DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 30-03-2022

 

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்தார்.

மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட பரிசோதனை திட்டத்தையும் முதல்வர் தொடக்கி வைத்துள்ளார்.

இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, முதல்வர் ஸ்டாலின், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக ஆட்டோடெல்ஃபியா மெட்டர்னல் அனலைசர் என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11-14 வாரங்கள்) இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வசதி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 



Read in source website



கொடைக்கானல்: செவ்வாயன்று சூரியனிலிருந்து எட்டு முறை சூரிய காந்தப் புயல் வீசியதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சூரிய காந்தப் புயல் வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சூரிய காந்தப் புயல் தொடர்பாக, நொடிக்கு நொடி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், நேற்று வீசிய சூரிய காந்தப் புயல் மிதமாக இருந்ததாகவும் வரும் நாள்களில் இது மேலும் தீவிரமடையும் என்று கணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூமியை நோக்கி வீசும் சூரிய காந்தப் புயல் காரணமாக செயற்கைக் கோள்கள்,  ஜிபிஎஸ் சாதனங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website


சென்னை: தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை துவக்கி வைத்தார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (30.3.2022) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அம்சமாக, சுகாதார கொள்கை வகுப்பதில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகாதாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இப்பேரவையில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர், அரசு சாரா அமைப்புகள், பொது சமூக அமைப்புகள், பொதுமக்கள், தனியார் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான தேவைகளை நேரடியாக மக்களிடமே கேட்டறிந்து, அக்கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகைகளில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது, மேலும், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் போன்றோருடைய தனிப்பட்ட தேவைகள் முன்னிலைபடுத்தி தீர்வு காணப்படுகிறது,

இம்முன்னோடி திட்டத்தில் இதுநாள்வரை சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், தருமபுரி, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தென்காசி, நீலகிரி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட சுகாதார மக்கள் சபையின் தீர்மானங்கள், மாநில சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தைகய மக்கள் சபைக் கூட்டங்கள் மூலம், சுகாதார அமைப்பில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் மேம்படும், சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான கொள்கை முடிவு எடுப்பதில் சமுதாயத்தின் ஈடுபாடும், பங்கேற்பும் அதிகரிக்கும். 

கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட பரிசோதனை திட்டம் இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, முதல்வர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக ஆட்டோடெல்ஃபியா மெட்டர்னல் அனலைசர் என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11-14 வாரங்கள்) இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கம் புதன்கிழமை (மார்ச் 30) தொடங்குகிறது.
 பல்கலைக்கழகப் பேரவைக் கூடத்தில் காலை 9.10 மணியளவில் நடைபெறவுள்ள தொடக்க விழாவுக்குத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகிக்கிறார். அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைப் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் நோக்கவுரையாற்றுகிறார்.
 தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன் ஆய்வரங்கக் கோவையை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகிறார்.
 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோஷம், சென்னை வானவில் பண்பாட்டு மையம் கே. ரவி ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.
 முன்னதாக, பதிவாளர் (பொறுப்பு) க. சங்கர் வரவேற்கிறார். நிறைவில் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் நன்றி கூறுகிறார்.
 இதையடுத்து, காலை 10 மணியளவில் சென்னை முனைவர் கணபதிராம் கானாமிர்தம் இசைப்பள்ளி மற்றும் மஹத்தி அகாதெமி இசை - நாட்டியப் பள்ளி மாணவர்களின் பாரதி ஐந்து - சேர்ந்திசையும், காலை 10.30 மணியளவில் சொற்பொழிவாளர் சுகிசிவம் சிறப்புரையும், முற்பகல் 11.30 மணியளவில் முனைவர் ஸ்ரீபிரசாந்தன் தலைமையில் ஆய்வரங்கப் பொது அமர்வும் நடைபெறவுள்ளன.
 பின்னர், வளர்தமிழ்ப் புல அரங்கத்தில் பிற்பகல் 2 மணியளவில் ஆய்வரங்க அமர்வுகள், பேரவைக் கூடத்தில் மாலை 4.45 மணியளவில் கர்நாடக மற்றும் பின்னணி இசைப் பாடகி எஸ். மஹதி குழுவினரின் பாரதி இசை, கூத்துக்களரி வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவக் கலைக் குழுவினரின் பாஞ்சாலி சபதம் -கப்பறை ஆட்டம், பாட்டும் பரதமும் -நடன நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன.
 தொடர்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (மார்ச் 31) வளர்தமிழ்ப் புலக் கருத்தரங்கக் கூடத்தில் காலை 10.15 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைத் தலைவரும், பாரதியியல் ஆய்வறிஞருமான ய. மணிகண்டன் பேசுகிறார்.
 அதே கூடத்தில் முற்பகல் 11.30 மணியளவில் ஆய்வரங்க அமர்வுகள் நடைபெறவுள்ளன.
 பின்னர், பேரவைக் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் சொற்பொழிவாளரும், பேராசிரியருமான பர்வீன் சுல்தானா பேசுகிறார். பிற்பகல் 3 மணியளவில் திருநெல்வேலி வேலவன் சங்கீதா குழுவினரின் வில்லிசைப்பாட்டு நடைபெறவுள்ளது.
 மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள நிறைவு விழாவுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகிக்கிறார். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரும், சொற்பொழிவாளருமான சுதாசேஷய்யன் ஆய்வுப் பேருரையாற்றுகிறார்.



Read in source website

மானிய உரங்கள் விற்பனையின்போது, இதர விவசாய இடுபொருள்களையும் விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக விற்கும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக வேளாண்துறை எச்சரிக்கை விடுத்தது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளா்கள் மூலம் நேரடி பயன் பரிமாற்றம் வழிகாட்டுதல் முறைகளைப் பின்பற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மானிய உரங்களை விற்கும் சமயம், சில உர விற்பனையாளா்கள் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக இதர இடுபொருள்களையும் வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனா். இதனால், விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

இத்தகைய விற்பனை, உரக்கட்டுப்பாட்டு ஆணைக்குப் புறம்பான செயலாகும். விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக இதர இடுபொருள்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உர விற்பனையாளா்களின் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் உர விற்பனையாளா்கள் குறித்த புகாா்களை மாநில உர உதவி மைய கைப்பேசி எண் (93634 40360) மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம் தெரிவிக்கலாம்.



Read in source website

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெ.குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி, செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தி:-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக வளா்ச்சி மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா் ஜெ.குமாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் 29 ஆண்டுகளாக கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவா். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் 20-க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியுள்ளாா். 5-க்கும் மேற்பட்ட சா்வதேச நிகழ்வுகளை நடத்திக் காட்டியுள்ளதுடன், 160-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். 25 முனைவா் பட்ட மாணவா்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளாா்.

பல்கலைக்கழக துணைவேந்தராக பணியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் இருப்பாா்.



Read in source website

ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 5 ஆயிரம் ரேஷன் கடைகளைப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், நசியனூரில் உள்ள தனியாா் அரிசி ஆலை, கங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கினை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் கொண்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் பிரிக்கப்படும்.

கடந்த ஆண்டு 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு இதுவரை 1,567 நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 28.7 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 1,608 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 54 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 57,128 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.126 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10,780 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா்.

இம்மையங்களில் முறைகேட்டைத் தடுக்க, மூட்டைகளைக் கையாளும் ஊழியா்களின் கூலி ஒரு மூட்டைக்கு ரூ.3.25இல் இருந்து ரூ.10ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 கோடி கூடுதல் கூலி வழங்கப்படும். இருந்தும் முறைகேட்டில் ஈடுபட்ட 30 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நெல் கொள்முதல் மையங்கள் குறித்த குறைகளைக் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 599 3540 மூலம் தெரிவிக்கலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் எஸ்.பிரபாகா், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

 



Read in source website

 

ஒரு குடும்பத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டதையடுத்து நேற்று(மார்ச்-29) நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகிற நிதியாண்டிலிருந்து இந்தத் திட்டம் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website


புது தில்லி: சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தொடர்ந்து, தற்போது அடுத்த கட்டண உயர்வை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, சென்னையில் புறநகர்ப் பகுதிகளான வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தபப்ட்ட சுங்கச்சாவடி கட்டணம் நடைமுறைக்கு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.45 முதல் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பின்படி, பஞ்சாபில் பாட்டியாலா மற்றும் சங்ரூர் சுங்கச்சாவடிகளில் தற்போதைய கட்டணத்தை விட 10 முதல் 18 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் வரும் வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 4) முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக, காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் வாரத்திலிருந்து முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு முந்தைய நடைமுறைகள், வரும் திங்கள்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

மத்திய அரசின் நீர் மேலாண்மைத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தில்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகளை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வழங்கினார்.
 நீர் மேலாண்மையில் மக்களையும் பல்வேறு தரப்பினரையும் முழுமையாக ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நீர் விருதுகளை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பயனுள்ள நீர் மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
 இதில் சிறந்த மாநிலம், மாவட்டம், ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனம், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 11 பிரிவுகளில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 57 தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
 நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை ஜல் சக்தித் துறையின் சிறப்புக் குழு, மாநில வாரியாக நேரில் கள ஆய்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.
 தமிழகம் 3-ஆம் இடம்: நிகழாண்டு மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா தில்லி விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை உத்தர பிரதேச மாநிலம் பிடித்தது. இதற்கான விருதை அந்த மாநிலத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
 இரண்டாம் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றது. மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விருது வழங்கினார். தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். 2020-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டாவது தேசிய நீர் விருதில், தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்திருந்தது.
 காவேரிப்பட்டினம் பள்ளிக்கு முதல் பரிசு: நீர் மேலாண்மையில் சிறந்த பள்ளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதை பள்ளியின் தலைமையாசிரியை வளர்மதி பெற்றுக் கொண்டார். புதுச்சேரி மணப்பட்டு அரசுப் பள்ளி மூன்றாவது இடம் பெற்றது. விருதை பள்ளித் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.
 செங்கல்பட்டு, மதுரைக்கு பரிசு: சிறந்த ஊராட்சி பிரிவில் (தென் மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் பரிசு பெற்றது. இதற்கான விருதை ஊராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் பெற்றுக் கொண்டார். சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு 3-ஆவது பரிசு கிடைத்தது. இதற்கான விருதை மதுரை மேயர் இந்திராணி பெற்றுக் கொண்டார்.
 சிறந்த தொழில் பிரிவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துக்கு 2-ஆவது பரிசும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கு 2-ஆவது இடத்துக்கான பரிசும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளையும், சான்றிதழ்களையும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், விஸ்வேஷ்வர் துடு ஆகியோர் கலந்து கொண்டனர்.



Read in source website

அஸ்ஸாம்- மேகாலய மாநிலங்களுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் மாநில எல்லை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பிரச்னைக்குரிய எல்லைப் பகுதிகள் 12-இல் 6 இடங்களுக்கு இரு மாநில அரசுகள் இடையே சமரசத் தீர்வு மேற்கொள்ளப்பட்டு செவ்வாய்க்கிழமை உடன்படிக்கை கையொப்பமானது.
 இந்த நிகழ்வு வடகிழக்கு இந்தியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
 புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மேகாலய முதல்வர் கான்ராட் சங்மாஆகியோர் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.
 இந்த ஒப்பந்தம் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே 884.9 கி.மீ. நிலப்பரப்பில் பிரச்னைக்குரிய 12 இடங்களில் 6 இடங்களுக்குத் தீர்வு எட்டப்படும்.
 இதுதொடர்பாக அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "இந்த உடன்படிக்கை மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை விவகாரத்தில் 70 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது வடகிழக்கு இந்தியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்' என்றார்.
 இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 6 இடங்களும் 36.79 சதுர கி.மீ. பரப்பளவில் 36 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 முன்னதாக எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு மாநிலங்களும் தலா மூன்று சட்டக் குழுக்களை நியமித்தன. இந்தக் குழுக்கள் இரு மாநில முதல்வர்களுடனும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டது. அதில் இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை விவகாரத்தில் ஒவ்வொரு கட்டமாக தீர்வு காண்பது என முடிவு எட்டப்பட்டது.
 அதன்படி சட்டக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் முதல் கட்டமாக எல்லையில் 36.79 சதுர கி.மீ. நிலப்பரப்பு உடன்படிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் அஸ்ஸாம் மாநிலம் 18.51 சதுர கி.மீ. பரப்பளவை தனது கட்டுப்பாட்டில் நிர்வகிப்பது எனவும், மேகாலயம் 18.28 சதுர கி.மீ. பரப்பளவை தனது கட்டுப்பாட்டில் நிர்வகிப்பது எனவும் முடிவு எட்டப்பட்டது.
 இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எனினும் அண்மைக் காலங்களில் இதற்கு சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 மேகாலய மாநிலம் கடந்த 1972-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆனால் அஸ்ஸாம் மாநிலத்தின் மறுபுனரமைப்பு சட்டம்-1971, புதிதாக உருவான மேகாலயத்துக்கு பல சவால்களை அளித்து வந்தது. அதில் எல்லையில் 12 இடங்களில் சர்ச்சைகள் தொடர்ந்து வந்தன.



Read in source website

துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு ஆகியவற்றை அடுத்த ஆண்டு மாா்ச் வரை தடையின்றி இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான பட்டியலில் வைக்க மத்திய அரசு அனுமதி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பருப்பு ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, அவற்றை தடையின்றி இறக்குமதி செய்யும் பொருள்களின் பட்டியலில் மத்திய அரசு கடந்த ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி சோ்த்தது. அந்த அவகாசம், கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், அந்த பருப்பு வகைகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கான அவகாசத்தை அடுத்த மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றான பருப்பு வகைகள் தட்டுப்பாடின்றி போதிய அளவில் உள்ளூரில் கிடைக்கச் செய்யவும், அவற்றின் விலையைக் கட்டுக்குள் வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் பருப்பு இறக்குமதி கொள்கையில் மாற்றம் வந்துவிடுமா என்று இறக்குமதியாளா்கள் கவலை கொண்டிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளது.



Read in source website

‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 50,000 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.37.80 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெறப்பட்ட முதலீட்டைவிட 65 சதவீதம் அதிகமான தொகை’ என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

மாநிலங்களவையில் நிதி மசோதா-2022, செலவின மசோதா-2022 ஆகியவற்றின் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் பொருளாதார நிா்வாகத் திறன் மீது அந்நிய முதலீட்டாளா்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். அதனால்தான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெறப்பட்ட முதலீட்டைவிட 65 சதவீதம் அதிகமான முதலீடு பெறப்பட்டுள்ளது. அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடா்ந்து நீடித்து வருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக, சா்வதேச அளவில் பொருளாதாரம் முடங்கியது. 32 நாடுகள் தங்கள் பொருளாதார மீட்சிக்காக வரியை உயா்த்தியுள்ளன. ஆனால், நிதிநிலையை மேம்படுத்த இந்திய அரசு வரி விகிதத்தை உயா்த்தவில்லை; புதிய வரிகளையும் விதிக்கவில்லை.

கரோனா பெருந்தொற்று, உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கச் செய்துவிட்டது. அதுபோலவே, உக்ரைன்-ரஷியா இடையேயான போரும் உலக நாடுகளை பாதிக்கச் செய்துவிட்டது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு வரிப் பகிா்வாக ரூ.8.35 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் இனி வரும் ஆண்டுகளில் நீடித்த வளா்ச்சிக்கு உதவும்.

பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: தேசிய பங்குச் சந்தையின்(என்எஸ்இ) கோ-லொகேஷன் வசதியை ஒரு பங்குத் தரகு நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதன் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா், முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்துள்ளது. அவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

 



Read in source website

மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தாா். அதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த மானியங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான விவாதம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியான நிதி ஒதுக்கீடு மசோதா, நிதி மசோதா ஆகியவற்றுக்கு மக்களவை கடந்த 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. அதையடுத்து அந்த மசோதாக்கள் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மசோதாக்களை ஆராய்ந்த மாநிலங்களவை, அவற்றில் எந்தவித திருத்தமும் செய்யாமல் மக்களவைக்குத் திருப்பி அனுப்பிவைத்துள்ளது.

