DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 09-05-2022

தமிழர்கள் தடம்பதித்த, கேரளத்தின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அளித்த அறிக்கையில்,

பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட சங்ககாலத் துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ரோமானிய நாணயங்கள், மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள், அரேபியத் தீபகற்பத்தைச் சார்ந்த அயலகப் பொருட்களை முன்னிறுத்தி, இந்தத் துறைமுகங்கள் வழியே சங்க காலத் தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் நம்மால் நிறுவ முடிந்தது.

கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானங்கள், தொல்பொருட்களின் செய்நேர்த்தி, தொழில்நுட்பத் திறன், பொறியியல் நுணுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததில் சங்ககாலத் தமிழகத்தில் நன்கு முதிர்ச்சியடைந்த நகரப் பண்பாடு செழித்து வளர்ந்திருந்தது என்பதை உலகுக்கு நம்மால் அறிவிக்க முடிந்தது.

அதுமட்டுமல்ல; கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்க் குடிமக்கள் பரவலான எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கினர் என்ற உண்மையை அறிவுலகம் ஏற்றுக் கொண்டது நமக்கெல்லாம் பெருமையளிக்கக்கூடிய செய்தியாகும். 

அதைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு சிவகளை பகுதியில் அகழாய்வு செய்தபோது கிடைத்த நெல்மணிகளை பகுப்பாய்வு செய்து, பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை, அகழாய்வுகளை மேற்கொள்வதிலும், தொல்பொருட்களை ஆய்வு செய்வதிலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. காந்த அளவியல் பகுப்பாய்வு,  ஆளில்லா வான்வழி ஊர்தி ஆய்வு, தரை ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல், அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்திட (1) தொல் தாவரவியல், (2) தொல் விலங்கியல், (3) தொல் மரபணு ஆய்வு, (4) சுற்றுச்சூழல் தொல்லியல், (5) மண் பகுப்பாய்வு, (6) உலோகவியல், (7) கடல்சார் ஆய்வு போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றிட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு அறிவியல்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் சிலவற்றை இந்த மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

· கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 

· சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் திரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதாகவும், தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, மிக முக்கியமான ஒரு ஆய்வு முடிவை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

கடந்த ஆண்டு, தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பகுப்பாய்வின் ஏஎம்எஸ் காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை இன்று கிடைத்திருக்கிறது.

மேலும், இந்தியாவில் இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட 28 இடங்களில் இதுவரை ஏஎம்எஸ் காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான, 4200 ஆண்டுகளுக்கு என்பதே, காலத்தால் முந்தியது என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கத்தக்க செய்தியாகும். 

அதேபோன்று, கருப்பு-சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது. 

இந்த இரும்புக்காலம் குறித்த முக்கியமான கண்டுபிடிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மஸ்ரீ திலீப் சக்ரபர்த்தி, புனே டெக்கான் கல்லூரியின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ பேராசிரியர் பத்தையா, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராகேஷ் திவாரி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விபா திரிபாதி, கர்நாடக பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவி செட்டார் ஆகிய தலைசிறந்த வல்லுநர்கள் பாராட்டியுள்ளார்கள்.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சிகள் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. தொடர்ந்து தமிழர்கள் தடம்பதித்த இந்தியாவின் பிறபகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்  என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நிறுவுவதே நமது அரசின் தலையாய கடமை என்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முத்தாய்ப்பாக தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் இன்று நிலை நிறுத்தியுள்ளது நமக்கெல்லாம் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
 



Read in source website

கொப்பரை தேங்காயை தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வழங்கி, குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூா், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, திருவாரூா், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 21 மாவட்டங்களிலுள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மே 6-ஆம் தேதி வரை, 2,221 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில், கொப்பரைத் தேங்காய் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையினைவிட குறைந்துள்ளது. இத்தருணத்தில் மாநில அரசு எடுத்துவரும் முயற்சியை நன்கு பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி, அரவை கொப்பரைக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையான கிலோவுக்கு ரூ.105.90 பெறலாம்.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, கொப்பரையை விற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

அரசு நிா்ணயித்துள்ள தரத்தில் கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியான கொள்முதல் செய்யப்படும் என்பதால், நன்கு உலர வைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வர வேண்டும்.

கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றாா் அமைச்சா்.



Read in source website

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகரவுள்ளது. இதன்காரணமாக, மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை உருவானது. இது வலுவடைந்து, சனிக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாகவும், நண்பகலில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும், நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரப் புயலாக வலுபெறக்கூடும். மேலும் இது , மே 10-ஆம் தேதி மாலை வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன்பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிஸா கடற்கரை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இந்த புயல் காரணமாக, மே 12-ஆம் தேதி தேதி வரை மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .

மத்திய வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களுக்கு மணிக்கு 105 கி.மீ. முதல் 115 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 125 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்த காற்று

வீசக்கூடும். இதுபோல, வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும்.

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 11, 12 ஆகிய தேதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிஸா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடல் பகுதி பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

 



Read in source website

நாட்டில் 1.2 கோடி போ் பாா்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 55 சதவீதம் பேருக்கு தீவிர கண்புரை பிரச்னைகள் இருப்பதாகவும் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் தெரிவித்தாா்.

‘ரெட்டிகான்’ எனப்படும் விழித்திரை சிகிச்சைகள் தொடா்பான சா்வதேச மருத்துவக் கருத்தரங்கை 12 ஆண்டுகளாக அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான மருத்துக் கருத்தரங்க நிகழ்வை சென்னையில் சமூக நலத் துறை அமைச்சா் கீதாஜீவன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜொ்மனி, இராக் உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,150 மருத்துவ நிபுணா்களும், துறைசாா் வல்லுநா்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனா். விழித்திரை சிகிச்சைகளில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள், புதிய முறைகள், மருந்துகளின் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.

முன்னதாக கருத்தரங்க தொடக்க விழா மற்றும் செய்தியாளா் சந்திப்பின்போது டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது: கேமராவில் உள்ள படச்சுருள் போல கண்களுக்கு விழித்திரை அமைந்துள்ளது. நாள்பட்ட சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், வயோதிகம் காரணமாக விழித்திரையில் ரத்தக் கசிவு, வீக்கம், துளை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதனை முறையாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும்.

இதற்கு முன்பு வரை அத்தகைய பாதிப்புகளைக் கண்டறிய நரம்பு வழியே ‘டை’ செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும். தற்போது ‘ஓசிடி - ஆஞ்சியோ’ முறை மூலம் நவீன ஸ்கேன் வசதிகள் மூலமாகவே விழித்திரை பாதிப்புகளைக் கண்டறியலாம். அதேபோன்று கண் சிகிச்சைகளுக்கு பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரஸ்பரம் பரிமாறக் கொள்ளவே இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 1.2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு பாா்வையிழப்பு உள்ளது. அதில் 55 சதவீதம் போ் கண்புரை பிரச்னையுடையவா்கள். உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சையளிக்காவிடில் நிரந்தரப் பாா்வையிழப்பு ஏற்படலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் அகா்வால்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அஸ்வின் அகா்வால், முதுநிலை கண் மருத்துவ நிபுணா் டாக்டா் சௌந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளிகளில் கண் பரிசோதனை

அரசுப் பள்ளிகள் அனைத்திலும் தொடா் கண் பரிசோதனை முகாம்கள் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

விதவைகள், கணவா்களால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற மகளிா்களுக்கு இலவசமாக கண் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் வழங்க தயாராக இருப்பதாக அகா்வால்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அஸ்வின் அகா்வால் தெரிவித்தாா். அது குறித்து அரசு சாா்பில் பரிசீலனை செய்யப்படும். அதேபோன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதைப் போன்று, கண் பரிசோதனைகளையும் அவ்வப்போது நடத்துவது குறித்தும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.



Read in source website

 

புது தில்லி: மருத்துவ வசதியில் நாடு ‘டோக்கன்‘ அணுகு முறையிலிருந்து ‘டோட்டல்‘ (மொத்த) அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசின் குறிக்கோளாக இருப்பது, சுகாதாரத்துறையில் முன் தடுப்பு மருத்துவம், நவீன மருத்துவ வசதி ஆகியவைகளுக்கிடையே ஒருங்கிணைந்து பணியாற்றுவதாகும் எனவும் மாண்டவியா குறிப்பிட்டாா்.

தில்லி கனாட் பிளேஸில் மத்திய அரசுக்கு சொந்தமான லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புற நோயாளிகள் மற்றும் உள்-நோயாளிகளுக்கான கூடுதல் வசதிகள் கொண்ட கட்டடங்களை மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சா் டாக்டா் பாா்தி பிரவீண் பவாா் முன்னிலையில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தாா்.

இந்த புதிய கட்டடங்கள் மூலம் மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் 877 லிருந்து 1000 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பகுதியில் கூடுதலான அதிநவீன சிடி ஸ்கேனா் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று புதிய மல்டி-ஸ்பெஷாலிட்டி(பல்நோக்கு வசதி) புறநோயாளிகளுக்கான பிரிவில் அனைத்து வகையான மருத்துவம், அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணா்கள் உள்ளிட்ட முழுமையான சுகாதாரப் பாதுகாப்புகளுடன் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது:

நாடு ‘டோக்கனில்‘ இருந்து விலகி ‘ ‘ டோட்டல்‘‘ (மொத்த)அணுகுமுறையை நோக்கி நகா்ந்துள்ளது. ஏழைகளுக்கான மருத்துவ சிகிச்சை செலவைகுறைக்கப்பட்டு, மருத்துவா்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாம் முழுமையாகச் சிந்தித்து நீண்ட காலத்திற்கான பாதையை மருத்துவத்தில் உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் போது,​நாம் சுதந்திரத்தின் 100 -வது ஆண்டு நிறைவடையும் போது இந்தியா எத்தகைய சுகாதார உள்கட்டமைப்பு கொண்டு இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பாா்வையுடன் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது அதில் மாநிலங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 3-நாள்களாக குஜராத் கேவாடியாவில் நடைபெற்ற சிந்தனைக் கூட்டத்தில், அனைத்து மாநில சுகாதார அமைச்சா்களும் தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொண்டனா். அதை எவ்வாறு உலகளாவியதாக மாற்றுவது என்பது பற்றியும் பயனுள்ள விவாதம் நடந்தது. இதே போன்று மத்திய அரசின் எந்தவொரு செயல் திட்டத்திலும் பொது மக்கள் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.

ஆரோக்கியம் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் நோயாளிகளுக்கு கிடைக்கத்தக்கதாக மாற்றுவது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டாா்.

மத்திய இணை அமைச்சா் டாக்டா் பாரதி பிரவின் பவாா், நாட்டின் தலைநகரில் உள்ள பழமையான இந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சிறந்த சுகாதார வசதி என்பது நோய்களுக்கான சிகிச்சைக்கு மட்டுமல்ல அவை சமூக நீதியை ஊக்குவித்து மேம்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல், லேடி ஹாா்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் டாக்டா் ராம் சந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.



Read in source website

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு ‘அசானி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயா் இலங்கையால் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சிங்கள மொழியில் அசானி என்பதற்கு பெருஞ்சினம் என்று பொருள்.

ஒவ்வொரு முறையும் புதிதாக புயல் உருவாகும்போது எவ்வாறு அதற்குப் பெயா் சூட்டப்படுகிறது? ஏன் அதற்குப் பெயரிடப்படுகிறது? என்ற கேள்வி பலரிடம் எழுவதுண்டு.

ஏன் பெயா் சூட்டப்படுகிறது?:

அதற்கு பதிலளிக்கும் விதமாக உலக வானிலை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடும். அந்தப் புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தைத் தவிா்க்கவும், பேரிடா் அபாய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயா் சூட்டப்படுகிறது.

புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையாக உள்ள பெயா்கள் சூட்டப்படுகின்றன. இதுபோல் பெயா் சூட்டுவது நூற்றுக்கணக்கான நிலையங்கள், கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும், திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்ப உதவுகிறது.

பெண் பெயா் வைக்கும் வழக்கம்:

தொடக்கத்தில் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டன. 1900-ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து புயல்களுக்கு பெண் பெயா் வைக்கும் வழக்கம் தொடங்கியது. பின்னா் பெயா் வைப்பதில் மேலும் ஒழுங்கான, ஆற்றல் மிக்க நடைமுறையைக் கொண்டிருப்பதற்குப் பெயா் பட்டியல் தயாரிக்க வானிலை ஆய்வாளா்கள் தீா்மானித்தனா்.

பெயா் சூட்டலில் ருசிகரம்:

வானிலை விஞ்ஞானிகள் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயா் சூட்டி வந்த காலத்தில், தங்களுக்குப் பிடிக்காத பெண்கள், அரசியல்வாதிகள் பெயா்களைச் சூட்டி வந்தாா்கள்!

புயல்களுக்குப் பெயா் சூட்டும் வழக்கத்தைத் தொடங்கியவா் பிரிட்டனைச் சோ்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் (1852-1922) என்பவா். இவா் முதலில் பிரிட்டனிலும் பின்னா் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்துவந்தாா்.

முதலில் கிரேக்க எழுத்துகளைக் கொண்ட பெயா்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயா்களையும் புயல்களுக்குச் சூட்ட அவா் முடிவு செய்தாா்.

பின்னா் புயல்களின் பெயா்கள் வரிசையில் அவருக்குப் பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதமா்களின் பெயா்களும் இடம் பிடித்தன!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்:

ஒருமுறை சூட்டப்படும் பெயா் மீண்டும் பயன்படுத்தப்படாது. புயல்களுக்கான பெயா்கள் அதிகபட்சம் 8 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம். அந்தப் பெயா் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தைச் சோ்ந்தவா்களின் உணா்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது.

கடந்த 2020-ஆம் ஆண்டு புயல்களுக்குச் சூட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயா்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் தலா 13 பெயா்களை அளித்தன. அவற்றில் இந்தியா சாா்பில் அளிக்கப்பட்ட பெயா்களில் கதி, மேக், ஆகாஷ் ஆகிய பெயா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பங்களிப்பு:

உலக அளவில் 6 சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்று. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகத்தை எட்டும்போது, அதற்குப் பெயா் சூட்டும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள 13 நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.

அகவரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயா்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவைப் பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

தமிழ்ப் பெயா்...: தற்போது உருவாகியுள்ள அசானி புயலைத் தொடா்ந்து அடுத்து உருவாகும் புதிய புயலுக்கு சித்ரங் என பெயரிடப்படவுள்ளது. அதனைத் தொடா்ந்து இந்தியா அளித்துள்ள குா்மி, பிரவாஹோ, ஜாா், முரசு போன்ற பெயா்களும் எதிா்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.



Read in source website

கேரளத்தில் 5 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சிறிய தடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தடிப்புகள் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இந்தக் காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இதுவரை தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 82 போ் அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காய்ச்சல் தனி தீநுண்மியினால் ஏற்படுகிா அல்லது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலின் பக்கவிளைவு காரணமாக ஏற்படுகிா என்பது தொடா்பாக மருத்துவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

அதே வேளையில், தக்காளி காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக, காய்ச்சல் அதிகமாகப் பரவும் கொல்லம், நெடுவத்தூா், அஞ்சால், ஆரியங்காவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை உள்ளூா் நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன.

அறிகுறிகளும் முன்னெச்சரிக்கைகளும்: இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு அதீத காய்ச்சல், உடல் வலி, சோா்வு ஆகியவற்றுடன் உடலில் தடிப்புகளும் தோன்றும்; வாயில் எரிச்சல், கைகள், முழங்கால்களில் நிறமாற்றம் உள்ளிட்டவையும் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் காணப்படுவோா் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டுமெனவும், அதிகமாக நீரைப் பருக வேண்டுமெனவும் சுகாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், தடிப்புகளைத் தொடக் கூடாது எனவும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

தமிழகத்தில் தயாா் நிலை : ஜெ.ராதாகிருஷ்ணன்

சேலம், மே 8: கேரள மாநிலத்தில் பரவிவரும் ‘தக்காளி காய்ச்சல்’ குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கேரளத்தில் பரவி வரும் தக்காளி வைரஸ் என்பது ஏற்கெனவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்றாகும். நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவால் இது பரவுகிறது.

தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தக்காளி வைரஸுக்கும் தக்காளிக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. கேரளத்தில் பரவி வரும் வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை கேட்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த வகை வைரஸ் தொற்றையும் சமாளிக்க தமிழக மருத்துவத் துறை தயாா் நிலையில் உள்ளது என்றாா்.



Read in source website

ஜெட் ஏா்வேஸ் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் வா்த்தகப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த ஜெட் ஏா்வேஸ் நிறுவனம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான ஜலன்-கல்ராக் கன்சோா்டியம் நிறுவனம், விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

விமானங்களை இயக்குவதற்கு அனுமதிச் சான்று பெறுவதற்காக, ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை அந்த நிறுவனம் விமானங்களை இயக்கி சோதனை நடத்தியது. விமானமும் அதில் உள்ள கருவிகளும் சரியாக இயங்குவதை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(டிஜிசிஏ) நிரூபிப்பதற்காக அந்த சோதனை நடத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் அனுப்பியது. அதில், அந்த நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஜெட் ஏா்வேஸ் நிறுவனம், டிஜிசிஏ அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகளுடன் விமானத்தை மீண்டும் இயக்கிக் காண்பிக்க வேண்டும். அதன் பிறகே, விமானங்களை இயக்குவதற்கு ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்துக்கு டிஜிசிஏ சான்றளிக்கும்.



Read in source website

திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து திசு வளா்ப்புத் தாவரங்களை இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளில் நெதா்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், கென்யா, செனகல், எத்தியோப்பியா, நேபாளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் திசு வளா்ப்பு ஆலைகளின் ஏற்றுமதி 1.71 கோடி டாலா்களாக இருந்தது.

இந்நிலையில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ) சாா்பில் இலை, உயிருள்ள தாவரங்கள், மலா்கள், நடவுப் பொருள்கள் போன்ற திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க கருத்தரங்கு நடைபெற்றது. இணையவழியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், இந்தியாவில் இருந்து திசு வளா்ப்புத் தாவரங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் அவற்றுக்கான தேவை, தாவரங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஏபிஇடிஏ அதிகாரிகள் விளக்கினா்.

இந்தியாவில் வளா்க்கப்படும் திசு வளா்ப்புத் தாவரங்களின் வரம்பை அதிகரிக்க வசதியாக, குறிப்பிட்ட தாவரங்கள் மற்றும் பயிா்களுக்கான நுண்ணுயிா்களின் பட்டியலை வழங்குமாறு ஏற்றுமதியாளா்களிடம் ஏபிஇடிஏ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். இதன் மூலம் திசு வளா்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



Read in source website

கௌகாத்தி: கௌகாத்தியின் உயர்நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியாவுக்கு அடுத்து நீதிபதி என்.கே.சிங் குடியரசு தலைவரால் நியமனம்.
 
நீதிபதி சுதன்ஷு பதவிக்காலம் முடிந்த பிறகு என்.கே.சிங் பொறுப்பேற்றுக்கொள்ளவார். 



Read in source website

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் சாம்பியன் ஆனாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருந்த அவா் 7-5, 0-6, 6-2 என்ற செட்களில் 12-ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை தோற்கடித்தாா். இதன் மூலம் 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யுடிஏ போட்டியில் பட்டம் வென்ற முதல் அராபிய வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

இந்த வெற்றியின் மூலம், திங்கள்கிழமை வெளியாகும் திருத்தப்பட்ட உலகத் தரவரிசையில் அவா் மீண்டும் 7-ஆம் இடத்துக்கு முன்னேறுவாா். களிமண் தரையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் ஜாபியுா், அதே போன்ற களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனிலும் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள முக்கிய போட்டியாளராக உருமாறியிருக்கிறாா்.

இரட்டையா் பிரிவு: மகளிா் இரட்டையா் பிரிவில் கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/மெக்ஸிகோவின் கியுலியானா ஆல்மோஸ் கூட்டணி 7-6 (7/1), 5-7, 10-7 என்ற செட்களில் அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக்/நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ் இணையை வீழ்த்தி கோப்பை வென்றது.

காா்ஃபியா - ஸ்வெரேவ் மோதல்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் 6-4, 3-6, 6-2 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை தோற்கடித்தாா். இதையடுத்து பட்டத்துக்கான இறுதிச்சுற்றில் அவா், ஸ்பெயினின் இளம் வீரரான காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவை எதிா்கொள்கிறாா்.



Read in source website

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த்/பிரியேஷா தேஷ்முக் கூட்டணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொ்மனியின் செபாஸ்டியன் ஹொ்மானி/சப்ரினா எக்கொ்ட் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதே பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்த இந்தியாவின் சௌரியா சைனி/நடாஷா ஜோஷி இணை 8-16 என்ற கணக்கில் உக்ரைனின் அலெக்ஸாண்டா் கோஸ்டிக்/வியோலெடா லைகோவா ஜோடியிடம் தோற்றது.

முன்னதாக தனிநபா் பிரிவில் 10 மீட்டா் ஏா் ரைஃபிளில் தனுஷ் ஸ்ரீகாந்த், 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் அபினவ் தேஷ்வால் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது தனுஷ்/பிரியேஷா கூட்டணி வென்றிருப்பது துப்பாக்கி சுடுதலில் 3-ஆவது தங்கமாகும். இது தவிர, ஆடவா் 10 ஏா் ரைஃபிளில் சௌரியா சைனியும், மகளிா் 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் வேதிகா சா்மாவும் பெற்ற வெண்கலத்துடன் சோ்த்து இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.



Read in source website


கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளார்.

மகிந்த ராஜபட்ச, பதவியை ராஜிநாமா செய்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாக மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கோரியிருந்த நிலையில் இந்த முடிவு எடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மகிழ்ந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.

இலங்கை மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலகியுள்ளார்.
 



Read in source website

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ இம்மாத இடையில் அமெரிக்க பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் செயலாளர் அந்தோணி ப்லிங்கென் சமீபத்தில் பிலவாலுடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அமெரிக்க-பாகிஸ்தான் உறவின் 75வது ஆண்டையொட்டி இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தார் பிலவால்.

சமீபகாலத்தில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்குமான இந்த தொலைபேசி உரையாடல் இதுவே முதல்முறை.



Read in source website

நேபாளத்தைச் சோ்ந்த காமி ரீதா (52) எவரெஸ்ட் சிகரத்தில் 26-ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளாா். மலையேற்றத்தில் கைதோ்ந்த ஷோ்பா இனத்தைச் சோ்ந்த அவரும் தனது குழுவினருடன் எவரெஸ்ட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏறிய இந்த சாதனையை படைத்துள்ளாா்.

இந்த ஆண்டுக்கான எவரெஸ்ட் மலையேற்றம் விரைவில் தொடங்குகிறது. அதில் பங்கேற்கவிருப்பவா்கள் வழியில் பிடித்துச் செல்வதற்கான கயிறுகளைக் கட்டுவதற்காக தனது குழுவினருடன் சோ்ந்து காமி ரீதா எவரெஸ்டில் ஏறினாா். அதற்காக, கடந்த 1953-இல் எட்மண்ட் ஹிலாரியும் டென்ஸிங் நாா்கேயும் எவரெஸ்டை முதல்முறையாக அடைவதற்காக கண்டறிந்த பாதையை காமி ரீத் பயன்படுத்தினாா்.



Read in source website

ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஜான் லீ, அந்த நகரின் புதிய தலைமை நிா்வாகியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஹாங்காங்கின் தற்போதைய தலைமை நிா்வாகி கேரி லாமின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தப் பதவிக்கு புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெயரளவுக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில் தற்போதைய தலைமைச் செயலா் ஜான் லீயைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. அதையடுத்து, 99 சதவீத வாக்குகளுடன் ஹாங்காங்கின் தலைமை நிா்வாகியாக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.



Read in source website

சென்னை: கடந்த 2011-ம் ஆண்டு 748-ஆக இருந்த இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது என்று காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், சைபர் (இணையதள) குற்ற காவல் நிலையங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

> டிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் செல்போன்களின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேகமாக அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

> 2011-ம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது.

> பெரும்பாலான இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதால், குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் களவு போன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

> வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் இதர நடைமுறைகள் காரணமாக, புகார்தாரருக்கு பணத்தைத் திரும்ப வழங்குவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

> இப்பிரச்சினையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் கூடுதலாக அதாவது 4 மண்டலங்களுக்கு தலா ஒன்றும், மத்திய குற்றப்பிரிவிற்கு ஒன்றும் என 5 இணையதள குற்ற காவல் நிலையங்கள் மறுபரவலாக்கும்முறை மூலம் ரூ.85.69 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு இதற்கான ஆணை வெளியிட்டுள்ளது.

> புலன் விசாரணையை அறிவியல் முறையில் மேம்படுத்த இணையதள தடயவியல் ஆய்வகம் அமைத்து அதில் உயர்தொழில்நுட்ப தடயவியல் கருவிகள், மென்பொருட்கள், சமூக வலைதள ஊள்ளீட்டுக் கருவிகள் அமைக்க ரூ.6.9 கோடி செலவில் "பாதுகாப்பான நகர" திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

> கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அதிகமான புகார்கள் கடந்த ஆண்டு வந்துள்ளதாகவும், கடந்த 2020-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 23,722 புகார்கள் வந்த நிலையில், கடந்த ஆண்டு 30 சதவீதம் அதிகமான புகார்கள் வந்துள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 2021ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் 1982 புகார்களும், 2020 ஆம் ஆண்டில் 2025 புகார்கள், 2021 ஆம் ஆண்டில் 2421 புகார்களும் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமை தொடர்பாக மட்டும் 875 புகார்கள் பதிவாகி உள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த சட்டத்தின் படி 2019 ஆம் ஆண்டு 2396 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 3090 புகார்களும், 2021 ஆம் ஆண்டு 4469 வழக்குகளும் பதிவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மட்டும் 3425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தமிழர்கள் தடம்பதித்த 4 மாநிலங்களில் அகழாய்வு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொல்லியல் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய முதல்வர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பகுப்பாய்வின் காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை இன்று கிடைத்திருக்கிறது.அதேபோன்று, கருப்பு - சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சிகள் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. தொடர்ந்து தமிழர்கள் தடம்பதித்த இந்தியாவின் பிறபகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.



Read in source website

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்வதற்கு ஏப்.27-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி தடை விதித்திருந்தார்.

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் மனிதனை மனிதன் தூக்கிச் செல்வதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் சந்தித்து பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். அப்போது, கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் தெரிவித்ததாக ஆதீனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த தமிழக முதல்வர் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளார். அவருக்கு நமது நல்லாசிகள்.

இதேபோல, இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க முயற்சித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத் துறை ஆணையர், செயலர் உள்ளிட்ட அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகிறோம்.

ஆன்மிக மறுப்பாளர்கள் அவர்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது போன்று, எங்கள் கொள்கையில் நாங்களும் உறுதியாக இருந்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரில் தான் சுமக்கின்றனர். இறைவன் கொடுத்த தவத்தால் கிடைப்பது இந்த பல்லக்கு. தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் தெரிவித்துள்ளார். பட்டினப் பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை, நாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்’’ என்றார்.

குழந்தையை தாய் சுமப்பதுபோல...

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியது, ‘‘பட்டினப் பிரவேசத்தில் மனிதரை மனிதர்கள் சுமக்கிறார்கள் என சிலர் குறை கூறுகின்றனர். அந்தப் புரிதல் தவறு. நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தவில்லை. குழந்தையை தாய் சுமப்பது போல, அவர்கள் தங்கள் குருவை தோளில் சுமக்கின்றனர். இந்த விஷயத்தில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூடிப் பேசி நல்ல முடிவை எடுத்துள்ளனர். இந்த பட்டினப் பிரவேசம் காலம் காலமாக தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் கூறியது:

மனிதனை பிறப்பு முதல் இறப்புவரை யாரோ சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் மகா சந்நிதானங்களை சாதாரண மனிதரோடு ஒப்பிடுவது தவறானது. பட்டினப் பிரவேசம் என்பது ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு குருமகா சந்நிதானங்கள் செல்லக்கூடிய நிகழ்ச்சி அல்ல. சிஷ்யர்கள் தங்களது குருவை தாங்கிச் செல்லக்கூடிய உற்சவம்.

