DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 24-08-2022

சென்னை: ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் காப்பீடு வழங்கக் கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களை காப்பீடு செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2019-ல் திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கோரி வழக்கு தொடரபட்டது.  ரூ.1.5 கோடி இழப்பீடு கோரி  தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகான விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளின் நிறுவனம் ரூ.64.33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் காப்பீடு வழங்கக் கூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Read in source website


சென்னை: தமிழக போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்துக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் குடும்பத்துக்கு இலவசப் பேருந்து பயண சலுகை வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் பணி நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும்.

பணியின்போது மரணமடையும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
 



Read in source website

 

'மல்லிகாவின் வீடு' சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இலக்கியத்திற்கான 2022 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது   இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் குழந்தைகள் எழுத்தாளர் ஜி. மீனாட்சியின் 'மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதை தொகுப்பு தேர்வாகியுள்ளது.

ஜி.மீனாட்சி பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி', `புதிய தலைமுறை', `மங்கையர் மலர்' இதழ்களில் பணியாற்றியவர். தற்போது `ராணி' வார இதழின் ஆசிரியர்.

பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்களிப்புப் பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்' அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு' விருதையும் ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்.

இம்முறை குழந்தை இலக்கியத்திற்கான சாகித்ய விருதில் பஞ்சாபி மொழி தேர்வு செய்யப்படவில்லை. விருதுக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு செப்புப் பட்டயமும்  ரூ. 50,000 தொகையும் வழங்கப்படும். 

விருது வழங்கும் நிகழ்வு தில்லியில் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.



Read in source website

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய உயர்வு குறித்து 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 14வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இதில், முக்கிய திருத்தமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும் அதிகபட்சமாக ரூ. 7,981ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 என்றும் உயர்த்தப்பட்டு கையெழுத்தானது.



Read in source website

 

அடுக்கடுக்காய் வளர்ந்த அறிவியலால் கூட இன்றளவும் எட்டாக் கனியாக இருப்பது புற்றுநோய்க்கான தீர்வுதான். அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு அதிகமானதோ, அந்த அளவு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதுமட்டுமா? புற்றுநோய் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை கூடதான். ஊருக்கு ஒரு புற்றுநோய் மருத்துவமனையும், வீதிக்கு பல புற்றுநோயாளிகளும் என்ற இன்றைய நிலைதான் நவீன வாழ்வியல் மாற்றத்திற்கு கிடைத்த பரிசு என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த புற்றுநோய் சிகிச்சை மையங்கள் இன்று அதிகமானதற்கு காரணம் நாம் மறந்துபோன பாரம்பரிய உணவு முறையும், பழக்க வழக்கமும், வாழ்வியல் நெறிமுறையும் தான். 

இயற்கையால் ஆன மண்பானை, உலோக பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதை மறந்த நாம், நாகரிக வளர்ச்சி என்று கருதி பிளாஸ்டிக் குடங்களை நாடியதும் கூட அதற்கான காரணமாகிவிட்டன.

அந்த வகையில் தொற்றா நோய்களில் இன்று உலகையே கவலைக்குள்ளாகி அச்சத்தில் ஆழ்த்தியுள்ள முக்கிய நோய் புற்றுநோய். காரணம் நிரந்தர தீர்வு இந்நோய்க்கு இல்லாதது தான். 

எவ்வளவு தான் செல்வம் சேர்த்து வைத்தாலும், அதை எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் ஆரோக்கியம் தான் என்ற பழமொழியின் விளக்கம் இந்நோயைப் பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சேமித்த செல்வங்கள் அனைத்தையும் இழந்தாலும், புற்றுநோயால் இழந்த ஆரோக்கியத்தை பெற முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். அந்த அளவுக்கு, மிகக் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் எமன் நோய்தான் இந்த புற்றுநோய். அத்தகைய புற்றுநோயை வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது.  

அந்த வகையில் குடல் புண்ணும், குடல் புற்றுநோயும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும், புதுயுகத்திற்கும் நிச்சயம் சவால் தான். 

ருசிக்காக உணவகத்தை நாடி வகை, வகையாய் சுவை கூட்டப்பட்ட உணவுகளோடு வாழ்வியலை அதிகம் விரும்புபவர்கள், பின்னாளில் குடல் புண்ணுக்காக மட்டுமின்றி குடல் புற்றுக்கும் மருத்துவமனையை நோக்கி நடையாய் நடக்க வேண்டியிருக்கும் என்பது தான் உண்மை. 

சுவையை அதிகரிக்க உணவில் சேர்க்கப்படும் பல்வேறு செயற்கை வேதிப்பொருள்கள் இயற்கையான உடலமைப்பை சிதைக்கும் தன்மை கொண்டவையே.

ஆக, குடல்புண் தொடங்கி குடல் புற்றுவரையில் வரவிடாமல் தடுக்கும் மூலிகை ஒன்று உண்டெனில் அது நிச்சயம் சுவை விரும்பிகளுக்கு அமிர்தம் தான். அந்த அமிர்தமான மூலிகையினை சிவன் கோவில்களில் நாள்தோறும் அர்ச்சனை செய்வதில் இருந்தே அதன் மருத்துவத் தன்மை பலருக்கு தெரியும்.

சிவத்துருமம் என்று கடவுள் பெயராலே நம்மை காக்க வந்துள்ள சித்த மருத்துவ அமிர்த மூலிகைதான் ‘வில்வம்’.

வில்வத்தின் சிறப்பு என்னவெனில் இலை, பிஞ்சு, பூ, காய், பழம், வேர் இவை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. 

துவர்ப்பும், கசப்பும் உடைய இதன் இலைத்தளிர் சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு பயன்படுத்தப் படுகிறது. இது சிவனுக்கே குளிர்ச்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றது. அப்போது நமக்கு இல்லாமலா என்ன? ஆம். பித்தம் சார்ந்த நோய்களை நீக்குவதில், சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் வில்வ இலை மிகச் சிறந்தது என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனை “வில்வத்தின் வேருக்கு வீறு குன்மம் வாயுகபம், சொல்லவொணா பித்தம் தொடர்சோபை நீங்கும்” என்ற அகத்தியர் குணவாகப் பாடல் வரிகளால் அறியலாம். 
  
வில்வ இலையில் உள்ள பிளவனாய்டு வேதிப்பொருளால் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், கிருமிக் கொல்லியாகவும், முக்கியமாக பாக்டீரியா மற்றும் வைரஸ்-க்கு எதிராக செயல்படும் தன்மையும், வயிற்றுப் போக்கினை நீக்கும் தன்மையும், இரைப்பையை பாதுகாக்கும் தன்மையும், பெருங்குடல் அழற்சி(புண்) போக்கும் தன்மையும், கல்லீரலை மற்றும் இருதயம் பாதுகாக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், வீக்க முருக்கியாகவும், மூட்டுவாதத்தை குறைப்பதாகவும், தோல் ஒவ்வாமையை தீர்ப்பதாகவும் உள்ளது.

மேலும், வில்வ பழம் நாள்பட்ட வயிற்றுப் போக்கு, வயிற்றுப்புண் சிகிச்சையிலும், மலமிளக்கியாகவும், பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றது.

வில்வத்தில் முக்கியமாக லிமோனீன், லினாலூல், α-கியூப்பீன், சினியோல், β-காரியோஃபிலீன் போன்ற நறுமணம் தரும் உயிர் வேதிச்சேர்மங்களை கொண்டுள்ளது. ஏஜெலின், ஏஜெலினைன், மார்மெலின், புரோகூமரின் மற்றும் மார்மெலோசின், டார்டாரிக்அமிலம், லினோலிக் அமிலம், டானின்கள், அந்தோ சயனின்கள் மற்றும் பிளாவனாய்டு கிளைகோசைடுகள் ஆகியவையும் உள்ளது. இவைகளே, இதன் தனித்துவமான மருத்துவ குணத்திற்கு காரணம்.

மேலும், வில்வ பழத்தில் தண்ணீர், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கரோட்டின், தையமின், ரிபோஃப்ளேவின்(பி2), நியாசின், அஸ்கார்பிக்அமிலம் (சி) போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் மற்றும் டார்டாரிக் அமிலமும் உள்ளது. 

மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத தாதுஉப்புக்களும் உள்ளன.

வில்வத்தில் உள்ள பல்வேறு தாவர வேதிப்பொருள்கள் அதன் வயிற்றுப் புண்ணை ஆற்றுவது முதல் புற்றுநோய் வருவதை தடுக்கும் தன்மையுடையதாக உள்ளன. வயிற்று புற்றுநோய் என்பது அதிகம் ஏற்படும் புற்றுநோய் வகைகளில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இதுவே 3 ஆவது மிகவும் ஆபத்தான புற்றுநோய் என்பதும் குறிப்பிடத்தக்கது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மரணத்திற்கு இரண்டாவது அதிக காரணம் புற்றுநோய்தான். அத்தகைய புற்றுநோயினைத் தடுக்க இந்த சித்த மருத்துவ மூலிகை பெரிதும்பயன்படும். 

வில்வ இலையும், பழமும் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். லுபியோல், யூஜெனோல், லிமோனென், சிட்ரல், ருடின் மற்றும் அந்தோ சயினின்கள் போன்ற வேதிப்பொருள்கள் புற்றுநோய் தடுப்பு செய்கையைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது.

நாள்பட்ட வயிற்றுப் புண் நிலையே புற்றுநோயாக மாறக்கூடும் என எச்சரிக்கிறது நவீன அறிவியல்.

சித்த மருத்துவத்தில் வில்வபழத்தைக் கொண்டு செய்யப்படும் வில்வாதி லேகியம் வயிற்றுப்புண் ஆற்றும் தன்மையுள்ளது. இது பித்தத்தையும் குறைக்கும். சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள வில்வபழத் தைலம், எண்ணெய் தேய்த்து குளிக்க பித்தத்தை குறைத்து கண்ணுக்கு குளிர்ச்சி தரும். 
ஆகவே, அடிக்கடி வயிற்றுப்புண்ணால் அவதியுறும் பலரும் இந்த வில்வபழத்தை எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும்.

அதேபோல், வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களும் வில்வ இலையுடன், மிளகு சேர்த்து கசாயமாக்கி எடுத்துக்கொள்ள நோய்நிலையில் நல்ல முன்னேற்றம் தரும்.

சிவத்துருமம் என்ற பெயரைக் கொண்ட வில்வம் எளிய சித்த மருத்துவ மூலிகை. இதன் மிகப் பெரிய பயன் மக்களைச் சென்றடையவே சிவன் கோவில்கள் தோறும் இதை வைத்து, நம்மை பயன்படுத்தக் கூறியிருப்பது, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப்போன மறை முகசெய்தி. 

ஆக, இத்தகைய வில்வம் என்பது சித்த மருத்துவம் நம் குடலுக்கு தந்த இயற்கை கொடை. அதை பயன்படுத்தினால் சீரண மண்டலத்தின் பாதுகாப்பு நிச்சயம் உறுதி.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com
 



Read in source website

காவல் துறையில் ஆா்டா்லி முறையை நான்கு மாதங்களுக்குள் ஒழிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவா் காவலா் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டைக் காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உயரதிகாரிகள் தங்கள்கீழ் உள்ளவா்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்ததுடன், உயரதிகாரிகளின் வீடுகளில் ஆா்டா்லி-களை பணியமா்த்துவது, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கா், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை உள்ளிட்டவை குறித்தும் விசாரித்தாா்.

மேலும், காவல்துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் ஆா்டா்லி-களை வைத்திருக்கக் கூடாது என்ற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் ஆா்டா்லி விவகாரம் தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ஆா்டா்லி முறையை காவல்துறையினா் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான ஆா்டா்லிகளை திரும்பப் பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் எஞ்சியவா்களும் திரும்ப பெறப்படுவாா்கள்.

காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆா்டா்லி-களை பயன்படுத்த மாட்டோம் என ஐபிஎஸ் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதாக டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து இந்த விவகாரத்தில், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது , பாராட்டுக்குரியது என நீதிபதி தெரிவித்தாா்.

ஆா்டா்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது தெரிவதாக அரசின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை இறுதி தீா்ப்பளித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம்,‘ அரசு உத்தரவாதம் அளித்தபடி ஆா்டா்லி முறையை நான்கு மாதங்களுக்குள் ஒழிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா். இதுதொடா்பாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.



Read in source website

நிகழ் ஆண்டுக்கான (2022) யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகளை சாகித்திய அகாதெமி புதன்கிழமை அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பி.காளிமுத்து, ஜி.மீனாட்சி ஆகியோரின் படைப்புகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு "யுவ புரஸ்கார்' விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான "பால சாகித்திய புரஸ்கார்' விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி
வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2022) இரு விருதுகளும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
சாகித்திய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில், மேலும் 23 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிப் பிரிவில்...: தமிழ் மொழிப் பிரிவில் "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' எனும் கவிதை தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி. காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.மீனாட்சி எழுதிய "மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதை நூலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு விருதுகளும் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பால சாகித்திய புரஸ்கார் விருது, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.
தமிழ் தவிர, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, நேபாளி, ஒடியா, தெலுங்கு, சம்ஸ்கிருதம், உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website


மின்னஞ்சலில் அதிக அளவில் விளம்பரங்கள் வருவதாக கூகுள் நிறுவனத்தின் மீது தனியுரிமை எல்லை மீறப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பயனர்களிடம் எந்தவித அனுமதியையோ அல்லது விருப்பத்தையோ பெறாமல், தொடர்ந்து விளம்பரங்கள் வருவதாக கூகுள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உலகில் அதிக அளவிலான மக்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கூகுள் நிறுவனத்தின் (ஜி மெயில்) மின்னஞ்சலையே பயன்படுத்துகின்றனர். 

இந்நிலையில், பயனர்களின் விருப்பத்தைப் பெறாமல் அதிக அளவிலான விளம்பரங்கள் நேரடியாக இன்பாக்ஸுக்கே வருவதாக புகார் எழுந்துள்ளது. 

பிரெஞ்சு தரவு பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ஆஸ்திரியா நாட்டின் நொய்ப் என்ற நிறுவனம் மின்னஞ்சலில் அதிக அளவு விளம்பரங்கள் வருவதாக கூகுள் மீது புகார் அளித்துள்ளது. 

விளம்பரங்களையும், விளம்பரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களையும் அனுப்புவதற்கு கூகுள் நிறுவனம் பயனர்களிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பிறகு பயனர்களுக்கு நேரடியாக வணிக ரீதியிலான விளம்பர மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.



Read in source website

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ. 20,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.

