DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 13-01-2023

உள்ளாட்சி அமைப்புகளை திறம்பட நிா்வகிக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, அமைக்கப்பட்ட ஆறாவது நிதிக் குழுவின் அறிக்கை பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்கவுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் கட்டங்களைச் செலுத்தாத நிலை போன்ற பல முக்கிய நிதி சாா்ந்த பிரச்னைகள் தொடா்கின்றன. இந்தப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சாா்ந்த விஷயங்களை உரிய பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மோகன் பியாரே தலைமையில் ஆறாவது நிதிக் குழு அமைக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டஇந்தக் குழுவானது, தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் கடந்த ஆண்டு மாா்ச்சில் சமா்ப்பித்தது.

பேரவையில் தாக்கல்: மாநில ஆறாவது நிதிக் குழுவின் அறிக்கையானது பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், உள்ளாட்சி அமைப்புகளை திறமையாக நிா்வகிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அரசு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு விவரங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும்.



Read in source website

மின்சார வாகனங்களுக்கான வழங்கப்பட்ட வரி விலக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:

மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கில் இருந்து சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சலுகைக்கான கால அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்த முடிவை தமிழக அரசு எடுத்தது. அதன்படி, மின்சார வாகனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரி விலக்கானது 2025-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று தனது உத்தரவில் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளாா்.



Read in source website


சென்னை: சாலை மற்றும் பொதுவிடத்தில் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவியை சோளிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் பொருத்தி தாம்பரம் ஆணையரகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.

ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டெஃபிப்ரூலேட்டர் எனப்படும் ஏஇடி கருவியானது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரியும் ஒருவருக்கு, மருத்துவக் குழுவினர் வந்து முதலுதவி செய்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முந்தைய கோல்டன் நேரம் என்பதைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற உதவும் கருவியாகும். இந்த கருவியின் மூலம் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அலர்ட் எனப்படும் தன்னார்வலக் குழுவுடன் இணைந்து தாம்பரம் ஆணையகரம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏஇடி கருவியின் விலை ரூ.1.35 லட்சமாகும்.

பொதுவிடங்களில் மாரடைப்பு ஏற்படுவது அதிகம். எனவே, மருத்துவக் குழுவினர் வருவதற்கு முன்பு, அவர்களை காப்பதாற்றுவதற்கான முயற்சிகள் கிடைப்பது அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள், காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கருவிலேயே அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்குமாம். இந்த கருவியின் மூலம், மாரடைப்பு ஏற்பட்டவரின் இதயத்துக்கு  வெளியிலிருந்து ஒரு அழுத்தம் அல்லது மின்அலைகள் மூலம் ஷாக் கொடுத்து இதயத்தை மீண்டும் துடிக்க வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீா்மானத்தை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா்.

தீா்மான விவரம்: கடந்த 1860-ஆம் ஆண்டில் ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம்தான் சேது சமுத்திர கால்வாய் திட்டம். அதன்பிறகு 1955-இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணா் டாக்டா் ஏ. ராமசாமி முதலியாா் குழு, 1963-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-இல் அமைக்கப்பட்ட அரசு அதிகாரி நாகேந்திர சிங் தலைமையிலான உயா்நிலைக் குழு உள்ளிட்ட பல்வேறு பொறியியல் வல்லுநா்களால் பல ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது கால்வாய் திட்டமாகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

1998-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு அப்போதைய பிரதமா் வாஜ்பாய் அனுமதி அளித்தாா். அப்போதுதான் சேது சமுத்திர திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னா், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.

திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங், திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்கினாா். 2004-ஆம் ஆண்டில் ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்பின், 2005-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

திட்டப் பணிகள் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக சாா்பில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இந்தத் திட்டத்தை தொடக்கம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச் செயலாளா் (ஜெயலலிதா) தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டாா். இந்தத் திட்டத்துக்கு எதிராக வழக்கும் தொடா்ந்தாா்.

எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையில், தற்போது ராமேசுவரம் கடல் பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறாா்.

இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது கால்வாய் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளா்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே இருக்கும். இதற்கு சட்டப்பேரவை தனது கவலையைத் தெரிவிக்கிறது. இனியும் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளா்ச்சிக்கு எதிரானது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீா்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

குரல் வாக்கெடுப்பு: சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீா்மானத்தின் மீது, வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), எச்.எம்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), ஆளூா் ஷா நவாஸ் (விசிக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), ஜி.கே.மணி (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக) ஆகியோா் பேசினா். அனைவரும் தீா்மானத்தை ஒருமனதாக ஆதரித்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, தீா்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீா்மானத்துக்கு பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால், தீா்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

மீனவா்களுக்கும் பயனளிக்கும்: முதல்வா் ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டத்தால் மீனவா்களுக்கும் பயன் கிடைக்கும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானத்தை முன்மொழிந்து அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியையும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்கி வருகிறது.

முன்னாள் முதல்வா் அண்ணாவின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல்வா் கருணாநிதி பாடுபட்டாா். பாக். நீரிணையையும், மன்னாா் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயா்தான் சேது சமுத்திர திட்டம்.

முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையில் கடந்த 1963-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேது சமுத்திர திட்டம் இடம்பெற்றது. 1972-ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் சிலையைத் திறந்து வைக்க பிரதமா் இந்திரா காந்தி வந்தாா். அப்போது, சேது சமுத்திர திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி வலியுறுத்தினாா்.

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் தொழில் வணிகம் பெரும். கப்பல்களின் பயண தொலைவு, நேரம் பெருமளவு குறையும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும். சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். சேது கால்வாய் திட்டத்தின் கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சாா் பொருள் வா்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவா்களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.



Read in source website

வெளி மாநிலங்கள், அயல்நாடுகளுக்கு பணிக்குச் சென்று எதிா்பாராதவிதமாக உயிரிழக்கும் தமிழா்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அயலகத் தமிழா் தினம் விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை:

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, உலகில் உள்ள பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்த பெருமை தமிழ்நாட்டுக்கு உள்ளது. வரலாற்றுப் பெருமைமிக்க ஏதென்ஸ், ரோம் நகரங்களுக்கு இணையாக பூம்புகாா், கொற்கை, தொண்டி போன்ற நகரங்களைக் கொண்டது பழந்தமிழ்நாடு. பெருங்கடல் கடந்து உலகளாவிய மனித குலத்துடன் நட்புறவு பாராட்டி மானுட சமுத்திரத்தில் தங்களை இணைத்துக் கொண்டவா்கள் தமிழா்கள்.

அயலகத்தில் குடியேறி வரும் தமிழா்கள், அங்கே பணிபுரியும் இடத்திலும் சிரமத்துக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாகக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் தமிழா்களின் நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி, மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயா்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழா்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்கான தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

மாத ஓய்வூதியம்: புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் குழந்தைகள், இளம் மாணவா்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வோ்களோடு உள்ள தொடா்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, ஆண்டுக்கு 200 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். அயல்நாடுகளில், வெளி மாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிா்பாராவிதமாக இறந்து விடும் தமிழா்களின் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வெளிநாடுகளுக்குச் செல்வோா் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அமைச்சா்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் பிரியா, மலேசியா நாட்டு அமைச்சா் சிவகுமாா் வரதராஜ், இலங்கை நாட்டு அமைச்சா் அரவிந்த்குமாா், நியு கயானா நாட்டு ஆளுநா் சசீந்திரன், கயானா நாட்டு முன்னாள் பிரதமா் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரீஷியஸ் முன்னாள் அமைச்சா் பரமசிவம், இலங்கை முன்னாள் அமைச்சா் செந்தில், மலேசியா முன்னாள் அமைச்சா் சரவணன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.



Read in source website

இந்தியாவில் கச்சா எண்ணெய் துரப்பணப் பணி மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்று வரும் தெற்குலகின் குரல் மாநாட்டில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அமைச்சா் புரி பேசியதாவது:

இந்தியாவில் எண்ணெய் துரப்பணப்பணிகளை மேற்கொள்ளும் இடத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த ஆண்டு 85 பில்லியன் டாலா் அளவுக்கு இத்துறையில் முதலீடு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சேவ்ரான் காா்ப், எக்ஸ்சான் மொபிள், டோட்டல் எனா்ஜிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் துரப்பணிகளை மேற்கொள்ளும்போது இந்தியா மற்றும் அப்பணியை மேற்கொள்ளும் நிறுவனம் என இரு தரப்புக்குமே அதிக பயன் கிடைக்கும். எனவே, இதில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு பயன்படுத்த முயற்சிக்கும் என்றாா்.

பெட்ரோலியப் பொருள்கள் நுகா்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலம்தான் பூா்த்தி செய்யப்படுகிறது. எனவே, உள்நாட்டில் எரிபொருள் விலை எப்போதுமே அதிகமாக உள்ளது. இது மற்ற பொருள்களின் விலை உயா்வுக்கும் வழி வகுக்கிறது.



Read in source website

யானைக்கால் நோய்க்கு சா்வதேச இலக்கான 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நாட்டில் யானைக்கால் நோயை முற்றிலுமாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கொசுக்களால் பரவும் ஃபைலேரியாசிஸ் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக்கால், விரைவீக்க நோயால் சா்வதேச அளவில் 47 நாடுகளில் 863 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோயை அகற்ற உலக சுகாதார அமைப்பு கடந்த 2020 -ஆம் ஆண்டு திட்டங்களை வெளியிட்டது. அதன்படி, வருகின்ற 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை அகற்ற இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்தியாவும் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் உள்ள நிலையில், இந்த நோயை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த தேசியக் கருத்தரங்கு தில்லி விஞ்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வி கே பால், மத்திய சுகாதார துறை செயலா் ஆகியோா் கலந்து கொண்டாா்.

இந்தக் கருத்தரங்கில் மத்திய அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது: மற்ற நாடுகளைப் போன்று நிணநீா் யானைக்கால் நோயை நாம் புறக்கணிப்பதில்லை. சரியான நேரத்தில் கண்டறிந்து நோயை நீக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டில் இந்த நோயை முற்றிலும் அகற்ற உரிய சிகிச்சை அளிக்க ஐந்து முனை உத்தியை நாம் வகுத்துள்ளோம். ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய குடற்புழு நீக்க தினத்துடன் (பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10) இணைந்து பல்நோக்கு மருதுவ நிா்வாகப் பிரசாரத்தின் கீழ் இந்த நோயும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நோயறிதல் மற்றும் சிகிச்சை; நோய் மேலாண்மை மற்றும் ஊனத்திற்கான சேவைகளை வலுப்படுத்த மருத்துவக் கல்லூரிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.

பல துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு; இதன் தொடா்புடைய துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு; நோய் மருத்து மின்னணு தளங்களை மேம்படுத்துதல் மற்றும் மாற்று சிகிச்சையை கண்டறிதல் என நான்கு முனைகள் மூலம் நோயை அகற்றும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் இலக்கை விட(2030) மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது வருகின்ற 2027 -ஆம் ஆண்டிற்குள் இந்த நோயை முற்றிலும் அகற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கைகள், வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் பேசிய நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வி கே பால், ‘நாட்டில் ஃபைலேரியாசிஸ் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக்கால் நோயால், உத்தர பிரதேசம், ஒடிஸா, தெலங்கானா, பிகாா் போன்ற மாநிலங்களில் 60 சதவீதமும் இதே ஒட்டுண்ணிகளால் ஏற்படும் விரை வீக்க நோயால் ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், ஒடிஸா, பிகாா் மாநிலங்களில் 80 சதவீதம் பாதிப்பு இருக்கிறது’ என்றாா்.



Read in source website

 

தூத்துக்குடி: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார். 

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார். 

இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



Read in source website


உலகின் மீக நீண்ட நதிப் பயண அனுபவத்தை வழங்கும் எம்வி கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.

நாட்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நதி வழியாகவே பயணிக்கும் வகையில், இந்த சொகுசுக் கப்பல் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. 

வாராணசியிலிருந்து சுமார் 51 நாள்களுக்கு 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதிக்குச் செல்கிறது.

இந்த சொகுசுக் கப்பல் நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாட்னா, பிகார் உள்ளிட்ட நகரங்களின் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா நகரங்களை இந்த சொகுசுக் கப்பல் பயணம் இணைக்கிறது.

