DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 19-10-2022

 

நீடித்த நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் இணைந்து பயன்பெற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்,

நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில், பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப் பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு,  ஊட்டச்சத்து  காய்கறித் தோட்டம் போன்ற வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்ளப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது. 

இதற்காக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நோக்கமும், பயன்களும்

பயிர் சாகுபடி மட்டும் மேற்கொண்டால், அறுவடையின் போது மட்டுமே வருமானம் கிடைக்கும். ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதற்காக, பயிர் சாகுபடியுடன், விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டால், விவசாயிகள் மட்டுமல்லாது, அவர்களின் வீட்டில் உள்ள பெண்களுக்கும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கூடுதல் வருமானமும் ஈட்ட இயலும்.

திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு

முதற்கட்டமாக 3,700 ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகள் அமைப்பதற்கு 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியை தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளித்து, அரசாணை தற்போது வேளாண்மை-உழவர் நலத்துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.    

ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு மானியம்?

 பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்ந்த அனைத்து வகையான பணிகளையும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கம் அமைப்பதற்கு, 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.

 ஊடு பயிர் அல்லது  வரப்புப்பயிர் சாகுபடிக்கு ரூ.5,000, கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ.15,000/-, பத்து ஆடுகள் வாங்குவதற்கு ரூ.15,000/-, பத்து கோழிகள் வாங்குவதற்கு ரூ.3,000/-, இரண்டு தேனீப் பெட்டிகளுக்கு ரூ.3,200/-, 35 பழமரக் கன்றுகளுக்கு ரூ.2000/-, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக பத்து சென்ட் பரப்பில் தீவன பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ரூ.800/-, மண்புழு உரத்தொட்டி அமைப்பதற்கு ரூ.6,000/- ஆக மொத்தம் ஒரு எக்டரில் ஒருங்கிணைந்த பண்ணையத் திடல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக  50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
 



Read in source website

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு  ஓய்வறை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பார, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தி தர தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அரசு அலுவலங்களிலும் பொதுமக்களுக்காக கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தலைமைச் செயலாளர் வலுயுறுத்தியுள்ளார்.



Read in source website

 


“நொறுங்க தின்றால் நூறு வயது”
என்ற பழமொழியைத் தெரியாதவர் இருக்க முடியாது. நம் பாரம்பரிய பழமொழிகள், நம் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையன. அவைகளை வாழ்வியல் முறையாக பின்பற்றினால் 100 வயது மட்டுமல்ல அதுக்கு மேலும் வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் பின்பற்றி வாழ்ந்து காட்டி சென்றுள்ளனர். 

ஆனால், இன்றைய தலைமுறையோ உட்கார்ந்து சாப்பிட கூட நேரமின்றி, அரக்க பறக்க உணவினை தின்று, நம் சீரண மண்டலம் செரிக்க முடியாமல், செரிமானத்தை தூண்டும் என்ற பெயரில் காற்றேட்டப்பட்ட பானங்களை அருந்தி, ஆயுட்காலத்தை குறைத்தது தான் மிச்சம். இத்தகைய நவீன வாழ்வியலால் ஆரோக்கியத்தை இழந்தது தான் மிகப்பெரிய ஆதாயம்.

சரி, அது எப்படி நொறுங்க தின்றால் ஆயுசு கூடும்? அது உணவு தானே, அன்றி மருந்தில்லையே? என்று பலருக்கு கேட்கத் தோன்றும். 

செரிமானத்தின் முதல்படி, நாம் வாயில் உணவிட்டு மென்று தின்று உணவு கவலங்களாக அதனை மாற்ற வேண்டும். நம் வாயில் பற்களை அரைவை இயந்திரங்களாக இயற்கை எதற்கு படைத்துள்ளது? என்றே பலருக்கு தெரியாது. அதனைப் பயன்படுத்தவும் தெரிவதில்லை. நாவிற்கு நல்ல சுவையை கொடுத்து அதன் பலனை அடையும் நாம், நன்கு மென்று தின்று பற்களால் உணவை கூழாக்கி விழுங்கி, அதன் பலனை யாரும் அடைவதே இல்லை.

கொத்துமல்லி இலை

நாம் உண்ணும் உணவை செரிக்க அமிலத்தையும், பித்தமாகிய காரத்தையும், பல்வேறு நொதிகளையும் நம் வயிறு, குடல் பகுதிகள் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலமும், பித்தமும் தான் நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு ஆதாரம். சரிவர மென்று உணவை விழுங்காமல் அப்படியே உணவையும், அத்துடன் சிறிது காற்றையும் சேர்த்து விழுங்குவது பலரது இயல்பு. அத்தகைய உணவு சீரணமாக நம் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமில சுரப்புகள் குடல்பகுதிகளை அரிக்கும். 

மேலும்,துரித உணவுகளும், எண்ணெய் அதிகம் செறிந்த உணவுகளும் இந்த அமில சுரப்பையும், பித்தத்தையும் அதிகமாக்கி சீரணக் கோளாறுகளை மட்டுமின்றி வயிறு,குடல் பகுதிகளை அரித்து வயிறு புண், குடல் புண், குடல் அழற்சி ஆகிய வியாதிகளை உண்டாக்கும். இவ்வாறு தொடர்ந்து பற்களால் நொறுக்காமல் விழுங்கிய உணவால், குடலில் அதிகரித்த பித்தமும், வாதமும் ஒன்றுகூடி குடல் அரிப்பு நோயையும் (IBS), இன்னும் பல நோய்களையும் நாளடைவில் உண்டாக்கும். 

அடிக்கடி வயிற்றுவலி, மலம் கழிப்பதன் மூலம் அந்த வலிக்கு சற்று நிவாரணம், மலம் கழிப்பதில் மாற்றம் மற்றும் மலத்தின் தோற்றத்தில்  மாற்றம் ஆகியன குடல் அரிப்பு நோயின் மிக முக்கிய குறிகுணங்களாக துரித உணவை அதிகம் நாடுபவர்களை துன்புறுத்தும்.

‘பித்தம் அடங்கிடில், பேசாதே போய் விடு’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது வாதம்,பித்தம்,கபம் இவை மூன்றில் உடலில் உயிர் இருப்பதை உறுதி செய்வது பித்தம் தான். உடல் சூட்டுக்கு காரணமான பித்தம் அடங்கிவிட்டால் உயிர் இல்லை. அத்தகைய பித்தம் அதிகரித்து அது பரவும் இடத்தைப் பொறுத்துக் குறிகுணங்களை மாற்றி நோய்களை உண்டுபண்ணும். அந்த வகையில் குடலில் அதிகமான பித்தம் குடல் புண்ணையும், குடல் அரிப்பு நோயையும் நாளடைவில் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

இவ்வாறு அதிகரித்த பித்தத்தை தணித்து, அதனால் ஏற்படும் புண்களையும் ஆற்றி, சீரணமண்டலத்துக்கு நன்மை செய்யும் ஒரு எளிய கடைசரக்கு மூலிகை இருக்குமெனில், அது நவீன வாழ்வியலில் மூழ்கியுள்ளவர்களுக்கு அமிர்தம் தான். அப்படி ஒரு எளிய மூலிகை தான் ‘உருள் அரிசி’ எனப்படும் ‘தனியா’

‘தனியா’ என்பதன் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தால் இது தணியாத பித்தத்தையும் தணிக்கும் தன்மையுடையதால் தனியா என்ற பெயர் பெற்றது அறியக்கிடக்கின்றது. இதனைப் ‘பித்தமெல்லாம் வேருடனே பேருங்கால்’ என்ற அகத்தியர் குணவாகடம் கூறும் பாடல் வரிகளால் உறுதி செய்யலாம்.

கொத்துமல்லி

கொத்துமல்லி இலைகளில் உள்ளதைப் போல் கொத்துமல்லி விதையான தனியாவிற்கும் பித்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது.சுரம், தலைவலி, வாய்நாற்றம், அசீரணம், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகளுக்கு தனியா விதை பல்வேறு தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனியா, குடலில் ஏற்படும் வலியை போக்கும் இசிவகற்றியாகவும், பசியை உண்டாக்கும் தன்மை, சீரணமுண்டாக்கி, வயிற்றில் உள்ள வாயுவை அகற்றுவதாகவும், குளிர்ச்சியை தருவதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், உடல் தேற்றியாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பதாகவும், புழுக்கொல்லியாகவும் செயல்படக்கூடியது. 

தனியாவின் அத்தியாவசிய எண்ணெயில் அதிக 'லினலூல்' என்ற வேதிப்பொருள் இருப்பதால், கொத்தமல்லி விதைகள் வலி நிவாரணி செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த மூலக்கூறே அதன் புற்றுநோய் தடுக்கும் பண்பிற்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட் எனும் செல்களின் தேய்மானத்தை தடுக்கும் தன்மைக்கும், மன பதட்டத்தை தடுக்கும் தன்மைக்கும், நரம்புகளை தேய்மானத்தை தடுக்கும் தன்மைக்கும், வீக்கத்தை குறைக்கவும் முக்கிய காரணமாக உள்ளது.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீசு, தயாமின், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன. தனியா விதையானது பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும்.

தனியாவை லேசாக வறுத்து பொடித்து தனியாகவோ, அல்லது ஏலக்காய், சீரகம் போன்ற பித்தத்தை குறைக்கும் பிற கடைசரக்குகள் உடனோ  சேர்த்துக் கலப்பு பொடியாக செய்து பாலில் கொதிக்க வைத்து பயன்படுத்த நல்ல பலன் தரும். அதிகரித்த பித்தத்தைக் குறைத்து குடல் புண்களை ஆற்றி குடல் அரிப்பு நோயில் இருந்து காக்கக்கூடியது.

உலக அளவில் சரியான மருத்துவ முறைகள் இல்லையே என உலகமே அஞ்சி நடுங்கும் ஒரு உடல் உபாதைக்கு, கிட்டத்தட்ட 9-23% பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டு அவதியுறும் குடல் அரிப்பு நோய்க்கு எளிமையான மருத்துவ முறையைக் கூறி, நோயிலிருந்து நீக்கி, நீடித்த ஆரோக்கியான வாழ்விற்கு வழிவகைகளை கூறுகிறது சித்த மருத்துவம். 

மிளகாய் எனும் குடலை அரிக்கும் உணவுப்பொருளை அரைக்கும் போது, தனியாவையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குடலை காக்கும் சூட்சுமத்தை ஒளித்து வைத்துள்ளது சித்த மருத்துவம். இன்னும் பல எளிய மூலிகைகளையும், கடை சரக்குகளையும் நோய்களை தீர்க்கும் பேராயுதமாக கூறுகிறது நம் பாரம்பரிய மருத்துவம். அதைப் பின்பற்றி வாழ்வது என்பது ஆரோக்கியத்தின் ஆணி வேர் போன்றது.  
 

