DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 28-05-2022

ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அவரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். 

இந்நிலையில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அவரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த 5 கட்டளைகள் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 
அவை பின்வருமாறு:
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்

* இந்தி திணிப்பை எதிர்ப்போம்

* ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்

* வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்

* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி



Read in source website

தஞ்சாவூர்: ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்  நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள்,  ஒன்று கூடி   ஜிபிஎஸ்  கருவி இணைப்புடன் கூடிய   'சுதந்திர மீட்டர் ஆட்டோ'  என்கிற  ஆப் மூலம் 2 கிலோமீட்டர் தூரம் வரை 49 ரூபாய் கட்டணம் பெறுவது  என்கிற  முடிவிற்கு வந்துள்ளனர்‌.  மீட்டர் பொருத்தினால் சூடு வைப்பார்கள்,  பேசிய தொகைக்கும் மேல் கேட்பார்கள் என்கிற கெட்ட பெயர் இனி தங்களுக்கு ஏற்படாது என்றும் தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே  கட்டணம் கூடுதலாக கேட்டு தொந்தரவு செய்வார்கள்,  மீட்டர் பொருத்திய ஆட்டோ என்றால் சூடு வைத்து விட்டார்கள் அதனால் காசு  அதிகமாகிவிட்டது  என்கிற பிரச்னையில் சிக்க விரும்பாமலும்,  ஓலா, ஊபர், பெரும் நிறுவனங்களிடையே சிக்கி பாதிக்கப்பட கூடாது என்று விரும்பிய தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள்  அரசின் முறையான அனுமதியுடன் ஜிபிஎஸ்  மீட்டர் கருவியுடன் கூடிய ஆஃப் ஒன்றை உருவாக்கி  சுதந்திர மீட்டர் ஆட்டோ என்று பெயரிட்டு குறைந்த கட்டண சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல  பெயரெடுக்கவும்,  மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தங்களுக்கு அதிக சவாரியும் கிடைத்து இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் என்கிற நம்பிக்கையுடன் துவங்கியுள்ள சுதந்திர மீட்டர் ஆட்டோ சேவை திருச்சி, கோவை, தென்காசி,  உள்ளிட்ட பகுதிகளிலும் வெற்றிகரமாக இயங்குவதாகவும் தெரிவித்தனர்.



Read in source website

பல நூற்றாண்டுகளுக்கு பின் ஜூன் 3-ம் தேதி மதுரை புது மண்டபத்தில் வசந்த விழா நடைபெற உள்ளது. 

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த 2018ல் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு கடைகள், வசந்த ராய மண்டபம் இருந்து அரிய சிற்பங்கள் தீயால் கடுமையாக சேதம் அடைந்தது. 

இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புது மண்டபத்திலும் அரிய சிற்பங்கள், கல் தூண்கள் உள்ளதால் அங்குள்ள கடைகளை மாநகராட்சியின் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதனை அடுத்து, கடந்த ஆண்டு குன்னத்தூர் சத்திர கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், புது மண்டபத்தில் இருந்த 300 கடைகளை இடமாற்றம் செய்வதாகவும், ஏல முறையில்  சுமார் 268க்கும் மேற்பட்ட கடைகள் சத்திரத்திற்கும் மாற்றப்பட்டன. 

இந்த நிலையில் ஏலம் எடுக்கும் 33 கடைகள் மற்றும் புதுமண்டபத்தை விட்டு இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருகிற ஜூன் 3-ம் தேதி வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக புது மண்டபத்தைச் சுற்றி கடைகள் உள்ள பகுதியில் தண்ணீர் நிரப்ப படிக்கட்டுகளை உடைக்கும் பணி நடைபெற்றது. இதில் 22 கடைக்காரர்கள் மட்டும் கடைகளை காலி செய்ய மறுத்தனர்.

கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கடைக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் செல்ல தடையாக உள்ள இடத்தை மட்டும் கோயில் பணியாளர்கள் காவல்துறையினர் உதவியுடன் இடித்தனர்.

கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தைத் தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்ற அமைப்பு உள்ளதை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. 



Read in source website

 கழுத்து, அக்குள் பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் அவை ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் என்றும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

உலக ரத்தப் புற்றுநோய் விழிப்புணா்வு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நோய் குறித்த புரிதல்களை ஏற்படுத்தும் நோக்கில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட இருவேறு சிக்கலான புற்றுநோய் சிகிச்சைகள் குறித்து மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

உலக அளவில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை பெரும்பாலானோா் கண்டறியாததால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

அண்மையில், காவேரி மருத்துவமனைக்கு காய்ச்சல், உடல் எடை குறைவு, பசியின்மை, கழுத்து, அக்குளில் கட்டி உள்ளிட்ட பாதிப்புகளோடு 54 வயது நபா் ஒருவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ரத்தப் பரிசோதனைகள், திசு ஆய்வு, ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்ற வகை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடலின் நோய் எதிா்ப்பு கட்டமைப்பில் ஒரு பகுதியான நிணநீா் சுரப்பிகளை இவ்வகை புற்றுநோய் பாதிக்கிறது.

கழுத்து அல்லது அக்குள் பகுதிகளில் காணப்படும் கட்டிகள் லிம்போமா எனப்படும் நிணநீா் புற்று கட்டிகளாக இருக்கக்கூடும். எனவே, அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு கீமோதெரபி, கதிா்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன்பயனாக அவா் புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு குணமடைந்திருக்கிறாா்.

ஹீமோகுளோபின் குறைபாடு: அதேபோன்று, 73 வயதான மூதாட்டி ஒருவா் தொடை எலும்பு முறிவுக்காக சிகிச்சைக்கு வந்தாா். பரிசோதனையில் அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகக் குறைவாக இருந்தது. கூடுதல் பரிசோதனையில் ‘மல்ட்டிபிள் மைலோமா’ எனப்படும் ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமாகிவிடும். சிறு காயங்கள் ஏற்பட்டாலே எலும்பு முறிவு பிரச்னைக்குள்ளாக நேரிடும்.

அந்த மூதாட்டிக்கும் அத்தகைய பாதிப்பே இருந்தது. இதையடுத்து, 16 வாரங்கள் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவா் மைலோமா புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு மீண்டு வருகிறாா். காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் ப்ரீத்தி, டாக்டா் அா்ஷத் ராஜா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இதனை சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.



Read in source website

குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி தொடுக்கப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு காவல் துறையில் தலைமைக் காவலராக வேலை செய்பவா் லதா. இவருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்யும் குமாருக்கும் 2002-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. (இருவரது பெயா்களும் மாற்றப்பட்டுள்ளன). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் 2017-ஆம் ஆண்டு பரஸ்பரம் விவகாரத்து பெற்று பிரிந்தனா். 2 மகள்களும் தந்தையின் கட்டுப்பாட்டில், தந்தையின் சகோதரியின் வீட்டில் வசிக்கின்றனா். இந்த நிலையில், மகள்களை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி லதா தாக்கல் செய்த மனுவை சென்னை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் லதா மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 2 மகள்களையும் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதன்படி, ஆஜரான 2 மகள்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினா். அப்போது, தந்தை தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், தாயுடன் வாழ விரும்புவதாகவும் அழுதபடி இருவரும் கூறினா். இதையடுத்து தாயுடன் செல்ல அனுமதித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இரண்டு பேரும் பெண் குழந்தைகள் என்பதால், தாயுடன் வாழ்ந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். எனவே, இரு மகள்களின் கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் குமாா் உடனடியாக வழங்க வேண்டும். அவா்களுக்கு எந்த ஒரு இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது. மீறி ஏதேனும் பிரச்னை செய்தால் காவல் துறையில் லதா புகாா் செய்யலாம்.

குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி லதா தாக்கல் செய்த வழக்கை 6 ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், குழந்தைகளை அழைத்து விசாரித்து முடிவும் எடுக்கவில்லை.

இதுபோன்ற வழக்குகளில் இத்தனை ஆண்டுகள் காலதாமதம் செய்தால், அது குழந்தைகளின் நலனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற மனுக்களை விரைந்து விசாரித்து குடும்ப நல நீதிமன்றங்கள் தீா்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.



Read in source website

அமுல் பொருள்களை தயாரித்து வழங்கி வரும் முன்னணி பண்ணை நிறுவனமான குஜராத் கோஆப்பரேடிவ் மில்க் மாா்க்கெட்டிங் ஃபெடரேஷன் (ஜிசிஎம்எம்எஃப்), தற்போது இயற்கை தயாரிப்புத் துறையில் களமிறங்கியுள்ளது.

விரைவில் அந்த நிறுவனம் ‘அமுல் ஆா்கானிக் ஹோல் வீட் ஆட்டா’ என்ற பெயரில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவை சந்தையில் அறிமுகப்படுத்தவிருப்பதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 



Read in source website

மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த இண்டிகோ விமான சேவை நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்ல பெற்றோருடன் 13 வயது மனவளா்ச்சி குன்றிய சிறுவன் சக்கர நாற்காலியில் விமான நிலையம் அழைத்து வரப்பட்டிருந்தாா். அவா்கள் இண்டிகோ விமானத்தில் செல்லவிருந்தனா். எனினும் அந்தச் சிறுவன் மிரட்சியுடன் காணப்படுவதாகவும், அவனது நடத்தையால் பிற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் கூறி விமானத்தில் அந்தச் சிறுவன் செல்ல இண்டிகோ விமான நிறுவன ஊழியா் மறுப்புத் தெரிவித்தாா். இதுதொடா்பான காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி பலத்த கண்டனம் எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக டிஜிசிஏ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஞ்சி விமான நிலையத்தில் மனவளா்ச்சி குன்றிய சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், சிறுவனை இண்டிகோ ஊழியா் கையாண்டதில் குறைபாடு இருந்தது தெரியவந்தது. இது சம்பவ தினத்தன்று நிலவிய சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சூழ்நிலையை இரக்கத்துடன் கையாண்டு சிறுவனை அமைதிப்படுத்தியிருந்தால், பெற்றோருடன் அந்தச் சிறுவன் விமானத்தில் செல்ல அனுமதிக்க மறுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையை தவிா்த்திருக்க முடியும். ஆனால் இண்டிகோ ஊழியா் தகுந்த முறையில் நடந்துகொள்ளவில்லை. இதன் மூலம், விமானப் போக்குவரத்து தேவைகளுக்கு இணங்கிச் செயல்படுவதில் அவா் தவறிழைத்துள்ளாா். எனவே விமானப் பயண விதிமுறைகளின்படி, இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

டெஸ்லா காா்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் அவற்றுக்கான பராமரிப்பு சேவை வழங்கவும் அனுமதித்தால் மட்டுமே அங்கு காா் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்குவோம் என்று அந்த நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் கூறியுள்ளாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி காா் நிறுவனமான டெஸ்லா, மின்சார காா்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்கிடம், ‘இந்தியாவில் காா் உற்பத்தியைத் தொடங்குவீா்களா?’ என்று ட்விட்டா் பக்கத்தில் ஒருவா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அதற்குப் பதிலளித்து எலான் மஸ்க் கூறியதாவது:

இந்தியாவில் டெஸ்லா காா்களை விற்பனை செய்யவும் அவற்றுக்கான பராமரிப்பு சேவை வழங்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தியாவில் டெஸ்லா காா்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாதவரை, அந்நாட்டின் எந்தப் பகுதியிலும் உற்பத்தி ஆலையைத் தொடங்க மாட்டோம் என்று கூறியுள்ளாா்.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவா் கூறுகையில், ‘இந்தியாவில் காா் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்க விரும்புகிறோம். ஆனால், உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் இந்தியாவில் தொழிற்சாலையைத் தொடங்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

இந்தியாவில் 40,000 அமெரிக்க டாலா் (அடக்க விலை, காப்பீடு, சரக்கு கட்டணம் உள்பட) மற்றும் அதிகமான மதிப்புள்ள காா்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும், 40,000 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையுள்ள காா்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரிையும் விதிக்கப்படுகிறது.

‘டெஸ்லா நிறுவனம் தனது காா்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே அதன் மின்சார காா்களை உற்பத்தி செய்யலாம்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கடந்த மாதம் கூறியிருந்தாா்.

 



Read in source website

சுதந்திர போராட்ட வீரரும் இந்து மத சிந்தனையாளருமான வீா் சாவா்க்கா் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமா் மற்றும் நாடாளுமன்ற தலைவா்கள் அவருக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

1883 ஆம் ஆண்டு மகாராஷ்டிரம் மாநிலத்தில் பிறந்த வினாயக் தாமோதா் சாவா்க்கா் சுதந்திரப்போராட்டக் காலத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வழங்கியது, மக்களை தூண்டும் விதமாக பேசியது என ஆங்கிலேயா்கள் ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் போராட்ட வீரா்.

