DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 23-03-2022


சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையர்கள் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு (2022-23) முதல் இளங்கலைப் படிப்புகளில் திருநங்கையர்களுக்கு அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் இலவச கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகம் கீழ் வரும் 131 இணைப்பு மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 340 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளித்து வரும் நிலையில், திருநங்கையர்களின் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும், திருநங்கையர்களுக்கு (மூன்றாம் பாலினத்தவர்) இலவசமாக கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, “ஒவ்வொரு கல்லூரியிலும் இளங்கலைப் படிப்புகளில் திருநங்கையர்ளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இடத்தையாவது ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அதிகமான திருநங்கையர்கள் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதை உறுதிசெய்யலாம்” என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.கௌரி கூறியுள்ளார். 

இதற்கு சிண்டிகேட் குழுவின் ஒப்புதலைப் பெற பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.  ஒப்புதல் தந்ததும் வரும் கல்வியாண்டில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும். 

அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படும்,

மேலும் "அடுத்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தில் சேரும் அனைத்து திருநங்கையர்களுக்கான கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழகம் தள்ளுபடி செய்யும்” என்று கௌரி கூறியுள்ளார். 

லயோலா கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளில் ஒன்று அல்லது இரண்டு திருநங்கையர்களர்களுக்கு இலவச கல்வியை அளித்து வருகிறது. 



Read in source website

 

புளி என்ற உடனே நம் நினைவுக்கு வருவது ‘ரசம்’ தான். தென்னிந்திய உணவு முறைகளில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது இந்த ரசம். மதிய உணவில் எது இருக்கிறதோ இல்லையோ, ரசம் இருந்தால் போதும் என்று ஏங்கும் நம்மவர்கள் ஏராளம். என்ன தான் வகை வகையாய் பல துரித உணவுகளோ, மேற்கத்தியோ உணவுகளோ விரும்பி பலரும் உண்டாலும் இறுதியில் ரசம் சாப்பிட்டால் தான் பலருக்கும் திருப்தியே. ‘அப்பாடா இப்ப தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கு’ என்று ரசத்திற்கு அடிமையானவர்கள் பலர்.

அதற்கென்ன காரணம்? புளிப்பு சுவை மட்டுமா? இல்லை. அதன் மருத்துவ தன்மையும் தான். ரசம் சாப்பிட்டால் தான் சீரணம் ஆகும் என்று ரசத்தை உணவாக மட்டும் பார்க்காமல், அசீரணத்தை போக்கும் மருத்துவ குணமாகவும் கூறுவது நம் பாரம்பரிய சித்த மருத்துவம். 

‘ரசம்’ என்ற சொல்லுக்கு ‘சாறு’ என்று பொருள். அப்படி பார்த்தால் புளி சாறு என்பதே  பின்னாளில் புளி ரசம் என்று மாறி, பிறகு வெறும் ‘ரசம்’ என்று திரிந்துள்ளதாக தெரிகிறது. ரசத்தில் பல வகைகள் இருப்பினும் அவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் புளி தான். 

சர்க்கரை வியாதி வந்தவுடனே அத்துடன்  ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவும் மாறுபட்டு ‘டிஸ்லிபிடிமியா’ என்ற நோய் நிலையும் தொடங்கிவிடுகிறது. 

சர்க்கரைக்கு மருந்து எடுப்பது போதாது என்று இந்த கொழுப்பிற்கும் மருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 

டாக்டர் நான் சர்க்கரை வியாதிக்கு தானே மருத்துவம் பார்க்க வந்தேன், கூடவே ஏன் கொலெஸ்டிரால்-க்கு மாத்திரை கொடுத்து இருக்கீங்க? என்று பலரும் கேட்க நினைத்து, டாக்டர் சொன்னா சரியாக தான் இருக்கும் என்று எண்ணி எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவர். 

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பல நாள்களாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. ஆதலால் மதுப்பிரியர்கள் அத்தகைய மருந்துகளை எடுப்பதும் மிகவும் ஆபத்தானது. அது அவர்களின் கல்லீரல் செயல்பாட்டில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலத்தான். ஆக கல்லீரலை பாதிக்காமல், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, கொழுப்பினையும் குறைக்கும் ஒரே மருந்து இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதுவும் உண்ணும் உணவு பொருளாக இருந்தால் இன்னும் வசதி. அந்த வகையில் இந்த ‘பழம்புளி அல்லது கோடாம்புளி’ மிக சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியது.

இன்று நாம் உணவில் பயன்படுத்தும் புளி, வாத நோய்களை உண்டாக்குவதாகவும், உணவிற்கு ஆகாது என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. “புத்தியும் மந்தமாகும் பொருமியும் உடல் ஊதும் பத்தியம் தவறும்” என்ற தேரையர் குணவாகட வரிகளால் இதனை அறியலாம். 

கோடாம்புளி அல்லது பழம்புளி என்று அறியப்படும் புளியால் வாத நோய் நீங்கும், நோய்களை உண்டாக்கும் மூன்று குற்றங்களான வாதம்,பித்தம், கபம் இவையும் நீங்கும் என்பதை “பழம்புளியை சேர்க்க திரிதோடம் வாதமொடு சூலை கபம் மாறும்காண்” என்ற அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.

அழகிய கோள வடிவ பழங்களைக் கொண்ட பழம்புளி, 5-8 பெரிய விதைகளுடன் காணப்படும். பழுத்தவுடன் பழம் அடர் ஊதா நிறத்தில் தோன்றும். பழுத்த கொடாம்புளியின் பழம் இனிப்பு அமிலசுவை கொண்டது. இது கார்சினோல், ஐசோகார்சினோல், மற்றும் கரிம அமிலங்கள் முக்கியமாக ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றது. கொடாம்புளியின் உலர்ந்த தோல் பாரம்பரியமாக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஊதா நிறத்திற்கு காரணமான ‘ஆன்தோசயனின்’ எனும் மருத்துவ குணமுள்ள இயற்கை நிறமிசத்து உலக அளவில் வணிகத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள ‘ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம்’ (எச்சிஏ) எனும் வேதிப்பொருள் இயற்கை ஆன்டசிட் ஆக செயல்படக்கூடியது. அதாவது இயற்கையாகவே பசியை அடக்ககூடியது. ஆதலால் அதிகப்படியாக உண்ணும் பழக்கமுடைய நபர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் இந்த புளியை பயன்படுத்த உடல் எடை குறைக்க உதவும். மேலும் எச்சிஏ என்பது அடினோசின் ட்ரைபாஸ்பேட்-சிட்ரேட் லைஸின் என்ற நொதியை தடுத்து  சிட்ரேட்டை எனும் வேதிப்பொருளை அசிடைல்-கோஎன்சைம்-ஏ ஆக மாற்றுவதற்கான தடையை உண்டாக்குகிறது. இதனால் உடலில் கொழுப்பு உற்பத்தி தடுக்கப்படுகிறது.

மேலும் பழம்புளிக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் ஆச்சர்யப்படுத்தும் வண்ணம் உள்ளது. இது உடல் எடையை குறைக்கும் தன்மையும், கொலெஸ்டெராலை குறைக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், மூட்டு வீக்கத்தை போக்கும் தன்மையும், மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், மன பதட்டம் நீக்கும் தன்மையும், புற்று நோய்களை வர விடாமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், இருதயத்தை பாதுகாக்கும் தன்மையும், கிருமி கொல்லியாகவும் செயல்படக்கூடியது .

இதில் உள்ள அபிஜெனின் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் நிலையிலும், மூட்டு வீக்கத்திலும், மறதி நோயிலும்  நல்ல பலனளிப்பதாக உள்ளது. கார்சினால் என்ற செயல்மூலக்கூறு ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கும் விதமாகவும், மாரடைப்புக்கு காரணமான அதிரோகிளிரோசிஸ் எனும் ரத்த குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இருதயத்தை காக்கும் தன்மையுடையது. மேலும் இது அதிகரித்த ரத்த அழுத்தம் குறைய ஏதுவாகவும் உள்ளது. 
 
பழம்புளி என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோடாம்புளி நம் பயன்படுத்த மறந்த ஒன்று. இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் சொந்தமான இந்த கொடம்புளி குறித்து உலகம் முழுதும் பல நாடுகளில், பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவ தன்மையுள்ள சிறந்த உணவுப்பொருள். 

பழமையைத் தேடி, ஆரோக்கியத்தை நாடும் பலரும், பழம்புளியை தேடி உணவில் சேர்த்தாலே போதும் இருதயத்திற்கு இதம் தரும். நீரிழிவு நோயினருக்கு வாழ்நாளை கூட்டும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website

அந்தமான் நிகோபார் கடற்கரைப் பகுதியில் நவீன ரக பிரமோஸ் ஏவுகணை புதன்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல் திறன், கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய  ஏவுகணை புதன்கிழமை அந்தமான் நிகோபார் கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், டிஆா்டிஓ மற்றும் இந்திய கடற்படை ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பில் இந்த வகை ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 



Read in source website


புது தில்லி: நாட்டில் காசநோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பின்னுக்குத் தள்ளி, கரோனா காலத்துக்குப் பிறகு 25 - 30 சதவீதம் அளவுக்கு காசநோயாளிகள் அதிகரித்திருப்பதாக குறிப்பாக காசநோய் பாதித்த இளைஞர்கள் அதிகரித்திருப்பதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், குணப்படுத்தக் கூடிய ஆனால், உலகளவில்  பல லட்சக் கணக்கானோரை காசநோய் பாதித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் இருக்கும் ஒட்டுமொத்த காசநோயாளிகளில் 27 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதும், ஆண்டு தோறும் புதிதாக 26 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

காசநோய் சிகிச்சை மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் கரோனா பேரிடர் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருநத்ன. இதனால், நாட்டில் காசநோய் பாதிப்புகளும், காசநோயால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காசநோய்க்கு உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 5-7 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் இது கரோனாவுக்கு முன்பு 1 - 2 சதவீதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 



Read in source website

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றார்.

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

இருப்பினும், மாநில பாஜகவுக்குள் முதல்வர் பதவிக்கு போட்டி நிலவியதால், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு மாநில முதல்வராக மீண்டும் புஷ்கர் சிங் தாமியை பாஜக தலைமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, டேராடூனில் நடைபெற்ற விழாவில் புஷ்கர் சிங் தாமிக்கு, ஆளுநர் குர்மித் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

 

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே 15 சதவிகித பெண் விமானிகள் இருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, உலகின் மற்ற நாடுகளில் உள்ள விமானிகளில் 5 சதவிகிதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவில் 15 சதவிகிதம் பெண் விமானிகள் உள்ளனர். 

பெண்கள் முன்னேற்றத்திற்காக விமானத் துறையில் உள்ள முன்னுதாரணம் இது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் விமானத் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பெரிய நகரங்களில் விமான நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது அந்த நகரங்களில் நிலை பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் விமான போக்குவரத்துத் துறை முக்கிய பங்காற்றும் துறையாக மாறியுள்ளது என்று கூறினார். 



Read in source website


புது தில்லி: நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31-க்குள் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியிருக்கும் கடிதத்தில்இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, நாடு முழுவதும் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளையும் இனியும் தொடர வேண்டிய அவசியமில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக, மத்திய உள்விவகாரத் துறை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது என்று மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதே வேளையில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை சமூக பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கரோனா கட்டுப்பாடுகள் வரும் 31ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த கரோனா கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 



Read in source website

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, மிசோரம் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ஏஎஸ்எஃப்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மாநிலத்தில் 33,000 க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன.

இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறை இணை இயக்குநர் டாக்டர் லால்மிங்தங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக, சமீபத்தில் சில கிராமங்களில் புதிதாக பன்றி இறப்புகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், சமீபத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்த பன்றிகளின் எண்ணிக்கை குறித்து இன்று புதன்கிழமை மாநில தலைமைச் செயலாளர் ரேணு சர்மாவை சந்தித்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். புதிய பாதிப்பு குறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை அதிகாரிகளும் சர்மாவை சந்தித்து தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார். 

இதற்கிடையில், சமீபத்தில் கிழக்கு மிசோரமின் சம்பாய் நகரில் சில பன்றிகள் இறந்ததற்கு 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' தான் காரணம் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

பன்றிகள் இறந்ததாகப் புகாரளிக்கப்பட்ட சம்பாய் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் மறு உத்தரவு வரும் வரை மார்ச் 21 முதல் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிசோரம்-மணிப்பூர் எல்லையில் உள்ள சகவர்தாய் கிராமத்திலும் 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால்' பன்றிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளதாக கிராம தலைவர் சங்கதன்குமா தெரிவித்துள்ளார்.