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768. இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

 


“நொறுங்க தின்றால் நூறு வயது”
என்ற பழமொழியைத் தெரியாதவர் இருக்க முடியாது. நம் பாரம்பரிய பழமொழிகள், நம் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையன. அவைகளை வாழ்வியல் முறையாக பின்பற்றினால் 100 வயது மட்டுமல்ல அதுக்கு மேலும் வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் பின்பற்றி வாழ்ந்து காட்டி சென்றுள்ளனர். 

ஆனால், இன்றைய தலைமுறையோ உட்கார்ந்து சாப்பிட கூட நேரமின்றி, அரக்க பறக்க உணவினை தின்று, நம் சீரண மண்டலம் செரிக்க முடியாமல், செரிமானத்தை தூண்டும் என்ற பெயரில் காற்றேட்டப்பட்ட பானங்களை அருந்தி, ஆயுட்காலத்தை குறைத்தது தான் மிச்சம். இத்தகைய நவீன வாழ்வியலால் ஆரோக்கியத்தை இழந்தது தான் மிகப்பெரிய ஆதாயம்.

சரி, அது எப்படி நொறுங்க தின்றால் ஆயுசு கூடும்? அது உணவு தானே, அன்றி மருந்தில்லையே? என்று பலருக்கு கேட்கத் தோன்றும். 

செரிமானத்தின் முதல்படி, நாம் வாயில் உணவிட்டு மென்று தின்று உணவு கவலங்களாக அதனை மாற்ற வேண்டும். நம் வாயில் பற்களை அரைவை இயந்திரங்களாக இயற்கை எதற்கு படைத்துள்ளது? என்றே பலருக்கு தெரியாது. அதனைப் பயன்படுத்தவும் தெரிவதில்லை. நாவிற்கு நல்ல சுவையை கொடுத்து அதன் பலனை அடையும் நாம், நன்கு மென்று தின்று பற்களால் உணவை கூழாக்கி விழுங்கி, அதன் பலனை யாரும் அடைவதே இல்லை.

கொத்துமல்லி இலை

நாம் உண்ணும் உணவை செரிக்க அமிலத்தையும், பித்தமாகிய காரத்தையும், பல்வேறு நொதிகளையும் நம் வயிறு, குடல் பகுதிகள் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலமும், பித்தமும் தான் நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு ஆதாரம். சரிவர மென்று உணவை விழுங்காமல் அப்படியே உணவையும், அத்துடன் சிறிது காற்றையும் சேர்த்து விழுங்குவது பலரது இயல்பு. அத்தகைய உணவு சீரணமாக நம் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமில சுரப்புகள் குடல்பகுதிகளை அரிக்கும். 

மேலும்,துரித உணவுகளும், எண்ணெய் அதிகம் செறிந்த உணவுகளும் இந்த அமில சுரப்பையும், பித்தத்தையும் அதிகமாக்கி சீரணக் கோளாறுகளை மட்டுமின்றி வயிறு,குடல் பகுதிகளை அரித்து வயிறு புண், குடல் புண், குடல் அழற்சி ஆகிய வியாதிகளை உண்டாக்கும். இவ்வாறு தொடர்ந்து பற்களால் நொறுக்காமல் விழுங்கிய உணவால், குடலில் அதிகரித்த பித்தமும், வாதமும் ஒன்றுகூடி குடல் அரிப்பு நோயையும் (IBS), இன்னும் பல நோய்களையும் நாளடைவில் உண்டாக்கும். 

அடிக்கடி வயிற்றுவலி, மலம் கழிப்பதன் மூலம் அந்த வலிக்கு சற்று நிவாரணம், மலம் கழிப்பதில் மாற்றம் மற்றும் மலத்தின் தோற்றத்தில்  மாற்றம் ஆகியன குடல் அரிப்பு நோயின் மிக முக்கிய குறிகுணங்களாக துரித உணவை அதிகம் நாடுபவர்களை துன்புறுத்தும்.

‘பித்தம் அடங்கிடில், பேசாதே போய் விடு’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது வாதம்,பித்தம்,கபம் இவை மூன்றில் உடலில் உயிர் இருப்பதை உறுதி செய்வது பித்தம் தான். உடல் சூட்டுக்கு காரணமான பித்தம் அடங்கிவிட்டால் உயிர் இல்லை. அத்தகைய பித்தம் அதிகரித்து அது பரவும் இடத்தைப் பொறுத்துக் குறிகுணங்களை மாற்றி நோய்களை உண்டுபண்ணும். அந்த வகையில் குடலில் அதிகமான பித்தம் குடல் புண்ணையும், குடல் அரிப்பு நோயையும் நாளடைவில் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

இவ்வாறு அதிகரித்த பித்தத்தை தணித்து, அதனால் ஏற்படும் புண்களையும் ஆற்றி, சீரணமண்டலத்துக்கு நன்மை செய்யும் ஒரு எளிய கடைசரக்கு மூலிகை இருக்குமெனில், அது நவீன வாழ்வியலில் மூழ்கியுள்ளவர்களுக்கு அமிர்தம் தான். அப்படி ஒரு எளிய மூலிகை தான் ‘உருள் அரிசி’ எனப்படும் ‘தனியா’

‘தனியா’ என்பதன் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தால் இது தணியாத பித்தத்தையும் தணிக்கும் தன்மையுடையதால் தனியா என்ற பெயர் பெற்றது அறியக்கிடக்கின்றது. இதனைப் ‘பித்தமெல்லாம் வேருடனே பேருங்கால்’ என்ற அகத்தியர் குணவாகடம் கூறும் பாடல் வரிகளால் உறுதி செய்யலாம்.

கொத்துமல்லி

கொத்துமல்லி இலைகளில் உள்ளதைப் போல் கொத்துமல்லி விதையான தனியாவிற்கும் பித்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது.சுரம், தலைவலி, வாய்நாற்றம், அசீரணம், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகளுக்கு தனியா விதை பல்வேறு தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனியா, குடலில் ஏற்படும் வலியை போக்கும் இசிவகற்றியாகவும், பசியை உண்டாக்கும் தன்மை, சீரணமுண்டாக்கி, வயிற்றில் உள்ள வாயுவை அகற்றுவதாகவும், குளிர்ச்சியை தருவதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், உடல் தேற்றியாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பதாகவும், புழுக்கொல்லியாகவும் செயல்படக்கூடியது. 

தனியாவின் அத்தியாவசிய எண்ணெயில் அதிக 'லினலூல்' என்ற வேதிப்பொருள் இருப்பதால், கொத்தமல்லி விதைகள் வலி நிவாரணி செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த மூலக்கூறே அதன் புற்றுநோய் தடுக்கும் பண்பிற்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட் எனும் செல்களின் தேய்மானத்தை தடுக்கும் தன்மைக்கும், மன பதட்டத்தை தடுக்கும் தன்மைக்கும், நரம்புகளை தேய்மானத்தை தடுக்கும் தன்மைக்கும், வீக்கத்தை குறைக்கவும் முக்கிய காரணமாக உள்ளது.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீசு, தயாமின், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன. தனியா விதையானது பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும்.

தனியாவை லேசாக வறுத்து பொடித்து தனியாகவோ, அல்லது ஏலக்காய், சீரகம் போன்ற பித்தத்தை குறைக்கும் பிற கடைசரக்குகள் உடனோ  சேர்த்துக் கலப்பு பொடியாக செய்து பாலில் கொதிக்க வைத்து பயன்படுத்த நல்ல பலன் தரும். அதிகரித்த பித்தத்தைக் குறைத்து குடல் புண்களை ஆற்றி குடல் அரிப்பு நோயில் இருந்து காக்கக்கூடியது.

உலக அளவில் சரியான மருத்துவ முறைகள் இல்லையே என உலகமே அஞ்சி நடுங்கும் ஒரு உடல் உபாதைக்கு, கிட்டத்தட்ட 9-23% பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டு அவதியுறும் குடல் அரிப்பு நோய்க்கு எளிமையான மருத்துவ முறையைக் கூறி, நோயிலிருந்து நீக்கி, நீடித்த ஆரோக்கியான வாழ்விற்கு வழிவகைகளை கூறுகிறது சித்த மருத்துவம். 

மிளகாய் எனும் குடலை அரிக்கும் உணவுப்பொருளை அரைக்கும் போது, தனியாவையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குடலை காக்கும் சூட்சுமத்தை ஒளித்து வைத்துள்ளது சித்த மருத்துவம். இன்னும் பல எளிய மூலிகைகளையும், கடை சரக்குகளையும் நோய்களை தீர்க்கும் பேராயுதமாக கூறுகிறது நம் பாரம்பரிய மருத்துவம். அதைப் பின்பற்றி வாழ்வது என்பது ஆரோக்கியத்தின் ஆணி வேர் போன்றது.  
 

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768. இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஆா்.கிருஷ்ணமூா்த்தி (91) சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.18) காலமானாா்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக 1980-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை, மீண்டும் 1994 முதல் 1996-ஆம் ஆண்டு வரை அவா் பணியாற்றினாா். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளாா்.

 



Read in source website

தமிழக எல்லையோர மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை அடுத்து சுகாதாரத் துறையினா் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

இந்தியாவில், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகித எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாகவும், பிற மாநிலங்களில் அந்த விகிதம் சரிவடைந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிய ஒவ்வொரு மாநிலத்தின் சாா்பிலும் தனித்தனியே குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககம், காவல்துறை அடங்கிய குழு தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநில எல்லை பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறது.

அதேபோன்று பிற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் ஆண் குழந்தைகளின் பிறப்பை காட்டிலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் அங்கும் கள ஆய்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிகழாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை சராசரியாக ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 932 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனா். இவற்றில் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

அப்பகுதிகளில் செயல்படும் ஸ்கேன் மையங்களில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பது சட்டவிரோதமாக தெரியப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் பெண் குழந்தைகளை கருகலைப்பு செய்வதால், பிறப்பு விகிதம் குறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது ஆய்வு நடத்துகிறோம். அதன் அடிப்படையில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் மாவட்டங்களில், மருத்துவம், ஊரக சேவை பணிகள் துறையின் இணை இயக்குநா்கள் ஆய்வு நடத்துகின்றனா். சட்டவிரோத செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.



