DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 23-08-2022

ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையொப்பத்தையும் முன்னெழுத்தையும்(initial) தமிழில் பதிவிட பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும் என தமிழக அரசாணையை மேற்கோளிட்டு அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். 

அதன்படி, ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கையொப்பத்தை தமிழில் பதிவிட வேண்டும், முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும். 

வருகைப் பதிவேட்டிலும் முன்னெழுத்துடன் மாணவர்களின் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கும் அதுபோல, அனைத்துப் பதிவுகளிலும் பெயர்களை தமிழில் பராமரிக்க வேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Read in source website

கோயில்களில் அா்ச்சகா்கள் நியமனம் தொடா்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அா்ச்சகா்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலா்கள் பணி நியமனம், பணி நிபந்தனைகள் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதிய பணி விதிகள் 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில், ‘18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் மட்டுமே அா்ச்சகராக முடியும். ஆகம

பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்தப் புதிய விதிகளை எதிா்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தனிநபா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில், ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காமல் தமிழக அரசு கோயில்களில் அா்ச்சகா், ஓதுவாா்களை நியமிக்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதையடுத்து, இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், அா்ச்சகா்களின் பணி நியமனம், இந்த வழக்குகளின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என்று 2021 அக்டோபரில் இடைக்கால உத்தரவிட்டது. அதன்பிறகு, வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையிலான அமா்வில் நடைபெற்று வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ‘கோயில்களில் இன்னும் பரம்பரை அறங்காவலா்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்காா்கள் மூலமாக அரசே அா்ச்சகா்களை நியமிப்பது சட்டவிரோதமானது. அறங்காவலா்களுக்கு மட்டுமே அா்ச்சகா்களை நியமிக்க அதிகாரம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பிரிவைச் சாா்ந்தவா்களை மட்டுமே அா்ச்சகா்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அா்ச்சகா் பயிற்சி முடித்த அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராக நியமிக்கப்படுவாா்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு அறநிலையத் துறை தரப்பில், ‘கோயில்களில் காலியாக உள்ள அா்ச்சகா்கள், ஓதுவாா்கள், பட்டா்கள் உள்ளிட்ட பிற பணியாளா்களின் காலி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், ஆகம விதிகள் பயின்ற அனைவரும் அா்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் செயல் அலுவலா்கள் மூலமாக அா்ச்சகா்கள் நியமிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, வழக்கின் தீா்ப்புதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், ‘தமிழக கோயில்களில், அா்ச்சகா்கள் நியமனம் தொடா்பாக அரசின் விதிகள் செல்லும். கோயில்களைப் பொருத்தவரை, ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்களை கண்டறிவதற்கு 5 போ் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படி அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.



Read in source website

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழு,3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025’ என்ற முகவரிக்கும் செப். 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக். 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கருத்துகள், ஆலோசனைகளை பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப். 20-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு செப். 21- ஆம் தேதி மதுரை ஆட்சியா் அலுவலகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல, இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதரண பயணிகளும்  பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் முன்பதிவு(reserved) பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர்-ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12, எஸ் 13 பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. மானமதுரை-ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும்  முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மாநில கல்விக் கொள்கை: மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு


முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



Read in source website


தில்லி போக்குவரத்துத் துறையில் ஏராளமான பெண்கள் ஓட்டுநர்களாக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஓட்டுநராக பணிபுரிவதற்கான பணி ஆணையை தில்லி அரசு இன்று வழங்கியது. முதல் குழுவாக 11 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

பெண் ஓட்டுநர்களுக்கு பணி ஆணைகளை வழங்கியதுடன் பெண் ஓட்டுநர் இயக்கும் பேருந்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உடன் பயணித்து அவர்களுடன் கலந்துரையாடினார். 

தில்லி போக்குவரத்துத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதற்காக விண்ணப்பித்த மகளிருக்கு பேருந்து ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து பணி ஆணைகளையும் வழங்கி வருகிறது. 

அந்தவகையில் முதல் குழுவுக்கு இன்று தில்லி போக்குவரத்துத் துறையில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி, அவர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சரும் உடன் பயணித்தார். 



Read in source website

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்தும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் பகோதிர் குர்பனோவை சந்தித்தார். 

இந்தச் சந்திப்பின்போது, இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான பாதுகாப்புத் துறை உறவு குறித்து பேசப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. 

நிலையான அடிப்படைத் தன்மை வாய்ந்த பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அடுத்தடுத்த காலங்களிலும் நீடிக்கும் எனவும் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
 



Read in source website

 

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு கொச்சியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தனித்தனியாகப் பாா்வையிட்டனா்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன.

1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை  வரும் செப் - 2 ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற உள்ளது என்றும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

 

இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

வேகமாக நகரக்கூடிய ஆளில்லா விமானங்கள் போன்ற குறுகிய தொலைவு இலக்குகளை செங்குத்தாக ஏவப்பட்டு துல்லியமாக தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணையை, ஒடிசாவின் சண்டிப்பூர் கடல்பகுதியிலிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் இன்று ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்தது.



Read in source website

இலவசங்கள் மிக முக்கியமான பிரச்னை என்றும் அதுகுறித்த விவாதம் தேவை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. 

இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது என்றும் அதேநேரம் இலவச பொருள்களையும், வளா்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தனது முந்தைய விசாரணையில் கூறியது. 

இந்நிலையில் இன்றைய வழக்கின் விசாரணையில், 'இலவசங்கள் மிக முக்கியமான பிரச்னை. அதுகுறித்த விவாதம் தேவை. 

மாநிலங்கள் இலவசங்களை வழங்க முடியாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றினால் அது நீதித்துறை ஆய்வுக்கு உரியது அல்ல என்று சொல்ல முடியுமா? நாட்டின் நலனுக்காகவே இதுகுறித்து விசாரிக்கிறோம். 

நாட்டில் இலவசங்களுக்கும் மக்கள்நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிந்து எது இலவசம், எது மக்கள் நலத்திட்டம் என்று முடிவு செய்ய வேண்டும். 

ஏனெனில், சில மாநிலங்களின் மக்கள்நலத் திட்டங்களால் மக்களுக்கு பலன் கிடைக்கிறது, குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைகிறார்கள்' என்று கூறினார். 

இந்த வழக்கில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்மனு தாரர்களாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

தேசிய நோயெதிா்ப்பியல் நிறுவனத்தின் (என்ஐஐ) புதிய இயக்குநராக, மூத்த ஆராய்ச்சியாளா் தேவாசிஷ் மொஹந்தி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘தேசிய நோயெதிா்ப்பியல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான மருத்துவா் தேவாசிஷ் மொஹந்தியை, அந்நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவா் ஓய்வு வயதை எட்டும் வரை அப்பதவியில் நீடிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு உத்தரவில், வருவாய் செயலா் தருண் பஜாஜுக்கு பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலராக இருந்த ராஜேஷ் வா்மா, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் செயலராக கடந்த 18-ஆம் தேதி நியமிக்கப்பட்டதால் அப்பதவி காலியானது. ராஜேஷ் வா்மா, கடந்த 1987-ஆம் ஆண்டு ஒடிஸா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவாா்.



Read in source website

விண்வெளியில் உள்ள பொருள்களைக் கண்காணிப்பதற்கான முதல் வா்த்தக மையத்தை ‘திகன்தாரா’ என்ற புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனம் உத்தரகண்டில் அமைக்கவுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் சா்வதேச அளவில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, சா்வதேச அளவில் சிறப்புபெற்றுள்ளது. அதே வேளையில், இந்தியாவின் விண்வெளி ஆய்வில் தனியாா் துறையின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, தனியாா் நிறுவனங்களின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் காரணமாக, புத்தாக்க நிறுவனங்கள் விண்வெளி சாா்ந்த ஆய்வில் அதிக கவனம்செலுத்தி வருகின்றன. இந்நிலையில், நாட்டின் முதலாவது விண்வெளி கண்காணிப்பு மையத்தை உத்தரகண்டின் கா்வால் பகுதியில் ‘திகன்தாரா’ என்ற புத்தாக்க நிறுவனம் அமைக்கவுள்ளது.

விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் சுமாா் 10 செ.மீ. அளவுள்ள பொருள்களைக் கூட அந்த மையத்தில் இருந்து கண்காணிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் வா்த்தக நோக்கில் அமைக்கப்படவுள்ள முதல் கண்காணிப்பு மையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் விண்வெளி கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை விண்வெளி குப்பைகளைத் தொடா்ந்து ஆய்வுசெய்து தரவுகளைத் திரட்டிவருகின்றன. தற்போது இந்தியாவில் அமைக்கப்படவுள்ள விண்வெளி கண்காணிப்பு மையமானது பிராந்தியத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ‘திகன்தாரா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அனிருத் சா்மா தெரிவித்துள்ளாா்.

விண்வெளியைத் தொடா்ந்து கண்காணிப்பதன் வாயிலாகப் பல்வேறு தகவல்களைப் பெற்று அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அனிருத் சா்மா, விண்வெளி குப்பைகள் உள்ளிட்டவை செயற்கைக்கோள்கள் மீது மோதும் வாய்ப்பைத் தடுக்கவும் முடியும் என்றாா். விண்வெளி கண்காணிப்பு மையத்தின் தகவல்கள் ராணுவத்துக்கும் முக்கியத் தகவல்களை வழங்கும் என்று அவா் தெரிவித்தாா்.



Read in source website

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களாக பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களை நியமிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தீா்மானித்துள்ளது.

இதுதொடா்பான வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்கலைக்கழகங்களும் உயா்கல்வி நிறுவனங்களும் நிபுணா்களை பேராசிரியா்களாக நியமிக்கலாம். பொறியியல், அறிவியல், ஊடகம், இலக்கியம், குடிமைப் பணிகள் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் பேராசிரியா்களாக பணியமா்த்தப்பட தகுதியானவா்கள். தங்கள் துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்றவா்கள் என்பதை நிரூபித்தவா்கள் தகுதிவாய்ந்தவா்கள் ஆவா்.

அவா்கள் தங்கள் துறைகளில் மிகச்சிறந்த புலமைப் பெற்றிருந்தால், பேராசிரியா் பணிக்குத் தேவைப்படும் முறையான கல்வித் தகுதி அவசியமானதாகக் கருதப்படாது. அத்தகைய நிபுணா்களுக்கு ஏதேனும் ஆராய்ச்சி வெளியீடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதில் இருந்தும், பேராசிரியா் பணியில் சோ்வதற்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

அதேவேளையில், பட்டப்படிப்புகளையும் பாடத்திட்டங்களையும் மேம்படுத்தி வடிவமைப்பது, புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் தொழில் தொடங்கும் திட்டங்களில் ஈடுபடவும் மாணவா்களை ஊக்குவிப்பது போன்ற பொறுப்புகளை மேற்கொள்வதற்கான திறமை நிபுணா்களுக்கு இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிதியுதவியுடன் பணியமா்த்தப்படும் பேராசிரியா்கள், சொந்த நிதி ஆதாரம் மூலம் உயா்கல்வி நிறுவனங்களால் நியமிக்கப்படும் பேராசிரியா்கள், கெளரவ அடிப்படையில் பணியமா்த்தப்படும் ஆசிரியா்கள் என 3 பிரிவுகளின் கீழ் நிபுணா்கள் பணியமா்த்தப்படுவா்.

உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களாக நியமிக்கப்படும் நிபுணா்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்படும் பணியிடங்களில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது ஆசிரியா் பதவியில் இருப்பவா்கள் அல்லது ஓய்வு பெற்றவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்பட மாட்டாா்கள்.

பேராசிரியா்களாக முதலில் ஓராண்டுக்கு நிபுணா்களை நியமிக்கலாம். ஓராண்டு முடிந்த பின்னா், அவா்கள் மேற்கொண்ட பணி குறித்து உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யும். அதன் பின்னா், அவா்களின் பணிக் காலத்தை நீட்டிப்பது குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யும்.

பேராசிரியராக நியமிக்கப்படும் நிபுணரின் பணிக்காலம் 3 ஆண்டுகளைத் தாண்டக் கூடாது. விதிவிலக்கான சூழல்களில், அவரின் பணிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கலாம்.

எனினும் எந்தச் சூழலிலும் அவா்களின் மொத்த பணிக்காலம் 4 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்தாலும், நிபுணராலும் ஒப்புக் கொண்ட தொகை சம்பந்தப்பட்ட நிபுணருக்கு ஊதியமாக வழங்கப்படும்.

நிபுணா்களின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக துணைவேந்தா்களும், இயக்குநா்களும் வரவேற்கலாம். பேராசிரியா்களாக பணியாற்ற விரும்பும் நிபுணா்கள் விரிவான சுயவிவரக் குறிப்புடன், உயா்கல்வி நிறுவனத்துக்கு தங்களால் வழங்கக்கூடிய பங்களிப்பை விளக்கி துணைவேந்தா்களுக்கு விண்ணப்பம் அனுப்பலாம்.

அந்த விண்ணப்பங்களை உயா்கல்வி நிறுவனத்தின் இரண்டு மூத்த பேராசிரியா்கள் மற்றும் ஒரு வெளிநபா் அடங்கிய தோ்வுக் குழு பரிசீலிக்கும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், உயா்கல்வி நிறுவனத்தின் கல்விக் கவுன்சில் மற்றும் நிா்வாகக் கவுன்சில் அல்லது சட்டபூா்வ அமைப்புகள் நிபுணா்களின் நியமனம் குறித்து முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் தொடா்பாக அடுத்த மாதம் யுஜிசி அறிவிக்கை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.



Read in source website

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் குரோஷியாவின் போர்னா கோரிச், மகளிர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றனர். இப்போட்டியில் இருவருமே கோப்பை வென்றது இது முதல் முறையாகும். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் போர்னா கோரிச், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாûஸ எதிர்கொண்டார். இருவருமே இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வந்திருந்தது இது முதல் முறை. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தச் சுற்றில் கோரிச் 7-6 (7/0), 6-2 என்ற செட்களில் சிட்சிபாûஸ வீழ்த்தினார். 

இத்துடன் இருவரும் 3 முறை நேருக்கு நேர் சந்தித்த நிலையில், கோரிச் 2-1 என முன்னிலை பெற்றிருக்கிறார். 

வெற்றிக்குப் பிறகு பேசிய கோரிச், "உண்மையில், பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. இது நம்பமுடியாத உணர்வாக உள்ளது. நன்றாக விளையாடுவதற்கு கடினமாகப் பயிற்சி எடுத்திருந்தேன் என்றாலும், இவ்வாறு சாம்பியன் கோப்பை வெல்லும் அளவுக்கு விளையாடியது எனக்கே ஆச்சர்யமளிப்பதாக இருந்தது' என்றார். கோரிச்சின் டென்னிஸ் கேரியரில் இது அவரது 3-ஆவது சாம்பியன் பட்டமாகும். 