மிசோரமில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' காரணமாக பன்றி இறப்புகள் குறித்த புகார்கள் எதுவும் இல்லை. 

மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் டாக்டர் கே பெய்ச்சுவா, சமீபத்தில் முடிவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​கடந்த ஆண்டு ஏற்பட்ட 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' பதிப்பால் 33,417 பன்றிகள் இறந்ததால் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக பேரவையில் தெரிவித்தார்.

மேலும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, மொத்தம் 10,910 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

வங்க தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகளால் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வந்ததாகவும், இது கடந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு மிசோரமின் லுங்லே மாவட்டத்தில் உள்ள லுங்சென் கிராமத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

பின்னர் போபாலில் உள்ள உயர்-பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் இதனை உறுதி செய்தது. 

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களைப் பாதிக்காது. ஆனால், பன்றிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும் கூறப்படுகிறது.



Read in source website

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் ஹரியாணா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கடந்த 4-ஆம் தேதி பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது பேசிய பாஜக மூத்த தலைவரும், முதல்வருமான மனோகா் லால் கட்டாா், ‘தாமாக முன்வந்து மதமாற்றிக் கொண்டால் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால், கட்டாயப்படுத்தியும், அச்சுறுத்தியும் மதமாற்றம் செய்யக் கூடாது.

கட்டாயப்படுத்தி மதமாற்றி குற்றம் செய்பவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் இதன்மூலம் தடுக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 6 மாவட்டங்களில் 127 கட்டாய மதமாற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா பேசுகையில், ‘கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே சட்டம் உள்ளபோது, இந்தப் புதிய சட்டம் தேவையில்லை’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் கிரண் செளதரி பேசுகையில், ‘இந்த மசோதா பிரிவினையை உண்டாக்கும். வருங்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதை பேரவை தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்’ என்றாா். காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.



Read in source website

ஏதாவதொரு காரணத்தால் தோ்வைத் தவறவிடும் தோ்வா்களுக்கு மறுதோ்வு நடத்துவதற்கான விதிகள் காணப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்நிலைத் தோ்வில் வெற்றிபெற்ற சிலா், கடந்த ஜனவரியில் முதன்மைத் தோ்வு நடைபெற்றபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் காரணமாக அவா்களால் ஒருசில தோ்வுகளில் கலந்து கொள்ள இயலவில்லை.

தங்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கவோ அல்லது முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக, கலந்துகொள்ளாத தோ்வுகளை மீண்டும் நடத்தவோ யுபிஎஸ்சிக்கு உத்தரவிடுமாறு 3 தோ்வா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், யுபிஎஸ்சி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘யுபிஎஸ்சி நடத்தும் தோ்வுகளில் தோ்வா்கள் ஏதாவதொரு காரணத்தால் கலந்துகொள்ளத் தவறினால், அவா்களுக்கு மட்டும் மறுதோ்வு நடத்துவதற்கான விதிகள் காணப்படவில்லை.

கடந்த காலத்தில் எந்தவொரு சூழலிலும் யுபிஎஸ்சி மறுதோ்வு நடத்தியது கிடையாது. மத்திய பணியாளா்-பயிற்சித் துறை வகுக்கும் விதிகளின் அடிப்படையில் யுபிஎஸ்சி தோ்வுகளை நடத்தி வருகிறது. தோ்வா்களுக்கான வயது வரம்பைத் தளா்த்துவது, தோ்வில் கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது உள்ளிட்டவை அத்துறையின் கொள்கை சாா்ந்த முடிவுக்குள் வரும்.

மத்திய அரசுக்குத் தேவையான பணியாளா்களை சரியான நேரத்தில் தோ்ந்தெடுத்து வழங்கும் பணியை யுபிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது. சில தோ்வா்களுக்கு மறுதோ்வு நடத்த நோ்ந்தால், உரிய காலத்தில் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்கும் விவகாரத்தில் சிக்கல் ஏற்படும்.

கரோனா தொற்று பரவல் காரணமாகக் கூடுதல் வாய்ப்பு கோரி ஏற்கெனவே தோ்வா்கள் சிலா் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரும் 25-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.



Read in source website


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மன் மலான் மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், அந்த அணி 37 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேசத்தில் டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு கேப்டன் தமிம் இக்பால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தினார். லிட்டன் தாஸ் ஒத்துழைப்பு தந்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அரைசதம் கடந்த இக்பால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வங்கதேச வெற்றியை உறுதி செய்தார். 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்த வங்கதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 82 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் வங்கதேசம் வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இது.



Read in source website


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரௌண்டர்களில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (385 புள்ளிகள்) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால், 357 புள்ளிகளுடன் அவர் ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்திலும், ஜாஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர். 

பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷேன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 196 ரன்கள் விளாசி இரண்டாவது டெஸ்டை டிரா செய்ய உதவிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.



Read in source website

 

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி பார்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

25 வயதே ஆன ஆஷ்லி பார்டி, மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்த ஆஷ்லி பார்டி, இதுவரை 15 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். 

2019ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியிலும், 2021ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியிலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் பட்டங்களை வென்றுள்ளார். 

25 வயதில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் அவர், தற்போது டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள ஆஷ்லி பார்டி, ''டென்னிஸ் விளையாட்டின் மீதான அன்பை எப்போதும் நிறுத்தப்போவதில்லை. எனது வாழ்வின் மிகப்பெரிய அங்கம் டென்னிஸ் விளையாட்டு. ஆனால், எனது வாழ்வின் மற்றொரு பகுதியையும் நான் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். இனி ஆஷ்லி பார்டி விளையாட்டு வீராங்கனையாக இருக்கப்போவதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆஷ்லி பார்டி தொடர்ந்து 121 வாரங்கள் உலகின் முதல் நிலை வீராங்கனையாக நீடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பிர்மிங்கமில் சமீபத்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் நெ.1 வீரர் விக்டர் அக்ஸல்சென்னிடம் மோதினார் லக்‌ஷயா சென். 21-10, 21-15 என எளிதான முறையில் வென்று 2-வது முறையாக ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் பட்டத்தை வென்றார் விக்டர். இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் 5-ல் விக்டரும் ஓர் ஆட்டத்தில் லக்‌ஷயாவும் வென்றுள்ளார்கள். 21 வருடங்களுக்கு முன்பு ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியை வென்றார் இந்தியாவின் கோபிசந்த். அதற்குப் பிறகு மீண்டும் இன்னொரு இந்தியர் பட்டம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ரசிகர்கள். ஆல் இங்கிலாந்து இறுதிச்சுற்றில் பங்கேற்ற 4-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் 20 வயது லக்‌ஷயா சென். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் லக்‌ஷயா சென். முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணியில் உள்ள இந்திய வீரர் இவர் தான். ஸ்ரீகாந்த் 12-ம் இடத்திலும் சார் பிரணீத் 19-ம் இடத்திலும் உள்ளார்கள். இந்தியா ஓபன் போட்டியை வென்ற லக்‌ஷயா சென், ஜெர்மன் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2-ம் இடத்தைப் பிடித்தார்.



Read in source website

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து, எரிபொருள் விலை உயா்வதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று சவூதி அரேபிய அரசு கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தும்போது, எண்ணெய் விநியோகம் தடைபட்டு விலை உயருகிறது.

அதே நேரத்தில், எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டும் என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில் (ஒபெக்) சவூதி அரேபியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே எரிபொருள்கள் விலை பல நாடுகளில் உச்சத்தில் உள்ள நிலையில், சவூதி அரேபியா உள்நோக்கத்துடன் செயல்பட்டு சிறிய அளவிலான தாக்குதலைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயா்த்துகிறது என்ற சந்தேகமும் சா்வதேச அளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் நாட்டின் எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து யேமன் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தும்போது கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து விலை உயருகிறது. இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது’ என்று கூறியுள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ரஷியா- உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 140 டாலா் என்ற உச்ச அளவைத் தொட்டது. இப்போது ஒரு பீப்பாய் 112 அமெரிக்க டாலா்களாக உள்ளது. எனினும், இது ரஷியா-உக்ரைன் போருக்கு முந்தைய விலையைவிட 15 டாலா் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ராமநாதபுரம்: இன்னும் 10 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐஎன்எஸ் கடற்படை விமானத்தளம் நாட்டின் தெற்குப்பகுதியில் அனைத்து விமானங்களையும் இயக்கும் வகையில் பெரிய விமானத்தளமாக மாறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் இரண்டு மேம்பட்ட இலகு ரக எம்கே 3 வகை ஹெலிகாப்டர்கள் இணைக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திர தளபதி துணை அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா தலைமை வகித்தார். விழாவிற்கு ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளத்தின் கமாண்டிங் ஆபீஸர் கேப்டன் விக்ராந்த் எஸ்.சப்னீஷ் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் மற்றும் கடற்படை அலுவலர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா பேசியது: "மேம்பட்ட இலக ரக எம்கே 3 (ஏஎல்ஹெச் எம் 3 ) வகை ஹெலிகாப்டர் முற்றிலுமாக இந்திய தயாரிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கால் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை கிழக்கு பிராந்தியத்தின் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இணைப்பதில் பெருமை கொள்கின்றேன். இந்த ஹெலிகாப்டர்கள் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு, பாதுகாப்பு, மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும்.

மேலும், இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்களுக்கு மருந்துப் பொருட்கள், உதவிப் பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படும். இயற்கை சீற்றங்களின்போது மத்திய, மாநில அரசுகளின் உதவிகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்த ஹெலிகாப்டர்கள் கப்பல்களில் இருந்தும், விமானங்களில் இருந்தும் இயக்கலாம். இந்திய கடற்படை கரோனா காலத்தில் நாடு முழுவதும் மற்றும் உலக நாடுகளுக்கும் மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டது.

நவீன தொழில்நுட்பமாக ரேடார், சென்சார்ஸ், நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியுள்ளது இவ்வகை ஹெலிகாப்டர்கள். ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் கடற்பகுதிகளில் மற்ற பாதுகாப்பு துறைகளுடன் இணைந்து மீனவர்கள் எல்லை தாண்டுவது, போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடற்பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு துறைகள் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

கடற்பாதுகாப்பில் மீன்வளத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், சுங்கத்துறை, இந்திய கடலோர காவல்படையினர் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் இந்திய கடற்படை கடற்பகுதியில் அண்டைநாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் தற்போதுள்ளதைவிட ஐந்து மடங்கு பெரிதாகி குறிப்பாக 8000 அடி ஓடுபாதையுடன் கூடிய இந்தியாவின் தெற்கு பகுதியில் பெரிய கடற்படை விமான தளமாக மாறும். அப்போது இங்கு ராணுவத்தின் சிறிய, பெரிய போர் விமானங்கள், சிவில் விமானங்களை இயக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.

முன்னதாக, வானிலிருந்து ஓடுபாதையில் இறங்கி வந்த 2 புதிய ஹெலிகாப்டர்களுக்கும், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த கடற்படை விமானத்தளம் சிறந்து விளங்குவதாக பாராட்டி, அதன் கமாண்டிங் ஆபீஸர் விக்ராந்த் எஸ். சப்னீஸிடம், கிழக்கு பிராந்திய தளபதி ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.



Read in source website

காபூல்: ஆப்கானிஸ்தானில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெண்கள் பள்ளிகளை மூடுவதற்கு ஆளும் தலிபான் அரசு உத்தரவிட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்களின் ஆட்சி: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர், அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி கலைக்கப்பட்டு, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏழு மாதங்களாக தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் முதல் முறையாக ஆப்கனில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மூடப்படும் என்று அறிவித்தது.

இதுகுறித்து ஆப்கன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இஸ்லாமியச் சட்டம் மற்றும் ஆப்கானிய கலாசாரத்தின்படி ஒரு நல்லத் திட்டம் உருவாக்கப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும். அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகள் படிக்கும் பள்ளிகள் அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை விடப்படுவதாக நாங்கள் அறிவிக்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை தலிபான்களின் செய்தித் தொடப்பாளர் இனாமுல்லா சமங்கனி உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் விளக்க வில்லை. "இது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று ஆப்கன் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜிஸ் அஹ்மதி ராயான் கூறியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை: மேற்குல நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வந்த அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி சரிந்து, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர், இதில் பலர் ஆசிரியர்கள்.