Read in source website

தெரு நாய் அல்லது வளா்ப்பு நாய்கடிக்கு 10-இல் 6 போ் உள்ளாவதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தெரு நாய் கடியால் காயமடைந்ததாக 56 சதவீதம் பேரும், வளா்ப்பு நாய் கடியால் காயமடைந்ததாக 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா். இது தங்கள் பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் சம்பவங்களாகும் என்றும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

நாடு முழுவதும் தெரு நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் தெரு நாய கடிக்கு சிறியவா்கள் மட்டுமின்றி பெரியவா்களும் பாதிக்கப்படுவதால், இதைத் தடுக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

பள்ளிச் செல்லும் தனது குழந்தைகளை தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற தந்தை ஒரு துப்பாக்கியை ஏந்தி சென்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதபோல் நொய்டாவில் மின்தூக்கியில் வளா்ப்பு நாய் கடிக்கு சிறுவன் உள்ளாகும் விடியோவும் அண்மையில் இணையத்தில் வெளியாகி பரபரப்பானது.

இதைத்தொடா்ந்து, நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 மாத குழந்தை ஒன்று தெருநாய் கடித்ததால் உயிரிழந்த சம்பவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் 303 மாவட்டங்களில் 31 ஆயிரம் பேருக்கும் அதிகமானவா்களிடம் ‘லோக்கல் சா்க்கில்ஸ்’ என்ற அமைப்பு கருத்து கேட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் போ் தில்லி என்சிஆா் பகுதிகளைச் சோ்ந்தவா்களாவா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனா் சச்சின் தபாரியா கூறுகையில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு அக்டோபா் 17-ஆம் தேதி முடிவடைந்தது. இதில் தெரு நாய் அல்லது வளா்ப்பு நாய்கடிக்கு 10-இல் 6 போ் உள்ளாவதாக தெரிவித்துள்ளனா். தங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவா் குறிப்பிட்டுள்ளனா்.

தெரு நாய் கடியால் காயமடைந்ததாக 56 சதவீதம் பேரும், வளா்ப்பு நாய் கடியால் காயமடைந்ததாக 31 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா்.

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் தங்கள் நாய்களுக்கு பயிற்சி அளித்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவதில் இருந்து பாதுகாக்கின்றனா் என 32 சதவீதத்தினா் குறிப்பிட்டுள்ளனா்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் இருந்து மாநகராட்சிகள் நடவடிக்கை எடுப்பதாக 10-இல் ஒருவா் மட்டுமே தெரிவித்துள்ளாா்.

இந்த ஆய்வில் 66 சதவீத ஆண்களும், 34 சதவீத பெண்களும் பங்கேற்றுள்ளனா்’ என்றாா்.

தெரு நாய் கடியால் பாதிப்பு: 56 %

வளா்ப்பு நாய் கடியால் பாதிப்பு: 31 %

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் பாதுகாக்கின்றனா்: 32 %



Read in source website

 

தமிழ்நாட்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்ற ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட அதிர்ச்சித் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 1,245 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளும், தமிழ்நாட்டில் 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில் குறைந்த கல்வி கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தது.

அதன்படி, அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி பாடங்கள் கட்டாய பாடங்களாக உள்ளது என்றும், 9 ஆம் வகுப்பு முதல் அவை விருப்பப் பாடங்களாக உள்ளதாகவும்,  பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக இல்லை எனவும், தமிழை மொழிப் பாடமாகத் தேர்ந்தெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், தமிழ், ஒரு மொழிப்பாடமாக இடம்பெறவில்லை எனவும், சமஸ்கிருத மொழிக்குப் பதிலாக தமிழை மொழிப் பாடமாக பயில முடியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளதாகவும், அந்த பள்ளிகளில் 109 இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும், 53 சமஸ்கிருதம் கற்பிக்கும் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்றுத் தரப்படும் என தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பிறப்பித்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் விருப்பப் பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவிடக் கோரியும் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, “அதை ஏற்க முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி மட்டுமே விருப்பப் பாடமாக இருப்பதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழை கற்பது அடிப்படை உரிமை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 49 பள்ளிகளில் தமிழ் விருப்ப மொழி பாடமாக கூட இல்லை என்றும், தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல் தகவலுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவது  வைரலாகி வருகிறது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட இந்த தகவல்கள் அனைத்தும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நாட்டின் 27-ஆவது தலைமை கணக்கு அதிகாரியாக (சிஜிஏ) மூத்த பொதுக் கணக்குகள் பணி அதிகாரி பாரதி தாஸ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

1988-ஆவது பிரிவு இந்திய பொது கணக்குகள் பணி (ஐசிஏஎஸ்) அதிகாரியான பாரதி தாஸ், நேரடி வரிகள் வாரியத்தின் முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திலும் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். மத்திய அரசுக்கு கணக்கு தணிக்கை விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள இவா், தற்போது சிஜிஏ-வாக பொறுப்பேற்றுள்ளாா்.

துறை ரீதியாக கணக்கு அறிக்கைகளைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்பது, துறை ரீதியான கணக்காய்வுகள் நடத்துவது ஆகியவை தலைமை கணக்கு அதிகாரியின் பொறுப்பாகும்.

 

 

 



Read in source website

வாழ்வின் பல்வேறு உணா்வுநிலைகளுடன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் உக்கிரத்தன்மையை வெளிப்படுத்திய ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக எழுத்தாளா் ஷேஹன் கருணதிலகவுக்கு ‘புக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் புக்கா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழாவில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளா்களும், முன்னாள் விருதாளா்களும் நேரில் பங்கேற்றனா். பிரிட்டன் இளவரசி கமீலா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா்.

இலங்கை எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக புக்கா் விருது வழங்கப்பட்டது. புக்கா் விருதுடன் சுமாா் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையும் எழுத்தாளா் கருணதிலகவுக்கு வழங்கப்பட்டது. அந்த நாவலில் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து நகைச்சுவையுடன் அவா் பதிவு செய்துள்ளதாக தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

மாலி அல்மெய்டா என்ற புகைப்படக் கலைஞா் இலங்கையில் நடைபெற்ற போரை 1990-ஆம் ஆண்டில் பதிவு செய்து வருகிறாா். திடீரென ஒருநாள் அவா் இறந்துவிடுகிறாா். பின்னா் மேலுலகம் செல்லும் அவா், தாம் எவ்வாறு மரணித்தோம் என்பதைக் கண்டறிய ஏழு உறவினா்களைத் தொடா்புகொள்கிறாா். அவ்வாறு தொடா்புகொள்ளும்போது போா்ப் புகைப்படங்கள் வாயிலாக இன வன்முறை, அன்பு, நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதாக நாவல் அமைந்துள்ளது. அந்தக் காலகட்ட அரசியல் விவகாரங்கள் குறித்தும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

விருது பெற்ற பிறகு பேசிய எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக, ‘‘பொருளாதார ரீதியில் பல்வேறு இழப்புகளை இலங்கை சந்தித்துள்ள நிலையில், இந்த வெற்றி கிடைத்துள்ளது. இன வன்முறைகள், ஊழல், முக்கிய பதவிகளுக்குத் தகுதியற்றவா்கள் நியமனம் உள்ளிட்டவை ஒருபோதும் எடுபடாது என்பதை இலங்கை கூடிய விரைவில் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். அண்மையில் இந்திய எழுத்தாளா் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டாா். தெற்காசியாவில் அரசியல் குறித்தும் மதம் தொடா்பாகவும் எழுதும் எழுத்தாளா்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாகவே உள்ளது’’ என்றாா்.

குவியும் வாழ்த்து:

புக்கா் விருது பெற்றுள்ள கருணதிலகவுக்கு இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இந்த நாவல் எழுத்தாளா் கருணதிலகவின் 2-ஆவது நாவல் ஆகும். மேலும், புக்கா் விருது பெற்றுள்ள 2-ஆவது இலங்கை எழுத்தாளா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

 



Read in source website

சென்னை: போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசின் மருத்துவத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் மருத்துவரின் உரிய பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும்.

அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை மருந்துவர் அளித்த பரிந்துரையைவிட அதிக அளவு எடுத்துக் கொண்டால் அந்த மருந்துகள் போதை உணர்வை ஏற்படுத்தும். இந்த மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்படி குறிப்பிட்ட அளவுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்த வகையான மருந்துகளை விதிகளை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத் துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முழுமையான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 26.09.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7ம் தேதி ஆன்லைன் ரம்மி தடையைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த சட்டம் இன்று (அக்.19 ) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் சட்டத்தை தாக்கல் செய்தார். இதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது.



Read in source website

சென்னை: நடப்பு 2022-23-ம் நிதியாண்டுக்கான 3-வது காலாண்டில் அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்கள் சிலவற்றுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோல், மாதாந்திர வருமான கணக்குத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 2 வருட டைம் டெபாசிட் திட்டத்துக்கு 5.5 சதவீதத்தில் இருந்து 5.7 ஆகவும், 3 வருட டைம் டெபாசிட் திட்டத்துக்கு 5.7 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் டிச. 31-ம் தேதி வரை இந்த வட்டி விகிதம் அமலில் இருக்கும். அதே சமயம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் (7.6 சதவீதம் வட்டி), பொது சேமநல நிதி திட்டம் (7.1), தேசிய சேமிப்பு பத்திரம் (6.8) ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட (யுஎன்டிபி) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் (2005-06 முதல் 2019-2021 வரையில்) பல பரிமாண வறுமை நிலைகளில் இருந்து 41.5 கோடிபேர் மீண்டுள்ளனர். அதன்படி, வறுமைக்கான குறியீடு 55.1 சதவீதத்திலிருந்து 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது என நடப்பாண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு தெரிவித்துள்ளது.

வறுமையின் பிடியிலிருந்து கோடிக்கணக்கானோர் மீண்டுள்ளது மிகப்பெரிய ஆதாயம் மற்றும் வரலாற்று மாற்றமாகும். இருந்தபோதிலும், 2020-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 22.89 கோடி ஏழைகள் உள்ளனர். உலகஅளவில் பார்க்கும்போது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் உள்ளது. இதனால், ஏராளமான சவால்களும் தொடர்கதையாகி வருகிறது.

வறுமைக் குறைப்பில் கோவா அதிக வேகம் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.

2015-16 கணக்கீட்டின்படி அதிக ஏழைகளைக் கொண்ட பிரிவில் 10 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. 2019-2021-ல் இந்தப் பிரிவில் இருந்து வெளியேறிய ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. எஞ்சியுள்ள பிஹார், ஜார்க்கண்ட், மேகாலயா, ம.பி., உ.பி., அசாம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அந்தப் பட்டியலில் தொடர்கின்றன. இவ்வாறு யுஎன்டிபி தெரிவித்துள்ளது.



Read in source website

ஹைதராபாத்: இந்திய உணவு வகைகளில் புகழ்பெற்ற ரசகுல்லா, பிகானரி புஜியா, ரட்லாமி சேவ் உள்ளிட்ட 17 உணவு வகைகளில் ஹைதராபாத்தின் ‘ஹலீம்’ அதிக புகழ்பெற்ற இந்திய உணவாக புவிசார் குறியீடு வென்றுள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உணவு பிரிவில் இந்த விருது ஹைதராபாத் ஹலீமுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 9-ம் தேதி வரை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இதற்கான வாக்கெடுப்பு மக்களிடையே நடத்தப்பட்டது. இதில், ஹைதராபாத் ஹலீம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.

