DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 28-08-2022

இணையதளம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக திரையிடல் சேவைகளை வழங்கும் ஓடிடி (ஓவா் தி டாப்) துறை இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்தத் துறை பல அடுக்கு திரையரங்கங்களின் (மல்டிபிளக்ஸ்) ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்று ‘எஸ்பிஐ ரிசா்ச்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் 2023-ஆம் ஆண்டில் ஓடிடி சேவைகளுக்கான சந்தை ரூ.11,944 கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது, கடந்த 2018-ஆம் ஆண்டில் வெறும் ரூ.2,590 கோடியாக இருந்தது. அந்த வகையில் சராசரியாக ஓடிடி சந்தை ஆண்டுக்கு 36 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

பொழுது போக்குத் துறையில் விசிஆா், விசிபி, டிவிடி-களுக்கான சந்தை கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் மிகப் பெரிய வளா்ச்சியைப் பெற்றது.

ஆனால், 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி, பின்னா் விஸ்வரூபம் எடுத்த மல்டிபிளக்ஸுகளால் அந்த சந்தை ஏறத்தான முற்றிலும் அழிந்துபோனது.

அதே போல், தற்போது பொழுது போக்குத் துறையில் வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஓடிடி சந்தையால் மல்ட்டிபிளக்ஸுகளின் ஆதிக்கமும் முடிவுக்கு வரக் ககூடும்.

ஏற்கனவே, பொழுதுபோக்கு துறை சந்தை மற்றும் வருவாயில் ஓடிடி பிரிவு 7-9 சதவீதம் பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில், ஓடிடி சந்தையில் புதிது புதிதாக பல நிறுவனங்கள் களமிறங்கி வருகின்றன. தற்போது இந்தியாவில் ஓடிடி சேவைகளை சுமாா் 40 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த நிறுவனங்கள், அனைத்து மொழிகளிலும், அசல் திரைப்படங்கள் மற்றும் நாடகத் தொடா்களை வாடிக்கையாளா்கள் வீடுகளுக்கே நேரடியாக - அவா்கள் விரும்பும் நேரத்தில் - இணையதளம் மூலம் வழங்கி வருகின்றன.

இதன் காரணமாக, பொழுது போக்குச் சந்தை மற்றும் வருவாயில் ஓடிடி பிரிவின் பங்கு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறை வட்டாரங்கள் அளிக்கும் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் தற்போது 45 கோடி ஓடிடி சந்தாதாரா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டின் இறுதியில் 50 கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஓடிடி சந்தையின் இந்த வலுவான வளா்ச்சிக்கு, நாளுக்கு நாள் மலிவாகவும் அதிவேகமாகவும் கிடைக்கும் இணையதள சேவைகள், அதிகரித்து வரும் இணையதள பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை, இணையதளம் மூலம் பணம் செலுத்தும் வழக்கம் அதிகரித்து வருவது போன்ற சூழல்கள் மிக சாதகமாக அமைந்துள்ளன.

இது தவிர, சா்வதேச ஓடிடி சேவை நிறுவனங்கள் சலுகை சந்தா திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளா்களைக் கவா்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு 14 கோடி சந்தாதாரா்கள், அமேஸான் பிரைம் வீடியோவுக்கு 6 கோடி சந்தாதாரா்கள், நெட்ஃபிளிக்ஸுக்கு 4 கோடி சந்தாதாரா்கள் உள்ளனா். மேலும், ஸீ5 நிறுவனத்துக்கு 3.7 கோடி சந்தாதாரா்களும், சோனிலைவுக்கு 2.5 கோடிசந்தாதாரா்களும் உள்ளனா்.

இந்த நிறுனங்கள், அமெரிக்காவில் வசூக்கும் கட்டணங்களில் 70 முதல் 90 சதவீதம் மலிவாக இந்தியாவில் கட்டணங்களை நிா்ணயித்துள்ளன.

உள்நாட்டு ஓடிடி நிறுவனங்களான சோனிலைவ், வூட், ஸீ5, ஆல்ட்பாலாஜி, ஹாய்சாய் போன்றவை பொழுது போக்குத் துறையின் பிராந்திய தேவைகளை பூா்த்தி செய்து வருகின்றன.

இந்தத் துறையில் தற்போதைய போக்கு நீடித்தால், 50 சதவீதத்துக்கும் மேலான நுகா்வோா் ஓடிடி-யில் சராசரியாக மாதம் 5 மணி நேரத்தை கழிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது, திரையங்குகளின் வருவாயை கணிசமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஓடிடி சந்தையின் வளா்ச்சிக்கு இணையதள சேவைகளின் மேம்பாடு மட்டுமன்றி, அரிதிறன் தொலைக்காட்சிகள் (ஸ்மாா்ட் டிவி), கைப்பேசி திரையை எல்இடி டிவிக்களில் காட்டும் குரோம்காஸ்ட் தொழில்நுட்பங்களும் காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், கரோனா நெருக்கடி காரணமாக சுமாா் 2 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. அப்போது திரைத் துறையின் இருப்பை தக்கவைக்க ஓடிடி-க்கள்தான் கைகொடுத்தன.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மட்டும் 30 ஹிந்தி திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகின. அதே போல், பன்னாட்டு ஓடிடி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளில் திரைத் தொடா்களை அதிக தரத்துடன் வெளியிட்டு சந்தாதாரா்களைக் கவா்ந்தன.

சில நேரங்களில் பாரம்பரிய முறைப்படி திரைப்படங்களை வெளியிடுவதை விட, இணையதளத்தில் ஒளிபரப்புவதற்காகவே திரைத் தொடா்களையும் திரைப்படங்களையும் எடுப்பதே லாபம் என்று படத் தயாரிப்பாளா்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஓடிடி வளா்ச்சியால் மல்டிபிளக்ஸ் திரையங்குகளின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் அபாயம் உள்ளதாக எஸ்பிஐ ரிசா்ச் அமைப்பு எச்சரித்துள்ளது.

 

 



Read in source website

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் எருது விடும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த தடை உத்தரவை முறையாக செயல்படுத்துமாறு காவல்துறைக்கு கேரள உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

கொல்லம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.28) எருது விடும் போட்டி நடத்த கால்நடை நலச் சங்கம் திட்டமிட்டிருந்ததற்கு எதிராக திருவனந்தபுரத்தைச் சோ்ந்த கே.எல்.அா்ஷித் என்பவா் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாா், நீதிபதி சாஜி பி.சாலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா், ‘எருது விடும் நிகழ்வு மற்றும் போட்டிகளை நடத்த தடை வித்து கொல்லம் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக்கேட்ட நீதிபதிகள், ‘மனுதாரா் குறிப்பிட்டுள்ள கால்நடை நலச் சங்கம் இந்திய கால்நடை நல வாரியத்தில் பதிவு செய்யப்படவே இல்லை. ஆனால், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாமல், எருது விடும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தச் சூழலில், எருது விடும் போட்டிக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்திருக்கிறாா். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளாலும் முறையாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய கால்நடை நல வாரியம் மற்றும் கால்நடை நலச் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.



Read in source website

கொப்பரை தேங்காய்க்கான கொள்முதலை தமிழகத்தில் மேலும் இரு மாதங்களுக்கு நீடிக்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கடந்தாண்டு பொதுச் சந்தையில் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ. 140 வரை இருந்த நிலையில் நிகழாண்டில் கிலோவிற்கு ரூ. 70 முதல் 80 ஆக சரிந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கிலோ ஒன்றிற்கு ரூ. 52.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 105.98 ஆக நிா்ணயித்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல்களை, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாஃபெட்), தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகியவை மத்திய அரசின் முகமைகளாக இருந்து மாவட்ட ஆட்சியகங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்களை மேற்கொள்கிறது.

