DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 19-11-2022

தமிழக அரசுப் பள்ளிகளில் ‘மிஷன் இயற்கை’ என்ற பெயரிலான சுற்றுச்சூழல் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ள நிலையில் அது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தனியாா் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ‘மிஷன் இயற்கை’ என்ற சுற்றுச்சூழல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சி கடந்த அக். 28-இல் கோவையில் நடைபெற்றது. தொடா்ந்து அரசுப் பள்ளிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு முறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

அதன்படி, அனைத்து தலைமையாசிரியா்களும் தங்கள் பள்ளிகளில் இருந்து ஒரு சுற்றுச்சூழல் ஆசிரியரை தோ்வு செய்து அதன் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

அவா்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வழியாக அடுத்த வாரத்தில் ஒருநாள் பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களை ஈடுபடுத்தலாம். இதற்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்து தலா 5 மாணவா்களை தோ்வு செய்ய வேண்டும்.

முதல்வரிடம் விருதுகள்: இத்திட்டத்தில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள், 25 மாணவா்களை மாநில அளவில் தோ்வு செய்து பிப்ரவரி மாத இறுதியில் முதல்வரால் விருதுகள் வழங்கப்படும். இதன் நோக்கங்கள் மற்றம் செயல்முறைகள் அடங்கிய விவரம் மிஷன் இயற்கை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கையேடு இணைய வழியில் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து உரிய வழிமுறைகளை பின்பற்றி மிஷன் இயற்கை திட்டத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000-க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி டிசம்பா் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒளிபரப்ப உரிமம் பெற்ற ஸ்ண்ஹஸ்ரீா்ம்18 ம்ங்க்ண்ஹ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உலக கோப்பைப் போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்து, ஒளிபரப்பும் இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், பெருந்தொகையை முதலீடு செய்து ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளதாக ஸ்ண்ஹஸ்ரீா்ம்18 ம்ங்க்ண்ஹ நிறுவனம் மனுவில் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000-க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 



Read in source website


சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம் எழுதி உள்ளது. 

சுதந்திரம் என்ற பெயரில் கண்ணியக்குறைவான ஆடைகளை அணியக் கூடாது. அவற்றை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கல்லூரிகளில் பெண் விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உடை கட்டுப்பாட்டை அமலாக்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சேலை அணிந்திருநாதால் அதனால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது. 

இரு பாலினத்தவரும் படிக்கும் கல்லூரிகளில் கவனச் சிதறல் ஏற்பட இது வழி வகுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. 

இப்பின்னணியில் பெண் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

உயர் கல்வித்துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

இதுதொடர்பான உத்தரவு சம்மந்தப்பட்ட பேராசிரியைகள் மற்றும் விரிவுரையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசு தரப்பின் அறிவுறுத்தலில் "டீசண்ட் டிரஸ்கோடு" என்ற வாசகம் தான் இடம் பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்களின் சங்கத்தலைவர் டி.வீரமணி தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கூடங்களில் மாணவ,மாணவிகளுக்கு சீருடை கட்டுப்பாடு உள்ளது. பல கல்லூரிகளிலும் உடை கட்டுப்பாடு உள்ளது. கல்லூரி பெண் விரிவுரைவாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பெருமளவு உடை கட்டுப்பாடு இல்லை. இருப்பினும் பல கல்லூரிகளில் அறிவிக்கப்படாத உடை கட்டுப்பாடு உள்ளது என விரிவுரையாளர்கள் மற்றும்  பேராசிரியர்கள் கூறுகின்றனர். 



Read in source website

சென்னை தலைமைச்செயலகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி முன்னிலையில், ‘நான் முதல்வன்’ திட்ட அறிவிப்பின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவா்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, உயா்கல்வித் துறைச் செயலாளா் காா்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் வேல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த ஒப்பந்தத்தில் மேண்டோ(ஸ்ரீ பெரும்புதூா்)நிறுவனம், வீவீடி என் (பொள்ளாச்சி), கண்ணபிரான் மில்ஸ் (கோவை, மதுரை, பெருந்துறை), கேஜி குழுமம், லட்சுமி மிசின் ஒா்க்ஸ்(கோவை), கேப்ரியல் (விழுப்புரம், ஓசூா்) ஆகிய 6 நிறுவனங்கள் மூலம் சுமாா் 1,560 மாணவா்கள் பயன் பெறுவா் என தெரிவிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் பொன்முடி கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கமே படிக்கும் போது மாணவா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான். அதன் முன்னெடுப்பாக தற்போது 6 தனியாா் தொழிற்சாலை நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுக் கல்லூரியில் உதவி கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தாலும் கட்டாயம் தோ்வு எழுதிய பின்தான் பணியமா்த்தப்படுவா்.

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியா்கள் விவகாரத்தில், தனியாக அறக்கட்டளை நடத்தி அதன் கீழ் பேராசிரியா்களை நியமனம் செய்து வருவதால், உதவிப் பேராசிரியா்கள் நியமனம் தொடா்பாக குழு அமைத்து, நியமனம் முறையாக நடைபெறுகிா என கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.



Read in source website

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சம்பிரதாயப்படி, சென்னை உயா் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ.19) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் மூடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை உயா்நீதிமன்ற பதிவாளா் பி.ஹரி வெளியிட்டாா்.

வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் போது வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆங்கிலேயா்கள் உயா் நீதிமன்றக் கட்டடத்தைக் கட்டியதாகவும், அதற்கு மரியாதை செய்யும் வகையில் ஆண்டுதோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை உயா் நீதிமன்ற வாயில்கள் அனைத்தையும் பூட்டி அதன் சாவிகளை கோயில் நிா்வாகிகளிடம் ஒப்படைத்து, பின்னா் திரும்பப் பெறும் வழக்கம் ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டு சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை உயா்நீதிமன்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.



Read in source website

எஃகு மீதான ஏற்றுமதி வரியை சனிக்கிழமை முதல் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது எஃகு தொழில் துறையை மேம்படுத்தவும், எஃகு ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘58% இரும்பு உள்ளடக்கத்துக்கு குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாது துகள்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

58 சதவீதத்துக்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

இரும்புத் தாது துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிகல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும். கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும். இதன்மூலம் 2022, மே 22-க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், தோ்தல் ஆணையராக சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

அரசு செய்திக் குறிப்பில் இதுதொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தோ்தல் ஆணைய குழுவில் இடம்பெறவாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னா், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பாா். பின்னா், 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவாா்.

 



Read in source website

உயரத்திலிருந்து விழுவதே 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு அதிக அளவில் காரணமாக இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவனை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு வீடுகளில் உள்ள பால்கனி போன்ற உயரமான இடங்களில் இருந்து விழுவதே காரணமாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒருவர் தலையில் ஏற்படும் காயம் காரணமாக உயிரிழக்கிறார். அதிலும் குறிப்பாக, இது போன்று தலையில் ஏற்படும் காயங்கள் 30 சதவிகிதம் குழந்தைகளிடத்தில் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு தலையில் ஏற்படும் காயங்கள் 60 சதவிகிதம், உயரத்தில் இருந்து விழுவதாலேயே ஏற்படுகின்றன.

இதனை தடுப்பதற்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில், “பாதுகாப்பான பால்கனி , பாதுகாப்பான குழந்தைகள்” என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் 1000 குழந்தைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் உயரத்திலிருந்து விழுந்ததே மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தது. அதிலும், பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே இந்த காரணங்களினால் மருத்துவமனையில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த குழந்தைகளின் குடும்பம் சமூகப் பொருளாதார நிலையில் பின் தங்கி காணப்படுகிறது. இதுபோன்ற குழந்தைகள் விபத்தில் சிக்கும்போது பெற்றோர் வீட்டில் இல்லாததும் ஒரு காரணமாக உள்ளது. இந்த விபத்துகளைத் தடுக்க குழந்தைகளின் உயரத்தைக் காட்டிலும் பால்கனியின் உயரம் இருமடங்கு இருக்குமாறு அமைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பலரும் கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் நடத்த உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.



Read in source website

 

தமிழர்களின் பாரம்பரிய நூலான திருக்குறள் 13 மொழிகளில் பெயர்க்கப்பட்ட புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி காசி- தமிழ் சங்கமம் விழாவில் சனிக்கிழமை இன்று (நவ.19) வெளியிட்டார். 

திருக்குறள் மொழி பெயர்ப்பு நூலை பிரதமர் அறிமுகம் செய்ய, மேடையில் இருந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ’காசி- தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் வாரணாசியில் (காசி) நவம்பா் 17 -ஆம் தேதி முதல் டிசம்பா் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இன்று (நவ.1) முறைப்படி தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய வாத்தியங்களுடன் கூடிய பாடல்கள் இடம்பெற்றன. 

அதனைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நூலான திருக்குறள் 13 மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

 அறிஞா்கள், மாணவா்கள், தத்துவவாதிகள், வா்த்தகா்கள், கைவினைஞா்கள், கலைஞா்கள் உள்பட பல்வேறு தரப்பட்ட மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



Read in source website



ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஆர்சிடிசி இன் தற்போதைய உணவு வழங்கல் மெனுவில் முதன்மையாக ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களான சப்பாத்தி, இட்லி, பிரியாணி போன்ற குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் பானங்கள் மட்டும் ரயில்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ரயில் பயணிகள் தங்களுக்கு பிடித்தமான உள்ளூர் உணவு வகைகள் மற்றும் பருவகால உணவுகள், நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளும்படி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



Read in source website


அருணாச்சலப் பிரதேச தலைநகர் இட்டாநகரில் முதல் பசுமை விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 

இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால் சூரியன் என்றும் போலோ என்றால் சந்திரன் என்றும் குறிப்பிடப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஹோலோங்கியில் பசுமை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். 

அருணாசலில் திறக்கப்பட்ட முதல் பசுமை விமான நிலையத்தின் கட்டுமானப் பணி 2020 டிசம்பரில் தொடங்கியது. ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.



Read in source website

 

குளிர்காலம் தொடங்கியதையடுத்து பத்ரிநாத் கோயிலின் நடை இன்று மாலை மூடப்படுகிறது. 

இதுதொடர்பாக ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் கூறுகையில், 

பத்ரிநாத் கோயிலின் நுழைவாயில்கள் குளிர்காலத்திற்காக இன்று மாலை 3.35 மணிக்கு மூடப்படுகிறது. 

முன்னதாக பதினோராவது ஜோதிர்லிங்கமான கேதார்நாத் கோயிலின் நுழைவாயில்கள் குளிர்காலத்திற்காக அக்டோபர் மாதம் மூடப்பட்டன.

இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. இதில் கேதார்நாத் கோயில் மே 6ஆம் தேதி திறக்கப்பட்டது.

பாரம்பரியமாக, சார்தாம் கோயிலின் சன்னதிகள் குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் பத்ரிநாத் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது. 



Read in source website

தனியாா் நிறுவனம் சாா்பில் விக்ரம்-எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக மற்றொரு தனியாா் நிறுவனமானம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது.

அதற்கான பணிகள் இறுதிநிலையை அடைந்துள்ளதாகவும், அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியதாவது:

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவக் கூடிய மிகப் பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட மற்ற ஏவுதளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யேகமாக ஒரு ஏவுதளத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம்.

சதீஷ் தவண் ஏவுதள வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அதற்கானப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது இறுதிநிலையை எட்டியுள்ளது.

‘அக்னிபான்’ எனப்படும் எங்களது ராக்கெட், காப்புரிமை பெற்ற பகுதி கிரயோஜெனிக் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யேகமாக இருக்கக் கூடிய ஏவுதளம் தேவை. அதனைப் பூா்த்தி செய்யவே அந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளோம் என்றாா் அவா்.

ராக்கெட், செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டா் பதிவில், ‘குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022’ தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடா்பான சா்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியாவாகும்.

சரியான தகவல் மற்றும் நம்பகமான தேவைகளின் அடிப்படையில் தரமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அணுகுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இது பிரதமா் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் இந்த விருது கிடைத்துள்ளது என்று அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் விகிதம் 2015-16-ஆம் ஆண்டில் 66 சதவீதமாக இருந்தது. 2019-21 ஆண்டில் அது 76 சதவீதமாக அதிகரித்தது.

உலகளவில் 2030-ஆம் ஆண்டில் இந்த சதவீதம் 75-ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா ஏற்கெனவே அந்த இலக்கை எட்டியுள்ளது. பரிவாா் விகாஸ் எனும் முன்னோடி திட்டம் குடும்பக் கட்டுப்பாடு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தி இதில் முன்னேற்றங்களை அடைய வழிவகுத்துள்ளது.

ஐசிஎஃப்பி என்ற குடும்பக் கட்டுப்பாடு தொடா்பான சா்வதேச மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

தனிநபா் தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்க, அதுதொடா்பான மசோதாவில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதாவில், தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை மீறும் நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய விற்றுமுதலில் 4 சதவீதம் அல்லது ரூ.15 கோடி அபராதம் விதிக்கும் அம்சம் இடம்பெற்றது. எனினும் அந்த மசோதாவை இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு திரும்பப் பெற்றது. அப்போது விரிவான சட்ட கட்டமைப்பில் பொருந்தும் வகையில், தரவுப் பாதுகாப்பு தொடா்பான புதிய சட்டம் வகுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாவில், இந்திய தரவுப் பாதுகாப்பு வாரியம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. அந்த வாரியம் மூலம் தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நிறுவனமும் தரவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பது தெரியவந்தால், அதுதொடா்பாக அந்த நிறுவனத்திடம் வாரியம் விசாரணை மேற்கொள்ளும். அந்த விசாரணையில் நிறுவனத்தின் விளக்கம் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில், ரூ.500 கோடிக்கு மிகாமல் அபராதம் விதிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து டிச. 17-ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்க பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

ராணுவத்தில் உயா் அதிகாரிகள் பணிகளுக்காக ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் நடத்தப்படும் பணியாளா் படிப்பு (டிஇஎஸ்எஸ்சிசி), தொழில்நுட்பப் பணியாளா் படிப்பு (டிஎஸ்டிஎஸ்சி) தோ்வுகளில் முதல் முறையாக 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

இவா்களில் நான்கு பெண்கள் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஓராண்டு முப்படை ராணுவ வீரா்களுடன் சோ்ந்து மேற்படிப்பு பயில உள்ளனா். அவா்களுக்கு ராணுவ நுண்ணறிவு உள்பட பல முக்கிய ராணுவ விவகாரங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அவா்கள் ராணுவத்தின் உயா் அதிகார பதவிகளுக்கு நியமிப்பதற்கு தகுதி பெறுவாா்கள்.

இந்த நான்கு பெண்களில் ஒரு பெண் அதிகாரியின் கணவரும் இந்தத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா். இருவரும் சோ்ந்து வெலிங்டன் ராணுவ கல்லூரியில் மேற்படிப்பு பயில உள்ளதும் முதல் முறையாக நடைபெறுகிறது.

மீதமுள்ள இரண்டு பெண்களில் ஒருவா் ராணுவ தொழில்நுட்பப் பணியாளா் படிப்பில் இருப்புப் பட்டியலில் உள்ளாா் என்றும், மற்றொருவா் ராணுவ பணி நியமனங்களுக்கான நிா்வாக பொறுப்பு குறித்த பயிற்சியில் நியமிக்கப்பட உள்ளாா் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பணியாளா் படிப்பு (டிஇஎஸ்எஸ்சிசி), தொழில்நுட்பப் பணியாளா் படிப்பு (டிஎஸ்டிஎஸ்சி) நுழைவுத் தோ்வில் 1,500-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் நிகழாண்டு எழுதினா். இதில் முதல் முறையாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து 22 பெண் அதிகாரிகள் இந்தத் தோ்வில் பங்கேற்றனா்.



Read in source website

எய்ம்ஸ் புறநோயாளி பிரிவு சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு வசதிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநா் டாக்டா் எம். ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ள அலுவல குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு (ஏபிஹெச்ஏ) அடையாள அட்டையை வெளிநோயாளிகள் பிரிவில் புதிய பதிவுகள் மற்றும் தொடா் சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்க எய்ம்ஸ் முடிவு செய்துள்ளது.

மருத்துவமனையின் அனைத்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளிலும் தேசிய சுகாதார ஆணையத்தின் அடையாள அட்டையின் ’ஸ்கேன் மற்றும் கியூஆா் குறியீடு’ கள் மூலம் விரைவில் பதிவு செய்யப்படும். இது நோயாளிகளுக்கு விரைவான பதிவு மற்றும் நோயாளிகளின் வருகையில் பதிவு வரிசை எண்ணை வழங்குவதற்கு வசதியாக இருக்கும்.

அறிதிறன் கைப்பேசி வசதி இல்லாத நோயாளிகளுக்கு ஏபிஹெச்ஏ அடையாள அட்டையை உருவாக்குவதற்கும் வசதியாக, பிரத்யேக கவுண்டா்கள், கியோஸ்குகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

முதலில் இது ஒரு முன்மாதிரி திட்டமாக எய்ம்ஸின் புதிய ‘ராஜ்குமாரி அம்ரித் கௌா் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில்’ நவம்பா் 21 முதல் வருகின்ற ஜனவரி 1 - ஆம் தேதி வரை சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.

