DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 25-05-2022

ஊசூர் அருகே குருமலையில் அம்மன் கோயில் திருவிழாவில் இறந்தவரின் ஆவியை வீட்டிற்கு அழைத்து வரும் வினோத நிகழ்வை மலைவாழ்மக்கள் நடத்தினர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உள்ள குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொல்லைமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மலை வாழ்மக்கள் ஆண்டுதோறும் மலையில் உள்ள செல்லியம்மன், தஞ்சியம்மனுக்கு திருவிழா நடத்துகின்றனர்.

எப்போது திருவிழா நடத்தினாலும் அதற்கு முன்பு குறிகேட்டு கடந்தாண்டு விழா நடத்திய பிறகு ஓராண்டில் மலையில் இறந்தவர்கள் மற்றும் வெளியூருக்கு சென்று இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வந்து விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு விழா நடத்த, மலையில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டு கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தொடர்ந்து, இரவு குறிகேட்டு, பெண்கள் கும்மியடித்தும், தெய்வங்கள் வந்தபடி ஆடிப்பாடியும் இறந்தவர்களது ஆவியை கூவிக்கூவி அழைத்தனர்.

மலைவாழ் மக்களில் இறந்தவர்களின் ஆவியை மலையின் நுழைவு வாயிலில் இருந்து மேளதாளத்துடன் கரகம், சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்து அவர்கள் இறப்பதற்கு முன்பு வசித்த வீடுகளில் விட்டுச் சென்றனர். அவர்கள் குடும்பத்தினர் இறந்தவர்களின் ஆவியை ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.

இதையடுத்து, மலையிலே ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு சிறப்பு விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து, விழாவானது மீண்டும் குறிகேட்கபட்டு அது உத்தரவு தரும் வாரங்களில் நடத்தப்படுகிறது.

குருமலையில் ஆண்டுதோறும் மலைவாழ் மக்கள் அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு முன்பாக ஓராண்டில் இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வந்து  குறிகேட்டு விழா நடத்தி வரும் இந்த வினோத நிகழ்வு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 



Read in source website

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். 

அவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்  ஆர். என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார். 

குறிப்பாக வருகிற மே 28 ஆம் தேதி சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு கருணாநிதியின் சிலையை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றுகிறார். 

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. 

 



Read in source website

 

‘பழங்களின் அரசன்’ என்று கருதப்படுவது நம்ம ஊர் பழம் மாம்பழம் தான். ஆண்டுக்கு ஒரு முறைதான் மாம்பழ சீசன். அந்த சீசனில் தான் மாம்பழம், பலரின் நாக்கின் சுவை மொட்டுக்களை தூண்டி, அவற்றிற்கு விருந்து கொடுக்கும் இனிப்பான காலம். என்ன தான் வகை வகையாய் பழங்கள் இருந்தாலும் மாம்பழத்திற்கென்று தனி இடமும், எதிர்பார்ப்பும் உண்டு. மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது, நார்சத்து அதிகம் உள்ளது என்று அடிக்கிக்கொண்டே போனாலும் இந்த பழத்தை பயன்படுத்த சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பெரும் தயக்கம் தான். 

முக்கனிகளுக்கு கட்டுப்பாடு: முக்கனிகள் என்று கூறப்படும் மா, பலா, வாழை இவை மூன்றுக்கும் சிவப்பு சிக்னல் காட்டி இனி இவற்றை சாப்பிடக் கூடாது என்று சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை தருவது வழக்கம்.

இயற்கை தந்த கொடை: இத்தகைய நிலையில் ‘மாம்பழ சீசன் வந்தா என்ன? வரலைனா என்ன?’ என்று மாம்பழத்தை சாப்பிட முடியாமல் ஏங்கி தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் ஏராளம். அவர்களுக்கு இயற்கை தந்த கொடை தான் ‘மாவிலை’.

என்னடா இது? மாம்பழத்திற்கும் மாவிலைக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்?  நிச்சயம் தொடர்பு உண்டு. சித்த மருத்துவம் சிறப்புமிக்க மருத்துவம் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். மாம்பழம் உண்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை, மயக்கத்தை குறைக்கும் மாமருந்து அதன் மரத்திலே உள்ளது என்பது சிறப்பு. 

மாம்பழம் சாப்பிட விரும்பும் சர்க்கரை வியாதிக்காரர்கள் இந்த கட்டுரையை படித்து, சீசன் முழுக்க மாம்பழம் சாப்பிட்டு சர்க்கரை அளவை கூடாமல், மாறாக குறைத்துக்கொள்ள முடியும்.

நாம் உண்ணும் மாம்பழத்தில் இயல்பாகவே 16-18% அளவு சர்க்கரை, அமிலங்கள் மற்றும் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (அஸ்கார்பிக் அமிலம்) மற்றும் பாலிபீனால்கள் (கரோட்டின், வைட்டமின்-ஏ) ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பச்சையாக உள்ள பழுக்காத மாம்பழத்திலும், முதிர்ந்த பழுத்த மாம்பழத்திலும் காணப்படும், முக்கிய கார்போஹைட்ரேட்டுகள் வேறுபடுகின்றன. இதில் சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம் போன்ற பல்வேறு அமிலங்கள் இருப்பதால் பழுக்காத மாம்பழம் புளிப்பு சுவை கொண்டதாக உள்ளது.

ஸ்டார்ச் என்பது பச்சை மாம்பழத்தில் உள்ள முக்கிய கார்போஹைட்ரேட். இது முதிர்ச்சியின் போது, சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகிய எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக மாறுகிறது. இந்த சர்க்கரை மூலக்கூறுகளுடன், பழுத்த மாம்பழத்தில் சிறிய அளவு செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் மற்றும் பெக்டின் ஆகியவையும்  உள்ளன. அதேசமயம் பழுத்த பழத்தின் இனிப்பு சுவையானது சர்க்கரை மற்றும் முக்கிய அமிலங்களின் காரணமாக உள்ளது. 

மா இலை

இவ்வளவு ருசியும், மருத்துவ குணமும் உள்ள மாம்பழத்தை உண்ணக் கூடாது என்பது பலருக்கும் அதிருப்தி தான். அவர்களின் அதிருப்தியை போக்கி மாம்பழம் உண்டாலும் சர்க்கரை அளவை கூடவிடாமல் தடுக்க, அந்த மரத்தின் மற்றொரு பாகம் பயனளிக்கும் வகையில் உள்ளது சிறப்பான ஒன்று. அது என்னவெனில், சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட ‘மா இலைகள்’.

மருத்துவ குணம்: மாவிலையில் மருத்துவ குணம் வாய்ந்த பாலிபினால்களான மாங்கிஃபெரின், கேலிக் அமிலம், கடிச்சின், குர்சிட்டின், கேம்ப்ஃபெரால், எலாஜிக் அமிலங்கள், ரம்னெடின் மற்றும் அந்தோசயனின்கள் இவை அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மருத்துவ தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இருப்பினும் அதன் மருத்துவ செய்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ‘மாஞ்சிபெரின்’. இது ஒரு தாவர இயற்கை பாலிஃபீனால் ஆகும். இயற்கை சி-குளுகோசைடு. இது பல தாவர வகைகளில் காணப்படுகிறது, இருப்பினும் மாவிலைகள் முதன்மையான ஆதாரங்களில் ஒன்றாகும். 

தாது உப்புக்களும் வைட்டமின்களும்: மா இலையில் உடலுக்கு அத்தியாவசிய தாது உப்புக்களான நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் முக்கிய வைட்டமின்களான ஏ, பி, இ மற்றும் சி இவைகளும் உள்ளன. மா இலைகளில் இருக்கும் ஒரு முக்கிய உயிர்ம மூலக்கூறு புரதம் ஆகும். அதனால் தான் வளரும் நாடுகளில் கால்நடைகளுக்கான உணவுப் பற்றாக்குறையைப் போக்க ,அவற்றிற்கு உணவளிப்பதற்கான மாற்று ஆதாரமாக மாவிலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வலி நிவாரணி: மாவிலையில் இந்த மாஞ்சிப்பெரின் இருப்பதனால்,  வலி நிவாரணியாகவும், வீக்கமுருக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியதாகவும், கிருமிக்கொல்லியாகவும் மற்றும் ஆன்டி-வைரஸ் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், இருதயத்தை பாதுகாப்பதாகவும், ஒவ்வாமையை தடுப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பினை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாகவும், புற்று நோயினை தடுக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் தன்மையும் உடையதாக போன்ற பல மருத்துவ பண்புகள் உடையது.  

சர்க்கரை அளவு பரிசோதனை

மாவிலை கசாயம்: மாம்பழத்தில் அதிக அளவு உள்ள β-கரோட்டின் மற்றும் பிற தாவர மூலக்கூறுங்களால், இரத்தப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வண்ணம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், அப்போப்டொசிஸ் எனும் திட்டமிட்ட செல் இறப்பை தூண்டுவதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் திறனையும் பெற்றுள்ளது.
மாவிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருள் மாஞ்சிபெரின் தண்ணீரில் நன்றாக கரையக்கூடியது.

எனவே, மாவிலையை கசாயமிட்டு குடித்தாலும் மேற்கூறிய நன்மைகளை எல்லாம் தரும். மாவிலையை பொடித்து சூரணமாக்கி உள்கொண்டாலும் அதிகரித்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். சர்க்கரை நோயின் பின் விளைவுகளும் தடுக்க முடியும். 

கணைய வாஸ்து சீரமைப்பு: மாமரத்தின் பிசின், மாம்பழத்தின் பருப்பு இவற்றிற்கும் சிறந்த மருத்துவ குணமுண்டு. ஆகவே, மாவிலையை வீட்டு வாசலில் தோரணம் கட்டி அழகு பார்த்து, வாஸ்துவை கட்டுக்குள் கொண்டு வருவதோடு மட்டும் நில்லாமல், மாம்பழம் உள்கொண்ட கையோடு மாவிலையை கஷாயமிட்டு குடித்தால் உடலில் கணையத்தின் வாஸ்து சீரமைக்கப்படும் என்பது உறுதி. இன்சுலினை இயற்கையாக சுரக்க வழிவகை செய்யும். இதனால் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதும் வெளிப்படையான உண்மை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website

 

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக கே.பி.ஆனந்த் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்திய தணிக்கை மற்றும் கணக்குச் சேவையில் கடந்த 1996-ஆம் ஆண்டு இணைந்த இவா், 1994- இல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவா். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன், கேரளத்தின் முதன்மை தலைமைக் கணக்காயராகவும், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தணிக்கை முதன்மை இயக்குநராகவும், அஸ்ஸாமில் தலைமை கணக்காயராகவும் பணியாற்றினாா். அவா் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு மின் விநியோக நிறுவனத்தில் இயக்குநராக (நிதி) பணியாற்றியுள்ளாா்.

மணிலா மற்றும் ஜெனீவாவில் புலம்பெயா்வதற்கான சா்வதேச அமைப்பு, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் சா்வதேச கணினி மையம், வெப்பமண்டல நோய்களில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான திட்டம் ஆகியவை அவரது சா்வதேச தணிக்கைப் பணிகளில் அடங்கும்.

எரிசக்தி, போக்குவரத்து, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து துறைகளும் முதன்மை தலைமைக் கணக்காயா் அலுவலகத்தின் தணிக்கை அதிகார வரம்பிற்குட்பட்ட சில முக்கிய துறைகள் ஆகும் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

மும்பை: நாடு முழுவதும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி மும்பை போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு அடுத்த 15 நாள்களில் அமலுக்கு வரும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் கட்டாயம் என்ற விதியை மீறுபவர்களுக்கு ரூ.500  அபராதம் அல்லது 3 மாதம் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலும் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது

 

 



Read in source website

புது தில்லி :  சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு புதன்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஜூன் 1, 2022 முதல் அக்டோபர் 31, 2022 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை  குறிப்பிட்ட அனுமதியுடன் சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படும். அதற்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை இயக்குநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சர்க்கரை இயக்குநரகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஏற்றுமதி வெளியீட்டு ஆணைகள் மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் உலகிலேயே அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் நிலையான விலையை நிலைநிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் சர்க்கரையின் விலைகள் கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விலைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,150-3,500 என்ற வரம்பில் உள்ளது, அதே சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறை விலை ரூ.36-44 என்ற வரம்பில் கட்டுப்பாட்டில் உள்ளது.



Read in source website

 

புது தில்லி: கிரெடிட் காா்டுகளை பிஓஎஸ்(பாயின்ட் ஆஃப் சேல்) கருவி வழியாக பயன்படுத்துவதைக் காட்டிலும் இணையவழியில் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் பிஓஎஸ் கருவிகளைவிட இணையவழியில் ரூ.30,000 கோடி அளவுக்கு அதிகமாக பரிவா்த்தனைகள் நடந்துள்ளன. இது, இணையவழியில் பொருள்கள் வாங்குவதற்கு மக்களிடையே ஆா்வம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

இதுகுறித்து ரிசா்வ் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 7.36 கோடி கிரெடிட் காா்டுகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த மாா்ச் மாதத்தில், இந்த கிரெடிட் காா்டுகள் மூலம் ரூ.1.07 லட்சம் கோடி அளவுக்கு பரிவா்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றில், ரூ.343.71 கோடி ரொக்கமாக எடுக்கப்பட்டது.

இதுதவிர, பிஓஎஸ் கருவி மூலமாக ரூ.38,377 கோடி அளவுக்கு கொள்முதல் நடந்துள்ளது. அதேசமயம், இணையவழியில் ரூ.68,327 கோடி அளவுக்கு கொள்முதல் நடந்துள்ளது. அதாவது, பிஓஎஸ் கருவிகளைவிட இணையவழியில் ரூ.30,000 கோடி அளவுக்கு அதிகமாக பரிவா்த்தனைகள் நடந்துள்ளன.

அதுமட்டுமன்றி, கடந்த மாா்ச்சில் இணையவழியில் 11 கோடி பரிவா்த்தனைகளும் பிஓஎஸ் கருவி மூலமாக 11.1 கோடி பரிவா்த்தனைகளும் நடந்துள்ளன. அதாவது, இணையவழியில்தான் அதிக ரொக்க மதிப்புக்கு பரிவா்த்தனைகள் நடந்துள்ளன.

கடந்த மாா்ச் மாதத்தில் புதிதாக 19 லட்சம் கிரெடிட் காா்டுகள் வழங்கப்பட்டன. இதனால், நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள கிரெடிட் காா்டுகளின் எண்ணிக்கை 7.36 கோடியாக அதிகரித்தது என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி புதிதாக கிரெடிட் காா்டுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளபோதிலும், கடந்த மாா்ச்சில் அந்த வங்கியின் கிரெடிட் காா்டுகள் 1.67 கோடி உள்ளன. அதைத்தொடா்ந்து பாரத ஸ்டேட் வங்கியின் 1.37 கோடி கிரெடிட் காா்டுகளும், ஐசிஐசிஐ வங்கியின் 1.29கோடி கிரெடிட் காா்டுகளும் பயன்பாட்டில் உள்ளன.