ரம்ஜான் நோன்பு சமயத்தில் ஹலீம் மிகவும் விரும்பி உண்ணும் உணவாகும். ஆட்டிறைச்சியை மைய அரைத்து, அதில், கோதுமை மாவு கலவையில், சில பருப்பு வகைகளும், மிளகாய் போன்ற கார வகைகளும் சேர்ந்து ஒரு தனி சுவையுடன் வழங்கப்படும் உணவே ஹலீம் ஆகும்.



Read in source website

புதுடெல்லி: கோதுமை கடுகு உட்பட 6 விளை பொருள்களுக்கு எம்எஸ்பியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு தற்போது ராபி மற்றும் காரிப் பருவத்தில் விளைவிக்கப்படும் 23 விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயிக்கிறது.

இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடியது. இதில் கோதுமை உட்பட 6 விளைபொருள்களுக்கான எம்எஸ்பி உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 2021-2022-ம் ஆண்டில் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015-ஆக இருந்தது. இது ரூ.2,125 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமையின் உற்பத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஏற்படும் செலவு ரூ.1,065 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடுகின் எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.400 அதிகரிக்கப்பட்டு ரூ.5,450 ஆக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்லியின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,635-லிருந்து, ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருப்புவகைகளின் எம்எஸ்பி ரூ.5,230-லிருந்து ரூ.5,335 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மைசூர் பருப்பின் எம்எஸ்பி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.



Read in source website

புதுடெல்லி: உலக நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சர்வதேச காவல் துறையான ‘இன்டர்போல்’ அமைப்பின் 90-வது பொதுச் சபைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டம் 25 ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது.

இக் கூட்டத்தில் 195 உறுப்புநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், காவல் துறை மற்றும் புலனாய்வுத் துறை தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இன்டர்போல் அமைப்பு வரலாற்று சிறப்பு மிக்க இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்த அமைப்பு தனது 100-வது ஆண்டை கொண்டாடவுள்ளது. நாம் எதிர்காலத்தையும் மற்றும் கடந்த காலத்தையும் பார்க்க வேண்டிய தருணம் இது. உயர்ந்த எண்ணங்கள் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரட்டும் என எங்களது வேதங்கள் கூறுகின்றன.

உலகளாவிய ஒத்துழைப்பில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. உலகை சிறந்த இடமாக மாற்ற உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். ஐ.நா அமைதி நடவடிக்கைகளில் முன்னணி பங்களிப்பை அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தங்கள் நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்றுதான் உலக நாடுகளும், சமூகங்களும் பார்க்கின்றன.

அச்சுறுத்தல்கள் உலகளாவியதாக இருக்கும்போது, இதற்கான நடவடிக்கை உள்ளூர் அளவில் இருக்க முடியாது. அச்சுறுத்தல்களை முறியடிக்க உலகம் ஒன்றிணைய இது சரியான தருணம். உலகம் முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச வியூகங்களை உருவாக்க வேண்டியது அவசியம். தப்பியோடும் குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ்கள் விநியோகிக்கும்போது, அவர்களின் கைது நடவடிக்கையை விரைவுபடுத்துவதன் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்களை கட்டுப்படுத்த இன்டர்போல் அமைப்பால் உதவ முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நினைவு தபால் தலை, சிறப்பு ரூ.100 நாணயம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

தாவூத்தை ஒப்படைப்பீர்களா?

இக்கூட்டத்தில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை (எப்ஐஏ) தலைமை இயக்குநர் மொஷின் பட் பங்கேற்றார். அவரிடம், ‘‘பாகிஸ்தானில் இருக்கும் மும்பை தாதா தாவூத் இப்ராகிம், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பீர்களா?’’ என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளிக்க மறுத்த பட், விரலை வாயில் வைத்து எதுவும் கேட்கக் கூடாது என சைகை காட்டினார்.



Read in source website

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமே கவுடா (86). 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால் அங்கிருந்த தாவரங்களும், கால்நடைகளும் இறக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, 16 குளங்களை தனி ஆளாக சொந்த பணத்தில் வெட்டினார். இதனால் அங்கு தாவரங்களும், கால்நடைகளும் நீரின்றி தவிக்கும் நிலையை போக்கினார். இதன் காரணமாக வறண்ட பூமியாக இருந்த அந்த கிராமமே நெல், கரும்பு விளையும் நிலமாக மாறியது. காமே கவுடாவின் சேவையை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், காமே கவுடாவை வெகுவாக பாராட்டி பேசினார். இந்நிலையில் முதுமை காரணமாக காமே கவுடா நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.



Read in source website

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் சுற்றுப்போட்டியின் பிரிவு ஏ ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் கார்த்திக் மெய்யப்பன். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இலங்கை அணி 117/2 என்று நன்றாக ஆடிக்கொண்டிருந்தனர். தொடக்க வீரர் பதுன் நிசாங்கா நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் அதிரடி வீரர் ராஜபக்ச இருந்தார். அப்போதுதான் கார்த்திக் மெய்யப்பன் என்ற அந்த 22 வயது யுஏஇ லெக் ஸ்பின்னர் புகுந்தார். இவர் 13-வது டி20 போட்டியையே ஆடுகிறார். 3 பந்துகளில் வரிசையாக ராஜபக்ச, சரித் அசலங்கா, இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆகியோரை காலி செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

முதலில் ராஜபக்ச ஆஃப் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த பந்து கூக்ளியின் அசலங்கா எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் அரவிந்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசியாக இலங்கை கேப்டன் ஷனகாவின் ஸ்டம்ப் கூக்ளியின் தொந்தரவாக ஹாட்ரிக் சாதனை. அதுவும் உலகக் கோப்பை டி20 ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் கார்த்திக் மெய்யப்பன்.

இந்த ஹாட்ரிக் சாதனை மூலம் பிரெட் லீ (2007), கர்ட்சிஸ் கேம்ஃபர் (2021), வனிந்து ஹசரங்கா (2021), கேகிசோ ரபாடா (2021) ஆகியோருடன் டி20 உலகக்கோப்பை ஹாட்ரிக் பட்டியலில் இணைந்தார் கார்த்திக் மெய்யப்பன்.

யார் இவர்? கார்த்திக் மெய்யப்பனின் இயற்பெயர் கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன். இவர் 2000-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னை, அபுதாபி, துபாய் என்று இருந்து கொண்டிருந்த இவரது குடும்பம் 2006-ல் துபாயில் செட்டில் ஆனது. இங்கிருந்துதான் கார்த்திக் மெய்யப்பன் இன்று யுஏஇ அணிக்கான சர்வதேச வீரராகியுள்ளார்.

துபாயில் வின்செஸ்டர் பள்ளியில் படித்தவர், அங்குதான் தற்போதைய சக வீரரான ஆர்யன் லக்ராவும் இவருடன் சேர்ந்து படித்தார்.

ஐபிஎல் 2020 தொடரின் போது ஆர்சிபி அணியில் இணைந்த போதுதான் இவரது பெயர் கிரிக்கெட் உலகில் பிரபலமானது. ஆர்சிபி அணியுடன் இவரும் யுஏஇ கேப்டன் அகமது ரசாவும் பயிற்சி பெற்றனர்.

கார்த்திக் மெய்யப்பன் யுஏஇ யு-19 அணியை வழிநடத்தியவர். 2019-ல் ஷார்ஜாவில் அமெரிக்காவுக்கு எதிராக யுஏஇ அணிக்காக தன் முதல் போட்டியில் அறிமுகமானார் கார்த்திக் மெய்யப்பன் .அயர்லாந்துக்கு எதிராக முதல் டி20 சர்வதேசப் போட்டியில் 2021-ல் அறிமுகமானார். 8 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் நேற்றைய போட்டியோடு 13 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியுள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 10 விக்கெட்டுகளையும் டி20-யில் இதுவரை 18 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.



Read in source website

சிட்னி: சில நாட்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மனிதர்களின் வடிவத்தில் பெரும் வெளிச்சத்துடன் காணப்படும் அந்த வடிவம் எலியன்களால் உருவாக்கப்பட்டதா அல்லது அண்டத்தின் பெரும்விரல் ரேகையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், சிட்னி பல்கலைகழகம் இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியை மீண்டும் தெளிவுப்படுத்தியதன் மூலம் அந்த வடிவம் அண்டத்தில் உள்ள WR140 என்ற நட்சத்திரம் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால், ஒரு நட்சத்திரத்தை சுற்றி எப்படி கைரேகை வடிவங்கள் தோன்றக்கூடும் என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கான பதிலையும் சிட்னி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிட்னி பல்கலைகழகம் வெளியிட தகவல்: WR140 நட்சத்திரம் ரகசியம் - WR140 என்பது Wolf-Rayet நட்சத்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது. அண்டத்தில் அழகாக காட்சியளிக்கு இந்த நட்சத்திரம். மிகவும் பிரகாசமாகவும் தோன்றுகிறது. சூரியக் குடும்பத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகளவிலான தூசியை இந்த நட்சத்திரங்கள் விண்வெளியில் வெளியிடுகின்றன.

WR140 நட்சத்திரம் தன்னை சுற்றி கதிர்வீச்சு மிகுந்த தீவிரத்தன்மை கொண்டதாக உள்ளது. ஒரு நொடிக்கு 1000 கிமீ வேகத்தில், அதாவது ஒளியின் வேகத்தில் 1% அளவு இங்கு தூசிகள் வீசப்படுகின்றன. WR140 நட்சத்திரத்தில் சூறாவளியை போல் காற்று வீசுகிறது. இந்தக் காற்றில் கார்பன் போன்ற தனிமங்கள் உள்ளன. அவைதான் தூசியை உருவாக்குகின்றன. WR140 என்பது பைனரி அமைப்பில் காணப்படும் தூசுகள், வாயுக்கள் நிறைந்த நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது மற்றொரு நட்சத்திரத்துடன் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கிறது. இந்தத் தூசுகளும், வாயுகளும்தான் கைரேகை போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாகவே WR140 நட்சத்திரம் தனது சுற்றுப்பாதைகலில் துல்லியமாக செதுக்கப்பட்ட புகை வளையங்களை வெளியேற்றுகிறது.



Read in source website

லண்டன்: வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. பணிக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்' சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தைகின்னஸ் உலக சாதனை அமைப்பும் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில், அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று ‘திங்கள்' சோகம் பகிரப்பட்டது.

“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்" என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர்வாசிகள் தங்கள் கருத்துகளை நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.