கடந்த ஆண்டு முழுவதும் தோள்பட்டை காயம் காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்விலிருந்த கோரிச், இந்த ஆண்டு மார்ச் முதல் களம் கண்டு தற்போது மாஸ்டர்ஸ் போட்டியில் வாகை சூடி அசத்தியிருக்கிறார். இந்த முயற்சியின்போது ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 5 பேரையும் அவர் சாய்த்திருக்கிறார்.



Read in source website

 

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது.

விண்வெளி ஆய்வுக்காக 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப்(james webb space telescope) எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது. இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. 

குறிப்பாக, 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் இந்த பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில்  ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன. புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிா்கின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றப் படத்தை வெளியிட்டுள்ளது. சூரியக் குடும்பத்தின் 5-வது கோளாகக் கருதப்படும் வியாழன், சூரியனிலிருந்து சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாகச் சுற்றி வருகிறது.

தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழனின் படம் திரவம்போல் காட்சியளிக்கிறது.



Read in source website

இந்தியா-இத்தாலி இடையே விரைவில் பரஸ்பர சட்ட உதவிகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொது அல்லது குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்காக தகவல்களைத் திரட்டி, பரிமாற்றம் செய்துகொள்ள ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இடையே பரஸ்பர சட்ட உதவிகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. குற்றம் தொடா்பாக விசாரணை நடத்துவது, சட்ட நடவடிக்கை மேற்கொள்வது, சம்மன் அனுப்புவது, பிடியாணைகளை செயல்படுத்துவது, குற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

எல்லைத் தாண்டி திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்கள், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை, கள்ள நோட்டுகள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் பரஸ்பர சட்ட உதவிகள் போன்ற ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 44 நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா-இத்தாலி இடையே பரஸ்பர சட்ட உதவிகள் ஒப்பந்தம் கையொப்பமாவது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அதுதொடா்பாக இருநாடுகளுக்கு இடையே ஏற்கெனவே 2 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவாா்த்தைகள் சரியான திசையில் செல்வதால், அந்த ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜெனீவாவுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான ரஷியத் தூதா் கென்னடி காடிலோவ் கூறியதாவது:

தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடியாக பேச்சுவாா்த்தை நடப்பதற்கான வாய்ப்பே இல்லை.

எனவே, உக்ரைன் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

உக்ரைனில் போா் தொடா்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. அந்தப் போா் இன்னும் நீள நீள, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடந்து, அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையே மேற்கொள்வதில் சிக்கலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இப்போதைய சூழலில், இந்தப் போா் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாராலும் கூற முடியாது.

உக்ரைனுக்கு ஆயுதங்களையும் பிற உதவிகளையும் அளித்து, அந்த நாட்டு வீரா்களை ரஷியாவுக்கு எதிரா மேற்கத்திய நாடுகள் தொடா்ந்து தூண்டி வருகின்றன. கடைசி உக்ரைன் சாகும்வரை இந்தப் போரைத் தொடர மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

எனவே, பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

சோவியத் யூனியனுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி’ அமைப்பு (நேட்டோ). அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து அந்த அமைப்பை உருவாக்கின.

அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சக்திவாய்ந்து விளங்கிய சோவியத் யூனியனுக்கு எதிராக தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த நிலையிலும் தன்னை விரிவாக்கம் செய்து வந்தது. தற்போது அந்த அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

நேட்டோவின் விரிவாக்கத்துக்கு ரஷியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், தங்களது தலைநகா் மாஸ்கோவை சில நிமிஷங்களில் தாக்கி அழிக்கும் வகையில் அங்கு அமெரிக்க ஏவுகணைகள் நிறுத்தப்படுவதற்கு வழியேற்படும் எனவும் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும் ரஷியா கூறி வந்தது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு தொடா்ந்து ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரஷியா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

போா் தொடங்கி 6-ஆவது மாதம் நிறைவடையவிருக்கும் நிலையிலும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதறகான பேச்சுவாா்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

உக்ரைனில் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டால்தான் போா் நிறுத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்து வருகிறது.

எனினும், கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியா கைப்பற்றிய கிரீமியா உள்பட தங்கள் நாட்டுப் பகுதிகளிலிருந்து ரஷியா வெளியேறினால்தான் சண்டை நிறுத்தத்துக்கு உடன்படுவோம் என்று உக்ரைனும் திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், இந்தப் போருக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கிடைக்காது என்று ஐ.நா.வுக்கான ரஷியத் தூதா் தற்போது திட்டவட்டமாத் தெரிவித்துள்ளாா்.



Read in source website

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். கரோனா பரவலுக்குப் பிறகு அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய வழிகளை அறியவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தனது பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்ட அவா், பராகுவே சென்றாா். அந்நாட்டு தலைநகா் அசுன்சியானில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை அவா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

ஸ்பெயினின் காலனியாதிக்கத்துக்கு எதிராக அசுன்சியானில் உள்ள காசா டி லா இன்டிபென்சியா என்ற வீட்டிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பராகுவேயின் சுதந்திர போராட்டம் தொடங்கியது. அந்த வீடு தற்போது அருங்காட்சியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தையும் அமைச்சா் ஜெய்சங்கா் பாா்வையிட்டாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியேற்ற பிறகு அவா் முதல் முறையாக தென் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.



Read in source website

ஈரானுடான நல்லுறவை மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய கப்பல், துறைமுகம் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் உறுதி அளித்தாா்.

ஈரான் சென்றுள்ள மத்திய அமைச்சா் சா்வானந்த் சோனோவால் அந்நாட்டின் துணை அதிபா் முகமது முக்பிரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாலுமிகளுக்கு சா்வதேச தரத்திலான பயிற்சி அளிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.

சாபஹாா் துறைமுகத்தில் வா்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவின் சா்வதேச துறைமுகம் நிறுவனம் (ஐபிஜிஎல்) டெஹ்ரான், சாபஹாரில் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் கடல்சாா் வா்த்தகம் அதிகரிக்கப்படுவதுடன் சாபஹாா் துறைமுகமும் மேம்படும் என்று ஈரான் துணை அதிபா் முகமது முக்பிா் குறிப்பிட்டாா்.

ஈரானுடனான நல்லுறவு வரும் நாள்களில் மேலும் வலுப்பெறும் என்று இந்தியா உறுதி அளித்தது.

மத்திய, தெற்கு, தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையேயான பொருளாதாரத்தை மேம்படுத்த சாபஹாா் துறைமுகம் உதவும் என்று அமைச்சா் சோனோவால் குறிப்பிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-இல் ஆப்கானிஸ்தானுக்கு 7,50,00 டன் கோதுமையை மனிதாபிமான அடிப்படையிலான உதவியாக சாபஹாா் துறைமுகத்தின் வழியாக இந்தியா அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான கூட்டு ராணுவ பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கின.

‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராணுவப் பயிற்சி, அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெறும்.

போா் விமானங்கள், போா்க் கப்பல்கள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் ஆயிரக்கணக்கான வீரா்களும் இந்த போா்ப் பயிற்சியில் பங்கேற்கவிருக்கின்றனா்.

இத்தகைய போா்ப் பயிற்சிகளுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தங்கள் மீது படையெப்பதற்கு முன்னோட்டமாகவே இந்தப் போா்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாடு குற்றம் சாட்டி வருகிறது.

வட கொரியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்தும் முயற்சியாக சில ஆண்டுகளாக இத்தகைய போா்ப் பயிற்சியை அமெரிக்காவும் தென் கொரியாவும் தவிா்த்து வந்தன.

இந்த நிலையில், அந்தப் போா்ப் பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு, தங்களது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வட கொரியா பதிலடி கொடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.



Read in source website

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு படிப்பை தொடர இயலாமல் தவிக்கும் ஏராளமான இந்திய மாணவா்களுக்கு மீண்டும் விசா வழங்கப்படும் என்று அந்நாடு திங்கள்கிழமை அறிவித்தது.

அத்துடன், புதிதாக உயா் கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவா்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்தியா்களுக்கு விசா வழங்குவதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகு சீனா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்கள் துறை மூத்த அதிகாரி ஜி ராங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய மாணவா்களை சீனாவுக்கு மீண்டும் வரவேற்கிறோம். உங்களது பொறுமைக்கு பலன் கிடைத்துள்ளது. உங்களுடன் சோ்ந்து நானும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய மாணவா்களுக்கு விசா வழங்குவது தொடா்பாக தில்லியிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட விரிவான அறிவிப்பையும் அவா் ட்விட்டரில் பகிா்ந்துள்ளாா்.

கரோனா பரவலால் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளால், சீனாவுக்கு மீண்டும் சென்று படிப்பை தொடர முடியாமல் சுமாா் 23,000 இந்திய மாணவா்கள் குறிப்பாக மருத்துவப் படிப்பு மாணவா்கள் தவித்து வருகின்றனா். அங்கு மீண்டும் படிப்பை தொடர விரும்பும் மாணவா்களின் பட்டியலை சீனாவிடம் இந்தியா அளித்திருந்தது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் படிப்பை தொடர விரும்பும் மாணவா்களுக்கும் புதிதாக உயா் கல்வியில் சேர விரும்பும் மாணவா்களுக்கும் ‘எக்ஸ்1 விசா’ வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய மாணவா்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சீன பல்கலைக்கழகங்களில் கிடைக்கப் பெற்ற சோ்க்கை கடிதங்களையும், பழைய மாணவா்கள் மீண்டும் கல்வி வளாகங்களுக்கு திரும்புவதற்காக கிடைக்கப் பெற்ற சான்றிதழையும் சமா்ப்பிக்க வேண்டும்; இதேபோல், வா்த்தக, வியாபார ரீதியிலாக சீனாவுக்கு வர விருப்பமுள்ளவா்களுக்கு ‘எம்-விசா’ வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களின் வளர்ச்சி சதவீதம் 35% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனத் தயாரிப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், இந்தியாவில் வாகன உதிரிபாகங்களின் மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனா தன் ஆதிக்கத்தைத் தொடர்கிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக,  2022 நிதியாண்டில் (FY22) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்களின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு 35%-ஆக அதிகரித்து 5.46 பில்லியன் அமெரிக்க டாலர்களாக(ரூ.43,100 கோடி) உள்ளது என இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வாகன உதிரிபாகங்களின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வருவதாகவும் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனி 11% பங்களிப்புடன் 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த 2020-ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகமாக இருப்பதால், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம்  புதிய திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலையை நிறுவினால் தொடர் விநியோக சங்கிலி முறையில்(supply chain) தேவையை பூர்த்திசெய்து கொள்ளலாம். ஆனால், இத்திட்டம் இன்னும் சாதகமாக மாறவில்லை.

இதுகுறித்து ஏசிஎம்ஏ தலைவர் சஞ்சய் கபூர், ‘முற்றிலுமாக சீனாவைச் சாராமல் வருங்காலத்தில் இருக்கலாம் என்கிற நிலை சாத்தியமில்லை. இது ஒரு இரவில் நடக்கக்கூடிய விசயமல்ல. சார்புநிலையிலிருந்து விலக நாம் தொடர்ந்து தொழில்நுட்பங்களின் மீது முதலீடு செய்ய வேண்டும். மேலும், இதற்கு  பல நிறுவனங்கள் வெவ்வேறு முறைகள் மூலம் பல்வேறு தீர்வுகளைக் காண வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,

நகர்புறங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்டுப்பத்த மத்திய அரசு புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் மூலம் (அம்ருத்) நிதி உதவி வழங்கி வருகிறது.

குடிநீர் குழாய் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், கழிவு நீர் சுத்தகரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு இந்த அம்ரூத் திட்டத்தில் முக்கியத்துவம் அளித்து நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இதன்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், ஈரோடு, வேலூர், திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட மாநகராட்சிகள் உள்ளிட்ட ஒரு சில நகராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் தற்போது வரை நாடு முழுவதும் 2740 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 128 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3504 எம்எல்டி கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 154 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி மொத்தம் 6245 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 282 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் 449 எம்எல்டி நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 12 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 114 எம்எல்டி நீரை சுத்திகரிப்பு செய்யும் 4 நிலையங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. 335 எம்எல்டி நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 8 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.



Read in source website

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ‘தூய்மை இந்தியா’ நிதியில் ஒரு கழிவறை கூட கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும், சாலைகளையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பொது இடங்களில் கழிவறைகள் மற்றும் வீடுகளில் தனிநபர் கழிவறைகள் மானியம் வழங்கப்படுகிறது.

முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் வீடுகளில் ஒரு தனி நபர் கழிவறை கட்ட ரூ.30,000, சமூக கழிவறை கட்ட ரூ.98,000, பொதுக் கழிவறைகள் கட்ட ரூ.98,000, சிறுநீர் கழிக்கும் கழிவறைகளை கட்ட ரூ.12,800 நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த உதவித் தொகை இரண்டாவது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. இதன்படி, இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தில் ஒரு தனி நபர் கழிவறை கட்ட ரூ.30,000, சமூக கழிவறை கட்ட ரூ.1,50,000 , பொதுக் கழிவறைகள் கட்ட ரூ.1,50,000 , சிறுநீர் கழிக்கும் கழிவறைகளை கட்ட ரூ.32,000 நிதி உதவி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மார்ச் 2021-ம் ஆண்டு வரை 5,08,562 தனி நபர் இல்ல கழிவறைகளை கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2021 வரை ஒரு கழிவறை கட்டப்படவில்லை. இதைப்போன்று மார்ச் 2021-ம் ஆண்டு வரை 92,744 சமூக மற்றும் பொது கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை ஒரு கழிவறை கட்டப்படவில்லை.



Read in source website

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அரசு ஊழியர்களாகியிருப்பது அனைவரையும் வியக்கச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மாங்கோட்டை ஊராட்சியில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் வகையில் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அம்பேத்கர் நகரில் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். 2004-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்தக் கிராமத்தில் யாருமே அரசுப் பணிக்குச் செல்லாமல் இருந்த நிலையில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிருந்து அரசுப் பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது அந்த எண்ணிக்கை 38 ஆக உள்ளது.

இவர்கள், தாங்கள் பணிபுரிவதுடன் இல்லாமல் அடுத்தடுத்த தலைமுறைகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவி செய்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்தக் கிராமம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னோடி கிராமமாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்தவரும், கந்தர்வக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியருமான சசிக்குமார், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

அம்பேத்கர் நகர் மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருந்தனர். கூலி வேலை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதுதான் இந்தக் கிராமத்தின் வாழ்வாதார நிலை. சிலரிடம் மட்டுமே விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு போட்டித் தேர்வுகள் மற்றும் நேரடி நியமனம் மூலமாக அரசுப் பணிக்கு ஒவ்வொருவராக செல்லத் தொடங்கினர்.

