DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 23-05-2022


கம்பம்: தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கம்பம் வடக்கு காவல் நிலைய காவலர் பி.மாரியப்பன்,  3 பரிசுகளை வென்று  சாதனை படைத்தார்.

மத்திய அரசின் மாஸ்டர் கேம் பெடரேசன் சார்பில் ஆண்டுதோறும் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மே 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கேரள அரசின் மாஸ்டர் அசோசியேசன் ஸ்போர்ட்ஸ் ஆப் கேரளா நடத்தியது.

இதில்  மாஸ்டர் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு ( எம்.ஏ. எஸ் டி)  சார்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பி.மாரியப்பன் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கத்தையும்,  சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.

தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட 12 காவலர்கள் மத்தியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பி.மாரியப்பன் மட்டும் மூன்று பரிசுகள் பெற்றிருந்தார். 

தேசிய அளவில்  சாதனை படைத்த காவலர் பி. மாரியப்பனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்,  சக காவலர்களும் பாராட்டினர்.
 



Read in source website

ஈரோடு: சிலம்பம், நுன்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் புத்தாஸ் சிலம்பாட்ட டிரஸ்ட் மற்றும் இணைந்து ஈரோட்டில் நேற்று நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது. இதில், 10 வயது பிரிவில் திக்‌ஷா சக்தியும், 7வயது பிரிவில் சிவிக்‌ஷா சக்தி ஆகியோர் பங்கேற்று ஒற்றைகம்பு சிலம்பமும், நுன்ஜாக்கும் இடைவிடாது சுழற்றினர். மாணவி சிவிக்‌ஷா சக்தி, 1 மணி நேரம் 5 நிமிடம் 6 விநாடியும்(1.05.06) திக்‌ஷா சக்தி 1 மணி நேரம் 20 நிமிடம் 3 விநாடியும்(1.20.03) சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்தனர். 
இதைத்தொடர்ந்து நோபால் உலக சாதனையின் முதன்மை அலுவலர், மாநில நடுவர் துரைராஜ் ஆகியோர் மாணவிகளை பாராட்டி நோபல் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கினர். 

இந்நிகழ்ச்சிக்கு, சிலம்பாட்ட கழக தலைவர் யூ.ஆர்.சி.தேவராஜ் தலைமை தாங்கினார். அக்னி ஸ்டீல் இயக்குநர்கள் சின்னச்சாமி, தங்கவேல், ராஜாமணி சின்னச்சாமி, மாணவிகளின் பெற்றோர் சக்தி கணேஷ், தீபா, கிரின் பில்ட் இயக்குநர் பாலு, பிரியா, டிப்ஸ் பள்ளி இயக்குநர் சிவகுமார் வி.வி நேஷனல் இயக்குநர் செந்தில் முருகன், மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும், மாணவிகளின் பயிற்சியாளருமான கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 



Read in source website

ரஷியா-உக்ரைன் போா், வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை என உலக அரசியல் நகா்ந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை தற்போதைய ஒரே பிரச்னையாக இருப்பது, விலைவாசி உயா்வு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடங்கி சமையல் எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வரையிலான விலைஉயா்வு, சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம்பாா்த்துள்ளது.

இவை ஒருபுறமிக்க வீட்டு வாடகை உயா்வு, கடன்களுக்கான வட்டி விகித உயா்வு உள்ளிட்டவற்றாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். சா்வதேச சூழலே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என விளக்கமளித்து வந்த மத்திய அரசு, மக்களின் துயா்துடைக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-யும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-யும் குறைந்துள்ளது. மத்திய அரசைத் தொடா்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது விதித்து வரும் மதிப்புகூட்டு வரியை சற்று குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் காரணமாக எரிபொருள் மீதான விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதைப் பெற சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. நாட்டில் சுமாா் 30 கோடி போ் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மானியம் கிடைக்கப் போவதில்லை. மாறாக, மத்திய அரசு செயல்படுத்தி வரும் உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றவா்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தலா ரூ.200 மானியத்தைப் பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.

அதன்படி, உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பயனாளா்கள் பெறும் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் வழங்கப்படவுள்ளது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சுமாா் ரூ.1,000-ஆக இருக்கும் நிலையில், உஜ்வாலா திட்டப் பலனாளா்களுக்கு மானியமாக ரூ.200 கிடைக்கும். அதனால், அவா்களுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை சுமாா் ரூ.800-ஆக மட்டுமே இருக்கும். அவா்களுக்கு மானியம் வழங்குவதன் மூலமாக சுமாா் ரூ.6,100 கோடி கூடுதலாக செலவாகும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெற்றுள்ள சுமாா் 9 கோடி பேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படவுள்ளது. மற்ற 21 கோடி பேருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்காக எந்தவித மானியமும் கிடைக்கப் போவதில்லை. உஜ்வலா திட்டப் பலனாளா்களும் மானிய விலையில் சிலிண்டரைப் பெறுவதில் நிபந்தனை உள்ளது. ஆண்டுக்கு அவா்கள் பெறும் 12 சிலிண்டா்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்கு அதிகமாக வாங்கும் சிலிண்டா்களுக்கு மானியம் கிடைக்காது. மானியத் தொகையானது பயனாளா்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது.

உஜ்வலா திட்டப் பயனாளிகள்

விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் பெண்களின் உடல்நலமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வந்தது. அதைத் தடுக்கும் நோக்கில் சமையல் எரிவாயு சிலிண்டா் பயன்பாட்டுக்கு வந்தது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அடுப்பின் விலையும் அதிகமாக இருந்ததால், ஏழைகள் தொடா்ந்து விறகு அடுப்பையும் மண்ணெண்ணெய் அடுப்பையுமே பயன்படுத்தி வந்தனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாணும் நோக்கில் உஜ்வலா திட்டத்தைக் கடந்த 2016-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, கிராமப்புற ஏழைகளுக்கு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரும் அடுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது.

பட்டியலினத்தோா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த 18 வயதுக்கும் அதிகமான பெண்கள் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பை இத்திட்டத்தின் கீழ் பெற முடியும். கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் சுமாா் 9.17 கோடி போ் உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனா்.

தொடரும் சவால்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் சுமாா் 90 லட்சம் உஜ்வலா திட்டப் பயனாளா்கள் 2-ஆவது சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளா்கள் 2-ஆவது முறை மட்டுமே சிலிண்டரைப் பெற்றுள்ளனா். அதற்கு அதிகமாக சிலிண்டரை அவா்கள் பெறவில்லை. இதன் மூலமாக, உஜ்வலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் முதலாவது சிலிண்டா் காலியாகிவிட்டால், அடுத்த சிலிண்டரை விலைகொடுத்து வாங்க முடியாத பொருளாதார சிக்கலில் பல குடும்பங்கள் தவித்து வருவது தெரிகிறது.

இத்தகைய பிரச்னைகளைப் போக்குவதற்கு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு அதிகரித்து வழங்க வேண்டும் என நிபுணா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.200 மானியத்தை நடுத்தர குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

நாட்டில் நடுத்தர குடும்பங்களே அதிகமாக உள்ள நிலையில், அவா்களுக்குத் திட்டங்களின் பலன்கள் கிடைக்காவிட்டால், பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினமே என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.



Read in source website

‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை’ முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (மே 23) தொடக்கி வைக்கிறாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்து விவசாயிகளுக்கு இடுபொருள்களை அவா் வழங்கவுள்ளாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கான அறிவிப்பு, தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளா்ச்சியை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, நீா்வள ஆதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆண்டிலும், ஐந்தில் ஒரு கிராம ஊராட்சியைத் தோ்வு செய்து, ஐந்தாண்டுகளில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

2022-23-ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்துடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதுடன், எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமாா் 9 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, வேளாண்மையைப் பெருக்கும் வகையிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை தொடக்கிவைக்கிறாா். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் திட்ட தொடக்க விழாவின் போது, விவசாயிகளுக்கு பணிக்கான உத்தரவுடன், இடுபொருள்களும் வழங்கப்படவுள்ளது.



Read in source website

 

இந்தியாவின் மீன் வளத்துறை அமைச்சகம் உலக ஆமை தினத்தை முன்னிட்டு ஆமைகளை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது. 

வருடந்தோறும் மே -23 ஆம் நாள் உலக ஆமை தினம் கொண்டாடப்படுகிறது.  அமெரிக்கா ஆமை பாதுகாப்பு நிறுவனம் இதை 2000இல் தொடங்கியது. இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனங்களை பாதுகாக்க மனிதர்கள் ஊக்குவிக்கபடுகிறார்கள். 

இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது: 

“கடற்சார் சூழ்நிலை மண்டலத்திற்கு ஆமைகள் முக்கியமான ஒன்றாகும். நாம் ஆமைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”. 



Read in source website

 

ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்து வைத்தார். 

கொல்கத்தாவில் ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி  திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியை கிழக்கு கலாச்சாரத் துறை அமைச்சகம் சார்பில் வங்காள தேசம் ஆளுநர் முன்னிலையில் ராஜாராம் மோகன்ராயின் நூலகத்தின் 50ஆவது ஆண்டும் கொண்டாடப்பட்டது. வருங்கால தலைமுறையினர் இவரது எண்ணங்களை தொடர முயற்சிக்க வேண்டும் என ஆளநர் கூறினார். 

சிலையை திறந்து வைத்துப் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது:

இன்று ராஜாராம் மோகன்ராயின் 250வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியா மற்றும் பிரதமரின் சார்பாக நான் எனது நன்றிக் கடனை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் நூலகம் 50 வருடத்தை நிறைவேறியுள்ளது. ‘அம்ரித் மஹோத்சவ்’ எனும் திட்டத்தின் கீழ் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை பெறுமைப்படுத்தி வருகிறோம். அவரது சிலையை நிறுவியது பெருமையாக இருக்கிறது. வருங்கால தலைமுறையினர் அவரது கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 



Read in source website

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பணிபுரியும் 1,300 ஊழியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையாக கடந்த ஆகஸ்ட் 2018இல் மாற்றப்பட்டது. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக மார்ச் 2020இல் பயோமெட்ரிக் முறை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தற்போது மீண்டும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“கரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்யவேண்டும்.

தற்போது தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளிட்டவை ஆராய சோதனை முறையில் மே 31 வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு செயல்படுத்தப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பிற அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபட்சவை தவிர, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜிநாமா செய்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கப்பலில், ரூ.45 கோடி மதிப்பிலான 9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பெளடா், 24 மெட்ரிக் டன் உயிா்காக்கும் மருந்துகள் நேற்று இலங்கை சென்றடைந்தது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபட்ச வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக இலங்கையின் பெரிய சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருகிறது. இதை எங்களால் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.



Read in source website

பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) சமா்ப்பித்த பரிந்துரைக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பரிந்துரையில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்விக் கட்டணம் மற்றும் அதிகபட்ச கல்விக் கட்டணம் என இரண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கல்விக் கட்டணத்தை மாற்றியமைப்பதற்காக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஏஐசிடிஇ அமைத்த இந்தக் குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை சமா்ப்பித்தது. இந்தப் பரிந்துரை மீது அனைத்து மாநிலங்களிடமிருந்து கருத்துகளைக் கேட்ட ஏஐசிடிஇ, பரிந்துரையை இறுதி செய்து சமா்ப்பித்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கட்டணம்: அந்தப் பரிந்துரையின்படி, 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்விக் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களை உள்ளடக்கிய ஆண்டு கட்டணம் ரூ. 67,900 ஆகவும், அதிபட்ச கட்டணம் ரூ. 1,40,900-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ. 79,600-ஆகவும், அதிபட்ச கட்டணம் ரூ. 1,89,,800-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்று இருந்தது.

எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைத் துறை முதுநிலை படிப்புகளுக்கு குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ. 85,000, அதிகபட்ச கட்டணம் ரூ. 1,95,200 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கல்விக் கட்டணம் மாற்றியமைப்பை உறுதி செய்த ஏஐசிடிஇ உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், ‘கட்டணக் குழுவின் பரிந்துரைக்கு மத்திய கல்வி அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடா்ந்து, இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் கட்டணம் நிா்ணயம் செய்துகொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏஐசிடிஇ ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. எனவே, பொறியியல் படிப்புக் கட்டணத்தை ஏஐசிடிஇ ஆலோசனையின் அடிப்படையில் மாற்றியமைக்கும் முடிவை இனி மாநிலங்கள்தான் எடுக்க வேண்டும்’ என்றாா்.



Read in source website

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நடவடிக்கை, மாநில அரசுகளுடனான வரிப் பகிா்வில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இந்நடவடிக்கை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ளும் வரியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியில் அடிப்படை கலால் வரி (பிஇடி), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி), சாலை-கட்டமைப்பு செஸ் வரி (ஆா்ஐசி), வேளாண்மை கட்டமைப்பு வளா்ச்சி செஸ் வரி (ஏஐடிசி) ஆகியவை அடங்கும். அவற்றுள் அடிப்படை கலால் வரி மட்டுமே மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்பட்டு வருகிறது. மற்றவை மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ளப்படுவதில்லை.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 ஆகியவை சாலை-கட்டமைப்பு செஸ் வரியில் இருந்தே குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலமாக மாநில அரசுகளுக்கான வரிப்பகிா்வில் எந்தவித பாதிப்பும் இருக்காது.

கடந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 இதே நடைமுறையின்படியே குறைக்கப்பட்டது. இரு நடவடிக்கைகள் மூலமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதிச்சுமையையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பரில் குறைக்கப்பட்ட கலால் வரியால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,20,000 கோடி வரை இழப்பு ஏற்படும். தற்போது குறைக்கப்பட்டுள்ள கலால் வரி காரணமாக, ஆண்டுக்கு ரூ.1,00,000 கோடி வரை இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.2,20,000 கோடி வருவாயை மத்திய அரசு இழக்கும்.

இந்திய ரிசா்வ் வங்கி தரவுப்படி, கடந்த 2014 முதல் 2022 வரை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளா்ச்சித் திட்டங்களுக்காக மட்டும் ரூ.90.9 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது. 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் அச்செலவு வெறும் ரூ.49.2 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ.24.85 லட்சம் கோடியும், மூலதன சொத்து உருவாக்கத்துக்கு ரூ.26.3 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மானியங்களுக்கு ரூ.13.9 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சனிக்கிழமை வரை 1 லிட்டா் பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி ரூ.27.90-ஆக இருந்தது. அதில் ரூ.1.40 அடிப்படை கலால் வரியாகும். இதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயை மட்டுமே மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும். மீதமுள்ள ரூ.26.50 மத்திய அரசுக்கே முழு வருவாயாகக் கிடைக்கும்.

அதேபோல், 1 லிட்டா் டீசல் மீதான ரூ.21.80 கலால் வரியில் ரூ.1.80 அடிப்படை கலால் வரியாகும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் பெரும்பகுதியானது செஸ் மூலமாகவே வசூலிக்கப்படுகிறது. செஸ் வரியை மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

‘வெளிநாட்டுத் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தற்சாா்புடன் இருப்பதில் பாதுகாப்பு துறை சாா்ந்த தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

முன்னதாக, நாகபுரி விமான நிலையத்தில் ராஜ்நாத் சிங்கை விமானப் படை அதிகாரி சஷிகா் செளத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா். அப்போது ‘படைகளின் செயல்திறனை உறுதி செய்தல் மற்றும் முறையான பராமரிப்புப் பணிகளை வீரா்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டும்’ என்று அதிகாரிகளை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்.

மேலும், விமான நிலையத்தில் பாதுகாப்புத் துறை சாா்ந்த தொழில் நிறுவன நிா்வாகிகளையும் சந்தித்த ராஜ்நாத் சிங், ‘வெளிநாட்டுத் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தற்சாா்புடன் இருப்பதில் தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, ராணுவம், விமானப் படை மற்றும் பாதுகாப்புத் துறை சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பில் மகாராஷ்டிர மாநில பகுதியில் மேற்கொளளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அவா்களுக்கு விவரித்தாா்’ என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

தில்லியில் உள்ள குதுப் மினாா் வளாகத்தில் அகழாய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு(ஏஎஸ்ஐ) உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடஇந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னா்கள் ஹிந்து கோயில்களை இடித்துவிட்டு அங்கு மசூதிகளை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லியில் உள்ள குதுப் மினாா் வளாகத்தை தில்லியை ஆட்சி செய்த குத்புதீன் ஐபக் கட்டவில்லை என்றும், அதை சந்திரகுப்த விக்ரமாதித்யன் கட்டினாா் என்றும் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி தரம்வீா் சா்மா கூறியிருந்தாா்.

இந்நிலையில், மத்திய கலாசாரத் துறைச் செயலா் கோவிந்த் மோகன், தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் வரலாற்று ஆசிரியா்களுடன் சனிக்கிழமை குதுப் மினாருக்குச் சென்று பாா்வையிட்டாா். சுமாா் 2 மணி நேரம் அங்கிருந்த அவா், அந்த நினைவுச் சின்னத்தைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, குதுப் மினாரில் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கலாசாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தது. வழக்கமான ஆய்வுப் பணிக்காகவே கோவிந்த் மோகன் தலைமையிலான குழு அங்கு சென்றது என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.



Read in source website

 

குத்துச்சண்டை வீராங்கனையாக மாறியதற்காக தந்தை கூறிய வார்த்தைகள் பெரிதும் உதவியாக இருந்ததாக நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த வாரம் நடைபெற்ற இஸ்தான்புல்லில் உலக குத்துச்சண்டை போட்டியில் 54 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அவரது வெற்றிக்கு மேரிகோம், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு நிகாத் ஜரீன் பேட்டியளித்தார். அவரிடம் சல்மான் கான் வாழ்த்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், அவர் எனக்கு நெருக்கமானவர் அல்ல. அத்தனை பெரிய நபர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுட்டுரைப் பதிவைப் படிக்கும்போது என் கைகள் நடுங்கின. அதற்கு பதிலளிக்க தட்டச்சு செய்யும்போது நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டேன். எனது கைகள் நடுங்கின. அவருடைய (சல்மான் கான்) பதிவு எனது நாளை சிறப்பாக்கியது என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், நான் குத்துச்சண்டை வீராங்கனையாவதற்கு முன்பு தடகள வீராங்கனையாக இருந்தேன்.  100 மீட்டர், 200 மீட்டர் பந்தயங்களில் கலந்துகொண்டுள்ளேன். எனது மாவட்டத்தில் பயிற்சியாளர் இல்லாததால், எனது தந்தைதான் எனக்கு பயிற்சி அளித்தார். விளையாட்டின் பல துறைகளில் பெண்கள் இருந்தும் குத்துச்சண்டையில் மட்டும் குறைவாகவே இருப்பதாக உணர்ந்தேன். 
 
ஒருகட்டத்திற்கு மேல் ஏன் குத்துச்சண்டையில் அதிக அளவில் பெண்கள் இல்லை என்று என் தந்தையிடம் கேட்டேன். அவர் எனக்கு அளித்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. பெண்களும் குத்துச்சண்டை செய்யலாம். ஆனால் நமது சமூகம் பெண்களை மென்மையானவர்களாகவே சித்தரித்துவிட்டது என்று என் தந்தை கூறினார். 

அதன்பிறகு நான் ஆண் குழந்தையைப் போன்றே வளர்ந்தேன். என்னை ஒரு பெண் குழந்தையாக யாரும் நினைக்கமாட்டார்கள். எனது தந்தை கூறியது என் மனதில் பதிந்துவிட்டது. அதனை மாற்றிக்காட்ட வேண்டும் என்ற உறுதியோடு நான் பயிற்சிகளை தொடர்ந்தேன். என் தந்தையிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் என்னை குத்துச்சண்டை பயிற்சியில் சேர்த்துவிட்டார் என்று தன் தந்தை குறித்து பெருமையுடன் குறிபிட்டார் நிகாத் ஜரீன். 



Read in source website

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின்னர் ஆப்கனில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு மக்களிடையே அமைதியற்ற சூழல் நிலவுகிறது. 

இதனிடையே ஆப்கன் படைக்கும் தலிபான்களுக்கும் ஏற்பட்ட போரினால் அங்கு உணவுப் போரூக்ளின் விலை கூடியுள்ளது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மூன்று மாதங்களில் உணவுப் பொருள்களின் விலைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒரு மூட்டை மாவின் விலை 1,400 ஆப்கானி(ஆப்கானிஸ்தான் கரன்சி)க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 2,800 முதல் 3,000 ஆப்கானிக்கு விற்கப்படுகிறது.

முன்பு 2,000 ஆப்கானிக்கு 20 லிட்டர் சமையல் எண்ணெயை வாங்கி வந்ததாக கூறும் மக்கள், தற்போது 10 லிட்டர் சமையல் எண்ணெயின் விலை 2,200 ஆப்கானியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

டாலருக்கு நிகரான ஆப்கானிஸ்தான் கரன்சி(ஆப்கானி)யின் மதிப்பு குறையும்போது, உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

உலக அளவில் கோதுமை பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆப்கனிலும் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 97 சதவீதம் பேர் பசி மற்றும் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது. உணவு நெருக்கடிக்கு வேலையின்மையும் ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. 

உள்ளூரில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானம் இல்லாததால் 56 சதவீதம் பேர் நாட்டை விட்டு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். 



Read in source website

சவுதி: கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சவுதி அரேபியா 16 நாடுகளுக்கு பயண தடை விதித்ததுள்ளது. சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கன், இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கரோனா பரவலின் 3-வது அலை ஏற்பட்டு பின்னர், சமீப காலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்படி, இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு ஆகிய நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடை விதித்து உள்ளது. 
 



Read in source website

எரிபொருள் விலையேற்றத்தால் திணறி வரும் ஜொ்மனி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் அனைத்து வகை பொதுப் போக்குவரத்து வசதிகளையும் மாதமொன்றுக்கு வெறும் 9 யுரோவில் (சுமாா் ரூ.740) வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஜூன் 1-லிருந்து 3 மாதங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த திட்டம், உக்ரைன் போரைத் தொடா்ந்து எரிபொருள் தேவைக்கு ரஷியாவை சாா்ந்திருக்க வேண்டிய அவசியத்தைக் குறைப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனால் அரசுக்கு 250 கோடி யுரோ (சுமாா் ரூ.20,500 கோடி) நட்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.