Read in source website

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கவர்னர் ஆரிப் முகமது கான் இடையே மோதல்; அமைச்சர்களை கவர்னர் பதவி நீக்கம் செய்ய முடியுமா?

Liz Mathew  

கேரள அரசு நடத்தும் கேரள பல்கலைக்கழகத்தில் நியமனங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், திங்களன்று தனது அலுவலகத்தின் “கண்ணியத்தைக் குறைத்த” அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதாக மிரட்டினார்.

ஆளுநர் ஆரிப் முகமது கானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால் கவர்னர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் தனிப்பட்ட அமைச்சர்களின் அறிக்கைகள், அவர்கள் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்,” என்று பதிவிடப்பட்டது.

இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தை வழிநடத்தும் CPI-M இன் மத்திய தலைமை, அரசியலமைப்பு ஆளுநருக்கு “சர்வாதிகார அதிகாரங்களை” வழங்கவில்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான ஆரிப் முகமது கானின் “அரசியல் சார்பு” “அம்பலமாகியுள்ளது” என்றும் கூறியது.

அரசாங்கத்தில் இருந்து ஒரு அமைச்சர் ஒருவரை ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நீக்கிய சந்தர்ப்பம் இதுவரை இல்லை.

நாடாளுமன்ற அமைப்பில் ஆளுநர் என்ன பங்கு வகிக்கிறார்?

ஆளுநரின் பதவி, பொறுப்பு, அதிகாரங்கள் மற்றும் நிபந்தனைகள் அரசியலமைப்பின் 153-161 பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தில் குடியரசுத் தலைவருக்கு நிகரான பதவிதான் கவர்னர் பதவி. அவர் மாநிலத்தின் நிர்வாக அதிகாரத்தின் தலைவராக உள்ளார், மேலும் சில விஷயங்களைத் தவிர்த்து, நாடாளுமன்ற முறைப்படி, மாநில சட்டமன்றத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறார்.

ஆளுநர் குடியரசுத் தலைவரால் (மத்திய அரசின் ஆலோசனையின் பேரில்) நியமிக்கப்படுகிறார், எனவே, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறார். பதவியானது அரசியலற்றது என்று கருதப்பட்டது; இருப்பினும், பல தசாப்தங்களாக மத்திய-மாநில உறவுகளில் கவர்னர்களின் பங்கு ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிறுத்தி வைப்பது அல்லது ஒரு கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான நேரத்தை நிர்ணயித்தல் அல்லது பொதுவாக தொங்கு சட்டசபைக்கு பிறகு, எந்தக் கட்சியை பெரும்பான்மையை நிரூபிக்க முதலில் அழைக்க வேண்டும் போன்ற சில அதிகாரங்களை ஆளுநர் அனுபவிக்கிறார், இது அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகளால் ஆயுதம் ஏந்தப்பட்டவை.

சட்டப்பிரிவு 164(1) கூறுகிறது “அமைச்சர்கள் கவர்னரின் விருப்பத்தின் போது பதவி வகிப்பார்கள்”. இதன் பொருள் கவர்னர் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாமா?

இதைத்தான் கேரள கவர்னர் மறைமுகமாக குறிப்பிடுகிறார். லோக்சபாவின் முன்னாள் பொதுச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி கூறியதாவது: ”பிரிவு 164(1) முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களின் நியமனம் குறித்து கூறுகிறது. முதலமைச்சரை நியமிக்கும் போது ஆளுநர் யாருடைய ஆலோசனையையும் பெற வேண்டியதில்லை என்றாலும், முதல்வரின் பரிந்துரையின் பேரில்தான் அவர் அமைச்சரை நியமிக்க முடியும். ஆளுநருக்கு தான் தேர்ந்தெடுக்கும் யாரையும் அமைச்சராக்க அதிகாரம் இல்லை. முதல்வரின் ஆலோசனையின் பேரில்தான் அவர் அமைச்சரை நியமிக்க முடியும்” என்று கூறினார்..

ஷம்ஷேர் சிங் & சிலர் எதிர் பஞ்சாப் மாநிலம் (1974) என்ற வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் இவ்வாறு கூறியது: “குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர், அனைத்து நிர்வாக அதிகாரங்களின் பாதுகாவலர்கள் மற்றும் பிறர், பல்வேறு பிரிவுகளின் கீழ், இந்த விதிகளின் மூலம், ஒரு சில நன்கு அறியப்பட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர்த்து, தங்கள் அமைச்சர்களின் ஆலோசனையின்படி மட்டுமே அவர்கள் தங்கள் முறையான அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நமது அரசியலமைப்பின் இந்த பிரிவின் சட்டத்தை நாங்கள் அறிவிக்கிறோம்.”

பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சபையில் பெரும்பான்மையைப் பெறுவதை நிறுத்தினால், அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தாலும், பதவியில் இருந்து விலக மறுத்தால், மற்றும் “நாட்டிற்கு சபையைக் கலைக்க அவசியமான முறையீடு” போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் மூன்றாவது சூழ்நிலையில் கூட, மாநிலத் தலைவர் (ஜனாதிபதி அல்லது ஆளுநர்) “அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும், மேலும் அவரது பிரதமரால் (முதலமைச்சர்) அறிவுறுத்தப்பட வேண்டும், அவர் இறுதியில் நடவடிக்கைக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நபம் ரெபியா மற்றும் பலர் எதிர் துணை சபாநாயகர் மற்றும் பலர் (2016) வழக்கில் உச்ச நீதிமன்றம் பி.ஆர் அம்பேத்கரின் அவதானிப்புகளை மேற்கோள் காட்டியது: “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அவர் சுயமாகச் செய்யக்கூடிய செயல்பாடு இல்லை; செயல்பாடுகள் எதுவும் இல்லை. அவருக்குச் செயல்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன, மேலும் இந்த வேறுபாட்டை சபை மனதில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கவர்னர் ஆரிப் முகமது கான் அலுவலகம் குற்றம் சாட்டியது போல், உண்மையிலேயே ஒரு அமைச்சர், கவர்னர் அல்லது அவரது அலுவலகத்தின் கண்ணியத்தை குறைத்தால், ராஜ் பவன் முதலமைச்சரை விசாரிக்கச் சொல்லலாம் என்று ஆச்சாரி கூறினார். “அமைச்சர் ஆளுநரை அவமதித்ததாகவோ அல்லது மரியாதை குறைவாக நடந்துக்கொண்டதாகவோ கண்டறியப்பட்டால், அமைச்சரை கைவிடுமாறு அவர் முதலமைச்சரிடம் கேட்கலாம்,” என்று ஆச்சாரி கூறினார்.

அப்படியானால் ஆளுநரின் “ப்ளஷர் (Pleasure)” என்றால் என்ன?

முதல்வர் அல்லது அமைச்சர்களை விருப்பத்தின் பேரில் பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமை உள்ளது என்று அர்த்தம் இல்லை என்று ஆச்சாரி கூறினார். “சபையில் அரசாங்கம் பெரும்பான்மையை அனுபவிக்கும் வரை ஆளுநர் தனது விருப்பத்தைப் பெற முடியும். பெரும்பான்மையை இழந்த அரசு பதவி விலக மறுத்தால் மட்டுமே கவர்னர் தனது விருப்பத்தை வாபஸ் பெற முடியும். பின்னர் அவர் விருப்பத்தைத் திரும்பப் பெற்று அதைத் தள்ளுபடி செய்கிறார், ”என்று ஆச்சாரி கூறினார்.

மேலும், “முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஒரு ஆளுநரால் அமைச்சரை நியமிக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ முடியாது. அதுதான் அரசியலமைப்பு நிலை” என்றும் ஆச்சாரி கூறினார்.

கவர்னர்கள் செய்ததாகக் கூறப்படும் பாரபட்சமான நிலைப்பாடு பற்றிய கவலைகளைத் தீர்க்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?

2000 ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கான தேசிய ஆணையம் ஆளுநர்கள் தேர்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பரிந்துரைத்தது. “ஒரு மாநிலத்தின் ஆளுநரை அந்த மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது.

“பொதுவாக ஐந்தாண்டு பதவிக் காலம் கடைபிடிக்கப்பட வேண்டும் மற்றும் கவர்னரை நீக்குவது அல்லது மாற்றுவது என்பது சம்பந்தப்பட்ட மாநில முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே நியமனத்தில் செய்யப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இருக்க வேண்டும்.”

1983ல் மத்திய-மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன், இந்திய துணை ஜனாதிபதி மற்றும் லோக்சபா சபாநாயகர் ஆகியோரிடம், கவர்னர்கள் தேர்வில், பிரதமர் ஆலோசனை பெற வேண்டும் என முன்மொழிந்தது.

மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக 2007ல் அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் புஞ்சி கமிட்டி, மார்ச் 2010ல் சமர்ப்பித்த அறிக்கையில், பிரதமர், உள்துறை அமைச்சர், துணைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மற்றும் சம்பந்தப்பட்ட முதல்வர் ஆகியோர் அடங்கிய குழு ஆளுநரை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மதன் மோகன் புஞ்சி கமிட்டி அரசியலமைப்பிலிருந்து “விருப்பக் கோட்பாட்டை” நீக்க பரிந்துரைத்தது, ஆனால் மாநில அரசின் ஆலோசனைக்கு எதிராக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர ஆளுநரின் உரிமையை ஆதரித்தது. மேலும் மாநில சட்டமன்றத்தால் ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாதிட்டது.



Read in source website

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் என்பது பரஸ்பர நிதிகளைப் போன்ற நிறுவளங்கள் ஆகும்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை (அக்17) தேசிய நெடுஞ்சாலை இன்ஃப்ரா டிரஸ்ட் (NHAI InvIT) பத்திரங்கள் பற்றிய வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.
இவை இந்த ஆண்டுக்கு 8.05% வருமானத்தை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நேஷனல் ஹைவேஸ் இன்ஃப்ரா டிரஸ்ட் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், என்ஹெச்ஏஐ இன்விடி கூடுதலாக ரூ.3,800 கோடியை திரட்ட இருப்பதாகவும், மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (என்சிடி) மூலம் சுமார் ரூ.1,500 கோடி திரட்டப்படுவதாகவும் கட்காரி கூறியிருந்தார்.

தொடர்ந்து, “இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம் 24 ஆண்டுகள் ஆகும். இந்த InvIT பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தையில் (NSE) இல் பட்டியலிடப்படும். முதலீட்டாளர்கள் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்” என்று அவர் கூறினார்.

