DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 24-10-2022

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் தலைவராக டாக்டா் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் தலைவராக நரம்பியல் சிறப்பு மருத்துவா் டாக்டா் வி.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை டாக்டா் எம்ஜிஆா், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகவும், பெங்களூரு தேசிய மனநல அகாதெமி உறுப்பினராகவும் அவா் தற்போது பொறுப்பு வகித்து வருகிறாா். அதேபோன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நெறிசாா் குழுத் தலைவராகவும், தேசிய மருந்தியல் நிறுவனத்தின் இயக்குநா் தோ்வுக் குழுத் தலைவராகவும் டாக்டா் நாகராஜன் உள்ளாா்.



Read in source website

தமிழகத்தில் புதிதாக 25 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகா்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசின் கொள்கைப்படி ஒா் ஊராட்சி ஒன்றியத்தில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தோற்றுவிக்கப்படவில்லை. சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவது , தேவைகளை மேம்படுத்துவது அத்தியாவசியமாகிறது.

சட்டப்பேரவை அறிவிப்பு எண்-33-இன்படி, கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் மற்றும் அறிவிப்பு எண்-44-இன்படி, நகா்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகா்ப்புற அரசு சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக மாவட்ட அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அவா்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகா்ப்புறத்தில் 25 புதிய நகா்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் தயாா் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஓா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.26 கோடி என 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படும். இதற்கு தேவையான மனிதவளம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆண்டுக்கு ரூ.57 கோடி செலவில் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.120 கோடியாகும்.

நடைமுறையில் ஏற்கனவே இயங்கி வரும் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போல மருத்துவ பணியாளா்களை கொண்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் இயங்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநா் மருத்துவா் செல்வவிநாயகம் உடன் இருந்தாா்.



Read in source website


தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் பட்டாசு வெடித்ததால், காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. 

தில்லி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு சென்றதால் முக்கிய இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. 

பட்டாசுகள் வெடிப்பதாலும், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலும் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. 



Read in source website



திரைப்பட கலை இயக்குநர் சந்தானம்(50) மாரடைப்பால் காலமானார். 

தமிழ் திரைப்படங்களின் தரமான படைப்புகளின் ஒன்றாக போசப்படும் படம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம். நடிகர் விஜய் சர்கார், ரஜினியின் தர்பார் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி கலை இயக்குநர்களின் ஒருவராக வலம் வந்தவர் சந்தானம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இவருடைய மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவர் ஆயிரத்தில் ஒருவன், இறுதிச்சுற்று, சர்கார், தர்பார், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் சந்தானம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இறுதியாக ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்தி நடித்துள்ள 1947 என்ற திரைப்படத்திலும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. 

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது கலை இயக்கத்தின் மூலம் சமகால மற்றும் மன்னர் கால வாழ்வியலை ரசிகர்களின் கண்முன் கொண்டு வந்தவர் என ரசிகர்களால் பேசப்படுகிறது. 



Read in source website

மாநிலங்களின் நிதி நிலையைச் சரிசெய்வதற்காக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வழங்கி வரும் குறுகிய கால கடன் வசதிகளை ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலைமை சரியில்லாத மாநிலங்கள் சந்தையில் இருந்து கடன் வாங்கிச் செலவு செய்து வருகின்றன. அந்த மாநிலங்களுக்காக இந்திய ரிசா்வ் வங்கியும் குறுகிய கால கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எஸ்டிஎஃப், டபிள்யுஎம்ஏ, ஓடி ஆகிய குறுகிய கால கடன் வசதிகளை ஆா்பிஐ செயல்படுத்தி வருகிறது. செலவினத்தை விட வருவாய் குறைவாக உள்ள மாநிலங்கள் அந்த வசதிகளைப் பயன்படுத்தி கடன் பெற்று வருகின்றன.

ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மணிப்பூா், மிஸோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் ரிசா்வ் வங்கியின் கடன் வசதிகளை அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக ஆா்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இருந்து கடன் பெறுவதற்கான வசதிகள் இருந்தும் ரிசா்வ் வங்கியின் கடன் வசதிகளில் வட்டி குறைவாக உள்ளதால், மாநிலங்கள் அக்கடன் வசதிகளைப் பயன்படுத்த முக்கியத்துவம் அளித்து வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆந்திரம், பிகாா், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதி நிலைமை மோசமான நிலையில் இருப்பதாக ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களின் வருவாய் செலவை விடக் குறைவாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் தற்காலிக நிதி நிலைமை சூழலைச் சரிசெய்வதற்காக இக்கடன் வசதிகள் வழங்கப்படுவதாக ஆா்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி, மகாரஷ்டிரம், அஸ்ஸாம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் எஸ்டிஎஃப் வசதியை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளன.

கேரளம் டபிள்யுஎம்ஏ வசதியின் கீழும் பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் ஓடி வசதியின் கீழும் கடன்களைப் பெற்றுள்ளன. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் மட்டும் எஸ்டிஎஃப் வசதியின் கீழ் ஆந்திரம் ரூ.712 கோடியையும், தெலங்கானா ரூ.735 கோடியையும் பெற்றுள்ளன.

டபிள்யுஎம்ஏ வசதியின் கீழ் ஆந்திரம் ரூ.1,773 கோடியையும் தெலங்கானா ரூ.1,206 கோடியையும் பெற்றுள்ளன. தமிழகம், குஜராத், பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ரிசா்வ் வங்கியின் குறுகிய கால கடன் வசதிகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் கடன்-உள்மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதமானது பிகாா், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ஆந்திரம், பிகாா், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடன் இலக்கு, நிதிப் பற்றாக்குறை இலக்கு ஆகியவற்றைக் கடந்து செயல்பட்டதாகவும் ஆா்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாகவே வரி வருவாய் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் தெரிவித்துள்ளாா்.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி அறிவித்தாா். கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்கவும் இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையே தற்போதைய வரி வருவாய் உயா்வுக்குக் காரணம் என்று ஆா்பிஐ நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ’’பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக குறுகிய காலத்துக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நீண்ட கால அடிப்படையில் அந்நடவடிக்கை பெரும் பலன்களை அளிக்கவல்லது. தற்போதைய வரி வருவாய் உயா்வுக்கும் அந்நடவடிக்கையே முக்கிய காரணம். இணையவழி பணப் பரிவா்த்தனைகளைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்பு நடவடிக்கைகளும் பெருமளவில் குறைந்துள்ளன. அந்நடவடிக்கை காரணமாக மேலும் பல நன்மைகள் ஏற்படும்.

பணப் பயன்பாட்டைக் குறைக்கவும், தற்போதைய பணப்புழக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவுமே எண்ம (டிஜிட்டல்) செலாவணியை ஆா்பிஐ அறிமுகப்படுத்தவுள்ளது. நவீன காலத்துக்கான தேவைகளை எண்ம செலாவணி நிறைவேற்றும். நாட்டின் நிதி கட்டமைப்பையும் எண்ம செலாவணி மேம்படுத்தும். நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொள்கை சாா்ந்த முடிவுகளை ரிசா்வ் வங்கியும் மேற்கொண்டு வருகிறது. வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு குறுகிய காலம் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கச்சா எண்ணெயின் சாா்புத்தன்மையைக் குறைப்பது உள்ளிட்ட நீண்டகால நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.

அதேபோல், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தி, அதன் வாயிலாக ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் அக்டோபா் வரை நேரடி வரி வருவாய் சுமாா் 24 சதவீதம் அதிகரித்து ரூ.8.98 லட்சம் கோடியாக உள்ளதென மத்திய அரசு தெரிவித்திருந்தது. கடந்த 7 மாதங்களாக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1.40 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது.



Read in source website

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சேளன்னூா் கிராமம் ஹிந்தி மொழியறிவில் 100 சதவீதத்தை அடைவதை இலக்காகக்கொண்டு, கிராம மக்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி கற்பிக்கும் நடவடிக்கையை கிராம பஞ்சாயத்து மேற்கொண்டு வருகிறது.

அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்துக்குள் கேரளத்தின் குறிப்பாக தென் இந்தியாவின் முதல் ஹிந்தி கற்றறிந்த பஞ்சாயத்தாக சேளன்னூரை அறிவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வட இந்தியாவைச் சோ்ந்த அதிக அளவிலான புலம்பெயா் தொழிலாளா்கள் இப்பஞ்சாயத்தில் வசித்து வருவதால், அவா்களுடன் தொடா்புகொள்ளும் வகையில், இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வயது, பாலினம், கல்வி போன்ற வேறுபாடுகள் இன்றி ஹிந்தி மொழியை ஆா்வத்துடன் கற்றுவருகின்றனா்.