இதன்மூலமாக அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது. நிதி மசோதாக்கள் மீது மாநிலங்களவைக்குப் பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லை. மக்களவை அனுப்பி வைக்கும் நிதி மசோதாக்களில் மாநிலங்களவை திருத்தங்களை மேற்கொள்ளலாம். அந்தத் திருத்தங்களை மக்களவை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம்.

நிதி மசோதாக்களை மாநிலங்களவை கிடப்பில் போட்டுவைக்க முடியாது. 14 நாள்களுக்குள் மக்களவைக்கு அந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு அந்த மசோதாக்கள் அனுப்பிவைக்கப்படவில்லை எனில், அவற்றுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவே கருதப்படும்.

 



Read in source website

தொலைபேசி உரையாடலையும், மின்னணு வழியில் பரிமாற்றம் செய்யப்பட்ட எந்தத் தகவலையும் ஒட்டுக்கேட்கவும் இடைமறித்துப் பாா்க்கவும் கண்காணிக்கவும் அங்கீகாரம் பெற்ற விசாரணை அமைப்புகளுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்-ஆப் உரையாடல் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு வழி தகவல்களையும் இடைமறித்துக் கேட்கவும் கண்காணிக்கவும் சா்வதேச அல்லது தேசிய அளவிலான விசாரணை அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

2009-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69-ஆவது பிரிவின்படி, தொலைபேசி உரையாடல், கணினி வழியில் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை ஒட்டுக்கேட்கவும் இடைமறித்துப் பாா்க்கவும் கண்காணிக்கவும் அங்கீகாரம் பெற்ற விசாரணை அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு, கண்காணிப்பு ஆகியவற்றுக்கான வழிமுறைகளும் 2009-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.



Read in source website

வேளாண் பயிா்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்கும் நடைமுறையை மேலும் திறம்பட மேற்கொள்வதற்காக ஒரு குழுவை அமைக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நவம்பரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமா் நரேந்திர மோடி, குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நரேந்திர சிங் தோமா் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா். அதில், நாட்டில் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப அறுவடை நடைமுறையிலும் மாற்றம் அவசியமாகிறது. வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் நடைமுறையை மேலும் திறம்பட மேற்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஒரு குழுவை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று தோமா் தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து கடந்த பிப்ரவரியில் பேசிய தோமா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் குழு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இக்குழுவில் மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார வல்லுநா்கள் ஆகியோா் இடம்பெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

தில்லியில் நடைபெற்ற 19-ஆவது சா்வதேச செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டரும், தேசிய சாம்பியனுமான அா்ஜூன் எரிகாய்சி செவ்வாய்க்கிழமை பட்டம் வென்றாா்.

கடைசி சுற்றின் முடிவில் அா்ஜூன், டி.குகேஷ், ஹா்ஷா பாரதகோடி ஆகிய மூவரும் 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனா். பின்னா் வெற்றியாளரை நிா்ணயிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் அா்ஜூன் முதலிடம் பிடிக்க, குகேஷ் 2-ஆம் இடமும், ஹா்ஷா 3-ஆம் இடமும் பிடித்தனா்.

8 புள்ளிகளுடன் இருந்த உஸ்பெகிஸ்தான் வீரா் நிக்மாடோவ் ஆா்டிக் 4-ஆம் இடமும், இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன், பராகுவேயின் டெல்காடோ ராமிரெஸ் நியுரிஸ், இந்தியாவின் எம்.ஆா்.லலித் பாபு, அபிஜித் குப்தா, நீலாஷ் ஷா, ஈரானின் கோலாமி ஆரிமி மஹ்தி ஆகியோா் 7.5 புள்ளிகளுடன் முறையே 5 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்தனா்.

இப்போட்டியில் சாம்பியன் ஆன அா்ஜூனுக்கு ரூ.4 லட்சம் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. தற்போது லைவ் இலோ தரவரிசையில் 2,675 புள்ளிகளுடன் அவா் இருப்பதால், சென்னையில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பிரதான அணிக்கு அவா் தோ்வாகிறாா் எனத் தெரிகிறது.



Read in source website

பாகிஸ்தானில்  இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.  

நம்பிக்கையில்லா தீா்மானம் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு  முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை (மாா்ச் 31) தொடங்கும்.

அதனைத் தொடா்ந்து, அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறும்.



Read in source website

 

பொருளாதார நெருக்கடி காரணமாக, சுழற்சி முறையில் இன்று முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்ய சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போதிய ஜெனரேட்டர்கள் இல்லாததால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமையன்று 10 மணி நேரம் மின் வெட்டு இருக்கும் என்றும் சிலோன் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று மட்டும் 10 மணி நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், அது மேலும் ஒரு நாளுக்கு தொடரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை பொது பயன்பாட்டு ஆணைய நிர்வாகி ஜனக ரத்னநாயகே இது குறித்து பேசுகையில், சிலோன் மின் வாரியம், இன்று 12 மணி நேர மின் வெட்டுக்கு அனுமதி கோரியது. ஆனால், இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் சார்பில் 2,000 மெட்ரிக் டன் டீசல் வரவழைக்கப்பட்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டதையடுத்து, 12 மணி நேர மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, இன்று 10 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

பொருளாதார பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், இலங்கையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. 

10 மணி நேர மின்வெட்டானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் என பகுதிகள் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என இரண்டு பிரிவுகளாகப் பிரித்தும் மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெரிய அளவில் வணிக நடவடிக்கைகள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்களும் வணிகமும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மின்வெட்டு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று வணிகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 

 



Read in source website

தூய்மையான எரிசக்தி, எண்மப் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கு அளிக்கும் உதவியை அதிகரிக்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தேசித்துள்ளாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2023 நிதியாண்டுக்கான மேம்பாட்டு உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவி அளிக்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவுக்கான மேம்பாட்டு உதவியானது 2021-இல் 25 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2023-ஆம் நிதியாண்டுக்கு 66 மில்லியன் டாலராக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அனுப்பியது.

இது தொடா்பாக வரும் நிதியாண்டுக்கான அமெரிக்க பட்ஜெட்டின் வெளியுறவுத் துறைக்கான ஒதுக்கீடு பகுதியில் கூறப்பட்டிருப்பதாவது:

தூய்மையான எரிபொருளை அதிகரிப்பது மற்றும் பிற பருவநிலை திட்டங்களின் மூலம் ஒரு பிராந்திய தலைவராக இந்தியாவின் பங்களிப்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிதியுதவி அதிகரிக்கப்படுகிறது. இந்த நிதியுதவி எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்திலும் முதலீடுகளை அதிகரிக்கும். அதிகரித்துவரும் எதேச்சதிகாரத்துக்கு எதிராகப் போராடவும், மனித உரிமைகள், சிவில் சமூகத்தின் பங்கேற்பு மற்றும் ஜனநாயக நிா்வாகத்தை வலுப்படுத்தவும் இந்த நிதி உதவும்.

சுகாதாரத் துறையில் இந்தியாவுக்கான நிதியுதவி 2021-இல் 34.5 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2023-இல் அதை 48.5 மில்லியன் டாலராக அதிகரிக்கவும் பைடன் நிா்வாகம் உத்தேசித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தெற்காசியாவுக்கான மேம்பாட்டு உதவியை 302.2 மில்லியன் டாலராக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ராமேசுவரம்: தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையேயான பாக் ஜலசந்தி கடல் பகுதியை குறைந்தநேரத்தில் (7 மணி நேரம் 55 நிமிடம்) நீந்தி தேனியைச் சேர்ந்தபள்ளி மாணவர் சிநேகன் நேற்றுசாதனை படைத்தார். மேலும், தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு திரும்பி நீந்தி வந்ததிலும் அவர்நடப்புச் சாதனையை முறியடித்தார்.

பாக் ஜலசந்தி கடல் பகுதிதமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும், ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதி ஆகும். இதுவரை 4 பெண்கள் உட்பட 17 பேர் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கோ நீந்திச் சென்றவர்கள்.

ஆனால், ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின்பு தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து சாதனை புரிந்தவர்கள் 2 பேர் மட்டுமே. அதில் ஒருவர், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன். இவர் 1971-ல் மொத்தம் 60 கி.மீ. தொலைவை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.

இந்நிலையில் தேனியை சேர்ந்த நீதிராஜன்-அனுஷா தம்பதியின் மகன் சிநேகன் (14). தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர். இவர் தேசிய, மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் சென்று,அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக்ஜலசந்தி கடலில் இருபுறமும் நீந்தி கடக்க இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும்பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்தியா - இலங்கை இருநாட்டு அனுமதி கிடைத்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிஅளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து நீந்த தொடங்கி 7 மணி 55 நிமிடங்களில் இரவு 9.55 மணியளவில் தலைமன்னாரை அடைந்தார். இதன்மூலம் 2018-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த துளசி சைதன்யா (29), 8 மணி 25 நிமிடத்தில் நீந்தி கடந்த சாதனையை சிநேகன் முறியடித்தார்.

திரும்பி வந்ததிலும் சாதனை

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து நீந்த தொடங்கி,நேற்று காலை 9.45 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை அடைந்தார். இதன் மூலம், 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்களில் நிகழ்த்திய சாதனையை, 19 மணி 45 நிமிட நேரத்தில் நீந்தி முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்தார்.



Read in source website

சென்னை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் உள்ள தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால் மாணவர்கள் சேரவேண்டாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு:

திறந்தநிலை மற்றும் தொலைதூர படிப்புகளை நடத்த விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள், விதிமுறைகளின்படி யுஜிசி-யிடம் முறையாக அங்கீகாரம் பெற வேண்டும்.

இந்நிலையில், தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர படிப்புகளுக்கு முறையாக அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயலாகும்.

அண்ணாமலை பல்கலை.யில்உள்ள தொலைதூர படிப்புகளுக்கு 2014-15 கல்வி ஆண்டு வரையே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை. அதன்படி அங்கீகாரமற்ற தொலைதூர, திறந்தநிலை படிப்புகள் செல்லாதவையாக கருதப்படும். அதுசார்ந்த மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு அந்த பல்கலைக்கழகமே பொறுப்பு. எனவே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் உள்ள தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலை.யில்200-க்கும் மேற்பட்ட தொலைதூரபடிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படித்துவருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசஅளவில் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராஜ்சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள் ளார். இதுவரை இப்பதவியில் இருந்த நிறுவனர் பிரெட் ஸ்மித், பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீப காலமாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் உயர் பதவியில் நியமிக்கப்படுவது தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது ராஜ் சுப்ரமணியமும் இடம்பெற்றுள் ளார். திருவனந்தபுரத்தில் பிறந்து ஐஐடி மும்பையில் பயின்றவர் ராஜ்.

இவர் தனது பணிக்காலத்தை பெடெக்ஸில்தான் தொடங்கினார். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஐஐடிமும்பையில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 5 நிறுவனங்களில்இதுவும் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் 6.5 லட்சம் பேர் பணிபுரிகின் றனர். சமீபத்தில் ஐபிஎம் நிறுவனத் தலைமைப் பொறுப்புக்கு அரவிந்த்கிருஷ்ணா, ட்விட்டர் நிறுவனத்துக்கு பராக் அகர்வால், சேனல் நிறுவனத்துக்கு லீனா நாயர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் மிகப் பெரும் சூப்பர்மார்க்கெட் சங்கிலித் தொடர் நிறுவனமான ஆல்பர்ட்சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியாக விவேக் சங்கரன் பொறுப்பேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Read in source website

கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத் தாகின.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற சீனாவைச் சேர்ந்த சினோசோர்-எடெக்வின் என்ற நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) ஆதரவுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தி திட்டமாகும்.

இந்த திட்டப்பணிகளை தமிழகத்தை ஒட்டிய பாக் வளைகுடா பகுதியில் சீன நிறுவனம் அமைக்க ஒப்புதல் அளிப்பது இப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என மத்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசுக்கு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தத் திட்டப் பணிகளை கடனுக்குப் பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றித் தர இந்தியா முன்வந்தது. இதையடுத்து இப்பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்திருந்தது. சமீபத்தில் இலங்கைக்கான சீன தூதர் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே கடல்சார் மீட்பு கூட்டு மையம் (எம்ஆர்சிசி) அமைக்க இந்தியா, இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால் இப்பகுதியில் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வடக்கு பகுதியில் உள்ள பாய்ன்ட் பெட்ரோ, பெசாலை, குருநகர் பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அமைக்க இந்தியா உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த 3 மின்திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. முன்னர் சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே என்டிபிசி நிறுவனம் கிழக்கு சம்பூர் நகரில் சூரிய மின்னுற்பத்தி திட்டப் பணியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேபோல அதானி குழுமம் வடக்கு பிராந்தியத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் மின்னுற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

அமைச்சர் சுற்றுப்பயணம்

இந்நிலையில் இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். அத்துடன் அங்கு நடைபெறும் 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் பிஐஎம்எஸ்டிஇசி மாநாட்டிலும் பங்கேற்றார். இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர்.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (டிஎன்ஏ) அண்மையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச பேச்சு நடத்தியதற்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தை யில் அரசியல் கைதிகள் விடுதலை, நில பயன்பாடு, காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை, 13-வது விதியை அமல்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேநேரம் அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஜெய்சங்கர் சந்தித்து பேசியபோது என்னென்ன அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது அதிகாரப் பகிர்வு அளிப்பதன் மூலமும் அரசியலமைப் பின் 13-வது பிரிவை செயல்படுத்து வதன் மூலமும்தான் சாத்தியமாகும் என்று முன்னதாக நடந்த செய்தியாளர் கள் சந்திப்பின்போது ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ஜெய்சங்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது: தமிழர்கள் எதிர்பார்பார்ப்பது சரிசமமாக நடத்தப்படுவது, அனைவருக்கும் ஒரே சட்டம், அமைதி மற்றும் மதிப்புடன் நடத்துவது ஆகியவை மட்டுமே. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது இலங்கைத் தலைவர்களிடம் இதே கருத்தைதான் வலியுறுத்தினேன். இருப்பினும் இது முற்றிலும் இலங்கை அரசின் உள்ளார்ந்த விஷயம். அதேசமயம் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய் யப்பட வேண்டியதும் அவசியம். இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை அரசின் செயல்பாடுகளை வரவேற் கிறேன். இப்போது நல்ல அறிகுறிகள் தென்படுகிறது. குறிப்பாக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இந்திய அரசு எப்போதும் இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கும், இலங்கைத் தமிழர்கள் தங்களது கோரிக்கையை அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும். ஐக்கிய இலங்கையில் தமிழர்கள் சமமாக நடத்தப்படுவது, ஒரே சட்டம், அமைதி, மதிப்புடன் நடத்தப்படுவது உள்ளிட்ட அனைத்துமே அந்நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். இரு நாடுகளிடையிலான நல்லுறவு மேம்பட இது வழிவகுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைச்சருக்கு கவுரவம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரமதர் மஹிந்தா ராஜபக்சவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா அளித்த 100 கோடி டாலர் உதவிக்கு இலங்கை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதலாக 150 கோடி டாலர் கடன் வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக இலங்கை வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அந்நாட்டின் 4 மூத்த அமைச்சர்கள் காமினி லொகுகே, ஜான்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் டி.வி.சனகா ஆகியோர் விமான நிலையம் சென்று வரவேற்றனர். இது இந்திய அமைச்சருக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவமாகும்.



Read in source website

மண்ணில் போடப்படும் விதைகள் மட்டும் பாக்டீரியாவால் சிதைக்கப்படாமல் முளைத்துவிடுகின்றனவே எப்படி, டிங்கு?

- எம். மருது பாண்டி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

நல்ல கேள்வி மருது பாண்டி. தாய்ச் செடி தன் சந்ததியைப் பெருக்கும் விதத்தில் விதைகளை உருவாக்குகிறது. இந்த விதைக்குள் புதிய உயிர் உருவாவதற்கான கருவும் அது வளர்வதற்குத் தேவையான உணவும் இருக்கின்றன. இந்த இரண்டையும் வெளிப்புறத் தோல் பாதுகாக்கிறது. மண்ணில் விதைகள் இடப்பட்ட பிறகு, காற்றையும் நீரையும் மட்டும் உள்ளே செல்ல தோல் அனுமதிக்கிறது. மண்ணில் இருக்கும் பெரும்பான்மையான பாக்டீரியாக்கள் மண் வளத்தைப் பெருக்கக்கூடியவை. அதனால், விதைகள் சேதமடையாமல், ஆரோக்கியமாக முளைவிட்டு வெளியே வருகின்றன, மருது பாண்டி.

