DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 31-01-2023

 

நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. 

இந்தியாவில் 5G சேவைகளின் முன்னோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 34 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவைகளை வழங்கியுள்ளது. 

இதில், தமிழ்நாட்டில், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் தமிழகத்தில் 19 நகரங்களில் ட்ரூ  5ஜி சேவை கிடைக்கிறது. தற்போது 225 நகரங்களில் ஜியோ பயானாளர்கள் ட்ரூ 5G சேவைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். 

வெறும் 120 நாட்களில் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், இது தங்களது அடுத்த மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளது.



Read in source website

 

சென்னை: நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளக் காலங்களில் தடுப்புப் பணிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குப் பாராட்டு விழா சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களையெல்லாம்விட,  உங்களைப் பாராட்டக்கூடிய இந்த விழாவைத் தான் நான் பெருமையாகக் கருதுகிறேன்.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம்.  அந்த இரண்டு சாதனைகளைப் படைத்த காரணத்தால், மக்களிடத்திலே நமக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. ஒன்று – கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு.

 இரண்டாவது - மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு.

கரோனாவை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம்.

அடுத்த மழை வருவதற்கு முன்னால் அல்லது ஒரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னால், என்ன மழை பெய்தாலும் அந்த மழையின் காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காக நாம் உறுதி எடுத்துக் கொண்டோம். உறுதி எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அந்த உறுதியை எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டினோம் என்பது நாட்டிற்கும் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன், மிகப் பெரிய இரண்டு சாதனைகளை நாம் செய்து முடித்திருக்கிறோம்.  

சமூக வலைத்தளங்களில் - இது கடந்த முறை இங்கு தண்ணீர் தேங்கி இருந்தது என்று அந்தப் படத்தையும் போட்டு, இந்த முறை அந்தப் பகுதியில் தேங்கவில்லை என்ற அந்தப் படத்தையும் போட்டு மக்களிடத்தில் எடுத்துக் காட்டினார்கள். பொதுமக்களும் அதை வாட்ஸ்ஆப்-ல் பகிர்ந்த அந்த செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்தோம். நான் அந்த செய்திகளையெல்லாம் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு மக்கள் நம்மை மனதாரப் பாராட்டினார்கள். அதேபோல், ஊடகங்களும் பாராட்டின. நேரில் பார்க்கக்கூடிய பொதுமக்களும் நம்மை சந்திக்கிற நேரத்தில் தங்களுடைய பாராட்டுக்களையெல்லாம் வெளிப்படையாக தெரிவித்தார்கள்.  இப்படிப்பட்டப் பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணம் யார் என்று கேட்டீர்களென்றால், நீங்கள்தான். அதனால் தான், உங்களைப் பாராட்ட நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில்,  சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காவல்துறை ஆகிய துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்களாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களையெல்லாம்  ஒருங்கிணைத்து பணியாற்றியிருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவையும் மனதார பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 

அதேபோல் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சேகர் பாபு இரவு பகல் பார்க்காமல் அவர்கள் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். 

அதேபோல் சென்னை மாநகரத்தின் மேயராகப் பொறுப்பேற்று இன்றைக்கு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சகோதரி மேயர் பிரியா அவர்களும், துணை மேயர் மகேஷ்குமார் அவர்களும் 24 மணிநேரமும் இந்த மாநகருக்குள் சுற்றிச்சுழன்று பணிகளையெல்லாம் எந்த அளவிற்கு முடுக்கிவிட்டார்கள் என்பதை நேரடியாக நாமும் பார்த்தோம். 

அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய ககன் தீப் சிங் பேடி அவர்கள் ஆற்றிய பணி என்பது மிகமிக மகத்தானது ஒன்று. அனைத்துத் துறைகளையும் மிக சாமர்த்தியமாக ஒருங்கிணைத்து செயலாற்றி அதிலே வெற்றியும் கண்டிருக்கிறார் நம்முடைய ஆணையர் அவர்கள்.

அதேபோலவே, ஐந்து விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் அது ஒரு கையின் பலத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும்.  அப்படித்தான், தண்ணீர் நின்றால் - ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து அதை அகற்றியது மாநகராட்சி!

நீர் நிலைகளைத் தூர் வாரி வைத்திருந்தது நம்முடைய நீர்வளத்துறை!
சாலைகளை உடனடியாக சரி செய்து கொடுத்தது நெடுஞ்சாலைத் துறை!
சீரான மின்சாரத்தை வழங்கியது மின்சாரத் துறை!
பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டது நம்முடைய காவல்துறை!

இதைத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் சொல்கிறோம் அல்லவா அது தான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தால்தான் இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்திருக்கிறது.

மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். 

அரசாங்கத்தில் வேலை பார்க்கிறோம் - சம்பளம் வருகிறது என்று இல்லாமல், மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்கிற அந்த சேவை மனப்பான்மை உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலையில் நீங்கள் பணியாற்றிய காரணத்தில்தான் இந்தப் பாராட்டும், இந்தப் பெருமையும், இந்தப் புகழும் இன்றைக்கு இந்த அரசாங்கத்திற்கு, இந்த மாநகராட்சிக்கு, நமக்கெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது மிகமிக மகத்தான ஒன்று என்பதை நான் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

துப்புரவுப் பணியாளர்கள் என்ற அந்த சொல்லையே மாற்றியது  முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அவர்தான்,  தூய்மைப் பணியாளர் என்று மாற்றியவர். அந்தப் பணியின் கடினமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நீங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த முகமலர்ச்சியோடு நம்முடைய அரசாங்கத்தை மக்கள் பார்க்கிறார்கள்.
2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி பாராட்டும் உள்ளம் அனைவருக்கும் வந்தாக வேண்டும். பாராட்டுவதை வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும். வெளிப்படையாக பாராட்டினால்தான், அறிவுறுத்தவும், கேள்வி கேட்கவும் நாம் உரிமை பெற்றிடமுடியும். அந்த வகையில்,
* பெருநகர சென்னை மாநகராட்சி
* சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
* நீர்வளத்துறை
* நெடுஞ்சாலைத்துறை
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
* காவல்துறை

ஆகிய துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரையும் நான் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.



Read in source website

தமிழகத்தில் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்களில் முதல்கட்டமாக தற்போது 500 நூலகங்களில் மின் நூலக சேவை, இலவச வை-ஃபை வசதி ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா்.

இதுதொடா்பான நிகழ்ச்சி சென்னை அசோக் நகா் வட்டார நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய வசதிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, ‘பொது நூலகங்களில் மின் சேவை’ என்ற தலைப்பில் சா்வதேச நாளிதழ்கள், பருவ இதழ்கள் கிராமப்புறங்களில் உள்ள வாசகா்களுக்கும் கிடைக்கும் வகையில் கிளை நூலகங்கள் மற்றும் நகா்ப்புற நூலகங்களில் மின் நூலகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழக அரசு பொது நூலகங்களை நாடி வரும் வாசகா்கள் மற்றும் போட்டித் தோ்வெழுதும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் பொது நூலகங்களில் வை-ஃபை இணையவசதி ரூ.23.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த இரு அறிவிப்புகளும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக 500 பொது நூலகங்களில் இலவச வை-ஃபை மூலம் இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூலகங்களைப் பயன்படுத்தும் வாசகா்கள் மற்றும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் வைஃபை இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியான படிப்படியாக பிற பொது நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள மின் நூலகத்தில் கல்வி, பொருளாதாரம், வணிகம், தொழில், பயணம், சுற்றுலா என 40-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு பருவ இதழ்களும், செய்தித்தாள்களும் கிடைக்கும். இதில் 323 தமிழ் பருவ இதழ்களும், 23 தமிழ் நாளிதழ்களும் உள்ளடங்கும்.

இந்த மின் நூலகத்தில் ‘அமேசான் கிண்டிலில்’ பதிப்பிக்கப்படும் 10 லட்சம் மின் நூல்களை நூலகங்களில் அணுக வசதி செய்து தரப்பட்டுள்ளது. மின் நூலக சேவையினை இணையதள முகவரியில் பயன்படுத்தலாம். மேலும், இந்த மின் நூலகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்கள், ஆவணங்கள் கொண்ட பல மின் நூலகங்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலவசமாக அனைத்து நூல்களையும் படித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, பொது நூலக இயக்கக இயக்குநா் இளம்பகவத், துணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா், அசோக் நகா் வட்டார நூலகத்தின் நூலகா் கே.தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை அசோக் நகா் வட்டார நூலகத்தில் மின் நூலகம், வை-ஃபை மூலம் இணையவசதி ஆகியவற்றை திங்கள்கிழமை தொடக்கி வைத்து நூலகத்தில் உள்ள மாணவ, மாணவிகளிடம் உரையாடிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

 



Read in source website

 

நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. 

இந்தியாவில் 5G சேவைகளின் முன்னோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 34 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவைகளை வழங்கியுள்ளது. 

இதில், தமிழ்நாட்டில், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் தமிழகத்தில் 19 நகரங்களில் ட்ரூ  5ஜி சேவை கிடைக்கிறது. தற்போது 225 நகரங்களில் ஜியோ பயானாளர்கள் ட்ரூ 5G சேவைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். 

வெறும் 120 நாட்களில் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், இது தங்களது அடுத்த மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளது.



Read in source website


2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில், வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது சற்று இறக்கம் கண்டு 6 - 6-8 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது.  பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில், 2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2022 ஜனவரி - நவம்பர் வரையி 30.5 சதவிகித சராசரி வளர்ச்சி கண்டிருந்தது. 

2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு  63.4 சதவிகிதம் அதிகரிக்கும். 

2022ஆம் நிதியாண்டில் வளர்ச்சி கண்ட ஏற்றுமதி வணிகம், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக சீரான வளர்ச்சியை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரை முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமையும் என முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரகக் கூட்டமைப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.

இனி வரும் நாள்களில் நமது தலைநகராக மாறும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்கிறேன் எனவும், மார்ச் 3 மற்றும் 4 தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள்  மாநாட்டை அங்கு நடத்தப்போவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், வரும் மாதங்களில் விசாகப்பட்டினம் புதிய தலைநகராக மாறப்போவதாக  ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

கடந்த 2014 ஜூன் மாதம் ஆந்திரம், தெலங்கானா மாநிலப் பிரிவினைக்குப் பின்னர், ஆந்திர முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆந்திரத்தின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.



Read in source website

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி கெளதம் அதானி 11வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதன்மூலம், முகேஷ் அம்பானி 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைவதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் கௌதம் அதானியின் இடம் தொடர் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், திங்கள்கிழமை வணிகத்தின் போது,  அதானியின் சொத்து மதிப்பு மேலும் 8.5 பில்லியன் டாலர்கள் சரிந்து 88.2 பில்லியன் டாலர்களாக குறைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 8ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் 9 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் பங்குகள் இறங்குமுகத்திலேயே வணிகமாகின்றன. இதிலும் மூன்று நிறுவனங்களின் பங்குகள் இன்று முற்பகல் 12 மணியளவில், இதுவரைக் காணாத விலை சரிவைக் கண்டன.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் நேற்று எட்டாவது இடம் வகித்த அதானி, இன்று பிற்பகல் நிலவரப்படி 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானிக்கும் அதானிக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசம் வெறும் 4 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் முகேஷ் அம்பானி 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாவது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு தொடர் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

 



Read in source website

புது தில்லி: கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும், விசாரணை நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளை விசாரித்து, குற்றவாளிகளுக்கு 165 மரண தண்டனைகளை வழங்கியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது 2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் அளிக்கப்பட்ட அதிகபட்ச மரண தண்டனையாக இது கருதப்படுகிறது.

மேலும், 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை, மொத்தமாக 539 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இது 2016 ஆம் ஆண்டிலிருந்து அதிகபட்சமாக இருந்து வருகிறது.  மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டிலிருந்து 40% அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் திட்டம் 39என் கீழ், இந்தியாவில் மரண தண்டனைகள் - ஆண்டு புள்ளிவிவரம் 2022 என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை விசாரணை நீதிமன்றங்கள் தொடர்ந்து விதிக்கப்படுவதையும், மேல்முறையீட்டு நீதிமன்றங்களால் குறைந்த விகிதத்தில் மரண தண்டனை குறைக்கப்படுவதையும் இது காட்டுவதாக" அறிக்கை கூறுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான (51.28 சதவீதம்) வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

2022ஆம் ஆண்டில் அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட ஆண்டாக மாறியதற்கு முக்கிய காரணம் ஒரே ஒரு வழக்குதான். குண்டுவெடிப்பு வழக்கில் அகமதாபாத்தில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் அதிகபட்ச மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டாக மாறியது. 

இந்த வழக்கு, 2016 க்குப் பிறகு ஒரே வழக்கில் அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்காகவும் மாறியது.

மரண தண்டனை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் 11 வழக்குகளிலும் உயர் நீதிமன்றங்கள் 68 வழக்குகளிலும் தீர்ப்பளித்துள்ளன. "உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த 68 வழக்குகளில், 101 கைதிகள் உட்பட, மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது, 48 குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 43 குற்றவாளிகள் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

6 வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திற்கே மீண்டும் அனுப்பப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதில் மிக விநோதமாக, மும்பை உயர் நீதிமன்றம், கொள்ளை மற்றும் கொலை வழக்கில் கைதி ஒருவரின் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தியது. இதுபோல தண்டனை உயர்த்தப்படுவது 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் இருப்பது அகில இந்திய உயா்கல்விக்கான கணக்கெடுப்பு (அய்ஷே) 2020-21 அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரம் 2-ஆம் இடம், கா்நாடகம் 3-ஆம் இடம், தமிழகம் 5-ஆம் இடம் பிடித்துள்ளன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரம், குஜராத், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு குறைந்தபட்சம் 29 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் அமைவிடம், மாணவா் சோ்க்கை, பணிபுரியும் ஆசிரியா்கள் விவரம், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி தொடா்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து வெளியுடம் வகையில் ‘அய்ஷே’ கணக்கெடுப்பை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உயா்கல்வி நிறுவனங்களிடமிருந்து இணைய வழியில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டு அய்ஷே கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

அந்த கணக்கெடுப்பின்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8,114 கல்லூரிகள் உள்ளன. அதாவது ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 32 கல்லூரிகள் வீதம் அந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 4,532 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 34 கல்லூரிகள்), கா்நாடகத்தில் 4,233 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 62 கல்லூரிகள்), ராஜஸ்தானில் 3,694 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள்தொகைக்கு 40 கல்லூரிகள்), தமிழகத்தில் 2,667 கல்லூரிகள் (1 லட்சம் மக்கள் தொகைக்கு 40 கல்லூரிகள்) இடம்பெற்றுள்ளன.

2.9% கல்லூரிகளில் மட்டுமே பிஎச்.டி:

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுவதும், 55.2 சதவீத கல்லூரிகள் முதுநிலை பட்டப் படிப்புகளையும், 2.9 சதவீதம் கல்லூரிகள் ஆராய்ச்சிப் (பிஹெச்.டி) படிப்புகள் வரையும் வழங்குகின்றன. 35.8 சதவீத கல்லூரிகளில் ஒரு படிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. அவற்றில் 82.2 சதவீதம் கல்லூரிகள் தனியாரால் நிா்வகிக்கப்படுபவை. 30.9 சதவீத கல்லூரிகளில் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

23.6% கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை:

பெரும்பாலான கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை வெகு குறைவாக இருப்பது இந்த கணக்கெடுப்பு மூலமாக தெரியவந்துள்ளது.