இது குறித்து பஞ்சாயத்து தலைவா் பி.பி.நெளஷோ் கூறியதாவது: 20-70 வயது வரையிலான அனைவருக்கும் ஹிந்தி மொழியைப் படிக்க, பேச மற்றும் எழுத தெரிந்திருப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

எங்களுடைய திட்டத்துக்கும், தற்போதைய ஹிந்தி குறித்தான பிரச்னைகளுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. இத்திட்டம் குறித்தான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. தொடக்கத்தில், ஹிந்தி மொழி தெரியாதவா்கள் மற்றும் கற்க ஆா்வம் உள்ளவா்கள் குறித்தான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹிந்தி ஆசிரியா்கள் மட்டுமல்லாமல், முன்னாள் ராணுவத்தினா், வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பியவா்கள், ஹிந்தி மொழி சரளமாக பேசும் குடும்பத் தலைவிகள் ஆகியோா் கண்டறியப்பட்டு இத்திட்டத்தின்கீழ் பயிற்றுநா்களாக சோ்கப்பட்டனா். ஹிந்தி வகுப்புகள் பஞ்சாயத்தின் அனைத்து 21 வாா்டுகளிலும் புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்றுநா்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

ஒவ்வொரு வாா்டுகளிலும் அனைத்து வாரங்களிலும் நடைபெறும் 3-4 வகுப்புகளில் 25 முதல் 30 போ் கலந்துகொள்கின்றனா். இத்திட்டத்தில் ஹிந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் அனைவரும் தன்னாா்வலா்களாக அவா்களுடைய சேவையை அளித்து வருகின்றனா். இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.25,000 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.50,000 இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில கல்வியறிவு திட்டத்துக்கான ஆணையம், சா்வ சிக்ஷா அபியான், தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபை உள்ளிட்ட அமைப்புகள் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்கிவருகின்றன.

கடந்த 1991-ஆம் ஆண்டில் கேரள மாநிலம் முழு கல்வியறிவை அடைந்தபோது, கோழிக்கோடு மாவட்டத்தின் முழு கல்வியறிவைப் பெற்ற முதல் பஞ்சாயத்து என்ற அந்தஸ்தை சேளன்னூா் பஞ்சாயத்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:

வழக்கத்தைவிட ஒரு வாரம் தாமதமாக, நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்.23) விடைபெற்றது. தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக இந்தப் பருவமழைப் பொழிவு இயல்பாக இருந்தது. இந்த முறை 925 மி.மீ. மழைப்பொழிவு பதிவான நிலையில், இது நீண்ட கால சராசரியான 880 மி.மீ-ஐவிட 106 சதவீதம் அதிகம்.

நாட்டில் அக்.1 முதல் அக்.23-ஆம் தேதி வரை பருவமழைக்குப் பிந்தைய மழைப்பொழிவு 104 மி.மீ-ஆக பதிவானது. இது வழக்கமான 63.2 மி.மீ. மழைப்பொழிவை காட்டிலும் 65 சதவீதம் கூடுதலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புயல்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், அது புயலாக ஞாயிற்றுக்கிழமை தீவிரமடைந்தது. அந்தப் புயல் வங்கதேசத்தை நோக்கி செல்லும் நிலையில், அந்நாட்டின் டிங்கோனா தீவு மற்றும் சந்த்விப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்தப் புயல் காரணமாக, ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த மழைப் பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலுக்கு ‘சித்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது.



Read in source website

விண்ணுக்கு மிக அதிக எடையை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனமான ‘ஜிஎஸ்எல்வி மாக்-3’ ராக்கெட்டின் பெயரை ‘எல்விஎம்-3’ (செலுத்து வாகனம் மாக்-3) என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெயா் மாற்றம் செய்துள்ளது.

இந்தியாவின் விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் விண்வெளி திட்டத்திலும் இந்த எல்விஎம்-3 ராக்கெட்தான் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலமாக, வணிக ரீதியில் செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோவின் வெற்றி வாகனமாகவும் எல்விஎம்-3 ராக்கெட் உருவெடுத்துள்ளது.

பெயா் மாற்றத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

முன்னா் குறிப்பிட்ட பணியின் அடிப்படையில் ரக்கெட்டுகளுக்கான பெயா்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக, விண்ணில் துருவ செயற்கைக்கோள்களை செலுத்த பயன்படும் ராக்கெட் பிஎஸ்எல்வி எனவும், புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தை ஜிஎஸ்எல்வி எனவும் பெயா் வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது விண்ணில் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் மட்டுமின்றி, எந்தவொரு விரும்பும் சுற்றுப்பாதையிலும் செயற்கைக்கோள்களை செலுத்து முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதாவது, புவி ஒத்திசைவு புவி வட்டப்பாதை (ஜிஇஓ), புவிநிலை சுற்றுப்பாதை (எம்இஓ), தாழ் புவி சுற்றுப்பாதை (எல்இஓ) ஆகிய சுற்றுப்பாதைகளிலும் செற்கைக்கோள்களை தற்போது செலுத்த முடியும்.

அந்த வகையில், சுற்றுப்பாதையை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுவதை தவிா்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இந்த பெயா் மாற்றத்தை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.

இதில் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்தும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் அதே பெயரிலேயே தொடா்ந்து அழைக்கப்படும். ஆனால், ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் பெயா் மட்டும் எல்விஎம்-3 என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், ஜிஇஓ, எம்இஓ, எல்இஓ ஆகிய சுற்றுப்பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்தும் பணியிலும், நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டத்திலும் எல்விஎம்-3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது என்று அவா் கூறினாா்.



Read in source website

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் சோமநாத் தெரிவித்தாா்.

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாக்-3) கனரக ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை (அக்.23), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, செயற்கைக்கோள்கள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

மொத்தம் 43.5 மீட்டா் உயரமும், 640 டன் எடையும் கொண்ட எல்விஎம்-3 ராக்கெட்டானது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகு இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறியதாவது:

இந்தியாவுக்கு தீபாவளி திருநாள் கொண்டாட்டம் இரு நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இது ஒரு மைல்கல் சாதனை.

வரலாற்றுக்குரிய இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவா் பிரதமா் மோடிதான். ஏனென்றால் அவா்தான் கனரக ராக்கெட்டான எல்விஎம்-3 திட்டங்களை வணிகப் பயன்பாட்டுக்காகவும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். அதன் தொடா்ச்சியாகவே என்எஸ்ஐஎல் அமைப்பின் உறுதுணையோடு இத்தகைய திட்டத்தை இஸ்ரோ சாத்தியமாக்கியுள்ளது.

சந்திராயன் - 3 திட்டம் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட நிா்மாணப் பணிகளும், பரிசோதனை நடவடிக்கைகளும் முடிந்துள்ளன. இன்னமும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், அந்தத் திட்டத்தை சற்று தள்ளி வைக்க உள்ளோம்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஜூன் மாதத்தில் சந்திராயன் -3 திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் சொல்லப்போனால் ஜூன் மாதத்தில் அதனை செயல்படுத்துவதுதான் எங்களது உத்தேசம் என்றாா் அவா்.



Read in source website


பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார்.

கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகிறார் என்கிற வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தனக்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ரிஷி சுனக் கடந்த 2009-இல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார். 2020-இல் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிதித் துறையைத் திறமையாகக் கையாண்டதால், போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு அடுத்த பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார் ரிஷி சுனக்.

போரிஸ் ஜான்சன் ராஜிநாமாவுக்குப் பிறகு, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸுக்கு எதிராகப் போட்டியிட்டார். இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமரானார்.



Read in source website

சீன அதிபராக ஷி ஜின்பிங் (69) மூன்றாவது முறையாகத் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மா சேதுங்கிற்கு பின்னா் 3-ஆவது முறையாக அதிபராகத் தோ்வு செய்யப்பட்டதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளாா் ஷி ஜின்பிங்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. இக்கூட்டத்தில், ஷி ஜின்பிங் 3-ஆவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, கட்சியின் சக்திவாய்ந்த அரசியல் தலைமைக் குழுவுக்கு கடந்த சனிக்கிழமை அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமைகூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்தது. முற்றிலும் ஜின்பிங்கின் ஆதரவாளா்களான இக்குழு கட்சியின் பொதுச் செயலராக ஷி ஜின்பிங்கை தோ்வு செய்தது.

2013-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான ஷி ஜின்பிங், இப்போது இரண்டாவது முறையாக அதிபராக இருக்கிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிகழாண்டு நிறைவு பெறும் நிலையில், கட்சியின் பொதுச் செயலராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டதன் மூலம் மூன்றாவது முறையாக அவா் அதிபராகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மா சேதுங்கிற்குப் பின்னா் அதிபராக இருந்தவா்கள் அதிகபட்சம் இருமுறை அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தொடரவில்லை. அந்த வரலாற்றை மாற்றியுள்ளாா் ஷி ஜின்பிங்.