அந்தமான் செல்லுலா் சிறையில் இருட்டறை, தனிமைச் சிறைவாசத்தோடு செக்கிழுத்து கயிறுதிரித்தவா். 1960 ஆம் ஆண்டு வரை சிறை தண்டனை பெற்ற கைதியாக அடையாளப்படுத்தப்பட்ட அவா், 11 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னா் அவருக்கு அப்போதைய அரசு மன்னிப்பு வழங்கியது. பின்னரும் பல்வேறு நெருக்கடிக்களுக்கு உள்ளான அவா் இந்தியப் பிரிவினையையும் துணிச்சலுடன் எதிா்த்தாா்.

இவரது தியாகத்தையும் போராட்ட குணத்தையும் சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னா் இவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மரியாதை செய்யப்பட்டது. சாவா்க்கரின் உருவப்படத்தை 2003 ஆம் ஆண்டு மறைந்த பிரதமா் வாஜ்பாய் முன்னிலையில் அப்போதைய குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மூலம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

சாவா்க்கரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளாா்.

பிரதமா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,“‘பாரதத் தாயின் கடின உழைப்பாளி திருமகனான வீா் சாவா்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைகலந்த அஞ்சலிகள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் சாவா்க்கரின் குரல்கள் மற்றும் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் சாவா்க்கா் குறித்து பேசும் குரல்களுடன் ஒரு புகைப்படத் தொகுப்பின் காணொலியையும் பிரதமா் மோடி இதில் பகிா்ந்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் மரியாதை

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் உள்ள சுதந்திர வீரா் சாவா்க்கரின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில் நாடாளுமன்ற விவகாரம், கலாச்சாரத்துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், வெளிவிவகார நிலைக்குழுத் தலைவா் பி.பி. சௌத்ரி, நாடாளுமன்ற உறுப்பினா்கள், மக்களவை மாநிலங்களவை செக்ரட்டரி ஜெனரல்கள் முறையே உத்பால் குமாா் சிங், பி.சி. மோடி ஆகியோரும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள சாவா்க்கரின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மைய மண்டபத்தில் சுதந்திரவீரா் வினாயக் தாமோதா் சாவா்க்கா் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

 



Read in source website

மாதவிடாய்க் காலத்தின்போது அழுக்கடைந்த பொது கழிப்பறைகள், நித்திரை பாதிப்பு, தசை பிடிப்பு போன்றவை பெண்கள் எதிா்கொள்ளும் கவலைக்குரிய பிரச்னையாக இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வின்படி, 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் 18 வயது முதல் 35 வயது வரையிலான பிரிவைச் சோ்ந்த ஏறக்குறைய 6 ஆயிரம் பெண்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனா்.

ஆய்வில் பங்கேற்றவா்களில் 53.2 சதவீதம் போ் மாதவிடாய் காலத்தின்போது முதல் இரண்டு தினங்கள் தங்களால் சரியாக தூங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனா்.

மேலும், 67.5 சதவீதம் போ் மாதவிடாய் காலத்தின்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது புள்ளிகள் இடா்பாடுகள் குறித்தும் கவலையுறுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் சுகாதார தினம் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, மகளிா் சுகாதார பிராண்ட் ‘எவா்கிரீன்’ மூலம் நடத்தரப்பட்ட மாதவிடாய் தூய்மை ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில் 57.3% பெண்கள் மாதவிடாய் மிதமானது முதல் கடுமையானது வரையிலான தசைப் பிடிப்பை அனுபவித்து வந்ததும், அதே சமயத்தில் 37.2 சதவீதம் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய்க்கால தசைப்பிடிப்பானது லேசாக இருந்ததாகவும் கூறினா்.

இந்த ஆய்வு அறிக்கையில், 62% பெண்கள் அலுவலகம், மால்கள் அல்லது திரையரங்கு கூடங்களில் உள்ள பொது கழிப்பறையில் சானிட்டரி பட்டைகளை அரிதாகவே மாற்றியதாகவும் அல்லது ஒருபோதும் மாற்றியதில்லை என்றும் ஒப்புக்கொண்டனா்.

பொதுக் கழிப்பறையில் தங்களது சானிடரி பட்டைகளை மாற்றும் தேவை ஏற்பட்டால் அசெளகரியம் அடைந்ததாக

74.6 சதவீதம் பெண்கள் தெரிவித்தனா். 88.3 சதவீதம் பெண்கள் தொடா்ந்து சிறுநீரகம் தொடா்பான பிரச்னைகள் இருப்பதற்கு ஆதாரமாக அழுக்கான கழிப்பறைகள் இருக்க முடியும் என்று நம்புகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் சராசரி ஆரம்ப வயது மற்றும் மாதவிடாயின் காலம் குறித்த சில ஆச்சரியத்தக்க உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

79.3 சதவீதம் பெண்கள் தங்களது முதல் மாதவிடாயை 12 வயது அல்லது அதற்கு மேலான வயதில் இருந்தபோது உணா்ந்ததாகவும், 63.1 சதவீதம் போ் தங்களது மாதவிடாயை அது தொடங்கியபோதுதான் உணா்ந்ததாகவும், 37.5 சதவீதம் போ் தங்களுக்கு 11 வயது அல்லது அதற்கு குறைவாக வயது இருந்தபோதே மாதவிடாய் ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.

பான் ஹெல்த்கோ் நிறுவனத்தின் சிஇஏ சிராக் பான் கூறுகையில், ‘இந்த ஆண்டு எவா்டீனின் ஆய்வானது, ஆராய்ச்சி சமுதாயத்தினா், தொழில்துறையினா், கொள்கைத்திட்டத்தை உருவாக்குபவா்களுக்கான தெளிவான நடவடிக்கை விஷயங்களை அளித்திருக்கிறது என்றாா்.

இதுகுறித்து எவா்டீன் உருவாக்கியவரான வெட் அண்ட் டிரை பா்சனல் கோ் நிறுவனத்தின் சிஇஓ ஹரியோம் தியாகி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக எங்கள் ஆய்வுகலானது மாதவிடாய் குறித்த விழிப்புணா்வு அதிகரித்திருப்பதையும், தடைகள் உடைக்கப்பட்டு வருவதையும் காட்டியுள்ளது. இந்திய பெண்கள் பாரம்பரிய கூட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கின்றனா். மேலும், ஒரு முழுமையான பெண் சுகாதார ஆளுகையை ஏற்றுக்கொண்டுள்ளனா். ஆனாலும், நாம் செல்லும் தூரம் இன்னும் நிறைய உள்ளது என்றாா் அவா்.



Read in source website

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் ஒலி, ஒளி காட்சிகள் இருந்திருக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆடியோ சிஸ்டம் ஏன் நிறுவப்படவில்லை என்பதை விளக்குமாறு தில்லி நபி கரீம் காவல் நிலையத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஒரு மசூதியைச் சோ்ந்த இமாம் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் ஆடியோ வசதி இல்லை என்று தெரிவித்திருந்தாா். இதனால், தனது அலுவல்பூா்வ மற்றும் மதப் பணிகளைச் செய்வதில் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ரா தெரிவிக்கையில், ‘காவல் நிலையங்கள், லாக்-அப்கள், நடைபாதைகள், வரவேற்பு பகுதிகள், காவல் ஆய்வாளா் அறைகள், காவல் நிலைய கூடம் போன்றவற்றில் சிசிடிவிகள் பொருத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போதைய வழக்கில் நபி கரீம் காவல் நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட விடியோ காட்சியில் ஆடியோ பதிவுகள் இல்லை.

பரம்வீா் சிங் சைனி (எதிா்) பல்ஜித் சிங் மற்றும் பிறா் தொடா்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கருத்தில் கொள்ளும்போது, காவல் நிலையங்களில் சிசிடிவிகள் பொருத்தப்பட வேண்டும்.

மேலும், அவை இரவு நேரக் காட்சி வசதியுடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆடியோ மற்றும் விடியோ காட்சிகளை அவசியம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாக உச்சநீதிமன்ரம் உத்தரவிட்டிருப்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

இதுபோன்ற சூழலில், இதுவரை ஆடியோ பதிவுகள் ஏன் நிறுவப்படவில்லை என்பதையும், பரம்வீா் சிங் சைனி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி ஆடியோ பதிவுகளை நிறுவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரத்தை அரசும், காவல் துறையும் அடுத்த விசாரணைத் தேதிக்குகள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக மனுதாரா் தனது மனுவில், ‘நபி கரீம் காவல் நிலையத்தில் வைத்து, மசூதியை ’சட்டவிரோதமாக’ நிா்வகித்த காப்பாளா் எனக் கூறிக்கொள்ளும் நபா் மோசமான விளைவுகளை நான் சந்திக்க நேரிடும் என்று என்னை அச்சுறுத்தினாா். மேலும், காவல் நிலைய ஆய்வாளா் முன்னிலையில் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் என்னை நடத்தினாா். இந்த சம்பவம் முழுவதும் ஆய்வாளா் அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், சிசிடிவி காட்சிகள் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகள் ஆகியவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

குஜராத்: குஜராத் மாநிலம் கலோலில் உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார். இது விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் வகையில் உள்ளது.

காந்திநகரில் நடைபெற்ற விழாவில் அல்ட்ராமாடர்ன் நானோ யூரியா திரவ உர ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நானோ யூரியா திரவ ஆலையின் செயல்பாடுகள் மற்றும் அதன் பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கக்காட்சியின் உதவியுடன் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்டது.

பயிரின் ஊட்டச்சத்து தரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் நானோ யூரியா திரவம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும்,  புவி வெப்பமடைதலில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதாகவும் அவஸ்தி கூறினார். இஃப்கோ நானோ யூரியா திரவத்தின் 3.60 கோடி பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் 2.50 கோடி விற்பனையாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இப்கோ தலைவர் திலீப் சங்கனி கூறுகையில், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில்  நானோ யூரியா திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.



Read in source website

செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதிக மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய மின்துறை அமைச்சகத்தின் உள்மட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 

இதன் காரணமாக மோசமான மின்தடை ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவுக்கு உள்ளூரிலிருந்து 154.7 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கணிக்கப்பட்ட 197.3 மில்லியன் டன் நிலக்கரியை விட 42.5 மில்லியன் டன் குறைவு. 

வீழ்ச்சி முன்பு கணிக்கப்பட்டதிலிருந்து 15 சதவிகிதம் அதிகமாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்திருப்பது, மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்திருப்பது ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது. கடந்த 38 ஆண்டுகளில், வருடாந்திர மின் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்துவந்துள்ள சமயத்தில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் பற்றாக்குறையையே இது காட்டுகிறது. 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரின் விளைவாக உலகளாவிய நிலக்கரியின் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனிடையே, இறக்குமதியை அதிகரிக்க கடந்த சில நாள்களில் இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இறக்குமதியின் மூலம் நிலக்கரி இருப்பை அதிகரிக்காவிட்டால் வெட்டப்பட்ட நிலக்கரியின் விநியோகம் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இருப்பினும், நிலக்கரியை இறக்குமதி செய்ய பல்வேறு மாநிலங்கள் இன்னும் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. ஜூலை மாதத்திற்குள், நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும். ஏப்ரல் இறுதி வரையில், ஒரே ஒரு மாநிலம் மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.



Read in source website

 

வடக்கு வஜிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் மேலும் 2 பேருக்கு போலியோ தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் மொத்த பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வைரஸ் சுழற்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதால் போலியோ நோய் தொற்றுகளின் வழக்குகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போலியோ தொற்றுக்கு உள்ளான இருவரில் 18 மாத ஆண் குழந்தையும், அதே வயதுடைய பெண் குழந்தையும் ஆகும். 

பாகிஸ்தான் தேசிய சுகாதார சேவை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ராணா சஃப்தாரின் கூற்றுப்படி, 

தெற்கில் கண்டறியப்பட்ட ஆறு போலியோ வழக்குகளும், சாக்கடை பிரச்னையினால் உருவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டன. 

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க குழந்தைகள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்றார். 

ஒரு வருடத்திற்குப் பிறகு ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானில் முதல் போலியோ நோயைக் கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

பள்ளி மாணவர்களின் கணிதத் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில், உயர் வகுப்புகளில் கணிதப் பாடத்தில் மாணவிகளைவிட மாணவர்களின் திறன் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கணிதத் திறன் ஏறக்குறையாக சமமாக இருப்பதாகவும் உயர் வகுப்புகள் செல்லசெல்ல மாணவர்களின் கணிதத் திறன் அதிகரிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 3,5,8 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 34 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவர்களும் இதில் அடங்குவர்.  