இந்த கொள்முதல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜூன் மாதமே முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 16 -ஆம் தேதி தமிழக அரசின் விவசாய உற்பத்தி ஆணையா் மற்றும் செயலா் சமயமூா்த்தி மத்திய அரசுக்கு இந்த கொள்முதல் காலக் கட்டத்தை நீடிக்க கோரி கடிதம் எழுதினாா். மேலும் கடந்த வாரம் பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டவா்கள் மத்திய வேளாண்மை துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில், ‘கரோனா தொற்றுக்கு பின்னா் தென்னை விவசாயிகளும், தேங்காய் மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ முதல் 2800 கிலோ வரையிலான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு ஏக்கருக்கு 216 கிலோ தான் அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது. பொது சந்தையில் விலை கடுமையாக குறைந்துள்ளது. ஆனால் யூரியா விலையேற்றம், உற்பத்தி செலவு, அறுவடை செலவு (ஒரு தேங்காய்க்கு ரூ.3) போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 800 கிலோ கொப்பரையை கொள் முதல் செய்யவும் கொள் முதல் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, தற்போது கொள்முதல் காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீடித்து அதாவது, வருகின்ற செப்டம்பா் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொப்பரை மற்றும் பந்து தேங்காயை கொள்முதல் செய்ய நாஃபெட், என்சிசிஎஃப் நிறுவனங்களுக்கு மத்திய வேளாண்மை துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் மற்ற கோரிக்கைகள் தொடா்பாக மத்திய அமைச்சா் தோமா், தமிழகத்திற்கும் குறிப்பாக தென்னை விளையும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளாா் எனவும் வேளாண்மை துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

 



Read in source website

 

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை படைத்தார்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 950 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். மெக்ராத்  எடுத்த 949 விக்கெட்டுகளை முறியடித்து சாதனை படைத்தார் ஆண்டர்சன். 

இங்கிலாந்து 415 ரன்கள் எடுத்தது முதல் இன்னிங்ஸில். 3-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 179 ரனகளுக்கு மொத்த விக்கெட்டும் இழந்தது. இங்கிலாந்து அணி 89 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (டெஸ்ட், ஒருநாள், டி20)

  • ஆண்டர்சன் - 951 விக்கெட்டுகள்
  • மெக்ராத்      -  949 விக்கெட்டுகள்
  • வாசிம் அக்ரம் - 916 விக்கெட்டுகள்


Read in source website

கௌரவமிக்க டையமண்ட் லீக் தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பைப் பெற்றாா் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா.

சுவிட்சா்லாந்தின் லாஸேன் நகரில் டையமண்ட் லீக் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈட்டி எறிதல் பிரிவு போட்டியில் 89.08 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றாா் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா. முதல் முயற்சியிலேயே இந்த தூரத்தை எறிந்தாா் நீரஜ்.

இதன் மூலம் 2023-இல் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் நேரடித் தகுதி பெற்றுள்ளாா்.

கடந்த ஜூலை மாதம் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தாா் நீரஜ் சோப்ரா. ஸ்டாக்ஹோம் லீகில் தனது சிறந்த முயற்சியான 89.94 மீ தூரத்தை எறியாவிட்டாலும், நீரஜ் டையமண்ட் லீகில் முதலிடம் பெற்றாா்.

செப்டம்பா் 7-8 தேதிகளில் ஜூரிச் நகரில் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. காமன்வெல்த் போட்டியில் காயம் காரணமாக நீரஜ் பங்கேற்கவில்லை.

 



Read in source website

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனா் இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையுடன் மோதினா் இந்தியாவின் சாத்விக்-சிராக். உலக தரவரிசையில் 7-ஆவது இடத்தில் உள்ள சிராக்-சாத்விக் இணை 6-ஆம் நிலையில் உள்ள மலேசிய இணையும் சரிக்கு சமமாக ஆடினா். முதல் கேமை 22-20 என கடுமையாகப் போராடி சாத்விக்-சிராக் வென்றனா்.

முதல் கேமில் 5 புள்ளிகள் தொடா்ந்து குவித்து சாதகமான நிலையை உருவாக்கினா். எனினும் 16-16 என மலேசிய இணை சமநிலையை ஏற்படுத்தியது. தொடா்ந்து கடைசியில் புள்ளிகளைக் குவித்து முதல் கேமை கைப்பற்றினா்.

இரண்டாவது கேமில் இரண்டு இணைகளும் புள்ளிகளைக் குவிக்கப் போராடிய நிலையில், மலேசிய இணை தொடா்ந்து 4 புள்ளிகளைக் குவித்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனா். 18-21 என இந்திய இணை கேமை இழந்தது.

மூன்றாவது கேமிலும் மலேசிய இணை முழு ஆதிக்கம் செலுத்தி 21-16 என அந்த கேமையும் தன்வசப்படுத்தியது.

இந்தியாவுக்கு வெண்கலம்:

இதையடுத்து இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் இணை வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன்ஷிப் இரட்டையா் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். மேலும் 13-ஆவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும்.

காலிறுதியில் நடப்பு சாம்பியன் டகுரோ-யுகோ இணையை வென்றிருந்தது இந்திய இணை.

பி.வி.சிந்து, சாய்னா, லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பதக்க சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

அடுத்த வாரம் ஜப்பான் ஓபன் சூப்பா் 750 போட்டியில் இந்திய அணியினா் பங்கேற்கின்றனா்.



Read in source website

ஓராண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெண்கள் சினிமாவில் நடிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது பலருக்கும் மகிழ்ச்சியளித்திருக்கிறது. இருப்பினும், பெண்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்வது அவர்களது உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: மனைவியுடன் அடிக்கடி சண்டை: உ.பி.யில் ஒரு மாதமாக 80 அடி பனைமரத்தில் வசிக்கும் நபர்

திரையரங்குகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து 37 திரைப்படங்கள் மற்றும் சில ஆவணப்படங்கள் வெளியாக உள்ளன. வெளியாக இருக்கும் இந்த திரைப்படங்களிலும் பெண்கள் அதிக அளவில் இடம் பெறவில்லை.

திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: “ ஓராண்டுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவிற்கான கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.” என்றனர்.



Read in source website

சென்னை: சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:

மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன்படி வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு போன்ற திட்டங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடவும் இத்திட்டத்தை தற்போதைய நிதியாண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.

அதனை ஏற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்தஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ளபோது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை, விற்பனைக்கு அனுமதி இல்லாத இடங்களில் இருந்து கடைகளுக்கு மாற்றுஇடம் ஒதுக்கீடு செய்யும்போது ஏற்கெனவே மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்து வந்த இடங்களுக்குஅருகிலேயே கடை ஒதுக்கி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில்விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை ஆகிய முன்னுரிமைகளின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்க அரசு ஆணையிடுகிறது.

அதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில், தேவைப்படும் சான்றிதழ்களை வழங்கிட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து நகர விற்பனை குழுக்களுக்கு அறிவுறுத்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 7-ம் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் 12 வயது முதல் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாக போடப்படுகிறது.

அதேபோல், 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கான பூஸ்டர் தவணை தடுப்பூசி தனியாரில் கட்டணத்தில் செலுத்தப்பட்டு வந்தது. அதனால், பூஸ்டர் தவணை செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதைத்தொடர்ந்து, 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு, 18 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி வழங்கும் பணி கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 211.39 கோடி டோஸ்

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 7 மணி வரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 கோடியே 7 லட்சத்து 56,966 பேருக்கு முதல் தவணையும், 85 கோடியே 93 லட்சத்து 19,998 பேருக்கு 2 தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுள்ள சிறார்களில் 6 கோடியே 16 லட்சத்து 37,810 பேருக்கு முதல் தவணையும், 5 கோடியே 22 லட்சத்து 24,659 பேருக்கு 2 தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுள்ள சிறார்களில் 4 கோடியே 2 லட்சத்து11,871 பேருக்கு முதல் தவணையும், 2கோடியே 99 லட்சத்து 97,546 பேருக்கு2 தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் பொறுத்தவரை சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களில் 5 கோடியே 96 லட்சத்து 1,554 பேருக்கு போடப்பட்டுள்ளது. 18 முதல் 59 வயதுள்ளவர்களில் 9 கோடியே 2 லட்சத்து 31,040 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 211 கோடியே 39 லட்சத்து 81,444 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7-வது இடத்தில் தமிழகம்

தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரத்தில், உத்தரப்பிரதேசம் 36 கோடியே 64 லட்சத்து 64,769 டோஸ் தடுப்பூசி செலுத்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா 17 கோடியே 56 லட்சத்து 64,340 டோஸ் தடுப்பூசி செலுத்தி 2-வது இடத்திலும், மேற்கு வங்கம் 15 கோடியே 33 லட்சத்து 4,193 டோஸ் தடுப்பூசி செலுத்தி 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகம் 12 கோடியே 23 லட்சத்து 25,024 டோஸ் தடுப்பூசி செலுத்தி 7-வது இடம் பிடித்துள்ளது.