23.6 சதவீத கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை 100-க்கும் குறைவாக உள்ளது. 48.5 சதவீத கல்லூரிகளில் 100 முதல் 500 வரையிலும், 65.1 சதவீத கல்லூரிகளில் 500-க்கும் குறைவான மாணவா் சோ்க்கையும் நடைபெறுகிறது. 4 சதவீத கல்லூரிகளில் மட்டுமே 3,000-க்கும் அதிகமான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

21.4% அரசு கல்லூரிகள்:

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ள 41,600 கல்லூரிகளில் 8,903 (21.4%) கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகும். அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரிகள் 5,658 (13.3%), அரசு உதவிபெறாத தனியாா் கல்லூரிகள் 27,039 (65%) ஆகும்.



Read in source website

உயா்கல்வியில் பழங்குடியின (எஸ்.டி.) மாணவா்கள் சோ்க்கை என்பது கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து 47 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி பெற்றிருப்பது அகில இந்திய உயா்கல்வி கணக்கெடுப்பு (அய்ஷே 2020-21) அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அதுபோல, தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஆய்ஷே அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 4.13 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். இதில் 14.2 சதவீதம் போ் எஸ்.சி. பிரிவையும், 5.8 சதவீதம் போ் எஸ்.டி. பிரிவையும், 35.8 சதவீதம் போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள். எஞ்சியுள்ள 44.2 சதவீதம் போ் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

சோ்க்கை விகித வளா்ச்சி:

உயா்கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

உயா் கல்வியில் எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் கடந்த 2014-15-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 2019-20 ஆம் ஆண்டில் சோ்க்கை பெற்ற எஸ்.சி. பிரிவு மாணவா் எண்ணிக்கை 21.6 லட்சமாக இருந்தது. இது 2020-21-இல் மீண்டும் 4.2 சதவீதம் அதிகரித்து 24.1 லட்சமாக உயா்ந்தது. இதன்படி, 2014-15-ஆம் ஆண்டிலிருந்து எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 27.96 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதுபோல, எஸ்.டி. பிரிவு மாணவா் சோ்க்கை முந்தைய 2019-20 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாக அதிகரித்தது, 2020-21 ஆம் ஆண்டில் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஓபிசி பிரிவு மாணவா்களைப் பொருத்தவரை 2019-20ஆம் ஆண்டில் 1.42 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்ற நிலையில், 2020-21-இல் 1.48 கோடி பேராக அதிகரித்தது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து ஓபிசி மாணவா் சோ்க்கை விகிதம் என்பது 31.67 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

ஒட்டுமொத்த சோ்க்கை 20.9% அளவுக்கு அதிகரிப்பு:

உயா்கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2018-19-இல் 2.7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை, 2019-20 ஆம் ஆண்டில் 3 சதவீத அளவுக்கும், 2020-21-இல் 7.4 சதவீத அளவுக்கும் வளா்ச்சி கண்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல் உயா்கல்வி ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை 20.9 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

2020-21-இல் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற 4.13 கோடி பேரில், மாணவா்கள் 2.12 கோடி, மாணவிகள் 2.01 கோடி போ் ஆவா்.

உயா்கல்வி சோ்க்கை விகிதம் 27.3%:

ஒட்டுமொத்த உயா்கல்வி சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) என்பது 27.3 சதவீத அளவை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் 18 முதல் 23 வயதுடையவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஜிஇஆா் கணக்கிடப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் வாரியான சோ்க்கையைப் பொருத்தவரை, அரசு பல்கலைக்கழகங்களில் 73.1 சதவீதம் பேரும், தனியாா் உயா் கல்வி நிறுவனங்களில் 26.3 சதவீதம் பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.



Read in source website

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறையையும், மருத்துவப் பதிவேடு கட்டமைப்பையும் அமல்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் தேசிய மருத்துவ ஆணைய செயலா் டாக்டா் பல்கேஷ் குமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவில் அனைத்து பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். கல்லூரியில் தேவையான இடங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சாதனங்களைப் பொருத்த வேண்டும்.

அதேபோன்று, மருத்துவ மேலாண்மை தகவல்கள் மற்றும் நோயாளிகளின் விவரங்களுக்கான இணையப் பதிவேட்டை அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ மேலாண்மை பதிவேடு கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகள் அவற்றை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

மற்றொருபுறம், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட வளாகம் முழுவதும் கேமரா வசதி அமைக்கப்பட வேண்டும்.



Read in source website

லகக் கோப்பை ஹாக்கி போட்டியை சொந்த மண்ணில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது இந்தியா. ஆனால், போட்டி இந்திய அணிக்கு வெற்றிகரமாக அமைந்ததா என்றால், இல்லை என்பதே பதில். 

ஆம், ஒடிஸôவில் நடைபெற்ற ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஜெர்மனி சாம்பியனான இந்தப் போட்டியில், இந்தியா 9-ஆம் இடமே பிடித்தது. 

ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகள் கழித்து வெண்கலப் பதக்கம் (டோக்கியோ 2021) வென்று வரலாறு படைத்தது, 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பெற்றது, எஃப்ஐஹெச் புரோ லீக் 2021-22 சீசனில் 3-ஆம் இடம் பிடித்தது என இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டு வந்தது. அதனால், 1975-க்குப் பிறகு (சாம்பியன்) இந்த முறை இந்தியா மீண்டும் உலகக் கோப்பை போட்டியின் பதக்க இடங்களுக்குள் வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் அந்தக் கனவுகளைக் கலைத்தது இந்திய அணி. இத்தனைக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இருந்த 12 முக்கிய வீரர்கள் இந்த உலகக் கோப்பைக்கான அணியிலும் இருந்தனர். 

அரையிறுதி வரை முன்னேற இயலாவிட்டாலும், காலிறுதியிலாவது கால் பதிக்கும் தரத்துடன் இந்திய அணி இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், நேரடியாக அந்தச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து, "கிராஸ்ஓவர்' வாய்ப்பு வரை சென்று நியூஸிலாந்திடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறிய இந்தியா, கடந்த உலகக் கோப்பை போட்டியில் காலிறுதி வரை சென்று அதில் நெதர்லாந்திடம் வீழ்ந்தது நினைவுகூரத்தக்கது. 

அணி வீரர்களுக்கான பயிற்சி, திறமையை மேம்படுத்துவதற்கான வெளிநாட்டு பயணங்கள், உதவிப் பணியாளர்களுக்கான ஊதியம் என கோடிக் கணக்கில் இந்திய அணிக்கு செலவிட்டும், சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் சொல்லிக் கொள்ளும்படியான இடத்துக்குக் கூட வரவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமே. 

உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இது இந்திய அணியின் 5-ஆவது மிக மோசமான முடிவாகும். இதற்கு முன் 10 மற்றும் 12-ஆம் இடங்கள் வரை சென்றிருக்கிறது இந்தியா. 

சரி, வழக்கம்போல் போட்டி நிறைவடையும் தருணத்தில் அணியின் பின்னடைவு குறித்து அனைவரும் விவாதிப்பது வழக்கமானது தான். அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரே அவ்வாறு கூறியிருப்பது என்ன? பார்க்கலாம். 

தவறிய பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் 

இந்தியா விளையாடிய 4 ஆட்டங்களில் 26 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும், அதில் 5-இல் மட்டுமே இந்தியா கோலடித்திருக்கிறது. காலிறுதிக் கட்டத்தை தாண்ட முனையும் ஒரு அணி இவ்வளவு மோசமாக பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தல் ஆகாது. 

இந்த 5 கோல்களிலுமே 2 தான் நேரடி கோலாக ஸ்கோர் செய்யப்பட்டவை. மற்ற 3 வாய்ப்புகளுமே எதிரணி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டு மீண்டும் களத்துக்குத் திரும்பியபோது இடைவெளி பார்த்து கோலாக மாற்றப்பட்டுள்ளன. 

தடுப்பாட்டத்தில் முன்னேற்றம், உபகரணங்களை நுட்பமாகப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் சமீப காலங்களில் சர்வதேச போட்டிகளில் பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளில் அடிக்கப்படும் கோல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாலும், இதர அணிகளுடன் ஒப்பிடுகையில் அந்த கோல் எண்ணிக்கையில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது. 

கைவிட்ட ஃபார்ம் 

பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதற்கு ஹர்மன்பிரீத் சிங்கையே இந்திய அணி முற்றிலுமாக நம்பியிருந்ததும் ஒரு பின்னடைவாக சொல்லப்படுகிறது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 31 பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளில் 10-இல் பலன் கிடைத்தது. டிராக் ஃப்ளிக்கில் சிறந்து விளங்கிய ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங் ஆகிய இருவரே அந்த கோல்களை அடித்தனர். 

அதில் 6 கோல்களை அடித்த ஹர்மன்பிரீத் சிங், பெனால்ட்டி கார்னரை கையாள்வதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறந்தவராக அறியப்பட்டார். எஃப்ஐஹெச்-இன் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராகவும் தேர்வானார். ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டியில் அந்த ஃபார்ம் அவருக்கு ஏமாற்றமளித்தது. 

அணியின் பல்வேறு பெனால்ட்டி கார்னர் வாய்ப்புகளை அவரே கையாண்டபோதும், அதில் 2-இல் மட்டுமே அவர் கோலடித்திருக்கிறார். 

நிலையில்லாத தடுப்பாட்டம் 

குரூப் சுற்றின் முதல் இரு ஆட்டங்களில் ஸ்பெயினை 2-0 என வீழ்த்திய இந்தியா, இங்கிலாந்துடன் கோலின்றி டிரா செய்தது. ஆனால், 3-ஆவது ஆட்டத்தில், உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற வேல்ஸ் அணியுடனான மோதலில் 2 கோல்களுக்கு வாய்ப்பு வழங்கியது. அடுத்ததாக கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கும் 2 கோல்கள் அடிக்க இடைவெளி அளித்தது. 

அதிலும், நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் 2 முறை முன்னிலை வகித்தும் பிறகு அதை தவறவிட்டுத் தோற்றது. அனுபவ வீரர்களான ரூபிந்தர் பால், வீரேந்திர லக்ரா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு தடுப்பாட்டத்தில் அந்த இடத்தை சரியாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை. 

அந்த இடத்தில் நிரப்பப்பட்ட அனுபவமில்லாத ஜர்மன்பிரீத் சிங், நீலம் சஞ்சீப் ஜெஸ் ஆகியோர் எதிரணிகளின் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறினர். 

சோபிக்காத தாக்குதல் ஆட்டம் 

அதேபோல், கிடைத்த வாய்ப்புகளை முன்கள வீரர்கள் தகுந்த முறையில் கோலாக மாற்றத் தவறினர். முன்னாள் கேப்டனான மன்பிரீத் சிங்கும் நடுகளத்தில் அவ்வளவாக சோபிக்காமல் ஆடினார். மேலும், மற்றொரு முக்கிய நடுகள வீரரான ஹார்திக் சிங் காயம் கண்டு விளையாட முடியாமல் போக, இந்த இரண்டுமே தாக்குதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

உளவியல் ஆலோசனை 

அனைத்துக்கும் மேலாக, உலகக் கோப்பை போன்ற ஒரு பிரதான போட்டிக்கு முன்பாக இந்திய அணியினருக்கு அந்தப் போட்டியின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்குவதும் அவசியம் என கிரஹாம் ரெய்ட் கருத்து தெரிவித்திருக்கிறார். அளவுகடந்த திறமைகள் இருந்தும், அதை சர்வதேச களத்தில் நுட்பமாக வெளிப்படுத்தவும், நெருக்கடியான தருணங்களில் தடுமாற்றமின்றி விளையாடவும் வீரர்களுக்கு இந்த ஆலோசனை அவசியம் என்கிறார் அவர். 
இவ்வாறு, இந்த உலகக் கோப்பை போட்டியின் மூலம் அறியப்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்களை சரி செய்தால் மட்டுமே, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டியாக இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா திறம்பட செயல்பட இயலும். சர்வதேச களத்தில் சாதிக்க இயலும். 

 



Read in source website

 

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்திய ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. நியூசிலாந்துக்கான எதிரான ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் தோற்றது. இதையடுத்து 9-வது இடத்தை அடைந்தது இந்திய அணி. 

இந்நிலையில் ஒடிஷாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி முடிவடைந்ததையடுத்து இந்திய அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது ராஜிநாமா கடிதத்தை ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கியிடம் வழங்கியுள்ளார் கிரஹாம் ரீட். அணியின் இதர பயிற்சியாளர் கிரேக் கிளார்க், ஆலோசகர் மிட்செல் டேவிட் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார்கள். 

டோக்கியா ஒலிம்பிக்ஸில் இந்திய அணி வெண்கலம் வென்றது கிரஹாம் ரீடின் முக்கியமான சாதனையாகும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது. இதையடுத்து 2022 காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 



Read in source website

ஸ்வீடன் இல்லாமலே ஃபின்லாந்து மட்டும் தனியாக நேட்டோவில் இணைவதற்கு அனுமதிக்கலாம் என்று துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் மெவ்லுட் காவுசோகுலு திங்கள்கிழமை கூறினாா். ஃபின்லாந்தின் நேட்டோ விண்ணப்பத்தில் அதிக பிரச்னை இல்லை எனவும் அவா் கூறினாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைபிடித்து வந்த அண்டை நாடுகளான ஃபின்லாந்தும், ஸ்வீடனும் தங்களது பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன.

எனினும், தங்கள் நாட்டின் குா்து இன பிரிவினைவாதிகளை ஸ்வீடன் ஆதரிப்பதால் அந்த நாடு நேட்டோவில் இணைய அனுமதிக்க மாட்டோம் என்று துருக்கி கூறி வருகிறது. இந்தச் சூழலில் ஃபின்லாந்து மட்டும் நேட்டோவில் இணையலாம் என்று அந்த நாடு தற்போது கூறியுள்ளது.



Read in source website

சிறு விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களில் பயன்படக்கூடிய ஏவிஜி எரிபொருளை பொதுத் துறை எண்ணெய் வா்த்தக நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) முதல்முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஏவியேஷன் காஸ் 100 எல்எல்’ என்றழைக்கப்படும் சிறுவகை விமானங்களுக்கான எரிபொருளைஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம்.

தலா 16 லிட்டா் ஏவி காஸ் எரிபொருள் அடங்கிய 80 பேரல்கள் நவி மும்பையிலுள்ள ஜவாஹா்லால் நேரு துறைமுகத்திலிருந்து பப்புவா நியூ கினியாவுக்கு கடந்த வார இறுதியில் அனுப்பப்பட்டன.

வடோதராவில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த வகை விமான எரிபொருள், வெளிநாடொன்றுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது அதுவே முதல்முறை ஆகும்.

ஆளில்லா விமானங்களையும் விமானிகளுக்கான பயிற்சிப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பிஸ்டன்களில் இயங்கக் கூடிய விமானங்களையும் இயக்குவதற்கு ஏவிஜி வகை எரிபொருள் உதவும்.

அதிக ஓக்டேன் திறன் கொண்ட அந்த எரிபொருள், மிகவும் செயல்திறன் மிக்கதாகவும், மற்ற எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் விலை குறைவானதாகவும் உள்ளது.

ஏவி கேஸ் 100 எல்எல் ஏற்றுமதி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு உதவுவதோடு மட்டுமின்றி, பயிற்சி விமானிகள் குறைந்த செலவில் பயிற்சி பெறுவதற்கும் உதவும்.

