DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 23-11-2022

 

அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

மாநகரப் பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின் எதிரொலியாக போக்குவரத்து கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் பொதுமக்கள் வழங்கும் ரூ.10, ரூ.20 நாணயங்களை வழங்கும்போது நடத்துநர்கள் அதனை மறுக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாணயங்களை வாங்க மறுத்தால், துறை சார்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. 

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறூவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பதோ சட்டப்படி குற்றம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து  புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருப்பதாவது:

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து  புதிய பாடத்திட்டம்கொண்டுவரப்படும்.

அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே மாதிரியான மொழிப்பாடம்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொண்டு வரப்படும். ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மக்களுக்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்.



Read in source website

கிருஸ்துமஸ்  மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் கேக் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிளம் கேக், வெண்ணிலா மற்றும் சாக்லெட் உள்பட 4 வகையான கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணியை இம்மாதவே தொடங்க உள்ளது.

3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்தது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூா்பாகு, பால் கேக், நெய் அல்வா, குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகளை விற்பனை செய்தது.

பால், இனிப்பு வகைகள், ஐஸ்கீரிம் மற்றும் நொறுக்கு தீனிகளை தொடர்து கேக் வகைகளை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது.



Read in source website

குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் விடுதிகளை மூட  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது.

மேலும், இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.


இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாரயண பிரசாத் அமர்வு, செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை மூட உத்தரவிட்டனர். மேலும், செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.



Read in source website

 

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகிவரும் ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ முன்னாள் தலைவரும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் தெரிவித்தாா்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இஸ்ரோவில் இம்மாதம் 26 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4 என்ற 54 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படவுள்ளன.

அடுத்தகட்டமாக எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் போன்றவை செலுத்தப்படவுள்ளன.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலத்தை செலுத்தும் முன்பு பலகட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ரோபோவை விண்ணுக்கு அனுப்பும் சோதனையும் நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியுள்ளது. 

அதாவது, ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்கப்பட வேண்டும். அதற்கு தகுந்தது போல் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும். 

அதேபோன்று மனிதர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமிக்கு வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும். பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பான பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன. 

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு (2023) இதை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அது சாoதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும். 

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில ஆா்ஜித பணிகள் நிறைவடைந்துவிட்டன. அங்கு மண் பரிசோதனையும், செயற்கைக்கோள் செலுத்தும்போது அதன் நிலையை அப்பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகளும் நடைபெறவுள்ளன. இதையடுத்து கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றாா் அவா்.
 



Read in source website

தமிழ் எழுத்தாளா்களைக் கெளரவிக்கும் வகையில், அவா்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எழுத்தாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டமானது, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், பத்து போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜி.திலகவதி, சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆா்.என்.ஜோ.டி.குரூஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்), கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றவா்களான பொன்.கோதண்டராமன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனாா், கா.ராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியா் விருது பெற்ற மருத்துவா் இரா.கலைக்கோவன் ஆகிய 10 எழுத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மேலே குறிப்பிட்ட 10 பேருக்கும் அவா்கள் வசிக்கும் மாவட்டத்திலோ அல்லது விரும்பும் மாவட்டத்திலோ வீடுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வின்படி, கரோனா தொற்றுக்குப் பிறகு குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

பீடியாட்ரிக் நியூராலஜி இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில், மார்ச் 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளின் மருத்துவ குறியீடுகளை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு பக்கவாதம் வந்தால் ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்து உள்ளது என்ற நிலையில், கோவிட்-19 பிறகு இந்த பாதிப்பு உண்மையாக மாறியுள்ளது என்று உட்டா ஹெல்த் பல்கலைக்கழகத்தில் குழந்தை நரம்பியல் ஆய்வின் முதன்மை ஆசிரியர் தெரிவித்தார். அதே வேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பக்கவாதம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 4 ஆக இருந்தது. 

2021ஆம் ஆண்டு குழந்தைகள் பற்றிய சர்வதேச ஆய்வு முடிவுகளின் படி தொற்று பாதித்த குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த கூற்று சர்வதேச ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு முரணாக உள்ளனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் எடுத்து கொண்ட 16 குழந்தைகளில், பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது பக்கவாதத்தால் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், பக்கவாதத்தின் அறிகுறிகளை முன்கூட்டியே ஆய்வு செய்யம் அவசியத்தை இந்த புதிய ஆய்வு எடுத்துறைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

காத்மாண்டு: பொறுப்பு பிரதமரும், நேபாள காங்கிரஸின் தலைவருமான ஷோ் பகதூா் தேவுபா புதன்கிழமை தனது சொந்த மாவட்டமான தன்குடா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 7 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியிலிருந்து 1991 முதல் தொடா்ந்து நாடாளுமன்றத்துக்கு தேவுபா தோ்ந்தெடுக்கப்பட்டு வருகிறாா்.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 போ் நேரடி தோ்தல் மூலமும், 110 போ் விகிதாசார தோ்தல் முறை மூலமும் தோ்ந்தெடுக்கப்படுவா். 

இத்தோ்தலுக்காக நாடு முழுவதும் 22,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

தேர்தல்களில் சுமார் 61 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். சில வன்முறைச் சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இருப்பினும், தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட வாக்குப் பதிவு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இத்தோ்தலில் 1.7 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா் என்று நேபாள தலைமை தேர்தல் ஆணையர் தினேஷ் குமார் தபாலியா கூறினார்.

நேபாளத்தில் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், நேபாளம் பொறுப்பு பொறுப்பு பிரதமரும், நேபாள காங்கிரஸின் தலைவருமான ஷேர் பகதூர் தேவுபா புதன்கிழமை தனது சொந்த மாவட்டமான தன்குடா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 7 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேவுபா 25 ஆயிரத்து 534 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சாகர் தாகல் 13,042 வாக்குகள் பெற்றார்.

நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு எதிராக நேபாள காங்கிரஸ் தலைவரான தற்போதைய பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, முன்னாள் மாவோயிஸ்ட் தலைவா் புஷ்ப கமல் தகலுடன் கூட்டணி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் வெளியிடப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

2006-இல் உள்நாட்டுப் போா் முடிவடைந்த பின்னா், நேபாளத்தில் எந்தப் பிரதமரும் முழுமையான பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. ஆதலால், இந்தத் தோ்தல் முடிவிலாவது நிலையான அரசு அமையுமா என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.



Read in source website

அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் யுரேனியத்தை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்போவதில்லை என்று ஒப்புக் கொண்டிருந்த ஈரான், தற்போது நிபந்தனையை மீறி 60 சதவீதம் வரை செறிவூட்டத் தொடங்கியதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுரேனியத்தின் செறிவூட்டலை அதிகப்படுத்திக்கொண்டே 90 சதவீதம் வரை சென்றால், இறுதியில் அதனைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்குவதற்கு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஈரான் அரசுக்குச் சொந்தமான இா்னா செய்தி நிறுவனம் கூறுகையில், தலைநகா் டெஹ்ரானுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில், நிலத்தடியில் உள்ள தங்களது ஃபோா்டோ அணுசக்தி மையத்தில் யுரேனியம் எரிபொருளை 60 சதவீதம் வரை செறிவூட்டும் பணிகள் தொடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ அண்மையில் நிறைவேற்றிய தீா்மானமொன்றுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து விளக்கமாக அந்த அமைச்சகம் எதையும் தெரிவிக்கவில்லை.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் பிற வல்லரசு நாடுகளும் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, ஈரான் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் கீழ், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் சம்மதித்தன. அதற்குப் பதிலாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, 3.67 சதவீதத்துக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டுவதில்லை உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் ஏற்றது.

இருந்தாலும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அந்த ஒப்பந்தத்தின் விளைவாக தளா்த்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தைவிட கூடுதல் சதவீதத்தில் யுரேனியத்தை செறிவூட்டி, நிபந்தனை அளவுக்கு அதிகமாக ஈரான் இருப்பு வைத்து வருகிறது.

இந்த நிலையில், 60 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்ட, 62.3 கிலோ யுரேனியத்தை ஈரான் கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் ஐஏஇஏ அமைப்பு கடந்த இந்த மாதம் குற்றம் சாட்டியது. இது, ஏற்கெனவே இருந்ததைவிட 6.7 கிலோ கூடுதலாகும் என்று அந்த அமைப்பு கூறியது.

அதன் தொடா்ச்சியாக, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தங்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று ஐஏஇஏ கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியது.

