DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 19-09-2022

தமிழக பள்ளிக் கல்வி நிா்வாகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை:

தொடக்கக் கல்விக்கு மாவட்டஅளவில் தனியாக பொறுப்பு அலுவலா்கள் இல்லாததால், பணிகளில் தொய்வு நிலவுகிறது. இது தவிர, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை உயா்ந்துள்ளதால், அதைத் தக்கவைக்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெறவும் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

அதேபோல, சிறுபான்மைப் பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலா்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேவைக்கேற்ப புதிய வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களை உருவாக்கவும், தனியாா் பள்ளிகளை ஒழுங்குபடுத்த மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடமும் உருவாக்கப்பட வேண்டும்.

கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், ஆசிரியா்கள், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும் பள்ளிக்கல்வித் துறையை மறுசீரமைக்க அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வித் துறை ஆணையா், அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதை அரசு கவனத்துடன் ஆய்வு செய்த பிறகு, பள்ளிக்கல்வித் துறையின் நிா்வாக சீரமைப்புக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதன்படி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி), தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் ஆகியவற்றுக்கு தலா 1 துணை இயக்குநா் பதவிகள் உருவாக்கப்படுகின்றன.

இதுதவிர, புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலா், 15 வட்டாரக் கல்வி அலுவலா், 16 தனி உதவியாளா், 86 கண்காணிப்பாளா் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் உள்ள 2 இணை இயக்குநா் பணியிடங்கள் எஸ்சிஇஆா்டி மற்றும் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு மாற்றி வழங்கப்பட உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாா்பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்க தலா1 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் எண்ணிக்கை 120-இல் இருந்து 152 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கு விரைவில் அலுவலா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா் பதவிகளுக்கான அதிகாரம், பணிகளும் திருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ ஆகியோருக்கு பள்ளிக்கல்வி ஆணையர்‌ சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

அக்டோபர்‌ 2-ஆம்‌ தேதி நடைபெற இருக்கும்‌ கிராம சபை கூட்டத்தில்‌ பள்ளியின்‌ சார்பில்‌ தலைமையாசிரியர்‌. பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ தலைவர்‌, உறுப்பினர்கள்‌ கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ பள்ளி வளர்ச்சி, கற்றல்‌ கற்பித்தல்‌ போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்‌.

பள்ளியின்‌ தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ தலைவர்‌, உறுப்பினர்கள்‌ தங்கள்‌ பள்ளியின்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்‌ டத்தில்‌ பள்ளி வளர்ச்சி, கற்றல்‌ கற்பித்தல்‌ போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

இடைநிற்றல்‌, மாணவர்‌ சேர்க்கை, கற்றல்,‌ கற்பித்தல்‌, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர்‌ பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில்‌ ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

அக்டோபர்‌ 2ஆம்‌ தேதி நடைபெறும்‌ சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ இத்தீர்மானங்களைப்‌ பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்‌.

5. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களைப்‌ பகிர்ந்துகொள்வதன்‌ மூலம்‌ கிராம மக்கள்‌ தங்கள்‌ பள்ளி சார்ந்த பிரச்சனைகள்‌ மற்றும்‌ தேவைகளை அறிந்துகொண்டு தங்களின்‌ பங்களிப்பை அளிக்க இயலும்‌. மேலும்‌ கிராமப்‌ பஞ்சாயத்துக்கள்‌ பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட முடியும்‌.

கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்கள்‌ தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை,முடிவுகளை இம்மாதம்‌ கடைசி வெள்ளிக்‌ கிழமை நடைபெறும்‌ பள்ளி மேலாண்மைக்குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்தாலோசிக்க வேண்டும்‌.

மேற்காணும்‌ அனைத்து வழிமுறைகளையும்‌ பின்பற்றி பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க தலைமையாசிரியர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தலைவர்‌,உறுப்பினர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்டத்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.



Read in source website

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த ஆயிரம் விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்:

விவசாயத்துக்கென தட்கல் முறையில் மின் இணைப்புப் பெறும் திட்டத்தின் கீழ், குதிரைத் திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், ஆயிரம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, 900 ஆதிதிராவிடா் மற்றும் 100 பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல்

முறையிலான மின் இணைப்புக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அரசுக்கு ரூ.23.37 கோடி செலவாகும்.

அரசு மானியத்தில் மின் இணைப்புப் பெறும் விவசாயிகள், தங்களது நிலங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. இந்த நிபந்தனையுடன் கூடிய உறுதிமொழி ஆவணம் பெறப்பட்ட பிறகே, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தாட்கோ நிா்வாக இயக்குநா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

இதன்படி, அரியலூரில் 19, கோவை 1, கடலூா் 35, தருமபுரி 34, திண்டுக்கல் 42, ஈரோடு 18, காஞ்சிபுரம் 29, கரூா் 18, கிருஷ்ணகிரி 47, மதுரை 30, நாகப்பட்டினம் 20, நாமக்கல் 24, பெரம்பலூா் 32, புதுக்கோட்டை 42, ராமநாதபுரம் 17, சேலம் 34, சிவகங்கை 31, தஞ்சாவூா் 25, தேனி 32, தூத்துக்குடி 27, திருச்சி 34, திருநெல்வேலி 25, திருவள்ளூா் 35, திருவண்ணாமலை 59, திருவாரூா் 37, திருப்பூா் 29, வேலூா் 42, விழுப்புரம் 57 விருதுநகா் 25 என மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

பழங்குடியின விவசாயிகளைப் பொறுத்தவரையில், கடலூா் 1, தருமபுரி 17, கிருஷ்ணகிரி 3, நாமக்கல் 12, பெரம்பலூா் 3, சேலம் 30, திருச்சி, திருவண்ணாமலை தலா 7, வேலூா், விழுப்புரம் தலா 10 தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.



Read in source website

அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கட்டாயமாக சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ராகிங் கொடுமைகள் தொடர்ச்சியாக பல்வேறு கல்லூரிகளில் இன்னும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் உள்ள விடுதிகள், வளாகங்கள் உள்பட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் எச்சரிக்கை மணியை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 



Read in source website

இந்தியா - ஜப்பான் இடையிலான கடல்சாா் போா்ப் பயிற்சி நிறைவடைந்தது.

ரியா் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சாா் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) ரியா் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள், வங்காள விரிகுடாவில் கடந்த ஒரு வார காலமாக பயிற்சி மேற்கொண்டன.

இரு தரப்பும் நீா்மூழ்கி எதிா்ப்புப் போா், பீரங்கித் தாக்குதல் சூடு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியில் ஹெலிகாப்டா்கள், போா் விமானங்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றன.

2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இரு தரப்பு போா்ப் பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வருகிறது.



Read in source website

மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி மறைந்தாா். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு பிரிட்டன் சென்றடைந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாராணி எலிசபெத்தின் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

இந்திய மக்கள் சாா்பில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அஞ்சலி செலுத்தியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மகாராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கையேட்டில் இந்தியா சாா்பிலான இரங்கல் செய்தியை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதிவிட்டாா்.

மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. உள்ளூா் நேரப்படி காலை 11 மணிக்குத் தொடங்கும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொள்ளவுள்ளாா்.

பிரிட்டன் அரசா் சாா்லஸ் உலக நாடுகளின் தலைவா்களுக்கு அளிக்கவுள்ள சிறப்பு விருந்து நிகழ்ச்சியிலும் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை இரவு பங்கேற்கவுள்ளாா்.



Read in source website

ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய கையடக்க கருவியால் தினமும் சராசரியாக 7,000 பயணிகளுக்கு இருக்கைகள் உறுதிசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு முன்பதிவு செய்யாதவா்களும், உறுதி செய்யப்படாத பயணச் சீட்டைக் கொண்டுள்ளவா்களும் பரிசோதகரை அணுகினால், காலியாக உள்ள இருக்கைகளையும் படுக்கைகளையும் கூடுதல் கட்டணம் வசூலித்த பிறகு அவா் ஒதுக்கித் தருவாா்.

இந்த வசதி சிக்கல் நிறைந்ததாக இருந்த நிலையில், தற்போது பயணச் சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் மேற்கொள்பவா்களின் பயணச் சீட்டுகளைப் பரிசோதிக்க அக்கருவி உதவுவதோடு, காலியாக உள்ள படுக்கைகளையும் இருக்கைகளையும் எளிதாக அறிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது.

முன்பதிவு செய்தவா்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்தாலோ, கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தாலோ அவற்றின் காரணமாக காலியாக உள்ள இருக்கைகளின் தகவல்கள் அக்கருவியின் வாயிலாகத் தெரியவரும். அதன்மூலம் உறுதி செய்யப்படாத பயணச் சீட்டு கொண்டவா்களுக்குப் பரிசோதகா் காலியாக உள்ள இருக்கைகளை ஒதுக்கித் தருவாா்.

