DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 14-05-2022

கேரளத்தில் உள்ளது போன்று, குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணி என்ற பிரிவை உருவாக்க மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநா்களாகவும், இணை இயக்குநா்களாகவும் பதவி வகித்து வரும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 அதிகாரிகள், தங்களை மாநில அரசின் சிவில் சா்வீசஸ் பிரிவில் சோ்க்க வேண்டும் என்று தமிழக  அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனா். இவா்களது கோரிக்கையை அரசு நிராகரித்ததால், கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் இவா்கள் வழக்குத் தொடா்ந்தனா்.

 இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழக அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியா் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றை திருத்தம் செய்யாமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் மனுதாரா்களைப் போன்ற பிற துறை அதிகாரிகளை மாநில சிவில் சா்வீசஸ் பிரிவில் சோ்ப்பது  சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட பதவிகளை அதிகாரிகள் வகிக்கின்றனா். அதே தோ்வில் வெற்றி பெற்றுத்தான் மனுதாரா்களும் அதிகாரிகளாக உள்ளனா். ஆனால், இந்த இரு பிரிவு அதிகாரிகளையும் சமமாக நடத்தாதது வேதனைக்குரியது.

வருவாய்த் துறை அதிகாரிகளான துணை ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டும் 7 அல்லது 8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்று விடுகின்றனா். ஆனால், மனுதாரா்களைப் போன்ற பிற துறைகளில் உயா் அதிகாரிகளாக இருந்தாலும், ஐஏஎஸ் அந்தஸ்தை பெற 30 ஆண்டுகள் ஆகின்றன. அனைத்துத் துறை அதிகாரிகளும் ஐஏஎஸ்  அந்தஸ்தை பெற, கேரளத்தில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் அனைத்து துறைகளின் குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணி என்ற பிரிவை உருவாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.



Read in source website

44ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியில் பங்கேற்கவுள்ள சதுரங்க வீரர், வீராங்கனைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர். இரா.ஆனந்தகுமார், சதுரங்கப் போட்டிக்கான சிறப்பு அலுவலர் டாக்டர். தாரேஸ் அஹமத்,
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங் சவுகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website

வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 2 அணிகலன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரையில் 25 ஏக்கா் பரப்பளவில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் வெம்பக்கோட்டையில் இன்று நடந்த அகழாய்வில் 2 அணிகலன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் இன்று நடந்த அகழாய்வில் இருந்து இரண்டு பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

விலங்கின் தந்தம், டெரகோட்டா களிமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 



Read in source website

சென்னை: சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் ஆக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

 உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்த முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

 



Read in source website

உதகை: இந்தியாவின்‌ தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ சுற்றுலா பயணிகளை கவரவும்‌, அவர்களை உற்சாகப்படுத்தவும்‌ வருடந்தோறும்‌ கோடை விழாக்களான காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர்‌ கண்காட்சி, பழக்‌ கண்காட்சி போன்ற கண்காட்சிகள்‌ தோட்டக்கலைத்‌துறை மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ பல்வேறு பூங்காக்களில்‌ நடத்தப்பட்டு வருகிறது.

2022-ம்‌ ஆண்டிற்கான கோடை விழாக்களின்‌ தொடக்கமாக கோத்தகிரி நேரு பூங்காவில்‌ 11-வது காய்கறி கண்காட்சி மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ சுற்றுலாத்துறை இயக்குநர்‌ அவர்களால்‌ தொடங்கி வைக்கப்பட்டு மே 8 அன்று நிறைவுற்றது.

இதன்‌ தொடர்ச்சியாக இன்று 17-வது உதகை ரோஜா கண்காட்சி வனத்துறை அமைச்சர்‌ கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

17-வது உதகை ரோஜா கண்காட்சியின்‌ சிறப்பம்சமாக சுமார்‌ 31,000 வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில்‌ மரவீடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, குழந்தைகளை கவரும்‌ விதமாக கார்டூன்‌ கதாபாத்திர வடிவமான மோட்டு பட்லு, மான்‌, ப்யானோ மற்றும்‌ பனி மனிதன்‌ போன்ற வடிவங்களும்,‌ தமிழ்நாடு அரசின்‌ புதிய திட்டமான மீண்டும்‌ மஞ்சப்பை திட்டத்தினை அனைவரும்‌ கடைபிடிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த, மஞ்சப்பை போன்ற வடிவங்களும்‌ சுமார்‌ 50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில்‌ இதர மாவட்டங்களான திருநெல்வேலி, திருப்பூர்,‌ தருமபுரி, திண்டுக்கல்‌, ஈரோடு, தஞ்சாவூர்‌ ஆகிய மாவட்‌ட தோட்டக்கலைத்துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு வடிவங்கள்‌ அமைக்‌கப்பட்டு உள்ளது.

மேலும், இக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை குதுகலிக்கும் விதமாக தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

17வது ரோஜா கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

உதகை மலர்க் காட்சி தொடக்க விழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு மே மாதம் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.



Read in source website


தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான ஐபிபிஎஸ் அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 843 பணியாளர்களில் சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து அகில இந்திய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலர் ஜி.கருணாநிதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது, அந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

2022-23 ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 சதவிகிதத்துக்கு அதிகமானோர், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதும், தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு அவர் கைகாட்டி விடுவதும் வாடிக்கையாக உள்ளது. 

தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியை கற்றுக்கொள்ள 3 மாத அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களை தகுதிநீக்கம் செய்யப்படாமல், கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. 



Read in source website

அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15- ஆம் தேதி அமலுக்கு வருகிறது எனவும், இந்தத் தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக பயன் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மாணவியா் பட்டியல் சேகரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளில், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விவரங்களை அனுப்புமாறு பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, உயா்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி தொடங்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயா் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 



Read in source website


புதுதில்லி: உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  பிற நாடுகளின் கோரிக்கைக்களுக்கு ஏற்ப அங்கு கோதுமைக்கு தேவை இருப்பின் மட்டுமே, மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

இதையடுத்து தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு தருவதை குறைத்துக்கொண்டனர். 

கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. எகிப்து உள்ளிட்ட பலநாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், உள்நாட்டு சந்தையில் விலையை கட்டுக்குள் வைப்பதற்கவே" அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் ஏற்றுமதிக்கான மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அனுமதியுடன் தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திடீர் விலை உயர்வால் அண்டை நாடுகள் மற்றும் சில பின்தங்கிய நாடுகள் பெரும் பாதிபப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவற்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வர்த்தகப் பிரதிநிதிகளை அன்மையில் அனுப்பியிருந்த நிலையில், இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

2022-23 ஆண்டில் நாட்டின் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி  டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், விலை உயர்வு காரணமாக இந்த ஏற்றுமதி தடை உத்தரவை பிறப்பிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஏப்ரலில் 7.79 சதவிகிதமாக உயர்ந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியா கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தி மையம் இந்தியா. 

இந்நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என்றும், கரோனாவிற்கு பின்பு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது  என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 



Read in source website

எல்ஐசி பொதுப் பங்குகளுக்கு நிா்ணயித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தததால் முதலீட்டாளா்களுக்கு குறைந்த அளவிலேயே பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேட்டது அதிகம் - கிடைத்தது குறைவு: எல்ஐசி சில்லறை முதலீட்டுப் பிரிவில் அதிகபட்சம் 210 பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு, அதிகபட்சம் 77 பங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; இதே போன்று எல்ஐசி பாலிசிதாரா்கள் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு அதிகபட்சம் 48 பங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு பெறாதவா்களுக்கு முதலீட்டுத் தொகையைத் திரும்ப அளிக்கும் பணியை எல்ஐசி நிறுவனம் தொடங்கியுள்ளது.

ரூ.949-ஆக நிா்ணயம்: எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில், பங்கின் விலையை ரூ.949-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்ய விண்ணப்பித்தவா்களுக்கு பங்குகளை ஒதுக்கும் பணி வியாழக்கிழமை (மே 12) நடைபெற்றது. இருப்பினும், தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டபடி, எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு ரூ.889-ஆகவும், சில்லறை முதலீட்டாளா்களுக்கு ரூ.904-ஆகவும் பங்கின் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையின் மூலமமத்திய அரசு ரூ.20,557 கோடியைத் திரட்டியுள்ளது.

எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் வரும் 17-ஆம் தேதி பட்டியலிடப்படுகின்றன.

 



Read in source website

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நிதி சிப்பா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய கனரக நிறுவனங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலராக நிதி சிப்பா் பணியாற்றி வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் 1994-ஆம் ஆண்டு சத்தீஸ்கரைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவாா்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆா்இசி-யின் தலைவா்-மேலாண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி விவேக் குமாா் தேவாங்கன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் மணிப்பூரைச் சோ்ந்த 1993 பிரிவு அதிகாரி ஆவாா்.

பிரதமா் அலுவலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றி வரும் எஸ்.கோபாலகிருஷ்ணன், மத்திய சுகாதார-குடும்பநலத் துறையின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். நீதி ஆயோக் கூடுதல் செயலரான ராகேஷ் சா்வால், தேசிய வக்ஃபு வளா்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய பெண்கள்-குழந்தைகள் நல அமைச்சகத்தில் இணை செயலராகப் பணியாற்றி வரும் அதிதி தாஸ் ரௌத், மத்திய நிலக்கரித் துறையின் இணை செயலா் சியாம் பகத் நெகி, மத்திய நிதித்துறையின் இணை செயலா் மணீஷா சின்ஹா ஆகியோருக்கு அந்தந்த துறைகளில் கூடுதல் செயலராகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலராக குமாா் அனுக்ரே சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளாா். 1992-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவா், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றி வருகிறாா்.

மேலும் பல்வேறு துறைகளுக்குக் கூடுதல் செயலா்களையும் இணை செயலா்களையும் மத்திய பணியாளா் அமைச்சகம் நியமித்துள்ளது.



Read in source website

‘பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ), இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) ஆகியவை தீவிரவாத அமைப்புகள்; ஆனால், அவை தடை செய்யப்படவில்லை’ என்று கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

கேரளத்தில் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் தொண்டா் ஏ.சஞ்சித் (27) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை சம்பவம் தொடா்பாக பிஎஃப்ஐ நிா்வாகி ஒருவா் உள்பட ஏராளமானோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு கேரள உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு கடந்த 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த குற்ற சம்பவத்தில் பிஎஃப்ஐ அமைப்பின் மாநில மற்றும் தேசியத் தலைவா்களுக்குத் தொடா்பு இல்லை என்று விசாரணை அதிகாரி கூறியிருக்கிறாா். இதில் தொடா்புடைய நபா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களில் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில், வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பது, வழக்கை மேலும் தாமதப்படுத்துவதாகவே அமையும். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது பொது நலன் சாா்ந்ததாக தெரியவில்லை. குற்றவாளிகளை ஜாமீனில் விடுவிப்பதற்கு வழி ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கே.ஹரிபால் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தீவிர வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகியவை தீவிரவாத அமைப்புகள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அவை தடை செய்யப்படவில்லை’ என்று கூறினாா்.