"நாங்கள் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளோம். எங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தேவை. இந்த பிரச்சினையை சமாளிக்க தற்காலிக அடிப்படையில் புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த முயற்சிக்கிறோம்" என அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவிகள் வேதனை: கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று (செவ்வாய் கிழமை) மாலையில் மாணவர்கள் மீண்டும் வகுப்பு திரும்புவதற்கு வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது பாதியிலேயே மாணவிகள் வகுப்பிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.

"என்னுடைய மாணவிகள் அழுதபடியே வகுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் அழுவதைப் பார்ப்பது அத்தனை வேதனையாக இருந்தது" என்று ஒமர் கான் பெண்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

"இது எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இந்தச் செய்தியை எங்கள் பள்ளி முதல்வர் அழுதபடியே எங்களிடம் கூறியபோது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம்" என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத மாணவி ஒருவர் தெரிவித்தார்.

பெண்களுக்கான கல்வி: கடந்த 1996 - 2001 ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் கல்வியையும், பெரும்பாலான பெண் வேலை வாய்ப்புகளையும் தடை செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தது. தலிபான்களின் எதிர்காலத் திட்டங்களுக்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளிப்பதற்கு அந்நாட்டின் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இரண்டு மாதங்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. 12 முதல் 19 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான பள்ளிகள் தனித்தனியாக இருப்பதையும், இஸ்லாமியக் கொள்கைகளின் படி அவை செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலிபான்கள் வலியுறுத்தியிருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பல அரசு வேலைகளிலிருந்து அவர்கள் திறம்பட வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பெண்களின் ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தலிபான்கள், பெண்கள் தனியாக நகரங்களுக்கு வெளியே பயணம் செய்வதை தடைசெய்திருக்கிறார்கள்.

தாலிபான்கள் தங்களின் கொள்கையில் இருந்து பின்வாங்காத பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் கல்விக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.



Read in source website

உக்ரைனுடனான போரில் முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் இயக்கவியல் என்ன? ரஷ்யா பயன்படுத்தும் ஆயுத அமைப்பு என்ன?

உக்ரைனுடன் நடந்து வரும் மோதலில் முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், ஹைப்பர்சோனிக் ஏரோபாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய அன்டர்கிரவுண்ட் வெர்ஹவுஸை அழித்தது என தெரிவித்தார்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்தது ஒலியைவிட 5 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன்கொண்டது மட்டுமின்றி சூழ்ச்சி செய்யக்கூடியது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சூழ்ச்சித்திறன் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையில் இருந்து அதை வேறுபடுத்துகிறது. பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே பயணிக்கக்கூடியது. ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணை பாலிஸ்டிக் போல் பாதையை பின்பற்றாமல், இலக்கை சூழ்ச்சிச்செய்தும் அழிக்கக்கூடியது.

ஹைப்பர்சோனிக் கிளைடர் ஏவுகணை (HGV), ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை என இரண்டு வகையான ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்புகள் உள்ளன. இலக்கை எட்டுவதற்கு முன்பு ராக்கெட்டிலிருந்து ஏவப்படுவதே hysonic glide vehicle. இலக்கை எட்டிய பின் அதி வேக engine என சொல்லப்படும் scramjet விருந்து ஏவப்படுவதே hypersonic cruise Missile.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் நன்மைகள் என்ன?

அமெரிக்க மூலோபாயக் கட்டளையின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜான் ஹைட்டனின் கூற்றுப்படி, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் தொலைதூர, பாதுகாக்கப்பட்ட அல்லது நேர நெருக்கடியான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பதிலளிக்கக்கூடிய, நீண்ட தூர தாக்குதல் விருப்பங்களில் இயக்க முடியும்.

வழக்கமான ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் கடினமான இலக்குகள் அல்லது அன்டர்கிரவுண்ட் பகுதிகளை அழித்திட கைனிடிக் எனர்ஜி ஆற்றலை உபயோகிக்கிறது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை விமானத்தில் கண்டறிய முடியுமா?

அக்டோபர் 2021 இல் வெளியிடப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பற்றிய Congressional Research Service அறிக்கையின்படி, ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் வேகம், சூழ்ச்சித்திறன், குறைந்த உயரம் ஆகியவற்றின் காரணமாக கண்டறிதல் மற்றும் பாதுகாப்பிற்கு சவால் விடக்கூடும். தரை அடிப்படையிலான ரேடார்கள் அல்லது டெரஸ்ட்ரியல் ரேடார்களால் ஆயுதம் பறக்கும் வரை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய முடியாது. இந்த தாமதம், ஏவுகணையை இடைமறிக்க முயற்சியை கடினமாக்குகிறது.

அமெரிக்காவின் தற்போதைய ஏவுகணைப் பாதுகாப்பிற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மாதிரியானது, ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு பதிலளிக்கும் மற்றும் நடுநிலையாக்கும் போதுமான தரவுகளை விரைவாக செயலாக்க இயலாது என்று சில ஆய்வாளர்கள் கூறியதாக காங்கிரஸின் அறிக்கை குறிப்பிடுகிறது

எந்த நாடுகளில் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உள்ளன? எந்த நாடு தயாரித்து வருகின்றன?

2018 ஆம் ஆண்டில் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ‘கின்சல்’ அல்லது டாகர் என அறிவித்த ரஷ்யா, உக்ரைனுடனான போரில் முதல்முறையாக பயன்படுத்தியுள்ளது. ரஷ்யா தவிர, சீனாவும் இந்த ஆயுத அம்சத்தை கையில் வைத்துள்ளது. ஆகஸ்ட் 2021 இல் இலக்கை அடையும் முன், உலகை சுற்றி வர இரண்டு முறை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய கின்சல் ஏவுகணையானது, அதன் இஸ்கந்தர் ஏவுகணையின் மாற்றம் என கூறப்படுகிறது.இந்த ஏவுகணையானது, ஜூலை 2018 இல் MiG-31 விமானத்தில் இருந்து 500 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி சோதனை செய்யப்பட்டது.

கின்சல் MiG-31 இல் இருந்து ஏவப்படும் போது 1200 மைல்கள் வரையிலான வரம்பில் Mach 10 இன் அதிகபட்ச வேகத்தைக் கொண்டிருந்ததாக ரஷ்ய ஊடக அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

இந்த ஏவுகணையை Su-34 நீண்ட தூரப் போர் விமானத்தில் பயன்படுத்துவதாகவும், Tu-22M3 மூலோபாய குண்டுவீச்சில் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2021 இல் லாங் மார்ச் ராக்கெட் மூலம் கிளைடர் ஏவுகணையை சீனா பரிசோதனை செய்தது. னா தன்னிடம் இருக்கும் DF-21 மற்றும் DF-26 ஏவுகணைகளுடன் இணைத்து HGV சோதனையை நடத்துவதாக கூறப்படுகிறது.

சீனாவும் 1200 மைல்கள் வரம்பில் DF-ZF HGV-ஐ விரிவாகப் பரிசோதித்து, 2020இல் களமிறக்கியது. அந்த அறிக்கையின்படி, ஆகஸ்ட் 2018 இல் அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஸ்டார்ரி ஸ்கை-2 (ஜிங் காங்- 2) சோதனையை வெற்றிகரமாக முடித்தது.

அமெரிக்காவில், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் அதன் கடற்படையின் conventional Prompt Strike திட்டத்தின் கீழ் மற்றும் ராணுவம், விமானப்படை மற்றும் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை (DARPA) மூலம் உருவாக்கப்படுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் திட்டங்களின் மேம்பட்ட கட்டத்தில் இருக்கும் அதே வேளையில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.

இந்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை திட்டத்தின் நிலை என்ன?

இந்தியா தனது ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் வாகனத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே இரட்டை திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை உருவாக்கி வருவதாகவும், ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2020 இல் Mach 6 ஸ்க்ராம்ஜெட் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்ததாகவும் காங்கிரஸின் அறிக்கை கூறுகிறது.



புரட்சியாளர் பகத் சிங் உருவப்படம் குறித்த சர்ச்சை; அவரின் கருத்துக்களை கண்டுக் கொள்ளாமல், அவரைப் பற்றி பேசுவதோடு மட்டும் இந்தியா நிறுத்திக் கொண்டது ஏன்?

கட்டுரை: சமன் லால்

Unseeing Bhagat Singh: Why India has stopped at only talking about him: புரட்சியாளர் பகத் சிங்கின் நான்கு உண்மையான புகைப்படங்களை விட, அமர் சிங்கின் ஓவியத்தை அடிப்படையாக கொண்ட, பகத் சிங்கின் உருவத்தை, தனது அலுவலகங்களில் காண்பிக்கும் பஞ்சாப் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 23 அன்று ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட அந்த மாவீரனை கடைப்பிடித்த அணுகுமுறையை விளக்குகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் உரையாடல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் படம் மற்றும் படங்கள் தேசத்திற்காக தனது உயிரைக் கொடுத்தபோது 23 வயதாக இருந்த பகத் சிங்கின் இணையற்ற துணிச்சல் மற்றும் அச்சமின்மையைச் சுற்றியுள்ள நாட்டுப்புறக் கதைகளில் வேரூன்றிய சில அன்பு சார்ந்த ஸ்டீரியோடைப்களிலிருந்து பெறப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்: கலவையான விமர்சனங்கள்

பகத் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட1929 முதல் ​​1931 வரை, பகத் சிங்கின் நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் சிறந்த சிறை நிலைமைகளுக்காக உண்ணாவிரதம் குறித்த செய்திகள் மற்றும் படங்கள், இந்தியா முழுவதும் பல மொழிகளில் பரவலாக செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. ஆனால், அவர் தூக்கிலிடப்பட்ட பிறகு, பகத்சிங்கின் சொந்த எழுத்துக்களை மறந்து போனோம்.

1931 மற்றும் 1936 க்கு இடையில், இந்தி, தமிழ், உருது, ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் பிற மொழிகளில் பகத் சிங் குறித்த கிட்டத்தட்ட 100 புத்தகங்கள் உட்பட குறைந்தது 200 கட்டுரைகள் தடைசெய்யப்பட்டது. அவற்றில் பல பகத்சிங்கின் தோழர்கள் மற்றும் சமகாலத்தவர்கள் மற்றும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்த நபர்களால் எழுதப்பட்டவை. இந்த எழுத்தாளர்களில் சிலர் தண்டிக்கப்பட்டனர்; லாகூர் சதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜிதேந்திர நாத் சன்யால், பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு, பகத் சிங்கைப் புகழ்ந்த முதல் பெரிய ஆளுமை, பிராமண எதிர்ப்பு சுயமரியாதை இயக்கத்தின் நிறுவனர் ஈ.வி. ராமசாமி நாயக்கர் (தந்தை பெரியார்) ஆவார், அவர் மார்ச் 29, 1931 இல் தனது குடி அரசு இதழில் பகத் சிங் குறித்து தலையங்கம் எழுதினார். சில மாதங்களுக்குப் பிறகு, 1930 ஆம் ஆண்டு பகத் சிங்கால் எழுதப்பட்டு, செப்டம்பர் 27, 1931 ஆம் ஆண்டு தி பீப்பிள் ஆஃப் லாகூர் இதழில் வெளியான பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ என்ற கட்டுரையை பெரியார் பெற்றார். இந்தக் கட்டுரையின், ஜீவானந்தம் அவர்களின் தமிழாக்கம் 1934 இல் குடி அரசு இதழில் வெளியானது.

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அந்த நேரத்தில் தனது மராத்தி செய்தித்தாள் ஜந்தாவில், பகத் சிங் மறைவு குறித்து சிறிய தலையங்கம் எழுதினார், மேலும் காந்தி, நேரு, சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பத்திரிகை அறிக்கைகள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

சுவாரஸ்யமாக, பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக நௌஜவான் பாரத் சபாவின் செயல்பாட்டாளர்களிடமிருந்து காந்தி கராச்சியில் கருப்பு மலர்களை ஏற்றுக்கொண்டார், பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் தியாகத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் காங்கிரஸ் தீர்மானம் தடைகளை எதிர்கொண்டது. காந்தியின் விருப்பப்படி, நேருவால் முன்வைக்கப்பட்டு மற்றும் மதன் மோகன் மாளவியாவால் ஆதரிக்கப்பட்ட தீர்மானம், பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தியது, ஆனால் தேசத்தின் இளைஞர்கள் அவரது பாதையைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இது மிகக் குறைந்த பெரும்பான்மையான பிரதிநிதிகளால் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.