Read in source website

சென்னை: இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் பயணிகளுக்கு கூடுதலாக கிடைக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் அதிநவீன "ஸ்கைலைட் சிஸ்டம்" அமைக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக இந்த சிஸ்டம் அமைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் செலவில் உள்நாடு மற்றும் சா்வதேச முணையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன, புதிய விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் தொடங்கியது. 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்தப் புதிய முனையங்களின் பணி கடந்த 2021-ம் ஆண்டிலேயே நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்று பாதிப்பு, தொடா்ச்சியான ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணியர்களின் எண்ணிக்கை தற்போது 1.7 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்கும். அதற்கு தகுந்தாற்போல் இந்த புதிய முணையம் கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

தரை தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான வழக்கான நடைமுறைகளும், இரண்டாவது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய அதிநவீன முணையத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. பயணிகள் ஓய்வு அறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகள் இந்தப் புதிய முனையத்தில் அமைகின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக ‘ஸ்கைலைட் சிஸ்டம்’ எனும் முனையத்திற்குள் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்கான, பிரத்யேக வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன. 6 மீட்டர் வட்ட வடிவில், 10-க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல் அமைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சூரிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும்.வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது. இந்த சிஸ்டத்திற்கு மேலும், கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன. அவை சூரிய ஒளியை பில்டா் செய்து,வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். வெப்பத்தை தடுத்து நிறுத்தும். இந்த ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இதனால், இந்தப் புதிய அதிநவீன முணையங்கள் நல்ல வெளிச்சங்களுடன், காற்றோட்ட வசதியுடனும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இந்தப் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையங்களின் பணிகளில், சுமாா் 80 சதவீதம் முடிக்கப்பட்டு, வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2023 தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.



Read in source website

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்களில் 70 முதல் 80 சதவீத பேர் பெண்கள்தான். உயர் சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள்தான். இவர்களில் கடைநிலைப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. மிகவும் குறைவான ஊதியத்தில் அதிக நேரம் பணியாற்றும் இந்தக் கடைநிலைப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

உலக நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரின் 'குளோபல் ஹெல்த் லீடர்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பானப் பங்களிப்பு, பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவர்களுக்கு இந்த விருதை 2019-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.

யார் இந்த ஆஷா பணியாளர்கள்?

ஆஷா பணியாளர்கள் என்பவர்கள் (Accredited Social Health Activists) கிராமங்களில் மருத்துவ சேவை புரியும் பெண் பணியாளர்கள் ஆவர். 8-ம் வகுப்பு படித்த 25 முதல் 45 வயது வரை உள்ள கிராமபுற பெண்கள் ஆஷா பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்தியாவில் 2005-ம் ஆண்டு தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission) கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு கிராமத்திற்கு அல்லது 1000 பேருக்கு ஓர் ஆஷா பணியாளர் என்ற விதிகளை அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஊதியம் எவ்வளவு?

ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து பல்வேறு ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.6000 ஊதியமாக வழங்கப்படுகிறது. பல மாநிலங்களில் மிகவும் குறைவான ஊதியம் மட்டுமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

10 லட்சம் பணியாளர்கள்

இந்தியாவில் ஊரக பகுதிகளில்தான் அதிக ஆஷா பணியாளர்கள் உள்ளனர். நகர்புறங்களில் குறைந்த ஆஷா பணியாளர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 10 லட்சம் ஆஷா பணியாளர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,64,523 பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 1170 பணியாளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 5,360 ஆஷா பணியாளர்கள் உள்ளனர். ஆஷா பணியாளர்கள் போன்றே தமிழ்நாட்டில் கிராமம் வாரியாக கிராம சுகாதார செவிலியர்கள் தொடக்கம் முதலே பணியாற்றி வருவதால் ஆஷா பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர்.

என்ன பணி?

கிராம அளவில் வீட்டுக்கு வீடு சுகாதார வசதிகளைக் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் முக்கியப் பணி. குறிப்பாக கருவுற்ற பெண்களை கண்காணிப்பது, குழந்தைப் பேறுக்கு உதவுவது, பிறந்த குழந்தைகளின் உடல்நிலையை கண்காணிப்பது, முறையாக தடுப்பூசி போட அறிவுறுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துல் என்று சுகாதாரம் தொடர்பான 20 மேற்பட்ட பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று

கரோனா தொற்று காலத்தில் கிராம அளிவில் நோய் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டதில் இவர்களின் பங்கு அளப்பறியது. கரோனா தொற்று கட்டுபபாட்டு பணிகளை மேற்கொள்வது, குழுந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கருவுற்ற பெண்கள் கண்காணிப்பது என ஒரே நேரத்தில் அதிக அளவு பணிகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, ஒரு நாளில் அதிக அளவு மக்களை கண்காணிக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதனால், அதிக நேரம் பணியாற்றும் நிலை உருவானது. இவ்வாறு கரோனா தொற்று காலத்தில் மக்களை காப்பத்தில் மிகப் பெரிய பணியை செய்தனர்.

இவ்வாறு கரோனா காலத்தில் இவர்களின் அளப்பறிய பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக குளோபல் ஹெல்த் லீடர்ஸ் விருதை அளித்து பெருமைப்படுத்தியது. இவர்களுக்கு பிரதமர் மோடி, சுகதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த வாழ்த்துகள் மட்டுமே இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துமா என்பதை சிந்தித்து, இவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் ஆஷா பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.



Read in source website

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் உள்ள ஜாமியா மசூதியும், சிவன் கோயிலை இடித்துக்கட்டப்பட்டதாக புகார் எழுப்பும் இந்து அமைப்புகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்ட மிட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தி யில் கடந்த 2019-ல் ராமர் கோயில் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதன் மேல்முறையீட்டு மனுவில் இந்துதரப்பினருக்கு கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பின்போது, மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படி, இதரவரலாற்றுக்காலப் புனிதத் தலங்கள் உள்ளநிலையிலேயே எந்த மாற்றம் இன்றி தொடரும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயில் அருகில்உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுராவின் ஷாயி ஈத்கா உள்ளிட்டப் பல மசூதிகள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வரு கின்றன.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் போபாலிலுள்ள, ஜாமியா மசூதிக்கு சிக்கல் உருவாகி விட்டது. இது கடந்த 19-ம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாபான குத்துஸியா பேகம் என்பவரால், 1832முதல் 1857-ம் ஆண்டிற்கு இடையேகட்டப்பட்டது. அப்போது, அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டியதாகப் புகார் உள்ளது.

இதன் மீதான வரலாற்று ஆவணங்களுடன், ம.பி மாநில உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவிடம் மனு அளிக் கப்பட்டுள்ளது. இதை இந்து அமைப்பான சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின் சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் திவாரி அளித்தார். இதில், போபாலின் மசூதியில் களஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு போபால் முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



Read in source website

இந்தியாவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்தத் தடை விவசாயிகளை எந்த வகையில் பாதிக்கும்? ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிப்பதற்குப் பதிலாக வேறு வழிமுறைகளை மத்திய அரசு கையாண்டிருக்க முடியுமா? என்பது பற்றி பார்ப்போம்.

இந்தியாவும் கோதுமை சாகுபடியும் கோதுமை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. அதேசமயம் கோதுமை சாகுபடி பரப்பளவு அடிப்படையில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, கோதுமை சாகுபடிப் பரப்பளவு இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதா? - ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஹெக்டோ் சாகுபடி செலவானது ரூ.2,358-லிருந்து ரூ.74,231-ஆக அதிகரித்த நிலையில், உற்பத்தியின் மதிப்பு ரூ.3,217-லிருந்து ரூ.74,308-ஆக மட்டுமே உயா்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு இம்மாநிலங்களில் பெரிய லாபம் கிடைக்கவில்லை. பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், கோதுமை சாகுபடியில் ஓரளவு லாபம் கிடைத்துள்ளதாக அந்தத் தரவுகள் கூறுகின்றன.

ஏன் விவசாயிகளுக்கு லாபம் இல்லை? - கோதுமை சாகுபடியில் குறைந்த லாபம் அல்லது இழப்பு ஏற்படுவதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இடுபொருள்களின் தொடா் விலை அதிகரிப்பால், சாகுபடி செலவு சமீப காலங்களில் கடுமையாக உயர்ந்துவிட்டது. கோதுமை மகசூல் அதிகரித்தபோதிலும் சாகுபடி செலவு உயர்வால், லாபம் கிடைப்பது அரிதாகிவிட்டது. இரண்டாவதாக கோதுமையின் மொத்தக் கொள்முதல் கணிசமாக அதிகரித்தபோதிலும், பெரும்பாலான விவசாயிகள் இப்பயிரை விற்பனை செய்வதற்கு சந்தையையே நம்பியுள்ளனர். ஆனால், சந்தை விலை பெரும்பாலான நாட்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட(எம்எஸ்பி) குறைவாக நிலவுவதால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை.

உக்ரைன்-ரஷ்யா இடையே தொடரும் போர் காரணமாக, சந்தையில் கோதுமையின் விலை மேலும் உயரும் என எதிர்பார்த்து விவசாயிகள் கோதுமையை விற்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இது ஒன்றும் அசாதாரணமானதல்ல! கடந்த காலங்கள் போல் அல்லாமல், இம்முறை விவசாயிகள் மிகவும் அறிவுபூா்வமாக சிந்தித்து சந்தை விலை மேலும் உயரும் எனக் காத்திருப்பதில் என்ன தவறு?

அரசு என்ன செய்திருக்க வேண்டும்? - ஏற்றுமதிக்கு முழுமையாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக, அரசு இரண்டு வழிகளைப் பின்பற்றி இருக்கலாம். ஒன்று, யூக வணிகத்தைத் தடுக்கும் நோக்கில், சில நிபந்தனைகளுடன் கோதுமை ஏற்றுமதியைப் படிப்படியாகக் குறைத்திருக்கலாம். இரண்டு, விவசாயிகளின் வருமான பாதுகாப்பைக்
கருத்தில்கொண்டு, கோதுமைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்திருக்கலாம். எவ்வாறாயினும், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இப்போது கோதுமை ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது, எனவே, ஏற்றுமதித் தடையால் விவசாயிகளுக்கு ஏற்படவுள்ள இழப்பை ஈடுசெய்ய, கோதுமைக்கான குறைந்தபட்ச விலையை உலகச் சந்தை விலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.



Read in source website

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை மத்திய அரசு குறைத்துள் ளது. இதனால் ஏற்படும் இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. மாநில அரசுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த வரிகுறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் மாநில அரசுகளுக்கு வரிஇழப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்தார். இதன்படி கடந்த 21-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் சிலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர்களோடு சில அடிப்படை உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடிப்படை கலால் வரி (பிஇடி), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி), சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஆர்ஐசி), வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஏஐடிசி) ஆகியவை இணைந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நிர்ணயிக்கின்றன.

இதில் அடிப்படை கலால் வரி மட்டுமே மாநிலஅரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மற்ற 3 வரிகளும் பகிர முடியாதவை. தற்போது மத்திய அரசு சார்பில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி (ஆர்ஐசி) மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இதனால்ஏற்படும் வரி இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. தற்போதைய கலால் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஓராண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். கடந்த நவம்பர் 21-ம் தேதியும் இதே நடைமுறையில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைக் கப்பட்டது. இதன்காரணமாக மத்திய அரசுக்கு ஓராண்டில் ரூ.1.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ரூ.2.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இந்த வரி இழப்பு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத் தின்படி கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ச்சி திட்ட செலவு ரூ.49.2 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம்
ஆண்டு வரையிலான பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வளர்ச்சி திட்ட செலவு ரூ.90.9 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மானியங் களுக்காக ரூ.13.9 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. தற் போது பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் உணவு, எரிபொருள், உரங்களுக்காக ரூ.26.3 லட்சம் கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.



Read in source website

தற்போதைய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு விநியோகச் சிக்கல்கள் காரணம் மற்றும் புரதங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை விட கலோரிகள் வழங்கும் உணவுகளின் விலைகள் அதிகம். இந்தியாவில் உலகளாவிய கலோரி உணவுகளின் விலை உயர்வின் தாக்கம் என்ன, மேலும் வரும் நாட்களில் என்ன காரணிகள் போக்குகளை தீர்மானிக்கும்?