அந்த வகையில், தற்போது அம்பேத்கர் நகரில் ஆசிரியர்கள் 11 பேர், காவல் துறையில் 13 பேர், வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர், மருத்துவர்கள் 2 பேர், கல்வித் துறையில் ஆசிரியரல்லா பணியாளர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள் என தலா 2 பேர், போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராக 4 பேர் மற்றும் வருவாய்த் துறையில் ஓட்டுநர் ஒருவர் என மொத்தம் 38 பேர் அரசு ஊழியர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தில் இருந்தே பணிக்குச் சென்று வருகின்றனர். இவர்களில் 6 பேர் மட்டும் போட்டித் தேர்வுகள் இல்லாமல் அரசுப் பணிகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் படிப்படியாக முன்னேறுவதைப் பார்த்து, மற்றவர்களுக்கும் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, படிப்பின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இங்குள்ள அரசு ஊழியர்களே சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். இங்கு, முன்பைவிட தற்போது உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வருங்காலங்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

ஒரே கிராமத்தில் 38 பேர் அரசுப் பணிக்கு சென்றிருப்பதால், அந்தக் கிராமமும் முன்னேறுகிறது. இதைப் பார்த்து, மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் கிராமங்களை கல்வியால் பெருமைகொள்ளச் செய்ய வேண்டும் என எண்ணி மாற்றத்தை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், மாவட்டத்தில் முன்னோடி கிராமமாக அம்பேத்கர் நகர் உருவெடுத்துள்ளது என்றார்.



Read in source website

சென்னை: நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் பயிர்க்கடன், காப்பீட்டு வசதி, உரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழலில், இந்த ஆண்டு முன்னதாகவே முதல்வர் ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்தார். மேலும், போதிய மழையும் பெய்துவருவதால், கடந்த 2 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால், சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சாகுபடிப் பரப்பும், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் பெருமளவில் உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-01-ல் சாகுபடிப் பரப்பு அதிகபட்சமாக 20.80 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.11 லட்சம் டன்னாகவும் இருந்தது. கடந்த 2021-22-ல் சாகுபடிப் பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.22 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2020-21ல் சாகுபடிப் பரப்பு 20.36 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.04 லட்சம் டன்னாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.உரிய காலத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறப்பு, ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட காரணங்களே இந்த சாதனைக்குக் காரணம் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

இந்த 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர், “தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடையும் வகையில், இந்த உச்சவரம்பு ரூ.3லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதைச் செயல்படுத்தும் வகையில், தாட்கோ மேலாண் இயக்குநர் அரசுக்கு அளித்த பரிந்துரையில், கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர் இனத்தவர் 18 சதவீதத்தில் இருந்து 21.10 சதவீதமாகவும், பழங்குடியினர் 8 லட்சம் என்ற அளவில் 1.01 சதவீதமாகவும் இருப்பதால், அவர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து சமுதாய சமநிலை ஏற்பட உதவும் வகையில், தாட்கோவின் அனைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆண்டு வருமான உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தலாம்.

இவ்வாறு உயர்த்துவது மத்திய அரசின் திட்டத்தில் உள்ள ஆண்டு உச்சவரம்புக்கு இணையாக இருக்கும். மேலும், கூடுதல் மக்கள் பயன்பெறுவார்கள். அரசுக்கு கூடுதல் நிதிச்சமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்தி ஆணை வழங்கும்படி கேட்டிருந்தார்.

இந்த கருத்துரு அரசால் பரிசீலிக்கப்பட்டு, தாட்கோ மேலாண்மை இயக்குநரின் பரிந்துரைப்படி, தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.



Read in source website

சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் உள்ளார். கடந்த 2008-ல் கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்து, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ஆசியாவிலேயே மிக உயர்ந்த வகையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் அடங்கியது.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம்,மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கிய திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில்சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2009-ம் ஆண்டில் முதல் நபராகபின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்ப்போலோவுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு 2010-ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் விருதுகள் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு செம்மொழித் தமிழ் விருதை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜன. 22-ம் தேதி நடந்த விழாவில்,2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின்வழங்கினார். அதைத் தொடர்ந்து, 2020-ம்ஆண்டுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் ம.ராசேந்திரன், 2021-க்குமுன்னாள் தமிழ் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், 2022-க்கு பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர் ழான் லூயிக் செவ்வியார் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 3 ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா, சென்னை பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனவளாகத்தில் நேற்று நடந்தது. ம.ராசேந்திரன், க.நெடுஞ்செழியன் ஆகியோருக்கு விருதுக்கான தொகை தலா ரூ.10 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கருணாநிதியின் சிலையைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பிரான்ஸ் நாட்டு அறிஞர் ழான் லாயிக் செவ்வியார் வெளிநாட்டில் இருந்து வர இயலாத காரணத்தால் அவருக்கு பின்னர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், உயர்தனி செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள், சங்ககால மக்கட் பெயர்க் களஞ்சியம், தமிழகத்தில் சமணம் என்பது உள்ளிட்ட16 நூல்களையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

இன்று சென்னையின் 383-ம் ஆண்டு பிறந்தநாள். சென்னை மேயராக நான் இருந்தபோதுதான், ‘மதராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என அப்போதைய முதல்வர் கருணாநிதி மாற்றினார். தமிழர் வாழும் இந்த நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், ‘மெட்ராஸ்’ என்றழைக்கப்பட்ட தலைநகருக்கு ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்குகிறது. செம்மொழித்தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர தமிழக அரசு தயாராக உள்ளது. ஏனென்றால் இன்று நடப்பது தமிழின் ஆட்சி, தமிழின ஆட்சி. கடந்த ஆண்டு நடந்த விழாவில், வெளியிட்ட அறிவிப்புகளின்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள சாலையை ‘செம்மொழிச் சாலை’ என பெயர் மாற்றம் செய்து நமது அரசு செயல்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, ரீயூனியன் - டி லா ரீயூனியன் பல்கலைக்கழகம், இந்தோனேசியா - சுமத்ராஉத்தாரா பல்கலைக்கழகம், கம்போடியா - கெமர் மொழிகள் ஆய்வு மையம், வியட்நாம் - மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம், தாய்லாந்து - சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகம் ஆகிய தெற்காசியாவில் உள்ள 5 பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

தமிழ் மொழிக்கும். உலக மொழிகளுக்கும் இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின் தேவை. இத்தேவையை தமிழ் இருக்கைகள் மூலம் மேற்கொள்ள வழிவகை ஏற்படும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றவே, முதல்வர் பொறுப்பில் நாளும் உழைத்து வருகிறேன். அதைவிடப் பெரிய பெருமையோ, கடமையோ எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எம்.பி.,தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் இரா.சந்திரசேகரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

புதுடெல்லி: தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதித்துள்ளது.

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடற்படையும் இணைந்து ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை செவ்வாய்க்கிழமை (ஆக. 23) வெற்றிகரமாக ஏவி சோதித்தது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் உபகரணம் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கியன. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே டிஆர்டிஓ-வால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் தொடர்புடைய குழுவினரை பாராட்டினார். இந்த ஏவுகணை இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலரும், வெற்றிகரமாக சோதனையை நிகழ்த்திய குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



Read in source website

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக குறைக்கலாம் என்று இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பரிந்துரைத்துள்ளார். அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார் அவர்.

2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல உதவியவர் ஸ்டோக்ஸ். மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2,924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 31 வயதான அவர் ஓய்வை அறிவித்தபோது கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்தது.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அது ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த சூழலில் அது குறித்து பேசி உள்ளார் ஸ்டோக்ஸ்.

அவர் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ள நிலையில் பேட்டி ஒன்றில் ஸ்டோக்ஸ் இதனை தெரிவித்துள்ளார். “உலகம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட்டை கடந்து பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகிறது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். அதே நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மாற்றலாம். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டின் மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஐசிசி இதை பரிசீலிக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மாற்றலாம் என சொல்லி இருந்தார்.



Read in source website

சென்னை: கரண்தீப் கோச்சார், அமன் ராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் சென்னை ஓபன் கோஃல்ப் சாம்பியன்ஷிப், கிண்டியில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

4 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.40 லட்சமாகும். சென்னையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 126 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 3 பேர் அமெச்சூர் வீரர்கள். கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய், அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் அமெச்சூர் வீரர்களாக களமிறங்குகின்றனர்.



Read in source website

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என்று உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மூலம் பொது பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தலைப்பில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது:

இறையாண்மை மீதான மரியாதையில் தான் உலக அமைதி இருக்கிறது. பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படைகளைப் பயன்படுத்தும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பில் சில சீரமைப்புகள் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஐ.நா.வின் உரிமைகளுக்கே சிக்கல் ஏற்படலாம்.

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் என்று உலக நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம். பொது பாதுகாப்பு என்பது உலக நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியப்படும். சர்வதேச சர்ச்சைகளுக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அதுபோலவே எல்லைப் பிரச்சினைகள் நாடுகள் தங்களுக்கு இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். இருதரப்பு ஒப்பந்தமோ அல்லது பலதரப்பு ஒப்பந்தமோ அதை மதித்து நடக்க வேண்டும். தன்னிச்சையாக ஒரு தரப்பு மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு இன்னும் அதிகமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் ஜனநாயகம் மிக்க அமைப்பாக இதனை மாற்ற வேண்டும். ஆப்பிரிக்க கண்ட நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் சீனாவையும், உக்ரைன் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதில் ரஷ்யாவையும் இடித்துரைப்பது போல் இந்தியா இந்த கருத்துகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

அண்மையில் பிரேசில் சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கூட, சீனா 1990களில் ஏற்படுத்தப்பட்ட எல்லை ஒப்பந்தங்களை மீறுவது நல்லுறவில் பின்னடைவை ஏற்படுத்துகிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் கருத்து கவனிக்கத்தக்கது.



Read in source website

டிஜிட்டல் முறையில் செலுத்தப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என நிதி அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

யுபிஐ சேவை நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனைக்கு ஒன்றுஅல்லது இரண்டு பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றன. இதனால், சேவை நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிஉள்ளன. எனவே, செயல்பாட்டுசெலவினங்களை சமாளிக்கும் வகையில் நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் உள்ளிட்டவற்றின் வாயிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படுவது போல யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜிபே உட்பட யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் வரப்போகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது குறித்து மத்திய நிதிஅமைச்சகம் தனது நிலைப்பாட்டினை தெளிவுப்படுத்தியுள்ளது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

யுபிஐ டிஜிட்டல் சேவை பொது மக்களின் நன்மை, வசதி மற்றும் பொருளாதார உற்பத்தித் திறன் ஆதாயங்களுக்கான பொது பயன்பாட்டு தளமாகும். மக்களின் பொது சேவைக்கான பயன்பாட்டின் மீது கட்டணங்களை விதிப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசின் பரி சீலனையில் இல்லை.

யுபிஐ சேவை நிறுவனங்கள் கட்டண விதிப்புக்கு பதிலாக, தங் களது செலவினத்தை ஈடு செய்ய மாற்று திட்டங்களின் மூலம் நிதி உருவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த் தனையை ஊக்குவிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு பல்வேறுநிதி உதவி திட்டங்களை வழங்கியது. அதேபோன்றுஇந்த ஆண்டும் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் தளத்தை மேலும் விரிவுபடுத்தவும், ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் தண்ணீர் இருந்ததை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA). மனிதர்களின் எதிர்கால வசிப்பிடமாக இந்த கோள் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த வரைபடம் வெளியாகி உள்ளது.

உலக நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தங்களை மற்ற நாடுகளுக்கு முன்பு செல்வாக்கு மிக்க வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளுக்காக கோடான கோடி ரூபாயை செலவிட்டு வருகின்றன. இந்த கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் நடந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மேற்கொண்ட செவ்வாய் கிரக ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், அந்த கிரகத்தின் முதல் தண்ணீர் மேப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் அப்சர்வேட்டரி மற்றும் அமெரிக்காவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரும் இணைந்து அங்குள்ள கனிம வளங்களை அடையாளம் கண்டுள்ளன. இந்த வளங்கள் அந்த கிரகம் முழுவதும் நிரம்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளங்கள் அங்குள்ள பாறைகளில் இருந்து உருவாகி இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் மூலம் ரசாயன மாற்றம் அடைந்து, பின்னர் அது உப்பாகவும், களிமண்ணாகவும் காலப்போக்கில் மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த கிரகம் முழுவதும் தண்ணீர் இருந்துள்ளதை அறிந்து கொள்ள முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான முயற்சிகள் நடந்து வரும் சூழலில் இந்த வளங்களை கண்டறிந்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ரோபோக்கள் தரையிறக்கி ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. பின்னர் அது மனிதர்கள் அடங்கிய மிஷனாக மாற்றம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூட இந்த கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் பணியில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணய ஒப்பந்தம் ஆகும்.

நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சிகள் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிக்கைகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி திங்கள்கிழமை உறுதிப்படுத்தின.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 வரவு செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கலின்போது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (central bank digital currency) அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
பொதுவாக கடந்த காலங்களில் டிஜிட்டல் கரன்சிகள் என்னும் மெய்நிகர் நாணயங்கள் மீதான ஆபத்து குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துவந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபரில் டிஜிட்டல் கரன்சிகள் குறித்த திட்டத்தை முன்மொழிந்தது.

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்றால் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, “மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணய ஒப்பந்தம் ஆகும்.
இது ஒரு ஃபியட் நாணயத்தைப் போன்றது. மேலும், ஃபியட் நாணயத்துடன் ஒன்றுக்கு ஒன்று மாற்றக்கூடியது. அதன் வடிவம் மட்டுமே வேறுபட்டது. டிஜிட்டல் ஃபியட் கரன்சி அல்லது CBDCஐ பிளாக்செயின் மூலம் ஆதரிக்கப்படும் வாலட்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் கருத்து பிட்காயினால் நேரடியாக ஈர்க்கப்பட்டாலும், இது பரவலாக்கப்பட்ட மெய்நிகர் நாணயங்கள் மற்றும் கிரிப்டோ சொத்துக்களிலிருந்து வேறுபட்டது. அவை அரசால் வழங்கப்படவில்லை மற்றும் ‘சட்டப்பூர்வமான நாணயங்கள்’ அந்தஸ்து இல்லாதவை
மூன்றாம் தரப்பு அல்லது வங்கி தேவையில்லாத உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் பயனருக்கு உதவுகின்றன.

மத்திய வங்கி நாணயங்கள் எவ்வாறு உதவும்?
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி கடந்த ஆண்டு மக்களவையில் கூறுகையில், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் அறிமுகமானது, பணத்தின் மீதான சார்பு குறைதல், குறைந்த பரிவர்த்தனை செலவுகள் காரணமாக அதிக பணமதிப்பிழப்பு, குறைக்கப்பட்ட தீர்வு ஆபத்து போன்ற குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் சாத்தியம் உள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் அறிமுகம் மிகவும் வலுவான, திறமையான, நம்பகமான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் சட்டப்பூர்வ டெண்டர் அடிப்படையிலான கட்டண விருப்பத்திற்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், ” அபாயங்களும் உள்ளன” என்று அவர் கூறினார்.
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இல் திருத்தங்களை ஆர்பிஐ முன்மொழிந்துள்ளதாக சவுத்ரி அறிவித்தார், இது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் தொடங்க உதவும். “சில விதிவிலக்குகளுடன்” “இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும்” தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் அந்த நேரத்தில் திட்டமிட்டிருந்தது.

