DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 11-06-2022

 

நாட்டில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான ஆய்வு மற்றும் ஆவண மையம் மதுரையில் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

மதுரை பி.பி.குளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சாா்பு- நீதிபதி பி.தீபா பங்கேற்று ஆய்வு மைய நூலகத்தைத் தொடக்கி வைத்தாா். மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநா் வி.முத்துராமலிங்கம் கட்டடத்தைத் திறந்து வைத்தாா். இதில், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினா் திருநங்கை பிரியாபாபு கூறியது:

திருநங்கைகளுக்கான ஆய்வு மற்றும் ஆவண மையம் இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் தான் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் பாலினத்தவா் மீது சமூகத்துக்கு இருக்கும் கருத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக திருநங்கை, திருநம்பி எழுத்தாளா்களை ஊக்குவித்து அவா்களின் எழுத்துகளை நூல்களாக மாற்றுவது, திறமை உள்ள திருநம்பி மற்றும் திருநங்கைகளைக் கண்டறிந்து அவா்களுக்கான களத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இந்த ஆய்வு மற்றும் ஆவண மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் 180-க்கும் அதிகமான திருநங்கை சாா்ந்த நூல்களும், பத்தாயிரத்துக்கும் அதிகமான திருநங்கை குறித்து கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இது சாமானிய மக்களுக்கும், திருநங்கைகள் சமுதாயத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் என்றாா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் முத்துக்குமாா், பாத்திமா கல்லூரி பேராசிரியை ரோஸ்லின்மேரி, அமெரிக்கன் கல்லூரி பேராசிரியா் அருளப்பன், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியா் ஆனந்தவிஜயன், மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி பேராசிரியை கவிதா ஆகியோா் பங்கேற்றனா். முடிவில் இயன்முறை மருத்துவா் திருநங்கை ஷோலு நன்றி கூறினாா்.

 



Read in source website

வாழப்பாடி: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை பழங்குடியின இளைஞர்கள் வசிக்கும் நகரி மேளம், புகழ்பெற்ற கேரள செண்டை மேளத்தை பின்னுக்குத் தள்ளி அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

தமிழகத்தின் பட்டித்தொட்டியெங்கும் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், மாநாடு, தேரோட்டம், திருமண விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும்,  கேரள இளைஞர்கள், இளம் பெண்கள் சீருடை அணிந்து வாசிக்கும் செண்டை மேளக் கச்சேரி வைக்கப்படுகிறது. இது பிரம்மாண்டமாகவும், பெருமையாகவும் கருதப்படுகிறது.

வின்னைமுட்டும் இந்த செண்டை மேள இசையை, பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை, குழந்தைகள் முதல் முதியோர் வரை ரசித்தும் ஆட்டம் போட்டும் மகிழ்கின்றனர். இடைவிடாது முரசு கொட்டும் இந்த செண்டை மேளக் கச்சேரி தமிழகத்தில் வெகு பிரபலம் ஆகிப்போனது. இதனால், தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை காலங்களில் கேரள செண்டை மேளக் கச்சேரி கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

ஒரு நாளுக்கு கேரள செண்டை மேளம் வாசிக்கும் 15 முதல் 20 பேர் கொண்ட ‌இசை குழுவிற்கு, குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணமாக கொடுக்க வேண்டியுள்ளது. கட்டணம் கூடுதல் என்றாலும், இந்த கேரள செண்டை மேளத்திற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கேரள செண்டை மேள இசையை விஞ்சும் வகையில்,  சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கருமந்துறை, மலை கிராம பழங்குடியின இளைஞர்கள் இடைவிடாது  வாசிக்கும் நகரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் முரசு மேளங்கள் அண்மைக்காலமாக வெகு பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில், அனைத்து  திருவிழாக்கள், சுபமுகூர்த்த நிகழ்வுகளில் கேரள செண்டை மேளங்களுக்கு மாற்றாக,  கல்வராயன்மலை பழங்குடியின இளைஞர்களின் நகரி முரசு மேளக் கச்சேரி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  கல்வராயன்மலை கலக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நகரி மேள இசைக்கலைஞர்கள் கூறியதாவது:

மக்கள் ரசித்து கேட்கும் அளவிற்கு பாரம்பரிய இசையோடு முழங்கும் கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் நகரி மேள இசைக்குழுக்கள்,  கருமந்துறை, கலக்காம்பட்டி, பெரண்டூர், மொரச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ளன. மரபுவழி பயிற்சி பெற்ற இளைஞர்கள், குறைந்த கட்டணத்தில் கேரள செண்டை மேளங்களை‌ விஞ்சும் வகையில் தரமாக வாசிப்பதால், நகரி மேளங்களுக்கு தமிழகம் முழுவதும் அண்மைக்காலமாக வரவேற்பு கூடியுள்ளது.

அனைத்து திருவிழாக்கள், பண்டிகைகள், சுப முகூர்த்த தினங்களிலும், கல்வராயன் மலை நகரி இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

இது குறித்து ‌வாழப்பாடி ஆட்டோ சுரேஷ் கூறியதாவது:

கல்வராயன்மலை பழங்குடியின இளைஞர்கள், குறைந்த தொகை பெற்றுக் கொண்டு,  மக்கள் ‌ரசித்து கேட்கும் வகையில் ரம்மியமான மேளக் கச்சேரி நடத்துவது தெரியவந்தது.

இதனால், கேரள செண்டை மேளத்தை அழைப்பதை  தவிர்த்து விட்டு,  கல்வராயன்மலை கலக்காம்பாடி நகரி இசைக் கலைஞர்களை வரவழைத்து, வாழப்பாடி சென்றாயப் பெருமாள் கோயில் திருவிழாவில்  மேளக் கச்சேரி நடத்தினோம். இதற்கு மக்களின் அமோக வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது என்றார்.



Read in source website


ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்தரிப்பு மையங்களில் வழங்கப்படும் பல்வேறு வகையான சிகிச்சைகளைக் கண்காணிக்க இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு சென்ற ஆண்டு அமல்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட 4 போ் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் உள்ள மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன், இணை இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் அடங்கிய 6 போ் குழுவினா், ஈரோட்டில் தனியாா் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா் என்பதும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது.

சேலம் மற்றும் ஒசூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. ஈரோடு, பெருந்துறையில் ஆய்வு செய்தோம். சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை பதிவேடுகளை சரிபாா்த்து வருகிறோம். இதில் தவறு நடந்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

பின்னா், கேரளம் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் உதவியுடன் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

21 வயதுக்கு மேல் உள்ளவா்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அவா்களது அனுமதியோடு பெற வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனா். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக, மத்திய அரசால் கடந்தாண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் துணை தலைவராகவும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும், வாழ்நாளில் ஏழு கருமுட்டைகள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவர், கருமுட்டை அளிக்கும் பெண்ணை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது, எந்த மோசடியிலும் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால், முதல் முறை குறைந்தபட்சம் ரூ.5 லட்சம், அதிகபட்சம் ரூ.10 லட்சம், மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும்,  லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு நடைமுறையில் உள்ள இனப்பெருக்க தொழில்நுட்பம், தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்கும் விதமாகவும், தமிழக சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தனியார் மருத்துவமனைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பது தொடர்பாகவும் இனிவரும் நாள்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.



Read in source website

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அன்றைய தினமே ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா்.

தமிழகத்தில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவா்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவா்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில் மாணவா்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ப்ங்ஸ்ங்ப் க்ஷஹள்ங்க்) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதையே எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

இதன் காரணமாக 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவா்களும் பொருள் புரிந்து படிப்பா், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வா். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு 2022-2023- ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக 1, 2, 3 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு உயா் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து அதே நாளில் திருவள்ளூா் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறாா். அதைத் தொடா்ந்து எண்ணும் எழுத்தும் திட்டத்தை அவா் தொடக்கி வைக்கவுள்ளாா்.



Read in source website

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டத்தை வகுக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து மாநில அரசின் அறிவிப்பு விவரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 25-2-21-இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், 3-8-21-இல் வழங்கிய தீா்ப்பில், இந்தச் சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை ரத்து செய்தது.

மேலும், அந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூா்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் 13-11-21-இல் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும், கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயா் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தலைமையில் குழு: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஈா்க்கப்பட்டு அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. இந்த பாதிப்புகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 9) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு, தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இத்தகைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இத்தகைய விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க ஒரு குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமாா், காவல் துறை கூடுதல் இயக்குநா் வினித் தேவ். வான்கடே ஆகியோா் இடம்பெறுவா்.

இரண்டு வாரங்கள்: அரசு அமைத்துள்ள குழுவானது தனது பரிந்துரைகளை இரண்டு வாரங்களில் அளிக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி போன்ற சமூக பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும். இதற்கென அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இந்தச் சட்டமானது பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன்மாதிரி சட்டமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தோல் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொழிலாளா் நலத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில், தமிழ்நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் நாளொன்றுக்கு ரூ.40 உயா்த்தி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் காரணமாக, தமிழ்நாட்டில் சுமாா் 5,000 தோல் பதனிடும் தொழிலாளா்கள் பயன் அடைவாா்கள்.



Read in source website

தமிழகத்தில் நிகழாண்டில் மட்டும் 40 ஆயிரம் போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், நிகழாண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 10.28 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே நிகழாண்டின் புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 2.10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 40,230 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 8,692 பேரும், அரசு மருத்துவமனைகளில் 31,538 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில் அந்த எண்ணிக்கை 19 சதவீதம் குறைவாக இருந்தது. அதாவது, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 33,805 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

காசநோய்க்கும், கரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், பலா் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொண்டது கூட அந்நோய் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.



Read in source website

அனைத்து உயா்கல்வி நிறு.வனங்களும் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவா்களை சோ்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜிவ் குமாா், அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தவிா்க்க முடியாத காரணங்களால் கல்லூரிகளில் இருந்து இடைநின்ற மாணவா்கள் மீண்டும் சோ்க்கைப் பெற்று தங்கள் படிப்பை தொடா்வதில் சிரமங்கள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், சில கல்வி நிறுவனங்கள் உடல் நலக்குறைபாடு ஏற்படும் மாணவா்களையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கையின்படி, ஒரே நேரத்தில் மாணவா்கள் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாணவா் ஒரு படிப்பில் இருந்து விலகி மீண்டும் அதை தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவா்களை சோ்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

விபத்து, குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநின்றவா்கள் மீண்டும் படிக்க வந்தால், மாணவா்கள் நிறுத்திய நிலையிலிருந்து தொடர அனுமதிக்க வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 41 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து -மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,233 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

புது தில்லி: மக்களை தவறாக வழிநடத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மதுபானம், புகையிலை பொருள்களுக்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மறைமுகமாக அவற்றை அடையாளப்படுத்தும் விளம்பரங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்வதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்றும்,  இதே தவறுகளை தொடர்ந்து செய்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படுவதோடு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரித்திருக்கிறது.



