DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 22-02-2023

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில்  நடைபெறும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website


குடல் சார்ந்த உபாதைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். ஏனெனில் இயல்பான செயல்களை கூட செய்ய முடியாமல், சொல்லப்போனால் நிம்மதியாக உட்கார கூட முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் துன்புறுத்தும் நோய் நிலை ஆசனவாய் சார்ந்த நோய்கள். அவற்றில் முக்கிய இடத்தை பிடிப்பவை மூலம், பவுத்திரம், ஆசன வெடிப்பு இவை மூன்றும் தான். எவ்வளவு தான் சிகிச்சை அளித்தாலும் மீண்டும் மீண்டும் உண்டாகி துன்புறுத்தும் தன்மை மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று.

மேற்கூறிய மூன்றும் வெவ்வேறு நோய்நிலையையும், குறிகுணங்களையும் கொண்டிருப்பதாக இருந்தாலும் மூன்றுமே ஆசன வாய் சார்ந்த குறிகுணங்கள் என்பதால் ஒன்று போல காணப்படும். ஆக முதலில் பவுத்திரம் நிலையில் இருந்து மூலம், மற்றும் ஆசன வெடிப்பினை வேறுபடுத்தி நோய்க்கணிப்பை உறுதி செய்வது அவசியம். 

சர்க்கரை வியாதி, உடல் பருமன் போன்ற நோய்நிலைகளினால் உண்டாகும் ஆசனவாய் பகுதியை சுற்றிய கட்டியானது நாளடைவில் பவுத்திரமாக மாறக்கூடும். அதாவது கட்டியில் இருந்து தனியே ஒரு பாதையை உண்டாக்கி சிறு சிறு துவாரங்களை உடைய புரையோடிய புண்ணாக மாறி வலி, எரிச்சல், நமைச்சல், ஆசனவாய் பகுதி சுற்றிலும் வீக்கம், துர்நாற்றமுள்ள நீர் போன்ற திரவம் கசிந்து உள்ளாடைகளில் படிதல் போன்ற குறிகுணங்களை உண்டாக்கி மனக்கவலையை உண்டாக்கும்.

இத்தகைய ஆசனவாய் கட்டிகள், பவுத்திரம் போன்ற நோய்நிலைகளுக்கு எலும்புருக்கி நோய், பால்வினை நோய்கள் போன்ற கிருமி தொற்றுக்கள் காரணமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை கண்டறிந்து வேறுபடுத்தி முறையான சிகிச்சை அளிப்பது நல்லது. சிலருக்கு சாதாரண அறுவை சிகிச்சையே செய்தாலும் மீண்டும் மீண்டும் கட்டி உண்டாகி அதிக துன்பத்தில் ஆழ்த்தும். 

தொற்று கிருமிகளால் உண்டாகும் ஆசனவாய் கட்டி மற்றும் பவுத்திர நிலையில் நல்லதொரு தீர்வை இயற்கையான முறையில் நாட நினைக்கும் பலருக்கும் உதவும் வகையில் பல சித்த மருத்துவ மூலிகைகள் கூறப்பட்டுள்ளன. அதில் எளிமையாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் உள்ள சிறப்பு மிக்க சித்த மருத்துவ மூலிகை தான் ‘அரிமஞ்சரி’ எனும் ‘குப்பைமேனி’.

இதன் பெயர்காரணத்தை சற்றே ஆராய்ந்தால் ‘அரி’ என்றால் அழகு, ‘மஞ்சரி’ என்பது தளிர். அதாவது குப்பை உணவுகளை உண்டு, நச்சு தன்மை மிக்க குப்பை போன்று கெட்டுபோன உடம்பை, அழகு மிக்க ஆரோக்கியமான உடலாக மாற்றும் மூலிகை என்பதால் ‘அரிமஞ்சரி’ என்ற பெயர் வந்ததாக தெரிகிறது. இதே பொருள் தான் குப்பைமேனி என்ற பெயருக்கும் பொருந்தும். மொத்தத்தில் குப்பைமேனி மூலிகையானது எளிமையாக குப்பையில் கிடைக்கும் மரகதப்பச்சை அளவுக்கு மகத்துவம் உள்ள மருத்துவ மூலிகை எனலாம்.

கைப்பு சுவையும், கார்ப்பு சுவையும் உடைய குப்பைமேனி மூலிகை வெப்ப தன்மையை கொண்டது என்கிறது சித்த மருத்துவம். எனவே கபத்தை நீக்கும் பல்வேறு மருந்துகளிலும், மருத்துவ முறைகளிலும் குப்பைமேனி பயன்படுத்தப்படுகின்றது. இன்றும் குப்பைமேனி பல கிராமங்களில் வீட்டு வைத்தியமாக பல்வேறு நோய்நிலைகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் குப்பைமேனி தோல் நோய் சிகிச்சையில் பயன்படுத்தி பலன் காணப்படுகிறது. இதன் இலையுடன் உப்பு சேர்த்து உடலில் தேய்த்து குளிக்க தோலில் உண்டாகும் நமைச்சல், சொறி, சிரங்கு நீங்கும். புண் ஆற்றும் மருத்துவ மூலிகையாகவும் அதிகம் பயன்படுகிறது. இதன் இலையில் உள்ள வேதிப்பொருட்களால் கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் பாக்டீரியாக்கள் வளர்ச்சி சிதைவதால் நுண்ணுயிர்க்கொல்லியாக உதவுகிறது. ஆஸ்துமா, வீசிங், மூச்சுக்குழல் அழற்சி ஆகிய நோய்நிலைகளுக்காக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குப்பைமேனி இலையில் மருத்துவ குணமுள்ள ஸ்டீராய்டுகள், ட்ரைடெர்பீனாய்டுகள், கிளைகோசைடுகள், கார்போஹைட்ரேட்டுகள், அல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் உள்ளன. தாவரத்தின் செயலியல் மூலப்பொருட்களில் சயனோஜெனிக் கிளைகோசைடுகள் அகாலிபின், எலாஜிக் அமிலம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.

குப்பைமேனி அதில் உள்ள வேதிப்பொருட்களால் பல மருத்துவக் குணங்களை பெற்றுள்ளது. இது உடலில் உள்ள புழுக்களை கொல்வதாகவும், வீக்கங்களை குறைப்பதாகவும், பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் உடையதாகவும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், உடல் பருமனை தடுப்பதாகவும், பூச்சிக்கடி மற்றும் நஞ்சுகளை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், காயத்தை குணப்படுத்துவதாகவும் உள்ளதாக முதல் நிலை நவீன ஆய்வுகள் பல சுட்டிக்காட்டுகின்றன.

குப்பைமேனி இலையுடன், கற்பூரவள்ளி, கரிசாலை சேர்த்து இடித்து சாறெடுத்து குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு கொடுக்க மார்பில் தங்கிய கோழை, கபம் வெளியப்படும். கோழையகற்றியாக செயல்படக்கூடியது. குப்பைமேனி இலையை அரைத்து புண்களுக்கு பூச விரைவில் புண் ஆறும். மூல நோயில் ரத்தம் கொட்டுவதை நிறுத்த குப்பைமேனியுடன், சீரகம் சேர்த்து பயன்படுத்த நல்ல பலன் தரும். கால் அரை இடுக்குகளில் உண்டாகும் பூஞ்சை தொற்றினை நீக்கும் தன்மையும் இதற்குண்டு.

குப்பைமேனி இலையுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி செய்யப்படும் ‘மேனி தைலம்’ எனும் சித்த மருந்து மிகப் பிரபலமானது. தினசரி ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி வீதம் இருவேளை எடுத்துக்கொள்ள வயிற்றில் உள்ள புழுக்கள் சாகும். மலச்சிக்கல் தீரும். மேலும் ஆசன வாயை சுற்றியுள்ள கட்டிகள் கரையும். ஆசனவாய் நோய்க்கு காரணமாகும் கிருமிகளைக் கொல்லும். இது பவுத்திரம் நோய்நிலையில் நல்ல பலன் தரும். இதை மூட்டுவாத நோய்களுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுத்த நன்மை தரும்.

எளிமையாக கிடைப்பதால் என்னவோ, குப்பைமேனி கேட்பாரற்று குப்பையில் உள்ளது. குப்பைமேனிக்கு மட்டும் இந்த நிலைமை அல்ல. இன்னும் பல நூற்றுக்கணக்கான எளிய மூலிகைகளும் பயன்படுத்தப்படாமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மூலிகைகளை அறிந்துகொண்டு பயன்படுத்த துவங்குவது நலம் பயக்கும். அந்த வகையில், குப்பைமேனியைப் பயன்படுத்த துவங்கினால் நமது உடல் சுத்தமடைந்து ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு: இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு பிறப்பித்த உத்தரவு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதைத் தொடா்ந்து, ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் மேகமலை புலிகள் என நான்கு புலிகள் காப்பகங்கள் பின்னா் அறிவிக்கை செய்யப்பட்டன

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், 150 உள்ளூா் தாவரங்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகமாகும். இந்த நிலப்பரப்பிலிருந்து 14 ஆறுகள் தோன்றுவதால் இந்த புலிகள் காப்பகம்“‘நதிகள் சரணாலயம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், தென்மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகளின் மிக முக்கியமான வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும், யானைகளின் எண்ணிக்கையை பராமரிக்கும் நோக்கத்துடனும் அகஸ்தியமலை யானைகள் காப்பகமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு மையம் அகஸ்தியமலை யானைகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசின் முயற்சியில் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்த போது, களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்புச் செய்தாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய, உயிா்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க

உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிலையான சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உள்ளூா் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகைக்கான அரசாணை, சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.

தமிழக அரசு சாா்பில் உலகத் தாய்மொழி தினம் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீா் அஹமத் சயீத் மகளிா் கல்லூரியில் (எஸ்ஐஇடி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழா பேரணியில் தமிழறிஞா்கள், மாணவிகள் திரளாக பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு துணை நிற்கும் ஊடகங்கள் குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதையடுத்து, கவிஞா் மு.மேத்தா தலைமையில் ‘தமிழ் எங்கள் உயா்வுக்கு வான்’ என்ற தலைப்பில் கவியரங்கம், வழக்குரைஞா் மா.ப.நாதன் தலைமையில் ‘நற்றமிழ் தடம் பதித்து நிமிா்ந்து நிற்பது’ தலைப்பில் இளையோா் அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் இரா.செல்வராஜ் கலந்து கொண்டு சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகைக்கான அரசாணை, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியா்கள் மற்றும் பதிப்பாளா்களுக்கான பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தாா்.