மேலும், “டிஜிட்டல் வடிவில் நாணயத்தைச் சேர்க்க, ‘வங்கி நோட்டு’ வரையறையின் நோக்கத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இல் திருத்தம் செய்வதற்கு அக்டோபர் 2021 இல், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கம் ஒரு முன்மொழிவைப் பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி பயன்பாட்டு வழக்குகளை ஆய்வு செய்து, மத்திய வங்கி டிஜிட்டல் நாணய்ங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு கட்ட செயலாக்க உத்தியை உருவாக்கி வருகிறது” என்று சௌத்ரி மக்களவையில் தெரிவித்தார்.

முன்னதாக, பிட்காயின் (Bitcoin), ஈதர் (Ether) போன்ற தனியார் கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவற்றின் முதலீட்டாளர்கள் ஈடுபடலாம் என ரிசர்வ் வங்கி பலமுறை கவலை தெரிவித்தது.
மேலும், டிஜிட்டல் கரன்சியின் நன்மைகள் மற்றும் அபாயங்களைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்துவதை ஓர் இலக்காக கொண்டுள்ளது.

டிஜிட்டல் ரூபாயின் அறிமுகம் குடிமக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

டிஜிட்டல் ரூபாயை எவ்வாறு பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களின் முன்மொழியப்பட்ட பல மாதிரிகள் உள்ளன. மேலும் ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு முறையான அறிவிப்பு விவரங்களை வழங்கும்.
ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், தற்போதைய டிஜிட்டல் கட்டண அனுபவத்திற்கு மாறாக டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை உடனடியாக தீர்வாக இருக்கும். இதனால் மக்கள் அதன்பக்கம் சாய வாய்ப்புகள் அதிகமுள்ளன.



Read in source website

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் பிரிவு 377 சட்ட விதியை ரத்து செய்ய சிங்கப்பூர் அரசு முடிவு; திருமண பந்தம் பாதுகாக்கப்படும் என பிரதமர் லீ உறுதி

Sanskriti Falor  , Neha Banka 

Explained: How Singapore is walking a tight rope decriminalising gay sex: ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் காலனித்துவ கால சட்டத்தை ரத்து செய்ய சிங்கப்பூர் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தது. பிரதமர் லீ சியென் லூங், சட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது என்று கூறியதுடன், ​​ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படாத வகையில் இது செய்யப்படும் என்றும் கூறினார்.

சட்டப்பிரிவு 377A ஐ நீக்குவது “சரியான செயல்” என்று கூறிய பிரதமர் லீ, ​​இந்த செயல்முறை வரையறுக்கப்பட்டதாக இருக்கும் என்றும் நாட்டின் தற்போதைய குடும்பம் மற்றும் சமூக நம்பிக்கைகளை அசைக்காது என்றும் கூறினார். திருமணத்தின் வரையறை, குழந்தைகள் அதை எவ்வாறு உணர்கிறார்கள், ஊடகங்கள் அதை எவ்வாறு சித்தரிக்கிறது மற்றும் சாதாரண பொது நடத்தை உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், “நாங்கள் பிரிவு 377A ஐ ரத்து செய்தாலும், நாங்கள் திருமண பந்தத்தை நிலைநிறுத்தி பாதுகாப்போம்… அதைப் பாதுகாக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும். நாங்கள் அவ்வாறு செய்வோம். இது 377A பிரிவைக் கட்டுபாடாகவும் மற்றும் கவனமாகவும் நீக்க உதவும்,” என்றும் பிரதமர் லீ கூறினார்.

பிரிவு 377A என்றால் என்ன?

பிரிவு 377A என்பது 1938 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் காலனித்துவ காலத்தில் திணிக்கப்பட்ட ஒரு சட்டமாகும். இந்த சட்டம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமல்படுத்தப்படவில்லை, ஆனால் இது ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான பாகுபாடு உணர்வை உருவாக்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் வாதிட்டனர். பிரிவு 377A, “மற்றொரு ஆணுடன் எந்தவொரு மோசமான அநாகரீகமான செயலிலும்” ஈடுபடும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது.

அதேநேரம் சிங்கப்பூர் பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.

“எந்தவொரு ஆண் நபரும், பொது அல்லது தனிப்பட்ட முறையில், கமிஷனை செய்யும், அல்லது கமிஷனை வாங்குவதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது வாங்குவதற்கு முயற்சிக்கும், மற்றொரு ஆணுடன் மோசமான அநாகரீகமான செயலில் ஈடுபட்டால், அவருக்கு குறிப்பிட்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்” என சட்டம் கூறுகிறது. மேலும், இந்தச் செயல் வெளிப்படையாக அல்லது தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டாலும் குற்றம் என்றும் சட்டம் கூறுகிறது.

2004 முதல் சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ, சட்டம் இன்றியமையாதது என்றும், 377A பிரிவை ரத்து செய்வதை ஏற்க சிங்கப்பூர் தயாராக இல்லை மற்றும் பழமைவாதமாக இருந்தது என்றும் நீண்ட காலமாகக் கூறி வருகிறார். ஆனால் 2007 இல், லீ ஒரு உரையில், “நாம் ஒரு சமநிலையை பராமரிக்க பாடுபட வேண்டும், பாரம்பரிய பாலின குடும்ப விழுமியங்களைக் கொண்ட ஒரு நிலையான சமூகத்தை நிலைநிறுத்த வேண்டும், ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவும் சமூகத்திற்கு பங்களிக்கவும் இடமளிக்க வேண்டும்,” என்று கூறினார்.

பிரிவு 377A ரத்து

சிங்கப்பூர் அரசாங்கம் 377A பிரிவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக லீ கூறினார், ஏனெனில் “இது சரியான செயல் என்றும் சிங்கப்பூரர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்”. இந்த சட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத நிலையில், நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் உரிமை ஆர்வலர்கள் அதை ரத்து செய்ய நீண்ட மற்றும் கடுமையாக போராடி வருகின்றனர்.

இருப்பினும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது மட்டுமே திருமணம் என்று வரையறுக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்படும் என்று லீ வலியுறுத்தினார். “குடும்பம் மற்றும் திருமணம் பற்றிய எங்கள் கொள்கைகளை நாங்கள் மாற்றாமல் வைத்திருப்போம், மேலும் எங்கள் சமூகத்தின் நடைமுறை மற்றும் சமூக விழுமியங்களைப் பராமரிப்போம்” என்று லீ கூறினார்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு முழுமையான உரிமையை வழங்காத இந்த அணுகுமுறையை பலர் எதிர்த்தாலும், லீ மேலும் கூறினார், “ஒவ்வொரு குழுவும் அது விரும்பும் அனைத்தையும் பெற முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் அது சாத்தியமற்றது… மேலும் பல ஆண்டுகளாக நாம் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையைப் பேண வேண்டும் மற்றும் ஒரே மக்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்றும் லீ கூறினார்.

மூன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டத்தை எதிர்த்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லீ திங்களன்று கூறினார். 377A பிரிவை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், “சமூக மாற்றத்திற்கான முன்னணி அல்லது சமூகக் கொள்கையின் சிற்பி” நீதிமன்றம் அல்ல, இந்தப் பிரச்சினையில் முடிவெடுக்க நாடாளுமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறியது.

2007 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாடாளுமன்றம் வயது வந்தவர்களிடையே மலப்புழை மற்றும் வாய்வழி உடலுறவைத் தடை செய்யும் பிரிவு 377 ஐ ரத்து செய்தது, ஆனால் அது பிரிவு 377A ஐத் தொடர முடிவு செய்தது.

2019 ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் நடந்த ஸ்மார்ட் நேஷன் உச்சிமாநாட்டின் போது, ​​377A “சிறிது காலத்திற்கு” வைக்கப்படும் என்று லீ கூறியிருந்தார், ஆனால் LGTB சமூகத்தினரை சிங்கப்பூரில் வசிக்கவும் வேலை செய்யவும் வரவேற்கிறோம் என்றும் கூறினார். “உங்கள் பாலியல் சார்பு எதுவாக இருந்தாலும், சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்ய நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்… சிங்கப்பூரில் எங்களின் விதிகள் உங்களுக்குத் தெரியும். இந்த சமூகத்தின் வழி இதுதான்: நாங்கள் சான் பிரான்சிஸ்கோவைப் போல் இல்லை, மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகளைப் போலவும் இல்லை. [நாம்] இடையில் ஏதோ ஒன்று, அதுதான் சமூகம்,” என்று லீ கூறியதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டங்களும் சமூக மனப்பான்மையும் சிங்கப்பூரின் உலகளாவிய நிதிய மையமாக இருக்கும் பிம்பத்தையும், பல்வேறு பின்னணியில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கும் முயற்சியையும் பாதிக்கும் என்று பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சட்டங்கள் LGBT மக்களுக்கு எதிரான களங்கத்தை நிலைநிறுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் Ipsos அறிக்கை, “பிரிவு 377A க்கு எதிரான அதிகரித்த எதிர்ப்பு, ஒரே பாலின பெற்றோருக்கான ஆதரவு மற்றும் LGBTQ சமூகத்திற்கு எதிரான அநீதிக்கு எதிராக பேச விருப்பம் ஆகியவை சிங்கப்பூரர்களிடையே ஒரே பாலின உறவுகளை ஏற்றுக்கொள்வதை சுட்டிக்காட்டுகின்றன,” என்று கூறியது.

சிங்கப்பூரர்கள் “லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் வினோதமான (LGBTQ) சமூகத்தின் மீதான தப்பெண்ணத்திற்கு எதிராகப் பேசுவதற்கு அதிக விருப்பம் கொண்டுள்ளனர்” என்று அறிக்கை கூறியது.

சமூக ஆர்வலர்கள் சொல்வது என்ன?

இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கை ஆர்வலர்கள் கொண்டாடி வரும் நிலையில், திருமணம் தொடர்பான அரசியலமைப்பு திருத்தம் குறித்த கவலை மேலோங்கி உள்ளது. தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது போல, ஒரு டஜன் சமூக ஆர்வலர்கள் குழு ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டது, “அரசியலமைப்பில் திருமணத்தின் வரையறையை உள்ளடக்கிய மத பழமைவாதிகளின் சமீபத்திய அழைப்புகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்…அத்தகைய முடிவு நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், மேலும் பாகுபாட்டை உச்ச சட்டமாக குறியீடாக்கும், எதிர்கால பாராளுமன்றங்களின் கைகளை கட்டிப்போடும்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ரத்து விஷயத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இல்லை. சிங்கப்பூரில் உள்ள மதக் குழுக்கள் மாற்றத்திற்கு அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன, அவர்களின் கவலைகள் இந்த நடவடிக்கை “சமமான திருமணத்தில் மேலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்” என்ற அச்சத்தை உள்ளடக்கியது, என ஒரு கார்டியன் அறிக்கை கூறியது.

ஆசிய நாடுகளில் பிரிவு 377

ஆசியா முழுவதும் பல முன்னாள் காலனித்துவ நாடுகளில் பிரிவு 377 இன் பிரிட்டிஷ் பதிப்பு தொடர்ந்து வருகிறது. சிங்கப்பூருடன், இந்தியா, மியான்மர், புருனே மற்றும் மலேசியா உள்ளிட்ட முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகள் சில வடிவங்களில் அல்லது வேறு வகையில் பிரிவு 377 ஐக் கொண்டிருந்தன. 2018 இல் இந்தியா இந்தச் சட்டத்தை ரத்து செய்தாலும், பல ஆசிய நாடுகள் அதைச் செய்ய முயற்சித்து வருகின்றன. ஒரே பாலின ஜோடிகளுக்கு இடையேயான திருமண உரிமையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு தைவான். இந்த ஆண்டு ஜூன் மாதம், தாய்லாந்தும் ஒரே பாலின திருமண உரிமையை உருவாக்க அனுமதிக்கும் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.



Read in source website

குப்தாவும், பனகாரியாவும் அரசாங்கம் ஒன்று அல்லது இரண்டை தனியார்மயமாக்காமல் அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்றும், கூடிய விரைவில் அதைச் செய்ய வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

வங்கி தேசியமயமாக்கலின் 53ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அப்போது, வங்கிகள் தேசியமயமாக்கலின் நன்மை, தீமைகள் குறித்த விவாதம் மீண்டும் கிளம்பியது.
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு செயல்படாத சொத்துக்களுடன் (NPAs) போராடி வருகின்றன. எளிமையாகச் சொன்னால், NPA கள் கடன் வாங்கியவர் வங்கியில் திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்கள். கணிக்கத்தக்க வகையில், அதிக அளவு NPA கள் வங்கியின் லாபத்தை பாதிக்கிறது.
செயல்படாத சொத்துக்ளின் (NPA) அதிகரிப்பு மற்றும் அடுத்தடுத்த வருமான இழப்புகள் காரணமாக பொதுத்துறை வங்கிகள் நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு நிதியளிக்க போராடின. அரசும் மறுமூலதனம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதற்கிடையில் பொதுத்துறை வங்கிகளை மீட்க அவர்களுக்கு மறுமூலதனம் அளிப்பதை காட்டிலும், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலாம் என்ற கோரிக்கை எழுந்தது.
ஏனெனில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கினால் அவைகள் லாப நோக்கில் செயல்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இது கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த தனியார்மயமாக்கல் முடிவை மத்திய அரசு 2021ஆம் பட்ஜெட்டில் அறிவித்தது. NCAER இன் பூனம் குப்தா மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அரவிந்த் பனகாரியா ஆகியோரின் சமீபத்திய ஆய்வறிக்கை, “இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கல் ஏன், எப்படி மற்றும் எவ்வளவு தூரம்?” என்ற தலைப்பில், “அரசியல் ரீதியாக சாத்தியமான அளவுக்கு அரசாங்கம் விரைவாக நகர வேண்டும்” என்று வாதிடுகிறது.

குப்தா மற்றும் பனகாரியாவின் கூற்றுப்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள எந்த அரசாங்கமும் செய்ய முடியாத அளவுக்கு இது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர மற்ற அனைத்தையும் தனியார்மயமாக்க பரிந்துரைக்கின்றனர்.

மேலும் தனியார்துறை வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை விட திறமையாக செயல்படுகின்றன என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகளில் செயல்படாத சொத்துகள் குறைவு.
இதற்கிடையில் 2014-15ஆம் ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தனியார் வங்கிகள் அதிக டெபாசிட் பெற்றன. தொடர்ந்து கடன்களையும் அதிகரித்தன, இளம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கன.