1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

இந்தக் கப்பலில், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள்,  16 படுக்கைகள், பரிசோதனை மையங்கள், சிடி ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம்பெற்றுள்ளது. மருத்துவப் பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்ட இரும்புகளைவிட நான்கு மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கப்பலில் 2,400 கி.மீ. அளவிற்கு நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இது கிட்டத்திட்ட கொச்சியிலிருந்து தில்லி வரையிலான தூரம். ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5 நாள்களுக்கு நடைபெற்றது. பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை  வரும் செப் - 2 ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற உள்ளது என்றும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சித் தத்துவத்தை அடித்தளமாகக் கொண்டே நாடு செயல்பட்டு வருகிறது. நாட்டின் முறையான செயல்பாட்டுக்கு நிதி முக்கியமானது. நிதி விவகாரத்தில் அதிக அதிகாரம் மத்திய அரசுவசமே உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருந்தாலும், அதற்குரிய நிதியை வழங்க வேண்டிய தாா்மிகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான வரிப் பகிா்வை முறைப்படுத்தும் நோக்கிலேயே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக் குழு அமைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு எவ்வளவு பகிா்ந்து அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். அந்தப் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்குக் கிடையாது. அதன் காரணமாக, மாநிலங்களுக்குத் தேவையான நிதியைப் பகிா்ந்து வழங்குவதில் நிதிக் குழுவின் பரிந்துரைக்கும் அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது.

அதேபோல், ‘செஸ்’ எனப்படும் வரி மீது கூடுதல் வரி விதிக்கும் நடைமுறையையும் மத்திய அரசு அதிகமாகக் கடைப்பிடித்து வருகிறது. செஸ் வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதுவும் மாநிலங்களின் நிதியாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

வருவாய்-செலவு பங்கு

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருவாயிலும் செலவிலும் மத்திய, மாநில அரசுகளின் பங்கு

நிதிக் குழு பரிந்துரை

வரி வருவாய் பங்கு

ஒட்டுமொத்த வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு (லட்சம் கோடி ரூபாயில்). 2019-20, 2020-21-ஆம் நிதியாண்டுகளில் கரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசுகளின் வருவாய் பெருமளவில் குறைந்தது. ஆனால், மத்திய அரசின் வரி வருவாய் தொடா்ந்து அதிகரித்தவாறே இருந்தது.

செஸ் வரி பங்கு

மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் செஸ் வரி மூலமாகக் கிடைத்த வருவாயின் பங்கு. 2011-12-ஆம் நிதியாண்டில் செஸ் வரி மூலமாக 10.4 சதவீத வருவாய் மட்டுமே மத்திய அரசுக்குக் கிடைத்தது. ஆனால், இது 2020-21-ஆம் நிதியாண்டில் சுமாா் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு தனது வருவாய் பெருக்கத்துக்கு செஸ் வரியை மட்டுமே நம்பியுள்ளது இதன் மூலமாக வெளிப்படுகிறது.



Read in source website

கோதுமையைத் தொடா்ந்து அரிசியின் சில்லறை விற்பனை விலையும் கடந்த ஆண்டை விட 6.31 சதவீதம் உயா்ந்து கிலோ ரூ. 37.7-க்கு விற்பனையாவது அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

நெல் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் இந்த விலை உயா்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, உற்பத்தி குறைவு மற்றும் இருப்பு குறைந்ததன் காரணமாக கோதுமை மாவின் விலை 17 சதவீதம் அளவுக்கு அண்மையில் உயா்ந்தது. கடந்த ஆண்டு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 30.04-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 35.17-ஆக உயா்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. தற்போது, அரிசியின் விலையும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து நிபுணா்கள் கூறுகையில், ‘நடப்பு கரீஃப் பருவத்தில் நெல் பயிரிடும் பரப்பு 8.25 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதால் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2022-23 கரீஃப் பருவத்தில் நிா்ணயிக்கப்பட்ட 11.2 கோடி டன் இலக்கைவிட உற்பத்தி சற்று குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, அரிசி சில்லறை விற்பனை விலை உயா்ந்து வருகிறது. இருந்தபோதும், மத்திய அரசிடம் மிகப் பெரிய அளவில் 396 லட்சம் டன் அளவுக்கு அரிசி இருப்பு இருப்பதால், கோதுமை மாவு அளவுக்கு விலை உயர வாய்ப்பிருக்காது’ என்றனா்.

மத்திய வேளாண் துறை அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் 374.63 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், நடப்பு கரீஃப் பருவத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை 343.70 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாா்க்கண்ட், மோ்கு வங்கம், பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களில் பருவ மழை குறைந்ததன் காரணமாக நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

‘பினாமி பரிவா்த்தனையில் ஈடுபடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கும் பிரிவு 3(2) செல்லாது; அந்தப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இல் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு, 2016-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பினாமி பரிவா்த்தனையில் ஈடுபடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.

இதனை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்ட நடைமுறைகள், 2016-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதிக்கு முன்தேதியிட்டு செயல்படுத்த முடியாது; எதிா்கால நடவடிக்கைகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்று தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சி.டி.ரவிகுமாா், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் 3(2) என்ற பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அது செல்லத்தக்கதல்ல’ என்று தீா்ப்பளித்தனா்.



Read in source website

பராகுவே தலைநகா் அசுன்சியானில் இந்தியாவின் புதிய தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்.

பிரேசில், பராகுவே, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். கரோனா பரவலுக்குப் பிறகு அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய வழிகளை அறியவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா். தனது பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்ட அவா், பராகுவே சென்றாா்.

இந்தியா-பராகுவே இடையே ராஜீய உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய வெளியுறவு அமைச்சா் என்ற பெருமையை எஸ்.ஜெய்சங்கா் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், அந்நாட்டு தலைநகா் அசுன்சியானில் இந்தியாவின் புதிய தூதரகத்தை அவா் திறந்துவைத்தாா். புதிய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது இந்தியா-பராகுவே இடையிலான உறவை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என்று ட்விட்டரில் அவா் தெரிவித்தாா்.



Read in source website

புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுவோருக்கு ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு ஆண்டுக்கு 24x7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு, 1959-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

மத்திய அரசு செவ்வாயன்று செய்த திருத்தங்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளிலிருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் குறித்த அறிவிக்கையில், ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அல்லது அந்தந்த உயர் நீதிமன்றங்கள் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை ஓராண்டு காலத்துக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு வாடகை இல்லாமல் வீடு மற்றும் பாதுகாப்பு வசதியும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இவ்விரு வசதிகளும் வழங்கப்படும்.

ஏற்கனவே, அயோத்தியா வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முழு நேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

 

ரஷியாவில் இனி ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் சாச்சி நகரில்  இந்தாண்டு ஃபார்முலா - 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற இருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக, அப்போட்டியை ரஷிய அரசு ரத்து செய்தது.

இதனால், உடனடியாக வேறு நாட்டிற்கு பந்தியத்தை மாற்றும் சூழல் ஏற்பட்டதால், இனி வரும் காலங்களில் ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் ரஷியாவில் நடைபெறாது என ஃபார்முலா-1 அமைப்பின் தலைமைச் செயலர் ஸ்டெஃபனோ டாமினிகலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தாண்டு ரஷியாவில் நடைபெற இருந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி உக்ரைன் போர் காரணமாக சென்னையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், புதிதாக ஒருவருக்கு எபோலா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதியில் உள்ள பெனி நகரில் கண்டறியப்பட்டுள்ள அந்த எபோலா தீநுண்மி, கடந்த 2018 முதல் 2020 வரை இரு மாகாணங்களில் பரவி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய எபோலா பரவலுடன் தொடா்புடையது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.



Read in source website

தமிழக மின்வாரியம் சார்பில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மின்தடைபற்றிய புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

மின்தடை, மின்சார விபத்து,மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தை 94987 94987 என்ற செல்பேசி எண் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தற்போது மத்திய அரசின் அனைத்து துறைகளும், துறை அமைச்சர்களும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளைத் தொடங்கி அதன்மூலம் தங்களது துறைசார்ந்த தகவல்கள், அறிவிப்புகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றைவெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல், தமிழக அரசும், அமைச்சர்களும் சமூக வலைதளங்களைப்பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், மின்வாரியம் சார்பில் சமூக வலைதள கணக்கு இல்லாததால், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தங்களது புகார்களைத் தெரிவிக்க மின்னகத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் (@TANGEDCO_Offcl), இன்ஸ்டாகிராம் (@tangedco_official), ஃபேஸ்புக் (@TANGEDCOOffcl) ஆகிய சமூக வலைதளங்களில் மின்வாரியம் கணக்குகளைத் தொடங்கியுள்ளது. இதில், மின்சாதன பராமரிப்புக்காக மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள், மின்னணு (டிஜிட்டல்) மின்கட்டண விழிப்புணர்வு விவரங்கள் பதிவிடப்படுகின்றன.

அத்துடன், புகார்களையும் பொதுமக்கள் அளிக்கலாம். இவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மின்வாரியத்தின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டுப் பெற்று, அதை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

தெற்கு ரயில்வேயில் 2021-22-ம் நிதியாண்டில் 78.5 சதவீதம் டிக்கெட் முன்பதிவு இணைதளம் மூலமாக நடைபெற்றுள்ளது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீதத்தை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இதன் எல்லையாக தமிழகம், கேரளம், புதுச்சேரி முழுமையாகவும், ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இவற்றில் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 79 சதவீதம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இணையத்தைப் பயன்படுத்துவது அண்மையில் வெளியான ஒரு புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

அதாவது அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, தெற்குரயில்வேயில் 2018-ம் ஆண்டு டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுக்கப்பட்ட காகித டிக்கெட்களின் சதவீதம் 26 முதல் 28 சதவீதமாக ஆக இருந்தது. இது 2019-20-ம்நிதியாண்டில், 22.8 சதவீதமாகவும், 2021-22-ம் நிதியாண்டில் 21.5 சதவீதமாகவும் குறைந்தது.

அடுத்தசில ஆண்டுகளில் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு 90 சதவீதத்தை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்புக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதி செய்வதற்கான நம்பகத்தன்மை, பயணிகளுக்கு ஏற்ற அம்சங்கள் இருப்பது, எளிதாக முன்பதிவு செய்யும் வசதி, இ-டிக்கெட் பதிவு செய்து காகிதத்தை (பிரின்ட் அவுட்) எடுத்துச்செல்வதில் தளர்வு ஆகியவை முக்கியக் காரணம்.

இதுதவிர, கரோனா காலத்துக்கு பிறகு, ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டருக்கு வந்து டிக்கெட் எடுப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது மற்றொரு காரணம். சென்னை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் நைனா மாசிலாமணி கூறியதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட முக்கிய இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக முன்பதிவு கவுன்ட்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

இதனால், பலர் இணையவழியில் டிக்கெட் முன்பதிவுக்கு மாறினர்.மேலும், இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செயல்முறைஉண்மையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலமாக, வேகமாகடிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறது. மேலும், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களைப் பெறுவதற்கு இது அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.

வேலை இழக்கும் அபாயம்

இதுகுறித்து தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது: இணையவழியில் டிக்கெட் முன்பதிவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இணையவழியில் டிக்கெட் முன்பதிவு 74 சதவீதமாக இருந்தது. இது, இப்போது 80 சதவீதத்தை அடைந்துள்ளது. இணையவழி மூலமாக டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால், டிக்கெட் கவுன்ட்டர்களில் புதிய ஆட்கள் நியமனம் இருக்காது.

தெற்கு ரயில்வேயில் 1.3 லட்சம் ஊழியர்களில் 24 ஆயிரம் ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், வணிகப்பிரிவில் சுமார் 2 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கிராமப்புறத்தில் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் வணிகப்பிரிவு பணியாளர்களை பெரிய ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு பணியாற்ற வந்துவிட்டனர்.

சிறிய ரயில் நிலைய டிக்கெட்கவுன்ட்டர்களில் தனியார் ஒப்பந்தப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இணையதளத்தில் மூலமாக டிக்கெட் முன்பதிவு 90 சதவீதத்தை எட்டிவிட்டால், கவுன்ட்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் மேலும் குறைக்கப்பட்டு, மற்றப் பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். மேலும், வணிகப்பிரிவு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர்கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்ட்டர்களில் தேவைக்கு ஏற்பஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் மூன்றாம் தரப்பினருக்கு ஒப்பந்த அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்யகொடுக்கிறோம். இணையதளத்தில் முன்பதிவு செய்வது பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது என்றார்.



Read in source website

புதுடெல்லி: பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு மீண்டும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை காக்க உதவிகோரி தமிழக அரசுக்கு அத்துறையின் சார்பில் ஜெர்மனியிலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடந்த 1963 முதல் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இதை, தமிழால் ஈர்க்கப்பட்டு, தமிழ்பயின்று, அறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மனியர் நிறுவினார். இதில், ஆய்வுக்கான வகையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் உள்ளன.

இந்த தமிழ் பிரிவுக்கு முதன்முறையாக 2018-ல் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக 2020-ல் இதை மூடும் அபாயம் உருவானது.

அமெரிக்கவாழ் இந்தியர்களால் திரட்டப்பட்ட பாதி நிதியால் மூடும் முடிவு, 2022 ஜூன் வரை தள்ளிப்போனது. மீதம் உள்ள பாதித்தொகையான ரூ.1.25 கோடியை அளிப்பதாக, கடந்த ஆட்சியின் தமிழக அரசால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பால் இந்த நிதியை அதிமுக அரசால் அளிக்க முடியவில்லை.

இப்பிரச்சினை கடந்த 2021, ஜுலை 7-ல் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகி கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, புதிய ஆட்சியின் முதல்வரான மு.க.ஸ்டாலின், செய்தி வெளியான அதே நாளில் ரூ.1.25 கோடியை அனுப்பி வைத்தார். தற்போது மீண்டும் மூடும் அபாயம் கொலோனின் தமிழ் பிரிவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொலோனின் தமிழ்ப் பிரிவை காக்க, அதன் உதவிப் பேராசிரியரான ஸ்வென் வொர்ட்மான் சமீபத்தில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2021, ஜுலை 7-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தமிழக அரசின் நிதியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக 2023 மார்ச் 31 வரை தமிழ் பிரிவை காத்து தொடர உதவியதாக முதல்வருக்கு நன்றிதெரிவித்துள்ளார்.

தமிழ் பிரிவின் நிலைத்தன்மைதொடர நிதியுதவி தேவைப்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்ட பேராசிரியர் ஸ்வென், மேலும் ஒரு வருடத்துக்கான நிதி அளித்து தமிழக அரசு உதவும்படி கோரியுள்ளார்.

கொலோனின் தமிழ் பிரிவின் சிக்கல்களை தீர்க்க ஜெர்மனியின் ‘ஐரோப்பா தமிழர் கூட்டமைப்பு’, அமெரிக்காவின் ‘தமிழ் சேர் இன்க்’ ஆகிய தமிழ் அமைப்புகளும் முன்வந்தன. இவற்றின் சார்பில் நிதியாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொலோனின் தமிழ் பிரிவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சிக்கலை தீர்க்க, இப்பல்கலைக்கழகத்தின் இதர துறைகளுடன் இணைந்து தமிழையும் அடிப்படையாக்கி, ஓர்ஆய்வு நிறுவனத்தை அமைக்கஇப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் திட்டமிடுகின்றனர்.