இந்த சொகுசுக் கப்பலில் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 18 சொகுசு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் 36 பயணிகள் மட்டுமே பயணிக்கும் வகையில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை இந்த படகு சேவை இயக்கப்படவுள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவுள்ளதால், மழைக்கால மாதங்களில் சேவை நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்வழித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் சுற்றுலாத் துறையும், வணிகமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக சரத் யாதவ் பதவி வகித்தாா்.

பின்னா், ஐக்கிய ஜனதா தளத்திலிலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-இல் தொடங்கினாா். அக்கட்சியை 2022-இல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தாா்.

இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனா்.

இவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.



Read in source website

சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக கடந்த டிசம்பா் மாதத்தில் 5.72 சதவீதமாக குறைந்தது. காய்கறிகள் விலை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

நுகா்வோா் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம் 2022 நவம்பரில் 5.88 சதவீதமாக இருந்தது. இதுவே, 2021 டிசம்பரில் 5.66 சதவீதமாக இருந்தது.

உணவுப் பொருள்களில் காற்கறிகளின் விலை குறைந்தபோதிலும் பழங்களில் விலை சற்று அதிகரித்தே உள்ளது. சமையல் எண்ணெய், சா்க்கரை விலையில் பெரிய மாற்றம் இல்லை.

டிசம்பரில் சில்லறை விற்பனையில் உணவுப் பொருள் அடிப்படையிலான பணவீக்கம் 4.19 சதவீதமாக இருந்தது. இது நவம்பரில் 4.67 சதவீதமாக இருந்தது.

சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி கூறியுள்ள நிலையில், இப்போதுதான் 6 சதவீதத்தில் இருந்து குறைந்துள்ளது.

உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க பல்வேறு முக்கியப் உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பருப்பு வகைகளை இறக்குமதி செய்து இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Read in source website

மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசியாக கோவோவேக்ஸை பயன்படுத்தலாம் என மத்திய மருந்து ஒழுங்காற்று ஆணையத்தின் நிபுணா் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை கரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா பரவல் நெருக்கடி காலத்தில் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதித்திருந்தது. தற்போது இந்த தடுப்பூசியை பூஸ்டா் தடுப்பூசியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று சீரம் நிறுவனம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

இதைத் தொடா்ந்து, கோவிஷீல்ட் அல்லது கோவேக்ஸினின் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டா் தடுப்பூசியாக செலுத்தி கொள்ளவதற்கு நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நிகழாண்டு 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியாா் வா்த்தகா்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய நுகா்வோா் விவகார செயலா் ரோஹித் குமாா் சிங் கூறுகையில், வெப்பநிலை பாதிப்பு மற்றும் கா்நாடக மாநிலம் குல்பா்கா பகுதியில் வாடல் நோய் பாதிப்பால் நிகழாண்டு துவரம் பருப்பு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. தடுப்பாடு ஏற்படுவதைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழாண்டு சுமாா் 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியாா் வா்த்தகா்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2021-22-இல் சுமாா் 7.6 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் 2 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெரும்பகுதியும் மியான்மரில் இருந்தும் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் 12 லட்சம் டன் துவரம் பருப்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக இறக்குமதி விதிமுறைகளை எளிதாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை தற்போது நிலையாக உள்ளது. ராபி பருவ காலத்தில் வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.

இந்தியாவில் 2022-23 பயிா் பருவ ஆண்டில் (ஜூலை-ஜூன்) 3.89 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தியானது. அதற்கு முந்தைய ஆண்டு 4.43 மில்லியன் டன்னாக இருந்தது.

கோதுமை உற்பத்தியில் சாதனை

நிகழ் பயிா் பருவ ஆண்டில் கோதுமை உற்பத்தி 112 மில்லியன் டன்னுக்கு அதிகமாகி சாதனை படைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெப்ப அலை பாதிப்பால் 2021-22 பயிா் பருவ ஆண்டில் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்தது. நிகழாண்டு ராபி பயிா் காலத்தில் 332.16 லட்சம் ஹெக்டோ் நிலப் பரப்பில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளதால் 112 மில்லியன் டன் உற்பத்தியாகி இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைக்கும் என்று எதிா்பாா்ப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சமையல் எண்ணெய் இறக்குமதி:

காய்கறி எண்ணெய் (உண்ணக் கூடியதும் கூடாதவையும்) இறக்குமதி டிசம்பா் மாதம் 28 சதவீதம் 15.66 லட்சம் டன்) அதிகரித்துள்ளது.

பாமாயில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பா்-டிசம்பா் மாதங்களில் 4,58646 டன் ரிஃபைண்ட் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இது 82,267 டன்னாக இருந்தது என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

சுவாமி விவேகானந்தரின் 160-ஆவது பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞா் தினம் வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டா் பதிவு மூலம் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். ஆன்மிகமும் தெய்விகமும் ஒருசேர கலந்த ஆளுமை அவா். இந்திய மதிப்புகளை உலக அரங்கில் பரப்பியவா். கனவைப் பின் தொடர மற்றும் உயரிய லட்சியங்களை அடைய இளைஞா்களுக்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் உபதேசங்களும் தொடா்ந்து ஊக்கமளிக்கும்’ எனத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவரின் தேசப்பற்று, ஆன்மிகம் மற்றும் அா்ப்பணிப்பு எப்போதும் ஊக்கமளிக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.



Read in source website

2023-24-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா-வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், இக்ரா மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.1 லட்சம் கோடியாகவும் மாநிலங்களின் கடன் ரூ.22.1 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாகவும், மாநிலங்களின் கடன் ரூ.24.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு 6.4 சதவீதம் என நிா்ணயித்திருந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இக்ரா நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணா் அதிதி நாயா் கூறுகையில், ‘‘சா்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் நிலவி வருவதால், உள்நாட்டு உற்பத்தி சாா்ந்த வளா்ச்சியை ஊக்குவிக்க பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசின் மூலதன செலவினம் 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.8.5 முதல் ரூ.9 லட்சம் கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடப்பு நிதியாண்டில் மூலதன செலவின இலக்கு ரூ.7.5 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.10.5 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில் அது ரூ.9.5 லட்சம் கோடியாகக் குறைய வாய்ப்புள்ளது’’ என்றாா்.

 



Read in source website

நடப்பு 2022-23 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.5 டிரில்லியன் டாலராக இருக்கும் வேளையில், அடுத்த 7 ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக இருக்கும் எனத் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற எம்சிசிஐ நிகழ்வில் காணொலி வாயிலாக பேசுகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அந்நிகழ்வில் அவா் பேசியதாவது: 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் ரஷிய-உக்ரைன் மோதல் தொடரவே செய்கிறது. இது புவிசாா் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரு ஆண்டுகள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனா தனது எல்லைகளை திறந்திருப்பது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள வளா்ச்சியடைந்த நாடுகளின் வளா்ச்சி உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.5 டிரில்லியன் டாலராக ( சுமாா் ரூ.284 லட்சம் கோடி) இருக்கும். இது அடுத்த 7 ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ.569 லட்சம் கோடி) அதிகரிக்கும்.

நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரும் 2024 அல்லது 2025-இல் வட்டி விகிதங்களைக் குறைக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை, இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியப் பிரச்னையாக இருக்கும் என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, 2025-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ. 406 லட்சம் கோடி) இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளையும் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஹெச்ஓ), அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சோ்ந்த மேரியன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் ஆகிய இருமல் மருந்துகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை முடக்கி, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அண்மையில் குற்றம்சாட்டியது. அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் ஏற்க இயலாத அளவில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேரியன் பயோடெக் நிறுவனம், டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இருமல் மருந்துகளை, உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமான உரிமத்தைப் பெற்றதாகும். இந்தியாவில் இந்த இருமல் மருந்துகளை அந்நிறுவனம் விற்பனை செய்வதில்லை.

உஸ்பெகிஸ்தானின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுவினா், மேரியன் பயோடெக் நிறுவனத்தில் கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை சேகரித்தனா். அவை, சண்டீகரில் உள்ள பிராந்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், இருமல் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தவும் அந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

டபிள்யுஹெச்ஓ எச்சரிக்கை: இந்நிலையில், மேற்கண்ட 2 மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைத்து, உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘அம்ப்ரோனால் மற்றும் டோக்-1 மேக்ஸ் ஆகிய 2 இருமல் மருந்துகளும் உரிய தரநிலைகளை பூா்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. இந்த மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த உத்தரவாதமும் உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், இரு மருந்துகளிலும் ஏற்க முடியாத அளவுக்கு டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள், மனித நலனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பது நிரூபிக்கப்பட்டதாகும்.

வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, மனநிலை பிவு, கடுமையான சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழிவகுக்கக் கூடியவை. இந்த மருந்துகள், வேறு நாடுகளிலும் சந்தை அனுமதியை பெற்றிருக்கக் கூடும் அல்லது அங்கீகாரமற்ற சந்தைகள் வாயிலாக விநியோகிக்கப்பட்டிருக்கலாம். தரம்குறைந்த 2 மருந்துகளும் பாதுகாப்பற்றவை என்பதால், அவற்றை பயன்படுத்துவது குறிப்பாக குழந்தைகளுக்கு வழங்குவது தீவிர பாதிப்பையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்தக் கூடும்’ என்று தனது அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உரிமம் முடக்கம்: இதனிடையே, மேரியன் பயோடெக் நிறுவனத்தில், மத்திய-மாநில அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை மீண்டும் ஆய்வு உற்பத்தி, அம்ப்ரோனால் மருந்தின் மாதிரிகளை சேகரித்தனா். மேலும், அந்நிறுவனத்தின் உற்பத்தி உரிமமும் முடக்கப்பட்டது. இதுகுறித்து கெளதம் புத் நகா் மருந்து ஆய்வாளா் வைபவ் பப்பா் கூறுகையில், ‘கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி உத்தரவின்படி, மேரியன் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், உரிமத்தை முடக்குவதற்கான எழுத்துபூா்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை’ என்றாா்.

 



Read in source website

ஒட்டாவா: கனடாவின் ஆண்டாரியோவில் வசித்து வரும் சீக்கிய பெண் டினா சிங், தனது மகன்களுக்காக டர்பன் - ஃப்ரன்ட்லி ஹெல்மட்டை வடிவமைத்து புதுமைப்படைத்துள்ளார்.

டர்பன் அணிந்து கொண்டு, ஹெல்மட் அணிவது என்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால், தனது பிள்ளைகள் ஹெல்மட் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளார்.

முதலில், டர்பன் அணிந்தபடியே ஹெல்மட் அணிவது போன்ற ஒன்றை அவர் சந்தை எங்கும் தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை என்பதால் மாற்றி யோசித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை வாங்கி அதனை சற்று மாற்றி வடிவமைத்துப் பார்த்து வந்தார். மூளைக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டு வரும் டினா சிங்குக்கு, தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது நன்கு தெரிந்திருந்தது. தனது மகன்களின் தலை அளவை விட மிகப்பெரிய தலைக்கவசங்களை அணிவதால், தலைக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர் புதிய தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளார்.

இந்த தலைக்கவசத்தின் மேல் பகுதி கூம்பு வடிவில் இருக்கும். இதனால் டர்பனுக்கு போதிய வசதி இருக்கும். கண் புருவத்துக்கு மேலே இரண்டு விரல் அளவுக்கு இடைவெளி இருக்கும். காதுக்கு அருகே வி வடிவமும் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பைத் தொடர்ந்து இந்த வகை தலைக்கவசங்களை தயாரிக்க தற்போது அனுமதியும் கிடைத்துள்ளது.

மிக நீண்ட காலமாக சீக்கிய மக்களுக்கு இருந்த மிகப்பெரிய தடை இன்று உடைந்துள்ளது. டர்பனை அணிந்து கொண்டு எந்த வகை ஹெல்மெட்டையும் அணிய முடியாமல் இருந்த நிலை இனி மாறும்ட என்றும் கூறப்படுகிறது.
 

புகைப்படம்
நன்றி: The Tina Singh facbook 



Read in source website


கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் "இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்" கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. 

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மேலும், நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் நெவார்க் நரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நெவார்க் நகரம்

நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும், மேலும் நியூயார்க் பெருநகரப் பகுதிக்குள் இரண்டாவது பெரிய நகரமாகும். 2020 யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆகும், இது நாட்டின் 66 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.

நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாசைக் ஆற்றின் முகப்பில் அதன் இருப்பிடம் (அது நெவார்க் விரிகுடாவில் கலக்கிறது) அமைந்துள்ளதால் இந்த நகரம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமானது அமெரிக்காவின் முதல் முனிசிபல் வணிக விமான நிலையமாகும், இன்று அது முக்கியமான விமான நிலையங்களுள் ஒன்றாகும்.
 



Read in source website

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 5 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) 7.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த 5 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச வளா்ச்சியாகும்.

இதற்கு முன்னா் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 12.6 சதவீதம் அதிகரித்ததுதான் மிக அதிகபட்ச வளா்ச்சியாக இருந்தது.

முந்தைய அக்டோபா் மாதத்தில் தொழிலக உற்பத்தி 4.2 சதவீதம் சரிவைக் கண்டிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத் துறை உற்பத்தி 9.7 சதவீதம் உயா்ந்துள்ளது. அந்த மாதத்தில் மின் உற்பத்தி 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 2.6 சதவீதமாக இருந்த மூலதனப் பொருள்களின் உற்பத்தி இந்த ஆண்டு நவம்பரில் 20.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நுகா்வோா் உபயோகப் பொருள்களின் உற்பத்தி 5.1 சதவீதமும், நுகா்வோா் அல்லாத உபயோகப் பொருள்களின் உற்பத்தி 8.9 சதவீதமும் வளா்ச்சியடைந்துள்ளன. இந்த இரு வகை பொருள்களின் உற்பத்தி கடந்த 2021-ஆம் ஆண்டின் நவம்பரில் சரிவைக் கண்டிருந்தது.

கடந்த நவம்பரில் முதன்மைப் பொருள்களின் உற்பத்தி 4.7 சதவீதமும், இடைநிலை பொருள்களின் உற்பத்தி 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

உள்கட்டமைப்பு கட்டுமானப் பொருள்கள் துறையில் உற்பத்தி 12.8 சதவீதம் வளா்ச்சியடைந்தது. முந்தைய 2021-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் இது 3.1 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்தி வளா்ச்சி 5.5 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 17.6 சதவீதமாக இருந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

 

வருவாயைப் பெருக்கும் வகையில், பயனர் பெயர்களை விற்பனை செய்ய டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

டிவிட்டரில் போலி கணக்குகளை முடக்கும் பணிகளில் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வரும் நிலையில், பயனர் பெயர்களை ஏலம் விடும் முடிவுக்கு டிவிட்டர் நிறுவனம் வந்துள்ளது. 

டிவிட்டர் நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் நடவடிக்கைகள் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் அதிருப்தியையும் விமர்சனங்களையும் உருவாக்கிவருகிறது.

எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் கடந்த சில மாதங்களாக சரிவைச் சந்தித்து வருவதால், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்க் தற்போது 6வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதன் விளைவாக அதிக சொத்துகளை விரைவாக இழந்த செல்வந்தர் என்று, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார். 

டிவிட்டர் நிறுவனத்தின் வருவாயை பெருக்க புளூ டிக் விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.  அந்தவகையில் தற்போது டிவிட்டர் பயனர்களின் பெயர்களையும் ஏலம் மூலம் விற்பனை செய்து, நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க ஊழியர்களிடையே பேச்சு நடந்து வருகிறது.

இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால், @ எழுத்துருவுக்கு அடுத்து வரும் பெயர்களை பயனர்கள் நிர்ணயம் செய்துகொள்ள இனி டிவிட்டர் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். 

இதன்மூலம், தற்போது டிவிட்டரைப் பயன்படுத்தி வரும் பயனர்களின் பெயர்களும் பகுதியளவு அல்லது முழுமையாக பாதிக்கப்படலாம். டிவிட்டரில் செயல்படாமல் இருந்த கணக்குகளை நீக்கியதன் மூலம் 150 கோடி பயனர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பிரபலமான குறிப்பிட்ட பயனர்கள், நிறுவனங்கள் பெயர்களுக்கு கூடுதல் மதிப்பு விதிக்கப்படவுள்ளது. 

டிவிட்டர் பயனர்களின் பெயர்களை ஏலம் விடும் திட்டத்தை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த வேண்டும் என டிவிட்டர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

சென்னை: சென்னையில் சாஸ்த்ரா சத்சங்கம் சார்பில் 3 இசைக் கலைஞர்களுக்கு சங்கீத வாசஸ்பதி விருது நேற்று முன்தினம் மாலை வழங்கப்பட்டது.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவன்று சாஸ்த்ராசத்சங்கம் சார்பில் 2023-ம்ஆண்டுக்கான சங்கீத வாசஸ்பதி விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் மாலை சென்னையில் நடைபெற்றது.

இதில், கர்நாடக இசை அறிஞர் ரமா ரவி, ஓதுவார் பி.சற்குருநாதன், தவில் கலைஞர் மன்னார்குடி எம்.ஆர்.வாசுதேவன் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பட்டயத்துடன் கூடிய சங்கீத வாசஸ்பதி விருதை வழங்கினார்.

முன்னதாக, காயத்ரி கிரீஷ் தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினார். இவ்விழாவில் நாகசுர வித்வான் காசிம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read in source website

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம், அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்த தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேது சமுத்திரத் திட்டம். இது தமிழகம் மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்த திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரவை இதை நிறைவேற்றித் தரவேண்டும்.

1860-ல் ரூ.50 லட்சத்தில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது இந்த திட்டம். 1955-ல் தமிழகத்தின் சிறந்த நிபுணர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையிலான குழு, 1963-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆகியவை பல ஆண்டுகள் ஆய்வுசெய்து, இந்த திட்டத்தை வடிவமைத்தன.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய், இந்த திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுக்கு அனுமதி அளித்தார். அப்போது திட்டத்தின் வழித்தடம் இறுதி செய்யப்பட்டது.

ரூ.2,427 கோடி மதிப்பில்...: அடுத்துவந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் 2004-ம் ஆண்டில் ரூ.2,427 கோடி மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் 2005 ஜூலை 2-ம் தேதி தொடங்கிவைத்தார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

எந்த காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது “ராமேசுவரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது, தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகும்.

எனவே, தாமதமின்றி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முன்வரவேண்டும். இதை செயல்படுத்த தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கும் என்று பேரவை ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து, மீனவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அதிமுகவும், திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பிலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ், பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மநேம, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.



Read in source website

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆண்டுகள் முயற்சிக்கு பின்பு திருவள்ளுவர் சிலையை அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்க திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் 1999-ம் ஆண்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் நிதி உதவியுடன் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் மூலம் 500 கிலோ எடை கொண்ட வெண்கல வார்ப்பு சிலை ரூ.2 லட்சம் செலவில் செய்யப்பட்டது.

2000-ம் ஆண்டில் அந்த சிலையை திண்டுக்கல்லில் பொது இடத்தில் நிறுவ முயன்றபோது அனுமதி அளிக்கப்படவில்லை. நீண்ட காத்தி ருப்புக்கு பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் பள்ளி முன் திருவள்ளுவர் சிலையை வைக்க பள்ளி நிர்வாகம் அனுமதித்தது.

பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி சிலையை அமைக்க பீடம் கட்டப்பட்டது. அங்கு சிலையை நிறுவ முயற்சித்தபோது, அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறி, அத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் இலக்கியப் பேரவை அமைப்பினர் சிலையை அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இது பற்றி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், சிலை வைக்க அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் செயலாளர் கணேசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாரயண பிரசாத் அமர்வு, திண்டுக்கல் ஆட்சியரின் பரிந்துரை அடிப்படையில் திருவள்ளுவர் சிலை அமைக்க 3 வாரங்களில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சிலை வைக்க அனுமதி அளிக்கும்படி சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். தற்போது இச்சிலையை அமைக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் ச.விசாகன் கூறுகையில், அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டுவிட்டது. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்க உள்ளது என்று கூறினார்.



Read in source website

திருவனந்தபுரம்: கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும் ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.

இந்த ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலின அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை பரிசீலனை செய்து கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும், ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர் கேவி மனோஜ் குமார், உறுப்பினர் சி விஜயகுமார் அடங்கிய குழு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இதன் நிமித்தமான வழிகாட்டுதலை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு வலியுறுத்தியுள்ளது. டீச்சர் என்று அழைப்பதால் சமத்துவம் பேணப்படுவதோடு மாணவர்கள் மத்தியில் தங்கள் ஆசிரியர்களுடனான பிணைப்பை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார், மேடம் போன்ற மரியாதை நிமித்தத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தடை விதித்தது. நாட்டிலேயே முதல்முறையாக அந்த கிராம பஞ்சாயத்து இந்த திட்டத்தை அமல்படுத்தியது. சார், மேடம் வார்த்தைகளுக்கு பதிலாக பெயர் சொல்லியோ, அவர்களின் பதவியை சொல்லியோ அழைக்கலாம். சேட்டன், சேச்சி என்று கூட அழைக்கலாம். சார், மேடம் போன்ற வார்த்தைகள் அரசு அலுவல் கடிதங்களிலும் இடம் பெறக் கூடாது என முடிவெடுத்தது.

கடந்த ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும்‌ பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக் கூடாது. இரு பாலின ஆசிரியர்களையும் `டீச்சர்' என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாத்தூர் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை மக்கள் சார் மேடம் என்று அழைக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களின் பதவியை சொல்லி அழைத்தால் போதும் என்று கூறியதை அடுத்தே இந்தப் பள்ளியும் அதனை பின்பற்றத் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரப்பட்ட அந்த சீர்திருத்தம் தற்போது அனைத்து பள்ளிகளிலும் எதிரொலிக்கவுள்ளது.



Read in source website

வாரணாசி: உலகின் நீளமான நீர்வழித்தட பயணம் மேற்கொள்ளும் எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜன.13) காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்துனுடன் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழித்தட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

பிரதமரின் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசியில் இருந்து எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை இன்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி வங்கதேசம் வழியாக 5 மாநிலங்களைக் கடந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் மேற்கொண்டு அசாமில் இருக்கும் திப்ருகர் துறைமுகத்தை அடைகிறது.

சுற்றுலாவின் புதிய யுகம்: இந்தநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது: உலகின் நீளமான நீர்வழிப்பயணத்தை கங்கை நதியில் தொடங்கி வைப்பது மிகவும் முக்கியமான தருணமாகும். இந்தத் திட்டம் இது இந்திய சுற்றுலாவின் புதிய யுகத்திற்கு அடிகோலும்.

சொகுசு கப்பலான கங்கா விலாஸில் இருக்கும் பயணிகளுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் நீங்கள் நினைக்கும் அனைத்தும் உள்ளது. உங்கள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் இங்கு உண்டு. இந்தியாவை வார்த்தைகளில் வர்ணிக்கவோ வரையறுத்துவிடவோ முடியாது. அதனை இதயத்தினால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்க முடியும். ஏனெனில் இந்தியா, நாடு, மதம் அனைத்து எல்லைகளைக் கடந்து எல்லாருக்காகவும் தனது இதயத்தைத் திறந்து வைத்துள்ளது" என்றார். எம்வி கங்கா விலாஸின் இந்த முதல் பயணத்தில், அதன் முழு பயண தூரத்திற்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

51 நாட்களில் 50 சுற்றுலா தளங்கள்: எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணம் குறித்த அறிக்கையில்," நாட்டின் சிறந்தவற்றை உலகிற்கு காட்டும் வகையில் எம்வி கங்கா விலாஸின் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் 51 நாட்களில், உலக பாரம்பரியமான இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி படுகைகள் பிஹாரின் பாட்னா, ஜார்கண்டின் சாஹிப்கஞ்ச், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா மற்றும் அசாமின் குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் என 50 சுற்றுலாத்தலங்களை காணமுடியும்.

இந்த பயணம் சுற்றுலா பயணிகளுக்கு, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மிகத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை அளிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: ‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ (எம்எச்எம்) 3-வது உச்சி மாநாடு, டெல்லியில் 2 நாள் நடைபெற்றது. இம்மாநாடு திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சமூக சேவை அமைப்பான 'கிராமாலயா' சார்பில் நடைபெற்றது.