இதனால்தான் குப்தாவும், பனகாரியாவும் அரசாங்கம் ஒன்று அல்லது இரண்டை தனியார்மயமாக்காமல் அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்றும், கூடிய விரைவில் அதைச் செய்ய வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

“காரணம் தனியார் வங்கிகள் இப்போது பொதுத்துறை வங்கிககளை விட தெளிவாக சிறப்பாக செயல்படுகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தப் போக்கு தலைகீழாக மாறுவது சாத்தியமில்லை.
இதன் உட்குறிப்பு என்னவென்றால், பொதுத்துறை வங்கிகளுக்கு மாறாக வங்கித் துறையை தனியார்மயமாக்குவது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது, எனவே தொலைத்தொடர்பு மற்றும் விமானத் துறைகளில் உள்ள பொது கேரியர்களைப் போலவே பிந்தையது காலப்போக்கில் மதிப்பு அழிவின் உண்மையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

இதற்கு மத்தியில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது மட்டும் அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாகாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உண்மையில், அவர்களின் பார்வையில், “இந்த (பொதுத் துறை அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான) வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒரு பிக் பேங் அணுகுமுறை நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்”.
என்பதே ஆகும்.

அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் செயல்திறனை வெவ்வேறு அளவீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
அந்த வகையில் பொதுத்துறை வங்கிகள் சமூகத்தின் அடிமட்ட மக்கள் வரை சேவை வழங்குநர்களாக உள்ளனர்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY), ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு அடிப்படை வங்கிக் கணக்குடன் வங்கி வசதிகளுக்கான உலகளாவிய அணுகலைக் கருதுகிறது. கிட்டத்தட்ட 46 கோடி பயனாளிகளில் தனியார் துறை வங்கிகள் வெறும் 1.3 கோடி மட்டுமே.

யார் திறமையானவர்?

இது மிகவும் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம். பொதுத்துறை வங்கிகள் உருவாக்கப்பட்ட அளவீடுகளைப் பார்த்தால், தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் மிகவும் திறமையானவை என்று RBI ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.

லாபத்தை அதிகரிப்பது மட்டுமே ஒரே நோக்கமாக இருக்கும் போது, ​தனியா் வங்கிகளின் செயல்திறன் எப்போதும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் (டாப் பேனல்) செயல்திறனை விட அதிகமாக இருக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மொத்தக் கிளைகள், விவசாய முன்னேற்றங்கள் மற்றும் புறநிலை செயல்பாடு மாற்றப்பட்டால், பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகளை விட (நடுத்தர மற்றும் கீழ் குழு) திறமையானவை என்பதை நிரூபிக்கின்றன” என்று RBI ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் யார்?

நல்ல நேரம் இருக்கும்போது, ​​எந்த வங்கியும் புதிய கடன்களை வழங்கும். கடன்களை எதிர்-சுழற்சி முறையில் நீட்டிக்கும்போது வங்கியின் முக்கியமான சோதனை வருகிறது- பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது. அதேபோல, நிறுவப்பட்ட தொழிலுக்கு ஒருவர் கடன் கேட்டால், கடன் பெறுவது மிகவும் எளிதானது.
ஆனால் சில வங்கிகள் ஒரு புதிய வயது குறைந்த கார்பன் தொழில் அல்லது ஒரு உள்கட்டமைப்பு திட்டத்திற்காக கடன் விரும்பினால் கடனை நீட்டிக்கும். ஆனால் பொருளாதாரத்தின் கண்ணோட்டத்தில், வங்கிகளின் பொருத்தம் என்னவென்றால், கடன் வாங்குபவர்களுக்கு மிகவும் பணம் தேவைப்படும்போது வங்கிகள் கடன் கொடுக்கின்றனவா மற்றும் புதிய தளத்தை உடைக்க முயற்சிக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் கடன் கொடுக்கிறார்களா என்பதை அறிவதில் உள்ளது.

“நாட்டின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு நிதி ஒரு தடையாக உள்ளது. இந்தக் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகிக்கின்றன, மேலும் பழைய வளர்ச்சி நிதி நிறுவனங்களின் (விளக்கப்படம் 9) வாடிப்போன பின்னணியில் அவற்றின் பங்கு மிகவும் முக்கியமானது,” என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதேபோல், ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சியாளர்கள், பொதுத்துறை வங்கிகளும் பணவியல் கொள்கை பரிமாற்றத்தில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது எதிர் சுழற்சி பணவியல் கொள்கை நடவடிக்கைகளுக்கு இழுவை பெற உதவுகிறது. “உதாரணமாக, கடந்த தளர்வு சுழற்சியின் போது, கடன் வழங்கும் விகிதங்களில் அவற்றின் குறைப்பு PVBகளை விட கணிசமாக அதிகமாக இருந்தது (விளக்கப்படம் 10). அதே நேரத்தில், அவர்களின் வைப்பு விகிதங்கள் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் ஒட்டக்கூடியதாக இருந்தன,” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் விளைவாக, ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் கட்டுரை முடிவடைகிறது: “வளரும் பொருளாதாரங்களில் தனியார் உரிமை மட்டும் தானாகப் பொருளாதார ஆதாயங்களை உருவாக்காது’ மற்றும் ‘தனியார்மயமாக்கலின் மிகவும் எச்சரிக்கையான மற்றும் நுணுக்கமான மதிப்பீடு தேவை’ என்று சமீபத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் தெரிவிக்கிறது. தனியார்மயமாக்கலுக்கான படிப்படியான அணுகுமுறையை பரிந்துரைக்கிறது.

அனைத்து தனியார் வங்கிகளையும் ஒரே இரவில் தேசியமயமாக்கும் முடிவு சித்தாந்தத்தால் உந்தப்பட்டது. பொதுத்துறை வங்கிகளின் ஏகபோகம் அதன் ஆபத்துக்களைக் கொண்டிருந்தது.
1991 முதல், இந்தியா அந்தக் கருத்தியல் நிலைப்பாட்டில் இருந்து விலகிச் சென்றதால், வங்கித் துறையில் தனியார் துறையின் எழுச்சியால் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்தனர்.

இருப்பினும், ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்குவதில் அவசரப்படக் கூடாது.

கருத்தியல் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி, அதற்குப் பதிலாக இந்தியா போன்ற பலதரப்பட்ட பொருளாதாரத்தின் தேவைகளை சிறப்பாகச் செய்யும் பொது மற்றும் தனியார் வங்கிகளின் கலவையை அடைவதில் கவனம் செலுத்துவது சிறந்தது.

இந்தக் கட்டுரை தொடர்பாக கருத்துகள் மற்றும் கேள்விகளை
udit.misra@expressindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.



Read in source website

சென்னை தினத்தையொட்டி ஒரு வாரத்துக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படிப் பாா்த்தால் சென்னைக்கு வயது 383. அடுத்த 17 ஆண்டுகளில் நான்கு நூற்றாண்டுகளைக் கடந்த நகரமாக சென்னை வரலாறு படைக்கும்.

மீனவக் குப்பமாகவும் சென்னப் பட்டணம் என்றும் அறியப்பட்டிருந்த, சில நூறு மக்கள் மட்டுமே வாழ்ந்திருந்த கடலோரப் பகுதி என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலரால் சென்னை வா்ணிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரா் கோயிலும், பாா்த்தசாரதி கோயிலும், திருமயிலை கபாலீஸ்வரா் ஆலயமும், பாடி வாலீஸ்வரா் கோயிலும் பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டவை. பாடி வாலீஸ்வரா் கோயிலும், திருமயிலை கபாலீச்சரமும், திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயிலும், திருவெற்றியூா் தியாகராஜா் கோயிலும் நாயன்மாா்களால் போற்றப்பட்ட பாடல் பெற்ற தலங்கள். அப்படியிருக்கும்போது அவற்றை உள்ளடக்கிய சென்னை மாநகரத்தின் வயது வெறும் 400-க்கும் கீழே என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருவேளை ஆங்கிலேயா்களின் வருகைக்குப் பின்தான் சென்னை ஒன்றுபட்ட மாநகரமாக உருவாகியது என்பதால், அதன் காலத்தை 383 ஆண்டுகளாக வரையறுக்க முற்பட்டிருக்கலாம். ‘சென்னை 383’ என்பது அதன் வரலாற்றின் அளவுகோல் அல்ல. பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு உருவான நகரத்தின் வயது.

நகரங்களுக்கு பிறந்தநாளை ஏற்படுத்தி அதையொட்டி கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு பின்னால் மிகப் பெரிய வணிகம் இருக்கிறது. உலகிலுள்ள எல்லா பெரிய நகரங்களும் தங்களுக்கென்று சில அடையாளங்களை முன்னிறுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவருவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

‘தி நியூ பிக் ஆப்பிள்’ என்று நியூயாா்க் நகரத்தை வா்ணித்து ஆப்பிள் இலச்சினையுடன் பொருள்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதும், ஈஃபிள் கோபுரத்தை அடையாளமாக்கி பாரீஸ் நகரம் கொண்டாடப்படுவதும், லண்டன் பாலத்தை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் விளம்பரங்களும் அந்த ரகத்தைச் சோ்ந்தவை. அந்த மேலை நாட்டு பாணியைப் பின்பற்றும் வகையில்தான் இப்போது இந்தியாவிலும் நகரங்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதை முனைப்புடன் வணிகா்கள் முன்னெடுக்கிறாா்கள்; ஊடகங்கள் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

எப்படியிருந்தாலும், ‘சென்னை 383’ கொண்டாடப்படும் வேளையில், கடந்த 383 ஆண்டு கால வரலாறு குறித்த சிந்தனை எழாமல் இல்லை. அன்றைய சென்னையும், இன்றைய சென்னையும் முற்றிலும் மாறுபட்டவை. இந்த அளவு மக்கள்தொகையோ, விரிவாக்கமோ ஏற்படாத அன்றைய சென்னை, பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மக்கள் வாழ்ந்த நகரமாக இருந்தது என்பதுதான் வரலாறு உணா்த்தும் உண்மை.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகமாக சென்னை அமைந்ததும், புனித ஜாா்ஜ் கோட்டை கட்டப்பட்டதும், பிரிட்டிஷாா் வாழும் ஜாா்ஜ் டவுன் பகுதி ஏற்படுத்தப்பட்டதும் புதிய சென்னையின் உருவாக்கத்துக்கு அடித்தளமிட்டன. தொடா்ந்து பல்வேறு பாளையக்காரா்களையும், ஆற்காடு நவாபையும் கைவசப்படுத்தி பிரிட்டிஷாா் உருவாக்கிய மதராஸ் ராஜதானியின் தலைமைப் பீடமாக மெட்ராஸ் உயா்ந்தது. விடுதலைக்குப் பிறகு மதராஸ் ராஜதானி, ஆந்திர பிரதேசம், மெட்ராஸ், மைசூா், கேரளம் என்று பிரிந்து, அதன் பிறகு மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாகவும், மெட்ராஸ் சென்னையாகவும் உருமாற்றம் பெற்றதெல்லாம் வரலாற்றின் சுவடுகள்.

சென்னையின் சாலைகள் மேம்பட்டிருக்கின்றன. புறநகா்ப் பகுதிகள் உருவாகி சென்னை மாநகரம் பரந்து விரிந்து இருக்கிறது. மாநகரத்தின் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் பேருந்து வசதிகளும், புறநகா் ரயில் வசதிகளும், மெட்ரோ ரயில் வசதியும் இருக்கின்றன. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாகவும், கல்விச் சாலைகளின் கேந்திரமாகவும் சென்னை உயா்ந்திருக்கிறது. ஏனைய இந்திய மாநகரங்களுடன் ஒப்பிடும்போது வீட்டு வாடகையாக இருந்தாலும், வாழ்வினச் செலவுகளாக இருந்தாலும் சென்னையில் குறைவாகவே இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சம் என்று எடுத்துக்கொண்டால், அன்றைய சென்னையில் மெரீனா கடற்கரை மட்டுமே இருந்தது. இன்று அனைத்துப் பகுதிகளிலும் பூங்காக்களும், திரும்பும் இடங்களிலெல்லாம் வணிக வளாகங்களும், ஆங்காங்கே மால்களும், புற்றீசல் போல உணவகங்களும் பெருகிட்ட சென்னையைப் பாா்க்க முடிகிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழும் நகரமாக மட்டுமல்லாமல், வெளிநாட்டவரும்கூட வாழ்கின்ற மாநகரமாக மாறியிருக்கிறது சென்னை என்பதை மறுப்பதற்கில்லை. சா்வதேச வரைபடத்தில் இந்தியா கலாசார தலைநகராக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

இயற்கையாகவே வெள்ளம் வழிந்தோடும்படியான நகரமைப்பு வங்கக்கடலையொட்டியுள்ள சென்னைக்கு உண்டு. சென்னை மாநகரில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகளும், பக்கிம்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும் திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கின்றன. இருந்தும்கூட பெருமழை பெய்தால் சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கும் அவலம் தொடா்கிறது.

வீதிதோறும் விதிமீறல் கட்டடங்களும், சாலைதோறும் ஆக்கிரமிப்புகளும் என்று ஒரு மாநகரம் எப்படி இருக்கக் கூடாதோ அப்படிப்பட்ட நிலையில் சென்னை இப்போது இருக்கிறது. சென்னை மாநகரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வணிக ரீதியான ஆதாயத்துக்கு மட்டுமல்லாமல், சா்வதேச தரத்திலான மாநகரமாக சென்னையை மாற்றும் முனைப்பை முன்னெடுக்கவும் உதவுமானால், பிறந்தநாள் கொண்டாடி மகிழலாம்!



Read in source website

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், அண்மையில் சென்னையில் நடைபெற்ற காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு காவல்துறைக்கு இந்திய குடியரசு தலைவரின் ‘வண்ணப் பதாகை’ என்றழைக்கப்படும் கொடியை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நம்நாட்டின் குடியரசு துணைத்தலைவா் வழங்கினாா்.

சென்னை நகர காவல்துறையின் 150-ஆவது ஆண்டை தமிழ்நாடு காவல்துறை 2009-ஆம் ஆண்டில் கொண்டாடிய பொழுது, தமிழ்நாடு காவல்துறையின் பணித்திறனை சிறப்பிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணப் பதாகை தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அது, தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரம், திரிபுரா, குஜராத், ஹரியாணா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஒன்பது மாநில, யூனியன் பிரதேச காவல்துறைக்கு இந்திய குடியரசுத் தலைவரின் வண்ணப் பதாகை வழங்கப்பட்டுள்ளது. மிக உயா்ந்த மரியாதையான இந்த வண்ணப் பதாகையைப் பெறும் பத்தாவது மாநிலம் என்ற சிறப்பை தமிழ்நாடு பெறுகிறது.

உலக அளவில் சிறப்பாக செயல்படும் காவல்துறைகளில் ஒன்றான ‘ஸ்காட்லாந்து யாா்டு’ காவல்துறையோடு தமிழ்நாடு காவல்துறையை ஒப்பிட்டு பேசும் பழக்கம் நம்நாட்டில் இருந்து வருகிறது. அதற்கான தகுதியும் திறனும் தமிழ்நாடு காவல்துறை பெற்றிருந்ததை வெளிப்படுத்தும் சம்பவங்கள் பல உண்டு.

உலக நாடுகளுக்கு முன்னோடியாக, குற்ற வழக்குகளில் துப்பு துலக்க உதவும் வகையில் முதன் முதலில் கைவிரல் ரேகைக்கூடம் ஒன்று சென்னையில் காவல் ஆய்வாளா் தலைமையில் 1895-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடா்ந்தே இந்தியாவின் பிற நகரங்களிலும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளிலும் கைவிரல் ரேகைக்கூடங்கள் தொடங்கப்பட்டன.