முறையாக நிர்வகிக்கவில்லை

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஜெர்மனிவாழ் தமிழர்கள் வட்டாரங்கள் கூறும்போது, “இதுவரை இல்லாத வகையில் கொலோனின் தமிழ் பிரிவு சிக்கலுக்கு உள்ளாக, அதை முறையாக நிர்வகிக்காதது தான் காரணம். இதற்கு தமிழக அரசு மீண்டும் உதவுவதுடன் தனது சார்பில் ஒருவரை இங்கு நியமித்து தமிழ் பிரிவின் நிர்வாகத்திலும் பங்குகொண்டால் தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். இதை செய்யத் தவறினால், கொலோனின் பழம்பெருமை வாய்ந்த நம் தமிழ் அழியும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தன.

இதுபோல், ஜெர்மனியில் பல்வேறு நகரங்களின் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பிரிவுகள் உள்ளன. இவை ஹேம்பர்க், ஹைடில்பர்க், பொக்கும் ஆகியனவாகும்.

இவற்றுக்கு நிதி உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சிறந்தமுறையில் தொடர்கின்றன. எனவே, இந்தமுறை அப்பல்கலைக்கழத்துடன் ஓர் உடன்படிக்கை செய்து தமிழக அரசு கொலோனுக்கு நிதியுதவி அளித்து அதன் தமிழ் பிரிவை காப்பது அவசியம்.

சென்னையில் நேற்று முன்தினம் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி தமிழுக்கான இருக்கைகளை தெற்காசியாவின் 5 நாடுகளில் அமைப்பதுடன் இவற்றை, கொலோனிலும் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் சார்பில் அமைப்பதும் பேருதவியாக அமையும்.



Read in source website

சென்னை: அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக 400 ஓட்டுநர்களை தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் பணியமர்த்த விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பு:

அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்கு கனரக போக்குவரத்து வாகன உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம், இதற்கான விண்ணப்ப படிவத்தை, சென்னை, பல்லவன் சாலை, விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளரிடம் (உபகரணங்கள்) செப்.12-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்தவிண்ணப்பத்தை செப்.13 பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், பிற்பகல் 3.30 மணியளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 12 பணிமனைகளில் மொத்தம் 400 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். அனைவரும் 24 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். கிளை மேலாளர்வழங்கும் பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஓட்டுநர்களுக்கான விடுப்பு, வருகைப் பதிவு உள்ளிட்டவற்றை தேர்வான ஒப்பந்த நிறுவனம் பராமரிக்க வேண்டும். ஒப்பந்த காலம் குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் கால அளவாகும்.



Read in source website

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகழாய்வில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப் பட்டலம், இரும்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிடைத்த முதுமக்கள் தாழி மூடிகள் கூம்பு வடிவில் இருந்த நிலையில், தற்போது ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. தட்டை வடிவிலான பகுதியில் பனை ஓலைப்பாய் அச்சு போன்ற பதிவுகள் காணப்படுகின்றன.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காயவைப்பதற்கு பனை ஓலைப்பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

முதுமக்கள் தாழி மூடியில் காணப்படுவது பனை ஓலை பாயின் அச்சு என்றால் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பனை ஓலைபொருட்களை பயன்படுத்தியிருப்பது உறுதியாகும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: சென்னையில் நேற்று காலணி, தோல் பொருட்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காலணித் தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழக தொழில் துறை சார்பில் காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 5 முதலீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசைப் பொறுத்தவரை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்கள் வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதை மனதில் கொண்டுதான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

பெரும் முதலீடுகள் மேற்கொள்ளப்படும், செமிகண்டக்டர், மின் வாகனங்கள், சோலார் செல்கள் உற்பத்தி, தகவல் தரவு மையங்கள், பெட்ரோலியப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள், நகைகள், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறோம். இந்த துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

எந்த துறையாக இருந்தாலும், அதை முன்னோக்கிச் செலுத்த சிறந்த கொள்கை வகுக்க வேண்டும். அந்தவகையில், காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், பசுமை ஹைட்ரஜன் கொள்கை, எத்தனால் கொள்கை, திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கை, திருத்தப்பட்ட வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் வெளியிடப்படும்.

அதேபோல, வழக்கமான சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் விரைவில் வெளியிடப்படும்.

தேசிய அளவில் காலணி உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 26 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 45 சதவீதமாகவும் உள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் காலணி மற்றும் தோல் உற்பத்தியில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பது, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவையே புதிய கொள்கையின் நோக்கம்.

சிப்காட், சிட்கோ மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மூலம், 30 முதல் 50 ஏக்கர் பரப்பில் தொழில்பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன், புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க உள்ளது.

தோல் அல்லாத காலணிகள் துறை மீதும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய கொள்கையில், தோல் அல்லாத காலணித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில், 250 ஏக்கர் பரப்பில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது காலணி உற்பத்திக்கான மூலப் பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. இந்தப் பூங்கா மூலம், மூலப் பொருட்களையும் நாமே தயாரிக்க முடியும். உலகச் சந்தையில் ‘மேக் இன் தமிழ்நாடு’ முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற லட்சியத்தை இத்திட்டம் நிறைவேற்றும். காலணித் தொழில் மேலும் சிறப்படைய, அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த மாநாட்டில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்ணி, தோல் ஏற்றுமதிக் கழக மண்டலத் தலைவர் இஸ்ரார் அகமது, காலணி மேம்பாட்டு மன்றத் தலைவர் ராஜ்குமார் குப்தா, தோல் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர் ஆர்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

கோத்தாரி- பீனிக்ஸ் அக்கார்டு நிறுவனம் சார்பில் காலணி உற்பத்திக்காக ரூ.1,200 கோடி முதலீடு, ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்புக்காக ரூ.500 கோடி முதலீடு, கோத்தாரி- எஸ்இஎம்எஸ் குழுமம் சார்பில் தோல் அல்லாத காலணி உற்பத்திக்காக ரூ.300 கோடி முதலீடு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, வேகன் குழுமம் சார்பில் தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்திக்கு ரூ.150 கோடி முதலீடு, வாக்கரூ நிறுவனம் சார்பில் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ரூ.100 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.பெரம்பலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அமையும் இந்த திட்டங்கள் மூலம் 37,450 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: “அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு ஏன் ஒரு குழுவை அமைக்க கூடாது? அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஏன் ஒரு முடிவை எட்டக் கூடாது?” என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள், "தேர்தல் இலவசங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையமோ, குழுவோ அமைப்பதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்தால் "நீதிபதி லோதா" தலைமையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது தலைமை நீதிபதி ரமணா, "இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் தொடர்பாக பேசுகின்றோமே தவிர, தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து கருத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த இரு விவகாரத்தையும் நாம் கருத்தில் வேண்டும்" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் சிங்வி, "தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்படும் இலவசங்கள் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் எந்தக் குழப்பமும் வராது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் ஒரு அரசு ஆட்சியமைத்த பின்னர் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது என்பது சிக்கலானது, அபாயகரமானதும் கூட" என்றார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த தேர்தல் இலவசங்கள் குறித்த விவகாரத்தில் ஆய்வு செய்ய ஆணையம் அல்லது குழு அமைத்தால் அதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை" என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, "இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பதற்கு ஏற்கெனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, இந்த இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் ஒரு குழுவை அமைக்கக் கூடாது? அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஏன் ஒரு முடிவை எட்டக் கூடாது?

இந்த ஆடம்பர இலவச அறிவிப்புகள் விவகாரம் என்பது ஒரு தீவிர பிரச்சினை. எனவே, இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு வர வேண்டும் என்பதே விருப்பம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடிவெடுக்கலாம். இதுபோன்ற இலவசம் அறிவிப்புகள் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் இது ஒரு தீவிரமான விவகாரம். ஏனெனில், இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர் நாளை ஆளுங்கட்சியாக ஆட்சிக்கு வரலாம். அவ்வாறு ஆட்சிக்கு வருபவர்கள் இதை நிர்வகிக்க வேண்டும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும்" என்றார்.

அப்போது மத்திய அரசின் செலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இலவச அறிவிப்புகள் கடும் விளைவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இலவச மின்சாரம் என்ற அறிவிப்பால் பல மின் பகிர்மான கழங்கள் இழப்பை சந்திக்கின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே. மேலும், இலவச அறிவிப்பு விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமை என கோருகின்றன. சில அரசியல் கட்சிகள் இலவசம் என்ற ஒரு அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முற்படுகின்றனர். அதேவேளையில் தேர்தல் இலவச அறிவிப்பு கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்யும். அதேநேரம் இதற்காக ஒரு குழுவை அமைத்தால் அதன் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இந்த தேர்தல் இலவசங்கள் குறித்து விரிவாக விசாரித்து, விவாதித்த பின்னர் தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்றி பட்டியலிட உத்தரவிட்டார்.



Read in source website

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வது தொடர்பான யோசனைகளை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

டெல்லியில் நடைபெற்ற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் கட்கரி இந்த யோசனைகளை முன்வைத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஎன்பிஆர் மூலம் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணமும் நேரடியாக வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்தே எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதனை விரைவில் பைலட் திட்டமாக செயல்படுத்தத் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு, அனைத்து கார்களுக்கும் தொழிற்சாலைகளிலேயே நம்பர் ப்ளேட் பொருத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, கட்டண வசூல் நடவடிக்கையை திட்டமிட்டு வருகிறோம். ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல் தான் இருக்கிறது. சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்க வழியில்லை. அதற்கான வழியையும் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். நம்பர் ப்ளேட் மூலமாகவே சுங்கக் கட்டணம் வசூலாகும் வகையில் பிரத்யேக நம்ப ப்ளேட்களை பொருத்த எல்லா வாகன ஓட்டிகளும் அறிவுறுத்தப்படுவார்கள். இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமசோதா கொண்டுவர வேண்டும்.
இப்போதைய நிலவரப்படி சுங்கக் கட்டணத்தில் 97% அதாவது ரூ.40,000 கோடி ஃபாஸ்டேக் மூலம் வசூலாகிறது. எஞ்சிய 3% பேர் மட்டுமே நேரடியாக கட்டணம் செலுத்துகின்றனர். ஃபாஸ்டேக் இருப்பதால் வாகனங்கள் சுங்கச் சாவடியில் 47 விநாடிகள் மட்டுமே காத்திருந்தால் போதுமானது. 1 மணி நேரத்தில் 260 வாகனங்கள் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு கடக்கின்றன.

இவ்வாறு கட்கரி தெரிவித்தார்.

ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமரா: சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமரா அமைக்கும்போது சுங்கச்சாவடிகளில் நெரிசல் மேலும் வெகுவாகக் குறையும். ஆனால் இதில் இருக்கும் நடைமுறை சிக்கல் குறித்து தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் கூறுகையில், "இந்தத் திட்டத்தில் தவறில்லாமல் எவ்விதமான தகவல் கசிவும் இல்லாமல் நடைமுறைப்படுத்த பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படும். ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமரா (ANPR) வகை கேமராக்கள் நம்பர் ப்ளேட்டில் உள்ள 9 எண்களை மட்டுமே கணித்து கட்டணம் நிர்ணயிக்கும் என்பதால் நம்பர் ப்ளேட்டில் வேறேதும் அநாவசிய எழுத்தோ வார்த்தையோ இருந்தால் அதை ஏஎன்பிஆர் கேமரா ரீட் செய்யாது. இந்தியாவில் நம்பர் ப்ளேட்டில் கண்டதையும் எழுதும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இது பெரிய சவாலாக இருக்கும்" என்றார்.



Read in source website

ஐசால்: மிகச் சிறப்பான பணிக்காக பிரிட்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் மிசோரம் போலீஸ் இடம் பிடித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், காவல் துறையினர் கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு கடத்தல் விலங்குகள் 468-ஐ பறிமுதல் செய்தனர். கடந்த ஜூன் மாதத்தில் 930 கிலோ 229 கிராம் போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மிசோரம் காவல் துறையினரின் இந்த கடமை மற்றும் அர்ப்பணிப்பு பிரிட்டனில் இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்காக மிகவும் கவுரவமிக்க தங்க பதிப்பு 2022 சான்றிதழ்கள் மிசோரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை மிசோரம் காவல் துறை சார்பில் சிஐடி டிஐஜி பூ லால் ஹூலியானா ஃபனாய் பெற்றுக் கொண்டார்.

‘‘இறுதியில் எங்களின் கடமைமற்றும் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதுகளை, எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்கள் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறோம். மக்களின் ஆதரவும், நம்பிக்கையும், எங்களை மேலும் வலுப்படுத்தி, ஊக்கமளித்துள்ளது. எதிர்காலத்திலும், நாங்கள் சிறப்பாக தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என மிசோரம் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகத் தரத்திலான நடவடிக் கைகளை பதிவு செய்து, அவற்றை கவுரவிப்பதே உலக சாதனை புத்தகம் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.



Read in source website

பெங்களூரு: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையில் (எஸ்பிஜி) கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வேட்டை வகை நாயான முதோல் வகை நாய்கள் சேர்க்கப்படவுள்ளன.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் பகுதியில் பிரபலமாக உள்ளவை முதோல் வகை நாய்கள். இவை பார்ப்பதற்கு தமிழகத்திலுள்ள சிப்பிப்பாறை வகை நாய்களைப் போலவே காணப்படும். இந்த முதோல் வகை நாய்கள் வேட்டை, மோப்பம் பிடித்து ஆட்களை அடையாளம் காண வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வகை நாய்களை பிரதமரின் எஸ்பிஜி படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாகல்கோட்டை மாவட்டம் திம்மாப்பூர் அருகே முதோலில் அமைந்துள்ள கேனைன் ரிசர்ச் அன்ட் இன்பர்மேஷன் சென்டரிலிருந்து (சிஆர்ஐசி) 2 நாய்க்குட்டிகளை எஸ்பிஜி குழுவினர் வாங்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிஆர்ஐசி இயக்குநர் சுஷாந்த் ஹண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: எஸ்பிஜி குழுவினர். முதோல் நாய்களின் செயல்திறனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்காக 2 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

ஏற்கெனவே இந்திய ராணுவம், விமானப்படை, துணை ராணுவப் படைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகளும் இந்த வகை நாய்களின் செயல்திறனைக் கண்டு வாங்கிச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சிஆர்ஐசி அமைப்பு கர்நாடக கால்நடை, விலங்குகள் மற்றும்மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக இயக்குநர் பி.வி.சிவப்பிரகாஷ் கூறும்போது, “தூரத்தில் கேட்கும் சிறு சத்தத்தைக் கூட இந்த வகை நாய்கள் கேட்டு மோப்பம் பிடிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக வேகத்தில் ஓடி வேட்டையாடும். மிகவும் உயரமான வேலி, மதில் சுவர்கள் போன்றவற்றைக் கூட தாண்டிக் குதிக்க வல்லவை. மற்ற நாய் வகையுடன் ஒப்பிடும்போது எந்தவித சீதோஷ்ண நிலையிலும் உயிர் வாழக் கூடியவை முதோல் இன நாய்கள்’’ என்றார்.