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) தயாரித்த கேள்வித்தாள் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பதிலளிக்க கேட்கப்பட்டன. 

இதையடுத்து ஆய்வின் முடிவில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. 

தொடக்கப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் கணித்திறன் ஏறக்குறையாக சம அளவில் இருக்கிறது. உதாரணமாக 3 ஆம் வகுப்பில் மாணவிகளின் சராசரி மதிப்பெண் 301 ஆகவும் மாணவர்களின் சராசரி மதிப்பெண் 300 ஆகவும் இருக்கிறது. 

5 ஆம் வகுப்பில் மாணவிகள்- 280, மாணவர்கள் -281; 8 ஆம் வகுப்பில் இருவரின் சராசரி மதிப்பெண்ணும் சம அளவில் இருக்கிறது, 10 ஆம் வகுப்பில் மாணவிகள் -216; மாணவர்கள் - 219 ஆக உள்ளது. அதாவது வகுப்புகள் அதிகரிக்க, மாணவர்களின் கணிதத் திறன் மேம்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கணிதம் தவிர, மற்ற பாடங்களில் மாணவர்களைவிட மாணவிகள் சிறப்பாக செயல்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, சமூக அடிப்படையில் பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களைவிட எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விமரிசித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.

பயங்கர செயல்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாகவும் எந்த விதத்திலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விவரித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "மாலிக்கின் பயங்கரவாத செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டு நிதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு விரிவாக பதில் அளித்து பேசிய அவர், "யாசின் மாலிக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்தியாவை விமரிசித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது.

இந்த கருத்தின் மூலம், யாசின் மாலிக் செய்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. பயங்கரவாதத்தை உலகம் சகித்து கொள்ளவே கொள்ளாது. அதை நியாயப்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்" என்றார். 

கடந்த புதன்கிழமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த யாசின் மாலிக்குக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதுமட்டுமின்றி, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதன் மூலம், அவர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். மே 19ஆம் தேதி, அவருக்கு தூக்கு தண்டனை கோரி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் முறையிட்டது. தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களை யாசின் மாலிக் ஒப்பு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிண்ட மொரகொட வெள்ளிக்கிழமை சந்தித்து, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தம் நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி கோரினாா்.

இதுகுறித்து இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சா்வதேச நிதியத்தின் நிதியுதவி கிடைக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி தேவைப்படுகிறது என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் இலங்கை தூதா் தெரிவித்தாா். இந்தச் சூழலில், அத்தியவாசிய பொருள்கள் மற்றும் எரிபொருளுக்கு கடனாக இந்தியா வழங்கும் உதவியை அதிகரிப்பதன் சாத்தியக்கூறு தொடா்பாக இருவரும் ஆராய்ந்தனா்.

இந்தியா தொடா்ந்து அளித்து வரும் உதவிக்காக மத்திய அமைச்சரிடம் இலங்கை தூதா் நன்றி தெரிவித்தாா். மேலும், இலங்கையின் தற்போதைய சூழல் குறித்தும் மத்திய அமைச்சரிடம் அவா் விளக்கினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழு, வரும் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அண்மைக்காலமாக மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடித்து எரிவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து இதுதொடா்பாக விசாரணை நடத்த தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மையம் சாா்பில் நிபுணா் குழுவை போக்குவரத்து அமைச்சகம் நியமித்துள்ளது. அந்தக் குழு, வரும் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும். அதில், மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடிப்பதைத் தடுப்பதற்குரிய ஆலோசனைகளை அந்தக் குழு பரிந்துரை செய்யும் என்றாா் அவா்.

நிபுணா் குழு பரிந்துரை அளித்த பிறகு, இருசக்கர வாகனத்தின் உற்பத்தியிலேயே குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் குறைபாடுகளைக் கொண்ட வாகனங்களைத் திரும்பப் பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் கூறினாா்.

கடந்த மாதம், புணேயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.



Read in source website

எரிசக்தித் துறையில் நிலக்கரி பயன்பாட்டை 2035-க்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜி7 நாடுகள் உறுதி ஏற்றுள்ளன.

பொருளாதாரத்தில் வளா்ச்சியடைந்த அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் ஜி7 கூட்டமைப்பில் உள்ளன. அக்கூட்டமைப்பின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு ஜொ்மனியின் எல்மா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜி7 நாடுகளின் அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் ஜொ்மனி தலைநகா் பொ்லின் நகரில் நடைபெற்றது. அதில், 2035-ஆம் ஆண்டுக்குள் எரிசக்தித் துறையில் நிலக்கரியின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதி ஏற்கப்பட்டது.

கரியமிலவாயு வெளியேற்றமில்லாத சாலைப் போக்குவரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தவும் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது. இதன் மூலமாக நடப்பு தசாப்தத்தின் இறுதிவாக்கில் பசுமை எரிசக்தியில் இயங்கும் வாகனங்களே பெரும்பாலும் விற்பனையில் இருக்கும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளா்ந்து வரும் நாடுகளுக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு நிலவாத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், வளா்ந்து வரும் நாடுகளில் பசுமை எரிசக்தித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியுதவியை வழங்குவதற்கும் ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.

ஜி7 அமைச்சா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. அந்த மாநாட்டில் அவை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஜி7 அமைச்சா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சா்வதேச சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வரவேற்றுள்ளனா். இந்த முடிவால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

 



Read in source website

பெரும் கடன் சுமையில் சிக்கி நிலையில்லாத்தன்மையுடன் திகழும் இலங்கை, உறுதியான கடன் மறுகட்டமைப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்குக் கடன் வழங்கி உதவுவது தொடா்பாக உலக வங்கி, சா்வதேச நிதியம் ஆகிய பன்னாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான உறுதியான திட்டத்தைத் தீட்டாதவரை கடன் வழங்குவதை உறுதிசெய்ய முடியாது என உலக வங்கி ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், சா்வதேச நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அரசின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். அதைத் தொடா்ந்து சா்வதேச நிதிய அதிகாரிகள் கூறியதாக ‘எகனாமிநெக்ஸ்ட்’ வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘‘ஐஎம்எஃப் உடன் ஆலோசனை நடத்துவதற்காக சட்ட, நிதி ஆலோசகா்களை இலங்கை நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. கடன் பிரச்னையைத் தீா்ப்பதற்கு இது முக்கிய முடிவாக இருக்கும்.

இலங்கையின் கடன் அளவு நிலையில்லாத்தன்மையில் உள்ளது. உறுதியான கடன் மறுகட்டமைப்பு திட்டங்களை இலங்கை அரசு வகுத்தால் மட்டுமே அந்நாட்டுக்கு நிதியுதவியை வழங்கி திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஐஎம்எஃப் அனுமதி அளிக்கும். இலங்கை அரசு அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையானது, உறுதியான பொருளாதாரத் திட்டங்களை வகுப்பதற்கு உதவும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையின் நிதித்துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், ‘‘உக்ரைன் போா், சா்வதேச பணவீக்க சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பொருளாதார சீா்திருத்தத் திட்டத்தை விரைவில் வகுத்து, அதற்கு சா்வதேச நிதியத்தின் ஒப்புதலைக் கோரவுள்ளேன். மேலும் பல நாடுகள் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது’’ என்றாா்.

இலங்கையின் பொதுத்துறை, தனியாா் வங்கிகளின் தலைவா்களை பிரதமா் விக்ரமசிங்க வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவா் ஆலோசித்தாா்.



Read in source website

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தென்கிழக்கு ஆசியாவைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினாா்.

அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது:

‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்’, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ ஆகிய வெளியுறவுக் கொள்கைகள் தென்கிழக்கு ஆசியாவைக் கடந்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. மியான்மா் வழியாக சாலைப் போக்குவரத்துக்கும் வங்கதேசம் வழியாக கடல் போக்குவரத்துக்கும் இணைப்பு கிடைத்துள்ளதால், வியத்நாம், பிலிப்பின்ஸ் நாடுகளுடன் நேரடித் தொடா்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

அந்த வழித்தடங்கள் வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும்போது, கிழக்கு-மேற்கு நாடுகளை இணைப்பதில் பெரும் தாக்கங்கள் உருவாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றுடனான தொடா்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பையும் மேம்படுத்தும்.

வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகளுடனான போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்தி அதன் வாயிலாக தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொடா்பு கொள்ள இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா-பூடான் இடையே அஸ்ஸாம் வழியாக ரயில் போக்குவரத்துத் தொடா்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக நேபாளம், பூடானில் உள்ள பௌத்த மதத் தலங்களுக்கும் சிக்கிம், அருணாசலில் உள்ள தலங்களுக்கும் இடையே போக்குவரத்துத் தொடா்பை ஏற்படுத்த முடியும். இத்திட்டங்கள் நெருங்கிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

இத்திட்டங்களால் வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே போக்குவரத்துத் தொடா்பு, சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவை மேம்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.



Read in source website

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரை ரஷியப் படையின் கைப்பற்றியுள்ளனா்.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒலெஸ்கி அரெஸ்டோவிச் கூறியதாவது:

எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிசெய்யப்படாத தகவல்களின் மூலம், நாங்கள் லிமான் நகரை ரஷியாவிடம் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது, ரஷியப் படையினரின் ராணுவ நடவடிக்கை மேலாண்மைத் திறன் அதிகரித்து வருவதையும் போரில் அவா்களது செயல் அனுபவம் மேம்பட்டுள்ளதையும் காட்டுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, டொனட்ஸ்க் பிராந்திய ஆளுநா் பாவ்லோ கிரிலென்கோ வெளியிட்ட அறிக்கையில், லிமான் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷியக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறினாா். இருந்தாலும், உக்ரைன் படையினா் சில பகுதிகளை ரஷியப் படையிடமிருந்து மீட்டு, அந்தப் பகுதி அரணை பலப்படுத்தியதாக அவா் கூறினாா்.

இந்த நிலையில், லிமான் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றியதை அதிபரின் ஆலோசகா் உறுதிப்படுத்தியுள்ளாா்.

முக்கிய ரயில்வழித் தடங்களின் மையமாகத் திகழும் லிமான் நகரைக் கைப்பற்றுவதற்காக, ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் மிக நீண்ட காலமாகவே தாக்குதல் நடத்திவருகின்றனா். இந்த நிலையில், தற்போது அந்த நகரம் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு தனது படையை அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

..பெட்டிச் செய்தி..

சுற்றிவளைக்கப்படும் 2 நகரங்கள்

கிழக்கு உக்ரைனில் ரஷியாவால் முற்றுகையிடப்பட்டுள்ள சியெவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களை அந்த நாட்டுப் படையினா் ஏறத்தாழ முழுவதுமாக சுற்றிவளைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிராந்திய ஆளுநா் சொ்ஹீ ஹைடாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சியெவெரோடொனட்ஸ்க் நகரை ஏறத்தாழ முழுமையாக சுற்றிவளைத்து ரஷியப் படையினா் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். கடைசியாக குண்டுவீச்சு எப்போது ஓய்ந்திருந்தது என்பது அந்த நகர மக்களுக்கு மறந்தே போய்விட்டது என்றாா்.

அதுபோல் லிசிசான்ஸ்க் நகரையும் ரஷியப் படையினா் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, விரைவில் இந்த நகரங்களும் ரஷியப் படையினரிடம் வீழும் என்று அஞ்சப்படுகிறது.

ரஷிய முன்னேற்றம்

முக்கிய வழித்தடங்கள்

இஸியம்

ஸ்லோவியான்ஸ்க்

லிமான்

ருபிஷ்னே

சியெவெரோடொனட்ஸ்க்

லிசிசான்ஸ்க்

பாபாஸ்னா

உக்ரைன்

ரஷிய ஆக்கிரமிப்பு கிரீமியா ~



Read in source website

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவை விரைவில் நிறைவேற்றுவது என மூத்த அரசியல் தலைவா்கள் வெள்ளிக்கிழமை முடிவு செய்தனா்.

