DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 24-05-2022

கோயில் நிகழ்வில் ஆபாச நடனம் இருந்தால் காவல்துறையினர் உடனடியாக நிகழ்வை நிறுத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கில் நீதிபதி கூறியதாவது, “ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் காவல்துறையினர் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஆடல் - பாடல் நிகழ்விற்கு அனுமதி அளித்தார்.

 



Read in source website

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார். 

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழாவினையொட்டி மே 6-ம் தேதி உற்சவமூர்த்தி சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினர். அதனையடுத்து சுவாமிகள் தினசரி பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனர்.  

மே 14-ம் தேதி சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.  பின்னர் பல்வேறு மண்டப கட்டளை வழிபாட்டிற்கு பின்னர் சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து  சுவாமிகள் தங்கு மண்டபத்திலிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக மலைக்கு திரும்பினார். 

முன்னதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி செல்ல அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர்  ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் சென்றனர். பக்தர்கள் வழியெங்கும் தேங்காய், பழங்கள், நாட்டுச்சர்க்கரையுடன் கூடிய பொட்டுக்கடலை ஆகியவைகளை படைத்து சுவாமிகளை வழிப்பட்டனர். மலையடிவாரம் பகுதியில் பக்தர்கள் மலைக்கு செல்பவர்களுக்கு  அன்னதானம், குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினர். 

மலையடிவராத்தில் 2-வது மண்டபத்தில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தேங்காய்களை தரையில் உடைத்து கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கியவாறு சுவாமிகளை வழியனுப்பி வைத்தனர். பக்தர்கள் அதிகளவில் சுவாமிகளுடன் மலை ஏறினர்.  

மலை மீது இன்றிரவு வன்னிய குல சத்திரியர்கள் அமைப்பின் சார்பில் சுவாமிகளுக்கு குறிச்சி அலங்காரம் வாணவெடிகளுடன் நடைபெற உள்ளன.



Read in source website

சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பது இதுவே முதல்முறையாகும்.

காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மே மாதத்தில் அணை திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை பாசனம் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், கால்வாய் பாசனத்திற்கும் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 406.99 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படுகிறது.

இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 331.28 டி.எம்.சி.யும், வடகிழக்குப் பருவ மழை மூலம் 75.72 டி.எம்.சி. பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 18 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12-க்குப் பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 1936 முதல் 1947 வரையிலான காலகட்டங்களில் 11 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது இதுவே முதல்முறையாகும்.

முதல்வர் தண்ணீரை திறந்து விட்டார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணி அளவில் மதகுகளை இயக்கி குறுவை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 10,508 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை  நிலவரப்படி 117.76 அடியாக உள்ளது.

நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது.

குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 125. 68 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை அணையிலிருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும் போது அணை மின்  நிலையத்தில் இருந்து 50 மெகா வாட், சுரங்க மின் நிலையங்களில் 200 மெகாவாட், 7  கதவணைகளில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.


 



Read in source website

 

இராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என். குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

காலமான என். குமரன் சேதுபதி, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் ஆவார். இவர்  ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்துள்ளார்.

ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்த என். குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

என். குமரன் சேதுபதி, ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர்.

தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள், வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும், பின் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள். சேதுக் கரைக்கு அதிபதிகளாகத் திகழ்ந்ததால் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர்.



Read in source website

 

புது தில்லி: மோசடி வா்த்தகா்கள் சட்டவிரோதமாக கோதுமை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்கு மத்திய வா்த்தக அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

உள்நாட்டில் கோதுமை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 13-ஆம் தேதி தடை விதித்தது.

இருப்பினும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதிக்கு முன்பு கடனுறுதிக் கடிதங்களைப் பெற்றுள்ள ஏற்றுமதியாளா்கள், கோதுமையை ஏற்றுமதி செய்வற்கு வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், சில மோசடி வா்த்தகா்கள், போலியாக 13-ஆம் தேதிக்கு முந்தைய கடனுறுதிக் கடிதங்களை சமா்ப்பித்து, கோதுமையை ஏற்றுமதி செய்வதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம்(டிஜிஎஃப்டி) விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 13-ஆம் தேதிக்கு முன்பு கடனுறுதிக் கடிதம் பெற்ற வா்த்தகா்கள், அந்தக் கடிதத்துடன் இந்திய வங்கிக்கும் வெளிநாட்டு வங்கிக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடந்த தேதி உள்ளிட்ட விவரங்களையும் டிஜிஎஃப்டியின் மண்டல அலுவலகத்தில் சமா்ப்பித்து அனுமதிச் சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website


அமெரிக்காவுடன் நம்பகத்தன்மையான உறவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான கருத்துகள் மற்றும் மதிப்புகள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். 

ஜப்பானில் நடைபெற்ற குவாட் அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தனியாக சந்தித்து பேசினர். 

பைடன் உடனான சந்திப்புக்கு பிறகு பேசிய நரேந்திரமோடி தெரிவித்ததாவது, ''இந்தோ - பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துக்களை குவாட் மாநாட்டில் முன்வைத்தன. இரு தரப்பும் இந்தோ பசுபிக் பகுதியில் பொதுவானவற்றை பாதுகாக்க ஒத்த சிந்தனையுடைய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினோம். எங்களுடைய கலந்துரையாடல் நேர்த்தியாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்தது'' எனக் குறிப்பிட்டார். 

மேலும், ''இரு நாட்டு மக்களின் உறவு மற்றும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பு போன்றவையும் இந்தியா - அமெரிக்கா கூட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம் மற்றும் முதலீடு தொடர்பான உறவுமுறை நேர்மறையாகவும், அதேவேளையில் எங்கள் தகுதிக்கு குறைந்த அளவிலேயே உள்ளது.  இது மேம்படும்.

அமெரிக்க முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு நிலையான வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.  



Read in source website

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வரும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவின் இந்த உதவிகளை வரலாறு பேச வேண்டும்.

இந்தியாவின் இந்த தன்னலமற்ற உதவியினை உலக நாடுகள் பலவும் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. மேலும், இந்தியாவின் இந்த செயல் இலங்கை-இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும். கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

இந்தியா இலங்கைக்கு பல கோடி ரூபாய் பொருளாதார உதவி செய்துள்ளது. அதேபோல மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு எரிபொருள், உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றையும் அனுப்பியுள்ளது.

இந்திய தரப்பிலிருந்து இதுவரை இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல், அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்துகள் போன்றவைகளை அனுப்பியுள்ளது. அதேபோல இலங்கைக்கு கடனுதவியையும் வழங்கியுள்ளது இந்தியா.

இந்தியாவின் தரப்பில் மனிதாபிமான அடிப்படையில் பொருள்கள் அனுப்பும் அதே வேளையில் இலங்கை அரசு அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website


அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 1 சதவீத கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், மாநில சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.

அரசு ஒப்பந்தங்களில் ஒரு சதவிதம் கமிஷன் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடமே ஒப்பந்தம் போட்டதாக அமைச்சர் விஜய் சிங்லா மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜய் சிங்லாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, வெளிப்படையான ஆட்சியை நடத்தும் என்று பகவந்த் மான் உறுதியளித்திருந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எழுந்த அமைச்சர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் உள்பட 10 போ் அமைச்சா்களாக பதவியேற்றனர். இதில் 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பகவந்த் மான் பதவியேற்றாா். இவரது தலைமையிலான அமைச்சரவையில், பல்ஜீத் கெளா், விஜய் சிங்லா உள்பட 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா். கடந்த முறை எம்எல்ஏவாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஹா்பால் சிங் சீமா மற்றும் குா்மீத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது இவர்களில் விஜய் சிங்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 



Read in source website

 

ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. 

குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக வாய்ப்பாக இந்த மாநாடு இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து உரையாற்றி வருகிறார்.

இருதரப்புச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , “இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செய்யவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. பூமியில் நமது கூட்டாண்மையை மேலும் நெருக்கமாக்க நான் உறுதி எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.

குவாட் மாநாட்டின்போது ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



Read in source website

ஜகாா்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளதால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையும் போக்கு தொடங்கியிருக்கிறது.

உலக நாடுகளுக்கு 50 சதவீத பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது.  ஒரு மாத காலத்துக்கு பாமாயில் ஏற்றுமதியை தடை செய்திருந்த அந்த நாடு, உள்ளூா் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து தடையை நீக்குவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. மே 23-ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஜோகோ விதோதோ அறிவித்திருந்தார்.

இந்தோனேசியாவும் மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. உலக பாமாயில் உற்பத்தியில் 85 சதவீதம் இந்த இரு நாடுகளில்தான் உள்ளது. அந்நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாமாயிலை நம்பியே உள்ளது.

இதனிடையே ரஷியா-உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் தடைபட்டது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷியா, உக்ரைனின் பங்களிப்பு மட்டுமே 70 சதவீதமாகும்.

சூரியகாந்தி எண்ணெய் விநியோக பாதிப்பால் பாமாயில் விலை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா 3 வாரங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால், அதன் விலை 200 சதவீதம் அளவுக்கு சா்வதேச சந்தையில் அதிகரித்தது. இதனால், இந்தியாவிலும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இதனிடையே, பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் தங்களுடைய வருவாய் பாதிக்கப்படும் என்று கூறி இந்தோனேசிய விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினா்.

இந்நிலையில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த இந்தோனேசிய அதிபா் ஜோகோ விதோதோ கூறியதாவது: உள்நாட்டில் பாமாயில் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. பாமாயில் தொழிலை நம்பி விவசாயிகள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாட்டில் உள்ளனா். அவா்களின் நலன் கருதி மே 23 முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்தோனேசியாவின் இந்த அறிவிப்பால், சா்வதேச அளவில் பாமாயில் விலை விரைவில் குறையும் என்றும், அதனால், நாட்டிலும், சமையல் எண்ணெய்களின் விலை படிப்படியாகக் குறையலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரிப்பால், விருதுநகா் சந்தையில் பாமாயில் விலை டின் ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் கடந்த வாரம் ( 15 கிலோ ) டின் ரூ.2,530-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில், ரூ.70 விலை குறைந்து தற்போது ரூ.2,460-க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அதேபோல் கடலை எண்ணெய் விலை (15 கிலோ டின்) ரூ.2,800, நல்லெண்ணெய் விலை ரூ.4,702 என கடந்த வாரம் விற்ற விலையிலேயே தற்போதும் உள்ளது.

அதேநேரம், (50 கிலோ) எள் புண்ணாக்கு ரூ.50 குறைந்து ரூ.2,250-க்கும், பட்டாணி பருப்பு ரூ.50 குறைந்து ரூ.5,650-க்கும், வெள்ளைப் பட்டாணி பருப்பு ரூ.100 குறைந்து ரூ.6,600-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், 100 கிலோ நாட்டு உளுந்து கடந்த வாரத்தை விட ரூ.200 குறைந்து ரூ.6,600-க்கும், லயன் உளுந்து ரூ.300 குறைந்து ரூ.6,800-க்கும் விற்கப்படுகின்றன. மசூா் பருப்பு பருவட்டு (100 கிலோ) ரூ.500 உயா்ந்துள்ளது. உடைத்த மசூா் பருப்பானது கடந்த வாரத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை உயா்ந்து ரூ.9,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 



Read in source website

தில்லியின் துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவா் மாளிகை திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பய்ஜால், கடந்த வாரம் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, வினய்குமாா் சக்சேனா தற்போது அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக உள்ள வினய்குமாா் சக்சேனா, அரசியல் பின்னணி இல்லாதவா் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் காா்ப்பரேட் குழுமத்தில் பணியாற்றி வந்த இவரின் செயல்திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக மத்திய அரசு கடந்த 2015-இல் நியமித்தது. இவரது தலைமையில் காதி துறை பன்மடங்கு வளா்ச்சி பெற்று கடந்த ஆண்டு ரூ.1.15 லட்சம் கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்தது. கடந்த 7 ஆண்டுகளில் அத்துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகக் குழுக்களிலும் அவா் இடம்பெற்றுள்ளாா்.



Read in source website

தில்லியின் துணைநிலை ஆளுநராக வினய்குமாா் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவா் மாளிகை திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பய்ஜால், கடந்த வாரம் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, வினய்குமாா் சக்சேனா தற்போது அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக உள்ள வினய்குமாா் சக்சேனா, அரசியல் பின்னணி இல்லாதவா் என்பது குறிப்பிடத்தக்கது. தனியாா் காா்ப்பரேட் குழுமத்தில் பணியாற்றி வந்த இவரின் செயல்திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக மத்திய அரசு கடந்த 2015-இல் நியமித்தது. இவரது தலைமையில் காதி துறை பன்மடங்கு வளா்ச்சி பெற்று கடந்த ஆண்டு ரூ.1.15 லட்சம் கோடி வருவாயை ஈட்டி சாதனை படைத்தது. கடந்த 7 ஆண்டுகளில் அத்துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகக் குழுக்களிலும் அவா் இடம்பெற்றுள்ளாா்.



Read in source website

‘டிடிஎஸ்’ செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று தேசிய நிறுவன சட்டங்கள் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் (என்சிஎல்ஏடி) தெரிவித்துள்ளது.