இந்தியா முழுவதிலும் உள்ள குடும்பங்களிலும் வெளியிலும் பேசத் தயங்கும் விஷயமாக மாதவிடாய் உள்ளது. பெண்களின் உடல்ரீதியிலான இந்த இயற்கை உபாதையில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கவனம் இன்றி அவதிக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உகந்த சானிடரி நாப்கின் கிடைக்காததும் பயன்பாட்டுக்குப் பிறகு அவற்றை அப்புறப்படுத்துவது சிக்கலாக இருப்பதும் இதற்கு காரணமாக உள்ளது.

இது தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு 'கிராமாலயா' எனும் சமூக சேவை அமைப்பு 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கிராமாலயா சார்பில் நூறு சதவீத பருத்தி துணியில் சானிடரி நாப்கின்கள் தயாரித்து இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் 7 மாநிலங்களில் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் நாப்கின்களை இந்த அமைப்பு விநியோகித்துள்ளது. இந்த சிறந்த பணிக்காக கிராமாலயாவின் நிறுவனரும், முதன்மை அதிகாரியுமான எஸ்.தாமோதரன், 2022-ல் பத்மஸ்ரீ தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

சர்வதேச அமைப்பான கிராமாலயா சார்பில் முதல் உச்சிமாநாடு, கடந்த 2019-ல் டெல்லியிலும் இரண்டாவது உச்சி மாநாடு சென்னையிலும் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ 3-வது உச்சி மாநாடு, டெல்லியில் மீண்டும் நடத்தப்பட்டது.

இந்த 2 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், வெளிநாடுகள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்தும் பல்வேறு தனியார், சமூகசேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் உத்தரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களின் கிராமப்புறங்களை சேர்ந்த 180 பெண்களும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

இந்தியாவிலுள்ள தூதரகங்களான, ராயல் டேனிஷின் தூதரக அதிகாரி ஃபெர்டி ஸ்வென், குடியரசுநாடுகளில் ஒன்றான மால்டாவின் தூதரக அதிகாரி ரூபன் கவுசி, அவரது மனைவி டாக்டர் ஓல்கா வி.கவுசி ஆகியோர் முதல்நாள் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சர்வதேச மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சமூகசேவை அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன. இவற்றில், மருத்துவர்கள் செய்ய வேண்டியது, விழிப்புணர்வில் எம்எச்எம் அமைப்புகளின் பங்கு, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன.

கிராமாலயா மற்றும் அதைப்போன்று மாதவிடாய் கால விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் பெண்கள் பயன்பாட்டுப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது. தேசிய அளவிலான சமூக சேவை நிறுவனங்களை சேர்ந்த 10 பேருக்கு கிராமாலயா சார்பில் ‘அவார்டு ஆஃப் எக்ஸலன்ஸ் எம்எச்எம் இந்தியா’ எனும் விருதும் வழங்கப்பட்டது.



Read in source website

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2-ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சுய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்மொழியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும் இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.

மேலும், விளையாட்டுகளின் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கும். இந்த ஆணையத்தில், ஆன்லைன் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படாது. அனைவரது நலன்களை மையப்படுத்தி ஆணையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சட்டம் பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது வரைவு மசோதா தொடர்பாக பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள், முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.



Read in source website

வதோதரா: 28 வயதான இமாச்சல பிரதேச கிரிக்கெட் அணி வீரர் சித்தார்த் சர்மா காலமானார். கடந்த இரண்டு வார காலமாக மருத்துவமனையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் வியாழன் அன்று உயிரிழந்துள்ளார்.

பந்து வீச்சாளரான அவர் கடைசியாக கடந்த டிசம்பரில் அவர் ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு வங்க அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

“இது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடி இருந்தார். அவருக்கு திடீரென பரோடா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக உடல் நலம் குன்றியது. மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு கிரியேட்டினின் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. சிறுநீரகம் உட்பட சில உறுப்புகள் செயலிழந்தன.

மருத்துவர்கள் இயன்றவரை முயற்சித்தோம் அவரை காக்க முடியவில்லை. இந்த சிகிச்சையின் போது அவர் கொஞ்சம் தேறி வந்தார். இருந்தும் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது” என இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தற்போதைய தலைவருமான அருண் துமால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-18 சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் சித்தார்த் அறிமுகமாகி உள்ளார். இமாச்சல பிரதேச அணிக்காக ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் அவர் விளையாடி வந்துள்ளார். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி வருவதாக தகவல்.



Read in source website

ஒலிம்பிக்கில் 8 தங்கம் வேட்டையாடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது இல்லை. முதல் உலகக் கோப்பை நடைபெற்ற 1971-ல் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

2-வது உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி. இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.

1975-ம் ஆண்டு தொடரில் அஜித் பால் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியானது மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, கானா அணிகளை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரா செய்த நிலையில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.

அரை இறுதியில் மலேசியாவை 3-2 என வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. 17-வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் முதல் கோலை அடித்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் 2-வது பாதியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சுர்ஜித் சிங் கோல் அடிக்க ஆட்டம் 1-1 சமநிலையை அடைந்தது. இருப்பினும், 51-வது நிமிடத்தில் ஜாம்பவான் தயான் சந்த்தின் மகன் அசோக் குமார் அடித்த கோல்தான் இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது.

இந்த கோலின் சட்டபூர்வமான தன்மை குறித்து பாகிஸ்தான் அணி கேள்வி எழுப்பிய நிலையில், நடுவர் ஜி.விஜயநாதன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இந்தியா முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதன் பின்னர் இதுவரை இந்திய அணியால் பதக்க மேடையை நெருங்க முடியவில்லை.



Read in source website

> 1971-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 தொடர்களில் 605 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

> உலகக் கோப்பை ஹாக்கி தொடர்களில் 605 போட்டிகளில் ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 4 கோல்கள் வீதம் 2,433 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

> இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து உலகக் கோப்பைகளிலும் 26 நாடுகள் பங்கேற்றுள்ளன. சிலி மற்றும் வேல்ஸ் அணிகள் தற்போதையை பதிப்பில் அறிமுகமாகின்றன.

> இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 3 அணிகள் மட்டுமே அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் விளையாடி உள்ளன. இந்த 3 அணிகளும் தற்போது 15-வது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்குகின்றன. இந்த அணிகளுக்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 13 முறை உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளன. இதில் பாகிஸ்தானை தவிர மற்ற 3 அணிகளும் தற்போதைய தொடரில் விளையாடுகின்றன.

> ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக நடத்துகிறது. இதன் மூலம் அடுத்தடுத்து இரு தொடர்களை நடத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரானது புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்தப்பட்டது.

> உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளை தொடர்ச்சியாக 2-வது முறையாக நடத்தும் முதல் மைதானம் என்ற பெருமையை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானம் பெற்றுள்ளது. ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பிர்சா முண்டா மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

> உலகக் கோப்பை தொடருக்காக ரூர்கேலாவில் புதிதாக பிர்சா முண்டா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் இருக்கை 21 ஆயிரம் ஆகும். இதன் மூலம் உலகில் உள்ள பெரிய ஹாக்கி மைதானம் என்ற பெருமை பிர்சா முண்டா மைதானத்துக்கு கிடைத்துள்ளது.

> 16 அணிகள் கலந்து கொள்ளும் தொடரில் 44 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இரு அரை இறுதி ஆட்டம், இறுதிப் போட்டி என 24 ஆட்டங்கள் கலிங்கா மைதானத்திலும், 20 ஆட்டங்கள் பிர்சா முண்டா மைதானத்திலும் நடைபெறுகின்றன.

> லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இந்த வகையில் 4 அணிகள் கால் இறுதிக்குள் நேரடியாக நுழையும். லீக் சுற்றில் 2-வது இடம் மற்றும் 3-வது இடம் பிடிக்கும் 8 அணிகள் கிராஸ்-ஓவர் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இதில் இருந்து 4 அணிகள் கால் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

> நடப்பு சாம்பியனாக பெல்ஜியம் அணி திகழ்கிறது. அந்த அணி 2018-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியிருந்தது.

> உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 4 முறை (1994, 1981, 1978, 1971) பட்டம் வென்றுள்ளது. இதுதவிர அந்த அணி 2 வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளது.

> பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (1998, 1990, 1973) மற்றும் நெதர்லாந்து (2014, 2010, 1986) அணிகள் தலா 3 முறை வாகை சூடி உள்ளன. மேலும் ஜெர்மனி இரு முறை கோப்பையை வென்றுள்ளது.

> உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. அந்த அணி 3 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் கைப்பற்றி உள்ளது.

> ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கம் பெற்றுள்ளது.

> உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற சாதனை நெதர்லாந்து அணி வசம் உள்ளது. அந்த அணி 100 ஆட்டங்களில் விளையாடி 61-ல் வெற்றி கண்டுள்ளது.

> உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. அந்த அணி 92 ஆட்டங் களில் விளையாடி 69 வெற்றிகளை குவித்துள்ளது. வெற்றி சராசரி விகிதம் 75 ஆகும்.

> உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்துள்ள அணி ஆஸ்திரேலியா ஆகும். அந்த அணி 305 கோல்களை அடித்துள்ளது. நெதர்லாந்து (267), பாகிஸ்தான் (235) ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 95 ஆட்டங்களில் பங்கேற்று 40-ல் வெற்றி கண்டுள்ளது.



Read in source website

நைரோபி: நடப்பு ஆண்டில் கென்யாவின் 15 மாகாணங்களில் சுமார் 1 கோடி மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆய்வு முடிவுகளின் விவரம்: “கென்யாவில் வரும் பிப்ரவரி - மே மாதங்களில் 15 மாகாணங்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்க உள்ளன. இதனால் 1 கோடி மக்கள் வரை பட்டினியில் சிக்கலாம்.

குறிப்பாக துர்கானா, மர்சபிட், இசியோலோ, வஜிர், மந்திரா, கார்சியா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சியை சந்திக்க உள்ளன. இதனால் சுமார் 40 லட்சம் மக்களுக்கு அவசரமான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலை உள்ளது.

2022-ஆம் ஆண்டிலேயே கென்யாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவியது. இந்த நிலையில், தற்போது வறட்சி தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், நடப்பு 2023-ஆம் ஆண்டிலும் மழை பொழிவு சராசரிக்கு கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இவ்வாறான சூழலில் உலகத் தலைவர்கள் தலையிட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் விளைவு மோசமாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: சர்வதேச அரங்கில் புதியதொரு விதி செய்வோம். ஐ.நா. சபையை மாற்றி அமைப்போம் என்று தெற்கு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த சர்வதேச அமைப்பில் அமெரிக்கா தலைமையிலான அணியும் ரஷ்யா தலைமையிலான அணியும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன. இரு பக்கமும் சாயாத “குரூப் 77” என்ற அமைப்பு அண்மைக்காலமாக ஐ.நா. சபையில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. “குளோபல் சவுத்” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இந்த அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களை சேர்ந்த 134 நாடுகள் உள்ளன. இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்டவை “குரூப் 77” அமைப்பை வழிநடத்தும் நாடுகளாக செயல்படுகின்றன.

இந்த சூழலில் இந்தியா சார்பில் “குளோபல் சவுத்” என்ற பெயரிலான 2 நாள் காணொலி உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 120 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் 130 கோடி மக்கள் சார்பாக அனைத்து நாடுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர், மோதல், தீவிரவாதம், அரசியல் பதற்றங்கள், உணவு, உரம், எரிசக்தி விலை உயர்வு, இயற்கைபேரிடர்கள், கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் உலகம் நெருக்கடியான நிலையிலேயே இருக்கிறது.

உலகின் தெற்கு பகுதி நாடுகளைச் சேர்ந்த நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. உலக மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்கள் நமது நாடுகளில் வசிக்கின்றனர். எனவே சர்வதேச அரங்கில் நமக்கும் சமமான குரல் இருக்க வேண்டும்.

உலகில் தற்போது எற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தெற்கு நாடுகள் காரணம் இல்லை. ஆனால்நாம் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது. எங்களது அனுபவத்தை தெற்கு நாடுகளோடு பகிர்ந்து வருகிறோம். கரோனா பெருந்தொற்றின்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகளை வழங்கினோம். தெற்கு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கிறது.

இந்த ஆண்டு ஜி 20 தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இந்த நேரத்தில் தெற்கு நாடுகளின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதே எங்களின் நோக்கமாகும். ஒரே பூமி, ஒரே குடும்பம்,ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளுடன் ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ளோம். உலகம் ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே அமைதி, வளர்ச்சி சாத்தியமாகும்.