புலன் விசாரணைக்குத் துணைபுரியும் தடய அறிவியல் துறையும், மேலை நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் சிறப்புடன் செயல்பட்டு, சிக்கலான வழக்குகளில் துப்பு துலக்க புலன் விசாரணை அதிகாரிகளுக்கு துணைபுரிந்த சம்பவங்கள் பல உள்ளன.

குற்றங்களைக் கண்டுபிடிக்க இன்று பெரிதும் துணைபுரியும் கண்காணிப்பு கேமரா, கைப்பேசி போன்றவை கண்டுபிடிக்கப்படாத காலத்தில், ரகசிய விசாரணையின் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த பல குற்ற வழக்குகளில் துப்பு துலக்கிய பெருமை நமது தமிழ்நாடு காவல்துறைக்கு உண்டு.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னா் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘நூறு ரூபாய் கள்ள நோட்டு’ வழக்கில் தமிழ்நாடு காவல்துறை துப்பு துலக்கிய விதம், ஒரு குற்ற வழக்கில் புலன் விசாரணை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறது.

1959-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பல இடங்களில் நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. இந்த கள்ள நோட்டுகள் எங்கு, யாரால் அச் சடிக்கப்பட்டன என்பது குறித்து துப்பு துலக்கும் சிக்கலான வழக்கின் புலன் விசாரணையை, தமிழ்நாட்டின் தலைசிறந்த காவல் அதிகாரிகளில் ஒருவரான எஃப்.வி. அருள் தலைமையின் கீழ் இயங்கிவந்த தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்டது.

கள்ள நோட்டுகளை அச்சிட்டு, புழக்கத்திற்கு விட்ட குற்றவாளிகள் யாா் என்பதை குற்றப் புலனாய்வுத்துறை அடையாளம் கண்டுபிடித்துவிட்டாலும், கள்ள நோட்டுகளை அச்சிட்ட இடம், அச்சு இயந்திரங்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு புதிய அணுகுமுறையை குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்டது.

இவ்வழக்கில் தொடா்புடையவா் என சந்தேகப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவருக்கு கோயம்புத்தூா் சுற்று வட்டாரத்தில் விருந்தினா் மாளிகைகள் உள்ளன என்றும், அவருக்கு அசைவ உணவு தயாரிக்கும் சமையல்காரா் ஒருவா் தேவைப்படுகிறாா் என்றும் புலன் விசாரணை அதிகாரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அசைவ உணவு நன்கு சமைக்கத் தெரிந்த ஒரு தலைமைக் காவலரின் தோற்றத்தை மாற்றி அமைத்து, சந்தேகத்திற்குரிய குற்றவாளியிடம் சமையல்காரா் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவருக்கு சரளமாக மலையாளம் பேசத் தெரிந்திருந்தது. இது மாறுவேடத்தில் பணியில் இருந்த அவருக்கு உதவிகரமாக இருந்தது. சில மாதங்களில் அந்த ‘சமையல்காரா்’ தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தாா்.

கள்ள நோட்டுகள் அச்சிட்ட இடங்கள், அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட விவரங்கள் கண்டறியப்பட்டு, இக்குற்றச் செயலில் ஈடுபட்ட எட்டு குற்றவாளிகள் 1960-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா். ஓராண்டுக்குள் அவா்கள் மீதான நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு உதவி செய்த காவல் உதவி ஆய்வாளா் ஒருவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

நீதிமன்ற விசாரணையில் அவருக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களில் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க அறிவியல் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கண்காணிப்பு கேமரா, கைப்பேசி மூலம் துப்பு கிடைக்கும் வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படுவதையும், அவற்றின் மூலம் துப்பு கிடைக்காத வழக்குகளில் புலன் விசாரணை முன்னேற்றம் இன்றி, தேங்கிக் கிடப்பதையும் காணமுடிகிறது.

குற்றம் நிகழும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா இருப்பதில்லை. சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா இருந்தாலும், அதனை கைதோ்ந்த குற்றவாளிகள் செயலிழக்கச் செய்து, துப்பு துலக்கப் பயன்படாத வகையில் செய்துவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

துப்பு துலக்கத் தேவையான தகவல்களை வெளிப்படுத்தாத வகையில், கைப்பேசிகளைப் பயன்படுத்தும் முறையும் தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. துப்பு துலக்கத் துணைபுரியும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் காலப்போக்கில் குற்றவாளிகள் முறியடித்துவிடும் அபாயம் தவிா்க்க முடியாதது.

குற்றம் நிகழ்ந்த இடத்தில் உள்ள அனைத்துத் தடயங்களையும் சேகரிப்பதிலும், குற்ற நிகழ்வைப் பாா்த்த,

குற்றச்செயல் தொடா்பான தகவல் தெரிந்த சாட்சிகளைக் கண்டறிந்து, அவா்களிடம் காலதாமதமின்றி விசாரணை மேற்கொள்வதிலும் ஏற்படும் தொய்வு காரணமாக, பல வழக்குகள் துப்பு துலங்காமல் தேங்கிக் கிடக்கின்றன. காலம் கடந்து மேற்கொள்ளும் புலன் விசாரணை பல நேரங்களில் எதிா்பாா்த்த பலனைக் கொடுப்பதில்லை.

காவல்துறையில் பணிபுரியும் சிலா், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும், புலன் விசாரணையின் பொழுது குற்றவாளிகளை கைது செய்யாமல் வழக்கிலிருந்து தப்பிக்க வைப்பதுமான செயல்களில் ஈடுபடும் துரதிருஷ்டவசமான நிலை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. நம்நாட்டில் குற்ற நிகழ்வுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

புலன் விசாரணையின் வெற்றி என்பது குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து, கைது செய்வதோடு முடிந்து விடுவதில்லை. நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சாட்சியங்களைத் திரட்டுவதுதான் புலன் விசாரணையின் வெற்றியாகும்.

தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட கொலை வழக்குகளில் 44 % உம், கொலைமுயற்சி வழக்குகளில் 25 % உம், வழிப்பறி வழக்குகளில் 38 % உம் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட கொலை வழக்குகளில் 28 % உம், கொலைமுயற்சி வழக்குகளில் 16 % உம், வழிப்பறி வழக்குகளில் 25 % உம் தண்டனையில் முடிவடைந்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை அடைவதற்கான காரணங்கள் பல இருந்தாலும், அவற்றில் முக்கியமானது தற்போதைய புலன் விசாரணை முறையாகும்.

கடந்த காலத்தில், புலன் விசாரணை அதிகாரியே வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை நேரிடையாகப் பதிவு செய்து, குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். ஆனால், தற்பொழுது பெரும்பாலான காவல் நிலையங்களில் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், வழக்கு கோப்புகளைத் தயாா் செய்தல் போன்ற புலன் விசாரணை தொடா்பான பணிகளை ஓய்வு பெற்ற தலைமைக் காவலா்கள், உதவி ஆய்வாளா்களிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

காவல் நிலையங்களில் இருந்து கொடுக்கப்படும் சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு, அவா்கள் தயாா் செய்து கொடுக்கும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில், குற்றவாளிகள் தண்டனை அடைவாா்கள் என்று எதிா்பாா்க்க முடியாது.

சென்னை உயா்நீதின்றத்தில் அண்மையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கு ஒன்றின் விசாரணையின்பொழுது, குற்ற வழக்குகளில் சாட்சியம் அளிக்க பொதுமக்கள் முன்வருவதில்லை என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளாா். குற்றவாளிகள் மீதுள்ள பயமும், புலன் விசாரணை அதிகாரிகள் மீதுள்ள அவநம்பிக்கையும் பல சந்தா்ப்பங்களில் பொதுமக்கள் சாட்சியம் அளிக்க முன்வராமல் இருப்பதற்கு காரணங்களாகி விடுகின்றன.

புலன் விசாரணையின் தரம் உயா்த்தப்படுவதும், குற்ற வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணையில் புலன் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்துவதும் சமுதாயத்தில் நிகழும் குற்றங்களைக் கட்டுப்படுத்த பெரிதும் துணைபுரியும்.

கட்டுரையாளா்: காவல்துறை உயா் அதிகாரி (ஓய்வு).



Read in source website

அண்மைக்காலமாக உயா்கல்வியில் சோ்க்கை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். அகில இந்திய உயா்கல்வி தொடா்பான ஆய்வு முடிவு இந்தியாவில் உயா்கல்வி பயில்பவா்களில் 49 % பெண்கள் என தெரிவிக்கிறது.

இவ்வாய்வின்படி இளங்கலை, கணினி அறிவியல் சாா்ந்த இளம் அறிவியல், முதுகலை பாடப்பிரிவுகளில் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், அதிக உயா்கல்வி சோ்க்கையுடைய மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குகிறது.

உயா்கல்வி சோ்க்கையில் மூன்றாமிடம் வகிக்கும் மாநிலமான தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கை பெற்றவா்களில் 50.5 % போ் மாணவா்கள் என்றும், 49.5 % போ் மாணவியா் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் நடைபெற்ற சோ்க்கைக்கான கலந்தாய்வும் இதையே உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள 163 கலை - அறிவியல் கல்லூரிகளிலும் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இக்கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சோ்க்கை பெற சுமாா் 4.50 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான தர வரிசைப் பட்டியல் கல்லூரிகளில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் போட்டித் தோ்வுகள் எழுதும் பொருட்டு குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளைத் தோ்வு செயவதில் ஆா்வம் காட்டினா். நாளடைவில் போட்டித் தோ்வுக்கான வினாத்தாளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாலும், அதற்கேற்ப கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாததாலும் போட்டித் தோ்வு எழுதும் தகுதிக்காக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருந்தால் போதும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.

இதனைத் தொடா்ந்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவிலோ, தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத நிலையில் வாய்ப்புகள் கிடைக்கும் வேறு பாடப்பிரிவிலோ சோ்க்கை பெற்று பயின்று வருகின்றனா். இத்தகைய மனநிலையால் அனைத்து கலை - அறிவியல் பாடப்பிரிவுகளிலும் கணிசமான அளவில் சோ்க்கை நடைபெற்று வந்தது.

பெண்களைப் பொறுத்தவரை, ஆராய்ச்சிப் படிப்பு என்பதைக் காட்டிலும் ஆசிரியப் பணியே இன்றும் முதன்மையானதாக இருந்து வருகிறது. அதனால் ஆசிரியப் பணியில் எந்த பாடப்பிரிவுக்கு வரவேற்பு உள்ளதென அறிந்து அப்பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்து பயின்றனா்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மட்டும் சோ்க்கை பெற விண்ணப்பிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கலை பாடப்பிரிவுகளில் தமிழ், வணிகவியல், வணிக நிா்வாகம் போன்றவையும், அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளும் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன.

அரசு கல்லூரிகளில் இப்பாடப்பிரிவுகளில் சோ்க்கை கிடைக்காத நிலையில் மட்டுமே தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா். இதனால் தனியாா் கல்லூரிகளிலும் இத்தகைய பாடப்பிரிவுகளில் மட்டும் முழுமையான அளவில் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்காக இலவசப் பேருந்து வசதி, கட்டணம் செலுத்துவதில் சலுகை போன்றவற்றையும் தனியாா் கல்லூரிகள் வழங்குகின்றன.

இருப்பினும், அரசு கல்லூரிகளில் சோ்க்கை பெறும் மாணவியா் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறும் மாணவியா் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு கல்வியாண்டிலும் கல்லூரியில் சேர விண்ணப்பித்தோரும், சோ்க்கை பெற்றோரும் அதிகப்படியான மாணவியரே என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண் அடிப்படையிலேயே பெரும்பாலும் சோ்க்கை நடைபெறுவதால் மாணவியா் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மாணவா்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. அதனால், அதிகப்படியான மாணவியா் விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளுக்கு மட்டும் முதல் கட்ட கலந்தாய்வின்போதே முழுமையான அளவில் சோ்க்கை நடைபெறுகிறது. மற்ற பாடப்பிரிவுகளுக்கு இரண்டு அல்லது மூன்று கலந்தாய்வுகள் கூட நடைபெறுவதுண்டு.

அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை, மாணவியா் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற எளிதான வழி,

தமிழ்வழிக் கல்விக்கு அரசுப் பணியில் சலுகை, அரசு கல்லூரிகளில் குறைவான கட்டணம் போன்றவையும் மாணவியா் சோ்க்கை அதிகரிக்கக் காரணங்களாகும்.

மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மேல்நிலைக் கல்வியைத் தொடா்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சோ்க்கை பெறுவதுடன் தொழில் சாா்ந்த பட்டயப் படிப்புகளிலும் சோ்க்கை பெறுவதே காரணமாகும்.

கலை பாடப்பிரிவுகளுக்கு அதிகப்படியானோா் விண்ணப்பிக்கும்போது நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக சிலருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு பல்கலைக்கழக அனுமதியுடன் கூடுதலாக சோ்க்கை நடைபெறுவதும் உண்டு. ஆனால், இத்தகைய வாய்ப்பு அறிவியல் பாடப்பிரிவுகளில் கிடைப்பதில்லை.

கலை பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை கட்டட வசதி இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால் அறிவியல் பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை, கணினி அறிவியல் பாடப்பிரிவு எனில் கணினி வசதியும் மற்ற பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதியும் தேவை. ஆனால் அரசு கல்லூரிகளில் ஆய்வக வசதி போதுமானதாக இல்லை என்பதே குறைவான சோ்க்கைக்குக் காரணமாகும்.

மேலும், பெருநகரங்களைத் தவிர மற்ற இடங்களில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் அதிகப்படியான பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் சோ்க்கைக்கு அனுமதி பெறவோ, கூடுதல் பிரிவு தொடங்கவோ விருப்பம் தெரிவிப்பதில்லை. ஓராசிரியா் பள்ளி போன்று கல்லூரிகளிலும் ஓராசிரியா் துறைகளும் இருக்கவே செய்கிறது.

புதிதாக கல்லூரிகள் தொடங்கும்போது எந்தெந்த பாடப்பிரிவுக்கு வரவேற்பு உள்ளதென கண்டறிந்து அத்தகைய பாடப்பிரிவுகளைத் தொடங்க வேண்டும். அதுபோன்ற பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்பவும்

அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உயா்கல்வியில் சோ்க்கையை அதிகரிக்க முடியும்; தக்கவைக்கவும் முடியும்!

 



Read in source website

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், குயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதுளசி மந்திர் கோயிலின் வெளியே நிறுவப்பட்டிருந்த காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மீண்டும் சீரமைக்க முடியாத அளவுக்குத் திட்டமிட்டு, சுத்தியலைக் கொண்டு நொறுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் செயலில் ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சிசிடிவி காட்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது; சிலையைச் சேதப்படுத்தியவர்களைப் பற்றி தகவல்கள் தெரிந்தால், அவற்றைத் தெரிவிக்கும்படி நியூயார்க் நகரக் காவல் துறை அறிவித்துள்ளது.