லாகூரில் உள்ள நௌஜவான் பாரத் சபா மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களால் ரூ.10 லட்சம் நிதி கோரி திட்டமிடப்பட்ட நினைவிடத்திற்கு ஒத்துழைக்க காந்தி மறுத்துவிட்டார். நௌஜவான் பாரத் சபா தடை செய்யப்பட்டதால், பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்கள் மகாத்மாவின் விருப்பு வெறுப்பைக் கண்டு இழுத்தடித்ததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

1947க்குப் பின்: வெறுமனே உதட்டுப் பேச்சு

பகத் சிங் இளைஞர்களிடம் மறுக்க முடியாத சக்தியாக இருந்தபோதிலும், அரசாங்கத்தின் 250 க்கும் மேற்பட்டவை உட்பட சுதந்திர இந்தியாவின் 1,000 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றுக்கு கூட அவருடைய பெயரிடப்படவில்லை. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ஏற்கனவே பகத் சிங் பெயரைக் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி சமீபத்தில்தான் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட வேண்டும் என்ற திட்டம் தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளது.

அவர் தூக்கிலிடப்பட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, பகத் சிங்கின் எழுத்துக்கள் ஒரே தொகுதியில் சேகரிக்கப்படவில்லை; இருப்பினும், அவை இப்போது பல மொழிகளிலும் சர்வதேச பதிப்புகளிலும் கிடைக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பகத் சிங் இருக்கை உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நிரப்பப்படாமல் உள்ளது, மேலும் அதன் கீழ் எந்த பெரிய கல்வித் திட்டமோ அல்லது ஆராய்ச்சியோ ஏற்பாடு செய்யப்படவில்லை.

பகத் சிங் (சந்திரசேகர் ஆசாத் மற்றும் மாஸ்டர்தா சூர்ஜ்யா சென் போன்றவர்கள்) பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் உருவப்படக் காட்சியகத்தில் இடம் பெறவில்லை, 2003ல் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டியதால், 1943 இல் 20 வயதிற்கு முன்பே தூக்கிலிடப்பட்ட பெரிதாக அறியப்படாத புரட்சியாளர் ஹேமு கலானி இடம்பெற்றிருந்தாலும் கூட பகத் சிங் இடம் பெறவில்லை.

1929 ஆம் ஆண்டில், ”கேட்காதவர்களுக்கு கேட்க செய்ய”, பகத் சிங்கும் படுகேஷ்வர் தத்தும் இந்த நாடாளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகளை வீசினர், பின்னர் மத்திய சட்டமன்றம் என்று அழைக்கப்பட்டது. நிறுவனங்களுக்கு பகத் சிங்கின் பெயரைப் பெயரிடவோ, நாடாளுமன்றத்தில் அவரைக் கௌரவிக்கவோ அல்லது உதட்டளவில் பேசப்படும் அவரது கருத்துக்களையும் தொலைநோக்குப் பார்வையையும் ஊக்குவிப்பதில் தயக்கம் காட்டுவது, அரசு அலுவலகங்கள் மற்றும் விளம்பரங்களில் அவரது உண்மையான படத்தைப் பயன்படுத்தாதது போன்றவை இருவேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

உண்மையில், 2008 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலால் பகத் சிங்கின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த விஷயத்திலும் கூட, புரட்சியாளரின் குடும்ப உறுப்பினர்கள் அவர் தோற்றத்தைப் பற்றி புகார் கூறியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த மறைந்த உருது கவிஞர் ஃபஹ்மிதா ரியாஸ், இது உண்மையான பகத்சிங்கின் முகம் அல்ல என்று கவிதை எழுதியிருந்தார்.

2007-2008 பகத் சிங்கின் நூற்றாண்டு விழாவில் இந்திய அரசு ரூ.5 மற்றும் ரூ.100 நாணயங்களை வெளியிட்டபோது, ​​அவர் தொப்பி அணிந்திருப்பதைக் காட்டி, பஞ்சாபில் உள்ள அகாலிகள் அவரது தலைப்பாகை உருவம் சித்தரிக்கப்படவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாரஸ்யமாக, 1970 களில், அப்போதைய முதல்வர் கியானி ஜைல் சிங், நவன்ஷஹரில் (இப்போது ஷஹீத் பகத் சிங் நகர்) பகத் சிங்கின் தொப்பியுடன் கூடிய சிலையை அவரது இளைய சகோதரர் குல்தார் சிங் முன்னிலையில் திறந்து வைத்தார், ஆனால் அந்தச் சிலை பின்னர் தலைப்பாகை அணிந்தவாறு மாற்றப்பட்டது.



Read in source website

Zomato (ஜொமேட்டோ) குருகிராமில் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய சோதனை செய்யும் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ‘Zomato இன்ஸ்டன்ட்; எனப்படும் அதன் விரைவான டெலிவரி அமைப்பு எப்படி வேலை செய்யும்?

Zomato (ஜொமேட்டோ) குருகிராமில் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய சோதனை செய்யும் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ‘Zomato இன்ஸ்டன்ட்; எனப்படும் அதன் விரைவான டெலிவரி அமைப்பு எப்படி வேலை செய்யும்? நிறுவனம் ஏன் விரைவான உணவு வர்த்தகத்தில் இறங்குகிறது? உணவை வழங்குவதற்கு 10 நிமிடங்கள் மிகக் குறைவான நேரமில்லையா?

விரைவு வணிக நிறுவனமான Blinkit (பிளின்கிட்) உடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்கு பிறகு, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜொமேட்டோ (Zomato) விரைவாக 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்யத் தொடங்க உள்ளது.

‘ஜொமேட்டோ (Zomato) இன்ஸ்டன்ட்’ என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை ஜொமேட்டோ நிறுவனம் குருகிராமில் வேகமாக உணவு விநியோகம் செய்வதற்கான ஒரு மாதிரி திட்டத்தை பரிசோதனை செய்யும் விதமாக ஒரு பரிசோதனை திட்டத்தை இயக்க உள்ளது.

ஜொமேட்டோவின் விரைவான டெலிவரி முறை எப்படி வேலை செய்யும்?

அதிக தேவை உள்ள வாடிக்கையாளர் சுற்றுப்புறங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள ‘ஃபினிஷிங் ஸ்டேஷன்’ நெட்வொர்க்கில் இருந்து விரைவான டெலிவரிகளை இந்த நிறுவனம் செய்யும். தொடக்கத்தில், இந்த முக்கிய திட்டத்தின் ஒரு பகுதியாக குருகிராமில் இதுபோன்ற நான்கு நிலையங்கள் அமைக்கப்படும்.

ஜொமேட்டோவின் ஃபினிஷிங் ஸ்டேஷன்கள், ஜெப்டோ (Zepto) மற்றும் பிளின்கிட் (Blinkit) போன்ற விரைவான வர்த்தக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டார்க் ஸ்டோர் மாதிரியைப் போலவே தெரிகிறது. இது இந்த நிறுவனங்களுக்கு செயல்பாட்டுச் சங்கிலியின் மீது அதிக கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் வழங்குகிறது.

தேவை முன்கணிப்பு மற்றும் ஹைப்பர்லோகல் விருப்பங்களின் அடிப்படையில், ஒவ்வொரு ஃபினிஷிங் ஸ்டேஷன்களிலும் 20-30 பொருட்கள் இருக்கும். அவை கொடுக்கப்பட்ட வட்டாரத்தில் அதிகம் விற்கப்படும். இந்த கிடங்குகளில் டிஷ்-லெவல் டிமாண்ட் முன்கணிப்பு அல்காரிதம்கள் மற்றும் இன்-ஸ்டேஷன் ரோபோட்டிக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளருக்கான விலையை சுமார் 50 சதவீதம் குறைக்க இந்த மாடல் உதவும் என்றும், அதே நேரத்தில் அதன் உணவக கூட்டாளர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களின் முழுமையான வருமானம் அப்படியே இருக்கும் என்றும் ஜொமேட்டோ கூறியுள்ளது.

ஜொமேட்டோ விரைவு உணவு வர்த்தகத்தில் ஏன் இறங்குகிறது?

நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறுகையில், ஜொமேட்டோவின் இன்ஸ்டன்ட் திட்டம் தொடங்குவதற்கான ஒரு காரணம், ஜொமேட்டோ வழங்கும் 30 நிமிட சராசரி டெலிவரி நேரம் மிகவும் மெதுவாக உள்ளது. மேலும், அது விரைவில் காணாமல் போகும். நாங்கள் இல்லை என்றால் அதைவிட விரைவாக வேறு யாராவது செய்வார்கள்” என்று கூறினார்.

மிக வேகமாக டெலிவரி செய்யும் நேரத்தின்படி உணவகங்களை வரிசைப்படுத்துவது ஜொமேட்டோ செயலியில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றாகும் என்றும் கோயல் கூறினார். “வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு விரைவான பதில்களை அதிகளவில் கோருகின்றனர். அவர்கள் திட்டமிட விரும்பவில்லை, காத்திருக்கவும் விரும்பவில்லை.

அறிவிப்பு: Zomatoவில் விரைவில் 10 நிமிட உணவு டெலிவரி செய்யப்படும்.

உணவு தரம் – 10/10
டெலிவரி பார்ட்னர் பாதுகாப்பு – 10/10
விநியோக நேரம் – 10 நிமிடங்கள்

உணவை வழங்குவதற்கு 10 நிமிடங்கள் மிகக் குறைவான நேரமல்லவா?

சாலை நிலைமைகள், போக்குவரத்து, வானிலை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு க்யூ-காமர்ஸ் நிறுவனங்கள் ஹைப்பர்லோகல் ஸ்டோர்களில் இருந்து செயல்படத் தொடங்கினாலும், இந்த அம்சங்கள் இந்தியாவில் இந்த 10 நிமிட டெலிவரி திட்டத்திற்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

விரைவான டெலிவரி வாக்குறுதியை நிறைவேற்ற, டெலிவரி பணியாளர்களை விரைவாக டெலிவரி செய்ய எந்த அழுத்தத்தையும் கொடுக்காது. தாமதமாக டெலிவரி செய்தால் அபராதம் விதிக்காது என்று Zomato கூறியுள்ளது. டெலிவரி செய்ய உறுதியளிக்கப்பட்ட நேரம் குறித்து டெலிவரி தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்படாது என்றும் அது கூறியுள்ளது.



Read in source website

கலப்பு எரிவாயு சிலிண்டர் அறிமுகம்; இது ரூ.654க்கு கிடைக்கும்; முக்கிய தகவல்கள் இங்கே

You can get LPG Gas cylinder at Rs.654 details here: எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் சாமானியர்கள் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், சுமார் ரூ.650 க்கு சிலிண்டர் கிடைத்தால் சூப்பராக இருக்கும் அல்லவா? இது குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம்.

எல்பிஜி கேஸ் சிலிண்டர் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் தேவை. ஆனால், பணவீக்கம் அதிகரித்து வருவதால், எல்பிஜி சிலிண்டர் வாங்குவது சாமானியர்களுக்கு கடினமாக உள்ளது. இதை மனதில் வைத்து சில எல்பிஜி நிறுவனங்கள் கலப்பு எரிவாயு சிலிண்டர்களை (Composite Gas Cylinder) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் விலை பொதுவான சிலிண்டரை விட மிகவும் குறைவாக இருக்கும். இந்த சிலிண்டரின் எடை சாதாரண சிலிண்டரை விட சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, அதில் உள்ள வாயுவின் அளவு குறைவாக இருக்கும். இந்த சிலிண்டர் வெறும் ரூ.634-க்கு கிடைக்கும். குறிப்பாக நிறுவனங்கள் குறைந்த விலையை எதிர்நோக்குபவர்களுக்காக இந்த சிலிண்டரை தொடங்கியுள்ளன. வீடுகளில் எரிவாயு பயன்பாடு குறைவாக உள்ளவர்களும் விலை உயர்ந்த காஸ் சிலிண்டர்களை மட்டுமே வாங்க வேண்டும். இதனால் அவர்களது குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்த கலப்பு எரிவாயு சிலிண்டர் உதவியாக இருக்கும். அதாவது ரூ.634க்கு சிலிண்டர் வாங்குவதால், அவர்களுக்கு ஒரே நேரத்தில் அதிக பணம் தேவைப்படாது.

