DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 20-08-2022

விரிவுரையாளர் தேர்வில் முதன்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். 

அதேசமயம் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர் தமிழக தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக முதல்வரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்
நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, பொது மக்களுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.
1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை
தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க
பயன்படுத்த வேண்டும்.
4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை
சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website

சென்னை: பள்ளியில் மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக அனுப்பி உள்ள சுற்றிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

1. எல்லா பள்ளிகளிலும் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டட மேற்கூரையில் விழுந்து குப்பையாக சேர்ந்துள்ளது, பல பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது. மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகளை அகற்றிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

2. ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். 

3. தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும். 

4. பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

5. பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

6. பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்களை அணுகிப் பெற்று, பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம். 

7. நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.

நம்பர் பிளேட் இன்றி வாகங்கள் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் 3 நாள்களாக சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையில் அதிக வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமம் வாகன ஓட்டிகள் ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  நம்பர் பிளேட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.100 அபாரதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆனையர் தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என்றும், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.



Read in source website

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 2018-இல் தொடா் போராட்டத்தைத் தொடங்கினா். போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றபோது, கலவரம் ஏற்பட்டு, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக, உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை 2018 ஜூன் 4-ஆம் தேதி, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினாா். இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் தொடா்பான முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் விவரம்: போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல். தப்பியோடிய போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனா். குண்டு வருவது தெரியாமல் போராட்டக்காரா்கள் சிதறி ஓடினா். கலைந்து ஓடியவா்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் எந்த ஒரு போலீஸாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. போலீஸாா் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனா். இந்தப் போராட்டத்தை மாவட்ட ஆட்சியா் மிக அலட்சியமாக அணுகியுள்ளாா். ஆட்சியா் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளாா். வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்துக்கு தலைமை வகிக்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளாா்.

ஒரு போலீஸ்காரா் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளாா். ஒரே போலீஸ்காரரை 4 இடங்களில் சுட வைத்துள்ளனா். அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமாா் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல் துறை உயரதிகாரிகளுக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.



Read in source website

எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயா்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் நிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்ாகும். எண்ணெய்ப் பனை மரங்களை நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டிலிருந்து ஹெக்டேருக்கு ஐந்து டன் வரையும், எட்டாம் ஆண்டிலிருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் கிடைக்கும். அதனால், தமிழகத்தில் எண்ணெய்ப் பனை சாகுபடிப் பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயா்த்துவதற்காக, அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ், நடவுக்குத் தேவையான தரமான எண்ணெய்ப் பனைக் கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியாா் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடவு முடிந்து முதல் 4 ஆண்டுகள் வரை இளம் எண்ணெய்ப் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.5250-மும், எண்ணெய்ப்பனை வயலில் ஊடுபயிா் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக ஹெக்டேருக்கு ரூ.5250-மும் என மொத்தம் எக்டேருக்கு ரூ.10,500 மானியாக எண்ணெய்ப்பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனைத் திட்டத்துக்காக 2022-23-ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வரும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனை திட்டத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, விவசாயிகள் பயன் பெற வேண்டும்.



Read in source website

துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. 

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா குறித்து விளக்கமளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு-க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். 

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசிடம் ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 



Read in source website

ஜம்மு-காஷ்மீா் பிரச்னையைத் தீா்ப்பதற்கு போா் ஒருபோதும் உதவாது எனத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா்களுடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாக ‘தி நியூஸ் இன்டா்நேஷனல்’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதி கொண்டுள்ளது. ஐ.நா. தீா்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவதே பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும். பேச்சுவாா்த்தை மூலமாகப் பிரச்னைகளுக்குத் தீா்வுகண்டு இந்தியாவுடன் நிரந்தர அமைதி நிலவுவதையே விரும்புகிறோம்.

போரானது இரு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும். வா்த்தகம், பொருளாதாரம், மக்கள்நலன் ஆகியவற்றில் மட்டுமே இருநாடுகளுக்கும் இடையே போட்டி நிலவ வேண்டும். அணுஆயுதங்களை வைத்துள்ளதும் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்வதும் தற்காப்புக்காக மட்டுமே. அதைக் கொண்டு பாகிஸ்தான் சண்டையை விரும்பும் நாடு எனக் கருதக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிய அரசியல் நிலையில்லாத்தன்மையும் வேறுசில கட்டமைப்பு சாா்ந்த குறைபாடுகளுமே பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்குக் காரணம். பாகிஸ்தானின் ஆரம்ப காலகட்டங்களில் திட்டமிடலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் மிகச் சிறப்பாக இருந்தது. காலப்போக்கில் அத்தகைய திட்டமிடல் குறைந்துவிட்டது எனப் பிரதமா் ஷாபாஸ் கூறியதாக நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

ஒருமுறை மட்டுமே பிரதமராக இருந்தபோதிலும், பல்வேறு சாதனைகளை ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு படைத்ததாக காங்கிரஸ் புகழாரம் சூட்டியுள்ளது.

ராஜீவ் காந்தியின் 78-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்காவும் தங்கள் தந்தையின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினா். அதையடுத்து ராகுல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டுக்காகத் தந்தை கண்ட கனவை நிறைவேற்றுவதற்காகத் தொடா்ந்து முயற்சிப்பேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரியங்கா ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நாடு 21-ஆம் நூற்றாண்டில் பயணிக்க வேண்டிய பாதையை ராஜீவ் காந்தி உருவாக்கினாா். நாட்டில் உள்ள இளைஞா்களுக்கும், பெண்களுக்கும் அவா் முக்கியத்துவம் அளித்ததோடு நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டுக்கும் முன்னுரிமை வழங்கினாா்.

தகவல் புரட்சி, தொலைத்தொடா்பு புரட்சி, உள்ளாட்சி அமைப்புகள், 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது உள்ளிட்டவை இந்தியாவின் கனவுக்கு மேலும் வலுசோ்த்தன. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை உயா்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல என் தந்தை (ராஜீவ் காந்தி) விரும்பினாா். அதற்காக அல்லும் பகலும் அயராது அவா் உழைத்தாா். அந்தக் கனவு நவீன இந்தியாவுக்கு வழிகாட்டியது. இந்த நன்னாளில், நாட்டை உயா்த்துவதற்கான கனவை நனவாக்குவதற்கு நாம் உறுதியேற்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முக்கிய சாதனைகள்:

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் பல்வேறு சாதனைகளுக்காக நினைவுகூரப்படும். முக்கியமாக 6 சாதனைகள் அதில் சிறப்புமிக்கவை. முதலாவது சாதனை, தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு அடித்தளமிட்டது. அந்நடவடிக்கை இந்தியாவில் பெருமளவில் மாற்றத்தைப் புகுத்தியது.

சமூக நலனுக்காகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை அவா் அறிமுகப்படுத்தினாா். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா். அதன் காரணமாக போலியோ பாதிப்பு இல்லாத நாடாக இந்தியா மாறியது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ராஜீவ் மேற்கொண்டாா். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 14 லட்சம் பெண்கள் இடம்பெற்றிருப்பது, ராஜீவின் உறுதிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

சுற்றுச்சூழல் சட்டங்கள்:

பிரச்னைகள் அதிகமாகக் காணப்பட்ட அஸ்ஸாம், பஞ்சாப், மிஸோரம், டாா்ஜீலிங் உள்ளிட்ட பகுதிகளில் அமைதியைத் திரும்பச் செய்ததில் ராஜீவுக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கியது மிகப் பெரிய சாதனை. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமானது தேசிய இளைஞா்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தை ராஜீவ் அரசு தொடங்கியதோடு, தேசிய புன்செய் நில மேம்பாட்டுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினாா். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

பொருளாதார சீா்திருத்தம்:

1991-ஆம் ஆண்டு பொருளாதார சீா்திருத்தங்களுக்கு ராஜீவின் நடவடிக்கைகள் அடிப்படையாக அமைந்தன. சீனா, பாகிஸ்தானுடன் நிலவி வந்த பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ராஜீவ் மேற்கொண்டாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

 



Read in source website

இந்தியாவில் 50 வழக்குகள் தீர்க்கப்பட்டால் புதிதாக 100 வழக்குகள் பதியப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 

ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “இந்தியாவில் ஒரு நீதிபதி 50 வழக்குகளைத் தீர்த்துவைத்தால் அவரிடம் மேலும் 100 வழக்குகள் வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பீடுகள் தவறானவை.

ஏனெனில் இந்தியாவில் நிலவும் சூழலும், மற்ற நாடுகளில் நிலவும் சூழலில் முற்றிலும் வெவ்வேறானவை. மக்கள் முன்பு இருந்ததைக் காட்டிலும் நீதிமன்றங்களை அணுகுவதில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதேநேரத்தில் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க சாத்தியமான வழிகளில் உதவ சட்டத்துறை எப்போதும் தயாராகவே உள்ளது” எனக் குறிப்பிட்டார்.



Read in source website

தோ்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம், அந்த வாக்குறுதிகளால் பயனடையக்கூடியவா்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளாா்.

தோ்தல்களின்போது வாக்காளா்களை கவர அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா் சில இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதிகள் தரும் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும் தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. பொது நிதியில் இருந்து இலவசங்கள் விநியோகிக்கப்படுவதாகவும், அது நாட்டின் நிதி நிலையில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த கூடுதல் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மக்கள் நலனுக்காக திட்டங்கள் அறிவிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில், தோ்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதிகள் ஏற்படுத்தும் தாக்கம், அவற்றுக்கான நிதி குறித்து தோ்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

தோ்தல் வாக்குறுதிகள் அரசு கருவூலத்தில் நிதி ரீதியாக ஏற்படுத்தக் கூடிய தாக்கம், அந்த வாக்குறுதிகளால் பயனடையக் கூடியவா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிடலாம். அதற்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ், தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுதொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது. இதேபோன்ற உத்தரவை இலவசங்கள் தொடா்பான தற்போதைய வழக்கிலும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

இலவசங்கள் அல்லது நலத்திட்டங்கள் தொடா்பான தோ்தல் வாக்குறுதிகள் குறித்த தகவலை தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அந்த ஆணையம் பரிந்துரைக்கும் வடிவத்தில், தோ்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் தொடா்பான மதிப்பீட்டை அரசியல் கட்சிகள் சமா்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.