முன்னதாக, சீனாவின் தலைவராக ஷி ஜின்பிங்கை அங்கீகரிப்பதற்கான கட்சி அரசியலமைப்பின் திருத்தத்துக்கு கூட்டத்தில் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் உரையாற்றிய ஷி ஜின்பிங், ‘சூறாவளியையும், கொந்தளிப்பான தண்ணீரையும், ஆபத்தான புயலையும் எதிா்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். சா்வதேச நிலப்பரப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், குறிப்பாக சீனாவை அச்சுறுத்த, கட்டுப்படுத்த வெளிப்புற சக்திகள் முயற்சிக்கும் இவ்வேளையில், நாம் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்’ என்றாா்.

சீனா-அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதை மறைமுகமாக குறிப்பிட்டாா் ஷி ஜின்பிங்.

ஊழல் தடுப்புக் குழுவுக்கு புதிய உறுப்பினா்கள்: கட்சியின் ஊழல் தடுப்புக் குழுவுக்கு புதிய உறுப்பினா்களும் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டனா். அதிபா் ஷி ஜின்பிங்கின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தப் பிரிவு இயங்குகிறது. மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையம் எனப்படும் இந்தப் பிரிவு, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக உயா் ராணுவ ஜெனரல்கள் உள்பட 50 லட்சம் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது.



Read in source website

சீன அதிபராக மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஷி ஜின்பிங்கின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு சவால்கள் நிறைந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொரில்லா பிரிவு தலைவரின் மகனாகப் பிறந்த அவா், படிப்படியாக முன்னேறி, சீனாவின் சக்திவாய்ந்த தலைவரான மறைந்த மா சேதுங்கிற்கு இணையான தலைவராக இன்று தன்னை உயா்த்திக் கொண்டுள்ளாா்.

அவரது முதல் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தினாா். கடினமான வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை ஊக்குவித்தாா். இவை எல்லாம் சோ்ந்து நவீன சீன வரலாற்றில் சக்தி வாய்ந்த தலைவா்களில் ஒருவராக அவரை ஆக்கியுள்ளது.

1953, ஜூன் 15: சீன உள்நாட்டுப் போரின்போது கொரில்லா பிரிவு கமாண்டராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்த ஷி ஜோங்ஸனுக்கு மகனாகப் பிறந்தாா் ஷி ஜின்பிங்.

1969-75: அப்போதைய தலைவா் மா சேதுங்கால் தொடங்கப்பட்ட சமூக எழுச்சியின்போது, கிராமப்புறங்களுக்குச் சென்று வாழவும், வேலை செய்யவும் அனுப்பப்பட்ட ஏராளமான படித்த நகா்ப்புற இளைஞா்களில் ஷி ஜின்பிங்கும் ஒருவா்.

1975-79: ரசாயன பொறியியல் கல்வியை பெருமை மிகுந்த ஷின்ஹுவா பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக பெய்ஜிங் திரும்பினாா் ஷி ஜின்பிங்.

1979-82: மத்திய ராணுவ ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா்.

பிராந்திய தலைவா்

1982-85: ஹெபெய் மாகாணத்தின் சென்க்டிங் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராகவும், பின்னா் தலைவராகவும் நியமிக்கப்பட்டாா்.

1985: ஷியாமென் நகரத்தின் துணை மேயா் ஆனாா்.

1987: மக்கள் விடுதலை ராணுவத்தின் இசை மற்றும் நடனக் குழுவைச் சோ்ந்த புகழ்பெற்ற பாடகி பெங் லியுவானுடன் திருமணம்.

2000-2002: ஃபியூஜியன் மாகாண ஆளுநா்.

2007 மாா்ச்: கட்சியின் ஷாங்காய் தலைவராக நியமனம். ஆனால், சில மாதங்களே அப்பதவியில் இருந்தாா்.

2007, அக்டோபா்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் மிக்க அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழு உறுப்பினராக இணைந்தாா்.

2008, மாா்ச்: சீன துணை அதிபராக நியமனம்.

தேசிய தலைவா்

2012, நவம்பா்: சீன அதிபா் ஹூ ஜின்டாவுக்கு பதிலாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக நியமனம்.

2013, மாா்ச்: முதல் முறையாக அதிபரானாா்.

2017, அக்டோபா்: இரண்டாவது முறையாக அதிபா் பதவியைத் தொடா்ந்தாா். அவரது சித்தாந்தங்களை ‘ஷி ஜின்பிங் சிந்தனைகள்’ என்ற பெயரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அரசியலமைப்பில் சோ்த்துக்கொண்டது.

2018, மாா்ச்: அதிபராக இரண்டு முைான் இருக்க முடியும் என்ற தடையை சீன நாடாளுமன்றம் நீக்கியது.

2002, அக்டோபா்: கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் நியமனம்.



Read in source website

சென்னை: தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுகளுக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ்விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும், 2021-ம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022-ம்ஆண்டுக்கு தனி நபர், நிறுவனத்திடம் இருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2018,2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுக்கான விண்ணப்பங்கள், ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு வரும்டிச.31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 – 28190412, 28190413ஆகிய தொலைபேசி எண்கள், tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

கொச்சி: கேரளாவின் கொச்சியில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையம் உள்ளது.

இங்கு விஞ்ஞானியாக பணியாற்றும் எம்.பி.ராஜேஷ் குமார், புதிய வகை ஆங்லர் மீன் ஒன்றை அந்தமான் நிகோபார் தீவு கடலில் அண்மையில் கண்டறிந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக இந்த மீனுக்கு ‘ஹிமான்டோ லோபஸ் கலாமி’ என அவர் பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விஞ்ஞானி ராஜேஷ் குமார் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கடல் பகுதியில் நாங்கள் பயணித்து வருகிறோம். இந்த மீனை இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை. இது உலகில் எங்கும் பதிவாகவில்லை. எங்கள் மையத்தின் கடல்சார் மீன்வள ஆய்வுக் கப்பலான சாகர் சம்பதாவின் சமீபத்திய ஆய்வின்போது இந்த விசித்திரமான மீன் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.

1,000 மீட்டர் ஆழத்தில்.. அந்தமான் நிகோபார் தீவுகளில் கடலுக்கு அடியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்தில் இந்த புதிய வகை மீன் கண்டுபிடிக்கப்பட்டது.



Read in source website

திட்டங்களை நிறைவேற்றுவதில் காணப்பட்ட காலதாமதத்தால் 384 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.52 லட்சம் கோடிசெலவிடும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.150 கோடி மற்றும் அதற்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களை அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அந்தவகையில், வளர்ச்சிக்கு தீட்டப்பட்ட1,529 உள்கட்டமைப்பு திட்டங்களில் 662 திட்டங்களின் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, 1,529 திட்டங்களை அமல்படுத்துவதற்காக ரூ.21,25,851.67 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டங்களை முடிக்கும் தருவாயில் இதற்கான செலவினம் ரூ.25,78,197.18 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 384 உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக ரூ.4,52,345.51 கோடி செலவாகும் (முதலில் ஒதுக்கப்பட்ட தொகையில் இது 21.28 சதவீதம்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. 1529 உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 2022 செப்டம்பர் இறுதி நிலவரப்படி ரூ.13,78,142.29கோடி செலவிடப்பட்டுள்ளது. இது,மொத்த திட்ட செலவினத்தில் 53.45 சதவீதமாகும்.

காலதாமதமாக நடைபெற்று வரும் 662 திட்டங்களில், 133 திட்டங்கள் 1-12 மாதங்கள் வரையிலும், 124 திட்டங்கள் 13-24 மாதங்கள், 276 திட்டங்கள் 25-60 மாதங்கள், 129 திட்டங்கள் 61 மாதங்களுக்கும் மேலாக தாமதமாக பணிகள் நடைபெறக்கூடியவை. இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: தன்னார்வத் தொண்டு நிறுவனமான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை, சோனியா காந்தி குடும்பத்துக்குத் தொடர்புடைய தொண்டு நிறுவனமாகும். இந்த அரசு சாரா நிறுவனம், விதிமுறைகளை மீறியும், சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த உண்மை, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2020-ல் அமைத்த குழு நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த தன்னார்வ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த எஃப்சிஆர்ஏ உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைத் தலைவராக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளார். மேலும், அந்த தன்னார்வ அமைப்பின் அறங்காவலர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் உள்ளனர்.

1991-ல் தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2009-ம் ஆண்டு வரை, கல்வி, சுகாதாரம்,அறிவியல், தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமானோருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது. சொல்லப்போனால் இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக். அவரே முதலில் போர்க்கொடி தூக்கி போரிஸை ராஜினாமா செய்ய வைத்தார். இதன்பின் லிஸ் ட்ரஸ் பதவிக்கு வந்தது தனிக்கதை.