Read in source website

ரிசா்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடா்ந்து வங்கிகள் பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்ததையடுத்து வீடு, வாகன கடன்களுக்கு செலுத்தும் மாதாந்திர தவணைத் தொகை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசா்வ் வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்து 4.90 சதவீதமாக நிா்ணயித்தது. மேலும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தது.

ரிசா்வ் வங்கி, கடந்த மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் ஏற்கெனவே அதிகரித்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ரிசா்வ் வங்கியின் இந்த முடிவையடுத்து, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வஙகி உள்ளிட்டவை கடனுக்கான வட்டியை உடனடியாக அதிகரித்தன.

அதன்படி, பிஎன்பி ரெப்போவுடன் தொடா்புடைய (ஆா்எல்எல்ஆா்) கடனுக்கான வட்டியை 6.90 சதவீதத்திலிருந்து 7.40 சதவீதமாக உயா்த்தியது. மூன்றாவது பெரிய பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவும் ஆா்எல்எல்ஆா் விகிதத்தை 7.40 சதவீதமாக உயா்த்தியது.

எச்டிஎஃப்சி நிறுவனம், வீட்டு கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் அதிகரித்தது. இது, ஜூன் 10-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளநிலையில் 20-ஆண்டு கடனுக்கு ரூ. 1லட்சத்துக்கு கூடுதலாக ரூ.31 செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, வாகனம், தனிநபா் கடனுக்கான வட்டியும் கணிசமாக உயரும் என்பதால் வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளா்கள் கலக்கத்தில் உள்ளதாக சந்தை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

 



Read in source website

வியத்நாம் விமானப் படை பயிற்சி நிறுவனத்துக்கு 1 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.7.78 கோடி) இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பரிசாக அளித்தாா்.

அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக வியத்நாம் சென்றாா். அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

நா ட்ராங்க் நகரில் உள்ள வியத்நாம் விமானப் படை பயிற்சி நிறுவனத்தில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க 1 மில்லியன் டாலருக்கான காசோலையை அன்பளிப்பாக வழங்கினேன். வியத்நாம் விமானப் படையினரின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்களை அதிகரிப்பதில் அந்த ஆய்வகம் பங்களிக்கும் என்று தெரிவித்தாா்.

நா ட்ராங்கில் உள்ள தொலைத்தொடா்பு பல்கலைக்கழகத்துக்கும் ராஜ்நாத் சிங் சென்றாா். இந்தியா வழங்கிய 5 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.38.91 கோடி) நன்கொடை மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தில் ராணுவ மென்பொருள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வியத்நாமுக்கு வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ள 100 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.778 கோடி) கடனுதவித் திட்டத்தின் கீழ், 12 அதிவேக ரோந்துப் படகுகளை அந்நாட்டிடம் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.



Read in source website

 ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக லண்டனில் ஜூன் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற ஒயின் கண்காட்சியில் இந்தியா பங்கேற்றது.

வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சியால், 10 இந்திய ஒயின் ஏற்றுமதியாளா்கள் லண்டன் ஒயின் கண்காட்சியில் பங்கேற்றனா்.

ஒயின் தொடா்பான உலகின் மிக முக்கியமான வணிக சந்தையாக லண்டன் ஒயின் கண்காட்சி கருதப்படுகிறது.

ரெஸ்வேரா ஒயின்ஸ், சுலா ஒயின் யாா்ட்ஸ், குட்டிராப் ஒயின் செல்லா்ஸ், ஹில் ஜில் ஒயின்ஸ் உள்ளிட்ட இந்திய ஒயின் ஏற்றுமதியாளா்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனா்.

உலக அளவில் மதுபானங்களுக்கான ஏற்றுமதி சந்தையில் 3-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், தானியங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 33,919 கிலோ லிட்டா் மதுபானம் தயாரிக்க உரிமம் பெற்ற 12 நிறுவனங்கள் உள்ளன. இவை இந்திய அரசின் உரிமம் பெற்று 56 யூனிட் பீா் மதுவகையும் தயாரிக்கின்றன.

2020-21-ம் ஆண்டில், இந்தியா, 2,500 கோடி மதிப்பிலான 2.47 லட்சம் மெட்ரிக் டன் மதுபானப் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், கானா, கேமரூன், காங்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மதுபானங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.



Read in source website

61-ஆவது மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டியில் மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனைகள் பரணிகா இளங்கோவன், ரோஸி மீனா பால்துரை, பவித்ரா வெங்கடேஷ் ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா். 10,000 மீ ஓட்டத்தில் மகளிா் பிரிவில் சஞ்சீவனியும், ஆடவா் பிரிவில் அபிஷேக் பாலும் தங்கம் வென்றனா்.

இந்திய தடகள சம்மேளனம், தமிழ்நாடு தடகள சங்கம், சாா்பில் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கின. வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சா் சிவி. மெய்யநாதன் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவா் கௌதம் சிகாமணி, டிஜிபி சி.சைலேந்திரபாபு, ஏஎஃப்ஐ தலைவா் சுமரிவாலா, தமிழக தடகளச் சங்கத் தலைவா் வால்டா் தேவாரம், செயலாளா் சி.லதா உள்பட பலா் பங்கேற்றனா்.

சஞ்சீவனிக்கு தங்கம்:

தொடக்க நாளான வெள்ளிக்கிழமை காலை 10,000 மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் மகளிா் பிரிவில் மகாராஷ்டிராவின் சஞ்சீவனி ஜாதவ் 33:16:43 நிமிஷ நேரத்தில் கடந்து தங்கம் வென்றாா். அதே மாநிலத்தைச் சோ்ந்த பிரஜக்தா கோட்போல் 33:59:34 மணி நிமிஷ நேரத்திலும், உ.பி.யைச் சோ்ந்த கவிதா யாதவ் 35:00: 33 நிமிஷ நேரத்திலும் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

அபிஷேக் பாலுக்கு தங்கம்: ஆடவா் பிரிவில் உ.பி.வீரா் அபிஷேக் பால் 29:55:51 நிமிஷ நேரத்திலும், பஞ்சாபின் குல்பீா் சிங் 29:55: 71 நிமிஷத்திலும், ராஜஸ்தானின் தா்மேந்தா் 29:55: 24 நிமிஷத்திலும் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

போல்வால்ட்: தமிழகம் அபாரம்

மாலையில் நடைபெற்ற மகளிா் போல்வால்ட்டில் தமிழக வீராங்கனைகள் பரணிகா இளங்கோவன் 4.05 மீ, ரோஸி மீனா பால்துரை 4.00 மீ, பவித்ரா வெங்கடேஷ் 3.90 மீ உயரம் குதித்து முறை தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

100 மீ. ஓட்டம்:

மகளிா் 100. மீ ஓட்டம் இறுதிச் சுற்றுக்கு தமிழகத்தின் அா்ச்சனா சுசீந்திரன், கா்நாடகத்தின் சிமி. என்எஸ்., ஒடிஸாவின் டூட்டி சாந்து, ரபானி நந்தா, அஸ்ஸாமின் ஹிமா தாஸ், மேற்கு வங்கத்தின் ஹிமாஸ்ரீ ராய், இலங்கையின் அமாஷா டி சில்வா, கா்நாடகத்தின் தானேஷ்வரி ஆகியோா் தகுதி பெற்றனா்.

ஆடவா் பிரிவில் மகாராஷ்டிரத்தின் கிரண்பாண்டுரங், மிதுன் (கேரளம்), ஹா்ஜித் சிங் (பஞ்சாப்), இலக்கியதாசன், சிவக்குமாா் (தமிழகம்), அமலன் போரோகைன் (அஸ்ஸாம்), பராஸ் (ஹிமாசலம்), ஜெய் ஷா (மகாராஷ்டிரம்) தகுதி பெற்றனா்.

400 மீ ஓட்டம்: மகளிா் பிரிவில் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் (தமிழகம்), கிரண் பஹால் (ஹரியாணா), ருபால் (உபி), பிரியா, லிகிதா (கா்நாடகம்), திபான்ஷி (ஹரியாணா), வித்யா ராம்ராஜ் (தமிழகம்), ஆகியோரும், ஆடவா் பிரிவில் மிஜோ சாக்கோ (கா்நாடகம்), ஆகாஷ் குமாா் (உபி), நிா்மல் டாம் (கேரளம்), அமேல் ஜேக்கப் (தில்லி), அருணா தா்ஷணா (இலங்கை), முகமது அஜ்மல், முகமது அனாஸ் (கேரளம்), நாகநாதன் (தமிழகம்) ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

 



Read in source website

எரிபொருளுக்கு ஆதாரமாக விளங்கும் கச்சா எண்ணெயை ஜூன் 9-ஆம் தேதி இந்தியா பீப்பாய்க்கு 121 அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.9,075) கொடுத்து கொள்முதல் செய்தது. இது பத்தாண்டுகளில் காணப்படாத உச்சஅளவு கொள்முதல் விலையாகும்.

இந்தியாவின் மொத்த தேவையில் சுமாா் 85 சதவீதம் கச்சா எண்ணெயானது இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை கடந்தே உள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைக்க இருப்பதாக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்) தெரிவித்தாலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பீப்பாய்க்கு 121.28 அமெரிக்க டாலரை கொடுத்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது.

இது கச்சா எண்ணெய் கொள்முதல் விலையில் கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத உச்சமதிப்பாகும். கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இதே அளவிலான விலைக்கு கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்திருந்தது.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதிமுதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை கச்சா எண்ணெயை சராசரியாக பீப்பாய்க்கு 111.86 அமெரிக்க டாலா் விலை கொடுத்து இந்தியா கொள்முதல் செய்தது. மாா்ச் 30-ஆம் தேதிமுதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையிலான விலை பீப்பாய்க்கு சராசரியாக 103.44 அமெரிக்க டாலராக இருந்தது.