Explained: Behind current food inflation: உலக நாடுகளும் இந்தியாவும் உணவு பொருட்களின் விலை மீண்டும் எழுவதைக் கண்டு வருகின்றன. செப்டம்பர் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில், இந்தியாவில் நுகர்வோர் உணவு விலை பணவீக்கம் ஆண்டுக்கு 0.68% லிருந்து 8.38% ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு விலைக் குறியீடு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது, இது கடந்த கால அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. அது 2000 களின் நடுப்பகுதியிலிருந்து 2012-13 வரையிலான காலகட்டம் வரை நிலவியது, 2008-09 உலகளாவிய நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால் இரண்டு உணவு பொருட்கள் விலை உயர்வு நிகழ்வுகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது, குறிப்பாக இந்தியாவில்.

முந்தையது ஒரு கட்டமைப்பு ரீதியான, தேவையை அடிப்படையாகக் கொண்ட விலை உயர்வாகும், இது வருமான உயர்வால் அதிகரித்தது. ஏழை மற்றும் கீழ்-நடுத்தர வர்க்க குடும்பங்கள் உட்பட உண்மையான வருமானம் அதிகரித்து, தானியங்கள் மற்றும் சர்க்கரை (அடிப்படையில் கலோரிகளை வழங்கும்) போன்றவற்றின் தனிநபர் நுகர்வு குறைந்து, புரதங்கள் (பால், பருப்பு வகைகள், முட்டை, மீன் மற்றும் இறைச்சி) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகள்) போன்ற உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த உணவுப் பல்வகைப்படுத்தலும் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2004-05 மற்றும் 2012-13 க்கு இடையில், மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் ஒட்டுமொத்த உயர்வு சர்க்கரைக்கு 93.1% ஆகவும், தானியங்களுக்கு 99.9% ஆகவும், சமையல் எண்ணெய்களுக்கு வெறும் 48.1% ஆகவும் இருந்தது (1 கிராம் கொழுப்பு 9 கலோரிகளை வழங்குகிறது, இது கோதுமை ஆட்டா மற்றும் சர்க்கரையிலிருந்து கிடைக்கும் கலோரிகளை விட 3-4 மடங்கு அதிகமாகும்). அதேப்போல், பால் 108.1%, காய்கறிகள் 110.1%, பருப்பு வகைகள் 141.3% மற்றும் முட்டை, இறைச்சி மற்றும் மீன் 144.5% என மொத்த விற்பனை விலைக்குறியீடு உயர்ந்தது.

இப்போது மற்றும் அடுத்து

தற்போதைய உணவு விலை உயர்வு, இதற்கு நேர்மாறாக, தனித்துவம் வாய்ந்தது. இது விநியோக சிக்கல்களால் ஏற்பட்டுள்ளது. மேலும் “புரத” உணவுப்பொருட்களின் விலை உயர்வை விட “கலோரி” உணவுப் பொருட்களின் விலை உயர்வு அதிகம், இது இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகர்ன் என்பவரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

ஆகஸ்ட் 2020 முதல், கொரோனா ஊரடங்கு படிப்படியாக நீக்கப்பட்டதன் மூலம் உலகளாவிய தேவை திரும்பத் தொடங்கியதும், FAO இன் தாவர எண்ணெய், தானியங்கள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைக் குறியீடுகள் முறையே 141%, 71% மற்றும் 50% உயர்ந்துள்ளன. இவை, ஏப்ரல் 2020 வரையிலான அதே காலகட்டத்தில் இறைச்சி விலைக் குறியீட்டில் 32% மற்றும் பால் உற்பத்தியில் 44% என ஒட்டுமொத்த உயர்வைத் தாண்டியுள்ளது.

மேலும், அட்டவணை 1 காட்டுவது போல், மேற்கூறிய விலை உயர்வின் பெரும்பகுதி உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முந்தையது. போருக்கு முன்பே, உக்ரைனில் 2020-21 இல் வறட்சி இருந்தது, அதே நேரத்தில் ரஷ்யா, டிசம்பர் 2020 இல், உள்நாட்டு விலையேற்றத்தைத் தணிப்பதற்காக கோதுமை, சோளம், பார்லி, கம்பு, சூரியகாந்தி மற்றும் ராப்சீட் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைகளை அறிவித்தது. உக்ரேனிய வறட்சி மற்றும் ரஷ்ய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் மலேசியாவின் எண்ணெய் பனை தோட்டங்களில் குடியேறிய தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை சமையல் எண்ணெய்கள் மற்றும் தானியங்களின் உலகளாவிய விலைகளை உயர்த்தியது.

பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போர், உலகின் கோதுமை, சோளம், பார்லி மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் கணிசமான பங்கைக் கொண்ட இரு நாடுகளின் விநியோகங்களை தாக்கியதன் மூலம் விஷயங்களை மோசமாக்கியது. இந்த தீயில் மேலும் எண்ணெய்யைச் சேர்த்தது, இந்தோனேஷியா உள்ளூர் உணவு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை (தற்காலிகத் தடையும் கூட) விதித்தது (முன்பு ரஷ்யா கோதுமையில் செய்ததைப் போன்றது). மேலும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்க்கரை, சோளம், பனை மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றை உயிரி எரிபொருள் உற்பத்திக்கு திசைதிருப்புவதை மிகவும் சாதகமாக மாற்றியது.

இருப்பினும், புரத உணவுகளில் அத்தகைய பெரிய விலை உயர்வு இல்லை. FAO வின் பால் மற்றும் இறைச்சி விலைக் குறியீடுகள் உயர்ந்துள்ளன, ஆனால் அது அதிகரித்து வரும் வருமானத்தில் இருந்து தேவையை இழுக்காமல், தீவனப் பொருட்களின் (சோளம், பார்லி, கம்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள்) விலை அதிகரிப்பால் ஏற்பட்டது. மார்ச் நடுப்பகுதியில் இருந்து, உலக பால் பொருட்கள் விநியோக ஏல மேடையில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (SMP) மற்றும் நீரற்ற பால் கொழுப்பு ஆகியவற்றின் விலைகள் முறையே 9.4% மற்றும் 15% குறைந்துள்ளன. எதிர்மறையாக இல்லாவிட்டாலும், இன்றைய குறைந்த, உண்மையான வருமான வளர்ச்சி விகிதங்களில் வாங்குபவர்கள் தாங்கமுடியாத உயர் விலைகளை எதிர்க்கின்றனர், இது தேவை அழிவைக் குறிக்கிறது.

இந்தியாவில் தாக்கம்

எவ்வாறாயினும், அதிக உலகளாவிய உணவு விலை உயர்வு இந்தியாவில் பெரும்பாலும் காய்கறி கொழுப்புகளுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் சமையல் எண்ணெய் நுகர்வுத் தேவையில் 60% க்கும் அதிகமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுவதில் ஆச்சரியமில்லை. ஜனவரி முதல் ஒட்டுமொத்த நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலைக் குறியீட்டின் எழுச்சிக்கு முன்பே, 2021 ஆம் ஆண்டு முழுவதும் சில்லறை சமையல் எண்ணெய் விலை உயர்வு 20-35% அளவில் இருந்ததை அதனுடன் உள்ள அட்டவணையில் இருந்து பார்க்க முடியும். சுவாரஸ்யமாக, மற்ற இரண்டு கலோரி உணவுப் பொருட்களான தானியங்கள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை உயர்வு, உலகளாவிய விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ளது.

குறைந்த பட்சம் சமீப காலம் வரை, தானியங்கள் மற்றும் சர்க்கரையில், விலை உயர்வு இல்லாததற்கு முக்கிய காரணம், நாடு இரண்டிலும் உபரி உற்பத்தியாளராக இருப்பதே ஆகும். 2021-22ல் (ஏப்ரல்-மார்ச்) இந்தியாவின் தானியங்கள் மற்றும் சர்க்கரையின் ஏற்றுமதிகள் முறையே $12.9 பில்லியன் மற்றும் $4.6 பில்லியன் மதிப்பில் சாதனை படைத்தது. மேலும், 21.2 மில்லியன் டன் அரிசி, 7.2 மில்லியன் டன் கோதுமை மற்றும் 3.6 மில்லியன் டன் மக்காச்சோளம் உட்பட, சுமார் 32.3 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் 105.6 மில்லியன் டன் தானியங்களை (55.1 மில்லியன் டன் அரிசி மற்றும் 50 மில்லியன் டன் கோதுமை) பொது விநியோக முறை மூலம் விற்கப்பட்ட நிலையிலும், அரசு குடோன்களில் இருப்புகள் நிரம்பி வழிகின்றன.

தானியங்களின் விலை உயர்வு சமீபகாலமாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் அந்த விலை உயர்வு, மார்ச் நடுப்பகுதியில் இருந்து திடீர் வெப்ப அலையால் கோதுமை பயிர் விளைச்சல் இழப்பின் பின்னணியில் வந்துள்ளது. இங்குள்ள டிரான்ஸ்மிஷன் மெக்கானிசம் வேறு வழியில் வேலை செய்தது: குறைந்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பங்குகள் குறைந்து வருவதால், இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய மத்திய அரசுக்கு வழிவகுத்தது, சர்வதேச விலைகள் அதிகரிப்பால், மற்ற (இறக்குமதி செய்யும்) நாடுகளுக்கு அதிக தட்டுப்பாடாக உருவாகியுள்ளது.

புரத உணவுகளின் நிலை என்ன?

தற்போதைய உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, புரதங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை விட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளைப் பற்றியது. அகில இந்திய மாடல் அல்லது அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பருப்புகளின் (பிளவு பருப்பு வகைகள்) சில்லறை விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக உள்ளன. அதில் சன்னா கிலோவுக்கு ரூ. 75 லிருந்து ரூ. 70, துவரம் பருப்பு ரூ. 110 லிருந்து ரூ 97.5, உளுந்து ரூ. 105 லிருந்து ரூ. 97, மற்றும் பாசிப் பருப்பு ரூ. 105லிருந்து ரூ. 98.5 என்ற அளவில் குறைந்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின்படி, மசூர் பருப்பு மட்டுமே விதிவிலக்கு, இதன் மாடல் விலை ரூ.90/கிலோ என்பது கடந்த ஆண்டு இந்த நேரத்தில் ரூ.85ஐ விட அதிகமாக உள்ளது.

பால் பொருட்களைப் பொறுத்தவரை, சர்வதேச SMP மற்றும் வெண்ணெய் கொழுப்பு விலைகளில் ஏற்பட்ட சரிவு, உள்நாட்டு சந்தையிலும் சில மாற்றங்களை கட்டாயப்படுத்தியுள்ளது. ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து, மகாராஷ்டிராவின் பால்பண்ணைகள் பசுவின் பால் SMP மற்றும் மஞ்சள் வெண்ணெய் ஆகியவற்றின் விலையை முறையே சுமார் ரூ.295 மற்றும் ரூ.400-லிருந்து ரூ.270 மற்றும் ரூ.360-365/கிலோவாகக் குறைத்துள்ளன. மே முதல் வாரம் வரை பால் கொள்முதல் விலையை (3.5% கொழுப்பு மற்றும் 8.5% திடப்பொருள் அல்லாத கொழுப்பு) லிட்டருக்கு ரூ.33-34 ஆகக் குறைத்துள்ளனர். எருமை பால் SMP மற்றும் வெள்ளை வெண்ணெய் விலைகள் தொடர்ந்து அதேநிலையில் உள்ளன, ஆனால் இவையும் பருவ மழையின் வருகையுடன் குறையத் தொடங்கும். கோடை மாதங்கள் எருமைப் பாலின் உச்சபட்ச “குறைவான” பருவமாகும். விலங்குகள் ஈன்றெடுக்கத் தொடங்கும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து உற்பத்தி உண்மையில் அதிகரிக்கும், மேலும் குளிர்காலத்தில் வசந்தகால மாதங்களில் உச்சத்தை அடைகிறது.