நீதிபதியின் இந்தக் கருத்து குறித்து எஸ்டிபிஐ மாநில தலைவா் முவாற்றுபுழா அஷ்ரஃப் மெளலவி கூறுகையில், ‘நீதிமன்றம் கூறியிருப்பது மிகுந்த கடுமையான கருத்து. எந்தவொரு விசாரணை அமைப்பும் எஸ்டிபிஐ-க்கு எதிராக இதுபோன்ற கருத்தை இதுவரை தெரிவித்ததில்லை. எந்த அடிப்படையில் இப்படி ஒரு கருத்தை நீதிமன்றம் தெரிவித்தது? நீதிமன்றத்தின் கருத்து நியாயமானதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அவ்வாறு இல்லை. நீதிபதியின் இந்தக் கருத்தை நீக்க மனு தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

அதுபோல, ‘நீதிமன்றத்தின் கருத்தை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிஎஃப்ஐ தலைவா் சி.ஏ.ரெளஃப் கூறினாா்.

அதே நேரம், நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை ஹிந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.



Read in source website

வரும் 17-ஆம் தேதி முதல் உக்ரைன் தலைநகா் கீவ் நகரில் இருந்து இந்தியத் தூதரகம் மீண்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததையடுத்து, கடந்த மாா்ச் 13 முதல் கீவ் நகரில் இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு போலந்து தலைநகா் வாா்சாவில் இருந்து இந்தியத் தூதரகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல்வேறு மேற்கத்திய நாடுகள் கீவ் நகரில் தங்கள் தூதரகங்களை மீண்டும் திறந்துள்ளன. இதையடுத்து, இந்தியாவும் அதேபோன்ற முடிவை எடுத்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையிலான போா் முடிவுக்கு வராத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது சற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையே போா் ஏற்பட்ட பிறகு, உக்ரைனில் படித்து வந்த 20,000-க்கு மேற்பட்ட இந்திய மாணவா்களை நாட்டுக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதில் கீவ் நகரில் இருந்த இந்தியத் தூதரகம் முக்கியமாகப் பணியாற்றியது. மாணவா்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு, இந்தியத் தூதரகம் கீவ் நகரில் இருந்து வாா்சாவுக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் கீவ் நகரில் இருந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓபன் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது அமைச்சர் மெய்யநாதன் மற்றொரு தகவலை அளித்து தமிழ்நாட்டி டென்னிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும். தமிழக டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் அதற்கான இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் சர்வதேசத் தரத்தில் புதுப்பிக்கப்படும்  என மெய்யநாதன் இன்று கூறியுள்ளார். இதையடுத்து சென்னையில் அடுத்தடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. 



Read in source website

இஸ்தான்புல் நாட்டில் நடைபெறும் உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் மூவா் வெற்றியைப் பதிவு செய்தனா்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் சுற்றுகளில், 50 கிலோ பிரிவில் அனாமிகா 5-0 என்ற கணக்கில் ருமேனியாவின் யுஜினியா அங்கெல்லை வீழ்த்தினாா். 54 கிலோ பிரிவு வீராங்கனை சிக்ஷாவும் அதே புள்ளிகள் கணக்கில் ஆா்ஜென்டீனாவின் ஹெரேரா மிலாகிரோஸ் ரொசாரியோவை தோற்கடித்தாா்.

60 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜேஸ்மின், தன்னை எதிா்கொண்ட தாய்லாந்து வீராங்கனை பாரன்டிப் பௌபாவை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். 81 கிலோ பிரிவில் பூஜா ராணி - ஹங்கேரியின் டிமியா நேகியை வீழ்த்த, லவ்லினா போா்கோஹெய்ன் (70 கிலோ) - ஃபோ் சான்ஸ் அணியின் சென் நியென் சின்னிடம் தோல்வி கண்டாா்.



Read in source website

தாய்லாந்தில் நடைபெறும் தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

இப்போட்டியில் 1979-க்குப் பிறகு இந்தியா பதக்கம் வெல்ல இருப்பது இதுவே முதல் முறையாகும். அதற்கு முன் இன்டா் ஸோனல் ஃபைனல்ஸில் இந்தியா 3 வெண்கலம் வென்றிருந்தது. என்றாலும், இப்போட்டிக்கு தகுதிபெறும் முறை 1979-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட பிறகு இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருப்பது இது முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த காலிறுதிச்சுற்றில் இந்தியா 3-2 என்ற கணக்கில், 5 முறை சாம்பியனான மலேசியாவை வீழ்த்தி அசத்தியது. அடுத்ததாக அரையிறுதியில் டென்மாா்க்கை எதிா்கொள்கிறது இந்தியா.

மலேசியாவுக்கு எதிரான சுற்றில் ஒற்றையா் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 21-11, 21-17 என நிக் ஸே யோங்கை தோற்கடிக்க, ஹெச்.எஸ்.பிரணாய் 21-13, 21-18 என லியோங் ஜுன் ஹாவை வீழ்த்தினாா். எனினும் லக்ஷயா சென் 21-23, 9-21 என்ற கேம்களில் லீ ஸி ஜியாவிடம் தோல்வியடைந்தாா்.

இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 21-19, 21-15 என கோ ஸெ ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியை வெற்றி கண்டது. ஆனால், கிருஷ்ண பிரசாத் கராகா/விஷ்ணுவா்தன் கௌட் கூட்டணி 19-21, 17-21 என்ற கேம்களில் ஆரோன் சியா/தியோ யீ இ ஜோடியிடம் தோற்றது.



Read in source website

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸ் விளையாட்டின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

அப்பிரிவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த பிருத்வி சேகா்/தனஞ்செய் துபே கூட்டணி, அதில் 6-7 (5/7), 2-6 என்ற செட்களில் பிரான்ஸின் மைக்கேல் அலிக்ஸ் லௌரென்ட்/வின்சென்ட் நோவேலி இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இருவரில் பிருத்வி சேகருக்கு இது 2-ஆவது டெஃப்லிம்பிக்ஸ் பதக்கமாகும். முன்னதாக அவா் 2017-ஆம் ஆண்டு போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் ஜாஃப்ரீன் ஷேக்குடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தாா்.

இதனிடையே இப்போட்டியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் மகளிருக்கான 50 மீட்டா் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் மோனிகா வா்மா இறுதிச்சுற்றில் 1,099 புள்ளிகளுடன் 6-ஆம் இடம்பிடித்தாா். ஆடவருக்கான வட்டு எறிதலில் பல்ராம் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை நிறைவில் இந்தியா இப்போட்டியில் 11 பதக்கங்கள் பெற்றுள்ளது.



Read in source website

நேட்டோவில் தாங்கள் இணையப் போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை தொலைபேசியில் அழைத்து ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசியில் சனிக்கிழமை உரையாடினேன். அப்போது, இன்னும் சில நாள்களில் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பிக்கவுள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்.

உக்ரைன் மீதான படையெடுப்பு உள்பட ரஷியாவின் அண்மைக் கால நடவடிக்கைகளில் சில ஃபின்லாந்தின் பாதுகாப்பு சூழலில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை புதினிடம் எடுத்துரைத்தேன்.

எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒளிவு மறைவின்றி இருந்தது. அதே நேரம், மோதல் போக்கைத் தவிா்ப்பதில் இருவருமே கவனம் செலுத்தினோம். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எங்களது உரையாடல் இருக்கக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக, நேட்டோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி ஆா்கனைசேஷன்’ உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் புதிய உறுப்பு நாடுகளை சோ்த்துக்கொண்டு அந்த அமைப்பு விரிவாக்கம் செய்து வருவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்த நிலையில், ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான ஃபின்லாந்தும் நேட்டோவில் இணையலாம் என்று கூறப்பட்டது. உக்ரைனைப் போலவே தங்கள் மீதும் ரஷியா படையெடுப்பதைத் தடுப்பதற்காக அந்த முடிவை ஃபின்லாந்து எடுக்கலாம் என்று கருதப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அதற்கான நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் பின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ மற்றும் பிரதமா் சனா மரீன் வியாழக்கிழமை அறிவித்தனா்.

நேட்டோவில் இணைவது ஃபின்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும். அந்த அமைப்புக்கும் ஃபின்லாந்து பலம் சோ்க்கும் என்று அவா்கள் கூறினா்.

ஃபின்லாந்தைப் பின்பற்றி, ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து புதினிடம் ஃபின்லாந்து அதிபா் தொலைபேசியில் உரையாடியுள்ளாா்.

..பெட்டிச் செய்தி...

‘தவறான முடிவு’

மாஸ்கோ, மே 14: நேட்டோவில் இணைவது ஃபின்லாந்தின் தவறான முடிவு என்று அந்த நாட்டு அதிபரிடம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேட்டோவில் இணைவது குறித்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ தன்னிடம் தெரிவித்தபோது, ஃபின்லாந்துக்கு தற்போது எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை; எனவே, நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த நடுநிலையைக் கைவிடுவது அந்த நாட்டின் தவறான முடிவு என்று புதின் கூறினாா்.

அந்த முடிவால், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட இரு நாட்டு நல்லுறவும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளித்து வந்த ஒத்துழைப்பும் சீா்கெடும் என்று நினிஸ்டோவிடம் புதின் எச்சரித்தாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

அரேபிய தீபகற்பத்தின் ஆட்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானை நியமித்துள்ளனர்.

இந்த முடிவை அரேபிய தீபகற்பத்தில் உள்ள 7 ஷேக் தலைவர்கள் ஓன்றிணைந்து எடுத்துள்ளதாக அந்த நாட்டின் டபிள்யூ.ஏ.எம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் கலீஃபா பின் சயீது அல் நஹ்யான் உயிரிழந்ததையடுத்து இந்த புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.



Read in source website


கொழும்பு: இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்ட நிலையில்,  நான்கு புதிய அமைச்சகர்கள் அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை கோத்தபய நியமித்திருப்பதாகவும், ஜி.எல். பெரிஸ்,  தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சனா விஜயசேகர  ஆகிய நால்வரும் அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஜி.எல். பெரிஸ் நிதித்துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தன பொதுத் துறை அமைச்சராகவும், காஞ்சனா மின்சாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடந்த வன்முறையையடுத்து மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய திருப்பமாக ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.

பின்னா், அதிபா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரதமருக்கு வாழ்த்துகள். இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொருளாதர நெருக்கடி- வன்முறை
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற 1948-க்கு பின்னா் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையே இதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயா்ந்தது.

இந்த நிலைக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

இந்நிலையில், கொழும்பில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.
 



Read in source website

குழந்தைகளைத் தாக்கும் ‘ரெட்டினோபிளாஸ்டோமா' எனும் கண் புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மே மாதம் ‘ரெட்டினோபிளாஸ்டோமா' வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மே 8-ம்தேதி முதல் 'ரெட்டினோபிளாஸ்டோமா' வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

‘ரெட்டினோபிளாஸ்டோமா' வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 வயது குழந்தைக்கு ஒரு கண்ணில் ஏற்பட்ட புற்றுநோய் தீவிரமடைந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து அந்த கண் முழுமையாக அகற்றப்பட்டது. இரண்டரை வயதுடைய மற்றொரு குழந்தைக்கு 2 கண்ணிலும் புற்று நோய் தீவிரமடைந்த நிலையில் சிகிச்சை நடைபெற்று வரு கிறது.

