DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 25-04-2022

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் வகையில், சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கொண்டு வந்த சட்ட மசோதா விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.

குஜராத், ஆந்திரம், தெலங்கானாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசுகளே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்ற புஞ்சி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த ஆணைய பரிந்துரையை ஏற்று, பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி மாநில ஆளுநருக்கு பதிலாக ஆளும் அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் இனி என்ன நடக்கும்?

இந்தப் புதிய சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இதுவரை ஒரு பல்கலைக்கழகத்துக்கு, தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூன்றில் ஒருவரை  மாநில ஆளுநர், துணைவேந்தராக தேர்வு செய்யும் நடைமுறை இருக்காது.

அதற்கு பதிலாக, தேர்வுக்குழு பரிந்துரை மீது தமிழக அரசே முடிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் என்று கூறப்படுகிறது.
 



Read in source website

பெரிய கோயில்களின் உபரி நிதியை சிறிய கோயில்களின் திருப்பணிக்காக பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான திருக்கோயில்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 35,000 திருக்கோயில்களின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகும். 12,959 திருக்கோயில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்த போதிய வருவாய் இல்லாததால் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களில் பெரும்பாலானவை தனித்துவமான கட்டடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், அந்த திருக்கோயில்களில் போதிய வருவாய் இன்மையால் உரிய பராமரிப்பின்றி  சிதிலமடைந்துள்ளன.

நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் உபரி நிதியை, திருப்பணிக்காக நிதியுதவி தேவைப்படும் பிற திருக்கோயில்களுக்கு மானியமாக வழங்கினால் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களை புனரமைத்து, திருப்பணி முடித்து குடமுழுக்கு செய்ய இயலும். எனவே, போதிய வருவாய் இல்லாத திருக்கோயில்களை நிதிவசதிமிக்க திருக்கோயில்களிலிருந்து  மானியம் பெற்று புனரமைத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து இணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் தங்கள் மண்டலத்தில், சரகத்தில் உடனடியாக ஆய்வு செய்து நிதி உதவி தேவைப்படும் திருக்கோயில்களின் பட்டியலை தயாா் செய்ய வேண்டும்.

நிதி உதவி அளிக்கக்கூடிய அளவில் உபரி நிதி உள்ள திருக்கோயில்களின் பட்டியலை, நிதி வசதியற்ற திருக்கோயில்களின் நிா்வாகிகளுக்கு வழங்க வேண்டும். நிதி உதவி தேவைப்படும் திருக்கோயில்களின் நிா்வாகிகள் திருப்பணிகளுக்கான விரிவான மதிப்பீடுகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தயாா் செய்து, அதனடிப்படையில் தேவைப்படும் நிதியை மானியமாக வழங்கக் கோரி நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் நிா்வாகிகளுக்கு எழுத்துபூா்வமாக மனு அளிக்க வேண்டும்.

நிா்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியின் அடிப்படையில் விதிகளைப் பின்பற்றி திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து சாா்பு  நிலை அலுவலா்களுக்கும், இந்த அறிக்கையை பின்பற்றுமாறு திருக்கோயில் நிா்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்கள்கிழமை முடக்கியுள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

“நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் மதநல்லிணக்கம் குறித்து தவறான தகவல்கள், உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

இதில், பாகிஸ்தானை சேர்ந்த 6 செய்திச் சேனல்களும் அடங்கும். இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 68 கோடி ஆகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் 22 யூடியூப் சேனல்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சண்டிகர்: சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக சிறப்பு இணையதளம் ஒன்றை பஞ்சாப் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையதளத்தில், புகார்தாரர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்காமலேயே புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையாளர் வி.கே. பாவ்ரா தெரிவித்துள்ளார்.

சைபர் குற்றங்கள் அல்லது ஆன்லைன் மோசடி என அனைத்து விதமான ஆன்லைன் குற்றங்களையும் இங்கே புகாராகப் பதிவு செய்யலாம், தங்களது புகார் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புகார்தாரர் இந்த இணையதளம் வழியாக கண்காணிக்கவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் எவ்வாறு புகாரளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

 

முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மாதவ் கோட்போலே மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவருக்கு வயது 85. 

கடந்த மார்ச் 1993இல் இந்திய நிர்வாகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முன்பு, காட்போல் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றினார்.

அவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் செயலாளராகவும், மகாராஷ்டிர அரசின் முதன்மை நிதிச் செயலாளராகவும் பணியாற்றினார்.

காட்போல் கொள்கை முடிவுகள் குறித்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 

அவர், மனைவி சுஜாதா, மகன் ராகுல், மகள் மீரா ஆகியோருடன் வசித்து வந்தார். 
 



Read in source website

கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், ஹெச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த 2011-12 -ஆம் ஆண்டில் பாதுகாப்பற்ற உடலுறவு முறை காரணமாக ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக இருந்த நிலையில், 2020-21-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 85,268-ஆக குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சந்திர சேகா் கெளா் என்பவா் ஆா்டிஐ-இன் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த தகவல்களில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 2011 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 17,08,777 போ் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் காலகட்டத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 3,18,814 போ் பாதிக்கப்பட்டனா். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 2,84,577 பேரும், கா்நாடகத்தில் 2,12,982 பேரும், தமிழகத்தில் 1,16,536 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,10,911 பேரும், குஜராத் மாநிலத்தில் 87,440 பேரும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் ரத்த தொடா்பு மூலமாக 15,782 பேரும், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் தன்மை மூலமாக 4,423 பேரும் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உள்பட 23,18,737 போ் ஹெச்ஐவி தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனா். இருந்தபோதும், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் சதீஷ் கெளல் கூறுகையில், ‘ஹெச்ஐவி பாதிப்பை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை இல்லை. இருந்தபோதும், முறையான மருத்துவ பராமரிப்பு மூலம் அவா்களுக்கான பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும். அதே நேரம், கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

தற்போது, கரோனா பாதிப்பு நம்மை கடந்துவிட்ட நிலையில், ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் கூடிய விரைவில் ஏஆா்டி (ஆன்டிரெட்ரோவைரல்) என்ற நோய் எதிா்ப்புத் திறனை ஊக்குவிக்கும் சிகிச்சையை தொடங்க வேண்டும்’ என்றாா்.



Read in source website

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை உயா்த்துவது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

143 பொருள்களின் சரக்கு-சேவை வரி உயா்த்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.

சரக்கு-சேவை வரியானது 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய விகிதங்களில் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டு வருகிறது. வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய்வதற்காக கா்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் பல மாநிலங்களின் நிதியமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்.

அந்தக் குழு பல்வேறு பொருள்களின் வரி விகிதங்களை மாற்றியமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாகவோ உயா்த்துவது குறித்தோ மாநில அரசுகளிடம் கருத்து கோரப்படவில்லை. வரி விகிதங்களை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய்ந்து வரும் மாநில அமைச்சா்கள் அடங்கிய குழுவானது இன்னும் அறிக்கையை சமா்ப்பிக்கவில்லை’’ என்றாா்.



Read in source website

மருத்துவ சேவை பெறுவது அடிப்படை மனித உரிமை என்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காணொலி வாயிலான தொலைத்தொடா்பு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்கவுள்ளது. இந்த மையம் மூலம் மீனாட்சி மருத்துவமனையின் 45 விதமான சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த மருத்துவா்களிடம் நோயாளிகள் நேரடியாக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற முடியும்.

இந்த மையத்தை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது:

கரோனா பரவலுக்குப் பிறகு கணினிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. நீதிமன்றங்கள்கூட காணொலி வழியாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் கிழக்கில் உள்ள இதர மாநிலங்களைச் சோ்ந்த நோயாளிகள் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெற தென்னிந்தியாவுக்குச் செல்கின்றனா். புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தில் கணினி வாயிலாக மருத்துவ சேவை அளிக்கப்படவுள்ளது, நோயாளிகள் தென்னிந்தியாவுக்குப் பயணிக்கும் சிக்கலை குறிப்பிட்ட அளவு குறைக்கும். மருத்துவ சேவை பெறுவது அனைவரின் அடிப்படை மனித உரிமை என்றாா் அவா்.



Read in source website

இணையவழியில் நாள்தோறும் சுமாா் ரூ.20,000 கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டு வருவதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தனது மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

பாபாசாஹேப் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முன்னாள் பிரதமா்களுக்கான அருங்காட்சியகம் தில்லியில் திறந்துவைக்கப்பட்டது. அவா்கள் குறித்த அரிய தகவல்களும், அவா்கள் பயன்படுத்திய பொருள்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. நாட்டின் வரலாறு குறித்து அறிந்துகொள்ளவும் அந்த அருங்காட்சியகம் உதவும். மகாத்மா காந்தியடிகள், சா்தாா் வல்லபபாய் படேல், அம்பேத்கா், ஜெய்பிரகாஷ் நாராயண், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆகியோா் குறித்த தகவல்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. நாட்டின் வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கு மக்கள் அதிக ஆா்வம்காட்டி வருகின்றனா். இந்நிலையில், முன்னாள் பிரதமா்களின் அருங்காட்சியகமானது இளைஞா்களைக் கவரும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. பழங்காலப் பொருள்களைப் பலா் அருங்காட்சியகங்களுக்கு அளித்து வருகின்றனா். இதன்மூலமாக நாட்டின் பாரம்பரியத்தைப் பலருக்குத் தெரியச் செய்வதை அவா்கள் ஊக்குவித்து வருகின்றனா். உலக அருங்காட்சியக தினம் மே 18-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. அன்று மக்கள் உள்ளூரில் உள்ள அருங்காட்சியகத்துக்குச் சென்று அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிா்ந்து கொள்ள வேண்டும்.

எளிமையாகும் வாழ்க்கை: தற்காலத்தில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சாலையோர உணவுக் கடைகளில்கூட இணையவழி பணப் பரிவா்த்தனை வசதிகள் காணப்படுகின்றன. தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தகைய வசதிகள் சென்றடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பீம் யுபிஐ வாயிலாகப் பணப் பரிவா்த்தனை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

நாட்டில் எண்ம (டிஜிட்டல்) பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மக்களின் வாழ்க்கையை இணையவழிப் பணப் பரிவா்த்தனை வசதிகள் எளிமைப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டியதற்கான அவசியம் குறைந்துள்ளது.