முட்டை மற்றும் இறைச்சி விலையில் இதே போன்ற தளர்வுகளை எதிர்பார்க்கலாம். கோடை வெப்பம் தணிவது, வளர்ப்பு மற்றும் பிராய்லர் பறவைகளின் வளரும் நேரத்தையும் இறப்பையும் குறைக்க உதவும். கடந்த ஜூன்-ஜூலையில் கோழிப்பண்ணை தொழில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது, முட்டையிடும் பறவைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தின் விலை கிலோவுக்கு மார்ச் 2021ல் ரூ.21-22ல் இருந்து ரூ.40ஐ தாண்டியது, பிராய்லர் குஞ்சுகளுக்கு ரூ 29-30 இலிருந்து ரூ.50-52 என அதிகரித்தது. இது எண்ணெய் பிரித்தெடுத்தலின் துணைப் பொருளாகப் பெறப்பட்ட புரதச்சத்து நிறைந்த தீவனப் பொருளான சோயாபீன் டீ-ஆயில்டு கேக் (DOC) விலைகள் உயர்ந்ததன் காரணமாக ஏற்பட்டது. 12 லட்சம் டன்கள் வரை மரபணு மாற்றப்பட்ட DOC இறக்குமதிக்கு அனுமதி அளித்து ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு எடுத்த முடிவு, வளர்ப்பு மற்றும் பிராய்லர் தீவனத்தின் விலையை கிலோவுக்கு ரூ.30 மற்றும் ரூ.45 என்ற அளவிற்கு நிலைப்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், ஹோட்டல்களை மீண்டும் திறப்பது மற்றும் பிற லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து தேவை மீட்கப்பட்டாலும், அது எந்த “புரத உணவு தட்டுப்பாட்டையும்” தூண்ட வாய்ப்பில்லை. உயரும் வருமானத்தின் தேவை, இந்த நேரத்தில் போதுமானதாக இல்லை.

பழங்கள் மற்றும் காய்கறிகளிலும், விலை உயர்வு அதிகரிப்புக்கு காரணம் (அட்டவணை 2) பெரும்பாலும் தேவை-பக்க காரணிகளைக் காட்டிலும் விநியோக அதிர்ச்சிகளாகும். இந்த ஆண்டு டிசம்பர்-ஜனவரியில் பெய்த பருவமழை (மலர் உதிர்வை உண்டாக்குகிறது) மற்றும் கோடையின் தொடக்கம் (பழங்கள் உருவாவதற்கும், வளருவதற்கும் போதுமான நேரத்தை அனுமதிக்காதது) மாம்பழ விலை உயர்வை இரட்டிப்பாக்கும். எலுமிச்சை பூக்கும் போது (ஜனவரியில்) மற்றும் அறுவடைக்கு (மார்ச்-ஏப்ரல்) இதேதான் நடந்தது.

அதே நேரத்தில், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தர்பூசணிகள், வெள்ளரி, பூசணி, வெண்டைக்காய், பாக்கு மற்றும் பிற கோடைகால காய்கறிகள் ஆகியவற்றில் அதிக விலை உயர்வு இல்லை. தக்காளி விலை அதிகமாக உள்ளது, ஆனால் ஆண்டின் இந்த நேரத்தில் அசாதாரணமாக இல்லை. மீண்டும், இடைவிடாத மழை, சந்தை வருகை ஆகியவை காரணமாக ஏற்பட்டுள்ளது.

சுருக்கமாக

போர், வறட்சி, பருவமழை மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் உணவுப் பொருள் விலை உயர்வு, கட்டமைப்பு தேவை-இழுக்கும் காரணிகளிலிருந்து வேறுபட்டது. இப்போது விலை உயர்வு, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் காட்டிலும் முக்கியமாக கலோரிகளை வழங்கும் உணவுகளிலும் உள்ளது. அது, ஓரளவிற்கு, முந்தைய விலை உயர்வை விட மோசமாக்குகிறது, இது, கோகர்னின் வார்த்தைகளில், “அதிகரிக்கும் செல்வத்தின் தவிர்க்க முடியாத விளைவு”.

அதிக விலை என்பது, விவசாயிகளிடமிருந்து விநியோகத்தை தூண்டும் அதே வேளையில், பருவமழையைப் பொறுத்தது. கடந்த ஆண்டு பருவமழை ஒட்டுமொத்த அர்த்தத்தில் “இயல்பானது”, ஆனால் ஜூலையில் நீடித்த வறண்ட காலநிலை மற்றும் ஆகஸ்ட் பிற்பகுதியில் இருந்து அதிக மழை காரணமாக, டிசம்பர்-ஜனவரி மாதங்களில் கடுமையான பருவமழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் “சாதாரண” பருவமழை முன்னறிவிப்பு எவ்வளவு சாதாரணமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்கிடையில், ஒரு நல்ல செய்தி, சனிக்கிழமையன்று, டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாய் குறைத்துள்ளது மற்றும் பல மாநிலங்களும் குறைப்புகளை அறிவித்துள்ளன. அது வரும் நாட்களில் உணவு பொருட்கள் விலை உயர்வில் மேலும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும்.



Read in source website

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில், சாதி வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் 2வது இடத்திலும் உள்ளதாக ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி சாதி அடிப்படையிலான வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், தமிழகத்தின் கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த தி ஃபேக்ட் அமைப்பின் திட்ட இயக்குநர் எஸ் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், மாவட்டம் தோறும் எத்தனை கிராமங்கள் சாதி வன்கொடுமைகள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடத்திய தீண்டமை ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் எத்தனை என்று கேட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ஏடிஜிபி) பதில் அளித்துள்ளார்.

ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஏடிஜிபி அலுவலகத்தின் அறிக்கையில், சாதிக் வன்கொடுமைகளில் 43 கிராமங்களுடன் தமிழகத்தில் கலாச்சாரத் தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்ட முதல் இடத்திலும், விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் மற்றும் திருநெல்வேலி 3வது இடத்திலும் உள்ளன. சாதி வன்கொடுமைகளில், மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களுடன் முதல் இடத்திலும் விழுப்புரம் 25 கிராமங்களுடன் 2வது இடத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 24 கிராமங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன. ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் சாதி வன்கொடுமை நடப்பதாக மொத்தம் 445 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தியிருந்தாலும், விழுப்புரத்தில் சாதி வன்கொடுமைகள் அதிகமாக இருந்துள்ளது. சாதி வன்கொடுமை நடைபெறும் கிராங்கள் அதிக எண்ணிக்கை கொண்ட மாவவட்டமாக மதுரை மாவட்டம் முதல் இடமும் விழுப்புரம் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது.

இந்த சாதி வன்கொடுமைகளுக்கு காரணம், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம். சாதி தொடர்பான எந்த வழக்கையும் இங்குள்ள காவல்துறை சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ கையாளுவதில்லை. ஒவ்வொரு முறையும் தொண்டு நிறுவனங்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ SC/ST பிரிவில் வழக்குப்பதிவு செய்யப் போராட வேண்டியுள்ளது.அரசியலமைப்பின் பாதுகாவலர்களே பாகுபாடுடன் நடந்து கொண்டால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? ” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதில்களின்படி, 341 கிராமங்கள் தீண்டாமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 597 தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் திருச்சியில் 42 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது. இதே காலகட்டத்தில் விழுப்புரத்தில் மட்டும் 15 கூட்டங்கள் நடந்துள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், மோகன் கூறுகையில், “சாதி வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக நலத் துறைகள் மூலம் மாவட்ட நிர்வாகம் சாதிக் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில் சாதிப் பாகுபாடுகள் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளன. வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க அதிகாரிகள் உதவுவார்கள். மேலும், சாதியைப் பின்பற்றும் கிராமங்கள் சிறப்பு சீர்திருத்தத் திட்டங்களின் கீழ் கொண்டு வரப்படும்” என்று கூறினார்.

அதே நேரத்தில், “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஏ.டி.ஜி.பி., சமூக நலத்துறையுடன் இணைந்து தீண்டாமை அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அதிக விழிப்புணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமை கிராமங்களாக அடையாளம் காணப்பட்ட 445 கிராமங்களை மாதிரி நல்லிணக்க கிராமங்களாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மாதிரி கிராமங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.” என்று சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.



Read in source website

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருவிழா முகூர்த்த நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசனம் செய்ய துணை ஆணையாளர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மணி, மதுரை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருவிழா முகூர்த்த நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசனம் செய்ய துணை ஆணையாளர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கோயில் மூலஸ்தானத்தில், வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி, துர்க்கை அம்மன், கற்பக விநாயகரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சத்தியகிரீசுவரர், மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பவளக்கனிவாய் பெருமாளை அனைத்து பக்தர்களும் கண்டு தரிசிக்க முடியாத நிலை இருந்தது. சிறப்பு கட்டணத்தில் செல்லும் பக்தர்கள் மட்டுமே 5 மூலவர்களையும் தரிசிக்க முடிந்தது. சமீபத்தில் கோயில் துணை ஆணையாளர் பொறுப்பேற்ற சுரேஷ், கோயிலுக்குள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

முகூர்த்த நாட்கள், திருவிழா நாட்கள், கூட்டம் அதிகமுள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் அனைத்து பக்தர்களும் 5 மூலவர்களையும் தரிசிக்கும் வகையில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டது .

அதன்படி, தற்போது பக்தர்கள் 5 மூலவர்களையும் தரிசித்து மகிழலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



Read in source website

What are the benefits of taking out a home insurance policy, how to take it? in tamil: இந்தியாவில் உள்ள பல முன்னணி வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகின்றன.

ஹோம்இன்ஷூரன்ஸ்பாலிசி: சொந்த வீடு என்பது பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தின் கனவு எனலாம். அவ்வகையில் வீடடின் மீதான முதலீடு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பெருங்கனவை சேமிப்பு மூலமாகவோ அல்லது வீட்டு கடன் மூலமாகவோ பலரும் அடைந்து வருகின்றனர். ஆனால், அப்படி மிகவும் கடினப்பட்டு உழைத்த வாங்கிய வீட்டை நம்மில் பலர் பாதுகாக்க மறந்து விடுகிறோம்.

பைக், கார் போன்று வீட்டிற்கும் இன்சூரன்ஸ் செய்யலாமா? என்றால் நிச்சயமாக இன்சூரன்ஸ் பண்ணலாம். ஒரு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வீட்டை வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், தீ விபத்து, திருட்டு, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்தும் வீடு மற்றும் அதன் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை ஈடு செய்து விட உதவுகிறது.

இதேபோல் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கூடுதல் பிரீமியத்திற்கு உங்கள் வீட்டில் உள்ள ஃபர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இது சொந்த வீடு வைத்திருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல வாடகை குடியிருப்பில் உள்ள உங்களின் தனிப்பட்ட உடமைகளைப் பாதுகாக்க உதவுகிறது.

தவிர, சொத்து காப்பீட்டு கொள்கையாகவும் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறது. எனவே தான் உங்கள் வீட்டின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் காப்பீட்டை பெறுவது இருக்கிறது.

ஹோம் இன்ஷூரன்ஸ் ஏன் தேவை?