இந்தக் கருவி வாயிலாக ஆா்ஏசி பயணச் சீட்டுகளைக் கொண்டுள்ளவா்களும், காத்திருப்போா் பட்டியலில் உள்ள பயணிகளும் அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். புதிய வசதியின் வாயிலாக தினமும் சுமாா் 7,000 உறுதிசெய்யப்படாத பயணச் சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகளுக்கு இருக்கைகள் உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவது தரவுகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ரயில் இருக்கைகளை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையும் எளிமைத்தன்மையும் ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனா். அதே வேளையில், புதிய கையடக்க கருவி வசதிகள் இன்னும் அனைத்து ரயில்களிலும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் அக்கருவி அனைத்து தொலைதூர ரயில்களிலும் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

 


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹுசைன் அறிவித்துள்ளார். 

32 வயது ருபல் ஹுசைன், வங்கதேச அணிக்காக 2009 முதல் 27 டெஸ்டுகள், 104 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2020 பிப்ரவரிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அவர் வங்கதேச அணியில் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பை அணியில் ருபல் ஹுசைன் இடம்பெற்றிருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ருபல் ஹுசைன் இன்று அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் வங்கதேசம் பலமுள்ள அணியாக மாறும் என அவர் கூறியுள்ளார். 27 டெஸ்டுகளில் விளையாடியுள்ள  ருபல் ஹுசைன் 36 விக்கெட்டுகளும் 265 ரன்களும் எடுத்துள்ளார். 



Read in source website

 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் மொஹலியில் நாளை நடைபெறுகிறது. ஆசியக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாத இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராகத் தலா 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி புதிய சீருடையுடன் விளையாடவுள்ளது. இந்திய ஆடவர், மகளிர் அணி வீரர்கள் புதிய சீருடையுடன் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 



Read in source website

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஓ) இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்றனா்.

உக்ரைன்-ரஷியா போா், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையேயான மோதல்போக்கு, ரஷியா, சீனா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், பாகிஸ்தானில் பெருவெள்ளம், அதிகரிக்கும் பருவநிலை மாற்ற விளைவுகள், சா்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளின் பின்னணியில் எஸ்சிஓ மாநாடு நடைபெற்றது.

சா்வதேச பொருளாதார (ஜிடிபி) மதிப்பில் எஸ்சிஓ நாடுகளின் பங்களிப்பு சுமாா் 30 சதவீதம். உலக மக்கள்தொகையில் சுமாா் 40 சதவீதம் போ் எஸ்சிஓ நாடுகளிலேயே வசிக்கின்றனா். மிகப் பெரும் பொருளாதார சக்திகளான இந்தியா, சீனா, ரஷியா ஆகியவையும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

எனவே, மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பதால், எஸ்சிஓ மாநாடு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற தலைவா்கள் தெரிவித்த முக்கிய கருத்துகளின் தொகுப்பு:

பிரதமா் நரேந்திர மோடி, இந்தியா

எரிசக்தி, உணவுப் பொருள்கள் விநியோகம் சீரடைய பிராந்தியத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலி நடைமுறையை விரிவாக்கம் செய்வது அவசியம்.

உறுப்பு நாடுகளிடையே போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சா்வதேச உணவுப் பாதுகாப்பின்மை பிரச்னைக்கு சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிப்பதே தீா்வு.

புத்தாக்கம், பாரம்பரிய மருந்துகளுக்கான தனித்தனி சிறப்புப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அதிபா் விளாதிமீா் புதின், ரஷியா

அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றுசக்தியாக எஸ்சிஓ கூட்டமைப்பு மாற வேண்டும்.

கூட்டமைப்பு சாா்பில் முக்கிய விளையாட்டுப் போட்டி நடத்தப்பட வேண்டும்.

நுழைவு இசைவு (விசா) இல்லாத பயணத்தை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு உக்ரைன் முட்டுக்கட்டை.

ரஷிய படைகளுக்குக் கூடுதல் அழுத்தம் தந்தால், உக்ரைன் மீதான தாக்குதல் அதிகரிக்கப்படும்.

அதிபா் ஷி ஜின்பிங், சீனா

பிராந்தியத்தில் வெளிப்புற சக்திகளின் தலையீட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம்.

பிராந்திய பாதுகாப்புக்கு பயங்கரவாதக் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்.

பரஸ்பர நலனுக்கு மதிப்பளித்து, அனைத்து நாடுகளும் பலனடையும் வகையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியம்.

சட்ட அமலாக்க நடைமுறைகளை வலுப்படுத்த 2,000 காவல் அதிகாரிகளுக்குப் பயிற்சி.

ரஷியாவின் நலனைக் காக்கவும், சா்வதேச விவகாரங்களில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் உறுதி.

பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான்

மத்திய ஆசிய நாடுகளுடனான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

சா்வதேச கூட்டங்களில் ஆப்கானிஸ்தானைப் புறக்கணிப்பது மிகப் பெரும் தவறாக முடியும்.

பயங்கரவாத நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்.

வெள்ளத் தடுப்புப் பணிகளில் பாகிஸ்தானுக்கு கூட்டமைப்பு உதவ வேண்டும்.

அதிபா் சவ்கத் மிா்ஸியோயெவ், உஸ்பெகிஸ்தான்

பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஏழ்மை நிலை ஒழிக்கப்பட்டு உணவுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம்.

பொதுவான பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான ஒற்றுமை முன்னெடுப்பு அவசியம்.

நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலான பொருளாதார பேச்சுவாா்த்தை கொள்கை.

பிராந்தியத்தில் தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் அவசியம்.

 

அதிபா் காசிம் ஜோமா்ட் டோகயெவ், கஜகஸ்தான்

உலகம் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான பங்களிப்பை எஸ்சிஓ கூட்டமைப்பு வழங்கும்.

கூட்டமைப்பின் மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து கஜகஸ்தான் செயல்படும்.

பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

சா்வதேச அரசியல் சக்திகளுக்கு மத்தியில் கஜகஸ்தான் நடுநிலை வகிக்கும்.

சா்வதேச உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எஸ்சிஓ கூட்டமைப்பு முக்கியப் பங்களிப்பை நல்கி வருகிறது.

அதிபா் எமோமலி ரஹ்மான், தஜிகிஸ்தான்

ஒருமித்த கருத்து அடிப்படையில் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட வேண்டும்.

பிராந்தியத்தில் நீடித்த வளா்ச்சியை ஒத்துழைப்புடன் ஏற்படுத்துவதற்கான பொறுப்பு எஸ்சிஓ கூட்டமைப்புக்கு உள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கும் போக்குவரத்து தொடா்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்த முடியும்.

மதம் சாா்ந்த பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

-தொகுப்பு: சுரேந்தா் ரவி



Read in source website

மதுரை: சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து தங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

இந்தியக் குடியரசு கட்சியின் எம்பியும், மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கட்சி பணி நிமர்த்தமாக இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ''சாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. இக்கணக்கெடுப்பு குறித்து தொழில்நுட்ப ரீதியான பதிவுகளில் சில குழப்பங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து நிறைவேற்ற வேண்டும். எங்களது இந்தியக் குடியரசு கட்சி சார்பில், நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். இக்கணக்கெடுப்பின் அடிப்படையில் யார், யார் எத்தனை சதவீத மக்கள் உள்ளனர் என தெரிந்துகொள்ளலாம். ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பது தெரியவில்லை.

முதியோர் இல்லம், மனநல காப்பகங்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க, முதியோர் இல்லம், மனநல காப்பகம் ஒன்றுக்கு அரசு ரூ.24 லட்சம் முதல் வரை 25 லட்சம் வரை செலவிடுகிறது. 25 நபர்களைக் கொண்ட ஒரு முதியோர் காப்பகத்திற்கு இம்மாதிரி உதவிகள் செய்யப்படுகிறது. மேலும், பதிவு பெறாத என்ஜிஓக்களால் (தொண்டு நிறுவனங்கள்) ஏராளமான தவறு நடக்கிறது. அவற்றை முறைப்படுத்தவேண்டும். பதிவு பெறாத தனியார் அமைப்புகளின் செயல்பாட்டை தடை செய்யவேண்டும். நீட் தேர்வு தேர்ச்சியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தகுதியுள்ளோர் தேர்வாகின்றனர்'' என்றார்.



Read in source website

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 12-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். நீதிபதி துரைசாமி வரும் 21-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார் .இதையடுத்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலக பணிகளை மேற்கொண்டு வரும் (பொறுப்பு தலைமை நீதிபதி) நீதிபதி எம்.துரைசாமி வரும் 21-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதி அலுவலக பணிகளை கவனிப்பார். பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார். நீதிபதி ராஜா வரும் 22-ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதிகளுக்கான பணிகளை மேற்கொள்வார்" என தெரிவிக்கபட்டுள்ளது.

நீதிபதி டி.ராஜா, மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் ஏம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்த நீதிபதி டி.ராஜா, சட்டபடிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரி முடித்து கடந்த 1988-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.

பின்னர் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியாரக பணியை தொடங்கிய அவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தார். சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.