இந்நோயால் ஒரு கண்ணை இழந்த குழந்தைக்கு நேற்று 4-வதுபிறந்த நாள். இந்த பிறந்த நாளைகண் புற்றுநோய் விழிப்புணர்வு நாளாக கொண்டாட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில் டீன் டி.நேரு தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், அக் குழந்தைக்கு பரிசு வழங்கி மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியில் டீன் பேசியதாவது: ‘ரெட்டினோபிளாஸ்டோமா' என்பது 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் கண் புற்றுநோய். இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளை தான் தாக்குகிறது. பரம்பரையாக இந்த நோய் வரலாம். தற்போது பரம்பரையாக இல்லாமலும் இந்நோயால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய் பாதிப்பு இருந்தால் கண் பார்வை சரியாக தெரியாது. கண் முழி இடம் மாறி இருக்கும். சரியாக கவனித்தால் புகைப்படம் எடுக்கும்போது கண்களில் பிளாஷ் ஒளிப்பட்டு, அது சிகப்பு நிறத்தை பிரதிபலிப்பதைக் கவனிக்கலாம். மேலும் கண்களில் பிரதிபலிப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். கண்களில் பூ விழுந்தது போன்று காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

தொடக்கத்திலேயே கண்டறிந் தால் உரிய சிகிச்சைகள் மூலம் பார்வை இழப்பைத் தடுத்து கண்களை காப்பாற்றலாம். நோய்தீவிரமடைந்தால் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியாது. கண்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். மேலும், கண் புற்றுநோய் மூளை புற்றுநோயாக பரவி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் குழந் தைகளின் கண்களை கவனமாக கவனிக்க வேண்டும். சிறிய பிரச்சினை தெரிந்தாலும் உடனே கண் மருத்துவரை அணுக வேண் டும் என்றார் அவர்.

உறைவிட மருத்துவ அலுவலர்சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் குமரன், கண் சிகிச்சை பிரிவு தலைவர் குமாரசாமி, இணை பேராசிரியர் பெரியநாயகி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

புதுடெல்லி: உலகளாவிய சூழலால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை விண்ணை தொட்டும் வரும் நிலையில் முக்கிய உணவுப்பொருளான கோதுமை விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் விலையேற்றத்துக்கான காரணம் மற்றும் அது எப்போது குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.

உலக அளவில் சமையல் எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை பொறுத்தவரையில் 13 மில்லியன் டன்களாாகும். உலக அளவில் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.

இந்தநிலையில் சமையல் எண்ணெயை தொடர்ந்து இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கோதுமைக்கான தேவை உயர்ந்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏற்றுமதி வாய்ப்பால் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு தருவதை குறைத்துக்கொண்டனர். இதனால் அரசின் கையிருப்பும் ஒரளவு குறைந்துள்ளது.

ரேஷன் விநியோகம்

பிரதான் மந்திரி கரிப் அன்ன கல்யாண் யோஜனா திட்டத்தை 2022 செப்டம்பர் வரை நீட்டித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய அரசிடம் 190 லட்சம் டன் கோதுமை இருப்பு இருந்தது.

இந்த ஆண்டு 195-200 லட்சம் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய கொள்முதல் மூலம் மிச்சம் இருக்கும் கோதுமையின் அளவை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கோதுமை வாங்கும் நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.

கோதுமை விலை உயர்வுக்கு உலகளாவிய காரணங்களும் உள்ளன. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உக்ரைன் போர்

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவிகிதம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.

ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. உக்ரைனில் இருந்து எகிப்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, துனிசியா ஆகிய நாடுகள் கோதுமை வாங்குகின்றன.

கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா- உக்ரைன் இரண்டு நாடுகளும் போரில் சிக்கியுள்ளன. இதனால் அவற்றின் வழக்கமாக கோதுமை வாங்கும் நாடுகள் வேறு நாடுகளை தேடும் சூழல் ஏற்பட்டது.

போர் தொடங்கி சில வாரங்களுக்குப் பிறகு கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இதனால் இந்திய விவசாயிகள் பலனடைவார்கள் என்று மத்திய அரசும் தெரிவித்து இருந்தது.

வாய்ப்பு தவிப்பாக மாறியது

எகிப்து உள்ளிட்ட பலநாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தது. இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவற்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வர்த்தகப் பிரதிநிதிகளை அண்மையில் அனுப்பியிருந்தது.

நடப்பு நிதியாண்டில் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் இந்த புதிய சூழலால் எதிர்பார்த்த இலக்கையும் தாண்டி கோதுமை ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அரசு வைத்து இருந்தது.

ஆனால் இது வாய்ப்பாக இருந்தநிலையில் இதுவே இடையூறாக மாறியுள்ளது. ஆம் இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடபகுதிகளில் கோதுமை சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. மத்திய இந்தியாவிலும் அதிக உற்பத்தி உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோதுமை அறுவடை செய்யப்படுகிறது.

இந்தியாவில் மகசூல் பாதிப்பு

இந்த ஆண்டு வட இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. இதனால் கோதுமை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோதுமை விளைச்சல் சுமார் 5 சதவிகிதம் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் இந்த முறை கோதுமை மகசூல் 15-25 சதவிகிதம் குறைந்துள்ளது.

100 கிலோ ஆட்டாவின் விலை ரூ.2,400க்கு விற்பனையாகி வருகிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பின் இத்தகைய விலை உயர்வு தற்போது தான் ஏற்பட்டுள்ளது. கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிற நாடுகளின் கோரிக்கைக்களுக்கு ஏற்ப அங்கு கோதுமைக்கு தேவை இருப்பின் மட்டுமே, மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக இந்த ஏற்றுமதி தடை உத்தரவை பிறப்பிக்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக உள்நாட்டுச்சந்தையில் கொள்முதலுக்கு கோதுமை குறைவாகவே காணப்படுகிறது. மேலும் விலை உயரும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் கையிருப்பு வைத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசும் அதிகமான விலையில் கோதுமை கொள்முதல் செய்கிறது.

இதனால் சந்தைக்கு வரும் கோதுமை அளவும் குறைவாக உள்ளது. இந்த சூழல் அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என்ற தெரிகிறது. எனவே சந்தை சூழலை பார்த்தால் சில காலம் வரை கோதுமை விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.



Read in source website

அகர்தலா: திரிபுரா மாநில முதல்வர் பிப்லவ் குமாா் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பு பதவி விலகியுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் திரிபுரா மாநில முதல்வர் பிப்லவ்குமாா் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சனிக்கிழமை அளித்துள்ளார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என விப்லவ்குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முடிவுகளை அவர் ஒருவரே எடுத்ததால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தி இருந்தனர். பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் இணைந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகியுள்ளார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிப்லவ் குமாா் தேவ் சந்தித்த நிலையில், பாஜக தலைமை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திரிபுராவின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



Read in source website

அகர்தலா: திரிபுரா மாநில முதல்வர் பிப்லவ் குமாா் தேவ் தனது பதவி விலகிய நிலையில் புதிய முதல்வராக மாநிலங்களவை எம்.பி. மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் திரிபுரா மாநில முதல்வர் பிப்லவ்குமாா் தேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சனிக்கிழமை அளித்துள்ளார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என விப்லவ்குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முடிவுகளை அவர் ஒருவரே எடுத்ததால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தி இருந்தனர். பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் இணைந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகியுள்ளார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிப்லவ் குமாா் தேவ் சந்தித்த நிலையில், பாஜக தலைமை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

புதிய முதல்வர் தேர்வு

இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் ஷாகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மாணிக் சஹா தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவுள்ளார்.

67 வயதான பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் திரிபுராவின் ஒரே மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக சார்பில் தேர்வானவர்.
திரிபுரா மருத்துவக் கல்லூரி மற்றும் அகர்தலாவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் நினைவு போதனா மருத்துவமனையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் சஹா, 2016ல் பாஜகவில் சேர்ந்தார். திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.



Read in source website

மும்பை: திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுகிறது. சில பெண்கள், கணவரின் பெயரை தங்கள் பெயரோடு இணைத்து கொள்கின்றனர். சிலர் தங்களது முதல் எழுத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கேற்ப ஆதார், பான் எண், வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் பெண்கள் தங்களது பெயர்களில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் எழுகிறது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் மரிசா அல்மைதாவுக்கு (27) கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அவர் தனது ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார்.

அப்போது கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயம் அளித்த திருமண சான்றிதழை, ஆவணமாக சமர்ப்பித்தார். ஆனால் ஆதார் அலுவலகத்தில், கிறிஸ்தவ திருமண சான்றிதழ் அத்தாட்சியாக ஏற்கப்படவில்லை.

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் கிறிஸ்தவ திருமண பதிவாளர் முன்பு திருமணம் செய்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால் அரசிதழில் பெயரை மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த வகைகளில் பெறப்படும் சான்றிதழை மட்டுமே அத்தாட்சியாக ஏற்க முடியும் என்று ஆதார் அலுவலக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆதார் அலுவலகம் மட்டுமன்றி மகாராஷ்டிர அரசு அலுவலகங்களிலும் கிறிஸ்தவ திருமண சான்றிதழ் அத்தாட்சியாக ஏற்கப்படுவது இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மரிசா அல்மைதா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயம் வழங்கும் திருமண சான்றிதழை அதிகாரபூர்வ ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

நீதிபதிகள் ரேவதி மோகித தேரே, மாதவ் ஜம்தார் அமர்வு வழக்கை விசாரிக்கிறது. அண்மையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிறிஸ்தவ திருமண சான்றிதழ் விவகாரம் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Read in source website

போபால்: உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது நேற்று முன்தினம் முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய பதிவாளர் கடந்த 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, உ.பி. மதரஸாக்களில் தேசிய கீதம்பாடுவது அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ம.பி. மதரஸாக்களிலும் தேசிய கீதம் கட்டாயமாக்க பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பதில் கூறுகையில், “இது நல்ல விஷயம். மத்திய பிரதேசத்திலும் அவ்வாறு கட்டாயம் ஆக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

இந்த விவகாரத்தில் மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா கூறும்போது, “தேசிய கீதம் பாடும்படி பாகிஸ்தானில் உள்ளவர்களை கேட்கவில்லை. உ.பி., ம.பி. மற்றும் நாட்டின் அனைத்து மூலைகளில் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். பாரத மாதாவுக்கு ஜே என்ற முழக்கம் எழுப்ப வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அது நடந்தால் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்றார்.



Read in source website

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள இதர மாவட்ட மக்களும் ஹைதராபாத் நகருக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கும் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அமைச்சர் ஹரீஷ் ராவ் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இவருடன் பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் ரூ. 5-க்கு வழங்கப்படும் உணவை ரசித்து சாப்பிட்டனர்.

திட்டம் குறித்து அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறும்போது, “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தெலங்கானா அரசு இந்த உயரிய நலத்திட்டத்தை தொடங்கி உள்ளது. ஏழை எளிய மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நோயாளிகள் மட்டுமின்றி, அவருடன் வரும் நபர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கெனவே ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் இத்திட்டம் அம்மா உணவகத்தை போன்று நடத்தி வருகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டதால் மக் கள் மகிழ்ச்சி அடைவர்’’ என்று தெரிவித்தார்.



Read in source website

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சம்ஸ்கிருத அறிஞர் பத்மஸ்ரீ பாகிரத் பிரசாத் திரிபாதி (88). இவர் வகீஸ் சாஸ்திரி என அழைக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை இரவு இவர் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் வாரணாசியில் உள்ள ஹரீஸ்சந்த்ரா படித்துறையில் நேற்று முன்தினம் நடந்தது.

இவரது சீடர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பாப் பாடகி மாடானோ 24 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரே ஆஃப் லைட்’ என்ற இசை ஆல்பம் தயாரித்த போது அதில் ஆதி சங்கரரின் ‘யோகா தாராவ்லி’ என்ற வழிபாட்டுப் பாடலும் இடம் பெற்றிருந்தது. இதில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களை மடோனாவால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் வகீஸ் சாஸ்திரியை தொடர்பு கொண்டு, அவரிடம் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொண்டார். இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘சம்ஸ்கிருதத்தை பிரபலம் அடையச் செய்த, வகீஸ் சாஸ்திரியின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.



