Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







20-05-2024
Monday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News







2022 இந்து தமிழ் திசை நாளிதழில் வந்த TNPSC Group 4 தேர்வுக்கான மாதிரி வினா விடைகள்



கடந்த (சனிக்கிழமை (ஏப்ரல் 30 ) அன்று குரூப்-4 தேர்வு மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் என்று அறிவித்திருந்தோம். மே 2 முதல் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பகுதிவாரியாக இந்த வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் பதிவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி இன்று இந்த வினா-விடைத் தொகுப்பின் முதல் பகுதியை வெளியிடுகிறோம்.

தமிழ்நாடு-1

1. தமிழ்நாட்டின் பரப்பளவு எத்தனை லட்சம் சதுர கிலோமீட்டர்?

அ) 2.1
ஆ) 1.3
இ) 1.7
ஈ) 3.1

2. இந்தியாவில் பரப்பளவைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது மாநிலம்?

அ) 6ஆவது
ஆ) 8 ஆவது
இ) 10 ஆவது
ஈ) 12ஆ வது

3. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட்தொகை எவ்வளவு?

அ) 5.21கோடி
ஆ) 6.21கோடி
இ) 7.21கோடி
ஈ) 8.21கோடி

4. இந்தியாவில் மககள்தொகையைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம்?

அ) 6ஆவது
ஆ) 8 ஆவது
இ) 10 ஆவது
ஈ) 12ஆ வது

5. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி எவ்வளவு?

அ) 850/ச.கிமீ
ஆ) 650/ச.கிமீ
இ) 550/ச.கிமீ
ஈ) 750/ச.கிமீ

6. 2011 மக்கள்தொகை கணக்கின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?

அ) 66.66%
ஆ) 69.6%
இ) 90.33%
ஈ) 80.33%

7. தமிழ்நாட்டின் தற்போதைய பாலின விகிதம் யாது?

அ) 946/1000
ஆ) 896/1000
இ) 996/1000
ஈ) 1026/1000

8. தமிழ்நாட்டின் கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

அ) 1076 கிமீ
ஆ) 1367 கிமீ
இ) 876 கிமீ
ஈ) 967 கிமீ

9. சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் எது?

அ) 14 - 01 - 1971
ஆ) 14 - 03 - 1970
இ) 14 - 01 - 1969
ஈ) 14 - 03 - 1973

10. தமிழ்நாடு அரசு சின்னமான ஆண்டாள் கோயில் எங்குள்ளது?

அ) திருவாரூர்.
ஆ) திருவாடானை
இ) திருவில்லிபுத்தூர்
ஈ) திருச்சி

11. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?

அ) பருந்து.
ஆ) மரகதப்புறா
இ) மயில்.
ஈ) சிட்டுக்குருவி

12. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

அ) கபடி.
ஆ) வாலிபால்
இ)ஹாக்கி.
ஈ) வலைப்பந்து

13. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

அ) மல்லிகை.
ஆ) ரோஜா
இ) செவ்வந்தி.
ஈ) செங்காந்தள்

14. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

அ) தென்னை.
ஆ) பனை
இ) வேம்பு.
ஈ) வாழை

15. தமிழ்நாட்டின் மாநிலப் பழம் எது?

அ) மா.
ஆ) பலா.
இ) வாழை.
ஈ) கொய்யா

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

விடைகள்:

1. ஆ.1.3

2. இ. 10 வது

3. இ. 7.21கோடி

4. அ. 6வது

5. இ. 550/ச.கிமீ

6. ஈ. 80.33%

7. இ. 996/1000

8. அ. 1076 கிமீ

9. இ. 14 - 01 - 1969

10. இ. ஶ்ரீவில்லிபுத்தூர்

11. ஆ. மரகதப்புறா

12. அ. கபடி

13. ஈ. செங்காந்தள்

14. ஆ. பனை

15. ஆ. பலா



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (மே 2) அன்று பகுதி-1இல் முதல் 15 வினாக்களை வெளிட்டிருந்தோம். இது அடுத்த 15 வினாக்கள்:-

தமிழ்நாடு - 1


16. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

அ) தெருக்கூத்து

ஆ) பரத நாட்டியம்

இ) கதகளி

ஈ) கரகாட்டம்

17. களப்பிரர்கள் எந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தை ஆண்டதாக கருதப்படுகிறது?

அ) கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இ) கி.பி. 4 ஆம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 6 ஆம் நூற்றாண்டு


18. யுனெஸ்கோவின் பாரம்பரியக் களமான மாமல்லபுர கடற்கரைக்கோயில் பல்லவர்களால் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?

அ) கி.பி. 8 ஆம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

இ) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 11 ஆம் நூற்றாண்டு

19. பல்லவ சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னன் யார்?

அ) நந்தி வர்மன்

ஆ) அபராஜிதன்

இ) மகேந்திரவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்ம வர்மன்

20. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஆதித்ய சோழனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?

அ) முதலாம் நரசிம்ம வர்மன்

ஆ) அபராஜிதன்

இ) மகேந்திரவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்ம வர்மன்

21. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?

அ) 17 - 12 - 2021

ஆ) 11 - 03 - 1970

இ) 14 - 01 - 1969

ஈ) 14 - 03 - 2021

22. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசால் தமிழ் மாநில பாடலாக அறிவிக்கப்பட்ட நாள் எது?


அ) 17 - 12 - 2021

ஆ) 11 - 03 - 1970

இ) 14 - 01 - 1969

ஈ) 14 - 03 - 2021

23. 'நீராரும் கடலுடுத்த' பாடல் எங்கு கடவுள் வாழ்த்தாக பாடப்பட்டு வந்தது?

அ) மதுரை தமிழ்ச் சங்கம்

ஆ) கரந்தை தமிழ்ச் சங்கம்

இ) தருமபுரி ஆதீனம்

ஈ) குன்றக்குடி ஆதீனம்

24. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) பெ. சுந்தரனார்

25. புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் எந்த வருடம் வெளியிடப்பட்டது?

அ) 1891

ஆ) 1903

இ) 1956

ஈ) 1970

26. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் யார்?

அ) கே.வி. மகாதேவன்

ஆ) இளையராஜா

இ) ம.சு. விஸ்வநாதன்

ஈ) ஏ.ஆர். ரகுமான்

27. தமிழ்நாடு அரசு சின்னத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் எது?

அ) உழைப்பே உயர்வு

ஆ) வாய்மையே வெல்லும்

இ) தமிழ் வாழ்க
ஈ) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

28. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

அ) வரையாடு

ஆ) புலி

இ) யானை

ஈ) சிங்கம்

29. தமிழக அரசின் நாட்காட்டியாக திருவள்ளுவர் நாட்காட்டி எந்த வருடம் நடைமுறைக்கு வந்தது?

அ) 1969

ஆ) 1972

இ) 1977

ஈ) 1992

30. நாம் பயன்படுத்தும் கிரிகேரியன் நாட்காட்டியுடன் எத்தனை வருடங்களைக் கூட்டினால் திருவள்ளுவர் நாட்காட்டி கிடைக்கும்?