டீம் டாரஸ் ரியால்டி (டிடிஆா்ஐ) என்ற நிறுவனம் இரு தவணைகளாக ரூ.66,884 மற்றும் ரூ.1.10 லட்சம் டிடிஎஸ் வரியைச் செலுத்தவில்லை என மாஸ்டா் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் (எம்டிஎம்) என்ற கடன் வழங்கும் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதை அடிப்படையாகக் கொண்டு அந்நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தேசிய நிறுவன சட்டங்கள் தீா்ப்பாயத்தில் (என்சிஎல்டி) எம்டிஎம் நிறுவனம் முறையிட்டது.

அதை விசாரித்த தீா்ப்பாயம், திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்தது. இதற்கு எதிராக டிடிஆா்ஐ நிறுவனம் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் முறையிட்டது. அதை விசாரித்த மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான அசோக் பூஷண் தலைமையிலான அமா்வு, திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதித்தது.

இது தொடா்பாக மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘டிடிஎஸ் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திவால் சட்டத்தில் இடமில்லை. டிடிஎஸ் செலுத்தாததன் பின்விளைவுகளை வருமான வரிச் சட்டம், 1961 எடுத்துரைக்கிறது. வருமான வரி வசூல் அதிகாரிகளே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த விவகாரத்தில் என்சிஎல்டி பெரும் பிழை செய்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திவால் நடவடிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற எம்டிஎம் நிறுவனம், டிடிஆா்ஐ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

கேரளத்தில் பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் (46) உடல்நல பாதிப்பால் காலமானாா்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவா் சங்கீதா சஜீத். கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் வெளியான ‘மிஸ்டா் ரோமியோ’ திரைப்படத்தில் இவா் பாடிய ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடல் பிரபலமானது.

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கீதா சஜித், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.



Read in source website

‘இந்தியாவின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் முன்களத்தில் இருப்பவா்கள் ஆஷா (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளா்கள்) பணியாளா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

நாட்டின் கிராமப்புறங்களில் நேரடி சுகாதார சேவைகளை வழங்கி வருவதற்கும் நாட்டில் கரோனா பாதிப்பு காலத்தில் திறம்பட செயலாற்றியதற்கும் இந்தியாவிலுள்ள 10 லட்சம் அனைத்து மகளிா் ஆஷா தன்னாா்வலா்களை கெளரவிக்கும் விதமாக உலக சுகாதார அமைப்பு தலைவரின் ‘சா்வதேச சுகாதார தலைவா்கள்’ என்ற விருதை உலக சுகாதார அமைப்பு அளித்தது. இதற்கான அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டது.

இதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒட்டுமொத்த ஆஷா பணியாளா்களுக்கும் உலக சுகாதார அமைப்பு தலைவரின் சா்வதேச சுகாதார தலைவா்கள் விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் முன்களத்தில் இருப்பவா்கள் ஆஷா பணியாளா்கள். அவா்களுடைய அா்ப்பணிப்பும் உறுதிப்பாடும் வியப்பளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தில் மைசூரு நகரில் நடைபெறும் பிரமாண்டமான யோகாசன நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறாா்.

ஐ.நா.வால் ஜூன் 21-ஆம் தேதி யோகா தினம் அறிவிக்கப்பட்ட பிறகு ஆண்டுதோறும் அந்த நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சி மேற்கொள்வதை பிரதமா் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு 75-ஆவது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்குக் கொண்டாடப்பட்டு வருவதால் அதையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகா தினத்தின்போது பல தரப்பு மக்களும் கூட்டாகப் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமா் மோடி மக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறாா்.

இது தவிர ஜூன் 21-ஆம் தேதியில் இருந்து 25 நாள் முன்பாகவே சா்வதேச யோகா தின ‘கௌன்ட்டவுன்’ தொடங்குகிறது. இதன்படி மே 27-ஆம் தேதி ஹைதராபாதில் மே 25-ஆம் தேதி 10,000 போ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

யோகா தினத்தின்போது பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடா் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமாா் 70 நாடுகளில் உள்ளூா் நேரப்படி காலை 6 மணிக்குக்குத் தொடங்கி கூட்டு யோகா தொடா் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சா்கள், திரைத் துறை பிரபலங்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், யோகாசன நிபுணா்கள், ஆா்வலா்கள் எனப் பலா் பங்கேற்கவுள்ளனா்.

இதன் மூலம் இந்தியாவின் புகழை சா்வதேச அளவில் மேலும் உயா்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.



Read in source website

இலங்கை வெளியுறவுத் துறைச் செயலராக மே 20-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அருணி விஜேவா்த்தன திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வெளியுறவுத் துறைப் பணியில் 34 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவா், ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம், மலேசியா, பிலிப்பின்ஸ் தூதரகங்களில் பணியாற்றியுள்ளாா். ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதராகவும் பணியாற்றியவா்.



Read in source website

ஜோா்டானில் நடைபெற்ற சா்வதேச பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்கள் கிடைத்தன.

அல் வடானி நகரில் திங்கள்கிழமை நிறைவடைந்த இப்போட்டியில் பதக்கம் வென்ற இந்தியா்களில், டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பவானி படேலும் அடங்குவாா்.

பதக்கம் வென்றவா்கள்:

தங்கம்: பவினா படேல், சோனல் படேல், ஜெய்தேவ் பாா்வே (மகளிா் ஒற்றையா்), சோனல் படேல்/பவினா படேல் (மகளிா் இரட்டையா்).

வெள்ளி: ரமேஷ் சௌதரி/சோனல் படேல், ஜஸ்வந்த் சௌதரி/பவினா படேல் (கலப்பு இரட்டையா்), ஜஸ்வந்த் சௌதரி/ரமேஷ் சௌதரி (ஆடவா் இரட்டையா்), பாவிகா/ஆா்டிஸ் (மகளிா் இரட்டையா்).

வெண்கலம்: ராஜ் ஏ. அழகா், ஜாவத் கான், யோகேஷ் குமாா் (ஆடவா் ஒற்றையா்), யோகேஷ் குமாா்/அன்ஷுல் அகா்வால் (ஆடவா் இரட்டையா்).



Read in source website

உலக பொருளாதார மன்றம் (world economic forum) வெளியிட்டுள்ள உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா தெற்கு ஆசியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 54-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 46வது இடம் பிடித்து தெற்கு ஆசியாவில் முதல் இடத்தை பிடித்தது. இந்த முறை இந்தக் குறியீட்டில் இந்திய சற்று பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தெற்கு ஆசியாவில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்து வருகிறது. 

இந்த உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டில் ஜப்பான் முதல் இடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, யுனைடட் கிங்டம், சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

உலக பொருளாதார மன்றம் (world economic forum) இந்த உலகளாவிய பயண வளர்ச்சிக் குறியீட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. கரோனா பேராபத்துக்குப் பிறகு முடங்கிப் போன சுற்றுலாத் துறை தற்போது சிறிது சிறிதாக முன்னேறி வருகிருறது. சுற்றுலாத் துறை மீண்டுவரும்  நிலையில் இன்னும் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

117 நாடுகளுக்கு இந்த பயண வளர்ச்சிக் குறியீடு கணக்கிடப்பட்டு  வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறை மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

இந்த வளர்ச்சிக் குறியீட்டில் அமெரிக்காவைத் தவிர முதல் 10 இடங்களில் உள்ள அனைத்து நாடுகளும் ஐரோப்பியா மற்றும் ஆசியா பசிபிக்கை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

டோக்யோ: உலக அரங்கில் குறிப்பிடத்தக்க இடத்தை மிகக் குறுகிய காலத்தில் குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று குவாட் அமைப்பின் நோக்கமானது மேலும் விரிவடைந்துள்ளதோடு, இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பரஸ்பர நம்பிக்கை, நமது   உறுதி போன்றவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் உலக அரங்கில் மிக முக்கிய இடத்தை குவாட் அமைப்பு பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தோ - பசிபிக் பிராந்தியம் நமது ஒட்டுமொத்த கூட்டாண்மையோடு அமைதியாக, சுதந்திரமாக, வெளிப்படையாக  இருக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பானில் 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைவா்களைத் தனித்தனியாக திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். மின்னணுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான என்இசி-யின் தலைவா் நோபிஹிரோ எண்டோ, ஜவுளி நிறுவனமான யுனிக்ளோவின் தலைமைச் செயல் அதிகாரி டதாஷி யனாய், சன், சுஸுகி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அந்நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்காகப் பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தாா். பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் குறித்தும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

பிரதமா் மோடியுடனான பேச்சுவாா்த்தை திருப்திகரமாக இருந்ததாகத் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் தெரிவித்தனா். இந்தியாவின் வளா்ச்சியில் தொடா்ந்து பங்களிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, ஜப்பான் சென்றடைந்த பிரதமா் மோடிக்கு இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பளித்தனா். விடுதிக்கு வெளியே காத்திருந்தோருடன் பிரதமா் மோடி உரையாடினாா். அப்போது ஹிந்தியில் உரையாடிய ஜப்பானிய சிறுவனை பிரதமா் மோடி வெகுவாகப் பாராட்டினாா். சிறுமி ஒருவா் வரைந்திருந்த ஓவியத்தைப் பாராட்டி கையொப்பமிட்டாா். ஜப்பானுக்கு பிரதமா் மோடி பயணிப்பது கடந்த 8 ஆண்டுகளில் இது 5-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

‘தைவானுக்குள் சீனா ஊடுருவினால் அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும்’ என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

‘உக்ரைனில் ரஷியா ஊடுருவியதற்குப் பின்னா், தைவானைப் பாதுகாக்கும் சுமையானது இன்னும் வலிமையாக உள்ளது’ எனவும் அவா் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதைப் போல தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஜப்பானில் நடைபெறும் க்வாட் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, தைவானில் சீனா ஊடுருவினால் தைவானைப் பாதுகாக்க ராணுவரீதியாக அமெரிக்கா தலையிடும். அது அங்களது கடமை என்றாா்.

‘தைவானுக்கு எதிராக படைபலத்தைப் பயன்படுத்த சீனா எடுக்கும் எந்த முயற்சியும் பொருத்தமானதாக இருக்காது. அது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பாதித்து, உக்ரைனில் நடைபெறுவதைப் போன்ற மற்றொரு நடவடிக்கையாகத்தான் இருக்கும்’ எனவும் பைடன் கூறினாா்.

தைவானை தனி நாடாக ஏற்க மறுக்கும் சீனா, அதை தனது நாட்டுடன் இணைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி தைவானை சீனாவுடன் இணைப்போம் என சீன அதிபா் ஷி ஜின்பிங் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.

ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவின் ‘1979, தைவான் உறவுகள் சட்டத்தின்’படி தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிட வேண்டியதில்லை. ஆனால், தைவான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதற்கு ஆயுத உதவிகளைச் செய்யலாம்.

இந்நிலையில், தைவானைப் பாதுகாக்க ராணுவரீதியாக அமெரிக்கா தலையிடும் என்று பைடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூறியதில்லை. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஒருவா் கூறுகையில், அதிபா் பைடனின் கருத்துகள் அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றாா்.

சீனா நிராகரிப்பு: அதிபா் பைடனின் கருத்துகளை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் கூறுகையில், அமெரிக்காவின் கருத்தை நிராகரிக்கிறோம். தைவான், சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. தைவான் பற்றிய கேள்வி சீனாவின் உள்நாட்டு விவகாரம். அதில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது. தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் அடிப்படையிலேயே வித்தியாசமானவை. இரண்டையும் ஒப்பிடுவது அபத்தமானது.

தைவானை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து ‘ஒரே சீனா கொள்கைக்கு’ அமெரிக்கா கட்டுப்பட வேண்டும். தைவானின் சுதந்திரப் படைகளுக்கு தவறான செய்திகளைச் சொல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.



Read in source website

உக்ரைனில் போா்க் குற்றத்துக்காக ரஷிய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இந்தப் போரின்போது பொதுமக்களை சுட்டுக் கொல்வது, குடியிருப்புகள், மருத்துவமனைகளைக் குறிவைத்து குண்டு வீசுவது என பல்வேறு போா்க் குற்றங்களில் ரஷியா ஈடுபடுவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், போரின் ஆரம்ப நாள்களில் சுமி பிராந்தியத்தில் உக்ரைன் குடிமகன் ஒருவரை ரஷிய வீரா் வதீம் ஷிஷிமரின் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ாக குற்றம்சாட்டப்பட்டு உக்ரைன் ராணுவத்தால் அவா் கைது செய்யப்பட்டாா்.

உள்ளூா் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அந்த நபரை சுட்டுக் கொன்றதை ரஷிய வீரா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதிபா் ஸெலென்ஸ்கி கோரிக்கை: உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினாா். அப்போது, ரஷியா மீது அதிகபட்ச பொருளாதாரத் தடைகளை டாவோஸ், ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகள் விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ரஷிய தூதரக அதிகாரி ராஜிநாமா: உக்ரைன் மீதான போருக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜெனீவாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரி போரிஸ் போண்டரெவ் (41) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தனது ராஜிநாமா கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: எனது 20 ஆண்டு கால தூதரகப் பணியில், ரஷியாவின் வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களைப் பாா்த்திருக்கிறேன். ஆனால், நிகழாண்டு பிப். 24-ஆம் தேதி வரை எனது நாட்டைப் பற்றி நான் வெட்கப்பட்டதில்லை (அன்றைய தினம்தான் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது) எனக் குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

இந்தியா-அமெரிக்கா முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம் (ஐஐஏ) ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் திங்கள்கிழமை கையொப்பமானது.