Read in source website

வங்கியில் ஒரு பொருளை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போது அந்த பொருளின் மீதான உரிமை, அதிகாரம் வங்கிக்கு மாற்றித் தரப்படுகிறது. அதற்காக வங்கிகளில் பல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவைகளின் உண்மையான அர்த்தம் புரியாமலேயே வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது நகையை ஹைபாத்திகேட் செய்து விடுகிறேன், காரை ப்ளெட்ஜ் பண்ணி விடுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

உண்மையில் நகையை ப்ளெட்ஜ் பண்ண வேண்டும், காரை ஹைப்பாத்திகேட் செய்ய வேண்டும், வீட்டை மார்கேஜ் செய்ய வேண்டும். வார்த்தைகளில் என்ன இருக்கிறது, எல்லாமே அடமானத்தைத் தானே குறிக்கிறது என்ற கேள்வி பலருக்குள் வரலாம். எல்லாம் அடமானம் தான் என்றாலும் வங்கிக்கு பொருள் மீது வழங்கப்படும் உரிமைகளில் வேறுபாடு இருக்கிறது என்கின்றனர் நிதியாலோசனை நிபுணர்கள். அதனால் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம், அடிப்படை விபரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அடமானக்கடன் வாங்கும் போது பயன்படுத்தப்படும் வங்கி மொழிகள், அவைகளுக்கான வித்தியாசங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளரும் முன்னாள் வங்கி பொது மேலாளருமான (பஞ்சாப் நேஷனல் வங்கி) "குறள் இனிது" சோம. வீரப்பன்.

வங்கியில் வாடிக்கையளர் ஒருவர் கடன் வாங்கும் போது அதற்கு ஈடாக கொடுக்கும் பொருள்களுக்கு என்ன மாதிரியான செக்யூரிட்டி ஏற்படுத்தலாம் என்பதற்கு இந்தியாவில் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றது. இது சட்டத்திற்கு உட்படது. எதிர்காலத்தில் வாடிக்கையாளர் கடனைக் கட்டத்த தவறும் போது, வங்கி அந்த பணத்தை வசூல் செய்யும் போது இந்த சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாட வேண்டும். வாடிக்கையாளர் வங்கியில் கடன் பெற்று ஒரு பொருளை வாங்குகிறார் என்றால், அந்த பொருளின் மீது வங்கிக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்படும். அதற்கு "பண்டுல் ஆஃப் ரைட்ஸ்" (Bundle of rights) என்று பெயர்.



Read in source website

காரீஃப் பருவத்திற்கு தேவையான உரங்களின் அளவு என்ன? உர விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

Harikishan Sharma

Explained: The fertiliser challenge: காரீஃப் பருவ விதைப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் உரங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட தடை காரணமாக, உரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது. வரவிருக்கும் காரீஃப் பருவத்தில் உரத் தட்டுப்பாடு இருக்காது என்று அரசாங்கம் கூறி வந்தாலும், புதிய இடங்களில் இருந்து உரங்களை வாங்குவது, விலையுயர்ந்த மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை முக்கிய சவால்களாக இருக்கும்.

கொரோனா மற்றும் உக்ரைன் போர் உர விநியோகத்தை எவ்வாறு பாதித்துள்ளது?

கொரோனா தொற்றுநோய் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் உரங்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் போக்குவரத்தை பாதித்துள்ளது. சீனா போன்ற முக்கிய உர ஏற்றுமதியாளர்கள், தங்கள் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவைக் கருத்தில் கொண்டு தங்கள் ஏற்றுமதியை படிப்படியாகக் குறைத்துள்ளனர். இது இந்தியா போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்தியா 40-45% பாஸ்பேடிக் இறக்குமதியை சீனாவிலிருந்து பெறுகிறது. தவிர, ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் உரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில், வழங்கல் தரப்பு நாடுகள் விநியோகத் தடைகளை எதிர்கொண்டுள்ளன.

ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற காரீஃப் பருவ மாநாட்டில் பேசிய உரத்துறை செயலர் ராஜேஷ் குமார் சதுர்வேதி, “தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையால்” உர விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிஏபி (டைஅம்மோனியம் பாஸ்பேட்) உரம் தயாரிப்பதற்காக ரஷ்யாவிலிருந்து அம்மோனியாவை மொராக்கோ கொள்முதல் செய்கிறது என்று கூறினார்.

இந்தியாவிற்கு எவ்வளவு உரம் தேவைப்படுகிறது?

காரீஃப் பருவம் (ஜூன்-அக்டோபர்) இந்தியாவின் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஓர் ஆண்டில் விளையக்கூடிய உணவு தானியங்களில் பாதியளவு இந்தப் பருவத்தில் விளைகிறது. இதேபோல், மூன்றில் ஒரு பங்கு பருப்பு வகைகள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் வித்துக்கள் இந்த பருவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, கணிசமான அளவு உரம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பயிர் சீசன் தொடங்கும் முன், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, உரங்களின் தேவையை மதிப்பீடு செய்து, சப்ளையை உறுதி செய்ய, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்து வருகிறது. காரீஃப் 2022 பருவத்துக்கு, 354.34 LMT தேவை என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது, இதில் யூரியா 179 LMT, DAP 58.82 LMT, மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MoP) 19.81 LMT, NPK (நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ்) 63.71 LMT, மற்றும் SSP 33 LMT.

உரத் தேவை ஒவ்வொரு மாதமும் தேவைக்கேற்ப மாறுபடும், இது பயிர் விதைக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது மீண்டும் பிராந்தியத்திற்கு பிராந்தியத்திற்கு மாறுபடும். உதாரணமாக, ஜூன்-ஆகஸ்ட் காலகட்டத்தில் யூரியாவின் தேவை உச்சத்தில் இருக்கும். அதேநேரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் யூரியாவின் தேவை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். மேலும் காரீஃப் பருவத்திற்கான உரங்களின் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் இந்த இரண்டு மாதங்களையும் பயன்படுத்துகிறது.

இருப்பு எவ்வளவு?

உரத்துறைச் செயலாளர் சதுர்வேதி பகிர்ந்துள்ள தரவுகளின்படி, காரீஃப் பருவத்தில் கிடைக்கும் உரத்தின் தொடக்க இருப்பு 125.5 LMT அல்லது தேவையில் 35% ஆகும். தனிப்பட்ட உரங்களில், யூரியா இருப்பு மொத்த தேவையில் 34.62%, டிஏபி இருப்பு 41.65%, MoP இருப்பு 30.29%, NPK இருப்பு 25.33% மற்றும் SSP இருப்பு 51.52% ஆகும்.

உள்நாட்டில் எவ்வளவு உற்பத்தி செய்யலாம்?

154.22 LMT யூரியா, 27.92 LMT DAP, 48.65 LMT NPK மற்றும் 24 LMT SSP உட்பட, காரீஃப் பருவத்தில் உள்நாட்டில் உரங்களின் உற்பத்தி 254.79 LMT ஐ தொடும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.

கோட்பாட்டளவில், கையிருப்பு மற்றும் “எதிர்பார்க்கப்படும்” உள்நாட்டு உற்பத்தி உரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும். இருப்பினும், உக்ரைன் போர் இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களின் விநியோகத்தை சீர்குலைத்துள்ளது, இது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 104.72 LMT உரங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது, அதில் பெரும்பாலானவை யூரியா மற்றும் டிஏபி.

“கிடைக்கக்கூடிய மொத்த உரங்களின் அளவு” என்பது, கையிருப்பு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை சேர்த்து 485.59 LMT ஆக இருக்கும்.

இதனை எதிர்ப்பார்த்து, “காரிஃப் பருவத்தில் நாம் உரங்கள் தொடர்பாக எந்த பிரச்சனையும் சந்திக்க வாய்ப்பில்லை” என உர மாநாட்டில் செயலாளர் சதுர்வேதி கூறினார்.

விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் விலையை எவ்வாறு பாதித்தன?

சமீபத்திய மாதங்களில் மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் சரக்கு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனா சமயத்தில் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், கப்பல்களுக்கான சராசரி சரக்குக் கட்டணங்கள் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தவிர, டிஏபி, யூரியா போன்ற உரங்களின் விலையும், அம்மோனியா, பாஸ்பேடிக் அமிலம் போன்ற மூலப்பொருட்களின் விலையும் 250-300% வரை உயர்ந்துள்ளது.

விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசாங்கம் 2022 காரிஃப் பருவத்திற்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (NBS) விகிதங்களை உயர்த்தியுள்ளது. நைட்ரஜன் (N)க்கான NBS விகிதங்கள் கடந்த காரிஃப் பருவத்தில் கிலோ ஒன்றுக்கு 18.78 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல்-செப்டம்பர் 2022 க்கு 389% உயர்த்தப்பட்டு கிலோ ஒன்றுக்கு 91.96 ரூபாயாக உள்ளது. இதேபோல், பாஸ்பேட் (P) க்கு 60% அதிகரித்து கிலோவுக்கு ரூ. 45.32ல் இருந்து கிலோவுக்கு ரூ.72.74 ஆகவும், பொட்டாஷ் (கே) க்கு 150% அதிகரித்து கிலோவுக்கு ரூ.10.12ல் இருந்து கிலோவுக்கு ரூ.25.31 ஆகவும், கந்தகத்திற்கு (சல்பர்) 192% அதிகரித்து கிலோவுக்கு ரூ 2.37ல் இருந்து கிலோவுக்கு ரூ 6.94 ஆகவும் உள்ளது. கடந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.1.62 கோடியாக இருந்த மொத்த உர மானியத் தொகை இந்த நிதியாண்டில் ரூ.2.5 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உர விநியோகத்தை அரசு எவ்வாறு உயர்த்த உள்ளது?

உணவுத்துறை செயலாளரின் கூற்றுப்படி, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் போரின் தொடக்கத்தில் இருந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து 3.60 LMT உரங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதைத் தவிர, இந்தியா ரஷ்ய நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2.5 LMT DAP/NPK உர விநியோகத்திற்காக C2C (கார்ப்பரேஷனுக்கு கார்ப்பரேசன்) விநியோக ஏற்பாட்டைச் செய்துள்ளது. மேலும், DAP (4 LMT), MOP (10 LMT) மற்றும் NPK (8 LMT) ஆகியவற்றின் கூடுதல் விநியோகத்திற்கும் ரஷ்யா உறுதியளித்தது. சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற பிற நாடுகளில் இருந்து உர விநியோகத்தைப் பெற இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 15 LMT யூரியாவை மூன்று ஆண்டுகளுக்கு நீண்ட கால ஏற்பாட்டின் கீழ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சதுர்வேதி கூறினார். ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தின் கீழ், இந்திய நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் 2022-23க்கு சவூதி அரேபியாவிடமிருந்து 25 LMT DAP/NPKஐப் பெற்றுள்ளன; சப்ளை தொடங்கிவிட்டது என்றும், ஒவ்வொரு மாதமும் இந்தியா 30,000 மெட்ரிக் டன் டிஏபியைப் பெறும் என்றும் சதுர்வேதி கூறினார்.