இது குறித்து 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த அமைப்பு இயற்றிய தீா்மானத்தில், தங்களது கேள்விகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பதில்களை ஈரான் தருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

 



Read in source website

‘உலகில் ஒவ்வொரு 11 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்படுகிறாா்’ என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்தாா்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சா்வதேச தினம் வரும் வெள்ளிக்கிழமை (நவ.25) கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையிலும், தில்லியில் ஷ்ரத்தா வாக்கா் என்ற இளம் பெண் காதலன் ஆப்தாப் அமீன் பூனாவாலாவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலிலும் இந்த கருத்தை அவா் தெரிவித்தாா்.

‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது. இதுபோன்ற வன்முறைகளை வரலாற்று புத்தகங்களில் ஏற்றவேண்டும்’ என்று அவா் அழைப்பு விடுத்தாா். அவா் மேலும் கூறியதாவது:

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகின் மிகப் பரவலான மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. ஒவ்வொரு 11 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினா்களால் கொலை செய்யப்படுகிறாா். கரோனா பாதிப்பு முதல் பொருளாதார சரிவு வரையிலான தாக்கங்கள், தவிா்க்கமுடியாத வன்முறைகளையும், வாக்குவாதங்களையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் வெறுப்பு பேச்சு, பாலியல் ரீதியில் மற்றும் இணையவழியில் என பலவகை துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனா். பெண்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம், சமமான பொருளாதார மீட்சி, உலகின் தேவையான நீடித்த வளா்ச்சி ஆகியவற்றையும் இந்த வன்முறைகளும், பாகுபாடும் தடுக்கின்றன.

இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீா்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நேரமிது. அதாவது, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரசுகள் சிறந்த திட்டங்களை வடிவமைத்து, நிதி ஒதுக்கி, தேசிய அளவிலான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளின் ஒவ்வொரு நிலைகளிலும் சமூக குழுக்கள் உள்ளிட்ட அடிநிலை அமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதோடு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்படுபவா்களுக்கு ஆதரவும் நீதிக்கான உரிமையும் காக்கப்படுகிறது என்ற உணா்வு ஏற்படும்.

நிதியை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும்: பெண்கள் உரிமைகள் அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கான நிதியை வரும் 2026-க்குள் 50 சதவீதமாக அரசுகள் உயா்த்த வேண்டும். மேலும், பெண்களின் உரிமைகளுக்கான ஆதரவு குரலை நாம் அனைவரும் எழுப்ப வேண்டும். அனைவரும் பெண்ணியவாதிகள் என பெருமையுடன் அறிவிக்க வேண்டும். ஆணாதிக்கத்தை சவால்விடும் வகையிலான பொதுப் பிரசாரங்களை ஆதரித்து, பெண் வெறுப்பு மற்றும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று குட்டெரெஸ் கூறினாா்.

‘ஒன்றிணைவோம்: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயல்பாடு’ என்ற இந்த ஆண்டுக்கான சா்வதேச தின கருப்பொருளை குறிப்பிட்ட அன்டோனியோ குட்டெெஸ், ‘பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கும் உலகம் முழுவதும் உள்ள சமூக செயல்பாட்டாளா்களுக்கு துணை நிற்போம்’ என்பதே அந்த கருப்பொருளின் அா்த்தம்’ என்றும் கூறினாா்.



Read in source website

மதுரை: குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிப்பது தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் - குறத்தி ஆட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் முன்பு புராணக் கதைகள், நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. சமீபகாலமாக குறவன்- குறத்தி ஆட்டத்தில் ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன.

எனவே, ஆபாசமான முறையில் குறவன் - குறத்தி ஆட்டம் நடத்த தடை விதித்தும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன் - குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. பின்னர் திபதிகள், பல ஆடல், பாடல் குழுவினர் குறவன் - குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக தெரிய வருகிறது. அதற்கு அனுமதிக்கக் கூடாது. எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்படக் கூடாது. எனவே, குறவன்- குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்புவது தொடர்பாக டிஜிபி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாசரணையை டிசம்பர் 1-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.



Read in source website

சென்னை: பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள 2000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தெருக்குறல் அறிவு என அறியப்படும் பிரபல இசை கலைஞர் அறிவு, பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவிற்காக எழுதி, இசையமைத்து பாடிய பாடலை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நூற்றாண்டுவிழா விழா கொண்டாடும் வேளையில் பொது சுகாதாரத்துறை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை கண்டுள்ளது. போலியோ, காலரா உள்ளிட்ட பல நோய்களை பொது சுகாதாரத்துறை ஒழித்துள்ளது. தற்போது கரோனாவையும் இந்த துறை சிறப்பாக கையாண்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடாக கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்க 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் பதிவு செய்ததில் இருந்தே, இந்த துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேசும்போது, "பொது சுகாதாரத்துறை கடந்த 100 அண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நிறைய பணிகளை செய்து வருகிறோம். மருத்துவம் குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்தவும், பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது" என்றார்.



Read in source website

சென்னை: புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் ஒசோன்சாட் தவிர்த்து அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் நவ. 25-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி தரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த மருத்துவர் கே.கனகவல்லி விருப்பத்தின்பேரில், மாநில அரசு சித்த மருத்துவப் பணியிடத்துக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராக உள்ள மருத்துவர் ஆர்.மீனாகுமாரிக்கு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், சித்த மருத்துவ உயர் கல்விக்கான தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என இருபெரும் நிறுவனங்களுக்கு ஒருவரே தலைமை வகிப்பது இதுவே முதல்முறை.



Read in source website

புதுடெல்லி: குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜோசப் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதான். தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டே மத்திய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை வரையறுக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991ன் பிரிவு 4ல் அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம் என சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் 2வது அம்சத்தைக் கருத்தில் கொண்டே தலைமை தேர்தல் ஆணையர்களை அரசு நியமிக்கிறது. 1950களில் தலைமை தேர்தல் ஆணையர்கள் 8 ஆண்டு காலம் அந்த பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 2004க்குப் பிறகு அவர்கள் சில நூறு நாட்கள் மட்டுமே தலைமை தேர்தல் ஆணையர்களாக இருக்க முடிகிறது. அவர்களுக்கு 65 வயது ஆகிவிட்டதை காரணம் காட்டி அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், தேர்தல் ஆணையம் பலவீனமாகவே இருக்கிறது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 8 ஆண்டுகளில் 6 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். தற்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2015ல் இருந்து 2022 வரையிலான 7 ஆண்டுகளில் 8 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகி உள்ளனர். தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களின் பிறந்த தேதி அரசிடம் இருப்பதால், அதை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இது மிக மிக மிக மோசமான நடவடிக்கை. 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்து தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என். சேஷன் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தேவை. பலவீனமான தேர்தல் ஆணையர்களின் தோல்களில் அதிகப்படியான அதிகாரச் சுமை உள்ளது. எனவே, இந்த பொறுப்புக்கு மிகச் சரியான நபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி முன்வைத்த வாதம்: திறமையானவர் என்பதைவிட நல்ல வலுவான குணங்களைக் கொண்ட ஒருவரை தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க நாங்கள் விரும்புகிறோம். அந்த அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுகிறார். சிறந்த மனிதர் நியமிக்கப்படுவதை அரசு எதிர்க்கவில்லை. ஆனால் அதனை அரசால் எவ்வாறு நிகழ்த்த முடியும் என்பதுதான் கேள்வி. தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசன வெற்றிடம் என்று ஏதும் இல்லை. மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இவ்வாறு அவர் வாதிட்டார்.



Read in source website

புதுடெல்லி: சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் இதுகுறித்து கூறியதாவது: இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா' என்ற முழக்கத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் உருவான கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. ஆனால், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, ‘வியத்தகு இந்தியா’ என்ற பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். மேலும், இது, கரோனாவுக்கு முன்பு காணப்பட்ட விறுவிறுப்பைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை1.7 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில்,வரும் 2023-ல் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை கரோனாவுக்கு முந்தைய நிலையை விஞ்சும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் இது, அவர்களுக்கு கலாச்சார, ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் புத்தணர்வு தரும் நிகழ்வாக அமையும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் ஜி20 அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமிதாப் காந்த் முக்கிய பங்காற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது.

தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று 2-வது முக்கிய காரணமாக இருந்துள்ளது. உலகம் முழுவதும் அந்த ஆண்டில் 33 வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு 5 பாக்டீரியாக்கள் மட்டுமே காரணமாக இருந்துள்ளன. அதேநேரம் உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று வகைகள் இடம் மற்றும் வயதுக் கேற்ப மாறுபட்டுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை 2019-ல் இ-கோலி, எஸ்.நுமோ னியா, கே.நிம்மோனியா, எஸ்.அவ்ரூஸ் மற்றும் ஏ.பவ்மானி ஆகிய 5 கொடிய பாக்டீரியாவால் 6 லட்சத்து 78 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இ-கோலி பாக்டீரியாவால் மட்டும் 1.57 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

எனவே, பாக்டீரியா தொற்று மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியதுஅவசியமாகிறது. குறிப்பாக,நோய்களைக் கண்டறியும் ஆய்வகங்களை அதிகப்படுத்துவது, தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை அமல்படுத்துவது, நோய் எதிர்ப்பு மருந்து பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Read in source website

ரியாத்: கத்தார் உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் 2 -1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைத் தொடர்ந்து பொது விடுமுறை அளித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் சவுதி அரேபிய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸை, ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின் சவுத் அப்துல்ஹமீத். இதனால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

எனினும் சவுதி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்து சவுதி அரேபியா முன்னிலை வகித்து அர்ஜெண்டினாவை வெற்றி கொண்டது. உலகக் கோப்பையில் சிறந்த அணியாக கருதப்படும் அர்ஜெண்டினாவை சவுதி வெற்றி கொண்டது சவுதி மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று பொது விடுமுறையை சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Read in source website

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பலத்த பனிகாற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் வழக்கத்துக்கு மாறாக கடந்த 24 மணி நேரத்தில் 180 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூயார்க்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து நியூயார்க் மேயர் ஹோசல் கூறும்போது, “எங்கள் கோரிக்கையை ஏற்று அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது குழு மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது” என்றார்.

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் பலவும் மோசமான வானிலை நிகழ்வுகளை சந்தித்து வருகின்றன. வறட்சி, வெள்ளம், புயல், தீவிர பனிப்பொழிவு, மழை ஆகியவற்றை உலக நாடுகள் எதிர் கொண்டுள்ளன. எனவே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Read in source website

வாஷிங்டன்: மறைந்த பிரபல நடிகரும், தற்காப்புக் கலையின் ஜாம்பவானுமான புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950-ல் பிறந்தார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் ‘என்டர் தி டிராகன்' உள்பட பல ஹாலிவுட் படங்களில் தற்காப்புக் கலையைப் போற்றும் விதத்தில் நடித்து புகழ்பெற்றார். 1973-ல் தனது 32-வது வயதில் அவர் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் நம்பினர்.

அப்போது புரூஸ் லீயின் மரணத்துக்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டன. சீனாவைச் சேர்ந்த நிழல் உலக தாதாக்களால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பொறாமை கொண்ட அவரது காதலி விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்றும் பல்வேறு வதந்திகள் பரவின.

ஆனால் புரூஸ் லீ மரணமடைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் வெளியான புதிய ஆய்வு முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நடிகர் புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினில் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் கிளினிக்கல் கிட்னி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. புரூஸ் லீயின் மரணத்துக்கு ஹைபோநட்ரீமியா காரணமாக இருந்திருக்கலாம். அதாவது சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் அவர் இறந்திருக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற அவரது சிறுநீரகங்கள் இயலாததால் புரூஸ் லீயின் மரணம் ஏற்பட்டது என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.



Read in source website

சென்னை: கூகுள் பே, போன் பே உட்பட யுபிஐ செயலிகளில் மேற்கொள்ளப்படும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் லிமிட் செய்யும் சூழல் வரலாம் எனத் தெரிகிறது. அதற்கான பணிகளை இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் சிஸ்டத்தை கவனித்து வரும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களுக்கான அளவீடு தொடர்பான வரம்பைக் கட்டுப்படுத்துவதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அதனால் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல்.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது.

கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு வங்கி கணக்கு மட்டுமே அடிப்படை. இந்த சூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரம்பு விதிக்கும் நடைமுறை விரைவில் அமலாக உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் இது தொடர்பான இறுதி முடிவு வெளிவந்தால் மட்டுமே முழு விவரங்கள் தெரியவரும்.

தற்போது கூகுள் பே மற்றும் போன் பே என இரண்டும் இந்திய சந்தையில் சுமார் 80 சதவீத பங்கை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை 30 சதவீதமாக கொண்டு வர வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா முன்மொழிந்துள்ளதாக தகவல். அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்பது யுபிஐ சேவை வழங்கி வரும் செயலி வழக்குநர்களின் கோரிக்கையாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Read in source website

சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்காக ஒரே படிவம் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக தற்போது பல்வேறு படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து ஒரே படிவம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாதிரி ஒருங்கிணைந்த படிவத்தை வருமான வரித் துறை, கடந்த 1-ம் தேதி வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

இதில், ஐடிஆர்-7 படிவத்தைத் தவிர இதர படிவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஐடிஆர்-1 மற்றும் 4 படிவங்கள் ஏற்கெனவே எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அவை அப்படியே தொடரப்படும்.

உதாரணமாக, ஒருவர் சம்பளதாரராக இருந்து சிறிது வட்டியும், ஈவுத் தொகையும் வருவாயாக பெற்றுக்கொண்டு ஒரு வீட்டை மட்டும் சொந்தமாக வைத்திருந்து ஆண்டு மொத்தவருவாய் ரூ.50 லட்சத்துக்குள் இருந்தால், அவர் ஐடிஆர்-1 படிவம் பயன்படுத்தினால் போதும். ஒருங்கிணைந்த படிவத்தை பயன்படுத்த வேண்டியதில்லை.

இதேபோல, ஒருவர் சுயதொழில் செய்பவராக இருந்தால், விற்றுமுதல் ஆண்டொன்றுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருந்தாலோ, சிறுதொழில் செய்து ஆண்டொன்றுக்கு விற்றுமுதல் ரூ.2 கோடிக்குள் இருந்தாலோ அவர்கள் ஐடிஆர் படிவம்-4ஐ பயன்படுத்தினால் போதும். ஒருங்கிணைந்தபடிவம் பயன்படுத்த வேண்டியதில்லை. ஐடிஆர் 2, 3, 5 அல்லது6 ஆகிய படிவங்களை பயன்படுத்துவோர்தான் இனி ஒருங்கிணைந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.



Read in source website

பழங்குடியின சமூகங்களை ஆதிவாசிகளுக்குப் பதிலாக ‘வனவாசி’ என்று பா.ஜ.க குறிப்பிடுவதாக ராகுல் காந்தி விமர்சனம்; அந்த வார்த்தைகளுக்கு வித்தியாசம் என்ன, அவற்றின் பயன்பாட்டின் வரலாறு என்ன?

Liz Mathew

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை, பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரஸால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி. நீங்கள் ஹிந்துஸ்தானின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்.

இதையும் படியுங்கள்: மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா; பலன்களும் பாதிப்புகளும்

ஆதிவாசியா அல்லது வனவாசியா?

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசியலமைப்பு பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும், இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் பாரம்பரியமாக பிரதான சாதிக் கட்டமைப்பிற்கு வெளியே ஒரு அலகாகக் கருதப்படுவதால், அவர்களின் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்த ‘வனவாசி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் இந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் பீதியடைந்த ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, இரண்டாவது சர்சங்சாலக் எம்.எஸ் கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார். பழங்குடியினரின் ‘இந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியது மற்றும் அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட்டாலும், சமூகத்தின் மத்தியில் சங்கத்தின் செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.

“நாங்கள் அவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை ஆதிவாசிகள் என்று அழைப்பதில்லை, ஏனென்றால் ஆதிவாசி என்றால் அசல் குடிமக்கள் அல்லது பழங்குடியினர், மற்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று அர்த்தம். ஆனால் நாம் அனைவரும் இந்த கண்டத்தின் பூர்வீக குடிமக்கள் என்று சங்கம் நம்புகிறது,” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் எங்கிருந்தோ இருந்து ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாடு, ஆர்.எஸ்.எஸ்.,ஸால் எப்போதும் நிராகரிக்கப்பட்டது என்று ராம் மாதவ் கூறினார். மேலும், “பழங்குடியினருக்கான அரசியலமைப்புச் சொல்லான அனுசுசித் ஜன்ஜாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சௌகான், வனவாசி என்ற சொல் 1952 இல் நிறுவப்பட்டது என்று விளக்கினார்.

“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது, மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும், ”என்று ஹர்ஷ் சௌஹான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் என்ற வார்த்தை அமெரிக்க சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.

“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் வனவாசி எளிமையான வார்த்தை அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சௌகான் விளக்கினார்.

இந்த வார்த்தை அவர்கள் “காடுகளில் வாழ வேண்டும்” என்பதைக் குறிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியது பற்றி, “நீங்கள் பாரதவாசி என்று அழைக்கப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்தியாவில் மட்டும் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இது ஒரு அரசியல் கதையாக ராகுல் காந்தி அடியெடுத்து வைக்க முயற்சிக்கிறார்” என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.

காடுகளில் வாழும் மக்களை பண்படுத்த முடியாது என்ற கருத்து “மேற்கத்திய எண்ணம்” என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.