Read in source website

திருவனந்தபுரம்: பெருநிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை ‘கேரள சவாரி’ என்ற பெயரில் மாநில அரசு தொடங்கி உள்ளது.

தற்போது தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 321 ஆட்டோ, 228 கார்கள் தங்களை இணைந்துள்ளன. அதிலும் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் 22 பெண் ஓட்டுநர்களும் உள்ளனர். குறைவான வாடகை, பாதுகாப்பான பயணம் இவை இரண்டும் இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறும் கேரள தொழில் துறை அமைச்சர் சிவன்குட்டி, காவல் துறையிடம் இருந்து ஒழுக்கச்சான்று பெற்று வரும் ஓட்டுநர்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும் என்கிறார்.

கேரள சவாரியில் பதிவு செய்து பயணிப்போருக்கு வசதியாக தனி இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இந்த செயலி உள்ளது. அது கூகுளின் தர ஆய்வில் உள்ளதால் சில தினங்களில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும். இதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கேரள தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும், மோட்டார் தொழிலாளர் நல வாரியம், இதை நிர்வகிக்கின்றது.

பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான ‘பீக் ஹவர்ஸில்’ தனியார் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் தொடங்கி, ரத்து செய்யப்பட்ட சவாரிக்கும் முழுக்கட்டணம் வசூல் செய்வது வரை அரசுக்கு பல புகார்கள் வந்ததால் ‘கேரள சவாரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மழை, இரவு என பாரபட்சம் இல்லாமல் எல்லா தருணங்களிலும் கேரள சவாரியில் ஒரேநிலையான கட்டணமே வசூலிக்கப்படும். இதில் சேவை நோக்கம் பிரதானமாகவும், லாப நோக்கம் நியாயமான கட்டணத்தை வசூலிப்பதில் மட்டுமே இருக்கும் என அறிவித்துள்ளது கேரள அரசு. தனியார் வாகனங்களில் 20 முதல் 30 சதவீதம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் சூழலில், கேரள சவாரியில் 8 சதவீதம் மட்டுமே சேவைக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேரள சவாரி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்களை இணைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் எரிபொருள் கட்டண சலுகை, டயர் விலையில் மானியம் என பல சலுகைகளை அரசு வழங்கும்.



Read in source website

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 1996 முதல் 2012 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறப்பாக விளையாடிவர் லஷ்மண். 134 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 11,119 ரன்களை குவித்துள்ளார். அண்மையில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் ஆக்டிங் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது முதலே இந்திய அணியின் பயிற்சியாளராக லஷ்மண் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது அதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுடன் ஹராரே நகரில் இருந்து அவரும் துபாய் செல்லும் விமானத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், தீபக் ஹூடா மற்றும் ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் ஹராரே நகரில் இருந்து துபாய் புறப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடர் 27 ஆகஸ்ட் முதல் 11 செப்டம்பர் வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ரோகித் தலைமையில் களம் காண்கிறது.



Read in source website

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 250 புள்ளிகள் கொண்ட இந்த டென்னிஸ் தொடரை தமிழக அரசு ஆதரவுடன் தமிழக டென்னிஸ் சங்கம் நடத்துகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 வீராங்கனைகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கரோலின் கார்சியா, 29-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க் 32-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் சென்னை ஓபனில் கலந்து கொள்கின்றனர்.

இந்தத் தொடர் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தமிழக டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறும்போது, “32 வீரர்களைக் கொண்ட ஒற்றையர் பிரிவு முதன்மைச் சுற்றுக்கான வைல்டு கார்டுகள் கனடாவின் யூஜின் பவுச்சார்ட், இந்தியாவின்அங்கிதா ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரு வைல்டுகார்டுகள் டென்னிஸ் தர வரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள வீராங்கனைகள் இங்கு வந்து விளையாட விரும்பினால் வழங்கப்படும்.

முன்னாள் 5-ம் நிலை வீராங்கனையான யூஜின் பவுச்சார்ட் 2014-ம்ஆண்டு விம்பிள்டன் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷர்மதா பாலு,ரியா பாட்டியா ஆகியோருக்கு வைல்டுகார்டு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

சென்னை ஓபன் இரட்டையர் பிரிவில் சானியாமிர்சா கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு விஜய் அமிர்தராஜ் பதிலளிக்கையில், “காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் சானியா கலந்து கொள்ள வில்லை. சென்னை ஓபனில் கலந்து கொள் வதற்கு அவர், முழு உடற்தகுதியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை ஓபனில் சானியா விளையாட முடியாத நிலை ஏற்பட்டால்,தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் அவரை அழைத்து, நம்ப முடியாத அளவிலான அவரது டென்னிஸ் வாழ்க்கை பயணத்துக்கு பாராட்டு விழா நடத்துவோம்” என்றார்.

மீண்டும் வருமா ஏடிபி?

விஜய் அமிர்தராஜ் கூறும்போது, “250புள்ளிகள் கொண்ட ஆடவருக்கான ஏடிபிதொடரை மீண்டும் சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசு ஆர்வம் கொண்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் அட்டவணை நெருக்கமாக உள்ளது. எனினும் அதை நோக்கி செயல்படுகிறோம்” என்றார்.

2024-ல் பெரிய தொடர்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்வருடந்தோறும் நடத்த முடியுமாஎன்றுகேட்டதற்கு, அமிர்தராஜ் கூறுகையில், “இந்தஆண்டு போட்டி எப்படி நடக்கிறது என்பதைப்பார்க்க வேண்டும். ஒரு வருடத்திற்கு உரிமம் பெற்றுள்ளோம். 2024-ம்ஆண்டு துபாய்மற்றும் தோஹா போட்டிகளுக்கு இடையே சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்தும் பெரிய வாய்ப்பு உள்ளது” என்றார்.

பரிசுத் தொகை

சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யூடிஏ மகளிர் டென்னிஸ் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை சுமார் ரூ.2 கோடியாகும்.

இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு சுமார் ரூ.26.50 லட்சமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு சுமார் ரூ.15.77 லட்சமும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு சுமார் ரூ.9.58 லட்சமும், 2-ம் இடம் பிடிக்கும் ஜோடிக்கு சுமார் ரூ.5.35 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று போட்டிக் குழு அறிவித்துள்ளது.

டிக்கெட் கட்டணம்

சென்னை ஓபன் போட்டி நடைபெறும் செப்டம்பர் 12 முதல் 18-ம் தேதி வரையிலான 7நாட்களுக்கும் சீசன் டிக்கெட்டுகளின் விலை ரூ.1000, ரூ.2000, ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான நாட்களுக்கான தினசரி டிக்கெட் கட்டணம் ரூ.100, ரூ.200, ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடைசி 3 நாட்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ. 200, ரூ.400 ரூ.600 ஆகும். டிக்கெட்டுகளை chennaiopenwta.in. என்ற இணைய தளம் வாயிலாக பெறலாம்.

ரூ.5 கோடி ஒதுக்கீடு..

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறும்போது, “சென்னை ஓபன் போட்டிக்காக தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். இது தவிர நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் ரூ.3 கோடியில் மின்விளக்குகள் பொறுத்தப்பட உள்ளது. ரூ.1.5 கோடியில்மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியில் 6 டென்னிஸ் கோர்ட்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.



Read in source website

ஹைதராபாத்: காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா.

35 வயதான சானியா கடந்த ஜனவரியில் இந்த சீசனுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சானியா மிர்சா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,“2 வாரங்களுக்கு முன்னர் கனடாவில் விளையாடிய போது எனது முழங்கையில் காயம் ஏற்பட்டது.

நேற்று ஸ்கேன் செய்து பார்க்கும் வரை அது எவ்வளவு மோசமானது என்பதை நான் உணரவில்லை, துரதிர்ஷ்டவசமாக எனது தசைநார் சிறிது கிழிந்துள்ளது. இதனால் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி உள்ளது. எனவே 29-ம் தேதி தொடங்கும் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுகிறேன். இது சிறந்ததல்ல, மோசமான நேரமும் கூட. காயமானது எனது ஓய்வு திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதுதொடர்பான விவரங்களை நான் பிறகு தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



Read in source website

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் 200-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் முதல் மன்னரான பெட்ரோவின் இதயம் அந்நாட்டுக்கு போர்ச்சுக்கலில் இருந்து வந்தடைந்தது.

போர்ச்சுக்கீசிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டு இருந்த பிரேசிலுக்கு போர்ச்சுக்கீசிய மன்னர் டாம் பெட்ரோ 1822-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி சுதந்திரம் வழங்கினார். அன்றிலிருந்து ‘பிரேசில் - போர்ச்சுக்கீஸ்’ என இரு நாடுகளிலும் போற்றப்படக் கூடிய மன்னராக பெட்ரோ கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், 1834-ஆம் ஆண்டு இறந்த பெட்ரோவின் இதயம் கிட்டதட்ட போர்ச்சுக்கீசிய நாட்டில் உள்ள தேவாலயத்தின் தங்க கலசத்தில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருளை நிரப்பி பாதுகாக்கப்படுகிறது.

இந்த இதயம் வருடம்தோறும் பிரேசிலின் சுதந்திர தினமான செப்டம்பர் 7-ம் தேசிய அன்று பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை பாரம்பரிய வழக்கமாக இரு நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அந்த வகையில் சுதந்திர தினத்திற்கு சில வாரம் உள்ள நிலையில், பிரேசிலுக்கு மன்னர் டாம் பெட்ரோவின் இதயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிரேசில் வந்தடைந்த டாம் பெட்ரோவின் இதயத்துக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா அதனை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் வானவேடிக்கைகளும் நடத்தப்பட்டன.

இதுகுறித்து பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலன் கூறும்போது, “இந்த நிகழ்வின் மூலம் பெட்ரோ எங்களுடன் உயிருடன் இருப்பதை போல் உணர்கிறோம்” என்றார். செப்டம்பர் 7-ம் தேதிவரை பெட்ரோவின் இதயம் பிரேசிலில் இருக்கும்.



Read in source website

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரக ட்ரோன்கள் இந்திய முப்படைகளில் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. இந்த கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. சீன, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இஸ்ரேல் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ஹெரோன் ரகத்தை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் சீன, பாகிஸ்தான் எல்லைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக அமெரிக்காவின் எம்.கியூ-9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் குளோபல் கார்பரேஷனிடம் இருந்து எம்.கியூ-9பி பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த 30 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன. இது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி 30 ட்ரோன்களும் இந்திய முப்படைகளில் சேர்க்கப்பட உள்ளன. ராணுவம், கடற்படை,விமானப் படைக்கு தலா 10 ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் குளோபல் கார்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி விவேக் லால் கூறும்போது, "ட்ரோன்கள் கொள்முதல் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்று தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

ரூ.22,000 கோடியில்..

ஏற்கெனவே நட்பின் அடிப்படையில் இந்திய கடற்படைக்கு 2 பிரிடேட்டர் ட்ரோன்கள் குத்தகைஅடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால் ரூ.22,000 கோடியில் 30 ட்ரோன்கள் புதிதாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ட்ரோன்கள் அமெரிக்காவின் அதிநவீன எப்35 போர் விமானங்களுக்கு நிகரானவை. தொடர்ந்து 40 மணி நேரம் வானில் பறக்கும். மணிக்கு 482 வேகத்தில் சீறிப் பாயும். கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கிகளை எளிதில் கண்டுபிடிக்கும்.

இந்த ட்ரோன்களில் இருந்து ஏவுகணைகளை செலுத்த முடி யும். 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

புதுடெல்லி: சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் டவர்களை விற்பனை செய்யும் பணிகளை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மானிடைசேஷன் பைப்லைனின் (NMP) ஒரு பகுதியாக இந்த விற்பனையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 13,567 டவர்கள் மற்றும் எம்டிஎன்எல்-இன் 1,350 டவர்களையும் வரும் 2025-க்குள் பகுதி பகுதியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலம் ரூ.4,000 கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இந்தியாவில் இயங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். இது அரசு நிறுவனமாகும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தரவுகளின் படி நாட்டின் ஒட்டுமொத்த பயனர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

அண்மையில் மத்திய அமைச்சரவை ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு தொகுப்பை அறிவித்திருந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் அதிவிரைவில் 5ஜி சேவை வெளியாக உள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதற்கான பணிகளை கவனித்து வருகின்றன. இந்நிலையில், பிஎஸ்என்எல் டவர்களை விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.

இருந்தாலும் இப்போது விற்பனை செய்யப்பட உள்ள டவர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்துடன் இணை இருப்பிட ஏற்பாடுகளை (Co-Location Arrangements) கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக, கேமரா மூலம் வாகனங்களின் பதிவு எண்களை பதிவு செய்து வாகன உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக, கேமரா மூலம் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறிந்து வாகன உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும்?

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசல், 97 சதவிகிதம் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலித்தாலும் பயணிகளை தொடர்ந்து பாதிக்கிறது. இந்த பார்வையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இப்போது சுங்கச் சாவடிகளுக்கு பதிலாக, தானியங்கி வாகன நம்பர் பிளேட்களை படிக்கும் (ஏ.என்.பி.ஆர்)கேமராக்கள் எனப்படும் வாகன பதிவு எண் பலகைகளை பதிவு செய்யும் கேமராக்களைக் கொண்டு வரும் திட்டத்துக்கு நகர்ந்து வருகிறது.

சுங்கச்சாவடிகளுக்கான புதிய திட்டம் என்ன?

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஏ.என்.பி.ஆர் கேமராக்களை நம்பியிருப்பது, வாகனத்தின் நம்பர் பிளேட்களைப் படித்து, வாகன உரிமையாளர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து தானாகவே கட்டணத்தைக் கழிக்கும் திட்டம் இது.

இந்த முறை எளிமையானது: சுங்கச் சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் பொருத்தப்படும் கேமராக்கள் நம்பர் பிளேட்களைப் படிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். இந்த கேமராக்களின் அடிப்படையில் அந்த வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

எல்லா நம்பர் பிளேட்களையும் கேமராக்களால் படிக்க முடியுமா?

இந்த கேமராக்களால் இந்தியாவில் உள்ள அனைத்து நம்பர் பிளேட்களையும் படிக்க முடியாது. ஆனல், 2019 க்குப் பிறகு வந்த வாகனங்களின் நம்பர் பிளேட்களை மட்டுமே கேமராக்களால் பதிவு செய்யப்படும்.

அரசாங்கம், 2019 ஆம் ஆண்டில், பயணிகள் வாகனங்களில் நிறுவனம் பொருத்திய நம்பர் பிளேட்களை கட்டாயம் வைத்திருக்கும் விதியை கொண்டு வந்தது. மேலும், இந்த நம்பர் பிளேட்களை மட்டுமே கேமராக்கள் மூலம் படிக்க முடியும். பழைய நம்பர் பிளேட்டுகளை மாற்றும் திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் சோதனைத் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை எளிதாக்குவதற்கான சட்டத் திருத்தங்களும் சுங்கச் சாவடிகளைத் தவிர்த்துவிட்டு பணம் செலுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகர்த்தப்படுகிறது.