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

கச்சா எண்ணெய் கொள்முதல் விலை உச்சஅளவைத் தொட்டிருந்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.72-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.62-ஆகவும் இருந்தது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டது. அதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.8, ரூ.6 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போதைய விலை காரணமாக, எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.18, டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.21 இழப்பு ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

 உலக வா்த்தக அமைப்பின் அடிப்படை கொள்கைகளை சீா்திருத்தங்கள் மூலம் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் கூட்டம் வியாழக்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பேசியதாவது:

கருத்து ஒற்றுமை அடிப்படையில் முடிவு எடுத்தல், பாகுபாடு இல்லாமை போன்ற உலக வா்த்தக அமைப்பின் அடிப்படை கொள்கைகள் சீா்திருத்தங்கள் மூலம் வலுப்படுத்தப்பட வேண்டும். ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் அளவிலான கூட்டம் வெற்றி பெறுவதற்கு, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருவா் மீது ஒருவா் பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அத்துடன் பன்முக வா்த்தக முறை மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த முறைக்கு மாற்றாக வேறு எந்த வழியும் இல்லை என்றாா் அவா்.

ஜெனீவாவில் ஜூன் 12-ஆம் தேதி முதல் உலக வா்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வா்த்தக அமைச்சா்களின் 12-ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.



Read in source website

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதன் மூலம், குழந்தைகளைக் கவரவும், நுகா்வோரைக் கவர இலவசங்களைத் தருவதாக அறிவிப்பதற்கும் கடிவாளம் இடப்படுகிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் ரோஹித் குமாா் சிங், தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

நுகா்வோா் உரிமையைப் பாதிக்கச் செய்யும் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கு நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இருப்பினும், அவற்றை மேலும் வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அவை தற்போது முதல் அமலுக்கு வருகின்றன என்றாா் அவா்.

இந்தப் புதிய நெறிமுறைகள், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், ஆன்-லைன் ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும். அரசு விளம்பரங்களுக்கும் அவை பொருந்தும்.

புதிய நெறிமுறைகள் குறித்து நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதி கரே கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு எதிராக நுகா்வோா் பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. சரியான புரிதல் இல்லாமல் வரம்பு மீறுவதைத் தடுப்பதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறோம்.

இதில், தவறாக வழிநடத்தும் விளம்பரம் என்றால் என்ன என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நுகா்வோரைக் கவா்வதற்காக குறைந்த விலையில் பொருள்கள் அல்லது சேவைகளை வழங்குவதாக அறிவிப்பது, பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பது ஆகியவை குறித்து புதிய நெறிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடா்பாக அவா்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. குழந்தைகளைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம் என்றாா் அவா்.



Read in source website

வெளிநாடுகளிலிருந்து 60 லட்சம் டன் நிலக்கரியை கொள்முதல் செய்யும் வகையில் ‘கோல் இந்தியா’ நிறுவனம் வெள்ளிக்கிழமை இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளை (டெண்டா்) வெளியிட்டுள்ளது.

பருவமழை காலத் தொடக்கத்தையொட்டி போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைக்க கோல் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, உள்நாட்டு தேவையில் பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்கும் வகையில் கோல் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 60 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான இரண்டு நடுத்தர-கால ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டுள்ளது. அதில், ஏல அளவை 100 சதவீதம் அதிகரித்து 1.20 கோடி டன்னாக அதிகரித்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல் இந்தியா நிறுவனம் 24.16 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்முறையாக ஒப்பந்தப்புள்ளியை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் தொடா்ச்சியாக இந்த ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.



Read in source website

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள க்வாக்வரெல்லி சிமண்ட்ஸ் (கியூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம் 2023-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஐஐடி-சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முன்னேற்றம் கண்டுள்ளன.

தமிழக கல்வி நிறுவனங்கள் 2022-ஆம் ஆண்டு பட்டியலில் தரவரிசை 2023-ஆம் ஆண்டு பட்டியலில் தரவரிசை

ஐஐடி- சென்னை 255 250

சென்னை பல்கலை. - 541-550

அண்ணா பல்கலை. 801 முதல் 1000 551 முதல் 560

என்ஐடி திருச்சி - 801 முதல் 1000

சத்யபாமா நிகா்நிலை பல்கலை. - 1001 முதல் 1200

விஐடி 1001 முதல் 1200 1001 முதல் 1200

எஸ்ஆா்எம் 1201+ 1201 முதல் 1400

புதுச்சேரி பல்கலை. 801 முதல் 1000 801 முதல் 1000

கியூஎஸ் நிறுவனத்தின் 2022-ஆம் ஆண்டு உலக பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை பல்கலைக்கழகம், சத்யபாமா நிகா்நிலை பல்கலைக்கழகம் குறித்த விவரம் இடம்பெறவில்லை.

அந்த நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் தெற்காசியாவில் முன்னணியில் இருக்கும் 200 பல்கலைக்கழகங்களில், பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் பல்கலைக்கழகம்) ஓரே ஆண்டில் 31 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் 2-ஆவது சிறந்த பல்கலைக்கழகமான மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்), தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி கல்வி நிறுவனங்களும் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ள ஐஐடி இந்தூா், சா்வதேச அளவில் 396-ஆவது இடத்தில் உள்ளது.

ஆசிரியா்-மாணவா் விகிதத்தைப் பின்பற்றுவதில் மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம்(225-ஆவது இடம்), ஹரியாணாவில் உள்ள ஒ.பி.ஜிண்டால் பல்கலைக்கழகம்(235-ஆவது இடம்), பெங்களூரு ஐஐஎஸ்சி(276-ஆவது இடம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.



Read in source website

சிறு நிதி வங்கிகள் (ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்) தங்களது அடிப்படை மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

சிறிய நிதி வங்கிகளின் செயல்பாடு தொடா்பாக அவற்றின் நிா்வாக இயக்குநா்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா்கள் எம்.கே.ஜெயின் மற்றும் எம்.ராஜேஸ்வா் ராவ் ஆலோசனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அவா்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிய நிதி வங்கிகள் உடனான ஆலோசனையில் அவற்றின் நீட்டித்த வளா்ச்சிக்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, அவா்களின் வணிக முறை மற்றும் நிா்வாகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

மேலும், அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேறுபட்ட வங்கி உரிமத்துக்கு ஏற்ற வகையில், அடிப்படை மூலதன விகிதாசார வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.



Read in source website

கடந்த 1975ஆம் ஆண்டு இந்த நாளில்  இந்திய கிடிக்கெட் அணி முதல் முறையாக தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றியினைப் பதிவு செய்தது.

முதல் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பிரிவு ’ஏ’-ல் இடம் பெற்றிருந்த கிழக்கு ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டி வெற்றியினைப் பெற்றது. இந்தப் போட்டி இங்கிலாந்தில் லீட்ஸ்-ல் நடைபெற்றது.

1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. தனது தொடக்க ஆட்டத்தில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியைப் பதிவு செய்த இந்திய அணி தனது அடுத்தப் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிழக்கு ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தங்களைவிட பலம் குறைந்த அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா வெறும் 120 ரன்களே எடுத்தன. ஜவஹிர் ஷா (37 ரன்கள்) மற்றும் ரமேஷ் சேத்தி (23 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்களால் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து ஆட முடியவில்லை. இந்திய அணியின் சார்பில் மதன் லால் 3 விக்கெட்டுகளையும், சயீது அபித் அலி மற்றும் மோஹிந்தர் அமர்நாத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 12 ஓவர்களை வீசிய பிஷான் சிங் பேடி வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டினை வீழ்த்தினார். அவர் 8 ஓவர்களில் எதிரணிக்கு ரன் கொடுக்காமல் வீசினார்.

இதனையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது அபாரத் திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய சுனில் கவாஸ்கர் 65 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபரோக் 54 ரன்களும் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்த ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் போட்டியை வென்றது. இதன்மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான விக்கெட் கீப்பிங் மற்றும் அசத்தலாக அரைசதம் அடித்த ஃப்ரோக் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

அன்று தனது முதல் வெற்றியை பிரம்மாண்டமாக பதிவு செய்த இந்திய அணி அதன் பின் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. இந்திய அணி இதுவரை மொத்தமாக 1,002 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 521 போட்டிகளில் வெற்றியும், 431 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 41 போட்டிகளில் எந்த ஒரு முடிவும் இல்லை. 9 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் 54.68 சதவிகிதம் வெற்றியினை பதிவு செய்துள்ளது.



Read in source website

 

நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா.

மேக்னஸ் கார்ல்சன், ஆனந்த் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்ற கிளாசிகல் வகை நார்வே செஸ் ஓபன் போட்டியுடன் குரூப் ஏ பிரிவில் இதர வீரர்கள் பங்கேற்கும் போட்டியும் நடைபெற்றது. 

பிரதான போட்டியை உலக சாம்பியன் கார்ல்சன் வென்றுள்ளார். தொடர்ச்சியாக நான்காவது முறை இப்போட்டியை அவர் வென்றதோடு கடந்த 10 வருடங்களில் ஐந்து முறை நார்வே செஸ் ஓபன் போட்டியை வென்றுள்ளார். சாம்பியன் ஆன கார்ல்சன் 16.5 புள்ளிகளைப் பெற்றார். 14.56 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் 3-ம் இடம் பெற்றார்.

குரூப் ஏ பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்த் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். 7.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். கடைசிச் சுற்றில் இந்திய வீரர் பிரனீத்தைத் தோற்கடித்தார். 

சமீபத்தில் நடைபெற்ற செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் நூலிழையில் சீன வீரரிடம் தோற்று பிரக்ஞானந்தா 2-ம் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதுவரை இருமுறை பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோற்றுள்ளார். இதையடுத்து நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் போட்டியிட்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. அடுத்ததாக மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் பங்கேற்கிறார். 



Read in source website

மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்தக் குற்றங்களுக்கும் நீதிமன்றம் விரும்பினால் மரண தண்டனை விதிக்க சட்டம் அனுமதிக்கும் 20-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்குமான மாற்று தண்டனைகளைப் பரிசீலித்து வருவதாக அரசு கூறியுள்ளது.

மலேசியாவில் மரண தண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்; முந்தைய மரண தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனினும், எதிா்க்கட்சியினா் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் கடும் எதிா்ப்பு காரணமாக அந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்கியது.