இதை ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதீன சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காக அதுகுறித்து பேசவேண்டும். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துகள். தருமபுரம் ஆதீனப் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனங்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்றார்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி நேற்று உத்தரவிட்டார்.

ஆன்மிக ஆட்சி

இதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கூறும்போது, ‘‘பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்துள்ளதால், நான் முன்பு சொன்னது போலவே தமிழகத்தில் நடப்பது ஆன்மிக ஆட்சி என்பதை தமிழக முதல்வர் மெய்ப்பித்துள்ளார்’’ என்றார்.



Read in source website

தேசத் தந்தை காந்தியடிகளால் தன்னுடைய ‘அரசியல் குரு’ என்று வர்ணிக்கப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே பிறந்த நாள் இன்று (மே 9).

அவரைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:-



Read in source website

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் உட்பட யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கு பெறுபவர். எம்.பி., எம்எல்ஏ.க்களின் வாக்குகளுக்கு தனித்தனி மதிப்பு உண்டு.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக, அங்கு 83 சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை அமைக்கப்படும், லடாக் பகுதி மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும். சட்டப்பேரவை தொகுதிகள் வரையறுக்கும் பணி முடிந்த பிறகு, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

ஜம்மு காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 90 உறுப்பினர்கள் அடங்கிய அவையை பரிந்துரைத்தது.

மாநில சட்டப்பேரவை உறுப் பினர்கள் இல்லாமல், குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 1974ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை கலைக்கப்பட்டபோதும், குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு பக்ருதீன் அலி அகமது தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் ஜம்மு காஷ்மீர் பிரதிநிதித்துவம் இல்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறாது. ஜம்மு காஷ்மீர் எம்.பி.க்கள் வாக்களித்து குடியரசுத் தலை வரை தேர்வு செய்வர்.

கடந்த 1952ம் ஆண்டில் எம்.பி.யின் வாக்கு மதிப்பு 494 ஆக இருந்தது. அதன்பின் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களில், எம்.பி.யின் வாக்கு மதிப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்தலில், எம்.பி.யின் வாக்குமதிப்பு 708-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாததால், எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700 ஆக குறைய வாய்ப்புள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதற்கு முன்பாக மாநிலங் களவை மற்றும் மாநில சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள காலியிடங்களை இடைத்தேர்தல் கள் மூலம் நிரப்ப தேர்தல் ஆணை யம் முயற்சிக்கிறது.-பிடிஐ



Read in source website

மாட்ரிட்: மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான இளம் வீரர் கார்லோஸ் அல்கரஸ். இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வீரர் ஆவார்.

கடந்த 2002 முதல் தொழில்முறை ரீதியாக டென்னிஸ் விளையாடி வரும் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் தொடர் தான் மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடர். களிமண் ஆடுகளத்தில் நடத்தப்படும் தொடர் இது. ஆடவர் மற்றும் மகளிர் என இருபாலரும் இந்த டென்னிஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இது ATP டூர் மாஸ்டர்ஸ் 1000 ஈவெண்ட்டில் நடத்தப்படும் ஒரு தொடராகும். இந்த தொடர் கடந்த ஏப்ரல் 28 முதல் மே 8 வரையில் நடைபெற்றது. இதில் பட்டம் வென்று அசத்தியுள்ளார் இளம் வீரர் கார்லோஸ் அல்கரஸ்.

யார் இவர்?

டென்னிஸ் விளையாட்டு உலகின் லேட்டஸ்ட் சென்சேஷனாக இணைந்துள்ளார் கார்லோஸ் அல்கரஸ். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கடந்த 2003-இல் பிறந்தவர். நடப்பு மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரில் இவர் விளையாடினார். இந்த தொடரில் டென்னிஸ் உலகில் தங்களது அபாரமான ஆட்டத்தின் மூலம் ஆட்சி செய்து வரும் ரஃபேல் நடாலை காலிறுதியிலும், ஜோக்கோவிச்சை அரையிறுதியிலும் வீழ்த்தி கவனம் ஈர்த்தார் அவர்.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி உள்ளார். இந்த போட்டியில் நேர் செட் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளார் கார்லோஸ் அல்கரஸ்.

சர்வதேச ஒற்றையர் ஆடவர் பிரிவு டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் டாப் 4 இடங்களில் இடம்பெற்றுள்ள மூன்று வீரர்களை வரிசையாக அடுத்தடுத்து மூன்று நாட்களில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் இரண்டு மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை வென்ற வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் அவர். கடந்த 2005-இல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மற்றொரு வீரரான ரஃபேல் நடால் 18 வயதில் இரண்டு மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை வென்றிருந்தார். இன்று வரை அது தான் சாதனையாக உள்ளது.

"இப்போதைக்கு உலகின் சிறந்த வீரர் கார்லோஸ் அல்கரஸ். அவருக்கு எனது பாராட்டுகள். டென்னிஸ் உலகிற்கு புதிய சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளதில் சிறப்பு. அவர் நிறைய கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல உள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீரராக உயர உள்ளார். இந்த தொடரை பல முறை வெல்ல உள்ளார்" என போட்டி முடிந்த பிறகு அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்தார்.



Read in source website

நைஜீரியா நாட்டிற்கு சென்று வந்த லண்டன் வாசி ஒருவருக்கு, குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரங்கு அம்மை என்றால் என்ன?

குரங்கு அம்மை என்பது ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும். அதாவது பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வேரியோலா வைரஸையும், பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் வேசினியா வைரஸையும் உள்ளடக்கில் வைரஸ் வகையாகும். குரங்கு நோய் பெரியம்மை நோயின் தான் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒப்பிடுகையில் தீவிரம் குறைவாக இருக்கும்.

1980களில் தடுப்பூசி மூலம் பெரியம்மை நோய் பரவலை தடுத்தாலும், குரங்கு அம்மை தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவி வருகிறது.

விலங்கிடமிருந்து பரவும் நோய்

குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். இதுவரை அணில், காம்பியன் வேட்டையாடிய எலிகள், டார்மிஸ் மற்றும் சில குரங்கு வகைகளில் குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த நோய் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவது வரையறுக்கப்பட்டதாகும். ஏனெனில், அதன் பரிமாற்றம் ஆறு தலைமுறை இடைவெளி கொண்ட நீண்ட சங்கிலி ஆகும். கடைசியாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர், ஓரிஜினலாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஆறு லிங்க் தள்ளியிருந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) மருத்துவ மற்றும் வளர்ந்து வரும் நோய்த்தொற்றுகளின் இயக்குனர் டாக்டர் கொலின் பிரவுன் கூறுகையில், “குரங்கு அம்மை மக்களிடையே எளிதில் பரவாது என்பதையும், பொது மக்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து மிகக் குறைவு என்பதையும் வலியுறுத்துவது முக்கியம் என்றார்.

அப்படி பரவுகிறது என்றால், உடல் திரவங்கள் வாயிலாகவும், தோலில் ஏற்படும் புண்கள் வாயிலாகவும் அல்லது வாய், தொண்டை, சுவாசத் துளிகளாலும், அசுத்தமான பொருள்கள் போன்ற உள் சளிப் பரப்புகளின் மூலம் பரவலாம் என்று WHO கூறுகிறது.

அறிகுறிகள், சிகிச்சை விவரம்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை பாதிப்பு காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் ஆரம்பிக்கிறது. நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது. இந்த பாதிப்பு, பெரியம்மை நோயில் ஏற்படாது.

குறிப்பாக சிக்கன் பாக்ஸ், தட்டம்மை, பாக்டீரியா தோல் தொற்றுகள், சிரங்கு, சிபிலிஸ், மருந்து சம்பந்தப்பட்ட ஒவ்வாமைகளுடன் குரங்கு அம்மையை குழப்பாமல் இருப்பது முக்கியம் என்று WHO சுட்டிக்காட்டுகிறது.

குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு அதன் அறிகுறிகள் குறைந்தது 7 முதல் 14 நாள்களுக்குள் தெரிந்துவிடும். சில சமயங்களில் 5-21 நாட்கள் வரை இருக்கலாம்.

பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டு 3 நாள்களுக்குள் முகத்தில் ரேஷ் ஏற்பட்டு மற்ற உடல் பகுதிகளுக்கும் பரவ தொடங்கிடும். தோல் வெடிப்பு நிலை 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். இது, புண்களை ஆழமாக்கி சீழ் ஏற்படுத்தி, ஸ்கேப்ஸ் அல்லது கரஸ்ட் உருவாக்கி அதிக வலியை தருகிறது.

குரங்கு அம்மை நோய் காரணமாக இறக்கும் நோயாளிகளின் விகிதம் 0 முதல் 11% வரை வேறுபடுகிறது. சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது.

குரங்கு அம்மைக்கு இதுவரை முறையான சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சைகளை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் விழிப்புணர்வு அவசியம் என கூறப்படுகிறது.

நோய் பாதிப்பு

1958 இல் குரங்கு அம்மை நோய் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த காலனி குரங்குகளிடம் 2 முறை அம்மை நோய் கண்டறியப்பட்டதையடுத்து உறுதி செய்யப்பட்டது.

1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரியம்மை நோயை அழிப்பதற்கான முயற்சியில், முதன்முதலாக மனிதனுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 15 நாடுகளில் இதுவரை மனிதர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காபோன், கேமரூன், நைஜீரியா, கோட் டி ஐவரி, லைபீரியா மற்றும் சியரா லியோன் போன்றவற்றில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென் சூடான், ஆப்பிரிக்காவில் பெனின், அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்பட்டுள்ளது.



Read in source website

தமிழக அரசு, கடந்த மாதம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரியை உயர்த்திய நிலையில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு, கடந்த மாதம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரியை உயர்த்திய நிலையில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. சட்டமன்றத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதாவின் மூலம், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை நிர்வகிக்கும் சட்டங்களில் மேம்படுத்தப்பட்ட சொத்து வரிக்கான புதிய பிரிவுகளை சேர்க்க தமிழக அரசு முயற்சி செய்துள்ளது.

“ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த நகராட்சி கவுன்சில்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். ஆனால், அதிமுகவைச் சேர்ந்த போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்த மசோதாவுக்கு அதிமுகவின் எதிர்ப்பைப் பதிவு செய்து இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்த்தார்.

1919 ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920; மதுரை நகர மாநகராட்சி சட்டம் 1971; கோயம்புத்தூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1981 ஆகியவற்றில் இந்த மசோதா புதிய விதியை சேர்க்க முயற்சி செய்கிறது. “கவுன்சில் தீர்மானத்தின் மூலம், அவ்வப்போது அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விகிதங்களுக்குள் சொத்து வரியை உயர்த்தலாம்.” என்ற விதியை சேர்க்க முயற்சி செய்கிறது.

-“செப்டிக் டேங்க்களை அவ்வப்போது சுத்தம் செய்தல் மற்றும் போக்குவரத்து, சிகிச்சை மற்றும் மலக் கசடு மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான” விரிவான திட்டத்தையும் அரசாங்கம் வகுத்துள்ளது. இந்த மசோதா, சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்ச் சட்டம் 1978 உடன், நான்கு சட்டங்களையும் திருத்த முயற்சி செய்கிறது.

“திறந்த சூழல் மற்றும் நீர்நிலைகளில் மலக் கழிவுகள் மற்றும் கழிவுகளை கண்மூடித்தனமாக அகற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, லாரிகள், டிரெய்லர்கள் அல்லது கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அகற்றுவதற்கும், மலக் கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்கள் அல்லது பிற வாகனங்களின் இயக்கம் மற்றும் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவது கட்டாயமாகும்” என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

சிறு நகரங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ள சுகாதார முறையாக மலம் கசடு மற்றும் கழிவுநீர் தொட்டி மேலாண்மையின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. மலம் கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை தேசியக் கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முழுமையான முழுச் சுத்திகரிப்புச் சுழற்சியை வழங்குவதற்காகத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் அகற்றுவதற்கான உரிமம், உரிமதாரரின் கடமைகள், கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதைத் தடுப்பது, அபராதம் விதித்தல், வாகனங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்யும் அதிகாரம் குறித்த புதிய பிரிவுகளை இந்த சட்ட மசோதா வழங்குகிறது.



Read in source website

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல், ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தைகள் என்று இருந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார சர்வே 5 இல், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரித்தல் விகிதம், ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் கீழே குறைந்துள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல், ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தைகள் என்று இருந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார சர்வே 5 இல், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரித்தல் விகிதம், ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் கீழே குறைந்துள்ளது.

தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களில், முஸ்லிம்களின் கருத்தரித்தல் விகித கடந்த இருபதாண்டுகளாக பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது.

பல ஆண்டுகளாகக் காணப்படும் குறைந்துவரும் போக்கிற்கு ஏற்பா, முஸ்லிம் சமூகத்தின் கருத்தரித்தல் விகிதம் 2015-16 இல் 2.6 ஆக இருந்து 2019-2021 இல் 2.3 ஆகக் குறைந்துள்ளது. அனைத்து மத சமூகங்களும் கருத்தரித்தலில் சரிவைக் காட்டி, நாட்டின் மொத்த கருத்தரித்தல் விகிதத்தில் சரிவுக்கு பங்களிப்பு செய்தாலும், முஸ்லிம் சமூகத்தில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 1 தகவல்படி, (1992-93) இல் 4.4 லிருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 தகவல்படி (2019- 2021- இல்) 2.3 ஆக வீழ்ச்சி கடுமையாக உள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல், நாட்டின் ஒட்டுமொத்த கருத்தரித்தல் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கு பதிலாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தகவல்படி, 2.2 நிலையில் இருந்து கீழே சரிந்துள்ளது.