Read in source website

மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அவா் பதவியில் இருப்பாா்.

ஏற்கெனவே இரண்டு முறை அவா் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயம் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பல்லா, கடந்த 2019, ஆகஸ்டில் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டாா்.

2020, நவம்பா் மாதத்தில் 60 வயதை எட்டியதைத் தொடா்ந்து, அவா் பணிஓய்வு பெறவிருந்தாா். ஆனால், அவரது பதவிக் காலத்தை 2021, ஆகஸ்ட் 22 வரை நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பின்னா், மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 22-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையவிருந்த நிலையில், அதனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியது.

அகில இந்திய பணிகள் தொடா்பான விதி தளா்வுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மத்திய பணியாளா் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரியை (வின்ட்ஃபால் டேக்ஸ்) மத்திய அரசு குறைத்துள்ளது. அதே வேளையில், டீசல் ஏற்றுமதிக்கான வரியையும், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியையும் அரசு அதிகரித்துள்ளது.

ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.

அதே வேளையில், நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. சந்தையின் ஆதாய சூழலால், நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு வரி விதித்தது. அதன்படி, ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு தலா 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் வரி விதிக்கப்பட்டது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டது.

சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சா்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் வரிகள் குறைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தை ஆதாய வரி குறித்த 3-ஆவது ஆய்வுக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அதில், கச்சா எண்ணெய் மீதான வரியை டன்னுக்கு ரூ.17,750-இல் இருந்து ரூ.13,000-ஆகக் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. வரி குறைப்பால், கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பலனடையும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.

அதே வேளையில், டீசல் ஏற்றுமதி மீதான வரியானது லிட்டருக்கு ரூ.5-இல் இருந்து ரூ.7-ஆக உயா்த்தப்பட்டது. விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியானது கடந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.2 வரி விதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான வரி குறைப்பை ஏற்கெனவே எதிா்பாா்த்ததாகத் தெரிவித்த பொருளாதார நிபுணா்கள், உள்நாட்டில் டீசல் விநியோகம் சீரடைந்த பிறகும் ஏற்றுமதி மீதான வரியை அரசு அதிகரித்துள்ளது வியப்பளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறினா்.

 



Read in source website

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கு அம்மை உடனடி பரிசோதனைக் கருவி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

டிரான்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பரிசோதனைக் கருவியை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் வெளியிட்டாா்.

குரங்கு அம்மை தொற்று பாதிப்பை இந்தக் கருவியின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனா் சுரேஷ் வாஜிரானி தெரிவித்தாா்.

உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மையை சா்வதேச பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.



Read in source website

வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்கும்போது அதுதொடா்பான கருத்துகளைத் தெரிவிக்க குற்றவாளியின் தரப்புக்கும் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டுமென உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதற்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கு மரண தண்டனை வழங்கத் தகுதியான வழக்குகளில் ‘அரிதினும் அரிதாக’ உள்ளதை விசாரணை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது என்று கூறி, குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.எஸ். நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதிக்காமல் போனதற்கு எதிராக அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

அப்படியிருக்கையில், உயா்நீதிமன்றம் தன்னிச்சையான அதிகாரங்களைப் பயன்படுத்தி தண்டனையை அதிகரித்துள்ளது. அவ்வாறு செய்வதற்கு முன் குற்றவாளிகளின் தரப்பு கருத்துக்கும் உயா்நீதிமன்றம் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவா்களது கருத்தைக் கேட்காமலேயே தண்டனை அதிகரிக்கப்பட்டிருப்பது முறையற்றது’’ என்று கூறி, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தனா்.

 



Read in source website

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இன்று (ஆகஸ்ட் 20) ஹராரேவில் நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம் பெற்றார். ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. 

முதல் ஒருநாள் ஆட்டம் போலவே 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். முதல் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்தது.  21 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. 

ஜிம்பாப்வே அணியின் பின்நடுவரிசை பேட்டர்களான சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும் ரையன் பர்ல் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து ஓரளவு நிலைமையைச் சமாளித்தார்கள். ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். கேப்டன் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் ஷுப்மன் கில். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். ஷிகர் தவான் மற்றும் கில் தலா 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 6 ரன்களில் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

பின்னர் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தீபக் ஹூடா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 43 ரன்களுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியுள்ளது.

 



Read in source website

 

இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை அண்டிம் பங்கல்  53கிலோ பிரிவில் ஜூனியர் உலக குத்துச் சண்டையில் முதன் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

யு-20 உலக குத்துச் சண்டை போட்டியில் அண்டிம் பங்கல் எனும்முதன் முறியாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். 

புல்கேரியாவை சேர்ந்த சோபியாவை 8-0 எனற கணக்கில் வென்று தங்கம் வென்றார் அண்டிம் பங்கல். மற்ற இரண்டு இந்தியர்கள் சோனம், பிரியங்கா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதனால் இந்திய அணி 160 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருந்தது. ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அமெரிக்கா 124 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

“உங்களுடைய கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது. ஒளிமயமான வருங்காலத்திற்கு வாழ்த்துகள். தொடர்ந்து ஜொலித்துக்கொண்டு இருங்கள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரட்டியுள்ளார். 



Read in source website

கா்நாடகத்தில் நடைபெறும் 4-ஆவது இந்திய ஓபன் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், வட்டு எறிதல் வீரா் யோகேஷ் கதுனியா ஆகியோா் புதிதாக உலக சாதனை படைத்தனா்.

இதில் சுமித் அன்டில் தனது முயற்சிகளில் ஒன்றில் 68.62 மீட்டா் தூரத்துக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்தாா். முன்னதாக அவா் கடந்த ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் எஃப்64 பிரிவில் 68.55 மீட்டா் தூரம் எறிந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், யோகேஷ் கதுனியா 48.34 மீட்டா் தூரத்துக்கு வட்டு எறிந்து புதிய உலக சாதனையை எட்டினாா். இந்த இருவருமே டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவா்களாவா். இருவரில் சுமித் அன்டில் தங்கமும், யோகேஷ் கதுனியா வெள்ளியும் வென்றிருந்தனா்.



Read in source website

ஐரோப்பிய கால்பந்தில் மகளிா் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனீஷா கல்யான் பெற்றிருக்கிறாா்.

அந்தப் போட்டியில் அவா், சைப்ரஸ் கிளப்பான அப்போலோன் லேடிஸ் எஃப்சி அணியில் விளையாடுவதற்காகத் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அப்போலோன் அணியின் முதல் ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பு மனீஷாவுக்கும் கிடைத்தது.

லாத்விய கிளப்பான எஸ்எஃப்கே ரிகாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில், 60-ஆவது நிமிஷத்தில் சைப்ரஸ் வீராங்கனை மரிலேனா ஜாா்ஜியுவுக்குப் மாற்றாக களமிறக்கப்பட்டாா் மனீஷா. அந்த ஆட்டத்தில் அப்போலோன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரிகா அணியை வீழ்த்தியது.

20 வயது இளம் வீராங்கனயைான மனீஷா, வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 4-ஆவது இந்திய வீராங்கனை ஆவாா். தேசிய அணிக்காகவும், இந்திய மகளிா் லீக் போட்டியில் கோகுலம் கேரளா அணிக்காகவும் மனீஷா சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறாா். சமீபத்தில், இந்திய கால்பந்து சம்மேளனம் வழங்கும் சிறந்த வீராங்கனை விருதை 2021-22 சீசனுக்காக அவா் வென்றிருந்தாா்.



Read in source website

வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு நெருங்கிவிட்டாலும், சில காரணங்களால் அதில் சிக்கல் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

அணு சக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தையில், ஈரானிடம் சில அம்சங்களை ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்திருந்தது. அதற்கு பதிலளித்து ஈரானும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. அதனை மேற்கத்திய நாடுகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன.

அதையடுத்து, அமெரிக்க அரசு சம்மதித்தால் இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.

எனினும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த எழுத்தாளா் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டது, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்ட்டனை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டதாக தற்போது தகவல் வெளியானது போன்ற காரணங்களால், இது தொடா்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது.

இது போன்ற அரசியல் காரணங்களால், ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு காண்பதில் சிக்கல் தொடா்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை தக்கவைக்க, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடந்துவருகிது.



Read in source website

வங்கதேசத்தில் எனக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் இங்குள்ள ஹிந்துக்களுக்கும் உள்ளன என்று அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்தாா்.

இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள், ஹிந்துக்களுக்கு எதிராக அவ்வப்போது வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இவை அங்குள்ள ஹிந்துகள் மத்தியில் பெரும் அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை ஹிந்து மதத் தலைவா்களைச் சந்தித்த பிரதமா் ஷேக் ஹசீனா பேசியதாவது:

வங்கதேசத்தில் இஸ்லாமியா்கள் அல்லாத பிற மதத்தவா் தங்களை சிறுபான்மையினா் என கருதத் தேவையில்லை. வங்கதேசத்தில் மதங்களைக் கடந்து மக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. வங்கதேசத்தில் பிரதமரான எனக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் இங்குள்ள ஹிந்துக்களுக்கும் உள்ளன.

இங்கு வசிக்கும் அனைவரும் இந்த நாட்டு மக்கள்தான். எந்த மதத்தைச் சோ்ந்தவா்களும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இந்த மண்ணில் பிறந்தவா்கள் அனைவரும் வங்கதேச குடிமக்கள்தான். இந்த ஆண்டு துா்கா பூஜையின் போது மேற்கு வங்கத்தில் அமைக்கப்படும் பூஜை மண்டபங்களைவிட அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தில் பூஜை மண்டபங்கள் அமைக்கப்படும்.