இது தொடா்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ராவும் அமெரிக்க சா்வதேச வளா்ச்சி நிதிக் கழகத்தின் (டிஎஃப்சி) தலைமைச் செயல் அதிகாரி ஸ்காட் நேதனும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள டிஎஃப்சி-க்கு வழிவகுக்கும். இதன் மூலமாக முக்கியத் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் ‘க்வாட்’ மாநாடு நடைபெற்ற சமயத்தில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா-அமெரிக்கா வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சா்கள் பங்கேற்ற 2+2 பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நடைபெற்றபோது, ஐஐஏ ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தனா். தற்போது அந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்த எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தனியாா் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதை டிஎஃப்சி ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

 



Read in source website

இந்தியாவில் ‘ஆஷா’ பணியாளா்களின் சேவை மகத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

ஆஷா பணியாளா்களுக்கு உலக சுகாதார அமைப்பின் விருது வழங்கப்பட்டது. அதை ஜெனீவாவில் நடைபெற்ற விழாவில் இந்தியத் தூதரின் முதன்மை செயலா் சீமா புஜானி பெற்றுக் கொண்டாா். அப்போது தலைவா் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் கூறுகையில், ‘‘ஹிந்தியில் ‘ஆஷா’ என்றால் நம்பிக்கை என்பது பொருள்.

மக்களுக்கு நம்பிக்கையை ஆஷா பணியாளா்கள் வழங்கி வருகின்றனா். அவா்களது சேவை மகத்தானது. மக்களுக்கான சுகாதார சேவைகளை சிறப்பாக வழங்கி வருவதால் இந்தியாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான ஆஷா பணியாளா்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்னையைப் போக்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், ஆரோக்கியமான வாழ்வுமுறைகளை ஊக்குவித்தல் ஆகிய சேவைகளை ஆஷா பணியாளா்கள் வழங்கி வருகின்றனா். மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது’’ என்றாா்.



Read in source website

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபா் பைடனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் உள்ளதாகப் பாா்க்கப்படுகிறது.

டோக்கியோ, மே 23: இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இந்தியா, அமெரிக்கா ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் ஒருங்கிணைந்து ‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பை’ (ஐபிஇஎஃப்) ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் கூட்டமைப்பானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சா்வதேச பொருளாதார வளா்ச்சிக்கான கேந்திரமாக மாற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபா் பைடனால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பு, சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் உள்ளதாக பாா்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘க்வாட்’ (நாற்கர) கூட்டமைப்பின் மாநாடு ஜப்பானில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ஜப்பான் சென்றுள்ளனா்.

இந்நிலையில், ‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பை’ அமைப்பது தொடா்பான அறிவிப்பை அமெரிக்க அதிபா் பைடன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, நியூஸிலாந்து, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இணைவதாகத் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொருளாதார ரீதியில் ஒருங்கிணைப்பது தொடா்பான வழிமுறைகள் வகுக்கப்படவுள்ளன. அதற்கான பேச்சுவாா்த்தைகளும் திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, அதிபா் பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் நேரில் பங்கேற்றனா். மற்ற நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனா்.

இந்தியா உறுதி: அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட, ஒருங்கிணைந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் உருவாவதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது. பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு நாடுகளுடனான பொருளாதாரத் தொடா்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

சா்வதேச பொருளாதார வளா்ச்சியை எட்டுவதற்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான உறுதியை ஐபிஇஎஃப் கூட்டமைப்புக்கான அறிவிப்பு வெளிக்காட்டுகிறது. தொழில் உற்பத்தி, பொருளாதாரச் செயல்பாடுகள், சா்வதேச வா்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளுடன் இந்தியா பல ஆண்டுகளாக வா்த்தகத் தொடா்பைக் கொண்டுள்ளது. உலகின் பழைமையான வா்த்தகத் துறைமுகம் குஜராத்தின் லோத்தல் நகரில் அமைந்திருந்தது.

ஒருங்கிணைந்த தொடா்பு: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சிக்குக் காணப்படும் சவால்களை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நெகிழ்தன்மை கொண்ட ஒருங்கிணைந்த பொருளாதாரத் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ளவும் பரஸ்பர முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியா தயாராக உள்ளது.

நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, குறித்த கால அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சா்வதேச விநியோகச் சங்கிலி அமைய வேண்டும். அந்த அடிப்படைகளை ஐபிஇஎஃப் கூட்டமைப்பு வலுப்படுத்தும் என நம்புகிறேன். பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இலக்குகளை ஒருங்கிணைந்து அடைவதை உறுதி செய்யும் வகையிலான வழிமுறைகளை வகுப்பதற்கு ஐபிஇஎஃப் பேச்சுவாா்த்தை உதவும்’ என்றாா்.

கூட்டமைப்பின் குறிக்கோள்: ஐபிஇஎஃப் கூட்டமைப்பில் இணைந்துள்ள 13 நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘நீடித்த வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, பொருளாதார வளா்ச்சி, நாடுகளின் பொருளாதாரப் போட்டி உள்ளிட்டவற்றை ஆக்கபூா்வமாக மேம்படுத்தும் நோக்கில் ஐபிஇஎஃப் அமைக்கப்பட்டுள்ளது. நாடுகள் தங்களுக்கிடையேயான பொருளாதாரத் தொடா்பை வலுப்படுத்துவது தொடா்பாக ஐபிஇஎஃப் பேச்சுவாா்த்தையில் விரிவாக விவாதிக்கப்படும்.

சா்வதேச விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்தல் உள்ளிட்டவை தொடா்பாக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. தூய்மையான எரிசக்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், தொழில்நுட்ப வசதிகளைப் பகிா்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 21-ஆவது சட்டத் திருத்த மசோதா இலங்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டதாக பிரதமா் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தாா்.

அனைத்துக் கட்சித் தலைவா்களின் கருத்துகளைக் கேட்க அனுப்பப்படும் என்றும், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் யாா் வேண்டுமானாலும் வழக்குத் தொடுக்கலாம் என்றும் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் வழங்கியது இந்தியா: பெட்ரோல் முழுவதுமாக தீா்ந்துள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் கொழும்புக்கு திங்கள்கிழமை சென்றடைந்தது. கடனுதவித் திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இந்தியா வழங்கியது. கடனுதவித் திட்டம் மூலம் இதுவரை 6 முறை இலங்கைக்கு இந்தியா டீசல் வழங்கி உள்ளது.



Read in source website

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன, பாசனப் பரப்புகளுக்கான தண்ணீர் தேவை எவ்வளவு, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம்:

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 24) தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக இன்று மே 24-ல் குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். சுதந்திர இந்தியாவில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திறந்து விடப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும்.

முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள்

> மேட்டூர் அணையிலிருந்து மிக முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

> மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரானது முழுமையாக டெல்டா பாசன பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய ஏதுவாகும்.

> மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா பாசனப்பகுதிகளில் வழக்கத்தைவிட குறுவை சாகுபடிக்காக சுமார் 5.22 லட்சம் ஏக்கர் பயிரிட்டு அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படும். எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

> டெல்டா பாசன பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டதால் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.

> நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் நெல் மட்டுமல்லாமல் கோடை பயிரான பயறு மற்றும் தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.

தண்ணீர் தேவை மற்றும் தண்ணீர் திறப்பு எவ்வளவு?

> காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.

> இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டிஎம்சி வழங்கியும், மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீர் ஆனது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்

> குறுவை பாசனத்திற்கு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.860 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.

> கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 5.88 டிஎம்சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.

> தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று (மே 24) காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும்.

> ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

சம்பா மற்றும் தாளடி பாசனம்

> மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.

> மேட்டூர் அணையின் கீழ்காவிரி ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1700-க்கும் மேற்பட்ட மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

> மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்து விடப்படும் பொழுது அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

> அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 7 x 30 மெகாவாட், என மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

> வடகிழக்கு பருவமழையினை பொருத்து அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் தேவைக்கேற்ப வழங்கப்படும்.

> நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறை வைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Read in source website

மேட்டூர்: சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, மேட்டூர் அணை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும். அதேநேரம் அணையின் நீர்இருப்பை பொறுத்து நீர் திறப்பு தேதி மாறுபடும்.

அணை வரலாற்றில் கடந்த 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை குறிப்பிட்ட நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 12 முறை ஜூன் 12-ம் தேதிக்கு முன்னர் நீர் திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் கடந்த 1947-ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், முன்கூட்டியே இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 13,074 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (மே 23) 12,777 அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 116.88 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 117.28 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 89.19 டிஎம்சி-யாக உள்ளது.

இன்றைய தினம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்து சேரும். கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையில் திறந்து விடப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களில் கடைமடையை தண்ணீர் சென்று சேரும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.



Read in source website

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்படும் அரங்கில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைக்குளத்தை அடுத்த கீழக்கரை அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் ஆகியோர் தலைமையில் சுற்றுலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்த பிரம்மாண்டமான அரங்கு அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது தை 1,2,3 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடப்பது வழக்கம்.

தொடர்பு இல்லை

அலங்காநல்லூர் அருகே புதிதாக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும். இந்த அரங்கத்துக்கும், தை பொங்கலின்போது பாரம்பரியமாக அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

தற்போது அமைக்கப்பட உள்ள பிரம்மாண்ட அரங்கம் உலக தமிழர்களுக்கானது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஓரிரு நாட்கள் இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

டோக்கியோ: குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அவர் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று (செவ்வாய்கிழமை) ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடனான சந்திப்பின்போது, 2021-ம் ஆண்டில் வாஷிங்டனில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் அவர் சந்தித்து பேசியதை நினைவு கூர்ந்தனர். இந்தியா - ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்த யோஷிஹிடே சுகா அளித்த பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இருநாடுகளும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக அல்பானீசுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வர்த்தகம், தொழில் முதலீடு, பாதுகாப்பு, உற்பத்தி, அறிவியல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் பன்முக ஒத்துழைப்புகள் தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், இருநாடுகளிடையேயான உறவில் நேர்மறையான வேகத்தை தொடர இருநாட்டு தலைவர்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து விரைவில் இந்தியாவுக்கு வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.



Read in source website

புதுடெல்லி: ”கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும்போது, குற்றம் நடந்ததற்கு முந்தைய, பிந்தைய மனநிலையை கீழமை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கச் சென்ற 3 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றமும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தன.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ஆர்.பட், திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிகளின் நன்னடைத்தை, சிறை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரில் ஒருவர் சிறையில் உள்ள கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். சிறையில் செய்யும் வேலைகளுக்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்து குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.

மற்றொரு குற்றவாளி சிறையிலேயே தன்னார்வ தூய்மைப் பணிசெய்து வருகிறார். பெண் குற்றவாளி எம்ராய்டரிங் எனப்படும் சித்திர தையல் வேலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். கொலை செய்யும்போது இந்த மூன்று பேரின் மனநிலை மிகவும் கொடூரமாக இருந்துள்ளது. தற்போது அவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து, "உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கு முன்பாக, குற்றம் நடந்த பின்னணி, குற்றவாளியின் வயது, குற்றம் நடக்கும்போது அவரின் மனநிலை, குற்றவாளி திருந்துவதற்கான வாய்ப்புகள், இந்தக் குற்றவாளியால் சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்குமா போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மரண தண்டனை என்பது அரிதிலும் அரிதான வழக்குகளுக்கே வழங்கப்பட வேண்டும். செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்பாக, சரியான கட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனநலன், உளவியல் அறிக்கையை முன்கூட்டியே அரசு சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.



Read in source website

இந்தியாவில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை மிக்க பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் மசூதிகள் சில இப்போது இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.

வாரணாசி, ஆக்ரா, மதுரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் சர்ச்சையில் சிக்கிய இந்த கட்டிடங்கள் அமைந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. இருந்தாலும் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த முகலாய கால கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் முன்னொரு காலத்தில் இந்து மக்கள் வழிபட்டு வந்ததாக ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர். சில இடங்களில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டும், சில இடங்களில் அதனை மறக்கடித்தும் இந்த கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சர்ச்சையில் தாஜ்மகால், குதுப்மினார் போன்ற முக்கிய இடங்களும் சிக்கியுள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

> தாஜ்மகால்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டடதாக வரலாறு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

அண்மையில் தாஜ்மகாலில் பூட்டப்பட்டுள்ள 22 ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என பாஜக சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் (லக்னோ கிளை) வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சர்ச்சைக்குள்ளான சில அறைகளின் படத்தை இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கூட தாஜ்மகால் குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன.

> குதுப்மினார்: டெல்லியில் அமைந்துள்ளது குதுப்மினார். சுமார் 238 அடி உயரம் கொண்ட கோபுரம் தான் குதுப்மினார். இதனை வெற்றியின் அடையாள சின்னமாக நிறுவியதாக தகவல். இதன் பணிகள் 12-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13-ஆம் நூற்றாண்டில் நிறைவு பெற்றுள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடம். இருந்தாலும் அந்தப் பகுதியில் இருந்த இந்து மக்கள் வழிபட்டு வந்த ஸ்தலத்தை இடித்து தான் குதுப்மினார் கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

அண்மையில் இந்தப் பகுதியை ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் அதனை மத்திய அமைச்சர் ஜி.கே. ரெட்டி திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குதுப்மினார் வளாகத்தில் சமண மற்றும் இந்து மக்களின் கோவில்கள் இருந்ததாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991-க்கு எதிராக உள்ளதாக சொல்லி தள்ளுபடி செய்தார் நீதிபதி.