இருப்பினும், அனைத்து மத சமூகங்களுக்கிடையில், முஸ்லிம் சமூகத்தின் கருத்தரித்தல் விகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்து சமூகம் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் 1.94 ஆக உள்ளது. இது 2015-16 இல் 2.1 ஆக இருந்தது. இந்து சமூகம் 1992-93 இல் கருத்தரித்தல் விகிதம் 3.3 ஆக இருந்தது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல், கிரிஸ்துவ சமூகம் 1.88, சீக்கிய சமூகம் 1.61, ஜெயின் சமூகம் 1.6 மற்றும் பௌத்த மற்றும் நவ-பௌத்த சமூகம் 1.39 என கருத்தரித்தல் விகிதத்தில் நாட்டிலேயே குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது என்று கண்டறிந்துள்ளது.

1992-93 மற்றும் 1998-99 மற்றும் 2005-2006 மற்றும் 2015-16 க்கு இடையில் 0.8 புள்ளிகள் குறைந்த போது – முஸ்லிம்களின் கருத்தரித்தல் விகிதத்தில் இரண்டு முறை வேகமான சரிவு ஏற்பட்டுள்ளது.

“இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், கருத்தரித்தலில் உள்ள இடைவெளி குறைந்து வருகிறது. கல்வியறிவு, வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் போன்ற மத சார்பற்ற காரணிகளின் விளைவாக அதிக கருத்தரித்தல் ஏற்படுகிறது. இரண்டு சமூகங்களுக்கிடையிலான தற்போதைய இடைவெளி முஸ்லிம்களின் இந்த அளவு பாதகமாக இருக்கிறது. கடந்த சில பத்தண்டுகளாக வளர்ந்து வரும் முஸ்லிம் நடுத்தர வர்க்கப் பெண்கள் கல்வி மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டின் மதிப்பை உணர்ந்து வருகிறார்கள்” என்று இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர், மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பூனம் முத்ரேஜா.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 iல் (2015-16) 32 சதவீதமாக இருந்த பள்ளிப்படிப்பு இல்லாத முஸ்லிம் பெண்களின் சதவீதம் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் (2019-21) 21.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாறாக, இந்துக்களைப் பொறுத்தவரை, இது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல் 31.4 சதவீதத்தில் இருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் 28.5 சதவீதமாக சிறிய மாற்றத்தைக் கண்டுள்ளது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 அறிக்கப்படி, பெண்களின் பள்ளிப்படிப்புடன் ஒரு பெண்ணுக்கு குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பள்ளிப்படிப்பு இல்லாத பெண்களுக்கு சராசரியாக 2.8 குழந்தைகள் உள்ளனர். 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பைக் கொண்ட பெண்களுக்கு 1.8 குழந்தைகள் உள்ளனர். மிகக் குறைந்த செல்வச் செழிப்பில் உள்ள பெண்களுக்கு சராசரியாக 1.0 குழந்தைகள் அதிகமாக உள்ளனர். மேலும், பொருளாதார முன்னேற்றம் இயற்கையான முறையில் குறைவான கருத்தரித்தல் விகிதங்களுக்கு வழிவகுக்கிறது என்று இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

“முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு குறித்து அதிக அளவில் விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த தரவு காட்டுகிறது. முஸ்லிம்களிடையே நவீன கருத்தடை பயன்பாடு தேசிய குடும்ப சுகாதர கணக்கெடுப்பு 4 இல் 37.9 சதவீதத்தில் இருந்து தேசிய குடும்ப சுகாதர கணக்கெடுப்பு 5 இல் 47.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களை விட அதிகரிப்பின் அளவு அதிகமாக உள்ளது” என்கிறார் முத்ரேஜா.

முஸ்லிம்கள் கருத்தடைக்கான நவீன இடைவெளி முறைகளை அதிகளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர்— தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 இல், 17 சதவீதத்திலிருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இல் 25.5 வரை அதிகரித்துள்ளது. இவர்கள், சீக்கியர்கள் (27.3 சதவீதம்) மற்றும் ஜெயின்கள் (26.3 சதவீதம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளனர். இடைவெளி என்பது கர்ப்பத்திற்குப் பிறகு ஒரு பெண் எவ்வளவு விரைவில் மீண்டும் பிரசவிப்பதைக் குறிக்கிறது.

“முஸ்லிம் ஆண்களில் அதிக அளவு சதவீதத்தினர் குடும்பக் கட்டுப்பாடு குறித்த சிறந்த அணுகுமுறையைக் காட்டியுள்ளனர். முஸ்லீம் ஆண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருத்தடை என்பது பெண்களின் வேலை என்று நினைக்கிறார்கள். அதைப் பற்றி ஆண்கள் கவலைப்படக்கூடாது. இந்த எண்ணிக்கை இந்துக்களில் 36 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. – தேசிய குடும்ப சுகாதார கணகெடுப்பு 5 இன் படி, கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு முஸ்லீம்களிடையே அதிகமாக உள்ளது. அதே சமயம் சீக்கியர்கள் மற்றும் ஜைனர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களிடையே ஆணுறைகளின் பயன்பாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே, குடும்பக் கட்டுப்பாட்டை சமூகம் ஏற்றுக்கொள்வதை அங்கீகரிப்பதும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு இஸ்லாம் எந்த வகையிலும் தடையாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதும் முக்கியம்.

இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் உள்ள முஸ்லிம் மக்கள் தங்கள் பொது சுகாதார அமைப்புகளில் அதிக எண்ணிக்கையிலான இடைவெளி முறைகள் காரணமாக குறைந்த கருத்தரித்தலைக் கண்டுள்ளனர். இந்தியா இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். கருத்தடைத் தேர்வுகளின் வாய்ப்பை விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் கருத்தடை சாதனங்களையும் சேர்க்க வேண்டும்” என்று முத்ரேஜா கூறினார்.

கிராமப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992-93 இல் ஒரு பெண்ணுக்கு 3.7 குழந்தைகளாக இருந்து 2019-21 இல் 2.1 குழந்தைகளாக குறைந்துள்ளது. 1992-93 இல் 2.7 குழந்தைகளாக இருந்த நகர்ப்புற பெண்களின் எண்ணிக்கை 2019-21 இல் 1.6 குழந்தைகளாக குறைந்துள்ளது. அனைத்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புகளின் பதிப்புகளிலும், வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், கருத்தரித்தல் விகிதம் 20-24 வயதில் உச்சத்தை அடைகிறது. அதன் பிறகு அது சீராக குறைகிறது.



Read in source website

 

இந்தியாவின் பெருநகரங்களில் காற்று மாசு பிரச்னை விஸ்வ
ரூபம் எடுத்து வருகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு முனைப்புக் காட்டுகிறது. 

போக்குவரத்து மூலம் ஏற்படும் கரியமிலவாயு மாசைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலை தூய்மையானதாக்குவதே மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் நோக்கமாகும். கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் கரியமிலவாயு உமிழ்வை வெகுவாகக் குறைக்க இந்தியா உறுதியளித்தது. இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும், அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின் வாகனங்களில் சுற்றுச்சூழலின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மின்கலம் மாற்றும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என 2022-23 ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த நிலையில், இரு சக்கர வாகனப் பிரிவில் மட்டும் இந்த மார்ச் மாதத்தில் விற்பனை 50,000-ஐ எட்டியுள்ளது. 2021 மார்ச்சுடன் ஒப்பிடுகையில், இது நான்கு மடங்கு அதிகமாகும். இருப்பினும், ஆரம்ப அனுபவம் சவாலானதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  

ஓலா மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்ததையடுத்து, ஜிதேந்திரா மின்சார இருசக்கர வாகனங்கள் நிறைந்த லாரி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு 3,125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்றுள்ளது. 

இதுபோன்ற நிகழ்வுகளால் விற்பனை 10%-க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்களை வாங்கும் நுகர்வோரும் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு உருவாகாமல் இருப்பது முக்கியமான காரணம்.

மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜிங்) மற்றும் பழுது பார்க்கும் நிலையங்களின் பற்றாக்குறை காணப்படுகிறது. அந்த வாகனங்களின் மின்கலம் 150 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் 100 கி.மீ. மட்டுமே செயல்படுகின்றன. இதனால், அடிக்கடி மின்னூட்டம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இந்த கார்களை விற்கும் நிறுவனங்கள் வீடுகளில் மின்னூட்டம் செய்யும் அமைப்புகளை எளிதாக்குவதில்லை. அதே சமயம் பொதுவான பகுதிகளில் இந்த வசதிகளை எவ்வாறு வழங்குவது என்பது பற்றி வீட்டுவசதி சங்கங்களும் மெளனமாகத்தான் உள்ளன. நம் நாட்டில் லட்சக்கணக்கான கார் உரிமையாளர்களுக்கு, கார்களை நிறுத்துவதற்கான சரியான பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், மின்னூட்டப் பிரச்னை மிகப் பெரிய தடையாக இருக்கிறது.

மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களும், அரசும் சில தீவிர தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை இடையூறுகளைக் களைய முன்வர வேண்டும். வணிக நோக்கத்தில் அவசரகதியில், பல மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களைப் புறக்கணித்து விடுகின்றன. மின்சார வாகனம் என்பதால் பிரச்னைகள் அதிகமாகவே காணப்படுகிறது.
அதிக அளவிலான மின்னூட்டத்தைச் சேமிக்கும் திறன்மிக்க மின்கலங்களை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் பழைய வாகனங்களை படிப்படியாக அகற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள் மாற்றும் வரைவுக் கொள்கையை நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்யப்படுவதற்கு பதிலாக எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் எந்த இடத்திலும் மின் கலத்தை மாற்றும் வசதிகளுக்கான மின்கல நிலையங்களை அமைப்பதுதான் இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.  

மின்சார வாகனங்களுக்கு நகர்ப்புறங்களில் மின்னூட்ட நிலையங்கள் (சார்ஜிங் ஸ்டேஷன்) அல்லது தனியார் குடியிருப்புப் பகுதிகளில் மின்னூட்ட வசதி செய்யப்படுகிறது. இதில் சில நேரங்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு மின்னூட்டத்தின்போது விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், எதிர்காலத்தில் வாகனங்கள் அதிகரிக்கும்போது இதற்கான நிலையங்கள் அமைப்பதற்கான இட நெருக்கடி ஏற்படக்கூடும்.

இதைக் கருத்தில் கொண்டுதான், வாகனங்களில் நேரடியாக மின்னூட்டம் செய்வதற்கு பதிலாக ஏற்கெனவே மின்னூட்டம் செய்யப்பட்ட மின்கலங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை இந்தப் புதிய வரைவுக் கொள்கை தெரிவிக்கிறது. இதற்கான ஆலோசனைகள், கருத்துகளை வருகின்ற ஜூன் 5-ஆம் தேதிக்குள் வழங்கும்படியும் பொதுமக்களை நீதி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது.  

மின்சார வாகனங்களால் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. அதே சமயம், சூரிய ஒளி, காற்றாலை போன்ற தூய்மையான மின்சாரத்திற்கான மாற்றத்தை திட்டமிடுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் தொடக்கத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்வது இயல்பு. புதைபடிவ எரிசக்தியிலிருந்து தூய்மையான மின்சாரத்துக்கு மாறுவதன் மூலம்தான் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க முடியும்.



Read in source website

 

நமது தேசியத் தலைநகராகிய தில்லியிலும், பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாத மகாராஷ்டிர மாநிலத் தலைநகராகிய மும்பையிலும் அரங்கேறிய இரண்டு வெளியேற்றச் சம்பவங்கள் தேசிய அளவில் பரவலான விவாதங்களை உருவாக்கியுள்ளன.

தொண்ணூறு வயது நிரம்பிய குச்சுப்புடி நடனக் கலைஞர் மாயாதர் ரெளத் தமக்கு வழங்கப்பட்ட அரசுக் குடியிருப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் மத்திய அரசினால் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர் அந்த வயதான குச்சுப்புடிக் கலைஞர். அரசு அதிகாரிகளால் அந்தக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அவருடைய வீட்டு உபயோகப் பொருட்களுடன் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுக்கான பட்டயமும் தெருவில் கிடந்த காட்சியை ஊடகங்களில் பார்த்த எவருக்கும் மனம் கலங்கியிருக்கும்.

1980-களில் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவான மாத வருமானம் உடைய கலைஞர்களுக்கு மத்திய கலாசார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஆசிய விளையாட்டு கிராமம் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் கலைஞர்களுக்கு வசிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மோகினி ஆட்டம், பரதநாட்டியம், கதக், இசைத்துறையைச் சேர்ந்த இக்கலைஞர்களில் சிலர் பத்ம விருதுகளைப் பெற்றவர்களும் கூட.  

காலம் தொடர்ந்து அவர்களுக்குக் கருணை புரியவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்த நகர்ப்புற வளர்ச்சித் துறை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு அக்கலைஞர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து மேற்கண்ட கலைஞர்கள் தொடர்ந்த வழக்கில் கிடைத்த தடையுத்தரவு கடந்த பிப்ரவரி மாதம் தில்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. 
கலைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய மேற்கொண்டு இரண்டு மாத காலம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதற்குப் பிறகும் வெளியேறாதவர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த உத்தரவு தெளிவுபடுத்திவிட்டது.

வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட கலைஞர்களில் பெரும்பாலானோர் எழுபது, எண்பது வயதைக் கடந்தவர்கள். முன்பு போல ஓடியாடி கலைநிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதிக்க வழியில்லாதவர்கள். கடந்த இரண்டு வருடங்களாக இவ்வுலகையே ஆட்டிப்படைத்த கரோனா தீநுண்மியின் விளைவாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இப்பெரும் கலைஞர்களையும் பெருமளவில் பாதிக்கவே செய்திருக்கும். 