அ) 33

ஆ) 32

இ) 31

ஈ) 30

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

விடைகள்


16. ஆ. பரத நாட்டியம்

17. இ. கி.பி. நான்காம்

18. அ. கி.பி. எட்டாம்

19. ஆ. அபராஜிதன்

20. ஆ. அபராஜிதன்

21. ஆ. 11 - 03 - 1970

22. அ. 17 - 12 - 2021

23. ஆ. கரந்தை தமிழ்ச்சங்கம்
(1914 முதல்)

24. ஈ. மனோன்மணியம்
பெ. சுந்தரனார்

25. அ. கி.பி. 1891

26. இ. ம.சு. விஸ்வநாதன்

27. ஆ. வாய்மையே வெல்லும்

28. அ. வரையாடு

29. ஆ. 1972

30. இ. 31



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 4) அன்று பகுதி-2இல் 15 வினாக்களை வெளியிட்டிருந்தோம். இதோடு தமிழ்நாடு-1 என்கிற தலைப்பின் கீழ் 30 வினாக்கள் நிறைவடைகின்றன. இன்றைய பகுதியில் இந்தியா -1 என்னும் புதிய தலைப்பில் முதல் 15 வினாக்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்தியா-1
(குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

1. இந்தியாவில் முதன்முதலில் தொடர்ந்து இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) வெங்கட்ராமன்
ஈ) ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

2. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

3. இந்தியாவில் முதன்முதலாக தனது பிரதமர் பதவியை பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தவர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) மொரார்ஜி தேசாய்
ஈ) லால் பகதூர் சாஸ்திரி

4. இந்தியாவில் தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கமுடியாமல் போன முதல் பிரதமர் யார்?
அ) ஐ.கே. குஜ்ரால்
ஆ) சந்திரசேகர்
இ) தேவகௌடா
ஈ) சரண்சிங்

5. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

6. காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களில், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் யார்?
அ) மொரார்ஜி தேசாய்
ஆ) நரசிம்ம ராவ்
இ)அ.பி. வாஜ்பாய்
ஈ) வி.பி. சிங்

7. சுதந்திர இந்தியாவின் முதல் இளம் பிரதமர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) ராஜீவ் காந்தி
ஈ) வி.பி.சிங்

8. அறுதிப் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிரதமர் யார்?
அ) இந்திராகாந்தி
ஆ) சந்திரசேகர்
இ) ஐ.கே.குஜ்ரால்
ஈ) அ.பி.வாஜ்பாய்

9. இந்தியாவில் முதன்முதலில் துணைப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சரண் சிங்
இ) தேவிலால்
ஈ) லால் கிருஷ்ண அத்வானி

10. இந்தியாவில் அரசமைப்பு 352 விதியின்படி 1975 ஆம் வருட நெருக்கடிநிலை பிரகடனத்தின் போது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வெங்கட்ராமன்
ஆ) ஜாகீர் உசேன்
இ) பக்ருதீன் அலி அகமது
ஈ) ஜெயில் சிங்

11. சுதந்திர இந்தியாவில் இருமுறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

12. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

13. இந்தியாவில் முதன் முதலில் இருமுறை தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வி.வி.கிரி
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

14. உச்ச நீதிமன்ற தலைமை நீதீபதியாகவும், துணைக்குடியரசுத் தலைவராகவும், தற்காலிக குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
அ) ஜாகீர் உசேன்
ஆ) ஜாட்டி
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சி. ராஜகோபாலாச்சாரி
இ) மௌன்ட் பேட்டன் பிரபு
ஈ) ராஜேந்திர பிரசாத்

**

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

விடைகள்:-

1. அ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்

2. ஆ. R. K. சண்முகம் செட்டியார்

3. இ. மொரார்ஜி தேசாய்

4. ஈ. சரண் சிங்

5. அ. குல்ஜாரிலால் நந்தா

6. இ. அ.பி. வாஜ்பாய்

7. இ. ராஜீவ் காந்தி

8. ஈ. அ.பி. வாஜ்பாய்

9. அ. சர்தார் வல்லபபாய் படேல்

10. இ. பக்ருதீன் அலி அகமது

11. அ. குல்ஜாரிலால் நந்தா

12. அ. சர்தார் வல்லபபாய் படேல்

13. ஆ. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

14. ஈ. முகம்மது இதயத்துல்லா

15. இ. மவுண்ட் பேட்டன் பிரபு



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) அன்று வெளியிடப்பட்ட பகுதி-3இல் ‘இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)’ என்னும் தலைப்பின் கீழ் 15 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். அதே தலைப்பின்கீழ் அடுத்த 15 வினாக்கள் :-

இந்தியா-1
(குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

16. சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த முதல் இந்தியர் யார்?

அ) வல்லபபாய் படேல்

ஆ) சி. ராஜகோபாலாச்சாரி

இ) மவுன்ட் பேட்டன் பிரபு

ஈ) ராஜேந்திர பிரசாத்

17. ஐ.கே. குஜ்ரால் தனது பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் யார்?

அ) நரசிம்ம ராவ்

ஆ) பிரம்மானந்த ரெட்டி

இ) சீத்தாராம் கேசரி

ஈ) விஜய பாஸ்கர் ரெட்டி

18. இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சி சார்ந்து மூன்று முறை பதவி வகித்த பிரதமர் யார்?

அ) வி.பி.சிங்

ஆ) நரேந்திர மோடி

இ) அ.பி.வாஜ்பாய்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

19. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக செயல்பட்டு பின்னர் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் யார்?

அ) ஐ.கே.குஜ்ரால்

ஆ) மன்மோகன் சிங்
இ)
வி.பி.சிங்

ஈ) முகமது இதயத்துல்லா

20. இந்தியாவில் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்று பிரதமராக பதவி வகித்தவர் யார்?

அ) மொரார்ஜி தேசாய்

ஆ) தேவ கௌடா

இ) சந்திரசேகர்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

21. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

அ) பிரதீபா பாட்டில்

ஆ) இந்திரா காந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

22. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பெயர் யாது?

அ) பிரதீபா பாட்டில்
ஆ) இந்திராகாந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

23. அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி
இ) இந்திராகாந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

24. ஆண்டுதோறும் செம்டம்பர் ஐந்தாம் நாள் யாருடைய நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

25. ஆண்டுதோறும் நவம்பர் பதினான்காம் நாள் யாருடைய நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

26. எந்த ஆண்டு ஏவுகணை மனிதன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

அ) 1995
ஆ) 1996

இ) 1997
ஈ) 1998


27. 1963 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்று பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) ஜாகீர் உசேன்

ஆ) ஜெயில் சிங்

இ) சங்கர் தயாள் சர்மா

ஈ) அ.ப.ஜெ.அப்துல் கலாம்

28. சிறப்பு வாய்ந்த தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி

இ) இந்திரா காந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

29. ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதல்வராக இருந்து பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

ஆ) நீலம் சஞ்சீவி ரெட்டி

இ) வி.வி.கிரி

ஈ) வெங்கையா நாயுடு

30. இந்தியாவில் மைனாரிட்டி அரசுடன் ஐந்தாண்டு பதவிக் காலம் முழுமைக்கும் (அடுத்த பொதுத்தேர்தல் வரை) பிரதமராக இருந்தவர் யார்?