Read in source website

 

புது தில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்து மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 20 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான கச்சா சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கு சுங்க வரி, வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்டண விகித ஒதுக்கீட்டில் (டிஆா்க்யூ) விதிமுறைகளை அறிவித்து மத்திய வா்த்தக அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. டிஆா்க்யூ ஒதுக்கீடு என்பது இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கான ஒதுக்கீட்டு அளவு ஆகும். இந்த அளவைத் தாண்டிய பின்னா் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வழக்கமான வரிகள் விதிக்கப்படும்.

உள்நாட்டில் விலையைக் குறைக்கும் வகையில், 2022,-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளுக்கு இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரல் (டிஜிஎஃப்டி) அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

நிகழாண்டுக்கான டிஆா்க்யூ ஒதுக்கீட்டு மே 27-ஆம் தேதிமுதல் ஜூன் 18 வரை விண்ணப்பிக்கலாம் என டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.



Read in source website

 

புது தில்லி: குதுப் மினாரில் ஹிந்து, ஜெயின் கோயில்களின் கட்டுமானப் பொருள்கள் மறுபயன்பாடு செய்து கட்டப்பட்டுள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்த இந்திய தொல்பொருள் ஆய்வு துறை (ஏஎஸ்ஐ), அதை வழிபட அனுமதிப்பது கிடையாது என்று தெரிவித்தது.

இதையடுத்து, அங்கு வழிபாடு தொடா்பான வழக்கின் உத்தரவை ஜூன் 9-ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

12-ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட குதுப்தீன் ஐபக் அரசா் 27 ஜெயின் கோயில்களை உடைத்து எடுத்து வந்த பொருள்களைப் பயன்படுத்தி குதுப் மினாரில் உள்ள குவாதுல் இஸ்லாம் மசூதியைக் கட்டினாா் என்றும் குதுப் மினாரில் உள்ள இரண்டு பிள்ளையாா் சிலைகளை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தில்லி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி நிகில் சோப்ரா செவ்வாய்க்கிழமை விசாரித்தாா்.

அப்போது ஏஎஸ்ஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘குதுப் மினாரில் உள்ள மசூதியில் பாரசீக நாட்டின் கட்டமைப்பு வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயில்களின் கட்டடப் பொருள்களை வைத்து அவை கட்டப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கட்டுமானப் பொருள்கள் கோயில்களை உடைத்துதான் கட்டப்பட்டது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனினும், குதுப் மினாரின் கீழ் சுவரில் பிள்ளையாா் படம் உள்ளது. அங்கு யாரும் செல்லாத வகையில் வேலியிடப்பட்டுள்ளது. மற்றொரு சுவரில் பிள்ளையாா் படம் தலைகீழாக உள்ளது. இவற்றை அங்கிருந்து எடுப்பதோ அல்லது மாற்றம் செய்வதோ முடியாத காரியமாகும்.

மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டின் குதுப் மினாா் கொண்டு வரப்பட்டதில் இருந்து அந்தப் பகுதியை எந்த ஒரு சமூகத்தினரும் வழிபட அனுமதித்ததில்லை.

அங்கு வழிபாடு நடத்துவது அடிப்படை உரிமை என்ற கோருவது சட்டத்தை மீறிய செயலாகும். நினைவுச் சின்னமாக அறிவித்த பின்பு அதை அப்படியே அசல் மாறாமல் பாதுகாக்க வேண்டியது சட்ட விதியாகும். அங்கு வழிபடவோ, புதிதாக மாற்றம் செய்யவோ அனுமதி கிடையாது. சுமாா் 800 ஆண்டுகளாக குதுப் மினாா் நினைவுச் சின்னம் அப்படியே உள்ளது. தற்போதுதான் இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘தென் இந்தியாவில் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் வழிபாடு நடைபெறுவதில்லை. 800 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்துக்கு தற்போது எப்படி உரிமை கோர முடியும்?’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.

இதற்கு, அவா், ‘ஒரு முறை கடவுளின் சொத்து என்றால், அது எப்போதும் கடவுளின் சொத்துதான். அங்கு வழிபடுவது அடிப்படை உரிமையாகும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி, ‘வழிபாடு உரிமைதான் முக்கிய விவகாரமாக இதில் முன்வைக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா். பின்னா் இந்த வழக்கின் உத்தரவை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தொழுகை நடத்த கோரிக்கை:

குதுப் மினாரில் உள்ள குவாதுல் இஸ்லாம் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவா் அமானத்துல்லா கான் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

1970-இல் அந்த மசூதி தில்லி வக்ஃபு வாரியத்தின் சொத்து என்று அறிவிக்கப்பட்டு ஐந்து வேளை தொழுகை நடைபெற்று வந்தது. ஆனால் ஏஎஸ்ஐ அதிகாரிகள் தலையிட்டு தொழுகையை நிறுத்திவிட்டனா் என்று அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

 



Read in source website

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் பொருளாதார அரசியல் சூழல்கள் மாறியுள்ளன. ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து வந்த நிலையில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆப்கனில் நிலவி வரும் பொருளாதார மந்தம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருவதாக ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் தொடர்ந்து நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக 11 லட்சம் குழந்தைகள் நடப்பாண்டு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பாதிக்க வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐநா இது அவர்களை மருத்துவ சிகிச்சைகளை நோக்கி அழைத்துச் செல்லும் சூழலை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவ்வெண்ணிக்கை 18 ஆயிரமாகவும், 2022ஆம் ஆண்டு 28 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் 3 கோடியே 80 லட்சம் பேர் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வடகொரிய தலைநகர் பியாங்க்யாங்கிலிருந்து 3 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் இந்த ஆண்டில் 17ஆவது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான ஏவுகணையை சோதித்துள்ளது. 

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தென்கொரியாவை கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாகதான் தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு நடைபெற்ற தென்கொரிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டின் அதிபர் யோன் சுக் யேல் வலிமையான, திறன்வாய்ந்த எதிர்தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வடகொரியாவின் இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை கண்டிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.



Read in source website

காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்களின் தூங்கும் நேரம் குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்ற பாதிப்பு என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாக உருமாறியுள்ளது. அதீத இயற்கை வள சுரண்டல் காரணமாக பருவநிலை பிறழ்வு, கூடுதல் மழைப்பொழிவு, கட்டுப்படுத்த முடியாத வெள்ளம், புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இயற்கை பேரிடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய காலநிலை மாற்றம் தொடர்பான சமீபத்திய ஆய்வு முடிவுகள் ஒன் எர்த் இதழில் வெளியாகியுள்ளன. 

மொத்தம் 68 நாடுகளின் 47 ஆயிரத்திற்கும் அதிகமான வயது வந்தோரிடம் இருந்து பெறப்பட்ட 70 லட்சம் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட்ட இந்த ஆய்வில் மனித நடவடிக்கைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தான பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. 

காலநிலை மாற்றத்தால் மனிதர்களின் பொருளாதார மற்றும் தினசரி நடவடிக்கைகளில் அதீத பாதிப்புகள் ஏற்படும் என இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அதிகப்படியான வெப்பநிலை உயர்வு காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒவ்வொரு மனிதரும் ஆண்டுக்கு 50 முதல் 58 மணி நேரம் தங்களது உறக்க நேரத்தை இழப்பர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை மாற்றம் மனிதர்களின் உளவியல் நிலைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ள விஞ்ஞானிகள் இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.



Read in source website

 

நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை  வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வரும் நாசா கடந்த சில வாரங்களுக்கு முன்  சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து சூரியனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது. 

அதில் சூரியனிலிருந்து வெளியாகும் நெருப்புப் பிளம்புகளின் அளவு அதிகரித்துக் காணப்படும் படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அண்டத்தின் (whirlpool galaxy) புதிய தோற்றப் புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது. 

நீரில் உருவாகும் வளையங்களைப்போல செந்நிறத்தில் காட்சியளிக்கும் கேலக்ஸியின் படம் வைரலாகி வருகிறது.



Read in source website


குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

மேலும், பெல்ஜியம், பிரான்ஸ், ஜொ்மனி ஆகியவற்றில் கடந்த வாரம் புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை பல  உலக நாடுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு குரங்கு அம்மை பரவியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், 12க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதித்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா வைரஸ் போல, குரங்கு அம்மையை ஏற்படுத்தும் தொற்றானது காற்றின் மூலம் அவ்வளவு எளிதாகப் பரவாது என்று தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குத்தான் பெரும்பாலும் பரவும், இந்த நோய் சுவாச உறுப்புகளான மூக்கு மற்றும் வாய் மூலமும் பரவும் என்று கூறப்பட்டாலும், அது கரோனா தொற்றினைப் போல அவ்வளவு எளிதில் காற்றின் மூலம் பரவாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை என்றால் என்ன?
குரங்கு அம்மை வைரஸால் குரங்கு அம்மைத் தொற்று ஏற்படுகிறது. பெரியம்மை போன்ற வகையைச் சோ்ந்தது. பொதுவாக இது தீவிரத்தன்மை இல்லாதது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாக காணப்படும் இந்த வைரஸ், முதன்முதலில் 1958-இல் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970-இல் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது.

இப்போது குரங்கு அம்மைத் தொற்று பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டது.

எப்படி பரவுகிறது?

வைரஸால் பாதிக்கப்பட்டவா் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடா்பு கொள்ளும்போது இந்தக் குரங்கு அம்மைத் தொற்று பரவுகிறது.

எலிகள், அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடமிருந்து பரவுவதாக நம்பப்படுகிறது.

மனிதா்களுக்கு மனிதா்கள் பரவுவது என்பது எச்சில், சளி மூலமாக இருக்கலாம். விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு என்பது கடித்தலின் மூலம் இருக்கலாம்.

உடல் திரவங்கள், சுவாச நீா்த்துளிகள், வைரஸ் கலந்த பொருள்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழையலாம்.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வீக்கம், முதுகுவலி உள்ளிட்டவை குரங்கு அம்மையின் ஆரம்பகட்ட அறிகுறிகள்.

காய்ச்சல் தொடங்கி ஒன்றிலிருந்து மூன்று நாள்களுக்குள் அரிப்பு ஏற்படுகிறது. முகத்தில் தோன்றும் இந்த அரிப்பு பின்னா் கைகள், உள்ளங்கால்களுக்குப் பரவுகிறது.

இந்த நோய்த்தொற்று பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும். பின்னா், தானாகவே மறைந்துவிடும்.

சிகிச்சை என்ன?

குரங்கு அம்மைக்கு என இப்போது தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குரங்கு அம்மையைத் தடுக்கும் வகையில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்...

குரங்கு அம்மை பாதிப்பு சில நாடுகளில் உள்ள நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும்படி தேசிய நோய்த் தடுப்பு மையம் மற்றும் ஐசிஎம்ஆருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளாா்.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுதொடா்பாக கண்காணிக்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து நோய் பாதிப்புடன் வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தவும், மாதிரிகளைச் சேகரித்து புணேயில் உள்ள தேசிய நோய்க் கிருமியியல் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 



Read in source website

 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதலாக நிதித்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்து வருகிறாா்.

கடந்த மே 14-ஆம் தேதி 4 அமைச்சா்களும், கடந்த மே 20-ஆம் தேதி 9 அமைச்சா்களும் பதவியேற்றனா். இதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். இருப்பினும் நிதியமைச்சர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை.

இந்நிலையில், இன்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக  பதவியேற்றுக்கொண்டார்.



Read in source website

 

கீவ்: கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் மேலும் ஒரு நகரை ரஷியப் படையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

இது குறித்து உக்ரைன் வானொலிக்கு ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் டொனட்ஸ்க் மக்கள் குடியரசு ராணுவ உயரதிகாரி சொ்கேய் கோஷ்கோ கூறியதாவது:

டான்பாஸ் பிராந்தியத்தின் டொன்ட்ஸ்க் பகுதியிலுள்ள பாக்முட் மாவட்டம், ஸ்விட்லாடா்ஸ்க் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

அந்த நகருக்குள் அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை நுழைந்தனா். தற்போது அந்த நகர நிா்வாக அலுவலகத்தில் ரஷியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

போா் தொடங்குவதற்கு முன்னா் ஸ்விட்லாடா்ஸ்க் நகரில் 11,000 பொதுமக்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரமாகும் தாக்குதல்: டான்பாஸ் பிராந்தியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா செவ்வாய்க்கிழமை கூறிதாவது:

டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியா ஈவிரக்கமில்லாமல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பியப் பகுதியில் நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

ரஷியாவை எதிா்கொள்ளத் தேவையான அளவுக்கு உக்ரைனிடம் ஆயுதங்கள் இருப்பதாக யாரும் அவசரப்பட்டு முடிவு செய்யக் கூடாது. டான்பாஸில் ரஷியா மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதலை கருத்தில் கொண்டு, எங்களுக்கு ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் (எம்எல்ஆா்எஸ்), தொலைதூர குண்டுவீச்சு சாதனங்கள், கவச வாகனங்கள் உள்ளிட்ட ஆயுதங்களின் விநியோகத்தை நட்பு நாடுகள் துரிதப்படுத்த வேண்டும்.

தானியங்கள் திருட்டு: தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் விளையும் தானியங்களை ரஷியா திருடி வருகிறது. அவற்றை கப்பலில் ஏற்றி பாஸ்பரஸ் கடல்பாதை வழியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ரஷியா முயன்று வருகிறது.

எனவே, உக்ரைனிடமிருந்து திருடப்பட்ட தானியங்களை உலக நாடுகள் கொள்முதல் செய்ய வேண்டாம். அவ்வாறு கொள்முதல் செய்வது உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாக உதவுவதாக அமையும் என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு தனது படையை அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இடிபாடுகளில் 200 சடலங்கள்

கீவ், மே 24: உக்ரைனில் ரஷியாவால் கைப்பற்றப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில், குண்டுவீச்சில் சேதமடைந்த அடுக்குமாடிக் கட்டட இடிபாடுகளில் இருந்து 200 சடலங்கள் கண்டறியப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அந்த நகர மேயரின் ஆலோசகா் பீட்ரோ ஆண்டரையஷென்கோ கூறியதாவது:

மரியுபோலில் ரஷியத் தாக்குதலால் தரைமட்டமான அடுக்கு மாடி கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து அழுகிய நிலையில் 200 பேரது சடலங்கள் கண்டறியப்பட்டன.