இரும்பு உருளையை விட கலவை சிலிண்டர் 7 கிலோ எடை குறைவாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் உள்நாட்டு சிலிண்டர் 17 கிலோ எடை கொண்டது. கலப்பு சிலிண்டர் நிச்சயமாக இலகுவானது, ஆனால் அது மிகவும் வலிமையானது. இது மூன்று அடுக்குகளைக் கொண்டது. 10 கிலோ கலப்பு சிலிண்டரில் இப்போது 10 கிலோ எரிவாயுவும் இருக்கும். இந்த வழியில் இந்த சிலிண்டரின் மொத்த எடை 20 கிலோவாக இருக்கும். ஆனால், இரும்பு உருளையின் எடை 30 கிலோவுக்கு மேல் உள்ளது. குறைந்த எரிவாயு காரணமாக, அதன் விலை அதே அளவு குறைக்கப்பட்டுள்ளது. இப்போது சந்தையில் கலப்பு எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே கோரும் ஒரு பிரிவு உள்ளது. முழு கலவையையும் சந்தையில் கொண்டு சென்றால், மக்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும் என்று விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியன் ஆயிலின் படி, மும்பையில் 10 கிலோ எரிவாயு கொண்ட கலப்பு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.634. இதன் விலை கொல்கத்தாவில் ரூ.652 ஆகவும், சென்னையில் ரூ.645 ஆகவும் உள்ளது. இவை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்குகளை மறு ஆய்வு செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஆலோசனை வாரியத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடும் மன உளைச்சலுடன் சிறைவாசம் அனுபவித்து வருபவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
 மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், இந்த ஆலோசனை வாரியத்தின் தலைவராக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னாவும், உறுப்பினர்களாக நீதிபதிகள் சந்திரதாரி சிங், ரஜ்னீஷ் பட்நாகர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், 1980-ஆம் ஆண்டு, செப்டம்பரில் தேசிய பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியர்களையோ இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரையோ கைது செய்து ஓராண்டு வரை சிறையில் அடைப்பதற்கு மத்திய - மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை சீர்குலைக்கத் திட்டமிடுபவர்கள், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது காவல்துறை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இதற்கான உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
 இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய நபர் தலைமறைவாகிவிட்டால், அது குறித்து பெருநகர் மாஜிஸ்திரேட் அல்லது நீதித்துறை நடுவருக்கு எழுத்து மூலம் தகவல் அளிக்க வேண்டும். மேலும், கைது செய்யப்படுபவருக்கு அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை ஐந்து நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதிகபட்சமாக 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரிடம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
 இந்தச் சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஆலோசனைக் குழுக்களை மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். அதோடு, இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மத்திய - மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். ஆலோசனைக் குழுக்கள் பிறப்பிக்கும் உத்தரவு எத்தகையதாக இருந்தாலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை எந்தக் காரணமும் கூறாமல் 3 முதல் 6 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 மிகக் கடுமையான இந்தச் சட்டம், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைவிட, ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறையை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராகத்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.
 தேசிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த1980-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் மொத்தம் 1,200 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 795 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2019 முதல் இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதன் மூலம், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.
 இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்குகளை மறு ஆய்வு செய்வதற்கான ஆலோசனை வாரியத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது.
 "தேசிய பாதுகாப்பு சட்டம்', "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்', "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டை மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
 தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்களையும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பதை குறை காண முடியாது.
 இந்தச் சட்டங்களின் கீழ் ஒன்றுமறியாத அப்பாவிகள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். நாட்டைப் பாதுகாப்பதற்காக இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே அது எதிர்பார்த்த பலனைத் தரும். மத்திய அரசு தற்போது இதை உணர்ந்து, தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய முன்வந்திருப்பது பாராட்டுக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும்!



Read in source website

வானிலை என்பது வளிமண்டலம் சார்ந்தது. அதிலும் காற்று மண்டலம் ஒரு விசித்திரமான அமைப்பு. பூமியில் இருந்து உயரே செல்லும்போதெல்லாம், 16 கிலோமீட்டர் உயரம் வரை ஒரு திருப்பமாக, வெப்பம் தணிந்து குளிரத் தொடங்கும். காற்றின் இந்த அடுக்கினை "திருப்ப மண்டலம்' என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் "ட்ரோப்போஸ்ஃபியர்'. கிரேக்க மொழியில் 'ட்ரோப்போஸ்' என்ற சொல்லுக்கு "திருப்பம்' என்பது பொருள்.
 வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவ மழை, வறட்சி, பெருமழை, சூறாவளி போன்ற அனைத்து வானிலை இயக்கங்களின் கருவறையாக இருப்பது இந்த "திருப்ப மண்டலம்'தான்.
 ஆனால் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வளிமண்டலத்தில் 16 கிலோமீட்டருக்கு மேல் 50 கிலோமீட்டர் உயரம் வரை வெப்பம் ஒரே சீராகப் பரவி இருக்கும். அப்பகுதியின் பெயர் "சீரடுக்கு மண்டலம்'. ஆங்கிலத்தில் "ஸ்ட்ராட்டோஸ்ஃபியர்'. அது ஓசோன் படலம். அது நம் உடம்பின் மேல் தோல் போன்றது. தோல், தன் மேற்பரப்பில் உள்ள மெலனின் புரதத்தினை சூரியனின் புற ஊதாக் கதிர்களை எதிர்த்து உறிஞ்சி தியாக சீலனாய் தானே உருமாறி, அழுக்காகிக் கொள்கிறது.
 அது போல ஓசோன் படலம், சூரிய ஒளிக்கற்றையில் ஏறத்தாழ 200 நானோமீட்டருக்கும் குறைவான அலைநீளம் கொண்ட தீங்கான புற ஊதாக் கதிர்வீச்சினை உள்வாங்கி, இயல்பாகவே தனக்குள் அடங்கிய மிகக் குறைந்த ஆக்சிஜன் மூலக்கூறுகளைப் பிரித்து, ஓசோனை உருவாக்குகிறது. அதாவது, தண்ணீர் லாரித் தொட்டிக்குள் ஒரு புளியங்கொட்டை இருக்கும் அளவுதான் இந்த வளிமண்டல ஓசோன். இயற்கையில் உருவாகும் இந்த வாயு படலம் நம்மைக் காக்கிறது என்று பரப்புவதும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிலைதான்.
 நவீன குளிர்சாதனப் பெட்டிகளில் கையாளப் பெறும் "ஃபிரியான்' எனப்படும் குளோரோ-ஃபுளூரோ கரிம வேதிமங்களும், தொழிற்சாலைப் புகையில் அடங்கிய ஹைடிரோ குளோரைடு, கந்தக அமில வாயுக்கள், குளோரின் ஆக்சைடுகள் ஆகியவை தவிர, மீத்தேன் எனும் சாண வாயுவும், மின்னலின்போது வெளிப்படும் நைட்ரிக் ஆக்சைடு, நிலத்தின் பாக்டீரியாக்கள் உமிழச் செய்யும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற எத்தனையோ காரணங்களாலும் வளிமண்டல ஓசோன் போர்வை பொத்தலாகி வருகிறது என்கிறோம்.
 அந்தப் படலத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதும், பனி உறைநிலைக்கும் மிகத் தாழ்ந்த நிலையில் சற்று கூடினாலோ காற்றழுத்தம் வேறுபட்டாலோ, ஓசோன் உற்பத்தி இயல்பாகவே குன்றும். அதனையே ஓட்டை என்று வர்ணிக்கிறோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி - தும்பாவில் சோவியத் ரஷிய வானிலை ஆய்வுகள் தொடங்கின.
 1983 மார்ச் 23 முதல் 29 வரை சோவியத் ரஷியாவின் "எம்-100' எனும் ஆய்வூர்தியின் பயன்சுமையாக ஒளியியல் மற்றும் வேதியியல் ஓசோன் அளவிகள் பறக்கவிடப் பெற்றன. இதன்வழி நிலநடுக்கோட்டுப் பகுதியின் வளிமண்டல ஓசோன் அளவுகள் பதிவாயின.
 வானில் மட்டுமா, வீட்டுக்குள்ளும் ஓசோன் உண்டாகிறது. லேசர் அச்சடிப்பான்கள், நகல் எடுக்கும் இயந்திரங்கள், இரும்புப் பற்ற வைப்பான்கள், மின் இயக்கிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் அலுவலகங்களிலும் உதவும் மின் தூக்கிகள், நீர் இறைக்கும் மின் நீரேற்றிகள் என அனைத்து உபகரணங்களின் பயன்பாட்டிலும் ஓசோன் உருவாகிறது. ஒருவிதக் கருவாட்டு மீன் வாடையும் இளம் நீல நிறமும் கொண்ட வாயு இது.
 இத்தகைய மின்சாதனங்களில் கரித்தண்டின் உராய்வில் வெளிப்படும் ஊதாக்கதிர்களால், அழுத்தம் குறைந்த ஆக்சிஜன், ஓசோனாகி நீக்கமற நிறைந்து விடுகிறது. நாம் அதற்குள்தான் வாசம் செய்கிறோம். வீட்டில் வாங்கி வைக்கும் தூய நீராக்கி உபகரணங்களின் புற ஊதாக் கதிர்களால் நீரில் கனிந்துள்ள ஆக்சிஜன், ஓசோன் ஆகலாம். அது நல்லது என்கிற சான்றுப் பத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை.
 அமெரிக்காவின் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை'யின் தகவலின்படி, துர்நாற்ற வேதிப் பொருள்களையோ, நுண்மிகள், நுண்கிருமிகள், பூஞ்சைகள் போன்ற ஏனைய உயிரியல் மாசுக்களையோ ஓசோன் அப்புறப்படுத்துவது இல்லை.
 இருமல், தொண்டை எரிச்சல், மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் ஓசோனால் வரக்கூடியவை. எதிர்-ஆக்சிகரணிகளாக வைட்டமின்-சி, வைட்டமின்-இ பற்றாக்குறை உடையவர்களுக்கு பிரச்னைதான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தினைக் காட்டிலும் இன்று பூமியில் தரைமட்டத்தில் பரவியிருந்த ஓசோன் அளவு அதிகரித்துள்ளது.
 கரியமில வாயுவின் அளவில் கால் பாகம் அளவுக்கு பசுமைக்குடில் விளைவில் ஓசோன் பங்களிக்கிறது என்பது உண்மை. வானிலையியல் மாற்றங்களுக்கான சர்வதேச நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை தெரிவிக்கும் தகவல் இது.
 வளிமண்டல ஓசோனில் விழும் ஓட்டைக்கு, வீட்டுக்குள், நாட்டுக்குள் செய்யும் கைங்கரியங்கள் மட்டும் காரணம் அல்ல. வீட்டுக் கூரைக்கும் மேலே வந்து விழும் அண்டக்கதிர் வீச்சுக்களும், காந்தப் புயல் வீச்சுக்களும்கூட காரணிகள்தாம்.
 அடிமை இந்தியாவில், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அச்சேறியதால் கிடைத்த நூல் ஆதாரங்களை மட்டும் வைத்து, ஆராய்ச்சி செய்யாமல், பன்முக உலகறிவுடன் அனைவரும் ஆய்வுகளை மேற்கொள்ள முயல வேண்டும். கட்சி, இயக்கம், பொருளாதார நிலை சார்ந்து பக்கத்தில் உள்ளவற்றையே உற்று கவனிக்கும் மண்புழுக்களின் பார்வை சமூக ஆர்வலர்களிடமும் உண்டு. எட்ட நின்று பார்த்தால், ஒரு மீனின் கண்ணோட்டம் மாதிரி, அக்கம்பக்கம் உள்ள வேறு சில மீன் கூட்டங்களும், ஏன் தாவரங்களும் கூடத் தெளிவாகத் தெரியும்.
 அதற்கும் அப்பால், விசாலமான பார்வைதான் பறவைக் கண்ணோட்டம். ஒரு இனப் புழுக்கள், ஒரு சாதி மீன்கள் போன்றவற்றையும் தாண்டி, இன்னும் விரிந்த நிலமும், நீரும் கண்ணில் படியும். அதைப் போலத்தான், இந்தத் திருப்ப மண்டலம், சீரடுக்கு மண்டலங்களைத் தாண்டி இடை மண்டலம், வெப்ப மண்டலம், அயன மண்டலம் போன்ற பல்வேறு காற்று அடுக்குகள் உள்ளன. வளிமண்டலத்தில் ஏறத்தாழ 100 முதல் 500 கிலோமீட்டர் வரையிலான உயரங்களில் அயனிகள் செறிந்து இருக்கும்.
 ஏறத்தாழ 250-400 கிலோமீட்டர் உயர வளிமண்டல ஆராய்ச்சிக்கு இந்த ராக்கெட்டுகள் அனுப்பும் பயன்சுமைகள் தகவல் வளம் சேர்க்காது. இதனால் அத்தகைய உயரங்களில் புவியைச் சுற்றியவாறே வானிலையை அளந்திட செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. தாழ்புவி மண்டலம் தொட்டு அதனையும் தாண்டிப் புறமண்டலத்தையும் அளந்துவிடும் ஆற்றல் மிக்கவை அவை.
 இந்தப் புறமண்டலத்தில் பிளாஸ்மா மற்றும் எலக்ட்ரான்கள் வியாபித்து உள்ளன. புவி சார்ந்த பிளாஸ்மா மற்றும் சூரிய பிளாஸ்மா ஆகிய இருபெரும் புறவெளி மண்டலங்கள் கடல் நீரும் கரையும் போல அண்டப் பெருவெளியில் கலந்து விடுகின்றன. அந்த 64,000 கிலோ மீட்டர் எல்லையில்தான் புவிகாந்த மண்டலம் வளையமிட்டு உள்ளது.
 இந்த எல்லைகளுக்குள் தெற்கு வடக்காக இயங்கி வரும் கதிர்வீச்சுப் பட்டைகளை "ஆலன் கதிர் வீச்சு வளையங்கள்' என்று குறிப்பிடுவர். 1958-இல் அமெரிக்காவின் "எக்ஸ்புளோரர்-1' எனும் செயற்கைக்கோள் இந்தக் கதிர்வீச்சு வளையங்களை அணுகி ஆராய்ந்தது. சோவியத் நாடு 1964 ஜனவரி மாதம் "எலக்ட்ரான்-1', "எலக்ட்ரான் - 2' ஆகிய இரு செயற்கைக்கோள்களை செலுத்தி இந்த கதிர்வீச்சு ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
 தொடர்ந்து அமெரிக்க நாட்டு "டைரோஸ்', "நிம்பஸ்', சோவியத் நாட்டு "காஸ்மாஸ்', "ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் "மீட்டியோசாட்', இந்தியாவின் "இன்சாட்', ஜப்பானின் 'ஜி.எம்.எஸ்' எனப்படும் "ஜியோஸ்டேஷனரி மிட்டிரியோலாஜிகல் சாட்டிலைட்' என்கிற புவி நிலைவட்ட வானிலைச் செயற்கைக்கோள் - எனப் பல்வேறு நாடுகளும் இந்த வானிலை ஆய்வில் முழுமூச்சுடன் ஈடுபட்டன.
 சூரியனின் மேற்பரப்பின் காந்தப்புயல் மண்டலத்தில் இருந்து அணு இம்மிகள் வெவ்வேறு வேகத்தில் நியுட்ரினோ காற்றாய்ச் சீறிப் பாய்கின்றன. இந்தப் புயல் அளவு கடந்த 50 ஆண்டுகளாகவே அதிகரித்து அதிகரித்து தற்போது உக்கிரமாகி வந்துள்ளது. இந்த சூரிய காந்தப் புயலால் புவிக்காந்த மண்டலமும் பிறவும் இயல்பாகவே பாதிப்புக்கு உள்ளாகும்.
 இதற்கிடையில், 1957-இல் "ஸ்புட்னிக்' ஏவப்பட்ட பின், இன்று வரை 11,140 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு, அவற்றில் ஏறத்தாழ 7,390 செயற்கைக்கோள்கள் இன்றுவரை செயல்பாட்டில் உள்ளன. அவற்றின் மின்காந்தக் கதிர் கற்றைகளின் உபயத்தினால் விரல்நுனியில் அண்டவெளிச் செய்திகள் மண்டிக்கிடக்கின்றன.
 புற விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணப்படி, 2020-ஆம் ஆண்டில் மட்டும் 1,283 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவரத் தொடங்கின. 2021-இல் 850 செயற்கைக்கோள்கள் பூமிக்கு வெளியிலிருந்து, மின்காந்த அலைகளை வளிமண்டலம் வழியாகவே தகவல் பரிமாறுகின்றன.
 ஆயினும் தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்களில் கையாளப்படும் "எல்-அலைவரிசை' (1-2 கிகா ஹெர்ட்ஸ்) நில வாகனப் போக்குவரத்திற்கு உதவும் இருப்பிடங்காட்டி அமைப்புகள் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்), புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் போன்றவற்றில் இடம்பெறும் மின்காந்தக் கற்றைகளால் தலைவலி, ஞாபக மறதி, மூளைக்கட்டி, கற்றல் குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகும் என்ற கருத்து "பயோமேட் இன்டர்நேஷனல்' (சர்வதேச உயிரி மருத்துவம்) என்னும் இணைய இதழில் பதிவாகியிருக்கிறது (4.9.2021).
 காலமும் சூழலும் கலாசாரக் கூறுகளும் மாறி மாறிப் பரிணமிக்கும் இன்றைய காலகட்டத்தில் புதிய மானிட இனத்திற்குத் தேவை, தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் நுட்பமும், கருவிகளை நவீனப்படுத்தும் தொழில்நுட்பமும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 
 இன்று (மார்ச் 23) உலக வானிலை நாள்.
 