Read in source website

மானாமதுரை அருகே நிலக்கொடை குறித்த அரச முத்திரையுடன் கூடிய பிற்கால பாண்டியர் சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

மானாமதுரை அருகே உள்ள சின்னக்கண்ணனூர் சிலம்பரசன்என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில், அப்பகுதியில் 2 சூலக்கற்களை பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் நிலக்கொடை வழங்கும்போது 4 திசைக ளிலும் 4 கற்களை நடுவர். அதில் தங்களது முத்திரையையும், எந்த நோக்கத்துக்காக, எந்த கோயிலுக்கு வழங்கப்பட்டது என்ற குறியீடுகளையும் புடைப்புச் சிற்பமாக கற்களில் இடம்பெறச் செய்வர்.

சிவன், அய்யனார், காளி கோயில்களுக்கு கொடுத்த நிலக்கொடை எனில் கற்களில் திரிசூலம் இடம் பெறும். இதை தேவதானம் என்பர். பெருமாள் கோயிலுக்கு கொடுத்த நிலக்கொடை எனில் சங்கு, சக்கரம் இடம் பெறும்.

இது திருவிடையாட்டம் என்பர். சமணர் கொடையை குறிக்க முக்குடையும், பவுத்த கொடையை குறிக்க தர்மச் சக்கரமும் இடம் பெற்றிருக்கும். இதை பள்ளிச்சந்தம் என்பர்.

தற்போது கண்டறியப்பட்ட 2 கற்களிலும் ஒரு திரிசூலமும், திரிசூலத்தின் இடதுபுறம் பாண்டியர்களின் செண்டு கோலும், சூலத்துக்கு வலது புறம் ஒரு மீனும் நீள்வாக்கில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியில் சிவன்கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடை என அனுமானிக்கலாம். இங்கு ஏற்கெனவே சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read in source website

சென்னை: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (ஃபியோ) தென்மண்டல தலைவராக, ஏவிடி குழுமநிறுவனங்களின் தலைவர் ஹபீப்ஹுசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்தஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஹபீப் ஹுசைன் தற்போது அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய தோல் ஆராய்ச்சி மையம் மற்றும்இந்திய தோல் தொழில் கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வருகிறார். தொழில்துறையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ள இவர்,மதிப்புக் கூட்டல் பொருட்களை தயாரிப்பதற்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பெங்களூரூ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவில் பட்டம் பெற்ற ஹபீப், கடந்த 1974-ம்ஆண்டு ஏவிடி குழுமத்தில் பணியில் சேர்ந்தார். ஃபியோவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இவர், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையின் சவால்களை சமாளிப்பதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவார். இது, மத்திய அரசு எதிர்பார்க்கும் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை அடைய உதவும் என இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.



Read in source website

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மைசூரு தசரா திருவிழா 413-வது ஆண்டாக வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு செய்வார்.

இதைத் தொடர்ந்து 10 நாட்களும் மலர் கண்காட்சி, திரைப்பட திருவிழா, உணவு திருவிழா, இளைஞர் திருவிழா, மகளிர் திருவிழா என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவின் இறுதி நாளான அக்டோபர் 5-ம் தேதி மாலையில் சாமுண்டீஸ்வரி அம்மனின் 750 கிலோ எடையிலான தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து ஊர்வலமாக‌ செல்லும். இதைத் தொடர்ந்து குதிரைப் படை, யானைப் படை, இசைக் குழுவினர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைநிகழ்ச்சி குழுவினர் என ஊர்வலம் நடைபெறும்.

நிறைவு நாளில் இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர‌ மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா, சோபியான் பகுதிகளில் திரையரங்குகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் 1980-ம் ஆண்டுகளில் சில திரையரங்குகள் செயல்பட்டன. ஆனால், அவற்றின் உரிமையாளர்கள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் பரவியதால் 1990-ம் ஆண்டுகளில் திரை அரங்குகள் மூடப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளை மீண்டும் திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நகர் லால் சவுக் பகுதியில் இருந்த ரீகல் சினிமா தியேட்டர் மீது 1999-ல் கையெறி குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து, நீலம், பிராட்வே போன்ற திரையரங்குகளும் மூடப்பட்டன.

தற்போது ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்களின் பொழுது போக்குக்காகவும், தகவல்களை அறிந்து கொள்வதற்காகவும், திறன் மேம்பாட்டுக்காகவும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள திரையரங்குகளை அரசு மீண்டும் திறந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரை படப்பிடிப்புக்கான தளமாக மாற்றவும், சினிமா தயாரிப்புக்குப் பயன்படுத்தவும், திரைப்படங்களை வெளியிடவும் ஜம்மு-காஷ்மீர் திரைப்பட மேம்பாட்டுக் கவுன்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், புல்வாமா, சோபியான் பகுதிகளில் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டன. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இவற்றைத் திறந்துவைத்து, ‘பாக் மில்கா பாக்’ என்ற பாலிவுட் திரைப்படத்தைப் பார்த்தார். இது தொடர்பான படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நகரில் வரும் அக்டோபர் மாதம் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



Read in source website

புதுடெல்லி: அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது.

உலக அளவில் ரயில்களை கட்டமைப்பதில் இந்தியா சிறந்துவிளங்குகிறது. ரயில் தயாரிப்பில் அடுத்த பெரிய நிகழ்வாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வரும் சுதந்திர தின நாளான 2023 ஆக. 15-ல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் கடந்த மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் ரயிலை ஓராண்டு காலத்துக்குள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாயு என்பது நினைவுகூரத்தக்கது.

சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் உலகின் தலைசிறந்த 5 ரயில்களுள் ஒன்றாக சமீபத்தில் கண்டறியப்பட்டது. மணிக்கு 180 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய இந்தரயில் சிறிய குலுங்கல் கூட இல்லாமல் மிக சொகுசாக பயணிக்க ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது. ஜப்பானின் புல்லட் ரயில் 100 கி.மீ. வேகத்தை 55 நொடிகளில் எட்டும் நிலையில், வந்தே பாரத் வெறும் 52 நொடிகளில் அந்த வேகத்தை எட்டிவிடும்.

நல்ல வேகம் தவிர, பாதுகாப்பான, நிலையான மற்றும் குறைந்த ஆற்றலை பயன்படுத்தக்கூடிய ரயில்களை சர்வதேச தரத்தில்உருவாக்குமாறு பொறியாளர் களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரயில் நிலையங்களின் தூய்மைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மக்டாலினெட்டும், செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவும் மோதினர். இதில் லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மக்டா லினெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இரட்டையர் பிரிவு

இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கனடாவின் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி - பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் ஜோடியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

மொத்தம் 58 நிமிடங்களிலேயே இந்த போட்டி முடிவுக்கு வந்தது. முன்னதாக போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்.

பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ. வீ.மெய்யநாதன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், விளையாட்டுத்துறை செயலர் அபூர்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 2 கோடியாகும். இதில்ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற லிண்டாவுக்கு சுமார் ரூ.26.50லட்சமும், 2-வது இடம் பிடித்த மக்டா லினெட்டுக்கு சுமார் ரூ.15.77 லட்சமும் வழங்கப்பட்டது.

இதேபோல், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த ஜோடிக்கு சுமார் ரூ.9.58 லட்சமும், 2-ம் இடம் பிடித்த ஜோடிக்கு சுமார் ரூ.5.35 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.



Read in source website

டர்பன்: இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கை ஒட்டி லண்டன் நகரில் உலகத் தலைவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். உலகின் கவனத்தை பிரம்மாண்ட இறுதி அஞ்சலி ஈர்த்துக் கொண்டிருக்கும் சூழலில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து நோக்கி பல குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச கவனத்தையும் அவை ஈர்த்துள்ளன.

அரச குடும்பத்தின் பாரம்பரிய நகைகளில் ஒன்றான செங்கோலில் உள்ள வைரத்தை திருப்பி அளிக்குமாறு அந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா என்றழைக்கப்படும் இந்த வைரத்திற்கு கல்லினன் என்ற பெயரும் உண்டு. 1905-ல் தென் ஆப்பிரிக்காவின் வைரச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட பெரிய வைரத்தின் ஒரு பகுதிதான் இது. தென் ஆப்பிரிக்கா பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திடம் அப்போதைய ஆட்சியாளர்களால் இந்த வைரம் ஒப்படைக்கப்பட்டது. இது தற்போது ராணியின் கிரீடத்தில் உள்ளது.

இந்நிலையில்தான் தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் குழுக்களும் இணைந்து ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கோருகின்றன. இது குறித்து தண்டக்ஸ்லோ சபேளோ என்ற நபர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், "எங்கள் நாட்டில் இருந்து சுரண்டி எடுத்துச் செல்லப்பட்ட வைரமும், இன்னும் சில தேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களும் தான் ராணியின் கிரீடத்தை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் மக்களின் ரத்தம்" அது என்றார்.