நூலாசிரியா்களுக்கு தலா ரூ.30 ஆயிரம், பதிப்பாளா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக, உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு, தாய்மொழியில் கல்வி கற்பதன் முக்கியத்துவம், தமிழ் வளா்ச்சி மற்றும் தமிழ்ப் படைப்பாளா்களின் மேம்பாட்டுக்கு அரசு ஆற்றி வரும் பணிகள் குறித்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் விளக்கிப் பேசினாா். பேராசிரியா் பா்வீன் சுல்தானா தாய்மொழி நாள் குறித்து சிறப்புரை ஆற்றினாா்.

விழாவில், சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன், நீதிபதி பஷீா் அஹமத் சயீத் மகளிா் கல்லூரியின் தலைவா் மூசா ராசா, முதல்வா் முனைவா் அம்துல் அஜீஸ், கவிஞா்கள் இனியவன், நெல்லை ஜெயந்தா, கங்கை மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Read in source website


புதுதில்லி: இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் குறைந்து 36.75 பில்லியன் டாலராக உள்ளது என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் அந்நிய நேரடி முதலீடு 43.17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 

பங்கு வரவு, மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர மூலதனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த அந்நிய நேரடி முதலீடுகள், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் 55.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 60.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

ஏப்ரல் முதல் டிசம்பர் 2022-23ம் ஆண்டில் சிங்கப்பூர் நாடானது 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு பெற்று முதலிடத்தைப் பிடித்தது.



Read in source website

இனி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிரம்பி இருக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது. 

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. 

அதன்படி, நாட்டில் பள்ளிகளில் இனி 1 ஆம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும் 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேநேரத்தில் 3 வயதில் குழந்தைகளை ப்ரீ-கேஜி சேர்க்கலாம், 3 ஆண்டுகள்  ப்ரீ-கேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும். 

குழந்தைகளை 6 வயதில் 1 ஆம் வகுப்பு சேர்க்கும்போது குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 



Read in source website

 

அசாமின் 31வது ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

அசாமின் ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற விழாவில் கடாரியாவுக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னதாக அசாம் ஆளுநராக இருந்த ஜெகதீஷ் முகியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தனது பதவியை ஞாயிறன்று பதவியை ராஜிநாமா செய்த நிலையில், 
மூத்த பாஜக தலைவராக இருந்த கட்டாரியா பதவியேற்றார். 

பதவியேற்பு விழாவில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அமைச்சரவை அமைச்சகர்கள், மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்டாரியா தனது மனைவி அனிதாவுடன் செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகைக்கு வந்த நிலையில், அவர்களுக்கு மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

78 வயதான கட்டாரியா, ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே அரசில் உள்துறை அமைச்சராக இருந்தார். அசாம் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 



Read in source website

அனைவருக்கும் பார்வை அளிக்கவும் ஒவ்வொருவருக்கும் கண் பாதுகாப்பு அளிக்கவும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 உலகம் முழுவதிலும் உள்ள பார்வையற்றோர் அல்லது கண் நோய்களைக் கொண்ட 220 கோடி பேரில் 30 சதவீதம் பேர் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பிரிவின் மண்டல இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், "கண் நலனுக்கு ஒருங்கிணைந்த மக்கள்' என்ற தலைப்பில் ஹைதராபாதில் நடைபெறும் 3 நாள் நிகழ்வில் உறுப்பு நாடுகளுக்கிடையே பேசியதாவது:
 தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கண் நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர். இந்தச் சுமை ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. உலக அளவில் பார்வைக் கோளாறுகளில் பாதி அளவு கோளாறுகள் முன்கூட்டியே தடுத்திருக்கப்பட்டிருக்க வேண்டியவை அல்லது இனிமேல்தான் கவனிக்கப்பட வேண்டியவை.
 இந்த விவகாரத்தில் குழந்தைகளும் முதியோரும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பெண்கள், ஊரக மக்கள், சிறுபான்மைக் குழுவினர் ஆகியோர் பார்வைக் கோளாறுகளைக் கொண்டவர்களாகவும், கண் சிகிச்சை வசதி கிடைக்காதவர்களாகவும் உள்ளனர்.
 தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் பார்வைக் கோளாறுகளை அதிகம் கொண்டவர்கள் சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கடந்த 2019-இல் இந்தப் பிராந்தியத்தில் 8.76 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3.6 கோடி பேர் சர்க்கரை நோய் சார்ந்த கண் நோய்களாலும், 96 லட்சம் பேர் சர்க்கரை நோய் சார்ந்த பார்வையிழப்பாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றார்.
 ஹைதராபாதில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வில் உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், திட்ட மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 கண் நலனுக்கான ஒருங்கிணைந்த மக்கள் செயல்திட்டத்துக்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
 இந்த நிகழ்வுக்கு எல்.வி. பிரசாத் கண் ஆராய்ச்சி நிறுவனம் ஆதரவு அளிக்கிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒளிவிலகல் பிழை பாதிப்பைக் கொண்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு சிகிச்சை, கண்புரை பாதிப்பு கொண்டோரில் 30 சதவீதம் பேருக்கு அறுவைசிகிச்சை, சர்க்கரை நோய் பாதிப்பைக் கொண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு கண் பரிசோதனை, சர்க்கரை நோய் பாதிப்பைக் கொண்டோரில் பார்வை இழப்பு அபாயத்தைக் கொண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு சிகிச்சை ஆகியவற்றை உறுப்பு நாடுகள் நோக்கமாகக் கொண்டு செயல்பட செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.



Read in source website

செயற்கைத் தொழில்நுட்பம், எழுத்து மற்றும் பேச்சு மொழியை உணரும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வழக்கு விசாரணையில் நடைபெறும் வாதங்களை நேரடியாக எழுத்து வடிவில் மாற்றும் முயற்சியை உச்சநீதிமன்றம் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், ‘அரசியல் சாசன அமா்வின் வழக்கு விசாரணை நடைமுறைகள் செவ்வாய்க்கிழமை முதல் எழுத்து வடிவில் மாற்றப்படும். உச்சநீதிமன்றத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, இவை வழக்குரைஞா்களால் சரிபாா்க்கப்படும். இந்த முறையில் உள்ள பிழைகளை நீக்குவதற்காக சோதனைமுறையில் இந்த வசதி செயல்படுத்தபடுகிறது’ எனத் தெரிவித்தாா்.

விசாரணை நடவடிக்கைகளை நேரடியான முறையில் எழுத்து வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் இதன் மூலம் வழக்கு விசாரணையின்போது நடைபெறும் வாதங்கள் நிரந்தரப் பதிவுகளாக சேகரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமா்வு தெரிவித்தது.

சிவசேனையின் உள்கட்சி விவகாரம் தொடா்பான வழக்கை அரசியல்சாசன அமா்வு தற்போது விசாரித்து வருகிறது.



Read in source website

இந்திய ரிசா்வ் வங்கியின் கணக்கு ஒருங்கிணைப்பு தளத்தில் (அக்கவுன்ட் அக்ரிகேட்டா்) தொழில் நிறுவனங்களை இணைப்பது, அந்நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் தலைவருமான நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளாா்.

ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்கள் கணக்கு ஒருங்கிணைப்பு தளத்தில் இணைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக குருகிராமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நந்தன் நிலகேனி, ‘‘சம்பந்தப்பட்ட தளம் மூலமாக நிறுவனங்கள் தங்கள் ஜிஎஸ்டி சாா்ந்த தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்தரவுகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதால், அவற்றைக் கொண்டு வங்கிகளில் எளிதில் கடன் பெற முடியும். சிறு, குறு தொழில் நிறுவனங்களும் எளிதில் கடனைப் பெற முடியும். கடன் மூலமாக நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்’’ என்றாா்.

கணக்கு ஒருங்கிணைப்பு தளம் மூலமாகக் குறிப்பிட்ட நிதி நிறுவனத்திடமிருந்து பெறும் தகவல்களை எந்தவித இடையூறுமின்றி மற்றொரு நிதி நிறுவனத்துக்குப் பரிமாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

‘இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி வலுவான விகிதத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது; எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த ஏற்றுமதியின் மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.82.80 லட்சம் கோடி) எட்டக் கூடும்’ என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் சரக்கு, சேவை ஏற்றுமதியின் மதிப்பு முறையே முன்னெப்போதும் இல்லாதபடி 422 பில்லியன் அமெரிக்க டாலா்கள், 254 பில்லியன் டாலா்களை எட்டியது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றில் பேசிய பியூஷ் கோயல், ‘அடுத்த 7 ஆண்டுகளுக்குள் அதாவது 2030-க்குள் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பும், சேவை ஏற்றுமதிகளின் மதிப்பும் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டும் என்பது எனது மதிப்பீடாகும்.

தகவல் தொழில்நுட்பத் துறையால் இயக்கப்படும் சேவைகள் துறை, அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது, திறமைக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றுடன் உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் உள்ளது.

இந்தியாவில் நிலவும் புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல் காரணமாக, ஒவ்வொரு நாடும் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றன. இத்திய புத்தாக்க நிறுவனங்களின் நோ்மை, வெளிப்படைத் தன்மையால், அந்நிறுவனங்களுடன் வா்த்தகத்தில் ஈடுபட உலகம் விரும்புகிறது’ என்றாா்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் சரக்குகள் ஏற்றுமதி 8.5 சதவீதம் உயா்ந்து 369.25 பில்லியன் டாலா்களாக உயா்ந்துள்ளது.

 



Read in source website

விமானப் பயணத்தின்போது பயணிகள் முறையின்றி நடந்து கொள்வதை சமாளிப்பதற்குத் தேவையான விதிகள் உள்ளதாகவும், அவை முறையாக அமல்படுத்தப்படுவதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைவா் அருண் குமாா் தெரிவித்துள்ளாா்.