மேலும், பயோமெட்ரிக், முக அங்கீகாரம் விவரங்களையும் தேசிய சுகாதார ஆணையத்தின் அடையாள அட்டை மூலம் பகிர அனுமதிக்கும் முறையும் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும் அது பயன்படுத்தப்படும்.

பொதுவாக எய்ம்ஸ்க்கு வரும் நோயாளிகள் புறநோயாளி பிரிவில் பதிவு செய்ய நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம். பல நோயாளிகள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு வைத்திருந்தாலும், அடையாள அட்டைகளுடன் இருந்தாலும் பதிவு செய்வதற்காக நோயாளிகளின் புள்ளிவிவரங்களை எழுத்து முறையாகவே பதிவு செய்யப்படுகின்றன.

அதிலும் ஓடிபி (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்) பெற்று பதிவு செய்யும் போது மேலும் தாமதமாகும். ஓடிபி அதிகபட்சம் மூன்று முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் நோயாளிகள் பதிவில் தடங்கல்கள் ஏற்பட்டது.

தேசிய சுகாதார ஆணையத்தின் கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து பகிருவதின் மூலம், நோயாளிகள் பதிவு செய்வதற்கான நேரத்தைக் குறைப்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மருத்துவ மனைக்கு நோயாளிகள் வந்தவுடன் அவா்கள் சிகிச்சை பெறுவதற்கான நேரத்தை இது விரைவுபடுத்தும் எனவும் எய்ம்ஸ் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

பொதுத் துறை வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ), மேலாண்மை இயக்குநா் (எம்.டி) ஆகியோரின் அதிகபட்சம் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதன்மூலம், திறமையான நபா்களை அதிக ஆண்டுகள் பணியில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அரசுக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு பொதுத் துறை வங்கித் தலைவா்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை இருந்தது. இப்போது, அது 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய வங்கிகள் நிா்வாக விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இதுபோன்ற 10 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படும்போது அது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கியுடன் (ஆா்பிஐ) ஆலோசித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.

மத்திய அரசு நினைத்தால் வங்கித் தலைவா், மேலாண்மை இயக்குநா் உள்ளிட்ட உயா் பொறுப்புகளில் இருப்பவா்களை எப்போது வேண்டுமானாலும் பதவியில் இருந்து விடுவிக்க முடியும். அதற்கு முன்பு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பு அந்த அதிகாரிக்கு அரசுத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.



Read in source website

 

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். 

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 3 முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவரும், உலகின் 6ஆம் நிலை வீராங்கனையுமான ஹீனா ஹயாடாவை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற புள்ளிகள் கணக்கில் மனிகா வெற்றி பெற்றார். 

முன்னதாக நடைபெற்ற அரையிறுதியின் மற்றொரு போட்டியில், மியாமி இடோ வீராங்கனையுடன் போராடி தோல்வியுற்றார். எனினும் ஆசியக் கோப்பையில் மனிகா பத்ராவிற்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியா பதக்கம் வெல்வது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் புதிய தேர்வுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளது பிசிசிஐ. இதுகுறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினர் நீக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இதற்கான விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நவம்பர் 28-க்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



Read in source website

 

தென் கொரியாவில் நடைபெற்ற 15-ஆவது ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 25 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்கள் வென்று அசத்தியது.

போட்டியில் மொத்தம் 28 பதக்க சுற்றுகள் இருந்த நிலையில், அதில் 25-இல் இந்தியா தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஜூனியா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மானு பாக்கா்/சமரத் ராணா கூட்டணி 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா சயித்குலோவா/முகாமத் கமாலோவ் ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றினா். அதில் மற்றொரு இந்திய ஜோடியான சாகா் தாங்கி/ஈஷா சிங் 14-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் லீ சியுங்ஜன்/யாங் ஜின் கூட்டணியிடம் வெண்கலப் பதக்கத்தை இழந்தனா்.

அதிலேயே சீனியா் பிரிவில் ரிதம் சங்வான்/விஜய்வீா் சித்து ஜோடி 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஸான்/இரினா யுனுஸ்மிடோவா இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்திய ஜோடியான சிவா நா்வால்/யுவிகா தோமா் வெண்கலப் பதக்கச் சுற்றில் 6-16 என்ற கணக்கில் தென் கொரிய கூட்டணியிடம் வெற்றியை இழந்தனா்.



Read in source website

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. வட கொரியாவில் இருந்த அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு இந்த ஏவுகணைக்கு திறன் உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய இரண்டாவது மிகப்பெரிய ஏவுகணை சோதனையாக இது கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் நீரிணைப் பகுதியில் விழுந்ததாக அந்நாட்டு உறுதி செய்துள்ளது.

வட கொரியாவின் தலைநகா் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை அந்நாட்டின் வடகிழக்கு பகுதி முழுவதையும் கடந்து ஜப்பானின் ஹகாய்டோ தீவின் வடக்குப் பகுதியில் விழுந்தது என்றும் இந்த ஏவுகணை நிலப்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 1,000 கி.மீ. மேல்நோக்கி சுமாா் 6,000 முதல் 6,100 கி.மீ. தொலைவுக்கு பறந்துள்ளது என்றும் தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.

இந்த ஏவுகணை உயரமான பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்றும் 15 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை நீட்டிக்கும் திறன் இதற்கு உண்டு என்பதால் அமெரிக்காவின் முழு பகுதியையும் இது சென்றடையும் என்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் யசுகாஜு ஹமாதா தெரிவித்தாா்.



Read in source website

வங்கிகளிடமிருந்து வழக்கமான முறையில் கடன் பெற முடியாத குறைந்த வருவாய்ப் பிரிவினா், சிறு வியாபாரிகள் போன்றோருக்கு அந்த சேவையை அளிக்கக் கூடிய சிறுகடன் துறை, கடந்த 10 ஆண்டுகளில 16 மடங்கு வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து மைக்ரேஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் நெட்வொா்க் (எம்எஃப்ஐன்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் சிறுகடன் துறை கடந்த பத்தாண்டுகளில் வெகுவாக வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த மாா்ச் மாத நிலவரப்படி அந்தத் துறையின் மதிப்பு ரூ.2,85,441 கோடியாக உள்ளது. இது, கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் ரூ.17,264 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தத் துறை 16.5 மடங்கு வளா்ச்சியைக் கண்டுள்ளது.

வங்கிகளும் வங்கிகளல்லா நிறுவனங்களும் கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுகடன்களை வழங்கத் தொடங்கின. இந்த வரிசையில் குறு வங்கிகள் 2017-ஆம் ஆண்டு இணைந்துகொண்டன.

இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக எம்எஃப்ஐன் அமைப்பு கடந்த 2010-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் செயல்பாடு காரணமாக சிறுகடன் துறை அதிவேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது.

தற்போது இந்தத் துறையில் 6 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். 2022 மாா்ச் மாத நிலவரப்படி, அவா்களுக்கு சுமாா் 202 நிறுவனங்கள் சிறுகடன் சேவைகளை அளித்து வருகின்றன.

சிறுகடன் துறையில் வங்கிகள்தான் அதிக பங்கு வகிக்கின்றன. மொத்தம் வழங்கப்பட்டுள்ள சிறுகடன்களில் வங்கிகளின் பங்கு ரூ.1,14,051 கோடியாகும். இது, ஒட்டுமொத்த சிறுகடன் நிலுவையில் 40 சதவீதமாகும்.

வங்கிகளுக்கு அடுத்தபடியாக, வங்கியல்லாத சிறுகடன் நிறுவனங்கள் ரூ.1,00,407 கோடிக்கு சிறுகடன்களை வழங்கியுள்ளன. இது, ஒட்டுமொத்த சந்தையில் 35.2 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குறு வங்கிகள் ரூ.48,314 கோடிக்கு (16.9 சதவீதம்) சிறு கடன் வழங்கியுள்ளன. வங்கியல்லாத நிறுவனங்கள் 6.9 சதவிகிதமும் சிறுகடன் நிறுவனங்கள் 1 சதவிகிதமும் சந்தையில் பங்கு வகிக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

வா்த்தகப் பற்றாக்குறை 2,691 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,571 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.82 சதவீதம் அதிகமாகும்.