“காடுகளிலோ அல்லது வனங்களிலோ வாழ்பவர்களுக்கு கலாச்சாரம் இருக்க முடியாது என்பது மேற்கத்திய கதை. இந்தியாவில் அப்படி இருந்ததில்லை. நமது கலாச்சாரம் வனவாசிகளிடமிருந்து உருவானது என்று நாங்கள் நம்புகிறோம். முற்காலத்தில் கிராமங்களில் வசிப்பவர்கள் கிராமவாசிகள் என்றும், நகரங்களில் வசிப்பவர்கள் நகரவாசிகள் என்றும், காடுகளில் இருப்பவர்கள் வனவாசிகள் என்றும் அழைக்கப்பட்டனர்,” என்று ஹர்ஷ் சௌகான் கூறினார்.

வனவாசி கல்யாண் ஆசிரமத்தை சங் பரிவார் அமைத்தது வனவாசிகளின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யவும், வெறுமனே “மதமாற்ற செயல்முறையை நிறுத்த” அல்ல என்றும் ஹர்ஷ் சௌஹான் வாதிட்டார்.

சர்ச்சை புதியதா?

பழங்குடி சமூகங்கள் காடுகளில் வாழ வேண்டிய அவசியமில்லை என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிபாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசியல் நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.

“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிபாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிபாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு ‘ஆதிபாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிபாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்ஜாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.,ஸில் கூட வனவாசி என்ற சொல்லை வழக்கொழிந்ததாகக் கருதும் ஒரு பிரிவினர் இருப்பதாகத் தெரிகிறது.

“உண்மையில், பல ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வனவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர், எங்கள் ஆசிரமங்கள் இப்போது கல்யாண் ஆசிரமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முக்கியமாக எங்கள் பணி கடலோர பழங்குடியினரையும் உள்ளடக்கியது. பழங்குடியினர் மத்தியில், சிலர் வனவாசி என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை, இந்த வார்த்தை “காட்டுவாசிகள்” போல் தெரிகிறது,” என்று மத்திய இந்தியாவில் பழங்குடியினர் மத்தியில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கூறினார்.

எவ்வாறாயினும், வனவாசியை மறுபரிசீலனை செய்ய திட்டமிடப்படவில்லை என்று ராம் மாதவ் கூறினார், ஆனால் அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜன்ஜாதி என்ற வார்த்தையை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறது.



Read in source website

ஷதானி தர்பார் என்றால் என்ன, அது ஏன் இந்திய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது? யாத்ரீகர் வருகைகளை நிர்வகிக்கும் 1974 இன் பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

சிந்து மாகாணத்தில் உள்ள ஷிவ் அவதாரி சத்குரு சாந்த் ஷதரம் சாஹிப்பின் 314ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்திய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் திங்கள்கிழமை (நவ.21) 100 விசாக்களை வழங்கியது. நவம்பர் 22 முதல் டிசம்பர் 3 வரை ஹயாத் பிடாஃபியில் உள்ள ஷதானி தர்பாருக்கு யாத்ரீகர்கள் வருகை தருவார்கள்.

1974 ஆம் ஆண்டின் பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கீழ், இரு நாடுகளிலிருந்தும் யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் எல்லைக்கு அப்பால் உள்ள சில ஆலயங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தியர்களை வரவேற்கும் ஷதானி தர்பார் குழுவின் ஒரு பகுதியான காக்கா கைலாஷ் ஜோட், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (indianexpress.com கூறுகையில், செவ்வாய்கிழமையன்று 99 யாத்ரீகர்கள் பாகிஸ்தானுக்கு வந்திருப்பதாகவும், பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் அவர்களை வரவேற்றனர் என்றும் கூறினார்.

ஷதானி தர்பார் என்றால் என்ன, அது ஏன் இந்திய யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது?

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள ஹயாத் பிடாஃபியில் அமைந்துள்ள ஷதானி தர்பார் அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய இந்துக் கோயிலாக நம்பப்படுகிறது. இது 1786 ஆம் ஆண்டு சந்த் ஷாதரம் சாஹிப்பால் நிறுவப்பட்டது, அதன் ஆண்டு நிறைவை யாத்ரீகர்கள் கொண்டாடுவதற்காக பயணித்தனர்.

தனது குடும்பம் நான்கு தலைமுறைகளாக ஷதானி தர்பார் சீடர்களாக இருப்பதாக ஜோட் கூறினார். “நான் ஹயாத் பிடாஃபியில் பிறந்தேன். தர்பாரின் வரலாறு பற்றி எனது தந்தை பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தக் கோவிலுக்கு எப்போதும் இஸ்லாமியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சிந்து மதங்கள் செழித்து இங்கு மதிக்கப்படும் 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது” என்றார்.

ஜோட் ஹயாத் பிடாஃபியில் பிறந்தார், இப்போது அருகிலுள்ள டஹர்கி நகரத்தில் வசிக்கிறார். இந்திய யாத்ரீகர்கள், ஷதானி தர்பாருக்குச் செல்வதைத் தவிர, ஜார்வார், அடில்பூர், கான்பூர் மெஹர் போன்ற இடங்களில் உள்ள புனிதத் தலங்களுக்குச் செல்வார்கள், மேலும் நன்கனா சாஹிப்பைப் பார்வையிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

“அவர்களின் பயணம், தங்குமிடம் போன்றவற்றை ஷதானி தர்பார் கவனித்துக் கொள்ளும் அதே வேளையில், பாகிஸ்தான் அரசாங்கம் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்” என்று ஜோட் கூறினார்.

சாந்த் ஷாதரம் சாஹிப்

கோவிலின் இணையதளத்தின்படி, 1708 ஆம் ஆண்டு அக்டோபரில் லாகூரில் உள்ள லோகனா காத்ரி குடும்பத்தில் சாந்த் ஷாதரம் பிறந்தார். அவர் ராமரின் மகன் லவ்வின் வழித்தோன்றல் என்றும், சிவபெருமானின் அவதாரம் என்றும் நம்பப்படுகிறது.

20 வயதிலிருந்தே, ஹரித்வார், யமுனோத்ரி, கங்கோத்ரி, அமர்நாத், அயோத்தி மற்றும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோயில் போன்ற பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்றார். 1768 ஆம் ஆண்டில், அவர் ராஜா நந்தின் ஆட்சியின் போது சிந்துவின் தலைநகரான மத்தேலோவை அடைந்தார், அங்கு அவர் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார் மற்றும் “புனித புனித நெருப்பை (துனி சாஹிப்) ஒளிரச் செய்தார்” என்று வலைத்தளம் கூறுகிறது.

“சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் தனது பக்தர்களுடன் மத்தேலோ என்ற கிராமத்தை விட்டு வெளியேறி, ஹயாத் பிடாஃபியில் மற்றொரு புனித கிராமத்திற்கு அருகில் குடியேறி, ஷதானி தர்பாரின் அடித்தளத்தை அமைத்தார். நீங்கள் ஒரு புனிதமான கிணறு தோண்டி, “துனி சாஹிப்” என்று அழைக்கப்படும் ஒரு “ஹோலி நெருப்பை” அறிவூட்டினீர்கள்,” என்றும் கோவில் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

துனி சாஹிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற்று, கிணற்றின் தண்ணீரைக் குடிப்பவர் தனது துன்பங்கள் மற்றும் துன்பங்களிலிருந்து விடுபடுவார் என்று நம்பப்படுகிறது. இன்றும் கூட, ஷடாய் தர்பாரில் வருடாந்திர கொண்டாட்டங்களில் ‘அக்னி பூஜை’ அல்லது தீ வழிபாடு அடங்கும்.
மேலும், வெகுஜன மக்களின் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, அங்கு வசதியுள்ள பக்தர்கள் வரதட்சணை மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான தம்பதிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். “கொண்டாட்டங்களில் கீதை, ராமாயணம் மற்றும் குரு கிரந்த் சாஹிப் பாராயணம் நடைபெறும்” என்று ஜோட் கூறினார்.

சந்த் ஷாதாரத்திற்குப் பிறகு, தற்போதைய, ஒன்பதாவது காடிசார் (மதகுரு) டாக்டர் யுதிஸ்டர் லால் ஆவார், அவர் முதன்மையாக சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் வசிக்கிறார். இவரது மனைவி மாதா தீபிகா மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவை சேர்ந்தவர்.