அன்றாட வாழ்வுக்கு மிக அதிகமான பணம் தேவைப்படுகின்ற தில்லி போன்ற பெருநகரங்களில் புதிதாக ஓர் இருப்பிடம் தேடுவதென்பது எத்தனை சிரமமான காரியம் ? இருந்தபோதிலும், தாங்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படுவதற்கு முன்பு கெளரவமாக வெளியயேறிவிட வேண்டும் என்று நினைத்த இருபது கலைஞர்கள் வேறு இடம் பார்த்துக்கொண்டு தங்களின் குடும்பத்தினருடன் கிளம்பிவிட்டனர். மற்றவர்களில் சிலர் அரசின் கருணையை எதிர்நோக்கி மனு போட்டுக் காத்திருந்தனர், மாயாதர் ரெளத் உட்பட. மற்றொரு குச்சுப்புடி கலைஞரான குரு ஜயராம ராவ் என்பவரின் குடும்பம் மூட்டை முடிச்சுகளைத் தயார் செய்து கொண்டிருந்தது. அவர்கள் கேட்டதெல்லாம் மேற்கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் மட்டுமே. 
ஆனால், அரசு அதிகாரிகள் வந்தார்கள், அவர்களை வெளியேற்றினார்கள். அவ்வளவே.

 ஒரு காலத்தில் விருதுகள் கொடுத்து, உறைவிடமும் கொடுத்து ஆராதித்த அதே நிர்வாகம், இப்போது அந்த மகத்தான கலைஞர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றி உள்ளது. அரசுக்கு சொந்தமான இடங்களை தலைமுறை தலைமுறையாக யாருக்கும் கொடுத்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை ஒதுக்கப்பட்ட உறைவிடங்களில் குறைந்தபட்சம் அந்தக் கலைஞர்கள் வாழும் வரையிலாவது இருக்க அனுமதிக்கலாம் அல்லவா ? 
மத்திய கலாசாரத் துறையும், நகர்ப்புற வளர்ச்சித் துறையும் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலான மனிதாபிமானத்துடன் அணுகியிருக்கலாம் என்றே தோன்றுகின்றது. 

இதே போல மகாராஷ்டிர தலைநகரான மும்பையில் அரங்கேறியுள்ள இன்னொரு வெளியேற்றம் நமது புருவங்களை உயர்த்த வைக்கிறது. திரைப்படக் கலைஞர்களுக்கு நிகராக நம்முடைய கிரிக்கெட் வீரர்களைப் போற்றுபவர்கள் நாம் என்பது தெரிந்த விஷயம்தானே? 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சாதனைகள் பல புரிந்த மட்டையாளருமாகிய சுனில் காவஸ்கருக்கு 1988-ஆம் வருடம் அப்போதைய மகாராஷ்டிர மாநில அரசு 21,348 சதுர அடி நிலத்தை வழங்கியது. 
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள விலைமதிப்பு மிக்க அந்த நிலம் "சுனில் காவஸ்கர் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளைக்கு அறுபது வருட குத்தகை  அடிப்படையில் வழங்கப்பட்டது. இளைஞர்களிடையே கிரிக்கெட் திறமையை வளர்ப்பதற்கான பயிற்சி நிலையம் ( அகாதெமி ) ஒன்றை அமைப்பதற்காக இந்த நிலம் வழங்கப் பட்டது. 

ஆனால், முப்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த இடத்திற்கு ஒரு சுற்றுச்சுவர் கூட எழுப்பப்படவில்லை என்று உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் கேள்வி எழுப்ப, மகாராஷ்டிர வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து தான் அந்த அகாதெமியை நடத்த இருப்பதாகக் கூறி மகாராஷ்டிர முதல்வரை சந்தித்த சுனில் காவஸ்கர், ஒருவழியாக அந்த நிலத்தை மாநில அரசுக்கே திருப்பி அளித்திருக்கிறார். 
பதவிக் காலம் முடிந்து பல வருடங்களானாலும் அரசுக் குடியிருப்புகளை விட்டு வெளியேறாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருப்பதை நாம் அறிவோம். கிரிக்கெட் வீரர் சுனில் காவஸ்கர் சுமார் நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள அரசுநிலத்தைத் தமக்கே பட்டா போட்டுக் கொள்ளாவிட்டாலும், ஒப்புக்கொண்ட பணியை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியிருக்கிறார்.
ஆனால், நாட்டுக்குப் பெருமை சேர்த்த அற்புதக் கலைஞர்கள் மட்டும் தங்களின் வயோதிக காலத்தில் அரசு ஒதுக்கிய வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். 
இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும்!
 



Read in source website


சென்னையை நோக்கி அனைவரையும் வரவழைத்த புத்தகத் திருவிழா இப்போது மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. காண்பதற்கும் கருதுவதற்கும் உரிய நிலையில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வாசிப்புக்குரிய தூண்டுதலை உண்டாக்கும் பேச்சாளர்களின் உரைகள் இடம்பெறுகின்றன. எல்லாத் திருவிழாக்களிலும் இடம்பெறும் பட்டிமன்றங்கள் இந்தவிழாக்களிலும் தவறாமல் இடம்பெற்றுவிடுகின்றன.
ஆனாலும், சென்னை அளவிற்கு இங்கெல்லாம் கூட்டம் வரவில்லை, விற்பனையும் நடைபெறவில்லை. எந்த ஒன்றும் தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும். காலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகளின் சிறப்பும் பங்கேற்பாளர்களின் வருகையும் உறுதியாய் வளர்ச்சியை நோக்கித்தான் அமையும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்குத் தென்பகுதி மக்கள் திரண்டு வருவதுபோல், திருநெல்வேலி, திருவள்ளூர், பெரம்பலூர், சிவகங்கை என்று ஊர்தோறும் நடைபெற்றுவரும் இந்த விழாக்களுக்கு வடதமிழகத்து மக்கள் சென்று வருவதையும், அது குறித்த பதிவுகளை முகநூல்களில் பதிவிடுவதையும் அறிகிறபோது உற்சாகம் எழுகிறது.
ஆனாலும், வந்து பார்ப்பவர்கள் அனைவரும் வாங்குபவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பார்த்தவற்றுள் தன் வாழ்வுக்கு இது இன்றியமையாதது என்னும் கருத்தை எந்தப் புத்தகம் ஏற்படுத்துமோ, அந்தப் புத்தகம்தான் அவர்கள் வசமாகும். அதற்கான காலமும் சூழலும் கனிந்து வர வேண்டும் என்பதோடு, அதற்கான முக்கியத்துவமும் உணர்த்தப்பட வேண்டும்.

இன்றைக்கு ஏராளமான எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள் உருவாகியிருக்கிறார்கள்; எழுதுகிறவர்களின் எண்ணிக்கைக்கும், வெளிவரும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் ஒப்ப, வாசகர்கள் எண்ணிக்கை வளர்ந்திருக்கிறதா என்பது ஐயமே. ஆனாலும், எழுத்துக்கும் புத்தகத்துக்கும் இருக்கிற கவர்ச்சி குறையவில்லை; விலையும் குறைய வாய்ப்பில்லை. நாளுக்கு நாள் தாளின் விலை ஏறிக்கொண்டிருக்கும்போது இது அதிகரிக்கத்தான் செய்யும். இது பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி மட்டுமல்ல, வாசகர்களுக்கும்தான். 
விரும்பிய புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாத அளவிற்கு விலை ஏற்றம். "புத்தகமோ பத்திரிகையோ படிக்காமல் பொழுது விடிவதில்லை' என்கிற அளவிற்கு, வாசிப்பை நேசிக்கும் அன்பர்கள் இருக்கிறார்கள். அன்றாட வாசிப்பு இவர்களுக்கு அவசியம். உடல் இயக்கத்திற்கு நடைப்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதுபோல் உள்ள விரிவிற்கு வாசிப்பு இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்தவர்கள் இவர்கள். என்னதான் காட்சி ஊடகங்கள் செய்திகளை உடனுக்குடன் வழங்கினாலும், செய்திக்குப் பின் விரியும் சிந்தனையின் விழுமியங்களை நுட்பமாய் உணர்ந்தவர்கள். 
பார்வைக்குப் பந்திவைக்கும் காட்சி ஊடகங்களின் பதிவுகளைவிட, பார்வைக்குப் பார்வை உண்டாக்கும் அச்சு ஊடகங்கள் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துபவை; விழித்திரையின் காட்சிகளைவிடவும், மனத்திரையில் விரியும் சித்திரங்கள் மகத்தானவை. கண்ட காட்சிகள், திரும்பத் திரும்பத் தம்மையே காட்டிக் கொண்டிருப்பவை; ஆனால், வாசித்துப் பெற்ற அனுபவ அலைகளோ கற்பனைக்கும் சிந்தனைக்கும் களம் அமைத்துக் கொடுக்கவல்லவை. 

எழுத்தின் சவாலை ஏற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கும்போது ஏற்படும் மலர்ச்சியை, இந்த நுண்கலைதான் கொடுக்கும்.
"வெள்ளைக் கமலத்திலே, அவள் வீற்றிருப்பாள்' என்று சொல்லிக் காட்டிய பாரதியின் வாசகத்தை ஓவியமாகத் தீட்டும்போது கலைவாணி தோன்றிவிடுகிறாள். தற்காலப் பெண்ணுக்கு ஒப்பனை செய்து, அதுபோலக் காட்டிவிடலாம். ஆனால், "புகழ் ஏற்றிருப்பாள்' என்கிற கருத்தை எப்படிச் சித்திரப்படுத்துவது? "அவள் நெற்றி, குளிர் நிலவு; சிந்தனையே அவளது கூந்தல்; இருசெவிகளிலும் இருக்கும் தோடுகள், வாதமும் தருக்கமும்; கற்பனையே அவளது தேன் இதழ்கள்' என்று மகாகவி பாரதி தீட்டும் சொற்சித்திரத்தில், கலைவாணி எழுந்தருளும் காட்சியை எந்தக் காட்சிச் சித்திரம் அப்படியே காட்டிவிட இயலும்? 
இவை யாவும் புறச்சித்திரங்கள்; புன்னகை சிந்தும் மெல்லிதழ்களுக்கு உள்ளே தவமிருக்கும் அன்னையின் செந்நாச் சிறப்பை,                                                                                                                                        
சொற்படு நயம் அறிவார் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவைஅறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் - அந்த
மேலவர் நாவு எனும் மலர்ப்பதத்தாள்
என்று காட்டும் அழகின் நுட்பத்தை, எழுத்தின் வழிதானே உணர்ந்து அனுபவிக்க இயலும்? இங்கே சொற்பதம் கடந்த அற்புதம் நிகழ்ந்துவிடுகிறதே. இதுதான் வாசிப்புத் தரும் உயிரனுபவம். 
இது, மனித குலத்திற்கே வாய்த்த உயரனுபவம். அதனால்தான்,
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
என்றார் திருவள்ளுவர்.

இவர்களுக்கு நடுவே, இன்னமும் பொழுதுபோக்குப் பழக்கமாகவே வாசிப்பைக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். போக்காவிட்டாலும் பொழுது போகத்தான் செய்யும்; ஆனால், அதனைப் பயனுள்ள வண்ணம் போக்குதற்குப் புத்தகங்கள்தாம் பெருந்துணை. அப்படிப்பட்ட புத்தகங்களை, இணையவழியில் இறக்குமதி செய்து கைப்பேசி, கணினித்திரைகளில் கண்டு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. ஆனாலும், அவை பார்வைக்கு உகந்ததாக இருக்குமா? 

மனத்திரையில் எழுச்சியுண்டாக்கும் எழுத்துகள், இந்த ஒளித்திரையின் வழியாக விழித்திரைகளைத் தொடும்போது ஏற்படும் விழியியல்சார் தாக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்குமா? புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் படிக்கிற மாதிரி, இந்த ஒளித்திரைகளின் வாயிலாக நெடுநேரம் வாசிக்க இயலுமா? அது நல்லதுதானா? 
அச்சு ஊடக பிரதிகளை, காட்சி ஊடகங்களின் வாயிலாகக் காண்பது எளிது;  கற்பதும்கூட எளிதாக இருக்கலாம். ஆவணமாக வைத்திருந்து மீளத் தேடிப் படிக்கவும், வேண்டும்போது வேண்டும் பக்கங்களைப் பார்க்கவும், மிகத் தேவையானவற்றை அடிக்கோடிட்டு வைத்துச் சிந்திக்கவும் தூண்டுகிற செயலைப் புத்தகத்தால்தான் செய்ய முடியும். இதனை உணராத நிலையில் சமூக ஊடகங்களில் கண்டதையெல்லாம் வாசித்துக் கடந்துவிடுகிறவர்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பொறுத்தவரையில், ஓரிரு பத்திகள், அதிகம் போனால், சில நூறு வார்த்தைகளுக்குமேல் படிக்க இயலாத மனநிலை.
வயிற்றுப் பசிக்கு உணவுபோல, அறிவுப்பசிக்கு புத்தகம். நொறுக்குத் தீனிகள் சுவைபயக்கும்; ஆனால், அவையே உணவாகிவிடாது. அது போல்தான் இந்தத் துணுக்குகள். தூறலால் பயிர்கள் விளைந்துவிடுவதில்லை; பெருமழை மட்டுமே உயிர்வளர்க்கும் வானமுதம்; புத்தகங்களுக்கும் இது பொருந்தும்.
எல்லாம் சரி. பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வேண்டிய வண்ணம், தன்னை உருக்கி, தன் காலத்துக்கான விழுமியங்களை நுண்ணிதாய் உணர்த்தி, கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கொடுக்கும் எழுத்தாளனுக்கு என்ன செய்துவிடமுடியும், இந்தச் சமுதாயம்?

இயல்பாய்க் கிட்டும் உலக இன்பங்களுக்குப் பெரிதும் ஆட்படாமல், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, எழுத்துத் தவம் இயற்றும் எழுத்தாளுமைக்குக் குறைந்தபட்சம் பாராட்டையேனும் நல்குவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், துறைதோறும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்குப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் கொடுப்பதுபோல, மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில், அப்பகுதிசார் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திப் பாராட்டுச் செய்யலாமே?

