DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 22-08-2022

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடைவார்கள் எனவும் ஆதி திராவிடர் நலத் துறை குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும்
வகையில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.



Read in source website

 

பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையரே பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், கடந்த மாதம் மாதாவரத்தில் பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய இரண்டு நபர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்களே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,

மனுதாரர் அறிக்கை குறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
 



Read in source website


சென்னை:  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

நல்ல சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 2.61 இலட்சம் கி.மீ ஆகும். இவற்றில், நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் சுமார் 70,556 கி.மீ நீளச் சாலைகள் உள்ளன. இச்சாலைகள் இந்திய தேசிய ஆணைய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மற்றும் மாவட்ட இதர சாலைகள் என பல்வேறு பிரிவுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதுமட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளால் பராமரிக்கப்படும் சாலைகளும் உள்ளன. சாலைக் கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சாலைக் குறியீடுகள் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆகையால், சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், மக்கள் சாலைகளை சரியான வகையில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இக்கையேட்டில் வாகன வேகத்தின் தாக்கங்களும், உலக சுகாதார நிறுவனம், இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சாலை விபத்து தொடர்பான புள்ளி விவரங்கள், விபத்திற்கான காரணங்கள், தவிர்த்திடும் வழிமுறைகள், சாலை விதிகள், சாலைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் தெரிவிக்கும் பலகைகள் ஆகிய விவரங்கள், இலகுரக, கனரக வாகனம் இயக்குபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றிய படவிளக்கம், வாகனப் பராமரிப்பு, முதலுதவி சேவைப் பற்றிய விளக்கங்கள் மற்றும் உதவி எண்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
 



Read in source website

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும், அரசின் எவ்விதமான உதவித் தொகையும் பெறாத, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கு, மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றார். 

அதுபோல, இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 



Read in source website


மதுரை: பழனி மலை முருகன் கோயிலில், திருமஞ்சன கட்டணத்தைப் பெறுவதற்கு பண்டாரத்தினரே உரிமை பெற்றவர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

பழனி முருகன் திருக்கோயில் குருக்கள் சார்பில் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அந்த மனுவை தள்ளுபடி செய்து மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது, பழனி முருகன் கோயில் திருமஞ்சன கட்டணத்தைப் பெற பண்டாரத்தினரே தகுதியானவர்கள்.
ஆரம்ப காலம் முதல் பண்டாரங்களே திருமஞ்சன நீரை தொன்று தொட்டு எடுத்து வருகின்றனர் என்பது கோயில் ஆவணம் மூலம் தெரிய வருகிறது.

கோயில் திருமஞ்சன நீரை எடுத்து வருவதிலும், கட்டணத்திலும் குருக்களுக்கு உரிமை வழங்கபடவில்லை என்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 



Read in source website

2020, 2021, 2022 ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் விருதுகளை முறையே முனைவர் ம.ராஜேந்திரன், முனைவர் க.நெடுஞ்செழியன்  ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார். 

2020 முதல் 2022-ஆம் ஆண்டுகள் வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்து, 16 நூல்களையும் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (22.8.2022) சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில், 2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று முத்தமிழறிஞர் அவர்கள் மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006- ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிறப்பினை கருதி முன்னாள் முதல்வர் கருணாநிதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’-யை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது, இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும்,  மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 

தற்பொழுது 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் முதல்வரால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், மேனாள் தமிழ் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் விருதுகளையும், விருதுடன் தலா 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2022-ஆம் ஆண்டிற்கான விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அவர் வெளிநாட்டிலிருந்து வரவியலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கான விருது பின்னர் வழங்கப்படும்.

மேலும், இவ்விழாவில் உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்,  சங்கால மக்கட் பெயர்க் களஞ்சியம், தமிழ்நாட்டில் சமணம் (கி.பி- 6-ஆம் நூற்றாண்டு வரை), ஒப்பில் தொல்காப்பியம், செம்மொழி தமிழ் இலக்கிய இலக்கண மேற்கோள் அடைவு, செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: எழுத்ததிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: சொல்லதிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: பொருளதிகாரம், தமிழர் பாரம்பரிய நெல் வகைச் சொல்லகராதி, உ.வே.சா. இலக்கிய அரும்பத அகராதியும் சங்கநூற் சொல்லடைவும், உ.வே.சா. நாட்குறிப்பு உள்ளிட்ட 16 நூல்களையும்  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இதன்பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், '3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழுக்கு செம்மொழி என்று தகுதி பெற்று தந்ததும் திமுக அரசு தான்;

 

செம்மொழி தகுதி வழங்க வேண்டுமென கலைஞர் எடுத்த முயற்சியும், அவர் பணியையும் நாடு நன்றாக அறியும். 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ் மொழி ஆய்வு, மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். 



Read in source website

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய விதிகள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம், பணி நிபந்தனை தொடர்பாக அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020-ல் கொண்டு வரப்பட்டன. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கலாம். ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என புதிய விதிகளில் உள்ளன.

இந்த புதிய விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், தனி நபர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய விதிகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை கண்டறிய 5 பேர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. 



Read in source website

'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும் குழந்தை பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம் என விதிகளை தளர்த்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. 

'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் பட்டம் பெற்றால் அந்த காலம் முழுவதும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற விதிகள் உள்ளன. 

இந்நிலையில், 'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டுவர அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, இந்த அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும் குழந்தை பெற்றுக்கொண்ட இளம் பெண்களும் கலந்துகொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக 'பாக்ஸ் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த விதிகள் நடப்பாண்டு முதலே கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

72வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள் அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது. 2020ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெசா, இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். 



Read in source website


புது தில்லி: செல்லிடப்பேசி செயலிகளின் வாயிலாக கடன் வழங்கி மோசடியில் ஈடுபடும் கும்பல்களைக் கண்டுபிடிக்க தில்லி காவல்துறையினர் கடந்த இரண்டு மாதங்களாக நடத்திய விசாரணையில் நூற்றுக்கணக்கான சீனத்தைச் சேர்ந்த கடன் செயலிகள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட சீன கடன் செயலிகளைக் கண்டுபிடித்திருக்கும் தில்லி காவல்துறை இது தொடர்பாக 22 பேரை கைது செய்துள்ளது.

சுமார் 100க்கும் மேற்பட்ட மோசடி செயலிகளை இந்த கும்பல் நிர்வகித்து வந்ததும், (அவை தற்போது முடக்கப்பட்டுள்ளது). பல்வேறு மாநிலங்களில், மக்களின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியிருப்பதும், இந்த செயலிகளுக்குப் பின்னணியில் சீன நிறுவனங்கள் நேரடியாக தொடர்பிலிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை டிசிபி தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையில், 50 செல்லிடப்பேசிகள், 25 கணினிகள், 9 மடிக்கணினிகள், 19 கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள், 3 கார்கள், 4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செல்லிடப்பேசி செயலிகள் மூலம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உடனடி கடன் வழங்கும் செயலிகள், அதனை திருப்பிச் செலுத்திய பிறகும் வாடிக்கையாளர்கள் துன்புறுத்துவதாகவும், கட்டாதவர்களை மிரட்டப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் இறங்கியது. 

இந்த செல்லிடப்பேசி செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதே, செல்லிடப்பேசியிலிருக்கும் அனைத்து தொடர்பு எண்கள், புகைப்படக் கேலரி, இதர தகவல்கள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதி கேட்கிறது. இந்த அனுமதி கிடைத்தவுடனே, அந்த செல்லிடப்பேசியிலிருக்கும் அனைத்துத் தகவல்களும் உடனடியாக சீன சர்வர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கடனை கட்டாவிட்டால், அவரது தொடர்பிலிருக்கும் எண்களை தொடர்பு கொண்டு பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, மார்ஃபிங் செய்த புகைப்படங்களை அனுப்புவதாக மிரட்டுவது என பல முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வெறும் பணத்தை முறைகேடு செய்திருப்பது மட்டுமல்லாமல், பயனாளர்களின் தகவல்களை சீன சர்வரில் சேர்த்திருப்பது தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 



Read in source website

மும்பை: எண்ம (டிஜிட்டல்) முறையில், மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுரைப் பக்கத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் போது, எந்த விதமான கட்டணம் வசூலிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இதுவரை அதுபோன்ற எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அதாவது, யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பொதுச் சேவை, பொதுமக்களின் வசதிக்காக, பொருளாதார மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்டது. அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ற எந்த பரிசீலனையும் மத்திய அரசிடம் இல்லை. அதே வேளையில், சேவை வழங்குபவர்களின் செலவினத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிகள் வேறு முறைகளில் கண்டடையவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணமில்லா யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அது முதல், பயனாளர்களுக்கும் வணிகர்களுக்கும் யுபிஐ பணப்பரிவர்த்தனை கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது.

முன்னதாக, ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடைமுறைகளைக் கொண்டு வருவது குறித்து கருத்துகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது.

பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து மக்கள் தங்களது ஆலோசனைகள், உரிய கருத்துகளை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிக்குள், மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, எண்ம முறையில் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து, தற்போது சிறிய நடைபாதைக் கடைகளில் கூட யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி வந்துவிட்டது. இந்த நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் எண்ம பணப்பரிவர்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் ஆர்பிஐ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

பணப்பரிவர்த்தனை முறைகளை ஒழுங்குபடுத்துவது, அதிலிருக்கும் குறைபாடுகளைப் போக்குவது, பணப்பரிவர்த்தனை முறையில் வருவாயைப் பெருக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் ஆர்பிஐ கவனம் செலுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை முறையில் பல்வேறு இடைத்தரகர்கள் இருந்தாலும் கூட, இந்த பணப்பரிவர்த்தனை சங்கிலி தொடரில் பயனாளர்களின் புகார்கள் பெரும்பாலும் நேரடியான கட்டணங்கள் தொடர்பானதாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயால் அந்தமான் நிக்கோபாா் உள்பட 8 மாநிலங்களில் 7,300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

கால்நடைகளின் தோலில் தோன்றும் கட்டிகளை அறிகுறியாக கொண்ட பெரியம்மை, கேப்ரிபாக்ஸ் எனும் தீநுண்மியால் ஏற்படும் தொற்றுநோயாகும்.

இது ஈ, கொசு போன்றவற்றால் கால்நடைகளுக்குப் பரவக்கூடியது. இந்நோயால் கால்நடைகளுக்கு இறப்பும் ஏற்படலாம்.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய இந்நோய் சமீப காலங்களாக ஆசியாவில் பரவத் தொடங்கியது. கடந்த 2019 ஜூலையில் வங்கதேசத்தில் இந்நோய்ப் பரவல் காணப்பட்டது. அதே ஆண்டில் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிஸா போன்ற கிழக்கு மாநிலங்களில் பெரியம்மை நோய்ப் பரவல் காணப்பட்டது.

நிகழாண்டில், முதலாவது பெரியம்மை நோய் பாதிப்பு குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது, 8 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாா் யூனியன் பிரதேசத்தில் இந்நோய்ப் பரவல் காணப்படுகிறது. இந்நோயால் 1.85 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்திலிருந்து 7,300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பெரியம்மை நோயால் கால்நடைகளின் இறப்பு விகிதம் 1-2 சதவீதமாக உள்ளதாகவும், நோய்ப் பரவலை தடுக்கும் விதமாக 17.9 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்நோய் மனிதா்களைத் தாக்குவதில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2019-இல் மேற்கொள்ளப்பட்ட 19-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள கால்நடைகளின் மொத்த எண்ணிக்கை 19.2 கோடியாகும்.



Read in source website

 

அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை சுமந்து செல்லும் எம்க்யூ-9பி வகை ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது தொடா்பான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளையில், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீன கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு, கண்காணிப்புப் பணிகளுக்காக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) கொள்முதல் செய்வதில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிடம் இருந்து 3 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.24,000 கோடி) அதிகமான மதிப்பில், எம்க்யூ-9பி வகை ப்ரிடேட்டா் ட்ரோன்களை வாங்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 ட்ரோன்கள் வீதம் மொத்தம் 30 ட்ரோன்கள் வாங்கப்படவுள்ளன.

இந்த ட்ரோன்கள் ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடியவை. நீடித்து உழைக்கும் திறன் கொண்டவை. கடற்பகுதியில் கண்காணிப்பு, நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்குவது, வான் பகுதி மற்றும் தரையில் உள்ள இலக்குகளைத் தாக்குவது போன்ற பல வகையான பணிகளை அந்த ட்ரோன்களால் செய்ய முடியும்.

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியை தலைமையகமாகக் கொண்ட ஜெனரல் அட்டாமிக்ஸ் க்ளோபல் காா்ப்பரேஷன் என்ற தனியாா் நிறுவனம் அந்த ட்ரோன்களை தயாரிக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிா்வாகி விவேக் லால் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘எம்க்யூ-9பி வகை ட்ரோன்களை கொள்முதல் செய்வது குறித்து இந்தியா-அமெரிக்கா அரசுகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் நிலவுகிறது’ என்று தெரிவித்தாா்.