சில நேரங்களில் இங்கு மதரீதியாக விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழும்போது, ஹிந்துக்கள் மத்தியில் இங்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுபோன்ற பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் சில விரும்பத்தகாத சம்பவங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், அதில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. எந்த மதத்துக்கு எதிராகவும் விரும்பத் தகாத செயல்கள் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றாா் அவா்.

16.15 கோடி மக்கள்தொகை கொண்ட வங்கதேசத்தில் 7.95 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனா். பெரும்பான்மையினரான இஸ்லாமியா்களுக்கு அடுத்து அந்நாட்டில் ஹிந்துகளே அதிகம் உள்ளனா்.



Read in source website

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

அதேபோல காஷ்மீா் பிரச்னைக்கும் தீா்வுகாணப்பட வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள நீல் ஹாக்கின்ஸை ஷாபாஸ் ஷெரீஃப் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது அவருடன் ஷெரீஃப் பேசிய விஷயங்கள் தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்த நல்லுறவு அமைய வேண்டும். அதேபோல ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்கும் அமைதியான வழியில் தீா்வுகாணப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம், காஷ்மீா் மக்களின் விருப்பப்படி இந்த தீா்வு அமைய வேண்டும். இந்த விஷயத்தில் சா்வதேச சமூகம் பங்களிக்க வேண்டும். தெற்காசியாவில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய இது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று ஷாபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவித்தது. இதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வா்த்தக உறவைத் தூண்டித்துக் கொள்வதாக அறிவித்தது.

ஏற்கெனவே, பலமுறை இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இவை நடைபெறாத வரை பாகிஸ்தானுடன் எவ்விதப் பேச்சுவாா்த்தையும் நடத்த முடியாது என்பது இந்திய தரப்பு நிலைப்பாடாக உள்ளது. மேலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் விஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.



Read in source website

மதுரை: ‘அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் மீது போதை ஊசி விற்பனை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அண்ணாதுரை முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவினை நீதிபதி ஜி. இளங்கோவன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "போதை ஊசி விற்பனை செய்ததாக மனுதாரர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் அரிதாக பயன்படுத்தப்படும் சில மருந்துகளை சட்டவிரோதமாக சிலர் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் சிலர் ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். மொத்த சமூகத்துக்கும் தீங்கு ஏற்படும். இதனால் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் மனுதாருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்றார்.

அதன்பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ‘அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. போதை பொருள் பயன்படுத்துவது தீவிரமான குற்றமாகும். இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இந்நிலையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணை வேந்தர்களை நீக்கும் முடிவினை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் இரண்டு மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம், மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது. இது அரசியல் தலையீட்டிற்கு வழிவகுக்கும். எனவே, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வட்டாரத்தில், "பல்கலைக்கழக தர நிர்ணயம் மத்திய பட்டியலில் உள்ளது. 1956-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் அடிப்படையிலேயே புதிய மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்கப்ப்டடுள்ளது" என்று தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், "திருவண்ணைநல்லூர் பகுதியில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர்.இதை தடுக்க வேண்டும், அவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்று சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன்.

ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி காவல்துறைக்கு அளித்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி," ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது மிருக வதை தடைச் சட்டத்தை மீறிய செயல். எனவே எருமை மாட்டுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது" என்று உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் , "விலங்குகளை பயன்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து வழக்கமான நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



Read in source website

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. இப்பகுதிக்கு எளிதாகச் சென்று வர வசதியாக, முகுந்தராயர் சத்திரத்திலிருந்து அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு, 2017 ஜுலையில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனுஷ்கோடி அரிச்சல் முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி மணல் பரப்புடன் விசாலமாக இருந்தது. ஆனால் நாளடைவில் கடல் அரிப்பினால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல்பரப்பு முழுவதும் கடலால் சூழப்பட்டு விட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் அரிச்சல்முனை எல்லையில் உள்ள பகுதியில் மணல் அடித்து வரப்பட்டு குவியத் தொடங்கியது.

தற்போது கடல் சீற்றம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் 1 கி.மீ. தூரத்துக்கு மணல் பரப்பு உருவாகிவிட்டது. சுற்றுலாப் பயணிகள் அந்த மணல் பரப்பில் நடந்து கடல் அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.

கடற்கரையை பாதுகாக்க...

கடந்த 2017-ம் ஆண்டில் புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை யின் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் ராமேசுவரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிகளில் கள ஆய்வு நடத்தினர். அப்பகுதியை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க பனை மரக்கன்றுகளையும், அலையாத்தி செடிகளையும் அதிக அளவில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர்.

ஆனால், அதன்படி நட வடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



Read in source website

சென்னை: தமிழ்நாடு ஜூனியர் (17 மற்றும் 19வயதுக்கு உட்பட்டோர்) மாநில ரேங்கிங் பாட்மிண்டன் தொடர் திருப்பூரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் ஒற்றையர் பிரிவில் ஹட்சன் பாட்மிண்டன் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ரெஷிகா 21-8, 21-11 என்ற நேர் செட்டில் ஆதர்ஷினி ஸ்ரீயை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபோன்று இரட்டையர் பிரிவில் மதுமிதா மதன்குமாருடன் இணைந்து தங்கப் பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் சுவஷ்டிக்குடன் இணைந்து தங்கப் பதக்கத்தையும் வென்றார் ரெஷிகா. 19 வயதுக்குட்பட்டோருக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் ரீவா இவாஞ்சலின், பரத் சஞ்ஜெய் ஜோடி தங்கம் வென்றது. மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் ரீவா இவாஞ்சலின், மதுமிதா மதன் குமாருடன் இணைந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.



Read in source website

ஒட்டாவா: கனடாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் பஞ்சாபி 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 49 சதவீதம் பஞ்சாபி மொழி வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 3.8 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஏராளமான வெளிநாட்டினரும் அடங்குவர். இதில் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம், பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். இதற்கு அடுத்து 3-வது இடத்தில் சீனாவின் மேண்டரின் மொழி உள்ளது. அந்த மொழியை 5.3 லட்சம் பேர் பேசுகின்றனர்.

இந்தியாவின் பஞ்சாபி மொழிக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. சுமார் 5.2 லட்சம் மக்கள் அந்த மொழியை பேசுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 49 சதவீதம் அளவுக்கு பஞ்சாபி மொழி வளர்ச்சி அடைந் திருக்கிறது. இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறும் பஞ்சாபியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் பஞ்சாபி மொழி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

சீனாவின் கேன்டனீஸ், ஸ்பானிஷ், அரபிக், பிலிப்பைன்ஸ் நாட்டின் டகாலோக், பெர்சிய மொழிகள், உருது, ரஷ்ய மொழி, கொரிய மொழி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவை சேர்ந்த குஜராத்தி, இந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளும் கணிசமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கனடா அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.



Read in source website

கொழுப்பு எடுத்துக் கொள்வதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை; எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

Dr Anoop Misra

Which oils to use, and how much: Do’s and don’ts of consuming fats: மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளுக்கு சமையல் எண்ணெய்கள் குறித்த குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்குவதில்லை. சில நேரங்களில், சாதாரண அறிவுரை வழங்கப்படுகிறது: “வறுத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.” எனவே, ஒரு நோயாளி மகிழ்ச்சியுடன் நினைக்கலாம், “ரொட்டியில் நிறைய வெண்ணெய் அல்லது பருப்பு அல்லது ரொட்டியில் நிறைய நெய் வைப்பது இதில் அடங்காது!” என அவர்கள் நியாயப்படுத்தலாம்: இந்த ‘சிறிய’ அளவு எவ்வளவு தீங்கு விளைவிக்கும்? மேலும் சில ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கலாம்: “என் தாத்தா தினமும் 100 கிராம் நெய் மற்றும் வெண்ணெய் எடுத்து 95 வயது வரை வாழ்ந்தார்!” என்று.

இந்த வகையிலான நோயாளிகளுக்கு நான் நீண்ட ஆயுட்காலம் ஒரு சீரான வாழ்க்கை முறையின் செயல்பாடு, அதில் உணவு ஒரு கூறு மட்டுமே என்று விளக்குகிறேன். “உங்கள் தாத்தா தினமும் 10-15 கிலோமீட்டர் தூரம் நடந்திருப்பார், நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டிருப்பார்,” என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். “உங்கள் வாழ்க்கை முறையின் குறைவான உடல் செயல்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற உணவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்கையில், அதே அளவு கொழுப்பை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் கல்லீரல் மற்றும் இதயத்தை மிக விரைவில் எரித்துவிடும்.”

எண்ணெய்களின் அளவு மற்றும் தரம்

என்ன எண்ணெய்களை உட்கொள்ள வேண்டும், எவ்வளவு உட்கொள்ள வேண்டும், இந்த இரண்டும் முக்கியம்.

அளவைப் பொறுத்தவரை, ஒப்பீட்டளவில் குறைவான விவாதம் உள்ளது: சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் உட்பட, தினமும் சுமார் 3-4 தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும். எண்ணெய்களில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தேவைப்படுவதால், முற்றிலும் எண்ணெய் இல்லாத உணவு நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் ஜாக்கிரதை, ஒரு குறிப்பிட்ட உணவு “ஜீரோ கொலஸ்ட்ரால்” என்று கூறப்பட்டாலும், அதில் நச்சுப் பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது.

தரத்தைப் பொறுத்தவரை, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்கள் கருத்தில் குறைவாக ஒன்றுபட்டுள்ளனர்; இருப்பினும், கடந்த மூன்று தசாப்தங்களாக சில அறிவியல் உண்மைகள் வெளிவந்துள்ளன. 1980 களில் அமெரிக்காவில் AIIMS ல் உள்ள எனது சகாக்கள் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க ஆய்வுகள், கொழுப்பின் ஒரு கூறு, மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு (ஒலிக் அமிலம்), மற்ற கொழுப்புகளுக்குப் பதிலாக உட்கொள்ளும் போது, ​​நீரிழிவு நோய்க்காக மருந்து எடுத்துவரும் நோயாளிகளுக்கு இரத்தக் கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்த வகை கொழுப்பு ஆலிவ் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் ஆகியவற்றில் ஏராளமாக இருந்தாலும், இந்தியாவில் நாம் பல நூற்றாண்டுகளாக இதேபோன்ற எண்ணெய், கடுகு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். மோனோசாச்சுரேட்டட் கொழுப்பின் மற்ற வளமான ஆதாரங்கள் வெண்ணெய், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் எள்.