தற்போதைய சூழலில் நாட்டில் நாள்தோறும் சுமாா் ரூ.20,000 கோடி அளவுக்கு இணையவழி பணப் பரிவா்த்தனை நடைபெறுகிறது. கடந்த மாா்ச்சில் மட்டும் யுபிஐ வாயிலாக சுமாா் ரூ.10 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டது. நாட்டில் நிதிசாா் தொழில்முனைவு நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

எண்ம கலைக்கூடம்: தொழில்நுட்ப வசதிகளானது மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தியுள்ளன. முக்கியமாக, மாற்றுத் திறனாளிகளுக்குத் தொழில்நுட்ப வசதிகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளையாட்டு, கலை, படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவா்கள் முன்னேறி வருகின்றனா். மாற்றுத்திறனாளி கலைஞா்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் எண்ம கலைக்கூடத்தை ‘வாய்ஸ் ஆஃப் ஸ்பெசலி ஏபிள்டு’ என்ற அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில் மாற்றுத்திறனாளி கலைஞா்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீா் சேகரிப்பு அவசியம்: நாட்டில் கோடை வெப்பம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பமானது, தண்ணீரைச் சேகரிப்பதற்கான பொறுப்பை மக்களுக்கு உணா்த்தி வருகிறது. நாட்டில் தண்ணீா்த் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் பலா் வாழ்ந்து வருகின்றனா். அவா்களைக் கருத்தில்கொண்டு நீரைச் சேகரிப்பதற்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீா்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்தந்த ஊரில் உள்ள இளைஞா்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள பத்வாய் கிராமத்தில் உள்ளூா் மக்கள் இணைந்து குப்பைகள் நிறைந்து காணப்பட்ட ஏரியைத் தூய்மைப்படுத்தியுள்ளனா். ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளிச் சிறாா்களும் முன்னின்றுள்ளனா். தற்போது ஏரிக் கரைகளில் அலங்கார விளக்குகள் நிறுவப்பட்டு உணவுக் கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளா்ச்சியைத் துரிதப்படுத்துவதில் நீருக்குப் பெரும் பங்குள்ளது. எனவே, நீா் சேகரிப்புக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட்டம்: ரமலான், அக்ஷய திரிதியை, புத்த பூா்ணிமா உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்டவற்றை மக்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

வினாக்களும் விடைகளும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின்போது நாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள் சாா்ந்த சில வினாக்களையும் பிரதமா் மோடி எழுப்பினாா். அந்த வினாக்களுக்கான விடைகளை நமோ செயலியின் மூலமாகவோ சமூக வலைதளத்திலோ தெரிவிக்கலாம் என்றும் அவா் கூறினாா்.

கணிதத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதில் இந்தியா்கள் எவ்வாறு சிறந்து விளங்கினா் என்பது குறித்தும் பிரதமா் மோடி பேசினாா்.



Read in source website

ஜொ்மனியில் நடைபெற்ற ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

உலகின் நம்பா் 1 வீராங்கனையான அவா், இறுதிச்சுற்றில் 6-2, 6-2 என்ற நோ் செட்களில் பெலாரஸின் அரினா சபலென்காவை தோற்கடித்தாா். இப்போட்டியில் முதல் முறையாக களம் கண்டபோதே சாம்பியன் ஆகி அசத்தியிருக்கிறாா் ஸ்வியாடெக்.

மேலும் இது, நடப்பு காலண்டரில் தொடா்ந்து அவா் வென்ற 4-ஆவது பட்டமாகும். இதற்கு முன் தோஹா, இண்டியன் வெல்ஸ், மியாமியில் நடைபெற்ற டபிள்யூடிஏ போட்டிகளிலும் அவா் சாம்பியன் ஆகியிருந்தாா்.

மறுபுறம், இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் நெதா்லாந்தின் டெமி ஷுா்ஸ்/அமெரிக்காவின் டெஸைரே கிராவ்ஸிக் இணை 6-3, 6-4 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாய், அமெரிக்காவின் கோகோ கௌஃப் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.



Read in source website


பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் ஆவார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபா் தோ்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாவா். அதிபரின் பதிவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில்,  கடந்த 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் மரீன் லெபென் உள்ளிட்ட 12 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தோ்தலில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீன் லெபென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

அந்நாட்டு சட்டப்படி அதிபராக தோ்வு செய்யப்படுபவா் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய அதிபா் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, காரைக்காலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையங்களில் பிரஞ்சு குடியுரிமை பெற்றவா்கள் வாக்களித்தனா். காரைக்கால் பிரெஞ்சுக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்தில் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்கள் தங்களது பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை ஆவணத்தைக் காட்டி வாக்களித்தனா். 

வாக்குப் பதிவு முடிந்ததும் காரைக்காலிலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குகள் எண்ணப்பட்டு, பிரெஞ்சு தூதரகத்துக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. 

வாக்குப் பதிவு முடிவில் மேக்ரான் சுமாா் 58 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக இமானுவல் மேக்ரான் தோ்வு செய்யப்பட்டார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரான் ஆவார். 44 வயதான அதிபர் இமானுவல் மக்ரானுக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரான்சை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.  

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலிலும் இவா்கள் இருவருக்கு இடையேதான் போட்டி நிலவியது. அப்போது மேக்ரான் 66.1 சதவீத வாக்குகளும், லெபென் 33.9 சதவீத வாக்குகளும் பெற்றனா். தற்போது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் லெபென் தோல்வி அடைந்திருப்பது பிரான்சில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தீவிர வலதுசாரிகள் நெருங்கிவிட்டதையே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறைவாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சீனா கரோனா திடீா் தீவிரம்: உஷாா் நிலையில் பெய்ஜிங்



Read in source website

நாட்டில் கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு இருமடங்கு அதாவது 119.2 பில்லியன் டாலா் (ரூ.9.11 லட்சம் கோடி) வரை அதிகரித்ததாக எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உலகின் 3-ஆவது மிகப்பெரிய எண்ணெய் நுகா்வு, இறக்குமதி நாடான இந்தியா கடந்த 2021-22 நிதியாண்டில் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.119.2 பில்லியன் டாலா் செலவிட்டுள்ளது. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் 62.2 பில்லியன் டாலராக (ரூ.4.76 லட்சம் கோடி) இருந்தது. மேலும், கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயா்ந்ததால், 13.7 பில்லியன் டாலா் (ரூ.1.05 லட்சம் கோடி) செலவிட நேரிட்டதாக பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியிலிருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த மாதங்களில் பேரலுக்கு 100 டாலரை கடந்து கடந்த மாா்ச் மாதம் 140 டாலரை எட்டியது. அதன்பின்னா் எண்ணெய் விலை சற்று இறக்கத்தைச் சந்தித்து தற்போது பேரலுக்கு 106 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பெட்ரோலிய திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

2021-22 நிதியாண்டில் இந்தியா 212.2 மில்லியன் டன் (21.22 கோடி) கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. முந்தைய நிதியாண்டில் 196.5 மில்லியன் டன் (19.6 கோடி) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும் 2021-22 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு கரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும். அதாவது, 2019-20-இல் 227 மில்லியன் டன் (22.7 கோடி) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, இறக்குமதிக்கென 101.4 பில்லியன் டாலா் (ரூ.7.75 லட்சம் கோடி) செலவிடப்பட்டது.

2021-22 நிதியாண்டில் 24.2 பில்லியன் டாலா் (ரூ.1.85 லட்சம் கோடி) மதிப்பில் 40.2 மில்லியன் டன் (4.02 கோடி) பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மறுமுனையில், 42.3 பில்லியன் (4.23 கோடி) மதிப்பில் 61.8 மில்லியன் டன் (6.18 கோடி) பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதவிர 32 பில்லியன் கனமீட்டா் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய 11.9 பில்லியன் டாலா் (ரூ. 91 ஆயிரம் கோடி) செலவிடப்பட்டது.

2019-20-இல் இந்தியா 32.2 மில்லியன் டன் (3.22 கோடி) கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 30.5 மில்லியன் டன்னாக (3.05 கோடி) குறைந்த கச்சா எண்ணெய் உற்பத்தி, 2021-22 நிதியாண்டில் 29.7 மில்லியன் (2.97 கோடி) டன்னாக சரிந்தது. இதேபோல, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சாா்பு 2019-20-இல் 85 சதவீதமாகவும், 2020-21-இல் 84.4 சதவீதமாகவும், 2021-22-இல் 85.5 சதவீதமாகவும் பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

சென்னை: கிராமந்தோறும் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுற்றுச்சூழல், வனத்துறை மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் ஏற்படுத்துதல், மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம், சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்துதல், சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கள் புதியதாக ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 13 முக்கிய அறிவிப்புகள்:

> திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்படும்.

> கிராமந்தோறும் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும்.

தமிழக அரசு, வனத்துறையின் முயற்சியாக இந்த ஆண்டில் 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும். வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் இப்பசுமை சோலைகள் ஏற்படுத்தப்படும். இவை ஒவ்வொன்றும் சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இந்த மரகதப் பூஞ்சோலைகள் உள்ளூர் கிராமத்தின் மரம் மற்றும் ஊரக விறகுத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், நீர்நிலையை மேம்படுத்தி சூழலியல் சேவைகளை வழங்குவதோடு பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும். கிராமத்தின் பொது நலனுக்காக உள்ளூர் சமூகம் இந்த சோலைகளிலிருந்து பொதுப்பயன் உரிமைகளைப் பெற்றிருக்கும். இந்த மரகதப் பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில் ரூபாய் 25 கோடி செலவில் உருவாக்கப்படும்.

> காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் ஏற்படுத்தப்படும்.

> திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம் தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதிகளில் அமைக்கப்படும். தேவாங்கு (Slender Loris) தென்னிந்திய தீபகற்ப வாழ்விடப் பகுதிகளில் காணப்படும் அரியவகை விலங்காகும். தேவாங்கு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் (IUCN) “அழியும் விளிம்பில் உள்ள இனம்” எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. தேவாங்கு வன உயிரின சரணாலய அறிவிப்பு இந்த அரிய இனத்தின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பூர்வமான மேலாண்மைக்கு உதவும். இந்த அறிவிப்பிற்கான கணக்கெடுப்பு, மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டில் ரூபாய் 5 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும்.

> மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம்.