எம்க்யூ-9பி ட்ரோன்களின் கொள்முதல் தொகை, ஆயுதங்கள், தொழில்நுட்பப் பகிா்வு உள்ளிட்டவை தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

 

ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பேருந்தை மத்திய அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புணேயில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆா்) - கேபிஐடி தனியாா் நிறுவனம் இணைந்து இந்தப் பேருந்தை உருவாக்கி உள்ளன.

இதுகுறித்து இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இது சுத்திகரிப்புத் தொழில், உரத் தொழில், எஃகு தொழில், சிமென்ட் தொழில் மற்றும் கனரக வணிகப் போக்குவரத்துத் துறையிலிருந்து உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.

எரிபொருள் செல், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு நீா் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறையாக மாறும்.

நீண்ட தொலைவு வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. டீசல் வாகனங்களைவிட ஹைட்ரஜன் வாகனங்களுக்கு குறைவான செலவாகும் என்பதால் இது இந்தியாவில் சரக்கு புரட்சியை ஏற்படுத்தும் என்றாா்.



Read in source website

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் சதமடித்த இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.

இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் இன்று தாண்டியுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

130 - ஷுப்மன் கில், 2022 
127* - சச்சின் டெண்டுல்கர், 1998
124* - ராயுடு, 2015
 



Read in source website

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனில் இருந்த நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம், பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, நன்கு விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 105 ரன்களும் கேப்டன் நிகோலஸ் பூரன் 91 ரன்களும் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 51 ரன்களும் எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்பும் கைல் மேயர்ஸும் 173 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்கள். முதல் விக்கெட் இழந்த பிறகு ஓரளவு தடுமாறினாலும் கடைசி 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்கள் மே.இ. தீவுகள் பேட்டர்கள்.  

நியூசிலாந்து அணி இலக்கை அபாரமாக விரட்டி 47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது. மார்டின் கப்தில் 57, கான்வே 56, டாம் லதம் 69, டேரில் மிட்செல் 63, ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருதை டாம் லதமும் தொடர் நாயகன் விருதை மிட்செல் சான்ட்னரும் வென்றார்கள். 

மேற்கிந்தியத் தீவுகளில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது நியூசிலாந்து அணி. 

ஒருநாள் தொடர்: மேற்கிந்தியத் தீவுகளில்  நியூசிலாந்து அணி

1985 - 0-5 எனத் தோல்வி
1996 - 2-3 எனத் தோல்வி
2002 - 1-3 எனத் தோல்வி
2012 - 1-4 எனத் தோல்வி
2022 - 2-1 என வெற்றி 



Read in source website

 

சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நிலையில், தனது சர்ச்சைக்குரிய ஆறுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்டது.

இந்தக் கப்பலின் இலங்கை பயணம், எந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனாலும், இந்தக் கப்பலின் இலங்கைப் பயணம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவேப் பார்க்கப்பட்டது.

சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலின் வருகைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்தது. அதன்படி, சீன உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தது. சரியாக ஆறு நாள்கள் அக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இது தொடா்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறுகையில், ‘இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சீன கப்பல் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சா்வதேச விதிகளுக்கு உள்பட்டே யுவான் வாங் கப்பல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நடவடிக்கைகள் எந்த நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்காது. எனவே, அக்கப்பலின் பயணத்தை எந்தவொரு மூன்றாவது நாடும் தடுக்க முயற்சிக்கக் கூடாது’ என்றாா்.

கப்பல் விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்ததாவது, ‘எரிபொருள் உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக மட்டுமே சீன கப்பல் இலங்கை வந்துள்ளது. கப்பலுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருமாறு சீன தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன கப்பல் விவகாரத்தில், அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்புக்கும் பாதுகாப்புக்கும் இலங்கை அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த சீன உளவுக் கப்பல் அனுமதிக்கப்படாது என இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
 



Read in source website

 

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அண்டை நாடான இலங்கைக்கு இந்திய அரசு 21,0000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.  

2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனா்.

கரோனா தொற்றுக்குப் பிறகு இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. 

அண்டை நாடுகளுக்கு இந்திய அரசு எபோதும் உதவும். அந்த வகையில் தற்போது இலங்கைக்கு 21000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.  

இலங்கையிலுள்ள இந்தியாவின் தூதரக அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

நட்பு மற்றும் ஒத்துழைப்பில் மேலும் வலுவை கூட்டுவது போல இந்தியா தற்போது 21,000 டன் உர வகைகளை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 44,000 டன் வழங்கியதைத் தொடர்ந்து இந்திய மொத்தமாக 2022இல் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவி புரிந்துள்ளது. இந்த உரங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கை விவசாயிகளுக்கு உதவும். இது இந்தியாவுடன் இணைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் இந்தியாவுக்குமான இருதரப்பு மக்களுக்கும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் கூட்டு பலனாகும். 



Read in source website

 

இந்தோனேஷியாவில் குரங்கு அம்மையால் ஒருவா் முதல் முறையாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இந்தோனேஷியாவுக்கு திரும்பிய 27 வயது நபருக்கு, கடந்த 5 நாள்களாக குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன. அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், அந்நபருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கடந்த மே மாதம் பிரிட்டனில் குரங்கு அம்மை நோய்ப் பரவல் கண்டறியப்பட்டது. ஜூலையில் குரங்கு அம்மையை சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தப்பட்டன.

இதுவரை 90 நாடுகளில், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.



Read in source website

 

எல்லைப் பகுதியில் படைகளைக் குவிப்பதற்கு எதிராகக் கையொப்பமான ஒப்பந்தங்களை சீனா மீறியதால் இருதரப்பு நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தென் அமெரிக்க நாடுகளுக்கான 6 நாள் அரசுமுறைப் பயணத்தை அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொடங்கினாா். வெளியுறவு அமைச்சரான பிறகு தென் அமெரிக்க நாடுகளுக்கு அவா் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.

முதல்நாடாக பிரேஸிலுக்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதிலளித்ததாவது:

இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடா்பாக 1990-களிலேயே ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. எல்லைப் பகுதிகளில் படைகளைக் குவிப்பதற்கு அந்த ஒப்பந்தங்கள் தடை விதிக்கின்றன. ஆனால், அந்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் சீனா படைகளைக் குவித்தது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினா் இடையேயான மோதல் விவகாரத்தை அனைவரும் அறிவா்.

அந்தப் பிரச்னைக்கு இன்னும் தீா்வு காணப்படவில்லை. அந்த விவகாரமே இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லுறவை வலுப்படுத்துவது ஒருவழிப்பாதை அல்ல. பரஸ்பர நம்பிக்கையும் நடவடிக்கையும் அதற்கு அவசியம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு கடினமான கட்டத்தில் உள்ளது. அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழலையே இந்தியா விரும்புகிறது. அதற்கு அந்நாடும் தயாராக இருக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதையுடன் இரு நாடுகளும் செயல்பட வேண்டும். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் மட்டுமே இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த முடியும் என்றாா் அவா்.

 

Image Caption

பிரேஸிலின் சாவ் பாலோ நகரில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

 



Read in source website

புதுச்சேரி: காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து நடப்பாண்டு தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். விடுதலைப் போராட்ட தியாகிகள் 260 பேருக்கு இலவச மனைபட்டா தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: > இந்து சமய அறநிலையத் துறை, வக்பு வாரியம் நவீனமயமாக்கப்படும். அனைத்து கோயில்களின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், கடவுள் உருவசிலைகள், அசையும் சொத்துக்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். கோயிலின் அனைத்து அசையா சொத்துக்கள் அனைத்தும் நில அளவை செய்து பாதுகாக்கப்படும். அனைத்து சொத்துக்களுக்கும் நியாயமான வாடகை தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.

> காரைக்கால் துறைமுகம் இலங்கையில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து இந்த ஆண்டு தொடங்கப்படும்.

> சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுக கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் இந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.

> புதுவை துறைமுக மேம்பாட்டுக்காக பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள ஆர்வமான நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோரப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை இந்திராகாந்தி பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் இ-மருத்துவ சேவை தொடங்கப்படும்.

> காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் பதிவு, சிகிச்சை பிரிவு ரூ.55 கோடியில் கட்டப்படும். மேலும் காரைக்காலில் புதிய அரசு மருத்துவமனை ரூ.80 கோடியில் கட்டப்படும். அதோடு காரைக்காலில் புதிய மருத்துவக்கல்லுாரி கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

> போக்குவரத்து சேவையை ஊக்குவிக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 25 எலக்ட்ரிக் பேருந்துகள், 50 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் புதிதாக இயக்கப்படும். அரசு, தனியார் பஸ்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும்.

> பாண்டி மெரினா கடற்கரையில் பாரதியார் சிலையுடன் தமிழ் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, பொழுதுபோக்கு மண்டலம் உருவாக்கப்படும். கைவினை கிராமத்தில் டிஜிட்டல் அருங்காட்சியகம், சுற்றுலா அனுபவ மையம், பொம்மை அருங்காட்சியம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப் படும்.

> காரைக்காலில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள், வீராம்பட்டினம் கோவில் ஆகியவை மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் மேம் படுத்தப்படும்.

> மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் மின்சாரம், சாலை அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தீம் பூங்கா, ஓய்வு விடுதி, மாநாட்டுக்கூடம், திரைப்படக்கூடம், சாகச விளையாட்டு போன்றவை தனியார் பங்களிப்புடன் செய்யப்படும்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் "வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தப்படும் மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம், இலவசமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 700 ஹெக்டேர் பரப்பில், 506 ஹெக்டேர் பரப்பில் இருந்த அன்னிய மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போன்ற அறிக்கை கடந்த முறையும் தாக்கல் செய்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் பணியை ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்க இரண்டு வாரங்கள் அரசுக்கு அவகாசம்" வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், நர்சரிகளில் அன்னிய மரக் கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Read in source website

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த திட்டம், 10 மலைப்பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "மலைப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 88 லட்சம் மதுபாட்டில்களில் 74 சதவீதம், அதாவது 52 லட்சம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருக்கும் என்பதால் அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது எனக் குறிப்பிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்துவது சிரமம் எனக் குறிப்பிட்டார்.

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களில் மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பாட்டில்களை திரும்ப பெறப்படும் நிலையில், கடையில் மதுபானத்தை வாங்கிச் சென்று வேறு இடங்களில் மது அருந்தும் பட்சத்தில் அந்த பாட்டில்களை திரும்பப் பெறுவது சிரமம்" எனக் குறிப்பிட்டார்.

பின்னர் ஒரு நாளைக்கு எத்தனை பாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, மாதம் 51 கோடி பாட்டில்கள் விற்கப்படுவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்த 51 கோடி பாட்டில்களை திரும்பப் பெறாவிட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Read in source website

சென்னை: முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் விதிகளினால் பயனாளிகள் இணைவதில் நிலவும் சிக்கல்களை களைய திட்டமிட்டு கள ஆய்வை தொடங்கியுள்ளதாக சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் ஆரம்ப முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படும்.

விதிமுறைகள்: இத்திட்டத்தில் பயனாளிகளை இணைப்பதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்; ஆண் குழந்தை இருக்கக் கூடாது, எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகள் உள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த விதிகளினால் தற்போதைய காலக்கட்டத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கண்டறிய சமூகநலத் துறை அதிகாரிகள் கள ஆய்வை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியினால் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாடு வயது வரம்பை கடந்த ஆண்டு தமிழக அரசு 40 ஆக உயர்த்தியது. இதனால், ஓராண்டில் கூடுதலாக சுமார் 1000 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

தற்போதைய காலக்கட்டத்தில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கு மேல் இருந்தாலேயே வசதியான குடும்பமாக கருத முடியாது, ஆண் குழந்தைகள் இருந்தால் பெண் குழந்தைகளை திட்டத்தில் இணைக்க முடியாது என்பன போன்ற விதிகளினால் ஆண்டுதோறும் சுமார்10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

திட்டத்தில் இணைவதற்கு பொதுவான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் ஒரே குடும்பத்தில் இருக்கக் கூடிய இரு குழந்தைகளுக்கு முதிர்வுத் தொகை வெவ்வேறாக வருகிறது.

இதுபோன்று விதிகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களை களைய பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், பயனாளிகள் இணைவதற்கான திட்டத்தின் விதிகளில் தமிழக அரசு மாற்றம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்றசுதந்திர தின விழாவில் பேசியமுதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்திவழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின்தொகுப்பூதியம், நிலைப்படுத்தப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு ஏற்கெனவே கடந்தஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2,500 ஊதியம் பெறுவோருக்கு ரூ.50-ம், மாதம் ரூ.2,500-க்கு அதிகமாக பெறுவோருக்கு ரூ.100-ம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வுஉள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

அதேபோல, 2006-ம் ஆண்டுக்கு முன் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாகவும், 2016-ம்ஆண்டில் சம்பள விகிதம் மற்றும்தர ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டவர்களுக்கு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றி, உயிரிழந்தவர்களின் மனைவி, அவர்களது குழந்தைகளுக்கு மாதம் ரூ.645வழங்கப்படுகிறது.