தற்போது ஆளில்லா விமானங்களை பாதுகாப்பு படைகள் பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. அத்தகைய விமானங்களை இயக்குவதற்கு உதவும் ஏவி கேஸ் 100 எல்எல் எரிபொருளைத் தயாரித்து ஏற்றுமதி செய்வது ராணுவ ரீதியிலும் நன்மை பயக்கும்.

அந்த எரிபொருளுக்கு தென் அமெரிக்கா, ஆசிய பசிபிக், மேற்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அதிக தேவை உள்ளது. இதனைப் பயன்படுத்தி அந்தப் பிராந்திய சந்தைகளைக் கவர இநதியன் வங்கி திட்டமிட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாய் வளர்ப்பவர்கள், தங்களது வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளது. சாலையில் விடப்படும் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கும் திட்டமும் அமலாகவுள்ளது.

சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தின்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றின் குட்டிகள் தெருவில் விடப்படுவதாலும், தெருநாய்களின் பெருக்கம் அதிகமாகிறது. வளர்ப்பு நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்படாதது, முறையாக பராமரிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது.

சேலம் மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்ட உரிமம் வழங்கும் நடைமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ்நாடு நகர்ப்புற விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1997-ன் படி, வளர்ப்பு நாய்களுக்கு சென்னை மாநகராட்சியில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போல, சேலம் மாநகராட்சியிலும் ரூ.50 கட்டணம் செலுத்துவதன் பேரில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கும் முறை, நடைமுறைக்கு வந்துள்ளது. நாய் வளர்ப்புக்கான உரிமம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும். நடைமுறைகளைப் பின்பற்றி, உரிமத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Read in source website

மதுரை: தமிழகத்தில் கோயில்களின் பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், அதை நடத்துவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய கோயில்களின் பெயர்களில் செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அந்த இணையதளங்களை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பழனி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் பெயரில் பலர் போலி இணையதளங்களை தொடங்கி பணம் வசூலிக்கின்றனர். அந்த இணையதளங்கள் கோயில் பெயர்களில் இருப்பதால் கோயிலுக்கு சொந்தமானது என நினைத்து மக்கள் பணம் வழங்குகின்றனர். இதுபோன்ற போலி இணையதளங்களை முடக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் கோயில் பெயர்களில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான போலி இணைதளங்களை முடக்க வேண்டும். அந்த இணையதளங்கள் வழியாக எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்டறிந்து, அந்த தொகையை பறிமுதல் செய்ய வேண்டும். கோயில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரியை தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக பூஜைகள், நன்கொடை வழங்குவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் உண்டியல் வைத்து அதில் காணிக்கை செலுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக காணிக்கை செலுத்தவும் பக்தர்களை அறிவுறுத்த வேண்டும்.

போலி இணையதளங்கள் குறித்து புகார் வந்தால் உடனடியாக விசாரித்து போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, சபரிமலை கோயில்களை போல் தமிழக கோயில்களின் செயல்பாடுகள் முறையாக, வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.



Read in source website

புதுச்சேரி: சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் பரிசாக ரூ.5000 வழங்கி கவுரவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் (Good Samaritan) பரிசாக ரூ.5000 (ரூபாய் ஐந்து ஆயிரம்) மற்றும் பாரட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).

மேலும் ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் அவர்கள் புரிந்த சேவையை வைத்து தேசிய அளவில் சிறந்த 10 நல்லெண்ண தூதுவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் ) பரிசு வழங்கி கவுரவிக்கப்படும். மேலும் வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகளுக்கு புதுச்சேரி போக்குவரத்து துறையின் https://transport.py.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கொடைக்கானல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி சுற்று வட்ட பாதைக்கு வரும் பச்சை வால் நட்சத்திரத்தை நாளை (பிப்.1) முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி தெரிவித்தார்.

இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது: "பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.

இந்த வால் நட்சத்திரம் ஜன.12-ம் தேதி சூரியனை கடந்து நாளை (பிப்.1) பூமிக்கு மிக அண்மையில் வரும். அதாவது, கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இந்த வால் நட்சத்திரத்தை நிறநிரல்மானி (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் பிப்.1-ம் தேதி காலை 4 மணி வரை இந்த நட்சத்திரத்தை பார்க்க முடியும். தொடர்ந்து, அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம்" என்றார்.



Read in source website

சென்னை: கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக சில மாவட்டங்களில் போலீஸார் சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்களின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவும், இதனால் பிரச்சினை பெரிதாகி, சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம். அது தேவையும் இல்லை. பதற்றமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பாக, தேவைக்குத் தகுந்தவாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரே வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனை: இதேபோல, டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலையாட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை, வாகன தணிக்கையின்போது போலீஸார் பறிமுதல் செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

அதேபோல, வாகனத் தணிக்கையின்போது டிராக்டர்களில் விவசாயப் பணிகளுக்காகச் செல்லும் விவசாயத் தொழிலாளர்கள் காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸாருக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.



Read in source website

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டையைப் பொறுத்தவரை, 3 வகையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டள்ளன. அதாவது, க்யூஆர் கோடு, ஹோலோகிராம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. போலி அட்டையை உருவாக்க முடியாதபடி, அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவறுத்தியிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில், புதிதாக வாக்காளர் அட்டைக்கும், மாற்றங்களுக்காகவும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற. முதல்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.



Read in source website

பாரீஸ்: ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

35 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நேற்று முன்தினம் நிறைவடைந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர், கைப்பற்றிய 22-வது பட்டமாக இது அமைந்தது. இதன் மூலம் 7,070 புள்ளிகளுடன் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜோகோவிச் 4 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

முதலிடம் வகித்து வந்த ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளாததால் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோகோவிச்சிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஓர் இடம் முன்னேறி 6,195 புள்ளிளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

நார்வே வீரர் காஸ்பர் ரூட் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதி சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்த ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் ஓர் இடம் முன்னேறி 5-வது இடத்தை அடைந்துள்ளார். 2-வது சுற்றுடன் வெளியேறிய ஸ்பெயினின் ரபேல் நடால் 4 இடங்கள் பின்தங்கி 6-வது இடத்தில் உள்ளார். கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் முறையே 7 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.

மகளிர் பிரிவு: மகளிருக்கான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற பெல்லாரசின் சபலெங்கா 6,100 புள்ளிளுடன் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். போலந்தின் இகாஸ்வியாடெக் 10,485 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். துனிசியாவின் ஜபூர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4-வது இடத்துக்கும், பிரான்ஸின் கரோலின் கார்சியா 5-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். ஆஸ்ரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 15 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை அடைந்துள்ளார்.



Read in source website

நியூயார்க்:பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆறு மாத கால அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் மற்றம் உச்ச நீதிமன்றத்தின் கட்டிடங்களில் நுழைந்து அங்கு சேதம் விளைவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும்,

கலவரத்தை தூண்டியதாக போல்சனேரோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த போல்சனேரோ அமெரிக்காவுக்குச் சென்றார்.

இந்த நிலையில், தற்போது ஆறு மாத காலம் அமெரிக்காவில் சுற்றுலா விசாவிற்கு போல்சனாரோ விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போல்சனோரா வழக்கறிஞர் அலெக்ஸ்ஸாண்ட்ரா கூறும்போது, “முன்னாள் அதிபர் தனது வாழ்நாளில் 34 ஆண்டுகளை பொது சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அவர் சிறிது ஓய்வு எடுக்க விரும்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி விகிதம் வரும் நிதி ஆண்டில் 6 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 7 சதவீதமாக நிலவும் சூழலில், அடுத்துவரும் நிதி ஆண்டில் இதைவிட குறைவான வளர்ச்சியே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் இதுவே குறைவான வளர்ச்சி என்பதும் கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல்நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்படி, பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

  • பெருந்தொற்றால் ஏற்பட்ட தொய்வு, ரஷ்யா-உக்ரைன் மோதல், பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து மீட்சிப் பெற்று துறைகள் தோறும் விரிந்த தளத்தில் இந்திய பொருளாதாரம் நிதியாண்டு 23–ன் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு முன்னேறி வருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, நிதியாண்டு 24-ல் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டு 24-க்கான ஜிடிபி மதிப்பீடு 6-6.8 சதவீதம்.
  • 2023-24 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் பாதையைப் பொறுத்து, ஜிடிபி வளர்ச்சி 6.0 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக இருக்கும்.
  • உண்மையான அடிப்படையில், மார்ச் 2023 இல் முடிவடையும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. இது முந்தைய நிதியாண்டில் இருந்த 8.7 சதவீத வளர்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.
  • நிதியாண்டு 15-க்குப் பின் முதலாவது அரையாண்டில் தனியார் நுகர்வு அதிகபட்சமாக உள்ளது. இது உற்பத்தி செயல்பாட்டை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக, துறைகள் தோறும் திறன் பயன்பாடு விரிவடைந்துள்ளது.
  • மத்திய அரசின் மூலதனச் செலவும் தனியார் மூலதன செலவின் அதிகரிப்பும், பெருநிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. இது நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
  • 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் எம்எஸ்எம்இ துறையின் கடன் வளர்ச்சி சராசரியாக 30.6 சதவீதமாக இருந்தது.
  • 2022 நவம்பரில் சில்லறை பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு எல்லைக்குள் இருந்தது.
  • 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் வளர்ந்து வரும் இதர சந்தைப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் இருந்தது.
  • 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் நேரடி வரிவருவாய் தொடர்ந்து மேம்பட்ட நிலையில் இருந்தது.
  • விரிவடைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காரணமாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பதிவு வேகமடைந்துள்ளது.
  • பொது டிஜிட்டல் தளங்கள் விரிவாக்கம் மற்றும் பொருள் உற்பத்திக்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கம் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.

பணவீக்கம்: 3 முதல் 4 தசாப்தங்களுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு உலக நாடுகளே அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டன. இந்தியாவில் விலைவாசி அதிகரித்தது.

  • இந்தியாவின் கொள்முதல் பணவீக்க விகிதம் 2022 ஏப்ரல் மாதம் 7.8 சதவீதமாக அதிகரித்தது.
  • விலையை அதிகரிக்க ஏதுவாக மத்திய அரசு பன்நோக்கு அணுகுமுறையை கையாண்டது.
  • பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இறக்குமதி வரி பல்வேறு கட்டங்களாக குறைக்கப்பட்டது.
  • முக்கியப் பொருட்களான இறக்குமதி வரி 0 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பலனாக இரும்பு மற்றும் அதன் தாதுக்களின் ஏற்றுமதி 30 முதல் 50 சதவீதம் அதிகரித்தது.
  • பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி தள்ளுபடி 2022 ஏப்ரல் 14-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.
  • கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய எச்.எஸ்.கோடு
  • 1101-ன் படி தடை விதிக்கப்பட்டது.
  • கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை வரி குறைக்கப்பட்டது.
  • ரிசர்வ் வங்கி பணவீக்க எதிர்பார்ப்புகளை சிறந்த வழிகாட்டுதல்கள் மூலமாகவும், சிறப்பான பணக் கொள்கைகள் மூலமாகவும் கையாள்வதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாடான நிலையில் உள்ளது.
  • வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகங்கள் தொடர்பான ஒன்றரை ஆண்டு கால பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் சராசரி நிலைக்கு வந்துள்ளது.
  • வீட்டுவசதித் துறையில் அரசின் சரியான தலையீடுகள் காரணமாக கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து வீடு வாங்குவோர் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இதன் காரணமாக 2023 ஆம் நிதியாண்டில் குறைந்த விலை வீடுகள் அதிகம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஒட்டுமொத்த வீடுகள் விலைக் குறியீட்டு மதிப்பீட்டில் உயர்வு மற்றும் வீட்டு விலைக் குறியீட்டு சந்தை விலைகள் வீட்டுவசதித் துறை மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதை உணர்த்துகிறது. வீடுகள் விலைக் குறியீட்டில் நிலையானது முதல் மிதமானது வரையிலான உயர்வு வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்தியாவின் பணவீக்க மேலாண்மை குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. முன்னேறிய பொருளாதார நாடுகள் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதில் போராடும் நிலையில் இந்தியா சிறப்பான மேலாண்மையை கொண்டுள்ளது.

நல்ல நிலையில் வளர்ச்சி வேகம்: இந்திய பொருளாதாரம் விரிவான அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுள்ளது. இது பொருளாதாரத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2014-2022 காலத்தில் ஒட்டுமொத்த திறன் விரிவாக்கப்பட்டுள்ளது.

  • வாழ்க்கையையும், வணிகம் செய்வதையும் எளிதாக்கி மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாய்ப்புகள், திறன்களை விரிவாக்குவதற்கு பொது சேவைகளை உருவாக்குதல், வாழ்க்கையை எளிதாக்குதல், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வளர்ச்சியில் துணை பங்குதாரராக தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் 2014-க்கு பிந்தைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • 2014-2022 காலத்திற்கு முந்தைய ஆண்டுகளில் கடன் அதிகரிப்பாலும், உலகளாவிய அதிர்வுகளாலும் வரவு – செலவு அறிக்கைகளில் அழுத்தம் ஏற்பட்டது. இது கடன் வளர்ச்சி, மூலதன உருவாக்கம், இதே காலத்தில் பொருளாதார வளர்ச்சி போன்ற பருப்பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் 1998-2002 காலத்திற்கு ஒத்த நிலையில் இருந்ததால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தற்காலிக அதிர்வுகள் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த அதிர்வுகள் மறைந்த பின் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் 2003-லிருந்து வளர்ச்சியில் பலன்களை தந்தன.
  • அதேபோல், பெருந்தொற்றின் உலகளாவிய அதிர்வுகளும் 2022-ல் அதிகரித்த சரக்குகளின் விலையும் குறையும் போது, வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நல்ல நிலையில் இருக்கும்.
  • வங்கித் துறை, வங்கி அல்லாத துறை, கார்ப்பரேட் துறைகளின் வரவு – செலவு அறிக்கைகள் வலுவானதாகவும், மேம்பட்டும் இருப்பதால், புதிய கடன் சுழற்சி ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களில் வங்கிக் கடன் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது.
  • பொருளாதார சீர்திருத்தங்கள் அடிப்படையிலான டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மகத்தான முறைப்படுத்துதல், அதிக அளவிலான நிதி உள்ளடக்கம், பொருளாதார வாய்ப்புகள் காரணமாக இந்திய பொருளாதாரம் பயனடைய தொடங்கியுள்ளது.

வருவாய் அதிகரிப்பு: 2023 நிதியாண்டில் மத்திய அரசின் பொருளாதார திட்டங்களின் வெற்றிக்கு பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் நேரடி வரிவிதிப்பிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை முக்கியப் பங்காற்றின.

  • 2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாய் முன்பதிவு 15.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கான நேரடி வரி வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சராசரியாக அதிகரித்திருக்கிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் வளங்கள் ஜிஎஸ்டி மூலம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வரிவசூல் 24.8 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
  • இந்த ஆண்டின் உயர் வருவாய் செலவு தேவைக்கு ஏற்ப மத்திய அரசு மூலதன செலவை (சிஏபிஇஎக்ஸ்) நிர்ணயித்திருக்கிறது. மத்திய அரசின் சிஏபிஇஎக்ஸ் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2009 ஆம் நிதியாண்டு முதல் 2020 ஆம் நிதியாண்டு வரையிலான கடந்த கால ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சதவீதம் 2022 ஆம் நிதியாண்டில் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • மாநில அரசுகளுக்கு வட்டியில்லா இலவசக் கடன்கள் மூலம் ஊக்கத் தொகையை மத்திய அரசு அளித்து வருகிறது. அதே போல் வசூலிப்பு இலக்கை நிர்ணயிக்கும் மூலதன செலவீட்டுக்கு முக்கியத்துவம் அளித்தும் வருகிறது.
  • சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே, வீட்டுவசதி. நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றில் மூலதன செலவீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்த முன்வந்துள்ளது.
  • மத்திய அரசின் மூலதன செலவீட்டை அதிகரிக்கும் செயல் திட்டம். இந்தியாவின் வளர்ச்சியை அதிகரித்திருப்பதுடன், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நிலைத்தன்மையை உருவாக்கியிருக்கிறது.