சங்க காலம் தொடங்கி, சமீப காலம் வரைக்கும் தமிழுக்குத் தகுஉயர்வளிக்கும் படைப்பாளிகள் எல்லா மாவட்டங்களிலும் இருப்பார்கள்; அவர்களில் தற்காலத்தில் வாழ்வோர்க்குப் பாராட்டும் பரிசும் கொடுப்பதுபோல, மறைந்த எழுத்தாளர்களின் நிழற்படங்களைக் காட்சிக்கு வைத்து, அவர்கள் குறித்த தகவல்களைச் சிறு கையேடாகத் தயாரித்து வழங்குவதன்மூலமாக, ஒரு வரலாற்றுப் பதிவை நிரந்தரப்படுத்தலாமே. 
புத்தகத் திருவிழா முடிந்த கையோடு, நிழற்படங்களையும் குறிப்புகளையும் அந்தந்த மாவட்டத் தலைமை நூலகங்களில் வைத்துப் பாதுகாக்கலாமே?
எழுத்து என்பது கலைசார்ந்த வடிவம் மட்டுமல்ல, அறிவுசார்ந்த இயக்கமும்தான். குழந்தைமை தொடங்கி, முதுமை வரை உடன் வரக்கூடிய நடைவண்டியும் ஊன்றுகோலும் எழுத்தே ஆகும். அதனால்தான்,
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் 
என்றார் திருவள்ளுவர். 

புத்தகத்திருவிழா ஓர் அறிவுசார் இயக்கம். ஆண்டுக்கு ஒருமுறை கூடி நடத்தும் கோலாகலத்தால் ஈர்க்கப்பட்டுப் புதிய தலைமுறை, பொதுமைசார் தலைமுறையாக உருவாகக் கூடும்; வாசகர்களை மையமிட்டு, எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் கூடிக் கலந்து பேசி, மகிழும்போது எழும் முக்கோண உறவு, பல மனக்கோணல்களையும் சரியாக்கக் கூடும். 
வகுப்பறைகளில் பெற முடியாத அரிய நுட்பங்களை, வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கும்; அவற்றைச் சீர் தூக்கிப் பார்த்துச் சிறப்புக்குரியவற்றை மேலெடுத்துச் செல்ல, இத்தகு நிகழ்வுகள் உதவும். சாதி, சமய, இன பேதங்கள் கடந்து மொழியின் அடிப்படையில் ஒருங்கு திரளும் இவ்விழாக்களில், மொழிபெயர்ப்பாக்கங்களுக்கும் சிறப்பிடம் இருப்பதால், உலகப் பொது மனித அறம் சார்ந்த விழுமியங்கள் நிலைபெறக் கூடும்.

புகழுடையவர்களின் வாழ்க்கை, புத்தகங்களில் பொதிந்திருக்கின்றது. எடுத்துப் படிக்கிறபோது, அவர்கள் மறுபடியும் பிறக்கிறார்கள்; நம்மையும் பிறப்பிக்கிறார்கள். நாளும் புதிதாய், நம்மைப் பிறப்பித்துக்கொள்ள, தாயினும் சாலப் பரிந்து அறிவூட்டும் நல்ல புத்தகம் ஒவ்வொன்றும் நற்றாய்; பத்திரிகைகள், செவிலித்தாயார். காட்சி ஊடகங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நெறிப்படுத்தும் தோழமைகள் எனக் கொள்வோம்.

 



Read in source website

கேரளத்தில் சோகம்: ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி: 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த 2 ஆம் தேதி கேரளத்தில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த மாநிலத்தையும் தாண்டித் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்த தேவந்தா என்கிற இளம்பெண் கெட்டுப்போன ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்திருக்கிறார். அவருடன் சேர்த்து ஷவர்மா சாப்பிட்ட 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். 

இது ஒரு புறமிருக்க தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 47 கடைகளில் நடைபெற்ற திடீா் சோதனையில் கெட்டுப்போன நிலையில் இருந்த 138 கிலோ அசைவ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டிருக்கிறது.

தருமபுரி நகரில் உள்ள அசைவ, துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், தரமற்ற 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மற்றும் திருக்குவளையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையின்போது, காலாவதியான 310 கிலோ கோழிக் கறி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் ஷவா்மா உணவு தயாரிக்கப்படும் உணவகங்களில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், 10 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி இன்னும் பல...

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஷவர்மா உணவு வகையை உண்டு இப்படி நேர்ந்துள்ளதால், சமீபத்திய செய்திகளில் அதிகம் அடிபடும் பெயராக ஷவர்மா மாறியுள்ளது. 

அதென்ன ஷவர்மா?

துண்டாக்கப்பட்ட  கோழி இறைச்சியை கம்பியில் செலுத்தி வெப்பத்தில் சுட்டு அதனை மீண்டும் வெட்டி எடுத்து நாண் அல்லது சப்பாத்தி வகை ரொட்டிகளால் சுற்றிச் சாப்பிடும் உணவே ஷவர்மா. தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஷவர்மா கடைகள் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரத்யேக கடைகளாகத் தோன்றிவருகின்றன. 

ஒரு நாட்டிற்கென பண்பாடும் கலாசாரமும் மொழியும் வரலாற்றுக் கூறுகளாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோன்றதொரு இடத்தை உணவுகளும் பெறுகின்றன. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பல உணவுகள் இன்றும் மக்களின் விருப்பமான உணவுப் பட்டியலில் உள்ளன.

எப்படி ஒரு மொழியை இன்னார் தான் கண்டுபிடித்தார் என்று வரையறுத்து சொல்ல முடியாதோ அதேபோல் உணவுகளையும் இவர்தான் கண்டுபிடித்தார் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப உணவுகள் தோன்றுகின்றன. மக்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களால் பிற இடங்களுக்கும் கடத்தப்படுகின்றன.

இன்றைக்குத் தமிழக செய்திகளில் பரவலான இடத்தைப் பிடித்துள்ள ஷவர்மா 1972 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து வந்த ஒரு தொழிலாளியால் ஜெர்மனியின் பெர்லினில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  அந்தத் தொழிலாளி தன்னுடைய பெர்லின் பயணத்தின்போது இதர தொழிலாளர்கள் தங்களது மதிய உணவாக வறுக்கப்பட்ட காய்கறிகளுடன் கோழி இறைச்சியை ச் சுட்டு சாப்பிடுவதை அறிந்ததாகவும் அந்த உணவை மேலும் சுவையாக்க விரும்பிய அவர் அதை வோய்லா என்று அழைக்கப்படும் ஒரு வகையான ரொட்டியில் சுற்றி ஷவர்மாவை உருவாக்கினார் எனவும் நம்பப்படுகிறது.

ஷவர்மாவின் தோற்றம் குறித்து இதுதான் திட்டவட்டமானது எனக் கூற முடியாத நிலை உள்ளது. ஒருசாரார் ஷவர்மா ஜெர்மனியில் உருவானது என்றும், மற்றொரு சாரார் இது துருக்கியில் உருவானது என்றும் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் ஷவர்மா வகை உணவுகள் ஐரோப்பாவிற்கு சொந்தமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஏன் ஷவர்மா வகை உணவுப் பொருள்கள் பேசுபொருளாகியுள்ளன?

இடம்பெயரும் மக்களுடன் அவர்களின் பழக்கவழக்கங்கள், மொழிகள், பண்பாட்டு கலாச்சார முறைகளுடன் உணவு முறைகளும் பயணம் செய்கின்றன. இந்தியாவில் வணிக நோக்கங்களுக்காக வந்த ஐரோப்பியர்கள் மூலம் ஷவர்மா வகை உணவுகள் நம் நாட்டிற்கு அறிமுகமாகின.

இடம்பெயர்ந்துவரும் மக்கள் மீது இயல்பாகவே எழும் வெறுப்பைப் போல மேற்கத்திய உணவுகளின் மீது ஆரம்பத்தில் மோகம் எழுந்தாலும் பின்னர் அவற்றின் மீது வெறுப்பு பரவ ஆரம்பிக்கிறது. 

ஷவர்மாவைப் பொருத்தவரையில் அதில் சேர்க்கப்படும் இறைச்சியும், அது சரியான பதத்தில் பயன்படுத்தப்படுவதும் சர்ச்சையாகியுள்ளது. பொதுவாக இறைச்சியைப் பொருத்தவரையில் சரியான வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும். 14 மணி நேரத்திற்குள்ளாக அதனை சமைப்பது, சரியான வெப்பநிலையில் அவற்றைப் பாதுகாப்பது என்கிற வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாதபோது அவை கெட்டுப் போகின்றன; உண்ண ஒவ்வாதவையாகின்றன.

உணவகங்களில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருக்கும் அசைவ ங்கள் எப்படி சமைக்கப்படுகின்றன என்பதை அறியவோ எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு அமைவதில்லை.

இவற்றைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் உணவக உரிமையாளர்கள் உப்பு கலந்த நீரில் கெட்டுப் போன அசைவங்களை சேர்த்து அவற்றைச் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.

சமீபத்தில் சிக்கிய பிரபல அசைவ பிரியாணி கடைகளே இதற்கு சான்று. தங்களுடைய சுவைக்காக மக்களிடம் நல்ல பெயரைப் பெற்ற நட்சத்திர பிரியாணி கடைகளே தரமற்ற கறியினைப் பயன்படுத்துவது வெட்டவெளிச்சமானது.

உணவு பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இவ்வாறு சமைக்கப்படும் உணவுகளை உண்ணும் மக்கள் வயிற்றுப் போக்கு, உடலில் நீர் இழப்பு போன்ற உடல்நல சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் கேரளத்தில் இறந்த மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையிலும் கூட கெட்டுப்போன ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகெல்லா பாக்டீரியா உயிர்க் கொல்லி கிடையாது என்கிறபோதிலும் அசைவம் என்று மட்டுமல்லாமல் சைவ உணவுகளிலும்கூட உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படாத அனைத்து வகை உணவுகளிலும் ஷிகெல்லா பாக்டீரியா உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் வீதிக்கு இரண்டு ஷவர்மா கடைகளேனும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே இவற்றில் பயன்படுத்தப்படும் இறைச்சி தரமானவைதானா, உரிய காலத்தில் பயன்படுத்தப்படுகிறதா, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களைத் தவிர யாராலும் இதை உறுதி செய்ய முடியாது.

ஷவர்மாவுக்காகத் தயார் செய்யப்பட்டுக் கூம்பு வடிவில் தொங்கவிட்டு சூடுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இறைச்சித் தொகுதி அன்றே விற்றுத் தீராவிட்டால் மீதியிருக்கும் இறைச்சியை என்ன செய்கிறார்கள்? அதுவே  மறுநாள் ஏதோவொரு தயாரிப்புக்குப் பின் விற்கப்படும் வாய்ப்புள்ளதா? எங்கிருந்து இறைச்சி வாங்கப்படுகிறது? அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறதா? ஷவர்மா தயாரிப்பவருக்கு உள்ளபடியே அதற்கான பயிற்சி இருக்கிறதா?... இப்படி நிறைய கேள்விகள், பதிலுக்காகக் காத்திருக்கின்றன.

கெட்டுப்போன, நாள்பட்ட இறைச்சி பயன்படுத்தப்படும்பட்சத்தில்,  பெரும்பாலான நேரங்களில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் இவற்றை உண்டாலும் தப்பிவிடுவார்கள். ஆனால், பிரச்சினையுள்ளவர்கள் பாடுதான் மோசமாகிவிடும்.

இந்த நிலையில் உணவுத் துறை அதிகாரிகளின் சோதனை ஒருபுறம் இருந்தாலும் உணவகங்களின் அக்கறையும் தனி கவனமும் உணவுத் தயாரிப்பில் அவசியமாகிறது. இறைச்சி உணவுகளுக்கான கட்டுப்பாடுகள் மட்டும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யாது என்பதை உணர்ந்து கொள்வதும், சைவம், அசைவம் என்கிற வேறுபாடுகளைத் தாண்டி உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் முறையான சோதனைகளுக்கு உட்படுத்துவதும், இந்த விவகாரத்தில் தவறிழைப்பவர்களின் உணவக உரிமைகளை ரத்து செய்வதும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதும் மட்டுமே கெட்டுப் போன உணவை பயன்படுத்தி உணவகங்களை நடத்துபவர்களுக்கு வழங்கும் சரியான தண்டனையாக இருக்கும்.

இவ்வளவு காலமாக கெட்டுப் போனவற்றை உண்பதால் பெரும்பாலும் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற வாதைகளைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். மற்றபடி சில நாள்கள் மருத்துவமனையிலிருந்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். ஆனால், இப்போது கெட்டுப்போன ஷவர்மாக்கள் மரணத்தையே அழைத்துவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இந்த நிலையில் மக்களும், குறிப்பாக இளைய தலைமுறையினர், கண்டமேனிக்கு, கண்ட கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்த்து, முன்னெச்சரிக்கையுடன் தரத்தை உறுதி செய்துகொள்ளக் கூடிய கடைகளில் மட்டும் ஷவர்மா போன்ற உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமே தற்காத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 



Read in source website

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு செய்ய முன்வந்திருக்கும் உதவிகள் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வளர்த்தெடுக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 29 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக என்றென்றும் நினைவுகூரப்படும். 40,000 டன் அரிசி, 100-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த உதவிகள் அமையும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் சார்ந்து அரசமைப்புரீதியில் கருத்து முரண்பாடுகள் நிலவிவரும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த நிவாரண உதவிகளுக்கு அனுமதியளித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய அரசு, ஜனவரி தொடங்கி இதுவரையில் மொத்தம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Read in source website

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் முதல்வர் வசம் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? - இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன்...

நிறைகள்: "முதல்வர் வசம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.130 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உதவித் தொகை படிப்படியாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைகள்: மாற்றுத் திறனாளிகளை பற்றிய புரிதல் இல்லாமல் திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பழைய சட்டத்தை குறிப்பிட்டு தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தனர். முதல்வர் வசம் துறையாக இருந்தாலும் துறையின் நடவடிக்கையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகள் துறையில் 118 திட்டங்கள் உள்ளன. இதில் பல திட்டங்கள் நடைமுறைக்கு கூட வரவில்லை.

பெரும்பாலான திட்டங்கள் தொண்டு நிறுவனங்களை மையப்படுத்திதான் உள்ளன. மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 4 லட்சம் பேர் இருந்தால் 2,000 பேருக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி ஆணையருக்கு நீதித்துறை நடுவருக்கு இணைய அதிகாரம் உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் முதல் பிரதிநிதியாக அவர் இருக்க வேண்டும். ஆனால், அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக செயல்படுகிறார்.

என்ன செய்ய வேண்டும்?