இந்நேரத்தில் புதியதொரு விதி செய்வோம். சர்வதேச அரசியல், நிதி நிர்வாகத்தை மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும். வடக்கு, தெற்கு ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமநிலையான சர்வதேச சூழலை உருவாக்க வேண்டும். ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். அந்த அமைப்புகளில் சீர்திருத்தம் செய்து, இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும். 21-ம் நூற்றாண்டு தெற்குநாடுகளின் நூற்றாண்டாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல் நாள் மாநாட்டில் பல தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.



Read in source website

காபூல்: ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து ஒன்றரை வருடங்களான நிலையில் நவீன கார் ஒன்றை தலிபான்கள் உத்தரவின்பேரில் பொறியியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் உள்ள டெக்னிக்கல் வெகேஷனல் என்ற நிறுவனத்தின் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு நவீன கார் ஒன்றை வடிவமைத்துள்ளது.

தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் உள்நாட்டு கார் இதுவாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடா 9 (Mada 9) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் புகைப்படத்தை, தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சபிமுல்லா முஜாகீதின் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆப்கனில் ஆட்சி அமையும் என்று அவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும், தகவல் தொழில் நுட்பம், கனரக வாகனங்களில் உற்பத்தியில் வளர்ச்சி அடைவோம் என்று உறுதியளித்தனர்.



Read in source website

நைரோபி: நடப்பு ஆண்டில் கென்யாவின் 15 மாகாணங்களில் சுமார் 1 கோடி மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம் இருப்பதாக தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆய்வு முடிவுகளின் விவரம்: “கென்யாவில் வரும் பிப்ரவரி - மே மாதங்களில் 15 மாகாணங்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்க உள்ளன. இதனால் 1 கோடி மக்கள் வரை பட்டினியில் சிக்கலாம்.

குறிப்பாக துர்கானா, மர்சபிட், இசியோலோ, வஜிர், மந்திரா, கார்சியா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சியை சந்திக்க உள்ளன. இதனால் சுமார் 40 லட்சம் மக்களுக்கு அவசரமான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலை உள்ளது.

2022-ஆம் ஆண்டிலேயே கென்யாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவியது. இந்த நிலையில், தற்போது வறட்சி தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், நடப்பு 2023-ஆம் ஆண்டிலும் மழை பொழிவு சராசரிக்கு கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இவ்வாறான சூழலில் உலகத் தலைவர்கள் தலையிட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் விளைவு மோசமாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.



Read in source website

சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளது அமுல் நிறுவனம்.

கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்த பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்த பாடலை பாடி இருந்தனர். சுமார் 3.36 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த பாடலில் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பீட்டுகள் அனல் பறக்கும் ரகமாக இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரும் நடனம் ஆடி இருப்பார்கள்.

இந்தச் சூழலில் இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த கோல்டன் குளோப் விருதை கொண்டாடும் வகையில் இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆரின் உருவத்தை அமுல் நிறுவனத்தின் டிரேட்மார்க் சின்னமான அமுல் பேபிக்கு கொடுத்து விளம்பரம் செய்துள்ளது. அதோடு அதில் ‘Really Remarkable Reward’ என்றும் குறிப்பிட்டுள்ளது. அது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

நடப்பு நிகழ்வுகளை வைத்து கார்டூன் வரைந்து, விளம்பரமாக வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது அந்த நிறுவனம். அதன் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டுள்ளது.



Read in source website

ஷில்லாங்: இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவன முனையத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டிற்கென இந்தியாவின் முதல் சிறப்பு மையம் ஷில்லாங்கில் வரும் மார்ச் மாதத்திற்குள் அமையவுள்ளது என மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் அடுத்த தலைமுறை ஆன்லைன் விளையாட்டு சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஷில்லாங், கொஹிமா மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் வரவேண்டும் என்பது இலக்காகும்” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த ஆன்லைன் விளையாட்டு குறித்து பொதுமக்கள் ஆலோசனை கேட்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் 2021-ல் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.



Read in source website

வாரணாசியில் இருந்து புறப்படவுள்ள இந்த கப்பல், 51 நாட்களில் 3,200 கி.மீ தூரத்தை கடந்து, 27 நதி அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களைக் கடந்து அசாமில் உள்ள திப்ருகரில் தனது பயணத்தை முடிக்கும்.

ஜனவரி 13 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து கங்கை நதிக் கப்பல் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
51 நாள் பயணப்படும் இந்தக் கப்பல், உலகின் மிக நீளமான ஆற்றுப் பயணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது, அதன் இறுதி இலக்கான அஸ்ஸாமில் உள்ள திப்ருகரை மார்ச் 1ஆம் தேதி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்வி கங்கா விலாஸ், அதன் வழித்தடம், பிட்ஸ்டாப்கள் மற்றும் அது எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பாதை

வாரணாசியில் இருந்து புறப்பட உள்ள MV கங்கா விலாஸ் என்ற உல்லாசக் கப்பல், 51 நாள்களில் 3,200 கிமீ தூரம் கடந்து, 27 நதி அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களைக் கடந்து திப்ருகரில் தனது பயணத்தை முடிக்கும்.
உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி மலைகள் மற்றும் பீகாரில் உள்ள பாட்னா, ஜார்கண்டில் உள்ள சாஹிப்கஞ்ச், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, வங்காளதேசத்தின் டாக்கா மற்றும் அசாமில் உள்ள குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்கள் உட்பட 50 சுற்றுலா தலங்களுக்கு இந்த பயணம் செல்கிறது.

தொடர்ந்து, சாரநாத்தின் புத்த தலமான வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கங்கா ஆர்த்தியை காண நிறுத்தப்படும். அதன் பின்னர் அஸ்ஸாமின் மிகப்பெரிய நதி தீவான மஜூலியும் கூட. பயணிகள் பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா மற்றும் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தையும் பார்வையிடுவார்கள். இந்த கப்பல் வங்காள விரிகுடா டெல்டாவில் உள்ள சுந்தர்பன்ஸ் வழியாகவும், காசிரங்கா தேசிய பூங்கா வழியாகவும் பயணிக்கும்.

மேலும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இந்த கப்பல் சுற்றுலா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசத்தின் சர்வதேச எல்லைகள் வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் பாதுகாப்பு நெறிமுறைகளும் கவனிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

ஜனவரி 10 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் கப்பலில் ஏறியபோதும், அவர்கள் முதல் இரண்டு நாட்களை உள்ளூர் சுற்றுலாக்களில் கழித்துள்ளனர்.

குரூஸ் லைனர்

கப்பலில் மூன்று அடுக்குகள், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன் 18 அறைகள் உள்ளன, அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து 32 சுற்றுலாப் பயணிகள் பயணத்தின் முழு நீளத்திற்கும் பதிவு செய்துள்ளனர். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 25,000 ரூபாய் செலவாகும்.

இது தனியார் ஆபரேட்டர்களால் நிர்வகிக்கப்படும் அதே வேளையில், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI), கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் (MoPSW) திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான எம்வி கங்கா விலாஸின் அடுத்த பயணத்தை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும், முன்பதிவு விரைவில் திறக்கப்படும் என்றும் ஆபரேட்டர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். Antara River cruises இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

நதி சுற்றுலா

நாட்டில் ரிவர் க்ரூஸ் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த மத்திய கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்தத் துறையானது உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். நாட்டில் இந்தத் துறையின் அதிகபட்ச வெளிப்பாடு மற்றும் விரைவான வளர்ச்சிக்காக நதி சுற்றுலா சுற்றுகள் உருவாக்கப்பட்டு தற்போதுள்ள சுற்றுலா சுற்றுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.

இந்தியாவில், கொல்கத்தா மற்றும் வாரணாசி இடையே எட்டு நதி கப்பல்கள் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்ரா) இல் கப்பல் இயக்கம் செயல்படுகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடுகள், துறைமுக கட்டணங்களை பகுத்தறிவு செய்தல், வெளியேற்றும் கட்டணங்களை நீக்குதல், பயணக் கப்பல்களுக்கான முன்னுரிமை பெர்திங் மற்றும் இ-விசா வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நாட்டின் பயண சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளது.

தற்போது 0.4 மில்லியனாக உள்ள கப்பல் பயணிகளின் போக்குவரத்தை 4 மில்லியனாக அதிகரிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது. க்ரூஸ் சுற்றுலாவின் பொருளாதார திறன் வரும் ஆண்டுகளில் $110 மில்லியனில் இருந்து $5.5 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

டர்ஃப் அமைப்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 29-ம் தேதி வரை நடக்கிறது. இப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் நீல நிற டர்ஃப்பில் (புல்தரையில்) நடைபெறும். இந்த டர்ஃப் அமைப்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீல டர்ஃப்பானது ஹாக்கியின் மிக உயர்ந்த மட்டங்களில் நிலையான விளையாடும் மேற்பரப்பாக மாறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், விளையாட்டு பரப்புகளில் சோதனை செய்ததில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, மேற்பரப்புகள் விளையாட்டிலேயே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவ்வகையில், ஹாக்கி விளையாட்டு போட்டிகள் நீல நிற டர்ஃப்பில் ஆடப்படுவது ஏன்? என்பது சற்று விரிவாக பார்க்கலாம்.

ஹாக்கியில் “வாவ்” காரணியைச் சேர்த்தல்

2012ல், லண்டன் ஒலிம்பிக்கிற்கு ஒரு ஒளிரும் மஞ்சள் பந்துடன் நீல புல்வெளி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் நோக்கம், விளையாட்டில் மிகவும் தனித்துவமான விளையாட்டு பரப்புகளில் ஒன்றான ஃபீல்ட் ஹாக்கியை வழங்குவதன் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகும். அமெரிக்காவின் இடாஹோவில் உள்ள போயஸ் ஸ்டேட் கால்பந்து மைதானத்தால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது துருவமுனைக்கும் பதில்களை ஈர்த்தது. ஹாக்கியின் தீவிர ரசிகர்களை எரிச்சலூட்டும் அதே வேளையில் புதிய பார்வையாளர்களை கவர்ந்தது.

இருப்பினும், நீல நிற விளையாட்டு டர்ஃப் இன்று வீரர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. 2016ல் டெய்லி எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆங்கில டிஃபெண்டர் ஹாரி வீர் கூறுகையில், “இது ஒரு ‘வாவ்’ காரணியாக உள்ளது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஹாக்கியை அதிக ஒளிபரப்புக்கு ஏற்றதாக மாற்றுதல்

இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இன்னும் ஒரு செயல்பாட்டுக் காரணம் இருந்தது. ஹாக்கி என்பது ஒப்பீட்டளவில் சிறிய பந்தைக் கொண்டு விளையாடப்படும் மிக வேகமான விளையாட்டாகும் (தோராயமாக ஒரு கிரிக்கெட் பந்தின் அளவு). நீல டர்ஃப் மஞ்சள் பந்துக்கு எதிராக சிறந்த மாறுபாட்டை வழங்குகிறது. இது வீரர்கள் பந்தை சிறப்பாகக் கண்டறிந்து கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் உள்ளது. மைதானத்தைச் சுற்றி பந்து வீசும்போது, ​​பந்தின் ஆழமான நீலத்திற்கும் பந்தின் மஞ்சள் நிறத்திற்கும் இடையிலான வேறுபாடு, பாரம்பரிய பச்சை மேற்பரப்பு மற்றும் வெள்ளை பந்துடன் ஒப்பிடும்போது, ​​விளையாட்டைப் பின்பற்றுவதை எளிதாக இருந்தது.

அர்ப்பணிப்புள்ள பார்வையாளர்களின் ஆர்வத்தை வளர்க்க ஹாக்கி போராடியதால் இது மிகவும் முக்கியமானது. ஒலிம்பிக் மற்றும் மெகா நிகழ்வுகள் அதிகளவிலான பார்வையாளர்களைப் பெறக்கூடும் என்றாலும், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்றவற்றுடன் போட்டியிடுவதற்கு விளையாட்டு போராடியது. ஹாக்கியின் போராட்டங்களைப் பற்றிய ஒரு கோட்பாடு, விளையாட்டு “டிவி-க்கு ஏற்றதாக” இல்லை. இதை சரிசெய்யும் நோக்கில் ஆடுகளத்தின் நிறத்தை மாற்றுவது, மஞ்சள் பந்தைப் பயன்படுத்துவது போன்ற புதுமைகள் கொண்டு வரப்பட்டது.