இந்தியாவில் சுமார் 2,44,119 கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் குடியிருப்பு வளாகங்களில் நடந்துள்ளன. இதேபோல் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திருடப்பட்ட சொத்து இழப்பு சுமார் 45% அதிகரித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் நடக்கும் சுமார் 70% திருட்டுகள் வீடுகளில் நடப்பவை தான். ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும் முன், உங்கள் வீடு அல்லது உடமைகளில் முன்பே இருக்கும் சேதங்கள், கட்டமைப்பு மற்றும் உற்பத்தி குறைபாடுகள் உள்ளிட்டவற்றை பாலிசி கவர் செய்யாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், வீட்டினுள் இருக்கும் உங்கள் பொருட்களுக்கு மட்டுமே பாலிசி எடுக்க முடியும்.

ஒவ்வொரு தனிப்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள முன்னணி வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பல ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. இவை வாடிக்கையாளர்கள் வீட்டுக் காப்பீட்டின் அவசியத்தைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான பாலிசியை தேர்வு செய்யவும் உதவுகின்றன.



Read in source website

கௌதம புத்தரின் 2566-ஆவது பிறந்த தினமான கடந்த திங்கள்கிழமை, அவா் பிறந்த நேபாளத்திலுள்ள லும்பினிக்கு பிரதமா் நரேந்திர மோடி விஜயம் மேற்கொண்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. புத்த பூா்ணிமா அன்று லும்பினியிலுள்ள மாயாதேவி கோயிலில் வழிபட்டதுடன் அங்கே இந்தியாவால் அமைக்கப்படவுள்ள சா்வதேச பௌத்த கலாசார மையத்துக்கு அடிக்கல்லும் நாட்டினாா். கலாசாரம், கல்வித் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு வழிகோலும் ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்திய - நேபாள பிரதமா்களால் கையொப்பமிடப்பட்டன.

நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் நிறுவப்பட்ட விமான நிலையத்தில் 74 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் விமானம் இறங்கியது. இப்போது பைரவாஹா என்கிற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கௌதம புத்தா சா்வதேச விமான நிலையத்தில் குவைட் ஏா்லைன்ஸின் விமானம் இறங்கி, நேபாள விமானத் துறை புது வரலாறு படைத்திருக்கிறது. பிரதமரின் 2014 விஜயத்தின்போதே ஆறு மாதங்களில் மூன்று கூடுதலான விமான வழித்தடங்களை அனுமதிப்பதாக ஏற்றுக்கொண்டும்கூட இன்னும் நாம் அதை நிறைவேற்றவில்லை என்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

2014-இல் பிரதமராக பதவியேற்றதும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி காத்மாண்டுவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். இதுவரை நேபாளத்துக்கு ஐந்து முறை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஒரே பிரதமா் என்கிற பெருமை நரேந்திர மோடிக்கு மட்டுமே உண்டு.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய - நேபாள உறவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. 2015-இல் நடந்த சம்பவங்களும், முந்தைய பிரதமா் உருவாக்கிய வரைபடப் பிரச்னையும் இருதரப்பு நட்புறவை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன. தற்போதைய பிரதமரின் ஐந்தாவது நேபாள விஜயத்தின் அடிப்படை நோக்கம், நட்புறவை மீட்டெடுப்பதுதான் என்பதை அவரது லும்பினி உரையும், நேபாள பிரதமரின் ஏப்ரல் மாத இந்திய விஜயமும் உணா்த்துகின்றன.

இந்திய - நேபாள உறவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 1950-இல் ஏற்படுத்திய சமாதான நட்புறவு ஒப்பந்தம் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 21-ஆவது நூற்றாண்டின் தேவைக்கேற்ப அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யவோ, திருத்தவோ, மேம்படுத்தவோ இந்தியா தயாராகவே இருந்து வருகிறது. கடந்த 22 ஆண்டுகளாக இருநாட்டு வெளியுறவுச் செயலா்களாலும் பல கூட்டறிக்கைகள் அந்த ஒப்பந்தம் குறித்து வெளியிடப்பட்டாலும்கூட, இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடு.

2016-க்குப் பிறகு இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டபோது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதை முழுமையாகப் பயன்படுத்தின. இந்தியாவுக்கு எதிரான மனநிலையை நேபாள மக்கள் மத்தியில் உருவாக்கின. அதன் அடிப்படையில், 2018 முதல் 2021 வரை சீனாவின் தலையீடு நேபாளத்தில் அதிகரித்தது. 2019-இல் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நேபாளத்தின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராக சீனா உருவெடுத்தது.

திபெத் - காத்மாண்டு, பொக்காரா - லும்பினி ரயில் தடம் சீனாவால் நேபாளத்தில் அறிவிக்கப்பட்டும்கூட, இன்னும் வேலை துவங்கவில்லை. அதேபோல, நேபாள - சீனா தடையில்லா வா்த்தகப் பகுதி அறிவிப்புடன் நிற்கிறது. சீனாவிலிருந்தான இறக்குமதியில் 5% கூட நேபாளத்தின் ஏற்றுமதி அந்த நாட்டுக்குக் கிடையாது. இந்தியா தனது ஏற்றுமதியில் 10%-க்கும் அதிகமான அளவில் நேபாளத்திலிருந்து இறக்குமதி செய்கிறது.

பெட்ரோல், மின்சாரம், உரம், உப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருள்கள் இந்தியாவிலிருந்துதான் நேபாளத்துக்கு போகின்றன. சீனாவைப் போலல்லாமல், இந்தியா முதலீடாகவும், கடனாகவும் நேபாளத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல், மானியமாகவும் உதவுகிறது என்பதை நேபாள ஆட்சியாளா்கள் உணராமல் இல்லை.

மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் கடன் வலையில் சிக்கியிருப்பதுபோல தாங்களும் சிக்கிவிடலாகாது என்கிற அச்சமும் நேபாளத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில்தான் இருநாட்டு உறவையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரதமா் மோடியின் ஒருநாள் லும்பினி விஜயம் அமைந்தது.

சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டாலும்கூட, இந்தியாவுடனான உறவை நேபாளத்தால் சுலபமாகத் துண்டித்துக்கொள்ள முடியாது. லும்பினி விஜயத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பதுபோல, இது கலாசார, பண்பாட்டு வரலாற்றுத் தொடா் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே தேவையில்லாத பல சா்ச்சைகளை முந்தைய பிரதமா் கிளப்பியதை அகற்றும் வகையில் தற்போதைய நேபாள பிரதமா் தேவுபா பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வழிகோலியிருக்கிறாா். காலாபானி, சுஸ்தா இரண்டு இடங்களில் மட்டும்தான் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை நிலவுகிறது என்பதையும் அவா் சுட்டிக்காட்டி அவற்றை சுமுகமாக தீா்வுகாண முடியும் என்றும் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நேபாளத்திலுள்ள புத்தா் பிறந்த லும்பினியையும், இந்தியாவிலுள்ள புத்தா் பரிநிா்வாணம் எய்திய குஷிநகரத்தையும் இணைக்கும் முயற்சிக்கு வழிகோலியிருக்கிறது பிரதமரின் புத்த பூா்ணிமா நேபாள விஜயம். அதுவே மீண்டும் இருநாட்டு உறவை முன்புபோல பலப்படுத்தும் என்று எதிா்பாா்ப்போமாக!



Read in source website

அண்மைக்காலமாக மாணவர்களின் செயல்பாடுகள் வேதனை தர கூடியவையாக மாறிவிட்டன. ஆசிரியர்களை மதிக்காத போக்கு நாள்தோறும் வளர்ந்து வருகிறது. வகுப்பறைக்கு பாடம் எடுக்க செல்வதற்கே ஆசிரியர்கள் அச்சப்படக்கூடிய நிலை உருவாகி விட்டது. மாணவர்கள், பாடத்தை கவனிக்காவிட்டாலும், கேள்விக்கு விடை சொல்லாவிட்டாலும், தேர்வு எழுதாவிட்டாலும் ஏன் என்று கேள்விகேட்க முடியாதபடி அவர்களின் கைகள் கட்டப்பட்டு விட்டன.

கரோனா நோய்த்தொற்று காரணமாக இரு ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். கரோனா காலகட்டத்தில் இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றதால் மாணவர்களின் கைகளில் பெற்றோரே கைப்பேசியைக் கொடுக்க வேண்டியதாயிற்று. இதனால், கைப்பேசியை நாள்தோறும் பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது. 

வகுப்பு நேரம் முடிந்த பின்னும் கைப்பேசியில் மூழ்கியதால், மோசமான விஷயங்கள் அவர்கள் கண்களில் பட்டு, அவர்களின் மனதைக் கெடுத்தன. அதன் விளைவுதான் பள்ளி மாணவர்களின் விரும்பத்தகாத செயல்பாடுகள் என்று உளவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வரும் மாணவர்களின் செயல்பாடுகள் காண்போரின் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. இப்படி மாணவர்களின் விரும்பத்தகாத செயல்கள் அதிகரித்து வந்த சூழலில், அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டன. இது போன்று தொடர்ந்து நடந்தால் மாணவரின் மாற்றுச் சான்றிதழில் அது குறித்து பதிவு செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் மனநிலையை சரியாக மாற்றியமைப்பதற்கான செயல்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மாணவர்களிடம் திறமையும் ஆற்றலும் இயற்கையாகவே அமைந்திருக்கும். அவற்றை வெளிக்கொணரும் வகையில் கல்விமுறை இருந்து விட்டால் பிரச்னையில்லை.  மனிதப் பண்புகளையும் மனிதநேய செயல்பாடுகளையும் ஒவ்வொரு மாணவனும்  உணர்ந்துகொள்ளும் வகையில் கல்விமுறை அமைந்தால் மாணவர்களின் மனநிலையில் நிச்சயம் மாற்றம் உருவாகும். 

அத்தகைய சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர், பெற்றோர், அரசு, சமூகம் என அனைத்து தரப்பினரும் இருக்கிறோம். முன்பெல்லாம், இத்தகைய மனிதநேய செயல்பாடுகள் மனிதர்களுக்கு இயற்கையாகவே இருந்தது. ஆனால், தற்போது நாம் அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய சூழல் உள்ளது.

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை தங்கள் கைப்பேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் மனநிலையில்தான் இன்றைய மாணவர்கள் இருக்கின்றனர். 

அவசர நேரத்தில் உதவி செய்யும் அடிப்படை மனிதப்பண்பை கூட இன்றைய மாணவர்கள் இழந்து விட்டதற்கு முக்கியக் காரணம், கல்விமுறையில் மனிதப் பண்பாடு குறித்த பாடப்பிரிவு  இல்லாததுதான். அவசர காலத்தில் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும். அப்படி உதவக்கூடிய மனம் மாணவர்களுக்கு வந்துவிட்டால் பிறரோடு சண்டையிடுவதற்கோ, பிறரைத் தாக்குவதற்கோ மாணவர்கள் துணிய மாட்டார்கள்.

பள்ளிகளில் முன்பு நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் அவை நிறுத்தப்பட்டு விட்டன. நீதிபோதனை அந்த பாட நேரத்தை கணிதமோ, ஆங்கிலமோ எடுத்துக்கொள்கிறது. இதனால் மனிதப் பண்பாடு குறித்த அறிவை மாணவர்கள் பெற முடியாமலேயே போய்விட்டது. அதுவும் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு நீதிபோதனை வகுப்பு என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் உள்ளது. 

எனவே, இன்றைய சிக்கலான சூழலில், மனிதப் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மாணவர்களின் விரும்பத்தகாத செயல்பாடுகள் நிச்சயம் மாறும். அன்பை போதிக்கும் பாடங்களை, கதைகளை, பாடல்களை பள்ளிதோறும் கற்பித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். 