அ) இந்திரா காந்தி

ஆ) மொரார்ஜி தேசாய்

இ) நரசிம்ம ராவ்

ஈ) வி.பி.சிங்

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

விடைகள்:

16. ஆ. சி.ராஜகோபாலாச்சாரி

17. இ. சீத்தாராம் கேசரி

18. இ. அ.பி.வாஜ்பாய்

19. ஆ. டாக்டர் மன்மோகன் சிங்

20. இ. சந்திரசேகர்

21. ஆ. இந்திராகாந்தி

22. அ. பிரதீபா பாட்டீல்

23. அ. ஜவாஹர்லால் நேரு

24. ஆ. டாக்டர் ராதாகிருஷ்ணன்

25. அ. பண்டித ஜவாஹர்லால் நேரு

26. இ. 1997

27. அ. டாக்டர் ஜாகீர் உசேன்

28. ஆ. லால் பகதூர் சாஸ்திரி

29. ஆ. நீலம் சஞ்சீவி ரெட்டி

30. இ. நரசிம்ம ராவ்



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கட்கிழமை (மே 9) அன்று வெளியிடப்பட்ட பகுதி-4இல் ‘இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)’ என்னும் தலைப்பின் கீழ் 15 (16-30) கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று இந்தியா-2 (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ) என்னும் புதிய தலைப்பின் கீழ் முதல் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

இந்தியா-2 (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ)

1. இந்தியாவில் முதல் இரும்பு தொழிற்சாலை உருவாகிய நகரம் எது?
அ) ரூர்கேலா. ஆ) ஜாம்ஷெட்பூர்
இ) பிலாய். ஈ) தன்பாத்

2. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள பானிபட் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்

3. தமிழகத்தின் மீன்பிடித்தொழில் நகரமான நாகப்பட்டிணம் எந்தக் கடல் பகுதியில் அமைந்துள்ளது?
அ) வங்காள விரிகுடா
ஆ) மன்னார் வளைகுடா
இ) இந்து மகா சமுத்திரம்
ஈ) கட்ச் வளைகுடா

4. சாஞ்சி தூபி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) குஜராத் ஈ) பீகார்

5. மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய வணிகசந்தை நகரம் எது?
அ) போபால். ஆ) உஜ்ஜயினி
இ) இந்தூர். ஈ)ஓங்காரேஸ்வரம்

6. கஜூராஹோ கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)பீகார். ஈ) மத்திய பிரதேசம்

7. தென்னிந்தியாவின் தலைவாசல் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ )ஹைதராபாத் ஈ) தூத்துக்குடி

8. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தளங்களுள் ஒன்றான உஜ்ஜயினி நகரம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்

9. தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) மும்பை ஆ) புனே
இ)சென்னை ஈ) பெங்களூரு

10. கன்ஹா தேசியப் பூங்கா எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்

11. தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகர் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ) ஹைதராபாத் ஈ) திருப்பதி

12. குணோ வனவிலங்குகள் சரணாலயம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்

13. தென்னிந்தியாவின் நெசவுத்தொழில் தலைநகரான (மான்செஸ்டர்) எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அ) தாமிரபரணி ஆ) பவானி
இ) நொய்யல் ஈ) காவிரி

14. செம்பு மற்றும் வைர உற்பத்தியில் முதன்மையாக உள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ)மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்

15. நீராறு அணை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) நீலகிரி ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை ஈ) கோயம்புத்தூர்

16. சர்ஜு ஆற்றின் துணை ஆறான கோமதி எந்த இந்திய மாநிலத்தில் பாய்கிறது?
அ) உத்தராகண்ட் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்

17. சூரத், பரூச் ஆகிய பன்னாட்டு வணிக நகரங்கள் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளன?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மகாராஷ்டிரா ஈ) பீகார்

18. ஜார்க்கண்ட் என்பதன் பொருள் யாது?
அ) மக்கள் கூட்டம் ஆ) நீர்ப்பகுதி
இ) காடுகள் நிறைந்த நிலப்பரப்பு ஈ) மலைகள் நிறைந்த பகுதி

19. இந்திய அரசின் திட்டக்குழு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள டாங் மாவட்டம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) பீகார்
இ)ஹரியானா ஈ) குஜராத்

20. கோனாரக் - சூரிய கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) ஒடிசா ஈ) பீகார்

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

விடைகள்:

1. ஆ) ஜாம்ஷெட்பூர் (ஜார்க்கண்ட்)

2. இ. ஹரியானா

3. அ. வங்காள விரிகுடா

4. ஆ. மத்திய பிரதேசம்

5. இ. இந்தூர்

6. ஈ. மத்தியப பிரதேசம்

7. அ. சென்னை

8. ஆ. மத்திய பிரதேசம்

9. இ. சென்னை

10. இ. மத்திய பிரதேசம்

11. அ. சென்னை

12. இ. மத்திய பிரதேசம்

13. இ. நொய்யல் (கோயம்புத்தூர்)

14. ஆ. மத்திய பிரதேசம்

15. ஈ. கோயம்புத்தூர் (பரம்பிக்குளம் ஆழியாறு பாசனதிட்டம்)

16. அ. உத்தராகண்ட்

17. ஆ. குஜராத்

18. இ. காடுகளைக்கொண்ட நிலப்பரப்பு

19. ஈ. குஜராத்

20. இ. ஒடிசா



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 11) அன்று வெளியிடப்பட்ட பகுதி-5இல் ‘இந்தியா-2இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று தமிழ் நாடு -2
(தமிழக அரசியல் - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன:

தமிழ் நாடு -2 (தமிழக அரசியல் - அ)

1. இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) சி. ராஜகோபாலாச்சாரி
ஈ) கு. காமராஜர்

2. இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) சி. ராஜகோபாலாச்சாரி
ஈ) கு. காமராஜர்

3. தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) ஜெ.ஜெயலலிதா
இ) மு.கருணாநிதி
ஈ) கு. காமராஜர்


4. தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) ஜெ.ஜெயலலிதா
இ) மு.கருணாநிதி
ஈ) கு. காமராஜர்

5. சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?
அ) எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) மு.கருணாநிதி
ஈ) எஸ்.டி. சோமசுந்தரம்

6. எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?
அ) ஜானகி ராமச்சந்திரன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) மு.கருணாநிதி
ஈ) எஸ்.டி. சோமசுந்தரம்

7. சி.ராஜகோபாலாச்சாரி தனது முதல்வர் பதவியை 1939 இல் ராஜினாமா செய்ததற்கு பின் அடுத்து 7வருடங்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றவர் யார்?