 கட்டுரையாளர்:
 இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).



Read in source website

கடந்த மார்ச் 16-ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. 2008, 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மார்ச் 15 நிலவரப்படி, தடுப்பூசி போடுவதற்குரிய வயதை அடைந்தவர்களில் சுமார் 75% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் சுமார் 46% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. அவர்களில் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பதின்வயதினரில் 5.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் தவணையையும் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், 12-14 வயதினருக்கும் தற்போது தடுப்பூசியின் பாதுகாப்பு வளையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கியதாக இது விரிவுபெற வேண்டும்.

இந்தியாவில் வயதுவந்தோருக்கான கரோனா தடுப்பூசிகளாக கோவிஷீல்டு, கோவாக்ஸின், கோர்பேவேக்ஸ் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 15-18 வயதினருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்ஸின் மட்டுமே போடப்பட்டுவந்தது. மார்ச் 16 முதல் 12-14 வயதினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ள தடுப்பூசித் தவணைகளில் முதன்முறையாக கோர்பேவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

ஹைதராபாதைச் சேர்ந்த ‘பயாலஜிகல் இ’ நிறுவனத்தால் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுவருகிறது. முற்றிலும் இந்தியாவிலேயே மேம்படுத்தப்பட்ட உயிரிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தடுப்பூசி இது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போடப்பட வேண்டியது. கடந்த பிப்ரவரி 21 அன்று இதற்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. 12 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கரோனாவின் மூன்றாவது அலையை முன்கூட்டிய திட்டமிடலுடன் இந்தியா வெற்றிகரமாகக் கடந்துவிட்டாலும் உலகின் சில பகுதிகளில் இன்னும் கரோனாவின் பரவல் கவலைக்குரியதாக உள்ளது. சீனாவிலும் தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கரோனா தொற்று பரவிவரும் வேகம் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவின் உருமாறிய வடிவங்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், இந்தியாவில் உரிய வயதடைந்தவர்கள் அனைவரும் தடுப்பூசிப் பாதுகாப்பைப் பெற வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசியின் வாயிலாக கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திவரும் நிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்குள் பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் அனைவரையும் விரைவில் தடுப்பூசிப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். அதற்கான ஆராய்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.



Read in source website

கரோனாவுக்குப் பின்னர் இந்த உலகம் முழுவதும் ஒற்றை நோய்க்கு எதிராக மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றது. அத்தனை ஆராய்ச்சிகளும், அத்தனை தடுப்பூசிகளும் ஒரே நோய்க்கு எதிரான பாதையில் முடங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு அதீத கவனம் பெற்றுள்ளது கரோனா. தீவிர ஆராய்ச்சிகள், துரித தடுப்பூசிகளால் தான் கரோனாவிலிருந்து உலகம் மீண்டு கொண்டிருக்கிறது என்பது எப்படி மறுப்பதற்கில்லையோ அதேபோல், பேசப்படாத பாகுபாடுகளால் இன்னும் சில நோய்கள் ஒழிக்கப்படாமல் அதற்கான இலக்குகள் மட்டும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்லப்படுகின்றன என்பதும் நிதர்சனம். அதனால் தான் பில் கேட்ஸ் இனி தன் கவனத்தை காசநோய் ஒழிப்பில் செலுத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

இங்கே ஒழிக்கப்பட வேண்டியதற்கு நிறைய நோய்கள் இருக்கின்றன. மனித சமுதாயத்தை 1400 ஆண்டுகளாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காசநோய் அதில் முதலிடத்தில் இருக்கிறது.

மார்ச் 24... உலக காசநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருத்துருவாக 'Invest to End TB. Save Lives' காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம். உயிர்களைக் காப்போம் என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தினத்தையொட்டி அரசு நிகழ்ச்சிகளுக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் இது ஒருநாளில் முடியும் கதையல்ல. காசநோய் ஒழிப்பிற்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு 2025. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கு காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு என்றால் பெரிய அளவிலான நிதி என்று மட்டும் நினைக்க வேண்டாம். அதற்கு பன்முகத்தன்மை இருக்கிறது.

டிபி லீடர்ஸ் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வளர்ச்சியோ, புரட்சியோ அது அடிமட்டத்தில் இருந்து தொடங்கப்பபட்டால்தான் பலன் தருவதாக இருக்கும். அவ்வாறாக, காசநோய் ஒழிப்பில் ரீச் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய களப்பணியாளர்கள் சிலரிடம் 'காசநோய் இல்லாத 2025 இலக்கு' குறித்து பேசினோம்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயந்தியிடமிருந்து அனுபவப் பகிர்வை ஆரம்பிப்போம். ஜெயந்தி எம்.எஸ்.சி., பிஎட் படித்துள்ளார். திருமணம், குழந்தை என இவரது வாழ்க்கை இயல்பாகத் தான் சென்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பின்னால் திடீர் காய்ச்சல், கடுமையான இருமல் என இவரை காசநோய் பாடாய்ப்படுத்தியுள்ளது. அப்போது தான் கரோனா உச்சத்தில் இருந்த நேரம் என்பதால் கரோனா தான் வந்துவிட்டதோ என்றும் பரிசோதனை செய்துள்ளார் ஜெயந்தி. ஆனால், கரோனா நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்தன. பின்னர் மருத்துவர் வழிகாட்டுதலுடன் காசநோய் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் செய்தார். கடைசியாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு காசநோய் இருப்பது உறுதியானது.

"காசநோய் ரிப்போர்ட்டுடன் நான், வெளியே குழந்தையுடன் கணவர். உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்" என்றார் ஜெயந்தி. அவரது அந்த அச்சம் உண்மைதானோ என நிரூபிப்பதுபோல் அவருடைய கணவரின் பிரிவு அமைந்தது. காசநோயாளியுடன் வாழ முடியாது என கணவர் விட்டுப்பிரிய, சமூகத்தில் இன்னமும் அந்நோய் மீதான பார்வையின் நிலை என்னவென்பதையும் அவருக்கு உணர்த்தியது. ஆனால் ஜெயந்தி ஒன்றை மட்டும் சரியாக செய்தார். 6 மாதங்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் விடாமல் மாத்திரை எடுத்துக் கொண்டார். விளைவு காசநோயிலிருந்து பூரண குணமடைந்தார்.

காசநோய் தனக்கு சாத்திய கதவுகள் தான் அவரை சமூகத்தின் இறுக்கமான மனக்கதவையும் தட்ட வைத்துள்ளது. ரீச் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று காசநோய் ஒழிப்பு களப் பணியாளர் ஆனார். காசநோயில் இருந்து மீண்டவரே களப் பணியாளர் ஆகும்போது சமூகத்தை அணுகுவது எளிது எனக் கூறுகிறார் ஜெயந்தி.