மாடுகளின் கொம்புக்கு வலி தெரியுமா, டிங்கு?

- எம். காவ்யா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி,பிராட்டியூர், திருச்சி.

மாடுகளின் கொம்புக்குள் எலும்பு இருக்கிறது. அந்த எலும்புக்கு மேலே கெரட்டின் என்கிற பொருள் காணப்படுகிறது. மாடுகளின் தேவைக்குக் கொம்பு பயன்படும்போது வலி இருக்காது. ஆனால், கொம்பு உடைந்தாலோ வெட்டப்பட்டாலோ வலி தெரியும். சேதமடைந்த கொம்பு விழுந்து, மீண்டும் புதுக் கொம்பு முளைக்காது. சேதமடைந்திருந்தாலும் மாட்டின் வாழ்நாள் வரை கொம்பு வளரும், காவ்யா.

விளக்கு வெளிச்சத்தைத் தேடிச் சென்று பூச்சிகள் இறப்பது ஏன், டிங்கு?

- ம. ஷர்மிதா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இந்தக் கேள்விக்கு உறுதியான விடை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஷர்மிதா. விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் பூச்சிகள் செல்வதற்கான காரணங்கள் சிலவற்றைச் சொல் கிறார்கள். இரவில் நிலாவின் வெளிச்சத்தைக் கண்டு பூச்சிகள் திசை அறிந்து செயல்பட்டன. மனிதர்கள் செயற்கையாக விளக்கு ஒளியைக் கண்டுபிடித்த பிறகு, வெளிச்சத்தைக் கண்டு குழப்பமடைகின்றன. இரவில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால், வெப்பத்தை நாடி விளக்கு வெளிச்சத்தை நோக்கிச் சென்று உயிரிழக்கின்றன. ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகள் உமிழும் அகச்சிவப்புக் கதிர் என்று நினைத்து, விளக்கு வெளிச்சத்தை நாடி வருகின்றன என்கிறார்கள்.

நாட்டுக் கோழியின் முட்டை ஏன் பழுப்பாக இருக்கிறது? பழுப்பு முட்டைக்கும் வெள்ளை முட்டைக்கும் என்ன வித்தியாசம், டிங்கு?

- இ. சையத் சமி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

கோழிகளின் இனத்துக்கு ஏற்ப முட்டை ஓடுகளின் நிறம் மாறுபடுகிறது. பழுப்பு முட்டைக்கும் வெள்ளை முட்டைக்கும் சத்துகளில் பெரிய அளவுக்கு வித்தியாசமில்லை. இரண்டு முட்டைகளுக்கு இடையே ஒரே வித்தியாசம் என்றால், அது அவற்றின் விலைதான். பழுப்பு முட்டையில் சத்து அதிகம் என்று நம்புவதாலும் செய்திகள் பரப்பப்படுவதாலும் விலை அதிகமாக இருக்கிறது. வெள்ளை முட்டையின் விலை குறைவாக இருக்கிறது, சையத் சமி.



Read in source website

இந்த பேச்சுவார்த்தை இன்னும் தொடருகின்ற நிலையில் இம்ரான் கான் பதவி விலகும் பட்சத்தில் இந்திய – பாக் உறவில் புதிய சிக்கல்கள் உருவாகக் கூடும்.

 Nirupama Subramanian 

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் தனது இறுதிக் கட்டத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அந்நாட்டின் அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

முட்டாஹிதா குவாமி இயக்கம் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறியதன் மூலம், பிடிஐ தலைமையிலான அரசு ஆட்சியை தொடர்வதற்கான பெரும்பான்மையை இழந்தது. ஏப்ரல் 3ஆம் தேதி எதிர்பார்க்கப்படும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை வரை, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக பதவியில் இருந்து விலகுவார் இம்ரான் கான் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இது போன்ற நிச்சயமற்ற சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைமை அதிகாரி, லெஃப்டினன்ட் நதீம் அஞ்சும் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை அவருடைய வீட்டில் சந்தித்து பேசினார்கள். நாட்டு மக்களுக்கு உரையாட இருப்பதாக அவர் கூறியிருந்த நிலையில் அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைமை அதிகாரியை நியமிப்பது தொடர்பாக ராணுவம் மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கு இடையே நிலவிய மாறுபட்ட கருத்தின் காரணமாக அவருடைய பதவி பறிபோகும் நிலைமை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே நிலவியது. ராணுவ தளபதி நியமிக்கும் நபருக்கு வாய்ப்பை வழங்கி கையெழுத்திடுவது மட்டுமே பிரதமரின் பணி என்றிருக்க இம்ரான் கான் பஜ்வாவை மூன்று வாரங்களுக்கு காக்க வைத்திருந்தார். மேலும் அப்போது பதவி வகித்திக் கொண்டிருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீதை பணி மாற்றம் செய்தார்.

நாங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் தான் இருக்கின்றோம் என்று கூறிக் கொண்ட உறவின் இறுதிக் கட்டமாக அது பார்க்கப்பட்டது. முதல்முறையாக பாக்ஸ்தானின் மக்கள் – ராணுவ அமைப்பு, கலப்பு முறைக்கு மாறியது. இரு தரப்பும் ஒரு புதிய பாதையில் பயணிக்க இருப்பதாக கூறினார்கள்.

கருத்தியல் ரீதியாக இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிவிலியன் அரசியல் அமைப்புகளிலும் ராணுவத்திற்கு மிக நெருக்கமானவராக இருக்கலாம் என ராணுவ ஆய்வாளரும் வர்ணனையாளருமான ஆயிஷா சித்திகா கூறினார்.

”அவர் இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர்களின் நிறுவன மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்புடன், பாகிஸ்தானின் நடுத்தர வர்க்கங்களின் சாம்பியனாக, அவர் இராணுவத்தின் சொந்த நடுத்தர வர்க்க நெறிமுறைகளை பிரதிபலிக்கும் ஒரு புரட்சியை பாகிஸ்தானில் கொண்டு வந்திருக்க வேண்டும்” சித்திகா கூறினார்.

பாஜ்வாவின் பதவி காலத்தை நீடிப்பது குறித்த அவரின் தடுமாற்றம் முதல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னை ஆட்சியில் அமர்த்திய ஒரு அமைப்பை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எப்படி கொண்டுவருவது என்று கற்பனை செய்தும், அவருக்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவை கற்பனை செய்தும் தன்னை கச்சாவாக வெளிப்படுத்திக் கொண்டார் என்றும் சித்திக்கா கூறினார்.

பி.டி.ஐ.யுடன் தொடர்ந்து அதிகரித்து வரும் அதிருப்தி, நவீன கால மதீனாவுக்கு நிகர் என்ற வாக்குறுதியை கொடுத்த பின்னர் அங்கே நடைபெற்ற ஆட்சி, அதன் சொந்த இயலாமை ஒரு காரணம், கொரோனா தொற்று மறுகாரணம் என்று இரண்டு அமைப்புகளுக்கும் இடையேயான பிளவு அதிகரிக்க துவங்கியது.

செல்வாக்கற்ற தலைவருடன் அடையாளம் காணப்படுவதை இராணுவம் இனியும் விரும்பவில்லை. இராணுவமும் ஐஎஸ்ஐயும் அவரைத் தேர்ந்தெடுக்கவும் அவரது கூட்டணியை ஒன்றாக இணைக்கவும் அதிக வேலைகளை மேற்கொண்டனர் என்பது ஒன்றும் இரகசியமல்ல.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிக ஆர்வம் செலுத்தவில்லை. பைடன் நிர்வாகத்திற்கும் கானுக்கும் இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும் படி இல்லாத காரணத்தால் இது தீவிரத் தன்மையை அடைந்தது. ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து இன்று வரை ஒரு தொலைபேசி உரையாடலும் இருவருக்கும் மத்தியில் நிகழவில்லை.

சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் நட்பை அதிகம் நாடும் ஒரு நாட்டின் ராணுவத்திற்கு இந்த போக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு கான் புடினை நேரில் சந்தித்தது வெளியுறவுக் கொள்கையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

கடந்த வாரம், கான் தனது பிரச்சனைகளில் வெளிநாட்டினரின் பங்கு உண்டு என்றும், நாட்டிற்கு வெளியே பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் சக்திகள் இருப்பதாகவும் அமெரிக்காவை குறிப்பிடும் வகையில் குற்றம் சாட்டினார்.

வர்த்தகத்தைத் தொடங்குவதன் மூலம் இந்தியாவுடனான உறவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் கூறப்பட்ட பாஜ்வாவுடன் இம்ரானும் ஒரே பக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

பிப்ரவரி 2021 இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் எல்லையில் துப்பாக்கி பயன்பாட்டினை குறைக்க வைத்தது. இரு நாட்டு இராணுவமும் இணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் அரசின் பங்கு குறைவாகவே உள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்னும் தொடருகின்ற நிலையில் இம்ரான் கான் பதவி விலகும் பட்சத்தில் இந்திய – பாக் உறவில் புதிய சிக்கல்கள் உருவாகக் கூடும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆளும் கட்சியின் தோல்விகளை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் அனைத்தும் வேற்றுமையை விலக்கி ஒன்றாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தனர். இதன் மூலம் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவை உண்மைக்கு மாறானது.

கானுக்கான இந்த நெருக்கடியில் இராணுவம் தன்னை நடுநிலை என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை இந்நிலையை எட்டியிருக்காது என்பதே பகிரங்கமான உண்மை. அதன் அர்த்தம் ராணுவம் அவர் பக்கம் இல்லை. இல்லையெனில் அவரது சொந்தக் கட்சியிலிருந்து பலர் விலகியிருக்க மாட்டார்கள். முக்கிய கூட்டணிக் கட்சிகளின் விலகல் அரங்கேறியிருக்காது.

அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக செயல்பட வேண்டும் என்பது தான் எந்த ஒரு புதிய தலைமையும் உணர வேண்டும். ஏன் என்றால் பாகிஸ்தான் ராணுவம் பி.எம்.எல்(என்) கட்சியையோ, பி.பி.பி.-ஐ கட்சியையோ முழுமையாக நம்பவில்லை.

இந்த வார துவக்கத்தில் கூட்டணியில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் பஞ்சாப் மாகாண ஆட்சியை க்யூ லீகிற்கு தர வேண்டும் என்று பி.எம்.எல்.(க்யூ) கட்சி இம்ரானுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டது. 1999ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு பி.எம்.எல்.(என்) கட்சியில் இருந்து விலகி உருவாக்கப்பட்ட கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இது நவாஸ் ஷெரீப்பின் கட்சியை பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த மாகாணத்தில் இருந்து விலக்கி வைக்க ராணுவத்திற்கு திறம்பட உதவியிருக்கலாம்.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் புதிய தேர்தலை அறிவிக்கவோ அல்லது 23 வரை நீடிக்கவோ தற்போதைய பிரதமரால் இயலாது. நாட்டில் இருந்து வெளியேறி லண்டனில் வசித்து வரும் நவாஸ் ஷெஃரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிஃப் பலரின் தேர்வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிறந்த நிர்வாக தன்மை கொண்ட இவர், மக்கள் – ராணுவ ஸ்பாதனத்தின் மீது மோதாமல் அடுத்த தேர்தல் வரும் வரை நாட்டை நிர்வகிக்கும் நபராக அவர் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் ராணுவத்தின் ஆதிக்கத்திற்கு சவால்விடுக்கும் வகையில் பெரும்பான்மையுடன் யாரும் ஆட்சி அமைக்கமாட்டார்கள் என்பதை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்யும். ஆனாலும் அப்போதும் அதிகம் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தலைவராக இம்ரான் கான் வரலாம்.



Read in source website

மைசூரின் கடைசி ஆட்சியாளரான திப்பு சுல்தான், செப்டம்பர் 1780-ல் நடந்த பொல்லிலூர் போர்க்களத்தில் போரிடும் ஓவியத்திற்கு சோதேபி ஏலத்தில் 5,00,000 யூரோ முதல் 8,00,000 வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓவியம் என்ன சித்தரிக்கிறது, அது முக்கியமானது ஏன்?

கலைகளின் புரவலராக அறியப்பட்ட திப்பு சுல்தான் பல குறிப்பிடத்தக்க ஓவியங்களை உருவாக்கினார். அவற்றில் பல சமீபத்திய ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏலத்தில் மிகப் பெரிய தொகையைப் பெற்றன. அவரது கருவூலத்தில் இருந்து மற்றொரு படைப்பு புதன்கிழமை (மார்ச் 30) ​​சோதேபியின் “இஸ்லாமிய உலக கலைகள் & இந்தியா” ஏலத்தில் ஏலம் விடப்படுகிறது. ‘பொல்லிலூர் போர்’ என்ற தலைப்பில், வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் “அந்த காலத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று” என்று வர்ணித்த இந்த படைப்புக்கு 5,00,000 யூரோக்கள் முதல் 8,00,000 யூரோக்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஓவியம் என்ன சித்தரிக்கிறது?

கிட்டத்தட்ட 32 அடி நீளமுள்ள இந்த நினைவுச்சின்ன ஓவியம், செப்டம்பர், 18970-ல் நடந்த பொல்லிலூர் போரில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலி மற்றும் அவருடைய மகன் திப்பு தலைமையிலான மைசூர் ராணுவத்தின் வெற்றியைக் குறிக்கிறது. மைசூர் ராணுவத்திற்கு எதிராக பிரிட்டிஷ் வீரர்கள் போராடுவதைக் கறுப்பு விதிகள் கொண்ட காகிதத்தில் கவ்வாக் காட்டுகிறது. இந்த ஓவியம் மைசூர் ராணுவத்திற்கு எதிராக பிரிட்டிஷ் வீரர்கள் போராடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது.

சோதேபி இணையதளத்தில் இந்த படைப்பு பற்றிய குறிப்பில், டேரிம்பிள் குறிப்பிடுகையில், “இந்த ஓவியம் பத்து பெரிய தாள்களுக்கு மேல் நீண்டு, கிட்டத்தட்ட 32 அடி (978.5 செ.மீ.) நீளம் கொண்டது. மேலும் கம்பெனியின் பீரங்கிகள் வெடித்து உடைந்த தருணத்தை சித்தரிக்கிறது. சமகால முகலாய வரலாற்றாசிரியர் குலாம் ஹுசைன் கான் கருத்துப்படி, பிரிட்டிஷ் சதுக்கத்தில், திப்புவின் குதிரைப்படை ஆக்ரோஷமான கடல் அலைகள் போல, இடது மற்றும் வலதுபுறத்தில் இருந்து முன்னேறுகிறது. இளஞ்சிவப்பு நிற கன்னமும், மாறாக பெண்மையும் கொண்ட கம்பெனி துருப்புக்கள் மைசூர் தீவிரமான தாக்குதலுக்காக அச்சத்துடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில், மைசூர் படைகள் கொல்வதற்காக நெருங்கி வருகிறார்கள்.

இந்த ஓவியத்தின் முக்கியத்துவம் என்ன?

மைசூரின் கடைசி ஆட்சியாளரான திப்பு சுல்தானால், 1784-ம் ஆண்டில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட டாரியா தௌலத் பாக் ஒரு பெரிய சுவரோவியத்தின் ஒரு பகுதியாக இந்த படைப்பு உருவாக்கப்பட்டது.

அப்படி மூன்று ஓவியங்கள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றில் ஒன்று, 2010-ல் ஒரு சேதேபி ஏலத்தில் 7,69,250 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ஏலத்தில் உள்ள ஓவியம் போலல்லாமல், பெரிதும் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது ஏலத்திற்கு வரவிருக்கும் படைப்பு இங்கிலாந்தில் உள்ள தனியார் சேகரிப்பின் ஒரு பகுதியாகும். மேலும், இந்த படைப்பு பல கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் லண்டனில் 1990 கண்காட்சி மற்றும் 1999 எடின்பரோவில் நடந்த கண்காட்சி ஆகியவை அடங்கும்.

சமீபத்திய ஆண்டுகளில் திப்பு சுல்தானின் வேறு என்ன நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டன?