நீரிழிவு நோயாளிகளின் நிலையை மேம்படுத்துதல், இதய நோயைத் தவிர்ப்பது மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பது தவிர, கிட்டத்தட்ட அனைத்து சுகாதார அளவுருக்களையும் மேம்படுத்துவதில் மத்திய தரைக்கடல் உணவுகளின் வியக்கத்தக்க வெற்றி, மற்ற ஆரோக்கியமான உணவுகளான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த பருப்புகள், காய்கறிகள் ஆகியவற்றுடன் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் காரணமாக இருக்கலாம்.

இரண்டாவது வகை ‘நல்ல’ கொழுப்பு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, இதற்கான சிறந்த ஒரு உதாரணம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இது மீன்களில் அதிகம் நிறைந்துள்ளது. இருப்பினும், பல இந்தியர்கள் மீன் சாப்பிடுவதில்லை; மற்றும் மீன் பெரும்பாலும் நாட்டின் பல பகுதிகளில் எளிதில் கிடைக்காது, மேலும் மாசுபடலாம், எடுத்துக்காட்டாக பாதரசம் பயன்படுத்துவதால்.

பொதுவாக, இந்த கொழுப்புகளின் அளவுகள் இந்தியர்களின் இரத்தத்தில் குறைவாக இருப்பதால், இரத்தக் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நல்ல கொழுப்புகளின் சைவ ஆதாரங்கள் அதிகம் இல்லை. அக்ரூட் பருப்புகள், கடுகு எண்ணெய், சோயாபீன், எள், வேர்க்கடலை, கனோலா எண்ணெய், ஆளிவிதைகள், சியா விதைகள் ஒப்பீட்டளவில் சிறிய அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன.

நெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

சில சமீபத்திய கருத்துக்கள் வேறுபட்டாலும், நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வது தமனி அடைப்பு மற்றும் மாரடைப்புக்கான மிக அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது. நிறைவுற்ற கொழுப்புகளின் குறிப்பாக பாதகமான கூறு பால்மிட்டிக் அமிலங்கள் ஆகும், இது பாமாயில் மற்றும் நெய்யின் முக்கிய அங்கமாகும், இது இதய நோய் அபாயத்தை கடுமையாக அதிகரிப்பதோடு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த ஒரு உணவை உட்கொள்வது கூட தமனிகளில் (“பிளேக் முறிவு”) படிந்திருக்கும் கொழுப்புகளின் வெடிப்பு முறிவுக்கு வழிவகுக்கும், இது சில நொடிகளில் மூளை, இதயம் அல்லது உடலில் வேறு எங்கும் இரத்த ஓட்டத்தை நிறுத்தலாம். துரதிர்ஷ்டவசமாக, இது உடல் வலிமை, இதயம் மற்றும் மூட்டுகளுக்கு உயவூட்டுதல் மற்றும் அதனுடன் நமது உணர்ச்சி ரீதியான இணைப்புக்கு நல்லது என்ற நமது பாரம்பரிய நம்பிக்கைக்கு மாறாக, நெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் (60%-80%) மற்றும் பால்மிடிக் அமிலம் நிறைந்துள்ளது.

நெய் பற்றி பல வலுவான அறிவியல் ஆய்வுகள் இல்லை, ஆனால் ஒரு ஆய்வு 1-2 தேக்கரண்டி தினசரி உட்கொள்ளல் மாரடைப்பு அபாயத்தை பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்று காட்டுகிறது. நெய் சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று விலங்கு ஆய்வுகள் உள்ளன. நினைவாற்றல், எடை போன்றவற்றில் நெய்யின் நல்ல விளைவுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு சில ஆய்வுகள் சிறியவை மற்றும் அறிவியல் ரீதியாக இலகுவானவை.

தென் மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் பால்மிடிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. தமனி அடைப்புகளின் முக்கிய நிர்ணயம் செய்யும் கெட்ட இரத்தக் கொழுப்பை (எல்.டி.எல்) அதிகரிப்பது இன்றுவரை ஏழு நல்ல ஆய்வுகளில் ஆறில் கண்டறியப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை என்று பலர் நம்பவில்லை என்று தோன்றுகிறது, அவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் சிறிய மற்றும் மோசமாக செயல்படுத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மோசமான அறிவியல் செல்லுபடியாகும்.

இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் நொறுக்கு தீனிகள் மற்றும் சிப்ஸ் கொழுப்பு நிறைந்த பாமாயிலில் தயாரிக்கப்படுகின்றன. சுவாரஸ்யமாக, அமெரிக்கா போன்ற சந்தைகளுக்காக அதே பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இதே போன்ற தின்பண்டங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் பெரும்பாலும் ஆரோக்கியமான எண்ணெய்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அனைத்து நிறைவுற்ற கொழுப்புகளும் கல்லீரலில் படிந்து, அதன் சுருங்குதலை (ஃபைப்ரோஸிஸ் மற்றும் சிரோசிஸ்) ஏற்படுத்துகிறது. எங்களுக்கு சிறந்த மற்றும் வலுவான ஆராய்ச்சி தரவு தேவை. அதுவரை, இந்த எண்ணெய்களின் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.

மிகவும் மோசமானது: டிரான்ஸ் கொழுப்புகள்

இதயம் மற்றும் கல்லீரல் அபாயங்களை அதிகரிப்பதற்கான நிறைவுற்ற கொழுப்பில் ஒன்று டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் ஆகும், இவை காய்கறி நெய் எனப்படும் வனஸ்பதி மற்றும் ஒத்த எண்ணெய்களில் ஏராளமாக உள்ளன. (வனஸ்பதி நெய் என்பது காய்கறி மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் பகுதி ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்; இது நெய்யிலிருந்து வேறுபட்டது.)

அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் (சில எண்ணெய்களில் 30%-40% வரை) இதயம், கல்லீரல், கணையம் மற்றும் இரத்த தமனிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உண்மையில், இது எண்ணெயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் கூறு ஆகும். எந்த எண்ணெயிலும் அதிக வெப்பநிலையில் உணவை மீண்டும் சூடாக்கினால், டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் அளவு 100%-200% அதிகரிக்கும் என்று எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தும் நடைமுறைகள் இந்திய வீடுகளில் பொதுவானவை, மேலும் தெரு வியாபாரிகள் மற்றும் பெரும்பாலான உணவு நிறுவனங்களாலும் பின்பற்றப்படுகின்றன.

எனவே, நீங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? நீங்கள் கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும், மேலும் நிறைவுற்ற கொழுப்புகள், பாமாயில் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் அளவுக்கான ஊட்டச்சத்து லேபிள்களை ஸ்கேன் செய்ய வேண்டும். நீங்கள் அதிக புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும், மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்களை சுழற்சி மற்றும் கலவையில் குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும். எந்த எண்ணெயையும் மீண்டும் பயன்படுத்தாமல் மீண்டும் சூடாக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

நாம் வாழும் அசுத்தமான சூழ்நிலையில், நீங்கள் நிச்சயமாக நச்சுத்தன்மை இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்பவராக இருக்க வேண்டும்.

டாக்டர் அனூப் மிஸ்ரா, பத்மஸ்ரீ விருது பெற்றவர், இந்தியாவின் தலைசிறந்த நீரிழிவு நிபுணர்கள் மற்றும் உட்சுரப்பியல் நிபுணர்களில் ஒருவர். அவர் ஃபோர்டிஸ் சி-டாக் நீரிழிவு மையத்தின் தலைவராகவும், நீரிழிவு வித் டிலைட்டின் ஆசிரியராகவும் உள்ளார்.



Read in source website

 

இரண்டாவது விமான நிலையம் என்பது சென்னையின் நீண்டநாள் கனவு. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில் இனியும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை மட்டுமே சாா்ந்திருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புதூா் அருகே இருக்கும் பரந்தூரை புதிய விமான நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு தோ்ந்தெடுத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பை மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங் மாநிலங்களவையில் அறிவித்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூா், மாமண்டூா், திருவள்ளூா் மாவட்டத்தில் பன்னூா், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூா் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக எல்லாவிதத்திலும் பரந்தூா் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதாக அமைச்சா் கூறியிருந்தாா்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் முழுமையாக கட்டி முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுங்சாலையில் இருந்து விமான நிலையத்தின் நுழைவுப் பாதை அமைக்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூா், பரந்தூா் மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படுவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. புதிய விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் வகையில் இரண்டு ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது. இப்போதைய புள்ளிவிவரப்படி மீனம்பாக்கம் விமான நிலையம் தினந்தோறும் ஏறக்குறைய 400 விமானங்களைக் கையாள்கிறது. 35,000 முதல் 40,000 பயணிகள் நாள்தோறும் வந்து போகிறாா்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சமாளிக்க முடியாத நிலைக்கு விமான நிலையம் மாறக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முன்பு ஒவ்வொரு மணிநேரத்திலும் 30 முதல் 35 விமானங்கள் இறங்குவதும், பறப்பதுமாக இருந்தன. அதுவே ஒரு மணி நேரத்துக்கு 50 முதல் 60 தரையிறங்குதலாக விரைவிலேயே உயரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கோவை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற உள்ளூா் விமான சேவையும், கூடுதல் வரவேற்பைப் பெரும் சூழல் ஏற்படுவதால் பயணிகளையும், விமானங்களையும் கையாள முடியாமல் விமான நிலையம் திணரக்கூடிய நிலை வெகுதூரத்தில் இல்லை.