விமானத்தில் பயணித்த சக பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த நபா் சிறுநீா் கழித்தது, பயணிகள் இருவா் விமானத்துக்குள்ளேயே மோதிக் கொண்டது, விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவா் புகைபிடித்தது போன்ற சம்பவங்கள் அண்மையில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மீது டிஜிசிஏ கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், வரும் 28-ஆம் தேதியுடன் பணிஓய்வு பெறவுள்ள டிஜிசிஏ தலைவா் அருண் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முறையின்றி நடந்து கொள்ளும் பயணிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிப்பதற்கென விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயணிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

போதுமான விதிகள் ஏற்கெனவே இருந்தாலும், அவற்றின் அமலாக்கம் போதுமான அளவில் இல்லாமல் இருந்தது. அதன் காரணமாகவே சில முகம் சுளிக்கும் வகையிலான சம்பவங்கள் நிகழ்ந்தன. தற்போது அனைத்து விதிகளும் முறையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சராசரியாக 4.5 லட்சம் உள்நாட்டு விமானப் பயணிகளும், 1 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் தினந்தோறும் விமானங்களில் பயணிக்கின்றனா். சில சமயங்களில் பயணிகள் முறையின்றி நடந்துகொள்கின்றனா். எனினும் அவை கட்டுக்குள் உள்ளன. அத்தகைய பயணிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய சூழலில் விமானப் பயணிகளின் முறையற்ற நடத்தையை சமாளிப்பதற்கான விதிகள் போதுமான அளவில் உள்ளன. விமானப் போக்குவரத்து விவகாரத்தில் உயா் பாதுகாப்பு விதிமுறைகள் காணப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது என்றாா் அவா்.

முறையற்ற நடத்தை காரணமாக கடந்த ஆண்டில் 63 பேருக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும், நடப்பாண்டில் இதுவரை 3 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘இந்தக் கலந்துரையாடலின்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு, இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ தளவாட கூட்டு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு துறை சாா்ந்த உற்பத்தி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து, கூட்டு உற்பத்திக்கான சாத்தியமுள்ள துறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கூட்டுறவு மூலமாக இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பிரிட்டன் நிறுவனங்களும் பங்குபெற வேண்டும் என்ற ஆலோசனையும் இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசித்ததோடு, பிராந்திய மற்றும் இந்திய-பசிபிக் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளையும் இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, நாகபுரி டெஸ்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். 2-வது டெஸ்டில்  32, 31 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து டெஸ்ட் பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 7-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் சர்மா. முதல் இரு இடங்களில் ஆஸி. பேட்டர்களான லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்கள். 



Read in source website

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் 40 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன். இதையடுத்து கடந்த நான்கு வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஆண்டர்சன்.

தரவரிசையில் 2-ம் இடத்தில் அஸ்வினும் 3-ம் இடத்தில் கம்மின்ஸும் உள்ளார்கள். நெ.1 இடத்தை 6-வது முறையாகப் பெற்றுள்ளார் ஆண்டர்சன். கடைசியாக 2018-ல் ஐந்து மாதங்களுக்கு முதலிடத்தில் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 682 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

1936-ல் கிளாரி கிரிம்மெட் 44 வயதில் தரவரிசையில் முதலிடம் அடைந்தார். அதன்பிறகு 40 வயதில் முதலிடத்தைப் பெற்ற பந்துவீச்சாளர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆண்டர்சன். 



Read in source website


நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அந்நாட்டு மக்கள் கையில் பணமில்லாமல் திண்டாடி வருகிறார்கள். பல வங்கிகளில், தங்கள் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க நீண்ட வரிசைகளும் வன்முறைகளும் நடந்தேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் புழக்கத்தில் இருந்த பழைய நைரா (ரூபாய்) நோட்டுகளை எல்லாம் மாற்றுவதற்கு பிப்ரவரி 20ஆம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல வங்கிகளில் கூட்டம் அலைமோதுவது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சில வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் நைரா மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் வன்முறையும் வெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நைஜீரிய மத்திய வங்கியானது புழக்கத்தில் இருந்த 200, 500 மற்றும் 1000 நைரா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடைசி நாளாக 2023ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியை அறிவித்திருந்தது. பிறகு அது பிப்ரவரி 20 ஆக நட்டிக்கப்பட்டது.

எனினும், போதுமான அளவில் புதிய நைரா நோட்டுகளை வங்கிகளால் புழக்கத்துக்கக் கொண்டு வர முடியவில்லை. இதனால் மக்களிடையே பணப்புழக்கம் இல்லாமல் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களிடையே வன்முறை வெடித்தாலும் இந்த நடவடிக்கையில் பின்வாங்கப் போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், வங்கிகளில் மக்கள் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வங்கிகளை தாக்குவது, சாலைகளில் மறியலில் ஈடுபடுவது உள்ளிட்ட போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

பலருக்கும் இந்த மாத துவக்கத்தில் வந்த ஊதியத்தைக் கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் அல்லாடுவதாகவும், மருத்துவச் செலவுக்குக் கூட கையில் காசில்லாமல் அவதிப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாங்கள் கடன் கேட்கவில்லை. எங்கள் பணத்தைக் கேட்கிறோம் என்று வங்கிகளில் வாக்குவாதத்தில் ஈடுபடும் மக்களையும் பார்க்க முடிகிறது.
 



Read in source website

ஜொ்மனியில் ரத்தப் புற்று நோயை போக்குவதற்காக குருத்தணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஒருவா், உயிா்க்கொல்லி நோயான எய்ட்ஸிலிருந்தும் குணமடைந்துள்ளாா். 53 வயதாகும் அந்த நபா், குருத்தணு மாற்று சிகிச்சை மூலம் எய்ட்ஸிலிருந்து விடுதலையடைந்த உலகின் 3-ஆவது நபா் ஆவாா்.



Read in source website

சென்னை: காவல் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்த 544போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கங்கள், அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் காவல்பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல் துறையில் 544 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்து ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 173 போலீஸார், போக்குவரத்து போலீஸார் 149 பேர், ஆயுதப்படையில் 80 பேர், நுண்ணறிவுப் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 85 போலீஸார் மற்றும் இதர பிரிவுகளான ரயில்வே, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும்செயலாக்கம் ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் 57 பேர் என மொத்தம் 544 ஆண், பெண் போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘பதக்கத்தை பெற்றுள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.

இதேபோல வரும் காலங்களிலும் நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முதல்இடம் வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணி செய்வோம்’’ என்றார்.

கூடுதல் டிஜிபிக்கள் சைலேஷ்குமார் யாதவ், மகேஷ்குமார் அகர்வால், டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பாலநாகதேவி, அபின் தினேஷ் மொடக், வனிதா உள்ளிட்டோரும் பதக்கங்களை வழங்கினர்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் நோக்கில் ரூ.2.07 லட்சம் கோடியை கடனாக வழங்க விரும்புவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மாசாத்சுகு அசாகவா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று(புதன் கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ''பிரதமர் நரேந்திர மோடியை, மாசாத்சுகு அசாகவா இன்று சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து, நீர்வழி போக்குவரத்து ஆகிய போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவது, மாநகரங்களுக்கான மேம்பாட்டுப் பணிகள், உள்நாட்டு உற்பத்தி பெருக்கம், மாவட்ட வளர்ச்சி உள்பட இந்திய அரசின் பிரதான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளிக்கும் என மாசாத்சுகு அசாகவா தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர்(ரூ.2.07 லட்சம் கோடி) நிதியை இந்தியாவுக்கு வழங்க முன்வருவது குறித்து மாசாத்சுகு அசாகவா எடுத்துரைத்தார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச அமைப்பு என்ற வகையில் ஜி20 மாநாடுகளில் பங்கேற்கும் ஆசிய வளர்ச்சி வங்கி, அதில், இந்தியாவின் முன்னுரிமைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறது.

1986 முதல் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 59 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, மனிதவள மேம்பாடு, விவசாயம், இயற்கை எரிவாயு உள்பட 64 திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளித்து வருகிறது.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசாத்சுகு அசாகவாவை நிர்மலா சீதாராமன் சந்தித்ததை அடுத்து நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இந்தியா - ஆசிய வளர்ச்சி வங்கி இடையே 2023-27 ஆண்டுகளுக்கான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தனித்துவமான அமிர்தகால முன்னெடுப்புகளான எரிசக்தி மாற்றம், போக்குவரத்து மேம்பாடு, தொழிற்பூங்காக்கள், சுகாதாரம், பட்டுசாலை திட்டம் ஆகியவற்றில் ஆசிய வளர்ச்சி வங்கி முதலீடு செய்யலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்தார். இதனை மாசாத்சுகு அசாகவா வரவேற்றார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும் உயர்கல்விக்கான திட்டமிடப்பட்ட செலவினம் சுமார் 8.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதை சமீபத்திய தரவுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

அந்த வகையில், இந்தியாவில் இன்னும் 1.2 லட்சம் பள்ளிக்கூடங்கள் ஒரே ஒரு ஆசிரியரை நம்பித்தான் இயங்கி வருகின்றன.

மாணவர்-ஆசிரியர் விகிதம், ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்பான தற்போதைய தரவுகள் இந்தியாவில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மேலும், கல்வித் துறையில் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான தீவிர முன்னெடுப்புகள் காணப்பட்ட போதிலும் பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இணைய வசதி இல்லாத நிலைதான் உள்ளது.

பிஹாரில் 60 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். மாணவர்-ஆசிரியர் விகிதங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம், பீஹார் முதலிடங்களில் உள்ளன.

மத்திய பிரதேசத்தில் மட்டும் 16,000-க்கும் மேற்பட்ட ஓர் ஆசிரியர் பள்ளிகள் உள்ளன.

ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி இந்தியாவில் 8% பள்ளிகள் ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகின்றன. நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவான பள்ளிகளில்தான் இணைய வசதி உள்ளது. அதன்படி 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கும் குறைவான பள்ளிகள்தான் இணைய வசதியை கொண்டுள்ளன. இதுபோன்ற நிலையில், பள்ளிகளில் டிஜிட்டல் திட்டங்களை செயல்படுத்துவது கடினமான பணியாகவே இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற விசாரணைகளை எழுத்து வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, மொழிநடைமுறை தொழில்நுட்பம் மூலம் உச்சநீதிமன்ற விசாரணைகளை நேற்று முதல் நேரடியாக எழுத்து வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் தொடங்கியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், விசாரணைகள் எழுத்து வடிவில் நேற்று ஒளிபரப்பப்பட்டன. இதை உச்சநீதிமன்ற இணையளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன் வழக்கறிஞர்களிடம் ஆய்வுக்காக அளிக்கப்படும். இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

விவாதங்களை எழுத்து வடிவில் வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை நீக்குவதற்காக 2 நாள் பரிசோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்பின், இது வழக்கமான நடைமுறையாக மாறும். விசாரணை விவரங்களை நேரடியாக எழுத்து வடிவில் வழங்குவதற்கான சாத்தியங்களை ஆராய நாங்கள் முயற்சிக்கிறோம். அதன்பின் விவாதங்கள் நிரந்தரமாக பதிவு செய்யப்படும். இவற்றை சட்டக் கல்லூரிகளால் ஆராய முடியும். இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறினார்.