அ) சுப்பராயுலு
ஆ) ஓமாந்தூர் பி. ராமசாமி
இ) டி.பிரகாசம்
ஈ) கு. காமராஜர்

8. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
உலகத்தமிழ் மாநாடு. முதல்வர்
அ) இரண்டாம் - அண்ணாதுரை
ஆ) ஐந்தாம். - எம்.ஜி.ஆர்
இ) எட்டாம் - ஜெயலலிதா
ஈ) பத்தாம் - கருணாநிதி

9. நீதிக்கட்சி எந்த ஆண்டுகளில் சென்னை மாகாணத்தை ஆண்டது?
அ) 1921 -1926
ஆ) 1926 -1931
இ) 1936 -1939
ஈ) 1942 - 1947

10. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
கட்சி. தோன்றிய ஆண்டு
அ) தி.மு.க. 1949
ஆ) அ.தி.மு.க. 1970
இ) த.மா.கா. 1996
ஈ) தே.மு.தி.க. 2004

11. ஆதி திராவிடர் மகாஜன சபையை எந்த வருடம் இரட்டைமலை சீனிவாசன் நிறுவினார்?
அ) 1861
ஆ) 1876
இ) 1886
ஈ) 1891

12. இங்கிலாந்து நாடாளுமன்ற கவுன்சில் முன் சாட்சியளிக்க தமிழர் சத்தியமூர்த்தி எந்த வருடம் அனுப்பி வைக்கப்பட்டார்?
அ) 1917 ஆ) 1918
இ) 1919 ஈ) 1920

13. திருநெல்வேலியில் பிறந்த 'காயிதே மில்லத்' அவர்களின் இயற்பெயர் யாது?
அ) முகமது இஸ்மாயில்
ஆ) முகமது இக்பால்
இ) காதர் மொய்தீன்
ஈ) அப்துல் சமது

14. பகத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
அ) பி. ராமமூர்த்தி
ஆ) எஸ். சத்தியமூர்த்தி
இ) ஜீவா என்ற மூக்குத்தி மூக்காண்டி
ஈ) பாலதண்டாயுதம்

15. தென்னிந்திய ரயில்வே தொழிற்சங்கம் உருவாகக் காரணமானவர் யார்?
அ) பி. ராமமூர்த்தி
ஆ) எஸ். சத்தியமூர்த்தி
இ) ஜீவா
ஈ) சிங்காரவேலர்

16. எட்டு வருடங்கள் நடைபெற்ற காளையார்கோவில் போரின் முடிவில் சிவகங்கையை மீட்ட தமிழ் வீராங்கனை யார்?
அ) ராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) வள்ளியம்மை
ஈ) அருண்டேல்

17. "தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்" என்ற நாவலை எழுதியவர் யார்?
அ) மூவலூர் இராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) தில்லையாடி வள்ளியம்மை
ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

18. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் கொண்டுவர மிகவும் உதவியர் யார்?
அ) மூவலூர் ராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) தில்லையாடி வள்ளியம்மை
ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

19. "இந்தியாவின் புனித மகள்" என காந்தியடிகளால் போற்றப்பட்டவர் யார்?
அ) மூவலூர் இராமமிர்தம்
ஆ) வேலு நாச்சியார்
இ) தில்லையாடி வள்ளியம்மை
ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

20. ருக்மணிதேவி அருண்டேல் எந்த ஆண்டில் கலாஷேத்ரா நடனப்பள்ளியை நிறுவினார்?
அ) 1926 ஆ) 1930
இ) 1932 ஈ) 1936

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

பகுதி-6இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்:


1. ஆ. ஓமாந்தூர் பி. ராமசாமி

2. இ. சி. ராஜகோபாலாச்சாரி

3. அ. எம்.ஜி. ராமச்சந்திரன்

4. இ. மு. கருணாநிதி

5. ஆ. நெடுஞ்செழியன்

6. ஆ. நெடுஞ்செழியன்

7. இ. டி.பிரகாசம்

8. ஈ. மு.கருணாநிதி

9. அ. 1921-1926

10 ஆ. அ.தி.மு.க.(1972)

11. ஈ. 1891

12. இ. 1919

13. அ. முகமது இஸ்மாயில்

14. இ. ஜீவா என்கிற பா.ஜீவானந்தம்

15. அ. பி. ராமமூர்த்தி

16. ஆ. வேலு நாச்சியார்

17. அ) மூவலூர் இராமமிர்தம்

18. ஈ) ருக்மணிதேவி அருண்டேல்

19. இ) தில்லையாடி வள்ளியம்மை

20. ஈ) 1936



Read in source website


பொது - 1 (உலகம் - அ)

1. பொருத்துக:
A. அலெக்சாண்டர் - 1.ஜெர்மனி
B. ஹிட்லர். - 2. ரஷ்யா
C. கோசிஜின். - 3. அமெரிக்கா
D. ரூசோல்ட். - 4. கிரேக்கம்
அ) A-4, B-1, C-2, D-3
ஆ) A-1, B-4, C-3, D-2
அ) A-4, B-1, C-3, D-2
அ) A-1, B-4, C-2, D-3

2. பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்க:
நாடு சிறப்பு
அ) பின்லாந்து - ஏரிகள்
ஆ) துருக்கி. - நோயாளி
இ) நெதர்லாந்து - தானியங்கள்
ஈ) நார்வே. - சூரிய உதயம்

3. சரியாக பொருந்தியதை தேர்ந்தெடுக்க:
நாடு நாணயம்
அ) இலங்கை - ரூபாய்
ஆ) மலேசியா - ரியாத்
இ) ஜப்பான் - பீசோ
ஈ) சிங்கப்பூர் - யென்

4. விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் பங்கேற்று வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழ்த்திய நகரம் எது?
அ) லாஸ் ஏஞ்சல்ஸ்
ஆ) சிகாகோ
இ) வாஷிங்டன்
ஈ) நியூ யார்க்

5. கீழ்க்கண்டவற்றுள் எந்த மொழி ஐக்கிய நாடுகள் அவையின் அலுவல் மொழி அல்ல?
அ) பிரெஞ்ச். ஆ) சீனம்
இ) லத்தீன். ஈ) ஸ்பானிஷ்

6. ஐக்கிய நாடுகள் அவையில் தொடர்ந்து எட்டு மணி நேரம் உரை நிகழ்த்திய இந்தியர் யார்?
அ) வாஜ்பாய் ஆ) பி.என்.பகவதி
இ) வி.கே.கிருஷ்ண மேனன் ஈ) சசி தரூர்

7. ஐ.நா. சார்பு சர்வதேசத் தொழிளாலர் அமைப்பு எந்த நகரில் தன் தலைமையிடத்தை கொண்டுள்ளது?
அ) பாரீஸ். ஆ) தி ஹேக்
இ)வாஷிங்டன் ஈ) ஜெனீவா

8. வருடந்தோறும் உலக மக்கள்தொகை நாள் என்றைக்கு கொண்டாடப்படுகிறது?
அ) ஆகஸ்ட் 12
ஆ) ஜூலை 11
இ) அக்டோபர் 24
ஈ) டிசம்பர் 10

9. ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமையிடம் எந்த நகரில் உள்ளது?
அ) பெர்லின். ஆ) பாரீஸ்
இ) லண்டன். ஈ) பிரஸ்ஸெல்ஸ்