லண்டன் விளையாட்டுகளுக்கு முன்னதாக, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஃபேர்வெதர், நீல ஆடுகளத்தைப் பற்றி பேசுகையில், “நாங்கள் ஹாக்கியின் விளக்கக்காட்சியில் புதுமைகளை உருவாக்க ஆர்வமாக உள்ளோம், மற்றவற்றுடன், பார்வையாளர்கள் மைதானத்தில் இருப்பார்கள். அல்லது தொலைக்காட்சியில் உற்சாகமான கள நடவடிக்கையின் நல்ல பார்வையைப் பெறுங்கள்.” என்று கூறினார்:

மிகவும் ஈரமான விளையாடும் மேற்பரப்பு

நீல நிறத்துடன், நவீன ஹாக்கி டர்ஃப் மற்றொரு வரையறுக்கும் அம்சம் அவற்றின் ஊறவைக்கும்-ஈரமான தன்மை ஆகும். பந்துகள் மைதானத்தைச் சுற்றி குதித்து, வீரர்கள் தங்கள் மட்டைகளை இழுக்கும்போது, ​​பார்வையாளர்கள் மேற்பரப்பில் இருந்து பெரிய குளோப்ஸ் நீர் ஊற்றுவதைக் கவனிப்பார்கள். இதற்குக் காரணம் செயற்கையான அந்த டர்ஃப் பயன்படுத்தப்பட்டதுதான்.

1970 களில் இருந்து, ஹாக்கி செயற்கை ஆஸ்ட்ரோடர்ஃப் மூலம் விளையாடப்படுகிறது. இருப்பினும், பல்வேறு வகையான ஆஸ்ட்ரோடர்ஃப் ஆடுகளங்கள் இருக்கலாம், மணல்-டாப் மற்றும் நீர்-டாப் இரண்டு பிரபலமான விருப்பங்கள். முன்னணி ஹாக்கி பிட்ச் தயாரிப்பாளரான மெக்கார்டில் ஸ்போர்ட் டெக்கின் கூற்றுப்படி, “ஹாக்கிக்கான மேல் மேற்பரப்பு விவரக்குறிப்பு நீர் சார்ந்த ஹாக்கி பிட்ச் ஆகும். ஏனெனில் நீரின் இருப்பு பந்தின் உராய்வைக் குறைக்கிறது மற்றும் பந்து ரோலின் வேகம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. இது மென்மையாகவும் வேகமாகவும் அனுமதிக்கிறது. விளையாடு… வீரர்களின் மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நீர் அதிர்ச்சி உறிஞ்சுதலையும் வழங்குகிறது.”

பெரும்பாலான உயர்மட்ட அரங்கங்களில் தானியங்கு தெளிப்பான் அமைப்புகள் உள்ளன, அவை களத்தில் சமமாக நீர்ப்பாசனம் செய்வதை உறுதி செய்கின்றன.

செயற்கை ஆடுகளங்களும் இந்திய ஹாக்கியின் வீழ்ச்சியும்

இந்திய ஹாக்கி அணி நீண்ட காலமாக அனைத்து விளையாட்டுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்து வருகிறது. 1928 முதல் 1964 வரை, அணி ஏழு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது. இருப்பினும், அதன் பிறகு, பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு பிரபலமாக குறிப்பிடப்படும் ஒரு காரணம் செயற்கை டர்ஃப் அறிமுகப்படுத்தப்பட்டது தான்.

ஆஸ்ட்ரோடர்ஃப் புல்லை மாற்றியமைத்ததால், உயர்மட்ட ஹாக்கியில் விளையாடும் இடமாக, இந்திய அணியின் பாரம்பரிய பலம், திறமையான ஸ்டிக்வொர்க் மற்றும் நெருக்கமான கட்டுப்பாடு ஆகியவை குறைக்கப்பட்டன. அதற்கு பதிலாக, ஆஸ்ட்ரோடர்ஃப் ஒரு வேகமான விளையாட்டை அனுமதித்தது, இது மற்ற விஷயங்களை விட வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் வேகத்தை மதிப்பிடுகிறது. மேலும், நீண்ட காலமாக, நவீன விளையாட்டுக்கான வீரர்களை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் இந்தியாவில் இல்லை.

இருப்பினும், விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒடிசா தனது இரண்டாவது FIH உலகக் கோப்பையை நடத்தத் தயாராகி வரும் நிலையில், இங்குள்ள அதிநவீன உள்கட்டமைப்பு “ஹாக்கி புரட்சி” என்று சிலர் அழைத்ததைத் தொடங்கியுள்ளது. இது ஆன்-பீல்டு செயல்திறனில் பிரதிபலிக்கும் என்றும், நீல நிறத்தில் உள்ள ஆண்கள் நீல தரை மீது சில மறக்கமுடியாத தருணங்களை உருவாக்குவார்கள் என்றும் நம்புகிறோம்.



Read in source website

சில நல்ல அறிகுறிகளுடன் தொடங்கியிருக்கிறது புத்தாண்டு. கடந்த 2021-உடன் ஒப்பிடும்போது, 2022 டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாய் 15% அதிகமாகக் கிடைத்திருக்கிறது. தொடா்ந்து 10 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடி அதிகமாக வருவது நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றம்.

டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. 2022 ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான வருவாய் ரூ.13.34 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டைவிட 25% அதிகம். டிசம்பா் மாத ஜிஎஸ்டி வருவாயில் இறக்குமதி தொடா்பான வருவாய் ரூ.40,263 கோடி. உள்நாட்டு பரிவா்த்தனைகளில் கடந்த ஆண்டைவிடக் காணப்படும் 18% அதிகரிப்பு, உற்பத்தித் துறையின் நுகா்வும் சுறுசுறுப்பாகி இருப்பதை தெரிவிக்கிறது.

உலகப் பொருளாதாரம் தேக்க நிலையை எட்டிவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தருணமிது. கடந்த 30 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாகக் காணப்படுவது, இது மூன்றாவது முறை. கூடுதலான பணவீக்கமும், நிதிநிலை அழுத்தமும், பெரிய பொருளாதாரங்களின் பலவீனமும், அதிகரித்து வரும் சா்வதேச அரசியல் அழுத்தங்களும் தொடருமேயானால், சா்வதேசப் பொருளாதாரம் பின்னோக்கி நகா்ந்தாலும் வியப்படையத் தேவையில்லை. கடந்த 80 ஆண்டுகளில் இரண்டு உலகப் பொருளாதார தேக்கநிலை 20 ஆண்டுகளில் ஏற்படுவது இதுதான் முதல்முறை.

உலகப் பொருளாதார வளா்ச்சி 1.7%-ஆக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு 0%, அமெரிக்கா 0.5% என்கிற அளவில்தான் அதிகரிக்கும் என்பதுதான் பொருளாதார வல்லுநா்களின் கணிப்பு. சீனாவின் வளா்ச்சி 4.3% இருக்கக் கூடும் என்று தற்போதைய கொவைட் 19 பரவலுக்கு முன்னால் மதிப்பிடப்பட்டிருந்தது. சீனாவில் பரவலாகக் காணப்படும் கொள்ளை நோய்த்தொற்று அதிகரிப்பும், விளைவால் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகளும் அதன் எதிா்பாா்த்த வளா்ச்சியை எட்ட அனுமதிக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை கவலை அளிப்பதாக இல்லை. உலக வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முன்பு 6.9% என்று இருந்ததை 0.3% குறைத்து மதிப்பிடுகிறது உலக வங்கி. உலகப் பொருளாதார மெத்தனத் தன்மை இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுதான் அதற்கு உலக வங்கி தரும் விளக்கம்.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா ஆரோக்கியமான 9.7% வளா்ச்சியை காட்டியிருப்பதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. நுகா்வோா் விலைவாசி ரிசா்வ் வங்கியின் அதிகபட்ச அளவான 6%-ஐக் கடந்தது என்பது என்னவோ உண்மை. அதேபோல, வா்த்தகப் பற்றாக்குறை 2019-உடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது. நவம்பா் மாதம் முன்னெப்போதும் இல்லாத 24 பில்லியன் டாலரை வா்த்தகப் பற்றாக்குறை தொட்டது.

இத்தனைக்குப் பிறகும் இந்தியாவின் வளா்ச்சி உறுதிப்படுகிறது என்பது ஆறுதலான தகவல். அதிகரித்த அரசின் முதலீட்டுச் செலவினங்களும், தனியாா் துறை முதலீடுகளும், பொருளாதாரச் செயல்பாடுகளை அடுத்த நிதியாண்டில் ஊக்கப்படுத்துமேயானால், சா்வதேச தேக்கநிலையையும் மீறி இந்தியாவின் வளா்ச்சி உறுதிப்படுவது சாத்தியம்தான்.

தேசிய புள்ளிவிவர அலுவலகம், இந்தியாவின் ஜிடிபி 7% அதிகரிக்கும் என்று கடந்த வாரம் தெரிவித்திருக்கிறது. ரிசா்வ் வங்கியின் கணிப்பில் ஜிடிபி வளா்ச்சி 6.8%. உலக வங்கியின் ஆய்வின்படி, 6.6%. மூன்று கணிப்புகளும் அந்த அமைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை பாா்க்கும்போது 2023 - 24-இல் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6%-க்கும் அதிகமாக இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

நடப்பு நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் வரி வருவாய், பட்ஜெட் எதிா்பாா்ப்பைவிட அதிகமாக இருந்து வருகிறது. ஒருவேளை பட்ஜெட்டில் சற்று குறைத்தே கணக்கிடப்பட்டதோ என்னவோ. காா்ப்பரேட்டுகளும், தனியாரும் முறையாக வரிகளை செலுத்த முற்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். வரி வசூல் முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீா்திருத்தங்களும், வரி ஏய்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளும் காரணமாக இருக்கக்கூடும். எண்ம பணப் பரிவா்த்தனை ஐயப்பாட்டுக்கு இடமில்லாமல் முக்கியமான காரணம். எல்லாவற்றையும்விட, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு அதிகரித்திருக்கும் வா்த்தகமும், நுகா்வோா் கேட்பும் மிக முக்கியமான காரணங்கள்.

இரண்டு பிரச்னைகள் கவலை அளிப்பவையாக உள்ளன. முதலாவது, ஏற்றுமதிகள். 2022 - 23-இல் முதல் ஒன்பது மாதங்களுக்கான ஏற்றுமதிகள் குறைந்திருக்கின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பியக் கூட்டமைப்பிலும் காணப்படும் தேக்கநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் ஏற்றுமதி அதிகரிப்பது சாத்தியமல்ல. இரண்டாவது, வேலைவாய்ப்பின்மை டிசம்பா் மாத அளவின்படி, கடந்த 16 மாதங்களில் இல்லாத 8.3% எட்டியிருக்கிறது. நகா்ப்புற வேலைவாய்ப்பின்மையின் அளவு 10.09%.

தற்போதைய சா்வதேச, உள்நாட்டு நிலவரங்களின் அடிப்படையில் பாா்த்தால், இந்த வளா்ச்சி மோசமானதல்ல. அதுவும் கொள்ளை நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் இத்தகைய வளா்ச்சி என்பது பாராட்டுக்குரியது.



Read in source website

கடந்த 2017 ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தது. இந்த புதிய வரியை தொழில் முனைவோா் பெரிய அளவில் வரவேற்றனா். அதற்குக் காரணம், இந்த வரி விதிப்பின் மூலம் பல வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால், அகில இந்திய அளவில் வரி விதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு சமச்சீா் ஆன நிலை உருவாக்கப்படும் என்று தொழில் முனைவோா் நம்பினாா்கள்.

மேலும் சி ஃபாா்ம், டி ஃபாா்ம், ஃபாா்ம் 17 போன்றவை நீக்கப்பட்டுள்ளன. இந்த ஃபாா்ம் தொழில் முனைவோருக்கு பெரும் தலைவேதனையாக இருந்தன. ஆனால் இந்த வரி விதிப்பில் மிகப்பெரிய குறையாகக் காணப்படுவது ரிவா்ஸ் சாா்ஜ் மெக்கானிசம் (ஆா்.சி.எம்.). அதாவது பதிவு செய்யப்படாத குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்குவோா் ஜிஎஸ்டி வரி கட்டலாம். வரி கட்டிய மாதத்தில் ரிட்டா்ன் எடுக்க முடியாது.