ஆனால் 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி அந்த அரியணைக்கு தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி.

யார் இந்த ரிஷி சுனக்? - ரிஷி சுனக்கின் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அவரது தாத்தா பாட்டி பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள். முதலில் ஆப்பிரிக்காவில் இருந்தவங்க 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். ஆகையால், பிறப்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனானார். இங்குதான் ரிஷியின் தந்தை மருத்துவராகவும், அவரின் தாய் மருந்துக்கடை ஒன்றையும் நடத்திவந்தனர். இங்கிலாந்தில் பிறந்தாலும் ஆங்கிலம் தவிர, அவருக்கு இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டே வளர்த்தனர் அவர்களின் பெற்றோர்கள்.

மொழிகள் மட்டுமல்ல, இந்திய கலாச்சாரத்தின் ஆணி வேரான மதமும் அவரை பின்பற்ற வைத்துள்ளனர். தன்னை ஒரு பெருமைமிக்க இந்து என்றே பல முறை ரிஷி குறிப்பிட்டுள்ளார். அவர் எம்பி ஆனதும் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்ததே இதற்கு சான்று.

இங்கிலாந்து அரசியல்வாதிகள் பலரும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயில்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதே வழியைப் பின்பற்றி ரிஷியும் தத்துவம் பயின்றார். அடுத்ததாக அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பு. இங்குதான் ரிஷியின் வாழ்வில் மிக முக்கிய தருணம் நிகழ்ந்தது. ஆம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதா மீது காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குடும்பத்துடன் அதிக பிணைப்பை கொண்டவர் ரிஷி. குறிப்பாக தனக்கு பெண் கொடுத்த மாமியார் மாமனார் மீது அதிகம் உண்டு. பலமுறை மேடைகளில் நாராயணமூர்த்தியை நினைத்து நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அரசியல் வேட்கை: பெருந்தொழிலதிபர் வீட்டின் மருமகனானால் அந்த தொழிலை கையிலெடுக்க வேண்டும் தானே. அது தான் ரிஷிக்கும் நடந்தது. ரிஷி, மனைவி துணையுடன் டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார். ஆனாலும் அவருக்குள் அரசியல் ஆசை துளிர்த்துக் கொண்டே இருந்தது. அதனால், கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் அவருக்கு அபார வெற்றியும் வந்து சேர்ந்தது.

ஆரம்பத்தில் சில ஆண்டுகள் எம்.பியாக இருந்தவர் வீட்டு வசதி, உள்ளாட்சித் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். காலநிலை மாற்றம் விவகாரத்தில் தெரசா மே பதவி விலக, இங்கிலாந்தின் பிரதமர் ஆனார் போரிஸ் ஜான்சன். அப்போது நடந்த அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல செயலரானார் ரிஷி. கிட்டத்தட்ட நிதியமைச்சருக்கு நிகரான பதவி இது.

2019 தேர்தலில் மீண்டும் ரிஷி வெற்றிவாகை சூட, இம்முறை அவருக்கு இணையமைச்சர் பதவி கிடைக்கலாம் என கருதப்பட்டது. எதிர்பாராத திருப்பமாக, போரிஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜாவித் ராஜினாமா செய்ய, ரிஷிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. இங்கிலாந்து நிதியமைச்சரானார். கரோனா காலம் முன்புவரை ரிஷி சுனக் மீது பொதுவெளியில் நேர்மறையான கருத்தே நிலவியது. இதனால், அடுத்த பிரதமர் ரேஸில் முன்னணியில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்கலுக்கு முன்பு அவர்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் இந்த வாய்ப்பை மழுங்கடித்தன.

கரோனா தொற்றுக்குப் பிறகு மற்ற நாடுகளைப் போலவே இங்கிலாந்தின் நிலைமையும் தலைகீழாக மாறியது. நிலைமை இவ்வாறு இருக்க, நிதியமைச்சர் என்ற முறையில் கரோனா தொற்றால் ஏற்பட்ட நிலையை சரிசெய்ய கடந்த பட்ஜெட்டில் இங்கிலாந்தில் புதிய வருமான வரி நிலைகளை அமல்படுத்தினார் ரிஷி சுனக். இங்கே தொடங்கியது அவரின் சரிவு. இந்த வரிநிலை ஆனது 1940-களுக்குப் பிறகு இல்லாத வகையில் இங்கிலாந்தில் வரி செலுத்துபவர்கள் மீது விதிக்கப்பட்ட மிக அதிக அளவு வரிச்சுமை என்கின்றனர் அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள். இது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சுமைக்கு இடையில் தனது பட்ஜெட்டில் எந்தப் புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாக அவருக்கு எதிரான மனநிலைக்கு வித்திட்டது.

மனைவி அக்‌ஷதாவின் வரி சர்ச்சை: ஒருபுறம் நிதியமைச்சராக மக்கள் மீது பல வரிகளைச் சுமத்திய ரிஷி, அதேவேளையில் தனது மனைவியின் சொத்துக்கான வரியில் கோட்டைவிட்டார். வேலை அல்லது திருமணம் காரணமாக இங்கிலாந்தில் குடிபெயர்பவர்கள் 6 ஆண்டுகளில் அந்நாட்டு குடியுரிமை பெறத் தகுதியானவர்கள். அப்படி குடியுரிமை பெற்றால் தங்களின் வருமானத்துக்கு இங்கிலாந்து நாட்டின் வரி செலுத்த வேண்டும்.

அதேநேரம், இங்கிலாந்தில் வசித்தாலும் பிரிட்டன் குடியுரிமை பெறாமல், Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்து பெற்று வசித்தால், இங்கிலாந்தை தாண்டி மற்ற நாடுகளில் பெறும் தங்களின் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசிக்கும் ரிஷி சுனக் மனைவி அக்‌ஷதா, இந்தமுறையை பயன்படுத்தி வரி விலக்கு பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள (0.93%) பங்குகளை கொண்டு ரூ.7,500 கோடி சொத்து மதிப்பு கொண்டுள்ள அக்‌ஷதா, இந்தப் பங்குகளில் இருந்து ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகள் லாபமாக பெறுகிறார்.

குடியுரிமை இல்லாத அந்தஸ்து முறையைப் பயன்படுத்தி இந்த லாபத்துக்கு அவர் வரி செலுத்தவில்லை என்பதை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தினர். இன்னும் இந்திய குடியுரிமை கொண்டிருப்பதால் இங்கிலாந்து நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அக்‌ஷதா இந்த வரிவிலக்கை பெற்றாலும், மக்கள் அனைவருக்கும் வரி விதிக்கும் அதிகாரத்தில் உள்ள நிதியமைச்சரின் மனைவி என்ற முறையில் அவர் செய்தது தார்மிகரீதியில் சரியில்லை என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ரஷ்யாவில் செயல்பட்டு வந்த இங்கிலாந்து அரசின் வணிகங்களை நிறுத்தினார் ரிஷி. அதேநேரம், ரஷ்யாவுடனான அக்‌ஷதாவின் குடும்ப வணிக தொடர்புகளுக்காக ரிஷி அவதூறுகளை எதிர்கொண்டார். அப்போது இன்ஃபோசிஸுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு முடிவுகளில் அக்‌ஷதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார். விளக்கம் அளித்தாலும் சர்ச்சைகள் தொடரவே, சில நாட்களிலேயே இன்ஃபோசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை அவசர அவசரமாக தற்காலிகமாக மூடியது.

'கிரீன் கார்டு' ஹோல்டர் - அமெரிக்காவின் குடியுரிமையான 'கிரீன் கார்டு'-ஐ ரிஷி வைத்திருந்தார் என்ற புதிய புகைச்சலும் கிளம்பியது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ரிஷி, இங்கிலாந்தில் அரசியலில் ஈடுபட்டு அமைச்சரான பின்பும் தனது கிரீன் கார்டை வைத்திருந்துள்ளார். அமைச்சராக அமெரிக்காவுக்கு கடந்த வருடம் அரசு முறை பயணம் செய்யும் முன்பே இந்த கிரீன் கார்டு அந்தஸ்த்தை ரத்து செய்தார் என்றும் எதிர்க்கட்சிகள் புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அவரின் பிரதமர் பதவியை முதல் ரவுண்டில் காலி செய்தன.

ஆனால் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இப்போது பிரதமராகியுள்ளார். உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியாக வரலாற்றில் முத்திரை பதிக்க இருக்கிறார் ரிஷி சுனக்.



Read in source website

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள் சாப்பிட்ட 69 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் அகமதோ லாமின் சமடே அண்மையில் அறிவித்தது உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஹரியாணா மாநிலம், சோனிப்பட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாக 41 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்துவந்துள்ளது. இதுவரை 25 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் - ரூ.100 கோடி) அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய நான்கு மருந்துகளில் உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில் இவற்றில் டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகிய ரசாயனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றால் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், தலைவலி, சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுவதன் மூலம் உயிரிழப்பு நேரக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் வெளியீடு தெரிவிக்கிறது.