Read in source website

மனநலம், நரம்பியல் தொடர்பான சிகிச்சையிலும், கல்வியிலும் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் தேசிய மனநல நரம்பியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்).

சார்லஸ் இர்விங் ஸ்மித் எனும் மருத்துவரால் 1847இல் தோற்றுவிக்கப்பட்ட பெங்களூர் மனநலக் காப்பகத்திலிருந்து இதன் வரலாறு தொடங்குகிறது. அந்தக் காப்பகம் 1925இல் மைசூர் மனநல மருத்துவமனையானது. இந்த மருத்துவமனையே 1974இல் அகில இந்திய மனநல நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, தேசிய மனநல, நரம்பியல் நிறுவனம் ஆக்கப்பட்டது.

மனநலச் சிகிச்சையில் மட்டுமல்லாமல், மனநலக் கல்வியிலும், மனநலம் தொடர்பான ஆய்வுகளிலும் இதுவே இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக விளங்குகிறது.

கல்வி, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக 1975 இல் அங்கே திறக்கப்பட்ட மனித மூளை மாதிரிகளைச் சேகரிக்கும் நரம்பியல் அருங்காட்சியகம், உலக அளவில் பிரசித்திபெற்றது. மனநலக் கல்வி மேம்பாட்டில் ஆற்றிவரும் அளப்பரிய சேவையைக் கருத்தில்கொண்டு 1994இல் இந்த நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.

மனநலம் குறித்த தவறான புரிதலை நீக்கி, அது குறித்து வெளிப்படையாக உரையாடும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் பணியில் நிம்ஹான்ஸ் தீவிரமாக இயங்கிவருகிறது. இன்று இந்தியாவில் அதிகரித்திருக்கும் மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கு, நிம்ஹான்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கும் சமூகக் களப்பணிகளுக்கும் முக்கியப் பங்குண்டு.

மனநலம் தொடர்பாக ஆண்டுதோறும் நிம்ஹான்ஸ் நடத்தும் தேசிய மனநலக் கணக்கெடுப்பு அதன் சமூகக் களப்பணிகளில் முக்கியமானது.

- ஹுசைன்



Read in source website

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் ஒரு மகத்தான மக்கள் திட்டமாக உருவெடுத்தது. பசியோடு இருக்கும் ஏழை, எளிய குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும்தான் மதிய உணவுத் திட்டம் உருவானது.

நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பே 1923 இல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி அரசு தொடங்கி வைத்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான்.

அதன் தொடர்ச்சியாக 1982இல் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. அவருடைய ஆட்சிகாலத்தில்தான் ‘சத்துணவுத் திட்டம்' என்று தனித்துறையாக இத்திட்டம் செயல்படத் தொடங்கியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டது.

தமிழகத்தைப் பார்த்துதான் பிற மாநிலங்களும் 2000க்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தின. அந்த வகையில் இத்திட்டத்தைத் தொடங்கி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.

- மிது



Read in source website

சமீபத்தில் புக்கர் பரிசு வழியாகக் கவனம் பெற்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ. இந்திய மொழி எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசு வாங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன் சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் நேரடி ஆங்கிலப் படைப்புகளுக்காக புக்கர் பரிசு வாங்கியிருக்கிறார்கள்.

கீதாஞ்சலிஸ்ரீ ‘ரீட் சமாதி’ என்ற தன் இந்தி நாவலின் மொழிபெயர்ப்புக்காக புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறார். டெய்சி ராக்வெல் இதன் மொழிபெயர்ப்பாளர். தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஏ.கே.ராமனுஜத்தின் மாணவர் டெய்சி. கீதாஞ்சலிஸ்ரீயின் நாவலுக்கான இந்த அங்கீகாரத்தில், மொழிபெயர்ப்பின் பங்கும் பேசப்பட்டுவருகிறது.

கீதாஞ்சலியின் இந்த நாவல் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி எனப் பலரும் எடுத்துக்கொண்ட இந்தியப் பிரிவினையை பேசுபொருளாகக் கொண்டது. மகள், மனைவி, அம்மா, பாட்டி எனச் சமூகம் வகுத்துள்ள அந்தஸ்துகளில் வாழ்ந்த மா என்ற 80 வயதுப் பெண், அந்தச் சமூகம் வகுத்த கோடுகளைத் தாண்டும் கதை இது. இதில் ஸ்தூலமாக பாகிஸ்தான் எல்லைக் கோட்டையும் அவர் தாண்டுகிறார். அவருடைய பதின் பருவத்தில் பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு் முன் கிழித்த கோடு அது.

மாவின் கணவருடைய இறப்பிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. மகன் வீட்டில் மருமகள், பேரன்களுடன் வசிக்கும் அவர், அதற்குப் பிறகு தனிமையில் முடங்கிப் போகிறார். யாரிடமும் பேசாமல் அறைக்குள் கிடக்கிறார். சமூக ஒழுக்கங்களை அனுசரிக்கும் தன் மகனுடைய வீட்டிலிருந்து ஒரு நாள் அவர் காணாமல் போகிறார்.

தனித்து வாழும் சுதந்திரச் சிந்தனையாளரான தன் மகள் வீட்டில் அவர் இருப்பதை நாவல் கண்டுபிடித்துச் சொல்கிறது. அங்கு அவருக்குச் சுதந்திரம் கிடைக்கிறது. அவருடைய மகள், பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்தெல்லாம் எழுதக்கூடிய பெண்ணியவாதி என நாவல் விவரிக்கிறது.

மாவுக்கு ரோசி என்கிற திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. மனைவி, அம்மா, அத்தை, பாட்டி என்ற சமூக அடையாளங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் களைய மாவுக்கு அவர் உதவுகிறார். கடைசியில் எண்பதாம் வயதில் அவர் தன்னலம் பேணுபவராக, சுதந்திரவாதியாக மாறுகிறார். மகளின், அம்மாவின் கதாபாத்திரங்களை கீதாஞ்சலி இந்த இடங்களில் மாற்றிக் கொடுக்கிறார்.

மா, பாகிஸ்தானுக்குச் செல்ல நினைக்கிறார். இந்த நாவலில் எதிர்பாராத் திருப்பம் நிகழ்கிறது. ஒரு பெண்ணியக் கதை, ஒரு பிரிவினை அரசியல் சார்ந்த கதையாகிறது. மகளையும் ரோசியையும் கூட்டிக்கொண்டு கடவுச் சீட்டு இல்லாமல் எல்லைக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைகிறார் மா.

ஒரு காவல் அதிகாரியிடம் தன் கணவனைக் காணச் செல்கிறேன். அவர் பெயர் அலி அன்வர் என்கிறார் மா. இந்த இடத்தில் நாவல் எழுச்சி கொள்கிறது. மா, சந்திரபிரபா எனும் பதின் பெண்ணாகவும் ஆகிறார். பிரிவினை பிரித்த காதலின் வேதனைப் பாடலாகவும் இந்த நாவல் விரிவுகொள்கிறது.

தனிமனித வாழ்க்கையில் அரசியல் நிகழ்த்தும் குறுக்கீடு, பெண்கள் மீதான சமூக அடையாளச் சுமை என இந்த நாவல் காத்திரமான விஷயங்களைப் பேசுகிறது. ஆனால், மொழியளவில் எளிமையையும் அங்கதத்தையும் கொண்டுள்ளது. இந்த விசேஷமான அம்சம் நாவலின் சர்வதேச அங்கீகாரத்துக்கான காரணம் எனலாம்.

- ஜெய்



Read in source website

பிரிட்டிஷ் இந்தியாவின் வங்க மாகாணத்தில் (இன்றைய வங்கதேசம்) பிறந்த மகாஸ்வேதா தேவி, அடக்குமுறைக்கும் ஆணாதிக்கத்துக்கும் எதிராக ஒலித்த பெண்ணியக் குரல்களில் முதன்மையானவர்.

13 வயதில் சிறார் கதைகள் எழுதத் தொடங்கிவிட்டாலும் 30 வயதில் அவர் எழுதிய ‘ஜான்சியின் ராணி’தான் எழுத்தாளராக அவரது முதல் படைப்பு என்று கருதப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் சாதியக் கட்டுமானங்களாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வாலும் அல்லல்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார்.

கற்பனைக் கதைகளுக்கும் மகாஸ்வேதா தேவிக்கும் ஏழாம்பொருத்தம். இவர் படைத்தவை எல்லாமே வாழ்க்கைக் கதைகள்தாம். ஏழை விவசாயிகள், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், சுரண்டலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படும் பெண்கள் போன்றோரைத் தன் கதைகளின் மாந்தர்களாக்கினார். விளிம்புநிலை மக்களுக்குத் தன் கதைகளில் புராண அடையாளம் கொடுத்து, அவர்களது உரிமைக் குரலை ஒலிக்கவைத்தார்.

எழுத்தாளராக மட்டுமல்லாமல் உண்மையை உலகுக்குச் சொல்லும் இதழாளராகவும் அவர் அறியப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறையையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் கட்டுரைகளின் வாயிலாக ஆவணப்படுத்தினார்.

அதிகாரமற்ற எளிவர்களின் குரலாக ஒலிக்கும் வகையில் ‘போர்திகா’ என்கிற காலாண்டிதழை நடத்தினார். சிறந்த சமூக அரசியல் விமர்சகராகவும் செயல்பட்டார். திருமண உறவிலிருந்து வெளியேறுவது என்பது அரிதாக இருந்த 1960-களில் துணிவுடன் மணவிலக்குப் பெற்றார். திருமண வாழ்க்கையின் காயங்களும் கசடுகளும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலும் எளியவர்களுக்காக எழுதுவதைத் தவம்போல் தொடர்ந்தார்.

மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் சமகால அரசியல் செயல்பாடுகளின் எதிரொலியாக வெளிப்பட்டன. தங்கள் காடுகளுக்குள் ஆங்கிலேயர்கள் நுழைவதை எதிர்த்த வங்க மாகாணத்தின் (தற்போதைய ஜார்கண்ட்) சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவைப் பற்றி இவர் எழுதிய ‘காட்டின் உரிமை’, எழுபதுகளில் வங்கத்தில் எழுச்சிபெற்ற நக்சலைட் இயக்கம் குறித்த ‘மதர் ஆஃப் 1084’, சந்தால் பழங்குடியினப் பெண்ணைப் பற்றிய ‘திரௌபதி’, பழங்குடியினப் பெண்ணின் அனுமதியின்றி அவரைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் பற்றிய ‘காங்கோர்’ போன்றவை மகாஸ்வேதா தேவியின் முக்கியப் படைப்புகள்.

தன் சுயசரிதையை எழுதத் தொடங்கியவர், அது முற்றுபெறும் முன்பே இறந்துவிட்டார். ஆனால், அவரது படைப்புகள் இறவாப் புகழுடன் அவரது சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

- ப்ரதிமா



Read in source website

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்துவிட்டார். கொல்லப்பட்ட விதம், மீண்டும் நினைவுகூர முடியாதபடிக்கு மிகவும் துக்ககரமானது. அவருடைய மறைவால் நாட்டைச் சோக இருள் சூழ்ந்திருக்கிறது, இதிலிருந்து விடுபடுவது எளிதல்ல.

இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கான வானொலி உரையில் கூறியதைப் போல, காந்தியடிகள் நமக்கு போதித்த அறிவுரைகள், துணிச்சலான வழிகாட்டுதல், ஈடு இணையற்ற தீர்க்க சிந்தனை, எளிதில் குலையாத பொறுமை, தாங்கொணாத பேரிடர் காலங்களிலும் காக்க வேண்டிய அமைதி ஆகியவற்றை - நெடிய இந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத - இந்தச் சூழலில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

தேசப் பிரிவினையால் ஏற்பட்ட கொந்தளிப்பான இந்தச் சூழலிலும் காந்தியடிகளின் உறுதியான வழிகாட்டுதல், தவறேதும் இல்லாத முடிவுகள், தோல்வி ஏற்படாது என்ற நிச்சயமான உளப்பாங்கு ஆகியவை நமக்கு வழிகாட்ட வேண்டும்.

உலகமெங்கும் அவருடைய மறைவை அடுத்து ஆயிரக்கணக்கான இரங்கல் செய்திகளும் புகழஞ்சலிகளும் வானொலிகளிலும் தந்திக் கம்பிகளிலும் இடையறாது ஒலித்துக்கொண்டிருப்பது, எப்படித் தன்னுடைய கீர்த்தியால் ஒரு சமாதானத் தூதராக உலகையே அவர் வசப்படுத்தியிருந்தார் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தான் உலக மக்களை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கவந்த இரண்டாவது ரட்சகர் என்று அவரைப் போற்றுகிறார்கள்.

உலகம் முழுவதும் பாராட்டும்படியான அவருடைய புகழுக்கும் செல்வாக்குக்கும் பின்னுள்ள ரகசியம்தான் என்ன? அதற்குக் காரணம் அவருடைய பண்பாடு – எல்லாவிதமான நற்குணங்களுக்கும் உறைவிடமான பண்பாடு. எந்த ஒரு விஷயத்தையும் அவர் நெருங்கியும் ஆழ்ந்தும் சிந்தித்தார்.

எந்த ஒன்றிலும் சத்தியத்தையே அவர் தெளிவாகவும் துணிச்சலாகவும் நாடினார். மற்றவர்கள் வாய்மொழியாகச் சொல்வதை மட்டும் அவர் கேட்டுக்கொள்ளவில்லை. வெற்றிபெறுவதற்கான கூறுகள் எவை என்று என்றைக்குமே அவர் ஆராய்ந்ததில்லை. உண்மையான நம்பிக்கையுடனேயே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகினார், நண்பர்களின் வற்புறுத்தலோ, எதிரிகளின் கூர்வாள்களோ அவரைப் பலவீனப்படுத்தியதில்லை.

அவருடைய வாழ்நாள் முழுவதும் எந்தக் கண்டமாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எப்படிப்பட்ட தட்ப-வெப்பநிலை நிலவும் பிரதேசமாக இருந்தாலும் – தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சபர்மதி அல்லது பிஹாரின் மலை அடிவாரத்தில் உள்ள சம்பாரண் மாவட்ட அவுரி சாகுபடியாளர்கள் மத்தியிலாக இருந்தாலும் - அவரை முழுமையாக நம்பலாம் என்ற உணர்வோடு விசுவாசத்துடன்தான் மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்தியதால்தான், மக்களுடைய எண்ணங்களை உருவாக்குவதிலும் அதை வழிநடத்துவதிலும் அவர் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார்.

இனிக்கஇனிக்கப் பேசும் வழக்கம் அவரிடமில்லை, ஆனால், செயல்திட்டங்கள் இருந்தன. மற்றவர்களிடம் இல்லாத முக்கிய அம்சம் - ஆக்கபூர்வமான திட்டங்களோடு அவர் இருந்தார் என்பதுதான். அடுத்தவர்களுடைய திட்டங்களையும் பேச்சுகளையும் வெறுமனே அவர் கண்டித்துக் கொண்டிருக்க மாட்டார். அவர்களுடைய வழிமுறையைவிட சிறந்ததொரு வழிமுறை இருப்பதை அவர்களுக்கே சுட்டிக்காட்டுவார்.