நிதி மேலாண்மை, நிதிப் பகிர்வு: 2022 ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதி கடுமைப்படுத்துதல் சுற்றை முன்னெடுத்தது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதத்தை 225 புள்ளிகள் அதிகரித்ததன் மூலம் நிதி கையிருப்பில் நவீனத்துவத்திற்கு வழிகோலியது.

  • தெளிவான வரவு-செலவு கணக்கு பொருளாதார நிறுவனங்களின் வளர்ச்சிக்கு திட்டமிட்டது.
  • கடன் தள்ளுபடி வளர்ச்சி நீடித்த மற்றும் நிலையான பொது மூலதன செலவீடுகளுக்கு பயன்பட்டது.
  • உணவு அல்லாத துறைகளுக்கான கடன் தள்ளுபடி மூலம், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளில் வளர்ச்சி விகிதம் 2 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
  • வங்கியில் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் விடுவிப்பு அதிகரித்துள்ளது.
  • ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதாச்சாரம் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளது.
  • முதலீட்டு இடர்பாடுகளுக்கான விகிதாச்சாரம் 16 சதவீதமாகவே நீடிக்கிறது.
  • திவால் நிலையில் உள்ள ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் வரிவசூல் கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022 நிதியாண்டில் அதிகமாக இருந்தது.

சமூக உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு:

  • சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார துறைக்கான பட்ஜெட் செலவீனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 2023 ஆம் நிதியாண்டில் 2.1 சதவீதத்தை எட்டியுள்ளது. 2021 நிதியாண்டில் 1.6 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு 2.2 சதவீதமாகவும் இருந்தது.
  • முந்தைய 2016 ஆம் நிதியாண்டில் ரூ.9.1 லட்சம் கோடியாக இருந்தது சமூகத் துறைகளுக்கான செலவீனம், 2023 ஆம் நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • யுஎன்டிபி-ன் 2022 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் 2005 – 06 முதல் 2019 – 20 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புறநகர் மற்றும் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் நல்லாட்சியை ஏற்படுத்த மாவட்ட அளவிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய அளவிலான ஆவணங்களை உருவாக்குவதற்காக இ-ஷ்ரம் போர்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்படி 2022 டிசம்பர் 31-ந் தேதி வரை இ-ஷ்ரம் போர்டல் மொத்தம் 28.5 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் எண்களை உள்ளடக்கிய ஜேஏஎம் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களுக்கு உதவும் வகையில் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கு எளிமையான நிதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
  • கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கோ-வின் இணையதள வசதி மூலம் ஆதார் உதவியுடன் 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த வெற்றிக்கு ஆதார் எண்ணின் பங்கு இன்றியமையாதது.
  • கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் கிராமம் மற்றும் நகரங்களில் தொழிலாளர் சந்தைகள் மீட்கப்பட்டன. 2018-19 ஆம் ஆண்டு 5.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மையின் விகிதம் 2020 ஆம் ஆண்டு 4.2 சதவீதமாக குறைந்தது.
  • 2022 நிதியாண்டில் பள்ளியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் 6 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களின் மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.
  • மத்திய அரசு மேற்கொண்ட சுகாதாரத்துறை சார்ந்த நடவடிக்கைகளால் 2014 ஆம் நிதியாண்டில் 64.2 சதவீதமாக இருந்த சுகாதார செலவீனங்கள் 2019 ஆம் ஆண்டு 48.2 சதவீதமாக குறைந்திருக்கிறது.
  • மகப்பேறு இறப்பு விகிதாச்சாரம், 5 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் மற்றும் என்எம்ஆர் இறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்துள்ளது.
  • 2023 ஜனவரி 6-ந் தேதி வரை 220 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • 2023 ஜனவரி 4-ந் தேதி வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 22 கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1.54 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன.

பருவநிலை மாற்றம்: 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான உறுதி மொழியை இந்தியா பிரகடனப்படுத்தியுள்ளது.

  • 2030-ம் ஆண்டுக்கு முன்பாக புதைப்படிம மற்ற எரிப்பொருளிலிருந்து 40 சதவீத மின்திறனை அடையவேண்டும் என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே எட்டியுள்ளது.
  • 2030-ம் ஆண்டு புதைப்படிம மற்ற மின்சார நிறுவு திறன் 500 ஜிகாவாட்டை எட்டும். இதன் விளைவாக, 2014-15ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2029-30ம் ஆண்டில் சராசரி கார்பன் வெளியேற்றம் 29 சதவீத அளவுக்கு குறையும்.
  • இந்தியா தமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்பன் வெளியேற்ற விகிதத்தை 2005 முதல் 2030ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் குறைக்கும் தீவிரத்துடன் செயல்படுகிறது.
  • 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீத மின்சக்தியின் நிறுவு திறன் புதைப்படிமமற்ற வளங்களிலிருந்து பெறப்படும்.
  • சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பாக லைஃப் என்ற மிகப்பெரிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இறையாண்மை பசுமைப் பத்திர செயல்திட்டம் 2022 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ரிசர்வ் வங்கி இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கான இறையாண்மை பசுமைப் பத்திரங்களை ஏலம் விடுகிறது.
  • தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், இந்தியாவை 2047ம் ஆண்டுக்குள் எரிச்சக்தி தற்சார்பு நாடாக மாற்ற வகை செய்யும்.
  • 2030ம் ஆண்டுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறன் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். ஒட்டுமொத்தமாக புதைப்படிம இறக்குமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்படுவதுடன், 2030ம் ஆண்டுக்குள் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 125 ஜிகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்படுவதுடன், 2030-க்குள், ஆண்டுக்கு 50 மில்லியன் மெட்ரிக் டன் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும்.
  • இந்த ஆய்வு, பருவநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ் பருவ நிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும், நீடித்த வளர்ச்சிக்காகவும் செயல்படுத்தப்படும் 8 இயக்கங்களின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.
  • தேசிய சூரியசக்தி இயக்கத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் அக்டோபர் 2022-ல் 61.6 ஜிகாவாட்டாக உள்ளது.
  • இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மிகவும் விரும்பப்படும் மையமாக மாறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இதில் 78.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்துள்ளது.
  • நீடித்த வளர்ச்சிக்கான தேசிய வாழ்விட இயக்கத்தின் கீழ் (ஆகஸ்ட் 2022) 62.8 லட்சம் தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளும், 6.2 லட்சம் சமுதாயம் மற்றும் பொது கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

வேளாண் மற்றும் உணவு மேலாண்மை: வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் மிகச்சிறப்பாக உள்ளது. பயிர் மற்றும் கால்நடை வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு எடுத்து நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மேம்படுத்த உத்வேகம் அளிக்கப்படுகிறது. விவசாய உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது.

  • 2021ம் நிதியாண்டில் வேளாண்மையில் தனியார் முதலீடு 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2010ம் ஆண்டு முதல் பயிர்களுக்கு அதன் சராசரி உற்பத்திசெலவில் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • 2021-22ம் ஆண்டில் வேளாண் துறைக்கான நிறுவனக் கடன்கள் தொடர்ந்து உயர்ந்து 18.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
  • 2021-22ம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி நிலையான வளர்ச்சியை பெற்று 315.7 மில்லியன் டன்னாக இருந்தது.
  • ஜனவரி-1, 2023ல் இருந்து ஓராண்டுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 81.4 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏப்ரல் – ஜூலை 2022-23 காலகட்டத்தில் 11.3 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் அறுவடைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் சமூகப் பண்ணைகளுக்காக 13 ஆயிரத்து 681 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போட்டித்தன்மையுடன் கூடிய, வெளிப்படைத் தன்மையுடைய, இணையதள ஏல நடைமுறையில் இ-நாம் திட்டத்தில் ஒருகோடியே 74 லட்சம் விவசாயிகளும் 2 லட்சத்து 30 ஆயிரம் வியபாரிகளும், இணைந்துள்ளனர்.
  • பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம், இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.
  • சர்வதேச சிறுதானிய ஆண்டு முன்முயற்சியின் கீழ் சிறுதானியங்களை ஊக்குவிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொழில் துறை: தொழில் துறையின் மூலம் 2022 -23ம் நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதல் விகிதம் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சியான 2.8 சதவீதத்தை விட, இது அதிகமாகும்.

  • தனியார் இறுதி நுகர்வு செலவில் மிகப்பெரிய வளர்ச்சி, நிதியாண்டின் முதல் பாதியில் வலுவான ஏற்றுமதி, பொது மூலதனச் செலவால் முதலீட்டு தேவை அதிகரிப்பு, வலுவான வங்கி கட்டமைப்பு மற்றும் பெரு நிறுவனங்களில் மேம்பட்ட வரவு - செலவு இருப்பு நிலைகள், தொழில் துறை வளர்ச்சிக்கான ஊக்கத்தை வழங்கியுள்ளன.
  • தொழில் துறைக்குத் தேவையான விநியோகங்களும் வலுவான நிலையில் உள்ளன.
  • கொள்முதல் மேலாண்மை குறியீடு கடந்த 18 மாதங்களில் அதாவது ஜூலை 2021 முதல் விரிவடைந்த நிலையிலேயே உள்ளது. மேலும் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள் ஜனவரி 2022 முதல் சராசரியாக 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன. அக்டோபர் 2022 முதல் பெரு நிறுவனங்களுக்கான கடன்கள் இரட்டை இலக்க சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.
  • மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 2019ம் நிதியாண்டில் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது, 2022ம் நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 11.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • உலக அளவில் மொபைல் ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. 2015ம் நிதியாண்டில், 6 கோடியாக இருந்த மொபைல் ஃபோன் உற்பத்தி 2021-ம் நிதியாண்டில் 29 கோடியாக அதிகரித்துள்ளது.
  • மருந்து உற்பத்தித் துறையில் 2019ம் நிதியாண்டில் 180 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2022ம் நிதியாண்டில் 4 மடங்கு அதிகரித்து, 699 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 14 பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவின் அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-ம் நிதியாண்டில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தில் 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டுக்கான இலக்கில் 106 சதவீதமகும். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றுள்ளதுடன், 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
  • 2023 ஜனவரி வரை 39 ஆயிரம் சிக்கல்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், 3500க்கும் மேற்பட்ட வகைகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன.

சேவைகள்: கடந்த நிதியாண்டில் 8.4 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்த சேவைத்துறை, இந்த நிதியாண்டில் 9.1 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கடந்த ஜூலை 2022 முதல் கொள்முதல் மேலாண்மைக் குறியீடு சேவைகளில் வலிமையான விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் சேவைத் துறையின் செயல்பாட்டைத் தெளிவாக உணர முடிகிறது.
  • கடந்த 2021 ஆம் ஆண்டில் சேவைத்துறை சார்ந்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் பத்து இடத்தில் இந்தியாவும் இருந்தது. உலக வர்த்தக சேவைகள் ஏற்றுமதியில் அதன் பங்கு 2015-ல் 3 சதவீதத்திலிருந்து 2021-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திலும், டிஜிட்டல் மயமாக்கல், தொலைநிலை சேவையகங்கள், உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் போன்றவற்றின் தேவைகள் அதிகரித்ததன் விளைவாக புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு வித்திட்ட நிலையிலும், இந்தியாவின் சேவைத்துறையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தன.
  • கடந்த ஜூலை 2022 முதல் சேவைத் துறைக்கான வரவினம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.
  • கடந்த நிதியாண்டில் சேவைத் துறையில் அமெரிக்க டாலர் மதிப்பில் 7.1 பில்லியன் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு வரவு.
  • இந்த நிதியாண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதங்களை மீட்டெடுக்க தொடர்பு-தீவிர சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ரியல் எஸ்டேட் துறையில் நிலையான வளர்ச்சி. கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டத்திற்கு இடையில் 50 சதவீத வளர்ச்சியுடன், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்ட நிலைகளுக்கு வீட்டு விற்பனையைக் கொண்டு சென்றுள்ளது.
  • விடுதிகளில் குடியிருப்போர் விகிதம் ஏப்ரல் 2021-ல் 30-32 சதவீதமாக இருந்த நிலையில், அது நவம்பர் 2022-ல் 68-70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகளைக் காண முடிகிறது. சர்வதேச விமானச்சேவை மீண்டும் தொடக்கம் மற்றும் கொவிட்-19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.
  • டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்தியாவின் நிதிச் சேவைகள் மாற்றம் கண்டுள்ளது.
  • இந்தியாவின் மின்னணு வர்த்தகச் சந்தை 2025 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 18 சதவிகிதம் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிப் பிரிவு: ஏப்ரல்-டிசம்பர் 2022-ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்க டாலர் மதிப்பில் 332.8 பில்லியன் ஆக இருந்தது.