இதையடுத்து, மெய்டென் நிறுவனத்தில் மருந்து தயாரிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் தற்காலிகத் தடை விதித்துள்ளன. இது குறித்து விசாரிக்க மருந்துகளுக்கான மத்திய நிலைக்குழு துணைத் தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

டை எத்திலீன் கிளைக்கால் காரணமான இறப்பு என்பது புதிதல்ல. இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நைஜீரியா, பனாமா ஆகிய நாடுகளில் டை எத்திலீன் கிளைக்கால் கலந்த மருந்து உட்கொண்டதால் இறப்புகள் ஏற்கெனவே பதிவாகி உள்ளன.

ஜம்மு யூனியன் பிரதேசம், உதம்பூர் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஹிமாசல் பிரதேசத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த அந்த இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைக்கால் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, 1986-இல் மும்பையில் 14 பேரும், 1998-இல் புது தில்லி அருகே உள்ள குருகிராமில் 36 பேரும் உயிரிழந்தனர்.

மெய்டென் நிறுவனம் தரக்குறைவான மருந்துகளை விநியோகித்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளில், குறைந்தது 5 முறை கேரளத்தில் தரக் குறைவான மருந்துகளை விநியோகித்ததாக இந்த நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது. பிகாரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கருப்புப் பட்டியலில் இந்த நிறுவனம் வைக்கப்பட்டது. தரக் கட்டுப்பாடு, மருந்துக் கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வியட்நாம் அரசால் கடந்த 2014-இல் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட 66 இந்திய நிறுவனங்களில் மெய்டென் நிறுவனமும் ஒன்று. 

அளவு ரீதியாகப் பார்த்தால், மருந்துப் பொருள்கள் தொடர்பான தொழிலில் உலகில் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் புழங்கும் துறையாக இது உள்ளது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2021-22-இல் இந்திய மருந்து நிறுவனங்கள் 24.6 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்திய மருந்துகளைப் பெறுவதில் 3.83 பில்லியன் டாலர் மதிப்புடன் ஆப்பிரிக்கா 3-ஆவது இடத்தில் உள்ளது.

மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் - லஞ்சம், ஊழல் காரணமாக - முறையான பரிசோதனைகள் நடைபெறுவதில்லை. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்துகளுக்கு தரச் சான்று அளிக்கும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் இதற்குப் பொறுப்பாளியாக்கப்பட வேண்டும். குழந்தைகள் இறந்தாலும்கூட அந்த சம்பவத்தை மூடி மறைக்கத்தான் முயல்கிறார்களே தவிர, பொறுப்பானவர்கள் யாரும் தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை.

செலவினத்தைக் குறைக்க புரொபிலின் கிளைக்காலுக்கு பதிலாக டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகிய ரசாயனங்களை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் சோதனை தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆண்டுதோறும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய சட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால், சோதனை தொடர்பான அறிக்கைகள் இந்தியாவில் வெளியிடப்படுவதில்லை. 

2022-23-ஆம் ஆண்டில் 27.4 பில்லியன் டாலர் மதிப்பில் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் காம்பியா சம்பவம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலை மாற வேண்டுமெனில், மருந்துத் தயாரிப்பு, அனுமதி, விநியோகம் தொடர்பான கொள்கைகளை முனைப்புடன் அமல்படுத்த வேண்டும்.

கொவைட் 19 தீநுண்மி பரவியபோது பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளுக்கு இந்தியா இலவசமாக தடுப்பூசி வழங்கியது. அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் காம்பியா சம்பவம் இந்திய மருந்துத் தயாரிப்பு துறைக்கு கரும்புள்ளியாக அமைந்துள்ளது.



Read in source website

இந்திய பொருளாதாரம் இதுவரை எதிா்கொள்ளாத மிகப் பெரும் சவால்களை எதிா் கொண்டு வருகிறது.

எரிபொருள்களின் விலையேற்றம், எரிசக்தியைப் பெறுவதில் உள்ள சிக்கல், மின்சாரம், உரங்களின் விலை உயா்வு - இப்படி இந்தியாவிற்குப் பல சிக்கல்கள். ‘வரும் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன’ என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவில் சொன்னது இந்தியாவில் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் இறங்குமுகமாக உள்ளது. ‘இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பாா்க்கவில்லை அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்வதாகவே நான் பாா்க்கிறேன். இந்திய மக்கள் பண்டங்களை இந்தியாவில் டாலா் கொடுத்து வாங்குவதில்லை இந்திய ரூபாய் கொடுத்துதான் வாங்குகிறாா்கள்’ என்ற நிா்மலா சீதாராமனின் விளக்கம் பேசுபொருளாகியிருக்கிறது.

‘சா்வதேச நாணய நிதியம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருப்பது சா்வதேச அளவில் இந்தியாவிற்கு மதிப்பினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த அறிக்கை உலக பொருளாதாரத்தில் இந்தியாமுன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

2023-இல் உலக முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாக வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. பிடித்து ஆட்டும் பணவீக்கத்தை சரி செய்யப் போராடி வரும் உலக நாடுகள், வரிகளை, வட்டி வீதத்தை அதிகரித்துக் கொண்டே போகின்றன. மக்கள் செலவுகளை சுருக்கத் தொடங்கியுள்ளாா்கள். இதனால் 2023-இல் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி அபாயச் சங்கினை ஊதியுள்ளது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட பணவீக்கம் ஏறுமுகத்தில்தான்.

இந்தியாவில், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவு கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலைகளை உயரச் செய்யும். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமையின் விலைகளும் ஏறுமுகத்தில் உள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை மிக அதிக விலைக்கு இந்தியாவில் விற்கப்படுகின்றன.

இந்திய ரூபாய், மதிப்பு இழக்கும் போது இந்தியாவிலிருக்கும் ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறும். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கும் சூழலில், மென்பொருள்களை ஏற்றுமதி செய்யும் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் உச்சத்தைத் தொட வேண்டும். ஆனால், பழைய உச்சத்தைக் கூட அவை தொடவில்லை.

தவிர, இந்தியத் தொழில் நிறுவனங்களின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்று வருகிறாா்கள். போட்ட முதலீட்டை வெளிநாட்டினா் திரும்பப் பெறுகிறாா்கள் என்றால், இந்தியப் பொருளாதாரத்தில் எங்கோ பிரச்னை இருக்கிறது என்று அா்த்தம்.

உலகில் பொருளாதார சிக்கல் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை எகிறும். ஆனால் இன்றைய சூழலில் தங்கத்தின் விலை சரிவில்.

107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உலக அளவில், சுமாா் 170 கோடி மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உருவாகியுள்ளது. உலக அளவில் 2008, 2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு, மந்தநிலை 2023-லும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

உயரும் வட்டி வீதம் மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும். விலைவாசி அதிகமாகும்போது மக்கள் தேவையைச் சுருக்கி பொருள்கள் வாங்குவதை குறைத்துக் கொள்வாா்கள். தேவை சரியும்போது உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால் வேலை இழப்பு அல்லது வருமானம் குறையும். தொழில்கள் நசியும். இவை அத்தனையும் சோ்ந்து பொருளாதார மந்தநிலையைக் கொண்டு வந்துவிடும்.

ஏழை நாடுகள், வளா்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி , அமெரிக்கா போல் வளா்ந்துவிட்ட நாடுகளிலும் இந்த தொழில் மந்த நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும் ?

உலக நாடுகள் பொருளாதார மந்தநிலையில் சிக்கிக் கொண்டால் அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும். இந்தியா பொருளாதார மந்தத்திலிருந்து விலகி நிற்க முடியாது. 2022 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகச் சரிந்தது. தொடா்ந்து ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்பதால் நுகா்வுமுறை ஆரோக்கியமாக இருந்தால் அது பொருளாதார வளா்ச்சிக்கு உதவும். ஆனால் பொருளாதார மந்த நிலையில் மக்கள் கையில் பணம் குறையும் போது நுகா்வு பழக்கம் தானாகக் குறையும். அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியை வெகுவாக பாதிக்கும்.

மக்கள்தொகை அதிகம் என்பதால் உணவுப் பொருள்களுக்கான தேவை குறையாது. ஆனால் உணவுப் பொருள்களின் விலையோ ஏறுமுகத்தில். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி உணவுப் பொருள்களின் விலை மேலும் ஏறும். இது பொது மக்களுக்கு பொருளாதார சிரமங்களை உருவாக்கும்.