தமிழக அரசு வனத்துறையின் முன்னோடி முயற்சியாக கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார இரு சக்கர வாகனங்களை கொள்முதல் செய்து வழங்க உள்ளது. இந்த நடவடிக்கையானது, கரிம மாசு நிறைந்த புதை படிவ எரி பொருட்கள் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், வனப் பாதுகாப்பில் மாசற்ற மற்றும் பசுமையான ஆற்றலை மேம்படுத்துவதற்கும், வனத்துறையின் பங்களிப்பை வலுப்படுத்தும். இந்த முயற்சி ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், “காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமைத்திட்டம்” மூலம் மேற்கொள்ளப்படும்.

> நீலக்கரிம உள்ளிருப்புக்கான முன்னெடுப்புகள் - அலையாத்தி காடுகள் மற்றும் பவளப்பாறைகள் பாதுகாப்பு

> சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.

> அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

> சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட சூழல் சுற்றுலா பகுதிகள் உள்ளூர் சமூக பங்களிப்புடன் வனத்துறை
மூலம் செயல்படுத்தப்படும்.

  • நீலகிரி மாவட்டம்,கேத்தரின் அருவி
  • திண்டுக்கல் மாவட்டம் தலைக்குத்து அருவி, பரப்பலாறு அருவி.
  • குரும்பப்பட்டி-ஏற்காடு.
  • ஐயூர்-தேன்கனிக்கோட்டை-ஒக்கேனக்கல் அருவி.
  • கொல்லிமலை - ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி - ஏலகிரிமலை.
  • ஏலகிரி - அமிர்தி ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சி-குலர்குகை.

இச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை, நீடித்த நிலையான வகையில் மேற்கொள்ள, உள்ளூர் சமூகத்தின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், மாவட்ட நிருவாகம் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சூழல் சுற்றுலா மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் ரூபாய் 14 கோடி செலவில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், "காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமைத்திட்டம்" மூலம் மேற்கொள்ளப்படும்.

> களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை - ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும்.

> வனப்பகுதிகளில் உள்ள அந்நியகளைத்தாவர இனங்கள் அகற்றப்படும்.

> வனத்துறையின் மேலாண்மை செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.

> நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் சோலைக்காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.



Read in source website

சென்னை: 'மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி' என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூ.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம், தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் உருவாக்குதல், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பசுமை மதிப்பீடு செய்தல், கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 7 முக்கிய அறிவிப்புகள்:

> பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம்

காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது, இளைய தலைமுறையினரிடமிருந்து துவக்கப் பெறவேண்டும்.

எனவே, தமிழக முதல்வரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. இந்தப் பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் ஏனைய பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். பள்ளியின் அனைத்து மின்தேவைகளும் சூரிய
ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.

இப்பள்ளிகளானது பசுமைப் பள்ளிக்கான முன்னோடி பள்ளிகளாக விளங்கி மற்ற பள்ளிகளும் பசுமைப் பணிகளை மேற்கொள்ள ஊக்கமாக அமையும். மேலும், இந்தப் பள்ளிகள் பசுமை திட்டங்கள் தொடர்பான தகவல் திரட்டை உருவாக்குவதற்காக பசுமை அட்டவணையில் மதிப்பீடு செய்யப்படும். மேற்கூறிய திட்டத்திற்காக தமிழக அரசால் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு செலவிடப்படும்.

> தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்.

தமிழகம் போன்ற கடலோர மாநிலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதும், அவற்றின் பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் போது, தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, மொத்தம் ரூ.500 கோடி செலவில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான அலகு ஒன்று மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படும்.

இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் ஒருங்கிணைப்பாளராக இருப்பதோடு, காலநிலை மாற்ற அலுவலராகவும் செயல்படுவார். மேற்கூறிய திட்டத்திற்காக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமையால் ரூ. 3.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

> மீண்டும் "மஞ்சப்பை" எக்ஸ்பிரஸ்

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தி, அடிமட்ட அளவுக்கு கொண்டு செல்வதற்காக 'மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி' என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூபாய் 13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இந்த மீண்டும் மஞ்சப்பை' எக்ஸ்பிரஸ் ரயில் நடமாடும் கண்காட்சியில், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றான சூழலியல் மாற்றுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் மற்றும் செய்தியை பரப்ப இணைய வழி மூலம் கண்காட்சிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இந்த சிறப்பு ரயில் கண்காட்சியானது இந்திய தொடர் வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) இணைந்து தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும். பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இந்தக் கண்காட்சி உபயோகமானதாக அமையும்.

> தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பசுமை மதிப்பீடு செய்தல்.

இந்தியாவில் தமிழகம் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்துள்ளது. பசுமை மதிப்பீடு மூலம் தொழில் துறைகளில் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையை மதிப்பிடுவதன் மூலமாக தொழில்துறை செயல்பாடுகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள் சிறந்த பசுமை இலக்குகளை அடைவதற்காக, ஒரு குறியீட்டு அடிப்படையிலான மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

இதற்காக தமிழக அரசு, தொழில் துறைமற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து ஒரு குறியீட்டு வழிமுறையை உருவாக்கும். தேசிய மற்றும் சர்வதேச நடைமுறைகளை ஆய்வு செய்து தொழிலகங்களுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்ட பிறகு, இதற்கான செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தூய்மையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரும்பும் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதும் மற்றும் பசுமை மேம்பாட்டிற்கான நெறிமுறைகளை உருவாக்குவதும் இந்த பசுமைக் குறியீட்டின் நோக்கமாகும்.

இத்திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூபாய் 2.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

> புதிய மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களை ஒரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் உருவாக்குதல்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நடவடிக்கைகள் மற்றும் செயல் திறனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் எழும் புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகவும், அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய ஆய்வகங்கள் ஒரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூபாய் 6 கோடி செலவில் உருவாக்கப்படும்.

> கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குதல்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகங்களின் ஒன்றான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இவ்வளாகமானது 295 ஏக்கரில் பரந்து விரிந்து காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் 3900 கடைகளைக் கொண்டுள்ளது.

இவ்வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துதல், பசுமைப் பகுதிகளை உருவாக்குதல், நிலைத்தகு உபகரணங்களை உருவாக்குதல், கார்பன் அளவை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகளை அரசு ஆய்வு செய்து அந்த சந்தை வளாகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை கொண்டு வருவதை உறுதி செய்யும்.

இத்திட்டத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை இணைந்து ரூ. 25 கோடி செலவில் செயல்படுத்தும்.

> பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்குதல்.

தமிழகத்தில் நெகிழி இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது. வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு 3 கல்லூரிகள், 3 பள்ளிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் ஏரளமானோர் சரியான வேலை கிடைக்காத சூழலில் வேலையை விட்டு விலகியுள்ளதுடன் வேலை தேடுவதையும் நிறுத்தி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகஅளவில் வேலையை விட்டு விலகும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை பல லட்சம் என்ற அளவில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்தது.



Read in source website

இந்தியா: காலநிலை மாற்றத்தால் இதுவரை மலேரியா நோய் இல்லாத நாடுகளுக்கு கூட புதிதாக மலேரியா பர வாய்ப்பு உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றம் என்பது மலேரியா நோய் பரவலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் புதுமையான முயற்சிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் பல கொடூர நோய்களுக்கு கூட இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியிவில்லை. அப்படிப்பட்ட நோய்களில் ஒரு நோய்தான் மலேரியா. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி ஒவ்வொரு ஆண்டு 241 மில்லியன் பேர் மலேரியாக நோயால் பாதிக்கப்படுகின்றனர். 6.27 லட்சம் மரணங்கள் உலக அளவில் பதிவாகி உள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மலேரியா நோயால் அதிக அளவு மரணம் அடைகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முதல் மலேரியா தடுப்பூசிக்கு கடந்த 2021-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தது. 2019-ம் ஆண்டு சோதனை முறையில் செயல்படுத்தபட்ட இந்த தடுப்பூசி கடந்த ஆண்டு பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.



Read in source website

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சலடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அம்பெர் ஃபிலாரி (Amber Fillary) நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ள இவர், இரண்டு வருடங்களுக்கு முன் நார்வேவில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

பனிக்கட்டிகளுக்கு அடியில் அவர் நீச்சல் அடிக்கும்போது துடுப்புகளையோ அல்லது டைவிங் சூட்-டையோ எதுவும் பயன்படுத்தவில்லை என்பது தான் இப்போதைய சாதனையை கூடுதல் சிறப்பு. இது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், இவர் பேட்டியளித்த போது, ”சிறு வயதில் இருந்தே நீச்சலடிப்பது மிகவும் பிடிக்கும். ஃபிக் ப்ளூ படம் பார்த்த பிறகு ஃப்ரீ டைவிங் மீது ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு தான் இதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். இப்படித்தான் தொடங்கியது என் பயணம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளேன்” என்றார். இவர் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஸ்டாக்ஹோம்: ராணுவத்துக்கான செலவுகளை மேற்கொள்வதில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது. இது, இதுவரை கண்டிராத உச்சபட்ச செலவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் ராணுவத்துகாக அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 4 மற்றும் 5-ஆம் இடங்களை முறையே பிரிட்டனும், ரஷ்யாவும் பிடித்துள்ளன. இந்த ஐந்து நாடுகளும் சேர்ந்த உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினங்களில் 68 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போதும்கூட உலகளவில் ராணுவத்திற்கான செலவு, வரலாற்று சாதனை படைத்துள்ளதாக, அந்த தனியார் ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் டியாகோ லோபெஸ் தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் பணவீக்கப் பிரச்சினையால் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்த போதும் கூட ராணுவத்திற்கான செலவு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

2020-இல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்த நிலையில், 2021-இல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாடுகள் வாரியாகப் பார்த்தால், அமெரிக்கா 2021-இல் 801 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவ மேம்பாட்டுக்காக செலவு செய்துள்ளது. அதுவும் குறிப்பாக ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு மட்டும் 24 சதவீதம் செலவு செய்துள்ளது. ஆயுத கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு 6.4 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.

சீனா இதே காலக்கட்டத்தில் 293 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளது. இது 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.7 சதவீதம் அதிகம்.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா ராணுவத்துக்கான செலவை 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா உள்நாட்டு ராணுவத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் பலப்படுத்தும் விதமாக 2021 ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 64 சதவீதத்தை உள்நாட்டு ராணுவ தயாரிப்புகளை வாங்க செலவழித்துள்ளது.