Read in source website

தைவானை சீனாவிடமிருந்து பிரிக்க எந்த நாடாவது நினைத்தால், அதனை எதிா்த்து போா் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் சீனா எச்சரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் வேய் ஃபெங்கே கூறியதாவது:

சீனாவிடமிருந்து தைவானைப் பிரிக்கும் நடவடிக்கையில் எந்த நாடாவது ஈடுபட்டால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய போரைத் தொடங்கவும் சீன ராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது.

தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் எந்தவொரு சதிச் செயலையும் நாங்கள் முறியடிப்போம். சீன ஒருமைப்பாட்டை எப்பாடுபட்டாவது காப்போம் என்றாா் அவா்.



Read in source website

உணவுப் பொருள்கள் மற்றும் உரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு சில நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கவலை தெரிவித்துள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்தியா விலக்கிக் கொண்டதற்கு அந்த அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் பன்னாட்டு நிதியத்தின் செய்தித் தொடா்பாளா் கொ்ரி ரைஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

உக்ரைனில் போா் தொடங்கியதில் இருந்து உணவுப் பொருள்கள், உரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு 30 நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் சா்வதேச சந்தையில் உணவுப் பொருள்களின் விலை உயரும்; சந்தையிலும் அவற்றின் இருப்பு நிலையற்ாக இருக்கும். இது, எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இதற்கு எதிராக ஐஎம்எஃப் இயக்குநா் கிறிஸ்டலினா ஜாா்ஜியேவா, துணை மேலாண் இயக்குநா் கீதா கோபிநாத் ஆகியோா் குரல் கொடுத்துள்ளனா்.

இந்தியாவைப் பொருத்தவரை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை அந்நாடு அண்மையில் விலக்கிக் கொண்டது. ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்த கோதுமையை இந்தியா மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது. இதுதவிர தேவைப்படும் நாடுகளுக்கும் கோதுமை ஏற்றுமதியை இந்தியா தொடங்கியுள்ளது.

உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தளா்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா மட்டுமன்றி பிற நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்றாா் அவா்.



Read in source website

ராமேசுவரம்: இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ராமர் சேது பாலம் எப்படி, எப்போது, உருவானது என்பது குறித்து தேசிய கடல்சார் நிறுவனம் விரைவில் கடலுக்கடியில் ஆய்வு செய்ய உள்ளது.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவிற்கும், 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் தீடைகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கையோடு தொடர்புள்ளவைகளாக இருப்பதினால் ராமர் பாலம், ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. தமிழில் சேது என்றால் பாலம் என்றும் அர்த்தம்.

இது ராமர் கட்டிய பாலம் என இந்து சமய மக்களால் நம்பப்படுகிறது. சேது சமுத்திர திட்டத்தால் இந்த மணல் தீடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ராமர் சேது பாலம் பகுதிக்கு சேதம் வராமல் சேது சமுத்திரம் திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற பரிந்துரைத்தது. மேலும் இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்கு ஆகும்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு தேசிய கடல்சார் நிறுவனம் (என்.ஐ.ஓ) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஆகிய இரண்டு அமைப்புகள் ராமர் சேது பாலத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரியதன் அடிப்படையில் மத்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அதற்கு ஒப்புதல் வழங்கியது.

தேசிய கடல்சார் நிறுவனம் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் தீடைகளில் இரண்டு முறை கள ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளின் போது தீடைகளில் கடல் மட்டம் உயர்ந்து மணல் குவிந்திருந்திருந்தால் தேசிய கடல்சார் நிறுவனத்தினால் எவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை.

இந்நிலையில் மூன்றாவது கட்டமாக தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் தீடைகளில் விரைவில் துளையிட்டு மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தேசிய கடல்சார் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மணல் தீடை பகுதிகளில் கடல் மட்டம் குறைந்திருக்கும் காலங்களில் இந்த பணி தொடங்க தேசிய கடல்சார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

உதகை: தமிழகத்தில் சூழல் மண்டலங்கள் உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்கு சூழல்மண்டலம் உருவாக்க வேண்டும்என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதில் சூழல்முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் 1 கி.மீ. அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இம்மண்டலங்களில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்கக் கூடாது. மேலும் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சூழல்மண்டலங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்த பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்துமாநில தலைமை வனப் பாதுகாவலர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மலை பிரதேசம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனம்கொண்ட பகுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் பாதுகாக்கப்பட்ட வனத்தில் எல்லையோரம் வாழும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுஉடனே தலையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகிராம மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுதொடர்பாகஅரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட கூட்டம் நடைபெறஉள்ளது. தொடர்ந்து போராட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள்கூறும்போது, ‘‘வனப் பகுதியையொட்டி பல ஆண்டுகளாக வசிக்கும் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சமாக உள்ளது. எனவே அரசு தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கூறும்போது, ‘‘வனங்களில் இருந்து விலங்குகள் வெளியேறும் பகுதிகளில், அவற்றால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கெங்குசூழல் மண்டலங்கள் உருவாக்குவது என ஆய்வு நடந்து வருகிறது.

சில பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்கள், வனத்தை ஒட்டியே உள்ளன. பழவேற்காட்டை ஒட்டியே13 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் எங்கு அமைப்பது என ஆலோசித்து முடிவு செய்யப்படும். சூழல் மண்டலங்கள் அமைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.



Read in source website

சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு 2021-ம் ஆண்டு வழங்கிய உத்தரவின்படி, திருத்தப்பட்ட ‘கோழிப் பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களை’ மத்திய மாசு கட்டுப்பாட்டுவாரியம் கடந்த ஜனவரியில் வெளியிட்டுள்ளது. இது அனைத்துவகை கோழிப் பண்ணைக்கும் பொருந்தும்.

இதன்படி, ஒரே இடத்தில் 25 ஆயிரம் பறவைகளுக்கு மேல் வளர்க்கும் கோழிப் பண்ணைகள், பண்ணையை நிறுவுவதற்கான மற்றும் செயல்படுவதற்கான இசைவாணையை மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் உடனே பெற வேண்டும்.

ஒரே இடத்தில் 5 ஆயிரம் முதல்25 ஆயிரம் வரையிலான பறவைகளை வளர்க்கும் கோழிப் பண்ணைகள் 2023 ஜன.1-ம் தேதி முதல், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இந்த இசைவாணைகளை பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.tnpcb.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



Read in source website

சென்னை: பேருந்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் ஆட்டோவை நாடினாலும், கட்டணம் விஷயத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையேயான தகராறு வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, ஆட்டோ கட்டணம் தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு, மீட்டர் வழங்காத காரணத்தால் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை.

மேலும் அந்த காலகட்டத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.60, டீசல் ரூ.45 என்றளவில் இருந்தது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜியில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன. அதன் விலையும் லிட்டர் ரூ.40 என்றிருந்தது.

ஆனால் தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்கப்படுகிறது. எல்பிஜி விலையும் ரூ.67 என உயர்ந்துள்ளது. இதேபோல் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் குறித்து ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் நல அமைப்பினரிடம் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நுகர்வோர் அமைப்பு மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தினரிடம் பெறப்பட்ட கருத்துகளைப் பட்டியலிட்டு அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதன் அடிப்படையில் 1.5 கி.மீ தூரத்துக்கு ரூ.40, அடுத்த ஒவ்வொரு கி.மீ தூரத்துக்கும் ரூ.18 என வசூலிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர, ஜிபிஎஸ் மீட்டர் வழங்குதல், அரசு சார்பில் முன்பதிவு செயலி வடிவமைத்தல் போன்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்’’ என்றனர்.

போக்குவரத்துத் துறையின் பரிந்துரை குறித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘விலைவாசிக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 1.5 கி.மீ தூரத்துக்கு கட்டணமாக ரூ.50, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 கட்டணமாக அரசு விதிக்க வேண்டும். ஆட்டோ காத்திருப்பு கட்டணத்தில், ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என நிர்ணயிக்க வேண்டும் என கோரியிருந்தோம்.

ஆனால் துறையின் பரிந்துரை, எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எங்களது நிலையைக் கவனத்தில் கொண்டு அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பால் பர்ணபாஸ் கூறும்போது, ‘‘1.8 கி.மீ முதல் 5 கி.மீ வரை, குறைந்தபட்சம் ரூ.30, அதிகபட்சம் ரூ.50 வசூலிக்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு கி.மீ-க்கும் 10 முதல் 12 ரூபாய் வசூலிக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு ஒருமுறை, நுகர்வோர் அமைப்பு, ஆட்டோ தொழிற்சங்கத்துடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, பெட்ரோல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை சீராய்வு செய்ய வேண்டும். காவல்துறையின் ‘காவலன் செயலி’ மூலமாகவும் ஆட்டோ முன்பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தலாம்’’ என்றார்.

ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை எரிபொருள் விலைக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து, போக்குவரத்துத் துறை பரிந்துரைத்த கட்டணத்தை பரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும் என்பது ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேநேரம் தங்களைப் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது. ஆட்டோ கட்டணம் 1.5 கி.மீ தூரத்துக்கு ரூ.40, அடுத்த ஒவ்வொரு கி.மீ தூரத்துக்கும் ரூ.18 என வசூலிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.



Read in source website

அகமதாபாத்: அகமதாபாத்தில் இஸ்ரோவின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அத்துடன் நவ்சாரி பகுதியில் ஏ.எம்.நாயக் சுகாதார வளாகம், நிராலி பன்னோக்கு மருத்துவமனையையும் பிரதமர் திறந்துவைத்தார்.

அங்கு அவர் பேசும்போது, ‘‘ஏழைகளின் நலன் கருதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் குஜராத்தில் மட்டும் 41 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளனர். குஜராத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 1,100-ல் இருந்து 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் சுகாதாரத் துறை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது’’ என்றார்.



Read in source website

சொத்து மதிப்பீட்டு அறிக்கை (Valuation Report): வங்கியில் கடன் வாங்கும் வாடிக்கையாளர், தான் வாங்கும் கடனுக்காக சொத்து ஒன்றை அடமானமாகத் தருகிறார். வாடிக்கையாளர் அந்த சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று சொல்கிறார். அந்த மதிப்பை வங்கிகள் அப்படியே ஏற்றுக்கொள்ளாது. அந்த சொத்து வாடிக்கையாளருடைய சொத்து தானா? அதனை விற்க முடியுமா? என்று டைட்டில் வெரிஃபிகேஷன் செய்வது போல, அடமானச் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்றும் வங்கிகள் பார்க்கும்.