> புதிய சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் அரசு கட்டிடங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமைப் பணி அதிகாரிகள் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்தச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

> மாற்றுத் திறானிகளுக்கு சான்றிதழ் அளிப்பது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

> மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்."



Read in source website

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? நிறை, குறைகள் என்னென்ன? செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து சற்றே விரிவாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கல்வியாளர் வே.வசந்தி தேவி...

"கடந்த ஓராண்டில் தமிழகத்தில் பேசுபொருளாகி, வீதிதோறும் ஒலித்துக் கொண்டிருக்கும் இரு திட்டங்கள் - பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடிக் கல்வி. இவை இரண்டும் இன்றைய தமிழகத்துக்கு கல்வியை அதன் சாபக்கேட்டிலிருந்து மீட்கும் சாத்தியப்பாடு கொண்டவை.

தமிழத்தின் பள்ளிகள் தங்கள் உயிர் பந்தங்களைத் துண்டித்துக் கொண்டுவிட்டன. சுற்றிலுமுள்ள சமுதாயத்துடனான உறவுகளை இழந்துவிட்டன. சமுதாயத்தில் வேரூன்றி, மக்களுடன் இடைவிடாது நடக்க வேண்டிய உரையாடல்கள் உறைந்துவிட்டன. பெரும்பாலான ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் பள்ளியின் அருகமை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வெகுதூரம் பயணித்து, தங்கள் கற்பித்தல் பணியை முடித்து, அவசரமாக வீடு திரும்புபவர்கள். பள்ளியின் பயனாளிகளான (stakeholders) பெற்றோர் பெரும்பாலான பள்ளி வளாகங்களுக்குள் காலடி வைக்கவே அனுமதியற்றவர்கள். இந்த அவமதிப்பிற்கான காரணத்தை விளக்க வேண்டிய தேவை இல்லை. இன்று அரசுப் பள்ளி பெற்றோர் ஏழைக்கும் ஏழையானவர் மட்டுமே. ஆகவே குரலற்றவர்கள். இவர்களுக்குப் பள்ளிகள் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?

ஜனநாயக நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதுதான். அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். ஜனநாயக சமுதாயத்தின் பிரஜைகளை உருவாக்கும் கல்வி அமைப்பிற்கும் இது முழுமையாகப் பொருந்தும். தமிழகத்தின் அடித்தளமான பள்ளி அமைப்பு சிறப்புற அமைந்து, அறிவும் திறனும் உணர்வும் கொண்ட மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால், அரசுப் பள்ளிகளின் நிர்வாக அமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

கல்வி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் தேவை. அதிகாரம் மையப்பட்டுக் கிடக்கும் நிலை மாறி, அதிகாரப்பரவலும், அதிகாரிகளின் கையிலிருந்து கல்வி மீட்கப்படுதலும் ( De-Bureaucratisation) தேவை. உலகின் எந்த முன்னணி நாட்டிலோ, மற்ற வளரும் நாடுகளிலோ அதிகாரிகளால் பள்ளிகள் நிர்வகிக்கும் நிலையே கிடையாது. அனைத்து நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகளும், பெற்றோரும் இணைந்து நடத்தும் நிர்வாகம்தான் பள்ளிகளில் நிலவுகிறது. அந்நாடுகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இத்தகைய ஜனநாயக நிர்வாக அமைப்பே அடித்தளமாகிறது. அதற்கான முதல்கட்ட முயற்சியே பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைத்தல்.

பள்ளி மேலாண்மைக் குழு: கடந்த ஏப்ரல் 23, ஏப்ரல் 30 - தமிழ்நாட்டின் அனைத்து கிராம – நகரத் தெருக்களும் ஓர் அதிசயத்தைக் கண்டன. அருகிலிருக்கும் அரசுப் பள்ளியை நோக்கி, கடைக்கோடி மக்கள் சாரை சாரையாகச் சென்றனர். தங்கள் ஓட்டு வீடுகளிலிருந்தும், நூறு நாள் வேலைத் திட்ட வேலையை கொஞ்சம் ஒதுக்கிவிட்டும், தூசு படிந்த ஆடைகளுடனும் விரைந்தனர். தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் நிர்வாக அதிகாரத்தில் பங்கேற்கும் நம்பவியலா வாய்ப்பு. பள்ளி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதற்கும் அனுமதி அற்றவர்கள்... அழைப்பு விடுத்து, வரவேற்கப்பட்டனர்.

மேலே குறிப்பிட்ட இரு நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில், பாதி தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பிற்கானத் தேர்தல் நடைபெற்றது. பெற்றோரும், ஊர் மக்களும் இது எங்கள் பள்ளி என்று சொந்தமும், பெருமையும் கொள்ளும் மாற்றத்திற்கான தொடக்கம். பட்டுப்போன ஜனநாயகத்தின் வேர்களில் பாயும் புது வெள்ளம். நாடு முழுதும் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கல்வி உரிமைச் சட்டம், 2009, பள்ளிகளை நிர்வகிக்கும், கண்காணிக்கும் பொறுப்பையும், அதிகாரத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளது. பெற்றோர் பதினைந்து பேர், உள்ளாட்சி உறுப்பினர் இருவர், தலைமை ஆசிரியர், ஓர் ஆசிரியர், கல்வியாளர்... இவற்றில் பாதிக்கு அதிகமானோர் பெண்கள். பெண் தலைவர் கொண்ட இந்தக் குழு வேர் மட்ட ஜனநாயகத்தின் ஒரு எடுத்துக்காட்டு.

பள்ளிக்கான ஆண்டுத் திட்டம் உருவாக்குவதிலிருந்து, பள்ளியின் தேவைகளைத் தீர்மானங்கள் நிறைவேற்றி, உரிய இடத்திலிருந்து பெறுதல், வரவு - செலவுகளைக் கண்காணித்தல், கட்டமைப்புகள், போதிய ஆசிரியகள் நியமனம், மாணவர்ச் சேர்க்கை, ஆசிரியர் வருகை, கற்றுத் தருதல், ஒவ்வொரு மாணவரும் வகுக்கப்பட்ட திறன்களைப் பெறுகிறார்களா, பின்தங்கிய மாணவருக்குத் தனி கவனம் அளிக்கப்படுகிறதா, வன்முறைகள் தடுக்கப்படுகிறனவா என்ற அனைத்தையும் கண்காணிக்கும் அமைப்பு இது. தமிழ்நாட்டில் இந்தக் குழு பெயரளவில் அமைக்கப்பட்டு, கேலிக் கூத்தாகிக் கிடக்கிறது. பள்ளித் தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக அமைத்துக் கொண்ட குழு, என்றும் கூடாத குழு, எவரும் அறியாத குழு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல சட்டங்கள் போல், உதாசீனம் செய்யப்பட்ட, செயலிழந்த சட்டம்.

சட்டம் நடைமுறைக்கு வந்த பனிரெண்டு ஆண்டுகளாக மறைத்து, அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆதார அமைப்பு இன்று தமிழ்நாட்டில் உயிர்பெற்று எழத் தொடங்கி இருக்கிறது. இன்றய தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பள்ளி மேலாண்மைக் குழுவைக் கல்வி மறுசீரமைப்பின் தொடக்கப் புள்ளியாகப் பாவிக்கிறது. கடந்த சில மாதங்களாக பள்ளி மேலாண்மைக் குழுவைப் பள்ளிதோறும் அமைக்க, உயிர்த் துடிப்பு கொண்ட அமைப்பாக மாற்ற, அரசுப் பள்ளி மாணவரின் பெற்றோர், குரல் பறிக்கப்பட்ட, விளிம்பு நிலையினர் உரிமைகளை மீட்டெடுக்க பிரம்மாண்ட முயற்சிகளைக் கல்வித் துறை, குறிப்பாக, மாநிலத் திட்ட இயக்குநரகம் எடுத்து வருகிறது.

இந்த ஜனநாயகக் கனவை வானிலிருந்து தரைக்கிறக்க படிகள் ஒவ்வொன்றாக கவனமாக அமைக்கப்படுகின்றன. சட்டம் மேலும் inclusive ஆக ஆக்கப்பட்டு, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகள் ஆகிய பெற்றோருக்கு முன்னுரிமையும், துணைத் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல மட்ட, பல கட்டப் பயிற்சிகள்; மாநிலம் முழுதும் பல்லாயிரக் கணக்கான பள்ளிகள் முழு பயனடைய நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், சிவில் சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் அனைவருக்கும் இடைவிடாப் பயிற்சிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், கலைப் பயணங்கள், காணொலிகள், சுவரொட்டிகள். குழுவின் பெரும் முக்கியத்துவம், யார் அதன் உறுப்பினர்கள், அதன் பணிகள், அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்துப் பேசி வருகின்றன.

முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏப்ரல் 23 அன்று, மாநிலம் முழுவதற்குமான அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், ஏப்ரல் 30 அன்று மாநிலம் முழுவதுமான தொடக்கப் பள்ளிகளில் பாதியிலும் நடந்துள்ளன. லட்சோபலட்சப் பெற்றோர் பங்கேற்றனர். முதல் கட்டத்தில் 5,74,615 பெற்றோர், மொத்தப் பெற்றோரில் 57.8%, இரண்டாம் கட்டத்தில் 7,53,197, மொத்தப் பெற்றோரில் 67.3%, அடுத்த இரண்டு ஆண்டுகள் பள்ளிகளை நிர்வகிக்கப் போகும் குழுக்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். பல மாவட்டங்களில் 70%, சிலவற்றில் 90% வரை பங்கேற்புப் பதிவாகி இருக்கிறது. நடைபெற்ற பிரச்சாரமும், மக்களைத் திரட்டியதும், பங்கேற்றதும், பகிர்ந்துகொண்டதும் முன் காணாத புத்துணர்ச்சியைப் பெற்றோர்களுக்கு ஊட்டிய அனுபவம்.

ஒரு சிறு நம்பிக்கை சாளரம் திறந்திருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு வேறொரு உலகம், இன்றினும் கொஞ்சம் மேம்பட்ட உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கை சாளரம்; அந்த உலகத்தை ஒரு படி அருகில் கொண்டு வருவதில் தங்களுக்கும் ஒரு சிறு பங்கு உண்டு என்ற நம்பிக்கை சாளரம் திறந்திருக்கும். அடுத்து மூன்று கட்டங்கள், மீதி பாதி தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், நடக்கவிருக்கின்றன. நம் கண் முன்னால் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் என்பது அதிகாரப் பரவல் செய்யப்பட்ட ஜனநாயக அமைப்பாக மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என்ற நம்பிக்கை அளிக்கிறது. முன் நிற்கும் சவால்கள் ஏராளம். அரசுப் பள்ளி நிர்வாகத்தில் ஒடுக்கப்பட்ட பெற்றோருக்கு பங்கேற்பு உறுதி செய்யப்படுமா? அல்லது, முன்பு போல் ஏட்டில் நின்றுவிடுமா?

மேலே சொன்னது போல், பள்ளி மேலாண்மைக் குழு வேர்மட்ட ஜனநாயக அமைப்பு. ஜனநாயகத்தின் இலக்கணமான அதிகாரப் பரவல், பயனாளிகள் பங்கேற்பு, நிறுவன கடப்பாடு (institutional accountability) ஆகியவற்றில் நிலை கொண்டது. இத்தகைய உயர் விழுமியங்களெல்லாம் ஆதிக்கங்கள் கோலோச்சும் சமுதாயத்தில் சாத்தியமாகுமா?

ஆதிக்கங்கள் உடைபட்டால்தான் சாத்தியமாகும். எந்த ஆதிக்கங்கள்? பெரிய ஆதிக்கங்கள், குட்டி ஆதிக்கங்கள். நம் சமுதாயத்தின் சாவா சாதியம் போல் ஒவ்வொரு மட்டத்திலும் நிலை கொண்டிருக்கும் ஆதிக்கங்கள். மேல் அதிகாரிகளிலிருந்து தொடங்கி பல மட்ட அதிகாரிகள். பள்ளிகளை அடைந்தால், தலைமை ஆசிரியரின் ஆதிக்கம், அவர் கீழ் ஆசிரியர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டி ராஜ்யம். அதிகாரங்களை விட்டுவிட யாருக்குத்தான் மனம் வரும்? இந்நிலையை மாற்றுவதற்குப் பெரும் முயற்சிகள் தேவை. அடுத்த இரண்டு ஆண்டுகள் சோதனைக் காலம். பெற்றதைப் பேணிக் காக்க வேண்டிய காலம்.

இந்தப் புதிய வரலாற்றின் பிறப்பிடம் எது? தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் மேல்மட்ட அதிகாரிகளின் ஆழ்ந்த அர்ப்பணம், மக்களிடம் கொண்ட அசையா நம்பிக்கை, நிர்வாகத் திறமை ஆகியவற்றில் பிறப்பெடுத்த நீரோட்டம். அது ஜீவ நதியாக வேண்டும். அரசின் மேல் மட்டத்திலிருந்து ஆணைகள் பிறந்தால் போதாது. மொத்த சமூகத்தின் பங்கேற்பு தேவை. கல்வி ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர், பெற்றோர், சிவில் சமூக அமைப்பினர், முன்னாள் மாணவர் பலரும் முயற்சி செய்ய வேண்டும். வெளியிலிருந்து நேசக் கரம் நீட்டப்பட வேண்டும். பள்ளிகளின் அச்சம், கதவைத் திறப்பதும், புதிய காற்று வீசுவதும் உகந்ததல்ல என்ற அச்சம் போக்கப்பட வேண்டும். பெற்றோரும், சமூகமும் தங்கள் எதிரிகளல்ல, தோழர்கள் என்ற நம்பிக்கை பிறக்க வேண்டும்.

உள்ளாட்சிகளுக்குப் பள்ளி மேலாண்மைக் குழுவில் முக்கியப் பங்கு உண்டு. ஊர்ப் பள்ளி நம் பள்ளி என்ற ஆழ்ந்த புரிதலுடன், அரவணைக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்ல; அர்ப்பணிப்புடன் வளர்த்து, பெருமை பெற என்ற பொறுப்புணர்வு மேலோங்க வேண்டும்.