InvIT (Infrastructure Investment Trust-உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை)

NHAI இன்விட் என்பது, அரசாங்கத்தின் தேசிய பணமாக்க பைப்லைனை (NMP) ஆதரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிதியுதவி செய்யப்படும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை ஆகும்.
NHAI இன் இன்விட் என்பது இந்திய அறக்கட்டளை சட்டம், 1882 மற்றும் SEBI (இந்திய பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) விதிமுறைகளின் கீழ் NHAI ஆல் நிறுவப்பட்ட அறக்கட்டளை ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை டிசம்பர் 2019 இல் NHAI இன் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைக்கு (InvIT) ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் முதலீட்டாளர் குழுக்களை சந்திக்கத் தொடங்கியது.

InvIT அறக்கட்டளை என்றால் என்ன?

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் என்பது பரஸ்பர நிதிகளைப் போன்ற நிறுவளங்கள் ஆகும்.

இவை, வை பல்வேறு வகை முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைச் சேகரித்து அவற்றை முடிக்கப்பட்ட மற்றும் வருவாய் ஈட்டும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து முதலீட்டாளருக்கு வருமானத்தை உருவாக்குகின்றன.

மூலதன சந்தை கட்டுப்பாட்டாளர் செப்டம்பர் 26, 2014 அன்று SEBI (உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள்) ஒழுங்குமுறைகள், 2014 க்கு அறிவித்தார், மேலும் இந்த அறக்கட்டளைகள் உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை எளிதாக்க உதவும்.

பரஸ்பர நிதிகள் போன்ற கட்டமைக்கப்பட்ட, அவர்களுக்கு ஒரு அறங்காவலர், ஸ்பான்சர்கள், முதலீட்டு மேலாளர் மற்றும் திட்ட மேலாளர் உள்ளனர்.
அறங்காவலர் (செபியால் சான்றளிக்கப்பட்டவர்) செயல்திறனை ஆய்வு செய்யும் பொறுப்பைக் கொண்டிருக்கும் போது, ஸ்பான்சர்(கள்) இன்விட்ஐ அமைக்கும் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் ஆவார்கள்.

InvIT இன் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மேற்பார்வையிடும் பணி முதலீட்டு மேலாளரிடம் ஒப்படைக்கப்படும். இருப்பினும்,, திட்ட மேலாளரே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முழு பொறுப்பு ஆகும்.
NHAI இன் இன்ஃப்ரா முதலீட்டு பத்திரங்கள் 8% வருவாயை வழங்குகின்றன.



Read in source website

ஜனநாயகத்தில் யாருமே எந்தப் பதவியிலும் நிரந்தரமாக இருந்துவிட முடியாது. அப்படியே இருந்தாலும்கூட இயற்கை அவர்களைத் தொடர அனுமதிக்காது. அப்படி இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரும் என்பதை மறந்து செயல்பட முனைவது நகைப்புக்குரியது.
கடந்த எட்டாண்டுகளில், அதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சரியோ, தவறோ அவர் தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்த நடவடிக்கைகள், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதுடன் பல முன்னேற்றங்களுக்கும் வழிகோலியிருக்கின்றன.
இந்தியா "கண்ணாடி நுண்ணிழை'யால் இணைக்கப்பட்டிருப்பதும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு மூலம் மானியம் முறைப்படுத்தப்பட்டிருப்பதும், சிறு நகரங்கள்கூட விமானப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டிருப்பதும் நரேந்திர மோடி அரசின் செயலாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொண்ட விதமும், 180 கோடி தவணை தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டதும் உலகமே வியந்து பாராட்டும் மோடி அரசின் சாதனைகள். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்படுத்தித் தந்திருப்பதற்காகவும், துணிந்து இந்தியாவின் தற்சார்பை முன்னிலைப்படுத்தும் வெளியுறவுக் கொள்கைளை வகுத்திருப்பதற்காகவும் நரேந்திர மோடி அரசை எத்துணை பாராட்டினாலும் தகும்.
பிரதமர் நரேந்திர மோடியும், அவர் தலைமையிலான அரசும் எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஆதரிக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்வாக ரீதியிலான வெற்றிகளுக்கு நடுவில், பொருளாதாரக் கொள்கையில் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்பதை சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், கட்டுக்குள் அடங்காமல் திமிறும் விலைவாசி, அச்சுறுத்தும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளைக் கண்ணை மூடிக்கொண்டு கடந்துபோக முடியாது.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதன் அடிப்படையே விமர்சனங்களும், விவாதங்களும்தான். அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புகள்தான் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும். நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டவும், விமர்சிக்கவும், தவறுகளைத் தட்டிக் கேட்கவும் முழு உரிமையும், சுதந்திரமும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவதுதான் நாடாளுமன்ற ஆட்சி முறையின் அடித்தளம்; பலம். அதை பலவீனப்படுத்த முற்பட்டால், அடுத்தாற்போல எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரும்போது அதன் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்பதை மத்திய - மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மறந்துவிடலாகாது.
நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல், நாடாளுமன்றம் கூடும் நாள்கள் குறைந்து வருகின்றன. அப்படியே கூடும்போதும், விவாதங்கள் நடைபெறும் நேரம் மிகமிகக் குறைவு. மசோதாக்கள் சட்டமாவதற்கு முன்பு, துறை சார்ந்த நிலைக்குழுக்களால் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டு, குறைகள் களையப்படும் வழிமுறை பின்பற்றப்படுகிறது. இப்போது அது கைவிடப்படும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
14-ஆவது மக்களவையில் 60% மசோதாக்களும், 15-ஆம் மக்களவையில் 71% மசோதாக்களும், நிலைக்குழுக்களால் விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், 16-ஆவது மக்களவையில் 27% மசோதாக்கள்தான் நிலைக்குழுக்களின் ஆய்வுக்கும் ஒப்புதலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் உட்பட சில மசோதாக்கள் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டதற்கு, நிலைக்குழுவில் அவை முறையாக விவாதிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படாததுதான் காரணம்.
எல்லா பிரச்னைகளையும் விவரமாகவும், ஆழமாகவும் விவாதிக்க நேரம் இருக்காது என்பதால்தான், துறை சார்ந்த சிறிய நிலைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் உள்ள நிலைக்குழுக்கள், ஜனநாயகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிர்வாகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளின் சபைக்கும் இடையேயான தொடர்பு அமைப்புகள் அவை. எல்லா எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களும் ஏதாவது ஒரு துறை சார்ந்த நிலைக்குழுவில் உறுப்பினராக இருப்பதால் அதை ஒரு குட்டி அவையாகவே கருத வேண்டும்.
பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் அல்லாமல், அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடனும் செயல்படுகின்றன நிலைக்குழுக்கள். எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் நிலைக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கும் ஜனநாயகத்தை அவைத் தலைவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த நடைமுறைக்கு இன்றைய நரேந்திர மோடி அரசு விடை கொடுக்க முற்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
உள்துறை அமைச்சக நிலைக்குழுத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி மாற்றப்பட்டு பாஜகவின் பிரிஜ்பால், செய்தித் தொடர்பு நிலைக்குழுத் தலைவரான காங்கிரஸின் சசி தரூருக்கு பதிலாக சிவசேனை (ஷிண்டே) கட்சியின் ஜிதன்ராவ் ஜாதவ் என்று பல நிலைக்குழுக்களின் தலைமைப் பொறுப்பு, எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளுங்கட்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தவறுகள் சுட்டிக் காட்டப்படுவதையும், தட்டிக் கேட்கப்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடி அரசு நினைக்குமானால், அது தவறு செய்கிறது.
நம்மை நாமே பார்த்துக்கொள்ள முடியாது; அதற்குக் கண்ணாடி வேண்டும். பெரும்பான்மை பலம் மட்டுமே ஜனநாயகம் அல்ல; அதற்கு எதிர்க்கட்சிகள் வேண்டும்!
 

 