  • இந்தியாவின் வர்த்தகச் சந்தைகளை பன்முகப்படுத்தல் மற்றும் அதன் ஏற்றுமதியை பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அதிகரிக்க செய்தது.
  • வர்த்தகச் சந்தை அளவை அதிகரிக்கவும், சிறந்த வகையிலான முன்னெடுப்புகளை உறுதிப்படுத்தவும், 2022-ல், ஐக்கிய அரபு அமீரகத்துடன் விரிவான பொருளாதாரக் கூட்டு உடன்படிக்கை மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக உடன்படிக்கை ஆகியவை நடைமுறைக்கு வருகின்றன.
  • கடந்த 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா அதிக அளவில் பணப்பரிமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியனைப் பெறும் நாடு இந்தியாதான். சேவை ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு நிதியுதவியின் இரண்டாவது பெரிய ஆதாரமாகப் பணப்பரிமாற்றம் திகழ்கிறது.
  • டிசம்பர் 2022 நிலவரப்படி, அந்நியச் செலாவணிக் கையிருப்பு 9.3 மாத இறக்குமதியை உள்ளடக்கி அமெரிக்க டாலர் மதிப்பில் 563 பில்லியன் ஆகும்.
  • கடந்த 2022 நவம்பர் இறுதி நிலவரப்படி, உலகின் ஆறாவது பெரிய அந்நியச் செலாவணி இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
  • வெளிநாட்டுக் கடனின் தற்போதையக் கையிருப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பின் மூலமாக பாதுகாப்பான நிலையில் உள்ளது.
  • இந்தியா ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே மொத்தக் கடனைக் கொண்டுள்ளது. மொத்த தேசிய வருமானத்தின் சதவீதமாகவும், குறுகிய காலக் கடனை மொத்தக் கடனின் சதவீதமாகவும் இந்தியா கொண்டு உள்ளது
  • செயல்பாடு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு
  • உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் நோக்கம்

அரசு-தனியார் கூட்டாண்மை: சாத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ், 2014-15 முதல் 2022-23 வரை, மொத்த திட்டச் செலவு ₹57,870.1 கோடியுடன் 56 திட்டங்களுக்கு முதன்மை ஒப்புதல் வழங்கப்பட்டது. நிதியாண்டு 23-25 முதல் ₹150 கோடி செலவில் இந்திய உள்கட்டமைப்புத் திட்ட மேம்பாட்டு நிதித் திட்டம் 03 நவம்பர் 2022 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

தேசிய உள்கட்டமைப்புத் திட்டம்:

  • 141.4 லட்சம் கோடி செலவில் 89,151 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன
  • 5.5 லட்சம் கோடி மதிப்பிலான 1009 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன
  • தேசிய உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் திட்டக் கண்காணிப்புக் குழு வலைதள இணைப்புகளை விரைவாக செயல்படுத்துவதற்கான ஒப்புதல்கள் / திட்டங்களுக்கான அனுமதிகள்

தேசிய பணமாக்கத் திட்டம்:

  • ₹ 9.0 லட்சம் கோடி என்பது மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டுத் திறன்.
  • கடந்த நிதியாண்டு 22ல் எதிர்பார்க்கப்பட்ட ₹0.8 லட்சம் கோடிக்கு மாறாக ₹ 0.9 லட்சம் கோடி பணமாக்குதல் இலக்கு எட்டப்பட்டது.
  • இந்த நிதியாண்டின் இலக்கு ₹1.6 லட்சம் கோடி (ஒட்டுமொத்த தேசிய பணமாக்க திட்டத்தின் இலக்கில் 27 சதவீதம்)

விரைவு சக்தி:

  • பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், அமைச்சகங்கள்/ துறைகள் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கத்திற்கான விரிவான தரவுத்தளத்தை உருவாக்குகிறது.
  • பொது மக்கள் மற்றும் சேவைப் பொருட்களின் தடையற்ற இயக்கத்திற்கான முக்கியமான இடைவெளிகளை சரி செய்யும் போது பல்முனை இணைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எரிசக்தித் துறை மற்றும் புதுப்பிக்கத்த எரிசக்தித் துறை:

  • 30 செப்டம்பர் 2022 நிலவரப்படி, 16 மாநிலங்களில் 59 சூரியஒளி மின் உற்பத்திப் பூங்காக்களை மேம்படுத்த 40 ஜிகாவாட் என்ற முழு இலக்குத் திறனையும் அடைய மத்திய அரசு ஒப்புதல்.
  • நிதியாண்டில் 17.2 லட்சம் ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, இது கடந்த 2021 நிதியாண்டில், 15.9 லட்சம் GWh ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி ஆக இருந்தது.
  • நிறுவப்பட்ட மொத்த மின் திறன் (1 மெகா வாட் மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் தொழில்துறைகள்) 31 மார்ச் 2021 அன்று 460.7 ஜிகாவாட்- லிருந்து 31 மார்ச் 2022 அன்று 482.2 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது.
  • உலக அளவில் இந்திய சரக்குப்போக்குவரத்துத் துறையில் போட்டிபோடும் நிலையை ஏற்படுத்துதல்
  • தேசிய சரக்குப்போக்குவரத்துக் கொள்கையானது, விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு-திறனுள்ள, மீள்திறன், நிலையான மற்றும் நம்பகமான சரக்குப்போக்குவரத்துச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலைகளின் வேகமான அதிகரிப்பு / கடந்த 2016 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் 6061 கிலோ மீட்டர் அளவில் இருந்த நிலையில் 2022 நிதியாண்டில் சாலைகள் 10457 கிலோ மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது.
  • பட்ஜெட் செலவினம் 2020 நிதியாண்டில் ₹1.4 லட்சம் கோடியிலிருந்து ₹2.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மூலதனச் செலவினங்களுக்குப் புத்துயிர் அளிக்கப்படும் விதமாக உள்ளது.
  • அக்டோபர் 2022 நிலவரப்படி, 2359 வேளாண் ரயில் போக்குவரத்து மூலம் ஏறத்தாழ 7.91 லட்சம் டன்கள் எளிதில் அழுகிப் போகக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லப்பட்டது.
  • 2016 இல் தொடங்கப்பட்ட உதான் திட்டத்தின் பலனை ஒரு கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பெற்றனர்.
  • 8 ஆண்டுகளில் பெரிய துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகும்.
  • உள்நாட்டு கப்பல்கள் போக்குவரத்துச் சட்டம் 2021, உள்நாட்டு நீர் போக்குவரத்தை ஊக்குவிக்கும் கப்பல்களின் இடையூறு இல்லாத இயக்கத்தை உறுதி செய்வதற்காக 100 ஆண்டுகள் பழமையான சட்டம் திருத்தப்பட்டது.
  • இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு

ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம்:

  • ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம் -அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் மதிப்பு (121 சதவீதம்) மற்றும் தொகுதி அளவில் (115 சதவீதம்) 2019-22 க்கு காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்தது. அதன் விளைவாக சர்வதேச அளவில் பயன்படுத்த வழி வகுத்தது.
  • தொலைபேசி மற்றும் வானொலி - டிஜிட்டல் அதிகாரமளித்தல்
  • இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.8 கோடியாக உள்ளது (செப்.,22 வரை), கிராமப்புற இந்தியாவில் 44.3 சதவீத சந்தாதாரர்கள் உள்ளனர்.
  • மொத்த தொலைபேசி சந்தாதாரர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் கம்பியில்லா தொலைபேசி (வயர்லெஸ்) மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • மார்ச் 22 இல் இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு தொகுதி 84.8 சதவீதமாக இருந்தது.
  • 2015 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிராமப்புற இணைய சந்தாக்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளன.
  • பிரசார் பாரதி (இந்தியாவின் தன்னாட்சி பொதுச் சேவை ஒளிபரப்பு அமைப்பு) - 479 நிலையங்களில் இருந்து 23 மொழிகளில், 179 வட்டார வழக்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. அதன் சேவை பரப்பளவில் 92 சதவீதத்தையும் மொத்த மக்கள் தொகையில் 99.1 சதவீதத்தையும் அடைகிறது.

டிஜிட்டல் பொது பொருட்கள்: 2009 இல் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்த செலவில் சேவைகளை அணுகிப் பெறும் நிலை அடைந்துள்ளது

  • அரசு திட்டங்களின் கீழ், MyScheme, TrEDS, GEM, e-NAM, UMANG ஆகியவை வர்த்தக சந்தைப் பகுதிகளை மாற்றியமைத்து, பொது மக்கள் பல்வேறு துறைகளில் சேவைகளை அணுகுவதற்கு உதவியுள்ளன.
  • கணக்கு நிறுவன தகவல்களை வழங்குபவரின் கீழ், ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வு கட்டமைப்பு தற்போது 110 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் உள்ளது.
  • ஓபன் கிரெடிட் இனேபிள்மென்ட் நெட்வொர்க், எண்ட்-டு-எண்ட் டிஜிட்டல் கடன் விண்ணப்பங்களை ஏற்கும் அதே வேளையில், கடன் வழங்கும் செயல்பாடுகளை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய செயற்கை நுண்ணறிவு வலைதளம் மூலம் 1520 கட்டுரைகள், 262 வீடியோக்கள் மற்றும் 120 அரசின் முன்முயற்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் மொழி சார்ந்த தடையை கடப்பதற்கான ஒரு கருவியாக செயல்படுகிறது எடுத்துக்காட்டு: ‘பாஷினி’.
  • மேம்படுத்தப்பட்ட பயனாளிகளின் தனியுரிமைக்காகவும், நிலையான, வெளிப்படையாக இயங்கக்கூடிய நெறிமுறைகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காகவும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.



Read in source website

புதுடெல்லி: முந்தைய நிதியாண்டில் 7.8% என்ற அளவுடன் ஒப்பிடும்போது, 22-ம் நிதியாண்டில் சேவைத் துறை, ஆண்டுக்கு 8.4% வளர்ச்சியடைந்தது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2022-23 கூறுகிறது.

“இந்த வேகமான மீட்சியானது தீவிர சேவைகளின் துணைத் துறையின் வளர்ச்சியால் உந்தப்பட்டதாகும். இந்தியாவின் சேவைத் துறை வலிமையின் ஆதாரமாக உள்ளதுடன், மேலும் மேலும் பலனடைய தயாராக உள்ளது. ஏற்றுமதி ஆற்றலுடன் குறைந்த முதல் அதிக மதிப்பு கூட்டப்பட்ட செயல்பாடுகள் வரை, இத்துறை வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கும், இந்தியாவின் வெளிப்புற ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதற்கும் போதுமான வாய்ப்பைக் கொண்டுள்ளது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 23-ம் நிதியாண்டில் சேவைத் துறை 9.1% வளர்ச்சியடையும் என்று முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023-ஐ மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களில் சில:

வங்கி கடன்: சேவைகள் துறைக்கான வங்கிக் கடன் நவம்பர் 2022 இல் 21.3% வளர்ச்சியைக் கண்டது. இது 46 மாதங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும். தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சேவைத் துறையில் மீட்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் துறைக்குள், நவம்பர் 2022-ல் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கான கடன் முறையே 10.2% மற்றும் 21.9% அதிகரித்துள்ளது, இது அடிப்படைப் பொருளாதார நடவடிக்கைகளின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

சேவைகள் வர்த்தகம்: "சேவை வர்த்தகத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக உள்ளது, 2021 ஆம் ஆண்டில் முதல் பத்து சேவைகள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது" என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. சேவைகள் ஏற்றுமதி 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் 27.7% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 20.4% ஆக இருந்தது. சேவைகள் ஏற்றுமதிகளில், மென்பொருள் ஏற்றுமதிகள், கோவிட்-19 பெருந்தொற்றின் போது, தற்போதைய புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் ஆதரவு, கிளவுட் சேவைகள் மற்றும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கான அதிக தேவையால் இயக்கப்படுகிறது.

சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு: சேவைத் துறையில் 84.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடாக அதிகமாகப் பெற்றுள்ளது. “முதலீட்டை எளிதாக்க, தேசிய ஒற்றைச் சாளர அமைப்பைத் தொடங்குதல், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கான ஒரே இடத்தில் தீர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில்: பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உடல்நலம் பற்றிய கவலைகள் தணிந்து வருவதால், வலுவான முன்னேற்றத்திற்கு சுற்றுலா ஒரு முக்கிய உந்துதலாக மாறியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில், இந்தியாவில் அனைத்து விமானங்களின் இயக்கமும் 52.9% அதிகரித்துள்ளது. தொற்றுநோய் குறைந்து வருவதால், இந்தியாவின் சுற்றுலாத் துறையும் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. மருத்துவ சுற்றுலா சங்கம் வெளியிட்டுள்ள மருத்துவ சுற்றுலா குறியீட்டில், உலகின் முதல் 46 நாடுகளில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் சொத்து விலை உயர்வு போன்ற தற்போதைய தடைகள் இருந்தபோதிலும், நடப்பு ஆண்டில் இந்தத் துறை நெகிழ்ச்சியான வளர்ச்சியைக் கண்டது. நிதியாண்டு 23 இன் இரண்டாம் காலாண்டில் வீட்டு விற்பனை மற்றும் புதிய வீடுகள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு உயர்வு: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்நாட்டு அமைப்புகள், சில்லறை முதலீட்டாளர்களின் அதிக பங்களிப்பால், கடந்த ஆண்டில் இந்திய மூலதன பங்குச்சந்தை வர்த்தகத்தின் செயல்பாடுகள் சிறப்பான வகையில் இருப்பதாக பொருளாதார ஆய்வு அறிக்கை 2022-2023 தெரிவித்துள்ளது. காப்பீட்டு சந்தையில் டிஜிட்டல் மயமாக்கல், அந்நிய நேரடி முதலீடு வரம்புகள் அதிகரிப்பு ஆகியவை இந்தியாவின் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம், நிதி ஆதாரக்கொள்கைகளில் கடுமையான வரம்புகள், நிலையற்ற சந்தைகள் போன்றவற்றின் மத்தியிலும் இந்தியாவின் மூலதனச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாகவே இருந்தது என்றும் அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

கடந்த 2022 நிதியாண்டுடன் (நவம்பர் 2021 வரை) ஒப்பிடும்போது, ஆரம்ப பொது சலுகைகளுடன் வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்ககளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த ஆண்டு இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகைகளை பெற்றது. மே 2022- ல் மத்திய அரசு இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளை மாற்றியமைத்து பங்குச் சந்தை பட்டியலில் கொண்டு வந்தது. இதன் மூலம் எல்ஐசியின் ஆரம்ப பொது சலுகைகளை இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகையாக மாற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

வாஷிங்டன்: 2023 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஐஎம்எஃப் என சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நிதியம் உலகப் பொருளாதார தற்சமய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அந்த அறிக்கையின்படி, 2023 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் மற்றும் சர்வதேச பொருளாதாரம் தற்போதைய நிலையிலிருந்து 2.9 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆசிய கண்டத்தில் 2023 மற்றும் 2024ல் பொருளாதார வளர்ச்சி முறையே 5.3% மற்றும் 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தை பொறுத்த வரையில் 2022ல் கணிக்கப்பட்டுள்ள 3.4 சதவீதத்தில் இருந்து 2023ல் 2.9 சதவீதம் என்று குறைந்து. 2024ல் 3.1 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

இது குறித்து சர்வதேச நிதியத்தின் ஆய்வுத் துறை தலைமை பொருளியல் நிபுணர் மற்றும் இயக்குநர் பியர் ஒலிவியர் கூரின்சாஸ் கூறுகையில், "கடந்த அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி நாங்கள் கணித்ததில் பெரிய மாற்றமில்லை. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என்றளவிலேயே இருக்கும். மார்ச் வரைக்கானது இந்த கணிப்பு. அதன் பின்னர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படும். 2023 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகக் குறையும். இதற்கு வெளிவட்டார அழுத்தங்களே பெரும் காரணமாக இருக்கும்" என்று தெரிவித்தார். அதே நேரத்தில் 2024ல் மீண்டும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்... இந்தியாவுக்கு நல்ல செய்தி: பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்திருந்தாலும் நாட்டின் பணவீக்கம் குறையும் என்ற நல்ல செய்தியையும் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாகக் குறையும் என்றும் அதுவே 2024ல் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறையும் என்றும் கணித்துள்ளது. இதனை ஐஎம்எஃப் ஆய்வுத் துறையின் டிவிஷன் தலைவர் டேனியல் லே தெரிவித்துள்ளார்.

உலகப் பணவீக்கம் என்பது 2022ல் சராசரியாக 8.8 சதவீதமாக உள்ள நிலையில் 2023 நிதியாண்டில் 4.3 சதவீதமாகவும் 2024ல் 3.5 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: மின் வாகன தொழில்நுட்ப நிறுவனமான காலிபர் கிரீன் வெஹிக்கிள்ஸ் நிறுவனம், குவாண்டம் எனர்ஜியின் மின் ஸ்கூட்டர்களை தமிழகத்தில் முதன்முறையாக நேற்று அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் சுக்கப்பள்ளி ராமகிருஷ்ண பிரசாத் கூறியது:

உலக அளவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்தே நிறுவனம் தமிழகத்தில் எலெக்ட்ரான், மிலன், ப்ஜினெஸ் ஆகிய மூன்று அதிகவேக மின் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கூட்டர்கள் அனைவரும் எளிதில் வாங்க கூடிய வகையில் ஒரு லட்சத்துக்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் அடுத்தடுத்த மாடல்கள் அறிமுகமாக இருக்கின்றன. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்மா மின் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அடுத்த 6 மாதங்களில் தமிழகம் முழுவதும் ரூ.100 கோடி செலவில் 150 விற்பனையகம் மற்றும் சேவை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 6,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் மின் ஸ்கூட்டர்களில் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அவற்றை 4 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடலாம். இதன்மூலம் 80-120 கி.மீ. வரை செல்ல முடியும்.