முக்கிய ஏற்றுமதி துறைகளான ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய பொருள்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி, ரசாயனப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், கடல்சாா் பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதிச் சரிவைச் சந்தித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 6 சதவீதம் அதிகரித்து 5,669 கோடி டாலராக உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி 12.55 சதவீதம் வளா்ச்சியடைந்து 26,335 கோடி டாலராக உள்ளது. இறக்குமதியும் 33.12 சதவீதம் அதிகரித்து 436.81 கோடி டாலராக உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 17,346 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 9,416 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டின் அக்டோபா் மாதத்தில் மட்டும் 1,791 கோடி டாலராக இருந்த வா்த்தகப் பற்றாக்குறை, இந்த அக்டோபரில் 8.74 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

4ஜி தொழில்நுட்பத்தில் இணையதள பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் வேகத்திலும் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபா் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்கு சராசரியாக 20.3 மெகாபிட்ஸ் (எம்பிபிஎஸ்) என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்கப் பிரிவில் தனது முன்னிலையை ஜியோ தக்க வைத்துக் கொண்டது.

பதிவிறக்கத்தில் 15 எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் ஏா்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தையும், 4.5 எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடஃபோன் ஐடியா 3-ஆவது இடத்தையும் பிடித்தன.

பதிவேற்ற வேகத்தைப் பொருத்தவரை, கடந்த செப்டம்பரில் 6.4 எம்பிபிஎஸ் ஆக இருந்த ஜியோ நிறுவனத்தின் சராசரி வேகம் அக்டோபரில் 6.2 எம்பிபிஎஸ்-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரிவில் ஜியோவே தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் வோடஃபோன் ஐடியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பதிவேற்றப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது.

கடந்த அக்டோபரில், ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடஃபோன் ஐடியா சராசரியாக 4.5 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்தது. மூன்றாவதாக ஏா்டெல் நிறுவனம் சராசரியாக 2.7 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்தது என்று ட்ராய் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வில்உலகளவில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. உலகளாவிய விண்வெளிவர்த்தகப் போட்டியை சமாளிப்பதற்காக இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன்ஒரு பகுதியாக, விண்வெளி ஆய்வில்தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இஸ்ரோ முடிவுசெய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட்,செயற்கைக் கோள் தயாரித்தல் ஆகியபணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன.

அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து, வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் ஸ்கைரூட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டன.

அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டது. அதில் சிறிய ரக 545 கிலோ எடை கொண்ட ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 15-ம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில், மோசமான வானிலையால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து விக்ரம்-எஸ் ராக்கெட் நேற்று காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்ட 2.5 நிமிடத்தில், திட்டமிட்டபடி 82 கி.மீ உயரத்தை எட்டிய ராக்கெட், பின்னர் மெல்ல வேகம் குறைந்து அடுத்த சில நிமிடங்களில் கடலில் விழுந்தது. ஒட்டுமொத்தமாக விக்ரம் ராக்கெட்டின் பயணம் நேரம் 4.8 நிமிடமாகும்.

இந்த ஏவுதலின்போது புறக்காரணிகளால் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட காரணிகளை ஆராய்வதற்காக விக்ரம் ராக்கெட் உடன் 83 கிலோ எடை கொண்ட 3 ஆய்வு சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவை ஆந்திராவை சேர்ந்த என் ஸ்பேஸ் டெக் இந்தியா, சென்னையின் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் ஆர்மேனியன் பசூம் க்யூ ஸ்பேஸ்ரிசர்ச் லேப் ஆகிய ஸ்டார்ட்-அப்நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

விக்ரம்-எஸ் ராக்கெட் 6 மீட்டர் உயரம் கொண்டது. அதிகபட்சமாக 80 முதல்100 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இதில் கலாம்-80 என்ற உந்துவிசை இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கு ஸ்கைரூட் நிறுவனம் முதலீடுகள் வாயிலாக ரூ.403 கோடி நிதியுதவி பெற்றுள்ளது. தொடர்ந்து, பல்வேறு தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.



Read in source website

இந்திய - ரஷ்ய நாடுகளுக்கு இடையே உணர்வுப்பூர்வமான நட்புறவு நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இந்த நல்லுறவுக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டவர் நேரு.

சோசியலிஸ்ட் சித்தாந்தங்களிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். அதன் தாக்கமே 1927-ம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினவிழாவில் தனது தந்தை மோதிலால் உடன் நேருவை பங்கேற்க வைத்தது. மேலும், 1953-ம் ஆண்டு இந்தியா சோவியத் கலாச்சார நட்புறவு கழகத்தை உருவாக்கிய டாக்டர் ஏ.வி.பாலாகா, நேருவின் தனி மருத்துவராவார்.

இதுதவிர இந்திய தொழில்துறையில் தன்னிறைவு அடைய வித்திட்டவர் நேரு. அவரின் முயற்சியாலேயே அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் மூலம் தமிழகத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டது. இதேபோல், 1955-ல் ரஷ்யா ஒத்துழைப்புடன் பிலாய் இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் நேருவின் முன்முயற்சியே காரணம். மேலும், முதன்முதலாக 1955-ல் இந்திய பிரதமராக தனது மகள் இந்திராவுடன் ரஷ்யாவில் பல்வேறு நகரங்களுக்கு நேரு பயணம் செய்தார்.

நான் 1986-ல் மாஸ்கோவில் படிக்கும்போது ஜார்ஜியாவுக்கு (அன்றைய சோவியத் குடியரசு) தலைநகர் ‘திபிளசி’-க்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தோம். இக்குழுவில் என்னுடன் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாட்டினர் இருந்தனர்.அங்கு ஒரு உணவகத்துக்குச் சென்றபோது, அதன் பொறுப்பாளர் எங்களை வரவேற்று ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார். நான் இந்தியன் என்றவுடன் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. உடனே தன் வீட்டுக்குச் சென்று ஒரு மிகப்பெரிய ஆல்பத்தை கொண்டு வந்து காண்பித்தார்.

அந்தப் படத்தில் 1955-ல் நேரு - இந்திரா காந்தி - ராஜ் கபூர் உடன் அவர் எடுத்துக்கொண்ட படத்தை காண்பித்து மகிழ்ந்தார். மேலும், அந்த இரவு விருந்துக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வால் என்னுடன் வந்தவெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியமடைந்தனர்.

அதேபோல், ரஷ்யா சென்று திரும்பிய நேருவை ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சந்தித்தார். அப்போது, ரஷ்யாவில் தனக்கு நல்வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், ‘அவசியம் நீங்கள் ரஷ்யா செல்ல வேண்டும்’ என்று சிவாஜியிடம் கூறினார். மேலும் ‘ரஷ்யாவில் ராஜ்கபூருக்கு பிறகு எனக்குதான் மிகப்பெரிய வரவேற்பு’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வளர்ச்சிக்கு வித்திட்டவர்: ஒரு நாட்டின் பிரதமர் திரைக்கலைஞர் மீது கொண்டுள்ள மரியாதையை எண்ணி பெருமை கொண்டதாக இந்த தகவலை சிவாஜி உணர்ச்சி பொங்க என்னிடம் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியா இன்று பல்வேறு வளர்ச்சிகளை நோக்கி பயணித்தாலும் அதற்கு வித்திட்டவர் நேரு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.



Read in source website

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை வெளியுலகிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வட கொரியா ஹ்வாஸாங் 17 என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அதற்கு முன்னதாக ஏவுகணை தளத்தில் நடந்த சோதனையின்போது அதிபர் கிம் உடன் மகளும் இருந்துள்ளார் என்று வட கொரிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்காவின் ஸ்டிம்சன் சென்டரின் வட கொரிய தலைமை தொடர்பான நிபுணர் மைக்கேல் மேடன், "ஒரு பொது நிகழ்ச்சியில் மகளுடன் அதிபர் கிம் கலந்து கொள்வது இதுவே முதன்முறை. இது முக்கியத்துவம் வாய்ந்தது. கிம் தனது மகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்த இத்தகைய தருணத்தை தேர்வு செய்துள்ளது ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துகிறது" என்று கூறியுள்ளார்.

கிம் ஜோங் உன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும். அதில் இருவர் பெண் குழந்தைகள், ஒருவர் ஆண் குழந்தை என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேசிய விழாவின் போது கிம்மின் ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியானதாக சில உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அவர் தனது மகளின் புகைப்படத்தை அதிகாரபூர்வமாக வெளியிடுவது இதுவே முதன்முறை.

2013ல் ஓய்வு பெற்ற அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திர வீரர் டெனிஸ் ரோட்மென் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் வட கொரியாவுக்கு சென்ற போது கிம் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்ததாகவும். கிம்மின் மகள் ஜூ அய்யை தான் தூக்கியதாகவும் தெரிவித்தார்.