அதேபோல், சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்களில் 62 லட்சத்து 74,086 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், ஆந்திரா 60 லட்சத்து 57,919 பேருக்கு தடுப்பூசி செலுத்தி 2-ம் இடத்திலும், குஜராத் 53 லட்சத்து 85,839 பேருக்கு தடுப்பூசி செலுத்தி 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 23 லட்சத்து 86,436 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி 11-ம் இடத்தில் உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியில் 12-ம் இடம்

மேலும், 18 முதல் 50 வயதுள்ளவர்களில் 1 கோடியே 63 லட்சத்து 11,994பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், 92 லட்சத்து 23,120 பேருக்கு தடுப்பூசிசெலுத்தி குஜராத் 2-ம் இடத்திலும், 83 லட்சத்து 3,852 பேருக்கு தடுப்பூசி செலுத்தி மேற்கு வங்கம் 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 33 லட்சத்து 11,323 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி 12-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் 7-வது இடத்தைப் பிடித்துள்ள தமிழகம், பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியிருப்பது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கூடுதல் மெகா முகாம்கள்

கரோனா தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 34 முகாம்கள் மூலம் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் முதல்,இரண்டாவது மற்றும் பூஸ்டர் தவணையாக செலுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்தில் கூடுதலாக மெகா முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 90.05 சதவீதத்தினருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களில் 91.14 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 77 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடைய சிறார்களில்92,85 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 69.10 சதவீதம் பேருக்கு இரண்டாம்தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தவணை தடுப்பூசி 14.96 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மக்களிடம் ஆர்வம் குறைந்தது

கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 18 முதல் 59 வயதுள்ளவர்களுக்கு 75 நாட்கள் இலவச தடுப்பூசி திட்டம் செப்.30-ம் தேதி வரை உள்ளது. அதற்குள் 18 முதல் 59 வயதுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செப்.30-ம் தேதிக்குப்பின் பூஸ்டர் தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்திதான் போட்டுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Read in source website

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆற்றை பொதுமக்கள் கடக்க வசதியாக நடைபாலத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பாலத்துக்கு அடல் நடைமேம்பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற காதி உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது 7,500 பெண்கள் ஒரே நேரத்தில் ராட்டையில் நூல் நூற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர்.



Read in source website

லண்டன்: பிரிட்டனில் மின்சாரம், எரிவாயுவிலை 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக பிரிட்டனில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் 73 சதவீத மின்சாரம் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணு சக்தி, சூரிய சக்தி, நீர்மின் சக்தி மூலம் 30 சதவீதமும், கழிவுகளில் இருந்து 10 சதவீதமும் நிலக்கரி மூலம் ஒரு சதவீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முழுமையாக நிறுத்தியதால் பிரிட்டன் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பான ஆப்ஜெம் நேற்று முன்தினம் மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையை 80 சதவீதம் வரை அதிகரித்தது.

தற்போது மின்சார நுகர்வோர் ஓராண்டுக்கு சராசரியாக ரூ.1.85 லட்சம் கட்டணம் செலுத்தி வரு கின்றனர். கட்டண உயர்வால் ஆண்டுக்கு ரூ.3.33 லட்சம் கட்டணம் செலுத்த நேரிடும். இதன் காரணமாக பிரிட்டனில் 84 சதவீத மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “வருவாய் குறைந்த குடும்பங்களால் மின்சார விலை உயர்வை சமாளிக்க முடியாது. அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவார்கள்’’ என்று எச்சரித்துள்ளனர்.

இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு உணவு நிறுவனங்கள், இறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடியுள்ளன. இதன்காரணமாக அடுத்த சில மாதங்களில் பிரிட்டனில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, பிரிட்டனில் மளிகை பொருட்களின் விற்பனை 4.1. சதவீதம் குறைந்துள்ளது. இறைச்சி, மீன்களின் விற்பனை 9.4 சதவீதம் குறைந்திருக்கிறது. சுமார் 13 லட்சம் குடும்பங்கள் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர் தாமஸ் கூறும்போது, “உணவு தானியங்கள், இறைச்சி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் லட்சக்கணக்கான குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுகிறது’’ என்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் கூறும்போது, “உக்ரைன் மக்கள் ரத்தத்தை சிந்தி வருகின்றனர். அவர்களுக்காக நாம் பொருளாதார ரீதியாக தியாகம் செய்ய கடமைபட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

பிரதமரின் விளக்கத்தை மக்கள் ஏற்க தயாராக இல்லை. விலைவாசி உயர்வை கண்டித்து பிரிட்டன் முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த மக்கள் தயாராகி வருவதாக அந்த நாட்டு காவல் துறை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



Read in source website

இங்கிலாந்தில் இருந்து அதிக ஸ்பான்சர் செய்யப்பட்ட படிப்பு விசாக்களை பெற்று சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஜூன் 2022 வரை ஒரு வருடத்தில் இந்திய மாணவர்களுக்கு 1,17,965 ஸ்பான்சர் படிப்பு விசாக்களை இங்கிலாந்து வழங்கியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 215% அதிகமாகும், அப்போது, 37,396 ஸ்பான்சர் படிப்பு விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

மேலும், இங்கிலாந்தில் இருந்து அதிக ஸ்பான்சர் செய்யப்பட்ட படிப்பு விசாக்களை பெற்று சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிப்பு விசாக்களுக்கு ஏன் விண்ணப்பிக்கிறார்கள்?

UK படிப்பு விசாவைப் பெறுவதற்கான வெற்றி விகிதம் மற்றும் காலவரிசை என்ன?

இங்கிலாந்தில் மாணவர் விசா வெற்றி விகிதம் கிட்டத்தட்ட 100% ஐ நெருங்குகிறது. எனவே இங்கிலாந்துக்கு படிப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கிட்டத்தட்ட அனுமதி பெறுகிறார்கள்.
எனவே ஜூன் 2002 வரையிலான 1.18 லட்சம் மாணவர் விசாக்களுக்கான ஓராண்டு எண்ணிக்கையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அந்த எண்ணிக்கைக்கு அருகில் உள்ளது.

அமிர்தசரஸில் உள்ள தவான் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் உரிமையாளர் சித்ரேஷ் தவான், ஸ்பான்சர் செய்யப்பட்ட மாணவர் விசா வெறும் 3-4 வாரங்களில் வந்து சேரும் என்று தெரிவித்தார், இது மாணவர்களிடையே பெருமளவு வரவேற்பை பெறுகிறது.

UK படிப்பு விசாவிற்கு ஏன் பல மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்?

தற்போது வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்களில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்), இந்தியாவில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் இங்கிலாந்திற்குச் சென்றுள்ளனர்.
ஆனால் 2006-07ல் இந்தப் போக்கு ஆஸ்திரேலியாவை நோக்கித் திரும்பியது, அங்கு 2011-12 வரை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தியாவில் இருந்து செல்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கனடா இந்தப் பட்டியலில் வந்தது, கடந்த ஒரு தசாப்த காலமாக இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு கனடா மிகவும் விருப்பமான இடமாக உள்ளது.

இன்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இங்கிலாந்து செல்லத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலோர் முதலில் கனடாவுக்கு முயற்சி செய்கிறார்கள்.

கனடிய விசாக்களுக்கான நீண்ட காத்திருப்பு மாணவர்களிடையே நிறைய சந்தேகங்களையும் அச்சங்களையும் உருவாக்குகிறது, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் இங்கிலாந்து வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்று மற்றொரு ஆலோசகர் கூறினார்.
பஞ்சாபைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 1.18 லட்சம் விசா வைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட 40% மாணவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.

ஜனவரியில் சேர்க்கை பெற கடந்த ஆண்டு கனடாவிற்கு விண்ணப்பித்திருந்தேன், ஆனால் எனது விசா எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டது, இப்போது மீண்டும் விண்ணப்பித்துள்ளேன். அது நடக்கவில்லை என்றால், நான் இங்கிலாந்துக்கு செல்வேன், ”என்று ஒரு மாணவர் கூறினார், கடந்த மூன்று மாதங்களாக தனது விசாவுக்காக காத்திருக்கிறார் இவர்.

கனடாவிற்கு மாணவர் வீசா விண்ணப்பங்கள் திடீரென அதிகரித்ததே நிராகரிப்புக்கான காரணம் என்று ஒரு ஆலோசகர் கூறினார். “ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் இழப்பைத் தவிர்க்க, மாணவர்கள் இப்போது இங்கிலாந்திற்கு விண்ணப்பிக்கின்றனர்.
அங்கு விசா செயல்முறை விரைவாகவும், கிட்டத்தட்ட உறுதியாகவும் உள்ளது,” என்று தவான் கூறினார், இங்கிலாந்திலும் மாணவர்கள் வேலை அனுமதிச் சீட்டுகளை முடித்த பிறகு நல்ல வசதிகளைப் பெறுகின்றனர். அவர்களின் படிப்புகள்.