10. கீழ்க்கண்ட எந்த உலக அமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக இல்லை?
அ) G - 5. ஆ) G - 15
இ) G - 20 ஈ) G - 24

11. பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்க :
நாடு தலைநகர்
அ) ஆஸ்திரியா - வியன்னா
ஆ) எகிப்து - கெய்ரோ
இ) நெதர்லாந்து - ஆம்ஸ்டர்டாம்
ஈ) இராக் - டெஹ்ரான்

12. 2020 - ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
அ)டோக்கியோ
ஆ) லண்டன்
இ) லாஸ் ஏஞ்சல்ஸ்
ஈ) அட்லாண்டா

13. கீழ்க்கண்ட நாடுகளில் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இல்லாத நாடு எது?
அ) சீனா. ஆ) இந்தியா
இ) ரஷ்யா. ஈ) சுவீடன்

14. யூரோ நாணயம் எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) 1997 ஆ) 1998
இ) 1999 ஈ) 2000

15. எந்த வருடம் சர்வதேச ஒட்டக இன ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது?
அ) 2022 ஆ) 2023
இ) 2024 ஈ) 2025

16. பூடான் நாட்டின் தலைநகரம் எது?
அ) திம்பு ஆ) காட்மண்டு
இ) காபூல் ஈ) நேபிய்டா

17. உலகளவில் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது நாடு எது?
அ) அமெரிக்கா ஆ) சீனா
இ) பிரேசில் ஈ) கனடா

18. எஸ்தோனியா நாடு எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?
அ) ஆசியா ஆ) ஆப்பிரிக்கா
இ) ஐரோப்பா ஈ) வட அமெரிக்கா

19. ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான பகுதியான கிளிமஞ்சாரோ எந்த நாட்டில் உள்ளது?
அ) தென்னாப்ரிக்கா
ஆ) டான்சானியா
இ) நைஜீரியா
ஈ) மொராக்கோ

20. உலகில் மிகவும் உலர்ந்த பகுதியாக கருதப்படும் பாலைவனம் எது?
அ) சகாரா ஆ) தார்
இ) கலகாரி ஈ) அடகாமா

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

பகுதி 7இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்

1. அ) A-4, B-1, C-2, D-3

2. ஈ) நார்வே - சூரிய உதயம்
(நடு இரவில் சூரியன் தோன்றும்)

3. அ) இலங்கை - ரூபாய்

4. ஆ) சிகாகோ

5. இ) லத்தீன்.

6. இ) வி.கே.கிருஷ்ண மேனன்

7. ஈ) ஜெனீவா

8. ஆ) ஜூலை 11

9. ஈ) பிரஸ்ஸெல்ஸ்

10. அ) G - 5

11. ஈ) இராக் - டெஹ்ரான்

12. அ) டோக்கியோ

13. ஈ) சுவீடன்

14. இ) 1999

15. இ) 2024

16. அ) திம்பு

17. ஈ) கனடா

18. இ) ஐரோப்பா

19. ஆ) டான்சானியா

20. ஈ) அடகாமா



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள், பிற போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா -விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (மே 16) அன்று வெளியிடப்பட்ட பகுதி-7 இல் பொது - 1 (உலகம் - அ) 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று இந்தியா - 3 (அரசமைப்பு - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன:

இந்தியா - 3 (அரசமைப்பு - அ)

1. உலகின் மிக நீண்ட அரசமைப்புச் சட்டம் (Constitution) இந்தியாவுடையது. உலகின் மிகச் சுருக்கமான அரசமைப்புச் சட்டம் எந்த நாட்டுடையது?
அ) இலங்கை ஆ) பங்களாதேஷ்
இ) மொராக்கோ ஈ) பின்லாந்து

2. இந்திய அரசமைப்பு எந்தப் பிரிவின்படி அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றம் மேற்கொள்ள முடியும்?
அ) 368 (1) அ) 358
இ) 386(1) ஈ) 356

3. இந்திய அரசமைப்பு இறுதி வடிவத்தில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்?
அ) 234 ஆ) 284
இ) 332 ஈ ) 248

4. இந்தியாவின் மிகப் பழமையான உயர் நீதிமன்றம் எங்குள்ளது?
அ) சென்னை ஆ) அலகாபாத்
இ) கொல்கத்தா ஈ) மும்பை

5. இந்திய அரசமைப்பின் எந்தப் பிரிவின்படி குடியரசுத் தலைவரைக் கைது செய்யவோ குற்றவியல் நடவடிக்கையோ எடுக்க முடியாது?
அ) 351 ஆ) 288
இ) 316 ஈ ) 361

6. எந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களுக்கு இடங்களை ஒதுக்கும் வழக்கத்தை ரத்துசெய்தது?
அ) 2016 ஆ) 2018
இ) 2019 ஈ) 2020

7. 12-03-1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து 78 உறுப்பினர்களுடன் தண்டி யாத்திரை புறப்பட்ட காந்தி எத்தனை கிலோமீட்டர் நடைப்பயணம் செய்தார்?
அ) 384 ஆ) 484
இ) 348 ஈ) 448

8. 1905 ஆம் வருடம் கர்சான் பிரபுவால் பிரிக்கப்பட்ட வங்காளம் எந்த ஆண்டில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது?
அ) 1909 ஆ) 1911
இ) 1912 ஈ) 1913

9. இந்திய அரசமைப்பின் எந்தச் சட்ட விதியின்படி உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்?
அ) 342 ஆ) 324
இ) 234 ஈ) 243

10. இந்திய அரசமைப்பு நிர்ணய அவை முதல் கூட்டம் நடைபெற்ற நாள் எது?
அ) 15-8-1946 ஆ) 9-12-1946
இ) 9-11- 1946 ஈ) 15-12-1946

11. இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவம்பர் 26 ‘இந்திய அரசமைப்பு நாளா’க எந்த ஆண்டில் முதல்முறையாகக் கொண்டாடப்பட்டது?
அ) 2000 ஆ) 2010
இ) 2015 ஈ) 2020

12. எந்த ஆண்டில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசமைப்பு நிர்ணய அவையை உருவாக்க பரிந்துரைத்தது?
அ) 1940 ஆ) 1941
இ) 1942 ஈ) 1943

13. அரசமைப்பு நிர்ணய அவை தொடங்கப்பட்டபோது அதன் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) பி.ஆர்.அம்பேத்கார்
இ) வல்லபபாய் படேல்
ஈ) சச்சிதானந்த சின்ஹா

14. இந்தியக் குடிமக்களின் அடிப்படை கடமைகள், எந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம்
பகுதி- 4இல் சேர்க்கப்பட்டன?
அ) 1976-42ஆவது ஆ) 1976-44ஆவது
இ) 1976-46ஆவது ஈ) 1976-48ஆவது