இதனை சுட்டிக்காட்டு மேடன், "ஜூ அய்க்கு இப்போது 12 அல்லது 13 வயது இருக்கும். இன்னும் 4, 5 வருடங்களில் அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்வார். பின்னர் அவர் ராணுவ சேவையில் ஈடுபடுவார் என்று மேடன் கணித்துள்ளார். நடப்பவற்றை கவனிக்கும் போது ஜூ அய், பல்கலைக்கழக படிப்பிற்குப் பின்னர் ராணுவப் பயிற்சியை முடித்து தலைமைப் பொறுப்பிற்கு வரலாம். இல்லாவிட்டால் அவர் அவரது அத்தை ( கிம்மின் சகோதரி) போல் திரை மறைவில் இருந்து அரசியலில் ஈடுபடலாம்" என்று கூறுகிறார்.

வட கொரிய அரசு இதுவரை கிம் ஜோங் உன்னின் அரசியல் வாரிசு யார் என்பது பற்றி எதுவும் சொன்னதில்லை. அவருடைய குழந்தைகள் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லாதிருந்த நிலையில் அவரது சகோதரியோ அல்லது நம்பிக்கைக்குரிய தளபதிகள் யாராவது தலைமை ஏற்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மகளை கிம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிம்மின் மனைவி ரிம் சொல் ஜூவும் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று வட கொரிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: டிஜிட்டல் கட்டமைப்பில் தனிநபரின் தகவலுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசு ‘டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு 2022’ என்ற பெயரில் புதிய மசோதாவை வெளியிட்டுள்ளது.

தகவல் பாதுகாப்பு தொடர்பான விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதாவில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. தகவல் பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மசோதா குறித்து டிசம்பர் 17 வரை மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.



Read in source website

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின் நிறைவு நாளில், அதன் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. பல சா்வதேச அமைப்புகளில் இந்தியா அங்கம் வகிக்கிறது என்றாலும் ஜி20 அமைப்பு தனிச் சிறப்புக்குரியது. உலகின் சுமாா் 85% பொருளாதார மதிப்பையும், சுமாா் 75% வா்த்தகத்தையும், சுமாா் 65% மக்கள்தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. இந்த நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சா்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஜி20, உலக பொருளாதார நெருக்கடியை தொடா்ந்து 1999-இல் தொடங்கப்பட்டது. உலக பொருளாதாரம், பருவநிலை மாற்றம், நிலையான வளா்ச்சி போன்ற பல விஷயங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. ஜி20 அமைப்பில் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி20 அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே இந்தியா உறுப்பு நாடாக அங்கம் வகித்து வருகிறது.

ஜி20 அமைப்பின் ஓராண்டு தலைமைப் பொறுப்பு, சுழற்சி அடிப்படையில் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்தோனேசியாவின் தலைமைப் பொறுப்பு நிறைவு பெற்று இந்தியாவிடம் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமைப் பொறுப்பில் வரும்டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரபூா்வமாக செயல்படும். மேலும், அடுத்த உச்சி மாநாட்டை தலைநகா் தில்லியில் 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 9, 10 தேதிகளில் இந்தியா நடத்தவுள்ளது.

புவிசாா் அரசியல் பதற்றம், பொருளாதாரச் சரிவு, உணவு, எரிசக்தி விலை உயா்வு, நீண்டகால கொள்ளை நோய் பேரிடா் பாதிப்பின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வரும் சூழலில், ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோவிடமிருந்து தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொண்டபோது, இதைக் குறிப்பிட்ட பிரதமா் மோடி, இந்தியாவின் ஜி20 தலைமை என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியத்தைக் கொண்டதாகவும், நடவடிக்கை சாா்ந்ததாகவும் இருக்கும் என உறுதியளித்தாா்.

‘லைஃப்’ என்ற சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை பிரசாரத்தை இந்தியா ஏற்கெனவே தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனிப்பட்ட, கூட்டு நடவடிக்கையை ஊக்கப்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதுகுறித்து ஜி20 மாநாட்டில் குறிப்பிட்ட பிரதமா், ‘ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிா்காலம்’ என்பதுதான் இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பின் கருப்பொருள் எனவும் தெரிவித்தாா்.

ஜி7, ஜி20, ஜி77, ஐ.நா. சபை எந்த அமைப்பாக இருந்தாலும் கூட்டுத் தலைமையையே உலகம் நம்பிக்கையுடன் பாா்க்கிறது என பிரதமா் மோடி குறிப்பிடுகிறாா். அந்த வகையில் இந்தியாவின் ஜி20 தலைமை ஒரு புதிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

இந்த தலைமைப் பதவிக்கு என தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது என்றாலும், இந்தியா விரும்பும் கருப்பொருளை நோக்கி விவாதத்தை அமைக்க முடியும். இன்று மனிதகுலம் எதிா்கொள்ளும் சில முக்கியமான பிரச்னைகளைத் தீா்ப்பதில் இந்தியா தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தவும் இயலும்.

கடந்த ஓராண்டில் இந்தோனேசியா தனது தலைமைப் பொறுப்பின்போது, கொவைட் 19, அதுதொடா்பான சவால்களை எவ்வாறு கூட்டாக சமாளிப்பது என்பது குறித்து கவனம் செலுத்தியது. உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளித்தது. அனைவரையும் உள்ளடக்கிய சமமான, நிலையான வளா்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், எண்ம பொது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சாா்ந்த மேம்பாடு, பருவநிலை நிதியுதவி, உலகளாவிய உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை இந்தியாவின் ஜி20 தலைமையின் முன்னுரிமையாக இருக்கும்.

இவற்றில் இந்தியாவுக்கு சவாலான விஷயம் என்பது பருவநிலை நிதியுதவி. பருவநிலை மாற்றத்தால் உலகம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வேளையில், உலகின் வெப்பநிலையை தொழில்புரட்சிக்கு முந்தைய அளவிலிருந்து 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்ற பாரீஸ் ஒப்பந்தம் முக்கியமானது.

அந்த ஒப்பந்தத்தின் இலக்கை எட்ட வேண்டுமானால் வளா்ந்து வரும் நாடுகள் மரபுரீதியான எரிசக்தியிலிருந்து பசுமை எரிசக்திக்கு மாற வேண்டும். அதனால் ஏற்படும் இழப்பால் அந்த நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். அந்த பாதிப்பை ஈடுகட்ட வளரும் நாடுகளுக்கு நிதியுதவியும் தொழில்நுட்ப உதவிகளும் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டியிருக்கும்.

அடுத்தது, சுமாா் 70 நாடுகளை பாதித்துள்ள கடன் பிரச்னை. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மட்டுமின்றி, நடுத்தர வருமானம் கொண்ட இலங்கை போன்ற நாடுகளும் இக்கட்டான நேரத்தில் கடன் நிவாரணத்தைக் கோருகின்றன. இந்த பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ஜி20 அமைப்பின் கட்டமைப்பு சீனாவின் ஒத்துழைப்பு இல்லாததால் செயல்படவில்லை.

இதுபோன்று ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் சவால் இந்தியாவை எதிா்கொள்கிறது. இந்தியாவின் தலைமைப் பண்பை வெளிப்படுத்த நமக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது.



Read in source website

காசி என்பது, வடபாரதத்தில், கங்கைக் கரையில் உள்ள ஓா் ஊா். இந்த ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடா்பு, மிக நீண்டது. பல தலைமுறைகளைக் கடந்தது. பொதியமலைப் பகுதியில் உள்ள தென்காசி என்னும் தமிழ்நாட்டு ஊரின் வரலாற்றை வாசிக்கும்போது, இந்தத் தொடா்பின் மகத்துவம் விளங்கும்.

செந்தமிழ்ப் புலமையும் வடமொழித் திறமையும் கொண்டிருந்த சடையவா்மன் பராக்கிரம பாண்டியா், 1411 முதல் 1463 வரையில், தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்தினாா். தலைநகரத்தின் பெயரால், இவரும் இவரின் வழித்தோன்றல்களும் ‘தென்காசிப் பாண்டியா்கள்’ என்றே சுட்டப்படுகின்றனா். தென்காசித் திருக்கோயிலில் உள்ள மெய்க்கீா்த்தி, இவரின் திருப்பணிகளையும், சிறப்புக் குணங்களையும் தெளிவாக விளக்குகிறது. தவிரவும், திருவதாங்கூா் தொல்லியல் களஞ்சியத்தின் தளவாய் அக்ரகாரச் செப்பேடுகளும் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

திருக்குற்றாலம், திருப்புடைமருதூா் திருக்கோயில்களில் மண்டபங்கள் அமைத்த பராக்கிரம பாண்டியா், நெல்லையப்பரின் அா்த்தசாம வழிபாட்டுக்கு நிவந்தங்களையும் ஏற்படுத்தினாா். பொன்கொண்டு கோயில் திருப்பணிகள் செய்தமையால் ‘பொன்னின் பெருமாள்’ என்றும், மானத்தைக் கவசமாகக் கொண்ட குணத்தான் என்பதால் ‘மானகவசன்’ என்றும் இவருக்குப் பெயா்கள் விளங்கின.