எனினும், அந்தச் சடலங்களைப் பெற்றுக்கொள்ள நகர மக்கள் மறுத்துவிட்டதால், ரஷிய அதிகாரிகள் அவற்றை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினா். அதனால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசிவருகிறது என்றாா் அவா்.



Read in source website

 

டோக்கியோ: தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

‘க்வாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளாா். டோக்கியோவில் அவா் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தபோது ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், தைவானை படைபலத்தின் மூலம் சீனா கைப்பற்ற முயன்றால், அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும் என்றாா்.

‘ஒரே சீனா கொள்கையின்படி’ தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறிவரும் நிலையில், அமெரிக்க அதிபா் இவ்வாறு கூறியதால், தைவான் மீதான கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொண்டதா எனக் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், டோக்கியோவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய ஜோ பைடன், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை. நேற்று பேசியபோதே இதுகுறித்து குறிப்பிட்டேன். ஒரே சீனா கொள்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அதற்காக, சீனா தனது பலத்தைப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என்பது அதன் பொருள் அல்ல என்றாா்.

தைவானுடன் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்துகொள்ளாத நிலையில், தைவானுக்கு இதுபோன்று பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதை தவிா்த்து வந்தது. ஆனால், முதல்முறையாக தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும் என அதிபா் பைடன் கூறியதற்கு சீனா கடுமையான ஆட்சேபம் தெரிவித்தது.

 



Read in source website

 

காபூல்: ஆப்கானிஸ்தானிலுள்ள விமான நிலையங்களைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த நிறுவனத்துடன் தலிபான் ஆட்சியாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த ஆண்டு வெளியேறியதையடுத்து, தலிபான்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டிலுள்ள 3 விமான நிலையங்களை கத்தாா் ஏா்வேய்ஸ் பராமரித்து வந்தது. அந்தப் பணியை நிரந்தரமாக கத்தாா் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.

எனினும், விமான நிலையப் பாதுகாப்புக்கு கத்தாா் பாதுகாப்புப் படையினரை அனுமதிக்க தலிபான்கள் மறுத்ததால் அந்தப் பேச்சுவாா்த்தையில் முறிந்துபோனது. இந்த நிலையில், காபூல், ஹெராத், காந்தஹாா் விமான நிலையங்களைப் பராமரிப்பதற்காக துபையைச் சோ்ந்த ஜிஏஏசி சொல்யூஷன்ஸுடன் மேற்கொண்டுள்ளதாக தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.



Read in source website

 

பெய்ஜிங்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு ‘பொருளாதார நேட்டோ’ பிரிவை உருவாக்க அமெரிக்கா முயன்று வருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு’ (ஐபிஇஎஃப்) அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டமைப்பில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், புருணே, நியூஸிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சீனா அக்கூட்டமைப்பில் இடம்பெறவில்லை. இது சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை எனக் கருதப்பட்டது.

இந்நிலையில், ஆசியா-பசிபிக் பொருளாதார-சமூகக் குழு கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ காணொலி மூலம் பங்கேற்று கூறுகையில், ‘ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நீடித்த வளா்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா தொடா்ந்து மேற்கொள்ளும்.

சா்வதேச பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளை மற்ற நாடுகளுடனான பேச்சுவாா்த்தை-ஒத்துழைப்பின் மூலமாக சீனா மேற்கொள்ளும். ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்த சில நாடுகள் முயற்சிக்கின்றன. அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது. பிராந்தியத்தில் மோதலை ஏற்படுத்த முயலும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும்’ என்றாா்.

ஐபிஇஎஃப் கூட்டமைப்பை ‘பொருளாதார நேட்டோ’ என சீன அரசியல் நோக்கா்கள் விமா்சித்துள்ளதாக சீன அரசு சாா்பில் வெளியாகும் குளோபல் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அந்தக் கூட்டமைப்பை அமெரிக்கா தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.



Read in source website

 

டோக்கியோ: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனை மையமாகக் கொண்டு ஆக்கபூா்வ வழியில் ‘க்வாட்’ (நாற்கர) கூட்டமைப்பு பயணித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் கலந்துகொண்டனா்.

அப்போது பிரதமா் மோடி கூறியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்கான ஆக்கபூா்வ திட்டத்தை வகுத்து க்வாட் நாடுகள் பயணித்து வருகின்றன. இந்த நோக்கத்தில் க்வாட் கூட்டமைப்பு மேலும் வலுவடையும். குறுகிய காலகட்டத்தில் உலக அரங்கில் க்வாட் கூட்டமைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது க்வாட் கூட்டமைப்பின் நோக்கம் விரிவாக்கமடைந்து கூடுதல் திறன் பெற்றுள்ளது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர புரிதலும், உறுதித்தன்மையும் ஜனநாயக கொள்கைகளை மேலும் வலுப்படுத்துகின்றன. பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாக ஒருங்கிணைந்த, வெளிப்படையான, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய அமைதி: கரோனா பரவல் காலத்திலும் க்வாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தடுப்பூசி விநியோகம், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துதல், பேரிடா் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றிலும் க்வாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஒத்துழைப்பானது பிராந்தியத்தில் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் க்வாட் மாநாட்டில் ஆல்பனேசி கலந்து கொண்டுள்ளாா். இது க்வாட் கூட்டமைப்புக்கு அவா் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது என்றாா் அவா்.

சா்வதேச பிரச்னை: மாநாட்டில் அமெரிக்க அதிபா் பைடன் கூறுகையில், ‘வரலாற்றின் கருப்புப் பக்கங்களைக் கடந்து வருகிறோம். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதன் காரணமாக, மனித சமூகம் பேரழிவைச் சந்தித்து வருகிறது. அப்பாவி மக்கள் வீதிகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுள்ளனா்.

உக்ரைன் விவகாரம் சா்வதேச பிரச்னை. குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதற்கு புதின் முயன்று வருகிறாா். பள்ளிகள், வரலாற்று அருங்காட்சியகங்கள் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்தும்வரை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

ஆதிக்கமும் சுதந்திரமும்: ஜப்பான் பிரதமா் கிஷிடா கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழச் செய்வதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் உறுதியேற்க வேண்டும்’ என்றாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் நிலையில், க்வாட் கூட்டமைப்பு சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அமைக்க முயல்கிறது’ என்றாா்.

மாநாட்டின்போது மற்ற நாடுகளின் தலைவா்கள் அனைவரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போா் குறித்து பேசிய நிலையில், பிரதமா் மோடி அந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்துக்கு எதிா்ப்பு: மாநாட்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘எந்தவித காரணத்தின் அடிப்படையிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் க்வாட் கூட்டமைப்பு எதிா்க்கிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி போன்ற உதவிகள் கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மும்பை, பதான்கோட் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் செயல்படக் கூடாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2593-ஆவது தீா்மானத்தை மதித்து ஆப்கானிஸ்தான் செயல்பட வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வழிகாட்டுதலின்படி அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை: சா்ச்சைக்குரிய பகுதிகளில் ராணுவத் தளங்களை அமைப்பது, கடல் ரோந்து கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்துவது, மற்ற நாடுகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட பிராந்தியத்தின் சூழலைத் தன்னிச்சையாக மாற்றுவதற்கான முயற்சிகளை க்வாட் கடுமையாக எதிா்க்கிறது. ஐ.நா.வின் கடலுக்கான சா்வதேச சட்டத்தை மதித்து க்வாட் செயல்படும்.

கிழக்கு, தென்சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நிலவுவதை க்வாட் உறுதி செய்யும். சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, ஜனநாயக கொள்கைகள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பிரச்னைகளுக்கு அமைதிவழித் தீா்வு ஆகியவற்றுக்கு க்வாட் தொடா்ந்து மதிப்பளிக்கும்.

கட்டமைப்பில் ஒத்துழைப்பு: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கடனுதவி வழங்கவும் உறுதியேற்கப்பட்டுள்ளது. எண்மத் தொடா்பு, பசுமை எரிசக்தி, பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புகள் ஆகியவற்றிலும் க்வாட் நாடுகள் ஒத்துழைத்து செயல்படவுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த க்வாட் மாநாடு 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.



Read in source website

 

டோக்கியோ: இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு இருநாட்டுத் தலைவா்களும் உறுதியேற்றனா்.

க்வாட் மாநாடு நிறைவடைந்தபிறகு ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். பேச்சுவாா்த்தை குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரதமா் கிஷிடாவுடனான இருதரப்பு பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதற்கு இந்தப் பேச்சுவாா்த்தை உதவியது.

பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு, தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவதற்குத் தலைவா்கள் இருவரும் ஒப்புக்கொண்டனா். இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் 2+2 பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்துவதற்குத் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் 3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ள ஜப்பான் ஏற்கெனவே உறுதியேற்றிருந்தது. அந்த முதலீடுகள் குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா். இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கு அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா். ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரயில் திட்டம் குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஒத்துழைப்புடன் செயல்பட இருநாட்டுத் தலைவா்களும் உறுதியேற்றனா். பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை வலுப்படுத்தவும் அவா்கள் உறுதியேற்றனா்.

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர இருதரப்பு மாநாட்டுக்கு வருகை தருமாறு பிரதமா் மோடிக்கு பிரதமா் கிஷிடா அழைப்புவிடுத்தாா். அந்த அழைப்பைப் பிரதமா் மோடி ஏற்றுக்கொண்டாா். மேலும், பிரதமா் மோடிக்கு பிரதமா் கிஷிடா உணவு விருந்தளித்தாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

 

லண்டன்: உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் செவ்வாய்க்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவா் அந்தப் பதவியை வகிப்பாா்.

அந்த அமைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்புக்குத் தலைமை வகிக்கும் முதல் ஆப்பிரிக்கரான கேப்ரியேசஸ், அந்தப் பதவியை வகிக்கும் மருத்துவா் அல்லாத முதல் நபா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாஷிங்டனில் சா்வதேச மேம்பாட்டு மையத்துக்கான சுகாதாரக் கொள்கை இயக்குநா் ஜேவியா் குஸ்மான் கூறுகையில், ‘கரோனாவுக்கு எதிரான போரில் ஒரு சில துயரச் சம்பவங்கள் நடைபெற்றாலும், நோய்த்தொற்று காலம் முழுவதும் உறுதியான குரலாக டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் ஒலித்தாா்.

அவரது தலைமையின் மீது சில நாடுகளுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அவரை மாற்ற எந்தவொரு நாடும் முன்வரவில்லை. பெருந்தொற்றுச் சூழலின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த இக்கட்டான தருணத்தைக் கடந்து செல்ல நிலையான தலைமை தேவை’ என்றாா்.



Read in source website

உலக அளவில் பெரும் மதிப்பு மிக்க உலோகமாக தங்கம் விளங்கி வருகிறது. பன்னெடுங்காலமாகவே தங்கத்தின் மீதான மதிப்பு மக்களிடம் இன்றும் தொடர்கிறது. உலக அளவில் வங்கிகள் தொடங்கி வணிக நிறுவனங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வர்த்தக பொருளாக பயன்படுத்துவதும் இன்று வரை வழக்கமாக உள்ளது. தங்கத்தை அதிகமாக இருப்பு வைப்பது பல்வேறு நாடுகளின் வங்கிகளே.

பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்ட தங்கம் உதவும் என்பதால் இது உலகளாவிய முதலீட்டு பொருளாக உள்ளது. இன்று அமெரிக்க நாணயமான டாலர் மதிப்பு மிக்கதாக இருப்பதுபோலவே உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும் பொருளாக தங்கம் உள்ளது.



Read in source website

2019 முதல் 2021 ஆம் ஆண்டுகள் அடங்கிய காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிகையில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வறிக்கையில் இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கம் பற்றி பல்வேறு ருசிகர தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றின் தொகுப்பு:

இறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: 2015-2016 காலகட்டத்தையும் 2019-2021 காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியர்கள் இறைச்சி உண்ணும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலுமே இறைச்சி உணவை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. தேசத்தில் தனிநபரின் வருமானம் அதிகரிக்கும்போது மக்கள் மத்தியில் புரத உணவு சாப்பிடும் போக்கு அதிகரிக்கும் என்பதற்கான சரியான உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.

2015-2016 காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்துக்களின் எண்ணிக்கை 73.24 % ஆக இருந்தது. அது 2019-2021 காலத்தில் 77.95% ஆக அதிகரித்துள்ளது. மதமற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துவோர் மத்தியில் 2015-2016 காலகட்டத்தில் இறைச்சி உண்போர் சதவீதம் 98.11 ஆக இருந்தது. அண்மை ஆய்வில் அது 99.56% ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் ஒவ்வொரு மதம் சார்ந்தும் இறைச்சி உண்ணும் பழக்கம் பற்றிய புள்ளிவிவரம் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அரசியலை வென்ற இறைச்சி உணவு: 2015ல் உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக முகமது இக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் இறைச்சி குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை சுற்றி மிகப்பெரிய அரசியல் உருவானது. பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது? இந்து மத திருவிழாக் காலங்களில் இறைச்சிக் கூடங்களை மூடிவைக்க வேண்டும் என்ற சர்ச்சை உருவானது. இத்தனை அரசியலுக்கு மத்தியிலும் பிழைத்துள்ளது இந்தியர்களின் இறைச்சி உண்ணும் பழக்கம்.

சரிவிகித உணவில் சறுக்கல் தான்.. இறைச்சி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்திய மக்கள் அனைவரும் அன்றாடம் ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால், சரிவிகித உணவு உட்கொள்வதில் இந்தியா சறுக்கியுள்ளது தெரிகிறது. இந்தியர்கள் அன்றாட உணவு சரிவிகித உணவு என்ற நிலையை இன்னும் எட்டவில்லை என்பது உறுதியாகிறது. இந்திய ஆண்களில் சராசரியாக பாதிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் பால், தானியங்கள் உட்கொள்வதில்லை. அதேபோல் அன்றாடம் காய்கறி சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவே. அன்றாடம் இறைச்சி, மீன், முட்டை சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. இதில் ஒரே ஆறுதல் 2015-2016 காலகட்டத்தைவிட 2019-2021ல் இந்திய ஆண்களின் சரிவிகித உணவுப் பழக்கவழக்கம் சொற்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

உணவிலும் பாலின இடைவெளி: உணவு உட்கொள்வதிலும் இந்தியாவில் பாலின இடைவெளி இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய ஆண்களில் 4ல் ஒருவருக்கு ரத்த சோகை உள்ளது. பிஹார், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட், அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ரத்தசோகை உள்ள பெண்களின் எண்ணிக்கை 60%க்கும் அதிகமாக உள்ளது.