"மக்கள் முன் நான் போய் நிற்கும்போது, எனக்குக் காசநோய் இருந்தது. தொடர்ந்து மருந்து சாப்பிட்டேன். பூரண நலத்துடன் உள்ளேன். இதில் தயக்கமோ, வெட்கமோ தேவையில்லை. ஆரம்பநிலையில் சிகிச்சை, விரைவில் பூரண குணம் தரும் என்பேன். அனைவரும் கேட்டுக் கொள்வார்கள்" எனக் கூறினார். இப்போது காசநோய் களப்பணியாளராக குடும்பத்திற்கான வருமானத்தையும் ஈட்டுகிறார் ஜெயந்தி.

அவர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்... இன்னும் நம் சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் தேவைப்படுகிறது. இப்படியாக கிராம அளவில், வட்ட அளவில், மாவட்ட அளவில் என களப் பணியாளர்கள் இணைந்து செயல்பட்டால் 2025 என்ன அதற்கும் முன்னதாகவே காசநோயை இந்தியாவில் இருந்து ஒழிக்கலாம் என்கிறார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுணா காசநோயாளி அல்ல. ஆனால், வல்லியூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக இருந்தவர் கரோனா காலத்தில் காசநோயாளிகளுக்கான மாத்திரைகளை கொடுக்கும் பணியை கூடுதலாக செய்து வந்துள்ளார். அந்த வேளையில் அவரது ஒப்பந்த பணி முடிவடைய, எஸ்டிஎஸ் என அழைக்கப்படும் சீனியர் டிபி ஸ்டாஃப் உதவியுடன் டிபி ஒழிப்பு களப் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து அந்தப் பணியை பெற்றுள்ளார்.

அவர் கூறியதாவது: ”சேலம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரீச் அமைப்பு சார்பில் என்னைப் போன்ற களப் பணியாளர்கள் டிபி லீடர்களாக பணியமர்த்தப்பட்டனர். நாங்கள் மொத்தம் 35 பேர். ஒன்றரை ஆண்டுகள் இந்தப் பணியில் இருந்தோம். கரோனா காலத்திலும் கூட நாங்கள் எங்கள் பணியை விடாது செய்தோம். எங்களுக்கான சேஃப்டி கிட் எல்லாமே கொடுத்திருந்தனர். அத்துடன் வீடுவீடாகச் சென்று காசநோய் பற்றி விசாரிப்போம். அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். கரோனா உச்சத்தில் இருந்த காலம் என்பதால் பலரும் எங்களுடன் ஒத்துழைக்க மறுப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு நோய் முற்றினால் ஏற்படும் சிக்கலை விளக்கி அழைத்துச் செல்வோம். பொதுவாக மக்களுக்கு காசநோய் உறுதியானால் மருத்துவமனைக்கு அலைந்து திரிய வேண்டுமோ, கூலித் தொழில் என்னவாகும் என்ற அச்சம் தான் இருக்கும்.

நாங்கள் அவர்களுக்கு மாத்திரை பெறுவது எவ்வளவு எளிது. ஃபோனிலேயே ஆலோசனைகளைப் பெறுவது எப்படி, ஊக்கத்தொகையை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வோம். அதில் அவர்கள் சிகிச்சைக்கு உடன்பட்டுவிடுவார்கள். நான் மட்டும் கடந்த 1.5 ஆண்டில் 75 நோயாளிகளை நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடையாளம் கண்டு தந்துள்ளேன். இவர்களில் 35 பேர் 6 மாத சிகிச்சை முடித்து இயல்புக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். மேல்தட்டில் உள்ள மக்கள் ஓரளவுக்கு சுயமாக சிகிச்சையை மேற்கொள்கின்றன. ஆனால், கடைநிலையில் உள்ள சாமான்ய மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும், வீடு தேடிச் சென்று சமரசம் செய்யும் பேச்சு தேவைப்படுகிறது. எங்களுக்கான ஊதியம் குறைவு தான். ஆனால் எங்களால் சமூக அளவில் உள்ள நோயாளிகள் கண்டறிதலும், சிகிச்சைக்கு சரியான நேரத்தில் உட்படுத்தப்படுவதும் அதிகமாக உள்ளதாக நாங்கள் சார்ந்த தொண்டு நிறுவன ஆய்வறிக்கைகளே குறிப்பிடுகின்றன. ஆகையால், காசநோய் ஒழிப்பு இலக்கின் காலம் அருகில் இருக்கும்போது எங்களைப் போன்ற களப் பணியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஊதியத்தையும் தாண்டியும் நாங்கள் சமூக சேவைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

பல்முனை ஒத்துழைப்பு தேவை: காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம் என்ற கருத்துரு குறித்து விவரித்த மருத்துவர் ரம்யா, ”நான் இதை வெறும் பண முதலீடு என்பதைத் தாண்டி பல்முனை ஒத்துழைப்பை முதலீடாக எதிர்பார்க்கிறேன். கரோனா ஒழிப்பில் சுகாதாரத் துறை மட்டுமல்ல ஐடி துறை தொடங்கி காவல்துறை வரை பலமுனை ஒத்துழைப்பு இருந்தது. அதனால் மருந்து கண்டுபிடிப்பு, சிகிச்சை முறையில் நாளுக்கு நாள் மேம்பாடு என எல்லாமே சாத்தியமானது. முதல் அலை, மூன்றாம் அலை, ஐந்தாம் அலை என எத்தனை வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பது மக்கள் தொடங்கி மருத்துவர் வரை அத்துப்படியாக உள்ளது. இது மாதிரியான Multi Sectoral Colloboration... பல்முனை ஒத்துழைப்பைத் தான் நாங்கள் காசநோய் ஒழிப்பில் எதிர்பார்க்கிறோம்.

காசநோயால் விமான சேவைகள் முடங்கவில்லை, வர்த்தகம் தடைபடவில்லை, சர்வதேச மாநாடுகள் முடங்கவில்லை என்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் வீச்சை நாம் மட்டுப்படுத்தினால் இலக்குகளை நீட்டித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியிருக்கும். ஒருமுறை ஒரேமுறை வார் ஃபூட்டிங் எனப்படும் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் காசநோய் ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வெறும் சுகாதாரத் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாண்டி பல்முனை ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். இதுதான் நான் காசநோய் ஒழிப்பில் காண விரும்பும் முதலீடு.

அதேபோல் மனித ஆற்றல் இன்னொரு மகத்தான முதலீடு. காசநோயில் இருந்து மீண்டவர்களால் தான் காசநோய் ஒழிப்பில் இன்னும் திறம்பட இயங்க முடியும். கிராஸ் ரூட்ஸ் அளவில் அத்தகைய டிபி லீடர்களை களப்பணியாளர்களாக்கினால் தொற்றை கண்டறிவதும், சிகிச்சையை துரிதப்படுத்துவதும் எளிதாகும். அவர்களை அவ்வாறு களப்பணியார்களாக்க வேண்டுமானால் முறையான பயிற்சியும் அதன் பின்னர் அவர்களது பணிகளைக் கண்காணித்தலும் தேவைப்படும். இதற்கு நிதி முதலீடு தேவைப்படும். இங்கு அரசு தாரளமாக முதலீடு செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

டெல்லியில் நடைபெறவுள்ள காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நோயிலிருந்து மீண்ட பெண் ஒருவர் தான் குத்துவிளக்கேற்றி வைக்கவுள்ளார். அதுபோலவே சமூகத்தில் கடைநிலையில் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெளிச்சத்தைப் பாய்ச்சுதலை நோயில் இருந்து மீண்டவர்களை களப்பணியில் ஈடுபடுத்தும் போது மேற்கொள்ள முடியும்” என்றார்.

காசநோய் ஒழிப்பில் களப்பணியாளர்கள் கணிக்கும் பாதையை மத்திய, மாநில அரசுகளும் பின்பற்றலாமே.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in



Read in source website

புதிய அரசு அமைந்த சில மாதங்களிலேயே பள்ளிக் கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. கடந்த ஞாயிறு (20.3.2022) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,200 எண்ணிக்கையிலான தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்புக்கான ஆயத்தக் கூட்டம் பிரம்மாண்டமாக விழாக்கோலம் பூண்டிருந்தது. மாநிலமெங்கும் 23 லட்சம் பெற்றோர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். பள்ளிகள் தொடர்பாகப் பெற்றோர்களுடன் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய நிகழ்வு இது.

2009-ம் ஆண்டின் இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தின் மிக முக்கியக் கூறுகளில் ஒன்று, பள்ளி மேலாண்மைக் குழு (SMC-School Management Committee). அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டிய அமைப்பு இது. பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் என்று 20 உறுப்பினர்களை உள்ளடக்கியதுதான் SMC. பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர்தான் இவ்வமைப்பின் தலைவராக இருக்க வேண்டும். பெண்களுக்குத்தான் தலைவருக்கான முன்னுரிமை தரப்படுகிறது.

மாற்றுத் திறனாளிக் குழந்தையின் பெற்றோர், பள்ளியில் படிக்கும் குழந்தையின் தூய்மைப் பணியாளர் பெற்றோர், பட்டியலின-பழங்குடியினக் குழந்தைகளின் பெற்றோர் இவர்களுள் ஒருவரே துணைத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வழிகாட்டுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியரே குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் இருப்பார். அவரைத் தவிர, பள்ளியின் ஆசிரியர் ஒருவர் உறுப்பினராகச் செயல்பட வேண்டும். பள்ளியில் படிக்கும் நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் 12 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்களில் 7 பேர் பெண்களாக இருப்பது கட்டாயம் என்கிறது சட்டம்.

மேலும், பள்ளிப் பகுதியைச் சேர்ந்த, உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் இருவர் SMC-ன் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களில் ஒரு பெண் இருக்க வேண்டும். கல்விமீது ஆர்வம் கொண்ட உறுப்பினர் ஒருவர், ஓய்வுபெற்ற ஆசிரியரோ அரசுசாரா அமைப்பினரோ குழுவில் இடம்பெறுவார்கள். இவர்கள் அனைவருடனும் சேர்த்து, சுய உதவிக் குழுவில் இருக்கும் பெற்றோர் ஒருவர் என மொத்தம் 20 உறுப்பினர்களுடன் SMC கட்டமைக்கப்பட வேண்டும். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதியதாக இக்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பள்ளிப் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதற்குமான முன்னெடுப்புகளில் இக்குழு கவனம் செலுத்துவதோடு, குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளிகளுக்குத் தேவைப்படும் வகுப்பறை, குடிநீர் கழிப்பறை கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் பாதுகாப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளி நூலகத் தேவை, குழந்தைகளுக்கான பிற தேவைகள், பாலியல்ரீதியாக உருவாகும் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது, உயர் கல்வி மாணவர்களுக்கு வழிகாட்டுவது, உதவிசெய்வது என்று பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் தரமான கல்விக்கும் பாதுகாப்பான கல்விக்கும் ஆசிரியர்களுடன் இணைந்து பொறுப்பேற்பதுதான் இக்குழு உறுப்பினர்களின் பணிகள்.

உறுப்பினரல்லாத பெற்றோர்கள் இக்குழுக் கூட்டத்தில் அவர்களது கருத்துகளையும் வெளிப்படுத்தலாம். தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் கலந்துரையாடி முடிவுகளை எடுத்துப் பள்ளியை மேம்படுத்த முன்வருவதும், பள்ளிகளின் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்துவதும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளின் நீட்சியாக இருக்கும் எனலாம்.

இவை மட்டுமின்றி, வருடத்தில் 4 முறை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் (ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2) பள்ளி வளர்ச்சித் தீர்மானங்களை அரசுக்கு அளித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் வழியாகப் பள்ளிக்கான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளலாம்.

இப்படியாக, அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த, வளப்படுத்த உதவும் மிகச் சிறந்த ஆயுதமே பள்ளி மேலாண்மைக் குழுக்கள். 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்களிடம், பெற்றோரிடம் இது குறித்த விவரங்கள் முழுமையாகச் சென்று சேராமல் இருந்தன. தங்கள் சிக்கல்களைச் சமாளிக்க இயலாமல் நலிவடைந்த அரசுப் பள்ளிகளும் உண்டு. அவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வாக இந்த நிகழ்வைப் பார்க்கலாம்.