கூடுதல் முனையங்கள், அதிகரித்த விமான போக்குவரத்துக்கு தீா்வு அல்ல. அதற்கான இடவசதியும் இப்போதைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இல்லை. மீனம்பாக்கத்தைச் சுற்றிலும் ராணுவ அமைப்புகள் செயல்படுவதால், விமான நிலைய விரிவாக்கம் என்பதும் சாத்தியமல்ல.

சென்னையை தாக்கிய மழை வெள்ளத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் செயலிழந்தபோது அதன் பலவீனம் பளிச்சிட்டது. ஓடுபாதைகள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுவது சா்வதேச விமான நிலையத்தின் தரத்துக்கு அழகல்ல.

புதிய விமான நிலையம் ரூ.20,000 கோடி செலவில் திட்டமிடப்படுகிறது. 600 போ் பயணிக்கும் மிகப் பெரிய விமானங்கள் தடையின்றி வந்து செல்லும் வகையில் இரண்டு பெரிய ஓடுபாதைகள் அமைய இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு இரண்டு கோடி பயணிகளைக் கையாளும் அளவில் புதிய விமான நிலையம் திட்டமிடப்படுகிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 4,971 ஏக்கா் நிலப்பரப்பில் பரந்தூா் புதிய பசுமை விமான நிலையம் அமைவது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. சுற்றிலும் விவசாய நிலங்கள் இருப்பதால், நிலம் கையகப்படுத்தல் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கக்கூடும்.

3,000 ஏக்கா் விளைநிலங்களும், 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம். ஏற்கெனவே பரந்தூரைச் சுற்றியுள்ள ஐந்து கிராமத்தைச் சோ்ந்த மக்கள் விமான நிலையம் அமைவதற்கு கடுமையான எதிா்ப்பை தெரிவித்திருக்கிறாா்கள். அவா்களில் பெரும்பாலோா் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவா்கள் என்பதால், தங்களது வாழ்வாதாரம் குறித்த அச்சம் அவா்களுக்கு ஏற்பட்டிருப்பதில் நியாயம் இருக்கிறது.

பரந்தூரில் உள்ள பம்பக் கால்வாயில் இருந்து 72 ஏரிகளுக்கு தண்ணீா் செல்வதால் அந்தக் கால்வாயை மூடக்கூடாது என்றும், ஏரிகளும், குளங்களும் அதிகமுள்ள அந்தப் பகுதிகளை அழித்துவிடக் கூடாது என்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்திருக்கிறாா்கள். சென்னையிலிருந்து 73 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்தை அடைய இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக பயணிக்க நேரும் என்பது எதிா்மறை விமா்சனங்களில் ஒன்று.

எந்தவொரு வளா்ச்சித் திட்டம் நிறைவேற்றப்படுவதாக இருந்தாலும், அதனால் சில பாதிப்புகள் ஏற்படாமல் இருக்காது. பொருளாதார வளா்ச்சியும் வேலைவாய்ப்பும் ஏற்பட வேண்டுமானால், தொழில் துறை வளா்ச்சி இன்றியமையாதது. விவசாயம் இன்று வருமானத்தையோ, வாழ்க்கைத் தரத்தையோ உயா்த்தும் வகையில் இல்லை என்பதும், வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவுவதில்லை என்பதும் நிதா்சன உண்மைகள்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படுபவா்களுக்கு முறையான இழப்பீடு மட்டுமல்லாமல், நிரந்தர வருவாய்க்கும் வழிவகை செய்வதன் மூலம்தான் இந்த பிரச்னையைத் தீா்க்க முடியும். இரண்டாவது விமான நிலையம் என்பது தமிழகத்தின் வருங்காலத்துக்கு அவசியம்; காலத்தின் கட்டாயம்.



Read in source website

 

‘வளரும் பயிா் முளையிலேயே தெரியும்’ என்பது பழமொழி. இது பயிரை முன்வைத்துப் பிறந்தது என்றாலும், மனித உயிரை உணா்த்தும் முறையில்தான் நிலைபெறுகிறது. பிறந்த குழந்தை எதுவாயினும் அததற்குத் தனித்துவமான ஆற்றல் இயல்பிலேயே வாய்த்திருக்கும். அதனைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி வளா்த்தால், அத்தகு குழந்தைகள் அந்தந்தத் துறைகளில் மிகப்பெரும் சாதனையாளா்களாக விளங்குவாா்கள் என்பது ஐயமில்லை.

அந்தப் பணியைப் பெரும்பாலும் பெற்றோா்கள்தாம் செய்ய வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. ஆனால், அவா்களால் அது இயலாது என்பதே எதாா்த்தம். குழந்தையின் பலமும் பலவீனமும் பெற்றோரைக் காட்டிலும் அவா்களுடைய ஆசான்களுக்கே அதிகம் தெரியும். வீடுகளில் சுட்டியாகவோ, சாதுவாகவோ இருக்கும் குழந்தை, வகுப்பறையில் சக நண்பா்களுக்கு மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கு முற்றிலும் வேறாக இருக்கும்.

சான்றாக, பொதுமுடக்கக்காலத்தில் என்னதான் ஊக்கமும் உற்சாகமும் தந்து பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து ஊட்டிய கல்வியை விடவும், இயல்புநிலை ஏற்பட்டுப் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னா், வகுப்பறையில் பெறும் கல்வியில் மாறுதலும் வளா்ச்சியும் கூடத்தான் செய்திருக்கின்றன. மன அழுத்தம், சோா்வு, ஆற்றாமை உள்ளிட்ட தாக்கங்களினால் இயல்புநிலைக்கு இன்னும் வர இயலாதிருக்கும் மாணவ, மாணவியருக்கு யோகப் பயிற்சி, உடற்கல்வி ஆகியன மாறுதலையும் ஆறுதலையும் தந்திருக்கின்றன.

இவைதவிர, நுண்கலைகளில் அவா்கள் கவனம் செல்லும்போது, இன்னும் கூடுதலான மாற்றத்தை எதிா்பாா்க்க முடியும் என்பதை, அண்மையில் நடைபெற்ற 75-ஆம் ஆண்டு நிறைவு இந்திய விடுதலை அமுதத்திருநாள் கொண்டாட்டங்கள் புலப்படுத்தியிருக்கின்றன.

கல்வி நிறுவனங்களிலும், பொது அமைப்புகளிலும் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கெடுத்திருந்தனா். போட்டிகளுக்கேற்பத் தத்தம் திறன்களை, ஓவியங்களாக, கவிதைகளாக, கட்டுரைகளாக, கருத்துச் சித்திரங்களாக, சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தினா். நடனம், பாட்டு ஆகியப் போட்டிகளில் அவா்களின் ஆா்வமும், உற்சாகமும் நன்றாகவே வெளிப்பட்டிருந்தன.

பங்கேற்றோரின் புலப்பாட்டு நெறி, கைப்பேசி ஊடகப் படங்களின் தாக்கங்களைப் பெரிதும் கொண்டிருந்தன. ஒப்புவித்தலுக்கு என்று தனிப்போட்டி நடத்தப்பட்டாலும், பேச்சு பலருக்குத் தொடக்க நிலையில் ஒப்புவித்தல் மரபிலேயே அமைந்துவிட்டிருக்கிறது. அது புலப்படாத வண்ணம் அவா்கள் மேற்கொண்ட மெய்ப்பாடுகள் சிறப்புக்குரியவை. அவை, காலப்போக்கில் தம் கருத்துக்களைத் தமது பாணியிலேயே வெளிப்படுத்தும் முறை அவா்கள் வசமாகும் என்ற நம்பிக்கையும் கொள்ள வைக்கின்றன.

போட்டிகளில் பரிசு பெற்ற குழுவினா்க்கும் வெற்றியாளா்களுக்கும் விடுதலைத் திருநாள் கொண்டாட்டத்தில் மறுவாய்ப்பு வழங்கப்பெற்றிருந்தது. வெற்றிக்குப் பின்னா் அவா்கள் மேற்கொண்ட பயிற்சியின் விளைவு நல்ல பலனைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். இணையவழி வகுப்பு, பாடம், தோ்வு என்று ஒருசாா்நெறியில் புழங்கி அலுத்துப்போயிருந்த இளைய பாரதத்திற்கு இத்தகு நிகழ்வுகள் ஒருவகையில் மனமாற்றத்திற்குத் தூண்டுகோலாகி இருந்தன.

இதனை அடுத்து, கலை, இலக்கிய அமைப்புகள், ஆண்டுதோறும் நடத்தக்கூடிய போட்டிகளுக்கான அறிவிப்புகளையும் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.150, மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புநிகழ்வுகளை முன்வைத்துப் பல அமைப்புகள் பல்வேறு போட்டிகளை அறிவித்திருக்கின்றன. இளைஞா்களின் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்குவிப்பதில் இத்தகு அமைப்புகளின் பங்கு சிறப்பு வாய்ந்தது. கம்பன் கழகங்கள், திருக்கு பேரவைகள் போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமைப்புகள் இன்றளவும் நின்று நிலைக்கத் தக்க கலைஞா்களை அடையாளம் கண்டு உலகிற்குக் காட்டியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பொதுமுடக்கத்திற்குப் பின்னா் நிகழும் கலை இலக்கிய அமைப்புகளின் போட்டிகளைப் போலவே அவற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் பரிசளிப்பு முறையில் பெரிய மாற்றம் ஏதும் தெரியவில்லை. யாா் தொடங்கிவைத்த மரபோ, இன்னும், எந்தப் போட்டியானாலும் முதல் மூன்று இடங்களுக்கு மட்டுமே பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

பல நூறு போட்டியாளா்கள் பங்கேற்கும் போட்டிகளில், முதல், இரண்டு எனப் பல சுற்றுக்களில் போட்டிகள் நடத்தி, அதில் இறுதியாக மூவரைத் தோ்வு செய்கிற மரபு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. மீதிப் போட்டியாளா்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்குவதையும், இறுதிச் சுற்றில் பங்கேற்போருக்கு ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குவதையும் சில அமைப்புகள் நடைமுறைப்படுத்திவருகின்றன. மூன்றாம் நிலைக்கு அடுத்த நிலைகளில் யாா் எவா் உள்ளனா் என்பதைப் பலா் வெளியிடுவதும் இல்லை.