அவரது அமர்வில் மகாராஷ்டிரா வழக்கு விசாரணை சப்-டைட்டிலுடன் நேற்று தொடங்கியது.



Read in source website

பியாங்யாங்: மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவீன உலகின் மர்ம தேசம் என்றால் அது வட கொரியா என்று கூறினாலும் மிகையாகாது. அங்கு எல்லாமே ரகசியம் தான். உலகமே கரோனா பரவலால் கதறிய காலத்திலும் கூட வட கொரியாவின் நிலை பற்றி எதுவும் வெளியே வரவில்லை. கரோன உயிர்ப் பலிகள் குறித்து எந்த செய்தியும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. தடுப்பூசியில் கூட அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கரோனா தடுப்பு நடவடிக்கையாக எல்லைகளை மூடினர். இதனால் சீனாவுடனான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சீன வர்த்தம் மூலமாகவே உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்து வந்தது வட கொரியா. இந்நிலையில், கரோனா காரணமாக எல்லைகள் மூடல், அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என ராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு மட்டுமே வட கொரியா அதிகமாக செலவழித்ததால் அங்கே மற்ற பணிகள் முடங்கின. இது ஒருபுறம் இருக்க புயல், பனி போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் வட கொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரிய அரசு ஊடகமான ரோடோங் சின்முன் பத்திரிகையில் எழுதப்பட்ட தலையங்கத்தில், “நாட்டின் பொருளாதாரத்தை மீட்க தற்சார்பு தான் அவசியம். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெற்றால் அவர்கள் உதவியின் போர்வையில் நம்மை அடக்குவார்கள். நம் உள்நாட்டு விவகாரத்தில் அரசியலில் தலையிடுவார்கள். அதனால் வெளிநாட்டு உதவிகள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க நினைப்பதும், அவர்கள் கொடுக்கும் உணவை உண்ண முற்படுவதும் விஷம் தோய்ந்த இனிப்பை உண்பதற்கே சமம்” என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வட கொரியாவில் இருந்து பெரும்பாலான ஐ.நா. அமைப்புகளும், மேற்குலக தன்னார்வலர்களும் வெளியேறிவிட்டனர். சீனா மட்டும்தான் இப்போதைக்கு வெளியிலிருந்து உணவுத் தேவைக்கு உதவும் ஒரே நாடாக இருக்கிறது. 1990-களில் ஏற்பட்ட பஞ்சம் போன்றதொரு நிலையை அல்லது அதைவிட மோசமான நிலையை வட கொரியா சந்திக்கலாம் என்று அண்டை நாடான தென் கொரியா கவலை தெரிவித்துள்ளது.

தென் கொரிய கிராமப்புற மேம்பாட்டு முகமை வெளியிட்டுள்ள தகவலில், வட கொரியாவின் பயிர் உற்பத்தி 2021-க்குப் பிறகு வெகுவாகக் குறைந்துள்ளது. கோடை காலத்தில் பெய்த கன மழை, அதன் பின்னர் தொடர்ந்த பனி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வட கொரியா உணவுப் பஞ்சத்துக்கு வித்திட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

வட கொரிய மக்களின் முக்கிய உணவு என்றால் அது அரிசிதான். ஆனால் விளைச்சல் குறைந்ததாலும், அப்படியே கிடைத்தாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும்பாலானோர் மக்காச்சோளத்துக்கு மாறிவிட்டனர். 2023 தொடக்கத்திலிருந்தே மக்காச் சோளத்தின் விலையும் 23 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

வட கொரியாவுடனான இணைப்புகாக தென் கொரியாவில் இணைப்பு அமைச்சகம் என்று ஒன்று இயங்குகிறது. அந்த அமைப்பு, அண்மைக்காலமாக வட கொரிய மாகாணங்கள் சிலவற்றில் பசி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே அங்கே உணவு உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும், அதனால் உணவு வழங்கல், விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளது.

வட கொரியா, தென் கொரியா பகை பின்னணி: ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை என்று வரலாற்றுப் பக்கங்களைத் தேடினால் இரண்டாம் உலகப் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது, ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர், 1945-ல் கொரியா விடுதலை பெற்றது.

கொரியா விடுதலை பெற்ற வேளையில் அதன் வட பகுதியில் சோவியத் நாடும், தென் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் போரை சந்தித்தது ஒன்றுபட்ட கொரியா. 1950-ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது.

1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவாகின. போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. இன்றும் தென் கொரியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. வட கொரியாவுக்கு அமெரிக்கா என்றாலே வெறுப்பு. அந்த வெறுப்பு தென் கொரியா மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது.



Read in source website

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு விரைவில் பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக நடந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஊடகங்கள், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்யப் பயணம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் அமையும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. சீன அரசின் தலைமை பிரதிநிதி வாங் யீ தற்போது மாஸ்கோவில் இருக்கிறார், இன்று (புதன்கிழமை) ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாங் யீயின் ஐரோப்பிய பயணத்தில் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தினார். புதின் - ஜி ஜின்பிங்கின் சந்திப்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்தது. இந்த நிலையில் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்க உள்ளனர்.

முன்னதாக, ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, ”நமது நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் நாம் (ரஷ்யா) இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ரஷ்யாவின் இருத்தலுக்காகவே உக்ரைனுடன் போர் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த மோதல் (உக்ரைன் போர்) ஏற்பட்டுவிடக் கூடாது என நாம் மிகுந்த பொறுமையுடன் இருந்தோம். இதற்காக சாத்தியமான அனைத்தையும் செய்தோம். பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண முயன்றோம். அமைதியான முறையில் விட்டுக் கொடுத்துச் செல்வதற்கே முயன்றோம். ஆனால், நமது முதுகில் குத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன.” என்று பேசியிருந்தார்.



Read in source website

புதுடெல்லி: வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 27ம் தேதி தொடங்குகிறது என்று நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "வர்த்தக ரீதியிலான சுரங்கங்களுக்கான 6வது கட்ட மற்றும் 5வது கட்டத்தின் 2வது பகுதி ஏலத்தை நிலக்கரி அமைச்சகம் 2022 நவம்பர் 3ம் தேதி தொடங்கியது. இதற்கு இந்தத் தொழில்துறையினர் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருந்ததுடன் 36 சுரங்கங்களுக்கு 96 ஏலங்கள் கோரப்பட்டன. இதில் பலர் முதல்முறையாக ஏலத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கத் துறையின் மீது ஆக்கப்பூர்வமான கருத்து உள்ளதை ஏலதாரர்கள் மத்தியில் நிலவிய இந்த ஆர்வம் எதிரொலித்தது.

தொழில்நுட்ப மதிப்பீடுகள் நிறைவடைந்த பிறகு 27 சுரங்கங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஏலங்கள் கோரப்பட்டிருந்தன. இதையடுத்து 2023 பிப்ரவரி 27 முதல் மீண்டும் ஏலம் விடும் பணி நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான மாதிரி ஏலம் பிப்ரவரி 24ம் தேதி நடத்தப்படவுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இஸ்ரேல் துறைமுகத்தை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் அதானி குழுமத்துக்கு இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் தற்போது அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹைபா துறைமுகம் எங்களின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சொத்து. அதனை நாங்கள் அதானி குழுமத்துக்குக் கொடுத்திருப்பது மிக முக்கியமான நடவடிக்கை. ஹைபா துறைமுகத்தை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் அதானி குழுமத்துக்கு இருக்கிறது.

பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அதானி குழுமத்தின் மிக முக்கிய தொழிலாக துறைமுகங்கள் உள்ளன. அவர்களின் துறைமுகங்களைப் பார்த்தேன். அவை நன்றாக இயங்குகின்றன. ஹைபா துறைமுகத்தை அதானிக்கு கொடுத்திருப்பதன் மூலம் இந்தியா - இஸ்ரேல் இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஓர் இந்திய நிறுவனத்துக்கு எங்கள் துறைமுகத்தைக் கொடுத்திருக்கிறோம். இந்தியா மீதான; இந்திய நிறுவனங்கள் மீதான எங்களின் ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு இது.

இஸ்ரேலில் மேலும் பல தொழில்களைத் தொடங்க அதானி குழுமம் ஆர்வம் காட்டி இருக்கிறது. அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். டாடா, கல்யாணி, பெல் உள்பட 80 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியா - இஸ்ரேல் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இரு நாடுகளுமே ஆர்வமாக உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இறுதியானதும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மேலும் பெருகும்.

இந்தியா எங்கள் நண்பன். எங்கள் நண்பன் எங்களோடு மேலும் நெருங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவோடு எங்கள் உறவு மிகவும் சவுகரியமாக இருக்கிறது. பிராந்திய சூப்பர் பவர் என்பதில் இருந்து சர்வதேச சூப்பர் பவராக இந்தியா வளர்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தின் பொறுப்பை சமீபத்தில் அதானி குழுமம் ஏற்றது. இதற்காக அதானி குழுமம் 1.2 பில்லியன் டாலர் தொகையை அதில் முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

லண்டன்: பிரிட்டனில் ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ திட்டம் பணியாளர்களிடத்திலும், நிறுவனங்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கரோனாவிற்குப் பிறகு உலக அளவில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தொழில், மருத்துவத் துறைகளில் நாளும் மாற்றங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் வேலை செய்யும் சோதனைத் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சோதனையை ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைகழங்கள் மற்றும் பாஸ்டன் கல்லூரி போன்றவை ஒருங்கிணைத்துள்ளன.