ஒரு மாணவன், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை சிறப்பாகக் கற்றாலும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெற்றாலும் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும் என்பது உண்மை. அதனால் அவனுக்கு  நற்பண்புகள் குறித்துத் தெரிந்துவிடாது. 

எனவே, சமூகத்திற்கு தேவையான நற்பண்புகள் கொண்ட மாணவனை உருவாக்குவதற்கு,  பண்பாடு, கலாசாரம், மனித நேயம் தொடர்புடைய கற்றல் முறைதான் இன்றைய காலத்திற்கு கட்டாயம் தேவை. அதை உருவாக்குவதற்கு மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோரும் மதிப்பெண்களை மட்டுமே தனது பிள்ளைகளின் தகுதியாக நினைக்கின்றனர். இதுவும் கூட ஒரு விதத்தில் மாணவர்களை பாதிக்க கூடும். எனவே மதிப்பெண்கள் மட்டும் போதாது. நற்பண்புகள்தான் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்றும், மதிப்பெண்களை தாண்டிய மதிப்பு உடையது ஒழுக்கம் என்றும் பெற்றோர் சொல்லி வளர்த்தால் அது பலன் தரும்.

தொழிலில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஒருவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் கடின வார்த்தைகளைப் பேசினால், அந்த மருத்துவரை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, நற்பண்புகளுடன் கூடிய, மனித நேயத்துடன் கூடிய கல்வியே சிறந்த வெற்றியை தரும் என்பதை பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். 

மாணவர்கள், ஆசிரியர்களைத்தானே தாக்குகிறார்கள் என நினைத்து அது குறித்து சிந்திக்காமல் விட்டு விட்டால் எதிர்காலத்தில் அத்தகைய மாணவர்கள் வழிதவறி சென்று சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும். அப்போது, அந்த பிள்ளையை பெற்ற பெற்றோரையும் இந்த சமூகம் ஒதுக்கிவிடும்.

எனவே, மனிதநேய சமூகத்தை உருவாக்க, மாணவர்களை நற்பண்புகளுடன், மனித பண்புகளுடனும் உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர், காவல்துறை, அரசு என அனைவருக்குமே உள்ளது. இதனை உணர்ந்து செயல்படுவோம்.



Read in source website

ஒரு மாநில காவல்துறையின் செயல்திறனையும், நிர்வாக அமைப்பையும் மதிப்பீடு செய்யும் அளவுகோலாக விளங்குவது அந்த மாநிலத்தில் நிகழும் காவல் மரணங்கள். காவல் மரணம், காவல்துறையின் மனித உரிமை மீறியச் செயலாகக் கருதப்படுவதோடு, அரசாங்கத்திற்கு அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது.

சென்னை தலைமைச் செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் அண்மையில் நிகழ்ந்த காவல் மரணத்தைத் தொடர்ந்து, குற்ற வழக்கில் கைதானவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்றும், ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டால், மாலைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்ற வழக்கில் கைதானவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் காவல் மரணங்கள் நிகழ்வதைத் தடுத்துவிட முடியுமா?  இரவு நேரங்களில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவது குறித்து சட்டம் கூறுவது என்ன?    

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான பிரிவு 22 (2)-இன் படி கைது செய்யப்பட்ட  நபரை 24 மணி நேரத்திற்குள் (நீதிபதியிடம் அழைத்துச் செல்ல ஆகும் பயண நேரம் நீங்கலாக) நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும்.

குற்றம் புரிந்த நபரை கைது செய்வது, அவரிடம் விசாரணை மேற்கொள்வது தொடர்பான விதிமுறைகளை குற்ற விசாரணை நடைமுறை சட்டம் வரையறை செய்துள்ளது. இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும்.


குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததும், உடனடியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டமும், குற்ற விசாரணை நடைமுறை சட்டமும் கூறவில்லை. கைது செய்யப்பட்டவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு 24 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  

குற்றச் செயலில் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என புலன் விசாரணை அதிகாரிக்குத் தெரிய வந்ததும், குற்றம் புரிந்த நபரை உடனடியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க முடியாது. அந்த குற்றவாளியிடம் முதல் கட்ட புலன் விசாரணையை 24 மணி நேரத்திற்குள் நடத்தி, அவருடன் குற்றச் செயலில் பங்கெடுத்துக் கொண்டவர்கள், குற்றம் நிகழ்த்திய விதம், குற்றம் நிகழ்த்தப் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து துப்பு துலக்க வேண்டும். சாட்சிகள் முன்னிலையில் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தை புலன் விசாரணை அதிகாரி பதிவு செய்ய வேண்டும். முதல் கட்ட புலன் விசாரணை அறிக்கையுடன் குற்றவாளியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும். முதல் கட்ட புலன் விசாரணை முறையாக நடைபெறாவிட்டால், நீதிமன்ற விசாரணையில் வழக்கு தோல்வியடைய அதுவே காரணமாகிவிடும்.

இரவு நேரத்தில் குற்றவாளிகளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், அது மற்றொரு அசம்பாவிதத்தை நோக்கி நகரும். இரவு நேரங்களில் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவதற்கென்று ரகசிய இடங்களை புலன் விசாரணை அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொள்ளும் நிலை உருவாக அது வழி வகுக்கும். அந்த ரகசிய இடங்களில் புலன் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் போகும் சூழல் ஏற்படும்.

காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் நடத்தப்படும் விசாரணையின் விளைவாக நிகழும் மரணம் மட்டுமின்றி, ஒரு குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வராமல், வேறு ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதன் விளைவாக நிகழும் மரணமும் காவல் மரணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
விசாரணையின்போது சந்தேகக் குற்றவாளியை அடித்து, துன்புறுத்துவதன் மூலம் குற்றம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை புலனாய்வில் ஈடுபடும் காவல்துறையினரிடம் நிலவுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக சந்தேக குற்றவாளியை விசாரணையின்போது கண்மூடித்தனமாக அடிப்பதால், காவல் மரணம் நிகழ்கின்றது.

காவல் நிலையம் அழைத்து வரப்படும் சந்தேக குற்றவாளி, விசாரணையின் முடிவை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், காவல் நிலைய வளாகத்திலேயே தூக்குப்போட்டுக் கொண்டோ, நச்சு திரவத்தைக் குடித்தோ தற்கொலை செய்து கொள்வதும் காவல் மரணமே.

குற்ற விசாரணை நடைமுறை சட்டமோ, புலன் விசாரணை செய்வது குறித்த வழிமுறைகளோ தெரியாத சிலர் புலன் விசாரணைக் குழுவில் இடம் பெற்று விடுகின்றனர். புலன் விசாரணையின்போது அவர்களுடைய வரம்பு மீறிய செயல் சில நேரங்களில் காவல் மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. அண்மையில் சென்னையில் நிகழ்ந்த காவல் மரணம் குறித்த வழக்கில் ஊர்க்காவல் படையைச் சார்ந்த ஒருவரும், ஆயுதப்படையைச் சார்ந்த இரு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் களப்பணி, புலன் விசாரணை போன்றவற்றில் ஈடுபடும் காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோரின் செயல்களை உடனுக்குடன் கண்காணித்து, அவர்களை வழி நடத்துவதற்காக பல நிலைகளில் காவல் உயரதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளனர். மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தெரியப்படுத்துவதற்காக தனிப்பிரிவு காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர்களின் உளவுத்தகவலும், காவல் உயரதிகாரிகளின் மேற்பார்வையும் முறையாக இருந்தால், காவல் மரணங்கள் நிகழ்வது தவிர்க்கப்பட்டு விடும்.

புலன் விசாரணையில் ஈடுபடும் காவல் அதிகாரிகளுக்கும், அவர்களுக்குத் துணைபுரியும் காவலர்களுக்கும் குற்ற விசாரணை நடைமுறை தொடர்பான சட்டங்கள், புலன் விசாரணையின்போது நிகழும் மனித உரிமை மீறல்களால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து தொடர்பயிற்சி வழங்குவதும் காவல் மரணங்கள் நிகழ்வதைத் தடுக்கத் துணைபுரியும்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், புலன் விசாரணைக்காக அவர்களைத் தங்கள் பொறுப்பில் (போலீஸ் கஸ்டடி) புலன் விசாரணை அதிகாரிகள் அழைத்து வருவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. 

புலன் விசாரணையைத் தொடர்வதற்காக போலீஸ் கஸ்டடி பெற்று அழைத்து வரப்படும் குற்றவாளிகள் மீது காவல்துறையினரே "என்கவுன்ட்டர்' என்ற பெயரில் துப்பாக்கி சூடு நடத்தி, குற்றவாளிகளை உயிரிழக்கச் செய்யும் முறை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. 

நீதிமன்ற விசாரணையின் முடிவில், பல கொடுங்குற்றவாளிகள் விடுதலை அடைந்துவிடுகின்றனர் என்றும், அவர்களுக்கு என்கவுன்ட்டர் மூலம் உடனடி தண்டனை வழங்கினால்தான், சமுதாயத்தில் கொடுங்குற்ற நிகழ்வுகள் குறையும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பொதுமக்களிடத்தில் வரவேற்பு கிடைத்தாலும், இத்தகைய என்கவுன்ட்டர்களும் காவல் மரணங்கள்தான். 

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவரும் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அழைத்துச் செல்லும்போது, பழிதீர்த்துக் கொள்ளும் விதத்தில், அக்கைதியின் பகையாளிகள் நடத்தும் தாக்குதலில் நீதிமன்ற விசாரணை கைதி உயிரிழக்கின்ற சம்பவங்களும் நம்நாட்டில் நிகழ்கின்றன. இத்தகைய மரணங்களும் காவல் மரணங்கள்தான்.

நீதிமன்ற ஆணையின்படி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விசாரணை கைதிகள் உயிரிழக்கின்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. புலன் விசாரணையின்போது காவல்துறையினர் அடித்ததன் விளைவாகவோ, சிறைச்சாலையில் சிறைத்துறையினர் தாக்கியதன் விளைவாகவோ, சிறைவாசிகளுக்கு இடையே ஏற்படும் மோதல் காரணமாகவோ கைதிகள் சிறையில் மரணமடைவதும் உண்டு. இம்மாதிரியான மரணங்கள் நீதிமன்ற காவல் மரணங்கள் ஆகும்.

சந்தேகக் குற்றவாளிகளிடம் நடத்தப்படும் புலன் விசாரணையின்போது நிகழும் காவல் மரணங்களும், கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்த பின்னர் நிகழும் நீதிமன்ற காவல் மரணங்களும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 9,009 நீதிமன்ற காவல் மரணங்களும், 649 விசாரணை காவல் மரணங்களும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என "தேசிய மனித உரிமை ஆணையம்' சுட்டிக் காட்டுகிறது. 

கடந்த ஆண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகமான காவல் மரணங்கள் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசமும், தென்னிந்தியாவில் அதிக காவல் மரணங்கள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடும் திகழ்கின்றன.

குற்றவாளிகளை அடித்துத் துன்புறுத்துவதும், என்கவுன்ட்டர் செய்வதும் குற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வாக அமையாது. முறையான புலன் விசாரணையும், துரிதமாக நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையுமே காவல் மரணங்களுக்கும், சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்கும் தீர்வாகும்.