“இங்கிலாந்து விசா செயலாக்கம் மிகவும் வெளிப்படையானது.

மாணவர்கள் பேசுவது, எழுதுவது, கேட்பது மற்றும் படிப்பது என நான்கு பகுதிகளில் மொத்தம் 6 பட்டைகள் தேவை, மேலும் சில பல்கலைக்கழகங்கள் ஆங்கிலப் பாடத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தகைய பல்கலைக்கழகங்கள் நடத்தும் சோதனைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு நிதியுதவி செய்கின்றன என்று தவான் கூறினார்.

மக்கள் பொதுவாக ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதால், இங்கிலாந்துக்கான மாணவர் விசாக்கள் அதிகரித்துள்ளன என்று மற்றொரு ஆலோசகர் மேலும் கூறினார்.

இங்கிலாந்து பல்வேறு படிப்பு விசாக்களை வழங்குவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், பல மேற்கத்திய நாடுகளில் அதிக படிப்பு விசாக்களை வழங்குவதற்கான போட்டி உள்ளது, ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்க வரும் இந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு கல்வித் துறை ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.



Read in source website

2009ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் 230வது அறிக்கையில், நீதிபதிகள் நியமனத்தில் நெப்போடிசம் இருக்கிறது. என்றும் தெரிந்தவர்கள், உறவினர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய ரமணா ஓய்வு பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு வெள்ளிக்கிழமை மாலையில் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேசிய நீதிபதி யு.யு. லலித்,”சட்டத்தை தெளிவானதாக்குவதே உச்ச நீதிமன்றத்தின் தலையாய பணி. அதை இயன்ற வழியில் சாத்தியமாக்க வேண்டுமானால், அதற்கு பெரிய அமர்வுகள் எப்போதும் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதன் மூலம் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு பெற முடியும்,” என்று கூறினார்.

“எனவே, எப்போதும் ஓர் அரசியலமைப்பு அமர்வு ஆண்டு முழுவதும் செயல்படுவதற்கு நாம் கடினமாக முயற்சி செய்வோம்,” என்று அவர் தெரிவித்தார். வழக்குகளின் பட்டியலை முடிந்தவரை எளிமையாக்குவதாகவும் அவசரமான விஷயங்களைக் குறிப்பிடுவதற்கு ஒரு துல்லிய நிர்வாக முறையை நிறுவ முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

இவர்தான் 49வது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கபட உள்ளார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 8ம் தேதி இவர் ஓய்வு பெற இருப்பதால், மூன்று மாதங்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்படுவார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலைமை நீதிபதி இவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்திய குடிமகான இருக்க வேண்டும் என்பததோடு, உயர்நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 10 வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 2  ஆர்டிகல் 124 படி இந்திய ஜனாதிபதிதான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். இந்தே ஆர்டிகல் 124 குறிப்பிடப்பட்டுள்ளதுபடி, உச்சநீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் ஆலோசனையோடு தலைமை நீதிபதியை அவர் தேர்வு செய்யலாம்.

இதுபோல ஆர்டிகல் 217-யின் படி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை, ஆளுநர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஆலோசனையோடு ஜனாதிபதி நியமிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் 65 வயதில் பணி ஓய்பு பெறுவார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் பணி ஓய்வு பெறுகிறார்.

கொலிஞ்சியம் பரிந்துரையின் பெயரில் கடந்த 20 வருடங்களாக நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. அனுபவத்தில் மூத்த உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற  நீதிபதிகள் 5 பேர் இதில் இருக்கின்றனர். இந்த கொலிஞ்சியம் என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. இவர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

கொலிஞ்சியம் முறையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்

2009ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் 230வது அறிக்கையில், நீதிபதிகள் நியமனத்தில் நெப்போடிசம் இருக்கிறது. என்றும் தெரிந்தவர்கள், உறவினர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதற்கு ஒரு மாற்றாக தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைத்து, அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நிதிபதிகள் இரண்டு பேர்,  சட்ட அமைச்சர், பிரதமர் மற்றும் மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் ஆகியயோர் இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கான முழு சட்ட வரையறை உருவாக்க பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது.



Read in source website

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் மறுஅவதாரம் எடுத்துள்ளது.

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது. ‘விக்ராந்த்’ எனப் பெயரிடப்படும் இந்தப் போர்க்கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

விக்ராந்த் என்பது இந்தியாவில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலாகும். மேலும் இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இந்த மாபெரும், சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவை இணைத்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) என்ற உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து, போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் (WDB), அதன் உள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட போர்க்கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்துள்ளது.
இந்தக் கப்பலின் நான்காவது மற்றும் இறுதி கட்ட கடல் சோதனைகள் மூன்று வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடித்திருந்தது.

இந்தியா விமானம் தாங்கிக் கப்பலை வைத்திருப்பது ஏன் முக்கியம்?

ஒரு விமானம் தாங்கி கப்பல் என்பது எந்தவொரு நாட்டிற்கும் மிகவும் சக்திவாய்ந்த கடல் சொத்துக்களில் ஒன்றாகும். இது விமான படை ஆதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது உதவிகரமாக இருக்கும்.
பல வல்லுநர்கள் விமானம் தாங்கி கப்பலை “நீல நீர்” கடற்படையாகக் கருதுகின்றனர். அதாவது, ஒரு நாட்டின் வலிமையையும் ஆற்றலையும் கடல் வழியாகக் காட்டக்கூடிய திறன் கொண்ட கடற்படை விமானம் தாங்கி கப்பல் வைத்திருப்பது மூலதனம் ஆகும்.

தற்போது ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பலைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளன, மேலும் இந்தியா இப்போது இந்த மதிப்புமிக்க கிளப்பில் சேர்ந்துள்ளது. உலகின் அதிநவீன மற்றும் சிக்கலான போர்க்கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும் போர்க்கப்பல்களை உருவாக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையை இந்தியா நிரூபித்துள்ளதாக நிபுணர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவும் முன்பு விமானம் தாங்கி போர்க்கப்பல்களைக் கொண்டிருந்தது. ஆனால் அவை பிரிட்டிஷ் அல்லது ரஷ்யர்களால் கட்டப்பட்டன. 2013 ஆம் ஆண்டு தற்போது கடற்படையின் ஒரே விமானம் தாங்கி கப்பலாக இருக்கும் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ சோவியத்-ரஷ்ய போர்க்கப்பலான ‘அட்மிரல் கோர்ஷ்கோவ்’ ஆக தொடங்கியது.

இந்தியாவின் முந்தைய இரண்டு கேரியர்களான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ மற்றும் ‘ஐஎன்எஸ் விராட்’ ஆகியவை முதலில் பிரிட்டன்வாசிகளால் கட்டப்பட்ட ‘எச்எம்எஸ் ஹெர்குலிஸ்’ மற்றும் ‘எச்எம்எஸ் ஹெர்ம்ஸ்’ ஆகும். இந்த இரண்டு போர்க்கப்பல்களும் முறையே 1961 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் கடற்படையில் இணைக்கப்பட்டன.

புதிய போர்க்கப்பலான ஐஏசி-1க்கு ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்று ஏன் பெயரிடப்பட்டது?

‘INS விக்ராந்த்’ என்ற பெயர் முதலில் இந்தியாவின் மிகவும் விரும்பப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலுக்கு சொந்தமானது, இது 1997 இல் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பல தசாப்தங்களாக சேவையில் மகத்தான தேசிய பெருமைக்கு ஆதாரமாக இருந்தது.

1961 இல் இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட மெஜஸ்டிக் கிளாஸ் 19,500 டன் போர்க்கப்பலான அசல் ‘விக்ராந்த்’ 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் முக்கிய பங்கு வகித்தது.
இந்தியா வங்காள விரிகுடாவில் ‘விக்ராந்த்’ என்ற விமானத்தை நிலைநிறுத்தியது, மேலும் அதன் இரண்டு விமானப் படைகளான சீ ஹாக் போர் விமானங்கள் மற்றும் அலிஸ் கண்காணிப்பு விமானங்கள் துறைமுகங்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் பிற இலக்குகள் மீதான தாக்குதல்களிலும், கடல் வழிகள் வழியாக பாகிஸ்தான் படைகள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு, ஐஏசி-1 தனது முதல் கடல் சோதனையைத் தொடங்கியபோது, ​​கடற்படை தனது முதல் கடல் சோதனைக்காக மறுபிறவி எடுத்த ‘விக்ராந்த்’ இந்தியாவிற்கு பெருமை மற்றும் வரலாற்று நாள் என்று பாராட்டியது.