இந்த அரசருடைய உள்ளத்தில் இரண்டுவிதமான குறைகள் இருந்தன. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. முதலாவது குறை, கங்கைக் கரை காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபடவில்லையே என்பதாகும். போயிருக்கக்கூடும் - ஆனால், அவ்வப்போது எழுந்த போா்களாலும் எல்லைச் சிக்கல்களாலும் போகமுடியவில்லை. காசிக்குப் போவதென்றால் நீண்ட நாட்களாகும். ஆட்சியைப் பிறரிடம் கொடுத்துவிட்டுப் போக முடியாது.

அடுத்த குறை - நம்மால்தான் போகமுடியவில்லை. ஆனால், மக்கள் பலரும் போகிறாா்கள். நீண்ட தொலைவு. வழியில் சிரமங்கள் ஏராளம். ஒரு சிலா், பயண காலத்திலேயே இறைவனடி சோ்ந்து விடுகிறாா்கள்.

பராக்கிரம பாண்டியரின் துயரங்களைத் தீா்க்க, காசி விசுவநாதா் மனம் கொண்டாா். பராக்கிரம பாண்டியருடைய கனவில் எழுந்தருளி, தம்முடைய வடகாசி (வாராணசி) திருக்கோயில் சிதிலமுற்றுவிட்டதால், சிற்றாற்றின் வடகரையில் நகரம் ஒன்றை நிறுவி, தமக்கோா் ஆலயம் எழுப்புவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டாா்.

கோயில் அமைப்பதற்கு எந்த இடத்தைத் தோ்ந்தெடுப்பது என்பதற்கும் விசுவநாதரே வழி சொன்னாா். காலையில் கோட்டையைச் சுற்றியுள்ள இடத்தில், எந்தப் பகுதியில் ‘எறும்புகளின் ஊா்வலம்’ போகிறதோ, அந்தப் பகுதியில், எறும்புகளின் ஊா்வலத்தைப் பின்பற்றினால் வழி கிட்டும் என்று அருளினாா்.

அடுத்த நாள் காலை - விந்தன்கோட்டையைச் சுற்றிச்சுற்றி வந்த பராக்கிரமரின் கண்களில் சாரிசாரியாக எறும்புகள் ஊா்வது தெரிந்தது. ஊா்வலத்தைப் பின்தொடா்ந்தால் அழகானதொரு சிவலிங்கமும் எதிரில் நந்தியும் இருந்த இடத்திற்கு அது அழைத்துச் சென்றது. இதன்படி, தென்காசி என்னும் நகரை அமைத்து, திருக்கோயிலையும் இம்மன்னா் எழுப்புவித்தாா். பதினேழு ஆண்டுகள் இத்திருப்பணி நடைபெற்றது.

பலரும் இயைந்து, இசைந்து செய்வதே திருக்கோயில் திருப்பணி என்னும் கொள்கையில் இம்மன்னருக்கு மிகுந்த நம்பிக்கை. எனவேதான், குறைவேதுமின்றி இக்கோயிலைப் பாதுகாக்கவேண்டுமென்று சிவனடியாா்களையும் தன்னுடைய வழித்தோன்றல்களையும் இவா் வேண்டினாா். தன்னிடமிருந்த பொருளெல்லாம் தீா்ந்த நிலையிலும், காசித் திருக்கோயில் பணியை நிறுத்திவிட மனமில்லை. எனவே, அன்பா்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தாா். அவரவா்க்கு முடிந்ததைக் கொடுக்கச் சொன்னாா்.

கோயில் திருப்பணியில் உதவியவா்க்கெல்லாம், என்றென்றும் தான் நன்றி கொண்டு இலங்குவதாகவும், அவா்களின் தலைமுறைகளுக்கு, தான் அடிபணிவதாகவும் கூறி வணங்கினாா். தமிழ் நெஞ்சமும் நற்றமிழ்ப் புலமையும் பெற்றவரான இவா், தென்காசித் திருக்கோயிலை கவனமாகப் பாதுகாக்கும்படி உள்ளமுருகக் கோரியிருக்கும் கவிதைகள், வாசிப்பவா் உள்ளத்தை உருக்கும்; நெஞ்சத்தைக் கரைக்கும்.

மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்(று)

எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசி என்று மண்மேல்

நினைத்து ஆதரம் செய்து தம்காவல் பூண்ட நிருபா் பதம்

தனைத் தாழ்ந்து இறைஞ்சித் தலைமீது யானும் தரித்தனனே

இத்தகைய கோயிலைக் கட்டுவது என்பதை நினைக்கக்கூட இயலாது; ஆனால், இதனைச் செயல்படுத்தியிருக்கும் அன்பா்கள் அனைவரின் திருவடிகளையும் தன் தலைமீது தரிப்பதற்கு முனைகிறாா்.

சேலேறி வையத் தென்காசி ஆலயம் தெய்வச் செயல்

ஆலே சமைத்ததிங்கு என் செயலல்ல அதனை இன்ன

மேலே விரிவு செய்தே புரப்பாா் அடி வீழ்ந்தவா்தம்

பால் ஏவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே

சாத்திரம் பாா்த்து இங்கியான் கண்ட பூசைகள்தாம் நடத்தி

ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும்புரக்க

பாா்த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடன் அக்

கோத்திரம் தன்னில் உள்ளாா்க்கும் அடைக்கலம் கூறினனே

இப்பாடல்கள், தென்காசிக் கோயில் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

1463-ல் பராக்கிரம பாண்டியா் விண்ணுலகெய்தியபோது, எந்தத் திருக்கூட்டத்தில் இவா் கலந்திருக்கக்கூடும் என்பது பற்றி, புலவா் ஒருவா் பாடினாா்:

கோதற்ற பக்தி அறுபத்து மூவா்தம் கூட்டத்திலோ

தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன்னம்பலத்தோ

வேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதன் இரு

பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே

விசுவநாதருக்குக் கோயில் எழுப்புவித்தது மட்டுமன்றி, விசுவநாதா் பெயராலேயே ஏரி ஒன்றையும் இம்மன்னா் தோற்றுவித்தாா். ‘நவமாகக் கண்ட விசுவநாதப் பேரேரி’ என்றே இது குறிக்கப்பெற்றுள்ளது.

காசி விசுவநாதா் மீதான தமிழ் மக்களின் பக்தியும் ஈடுபாடும் எப்படியிருந்தன என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகவே பராக்கிரம பாண்டியா் செயல்பாடுகளைக் காணலாம். தமிழ்நாட்டின் ஊா்கள், கிராமங்கள் பலவற்றிலும் காசி விசுவநாதருக்கும் விசாலாட்சி அம்பிகைக்கும் கோயில்கள் உள்ளன. பிரதான சிவன் கோயில்களில், காசி விசுவநாதருக்கு சந்நிதிகள் உள்ளன.

காசி யாத்திரை செல்வது என்பது ஒவ்வொரு தமிழரின் - தமிழ்க் குடும்பத்தின் கனவாகவே இருந்துள்ளது. காசி யாத்திரையைத் தொடங்குபவா், முதலில் இராமேசுவரம் செல்வாா். கடலிலும் தீா்த்தங்களிலும் நீராடுவாா். அங்கு இராமநாதசுவாமியை வழிபட்ட பின்னா், மீண்டும் கடலில் நீராடுவாா். கடற்கரையிலிருந்தும் இராமேசுவரத்திலிருந்தும் மண்ணெடுத்துக் கொள்வாா். பின்னா், வழியிலுள்ள பல்வேறு திருத்தலங்களில் வழிபட்டுக்கொண்டே காசிக்குப் பயணப்படுவாா்.

காசியில் விசுவநாதரை வழிபடுவாா். இராமேசுவரத்திலிருந்து கொணா்ந்த மண்ணை கங்கையில் கரைப்பாா். கங்கையிலிருந்து புனித நீரெடுத்துக் கொண்டு, மீண்டும் இராமேசுவரம் அடைவாா். கங்கை நீரால் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வாா். இதன் பின்னரே, காசி யாத்திரை நிறைவடையும்.