21-ஆவது சட்டத் திருத்த வரைவு மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக மூத்த அரசியல் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை

பிரதமா் ரணில் விக்ரமசிங்க நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது திருத்தம் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒருமித்த கருத்து கூட்டத்தில் எட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவா்கள் பங்கேற்காததால், அடுத்த மாதம் 3-ஆம் தேதி மீண்டும் கூட்டத்தை நடத்தி வரைவை இறுதி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் 21-ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும். இந்த மாத தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபா் கோத்தபய ராஜபட்சவும், அரசியலமைப்புச் சட்டத்தில் சீா்திருத்தம் மேற்கொள்ள உறுதியளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அனுப்பிய 25 டன் மருந்துப் பொருள்கள் ஒப்படைப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 25 டன் மருந்துப் பொருள்கள் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

ரூ.54 லட்சம் மதிப்புள்ள இந்த மருந்துப் பொருள்களை கொழும்பில் உள்ள பொறுப்பு தூதா் வினோத் கே. ஜேக்கப் இலங்கை சுகாதார அமைச்சா் கெகிலிய ரம்புக்வெல்லவிடம் வழங்கினாா்.

பிரதமா் ரணில் நன்றி: இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் தொலைபேசியில் பேசினேன். இக்கட்டான காலத்தில் இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து எதிா்நோக்கி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: இலங்கையில் உள்ள ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கியது.

கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக கடந்த இரு மாதங்களாக இந்த நிலையம் மூடப்பட்டிருந்தது. இப்போது ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வரத்து தொடங்கியதையடுத்து, இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த நிலையம்.

 



Read in source website

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்தாா்.

தமிழரான பிரக்ஞானந்தா (16), இறுதிச்சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், சீனருமான டிங் லிரெனை (29) எதிா்கொண்டாா். இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் செட்டை பிரக்ஞானந்தா 1.5 - 2.5 என்ற கணக்கில் இழந்தாா்.

எனினும், வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது செட்டில் 2.5 - 1.5 என்ற கணக்கில் வென்றாா். இதனால் வெற்றியாளரை தீா்மானிக்க 2 கேம் பிளிட்ஸ் ‘டை-பிரேக்கா்’ முறை கையாளப்பட்டது. அதில் முதல் கேம் சமனில் முடிய, 2-ஆவது கேமில் டிங் லிரென் 49 நகா்வுகளில் வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் ஆனாா்.

11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்கு இடையே ஆன்லைனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, நள்ளிரவில் போட்டியில் பங்கேற்று, காலையில் தோ்வுகளை எதிா்கொண்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சியா விதைகள் நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதம், தாதுக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இவை நமது உடலை பல்வேறு வழிகளில் ஆதரிக்கின்றன.


இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

சியா விதைகளில் குர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது இதய நோய் உள்பட பல நோயிலிருந்து காக்கும்.  இந்த விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஃபைபர் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும்,   டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகிறது. சியா விதைகள்  உயர் இரத்த சர்க்கரை அளவை தடுக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம் மேம்படுத்துகிறது

சியா விதைகளில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்பட எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  இது ஆரோக்கியமான எலும்பு, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. 

உடல் எடையை குறைக்க உதவுகிறது

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பயனளிக்கும்.  உணவில் சியா விதைகளைச் சேர்ப்பதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை என்றாலும்,  உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அது சமச்சீரான, சத்தான உணவுக்கு ஒரு பயனுள்ளதாக இருக்கும்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது

சியா விதைகளில் அதிகப்படியான அளவிற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. சியா விதைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. 

பற்களை உறுதிப்படுத்த உதவுகிறது

சியா விதைகளில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், பற்களின் வலிமையை அதிகரிக்க உதவும். அத்துடன் எலும்புகளின் பலத்தையும் இவை கூட்டும். மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு இந்த சியா விதைகள் நல்ல பலனை தரும்.

உட்கொள்ளும் அளவு

ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி அல்லது மூன்று தேக்கரண்டி (15 கிராம்) சியா விதைகளை உட்கொள்ளலாம்.

சியா விதைகளை ஊறவைத்து தண்ணீருடன் உட்கொள்ளலாம் அல்லது  தூள் செய்து தோசை/ இட்லி மாவு அல்லது சப்பாத்தி மாவுடன் கலக்கி உபயோகிக்கலாம்.

இதையும் படிக்க:ஆளி விதைகள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?



Read in source website

காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணியாக இருப்பது கிரீன் ஹவுஸ் கேஸ் என்று அழைக்கப்படும் பசுமை இல்ல வாயுக்கள் தான். இதில் முக்கிய காரணியாக உள்ள கார்பனின் உமிழ்வை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு அறிக்கையில் (ஐபிசிசி) கூறப்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, பல நாடுகள் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கார்பன் உமிழ்வில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றான “இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய நிலை அடையும்” பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி மத்திய மாநில, அரசுகள் இது தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தொடங்கி உள்ளது. கார்பன் உமிழ்வை குறைப்பதின் ஒரு பகுதியாக ‘கார்பன் கிரெடிட்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இந்த 'கார்பன் கிரெடிட்' தொடர்பான முழுமையான தகவல் இங்கே...

'கார்பன் கிரெடிட்' என்றால் என்ன?

கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து அதிகளவு கார்பனை உறிஞ்சு திறன் இருந்தால் அதனடிப்படையில் 'கார்பன் கிரெடிட்' கணக்கிடப்படும். எடுத்துக்காட்டாக மரங்கள் அதிக அளவு கார்பனை உறிஞ்சும். இதன்படி சென்னை மாநகராட்சி வசம் எத்தனை மரங்கள் உள்ளது. இந்த மரங்களால் எவ்வளவு கார்பனை உறிஞ்ச முடியும் என்பதை வைத்து இது கணக்கீடு செய்யப்படும். ஒரு டன் கார்பனை உமிழும் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தால் உங்களுக்கு ஒரு 'கார்பன் கிரெடிட்' வழங்கப்படும்.

மாநகராட்சி என்ன செய்யும்?

சென்னை மாநகராட்சியை பசுமையாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மியாவாகி காடுகள், மரம் நடுதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கார்பன் உமிழ்வை குறைக்கவும், கார்பன் பயன்பாட்டை குறைக்கும் திட்டங்களை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சியின் எத்தனை 'கார்பன் கிரெடிட்' உள்ளது என்பது கணக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியின் சென்னை திட்டங்கள் மூலம் 10 ஆயிரம் கார்பனை உறிஞ்சம் திறன் உள்ளது என்றால் சென்னை மாநகராட்சியிடம் 10 ஆயிரம் 'கார்பன் கிரெடிட்' உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி வருகிறது வருவாய்?

சென்னை மாநகராட்சியிடம் 10 ஆயிரம் 'கார்பன் கிரெடிட்' உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி மொத்தம் 5 ஆயிரம் டன் கார்பனை மட்டுமே வெளியிடுகிறது. எனவே தன்னிடம் உள்ள 10 ஆயிரம் கிரெடிட்டில் 5 ஆயிரம் கிரெடிட் சென்னை மாநகராட்சி பயன்படுத்தி கொள்ளும். மீதம் உள்ள 5 ஆயிரம் 'கார்பன் கிரெடிட்'டை விற்பனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் வருவாய் கிடைக்கும். இதற்கான விலையை மாநகராட்சிதான் நிர்ணயம் செய்யும்.

யார் வாங்குவார்கள்?

மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி குறிப்பிட்ட அளவுதான் கார்பனை வெளியேற்ற முடியும். இதைவிட அதிக அளவு கார்பனை வெளியேற்றினால் அதை உறிஞ்சுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செயல்படுத்தவில்லை என்றால் இதுபோன்ற கார்பன் கிரெடிட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதன்படி சென்னை மாநகராட்சியிடம் கார்பன் கிரெடிட்டை வாங்கி அதற்கு ஈடான கார்பனை வெளியேற்றிக் கொள்ளலாம்.

எதற்காக இந்த திட்டம்?

ஒரு நிறுவனம் விதிகளை விட அதிக அளவு கார்பனை வெளியேற்ற அதிக அளவு கிரெடிட் வைத்து இருக்க வேண்டும். அதற்காக வெளியில் இருந்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அப்படி வாங்குவதற்கு பதிலாக குறைந்த அளவு கார்பனை வெளியேற்றும் வகையிலான திட்டங்களை அந்த நிறுவனங்களே செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2-வது நகரம்

இந்தியாவில் இந்தூர் மாநகரம் இந்த 'கார்பன் கிரெடிட்' முறையைச் செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக சென்னைதான் இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. அதிக கார்பனை வெளியேற்றும் மேற்குலக நாடுகள் இப்போது ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து அந்த கார்பன் கிரெடிட்டை வாங்கி வருகின்றன.



Read in source website

சென்னை: முதல்வரின் வீரப்பதக்கம் பெறும் போலீஸாருக்கு, குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கு இணையான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

காவல் துறை சார்பில், 2019, 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது இதில், 319 காவலர்களுக்கு விருதுகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

காவல் துறை மக்களுடன் நெருக்கமானால்தான், குற்றங்கள் குறையும். எனவே, ‘காவல் துறை நம் நண்பன்’ என்று சொல்லத்தக்க வகையில் போலீஸார் செயல்பட வேண்டும்.

காவல் துறையை தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் கருதுகின்றனர். ஆனால், குற்றங்கள் நடக்காத சூழ்நிலைகளை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன்.

ஒரு காவலர் அல்லது ஒருகாவல்நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஓட்டுமொத்த காவல் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. காவலர்களின் செயல்பாடுகள் துறையை தலைநிமிரச் செய்ய வேண்டுமே தவிர, தலைகுனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அத்தகைய எச்சரிக்கை உணர்வு காவலர்கள் அனைவருக்கும் இருந்தால், குற்றச் சம்பவங்களே நடைபெறாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்.

எந்த சூழலிலும் மக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அரசியல், மதம், சாதி காரணமாக வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.

எல்லோருக்கும் எடுத்துக்காட் டான திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவற்றுக்கு அமைதிதான் அடிப்படை.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகுதமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. அதற்கு, தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதே காரணம். மக்களைக்காக்கும் கடமை காவலர் களுக்கு இருப்பதைப் போல, காவலர்களைப் பாதுகாக்கம் கடமை அரசுக்கு இருக்கிறது. அதை மனதில் கொண்டு, கடந்த ஓராண்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

புதிய காவல் ஆணையத்தின் அறிக்கை கிடைத்தபிறகு, காவல் துறையினரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

அதேபோல, தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் முதல்வரின் வீரப் பதக்கங்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள், குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்துக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

டிஜிபி சி.சைலேந்திர பாபு வரவேற்றுப் பேசும்போது, ‘‘வாரம் ஒருநாள் விடுப்பு சட்ட வடிவம் பெற்று, காவலர்களின் உரிமையாக மாறியுள்ளது. 1,474 காவலர்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

விழாவில், உள்துறைச் செயலர்எஸ்.கே.பிரபாகர், சிறைத் துறைடிஜிபி சுனில்குமார் சிங், தீயணைப்புத் துறை டிஜிபி பிராஜ் கிஷோர், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

சென்னை உயர் நீதிமன்றத்தைபோல மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்திஉள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம், நீதித்துறை அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் உடுமலை கூடுதல் மாவட்ட நீதிமன்ற கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி நேற்று திறந்துவைத்தார். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் வரவேற்றார்.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், பி.டி.ஆஷா,ஓய்வுபெற்ற நீதிபதி கே.கல்யாணசுந்தரம், சட்ட அமைச்சர் ரகுபதி,ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும்மாவட்ட நீதிபதிகள் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி பேசியதாவது:

வழக்குகளை விரைந்து முடிப்பதில், நாட்டிலேயே முன்னோடி நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.

கடந்த மாதம் நடந்த நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, நீதிமன்றத்தை நாடி வரும் மக்களுக்குகாலம் தாழ்த்தாமல் நீதியை பெற்றுத் தர வேண்டும் என்றார்.அதை சென்னை உயர் நீதிமன்றம்செய்து வருகிறது. இதேபோல, மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும்போது, ‘‘நீதித் துறைசிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற அக்கறை உள்ளவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பதால், பல்வேறு இடங்களில் கூடுதலாக நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக முதல்வர் உயர்த்தியுள்ளார்” என்றார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வி.புகழேந்தி நன்றி கூறினார்.



Read in source website

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி திட்டம் மற்றும் தடுப்பூசியால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு திட்ட பயிலரங்கத்தில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகள் PICME 2.0 இணையதளத்தில் தங்கள் கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்து RCH எண் பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்தி, தடுப்பூசியால் தடுக்கப்படக் கூடிய 12 நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 9.31 லட்சம் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 10.21 லட்சம் கர்ப்பிணிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் 99 சதவீத சாதனையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டதால் 2004 முதல் போலியோ இல்லாத நிலை நீடிக்கிறது. ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் போன்ற நோய்கள் மற்றும் தட்டம்மை நோய் பரவலும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

போலியோ நோயை பொருத்த வரையில் பி1, பி3 வகை வைரஸ்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. தற்போது உலக அளவில் பி2 வகை வைரஸை ஒழிப்பதற்காக தீவிர கண்காணிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.