ஐந்தாவது காடிசார் ஒரு பெண், மாதா சாஹிப் ஹசி தேவி, அவர் 1852 இல் பதவியை ஏற்றார். அனைத்து காடிசார்களும் சிறந்த ஆன்மீக சக்திகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, ஆறாவது, சத்குரு சந்த் மங்களாராம் சாஹிப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

கோவிலின் வலைத்தளத்தின்படி, “1930 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரித்து ஆட்சி கொள்கையின் காரணமாக, உள்ளூர் முஸ்லிம்கள் இந்து முஸ்லிம்களை துன்புறுத்தவும், கொள்ளையடிக்கவும், கொல்லவும் ஆட்சியாளர்களால் தூண்டப்பட்டனர்.
ஆனால் “சாந்த் மங்களராம் சாஹிப் புனித துனி சாஹிப் தண்ணீரை கலந்து” ஹயாத் பிடாஃபியின் எல்லையை சுற்றி எறிந்தார். இதன் விளைவாக, ஆக்கிரமிப்பாளர்கள் கிராமத்திற்குள் நுழைந்தபோது, அவர்கள் பார்வையற்றவர்களாக மாறினர்.
கிராமத்தை விட்டு வெளியேறியவுடன் அவர்களுக்கு கண் பார்வை திரும்பியது. “இந்த வழியில் ஹயாத் பிடாஃபி மக்கள் சந்த் மங்களராம் சாஹிப்பின் அதிசயத்தால் காப்பாற்றப்பட்டனர்” என்று இணையதளம் கூறுகிறது.

1974 இந்தியா-பாகிஸ்தான் நெறிமுறை

நெறிமுறையின் கீழ், இரு நாடுகளிலிருந்தும் யாத்ரீகர்கள் வழக்கமான குடியேற்ற செயல்முறையின் மூலம் செல்லாமல் சில மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல விசாவைப் பெறுகிறார்கள்.
யாத்ரீகர்கள் குழுக்களாக மட்டுமே பயணிக்க முடியும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய குழுக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நெறிமுறையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள பதினைந்து கோவில்களும், இந்தியாவில் ஐந்து கோவில்களும் உள்ளன.

பாகிஸ்தானில் உள்ள ஆலயங்கள்:

குருத்வாரா ஸ்ரீ நங்கனா சாஹிப் (ராவல்பிண்டி); குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாஹிப் (ராவல்பிண்டி); மகாராஜ் ரஞ்சித் சிங்கின் (லாகூர்) சமாதி; குருத்வாரா ஸ்ரீ தேரா சாஹிப் (லாகூர்); குருத்வாரா ஜனம் அஸ்தான் (லாகூர்); குருத்வாரா திவான் கானா (லாகூர்); குருத்வாரா ஷாஹீத் கஞ்ச், சிங்கானியன் (லாகூர்); குருத்வாரா பாய் தாரா சிங் (லாகூர்); ஆறாவது குருவின் குருத்வாரா, மொசாங், (லாகூர்); ஸ்ரீ குரு ராம் தாஸ் பிறந்த இடம் (லாகூர்); குருத்வாரா செவின் பாட்ஷாஹி, மொசாங் (லாகூர்); ஸ்ரீ கடாஸ்ராஜ் சன்னதி; ஷதானி தர்பார், ஹயாத் பிடாஃபி (சிந்து); சாது பேலா, கான்பூர் மற்றும் மிர்பூர் மத்தேலோ (சிந்து); ஹஸ்ரத் டேட்டா கஞ்ச் பக்ஷின் ஆலயம் (லாகூர்) ஆகும்.

இந்தியாவில், நெறிமுறை ஹஸ்ரத் மொய்னுதீன் சிஷ்டி (அஜ்மீர்), ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா (டெல்லி), ஹஸ்ரத் அமீர் குஸ்ரோ (டெல்லி), ஹஸ்ரத் முஜாதித் அல்ஃப் சானி (சிர்ஹிந்த் ஷெரீப், பஞ்சாப்) மற்றும் ஹஸ்ரத் குவாஜா அலாவுதீன் அலி அஹ்மத் ஷபீர் (கேல்) ஆகியவை வருகிறது.



Read in source website

 மத்திய பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரி வேதியியல், உடற்கூறியல், மருத்துவ உடலியல் பாடங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு, அப்புத்தகங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வெளியிடப்பட்டன. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுமே உள்ளூர் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்கிற தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக, நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் இதை முன்னெடுத்துள்ளது.
 அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்ல விஷயமாகத் தோன்றலாம். அதற்கு முன் பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
 ரஷியா, ஜப்பான், பிரான்ஸ், கியூபா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அவரவர் நாட்டு மொழிகளில்தான் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன என்பது தாய்மொழி ஆதரவாளர்களின் வாதம். ஆனால், இதில் உள்ள மற்றோர் உண்மையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
 மேலே குறிப்பிட்ட நாடுகளில் சீனாவும், ரஷியாவும்தான் நம்மைவிட பரப்பளவில் பெரிய நாடுகள். சீனாவில் மட்டும்தான் நம்மைவிட மக்கள்தொகை அதிகம். மற்ற நாடுகள் எல்லாம் தமிழ்நாட்டை விட சற்றுக் கூடுதலாகவோ, குறைவாகவோ பரப்பளவும், மக்கள்தொகையும் கொண்ட நாடுகள்.
 இந்த நாடுகளில் எல்லாம் ஒரே தேசிய மொழி இருப்பதுபோல, நமது நாட்டில் ஒரே தேசிய மொழி கிடையாது. மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியிலும், ஹிந்தி பேசாத மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில மொழியிலும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவை கற்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்படலாம். அது "மண்ணின் மைந்தர்'களுக்கு வாய்ப்பு என்கிற வாதத்தில் முடிந்து தேச ஒற்றுமைக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
 இப்போது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் மாணவர்கள் சேர்க்கை பெற முடியும். ஆனால், உள்ளூர் மொழியில்தான் கல்வி என்பது தீவிரமாக அமல்படுத்தப்படுமானால், அது மாணவர்களுக்கான அந்த வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாகிவிடும்.
 மருத்துவத்தைப் பொறுத்தவரை, வகுப்பறைகளில் படிப்பதைவிட பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களே மருத்துவரை மேம்பட்டவராக ஆக்குகின்றன. சர்வதேச இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படிப்பது அவசியம். ஆங்கில அறிவு இல்லை எனில் இதில் சிக்கல் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட உள்ளூர் மொழி வழியில் படிப்பவர்கள் அந்த மாநிலத்தைவிட்டு வெளியே செல்வதற்கு தயங்குவார்கள் என்பதுடன், வெளிநாடுகளில் மேற்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கக்கூடும்.
 அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 13 உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் தமிழ் வழி பொறியியல் (பி.இ.) படிப்புகளில் சேர மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதுவரை நான்கு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் சிவில் என்ஜினீயரிங் படிப்பில் மொத்தம் உள்ள 360 இடங்களில் 88 இடங்களே (24 %) நிரம்பி இருக்கின்றன. அதேபோன்று, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் மொத்தம் உள்ள 429 இடங்களில் 84 மாணவர்கள்தான் (20 %) சேர்ந்துள்ளனர்.
 தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிரமமும், பொறியியல் படிப்புகளின் மீதான மோகம் குறைந்துள்ளதுமே இதற்கு காரணங்கள் என பேராசிரியர்கள் கூறுகின்றனர். மேற்படிப்புகளுக்கான வாய்ப்பு இருக்காது என்கிற அச்சமும்கூட காரணமாக இருக்கக்கூடும். இதற்குத் தீர்வுதான் என்ன?
 புரிந்துகொள்வதற்கு எளிது என்பதால் தாய்மொழியில் படிப்பது சிறந்தது என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வியாளர்களின் கருத்து. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழியிலேயே கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை -2020 வலியுறுத்துகிறது. இதை கேந்திரிய வித்யாலயா தவிர, அந்தந்த மாநிலங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் முதலில் அமல்படுத்தலாம்.
 மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் உள்ளூர் மொழியில் கற்பிப்பது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் சிறிய அளவில் முயற்சி செய்து (பைலட் புராஜெக்ட்) அதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் கருத்தொற்றுமை கண்டு விரிவாக்கம் செய்யலாம். அதுவரை மருத்துவம், பொறியியல் போன்றவை ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும்.
 மருத்துவ, பொறியியல் பாடங்கள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும்படி செய்யலாம். பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அந்த மொழிபெயர்ப்புகள் அவர்களுக்கு போதிய புரிதலை ஏற்படுத்தும்.
 மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில்தான் கற்பிக்கப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், தாய்மொழியில் படிப்பு உடனடியாக அமலாவதற்கு சாத்தியம் இல்லை. ஆங்கிலம் புறக்கணிக்கப்பட்டு தாய்மொழி அல்லது ஹிந்தியிலேயே கற்பிக்க வேண்டும் என்கிற கருத்து, எதிர்பார்க்கும் நன்மைக்கு பதிலாகக் கெடுதலை ஏற்படுத்திவிடலாகாது.
 முதலில் தாய்மொழியில் சரியாக எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்த தலைமுறையை உருவாக்குவோம். அதற்குப் பிறகு உயர்கல்வியில் தாய்மொழிக் கல்வி குறித்து யோசிப்போம்!