15. பொருத்துக:
A. சாதி, சமய, இன, நிற
அடிப்படையில் வேறுபடுத்தல்
கூடாது. - 1.பிரிவு 18
B. பொதுப்பணி, வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு - 2. பிரிவு 17
C. தீண்டாமை
ஒழிப்பு. - 3. பிரிவு 16
D. அரசு அணுமதியின்றி
பெறப்படும் பட்டயங்களைத்
தடை ய்தல். - 4. பிரிவு 15
அ) A-1, B- 2, C-3, D-4 ஆ) A-4, B-3, C-2, D-1
இ) A- 4, B-3, C-1, D-2 ஈ) A-1,B- 2,C-4, D-3

16. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) - 1980
ஆ) கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (RLEG) - 1983
இ) ஜவஹர் ரோஜ்ஹர் யோஜனா திட்டம் (JRY) - 1989
ஈ) பிரதம மந்திரி ரோஜ்ஹர் யோஜனா (PMRY) - 1996

17. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை சட்டம் - 1980
ஆ) கொத்தடிமை ஒழிப்புச் சட்டம். - 1976
இ) உடன்கட்டைஏறுதல் ஒழிப்புச் சட்டம் - 1829
ஈ) கைம்பெண் மறுமணச் சட்டம் - 1856

18. இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எந்தத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது?
அ) நேரடித் தேர்தல்
ஆ) விகிதாச்சார பிரதிநிதித்துவம்
இ) மக்களவை உறுப்பினர்களின் வழியாக மறைமுகத் தேர்தல்
ஈ) ஏதுமில்லை

19. கீழ்க்கண்ட தொடர்களில் ஆளுநருக்குப் பொருந்தாதது எது?
அ) நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்
ஆ) உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்
இ) ஒரு மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஈ) குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு பதவி நீட்டிப்பு செய்யலாம்; பதவிக் காலம் முடியும் முன்னரே பதவி நீக்கம் செய்யலாம்.

20. பொருத்துக:
A. அரசமைப்பு மூலமாகத் தீர்வு காணும் உரிமை. - 1. பிரிவு 29, 30
B. பண்பாடு, கல்வி உரிமை. - 2. பிரிவு 32
C. சுரண்டலுக்கு
எதிரான உரிமை. - 3. பிரிவு 23, 24
D. சமத்துவ உரிமை - 4. பிரிவு 14-18
அ) A-2,B-1,C-3,D-4 ஆ) A-1,B-2,C-4,D-3
இ) A-1,B-2,C-3,D-4 ஈ) A-4,B-3,C-2,D-1

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்


பகுதி 8இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்


1. இ) மொராக்கோ

2. அ) 368 (1)

3. ஆ) 284

4. இ) கொல்கத்தா. (1862)

5. ஈ ) 361

6. இ) 2019

7. அ) 384

8. ஆ) 1911

9. ஈ) 243

10. ஆ) 9-12-1946

11. இ) 2015

12. இ) 1942

13. ஈ) சச்சிதானந்த சின்ஹா

14. அ) 1976-42வது

15. ஆ) A-4, B-3, C-2, D-1

16. ஈ) பிரதம மந்திரி ரோஜ்ஹர் யோஜனா (PMRY) - 1996 (சரியான ஆண்டு - 1993)

17. அ) தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை சட்டம் - 1980 (சரியான ஆண்டு - 1987)

18. ஆ) விகிதாசார பிரதிநிதித்துவம்

19. இ) அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்

20. அ) A-1,B-,2, C-3,D-4



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 18) அன்று பகுதி-8 இல் இந்தியா - 3 (அரசமைப்பு - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று தமிழ்நாடு - 3 (தமிழக வரலாறு - அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு - 3
தமிழக வரலாறு - அ

1. 1863இல் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி ஒன்றைத் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் பல்லாவரம் பகுதியில் முதன்‌முதலாகக் கண்டறிந்தவர் யார்?
அ) வில்லியம் கிங்
ஆ) ராபர்ட் பூருஸ்பட்
இ) வில்லியம் ஜோன்ஸ்
ஈ) மார்ஷல்

2. தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட உலோகம் எது?
அ) செம்பு ஆ) தங்கம்
இ) இரும்பு ஈ) ஈயம்

3. தமிழகத்தில் பழைய மண்தாழிகள் கிடைக்கப்பெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) திருநெல்வேலி
ஆ) விருதுநகர்
இ) கன்னியாகுமரி
ஈ) மதுரை

4. பழங்காலத்தில் தமிழ் எழுத்தான பிராமி எழுத்துக்களைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு எது?
அ) உத்திரமேரூர்
ஆ) குடுமியான் மலை
இ) கழுகுமலை
ஈ) சிதம்பரம்

5. இமயத்திலிருந்து கற்களைக் கொண்டுவந்து கண்ணகிக்குச் சிலை வடித்த சேர மன்னர் யார்?
அ) ஜடவர்மன்
ஆ) செங்குட்டுவன்
இ) இரும்பொறை
ஈ) சேரலாதன்

6. சங்க காலத்தில் போர்வை என அழைக்கப்பட்ட ஊர் எது?
அ) கரூர்
ஆ) குளித்தலை
இ) முசிறி
ஈ) பேட்டவாய்த்தலை

7. கோவலனுக்குத் தவறாக தண்டனை அளித்த பாண்டிய மன்னன் யார்?
அ) ஜடவர்மன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) சுந்தர பாண்டியன்
ஈ) வீர பாண்டியன்

8. கும்பகோணம் மகாமகக் குளத்தைப் புதுப்பித்த நாயக்க மன்னர் யார்?
அ) அச்சுதப்ப நாயக்கர்
ஆ) திருமலை நாயக்கர்
இ) கோபால நாயக்கர்
ஈ) விஸ்வநாத நாயக்கர்

9. தஞ்சாவூரை ஆண்ட முதல் நாயக்க மன்னர் யார்?
அ) அச்சுதப்ப நாயக்கர்
ஆ) திருமலை நாயக்கர்
இ) செவப்ப நாயக்கர்
ஈ) விஸ்வநாத நாயக்கர்

10. மதுரை நாயக்கர் ஆட்சியில் முதல் மன்னர் யார்?
அ) அச்சுதப்ப நாயக்கர்
ஆ) திருமலை நாயக்கர்
இ) செவப்ப நாயக்கர்
ஈ) விஸ்வநாத நாயக்கர்

11. தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் மராத்திய மன்னர் யார்?
அ) முதலாம் பாஜிராவ்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) சிவாஜி
ஈ) பாஸ்கரராவ்

12. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழர் யார்?
அ) கட்டபொம்மன்
ஆ) மருது பாண்டியன்
இ) வேலுநாச்சியார்
ஈ) புலித்தேவன்

13. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த ஆண்டில் பிறந்தார்?
அ) 1721 ஆ) 1761
இ) 1781 ஈ) 1791

14. தஞ்சாவூரில் 'சரஸ்வதி மஹால்' நூலகத்தை உருவாக்கியவர் யார்?
அ) சிவாஜி
ஆ) முதலாம் சரபோஜி
இ) இரண்டாம் சரபோஜி
ஈ) இரண்டாம் பாஜி ராவ்