புதிய ‘விக்ராந்த்’ என்னென்ன உள்நாட்டு கூறுகளைக் கொண்டுள்ளது?

IAC-1 இன் கட்டுமானத்திற்குத் தேவையான போர்க்கப்பல் தர எஃகு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL) மற்றும் இந்திய கடற்படையுடன் இணைந்து ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய திருப்பம், போர்க்கப்பல் எஃகு தொடர்பாக நாடு தன்னிறைவு அடைந்துள்ளது என்று அது கூறியது.

இந்தத் திட்டத்தின் உள்நாட்டு உள்ளடக்கம் தோராயமாக 76% என்று கடற்படை தெரிவித்துள்ளது. இதில் 23,000 டன் எஃகு, 2,500 கிமீ மின்சார கேபிள்கள், 150 கிமீ குழாய்கள் மற்றும் 2,000 வால்வுகள் மற்றும் கடினமான ஹல் படகுகள், கேலி உபகரணங்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன ஆலைகள் மற்றும் ஸ்டீயரிங் கியர் உள்ளிட்ட பல முடிக்கப்பட்ட தயாரிப்புகள் அடங்கும்.

அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, பெரிய இந்திய தொழில்துறை நிறுவனங்கள், அதாவது, பெல், பெல், ஜிஆர்எஸ்இ, கெல்ட்ரான், கிர்லோஸ்கர், எல்&டி, வார்ட்சிலா இந்தியா, முதலியன மற்றும் 100 க்கும் மேற்பட்ட MSMEகள் கப்பலில் உள்ள உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.
உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள் துணைத் தொழில்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, மேலும் 2,000 சிஎஸ்எல் பணியாளர்களுக்கும், துணைத் தொழில்களில் சுமார் 13,000 ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்பட்டது.

இந்தத் திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய உற்பத்தியாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் சுமார் 2,000 இந்தியர்கள் IAC-1 போர்டில் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றதாகவும் கடற்படை முன்னதாக கூறியிருந்தது. 40,000க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக வேலை பார்த்தனர்.

சுமார் ரூ.23,000 கோடி திட்ட மதிப்பீட்டில் சுமார் 80-85 சதவீதம் இந்தியப் பொருளாதாரத்தில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டது.

புதிய ‘விக்ராந்த்’ என்ன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டிருக்கும்?

புதிய போர்க்கப்பலானது இந்தியாவின் தற்போதைய கேரியர் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ உடன் ஒப்பிடுகையில், இது 44,500 டன் கப்பல். .இதில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட 34 விமானங்கள் வரை கொண்டு செல்ல முடியும்.

கப்பலில், MiG-29K போர் விமானங்கள், Kamov-31 Air Early Warning Helicopters, MH-60R Seahawk மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH) உட்பட 30 விமானங்களை இயக்கலாம்.
பெங்களூரைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம் (எல்சிஏ) (கப்பற்படை) ஆகியவற்றால் கட்டப்பட்டது.

ஷார்ட் டேக் ஆஃப் ஆனால் அரெஸ்டட் ரெக்கவரி (STOBAR) எனப்படும் புதிய விமானம்-செயல்பாட்டு பயன்முறையைப் பயன்படுத்தி, IAC ஆனது விமானத்தை ஏவுவதற்கான ஸ்கை-ஜம்ப் மற்றும் அவற்றை மீட்டெடுப்பதற்கான மூன்று ‘அரெஸ்டர் வயர்களின்’ தொகுப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.

மிக்-29கே மற்றும் கமோவ்-31 விமானங்கள் ஏற்கனவே ‘விக்ரமாதித்யா’வில் பயன்பாட்டில் உள்ளன. MH-60R சீஹாக்ஸ் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மூலம் தயாரிக்கப்பட்டது.

புதிய ‘விக்ராந்தில்’ வேறு என்ன இருக்கும்?

262 மீ நீளம் மற்றும் 62 மீ அகலம் கொண்ட ‘விக்ராந்த்’ முழுமையாக ஏற்றப்படும் போது தோராயமாக 43,000 டன்களை இடமாற்றம் செய்கிறது, மேலும் அதிகபட்சமாக 28 நாட்ஸ் (சுமார் 52 கிமீ/மணி) வேகம் 7500 என்எம் தாங்கும் திறன் கொண்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் சுமார் 1,600 பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சுமார் 2,200 அறைகள் உள்ளன, இதில் பெண்கள் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் உள்ளன.

கேரியர் இயந்திர செயல்பாடுகள், கப்பல் வழிசெலுத்தல் மற்றும் உயிர்வாழ்வதற்கான மிக உயர்ந்த அளவிலான தன்னியக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரியர் நவீன நவீன உபகரணங்கள் மற்றும் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
பெரிய மாடுலர் OT, எமர்ஜென்சி மாடுலர் OT, பிசியோதெரபி கிளினிக், ICU, ஆய்வகங்கள், CT ஸ்கேனர், எக்ஸ்-ரே இயந்திரங்கள், பல் மருத்துவ வளாகம், தனிமைப்படுத்தப்பட்ட வார்டு மற்றும் டெலிமெடிசின் வசதிகள் உள்ளிட்ட சமீபத்திய மருத்துவ உபகரண வசதிகளுடன் இது ஒரு முழுமையான நவீன மருத்துவ வளாகத்தைக் கொண்டுள்ளது.

தற்போது இந்தியா திறமையை வெளிப்படுத்தியுள்ளதால், மேலும் கேரியர்களை உருவாக்குமா?

2015 ஆம் ஆண்டு முதல், நாட்டிற்காக மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை உருவாக்க கடற்படை அனுமதி கோரி வருகிறது, இது அங்கீகரிக்கப்பட்டால், இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலாக (IAC-2) மாறும்.
இந்த முன்மொழியப்பட்ட கேரியர், ‘ஐஎன்எஸ் விஷால்’ என்று பெயரிடப்பட உள்ளது, இது ஐஏசி-1 மற்றும் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ இரண்டையும் விட மிகப் பெரிய 65,000 டன் எடையுள்ள ஒரு மாபெரும் கப்பலாக இருக்கும்.

இருப்பினும், IAC-2 இன் அவசியத்தை அரசாங்கம் நம்புவதற்கு, “மனநிலையில் மாற்றம்” தேவை என்று கடற்படை வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தன.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றொரு விமானம் தாங்கி கப்பலில் முதலீடு செய்வதற்கு எதிராகப் பேசியிருந்தார், மேலும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை “மூழ்க முடியாத” கடற்படை சொத்துகளாக உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தார்.

ஆனால், பரந்த இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாக்க, இரவும் பகலும் தொடர்ந்து விமானச் சக்தி தேவை என்று கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். மூன்றாவது கேரியர் கடற்படைக்கு எழுச்சி திறனை வழங்கும், இது எதிர்காலத்தில் இன்றியமையாததாக இருக்கும் என்று அவர்கள் வாதிட்டனர்.

அமெரிக்க கடற்படைக்கு 11 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கும் நிலையில், சீனாவும் தனது விமானம் தாங்கி கப்பல் திட்டத்தில் தீவிரமாக முன்னேறி வருகிறது. இது இப்போது இரண்டு கேரியர்களைக் கொண்டுள்ளது, மூன்றாவது தயாரிப்பில் உள்ளது.
ஐஏசி-2 திட்டத்திற்கு இந்தியா இப்போது அனுமதி அளித்தாலும், போர்க்கப்பல் இயக்கப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கடற்படை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.



Read in source website

சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் வந்து சென்றது.

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வாரம் அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி புறப்பட்டு சென்றது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் இலங்கை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதர், இந்தியா குறித்து மறைமுகமாக சாடியுள்ளார். இலங்கையின் இறையாண்மையில் “முழுமையான தலையீடு” என்று குற்றஞ்சாட்டி நிலையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வரவுள்ளத்தை அறிந்த இந்தியா, முன்பே இலங்கையிடம் கவலை தெரிவித்தது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தலாக இருக்கம் என தெரிவித்தது. இதையடுத்து, இலங்கை சீனாவிற்கு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு கடிதம் அனுப்பியது. இருப்பினும் கோரிக்கை ஏற்க சீனா மறுத்தது. முன்பு ஆகஸ்ட் 11 முதல் 17 வரை கப்பல் இலங்கை வந்த செல்ல இருந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக ஆகஸ்ட் 16 முதல் 22 வரை இலங்கையின்

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை இலங்கை வர இருந்ததை ஆகஸ்ட் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சென்றது.