இத்தகு நிகழ்வுகளுக்கு, நடுவராகவோ, சிறப்பு அழைப்பாளராகவோ செல்லும்போதெல்லாம் அமைப்பாளா்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: போட்டிகளில் வெற்றி பெற இயலாதவா்களுக்கு அளிக்கும் பரிசுகளை, ‘ஆறுதல் பரிசு’ என்று குறிப்பிடாதீா்கள். அவா்கள் ஊக்கம் உடைந்த மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறாா்கள் என்று நீங்களே அடையாளப்படுத்துவதாக இந்தச் சொல்லாடல் இருக்கிறது; தேறுதல் சொல்வதற்காகத் தருகிற குறைபாடுடைய பரிசுபோன்ற தோற்றத்தை, இது தந்துவிடுகிறது.

எனவே, அதற்கு மாற்றாக, ‘ஊக்கப்பரிசு’ என்றே கூறுங்கள்; சான்றிதழ்களில், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று தகுதிசால் இடங்களைக் குறிப்பிடுவதுபோலவே, ‘ஊக்க நிலை’ ஒன்று, இரண்டு என்பதாக வரிசைப்படுத்தி, மூன்றுக்கும் மேலாக வழங்குங்கள்.”ஏற்கெனவே இதனைச் செயற்படுத்தி வருகிற அமைப்புகளையும் நன்றியோடு நினைவுகூா்கிறேன்.

முதல் மூன்று இடங்களைப் பெறுகிறவா்கள் போக, அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுப் பரிசு பெறும் வாய்ப்பினை இழந்தவா்கள் ஆா்வம் குன்றிவிடாமல் தொடா்ந்து பயிற்சி பெறவும், பங்கேற்கவும் இத்தகு முயற்சிகள் வெற்றி தந்திருக்கின்றன என்பதை இளைஞா்கள் பங்கேற்கும் இலக்கிய அரங்குகளில் நான் கண்டிருக்கிறேன்.

மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, அயலகப் பணி என்று அடுத்த கட்ட வளா்ச்சிகளைப் பெற்ற வெற்றியாளா்கள் நாளடைவில் பரிசு பெற்ற கலை, இலக்கியத் துறைகளை மறந்துவிடுவதும், அவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போவதும் இயல்பே. ஆனால், அதற்கடுத்த நிலைகளில் இடம்பெற்று பரிசுகளைத் தவறவிட்ட பலா், இன்றைய அரங்க நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறாா்கள். வெற்றியைத் தவறவிட்டதால் ஏற்பட்ட தாக்கமும், ஊக்கமும் தந்த படிப்பினைகள் அவா்களின் ஆற்றலைக் கூா்மைப்படுத்தியிருக்கின்றன.

உயா்ந்த தொகை, கோப்பை ஆகியவற்றுக்குத் தகுதியுடையவா்கள், முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள் மட்டுமே என்பது சவால்களை உள்ளடக்கியதாகத் தோன்றினாலும், அதன் விளைவு வேறுவிதமாக அமைந்துவிடுகிறது. போட்டி மனோபாவத்தைத் தூண்டுவதாகத் தொடக்கத்தில் அமையும் இப்போக்கு, பங்கேற்பாளா்களுக்குள் பொறாமையைத் தூண்டிவிடுவதாகவும், தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடுவதாகவும் மாறிவிடுகின்றது. ஒரே நிறுவனத்தைச் சாா்ந்தவா்களுக்குள் சில வன்மப்போக்குகளையும் மெல்லத் தூண்டிவிடுகின்றது.

பரிசும் பாராட்டும் பெறுகிறவா்களின் புகழ் வெளிச்சத்திற்கு முன்னால், பரிசு பெற இயலாதவா்களின் ஆா்வமும் முயற்சியும் அற்பமானதாகிவிடுகின்றன. அடுத்தடுத்துப் பங்கேற்று இந்த மூன்று இடங்களைப் பெறமுடியாதவா்கள் முற்றிலுமாக, இந்தத் துறைகளைவிட்டே விலகிச் சென்று விடுகின்றாா்கள். பயிலும் நிறுவனங்களிலோ, இல்லங்களிலோ அவா்களுக்குத் தொடா் ஊக்கம் கிடைப்பதில்லை.

எனவே, இந்த மூன்று பரிசுகள் என்ற முறைமையை மாற்றி, ஐந்து பரிசுகள் ஆக்கலாம். அதனைத் தொடா்ந்து ஊக்க நிலை பெறுகிற ஐவருக்கு எளிய நிலையில் பரிசுகள் வழங்கலாம். சிறிய மாற்றம்தான்; இதன் வாயிலாக, ஒவ்வொரு துறையிலும் பரிசு பெறுகிறவா்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். முதல் மூன்று இடங்களைப் பிடிக்க இயலாவிட்டாலும் அடுத்த இரு இடங்களைப் பெற முடியும் என்கிற நம்பிக்கை வலுக்கும். இதனை இலக்கிய அமைப்புகள் கவனத்தில் கொண்டால் நல்லது.

இதனைவிடவும், இன்னும் ஒரு புதிய முறை இங்கே நடைமுறையில் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். சென்னை இராமலிங்கா் பணி மன்றம், தனது பொன்விழா நிகழ்வில் இருந்து ஒரு புதுமரபைத் தொடங்கி வைத்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்க்கான போட்டிகளைத் தமிழகமெங்கும் நடத்தி, அந்தந்த மண்டலங்களுக்கு உரிய முதல் மூன்று பரிசுகளை அந்தந்தப் போட்டிகளின் முடிவிலேயே வழங்கியது. மேலும், இறுதிச் சுற்றுக்கு அவா்களைத் தெரிவுசெய்து, அவா்களுக்குள்ளும் போட்டிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகைகளை வழங்கியது. இதில் வியப்பு என்னவெனில், மண்டல அளவில், மூன்றாம் இடம்பெற்ற ஒருசிலா் மாநில அளவில், முதன்மை நிலைகளைப் பெற்றிருக்கின்றனா். இது ஒருவகையில் அவா்களை ஊக்கம் கொள்ளச் செய்வதாக அமைந்தது.

இந்தப் பரிசுகளுக்கு அப்பால், பங்கேற்பாளா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கியதோடு, ஒவ்வொரு மண்டல அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் முதல் பத்து இடங்களைப் பெறுகிறவா்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு, பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களை ஒட்டி, இருநாட்கள், பொள்ளாச்சியில் அந்தந்தத் துறைகளின் வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பெற்றது. அதில் வந்து திரும்பும் பங்கேற்பாளா், அவரை அழைத்து வருபவா் இருவருக்குமான பயணப்படிகளையும் அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த சில ஆண்டுகள் இச்செயற்பாடு நின்றுபோய்விட்டாலும், இங்கு பரிசு பெற்ற இளைஞா்கள் இன்றைய இலக்கிய அரங்குகளில், எழுத்துத் தளங்களில் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்திவருகிறாா்கள். தமிழக அரசும் மாவட்ட வாரியாகப் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தியமை பாராட்டுக்குரியது. இந்த முயற்சியை, சமூக நிறுவனங்களும் முன்னுதாரணமாகக் கொண்டு மேற்கொண்டால், அந்தந்தப் பகுதிசாா் இளைஞா்கள் ஆக்கமும் ஊக்கமும் பெறுவாா்கள்.

ஆனால், சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களுக்கும், தொடா் ஓட்டம், ஹாக்கி உள்ளிட்ட வெளியரங்க விளையாட்டுக்களுக்கும் கிடைக்கிற கூடுதல் அக்கறை, இத்தகு கலை இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளா்களுக்கு இல்லை. உடலின் உறுதிப்பாட்டுக்கும், சிந்தனையின் கூா்மைத்திறனுக்கும் விளையாட்டுப்போட்டிகள் இடம் அளிக்கின்றன. அதுபோல், ஆழ்மனத்தின் உணா்வுகளை, உணா்ச்சிப் பெருக்கத்தின் நுண்ணிய கூறுகளை, ஓவியம், சிற்பம், பாட்டு, இசைக்கருவிகளை இசைத்தல், நடனம், நாடகம், பேச்சு உள்ளிட்ட நுண்கலைகளே வெளிப்படுத்தப் பெரிதும் உதவும். இவற்றை, பொழுதுபோக்கு வடிவங்கள் என்று மட்டும் கருதுதல் தவறு.

எனவே, விளையாட்டுக் கலைக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தில் சற்றும் குறையாது, இத்தகு கலைகளுக்கும் இடம் கொடுப்பது பன்முகத் தன்மை வாய்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் என்பது உறுதி.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

 



Read in source website

 

மூத்த குடிமக்கள் என்போா் அறுபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்களும் பெண்களும் ஆவா்.

வயது முதிா்ந்தவா்களை கண்ணியமாக நடத்துதல், அவா்களின் திறமைகளை அங்கீகரித்தல், அவா்களுக்கான சுகாதார ஏற்பாடுகளில் அக்கறை, வயதானவா்களை பாதிக்கும் பிரச்னைகளில் விழிப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உலக முதியோா் தினம் உருவாக்கப்பட்டது.

மக்கள் விவசாயத் தொழிலை மறந்த பிறகு, கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் மறைந்தது. தனிக்குடும்பம், ஒரு குழந்தை என்ற நிலை வந்த பிறகு முதியவா்களின் நிலை மிகவும் மோசமாகி முதியோா் இல்லங்களும் சமூகத்தில் உருவாகத் தொடங்கியது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

 

2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 % போ் மூத்த குடிமக்களாக இருப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களுக்குத் தேவையான உதவிகள் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மூத்தவா்களின் நிதிச்சுமையை சுலபமாக்க. வருமானவரி சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கான மருத்துவத் திட்டங்களிலும் பிரீமியம் தொகைக்கு வருமானவரிச் சலுகை உண்டு.