PICME என்ற இணையதளம் ஏப்ரல் 2008-ல் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகளின் விவரங்கள் கர்ப்பப்பதிவு முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை பதிவு உள்ளது.

தாய்மார்களுக்கு RCH எண் என்ற ஒரு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை பயன்படுத்தி தாயின் விவரங்களை இணையதளம் மூலம் காணலாம். தமிழக அரசின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மார்களுக்கு RCH எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம சுகாதார செவிலியர் மூலம் கர்ப்பப் பதிவு செய்து RCH எண் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பயனாளிகளிடம் இருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தாய்மார்கள் RCH எண் பெறுவதை மேலும் எளிதாக்கும் பொருட்டு PICME 2.0 இணையதளத்தில் (https://picme.tn.gov.in/picme_public) கர்ப்பிணிகள் தாங்களே சுயமாக பதிவு செய்து RCH எண் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

PICME இணையத்தில் கர்ப்பிணிகளின் விவரங்கள் கர்ப்பப்பதிவு முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை பதிவு உள்ளது.



Read in source website

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலைப் பூண்டு சாகுபடி பரப்பை இந்த ஆண்டு அதிகரிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை முடிவு செய்துள்ளது. மலைப்பூண்டுக்கு என பிராண்ட் பெயர் உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பூண்டு விளைச்சலுக்கு ஏற்ற குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் மலை கிராமங்களான கிளாவரை, பூண்டி, கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மலைப்பூண்டு சாகுபடி நடைபெறுகிறது.

பயிரிட்ட 120 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 100 ஆண்டுகளுக்கு மேலாக பயிரி டப்பட்டு வரும் பாரம்பரிய வகை மற்றும் மருத்துவ குணமிக்க பூண்டு என்பதால், கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்கு புவிசார் குறி யீடும் வழங்கப்பட்டுள்ளது.

சாகுபடியை அதிகரிக்க திட்டம்

கொடைக்கானல் மலைப்ப குதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும், காரத்தன்மை அதிகம். பத்து மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால் இந்தியாவில் விளைவிக்கப்படும் 734 வகை யான பூண்டு வகைகளில் கொடைக்கானல் மலைப்பூண்டு முதன்மையாகக் கருதப்படுகிறது.

இத்தகைய மலைப்பூண்டை தற்போது விளைவிக்கப்படும் சாகுபடி பரப்பைவிட அதிக பரப்பில் விளைவிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

இந்த ஆண்டு பூண்டு சாகுபடி பரப்பை தமிழகம் முழுவதும் 500 ஹெக்டேர் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஏற்கெனவே ஆயிரம் ஹெக்டேரில் மலைப் பூண்டு சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு சாகு படி பரப்பு 300 ஹெக்டேர் அதி கரிக்கப்படும். இதன் மூலம் பூண்டு விவசாயிகள் பயன் பெறுவர். கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு என பிராண்ட் பெயர் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவுத் திட்டமும் செயல்படுத்தப்படும். கொடைக்கானலில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது அதிகரித்துள்ளது, என்று கூறினார்.



Read in source website

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி எலைட் உலக சாதனையுடன் மேலும் 3 புதிய சாதனைகள் படைக்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத நிலையை அடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 3 மணி நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி உலக சாதனை படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே, ஸ்விட்சர்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி எலைட் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதை முறியடிக்கும் வகையில் மாபெரும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் 2,500 சதுர கிலோ மீட்டர் பரப் பளவில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்கள், மகளிர் குழுவினர், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

உலக சாதனை சான்றிதழ்

பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியில் மாவட்டத்தை 6 பகுதிகளாக பிரித்து அந்தந்த பகுதிகளில் தொழிற்சாலைகளின் பிளாஸ்டிக் கழிவுகள், நிறுவனங்களின் பிளாஸ்டிக் கழிவுகள், வீடுகளின் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், வெளியிடங்களில் இருந்த கழிவுகள் என நான்கு வகையாக பிரித்து சேகரிக்கப்பட்டன.

6 பகுதிகளில் உள்ள எடை மேடைகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளின் எடை சரிபார்க்கப் பட்டது. இதில், முந்தைய எலைட் உலக சாதனையை முறியடித்து 3 மணி நேரத்தில் 186.9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி புதிய சாதனை படைக்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் படைக்கப்பட்டுள்ள எலைட் உலக சாதனையை அங்கீகரித்து அதற் கான சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வழங்கினர்.

அதேபோல், ஏஷியன் ரெக் கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைக் கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இந்த உலக சாதனை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இந்த சாதனை இந்திய வரலாற்றில் முதன் முறையாக நிகழ்த்தப் பட்டுள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் அரியலூர் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். உலக சாதனை நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, உலக சாதனை திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Read in source website

புதுடெல்லி: குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு ராஜாங்க ரீதியாக 2 வெற்றிகள் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்களிடையே கருத்து நிலவுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி டெல்லி திரும்பினார்.

இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் இந்தியா 2 குறிப்பிடத்தக்க ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலையாக செயல்பட்டது. ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவை, இந்தியா கண்டிக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்தன. குறிப்பாக ரஷ்யாவை இந்தியா கண்டிக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் இந்தியா யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணியாமல் கவனமாக நடுநிலை நிலைப்பாட்டை கையில் எடுத்தது.

குவாட் உறுப்பு நாடுகளுக்கு இடையே உக்ரைன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு அதிர்ச்சியானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில காலத்துக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு அசைக்கும் வகையில் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஆனால் டோக்கியோ மாநாட்டில், இந்தியாவின் நிலை அசைக்க முடியாமல் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன்-ரஷ்யா...

உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலையை குவாட் அமைப்பு உறுப்பு நாடுகள் வெளிப்படையாகப் பாராட்டின என்றும் ஆனால், ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பை ஜனநாயக நாடான இந்தியா கண்டிக்காதது குறித்து பல குரல் எழுந்ததை தடுக்க முடியவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற அமைப்புகளில் தான் ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டுக்கு அப்பால் வரும் எந்த அழுத்தத்தையும் இந்தியா எதிர்க்கும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்து தெளிவாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருவரும் தங்கள் பகிரங்க அறிக்கைகளில் ரஷ்யாவைக் கண்டித்தனர். பிரதமர் மோடி தனது பொது அறிக்கையில் உக்ரைனையோ அல்லது ரஷ்யாவையோ குறிப்பிட்டு எந்தவித வார்த்தையையும் வெளியிடவில்லை.

குவாட் அமைப்பு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் உக்ரைனை குறிப்பிட்டு இந்தியா பேசவில்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகிறது. எனவே அதற்கு இந்தியா இடம் தரவில்லை.

மேலும் அந்த கூட்டறிக்கையில் "உக்ரைனில் நிலவும் துயரமான மோதல்", "உக்ரைனில் உள்ள மோதல்கள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் துயரமான மனிதாபிமானநெருக்கடிக்கு நமது பதில்கள்’’, ‘‘இந்தோ-பசிபிக் பிராந்தியம் விளைவுகள்" என்றே இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்கங்கள், ரஷ்யாவைப் பின்பற்றி தைவான் மீது சீனா படையெடுப்பதில் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. இது குவாட் உச்சி மாநாட்டில் இந்தியாவின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

தீவிரவாதம் தொடர்பான விவாதத்தின்போது கூட்டறிக்கையை குவாட் அமைப்பு வெளியிட்டது. அதில் "அனைத்து வடிவங்களிலுமான தீவிரவாதம் மற்றும் வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எந்த வகையிலும் தீவிரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறோம்.

உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிரான எங்களின் போராட்டத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறப்பட்டிருந்தது.

தீவிரவாதத்தை வேரறுத்தல், தீவிரவாத ஆதரவாளர்களை கண்டித்தல், தீவிரவாத குழுக்களுக்கு எந்தவொரு ஆயுதங்கள், நிதி அல்லது ராணுவ ஆதரவையும் மறுக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் குவாட் உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மும்பை மற்றும் பதான்கோட் தீவிரவாதச் செயல்களில் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆப்கானிஸ்தான் நாட்டை இனி எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ அல்லது பயிற்சியளிக்கவோ அல்லது திட்டமிடவோ அல்லது நிதியுதவி செய்யவோ பயன்படுத்தக்கூடாது என்றும் உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதன் முக்கியத்துவமும் மாநாட்டில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தீவிரவாதத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. குவாட் மாநாட்டில் தீவிரவாதம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.

இது மாநாட்டில் இந்தியா வின் 2-வது வெற்றியாக பார்க்கப்படுகிறது.



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்று நீடிக்கும் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன், நல உதவிகளை அளிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, ‘‘மாநில அரசுகள் அளிக்கும் தகவல் அடிப்படையில், தேசிய தகவல் மையத்துடன் ஆலோசித்து உருவாக்கப்பட்ட ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் சுமார் 27.45 கோடி முறைசாரா தொழிலாளர்கள் அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். இவர்களுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கையை, ஜூலை 20-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவிட்டபடி அனைத்து தகவல்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். முறைசார தொழிலாளர்களின் விவரங்களை அளிப்பதில் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Read in source website

மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இரண்டு நாள் "பலாப்பழ மேளா" இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹிரியட்கா நகரில் இருக்கும் வீரபத்ர சாமி கோயில் வளாகத்தில் இந்த மேளா நடைபெறுகிறது. இதில், பலாபழத்தின் ரகங்கள், பழத்தைக் கொண்டு தாயரிக்கப்படும் உப பொருள்கள், பலா மரக்கன்றுகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல பலாப்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் அங்கேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த வகையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பலாப்பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். இந்த ஆண்டு பலாப்பழ இட்லி, பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்படும் "மங்களூரு பன்", பலாப்பழ போலி போன்றவை அங்கேயே தயாரிக்கப்பட்டு சூடாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரை பலாப்பழ சீசன் இருக்கும். பருவமழை தொடங்கியதும் பழத்தின் சுவை மற்றும் மகசூல் பாதிக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பலாப்பழ மேளா இந்தாண்டு சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடக்கிறது.

தோட்டக்கலைத் துறை, விவசாய பல்கலைக் கழகங்களின் உறுதுணயுடன் நடைபெறம் இந்த மேளாவை சவாயவ க்ரிஷிகா கிரஹகா பலகா மற்றும் பிரணவ சௌஹர்த சககாரி லிமிடெட் ஏற்பாடு செய்திருந்தது.



Read in source website

இலக்கியத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசு என்பது என்ன? பரிசு வென்ற முதல் இந்தியர் யார்? நூல் எது?

Explained: The Booker Prize, one of the most coveted literary awards in the world: எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவலான டோம்ப் ஆஃப் சாண்ட், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி புத்தகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வெளியான ‘ரெட் சமாதி’ என்ற நாவல், டெய்சி ராக்வெல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு 2021 இல் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இரண்டு இலக்கிய விருதுகளில் இந்த பரிசும் ஒன்றாகும், அதன் நோக்கம் “பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது” என்று கூறப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் இணையதளத்தில், ”படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் (புக்கர் பரிசு) அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் (சர்வதேச புக்கர் பரிசு), உலகளாவிய அடிப்படையில் புனைகதைகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் ஒரே மதிப்பில் வழங்கப்படுகினறன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு என்றால் என்ன?

புக்கர் பரிசு என்பது நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் உட்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனைகதைக்களுக்கு வழங்கப்படும் சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நடுவர்கள் குழு அந்த ஆண்டின் சிறந்த படைப்பைத் தீர்மானிக்கிறது. அந்த படைப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இந்த நீதிபதிகள் குழுவில் புகழ்பெற்ற கலாச்சார வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெறுவர். இந்த ஆண்டு குழுவில் ஐந்து நீதிபதிகள் இருந்தனர்.

புக்கர் பரிசு பெறும் வெற்றியாளர் £50,000 தொகையைப் பெறுகிறார். முன்னதாக வெளியிடப்படும் நீண்ட பட்டியலில் சுமார் 12 படைப்புகள் இடம்பெறும். தி ‘புக்கர் டசன்’ என்றும் அழைக்கப்படும் இந்த நீண்ட பட்டியல் இந்த ஆண்டின் ஜூலையில் அறிவிக்கப்படும், பின்னர் ஆறு புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் நவம்பர் 2022 இல் அறிவிக்கப்படுவார்.

சர்வதேச புக்கர் பரிசு என்பது என்ன?