Read in source website

 ஒரு காலத்தில், செயற்கரிய சாதனைகளைச் செய்தவர்களுக்குத்தான் சிலைகள் நிறுவப்பட்டன. நிலையில்லாத உலகத்தில், நிலைத்து நிற்கும்படியான அரும்பெருஞ்செயல்களை செய்து முடித்துவிட்டு மாய்ந்தவரே, மாண்புடையவர்களாகத் திகழ்கின்றனர். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே' என்பது புறநானூறு. வீரபத்தினி கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் தங்களுக்குச் சிலை வைத்துக் கொள்ளவில்லை.
 மகாத்மா காந்தியடிகளுக்கு ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் சிலைகள் எழுப்பப் பெற்று இருக்கின்றன. அவருடைய சிலையைப் பார்ப்போர் எல்லாம் அவரை வணங்குகிறார்கள். வேறு சிலருடைய சிலைகளைக் காக்கைகளைத் தவிர ஏரெடுத்துப் பார்ப்பார் எவரும் இல்லை. லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் எனும் இடத்தில் டிரபால்கர் சதுக்கத்தில், நெப்போலியனைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி நெல்சனுக்கு ஒரு நினைவுத் தூண் எழுப்பியிருக்கிறார்கள். அந்தத் தூணின் தலையில் நெல்சனுடைய தலையை மட்டும் அமைத்திருக்கிறார்கள். ஆனால், அச்சிலை பார்ப்போருக்கு ஒரு வரலாற்றையே சொல்லுகிறது.
 இங்கிலாந்தை நோக்கி கப்பல்களில் படையெடுத்து வந்த நெப்போலியனைக் கடல்போரில் வல்ல தளபதி நெல்சன், வாட்டர்லூவில் மிக எளிதாகக் தோற்கடித்து விடுகிறான். பிரெஞ்சுப்படை முற்றாகத் தோற்று, தாம் பயணித்து வந்த கப்பல்களை எல்லாம் விட்டுவிட்டுப் பறந்தோடி போய்விடுகிறது.
 அந்தக் கப்பல்களை எல்லாம் ஆங்கிலேயர் உடைத்து அவற்றிலிருந்த இரும்புகளை எல்லாம் எடுத்து உருக்கி, அவற்றைக் கொண்டு ஒரு பெரிய தூணை கட்டமைத்தார்கள். அந்தத் தூணில், தங்களுடைய வெற்றி வரலாற்றைச் செதுக்கினார்கள். அதுதான் டிரபால்கரில் நட்டுவைக்கப்பட்ட தூண். அத்தூணில் உச்சியில் நெல்சனில் தலை வடிவம். லண்டனுக்கு சுற்றுலா வரும் பயணிகள் அத்தூணைப் பார்க்காமல் செல்வதில்லை. அந்த வரலாற்றைப் படிக்காமல் செல்வதில்லை.
 அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் புத்துயிரும், புதுரத்தமும் பாய்ச்சிய நான்கு அதிபர்கள், ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர். தெற்கு டெகொடா மாநிலத்தில் இருக்கும் "கறுப்புமலை' என அழைக்கப்படும் ரஸ்மோர் மலையில், 800 அடி உயரத்தில் குறிப்பிட்ட நான்கு அதிபர்களின் முகங்களை மட்டும் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
 1927-ஆம் ஆண்டு 2,50,000 டாலர் ஒதுக்கீட்டில் தினமும் 400 ஆட்களைக் கொண்டு தொடங்கப்பட்ட அப்பணி, 1941-ஆம் ஆண்டுதான் முற்றுப்பெற்றது. சமூகவிரோதிகள் அவற்றைச் சிதைத்து விடாமல் இருப்பதற்குக் கடுமையான பாதுகாப்பு அரணும் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா வருகின்ற சுற்றுலாப் பயணிகள், அதனை ஒரு திவ்விய தேசமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர். அமெரிக்கர்கள் எதிர்காலவியலில் வல்லவராயிற்றே! (இதனைத் திட்டுமிட்டுச் செதுக்கிய சிற்பி உல கப்புகழ் பெற்ற கட்ஸன் போர்க்கலம் ஆவார்).
 மிகப்பெரிய ஆளுமைக்குரிய சகல சாதுரியங்களையும் பெற்றவர் சர்தார் வல்லபபாய் படேல். அந்த இரும்பு மனிதர் இல்லால் போயிருந்தால், ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானோடு, அம்மாநிலத்தை இணைத்திருப்பார். அந்த மாமனிதருக்கு குஜராத் மாநிலத்தில் சிலையெழுப்பி நினைவகமும் ஏற்படுத்தியமை, சாலச் சிறந்த செய்கையாகும்.
 சில வியத்தகு நிகழ்ச்சிகளும் சிலைகள் வரலாற்றில் உண்டு. 1927-ஆம் ஆண்டு "நீல்' என்பவன் வாராணசியில் கவர்னராக இருந்தான். அவனைப் போன்ற கொடுங்கோலனை வரலாற்றில் காண்பதரிது. விடுதலைப் போராளிகள் யாரைக் கண்டாலும் சுட்டுத் தள்ளுவான் அல்லது தூக்கிலே போடுவான். வாராணசியிலே போதிய தூக்கு மரங்கள் இல்லாத காரணத்தால், மரக்கிளைகளில் தூக்குக் கயிற்றைத் தொங்கவிட்டு, அதில் போராளிகளை மாட்டித் தொங்கவிட்டான்.
 விடுதலைப் போர், வெகுஜன ஆதரவைப் பெற்று வரும்போது, கொடுங்கோலன் நீல் சிலைகளைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற கருத்து தலைவர்களால் வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கமிட்டியும் அதற்கு ஆதரவு தந்தது. ஆனால், காந்தியடிகள் அந்த வன்முறைக்கு இணங்க மறுத்தார். ஆனால் காமராசர், சோமயாஜுலு போன்ற தொண்டர்களை அழைத்துக் கொண்டு, நீல் சிலையைத் தகர்ப்பதற்குச் சென்னைக்கு விரைந்தார். அந்தச் செய்தி காந்தியடிகள் காதுகளுக்கு எட்டியது. அண்ணல் காந்தி, அந்த செயலை மென்மையாகச் செய்யும்படி பணிந்தார்.
 அதனால், காமராசர் களிமண் உருண்டைகளைத் தயாரித்து சென்னையிலிருந்த நீல் சிலை மீது அவ்வுருண்டைகளை இரவு முழுவதும் விட்டெறிந்து, அவன் உடம்பு முழுமையும் உருண்டைகளால் நிரப்பினர்.
 சிலை தகர்வில் சில அநியாயங்களும் நிகழ்ந்துள்ளன. முதல் உலகப்போர் முடிந்தவுடன் சோவியத் நாட்டிலிருந்த லியோ டால்ஸ்டாயினுடைய சிலையை, ஆத்திரக்காரர்களாகிய நாஜிக்கள் அடித்து உடைத்துத் தகர்த்து விடுகின்றனர். வார்சா மாநாட்டை முடித்துவிட்டு கோவை வழியாகக் கேரளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த வள்ளத்தோள் நாராயண மேனனுக்கு அச்செய்தி தெரிவிக்கப்படுகிறது. அதனைக் கேட்டு ஆவேசம் அடைந்த வள்ளத்தோள், அங்கேயே ஆங்கிலத்தில் ஒரு கண்டனக் கவிதை எழுதுகிறார்.
 "ஓ எதேச்சாதிகார போர் வெறியர்களே! டால்ஸ்டாயை யார் என்று நினைத்தீர்கள்? அவர் ருசியாவிற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லையடா? அவர் உலகத்திற்கே ஆசான்! அவர் உலகநாடுகள் அனைத்தாலும் அங்கீகரிக்கப்பட்டவர்; கெளரவிக்கப்பட்டவர்! அவர் உலக மனிதர்களின் பிரதிநிதி. எதேச்சாதிகாரிகளே! உங்களுடைய வாழ்நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன' என ஆவேசத்தோடு வடிக்கப்பட்ட கவிதையை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு கேரளத்திற்குப் புறப்படுகிறார்.
 எதேச்சாதிகாரிகள் செய்த கொடுங்கோன்மைக்கு நிகரான ஒரு செயலைக் குடியரசிலும் ஒரு பெருமகன் கூச்சமில்லாமல் நிகழ்த்துகிறார். அக்டோபர் புரட்சியில் மாவீரன் லெனினோடு தோளோடுதோள் நின்றவர் ஜோசப் ஸ்டாலின். குருசேவ், சோவியத்தின் அதிபரான பிறகு, சோவியத் நாட்டிலிருந்த ஜோசப் ஸ்டாலினுடைய சிலைகளை எல்லாம் தகர்த்தெறியச் செய்கிறார். தனிமனிதர்களுக்கிடையே இருந்த ஆணவம், அகந்தையே இதற்குக் காரணம். அதனைக் கேட்டு உலகநாடுகள் வருந்தினவே தவிர, கண்டிக்கவில்லை.
 சில ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் மலைப்பாறைகளில் செதுக்கப் பட்டிருந்த புத்த பகவானின் திருமுகங்களை எல்லாம் சிதைத்தெறிந்த செய்திகளை ஊடகங்களில் பார்த்தோம்.
 சில சாதனையர்களுக்குச் சமூகம் கொடுக்கின்ற முக்கியத்துவம் குறித்துச் சம்பந்தப்பட்டவர்கள், நாணி தலைகுனிய வேண்டுமே தவிர அகங்காரம் கொள்ளக்கூடாது. "தம்புகழ்க் கேட்டாற்போல் தலை சாய்ந்து மரம் நிற்க' எனக் கலித்தொகை பாடல் (119) சொல்லும். கலித்தொகைப் பாடல், பிரெஞ்சு நாட்டின் விக்டர் ஹியூகோவிற்குத் தெரியாது என்ற காரணத்தால், புகழ் போதை தலைக்கேறி நின்றார். விக்டர் ஹியூகோவை "பிரெஞ்சு இலக்கியத்தின் பிராணவாயு' எனச் சொல்லுவார்கள். சிறந்த கவிஞர், நாவலாசிரியர். "தி ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டாம்' எனும் புகழ் பெற்ற நாவலைப் படைத்தவர்.
 அவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பேரவை உள்ளே நுழைந்தபோது, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினராம். பிரெஞ்சு முறைப்படி மிகப் பெரிய மனிதர் பேரவைக்குள் நுழையும் போது, உறுப்பினர்கள் உட்கார்ந்த நிலையில், தங்களுடைய தொப்பியைச் சற்றே மேலே நகர்த்தி மரியாதை செய்வார்களாம். ஆனால், விக்டர் ஹியூகோ எனும் மாபெரும் இலக்கியகர்த்தா நுழைந்தபோது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்களாம்.
 இவற்றால் எல்லாம் புகழ் போதை தலைக்கேறிய ஹியூகோ, ""இனி "பாரிஸ்' என்ற பெயரை எடுத்துவிட்டு, அதற்கு "விக்டர் ஹியூகோ' எனப் பெயர் சூட்டவேண்டும்'' என்று தீர்மானம் கொண்டு வந்தாராம். அன்றே அவர் புகழ், அதலபாதாளத்தில் வீழ்ந்தது.
 ஐரோப்பாவின் நோயாளியாகக் கிடந்த துருக்கிக்குப் புதுரத்தம் பாய்ச்சி, அதனைப் பூலோக சொர்க்கம் ஆக்கியவர், கமால் அத்தாதுர்க். அவர் ஆற்றிய தொண்டுகளுக்காகவும், சேவைகளுக்காகவும், மக்கள் எப்படி தங்களுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்தார்கள் தெரியுமா? கமால் அத்தாதுர்க் போட்டியிட்டு வென்று கொண்டு வந்த தொகுதியில், இனிமேல் தேர்தலே கிடையாது எனச் சொல்லி, இன்றுவரை அத்தொகுதியைக் காலியாகவே வைத்திருக்கிறார்கள்.
 நம் நாட்டிலும் அப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, கிண்டியில் மகாத்மா காந்தியடிகளுக்காக ஒரு நினைவாலயம் கட்டுவதற்குப் பல இசை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அவருடைய ஆதரவினால்தான், காந்தி மண்டபத்தின் அடித்தளமே நிற்கிறது. ஆனால், அம்மாதரசி அரசு வழங்கிய எந்தப் பதவியையும் ஏற்கவில்லை. திருப்பதி தேவஸ்தானம் அவரை தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவானாக இருக்கும்படி வேண்டிபோது மறுதலித்து விட்டார். சங்கப்புலவர் "உண்டால் அம்ம இவ்வுலகம்' என அன்று பாடியது, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மேதைகள் வரப்போவதை எண்ணித்தானோ என்னவோ! திருப்பதியில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருந்தாலும், திருமலையில் தினமும் ஒலிக்கும் அவரின் சுப்ரபாதமே, அவருக்கான சிறந்த நினைவுச்சின்னமாகும்.
 காரைக்காலம்மையார் திருவாலங்காட்டைச் சென்றடையும்போது, தலையாலே நடந்து சென்றதை நாடறியும். ஏன் தலையாலே நடந்து சென்றார் தெரியுமா? அம்மையும் அப்பனும் வதிந்திருக்கும் இடத்தைப் புனிதமாகக் கருதியதால், அவ்விடத்தைக் காலால் மிதிக்கக் கூடாதென்று தலையாலே நடந்தேகினாராம். ஓர் அடக்கத்தையும் அருங்குணத்தையும் அடுத்தடுத்து வென்ற நிகழ்ச்சிகளும் பெரியபுராணத்தில் உண்டு.
 திருஞானசம்பந்தர் திருவாலங்காட்டு இறைவனை வணங்க வரும்போது, திருவாலங்காட்டுக்குள்ளே நுழையவில்லை. எல்லைப்புறத்திலேயே நின்று பதிகம் பாடிப் பரவசப்பட்டுச் சென்றார். காரணம், அம்மையார் தலையாலே நடந்தேறிய இடத்தைக் காலால் மிதித்து நடக்க அஞ்சியமைதான்,
 அதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனார், சீர்காழி சிவனை எல்லையில் நின்றே வணங்கிச் செல்கிறார். காரணம், சீர்காழி திருஞானசம்பந்தர் அவதரித்த மண் என்பதால்! அவ்வாறே திருநாவுக்கரசர் அவதரித்த மண்ணை மிதிக்க அஞ்சி சித்தவடமடத்திலேயே தங்கி, அங்கிருந்துத் திருப்பாதிரிப்புலியூரானை வணங்கிச் செல்கிறார், சுந்தரர்.
 சோவியத் அதிபர் குருசேவ் இந்தியாவிற்கு வந்தபோது, பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். குடியரசுத் தலைவருடைய மாளிகையில் முன்னாள் கவர்னர் ஜெனரல், வைஸ்ராய் இவர்களின் படங்களை எல்லாம் பார்த்து எரிச்சலடைந்த குருசேவ், "இவர்களுடைய படங்களை எல்லாம் ஏன் இங்கே இன்னும் வைத்திருக்கிறீர்கள்? இவர்கள்தாமே உங்களை அடிமைகளாக வைத்திருந்தவர்கள்' என்று கேட்டார். அதற்குப் பண்டித நேரு, "வரலாற்றை அவ்வளவு எளிதாகக் தூக்கியெறிய முடியாது' என்றார். புத்தன் பிறந்த மண்ணில் அதுதானே முறை? அதுதானே பண்பாடு?
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).