இணையத்தில் change.org என்ற ஆன்லைன் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரிட்டன் இப்போதாவது பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடட்டும். திருடப்பட்ட தங்கம், வைரம் என அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏபிசி செய்தியின் படி செங்கோலில் உள்ள நீர்த்துளி வடிவிலான 530.2 கேரம் வைரத்தை தான் தென் ஆப்பிரிக்கா திருப்பியளிக்குமாறு கோருகிறது எனத் தெரிகிறது.. இது 1600களில் இந்த கிரீடத்தில் பொருத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வைரத்தின் பண மதிப்பு எவ்வளவு என்று தெரியாவிட்டாலும் இதன் வரலாறும், இதன் அரிய தன்மையும் இதன் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

கோஹினூர் வைரம்: ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு கோஹினூர் என்று பெயர் வைத்தனர். தற்போது உலகிலேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) கோஹினூர் உள்ளது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. கோஹினூர் வைரம் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள ஒரு இந்து கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது. மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) அதை கொள்ளையடித்தார் என்றும், அதன்பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார். மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது 1849ல் விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

திப்பு சுல்தான் மோதிரம்: 1799ல் திப்பு சுல்தான் போர்க்களத்தில் மறைந்தபோது அவரது உடலில் இருந்து அவரது மோதிரம் பறிபோனது. அது பிரிட்டனில் நடந்த ஏலம் ஒன்றில் 1,45,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டதாக தகவல் உண்டு.

ரோசட்டா ஸ்டோன்: கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுவது உண்டு. அதேபோல் தான் எகிப்திலும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட ரோசட்டா ஸ்டோனை மீட்டெடுக்க வேண்டும் என்ற பல காலமாக பலரும் கோரி வருகின்றனர். இது எகிப்திலிருந்து பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். அங்கிருந்து 1800களில் பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் புதிய தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியல் (NLEM)-2022 ஐ வெளியிட்டது; இது எப்படி விநியோகத்தை உறுதி செய்கிறது? விலையை கட்டுப்படுத்துகிறது? புதிய சேர்க்கை மற்றும் நீக்கங்கள் என்ன?

Anonna Dutt

மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் புதிய தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியல் (NLEM)-2022 ஐ வெளியிட்டது, இது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட புதிய பட்டியலில், அதிக புற்றுநோய் மருந்துகள், புதிய நீரிழிவு மருந்துகள் மற்றும் காப்புரிமையின் கீழ் உள்ள நான்கு மருந்துகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் என்பது என்ன?

பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்ட பட்டியலில், பெரும்பான்மையான மக்களின் முன்னுரிமை சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யத் தேவையான மருந்துகள் உள்ளன. மருந்துகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கு சிறந்தவை மற்றும் அதே நேரத்தில் செலவு குறைந்தவை. இந்த பட்டியலில் எப்போதும் ஜெனரிக்ஸ் மருந்துகள் (குரோசினுக்கு பதிலாக பாராசிட்டமால் போன்ற பிராண்ட் செய்யப்படாத மருந்துகள்) சேர்க்கப்படுவதற்கு இதுவே காரணம்.

பட்டியலில் பொதுவாக அரசாங்கத்தின் சுகாதார திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும் மருந்துகள் அடங்கியிருக்கும், அதாவது நாட்டின் காசநோய் ஒழிப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படும் 2022 இல் சேர்க்கப்பட்டுள்ள பெடாகுலின் போன்றவை.

உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருத்துவப் பட்டியலின் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பட்டியல் 1996 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் நான்கு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது – 2003, 2011, 2015 மற்றும் இப்போது 2022 இல்.

நாட்டில் உள்ள நோய்களின் மாறிவரும் தன்மை, சந்தையில் கிடைக்கக்கூடிய புதிய மருந்துகள், வழக்கற்றுப் போகும் மருந்துகள் அல்லது ஆபத்துகளுக்காக தடைசெய்யப்படும் சில மருந்துகள், மற்றும் புதிய சிகிச்சை நெறிமுறைகளை மனதில் கொண்டு திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

இந்த பட்டியல் அரசாங்க சுகாதார நிலையங்களில் மருந்துகளை வாங்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. அத்தியாவசிய மருந்துகள் அனைத்து சுகாதார மையங்களிலும் கவனிப்பின் அளவைப் பொறுத்து இருக்க வேண்டும் (NLEM அனைத்து மருந்துகளையும் P, S அல்லது T எனக் குறிக்கும், அதாவது முதன்மை, இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை சுகாதார வசதிகளில் கிடைக்கும்). எந்தெந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற மருந்துக் கொள்கைகளை மருத்துவமனைகள் உருவாக்கவும் இது உதவுகிறது – NLEM-2022, பட்டியலில் உள்ள வலுவான, பரந்த-ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாடிக் மெரோபெனெம் உட்பட, எதிர்ப்பு முறையைப் பொறுத்து பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பட்டியல் மாற்றியுள்ளது.

இலவச மருந்துகளை வழங்கும் அரசாங்க வசதிகள் இவைகளுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது; மேலும் செலவை திருப்பிச் செலுத்தும் முகவர்களாலும் பயன்படுத்தலாம். கூடுதலாக, மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு குறித்து இளம் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க பட்டியல் உதவுகிறது.

ஆனால், பட்டியலின் மிக முக்கியமான பயன்பாடு, இந்த மருந்துகளை பொது மக்களுக்கு மலிவு விலையில் வழங்குவதாகும்.

NLEM மருந்துகளை எப்படி மலிவு விலையில் கொடுக்கிறது?

மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் மூலம் பொது நலன் கருதி சில மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியல் ஒரு மருந்தை அத்தியாவசியமாகக் கருதுவதற்கும் அதன் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முதன்மையான அடிப்படையாக அமைகிறது. கூடுதலாக, NLEM இல் உள்ளவை தவிர மற்ற மருந்துகளின் விலைகளும் DPCO மூலம் கட்டுப்படுத்தப்படலாம்.

NLEM இல் ஒரு மருந்து சேர்க்கப்பட்டவுடன், அதன் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது மற்றும் நிறுவனங்களால் மாற்ற முடியாது.

“இந்தப் பட்டியலின் அடிப்படையில், உச்சவரம்பு விலையை NPPA தீர்மானிக்கும். NLEM இன் கீழ் மருந்துகளின் விலைகளை நிறுவனங்களால் அதிகரிக்க முடியாது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலைக் குறியீட்டின்படி விலைகள் அதிகரிக்கப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன, அதாவது இந்த மருந்துகளின் விலைகளை நியாயமற்ற முறையில் அதிகரிக்க முடியாது,” என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பட்டியலை வெளியிடும் நிகழ்வின் போது கூறினார்.

NLEM-2022 இல் குறிப்பிடத்தக்க சேர்த்தல்கள் என்ன?

புதிய பட்டியலில் NLEM-2015 இல் இல்லாத 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன, மிக முக்கியமாக இது நான்கு புற்றுநோய் மருந்துகளைச் சேர்த்துள்ளது – Bendamustine Hydrochloride – இது சில வகையான இரத்தம் மற்றும் நிணநீர் முனை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, Irinotecan HCI ட்ரைஹைட்ரேட் பெருங்குடல் மற்றும் கணைய புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான லெனலிடோமைடு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான லியூப்ரோலைடு அசிடேட் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. புற்றுநோய் சிகிச்சைகள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்தவை, ஆனால் அதிக வர்த்தக விளிம்புகளைக் கொண்டுள்ளன.

இப்பட்டியலில் புதிய வகை மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன, அவை இப்போது மருத்துவர்களால் நீரிழிவு சிகிச்சைக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன, அவை மருந்து டெனிலிக்ளிப்டின் மற்றும் இன்சுலின் கிளார்கின். தற்போது அரசாங்கத்தின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ரோட்டா வைரஸ் தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, தேசிய மருத்துவ திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள காசநோய்க்கான பெடாகுலின் மற்றும் டெலாமினிட், ஹெபடைடிஸ் சி சிகிச்சைக்கான டாக்லடாஸ்விர், ஹெபடைடிஸ் சி சிகிச்சைக்கான டாக்லடாஸ்விர் போன்ற காப்புரிமையின் கீழ் இன்னும் உள்ள குறைந்தது நான்கு மருந்துகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்த மருந்துகளின் விலை அதிகம் என்பதால் காப்புரிமை பெற்ற மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை.

” NLEM இல் காப்புரிமை பெற்ற மருந்துகள் சேர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. எனவே, குழு, பங்குதாரர்கள் மற்றும் அமைச்சகம், காப்புரிமை பெற்ற மருந்துகள் (தேவை, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் செலவு செயல்திறன்) அளவுகோல்களை பூர்த்தி செய்தால் NLEM இன் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்ற முடிவை எடுத்தது. மேலும், இந்த மருந்துகள் மிகவும் முக்கியமானவை மற்றும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ”என்று 2018 ஆம் ஆண்டில் பட்டியலை மாற்றுவதற்காக அமைக்கப்பட்ட மருந்துகளுக்கான தேசியக் குழுவின் தலைவர் டாக்டர் ஒய்.கே. குப்தா கூறினார்.