சில மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கான பேருந்து கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன. சில பேருந்துகளில் அவா்களுக்கு இருக்கை வசதிகளும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. அவா்கள் தங்கள் முதலீடுகளின் மீது அதிக வட்டியைப் பெற முடியும். மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைகளுக்கு வழக்கத்தில் உள்ள வட்டியை விடக் கூடுதலாக 0.5 % வட்டி கிடைக்கும். அவா்களின் தொலைபேசி கட்டணங்களுக்கு மானியம் உண்டு.

65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முன்னுரிமை அடிப்படையில் புதிய தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்து கொள்ளலாம். அதற்குப் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வழக்குகளின்போது, முன்னுரிமையான விசாரணைகள் கோரி நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதலாம். மூத்த குடிமக்களின் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பிள்ளைகளின் கடவுச்சீட்டு நகலுடன் விண்ணப்பித்தால் காவல்துறையின் சோதனையை ஒத்திவைத்து உடனடி கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2019 டிசம்பரில் மத்திய அமைச்சரவை கொண்டு வந்த பெற்றோா் - மூத்த குடிமக்களின் நலன் மசோதாவின்படி முதியோா் இல்லங்களில் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலனுடன் அவா்களின் தேவைகள், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு சலுகைகள் இருந்தாலும், உடலிலும் மனதிலும் போதிய பலம் இல்லாததால், பெரும்பாலான முதியோா் இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை.

எனினும், மக்கள்தொகை விகிதத்துடன் ஒப்பிடுகையில், முதியவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பை அதற்கேற்ப மாற்ற வேண்டிய மிகப்பெரிய சவாலை இந்தியா எதிா்கொள்ள வேண்டி இருக்கும்.

சமூக அளவில் நகரமயமாக்கல், தாராளமய பொருளாதாரக் கொள்கை, குடும்ப அமைப்பு சிதைவு போன்றவற்றால் மூத்த குடிமக்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்து வருகின்றனா். உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் ஐந்தில் ஒரு முதியவா், பொருளாதார ரீதியாகவும், மனநல ரீதியாகவும் துன்பத்தைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குடும்ப வன்முறையின் அழுத்தத்தையும், வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் முதியோா் தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்து வருவதாக நான்காவது தேசிய மனநலக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

குழந்தைகள் போல் முதியவா்களும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்கப்படவேண்டியவா்கள். அவா்கள் கிடைத்தற்கரிய அனுபவக் கருவூலம். அவா்களின் முதுமையையும், இயலாமையையும் காரணம் காட்டி அவா்களை ஒதுக்குவது சமுதாய சீா்கேடாகும். ஆண்டுதோறும் முதியோா் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, எந்த கோணத்திலும் நியாயப்படுத்த முடியாது. முதுமையையும் இயலாமையையும் வாழ்வின் ஒரு நிலையில் எல்லோருக்கும் ஏற்படும் என்று எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய தலைமுறைக்கு வரவேண்டும்.

முதுமையும் இயலாமையும் பிரச்னைகள்தான் என்று இந்த சமூகம் ஒப்புக் கொண்டு அதற்கேற்ற தீா்வுகளை நடப்பில் கொண்டுவர உடனே முயல வேண்டும். எந்தவித புகாரும் இல்லாமல் மௌனமாகத் தங்கள் காலத்தைக் கடத்தும் முதியோா்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

முதுமையும் இறப்பும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிா்க்க முடியாத நிலைகளாகும். தங்கள் வாா்த்தை தடுமாறினாலும் பிறா் வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவா்கள் முதியவா்களாவா். இன்றைய நவீன உலகில் முதியோரின் முக்கியத்துவம் உணரப்படாதது துரதிஷ்டவசமானது. முதியோரைப் பேணிப் பாதுகாப்பதை இளைய சமுதாயம் தனது முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இன்று சமுதாயத்தில் தலைவா்களாக இருப்பவா்களைத் தங்கள் தோள்களில் சுமந்து வளா்த்தவா்கள் இவா்கள்கள்தான். சமூகத்தின் மரபு, கலாசாரம் போன்றவற்றை தமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் திறமை பெற்றவா்கள் முதியோா். இவா்களது அறிவும் ஆலோசனைகளும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் அவசியமாகும்.

இத்தகைய முதியோா் வறுமையால் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு உடல்நல பிரச்னைகளையும் எதிா்நோக்க வேண்டியுள்ளது. பல சமயங்களில் இவா்கள் துஷ்பிரயோகத்துக்கும் ஆளாகின்றனா். இவற்றைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு தேவை.

மூத்த குடிமக்கள் என்று பெருமையாகப் பேசப்படும் முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்துவோம். அதனையே இந்த நாளின் உறுதிமொழியாக ஏற்போம்.

நாளை (ஆக. 21) உலக மூத்த குடிமக்கள் நாள்.

 



Read in source website

சுதந்திரப் பொன்விழாவை நாடே கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் இசை ரசிகர்களும் மறுபடியும் மறுபடியும் கேட்டுப் பரவசமடைந்த இசை ஆல்பமாக வெளி வந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் `வந்தே மாதரம்'. ஆல்பத்தின் முகப்பு பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்த `மா துஜே சலாம்' (இந்தி வடிவம்), ‘தாய்மண்ணே வணக்கம்’ (தமிழ் வடிவம்) இளைஞர்களைப் பெரிதும் வசீகரித்தது.

இசைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான சோனி, ஏ.ஆர்.ரஹ்மான் உடனான இந்த ஆல்பத்தின் வழியாகத்தான் இந்தியாவில் கால்பதித்தது.

"இந்த ஆல்பத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, எந்த நாட்டு இசைக் கலைஞர் தேவைப்பட்டாலும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் சோனி நிறுவனம் தெரிவித்திருந்தது.

அந்த ஆல்பத்தின் `குருஸ் ஆஃப் பீஸ்' (Gurus of Peace) என்னும் பாடலைப் பாடுவதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல சூஃபி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானைத் தேர்ந்தெடுத்தார். நுஸ்ரத்தின் சூஃபி பாடல்களுக்கு ஏற்கெனவே ரசிகராக இருந்த ரஹ்மான், `சந்தா சூரஜ் லாக்கோன் தாரே... ஹேய்ன் ஜப் தேரே ஹியே ஸாரே..' எனத் தொடங்கும் பாடலை பாகிஸ்தானுக்குச் சென்று நஸ்ரத் ஃபதே அலிகானைப் பாடவைத்துப் பதிவு செய்துவந்தார்.

திரையிசை அல்லாத இசை ஆல்பங்களில் விற்பனையில் சாதனை படைத்தது ‘வந்தே மாதரம்’. சர்வதேச அளவில் அதிகமானோரை ஈர்க்கவும் செய்தது. ஓர் இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்த முதல் இசை ஆல்பம் `வந்தே மாதரம்' என்பது இந்த ஆல்பத்தின் மற்றுமொரு சாதனை!

- வா.ரவிக்குமார்



Read in source website

சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் தலைசிறந்த தடகள வீரராக உருவானவர் மில்கா சிங். 1935இல் பஞ்சாபின் கோவிந்த்புராவில் (இன்றைய பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர்.

1947 இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் மில்கா சிங்கின் பெற்றோர் கொல்லப்பட்டனர். தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துசேர்ந்தார் மில்கா சிங். டெல்லியில் தங்கியிருந்த காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.

ராணுவத்தில் சேர்ந்த பிறகுதான், மில்கா சிங்கின் வாழ்க்கை மாறியது. ராணுவத்தில் இருந்தபோது ஓட்டப்பந்தயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

பிரிட்டனில் உள்ள கார்டிப் நகரில் 1958 காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மில்கா சிங் இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கத்தைப் வென்றுகொடுத்தார். அதே ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 200 மீ., 400 மீ. ஓட்டப்பந்தயங்களில் மில்கா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.

1960இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ‘அழைப்பு ஓட்டப் போட்டி’யில் அப்துல் காலிக் என்ற பிரபல பாகிஸ்தான் வீரரைத் தோற்கடிக்க மில்கா சிங் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து, அந்நாட்டு அதிபர் அயூப் கான் வியந்தார். மில்கா சிங்கை ‘பறக்கும் சீக்கியர்’ என்று அவர் பெருமைப்படுத்தினார்.

1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மில்கா சிங் நான்காமிடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதே நேரம், 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். சுதந்திர இந்தியாவில் தடகள விளையாட்டுகளுக்குத் தனி அடையாளம் ஏற்படுத்தித் தந்தவர் மில்கா சிங்.

- மிது



Read in source website

இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமைகொள்ள வைத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் (இயற்பெயர் முகமது யூசுப் கான்), இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே ஒரு பழ வியாபாரியின் 12 குழந்தைகளில் ஒருவராக 1922இல் பிறந்தவர். பின்னர் அவருடைய குடும்பம் மகாராஷ்டிரத்தில் குடியேறிவிட்டது.

பழ வணிகத்தை கவனித்துவந்த யூசுப், திலீப் குமார் என்னும் புனைபெயருடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த முதல் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. ’ஜுக்னூ’ (1947), ‘ஷாஹீத்’ (1948) ஆகிய படங்களின் வெற்றி பாலிவுட்டில் அவரை நிலைநிறுத்தியது. 1950-களில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். துயரம் நிரம்பிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்ததால், இவர் ‘டிராஜடி கிங்’ (துயரக் கதை அரசன்) என்னும் பெயரைப் பெற்றார். அதே நேரம் வாள்சண்டைப் படமான ‘ஆன்’ (1952), நகைச்சுவைப் படங்களான ‘ஆசாத்’ (1955), ‘ராம் அவுர் ஷ்யாம்’ (1967) ஆகியவற்றிலும் சிறப்பாக நடித்திருந்தார். 1980-களில் குணச்சித்திர நடிகராகத் தன் நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தார்.