இந்திய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிப்பதற்கான முறை என்ன?

தற்போது கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி மொத்த சுங்க வரி வசூலில் சுமார் 97 சதவீதம் ஃபாஸ்டேக்குகள் மூலம் நடக்கிறது – மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே ஃபாஸ்டேக் பயன்படுத்தாததற்காக சாதாரண சுங்க கட்டணங்களை விட அதிகமாக செலுத்துகின்றனர்.

ஃபாஸ்டேக்குகள் மூலம், ஒரு சுங்கச் சாவடியைக் கடக்க ஒரு வாகனத்திற்கு சுமார் 47 வினாடிகள் ஆகும். குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடு உள்ளது – அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, கைகளில் சுங்கவரி வசூலிக்கும்போது அந்த சாலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு 112 வாகனங்கள் சென்றதுடன் ஒப்பிடும்போது மின்னணு கட்டண வசூல் செய்யப்படும்போது அந்த சாலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு 260 க்கும் மேற்பட்ட வாகனங்களை அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது.

ஃபாஸ்டேக்குகள் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்தை எளிதாக்கியிருந்தாலும், அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, சுங்கச் சாவடிகளை கடக்க வேண்டியிருப்பதால், நெரிசல் இன்னும் அப்படியே உள்ளது. நெரிசலைக் குறைக்க ஏ.என்.பி.ஆர் கேமராக்களின் உதவியை நாடுவதோடு மட்டுமல்லாமல், ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தையும் சுங்கவரி வசூலிப்பதற்கான விருப்பங்களில் ஒன்றாக அரசாங்கம் பார்க்கிறது.

ஏ.என்.பி.ஆர் கேமராக்களில் பிரச்னை உள்ளதா?

ஏ.என்.பி.ஆர் கேமராக்களின் வெற்றியானது, கேமராவின் தேவைகளுடன் ஒத்திசைக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதைப் பொறுத்ததாக இருக்கும்.

‘இந்திய அரசு/டெல்லி’ ஒன்பது இலக்கப் பதிவு எண்ணைத் தாண்டி, நம்பர் பிளேட்டுகளில் கடவுள்களின் பெயர்கள் போன்ற விஷயங்களை எழுதுவது சோதனையின் போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை லாரிகளில் நம்பர் பிளேட்களைப் படிப்பதில் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் நம்பர்கள் மறைந்திருக்கும் அல்லது அசுத்தமாக இருக்கும்.

ஒரு முக்கிய விரைவுச் சாலையில் சோதனை திட்டத்தில், இதுபோன்ற நம்பர் பிளேட்களைக் கொண்ட சுமார் 10 சதவீத வாகனங்கள் ஏ.என்.பி.ஆர் கேமராக்களால் தவறவிடப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.



Read in source website

கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதால், தக்காளி காய்ச்சலை தடுப்பதும் அதற்கான மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பாகவும் மத்திய சுகதாரத்துறை வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதால், தக்காளி காய்ச்சலை தடுப்பதும் அதற்கான மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பாகவும் மத்திய சுகதாரத்துறை வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான பார்வையை லான்செட் என்ற மருத்துவ ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளது. இது ஒரு எச்எப்எம்டி அதாவது கை-வாய்-கால் தொடர்பான வைரல் தொற்று என்று கூறிகின்றனர்.  இது என்டர்நோ வைரஸ் என்ற வைரஸால் பரவுகிறது.

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன ?

காய்ச்சலுடன், மூட்டு வலி, மற்றும் தக்காளி போல் சிவப்பான ராஷஸ்  5 வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மேலும் கூடுதலாக  வாந்தி, மயக்கம், பேதி அறிகுறிகளும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு மற்றும் சிக்கன்கொனியா பாதித்தவர்களை இது தாக்குவதாக கேரளாவில் கிடைத்த தகவல் படி கூறப்படுகிறது. காக்ஸாக்கி வைரஸ் ஏ-6 மற்றும் ஏ-16 என்ற வேரியண்டுகளால் இந்நோய் உருவாக்கப்படுகிறது.

வைராலஜி பேராசிரியர் டாக்டர் எக்தா குப்தா கூறுகையில் “ இது ஒரு புது நோய் இல்லை. இது தொடர்பாக மருத்துவ புத்தக்கத்தில் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களில் இது இந்தியா முழுவதிலும் காணப்பட்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அதிக வைரல் லாப்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதால், இது போன்ற மற்ற வைரல் நோய்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படுகிறது.

இதற்கான சிகிச்சை

தக்காளி காய்ச்சலுக்கு தனியாக எந்த மருந்துகளும் இல்லை. காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை வழங்கப்படும்.

வராமல் தடுப்பது எப்படி ?

இந்த அறிகுறிகள் உள்ள நபர்கள் 5 முதல் 7 நாட்கள்வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.



Read in source website

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புகைப்படங்கள் உங்கள் கணக்கில் இருந்ததால், கூகுள் உங்கள் கணக்கை முடக்கிறது; அதை கூகுள் எப்படி செய்கிறது என்பது இங்கே

Shruti Dhapola

Explained: How Google blocks accounts over child sexual abuse material: உங்கள் கூகுள் புகைப்படங்கள் (Google Photos) பகுதியில் உங்கள் குழந்தைகளின் நிர்வாணப் படங்கள் இடம்பெறுவதால், உங்கள் கூகுள் கணக்கிற்கான அணுகல் ரத்து செய்யப்படுமா? சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு பெற்றோரின் விஷயத்திலும், டெக்சாஸில் மற்றொருவரின் விஷயத்திலும் அதுதான் நடந்ததாகத் தெரிகிறது. குழந்தைகளின் தனிப்பட்ட படங்களை குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் (CSAM) என சிஸ்டம் சுட்டிக்காட்டியதால், இரு பெற்றோர்களும் தங்கள் கூகுள் கணக்குகளுக்கான அணுகலை இழந்தனர். தி நியூயார்க் டைம்ஸ் (NYT) செய்தி வெளியிட்டுள்ள இந்த கதை, கூகுள் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் பயனர் தனியுரிமை மற்றும் CSAM கண்காணிப்பைச் சுற்றியுள்ள சிக்கலான பிரச்னைகளை எடுத்துக்காட்டுகிறது.

சாத்தியமான துஷ்பிரயோகத்திற்காக சுட்டிக்காட்டப்பட்டது

தி நியூயார்க் டைம்ஸின் கதையின்படி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு தந்தை மருத்துவரிடம் அனுப்புவதற்காக தனது மகனின் பிறப்புறுப்பின் படத்தை எடுத்துள்ளார். அவர் ஆண்ட்ராய்டு ஃபோனைப் பயன்படுத்தினார், மேலும் அவரது கூகுள் புகைப்படக் கணக்கில் அந்தப் படம் காப்புப் பிரதி எடுக்கப்பட்டது. ஆனால் கூகுளின் சிஸ்டம் இதை CSAM என சுட்டிக்காட்டியது, மேலும் அவரது கணக்கு அணுகல் இடைநிறுத்தப்பட்டது. தந்தையும் போலீஸ் விசாரணையை எதிர்கொண்டார். ஏனென்றால், கூகுளின் சிஸ்டம் CSAM ஐக் கண்டறிந்தால், அவர்கள் அமெரிக்காவில் உள்ள காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு (NCMEC) “சைபர் டிப்லைன்” அறிக்கையையும் அனுப்புகிறார்கள்.

NCMEC பின்னர் சட்ட அமலாக்க முகமைகளை ஈடுபடுத்தலாம். இதேபோன்ற கதை டெக்சாஸில் மற்றொரு தந்தையுடன் வெளிப்பட்டது. இரு பெற்றோரையும் போலீசார் விடுவித்தாலும், கூகுள் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

கூகுள் தானாகவே புகைப்படங்களை ஸ்கேன் செய்து CSAMஐக் கண்டறிவதில் இந்தச் சிக்கல் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. 2020 ஆம் ஆண்டில், கன்சாஸை தளமாகக் கொண்ட ஒரு கலைஞருக்கு எதிராக அவரது சில கலைப் படைப்புகளை CSAM என கூகுள் அடையாளம் கண்ட பிறகு அவருக்கு எதிராக எப்படி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

கூகுளின் சொந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இது CSAM பற்றிய 458,178 அறிக்கைகளை அமெரிக்காவில் உள்ள NCMECக்கு அனுப்பியது மற்றும் 2021 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கத்தைப் புகாரளித்துள்ளது. மேலும், அதே காலகட்டத்தில் 140,868 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

CSAM ஐ கூகுள் எப்படி ஸ்கேன் செய்கிறது

“எங்கள் பயனர்கள் மற்றும் NGOகள் போன்ற மூன்றாம் தரப்பினரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை நம்பியிருப்பதைத் தவிர, தானியங்கி கண்டறிதல் மற்றும் மனித மதிப்பாய்வை, எங்கள் தளங்களில் CSAM ஐக் கண்டறியவும், அகற்றவும் மற்றும் புகாரளிக்கவும், பயன்படுத்துகிறோம்” என்று கூகுள் கூறுகிறது.

ஆனால் இது முதன்மையாக CSAM ஐ ஸ்கேன் செய்து குறியிட இரண்டு முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. Google Drive, Google Photos போன்றவற்றில் நீங்கள் பதிவேற்றக்கூடிய படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளுக்கு இது பொருந்தும். உங்கள் கூகுள் கணக்கு இந்தச் சேவைகள் அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

முதல் தொழில்நுட்பம் ஹாஷ் மேட்சிங் ஆகும், இதில் யூடியூபின் CSAI (குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் இமேஜரி) பொருத்த தொழில்நுட்பமும் உள்ளடங்கும். CSAI மேட்ச் என்பது சிறுவர் துஷ்பிரயோகத்தின் வீடியோக்களை எதிர்த்துப் போராடுவதற்கு YouTube இல் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும், மேலும் Google இன் படி, “முன்னர் அடையாளம் காணப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களின் மறு பதிவேற்றங்களை வீடியோக்களில்” கண்டறிய முடியும். இந்த குறிப்பிட்ட API ஐ கூகுளின் தரவுத்தளங்களுடன் பொருத்துவதன் மூலம் CSAM ஐக் கண்டறிய பிற NGOக்கள், நிறுவனங்களும் பயன்படுத்தலாம். அடிப்படையில், ஒவ்வொரு முறையும் CSAM என அடையாளம் காணக்கூடிய ஒரு படத்தை கூகுள் கண்டறியும் போது, ​​அதற்கு ஒரு ஹாஷ் அல்லது எண் மதிப்பு ஒதுக்கப்படும், பின்னர் அது ஏற்கனவே உள்ள தரவுத்தளத்திலிருந்து முந்தைய ஹாஷுடன் பொருத்தப்படும். இந்த ஹாஷ் மேட்சிங் தொழில்நுட்பத்தை கூகுள் மட்டும் பயன்படுத்தவில்லை. மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் இதே போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

ஹாஷ் பொருத்தம் என்னவென்றால், நிறுவனம் CSAM ஐ சேமித்து வைக்கவில்லை, ஆனால் கேள்விக்குரிய படம், வீடியோ அல்லது உள்ளடக்கத்தைக் குறிக்கும் மதிப்பு அல்லது ஹாஷ் குறித்து வைக்கப்படுகிறது. மற்றொரு புகைப்படம் அல்லது வீடியோவிற்கு இதே போன்ற ஹாஷ் இருந்தால், அது CSAM ஆக இருக்கலாம், மேலும் கேள்விக்குரிய உள்ளடக்கம் சுட்டிக்காட்டப்படும்.

ஆனால் கூகுள் CSAM ஐத் தேடுவதற்கு இயந்திர கற்றல் கருவிகளையும் பயன்படுத்துகிறது, மேலும் இது 2018 இல் இதை முதன்முதலில் அறிவித்தது. இந்த “மெஷின் லேர்னிங் வகைப்படுத்திகள் இதுவரை கண்டிராத CSAM ஐக் கண்டறிய முடியும்” என்று குறிப்பிடுகிறது.

தொழில்நுட்பம் இயந்திர கற்றல் மற்றும் பட செயலாக்கத்திற்கான ஆழமான நரம்பியல் நெட்வொர்க்குகளை நம்பியுள்ளது. இங்குள்ள நன்மை என்னவென்றால், ஹாஷ் செய்யப்பட்ட தரவுத்தளத்தின் ஒரு பகுதியாக இல்லாத உள்ளடக்கத்தை நீங்கள் காணலாம். கூகுள் இந்த அறிவிப்பின் போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் அதன் தொழில் கூட்டாளர்களுக்கும் தொழில்நுட்பத்தை இலவசமாகக் கிடைக்கச் செய்தது. அதன் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் CSAM என அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கம் “எங்கள் சிறப்பு மதிப்பாய்வுக் குழுக்களால் உறுதிப்படுத்தப்பட்டது” என்றும் கூகுள் குறிப்பிடுகிறது.

புகாரளிக்கப்பட்ட நிகழ்வுகளில் CSAM ஐ அடையாளம் காண என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த AI தொழில்நுட்பத்தின் துல்லியத்தை கூகுள் வெளியிடவில்லை.

இந்த விஷயத்தில் கூகுளின் கொள்கை

கூகுளின் கொள்கைப் பக்கத்தில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தின் பட்டியலைக் குறிப்பிடுகிறது மற்றும் அதன் சேவைகளுக்கான அணுகலை இழக்கச் செய்யலாம். குழந்தைகள் ஆபாசத்தின் வரையறையைப் பொறுத்தவரை, கூகுள் அமெரிக்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒன்றைப் பயன்படுத்துகிறது. எனவே, மைனர் (18 வயதுக்குட்பட்ட) பாலியல் ரீதியாக சுரண்டப்படும் எந்தப் படமும் குழந்தைகள் ஆபாசமாக வரையறுக்கப்படுகிறது.

இது CSAM இல் ஒரு விரிவான பகுதியைக் கொண்டுள்ளது மற்றும் பயனர்கள் “குழந்தைகளை சுரண்டும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் உள்ளடக்கத்தை உருவாக்கவோ, பதிவேற்றவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது” என்றும், “இதில் அனைத்து குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களும் அடங்கும்” என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. பயனர்கள் CSAM உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது முறைகேடுகளைப் புகாரளிக்கவும் இது ஊக்குவிக்கிறது.

இது அதன் தயாரிப்புகளை “குழந்தைகளுக்கு ஆபத்தில் ஆழ்த்துவதற்கு” பயன்படுத்துவதையும் தடை செய்கிறது. பாலின உள்ளடக்கத்திற்காக ‘குழந்தைகளை வளர்க்க’ கூகுள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது, பாலியல் பலாத்காரம் (குழந்தையை மிரட்டுவது அல்லது அச்சுறுத்துவது), “மைனரைப் பாலியல்ரீதியாக்குவது”, “குழந்தையைக் கடத்துவது” போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன என்று கொள்கை குறிப்பிடுகிறது.