இலங்கைக்கான சீன தூதர் குய் சென்ஹாங் கூறுகையில், இலங்கையின் சிறந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​இலங்கை அதன் வடக்கு அண்டை நாட்டிலிருந்து 17 முறை ஆக்கிரமிப்புகளை வென்றது. கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக பயங்கரவாத எதிர்ப்புப் போர். இப்போதும் உலகில் தைரியமாகவும் பெருமையாகவும் நிற்கிறது. இலங்கையின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதான எந்தவொரு மீறலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

யுவான் வாங் 5 குறித்து பேசுகையில், “ஹம்பாந்தோட்டை அல்லது வேறு எந்த துறைமுகத்திலும் வெளிநாட்டுக் கப்பலின் வருகை அங்கீகரிப்பது இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக அதன் இறையாண்மைக்குள் எடுக்கப்பட்ட முடிவாகும். யுவான் வாங் 5 கப்பலால் ‘பாதுகாப்புக் கவலைகள்’ என்று எந்த ஆதாரமும் இல்லாமல் வெளியில் இருந்து கூறுவது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் ஒரு முழுமையான தலையீடு ஆகும்.

அதிர்ஷ்டவசமாக, சீனா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியுடன், இது சரி செய்யப்பட்டது. இது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சர்வதேச நியாயத்தையும் நீதியையும் மீண்டும் ஒருமுறை பாதுகாக்கிறது” என சீன தூதர் கூறினார்.

“இலங்கையைப் போலவே, சீனாவும் 1840 முதல் 1949 வரை நூறு ஆண்டுகள் கடுமையான பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் சீனா இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அதைத் தொடர்ந்து செய்வோம்.

இந்த நிலையில், தொலைதூரத்தில் அல்லது அருகில் உள்ள சில நாடுகள், இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் மீண்டும் மீண்டும் தலையிடுகிறது மற்றும் பல்வேறு ஆதாரமற்ற காரணங்களை கூறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சீனாவிற்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சீன தூதரின் கருத்துக்களை நாங்கள் கவனித்தோம். சீன தூதர் அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை மீறி இருக்கிறார். இலங்கையின் அண்டை நாடுகள் பற்றிய அவரது பார்வை அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதன் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தியா அப்படியானது இல்லை. இந்தியா மிகவும் வித்தியாசமானது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடன் பிரச்சனை உள்ளது. இலங்கைக்கு இப்போது தேவை ஆதரவுதான். மற்றொரு நாட்டின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்கிற தேவையற்ற அழுத்தங்கள், சர்ச்சைகள் இலங்கைக்கு தேவை இல்லை” என இந்தியா தூதரகம் தெரிவித்துள்ளது.



Read in source website

சர்வதேச சினிமா வரலாறு தொடங்கிய சில பத்தாண்டுகளுக்குள் இந்திய சினிமாக் கலையின் வரலாறு தொடங்கிவிட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பு நாடகத்துக்கு மாற்றாக இருந்த சினிமாக் கலை பற்றிய மதிப்பீடு எதுவும் உருவாகியிருக்கவில்லை. அதனால் இந்திய சினிமா வரலாற்றைச் சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்ட நம்மிடம் ஆவணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை.

எல்லாத் துறைகளிலும் ஆவணப்படுத்துதலில் நாம் பின்தங்கி இருந்தோம். இதற்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டவர் பி.கே.நாயர். திருவனந்தபுரத்தில் பிறந்து சினிமா இயக்கும் ஆசையுடன் பம்பாய்க்குப் போன இவரின் வாழ்க்கை, இந்திய சினிமாவின் முதன்மை ஆவண ஆய்வாளராக அவரை மாற்றிவிட்டது. ‘மதர் இந்தியா’ இயக்குநர் மெஹ்பூப் கான், ‘தேவதாஸ்’ இயக்குநர் விமல் ராய் ஆகியோரிடம் அவர் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தனக்கு சினிமா இயக்கம் ஒத்துவராது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இது அந்தத் தலைமுறையின் அபூர்வமான பண்பு.

ஆய்வுத் துறையில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் புனே இந்தியத் திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இந்திய சினிமாவின் வரலாற்றை உரத்துச் சொல்வதற்கான சான்றுகளைத் தேடிய, அவரது ஆய்வுப் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் நிறுவனரான அவர், அரசு நிதி வாங்கிக்கொண்டு அலுவலகத்திலேயே இருக்கவில்லை.

இந்தியாவின் மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். நாசிக் அருகில் ஒரு கிராமத்தில் தாதாசாகேப் பால்கேயின் ‘காளிய மர்தன்’ படச்சுருள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார். ஒருமுறை படகோட்டி இல்லாமல் ஆற்றைக் கடந்திருக்கிறார். கல்கத்தாவில் வைக்கோலுக்கும் சாணி வரட்டிகளுக்கும் இடையில் ஈரத்தில் கிடந்த சில படச்சுருள்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். பழைய படங்களைத் தேடி சினிமாக் கொட்டகை, கொட்டகையாக அலைந்திருக்கிறார். இந்தத் தேடல் இந்தியாவைத் தாண்டியும் விரிந்திருக்கிறது.

தாய்லாந்தில் ஒரு பழைய திரையரங்கிலிருந்து ‘சதீஷ், சுகன்யா’ என்னும் படத்தையும் வங்கதேசத்திலிருந்து ‘தேவதாஸ்’ படத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பிறகு உருவான புதிய தலைமுறை சினிமாக் கலைஞர்களுக்கு பி.கே.நாயர் ஆவணப்படுத்திய படங்கள் இந்தியத் திரைப்பட வரலாற்றைக் கற்பித்தன. இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவைத் திரும்ப உயிர்பித்ததும் இந்திய சினிமாவின் பிறப்பைக் கண்டறிந்ததும் பி.கே.நாயர் என்ற தனிமனிதன் செய்த மகத்தான சாதனை.

- விபின்



Read in source website

லட்சக்கணக்கான நூலிழைகளைச் சேர்த்து ஒரு துணியை நெய்வது எவ்வளவு சிரமமான காரியமோ, அதேபோல சுதந்திர இந்தியாவின் முக்கால் நூற்றாண்டு ஆடை வரலாற்றைச் சொல்வதும் சிரமமானதே!

‘இதுதான் இந்தியாவின் ஆடை’ என்று ஒன்றைப் பொதுமைப்படுத்திச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப ஆடைகள் அணியப்படுகின்றன. இவ்வளவு விதமான ஆடைகள் புழக்கத்தில் இருந்தாலும் எல்லாருக்கும் ஆடை அணியும் வாய்ப்பு கிடைத்திருந்ததா என்றால், அதுவும் இல்லை. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. பல ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகே ரவிக்கை அணியும் உரிமையை அவர்கள் பெற்றார்கள். அதேபோல சட்டையும் தோளில் துண்டும் அணியும் உரிமை குறிப்பிட்ட சாதி ஆண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல மக்களின் பார்வை விரிவடைய, அனைத்து ஆண்களும் சட்டை அணிவதற்கும் துண்டு போடுவதற்கும் உரிமை கிடைத்தது.

சுதந்திரப் போராட்டத்தில்... - சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ஆடைகளின் விற்பனையைத் தடுப்பதற்காக, ஐரோப்பாவிலிருந்து மலிவான விலையில் ஆடைகள் விற்பனைக்கு வந்தன. ஆடைகள் எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் அந்நிய ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் காந்தி. ஏராளமான மக்கள் அந்நியத் துணிகளை நெருப்பில் இட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது காதியும் கைத்தறியும் செழிக்கக் காரணமாக அமைந்தது.

‘ஆடை என்பது நம் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியது’ என்பார்கள். அந்தக் கூற்றையும் பொய்யாக்கியவர் காந்தி. அவர் ஒருமுறை மதுரைக்குச் சென்றிருந்தபோது எளிய மனிதர் ஒருவரின் ஆடையைக் கண்டு, தன்னுடைய ஆடைகளைத் துறந்து வேட்டி, துண்டுக்கு மாறினார். அதே ஆடையில்தான் உலகமெங்கும் சென்றுவந்தார். இந்த எளிய ஆடை அவருக்கு மேலும் மரியாதையைத் தேடித் தந்ததே தவிர, எவ்விதத்திலும் அவருடைய புகழைக் குறைக்கவில்லை.

காந்தி காலத்தில் மிக நேர்த்தியாக ஆடை அணிந்த நேருவின் 'ஜாக்கெட்', முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் உயர்பதவிகளில் இருப்பவர்கள் விரும்பி அணியக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு... - நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றாலும்கூட, மக்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட முடியாத விஷயங்களில் ஆடையும் ஒன்று. விடுதலைக்குப் பிறகு இந்திய ஆடைகளில் மேற்கத்திய பாணி அதிக தாக்கத்தைச் செலுத்தியது.