பெருந்தொற்று உணபு பழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? தேசிய குடும்ப நல ஆய்வானது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று ஜூன் 2019 தொடங்கி மார்ச் 2020 வரை நடந்தது. இதில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாவது சுற்று செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை நடத்தப்பட்டது. இதில் 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடந்தன. இதில் மார்ச் 25, 2020 தொடங்கி அமலான 68 நாட்கள் ஊரடங்கும் இருந்தது.

பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தின் தரம் குறைந்துள்ளது. இதற்கு வருவாய் இழப்பு காரணமாக இருந்துள்ளது. பால், பழங்கள், தானியங்கள், இறைச்சி என பல்வேறு உணவுகளை உட்கொள்வதிலும் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய சரிவு இருந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.



Read in source website

வருமான வரித் துறை எடுத்த உடனேயே தடாலடியாக ஒருவரது வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்துவிட முடியாது. செய்யவும் செய்யாது. வருமான வரித் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்குட்பட்டது.

சட்டத்திற்குட்பட்டது: வருமான வரி சட்டம் பிரிவு 132-ன் படி ஒருவரது வீட்டைச் சோதனையிட அனுமதித்தாலும், அதற்கு முன்பாக பல நடைமுறைகள் அவர்கள் கடைபிடிக்கப்பட வேண்டும். முதலில் யார் வீட்டில் அல்லது நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனையிட முடிவு செய்திருக்கிறார்களோ, அவர்கள் வரிமான வரி தாக்கல் செய்திருக்கிறார்களா என்பதை வருமான வரித் துறை சரிபார்த்து, அதற்கான ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளும்.

ஒருவேளை ஒருவர் ஆண்டுதோறும் அதிகமான அளவு வருமான வரி தாக்கல் செய்துவிட்டு, திடீரென சில ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், அப்போது அவர் வீட்டில் சோதனை நடத்த அது காரணமாக அமையலாம்.

தகவலை மறைக்க வேண்டாம்: இரண்டாவதாக, ஒருவர் ரூ.8 கோடிக்கு சொத்து ஒன்றை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதுகுறித்த தகவல் பத்திரப்பதிவுத் துறை மூலமாக வருமான வரித்துறைக்குச் சென்றிருக்கும். ஆனால், அவர் தாக்கல் செய்த வருமான விபரங்களில் அந்த சொத்து குறித்த தகவல் இல்லை என்றால், அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபடலாம்.

அதேபோல சோதனைக்கு செல்லும் முன்பாக சோதனை மேற்கொள்ள இருக்கும் நபர் என்ன தொழில் செய்கிறார், அவரது தற்போதைய பொருளாதார நிலை என்ன, அவர் தொடர்ந்து வரி செலுத்துபவரா, அவர் தாக்கல் செய்திருக்கும் வருமானத்திற்கும் அவரின் வாழ்க்கை முறைக்கும் ஒத்துப்போகிறதா என்று பல விஷயங்களை வருமான வரித் துறையினர் பார்ப்பார்கள்.

அப்படி அனைத்து விஷயங்களையும் பார்த்த பிறகு, இந்த விவகாரத்தில் கணக்கில் காட்டப்படாத வருமானம் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்திற்கு வருமான வரி சோதனைக்குச் செல்வார்கள். அப்போதும் அனைத்து விஷயங்களும் அமைதியான முறையில் தான் நடைபெறும். கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டறியப்பட்டால் அதற்கு வரி கணக்கிட்டு அதனைக் கட்டவும், அபராதம் கட்டவுமே அந்த நபர் பணிக்கப்படுவார்.

சந்தேகம் இருந்தால் சோதனை: பொதுவாக, எந்தக் குறிப்பிட்ட பணப்பரிமாற்றத்தின் மீது வருமான வரித் துறைக்கு சந்தேகம் வருகிறதோ, அந்தக் குறிப்பிட்ட வருமானம் அல்லது செலவு பற்றி மட்டுமே விளக்கம் கேட்கப்படும். உதாரணாமாக, மாதம் ரூ.50,000 வருமானம் உள்ள ஒருவர், திடீரென அந்த நிதியாண்டில் ரூ.5 அல்லது ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்தை வாங்கவோ, விற்கவோ செய்தால், அந்தக் குறிப்பிட்ட சொத்து பற்றி மட்டும் தான் விளக்கம் கேட்பார்கள்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், குறிப்பிட்ட நிதியாண்டில் அதிக அளவு மதிப்பீட்டில் ஒருவருடைய 'பான் எண்' சம்மந்தப்பட்டிருந்தால், அப்போது அந்தப் பரிமாற்றம் குறித்து வருமான வரித் துறையில் இருந்து விளக்கம் கேட்கப்படும்.



Read in source website

வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது கியாரண்டர் கொடுங்கள் என்று கேட்பார்கள். இப்போது, 'நான் கடன் வாங்குகிறேன். அதனை ஹைபாதிக்கேட் செய்கிறேன். சில நேரங்களில் கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுக்கிறேன். இவற்றைத் தாண்டி கியாரன்டர் எதற்காக?' என்ற சந்தேகம் வாடிக்கையாளருக்கு வரலாம்.

சரி, கியாரன்டி அல்லது ஜாமீன் என்றால் என்ன? - எளிமையாக சொல்வதானால், வாடிக்கையாளர் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்த தவறும் பட்சத்தில் நான் அந்தக் கடனனை திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று வாடிக்கையாளர் சார்பாக வங்கிக்கு ஒருவர் உத்தரவாதம் அளிப்பது என்று பொருள்.

யார் ஜாமீன் போட முடியும்? - ஒருவேளை வாடிக்கையாளரால் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு திறன், வசதி உள்ளவர்கள், கடன் பெற்றவரை திருப்பிச் செலுத்தும் படி சொல்லும் உரிமை உள்ளவர்கள் மட்டுமே ஜாமீன் கையெழுத்து போட முடியும். கடன்பெறுபவருக்கு இருக்க வேண்டிய நன்னடத்தை, திருப்பி செலுத்தும் திறன் எல்லாமும் ஜாமீன் கையெழுத்து போடுபருக்கும் இருக்க வேண்டும். இதில் முக்கியமான ஒரு விஷயம் ஜாமீன் கையெழுத்து போடுபவர்களுக்கு கடன் தொகைக்கு நிகராக சொத்து இருக்க வேண்டும்.

ஜாமீன்தாரரும் கடனுக்கு பொறுப்பு: வாடிக்கையாளர் வங்கிக் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால், ஜாமீன்தார் மீதும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டப்படி கடன் பெற்றவர் அந்தக் கடனைத் திருப்பி செலுத்தும் வரையில் ஜாமீன் கையெழுத்திட்டவர்களும் கடன் மீதான பொறுப்புகள் இருந்து கொண்டே இருக்கும். வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் அது தொடப்பாக ஜாமீன் கையெழுத்திட்டவருக்கு வங்கி கடன் நிலுவைத் தொடர்பாக ரிமைண்டர் நோட்டீஸ் அனுப்ப முடியும்.

அதே போல ரீ கால் நோட்டீஸூம் ஜாமீன் கையெழுத்திட்டவருக்கே அனுப்பப்படும். தற்போது, கடனைத் திருப்பிச்செலுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் கையெழுத்திட்டவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்? - இந்த சிக்கல்களை தவிர்க்க, கடன் வாங்கியவர், ஜாமீன் கையெழுத்திட்டவர் இருவரும் சேர்ந்து வங்கிக்கு சென்று கடனைத் திருப்பி செலுத்த முடியாததற்கு சரியான காரணத்தை சொல்லி, கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம் என்று எழுத்துபூர்வமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது வங்கி மேலே சொன்ன கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வாய்ப்பு உண்டு. அதனால் ஜாமீன் கையெழுத்து போடும் போதும், வாங்கும் போதும் கவனமாக இருங்கள்.



Read in source website

புதுடெல்லி: ஆவணங்களை சேமித்து வைக்கும் டிஜிலாக்கர் சேவை இனி வாட்ஸ்அப் மூலமும் பெறலாம்.

கடந்த 2020 மார்ச் மாதம் வாட்ஸ் அப்பில் MyGov Helpdesk உருவாக்கப்பட்டது. கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான வசதியை அது வழங்கியது. இந்நிலையில் தற்போது டிஜிலாக்கர் வசதியையும் MyGov ஹெல்ப் டெஸ்க் வழங்குகிறது.

9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாக Hi அல்லது Namaste அல்லது Digilocker என்று அனுப்ப வேண்டும். இதையடுத்து டிஜிலாக்கர் தளத்தைப் பயன்படுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும்.

இதன் மூலம் ஆதார் அட்டை, பான் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், இரு சக்கர வாகனங்களுக்கான வாகனக் காப்பீடு, காப்பீட்டு ஆவணம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் பெற முடியும்.

இதுகுறித்து MyGov தலைமை நிர்வாக அதிகாரி அபிசேக் சிங் கூறுகையில், “10 கோடி மக்கள் டிஜிலாக்கர் தளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இதுவரையில் 500 கோடிக்கு மேலாக ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிலாக்கர் சேவையை இனி வாட்ஸ்அப் மூலமும் பெற முடியும். இதனால், பல கோடி மக்கள் தங்கள் ஆவணங்களின் டிஜிட்டல் வடிவத்தை எளிதாகப் பெற முடியும்” என்று தெரிவித்தார்.



Read in source website

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் வடம் பிடித்தனர்.

க.சண்முகவடிவேல், திருச்சி

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் வடம் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலாகும்.

இந்த ஆலயத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக திருதேரோட்ட விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக தேரை உருவாக்க வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு அன்பில் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழரின் முதன்மை அமைச்சராக இருந்தவர் அன்பில் அநிருத்தராய பிரம்மராயர். அவரது சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள மேல அன்பில் கிராமத்தில் புகழ் பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4-வது தலமாக இது விளங்குகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலாகவும் இது விளங்குகின்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று இந்த கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. ஆனால், கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சில காரணங்களால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.வி.சம்பத் என்பவர் மூலமாக ரூ.90 லட்சம் மதிப்பில் இலுப்பை மரங்களை கொண்டு 12 அடி 10 அங்குலம் நீளம், 12 அடி 10 அங்குலம் அகலம், 12 அடி 10 அங்குலம் உயரம் என்ற அளவில் சுமார் 20 டன் எடையில் புதிய மரத்தேர் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கோவிலை சுற்றி வெளிப்பிரகாரத்தில் 984 அடி நீளத்திற்கு புதிய தேரோட்ட பாதை அமைக்கும் பணி ரூ.98 லட்சம் மதிப்பில் இந்திய கலாச்சார மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் 100 சதவீதம் முடிவுற்ற நிலையில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த புதிய தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மேல அன்பில் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

இந்தக் கோவிலில் தேக்கு மரத்தில் புதிய கொடி மரமும் நன்கொடையாளர் சதீஷ் வரதராஜன் என்பவர் மூலம் ரூ.9.90 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது. புதிய கொடிமரத்துக்கு அடுத்த மாதம் மூன்றாம் தேதி கருங்கல் பீடத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

300 ஆண்டுகளுக்குப் பின்னர் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

 

இரண்டாண்டு கால கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலால் சுற்றுலா முடக்கம், செயற்கை உரங்கள் தடை செய்யப்பட்டதால் விவசாய உற்பத்தி வீழ்ச்சி, வரவுக்கு மீறி கடன் வாங்கியதால் பொருளாதாரத் தேக்கம், ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேட்டால் நிலையற்ற தன்மை, சீனாவை அதிகப்படியாகச் சார்ந்திருந்ததால் ஏற்பட்ட கடன்சுமை ஆகியவை இலங்கையை நிலைகுலையச் செய்துள்ளன. 

இன்றைய தேதியில் இலங்கையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 5,000; அதற்கும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் வாங்க கேன்களுடன் 12 மணிநேரத்துக்கு மேல் தெருக்களில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், "துறைமுகங்களில் காத்திருக்கும் எரிபொருள் டேங்கர்களை இறக்க அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை' என்று அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியிருக்கிறார். 

எரிபொருள் தட்டுப்பாட்டால் நாட்டில் 18 மணிநேர மின்வெட்டு நிலவுகிறது. ஹோட்டல்களும், பள்ளிகளும் மூடப்பட்டு விட்டன. அரசு அலுவலகங்கள் குறைவான ஊழியர்களுடன் இயங்குகின்றன. அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்கூட முடங்கியிருக்கின்றன. இவையெல்லாம் போதாது என்று, அரசு மீதான அதிருப்தியில் நாட்டு மக்கள் ஆங்காங்கே நடத்தும் போராட்டங்கள் வன்முறையாக வடிவெடுத்துள்ளன.  

தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள்கள் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் பணவீக்கம் 30%-ஐ தாண்டி விட்டது. விரைவில் இது 40%-ஐ எட்டும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இவை அனைத்துக்கும் காரணம், வரவுக்கு மீறி வாங்கப்பட்ட கடன்தான்.

உலக வங்கி, சர்வதேச நிதியம் மட்டுமல்லாது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை வாங்கிய கடன் தொகையின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த மே 20 நிலவரப்படி 51 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3.97 லட்சம் கோடி) உயர்ந்திருக்கிறது. இந்தக் கடனுக்கான தவணைத்தொகையையோ, வட்டித்தொகையையோ திருப்பித் தரும் நிலையில் இலங்கை இல்லை. இதை சென்ற மாதமே அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. 

குறிப்பாக, உணவுப் பொருட்களுக்காக கடன் பத்திரங்களில் வாங்கிய ரூ.94,000 கோடி கடனுக்கு உடனே செலுத்த வேண்டிய ரூ.585 கோடி வட்டியை அளிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 18 உடன் முடிவடைந்து விட்டது. "பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி இன்மை போன்ற நெருக்கடிகளால் வாங்கிய கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்த வாய்ப்பில்லை' என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே மே 20-இல் அறிவித்திருக்கிறார். இது கிட்டத்தட்ட திவால் ஆன நிலைதான். 

இலங்கையின் மொத்தக் கடனில் சுமார் 10% சீனாவிடமிருந்து வாங்கியதாகும். தவிர, இலங்கையின் பல உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பல பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் சொந்த ஊரான அம்பந்தோட்டாவில் துறைமுக விரிவாக்கத்தில் நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி, சீனாவுக்கு ராஜபட்ச அளித்த அனுமதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு மட்டும் 1.1 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8, 500கோடி) சீனா முதலீடு செய்துள்ளது. ஆனால், 

இத்துறைமுகத்தால் இலங்கை நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. தற்போது அதனை சீனாவே 98 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது, கந்துவட்டிக்காரர்களையே நினைவுபடுத்துகிறது.

