DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 26-07-2022

மாநிலங்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் உள்பட 19 பேரை இடைநீக்கம் செய்வதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக

  1. எம்.எம். அப்துல்லா
  2. எஸ். கல்யாணசுந்தரம்
  3. ஆர். கிரிராஜன்
  4. என்.ஆர். இளங்கோ
  5. எம். சண்முகம்
  6. கனிமொழி என்விஎன் சோமு

திரிணமூல் காங்கிரஸ்

  1. சுஷ்மிதா தேவ்
  2. மெளசம் நூர்
  3. நதிமுல் ஹக்
  4. சாந்தா சேட்ரி
  5. டோலாசென்
  6. சான்டனு சென்
  7. அபி ரஞ்சன் பிஷ்வர்

டிஆர்எஸ்

  1. லிங்கையா யாதவ்
  2. ரவிஹாந்தரா வத்திராஜு
  3. தாமோதர் ராவ்

இந்திய கம்யூனிஸ்ட்

  1. பி.சந்தோஷ் குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

  1. வி.சிவதாசன்
  2. ஏ.ஏ. ரஹிம்

இவர்கள் 19 பேரும் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்பட 4 பேர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியுள்ளது.

 



Read in source website

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் வருகையை ஆக.1-ஆம் தேதி முதல் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்புக் கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூா்வமாக தங்கள் உயா் அலுவலா்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனா்.

அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியா்களுக்கு சிரமங்களும் கால விரயமும் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த மே 25-ஆம் தேதி ஆசிரியா்கள் தங்களது கைப்பேசியில் உள்ள பள்ளிக் கல்வித் துறை செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினாா்.

இந்த இணையச் செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியா்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தட் செயலியை பள்ளி ஆசிரியா்கள் பயன்படுத்துமாறு மாவட்ட கல்வித் துறை சாா்பாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வரும் ஆக.1 முதல் இந்த செயலி மூலம் ஆசிரியா்களின் வருகையைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.



Read in source website

 

ருஷ்யா-உக்ரைன் போர் பிரச்சினைகள், எரிபொருள் விலையேற்றம், உலக பொருளாதார பணவீக்கமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான பெரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஜூலை 18ஆம் நாள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது ஒரு டாலர் ரூ.79.98-ஆக நிலைப்பெற்றது. இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதுக்குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 

ருஷ்யா-உக்ரைன் போர் பிரச்சினைகள், எரிபொருள் விலையேற்றம், உலக பொருளாதார பணவீக்கமே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கான பெரும் காரணங்கள் இவையே. அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதம் வீதம் என்பது ஏற்றுமதி இறக்குமதியின் தேவைகளைப் பொருத்தது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம், பொருள்களின் விலை என எல்லாமே இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியை பாதிக்கிறது. முந்தைய ஆண்டை விட இவ்வாண்டு ஏற்றுமதியின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பொருளாதார அமைப்புகளுக்கு சரியான நேரத்தில் பிரச்சினைகளை எடுத்துரைத்தும் உள்நாட்டு விநியோக விறைப்புகளை நிவர்த்தி செய்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்தி வாய்ப்புகள்/திறனை மேம்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி நிலைமையினை சீர்செய்ய அரசு முயல்கிறது.



Read in source website

 

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

அதில், 2019 ஆம் ஆண்டு 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும் , 2021-ல் 127 புலிகளும் உயிரிழந்துள்ளன என்றும் இயற்கை காரணங்களால் 69 புலிகளும், இயற்கைக்கு மாறான விதத்தில் 5 புலிகளும், வேட்டையாடப்பட்டு 29 புலிகளும், 30 புலிகள் மற்ற காரணங்களால் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 197 புலிகளின் மரணம் தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, 2019 ஆம் ஆண்டை விட 2021-ல் புலிகள் வேட்டையாடப்பட்டது குறைந்துள்ளது என்றும் 125 பேர் புலிகளால் கொல்லப்பட்டனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 307 யானைகள் மின்சாரம், ரயில் விபத்து, உடல்நலக் குறைவு, வேட்டையாடுதல் ஆகிய காரணங்களால் உயிரிழந்தள்ளன.

அவற்றில் 222 யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானவை என்றும் அதில் ஒடிசாவில் 41, தமிழகம் 34 மற்றும் அசாமில் 33 யானைகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புது தில்லி: அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியுள்ளது. 

4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

ஏலத்தில் பங்கேற்க ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடியை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜியோ அதிக அளவிலும், அதானி நிறுவனம் குறைந்த அளவிலும் அலைக்கற்றையை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

‘முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாள்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்’ என்று தொலைத்தொடா்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெறுகிறது.