திப்பு சுல்தானின் அரியணையை அலங்கரித்த எட்டு புலித் தலைகளில் ஒன்று 1.5 மில்லியன் யூரோ விலையில் நவம்பர் 2021-ல் ஏலத்திற்கு வந்தது. இங்கிலாந்தின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை (DCMS) அதன் ஏற்றுமதியை தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த சிம்மாசனம் பிரிட்டிஷ் வரலாற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்று முடிவானது. அதனால், இங்கிலாந்தில் இருந்து ஒருவர் வாங்கலாம் என்று நம்புகிறது.

திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் மார்ச் 2019-ல் சுமார் 1,07,000 யூரோக்களுக்கு ஏலம் போனது. அதில் வெள்ளியில் பொருத்தப்பட்ட 20-துளை ஃபிளிண்ட்லாக் துப்பாக்கி மற்றும் பயோனெட் ஆகியவை 60,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டன. அதே ஆண்டில், ஜூன் மாதத்தில், திப்பு சுல்தானின் மேஜிக் பாக்ஸை கிறிஸ்டி 4,95,000 டாலருக்கு விற்பனையானது.

2015-ம் ஆண்டில், திப்புவின் ஆயுதங்கள் மற்றும் கவசங்களின் தொகுப்பு போன்ஹாம்ஸ் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை விற்பனையில் மொத்தம் 6 மில்லியன் யூரோக்களுக்கு மேல் விற்கப்பட்டது. ஏலத்தில் உள்ள 30 பொருட்கள் ஒருவரின் சேகரிப்பில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சிறுபான்மையினர் முழுமையாக திருப்தி அடையாத வரை, நாம் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது.” – இது 1947ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் பண்டிட் ஜி.பி. பாண்ட் அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முன்பு கூறியது.

”இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் தொடர்பாக நிலவும் பல்வேறு சந்தேகங்களுக்குமான திருப்திகரமான பதிலை சுதந்திர இந்தியாவின் ஆரோக்கியம், சக்தி மற்றும் வலிமையே உறுதி செய்யும். இதுகாலம் வரை சிறுபான்மையினர் குறித்த கேள்விகள் இங்கே கலவரங்களையும், அவநம்பிக்கை மற்றும் பிளவுகளை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு புதிய அத்யாயம் துவங்குவதற்கான தேவை இருக்கிறது. சிறுபான்மையினர் முழுமையாக திருப்தி அடையாத வரை, நாம் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது.” – இது 1947ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் பண்டிட் ஜி.பி. பாண்ட் அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முன்பு கூறியது.

சிறுபான்மையினர் யார், அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் எப்படி வரையறுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விரிவான பிரமாணப் பத்திரத்தை இந்த வாரம் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த பிரமாணப் பத்திரம் “சிறுபான்மைத் திருப்தி” என்ற பதத்தை சிக்கலாக மாற்றியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சில இடங்களில் இந்துக்களும் சிறுபான்மையினரே என்று பிரமாணப் பத்திரம் சரியாக கூற, சிறுபான்மையினர் நலத்திற்காக கொண்டு வரப்படும் திட்டங்களை எவ்வாறு ”சமாதானப்படுத்த எடுக்கப்படும் முயற்சி” என்று அழைக்க முடியும்?

அரசின் பிரமாணப் பத்திரம்

பாஜக அனைவருக்கும் நீதி; யாரையும் திருப்திப்படுத்த வேண்டாம் என்று வெகு காலமாக சிறுபான்மையினரின் உரிமைகளை எதிர்ப்பதற்காக பேசி வருகிறது. சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக, 2014ம் ஆண்டு மே மாதம், நஜ்மா ஹெப்துல்லா பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாளில், சிறுபான்மையினர் என்று அழைக்க முடியாத அளவுக்கு இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அரசு தற்பொது வரவேற்கத் தக்க மாற்றத்தைப் பெற்றுள்ளது. இனி காஷ்மீர், லடாக், பஞ்சாப், சில வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதில் அது தயக்கம் காட்டாது என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் 2020இல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கலாம் என்றும், சிறுபான்மை நலத் திட்டங்கள் “மதத்தின் அடிப்படையில் மட்டுமே பாகுபாட்டைத் தடைசெய்யும் அரசியல் அமைப்பு பிரிவு 15ஐ மீறவில்லை” என்றும் பிரமாணப் பத்திரம் கூறுகிறது. இந்தத் திட்டங்கள் சிறுபான்மையினரிடையே உள்ள ஏழைப் பிரிவினரின் நலனுக்காக வழங்கப்படுகிறது, மேலும் அரசியல் அமைப்பின் 38 மற்றும் 46 பிரிவுகளின் கீழ் நலிந்த பிரிவினரின் நலன்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992 மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையச் சட்டம் 2005 ஆகியவற்றை இயற்றுவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பையும் அரசாங்கம் பாதுகாத்துள்ளது. சிறுபான்மையினர் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வரையறுக்கப்பட்டுள்ளனர் என்று பிரமாணப் பத்திரம் கூறுகிறது.

இதே வழக்கில் உபாத்யாய் தாக்கல் செய்த முந்தைய மனுவில், இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அனுப்பியது. ஆணையத்தால் அமைக்கப்பட்ட துணைக் குழு இதன் அனைத்து கோரிக்கைகளையும் 2019ம் ஆண்டு நிராகரித்தது.

1) பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்;

2) சிறுபான்மையர் ஆணைய சட்டம் 1992ன் கீழ், 1993ம் ஆண்டு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிக்கள் ஆகியோரை சிறுபான்மையினராக அறிவித்தது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

3) மாநில அளவில் சிறுபான்மையினர் அறிவிப்பிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல்

4)சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான 1992 ஐ.நா பிரகடனத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை வரையறுத்தல்

போன்ற வேண்டுகோள்களை அவரின் மனு கோரியது. அனைத்தையும் நிராகரித்து அறிவித்தது அந்த துணைக் குழு.

இந்த வார அரசாங்கத்தின் பிரமாணப் பத்திரம், தேசிய சிறுபான்மை வாரியத்தின் கருத்துகளுக்கு மாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர் வரையறை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் யார் என்பது வரையறுக்கப்படவில்லை. ஆனால் பிரிவுகள் 29 மற்றும் 30 இன் தலைப்புக் குறிப்புகளிலும், பிரிவு 30ன் (1) மற்றும் (2) பிரிவுகளிலும் என 4 இடங்களில் மைனாரிட்டி என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் (மற்றும் பெரும்பான்மையினர்) என்பதன் மிகத் தெளிவான வரையறை எண்களின் அடிப்படையிலானது. சிறுபான்மை என்பது ஒரு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினரை விட எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் குழுவாகும்.

ஆனால் முன்னுரிமை அல்லது எண்களின் பற்றாக்குறை மட்டும் எந்த அதிகாரபூர்வமான வரையறைக்கும் வழிகாட்டியாக இருக்காது. நிறரீதியாக மக்கள் பிரிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில், சிறுபான்மையினர் மற்ற சமூகத்தின் மீது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்தினர்.

சில நாடுகளில், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையை பிரிக்கும் கோடு மிகவும் மெல்லியதாக இருப்பதால், சிறுபான்மை குழுவை வரையறுப்பது சாத்தியமற்றதாக உள்ளது. ஒரு சமூகம் வெவ்வேறு குழுக்களால் ஆனதாக இருக்கும், எண்ணிக்கை அடிப்படையில் அவர்களில் யாருமே சிறுபான்மையினராக இருக்க இயலாது. எண்களின் அளவுகோல் முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் சிறுபான்மையினரின் எந்தவொரு வரையறைக்கும் இது போதுமானதாக கருதப்படக் கூடாது.

சிறுபான்மையினரின் வரையறையின் இரண்டாவது கூறு, அவர்கள் சமூகத்திலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தாததாக நபர்களாக இருக்க வேண்டும். ஒரு குழுவின் மதிப்புகள் மற்றும் உலகக் கண்ணோட்டங்கள் எதுவும் பிரதிபலிக்காதபோது அல்லது பொதுத் துறையில் மற்றும் சமூக விதிமுறைகளின் அரசியலமைப்பில் போதுமான அளவு பிரதிபலிக்காதபோது ஒரு குழுவை சிறுபான்மையாகக் கருதலாம். இவை ஓரங்கட்டுதல் மற்றும் விலக்கப்படுதல் ஆகிய முக்கிய காரணங்களை வலுப்படுத்துகின்றன. இஸ்லாமியர்கள் இவ்விரண்டிலும் சரியாக பொருந்துகிறார்கள். குறைவான எண்ணிக்கை மற்றும் ஆதிக்கமின்மை. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இவர்களின் பிரதிநிதித்துவம் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

எண்களின் அளவு மற்றும் ஆதிக்கம் அற்ற தன்மை ஆகியவை மட்டுமே பெரும்பான்மை, சிறுபான்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற அவசியமில்லை. ஒரு குழு மற்றவர்களை விட எண்ணிக்கையில் சிறியதாக இருக்கலாம், மேலும் அதன் மதிப்புகள் மேலாதிக்க அரசியல் அல்லது சமூக நெறிமுறைகளில் முழுமையடையாமல் பிரதிபலிக்கப்படலாம். ஆனால் அவர்கள் மத்தியில் விலக்கப்பட்டவர்கள் என்ற போக்கு காணப்படாது. பார்சிக்களே இதற்கு சிறந்த உதாரணம்.

இந்திய அரசியல் சாசனம் மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. எல்.ஜி.பி.டி.க்யூ போன்ற பாலியல் சிறுபான்மையினரை அங்கீகரிக்கவில்லை. மேலும், ஒரு குழுவை 30(1) பிரிவின் கீழ் சிறுபான்மையினராக அங்கீகரிப்பதற்காக, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 50%க்கும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்

இந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிப்பதற்கான பொதுநல வழக்குகள் தேவையில்லை என்று இந்த ஆசிரியர் நீண்டகாலமாக கூறிவருகிறார். உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வமான தீர்ப்புகளில் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து தேவையில்லாத பொது விவாதத்தை உருவாக்க இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கேரளா கல்வி மசோதா 1958-ல் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குழுவின் சிறுபான்மை நிலையைத் தீர்மானிக்க மாவட்டங்களை ஒரு அலகாக எடுத்துக் கொள்வதை நிராகரித்தது. உச்ச நீதிமன்றம் தங்களை சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ளும் குழுக்களின் சிறுபான்மை நிலையை தீர்மானிக்க “மாநிலத்தை” ஒரு அலகாக எடுத்துக் கொண்டது.

டி.எம்.ஏ. பை அறக்கட்டளை 2003ம் ஆண்டு வழக்கில் 11 பேர் கொண்ட அமர்வு, சமூகம், மதம், அல்லது மொழி போன்று எந்தவிதமான சிறப்பு சிறுபான்மை வரையறையையும் பெற முடியாதவர்களில், ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 50%க்கும் குறைவாக இருக்கும் குழுவினரை சிறுபான்மையினர் என்று வரையறை செய்து அவர்களுக்கு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உரிமையுண்டு என்று குறிப்பிட்டது.

30வது பிரிவு “மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினர்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், மொழிவாரியாக உருவாக்கப்பட்ட மாநிலங்களின் மட்டத்தில் சிறுபான்மையினர் வரையறுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கூறி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மை சமூகத்தின் அந்தஸ்துக்கு தகுதியானவர்கள் என்று இந்த ஆசிரியர் பல ஆண்டுகளாக வாதிட்டு வருகிறார். ஒரு தமிழ் பிராமணர் தமிழ்நாட்டைத் தவிர pஇற மாநிலங்களில் சிறுபான்மை கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். உண்மையில், மொழிவழி சிறுபான்மையினராக, இந்து குழுக்கள் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.

எனவே, இந்துக்கள் இந்தியா முழுவதிலும் உள்ள மொழிவழி சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்படுவதற்கு உரிமையுடையவர்கள். எனவே பொதுநல வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பற்றி பேசுவது என்ன?

மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் கர்நாடக அரசு அங்கீகரிக்கும் பல மொழி சிறுபான்மையினரைக் குறிப்பிடுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதாகவும், அவர்கள் மீது பஞ்சாபி மொழியை திணிக்க முடியாது என்றும் அரை நூற்றாண்டுக்கும் முன்பாக 1971ம் ஆண்டு டி.ஏ.வி. கல்லூரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத மற்றும் மொழி சிறுபான்மையினர்

இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 30ல் மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு ஒரே உரிமைகளை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறுபான்மையினர் மாநில அளவில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறவில்லை. 2019ம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மையினர் நலச் சட்டம், 1992 இன் பிரிவு 2 இன் கீழ், ஒரு சமூகத்தை மத சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று கூறியது. இது உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்துடன் ஒத்துப்போகவில்லை, மேலும் 2016ஆம் ஆண்டில் யூதர்களை மாநிலத்தில் சிறுபான்மையினராக அங்கீகரித்த தேவேந்திர ஃபட்னாவிஸின் கீழ் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் உதாரணத்தை மார்ச் 25 ஆம் தேதி பிரமாணப் பத்திரத்தில் மேற்கோள் காட்டியுள்ளது மத்திய அரசு.

சிறுபான்மையினரை அங்கீகரிப்பது குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. மத சிறுபான்மையினரை தேசிய அளவிலும் மொழி சிறுபான்மையினரை மாநில அடிப்படையிலும் வரையறுப்பது ஒரு அணுகுமுறையாக இருக்கலாம். சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின் கீழ் இந்திய அரசு ஏற்கனவே சில மத குழுக்களை நாடு முழுவதும் சிறுபான்மையினராக அறிவித்துள்ளது.

டிஎம்ஏ பை அறக்கட்டளையில் நீதிபதி ரூமா பாலின் மாறுபட்ட கருத்தை ஏற்றுக்கொள்வது இரண்டாவது அணுகுமுறையாக இருக்கும். ஒரு குழு சிறுபான்மையா இல்லையா என்பது பாதுகாப்பு கோரப்படும் குறிப்பிட்ட சட்டத்தின் ஆதாரம் மற்றும் பிராந்திய பயன்பாடு தொடர்பாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை அந்த நீதிபதி கூறினார். பாராளுமன்றத்தின் ஒரு சட்டம் சவால் செய்யப்பட்டால், சிறுபான்மையினர் தேசிய அளவில் வரையறுக்கப்பட வேண்டும்; இது ஒரு மாநில சட்டமாக இருந்தால், சிறுபான்மையினர் மாநில அளவில் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

2005 இல் ஒரு தவறான தீர்ப்பில், அலகாபாத் உயர்நீதிமன்றம் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, ஏனெனில் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியாவில் யாரும் சிறுபான்மையினர் இல்லை என்றும், இதனால் சிறுபான்மையினர் உரிமைகள் பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் ‘பால் பாட்டீல்’ (2003) இல் ஜெயின்களை சிறுபான்மையினராக அங்கீகரிக்க மறுத்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெரிய அமர்வின் தீர்ப்புகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு பார்வைக்கும் எதிரான தீர்ப்பை வழங்கியது.

எந்தவொரு புதிய மதக் குழுவையும் சிறுபான்மையினராக அங்கீகரிக்கக் கூடாது என்றும், மதச் சிறுபான்மையினரின் பட்டியலைக் குறைப்பதற்கும், இறுதியாக அதை முற்றிலுமாக அகற்றுவதற்குமே சிறுபான்மையினர் ஆணையம் பணியாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. . ஷரத்து 25, தற்போதுள்ள மதங்களுக்கு மட்டும் மத சுதந்திரத்தை வழங்கவில்லை. புதிய மதங்கள் பிறப்பதைத் தடுக்காது. புதிய மதங்கள் தோன்றலாம், அத்தகைய குழுக்கள் மத சிறுபான்மையினராக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படலாம் என்பதையும் சுட்டுகிறது இந்த பிரிவு.

அரசியலமைப்புச் சட்டத்தின் இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர், NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான ஃபைசான் முஸ்தபா எழுதிய கட்டுரை இது. கருத்துகள் அனைத்தும் அவரின் சொந்த கருத்துகள்



Read in source website

Tamil Business Update : வரும் ஏப்ரல் 1, 2022 முதல் வருமான வரி முதல் கிரிப்டோ வரை சில மாற்றங்கள் நடைபெற உள்ளன.