பட்டியல் மற்றொரு குறிப்பிடத்தக்க சேர்க்கை, நிகோடின் மற்றும் ஓபியாய்டு மாற்று சிகிச்சையை உள்ளடக்கியது, முந்தைய பட்டியல்களில் கிடைக்கக்கூடிய பிரிவில் எந்த சிகிச்சையும் இல்லை.

NLEM-2022 இலிருந்து எந்த மருந்துகள் அகற்றப்பட்டன?

முந்தைய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டன, இது NLEM-2022 இல் உள்ள மொத்த மருந்துகளின் எண்ணிக்கையை 384 ஆகக் கொண்டு வந்தது. மிக முக்கியமான நீக்குதல்கள் மூன்று காசநோய் எதிர்ப்பு மருந்துகளாகும், இதில் கானாமைசின் ஊசியும் அடங்கும். அத்தகைய நோயாளிகளுக்கு அரசாங்கம் இப்போது அனைத்து வாய்வழி மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் கானாமைசின் மருந்து சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் காது கேளாமை போன்ற கடுமையான பக்க விளைவுகளுடன் தொடர்புடையதால் நீக்கப்பட்டுள்ளது.

மெரோபெனெம் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு ஐவர்மெக்டின் (இது அரசாங்கத்தின் நிணநீர் ஃபைலேரியாசிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்) போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைச் சேர்க்கும் போது, ​​பட்டியலில் கேப்ரியோமைசின், கான்சிக்ளோவிர் (இது புற்றுநோய் மற்றும் கரு சிதைவுக்கு வழிவகுக்கும்), மோசமான செயல்திறன் கொண்ட ஹெபடைடிஸ் மருந்து போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நீக்கியுள்ளது.

பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவையும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.



Read in source website

அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட முகவரியில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்தக் கட்சிகள் செயல்படாதது தெரியவந்தது.

மேலும் பிகார், தில்லி, கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில் 253 கட்சிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த மே 25}ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு உள்ளான கட்சிகளின் எண்ணிக்கை 537. 

2021 செப்டம்பர் வரையிலான கணக்குப்படி, இந்தியாவில் 8 தேசிய கட்சிகள், 54 மாநில கட்சிகள், 2,796 அங்கீகாரமற்ற கட்சிகள் என மொத்தம் 2858 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வாக்கு சதவீதமும் இல்லாமல், எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற மக்கள் பிரதிநிதிகளும்  இல்லாமல் இருக்கும் அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவையாகும். 

அவற்றைப் பதிவு செய்த அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியிருக்கிறது.தமிழகத்தில் பதிவு செய்து ஆறு ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடாத தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய கட்சி, சமூக சமத்துவப் படை, சக்தி பாரத தேசம், நேஷனல் வெல்ஃபேர் பார்ட்டி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், ஹிந்துஸ்தான் நேஷனல் கட்சி ஆகிய 13 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் இப்போது புதிது புதிதாக கட்சிகள் தொடங்கப்படுகின்றன. ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் கட்சிகள் இருக்கும்போது புற்றீசல்போல கட்சிகள் தொடங்கப்படும் மர்மம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. காவல் துறை, அரசு சார்ந்த இடங்களில்  அரசியல் கட்சியினர் என்றால் மதிப்பு கூடுகிறது. அரசியல் கட்சி என்கிற பெயரில் சமுதாயத்தில் குறிப்பாக அரசு அலுவலகங்களில் சலுகை பெறும் நோக்கம்தான் சிலர் கட்சி தொடங்குவதன் காரணம். 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அரசின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படும். தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசும்போது, சிறிய அரசியல் கட்சியாக இருந்தாலும் பெரிய அரசியல் கட்சிகள் அவர்களை மதித்து நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற கட்சிகளை ஆதரவுக்கும், ஆள் பலத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு பணமும் தரப்படுகிறது.

வரி சலுகைக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பெரு நிறுவனங்களே கூட தங்களின் ஆதரவாளர்களைக் கொண்டு வரி சலுகைக்காக அரசியல் கட்சிகளைத் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் தங்களுக்கு இத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவே பெரிய கட்சிகள், பல சிறிய கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து உருவாக்குகின்றன. 

பெரிய கட்சிகள் தங்களின் செலவுக் கணக்குகளைக் காட்டுவதற்கு இதுபோன்ற சிறிய கட்சிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு பெரிய கட்சி தனக்கான நோட்டீஸ், விளம்பரம் உள்ளிட்டவற்றை சிறிய அரசியல் கட்சிகளின் செலவுக் கணக்கில் காட்டி தயார் செய்து கொள்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அரசின் பல சலுகைகள், பயன்கள் உள்ளன. அவை பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் மதிப்பு, சலுகைகளின் அடிப்படையிலானவை.

பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அங்கீகாரம் பெற்றிருந்தாலும் அந்தக் கட்சியினருக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கட்டணம் கோரப்பட்டால் அவர்கள் பிரச்னை செய்வார்கள், வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களுக்கு சுங்கச்சாவடிகளில் விலக்கு அளிக்கப்படுகிறது.கருப்புப் பணத்தைக் கட்சிக்கு நன்கொடையாக கொடுத்து அவற்றை வெள்ளையாக்குவதும் நடைபெற்று வருகிறது. 

இதுபோன்ற சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளுக்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் யாரிடமும் நன்கொடை வசூலித்துக் கொள்ளலாம். அதற்கு வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். மிரட்டி வசூலிப்பதும் உண்டு. 

சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தகவல்களின் அடிப்படையில் குஜராத், மகாராஷ்டிரம், தில்லி, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா உள்பட நாடு முழுவதும் அங்கீகாரமற்ற கட்சிகளுக்கு சொந்தமான 110 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சோதனை நடத்தினர். 

தேர்தல் நேரத்தில் சிறிய கட்சிகள் பெயரளவுக்கு வேட்பாளர்களை நிறுத்தும். அந்தந்த வாக்குச்சாவடியில் சிறிய கட்சிகளின் சார்பாக முகவர்களின் பெயர் இருந்தாலும் அவர்கள் பெரிய கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவர். இதற்காகவே சிலர் கட்சி அங்கீகாரம் பெற்று அதன்மூலம் ஆதாயமடைய முற்படுகின்றனர். ஒன்றுமே இல்லாத நிலையில் கட்சி தொடங்குபவர்கள் ஒருசில ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக உயர்ந்துவிடுவதும் உண்டு.

கொள்கை, தொண்டு, மக்கள் நலன் அடிப்படையிலான அரசியல் இயக்கங்கள் இல்லாத நிலையில் பணம் மட்டுமே அரசியலின் குறிக்கோளாக மாறியிருக்கிறது. லாபகரமான முதலீட்டுக்கான களமாக அரசியல் மாறிவிட்டிருக்கும் நிலையில் போலி அரசியல் கட்சிகளை களையெடுக்கும் முயற்சி வரவேற்புக்குரியது.



Read in source website

ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அவை அனைத்திற்கும் காப்புரிமை  பெற்றிருக்கிறார் என்ற செய்தியை வாசித்தறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அவரது கண்டுபிடிப்புகள் எதுவும் சாதாரணமானது அல்ல. மின்சார பல்பு முதல் திரைப்படம் வரை மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் இதில் அடங்கும். 

அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவுடன் கூடிய அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆய்வில் ஈடுபடுவதற்கு முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் படித்து விடுவார். 

அதுமட்டுமல்லாமல் பிறர் கண்டுபிடித்து நின்றுவிட்ட இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்குவார். இதனால் அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளில் அவரால் நிகழ்த்த முடிந்தது. 

பிறரின் அனுபவங்களைப் பயன்படுத்துவது அறிவியல் ஆய்வுக்கு மட்டுமல்ல, அனைத்துக்கும் பொருந்தும். ஒரு கதை நினைவுக்கு வருகிறது.   குறிப்பிட்ட ஓர் இடத்தில் புதையல் இருப்பதாக யாருடைய வாய் மொழியையோ கேட்ட ஒரு மனிதன் பல நாள் பாடுபட்டு அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டினான். 

ஒரு மாத காலம் போராடி 40 அடி ஆழம் தோண்டினான். பின் அவன் மனம் சோர்ந்தான். நிச்சயமில்லாத ஒரு விஷயத்தில் ஏன் நாம் சிரமப்பட வேண்டும் என்று எண்ணி, தோண்டுவதை அன்றோடு நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டான்.  