Read in source website

புராணங்களில் இடம் பெற்றிருக்கும் நவீன அறிவியல் கருத்துகளை ஆய்வு செய்யும் அறிவியல் அறிஞர்கள் அதை உண்மை என்று நிரூபிக்கிறார்கள். மற்றொருபுறம் நம்முடைய புராணங்கள் கட்டுக் கதைகள் என்று நம்மவர்களே சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.
 சங்கத் தமிழ் இலக்கியங்களில் காதலும் வீரமும் மட்டுமே பேசப்படுவதாகப் பொதுவாகச் சொல்லி வைக்கிறார்கள். சங்க இலக்கியம் வானியல் முதலான அறிவியல் பற்றியும் பேசுகிறது. ரிக் வேதமும் வானியல் தொடர்பான நுட்பங்களைப் பற்றிப் பேசுகிறது. இரண்டிலும் நமக்குப் பரிச்சயம் இல்லை. தமிழரான நமக்கு ஏன் இவற்றைப் படிப்பதற்கான சூழல் அமையவில்லை?
 புராணங்கள் வரலாற்றைச் சொல்பவை. காலம் மிகக் கடந்த காரணத்தால் அவற்றை நிறுவுவதற்கான தரவுகள் இல்லாமல் போய்விடுகின்றன. புராணங்களே சான்றுகளாக எஞ்சி நிற்கின்றன. காஞ்சி மகா ஸ்வாமிகள், தமது "தெய்வத்தின் குரல்' எனும் நூலில் புராணங்கள் மட்டுமல்ல, ஸ்தல புராணங்களும் அதிகத் தகவல்களைச் சொல்கின்றன என்று குறிப்பிடுகிறார்.
 ஸ்தல புராணங்கள் ஓர் இடத்தின், ஆலயத்தின் கதை என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அவற்றில் பொதிந்திருக்கும் உண்மைகள் ஏராளம். ஸ்தலபுராணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மகா ஸ்வாமிகள் நம்முடைய கற்றலில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பவற்றை நாமே கற்றுக்கொள்ளாமல் உண்மை எது பொய் எது எனத் தெரியாமல் நிற்பதன் பின்புலம் யாது?
 சென்ற நூற்றாண்டு வரை ஒவ்வொரு சமூகத்திற்கும் எழுதப்பட்ட வரலாறு இருந்தது. தற்போது யாருக்கும் அது பற்றிய உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பவர் இல்லாத காரணத்தால் ஒவ்வொன்றாக அழிந்து போய்விட்டன.
 நம்முடைய மூதாதையர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்னென்ன அரும்பெரும் சாதனைகளைச் செய்தார்கள் என்பவை பற்றிய தகவல்கள் நமக்குத் தெரிவதில்லை. "ஜாதிகளை ஒழிக்கிறோம்' என்று பெருங்குரலில் பேசியவர்களால் ஜாதிய அரசியல் இன்றளவும் நடக்கிறது. ஆனால், நமது சமூகப் பெரியவர்களின் வரலாறுகள் காணாமல் போய்விட்டன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன?
 சமீபத்தில் மனுஸ்ம்ருதி குறித்த ஒரு புத்தகம் அரசியல் கட்சியினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் அட்டைப் படத்தில் உடன்கட்டை ஏறுவது போன்றதொரு காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனுஸ்ம்ருதியில் உடன்கட்டை ஏறுவது போன்ற பழக்கங்கள் பேசப்படவில்லை. ஆனால் நமக்கு அது தெரியாது. பிறர் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
 "சதி' என்று கூறப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் வடவரின் கலாசாரத்தில் இருந்த கொடிய முறை என்று பேசுகிறார்கள். உண்மையில் சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. கணவன் இறந்துவிட்டால் பெண்கள் கொடுமையான கைம்மை நோன்பு மேற்கொண்டதைப் பற்றி புறநானூற்றில் பதினெட்டுப் பாடல்கள் பேசுகின்றன. அப்படிப்பட்ட வழக்கம் பார்ப்பனர்களிடம் இருந்திருக்கவில்லை.
 போர்க்களம் புகுந்த தமிழ் மறக்குல வீரர்களின் மனைவியர் இங்ஙனம் கைம்மை நோன்பு மேற்கொண்ட தகவல்களே இருக்கின்றன. மொட்டை அடித்துக் கொண்டு பத்திய உணவை உண்டு சரளைக்கற்கள் நிறைந்த தரையில் பாய் கூட இல்லாமல் அவர்கள் படுத்துக் கொண்டனர் என்றெல்லாம் செய்தி இருக்கிறது. இளம்பெண்களும் கைம்மை நோன்பைத் தங்கள் வாழ்நாளெல்லாம் பின்பற்றினர் என்றும் புறநானூறு பேசுகிறது.
 "உடன்கட்டை ஏறுதல்', "உடன்பள்ளி கொள்ளுதல்' என்று கணவனின் இறந்த உடலை எரித்த தீயில் பெண்கள் தாங்களும் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி பேசப்பட்டிருக்கிறது. பாண்டியன் அறிவுடை நம்பியின் இளம் மனைவி உடன்கட்டை ஏறிய செய்தியை நேரில் பார்த்ததாகப் புலவர் மதுரைப் பேராலவாயர் பதிவு செய்கிறார்.
 பாண்டிமாதேவி பெருங்கோப்பெண்டு கற்றறிந்த பெண். அவளே தன் இறப்புக்கு முன்பதிவு செய்வதாக ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கிறது. "பல்சான்றீரே பல்சான்றீரே செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லா சூழ்ச்சிப் பல்சான்றீரே' என சான்றோர்கள் அவளை உடன்கட்டை ஏற வேண்டாமெனத் தடுப்பதாகவும் கைம்மை நோன்பை விட என் காதல்கணவரோடு வீடுபேறு அடைவதே தனக்கு ஆனந்தம் என்று சொல்வதாகவும் அந்தப் பாடல் அமைந்திருக்கிறது. மன்னன் ஆய்அண்டிரன் இறந்த பொழுது அவனது மனைவியர் அவனோடு உடன்கட்டை ஏறியதை நேரில் பார்த்ததாக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.
 உடன்கட்டை ஏறுதல் கொடிய வழக்கம் என்பதிலே நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஒழிக்கப்பட வேண்டியது என்பதை உணர்ந்தே சான்றோர்கள் அதனை மறுத்துள்ளனர். என்றாலும் அதனை வடவரின் சதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. அப்படிக் கூறுவதில் அரசியல் மட்டுமே இருக்கிறது. இப்படிப் பேசுவோருக்குத் தமிழின் புறநானூறு தெரியுமா? தெரிந்திருந்தும் நம்மிடம் கதை சொல்கிறார்கள் என்றால் நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதுதான் பொருள். அவர்களுக்கே தமிழில் இப்படி ஓர் இலக்கியம் இருப்பது தெரியவில்லை எனில் தமிழறியாத இவர்களையா நாம் நமக்கான வழிகாட்டிகள் என்றும், தலைவர்கள் என்றும் ஏற்பது?
 சிந்திக்க வேண்டிய இடம் இதுவே. நமக்குப் புறநானூறு தெரிந்திருக்குமேயானால் இத்தகைய வழக்கம் நாடு முழுவதும் இருந்திருக்கிறது என்ற புரிதல் ஏற்பட்டிருக்கும். வெற்று அரசியலை அடையாளம் கண்டு ஒதுக்கியிருப்போம். அரசியல் நமது தேவைகளை, முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்திருப்போம். அப்படி நாம் உணர்ந்துகொள்ளும்பட்சத்தில் அரசியல்வாதிகள் நம்மை உணர்ச்சிவயப்படச் செய்து அரசியல் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படியென்றால், நாம் தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் போனதில் அரசியல் இருக்கிறதா?
 ஹிந்துக்களைப் பொறுத்தவரை எந்த இறைவனை வணங்குகிறோம் என்பதை விட எந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாவம், புண்ணியம் என்ற சிந்தனையே அவர்களை வழிநடத்துகிறது. கர்மவினை என்று நமக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்வதும், நல்வாய்ப்புகளை முன்னோர் செய்த புண்ணியம் என்று எண்ணி நன்றி பாராட்டுவதும் ஒவ்வொரு ஹிந்துவின் மரபணுவில் நிறைந்திருக்கிறது. தர்ம சாஸ்திரங்கள் தெரியாவிட்டாலும் இந்த நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.
 தொல்லியல் அறிஞர் நாகசாமி, "தர்ம சாஸ்திரங்களைத் தொகுத்து எளிதாகப் புரியும்படியாக திருவள்ளுவர் திருக்குறளை வழங்கியிருக்கிறார்' என்று சான்றுகளோடு நிரூபித்து நூல் எழுதியிருக்கிறார்கள். இதனைப் படிப்பதற்கான வாய்ப்பு நமக்குப் பள்ளிக்கூடத்திலோ, கல்லூரியிலோ கிடைப்பதில்லை. ஆனால், திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்று புதிது புதிதாகக் கதை சொல்கிறார்கள். முழுமையாகத் திருக்குறளை தர்ம சாஸ்திரங்களின் சாரத்தைப் படிப்பதற்கான வாய்ப்பு நமக்கு வாய்க்காததற்குப் பின்னும் அரசியல் இருக்கிறதா?
 சமய மறுமலர்ச்சி தமிழ் மண்ணில் நிகழ்ந்ததைப் போல உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. புற சமயங்களால் நம்முடைய சமயங்கள் நலிவுற்றபொழுது, ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றி தமிழால் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் கூட அந்த கிராமத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெருமையை ஏந்தி நிற்கும் படியாக தமிழ் தேவாரமும் திவ்யப்பிரபந்தமும் பாடுகின்றன.
 "தமிழ் ஞானசம்பந்தன்' என்றே தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் திருஞானசம்பந்தர். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்தவன்' என்று திருஞானசம்பந்தர் சமயம் பரப்பியதைக் காட்டிலும், அன்றாடம் தமிழ் பரப்பியது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாமல் போனதற்குக் காரணம் யார் அல்லது எது?
 தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைப் படிப்பது தொடர்பாக சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சம்ஸ்கிருதம் நமக்கு விரோதமானது என்பதை நிறுவுவதற்காகவே மனுஸ்ம்ருதி போன்ற நூல்கள் எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. தமிழை வாழ வைத்து அடுத்த தலைமுறைக்குத் தந்த தமிழ் அறிஞர்கள் பன்மொழிப் புலமை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை இன்றைய தலைமுறை அறியுமா?
 பல மொழிகளைக் கற்றுணர்ந்தவர் பன்மொழி வல்லார். "ஒரு மொழியின் இலக்கியத்தை சிறந்தது என சொல்லவேண்டுமானால் பிற மொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும் சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண்நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது' என்கிறார் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்.
 இவரை இளைஞர்களுக்குத் தெரியுமா? வரலாறு, பொருளியல், அரசியல், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹிந்தி உட்பட பதினெட்டு மொழிகள் அறிந்திருந்தார். அவரைப் பற்றி நமக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும் அரசியல் எது?
 தமிழர்கள் என்று பெருமிதப்படும் நமக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாது. பள்ளிக்கூடங்களில் தமிழில் தேர்ச்சி பெறுவது கூட கடினம் என்ற நிலைக்கு எப்படி வந்தோம்? தமிழின் பொக்கிஷங்களை நம்மிடமிருந்து மறைப்பதற்கான காரணம் யாது? காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் தொடர்பு உண்டு என்று நம்பும் தமிழர்களை ஹிந்துக்கள் இல்லை என்று வாதிடுவது எதனால்?
 தர்ம சாஸ்திரங்களை நம்பும் நாட்டில் "சநாதனத்தை வேரறுப்போம்' என்ற கூக்குரலுக்குப் பின்னிருக்கும் மர்மம் என்ன? தமிழ் கற்றுக் கொள்வதற்கு முயலும்பட்சத்தில் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அரசியல் தந்திரங்கள் எடுபடாமல் போகும். நாம் யார் என்பதையும், நம் முன்னோர் காட்டிய வழி யாதென்பதையும் தெரிந்து கொண்டால் புதிய சிந்தனைகளோடு புதிய வாசல் திறக்கும்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.