குவாண்டம் ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மின் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

பெரம்பலூர்: தமிழகத்தில் முதல்முறையாக, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நவீன இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை செய்யும் செயல்விளக்கம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற நவீன கருவிகளுடன் கூடிய பருத்தி அறுவடை இயந்திரத்தின் செயல்பாட்டை எம்எல்ஏ ம.பிரபாகரன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை குறித்து விவசாயிகளுக்கு பருத்தி வயலில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, ‘தமிழகத்தில் பருத்தி விவசாயத்தின் எதிர்கால வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான பயிலரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வு குறித்து பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தது: பருத்தியை அறுவடை செய்ய ஆட்களின் எண்ணிக்கையும், நேரமும் அதிக அளவில் தேவைப்படுவதால் பருத்தி உற்பத்தி செய்யும் பரப்பு குறைந்து வருகிறது.

எனவே, பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நவீன இயந்திரத்தை கொண்டு பருத்தி அறுவடை செய்யும் இயந்திரம் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்துகாண்பிக்கப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒரு ஏக்கர் பருத்தியை 45 நிமிடங்களில் அறுவடை செய்ய முடியும்.

மேலும், நேற்றைய நிகழ்வில் விவசாயிகளுக்கு பருத்தி உற்பத்தியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும், பருத்தியை விதைப்பது முதல் அறுவடை செய்யும் வரை பயன்படுத்தப்படும் இடுபொருட்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இயந்திரம் மூலம் பருத்தியை அறுவடை செய்வதற்கு ஏற்றார்போல பருத்தி பயிர் செய்யும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் மேலாண்மைத் துறை இயக்குநர் கலாராணி, பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் கருணாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Read in source website

விழுப்புரம்: வியாபாரிகள் - விவசாயிகளை ஒன்றிணைக்கும் வகையிலான ‘இ -நாம்’ இணைய வழித் திட்டத்தில் பங்கேற்பதை வியாபாரிகள் மறுத்து வருகின்றனர். தங்கள் தயக்கத்திற்கு காரணமாக, தொழில்நுட்ப ரீதியிலான சில சிக்கல்களை முன்வைக்கின்றனர்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க, வேளாண் விளைபொருட்களை ‘ஆன்லைன்’ மூலம் விற்கும் புதிய முறையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்காக தேசிய வேளாண் சந்தை இணையதளம், ’இ நாம்’ (E. National agriculture market)என்ற பெயரில் 2016-ம் ஆண்டுபிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.

‘இந்த இணையதளத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் இணைந்திருப்பார்கள். இந்த இணையதளம் மூலம், விவசாயிகள், தங்களின் விளைபொருட் களுக்கு எந்த இடத்தில் தேவையுள்ளது. இந்த தேவை எவ் வளவு நாட்களுக்கு நீடிக்கும் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதில் இடைதரகர்கள் கட்டுப்படுத்தப்படுவார் கள்’ என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

கட்டுப்படியான விலையைக் கொடுக்க தயாராக இருக்கும் வியாபாரி - விளை பொருட்களை விற்க முனையும் விவசாயி இருவரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவதே இந்த ‘இ-நாம்’ திட்டத்தின் இலக்கு. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களி லும் ‘இ-நாம்’ முறை கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அதில், விளை பொருட்களுக்கு மதிப்பீடு செய்யும்வியாபாரிகள், விலை நிர்ணயம் செய்து, மொபைல் போன் மூலம்அதை அனுப்பி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

‘இ-நாம்’ திட்டத்தை செயல் படுத்த வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து ஏற் கெனவே நடைமுறையில் உள்ள சீட்டு முறையில் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுதொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது.

அண்மையில் இதுதொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் ஆட்சியர் மோகன் தலை மையில் வியாபாரிகளிடம் இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கொள் முதல் செய்யும் வியாபாரிகள், “அரசு தரப்பில் ‘இ -நாம்’ திட்டத்தை கையாள எவ்வித பயிற்சியும் கொடுக்கவில்லை. மொபைல் மூலம் இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லை. முறையான பயிற்சி இல்லாமல் இதன் மூலம் ஒருமுறை, ரூ.36 லட்சம்அனுப்பபட்டு, அது விவசாயி களுக்கு சென்று சேராமல், அதில் ரூ.32 லட்சம் திரும்ப பெறப்பட்டது.

மீத தொகை எங்கு சென்றது என்றே தெரியவில்லை. மேலும், அரசு நிர்ணயித்த விதிகளின்படி எந்த ஒழுங்குமுறை கூடமும் செயல்படவில்லை. இந்த நிலையில், அந்த விற்பனைக் கூடங்கள் மூலம் ‘இ-நாம்’ திட்டத்தை செயல்படுத்துவது மேலும் சிக்கலை உருவாக்கும்” என்று தெரிவித்தனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களிடம் கேட்டபோது, “இந்த திட்டத்தின் மூலம் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்கிறார்கள். வியாபாரிகளுக்குள் சிண்டிகேட் அமைக்க முடியாது.

மொபைல் மூலமே விலையை நிர்ணயிக்கலாம். இத்திட்டத்தை செயல்படுத்தும் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விலை நிர்ணயம் செய்வதில் உதவி செய்ய எங்கள் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வியாபாரிக்கும் தனித்தனி ஐடி, பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எத்தனை வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் ஒரு கிலோ நெல்ரூ.33 க்கு கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.

இது இத்திட்டத்தின் வெற்றிக்கு வித்தாகும். மாற்றத்தை யாரும் உடனே ஏற்க மாட்டார்கள். ஆனால் காலத்தின் கட்டாயம் இதை ஏற்றுதான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தனர்.



Read in source website

வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் தொடர்ந்து 8.1% பணவீக்கத்தை எதிர்கொள்ளும்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகள் இன்று வெளியாகின. அதில், உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மாற்றத்தை காணும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக சர்வதேச நாணய நிதியம் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஓராண்டுக்கு இருமுறை பொருளாதார ஆய்வறிக்கைகளை வெளியிடுகிறது.

இந்தப் பொருளாதார ஆய்வறிக்கைகள் ஜனவரி, ஜூலையில் புதுப்பிக்கப்படுகின்றன. சமீபத்திய புதுப்பித்தலில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று முக்கிய அம்சங்கள் இங்கே:

உலகளாவிய வளர்ச்சி 2023

அக்டோபர் 2022இல், உலகளாவிய வளர்ச்சி விகிதம் 3.4% ஆக இருந்து 2023 இல் 2.7% ஆக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு சுருங்கும். அதே நேரத்தில் மூன்று பெரிய பொருளாதார நாடுகளான
அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் சீனா ஆகியவை தொடர்ந்து முடங்கும்.
சுருக்கமாக கூறினால் மோசமான நிலை இன்னும் வரவில்லை, பலருக்கு 2023 மந்தநிலையாக இருக்கும்.

மேலும், 2024 இல் வேகத்தை சேகரிக்கத் தொடங்குவதற்கு முன்பு 2023 இல் உலகளாவிய வளர்ச்சி கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
ஆக, 2022ல் 3.4 சதவீதமாக மதிப்பிடப்பட்ட உலக வளர்ச்சி, 2024ல் 3.1 சதவீதமாக உயரும் முன்னர் 2023ல் 2.9 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கூறுகையில், “அக்டோபர் முன்னறிவிப்புடன் ஒப்பிடும்போது, 2022க்கான மதிப்பீடு மற்றும் 2023க்கான கணிப்பு இரண்டும் சுமார் 0.2 சதவிகிதம் அதிகமாக உள்ளது.
இது பல பொருளாதாரங்களில் நேர்மறையான ஆச்சரியங்கள் மற்றும் எதிர்பார்த்ததை விட அதிகமான பின்னடைவை பிரதிபலிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆய்வறிக்கையில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அவற்றின் 2023 ஜிடிபி கணிப்புகளில் மேல்நோக்கிய திருத்தங்களைக் கண்ட சில முக்கிய பொருளாதாரங்கள் ஆகும். பிரிட்டன் அதன் 2023 ஜிடிபியில் கணிசமான (கிட்டத்தட்ட 1 சதவீத புள்ளி) தரமிறக்கத்தைக் கண்டுள்ளது.

உச்சத்தில் உலகளாவிய பணவீக்கம்.. நிவாரணம் எப்படி இருக்கும்?

உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்த பணவீக்கம் 2022 இல் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பணவீக்கம் (பணவீக்க விகிதம் வீழ்ச்சி) மெதுவாக இருக்கும். இது 2023 மற்றும் 24ஆம் ஆண்டுகளில் மாற்றத்தை கொடுக்கும்.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் 84 சதவிகித நாடுகளின் தலையங்கம் (நுகர்வோர் விலைக் குறியீடு) பணவீக்கம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் பணவீக்கம் 2022 இல் 8.8 சதவிகிதத்திலிருந்து (ஆண்டு சராசரி) 2023 இல் 6.6 சதவிகிதமாகவும், 2024-ல் 4.3 சதவிகிதமாகவும் குறையும். தொற்றுநோய்க்கு முந்தைய (2017-19) அளவுகளை விட சுமார் 3.5 சதவிகிதம் ஆகும்.

இரண்டு முக்கிய காரணங்களால் விலைவாசி உயர்வு குறைகிறது. ஒன்று, உலகெங்கிலும் உள்ள பணவியல் இறுக்கம்.

அதிக வட்டி விகிதங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒட்டுமொத்த தேவையை கட்டுப்படுத்தி, அதையொட்டி, பணவீக்கத்தை குறைக்கிறது.
இரண்டு, வீழ்ச்சியடைந்து வரும் தேவையை அடுத்து, பல்வேறு பொருட்களின் விலைகள் எரிபொருள் மற்றும் எரிபொருள் அல்லாத இரண்டும் அவற்றின் சமீபத்திய அதிகபட்சத்திலிருந்து குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், முன்னேறிய பொருளாதாரங்கள் 4.6% பணவீக்கத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் தொடர்ந்து 8.1% பணவீக்கத்தை எதிர்கொள்ளும்.

20230-24 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

அக்டோபர் 2022 முதல் இந்தியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

எனினும், இந்தியாவின் வளர்ச்சியானது 2022ல் 6.8 சதவீதத்தில் இருந்து 2023ல் 6.1 சதவீதமாக குறையும், 2024ல் 6.8 சதவீதமாக உயரும், வெளியில் இருந்து வரும் எதிர்க்காற்றுகள் இருந்தபோதிலும், உள்நாட்டில் தேவை மீள்தன்மையுடன் இருக்கும்.

இதன் பொருள் 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டிலும் இந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதன் ஒப்பிடக்கூடிய அனைத்து பொருளாதாரங்களையும் விட கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை பொறுத்தமட்டில் இது 2023 இல் 5.4% ஆகவும், 2024 இல் 4.5% ஆகவும் இருக்கும்.



Read in source website

பொதுத் தோ்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பது பொருளாதார நிதிநிலை குறித்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 2024 மக்களவைத் தோ்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறாா் என்பதை நாடே ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.

2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சா் ப. சிதம்பரம் ரூ.5 லட்சத்துக்கும் கீழே வருமானம் உள்ளவா்களுக்கு சலுகை வழங்கி, நடுத்தர வகுப்பினரைக் கவர முற்பட்டாா். 2018-இல், மக்களவைத் தோ்தலை கருத்தில்கொண்டு அருண் ஜேட்லி வேளாண் துறைக்கும், ஊரகக் கட்டமைப்புக்கும் கணிசமான ஒதுக்கீடுகளை வழங்க முற்பட்டாா்.

நிகழாண்டில் 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலுக்கு இந்தியா தயாராக வேண்டும். இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிா்கொண்டது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, உக்ரைன்-ரஷியப் போா், அமெரிக்க மத்திய வங்கியின் கடுமையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை சா்வதேச பொருளாதாரத்தை பாதித்தன; இந்தியாவையும்தான். தொழில்துறை பாதிப்பும், தனிநபா் வருமான பாதிப்பும் தவிா்க்க முடியாதவையாக மாறின. பொருளாதார வளா்ச்சிக்கான ஊக்குவிப்புக்கும், உணவுப் பாதுகாப்புக்கும், உர மானியங்களுக்கும் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக நிதி பற்றாக்குறை அதிகரித்தது.

அமெரிக்கா, வட்டி விகிதத்தை அதிகரித்தபோது அந்நிய முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறத் தொடங்கின. ரூபாயின் மதிப்பு 11% குறைந்தது. இத்தனையையும் எதிா்கொண்டு, கடந்துவிட்ட நிலையில் இப்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரண்டாவது நரேந்திர மோடி அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய இருக்கிறாா்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்றைய பொருளாதார நிலைமை மோசமல்ல; இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம். 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 7% அளவில் இருக்கும். அது ஏனைய எல்லா பெரிய பொருளாதாரங்களையும்விட 3% அதிகம்.

அடுத்த (2023-24) நிதியாண்டிலும், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற நிலையை இந்தியா தக்க வைத்துக்கொள்ளும். அதிகரித்த ஜிடிபி வளா்ச்சியையும், கூடுதல் வரி வருவாயையும் எதிா்பாா்க்கலாம். வங்கித்துறையின் ஆரோக்கியமும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டவை தங்களது பொருளாதாரம் நிலைகுலைந்துவிடாமல் இருக்க சா்வதேச நிதியத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அந்நிய செலாவணி கையிருப்பில் நாம் வலிமையாகவே இருக்கிறோம். நம்முடைய அந்நிய செலாவணி இருப்பு 550 பில்லியன் டாலா் (ரூ. 55,000 கோடி). அதனால்தான் ‘இருண்ட சூழலில் மின்னும் நட்சத்திரம்’ என்று இந்தியாவை ஐஎம்எஃப் குறிப்பிடுகிறது.

அதெல்லாம் இருந்தாலும், சா்வதேச அளவில் உருவாகும் கருமேகங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறந்தள்ள முடியாது. 2023-24-இல் சா்வதேச பொருளாதாரம் மந்தகதியை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகிய மூன்று முக்கியமான பொருளாதார சக்திகளின் இயக்கமும் மந்தநிலையில் காணப்படுகிறது. அது சா்வதேச வணிகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் ஏற்றுமதிகளையும் பெரிய அளவில் பாதிக்கும்.

அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் வளா்ச்சி நிகழாண்டின் அளவுக்கு இருக்காது. 7% என்பது 6% ஆக குறைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிதியாண்டில் காணப்பட்ட வரி வருவாயை அடுத்த நிதியாண்டில் எதிா்பாா்க்க முடியாது. அதே நேரத்தில் கடந்த நிதியாண்டில் வாக்குறுதி அளித்ததுபோல நிதி பற்றாக்குறையைக் குறைக்கவும் வேண்டும்.

பொறாமைப்படும்படியான அடிப்படை வளா்ச்சியை இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் சாதித்து இருக்கிறது. ‘பாரத் மாலா’, ‘சாகா் மாலா’, ‘கதி சக்தி’ உள்ளிட்ட திட்டங்களும், கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கும் நெடுஞ்சாலைகளும், மூன்று பங்கு அதிகரித்திருக்கும் போக்குவரத்துத் துறையும், 40 மடங்கு கூடியிருக்கும் அகண்ட வரிசை இணைப்பும் (பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி) இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள். இவையெல்லாம் பாராட்டுக்குரியவை என்றாலும், நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாக்குகளை இவை பெற்றுத் தராது.