“நிர்வாணம், கிராஃபிக் செக்ஸ் செயல்கள் மற்றும் ஆபாசப் பொருட்கள் போன்ற வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் கொண்ட உள்ளடக்கத்தை பயனர்கள் விநியோகிக்கக் கூடாது” என்று கொள்கை தெளிவாகக் கூறுகிறது. வணிக ஆபாச தளங்களுக்கு பார்வை எண்ணிக்கையை அதிகரிப்பதும் இதில் அடங்கும்”. அதேநேரம் இது “கல்வி, ஆவணப்படம், அறிவியல் அல்லது கலை நோக்கங்களுக்காக நிர்வாணத்தை” அனுமதிக்கிறது.

அணுகலை மீட்டெடுப்பதில் தாமதம்

தற்போதைய விவாதம் இதுதான். CSAM ஒரு தீவிரமான பிரச்சனையாக இருந்தாலும், NYT அறிக்கை, அதை எதிர்த்துப் போராடுவது என்பது சிக்கலான நீர் வழி பயணத்தை குறிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பயனர் தனியுரிமையை சமநிலைப்படுத்துவது மற்றும் சிக்கலான உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடுவது சொல்வதை விட எளிதானது.

இரு பெற்றோரின் நிகழ்வுகளிலும், அவர்கள் அப்பாவியாக படத்தை எடுத்தார்கள், இருவரும் அணுகலை இழந்தனர். இருவரையும் போலீசார் விடுவித்த நிலையில், கூகுள் அவர்களின் கணக்குகளை மீட்டெடுக்கவில்லை. பெற்றோருக்கு, இந்த வழக்கு கண்களைத் திறக்கும், அவர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது குழந்தைகளின் தற்செயலான நிர்வாண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்க வேண்டியிருக்கும்.

இன்றைய உலகில், பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், இன்னும் சில நிகழ்நேர தருணங்கள் பதிவு செய்யப்பட்டு மேகக்கணியில் பதிவேற்றம் செய்யப்படலாம். இவை பின்னர் CSAM எனக் குறிக்கப்படலாம். மேலும், மேகக்கணியில் நாம் எவ்வளவு சார்ந்து இருக்கிறோம் என்பதன் மூலம், ஒருவரின் கூகுள் கணக்கிற்கான அணுகலை இழப்பது என்பது புகைப்படங்கள், நினைவுகள், அஞ்சல்கள் போன்றவற்றுக்கான அணுகலை இழப்பதைக் குறிக்கிறது. ஒருவேளை மோசமானது நடந்தால், பயனர்கள் தங்கள் உள்ளடக்கத்தில் சிலவற்றை ஆஃப்லைனில் சேமிக்க வேண்டும் என்பதற்கான மற்றொரு நினைவூட்டலாக இது இருக்கலாம் மற்றும் அவர்களின் கணக்கு அணுகல் பறிக்கப்படலாம்.



Read in source website

சாலை மேம்பாடு எந்த அளவுக்கு முனைப்புடன் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறவில்லை என்பதை தொடர்ந்து நிகழும் சாலை விபத்துகள் எடுத்தியம்புகின்றன. அதுமட்டுமல்ல, சாலை விபத்துகள் பல பதிவாகாமல் போகின்ற அவலமும் தொடர்கிறது.
 சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், சைக்கிளில் வீடு திரும்பும்போது மாநகரப் பேருந்து மோதி உயிரிழந்தார். அருகில் இருந்த காவல் நிலையத்தினர் அன்று சுதந்திர தினக் கொண்டாட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக உயிரிழந்த சிறுமி கவனிப்பாரற்று சாலையில் கிடந்த துயர நிகழ்வு பல செய்திகளை உணர்த்துகிறது.
 காவல்துறையினரின் உடனடி கவனிப்பின்மை, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் கவனக்குறைவு, பாதசாரிகளும் சைக்கிள் ஓட்டுபவர்களும் பாதுகாப்பாக பயணிக்க சாலைகளில் வழியில்லாமை, சாலை ஆக்கிரமிப்புகள், குடிநீர், கழிவுநீர் துறையினரின் பணிகள் என்று பல்வேறு காரணங்களால் சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 2017 முதல் 2020 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 22,000 சாலை விபத்து மரணங்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களின் மறுபரிசீலனையில் வெளியாகியிருக்கும் இந்தத் தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.
 2019-இல் 9,813 உயிரிழப்பு விபத்துகளும், அதனால் ஏற்பட்ட 10,525 மரணங்களும் பதிவாகியிருக்கின்றன. மறு ஆய்வின்படி, உயிரிழப்பு விபத்துகள் 17,196 என்றும், மரணங்கள் 18,129 என்றும் திருத்தப்பட்டிருக்கிறது. அதே போல, 2020-இல் உயிரிழப்பு விபத்துகள் 7,560, மரணங்கள் 8,060 என்று பதிவாகியிருந்தது. மறு ஆய்வில் உயிரிழப்பு விபத்துகள் 13,868, மரணங்கள் 14,527 என்று திருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, விபத்துகளும் உயிரிழப்புகளும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
 இதில் வேடிக்கை என்னவென்றால், 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாலைப் பாதுகாப்பில் முதல் மாநிலத்துக்கான விருதை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. அதே ஆண்டுகளில் சாலை விபத்து மரணங்கள் 24%, 12% என்று குறைத்திருப்பதற்கான பாராட்டையும் உலக வங்கியிடமிருந்து தமிழகம் பெற்றது.
 புள்ளிவிவரங்கள், தரவுகளில் குறைபாடு இருப்பது சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் படையினரின் ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் மாநில காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
 இதன் பின்னணியில், புள்ளிவிவரங்கள் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் விடப்பட்டிருக்கக்கூடும் என்று கருத இடமிருக்கிறது. சாலைப் பாதுகாப்புக்கான பாராட்டைப் பெறுவதற்காகவும், மத்திய - மாநில அரசுகளின் விருதுகளைக் கருத்தில் கொண்டும் இதுபோல புள்ளிவிவரங்களை மாற்றுவது அரசு நிர்வாகத்துக்கு புதிதொன்றுமல்ல.
 சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரக் குறைபாடுகளுக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். மறு ஆய்வு செய்யப்பட்ட ஆண்டுகளில் தமிழகம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும். சாலையில் நிகழ்ந்த விபத்தின்போது பலியானவர்களை மட்டுமே பதிவு செய்து, மருத்துவமனையில் சில நாட்களுக்குப் பின் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கவனிக்காமல் விட்டிருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
 காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் ஒருவேளை இந்தக் குறைபாடு தவிர்க்கப்பட்டிருக்கலாம். மேலும். காப்பீடு பெறுவதற்கு விபத்துகள் பதிவாகி இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், இதுபோன்ற குளறுபடி எப்படி, எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்கள் பல காப்பீடு பெறமுடியாமல் போயிருந்தால், அது மிகப் பெரிய கொடுமை.
 தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவில் இந்தியாவும் சாலைப் பாதுகாப்பில் மெச்சும்படியாக இல்லை. உலக வாகனங்களின் எண்ணிக்கையில் வெறும் 1% மட்டுமே இருக்கும் இந்தியா, சர்வதேச அளவிலான சாலை விபத்துகளில் 10% அதிகமாக இருக்கிறது என்பதை நாம் வருத்தத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி, 2015 முதல் 2019 வரை ஆண்டுதோறும் சராசரியாக 1,49,472 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். 4,72,606 சாலை விபத்துகளில் 4,77,331 பேர் காயமடைகிறார்கள். இந்த புள்ளிவிவரமும் மறுபரிசீலனை செய்யப்பட்டால் அதிகரிக்குமோ என்னவோ.
 சாலை விபத்துகளுக்கு வாகனங்களின் குறைபாடுகள் காரணமாக இருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எல்லா பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த அதிநவீன வாகனங்கள் இயங்குகின்றன.
 வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும், பயிற்சியின்மையும், சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமையும் சாலை விபத்துக்கு முக்கியக் காரணங்கள். அதற்கு எள்ளளவும் குறையாதது நமது சாலைகளின் நிலைமை. இருபுறமும் ஆக்கிரமிப்புகள், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள், செப்பனிடப்படாத சாலைகள் ஆகியவை சாலை விபத்துகளுக்கு உறுதுணையாகின்றன. சுங்கம் வசூலிக்கப்படும் நாற்கரச் சாலைகளின் தரக் குறைபாடுகளை கேள்வி கேட்பார் இல்லை.
 இந்த நிலைமைகள் மாறாதவரை இந்தியாவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அன்றாட நிகழ்வுகளாகத் தொடரும்.
 
 



Read in source website

'இலவசம் இழிவு உழைப்பே உயர்வு' என்று கூறியவர் தேசப்பிதா காந்திஜி. இலவசம் என்பது உன்னதமான உழைப்பை உதாசீனப்படுத்தும் சொல். லஞ்சம் என்பதை அன்பளிப்பு என்று கூறுவது போலத்தான் இதுவும்.
"மீனைக் கொடுக்காதே, மீன் பிடிக்கத் தூண்டில் கொடு' என்பது ஒரு மேலைநாட்டுப் பழமொழி. மீனைக் கொடுப்பது இலவசம்; தூண்டில் என்பது உழைப்பு.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நான்குவழி விரைவுச் சாலையைத் திறந்துவைத்துப் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "உத்தர பிரதேச மக்கள் இனிப்புப் பண்டத்தை விரும்பிச் சாப்பிடுவதைப் போல இலவசங்களை விரும்புகிறார்கள். இது தேச வளர்ச்சிக்கு ஆபத்தானது' என்று பேசியுள்ளார்.
பின்னர், இதே கருத்தை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இலவசங்களுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய என்கிற வழக்குரைஞர் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.
அதில், "தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில் நியாயப்படுத்த முடியாத இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பது, அரசியல் சாசனத்தின் ஜனநாயகக் கோட்பாட்டிற்கே முரணானதாகும். அத்தகைய அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், அக்கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், நமது நாடாளுமன்றம் இதனை விவாதிக்க விரும்பாது என்றும், அரசியல் கட்சிகளும் இலவசங்களை ரத்து செய்ய விரும்பாது என்றும் சுட்டிக்காட்டியது. ஆனாலும் ஆணையமோ, மத்திய அரசோ இப்படிக் கூறிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் எடுத்துக் கூறியுள்ளதை வரவேற்க வேண்டும்.
"இலவசம் என்பது அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் தேசத்தின் பொருளாதாரப் பேரழிவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை மறுக்க முடியாது' என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளித்த பதில் மனுவில் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
இப்போது நம் முன் உள்ள கேள்வி, இலவசங்கள் என்பவை எவை என்பதுதான். அவற்றைத் தீர்மானிக்க ஒரு நிபுணர் குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அக்குழுவில் மத்திய அரசு - மாநில அரசுகள், நிதி கமிஷன், நீதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி, பயனாளிகள் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இலவசங்களால் அரசு நிதி அதிக அளவு செலவாகிறது. அதனால் மாநில அரசுகள் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகிறது. இலவசங்களை வழங்கும் ஆளுங்கட்சி, வாக்காளர்களின் அபிமானத்துக்கு உரியதாவதால், அதனுடைய ஆட்சி தொடர்வதற்கு உதவுகின்றது. இந்த இலவசங்களால் அடுத்து வரும் தேர்தலிலும் மீண்டும் அந்த அரசியல் கட்சியே வெற்றி பெறுகிறது. இலவசம் இவ்வாறு வாக்குவங்கியாக செயல்பட்டு வருகிறது.
ஆளுங்கட்சிக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சி கூட்டணியும் இதேபோல அதிக இலவசங்களை அறிவிக்க வேண்டியதாகிறது.
ஒரு கட்சி மிக்ஸி, கிரைண்டர் இலவசமாகத் தருவதாகச் சொன்னால், இன்னொரு கட்சி வாஷிங்மெஷின் தருவதாகப் போட்டிக்கு அறிவிக்கும். ஒரு கட்சி மடிக்கணினி என்றால், இன்னொரு கட்சி இலவச இணையம் என்கிறது.
ஒரு கட்சி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி தருவதாகச் சொன்னால், இன்னொரு கட்சி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப் போவதாக அறிவிக்கிறது. ஒரு கட்சி புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால், இன்னொன்று பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுகிறது.
குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 என்று ஒரு கட்சி அறிவித்தால், இன்னொரு கட்சி குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறுகிறது.
இந்த இலவசப் போட்டாபோட்டிக்கு எல்லையே இல்லை. இலவச அறிவிப்பின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதுதான். "வருடம் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாகக் கூறிய மத்திய ஆளுங்கட்சி, அப்படித் தரவில்லை என்பது மட்டுமல்ல, வேலையில் இருந்த தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்குமாறு பல தொழிற்சாலைகளையும் மூடிவிட்டது' என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இலவசங்களைப் பற்றி இரண்டு விதமான கருத்துகள் நிலவுகின்றன. ஏழைகளால் மிக்ஸி, கிரைண்டர்களை வாங்க முடியாது. அவர்கள் பழைய ஆட்டுக்கல், அம்மிக் கல்லைத்தான் பயன்படுத்துகின்றனர். அவர்களுடைய தினக்கூலி அவர்களின் உணவுக்குக்கூட போதுமானதாக இல்லை. அதனால்தான் நியாயவிலைக் கடைகளின் மூலம் அவர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி தரப்படுகிறது. விலைக்கு வாங்கும் அரிசியும் குறைந்த விலையில் தரப்படுகிறது.
இப்படிப்பட்ட சாமானிய மக்களுக்கு வாங்கும் சக்தி குறைவாக உள்ளதை கவனத்தில் கொண்டுதான், இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, இலவச வேட்டி, புடவை முதலியவற்றை அரசு வழங்குகின்றது. இவற்றை இலவசம் என்று கூறாமல், நலத்திட்ட உதவி என்றே அரசு கூறுகிறது. முந்தைய அரசும் இவற்றை செய்துவந்த காரணத்தால், இலவசங்களை குற்றமாக அரசியல் கட்சிகளால் கூற முடிவதில்லை.
மத்திய அரசு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவ சிகிச்சைக்காகத் தருவதாகக் கூறுகிறது. மாநில அரசுகளும் பல சலுகைகளை வழங்குகின்றன. கல்விக்கான கடன்கள் ரத்துசெய்யப்படப் போவதாக அறிவிக்கப்படுகிறது.
வட்டியில்லாக் கடனாக அதனைக் கருதி, மாணவர்கள் படிப்பை முடித்து வேலைக்குச் சென்ற பிறகு கடனை தவணைமுறையில் திருப்பிக் கட்டலாம் எனக் கூறப்படுகிறது. இன்னொரு கட்சி கல்விக் கடனையே முழுமையாக ரத்து செய்வதாக அறிவிக்கிறது.
ஹிமாசல பிரதேசத்தில் ஒரு கட்சி, வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும், ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 நிதியுதவி என்றும் அறிவித்துள்ளது (அங்கு நான்கு மாதத்தில் தேர்தல் வரவிருக்கிறது).
இதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பதற்கான விளக்கத்தை அக்கட்சி தரவில்லை. அவ்வாறு தராமல் இலவசங்களை மட்டும் அறிவிப்பது தவறானது என்று கட்சிகளைக் கண்டிக்கும் சட்ட விதிகளும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை; நீதிமன்றத்திடமும் இல்லை. நீதிமன்றம் அறிவுரை கூறலாம், அவ்வளவுதான்.
இதற்காக ஒரு குழு அமைத்து விதிகளை வகுக்க வேண்டும் என்று யோசனை கூறத்தான் உச்சநீதிமன்றத்தால் முடிந்ததே தவிர, உத்தரவிட முடியவில்லை. தமிழ்நாட்டில் மகளிருக்கு பேருந்துப் பயணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால், அவர்களுடைய பயணச் செலவு மிச்சமாகியுள்ளது. பொருளாதார சிக்கலிலிருந்து அவர்கள் மீண்டுள்ளனர் என அரசு கூறுகிறது.
இந்த திட்டத்திற்காக பெண் வாக்காளர்கள் நன்றி கூறுவார்களேயானால், அவர்கள் அக்கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். இதனை எதிர்ப்பது என்றால், நகரப் பேருந்துகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த இலவசம், புறநகர்ப் பேருந்துப் பயணங்களுக்கும் தரப்படும் என்றுதான் எதிர்க்கட்சிகள் கூற வேண்டி வரும்.
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுப்பது, இலவச கழிப்பறைக் கட்டிக் கொடுப்பது, இலவச சமையல் எரிவாயு உருளைகளைத் தருவது போன்றவை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளாகவே கருதப்பட வேண்டுமே தவிர, அவற்றை இலவசமாகக் கருதுவது தவறு என்கின்றனர்.
இலவச மதிய உணவு, இலவச காலை சிற்றுண்டி ஆகியவை ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களே தவிர, அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும் இலவசங்கள் அல்ல என்று கூறப்படுகிறது. இதேபோலத்தான் ஏழைகளுக்கு இலவச சட்டஉதவி வழங்க உச்சநீதிமன்றமே முன்வந்துள்ளது.
உண்மையில் அரசியல் ஆதாயத்திற்காகவே இலவசங்களை வழங்குகிறார்கள் என்பதே உண்மை. என்ன அந்த அரசியல் ஆதாயம்?
நாடு முழுவதுமுள்ள 10 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ. 6,000 சென்ற இரு ஆண்டுகளாகத் தரப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகளுக்குத் தரப்படும் நிதி உதவியாக நினைக்க வேண்டுமே தவிர, விவசாயிகளை வாக்குவங்கியாக்கும் நோக்கமுள்ளதாகக் கருதக் கூடாது என்கிறனர்.
இவை இலவசங்கள், இவை நலத்திட்டங்கள் என வரையறை செய்வதில் குழப்பமே நீடிக்கிறது. ஆனாலும், இலவசங்கள் தேசப் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்கிற விமர்சனம் தவறல்ல.
இலவசம், நலத்திட்டம் இரண்டுமே வாங்கும் சக்தியற்றவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கானவை. இலவசம் வாக்குவங்கியாக உருமாறுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. வாக்காளர்களின் ஏழ்மை நிலை அதனை நியாயப்படுத்துகிறது.
வேலைவாய்ப்பை உடனடியாக உருவாக்க முடியாத நிலையில்தான் கிராமப்புறங்களில் நூறுநாள் வேலைத்திட்டம் எனும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
எவையெல்லாம் இலவசங்கள், எவையெல்லாம் நலத்திட்டங்கள் என்பதை வரையறுக்க வேண்டியது இன்றைய அவசரத் தேவையாகும். உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி அமைக்கப்படும் குழுவை ஆளுங்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரவேற்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களும் அக்குழுவுக்குத் தங்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இலவச பட்டியலும் நலத்திட்ட உதவி பட்டியலும் தயாரிக்கலாம். இலவச பட்டியலில் உள்ளவற்றை நலத்திட்ட பட்டியலுக்கு மாற்றலாம். அதேபோல நலத்திட்டப் பட்டியலில் உள்ளவற்றை இலவச பட்டியலுக்கு மாற்றலாம்.
இவ்வாறு உருவாக்கப்படும் இறுதிப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலவசங்களை வழங்குவதற்குரிய நிதி ஆதாரத்தை இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் எப்படித் திரட்டப் போகின்றன என்பதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம்.
தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடிக்கும் மாபெரும் பணியை செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால், அது மட்டும் போதாது. தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி சுயாட்சியுள்ள நிறுவனம்.
இலவசங்களை வழங்க முன்வரும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதியை எப்படித் திரட்டுகின்றன என்பதைத் தெரிவிக்காத நிலையில் அக்கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வழிகோலப்பட வேண்டும். அப்போதுதான் நீதிமன்றத்தைப் போல தேர்தல் ஆணையமும் ஜனநாயகத்தைக் காக்கும் அரணாக அமையும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