இவர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு உயர்த்தியுள்ளதுபோல 360சதவீதத்தில் இருந்து 373 சதவீதமாக ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை,அவரவர் வங்கிக் கணக்கில்செலுத்தப்படும். இவ்வாறு அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Read in source website

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், 4,500 பட்டியலின குடும்பத்தினருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போதே, 35 ஆண்டுகளுக்கு முன்பு, வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள், பட்டா இன்றி வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் மற்றும்பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை, இணைய தளத்தில் பதிவேற்றும்படி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இ-பட்டா வழங்க முடிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் குழுஅமைத்து, அரசின் வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் களை பட்டா ஒதுக்கீடு பகுதியில் நேரடி கள ஆய்வுசெய்து, வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களைஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் மாவட்டத்தில் அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு பெற்றவர்கள் சுமார் 5,000 பேர் கண்டறியப்பட்டனர். அவை உடனுக்குடன், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 4,500 பேருக்கு அரசின் இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 பேர் குறித்த நேரடி கள ஆய்வு நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் எஞ்சியவர்களுக்கு இ.பட்டா வழங்கப்படும். கடந்த 35 ஆண்டு களுக்கு மேலாக நிலவி வந்த இந்த பிரச்சினைக்கு ஆட்சியரின் நடவடிக்கையால் தற்போது தீர்வு கிடைத்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் 500 பேர் குறித்த நேரடி கள ஆய்வு நடைபெற்று வருகிறது.



Read in source website

புதுடெல்லி: தோல் கழலை நோய் 8 மாநிலங்களுக்கு பரவி உள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தோல் கழலை நோய் (லம்பி ஸ்கின் டிசீஸ்) கால்நடைகளை குறிப்பாக பசு மாடுகளை தாக்குகிறது. போக்ஸ்விரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை வைரஸ் மூலம் பரவும் இந்நோய் தொற்றும் தன்மை கொண்டது. குறிப்பாக கொசு, ஈக்கள் மூலம் பரவும். இதன் அறிகுறியாக முதலில் காய்ச்சல் ஏற்படும்.

பின்னர் தோலின் மேற்புரத்தில சிறுசிறு கட்டிகள் உருவாகும். இந்த நோய் மரணத்தையும் ஏற்படுத்தும். இந்த நோய் முதன் முதலில் 1929-ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் இந்த நோய் கால்நடைகளை தாக்கியது. அதே ஆண்டில் மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பரவியது.

இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இந்த நோய் பரவி உள்ளது. இந்த நோயால் பசு மாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பால் உற்பத்தி குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது. நாடு முழுவதும் இதுவரை 1.85 லட்சம் கால்நடைகள் தோல் கழலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 7,300 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக பஞ்சாபில் 3,359, ராஜஸ்தானில் 2,111, குஜராத்தில் 1,679 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழப்பு விகிதம் 1 முதல் 2 சதவீதமாக இருக்கிறது. அதேநேரம் மனிதர்களுக்கு இந்த நோய் பரவாது.

தோல் கழலை நோய் வேகமாக பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 17.92 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கு, நிலைமையை ஆராய மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் பாதித்த கால் நடைகளை தனிமைப்படுத்த வேண்டும், இந்த நோயால் உயிரிழந்த கால்நடைகளை பாதுகாப்பாக அடக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப் பட்ட கால்நடைகளின் உரிமை யாளர்களுக்கு உதவவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசுகள் இலவச தொலைபேசி கட்டுப்பாட்டு மையங்களை நிறுவி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: கரோனா வைரஸை தொடர்ந்து இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது கடந்த மே 6-ம் தேதி முதல் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் நெடுவத்தூர், ஆரியங்காவு, அன்சால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளும், 10 வயதுக்குட்பட்ட 26 சிறுவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு, சிக்குன்குன்யா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிறு கொப்புளங்கள் தோன்றும். இது சற்று பெரிதாகி தக்காளி போல சிவப்பாக தோன்றும். இதனாலேயே இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது தொற்றும் தன்மை கொண்டது ஆகும்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. உடல், மூட்டு வலி கடுமையாக இருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும். அதேநேரம் இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறினால், பெரியவர்களுக்கு பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Read in source website

கடந்த 2018 முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் சாலையில் இருந்த பள்ளங்களால் மொத்தம் 5,626 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அண்மைய தரவுகளின் படி தெரியவந்துள்ளது.

பாதுகாப்பான சாலை பயணத்திற்கு பல்வேறு உத்திகளை அரசு முன்னெடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. அந்த அமைச்சகத்தின் அண்மைய தரவில்தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

>2018 = 2,015 பேர்
>2019 = 2,140 பேர்
>2020 = 1,471 பேர்
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் வடிவமைப்பு, அதிக வேகம், மொபைல் போன் பயன்படுத்துவதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக சுமை ஏற்றப்பட்ட வாகனம், வாகனத்தின் நிலை, மோசமான வெளிச்சம், முந்தி செல்வது, பொதுப்பணித் துறையின் கவனக் குறைவு, வானிலை, ஓட்டுநரின் தவறு, தவறான பக்கத்தில் (திசையில்) வாகனம் ஓட்டுவது, சாலையின் குறைபாடு, மோட்டார் வாகனத்தின் குறைபாடு, சைக்கிள் ஓட்டுபவர்களின் தவறு, பாதசாரிகளின் தவறு போன்றவை விபத்துக்கான பிற காரணங்களாகும்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிகம் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு, அதனை சீர் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை வடிவமைப்பு திட்டமிடலின் போதே சாலை பாதுகாப்பு அதில் ஒருங்கிணைக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



Read in source website

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சீங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. ஆசிய நாடுகளில் எல்ஜிபிடிக்யூ+ குறித்த உரிமை வாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் மட்டும் அதற்கான தடைகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

எனினும், அங்குள்ள எல்ஜிபிடிக்யூ+ செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து தங்களுக்கான உரிமைகளுக்கு வலுவான குரல் எழுப்பி வந்தனர். இந்தச் சூழலில்தான் தன்பாலின ஈர்ப்பை குற்றம் என சொல்லும் சிங்கப்பூரின் 377-வது சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் பிரதமர், லீ சியன் லூங் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்று தொலைகாட்சியில் அறிவித்தார்.

இதுகுறித்து லூங் தொலைகாட்சியில் பேசும்போது, ”இதுதான் சரியான செயல்.பெரும்பாலான சிங்கப்பூர் குடிமக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதால், இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்றார்.

நீக்கம் குறித்து சிங்கப்பூர் தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் பேசும்போது, “நாங்கள் இறுதியில் சாதித்துவிட்டோம். இறுதியில் அது நடந்துவிட்டது. இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்றார்.



Read in source website

இன்றைக்கு சில்லரை வணிகத்தில் இருக்கும் போட்டியில் கடுகளவுகூட நம் நாடு சுதந்திரமடைந்த சமயத்தில் இருந்ததில்லை. இந்திய சில்லரை வணிகத்தின் மதிப்பு இன்றைக்கு ரூ.72 லட்சம் கோடியாகும். இந்தத் துறையில் ‘அண்ணாச்சிக் கடைகள்’, ‘கிராணா' (kirana), ‘மாம் & பாப்' (mom & pop) என பல பெயர்களில் அழைக்கப்படும் பாரம்பரியமான பலசரக்குக் கடைகளும், மாடர்ன் ரீடெயில் என அறியப்படுகிற சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விற்பனை செய்யும் ஆன்லைன் கடைகளும் அடங்கும்.

சில்லரை வணிகத்தில் 80 சதவீத விற்பனை பலசரக்குக் கடைகள் மூலமும், 15 சதவீதம் சூப்பர் மார்க்கெட்டுகள் மூலமும் மீதமுள்ள 5 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் ஆன்லைன் மூலமான வர்த்தகத்தின் வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது.

ஹோம் டெலிவரி: மாடர்ன் ரீடெயிலும், ஆன்லைன் வர்த்தகமும் கரோனாவுக்குப் பிறகு பெரும் வளர்ச்சி அடைந்து வருகிற நிலையில், இந்தப் போட்டிச் சூழலில் தாக்குப்பிடிக்க பாரம்பரியமான பலசரக்குக் கடைகளும் ‘ஹோம் டெலிவரி’ சேவையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதில் சுவராசியம் என்னவெனில், ஆன்லைன் வர்த்தகத் தளங்களும் தங்களின் விநியோக மேம்பாட்டுக்காக பலசரக்குக் கடைகளுடன் ஒன்று சேர ஆரம்பித்திருக்கின்றன.

இந்த மாதிரியான ஒரு கூட்டுறவு பல ‘ஹைப்பர்லோக்கல்’ சில்லரை வர்த்தகர்கள் உருவாக வழிவகுத்திருக்கிறது. இதில் டன்சோ, சுவிக்கி, சொமேட்டோ, பிக்பாஸ்கெட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சில்லரை வணிகத்தின் எதிர்காலம்: மத்திய அரசு சில்லரை வணிகத் துறையில் லட்சக்கணக்கான சிறிய உள்ளூர் கடைகளையும் நுகர்வோர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ‘ஓஎன்டிசி’ (Open Network for Digital Commerce) கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ‘அமேசான்’, ‘ஃபிளிப்கார்ட்’ உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். அந்தவகையில் இனி இந்திய சில்லரை வணிகத் துறை என்பது பலசரக்குக் கடைகளும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஆன்லைன் வர்த்தகமும் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதாக இருக்கும்.



Read in source website

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் கோவை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபிரீடம் 75 பாரத் ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாட்களுக்கு ரூ.275-க்கு வழங்கப்படுகிறது. மாதம் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாட்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775-க்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜி5 பிரீமியம், வூட் செலக்ட் போன்ற ஓடிடி சேவைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு சுதந்திர தின சலுகை வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும், பிஎஸ்என்எல் தனது மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பிரதிமாதம் 75 ஜிபி டேட்டாவுடன் அளவற்ற அழைப்புகளுடன் 300 நாட்கள் வேலிடிட்டி ரூ. 2,022-க்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2,399 மற்றும் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 75 ஜிபி டேட்டாவைக் கூடுதலாகப் பெறலாம். இச்சலுகை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மட்டுமே.

பிஎஸ்என்எல் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் புதிய சிம்கார்டையும், 28 நாட்களுக்கு அளவற்ற அழைப்புகளை ரூ.108-க்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாற்றி சிறப்புச் சலுகைகளைப் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: தூய்மையான காற்றை சுவாசிக்க உதவி செய்யும் புதிய தலைக்கவசம் ஒன்றை டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

‘ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ்’ என்ற அந்த புதிய நிறுவனம் தயாரித்துள்ள அந்த தலைக்கவசத்தில் 'புளூடூத்'துடன் இணைக்கப்பட்ட செயலி ஒன்று உள்ளது. இந்த செயலி, தலைக்கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது.

இந்த புதிய நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொடக்க நிதியை பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் தொழில்நுட்பப் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன், வணிக அடிப்படையிலான ஒப்பந்தங்களில், இந்த புதிய தொழில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. குளிர்காலங்களில் புதுடெல்லியில் ஏற்படும் காற்று மாசுவினால், இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்ந்து, இந்த தலைக்கவசங்களை ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



Read in source website

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வரை மீம்ஸ் பார்க்க நேரம் செலவிட்டு வருவதாக RedSeer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை ஆய்வறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் 80 சதவீதம் மீம்ஸ் பார்க்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பயனர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மீம்ஸ் பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு துறையில் மீம்ஸ்கள் உச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இந்த டிமாண்ட் காரணமாக மீம்ஸ்களை உருவாக்க உதவும் தளங்களின் எண்ணிக்கையும் சந்தையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீம்ஸ் பயனர்கள் அல்லது பார்வையாளர்களில் பெருவாரியானவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோஷியல் மீடியாதான் மீம்ஸ்களை பார்வையிடுவதற்கு உதவும் பிரதான தளமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாய்மொழியாக குறிப்பிட்டு சொல்வதும் மீம்ஸ்களுக்கான பார்வையைக் கூட்டுகிறதாம்.

இவை அனைத்திற்கும் சோஷியல் மீடியா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு என ஒரு பிராண்ட் ஐடென்டியை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புனே: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இன்று (ஆகஸ்ட் 21) புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை அறிமுகப்படுத்தினார்.