புதிய நிதியாண்டு 2022-23 (FY23) விரைவில் தொடங்க உள்ள நிலையில் அடுத்த நிதியாண்டில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டைப் பாதிக்கக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் உள்ளன. வரும் ஏப்ரல் 1, 2022 முதல் வருமான வரி முதல் கிரிப்டோ வரை சில மாற்றங்கள் நடைபெற உள்ளன.

கிரிப்டோ சொத்துக்களுக்கு அடுத்த நிதியாண்டு (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் வரி விதிக்கப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2022 பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். பிட்காயின், எத்தேரியம் மற்றும் பூஞ்சையற்ற டோக்கன்கள் (NFT) உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்திற்கு 30 சதவீத வரியை அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் தனது உரையில், இத்தகைய பரிவர்த்தனைகளில் அபரிமிதமான உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட வரி விதிப்புக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும்  சில நிபந்தனைகளின் கீழ் 1 சதவீதம் டிடிஎஸ் மற்றும் பரிசு வரி இருக்கும்  என்றும், அத்தகைய டிஜிட்டல் சொத்தைப் பெறுபவர் அன்பளிப்பாக செலுத்த வேண்டும் என்வும் கூறியுள்ளார்.

பிஎஃப் (PF)  கணக்கில் வரி

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஏப்ரல் 1 முதல் வருமான வரி (25வது திருத்தம்) விதி 2021-ஐ நடைமுறைப்படுத்த உள்ளது.இந்த புதிய விதியில், பிஎஃப் (PF) கணக்கில் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கும் மேலான பங்களிப்புகளின் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வரி விதிக்கக்கூடிய வட்டியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, வருங்கால வைப்பு நிதிக் கணக்கிற்குள் தனி கணக்குகள் 2021-2022 மற்றும் அனைத்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஒரு நபர் செலுத்தும் வரிக்கு உட்பட்ட மற்றும் வரி விதிக்கப்படாத பங்களிப்புகளுக்காக பராமரிக்கப்படும்.

புதுப்பிக்கப்பட்ட ஐடிஆர்களை தாக்கல் செய்தல்

வருமான வரி செலுத்துவோர் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கும் புதிய விதி உள்ளது. இருப்பினும் கூடுதல் இழப்பு அல்லது வரிப் பொறுப்பில் வீழ்ச்சியைப் புகாரளிக்க இந்த விதியை பயன்படுத்த முடியாது.

மலிவு விலையில் வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் வரிச் சலுகை இல்லை

நிதியாண்டு 2022-23 (FY23) முதல், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு பிரிவு 80EEA இன் கீழ் கூடுதல் வரி விலக்கின் பலனை அரசு நிறுத்தும்.. 2018-19 நிதியாண்டின் (FY19) பட்ஜெட்டில், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான பிரிவு 24(b) 2 லட்சத்துக்கு மேல் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமான வரிச் சலுகையை அரசாங்கம் அறிவித்திருந்தது. 45 லட்சம் வரை. இந்த வசதி பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நிதியாண்டு 2020- மற்றும் 2021-ல் (FY20 மற்றும் FY21) வரவு செலவுத் திட்டங்களில் நீட்டிக்கப்பட்டது.

எனவே, அத்தகைய வீடு வாங்குபவர்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24(b) மற்றும் பிரிவு 80EEa ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிகபட்சமாக ரூ. 3.5 லட்சத்தை விலக்கிக் கொள்ளலாம்.

ஆனால் இப்போது, ​​புதிய நிதியாண்டில், மலிவு விலையில் வீடு வாங்க விரும்பும் வீடு வாங்குபவர்கள் FY23 முதல் அதிக வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Dearness Allowance (DA) hiked by 3% for central govt employees, pensioners: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 31 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

புதிய டிஏ மற்றும் டிஆர் விகிதங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று அரசாங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி உள்ளது” என்று அரசாங்கம் கூறியது.

DA மற்றும் DR ஆகிய இரண்டின் கணக்கின் மூலம் ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி கூடுதலாக செலவாகும்.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இந்த உயர்வுக்கு முன், டிஏ மற்றும் டிஆர் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைச்சரவையால் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதம் ஆக வழங்கப்பட்டது.



Read in source website

ரசெஸ்ஸோ அல்லது அங்கிருந்து வரும் கான்வாய்கள் மீது ரஷ்ய தாக்குதலின் அச்சுறுத்தல் எப்போதும் இருப்பதற்கான காரணமும் இதுதான்.

தென்கிழக்கு போலந்தில் உள்ள, வெறும் 2 லட்சம் மக்கள்தொகை மற்றும் சுமார் 10 கிமீ அகலம் கொண்ட சிறிய ரசெஸ்ஸோ (Rzeszow) நகரம், ஒரு பாரிய இராணுவ பரிமாற்ற நடவடிக்கையின் மையமாக தொடர்கிறது, இது ரஷ்யாவிற்கு எதிராக எதிர்பாராத வகையில் உறுதியான பாதுகாப்பை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

ரசெஸ்ஸோ நகரின் மையத்தில் சிட்டி ஹால் உள்ளது, இது போலந்தின் வெள்ளை, சிவப்பு நிறத்துடன் உக்ரைனின் நீலம், மஞ்சள் கொடியுடன் உள்ளது.

எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ரசெஸ்ஸோவின், சிவில் விமான நிலையம் வழியாக, மேற்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன, அதன்பின் கீவில் இருந்து மரியுபோல் வரை- முன்னணிப் பகுதிகளுக்குச் செல்கிறது.

போலந்தின் உயர்மட்ட இராணுவ ஆய்வாளர் மரேக் ஸ்வியர்சின்ஸ்கி இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், ரசெஸ்ஸோ ஆயுதங்களை மாற்றுவதற்கான “முக்கிய இடமாக” மாறியுள்ளது, இது ரஷ்யாவின் முன்னோக்கிய நடவடிக்கைகளை நிறுத்தியது.

இராணுவ உபகரணங்கள் ரசெஸ்ஸோ- ஜசியோன்கா விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அது டிரக்குகள் மற்றும் பிற உள்ளூர் வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஐரோப்பாவின் மிக நீளமான கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையான E40 வழியாக, உக்ரைனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

ரசெஸ்ஸோ அல்லது அங்கிருந்து வரும் கான்வாய்கள் மீது ரஷ்ய தாக்குதலின் அச்சுறுத்தல் எப்போதும் இருப்பதற்கான காரணமும் இதுதான்.

இதுவரை எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்றாலும்,” ரசெஸ்ஸோவின் செயல்பாடு இன்னும் ஆபத்தானது” என்று ஸ்வியர்சின்ஸ்கி கூறினார்.

மேலும் இராணுவ ஆய்வாளரின் கூற்றுப்படி, உக்ரைனின் 90 சதவீத ஆயுதங்கள் இன்னும் சோவியத் அல்லது ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவை. அன்டி-டேங்க் துப்பாக்கிகள் என்று வரும்போது, ​​​​அது உக்ரேனிய மற்றும் மேற்கத்திய தயாரிப்புகளுக்கு இடையில் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பும் பெரும்பாலானவை, அன்டி-டேங்க் மற்றும் அன்டி-ஏர் கிராஃப்ட் ஆயுதங்களாகும்.

ஆனால் போலந்து’ கிழக்கு முகாமின் ஒரு பகுதியாக இருந்ததால், சோவியத் யூனியனுடனான அதன் வரலாற்று தொடர்புகள் இந்த நேரத்தில் உக்ரைனுக்கு மகத்தான உதவியாக உள்ளன. “சோவியத் திறன் கொண்ட ஆயுதங்களைக் கொண்டிருந்த போலந்து போன்ற நாடுகள் மட்டுமே உக்ரைனுக்கு வெடிமருந்துகளை அனுப்ப உதவ முடியும்” என்று ஸ்வியர்சின்ஸ்கி கூறினார்.

ஒவ்வொரு நாடும் அனுப்பிய ஆயுதங்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் அமெரிக்கா மிகப்பெரிய பங்கை அனுப்பியுள்ளது, ஏற்கனவே 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவழித்துள்ளது. இங்கிலாந்தும் கூட, “அன்டி டேங்க் ஆயுதங்களை அனுப்பியுள்ளது, என்றார்.

ஆயுதங்கள் எதுவும் நேட்டோவால் அனுப்பப்படவில்லை, ஆனால் அதன் சில உறுப்பு நாடுகளால் அனுப்பப்பட்டது என்று ஸ்வியர்சின்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

கடந்த சில வாரங்களாக எல்விவில் இருக்கும் அட்லாண்டிக் கவுன்சிலின் உலகளாவிய விவகார ஆய்வாளர் மைக்கேல் போசியுர்கிவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்: ஃபிளாக் ஜாக்கெட்டுகள் முதல் ஹெல்மெட் வரை, தரையிலிருந்து வான் ஏவுகணைகள் வரை அனைத்தும்-“மேற்கத்திய நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்குகின்றன. இவை உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் விஷயங்கள். ஆனால் உக்ரைன் உண்மையில் கேட்பது அதைவிட அதிகம்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, “இன்னும் நிறைய கேட்கிறார், மேலும் சில ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன”. முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட பிராந்திய பாதுகாப்புப் படைகளுக்கு கூட, “ஃப்ளாக் ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்கள் போன்ற எளிய விஷயங்கள் மிகவும் தேவைப்படுகின்றன” என்று கூறினார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ இந்த அளவிலான நடவடிக்கைக்கு தங்கள் தளவாட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக, போலந்தில் இராணுவம் மற்றும் இராணுவம் அல்லாத பணியாளர்களை வைத்துள்ளன. மேலும், சாலை வழிகளைத் தவிர, சில உபகரணங்கள் ரயில்கள் மூலம் அனுப்பப்படுவதாக தகவல்கள் உள்ளன, இது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.



Read in source website

 மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுயி என்ற கிராமத்தில் நடந்த வன்முறையில் 7 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 9 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணையும் தொடங்கியுள்ளது என்றாலும், அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும், எதிரிகளைப் பழிவாங்கும் போக்கு, பெண்கள், சிறார்களையும்கூட கொடூரமாகக் கொல்லும் அளவுக்குச் சென்றுள்ளது என்பதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
 பீர்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் பாது ஷேக் என்பவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் வகையில் நடந்த வன்முறையில்தான் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், இவர்கள் எரித்துக் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
 இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்தவர்கள்தான் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதன்படி, முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹுசைனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்சி சார்பின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தாலும், இதில் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 சம்பவம் நடைபெற்ற இரண்டாவது நாள் மம்தா பானர்ஜி, போக்டுயி கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உள்ளூர் மக்கள், இந்தப் படுகொலையில் ஈடுபட்டவர் அனருல் ஹுசைன்தான் என மம்தாவிடம் நேரடியாகக் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து, மாநில காவல்துறைத் தலைவருக்கு அனருல் ஹுசைனை கைது செய்யும்படி மம்தா உத்தரவிட்ட பின்னரே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 கொடூரமாக 9 பேர் கொலை செய்யப்பட்டு சுமார் 40 மணி நேரத்துக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், மாநில முதல்வர் உத்தரவிட்ட அடுத்த சில மணி நேரங்களில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவரைக் கைது செய்துள்ளனர். அப்படியானால், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்பதுதானே உண்மை? இந்த வழக்கில் மாநில காவல்துறையின் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 அரசியல் வன்முறைகளுக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல என்றாலும், மேற்கு வங்கத்தில் அது சற்று அதிகமாகவே காணப்படுவதை கடந்தகால வரலாறு உணர்த்துகிறது. "மேற்கு வங்கத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வன்முறை அரங்கேறுவது துரதிருஷ்டவசமானது' என்று கூறுகிறார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி.
 பீர்பூம் சம்பவத்துக்கு நேரடியான காரணம் தேர்தல் இல்லை என்றாலும், அரசியல்தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எத்தகைய குற்றச் செயலிலும் தயங்காமல் ஈடுபடுபவர்கள்,அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருக்கும் தைரியத்தில்தான் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றன.
 அரசியல் வன்முறை என்பது வங்காளத்துக்கு புதிதொன்றுமல்ல. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் நடந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அவலம் இது. முந்தைய சித்தார்த் சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும், ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியிலும் இதேபோல அரசியல் வன்முறைகள் நிகழ்ந்தன என்கிற உண்மையை மறந்துவிட முடியாது.
 உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, 2018 செப்டம்பர் மாதம் அரசியலில் குற்றவாளிகள் அதிகமாவதைத் தடுக்கும் நோக்கில் தீர்ப்பு வழங்கியது. 2020 பிப்ரவரியில் மற்றொரு வழக்கில் முந்தைய தீர்ப்பை மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம், புதிதாக மேலும் சில உத்தரவுகளையும் பிறப்பித்தது.
 அதன்படி, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை வேட்பாளர்களாக ஏன் தேர்வு செய்தோம் என்பதற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த விஷயத்தை சமூக ஊடகங்கள் வழியாக மக்களுக்கு எடுத்துச் செல்லவும் வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், மக்களவைத் தேர்தலுக்கும் மட்டும்தான் பொருந்தும் என எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசியலின் கீழ்நிலையிலிருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழ்நிலையிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்குபவர்கள்தான் படிப்படியாக வளர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி. என்று ஆகின்றனர். அரசியலை கீழ்நிலையிலேயே செம்மைப்படுத்த வேண்டியது அவசியம்.
 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றன. ஆனால், எத்தனை கட்சிகள் அத்தீர்ப்பை அமல்படுத்தின என்பது கேள்விக்குறியே. அதேபோல பீர்பூம் சம்பவத்திலிருந்தும் குறிப்பிட்ட கட்சி மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுமே பாடம் படிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் வருங்காலத்தில் இதுபோன்ற படுகொலைகளைத் தடுக்க முடியும்!