யூரியாவின் உள்நாட்டு உற்பத்திக்காக, அரசாங்கம் மேட்டிக்ஸ் (மேற்கு வங்கம்), ராமகுண்டம் (தெலுங்கானா) மற்றும் கோரக்பூர் (உ.பி.) ஆலைகளில் கவனம் செலுத்துகிறது, மேலும் சிந்த்ரி மற்றும் பாரௌனியில் உள்ள மற்ற இரண்டு அலகுகளை புதுப்பிக்கிறது. ஆண்டுக்கு 10 LMT யூரியாவைப் பெறுவதற்காக ஓமானுடன் நீண்ட கால விநியோக ஒப்பந்தத்தையும் இந்தியா செய்துகொண்டுள்ளது.

மூலப்பொருட்களின் நிலை என்ன?

காரீஃப் 2022 இன் போது பொட்டாஷின் தேவை 19.81 LMT என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 5 LMT கையிருப்பு உள்ளது. இந்தியா 23.18 LMT இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறது, இது மொத்த இருப்பை 28.18 LMT ஆக மாற்றும்.

பொட்டாஷ் மூலப்பொருளுக்கு இந்தியா இறக்குமதியை நம்பியுள்ளது, பொட்டாஷ் உரங்கள் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அடுத்து, பொட்டாஷின் சர்வதேச விலைகள் டிசம்பர் 2021 இல் ஒரு மெட்ரிக் டன்னுக்கு $445ல் இருந்து கடந்த மாதம் ஒரு MTக்கு $600 ஆக அதிகரித்துள்ளது.

பெலாரஸில் இருந்து பொட்டாஷ் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா இப்போது கனடாவில் இருந்து 12 LMT பொட்டாஷ் சப்ளை பெற்றுள்ளதாக உரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

மார்ச் 21 அன்று, 8.75 LMT கூடுதல் அளவு பிற நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஜோர்டானிலிருந்து பெறப்பட்டுள்ளது.

ராக் பாஸ்பேட் போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே சுரங்கங்கள் மூலம் பெறுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விருப்பத்தை ஆராய்வதற்காக, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மாநில அரசுகளிடம் மத்திய அரசு என்ன எதிர்பார்க்கிறது?

காரிஃப் விதைப்பு தொடங்குவதற்கு முன்னதாக, தேவைக்கேற்ப உர விநியோகத்தைச் சீராக்க “சிறு- திட்டமிடல்” செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வரக்கூடிய உர அளவுகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு ரயில் ரேக்குகளை சரியான நேரத்தில் இறக்குவதை உறுதி செய்யுமாறும், நானோ யூரியா போன்ற மாற்று உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், உரங்களை மாற்றுதல், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக “கடுமையான” நடவடிக்கை எடுக்கவும், மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.



Read in source website

சமீபத்திய கண்டுபிடிப்புக்கு முன், தமிழ்நாட்டின் இரும்பு உபயோகத்திற்கான ஆரம்ப சான்றுகள் மேட்டூருக்கு அருகிலுள்ள தெலுங்கனூர் ஆகிய இடங்களில் கிடைத்தன. இது கிமு 1500 க்கு முந்தையது ஆகும்.

அருண் ஜனார்த்தனன்

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளின் கார்பன் டேட்டிங் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இரும்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தெரிவிப்பதாக, தொல்லியல் துறை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த வாரம் அறிவித்தது.

இதற்கு முன், இரும்பு உபயோகத்தின் ஆரம்ப சான்றுகள் நாட்டை பொறுத்தவரையில் கிமு 1900-2000 வரையிலும், தமிழ்நாட்டிற்கு கிமு 1500 வரையிலும் இருந்தன. ஆனால், சமீபத்திய சான்றுகள்’ தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு’  கிமு 2172 க்கு முந்தையவை என்பதை காட்டுகிறது.

4,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் இரும்பு பற்றி அறிந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். “இரும்பின் பயன்பாட்டை மனிதகுலம் உணரத் தொடங்கிய பின்னரே அடர்ந்த காடுகள் வளமான நிலங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் விவசாய பணிகள் தொடங்கியது தொடர்பான கேள்விகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பதில் அளித்துள்ளது” என்று ஸ்டாலின் கூறினார்.

கண்டுபிடிப்புகள்

பெங்களூரில் இருந்து சுமார் 100 கிமீ தெற்கில் உள்ள தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மயிலாடும்பாறையில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டது. மயிலாடும்பாறை என்பது நுண்கற்காலம் (கிமு 30,000) மற்றும் ஆரம்பகால வரலாற்று (கிமு 600) காலங்களுக்கு இடைப்பட்ட பழங்கால கலாச்சாரப் பொருட்களைக் கொண்ட ஒரு முக்கியமான தளமாகும்.

“தொகரப்பள்ளி, கங்காவரம், சந்தூர், வேடர்தட்டக்கல், குட்டூர், கிட்லூர், சப்பமுட்லு மற்றும் கப்பலவாடி போன்ற பல தொல்பொருள் இடங்களுக்கு மத்தியில் இந்த தளம் அமைந்துள்ளது. இந்த முக்கியமான தொல்பொருள் இடங்கள் அனைத்தும் 10 கிமீ தொலைவில் உள்ளன.

மயிலாடும்பாறை என்ற தலைப்பில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேராசிரியர் ராஜன் இந்த இடத்தை 1990 களில் கண்டுபிடித்தார், மேலும் அங்கிருந்து முதல் அகழ்வாராய்ச்சி 1990 களில் செய்யப்பட்டது. அசலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபியைப் (accelerator mass spectroscopy) பயன்படுத்திய டேட்டிங் முடிவுகள் கடந்த வாரம் வந்தன.

காலவரிசை மறுபரிசீலனை செய்யப்பட்டது

மனிதர்கள் இரும்புக் காலத்தில் நுழைந்த தேதிகள் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாறுபடும். இந்தியாவிலும், பல தசாப்தங்களாக தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளுடன் தேதி திருத்தப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டில், ராஜஸ்தானில் உள்ள அஹார் என்ற இடத்தில், கிமு 1300 இல் இரும்பின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கர்நாடகாவில் உள்ள புக்காசாகராவில் இரும்பு உற்பத்தியைக் குறிக்கும் மாதிரிகள்’ கிமு 1530 க்கு முந்தையவை என்பது தெரியவந்தது.

மத்திய கங்கை பள்ளத்தாக்கில் உள்ள ராய்புராவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரும்பு உருகியதற்கான சான்றுகள் கிடைத்தன. இதனால் இந்த தேதி பின்னர் 1700-1800 BCEக்கு தள்ளப்பட்டது,

பின்னர் வாரணாசிக்கு அருகிலுள்ள மல்ஹர் மற்றும் வட கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி ஆகிய இடங்களில் ஆய்வுகள் அடிப்படையில், இந்தியாவில் கி.மு.1900-2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்படுத்தியதற்கான சான்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட டேட்டிங் முடிவுகள், கி.மு. 1800 ஆண்டுகளுக்கு முன்னாடியே,  இரும்பு-தாது தொழில்நுட்பத்தின் ஆதாரங்களைக் காட்டுகின்றன.

சமீபத்திய கண்டுபிடிப்புக்கு முன், தமிழ்நாட்டின் இரும்பு உபயோகத்திற்கான ஆரம்ப சான்றுகள் மேட்டூருக்கு அருகிலுள்ள தெலுங்கனூர் மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் கிடைத்தன, இது கிமு 1500 க்கு முந்தையது.

வரலாற்று முக்கியத்துவம்

இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு தோன்றியதாகக் கூறப்படும் சிந்து சமவெளியில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை (கிமு 1500). அதேநேரம் செம்பு கிடைக்காத மற்ற பகுதிகள் கற்காலத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரும்புத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அது விவசாயக் கருவிகள் மற்றும் ஆயுதங்களின் உற்பத்திக்கு வழிவகுத்தது, இது பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு முன்னால் ஒரு நாகரிகத்திற்குத் தேவையான உற்பத்திக்கு வழிவகுத்தது என்று மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய முன்னணி விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

பயனுள்ள கருவிகள் தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தாலும், இவை உடையக்கூடியவை மற்றும் இரும்புக் கருவிகளைப் போல வலுவாக இல்லை. அடர்ந்த காடுகளை அழிக்கவும், நிலத்தை விவசாயத்தின் கீழ் கொண்டு வரவும் செப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது கடினமாக இருந்திருக்கும் -அதனால்தான் மனிதர்கள் இரும்பை பயன்படுத்தத் தொடங்கிய பின்னரே காடழிப்பு நடந்ததாக விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

நமது இரும்புக் காலம் கிமு 1500 முதல் கிமு 2000 வரையிலான என்பதற்கான சமீபத்திய சான்றுகளைக் கொண்டு, நமது கலாச்சார விதைகள் கிமு 2000 இல் போடப்பட்டது என்று நாம் கருதலாம். மேலும் இரும்புத் தொழில்நுட்பத்தால் தூண்டப்பட்ட சமூக-பொருளாதார மாற்றங்கள் மற்றும் பாரிய உற்பத்தியின் பலன் அதன் முதல் பலனை கிமு 600 இல் கொடுத்தது – தமிழ் பிராமி எழுத்துக்கள்,” என்று விஞ்ஞானி கூறினார்.

கலாச்சாரம் மற்றும் அரசியல்

தமிழ் பிராமி எழுத்துக்கள் கிமு 300 இல் தோன்றியதாக நம்பப்பட்டது, ஆனால் 2019 இல் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு கிமு 600 க்கு அதைத் தள்ளியது.

இந்த டேட்டிங் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தமிழ்நாடு/தென்னிந்தியாவின் சங்க காலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தது. இதுவும், சமீபத்திய கண்டுபிடிப்புகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் எழுத்துகளின் காலக்கணிப்பு, இந்திய தொல்லியல் துறை (ASI) மேம்பட்ட கார்பன் டேட்டிங் சோதனைகளுக்கு செல்லாததால் சர்ச்சைக்குள்ளானது, மேலும் ஆய்வைத் தொடங்கிய ஒரு இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் மாநிலத்திற்கு வெளியே மாற்றப்பட்டார். பிறகு 2019 கண்டுபிடிப்புகள் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளில் இருந்து வெளிவந்தன.

இந்திய வரலாற்றை தமிழர் மண்ணில் இருந்து மாற்றி எழுத வேண்டும் என்பதை அறிவியல் முறைகள் மூலம் நிலைநாட்டுவதே மாநில அரசின் இலக்கு என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறினார். கீழடியில் காணப்படும் கிராஃபிட்டி மற்றும் சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியை மாநில தொல்லியல் துறை தொடங்கும் என்றார்.



Read in source website

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் (ஆர்.ஏ.புரம்) கோவிந்தசாமி நகரில் நீர்நிலைக்கு அருகில் உள்ள நிலங்களில் 259 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 2008-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதையடுத்து, அந்த வீடுகளை அகற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8)  நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாமக நிர்வாகியான வி.ஜி.கண்ணையன் (57) என்பவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் அடுத்த நாள் அவர் உயிரிழந்தார். உண்மையிலேயே இது துர திருஷ்டவசமான சம்பவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் எதார்த்த உண்மைகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. 

தமிழக கிராமங்களில் விவசாயத்திலோ மற்ற தொழில்களிலோ போதிய வருவாய் கிடைக்காமல் இருப்பதால்,  பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் இடம் பெயர்ந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு வருகின்றனர். நகர்மயமாதல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

அப்படி வருபவர்கள் பெரும்பாலும் புறம்போக்கு இடங்களிலும், நீர்நிலைக்கு அருகில் உள்ள இடங்களிலும், கோயில் இடங்களிலும் குடிசைகள் அமைத்து வாழ முற்படுகிறார்கள். வாக்குவங்கி அரசியல் காரணமாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு  குடும்ப அட்டை, மின் விநியோகம் போன்றவற்றை அளித்து விடுகிறது.