15. மேட்டூர் (ஸடேன்லி) நீர்த்தேக்கம் கட்டப்பட்ட ஆண்டு எது?
அ) 1924 ஆ) 1928
இ) 1930 ஈ) 1934

16. சேரன்மாதேவி என்கிற இடத்தில் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி முகாம் அமைத்தவர் யார்?
அ) வ.உ.சிதம்பரனார்
ஆ) சுப்ரமணிய சிவா
இ) வ.வே.சு. அய்யர்
ஈ) சுப்ரமணிய பாரதியார்

17. வேலூர் கோட்டை கலகம் எந்த ஆண்டில் நடைபெற்றது?
அ) 1706 ஆ) 1806
இ) 1860 ஈ) 1896

18. சர் தாமஸ் மன்றோ மூலம் தமிழகம் முழுவதும் ரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்ட வருடம் எது?
அ) 1820 ஆ) 1826
இ) 1840 ஈ) 1896

19. மாசிமகம் யாருடைய முக்கியத் திருவிழாவாகக் கருதப்பட்டது?
அ) சோழர்கள். ஆ) சேரர்கள்
இ) பாண்டியர்கள் ஈ) பல்லவர்கள்

20. கங்கைகொண்டசோழபுரம் என்கிற நகரை நிறுவியவர் யார்?
அ) ராஜராஜன்
ஆ) முதலாம் ராஜேந்திரன்
இ) இரண்டாம் ராஜேந்திரன்
ஈ) முதலாம் பராந்தகன்

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.


பகுதி 9இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்

1. ஆ) ராபர்ட் பூருஸ்பட்

2. இ) இரும்பு

3. அ) திருநெல்வேலி

4. இ) கழுகு மலை

5. ஆ) செங்குட்டுவன்

6. ஈ) பேட்டவாய்த்தலை

7. ஆ) நெடுஞ்செழியன்

8. அ) அச்சுதப்ப நாயக்கர்

9. இ) செவப்ப நாயக்கர்

10. ஈ) விஸ்வநாத நாயக்கர்

11. இ) சிவாஜி

12. ஈ) புலித்தேவன்

13. ஆ) 1761

14. இ) இரண்டாம் சரபோஜி

15. ஈ) 1934

16. இ) வ.வே.சு. அய்யர்

17. ஆ) 1806

18. அ) 1820

19. அ) சோழர்கள்

20. ஆ) முதலாம் ராஜேந்திரன்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 20) அன்று பகுதி-9 இல் தமிழ்நாடு - 3 (தமிழக வரலாறு - அ) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘பொது- 2’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

பொது - 2

1. காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஓரிகாமி என்னும் கலையைக் கண்டறிந்தவர்கள் யார்?
அ) இத்தாலியர் ஆ) ஜப்பானியர்
இ) சீனர் ஈ) இந்தியர்

2. உலகில் பாம்பு இனம் மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படுகிறது?
அ) நூறு கோடி ஆ) ஒரு கோடி
இ) பத்து கோடி ஈ) ஆயிரம் கோடி

3. ‘போரும் அமைதியும்’ (War and Peace) என்கிற நூலை எழுதியவர் யார்?
அ) வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆ) ஜான் மில்டன்
இ) பிளாட்டோ ஈ) லியோ டால்ஸ்டாய்

4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எந்த நாட்டில் உள்ளது?
அ) இங்கிலாந்து ஆ) அமெரிக்கா
இ) தென்னாப்பிரிக்கா ஈ) ரஷ்யா

5. கீழ்க்கண்ட தொடர்களில் பெரியாருக்குப் பொருத்தமற்றது எது?
அ) இந்திய அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
ஆ) பகுத்தறிவாளர் சங்கத்தை நிறுவினார்
இ) யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டது
ஈ) வைக்கம் வீரர் எனப் போற்றப்பட்டார்

6. மேரி கியூரிக்கு (1867-1934) பொருத்தமற்ற தொடர் எது?
அ) பிறந்த நாடு இங்கிலாந்து.
ஆ) இரண்டாம் முறை நோபல் பரிசு 1909இல் கிடைத்தது.
இ) பியரி கியூரி, மேரி கியூரி இருவரும் சேர்ந்து 1903இல் நோபல் பரிசு பெற்றனர்.
ஈ) பியரி கியூரி, மேரி கியூரி இருவரும் சேர்ந்து முதன்முதலில் பொலோனியத்தையும் ரேடியத்தையும் கண்டறிந்தனர்.

7. கணிதமேதை ராமானுஜத்தின் 75ஆவது பிறந்தநாளையொட்டி அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அவருடைய 125ஆவது பிறந்தநாள் எப்போது கொண்டாடப்பட்டது?
அ) 28-02-2012 ஆ) 07-04-2012
இ) 22-12-2012 ஈ) 08-05-2012

8. பொருத்துக :
A. ஷேக்ஸ்பியர் - 1. ஆங்கில நாடக ஆசிரியர்
B. மில்டன் - 2. ஆங்கிலக் கவிஞர்
C. பிளாட்டோ - 3. ரஷ்ய எழுத்தாளர்
D. டால்ஸ்டாய் - 4. கிரேக்கச் சிந்தனையாளர்
அ) A-1, B-2, C-3, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-4, B-3, C-2, D-1 ஈ) A-1, B-2, C-4, D-3

9. முதன்முதலில் இளங்கலை பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளி யார்?
அ) மேரி கியூரி ஆ) ஜார்ஜ் பெர்னாட் ஷா
இ) ஹெலன் கெல்லர் ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்

10. கீழ்க்கண்ட நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடுகள் எவை?
1. இலங்கை 2. சிங்கப்பூர்
3. மலேசியா
அ) 1, 2, 3 ஆ) 1, 2
இ) 2, 3 ஈ) 1, 3

11. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம் எது?
அ) தூத்துக்குடி ஆ) காஞ்சிபுரம்
இ) மதுரை ஈ) கும்பகோணம்

12. பொருத்துக:
A. கணக்கிடும் கருவி - 1. ஹோவார்டு ஜக்கன்
B. கணிணி - 2. சார்லஸ் பாபேஜ்
C. எண்ணிலக்கக் கணிணி - 3. பிளேஸ் பாஸ்கல்
D. வலைப்பின்னல் - 4. பிம் பெர்னர்லீ
அ) A-3, B-2, C-1, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-4, B-3, C-2, D-1 ஈ) A-1, B-2, C-4, D-3

13. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என முதன்முதலில் கூறியவர் யார்?
அ) கலிலியோ (இத்தாலி)
ஆ) தாலமி (எகிப்து)
இ) ஆரியபட்டர் (இந்தியா)
ஈ) கோபர்நிக்கஸ் (போலந்து)

14. அறிஞர் அண்ணாவால் தமிழகத்தின் ஆனி பெசன்ட் என அழைக்கப்பட்டவர் யார்?
அ) டாக்டர் முத்துலெட்சுமி
ஆ) குந்தவை நாச்சியார்
இ) மூவலூர் ராமாமிர்தம்
ஈ) ராணி மங்கம்மாள்