சில நாட்களுக்குப் பிறகு அந்த வழியே சென்ற மற்றொருவனின் கண்களில் இந்த நிலம் தட்டுப்பட, அவன் முதலாமவன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நிலத்தை இன்னும் ஆழமாக தோண்டத் தொடங்கினான். 50 அடி ஆழத்திலேயே அவனுக்குப் புதையல் கிடைத்தது.  நம்பிக்கையோ, அதிர்ஷ்டமோ இக்கதையின் பேசுபொருள் அல்ல. பிறரது பணியின் பங்களிப்பு நம் பணியுடன் இணையும்போது ஏற்படும் முன்னேற்றமே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

ஒரு தந்தையானவர் தான் அனுபவத்தில் கண்ட வியாபார நுணுக்கத்தை தனக்குப் பின் வியாபார பொறுப்பை ஏற்க வரும் தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பார் இல்லையா அதுபோலத்தான். தாம் கற்ற, கேட்ட, அறிந்த, தெளிந்த, கணித்த கூறுகளை மனிதன் புத்தகங்களாக எழுதி குவித்து வைத்துள்ளான். புத்தகங்களிலிருந்து பெறும் அனுபவங்களை நம் வாழ்வில் பயன்படுத்துவது கூட இந்த வகைதான். 

பிறருடைய பணத்தை எப்படி நான் ஏற்பதில்லையோ அதேபோல பிறருடைய அறிவையும் நான் பயன்படுத்துவதில்லை என்று இருப்போரும் உண்டு. வீடு கட்ட நல்ல திட்டமொன்றை சொன்ன உறவினரின் கூற்றை வேண்டுமென்றே நிராகரித்தார் நண்பர் ஒருவர். 

பிறரின் அறிவுரையும் ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை,  அனைத்தையும் நானே பார்த்துக் கொள்வேன் என்ற மனநிலைதான் காரணம். உறவினரின் வழிகாட்டலைப் புறக்கணித்ததால் கால விரயமும் பண விரயமும் ஏற்பட்டதை உணர்ந்து நொந்தார் நண்பர். 

இப்படி வலிய வந்து அறிவுரை சொல்பவர் உயர்ந்தவர் இல்லை.  அவர்கள் சொல்லும் திட்டங்களை நாம் செயல்படுத்துவதால் நாம் கீழ் நிலையில் இருப்பதாக அர்த்தமும் இல்லை. பரஸ்பரம் ஒரு கருத்து பரிமாற்றம், அவ்வளவே! அதில் பெரும் மனத் திருப்தியும் கிடைக்கிறது. 

நம்முடைய வேலையைச் செய்ய ஊழியர்கள் பலரை நியமித்து பணிகளை பிரித்துத் தருகிறோம். இது எப்படி இயல்பானதோ அப்படி இயல்பானதுதான் பிறர் அறிவையும் அனுபவத்தையும் நாம் பெறுவதும். 

"மெய், வாய், கண், மூக்கு, செவி என்று புலன்களின் வழியாக அறிந்த வகையில் அறிவு ஐந்து; புலன்களால் உற்று அறிந்தவற்றையெல்லாம் மனத்தினுள் வாங்கிக் கொண்ட வகையில் அறிவு ஆறு; வாங்கிக் கொண்டவற்றையெல்லாம் வகைப்படுத்தித் தொகுத்து, உணர்ந்துகொண்ட வகையில் அறிவு ஏழு; கல்வியுடன் சேர்ந்து பெற்ற அறிவு எட்டு; கல்வி அனுபவத்துடன் ஒன்பது; இறையருளைப் பற்றும் அறிவு பத்து' என பத்து வகையான அறிவுகளைப் பற்றி பேசுகிறது  திருமூலரின் "திருமந்திரம்'.
ஆனால் இன்றைய நவீன காலத்தில் இவற்றையெல்லாம் தாண்டி  நாம் பலவற்றை பலரிடமிருந்து பெற்று நம் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முனைய வேண்டியதாய் உள்ளது.

ஆசிரியர் ஒருவர், தன் மாணவனுக்கு தனக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் அவனது தேவைக்கேற்ப வழங்குகிறார். தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான் கற்றதைக் கூட 15 வயது மாணவனுக்கு விளக்குகிறார். ஆசிரியர்களைத் தவிர வேறு  யாருக்கும் நம்மிடம் நின்று பேசவோ அறிவுரை சொல்லவோ இன்று நேரம் கிடையாது. பந்தயக் குதிரைகளின் மீதேறி ஓடுவதுபோல் அவரவர் ஒவ்வொரு திசையில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். 

ஆசிரியருக்கு அடுத்து மாணவனுக்கு தனிப்பட்ட முறையில் அறிவு தானம் வழங்கி அவனை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல யாரும் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருப்பவர்களும் நமக்கு பொருந்தும்படியாக நம் அலைவரிசைக்கு ஒத்துப் போகும் வண்ணம் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.  
ஒரு சமயம் ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த பெரியவர்கள் உயரிய கருத்துக்களை எடுத்துரைத்த வண்ணம் இருந்தனர்.

கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து, இத்தகைய சிறந்த கருத்துகளை தாங்கள் எப்படி பெற்றீர்கள்? அதை நாங்களும் பெற எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். 

அதற்கு அந்தப் பெரியவர், "நான் பல வருடங்கள் செலவழித்து இதைக் கற்றேன். நீங்களும் உங்கள் சொந்த முயற்சியில் தேடித் தேடி கற்று முன்னேறுங்கள்' என்று கூறிச் சென்றார். இந்த உலகமே இப்படித்தான். தான் அரும்பாடுபட்டு பெற்றதை பிறர் சுலபமாக பெறுவதை பலர் விரும்புவதில்லை.  இதனால்தான் நாம் மனிதர்களை காட்டிலும் தொழில்நுட்பத்தை அதிகம் கைக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது இந்த நவீன காலத்தில் ஏற்புடையதாகவும் இருக்கிறது. 

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்று சில தினங்களுக்கு முன் தன் புதிய தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியது. அறிமுகமான சில மணி நேரத்திற்குள்ளாகவே அதை விலை கொடுத்து வாங்க ஒரு கூட்டமே அலைமோதுகிறது. ஏனென்றால் இதே உளவியல்தான். மனிதர்களிடையே, நட்பு வட்டத்தினரிடையே, உறவுகளிடையே பிறர் அறிவை பயன்படுத்த இங்கு ஒரு இடைவெளி விழுந்துவிட்டதால் மனிதன் தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கிவிட்டான். 

தனக்கென்று நம்பகமானவர்களை வைத்துக் கொள்ள அவனுக்கு தொழில்நுட்பம்   சுலபமாகக் கைகொடுக்கிறது. கேட்டதை வழங்கும் காமதேனுவைப் போல அவன் தேடுவனவற்றையும் அவனுக்கு தேவைப்படும் அனைத்தையும் தன் தகவல் சுரங்கத்திலிருந்து வாரி வழங்குகிறது. எட்டாம் அறிவான தகவல் தொழில்நுட்பத்தின் அறிவையும் மனிதன் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் அவன் பல விஷயங்களில் தன்னம்பிக்கை உடையனவாக இருக்கிறான். 

ஒரு தாய், தன் குழந்தைக்கு உடல் நலமாக இருக்கும்போது திட உணவையும் காய்ச்சலாக இருக்கும்போது கஞ்சியையும் கொடுப்பாள். அவளுக்குத் தெரியும் தன் குழந்தைக்கு எந்தெந்த காலத்தில் என்னென்ன தரவேண்டும் என்பது. பிள்ளைகளுக்கு எப்படி தாய் பார்த்து பார்த்து சமைத்து கொடுப்பாளோ அதே போன்ற பங்களிப்பை செய்ய வந்துவிட்டது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு. 

இணையம் 3.0 }வின் சாராம்சமே அதுதான். இந்த செயல்திறன் அறிவாற்றல், நமக்கு என்ன தேவையோ அதனைப் பார்த்து பார்த்து அறிந்து சேவையாற்றும். நம்முடைய உதவியாளர் நம்மிடம்  கடமைக்காக வேலை செய்யாமல் தாயன்புடன் நமக்கு சேவையாற்றுவது போல. இப்படி அறிவுசார்ந்த விஷயத்தில் தகவல் தொழில்நுட்பம் உடன் வருவதால்  ஒவ்வொரு தனிநபரின் அறிவார்ந்த பலமும் கூடுகிறது.

இந்த நவீன யுகத்தில் தொழில்நுட்பம் வழி பெறப்படும் அறிவு மிளிர்ந்து அது எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பயன்படும் விதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது.  

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எனும் திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தின் வழி பெற்றாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெளிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

மனித சக்தி எல்லையில்லாதது. அது தொழில்நுட்ப அறிவுடன் இணையும்போது அந்த எல்லையின் பரப்பு இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே போகிறது. ஒரு விஞ்ஞானியின் மூளையில் பொதிந்திருக்கும் பொக்கிஷமான தரவுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அவருக்குப்பின் அடுத்தவர் மூளைக்குள் மடைமாற்றும் ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் கூற்றும் இக்கருத்துக்குப் பொருந்துவதாய் இருக்கிறது. ஆக, பிறரது அறிவையும் ஆலோசனைகளையும் பயன்படுத்தி முன்னேறுவது வெகு இயல்புதான்,  அது அனைத்துத் துறைகளிலும் உள்ளதுதான் என்பதை மனத்தில் இருத்தி முன்னேறுவோம்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.