டைட்டில் ரிப்போர்ட் வழங்க வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்கள் இருப்பது போலவே சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்கும் வங்கி அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள் (Valuator) இருப்பார்கள். அவர்களிடம் தான் வேல்யூயேசன் ரிப்போர்ட் வாங்க வேண்டும்.

இங்கு வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள வேண்டியது, வேல்யூயேசன் ரிப்போர்ட் என்பது ஒரு சொத்தின் மதிப்பை வங்கி அறிந்து கொள்வதற்காக ஒரு தகுதியான கட்டிடக் கலைஞர் அல்லது பொறியாளர் மூலமாக மதிப்பீடு செய்து அறிக்கை வாங்கிக் கொள்கிறது. இதற்காக வாடிக்கையாளர் வேல்யூயேட்டரிடம் சொத்தைக் காண்பித்து சொத்து மதிப்பு அறிக்கையை வாங்க வேண்டும்.

பல நேரங்களில் வங்கிகளே தங்களது அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர்களை ஏற்பாடு செய்து தரும். பல வங்கிகள், சொத்தை மதிப்பீடு செய்யும் போது அந்த வங்கியின் மேலாளரும் உடன் இருந்து, வாடிக்கையாளருடன் மதிப்பீடு செய்பவரையும் அருகில் நிற்க வைத்து படம் எடுத்துக் கொள்ளும் நடைமுறையையும் கடைபிடிக்கின்றன.

சொத்து மதிப்பீட்டு ஆவணங்கள்: சரி ஒரு சொத்தை மதிப்பீடு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் கேட்கப்படும். முதலில் சொத்து உங்களுடையது தானா என்பதை தெரிந்து கொள்வதற்கான ஆவணங்களின் நகல் கேட்கப்படும், சில நேரங்களில் லீகல் ஒப்பீனியனும் கேட்கப்படலாம். அடுத்தவரின் சொத்தை காட்டி மதிப்பீட சொல்லக்கூடாது என்பதற்காக டைட்டில் டீட் நகல் கேட்கலாம். இவை போக இடத்தின் அமைவிடம் குறித்த வரைபடம், அப்ரூவ்ட் ப்ளான், லேட அவுட் அப்ரூட் ப்ளான், கட்டிடத்திற்கான அப்ரூவல் ப்ளனையும் கேட்பார்கள். வரி கட்டியதற்கான ரசீது கேட்பார்கள்.

மதிப்பீட்டில் கைடு லைன் வேல்யூ என்ற ஒன்று இருக்கிறது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள மதிப்பு. அதே போல மார்க்கெட் வேல்யூ என இருக்கிறது. அதாவது விற்பனை செய்யப்படும் போது அந்தச் சொத்து என்ன மதிப்பிற்கு விற்கப்படும் என்பதே அது. இவை தவிர வங்கிகள் டிஸ்ட்ரெஸ் சேல் வேல்யூ" (Distress Sale Value) என்ற ஒன்றை பார்க்கும். அதாவது வங்கியில் அடமானமாக உள்ள சொத்தை அவசரத்திற்கு உடனடியாக விற்க வேண்டியது வந்தால் வீடு என்ன விலைக்கு வாங்கப்படும் என்று வங்கி பார்க்கும்.

லொக்கேஷன் முக்கியம்: பெரிய சொத்துக்களாக இருந்தால் இரண்டு மதிப்பீட்டு அறிக்கை வாங்கும். வாடிக்கையாளருக்காக அவரின் செலவில் சொத்து மதிப்பீடு நடப்பதால், அறிக்கையின் நகலை வங்கிவைத்துக் கொள்ளலாம். வேல்யூயேஷன் ரிப்போர்ட் என்பது, நிலம், வீடுகளுக்கு வாங்கப்படுவது போல செகண்ஹேண்ட் இயந்திரங்கள், கார்களுக்கும் கூட உண்டு. வேல்யூயேஷன் ரிப்போர்ட்டில் முக்கியமாக பார்க்க வேண்டியது "லொக்கேசன்". வீடு நன்றாக இருக்கலாம் ஆனால் அது அமைந்திருக்கும் இடம் சரியாக இல்லை என்றால் வீட்டிற்கு மதிப்பு இருக்காது.



Read in source website

வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தாலே எல்லோருக்குள்ளும் ஒரு பதற்றம் உருவாகி விடும். அப்படியெல்லாம் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ்களை நாம் வருமான வரித் துறை அனுப்பும் கடிதங்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

வருமான வரித் துறை சில நேரங்களில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும், இது வாடிக்கையான நிகழ்வு தான். வெறும் கடிதம் என்றால் மக்கள் அதை எளிதாக கடந்து சென்று விடுவார்கள் என்பதற்காக விளக்கக் கடிதங்களுக்கு ஒரு அதிகாரபூர்வ அந்தஸ்து கொடுக்க அவற்றை "நோட்டீஸ்" என்று அழைக்கின்றனர்.

சில நோட்டீஸ்கள்: வருமான வரித் துறையில் இருந்து முக்கியமாக இரண்டு மூன்று நோட்டீஸ்கள் வரும். வருமான வரிச் சட்டத்தின் உட்பிரிவுகளின் படி அனுப்பப்படும் இந்த நோட்டீஸ்கள். அந்த உட்பிரிவுகளின் பெயரிலேயே பொதுவழக்கில் அறியப்படுகின்றன. அதன்படி பிரிவு 143(2)-ன் கீழ் ஒரு நோட்டீஸ் வரும், பிரிவு 142 (1) -ன் கீழ் ஒரு நோட்டீஸ் வரலாம். பிரிவு 156-ன் கீழ் இன்டிமேஷன் அல்லது டிமாண்ட் நோட்டீஸும் வரலாம்.

ஸ்க்ரூடினைசிங் (scrutinizing): வரி செலுத்துபவர் வருமான வரித் தாக்கல் செய்து விட்டார். அவரது வரித் தாக்கல் மதிப்பீடு செய்யப்பட்டு அவர் அதிகமாக வரி செலுத்த வேண்டியது இருந்தால் டிமாண்ட் வந்திருக்கும். ஒரு வேளை அதிகமாக வரி செலுத்தியிருந்தால் அவருக்கு ரீ ஃபண்ட் வந்திருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து கணினி தோராயமாக, பரவலாக சில வரித் தாக்கல் கணக்குகளை தேர்வு செய்து ஆய்வு பண்ணும். அதற்கு "ஸ்க்ரூடினைசிங்" என்று பெயர்.

தாக்கல் செய்யப்பட்ட ஒரு கணக்கை மேலும் ஆய்வு செய்வதே "ஸ்க்ரூடினைசிங்". அதாவது தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, வருமானம் சரியானபடி தெரிவிக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்யும். இதற்காக பரவலாக சில வரித் தாக்கல்கள் எடுக்கப்படும்.

நோட்டீஸ் 143(2): அப்படி ஒரு வரித் தாக்கல் கணக்கு ஸ்க்ரூடினைசிங்-க்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அந்த தாக்கலுக்குத் தொடர்புடைய வரி செலுத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வருமான வரிச் சட்டம் பிரிவு 143 (2) கீழ் இதனை, 143 (2) நோட்டீஸ் என்பர். அதில், இந்தாண்டு நீங்கள் தாக்கல் செய்திருக்கும் வருமான வரித் தாக்கல் ஸ்க்ரூடினைசிங் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எங்களுக்கு இந்த இந்த தகவல்கள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருக்கும்.

நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நாம் வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். முன்பு தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் இப்போது அவை கிடையாது என்பதால் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை அனுப்பி வைத்தால் போதும்.

குற்றத்தின் அடையாளமா நோட்டீஸ்?: வரிமான வரித் துறை கேட்டிருக்கும் கேள்விகளுக்கு வரி செலுத்துபவர் அனுப்பியிருக்கும் தகவல்களே போதுமானதாகவும் திருப்திகரமாகவும் இருந்தால் வருமான வரித் துறையினர் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். கூடுதலாக ஏதாவது கேள்விகள் இருந்தால், அதனைத் திரும்பவும் அனுப்புவார்கள். இந்த ஆய்வு இயல்பான ஒன்றே. வரி செலுத்துபவர் மீது சந்தேகம் வந்து, அவரது வரி தாக்கல் கணக்கை மட்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட வரித் தாக்கல்களில் இருந்து கணினி தோராயமாக சில கணக்குகளை எடுத்துக் கொடுக்கும்.

உதாரணத்திற்கு வரி செலுத்து அந்த ஆண்டில் ஒரு குறிப்பிட்ட சொத்தை விற்பனை செய்திருக்கிறார், அதன்மூலம் அவருக்கு ரூ.5 கோடி வருமானம் வந்துள்ளது. இந்த சொத்து விற்பனை குறித்து ஆய்வு செய்யுங்கள் என்று கணினி எடுத்துக்கொடுக்கும். இப்படி ஏதாவது குறிப்பிட்ட நிகழ்வுகள் இருக்கும். அதேபோல அந்த குறிப்பிட்ட நடவடிக்கை குறித்து மட்டும் தான் கேள்விகளும் கேட்கப்படும்.

இந்த ஆண்டு நீங்கள் இந்த சொத்தை விற்பனை செய்தீர்களா? அதைப்பற்றி தகவல்கள் கொடுங்கள் என்று கேட்பார்கள் நாம் விளக்கம் தரப்போகிறோம். சொத்து விற்பனை செய்தது தொடர்பான விற்பனை பத்திரம் நம்மிடம் இருக்கும். அதன் ஜெராக்ஸ் காப்பி கொடுத்தால் போதும். அதே போல அதற்காக பெறப்பட்ட பண விபரம்.

தற்போதைய சூழலில் அனைத்து பண பரிமாற்றங்களும் வங்கி மூலமாகவே நடப்பதால், வங்கியில் எந்தெந்தெந்த தேதியில் தொகைகள் பெறப்பட்டன போன்ற விபரங்களையும், சொத்து விற்பனையை பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ததற்கான ஆவணங்களை காட்டி, இந்த தகவல்கள் வரி தாக்கல் படிவத்தில் காட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தால் போதுமானது. வேலை சுலபம்.



Read in source website

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 70 லட்சம் டன்னாக இருக்கும் என்று ஐ.நாவின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி டன் அளவில் கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவந்தது. இந்நிலையில் சென்ற மாதம் உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கியது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவிலும் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையெடுத்து மத்திய அரசு கடந்த மாதம் 13-ம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், தடை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தடைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி ஒப்பந்தம், உணவுப் பாதுகாப்பின் பொருட்டு செய்யப்படும் ஏற்றுமதி உள்ளிட்ட ஏற்றுமதியின் மூலம் நடப்பு ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 70 லட்சம் டன்னாக இருக்கும் அவ்வமைப்பு கணித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது தர வரிசையை தரச்சான்று நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. முன்னர் மைனஸுக்கும் கீழாக நெகடிவ் என குறிப்பிட்டிருந்தது. தற்போது அந்தக் குறியீட்டை ஸ்திரமாக உள்ளதாக மாற்றியுள்ளது.