கட்டுரையாளர்:



Read in source website

தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி உயர்வின் காரணமாக நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பெட்ரோல் மீதான தீர்வை லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான தீர்வை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படும் என்ற அவரது அறிவிப்பு, எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருவதைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

தவிர, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 வீதம் 12 சிலிண்டர்களுக்கான மானியங்கள் 9 கோடி பேருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மீதான தீர்வையில் லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான தீர்வையில் லிட்டருக்கு ரூ.10 என மத்திய அரசு குறைத்தது. நவம்பரில், மதிப்புக் கூட்டுவரியை (வாட்) குறைத்துக்கொள்ளாத மாநில அரசுகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தாமே முன்வந்து அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தகைய எதிர்பார்ப்பு மக்களிடமும் தீவிரமாக எழுந்துள்ளது.



Read in source website

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட அகில இந்திய செயற்குழுத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். நேரு குடும்பத்தின் தலைமையிலேயே காங்கிரஸ் தொடர வேண்டுமா, இல்லை அதற்கு வெளியே புதிதாக ஒரு தலைவர் உருவாகி வர வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இடையேதான் இந்த மாநாடு கூடியது.

இதற்கு முன் கடந்த ஏழு வருடங்களாக ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சியை ஓரளவு தாங்கிப் பிடித்துக்கொண்டே வந்தார்கள். அவர்களின் எந்த வியூகமும் எடுபடாமல் போனது. இதற்கு பாஜகவுக்குப் பிரதானப் பங்கு உண்டென்றாலும், பிராந்தியக் கட்சிகள் பலவும் காங்கிரஸைப் பெரிதாக மதிக்காததும் ஒரு காரணம். ஆட்சி அதிகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ருசி கண்டுவிட்ட இந்தக் கட்சிகள், தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்துகொள்ளும் தகுதிகளை வளர்த்துக்கொண்டுவிட்டன. அந்தக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தற்போது தேவைப்படவில்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டு, அதே பாணியில் ஒருபக்கம் அரசியலை நடத்திக்கொண்டும் இன்னொரு பக்கம் அதிதீவிர இந்துத்துவக் கொள்கையைச் செயல்படுத்தியும் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறது.



Read in source website

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகையும் யூடியூப் பிரபலமுமான சேத்னா ராஜ், கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை (Liposuction) மேற்கொண்டதால் உயிரிழந்துள்ளார். ஒல்லியாகத் தோற்றமளிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகளின் விளைவாக, 22 வயதுப் பெண் சேத்னா மரணமடைந்திருப்பது, உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சைகள், சைஸ் ஜீரோ அல்லது சிக்ஸ் பேக் போன்ற மிகவும் கட்டுக்கோப்பான உடலமைப்பு மீது அதிகரித்துவரும் மோகம், பருமனாக இருப்பவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் ஆகியவை குறித்த விவாதங்களை வலுப்பெறச் செய்துள்ளது.

சேத்னாவின் இறப்புக்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளித்த மருத்துவ மையத்தின் கவனக்குறைவே காரணம் என்று அவருடைய பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு சேத்னா உயிரிழந்திருக்கிறார். பொதுவாக, இதுபோன்ற கொழுப்பு நீக்க/எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் மிக அரிதாகச் சிலருக்கு மரணத்தை விளைவிக்கும் வரையிலான தீவிர பின்விளைவுகள் ஏற்படும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள ஆர்த்தி அகர்வால், 2015-ல் 31 வயதாகியிருந்தபோது அமெரிக்காவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இறப்பதற்கு ஆறு வாரங்களுக்கு முன் அவர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இது போன்ற அறுவை சிகிச்சைகளால் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளுக்கும் சிலர் ஆளாகின்றனர். அதேநேரம், நவீன மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக இந்த அறுவை சிகிச்சைகளின் இறப்பு விகிதமும் பிற தீய விளைவுகளும் படிப்படியாகக் குறைந்துவந்துள்ளன.

ஆனாலும், இந்த அறுவை சிகிச்சைகளுக்குத் தரமான, நம்பகமான மருத்துவர்களையும் மருத்துவ மையங்களையும் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. திரைப்படங்கள் உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் இருப்பவர்கள், உடல் எடையை உடனடியாகக் குறைத்தாக வேண்டும் என்னும் அவசரம் காரணமாகத் தவறான நபர்களிடம் சிக்கிவிடுகின்றனர். வசதி குறைவானவர்கள் மலிவுக் கட்டணத்தில் கிடைக்கும் தரமற்ற சிகிச்சைக்குப் பலியாகிவிடுகிறார்கள்.

பருமனாக இருக்கும் அனைவருக்கும் இந்த அறுவை சிகிச்சை உகந்ததல்ல. தேவையானதும் அல்ல. ஒருவரின் உயரத்துக்கு ஏற்ப அவருடைய உடல் எடை எவ்வளவு இருக்கலாம் என்பதைக் கணக்கிட, ‘உடல் பருமக் குறியீடு’ (body mass index) என்னும் அளவீடு பயன்படுத்தப்படுகிறது. உடல்பருமக் குறியீடானது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட துணைநோய் இருப்போருக்கு 32.5 அல்லது அதற்கு மேலாகவும் பிறருக்கு 37.5 அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால் மட்டுமே அந்த நபர் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவார்.

அதுவும் அவர் அதீத உடல் பருமனின் காரணமாக நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அகால மரணத்துக்கும் ஆளாகிவிடுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் முற்றிலும் பலனளிக்கத் தவறிவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சைகளின் மூலம் உடல் எடையைக் குறைப்பதற்கான வழியை நாட வேண்டும்.

உடல் எடையால் விளையும் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மட்டும் அல்லாமல், சமூக அழுத்தத்தால் விளையும் உளவியல் பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்புவோரும் தொழில் காரணங்களுக்காக ’அழகா’கத் தோன்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்போரும்தான் எடை குறைப்பு அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். இவர்களில் பலர் உடனடித் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். அல்லது அதற்கான அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு, பருமனாக இருப்பதை இழிவானதாகவும் கிண்டலுக்குரியதாகவும் பார்க்கும் நம் சமூக மனநிலை மென்மேலும் வலுப்பட்டிருப்பதும் தீவிரமடைந்திருப்பதும் முக்கியப் பங்களிக்கிறது. பருமனாக இருப்பது குறித்த கேலிகள் நம் சமூகத்தில் நெடுங்காலமாக இருந்துவருவதுதான். ஆனால், எது பருமன், எது கேலிக்குரிய உடல் எடை என்னும் அளவுகோல் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் தொப்பையுடன் இருப்பது ஊளைச் சதையுடன் இருப்பது ஆகியவை மட்டுமே கிண்டலுக்குரியதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அண்மைக் காலங்களில் சற்று சதைப்பிடிப்புடன் இருப்பதே ஒருவரை ‘குண்டு’ என்று முத்திரை குத்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

இந்தப் பார்வை மாற்றத்தில் உடல் எடை தொடர்பான சர்வதேச அளவிலான பெருவணிகப் பெருக்கத்துக்கும் மறுக்க முடியாத பங்கிருக்கிறது. 1990-களிலிருந்து சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் தங்களின் உடல் எடை குறித்த கவனம் அவர்களுக்கு அதிகரிக்கத் தொடங்கியது. சில நடிகர்கள், நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள் என்பதற்காகவே கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். ஆண்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும் பெண்கள் என்றால் சைஸ் ஜீரோ உடல்வாகைப் பெற்றிருக்க வேண்டும் என்பது புத்தாயிரத்துக்குப் பின் காட்சி ஊடகங்கள் வழியே பெரிதும் திணிக்கப்பட்டது. சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் இதை ட்ரெண்டாக்கியதில் பங்களித்தனர். ஒரு கட்டத்தில் ஒல்லியாக இருப்பது மட்டுமே அழகானது என்னும் மனநிலை ஊடகங்களில் மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்திலும் எழுதப்படாத விதியாகிவிட்டது.

அதிக எடை குறித்த இழிவான பார்வை பொதுச் சமூகத்திலும் பரவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, பார்க்கும் நண்பரையோ உறவினரையோ “என்ன... இவ்ளோ குண்டாகிட்டீங்க?” என்று கேட்பது சர்வசாதாரணமாகிவிட்டது. முதல் முறை சந்திப்பவர்களிடம்கூட அவருடைய உடல் எடை குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் பலர் தயங்குவதேயில்லை. பலர் முன்னிலையில் ஒருவரின் உடல் எடையை விமர்சிப்பது சம்பந்தப்பட்டவருக்கு வலியைக் கொடுக்கக்கூடும் என்பது குறித்து, இப்படிக் கேட்பவர்கள் யோசிப்பதேயில்லை.

அப்படி யோசிக்கத் தேவையில்லை என்று நினைக்கும் அளவுக்கு பருமனாக இருப்பது பாவச் செயல் என்பது போன்ற மனநிலை பரவலாகிவருகிறது. பெண்கள், குறிப்பாக காட்சி ஊடகத் துறையில் இருப்போர் பன்மடங்கு அதிகமாக இந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். சமூக ஊடகங்களில் ஒரு நடிகை தன் ஒளிப்படத்தைப் பதிவேற்றினால் ‘குண்டாகிவிட்டார்’, ‘சதைபோட்டுவிட்டார்’ என்று கூறுவது தொடங்கி, அதற்காகக் கிண்டலடிப்பது, இழிவுபடுத்துவது வரை கடுமையான எதிர்வினைகளைக் காண முடியும். இதன் காரணமாகவே அண்மைக் காலங்களில் வழக்கமான எடை என்று சொல்லக்கூடிய தோற்றம்கொண்ட நடிகைகள் சிலர் மிகவும் ஒல்லியாகியிருப்பதைக் காண முடிகிறது. அப்படி ஒல்லியான பிறகும் ‘நோயாளிபோல் இருக்கிறார்’ என்பது போன்ற விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேர்கிறது.

இன்னொருபுறம், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த அக்கறை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உடற்பயிற்சிக் கூடங்கள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன. அனைத்து வயது ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கின்றனர். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற அக்கறையும் அதற்கான முனைப்புகளும் வரவேற்கத் தகுந்தவைதான். ஆனால், கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மீதான அதீத மோகத்துக்கும் அதனால் விளையும் அழுத்தத்துக்கும் அவை சார்ந்த வணிகத்துக்கும் பங்கிருப்பதை மறுக்க முடியாது.

கட்டுக்கோப்பான உடலமைப்பை விரைவாகப் பெற வேண்டிய உந்துதலில், போதிய பயிற்சி இல்லாமல், கடினமான உடற்பயிற்சிகளைச் செய்து, உடலுக்கு நீண்ட கால பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டுவிடுகின்றனர். இது போன்ற அழுத்தங்கள் தேவையற்றவை என்பதை அனைவரும் உணர வேண்டும். எடை குறைப்பு, உடலைக் கச்சிதமாகக் கட்டமைப்பது இரண்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டலுடன் நிதானமாக, படிப்படியாக நிகழ வேண்டிய விஷயங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உடல் கட்டுக்கோப்பாக இருப்பதைவிட ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையானது என்பதை உணர வேண்டும்.

பருமனாக இருப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்பது மறுக்கவே முடியாத மருத்துவ உண்மை. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால், அதற்கு உடனடித் தீர்வுகளை நாடுவது தேவையற்ற ஆபத்துகளை விளைவிக்கும். தக்க மருத்துவ ஆலோசனையுடனும் வழிகாட்டுதலுடனும் உடல் எடைக் குறைப்பை மேற்கொண்டு ஆரோக்கியத்தைப் பெறுவதற்கே பருமனாக இருப்பவர்கள் கவனம்குவிக்க வேண்டும். கிண்டல்களையும் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல் கடக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

- கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in



Read in source website