Read in source website

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேலாகிவிட்ட  நிலையில், மாநிலத்தின் நிதி நிலைமை இன்னும் முழுமையாகச் சீரடையாததால், தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சிக்கலில் தவித்து வருகிறது. 

இந்தச் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி தெரியாமல், தான் சுமந்து வரும் அதிகப்படியான சுமையை மக்கள் மீது இறக்கி வைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏற்கெனவே சொத்து வரி, பால் பொருள்கள் விலை உயர்வை அறிவித்த அரசு, தற்போது மின்சாரக் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் ஏழை, நடுத்தர வருவாய் ஈட்டும் மக்கள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மேலும் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. 

கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மின்சாரக் கட்டணம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2017-இல் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போதைய மின் கட்டண உயர்வு, கடந்த 10-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது. மின் வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்தக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தில், முதல் 1 யூனிட் முதல் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும்.

வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தில் 101-200 வரையிலான யூனிட்களுக்கு ரூ.55-உம், 201-300 வரையிலான யூனிட்களுக்கு ரூ.145-உம், 301-400 வரையிலான யூனிட்களுக்கு ரூ.295-உம், 401-500 வரையிலான யூனிட்களுக்கு ரூ.595-உம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல, 501-600 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-உம், 601-800 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9-உம், 801-1000 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 10-உம், 1000 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11-உம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான மின் கட்டணத்தில் இதுவரை இரண்டு மாதங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 20- ரூ.50 வரையிலான நிலைக் கட்டணம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், 2023 ஜூலை 1 முதல் 2026-27 நிதியாண்டு வரை ஆண்டுதோறும் 6 சதவீத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதால், இந்தச் சுமையானது ஒவ்வோர் ஆண்டும் சிறிதளவு கூடிக்கொண்டே போகும் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், மின் கட்டணம் சிறிதளவே அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறுந்தொழில்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான மின் உபயோகக் கட்டணத்தில் மாதத்துக்கு ரூ. 50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விசைத்தறிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டில் இரு மாதங்களுக்கு 750 யூனிட் வரை இலவசம் என்ற நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 70 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை வீடு, விவசாயம் இவற்றுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதே போல,  கைத்தறி, விசைத்தறிக் கூடங்ககளுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களின் மின் வாரியங்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். 

ஆனால், மின் கட்டணத்தை திடீரென மிக அதிகளவில் உயர்த்துவதற்குப் பதிலாக, ஆண்டுதோறும் சிறிதளவு அதிகரிப்பு என்ற முறையை மின் வாரியம் கடைப்பிடித்திருந்தால் மக்கள் அதிகப்படியான இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.

தமிழகத்தில் தற்போது சுமார் 3.5 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின் உற்பத்தி, விநியோகம், ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றுக்காக மின் வாரியம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 9 செலவிடுகிறது. ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் மூலம் அதற்குக் கிடைக்கும் வருவாய் ரூ. 7 மட்டுமே. 

இதனால், தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் சுமை தற்போது ரூ. 1,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் கடன்களுக்கான வட்டியாக ஆண்டுக்கு ரூ.16,500 கோடியை மின் வாரியம் செலுத்துகிறது.

விவசாயம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும் கைத்தறி, விசைத்தறிக் கூடங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்க வேண்டியுள்ளதால், இந்தக் கடன் சுமையிலிருந்து மின் வாரியம் மீள்வது அவ்வளவு எளிதானல்ல. 
இந்த உண்மை நிலவரத்தைப்  புரிந்து கொள்ளாமல், அரசியல் லாப நோக்கத்துக்காக மேலும் மேலும் இலவசங்களை வாரி இறைக்கும் மாநில அரசுகளின் போக்கால் மின் வாரியங்களின் நிதி நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை மறுக்கவியலாது.

அரசுடைமை வங்கிகள் வாராக்கடன் பிரச்னைகளிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. 

இதே போல, அனைத்து மாநில மின் வாரியங்களும் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும். மத்திய அரசு வகுத்தளிக்கும் விதிகளைப் பின்பற்றி, மின் வாரியங்களின் நிதி நிலைமை சீரடைய மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதைவிடுத்து, மக்களின் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.



Read in source website

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரான முகுல் ரோஹத்கி, மீண்டும் ஒருமுறை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, அவர் ஜூன் 2014 முதல் ஜூன் 2017 வரையில் அந்தப் பொறுப்பை வகித்துள்ளார். தற்போது அட்டர்னி ஜெனரலாக உள்ள மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கடந்த ஜூன் மாதத்துடன் விலகிக்கொள்ள முடிவெடுத்தார். மூன்று மாத காலம் அப்பதவியில் தொடருமாறு மத்திய அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்படி, செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அவரது இடத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிக உயர்ந்த சட்ட அலுவலர் பொறுப்பான அட்டர்னி ஜெனரல் பணிக்கு ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்தவரை மறுமுறையும் நியமிக்கும் வழக்கம் சரியானதா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகிக்கும் கே.கே.வேணுகோபால், 90 வயதைக் கடந்தவர் என்பது, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் நீண்ட காலமாகச் செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.



Read in source website

பெரியார் வானொலியில் பேசினாரா என்று கேட்டால், காந்தி கொல்லப்பட்டபோது நிலவிய கொந்தளிப்பான சூழலில் பேசிய அமைதிப் பேச்சைத்தான் பெரும்பாலானோர் குறிப்பிடுவர்; அநேகமாக அதுதான் பெரியாரின் முதல் ஒலிபரப்பு. காந்தி மறைந்த மறுநாள் (31.1.1948) திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அப்பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அது 1939இல் தொடங்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியால் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகும். சென்னையில் 1924 ஜூலை 31 அன்று முறையான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கியது. இந்த ஒலிபரப்பைப் பெரியார் கேட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட அந்த நாளில், அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு இரண்டாம் முறை சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். அது சிறைவாசத்தின் 15ஆம் நாள். அறிவியல் முன்னேற்ற நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் அடியை எடுத்துவைத்த நேரத்தில், அவர் கேரளத்தில் சமூகச் சமத்துவ முயற்சியில் ஓர் அடியை முன்வைத்தார்.

பெரியாரின் ஒலிபரப்புகள்: அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட காலம் முதல் பெரியார் மறைவு வரையிலான (1938-1973) 35 ஆண்டுகளில், இப்போது கிடைக்கும் ஆவணங்களின் ஆதாரப்படி, ஆறு முறை பெரியாரின் பேச்சு ஒலிபரப்பாகியுள்ளது. 1948இல் காந்தி காலமானபோது மக்களை அமைதிப்படுத்துவதற்கான உரை, 1965இல் சீனப் போர் நிகழ்ந்தபோது மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான உரை, 1972இல் ராஜாஜி காலமானபோது ஆற்றிய இரங்கல் உரை என மூன்று உரைகளைப் பெரியார் நிகழ்த்தியுள்ளார். தவிர, நேர்முகம் என்ற வகையில் மேலும் 3 ஒலிபரப்புகள் நிகழ்ந்துள்ளன. 1968 இல் கே.பி.கணபதி (மாறன்) என்ற வானொலிக் கலைஞர் கண்டது முதலாவது நேர்முகம். 1970இல் மத்திய இணை அமைச்சர் எஸ்.சந்திரசேகர் நிகழ்த்தியது இரண்டாவதும், மூன்றாவதும் நிறைவானதுமான நேர்முகம் 1973இல் ஒலிபரப்பானதாகும். இந்த நேர்காணலில் பெரியாரோடு பேசியவர் ஜி.சுப்பிரமணியம் என்ற வானொலி அலுவலர். இந்த மூன்று பேச்சுகள், மூன்று நேர்முகம் ஆகியவற்றின் விவரங்களைக் கவனித்துப் படிக்கும் வாசகர்களுக்கு இவை இயல்பானதாகவே தோன்றும், ஒன்றைத் தவிர. மத்திய அமைச்சர் பெரியாரை நேர்முகம் கண்டார் என்பதுதான் அது. இந்திரா காந்தியின் அமைச்சரவையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் (1918-2001). குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாகப் பெரியாரிடம் ஆலோசனை கேட்பதற்காக வந்த அவர், பெரியாரை (அடையாறு) வீட்டில் நேர்முகம் கண்டார். பெரியாரின் கருத்துகளைப் பெற்று ஆச்சரியமடைந்த அமைச்சர் ஒரு கருத்தை ‘மூலமான கருத்து’ (original suggestion) என்று மனமகிழ்ந்து சொன்னார்.