“பிரதமர் மோடியின் ஹைட்ரஜன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற வகையில் மலிவான மற்றும் அணுகக்கூடிய தூய்மையான எரிசக்தியில் இயங்கக்கூடியதாக இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இது சுத்திகரிப்பு தொழில், உரத் தொழில், எஃகுத் தொழில், சிமெண்ட் தொழில் மற்றும் கனரக வணிகப் போக்குவரத்து துறையில் இருந்து உமிழ்வை குறைக்க உதவுகிறது.

எரிபொருள் செல், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது. பேருந்தில் இருந்து வெளியேறும் ஒரே கழிவு, நீர் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறையாக மாறும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நீண்ட தூர வழித்தடங்களில் ஓடும் ஒரு டீசல் பேருந்து பொதுவாக ஆண்டுக்கு 100 டன் கரியமில வாயுவை வெளியிடுகிறது. இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன.

எரிபொருள் செல் வாகனங்களின் அதிக செயல்திறன் மற்றும் ஹைட்ரஜனின் அதிக ஆற்றல் அடர்த்தி ஆகியவை எரிபொருள் செல் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செயல்பாட்டு செலவு டீசலில் இயங்கும் வாகனங்களை விட குறைவாக இருப்பதை உறுதி செய்வதாக ஜிதேந்திர சிங் கூறினார். மேலும் இது இந்தியாவில் சரக்கு புரட்சியை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

கேபிஐடி-சிஎஸ்ஐஆர்-இன் கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொழில்நுட்பத் திறன் உலகிலேயே மிகச் சிறந்ததாகவும், மிகக் குறைந்த செலவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.



Read in source website

மேக வெடிப்பு என விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் உண்மையில், வரையறையின்படி, மேக வெடிப்பு அல்ல. ஏனென்றால், இந்த நிகழ்வுகள் மிகவும் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்பவை.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் இந்த நேரத்தில் கனமழையைப் பதிவு செய்துள்ளன, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதித்தது, மேலும் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு என்பது குறிப்பிட்ட இடத்தில் நிகழும் தீவிரமான மழைப்பொழிவு ஆகும். ஒரு சிறிய புவியியல் பகுதியில், குறுகிய காலத்தில் பெய்யும் மிகக் கடுமையான மழை பரவலான அழிவை ஏற்படுத்தும். குறிப்பாக மலைப்பகுதிகளில் இந்த நிகழ்வு மிகவும் பொதுவானது.

இருப்பினும், மிக அதிக மழையின் அனைத்து நிகழ்வுகளும் மேக வெடிப்புகள் அல்ல. மேக வெடிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது: சுமார் 10 கிமீ x 10-கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்தில், 10 செமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழை பொழிவு மேக வெடிப்பு நிகழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த வரையறையின்படி, அதே பகுதியில் அரை மணி நேரத்தில் 5 செ.மீ மழை பொழிந்தால் அதுவும் மேக வெடிப்பாகவும் வகைப்படுத்தப்படும்.

இதை வைத்துப் பார்த்தால், ஒரு சாதாரண ஆண்டில், இந்தியா, ஒட்டுமொத்தமாக, ஆண்டு முழுவதும் சுமார் 116 செ.மீ மழையைப் பெறுகிறது. அதாவது ஒரு வருடத்தில் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பெய்யும் மழை முழுவதும் அதன் பரப்பளவில் சமமாகப் பரவியிருந்தால், மொத்த நீர் 116 செமீ உயரத்தில் இருக்கும். நிச்சயமாக, நாட்டில் மழைப்பொழிவில் மிகப்பெரிய புவியியல் மாறுபாடுகள் உள்ளன, மேலும் சில பகுதிகள் ஒரு வருடத்தில் இந்த அளவை விட 10 மடங்கு அதிகமாகப் பெறுகின்றன. ஆனால் சராசரியாக, இந்தியாவில் எந்த இடத்திலும் ஒரு வருடத்தில் சுமார் 116 செ.மீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுவே மேக வெடிப்பு நிகழ்வின் போது, அந்த இடத்தில் ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 10%, ஒரு மணி நேரம் பெய்யும் மழையில் கிடைத்துவிடுகிறது. ஜூலை 26, 2005 அன்று மும்பை அனுபவித்ததை விட மோசமான நிலைமை இது, இது சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் மழைப்பொழிவின் மிக தீவிர நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த நேரத்தில், மும்பையில் 24 மணி நேரத்தில் 94 செமீ மழை பெய்தது, இதன் விளைவாக 400 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன.

மேக வெடிப்புகள் எவ்வளவு பொதுவானவை?

மேக வெடிப்புகள் அசாதாரணமான நிகழ்வுகள் அல்ல, குறிப்பாக மழைக்கால மாதங்களில். இவற்றில் பெரும்பாலானவை இமயமலை மாநிலங்களில் நிகழ்கின்றன, அங்கு உள்ளூர் புவியியல், காற்று அமைப்புகள், கீழ் மற்றும் மேல் வளிமண்டலத்திற்கு இடையே உள்ள வெப்பநிலை மாற்றங்கள் போன்றவை மேக வெடிப்பு நிகழ்வுக்கு வழிவகுக்கின்றன.

இருப்பினும், மேக வெடிப்பு என விவரிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் உண்மையில், வரையறையின்படி, மேக வெடிப்பு அல்ல. ஏனென்றால், இந்த நிகழ்வுகள் மிகவும் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்பவை. அவை பெரும்பாலும் மழையை அளவிடும் கருவிகள் இல்லாத மிகச் சிறிய பகுதிகளில் நடைபெறுகின்றன. இருப்பினும், இந்த நிகழ்வுகளின் விளைவுகள் சிறிய பகுதிகளில் மட்டும் அல்ல. நிலப்பரப்பின் தன்மை காரணமாக, கனமழை நிகழ்வுகள் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களைத் தூண்டி, கீழ்நோக்கி விரிவான அழிவை ஏற்படுத்துகின்றன.

இதனால் தான், மழையின் அளவு வரையறுக்கப்பட்ட அளவுகோல்களை சந்திக்கிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், மலைப்பாங்கான பகுதிகளில் உயிர் மற்றும் உடைமைகளை அழிக்க வழிவகுக்கும் ஒவ்வொரு திடீர் மழையும் “மேகவெடிப்பு” என்று விவரிக்கப்படுவதற்கு இதுவே காரணம். அதே நேரத்தில், தொலைதூர இடங்களில் உண்மையான மேக வெடிப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் சாத்தியமாகும்.

மேக வெடிப்புகளை முன்னறிவிக்க முடியுமா?

இந்திய வானிலை ஆய்வு மையம் மழை நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துள்ளது, ஆனால் அது மழையின் அளவைக் கணிக்கவில்லை- உண்மையில், எந்த வானிலை ஆய்வு நிறுவனமும் அவ்வாறு செய்யவில்லை. முன்னறிவிப்புகள் லேசான, கன அல்லது மிகக் கடுமையான மழையைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் வானிலை விஞ்ஞானிகளுக்கு எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்று சரியாக கணிக்கும் திறன் இல்லை.

கூடுதலாக, முன்னறிவிப்புகள்’ பொதுவாக ஒரு பகுதி, ஒரு மாநிலம், ஒரு வானிலை துணைப் பிரிவு அல்லது ஒரு மாவட்டம் என ஒப்பீட்டளவில் பெரிய புவியியல் பகுதி உள்ளடக்கியது. அவை சிறிய பகுதிகளில் ஜூம் செய்யும்போது, ​​முன்னறிவிப்புகள் மேலும் மேலும் நிச்சயமற்றதாக இருக்கும்.

கோட்பாட்டளவில், மிகச் சிறிய பகுதியிலும் மழையை முன்னறிவிப்பது சாத்தியமில்லை. அதற்கு மிகவும் அடர்த்தியான வானிலை கருவிகளின் நெட்வொர்க் மற்றும் தற்போதைய தொழில்நுட்பங்களில் சாத்தியமற்றதாகத் தோன்றும் கணினித் திறன்கள் தேவை.

இதன் விளைவாக, குறிப்பிட்ட மேக வெடிப்பு நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியாது. எந்த முன்னறிவிப்பும் மேக வெடிப்புக்கான சாத்தியத்தை குறிப்பிடவில்லை. ஆனால் கனமழை முதல் மிக கனமழை வரையிலான நிகழ்வுகளுக்கான எச்சரிக்கைகள் உள்ளன, மேலும் இவை வழக்கமாக நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே கணிக்கப்படுகின்றன. மேக வெடிப்பு போன்ற சூழ்நிலைகளை விளைவிக்கக்கூடிய மிக அதிக மழைக்கான சாத்தியம், ஆறு முதல் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

மேக வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறதா?

இந்திய வானிலை மையம் வரையறுத்துள்ளபடி, மேக வெடிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறும் நீண்ட காலப் போக்கு எதுவும் இல்லை. எவ்வாறாயினும், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும். தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது நன்கு நிறுவப்பட்ட விஷயம். இந்தியாவில் பெய்யும் மழையின் அளவு கணிசமாக மாறவில்லை என்றாலும், குறுகிய காலத்தில் மழையின் அளவு அதிகரித்து வருகிறது.

அதாவது, ஈரமான காலங்கள் மிகவும் ஈரமாக இருக்கும், மேலும் மழைக்காலத்திலும் கூட நீண்ட வறண்ட காலநிலையுடன் இடைப்பட்டதாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு காரணமான இந்த வகையான முறை, மேக வெடிப்பு நிகழ்வுகளும் அதிகரித்து வரக்கூடும் என்று கூறுகிறது.



Read in source website

 

காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்புக்கும் காரணமாக இருக்க வேண்டிய விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் பாராட்டும்படியாக இல்லை. கிரிக்கெட்டில் தொடங்கி எல்லா விளையாட்டுகளின் சங்கங்களோ, சம்மேளனங்களோ அரசியலாக்கப்பட்டிருக்கும் அவலம் தொடர்கிறது. இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு அண்மையில் விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையும், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எதிரான தில்லி உயர்நீதிமன்ற உத்தரவும் அதன் வெளிப்பாடுகள்.

இந்திய கால்பந்து நிர்வாகத்தில் தேவையற்ற மூன்றாம் தரப்பு தலையீடுகள் இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) சர்வதேச கால்பந்து சம்மேளனம்(ஃபிஃபா) இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், அக்டோபரில் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 85 ஆண்டுகால இந்திய கால்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக எதிர்கொள்ளும் இந்தத் தடை, சர்வதேச அரங்கில் நமக்குத் தலைக்குனிவு.

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு நீதிமன்றத்தின் தலையீடு காரணம் என்பதுதான் வேடிக்கை. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகத் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரஃபுல் படேல். அவரின் பதவிக் காலம் கடந்த 2020 டிசம்பரில் நிறைவடைந்தும்கூட உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி பதவியில் தொடர்ந்து வந்தார்.

மாநில கால்பந்து சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பிரஃபுல் படேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். சம்மேளனத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரஃபுல் படேலை நீக்கி நிர்வாகக் குழுவை கலைத்து, கடந்த மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சம்மேளனத்தை மேலாண்மை செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கர் கங்குலி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் நிர்வாகிகள் குழுவை நியமித்தது.

அந்த நிர்வாகிகள் குழு பரிந்துரையின்படி, மாநில சங்கங்கள் மட்டுமல்லாமல் முக்கியமான விளையாட்டு வீரர்கள் 36 பேருக்கும் (அதாவது 50%) வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிகளின்படி, மூன்றாம் தரப்பு தலையீடு அனுமதிக்கப்படுவதில்லை. கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலில் அது அரசாங்கமானாலும், நீதிமன்றமானாலும் தலையிடுவதை சர்வதேச சம்மேளனம் விரும்புவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கான பங்களிப்பை அகற்றுவது அல்லது அதை 25%}ஆகக் குறைப்பது என்கிற சர்வதேச சம்மேளனத்தின் அறிவுரைகளை ஏற்காததால்தான் இப்போது தடையை எதிர்கொள்கிறது இந்திய கால்பந்து சம்மேளனம்.

முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகக் குழு பதவியேற்றிருந்தால் நீதிமன்றத் தலையீட்டுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. சம்மேளன நிர்வாகத்தில் மூன்றாவது தரப்பு தலையீடு, அதாவது உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழு செயல்பட்டபோது, சர்வதேச கால்பந்து சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு அவகாசம் வழங்கியது. ஆசிய கால்பந்து சம்மேளனத்தை இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. புதிய நிர்வாகக் குழு செப்டம்பர் மாதம் பதவியேற்க வேண்டும் என்பதுதான் ஃபிஃபாவின் கோரிக்கை. அப்படியிருக்கும்போது திடீரென்று தடை விதிக்கப்பட்டதற்கு பிரஃபுல் படேல் தலைமையிலான முந்தைய நிர்வாகக் குழுவின் பின்னணி இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் விதித்திருக்கும் தடையை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டவர்களை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டி விளையாட்டுத் துறையிலிருந்து அகற்றி நிறுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு.