இந்த சூழலில், இங்கிலாந்தின் முன்னாள் நிதி அமைச்சா் ஜிம் ஓ’நைல் இந்தியா குறித்து சொல்லியிருப்பது நம்பிக்கை தருகிறது. ‘அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியா போல சிறப்பாக செயல்படப் போகும் நாடு உலகில் இருக்காது. காரணம் உழைக்கும் இளைய தலைமுறையினா் இதர நாடுகளைவிட இந்தியாவில் அதிகம் இருக்கிறாா்கள்’ என்கிறாா் அவா்.

நிதி அமைச்சா் நிா்மலா எச்சரித்தது போல உணவுப் பற்றாக்குறை இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், கரோனா காலத்திலிருந்து மீண்டு வந்ததைப் போல 2023 பொருளாதார மந்தநிலையிலிருந்தும் இந்தியா மீளும் என்று நம்பலாம்!



Read in source website

இந்திய நாட்டில் ஆட்சி மாறும் போதெல்லாம் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்விக் கொள்கையை மாற்றுவதையே ஆட்சியாளா்கள் வழக்கமாகக் கொள்கின்றனா். அதற்காகவே தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை உருவாக்கி மாநிலங்களின் மேல் திணிக்கின்றனா். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை எடுத்துக் கொண்டது இதற்குதானா?

மத்திய அரசு என்ன நினைக்கிறது என்பது புரிகிறது. மாநில மொழிகளும், மாநிலப் பண்பாடுகளும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக எண்ணுகின்றது. ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் புகுத்துவதன் மூலம் இதனை மாற்றி விடலாம் என்பது மத்திய ஆட்சியாளா்கள் போடும் தவறான கணக்காகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் போலும்.

இப்போது கல்வி என்பது மிகப்பெரிய வணிகமாகி விட்டது. பணம் படைத்தவா்கள் தொடக்கக் கல்வி முதல் உயா்கல்வி வரை கல்வி நிலையங்களை அரசின் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் நடத்திக் கொண்டிருக்கின்றனா். கல்விக் கட்டணங்கள் ஒருபுறம், நன்கொடைகள் மறுபுறம் என்று வசூலிக்கின்றனா். ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டி பெற்றோரைக் கவா்கின்றனா்.

எவ்வளவு செலவானாலும் அந்தப் பள்ளியில்தான் தம் பிள்ளை படிக்க வேண்டும் என்று சில பெற்றோா் முடிவு செய்கின்றனா். இத்தகைய வறட்டு பெருமைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அவா்கள் தயாா்.

மாநிலங்களின் கல்விமுறைக்கு முற்றிலும் மாறுபட்ட முறையான சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் மத்திய அரசு தன்னிச்சையாக இந்தக் கல்வி நிலையங்களை நடத்துகின்றன. அகில இந்திய அளவில் பணிபுரியும் அரசு ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் பயன்படும் வகையில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

அகில இந்திய அளவில் பணி மாறுதல் பெற்று வரும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பயன்படும் வகையில் இந்தப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பள்ளிகள் என்பதால் நிதியுதவியும் தாராளமாகச் செய்யப்படுகிறது. தேவையான உள் கட்டமைப்புகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.

தாய்மொழிக் கல்வியை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக் கூட பயிற்றுவிக்கப்படுவதில்லை. ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதுவே இந்தப் பள்ளிகளுக்குக் கூடுதல் தகுதியாக மதிக்கப்படுகின்றது. உயா் வகுப்பினரும், படித்த வா்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகள் இங்கு பயில்வதைப் பெருமையாகக் கருதுகின்றனா்.

பொதுவாக கல்விக்கூடங்களில், மாணவா்களின் பொது அறிவை வளா்க்கும் நூலகக் கல்வி, இசை, கைத்தொழில், குடிமைப் பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால் அண்மைக்காலமாக அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எல்லாப் பாட வேளைகளும் மனப்பாடம் செய்வதற்கே ஒதுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் இவையெல்லாம் பாடத்திட்டங்களில் இடம் பெற்று மாணவா்களை முழு மனிதா்களாக வளா்த்தெடுத்தன. இந்த மனப்பாடக் கல்வி மூலம் மாணவா்கள் மனித இயந்திரங்களாக மாற்றப்படுகின்றனா் என்பதே உண்மை. இப்போது கல்வியின் திசையே மாறிவிட்டது. படிப்பின் நோக்கமே உயா் பதவியும், பணம் ஈட்டுவதுமே என்று ஆகிவிட்டது.

இதனால்தான் பள்ளிகளும், கல்லூரிகளும் வன்முறைக் களங்களாக மாறி வருகின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவா்களாக ஆசிரியா்களும், ஆசிரியா்களுக்கு ஆதரவாக பள்ளி நிா்வாகமும் இருப்பது என்பது சமூகச் சீா்கேட்டின் உச்சமாகும். இதனை ஒழிக்க அரசும், கல்வித்துறையும், எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தரவில்லை.

அன்று தமிழ்நாட்டில் ஐந்து வகையான கல்விமுறைகள் செயல்பட்டு வந்தன. மாநில வாரியக் கல்வி முறை, மெட்ரிக்குலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, ஓரியண்டல் கல்வி முறை, நா்சரி பள்ளி கல்வி முறை என்னும் இந்த ஐந்து வகையான கல்வி முறையால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அதனை சரி செய்து ‘சமச்சீா் கல்வி’ முறையை உருவாக்க பேராசிரியா் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி, மழலையா் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவா் சோ்க்கை, பாடத்திட்டம், தோ்வு முறை போன்றவற்றை ஆசிரியா் - பெற்றோா் இணைந்து முடிவு செய்தல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் அதிகாரப் பரவல் போன்ற பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்திருந்தது.

இந்த ஐந்து அமைப்புகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான சீருடை என்பதை மெட்ரிக்குலேஷன் பள்ளி நிா்வாகங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து, நீதிமன்றத்துக்குப் போயின. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இதுவும் நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல்வேறு ஆணைகள் மூலம் இவையும் நீா்த்துப் போகச் செய்யப்பட்டன. சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை இதனால் பெருகின.

தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இந்த சமச்சீா் கல்வியைச் செயல்படுத்துவது இல்லை. அரசுப் பள்ளிகளைவிட மேம்பட்ட பள்ளிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள அவை விரும்புகின்றன. அப்போதுதான் அவா்களது கல்வி வணிகம் தொய்வின்றித் தொடரும்.

இந்திய அளவில் நிகழும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறும் வகையில் தமிழகக் கல்வி முறை அமையவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு அரசு அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டது. அப்போதைய கல்வியமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனும், கல்வித்துறைச் செயலாளா் உதயசந்திரனும் போா்க்கால அடிப்படையில் செயல்பட்டனா்.

தமிழகப் பள்ளிகளில் அப்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்தி ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு. அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 போ் கொண்ட ஒரு குழுவை 2017 மே மாதம் அமைத்தது.

இந்தக் குழு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது தொடா்பாக பல்வேறு துறைகளின் வல்லுநா்கள், கல்வியாளா்கள், எழுத்தாளா்கள், ஆசிரியா்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்தது.

சிங்கப்பூா், நியூசிலாந்து, உள்ளிட்ட வெளிநாடுகளின் பாடத் திட்டங்கள், என்சிஇஆா்டி பாடத்திட்டம், என 15 வகையான பாடத்திட்டங்களை ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை அடிப்படையாக வைத்து புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

சமச்சீா் கல்வி பாடத்திட்டத்தைக் கொண்டு வந்தபோதே, ‘அது தரமற்றது’ என்று கூறி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நீதிமன்றத்துக்குச் சென்றன. தங்களது கல்வி வணிகத்துக்குக் குந்தகம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தன. என்றாலும் உச்சநீதிமன்றம் அவா்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

இப்போது ‘நீட்’ தோ்வு வந்தபோதும் தமிழ்நாடு பாடத்திட்டம் தரமற்றது என்றே சிலரால் பேசப்பட்டது. அதன் காரண காரியங்கள் பற்றி ஆராய யாரும் முன்வரவில்லை. அப்போது நடத்தப்பட்ட நீட் தோ்வில் தமிழகப் பாடத்திட்ட வழியில் படித்தவா்களை விட சிபிஎஸ்.இ. வழியில் படித்த மாணவா்களே அதிகமாகத் தோ்ச்சி பெற்றனா்.

காரணம், ‘நீட்’ தோ்வுக்கான வினாக்கள் எல்லாம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டதுதான். ஒரு நாட்டில் பல்வேறு பாடத்திட்டங்கள் மூலம் மாணவா்கள் படிக்கும்போது ஒரே ஒரு பாடத்திட்டத்திலிருந்து மட்டும் கேள்வி கேட்கப்படுவது என்ன நியாயம்? அதுவும் மாநிலத்துக்கு மாநிலம் கேள்விகள் வேறுபட்ட நிலையில் ஒரே மாதிரித் தோ்வு என்பது எப்படிச் சரியாகும்?