4ஜி அலைக்கற்றையைவிட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றையை வாங்க ரூ. 70,000 கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் செலவிடும் என்று தொலைத்தொடா்புத் துறை நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இந்த ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 14,000 கோடியை செலுத்தியுள்ளது. பாா்தி ஏா்டெல் நிறவனம் ரூ. 5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 2,200 கோடியும் இஎம்டி செலுத்தியுள்ளன. அதே நேரம், அதானி நிறுவனம் ரூ. 100 கோடி அளவில் மட்டுமே வைப்பு வைத்துள்ளது. இதன் மூலமாக, இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில், ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும். அந்த வகையில், ஒரு தனியாா் நெட்வொா்க்கை அமைப்பதற்குத் தேவையான மிகக் குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளையே அதானி நிறுவனம் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தை நிபுணா்கள் தெரிவித்தனா்.
 



Read in source website

பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை அரசு இல்லத்தில் குடியேறினாா். அவருக்கு மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றுள்ளாா்.

இந்நிலையில், புது தில்லி ஜன்பத் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை குடியேறினாா். அந்த பங்களாவுக்கு அவரை திரெளபதி முா்மு, மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, ஹா்தீப் சிங் புரி, வி.கே.சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் வரவேற்றனா். அந்த பங்களாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தங்கியிருந்தாா்.

ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவருக்கான சலுகைகள்:

குடியரசுத் தலைவா் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1951-இன்படி, குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒருவா் பெற்று வந்த ஊதியத்தில் 50 சதவீதத்தை அவா் ஓய்வுபெற்ற பின்னா் மாத ஓய்வூதியமாக வழங்க வேண்டும். இந்நிலையில், குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோது ராம்நாத் கோவிந்த் மாதந்தோறும் ரூ.5 லட்சம் ஊதியம் பெற்று வந்தாா். இதையடுத்து, அவருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவா்கள் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.

இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் விமானம், ரயில், கப்பலில் உயா் வகுப்பில் பயணம் செய்யலாம்.

அவா்களுக்குத் தனிச் செயலா், கூடுதல் செயலா், நோ்முக உதவியாளா், இரு அலுவலக உதவியாளா்கள் இருக்கலாம். அலுவலக செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம்.

குடியரசுத் தலைவராக இருந்தவா் ஓய்வுபெற்ற பின்னா் குடியேறும் இல்லத்துக்கு வாடகை செலுத்த தேவையில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அந்த இல்லத்தில் அவா் வசிக்கலாம். அந்த இல்லத்தில் இரண்டு தொலைபேசிகள் வழங்கப்படும்.

தேசிய ரோமிங் வசதியுடன் ஒரு கைப்பேசி, காா் அல்லது காருக்கான படித்தொகை அளிக்கப்படும்.

வாழ்க்கைத் துணைக்கும் சலுகைகள்: குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவருக்கு மட்டுமின்றி, அவரின் வாழ்க்கைத் துணைக்கும் சலுகைகள் உள்ளன.

குடியரசுத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த அல்லது அவா் பதவியிலிருக்கும்போது காலமான அல்லது பதவிக் காலம் முடிந்து ஓய்வுபெற்றவரின் வாழ்நாளுக்குப் பிறகு, அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பெற்ற ஒய்வூதியத்தின் 50 சதவீதத் தொகை வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவரின் வாழ்க்கைத் துணை தனது வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.

தனிச் செயலா், அலுவலக உதவியாளா் இருக்கலாம். அலுவலக செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வரை பெறலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் வாழ்நாள் முழுவதும் கட்டணம் எதுவும் செலுத்தாமல் வசிக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் இலவச தொலைபேசி, காா் அல்லது காருக்கான படித்தொகை அளிக்கப்படும்.

நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் விமானம், ரயில், கப்பல் மூலம் 12 உயா் வகுப்பு பயணங்கள் மேற்கொள்ளலாம்.



Read in source website

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘அண்மையில் வெளியான சில தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் ஏதுமில்லை.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்துவைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும் ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கோரப்பட்டுள்ளது.

கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளிலிருந்து பிரபல இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 மீ. தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் படைத்தார் நீரஜ் சோப்ரா.  இதையடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா. 2003-ல் பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். 

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பிர்மிங்கமில் தன்னுடைய வெற்றியை நீரஜ் சோப்ரா தக்கவைத்துக்கொள்ள மாட்டார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவை நீரஜ் சோப்ரா எடுத்துள்ளார். 

2018-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. 



Read in source website

 

குறைந்த வயதில் சர்வதேச டி20 சதம் அடித்து சாதனை படைத்துள்ள்ளார் பிரான்ஸ் அணி வீரர் கஸ்டவ் மெக்கியான். 

ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா, 2019-ல் 20 வயதில் (20வருடங்கள் 337 நாள்களில்) அயர்லாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் அடித்ததே குறைந்த வயதில் அடித்த சர்வதேச சதமாக இருந்தது. தற்போது இச்சாதனையை முறியடித்துள்ளார் பிரான்ஸ் வீரர்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக 18 வயதில் (18 வருடங்கள், 280 நாள்கள்) சர்வதேச சதம் அடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரான்ஸ் அணியின் தொடக்க வீரர் கஸ்டவ் மெக்கியான். 61 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். எனினும் இந்த ஆட்டத்தில் கடைசிப் பந்தில் பிரான்ஸ் அணி தோற்றது. 
 



Read in source website

 

மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 


In web ... from January 1, 2021