Read in source website

 கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூட மறுத்து வருகிறார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. "அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை' என்று முழக்கம் இடுகிறார்.
 காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் இவற்றின் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அண்டை மாநிலங்களின் அனுமதியோ மத்திய அரசின் அனுமதியோ பெறாமல் அணை கட்ட முற்படுவது எந்த வகையில் நியாயம்? கர்நாடக அரசினுடைய இந்தச்செயல்பாடு, தமிழகத்திற்கு இழைக்கப்படுகிற அநீதியாகும்.
 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத்திய அரசு கர்நாடக அரசுக்கு எவ்வித தொழில்நுட்ப அனுமதியோ சுற்றுச்சூழல் அனுமதியோ அளிக்கக் கூடாது என்றும், காவிரிநீர் மேலாண்மை ஆணையம் மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 காவிரிநீரை தமிழ்நாடு பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், காவிரியில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி வருவது சர்வாதிகாரப் போக்கு இல்லையா? இதன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறுகிறது கர்நாடக அரசு. மேக்கேதாட்டில் அணை கட்டி, தமிழகத்திற்கு காவிரிநீர் செல்வதைத் தடுக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்குதான் கர்நாடகத்துக்கு இருக்கிறது.
 மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால் காவிரிப் படுகையில் உள்ள 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி அழிந்து விடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை கர்நாடக அரசு. "மத்திய அரசில் பத்து ஆண்டு காலம் திமுக அங்கம் வகித்தபோது, காங்கிரஸ் துணையோடு காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம்' என்றும், "அதிமுக, பாஜக அரசின் கூட்டணியில் இருந்தபோது இப்பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்' என்றும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில உரிமைகளை உரசிப் பார்க்கிற செயல்தான் நடந்து கொண்டிருக்கிறது.
 நடுவர்மன்ற தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளும் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழகத்தின் கடமை. சட்டத்தையும், அண்டை மாநில உணர்வுகளையும் மதிக்க மாட்டோம் என்ற முடிவோடு கர்நாடக அரசு செயல்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காதா?
 கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, "மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை' என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது. மேலும், மேக்கேதாட்டு அணை, பெங்களூரு குடிநீர் திட்டம் இவற்றுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. மேக்கேதாட்டு அணை பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவது சட்டவிரோத செயல் அல்லவா?
 தமிழகத்தின் கடைமடைப் பகுதி வரை பாய்கின்ற காவிரியில் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்ட முயல்வது உச்சநீதிமன்றத்தை மதிக்காத போக்கையே காட்டுகிறது. இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாகவே கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட முயன்று வருகிறது.1980-ஆம் ஆண்டில் கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டு ராவ் இருந்தார். அப்போதுதான் மேக்கேதாட்டில் அணைகட்டும் திட்டத்துக்கு அடித்தளம் போடப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
 மீண்டும் 2012-இல் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது. மீறி கட்டினால் சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அந்த மனுவுக்கு பதில் அளித்த கர்நாடக அரசு, "மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டாலும், தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீரின் அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று கூறியது. கர்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேறும் நீர், கபினி அணைக்குச் சென்று அங்கிருந்து தமிழக எல்லையான பிலுகுண்டுலு என்ற இடத்திற்கு வருகிறது. பிலுகுண்டுலுவில்தான் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவிடப்படுகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டினால், தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடைபடாதா?
 காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு எப்போதுமே திறந்து விட்டதில்லை. கர்நாடகத்தில் அதிக அளவு மழை பொழிந்து அணை நிரம்பி வழிந்தால் மட்டுமே, வேறு வழியின்றி உபரிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் 11 மாவட்டங்கள், குடிநீருக்கும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் காவிரி நீரையே நம்பியிருக்கின்றன.
 தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்குமான காவிரிநீர் பிரச்னை அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்திற்கும் உரிமை உண்டு என்று ஒப்பந்தம் இருந்தாலும், கர்நாடக அரசு அதனை ஏற்காமல், "எங்களுக்கு வேண்டிய தண்ணீரே கிடைக்கவில்லை. பின்பு நாங்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும்? தமிழகத்திற்கு உரிமை உண்டு என்கிற ஒப்பந்தம் எல்லாம் முடிந்து விட்டது' என்று சொல்கிறது. இது எந்த வகையில் நியாயம்?
 காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை, கர்நாடகத்தில் குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சித்தராமையா அனைவரும் ஒரே அணியில் நிற்கிறார்கள். தமிழகத்திற்கான தண்ணீரைத் தந்து விடக்கூடாது என்பதற்காக கர்நாடக அரசு பின்னும் ஒரு மாயவலைதான் இந்த மேக்கேதாட்டு அணை பிரச்னை.
 கர்நாடக உள்துறை அமைச்சர் "தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேக்கேதாட்டில் அணை கட்ட தடை விதிக்கவில்லை. ஆகவே, அணை கட்டியே தீருவோம். அணை கட்டும் பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டோம்' என்கிறார்.
 நதி ஒரு தேசிய சொத்து. அது உற்பத்தியாகிற இடத்தை விட போய்ச் சேருகிற இடத்திற்குத்தான் அதிக உரிமை இருக்கிறது என்கிறது நதிநீர் தாவா ஷரத்து. நடுவர் மன்ற தீர்ப்பிலும் இது குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், எங்கள் மாநிலத்தில் அணை கட்டுவதற்கு நாங்கள் யாரைக் கேட்க வேண்டும் என்கிறார் பசவராஜ் பொம்மை. ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய போக்கு நல்லதா?
 கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை 49 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது. ஆனால், மேக்கேதாட்டு அணையில் 67.16 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசால் தேக்கி வைக்க முடியும். இதனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காத நிலை ஏற்படும். இந்த அடிப்படை உண்மையைக் கூட கர்நாடக அரசு ஏற்க மறுக்கிறது.
 காவிரிநீர் பிரச்னையில், சென்னை மகாணம் -  மைசூர் சமஸ்தான ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு -கர்நாடக அரசு பேச்சுவார்த்தைகள், நடுவர் மன்றத் தீர்ப்புகள், உச்சநீதிமன்ற உத்தரவுகள் என்று பல கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறோம். நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி கர்நாடக அரசு நடந்து கொண்டிருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு 174.75 டிஎம்சி தண்ணீர்தானே கிடைக்கிறது?
 கடந்த ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருகி வந்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி விட்டது.
 துயரத்தை சுமந்து கொண்டிருக்கின்ற விவசாயிகள், தங்கள் கண்ணீரைத் துடைப்பதற்கு ஒரு கரம் நீளுமா, ஆறுதல் வார்த்தை கேட்குமா என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை என்கிற இன்னொரு பூதம் வந்து விவசாயிகளை அச்சுறுத்துகிறது.
 1970-ஆம் ஆண்டு கணக்கின்படி காவிரியில் கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பரப்பு சுமார் 7 லட்சம் ஏக்கர், தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம் சுமார் 30 லட்சம் ஏக்கர். இன்று கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 25 லட்சம் ஏக்கருக்கும் மேலாக கூடி விட்டது. நீர்த்தேக்கங்கள் மூலமாக 20 லட்சம் ஏக்கர், ஏரிகள், குட்டைகள் மூலமாக 2 லட்சம் ஏக்கர், அணைக்கட்டுகள் மூலமாக 2.67 ஏக்கர் என்று பாசனப் பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறது கர்நாடகம்.
 தமிழ்நாட்டின் தற்போதைய காவிரிப் பாசனப் பரப்பு 20 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது. தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர், நந்தலாறு, நட்டாறு, வஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரிவிடையான் ஆறு ஆகிய ஏழு ஆறுகளின் மூலம் கிடைக்கிறது. இதனால் காரைக்கால் பகுதிகளில் விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட புதுச்சேரிக்கு கிடைக்காது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கூறுகிறோம்.
 காவிரி ஆறு கர்நாடகத்தில் 320 கி.மீ. தொலைவும், தமிழகத்தில் 416 கி.மீ. தொலைவும் பயணிக்கிறது என்பதையும், சங்க காலம் முதலே காவிரிக்கு தமிழகத்தோடு தொடர்பு உண்டு என்பதையும் கர்நாடக அரசு புரிந்து கொண்டு, இந்த தொப்புள் கொடி உறவை அறுத்து விடக்கூடாது. வேருக்கு வெந்நீரையும், விவசாயிக்கு கண்ணீரையும் தந்து விடக்கூடாது.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.



Read in source website

 

இலங்கைத் திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர்பெற்ற இயற்கையான துறைமுகம். இங்குள்ள கோட்டை முக்கியமானது.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அடுத்த வகையில் இலங்கையில் திருகோணமலை துறைமுகம் இருக்கிறது. இந்தத் துறைமுகத்தை இந்து மகா சமுத்திரத்தின் சாவி என்றுகூட சொல்வார்கள்.

மலைகளால் சூழ்ந்த இயற்கை வளமிக்க இந்தத் துறைமுகத்தில் ஒருபக்கத்தில் இருக்கிற கப்பலுக்கு, அருகிலுள்ள மற்றொரு கப்பல்கூட கண்ணுக்குப் புலப்படாது. அப்படிப்பட்ட இயற்கை துறைமுகம்.

இயற்கை வளம் கொண்ட கடல் சூழ்ந்த நகரம். இந்த நகரத்தை 1970களில் அமெரிக்க அதிபராக நிக்சன் இருக்கும்போது, திருகோணமலை துறைமுகத்தை எண்ணெய் கிடங்கில் அமைக்கவும், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (voice of america) மற்றும் அமெரிக்காவின் ஒரு கேந்திரத்தை வைக்கவும் முயற்சிகள் நடந்தன. இருப்பினும், பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இந்தியா-ரஷியா ஒப்பந்தத்தால் அது முறியடிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் சமீபத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்தில் இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது முக்கியமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.

திருகோணமலையில் தென் பகுதியில் அமைய இருந்த சம்பூர் மின் உற்பத்தி நிலைய திட்டம் ஈழ மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. பின் வேறு பகுதிக்கு அத்திட்டம் மாற்றப்பட்டது. அங்கே நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னைகள் என பல்வேறு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் திரிகோணமலையை குறித்து இருந்தாலும், சீனாவும் அதற்குச் சமமாக தங்களுடைய இருப்பைத் திருகோணமலையில் காட்டி வருகிறது.

திருகோணமலை நகரம் அரசியல், சமூக, வரலாற்று ரீதியான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மாகாண சபைகள் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தலைநகராகவும் இந்நகர் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தது.

குறிப்பாக, இலங்கையின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்நகரின்  இயற்கைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி, போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஷார் மற்றும் பிரஞ்சுக்காரர்களும் காலத்திற்கு காலம் இந்நகரத்தினையும், இயற்கை துறைமுகத்தினையும், இப்பகுதியில் அமைக்கப்பட்ட பிரெட்ரிக் கோட்டை பிரதேசத்தினை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்க மேற்கொண்ட முயற்சிகள் வரலாறு மறக்க முடியாத சம்பவங்கள்.

இத்தகைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையினாலேயே இப்பெரு நகரம் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களின் குண்டுவீச்சுக்கு உள்ளாகியது.

அரசியல் ரீதியில் மட்டுமின்றி ஆன்மிகத்திலும் இந்நகரின் சிறப்பு மேலோங்கி இருந்துள்ளது.

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் ரோமாபுரி’ என இந்நகரின் சிறப்பினை ஹரஸ் பாதிரியார் ஏற்றிப் போற்றியுள்ளார். ‘கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே’ எனவும், தேவாரம் பாடியவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்நகரின் சிறப்பினை வர்ணித்துள்ளனர். இதுமட்டுமன்றி ‘குரைகடலோத நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே’ என்ற தேவார பாடல் வரிகளும் திருகோணமலையின் அன்றைய பொருளாதாரச் செழிப்பினை எடுத்துரைப்பதாக உள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதாவது 1865-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி முறை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இம்முறையின் கீழ் உள்ளாட்சி சபை, சுகாதார சபை என இரண்டுவித சபைகள் இலங்கை அரசியலில் ஆரம்ப காலத்திலிருந்தே நிறுவப்பட்டன. ஆயினும் திருகோணமலையைப் பொருத்தவரை உள்ளாட்சி சபையே தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்துள்ளது.

14.11.1925 ஆம் ஆண்டு தேசிய உள்ளாட்சி சபைகளின் உத்தரவுபடி 16.12.1932 -ல், அடுத்து 1939 ஆம் ஆண்டிலிருந்து இச்சபை நகர அபிவிருத்தி சபை (U D C) ஆக உயர்வு பெற்றது. இச்சபையின் தலைவராக ரகசிய வாக்கெடுப்பு மூலம் டி. இராஜரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரி.பாலசுப்பிரமணியம் (முகாந்திரம்) உபதலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்று ரீதியாக குறிப்பிடத்தக்க வகையிலான இப்பெரு நகரம் 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி உள்ளூர் நிர்வாக ஆட்சியமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடந்து 1957 ஆம் ஆண்டு அர்பன் கவுன்சில் என அழைக்கப்படும் பெரும் நகராட்சி மன்றமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்நகரசபையானது 7.5 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. திருகோணமலை தமிழர்களுடைய புண்ணியஸ்தலம்.

திருஞானசம்பந்தர் அருளிய திருக்கோணமலைத் திருப்பதிகம் முதல் இரண்டு பாக்கள்…

1

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி

வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்

கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்

குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.

2

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்

பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்

கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து

குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே

இரண்டு மலைகளுக்கு இடையில்தான் ராவணன் வதம் செய்யப்பட்டார் என்கிற ஒரு நம்பிக்கையான கருத்தைச் சொல்கிறார்கள். மேலும்,  இந்தக் கோயிலைச் சுற்றி இந்து மக்களை வேதனைப்படுத்துகின்ற வகையில், பல்வேறு ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன

திருகோணமலையின் பதிவுசெய்யப்பட்ட வரலாறு இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது, நவீனத்திற்கு முந்தைய காலத்தில் கோணேஸ்வரம் கோயிலுடன் தொடர்புடைய குடிமக்கள் குடியேற்றத்தில் இருந்து தொடங்குகிறது. ஆசியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான இது தென்கிழக்கு ஆசியாவுடனான தீவின் சர்வதேச வர்த்தக வரலாற்றில் ஒரு முக்கிய கடல் துறைமுகமாக செயல்பட்டது.

அகத்தியரால் நிறுவப்பட்ட சித்தர் தமிழ் மருத்துவப் பல்கலைக்கழகமான "அகத்தியர் தாபனம்" என்ற ஆசியாவின் ஆரம்பகால மருத்துவ ஆராய்ச்சிகளில் சில அதன் புறநகர் கிராமமான கன்குவேலியில் இருந்து கண்டம் முழுவதும் தமிழ் தாம்ரபரணியன் கலாச்சாரத்தைப் பரப்ப உதவியது. பண்டைய உலகில், இது அனுராதபுர ராஜ்யத்தின் கீழ் வளர்ந்து வரும் வன்னி நாட்டின் கிழக்கு ராஜ்யங்களின் தலைநகராக தொடர்ச்சியாக இருந்தது.

பல்லவ வம்சம், சோழ வம்சம், பாண்டிய வம்சம், வன்னிமைத் தலைவர்கள் மற்றும் யாழ்ப்பாண ராஜ்யம் கோணேஸ்வரம் ஆலயத்தின் வருவாய் மூலம் 1620 இல் டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிப் போரின் போரைத் தொடர்ந்து 1795 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து  யாழ்ப்பாண ராஜ்யத்தை போர்த்துகேயர் கைப்பற்றியதைத் தொடர்ந்து கோட்டை துறைமுக நகரமாக மாற்றப்பட்டபோது திருகோணமலையின் நகரமயமாக்கல் தொடர்ந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் 1815 ஆம் ஆண்டு சிலோன் மாநிலமாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நகரத்தின் கட்டடக் கலைகள் பூர்விக மற்றும் ஐரோப்பிய பாணிகளுக்கு இடையிலான தொடர்புகளின் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறது.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் பெருங்கடல் தாக்குதலின் ஒரு பகுதியாக ஜப்பானியர்களால் தாக்கப்பட்டது . பின், 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான அரசியல் உறவு மோசமடைந்து உள்நாட்டுப் போராக வெடித்தபோது நகரமும் மாவட்டமும் பாதிக்கப்பட்டன.

திருகோணமலை காரிசனில் உள்ள முக்கிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களைக் கொண்டுள்ள இந்த நகரம், தீவின் மிகப் பெரிய டச்சு கோட்டையையும் கொண்டுள்ளது.

திருகோணமலை வளைகுடா என்பது தெற்கே மகாவில்லி கங்கை ஆற்றின் பாலம், சமஸ்கிருதத்தில் வரலாற்று "கோகர்ணம்", "பசுவின் காது" என்றும் பொருள்படுகிறது.

மேலும், இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் சிவ வழிபாட்டின் மற்ற தலங்களைப் போன்றது.

தனித்துவமாக, திருகோணமலை ஒரு பஞ்ச ஈஸ்வரம், ஒரு பாடல் பெற்ற தலமாகவும் இலங்கையில் உள்ள முருகனின் மகா சக்தி  பீடம் என்றும்  ’தட்சிணா-பின் கைலாசம்’ அல்லது ’தெற்கின் கைலாச மலை’ மற்றும் ’கிழக்கத்திய பாகன்களின் ரோம்’ என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, பெரிய அளவு கொண்ட அதன் துறைமுகத்தால் புகழ் பெற்றது. இந்தியப் பெருங்கடலில் உள்ள மற்றதைப்போல் அல்லாமல், இது அனைத்து வானிலைகளிலும் அனைத்து கைவினைப் பொருட்களுக்கும் அணுகக்கூடியது. 

’உலகின் மிகச்சிறந்த துறைமுகம்’ என்றும், ஆங்கிலேயர்களால், உலகின் மிக மதிப்புமிக்க காலனித்துவ உடைமை என்றும், நமது இந்தியப் பேரரசுக்கு வேறெங்கும் இருந்து அனுபவிக்காத பாதுகாப்பைக் கொடுப்பது" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் அமைந்துள்ள உப்புவேலி, சல்லி, நிலாவெளி, கோயில் வருகைகள், சர்ஃபிங் , ஸ்கூபா டைவிங் , மீன்பிடித்தல் மற்றும் திமிங்கலத்தைப் பார்ப்பது மற்றும் கன்னியா வெந்நீர் ஊற்று ஆகியவை பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.

திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழகம், பல நூற்றாண்டுகளாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கவிதைகள், திரைப்படங்கள், இசை மற்றும் இலக்கியம் ஆகிய செயல்பாட்டிற்கு உத்வேகம் அளித்துள்ளது.