விளையாட்டு சங்கங்களின் நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பில் சிலர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்தச் சங்கங்களை தங்களது தனிப்பட்ட சொத்து போல அவர்கள் கருதுகிறார்கள். அதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். விளையாட்டு சங்கங்களின் உயர் பதவிகளுக்கான கால, வயது வரம்பு உள்ளிட்டவை அடங்கிய தேசிய விளையாட்டுச் சட்டம் இந்திய விளையாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. தனிநபர் ஆதிக்கத்தை அகற்றுவதுதான் அதன் நோக்கம். ஆனால் கால்பந்து சம்மேளனம், ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட 54 சங்கங்கள் விதிமுறைகளை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றுவதில்லை.

அதனால்தான் நீதிமன்றத் தலையீடு தேவைப்படுகிறது.

இந்தத் தடை காரணமாக சர்வதேச போட்டிகளில் நமது கால்பந்து அணிகள் பங்கேற்க முடியாது. கிளப் கால்பந்து போட்டிகளிலும் இந்தியக் குழுக்கள் கலந்துகொள்ள முடியாது. நடக்கவிருந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலகக் கால்பந்து போட்டி நடக்காது.

இது பிடிவாதம் பிடிப்பதற்கான நேரம் அல்ல. கால்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகளின் கால்களைக் கட்டிப் போடாதீர்கள். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகளை ஏற்று தடையை அகற்ற முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது உறுதிப்பட வேண்டும்.



Read in source website


எனது நண்பரின் பத்து வயது பெயரன் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறான். கனடா நாட்டின் கல்வித்தரம் பற்றிய உரையாடல் நடந்தது. உடனே அவர் தன் கைப்பேசியில் அச்சிறுவன் அனுப்பியிருந்த, அவன் தயார் செய்த பாடத்திட்டங்களைக் காட்டினார். 

அவற்றில் ஜப்பான் பற்றி, கனடா பற்றி, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி பல்வேறு விவரங்களைத் திரட்டி, சிறு புத்தக வடிவில் அமைத்துள்ளான். நான் அசந்து போனேன். தேர்ந்த பத்திரிகை வடிவமைப்பாளரின் நேர்த்தி அதில் இருந்தது. "அவனுக்குப் பெற்றோர் உதவி செய்தார்களா' என்று நான் கேட்டபோது "இல்லை' என்று பதில் வந்தது. 

ஒரு நிமிடம் நம்மூர் குழந்தைகளைப் பற்றி நினைக்கத் தோன்றியது. நம் கல்லூரி மாணவர்கள் செய்யும் புராஜக்ட் பற்றி நாம் அறிவோம். பலர் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். மூளையை கசக்கிக் கொண்டு யோசித்துச் செய்பவர்கள் சிலர். அவை மதிப்பெண்களுக்குக்கானவையே தவிர சமுதாயத்திற்குப் பயன் தருவதற்காக இல்லை. 

அதே போல மாணவர்கள் அûஸன்மென்ட் தயார் செய்யும்போதும், ஒரு சிலர் மட்டுமே நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைத் தேடி எடுத்தும், இணையத்தில் தேடியும் குறிப்பெடுத்து எழுதி தயார் செய்வார்கள். அவர்களின் நண்பர்கள் அதை அப்படியே காப்பி அடித்துக் கொடுத்து விடுவார்கள். சிலர் எதையாவது எழுதிக் கொடுத்து ஒப்பேற்றி விடுவார்கள். எல்லோருக்கும் ஒரே மதிப்பெண் கிடைக்கும்.

நம் பாடத்திட்டங்கள் கல்வியாளர்களால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கல்வியின் தரத்தில் எதிரொலிக்கவே செய்கிறது. வாய்ப்பும், வசதியும் இருந்தால் கல்வியும் வசப்படும். கல்வியின் தரம் நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைப் பொறுத்தே மாணவர்களின் கற்றல் திறனும், அறிவும் மேம்படும். மாணவர்களுக்குப் பாடத்தில் ஆர்வம் ஏற்படும்படி பாடம் நடத்த வேண்டும். 

ஒரு தலைப்பு அல்லது சரித்திர நிகழ்வு, செய்யுள் என்று நடத்தும்போது வெறுமனே புத்தகத்தில் உள்ளதை மட்டுமே நடத்துகிறார்கள்; வேறு சிலர் மேலோட்டமாக விளக்குகிறார்கள். இதனால் மாணவர்களுக்குப் புரிவதில்லை. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். அதன் காரணமாக அப்பகுதி குறித்த பல்வேறு தகவல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வமோ, அதை மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ மாணவர்களிடம் ஏற்படுவதில்லை. 

அறிவியல் விதிகள், மொழியியலின் அடிப்படை இலக்கணம், சரித்திர நிகழ்வுகள், ஆண்டுகள், தேதிகள் எல்லாம் மாணவர்களின் மனதில் செதுக்கப்பட வேண்டும். இன்று பலருக்கும் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை என்று தெரியவில்லை. நம் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள், நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள், காந்தியடிகளின் சுயசரிதையின் பெயர் என்ன எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 

தங்கள் துறையில் அவர்கள் சிறந்த அறிவு பெற்றுள்ளவர்கள்; மிகுந்த திறமைசாலிகள். ஆனால் பொது அறிவு குறைவு. தமிழ் மாதங்களின் பெயர்கள் கூட தெரியவில்லை என்றால் என்ன செய்வது? தேர்வில் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு 65 மதிப்பெண்ணுக்கு  பதில் தெரியாது என்று அர்த்தம். அவனும் தேர்ச்சி பெறுகிறான், 95 மதிப்பெண் பெற்றவனும் தேர்ச்சி பெறுகிறான். இருசாராருமே அடுத்த வகுப்பிற்குப் போகிறார்கள். இதுதான் நம் கல்வி முறை.

ஆசிரியர்கள், ஒரு பாடத்தை நடத்துவதற்கு முன் அது பற்றிய அனைத்து குறிப்புகளையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் கூறி விட்டு பாடத்தை நடத்தினால் மாணவர்கள் மனதில் அது நன்கு பதியும். அப்படி நடத்தினால் மாணவர்களிடம் கவனக் குவிப்பு இருக்கும். 

அறிவியல் பாடங்களைப் புரிந்து கொள்வதற்காகத் தான் ஆய்வக வகுப்புகள் உள்ளன. ஆய்வக வகுப்பில் நன்கு விளங்கிக் கொண்டு பின் வகுப்பில் அதை நடத்தும் போது எளிதாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வகங்களுக்குள் நுழையும் போதே ஏதோ கொலைக்களத்திற்குப் போவதைப் போல போனால் அவர்களால் எதைக் கற்றுக் கொள்ள முடியும்? விலையுயர்ந்த இயந்திரங்கள் என்றால் மாணவர்களைத் தொடக்கூட அனுமதிப்பது இல்லை. கற்றல் ஓர் இனிமையான அனுபவமாக மலர வேண்டும்.

அக்காலத்தில் ஒன்றாம் வகுப்பில் குழந்தையை சேர்த்து விடுவதோடு பெற்றோரின் கடமை முடிந்து விடும். அவர்கள் 11-ஆம் வகுப்பை முடித்து, பின் ஏதோ கிடைத்த பாடப்பிரிவில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்கி வேலையிலும் சேர்ந்து விடுவார்கள். எல்லாம் எளிது, இனிது. 

வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் படித்தார்கள். புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பெற்றவர்கள் உடன் வர மாட்டார்கள். தனி வகுப்புக்குப் போவது என்றால் கொஞ்சம் அவமானமாக இருக்கும். தவறு செய்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தார்கள்; தண்டித்தார்கள். பெற்றோர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனது இல்லை. 

காலப்போக்கில் கல்வி வியாபாரமாகிப் போனதால், கல்விக் கூடங்கள் வெறும் மதிப்பெண் பெற வைக்கும் பட்டறைகளாக மாறி விட்டன. இன்றைய கல்வி முறையில் பள்ளி பாதி, வீடு பாதி என்று பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவோ, வீட்டுப் பாடம் செய்ய வைக்கவோ நேரம் இன்றித் தவிக்கிறார்கள். 

பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகும் நிலையில் இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆவதால் பிள்ளைகளுக்கு உதவ முடியாத நிலை. வெறுமனே எழுத வைப்பது, படிக்க வைப்பது என்றால் பாட்டி, தாத்தா பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் எல்லா வீடுகளிலும் இணையத் தொடர்பு இருக்க வேண்டும், மடிக்கணினி இருக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 

மழலையர் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை விளக்கப்படம் ("சார்ட்') புராஜெக்ட் தயார் செய்து கொண்டு வரச் சொல்கிறார்கள். சில விளக்கப்படங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. வாங்கி ஓட்டி  விடுவது எளிது. ஆனால் இப்போது அப்படித் தருவது கிடையாது. உதாரணத்திற்கு "குகை மனிதனின் ஓவியங்கள்' (ஒன்றாம் வகுப்புக்கு) இதற்கு கடைகளில் படம் இல்லை. கூகிளில் தேடினால் கிடைக்கிறது. அதை கணினியில் பிரிண்ட் அவுட்  எடுத்து ஒட்ட வேண்டும். கணினி பற்றிய அறிவு இல்லாதவர்களால் என்ன செய்ய முடியும்? 

இரவுப் பணி செய்யும் பெண்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் பணியில் இருப்பவர்கள்)  எப்படி குழந்தைக்கு உதவி செய்வார்கள்? "குடும்ப மரம்' (பேமிலி டிரீ)  வரைந்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து ஒட்ட வேண்டும். அதே போல சில பள்ளிகளில் நிறைய வீட்டுப்பாடம் கொடுக்கிறார்கள். சிறு குழந்தைகள் பள்ளியில் படித்தால் போதாதா? வீட்டில் அவர்களை உட்கார்த்தி வைத்து எழுத வைப்பது பெரும்பாடு.  வெட்டி, ஒட்டும் வேலை குழந்தைகளால் முடியுமா? அப்போது இது பெரியவர்களுக்கானதா? 
    
ஒரு பள்ளியில் செடியின் தண்டு, வேர், இலை எல்லாவற்றையும் ஒட்டி எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றார்கள். ஒரு செடியைக் கொண்டு வந்து வகுப்பில் காட்டி, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். வெறுமனே இவ்வாறு வேலை கொடுப்பது பெற்றோருக்கா? 

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புராஜெக்ட் கொடுத்தால் அவர்கள் தாங்களாகவே செய்து கொள்வார்கள். ஆனாலும் தேவையில்லாமல் அவர்களைப் பாடங்களைப் படிக்க விடாமல் கணினி மையத்திற்கும், கடைக்கும் அலைக்கழிக்கிறார்கள். பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடக்க விருக்கிறது என்றால் புராஜெக்ட் செய்யட்டும். பிள்ளைகளின் அறிவியல் அறிவு வெளிப்படும் என்பதால் அதை வரவேற்கலாம்.

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல குழந்தைகள் மாலையில் பாட்டு வகுப்பு, நடன வகுப்பு, ஹிந்தி வகுப்பு எனப் பறக்கிறார்கள். பெற்றோர் சொல்லும் காரணம் என்னவென்றால், 9-ஆம் வகுப்புக்கு வருவதற்குள் பிள்ளைகள் இது போன்று பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பின் மதிப்பெண்களைத் துரத்த வேண்டும்.

அவர்கள் குழந்தைகளா? இயந்திரங்களா? பாவம் சனி, ஞாயிறு நாட்களில் கூட ஓய்வே இல்லை. அத்தனை வகுப்புகளுக்குப் போக வேண்டும். இதில் வியப்பு என்னவென்றால் குழந்தைகளால் அவ்வளவையும் கற்றுக் கொள்ள முடிகிறது என்பது தான். 

இரண்டு ஆண்டுகள் முடங்கிப் போய்விட்ட நிலையில், பள்ளிக்கே போகாமல் இணையவழி வகுப்பில் படித்த குழந்தை இப்போது முதல் வகுப்பு. அதற்கு இப்போது வினா விடைதான் பாடம். அதுவும் இரண்டு வரிகள். ஒன்றும் அர்த்தம் விளங்காமல் அக்குழந்தையால் எப்படிப் படித்து தேர்வு எழுத முடியும்?

பெரும் பள்ளம் ஏற்பட்டு விட்டால், முதலில் அப்பள்ளத்தை மண் கொட்டி மூடி சமன் செய்ய வேண்டும் என்பதைப் போல இரண்டாண்டு இடைவெளியை நிரப்பி விட்டு, பின்னர் நடப்புக் கல்வியாண்டுப் பாடத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒரு சிலர் அவ்வாறு செய்கிறார்கள். மற்றவர்கள் இது பெற்றோரின் பொறுப்பு என்று விட்டு விடுகிறார்கள். 

இந்த ஆண்டு வெட்டுவது, ஒட்டுவது போன்ற விளக்கப்படங்களைத் தவிர்த்து விட்டு, அடிப்படைப் பாடங்களைக் கற்றுத் தர வேண்டும். எப்போதுமே பெரியவர்கள் செய்யும் படியான புராஜெக்ட்டுகளை குழந்தைகளுக்குத் தரக்கூடாது. பள்ளிகள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).