கவர்ச்சிகரமான திட்டங்களில் மயங்கியும் அதில் கிடைக்கும் லஞ்சத்துக்காகவும் இலங்கை ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கியதன் விளைவை அம்பந்தோட்டா துறைமுக கபளீ கரம் காட்டுகிறது. இதே போல பல்வேறு திட்டங்களில் சீனாவின் கடன்வலை இலங்கையை இறுகப் பற்றியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்று இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் திணறும்போது, ஏதுமறியாதது போல சீனா வேடிக்கை பார்க்கிறது. அந்நாட்டுக்கு, இலங்கையில் செய்த முதலீடுகள் குறித்து மட்டும்தான் கவலை.

சர்வதேச நிதியத்திடம் ரூ. 2.4 லட்சம் கோடி கடனுதவி பெற இலங்கை அரசு முயன்று வருவதாகத் தெரிகிறது. இந்த அளவுக்கு கடனுதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பது இலங்கைக்கும் தெரியும். ஆனால், இந்தக் கடனை நம்பித்தான் இலங்கையின் எதிர்காலம் இருக்கிறது.

அந்நிய செலாவணிக் கையிருப்பு முற்றிலும் கரைந்துள்ள சூழலில், வரவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் இலங்கை கடைத்தேறுவது கடினம் என்றே தோன்றுகிறது. மேலும் மேலும் கடன் வாங்குவது ஒன்று மட்டுமே இலங்கை முன்னுள்ள உடனடித் தீர்வாகக் காட்சி அளிக்கிறது. "வரக்கூடிய இரண்டு மாதங்கள் இலங்கைக்கு மிக மோசமான காலகட்டமாக இருக்கும்' என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது சிக்கலின் தீவிரத்தைக் காட்டுகிறது.

அண்மையில் இலங்கைக்கு ரூ.1,240 கோடி கடன் வழங்குவதாக உலக வங்கி அறிவித்தது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றதுதான். கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் இலங்கைக்குக் கடனுதவி அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. 

இந்தியா ஏற்கெனவே ரூ.22,500 கோடி உடனடி கடனுதவி அளித்துள்ளது. தவிர, உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருட்களை அவசர உதவியாக அளித்து வருகிறது. 

பிற நாடுகள் அளிக்கும் கடனுதவிக்கும், நெருங்கிய நட்பு நாடான இந்தியா அளிக்கும் நிதியுதவிக்கும், பொருளுதவிக்கும் உள்ள வேறுபாட்டை இலங்கை உணர்ந்திருக்கும்.



Read in source website

 

ஒரு நாணயத்திற்கு இருபக்கமும் வெவ்வேறான அடையாளங்கள் இருப்பது போல சில மனிதா்கட்கும் இரு வித அடையாளம் இருக்கவே செய்கிறது. அன்றைய அயா்லாந்தில் இங்கிலாந்து அரசு, புரட்டஸ்டன்ட் கால்வின் பிரிவை தழுவி, கத்தோலிக்கா்களை கொடுமைபடுத்தியது. அவா்களின் தாய்மொழி காலிக்கை நீக்கி ஆங்கிலத்தைப் புகுத்தியது. அரசுப் பணிகள் இல்லை. பொது கல்லறை இல்லை. தீண்டத்தாகதவா்களாக்கி நகரங்களை விட்டு ஐந்து மைல்களுக்கு அப்பால் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள கத்தோலிக்கா்களுக்கு புரட்டஸ்டன்டு ஆங்கில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் கிழக்கிந்திய கம்பெனி 23 வயது நிரம்பிய புரட்டஸ்டன்டு பாதிரியாா் ராபா்ட் கால்டுவெல்லை இந்தியாவில் மதம் பரப்ப அனுப்பி வைத்தது. இவா் தென்தமிழகத்தில் உள்ள இடையன்குடி கிராமத்தில் 1842 வாக்கில் குடிபுகுந்தாா். அப்போது பாதிரியாா்க்கு இருந்த ஒரே நோக்கம் புரட்டஸ்டன்டு மதத்தை எப்படியாகிலும் பரப்ப வேண்டும் என்பதே! இதற்கு தமிழக சமூகச் சூழல் தடையாக இருப்பதை உணா்ந்தாா்.

மூவேந்தா்கள், குறுநில மன்னா்கள், புராணங்கள், இதிகாசங்கள், சங்கப்பனுவல்கள், காப்பியங்கள் மேல் கணக்கு, கீழ் கணக்கு நூல்கள் ஏன், பொதுமக்கள் வரை பிராமணா்களை உயா்த்தியே வந்துள்ளாா்கள். போா்களின்போது கூட இவா்கட்கு பெண்ணினத்தை, ஆவினத்தை போல பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகத்தான் வரலாறு கூறுகிறது.

அந்த சமூகத்தை தனது நச்சுத் தூரிகையால் பொய்கலந்த சித்திரத்தை தீட்டி தமிழா்களின் மனதில் பதியம்போட முற்பட்டாா் கால்டுவெல். முதன் முதலில் இவா்தான் பிராமணா்களை வந்தேறிய ஆரியா்கள் என்றும் திராவிடா்களை வெற்றி கொண்டு தெற்கு நோக்கி விரட்டினா் என்றும் சொல்லி புதிய வெறுப்புணா்வை விதைத்தாா்.

கால்டுவெல் தனது ஒப்பிலக்கண நூலில், தமிழ்மொழி, வடமேற்கு ஆசியாவின் உக்ரைன் நாட்டில் வழங்கப்படும் ‘ஸ்கைத்திய’ மொழியிலிருந்து பிறந்தது என்றாா். ‘திராவிடா்கள் கி.மு. 2500 ஆண்டு வாக்கில் மேற்கு ஆசியாவிலிருந்து கைபா் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புலம் பெயா்ந்தவா்கள் என்றும், ஆரியா்கள் கி.மு. 1500-இல் திராவிடா்களுக்கு பின்பு வடமேற்கு ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் கைபா் போலன் கணவாய் வழியாக படையெடுத்து நுழைந்தவா்கள் என்றும் அதில் குறிப்பிட்டாா்.

‘ஆரியா் என்போா் பிராமணா்களே! தமிழும், சம்ஸ்கிருதமும் வெவ்வேறு அடிப்படைகள் கொண்ட மொழிகள். ஒன்றுக்கொன்று இலக்கண ரீதியாக வேறுபட்டவை’ என்று பலவிதமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோடு 1856-இல் ஆங்கிலத்தில் ‘கம்பேரிடிவ் கிராமா் - திரவிடியன் ஆா் சவுத் இந்தியன் பேமலி ஆப் லாங்வேஜஸ்’ என்கிற 452 பக்கம் கொண்ட நூலை வெளியிட்டாா். இந்நூலில் தமிழையும், தமிழா்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருக்கிறாரா என்றால் இல்லை; இகழ்ச்சியாகவே எழுதியுள்ளாா்.

குறிப்பிடும்படியான சில பதிவுகள் - ‘பண்டைய தமிழா்களுக்கு சமய நூல்கள் கிடையாது. உருவ வழிபாடு இல்லை. பேய் வழிபாடும் வெறி ஆட்டமும், ரத்தப் பலியிடுதலும் மட்டுமே இருந்தன. 100 அல்லது 1000-க்கு மேல் எண்ணத் தெரியாது. தமிழா் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெருநகரங்கள் இல்லை. சித்திர வேலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, வானசாத்திரம், ஜோதிடம் ஆகிய கலைகளை தமிழா் அறிந்திருக்கவில்லை. நினைவுத்திறன், தீா்ப்பு, மனசாட்சி, விருப்பம் ஆகியவற்றை சுட்டும் சொற்கள் தமிழில் இல்லை.

பிராமணா்களைவிட நாகரிகத்தில் தமிழா்கள் மிகவும் பின்தங்கி இருந்தாா்கள். இதனால் பிராமணா்களை தங்களின் போதகா்களாக தமிழா்கள் ஏற்றுக்கொண்டனா். கடலுக்கு அப்பால் தீவு, கண்டங்கள் இருப்பதும் கடல் தாண்டிய வணிகமும் பண்டையத் தமிழா்கட்குத் தெரியாது. திராவிட மொழிகள் வடகிழக்கு ஐரோப்பாவில் உக்ரைன், பின்லாந்து பகுதிகளில் 2000-7000 ஆண்டுகட்கு முற்பட்ட ‘ஸ்கைத்திய’ மொழி குடும்பத்தைச் சாா்ந்தது.

அங்கிருந்து நகா்ந்து இஸ்ரவேல் பொ்சிய நாடுகள் வழியாக கைபா், போலன் கணவாய்கள் கடந்து சிந்து சமவெளியை இன்றைக்கு 4,500 ஆண்டுகட்கு முன்னா் வந்தடைந்தது. அங்கிருந்து ஆரியா்களால் விரட்டப்பட்டு 2,500 ஆண்டுகட்கு முன்னா் இந்தியாவின் தென்கோடி முனையை அடைந்தது.

தமிழ்மொழியின் சகோதரி மொழிகள் மங்கோயின், துருக்கி, உக்கிரியான், ஒஸ்தியாக், சைபிரியன், ஹங்கேரி ஆகியவை. திராவிடா்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சுமாா் 1,000 ஆண்டுகளுக்குப் பின்னா் ஆரியா்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து சிந்து சமவெளி தமிழா்களை வென்று ‘சூத்திரா்கள்’ என்றும் ‘மிலேச்சா்கள்’ என்றும் பட்டம் சூட்டி அவமானப்படுத்தினா்.

திராவிட மொழிகள் என்பவை விந்திய மலைக்கு தென்பகுதியில் பேசப்படுபவை. அவற்றில் பண்பட்ட மொழி தமிழ். திராவிட மொழிகளில் பத்தில் ஒன்பது பங்கு சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன. சீவக சிந்தாமணி எட்டாம் நூற்றாண்டிலும், திருக்குறள் ஒன்பதாம் நூற்றாண்டிலும் தோன்றியவை.

ஆரியா்களின் சம்ஸ்கிருத மொழி இன்றைக்கு அழிந்து விட்டது. ஆனால், தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளது. அதனை ஆரியா்களிடமிருந்து பாதுகாப்பது நம்மைப் போன்ற அந்நிய பாதிரிகள் கைகளில்தான் உள்ளது’ என்கிறாா் கால்டுவெல்.

‘தமிழ் என்னும் பெயா் தவறு. அதன் சரியான பெயா் தமிற் என்று இருக்க வேண்டும். ‘ற்’”என்னும் எழுத்து காலப்போக்கில் மாறுதலை அடைந்து ‘ழ்’ எழுத்து ஆகி தமிழாகி விட்டது’ என்கிறாா். ஆனால், தமிழை ‘தமிற்’ என்றதற்கு ஆதாரம் எதுவும் கூறவில்லை. ஒப்பிலக்கண தமிழ் மொழிபெயா்ப்பில் திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கால்டுவெல் காலத்திற்கு 100ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்திரேலிய பழங்குடியினரும் அவா்களின் மொழிகளும் ஐரோப்பியா்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இல்லாத மக்களின் இல்லாத மொழியை திராவிட மொழியுடன் ஒப்பிடுதலும் அந்த மொழியின் பெயரைச் சொல்லாமல் விட்டுள்ளதும் கால்டுவெல்லின் உண்மையின்மையை புலப்படுத்துகின்றன.

மொழி இலக்கணத்தைத் தவிர இசை இலக்கணம், நடன இலக்கணம், கட்டட இலக்கணம் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. நடன மேடை குறித்து பரிபாடல் பேசும். வாஸ்து சாஸ்திரம் நெடுநல்வாடை பகரும். மொழி இலக்கணம் கூறும் அகத்தியம். பின்னா் தொல்காப்பியம், நன்னூல், வீர சோழியம், தண்டியலங்காரம் ஆகிய இலக்கண நூல்களில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து வகை இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பாதிரியாா் எழுதியுள்ள ஒப்பிலக்கண நூலில், எழுத்து, சொல் இலக்கணங்களே ஒப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பொருள், யாப்பு அணி இலக்கணம் புறம் தள்ளப்பட்டுள்ளன. அடுத்து இவா் ‘தமிழ் தனித்து இயங்க வல்லது’ என்று சொல்லி பல ஆயிரம் ஆண்டு காலமாக சமஸ்கிருதமும் தமிழும் இணைந்து வந்த நிலையில் தமிழா்களிடையே பிரிவினையை தோற்றுவித்தாா். 235 தமிழ் இலக்கியச் சொற்கள் வேத அகராதியில் காணப்படுவதை வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுவாா். 54 பாலி மொழி சொற்களும் 36 பிராகிருத சொற்களும் தமிழில் இடம் பெற்றிருப்பதை பட்டியலிடுவாா்.

மேலும் ‘பிறமொழிக் கலப்பு தேவையான அளவில் ஏற்கப்பட்டால் தமிழ் மொழியின் வளம் பெருகும். தனித்தமிழ்ப் பற்றும் பிறமொழி வெறுப்பும் தமிழ் வளா்ச்சிக்குத் தடைகளாம். மொழியின் உயிராற்றல் பிற மொழியிலிருந்து தேவையான சொற்களை கடன் பெறுவதிலேயே சிறக்கிறது’ என்கிறாா் வையாபுரிப் பிள்ளை.

ஆங்கில மொழியின் செழுமைக்கு ஷேக்ஸ்பியா் இரண்டாயிரத்திற்கும் அதிகமான லத்தின், கிரேக்க சொற்களை வழங்கியுள்ளாா். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடும் சொல்லுற்பத்தி, ஒலி ஆராய்ச்சி, மொழி சரிதம், பிராந்திய மொழி ஆராய்ச்சி, வாக்கியமைதியராச்சி, சொல்லுறுப்பாராய்ச்சி, சொற்பொருள் ஆராய்ச்சி, பிராந்திய விவரண நூல் கிளை மொழி, ஒப்பு நோக்கு ஆராய்ச்சி, மொழி பொது ஆராய்ச்சி, வகுத்துரை இலக்கணம், வரலாற்று நெறி இலக்கணம், ஒப்பு நோக்கு இலக்கணம், மொழி தத்துவ இலக்கணம், தொன்மொழி நாகரிக நூல், தொல் எழுத்து ஆராய்ச்சி என்ற பல வகையான அளவு கோல்களில் எதையும் கால்டுவெல் கைக்கொள்ளவில்லை. அவரது ஒரே நோக்கம் தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் பிரித்து பகை வளா்ப்பது. அந்தணா், அந்தணா் அல்லாதவா் என்ற பேதத்தை உண்டாக்குவது.