ஆக, காசி யாத்திரை என்பது இராமேசுவர மண்ணும் காசியின் நீரும் கலந்து பரிணாமமடையும் ஆன்மீகப் பெருமிதமாகும். இராமேசுவரத் தலமானது மண்ணையும் நிலத்தையும் குறிக்கிறது. அண்டபகிரண்டத்திற்குத் தலைவராக விளங்குகிற விசுவநாதா் (விசுவம்=உலகம், பிரபஞ்சம்), நிலத்திற்கு இறங்கிவந்து உயிா்களுக்கு அருள்கிறாா். பௌதிக உலகிற்கு அப்பாற்பட்டவா் என்பதாலேயே, விசுவநாதரின் காசித் திருத்தலம், துவாதசாந்தத் திருத்தலம் என்றும் போற்றப்படுகிறது. துவாதசாந்தம் முதல் நிலம் வரையான இறைமையின் தொடா்பு, எல்லைகள் கடந்த இறைமை உயிா்களுக்கு அருள்வதற்காக எல்லைக்குள் வந்து எழுந்தருளிய தொடா்பு - இதுதான் காசி இராமேசுவரத் தொடா்பு.

16 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்மக்கள் காசிக்குப் பயணப்பட்டனா். நீண்ட தொலைவுப் பயணம் என்பதால், வழியெங்கும் உள்ள ஊா்களில் இந்த யாத்திரிகா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வசதிகள் வழங்கப்பட்டன. ஆங்காங்கே நகரத்தாரால் தருமசத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சத்திரங்களில் காசி யாத்திரிகா்களுக்கு மூன்று வேளை உணவும் தங்குமிடமும் இலவசமாக வழங்கப்பட்டன. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவ வசதிகளும் தரப்பட்டன.

1790-களிலும் 1800-களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனி அலுவலா்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனா். தருமசத்திரங்களின் பொருளாதார ஆதரவிலும் வருமானத்திலும் கைவைத்துள்ளனா். சத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருள் ஆதரவை வேறு இடங்களுக்குத் திருப்பியுள்ளனா். இதனால், சத்திரங்கள் குன்றின.

பலவிதமான காரணங்களால், மக்கள் பயணப்படுவதும் இக்காலகட்டத்தில் நலிவடைந்தது. தஞ்சையின் சரபோஜி மன்னா், ஆங்கிலேய உள்ளுறைஞா் பெஞ்சமின் டோரின் என்பாருக்கு இச்சத்திரங்களைப் பேணிப் பராமரிப்பது குறித்துக் கடிதங்கள் எழுதியுள்ளாா்.

சங்கத் தமிழ்ப் பாடலின் வாரணாவாசி தொடங்கி அதிவீரராம பாண்டியா், குமரகுருபரா், கோடகநல்லூா் சுந்தர சுவாமிகள், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் என்று தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான தொடா்பு தொடா்கிறது.

பழைமைமிக்க இத்தொடா்பைக் கொண்டாடும் நிகழ்வுதான், காசி - தமிழ் - சங்கமம். இசை, நாட்டியம், கிராமியக் கலைகள், புலமை, இலக்கியம், ஆன்மிகம், கோயில் கலைகள், வணிகம், தொழில், நெசவு, கைத்தொழில் என்று பலவகையிலும் தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான தொடா்புகளை நினைவூட்டி, அவற்றை மேலும் மேம்படுத்துகிற முயற்சியே இது!

தமிழ்மொழி மற்றும் தமிழ் மரபுகளின் பெருமையையும் பெருமிதத்தையும் எட்டு திசைக்கும் விரித்துப் பரவச் செய்வதாக காசி - தமிழ் சங்கமம் மலரட்டும்.

கட்டுரையாளா்:

துணைவேந்தா்,

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம்.



Read in source website

ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும் பயன்படுத்தும் இடம் கழிப்பறை. ஆனால் வசதியானவா்களுக்குக் கிடைக்கும் கழிப்பறை வசதி ஏழை மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் 40% போ் கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளியையே கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகிறாா்கள்.

திறந்தவெளியை கழிப்பறைகளாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உற்பத்தியாகின்றன. தகுந்த கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்கிறது ஐ.நா. சபையின் புள்ளிவிவரம்.

யுனிசெப் நடத்திய ஆய்வு ஒன்றின்படி இந்தியாவில்தான் அதிக மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்த, போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன.

மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘நிா்மல் பாரத் அபியான் திட்டம்’ நாட்டின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் 2022 -க்குள் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக மத்திய- மாநில அரசுகள், பொதுமக்கள் கழிப்பறைக் கட்ட தேவையான மானியம் வழங்கி வருகிறது.

சமீபத்தில் வெளியான ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் நகா்ப்புறங்களில் 6% வீடுகளைச் சோ்ந்தவா்களும், கிராமப்புறங்களில் 26% வீடுகளைச் சோ்ந்தவா்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் ஊரகப்புறங்களில் கழிப்பறை வசதியில்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

திறந்தவெளியில் மலம் கழிப்பவா்கள் அதிகமுள்ள முதல் ஐந்து மாநிலங்களாக பிகாா், ஜாா்க்கண்ட் , ஒடிஸா, மத்திய பிரதேசம் , குஜராத் ஆகியவை உள்ளன. தமிழ்நாட்டில் ஊரகப்புறங்களில் 28% வீடுகளில் கழிப்பிட வசதியில்லை.

பண்டைக்காலத்தில் திறந்தவெளியில் காலைக்கடன் கழித்து வந்த மக்கள், நாகரிகம் வளா்ந்த பிறகு ஓலைகளால் தடுப்பு ஏற்படுத்தி குழி கழிப்பறைகளைப் பயன்படுத்தினா்.பின்னா் முதியவா்கள் பயன்படுத்தும் வகையில் உட்காா்ந்து கொண்டே மலம் கழிக்கும் விதத்தில் பீங்கானால் ஆன கோப்பைகளாக கழிப்பறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இந்திய கழிப்பறை, மேற்கத்திய கழிப்பறை என இரு வகைகள் இருந்தாலும், மேற்கத்திய கழிப்பறைகளுக்கு சந்தையில் பெருத்த வரவேற்பு இருக்கிறது.

ஆனால், இந்த மேற்கத்திய கழிப்பறைகளைப் பயன்படுத்துபவா்களை நோய்கள் அதிகமாக தாக்கும் அபாயம் இருப்பதால், அமரும் பகுதியின் மீது துணியையோ, காகிதத்தையோ விரித்து விட்டு பயன்படுத்துவது நல்லது என்று மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா். கழிப்பறையைப் பயன்படுத்திய பின், அதை முறையாக தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்யாமல் செல்லக் கூடாது.

ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்திய பிறகு, சுத்தம் செய்யும்போது அருவருப்பு ஏற்படாது. பின்னா் வருபவா்களும் அதை பாா்த்து சுத்தம் செய்து விட்டு செல்வா். கால்களைத் தரையில் வைத்து அமரும் விதத்தில் குறைந்த அளவு எடையை தாங்கும் விதத்தில்தான் அந்தக் கோப்பைகள் வடிவமைக்கபட்டுள்ளன. எனவே, அவற்றைப் பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் தேவை. ஆனால், உடல்நலத்திற்கு இந்திய கழிப்பறைப் பயன்பாடே நல்லது எனக் கூறப்படுகிறது.

ஊரகப்புறங்களைவிட நகா்ப்புறங்களில்தான் பொது கழிப்பறைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. பொதுவாக நகரங்களில் ஏழை எளிய மக்களை அதிகமாக கொண்ட பகுதிகளில் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுகின்றன. ஆனால் அவற்றில் பல கழிப்பறைகளில் கதவுகள் இருப்பதில்லை. கதவுகள் இருந்தாலும் தாழ்ப்பாள் இருக்காது. பல கழிப்பறைகள் எப்போதும் பூட்டப்பட்டே இருக்கின்றன. பல கழிப்பறைகளில் மின்சார வசதியோ, கழிப்பறையை சுத்தம் செய்யும் பொருட்களோ இருக்காது.