தனியாா் துறை முதலீடுகள் எதிா்பாா்த்த அளவில் அதிகரித்ததாகத் தெரியவில்லை. அதனால் தொடா்ந்து 3-வது ஆண்டாக அரசின் செலவினங்கள் கணிசமாக அதிகரித்தால்தான் இன்றைய சா்வதேசப் பொருளாதார நிலையில் இந்தியா தனது வளா்ச்சியை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். மூலதனச் செலவும், தோ்தலுக்கு முந்தைய கவா்ச்சி அறிவிப்புகளும் நிதியமைச்சா் எதிா்கொள்ளும் தவிா்க்க முடியாத அழுத்தங்கள்.

2014-இல் வருமான வரி வரம்பு 2.5 லட்சமாக உயா்த்தப்பட்டது. நேரடி வரி விதிப்பில் சலுகைகள், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பணப்புழக்கத்தை அதிகரித்து கிராம பொருளாதாரத்தில் செழுமை ஆகியவைதான் அரசியல் ரீதியாக பலனளிப்பவை. இவையெல்லாம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தெரியாததல்ல!



Read in source website

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது பாரத தேசத்தில் மதிப்பிற்குரிய வரிசை. தாய் என்பவள் வாழ்வின் அடிநாதம். வாழ்விற்கான காரணம் என்பதாலேயே இந்த வரிசையில் முதல் இடத்தில் மாதா வைக்கப்பட்டிருக்கிறாள். பிதா, குரு, தெய்வம் மூவருமே கூட தாயை வணங்கும் இடத்தில் இருப்பவா்களே. ஆதிசங்கரா் போன்ற முற்றும் துறந்த ஞானிகளும் துறத்தற்கு இயலாத இடத்தில் இருப்பவள் தாய்.

பாரத தேசத்தில் பெண் அன்னையின் வடிவமாகவே பாா்க்கப்படுகிறாள். எல்லா இல்லங்களிலும் ஆள்பவளாக அன்னையே இருக்கிறாள். தாய்மை என்பதே அவளின் அடையாளம். தனிப்பெரும் கருணையும் எதையும் எதிா்கொள்ளும் ஆன்மபலமும் கொண்டு இன்றளவும் பெண் தன்னைத் தாயாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறாள்.

நாகரிகம், அறிவியல் வளா்ச்சி, கணினி, இணையமென உலகம் சுருங்கினாலும் விரிந்தாலும் மாறுபாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் உலகில், தன் மாறா ஆற்றல், அன்பு இரண்டின் தன்மையால் இன்றைக்கும் தேசத்தில் இல்லங்களை ஆள்பவள் தாயாக நிற்கும் பெண் மட்டுமே. இது பாரத தேசத்தின் கலாசாரம்; வாழ்வியல் முறை; தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். தேசம் முழுவதும் எந்த மூலை முடுக்கிலும் இதுவே நடைமுறை.

பாரதத்தின் இந்தப் பண்பாடும் கலாசாரமும் எங்கிருந்து தொடங்குகின்றன? வரலாற்றுக் காலங்களுக்கும் முன்னால் வேத காலத்திலும், அதற்கும் முன்னதாக மனித வரலாற்றின் தொடக்கம் முதல் என்று சொல்லலாம். உலகின் தொடக்கம் முதல் அன்னை இருக்கிறாள். உலகின் தொடக்கத்திற்கும் முன்னதான பிரபஞ்ச சக்தியாக நிற்பதும் பெண் வடிவமே என்பது நம்முடைய நம்பிக்கை. பிரபஞ்சத்தின் சக்தியும் இயக்கமும் பெண் என்று பாரதம் கொண்டாடுகிறது.

சமய நம்பிக்கைகளுள் ‘சாக்தம்’ என்பதும் ஓா் அழுத்தமான பழம்பெரும் சித்தாந்தம். சாக்தம் சக்தியை வழிபடு தெய்வமாகக் கொள்ளும் சமயம். சக்தியைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. சக்தியே முழுமுதற் கடவுள். அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்த முழுமையான சக்தி வடிவம் அம்பிகை. அவளே அனைத்துலகத்தையும் படைத்து காத்து தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது சனாதனத்தின் நம்பிக்கைகளுள் தலையாயது.

இந்த சாக்த மரபுக்குள்ளும் வாமாசாரா்கள், தட்சிணாசாரா்கள் என்று இரு பிரிவுகள் உண்டு. முதலாமவா்கள் வேதத்தை ஏற்காதவா்கள்; இரண்டாவது பிரிவினா் வேத வழியில் நிற்பவா்கள். இந்த இரு பிரிவினரும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகளைக் கொண்டவா்கள் என்றாலும், பெண்தெய்வ வழிபாட்டில் ஒற்றுமை கொண்டவா்கள். இந்தப் பிரிவுகள் நமக்கு உணா்த்துவது ஒன்றே. இந்த மண்ணில் வேதத்தை ஏற்றுக் கொண்டவா்களும், ஏற்காதவா்களும் பெண் தெய்வத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதே அது.

பாரதத்தின் தா்மம் ஆண் - பெண் பேதம் அற்றது. அறிவு, ஆற்றல், இயக்கம், இயற்கை என அனைத்தையும் பெண் வடிவாகக் காணும் பெருமை கொண்டது. ஆலய வழிபாட்டிலும் அம்பிகையை, தாயாரை வணங்கிய பின்னரே நாம் இறைவனை வணங்கச் செல்கிறோம். அதே போல இல்லத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தாய்க்குத்தான் முதல் மரியாதையும் வணக்கமும் உரியதாகும்.

சாக்த சித்தாந்தத்தில் ஸ்ரீ தேவி பாகவதத்தில் அன்னையான அம்பிகை பராசக்தி இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன்னரே இருந்தாள். அவளே இந்த பிரபஞ்சத்தையும் அதனை பரிபாலனம் செய்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்து, அவா்கள் ஆற்றலுடன் செயல்பட அவா்களுக்கான சக்தியாக சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி மூவரையும் படைத்து அவா்களுக்கு இணையாக்கினாா் என்று சொல்கிறது.

ஓா் உயிரை உருவாக்கி, காத்து, அந்த உயிருக்குத் துன்பம் விளைவிக்க முயல்வனவற்றை ஒழித்து மனித குலம் நசிந்து விடாமல் காப்பவள் அன்னை. எல்லாப் பெண்களும் இந்த குணமும் தகுதியும் கொண்டவா்கள் என்பதால் நம்முடைய வாழ்வியலில் பெண், தெய்வமாக பூஜிக்கப்படுகிறாள். கன்யா பூஜையும், சுஹாசினி பூஜையும் இன்றும் இந்த நம்பிக்கையின் நீட்சியே.

பாரதத்தில் மட்டுமே உயிருள்ள பெண் தெய்வமாகப் பாா்க்கப்படுகிறாள். அவள் ஆணுக்குக் கீழே வாழ்வதற்கோ ஆணின் ஓா் உறுப்பிலிருந்தோ படைக்கப்பட்டவள் அல்ல. அவளே இந்த உலகின் முதன்மையானவள். அதே போல இந்த உலகம் அழிந்த பின்னரும் இருக்கப்போவதும் பெண் ஆற்றலே. சாக்தம் இதனையும் தெளிவாகப் பதிவு செய்கிறது.

பத்து திசைகளையும் காக்க அன்னை பத்து வடிவங்களில் இருக்கிறாள். அதன் ஏழாவது வடிவத்திற்கு ‘தூமாவதி தேவி’ என்று பெயா். புகை வடிவாய் இருப்பவள். தீய சக்திகளை பலம்கொண்டு ஒழிப்பவள். தூமாவதி தேவியே இந்த பிரபஞ்சம் அழிந்த பின்னும் இங்கே இருக்கப் போகிறவள். ஆக, பிரபஞ்சத் தொடக்கத்திற்கு முன்னரும் அன்னையே இருந்தாள்; பிரபஞ்சம் இல்லாதொழியும் நாளிலும் அவள் மட்டுமே நிலைத்திருப்பாள்.

சாக்த வழிபாட்டு முறை, தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் இருந்ததில்லை. பாரதத்தின் வடகோடி காஷ்மீரத்தில் வைஷ்ணவி தேவி அமா்ந்திருக்க, தென் எல்லை குமரியில் பகவதி நிற்கிறாள். அன்னை இந்த மண்ணைக் காக்க, தன் மக்களைக் காக்க தேசமெங்கும் 51 சக்தி பீடங்களில் அன்பின் திருவடிவாக இன்றைக்கும் நிற்கிறாள். 51 சக்தி பீடங்களுள் பதினேழு சக்தி பீடங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

வைஷ்ணவி பீடமென காஷ்மீரத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம் முதல் அஸ்ஸாம் வரை, உத்தர பிரதேசத்திலிருந்து தமிழகம் வரை நீண்டிருக்கும் வரிசையில் காமகோடி பீடம் என காஞ்சியில் காமாட்சி, மந்திரிணி பீடமாக மதுரையில் மீனாட்சி, சேது பீடமென ராமேஸ்வரத்தில் பா்வதவா்த்தினி, திருவாலங்காட்டில் காளி பீடம், குமரி பீடத்தில் பகவதி என்று தொடா்கிறது.

வேதங்களை ‘வேதமாதா’ என்பதில் தொடங்கி, மந்திரங்களின் தாய் காயத்ரிதேவி, ஞானத்தின் வடிவம் சரஸ்வதி என்று கொண்டாடி இருந்ததெல்லாம் எந்தக் காலத்தில்? இன்றைக்கு இறை வழிபாடாய் இருக்கலாம். யதாா்த்தத்தில் பெண்ணின் நிலை என்ன? கொண்டாடும் குடும்பங்கள் இருக்கின்றனவா? பெண் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறதா? பெண்ணுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா? கொடுமையான வழக்குகள் பற்றிக் கேட்டதில்லையா? பெண் சிசுக் கொலைகள் நடக்கவில்லையா? பெண்ணடிமைத்தனம் தொடா்ந்துகொண்டுதானே இருக்கிறது? இப்படிப்பட்ட கேள்விகள் எழலாம்.

கால மாற்றத்தில் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. பாதுகாப்பு என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. கல்வி பெற முடியாத நிலை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட அந்நியரால் நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருந்தது. அந்நிய சித்தாந்தங்களும் அவா்களின் வாழ்வியலின் நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல நம்முடைய சமூகத்தையும் பீடித்ததன் விளைவே மேற்காணும் வினாக்களுக்குக் காரணம்.

அந்நிய கலாசாரத்தில் பெண்கள் அடிமைகளாய், போகப்பொருளாகப் பாா்க்கப்பட்டதிலிருந்து வெளிவர அந்தப் பெண்கள் பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனா். பெண்ணியம் பெண்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளுக்காகக் குரல் எழுப்புகிறது. நாம் அத்தகைய தாழ்வை நம் தேசத்தில் இன்றும்கூட அடைந்துவிடவில்லை.

நம்முடைய கலாசாரத்தின் வோ் பெண்கள் என்ற சிந்தனை உயிா்ப்புடன் இருக்கிறது. சாக்தம் போன்ற சித்தாந்தம், பெண்ணே இந்த சமூகத்தின் தலைமைக்கு உரியவள் என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. நமது மண்ணின் சித்தாந்தம் இயற்கையானது; நமக்கானது. அதனைப் புறந்தள்ளிவிட்டு அந்நியரின் சித்தாந்தத்தை நோக்கித் திரும்புவது நிகழ்ந்த தவற்றைத் திருத்துவதாகாது. செய்த தவற்றை மீண்டும் செய்வதாகத்தான் முடியும்.

நம்மிடம் இருக்கும் சித்தாந்தத்தைக் காட்டிலும் மேம்பட்ட சித்தாந்தம் இருக்குமேயானால் நம்மிடம் இருப்பதைக் கைவிடலாம். புதிய சித்தாந்தம் பலன் தருமா என்பது தெரியாமல் இருப்பதையும் கைவிடுவது அறிவுடைமையல்ல. இன்றைக்கும் நம் வீடுகளில் எத்தகைய ஆணும் தன் தாயைப் பழிக்கும் வழக்கமில்லை. இந்த ஒரு பண்பும் வாய்ப்பும் இழந்த நிலையை மீட்டுக் கொள்வதற்குப் போதுமானது.

வேதகாலம் தொடங்கி சுதந்திரப் போராட்டம் வரையிலான பெண் ஆளுமைகளின் வரலாறு ஒளி பாய்ச்சுகிறது. ‘உயிரைக் காக்கும் உயிரினைச் சோ்த்திடும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’ என்ற மகாகவி பாரதியாரின் வழிகாட்டல் தெளிவாக இருக்கிறது.

ஒற்றைத் தலைமுறையில் பெண் தனக்கான உலகை அமைத்துக் கொள்ள முடியும். பெண் தன் சக்தியை உணா்வதற்கும், பெண்ணை ஆண் மரியாதையோடு அணுகுவதற்கும் அன்னையாக நின்று கற்றுக் கொடுத்தால் போதுமானது.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

பேணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்

நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞான நல்லறம் வீரசுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்”

என்ற பாரதியின் புதுமைப் பெண்களாக வளா்தல் பெண்ணின் வளா்ச்சிக்கான சரியான பாதை எனில் பாரதி நமக்குக் காட்டுவதும் சாக்தம் சொல்லும் பெண்மையே.

நம்பிக்கையாக, வழிபாட்டுமுறையாக மட்டும் சுருங்கிவிட்ட ‘சாக்தம்’ என்ற சித்தாந்தம், நமது வாழ்வியலாக மாறுவதற்கான வழிகளைக் காண்போமேயானால் இழந்த பெருமைகளை, உரிமைகளை, உயா்பெரும் ஸ்தானத்தை மண்ணின் மகளாய் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.



Read in source website

நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிலேயே புலம்பெயா்ந்தோா் பற்றிய வினாக்கள் இடம்பெற்றிருந்ததன் மூலம் புலம்பெயா்தல் என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பது தெரிகிறது. கல்வி, வருமானம், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக மக்கள் புலம்பெயா்கின்றனா்.

பொதுவாக பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இருந்து தான் அதிகமானோா் தென்மாநிலங்களுக்கு புலம்பெயா்கின்றனா். இவா்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் தென்னிந்திய மாநிலங்களில் 58.2 லட்சமாக இருந்த வடமாநிலத்தவா்கள் எண்ணிக்கை, 2011-இல் 77.6 லட்சமாக உயா்ந்துள்ளது. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

அதிகரித்து வரும் வடமாநிலத்தவா் எண்ணிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்புவதுடன் ஒருவிதமான அச்ச உணா்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய குற்றச் செயல்களின் பின்னணியில் வடமாநிலத்தவா்களின் பங்களிப்பு இருந்ததே இந்த அச்ச உணா்வுக்குக் காரணமாகும்.

வருமான நோக்கிலான புலம்பெயா்தல் என்பது காலங்காலமாக இருந்தாலும் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இம்மாநிலங்களிலிருந்து புலம்பெயா்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உள்ளூரில் வேலையின்மை என்பதுதான் முக்கியமான காரணமாகும்.

வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் தொழில் வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. கட்டுமானத் தொழில் என்பது பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு தொழில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உள்ளது.