15. தூமகேது எனப்படுவது எது?
அ) ராகு, கேது
ஆ) வால் நட்சத்திரம்
இ) சனி
ஈ) நாள்மீன்

16. வருடந்தோறும் உலக வனவிலங்கு நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
அ) செப்டம்பர் 4
ஆ) டிசம்பர் 4
இ) நவம்பர் 4
ஈ) அக்டோபர் 4

17. பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளி அமெரிக்காவில் எந்த நகரத்தில் உள்ளது?
அ) பாஸ்டன் ஆ) சிகாகோ
இ) நியுயார்க் ஈ) வாஷிங்டன்

18. ரீயூனியன் தீவில் வாழும் தமிழர்கள் எந்த நாட்டவர்களால் ஒப்பந்தக் கூலிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்?
அ) ஆஸ்திரேலியா ஆ) பிரான்ஸ்
இ) இங்கிலாந்து ஈ) இலங்கை

19. வள்ளுவர் கூறும் ஞானப்பச்சிலை எது?
அ) துளசி ஆ) குப்பைமேனி
இ) தூதுவளை ஈ) கீழாநெல்லி

20. பொருத்துக:
A. பூச்சிக்கடி - 1. துளசி
B. இருமல் - 2. தூதுவளை
C. மஞ்சள்காமாலை - 3. கீழாநெல்லி
D. மார்புச்சளி - 4. குப்பைமேனி
அ) A1, B-2, C-3, D-4 ஆ) A-2, B-1, C-4, D-3
இ) A-4, B-3, C-2, D-1 ஈ) A-4, B-2, C-3, D-1


தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.


பகுதி-10இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்


1. ஆ) ஜப்பானியர்

2. இ) பத்து கோடி

3. ஈ) டால்ஸ்டாய்

4. அ) இங்கிலாந்து

5. அ) பாரத ரத்னா விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது

6. ஆ) இரண்டாம் முறை நோபல் பரிசு 1909 இல் கிடைத்தது (1911)

7. இ) 22-12-2012

8. ஈ) A-1,B- 2,C- 4, D-3

9. இ) ஹெலன் கெல்லர்

10. அ) 1, 2 மற்றும் 3

11. இ) மதுரை

12. அ) 3, 2, 1, 4

13. ஈ) கோபர்நிகஸ் (போலந்து)

14. இ) மூவலூர் ராமமிர்தம்

15. ஆ) வால் நட்சத்திரம்

16. ஈ) அக்டோபர் 4

17. அ) பாஸ்டன்

18. ஆ) பிரான்ஸ்

19. இ) தூதுவளை

20. ஈ) A-4,B- 2, C-3, D-1



Read in source website

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (மே 23) அன்று பகுதி-10 இல் தமிழ்நாடு - 3 (தமிழக வரலாறு - அ) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘இந்தியா-4’ (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - ஆ) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

நமது இந்தியா - 4

இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - ஆ

1. ஒடிசாவில் எந்த நகரத்தில் ஜெகநாதர் கோயில் உள்ளது?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கட்டாக் ஈ) கொனாரக்

2. இந்தியாவில் மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நகரத்தில் உள்ளது?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கட்டாக் ஈ) கொனாரக்

3. ஜாரவா பழங்குடி மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடம் எது?
அ) அந்தமான் ஆ) லட்சத்தீவு
இ) மாகே ஈ) யானம்

4. இந்தியாவின் ஏரிகள் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) ஜெய்ப்பூர் ஆ) அஜ்மீர்
இ) உதய்பூர் ஈ) கோட்டா

5. 18 - 05 - 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்கிற பெயரில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை எந்த நகரில் நடத்தியது?
அ) காந்திநகர் ஆ) தன்பாத்
இ) ராஞ்சி ஈ) பொக்ரான்

6. புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி அம்மன் மலைக்கோயில் அமைந்துள்ள உதம்பூர் எந்த மாநிலம்/மத்திய ஆட்சிப் பகுதியில் உள்ளது?
அ) இமாசல பிரதேசம்
ஆ) உத்தராகண்ட்
இ) ஜம்மு & காஷ்மீர்
ஈ) அருணாசல பிரதேசம்

7. இந்தியாவின் அரண்மனை நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) கொல்கத்தா ஆ) ஜெய்ப்பூர்
இ) மைசூரு ஈ) தஞ்சாவூர்

8. நிலப்பரப்புகளின் ஒற்றுமை காரணமாக இந்தியாவில் எந்த இடத்தை மகாத்மா காந்தி ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என குறிப்பிட்டுள்ளார்?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கௌசாணி ஈ) கொனாரக்

9. இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் (pink city) என அழைக்கப்படும் நகரம் எது?
அ) கொல்கத்தா ஆ) ஜெய்ப்பூர்
இ) மைசூரு ஈ) உதய்பூர்

10. எல்லோரா குகைக்கோயில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) குஜராத் ஆ) மகாராஷ்டிரம்
இ) ஒடிசா ஈ) பிஹார்

11. மகாராஷ்டிரத்தில் உள்ள அஜந்தா குடவரைக் கோயில்களைப் பற்றிக் குறிப்பெழுதி வைத்த சீனப் பயணி யார்?
அ) யுவான் சுவாங் ஆ) பாஹியான்
இ) இட்சிங்
ஈ) மார்க்கோ போலோ

12. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எந்த நகரில் உள்ளது?
அ) டெல்லி ஆ) சென்னை
இ) கொல்கத்தா ஈ) மும்பை

13. சரயு நதி பாயும் இந்திய மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்திர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) மகாராஷ்டிரம்

14. அல்மோரா சிறை இருக்கும் இந்திய மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) பிஹார்

15. 1972 ஆம் ஆண்டு எந்த நகரில் கணிதமேதை இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது?
அ) டெல்லி ஆ) சென்னை
இ) கொல்கத்தா ஈ) மும்பை

16. இந்தியாவின் மிகப் பெரிய மத்திய ஆட்சிப் பகுதி எது?
அ) சண்டிகர்
ஆ) அந்தமான் நிகோபர் தீவுகள்
இ) டெல்லி
ஈ) புதுச்சேரி

17 இயற்கைச் செழிப்புடன் காணப்படும் சுந்தரவன காடுகள் அமைந்துள்ள மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) மேற்கு வங்கம்

18. எந்த ஆண்டில் மேகாலயம் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றது?
அ) 1969 ஆ) 1970
இ) 1972 ஈ) 1974

19. ‘ஆப்பிள் மாநிலம்’ என அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
அ) ஜம்மு & காஷ்மீர்
ஆ) இமாசல பிரதேசம்
இ) உத்தரகாண்ட்
ஈ) அருணாசல பிரதேசம்

20. ‘இந்தியாவின் நறுமணத் தோட்டம்’ எனப் போற்றப்படும் மாநிலம் எது?
அ) கேரளம்
ஆ) இமாசல பிரதேசம்
இ) ஜம்மு & காஷ்மீர்
ஈ) அருணாசல பிரதேசம்

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.



Read in source website




Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us