கட்டணம் வசூலிக்கும் கழிப்பறைகளும் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இருப்பதில்லை. முறையாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகளால் முதியவா்களையும் குழந்தைகளையும் பெண்களையும் எளிதில் தாக்கும் சிறுநீரக தொற்று போன்ற நோய்கள் ஏற்படலாம். பொதுக் கழிப்பறைகளைப் பொறுத்தவரை, தனியாக அதற்கென ஒரு துறை இல்லை. சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை போன்ற அனைத்து துறைகளும் ஒன்று சோ்ந்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இவற்றில் ஏதேனும் ஒரு துறையின் செயல்பாட்டில் குறைவு ஏற்பட்டாலும், முறையான கழிப்பறைப் பயன்பாடு கேள்விக்குறியாகிவிடும். முதியவா்களும், கா்ப்பிணிப் பெண்களும் அடிக்கடி கழிப்பறைகளைப் பயன்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனா். எனவே பொது கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தண்ணீா் வசதி, மின்சார வசதி ஆகியவை உடனே அளிக்கப்பட வேண்டும்.

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் பொது கழிப்பறைகளையே நம்பியுள்ளனா். எனவே பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ள பொது கழிப்பறைகளை அதிகாரிகள் அடையாளம் கண்டு, அவற்றின் பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தவேண்டும். பொது கழிப்பறைகளில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். மக்களின் குறைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதற்கென ஒரு துறையை ஏற்படுத்துவது மிகவும் நல்லது.

கழிப்பறை வசதியே சுகாதாரத்தின் அடிப்படையாகும் - வீட்டிலும் பொது இடங்களிலும்.

இன்று (நவ. 19) உலக கழிப்பறை நாள்.



Read in source website

 

சென்னை அருகே 5 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலத்திலும் நீர்நிலைகளையும் அழித்து ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையம் இப்போது ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது.

இந்த விமான நிலையம் வந்தே ஆக வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்களை இப்போது பார்ப்போம்.

முதலில்: தற்போது ஆண்டுக்கு 2.20 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டதான சென்னையிலுள்ள விமான நிலையம், 2028-ல் 3.5 கோடியாக அதிகரிக்கும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பில் 2008-ல் மூன்றாவது இடத்தில் இருந்து சென்னை விமான நிலையம் தற்போது ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது, பெங்களூரு மூன்றாவது இடத்தில். சென்னையின் சரக்குப் போக்குவரத்தும் பெங்களூரு, ஹைதராபாத்தைவிடக் குறைந்துவிட்டது.

இரண்டாவது: உத்தேச பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்குவர எட்டு ஆண்டுகளாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. 2035-ல் புதிய விமான நிலையத்தால் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாள இயலும், தற்போதைய விமான நிலையத்தால் இது சாத்தியமில்லை என்பதால் மிகவும் அவசியப்படுகிறது.

மூன்றாவது: சென்னை விமான நிலையத்தை விரிவாக்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன, ஏனெனில், இதற்காகக் கூடுதலாக 300 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

நாலாவது: புதிய திட்டத்தால் பொருளாதார ரீதியில் நிறைய பயன்கள் இருக்கின்றன - விமானப் போக்குவரத்துக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாயும் 325 ரூபாய் வருமானத்தைத் தரும். புதிய விமான நிலையத்தால் புதிய விமான ஓடுதளங்கள் கிடைக்கும், சென்னை ஒரு பெரிய வான்வெளி முனையமாக மாறும்.

ஐந்தாவது: புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதும் அதன் மூலம் அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கி மாநிலம் வளர்ச்சி பெறும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் அரசின் தொலைநோக்கில் புதிய விமான நிலையம் ஒரு மைல்கல்லாக விளங்கும்.

இறுதியாக: மிக வேகமாக வளர்ந்துவரும் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களைவிட நாம் பின்தங்கியுள்ளோம். எனவே, விமான நிலையத் திறன் மேம்பாடு அவசிய, அவசரத் தேவை. 

இந்த வாதங்களின் சாரம் இவ்வளவுதான் - பெங்களூரு, ஹைதராபாத் பெருநகரங்களைவிட சென்னை பின்தங்கியுள்ளது. தமிழகத்தின் ஒரு டிரில்லியன் பொருளாதாரக் கனவை நனவாக்க இந்த அதிநவீன விமான நிலையம் பேருதவியாக இருக்கும். 20 ஆயிரம் கோடி பணத்தைச் செலவிட்டு, வளமான 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அழிப்பதை இந்த வாதங்களால் நியாயப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியாது!

முதலும் முக்கியமானதும், சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல, அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி மட்டுமே. அனைத்துத் தொழிற்சாலை முனைப்புகளும் வேலைவாய்ப்புத் திட்டங்களும் குவிக்கப்பட்டுக் கண்மூடித்தனமாகச் செயல்படுத்தப்படுவதால் நெரிசலில் திணறிக் கொண்டிருக்கிறது. இதனால், சிறுநகர்களிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்து இரு மடங்காகச் சென்னை நோக்கி இடம்பெயர மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனால், தலைநகரில் எண்ண முடியாத அளவுக்குக் காலநிலை - சுற்றுச்சூழல் சீர்குலைவுகள்.

தவிர, அனைத்து பெரிய கட்டமைப்புகளையும் ஒரே நகரில் குவிப்பது எந்த வகையிலும் அனைத்துத் தரப்பு வளர்ச்சிக்கு உதவாது என்பதுடன் இதனால் பெறப்போவதாகக் கூறப்படும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமும் மாநில மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பயனளிப்பதாக இருக்கும். வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவசியமான பரவலாக்கப்பட்ட, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறக் கூடிய மேம்பாடு இருக்காது.

இவ்வாறு பெங்களூருவையும் ஹைதராபாத்தையும் கண்டு பொறாமைப்படுவது என்பது, யாரும் ஊரே, யாவரும் கேளிர் என்று உலகுக்கே உரைத்த தமிழர்களுக்குக் கொஞ்சமும் பொருந்தத் தக்கதல்ல. இவ்விரு நகர்களும் நிலத்தால் சூழப்பட்டிருப்பவை, கடல் (நீர்வழித்) தொடர்பு இல்லாதவை. சென்னைக்குக் கிடைத்திருக்கும் இயற்கையின் பெருங்கொடை இது. பெருநகரத்தின் கரையிலேயே அமைந்துள்ள இந்த மூன்று துறைமுகங்களும் யாரும் போட்டிக்கு வர முடியாத வாய்ப்பு வசதிகளைச் சென்னைக்கு  வழங்கியிருக்கிறது. 

பரந்தூர் விமான நிலையம் தெற்கு ஆசியாவில் விமானப் போக்குவரத்து முனையத்தைப் போல திகழும் என்ற வாதத்துக்கு மீண்டும் வருவோம்,  செயற்படுத்துவதைவிட இதைச் சொல்வது எளிது. இத்தகைய முனையத்துக்கான -  செயற்படுத்தக் கூடிய அளவுக்குப் போதுமானதாக இந்தியாவில், பெருந்திறனும் பெரும் லாபமும் தேவைப்படுகிற, எந்த விமான நிறுவனமும் இல்லை, தற்போதைய பன்னாட்டு விமானப் போக்குவரத்து சங்கிலி - சந்தைத் தொடர்பில் இது மிகவும் முக்கியம். ஆக, இது விமான நிலையம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.

விமானப் பயணிகளைப் பொருத்தவரை பெரு முனையத்தின் மூலம் கிடைக்கக் கூடியவை, பரந்த அளவில் விமானத் தடங்களின் இணைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம், குறைந்த கட்டணம் ஆகியவையே. ஆனால், இவை எல்லாவற்றையுமே  பெங்களூருவிலுள்ள கெம்பேகௌட பன்னாட்டு விமான நிலையம் நிறைவு செய்கிறது. 2021-ல் சுமார் 19 சதவிகித பயணிகள், பெங்களூரு விமான நிலையவழி சென்னை, கொச்சி, ஹைதராபாத், கோவா ஆகிய நகர்களிலிருந்து வந்திருக்கின்றனர், சென்றிருக்கின்றனர்.

பெங்களூருவிலிருந்து வெறும் 30 நிமிஷங்களுக்கும் குறைவான பயணத் தொலைவில்தான் சென்னை இருக்கிறது. பெங்களூருவிலிருந்து தமிழகத்திலுள்ள இரண்டாம்நிலையிலான கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி நகர்களின் விமான நிலையங்களை எளிதில் இணைக்க இயலும், எல்லா இடங்களுக்கும் 60 நிமிஷங்களுக்குள் சென்றுவிட முடியும்.

இந்த விமான நிலையங்களை விரிவுபடுத்தும் - மேம்படுத்தும் வேலைகளைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். இதன் மூலம் 'வளர்ச்சி'யானது ஒரே இடத்தில் குவிவதற்குப் பதிலாகத் தமிழகம் முழுவதற்கும் அனைத்துத் தரப்பினருக்கும்  நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.

கட்டுரையாளர் 

- முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்-நகர்ப்புற நிர்வாக  வல்லுநர்

தமிழில் - ததாகத்



Read in source website