Read in source website

புது டெல்லி: உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி. இதன் மூலம் வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார் அவர்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருபவர் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி. 59 வயதான அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அண்மையில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் அதானி இணைந்தார். இந்நிலையில், தற்போது பெர்க்சயர் ஹாதவே (Berkshire Hathaway) தலைமைச் செயல் அதிகாரி வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பில்லியனர்ஸ் பட்டியலின்படி 123.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார் அதானி. அதன் மூலம் 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ள வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். வாரன் பஃபெட் நிறுவனமும் அமெரிக்க பங்குச் சந்தையில் தனது பங்குகளில் சரிவை கண்டுள்ளது இதற்கு காரணம் என தெரிகிறது.

பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.



Read in source website

வாஷிங்டன்: இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உலக வர்த்தக நிறுவன (டபிள்யூடிஓ) இயக்குநர் ஜெனரல் நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல நாடுகளில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு டபிள்யூடிஓ விதிமுறைகள் தடையாக உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதில் பிரச்சினைகள் உள்ளதாக அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஆகியவற்றின் குளிர்கால கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஐஎம்எப் கூட்டத்தில் டபிள்யூடிஓ இயக்குநர் ஜெனரல் நகோஸி ஒகோன்ஜோ இவேலா கூறியதாவது:

உணவுப்பொருள் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகளுக்கு சுமுகத் தீர்வு காணப்படும். போர்காரணமாக இந்தியா இப்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதேசமயம் உலக அளவில் போர்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது பெரும் பிரச்சினையாகும். போர் காரணமாக உணவு தானிய ஏற்றுமதி குறிப்பாக கோதுமை ஏற்றுமதி அதிகரிப்பது ஒரு சில நாடுகளுக்கு கிடைத்த வாய்ப்பு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

20 நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி

இந்தியா தற்போது 20 நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆண்டு 1.5 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டில் இந்தியாவில் தானிய உற்பத்தி உபரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 11.10 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வாஷிங்டன் சென்றிருந்த மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உலகின் பிற நாடுகளில் உணவுதானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்திய தயாரிப்புகளுக்கு உரிய சந்தையை இந்தியா அடையாளம் காண வேண்டியுள்ளது. அதேபோல தேவையுள்ள நாடுகளுக்கு உதவி புரிய வேண்டிய அவசியமும் உள்ளது.

குறிப்பாக பசியால் வாடும்நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்புவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அவ்விதம் அனுப்புவதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

IMF, 2022-23க்கான இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதத்தை கூர்மையாகக் குறைத்துள்ளது, ஆனாலும், 8.2% ஆக உள்ளது, இது மற்ற பெரிய பொருளாதாரத்தை விட மிக வேகமாக உள்ளது. இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதத்தைப் பார்க்க சரியான வழி என்ன?

ExplainSpeaking: How to read IMF’s latest GDP forecast for India: கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் இரண்டு வருடாந்திர உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் (WEO) முதல் அறிக்கையை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும், IMF இரண்டு WEO அறிக்கைகளை வெளியிடுகிறது, இவை ஒவ்வொன்றும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியாகும்; இந்த இரண்டு அறிக்கைகளின் அப்டேட்கள் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட கடைசி முழு WEO பற்றிய ExplainSpeaking இல் எழுதப்பட்டதின் சிறுகுறிப்பு இங்கே. அக்டோபர் மாதக் கண்ணோட்டத்தில், நாடுகளிடையே அதிகரித்து வரும் சமத்துவமின்மை குறித்து IMF மிகவும் கவலை கொண்டுள்ளது. முக்கியமாக, அமெரிக்கா போன்ற முன்னேறிய பொருளாதாரங்களுக்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கும் இடையே “பொருளாதார வாய்ப்புகளில் ஆபத்தான வேறுபாடு” இருப்பதை அது சுட்டிக்காட்டியது. குறிப்பாக, வேலைவாய்ப்பு வளர்ச்சியானது, உற்பத்தியை மீட்டெடுப்பதில் பின்தங்கியிருக்கும் என்று அது எடுத்துக்காட்டியது. ஏற்கனவே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது முக்கியமானதாக இருந்தது.

இம்முறை, யூகிக்கக்கூடிய வகையில், IMF இன் கவனம் உலக வளர்ச்சியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் தாக்கத்தின் மீது உள்ளது.

இந்தியாவின் குறிப்பிட்ட விஷயத்திற்கு வருவதற்கு முன், உலக வளர்ச்சிக்கு IMF என்ன முன்னறிவித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம்

IMF உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் கூர்மையான வீழ்ச்சியைக் கணித்துள்ளது. “உலகளாவிய வளர்ச்சி 2021 இல் மதிப்பிடப்பட்ட 6.1 சதவீதத்திலிருந்து 2022 மற்றும் 2023 இல் 3.6 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2022 மற்றும் 2023 இல் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை விட 0.8 மற்றும் 0.2 சதவீத புள்ளிகள் குறைவாக உள்ளது,” என்று அது கூறுகிறது. இதைவிட மோசமாக, 2023க்கு அப்பால், உலக வளர்ச்சி இன்னும் 3.3 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக வளர்ச்சியில் ஏற்படும் சரிவு இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளை குறைத்துவிடும், குறிப்பாக அது இந்திய ஏற்றுமதிக்கான தேவையை குறைக்க வழிவகுக்கும்.

மீண்டும், அக்டோபர் 2021 WEO ஐப் போலவே, IMF இந்த “வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் உற்பத்தியில் இழுபறி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, 2022 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா அதன் தொற்றுநோய்க்கு முந்தைய உற்பத்தி நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற மேம்பட்ட நாடுகளின் பொருளாதாரங்களில், தொற்றுநோய்க்கு முந்தைய போக்குடன் ஒப்பிடும்போது பற்றாக்குறை குறையும்.

சமீபத்திய WEO இலிருந்து படம் 1.17 இதை வெளிப்படுத்துகிறது. முதல் குழு உற்பத்தி இடைவெளியைக் காட்டுகிறது, அதாவது உண்மையான மற்றும் சாத்தியமான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இடையிலான வித்தியாசம். சராசரியாக இந்த இடைவெளி இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு (விளக்கப்படத்தில் IND) குறிப்பாக 2022-23க்கு அதிகமாக உள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய “போக்குடன்” ஒப்பிடும் போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பேனல்கள், ​​முறையே, 2024 இன் உற்பத்தி மற்றும் வேலை இழப்புகளை முன்னறிவிக்கின்றன. இவையும் கூட, வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒரு நாட்டின் மொத்த ஜிடிபியின் தொற்றுநோய்க்கு முந்தைய “நிலையுடன்” அல்லாமல், தொற்றுநோய்க்கு முந்தைய “போக்குடன்” ஒப்பிடுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். படம் 1.18 இதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.

அந்த படத்தில் உள்ள இடைவெளி இல்லா கோடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொற்றுநோய்க்கு முந்தைய போக்கை வரைபடமாக்குகின்றன. இடைவெளி உடைய கோடுகள் என்பது பொருளாதாரம் எவ்வாறு மீண்டு வந்தது என்பதன் அடிப்படையில் வேறுபட்ட கணிப்புகளாகும். சிவப்புக் கோடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி நீலக் கோடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை விட அதிகமாக உள்ளது. இது வளர்ந்த பொருளாதாரங்களை விட வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் எவ்வாறு மீளப் போராடுகின்றன என்பதைக் குறிக்கிறது.

ஒரு கடைசி ஆனால் முக்கியமான விஷயம் பணவீக்க அளவைப் பற்றியது, ஏனெனில் வளர்ச்சி குறைவது கவலைக்குரியது அல்ல. உக்ரைனில் போரின் சீர்குலைவு தாக்கத்தால், பல பொருட்களின் விலைகள் உயர்ந்து, பணவீக்கத்தில் பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளன.

“பணவீக்கம் முந்தைய முன்னறிவிப்பை விட நீண்ட காலத்திற்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது போரினால் தூண்டப்பட்ட பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலை அழுத்தங்களை விரிவுபடுத்துகிறது” என்று WEO கூறுகிறது.

இங்கும், வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மோசமாக உள்ளன. “2022 ஆம் ஆண்டில், பணவீக்கம் மேம்பட்ட பொருளாதாரங்களில் 5.7 சதவீதமாகவும், வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் 8.7 சதவீதமாகவும் இருக்கும். இது ஜனவரியில் கணிக்கப்பட்டதை விட 1.8 மற்றும் 2.8 சதவீத புள்ளிகள் அதிகமாக இருக்கும்”.

IMF அபாயங்களைப் பற்றி கவலைப்படுவது குறைவாகவே உள்ளது. “ஆபத்துகள் பெரியவை மற்றும் எதிர்மறையானவை” என்று அறிக்கை கூறுகிறது. போர் மோசமடைதல், புவிசார் அரசியல் பதட்டங்கள் மோசமடைதல், தொற்றுநோயின் மீள் எழுச்சி, அதிகரித்த சமூக பதட்டங்கள், சீனாவில் மோசமான மந்தநிலை, அதிக பணவீக்க எதிர்பார்ப்புகள், அதிக வட்டி விகிதங்கள் போன்றவை இதில் அடங்கும்.

இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்டம்

இந்தியாவிற்கான IMF இன் சமீபத்திய முன்னறிவிப்பை விவரிக்க இரண்டு வழிகள் உள்ளன (அட்டவணை 1.1 ஐப் பார்க்கவும்).

2022 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் GDP வளர்ச்சி விகிதத்தைப் பார்த்து, அதை உலக அளவில் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு வழி. இந்த அணுகுமுறையைத்தான் தற்போதைய அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியா 8.2% (பச்சை நிறத்தில் உயர்த்தப்பட்டுள்ளது) வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் சிறந்த வளர்ச்சி விகிதமாகும். இது முன்னேறிய பொருளாதாரங்கள் (3.3%) மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் (3.8%) ஆகிய இரண்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இந்தியாவின் GDP முன்னறிவிப்பைப் பார்ப்பதற்கான மற்றொரு வழி என்பது, அரசாங்கத்தின் விமர்சகர்கள் பயன்படுத்துவதற்குத் தேர்ந்தெடுக்கும் ஒன்றான, WEO இன் ஜனவரி புதுப்பித்தலுக்குப் பிறகு, மஞ்சள் நிறத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ள – 0.8 சதவீத புள்ளிகளால் அது எவ்வாறு திருத்தப்பட்டது என்பதில் கவனம் செலுத்துவதாகும். நிச்சயமாக, பல பொருளாதாரங்கள் கடுமையான கீழ்நோக்கிய திருத்தங்களைச் சந்தித்துள்ளன.

இந்தியாவின் GDP வளர்ச்சியைப் பார்க்க சரியான வழி என்ன?