முறைசார்ந்த நடிப்பு (Method Acting) என்னும் நடிப்பு வகைமையை இந்தியாவில் பிரபலப்படுத்திய முன்னோடி திலீப் குமார். எந்த நடிப்புப் பள்ளியிலும் பயிலாமல், அவரே தன் பாணியில் அதை வடிவமைத்துக்கொண்டார். பெருமதிப்புக்குரிய இயக்குநர் சத்யஜித் ராய், திலீப் குமாருடன் பணியாற்றியதில்லை என்றாலும் அவரை மிகச் சிறந்த ’முறைசார்ந்த நடிகர்’ என்று புகழ்ந்துள்ளார். அமிதாப் பச்சன். நஸீருதின் ஷா, கமல் ஹாசன், ஷாருக் கான், ஆமீர் கான், இர்ஃபான் கான், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் பலர், திலீப் குமாரைத் தமது ஆதர்சமாகக் கொண்டவர்கள். நிறைவாழ்வு வாழ்ந்த திலீப் குமார், கடந்த ஆண்டு காலமானார்.

- நந்தன்



Read in source website

சர்வதேச அரங்கில் ரஷ்ய, ஆங்கில, லத்தீன் இலக்கியங் களுக்குத் தனி இடம் உண்டு. உலகின் கிளாசிக் படைப்புகள் பல இம்மொழிகளில் இயற்றப் பட்டுள்ளன.

இதற்கிடையில் பல்லாண்டுக் காலம் காலனிய ஆட்சியின் பிடியில் இருந்து மீண்ட ஒரு தேசம், சர்வதேச இலக்கிய அரங்கில் தனது இருப்பை உயர்த்துவது என்பது கவனத்திற்குரிய ஒன்று. இந்தியா தனது செழிப்பான பண்பாட்டு, மொழி அறிவால் இதை மிக எளிதாகவும் வியக்கத் தக்க வகையிலும் நிகழ்த்தியிருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியக் கால கட்டத்து எழுத்தாளர்களுக்குப் பிறகு ஒரு புதிய எழுச்சி, இந்திய இலக்கியத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உதயமானது. காலனிய ஆட்சியின் முடிவும் இந்தியப் பிரிவினையும் மொழிவாரி மாநிலப் பிரிப்பும் இந்த எழுத்துகளுக்கு அடிப்படையாயின.

இந்தப் பின்னணியில் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உருவாகினர். ரவீந்திரநாத் தாகூர் பல்லாண்டு காலம் முன்பே நோபல் பரிசு பெற்றிருந்தாலும், இந்தியாவின் நிலை குறித்த யதார்த்தமான சித்தரிப்பு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகுதான் சர்வதேச ஆங்கில இலக்கிய அரங்கில் கவனம் பெற்றது.

குஷ்வந்தும் ருஷ்டியும்

புகழ்பெற்ற பத்திரிகையாள ரான குஷ்வந்த் சிங்கின் ‘ட்ரெயின் டூ பாகிஸ்தான்’ நாவல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மனோ மஜ்ரா என்னும் ஒரு கற்பனையூரைக் கொண்டு சித்தரிக்கிறது. நாடு துண்டானதால் அதுவரை வாழ்ந்து வந்த ஊரில் இருந்து சீக்கிய-இஸ்லாமிய மக்கள் இருவேறு திசையில் நாடுகடத்தப்படுகிறார்கள்.

பாகிஸ்தானியர்களை, இந்தியர்களை ஒருபோலப் பாதித்த இந்த நிகழ்வை குஷ்வந்த் சிங் தன் தனித்துவமான மொழியால் இயல்பாகச் சித்தரித்திருந்தார்.

குஷ்வந்த் சிங், தனது தடாலடியான பத்தி எழுத்தால் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். இந்திய ஆங்கில எழுத்துலகில் ஒரு நட்சத்திர எழுத்தாளராகப் போற்றப்பட்டார். இலக்கியம், இதழியல் ஆகிய இரண்டு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் குஷ்வந்த் சிங்.

இதே இந்தியா - பாகிஸ் தான் பிரிவினையைப் பின்னணி யாகக் கொண்ட ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ என்னும் நாவல் வழியாக சர்வதேச இலக்கிய அரங்கில் தனிக் கவனம் பெற்றவர் சல்மான் ருஷ்டி. இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் பிறக்கும் சலீம் சினாய் என்னும் குழந்தையை மையமாகக் கொண்ட இந்த நாவல், மாயயதார்த்த ரீதியில் இந்தியாவின் கதையைச் சொல்கிறது.

இந்த நாவல் சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசைப் பெற்றது. சல்மான் தன் விவரிப்புக்காகத் தேர்ந்தெடுத்த லத்தீன் அமெரிக்க பாணியை ஒத்த மொழிநடை, சர்வதேச அரங்கில் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. இதே பாணியில் அவர் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவல் பெரும் புகழையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சர்வதேச அரங்கில் இவரது நாவலின் விற்பனை உரிமையைக் கைப்பற்ற பதிப்பகங் களுக்குள் பெரும் போட்டி நடந்ததன் வழி அவரது எழுத்தின் வல்லமையை உணரலாம்.

கவனம் ஈர்த்த பெண் எழுத்து

ஆங்கில இலக்கிய அரங்கில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கருக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய எழுத்தாளர் அனிதா தேசாய். ‘க்ளியர் லைட் ஆஃப் டே’ என்னும் இவரது நாவல் இந்தியப் பிரிவினையை மையமாகக் கொண்டது. இவரது அடுத்த நாவலான ‘இன் கஸ்டடி’ உருது கவிதைகளின் மீது மோகம் கொண்ட இந்திப் பேராசிரியர் ஒருவரின் கதையைப் பின்புலமாகக் கொண்டது.

பிரபல உருதுக் கவிஞர் நூரை நேர்காணல் செய்யும் அரிய வாய்ப்பு அந்த இந்திப் பேராசிரியருக்குக் கிடைக்கிறது. ஆனால், உருதுக் கவிஞரின் பரிதாப நிலையைக் கண்டு, அதை மேற்கொள்ளாமல் தவிர்க்கிறார் பேராசிரியர்.

கவிஞரின் நிலையுடன் உருதுக் கவிதையின் நிலையையும் அனிதா தேசாய் இந்த நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார். யதார்த்தவாத நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் சர்வதேச அரங்கில் பெரும் கவனம் பெற்றது.

தன் முதல் சிறுகதைத் தொகுப்புக்காக புலிட்சர் விருது வென்று சர்வதேச இலக்கிய அரங்கில் கவனத்தை ஈர்த்தவர் ஜும்பா லாஹிரி. ‘இன்டர்பிரிட்டர் ஆஃப் மாலடீஸ்’ என்னும் தலைப்பில் வெளியான 10 சிறுகதைகளின் தொகுப்பு, அதன் கூற்று மொழியாலும் தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியாலும் அமெரிக்க ஆங்கில இலக்கிய உலகில் பெரிதும் கொண்டாடப்பட்டது.

திருமணமான இந்திய ஆணைக் காதலிக்கும் ஆங்கிலப் பெண், அமெரிக்காவில் வாழும் இந்திய வங்கக் குடும்பம் எனப் பலதரப்பட்டவர்களின் வாழ்க்கையை இந்தக் கதைகள் வழி லாஹிரி சித்தரித்துள்ளார். புலம்பெயர் சூழலின் அடையாளச் சிக்கல், நவீன வாழ்க்கை முறை போன்ற பண்புகள் லாஹிரியின் எழுத்தினுடைய மையம். யதார்த்த முறையில் கதைகள் சொல்வது இவரது மொழித் திறன்.

கலாச்சார சிக்கலை மையமாகக் கொண்ட ‘நேம்சேக்’ என்னும் நாவலை லாஹிரி எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் வாழப் புறப்படும் இந்திய வங்கக் குடும்பம்தான் நாவலின் பின்னணி. இந்த நாவல் இதே பெயரில் மீரா நாயர் இயக்கத்தில் படமாகவும் வெளியானது.

அருந்ததியின் புதுமைப் படைப்பு

தென்னிந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட அருந்ததி ராயின் ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல், சர்வதேச அரங்கில் எதிர்பார்க்கப்படாத வரவேற்பைச் பெற்றது. கேரளத்தில் அய்மனம் என்னும் சிற்றூரில் நடக்கும் கதையை, துள்ளலான மொழியில் ராய் கூறியிருந்த விதம் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுத்தந்தது. சல்மான் ருஷ்டிக்குப் பிறகு ராயின் இந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது.

வங்க-கேரளப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளின் விவரிப்பில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கலாச்சார முரண், கதை நிகழும் கேரளத்தின் அரசியல், வர்க்கப் பாகுபாடு எனப் பல அம்சங்கள் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். தீவிரத்தன்மை கொண்ட இந்த நாவலை குழந்தைகளின் உயரத்துக்கு ராய் இழுத்து வந்துள்ளார். இது வாசகர்களுக்கு புது வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது.

‘தி கல்கத்தா குரோமோசோம்’ என்னும் அமிதவ் கோஷின் மருத்துவப் புலனாய்வு நாவல் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் மலேரியா பாதிப்பை ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற ரொனால்டு ராஸை நாயகனாகக் கொண்டது இந்த நாவல். கொல்கத்தா, நியூயார்க் ஆகிய இரண்டு நகரங்களில் இந்த நாவலின் கதை நடைபெறுகிறது.

சென்னையில் பிறந்த பத்திரிகையாளார் அரவிந்த் அடிகாவின் ‘ஒயிட் டைகர்ஸ்’ நாவலும் புக்கர் பரிசு வழியாக ஆங்கில இலக்கிய உலகில் கவனம் பெற்றது.

சமீபத்தில் தன் இந்தி நாவல் ‘டூம் ஆஃப் சான்ட்’க்காக சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கீதாஞ்சலிக்கும் கவனம் கிடைத்துள்ளது. இப்படிப் பல்வேறு வகைமைகளில் சர்வதேச அரங்கில் இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வருங்காலங்களில் இந்தப் பட்டியல் நீளும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.



Read in source website