தலைமுறைகள் கடந்தாலும்கூட, அவர்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றமில்லை. குடிசைகள் சிறிய அளவில் கான்கிரீட் கட்டடங்கள் ஆகின்றன. யாரோ ஒருவர் நீதிமன்றத்தை நாடும்போது, வாக்குவங்கியைப் பற்றி கவலை இல்லாததால், ஆக்கிரமிப்பை அகற்ற  நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இதுதான் நடந்துள்ளது. கோவையிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நூற்றுக்கணக்கில் அகற்றப்பட்டன. மக்கள் போராட்டம் நடத்தியும் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அதிகாரிகள் அகற்றினார்கள். 

சென்னை ஆர்.ஏ.புரம் சம்பவத்தில், 2008 முதல் வழக்கு நடந்து வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக அந்த கட்டடங்கள் அகற்றப் படாது என்ற நம்பிக்கையை அளித்தது யார்? எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான். 

இந்த சம்பவம் நடந்த உடனே ஒரு அமைப்பின் நிர்வாகி, "இது நவீன தீண்டாமை. 220 சதுர அடி வீட்டில் அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் வசித்துப் பார்த்தால் கஷ்டம் புரியும்' என்று சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். மற்றொரு கட்சியின் தலைவர், வட மாநிலத்தவர் ஒருவருக்காக இத்தனை கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். தீக்குளித்து இறந்தவர் சார்ந்த கட்சியின் நிர்வாகியும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். 

இவர்கள் எவ்வளவு ஆவேசமாகப் பேசினாலும், போராடினாலும் அகற்றப்படும் கட்டடங்கள் அங்கு திரும்பி வரப்போவதில்லை. இது ஒருபுறம் இருக்க, கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா அளிக்க வேண்டும் என ஒரு கட்சியினர் மாநிலம் முழுவதும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆங்காங்கே மாவட்ட நிர்வாகத்தினரிடம் இது தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.

இந்த விஷயத்திலும் என்றாவது ஒருநாள் நீதிமன்றம் தலையிட்டு அங்கிருப்பவர்களை அகற்றிவிடும். வாழ்நாள் முழுவதும் தங்களை அரசியல் கட்சியினர் காப்பாற்ற வழியில்லை என்பதை, ஏழ்மை காரணமாக ஆக்கிரமிப்பு செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

"உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பாக வந்த பிறகே, கட்டடங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏழைகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய நிலையில் அரசு இல்லை. அதே சமயம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலையும் அரசுக்கு  உள்ளது' என ஆர்.ஏ.புரம் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆக்கிரமிப்பு பகுதி மக்களுக்கு, அருகிலேயே குடியிருப்புகள் வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் சூழ்நிலை  ஏற்படும்போது முன்கூட்டியே மக்களிடம் கருத்து கேட்கப்படும்  என்றும், புதிய இடத்தில் தேவைப்படும் அனைத்து வசதிகளும்  செய்யப்பட்ட பின்னரே குடியமர்வு செய்யப்படுவர் என்றும், மக்கள் நலன் சார்ந்த மறுகுடியமர்வுக் கொள்கை வகுக்கப்படும் என்றும்  மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

கோவையில் நகரின் மையப் பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவர்களுக்கு தொலைதூரப் பகுதிகளில்தான் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி  குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. தொடக்கத்தில் போராடினாலும் பின்னர் அவர்கள் அந்த இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

இது தவிர்க்க முடியாதது. நகரின் முக்கியப் பகுதிகளில் அவர்களுக்கு இடமளித்தால், அவர்கள் அதை மனை வணிக, அடுக்கு மாடிக் கட்டட நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்களே தவிர, அங்கேயே வாழப்போவது இல்லை. ஆக்கிரமிப்புகளைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும். அத்தகைய வீடுகளுக்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கக் கூடாது. அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் இந்த பிரச்னையில் தலை யிடாமல் இருந்தாலே ஆக்கிரமிப்பு தானாகக் குறைந்துவிடும்.

ஏழைகளுக்காகப் போராடும் அமைப்புகள் எழுப்பும் கேள்வி, பணக்காரர்களது ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றுமா என்பதே. ஏழைகளின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாமல், பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று போராடுவதே நியாயமாக இருக்கும். எத்தகைய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அது அகற்றப் படுவதுதானே நியாயம்..?
 



Read in source website

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாமல், அரசியல் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அரசுக்கு எதிராக நடக்கும் கிளா்ச்சிகளை அடக்க ராணுவம் பணிக்கப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபட்ச பதவி விலகியதைத் தொடா்ந்து, புதிய பிரதமராக முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்திருக்கிறாா் அதிபா் கோத்தபய ராஜபட்ச.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உணவுப்பஞ்சம் ஆகியவற்றை தீா்த்து வைக்க, இந்திய அரசாங்கம் பெருமளவில் உதவி செய்து வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம், பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழா்கள் பலரும் இந்தியாவிற்கு அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனா்.

இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் நாம் உதவுவது புதிதல்ல. வரலாற்றுக் காலம் தொட்டு இது நடைபெற்று வருகிறது. 750 ஆண்டுகளுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசா் பரராசசேகரன். அங்கு இருக்கின்ற மக்களுக்கு உதவும் வகையில் புகழேந்திப் புலவா் சடையப்ப வள்ளலிடம் பஞ்சம் குறித்த தகவல்களை தெரிவிக்கின்றாா். சடையப்ப வள்ளல் தமிழகத்திலிருந்து ஈழத் தமிழா்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி உதவுகின்றாா்.

தேனாா் தொடையாா் பர ராச சிங்கப்பெரு மான்
செந்தமிழுக்கு காணாா் நெல்லின் மலைகோடி
கண்டி நாடு கரைசேரக் கூனாா் கப்பல்
ஆயிரத்தில் கொடு போய் அளித்த
கொடைத் தடக்கை மானா கரன் சங்கரன்
உடையான் வளம்சோ் சோழ மண்டலமே

என்கிற சோழ மண்டல சதகப் பாடல் மூலம் இதனை அறியலாம்.

இதே போல இலங்கையில் அனுராதபுர மன்னன் தேவநாம்பிரியதீசன் கேட்ட அனைத்தையும் கொடுத்தாா் இந்தியாவை ஆண்ட அசோக சக்கரவா்த்தி. அசோகா் இலங்கை மக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளையும் உணவுகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்ததை தனது ஆட்சியின் 13-ஆவது ஆண்டில் இரண்டாவது கல்வெட்டில் பதித்துள்ளாா்.

இலங்கைக்கு பல்வேறு சமயங்களில் இந்திய அரசாங்கம் உதவி செய்து வந்துள்ளது. 1971 ஏப்ரலில் இலங்கையில் சிங்கள புரட்சிகர இளைஞா் அமைப்பு இலங்கை அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தது. அப்போதைய இலங்கை பிரதமா் சிறிமாவோ பண்டாரநாயக, அன்றைய இந்திய பிரதமா் இந்திரா காந்தியிடம் உதவி கேட்டாா். உடனே இந்தியப்படை அங்கே சென்று கிளா்ச்சியாளா்களை அடக்கி சிறிமாவோ அரசைக் காப்பாற்றியது.

2020 செப்டம்பரில் இலங்கைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று கொழும்புக்கு அருகே தீப்பற்றி எரிந்தது. அப்போதும் இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. இந்திய கடலோர காவல்படை விரைந்து சென்று தீயை அணைத்து எண்ணெய் கப்பல் உடையாமல் காப்பாற்றி இலங்கையிடம் ஒப்படைத்தது.

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை பெற்ற பிறகு இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் இந்திய அரசாங்கம் செய்த உதவிகள் ஏராளம். ஆனால், இந்திய அரசாங்கமும், தமிழக மக்களும் செய்த உதவிகளுக்கு இந்தியாவிற்கோ தமிழக மக்களுக்கோ நன்றியுடைய அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறதா?

1971 டிசம்பரில் இந்தியா - பாகிஸ்தான் போா் நடைபெற்றபோது, பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க விமானப் படைகளைப் பயன்படுத்துகிறது. அபோபது இந்தியாவுக்கு உதவியாக இலங்கை தன் படையை அனுப்பவில்லை; ஆதரவுக் குரல் கூட கொடுக்கவில்லை. மாறாக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அந்நாட்டுப் படைகளுக்கு இலங்கை உதவியது. சிறிமாவோ அரசு, பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுமதி கொடுத்தது. அங்கிருந்து இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் முற்பட்டது.

இதே போல இந்தியா - சீனா போரின் போதும் இலங்கை அரசாங்கம் சீனாவிற்குத்தான் ஆதரவாக நின்றது. சா்வதேச அரசியலிலும் இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையே மேற்கொண்டு வருகிறது. ஆனால், இலங்கை தமிழ் மக்கள் எப்பொழுதும் இந்தியாவை ஆதரித்தே வந்துள்ளனா்.

2014 அக்டோபரில் தமிழக மீனவா்கள் ஐந்து பேருக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ‘இந்திய மீனவா்களை சுட்டுக் கொல்வோம்’ என்று ஆவேசமாகப் பேசினாா். சிங்கள கடற்படையின் அட்டூழியங்கள் இன்றும் தொடா்கிறது. இந்திய மீனவா்கள், அதாவது தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் முடிவுக்கு வரவில்லை. இந்திய எல்லைக்குள் வந்து தீ வைப்பு உள்ளிட்ட காரியங்களில் இலங்கை கடற்படையினா் ஈடுபட்டதும் வரலாறு.

1948 முதல் 1958 வரை பாக் நீரிணையிலும், மன்னாா் வளைகுடாவிலும் காணப்பட்ட மீனவா்களின் படகுகளை, தோணிகளைக் கைப்பற்றி அவற்றில் இருந்த மீனவா்களை ‘கள்ளத் தோணிகள்’ எனக்கூறி கைது செய்து கொழும்பில் சித்திரவதை முகாமில் வைத்து விசாரணையின்றி கொடுமைப் படுத்தியது இலங்கை கடற்படை.

1960 முதல் 1970 வரை இலங்கையில் இந்திய மீனவா்களின் வள்ளங்களையும், தோணிகளையும் கடத்தல்காரா் கலங்கள் என கைப்பற்றியதோடு மீனவா்களை கொழும்பு சித்திரவதை முகாமில் அடைத்து வைத்தனா். 1970 முதல் 2009 வரையிலான 40 ஆண்டு காலத்தில் பாக் நீரிணையில் மன்னாா் வளைகுடாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மீனவா்கள் உயிரிழந்தாா்கள். ராமேஸ்வரம் தீவில் நுழைந்த இலங்கை கடற்படை மீனவா் குடிசைகளை எரித்தது உச்சகட்ட துரோகமாகும்.

இந்தியாவுடன் இலங்கை செய்து கொண்ட உடன்பாடுகளை எப்போதும் தனக்கு சாதகமாகவே இலங்கை பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா, இலங்கையுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின்படி எப்பொழுதும் நடந்து கொள்ளும். ஆனால், இலங்கை, இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறித்தான் எப்போதும் செயல்பட்டிருக்கிறது.