பொருளாதார வளர்ச்சி என்று வரும்போது, ​​ஒவ்வொரு நாடும் கிரிக்கெட்டிலில் பயன்படுத்தப்படும் “தேவையான ரன் ரேட்” என்ற அடிப்படையை பின்பற்றுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நாட்டின் வளர்ச்சியின் வேகம், அந்த நாட்டின் சராசரி குடிமகன் எவ்வளவு நன்றாக இருக்கிறார் என்பதைப் பொறுத்தது. அதுபோல, வெவ்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதாகத் தோன்றினாலும், அதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால், ஒவ்வொரு நாடும் அதன் கடந்தகால சுயத்துடன் போட்டியிடுகிறது.

அட்டவணை A இந்த விஷயத்தை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.

இரண்டு தனிப்படுத்தப்பட்ட அட்டவணை நெடுவரிசைகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு நாட்டின் பங்கு மற்றும் உலகளாவிய மக்கள்தொகையில் அதன் பங்கை விவரிக்கின்றன.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலக மக்கள்தொகையில் உள்ள பங்கை விட அதிக பங்கைக் கொண்ட நாடுகள், எடுத்துக்காட்டாக, அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களும் வளமானவை. இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தங்கள் பங்கை விட உலக மக்கள்தொகையில் பங்கு அதிகமாக இருக்கும் நாடுகள் ஜிடிபி வளர்ச்சியின் மிக உயர்ந்த விகிதத்தை எதிர்கொள்கின்றன.

உதித்



Read in source website

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 2010-இல் இயற்றப்பட்ட வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் செல்லத்தக்கதுதான் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்யும்போது அல்லது புதுப்பிக்கும்போது உறுப்பினர்களின் ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும், கடவுச்சீட்டு நகலைச் சமர்ப்பிக்க வேண்டும், வெளிநாட்டு நன்கொடையை வேறு ஒருவருக்கு மாற்றக்கூடாது, தில்லி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை மூலமாகத்தான் நன்கொடைகளைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் புதிய சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதை எதிர்த்து சில தன்னார்வ அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டன. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைத் தவிர மற்ற எல்லாத் திருத்தங்களும் செல்லத்தக்கவை என்று உத்தரவிட்டுள்ளது. தேசத்தின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றைக் காக்க இந்த சட்டத் திருத்தங்கள் தேவைதான் என்றும், இத்தகைய சட்டத் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் நன்கொடை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது; பல நிறுவனங்கள் எந்த நோக்கத்துக்காகப் பதிவு செய்யப்பட்டதோ, அதற்காக நன்கொடைகளைச் செலவு செய்வதில்லை; முறையான கண்காணிப்பை உறுதி செய்யவே ஒரே வங்கிக் கிளையின் மூலமே நன்கொடைகளைப் பெற வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது; குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் வெவ்வேறு கணக்குகளின் மூலம் நன்கொடையைப் பயன்படுத்தலாம் உள்ளிட்ட திருத்தங்கள் சரியான அணுகுமுறைதான் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொண்டு நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெளிநாட்டவருக்கு ஆதாரமாக கடவுச்சீட்டை ஏற்கும்போது, அதையே இந்தியருக்கும் ஏன் ஏற்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியர்களும் ஆதாருக்கு பதிலாக கடவுச்சீட்டை அடையாள ஆதாரமாக அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் சுமார் 33 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நமது நாட்டின் மக்கள்தொகையான சுமார் 138 கோடி பேரில் 400 பேருக்கு ஒரு தொண்டு நிறுவனம் செயல்படுவதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. "நீதி ஆயோக்' இணையதளத்தில் 1,00,873 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசின் கணக்குப்படியே, 2016-17, 2017-18 ஆகிய இரு ஆண்டுகளில், 22,400 பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் ரூ.58 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அப்படியெனில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திரட்டப்படும் நன்கொடை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம்.

பல தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறும் நோக்கத்துடன் தொடங்கப்படுகின்றன. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்ப்பவர்களும் அந்த சொத்தைப் பாதுகாக்க சில அறக்கட்டளைகளைத் தொடங்குகின்றனர். இதுபோன்ற தொண்டு நிறுவனங்களில் அறங்காவலர்களாக பெரும்பாலும் குடும்பத்தினரும், நண்பர்களுமே பொறுப்பில் இருக்கிறார்கள்.

நமது நாட்டில் அண்மைக்காலமாக எந்த ஒரு திட்டத்தைத் தொடங்கினாலும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவிடுகிறது. இதுபோன்ற போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன என்பது காலங்காலமாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நன்கொடைகளைப் பெறும் நிறுவனங்கள் முறையான கணக்குகளைப் பராமரிப்பதில்லை. 

மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய வரவு - செலவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதில்லை. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. 

மேலும், நமது நாட்டு சட்டங்களை மீறியதாக 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 20,600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. அதே போல, 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 1,811 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளதாகவும், 2019 முதல் கடந்த பிப்ரவரி வரை 2,309 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அண்மையில் தெரிவித்தார்.

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட, ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வரும் நாட்டில் போலி தன்னார்வ நிறுவனங்கள் கண்காணிக்கப்படாவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும். இதை உச்சநீதிமன்றம் அரசின் திருத்தங்களை அங்கீகரித்துள்ள நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான முறையான கண்காணிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்!



Read in source website

இந்தியா ஓர் விவசாய நாடு. விவசாய அபிவிருத்திக்கு அடிப்படைத் தேவை நீர் ஆதாரம், கூடுதலான விவசாய நிலம். மிக முக்கியமாக பயிர் செய்யும் விவசாயிகளின் நலன். அதாவது அவர்கள் விவசாயத் தொழிலை விட்டு விலகிவிடக்கூடாது. அவ்வாறு ஒரு விவசாயி வேளாண்மைத் தொழிலை விட்டு வெளியேறினால் வேறு ஒரு விவசாயி புதிதாக உள்ளே நுழைய வேண்டும்.

அப்போதுதான் விவசாயத் தொழில் எப்போதும் சமநிலையில் இருக்கும்.
ஆனால், இன்றைக்கு விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு இடும் இடுபொருள்களான ரசாயன உரங்களின் விலை தங்கத்தின் விலைபோல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் விளைந்த தானியங்களுக்கான விலையோ இடுபொருள்களின் விலையேற்றத்திற்கான விகிதாசாரத்தில் இல்லாமல் அதலபாதாளத்தில் உள்ளது. 

இதுதான் இப்படியென்றால் விவசாயிகள் தங்களது நிலத்தின் தன்மையை உயர்த்துவதற்காக இயற்கையான குப்பைகள், ஆட்டு, மாட்டு சாணங்கள் என பல தேவைகளை அவ்வப்போது மண்ணுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. இந்தக் குப்பைகள், எருக்களை விவசாயிகள் விலைக்கு வாங்கியே வயலில் போடவேண்டும். 

முற்காலங்களில் தன் வீட்டிலே வளர்க்கும் ஆடு, மாடுகளை கிடைபோட்டு அதன் சாணத்தை மண்ணுக்கு இட்டு அதை வளப்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்களின் வரவாலும் கால்நடைகளைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களாலும் அவை முற்றிலுமாக குறைந்துவிட்டன.

"ஏரினும் நன்றால் எருஇடுதல்' என்கிறார் வள்ளுவர். இந்த நிலையில் விவசாயிகளுக்குள்ள இன்னொரு வரப்பிரசாதம், தங்கள் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல் மண்.  இவ்வகை மண்களில் (குறிப்பாக கரம்பை மண்) வயலுக்கு வேண்டிய வளமான சத்துகள் நிறைய உள்ளன.

முற்காலங்களில் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் மூலம் இந்த மண்ணைஅள்ளி வயலுக்கு அடித்து பயன் அடைந்து வந்தார்கள். ஆனால், இந்த வகையான முயற்சியில் முழுக்கமுழுக்க மனித உழைப்பே அதிகம் தேவைப்பட்டதால் அவர்களால் அந்தப் பணிகளை முழுமையாக செய்து கொள்ள முடியவில்லை. 

அக்காலங்களில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றின் மராமத்துப் பணிகள் மனித உழைப்பின் மூலமே செயல்படுத்தப்பட்டன. அதனால் கண்மாய், ஏரிகளை ஆழமாக, அதிகமான நீர் கொள்வதற்கு ஏதுவாக தோண்ட முடியவில்லை. பல ஏரிகளிலும், கண்மாய்களிலும் கரைகளே இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டது.

ஆனால் இன்று நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. ஒரு நாள் முழுதும் 10 மாட்டு வண்டிகளில் அள்ளிய மண்ணை 10 நிமிடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ள முடியும். இந்த இயந்திரங்களின் வரவை நினைத்து விவசாயிகள் மகிழ்சியாக இருந்த நிலையில், அரசு வண்டல் மண் அள்ளுவதை தடை செய்தது. அப்படி அவர்கள் அள்ளுவதானால் வருவாய் துறை அனுமதி பெற்று அதன் விதிகளுக்குட்பட்டு அள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தது. 

இது யாரையோ நினைத்து யாருக்காகவோ கொண்டு வந்த சட்டம். ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது கிராமத்து விவசாயிகள்தாம். தங்களது சொந்த வயலில் உள்ள மேடு பள்ளங்களைக்கூட இயந்திரங்கள் மூலம் சீர் செய்ய முடியவில்லை. ஏகப்பட்ட கெடுபிடிகள். வருவாய் துறைக்கு வருவாய் கொடுத்ததால் தான் தங்களின் பட்டா நிலங்களை சமன் செய்யமுடியும் என்கிற நிலை. இந்த நிலை எப்போது மாறும் என்று ஏங்கியிருந்தார்கள் விவசாயிகள். 

இந்த நிலையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு அவர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. "கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டும், நீர் மட்டம் குறைந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில், நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு விவசாயிகளின் நலன் சார்ந்த அறிவிப்பு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனால் கண்மாய்கள், ஏரிகளை அரசுப் பணத்தில் மராமத்து செய்வதற்கு ஆகும் பல கோடி ரூபாய் சேமிக்கப்படும். அந்தந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கண்மாய் வண்டல் மண்ணை தங்கள் நிலத்துக்கு தங்கள் செலவிலே அள்ளுவதால் அவர்களும் பயன்அடைகிறார்கள். அவர்களுக்கு நீரளிக்கும் கண்மாய் ஏரிகளையும் ஆழப்படுத்தி வளப்படுத்துகிறார்கள். கண்மாய்கள், ஏரிகள் ஆழப்படுத்துவதற்கென்று தனியாக நிதி ஒதுக்கும்போது முந்தைய அளவிலிருந்து இது குறையும்.