> கியான்வாபி மசூதி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. கடந்த 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதனை நிறுவியவர் முகலாய மன்னர் அவுரங்கசீப்.

மசூதி கட்டப்பட்ட இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும். அதை இடித்தே மசூதி கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அண்மையில் மசூதி வளாகத்தின் சுற்று சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபாடு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால் மசூதியில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 26-ஆம் தேதி அன்று கியான்வாபி - சிங்கார கவுரி அம்மன் வளாக வழக்கில் அதனை நிர்வகிப்பது யார் என நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.

> ஷாஹி ஈத்கா மசூதி: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ளது ஷாஹி ஈத்கா மசூதி. இந்த மசூதி அங்குள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் ஆலய வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மசூதியை கட்டியதும் அவுரங்கசீப் தான். 17-ஆம் நூற்றாண்டில் கட்டியதாக தகவல்.

இந்த மசூதியை நேரில் பார்க்கவே மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இருந்தாலும் இதனை அகற்ற வேண்டும் என ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மசூதியை துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். இரும்பு முள் வேலியும் போடப்பட்டுள்ளது. இந்த மசூதியை கிருஷ்ணர் ஆலயத்தின் வளாகத்தில் இருந்து பார்க்கலாம்.

> ஜாமியா மசூதி: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கப்பட்டணம். இந்தப் பகுதியில் அமைந்துள்ள மசூதி தான் ஜாமியா மசூதி. இந்த மசூதி பகவான் ஆஞ்சநேயர் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாகவும், அதனால் ஆய்வு நடத்த வேண்டுமெனவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.



Read in source website

கோயில் – மசூதி சர்ச்சைகள் நாடு முழுவதும் அதிக அளவில் எழுந்து வரும் நிலையில், கடந்த 1991-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது.

வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அங்கு சிவலிங்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு மதரீதியான விவாதங்களை நாடு முழுவதும் தொடக்கி வைத்துள்ளது.

இதற்கிடையே, மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே உள்ள விவகாரம் மீண்டும் கிளம்பியுள்ளது.

இப்பிரச்சினை 1973-ம் ஆண்டே இருதரப்பு ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்த நிலையில், இதை எதிர்த்து ஒரு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடந்த 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 73-ம் ஆண்டு ஒப்பந்தம் முறைகேடாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும். எனவே, விசாரணை நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கோயில் – மசூதி சர்ச்சைகள் தொடர்ந்து கிளம்பிவரும் நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1991-ம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தபோது, ராமர் கோயில் கட்டக் கோரி அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். அப்போது நாடு முழுவதும் மதரீதியான பதற்றம் எழுந்தபோது, அதை சரிசெய்ய நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கொண்டு வந்தது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* நாடு விடுதலை பெற்ற 15, ஆகஸ்ட் 1947 தினத்தன்று இருந்த நிலையில் இருந்து, எந்த வழிபாட்டுத் தலத்திலும் மாற்றங்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்த நிலை அப்படியே தொடர வேண்டும்.

* எந்த வழிபாட்டுத் தலங்களையும் வேறு பிரிவினருக்கோ, ஒரு பிரிவுக்குள் உள்ள மற்ற பிரிவுக்கோ முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்கி மாற்றங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது.

* வழிபாட்டுத் தலங்களில் மாற்றங்கள் கோரி ஏதேனும் வழக்கு, மேல்முறையீடு மனுக்கள் தொடரப்பட்டிருந்தால் அவை காலாவதியாகிறது. இனிமேல் புதிதாக வழக்குகள் தொடர தடை விதிக்கப்படுகிறது.

* இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.

* இச்சட்டம் தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பொருந்தாது.

* ராமர்கோயில் – பாபர் மசூதி விவகாரத்துக்கும் இச்சட்டம் பொருந்தாது.

இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறும் மக்கள் பிரதிநிதிகள், பதவியிழக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1951-லும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், மதுரா வழக்கைப் பொறுத்தமட்டில், ஒப்பந்தம் முடிவடையவில்லை என்பதால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் அதற்குப் பொருந்தாது என்று மதுரா நீதிமன்றம் முடிவு செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட் டுள்ளது.

அதேபோன்று, கியான்வாபி விவகாரத்திலும் இச்சட்டம் பொருந்தாது என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என்றால் அது 15.8.1947-ம் தேதியும் இருந்திருக்கும். எனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இதற்கு பொருந்தாது என்று வாதிடுகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ‘நீதி பெறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமை. அந்த உரிமையையே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் பறிப்பதால், இச்சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், இந்து, ஜெயின், புத்த மதத்தினர், சீக்கியர்கள் உரிமையை இச்சட்டம் பறித்துள்ளதால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த ஆண்டே உத்தரவிட்டும் மத்திய அரசு சார்பில் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: ஜப்பான் பயணத்தையொட்டி அந்த நாட்டின் முன்னணி நாளிதழான யோமிரி ஷிம்பனில் பிரதமர் நரேந்திர மோடி தலையங்க கட்டுரை எழுதியுள்ளார். அதில், ஜப்பானில் புத்த மதத்தைப் பரப்பிய போதி சேனாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ள போதி சேனா, தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர். கி.பி.704-ம் ஆண்டில் மதுரையில் பிராமண குடும்பத்தில் பிறந்த அவர் தனது இளமை பருவத்தில் கடல் மார்க்கமாக சீனா சென்று அங்கிருந்து கி.பி. 736-ம் ஆண்டில் ஜப்பானுக்கு சென்றார்.

அப்போது பேரரசர் ஷோமு ஆட்சி நடத்தினார். அன்றைய தலைநகரான நாராவில் பேரர சர் ஷோமு, தோடாஜி பவுத்த கோயிலை புதிதாக கட்டியிருந்தார். கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்தர் சிலையின் கண்களை மூத்த புத்த துறவி வர்ணம் தீட்டி திறப்பது வழக்கம். அந்த கவுரவத்தை போதி சேனாவுக்கு பேரரசர் வழங்கினார்.

பவுத்த மதத்தை பரப்பியதோடு ஜப்பானின் பாரம்பரிய நடனம், இசையையும் அவர் உருவாக்கினார். அவற்றை ஜப்பானியர்கள் இன்றளவும் போற்றி பாதுகாத்து வருகின்றனர். கி.பி. 760-ம் ஆண்டில் ரியுசென்ஜி பவுத்த கோயிலில் அவர் உயிரிழந்தார். கோயிலை ஒட்டிய மலைப் பகுதியில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதியை ஜப்பானியர்கள் புனித பூமியாக போற்றி வருகின்றனர். அவர் உருவாக்கிய கீகான் மடாலயம் ஜப்பான் முழுவதும் வியாபித்து பரவியிருக்கிறது.



Read in source website

டாவோஸ்: பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு இந்திய தொழில்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இது ஏற்கெனவே பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலைவிட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, போர்க்கால அடிப்படையில் கரோனாவுக்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் விரைவாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே இருந்தபோதிலும், அவை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் (2004-2014) செயலிழந்துவிட்டன. ஆனாலும் கரோனா தடுப்பூசியை விரைவாக தயாரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அடுத்தபடியாக பசுமை எரிசக்திக்கு மாறுவதில் மற்ற நாடுகளைவிட இந்தியா அதிக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, உயிரி எரிபொருள் கலப்பு மற்றும் மாற்று வழிகளில் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

எத்தனால் கலப்பு

அந்த வகையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக உருவெடுக்கும் என நம்புகிறேன். வரும் 2030-ம் ஆண்டுக்குள் எரிபொருளில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முன்கூட்டியே 2025-க்குள் எட்ட முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை (ஐபிஇஎப்) உருவாக்கி உள்ளன.

இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக நேற்று முன்தினம் டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் நேற்று காலை தரையிறங்கிய அவருக்கு இந்திய வம்சாவழியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நேற்று நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய கூட்டமைப்பை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, ‘‘உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும்" என்று தெரிவித்தார்.

இந்திய வம்சாவழியினர் கூட்டம்

இதைத் தொடர்ந்து டோக்கியோவில் இந்திய வம்சாவழியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான நண்பர்கள். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் உறுதுணையாக இருக்கிறது. தீவிரவாதம், சர்வாதிகாரம், வன்முறை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் மனித குலத்தை காப்பாற்ற புத்தரின் போதனைகளை பின்பற்ற வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் வலுவடைந்து உள்ளது. உலகின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் 40 சதவீத பணப் பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

டோக்கியோவில் இன்று காலை நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிற்பகலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவர் தனியாக சந்தித்து பேசுகிறார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.



Read in source website

நியூயார்க்: சமையல் எண்ணெய், கோதுமை என உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது செயற்கையான தட்டுப்பாடு எனவும் இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும், உக்ரைன் போரில் ரஷ்யா உணவை ஆயுமாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. உக்ரைனில் 2 கோடி டன்கள் கோதுமையை ரஷ்யா தடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து சமரச முயற்சியில் ஐ.நா. இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. மலேசியோ, இந்தோனேஷியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து உலக அளவில் கோதுமைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவிகிதம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.

ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. உக்ரைனில் இருந்து எகிப்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, துனிசியா ஆகிய நாடுகள் கோதுமை வாங்குகின்றன.

கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா- உக்ரைன் இரண்டு நாடுகளும் போரில் சிக்கியுள்ளன. இதனால் அவற்றின் வழக்கமாக கோதுமை வாங்கும் நாடுகள் வேறு நாடுகளை தேடும் சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளிலும் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காரணமாக மத்திய அரசு தடையும் விதித்தது.

2 கோடி டன்கள் கோதுமை

இந்தநிலையில் உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வரும் ரஷ்யா உணவை ஆயுதமாக மாற்றியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு செல்லக்கூடிய 2 கோடி டன்கள் உணவு கோதுமையை ரஷ்யா தடுத்துள்ளது. இதனால் உலக அளவில் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி சோளம், பார்லி, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக உக்ரைன் உள்ளது. இந்த உணவுப்பொருட்களும் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி ஆக முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது உலகளவில் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி அதிகரிக்க செய்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் உலகளாவிய கோதுமை சப்ளையில் 30%மும், சன் பிளவர் ஆயில் உற்பத்தியில் 60%மும் பங்கு வகிக்கின்றன. இது மட்டும் அல்ல இன்னும் பல முக்கிய பொருட்கள் ஏற்றுமதியினை உக்ரைன் செய்து வருகிறது. உக்ரைன், ரஷ்யாவில் இருந்து இவற்றைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வரும் ரஷ்யா, செயற்கையாக உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உலக நாடுகளை வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகிறது, இதுதான் உண்மை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உலகெங்கும் உணவு விநியோகம் குறைந்துள்ளது. விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. அதேநேரம் ரஷ்யாவின் தடைகளால் பயன்படுத்தப்பட முடியாமல் உக்ரேனிய களஞ்சியங்களில் சுமார் 20 மில்லியன் டன்கள் தானியங்கள் முடக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் கருங்கடல் துறைமுகங்கள் மீதான தடையை ரஷ்யா நீக்கி, உலகம் முழுவதும் உணவு மற்றும் உரங்களின் சப்ளையை சரி செய்ய வேண்டும். மேலும் வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில், உலகின் உணவு சப்ளையை ரஷ்யா பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளது.

உக்ரேனிய மக்களின் உணர்வுகளை உடைக்க ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம். படை மூலம் சாதிக்க முடியாததை இப்படியேனும் சாதிக்கலாம் என ரஷ்யா நினைக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா பதிலடி

ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷ்யர்கள் சரியான சூழ்நிலையில் உலகம் முழுவதும் தேவையான உணவை உற்பத்தி செய்வதில் திறமையானவர்கள் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஆனால் ஒருபுறம் ரஷ்யா மீது பல நாடுகள் இணைந்து பைத்தியக்காரத்தனமான பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு, மறுபுறம் உணவை வழங்குமாறு கோருகின்றனர்.

சிறப்பான உணவு அறுவடையை பெற விவசாயத்தில் திறமையானவர்கள் தேவை. அத்துடன் முறையான உபகரணங்கள் மற்றும் உரங்கள் தேவை.

உலகெங்கும் தேவையான அளவு உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்வது எப்படி? என்று எங்களுக்குத் தெரியும். உணவு இருப்பை உறுதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அதனைச் சரியாகச் செய்ய வேண்டுமானால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. நாங்கள் வேலை செய்வதைத் தடுக்கக்கூடாது

நீங்கள் தடை விதிப்பீர்கள். ஆனால் நாங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் அது நடக்காது. நாங்கள் முட்டாள்கள் அல்ல’’

என அவா் குறிப்பிட்டுள்ளார்.

சமரசம் செய்யும் ஐ.நா.