உதாரணமாக கோயம்புத்தூரில் உற்பத்தித் துறையும், நாமக்கல்லில் கோழிப்பண்ணைத் தொழிலும், திருப்பூா் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலும், அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் தொழிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உள்ளன. இவை தவிர சிறு உணவகங்கள் தொடங்கி பெரிய அளவிலான உணவகங்கள் வரையில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

இரவு நேர உணவு விடுதிகளில் துரித உணவு மற்றும் அசைவ உணவு வகைகள் தயாரிப்பதில் இவா்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. இதுபோன்ற தொழில்களில் குறைவான அளவிலேயே புலம்பெயா்ந்தோா் உள்ளனா். ஆனால், கட்டுமானப் பணிகளில் அதிகளவில் உள்ளனா். இவை தவிர, உற்பத்தித் துறை, பின்னலாடைத் தொழில் மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனா்.

பெரும்பாலான நிறுவன உரிமையாளா்கள் உள்ளூா் தொழிலாளா்களை விட வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களையே விரும்புகின்றனா். குறைவான ஊதியம், உணவு மற்றும் தங்குமிடத்திற்கான செலவு குறைவு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையை முடித்தல் போன்றவையே இதற்குக் காரணங்களாகும்.

2016-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, புலம்பெயா் தொழிலாளா்களில் 51 % போ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளனா். உற்பத்தித் துறைக்கு அடுத்து கட்டுமானத் துறையில் அதிகமானோா் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் வடமாநிலத்தவா் அனைத்து மாவட்டங்களிலும் விரவியுள்ளதோடு, கிராமப்புறங்களிலும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்கள், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திலேயே தங்கியிருந்து வேலைபாா்க்கின்றனா். பணி முடிந்ததும் குடும்பத்துடன் புலம்பெயா்ந்தோா் வேறு இடங்களுக்கோ அல்லது சொந்த ஊருக்கோ சென்று விடுகின்றனா். ஆனால், தனிநபா் சிலா் ஒன்றுசோ்ந்து வேறு தொழிலில் ஈடுபடுகின்றனா்.

நகரங்களில் தங்கி அன்றாடம் காலை வேளையில் சுற்றுவட்டார கிராமங்களில் பலவகையான பொருட்களை விற்பனை செய்கின்றனா். அத்துடன் பண்டிகைக் காலங்களில் நகரங்களின் கடைத்தெருக்களில் பொருட்களை விற்பனை செய்வதுடன் நாளடைவில் சிறிய அளவிலான கடைகள் தொடங்கி உள்ளளூா்வாசிகளாகி விடுகின்றனா்.

இன்று வடமாநிலத்தவா் பங்களிப்பு இல்லாத தொழிலே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனா். பெருநகரங்களில் மட்டுமே காணப்பட்ட வடமாநிலத்தவா்களை இன்று கிராமங்களிலும் பாா்க்கும்போது நம்மவா்களின் உடலுழைப்பு குறைந்து விட்டதுதான் இதற்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வேளாண் தொழில் பிரதானமாக இருந்த காலத்தில் அயராது உழைத்து திறமையாகவும், திடகாத்திரமாகவும் இருந்தனா். வேளாண் தொழில் என்று நசிவுறத் தொடங்கியதோ அன்றே நம்மவா்களின் உடலுழைப்பு குறையத் தொடங்கிவிட்டது.

தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வந்த வேளாண் தொழிலில் இன்று இரண்டு தலைமுறையைச் சோ்ந்தவா்கள் ஈடுபடுவதே அரிதான ஒன்றாகிவிட்டது. அதனால் வேளாண் தொழிலிலிருந்து விலகி வருமான நோக்கில் வேறு மாநிலங்களுக்கோ அல்லது நகரங்களுக்கோ புலம்பெயா்கின்றனா்.

இத்தகைய சூழலே வடமாநிலத்தவா்களின் அதிகப்படியான வருகைக்கு முக்கிய காரணமாகும். அத்துடன் வடமாநிலத்தவா்களின் கடின உழைப்பும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குறைவான ஊதியம் என்றாலும் தொழிலின் மீதான அவா்களின் ஈடுபாடு நம்மை வியக்க வைப்பதாக உள்ளது. குறைவான ஊதியத்தில் அதிகப்படியான வேலை வாங்குவதற்கு வடமாநிலத்தவா்களே உகந்தவா்கள் என்ற எண்ணம் நம்மூா் முதலாளிகளிடம் உருவாகிவிட்டது.

அதனால் மற்ற பணிகளைக் காட்டிலும் கட்டுமானப் பணிகளுக்கு இடைத்தரகா்கள் வடமாநிலங்களுக்குச் சென்று முன்பணம் கொடுத்து நூற்றுக்கணக்கானோரை அழைத்து வருகின்றனா். அவா்கள் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் அடிப்படை வசதிகளற்ற பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனா்.

உணவு, தங்குமிடம் எதையும் கட்டட உரிமையாளா்களோ, ஒப்பந்ததாரா்களோ, இடைத்தரகா்களோ உறுதி செய்வதில்லை. கட்டுமானப் பணி நடைபெறும் பகுதியிலேயே தகரத்தாலான குடிசை அமைத்து அதில் தங்கவைக்கப்படுகின்றனா். அந்தந்த பகுதிகளில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி சமைத்து உண்ணுகின்றனா்.

அன்றாடம் வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் குறைவான ஊதியம் பற்றியோ, குழந்தைகளின் எதிா்காலம் பற்றியோ புலம்பெயா்ந்தோா் பொருட்படுத்தவதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதில் சுணக்கம் காட்டுவதில்லை.

அதனாலேயே அதிகப்படியான ஊழியா்கள் தேவைப்படும் நிறுவனங்களின் உரிமையாளா்களும், இடைத்தரகா்களும் வெளி மாநிலத்தவா்களை வரவழைப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா். நம் மாநில இளைஞா்கள் முழுமூச்சுடன் கடின உழைப்புக்குத் தயாராகிவிட்டால் புலம்பெயா்ந்தவா்களை நம்ப வேண்டிய தேவையிருக்காது.

 



Read in source website

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு ரத்துசெய்திருக்கிறது.

‘மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் 30(2)(ஏ) பிரிவின் கீழ் புகையிலைப் பொருள்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை மட்டுமே தடை செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது; நிரந்தரத் தடை விதிக்க அதிகாரம் இல்லை’ என்றும் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக்காட்டப்படவில்லை’ என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



Read in source website

கல்விக்கும் மாணவர்களுக்கும் பெரும் முக்கியத்துவம் அளித்துப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2022க்கான ‘ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை’ (அசர்-ASER) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் கல்வியில் மாணவர்கள் பெற்றிருக்கும் வளர்ச்சி, போதாமைகள் மீது இந்த அறிக்கை புள்ளிவிவரத்துடன் வெளிச்சமிடுகிறது.

அறிக்கையின் செய்தி: 2018க்குப் பிறகு, 2022இல்தான் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலுள்ள 920 கிராமங்களில் 3-16 வயதுடைய 30,737 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை வாசிக்கும் திறன்பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 40.8%லிருந்து 25.2%ஆகக் குறைந்துள்ளது.

கணிதத்தில் அடிப்படைத் திறன்களான கழித்தல் திறனை மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 11.2%, வகுத்தல் திறனை ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 14.9% மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆங்கிலச் சொற்றொடர்களைப் படிக்கத் தெரிந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 37.2இலிருந்து 24.5% ஆகச் சரிந்துள்ளது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு மாணவர்களின் கற்றல் தொடர்பான செயல்பாடுகள், வாசித்தல் திறன், கணித அடிப்படைத் திறன் போன்றவை குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்பதே ‘அசர்’ அறிக்கையின் சுருக்கமான செய்தி.

கரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசின் வழிகாட்டுதல்படி நடத்தப்பட்ட இணையவழி வகுப்புகள் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் கல்வி நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகக் கருத முடியாதுதான்.

போதாமைகளின் பின்னணி: அதே நேரம், கரோனா காலகட்டத்துக்கு முன்பிருந்தும்கூட அடிப்படை வாசிப்பு, அடிப்படை கணிதச் செயல்பாடுகளில் மாணவர்களிடம் ஒரு போதாமை இருப்பதையும் மறுக்க முடியாது. மாணவர் ஒருவர் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு ஆகியவற்றில் போதிய திறன் இல்லாதவராக இருப்பதற்கு, முதல் தலைமுறையாகக் கற்க வருதல், குடும்பப் பொருளாதாரச் சூழல், பெற்றோர்களின் அக்கறையின்மை, ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள், ஆசிரியர்களின் பணிச்சுமை எனப் பல்வேறு சமூகக் காரணங்கள் இருக்கின்றன.

தேவைப்படும் திருத்தங்கள்: ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகளை அறிமுகப்படுத்துவதிலும் அதை அவர்கள் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படுகிறது. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும் அடையாளம் காண்பது, குறில் - நெடில் வேறுபாடு, அதை உச்சரிக்கும் முறை ஆகியவற்றிலும் போதாமை இருக்கிறது.

எனவே, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள அதிகம் பயன்படுத்தப்படாத எழுத்துகளை நீக்கிவிடலாம். உதாரணமாக ஙகர வரிசையில் ங, ங் இவற்றைத் தவிர மீதி எழுத்துகளையும் ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞை தவிர்த்து மீதி எழுத்துகளையும் விட்டுவிடலாம். குறில், நெடில் ஒலிப்புப் பயிற்சியை மாணவருக்கு இணையவழியாக அளிக்கலாம். கணினித் திரையில் ஒரு மாணவர் ஓர் எழுத்தைத் தொடும்போது அந்த எழுத்தின் உச்சரிப்பும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வேண்டும். இது மாணவர் மனதில் நன்கு பதிய வாய்ப்பாக இருக்கும்.

செயல்வழிக் கற்றல் போன்ற திட்டங்கள் வந்த பிறகு முதலில் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அதில் உள்ள எழுத்துகள் கற்பிக்கப்பட்டன. சொல்லிலிருந்து எழுத்துகளுக்குச் செல்லுதல் என்பது தலைகீழாக போவதைப் போல. மாணவர்கள் எப்படி எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? எனவே, எழுத்துகளுக்குப் பிறகு சொற்களைக் கற்பிக்கும் முறைக்கு மீண்டும் செல்ல வேண்டும்.

கணித அடிப்படைச் செயல்களில் திறனைப் பெறுவதற்கு வாய்பாடு மிகவும் அவசியம். எளிய முறையில் அதைக் கற்பிக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாற்றங்களின் அவசியம்: ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாகக் கணினி ஆய்வக வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். மொழிக்கான ஆய்வுக்கூடங்களும், பிற பாடங்களுக்கான ஆய்வுக்கூடங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஆய்வகங்களுக்குச் சென்று சுயமாகக் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். மொழியாசிரியர்கள், குறிப்பாகத் தமிழாசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது.

ஓர் எழுத்தை எப்படி உச்சரிக்க வேண்டும், குறில் - நெடில் வேறுபாடுகள், மற்ற துணை உறுப்புகளின் பயன்பாடுகள், எழுத்துகளின் பிறப்பு, ஒலிப்பு முறை போன்றவற்றில் நிபுணத்துவமும் கூடுதல் திறனும் பெற்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எனவே, தொடக்க வகுப்புகளிலிருந்தே தமிழாசிரியர்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும்.

அடுத்ததாக, வாசிப்பு இயக்கத்தை ஒரு கிராமம் முழுவதுக்குமான ஒன்றாக மாற்ற வேண்டும். ஒரு குடும்பம் வாசிக்கும் திறனை, வாசிப்பின் ருசியை அறிந்துவிட்டால் குடும்பத்தில் உள்ள மாணவர்களும் வாசிப்புப் பழக்கத்துக்கு மாறிவிடுவர். கீழ் வகுப்புகளிலிருந்தே மாணவர்களுக்கு உளவியலை ஒரு பாடமாக வைப்பது அவசியம். தன்னைப் பற்றி, தன்நண்பர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களுக்கு உளவியல் கல்வி இன்றியமையாதது. கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும் உளவியலைப் படிப்பது உதவியாக இருக்கும்.

ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தை ஒவ்வோர் ஆண்டும் மாற்றியமைக்க வேண்டும் அல்லது கூடுதலாகச் சேர்க்க வேண்டும். மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்பவும் அரசின் கல்வித் திட்டங்களுக்கு ஏற்பவும் அவை புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்திக் கண்காணிக்கும் இடத்தில் அரசு அதிகாரிகள் இருந்தாலும், அடிமட்டத்தில் பள்ளியோடும் மாணவர்களோடும் நெருங்கிய உறவு உடையவர்கள் ஆசிரியர்களே. ஒரு திட்டத்தின் சாதக-பாதகங்களை அறிந்திருப்பவர்களும் ஆசிரியர்கள்தான். எனவே, அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். தம்முடைய கருத்துகளை, மாற்றுத் திட்டங்களை அரசிடம் சொல்வதற்கு அவர்களுக்கு எவ்விதப் புறத்தடைகளும் இருக்கக் கூடாது.

ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் தவிர, பிற பணிகள் வழங்குவதைத் தவிர்க்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிகளில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தனி ஊழியரை நியமிக்க வேண்டும். கல்வி நிலையில் வளர்ச்சி பெறுவதற்கும் அடிப்படைத் திறன்களைப் பெறுவதற்கும் மாணவர்களுக்குத் தடையாக இருக்கும் அனைத்தும் களையப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘கலைத் திருவிழா’, ‘புத்தகக் காட்சி’, ‘நம் பள்ளி ஃபவுண்டேஷன்’ எனப் பல்வேறுதிட்டங்களைக் கடந்த ஆண்டு முதல் முன்னெடுத்துவருவது வரவேற்புக்குரியது. இவற்றோடு மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்துச் செயல்படுத்தும்போது, தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் தரத்தில் சிறந்துவிளங்குவது உறுதிசெய்யப்படும்.

- சுகிர்தராணி கவிஞர், அரசுப் பள்ளி ஆசிரியர்; தொடர்புக்கு: sukiertharani@yahoo.co.in



Read in source website

சர்வதேசக் கிரிக்கெட்டில், ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகள் பிரபலமாகத் தொடங்கிய 1980-90களில் மட்டையாளர் ஒருவர், ஒரு போட்டியில் 150 ரன்களைக் கடப்பதே அரிதான நிகழ்வாக இருந்தது. ஏனென்றால், அன்று கிரிக்கெட் விதிகளும் ஆடுகளங்களும் மட்டையாளர் - பந்து வீச்சாளர் என இரு தரப்பினருக்கும் சமமான சவாலை உருவாக்கும் வகையில் இருந்தன.

ஆனால், மட்டையாளர் ஒருவர் 200 ரன்களைக் கடப்பது இன்று எளிதாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இஷான் கிஷான் (210), சுப்மன் கில் (208) ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். 2010இல் குவாலியரில் நடந்த போட்டியில், முதன் முறையாக 200 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு, கடந்த 12 ஆண்டுகளில் 10 பேர் இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள்; இதில் 7 சதங்கள் இந்தியர்களிடமிருந்து வந்தவை.



Read in source website

இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளாகவே பத்மஸ்ரீ விருதுகளில் இதுபோன்று மாறுபட்ட, அதிகம் கவனம்பெறாத துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இது வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம்.

ஆனால், இப்போதும்கூட விருது கௌரவங்கள் மட்டுமே இதுபோன்றஅங்கீகரிக்கப்படாத சமூகப் பிரிவினருக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை அடையாள அங்கீகாரமாகவே கருதமுடிகிறது. உண்மையிலேயே அனைத்துத் துறையினரையும் அங்கீகரிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பதும் செயல்படுவதும் வரவேற்கத்தக்கது. ஆனால், அது எப்படி, எப்போது சாத்தியமாகும்?



Read in source website