ஆனால், இது "நிபந்தனைகளுக்கு உட்பட்டு' என்று பல வணிக நிறுவனங்களின் சலுகை அறிவிப்பு போல் ஆகிவிடக்கூடாது. மறுபடியும் வருவாய் அலுவலர்களின் அலுவலக வாசல்களில் விவசாயிகள் காத்துக்கிடக்கும் சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது.

கிராமங்களில் உள்ள கண்மாய், ஏரிகளில் பாசன வசதி உள்ளவர்களை மட்டுமே பயனாளிகளாக நிர்ணயிக்க வேண்டும். அவரவர் தங்கள் வயலுக்குத் தேவையான அளவு மண்ணை மட்டுமே அள்ள அனுமதிக்க வேண்டும். இதில் வேறு எந்த அரசியல் குறுக்கீடும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலர் மண்ணை அள்ளி விவசாயிகளுக்கு விற்பதோ இதனை வணிகமாக மாற்றி வியாபாரம் செய்யும் தரகர்கள் உள்ளே நுழைவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களை வைத்தே ஒரு குழு அமைத்து அதன் மூலம் இப்பணியைச் செய்ய அனுமதிக்கலாம். வெளியாட்கள் நுழையாமல் தடுக்க வேண்டும். ஏதாவது காரணம் சொல்லி வருவாய் துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் பணம் பறித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் கவனித்து செயல்பட்டால், விவசாயிகள் நிச்சயம் பயன் அடைவார்கள்; விவசாய நிலங்கள் மேம்படும். அவ்வாறு விவசாய நிலங்கள் வளமாகும் பட்சத்தில் விளைநிலங்களில் விளைச்சல் அதிகரிக்கும். ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இதுபோன்ற நியாயமான சலுகைகளை  விவசாயிகளக்கு அளித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
 



Read in source website

முற்காலங்களில் பிள்ளைகள் ஐந்து வயது நிறைவடைந்த பின்புதான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது இரண்டரை வயதிலேயே குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அதாவது ஒரு குழந்தை பிறந்து முதல் இரண்டரை ஆண்டுகளைத் தவிர, கல்லூரியில் மேற்படிப்பை முடிக்கும் காலம் வரை ஆசிரியர்களிடமே இருக்கின்றனர். 

காலையில் ஏழு மணிக்கு பயணிக்கத் தொடங்கும் மாணவ கண்மணிகள் மாலை வரை பள்ளியில் படிப்பை முடித்து அதன் பின்பு டியூஷன் வகுப்பு, சிறப்பு வகுப்பு என்று இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகின்றனர்.
கல்லாக இருக்கும் ஒரு பாறையைத் தகர்த்து எப்படி ஒரு சிற்பி சிற்பமாக வடிவமைக்கிறானோ அதைப் போலத்தான் மாணவ கண்மணிகளை ஆசிரியர்கள் கல்வி தந்து அறிவாற்றல் மிக்கவர்களாக ஆக்குகின்றனர். தற்போது பெற்றோர் தம் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை பெரிதும் விரும்பி ஆங்கிலப் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள். 
தங்களால் படிக்க முடியவில்லை தங்கள் பிள்ளைகளாவது படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்குரைஞராகவோ வரவேண்டும் என்று விரும்பி நிலத்தை விற்று, வீட்டை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.

முன்பெல்லாம் தன் பிள்ளை டாக்டராகத்தான் வர வேண்டுமென்று பெரும்பாலான பெற்றோர் விரும்பினார்கள். ஆனால், படித்த பெண்கள் குடும்பத் தலைவிகளாக வந்த பின்பு, தம் பிள்ளை ஒரு மாவட்ட ஆட்சியராகவோ, காவல்துறை அதிகாரியாகவோ வந்திட எவ்வளவு வேண்டுமானாலும் செலவுச் செய்யத் தயாராக இருக்கின்றனர்.
ஆனால், அந்தப் பிள்ளைகள் உயர் நிலைக்கு வந்த பின்பு தமது வயதான பெற்றோரை கவனிப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதுவும் அயல் நாடுகளுக்குச் சென்று பணிபுரிபவர்கள்,  பெற்றோர் இறந்த செய்தி வந்தால்கூட, "நான் செலவுக்கு பணம் அனுப்புகிறேன் நீங்களே அடக்கம் செய்து விடுங்கள்' என்று உறவினரிடம் கூறி, தம்மைப் பெற்றவர்களை அனாதைப் பிணங்களாக ஆக்கி விடுகின்றனர்.

ஆசை ஆசையாக பிள்ளையை வளர்த்திடும் பெற்றோரில் பெரும்பாலோர் அந்தப் பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள். அதுவும் உள்ளூரில் பிள்ளைகள் வசிக்கும்போதே பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவது கொடுமையிலும் கொடுமையன்றோ!
சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. பெற்றோர், தங்கள் பெயரில் உள்ள சிறிய அளவு நிலத்தை விற்று, பணத்தை தனக்குத் தரவேண்டும் என்று மகன் கேட்கிறான். பெற்றோர், நிலத்தை விற்க மாட்டோம் என்று மறுக்க, கோபமடைந்த மகன் அவர்களை அடிக்கிறான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவலர்கள் விரைந்து வந்து மகனை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.  உடனே அவனுடைய பெற்றோர் பதறுகின்றனர். அவனுடைய தாய் காவலரின் காலைப் பிடித்து "என் மகனை ஒன்றும் செய்யாதீர்கள். அவன் எங்களை அடிக்கவில்லை' என்று கதறி அழ காவலர்கள் அவனை கைது செய்யாமல் விட்டுச் சென்றனர். 

தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் மனம் பதறும் செய்திகள் அன்றாடம் வெளிவருகின்றன. அண்மையில், ஒரு மாலை பத்திரிகையில், "மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன்', "ஐ.ஐ.டி. மாணவியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாணவனும் ஆசிரியரும்', "ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் வன்முறை செய்த கொடுமை', "ஒரு பெண்னை பலர் கூட்டு பாலியல் வன்முறை', "கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்', "சொத்திற்காக தனது தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்' என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இதனைப் படிக்கும் மாணவர்களின் மனம் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  

கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் முதல்வராக இருந்தபோது மாணவர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கினர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டுமே மதிய உணவு வழங்கப்பட்டது. அதை நீட்டித்து, சாப்பிட வசதியில்லாததால் பள்ளிக்கு வராமல் இருந்த பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைக்க, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு வழங்கினார் காமராஜர். எம்.ஜி.ஆர். அதையே மேலும் விரிவுபடுத்தி சத்துணவு வழங்கினார். பின்னர் முதல்வரான கருணாநிதி சத்துணவோடு முட்டை, முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கிட வழிவகுத்தார்.

அதற்குப் பிறகு முதல்வரான ஜெயலலிதா பதினான்கு வகையான சலுகைகளை மாணவ செல்வங்களுக்கு வழங்கினார். சீருடை, புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, நல்ல உணவு என்று ஏராளமாக வழங்கினார். இன்றைய முதல்வரோ அதிக மாணவியர் உயர்கல்வி பெறும் வகையில், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000  தமிழக அரசு வழங்குமென்று அறிவித்தார். மேலும் ஐ.ஐ.டி., எய்ம்ஸ் கல்லூரிகளில் படிக்கும் மாணவ செல்வங்களின் அனைத்து படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் "உங்களால் மறக்க முடியாத மனிதர் யார்' என்று கேள்வி எழுப்பியபோது "என்னால் மறக்க முடியாத மாமனிதர் எனக்கு ஆரம்பக் கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்தான்' என்று பெருமைப்படக் கூறினார். "உன்னிடம் இருக்கும் சிறந்ததையெல்லாம் மாணவர்களுக்குக் கொடு. அவை மீண்டும் உனக்கே வந்து சேரும்' என்று தயானந்த சுவாமிகள் கூறியுள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன், "மாணவர்கள் மீது அன்பு கொண்டவர்கள் மனித  குலத்தின் மீது அன்பு கொண்டவர்கள் ஆவர்' என்று  கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் பள்ளிச் சீருடையில்தான் வரவேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பள்ளிப் பருவத்தில் யார் என்ன ஜாதி, மதம் என்ற வேறுபாடே மாணவர்களுக்குத் தெரியாது. அங்கே  ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்கு வருவோம் என்று சில மாணவிகள் கூறுகின்றனர். இதனை பலர் தங்கள் அரசியல் அறுவடைக்காக ஆதரிக்கின்றனர்.

இஸ்லாமியர் புனித நூலான குர்ஆனில் எந்த இடத்திலும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றோ, ஆண்கள் தாடிவளர்ப்பது கட்டாயமென்றோ குறிப்பிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, அரசு ஊழியர்களும் ஆண்களும் கட்டாயம் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தாடி வைத்துக் கொண்டதில்லை. பாகிஸ்தான் அதிபராக இருந்த இம்ரான் கான் தாடி வைத்துக் கொண்டா இருக்கிறார்? இந்தியாவில் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமும், பக்ருதீன் அலிஅகமதுவும்கூட தாடி வைத்திருக்கவில்லை. அண்மையில் துபை சென்ற தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பலரும் தாடி வைத்துக்கொள்ளாமல்தான் இருந்துள்ளனர். 

உலகை வென்றவன், மாவீரன், அடக்க முடியாத குதிரையை அடக்கி தன் ஆளுமைத் திறனைக் காட்டியவன் என்றெல்லாம் போற்றப்படும் அலெக்ஸôண்டருக்கு போரிடும் தன்மையையும் வீரத்தையும் விளங்க வைத்தவன் புருஷோத்தமன் என்ற போரஸ் மன்னன்தான். அப்படிப்பட்ட அலெக்ஸôண்டரின் வெற்றிக்கும், அறிவுக்கும், திறனுக்கும், ஆளுமைக்கும் காரணமாக இருந்தவர் என்று இன்றும் போற்றப்படுபவர் அவருக்கு அறிவூட்டிய ஆசிரியர் அரிஸ்டாடில்தான். அலெக்ஸôண்டர் புகழ் இருக்கும் வரை அரிஸ்டாடில் புகழும் இருக்கும்.

அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளமானோர். அதிலும் குறிப்பாக மாணவர்களே அதிகம். ஒருமுறை அண்ணாவிடம் "மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா' என்று கேட்டபோது, "மாணவர்களுக்கு அரசியல் என்பது அத்தை மகள் போன்றது. அத்தை மகளை சுற்றிச் சுற்றி வரலாமே தவிர, தொட்டு விடக் கூடாது. அப்படித்தான் மாணவர்களுக்கு அரசியல் என்பதும்' என்று பதிலளித்துள்ளார். அந்த அண்ணா முதல்வரானது 1965}இல் மாணவர்கள் தாய்மொழி தமிழைக் காத்திட செய்த புரட்சியால்தான் என்பதே உண்மை.

இன்றைய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அடிக்கடி "மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். அதுவே அவர்கள் அறிவை வளர்த்திடும்' என்று கூறுவார். மகாத்மா காந்தி "சத்திய சோதனை' என்கிற தனது வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ எழுதிடவில்லை. அவருடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார். அவர் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள பெரிதும் விரும்பினார்.

மூதறிஞர் ராஜாஜி தனது மகளுக்கு வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவாராம். ஒருநாள், இதனைப் பார்த்துவிட்ட காந்திஜி ராஜாஜியிடம், "உங்கள் தாய்மொழியான தமிழ்மொழி எவ்வளவு இனிமையான மொழி. இனிமேல் நீங்கள் தமிழிலேயே கடிதம் எழுதுங்கள், அதுவே நல்லது' என்றாராம்.
"கல்வியே ஆன்மாவின் உணவு. அது இல்லையென்றால், நம் சக்திகள் எதுவும் நமக்குப் பயன் தாரது' என்று மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் இத்தாலிய அறிஞர் மாஜினி. "கல்விச்சாலை ஒன்றைத் திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை மூடுபவன் ஆவான்' என்று அறிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். "ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் தூண்டுவதே உண்மையான கல்வி; ஆனந்தம் அளிப்பது அதுவே' என்று அறிஞர் ரஸ்கின் கல்வியின் அவசியத்தை கூறியுள்ளார்.

இன்றைய மாணவ சமுதாயம், இப்படிப்பட்ட கல்வியை நன்கு கற்று, நல்வழியில் செல்வத்தை ஈட்டி, அனைவரிடமும் அன்பு செலுத்தி, முதுமையில் பெற்றோரைக் காப்போம் என்று உறுதியேற்க வேண்டும். 



Read in source website

‘பக்ரீத்’ எனும் ‘ஈதுல் அள்கா’ தியாகத் திருநாளாகவும் ‘ஹஜ்’ பெருநாளாகவும் அமைந்துள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினரான முஸ்லிம் பெருமக்கள், இந்நாளை தியாகம், சமத்துவம், சகோதரத்துவ உணர்வூட்டும் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ‘ஏப்ரஹாம்’ எனப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒர் இறைத் தத்துவத்தை உலகில் நிலைநாட்டிய மனிதப் புனிதர். “இறைவன் ஒருவனே; இறைவனால் படைக்கபபட்டவைகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் வணங்குதற்குரியன அல்ல. அவற்றையெல்லாம் படைத்த மூல முதலாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்” என்ற கொள்கையை உலகில் நிலைநாட்ட ஓயாது உழைத்த உத்தமர்.

முதுமையின் எல்லைக்கோட்டை எட்டியபோது இறையருளால் பெற்ற தம் புதல்வனை இறைவனுக்குப் பலியிடுவதுபோல் கண்ட தொடர் கனவை இறை விருப்பம் எனக் கொண்டு அதைத் தம் மகனிடம் கூறி, அவர் சம்மதத்தோடு, மைந்தரின் இன்னுயிரை இறைவனுக்குக் காணிக்கையாக்க முனைந்த தியாகச் செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமை இந்நாளில்தான் ஹாஜிகளால் நிறைவேற்றப்படுகிறது. ‘ஹஜ்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும். வசதி படைத்தவர்கட்கு மட்டுமே ஹஜ் கட்டாயக் கடமையாகும். ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜி, மக்காவிலுள்ள ‘கஃபா’ இறையில்லத்தை நாடிச் செல்கிறார். கஃபா இறையில்லமே தவிர இறைவனல்ல. சதுரவடிவான இக் கட்டடத்தை வலம் வரலாமே தவிர, வணங்கக்கூடாது. இறையடியார்கள் ஆண்டுக்கொருமுறை ஹஜ் செய்ய வேண்டும் என இப்ராஹீம் (அலை) ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு விடுத்த அழைப்பை ஏற்று இன்றும் முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி வருகின்றனர். ‘கஃபா’ என்ற சொல்லுக்கு வட்ட வடிவானது என்று பொருள். சதுரமானது என்ற பொருளும் உண்டு. வட்ட வடிவான நிலப்பரப்பில் சதுர வடிவாக அமைந்த கட்டடமே ‘கஃபா’; 40 அடி நீளமும், 50 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட வெற்றுக் கட்டடமாகும். இதனுள் சென்று இறைவணக்கம் புரியக்கூடாது என்பது விதியாகும். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை ‘கஃபா’ இருக்கும் திக்கு நோக்கியே தொழுகின்றனர். கஃபாவில் தொழுகின்றபோது திசைக்கட்டுப்பாடு ஏதுமின்றி, எத்திக்கில் இருந்தும் தொழலாம்.

‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜிகள் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கப்பால், தங்கள் வெற்றுடம்பில் தைக்கப்படாத ஒரு துண்டை இடுப்பில் உடுத்திக் கொண்டு மற்றொரு துண்டை போர்த்திக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற முற்படுகிறார்கள். இது ‘எஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. இறந்தவரின் சடலத்தின் மீது இத்தகு துணியே போர்த்தப்படுகிறது. இறைவனை அடைய அனைத்தையும் துறக்கத் துணியும் செயலையே இது நினைவூட்டுவதாயுள்ளது. ஹஜ்ஜின் போது கஃபா, இறையில்லத்தில் இறைவணக்கத்திற்காகக் குழுமியுள்ள இலட்சக்கணக்கான ஹாஜிகள் தங்கள் நாடு, மொழி, இன, நிற, கலாச்சார வேறுபாடுகளையெல்லாம் மறந்தவர்களாக, நாம் அனைவரும் ஆதாம் (அலை) வழிவந்த சகோதரர்களே; அனைவரும் சமமானவர்களே என்ற உணர்வோடு சமத்துவத்தை - சகோதரத்துவத்தைச் செயல் வடிவில் நிலை நாட்டுகின்றனர்.

மீண்டும் அதே எஹ்ராம் உடையில் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் நண்பகலுக்குப் பின் மக்காவுக்கு அருகிலுள்ள ‘அரஃபா’ பெரு வெளியில் குழுமுகின்றனர். இங்குதான் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகிறது. இறுதித் தீர்ப்பு நாளின்போது ‘மஹ்ஷர்’ மைதானத்தில் மனித குலம் மீண்டும் உயிர்த்து எழுப்பப்படுவதை நினைவு கூர்வதாக இந்நிகழ்வு அமைகிறது.

அது மட்டுமல்ல, ஹாஜிகள் ஒரு பகல் மட்டும் தங்குவதற்காக அமைக்கப்படும் கூடாரங்கள் அன்று மாலையே அகற்றப்படுகின்றன. இஃது இறைவனால் அளிக்கப்பட்ட மனித வாழ்வு எனும் கூடாரம் எந்நேரமும் இறைவனால் பிரிக்கப்படலாம். தங்கள் உடலிலிருந்து உயிர் பிரிக்கப்படலாம் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துவதாயுள்ளது. மறுநாள் மினா எனுமிடத்தில் சைத்தானைக் கல்லால் எறியும் நிகழ்வு நிறைவேற்றப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் இறைவிருப்பத்தை நிறைவேற்ற முனைந்த இப்ராஹிம் (அலை) அவர்களைத் தடுக்க முயன்ற சைத்தானை அவர் கல்லால் அடித்து விரட்டிய செயலை நினைவுகூரும் வகையில் இச் செயல் ஹாஜிகளால் ஏழு கற்கள் எறிந்து நிறைவேற்றப்படுகிறது. இஃது ஒரு குறியீட்டுச் செயலாகும். சைத்தானிய செயல், புறத்தில் மட்டுமல்லாது அகத்திலும் உண்டாகும் ஏழுவித தீயுணர்வுகளை மனத்திலிருந்து அகற்ற முயலும் முயற்சியின் குறியீடாகவே இச்செயல் அமைந்து உள்ளது.

மினாவில் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ‘குர்பானி’ கொடுப்பதுடன் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகிறது. ஹஜ்ஜின் போது, ஒவ்வொரு ஹாஜியும் தான் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவச் செயல்களை மன்னிக்க இறைவனிடம் மன்றாடுகிறார். இனி, தவறே செய்யாத தவ வாழ்வு மேற்கொள்ள உறுதியேற்கிறார். இதன் மூலம் ஒரு புதுவாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறார். இதைப் பற்றி பெருமானார் (சல்) அவர்கள்,

“எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து தீய சொல் பேசாமலும், தீய செயல் செய்யாமலும் திரும்புவாரோ அவர் தன் தாயின் வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவமற்றவராகத் திரும்புகிறார்” எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு ஹஜ் பெருநாளும் தியாகத் திருநாளுமான ‘ஈதுல் அள்கா’ மனிதனைப் புனிதனாக்கிப் புதுவாழ்வு தருவதோடு உலகில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வழிகாட்டும் வாழ்வியல் நிகழ்வாக அமைந்துள்ளது. 



Read in source website

பாரம்பரிய மருத்துவத் துறையின் வளர்ச்சியில் மத்திய அரசு காட்டிவரும் அக்கறை வரவேற்புக்குரியது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள சில முயற்சிகள் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன. ஏப்ரல் 19 அன்று, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைகளில் பன்மைத்துவச் சூழலுக்கான உரையாடலை நிகழ்த்துவது இம்மையத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதையடுத்து, காந்திநகரில் நடந்த இந்தியப் பாரம்பரிய மருத்துவத் துறை கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான மாநாட்டிலும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். பாரம்பரிய சிகிச்சை பெற வருகைதரும் அயல்நாட்டுப் பயணிகளுக்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும், பாரம்பரிய முறையிலான மருந்துகளுக்கு தரக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை இம்மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.



Read in source website

பள்ளி மேலாண்மைக் குழு பற்றி கடந்த 20.03.2022 அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்துக்குப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில், ஒரு ஊராட்சித் தலைவர் பள்ளி மாணவர்களின் சீருடை போலவே உடை அணிந்துகொண்டு, அனைத்துப் பெற்றோர்களையும் வீடுவீடாகச் சென்று சந்தித்தார்.

துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என அனைவரையும் உடன் அழைத்துச் சென்றார். தனது இரு பிள்ளைகளையும் தனது ஊராட்சியிலுள்ள அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள இவர், பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவது, ‘இல்லம் தேடிக் கல்வி’ தன்னார்வலர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, அவர்களை ஊக்கப்படுத்துவது என எப்படியாவது தங்கள் கிராமக் குழந்தைகளின் கல்வி மேம்பட வேண்டுமெனப் பெருமுயற்சி எடுத்துவருகிறார். இதற்காகச் சுழன்று இயங்குகிறது அவ்வூராட்சி நிர்வாகம்.



Read in source website

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கரோனா வைரஸுக்குப் பலியானோர் எண்ணிக்கை தொடர்பாக இவ்வளவு காலம் நிலவிவந்த மர்மம் கடைசியாக விலகப்போகிறது. கரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை குறித்து இதுவரை திட்டவட்டமாக யாருக்கும் தெரியாது. உலக சுகாதார நிறுவனம் (உ.சு.நி) அந்தத் தரவு சார்ந்த கணக்கீட்டை மேற்கொண்டுவருகிறது. டிசம்பர் 2021 வரை கரோனாவுக்கு 60 லட்சம் பேர் பலியாகியிருப்பதாகப் பல்வேறு நாட்டு அரசுக் கணக்கீடுகள் கூறுகின்றன. ஆனால், உலக சுகாதார நிறுவனக் கணக்குப்படி, பலியானவர்கள் எண்ணிக்கையோ 1.5 கோடி.

கரோனா வைரஸ் எப்படிப்பட்ட உயிரிழப்பு சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிக்கை உதவும். கரோனா வைரஸின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்றுநோய்கள் பரவினால் எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வகுக்கவும், திட்டமிடவும், தடுப்பூசிகள் எவ்வாறு நமக்கு உதவின என்பதை அறியவும் இந்தத் தரவுகள் அவசியமாகின்றன. ஓராண்டுக்கு மேலாக ஆராய்ச்சி, பகுப்பாய்வு நடத்தப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட இந்தத் தரவு இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. கரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்கள் குறித்த தரவை உ.சு.நி. தற்போது வெளியிடக் கூடாது, இந்த வெளியீட்டை 10 ஆண்டுகளுக்கு ஒத்திப்போட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

இழந்தது அதிகம்

கரோனா தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5.2 லட்சம் என்று மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், உ.சு.நி. கணக்கீட்டின்படி கரோனாவுக்கு இந்தியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 40 லட்சம். இது அரசு கூறுவதைவிட 8 மடங்கு அதிகம். இறந்த 8 பேரில் ஒருவர் மட்டுமே அரசுக் கணக்கீட்டில் வந்திருக்கிறார். இந்தப் புதிய தரவின்படி, கரோனா வைரஸுக்கு மிக அதிக மக்களைப் பலிகொடுத்த நாடாக இந்தியா மாறுகிறது. கரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இந்தியா இழந்தது அதிகம் என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. கரோனாவுக்குப் பலியானவர்களில் கணக்கில் விடுபட்டுப்போனவர்கள் குறித்து தரவு இதழாளர் எஸ்.ருக்மிணி உள்ளிட்டோர் முன்வைத்த கேள்விகளையும் தரவு சார்ந்த இடைவெளிகளையுமே உ.சு.நி. அறிக்கை அழுத்திச் சொல்லியிருக்கிறது.

கணக்கிடும் முறை பிரச்சினைகள்

இறந்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான ஒட்டுமொத்தத் தேசியத் தரவு, உள்ளூர் அளவில் கிடைத்த தகவல்கள், வீடுவாரி ஆய்வு, புள்ளியியல் மாதிரி ஆகியவற்றின் அடிப்படையில் அரசுக் கணக்கீடுகள் தவறவிட்ட இறப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. கரோனாவால் நேரடியாக இறந்தவர்கள், ஏற்கெனவே இருந்த உடல் சிக்கல் கரோனா நோயால் தீவிரமடைந்து இறந்தவர்கள், பெருந்தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்கள் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து மரண எண்ணிக்கை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒருவர் இறந்தபோது அவரது உடலில் கரோனா வைரஸ் இருந்தால்தான் கரோனா வைரஸால் இறந்தவராகக் கருதப்படுவார் என்று மத்திய அரசு கூறியது ஏற்கெனவே சர்ச்சையாகியிருந்தது. ஒருவருடைய இறப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் கரோனா காரணமாக இருந்தால், அதை கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட இறப்பாகவே கருத வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்தத் தரவைத் தயாரிப்பதில் உலகெங்கும் உள்ள மக்கள்தொகை ஆய்வாளர்கள், பொதுச் சுகாதார நிபுணர்கள், புள்ளியியலர்கள், தரவு அறிவியலர்கள் ஈடுபட்டார்கள்.

இந்தத் தரவு வெளியிடப்படும் தேதி தொடர்ச்சியாகத் தள்ளிப்போவது தொடர்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு விமர்சனக் கட்டுரையைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் தரவைக் கணக்கிடும் முறை தவறு என்று மத்திய அரசு விமர்சனம் செய்தது. இந்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த எதிர்வினை அடிப்படையிலேயே தவறானது என்கிறார் உ.சு.நி.யின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினரும் பேராசிரியருமான ஜான் வேக்ஃபீல்ட்.

“உலகளாவிய கணிப்பு முறைகள் இந்தியக் கணக்கீட்டுக்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்தியா எங்களுக்கு அளித்த தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கில் தவறவிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது” என்கிறார் அவர். உ.சு.நி. தரவு மட்டுமல்ல, 2022 பிப்ரவரியில் பிரபல ஆய்வு இதழான ‘சயின்ஸ்’-ன் ஆய்வும் இதையே சுட்டிக்காட்டுகிறது. அரசுக் கணக்கைவிட ஏழு-எட்டு மடங்கு அதிக இறப்பு நிகழ்ந்திருக்கும் என்று அது கூறியது. அதேபோல் 2022 மார்ச்சில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’, இந்தியாவின் மொத்த கரோனா இறப்பு 40 லட்சம் என்று மதிப்பிட்டது.

ஒரு பெருந்தொற்று பரவிக்கொண்டிருக்கும்போது, அதன் காரணமாக இறப்பவர்களைத் துல்லியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்வது பெரும் சவால் என்பதில் மறுகேள்விக்கு இடமில்லை. இந்தப் பின்னணியில், மருத்துவ அறிவியல், ஆய்வுத் தேவைகளுக்காக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சார்ந்த தரவுகள் உரிய நெறிமுறைகளின்படி பிற்பாடு திரட்டப்படுகின்றன. அது உலக அளவில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

எதிர்காலத்தில் ஒரு பெருந்தொற்று பரவும்போது பொது முடக்கம் தேவையா, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் இதயம், நீரிழிவு போன்ற நோயாளிகளுக்குச் சிகிச்சையைத் தொடரலாமா-நிறுத்தலாமா என்பது போன்ற சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடவும், மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கான கொள்கையை வரையறுக்க இதுபோன்ற தரவுகள் பெரிதும் உதவும்.

வெறுமனே மறுக்க முடியுமா?

கரோனாவால் 3 லட்சம் பேர் இறந்ததாக 2021 இறுதியில் ரஷ்ய அரசு தெரிவித்திருந்தது. அதே நேரம், ரஷ்யப் புள்ளியியல் நிறுவனமும் உ.சு.நி-யின் தரவும் 10 லட்சம் பேர் இறந்ததாகத் தெரிவிக்கின்றன. அந்தத் தரவை ரஷ்ய அரசு ஏற்க மறுத்தாலும்கூட, அந்தத் தரவு வெளியிடப்படுவதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை. “ஒரு தரவை நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால், அதற்கான பதிலீட்டுத் தரவை அறிவியல் அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அதற்குப் பதிலாக ஒரு தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என வெறுமனே மறுக்க முடியாது” என்கிறார் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகப் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த உயிரிப் புள்ளியியல் பேராசிரியர் பிரமர் முகர்ஜி.

பெருந்தொற்றால் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த தரவு வெளியிடப்படுவது பெரும் எதிர்வினைகளை உருவாக்கும் என மத்திய அரசு அஞ்சுவதால், அதைத் தடுக்க முயலலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

“இது வெறும் உலகளாவிய கணக்கீடு மட்டுமல்ல, அரசுகளின் பொறுப்புடைமை சார்ந்தது” என்கிறார் உ.சு.நி. நிபுணர் குழுவின் உறுப்பினரான டாக்டர் பிரபாத் ஜா.

முரணான உண்மைகள்

2018-19-ல் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.2 பேர். 138 கோடிப் பேருக்கு இதைக் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 27,200 இறப்புகள் வரும். கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவில் ஒரு நாளைக்கு கரோனாவால் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 4,000 என்றது அரசு. அது இயல்பான இறப்புகளைவிட 15% மட்டுமே அதிகம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டது, இடுகாடுகள் - சுடுகாடுகளில் ஏற்பட்ட நெருக்கடி நிலைகளுடன் ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை எப்படி உண்மையாக இருக்க முடியும்?

கரோனாவால் இறந்ததற்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு வந்த விண்ணப்பங்கள், கரோனா இறப்பு எண்ணிக்கை என்று அரசு காட்டும் கணக்கைவிட குஜராத்தில் 9 மடங்கு அதிகமாகவும் தெலங்கானாவில் 7 மடங்கு அதிகமாகவும் வந்துள்ளன. அதில் பெருமளவு இழப்பீட்டு மனுக்களுக்கு அரசு இழப்பீடும் வழங்கியுள்ளது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு தவறாகக் கணக்கிட்டதையே இது காட்டுகிறது. இந்தப் பின்னணித் தரவுகள், இந்திய அரசு முன்வைக்கும் வாதத்துக்கு எதிராக உள்ளன.

அறிவியல்பூர்வமான பார்வை, வெளிப்படைத்தன்மை, நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு நகரும் உந்துதல் போன்றவை அரசிடம் இருந்தால் ஆய்வாளர்கள், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வகையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தரவு இடைவெளியை நிரப்பும் வகையில் ஒரு நாட்டின் தரவு சேகரிப்பு அமைப்பு வலுவாகக் கட்டமைக்கப்படவும் வேண்டும்.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in



Read in source website