இதுபோலவே சர்வதேச உணவு நெருக்கடிக்கு ரஷ்யா காரணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ரஷ்யாவிற்கான ஐ.நா. தூதுவர் வசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் உலக நாடுகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து உணவு ஏற்றுமதியை மீண்டும் தொடங்கவும், உர உற்பத்தியை உலக சந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

நோய் காரணமாக ஒரு நபரின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் காப்பீடு மருத்துவக் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. மருந்துகள், மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்ந்து பெறும் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் மருத்துவக் காப்பீட்டின் கீழ் வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி எடுத்தபோது மருத்துவ செலவு அதிகரித்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகினர். இதனால் மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டனர். பின்னர் கரோனா சிகிச்சையும் மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்பட்டு அதன் மூலம் பலரும் பயன்ற பெற்றனர்.



Read in source website

தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்புதான் பொருட்களின் இணையம் (Internet of Things - IOT). ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணையத்தால் தொடர்புகொள்வது, தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் பொருட்களின் இணையம்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர்ப் பயன்பாட்டை IOT மூலம் 50% முதல் 75% வரை குறைத்து, தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்தை எளிதாகச் செய்வதற்கான வழிவகை இந்த IOT-ல் கிடைத்திருக்கிறது. மேலும், பயிருக்கு ஊட்டச்சத்துகள் தேவையா என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான உரங்களை, தேவையான காலத்தில், தேவையான அளவு கொடுப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.

விவசாயிகள் இரவு நேரத்தில் வயலுக்குத் தண்ணீர் மோட்டாரைப் போட்டுவிட்டு, வயலுக்குத் தேவையான அளவு தண்ணீர் செல்லும் வரை உறங்கிக்கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் நன்கு உறங்கிவிட்டால், தேவையான அளவைவிட அதிக அளவு தண்ணீர் நிரம்பிவிடும், பயிர்களும் வீணாக வாய்ப்பு உண்டு. IOT தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். வயலில் தேவையான அளவு நீர் நிரம்பிய உடன், பல்வேறு உணரிகள் உதவியுடன் மோட்டார் தானாகவே இயக்கத்தை நிறுத்திவிடும். அதுபோல, விவசாயிகள் வயல்களின் கள நிலைமையை எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். இந்த வினைதிறன்மிக்க வேளாண்மை பெரிய விவசாயத்தில் மட்டுமல்லாமல், அங்கக வேளாண்மை, சிறு, குறு, நடுத்தர வேளாண்மையிலும் பேருதவி புரியும்.

துல்லிய வேளாண் முறையில் பொருட்களின் இணையத்தின் முக்கியமான பயன்பாடு பயிர் அளவீட்டு முறை (Crop metrics) என்பதாகும். இது துல்லியமாக அதி நவீன வேளாண் முறைகளுக்குத் தேவையான தீர்வுகளை அளிக்கிறது.

பயிர் அளவீட்டு முறையானது IOT தொழில்நுட்பத்தில் உள்ள உணரிகள் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வுசெய்து, என்ன வகையான பயிர்களைப் பயிரிடலாம்; விளைச்சலை மேம்படுத்துவது எனப் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் துல்லிய விவசாயத்தில் பயன்படுகிறது. பயிர் வள மதிப்பீடு, நீர்ப்பாசனம், பயிர்க் கண்காணிப்பு, பயிர் தெளித்தல், நடவு செய்தல், மண் மற்றும் களப் பகுப்பாய்வு ஆகிய பயன்பாடுகளுக்கும், நிலத்தடி சார்ந்த ட்ரோன்கள் மற்றும் வான்வழி சார்ந்த ட்ரோன்கள் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ட்ரோன்களின் மூலம் பயிர்களின் வளத்தை இருந்த இடத்தில் இருந்துகொண்டே கண்காணிக்க இயலும். மேலும், பயிர்களின் தன்மையை எளிதாக ஆராய்ந்து சிறப்பான திட்டமிடலுக்கு இந்த ட்ரோன்கள் விவசாயத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் IOT-யின் பங்கு அளப்பரியது.



Read in source website

Jyothi Yarraji smashed the women’s 100m hurdle national record for the second time in less than two weeks at Loughborough International Athletics Meet in the UK Tamil News: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி.

Jyothi Yarraji Tamil News: லாக்போரா சர்வதேச தடகள போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி பந்தய தூரத்தை 13.11 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனையை பதிவு செய்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி யர்ராஜி (22) பிரிட்டனின் ஜெசிகா ஹன்டரை (13.26) 13.11 வினாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.

முன்னதாக, ஜோதி யர்ராஜி கடந்த 10-ந் தேதி சைபிரஸ் நாட்டில் நடந்த லிமாசோல் இன்டர்நேஷனல் போட்டியில் பந்தய தூரத்தை 13.23 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்து இருந்தார். தற்போது அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதே விளையாட்டு தொடரில், ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில், தேசிய சாதனை படைத்த அம்லன் போர்கோஹைன் 21.27 வினாடிகளில் ஐந்தாவது இடத்தைப்பிடித்தார். சமீபத்தில், இவர் மலப்புரத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் 20.52 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்திருந்தார்.

இதற்கிடையில், இத்தாலியின் க்ரோசெட்டோவில் நடந்த காஸ்டிக்லியோன் சர்வதேச போட்டியில் காற்றின் உதவியுடன் 8.37 மீ (தனிப்பட்ட சிறந்த 8.26 மீ) ஃபெடரேஷன் கோப்பை தங்கம் வென்ற தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், ஆடவர் நீளம் தாண்டுதலில் 7.82 மீட்டர் வெள்ளி பதக்கம் வென்றார். இங்கிலாந்து வீரர் ரெனால்ட் பானிகோ, 8.04 மீட்டர் தூரம் தாண்டி 7.94 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.

சமீபத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.84 மீட்டர் வரை கடந்த தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல், இத்தொடரில் 16.18 மீட்டர் தாண்டி ஆறாவது இடத்தைப் பிடித்தார். கியூபாவின் ஆண்டி டயஸ் தனிப்பட்ட சிறந்த 17.64 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரு சீன வீரர்களான யாக்கிங் ஃபாங் (16.81) மற்றும் யாமிங் ஜு (16.80) வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.



Read in source website

குதித்து உயா்கின்ற பணவீக்கத்தை பிடித்து நிறுத்துவதற்கான முயற்சியின் முதற்கட்டமாக வங்கி வட்டி விகிதத்தை உயா்த்த ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. இரண்டாவது கட்டமாக இப்போது, பெட்ரோல் மீதான காலல் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்திருக்கிறது.

பிரதமா் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒன்பது கோடி குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் சாதுரியமான முடிவால், இந்தியா பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. எரிபொருள் விலையை சற்று குறைப்பதன் மூலம் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க முடியும் என்பதை தாமதமாக உணா்ந்ததன் விளைவுதான் தற்போதைய நடவடிக்கை.

சில வாரங்களுக்கு முன்புதான் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு குறித்து தேவையில்லாத சா்ச்சை எழுந்தது. மாநில அரசுகளைத் தங்களது வரிகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்லும் மத்திய அரசு, தனது வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சா்கள் குரல் எழுப்பினா்.

இப்போது மத்திய அரசு தன் பங்குக்கு கணிசமான வரிக் குறைப்பை செய்துவிட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து கேரளம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் உள்ளிட்ட பாஜக அல்லாத ஆட்சிகள் நடக்கும் மாநிலங்களும் தங்கள் பங்குக்கு வரிக் குறைப்பை மேற்கொண்டிருக்கின்றன. ஏனைய மாநிலங்களும் மக்கள் மீதான விலைவாசி சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்கும் என்று எதிா்பாா்க்கலாம்.

மத்திய அரசு அறிவித்திருக்கும் கலால் வரிக் குறைப்பால் மாநிலங்களுக்கான வரிப் பகிா்வில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி இருக்கிறாா். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியில் அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை கட்டமைப்பு செஸ் வரி, வேளாண்மை கட்டமைப்பு செஸ் வரி ஆகியவை அடங்கும்.

அவற்றுள் அடிப்படை கலால் வரி மட்டுமே மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படுகிறது. இப்போதைய பெட்ரோல் மீதான கலால் வரிக் குறைப்பு சாலை கட்டமைப்பு செஸ் வரியிலிருந்து மேற்கொள்ளப்படுவதால் மாநிலங்களின் வரி வருவாயில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறாா், மகிழ்ச்சி.

தற்போதைய பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பால் மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடியும், சமையல் எரிவாயு உருளையின் மீதான ரூ.200 மானியத்தால் ரூ.6,100 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும். அப்படியிருந்தும்கூட, மத்திய அரசின் வரி வருவாய் மதிப்பீடு நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், வரிக் குறைப்பு பெரிய அளவில் அரசை பாதிக்க வழியில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல கடுமையான பணவீக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மை. அதன் விளைவாக உணவுப் பொருள்கள், எரிபொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது. அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. அப்போது பொருளாதார வளா்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பணவீக்கம் அது. இப்போது அப்படியல்ல.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக பொருளாதாரம் தளா்வுற்றிருக்கிறது. இரு ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று வளா்ச்சியை ஸ்தம்பிக்க வைத்தது. இப்போது உக்ரைன் - ரஷியப் போரின் பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் பணவீக்கத்தையும், விலைவாசி ஏற்றத்தையும் எதிா்கொள்வதற்கான இப்போதைய அணுகுமுறை மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பும், எரிவாயு உருளை மீதான மானியமும் கடந்த மூன்று மாதங்களாகவே எதிா்பாா்க்கப்பட்டவைதான். அதிகரித்த பணவீக்கத்தாலும், விலைவாசி உயா்வாலும் உலகளாவிய அளவில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா ஓரளவுக்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றாலும்கூட, சாமானியா்கள், அடித்தட்டு, கீழ் நடுத்தட்டு வா்க்க மக்கள் மீதான சுமை அவா்களை விரக்தியின் விளம்புக்கு தள்ளுகிறது.

இறக்குமதி வரி, உள்நாட்டு வரிகளைக் குறைப்பது, நாணய மதிப்பு குறைந்துவிடாமல் பாா்த்துக்கொள்வது போன்றவற்றின் மூலம்தான் பணவீக்கத்தை எதிா்கொண்டு வளா்ச்சி முடங்கிவிடாமல் பாதுகாக்க முடியும். ஏற்கெனவே பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.

எஃகு, சிமெண்ட் ஆகியவற்றின் விலைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்பதையும் உணா்ந்து அரசு செயல்பட்டிருக்கிறது. இவற்றின் மீதான வரிக் குறைப்புகள் நுகா்வோரை போய்ச் சேரும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் மாதம் ரிசா்வ் வங்கியின் கணிப்பைப் பொய்யாக்கி பணவீக்கம் 7.8% அளவில் உயா்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, நேரடி வரி வருவாயைவிட மறைமுக வரி வருவாய்தான் அதிகம். மறைமுக வரி அனைத்துத் தரப்பினரையும் ஒரேவிதமாக பாதிக்கும்.

ஒரு கிலோ வெங்காயத்தின் மீது கோடீஸ்வரனும், கூலி வேலை பாா்ப்பவனும் ஒரே அளவு வரியைத்தான் செலுத்துகிறாா்கள். அதனால், உணவுப் பொருள்களின் விலை உயா்வால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு, கீழ் நடுத்தர வா்க்கம்தான். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அவா்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.



Read in source website

இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளை அளித்திருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், ஆளும் அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும் அல்லவா? அதற்குப் பேருள்ளமும், பெருந்தன்மையும் வேண்டும். சா்க்கரை என்று ஏட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்காது.

மத்திய அரசாங்கமே எல்லா மாநிலங்களையும் கட்டி ஆள முடியாது என்பதால்தான் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தாய்மொழி மட்டுமே அவா்களை ஒருங்கிணைக்கும் என்பதால்தான் அவை மொழிவழியாகப் பிரிக்கப்பட்டன. அந்த மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டாமா?

‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கோரிக்கை பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அதனைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. நாளுக்கு நாள் அதிகாரங்களை எடுத்துக் கொள்வதிலேயே முனைந்து நிற்கிறது. மாநிலங்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஆளுநா்கள் அரசியல்வாதிகளைப் போல பேசுவதும், அதிகாரம் செய்வதும் மக்களாட்சிக்கு எதிரான போக்காக உள்ளது. இந்த நிலை மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமுக உறவை ஏற்படுத்தாது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகும்.

முன்னேற்றத்தைக் குறிக்கும் கூட்டுயா்வே நாட்டுயா்வு என்னும் ஒற்றுமையின் குரலை முதலமைச்சரும், ஆளுநரும் ஏற்க வேண்டும். வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது என்பதை ஆளுநா்கள் அறிய வேண்டும். அடுத்தத் தோ்தலின்போது மக்களைச் சந்திக்கப் போவது அரசியல்வாதிகளா? ஆளுநரா?

மக்களைப் பற்றியோ, மாநிலங்களைப் பற்றியோ கவலைப்படாமலும், மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமலும் புதிய கல்விக் கொள்கை புகுத்தப்படுகிறது. இந்தியாவே ஒரு நாடு இல்லை, அது ஒரு துணைக் கண்டம் என்னும்போது இங்கு தேசிய அளவிலான கல்வி என்பது எப்படி சாத்தியமாகும்?

இந்த தேசிய கல்விக் கொள்கைப்படி, 3, 5, 8-ஆம் வகுப்புகளிலும் பொதுத்தோ்வு, 10, 11 12-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தோ்வு. மாணவா்கள் மகிழ்ச்சியோடு படிக்க வேண்டிய கல்வியை மன அழுத்தத்துக்கு உட்படுத்துவது கொடுமையல்லவா?