விளிம்பு நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் குரலற்ற ஒரு பெரும் மக்கள் திரள் தங்கள் குழந்தைகளின் எதிர் காலம் குறித்த நம்பிக்கைகளின் குவி மையமாகப் பள்ளி மேலாண்மைக் குழுவைக் காண வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி: கரோனாவின் சூறாவளித் தாக்கத்தில் உலக நாடுகள் அனைத்திலும் கல்வி சுக்கு நூறாக உடைந்தது. சமுதாயத்தின் செல்வங்களான குழந்தைகள் கற்றதை, கற்றலையே, இழந்து சாம்பிக் கிடக்கின்றனர். மீளவியலா வரலாற்றுப் பேரிழப்பாக நிலைத்து விடும் அபாயம் எங்கும் உணரப்படுகிறது. ஒரு தலைமுறையின் சோகம் இது. கல்வி மீட்சிக்கான திட்டம் ஒன்றைத் தமிழக அரசு உருவாக்கியது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சிந்திக்கத் துணியாத ‘ இல்லம் தேடிக் கல்வி’ என்றத் திட்டம் இது. குழந்தைகளின் வசிப்பிடத்தில் மையங்கள் அமைத்து, மாலை நேரங்களில் தன்னார்வலர்களின் துணையுடன் நடக்கும். பெற்றோரும், ஊர் மக்களும் மையங்களை நிர்வகிப்பதில் பெரும் பங்கேற்பர். குழந்தைகள் இழந்ததை மீட்பர்; முன்பு காணாத புதியவற்றையும் பெறுவர் என்பது திட்டத்தின் நோக்கம். வகுப்பறையின் மூச்சு முட்டும் சூழலுக்கு மாற்றாக, மனப்பாடம் செய்து கொட்டும் புரியாத கற்றலுக்கு மாற்றாக, சுதந்திரக் காற்று வீச, பாடலும், ஆடலும், ஒலிக்க, குழந்தைகளின் கேள்விகளும், ஆரவாரமும் கட்டற்று பொங்கி வர, அவற்றையெல்லாம் பெற்றோரும், ஊராரும் கண்டு மகிழ, கல்வி நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. வரவேற்பையும், விமர்சனங்களையும், தாக்குதல்களையும் திட்டம் சந்தித்தது.

திட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த பின்... அதன் சொரூபமாக, வடிவமாகக் காட்சியளிப்பவர்கள் அதனை நடத்தும் தன்னார்வலர்கள். தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் மையங்களில் கற்பிக்க விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு செய்யுமாறு அரசு அறிவித்த போது, ஓர் அதிசயம் காத்திருந்தது. ஒரு லட்சத்துத் தொன்னூறாயிரம் பதிவுகள். அனைவரும் பெண்கள். கிராமங்களில், சிற்றூர்களில் வீடுகளில் முடங்கிக் கிடந்த பெண்கள், பட்டதாரிகள், பள்ளி முடித்தவர்கள் திரண்டு வந்தனர். அரசு நடத்திய பல கட்டத் தேர்வுகளை அனாயாசமாகக் கடந்து, எதிர்ப்புகளைத் தவிடு பொடியாக்கி, தலை நிமிர்ந்து நிற்கும் கல்விப் படை இது. திட்டம் வகுக்கும் போது சிந்தித்தும் பார்க்காத படை. தமிழ் சமூகப் பார்க்கடலைக் கடைந்த போது, அதன் ஆழத்திலிருந்து, எதிர்பாராமல் எழுந்து, மண்ணுக்கும், விண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்த மகாசக்தி.

தன்னார்வலர்களின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் காண்போரையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது. பல காலம் ஆசிரியர் இயக்கத் தலைவராக இருந்த ஒருவர் சொல்கிறார், “அந்த சகோதரிகளைப் பார்த்தால், காலில் விழ வேண்டும் போல் இருக்கிறது.” பலர் புதுப்புது கற்பித்தல் முறைகளைக் கையாளுகிறார்கள். தங்கள் சொந்த செலவிலேயே கல்வி உபகரணங்களைத் தயாரிக்கிறார்கள். சென்னை தீவுத் திடலில் நடந்த பொருட்காட்சியில் இல்லம் தேடிக் கல்வி அரங்கம் அனைவரையும் கவ்வி இழுத்தது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சாபக்கேட்டிற்கு, பள்ளிகள் சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்டுக் கிடப்பதற்கு , விமோசனம் தேடும் வாய்ப்பும் தென்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான தேர்தல்களில் உறுப்பினர்களாக ஏராளமான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளியையும், சமுதாயத்தையும் இணைக்கும் சங்கிலி அவர்கள். அந்நியப்பட்டவை அன்யோன்யப்படும் விடியல் தென்படுகிறது.

மையங்களில் புதிய கல்வி; சுவர்களை உடைத்த, தடைகளைத் தகர்த்த கல்வி; ‘ டீச்சர்’ என்ற அதிகாரச் சொல்லிற்கு பதிலாக, ‘அக்கா’ என்ற அன்புச் சொல். அன்பின் அரவணைப்பில் அச்சம் தவிர்த்த கற்றல். கேள்வி கேட்கலாம்; சக மாணவருடன் சேர்ந்து விடை தேடலாம்; விடைகள் பலவாயினும் கடிதல் இல்லை; விடுகதைகள் போடலாம். பாடிக் கற்கலாம்; கற்றதை வரையலாம்; நடிக்கலாம். கற்பனைக் குதிரையைத் தட்டி விடலாம்; விண்ணை நோக்கிப் பறக்கலாம். குழந்தைகள் ஆர்வத்துடன் ஓடி வருகிறார்கள். அக்காவிற்காகக் காத்திருக்கிறார்கள். வகுப்பு முடிந்தும் போக மறுக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பத்தில் ஆத்திரமும், பொறாமையும் கொண்டவர்கள், மையங்களுக்குப் போக மறுத்தவர்கள், இன்று புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

உலகம் முழுதும், பல காலமாக மாற்றுக் கல்வி இயக்கங்களும், புரட்சியாளர்களும் கனவு கண்ட கல்வி இதுதானோ? கொரானாவின் கொடையாக நம் மடியில் வந்து வீழ்ந்திருக்கிறதோ?

தமிழ்நாடு இன்று மாடல் ஆகி இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்- சமூக செயல்பாட்டாளர் ஜான் டிரீஸ் போகுமிடமெல்லாம் ‘ தமிழகத்தைப் பாருங்கள்’ என்று சொல்கிறார்.

குறைகளற்ற நிறைகளேது? - கனவு மெய்ப்பட செய்ய வேண்டியதோ ஏராளம். திட்ட வடிவில் இருக்கும் சில குறைகள் நீக்கப்பட வேண்டும். அரசு அமைப்பை உருவாக்கிவிட்டது. அமைப்பில் ஆன்மாவைக் காணும் பொறுப்பு நம் அனைவரினுடையது.”

கட்டுரையாளர்: வே.வசந்திதேவி | தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

- தொகுப்பு: இந்து குணசேகர்



Read in source website

தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. இப்பிரிவின் செல்லும் தன்மையைக் கேள்விக்குட்படுத்திப் பத்திரிகையாளர்களால் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்குகளை மாற்ற முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது. தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும். வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது.

தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசத் துரோகச் சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்துக்காகவே அச்சட்டப்பிரிவைச் செல்லும் என்று அறிவித்த முன்னோடித் தீர்ப்பு ஒன்றை மறுபரிசீலிக்க வேண்டிய தேவையில்லை என்பது, இவ்விஷயத்தில் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதே கருத்துரிமை. ஆனால், காலனிய காலத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட தேசத் துரோகச் சட்டப்பிரிவைக் கருத்துரிமைக்கான கட்டுப்பாடாக இனிமேலும் தொடர வேண்டுமா என்பதுதான் கேள்வி. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பதே தேசத் துரோகம் என்ற பார்வையிலிருந்து உருவானது இதச பிரிவு 124(அ). சுதந்திரம் பெற்ற பிறகும், அதைத் தொடரத்தான் வேண்டுமா?

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பதே அப்போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்குகளின் வரலாறுதான். தேசத் துரோக வழக்குகளில் காலனிய ஆதிக்கம் மட்டுமல்ல, அதனூடாக நிறவெறிப் போக்கும் சேர்ந்தியங்கியது. 1878-ல் இயற்றப்பட்ட பிராந்திய மொழிகள் பத்திரிகைச் சட்டப்படி தலைவர்கள் தாங்கள் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய, வெளியிட்ட செய்திகளுக்காகவும் கட்டுரைகளுக்காகவும் தேசத் துரோக வழக்குகளை எதிர்கொண்டனர்.

பாலகங்காதர திலகர் இரண்டு முறை தேசத் துரோக வழக்குகளை எதிர்கொண்டார். அவற்றில் ஒரு வழக்கில் வெற்றிபெறவும் செய்தார். புனே மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருடைய வழக்கறிஞராக முகம்மது அலி ஜின்னா வாதாடினார் என்றாலும், அவரால் மாவட்ட நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியாமல் போனது. ஆனால், அவ்வழக்கை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து திலகரை தேசத் துரோக வழக்கிலிருந்து விடுவித்தார்.

1937-ல் மெக்காலே தயாரித்த குற்றவியல் சட்ட வரைவிலேயே இந்தச் சட்டப்பிரிவு இடம்பெற்றிருந்தபோதிலும், இந்தியத் தண்டனைச் சட்டத்தை இயற்றியபோது, அது சேர்க்கப்படவில்லை. தேசத் துரோகக் குற்றத்துக்கான அப்போதைய சட்டப்பிரிவுகளில் இருந்த போதாமைகளைக் களையும் நோக்கத்தில், அக்குற்றத்துக்கான வரையறையும் தண்டனையும் 1870-ல்தான் இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, பின்பு அது 1898-ல் திருத்தப்பட்டது.

தேசத் தந்தை காந்தியும் ஜவாஹர்லால் நேரு, மௌலானா ஆஸாத் போன்ற பெருந்தலைவர்களும் இக்குற்றச்சாட்டின் பேரில் கைதாகியிருக்கிறார்கள். அதனால்தான் இந்தச் சட்டப்பிரிவு நடைமுறைக் காரணங்களுக்காக மட்டுமின்றி, வரலாற்றுக் காரணங்களுக்காகவும் நீடிக்கக் கூடாது என்ற கருத்தை நாடாளுமன்றத்திலேயே நேரு வெளிப்படுத்தினார். ஆனாலும், அது தொடரவே செய்கிறது. ஆனால், சமீப காலமாக அரசுக்கு எதிரான கருத்துகளைப் பகிரும் பத்திரிகையாளர்களுக்கும் மாணவர் தலைவர்களுக்கும் எதிராக அந்தச் சட்டப்பிரிவைக் கையாளும் வழக்கம் உருவாகியிருக்கிறது.

இந்திய அரசமைப்பு விவாதிக்கப்பட்டபோதும்கூட, தேசத் துரோகம் குறித்த கூறு விவாதிக்கப்பட்டது. ஆனால், அதை இறுதிசெய்யும்போது, தேசத் துரோகம் குறித்த வார்த்தைகள் மிகுந்த கவனத்துடன் தவிர்க்கப்பட்டன. அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கான கருத்துரிமை மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்குத் தடையாகிவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே கருத்துரிமை தொடர்பான அரசமைப்புக் கூறில் தேசத் துரோகம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது.

1950-ல் ரொமேஷ் தாப்பர் வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த வார்த்தை அரசமைப்பில் தவிர்க்கப்பட்டதற்கான காரணம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தீர்ப்பைப் பின்பற்றி 1952-ல் மாஸ்டர் தாரா சிங் வழக்கில் பஞ்சாப் உயர் நீதிமன்றமும் 1958-ல் ராம் நந்தன் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றமும் தேசத் துரோகக் குற்றத்துக்கான 124(அ) சட்டப்பிரிவைச் செல்லாது என்றே அறிவித்தன. நீதிபதி ஜி.எஸ்.ராஜத்யாக்ஷா தலைமையிலான பத்திரிகை ஆணையத்தின் அறிக்கையும், இதச பிரிவு 124(அ) நீக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அளித்துள்ளது.

1962-ல் கேதார் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இந்திய தண்டனைச் சட்டத்தில் 124(அ) பிரிவைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. ஆனால், அத்தீர்ப்பில் விதித்த கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து மாறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. இப்போது, அந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாமா என்பது குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது. இந்தியச் சட்ட அமைப்புமுறையில், காலனிய அம்சங்களைத் துடைத்தெறிய வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளுமா இல்லை மறுக்குமா என்பது இன்றோ நாளையோ தெரிந்துவிடும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பதே தேசத் துரோகம் என்ற பார்வையிலிருந்து உருவானது

இதச பிரிவு 124(அ). சுதந்திரம் பெற்ற பிறகும், அதைத் தொடரத்தான் வேண்டுமா?



Read in source website

இதற்கு முன்பு எந்த முதலமைச்சரும் பதவியேற்கும்போது இருந்திராத சூழலில்தான் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஒரு புதிய அரசுக்கு முதல் 6 மாதங்களில் கிடைக்கும் ‘ஹனிமூன்’ காலம் என்ற அனுகூலம் கூட ஸ்டாலின் அரசுக்குக் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே கரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியை ஸ்டாலின் அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் கரோனா; பிறகு மழை, வெள்ளம் என முதல் 6 மாதங்கள் பேரிடர்களிலேயே ஆட்சியாளர்கள் சக்தியைச் செலவழிக்க வேண்டியிருந்தது.

எனவே, ஒரு புதிய அரசை ஓராண்டில் மதிப்பிடுவதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை. அதே வேளையில், ஒரு புதிய அரசு ஆட்சி செய்யும் முறையை மதிப்பீடு செய்யலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவியேற்ற திமுக அரசு, எடுத்த எடுப்பிலேயே தொலைநோக்குப் பார்வையோடு பல துறைகளின் பெயர்களை மாற்றம் செய்திருந்தது. குறிப்பாக, பொதுப்பணித் துறையின் கீழ் இருந்த நீர்வளத் துறையைத் தனியாகப் பிரித்தது ஒரு நல்ல தொடக்கம்.



Read in source website