 



Read in source website

தேனி சட்டக் கல்லூரி மாணவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், அரசமைப்பின் முதன்மைச் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கரைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துகளும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அவரது உருவப்படம் இடம்பெற வேண்டும் என்று பிறப்பித்திருக்கும் உத்தரவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

கல்லூரி முதல்வரின் அறையில் அம்பேத்கரின் உருவப்படம் இடம்பெற வேண்டும், தமிழ்வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர், கல்லூரி நிர்வாகத்திடம் கோரியுள்ளார். அவரது அணுகுமுறையில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டிய கல்லூரி நிர்வாகம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அம்மாணவர் தனக்காக வாதிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின்போது, குறிப்பிட்ட அம்மாணவர் தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் கைப்பட மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியதோடு, கல்லூரி நிர்வாகம் உடனடியாக அம்பேத்கரின் உருவப்படத்தை நிறுவி, அதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியும் உயர் நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை அதற்கடுத்த இரண்டாம் நாளுக்குத் தள்ளிவைத்தது.



Read in source website

இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படையின் கேப்டனாகவும் எளிய மக்களுக்குச் சேவை செய்த மருத்துவராகவும் அறியப்படுபவர் லட்சுமி சாகல்.

படிப்பும் செல்வாக்கும் அரசியல் பின்புலமும் கொண்ட சுவாமிநாதன் - அம்மு தம்பதியின் மகள் லட்சுமி. சிறு வயதிலிருந்தே தன் அம்மாவுடன் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்தபோது கதர் ஆடைகள் அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார். 1938இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

மீரட் சதி வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட சுகாசினி, லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். அப்போது அவரிடம் லட்சுமி மார்க்சியம் கற்றுக்கொண்டார்; ரஷ்யப் புரட்சி குறித்தும் படித்தார். புரட்சியினால் மட்டுமே சமூக மாற்றம் சாத்தியம் என்ற எண்ணத்தை வந்தடைந்தபோது, காந்தியக் கொள்கையைக் கைவிட்டார் லட்சுமி.

இரண்டாம் உலகப் போரின்போது உறவினர் ஒருவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் லட்சுமி. அங்கே புலம்பெயர்ந்த இந்தியர்களின் நிலையைக் கண்டு வருந்தினார். அவர்களுக்குத் தம்மால் ஆன மருத்துவ உதவிகளைச் செய்தார். அப்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் உருவானது. அதில் ஏராளமான புலம்பெயர்ந்த இந்தியர்கள் தாமாகச் சேவைசெய்ய முன்வந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்துவந்த லட்சுமியை, சுபாஷ் சந்திர போஸ் சந்தித்தார். ‘ஜான்சி ராணி பெண்கள் படை’க்கு தலைமையேற்குமாறு கேட்டுக்கொண்டார். தெற்காசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பெண்கள் படை என்ற சிறப்பும் இந்தப் படைக்கு உண்டு.

லட்சுமியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மலேசியாவிலிருந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சிங்கப்பூரிலிருந்து பர்மா வழியாக இந்தியாவை அடைவதற்கான கடினமான பயணத்தில் மிகுந்த நெஞ்சுரத்தோடு அவர்கள் சென்றனர். பர்மிய - இந்திய எல்லையில் ஆங்கிலேயப் படைகளிடம் சிக்கிகொண்ட பெண்கள், நச்சுக்கிழங்குகளைத் தின்று உயிர் துறந்தனர்.

இந்திய தேசிய ராணுவத்தால் நடத்தப்பட்ட மருத்துவமனைக்கு வரும் காயமடைந்த வீரர்களுக்கு லட்சுமி சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். ஒருநாள் மருத்துவமனை என்பதை அறிந்தும் ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்தியது. பதுங்குக்குழியில் இருந்த லட்சுமி உயிர்தப்பினார். கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

1947இல் சக விடுதலைப் போராட்ட வீரரான பிரேம்குமார் சாகலைத் திருமணம் செய்துகொண்டார். கான்பூரில் குடியேறி, 97 வயது வரை ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவையை வழங்கினார். 2002இல் இடதுசாரிகளின் சார்பில் குடியரசுத் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்தும் போட்டியிட்டு்ள்ளார்.



Read in source website

மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022: மத்திய அரசின் மின் துறை அமைச்சகம், மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022-ஐ ஆகஸ்ட் 8 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இருக்கும் நாடாளுமன்றத்தின் எரிசக்தி நிலைக்குழுவுக்கு அனுப்பி, மசோதாவின் முழு சாராம்சத்தையும் விவாதிக்கலாம் என்று மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிஸான் மோர்ச்சா’வுக்கு (எஸ்.கே.எம்) அளித்த வாக்குறுதியை மீறி, இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல; அரசமைப்புக்கு எதிரானது, மாநிலங்களின் நலனுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கூறினர்.



Read in source website

இந்தியக் குடியரசின் தொடக்கம் - இந்நாட்டு மக்கள் மீதான உயர் நம்பிக்கையின் மீதான செயல்பாடு; நாட்டின் அனைத்து வளங்களையும் திறமையையும் பயனுள்ள நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கும் நடவடிக்கை. தன்னுடைய வலிமை, செயல்திறனை நாட்டுக்கு அதிகபட்சமாக அளித்து நாட்டின் பெருமையைக் காப்போம் என்ற உறுதிமொழியை மக்கள் எடுத்துக்கொள்வதை மறைமுகமாக வலியுறுத்துவதுதான் குடியரசு அறிவிப்பு. கவனச் சிதறலுக்கு ஆளாகிவிட்ட உலகுக்கு, தேவைப்படும்போது தனது ஆற்றலை ஒன்றுதிரட்டிச் செயல்பட்டு, அபயமளிக்கக் கூடிய நாடுதான் இந்தியா என்பதை உணர்த்தவே குடியரசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய அரசமைப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அதில் தனிநபரின் சுயம், கூட்டு உறுதிப்பாட்டில் கரைந்துவிடாது, மாறாக அதை தொடர்ந்து வளர்த்தெடுக்கும். அத்தகைய அரசியல் ஏற்பாட்டில் யாருமே ஊன்றுகோலுடன் நடை போட வேண்டிய அவசியம் இருக்காது. பொதுப் பிரச்சினையில் நான் கவலைப்பட ஏதுமில்லை என்று எவரும் ஒதுங்கிவிடவும் முடியாது.



Read in source website

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டறிந்த செய்தி ஐந்து மாதங்கள் கழித்துத்தான் அவரை அனுப்பிவைத்த ஸ்பெயின் நாட்டு மன்னருக்குத் தெரியவந்தது. அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 நாட்களுக்குப் பிறகே அந்தச் செய்தி ஐரோப்பியர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரம் விமானத் தாக்குதலில் தகர்க்கப்பட்டதை உலகமெங்கும் மக்கள் தங்களது வீடுகளில் தொலைக்காட்சி மூலம் உடனடியாகக் காண முடிந்தது. ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள அற்புதத்தின் விளைவு இது.

மக்களிடம் கருத்துகளை உருவாக்குவதிலும் மனித மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பதிலும் பத்திரிகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால்தான் பத்திரிகைகளை ‘மூன்றாவது கண்’ என்கிறோம். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், எந்தவித வியாபார நோக்கமுமின்றி சமூக அக்கறையோடு இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து மக்களுக்குச் செய்திகளைக் கொண்டுசேர்க்கப் பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

செய்தி உற்பத்தியும் கருத்தும்: ஜனநாயகத்தின் கண்களாகவும் நேர்மறையான மாற்றங்களுக்குத் துணை நிற்பவையாகவும் இருக்க வேண்டிய ஊடகங்கள், காலப்போக்கில் செய்திகளை உற்பத்திசெய்யும் கூடங்களாக மாறிவிட்டன. வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும் செய்திகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாகிவிட்டன. செய்திகளில் ஜனநாயகத்தன்மை குறைந்து, நுகர்பொருள் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்தன்மை பெருகிவிட்டது. விளம்பரதாரர்களே செய்தியின்-நிகழ்ச்சியின் தன்மையை முடிவுசெய்கிறார்கள். அதனால், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைச் சில நேரம் ஊடகங்கள் புறக்கணிக்க நேர்கிறது. அரசியல், திரைப்படம், குற்ற நிகழ்வுகள் போன்ற செய்திகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் பல ஊடகங்கள், மக்களின் முக்கியப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்வதில்லை. சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக வெகுமக்களுக்கான ஊடகங்கள் மாறிவிட்டதால், அதனை நடத்தும் உரிமையாளர்கள் செய்திகளைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றனர். அது ஊடகங்களின் உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்கிறது. முன்பு செய்திக்கும் செய்தி விமர்சனத்துக்கும் தனியே வேறுபாடு இருக்கும். இப்போது பல பத்திரிகைகளில் செய்திகளுடனேயே தங்களது கருத்துகளையும் திணித்து, அதையும் செய்திபோல வெளியிடும் போக்கும் உருவாகிவிட்டது.

அரசு நிர்வாகத்தில் நிகழக்கூடிய தவறுகளை, குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் செய்திகளை வெளியிடும் சில பத்திரிகைகள், பெரும்பாலும் அதன் அடிப்படை அம்சங்களைப் பற்றிக் கேள்வி எழுப்புவதில்லை. தற்போதுள்ள அமைப்பினுடைய கோளாறுகளின் அறிகுறிகளை மட்டுமே சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைக்கும் வகையிலேயே பெரும்பாலும் உள்ளன. விளிம்புநிலை மக்களின் முக்கியப் பிரச்சினைகள் பல செய்தி ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை.