1954 நேரு - கொத்தலாவலை ஒப்பந்தம், 1964 சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தம், 1974, 1976 கச்சத்தீவுக்கான இந்திரா காந்தி- சிரிமாவோ ஒப்பந்தம், 1987 ராஜீவ் காந்தி - ஜெயவா்த்தன ஒப்பந்தம் இவை அனைத்தையுமே இந்தியத் தரப்பு நிறைவேற்றியது. இலங்கையோ அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்தைக் கூட நிறைவேற்றவில்லை. ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும், அதன் பிறகு ஒப்பந்தத்தை மீறுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு கைவந்த கலையாகும்.

1925 யாழ்ப்பாண மகேந்திரா ஒப்பந்தம், 1947 சோல்பரி ஒப்பந்தம், 1958 செல்வா ஒப்பந்தம், 1965 செல்வா - டட்லி ஒப்பந்தம் இவை அனைத்துமே இலங்கைத் தமிழா்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றிய ஒப்பந்தங்கள். அந்த ஒப்பந்தங்களின் படி இலங்கை அரசு நடந்துகொள்ளவில்லை. இலங்கைத் தமிழா் தலைவா்கள் ஏமாந்தாா்கள்.

இலங்கை 2015 அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட தீா்மானத்தை 2020-இல் ஒப்புக் கொள்ள மறுத்தது. ஐ.நா. அமைப்பு உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிடம் கொடுத்த வாக்குறுதிகளையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.

இந்தியா செய்த நன்மைகளை கருத்தில் கொள்ளாமல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீன தேசத்திற்கு ஆதரவாகவே இலங்கை நடந்து கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் தளங்களை அமைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அது மட்டுமல்ல, இலங்கையில் இந்திய எதிா்ப்பு கொள்கைகளின் மூலமாகத்தான் சிங்கள அரசியல் கட்சிகள் வாக்காளா்களைக் கவா்ந்து கொண்டிருக்கிறாா்கள். இந்தியா்களுக்கு எதிராக, தமிழா்களுக்கு எதிராக முழங்கினால் மட்டுமே இலங்கையில் சிங்களா்களின் வாக்குகளைப் பெற முடியும் என இந்தியாவிடம் இலங்கை அரசியல்வாதிகள் கூறி வருகிறாா்கள்.

இப்பொழுது இந்தியாவிடம் பஞ்சத்தைப் போக்க உணவு கேட்கிறாா்கள்; எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க உதவி கேட்கிறாா்கள்; கடன் சுமையில் இருந்து மீண்டு வர பண உதவி கேட்கிறாா்கள்.

இந்த நிலையில் நாம் இலங்கைக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதை சிந்தித்துதான் உதவி செய்ய வேண்டும். பாத்திரமறிந்துதான் பிச்சையிட வேண்டும்.

இலங்கைத் தமிழருக்கு அரசியல் உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்க வேண்டும். இதற்கான ஷரத்து 1987 ராஜீவ் காந்தி - ஜெயவா்த்தன ஒப்பந்தத்தில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும்.

ராஜீவ் காந்தி - ஜெயவா்தன ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு சாத்தியப்படும். தமிழா்களின் பகுதிகள் பாதுகாக்கப்படும். இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் போல தமிழா்களுக்கான மாநில உரிமையும் கிடைத்துவிடும். இலங்கையில் 13-ஆவது அட்டவணை சீா்திருத்தம் ஏற்படும். இலங்கைத் தமிழா் பிரச்னைக்கு ஓரளவு சரியான தீா்வாக இது அமையும்.

அதே போல இந்திரா காந்தி -சிறிமாவோ செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கச்சத்தீவில் இந்திய மீனவா்களின் மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்த வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த முறையும் நாம் ஏமாந்துவிடக் கூடாது!

கட்டுரையாளா்:

தலைவா், இந்து மக்கள் கட்சி.



Read in source website

பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் தமது பணியை முடித்ததற்கு பிறகு தனித்து விடப்படும். ஆனாலும் அவை தொடா்ந்து விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் செயற்கைகோள்களை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளின் பாகங்களும் விண்வெளியில் ஆங்காங்கு மிதந்து சென்று கொண்டிருக்கும். மொத்தத்தில் விண்வெளியையும் மனிதா்கள் குப்பையாக்கி வைத்திருக்கிறாா்கள் என்பது நிதா்சனம்.

பலநூறு கிலோ மீட்டா் வேகத்தில் விண்வெளியில் மிதந்து செல்லும் இந்தக் குப்பைகள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயற்கைகோள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பூமியை சுற்றி 21,900-க்கும் மேற்பட்ட பொருள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இதில் சுமாா் 4,450 பொருள்கள் மட்டுமே செயல்படும் செயற்கை கோள்களாகும். மற்றவை எல்லாம் உடைந்த செயற்கை கோள்கள், ஏவுகணைகளின் பாகங்கள் என்று கடந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இவை தவிர, விண்வெளியில் மிதக்கும் மிகச் சிறியது முதல் 10 செ.மீ வரையிலான துகள்களின் பட்டியல் தனியாக உள்ளது என்பதும் குறிப்படத்தக்கது. பொதுவாக விண்வெளிக் குப்பைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனா். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் செயற்கை கோள்களின் முதல் எதிரி இந்த விண்வெளிக் குப்பைகள்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் உலக நாடுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கின்றனா்.

விண்வெளிக் குப்பைகளிடமிருந்து தப்பிக்க செயற்கைக்கோள்களில் கவச அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அதையும் தாண்டி சிறிய துகள்களால் பாதிப்பு ஏற்படுகிறது. தொடா்ந்து விண்வெளிக் குப்பைகள் பற்றி ஆய்வு செய்து வரும் நாசா விஞ்ஞானிகள், ஒவ்வொரு நாளும் அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனா். மொத்தத்தில் அளவில் பெரிய விண்வெளிக் குப்பைகள் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகியவை விண்வெளியில் அதிக குப்பைகளை கொட்டிய முதல் மூன்று நாடுகள் ஆகும்.

2109-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா. இதற்கு ‘மிஷன் சக்தி’ என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணை வைத்துள்ள நான்காவது நாடானது நமது நாடு. போா் சூழல்களில் எதிரி நாடுகள் செயற்கைக்கோள் மூலம் நிலப்பரப்புகளை கண்காணிப்பதை இந்த ஏவுகணை மூலம் தடுக்க முடியும். செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணை என்பது விண்வெளிக் குப்பையை மேலும் அதிகப்படுத்தலாம். அதே நேரத்தில் விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை அழிக்கும் வகையிலான சோதனைக்கு எதிா்ப்பும் கிளம்பியது.

ஆனால் இந்தியா சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதற்கு முன்புவரை 115 என்ற எண்ணிக்கையிலிருந்து இந்தியாவின் விண்வெளிக் குப்பை அளவு, மேற்கண்ட ஏவுகணை சோதனையால் 160 ஆக உயா்ந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிக் குப்பைகள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தியுள்ளன. ஏவுகணை சோதனைக்கு முந்தைய அளவைவிட தற்போது அதிக அளவில் இந்தியாவின் விண்வெளிக் குப்பைகள் மிதந்து கொண்டிருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகளின் கோடைக்காலம் மிக கடுமையானதாக இருந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. கோடை நாட்களின் அதிகரிப்பும் வெப்பத்தின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த மாா்ச் மாதம் இந்தியாவின் வடமேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதிகமாக இருந்தது.

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து 4.5 முதல் 8.5 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது. ஏப்ரல் 27-ந் தேதி இந்தியாவிலேயே அதிக வெப்பம் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் 45.9 செல்சியஸ் பதிவானது. அதற்கு முந்தைய நாள் ராஜஸ்தானில் பாா்மா் என்ற இடத்தில் 45.1 செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்தியாவில் பல நகரங்களில் பரவலாக 42 முதல் 44 செல்சியஸ் வெப்பம் நிலவியது.

பிரயாக் ராஜில் 45.9 செல்சியஸ் பதிவான நாளில் பூமியின் மீது நிலவிய வெப்பக்காற்று சலனத்தின் மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வரைபடம் நிலப்பரப்பிலிருந்து 2 மீட்டா் உயரத்திற்கு நிலவிய வெப்ப சலனத்தை காட்சிப்படுத்துகிறது. இந்தியா்கள் எல்லோருமே நெருப்பாற்றில் நீந்துகிறோம் என்றால் அது மிகையில்லை.

அதிக அனல் காற்று வீசும்போது அதன் தாக்கம் ‘சன் ஸ்ட்ரோக்’ உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துவடன் முடிந்து போவதில்லை. காற்றின் தரம் குறைகிறது. மழை வாய்ப்பைத் தடுக்கிறது. வேளாண் விளைச்சலைக் குறைத்து விடுகிறது. இவை மட்டுமல்ல, நகா்ப்புறங்களில் மின்தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ப மின் உற்பத்தியை உடனே அதிகரிப்பது எளிதல்ல. தேவையான நிலக்கரி உடனடியாக கிடைப்பதில்லை. இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மின்பற்றாக்குறை இந்த ஆண்டில் காணப்படுகிறது.

இவற்றுடன் புவி வெப்பமயத்தின் தாக்கத்தால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மலைகளில் பனி உருகுவதும் அதிகரித்துள்ளது. அதிகபட்ச வெப்பம் நிலவிய ஏப்ரல் 27-ஆம் தேதி இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக மத்திய வனத்துறை அறிக்கை கூறுகிறது. இதில் 30 சதவிகித காடுகள் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளவை.

வானிலையின் மாறுபாடுகளால் வெப்பக்காற்று வெளியேற வழியின்றி மேற்பரப்பிலேயே தங்குவதால் இரவு முழுவதும் லேசான வெப்பம் தொடா்கிறது. குறைந்துவரும் விண்வெளிக் குப்பைகளை மேலும் குறைப்பதற்கும் அதிகரிக்கும் வெப்ப சலனத்தை கட்டுப்படுத்துவதற்கும் அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.



Read in source website

 

இலங்கையில் 9,75,000 இந்திய வம்சாவளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது. எதற்காக இந்த ஒப்பந்தம்?

1815 காலகட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மையப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் காப்பி பயிரிட்டனர். காப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம்கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து கடலில் பயணித்தபோது பலர், தவறுதலாக வங்கக் கடலில் விழுந்து மாண்டனர். மன்னாரில் இறங்கி மலையகம் வரை அடர்ந்த காடுகள் வழியாக அழைத்துச் சென்றபொழுது, பலரும் நோய்வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்தனர். பயணத்தின்போது சோறு, தண்ணீர் இல்லை.

1842-லிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மனிதநேயமின்றி அடிமைகளைப்போல் அழைத்துச் சென்றனர். பிரடெரிக் நார்த் என்ற ஆங்கிலேயர் பரிபாலனத்தில், இலங்கையில் இருந்த ஆங்கில அரசுகள் இந்திய வம்சாவளியினரை, மனிதர்கள் என்று நினைக்காமல் பார்சல் பொருளாக நடத்தின.

தமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் துவக்கப்பட்டன. இதற்கு தலைமையிடமாக திருச்சியில் 'பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி' என்ற அமைப்பு செயல்பட்டது. இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஏழ்மையான மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்காக அனுப்பப்பட்டனர்.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்குள்ள கடுங்குளிரும், சூழலும் ஒத்துக்கொள்ளாமல் 70,000 இந்திய வம்சாவளியினர் இறந்ததாக கொழும்பு 'அப்சர்வர்' ஏடு அப்போது தெரிவித்தது. பஞ்சம், வறட்சி, கொள்ளை நோய் இங்கிருந்து சென்றவர்களை வாட்டி வதைத்தன.