Read in source website

 

இந்த உலகில் நட்பை விரும்பாதவர் என்று எவரும் இருக்க மாட்டார். மனிதர்கள்தான் என்றில்லை நாய், பூனை, பறவைகள் என பல்வகை உயிரினங்களும் அதனதன் இனத்தோடு நட்பில் திளைக்கின்றன. உடுக்கை இழந்தவன் கைபோல உதவுதல் என்று திருவள்ளுவரும் நட்பின் தன்மையை வரையறுத்திருக்கிறார். மனதை லேசாக்க நட்பைவிட எளிய கருவி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் எளிமையான இந்த நட்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், பராமரிக்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்பதும் அவசியமானதே.

நட்பிலே பொதுவாக ஆழமான நட்பு, சாதாரண நட்பு என்று வகுத்திருக்கோம். பலரோடு நாம் நட்பில் இருந்தாலும் ஒரு சிலரோடுதான் ஆழமான நட்பில் இருப்போம். மற்றவர்களோடு பெயரளவுக்கு மேம்போக்கான நட்பு பூண்டிருப்போம்.

நட்பைப் பராமரிக்க நாம் செலவிட விரும்பும் நேரம், பணம் உள்ளிட்ட பல காரணிகள் அது ஆழமான நட்பா, மேம்போக்கான நட்பா என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆக நட்புக்கும் ஒரு விலையுண்டு.

ஆழமான நட்புக்கும் மேம்போக்கான நட்புக்கும் என்ன வித்தியாசம்? சிறு வயது முதல் பள்ளியில் நம்முடன் படித்த பலரையும் நாம் நினைவில் வைத்திருப்போம். அவர்களில் பலருடனான நம்முடைய நட்பு ஆழமானதாகவே இருக்கும்.

அவர்கள் நாம் படித்த காலத்தில் மிகவும் சொற்ப அளவிலான உதவியை நமக்கு செய்தவராகக் கூட இருக்கலாம். அந்த நேரத்தில் அந்த சிறிய உதவி மட்டும் இல்லாது போயிருந்தால் நமக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டு இருக்கும். எனவே, அதுபோன்ற நட்பை நாம் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கவே செய்வோம்.

நாம் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் நாம் நட்பு பாராட்ட இயலாது; முடியவும் முடியாது. ஒரு சிலரைப் பார்த்தவுடன் நாம் கண்டும் காணாமலும் செல்கிறோம். அவர்களும் அப்படியே செல்லலாம். ஒரு சிலரைப் பார்த்தவுடன் நாம் புன்னகைக்கிறோம், புன்னகைத்துக்கொண்டே நகர்கிறோம்.

ஆனால் வேறு சிலரைப் பார்த்தவுடன் எவ்வளவு மும்முரமான பணி இருந்தாலும் அதனை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் செல்கிறோம். இது போன்ற நேரங்களில், நமக்கோ அவருக்கோ நேரம் இல்லையென்றால் அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நிச்சயம் பேசுகிறேன் என்ற உத்தரவாதத்தோடு அவருக்கு விடை கொடுக்கிறோம்.

நேரில் பார்த்துப் பேசுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு சிலரோடு நாம் தொடர்பு கொண்டு பேசி அவருடனான நமது நட்பைப் புதுப்பித்துக் கொண்டே இருப்போம். இது போலவே பலர் நம்முடைய நட்பையும் புதுப்பிப்பார்கள்.

எது எப்படி இருப்பினும் ஒவ்வொருவரது நட்புக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரத்தை நாம் செலவிடவேண்டியுள்ளது. இவ்வாறு நாம் பராமரித்தும் நண்பர்களில் பலரை நாம் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு இல்லாத போது அவரை மறந்து கூட போகிறோம். அதுபோலவே நம்மையும் பலர் மறந்து போகிறார்கள் பதவி, பொருளாதார பின்புலம் போன்ற காரணிகளை முன்வைத்து சிலரது நட்பை நாம் பராமரிப்போம். அவரும் அவ்வாறே நம்முடைய நட்பைப் பராமரிக்கலாம். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏதாவது உதவி கேட்க வேண்டிய நிலைமை ஏற்படும். அப்போது வாய்ப்பு இருந்தால் உதவுகிறோம் இல்லை என்றால் மறுக்கிறோம். இவ்வாறு ஓர் எதிர்பார்ப்போடு நாம் பராமரிக்கும் நட்பு பல நேரம் காணாமலே போகிறது நமக்கு ஒரு பெருத்த மன வருத்தம் வருகிறது. அந்த மன வருத்தத்தை நம்முடன் இருக்கக்கூடிய பலருடனும் பகிர வாய்ப்பிருந்தால் பகிர்கிறோம். ஒருவேளை அதற்கான வாய்ப்பு இல்லை எனில், எங்கேயோ இருக்கக்கூடிய ஒரு நண்பருடனான ஒரு சிறு உரையாடல் மூலம் நம்முடைய ஒட்டுமொத்த வருத்தத்தையும் குறைத்துக்கொள்கிறோம்.

நம்மிடம் உள்ள பலத்தை நமக்கு உணர்த்தி நம்மை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றக்கூடிய உரையாடலாகக் கூட அது அமைந்து விடும். அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவர் மற்றவரின் நன்மையில் ஆர்வம் செலுத்த வாய்ப்புள்ளதாக நட்பு அமையவேண்டும்.

நட்பு என்பது ஆடம்பரம் அல்ல, அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அதே நேரம் நட்பு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கேற்ப பலனளிக்கக்கூடியதாக அமைகிறது.

இன்று இணைய உலகில் நமக்கு முகநூல் கட்செவி அஞ்சல் போன்றவை மூலமாக பலரும் நண்பர்களாகின்றனர். அவர்களுடைய நட்பை இது போன்ற எந்த கணக்கிலும் நாம் சேர்க்க முடியாது. இணையவெளியில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம். ஆனால், தேவை என்று வரும்போது எவரும் கைகொடுக்காமல் போகலாம்.

ஆனால், இணையவெளி தொடர்புகள் மூலம் கிடைப்பவர்களைவிட, ஏற்கெனவே நம்மோடு ஆழமான நட்பில் இருந்து தற்போது தொடர்பில் இல்லாதவர்களை மீண்டும் தொடர்புகொள்ள இணையவெளி உதவலாம். அதே நேரத்தில் வயது முதிர்ந்த பிறகு நமக்கு ஏற்படக்கூடிய பல நட்புகளும் ஆழமான நட்புகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

அதற்கு காரணம் நட்பு என்பது வளரக்கூடியது, பராமரிக்க வேண்டியது. நட்பை நாம் கூடுமானவரையில் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். பிறருக்கு உதவுவதற்கான சாதனமாக நட்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அண்டை அயலாரிடம் எதிர்ப்பார்ப்பில்லாது நட்பு கொண்டு அதனைப் பராமரிக்க முயல வேண்டும். ஆயிரம் பேர் நட்பில் இருந்தாலும் நமது வீட்டிலுள்ளோர், உறவினர்கள், நமக்கு அண்மையிலுள்ளோர் இவர்களை மறந்து இணையவெளியில் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கக் கூடாது.

நமது வீட்டிலிருந்து, வீதியிலிருந்து நட்பு வளையங்களை பெரிதாக்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில் உடனிருப்போரிடமும் நட்பு பாராட்டி வாழவேண்டும். இது போன்ற நட்புகளே நமது துயரத்தில் கை கொடுப்பதாக அமையும்.



Read in source website

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களின் மீது மே 22, 2018 அன்று காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி மாணவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் நீண்ட காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 1,200-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்துத் தன்னுடைய இறுதி அறிக்கையைத் தமிழக அரசிடம் கடந்த மே 18 அன்று அளித்தது.



Read in source website

கலையுலகத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவை, திராவிட இயக்கங்களுக்கு முன்னரே கட்டியெழுப்பிய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி. வழக்கறிஞரான அவரது பேச்சாற்றல், ஆங்கில மொழி யறிவு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் தேசியப் பிரிவுக்கு தலைவர் ஆக்கப்பட்டவர்.

சுகுண விலாச சபாவின் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டிருந்தவரான சத்தியமூர்த்தி, பிரிட்டிஷ் அரசின் கொள்கை களைச் சாடுவதற்கும், தேசிய உணர்வைப் பரப்புவதற்கும் நாடக மேடையும் நாடகப் பாடல்களும் சக்தி வாய்ந்த கருவி என்பதை உணர்ந்திருந்தார். அதனால் நாடக, சினிமா கலைஞர்களுடன் இணைந்து இயங்கத் தொடங்கினார்.

1920இல் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கெடுத்தபோது நாடக, சினிமா கலைஞர் களையும் போராட்டத்துக்குள் இழுத்தார். 1923இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது கலையுலகைச் சேர்ந்த பலரையும் கள அரசியலுக்கு அழைத்துவந்தார்.

பிரிட்டிஷ் அரசு சில நாடகக் குழுக்களுக்கு தடை விதித்தபோது, சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி, நாடக் கலைஞர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

சினிமா பேசத் தொடங்கியதும், சமூக மாற்றத்துக்கான மகத்தான சாதனமாக அதைக் கண்ட சத்தியமூர்த்தி, ‘இந்திய மறுமலர்ச்சியில் பங்களிப்பு செய்யும்படி திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்’ என்று கட்டுரை எழுதினார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட துடன், அந்த அமைப்புக்கான கொள்கைகளையும் அவர் வடித்துக்கொடுத்தார். அதேபோல் சுதந்திரத் துக்கு முன்னர் பம்பாயில் நடைபெற்ற முதல் இந்தியத் திரையுலக மாநாட்டுக்கு தலைமை வகித்து, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.

பின்னாளில் திராவிட இயக்கத்தில் சேர்ந்த எம்.ஜி.ராமசந்திரன், ‘கதரின் வெற்றி’ நாடகத்தில் நடித்ததும் காங்கிரஸ் அனுதாபியாக இருந்ததும் தீரர் சத்தியமூர்த்தி உருவாக்கிய தாக்கத்தின் நீட்சியே.



Read in source website

உலகின் மிகப் பழமையான வேளாண் அமைப்புகளில் ஒன்றான இந்திய வேளாண்மை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக வேளாண் துறை திகழ்கிறது. 1950-51இல் 51 மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி, 2021-22இல் 314 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 75 ஆண்டுகளில் இந்திய வேளாண்மை பல உச்சங்களைத் தொட்டுள்ளது. வாழைப்பழ விளைச்சலில் சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதே போல எருமைப்பாலில் முதலிடம், நெல், கோதுமை, கரும்பு, பச்சைக் காய்கறிகள், உருளைக்கிழங்கு, பருத்தி, பசும்பால் ஆகியவற்றில் உலகில் இரண்டாம் இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. உணவு தானியங்களின் உற்பத்தி 6 மடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் 11 மடங்கு, மீன் உற்பத்தி 18 மடங்கு, பால் 10 மடங்கு, முட்டை 53 மடங்கு உயர்ந்திருக்கிறது.

விடுதலை பெற்ற காலகட்டத்தில், இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 36 கோடி; அப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்கு 51.9%. இந்தியாவின் தற்போதைய உத்தேச மக்கள்தொகை ஏறத்தாழ 139 கோடி.

ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), வேளாண்மையின் பங்கு 2017இல் 15.4% ஆகக் குறைந்திருக்கிறது. பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு உள்ளான போதும் 63 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு (45.6%) வேளாண்மைத் துறை மூலமே கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- அபி



Read in source website

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆளுமையாகவும் கவிஞராகவும் அறியப்படுபவர் சரோஜினி. படித்த, செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.

சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது கவிதைகளைக் கண்ட ஹைதரா பாத் நிஜாம், வெளிநாட்டில் படிப்பதற்கான உதவித்தொகையை வழங்கினார்.

லண்டனில் உயர்கல்வி பயின்றார். அப்போது முத்தியாலா கோவிந்தராஜுலு என்ற தொழில்முறை மருத்துவரை காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், காந்தி, நேரு ஆகியோரின் நட்பு அவருக்குக் கிடைத்தது.

வங்காளம், இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், பாரசீகம் ஆகிய மொழிகள் அவருக்குத் தெரியும் என்பதால் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தார். பெண்ணுரிமை குறித்துப் பேசினார். தன் பேச்சால் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.

1925இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931இல் காந்தி, மதன்மோகன் மாளவியாவுடன் இணைந்து வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.

1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். அப்போது காந்தியிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

சுதந்திர இந்தியாவில் ஐக்கிய மாகாணத்தின் (இன்றைய உத்தர பிரதேசம்) ஆளுநராகப் பொறுப்பேற்றார் சரோஜினி. இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பைப் பெற்றார். 'கவிக்குயில்’, 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட சரோஜினி, 1948ஆம் ஆண்டு மறைந்தார்.