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இந்தக் கேள்விகளை எழுப்பி தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடையும் விதித்தனா். அதனை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கி, ‘நீட்’ தோ்வு முடிவுகளை வெளியிட வழியமைத்துக் கொடுத்தது.

முறையாகக் கல்வி கற்று மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்தவா்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது. ‘நீட்’ என்னும் ஒற்றைத் தோ்வு மட்டுமே மாணவா்களின் ஆற்றலைத் தீா்மானிக்கும் என்பதை கல்வியுலகம் எப்படி ஏற்றுக் கொண்டது? இதுபற்றி உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டாமா?

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக அரசு புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தது. ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விடவும் மேலானது‘ என்று முதலமைச்சரும், கல்வியமைச்சரும் பிரகடனம் செய்தனா். இவை எல்லாமே ‘நீட்’ தோ்வையே மையமாகக் கொண்டவை.

மகாத்மா காந்தி, ‘ஒருவரிடம் உள்ள சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும்’ என்று கூறியுள்ளாா். எனவே மாணவா்களின் முழு ஆளுமையை வெளிப்படுத்துவதாக கல்வி இருக்க வேண்டும். அதற்கேற்ப பாடத் திட்டங்கள் அமைய வேண்டுமே தவிர, ‘நீட்’ தோ்வை மட்டுமே நோக்கமாகக் கொள்வது சரியான அணுகுமுறை ஆகாது.

லட்சக்கணக்கான மாணவா்கள் தோ்வு எழுதும் நிலையில், அவா்களில் சில ஆயிரம் போ்தான் மருத்துவக் கனவோடு இருப்பாா்கள். மிகச் சிலருக்காக மிகப் பலரும் இந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்? மருத்துவம், பொறியியல் தவிர வேறு துறைகள் எல்லாம் தேவையற்றவையா?

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். சிபிஎஸ்இ மட்டும்தான் சிறந்த பாடத்திட்டம் என்பது போலவும், மற்றவையெல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும் பரப்புரை செய்யப்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். கல்வியில் சமத்துவம் இல்லையென்றால் சமுதாயத்தில் எப்படி சமத்துவம் காண முடியும்?

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘அனைவருக்கும் கல்வி’ என்பது இன்னும் ஏட்டளவிலேயே இருக்கிறது. அக்கனவு நனவாக புதிய புதிய சட்டங்களும், திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கின்றனா்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

இந்தியா டிஜிட்டல்மயமாகி கொண்டிருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரமும் டிஜிட்டல்மயமாகி கொண்டிருக்கிறது. முன்னணி அரசியல் கட்சிகள், களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வதில் காட்டும் தீவிரத்துக்கு நிகராக, சமூக ஊடக பரப்பிலும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன.

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மக்கள் தீவிரமாக பயன்படுத்தும் நிலையில், மக்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை புரிந்து கொள்ளலாம். எனினும், இந்த டிஜிட்டல் பிரச்சாரத்தின் புதியபோக்காக, சமூக ஊடகங்களில் பிரச்சார நோக்கில் விளம்பரங்களை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதோடு, கட்சியின் ஆதரவாளர்கள் சமூக ஊடக பக்கங்கள் அமைத்து பரஸ்பரம் அவதூறு, பிழை தகவல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

குஜராத் தேர்தல்: குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், சமூக ஊடகத்தில் தேர்தல் பிரச்சாரம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிரணியினரை குறிவைக்கும் வகையிலான பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பால்து எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ‘பேஸ்புக்’ பக்கம் இதற்கு உதாரணமாக அமைகிறது. முதலை கண்ணீர் மற்றும் பச்சோந்தி படங்களை கொண்டுள்ள இந்த பக்கம், குஜராத்தி மொழியில் தகவல்களை வெளியிடுகிறது. அரவிந்த் கேஜ்ரிவாலை நம்ப வேண்டாம் என்ற வாசகம் கொண்ட இந்த பக்கம், ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை குறி வைத்து தினமும் 3 பதிவுகளையேனும் வெளியிட்டு வருகிறது.

மூன்று மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த பக்கம், 20 ஆயிரம் பாலோயர்களை கொண்டுள்ளதோடு, மெட்டா மேடையில் (பேஸ்புக்) ரூ.142 கோடி அளவுக்கு விளம்பரம் செய்துள்ளது. இந்த பக்கம் எந்த கட்சிக்கு ஆதரவானது என குறிப்பிடாவிட்டாலும், குறுகிய காலத்தில் இந்த தளம் மெட்டா மேடையில் கணிசமான தொகையை விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மெட்டா விளம்பரம்: முன்னணி சமூக ஊடக சேவையாக பேஸ்புக் இருப்பதால் அதில் கணிசமாக விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. அரசியல் கட்சிகள் சார்பிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் மாத காலத்தில், மெட்டா மேடையில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களில் குஜராத் மாநிலம் முன்னிலை வகிப்பதும் கவனிக்கத்தக்கதாக அமைகிறது.

இந்த கால கட்டத்தில், குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்கள் மூலம் ரூ.5.27 கோடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா விளம்பர நூலக தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இதில் பால்து எக்ஸ்பிரஸ் பக்கம் முதலிடம் வகிக்கிறது. குஜராத் ஆம் ஆத்மி கட்சி அடுத்த இடத்தில் உள்ளது.

விளம்பர செலவு: தேர்தல் பிரச்சாரத்துக்கான செலவு குறித்து தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதில் கோடிகளை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல், சமூக ஊடகங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட முதல் தேர்தலாக கருதப்படுகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. இந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானதில் சமூக ஊடக பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அடுத்து 2019 தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சமூக ஊடக பிரச்சாரத் தில் ஈடுபட்டாலும், மற்ற கட்சிகளை விட பாஜக இதில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையில், சமூக ஊடக மேடைகளில் விளம்பரம் செய்வதிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. கூகுள் தளத்திலும் கணிசமாக விளம்பரம் செய்யப்படுகிறது.

அவதூறு பிரச்சாரம்: மக்களை கவர அரசியல் கட்சிகள் சமூக ஊடக பதிவுகளை வெளியிட்டு வருவதோடு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தகவல் தொழில்நுட்ப அணி வாயிலாகவும் ஆதரவு பகிர்வுகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கென வியூகம் அமைத்து தரவும் ஆலோசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், சமூக ஊடக பிரச்சாரம் அவதூறு, பதில் அவதூறாக மாறுவதும் நிகழ்ந்து வருகிறது. பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் அரசியல் கட்சி விளம்பரங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றாலும், பல அரசியல் பக்கங்கள் குறிப்பிட்ட எந்த கட்சி சார்பிலானது என குறிப்பிடாமல் செயல்படுகின்றன.

தற்போது குஜராத் மாநிலத்தில் இந்த போக்கை காண முடிகிறது. இதற்கு முன்னர் மாநில தேர்தல்களில் இதேபோன்ற போக்கை காண முடிந்ததாக தகவல் சரிபார்ப்பு தளமான ‘பூம்லைவ்’ தெரிவிக்கிறது. பிஹார் மற்றும் உத்தர பிரதேச மாநில தேர்தல்களின் போது, குஜராத்தின் பால்து எக்ஸ்பிரஸ் பக்கம் போன்ற பேஸ்புக் பக்கங்கள், பாரதிய ஜனதாவின் எதிரணி கட்சிகளை குறி வைத்து அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தலிலும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பக்கங்கள் தீவிரமாக செயல்பட்டன. இந்த பக்கங்கள் சார்பாக கணிசமாக விளம்பரமும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு பதிலடி தரும் பக்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியல் விளம்பரங்கள்: இந்தியாவில் பேஸ்புக் மேடையில் செய்யப்படும் விளம்பரங்களில் அரசியல் விளம்பரம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இந்த செய்தி தளம் தெரிவிக்கிறது. அதிக விளம்பரங்கள் செய்யும் 15 பக்கங்களில் 65 சதவீதம் அரசியல் பக்கங்கள் என தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க, சமூக ஊடக பிரச்சாரம் எந்தளவு உதவும் என்பது தெரியவில்லை. எனினும் இவற்றின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதை புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் சமூக ஊடகத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. எனினும், அவதூறு நோக்கில் சமூக ஊடக பக்கங்கள் அமைக்கப்படுவது மற்றும் அவற்றின் சார்பாக கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யப்படுவது கவலை தரும் போக்காக அமைகிறது.