முதற்கட்டமாக லண்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தச் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வங்கிகள், மருத்துவமனைகள், அனிமேஷன் ஸ்டூடியோக்கள் என உலகம் முழுவதும் சுமார் 150 நிறுவனங்களைச் சேர்ந்த 7,000 பணியாளர்கள் இந்தச் சோதனையில் பங்கேற்றனர். இந்தச் சோதனை முறையில், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் அளிக்கப்படும். குறைந்த நாட்கள் வேலை செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வேலைக்கான இலக்கை அடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவே இந்தச் சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

அதன்படி, பிரிட்டன் முழுவதிலும் உள்ள 61 நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள், ஜூன் மற்றும் டிசம்பர் 2022-க்கு இடைப்பட்ட மாதங்களில் வாரத்துக்கு நான்கு நாட்கள் அதாவது சராசரியாக 34 மணி நேரம் பணிபுரிந்துள்ளனர். இதில், 56 நிறுவனங்கள், அதாவது 92 சதவீதத்தினர் இதே முறையில் பணி செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டதால் உற்பத்தித் திறனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை எனும்போது பணியாளர்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு கவனமாக உள்ளனர். மேலும், இம்முறை அவர்களது வேலை - தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலை மேம்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 4 நாட்கள் வேலைத் திட்டத்தின் பிரச்சார இயக்குநர் ஜோ கூறும்போது, “ நான்கு நாள் வேலை வாரத்தை நோக்கிய இயக்கத்திற்கு இது ஒரு முக்கிய திருப்புமுனைத் தருணம்” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சோதனை திட்டம் பிரிட்டன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.



Read in source website

2022-23-ம் ஆண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையின்படி கடன் வளர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் அரசு வங்கிகளில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (பிஓஎம்) முதலிடத்தில் உள்ளது.

புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வருடாந்திர வளர்ச்சி அடிப்படையில் மொத்த கடன் அளவில் 21.67 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. கரோனா பேரிடர் நிலவிய நிலையிலும் கடந்த 10 காலாண்டுகளில் வங்கி கடன் வளர்ச்சி சதவீத அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 19.80 சதவீத வளர்ச்சியுடன் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவும், 16.91 சதவீத வளர்ச்சியுடன் எஸ்பிஐயும் உள்ளன.

சில்லறை கடன், விவசாயம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன்களின் அடிப்படையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 19.18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்



Read in source website

இந்தியாவில் யாரும் ஒரு வேட்பாளருக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, ஒரு வேட்பாளரின் கல்வித் தகுதி குறித்து தவறான தகவல்களை வழங்குவது முறைகேடு செயலுக்கு இணையாகாது.

பிப்ரவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றம், இந்தியாவில் எவரும் ஒரு வேட்பாளருக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்றும், தேர்தலில் வேட்பாளரின் தகுதிகள் குறித்த தவறான தகவல்களை வழங்குவதை (4) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் படி பிரிவு 123 (2) மற்றும் பிரிவு 123-ன் கீழ் ‘முறைகேடு நடைமுறை’ என்று கருத முடியாது என்றும் கூறியுள்ளது.

தற்போதைய வழக்கில் என்ன நடந்தது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘அனுக்ரஹ் நாராயண் சிங் சி. ஹர்ஷ் வர்தன் பாஜ்பாய்’ 2017 அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றம் பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஹர்ஷ் வர்தன் பாஜ்பாய் தனது பொறுப்புகள் மற்றும் சரியான கல்வித் தகுதிகளை வெளியிடாமல் வாக்காளர்களின் தேர்தல் உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் தலையிட்டதன் மூலம் பிரிவு 123(2) இன் கீழ் ‘முறைகேடு நடத்தையில்’ ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அனுக்ரஹ் நாராயண் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அவரது நியமனம் குறித்த வாக்குமூலத்தில், 123(4) பிரிவின் கீழ் ஒரு ‘ஊழல் நடத்தை’ ஆகும். பாஜ்பாய் தனது நடத்தை பற்றிய பொய்யான அறிக்கையை வெளியிட்டு, தெரிந்தே அவரது தேர்தல் முடிவில் தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வாதிட்டார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஹர்ஷ் வர்தன் பாஜ்பாய் தாக்கல் செய்த வேட்பாளர் மனு பிரமாணப்பத்திரத்தில், பாஜ்பாய் தனது பொறுப்புகள் மற்றும் சரியான கல்வித் தகுதிகளை வெளியிடாமல் வாக்காளர்களின் தேர்தல் உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் தலையிட்டதன் மூலம் பிரிவு 123(2) இன் கீழ் முறைகேடு செயலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அனுக்ரஹ் நாராயண் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

123(4) பிரிவின் கீழ் முறைகேடான செயல் மூலம் பாஜ்பாய் தனது நடத்தை பற்றிய பொய்யான அறிக்கையை வெளியிட்டு, தெரிந்தே அவரது தேர்தல் முடிவை பாதிக்கச் செய்துள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வாதிட்டுள்ளார்.

இருப்பினும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ராஜ் பீர் சிங், ‘பதிலளிப்பவரின் கல்வித் தகுதி தொடர்பான தவறான அல்லது தகவல்களை மறைத்தல் வாக்காளர்களை தகாத முறையில் பாதிக்காது. ஏனெனில், வெளிப்படுத்துவதில் உள்ள குறைபாடு கணிசமான அத்தகைய தன்மையைக் கொண்டிருக்கவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின்படி தேர்தலின் வாய்ப்புகள், முறைகேடு நிறைந்த நடைமுறை” என்று குறிப்பிடப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் ‘முறைகேடு நடைமுறைகள்’ என்றால் என்ன?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவு, தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக, லஞ்சம், தேவையற்ற செல்வாக்கு, தவறான தகவல்கள், மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி, இந்திய குடிமக்களின் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பகை அல்லது வெறுப்பு உணர்வுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதை முறைகேடான நடைமுறைகள் என்று வரையறுக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123 (2)-ன் படி, தேவையற்ற செல்வாக்கு பற்றி விவரிக்கிறது. இது வேட்பாளர் அல்லது அவரது முகவர் அல்லது வேறு எந்த நபரின் நேரடி அல்லது மறைமுக குறுக்கீடு அல்லது வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவரின் ஒப்புதலுடன் தலையிட முயற்சி செய்வது எந்தவொரு தேர்தல் உரிமையையும் மீறிப் பயன்படுத்துதல், காயம், சமூகப் புறக்கணிப்பு மற்றும் எந்த சாதி அல்லது சமூகத்திலிருந்தும் வெளியேற்றப்படுதல் போன்ற அச்சுறுத்தல்களும் இதில் அடங்கும். மேலும், ஒரு வேட்பாளரையோ அல்லது வாக்காளர்களையோ அவர்கள் தெய்வீக அதிருப்தி அல்லது ஆன்மீக கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்று நம்ப வைப்பது, அத்தகைய வேட்பாளர் அல்லது வாக்காளர்களின் தேர்தல் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில்” தலையிடுவதாக கருதப்படும்.

பிரிவு 123 (4) ‘முறைகேடு நடைமுறைகளின்’ வரம்பை வேட்பாளரின் தேர்தலின் முடிவைப் பாதிக்கக்கூடிய தவறான அறிக்கைகளை வேண்டுமென்றே வெளியிடுவது என்று விரிவுபடுத்துகிறது.

இந்த சட்டத்தின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சில குற்றங்களுக்கு தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்; முறைகேடு நடைமுறைகளின் அடிப்படையில்; தேர்தல் செலவுகளை அறிவிக்கத் தவறியதற்காக; அரசாங்க ஒப்பந்தங்கள் அல்லது வேலைகளில் பெற்ற ஆதாயத்திற்காகவும் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கலாம்.

கடந்த காலங்களில் என்ன நடைமுறைகளை ஊழல் நடைமுறைகளாக நீதிமன்றம் கூறியது?

2017-ம் ஆண்டில், முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, “அபிராம் சிங் எதிரி சி.டி. கமச்சன்” வழக்கில் வேட்பாளரின் மதம், இனம், ஜாதி, சமூகம் அல்லது மொழி, ஆகியவற்றின் பெயரில் வாக்கு கேட்டால் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று கூறியது. பிரிவு 123 (3) இன் படி அவற்றை தடை செய்கிறது.

இருப்பினும், நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் ஏ.கே.கோயல் ஆகியோருடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த மாறுபட்ட கருத்தில், “தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர், குடிமக்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் குறித்து பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி ஆகியவற்றில் தோற்றம் கொண்ட பண்புகளின் அடிப்படையானது ஜனநாயகத்தை குறைக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

1994-ல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு “எஸ்.ஆர் பொம்மை எதிரி ஒன்றிய அரசு, மதச்சார்பின்மையை அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் கருதுகிறது என்று நீதிமன்றம் கூறியது. “மதங்கள், மதப் பிரிவுகள் மற்றும் பிரிவுகள் மீதான அரசின் அணுகுமுறை என்னவாக இருந்தாலும், மதத்தை அரசின் எந்த மதச்சார்பற்ற நடவடிக்கையிலும் கலக்க முடியாது.” மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதம் அத்துமீறல் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123-ன் துணைப் பிரிவு (3)-ல் இருந்து இது தெளிவாகிறது என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், 1955-ம் ஆண்டிலேயேகூட, உச்ச நீதிமன்றம் ‘ஜமுனா பிரசாத் முகரியா வி. லச்சி ராம்’ பிரிவு 123 (3)-ன் அரசியலமைப்புச் செல்லுபடியை உறுதி செய்தது.

கொலிஜியம் vs என்.ஜே.ஏ.சி: நீதிபதிகள் நியமனம் குறித்த புதிய விவாதம் என்ன?

மிக சமீபத்தில் 2022-ல், உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு எஸ். சுப்பிரமணியம் பாலாஜி எதிரி தமிழ்நாடு அரசு வழக்கில் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கைகளை ஆராயுமாறு உத்தரவிட்டது. இலவசங்கள் வாக்குறுதிகள் முறைகேடு நடவடிக்கை என்று கூற முடியாது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியது.



Read in source website

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப் பரிவர்த்தனை தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இருநாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப் பரிவர்த்தனை தளங்கள் நேற்று (பிப்.21) இணைக்கப்பட்டன. இந்த இணைப்பின் வழியான முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் மேற்கொண்டனர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணப் பரிவர்த்தனையை தொடங்கி வைத்தனர். இதன்படி, இனி சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் மொபைல் செயலி வழியாக, மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி பயன்படுத்தி இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு குறைந்த கட்டணத்தில் எளிமையான முறையில் பணம் அனுப்ப முடியும். அதேபோல் இந்தியாவில் உள்ளவர்களும் சிங்கப்பூருக்கு யுபிஐ செயலிகள் வழியாக எளிதில் பணம் அனுப்ப முடியும்.