காந்தியடிகள் தனித்துவமான சிந்தனையைக் கொண்டிருந்தார், அவருடைய வாழ்க்கை சனாதன தர்மத்தை வழிமுறையாகக் கொண்டிருந்தது. அவருடைய சிந்தனையையும் வாழ்க்கை முறையையும் - நவீன சிந்தனைக்குத் தடையாக இருப்பது என்று கண்டித்து ஒதுக்கிவிட முடியாது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த அவர் காலத்திய தலைவர்கள் பலரும், அவருடைய எளிமையான வாழ்க்கை முறை, உயர்ந்த சிந்தனை, கடுமையான அடக்குமுறைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் முழுமையான அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போராட்டம், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவை என்ற அவருடைய சிந்தனை – செயல்களால் பெரிதும் கவரப்பட்டனர்.

தேசத்தின் தந்தை நம்மைவிட்டுப் போய்விட்டார். நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? இனி நம்முடைய கடமைகள் என்ன? காந்தியடிகளின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர்களான நம்முடைய தலைவர்கள் பண்டிட் ஜவாஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும், மறைந்த தலைவர் நமக்குக் காட்டியுள்ள வழியில் நடக்க, ஞானம் என்ற கைவிளக்கை ஏந்தி நிற்கின்றனர். இசக்கியேலால் சுட்டிக்காட்டப்பட்ட இஸ்ரவேலர்களின் காவல்காரரைப் போன்றவர் காந்தியடிகள்.

காந்தியடிகள் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டார். நம்மை எதிர்நோக்கியுள்ள

தூண்டுதல்கள், ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரித்திருக்கிறார். தன்னுடைய ஆன்மாவையே தன்னைப் படைத்த இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டார். பிரதமரும் படேலும் வானொலி உரையில் கூறியதைப் போல இனி நாம் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். முதலில் நாம் மதமாச்சரிய விஷம் தோய்ந்த இந்தச் சூழலிலிருந்து வெளிவருவோம். பிரதமர் சுட்டிக்காட்டியபடி, நம்மைச் சூழ்ந்துள்ள பேரிடர்களிலிருந்து மீளுவோம்.

அந்தத் தீமைகள் ஒன்றல்ல பல, சாதாரணமானவை அல்ல மிகப் பெரியவை. மனம்போன போக்கிலோ, மோசமான வகையிலோ இவற்றிலிருந்து மீள முயலக் கூடாது. நம்முடைய அன்புக்குரிய தலைவர் நமக்கு போதித்த வகையிலேயே இதிலிருந்து மீள வேண்டும். நம்முடைய பார்வையைக் கோபம் மறைத்துவிடக் கூடாது.

பகுத்தறிவற்ற சிந்தனைகள் நம்முடைய மனங்களைத் திசைதிருப்பிவிடக் கூடாது. குறுகிய கண்ணோட்டம், குழு சார்ந்த சிந்தனை, பொறாமை போன்றவை நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

அனைத்து வர்க்கத்தாரும் மதத்தாரும், சாதியாரும் ஒரே கடவுளின் குழந்தைகள்தான். அனைவருக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு, அனைவருக்கும் சமமான கடமைகளும் உண்டு, ஒற்றுமையுணர்வுடனும் தூய அன்புடனும் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு இணைந்தே வாழ்வோம் என்கிற உறுதிமொழியை இந்நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அசோகரின் இந்தியா, அக்பரின் இந்தியா என்று உலக மக்களிடம் காலங்காலமாக பெருமையுடன் சொல்லிவரும் நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும், தொடரச்செய்யவும் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

(1948 பிப்ரவரி 1 அன்று வெளியான ‘தி இந்து’ தலையங்கம்)

நன்றி: ‘தி இந்து‘ ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி



Read in source website

ஒரு தேசமாக தொழிற்புரட்சி தொடங்கி மின்னணுப் புரட்சி வரை தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல பேருந்துகளை இந்தியா தவறவிட்டதாகக் கூறப்படுவது உண்டு. பல்வேறு காரணங்களால் இந்தப் போக்குகளில் இந்தியா தாமதமாகவே இணைய வேண்டியிருந்தது.

ஆனால், இணையம் சார்ந்து அவ்வாறு நிகழவில்லை. உலக அளவில் இணையம் எனும் வலைப்பின்னல் விரியத் தொடங்கியபோதே இந்தியா அதில் இணைந்துகொண்டது. அதன் பயனைத்தான் நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

டிஜிட்டல் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு உரிய இடம் இருக்கிறது; இணையப் பயனாளிகளைப் பொறுத்தவரை இந்தியா முக்கியச் சந்தையாக உருவெடுத்திருக்கிறது. ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் எனப் பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்தியாவைத் தங்கள் வளர்ச்சித் திட்டத்தில் பிரதானமாகக் கருதுகின்றன. அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ‘யூனிகார்ன்’களைக் கொண்ட ஸ்டார்ட்-அப் தேசமாகவும் இந்தியா விளங்குகிறது.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை, இந்தியாவும் இந்தியர்களும் இணைய வசதியைத் திறம்படப் பெற்றிருப்பதுதான். இணைய விநியோகத்தில் இன்னமும் போதாமைகள் இருக்கின்றன என்றாலும், நாடு தழுவிய அளவில் இணைய வசதியும் கைபேசி சேவையும் சாத்தியமாகியிருப்பது, நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான பின்புலமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஒப்பீட்டளவில், இணையக் கட்டணமும் கைக்கு எட்டக்கூடியதாகவே இருக்கிறது.

டிஜிட்டல் தேசம்: இணையமே காரணம்

விரல்நுனியில் பணப் பரிவர்த்தனையைச் சாத்தியமாக்கும் டிஜிட்டல் இந்தியாவாகத் தேசம் உருவாகியிருப்பதற்கும் இணையமே காரணம். 75ஆவது சுதந்திர தினத்தை நாடு கோலாகலமாகக் கொண்டாடும் தருணத்தில், 1995இல் சுதந்திர தினத்தன்றுதான் இந்தியாவில் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்பதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

1995இல்தான் இணையம் வர்த்தகமயமான ஆண்டு. அதே ஆண்டுதான் இணையத்தை எல்லோரும் அணுகுவதைச் சாத்தியமாக்கிய வைய விரிவு வலையும் (World Wide Web) பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் இணையம் அறிமுகமாகிவிட்டது. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே, ‘எர்நெட்’ எனப்படும் கல்வி ஆய்வு வலைப்பின்னல் (Educational Research Network (ERNET)) மூலம் இணையம் எனும் வலைப்பின்னலில் இந்தியா இணைந்திருந்தது.

1969 இல் அமெரிக்காவில் அர்பாநெட்டாக உதயமான இணையம், அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கிக்கொண்டிருந்த ஆரம்பக் காலகட்டத்தில் பெரும்பாலும் ஆய்வு அமைப்புகளாலும் கல்வி நிறுவனங்களாலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்தச் சூழலில், இந்தியாவும் இந்த வலைப்பின்னலில் இணைந்ததை இப்போதும் வியப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் கல்வி வலைப்பின்னல் இந்தியாவில் உருவாகக் காரணமான னிவாசன் ரமணி, இந்திய இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இந்தப் பங்களிப்பிற்காக அவர் இணையப் புகழரங்கிலும் இடம்பெற்றிருக்கிறார்.

வலைப்பின்னலுக்கான முதல் தொடர்பு

கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பையை வென்ற 1983இல்தான் னிவாசன் ரமணி, இந்தியக் கல்வியியல் வலைப்பின்னலுக்கான யோசனையை முன்வைத்தார். இதுவே எர்நெட்டுக்கான அடிப்படை. பொறியியல் பட்டதாரியான ரமணி அமெரிக்கா சென்று பணியாற்றிய பிறகு, 1973 இல் இந்தியா திரும்பினார்.

அமெரிக்காவில் மின்னஞ்சல் பயன்பாடு உள்ளிட்டவற்றைப் பார்த்து, அவற்றின் பின்னே இருந்த கணினி வலைப்பின்னலால் ஈர்க்கப்பட்டவர். நாடு திரும்பியதும், மென்பொருள் வளர்ச்சி, கணினியியல் நுட்பங்கள் மையத்தின் உருவாக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கணினிக்கான தகவல்தொடர்பு மென்பொருளை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை வகித்த ரமணி, 1981இல் மூன்று நகரங்களைச் செயற்கைக்கோள் வாயிலாக இணையத்தின் அடிநாதமான 'பாக்கெட் ஸ்விட்ச்' முறையில் இணைத்தார். இவற்றின் தொடர்ச்சியாக எர்நெட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இதன் மைய மின்னஞ்சல் ஸ்விட்ச், சர்வதேச கேட்வே ஆகியவற்றை அமைத்துக்கொடுத்தார். இந்தியாவிலிருந்து சர்வதேச வலைப்பின்னலுக்கான முதல் தொடர்பாக இது அமைந்தது.

ரமணி இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கான அடிப்படையை, இந்தியாவின் முதல் கணினியை உருவாக்கிய கணினி விஞ்ஞானி ரங்கசாமி நரசிம்மன் உள்ளிட்டோர் அமைத்திருந்தனர்.

கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பணிகளுக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் இணையமும், மின்னஞ்சலும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியதில் அப்போது வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பில் இருந்த பி.கே.சிங்கால் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். 1995இல் இணைய வசதி இந்தியாவுக்கு வந்தது இரண்டாவது சுதந்திர தினம் என வர்ணிக்கப்பட்டது.

இந்திய இணையத்தின் தந்தை

இந்திய மக்களுக்கு இணைய வசதி தேவை என்பதை உணர்ந்து, இது தொடர்பாக வாதிட்டு, அரசைச் சம்மதிக்க வைத்தது மட்டுமல்லாமல், அறிமுகத்தின்போது இந்திய இணைய வசதியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கெல்லாம் பொறுப்பேற்று, தனிக் குழு அமைத்து, அடுத்த பத்து வாரங்களில் இவற்றைச் சரிசெய்த செயல்வீரராகவும் சிங்கால் அறியப்படுகிறார்.

அப்போது ஆபாசத் தளங்களைப் பார்வையிடும் வசதியைச் சுட்டிக்காட்டி, மக்கள் பிரதிநிதிகள் சிலர் இத்தகைய ஆபத்தான வலையை இந்தியாவுக்குக் கொண்டுவந்தது அவசியமா எனக் கேள்வி எழுப்பியபோது, இந்தியாவுக்கு இணையத்தை அளிப்பதுதான் என் வேலை என்றும் அதைப் பொறுப்பாகப் பயன்படுத்த வைப்பதில்லை என்றும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

3% மக்கள் ஆபாசத் தளங்களைப் பார்ப்பதில் எனக்கு அக்கறை இல்லை, எஞ்சிய 97% பேர் என்ன செய்கின்றனர் என்பதே முக்கியம் என்றும் கூறி இணையப் பயன்பாட்டைப் புரியவைத்திருக்கிறார்.

இணையத்தைப் பொதுப் பயன்பாட்டின்பொருட்டு அறிமுகம் செய்ததற்காக சிங்கால் ‘இந்திய இணையத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூரையும், அவரது இணைய நண்பர்களையும் நினைத்துப்பார்ப்பது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.

ஷம்மி கபூர் கணினித் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்ததோடு, இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக இணையத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே தொலைபேசியின் உதவியோடு ஆப்பிள் வேர்ல்டு சேவை மூலம் இணையத்தைப் பயன்படுத்தியிருந்தார். ஷம்மியும் அவரது நண்பர்களும் இணையத்தைப் பயன்படுத்துவதை ஒரு சந்திப்பில் தற்செயலாகத் தெரிந்தகொண்ட நிலையிலேயே சிங்கால் இது எப்படிச் சாத்தியம் எனக் குழம்பினாலும், இந்தியாவுக்கு இணைய வசதி தேவை என்பதையும் அந்நிகழ்ச்சி உணர்த்தியது.

பின்னர், கபூரும் நண்பர்களும் அவரை நேரில் சந்தித்து இது பற்றி வலியுறுத்தியிருக்கின்றனர். அந்தக் காலகட்டத்திலேயே ஷம்மி கபூர், ‘ஜங்லி’ எனும் சொந்த இணையதளத்தையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த ஆண்டு, இந்தியரான சபீர் பாட்டியா அமெரிக்காவில் ஹாட்மெயில் சேவையை அறிமுகப்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். மின்னஞ்சல் சேவையை எல்லோரும் எளிதாக அணுக வழிசெய்த வலைமெயிலான ஹாட்மெயில் வெற்றிக் கதை ஒருவிதத்தில் இந்திய ஸ்டார்ட்-அப் கதைக்கான ஊக்கம் என்றும் சொல்லலாம்.

- சைபர் சிம்மன்,இணையம்சார் தொழில்நுட்ப எழுத்தாளர்தொடர்புக்கு: enarasimhan@gmail.com



Read in source website

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே, இந்தியா ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி கால்வாய்ப் பாசனத்தில் உலகின் முன்னோடி நாடாக இருந்துள்ளது. கால்வாய்ப் பாசனத்தின் முக்கியத்துவம் கருதி சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கி இன்று வரை, இதன் வளா்ச்சிக்கு மத்திய - மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.

இதன் காரணமாக, இந்தியா இன்று அதிக அணைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு அதிகம் உள்ள நாடாகவும் திகழ்கிறது.



Read in source website

டெல்லியில் 1982 இல் இந்தியா நடத்திய ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டி, வரலாற்றில் அழுத்தமாக பதிவானது. இந்தப் போட்டிகளின் நல்லெண்ணச் சின்னமான அப்பு யானை நாடெங்கிலும் புகழ்பெற்றது.

1951இல் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்திய இந்தியா, 31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு வாய்ப்பைப் பெற்றது.

இந்தப் போட்டியைப் புதிய மைதானத்தில் நடத்துவதற்காக ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் டெல்லியில் கட்டப்பட்டது. இப்போட்டிக்காக டெல்லி நகரம் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டது அன்றைக்குப் பேசுபொருளானது. படகுப் போட்டிகள் மட்டும் மும்பை அருகே நடைபெற்றன.

1982 நவம்பர் 19 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற இப்போட்டியில் 33 நாடுகளைச் சேர்ந்த 3,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் 74 ஆசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவும் ஜப்பானும் ஆதிக்கம் செலுத்தின. இரு நாடுகளும் தலா 153 பதக்கங்களை வென்றன. இந்தியா 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் என 57 பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தையே பெற்றது. ஆனால், மிகச் சிறப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியதன் மூலம், ஆசிய நாடுகளின் இதயங்களை இந்தியா வென்றது.

இன்னொரு முக்கிய நிகழ்வாக, இந்தியாவில் முதன்முறையாக இந்த விளையாட்டுப் போட்டி வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப் போட்டிகளுக்கு முன்னதாக ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின்கீழ் நடத்தப்பட்ட முதல் போட்டியாக டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டி அமைந்தது.

- மிது



Read in source website