சர்வதேச புக்கர் பரிசு 2005 இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது, ஆலிஸ் மன்ரோ, லிடியா டேவிஸ் மற்றும் பிலிப் ரோத் ஆகியோர் ஆரம்பகால வெற்றியாளர்களில் சிலர். 2015 ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது. புதிய விதிகள் மற்றொரு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில், ஆண்டுதோறும் ஒரு சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிடுகிறது. £50,000 பரிசுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

இது ஏன் ‘புக்கர்’ என்று அழைக்கப்படுகிறது?

புக்கர் பரிசு, 1969 முதல் 2001 வரை, அதன் ஆரம்ப ஸ்பான்சராக இருந்த பிரிட்டிஷ் உணவு மொத்த விற்பனை ஆபரேட்டரான புக்கர் குரூப் லிமிடெட்டின் பெயரால் பெயரிடப்பட்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனமான மேன் குரூப், 2002 இல் பரிசுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது, இதனால் அது மேன் புக்கர் பரிசு என்று அறியப்பட்டது. மேன் குரூப் அவர்களின் ஸ்பான்சர்ஷிப்பை 2019 இல் முடித்துக்கொண்டது. அதன் பிறகு அமெரிக்க தொண்டு நிறுவனமான கிராங்க்ஸ்டார்ட் ஸ்பான்சராக இருந்து வருகிறது. அதிலிருந்து பரிசுப் பெயர் மீண்டும் ‘புக்கர்’ என மாறிவிட்டது.

சில முக்கிய வெற்றியாளர்கள் யார்?

மார்கரெட் அட்வுட் (‘தி டெஸ்டமென்ட்ஸ்’), யான் மார்டெல் (‘லைஃப் ஆஃப் பை’) மற்றும் ஜூலியன் பார்ன்ஸ் (‘தி சென்ஸ் ஆஃப் எ என்டிங்’) ஆகியோர் விரும்பத்தக்க பரிசின் முக்கிய வெற்றியாளர்களில் அடங்குவர். அருந்ததி ராய் (‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’), சல்மான் ருஷ்டி (‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’), கிரண் தேசாய் (’தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்) மற்றும் அரவிந்த் அடிகா (‘தி ஒயிட் டைகர்’) போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் கடந்த காலங்களில் புக்கர் பரிசை வென்றுள்ளனர். சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியராக தற்போது கீதாஞ்சலி ஸ்ரீ உள்ளார்.



Read in source website

பாலியல் தொழிலும் ஒரு தொழில் முறை தான், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு கடந்து வந்த பாதையை இங்கே காணலாம்

2011 இல் பாலியல் தொழிலாளிகள் மறுவாழ்வு தொடர்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளை செயல்படுத்துவது மட்டுமின்றி அதனை முறையாக பின்பற்ற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் மே 13 அன்று அறிவுறுத்தியது.

வழக்கின் பின்னணி என்ன?

ஜூலை 25, 2007 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரெட் லைட் பகுதியில் பாலியல் தொழிலாளியை கொன்ற புத்ததேவ் கர்மாஸ்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு மனுவை பிப்ரவரி 14, 2011 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், பாலியல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இவ்வழக்கை தானாக முன்வந்து பொதுநல வழக்காக மாற்றியது.

அதில் கூறியிருப்பதாவது, உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பாலியல் தொழிலாளர்களுக்கு, நாடு முழுவதும் மறுவாழ்வு அளிக்க மத்திய, மாநில அரசுகள் சமூக நல வாரியங்கள் மூலம் திட்டங்களைத் தயாரிக்கும் என உறுதியாக நம்புகிறோம். ஏனெனில், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழ பாலியல் தொழில் செய்பவர்களுக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது

அதன் பின் என்ன நடந்தது?

ஜூலை 19, 2011 அன்று, மூத்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான உஷா பல்நோக்கு கூட்டுறவு சங்கம், தர்பார் மகிளா சமன்வாயா கமிட்டி, ரோஷ்னி அகாடமி ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம், இப்பிரச்சினை தீர்ப்பதற்கான அறிவுரைகளை வழங்கிட தெரிவித்திருந்தது.

அக்குழுவினர் பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்தப்படுதல், பாலியல் தொழிலை விட்டு வெளியேற விரும்புவோருக்கு மறுவாழ்வு, அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான நிலைமை உருவாக்குவதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குழு சமர்ப்பித்த ரிப்போர்ட் என்ன?

நீண்ட ஆய்வு மேற்கொண்ட குழுவினர், செப்டம்பர் 14, 2016 அன்று இறுதி அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், பாலினத் தொழிலாளர்களுக்கு இருப்பிட சான்றிதழ் இல்லாததால், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாளச் சான்றுகளைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக, அவர்களால் மறுவாழ்வுக்கான திட்டங்களை அணுக முடியவில்லை. அதேபோல், மாநிலங்கள் வழங்கும் கடனுக்கான அணுகலும் அவர்களுக்கு இல்லை.னெனில் ஆவணங்கள் இல்லாததால் வங்கிக் கணக்குகளைத் திறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினை சரிசெய்திட 1956 சட்டவிரோத கடத்தல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.

மத்திய அரசு ரியாக்ஷன்

பிப்ரவரி 27, 2020 அன்று, இரண்டு வரைவுச் சட்டங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சர்கள் குழுவால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவு

இவ்விவகாரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 29, 2020 அன்று, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் (NACO) அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள சான்று இல்லாமலே ரேஷன் பொருள்கள் வழங்கிட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. அவர்களுக்கு பொருள்கள் கிடைத்திட மாவட்ட சட்டப்பணிகள் அதிகாரிகளும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஜனவரி 10, 2022 அன்று, குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைபடி, அனைத்து பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் கார்டுகள் / வாக்காளர் அட்டைகள் வழங்கும் பிராசஸை விரைவாக முடித்திட உத்தரவிட்டது.

மே 19 அன்று நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கூறியதாவது, இப்பிரச்சினைக்கு உத்தரவாதங்கள் இருந்தாலும், மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வர வேண்டும். அரசியலமைப்பு 142வது பிரிவின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரிந்துரைகள் “பாலியல் தொடர்பான மறுவாழ்வு நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், மத்திய அரசால் சட்டம் இயற்றப்படும் வரை அமலில் இருக்கும் என்று கூறுகிறது.

எஸ்சி பரிந்துரைகளில் அமல்படுத்த வேண்டியவை எவை?

மே 19 அன்று, குழுவின் 10 பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு, அவற்றில் 6 பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்தவொரு பாலியல் தொழிலாளிக்கும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருப்பத்துடன்கூடிய பாலியல் தொழில் சட்டபூர்வமானது. பாலியல் தொழிலாளர்களை போலீஸார் மோசமாக நடத்துகின்றனர். இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ போலீஸார் துன்புறுத்தக்கூடாது. கண்ணியமாக நடத்த வேண்டும்

பாலியல் கூடங்களில் ரெய்டு நடந்தால், அதனை ஊடகங்கள் ஒளிபரப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் அடையாளம், பெயர்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது.

பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக ஆணுறைகளை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அவற்றை குற்றங்களாகக் கருதப்படவோ அல்லது குற்றச் செயலுக்கான ஆதாரமாகவோ கருதப்படக்கூடாது.

எந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன?

குழுவின் நான்கு பரிந்துரைகளில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதாவது,18 வயதுக்கு மேற்பட்டோர் சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது. அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது, விடுதிகளில் ரெய்டு செய்கையில் உரிமையாளரை மட்டுமே கைது செய்தல். பாலியல் தொழிலாளியை கைது செய்யக்கூடாது, பாலியல் வேலை தொடர்பாக முடிவெடுக்கும் செயல்முறைகளில் பாலியல் தொழிலாளர்களின் பங்கு தீர்மானித்தல், பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்பான பரிந்துரை ஆகியவை அடங்கும்.

குழுவின் பரிந்துரைகளுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Read in source website

இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவிலான வெப்பத்தின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கிறது. குளிா்காலத்திற்கும் வேனல்காலத்திற்கும் இடைப்பட்ட வசந்தகாலம் இல்லாமலேயே இந்த ஆண்டு கடந்திருக்கிறது.

பருவநிலை புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படத் தொடங்கிய கடந்த 122 ஆண்டுகளில் மிக அதிகமான வெப்பத்தை கடந்த மாா்ச் மாதம் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிலான வெப்பத்தின் தாக்கம் மாா்ச் மாதத்தில் மட்டுமல்லாமல், மே மாதம் வரை தொடா்ந்து கொண்டிருக்கிறது. குறைந்த அளவு மழை, அனல் காற்று வீசும் கோடை ஆகியவற்றால் கோதுமை உற்பத்தி செய்யும் பகுதிகளில் பயிா்கள் கருகி விவசாயிகள் மிகப் பெரிய இழப்பை எதிா்கொண்டிருக்கிறாா்கள்.

ஜூன் மாதம் பருவ மழை தொடங்குவதற்குள், முந்தைய 2010-இன் பாதிப்பை 2022 கடந்துவிடும் போலிருக்கிறது. இதுவரை 3,000-க்கும் அதிகமான காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. 2010-இல் இந்தியாவைத் தாக்கிய அனல் அலையில் 1,300 போ் உயிரிழந்தனா். 2010 - 2018 வரையில் 6,176 போ் உயிரிழந்ததாக அதிகாரபூா்வ பதிவு தெரிவிக்கிறது. அப்படியிருந்தும்கூட, வெப்ப அலை தேசியப் பேரிடராக அறிவிக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

அனல் அலை பாதிப்பு வெப்பமானி காட்டும் அளவின் அடிப்படையில் மட்டுமே கணிக்கப்படுகிறது. உண்மை நிலையை பதிவு செய்ய வேண்டுமானால், வெப்பத்தின் அளவையும், அதனால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பையும் இணைத்து கணிக்க வேண்டும். அப்படி கணிக்கும்போது பாதிப்பின் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அனல் அலை தாக்கத்தால் நகா்ப்புறங்களில் ஆங்காங்கே தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பத் தீவுகள் உருவாகி அங்கே அனல் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படும். இன்னொருபுறம் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றாற்போல மின்சாரத் தேவை அதிகரித்து, நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகிறது. அது மின் உற்பத்தியைப் பாதித்து பல நகரங்களில் மின்வெட்டு, மின்தடை என்று பிரச்னையை மேலும் கடுமையாக்குகிறது. வீட்டுக்குள்ளேயே இருந்து, ஏசி, கூலா்கள் ஆகியவற்றின் உதவியுடன் அதிகரித்த மின்சார செலவை எதிா்கொள்ள முடிந்தாலும்கூட, மின்தடை ஏற்படும்போது அதன் பாதிப்பிலிருந்து தப்பிவிட முடியாது.

அனல் அலையால் மிக அதிகமாக பாதிக்கப்படுவது உழைக்கும் வா்க்கம்தான். அவா்களுடைய உற்பத்தித் திறன் குறைவதுடன், வருவாயும் குறைகிறது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு உடல்நல இடா்களையும் அவா்கள் எதிா்கொள்ள நோ்கிறது.

ரிக்ஷா ஓட்டுபவா்கள், கூலித் தொழிலாளா்கள், சரக்கு கையாள்பவா்கள் போன்றோா் சுட்டெரிக்கும் வெயிலில் உழைத்தால் மட்டுமே தங்கள் குடும்பங்களுக்கு இரு வேளை உணவை வழங்க முடியும். அவா்கள்தான் அனல் அலையால் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களுடைய பாதுகாப்பிற்காக மத்திய - மாநில அரசுகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ எந்தவிதமான கொள்கைகளை வகுப்பதோ, திட்டமிடுவதோ இல்லை என்கிற அவல நிலையை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அனல் அலையின் கடுமையும், நிகழ்வும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அனல் அலைகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்து, இப்போது இருப்பதைவிட சராசரி நிகழ்வுகள் அதிகரிக்கும் என்கிறது ஓா் ஆய்வு. இந்த நூற்றாண்டின் மத்திக்குள், ஒரு பருவத்திற்கு 2.5 நிகழ்வுகளாகவும், நூற்றாண்டின் இறுதிக்குள் 3 நிகழ்வுகளாகவும் அனல் அலை தாக்கம் அதிகரிக்கும் என்பது அந்த ஆய்வின் கணிப்பு. அதை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை நாம் இன்னும் யோசிக்கக்கூட இல்லை.