UPI மற்றும் PayNow என்றால் என்ன?

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி ஆகும். இது விர்ச்சுவல் பேமென்ட் அட்ரஸ் (விபிஏ) மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. போன் நம்பர் அல்லது யுபிஐ ஐடி பயன்படுத்தி பணம் அனுப்பலாம். வங்கிக் கணக்கு விவரங்கள் எதுவும் பகிரத் தேவையில்லை. யுபிஐ ஆனது ஒரு நபர் டூ மற்றொரு நபர் (P2P) மற்றம் நபர் டூ வணிகர் (P2M) ஆகிய இரண்டு சேவைகளை ஆதரிக்கிறது. இதன் மூலம் பணம் அனுப்பவும் முடியும் பெறவும் முடியும்.

இந்தியாவில் யுபிஐ போல் சிங்கப்பூரில் பேநவ் செயல்படுகிறது. இதுவும் விரைவான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி ஆகும். பியர்-டு-பியர் நிதி பரிமாற்ற சேவையை செயல்படுத்துகிறது. பயனர்கள் தங்கள் மொபைல் எண், சிங்கப்பூர் தேசியப் பதிவு அடையாள அட்டை (NRIC)/வெளிநாட்டு அடையாள எண் (FIN) அல்லது VPA ஆகியவற்றைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள வங்கி அல்லது மின்-வாலட் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கு உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.

UPI- PayNow இணைப்பு என்றால் என்ன?

பொதுவாகவே எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் குறைவான வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்கும். மேலும் உள்நாட்டு பரிவர்த்தனைகளை விட கட்டணம் அதிகம். இந்நிலையில், UPI-PayNow இணைப்பு, குறைவான கட்டணத்தில் இருநாடுகளுக்கு இடையே பணப் பரிவர்த்தனை மற்றும் செயல்முறையை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இரு நாட்டு மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

UPI-PayNow இணைப்பு மூலம் வேகமாகவும், குறைந்த கட்டணத்திலும் பணம் அனுப்ப மற்றும் பெற முடியும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் பயனடைவர். சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு உடனடியாக மற்றும் குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்ப முடியும். அதேபோல் இந்தியாவில் இருந்தும் அனுப்ப முடியும். 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மொத்த Remittance பணத் தரவில் சிங்கப்பூரின் பங்கு 5.7 சதவீதமாக உள்ளது என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.



Read in source website

 ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
 ஆந்திரத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக ஹைதராபாத் அடுத்த பத்து ஆண்டுகள் தொடரும் என்று தீர்மானிக்கப்பட்டது. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்கிவிட்ட நிலையில், இன்னும்கூட ஆந்திரத்தின் தலைநகரம் எது என்பது முடிவாகாமல் இருக்கிறது.
 மொழிவாரி அடிப்படையில் தெலுங்கு பேசும் மக்களின் தாயகமாக ஆந்திரம் உருவானதும், அதன் தலைநகராக ஹைதராபாத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வரலாற்று நிகழ்வுகள். ஆந்திரம் பிரிக்கப்பட்டபோது ஹைதராபாத் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தெலங்கானாவுக்கு மட்டுமான தலைநகரமாக மாறும் என்பது தெளிவாகவே அறிவிக்கப்பட்டது.
 2014-இல் அன்றைய முதல்வராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஹைதராபாதுக்கு பதிலாக புதியதொரு தலைநகரை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். ஹைதராபாதை மேம்படுத்தியதைப் போல புதியதொரு தலைநகரை உருவாக்கி ஆந்திரத்துக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் அவர் முன்மொழிந்த திட்டம்தான் தலைநகர் அமராவதி.
 அமராவதியை உருவாக்குவதற்காக இந்தியாவின் வளமையான விவசாய நிலங்கள் கொண்ட பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் நாயுடுவால் முன்மொழியப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு வழங்கிய நிலத்துக்கான ஆண்டு வாடகையும், அதற்குப் பிறகு தலைநகர் அமராவதியில் ஏக்கர் ஒன்றுக்கு 3,000 சதுர அடி மனையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
 கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளிலுள்ள விவசாயிகள் அன்றைய முதல்வர் நாயுடுவின் வாக்குறுதியால் கவரப்பட்டு, தங்களது நிலங்களை மனமுவந்து வழங்கினர். மனைவணிக மதிப்பு பல மடங்கு அதிகரித்து, முதலீடுகள் அமராவதியில் குவிந்தன. புதிய தலைநகரமான அமராவதியை கட்டமைக்கும் பணி அதிவேகமாக நடந்தது. சந்திரபாபு நாயுடுவின் கனவு மட்டுமல்ல, மனமுவந்து தங்களது நிலங்களை வழங்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கனவும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவால் தகர்ந்தது.
 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானபோது, ஆந்திரத்துக்கு ஒரு தலைநகருக்கு பதிலாக மூன்று தலைநகரங்கள் என்று அறிவித்தார். வடக்கு ஆந்திரம், தெற்கு ஆந்திரம், ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளிலும் தலைநகரங்கள் அமைப்பதுதான் அவரது திட்டம். ஆந்திரத்தின் தலைமைச் செயலகத்தை விசாகப்பட்டினத்திலும், சட்டப்பேரவையை அமராவதியிலும், உயர்நீதிமன்றத்தை கர்னூலிலும் அமைக்கப்போவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தபோது, அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கொதித்தெழுந்தனர். அவர்கள் போராட்டத்துடன் நின்றுவிடாமல் நீதிமன்றத்தையும் நாடினார்கள்.
 2021-இல் மூன்று தலைநகரத் திட்டத்தை கைவிட்டார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திர உயர்நீதிமன்றம், ஆந்திர அரசு தனது அமராவதி திட்டத்தை தொடர வேண்டுமென்றும், கைவிடலாகாது என்றும் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது ஜெகன்மோகன் ரெட்டி அரசு.
 மன்னராட்சி காலத்தில் அரசர் இருக்கும் இடம்தான், அது சிற்றூராக இருந்தாலும்கூட, அந்த நாட்டின் தலைநகரமாகக் கருதப்பட்டது. இப்போதும்கூட அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களின் தலைநகரங்கள் முக்கியத்துவம் பெற்றவை அல்ல. இன்றைய சூழலில் தலைநகரம் என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடி சட்டம் இயற்றும், அமைச்சர்களின் தலைமையில் பல்வேறு துறைகளின் நிர்வாக மையமாகச் செயல்படும் இடம்தான். அதற்கு மேல் முக்கியத்துவம் கிடையாது.
 ஆந்திரத்தைப் பொறுத்தவரை தெலங்கானாவும் பிரிந்து, தகவல் தொழில்நுட்ப நகரமான ஹைதராபாதையும் இழந்த பிறகு விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகள்தான் எஞ்சின. ஹைதராபாதை தொழில்நுட்ப நகரமாக மாற்றி, அந்நிய முதலீடுகளை ஈர்த்ததுபோல, ஆந்திரத்தையும் உருவாக்க நவீன கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்று கருதினார் சந்திரபாபு நாயுடு. அதன் மூலம்தான் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதால் அமராவதியை நிர்வாகத் தலைநகராக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழும் ஒருங்கிணைந்த நவீன நகரமாகவும் உருவாக்க அவர் திட்டமிட்டார்.
 அந்தத் திட்டம் இப்போது அரைகுறையாக நிற்கிறது.
 மாநில நிர்வாகம் இனிமேல் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்திலிருந்து செயல்படும் என்று தில்லியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அமராவதியில் தொழிற்சாலைகளையும், கல்வி நிறுவனங்களையும், வணிக வளாகங்களையும் நிறுவ முதலீடு செய்தவர்கள் திகைப்பில் திணறுகிறார்கள். தங்களது நிலங்களை வழங்கிய விவசாயிகள் நீதிமன்றத்தின் முடிவு தங்களுக்கு சாதகமாக வரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது வருங்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
 ஆந்திரத்தின் தலைநகரம் எது என்கிற குழப்பத்துக்கு உச்சநீதிமன்றம்தான் நல்ல தீர்ப்பை வழங்கி முடிவு கட்ட வேண்டும். இப்படியே இந்தக் குழப்பம் தொடருவது ஆந்திரத்துக்கும், அதன் வருங்காலத்துக்கும் நல்லதல்ல!
 