- ஸ்நேகா



Read in source website

இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரர்களை நினைவு கூர்வது நம் கடமை. முதல் விடுதலைப் போராக அறியப்படும் 1857 இல் நடந்த ‘சிப்பாய் கலக’த்திற்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தலைவன் ஒண்டிவீரன் எனும் போராளியின் வீரமரணத்தின் 250 ஆவது ஆண்டை நினைவுகூர்கிறோம். அதனை கொண்டாடும்விதமாக, மத்திய அரசு ஆகஸ்ட் 20 அன்று தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

நெற்கட்டான் செவ்வயல் பாளையம்

திருநெல்வேலிக்கு அருகில், சங்கரன்கோவிலி லிருந்து வடமேற்கில் பத்து கிலோமீட்டர் தொலை விலும், வாசுதேவநல்லூரிலிருந்து கிழக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள, நல்ல விளைச்சல் நிலங்களை மிகுதியாகக் கொண்ட செழிப்பான ஜமீன் நெற்கட்டும் செவ்வயல்.

அந்த ஜமீன் பரம்பரையில் பொ.ஆ. (கி.பி.) 1710 ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா எனும் தம்பதியினருக்கு பிறந்தவர் ஒண்டிவீரன். இவர் சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப் பாடவும், ஒயிலாடவும் மற்றும் தோல் வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் வீரனது தந்தை இறந்ததால், ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பரான பூலித்தேவனோடு சேர்ந்து ஆண்டுவந்தார். இந்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரின் வரலாற்றைத் தனித்துச் பேச முடியாது.

ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்றபோது, சமூக அரசியல் சூழல் காரணமாக பாளையப் பொறுப்பை பூலித்தேவன் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இருவரும் இணைந்தே பாளையத்தை ஆண்டு வந்தனர். ஒண்டிவீரன் படைத்தளபதியாக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டு, பகைவருக்கெதிரான போரை தலைமையேற்று நடத்திவந்தார்.

கிழக்கு இந்திய கம்பெனியர் இந்தியாவில் வணிகம் செய்ய நுழைந்து, மெதுவாக அரசியல் சதுராட்டம் ஆடத்தொடங்கிய காலகட்டம் அது. ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு ராணுவ உதவி செய்து, அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். 1755 ஆம் ஆண்டு பூலித்தேவனும் ஒண்டிவீரனும், ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்கவேண்டும் என்று எதிர்த்தனர். நெல்லை கப்பமாக கட்ட மறுத்தனர். எனவேதான், நெற்கட்டும் செவ்வயல், “நெற்கட்டான் செவ்வயல்” என அழைக்கப்படலாயிற்று.

முதல் விடுதலைப் போர்

ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வயல் பாயைத்தின் மீது போர் தொடுத்தனர். ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கான் மற்றும் லார்ட் இன்னிங்ஸ் தலைமையிலான படையை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் எல்லையிலேயே 1755 மே 22ஆம் நாள் தோற்கடித்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும்.

மீண்டும் அதே ஆண்டு மாபூஸ்கான் மற்றும் ஆங்கிலேயப் படைத்தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் நெல்லை நோக்கி பெரும்படை புறப்பட்டது. வழியில் மணப்பாறையில் லட்சுமண நாயக்கர் அடிபணிந்தார்.

மதுரையும் ராமநாதபுரமும்கூட பணிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனாரான பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் (கெட்டி பொம்மு) கர்னல் ஹெரானிடம் கப்பம் கட்டிப் பணிந்துபோனார். தொடர்ந்து ஆங்கிலேயப் படை தென்மலையில் முகாமிட்டனர். ஆனால், அவர்களின் 2000 வீரர்களுடன் கூடிய பெரும்படையை மீண்டும் வென்று வெற்றிவாகை சூடினார் ஒண்டிவீரன்.

இதுவே ஆங்கிலேயருக்கு எதிரான நடந்த முதல் சுதந்திரப் போராகும், காலத்தால் மட்டும் அல்ல; பண்பாலும்! ‘சிப்பாய் கலக’த்திற்கான காரணங்களாக கருதப்படுபவை: நிலங்களை இழந்துவிடக் கூடாது என்ற சிற்றரசர்களின் தூண்டுதல், வங்காளப் படையில் நிலவிய சாதியத்தால் ஏற்பட்ட அயல்நாட்டிற்குச் சென்று போரிட விரும்பாத மனநிலை மற்றும் “என்ஃபீல்ட் ரைஃபிள்” துப்பாக்கி குண்டுகளால் உண்டான மத அடிப்படைவாதம் போன்றவையே! எனவே அக்கலகம் ஆங்கிலேயரை வெளியேற்றவேண்டும் என்ற நோக்கில் எழுப்பப்படவில்லை.

அக்கலகத் திற்கு யாரும் நேரடியாக தலைமை ஏற்கவும் இல்லை; கொள்கை எதுவும் கிடையாது. மாறாக சுயஉரிமைக்கான தன்னெழுச்சியே அக்கலகம்.

தென்பாண்டிச் சீமையின் சிம்மசொப்பனம்

மீண்டும் 1756 மற்றும் 1757 ஆண்டுகளிலும் போர் தொடுத்த ஆங்கிலேயரை தோற்கடித்தவர் ஒண்டிவீரன். எட்டயபுரம் உள்ளிட்ட சில தெலுங்கு பாளையங்கள் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாயின. அவற்றின் மீது போர்தொடுத்து, ஆங்கிலேயருக்கு எதிராக மற்ற பாளையங்களை அணிசேர்த்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும். நாயக்கர் காலத்தில் 16 தமிழ் பாளையங்களும், 56 தெலுங்கு பாளையங்களும் இருந்தன. ஆழ்வார்குறிச்சி அழகப்பன் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்.

அழகப்பனுக்கு ஆதரவாக மருதநாயகம் என்ற கான்சாகிப் யூசுப்கான் களமிறங்கினார். 1759 ஜுலை 2 ஆம் நாள் அவர் ஊத்துமலை, சுரண்டை பாளையங்களைக் கைப்பற்றினார். நவம்பர் 6-ஆம் நாள் ஒண்டிவீரன் அவற்றை மீட்டெடுத்தார். கோபம் கொண்ட மருதநாயகம், தொண்டமான் படையுடன் இணைந்து வாசுதேவ நல்லூரைத் தாக்கினார்.

இருபது நாள் நடந்த போரில் பூலித்தேவனும் ஒண்டிவீரனும் இரு படை களாகப் பிரிந்து போரிட்டு வென்றனர். மீண்டும் கான்சாகிப் 1760 டிசம்பர் 20 அன்று நெற்கட்டான் செவ்வயலைத் தாக்கினார். அப்போரில் ஒண்டிவீரனின் துணை தளபதி வெண்ணிக்காலாடி வீரமரணம் அடைந்தார். இவர் தேவேந்திரர் குலத்தைச் சார்ந்தவர். ஆனாலும் இப்போரிலும் கான்சாகிப் தோல்வியையே தழுவினார்.

இறுதிப்போர்கள்

1767 மே 13 அன்று ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் நெற்கட்டான் செவ்வயலின் இராணுவ தளமாக இருந்த வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ் மறவர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன் தலைமையில் மிகக் கடுமையாக போரிட்டனர்.

திகைத்துப்போன காம்பெல் இது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு 1767 மே 28 அன்று எழுதிய கடிதம் இன்றும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. இருப்பினும், அவர்களின் பலம் வாய்ந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் முன் நம்மவர்களின் வாட்கள், வேட்கள் தோற்றுப்போயின.

அப்போது, சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன் மீண்டும் திரும்பவில்லை. எனவே, ஒண்டிவீரன் மீண்டும் பாளையப் பொறுப்பை ஏற்று, பூலித்தேவனின் மூன்று பிள்ளைகளையும் நான்கு ஆண்டுகள் காத்துவந்தார். மீண்டும் களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்தூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இறுதியாக, 1771 ஆகஸ்ட் 20 ந்தேதி நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் வீரமரணமடைந்தார்.

வரலாற்று மீட்டுருவாக்கம்

மேற்கண்ட ஒண்டிவீரன் வரலாறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற வழக்கமான வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் ஒண்டிவீரன் இன்று தாழ்த்தப்பட்டவராக வகைப்படுத்தப்பட்டுள்ள அருந்ததியர் குலத்தில் பகடை எனும் பிரிவைச் சார்ந்தவர்.

வாய்மொழி வழக்காறுகளிலிருந்துதான் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டி இருக்கிறது. காஞ்ச அய்லையா, “மாதிகா (அருந்ததியர்) மக்களின் வாழ்வு வாய்மொழி வரலாறாகவே இருக்கிறது; அது எழுதப்பட்ட இலக்கியங்களில் இல்லை” என்கிறார்.

லூயிஸ் அல்தூசர், “வரலாற்றில் மறைக்கப்பட்டவை எவையும், எறிந்தால் திரும்ப வராமல் இருக்க, தூக்கி எறியப்பட்ட பழைய செருப்புகள் அல்ல. அந்த வரலாறுகள் வெளிக் கசிந்துகொண்டே இருக்கும். வெடிப்புற வெளிப்படவும் செய்யும்.” என்கிறார். “சமூகத்தில் எவையெல்லாம் தவறாக தீர்மானிக்கப்பட்டதோ, அவையெல்லாம் ஒருபோதும் முற்ற முடிவாக தீர்மானிக்கப்பட்டவை அல்ல. மாறாக, அவையெல்லாம் மீண்டும் மறுசீரமைக்கப்பட வேண் டும்.” என்கிறார் பி.ஆர். அம்பேத்கர்.

எனவே, ஒண்டிவீரன் வரலாற்றைக் கட்டமைக்க ‘ஒண்டிவீரன் கதைப்பாடல்’, ‘ஒண்டிவீரன் வில்லுப்பாட்டு’ மற்றும் ‘ஒண்டிவீரன் நாடகம்’ போன்ற வாய்மொழி இலக்கியங்களே சான்றாதாரங்கள் ஆகின்றன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி’ போன்ற நாட்டார் பாடல்களில் ஒண்டிவீரன் வரலாறு கிளைக்கதைகளாக சொல்லப் படுகிறது.

இவ்விரண்டு மூலங்களும் நுணுக்கமாக முரண்படுவதும் நாம் அறிந்ததே! ந. இராசையா, எழில். இளங்கோவன் மற்றும் ச. சீனிவாசன் போன்றோரின் காத்திரமான ஆய்வுகள் ஒப்பிலாவீரன் ஒண்டிவீரன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றன.

(சி. பேசில் சேவியர், பிளாசபி ஆஃப் மார்ஜின்ஸ் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு basilxavier@gmail.com)



Read in source website

கடந்த 1947 ஆகஸ்ட் 14இல் நம் நாட்டிலிருந்து பிரிந்தது பாகிஸ்தான் மட்டுமல்ல. அரசியல் காரணங்களுக்காக நடந்ததாகக் கருதப்படும் இப்பிரிவினையால் இரண்டு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான உறவினர்களும் பிரிந்தார்கள். பஞ்சாபின் மூன்றில் இரண்டு பங்கு பாகிஸ்தானுடன் சென்றுவிட்டது.

ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டாயிரம் பேர் அமிர்தசரஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜலியான்வாலா பாக்கிலிருந்து வாகா எல்லைக்கு ஊர்வலமாக சென்றுவந்தனர். வாகா எல்லை அருகில் உள்ள அட்டாரி கிராமத்தில், மெழுகுவர்த்திகளை ஏற்றி விடியவிடிய நடைபெறும் சமாதான விழாவில் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானில் இருந்தும் பல முக்கியப் பிரமுகர்கள் இந்தியாவுக்கு வந்து இதில் கலந்துகொண்டுள்ளனர். சமீப ஆண்டுகளாக பாதுகாப்பு காரணமாக, சில ருக்கு மட்டும் அட்டாரி-வாகா எல்லையில் மெழுகுவர்த்தி ஏற்ற அனுமதி கிடைக்கிறது.

பிரிவினைக் கலவரத்தால் பலியானவர் களில் பெரும்பாலானோர் பஞ்சாபிகள். அவர்களுக்காக பாகிஸ்தான் அருகே இருக்கும் அட்டாரி-வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில் சில கி.மீ. தொலைவு உள்பகுதிக்கு இது இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 14இல் செல்பவர்கள் இங்குதான் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

பாகிஸ்தான் சென்று திரும்புதல்

பஞ்சாப் நாட்டுப்புற பாடல்கள் ஆய்வு மையத்தின் தலைவர் பூபேந்தர் சிங் சாந்து, பஞ்சாப் அரசு மின்துறையின் உதவி பொறியாளரும்கூட. பிரிவினை குறித்து அவர் நினைவுகூர்ந்த போது, “இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது குறைந்த பட்சம் ஆறு மாதங்களில் பத்து லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளின் மதவாதிகளால் ஏற்பட்ட பிரிவினைக் கலவரங்களால் உயிரிழந்தவர்களில் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் அடக்கம். 1947-க்குப் பிறகு மாவட்ட துணை ஆட்சியர்களிடம் ஜாமீன் அளித்து, சிறப்பு அனுமதி பெற்று பலர் பாகிஸ்தானுக்கு சென்று வந்தனர். பாகிஸ்தானியர்களும் இந்தியாவிற்கு வந்து சென்றனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்ட பின், இது மாறி விட்டது” என்கிறார்.