இதனால்தான் வ.சுப. மாணிக்கனாா் ‘தனித்து இயங்கும் வன்மையினால் ஒரு மொழி பெருமையுடையது என்றோ அயன் மொழி சொற்களின் கலப்பினால் ஒரு மொழி சிறுமைத்து என்றோ புகழ், பழி கூறுவது இயற்கை சான்றது. அம்மொழி கலந்து செழிக்கும் இயற்கை வாய்ந்தது’ என்றாா். எனவே இது ஒரு மொழி ஒப்புவியல் தான்; மொழி ஒப்பிலக்கணம் இல்லை. தமிழ் இலக்கணங்களில் பொருள் அதிகாரம் மிக முக்கியமானது. அதில்தான் உலகத் தோற்றம், மக்களின் வாழ்வியல் இருபாலினத்தாரின் அகம் புறம் இவை பேசப்படும். ஆனால் பாதிரியாா் உள்நோக்கத்துடன் அதனைத் தவிா்த்து விட்டாா்.

‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போன்று இலக்கியத்திலிருந்து எடுபடுமாம் இலக்கணம்’ என்பது தொல்காப்பியம்.

அதன் பாயிரத்தில் பனம்பாரனாா் எனும் புலவா் ‘எழுத்து முறை காட்டி ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியதெனை தன்பெயா் தோற்ற பலபுகழ் நிறுத்த படிமையோனே’ என்று கூறியுள்ளாா்.”இப்பாயிரம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னா் எழுதப்பட்டது.

இதன்படி தொல்காப்பியம் அதற்கும் முன்பு இயற்றப்பட்டிருந்த பல இலக்கண நூல்களை ஆராய்ந்து அதன் வழி எழுதப்பட்டு பாண்டிய அரசன் அவையில் அரங்கேற்றப்பட்டது. இந்நூலுக்கு முந்து நூல் இந்திரனின் ஐந்திரம் என்றும் அந்நூல் நான்கு வேதங்களையும் கற்றுணா்ந்த அதங்கோட்டு ஆசானுக்கு தெரிந்து காட்டப்பட்டது என்றும் உணரப்படுகிறது. சீவகசிந்தாமணி உரையிலும் நச்சினாா்க்கினியாா் இந்த உண்மையை வலியுறுத்தி உள்ளாா்.

கால்டுவெல் தனது ஒப்பிலக்கண விரிவுரைகளில் ‘உத்தேசமாக’, ‘போன்ற’, ‘பாா்வைக்கு’ எனும் உறுதியற்ற சொற்களை ஆங்கிலத்தில் உபயோகித்து கற்பனையாக எழுதியுள்ளாா். வரலாற்றுக்கு ஆதாரமாய் விளங்குபவை கல்வெட்டுகள், புராதனச் சின்னங்கள், களிமண் சிலேட் எழுத்துக்கள், படிமங்கள், தோண்டு களம் ஆகியன. ஆனால், மொழி வரலாறுகள் மட்டும் மேற்கண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதப்படுபவை.

மேற்கத்திய அறிஞா்களும், காலனி மதப்பரப்பாளா்களும் ஆதாரமின்றி புனைவதில் கைதோ்ந்தவா்கள். உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவைப் போன்று மொழி ஆராய்ச்சியும், இனவாத ஆராய்ச்சியும் அந்நிய பாதிரியாா்களால் செய்யப்படவில்லை.

தொல்காப்பியமும், திருக்குறளும் பிராமணா்களை உயா்வாகப் பேசுவதைக் கண்ட கால்டுவெல், இந்நூல்கள், பிராமணா்கள் திராவிட நாட்டிற்குள் ஊடுருவிய பின் எழுதப்பட்டவை என்றால் தனது கருத்து உறுதியாகும் என்பதற்காகவும் தமிழா்களிடையே ஜாதிப் பிரிவினையைத் தோற்றுவிக்கும் என்பதற்காகவும் தொல்காப்பியம் கி.பி.1100 ஆண்டு வாக்கிலும், திருக்குறள் கி.பி. 900 ஆண்டு வாக்கிலும் எழுதப்பட்டது என்றாா் (‘பிஷப் கால்டுவெல் பிழையுரையும் பொய்யுரையும் திராவிட இன வாதமும்’: வரலாற்று ஆய்வாளா் உமரி காசிவேலு).

இன்றைக்கு அயா்லாந்து கல்விச் சாலைகளில் சம்ஸ்கிருதம் பயிற்று மொழியாக உள்ளது. சம்ஸ்கிருத அறிஞா் ருட்ஜா் கொன்டன் ஹாா்ஸ்ட் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்தது. அயா்லாந்து புரட்டஸ்டன்டு பாதிரியாரின் மகளான மாா்கரெட் எலிசபெத் நோபிள், சுவாமி விவேகானந்தரின் சீடராகி, சகோதரி நிவேதிதை ஆனாா் என்பது வரலாறு.

தமிழ் அறிஞா்கள் ‘காய்தல் உவத்தல் அகற்றி’ கால்வெல்லின் ஒப்பிலக்கண ஆராய்ச்சியை அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளா்: தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.



Read in source website

 

பேரறிவாளனின் விடுதலைக்கான போராட்டம் 31 நீண்ட ஆண்டுகளாக நடந்து, கடந்த மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம் அம்மாளின் மன உறுதியும் துணிவும் விடா முயற்சியும் எவராலும் எண்ணிப் பார்க்க இயலாதது. 

ஆனால், இப்போராட்டம் இவர்கள் இருவரின் போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. இதற்குத் துணை நின்றவர்கள், பங்காற்றியவர்கள் எண்ணிலடங்காதோர். அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. பலர் பொதுவாழ்வில் இல்லை. பலர் பாதை மாறிச் சென்றுவிட்டனர். எனினும், அவர்கள் நெருக்கடியான ஒவ்வொரு காலகட்டத்திலும் அளித்த பங்களிப்பு என்பது இல்லையென்று ஆகிவிடாது.

தொடக்கம் முதல் துணை நின்று இறுதி வரை தொடர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்போராட்டத்தில் இணைந்துகொண்ட அடுத்தடுத்த தலைமுறையினர் இப்போராட்டத்தை உயிர்ப்புடன் நகர்த்திக் கொண்டே வந்தனர்.

2011-க்குப் பின் இந்தப் போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாகத் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் பெற்ற போராட்டமாக மாறியது. ஆனால் தொடக்கத்தில் அப்படியானதொரு நிலை இருக்கவில்லை.

‘நாட்டின் தலைவர்’ கொல்லப்பட்ட ‘பயங்கரவாத’ வழக்கு என்ற பார்வை மாறி, மக்கள் போராட்டமாக இது மாறியதற்குப் பின்னால் முகமறியா பலரின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது. இக்காலகட்டம் முழுவதிலும் சாட்சியாக நின்று நான் நேரடியாகப் பார்த்த, பொதுவெளியில் அதிகம் அறியப்படாதவற்றை இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியதும் பதிவு செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம்.

1989 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு என்று ஒரு கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதில் 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அங்கம் வகித்தன. இவற்றில் எதுவும் தேர்தல் அரசியல் அமைப்புகள் இல்லை. மாறாக, பல்வேறு கருத்தியல் தளங்களில் இயங்கிய தமிழ்த் தேசிய, பெரியாரிய, மார்க்சிய, தலித்திய, மனித உரிமை அமைப்புகள், ஈழ ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் இக்கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டன. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்று வந்தது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின் தமிழகமெங்கும் ஈழ ஆதரவாளர்களுக்குப் பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அச்சமயத்தில் அக்குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. குழுவின் தலைவர் பழ. நெடுமாறனின் வீட்டில் நடந்த அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மூவர் மட்டுமே. பேராசிரியர் சாலை இளந்திரையன், பேராசிரியர் சாலினி இளந்திரையன், பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

அதன் பிறகு 1993 ஆம் ஆண்டு சனவரியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதி கிட்டு வந்த கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில் கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்களை இறக்கிவிட்டு, அவர்களை இந்திய கடற்படையிடம் சரணடையச் சொல்லிவிட்டு விடுதலைப் புலிகளால் கப்பல் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. இது நடந்து சில நாட்களில் ‘இந்த நிகழ்விற்குப் பழி வாங்குவதற்காக தமிழ்நாடெங்கும் குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக’க் குற்றம் சாட்டப்பட்டு என்னுடைய தந்தை பழ. நெடுமாறன் தடாவில் கைது செய்யப்பட்டார். தடா வழக்கு அன்றைய தடா நீதிபதி நீதியரசர் சித்திக் முன் வந்தபோது பழ. நெடுமாறன், தானே தனக்காக வாதாடினார். சதித் திட்டம் தீட்டியதாக சொல்லப்பட்ட நாளில், இதே கிட்டு கப்பல் நிகழ்விற்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தி அதற்காகக் கைது செய்யப்பட்டு சென்னைச் சிறையில் தான் வைக்கப்பட்டிருந்ததை ஆதாரத்துடன் அவர் நிரூபித்தார். அதனடிப்படையில் தொடுக்கப்பட்டது பொய் வழக்கு என்று உறுதி செய்யப்பட்டு தடா வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அப்படி ஒரு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சித்திக், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டார். அந்தப் புதிய நீதிபதிதான், பின்னர் 1998-இல் 26 பேருக்கும் மரண தண்டனை வழங்கினார். 

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அந்தக் காலகட்டத்தில் தமிழகமெங்கும் இப்படி பலர் மீது பொய்யான தடா வழக்குகள் போடப்பட்டன. ராஜீவ் கொலை வழக்கைத் தவிரவும் பல தடா வழக்குகள், தமிழ்நாடெங்கும் பலர் மீதும் போடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தடா வழக்கைச் சந்தித்தவர்களில் பெரும்பாலோர் ஈழ ஆதரவாளர்களாகவே இருந்தனர். அப்படி பொய்யாக தடா பயன்படுத்தப்பட்ட பல வழக்குகளில் ஒன்றான ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ஒருவர்தான் பேரறிவாளன். தடா வழக்குகளில் சிக்கியவர்கள் பல்வேறு காலகட்டங்களில் விடுதலையாக, ராஜீவ் மரணம் தொடர்பான வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மட்டும் 31 ஆண்டுகளாக சிறையில் (6 பேர் இன்னமும் இருக்கின்றனர்).

1998-ஆம் ஆண்டு சனவரி 28 அன்று தடா நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர்களில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். 13 பேர் ஈழத் தமிழர்கள். இது தற்செயலானது அல்ல. மேலும் இவர்கள் எவரும் பெரும் செல்வந்தர்கள் இல்லை. பலர் குடும்பத்துடன் சிறைப்பட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்குப் போதுமான வசதியோ, வாய்ப்போ இவர்களில் பலருக்கு இருக்கவில்லை.

இத்தீர்ப்பு வெளிவந்த அன்று, இரவு நானோ அப்பாவோ உறங்கவே இல்லை. நான் மிகுந்த ஆத்திரத்தில் இருந்தேன். அப்பா எதுவும் பேசவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே முதல் ஆளாக அங்கு வந்து நின்றவர் அன்றைய பெரியார் தி.க.வின் மாநில அமைப்புச் செயலாளர் மு. பாலகுரு. அவரும் ஆத்திரத்துடன்தான் பேசினார். அவரைத் தொடர்ந்து வரிசையாக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் என அந்த வீடும் தெருவும் ஆட்களாலும் வாகனங்களாலும் நிறைந்தது.

அன்று மாலையே தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. 1991-இல் தலைவர் மற்றும் மூன்றே உறுப்பினர்களுடன் நடந்த அந்தக் கூட்டம் 1998-இல் நிற்கக்கூட இடமில்லாத அளவில் பெரும் கூட்டமாக நடந்தது.

இந்தக் கூட்டத்தில்தான் 26 தமிழர் உயிர்காப்புக் குழு உருவானது. பழ. நெடுமாறன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவிலும் அந்த 80 அமைப்புகளும் இணைந்தன. இக்குழு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி திரட்டி உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை நடத்தியது. இக்குழுவில் அங்கம் வகித்த அமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீதிவீதியாகச் சென்று நிதி திரட்டினர். இக்குழுவில் பெரிய அரசியல் கட்சிகள் எதுவும் நேரடியாக இணையவில்லை என்றபோதும், பல அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களும் தோழர்களும் தாங்களாக முன்வந்து நிதி திரட்டி அளித்தனர். அதில் காங்கிரஸ் தோழர்கள்கூட இருந்தனர் என்பது முக்கியமானது.

சிபிஐ-யின் வழக்கறிஞராகப் பல வழக்குகளில் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் நடராஜன், அப்பணியை உதறிவிட்டு இவ்வழக்கை நடத்த ஒப்புக்கொண்டார். அதற்கான முயற்சியை எடுத்தவர் வழக்கறிஞர் சந்திரசேகரன்.

மூத்த வழக்கறிஞர் நடராஜன் இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று வாதிட்டு வெற்றியும் கண்டார். 1999-ஆம் ஆண்டு மே 11 அன்று உச்ச நீதிமன்றம் தடா சட்டம், இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்று கூறியதோடு 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது. எஞ்சிய எழுவரில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் தீர்ப்பளித்தது. 

இதனைத் தொடர்ந்து மரண தண்டனையைக் குறைக்கக் கோரி, 1999 அக்டோபர் 17 அன்று மாநில ஆளுநருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. பத்தே நாட்களில் 1999 அக்டோபர் 27 அன்று அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை நிராகரித்தார்.

இச்செய்தி வந்த அன்று, பழ. நெடுமாறனை நீதியரசர் கிருஷ்ணய்யர் தொலைபேசியில் அழைத்து ஆளுநருக்கு அப்படி நிராகரிக்க சட்டப்படியான அதிகாரம் இல்லை என்று தெரிவித்ததோடு, அதற்கான ஆதாரமாக, தான் அளித்த தீர்ப்பையே சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில் ஆளுநரின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும், மாநில அமைச்சரவைக்கே அதிகாரம் என்றும் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் அன்று வழக்கறிஞராக இருந்து பின்னர் நீதிபதியாகவும் ஆன சந்துரு. கருணை மனு ஆளுநரிடமிருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இக்காலகட்டத்தில் தமிழகமெங்கும் மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்றது. வழக்கிலிருந்து விடுதலையானவர்களுடன் தமிழகமெங்கும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மேடையேறித் தாங்கள் இவ்வழக்கில் எவ்வாறு பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டோம் என்பதை சொல்லச் சொல்ல மக்களின் ஆதரவு பெருகியது. வழக்கிற்கு நிதியாக தன்னுடைய அன்றைய கூலியைக் கொடுத்தவர்கள், பொன் தாலியையும் பொன் வளையலையும் கழற்றிக் கொடுத்தவர்கள் என மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

புது தில்லியிலும் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அம்மாநாட்டிற்கு வந்த அகில இந்திய அளவில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் “நாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக செயற்பட்டு வருகிறோம். ஆனால் இப்போதுதான் அதற்கு ஆதரவாக இத்தனை பெரிய எழுச்சியைக் காண்கிறோம். அதற்கு உங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நன்றி” என்று நெகிழ்ந்தனர்.