Read in source website

 மக்களாட்சியில் மகத்தான சக்தி தேர்தல். தம்மை ஆளுவதற்குத் தகுதியானவர்களை ரகசியமாகத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்குக் கிடைத்த உரிமையே வாக்கு. பல கட்சிகள் இருக்கும் நாட்டில் தேர்தல் நடத்துவது என்பதே ஒரு சாதனைதான். அப்படிப்பட்ட நம் நாட்டில் தொடர்ந்து பல தேர்தல்களை சிறப்பாக நடத்தி, சாதனை படைத்து உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளோம்.
 ஒரு தொகுதியில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டு கடுமையான போட்டி நிலவும்போது தேர்தல் பரப்புரையும் வாக்கு சேகரிப்பும் அவசியமாகிறது. கட்சியின் கொள்கைகளையும் வேட்பாளரின் தகுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொண்டு, வாக்களிப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.
 தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேடை பல நல்ல பேச்சாளர்களையும் சிறந்த தலைவர்களையும் உருவாக்கியுள்ளது என்பது வரலாற்று உண்மை. அந்த அளவுக்குத் தேர்தல் பிரசார மேடையின் தாக்கம் இருந்தது. முன்பெல்லாம் தேர்தல் பிரசாரக் கூட்டம் என்றால் அங்கு மக்கள் தாமாகக் கூடிவிடுவர். எந்தக் கட்சி மேடை போட்டாலும் அங்கே மக்கள் கூட்டம் அலைமோதும்.
 மாற்றுக் கட்சிக் கூட்டமாக இருந்தாலும் கூட, தலைவர்களின் பேச்சைக் கேட்க பலர் கூடுவர். என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்பதில் அப்படி ஒரு ஆர்வம் அவர்களுக்கு. பேச்சாளர்களும் நாட்டின் நடப்பைச் சொல்லி, தங்கள் எதிர்காலத் திட்டங்களைக் கூறித் தம் கட்சிக் கொள்கைகளை விளக்கிப் பேசுவர்.
 இப்போதெல்லாம் அப்படியில்லை. அடுத்தவர்களைத் தாழ்த்திப் பேசுவதே வழக்கமாகிவிட்டது. கொள்கையை ஒதுக்கிவிட்டு வெற்றுக் கூச்சல் போடுவதே பிரதானமாகிவிட்டது. கூட்டத்திற்கு வரும் மக்களும் தாமாக விரும்பி வருவதில்லை. பணம் கொடுத்து ஆள் திரட்டும் காலம் ஆகிவிட்டது. "எவ்வளவு தருவீர்கள்' என்று பேரம் பேசும் தைரியம் வந்துவிட்டது. பணம் தருகிறேன் என்று சொல்லிக் கூட்டிவந்து பாதிவழியில் பரிதவிக்கவிடுவதும் இப்போது இயல்பாகிவிட்டது.
 முன்பெல்லாம் கட்சி விசுவாசிகள், வீடு வீடாகச் சென்று உறவு முறை பேசி உரிமையோடு வாக்கு கேட்பர். இப்போதெல்லாம் அப்படியில்லை. பல இடங்களில் இருந்து கட்சி தொண்டர்கள் என்ற பெயரில் அடியாட்கள் வருகின்றனர். வாடகைக்கு இடம்பிடித்து ஓரிடத்தில் தங்கியிருந்து, கை நிறையப் பணம் வாங்கி, கறிச்சோறு தின்று வாக்கு சேகரிக்கச் செல்கின்றனர். இது அவர்களுக்கு தேர்தல்காலப் பிழைப்பு. அவர்கள் வாக்கு சேகரிக்கும் விதம் உள்ளூர்வாசிகளை மிரட்டும் தொனியில் உள்ளது.
 வாக்களிப்பது தங்களின் ஜனநாயகக் கடமை என்ற எண்ணம் மக்கள் மனத்தில் முன்பு இருந்தது. அதனால் ஊரில் இருக்கும் பெரிய மனிதர் கைகாட்டும் வேட்பாளருக்கு வாக்களித்தனர். அதனால் ஊரிலிருக்கும் பெரிய மனிதரைப் பார்த்தால் போதும் என்ற நிலை வேட்பாளருக்கு இருந்தது. அவரும் ஊருக்குச் செய்ய வேண்டிய வசதி பற்றி வேட்பாளரிடம் கோரிக்கை வைப்பார்.
 இப்போது எல்லோரும் பெரிய மனிதர் ஆகிவிட்டனர். யார் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. "பணம் தந்தால் வோட்டு போடுவோம்' என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். அந்த அளவிற்குப் பணத்தைக் கொடுத்து ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றிவிட்டனர் இன்றைய அரசியல்வாதிகள். "அந்த ஊர் பார்முலா', "இந்த ஊர் பார்முலா' என்று அதனைப் பெருமையாகப் பேசும் வழக்கமும் உருவாகிவிட்டது.
 இதனால் தேர்தல் கூட்டத்திற்குச் செய்யும் செலவை வாக்காளர்களுக்குக் கொடுத்தால் போதும் என்ற விபரீத எண்ணம் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வந்துவிட்டது. எனவே பணப் பட்டுவாடா செய்யும் வேலையைத் தீவிரமாகச் செய்யத் தொடங்கிவிட்டனர். தேர்தல் ஆணையம் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் பணப் பட்டுவாடாவை செய்யும் வழியைக் கண்டு பிடித்தனர்.
 தேர்தல் பரப்புரையில் தொய்வு விழுந்து, பணப் பட்டுவாடா வீறு பெற்றுவிட்ட வாக்குச் சேகரிப்பில் இப்போது ஒரு புதிய அணுகுமுறை உருவாகியுள்ளது. அது தான் வாக்காளர்களைக் கவரவேண்டும் என்பதற்காக வித்தியாசமாகச் செயல்படுவது. இதனை ஒரு அதிசயச் செயல்முறை என்றும் கூறலாம்.
 வீட்டுக்கு வீடு பால் போடுவது, கோழிக்கறி கொடுப்பது என்று நடக்கும் நிகழ்வைச் சொல்லவில்லை. முன்பு கம்மல் கொடுத்தார்கள், இப்போது கோழிக்கறி கொடுக்கிறார்கள் என்று இதனை விட்டு விடலாம். இதை விடவும் ஒருபடி மேலே சென்றுவிட்டது அண்மைக்கால வாக்கு சேகரிப்பு நிகழ்வு.
 வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள் அத்தந்தப் பகுதிக்கு ஏற்ப நடந்து கொள்வது விநோதமாக இருக்கிறது. ஒரு வேட்பாளர் ஹோட்டலில் பரோட்டா வீசுகிறார், ஒருவர் பரிமாறுகிறார், ஒருவர் பாத்திரம் கழுவுகிறார், ஒருவர் மீன் கழுவுகிறார், இன்னொருவர் துணி அலசுகிறார், மற்றொருவர் மேளம் அடிக்கிறார், இன்னொருவர் கரகாட்டக்காரர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார். இப்படி ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு விதவிதமாகச் செயல்பட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.
 அவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் மக்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கின்றனர். இந்த ரசனையெல்லாம் வாக்காக மாறும் என்று வேட்பாளர்கள் நினைக்கின்றனர். வாக்காளர்கள் இதற்கெல்லாம் மசிவதாகத் தெரியவில்லை. கொடுக்கும் பணத்திற்கும் அள்ளி வீசும் இலவசத்திற்கும்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது கடந்த தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, வேட்பாளர்கள் இப்படி பலவாறு நடித்து வாக்கு சேகரிப்பதை நகைச்சுவையாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.