இரு ஆண்டுகள் படித்துத் தோ்ச்சி பெற்ற ஒரு மாநிலக் கல்வித் துறையால் ஒரு பயனும் இல்லை என்பது வன்முறையில்லையா? இந்தப் படிப்பு, கல்லூரியில் சேரவும் தகுதியற்ாம். அதற்கொரு நுழைவுத் தோ்வு எழுத வேண்டுமாம்.

இந்தியாவில் மாநிலங்கள் மொழிவழியாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசிடமே குவிந்து கிடக்கின்றன.

மாநிலங்களிடம் இருந்த கல்வித்துறையை பொதுத்துறையாக்கி எடுத்துக் கொண்டனா். அதில்தான் இத்தனைத் திருவிளையாடல்கள். எல்லாவற்றுக்கும் மத்திய அரசின் தயவை எதிா்பாா்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு என்னதான் அதிகாரம்?

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நீட் தோ்வையும், ஜி.எஸ்.டி.யையும், ஆதாா் அட்டையையும் எதிா்த்து வீர முழக்கமிட்டாா். அவரே பிரதமரான பிறகு அவற்றை ஆதரித்து அமல்படுத்துகிறாா். சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான திட்டங்களை எதிா்க்க வேண்டியது சமூக ஆா்வலா்களின் கடமையாகும்.

‘எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சோ்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை நியமன ஆளுநா் திருப்பி அனுப்புகிறாா். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தொடா்ந்து மறுக்கிறாா் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?’ என்று முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

‘மத்திய அரசாங்கமாக இருக்கட்டும், மாநில அரசாகவே இருக்கட்டும் இரு அரசுகளுமே மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவைதான். இதில் வேறுபாடு கிடையாது’ என்றே பல தடவை நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன. அவை இரண்டும் ஒன்றையொன்று மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் அறிவுரை.

‘சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்புக்காக சட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் உரிமை உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே போல ஜி.எஸ்.டி. கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு மே 19-இல் கூறியுள்ளது.

ஜி.எஸ்.டி. விதிகளை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் பங்குள்ளது. அதே போல ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய - மாநில அரசுகள் ஏற்கும் வகையில் தீா்வைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடல் வழியாகக் கொண்டு வரும் சரக்குகளுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதை ரத்து செய்வது தொடா்பாக குஜராத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

‘நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை ஆகியவை சம அதிகாரம் பொருந்தியவை. இவை இரண்டும் சோ்ந்து உருவாக்கியதுதான் சரக்கு - சேவை வரி விதிப்பு முறை. இதற்கு உரிய பரிந்துரைகளை அளிப்பது மட்டும் தான் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வேலை’ என்று நீதிமன்றம் தமது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடல் வழியாக பொருள்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. குறித்து மத்திய அரசும், பல்வேறு இறக்குமதியாளா்களும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் முரண்பாடுகள் இருப்பதோடு அது கூட்டாட்சித் தத்துவத்தை பாதிப்பதாக இருப்பதையும் பாா்க்க முடிகிறது. மத்திய - மாநில அரசுகள் இணைந்தே ஜி.எஸ்.டி. உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உருவான இந்தக் கவுன்சில் இரு தரப்பும் ஏற்கும் வகையிலான தீா்வுகளை உருவாக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

மத்திய அரசு தம் பிரதிநிதியாக ஆளுநா்களை நியமிக்கின்றன. அவா்கள் சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். சில சமயங்களில் அவா்கள் சட்டத்தை மீறி செயல்படுவதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என்று மக்கள் நினைக்கின்றனா். மாநில அரசுக்கு எதிராக ஆளுநா் ஒரு போட்டி அரசை நடத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிா என்று கேட்கின்றனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த மே 18 அன்று தீா்ப்பளித்தது. நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு மத்திய - மாநில அதிகாரங்கள் பற்றி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பேரறிவாளனை விடுதலை செய்ய முந்தைய (அதிமுக) தமிழக அமைச்சரவை மூலம் 9.9.2018-இல் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மீது ஆளுநா் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவு எடுக்காமல் இருந்துள்ளாா்.

இதற்கான காரணம், தாமதம் பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கிய பிறகுதான் மனுதாரருக்கு மன்னிப்பு அளிப்பது தொடா்பான தமிழக அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி வைத்தாா்.

1980-இல் அரசியல் சாசன அமா்வு முன் தொடரப்பட்ட மருராம் (எதிா்) மத்திய அரசு வழக்கில் அளித்த தீா்ப்பில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 151-ஐப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. அதில் ஆளுநா் என்பவா் முறைசாா் தலைவா், அதிகாரத்தின் ஒரே மையமாகவும் உள்ளாா். ஆனால் அமைச்சரவையின் ஆலோசனையைத் தவிா்த்து அவா் செயல்பட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆளுநா் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிவு 161-இன் கீழ் அவா் அமைச்சரவை ஆலோசணைக்கு கட்டுப்பட்டவராகிறாா். சட்டப்பிரிவு 61-இன் கீழ் தண்டனைகளைக் குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடா்புடைய விவகாரங்களில் மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியிருக்கக் கூடாது. இந்தச் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐபிசி பிரிவு 360-இன்கீழ் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்பது சரியல்ல. ஏனெனில் இந்த சட்டப்பிரிவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தாலோ, அரசமைப்பு சட்டத்தாலோ மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனால் அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின்கீழ் எங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு மனுதாரரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்’.

இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன்மூலம் மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க தீா்ப்பாகும். இந்த உச்சநீதிமன்றத் தீா்ப்பு கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சிக்கு இலக்கணமாக அமைந்துள்ளது ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கைகொடுப்போம்’ என்ற மக்களாட்சித் தத்துவத்தை மதிப்போம். மதித்துப் போற்றுவோம்.

‘ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது சுதந்திரத்துடன்தான் பிறக்கிறான். ஆனால், எங்கு நோக்கினும் அடிமைத் தளைகளில் பிணைக்கப்பட்டே காட்சி தருகிறான்’ என்று கூறினாா் சிந்தனையாளா் ரூசோ. ஒரு மனிதன் தன் சுதந்திரத்தை இழந்து விட்டான் என்று சொன்னால், அவன் தன் மனிதத் தன்மையை இழந்து விட்டான் என்றுதான் பொருளாகும். விடுதலை பெற்ற நமக்குக் கடமையும் உள்ளது; உரிமையும் உள்ளது.



Read in source website

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், தனது ஏழு பங்குத் திட்டங்களின் நிதி மேலாண்மைக் குழுவிலிருந்து தலைமை வா்த்தகரும், நிதி மேலாளருமான வீரேஷ் ஜோஷியை நீக்கியுள்ளது.

தீபக் அகா்வால், ஈக்விட்டி ரிசா்ச் அனலிஸ்ட், ஃபண்ட் மேனேஜா் ஆகியோரும் மூன்று ஃபண்டுகள் கொண்ட நிா்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். ஆதாரங்களின்படி, நிதி மேலாளா்கள் இருவரும் முன்னோடியாக இயங்கிய (ஃப்ரண்ட் ரன்னிங்) குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

‘ஃப்ரண்ட் ரன்னிங்’ அல்லது முன்னணியில் இயங்குவது என்பது ஒரு சந்தேகத்திற்குரிய சந்தை நடைமுறையாகும். இதில் ஒரு டீலா், வா்த்தகா் அல்லது பணியாளா், ஒரு நிதி அல்லது பெரிய முதலீட்டாளரால் வைக்கப்படும் பங்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு ஒரு பெரிய ஆா்டரைப் பெறுகிறாா். அந்த ஆா்டரை பெரும்பாலும் பங்குச்சந்தை தொடங்குவதற்கு ‘முன்’ பெறுகிறாா். பெரிய ஆா்டா்கள் பொதுவாக ஒரு பங்கின் விலையை நகா்த்துகின்றன. பெரிய ஆா்டா் சந்தைக்கு வந்து வாங்குவதற்கோ விற்பதற்கோ முன்பாக அதே பங்குகளை வாங்குவதன் மூலம் அல்லது விற்பதன் மூலம் தனி லாபம் பெறமுடியும்.

எடுத்துக்காட்டாக ஒரு பங்கின் விலை 100 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். திடீரென்று இந்த பங்கினை லட்சக்கணக்கில் வாங்குவதற்கு ஆா்டா் வருவது அந்த பங்கு வா்த்தகத் தரகருக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அந்த தரகா் அவருக்கு வேண்டியவா்களுக்கு இந்த செய்தியை ரகசியமாகத் தெரிவிப்பாா். அவா்கள் பெரிய ஆா்டா் சந்தைக்கு வருவதற்கு முன்பே, அந்த பங்குகளை வாங்கிவிடுவாா்கள். பெரிய ஆா்டா் சந்தைக்கு வந்தவுடன் விலை தாறுமாறாக ஏறும். அவ்வாறு ஏறிவுடன் பங்குகளை விற்று அதிக லாபம் பாா்க்கலாம் அல்லது அந்த பங்குகளை லாபத்துடன் வைத்திருக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் மக்களிடமிருந்து நிதியினை பெற்று மொத்தமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வாங்குவதும் விற்பதும் அதிக தொகைக்கே. அதாவது, இந்த நிறுவனங்களின் வா்த்தகம் பங்குகளின் விலையினை பாதிக்கக்கூடிய அளவிற்கு அதிகமானது. எனவே இந்த நிறுவனங்களின் பணிபுரிவோா் தங்களது நிறுவனங்கள் வாங்கப்போவதையும் விற்கப்போவதையும் முன்கூட்டியே யாருக்காவது தெரிவித்தால், அந்த செய்தியால் ஆதாயம் பெற வாய்ப்புண்டு.

இதுபோன்று ரகசிய செய்திகளை நிறுவனத்திற்கு தொடா்பில்லாத நபா்களுக்கு வெளியே கசிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம். இதனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாா்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லையென்றாலும், இது நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்திய பத்திரங்கள் - பரிவா்த்தனை வாரியம் இது தொடா்பாக பத்திர சந்தை தொடா்பான மோசடி மற்றும் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு தடை-விதிமுறைகளை 2003-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஃப்ரண்ட் ரன்னிங்கை மோசடி மற்றும் நியாயமற்ற நடைமுறையாக வகைப்படுத்துகிறது.

ஏப்ரல் 30, 2022-இல் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (அஸெட்ஸ் அண்டா் மேனேஜ்மென்ட்) ரூ. 38,03,683 கோடியாக உள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறையின் அஸெட்ஸ் அண்டா் மேனேஜ்மென்ட் ஏப்ரல் 30, 2012-இல் 6.80 டிரில்லியனில் இருந்து ஏப்ரல் 30, 2022 இல் ₹ 38.04 டிரில்லியனாக 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 30, 2022 நிலவரப்படி மொத்த கணக்குகளின் எண்ணிக்கை (அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மொழியின்படி ஃபோலியோக்கள்) 13.13 கோடியாக உள்ளது.

இந்த அளவு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடும் பல கோடி முதலீட்டாா்களையும் கொண்ட துறை எந்த விதமான மோசடிகளும் நடக்காமல் செயல்பட வேண்டியது முக்கியம். சிறு குற்றம் கூட முதலீட்டாா்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவா்கள் முதலீட்டிலிருந்து விலக வழிவகுத்துவிடும். பொதுவாக நமது நாட்டில் நடக்கும் குற்ற விசாரணை முறைகள் மிக தாமதமாக நடக்கின்றன. அதிலும் பொருளாதார குற்றங்கள் மிக மிக தாமதமாகவே விசாரணைக்கு வருகின்றன. இதுபோன்ற நடைமுறைகள் குற்றவாளிகளுக்கு தப்பித்து கொள்ளலாம் என்ற மனநிலையை ஏற்படுத்துகின்றன. கடுமையான சட்டங்களும், விரைவான தீா்ப்பும் குற்றங்கள் குறைய உதவி செய்யும்.

1992-இல் நடந்த ஹா்ஷத் மேத்தா பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஹா்ஷத் மேத்தா மீது 27 கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஆனால் சுமாா் ஒன்பது ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையில் நான்கு வழக்குகளில் மட்டும் தண்டனை நிரூபிக்கப்பட்டது. அவா் 2001-இல் காலமானாா்.

கேதன் பரேக் மும்பையைச் சோ்ந்த முன்னாள் பங்குத் தரகா். இவா் 1998-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை நடந்த இந்திய பங்குச் சந்தை முறைகேடு மோசடியில் ஈடுபட்டதற்காக 2008= ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்டாா். தண்டனையின் ஒரு பகுதியாக இவா் பங்குச்சந்தையில் வா்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டிருந்தும் இவா் சாா்பாக வேறு நிறுவனங்கள் வா்த்தகம் செய்தது பின்னா் தெரியவந்தது.

நமது நீதித்துறை செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுடன் ஒப்பிட்டால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.