ஒரு கட்டத்தில் காப்பி பயிர்கள் சரியாக விளையவில்லையென்று, ஆங்கிலேயர்கள் தேயிலை, ரப்பர், தென்னை, சிங்கோனா என்று விளைச்சலை மாற்றினர். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளர்கள் கங்காணி முறையில் கண்காணிக்கப்பட்டனர். 

அப்பகுதியில் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல் ஒன்று...

கண்டி கண்டி எங்கா தீங்கா
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதி கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி

பயத்திலும், அச்சத்திலும் தொழிலாளர்கள் வாழ வேண்டிய நிலைமை இருந்தது. காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடும் உழைப்பு. அந்த உழைப்பின்போது, காட்டில் உள்ள அட்டைகள் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சின.
இதிலிருந்து அவர்கள் தப்பி போக முடியாதவாறு வேலிகள் இருந்தன. தப்ப முயன்று அகப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. இது சுருக்கமான வரலாறு. 

இலங்கை, 4.2.1948 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டு, சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

விடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இவர்கள் படும் அவஸ்தைகள், அன்றைய பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து இலங்கை அதிபர் கொத்லவாலாவிடம் பேசினார்.

1954-இல் தில்லி வந்த கொத்லவாலா, நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு, 'நீங்கள் இலங்கை வந்தபோது, உங்கள் கூட்டத்தில் எங்கள் நாட்டினர் கல் வீசினார்கள் என்று எங்கள் மீது கோபம் காட்டாதீர்கள். இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை தீர்க்க ஒத்துழைப்புத் தாருங்கள்' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பின்னர் நேரு - கொத்லவாலா ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

நேரு - கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையகத் தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.

நேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலம் இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன இந்திய போர் போன்றவைகளை காரணமாக வைத்து, சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து பண்டார நாயகா 1964 அக்டோபர் 22-ஆம் தேதி தில்லி வந்தார்.

சிரிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய அரசு இலங்கையின் கோரிக்கையை வாய்மூடி ஏற்றுக் கொண்டது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங், தமிழக அமைச்சர் வி. ராமய்யா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்பட்டது. தமிழக அமைச்சரான வி. ராமய்யா அப்போது வாய் திறந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் பிரஜா உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. 

இதே 1964-இல் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கிடப்பில் போடப்பட்டதும், கச்சத்தீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக காவு கொடுக்கப்பட்டது என்பதும் வேறு விஷயம்.

தமிழக தலைவர்கள் அண்ணா, ராஜாஜி, ம.பொ.சி. போன்றோர் தமிழகத்தின் கருத்து அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என வினா எழுப்பினர். ஒப்பந்தம் 1964-இல் கையெழுத்தானாலும், 1967-இல்தான் நடைமுறைக்கு வரும் என்று ஒப்புக் கொண்டனர். ஆனால், 1965 - 66-லேயே சில தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு.

ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதேபோன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விட்டனர். என்ன வேதனை?
அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்தனர். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமலும், தொழில் தொடங்க கடனுக்கு மன்றாடுதல் எனவும் நிலைகுலைந்து போயினர்.
மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். பலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்திய மண்ணோ, அவர்களை தங்களுடைய சகோதரர்கள் என நினைக்காமல், சிலோன்காரர்கள் என்ற பிரிவினையோடு பார்த்தது. இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இதே நிலைமை இன்று வரை நீடிக்கிறது.

பல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை இன்றும் அனுபவித்து வருகின்றனர். 1983 கலவரங்களுக்குப் பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களைப் போன்றுதான், அன்று மலையகத் தமிழர்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகும் கஷ்டங்களை அனுபவித்தனர்.

மனித உரிமைகள், மானுடம் எனப் பேசிடும் நாம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவுக்குழிக்கும், அடிமை சாசனத்திற்கும் அழைத்துச் சென்றது என்ற ரணமான செய்தியைப் பதிவு செய்யும் நிலையில் இருக்கின்றோம்.

பிஜித் தீவு காப்பி தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளை கண்ட பாரதி, "விதியே விதியே, தமிழ் சாதியே என் செய்ய நினைத்தாய்?' என்று பாடினானே, அந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. 

சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில்

சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் குறித்து  09-03-1965 அன்று, அன்றைய மக்களவை உறுப்பினர் ஆர்.இராமநாதன் செட்டியார் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மலையகத் தமிழர்கள் எவ்வளவு சொத்துக்களோடு இந்தியாவிற்குள் வரலாம் என்று கேள்வியை முன்வைத்தார்.

அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர். தினேஷ் சிங் அக்கறையின்றி மழுப்பலான பதில் சொன்னது வேதனையாக இருந்தது. 

அதுமட்டுமில்லாமல், 75 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து வரலாம் என இலங்கை அரசு சொல்லியுள்ளது என்று பொறுப்பற்ற பதில்களை ஒப்புக்குச் சொல்லி  தில்லி பரிவாரங்கள் 1965லும் நடந்துகொண்டது.

அகதிகளாக வருபவர்கள் தானே என்ற மனநிலையில் தான் மலையகத் தமிழர்களை மிகத் தாழ்ந்த பார்வையோடு மத்திய அரசு அணுகியது அன்று. 

என்றைக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை என்பது தில்லிக்கு உப்பும், ஊறுகாயும் போன்றுதான் என்ற நிலை. அதே நிலை இன்றுவரைத் தொடர்கின்றது.

(2014ல் தினமணியில் வெளியான கட்டுரை - மீள்பிரசுரம்)

- தொடரும் 



Read in source website

அதிஸ்யா
- க.அம்சப்ரியாவின் சாக்பீஸ் கவிதைகள்
தொகுப்பு: ப்ரியம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,
சென்னை-11
விலை: ரூ.100
தொடர்புக்கு:
94446 40986

‘உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகளல்ல; உங்கள் வழியாக இப்பூமிக்கு வந்தவர்கள்’ என்றார் கலீல் ஜிப்ரான். நம் குழந்தைகள்தானே என்கிற உரிமையிலும் அக்கறையிலும் குழந்தைகள்மீது நாம் அதிகாரத்தையே செலுத்திவருகிறோம் என்பதைப் பல நேரங்களில் பெற்றோரான நாம் உணர்வதேயில்லை. பொதுவெளியில் குழந்தைகளின் அகவுலகம் சார்ந்து இன்னமும் பேசப்படாத, கவனிக்கப்பெறாத பல நூறு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழில் குழந்தைகளின் நிராதரவான ஏக்கப் பெருமூச்சு படைப்புகளின் வழியாக மெல்ல மேலெழுந்துவரும் சூழலில் வெளிவந்திருக்கிறாள் இந்த ‘அதிஸ்யா’. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டும், கல்விப் பணியில் ஈடுபாட்டோடு செயல்பட்டுக்கொண்டும் இருக்கும் கவிஞர் க.அம்சப்ரியாவின் பல கவிதை நூல்களிலிருந்து குழந்தைகளின் மனவுலகம் சார்ந்த கவிதைகளை மட்டும் தேர்வுசெய்து தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் ப்ரியம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையே இந்நூலிலுள்ள எல்லாக் கவிதைகளின் ஊடாகவும் கண்டுணர முடிகிறது. குழந்தைகள் உலகின் மையக்குரலாக அதிஸ்யாவின் குரல் கவிதைகள்தோறும் ஒலிக்கிறது. ‘அதிஸ்யாவிடம் அவர்கள் / ஓர் ஆப்பிள் துண்டைத் தந்தார்கள் / வேணிக்குக் கொஞ்சம் / விசாலாட்சிக்குக் கொஞ்சம் / உமாவுக்குக் கொஞ்சம் / ரித்திகாவுக்குக் கொஞ்சமென / காக்காக்கடி போட்டுக்கொண்டே இருந்தாள் / ஆப்பிள் துண்டு / ஆப்பிள் தோட்டமாகிக்கொண்டிருந்தது’ எனும் வரிகளில் உலகக் குழந்தைகளின் ஒற்றைப் பிரதிநிதியாக நம் முன்னே புது ரூபம் கொள்கிறாள் அதிஸ்யா. குழந்தைமையைத் தொலைத்துவிடாத மனதோடு அதிஸ்யாவையும் சுமந்துவரும் க.அம்சப்ரியாவின் இக்கவிதைகள், நமக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான புரிதலைத் தருவதில் துணைநிற்கின்றன.

- மு.முருகேஷ்

‘நந்திபுரத்து நாயகி’ - புதிய பதிப்பு

நந்திபுரத்து நாயகி
விக்கிரமன்
வெளியீடு: யாழினி பதிப்பகம்,
சென்னை - 600108
விலை: ரூ.888
தொடர்புக்கு:
044-2536 9892

சோழப் பேரரசின் அரியணையைக் கைப்பற்றுவதற்கான அதிகாரப் போட்டியை முன்வைத்து, அமரர் கல்கி எழுதிய மாபெரும் வரலாற்றுப் புதினம் ‘பொன்னியின் செல்வன்’. நவீனத் தமிழர்கள் சோழப் பேரரசு குறித்துப் பெருமிதம் கொள்ளவும் அந்தக் காலகட்டத்து அரசியல், சமூக நிகழ்வுகளைத் தேடித் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளவும் உந்திய இந்த நூல், இன்றளவும் தமிழில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நூலின் தொடர்ச்சியாக விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினம் ‘நந்திபுரத்து நாயகி’. ‘பொன்னியின் செல்வன்’ நிறைவடைந்தபோது, தொக்கிநின்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையிலும் அதன் முதன்மைக் கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்த மனிதர்களுமான அருண்மொழிவர்மன் (ராஜராஜ சோழன்), குந்தவை, வந்தியத்தேவன் உள்ளிட்டோருக்கு அதற்குப் பின் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ளும் வாசகர்களின் வேட்கையை நிறைவேற்றும் விதமாகவும் விக்கிரமன் எழுதிய தொடர்கதை 1957-59 வரை ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. நூல் வடிவத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கடந்துவிட்ட ‘நந்திபுரத்து நாயகி’, இப்போது மூன்று பாகங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது. 2015 சென்னை பெருவெள்ளத்தில் எழுத்தாளர் விக்கிரமன் மறைந்த பிறகு வெளியாகும் முதல் பதிப்பு இது.

- கோபால்



Read in source website

தி.ஜானகிராமனின் நூற்றாண்டில் (2021) தி.ஜா.வுடன் தொடர்புடைய மேலும் இரு நூல்கள் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கின்றன. தி.ஜா. அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் எழுத்து, முன்னுரை-மதிப்புரை, கலை, பயணம், சமூகம், தன் அனுபவம் போன்ற உட்தலைப்புகளில் ‘தி.ஜானகிராமன் கட்டுரைகள்’ என்ற பெயரில் சுகுமாரனால் தொகுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, தி.ஜா.வின் படைப்புகள் குறித்து சுகுமாரனால் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள், முன்னுரைகள், பதிப்புரைகள் போன்றவை ‘மோகப் பெருமயக்கு’ என்ற நூலாகியுள்ளது. தி.ஜா.வின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு முதல் தி.ஜா.வின் கட்டுரைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட பதிப்புரை வரை, கடந்த நாற்பதாண்டு காலத்தில் எழுதப்பட்ட பதினோரு கட்டுரைகளும் நேர்காணல் ஒன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்விரு நூல்களுமே சுகுமாரன் என்ற தீவிர வாசகரால் தி.ஜா. எனும் படைப்பாளுமைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட காணிக்கைகள்.



Read in source website