Read in source website


2022 ஆம் ஆண்டு ஜூலையில் 13.73 கோடி பெண் பயணிகள் தமிழக பேருந்துகளில் பயணம் செய்ததற்கு  ரூ. 206 கோடி மதிப்பிலான இழப்பீடு தொகையை தமிழக அரசு, போக்குவரத்து கழகங்களுக்கு  வழங்குகிறது. (ஒரு பயணிக்கு ரூபாய் 15/-வீதம்).

பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் என்பது அந்தந்த பிராந்தியத்தில் நிலையான இயக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வரப்பிரசாதம். இத்திட்டம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான முழுமையான தொலைநோக்குப் பார்வையும் புதிய உத்தியும் கொண்டதாகவும் இருக்கிறது. இலவசக் கட்டணக் கொள்கையானது நடுத்தரக் குடும்பங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்கும்  அதிக பெண் பயணிகளை ஈர்ப்பதற்கும் பொதுப் போக்குவரத்தின் தரம் மற்றும் இணைப்புகளை மேம்படுத்துவதற்கும், ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. 

மேற்கத்திய நாடுகளில், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகரங்களில்  பெண் பயணிகளுக்கு  அரசு இலவசப் பயணத்திற்கான முதன்மையான காராணிகளாக  காலநிலை மாற்றம்  மற்றும் சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துதல் போன்றவைகளை  எடுத்துக்கொண்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்குவதற்கான காரணத்தை தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

பொதுமக்களின் பார்வையில் பெண்களின் ஓட்டு வங்கியைப் பெறுவதற்காக பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கியதாக நினைக்கின்றனர். ஆனால், கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் 100 நாட்கள் வேலை என்ற திட்டத்தைவிட பெண் பயணிகளுக்கு இலவசப் பொதுப் போக்குவரத்து வழங்குவது என்பது சிறந்தது. இத்திட்டம் பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த  முழுமையான தொலைநோக்குத் திட்டம் என்பதையும் மற்றும் சுயசார்பு கொண்ட பெண்களை உருவாக்கும் புதிய உத்தி என்பதையும் பெண்களுக்கான இணைப்பு வசதியை மேம்படுத்துவதாகக் காட்டும் முதலீட்டுத் திட்டம் என்பதையும் அரசு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

அவ்வாறு தெரிவிக்காமல் வெறுமனே பெண்களுக்கு இலவசப் பயணம் அமல்படுத்தும்போது அரசு மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறை ஆகிய இரண்டிற்கும் பெரிய பலன்களைத் தராது.

பெண்கள் கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நகரங்களில் நல்ல வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு இத்திட்டம் மிகவும் பயன்படுகிறது . தமிழக அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், முன்பு இதுபோன்ற தங்குமிடங்களுக்குச் செல்லவோ அல்லது வேலைக்காக நகரத்திற்குச் செல்லவோ முடியாமல் இருந்த பல கிராமப்புறப் பெண்களுக்கு இப்போது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இது அவர்களின் வருவாயைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளது மற்றும் பல பெண்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளது.

குறிப்பாக, கிராமங்களில் குறைந்த ஊதியத்திற்கு 10, 12 வகுப்பு வரை படித்த பெண்கள் மாதம் ரூபாய் 4000/- பெற்றுக்கொண்டு சிறிய கடைகளில் அலுவலகங்களில் 12 மணி நேரம் வேலை செய்து பாலியல் சுரண்டல்களுக்கு மத்தியில்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள், இத்திட்டத்தின் மூலம் பெருநகரம் மற்றும் மாநகரங்களில் உள்ள மால்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புககள், பெரிய கட்டிடங்களின் பராமரிப்பு வேலைகளுக்கு கிராமங்களிலிருந்து அல்லது புறநகர்ப் பகுதிகளிலிருந்து  நகரங்களுக்கு பாதுகாப்பாகவும் மற்றும் வருமான உயர்வுடன் கூடிய  (ரூபாய் 16000/- வரை) வேலைகளுக்குச் செல்ல பெண்களுக்கு மிகப்பெரிய முத்தாய்ப்பாக வாய்ப்பாக அமைகிறது என்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியும். (உதாரணம் :மெட்ரோசோன், வி.ஆர்.  மால்).

அரசு மாதம்தோறும் ஒரு பெண்ணுக்கு ரூபாய் 900/- செலவு செய்து அவர்களை முந்தைய வருமானமான ரூபாய் 4000/- லிருந்து ரூபாய் 16000/- வரை  வருமான உயர்வு பெற்று கிட்டத்தட்ட 3.5 முதல் 4 மடங்கு வரை கூடுதலாக பெறுகின்றனர். இத்திட்டத்தினால் கிடைக்கப் பெறும் தமிழக பெண்களின் வருமான வரம்பு உயர்வடைந்து அதனால் மாநிலத்தில் முன்னேற்றம் (GDP) ஏற்பட வழி வகை செய்கிறது. 