மூன்றாம் குலோத்துங்கன் (பொது ஆண்டு 1178 - 1218) - ஈழத்தை நிலைநிறுத்திய வேந்து, சோழப் பேரரசின் இறுதி நட்சத்திரம் என்று கூறப்படும் இந்த அரசன் வெற்றி மேல் வெற்றி பெற்று முதிய வயதில், தனது இறுதிக் காலத்தில் புதிதாக எழுச்சி பெற்றுவந்த பாண்டியர்களிடம் தோல்வியைக் கண்டான்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் தோல்வியுற்று (பொது ஆண்டு 1216-1217) அவன் தங்கியிருந்த பொன்னமராவதிக்கு பாண்டியருக்குக் கட்டுப்பட்ட அரசாக சோழநாடு இருப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கத் தனது முதிய வயதில் மூன்றாம் குலோத்துங்கனும், பின்னர் ஆட்சிக்கு வந்த அவன் மகன் மூன்றாம் ராஜராஜனும் செல்லும் காட்சியை யோசிக்கும்போது ஒரு காவியத் துயரம் ஏற்படுகிறது.

ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் இதற்கு முன்னரே பொது ஆண்டு 1215 இல் இலங்கையில் கலிங்க மாகோன் ஆட்சியேற உதவிபுரிந்து வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வலிமையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான் என்பது சென்ற ஆண்டு திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

திருகோணமலையில் இருந்த குலோத்துங்க சோழ காலிங்கராயன் என்னும் அதிகாரி, கலிங்க மாகோனுக்கு வீராபிஷேகம் செய்த செய்தியை அந்தக் கல்வெட்டு கூறுகிறது. முக்கியமாக, பாண்டிய மன்னர்களின் பங்களிப்பையும் நினைவுபடுத்த வேண்டும்.

                                                                                                                                   (தொடரும்)



Read in source website

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி நகரங்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணமும் அங்குள்ள முன்னணித் தொழில் நிறுவனங்களோடு அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் புதிய முதலீடுகளையும் புதிய வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தந்திருக்கின்றன.

அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர், இந்தப் பயணத்தில் முதற்கட்டமாக ரூ.6,100 கோடி மதிப்பிலான தொழில்கள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கவுள்ள 3 தொழில்கள் 5,000 வேலைகளை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ள நிலையில், அந்நிய நேரடி முதலீடுகளின் வழியாக அதை விரைந்து செய்துமுடிக்க முதல்வர் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் துபாயில் நடத்தப்படும் தொழில் கண்காட்சிகளில் பங்குபெறுவதிலும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றன. சமீப காலமாக, தென்னிந்திய மாநிலங்கள் இம்முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. வணிகரீதியாக மட்டுமின்றி, கலாச்சாரரீதியாகவும் தென்னிந்தியாவுக்கும் ஐக்கிய அமீரகத்துக்கும் இடையே ஒரு பிணைப்பு வலுப்பட்டுவருகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்னால் தொழில் கண்காட்சி தொடங்கியபோது, துபாயின் உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நவராத்திரியையொட்டி தெலங்கானாவின் மலர்த் திருவிழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கில் இசையமைத்த பாடலும் அப்போது அங்கு ஒலிபரப்பப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கண்காட்சியில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேச மாநிலம் ரூ.10,350 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இக்கண்காட்சியில் பங்கேற்றார். மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தமிழ்நாடும் தன்னை இம்முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பது காலத்தே எடுத்த மிகச் சரியான முடிவு.

தமிழ்நாடு முதல்வரின் இப்பயணத்தில் உணவு பதப்படுத்துதல், ஜவுளி, உள்கட்டமைப்பு என்று பல்வேறு தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தாலும் மின்சக்தியால் இயங்கும் வாகன உற்பத்தித் தொழில்துறையில் முதலீடுகள் செய்யுமாறு அவர் விடுத்திருக்கும் அழைப்பு மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டது.

வாகன உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணித் தொழில் நகரமாக விளங்கிவரும் சென்னை, அடுத்த வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதிகரித்துவரும் பெட்ரோலிய எரிபொருட்களின் தேவையைக் குறைப்பதற்காக, உலகம் முழுவதுமே மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம்காட்டப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அத்தகைய ஒரு தொலைநோக்குத் திட்டத்துக்கு முதல்வரின் இந்த நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் வித்திட்டுள்ளது.



Read in source website

எளிய மக்கள் வசிக்கும் இடம் என்பதாலோ என்னவோ, கண்ணகி நகர் என்றாலே போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்கள் பற்றிய கதைகளுடன் அதனை இணைத்துப் பார்ப்பதே சமூகத்தின் பொதுப்புத்தியாக இருந்துவந்தது. இந்தப் போக்கை அங்கே வரையப்பட்டு இருக்கும் வண்ணமயமான சுவரோவியங்கள் மாற்றியமைத்து உள்ளன. இன்று கண்ணகி நகர் என்றாலே, அதன் பிரமாண்டமான ஓவியங்களே நம் மனத்தினுள் முதலில் விரிகின்றன. சென்னை மாநகராட்சியின் அழைப்பின் பேரில், கண்ணகி நகரைக் கலை நகரமாக மாற்றும் முயற்சியில் 'ஸ்டார்ட் ஆர்ட் இந்தியா பவுண்டேசன்' எனும் அமைப்பு ஈடுபட்டதால் ஏற்பட்ட மாற்றம் இது.

உதிர்ந்த வண்ணமும், இடிந்த சுவருமாய் இருந்த கண்ணகி நகர் குடியிருப்புகள் வண்ணமயமான சுவரோவியங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளன. அங்கே வசிக்கும் எளிய மக்களின் அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அந்தச் சுவர் ஓவியங்கள், அவர்களின் வாழ்வுக்குப் புது அர்த்தம் சேர்த்துள்ளன; உத்வேகமும் அளித்துள்ளன; இதன் நீட்சியாக, கண்ணகி நகரைக் குறித்த சமூகத்தின் பார்வையும் சற்றே மாறியிருப்பது போன்ற பிம்பமும் இன்று கட்டமைந்து வருகிறது.

கண்ணகி நகரின் அமைப்பு

சென்னை புறநகர்ப் பகுதியில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் ஐடி எக்ஸ்பிரஸ் ஹைவேக்கும் இடையில், செல்வச் செழிப்பைப் பறைசாற்றி வானுயர வளர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஊடே ஒளிந்து நிற்கிறது கண்ணகி நகர். இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்றப் பகுதி இது. அங்கிருக்கும் 24,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். நகரத்தின் நவீனத்துவமும் மிக அருகாமையில் இருக்கும்போதும், இந்த புறநகர்ப் பகுதி நகரத்தின் கூறுகளுக்கு மிகவும் அந்நியப்பட்டே நிற்கின்றது.

துரைப்பாக்கத்தில் இருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளைக் கடந்து செல்லும்போது, சட்டென கண்ணகி நகர் நம் கண்முன்னே விரிந்து நிற்கிறது. மிகுந்த விசாலமான பரப்பைக் கொண்டதாக இருக்கும் இந்தப் பகுதியின் நுழைவு பகுதியிலேயே நகரப் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை இருக்கிறது. அதிலிருந்து சில அடி தூரத்தில் அரசாங்க மருத்துவமனையும் இருக்கிறது. சாலைகள் அகலமாகவும், நல்ல தரமானதாகவுமே இருக்கின்றன. அந்தச் சாலையின் இறுதியில், ஒரு பெரிய பூங்கா இருக்கின்றது.

ஜன்னலை எப்படித் திறப்பது?

நான் சென்றபோது, அந்தப் பூங்காவுக்கு உள்ளும், வெளியும் மக்கள் அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தனர். சிலர் சிந்தனையில் மூழ்கியபடி தனியே அமர்ந்தும் இருந்தனர். சுவரோவியங்கள் வரையும் இடம் எங்கே இருக்கிறது என்று அங்கே இருந்த ஒருவரிடம் குறித்துக் கேட்டபோது, எவ்வித உணர்ச்சியுமின்றி எனக்கு வழிகாட்டினார். அதைக் கவனித்தபடி அமைதியாக அமர்ந்திருந்த ஒரு நபர், "நீங்கள் யார்?" என்று என்னிடம் கேட்டார். கேள்வி கேட்டவரின் பெயர் ஆல்பர்ட், அவருக்குச் சுமார் 35 வயது இருக்கலாம்.

என்னை அறிமுகப்படுத்திய பின்னர், அவரிடம் சுவரோவியங்கள் குறித்துக் கேட்டேன். "அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத சூழலில் வாழும் எங்களுக்கு இந்த ஓவியங்களால் என்னப் பயன்? குடியிருப்புகளுக்குத் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வழியில்லை. ஜன்னலைத் திறந்தாலே நாற்றமும், கொசுக்களும் சேர்ந்து எங்களைத் தாக்குகின்றன. இந்த நிலையில், நாங்கள் எங்கே ஜன்னலைத் திறப்பது, ஓவியங்களை ரசிப்பது" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். அவர் ஆதங்கத்தின் நியாயமும் வேதனையும் அவர் குரலில் அழுத்தமாக எதிரொலித்தன.

ஓவியங்களின் ஊடே தேங்கி நிற்கும் கழிவுநீர்

அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரில் இருக்கும் கட்டிடத்தில், அழகான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த ஓவியங்கள் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை இணைப்பதாக இருந்தன. அந்த ஓவியத்தின் அழகில் மயங்கி அருகில் செல்லும்போதுதான், அந்தக் கட்டிடங்களுக்கு இடையே தேங்கி நிற்கும் கழிவுநீர் கண்ணில்பட்டது. அதன் நாற்றம் சுவாசத்தை நிறுத்தும் அளவுக்கு மூர்க்கமாக இருந்தது. அங்கிருந்து நகர எத்தனித்தபோது "பத்து ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதன் விளைவு இது" என்று சொன்னபடியே ஒரு முதியவர் அருகில் வந்தார். பாண்டியன் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர் "இந்தச் சுவரோவியங்கள் எங்கள் இருப்பிடத்துக்குப் புது அடையாளத்தை வழங்கியிருக்கின்றன. இப்போது தேர்தலும் முடிவடைந்துவிட்டதால், குடியிருப்பின் அவல நிலை விரைவில் மாறிவிடும்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டார்கள்

"அப்படி எல்லாம் இங்கே எதுவும் எளிதில் மாறிடாது. பத்தாண்டுகளுக்கும் முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்போதும் நிலை இப்படித்தான் இருக்கிறது. நாளையும் இது இப்படித்தான் இருக்கப் போகிறது" என்று அங்கிருந்த மற்றொருவர் பாண்டியனைக் கடிந்து பேசினார். அவர் பெயர் போஸ். வயது சுமார் 60 இருக்கலாம். மிகுந்த விரக்தியுடன் பேசத் தொடங்கியவர், "சொந்தவூரில் வாழும் அகதிகள் நாங்கள். எங்களை வேரோடு பிடுங்கி வந்து இங்கே எறிந்துவிட்டார்கள். சமுத்திரத்தை நம்பியிருந்த நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி கிடைத்த வேலையைச் செய்தபடி வயிற்றைக் கழுவித் திரிகிறோம். எங்கள் பிள்ளைகள் படித்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல முடியவில்லை. கண்ணகி நகர் என்கிற பெயரைப் பார்த்தவுடன் எங்கள் பிள்ளைகளை எந்த ஐடி நிறுவனமும் சேர்த்துக்கொள்வது இல்லை" என்று வேதனையுடன் கூறிவிட்டுச் சென்றார்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் தண்ணீர்

ஓவியம் வரையும் இடம் நோக்கி நகரத் தொடங்கியபோது, எதிரில் வந்த இருதயராணி "இந்த ஓவியங்களைப் பார்த்தால், எங்கள் குழந்தைகளுக்கும் ஓவியம் வரையும் ஆர்வம் ஏற்படும் சொல்கிறார்கள். அன்றாட பிரச்சினைகளில் அல்லாடும் எங்களின் நிலை இவர்களுக்குப் புரிந்திருந்தால், இவர்களால் இப்படிச் சொல்லியிருக்க முடியாது. வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசுத் தொல்லை வேறு. நான்கு நாட்களுக்கு ஒருமுறையே இங்கே தண்ணீர் வரும். அதையும் அடிப்பம்பின் மூலமே அடித்து எடுக்க வேண்டும். இது ஏன், நீண்ட மறியல் போராட்டத்துக்குப் பின்னரே எங்கள் பகுதிக்குப் போக்குவரத்து வசதியே கிடைத்தது. அதுவும் நாங்கள் இங்கு வந்து பத்தாண்டுகள் ஆன பின்னரே கிடைத்தது. இந்த ஓவியங்களில் கொட்டும் பணத்தையும், உழைப்பையும் இங்கிருக்கும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தலாம். அது குறித்து இவர்களுக்கு எங்கே அக்கறை இருக்கப் போகிறது. ஓவியம் வரைவதும், போட்டோ எடுப்பதும், வீடியோ எடுப்பதுமே இவர்களுக்கு முக்கியம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தண்ணீர் வருகிறது என்கிற குரல் கேட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் விரைந்து ஓடினார்.

அவர் கூறியபடியே அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில், கிரேனில் நின்றபடி ஓர் இளம்பெண் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியத்தில் அவர் பெயரும் எழுதப்பட்டு இருந்தது. கீழே நின்றுகொண்டிருந்த அவர் கணவர் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துக்கு அருகில், கழிவுநீர் தேங்கி நின்றுகொண்டிருந்தது. அவர் கையிருந்த வீடியோ மேல் நோக்கியதாக மட்டுமே இருந்தது. கீழே தேங்கி நிற்கும் கழிவுநீர் குறித்து எவ்வித பிரஞ்ஞையுமின்றி மனைவி வரையும் ஓவியத்தை அவர் ரசித்துக்கொண்டு இருந்தார்.

மீனை வெறுக்கும் மகள்

அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் (பெயர் சொல்ல விரும்பவில்லை) "சுனாமியிலிருந்து மீண்ட எங்களை, இந்தக் குழியில் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டார்கள். 16 வயதில் இங்கே வந்தேன். இன்று என்னுடைய மகளுக்கு 16 வயதாகிறது. மீன்பிடிக்கும் தொழிலே என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை இன்று வளர்ந்து நிற்கிறது. மீன் வாசனையைக் கூட வெறுக்கும் அளவுக்கும் அவர்கள் இருக்கிறார்கள். ஆத்ம திருப்திக்காக வெளியிலிருந்து மீன் வாங்கிவந்து விற்கும் என்னுடைய அம்மாவின் அருகில் செல்வதற்குக் கூட என்னுடைய மகள் தயங்குகிறாள். மீன் வாசனையை அந்த அளவுக்கு அவள் வெறுக்கிறாள்" என்று வேதனையுடன் கூறினார்.

இருப்பே கேள்விக்குறி

நகரமயமாக்கலின் கொடூரப் பிடியில் அகப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்து அங்கே வசிக்கும் மக்கள், அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் சூழலில் இன்றும் இருக்கின்றனர். பொருளாதார நெருக்கடி, வாழ்வாதார பிரச்சினைகள், அவர்களை ஏற்க மறுக்கும் சமூகத்தின் பொதுப்புத்தி போன்ற காரணங்களால் அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதைக் குறித்த முழுமையான புரிதலோ, அவர்களின் தேவை குறித்த தெளிவோ இன்றி அங்கே சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

ஓவியங்கள் மிகுந்த அழகுடன் உள்ளன. கண்களையும் மனத்தையும் கவர்கின்றன. ஆனால் குடிநீர், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் கூட முழுமையாக் கிடைக்காத நிலையிலிருக்கும் அந்த மக்களுக்கு இந்த வண்ண சுவரோவியங்கள் எவ்விதத்தில் பயனளிக்கும் என்பதுதான் தெரியவில்லை.

> தொடர்புக்கு mohamed.hushain@hindutamil.co.in



Read in source website

சென்னை மாநகரம் தொடங்கி, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களை புல்டோசர்களால் இடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்குத் திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அத்தகு பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்துவது முதல் கடமையாகும். நடைபெறும் நிகழ்வுகளோ அதற்கு எதிர்திசையில் செல்லத் தொடங்கியுள்ளதாக உணர முடிகிறது.

நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மேய்க்கால், அரசு நிலங்களில் குடியிருக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என வரையறுத்து, ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றுங்கள் எனத் தினந்தோறும் தமிழ்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.186, வருவாய் நிலையாணை எண்.24-ன்படி மேய்க்கால், ஆட்சேபணையற்ற அரசு நிலங்களை வகைமாற்றம் செய்து, மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்க வழிவகை உள்ளது. இவ்வாறு வகைமாற்றம் செய்து ஒப்படைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்துவரும் குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன.

“தமிழ்நாடு அரசு மக்களுக்குச் சாதகமாக இருக்கிறது, நீதிமன்ற உத்தரவை மீறி ஏதும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்” என்று சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3,000 குடும்பங்கள் வாழ்விட உரிமையை உறுதிசெய்துகொள்வதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவருகின்றன. திமுக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்வதற்காக மக்களோடு மக்களாக அனைத்துக் கட்சிகள், அமைப்புகளுடன் போராடிவருகின்றனர்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், பெத்தேல் நகர் தொடர்பான பொதுநல வழக்கு சார்ந்த விசாரணையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் பெத்தேல் நகர் பகுதி வீடுகளை இடித்துத் தள்ளவும் மின்இணைப்புகளைத் துண்டிக்கவும் உத்தரவிட்டபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்வினை ஆற்றவில்லை. மக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் (85 வயது), நேரடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தி, மக்களின் வாழ்விட உரிமைக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். இப்படிப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் மக்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்காமல் இருப்பது முரணாக இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் அன்றைய தலைவர் மு.அப்பாவு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய நில நிர்வாகம் குறித்த குழு (2008-2009) மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி, விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பித்தது. அதில், மேய்க்கால் புறம்போக்கில் குடியிருக்கும் பெத்தேல் நகர் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி, அரசு நடவடிக்கையின் பேரில் பெத்தேல் நகர் பகுதி மக்களுக்குப் பட்டா கொடுப்பதில் உள்ள சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும், பெத்தேல் நகர் போன்று ஏழை எளிய மக்களின் வாழ்விட உரிமையானது, பொதுநல வழக்குகளின் பெயரால் நீதிமன்றத்தில் தடைசெய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

சென்னை ராமாபுரம் திருமலை நகர் பகுதியில், மக்கள் குடியிருந்த இடத்தை தமிழ்நாடு அரசு வகை மாற்றம் செய்து தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் விற்பனைப் பத்திரம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தனியொருவர் தொடுத்த பொதுநல வழக்கில், அப்பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ‘‘ஒருவர் வறுமையில் இருக்கிறார் என்பதற்காக அங்கீகரிக்கப்படாத இடங்களில் குடியிருக்கும் மக்களின் வீடுகளை இடித்து அகற்றும்போது, மாற்றுக் குடியிருப்பு வழங்கக் கூடாது" என்கிற வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 1947-ல் அமைக்கப்பட்ட ‘நகர மேம்பாட்டு அறக்கட்டளை’ (City Improvement Trust) நீர்நிலைப் பகுதிகள், பல்வேறு வகை நிலங்களை வகை மாற்றம் செய்து உயர்தர, நடுத்தர குடியிருப்புகள், தனிநபர் பங்களாக்கள் கட்டுவதற்கு வழிவகை செய்தது. இந்தப் பகுதிகளை இப்போது ஆக்கிரமிப்பு என வரையறுக்க முடியுமா?

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் முகப்பேர், நெற்குன்றம் பகுதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் நீர்நிலைகளின் மீதுதான் கட்டப்பட்டுள்ளன. இது குறித்துப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலர்கள் எழுப்பிய கோரிக்கைகளும் விமர்சனங்களும் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், முதலீடுகளை ஈர்க்கவும், கடன்களை வாங்கவும் மாநில அரசு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த முதலீடுகளும் கடன்களும் ஏழை எளிய மக்களின் வாழ்விடத்தைக் குறிபார்த்துச் சூறையாடுவதற்கு வழிவகுக்கக் கூடாது. அது எந்த வழியில், எந்தத் தளங்களில் வந்தாலும் அவற்றை ‘மக்கள் நல அரசு’ என்கிற திசைவழியிலேயே எதிர்கொள்ள வேண்டும்.

இன்று மனிதவளக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு அடிப்படையான காரணம், ‘மக்கள் நல அரசு’ (welfare state) என்கிற அடிப்படையில் திமுக, அதிமுக அரசுகள் மேற்கொண்ட மக்கள் நலத் திட்டங்கள்தான். அதில் வாழ்விட உரிமை அடிப்படையானது. இலவச குடிமனைப் பட்டா, வறிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், ஓலைக் குடிசைகளில் வசித்த மக்களுக்கு அந்தப் பகுதியிலேயே தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு, ஆட்சேபணையற்ற - ஆட்சேபணை உள்ள குடியிருப்புகளைப் பிரித்து, ஆட்சேபணையற்ற பகுதிகளுக்கு நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்கியது, ஆட்சேபணை உள்ள பகுதியில் குடியிருந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கியது எனப் பல முன்னோடித் திட்டங்கள் முக்கியமானவையாக உள்ளன.

இந்த வரலாற்றின் அடிப்படையில், கடந்த கால அரசுகளின் வழிகாட்டு ஆவணங்கள் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் வழக்காட தமிழ்நாடு அரசு வழிகாட்ட வேண்டும். மக்களின் வாழ்விட உரிமைகள் நீதிமன்றங்களில் விவாதத்துக்கு உள்ளாக்கப்படும்போது அரசின் சமூகநீதி சார்ந்த நிலைப்பாடுகளை, கொள்கை முடிவுகளை எடுத்துரைத்து எளிய மக்களின் வாழ்விட உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அரசு வழக்கறிஞர்கள் முன்நிற்பதுதானே சரியாக இருக்கும்.

- ஜி.செல்வா, மாவட்டச் செயலாளர், சிபிஐ-எம், மத்திய சென்னை. தொடர்புக்கு: selvacpim@gmail.com



Read in source website

ஒளிப்படக் கலைக்கு உலக அளவில் வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளுள் ஒன்றான ‘வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ’ விருதுக்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து தேர்வாகியிருக்கும் நால்வருள் மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரனும் ஒருவர். மேலும், இந்த விருதின் உலக அளவிலான பிரிவுக்கான பரிசீலனையிலும் செந்தில் குமரனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. நேஷனல் ஜியாகிரபிக் சொஸைட்டியின் ‘எமெர்ஜிங் எக்ஸ்ப்ளோரர் விருது’ உள்ளிட்ட 20 சர்வதேச அங்கீகாரங்கள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. ‘நேஷனல் ஜியாகிரபிக்’, ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட இதழ்களில் இவருடைய படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆவண ஒளிப்படக் கலைஞரான செந்தில் குமரனுடன் உரையாடியதிலிருந்து…

இந்தப் பயணம் எப்படித் தொடங்கியது?

சிறு வயதிலிருந்து எனக்குக் காட்சிக் கலையில் விருப்பம் அதிகம் என்பதால் ஒளிப்படக் கலைத் துறைக்கு வந்தேன். நானாகவேதான் கற்றுக்கொண்டேன். ஒளிப்படங்கள் சார்ந்து பயணங்கள் செல்வதற்கும் படச்சுருள்கள் வாங்குவதற்குமான செலவுகளுக்காக நான் 2001-ல் தொழில்முறையில் ஒளிப்படங்கள் எடுத்துத்தரத் தொடங்கினேன். சிறிய விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தினேன்.

இந்தியாவில் பல இடங்களுக்கு நான் மேற்கொண்ட பயணங்கள்தான் சமூகம் பற்றியும் மக்களைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவின. இதன் தொடர்ச்சியாகத்தான் நான் எடுத்த ஒளிப்பட வரிசைகளும் அமைந்தன. 2005-06 வாக்கில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒளிப்பட வரிசை. பிறகு திருநங்கைகள், மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றும் அவலம், சர்க்கஸ் போன்றவற்றைப் பற்றிய ஒளிப்பட வரிசைகளை உருவாக்கினேன்.

மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல் தொடர்பான படங்களை எடுப்பதில் எப்போது ஈடுபட ஆரம்பித்தீர்கள்?

முதுமலையைச் சேர்ந்த கலைவாணன் என்றொரு கால்நடை மருத்துவருடன் 2012-ல் வால்பாறைக்குச் சென்றேன். ஊருக்குள் ஒரு புலி, உடம்பு முழுக்கக் காயங்களுடன் வந்திருந்தது. அதைப் பிடித்து, மறுநாள் காட்டுக்குள் விடுவதாகத் திட்டம். அந்த ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் ஒளிப்பட ஆவணமாக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். புலியோ உடல்நிலை குன்றி இறந்துவிட்டது. அப்போது எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன.

இந்தியாவிலேயே மிக முக்கியமான வனப் பாதுகாப்புச் செயல்பாட்டாளரும், ‘யானை மனிதர்’ என்று அழைக்கப்படுபவருமான அஜய் தேசாயும் அப்போது என்னுடன் இருந்தார். மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல், வனப் பாதுகாப்பு போன்றவற்றை எப்படிப் பார்ப்பது என்றெல்லாம் அவர் எனக்குச் சொல்லித்தந்தார். அவருடன் நான் 10 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அவருடைய 35 ஆண்டுகால அனுபவங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது பெரிய வாய்ப்பு.

கடந்த 10 ஆண்டுகளாக மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளல் தொடர்பாக இந்தியா முழுவதும் 12 புலிகள் காப்பகங்களில் ஒளிப்பட ஆவணமாக்கலில் இயங்கிவந்திருக்கிறேன். வனங்களின் மையப் பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்குச் சென்று, மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளல் தொடர்பாக ஒளிப்பட ஆவணமாக்கல் செய்திருக்கிறேன். இதனால் விலங்குகள் தரப்பு, மக்கள் தரப்பு, வனத் துறையினர் தரப்பு, அரசுத் தரப்பு என்று அனைத்துத் தரப்புகளின் கோணத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வனவுயிர் பாதுகாப்பாளர்கள் எல்லாம் பழங்குடியினர் மீதுதான் தவறு என்பார்கள். செயல்பாட்டாளர்கள் எல்லாம் புலிகள் காப்பகங்கள் பழங்குடியினருக்கு எதிராக இருக்கின்றன என்பார்கள். வனத் துறையினரைப் பார்த்தால் அவர்கள் விலங்குகள், மக்கள் இரண்டு தரப்புகளையும் ஒரே சமயத்தில் காப்பாற்ற வேண்டும். இந்த அனைத்துக் கோணங்களும் எனக்கு 10 ஆண்டு அனுபவத்தில் கிடைத்தன.

மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளலுக்கு முக்கியக் காரணம் என்ன?

காடுகளுக்கு ஓரமாக உள்ள மக்கள் வனப் பகுதிகளை ஆக்கிரமித்ததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். வயல்கள், ஆக்கிரமிப்பு போன்றவை மூன்று சதவீதம்தான். 84% காட்டழிப்புக்குக் காரணம் சுரங்கங்கள்தான். சுரங்கம் ஏன் தேவையாக இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் நகர்ப்புற வளர்ச்சியும் உலகமயமாக்கலும் இருக்கின்றன. நாம் பயன்படுத்தும் உலோகங்கள், கைபேசி, கணினி போன்ற சாதனங்களில் இருக்கும் கனிமங்கள் எல்லாமே காடுகளில் உள்ள சுரங்கங்களிலிருந்துதான் பெறப்படுகின்றன. நாம்தான் இதற்கெல்லாம் நேரடியான காரணம் என்பதைப் பிரதானப்படுத்திக் காட்ட வேண்டும் என்றுதான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.

இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

காட்டழிப்பை நிறுத்தாமல் எதுவுமே செய்ய முடியாது. 2010-12 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 1,700 புலிகள் இருந்தன. இப்போது 3,000-க்கும் மேற்பட்ட புலிகள் இருக்கின்றன. ஆனால், காடுகளின் பரப்பளவு 2010-ஐவிடத் தற்போது மிகவும் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அன்று இருந்த காடுகளைவிட இப்போது உள்ள காடுகளின் ஓரங்களில் இடையூறுகள் அதிகமாகிவிட்டன. இந்தியாவில் உள்ளவற்றில் கிட்டத்தட்ட 29% புலிகள், பாதுகாக்கப்பட்ட வனமையப் பகுதிகளுக்கு (core zone) வெளியில்தான் இருக்கின்றன.

ஆக, காட்டின் பரப்பளவை அதிகப்படுத்தாமல் புலிகளை மட்டும் அதிகப்படுத்துவது என்பது மிகவும் தவறான விஷயம். இருக்கும் காடுகளையாவது இனிமேல் அழிக்காமல் பார்த்துக்கொள்வது, காட்டுயிர்களுக்கு வழித்தடங்களை ஏற்படுத்துவது போன்றவைதான் தீர்வுகள். ஆனால், நாம் வழித்தடங்களை ஏற்படுத்தாமல் சுற்றிவளைத்துவிடுகிறோம். அணைகள், ரயில் பாதைகள் என்றெல்லாம் இடையூறுகளை ஏற்படுத்திவிடுகிறோம். இப்படிப்பட்ட சூழல் மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளலுக்குத்தான் வித்திடும்.

விவசாயிகள் - யானைகள் எதிர்கொள்ளலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

யானைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் இயல்புடையவை. இந்தியாவில் அவற்றின் வழித்தடங்கள் 84% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் திசைமாறி விவசாய நிலங்களுக்கு வந்து கரும்பு, நெல், சோளம் போன்ற பயிர்களைத் தின்கின்றன. அந்தப் பயிர்களின் சுவை அவற்றுக்குப் பிடித்துப்போனதால், காட்டுக்குப் போக வேண்டிய அவசியமில்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இதனால் ஏற்படும் எதிர்கொள்ளலில் ஒன்று மனிதர்கள் சாகிறார்கள், இல்லையென்றால் யானைகள் சாகின்றன. பெருவிவசாயிகளெல்லாம் தங்கள் நிலங்களைச் சுற்றி சூரிய மின்சக்தி வேலிகள், நீள்குழிகள் போன்ற பாதுகாப்புகளை அதிக செலவில் ஏற்படுத்திக்கொள்வார்கள்.

ஒன்றரை ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்கள் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு இதற்கெல்லாம் வசதி இருக்காது. ஆறு மாத உழைப்பை யானைகள் அழித்துவிடக் கூடுமோ என்று அஞ்சி, சூரிய மின்வேலி அல்லாமல் வழக்கமான மின்வேலிகளை வைத்துவிடுகிறார்கள். இதனால் யானை செத்தாலும் அவர்களுக்குத்தான் பிரச்சினை. இன்னொரு புறம் யானைகளால் தாக்கப்பட்டு இறப்பவர்களும் வாட்ச்மேன்கள், ஏழை விவசாயிகள் போன்றோர்தான். நாம் அந்தக் கோணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக, விலங்குகள் பாதுகாப்பு என்பதை மட்டும் மனதில் கொண்டு நாம் செயல்பட்டால், மக்களின் மனநிலை விலங்குகளுக்கு எதிரானவர்களாக மாறிவிடும். பிறகு, நம்மால் விலங்குகளைக் காப்பாற்ற முடியாது. விலங்குகளிடம் உள்ளூர் மக்கள் மூர்க்கமாக நடந்துகொள்ள நேரிடும்.

வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ விருது குறித்துச் சொல்லுங்கள்...

ஒளிப்படங்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் உயரிய விருது இது. இந்த விருதைப் பெறுவது என்னுடைய 20 ஆண்டுக் கனவு. இந்த ஆண்டு விருதுக்கான வகைமையை விரிவுபடுத்தினார்கள். உலக அளவில் ஆறு பிராந்தியங்களாகப் பிரித்தார்கள். நான் 30 படங்கள் கொண்ட ஒரு ஒளிப்பட வரிசையை அனுப்பியிருந்தேன். எனக்கு விருதுக் குழுவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. நான் எடுத்த ஒளிப்படங்கள், அதன் மையப்பொருள் ஆகியவற்றுக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிக் கேட்டார்கள். என்னுடைய திட்டப் பணிகள் எல்லாம் என்னுடைய சொந்தச் செலவில் மேற்கொண்டவை; மேலும், நானும் உள்ளூர் நபர் என்பதால் மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ளூர் மக்களின் நிலையை, சிக்கல்களை நன்கு அறிந்தவன். இந்த இரண்டு விஷயங்களும் எனக்குச் சாதகமாக ஆயின.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in



Read in source website