50% இடஒதுக்கீடு: அமைச்சர்: “ரெண்டு குழந்தை போதும்னு சொல்றோம். அதுல என்ன கஷ்டம்னா, இப்போ ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் கஷ்டம் இல்லை. இரண்டும் பொண்ணா போய்விட்டது என்றால் இன்னும் ஒன்றுக்கு ட்ரை (Try) பண்றாரு ஆளு, ஆண் குழந்தை வேணும்னு. அதுக்கு எப்படி அவங்கள எஜுகேட் (Educate) பண்றதுன்னு எனக்குத் தெரியல. பெண் குழந்தை பிறந்தாலும் அதோடு நிறுத்திக்கலாம், ஒண்ணும் கஷ்டம் இல்லை. பெண்ணும் ஆணும் ஒண்ணுன்னு சொல்றதுக்கு நம்மால முடியல. நான் சொல்றது என்னன்னா, ரெண்டு குழந்தை இருந்தா போதும். இதை எப்படி மக்களுக்குச் சொல்றது?"

இதுதான் அமைச்சரின் கேள்வி, சந்தேகம்.: பெரியார்: “அந்த எண்ணம் மக்கள் மனசுல இருந்து மாற வேண்டுமானால் 50 சதவீதம் பெண்களுக்கு உத்தியோகம், 50 சதவீதம் ஆம்பளைக்கு உத்தியோகம் (என்று செய்துவிட வேண்டும்). ஒரு ஆபீஸ்ல 100 உத்தியோகஸ்தர்கள் இருந்தா 50 பெண்கள் இருக்காங்களான்னு கேட்கணும். இல்லாவிட்டால், அதைப் போடுன்னு சொல்லணும். அப்ப பெத்தவங்களுக்கு ஆண் இருந்தாலும் ஒண்ணு, பெண் இருந்தாலும் ஒண்ணு என்றாகும். இந்த ஆம்பளை எல்லாம் உத்தியோகம் பார்க்கிறார்கள், பொம்பளைங்க எல்லாம் வீட்ல இருக்காங்க. அதனால நமக்கு ஆம்பளப் புள்ள ஒண்ணு வேணும்னு தோணுது. அவன் சம்பாதிக்கிறான் என்று தோணுது. அதனால நாம் ஈக்குவலைஸ் (equalise) பண்ணிட்டா உத்தியோகத்தை ஆளுக்குப் பாதின்னு’’ (ஆதாரம்: பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், திருத்தப்பட்ட பதிப்பு). இதைக் கேட்ட அமைச்சர் ‘‘இந்த யோசனை நல்லா இருக்குது. ‘ஒரிஜினல் சஜஷன்’. இதை நாங்க எக்ஸாமின் பண்ணிப் பார்க்கிறோம்” என்றார். இந்த நேர்முகம் 8 மார்ச் 1970இல் சென்னை வானொலியில் ஒலிபரப்பானது. பெரியார் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கேட்கிறார். ஆனால் 35%-ஐயே 75 ஆண்டுகளுக்குப் பின்னும் நாடு இன்னும் நடைமுறைப்படுத்தத் தயாராகவில்லை.

இறுதி ஊர்வல வர்ணனை: அமைச்சரின் இந்த நேர்முகத்திற்குப் பிறகு 18.10.1973இல் திருச்சி வானொலியில் ஜி.சுப்ரமணியம் கண்ட நேர்முகம் ஒலிபரப்பானது. இது ஒலிபரப்பான இரண்டு மாதங்களில் (24.12.73) பெரியார் காலமானார். அரசு மரியாதையுடன் நிகழ்ந்த இறுதி ஊர்வலத்தை அப்போதிருந்த ஒரே மக்கள் தொடர்பு ஊடகமான வானொலி நேரலையாக ஒலிபரப்பியது. 25.12.73 அன்று பிற்பகல் 2:45 மணிக்கு அதுவரை வரலாறு கண்டிருக்காத மனிதரின் இறுதி ஊர்வல வர்ணனை தொடங்கி ஒலித்தது. வானொலியில் அதுதான் பெரியார் தொடர்பான நிறைவான ஒலிபரப்பு. மறைவு வரை மொத்தம் ஆறு ஒலிபரப்புகளே பெரியாருக்குச் செய்யப்பட்டிருந்த நிலையில், வானொலியில் இப்போது ஆண்டுக்கு இரண்டு நிகழ்ச்சிகளாவது (பிறந்த நாள், நினைவு நாள்) இடம்பெறுகின்றன. முதலாம் ஆண்டு நினைவுரையைத் தில்லை வில்லாளன் தொடக்கிவைத்தார். வானொலி ஒலிபரப்பைப் பெரியார் பயன்படுத்தினாரோ இல்லையோ, அரசாங்கம் தன்நோக்கத்திற்காகப் பெரியாரைப் பயன்படுத்திக்கொண்டது என்று உணர முடிகிறது. மக்களை அமைதிப்படுத்தவும், ஒற்றுமைப்படுத்தவும், நாட்டுத் தலைவரைக் கௌரவப்படுத்தவும், மக்களை முன்னேற்றவும் என அரசு பெரியாரின் பேச்சைப் பயன்படுத்திக்கொண்டது. வான் அலைகள் அரசுக்கு அல்ல, மக்களுக்கு உரிமையானது என்ற 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தீர்ப்பு பெரியார் காலத்தில் வந்திருந்தால், நாம் வாழும் தமிழ்நாடு நாம் இப்போது வாழும் தமிழ்நாடாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. - பழ. அதியமான், உதவி இயக்குநர் (ஓய்வு), சென்னை அகில இந்திய வானொலி நிலையம். தொடர்புக்கு: athiy61@yahoo.co.in



Read in source website

“எல்லா மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம்தான். ஆகவே, அம்மொழியைத் தேசிய மொழியாக அறிவிக்குமாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தொடுக்கப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. வழக்குத் தொடுத்தவர் குஜராத்தின் முன்னாள் கூடுதல் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஜி.வஞ்சாரா என்பவர்.

இந்தக் குரல் ஒன்றும் புதிதல்ல. நூற்றாண்டுகள் தாண்டியும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் குரல்; சங் பரிவாரங்கள் நீண்ட காலமாக எழுப்பிக்கொண்டிருக்கும் குரலும்தான். சம்ஸ்கிருதம் இந்தியாவில் புழங்கும் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்கிற கருத்தாக்கம் காலனிய காலத்தில் உருவாகி வலுப்பெற்ற ஒரு கற்பிதம். 1757 பிளாசி போருக்குப் பின் வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையைப் (திவானி) பெற்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆட்சிசெய்யத் தலைப்பட்டனர். மக்களை ஆள வேண்டுமெனில் அவர்களின் மொழிகளின் மீது தமக்கு ஆளுமை வேண்டும் என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்திருந்தனர். மொழிபெயர்க்கும் துபாஷிகளை முழுமையாக நம்ப முடியாது என்கிற அனுபவத்தில், இந்திய மொழிகளைத் தாமே கற்க முறையான ஏற்பாடுகளைச் செய்தனர்.



Read in source website

‘இந்து தமிழ் திசை’யில் (23.04.2022) வெளியான ‘ஆசிரியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்’ என்ற கட்டுரை மூலம் அரசுப் பள்ளிகளில் வாசிப்புக்கான முன்னெடுப்புக்குக் கோரிக்கை விடுத்திருந்தோம். அது தற்போது நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரிடமிருந்து வந்திருக்கும் சுற்றறிக்கை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளி நூலகம் சார்ந்த செயல்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளது. ஆகஸ்ட் 17 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கிவைத்த வாசிப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பைப் பார்க்கலாம்.

வாசிப்புச் செயல்பாடு: அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்புச் செயல்பாடுகளுக்காக வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சுழற்சிமுறையில் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்; புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து வர வேண்டும். வாசித்த புத்தகம் சார்ந்து ஆசிரியர் அறிமுகம், புத்தக அறிமுகம், புத்தக ஒப்பீடு, புத்தக மதிப்புரை, மேற்கோள்களைக் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல், ஓவியம், பேச்சு, கட்டுரை, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. நூலகச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் பொறுப்பு வட்டாரக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அளவில் பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆர்வம் சார்ந்த புத்தகங்களை வாசிக்க ஊக்கப்படுத்துவது, பள்ளிக்கு அருகில் உள்ள எழுத்தாளர்களை அழைத்து மாணவர்களிடம் உரையாடச் செய்வது, நூலகத்தில் உள்ள புத்தகங்களிலிருந்து புதிய சொற்களைப் பட்டியலிடுதல், பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை வகைப்படுத்துதல் என மாணவர்களுக்கும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகங்களைத் தொலைத்துவிட்டால், பள்ளி நூலகத்துக்கு ஒரு புத்தகத்தைப் புதிதாக வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கோரலாம். மாணவர் புத்தகத்தைக் கிழித்துவிட்டால், அறிவுரை கூறி எச்சரித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாம். ஒவ்வொரு வாரமும் புத்தகம் வழங்கப்பட்டு, மாணவர்கள் வாசிக்க வேண்டும் என்பதே இலக்கு. ஏறக்குறைய 40,000 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த முன்னெடுப்பு முறையாகச் செயல்படுத்தப்பட்டால் விளைவு அளப்பரியதாக இருக்கும். எதிர்காலச் சமுதாயம் விரும்பத்தக்கதாக மாறும்.



Read in source website