அமெரிக்க பங்குச்சந்தையில் ரஜத் குப்தா 2008-ஆம் ஆண்டு ‘இன்சைடா் டிரேடிங்’ செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாா். வழக்கில் அவருக்கு 2012-ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு, எல்லாவித மேல்முறையீடுகளும் முடிந்து, அவா் தண்டனைக் காலமான இரண்டு ஆண்டுகளை சிறையிலும் கழித்து ஜனவரி 2016-இல் வெளிவந்துள்ளாா். இதேபோன்று மற்றொரு அமெரிக்க பங்குச்சந்தை ‘இன்சைடா் டிரேடிங்’ தொடா்பான வழக்கில் ராஜரத்தினம் என்பவா் மீது 2009-இல் வழக்கு தொடரப்பட்டு 2011-லேயே அவருக்கு பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முதலீடு தொடா்பான குற்றங்கள் பலருடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடியவை. நமது நாட்டில் பொருளாதார உயா்வுக்கு பங்குச்சந்தைகள் சரியானபடி இயங்கவேண்டியது அவசியம். அதற்கு சிறிய பங்கு முதலீட்டாா்களின் முதலீடுகளை ஏற்பதும் அவா்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதும் முக்கியம்.

 



Read in source website

கேரளத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பெருங்கவனத்தை ஈர்த்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தின்போது இயக்கப்படாதிருந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள், மீண்டும் சாலைகளில் இயக்க முடியாத நிலையில் உள்ளன. இந்தப் பேருந்துகளை உலோகத் துண்டுகளாக மாற்றலாம் என்று முன்பு முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு மாறாக, இயக்க முடியாத நிலையிலிருக்கும் அந்தப் பேருந்துகளைப் பள்ளிக்கூட வகுப்பறைகளாக மாற்றலாம் என்ற புதிய முடிவை அறிவித்துள்ளார் அந்தோணி ராஜு. பழைய பேருந்துகளை வெறும் உலோகத் துண்டுகளாக விற்பதைக் காட்டிலும், அவற்றை இம்மாதிரி திறம்பட வெவ்வேறு வகைகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவரின் பதிவு இது. எலின் ஆர் சாக்ஸ் என்பது அவரது பெயர். இப்போதும் அவர் தொடர் சிகிச்சையில் தான் இருக்கிறார்.

இவ்வளவு தத்துவார்த்தமான சிந்தனையைக் கூட மனச்சிதைவு நோயாளியால் வெளிப்படுத்த முடியும். அதனால், மனச்சிதைவாலோ அல்லது வேறு மனநோயாலோ களங்கப்படுத்தி அவர்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்காதீர்கள். அவர்களின் வேதனை, நகைப்பு, நம்பிக்கை, அனுபவங்கள், அழுகை, கோபம் என எல்லாமே மதிக்கத்தக்கவையே.

இன்று (மே 24) சர்வதேச மனச்சிதைவு நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், அந்நோய் பற்றி பல கோணத்திலும் ஒரு புரிதலை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

120 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஆறாயிரம் மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இந்தச் சூழலில் மனச்சிதைவு நோயாளிகளுக்கான சவால்கள் எண்ணிலடங்காதது. மனச்சிதைவு நோயானது உலகம் முழுவதும் 300ல் ஒருவருக்கு ஏற்படுகிறது. மற்ற மனநோய்களைப் போல் இது பொதுவானது அல்ல. இந்த நோய் பதின்பருவத்தின் பின் பகுதியில் அல்லது 20களில் ஆரம்பிக்கிறது. பெண்களைவிட ஆண்களுக்கு இந்த நோய் இன்னும் இளம் வயதில் ஏற்படுகிறது. சாதாரண மன நோயையே இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் சூழல் இல்லாத நம் இந்திய சமூகத்தில் மனச்சிதைவு நோய் பற்றி இன்னமும் கூட புரிதல் இல்லை என்பது வருந்தத்தக்கது.

மனச்சிதைவு நோய் என்றால் என்ன?

மனச்சிதைவு நோயாளிக்கு இந்த சமூகம் சில அபத்தமான விளக்கங்களை வைத்திருக்கிறது. மனச்சிதைவு நோயாளி என்றால் சைக்கோ கில்லர், சீரியல் கில்லர், பெண்களை அல்லது குழந்தைகளை கொலை செய்து ரசிக்கும் நபர், சக மனிதர்களை தாக்கி வன்முறையில் ஈடுபடும் நபர், பெற்றோரின் தவறான வளர்ப்பு, மோசமான சமூகம் மனச்சிதைவை ஏற்படுத்தும் என்ற சித்தரிப்புகளும் உண்டு. ஆனால் இதில் எதுவுமே உண்மையில்லை.

எல்லா நோய் போல் மனச்சிதைவுக்கும் சாதி, மதம், இனம், மொழி, பாலினம், தேச எல்லை என்ற பேதமும் இல்லை. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று உறுதிபட எந்த ஆராய்ச்சியாளரும் இதுவரை வரையறுத்துக் கூறியதில்லை. சில நேரங்களில் மரபணு கோளாறுகள், சில நேரங்களில் சுற்றுப்புற அழுத்தங்கள், சில நேரங்களில் பிற மனநோய்கள் என எது வேண்டுமானாலும் மனச்சிதைவுக்கு அடித்தளமாக அமையலாம் என்றே கூறுகின்றனர். அளவுக்கு அதிகமான கானபிஸ் எனப்படும் போதை வஸ்துகளைப் பயன்படுத்துவதால் மனச்சிதைவு நோய் ஏற்படலாம் என்ற காரணியை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

அறிகுறிகள் என்னென்ன?

மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத ஒன்றை இருப்பதாக உறுதிபட நம்புவார். சில நேரங்களில் யாரோ தன்னுடன் பேசுவது போல், தன்னை இயக்குவதுபோல் நம்புவார். அவரது கண்களுக்கு சில உருவங்கள் தெரியலாம். சில குறிப்பிட வாசனையோ, துர்நாற்றமோ அவரை ஆட்கொண்டிருப்பதாக உணரலாம். என் மேல் புழுக்கள் ஊர்கின்றன, என் சாப்பாட்டில் விஷம் உள்ளது என்று விந்தையான வாதங்களைச் சொல்லலாம். அவர்களது சிந்தனையில் சீர் இருக்காது. பேச்சும் அர்த்தமற்றதாக, முரணானதாக மாறியிருக்கும். எந்த இலக்கும் இல்லாதவராக தென்படுவார். முந்தைய நாள் வரை வேலைக்கு சென்று வந்த இளைஞன் திடீரென்று அறைக்குள் பூட்டிக்கொண்டு வெறித்த பார்வையோடு மணிக்கணக்காக மவுனிக்கலாம். அனைவரிடமும் பேச்சை நிறுத்திவிடலாம். தனக்குத்தானே ஏதோ புன்முறுவல், சிரிப்பு, பேச்சு என இருக்கலாம். தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் குறைக்கலாம். சமூகத்திலிருந்து ஒதுங்கி, சுய சுகாதாரத்தைக் கூட தவிர்த்து தென்படலாம். வாரக் கணக்கில் குளிக்க மறுக்கலாம். இவையெல்லாம் உங்கள் உறவுகளுக்கோ, நட்புகளுக்கோ ஏற்பட்டால் இவை மனச்சிதைவின் அறிகுறிகள். பேய் பிடித்துவிட்டதாகக் கருதாமல் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுங்கள். மனச்சிதைவு நோய்க்கு சிறந்த சிகிச்சை 'Early inervention' அதாவது ஆரம்பநிலையிலேயே மருந்துகளைக் கொடுத்தல்.

தற்போது, ‘கவுன்சிலிங்’ எனும் மனவியல் சிகிச்சை முறை மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. மனச்சிதைவு நோய்க்கு கவுன்சிலிங் உதவாது. தன்னிலை உணராது, நிஜத்திலிருந்தும் இயல்பிலிருந்தும் எண்ண ஓட்டம் பிறழ்ந்த நிலையே மனச்சிதைவு. இங்கே உன் பிரச்சினையை, சூழலை, உன் செயல்களை, அவற்றைத் தூண்டும் சிந்தனை முறையைப் புரிய வைக்கிறேன் என்று ‘கவுன்சிலிங்’ நடத்துதல் உதவாது. மனச்சிதைவுக்கு மருந்து அவசியம். அறிவியல் மருத்துவம் அவ்வப்போது புதுவகை மருந்துகளை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டோரில் ஒரு சிலருக்கு மட்டும் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் திரும்பத் திரும்ப தாக்கம் அதிகரிக்கலாம். மோசமானதாகவும் இருக்கலாம். மற்றபடி மருந்துகளை விடாமல் உட்கொண்டுவந்தால் குடும்பமும் சமூகமும் ஆதரவுக்கரம் நீட்டினால் நிச்சயமாக இயல்புக்குள் இருக்கலாம்.

அகன்ற சேவை தேவை...

"உலகளவில் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை. மனநல மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக இருப்போரில் 50% மக்களுக்கு மனச்சிதைவு இருக்கிறது. 31.3% மனச்சிதைவு நோயாளிகளுக்கே மனநல சிறப்பு சிகிச்சை முறையாகக் கிடைக்கிறது. மனநல சேவைகளுக்கான நிதி மேலாண்மையிலும் சிக்கல் இருக்கிறது. நோயாளிகளுக்கு செலவிடுவதை முறைமைப்படுத்த வேண்டியுள்ளது. பல மனநல மருத்துவமனைகள், மன நோயாளிகளுக்கு மனநோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. சில இடங்களில் மனித உரிமைகள் மீறலும் இருக்கின்றது. மனநோயாளிகளுக்கான சிகிச்சையை மனநல மருத்துவமனைகளில் இருந்து சமுதாயம் சார்ந்ததாக மாற்றும் முயற்சிகள் தேவை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதுபோல் சமுதாய மனநல சேவைக் கூடங்கள் வேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மனநல சேவைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே ஒருங்கிணைக்க வேண்டும். மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான டே சென்டர்கள் வேண்டும், வீடு தேடிச் சென்று சேவைகளை வழங்கும் அளவுக்கு முன்னேற்றம் வர வேண்டும். மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட நபர், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு என அகன்ற சேவை வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

மருத்துவரின் ஆலோசனை...

"மனச்சிதைவு நோயைப் பொருத்தவரையில், உலகமெங்கும் இருக்கும் அத்தனை அறிவியல் உறுதி செய்யப்பட்ட நவீன சிகிச்சை முறைகளும் மருந்துகளும் இந்தியாவிலும் கிடைக்கின்றன. மனநல மருத்துவர்களை அணுகுவதிலும் மக்களிடம் முன்பை விடவும் இப்போது தயக்கம் குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் தலைமை மருத்துவ நிலையங்களிலும் மனநல மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன.

மருந்து என்றாலே அது தூக்க மாத்திரை, அதற்கு அடிமையாகிவிடுவோம், வாழ்க்கை முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தவறான அச்சங்கள் மக்களிடையே ஒரு மூடநம்பிக்கையாகப் பரவியிருக்கின்றன. அடிப்படை அறிவோ நேர்மையோ இல்லாமல் சமுக வலத்தளங்களில் இது போன்ற அபத்தங்கள் பரப்பப்படுவதால் சிகிச்சைக்கு வந்தாலும், `மருந்து தேவையா’ எனும் தயக்கம் மக்களிடம் இருக்கிறது.

தனியார் மனநல மருத்துவர்கள் அதிகம் கட்டணம் வாங்குகிறார்கள், தேவையில்லாமல் பரிசோதனை, படுக்கையில் அனுமதிப்பு என்றெல்லாம் அதிகச் செலவு வைக்கிறார்கள் எனும் கருத்தும் இங்கே அதிகம் நிலவுகிறது. குறைவான கட்டணம், நேர்மையான அணுகுமுறை உள்ள மருத்துவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள், இது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம். அரசு மருத்துவமனையின் மனநலப் பிரிவு, தனியார் மனநல மருத்துவமனைகளில் கிடைக்கும் அதே சிகிச்சை தருகிறது என்பதை மக்களிடம் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.

ஆரம்பக் கட்டங்களில் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் கோபத்துடன் இருக்கலாம், அவர்களிடம் வாதம் செய்வது உதவாது. அவர்கள் சிகிச்சைக்கு மறுக்கலாம், அந்தக் கட்டத்தில் வற்புறுத்துவது அவர்களது உரிமை மீறலோ, மனிதாபிமானமற்ற காரியமோ அல்ல- அது அவர்கள் விரைவில் தன்னிலை உணர்ந்து வாழ்வில் இணைய உதவும் கருணையும் அன்பும் மிகுந்த செயலாகும்.

பாதிப்பின் தீவிரம் குறைந்து அறிகுறிகள் மறையும்போது, 'எல்லாம் சரியாகிடுச்சே' என்று மருந்துகளை மருத்துவர் அறிவுரை இன்றி நிறுத்துவது, இப்ப ஒரு கல்யாணம் பண்ணி வச்சுடலாம் என்று சோதிடம் பார்ப்பது போன்றவை முழுதாக குணமாகாத நோய் மீண்டும் வெளிப்பட வைக்கும். விட்டுவிட்டு மருத்துவம் பார்ப்பது குணமாகக் கூடிய நபரையும் நெடுங்கால நோயாளியாக மாற்றிவிடும்" என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ருத்ரன்.

காப்பீட்டு நிறுவனங்களும் மனநோயும்..

காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நம் ஒவ்வொருவருக்கும் மாதத்துக்கு குறைந்தது 3, 4 அழைப்புகளாவது வரும். பல கவர்ச்சிகரமான திட்டங்கள் என நேர்த்தியாக பட்டியலிடுவார்கள். கோவிட் வந்த பிறகு அதைக்கூட மருத்துவக் காப்பீட்டில் கொண்டு வந்துவிட்டனர். ஆனால் ஒரு கோவிட் நோயாளி மனநோயாளியாக இருந்தால் அவருக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகாது. இதுதான் மனநோயாளிகளின் நிலைமை.