மக்களுக்கான ஒரு அரசானது சமூகத்தின் ஆதாரமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விவரங்களை மாநிலம் முழுவதும் ஒரே நாளில் விழிப்புணர்வாக எடுத்துச்சென்றதை நேர்மறையாகப் பார்க்கலாம். இந்த நிகழ்வு, அனைத்துப் பெற்றோரிடமும் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் முதல் வாரம் மீண்டும் பெற்றோர்கள் வந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். அப்படி உறுப்பினராகும் பெற்றோர்கள் உள்ளிட்ட சமூகம் நமது அரசுப் பள்ளிகளின் நீண்ட காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளுக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் நியமிப்பதை மாநிலம் முழுக்க SMC கோரிக்கையாக வைத்து ஆசிரியர்களை அமர்த்தினால் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்.

அதே போல முதல்வர் வெளியிட்டுள்ள வாசிப்பு இயக்கம் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் இக்குழு உறுப்பினர்கள் நடைமுறைப்படுத்தினால், சமூக மாற்றங்கள் நிகழும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மழலையர் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், கற்பித்தல் உபகரணங்கள், புதிதாக அரசுப் பள்ளிகளை வந்தடைந்திருக்கும் பல லட்சம் குழந்தைகளுக்கான ஆசிரியர் நியமனம், கழிப்பறை வசதிகள், துப்புரவுப் பணியாளர்கள் நியமனம், சுற்றுச்சுவர் அமைப்பு, இரவுக் காவலரை நியமித்துப் பள்ளி வளாகத்தைப் பாதுகாத்தல், பள்ளித் தளவாடப் பொருட்கள், பள்ளிகளில் குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர் நியமனம் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கவனம் செலுத்தினால், நம் பள்ளி என்றுமே நம் பெருமைதான். அரசுப் பள்ளிகளைப் பொலிவு பெறச் செய்யப்போவது இந்த SMC என்ற வெளிச்சக்கீற்றுதான் என்பதில் ஐயமில்லை.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர், கல்வியாளர்.

தொடர்புக்கு: uma2015scert@gmail.com



Read in source website

ஃபோக்ஸ்வாகன் வாகனங்களுக்கு எரிபொருள் தொட்டிகளை உற்பத்திசெய்யும் ஆஸ்திரியாவின் ஒரு தொழிற்சாலை அது. அங்கு உற்பத்தியான ஆயிரக்கணக்கான எரிபொருள் தொட்டிகளின் உலோகச் சுவரில் மயிரிழை அளவில் விரிசல். விரிசலுக்கான காரணமோ தீர்வோ தெரியாமல் நிர்வாகிகள் தத்தளித்த சூழலில், அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருந்தார் ஜி.டி.நாயுடு.

உலோகத் தகடுகளைத் தொட்டிகளாக மாற்றும் பிரஸ்ஸிங் இயந்திரத்தைச் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார். சிகரெட் பெட்டியிலிருந்து வழவழப்பான மெழுகுத்தாளை எடுத்து, பிரஸ்ஸிங் இயந்திரத்துக்கும் தகடுக்கும் இடையில் விரிசல் வரும் இடம் பார்த்து வைத்து, இயந்திரத்தை இயக்கச் சொன்னார். அதன்பிறகு உருவாக்கப்பட்ட தொட்டியில் விரிசல் இல்லை. அசந்துபோனார்கள் ஆஸ்திரியப் பொறியாளர்கள்.

‘அமெரிக்காவில் ஃபோர்டு தொழிற்சாலையில் பிரஸ்ஸிங் இயந்திரத்தில் உராய்வைத் தடுக்கத் திமிங்கிலத்தின் கொழுப்பைத் தடவித் தகடுகளை அச்சடிப்பதைக் கவனித்தேன். உராய்வைத் தவிர்த்தால் விரிசலைத் தடுக்கலாம். அதனால் மெழுகுத்தாளை உபயோகித்துப் பார்த்தேன். விரிசல் தவிர்க்கப்பட்டது’ என்றார் ஜி.டி.நாயுடு. அதுதான் ஜி.டி.நாயுடு. கூர்ந்த கவனிப்பு, பரந்துபட்ட அனுபவ அறிவு, சோதனை முயற்சிகள், நடைமுறைத் தீர்வுகள், புதுமைக் கண்டுபிடிப்புகள் எனப் பொறியியல் உலகில் துவளாமல் களமாடியவர் கோபாலசாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு.

பல்கலைக்கழகப் பட்டங்களால், ஆராய்ச்சிக் கட்டுரைகளால் வரையறுக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தந்த பொறியியல் வித்தகர் அவர். மின்சார சவரக்கத்தி, வாக்குப் பதிவு இயந்திரம், பழச்சாறு எந்திரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளோடு நின்றுவிடாமல் வெற்றிகரமான தொழிலதிபராகவும் கொடிநாட்டியவர். ஒரு கட்டத்தில், அவருடைய யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தில் இருநூறுக்கும் அதிகமான பேருந்துகள் இயங்கின. அந்த நிறுவனத்தின் முதல் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், சுத்தம் செய்பவர், மெக்கானிக், கணக்கர், முதலாளி என எல்லாமுமாக இருந்தவர் ஜி.டி.நாயுடு!

படிப்பாளி: முறையான பொறியியல் கல்வியைப் பெறாவிட்டாலும் ஜி.டி.நாயுடு ஒரு தேர்ந்த படிப்பாளி. அறிவியல் சார்ந்த 16,000 புத்தகங்களையும் உளவியல் சார்ந்த 3,000 புத்தகங்களையும் அவர் வைத்திருந்தார் என அவரது புதல்வர் ஜி.டி.கோபால் ஒரு நூலில் பதிவுசெய்திருக்கிறார். இடையூறு இல்லாமல் படிப்பதற்காக ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வாராம் ஜி.டி.நாயுடு.

பட்டறிவு: உலக அளவிலான பொறியியல் அனுபவத்தை அவர் தேடிப் பெற்றார். ஏறக்குறைய 40 முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொருட்காட்சிகள், கருத்தரங்குகள் என அறிவுசார் பயணங்களாக அவை இருந்தன. 1932-ல் அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணத்தில், ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் பல நாடுகளில் தங்கியிருந்து, தொழில்நுட்பங்களையும் வர்த்தக நுணுக்கங்களையும் ஆவணப்படுத்திக்கொண்டு திரும்பினார். உண்மையிலேயே அனுபவ ஞானம் பெற விரும்பும் ஒவ்வொரு மனிதரும் பல நாடுகளைச் சுற்றிப்பார்க்க வேண்டியது இன்றியமையாதது என அவர் தீவிரமாக நம்பினார்.

தொடர் தேடல்கள்: கையெழுத்துக் குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் எனப் பல தளங்களில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது அறிவுத் தேடல்களைத் தொடர்ந்தவர் ஜி.டி.நாயுடு.

1940-களிலேயே ஏறக்குறைய 1,000 தலைப்புகளில் 500 மணி நேரம் ஓடக்கூடிய 100 வீடியோ காட்சிகளை வைத்திருந்தவர் அவர். அறிவியல் ஆவணப்படுத்தலுக்காகக் கற்ற புகைப்பட வீடியோ கலையில் அவர் தேர்ந்தவராகி நேரு, காந்தி, ஹிட்லர், முசோலினி உள்ளிட்டவர்களையும் படம்பிடித்தது இன்னொரு சுவாரசியம். தனது நான்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களையும் பற்றி ஜி.டி.நாயுடு எழுதிய ‘நான் கண்ட உலகம்’ சாதிக்கத் துடிக்கும் அனைவருக்குமான ஒரு உன்னதமான உள்ளீடு.

தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டுவந்த அவர், அவ்வப்போது தன்னைச் சுய அலசல் செய்துகொண்டு தனது போக்குகளை மாற்றிக்கொள்ளவும் தயங்கியதில்லை. அவர் ‘நான் செய்த தவறுகள்’ என்று ஒரு தனி கோப்பு ஏற்படுத்தி வைத்திருந்தார் என ‘அப்பா’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி.

கொள்கை உறுதி: அவரது பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான உற்பத்தி உரிமத்தை அப்போதைய பிரிட்டிஷ் - இந்திய அரசாங்கம் தர மறுத்தது. ஆனாலும், விடாப்பிடியாகப் புதிய கண்டுபிடிப்புகளில் தனது கவனத்தைச் செலுத்தினார். பொறியியல் துறையில் மட்டுமின்றி விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளிலும் பல சோதனைகளைச் செய்தவர் ஜி.டி.நாயுடு. பருத்தி, சோளம், பட்டாணி, துவரை, பப்பாளி ஆகியவற்றின் பரிசோதனை வெற்றிகளும், நீரிழிவு நோய்க்கான சித்த வைத்திய மருந்து உருவாக்கும் முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.

தேச பக்தி: தனது தொழில்நுட்பத் தேடல்களின் பலன் தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 1960-களில் ஜி.டி.நாயுடு நடத்திவந்த ஏறத்தாழ 36 தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு, உள்நாட்டுத் தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி எனப் பல நிலைகளில் நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றின. 1936-ல் இவரது புதுமைப் படைப்பான ‘ரேஸண்ட் மின் சவரக்கத்தி’ இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றது. லண்டனில், ஒரே மாதத்தில் 7,500-க்கும் மேற்பட்ட ரேஸர்கள் விற்பனையாயின. ஒரு அமெரிக்க நிறுவனம் 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அதன் உரிமத்தை விலை பேசியது. “நான் செய்யும் காரியத்தின் எந்த நல்ல விளைவும் இந்தியாவையே சென்றடைய வேண்டும்” என்று தீர்க்கமாக மறுத்துவிட்டார் ஜி.டி.நாயுடு.

அறிவியல் நண்பர்கள்: அறிஞர்களோடு நட்புறவைப் பேணித் தன்னை மென்மேலும் மெருகேற்றிக்கொண்டார் ஜி.டி.நாயுடு. நோபல் பரிசுபெற்ற அறிவியலர் சர்.சி.வி.ராமன், புகழ்பெற்ற பொறியாளர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் இவரின் நட்பு வட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க அறிவியல் ஆளுமைகள். குரலையும் இசையையும் தேனிரும்புக் கம்பியில் பதிவுசெய்யும் ரெக்கார்டரை சி.வி.ராமனுக்கு ஜி.டி.நாயுடு பரிசளித்தார். இதைப் பயன்படுத்தி, 1952-ல் சி.வி.ராமனின் அறிவியல் காங்கிரஸ் உரையைத் தான் பதிவுசெய்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார், ராமனின் வரலாற்றை எழுதிய அறிவியலர் ஏ.ஜெயராமன்.

வாழ்க்கைச் செய்தி: தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த அவர், தனது நன்கொடைகளின் மூலம் கோவையில் பல்தொழில்நுட்பப் பயிலகமும், பொறியியல் கல்லூரியும் உருவாகக் காரணமானார். அப்படித் தொடங்கப்பட்ட ஆர்தர் ஹோப் பொறியியல் கல்லூரியே இன்று அரசு தொழில்நுட்பக் கல்லூரியாக விழுதுவிட்டுச் செழித்திருக்கிறது.

வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கல்வி கற்று, அடுத்த 25 ஆண்டுகள் உழைத்துப் பொருள் ஈட்டி, பின்னர் சமூக சேவைக்காக உழைக்க வேண்டும் என்பதே ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கோட்பாடு. வெற்றிகளால் மட்டுமே நிரம்பியவையல்ல அவரது நாட்கள். தனது கண்டுபிடிப்புகளுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்ட உற்பத்தி உரிமங்கள், தனது சில தொழில்முனைவு முயற்சிகளில் பெற்ற தோல்விகள், தேர்தல் தோல்வி எனப் பல சவால்களையும் தனது வாழ்வில் அவர் சந்தித்தார்.

ஜி.டி.நாயுடு என்ற கண்டுபிடிப்பாளர் இந்தியாவின் பொறியியல் வரையறைகளை மாற்றியமைத்த புதுமையாளர் என்பதுதான் வரலாறு. புதுமையான தொழில்முனைவுகளால் ‘ஸ்டார்ட் அப்’ கலாச்சாரத்தை நாட்டில் பதியமிட்ட தொழில்நுட்பத் தலைமகன் அவர்.

- வி.டில்லிபாபு, டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி. ‘பொறியியல் புரட்சிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com இன்று ஜி.டி.நாயுடு பிறந்தநாள்



Read in source website