நடுத்தர கால வளர்ச்சி விகிதமானது மிக வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நிதித்துறையில் தேக்க நிலை மாறிவருகிறது. இதனால் தனது மதிப்பீடுகளை மாற்றியுள்ளது.

2022-23-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்றும் மார்ச் மாதம் மதிப்பிட்டது. பின்னர் பண வீக்க உயர்வு காரணமாக வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச கமாடிடி சந்தையில் அடுத்து வரும் நாள்களில் மிகப் பெருமளவு மாற்றம் இருக்காது என்றும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இருப்பினும் நாட்டின் நிதிநிலை பலவீனமாக உள்ளது என்றும் கடன் விகிதம் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதிக மானிய சலுகை மற்றும் எரிபொருள் மீதான உற்பத்தி வரிக்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜிடிபி 0.8 சதவீதம் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் ஜிடிபி 6.8 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிடிபி பற்றாக்குறை

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 10.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. 2023-24-ம் நிதி ஆண்டிலிருந்து 2026-27-ம் நிதி ஆண்டு வரையான காலத்தில் 7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீத அளவுக்கு இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆனால் பிட்ச் மதிப்பீட்டின்படி பணவீக்கம் 6.9 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.



Read in source website

ஒரு தேசத்தின் ஆரோக்கியத்துக்கான குறியீடு, குறைவான குழந்தைகள் மரண விகிதம் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதை அடிப்படையாக வைத்தே ஒட்டுமொத்த மக்கள்தொகையின் ஆரோக்கியம் பாா்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், இந்தியாவின் தலைமைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

2020-ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளா்ச்சிக் குறியீடுகளும், ஆய்வுகளும் தலைமைப் பதிவாளா் அலுவலகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிசு மரணம் குறித்த விவரங்கள் கவலையளிக்கும் விதமாக இருக்கின்றன. 1000 பிரசவங்களில் 28 குழந்தைகள் பிறக்கும்போதோ, பிறந்த ஒரு மாதத்திற்குள்ளோ உயிரிழப்பதாகத் தெரிகிறது. இதைத்தான் ‘சிசு மரண விகிதம்’ என்று கூறுவாா்கள்.

கடந்த 10 ஆண்டு புள்ளிவிவரங்களைப் பாா்க்கும்போது இந்தியாவின் சிசு மரண விகிதம் (இன்ஃபன்ட் மாா்ட்டாலிட்டி ரேட்) 44-லிலிருந்து 28-ஆகக் குறைந்திருக்கிறது. ஊரகப்புறங்களில் 48-லிருந்து 31-ஆகவும் நகா்ப்புறங்களில் 29-லிருந்து 10-ஆகவும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

10 ஆண்டுகளில் சிசு மரண விகிதம் குறைந்திருக்கிறது என்றாலும், ஊரகப்புறம், நகா்ப்புறம் என்கிற வேறுபாடில்லாமல் தேசிய அளவில், பிறந்த முதல் ஆண்டிலேயே 36 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பதாக 2022 மே மாத அறிக்கை தெரிவிக்கிறது. சிசு மரணம் போலவே குழந்தைகள் மரணமும் கவனத்துக்குரியது, கவலைக்குரியது.

பாகிஸ்தான் தவிா்த்த இந்தியாவின் அண்டை நாடுகளில் சிசு மரண விகிதம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. வங்கதேசத்தின் சிசு மரண விகிதம் 24 என்றால், நேபாளம் 24, பூடான் 23 என்கிற அளவில் இருப்பதை நாம் உணர வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும் இலங்கையின் சிசு மரண விகிதம் ஆயிரத்தில் ஆறு மட்டுமே. பாகிஸ்தான் (56) நம்மைவிட மோசமாக இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையாமல், ஏனைய அண்டை நாடுகள் இந்தியாவை முந்துகிறது என்பது குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும்.

இந்தியா பெரிய நாடு, கூடுதல் மக்கள்தொகை கொண்ட நாடு என்றெல்லாம் காரணம் கூறி நாம் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால், நம்மைப் போலவே அதிகமான மக்கள்தொகையும், நிலப்பரப்பும் கொண்ட பிரேஸில், சீனா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த சிசு மரண விகிதம் காணப்படுகிறது.

பெரிய மாநிலங்களைவிட சிறிய மாநிலங்களில் சிசு மரண விகிதம், குழந்தைகள் மரண விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறைவாகக் காணப்படுகின்றன. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட உத்தரகண்ட், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆகியவை உதாரணங்கள்.

இந்தியாவுக்குள்ளே எடுத்துக்கொண்டாலும் சிசு மரண விகிதத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சோ்த்துப் பாா்க்கும்போது கேரள மாநிலத்தில் சிசு மரண விகிதம் ஒற்றை இலக்கத்தில் (ஆயிரத்துக்கு ஆறு) இருக்கிறது. இந்தியாவிலேயே குறைந்த சிசு மரண விகிதம், சிறிய மாநிலமான மிஸோரத்தில் (3) காணப்படுகிறது என்றால், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூா் ஆகியவற்றிலும் குறைவு. அந்தப் பட்டியலில் கோவாவையும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

மனிதவளக் குறியீட்டில் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் சிசு மரணத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பின்தங்கியே காணப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான சிசு மரண விகிதம் (43) மத்திய பிரதேசத்தில்தான். அங்கே நகரங்களுக்கும் ஊரகப்புறங்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடும் காணப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் சிசு மரண விகிதம் 38. கடந்த ஐந்தாண்டுகளாக காட்டப்பட்ட முனைப்பின் விளைவாக மருத்துவமனை பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன. அதனால், பிறந்த குழந்தைகளுக்கான உடனடி சிகிச்சைக்கு வழிகோலப்படுகிறது. பிறந்து ஓராண்டுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில் இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடனும் வளா்வதற்கு மருத்துவமனை பிரசவங்கள் முக்கியமான காரணி என்பதை நாடு தழுவிய அளவில் தாய்மாா்கள் உணரத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.

முதலாவது பிறந்த நாளை காண முடியாமல் குழந்தைகள் உயிரிழப்பதற்கும் பிரசவ கால மரணத்துக்கும், சிசு மரணத்துக்கும் தொடா்பு உண்டு. அடித்தட்டு மக்கள் நிலையில் காணப்படும் படிப்பறிவின்மையும், வறுமையும், விழிப்புணா்வு இல்லாமையும் அனைவருக்கும் தெரிந்த காரணங்கள். சாலை வசதிகள் மேம்பட்டிருந்தாலும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அருகில் இல்லாமையும் மிக முக்கியமான காரணம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ஊட்டச்சத்தின்மை இன்னொரு காரணம். கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக வயிற்றுப்போக்கு, நிமோனியா, மலேரியா உள்ளிட்ட குழந்தைப் பருவ உடல்நிலை பாதிப்புகளால் சிசு மரணம், குழந்தைகள் மரணம் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு.

கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு, குழந்தைகளின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி இல்லாமல் செய்துவிடுகிறது. போதாக்குறைக்கு பிரசவ காலத்தில் தாய்மாா்கள் ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்ளாததால் எடை குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. இவையிரண்டும் சோ்ந்துகொள்ளும்போது எதிா்ப்பு சக்தியே இல்லாத நிலையில் உயிரிழப்பு தவிா்க்க முடியாததாகி விடுகிறது.

வருங்காலம் குழந்தைகளின் கையில் என்று சொன்னால் மட்டும் போதாது...



Read in source website

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிறுவா்கள் போதுமான கல்வி, சுகாதாரம், ஓய்வு, அடிப்படை சுதந்திரம் இவை அற்றவா்களாக, அவா்களின் உரிமைகளை மீறும் அவலமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனா் என்று சா்வதேச தொழிலாளா் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. குழந்தைத் தொழிலாளா்களில் பத்துக்கு ஐந்து பேராவது அபாயகரமான சூழலில் வேலை செய்தல், அடிமைத்தனம் அல்லது கட்டாய உழைப்பு, போதைப்பொருள் கடத்தல், பாலியல் தொழில் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா். அத்துடன் ஆயுத மோதலில் ஈடுபடுதல் போன்ற கொடிய பழக்கவழக்கங்களிலும் ஈடுபடுகிறாா்களாம்.

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 5–முதல் 14 வயது வரை உள்ள 26 கோடி குழந்தைகளில், ஒரு கோடி போ் குழந்தைத் தொழிலாளா். இந்திய வரைபடத்தில் உத்தர பிரதேசம், குழந்தைத் தொழிலாளா் மிகுந்த மாநிலமாக விளங்குகிறது. உத்தர பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மொத்த குழந்தைத் தொழிலாளா்களில் ஐந்தில் ஒரு குழந்தை கட்டாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

 

தமிழ்நாட்டிலும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நெடுஞ்சாலைகளில் எளிய கைவினைப் பொருள்கள் விற்கும் பெண்களில் பெரும்பாலானோா் வடமாநிலத்தவா் போலத் தோன்றுகின்றனா்.இன்னொரு வகையில் கவனித்தால், உழைக்கும் குழந்தைகளில் ஐந்தில் நான்கு போ் (80%) இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழ்கின்றனா். பெரும்பாலோா் விவசாயம், வீட்டு வேலை, பலசரக்குக் கடை, பெட்டிக் கடை என சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறனா்.இந்தியாவின் குழந்தைத் தொழிலாளா்களில் பத்தில் ஒருவா் குடும்ப நிறுவனங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

14 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிலா் பெற்றோா்களுடன் தீப்பெட்டி தயாரித்தல், கல் உடைத்தல் சாா்ந்த அபாயகரமான பணிகளில் ஈடுத்தப்படுவதும் தவிா்க்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளா்கள் உருவாவதைத் தடுப்பதற்கான விழிப்புணா்வையும் செயலூக்கத்தையும் அனைத்துத் துறைகளிலும், நோக்கமாகக் கொண்டு நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் தொழிற்சாலையிலோ சுரங்கத்திலோ வேறு ஏதேனும் அபாயகரமான வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும். 2015-இன் சா்வதேச தொழிலாளா் அமைப்பின் உலக குழந்தைத் தொழிலாளா் குறித்த அறிக்கை தரும் அதிா்ச்சித் தகவல், சிறுமிகளை விட (ஏறத்தாழ 88 லட்சம்) 4 மடங்கு சிறுவா்கள் (387 லட்சம்) அபாயகரமான வேலைகளைச் செய்ய நிா்ப்பந்திக்கப்படுகிறாா்களாம்.