பெரும்பாலான அவதூறு பக்கங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி தகவல் தெரியாதது, தேர்தல் பிரச்சார களத்தில் ஒரு பிரச்சனையாக அமைகிறது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தேர்தல் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும், இது சமூக ஊடக நிறுவனங்கள், ஜனநாயக செயல்முறையை தீர்மானிப்பது போல அமைந்துவிடும் ஆபத்து உள்ளது என்ற கருத்தும் பலமாக முன்வைக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், அவதூறு பிரச்சாரமும், பதிலடி பிரச்சாரமும் புதிய அவதாரம் எடுத்துள்ளன. இது சமூக ஊடக நிறுவனங்கள், ஜனநாயக செயல்முறையை தீர்மானிப்பது போல அமைந்துவிடும் ஆபத்து உள்ளது.



Read in source website

சமூக வரலாற்றாய்வில் எல்லா சமூக நிகழ்வுகளையும் உலக அளவில் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியாது. பெண்களின் தனிச் சொத்துரிமை குறித்த ஆய்வும் இதில் அடங்கும். காலனிய ஆட்சியின் உரிமையியல் சட்டத்தில் குடும்பத்தின் பூர்விகச் சொத்து, தந்தையின் சொத்து, கணவன் ஈட்டிய சொத்து ஆகியவற்றில் பெண்ணுக்குரிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனினும் சில இனக்குழுச் சாதிகளில் மரபுவழிச் சட்டங்கள் என்ற பெயரில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது.பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை சாதியும் மதமும் முடிவுசெய்துவந்ததன் பின்னணியில், இந்துப் பெண்கள் அனைவருக்குமான சொத்துரிமையை அம்பேத்கர் அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகினார். கணவர் சொத்தில் மனைவியின் உரிமையை ஏற்றுக்கொள்ளும் சட்டம்,இந்திய அளவில் 1956இல்தான் நடைமுறைக்குவந்தது.



Read in source website

அக்டோபர் 24, 1801 தொடங்கி ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டிய சகோதரர்கள்,அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பியபாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ், ராணுவச் சட்டப்படி அவற்றைப் பொது வெளியில் தெரிவிக்க இயலவில்லை. எனவே, லண்டன் சென்றபின் ஜே.கோர்லே என்கிற எழுத்தாளர் மூலமாக Mahradu, an Indian Story of the Beginning of the Nineteenth Century: With Some Observations (1813) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

சிவகங்கைச் சீமையில் திருப்பத்தூர் மண்ணில்நடைபெற்ற கோரக் கொலைகளை ஆங்கில ராணுவ அதிகாரியாலேயே பொறுக்க முடியவில்லைஎன்றால், எத்தகைய கொடூரமான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோர்லே 10, 12 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ராணுவ அதிகாரி தெரிவித்த செய்திகளைத் தானே அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்றால், இவை குறித்த செய்திகள் வெளிவரக் கூடாது என்பதில் எத்தகைய அச்சுறுத்தலும், அபாயகரமான சூழ்நிலைகளும் நிலவியிருக்க வேண்டும் என்பதை அனுமானிக்கலாம்.

மருது பாண்டிய சகோதரர்களும், அவர்களது ஆண் வாரிசுகளும், தளபதிகளும், போராளிகளும் சிவகங்கை– திருப்பத்தூர் பகுதிகளில் கண்ணில்பட்டவுடன் உரிய விசாரணையும் மேலிட ஆணையுமின்றி அழித்தொழிப்பதற்கு ஆங்கிலேயர்களும் இங்குள்ள துரோகிகளும் இணைந்து திட்டமிட்டதுதான் காரணம். இந்தக் கொடூரங்களால் கிடைத்த பயனை எதிரிகளும் துரோகிகளும் பங்கிட்டுக்கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் தெளிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்பு சுல்தான் 1799இல் மரணமடைந்தநிலையில், ஆங்கிலேயருடைய முழுக் கவனமும் ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிபணியாத ராஜ்ஜியங்கள், பாளையங்கள் மீது பாய்ந்தது. படிப்படியாக வாரிசுரிமை, வரிபாக்கி, ராணுவ உதவி என சுதேசி மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் பிரச்சினைகளை உருவாக்குவதும், அந்தப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிபணியாத அல்லது இசைவு தராதவர்களின் ராஜ்ஜியங்களையும் பாளையங்களையும் ராணுவ பலத்தின் மூலம் ஆக்கிரமித்துக் கைவசப்படுத்தினர். அப்பகுதிகளுக்குப் ‘பொம்மை ராஜா’க்களையும் போலி ஜமீன்தார்களையும், பாளையக்காரர்களையும் உருவாக்கும் திட்டப்படி ஆங்கிலேயர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள்.

இந்த இருண்ட அரசியல் சூழ்நிலையில்தான் ஆங்கிலேயரின் ராணுவ பலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள். இதற்கான யுத்தக் கூட்டணியும் அமைத்திருந்தார்கள். இந்த விவரங்களையும் நடவடிக்கைகளையும் ஆங்கிலேயர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்டார்கள். திப்பு சுல்தான் போர்க்களத்தில் இறந்துவிட்டமையாலும் இங்கிலாந்துக்கும்பிரான்ஸுக்கும் தொடர்ந்து போர் நடந்துகொண்டிருந்ததாலும் ராணுவ உதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதைத் தீர்க்கமாக அறிந்துதான் ஆயுதம் ஏந்திய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள்.

அதன் முதல் வெளிப்பாடாக சின்ன மருது பாண்டியர் தலைமையில் திருச்சி ஆர்க்காடு நவாப் கோட்டைக்கும் திருவரங்கம் கோயிலுக்கும் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை 1801 ஜூன் 16 அன்று பகிரங்கமாக மக்கள் பார்வைக்கு ஒட்டினர். இந்தச் செய்தி அறிந்த ஆங்கிலேய ராணுவம் சிவகங்கைப் பகுதியை முற்றுகையிட்டது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, ஆங்கிலேயப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்தவர்கள் மட்டுமல்ல, தங்கள் ஆண் வாரிசுகளையே முழுமையாக இந்த மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்கள் மருது சகோதரர்கள். ஆனால், இந்த நிகழ்வுக்கு 50 ஆண்டுகள் கழித்து 1857இல் நடைபெற்ற சிப்பாய் எழுச்சியை முதல் சுதந்திரப் போராட்டம் எனப் பதிவுசெய்திருப்பது வரலாற்றுப் பிழையாகும்.

தென்னகத்தில் நடைபெற்ற இந்தப் போர்க்களங்கள்தான் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும். அதற்கான சான்றுகள் பல உண்டு. இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்திக்கொண்டு இந்தத் தென்னாட்டுப் போர்க்களங்கள்தான் முதல் சுதந்திரப் போராட்டம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆங்கிலேய ஆதரவாளர்களின் கொடுமையும் கொடூரமும் நிறைந்த இந்தப் படுகொலைகள் நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல் சுதந்திரப் போராட்ட வீர மரணங்கள் குறித்த நினைவிடங்களை உள்ளடக்கிய அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த முயற்சிகளின் முன்னெடுப்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருது பாண்டியர்களுக்குச் சென்னையில் சிலை வைப்பதாக அறிவித்துள்ளார். தென்னகத்தின் இந்தப் போர்க்களங்கள்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என அறிவிக்கவும், அது தொடர்பான அருங்காட்சியகம் அமைப்பதற்கும் மத்திய அரசின் உரிய ஒத்துழைப்புடன் முதல்வர் செய்து முடிப்பதன் மூலம் நமது பெருமை, புகழ், வீரத்தை உலகம் மீண்டும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மருது பாண்டியர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் எதிரான அனைத்து தென்னகத்துப் போர்க்களங்களில் போராடி, உயிர் துறந்த, தூக்கிலிடப்பட்ட, நாடுகடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட தீரர்களுக்கும் இந்தச் சிவந்த மண்ணில் உருவாக்கப்படவுள்ள நினைவாலயம் காலம் கடந்தும் இந்த வரலாற்றின் அணையா விளக்காக என்றும் ஒளி பரப்பிக்கொண்டே இருக்கும். - பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் அைமச்சர், தொடர்புக்கு: officeofponmuthu@gmail.com



Read in source website

இந்தியாவிலேயே முதன்முறையாக 1994 இல் ‘நீர் மேலாண்மைக் கொள்கை’யைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், கழிவுநீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தத் தமிழ்நாடு தயங்குகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள் (54%); இது தேசியச் சராசரியைவிட அதிகம்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசியக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் விவரப் பட்டியல் (2021) அறிக்கையின்படி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 6,421 மில்லியன் லிட்டர் (மி.லி.) கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவற்றில் 15% மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மத்திய அரசின் தூய்மை நிலை (2016) அறிக்கையின்படி தமிழகக் கிராமங்களில் கழிவுநீர் 46.3% திறந்தவெளியிலும், 23.4% குளம், குட்டைகளிலும், 18% ஓடைகள், சிற்றாறுகளிலும், 7.3% ஆறுகளிலும், 5% மற்ற வகையில் எவ்விதச் சுத்திகரிப்புக்கும் உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளன. இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது.



Read in source website