பிரிவினை ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து 1980களில் மீண்ட இந்தியா, ஃபேஷன் துறையில் அடியெடுத்து வைத்தது. ஜவுளித் தொழில் வேகமாக வளர ஆரம்பித்தது. கைத்தறி, பருத்தியின் செல்வாக்கு குறைந்து, பாலியெஸ்டர் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. சாயம் போகாமல் நீண்ட காலத்துக்கு உழைப்பதால், மக்களிடம் இன்றுவரை அது செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இன்று நான்கரை கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஜவுளி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கைத்தறி தொடர்பான பணிகளில் இருக்கிறார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் ஈடுபடும் வேலை நெசவு சார்ந்ததே.

பெண்களும் ஃபேஷனும்: சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் சட்டை, பாவாடை அணிந்து புடவை கட்டும் வழக்கத்துக்கு மாறினார்கள். ஆரம்பத்தில் புடவைக்கு ஏற்ப அதே வண்ண ரவிக்கை அணியும் வழக்கம் இல்லை. பின்னர் பொருத்தமான ரவிக்கையை அணியும் வழக்கம் வந்தது. தற்போது புடவையிலேயே ரவிக்கைக்கான துணியும் சேர்ந்தே வருவதால், தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நாள்களுக்குச் சாதாரண ஆடைகளும் விசேஷங்களுக்குச் சிறப்பான ஆடைகளும் அணியும் வழக்கம் அதிகரித்தது. ஆரம்பத்தில் அவசியத்துக்கு அணியப்பட்ட ஆடை, பிறகு ஃபேஷனுக்கு அணியும் நிலைக்குச் சென்றது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ஆடைகளை அணியும் வழக்கமும் உருவானது. ரவிக்கையில் நீளக் கை, குட்டைக் கை, பஃப் கை, முழுக்கை, வட்டக் கழுத்து, சதுரக் கழுத்து, படகுக் கழுத்து எனக் கதாநாயகிகள் அணியும் விதத்தைப் பார்த்துப் பெண்கள் ரவிக்கைகளைத் தைத்துக்கொண்டார்கள்.

தொண்ணூறுகளில் பாவாடை, தாவணியி லிருந்து பெண்கள் சிறிதுசிறிதாக சுடிதாருக்கு மாறி, இன்று பெரும்பாலான இந்திய இளம் பெண்களின் ஆடையாக அது நிலைத்துவிட்டது. தாவணி, புடவையிலிருக்கும் வசதிக் குறைபாடு சுடிதாரில் இல்லை என்பதால் பெண்களின் மனங்களை வென்றுவிட்டது!

இன்றைய இளம் தலைமுறை பாவடை தாவணியைப் புறக்கணித்தாலும், அதுக்கு நெருங்கிய உறவான வட இந்திய ‘லெஹங்கா’ என்ற நவீன வடிவத்துக்குத் தங்கள் ஆதரவை நல்கிவருகிறார்கள்.

இந்தியா முழுவதும் பல்வேறு விதங்களாகப் புடவைகளை அணிந்துவந்த பெண்கள், இன்று பெரும்பாலும் ஒரே விதமாக அணியும் நிலைக்கு வந்துவிட்டார்கள். கணவனை இழந்த பெண்கள் வெள்ளைச் சட்டை, வெள்ளைப் புடவை அணியும் வழக்கம் ஒருவழியாக வழக்கொழிந்துவிட்டது. இரவு நேரத்தில் மட்டுமே அணிய ஆரம்பித்த ‘நைட்டி’ இன்று நேரம் காலம், இடம் பொருள் பார்க்காத பெண்களின் விருப்பத்துக்குரிய ஆடையாக மாறிவிட்டது!

ஆடைகளில் எவ்வளவோ முன்னேற்றம் வந்துவிட்டாலும் இன்றும் பெண்கள் அணியும் ஆடைகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு முதல் காரணமாக, அவர்கள் அணியும் ஆடைகள் தேவையற்று முன்னிறுத்தப்படுகின்றன. சமீபத்தில் கேரள நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘பாதிக்கப் பட்டதாகச் சொல்லும் பெண், பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையில் ஆடை அணிந்திருந்தார்’ என்று கூறி, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அளித்தது அதிர்ச்சியான விஷயமே.

ஆண்களும் ஆடைகளும்: புடவையைப் போலவே வேட்டியும் முண்டு, கன்னட பஞ்சகச்சம், வங்காள கோச்சானோ, மகாராஷ்டிர தோத்தார், ராஜஸ்தானி டுலாங்கி தோத்தி, பஞ்சாபி சத்ரா என்று விதவிதமாக அணியப்படுகிறது. குர்தா வேட்டியும் குர்தா பைஜாமாவும் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன.

வேட்டி கட்டாத இன்றைய இளைய தலைமுறையைக் கவர்வதற்காக வெல்க்ரோவும் பாக்கெட்டும் வைத்த வேட்டிகளும் தயாரிக்கப்பட்டு புதிய சந்தையை உருவாக்கியுள்ளன.

தோளில் துண்டு அணியும் பழக்கமும் இருந்தது. அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி, சட்டை, துண்டுகளில் தங்களுக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கினர். கதர் துண்டு, தேங்காய்ப்பூ துண்டு, கம்பளித் துண்டு என்று துண்டிலும் பல மாற்றங்களை அவர்கள் கொண்டுவந்தனர். இன்றோ துண்டு அணியும் வழக்கம் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.

திரைப்படங்களில் கதாநாயகர்கள் அணியும் பெல்பாட்டம், ஸ்லிம் ஃபிட், ஜாகர்ஸ், கார்கோ, ப்ளீட்டட், டிராக்சூட் போன்றவற்றைப் பார்த்து, ஆண்களும் தங்கள் ஃபேஷனை மாற்றிக் கொள்கிறார்கள். அதேபோல் கேஷுவல், ஃபார்மல், முழுக்கை, அரைக்கை, ஸ்லிம் ஃபிட் எனச் சட்டைகளிலும் பல விதங்கள் இருக்கின்றன.

ஒரு முறை அணிந்த வேட்டியைத் துவைக்காமல் பயன்படுத்த முடியாது என்றால், ஜீன்ஸை விருப்பமும் நேரமும் இருக்கும்போது துவைக்கலாம் என்ற அளவுக்கு வசதியாக இருப்பதால், இளைஞர்களின் மனத்தில் அது சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டது! இவை போக லுங்கி, அரைக்கால் சட்டை, டிசர்ட்டை போன்று வீட்டில் பயன்படுத்தும் ஆடைகளும் உண்டு.

வீடு தேடிவரும் ஆடைகள்

அந்தக் காலத்தில் தலையில் துணிகளைச் சுமந்துகொண்டு, வீடுவீடாக வந்து ஆட்கள் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். முழுப் பணத்தையும் கொடுத்து வாங்க இயலாதவர்கள், ஒவ்வொரு மாதமும் சிறு தொகை கொடுத்து வாங்குவார்கள். இந்த வழக்கம் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. மக்கள் கடைகளுக்குச் சென்று நிறைய துணிகளைத் தேடி, தங்களுக்குப் பிடித்த ஆடைகளை வாங்க ஆரம்பித்தனர். தற்போது இணையவழி விற்பனை மூலம், மீண்டும் ஆடைகள் இல்லம் தேடி வர ஆரம்பித்துவிட்டன.

ஒருகாலத்தில் விலை உயர்ந்த ஆடைகளை பொருளாதார வசதியில் பின்தங்கியவர்களால் வாங்க இயலாத சூழல் இருந்தது. இன்றோ அவற்றை மலிவு விலையிலும் கொண்டுவந்து, எல்லாரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய முடிவது வரவேற்கத்தக்கது.

தேவை - விசேஷங்களுக்காக மட்டுமே வாங்கப்பட்ட ஆடைகள், இன்று ஃபேஷனுக்காக வாங்கப்படுகின்றன. கடன் அட்டை மூலம் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கப்படும் ஆடைகள், வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடுவதால், ஆடம்பரச் செலவாகவும் இது மாறிவருகிறது. அதேபோல இன்றைய துணிகளில் சில வகைகள் எளிதில் கிழிவதும் இல்லை, மண்ணில் மட்கிப் போவதும் இல்லை என்பதால் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எவ்வளவு காலம் ஆனாலும் எவ்வளவு ஃபேஷன்கள் வந்தாலும் விசேஷங்களில் அணியும் ஆடைகளாக சேலை, வேட்டி இருந்துகொண்டுதான் இருக்கும்! ஃபேஷன் தொழில் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கும்! ஆடை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட விருப்பம், வசதியைச் சார்ந்தது. எல்லாருக்கும் அவரவர் விரும்பிய ஆடைகளை அணிய உரிமை இருக்கிறது.
என்னதான் முன்னேற்றம் வந்தாலும் பெண்கள் அணியும் ஆடைகளில் கைக்குட்டை, பணம், திறன்பேசி போன்றவற்றை வைக்கும் விதத்தில் ஒரு பாக்கெட் வைத்துத் தைக்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ?

தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in



Read in source website

கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 1968இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தேவையான விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் இந்தக் கல்விக் கொள்கை கவனம் செலுத்தியது. நாட்டின் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில் கல்வி மகத்தான பங்களிப்பை ஆற்றக்கூடும் என்று இந்த கல்விக் கொள்கை அங்கீகரித்தது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 45ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறி, 14 வயதுவரை உள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்கிறது. இந்த வழிகாட்டு நெறியை நிறைவேற்றுவதில் தேசிய கல்விக் கொள்கை 1968 கவனம் செலுத்தியது. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவது அந்தக் கல்விக் கொள்கையின் முதன்மை இலக்காக இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கும் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் பகுதிகளில் வாழ்வோருக்கும் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தது. பெண் கல்விக்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்தது.

பல்கலைக்கழகங்களிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதை ஏற்றுக்கொண்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமலே அவற்றுக்கு உரிய வயதைக் கடந்துவிட்டோருக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கும் முதியோர் கல்வி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நாட்டின் எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றது. கற்பித்தலில் தரத்தை உறுதிசெய்வதற்கான ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதலும் இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கங்களாக இருந்தன.

இந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றது. அனைத்துப் பாடங்களையும் தாய்மொழிவழியில் கற்பிப்பதையும் ஆதரித்தது. இந்தி மொழியை தேசிய ஒருமைப்பாட்டுக்கான கருவியாகக் கருதிய இந்தக் கல்விக் கொள்கை, நாடு முழுவதும் அது மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைப்படி பள்ளிக் கல்வி 10+2+3 என்று வரையறுக்கப்பட்டது.

பல முற்போக்கான இலக்குகளை வெளிப்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 1968 தனது இலக்குகள் பலவற்றை எட்டத் தவறியது. நிதிப் பற்றாக்குறையே இதற்கு முதன்மையான காரணம்.

- நந்தன்



Read in source website

இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது, ப.காளிமுத்து எழுதியுள்ள ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளில் யுவபுரஸ்கார் விருதுக்கு மட்டுமே அறிவிப்பின் மூலம் படைப்பாளர்களிடமிருந்து நூல்களைப் பெற்று விருதுக்குப் பரிசீலிக்கப்படுகிறது. பரிசீலனைக்கு எத்தனை நூல்கள் வந்தன, அந்த நூல்களில் இருந்து குறும்பட்டியலை யார் தயார் செய்தார்கள் என்பது போன்ற தகவல்கள் இல்லை.

ஆனால், சாகித்ய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலும் மூன்று நடுவர்களை நியமிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குறும்பட்டியலில் இருந்து மூன்று நடுவர்கள் பரிந்துரைக்கும் தலா இரண்டு நூல்களில் இருந்தே ஒரு நூல் விருதுக்குரிய தகுதியைப் பெறுகிறது. சாகித்ய அகாடமி விருது அறிவிப்புகள் பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விருது அறிவிப்பு குறித்தும் தீவிரமாகவே சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. தாய்மொழிக்கும் இலக்கியத்திற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கும் படைப்பிற்கே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்று சாகித்ய அகாடமியின் விதியை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பரிந்துரைப் பட்டியலிலுள்ள படைப்பாளிகள் பலரது நூல்களை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். அதில் பலர் நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளர்கள்; தொடர்ச்சியாக இயங்கிவருபவர்கள்.



Read in source website

நாடு சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகள் கழித்தே இந்தியாவின் விண்வெளி கனவு மெல்லமெல்ல நனவுக்கு வரத் தொடங்கியது. 1962இல் அப்போதைய பிரதமர் நேருவின் வழிகாட்டுதலின்படி ‘INCOSPAR’ எனும் விண்வெளி ஆராய்ச்சி குழுவை டாக்டர் விக்ரம் சாராபாய் உருவாக்கினார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமும் ஓர் உறுப்பினர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ)’ என அது பெயர் மாற்றப்பட்டது. அமெரிக்காவும் ரஷ்யாவும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய காலகட்டத்தில்தான், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இஸ்ரோ விண்வெளி அறிவியலில் தளிர்நடை போடத் தொடங்கியது.

அந்த அமைப்பு 1975 ஏப்ரல் 19 அன்று முதன்முதலாக வடிவமைத்த ‘ஆரியப்பட்டா’ செயற்கைக்கோள், சோவியத் ஒன்றியத்தின் இண்டர்காஸ்மோஸ் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் விண்வெளித் துறையில் இஸ்ரோ நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அளப்பரியவை. 114 விண்கல செலுத்து முயற்சிகள், 84 ஏவுகல செலுத்து முயற்சிகள், 13 மாணவர் செயற்கைக்கோள்கள், 2 மறுநுழைவுப் பணிகள், 34 நாடுகளின் 342 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல் உள்ளிட்ட பல விண்வெளித் திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை ஆய்வுகள், விவசாயம் ஆகியவற்றுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்டங்கள் பெரிதும் வலுசேர்த்து வருகின்றன. நீர் பாதுகாப்புக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் இஸ்ரோவின் தரவுகள் பேருதவியாக இருக்கின்றன. குறைந்த செலவில் இஸ்ரோவால் நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயானும், செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யானும் இன்று விண்வெளி அறிவியலில் இந்தியாவை அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளன. இன்றைய தேதியில், விண்வெளி அறிவியலிலும் விண்வெளித் தொழில்நுட்பத்திலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.



Read in source website

அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு இது. சிறார் இலக்கிய வளர்ச்சி ஒன்றே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருந்த அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில், சிறார் இலக்கியத் துறை இயல்பாகவே கூடுதல் கவனத்தைப் பெறும். ஆனால், கடந்த வாரம் ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்ட பால சாகித்ய விருதோ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

பால சாகித்ய புரஸ்கார் என்கிற பெயரில் சிறார் இலக்கியத்தை அங்கீகரிக்கும் நடைமுறையைச் சாகித்ய அகாடமி 2010இல் தொடங்கியது நல்லதொரு முடிவு. இந்த விருதுத் தேர்வில் சமீப ஆண்டுகளாகப் பரிசீலனை செய்யப்பட்ட நூல்களுக்கான குறும்பட்டியல் வெளியிடப்படும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. விருதுத் தேர்வில் வெளி்ப்படைத்தன்மை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இது தருகிறது. அதே நேரம் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூல் புதுமையாக இருக்கிறதா, புதிய அணுகுமுறையைத் தொடங்கிவைத்துள்ளதா, நவீன சிறார் இலக்கியம் தொட்டுள்ள உயரத்தை முன்னகர்த்துகிறதா என்கிற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.



Read in source website

முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வீனஸ் ஸ்டுடியோவில் மணி ரத்னத்தின் ‘நாயகன்’ படத்துக்காக, தோட்டா தரணி அமைத்திருந்த தாராவி குடிசைப் பகுதியைச் சென்று பார்த்ததை ஒரு ‘தொல்லியல்சார்’ அனுபவம் என்பேன். ஆழ்வார்பேட்டையில் இருந்துகொண்டு கற்பனையான பம்பாய் நகரத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திய விதம் மணி ரத்னத்தின் திறமைக்குச் சான்று.

தாராவியின் மூர்க்கமான நிதர்சனம், பம்பாயின் ஆங்கிலேயக் கட்டிடக் கலை, நாயக்கர் வீட்டு உள் வடிவமைப்பு ஆகிய மூன்று வகைக் கட்டிடக் கலைப் பரிமாணங்களால் இப்படம் ஒளிர்கிறது. சென்னையில் உருவெடுத்த கற்பனை பம்பாய்: அழகான தமிழகக் கடற்கரையில் கதை தொடங்குகிறது. சிறுவனான வேலு, தொழிற்சங்கத் தலைவரான தன் தந்தையைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் சிலர் கொன்றதற்காகப் பழிவாங்கிவிட்டுத் தப்பி ஓடுகிறான்.



Read in source website