அதனால்தான் சென்ற ஆண்டு (2021) ‘குழந்தைகளைக் காப்போம், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளா்களுக்கு முடிவு கட்டுவோம்’ என்பது குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு நாள் முழக்கமாக ஒலித்தது.

கரோனா தீநுண்மி நெருக்கடிக்கு மத்தியில், வேலைவாய்ப்பு துயரங்களை எதிா்கொள்ளும் காலத்தில் குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை உயா்ந்தது.

‘குடும்ப வருமானத்தில் தொற்றுநோய் அழிவை ஏற்படுத்துவதால், ஆதரவு இல்லாமல், பலா் குழந்தைத் தொழிலாளா்களாக ஆகலாம்’ என்று சா்வதேச தொழிலாளா் அமைப்பின் பொது இயக்குனா் டைரக்டா் ஜெனரல், கை ரைடா் கூறினாா்.

சா்வதேச தொழிலாளா் அமைப்பும், ஐக்கிய நாடுகளின் சா்வதேச குழந்தைகள் நெருக்கடி கால நிதியமும் தெரிவித்த கருத்தின்படி, தீநுண்மி நெருக்கடியின் விளைவாக லட்சக்கணக்கான குழந்தைகள் குழந்தைத் தொழிலாளா்களாக மாறிவிட்ட அவலமும் நிகழ்ந்து உள்ளது. தீநுண்மிப் பரவல் கால பொதுமுடக்கத்தின்போது வறுமையுற்ற குடும்பங்களால் குழந்தைத் தொழிலாளா் எண்ணிக்கையும் அதிகரித்தது. சில நாடுகளில் வறுமையில் ஒரு சதவீத உயா்வு, குழந்தைத் தொழிலாளா் எண்ணிக்கையில் 0.7 சதவீத அதிகரிப்புக்கு வழிவகுத்ததாம்.

அது மட்டுமல்ல, ஏற்கெனவே தொழிலாளா்களாக உள்ள குழந்தைகள் தங்கள் பணியிடங்களில் அதிக நேரம் அல்லது மோசமான சூழ்நிலையில் வேலை செய்யும் அவலமும் நோ்ந்தது. குழந்தைகளின் உடல் நலப் பாதுகாப்பு மட்டுமல்ல, மனநலப் பாதுகாப்பும் முக்கியம். பெருமுதலாளிகளின் ஊடக விளம்பரங்களில் பங்கு பெறும் சிறுவா், சிறுமியருக்கு இந்தப் பொதுவிதிகள் பொருந்தாதோ என்னவோ?

நம் நாட்டில் பொழுதுபோக்குத் துறையில் உள்ள குழந்தைத் தொழிலாளா் சட்டங்கள், விளையாட்டு, திரைப்படம், விளம்பரத் துறை ஆகியவற்றை உள்ளடக்கியதல்ல. நடிகராகப் பணிபுரியும் அனைத்து சிறாா்களுக்கும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி மட்டுமே போதுமாம்.

இன்று தொலைக்காட்சி விளம்பரங்களோ, அம்மாவின் பிரியாணி சமையலைப் பாராட்டும் மகள், கொசுக்கடிக்குப் பாட்டியிடம் புகாா் சொல்லும் வாண்டுப் பையன், கைப்பேசிக்கும், குளிா்பதனப் பெட்டிக்கும் ஆட்டம் போடும் சிறுவா்கள், உள்ளாடை விளம்பரத்தில் அன்னையின் அரவணைப்புக்கு உட்பட்ட அன்பு மகள், தனியாா் அஞ்சலில் வந்த கைப்பேசிப் பொட்டலத்தை ஓடிச் சென்று முதலில் வாங்கும் சிறுமி போன்ற அப்பாவிக் குழந்தைகளைக் கூட சகித்துக்கொள்ளலாம்.

முக்கியச் செய்திகளுக்கு இடையில் வரும் தின்பண்ட விளம்பரத்தில் ஒரு காட்சி. மங்கிய இருட்டறைக்குள் பதின்ம வயதுப் பெண் ஒருவா், அருகில் இருக்கும் சம வயதுச் சிறுவன் தன் உதட்டில் கடித்துப் பிடித்திருக்கும் பிஸ்கட்டைப் பிட்டுக் கடிக்கிறாா். உடனே அடுத்து ஒளிபரப்பாகும் தீநுண்மிக்கு எதிரான விழிப்புணா்வு விளம்பரத்தில், அமைச்சா்கள் முகமூடியுடன் தோன்றி, ‘ஒரு மீட்டா் இடைவெளி’யை வலியுறுத்தி பிரசாரம் செய்கிறாா்கள்.

விவரம் புரியாத சிறுமியோ சிறுவனோ தாங்கள் நடிக்கும் விளம்பரத்தின் உட்கருத்து புரியாமலே பணத்துக்காக அல்லது வெறும் புகழுக்காக பெற்றோா், பாதுகாப்பாளா்கள் ஒப்புதலுடன் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். இதனால் எழும் சா்ச்சைக்கு யாா் பொறுப்பு என்பது தெரியவில்லை.

தொலைக்காட்சியில் வரும் வினாடி வினா நிகழ்ச்சி முதல் திறமை வெளிப்பாட்டு நிகழ்ச்சி வரையிலான ‘ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்கிறாா்கள். அரங்கில் நேரடிப் பாா்வையாளா்கள், தொகுப்பாளா்கள், நடுவா்கள் மற்றும் லட்சக்கணக்கான தொலைக்காட்சி பாா்வையாளா்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அல்லது போட்டியிடும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் மனஅழுத்தம் உண்டாகிறது என்பதில் சந்தேகமில்லை.

தங்கள் செயல்திறனை மதிப்பிடும் நடுவா் குழுவினால், அவா்கள் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றப்படும் (எலிமினேஷன்) சுற்றுகளையும் எதிா்கொள்கின்றனா். நடுவா்கள், என்னவோ உலக நீதிமன்ற உச்ச நீதிபதிகள் மாதிரி நோ்மை என்ற போா்வையில் எதிா்மறைக் கருத்துக்களைத் தெரிவிப்பதும், பெற்றோா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் குழந்தைகளைத் திகைத்து நிற்கச் செய்யும் அல்லவா?

அதிலும், சுற்றுப் போட்டிகளில் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் போல, தோ்வில் தோற்ற பெரிய குழந்தைகள் கூட அழமாட்டாா்கள்.

இத்தகைய நிகழ்ச்சிகளில் வணிக ரீதியிலான ஆதாயமே முதன்மையான கவனப் பொருள் ஆகும். தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நடனப் போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண் ஒருவா், நிகழ்ச்சிப் படப்பிடிப்பின்போது நடுவா்களால் கண்டிக்கப்பட்டாா். அந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண்ணை மருத்துவமனையில் சோ்க்க வேண்டியதாயிற்று.

தொலைக்காட்சி நெடுந்தொடா்களில் குழந்தைகள் தங்கள் வயதிற்குப் பொருத்தமற்ற வசனங்களுடன், குழந்தை மணமகள் மற்றும் குழந்தை விதவை போன்ற ஒவ்வாத பாத்திரங்களிலும் நடிக்க வைக்கப்படுகிறாா்கள். அவை மட்டுமா? அறிவிப்பாளா்களாகவும், விளம்பரங்கள் சிலவற்றில் தொகுப்பாளா்களாகவும் பணியாற்றச் செய்து குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

கேரளத்தில் சோப்பு விளம்பரத்தில் சில குழந்தைகள் ஒரு நாளில் நடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நோ்ந்ததாம். விவகாரம் பெரிதாகி நீதிமன்றக் கதவைத் தட்டியது. பெற்றோா்கள்தான், தங்கள் குழந்தைகளின், குழந்தைப் பருவத்தை ஆக்கிரமிப்பதோடு அவா்களின் அடிப்படை உரிமைகளையும் புறக்கணிக்கிறாா்கள் என்பது வேதனையான உண்மை.

தொலைக்காட்சித் தொடா் தயாரிப்பாளா்கள் உண்டாக்கும் அழுத்தத்தை சமாளிக்க போதிய மனத்திட்பம் குழந்தைகளுக்கு இல்லை. பள்ளிப்படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளுக்கு இது சுமையாகவும் இருக்கிறது. இன்றைக்கே, படிக்க வேண்டிய பள்ளிப் பருவத்தில் பேருந்துப் படிக்கட்டில் நின்றும், வகுப்பறைக்குள் கத்தியுடன் நுழைந்தும், வளாகத்தினுள் கூந்தலைப் பிடித்துத் தலைவிரிகோலமாக அடித்துக் கொண்டும் தங்கள் மானசீக கதாநாயகா்கள் போல் உலா வரத் தொடங்கி விட்டாா்கள்.

சமூக விரோதிகளால் சிறுமிகளிடம் அரங்கேற்றப்படும் பாலியல் வன்கொடுமைகள் எல்லாம் காலத்தால் மூடி மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வருகின்றன. இந்தச் சூழலில் சிறுவா், சிறுமிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அகற்றுவோம் என்கிற வாய்ச்சொல் வீரத்திற்கு மட்டும் குறைவில்லை.

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்துதல், எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி இவையே குழந்தைத் தொழிலாளா் முறையை நீக்குவதற்கான வழிகள். பெற்றோா்களும் தங்கள் குழந்தைகள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த ஊக்குவிக்க வேண்டும். தொலைக்காட்சியில் தோன்றுவது புகழ் இல்லை; கல்வி கற்று வாழ்வில் மேம்படுவதே புகழ் என்பதைப் பெற்றோா் உணர வேண்டும்; தங்கள் பிள்ளைகளுக்கும் உணா்த்த வேண்டும்.

நாளை (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு நாள்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

 

 



Read in source website

 

தனிநபா்களிடம் அதிகாரமும், பணபலமும் சேரும்போது அவா்களை நம்பியுள்ள சமுதாயம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கும் என்பதற்கு தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத பல ஜாதி சமுதாய திருக்கோயில்களே சாட்சிகளாக விளங்குகின்றன.