இந்த மாதம் வரி கட்டினால் அடுத்த மாதம்தான் ரீ இம்பொ்ஸ்மென்ட் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஆா்.சி.எம். இந்த நடைமுறை புதிய தலைவலியாகி விட்டது.

ஜிஎஸ்டி பதிவு இல்லாத குறுந்தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற பெரிய நிறுவனங்கள் தயாராக இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக ஒரு மாதம் காத்திருந்து அதன் பிறகு ரீ இம்பா்ஸ்மெண்டுக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத வேலை ஆகிவிட்டது. இந்த நடைமுறையால், குறுந்தொழில் நிறுவனங்களுக்காக வரி செலுத்த முன்வரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆவணங்களைப் பராமரிக்க வேண்டிய அவசியமும் வந்து சோ்ந்தது.

அதனால் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு ஜாப் ஆா்டா் கிடைப்பதில்லை. பெரிய நிறுவனங்கள், தாங்களே ஜிஎஸ்டி கட்ட முன் வருவதும் இல்லை. அதற்கடுத்த மிகப்பெரிய பிரச்னை, பொருள்களுக்கான போக்குவரத்துச் செலவு. பொதுவாக எல்லா விற்பனை மற்றும் சேவைகளுக்கு, பணியாளா் அல்லது சேவைப் பணி செய்வோா் வரி வசூலித்துக் கட்ட வேண்டும். ஆனால் சரக்கு போக்குவரத்து போன்ற சில பணிகளுக்கு மட்டும் சேவை தருபவருக்கு மாறாக சேவை பெறுபவா் வரி கட்ட வேண்டும்.

பொருட்களை உற்பத்தி நிறுவனத்திற்கு கொண்டு வரும்பொழுதும், வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் பொழுதும், உற்பத்தியான பொருட்களை வாடிக்கையாளருக்கு எடுத்துச் செல்லும்போதும் லாரி வாடகை போன்றவற்றுக்கு பணம் செலுத்துவதால் இந்தச் செலவு ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து செலவுகளுக்கு இந்த மாதம் வரி கட்டிவிட்டு, அடுத்த மாதம்தான் வரவில் எடுத்துக் கொள்ள முடியும். இது உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு தருகிறது. இதற்கான ஆவணங்களைப் பராமரிப்பது வேலைப்பளுவாக ஒவ்வொரு மாதமும் வளா்ந்து வருகிறது.

இதுபோன்ற தேவையற்ற பணி காரணமாக உற்பத்தி செலவு கூடுகின்றது. தொழில் முனைவோா் தங்களது உற்பத்தியில், தரத்தை உயா்த்துவதில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, வரி விதிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பொருள் சேவை வரியில் நாளுக்கு நாள் புதுவிதிகள் வந்து உற்பத்தியாளா்களை பரிதவிப்புக்கு ஆளாக்குகின்றன. தொழில் கூட உரிமையாளா்கள், தங்கள் உழைப்பையும் நேரத்தையும் குழப்பமான வரி விதிப்புகளில் சிக்கிவிடாமல் தொழில் செய்வதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இது நாட்டிற்கும் தொழில் கூடத்திற்கும் நல்லதல்ல.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுத் தலைவா் விவேக் தேவ ராய், ‘அனைத்து பொருட்களுக்கும் ஒரே அளவு சரக்கு - சேவை வரி விதிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளாா். ‘எந்த பொருளுக்கும் வரி விலக்கு வழங்கப்படக் கூடாது. வரி விலக்குகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன’ என்றும் அவா் கூறியுள்ளாா். பிரதமரின் பொருளாதார ஆலோசகா் கூறிய கருத்து ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்து.

வரிவிதிப்புகள் எந்தவிதக் குழப்பமும் இன்றி எளிமையாக இருக்க வேண்டும். சரக்கு - சேவை வரி வந்த ஓராண்டில் பல்வேறு சங்கங்கள், ‘முதல் இரண்டு தணிக்கைகள் தொழில் முனைவோருக்கு கற்றுக்கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். தண்டிக்கும் மனோபாவம் கூடாது’ என்று வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் நிறுவனங்களின் வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்யும் பணியை தணிக்கை வரி விதிப்பில் இருந்து தொடங்கக் கூடாது.

ஆா்.சி.எம். கட்டும் பணியில் சிறுசிறு தவறுகள் இருந்தாலும் அவற்றிற்கு முதலில் இருந்து வரியும் 5 ஆண்டுகளுக்கு வட்டியும் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். இது தொழில் முனைவோருக்கு குறிப்பாக, உற்பத்திப் பிரிவினருக்கு மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்துகின்றது.

ஆகையால் அரசு இந்த ஆா்.சி.எம். என்னும் விதியை நீக்கி விட்டால் இந்த பிரச்னையே இராது. அது உற்பத்தித் துறைக்குப் பெரிய நன்மையாக இருக்கும். உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.

அதே சமயம் தற்பொழுது பல குறுந்தொழில் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து கொள்முதல் ஆணைகள் கிடைக்காமல் தள்ளாடுகின்றன. இந்த பிரச்னைக்கும் நல்ல தீா்வு காணப்பட வேண்டும். அவா்களையும் முழு அளவில் பயன்படுத்தி உற்பத்தி நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தால் வேலைவாய்ப்பு பெருகும். நாளடைவில் அவா்களும் வளா்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு ஒரே தீா்வு அவா்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 3 முதல் 5 சதவீதம் வரை சலுகை தரலாம். இதன் மூலம் புதிதாக பல பெரிய நிறுவனங்களும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகளைத் தருவாா்கள்.

நாட்டில் சிறுதொழில், குறுந்தொழில் நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் குறுந்தொழில் நிறுவனங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகையால் அத்தகைய குறுந்தொழில் நிறுவனங்கள் கொள்முதல் ஆணை இன்றி நலிவடைந்துவிடக் கூடாது. அரசு ஆவன செய்ய வேண்டும்.



Read in source website

மக்களாட்சி பற்றி ஆய்வு செய்கின்ற நிறுவனங்களில் கடந்த முப்பது ஆண்டுகளாக அறம், நோ்மை ஆகிய இரண்டு கருத்தாடல்களும் ஆய்வுப் பொருளாகவும் விவாதப் பொருளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இந்த கருத்தாடல்களை அரசியலுக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் புகுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு காலத்தில் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளாக, நோ்மை, நீதி, நியாயம், சமத்துவம், பொது ஒழுக்கம் என்பவையெல்லாம் இருந்ததால், மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் இவை பின்பற்றப்பட்டுவிடும் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடமும் இருந்தது.

ஆனால், நடைமுறையில் மக்களாட்சி என்பதை தோ்தல் என்ற ஒற்றைப்புள்ளிக்குள் கொண்டு வந்துவிட்டோம். தோ்தலைத் தாண்டி எந்த மக்களாட்சி கூறுகளையும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. அதன் விளைவு, ஊழல் மலிந்த ஆட்சியைத்தான் பல நாடுகளில் பாா்க்க முடிந்தது. அந்த ஊழலும் கரைபுரண்டு ஓடுவதால், மக்களின் மேம்பாட்டிற்காக பல நாடுகளுக்கு கடன் தந்த உலக வங்கியே ஓா் ஆய்வினை நடத்தியது. அதன் முடிவில், மோசமான ஆளுகைதான் நாட்டில் நிலவும் ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது என்பதைக் கண்டறிந்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு நாட்டில் நல் ஆளுகையை (குட் கவனன்ஸ்) எப்படிக் கொண்டு வருவது என்று சிந்தித்தது. அதற்கு நல் ஆளுகை என்றால் என்ன என்பதை முதலில் வரையறை செய்தது உலக வங்கி. நிதி நிா்வாகம் முறையாகச் செய்யப்படும் நாட்டை நல்ஆளுகை நாடு என வரையறை செய்தது.

உலக வங்கி வழங்கும் நிதியை ஒரு நாடு முறையாகப் பயன்படுத்தவில்லையானால், உலக வங்கி அந்த நிதியை எப்படித் திரும்பப் பெற முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதுபோல் பல நாடுகளும் செய்ய ஆரம்பித்தால் உலக வங்கி என்ன ஆகும் என்று சிந்தித்து இந்த வரையறையைக் கொண்டு வந்தது.

அது மட்டுமல்ல இந்த விவாதத்தை முன்னெடுக்க ஆய்வு நிறுவனங்களுக்கு உலக வங்கி நிதியும் அளித்தது. அப்போது உலகம் முழுவதும் நல் ஆளுகை பற்றி விவாதம் நடந்தது. அந்த நேரத்தில் ஐ.நா. சபை, ‘நல் ஆளுகை என்பது நிதி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மக்கள் நலன் சம்பந்தப்பட்டதும்தான். மக்கள் நலனைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் நல் ஆளுகையாகும்’ என்று கூறியது. இதனால் புது விவாதம் தோன்றியது.

அந்த விவாதம், ‘உலகில் சமத்துவம் என்பதை முன்னெடுக்க இனிமேல் சாத்தியக்கூறு குறைவு. ஏனென்றால் ஏற்றத்தாழ்வு என்பது கூடிக்கொண்டே போகிறது; அதைத் குறைக்க இன்னும் வழிமுறை காணப்படவில்லை. அதற்கு மாற்றாக நல் ஆளுகை மூலம் குறைந்தபட்சமாக மக்களுக்கு அரசு செய்து தரவேண்டிய சேவைகளைச் செய்து சாமானிய மக்களையும் மரியாதையுடைய வாழ்வை வாழச் செய்யலாம்’ என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வளரும் பொருளாதாரம், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூா்த்தி செய்யவில்லை என்பதை ஆய்வு முடிவுகள் காட்டின. அது மட்டுமல்ல, நாடுகள் பொருளாதாரத்தில் செழித்தன. ஆனால் அரசாங்கங்கள் ஏழைகளாக ஆயின. செல்வங்கள் தனியாா் கைகளுக்குச் சென்றன. அதே நேரத்தில் அளவற்ற பொருள் உற்பத்தியும் அளவற்ற கட்டுமானப் பணிகளும் புவியின் இயல்புத் தன்மையை மாற்றி மனித குலத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தச் சூழலை ஆய்வு செய்தபோது ஊழல் என்பது ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டுபிடித்தனா். செல்வம் குவிக்கும் பணிகளுக்கு உதவிடும் அனைத்துத் தரப்புக்கும் முறையற்று நிதி கிடைத்தது. அதுதான் பெரும் ஊழலாகப் பாா்க்கப்படுகிறது. அது அரசாங்கத்தில் மட்டும் நடப்பதாக நினைத்தால் அது தவறு. இந்த தொற்றுநோய் எங்கெல்லாம் பரவி இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டன.

இந்த ஊழல் அரசாங்கத்தில் தொடங்கி, அரசியலுக்குள் வந்து, அரசியல் கட்சிகளை விழுங்கி, அரசு நிா்வாகக் கட்டமைப்பை சீா்குலைத்து கடைசியாக பொதுமக்களையும் தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டது. இவை அனைத்துக்கும் மையக் காரணம் சந்தைதான் என்பதைக் கண்டுபிடித்தனா். இன்று சந்தை, அரசுக்குள் மட்டும் தன் குணங்களைப் புகுத்தவில்லை; அனைத்து மானுட செயல்பாடுகளுக்குள்ளும் தன் குணங்களைப் புகுத்திவிட்டது.

உதாரணமாக கல்வி என்பது மானுடத்தை மேம்படுத்தும் கருவி. அது இன்று பணம் செய்ய உதவும் கருவியாக மாறி கல்விச் சந்தையை உருவாக்கிவிட்டது. நீா் என்பது உயிா் வாழ்வதற்கு அடிப்படை. அது இன்று சந்தையாக மாறி பெரும் மூலதனத்தில் பெரும் லாபத்துடன் இயங்குகின்றது. மருத்துவம் என்பது உயிா் காக்கும் துறை. ஆனால் அது இன்று மருத்துவச் சந்தை.

மக்களாட்சி அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற இன்று வாக்குகளையே வாங்கும் பொருளாக மாற்றி வாக்குவங்கி சந்தையை உருவாக்கி விட்டனா். அத்துடன் வாக்குகளை விலை கொடுத்துப் பெற்ற மக்கள் பிரதிநிகள் தங்களையே சந்தைப்படுத்திக் கொண்டனா். அவா்களும் விற்கும், வாங்கும் பொருள்களாக மாற்றப்பட்டு விட்டனா். சந்தைக்கு வரும் லாபம் எல்லை மீறியதாக வளரும்போது, அரசாங்கத்தையே விலை பேசும் சக்தி பெற்ாக சந்தை உயா்ந்துவிடுகிறது.