Read in source website

 ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த டி.கே. சிதம்பரநாத முதலியாரின் (டி.கே.சி.) உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊர் குற்றாலம். அங்கு இயற்கையாக எழும் ஒலிகளையும் தமிழ் பாடல்களின் ராக, தாளங்களையும் இணைத்துக் காண்கிற அவருடைய ரசனை உணர்வே அவரை ரசிகமணியாக்கி இருக்கிறது.
 இதை, டி.கே.சி. எழுதிய கட்டுரையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். "கவியில், அதாவது உண்மை ததும்பும் உருவத்தோடு கூடிய கவியில் ஈடுபட்டுவிட்டால், வார்த்தை, தாளம், தமிழ்ப் பண்பு இவற்றில் அப்படியே கரைந்துவிடுகிறோம் நாம். பாஷைக்கு ஒரு மந்திர சக்தி இருக்கிறதாகவே தெரிகிறது. கவியிலுள்ள உணர்ச்சி வசமாய்ப் போய், வார்த்தை, தாளம், செய்யுள்கோப்பு இவற்றால் ஆகிய உருவமாகவே மாறி விடுகிறோம். கவிக்கு விஷயம் அல்ல, உருவமே பிரதானம்' எனச் சொல்கிறார் டி.கே.சி.
 வழக்குரைஞரான டி.கே.சி. நெல்லை வண்ணார்பேட்டையில் வசித்தபோது, "வட்டத் தொட்டி' என்ற பெயரில் இலக்கிய அமைப்பை நடத்தியிருக்கிறார். ஜஸ்டிஸ் மகராஜன், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மீ.ப. சோமு, ல. சண்முகசுந்தரம், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், அ. சீனிவாச ராகவன், பெ.நா. அப்புஸ்வாமி, கே.பி. கணபதி, டி.டி. திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு. அருணாசலம், ஜி.சி. பட்டாபிராம் போன்ற பல இலக்கியவாதிகள் கலந்து கொண்ட அமைப்பு அது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளை எல்லாம் வெளிக்கொணர்ந்து அவற்றின் சுவையை மற்றவர்கள் அனுபவிக்கச் செய்திருக்கிறார் டி.கே.சி.
 ரசிகமணி நெல்லையில் இருந்தபோதும் சரி, திருக்குற்றாலத்தில் இருந்தபோதும் சரி அவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடம் கம்பனின் கவியாற்றலையும் கம்பரின் பெருமைகளையும் டி.கே.சி விவரிக்கும்போது எல்லாரும் மெய்ம்மறந்து கேட்பார்கள்.
 டி.கே.சி.யால் வாரம் ஒருமுறை நடத்தப்பட்ட வட்டத் தொட்டி அமைப்பு "டி.கே.சி. வட்டத்தொட்டி' என்ற பெயரில் பிரபலமடைந்தது. அப்போது எழுத்தாளர் லா.ச.ரா. தென்காசியில் வங்கி மேலாளராக பணிபுரிந்ததால் வட்டத் தொட்டி நிகழ்ச்சிக்கு அடிக்கடி வருவதுண்டு. டி.கே.சி 1926- இல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பொறுப்பேற்றார்.
 டி.கே.சி. நெல்லையில் இருந்தபோதே ராஜாஜி, கல்கி குடும்பத்தினர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். டி.கே.சி. வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து தங்கியிருக்கின்றனர். கல்கி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் அடிக்கடி இங்கே வருவதுண்டு.
 ராஜாஜியும், கல்கியும் டி.கே.சி.யின் நெருக்கமான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. மூவரும் பழகத் தொடங்கிய காலத்தில், ராஜாஜியும் கல்கியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். டி.கே.சி.யோ நீதிக்கட்சியில் தொடர்பு வைத்திருந்தார். ஆனாலும் அவர்களுடைய நட்பை அவர்கள் சார்ந்திருந்த கட்சிகள் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய நட்பு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. டி.கே.சி. நெல்லையில் இருக்கும்போதே குற்றாலத்துக்கு அடிக்கடி வந்துவிடுவார். தான் வருவதற்கு முன்பு ராஜாஜியையும், கல்கியையும் குற்றாலத்துக்கு வரச்சொல்லி கடிதம் எழுதிவிடுவார். குற்றாலத்தில் டி.கே.சி. தங்குவது குற்றாலீஸ்வரர் கோயிலுக்கு அருகே உள்ள 1-ஆம் எண் பங்களாவில்தான்.
 அதற்குப் பிறகு நிரந்தரமாக குற்றாலத்துக்கே குடிவந்துவிட்டார். 1942 -ஆம் ஆண்டு குற்றாலம் ஐந்தருவி சாலையில் அருகருகே உள்ள எட்டறை என்ற வரிசை வீடுகளில் இரண்டு வீடுகளை, குற்றாலம் கோயில் தேவஸ்தானத்திடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார்.
 ஒரு வீட்டில் டி.கே.சி.யின் குடும்பத்தினர் தங்கினார்கள். அந்த வீட்டில் சமையல், சாப்பாடு, விருந்தினர்களை உபசரிப்பது எல்லாம் நடக்கும். இன்னொரு வீட்டில் டி.கே.சி. தங்கியிருந்தார். படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் உரையாடுவது எல்லாம் அங்கேதான்.
 டி.கே.சி. வீட்டில் தினமும் 20, 25 பேர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். டி.கே.சி.யின் ஒரே மகன் செல்லையா என்கிற தீத்தாரப்பன் 32 வயதில் மறைந்தார். அந்த அதிர்ச்சியை டி.கே.சி.யாலும் அவருடைய துணைவியாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதும், அவர்களை உபசரிப்பதும் அந்த கவலையில் இருந்து அவர்கள் மீள உதவியிருக்கிறது.
 திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டிகேசி இருந்த வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் குற்றாலத்தில் இருந்த வீடு அந்த அளவுக்குப் பெரிதில்லை. டி.கே.சி. குற்றாலத்துக்கு குடியிருக்க வரும்போது மின் இணைப்பு இல்லை. அரிக்கேன் விளக்குதான்.
 இன்று போல அன்று தொலைபேசி வசதி கிடையாது. ராஜாஜி, கல்கி ஆகியோரிடம் இருந்து தகவல்கள், கடிதம், தந்தி மூலமாகத்தான் வரும். குற்றாலத்தில் சாரல் தொடங்கி, அருவிகளில் நீர் பெருகி வழியத் தொடங்கும்போதுதான் குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அதுவரை ஒரு கிராமத்தைப் போல, குறைவாகத்தான் மக்கள் நடமாட்டம் இருக்கும்.
 குற்றாலநாதர் கோயிலின் வடக்கு வாசலில் இருந்து அருவிக்குப் போகும் வழியில் வலது பக்கம் மலையின் அடியில் கசிந்து வரும் நீரைத் தொட்டியில் நிரப்பி, கோயிலின் மடப்பள்ளிக்கு செல்லுமாறு ஒரு குழாயும், கோயிலுக்கு வெளியே மக்களுக்குப் பயன்படுமாறு மற்றொரு குழாயும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த நீர் விழும் பகுதிக்கு அருகில் இருந்த சிறுவீடு ஒன்றில் ஸ்ரீமத் மெளன ஸ்வாமிகள் தங்கியிருந்தார். அங்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததால், செங்கோட்டை சாலையில் ஸ்ரீமத்மெளன ஸ்வாமிகள் மடம் அமைக்கப்பட்டது.
 முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு என்னகாரணத்தாலோ ராஜீவ் காந்தியால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் நரசிம்ம ராவ், அரசியலை விட்டுத் தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாதுக்குச் செல்ல முடிவெடுத்தார். அதன் பின் குற்றாலத்தில் உள்ள ஸ்ரீமத் மெளன ஸ்வாமிகள் மடத்திலேயே இறுதிக் காலம் வரை தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாகஅவருக்கு பிரதமராகும் வாய்ப்பு 1991- இல் கிட்டியது.
 டி.கே.சி. குற்றாலத்தில் குடியேறிய பிறகும், ராஜாஜி, கல்கி ஆகியோர் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள். "அண்ணி' என்று எல்லோராலும்அழைக்கப்பட்ட டி.கே.சி.யின் மனைவி பிச்சம்மாளுக்கு விருந்தினர்களை உபசரிப்பதுதான் வேலை. ராஜாஜி, கல்கி, எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி எல்லாரும் "அண்ணி' என்றே பிச்சம்மாளை அழைப்பார்கள்.
 ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1953-இல் சென்னை ஆளுநர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்துக்கு வந்திருக்கிறார். ஆங்கிலத்தில் விளக்கமளித்து பின்னர் தமிழ் கவிதைகளை பிரகாசாவுக்கு டி.கே.சி. பாடிக் காட்டினார். இதுபோன்று இதற்கு முன்பு காந்தி, வினோபா பாவே ஆகியோருக்கும் டி.கே.சி. பாடிக் காட்டியிருக்கிறார். அடுத்த முறை ஆளுநர் பிரகாசா குற்றாலம் வந்தபோது, டி.கே.சி. காலமாகிவிட்டார். ஆளுநர் பிரகாசா டி.கே.சி. இல்லம் சென்று டி.கே.சி. குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தார். அன்றைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையும் குற்றாலம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
 கம்பனின் கவியுள்ளத்தை வெளிப்படுத்தும் பணியில் டி.கே.சி. ஈடுபட்டிருந்தார். "கம்பர் தரும் காட்சி' என்னும் தலைப்பில் கல்கி ஆரம்ப இதழில் (1941ஆகஸ்ட்) தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் கம்பராமாயணத்தை விளக்கமாக எழுதி வந்தார். அதன் மூலம் சாதாரண வாசகரையும் கம்பர் கவியை அனுபவிக்கச் செய்ய முடிந்ததே என்று மகிழ்ச்சி கொண்டார் டி.கே.சி.
 கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய டி.கே.சி., அதில் இடம்பெற்ற 627 பாடல்கள் இடைச்செருகல் என அடையாளம் கண்டு அவற்றை நீக்கினார். கம்பர் கவிதைகளில் சிலவற்றை திருத்தம் செய்து அவற்றை அர்த்தம் பொதிந்த கவிதைகளாகப் பதிப்பித்தார். இதற்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது. அது 1953-ஆம் ஆண்டு "கம்பர் தரும் ராமாயணம்' என்ற நூலாக வெளிவந்தது. அந்த நூலின் முதல் தொகுதி வெளியீட்டு விழா குற்றாலத்தில் நடந்தது. அதில் ராஜாஜி பங்கேற்றார்.
 ரசிகமணி டி.கே.சி. என்று எண்ணும்போதே கவிதை நினைவுக்கு வரும். அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும். கவிதையை எப்படி அனுபவித்தாரோ அதுபோன்றே இசையையும் அவர்அனுபவித்தார்.
 சென்னையில் டி.கே.சி. இருந்தபோது வீணை தனம்மாளை அடிக்கடி சந்தித்து தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். டி.கே.சி. வீட்டில் வீணை தனம்மாளின் படம் இருந்தது.
 கல்கி குடும்பத்தினர் குற்றாலம் வந்தால் டி.கே.சி. வீட்டில்தான் தங்குவார்கள். சென்னைக்கு டி.கே.சி. குடும்பத்தினர் சென்றால் கல்கி வீட்டில்தான் தங்குவார்கள். 1937 முதல் குற்றாலம் செல்வதை கல்கி வழக்கமாக வைத்திருந்தார். ஆஸ்துமா நோயாளியான கல்கிக்கு குற்றாலம் குளியலால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. சிவகாமியின் சபதத்தில் குற்றாலம் தொடர்பான காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன.
 கல்கி இதழ் மூலம் நன்கொடை வசூலித்து எட்டயபுரத்தில் பாரதியாருக்கு மணிமண்டபம் கட்டியது கல்கிதான். "பாரதி ஸ்பெஷல்' என்ற ரயில் கோவில்பட்டிக்கு விடப்பட்டது. இந்த பாரதி மண்டபம் கட்டும் பணிகளுக்கான அலுவலகமாக டி.கே.சி.யின் குற்றால வீடு இருந்தது.
 ரசிகமணி டி.கே.சி. 1954-ஆம் ஆண்டு தனது 73-ஆம் வயதில் மறைந்தார். "கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1,000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது' என டி.கே.சி.க்குப் புகழ்மாலை சூட்டினார் ஜஸ்டிஸ் மகராஜன்.
 தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில் கூட தனக்கென எதையும் பெற்றுக் கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்தார் டி.கே.சி. அவர், தனது இறுதிக் காலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருக்கிறது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் பெயர் பலகைகூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.
 இதற்கு மாறாக, பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அகற்றுவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது நினைவிடம்.
 பொருநை ஆற்று ஞானியாகவும், திருநெல்வேலி கன்னல் தமிழின் காவலராகவும் வாழ்ந்தவர் டி.கே.சி. கம்பனின் கவியுள்ளத்துக்கும், தமிழுக்கும், கடித இலக்கியத்துக்கும், தமிழிசைக்கும் உழைத்த.டி.கே.சி.க்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.
 
 கட்டுரையாளர்:
 அரசியலாளர்.
 



Read in source website

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலவீனமான நிலையில், உதவிக்காகச் சக மனிதர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இருப்பவர்கள், அதே மனிதர்களால் கொடுமைப்படுத்தப்படுவதைவிடப் பேரவலம் என்ன இருக்க முடியும்? விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் செயல்பட்டுவந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்புகின்றன.

இந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர் எனப் பல தரப்பினரும் அடக்கம். இவர்களுக்கு இடையில் இருந்த ஒரே ஒற்றுமை, எல்லோருமே ஏதேனும் வகையில் வன்கொடுமைக்கு ஆளானவர்கள்தான்.



Read in source website

பிப்ரவரி 11 அன்று தென் ஆப்பிரிக்காவில் சிற்றலை ஒலிபரப்பில் திடீரெனப் பாதிப்பு ஏற்பட்டது. பலருக்கு எப்படி அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. ‘துடிப்புப் பகுதி AR3217’ என அழைக்கப்படும் சூரியக் கரும்புள்ளிப் பகுதியில், இந்திய நேரப்படி இரவு 9.20 மணிக்கு ஏற்பட்ட சிறிய சூரிய ஒளிப்புயல்தான் அதற்குக் காரணம்.

சூரிய இயக்கத் துடிப்பில் 11 ஆண்டு ஊசல் காலம் கொண்ட ஏற்ற இறக்கம் உள்ளது. 2019 டிசம்பரில் தொடங்கிய இந்த ஊசல் இப்போது ஏறுமுகத்தில் உள்ளது. ஜூலை 2025இல் இது உச்சம் அடையும். எனவே, அடுத்த சில மாதங்களில் சீற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் கூடும் என எச்சரிக்கிறார்கள் விண்வெளி வானிலை ஆய்வாளர்கள்.



Read in source website

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி, பணத்தைத் தொலைத்து, நிம்மதியிழந்து இதுவரை 45 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டைத் தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

நான்கு மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான சட்ட நிலைப்பாடு என்ன?



Read in source website