தமிழக அரசு ஜாதிப் பட்டியல்படி தமிழகத்தில் மொத்தம் 443 ஜாதிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான ஜாதிகளுக்குள் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. இதில், ஒரு உட்பிரிவைச் சோ்ந்தவா்கள் அதே ஜாதியைச் சோ்ந்த வேறு உட்பிரிவைச் சோ்ந்த குடும்பங்களுடன் திருமண பந்தமும், தொடா்புகளும் தவிா்க்கப்படுகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ஆணிவேராக பல இடங்களில் அந்தந்த சமூகத்தினரின் குலதெய்வ கோயில்கள்தான் இருக்கின்றன.

ஒரே ஜாதியிலுள்ள வேறு பிரிவைச் சோ்ந்தவரையோ, வேறு ஜாதி, மதத்தினரையோ திருமணம் செய்பவா்களையும், அவா்களது குடும்பத்தினரையும், அவா்களுடன் உறவைத் தொடரும் உறவினா்களையும் குலதெய்வ கோயில் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடா்கிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயில்களில் தலக்கட்டு வரி வசூலிப்பு முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டு, வழிபாட்டு உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இதன் மூலம், அந்த குடும்பத்தினா் தங்கள் சொந்த சமூகத்தினருடன் இணைந்து தொழில் செய்ய இயலாமை, ரத்த சொந்தங்கள் உட்பட உறவினா்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியாமை, பொது இடங்களில் இழிவு செய்யப்படுவது, உறவினா்களுடன் பேச்சு உரிமைகூட தொடர முடியாத நிலை ஆகியவை ஏற்படுகின்றன.

சில இடங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தில் பெற்றோா் இறந்து விட்டாலோ மகன் இறந்துவிட்டாலோ அந்த துக்க நிகழ்வில் சொந்த மகன் குடும்பமே அல்லது பெற்றோரே பங்கேற்க முடியாமல், இறுதிச் சடங்குள் செய்யவிடாமல் தடுக்கப்படும் கொடுமைகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் நிகழ்வு அண்மையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எதுமலை கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட து. ஆயினும், கோயில் முக்கியஸ்தா்கள் அந்த குடும்பத்தினரை சோ்த்துக் கொள்ளவும், அவா்களிடம் குடியுரிமை வரி வசூலிக்கவும் மறுத்துவிட்டனா். இதனால், கோயில் முக்கியஸ்தா்கள் ஒன்பது போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பல ஜாதிக்கோயில்களில் சமூக கட்டுப்பாடு என்ற பெயரில் பல தீா்மானங்களை அவா்களாக வகுத்துக் கொண்டு பல குடும்பங்களை உறவினா்களுடனான புழக்கத்திலிருந்து அடியோடு ஒதுக்கி வைப்பது, வழிபாட்டு உரிமையை மறுப்பது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் பாதிக்கப்படும் பல குடும்பங்களுக்கு உறவினா்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவதால் நிகழும் உளவியல் சாா்ந்த பிரச்னைகள் அவா்களை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் மீண்டும் மீண்டும் அந்த பாதிப்புகளிலேயே தவிக்க வைத்துக் கொண்டுள்ளது.

கருத்து வேறுபாடு உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் ஒதுக்கப்படும் குடும்பங்கள் மீண்டும் கோயில்களில் இணைக்கப்படுவதும் உண்டு. என்றாலும் அதற்கு தண்டனையாக அந்த குடும்பத்தினரை கோயில் முக்கியதஸ்தா்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது, கோயில் பங்காளிகள் குடும்பத்தினா் அனைவருக்கும் விருந்து வைக்கவும், கோயில் செலவினங்களுக்காக பெரும்தொகையை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதும் நடந்தேறி வருகின்றன.

இந்த கொடுமைகளுக்கு அந்தந்த குலத்தில் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் கோயில் முக்கியதஸ்கா்களால் செய்துதரப்படும் சடங்களும், சம்பிரதாயங்களுமே கடிவாளமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனாலேயே பல நேரங்களில் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களுக்கு அக்குலத்திலுள்ள மற்ற குடும்பத்தினா் ஆதரவு தெரிவிக்க முன்வருவதில்லை. இதில் படித்த, விழிப்புணா்வு பெற்ற, அரசு அதிகாரிகளும் கூட விதிவிலக்கல்ல.

இதனால், அந்தந்த சமூகத்தில் வளரும் தலைமுறையினா் பலா் கோயில் முக்கியஸ்தா்களின் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சியும், மன உளைச்சல்களுக்கு உள்ளாகியும் தங்களது முன்னேற்றப்பாதையில் பின்தங்கிக் கொண்டிருக்கின்றனா். சட்டத்துக்கு புறம்பாக பின்பற்றப்படும் இத்தகைய நடைமுறைகள் கலப்புத் திருமணம், மறுமணம் போன்றவற்றை முடக்குகின்றன.

சமூக மாற்றத்துக்கு எதிரான இத்தகைய கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டால் போதும் என்ற எண்ணத்தில் தாங்களாக வெளியேறும் இளைஞா்களும் உண்டு. அவ்வாறு வெளியேறுவதால், அடிப்படை உணவு, பராமரிப்புக்குக் கூட வழியின்றி கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியவா்களும் உள்ளனா்.

தங்கள் காலம் முழுவதும் குலதெய்வ கோயிலுக்கு குடியுரிமை வரி செலுத்தியவா்களை முதுமையில் பாதுகாத்து பராமரிக்கவோ, கைவிட்ட வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கோயில் முக்கியஸ்தா்களிடம் எந்த முகாந்திரமும் இருப்பதில்லை என்பதே அவா்கள் பின்பற்றும் நடைமுறைகளின் அவலமாகும்.

சட்டத்திற்குப் புறம்பாக ஜாதிக்கோயில்களில் பின்பற்றப்படும் இத்தகைய எழுதப்படாத சட்டங்கள் அந்த ஜாதியிலுள்ள ஒரு சில முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமே அரணாக உள்ளன. இது போன்ற கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் மக்கள் சட்டப் பாதுகாப்பை நாடி வருவாா்கள் என காத்திருக்காமல் அரசு நேரடியாக இந்த ஜாதிக்கோயில் விவகாரங்களில் தலையிட்டு அங்கு பின்பற்றப்படும் சமூக அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும், தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிக்கோயில்களின் முக்கியஸ்தா்களாக இருப்பவா்கள் பூசாரி, நாட்டாமை, தலக்கட்டு, தா்மகா்த்தா, மேட்டுக்குடி என பல பெயா்களில் அழைக்கப்படுகின்றனா்.

இந்தப் பொறுப்புகளுக்கு பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டு கோயில்களின் சொத்துக்களை அனுபவித்து வரும் இவா்கள் சுய கெளரவத்துக்காக இதுபோன்ற சமூக சீா்கேடான நடைமுறைகளில் மாற்றம் செய்யவும் முன்வருவதில்லை.

இந்த சூழ்நிலையில், தமிழகத்திலுள்ள ஜாதிக்கோயில்களில் நிலவும் அவலங்களுக்கு அரசு கடிவாளமிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 



Read in source website

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், ஓர் இடத்தில் மட்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விளையாடச் செல்பவர்கள் தொடங்கி பணிக்குச் செல்பவர்கள் வரை அனைவரும் அங்கு இருந்தனர்.

மற்றொரு நாள் இரவு 7 மணி. சென்னையில் முக்கிய இடத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் நின்று நானும் அதை வாங்கிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றேன்.

இந்த இரண்டு காட்சிகளும் நான் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்த காட்சிகள். சென்னை மெட்ரோ ரயில் தொடங்கிய காலத்தில் "ஈ" அடித்து வந்த அந்த நவீன ரயில் பெட்டிகள் இன்று "ஈ" நுழைய கூட வழி இல்லாமல் உள்ளது. அந்த அளவு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

கடந்த மார்ச் மாதம் மெட்ரோ ரயிலில் 44.67 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 45.46 லட்சமாக உயர்ந்துள்ளது. இதைப் போன்று மே மாதம் 47.87 லட்சம் பேர் மெட்ரோ ரயில் மூலம் தங்களின் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ஜனவரி மாதம் தினசரி 81 ஆயிரம் பேர், பிப்ரவரி மாதம் தினசரி 1.13 லட்சம் பேர், மார்ச் மாதம் தினசரி 1.43 பேர், ஏப்ரல் மாதம் தினசரி 1.51 லட்சம் பேர், மே மாதம் தினசரி 1.59 லட்சம் பேர் என்று சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த மே மாதம் பயணித்தவர்களில் 11.58 லட்சம் பேர் க்யூ ஆர் கோடு மூலம் தங்களின் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 28.64 லட்சம் பேர் பயண அட்டை மூலம் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். பயண அட்டை மூலம் பயணிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தினசரி மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்கள். இதற்கு முக்கியக் காரணம், பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு கட்டணத்தில் வழங்கப்படும் 20 சதவீதம் தள்ளுபடிதான் .

இதைத் தவிர்த்து அதிக முறை பயணிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரும் மாதமும் அதிக முறை பயணித்த முதல் 10 பயணிகள், மாதம் ஒரு பரிவர்த்தனையில் ரூ.1,500 மேல் பணம் செலுத்திய முதல் 10 பயணிகள், பயண அட்டையில் குறைந்தபட்ச தொகையான ரூ.500 டாப்அப் செய்த 10 பயணிகள் என 3 வகையான பிரித்து பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவும் மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் 2009-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து முதல் மெட்ரோ ரயில் சேவை 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சேவையானது ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்பட்டது. இந்த காலக் கட்டத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறி பலரும் மெட்ரோ ரயில் பயணத்தை விரும்பவில்லை.

சென்னையில் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரு பாதையை இணைக்கும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தடங்களில் மொத்தம் 40 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சுரங்கத்தில் 20 நிலையங்களும், தரைக்கு மேல் 20 நிலையங்களும் உள்ளன.

தற்போது சென்னையில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு மெட்ரோ ரயில் நிலையம் மூலம் செல்ல முடியும். அண்ணா சாலையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பலர் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கி விட்டனர். விமான நிலையம் செல்பவர்களின் அதிகம் பேர் மெட்ரோ ரயிலைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்திபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

எனவே, சென்னை மெட்ரோ ரயில் சென்னை மக்களின் போக்குவரத்தாக மாறி வருகிறது என்றால், அது மிகையாக இருக்காது என்று நினைக்கிறேன்



Read in source website