ஊடகங்களின் இன்றைய நிலை: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய இதழ்கள் (நியூ மீடியா) முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. அதேவேளையில், கட்டற்ற சுதந்திரத்துடன் சமூக ஊடகங்கள் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்துவருகின்றன. மாறுபட்ட பல்வேறு கருத்துகளை விவாதிக்கின்றன. அச்சுவழிப் பத்திரிகைகளே இணையவழியில் இதழ்களை நடத்துவதும் வாசகர்களுடன் விவாதிக்கச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதும் நிகழ்கிறது. சில நேரம் செய்திப் பத்திரிகைகளில் சில செய்திகள் ஓரங்கட்டப்பட்டாலோ அல்லது மறைக்கப்பட்டாலோ சமூக ஊடகங்கள் அந்தச் செய்திகளை வெளியிடுவதுடன், அந்த இதழ்கள் ஏன் வெளியிடவில்லை என்ற விவாதத்திலும் இறங்குகின்றன. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை பல நேரம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதையும் தனிநபர் காழ்ப்புணர்ச்சியுடன் செய்திகள் வெளிவருவதையும் சில நேரம் பொய்ச் செய்திகள் உண்மை போலச் சமூக ஊடகங்களில் உலா வருவதையும் பார்க்க முடிகிறது.

தற்போது ஊடகத்துடன் சம்பந்தப்படாதவர்கள் ஊடகத் துறைக்கு அதிகம் வரத் தொடங்கிவிட்டார்கள். பெரிய தொழில் நிறுவனங்களின், பெரிய பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் பெரிய ஊடக நிறுவனங்கள் உள்ளன. தற்போது விளம்பரதாரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் ஊடகங்களின் உள்ளடக்கத்தை நிர்ணயிப்பதில் மறைமுகமாகத் தலையிடுகின்றன. இந்தச் செய்தியைப் போடலாம், இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தக் கூடாது, இந்தச் செய்தியைப் போடவே கூடாது என்றெல்லாம் அழுத்தங்கள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் முழுச் சுதந்திரத்துடன் எழுதுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவருகின்றன. எனினும், ஒரு சில பத்திரிகைகளும், சில சுயாதீனப் பத்திரிகை ஊடகங்களும் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிடுவதில் தயக்கம் காட்டுவதில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

பத்திரிகைச் சுதந்திரம்: நெருக்கடி நிலைக் காலத்தில் பத்திரிகைகள் அரசின் தணிக்கைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகின. அதைத் தைரியமாக எதிர்கொண்ட பத்திரிகைகளும் உண்டு. ஆனால், தற்போது மக்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த சில மக்கள் பிரச்சினைகள் தொலைக்காட்சி ஊடகங்களின் விவாதப் பொருளாக இருப்பதில்லை. மக்களைப் பாதிக்கும் பல விஷயங்களில் பல ஊடகங்கள் மௌனம் சாதிப்பதையும் அல்லது கண்டுகொள்ளாமல் கடந்துசெல்வதையும் பார்க்க முடிகிறது. கடந்த காலத்தில் கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி போன்றவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பன் பிணை கிடைக்காமல் தவித்துவருகிறார். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் குரல்களை ஒடுக்கும் வகையில் சட்டவிரோதச் செயல்பாட்டுத் தடுப்புச் சட்டம் (உபா) போன்ற சட்டங்களை அரசு கையில் எடுக்கிறது.

ஜனநாயகத்தின் குறியீடாகப் பத்திரிகைச் சுதந்திரம் கருதப்படுகிறது. ஆனால், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவருகிறது என்பதை எல்லைகளைக் கடந்த செய்தியாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு அறிக்கைப்படி, பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டு எண்ணில் 180 நாடுகளில் இந்தியா 150-வது இடத்தில் உள்ளது. கருத்துச் சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகியுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

‘நமது நாட்டில் அநேகப் பத்திரிகைகள் இருந்தாலும் தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன’ என்று ‘குடியரசு’ இதழில் பெரியார் (19.05.1925) எழுதினார். இந்தியச் சுதந்திரத்துக்கு முன் பெரியார் எழுதியது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. பத்திரிகைகளுக்கு என்று தற்போது தணிக்கை முறை இல்லை. அதே சமயம் தணிக்கை முறை கொண்டுவரப்பட்டால், அது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் விதமாகத்தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை. மரபாக இருந்துவரும் வழக்கப்படி, பத்திரிகைகள் தங்களைச் சுயதணிக்கை செய்துகொள்ளும் முறையே தொடர வேண்டும். அதே நேரம், தொடக்க காலம் தொட்டுப் பத்திரிகைகள் கடைப்பிடித்துவரும் அறம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் இன்றைய தேவையாக இருக்கிறது.

விளம்பரங்களை நம்பித்தான் ஒரு ஊடகத்தின் வருவாயும் ஆயுளும் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை மாறினால்தான், அறம் சார்ந்து செயல்படும் ஊடகங்கள் தொடர்ந்து இயங்க முடியும். அந்த வகையில் சரியான ஊடகங்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

- பொன்.தனசேகரன், மூத்த இதழாளர்

தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com



Read in source website

சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ் இலக்கியம் நவீனமடைந்ததில் தமிழ் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. இந்தக் காலகட்டம், சிற்றிதழ் இயக்கம் என இலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ‘மணிக்கொடி’ இதழ், நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வித்திட்டாலும், அது விருட்சமாக வளர்ந்தது சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான். அந்த வகையில் ‘மணிக்கொடி’ காலகட்டத்தவரான எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் முதன்மையானது.

‘எழுத்து’, 1959இல் எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவந்தது. தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு இந்த இதழ் களம் அமைத்துக்கொடுத்தது. க.நா.சுப்ரமண்யம், ந.பிச்சமூர்த்தி, நகுலன், சுந்தர ராமசாமி, பிரமிள், எஸ்.வைத்தீஸ்வரன், சி.மணி போன்ற முதல் தலைமுறை கவிஞர்கள் பலரும் இந்த இதழில் தொடர்ந்து எழுதினர். வில்லியம் பாக்னர், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆண்டன் செகாவ், ஹென்றி ஜேம்ஸ் போன்ற அயல் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘எழுத்து’ தொடர்ந்து வெளியிட்டது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ‘எழுத்து’ இதழ் ஓர் இயக்கமாக இருந்தது.

எழுத்தாளர் க.நா.சு. 1964இல் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழை நடத்தினார். இலக்கியக் கோட்பாடுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். படைப்புரீதியான புதிய முயற்சிகளை அதில் பதிப்பித்தார். சுந்தர ராமசாமி, நகுலன், ஆர்.சூடாமணி, வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், தி.க.சிவசங்கரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இதில் பங்களித்துவந்தனர்.

‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் நிருபராக டெல்லியில் பணியாற்றிய கி.கஸ்தூரிரங்கன் ‘கணையாழி’ இதழை 1965இல் தொடங்கினார். இந்த இதழ் இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது. அசோகமித்திரன் இதன் ஆசிரியராக இருந்த கட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எழுத்து இதழில் எழுதிய கவிஞர் சி.மணி ‘நடை’ என்ற பெயரில் காலாண்டிதழை 1968இல் தொடங்கினார். இந்த இதழ், நவீன ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது. கவிஞர்கள் ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன் தொடர்ந்து எழுதினர். நாடக ஆளுமையான ந. முத்துசாமியின் கதைகளும் ‘நடை’யில் வெளிவந்தன.

எழுத்தாளார் நா.கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ‘கசடதபற’ இதழ் 1970இல் தொடங்கப்பட்டது. இந்த இதழில் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ஐராவதம், ந. முத்துசாமி, அசோகமித்திரன் ஆகியோர் பங்களித்துள்ளனர். பின்னால் பெரும் பெயர்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரனும் இந்த இதழில் பங்களித்துள்ளார். நூலகராகப் பணியாற்றிய தேவ சித்திரபாரதி ‘ஞானரதம்’ (1970) என்ற பெயரில் ஒரு சிற்றிதழைக் கொண்டு வந்தார். ஜெயகாந்தன் இதன் ஆசிரியராகச் சில காலம் இருந்தார். வனமாலிகையின் ‘சதங்கை’, சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’, ராஜமார்த்தாண்டனின் ‘கொல்லிப்பாவை’ போன்ற இதழ்களும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

கோவையிலிருந்து வந்த ‘வானம்பாடி’ இதழ் (1970), தமிழ் இலக்கியச் சூழலில் ஓர் இயக்கமாகப் பார்க்கப்படுகிறது. மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், பா.செயப்பிரகாசம், கோ. ராஜாராம் போன்ற கவிஞர்கள் இந்த இதழ் மூலம் கவனம் பெற்றனர். இடதுசாரித் தலைவர் ப.ஜீவானந்தம் ஆசிரியராக இருந்து 1954இலிருந்து கொண்டுவந்த ‘தாமரை’ தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. ரஷ்ய, பிற மொழி இலக்கியங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. பிரபஞ்சன், வண்ணநிலவன், பூமணி, கந்தர்வன், பா.செயப்பிரகாசம், ஆர்.கே.லிங்கன், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்பபாரதி போன்ற எழுத்தாளர்கள் இந்த இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழாக வெளிவரும் ‘செம்மலர்’ எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது. ராஜேந்திர சோழன், தணிகைச் செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி உள்ளிட்டோர் இந்த இதழில் எழுதியுள்ளனர். எழுதுவதற்கு ஊடகம் இல்லாக் காலகட்டத்தில் தமிழில் இலக்கிய ரசனைமிக்க, அரசியல் சுரனைமிக்க போக்குகள் உருவாக சிற்றிதழ்கள் களமாக இருந்தன.

- ஜெயகுமார்



Read in source website

இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அரசியல் அடக்குமுறையை எதிர்த்தவர் ஸ்நேகலதா ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் 1932இல் பிறந்த ஸ்நேகலதா, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார். ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இந்திய உடைகளை அணிந்தும் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டும் கல்லூரிக்குச் சென்றார்.

ஸ்நேகலதா - பட்டாபிராம் தம்பதி, சுதந்திரப் போராட்ட வீரர் ராம்மனோகர் லோகியாவின் செயல்பாடுகளால் கவரப்பட்டு அவரைப் பின்பற்றி போராட்டங்களில் ஈடுபட்டனர். 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போது தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமானது ‘பரோடா டைனமைட் வழக்கு’. குற்றப்பத்திரிகையில் ஸ்நேகலதாவின் பெயர் இடம்பெறாதபோதும், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குழுவினரின் செயலுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்பட்டு மிசா (Maintenance of Internal Security Act) சட்டத்தின்கீழ் ஸ்நேகலதா கைது செய்யப்பட்டார்.

1976 மே 2 அன்று கைதுசெய்யப்பட்டு, எந்த விசாரணையும் இன்றி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாள்பட்ட ஆஸ்துமா வால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை சிறையில் அனுபவித்த கொடுமைகளாலும் சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் மோசமடைந்தது. இருந்தபோதும் சிறைக் கைதிகளின் உரிமைக்காகப் போராடினார். சிறைக் கைதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவதைக் கண்டித்தார். சிறையில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிறையில் இருந்தபோது அங்கே நடந்த வற்றைச் சிறு நாட்குறிப்பேட்டில் ஸ்நேகலதா பதிவுசெய்துவந்தார். அவரது டைரிக் குறிப்பு களைத் தொகுத்து கர்நாடக மனித உரிமைகள் ஆணையம் 1977இல் புத்தகமாக வெளியிட்டது. பெண்ணிய வரலாற்று ஆய்வாளரான உமா சக்ரவர்த்தி, ஸ்நேகலதாவின் அரசியல் செயல் பாடுகளையும் அவரது சிறை அனுபவங்களையும் மையமாக வைத்து, ‘Prison Diaries’ என்கிற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்நேகலதாவின் உடல்நிலை மோசமடைந் ததையடுத்து எங்கே அவர் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று பயந்து 1977 ஜனவரி 15 அன்று பரோலில் வெளியே அனுப்பப்பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உடலும் மனமும் பாதிக்கபட்டிருந்தவர், வெளியே அனுப்பப்பட்ட ஐந்தாம் நாள் மரணமடைந்தார்.

- ப்ரதிமா



Read in source website

இஸ்ரோவால் 2008 அக்டோபர் 22இல் ஆளில்லாத விண்கலம் சந்திரயான் நிலவுக்குச் செலுத்தப்பட்டது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் இது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துசென்ற பி.எஸ்.எல்.வி ஏவுகலம் புவியின் சுற்றுப்பாதையில் முதலில் அதை நிலைநிறுத்தியது. அதன் பின்னர் அந்த விண்கலத்தின் முன்னுந்து அமைப்பு நிலவை நோக்கி அதைச் செலுத்தி, நிலவுக்கு மேலே 100 கி.மீ. சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த விண்கலத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கருவிகளும், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை தயாரித்த ஆய்வுக் கருவிகளும் இடம்பெற்றிருந்தன.

சந்திரயானின் ஆய்வு, நிலவின் பரப்பில் அதிக அளவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தக் கண்டறிதல் நிலவு குறித்த ஆய்வுகளில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சர்வதேச நாடுகள், நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின.

சந்திரயான் திட்டத்துக்கு ஆன செலவு இந்திய மதிப்பில் ரூபாய் 400 கோடி. நிலவைச் சுற்றியபடியே இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படும் விதமாக சந்திரயான் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களிலேயே அது தரைக்கட்டுப்பாடு நிலையத்துட னான தொடர்பை இழந்தது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சந்திரயான் செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பத்து மாதங்களே செயல் பட்டாலும் சந்திரயான் தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துவிட்டது.

2019 ஜூலை 22 அன்று சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் தரையிறங்கு கலம் விக்ரம், 2019, செப்டம்பர் 7 அன்று நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. ஆனால், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்திலிருந்தபோது தரையிறங்கு கலம் விக்ரமுடன் தகவல்தொடர்பை இஸ்ரோ இழந்துவிட்டது. ஒருவேளை விக்ரம் வெற்றிகரமாகத் தரையிறங்கி இருந்தால், அது நிலவு குறித்த ஆய்வில் இன்னொரு மைல்கல்லாக இருந்திருக்கும்.

- ஹுசைன்



Read in source website

நம் நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்படியான ஒரு கொண்டாட்ட நிகழ்வு பம்மல் சூரியம்மன் குளக்கரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எக்ஸ்னோரா தலைவர் செந்தூர் பாரி, ‘‘எல்லா நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள்.. அந்தப் பொன்னாடையால் என்ன பயன் என்று கேட்கிறபோது, யாராலும் பதில் அளிக்க முடிவதில்லை.

ஆனால், அந்த சிந்தெடிக் சால்வையால் சுற்றுச்சூழலுக்குக் பெரும் கேடுதான் விளைகிறது. அதனால், நான் கலந்துகொள்ளும் எல்லா விழா நிகழ்ச்சிகளிலும் நூலாடை அணிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதனால் பயனும் உண்டு... முக்கியமாக சுற்றுச்சூழலுக்கும் கேடு இல்லை’’ என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். மேலும், கார்பன் சமநிலை அடைந்துள்ள கேரளத்தின் வயநாட்டைப் போன்று தமிழ்நாட்டிலும் கோடிக்கணக்கான மரங்கள் நடுவதற்கு எக்ஸ்னோரா அமைப்பு முயற்சி எடுத்து வருவதாகக் கூறினார். ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் இந்திர குமாரும், விழா அமைப்பாளர் மா.பன்னீர் செல்வமும் உடனிருந்தனர்.

- ஸ்ரீநிகேதன், சென்னை-75.



Read in source website