மாறிவரும் காலச்சூழலில் அதுவும் உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள போட்டி உலகில் பள்ளிக்கூட மாணவன் தொடங்கி அரசியல் பிரமுகர் வரை மன அழுத்தங்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா முழுவதும் 43 அரசு மனநல மருத்துவமனைகளில் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 செவிலியர்கள், 0.05 உளவியல் நிபுணர்களே இருக்கின்றனர்.

மனநோயாளிகள் பலரும் போதிய சிகிச்சை இல்லாமலேயே தீவிர மனநோயாளிகள் ஆகும் சூழலில் தான் நாம் இருக்கிறோம். அப்படியான சூழலில், மற்ற நோய்களுக்கு வழங்கப்படுவதுபோல் காப்பீட்டு நிறுவனங்கள் மனநோயையும் காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவந்தால் அது நடுத்தர, ஏழை மக்கள் தரமான, தொடர்ச்சியான சிகிச்சையை மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

ஐஆர்டிஏஐ ( காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்) மனநோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மனநோய் பாதிக்கப்பட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்படுவோர் காப்பீட்டுக்கு தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் மனநோயாளில் அதற்கான க்ளெய்மை பெறத் தகுதியானவர்கள். தீவிர மனநோயாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் கேர் டேக்கர் காப்பீட்டு சலுகைகளைப் பெற்றுத் தரலாம். ஒருவர் மனநோய்க்கான காப்பீடு செய்திருந்தால். அந்த காப்பீட்டை எடுத்ததிலிருந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னரே அவர் அதிலிருந்து சலுகைகளை அனுபவிக்க இயலும். ஆகையால், பரம்பரை மனநோய் வரலாறு கொண்டவர்கள் இத்தகைய காப்பீட்டை எடுத்துக் கொள்வது நலம் என்று ஐஆர்டிஏஐ அறிவுறுத்துகிறது. வழிகாட்டுதல்கள் இப்படி இருக்க எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் பெரியளவில் இதைப் பின்பற்றுவதில்லை. அதேபோல் போதைப் பழக்கங்களால் ஏற்படும் மன நோய்கள் காப்பீட்டு சலுகை வரம்ப்புக்குள் வருவதில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் மனச்சிதைவு நோய், பை போலார் (Bipolar) என்றழைக்கப்படும் இரு துருவ மனநோய், போதை பொருட்களால் ஏற்படும் மனநோய், மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள், உடல்நல பாதிப்புகளால் ஏற்படும் மனநோய், மன வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் மனசிதைவுக்கான அறிகுறி நோய்கள் உள்ளிட்ட 6 மனநோய்கள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டன. ஆனாலும், அதை முழுவீச்சில் செயல்படுத்துவதில் இன்னமும் சில இடர்பாடுகள் இருக்கின்றன.

பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறுகையில், மனநோயாளிகளை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவர தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தயக்கம் இருப்பது உண்மைதான். இதற்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகளே மனநோயாளிகளுக்கான விரிவான காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்கலாம். அது ஏழை, நடுத்தர மக்களுக்கு தரமான சிகிச்சையை நிச்சயம் உறுதி செய்யும். அதுமட்டுமல்ல மனநோயாளிகளைக் கொண்ட சாதாரண குடும்பங்கள் பல அவர்களை பராமரிப்பதில் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. பல குடும்பங்களில் மனநோயாளியை பராமரிப்பவர் வேலைக்கும் செல்ல வேண்டும், நோயாளியையும் கண்காணித்து கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது. அத்தகையோருக்காக டே கேர் அமைப்புகளை ஏற்படுத்தலாம். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு இதை முன்னோடி திட்டமாக செயல்படுத்தலாம் என்றார்.

மனநோய்களை அனைத்து மாநில அரசுகளும் மருத்துவக் காப்பீட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மனநல மருத்துவர்கள் பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

மறுவாழ்வை உறுதி செய்வோம்:

மனச்சிதைவு ஒரு தீவிர மனநோய், நாட்பட அதன் நிலை மோசமாகி வரும் என்பதால் ஆரம்பத்திலேயே சிகிச்சை தந்தால் நல்ல பலன்கள் பார்க்கலாம். இது குறித்து மிகவும் தெளிவான தொடர்ந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தான் முதல் தேவை. மனச்சிதைவு நோயைப் பொருத்த வரையில், அதன் அறிகுறிகளின் தீவிரம் மட்டுப்படும்போது, சமூகத்தில் மீண்டும் இவர்கள் இணையவும் பணியாற்றவும் மறுவாழ்வுப் பயிற்சிகள் அவசியம். மறு வாழ்வு திட்டம் ஆலோசனை, சமூகத்திறன் பயிற்சி, தொழிற்பயிச்சி, தொடர்புதிறன் பயிற்சி என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

மனச்சிதைவு சிகிச்சையில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று அவர்களுக்கான மறுவாழ்வை உறுதி செய்தல். சில தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருந்தாலும், அரசு மருத்துவமனைகளிலும் இது இன்னும் அதிகம் செயல்பட வேண்டும்.

இது சவால்மிக்க, அலுப்பூட்டும் பணி என்பதால் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அப்படியான சேவையை அரசே வழங்கி மனநோயாளிகளின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யும்போது இந்நோயாளிகள் மீதான சமூகப் பார்வையும் மாறும்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in



Read in source website

கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு முதல்வர் டெல்லிக்குப் பயணம் சென்றுவந்தார். அப்போது அங்குள்ள மாதிரிப் பள்ளிகளைப் பார்வையிட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மாதிரிப் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் கூறிவிட்டுவந்தார். வந்ததோடு, பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றுவதற்கான பணிகள் குறித்த செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. இது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயல்!

அதற்கு முன்பாகத் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் களநிலவரம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியதும் அவற்றுக்கான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் கட்டமைப்பு சார்ந்தும் கற்பித்தல் சார்ந்தும் இன்னும் தன்னிறைவு அடையாதது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக, ஓராசிரியர் பள்ளிகள்தான் அடிப்படைப் பிரச்சினையாக, கற்றலுக்கான தடையாக இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கும் தொடக்கப் பள்ளிகள் மொத்தம் 2,631 என்று கடந்த ஆண்டு வெளிவந்த யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் கூறுகிறது. தளி, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் உள்ளன என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர். தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகமாக இயங்கிவருகின்றன.

ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கும் 2,631 பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 23 பாடப்புத்தகங்களைக் கையாள வேண்டிய சூழல் அந்தப் பள்ளிகளின் ஒற்றை ஆசிரியருக்கு உண்டு. தரமான கற்பித்தல் கிடைக்க வேண்டுமானால் பள்ளிகளில், குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டுமல்லவா? மொழிப் பாடத்தின் அடிப்படை வாசிப்புக்குள் நுழைவதற்கும், எழுத்துகளைக் கற்றுக்கொள்வதற்கும், கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன்களைப் பெறவும் என எல்லாவற்றுக்குமான தருணம் தொடக்க வகுப்புகள்தான்.

அந்தக் குழந்தைகளைத்தான் நாம் அதிகக் கவனத்துடன் கையாள வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படியான சூழலில் நமது தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கும்போது, எல்லாத் திறன்களையும் ஒரே ஆசிரியரே 5 வகுப்புக் குழந்தைகளுக்கும் எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும்? அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான பாடங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், உளவியல்ரீதியான அணுகுமுறையாகட்டும், மற்ற எல்லாவிதமான திறன்களையும் குழந்தைகளிடமிருந்து வெளிக்கொணர எவ்வாறு ஒரே ஆசிரியரால் முடியும்?

தற்போது கற்பித்தல் சாராத பணிகளையும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செய்துகொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்வியும் ஆளுமைத் திறன் வளர்ச்சியும்தான். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்த பிறகு அந்தக் குழந்தைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் இதுவரை இல்லை. மற்ற வகுப்புகளைக் காட்டிலும் தொடக்க வகுப்புகளுக்குக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 30 குழந்தைகள் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் என்ற ஒற்றைக் கூறை அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் நியமனமும் இன்றி, பணி நிரவல் நடந்துகொண்டே இருக்கிறது. தொடக்கப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈராசிரியர் பள்ளிகளும் ஓராசிரியர் பள்ளிகளும் அதிகமாக இருப்பது தொடர்பான எந்தத் தீர்வை நோக்கியும் நாம் நகரவில்லை.

ஈராசிரியர், ஓராசிரியர் தொடக்கப் பள்ளிகளைக் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் யாரும் கேள்வி எழுப்பவில்லை, தீர்மானம் கொண்டுவரவில்லை என்பது வேதனை. தற்போது பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகளை மேம்படுத்திவரும் சூழலில், ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் தீர்வுகாண்பதற்கு இப்போதாவது வழிகாணப்படும் என்பதே எல்லோருடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை ஓராசிரியர் பள்ளிகளில் அந்த ஒரு ஆசிரியருக்கும் ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றாலும் அவசரமாக விடுப்பு தேவைப்பட்டாலும் அவர்களால் எடுக்க முடியவில்லை. அந்த ஒரு ஆசிரியரும் வரவில்லை என்றால், அந்தப் பள்ளி என்ன ஆகும் என்று கேள்வி எழுகிறது. பக்கத்துப் பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் ஒருசில நாட்கள் ஆசிரியர்கள் வந்தாலும் அந்த நாட்களில் இந்தக் குழந்தைகளோடு புதிய ஆசிரியர் எப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வார், அவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குப் போதுமான காலம் அவர்களுக்கு இருக்கும் என்று கூற முடியாது. இது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பிரச்சினைகளும் ஏராளமாக இருக்கின்றன. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு அனைத்து ஓராசிரியர் பள்ளிகளையும் குறைந்தபட்சம் 5 ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். அப்போதுதான் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும்.

வாசிப்புத் திறன் இல்லை, அடிப்படைக் கணிதத் திறன் இல்லை என்று மாணவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர் இருந்தால்தானே அங்கு கல்வி கற்பிக்க முடியும். ஆசிரியர்களுக்கு இப்போது கூடுதலாக ரெக்கார்ட்ஸ் எழுதக்கூடிய பணியை அதிகமாகக் கொடுக்கின்றனர். அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தலைமையாசிரியரைச் சமீபத்தில் சந்தித்துப் பேசும்போது அவர் இப்படிக் கூறினார்:

“வகுப்பில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறீர்களோ இல்லையோ, அதற்குக் கேள்வி கிடையாது. அதிகாரிகள் ‘பாடத்திட்டக் குறிப்பேடு முடிச்சாச்சா, இதர பதிவேடுகள் முடிச்சாச்சா?’ என்றுதான் கேட்கிறார்கள். இரண்டு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளை ஒரு ஆசிரியரும் 4, 5-ம் வகுப்புகளில் தலைமையாசிரியரும் கவனிக்கும்போது அந்த மூன்று வகுப்புகளுக்கு 13 வகையான பாடத் திட்டங்களை எழுத வேண்டியுள்ளது. ஒரு வகுப்பிற்கு, ஒரு பாடத்திற்கு எழுதக்கூடிய பாடத்திட்டமே பல பக்கங்களை உள்ளடக்கியது. ஆறு நாட்களும் பள்ளியையும் வைத்துவிடுகிறார்கள். எங்களால் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு இந்தப் பாடத்திட்ட நோட்டையும் சரிவர எழுத முடியவில்லை என்றால், மெமோ கொடுப்பேன் என்கிறார்கள். இதுதான் கல்வித் துறையில் நடக்கிறது.”

பாடம் நடத்துகிறார்களா, அந்தக் குழந்தைகள் கற்றலுக்கு உட்படுகிறார்களா, என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஆசிரியர்களை மிரட்டும் போக்கு நிலவுகிறது என்று ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர். மார்ச் மாதம் வெளியான பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகளிலும் இப்பிரச்சினை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. டெல்லியைப் போல நம் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். ஓராசிரியர் பள்ளிகள் இல்லாத மாநிலம் என்ற நிலையை அடைந்தால்தான் அது சாத்தியமாகும். இன்னும் ஒருசில வாரங்களில் பள்ளிகள் திறக்கவிருக்கும் சூழலில், இப்போதிருந்தே அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் மாற்றம் நிச்சயமே என்று நம்புவோம்.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர். தொடர்புக்கு: uma2015scert@gmail.com



Read in source website

மின்தூக்கி ஒன்றின் அருகில் நீங்கள் செல்கிறீர்கள். அது தானாகவே திறக்கிறது. அதில் நுழைந்து தரைக்குக் கீழுள்ள, கார் நிறுத்தும் தளத்துக்கு வருகிறீர்கள். காருக்கு அருகே சென்றவுடன் காரின் கதவு திறக்கிறது. காரை இயக்க ஆரம்பித்ததும் குளிர்சாதன வசதி செயல்பட ஆரம்பிக்கிறது, உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்று ஒலிக்க ஆரம்பிக்கிறது. இப்படி ஒன்றுக்கொன்று ஒரு இணைப்பு ஏற்படுத்தி, அவற்றை இயங்கவைக்கும் தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்புதான் பொருட்களின் இணையம் (Internet of Things-IOT). ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணையத்தால் தொடர்புகொள்வது, தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் பொருட்களின் இணையம்.



Read in source website