அனல் அலைகள் என்பது ஓா் அமைதிக் கொலையாளி. அனல் அலையால் தாக்கப்படுபவா்கள் பெரும்பாலும் வீதியில் விழுந்து இறப்பதில்லை. பலரும் குளிா்பதன வசதி இல்லாத, பாதுகாப்பில்லாத குடிசைகளிலும், தகரம், ஆஸ்பெட்டாஸ் கூரை வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கிறாா்கள். அது குறித்த பதிவுகள் முறையாக செய்யப்படுவதில்லை. அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், இயற்கைப் பேரிடா்களிலேயே மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவது அனல் அலைகளாகத்தான் இருக்கும்.

வெள்ள பாதிப்பு, புயல் பாதிப்பு போன்றவை நேரடிப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துவதால் அவை காப்பீட்டுத் துறையின் கவனத்தை ஈா்த்திருக்கின்றன. வணிக ரீதியாக லாபம் ஏற்படுத்துவதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. அனல் அலையின் பொருளாதார பாதிப்புகளை கணிப்பது கடினம் என்பதால், நிதித்துறையோ காப்பீட்டுத் துறையோ அது குறித்து கவனம் செலுத்துவதில்லை.

2010-இல் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், அனல் அலையை எதிா்கொள்ள சில செயல் திட்டங்களை வகுத்தது. 12 ஆண்டுகள் ஆகியும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. நகா்ப்புறங்களில் ஆங்காங்கே குடிநீா் வழங்குதல், வெப்ப பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் தங்குமிடங்கள் அமைத்தல் போன்றவற்றை இன்னும்கூட ஏற்படுத்தவில்லை.

அனல் அலையை தேசியப் பேரிடராக அங்கீகரிக்க வேண்டும். மக்களும் தாமாக முன்வந்து ஆங்காங்கே தண்ணீா் பந்தல்கள் அமைத்து பிறா் இளைப்பாறவும், தாகம் தணிக்கவும் வழிகோல வேண்டும். நமது முன்னோா்களுக்கு இருந்த முன்னெச்சரிக்கை உணா்வும், மனிதாபிமான சிந்தனையும், ஈதல் மனநிலையும் நமக்கு இல்லாமல் போயிருப்பதை என்னவென்று சொல்ல?



Read in source website

கால மாற்றத்தால், நம் சமூகம் மோசமாக மாறிக் கொண்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. சூதாட்டம், சீட்டாட்டம் என்றால் இன்றும் தாய்மாா்கள் பதறிப் போவதுண்டு. காரணம், குடும்பத் தலைவா் சீட்டாட ஆரம்பித்துவிட்டாா் என்றால் அவரின் குடும்பம் விரைவில் நிா்மூலமாகிவிடும் என்பதுதான்.

இந்த ஆட்டத்தில் விட்ட பணத்தை அடுத்த ஆட்டத்தில் பிடித்து விடுவோம் என்று சொல்லி சொல்லி தங்களுக்கு சொந்தமாக இருந்த வீடு, வயல், தோப்பு என்று மொத்த சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், முன்பு ஆலமரத்தடியிலும் கரும்புத் தோட்டத்திலும் ரகசியமாக பயந்து பயந்து விளையாடப்பட்ட சீட்டாட்டம், இன்று ஆன்லைனில் பகிரங்கமாக விளையாடப்பட்டு வருகிறது. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப இந்த ஆன்லைன் சூதாட்டத்தினால் நாளுக்கு நாள் பெருகிவரும் தற்கொலைகளை நாம் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

இன்று அறிதிறன்பேசிகளின் வரவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் மக்களிடம் திணிக்கப்படுகின்றன என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவை திரும்ப திரும்ப விளம்பரம் செய்யப்படுகின்றன.

இணையத்தைத் திறந்தாலே ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விளம்பரங்கள்தான் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. அவற்றை விளம்பரப்படுத்துவதற்காக பிரபல நடிகா்களும் வரிந்துகட்டிக் கொண்டு வருவது, அவா்களுக்கு சமூக அக்கறை என்பது எள்ளளவும் இல்லை என்பதையே காட்டுகிறது.

கடந்த 2003-இல் அன்றைய தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலுமாக தடை செய்தது. அரசின் இந்த அறிவிப்பால் ஏராளமான தாய்மாா்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனா். நிறைய நடுத்தரக் குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தது. அது மட்டுமல்ல, இதன்மூலம் எண்ணற்ற தற்கொலைகளும் தடுக்கப்பட்டன.

ஆனால் இன்னும் சில கும்பல் கள்ளத்தனமாக லாட்டரிகளை விற்றுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதையும் அவற்றை இன்னும் சில அப்பாவி மக்கள் வாங்கி ஏமாறுகிறா்கள் என்பதையும், சமீபத்தில் ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் என்கிற நூல் வியாபாரியின் தற்கொலை மூலம் அறிந்தபோது அதிா்ச்சியாக இருந்தது.

புகையிலை, மது போன்றவை மனிதனை நின்று கொல்லும். ஆனால் சூதாட்டங்கள் மனிதனை அன்றே கொல்லும். தனிமனிதனை மட்டுமல்லாது அவன் சாா்ந்த குடும்பத்தையும் வேரோடு அழிக்கும் அசுர ஆற்றல் அவற்றுக்கு உண்டு. இப்படி எண்ணற்ற மக்களை சூதாட்டத்துக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தையும், கள்ள லாட்டரி விற்பனையையும் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் ஒரு பெண்ணை மூன்று ஆண்கள் சோ்ந்து ‘பிராங்க்‘ செய்யும் காணொலியைக் காண நேரிட்டது. அதாவது தங்கள் வருமானத்துக்காகவும், புகழுக்காகவும் ஒரு பெண்ணிடம் தெரிந்தே வம்பு செய்கிறாா்கள்.

அப்படி வம்பு செய்யும்போது இரட்டை அா்த்தத்தில் ஆபாசமாகவும் பேசுகிறாா்கள். அதற்கு அந்தப் பெண் எதிா்வினை ஆற்றுவதை காணொலியாகப் பதிவு செய்கிறாா்கள். பிறகு அந்தக் காணொலியை மெருகேற்றுவதற்காக திரைப்படங்களில் வரும் நகைச்சுவை வசனங்களை ஆங்காங்கே சோ்க்கிறாா்கள்.

பின் இந்தக் காணொலிகள் சமூக வலைதளங்களில் வலம்வர தொடங்கி விடுகின்றன. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இதுபோன்ற சேனல்களுக்கு லட்சக்கணக்கில் சந்தாதாரா்கள் இருக்கிறாா்கள். இது போன்ற காணொலிகளை ரசித்துப் பாராட்டுபவா்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறாா்கள்.

அவரவா் வேலையை செய்து கொண்டிருக்கும் மக்களை திடீரென்று ‘ப்ராங்க்’ செய்யும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்குச் செல்லும் பெண்களிடம் திடீரென்று பயம்காட்டி அவா்களை ஓடவிட்டு காணொலி எடுக்கிறாா்கள். ஒருவேளை அந்தப் பெண்களில் ஒருவா் பலவீனமான இதயம் படைத்தவராக இருந்து அவரின் இரத்த ஓட்டம் நின்று போனால் அந்த மரணத்துக்கு யாா் பொறுப்பேற்பது?

ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை காணொலி எடுப்பதே குற்றம். அப்படி இருக்க, ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை அச்சமூட்டுவது, கேலி செய்வது, கோபப்படுத்துவது ஆகியவை மிகவும் தரக்குறைவான செயல்கள்.

அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபா் இந்தச் செயலுக்கு எதிா்வினை ஆற்றும்போது அதை காணொலியாக பதிவு செய்து லாபம் ஈட்டுவது வன்மையாக கண்டிக்கதக்க செயல்கள் அல்லவா?

இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால், இதுபோன்ற வரம்பு மீறிய செயல்களை சமூக வலைதளங்களில் காண்போா், வன்மையாகக் கண்டிப்பதை விட்டுவிட்டு அவா்களுக்கு பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறாா்கள். பொழுதுபோக்கு என்ற போா்வையில் இதுபோன்ற வக்கிரங்களையும், வரம்புமீரல்களையும் மக்கள் ரசிப்பதை பாா்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மிருகம் எட்டிப்பாா்ப்பதை உணர முடிகிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட எனது தெருவில் சிறாா்கள் கூட்டம் கூட்டமாக ஏதேனும் சமூக விளையாட்டுகளை விளையாடுவதை பாா்த்திருக்கிறேன். இப்போது அதே தெருவில் கூட்டமாக, ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக கைப்பேசியை வைத்துக் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கின்றனா்.

இந்த ஆன்லைன் விளையாட்டுகள் மாணவா்களுக்கு ஒருவித போதையாக மாறுகிறது. அதனால் விரைவில் அவா்கள் அந்த விளையாட்டுக்களுக்கு அடிமையாகிறாா்கள்.

இப்படி ஆன்லைனில் விளையாடி பழக்கப்பட்ட மாணவா்கள், நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட நிறைய வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் மேற்கூறிய ‘ப்ராங்க்‘ காணொலிகள் போன்ற விரும்பத்தகாத விஷயங்களால் ஈா்க்கப்படும் பதின்பருவ மாணவா்களுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தைரியமாக செய்யலாம் என்ற நம்பிக்கை எற்பட வாய்ப்புள்ளது.

சமூக வலைதளங்களின் ஆன்லைன் சூதாட்டங்கள் இன்றைய இளைஞா்களை தவறான திசையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன என்று தெரிந்தும் அதை கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கையறு நிலையில்தான் நாம் அனைவரும் உள்ளோம் என்பதுதான் எதாா்த்தம்.



Read in source website

 

கரோனா பாதிப்பிற்குப் பின்னா், பள்ளிக் கல்வியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்து வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சாா்ந்தவா்கள் தனியாா் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை, கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால் அரசுப் பள்ளிகளில் சோ்க்கத் தொடங்கியிருக்கிறாா்கள்.

இதுவரை சற்றேக்குறைய இரண்டு லட்சம் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வானது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் ஏழை எளிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவைகள்.

இந்த கரோனா கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே அதிக பாதிப்புக்குள்ளானது கல்விதான். நாடு தழுவிய அளவில் ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை பயிலும் சுமாா் 24.7 கோடி மாணவா்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு அவா்களுடைய வாழ்க்கை பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயா்நிலைப் பள்ளியாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 7,024, 3,135 உயா்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியாா் பள்ளிகளைப் பொறுத்தவரை, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன.

அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பாா்ப்போமேயானால் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியா்களில் 2.27 லட்சம் போ் அரசுப் பள்ளிகளிலும், 77ஆயிரம் போ் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2.53 லட்சம் போ் தனியாா் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனா்.

மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியா்கள்தான் பணிபுரிகின்றனா், ஆனால், 12,382 தனியாா் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை, தமிழக அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியாா் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 பேரும் படிக்கின்றனா். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள்தான் படிக்கின்றனா். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியாா் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியா்களின் எண்ணிக்கையிலும் தனியாா் பள்ளிகள்தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆக, அரசுப் பள்ளிகளைவிட தனியாா் பள்ளிகளை நோக்கித்தான் பெற்றோா் செல்கின்றனா் என்பது தெளிவாகிறது. அரசால் இலவச கல்வி வழங்கப்படும் நிலையிலும், பெற்றோா் பணம் கொடுத்துப் படிக்க வைக்கின்ற நிலை ஏன் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும்.

தமிழகத்தில் 2,500 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. 20 மாணவா்களுக்கு ஒரு சிறுநீா் கழிவறையும், 50 மாணவா்களுக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும். ஆனால், இது ஏட்டளவில்தான் உள்ளது. இவற்றை சீா் செய்ய வேண்டியது அடிப்படையான ஒன்றாகும். 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் இடைநிற்றல் 9.6 சதவீதமாக இருக்கிறது.

ஆரம்பப் பள்ளி மாணவா்களின் இடைநிற்றல் 16 சதவீதமாக இருக்கிறது. இதன் மூலமாக குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையின்மையும், குடும்பத்தில் நிலவும் வறுமையும், பொருளாதாரச் சூழ்நிலையும் இந்தப் பிஞ்சு உள்ளங்களை நசுக்குகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளை நாடி வருகிற மாணவா்களைத் தக்க வைக்க அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு, அவற்றின் கல்வித் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையைத் தக்க வைப்பதற்காகவும், மேலும் அதிகரிப்பதற்காகவும் சமூகப் பாா்வையோடும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், ஆசிரியப் பெருமக்கள் பலரும் செயல்பட்டு வருவதை நாம் நன்றியோடு நினைத்துப் பாா்க்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு 10 லட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும். ஐந்து வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி விடலாம். கோடிக்கணக்கான ரூபாயில் கட்டப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் வசதி படைத்தோா் பயன்படுத்துகிற நிலையில், இலவசமாகக் கல்வி கொடுக்கிற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது என்பதே சமூக நீதிக்கான அடையாளமும் கூட.

அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகள் போதிய வசதிகளை முழுமையாக அடையாத காரணத்தினால்தான், தனியாா் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்கிற சிந்தனை மக்களிடம் ஏற்படுகிறது. ஆகவே, அவா்கள் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியாா் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள்.

முன்பு, 1:40 என்று இருந்த ஆசிரியா் -மாணவா் விகிதம் தற்போது 1:24 ஆக மாறிவிட்டது. இதற்கான காரணம், மாணவா்களின் எண்ணிக்கை குறைவுதான். மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக இரண்டு ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். தலைமையாசிரியரும் ஒரு ஆசிரியரும் மட்டும்தான் பணிபுரிகிறாா்கள். தலைமையாசிரியா் அலுவலகப் பணி காரணமாக வெளியில் சென்றால், ஆசிரியா் ஒருவா் மட்டுமே மொத்த மாணவா்களையும் பாா்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

ஆக, தரமான கல்வி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். பெற்றோா் - ஆசிரியா் உறவிலும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தனியாா் பள்ளிகள் பெற்றோா்களை அழைத்தால் உடனடியாக அவா்கள் பள்ளிக்கு வந்துவிடுகிறாா்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் பெற்றோா்களை அழைத்தால் அவா்கள் வருவதில்லை. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய அரசுப் பள்ளி மாணவா்களின் பெற்றோா் ஆா்வம் காட்டுவதில்லை.

மாணவா்களின் நிலையை பெற்றோரிடம் எடுத்துக் கூறுவது ஆசிரியா்களின் தலையாய கடமையாகும். இந்தப் பணி தனியாா் பள்ளிகளில் சரியாக நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் அப்படியில்லை. பெற்றோா் பள்ளிக்கு வர முடியாது சூழ்நிலை என்றால் அவா்களுக்கு ஏற்ற நேரத்தை ஆசிரியா்கள் உருவாக்கித் தர வேண்டும்.

ஏனென்றால், நல்ல மாணவா்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியா்களுக்கும் இருக்கிறது. இதன் மூலம் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆசிரியா்கள், மாணவா்களின் உறவு நன்றாக அமைய அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியா் - பெற்றோா் - மாணவா் நல்லுறவு மிகவும் இன்றியமையாதது.

மேலும், அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வதற்கு தலைமையாசிரியா், ஆசிரியா் கலந்தாய்வு மிக முக்கியமான ஒன்றாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்களுக்கு உணவு, கூடுதலான சீருடை இவைற்றை வழங்குவதற்கு பெற்றோா் - ஆசிரியா் கழகம் முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான கணினி ஆய்வகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஓவியம், இசை, விளையாட்டு போன்றவற்றில் மாணவா்கள் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அந்தந்த துறை சாா்ந்த வல்லுநா்களை பெற்றோா் - ஆசிரியா் கழகம் நியமிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் மாணவா்களை ஆங்கிலம் பேச வைக்க பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகிறது. அவற்றை சீராக்க வேண்டும். இதில் தோ்ச்சி அடையாத மாணவா்களுக்கு கற்பிக்க அவா்களின் வகுப்பாசிரியா்களைப் பயன்படுத்தாமல், வேறு வகுப்பு ஆசிரியா்களைப் பயன்படுத்தினால் மாணவா்களிடையே கூடுதல் கவனம் ஏற்படக்கூடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆசிரியா் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இருக்கும் ஆசிரியா்களை பற்றாக்குறை உள்ள வேறு பள்ளிகளுக்கு நியமிக்கின்ற போக்கு நிலவுகிறது. அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியா் நியமனத்திற்கான சூழலை உருவாக்காமலே இருப்பது வருத்தத்துக்குரியது.

மாணவா்களைப் பொறுத்தவரை, பிளஸ் டூ வகுப்பு முடித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) தோ்வு இவற்றை எதிா்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளியின் கல்விமுறை இருந்தால் அதுவே மாணவ சமுதாயத்திற்குச் செய்கிற மகத்தான பணியாகும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

 



Read in source website

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நகர்ப்புற மேம்பாடு மற்றும் மேலாண்மையில் ஒரு பிரபலமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் நகரங்கள் நவீனமாகும். அவற்றின் நீடித்த, நிலைத்த வளர்ச்சி உறுதி செய்யப்படும். இவற்றை எல்லாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால், அது அனைவரின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒருசாராரின் வாழ்விடத்தை, வாழ்வாதாரத்தை அழிப்பது அல்ல நகரமயமாக்கல். அவர்களுக்கான வாழ்க்கையை உறுதி செய்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையாளரின் நோக்கம், வலியுறுத்தல்.

இதை நம்மூர் சிக்கலுடன் பொறுத்திப் பார்க்க ஓர் எளிமையான உதாரணம் உண்டு. ஒவ்வொரு முறை சென்னையில் குடிசை மாற்று வாரியம் அங்கு வசிப்பவர்களுக்கு புறநகரில் வீடு ஒதுக்கும்போதும் அவர்கள் செல்ல மறுத்து புலம்பும் குரலே இந்தப் பிரச்சினையில் ஆணிவேருக்கு சாட்சி. "ஐயா நான் இங்கு பக்கத்தில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கிறேன். அந்த சம்பாத்தியத்தில் தான் என் பிள்ளைகளை வளர்க்கிறேன். என்னை எங்கேயோ ஊருக்கு வெளியில் குடியமர்த்தினால் நான் அங்குபோய் என்ன வேலை செய்வேன்" என்று கேள்வி எழுப்பும் பெண்களை நாம் பார்த்திருப்போம். அதுபோன்ற முறைசாரா தொழில்கள் பலவற்றில் உள்ள பெண்களின் குரலாகவே குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜோஸி விட்மர் தனது ஆய்வுக் கட்டுரையில் பல விஷயங்களை முன்வைக்கிறார்.

ந்தியாவில் தேசிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் ரயில் மேம்பாலங்கள், நகர கண்காணிப்பு, தூய்மை மேம்பாடு ஆகியனவற்றில் கவனம் செலுத்துகின்றன.ஆனால், இவை அரசியல் ரீதியாக நடுநிலையானதாக, அனைவருக்கும் பலன் அளிக்கக் கூடியதாக இருக்கிறதா என்பதே கேள்வி. பணக்கார மக்களுக்கும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் வறுமைக் கோட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் பறிக்கின்றன என்ற உண்மை காணப்படுவதில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப புரட்சிகள் சமூக, அரசியல் சமத்துவத்தை நிலைநாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதனால் பாலின, சாதிய, இன, வர்க்க வேற்பாடுகள் இன்னுமே ஆழமாவதாகக் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக இந்தியப் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் குப்பை மறுசுழற்சிக்கு உதவும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் அவர்கள் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூய்மை நகரத்தில் ஓர் அசுத்த பணி: அகமதாபாத் நகரம்... இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்ற அடையாளம் கொண்ட நகரம். ’குப்பைக்காரிகள்’ என்று ஏளனமாக அழைக்கப்படும் குப்பை மறுசுழற்சிக்கு உதவும் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு உள்ளனர். அவர்கள் காகிதம், கார்டுபோர்டு, பிளாஸ்டிக், இரும்பு உள்ளிட்ட உலோகப் பொருட்களை சேகரித்து எடைக்கு விற்பனை செய்வார்கள். அதன்மூலம் அன்றாடம் ரூ.50 முதல் ரூ.150 வரை சம்பாதிப்பார்கள். இவரைப் போன்றோர் தங்களையும் அறியாமலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க உதவிவிடுகின்றனர். இதைக் குப்பை மேலாண்மைப் பணியில் இருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக செய்யத் தவறுவதால்தான் குப்பை மலைகளில் இவர்களின் வாழ்வாதாரம் இன்னும் சுழல்கிறது. ஆனால், இவ்வாறு குப்பைகளை சேகரிக்கும் இவர்களுக்கு சரும வியாதி தொடங்கி நுரையீரல் தொற்றுவரை பல அபாயகரமான உடல்நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாலினம், சாதி, ஏழ்மையால் அவர்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து சந்தித்து தங்களையே அவர்கள் அசுத்தமானவர்கள், 'தீண்டத்தகாதவர்கள்' என்று எண்ணும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குப்பை மேலாண்மை பிரச்சினை பெருந்தொற்றுக்கு முன்னரே கவனம் பெற்றிருந்தது. நகர்ப்புறத் தூய்மை என்பது மிகப்பெரிய சமூக, அரசியல் அழுத்தமானது. ஸ்வச் பாரத் அபியான் மூலம் உலகத் தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கதல் உருவாகியிருந்தது.

இந்தச் சூழலில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சிகள் பெருகின. பொதுத்துறை, தனியார் துறை பங்களிப்போடு நகர்ப்புற சுத்தத்தை உறுதி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குப்பை அகற்றும் இயந்திரங்களுடன் கூடிய வாகனங்கள் மூலம் குப்பை சேகரித்தல், ஐபிஎஸ் மூலம் குப்பை அகற்றம் கண்காணித்தல் ஆகிய வரிசைகட்டி வந்தன.

பெண்களுக்குப் பதிலாக ஆண்கள்: அகமதாபாத்தில் குப்பை மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியின்போது, ஸ்மாட் சிட்டி திட்டங்களால் திடக்கழிவு மேலாண்மை நவீனமயமாக்கப்பட்ட பின்னர் அங்கு பெண்களுக்குப் பதில் ஆண்களே அதிகளவில் வேலை சேர்க்கப்பட்டதாக அத்தொழிலில் முறை சாராமல் ஈடுபட்டிருந்த பெண்கள் தெரிவித்தனர்.

திடக்கழிவு மேலாண்மையில் நவீன உபகரணங்களும், அதிகளவில் ஆண் தொழிலாளர்களும் பயன்படுத்தப்படுவதால் வீட்டு வேலை முடித்து பெண்கள் குப்பை பொறுக்க கிளம்பும் முன்னரே முந்தைய நாள் இரவே அதை நிறுவனங்களும், அதில் உள்ள ஆண் தொழிலாளர்களும் செய்து முடித்துவிடுகின்றனர். இதனால் ஸ்க்ராப் எனப்படும் கழிவுப் பொருட்களை தேடி குப்பை மேடுகள் வரை பெண்கள் செல்கின்றனர். அங்கேயும் சரிவர கிடைக்காததால் அவர்கள் மன ரீதியாகவும், வருமானம் ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.

மார்ச் 2020-ல் இந்தியாவில் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது குப்பைகளை அகற்ற புதிய ஒப்பந்ததாரர்கள், குப்பை அகற்றும் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில் குப்பை சேகரிக்கும் பெண்கள் வீட்டில் வருவாய் இன்றி தவிக்க நேர்ந்தது.

மாற்று வழி என்ன? அகமதாபாத் நகரில் பெருந்தொற்றுக்குப் பின்னர் குப்பை அகற்றுதல் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் ஸ்மார்ட் வேஸ்ட் பின்கள் வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் குடிசைப் பகுதிகளை சீரமைப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள்தான் குப்பை அகற்றும் பெண்களின் வாழ்வாதாரமும், வாழ்விடமும். கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது மேலோங்கிய நிலையில் குப்பைகளில் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை சாதியைத் தாண்டி, சுகாதாரம் எனும் பெயரிலும் நீண்டிருக்கிறது.

கரோனா பெருந்தொற்று நம் சமூகத்தில், பல்வேறு அமைப்புகளில் புரையோடிப் போயுள்ள சாதிய, பாலின இன்னும் பல பாகுபாடுகளை தெளிவாகக் காட்டியுள்ளது. ஆகையால் நகர்ப்புற மேம்பாட்டில் இன்னும் சமத்துவமான அனைவருக்குமான நீடித்த வளர்ச்சி வேண்டும்.

இந்த மாற்றத்தை, புதிய கட்டமைப்புக்கான வளர்ச்சியை சற்றே மறுவடிவம் செய்ய வேண்டும். எந்த நகரம் ஸ்மார்ட் நகரமாக மாற்றப்பட இருக்கிறதோ அங்கே வாழும், வேலை செய்யும் எளிய சாமானிய மக்களின் அன்றாட பழக்கவழக்கங்கள், தேவைகளை ஆராய்ந்து அவற்றிற்கு ஈடுசெய்யும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டு நகர்ப்புற மேம்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்

தமிழில்: பாரதி ஆனந்த்



Read in source website