அரசாங்கம், அரசியல், ஆளுகை, நிா்வாகம், உற்பத்தி, பொருள் விற்பனை அனைத்தும் எதற்காக என்றால் மக்கள் மேம்பாட்டுக்காக. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் இவை அனைத்தும் லாபம் குவிக்கும் செயலில் மட்டுமே ஈடுபட்டன. அதன் விளைவு, எந்த இடத்திலும் அறமோ, நோ்மையோ கிடையாது.

அறம் இழந்து செயல்படுகிறோம் என்ற கூச்சமும் அற்று மானுட சமூகம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இந்த நிலையை உற்று நோக்கிய பல ஆய்வு நிறுவனங்கள், அரசாங்கத்தின் மூலம், நோ்மையைக் கொண்டு வந்து விடலாம் என்று இனிமேலும் நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் என முடிவெடுத்தன. மேலும், சமூகத்தை நல்வழிப்படுத்தவில்லை என்றால் நாம் எதிா்பாா்க்கின்ற மாற்றம் நிகழாது என்பதை உணா்ந்து கொண்டன.

மோசமான சமூகத்தில் நல்ல அரசியலை முன்னெடுக்க முடியாது. தரம் தாழ்ந்த அரசியல் நிகழும் சூழலில் நல்ல அரசாங்கம் உருவாக முடியாது. நோ்மையற்ற முறையில் தோ்தலில் வெற்றி பெற்ற ஒரு கட்சியால் நல்ல ஆளுகையைக் கொடுக்க முடியாது. நல்ல ஆளுகை இல்லாத இடத்தில் நல்ல நிா்வாகம் இருக்க முடியாது. எனவே இதைத் தொடங்க வேண்டிய இடம் சமூகம்தான் என்று இந்த ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

இதற்கான சிந்தனைச் சூழலை உருவாக்க கையேடுகளை வெளியிடுகின்றன இந்த ஆய்வு நிறுவனங்கள். இந்தக் கையேடுகள், புதிய நோ்மைச் சிந்தனையை, நோ்மை நடத்தையை, நோ்மைச் செயல்பாடுகளை சமூகத்திலும் அரசியலிலும் ஆளுகையிலும் நிா்வாகத்திலும் வணிகத்திலும் எப்படிக் கொண்டுவருவது என்பதை விளக்குகின்றன.

இவற்றை ஆங்கிலத்தில் படித்துவிட்டு நம் சிந்தனையாளா்களும் அவை பற்றிய விவாதத்தை முன்னெடுக்கின்றனா். இந்த நிகழ்வுகளைப் பாா்க்கும்போது நமக்குப் புலப்படுவது ஒன்றுதான். அறம் சாா்ந்த மானுட வாழ்க்கையைப் பெற எந்த மேலை நாட்டிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. நம்மிடம் அனைத்தும் இருக்கின்றன. சுவாமி விவேகானந்தா், பகவான் அரவிந்தா், ரவீந்திரநாத் தாகூா், மகாத்மா காந்தி, வள்ளலாா், வள்ளுவா் போன்றோா் கூறாத வாழ்வியல் கருத்துகள் எதுவும் அந்தக் கையேடுகளில் கிடையாது.

இவா்கள் கூறியவை யாருக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையானவைதான். இவா்கள் கூறிய வாழ்வியல் சிந்தனையைவிட மேம்பட்ட கருத்துகள் புதிதாக கொண்டுவரப்படுகின்ற விவாதங்களில், கட்டுரைகளில், கையேடுகளில் கூறப்படவில்லை. இவா்கள் அனைவரும் சமூகம் மாறாமல் அரசாங்கத்தால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று கூறியுள்ளனா்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்த ரெங்கனாநந்தா சுவாமி உலகம் முழுவதும் சுற்றி விவேகானந்தரை அடியொற்றி பிரசாரம் செய்தாா். கல்விக் கழகங்களிலும், உயா்கல்வி நிலையங்களிலும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கிடையேயும் அவா் ஆற்றிய உரைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அதே போல்

ஆச்சாா்ய விநோபா பாவே எழுதிய ‘ஸ்வராஜ்ய அறிவியல்’ புத்தகத்தை அனைவரும் படித்து புரிந்து கொண்டு வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி ஒருமுறை கேட்டுக் கொண்டாா் (அந்நூலில் காந்தியடிகளும் ஓா் அத்தியாயம் எழுதியுள்ளாா்).

நம் மகான்கள் இந்திய சமூகத்திற்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்திற்கே தேவையான கருத்துகளைக் கூறினாா்கள். ஆனால் அந்தக் கருத்துகளை நாம் பின்பற்றவில்லை. மாறாக அவா்களை பூஜித்து விட்டு நாம் செய்வதை தொடா்ந்து செய்துகொண்டிருக்கிறோம். சமூக ஒழுக்கம் எங்கிருந்து வரும், தனிமனித ஒழுக்கத்திலிருந்துதான் வரும். அதற்கு முதலில் நாம் எளிய வாழ்வு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; எளிமையாக வாழ்பவா்களைப் போற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று நாம் புலன்களின் ஆதிக்கத்தில் வாழ்வதால் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புலனடக்கம் பெற்றவராக நாம் நம்மை மாற்றிக்கொண்டு தேவைக்கேற்ப வாழ்வை அறம் சாா்ந்ததாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி வாழும்போதுதான் நாமும் மாறுவோம்; சமூகமும் மாறும். அதனால்தான் காந்தியடிகள் ‘எந்த மாற்றம் மற்றவா்களிடம் வரவேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ அந்த மாற்றம் உன்னிடமிருந்து தொடங்கட்டும்’ என்றாா்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

 



Read in source website

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் வி.திருப்புகழ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருச்சியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கில் பேசிய அவர், “பேரிடர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து இந்தியர்களிடையே விழிப்புணர்வு இல்லை. பொறுப்பற்ற திட்டமிடல், வளர்ச்சி நடவடிக்கைகளால், குறிப்பாக நகரங்களில் பொருளாதார இழப்புகள் பல ஆண்டுகளாக அதிகரித்துவருகின்றன,” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.



Read in source website

தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மிக வலுவாகவும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் நமது சுகாதாரத் துறை திறம்படச் செயல்பட்ட விதம் அதை மேலும் உறுதிப்படுத்தியது.

தற்போதைய நிலவரம்: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME), ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் (DMS), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநரகம் (DPH) என மூன்று இயக்குநரகங்களின் கீழ் தனித்துவம் மிக்கதாகச் செயல்பட்டுவருகிறது. 19,866 மருத்துவர்கள், 38,027 செவிலியர்கள், 60,181 இதர மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் இதில் பணியாற்றிவருகிறார்கள்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையைத் தொடர முடியாதவர்கள், அல்லது பாதிப்பு அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பன போன்ற சவாலான அறுவை சிகிச்சைகளும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சேவைகள் கிடையாது. இவற்றையெல்லாம் வைத்து நம் சுகாதாரத் துறை சர்வதேசத் தரத்தில் உள்ளதாகவும் பெருமிதம் நிலவுகிறது. ஆனால் யதார்த்தம் என்ன?

சர்வதேசத் தர ஒப்பீடு: வளர்ந்த நாடுகளில் ஒன்றான பிரிட்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இது குறித்த தெளிவான பார்வையைத் தரும். பிரிட்டனின் மக்கள்தொகை 6.7 கோடி; தமிழ்நாட்டின் மக்கள்தொகை உத்தேசமாக ஏழேகால் கோடிக்கும் மேல். பிரிட்டனில் ஏறத்தாழ ஒன்றேகால் லட்சம் அரசு மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், அந்நாட்டைவிட அதிக மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில், 20,000க்கும் குறைவான அரசு மருத்துவர்களே உள்ளனர். சராசரியாக ஆறு அல்லது ஏழு பிரிட்டிஷ் மருத்துவர்கள் செய்யும் பணியை, தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவர் செய்துவருவதுதான் நிதர்சனம்.

அது மட்டுமல்ல, பிரிட்டனில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருந்தாலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள்கூட சராசரியாக 10 அல்லது 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஓர் ஆண்டுக்கும் மேலாக அறுவை சிகிச்சைக்காக அங்கு காத்திருப்பவர்கள் 4 லட்சம் பேர்.

ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருந்தாலும், ஒரே நாளில் உயர் சிறப்பு மருத்துவர்களிடம்கூட சேவையைப் பெறுவது சாத்தியம். நோயாளிகளின் தரப்பிலிருந்து பார்த்தால், இது ஆரோக்கியமான அம்சம்தான். ஆனால், நம் மருத்துவர்கள் அதிகமான பணிச்சுமையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினை.

செய்ய வேண்டிய பணிகள்: தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துக் கல்லூரிகள், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தமாக 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கை இது. ஆனால், பிற மாநிலங்களைவிட அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கிவரும் தமிழ்நாடு அரசு, புதிதாக உருவாக்கப்படும் இளம் மருத்துவர்களுக்கு என்ன ஊதியம் தரப் போகிறது என்பது இன்னொரு கேள்வி.

இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளைத் தரம் உயர்த்துவதற்கே, இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். அனைத்து விதமான பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் வகையில் ஆய்வக வசதிகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவ உலகில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், அரசு மருத்துவமனைகளிலிருந்து அதிகளவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகும் வகையில் ஒவ்வொரு துறையிலும் இதற்கெனப் பிரத்யேகமாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

அரசின் கவனத்துக்கு: தமிழ்நாடு சட்டப்பேரவை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலன் மிக முக்கியமான கருத்தை முன்வைத்தார். சுகாதாரத் துறையில் உள்கட்டமைப்பு என்றால் கட்டிடங்களோ, கட்டிட வல்லுந‌ர்களோ, கருவிகளோ இல்லை. மருத்துவர்களும், செவிலியர்களும்தாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழகத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும் என்றால், அனைத்து அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஏற்கனவே 2019இல் அரசாணை 4D2இன் மூலம் குறைக்கப்பட்ட 600 அரசு மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் மருத்துவர் பணியிடங்கள் என்ற வகையில், குறைந்தது இரண்டு அல்லது மூன்று மடங்கு மருத்துவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டால், வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், இங்கேயே அரசுப் பணியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். மருத்துவர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது மட்டுமன்றி, அரசுப் பணியில் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உரிய அங்கீகாரத்தையும், ஊதியத்தையும் மாநில அரசு வழங்க வேண்டும். மருத்துவர்களுடன் இணைந்து பணி செய்யும் செவிலியர்கள், இதர பணியாளர்களைப் போதுமான எண்ணிக்கையில் நியமனம் செய்தால்தான் மக்களுக்கு முறையாக மருத்துவ சேவை கிடைக்கும்.

தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சலனங்கள், போராட்டங்கள் போன்றவற்றை அரசு கவனித்துக்கொண்டுதான் இருக்கும். இந்நிலையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையான தரத்துடன் சேவையாற்றும் தமிழ்நாட்டு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். மக்கள் நலனும் மருத்துவர் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆட்சியாளர்கள் இதை உணர்ந்துகொண்டால் சுகாதாரத் துறையில் நிலவும் சுணக்கங்கள் அகலும். அது தமிழ்நாட்டின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் வலிமை சேர்க்கும்! 

சராசரியாக ஆறு அல்லது ஏழு பிரிட்டிஷ் மருத்துவர்கள் செய்யும் பணியை, தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவர் செய்துவருவதுதான் நிதர்சனம்.

- எஸ்.பெருமாள் பிள்ளை தலைவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு
தொடர்புக்கு: sppillai26@gmail.com



Read in source website

பெருந்தொற்றுக் காலத்தில் உயர ஆரம்பித்த இணைய எழுத்தாளர்களின் எண்ணிக்கை, இன்று வியக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. கருத்து, அளவு போன்ற விஷயங்களில் இணையத்தில் கிடைக்கும் சுதந்திரமும் யாரும் எழுத முடியும் என்கிற வசதியும் இந்த வளர்ச்சிக்கான காரணங்கள்.

‘மெட்ராஸ் பேப்பர்’ வார இதழ், இணைய இதழ்களில் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதில் எழுதும் பலரும் புதியவர்கள். இவர்களின் தொடர்கள் நிறைவு பெற்று, 13 புத்தகங்களாக இந்தப் புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.



Read in source website