துண்டிக்கப்பட்ட உரையாடல்

தொடர்ந்த நண்பர் பூபேந்தர் சாந்து, ‘சீக்கியர்களின் குருவான குரு நானக் பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ளது. ஆனால், அங்கு எளிதாகச் செல்ல முடி வதில்லை. ‘சாரே ஜஹான்சே அச்சா! இந்துஸ்தான் ஹமாரா!‘ என நாம் பாடிக் கொண்டிருக்கும் தேசியப் பாடலை பாடிய அல்லாமா இக்பாலின் வீடும் பாகிஸ்தானில் உள்ளது. அங்குள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் சாதாரணமாக நடை பெற்றுக்கொண்டிருந்த உரையாடல்கள், உளவாளி பட்டத்திற்கு அஞ்சி நின்றுபோயின’ என ஆதங்கப் படுகிறார்.

எனவே, எல்லையில் பதற்றத்தைத் தணித்து, தொடக்கக் காலத்தில் இருந்தபடி விசா நடைமுறைகளைத் தளர்த்தி, இரண்டு நாடுகளிடையே மீண்டும் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.

உறவுகளைப் பிரிந்தோம்

பிரபல பஞ்சாபி எழுத்தாளரும், கவிஞரு மான பீபா பல்வந்த் சிங் கூறுகையில், ‘பாகிஸ்தான் பஞ்சாபில் வாழும் முஸ்லிம்களும் பஞ்சாபி மொழி பேசுகின்றனர். இரண்டு நாட்டு பஞ்சாபிகளுக்காக கதை, கவிதை நூல்கள் இப்போதும் வெளிவருகின்றன. அவற்றைப் படித்து இன்புறுகிறோம்.

ஒரு காலத்தில் லாகூர்வாசிகள் உணவருந்த வேண்டி, 50 கி.மீ. தொலைவிலுள்ள அமிர்தசரஸின் ஹோட்டல்களுக்கு வந்து சென்றுள்ளனர். பாகிஸ்தான் நாளிதழ்களைப் படிக்காமல் இங்கு பலருக்கு பொழுது ஓடாத காலம் ஒன்றிருந்தது. பலருக்கு பாகிஸ்தான் சென்றுவிட்ட உறவினர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது. உறவினர்களைப் பிரிவதுதான் எவ்வளவு வேதனை?‘ என உணர்ச்சி வசப்படுகிறார்.

பாகிஸ்தானின் இந்திய எல்லையில் உள்ள வாகா கிராமத்தில் அதே தினத்தில் சமாதான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் இந்திய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு திரும்பிய காலம் ஒன்று உண்டு.

இப்படி சூழல் இணக்கமாக இருந்த காலத்தில் ஓடிய சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயிலும் பேருந்து வசதியும், தம் நாட்டு எல்லையைத் தாண்டுவதை இப்போது நிறுத்திவிட்டன. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள இரும்பு வேலியை உருக்கி பாலமாக்க முயலும், பஞ்சாபிகளின் கனவு தொடர்கிறது.



Read in source website

பெருகிவரும் அறிவுப் புலங்களுக்கு ஈடுகொடுத்துத் தமிழ், தன் சொல் இருப்பைப் பெருக்கிக்கொள்கிறது. அறிவுப் புலங்கள் நமக்கு ஆங்கிலம் வழியாகவே எட்டுவதால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான கலைச் சொற்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

“ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்தார்கள்” என்று அம்மா சொல்கிறார். “குழாய் மாத்திரையா, வில்லை மாத்திரையா?” என்று மகள் கேட்கிறார். ‘ஊசி’யின் பழைய பொருளை விரிவாக்கி, அப்படி விரிவாக்கியதை வினைச்சொல்லாக்கி, ‘மாத்திரை’க்கும் கீழ்நிலையில் அதற்கு வகைச் சொற்களை உருவாக்கிப் புதிய சூழலை வசப்படுத்திக்கொள்கிறார்கள். தேவை ஏற்படும்போது சாதாரண மக்களும் நூதனமான பொருட்களுக்கு இப்படிப் புதுச் சொற்களைப் படைத்துக்கொள்வார்கள்.



Read in source website

உலகின் தொன்மையான வரலாற்றுக்கும், நாகரிகச் செழுமைக்கும், பண்பாட்டுப் பெருமைக்கும் தகுதியான ஓர் இடமாக இந்தியா உள்ளது. இந்திய வரலாற்றின் தொன்மையை வெளிப்படுத்துபவை தொல்லியல் சான்றுகள்தான். அத்தகைய தொல்லியல் சான்றுகள் கள ஆய்வுகள், அகழாய்வுகள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.

இந்தியாவில் தொல்லியல் அகழாய்வுகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கின. உலக நாகரிகங்களுள் தொன்மையானதும் செழுமையானதுமான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளிலும் மற்றும் பல இடங்களிலும் புகழ்பெற்ற அகழாய்வு அறிஞர்களான அலெக்சாண்டர் கன்னிங்காம், சர் ஜான் மார்ஷல், மார்டிமர் வீலர் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள், இந்திய அறிஞர்களான அமலானந்த கோஷ், ஆர்.டி.பேனர்ஜி, ஹெச்.டி.சங்காலியா, கே.வி.சௌந்தரராசன் போன்றோரும் பல்வேறு இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு, இந்திய வரலாற்றின் தொன்மையை உலகறியச் செய்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் சிந்துவெளி தொடர்புடைய தலங்களில் பெருமளவு அண்டை நாடான பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றுவிட்ட பிறகு, இந்திய நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வெளிப்படும் தொன்மை: சிந்துவெளி நாகரிகக் கூறுகளைக் கொண்டிருக்கக்கூடிய மிக முக்கியத் தலமான குஜராத்தின் லோத்தலில், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை 1955 முதல் 1960 வரை அகழாய்வை மேற்கொண்டது. அங்கு 2,200 ஆண்டுகள் பழமையான நகரக் கட்டமைப்பு கண்டறியப்பட்டதோடு, உலகின் தொன்மையான கப்பல் கட்டும் பகுதியும் வெளிக்கொணரப்பட்டது.

அப்பகுதி சபர்மதி ஆற்றங்கரையின் வணிகப் பெருவழியோடு இணைக்கப்பட்டிருந்ததும் அறியப்பட்டது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று, குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள தோலவீரா. 1960-களின்தொடக்கத்தில் தோலவீராவைச் சேர்ந்த சம்புதான் காத்வி என்பவரால் இப்பகுதி கண்டறியப்பட்டு, அரசின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்பகுதியில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியவர் ஜே.பி.ஜோஷி எனும் தொல்லியல் ஆய்வாளர். சிந்துவெளி நாகரிகத்தின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்திய பகுதி தோலவீராதான். 1990 முதல் 2005 வரை தொடர்ச்சியாக இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு நகரக் கட்டமைப்பு, உயிரினங்களின் எலும்புகள், தங்கம், வெள்ளியிலான பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன.

தெற்கு குஜராத், பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப், மேற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளோடு வணிகத் தொடர்புகளை இப்பகுதி கொண்டிருந்தது என்பதற்குப் பல்வேறு தரவுகள் இப்பகுதியில் கிடைத்தன.

அதேபோன்று சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களைக்கொண்டிருக்கக்கூடிய ஹரியாணாவின்பனவாலி என்ற இடத்தில், 1974 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அகழாய்வு மேற்கொண்டது. அகழாய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், இதன் காலம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

முதல் கட்டம், 2500-2300 பொது ஆண்டுக்கு முந்தையது (சூளையில் இட்டுச் சுடப்பட்ட செங்கற்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள்). இரண்டாம் கட்டம், 2300-1700 பொது ஆண்டுக்கு முந்தையது (105 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் உயரம், 6 மீட்டர் அகலம் நீண்ட சுவரால் பாதுகாக்கப்பட்ட 200x500 மீட்டர் அளவுடைய சதுரங்கப் பலகை வடிவிலான சரியான கோணங்களில் வடிவமைக்கப்பட்ட தெருக்கள், வீடுகள் கொண்ட நகரக் கட்டமைப்பு). மூன்றாம் கட்டம், 1700-1450 பொது ஆண்டுக்கு முந்தையது (சிந்துவெளி நாகரிகத்திற்குப் பிறகான காலம்) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

திருப்புமுனை அகழாய்வு: இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களைக் கண்டறியும் பணியின் ஒரு மைல் கல்லாகக் கிடைத்ததுதான் ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள காளிபங்கன் என்கிற இடம். இந்தியப் பண்பாட்டின் தொன்மையைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த இத்தாலியரான லூஜி பியொ டெசிடோரேயால் இப்பகுதி முதலில் கண்டறியப்பட்டாலும், 1960-களில்தான் இந்த இடம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

இப்பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான பி.பி.லால், பி.கே.தாப்பர், எம்.டி.கரே, கே.எம்.ஸ்ரீவாஸ்தவா போன்றோரால் 1960-1969 வரை தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 34 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 இல் வெளியிடப்பட்ட இந்த அகழாய்வின் அறிக்கை, இப்பகுதி சிந்துவெளி நாகரிகப் பகுதிகளின் தலைநகரமாக இருந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் தொன்மையான ஏர் உழவு நடைபெற்ற விவசாய நிலம் கொண்ட பகுதி காளிபங்கன்தான் என்றும் நிறுவப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான அகழாய்வாகப் பார்க்கப்படுவது, ஹரியாணாவின் ராக்கிகரியில் மேற்கொள்ளப்பட்டதாகும். சிந்துவெளி நாகரிகத்தின் வளர்ச்சியடைந்த காலகட்டத்தைச் சார்ந்தது (2600-1900) என்று கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், முதலில் 1969, 1997-2000, 2011-2016 வரை, அண்மைக் காலத்தில் 2021 என அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நன்கு கட்டமைக்கப்பட்ட சாலைகள், கழிவுநீர் வெளியேற்றும் வசதிகள், மழைநீர் சேகரிப்புத் திட்டம், தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், மனித எலும்புகள் உள்ளிட்ட தொல்லியல் தரவுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொல்லியல்: தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2013 இல் தமிழகத்தில் கண்டறியப்பட்டு, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் அகழாய்வு செய்யப்பட்ட இடம் கீழடி. பின்னர், அப்பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது.

இதன் மூலம் தமிழர் வரலாற்றுத் தொன்மையையும், செழிப்பான வாழ்க்கை முறைக் கூறுகளையும், கல்வியறிவைப் பறைசாற்றும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள், சாயத் தொட்டிகள், கூரை ஓடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பசு மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை இந்தியாவில் உள்ள பல்வேறு ஆய்வகங்கள், அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு கீழடியின் பண்பாட்டுத் தொன்மை பொ.ஆ.மு. (கி.மு.) 580 முதல் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் 1902-1903, 1903-1904 ஆகிய ஆண்டுகளில் அலெக்சாண்டர் ரீ என்பவரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு முறையே 1,872, 4,000 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் பானை ஓடுகள், இரும்புப் பொருட்கள், தாமிரத்தால் ஆன ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், அரிய கல் மணிகள், பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பிறகு, 2003-2004 ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை நடத்திய அகழாய்வுகளில் 100-க்கும் மேற்பட்ட தாழிகள், சிறிய அளவில் தாமிரத்தாலான பொருட்கள், வளையல்கள், மோதிரம், 70-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள், பானைகள் செய்வதற்கான சூளை, உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருள் எச்சங்கள் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இவை சார்ந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இப்பகுதியின் காலம் பொ.ஆ.மு. (கி.மு.) 850-560 வரை என்று கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிவகளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் காலம் அறிவியல் ஆய்வுகளின் வாயிலாக பொ.ஆ. மு. (கி.மு.) 1155 என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகியிருக்கிறது. இவை மட்டுமின்றி தமிழகத்தில் பொருந்தல், மணலூர், மயிலாடும்பாறை, கொடுமணல், பொற்பனைக்கோட்டை, அழகங்குளம், உறையூர், அத்திரம்பாக்கம், பையம்பள்ளி, கேரளத்தில் பட்டினம், கர்நாடகத்தில் பிரம்மகிரி, சந்திரவல்லி, வட கிழக்கு இந்தியாவில் உள்ள பெருங்கடற்படைக் காலத்தைச் சார்ந்த பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இந்திய வரலாற்றின் தொன்மையையும், பண்பாட்டுச் செழுமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை!

- இ.இனியன், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர்

தொடர்புக்கு: initnou@gmail.com



Read in source website