பேருந்துகளின் கூட்ட நெரிசல் அதிக பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகுக்கும். பாதுகாப்புக் காரணங்களால், பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்கான குறுகிய கால அவகாசம் உள்ளது.  குடும்பஸ்தர்கள், தங்கள் மனைவியை அலுவலகம் செல்வதற்கும் அல்லது குழந்தைகளை முறையே பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும், அழைத்து வருவதற்கும் பாதுகாப்பு காரணம் கருதி கணவர்களையே அதிகம் சார்ந்துள்ளனர். இது பொதுமக்களின் தனிப்பட்ட வாகனப் பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கிறது. பெண்களுக்கு என தனி பேரூந்துகளில் இலவசப் பயணத்தை அறிமுகப்படுத்தும்போது கூட்ட நெரிசல் பயணம் மற்றும் தனிநபர் வாகன பயன்பாடு குறைப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்படுகிறது.

எனவே, தமிழக அரசு பெண்களுக்கென இலவசப் பயணப் பேருந்துகள் தனியாக இயக்கினால் தற்போது பயணம் செய்யக்கூடிய சதவிகிதத்தைவிட பன்மடங்கு  வாய்ப்புள்ளது. பொதுப் போக்குவரத்து நிலையங்களில் பயன்படுத்துவதற்கு வசதி குறைவாக இருந்தாலும், தமிழக பெண்கள் இலவசப் பொதுப் போக்குவரத்தைப் பெரிதாக நம்பியும் எதிர்பார்த்தும் உள்ளனர்.

அதற்கான  காரணங்கள், இன்னும் பலர் பொதுப் போக்குவரத்து மட்டுமே  பெண்களுக்கு  பாதுகாப்பாகவும்  மற்றும் பெரும்பான்மையாக சரியான நேரத்திற்கு பயணம் செய்வதற்கு ஏதுவாக அமைகிறது.

குறிப்பாக அதிகாலை 3 மணி அளவில் காய்கறிகளை, கீரையை, கடலில் இருந்து மீன் இறைச்சிகளை கிராமங்களில் இருந்து எடுத்து வந்து நகரங்களுக்கு விற்பனை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் வருமான உயர்வையும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் வழங்குகிறது.

பெண்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து - நன்மைகள் 

• சாலையில் கார்களின் பயன்பாட்டின் எண்ணிக்கை குறைவதால் காலநிலை மாற்ற நிகழ்வுகள் குறையும் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறையவும் உதவுகிறது. 

• பெண்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தும்போது தனிநபர் வாகனப் பயன்பாடு குறைந்து காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது. 

• அரசாங்கத்தின் வேலை குறிப்பாக பெண்களுக்கான சேவைகளை வழங்குவது, இதன் மூலம் பெண்களின் வருமான வரம்பு உயர்ந்து பெண்கள் அதிகாரம் மேம்பட உதவுகிறது. 

• பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது பாலியல் துஷ்பிரயோகம்/ துன்புறுத்தலைத் தடுக்கபடுகிறது. 

• மனித வளச் சந்தையில்  அர்ப்பணிக்கப்பட்ட சிரத்தையுடன் பணிபுரியக்கூடிய பெண் தொழிலாளர்கள் கிடைக்க வழி வகை செய்கிறது. 

• பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் நம்பகமானவை, அதன் பாதுகாப்பு பயணத்தை உறுதிசெய்து பெண்கள் ஊக்கமடைவதற்கு வழி வகுக்கிறது.

• உள் நகரங்களில் உள்ள பெண் பயனர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் செயல்திறன், வசதி மேம்படவும் மற்றும் அதன்மேல் ஈர்ப்பினை உருவாக்கவும் வழிவகை செய்கிறது .

• இலவசப் போக்குவரத்து மூலம் பெண்களை குழுக்களாக ஒன்றிணைத்து தனிப்பட்ட வாகனங்களைச் சாராமல்  அவர்களின் நட்பு வட்டாரம் விரிவடைய உதவுகிறது. 

• அதிக பயணச் செலவு  இல்லாததால் நிறைய பெண்களின் சேமிப்பு உயர்வடைந்து  பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள் .

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]



Read in source website

முதியோர், மாற்றுத்திறனாளிகள், பிற காரணங்களால் நூலகங்களுக்கு வந்து நூல்களைப் படிக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நூல்களை வழங்கும் ‘நூலக நண்பர்கள்’ திட்டம், டிசம்பர் 1 அன்று சென்னையில் தொடங்கப்படும் என்று சென்னை மாவட்ட நூலக அலுவலர் ச.இளங்கோ சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வாசிப்புப் பழக்கத்தைப் பரவலாக்குவதில் தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முக்கியமான முன்னெடுப்பு இது.

தமிழகத்தில் 4,600-க்கும் அதிகமான அரசு நூலகங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினராலும் பயன்படுத்தப்படுவதில்லை. 2020இலிருந்து கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக, நூலகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்ப் பரவல் ஆபத்து காரணமாக முதியவர்கள் அனுமதிக்கப்படவில்லை.



Read in source website

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் உணவகத்தில் இருக்கும்போது ‘தந்தூரி சிக்கன்’ என்கிற சொல்லைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இது மலேசியாவில் தொற்றிய பழக்கம். அங்குள்ள தமிழர்கள் எந்தவொரு புதிய அறிவியல் சொல் அறிமுகமானாலும், அதற்குரிய தமிழ்ச் சொல்லை உடனே உருவாக்கிடுவர்.

இன்றைய தமிழில் வழங்கும் ‘வானொலி’, ‘தொலைக்காட்சி’, ‘கணினி’ போன்ற பல சொற்கள் அவர்களது அன்பளிப்பே என்பர். தமிழ்நாட்டில் ‘உலக வலைப்பின்னல்’ என்று நாம் உருட்டிக்கொண்டிருந்தபோது, அவர்கள் ‘இணையம்’ என்றனர். நமக்கு இன்னமும் ‘வைரஸ்’ ஆக இருப்பது, அவர்களுக்கு ‘நச்சில்’. நாம் என்னதான் பொருத்தமாக ‘மின்னஞ்சல்’ என்றாலும், அவர்கள் இன்னும் அழகியலுடன் ‘மின்மடல்’ என்பர். நமது அலைபேசி பல்லாண்டுகளுக்கு முன்னரே அவர்களுக்குக் ‘கைபேசி.’ இந்தச் சொற்கள் அங்கே புழக்கத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Read in source website

நவம்பர் 15, 2022 அன்று உலக மக்கள்தொகை 800 கோடியைத் (8 பில்லியன்) தொட்டிருப்பதாக, ஐ.நா.வின் பொருளாதார - சமூக விவகாரங்கள் துறை (UN DESA) தெரிவித்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலக மக்கள்தொகை 250 கோடியாக இருந்தது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அசாத்தியப் பாய்ச்சல், உணவு-சுகாதாரத் துறைகளை மேம்படுத்தியது. சுகாதாரம், வறுமை ஒழிப்பு, கல்வி ஆகிய தளங்களில் நேர்மறையான முன்னெடுப்புகளும் குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு மரணம் ஆகிய குறியீடுகளின் வீழ்ச்சியும் மனிதகுலத்தின் சராசரி ஆயுட்கால நீட்டிப்புக்குப் பங்களித்த முக்கியக் காரணிகளாகும்.

குறையும் வளர்ச்சி விகிதம்: இந்தப் பின்னணியில் 1987, 1999, 2011 ஆகிய ஆண்டுகளில் உலக மக்கள்தொகை முறையே 500, 600, 700 கோடியை எட்டியது. ஆனால், உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1950 முதல் குறைந்துவருகிறது; 2020இல் அது ஆண்டுக்கு 1% என்ற அளவுக்குக் குறைந்தது. உலக மக்கள்தொகை, 700இலிருந்து 800 கோடியாக உயர்வதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில், 900 கோடியாக உயர்வதற்குச் சுமார் 15 ஆண்டுகள் (2037) ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துவருவது இதன்மூலம் வெளிப்படையாகிறது.



Read in source website

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதைத் தக்கவைத்துக்கொள்ள கல்வித் துறையும் ஆசிரியர்களும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகின்றனர். அரசுப் பள்ளிகள் சிலவற்றில், குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைப் பிரச்சினை இருக்கிறது; கழிவறை தூய்மையாக இல்லாததால் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகே சிறுநீர் கழிக்கிறார்கள். பள்ளி நேரத்தில் தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்கிறார்கள். இதனால் உடல்ரீதியான பல்வேறு பாதிப்புகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

காரணங்கள் என்ன?: தொடக்கப் பள்ளிக்கு ரூ.1,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1,500, உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.2,250, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3,000 என உள்ளாட்சித் துறை மூலம் துப்புரவுப் பணியாளருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிகக் குழந்தைகள் புழங்குமிடத்தில் துப்புரவுப் பணியாளர் இரண்டு வேளையும் பணியாற்றினால்தான் கழிவறை தூய்மையாக இருக்கும்.



Read in source website