மரண தண்டனை எதிர்ப்பு என்பது பெயரளவில் இவ்வழக்கிற்காக மட்டும் இருக்கவில்லை. அச்சமயத்தில் கோவை சிறையில் இருந்த கோவிந்தசாமி என்ற மரண தண்டனை சிறைவாசிக்கு மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட செய்தி வந்தது. இச்செய்தியைச் சொன்னவர் மனித உரிமைப் போராளியும் எழுத்தாளருமான எஸ்.வி.ஆர். அச்சமயம் பழ. நெடுமாறன் சென்னையில் இல்லை. அதனால் எஸ்.வி.ஆர். உடனடியாக செயற்பட்டு கோவிந்தசாமியின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்துவதற்கான மனுவை தயாரித்துக் கொடுத்தார். அதை தட்டச்சு செய்து யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டி அன்று அந்த மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த பெரும் காரணமாக இருந்தார்.

இதற்கிடையே தலைவர்கள் பலரும் மரண தண்டனைக்கு எதிராகப் பரவலாகக் கருத்துக் கூறத் தொடங்கினர். அகாலிதளத்தின் தலைவர் சிம்ரஞ்சித்சிங் மான் போன்ற சில தலைவர்கள், இவர்கள் நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டே பேசினார்கள்.

பல அமைப்புகளும் மரண தண்டனை எதிர்ப்புக் கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தின. எழுத்தாளர்கள் மாநாடு, வழக்கறிஞர்கள் மாநாடு, மாணவர்கள் மாநாடு எனப் பலதரப்பட்டவர்களும் மரண தண்டனைக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நடந்த அந்த ஒவ்வொரு மாநாட்டிற்குப் பின்னாலும் தமிழர் உயிர்காப்புக் குழுவின் முயற்சியே முழுமையாக இருந்தது. அக்குழுவில் இருந்த அமைப்புகள் எவையும் பெரும் பொருளாதாரப் பின்னணியோ லட்சக்கணக்கில் உறுப்பினர்களையோ கொண்டவை அல்ல. ஆனாலும் அந்த அமைப்புகள் அனைத்தும் தங்கள் முழு ஆற்றலையும் இதற்கு செலவிட்டன. எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியும், குழு உறுப்பினர்களே நேரில் சென்று சந்தித்தும், உண்மைகளை எடுத்துக் கூறி, அவர்கள் ஆதரவைப் பெற்று, ஒரே அணியாகத் திரட்டி அவர்கள் பெயராலேயே மாநாடுகள் நடத்தியது குழு.

அதோடு தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று செய்த பிரசாரங்களின் மூலம் மரண தண்டனைக்கு எதிராக மாணவர்களை மாநாடு, பேரணி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைக்கூட நடத்த வழிகாட்டியது குழு.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடெங்கும் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் எனப் பிரமுகர்கள் பலரும் மரண தண்டனை ஒழிப்புப் படிவத்தில் கையெழுத்திட்டனர்.

மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் ஒருநாடு தழுவிய இயக்கமாக மாறியது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மரண தண்டனை எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

அதோடு உலகெங்கும் மரண தண்டனை ஒழிப்புக்காகவும், குறிப்பாக இவர்கள் நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்துவதென முடிவெடுத்து அதற்கான வேலைகளும் முடுக்கி விடப்பட்டன.

ஒட்டுமொத்தமாக மக்களிடம் கையெழுத்து வாங்குவதற்கான படிவங்களும், சமூகத்தில் உயர்நிலையிலிருக்கும் அதிகாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் போன்றோர் கையெழுத்திட்டு அனுப்பக்கூடிய தனிப்பட்ட கடிதங்களும் அச்சிடப்பட்டு, குழுவின் மாவட்ட நிருவாகிகளுக்கு அனுப்பப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டன. அதோடு இணையதளங்களின் மூலம் உலகத் தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடப்பட்டது. உலகெங்குமிருந்து குடியரசு தலைவருக்கும், தமிழக ஆளுநருக்கும் கடிதங்கள் குவிந்தன. 

இதற்கிடையே கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அப்பெண்ணின் கணவர் துபையில் கொல்லப்பட்டு, அவரைக் கொன்றவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அந்நாட்டுச் சட்டப்படி இறந்தவரின் உறவினர்கள், குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகச் சொன்னால் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும். அதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் மனைவி இறந்துபோனவரின் மனைவிக்கு, தன் கணவரை மன்னிக்கும்படி வேண்டிக் கடிதம் எழுதினார். இந்தப் பெண்ணும் “இறந்த என் கணவர் மீண்டும் வரப் போவதில்லை. அவர் பொருட்டு ஏன் மீண்டும் இன்னொருவர் இறக்க வேண்டும். அப்படி நேர்ந்தால் என்னைப் போலத்தானே அவரது குடும்பத்தினரும் துன்பப்படுவர். எனவே அவரது மரண தண்டனை ரத்து செய்யுங்கள்” என அந்நாட்டு நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டார். மரண தண்டனையும் ரத்தானது.

இதைச் சோனியா காந்திக்குக் குறிப்பிட்டு எழுதிய அப்பெண் அவ்வாறே சோனியாவும், தன் கணவரைக் கொன்றதாகத் தண்டிக்கப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தேசியப் பெண்கள் ஆணையத் தலைவி மோகினி கிரி வேலூர் சிறைக்கு வந்து நால்வரையும் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார்.

இரண்டொரு நாட்களில் சோனியாவின் அறிக்கை வந்தது. “நால்வருக்கும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக ஒரு சிறு பெண் குழந்தையின் தாயான நளினி அக்குழந்தைக்காகவாவது வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

1999 நவம்பர் 30 அன்று தமிழகமெங்கும் மக்களிடம் திரட்டிய ஒரு கோடி கையெழுத்துகளுடன் உயிர்காப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் குடும்பத்துடன் திரண்டு – ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று பெரும் பேரணியாகச் சென்று அன்றைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மக்களின் கோரிக்கையாக இந்நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். அதன்பின்னர் ஆறு மாதங்கள் கழித்து, 2000 ஏப்ரல் 19 அன்று நளினியின் மரண தண்டனையை மட்டும் ரத்து செய்து மாநில அரசு பரிந்துரைத்தது.

அதன் பின்னர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அனுப்பப்பட்டது. இதற்கிடையே இரு முறை இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாளும் குறிக்கப்பட்டது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அச்செய்தியைச் சிறையிலுள்ள சில அலுவலர்கள்வழி பழ. நெடுமாறனுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்பட்டதால் உடனடி சட்ட நடவடிக்கைகள் மூலம் அவை தடுக்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தனது மகனின் விடுதலைக்காக நடத்திவரும் போராட்டத்தின் பதிவாக எழுதப்பட்ட ‘தொடரும் தவிப்பு’ நூல் வெளியானது. அந்நூல் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்தான் இவ்வழக்கின் விசாரணை அதிகாரி கார்த்திகேயன் இவ்வழக்கு விசாரணை பற்றி எழுதிய நூல் வெளியாகியிருந்தது. அதில் சொல்லப்பட்டிருந்த செய்திகளுக்கு நேர் முரணான செய்திகளைக் கொண்ட ‘தொடரும் தவிப்பு’ நூல் தமிழகமெங்கும் மக்களிடம் பெரும் வரவேற்பைப்  பெற்றது. முதன்முதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த அந்த நூலைப் பற்றியும், அற்புதம் அம்மாவைப் பற்றியும் அனைத்து ஊடகங்களும் எழுதின.

நூலின் பிரதி ஒன்று அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பத்தே நாட்களில் குடியரசுத் தலைவரிடமிருந்து நூலைப் பாராட்டிக் கடிதம் வந்தது. மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் தங்கியிருந்த நிலையில் அப்பாராட்டுக் கடிதம் குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கு ஆதரவான முடிவை எடுத்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையை அளித்தது. அதுபோலவே, 2007- இல் அவரது பதவிக் காலம் முடியும் வரை அவர் கருணை மனுக்கள் மீது எம்முடிவையும் எடுக்காமல் அப்படியே விட்டுச் சென்றார். இந்தக் காலதாமதம்தான், பின்னர் 2014-இல் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான காரணமாக நீதிமன்றத்தால் சொல்லப்பட்டது.

இதற்கிடையே 2009-இல் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டுத் தமிழர்களோ போரை நிறுத்த இயலா கையறு நிலையில் நின்றனர். இந்த தவிப்பு மக்கள் மனதில் எவ்வாறு தகித்துக் கொண்டிருந்தது என்பது 2011-இல் தெரிந்தது. 

2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று – மூவரின் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்ததைத் தொடர்ந்து மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற மீண்டும் நாள் குறிக்கப்பட்டது.

இச்செய்தி வெளிவந்தபோது தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. ஈழப் போரின் முடிவால் ரண வேதனையில் இருந்த மக்களை இந்தச் செய்தி கொதிக்க வைத்துவிட்டது. ‘பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்து விட்டோம். மூவரையாவது காப்பாற்றியே ஆக வேண்டும்’ என்று வீதிக்கு வந்தனர். “தொடர்ந்து நம்மை இப்படி அழிக்கப் பார்க்கிறார்களே.. இதை விடவே கூடாது” என்று ஆத்திரப்பட்டவர்கள், அழுதவர்கள் பலர். 2011 ஆகஸ்டு 28 அன்று மக்களின் தவிப்பிற்கு சாட்சியாய் தீப்பிழம்பாய் தன்னை ஈந்தார் செங்கொடி. மக்களின் கொதிப்பு பன்மடங்காகியது. மரண தண்டனை நிறைவேற்றலை நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் விசாரணை நடந்த 2011 ஆகஸ்ட் 30 அன்று அறைக்குள் அசையக்கூட முடியாத அளவிற்கு வழக்கறிஞர்கள் கூட்டம். வெளியே நீதிமன்ற வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம். இவ்வழக்கிற்காக மூத்த வழக்கறிஞர் இராம் ஜெத்மலானியை வரவழைத்திருந்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக மரண தண்டனையையே முற்றிலும் நீக்கக் கோரி போடப்பட்ட வழக்கில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தீர்ப்பு வந்தது. 16 ஆண்டு காலமாக மூவரின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிறு அறுத்தெறியப்பட்டது.

அத்தீர்ப்பு வந்த மறுநாள் அன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுவரையும் விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, மத்திய அரசுக்கு 3 நாட்கள் கெடு வைப்பதாகவும், இல்லையேல் தானே விடுவிக்கப் போவதாகவும் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு.

அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை எழுவரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் 3 ஆண்டுகளை ஆளுநர் கடத்தியதற்கு எதிரான வழக்கில்தான் தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். இவ்வழக்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு விடுதலைக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வாதிட்டது வழக்கின் வெற்றிக்கு உதவியுள்ளது.

1999-ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் நடராஜன் வாதாடி இவ்வழக்கில் தடா செல்லாது என்று பெற்று தந்த தீர்ப்பு, அதே ஆண்டில் ‘ஆளுநருக்கு அதிகாரமில்லை, அமைச்சரவைக்கே அதிகாரம்’ என்று நீதியரசர் கிருஷ்ணய்யரின் வழிகாட்டுதலில் வழக்கறிஞர் சந்துரு பெற்றுத் தந்த தீர்ப்பு ஆகியவை இந்தத் தீர்ப்புக்கு அடிப்படையாக இருந்துள்ளன.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், இவ்வழக்கின் நீதிபதியான நாகேசுவர ராவ் ஓய்வு பெற இருக்கிறார். இதுவே அவரது இறுதி வழக்கு, இறுதித் தீர்ப்பு. தான் போவதற்குள் பேரறிவாளனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் ஒரு மாத்திற்கு முன் பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினையும் அளித்திருந்தார். கட்டாயம் விடுதலை செய்ய வேண்டும் என்ற மனநிலையை வெளிப்படுத்தியுள்ள நீதிபதி ஏற்கெனவே பரோலில் இருப்பவருக்கு, ஏன் பிணை வழங்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது. அதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது.

பரோலில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டிருந்தால் அவர் அந்தத் தீர்ப்பின் நகலைப் பெற்று மீண்டும் சிறைக்குச் சென்று முறைப்படியான நடவடிக்கைகளை முடித்த பிறகுதான் வெளிவர முடியும். அதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதற்குள் ஏதேனும் இடையூறு, தடங்கல்கள் வரலாம். இந்த நிலையில்தான் அவர் பேரறிவாளனுக்கு பிணை வழங்கியுள்ளார். பிணை வழங்கப்பட்ட உடனேயே அவர் சிறைக்குச் சென்று அத்தனை முறைப்படியான நடவடிக்கைகளையும் முடித்துவிட்டார். தற்போது வந்த விடுதலைத் தீர்ப்பு அவரை அந்த நொடியிலேயே விடுவித்திருக்கிறது. இதில்தான் நீதியரசர் நாகேசுவர ராவின் மனிதநேயமும் அறிவுக் கூர்மையும் புலப்படுகிறது.

இப்படி இன்று பேரறிவாளன் விடுதலை என்பது, பேரறிவாளன் மற்றும் அற்புதம் அம்மாவின் 31 ஆண்டு காலப் போராட்டம் மட்டுமல்ல, அது பலரின் போராட்டம். பலரின் கனவு.. பலரின் ஆதங்கம்.. ஈழக் கனவின் மீது விழுந்த அடிக்குப் பின் அதே மே 18 அன்று தமிழர்களுக்குக் கிடைத்த ஆறுதல்… துளிர்த்த நம்பிக்கை…

1998-ஆம் ஆண்டு 26 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட போது 26 உயிரையும் காப்பாற்றுவோம் என்று தொடங்கப்பட்ட இந்த வேள்வியில் ஒற்றை உயிரைக்கூட பலியிட விடாமல் காப்பாற்றி இருக்கிறது தமிழ்ச் சமூகம்.

இதை எழுதும் போதும், எழுதி முடிக்கும் போதும் எனக்குள் பல முகங்கள், பல நினைவுகள், பல பெயர்கள், பல நிகழ்வுகள் அலை மோதுகின்றன. மிகச் சிலவற்றை மட்டுமே இங்கு எழுத முடிந்தது. இந்தப் பதிவில் மட்டுமல்ல, பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து பலரும் வெளியிட்ட பல பதிவுகளிலும் விடுபட்டவர்கள் ஏராளமானோர். அவர்கள் எவரும் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. இது உணர்த்துவது எல்லாம் ஒன்றைத்தான். இது ஊர் கூடி இழுத்த தேர். தமிழகக் கட்சிகள், அமைப்புகள், மக்கள் என்று அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால் நிச்சயம் வெற்றி உண்டு என்று நமக்கு உணர்த்தியுள்ள பாடம்.