Read in source website

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய 8,000 பணியிடங்களுக்கான குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் போட்டித் தேர்வினை 22 லட்சம் பேரும் 220 குரூப்-3 பணியிடங்களுக்கான தேர்வினை மூன்று லட்சம் பேரும் தமிழ்நாட்டில் எழுதியுள்ளனர். நல்ல ஊதியத்துடன், அதிகாரம் மிக்க 5,000-க்கும் அதிகமான பணிகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மத்திய அரசுப் பணி தேர்வாணையம், ரயில்வே பணிகள், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு வங்கிப் பணிகள் ஆகியவற்றுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டு மாணவர்கள் மிகக் குறைவாகவே விண்ணப்பிக்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பித்தாலும் அத்தகைய போட்டித் தேர்வுகளில் முறையான பயிற்சியின்றி சொற்ப எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.

தமிழ்நாட்டுக்குள் நல்ல ஊதியத்துடன், சமூகப் பாதுகாப்பு அளிக்கும் நிரந்தர, அதிகாரம் உள்ள மத்திய அரசுப் பதவிகள், பணியிடங்களில் வெளிமாநிலத்தவர் பணியாற்றிவருவதைச் சமீபத்திய புள்ளிவிவரங்களும் செய்திகளும் புலப்படுத்துகின்றன. வட இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றம் என்றாலே பெரும் போராட்டம் நடைபெறுகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக ‘அக்னிபாத்’ அறிமுகப்படுத்தப்பட்டபோது வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களை நாம் அறிவோம். ரயில்வே பணிகளுக்கான போட்டித் தேர்வில் கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டதால், பாட்னா போன்ற இடங்களில் நடந்த போராட்டத்தில் நான்கு ரயில்கள்கொளுத்தப்பட்டன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறி, டெல்லியில் பெரும் போராட்டம் நடைபெற்றது; உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவுகளை ஓராண்டு நிறுத்திவைத்தது.

இப்பணிகளில் சேர தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, மத்திய அரசில் இப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் இருப்பதே பெரும்பான்மை மாணவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மத்திய அரசுப் பணிகள் என்றாலே வட இந்தியாவிலோ அல்லது டெல்லியிலோ பணியாற்ற வேண்டும், இந்தி தெரிந்தால் மட்டுமே இப்பணிகள் கிடைக்கும் என்பன போன்ற தவறான கற்பிதங்களும் தமிழக மாணவர்களிடம் உள்ளன.

தமிழ்நாட்டில் சிறிதும் பெரிதுமாக எண்பதுக்கும் மேற்பபட்ட மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் மட்டுமே ஏழு இயங்கிவருகின்றன. துணை ராணுவப் படையினர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் பணியாற்றிவருகின்றனர். மிகப்பெரிய அளவில் என்.எல்.சி, பாரத் மிகுமின் நிறுவனம், இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அன்றி கிராம அஞ்சலகங்களில், ரயிலில் பயணச்சீட்டுப் பரிசோதகர் பணிகளில் சமீப காலமாகத் தமிழர் அல்லாதோரே பணிநியமனம் பெற்றுவருகிறார்கள் என்பது கவலையளிக்கும் செய்தி.

தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு (CGLE 2022) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் 20,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்குக் கட்டாயம் 1,800 பணியிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் வானிலை ஆய்வு மையத்தில் 960 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்படி தேர்வுகளில் பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்பட்டும் உள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.100 மட்டுமே. அதிலும் பெண்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, இத்தேர்வுகளுக்கு இதற்கு முன் இருந்ததுபோல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே விடையளிக்கும் எழுத்துத் தேர்வுமுறை (Descriptive), இப்போது ரத்துசெய்யப்பட்டுவிட்டது. நேர்காணல் முறையிலான தேர்வும் (Interview) முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இந்தி மொழி தெரிந்தவர்களுக்கான முன்னுரிமை பெருமளவு தவிர்க்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம். இது இந்தி தெரியாத தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்வாய்ப்பாகும். அது மட்டுமல்லாமல், மத்திய அரசானது 2024-க்குள்,மத்திய அரசுப் பணிகளில் 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகளை வெளியிட்டுவருகிறது. இதில் குறைந்தது 70,000 முதல் 80,000 பணியிடங்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னராவது இப்பணிகளுக்கான பயிற்சி மையங்கள் சென்னையிலோ தமிழ்நாட்டின் பிற நகரங்களிலோ இல்லை, புத்தகங்கள் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இணையவழியாகவே வகுப்புகள், தமிழ்நாடு - வெளிமாநிலப் பயிற்சி நிறுவனங்களால் சிறப்பாக அளிக்கப்படுகிறது. தேவைப்படும் புத்தகங்கள் இணையவழியிலும் நிறையவே கிடைக்கின்றன. யூடியூப், செயலிகள் மூலமாகப் பலர் இத்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கிறார்கள்.

மத்திய அரசு வேலைவாய்புகள் குறித்து தமிழக மாணவர்களிடையே போதுமான விழிப்புணர்வோ தகவல்களோ இல்லாதது பெரும் குறை. எனவே, இப்போட்டித் தேர்வுகள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வாய்ப்புக்கு ஏற்பவோ அனைத்துக் கல்லூரிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும், மாணவர் விடுதிகளிலும், மத்திய அரசு வேலைவாய்ப்புகள், அவற்றுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை/ பயிற்சி முகாம்களை நடத்த கல்லூரி - பள்ளி கல்வித் துறைக்கும் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு - பயிற்சித் துறைக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அளவில் சிறப்பாகச் செயல்படும் பயிற்சி நிறுவனங்களை அழைத்து இணையவழி வகுப்புகளை வழங்கவும், பயிற்சிக்கான புத்தகங்களை மாணவர்களுக்குக் குறைந்த விலையில் வழங்கிடவும் செய்தால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். - கு.தனேசகர்
தொடர்புக்கு: kdanasekar@yahoo.com



Read in source website

கர்நாடக மாநிலத்தின் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாமா, கூடாதா என்கிற வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வினால் விசாரிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கான மாணவி ஒருவரின் உரிமைக்கும் பள்ளிக்கூடங்களில் மதச்சார்பின்மையைப் பேண வேண்டும் என்னும் அரசின் விருப்பத்துக்கும் இடையிலான மோதலை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வால் தீர்த்து வைக்க முடியவில்லை.

இந்த வழக்கில் அக்டோபர் 13 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாறுபட்டதாக இருந்தது. முன்னதாகக் கர்நாடக அரசு மார்ச் 15 அன்று கல்வி நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர, ஹிஜாப் உள்ளிட்டவேறெந்த ஆடையையும் அணிந்துவருவதற்குத் தடைவிதித்திருந்தது. அதற்கு எதிராக ஹிஜாப் அணியும் மாணவிகள் தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் மாநில அரசின் தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தார். மற்றொரு நீதிபதியான சுதான்ஷு தூலியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்தார். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் வழிகாட்டுதலின்படி அமையும்.



Read in source website

மும்பையின் கோவண்டியிலுள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம் என்கிற செய்தி கடந்த செப்டம்பர் 12 அன்று ஊடகங்களில் வெளியானது. கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள், கூர்நோக்கு இல்லத்தில் சிறுமியைப் பலாத்காரம் செய்த சக சிறுமிகள் என்கிற செய்திகள் பிற மாநிலங்கள் மட்டுமின்றித் தமிழகக் கூர்நோக்கு இல்லங்களிலிருந்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. கடந்த பிப்ரவரி 2 அன்று நாகர்கோவிலில் அரசுப் பள்ளி அருகே பெண் சிறார்களுக்கான கூர்நோக்கு இல்லக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. ஆனால், குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகளுக்கான கூர்நோக்கு இல்லத்தை அரசுப் பள்ளி அருகே தொடங்குவது மற்ற சிறார்களுக்கு நல்லதல்ல எனக் கூறி, கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.



Read in source website

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் அக்டோபர் 11 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார். தன் பிள்ளைகளுக்குப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், மனு நிராகரிக்கப்படவே வேல்முருகன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். சிகிச்சை பலனின்றி மறுநாள் வேல்முருகன் இறந்துவிட, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது.

விசாரணையின்போது இது குறித்து விளக்கமளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பட்டியலினத்தைச் சேர்ந்த வேல்முருகன் தன் பிள்ளைகளுக்குப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் கேட்டதாகத் தெரிவித்திருந்தார்; சான்றிதழுக்காக வேல்முருகன் சமர்ப்பித்திருந்த ஆவணத்திலும் தவறு இருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றார். குறவர், நரிக்குறவர் ஆகிய இரண்டு பிரிவுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் பல காலமாகப் பிரச்சினை இருந்துவருகிறது. நரிக்குறவர்கள் வெளிமாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த நாடோடிகள், தாங்களே இம்மண்ணின் மைந்தர்கள் என்று குறவர்கள் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் பூர்விகமாக வாழ்ந்துவரும் குறவர்களைப் பழங்குடியினர் (எஸ்.டி.,) வகுப்பில் சேர்க்காமல், பட்டியலின (எஸ்.சி.,) வகுப்பில் சேர்த்திருப்பது குறித்த வாதமும் தொடர்கதையாக இருக்கிறது. இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதிலும் பெரும் தடை நிலவுகிறது.



Read in source website