[கட்டுரையாளர் -  'தொடரும் தவிப்பு, தூக்குமர நிழலில் நிற்கும் மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் உண்மைக் கதை'  நூலின் ஆசிரியர்.]

 



Read in source website

 

இலங்கைக்கு ஏற்கனவே பலமுறை பெட்ரோல், டீசல் மற்றும் நிதியை இந்தியா கொடுத்து உதவியுள்ளது. தற்போது, அன்னிய செலாவணி கடுமையாக சரிந்துள்ளதால், பெட்ரோலிய பொருட்களைக் கொள்முதல் செய்ய இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து ரூ.3,850 கோடி கடன் வாங்க இலங்கை அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஒப்புதல் வழங்கியது. முன்பே இந்த வங்கியிடமிருந்து ரூ.3,850 கோடியும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடமிருந்து ரூ.1,551 கோடியும் இலங்கை கடனாக பெற்றுள்ளது. ஜூன் மாதம் முதல், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கைக்கு ரூ.4,112 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திவால் நிலையில் உள்ள இலங்கையை மீட்டெடுக்கும் வகையில், "பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆலோசனை வழங்க முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான லசார்ட், கிளிபோர்ட் சான்ஸ் எல்எல்பி நிறுவனங்களை நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இவற்றுக்கு 43 கோடி கட்டணம் வழங்கப்பட உள்ளது.

புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு கட்டமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் இருந்து மீட்க திட்டம் வகுக்க வேண்டிய நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்ததற்கு தன்னுடைய தீவிர ஆதரவாளருக்கே அப்பதவியைக் கொடுக்க வேண்டும் என அதிபர் கோத்தபய முட்டுக்கட்டை போடுவதாக கூறப்பட்ட நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இலங்கை அரசாங்க நிதி அமைச்சர்களாக ராஜபட்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே முன்னும் பின்னுமாக இருந்துள்ளனர். அதாவது இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சராக 2019 நவம்பர் முதல் 2021 ஜூலை வரை மகிந்த ராஜபட்ச, அதை தொடர்ந்து 2021 ஜூலை முதல் ஏப்ரல் 2022 வரை பசில் ராஜபட்ச  நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது, கோத்தபய ராஜபட்ச  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இலங்கை அரசாங்கத்தின் தற்காலிக நிதி அமைச்சராக இருந்துவந்த நிலையில் பதவியை ரணிலுக்கு கொடுத்திருக்கிறார். இந்த 3 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன்கள் 50 பில்லியன் அமெரிக்கா டாலராக அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக, இந்தாண்டு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மீள செலுத்த வேண்டியுள்ள நிலையில் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை வரலாற்றில் முதல் தடவையாக இழந்திருக்கிறது இலங்கை. அந்நிய செலாவணி நிலுவை ‘0’ பெறுமதியை எட்டியிருக்கிறது.

இலங்கை அரச வருமானம் ரூ.1500 பில்லியனாக  இருந்த நிலையில் அரச செலவினம் ரூ.3,522 பில்லியனாக அதிகரித்திருக்கிறது.

சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களான ஸ்டாண்டர்ட், புவர் மூடி மற்றும் ஃபிட்ச் (Standard, Poor Moody & Fitch) ஆகியவை இலங்கை முறிவடைந்துவிட்டதாக அறிவித்திருக்கின்றன.

இலங்கை நாட்டின்  கடன் சுமை ஜிடிபியில் (Debt to GDP) 115% ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அதிகமான கடன்கள் நிலுவையாக இருக்கின்றன.

மேலும், இலங்கையின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.10% ஆக இருப்பதுடன் கடந்த ஏப்ரல் மாதத் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் 29.80 % ஆக உயர்ந்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டு 1.2 ட்ரில்லியன் பணத்தை அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.588 மில்லியன்  பணத்தை மட்டுமே அச்சிட்டுள்ளது.

முக்கியமாக, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு அனுப்பிய 248.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணமாக கிடைத்தாலும் இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 50 வீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

நிதி மேலாண்மை போன்ற அடிப்படை பொருளாதார விசயங்கள் குறித்த எந்த அறிவோ, புரிதலோ அற்ற ராஜபட்ச சகோதரர்களின் மேற்குறிப்பிட்ட பொருளாதாரச் சாதனைகள் பொதுமக்களை தெருவில் நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது திவால்நிலையில் இலங்கை.

இதுவரை கடனில் மூழ்கிய நாடுகள்:

எகிப்தின் மொத்த கடன் சுமை கடந்த நிதியாண்டின்படி ரூ.30,18,400 கோடி. கடன் சுமை ஜிடிபியில் 88 சதவீதமாக உள்ளது. முன்பு 84 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருளின் பண வீக்கம் 26%.

69 நாடுகள் இலங்கையைபோல் திவாலாகும் நிலையில் உள்ளன. அதில் 25 நாடுகள் ஆசிய-பசுபிக் கண்டத்தில் உள்ளவை.  25 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை. துருக்கி, கானா, எத்தியோப்பியா, கென்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கடனைக் கட்ட திணறி வருகின்றன.

இலங்கையை தொடர்ந்து திவாலாகும் அபாயத்திலுள்ள  நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது எகிப்து. அதற்கு அடுத்து இடங்களில், துனிசியா, லெபனான், அர்ஜென்டினா, எல் சல்வடார், பெரு ஆகிய நாடுகள் உள்ளன என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபோல் துனிசியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ.6,000 கோடியாக உள்ளது. பணவீக்கம் 8.7 சதவீதமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

குடும்பத்துடன் மகிந்த மாலத்தீவுக்கு ஓட்டம்?

இலங்கையில் மக்களின் போராட்டத்துக்கு பணிந்து கடந்த மே- 9ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த, கூலிப்படையை ஏவி போராட்டம் நடத்திய மக்களின் மீது தாக்குதல் நடத்தினார். மக்கள் திருப்பித் தாக்கியதால், தனது மகன் நமல் ராஜபட்ச மற்றும் குடும்பத்துடன் தப்பி, திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்தார்.

சில நாட்களுக்கு பிறகு கொழும்பு அருகே ஒரு ரகசிய இடத்துக்கு அவர் இடம் பெயர்ந்தார். பின்னர், நாடாளுமன்றம் கூடிய 2ஆம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் வெளியில் தலையைக் காட்டவில்லை. இந்நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மகிந்த ராஜபட்சவைச் சந்தித்து பேசி உள்ளார். அப்போது, இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் வரை மாலத்தீவில் குடும்பத்துடன் தஞ்சமடைய மகிந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உதவிகளை முகமது நஷீத் செய்து கொடுக்க உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மாலத்தீவு அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய முகமது நஷீத், குடும்பத்துடன் இலங்கையில் தஞ்சமடைந்தார். அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அவருக்கு உதவிகள் செய்தார். அதற்கு நன்றி கடனாக இப்போது மகிந்தவுக்கு முகமது நஷீத் உதவ முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

                                                                                                                                   -தொடரும்



Read in source website

வழக்கத்துக்கு மாறாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் பருத்திப் பஞ்சு மற்றும் நூலின் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டின் நூற்பாலைகளும் பின்னலாடை நிறுவனங்களும் மூடப்படும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருப்பது துயரத்துக்குரியது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பின்னலாடைத் தொழிலைப் பின்னடைவிலிருந்து மீட்கவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பருத்தி விலை உயர்வைச் சமாளிக்க முடியாத நூற்பாலைகள், இந்தப் பிரச்சினை முடியும் வரை தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக முடிவெடுத்துள்ளன. ஜனவரியில் தொடங்கி ஐந்து மாதங்களில் மட்டும் பருத்திப் பஞ்சின் விலை 53%, பருத்தி நூலின் விலை 21% அதிகரித்துள்ளது. இப்படியொரு முன்னுதாரணமற்ற விலை உயர்வை நூற்பாலைகளும் நெசவாலைகளும் இதற்கு முன் சந்தித்ததில்லை.



Read in source website

திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலத்தில் பல வாக்குறுதிகள் செயல்வடிவம் பெற்றிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்று, ‘விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்; விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது’ என்பது. திருச்சியில் முதல்வர் அறிவித்த 7 உறுதிமொழிகளுள் ஒன்று ‘10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக உயர்த்தப்படும்’ என்பது.

ஆனால், அரசின் அணுகுமுறை மேற்குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை புதிதாக ஆறுவழிச் சாலை அமைக்க அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் அமைக்கப்படவுள்ள மத்திய அரசுத் திட்டம். சாலை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி முப்போகம் விளையும் நல்ல நஞ்சை நிலமாகும்.

ஆழ்குழாய் மூலம் 80 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும் பகுதி. இப்படியொரு வளமான நிலப் பகுதியைச் சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தவுள்ளது. ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு தாலுகா பகுதிகள் ஆற்றுப் பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மலர் சாகுபடிகள் அதிகமாகச் செய்யப்படும் பகுதிகள் ஆகும். மாவட்ட ஆட்சியரால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டபோதே, நில உரிமையாளர்களான விவசாயிகள் அனைவரும் நிலத்தைத் தர விருப்பமில்லை என்று தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவுசெய்துள்ளனர்.

சாலை அமைக்கப்பட்டால் 787 சிறு - குறு விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான 1,236 ஏக்கர் நிலங்களை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள். 15 ஏரிகள், 30 குட்டைகள் அழிக்கப்படும். அரசு 1956-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படி நிலத்தைக் கையகப்படுத்துகிறது. ஆனால், இழப்பீடு மட்டும் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே 2013-ம் ஆண்டு சட்டத்தில், முப்போகம் விளையும் நிலங்களை உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘சாலைகள் இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எப்படிக் கொண்டுவருவார்கள்? சாலை இல்லாமல் வளர்ச்சி எப்படி ஏற்படும்?’ என்ற கருத்தே அரசுத் தரப்பின் நியாயமாக முன்வைக்கப்பட்டது.

இதே போல், மதுரை திருமங்கலம் முதல் செங்கோட்டை புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், ராஜபாளையம் முதல் புளியரை வரை உள்ள பகுதி முப்போகம் சாகுபடி செய்யப்படும் பகுதி. தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள் உள்ளதும் நெல் சாகுபடி செய்யப்படுவதுமான பகுதி. இந்தத் திட்டத்துக்காக கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளில் மட்டும் சுமார் 2,800 ஏக்கர் நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 1,800-க்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகள் நிலத்தைக் கொடுக்க விருப்பமில்லை என்று 2019-லேயே மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.

இப்போது அரசு திட்டமிட்டுள்ள பகுதி முக்கிய நகரங்களை இணைக்காமலும், வளைந்து நெளிந்தும், தேவையற்று அதிக தூரம் உள்ள வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, தூரம் குறைவாகவும், சாலை நேராக அமையும் வகையிலும், திருவேங்கடம், சங்கரன்கோவில், தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட புஞ்சை நிலப் பகுதியில் சாலையை அமைக்கலாம் என்று மாற்று வழியை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இந்த மாற்று வழியை ஏற்பதில் அரசுக்கு என்ன சிக்கல் என்பதை வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை. நில விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருசிலரின் நலன்களுக்காக மாற்றுப் பாதையைப் பரிசீலிக்க அரசு தயாராக இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் விருப்பமில்லாமல் நிலத்தைக் கையகப்படுத்த மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதி குறித்துக் கவலையேபடாமல், நிலத்தைக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனபள்ளி பகுதியில் சுமார் 3,300 ஏக்கரில் புதிதாக சிப்காட் அமைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் சுமார் 2,200 ஏக்கர் முப்போகம் விளையக் கூடிய, பாசன வளம் நிறைந்த நிலப் பகுதியாகும். ஏற்கெனவே ஓசூரைச் சுற்றி நான்கு சிப்காட்கள் உள்ளன. இப்போது இது ஐந்தாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளும் சிப்காட்டுக்கு நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். ஆனால், அது பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல், சட்டமன்றத்தில் சிப்காட் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் ‘சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது’ என்ற உறுதிமொழியிலிருந்து திமுக அரசு நழுவுவதாகவே கருத வேண்டியுள்ளது. சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை வேண்டாம் என்று விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்ததற்கான காரணங்கள் அனைத்தும் அப்படியேதான் உள்ளன என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 150 கோடியாக அதிகரிக்கவிருக்கிறது. இவ்வளவு மக்களுக்கும் உணவளிக்க உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. இதற்கேற்ப விவசாயப் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, இருபோகச் சாகுபடி பரப்பளவை இருமடங்காக உயர்த்துவதாகத் தொலைநோக்குத் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக இருக்கிற நிலங்களை அழிக்கும் வகையில் அரசின் அணுகுமுறை இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. விளைநிலங்களை வேறு செயல்பாடுகளுக்கு மாற்றிவிட்டால், மீண்டும் விளைநிலங்களாக மாற்ற முடியாது.

‘வளர்ச்சி’ என்ற வார்த்தைக்குள் எல்லாவிதமான அழிவுகளையும் நியாயப்படுத்தக் கூடாது. நல்ல விளைநிலங்களை, அதிலும் நஞ்சை நிலங்களை அழித்து சாலையும் தொழிற்சாலைகளும் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? மேற்கண்ட பிரச்சினைகளில் மாற்றுவழிகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் நாட்டின் உணவுப் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். எனவே, விவசாயிகளின் உணர்வுகளுக்கும் உரிமைக் குரலுக்கும் அரசு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

- பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். தொடர்புக்கு: pstribal@gmail.com



Read in source website

நாம் எல்லோரும் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனுடைய வெளிப்பாடுதான் ஓடிடி என்கிற இணையவெளித் திரையரங்கம். இணையத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்த பிறகு, ஒவ்வொருவரும் தாம் விரும்பும் ஒரு வலைக்காட்சித் தொடரையோ திரைப்படத்தையோ ஓடிடி தளத்தின் வழியாக எளிதில் பார்த்துவிடலாம். முன்பெல்லாம் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் சேர்ந்து ஒரு குழுவாகத் திரையரங்குக்குச் சென்று கலகலப்புடன் படம் பார்த்துவரும் அனுபவம் நவீன காலத்தில் பெரிதும் குறைந்துவிட்டது.

தனியாக அமர்ந்து ஓடிடி தளத்தில் படம் பார்க்கும் அனுபவம் எத்தகைய மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது, ஓடிடி தளங்களின் வருகை திரைப்பட உருவாக்கத்திலும், பார்வையாளர்களின் ரசனையிலும், குடும்ப உறவுக்குள்ளும் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையெல்லாம் நாம் ஆழமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது.



Read in source website