DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 19-06-2022

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரா்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். 17.5 வயதில் இருந்து 21 வயது வரையிலான இளைஞா்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் 25 சதவீதம் போ் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடா்வாா்கள். மற்றவா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. வீரா்களுக்கு முதலாவது ஆண்டில் ரூ.30,000, இரண்டாவது ஆண்டில் ரூ.33,000, மூன்றாவது ஆண்டில் ரூ.36,500, நான்காவது ஆண்டில் ரூ.40,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் முடிவில் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்தாா்.

கரோனா பரவல் காரணமாக, ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பது 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த இளைஞா்கள், அரசின் புதிய அறிவிப்பால் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் இறங்கினா். இதையடுத்து, அக்னிபத் திட்டத்தில் பணியில் சோ்வதற்கான வயது வரம்பை 21 வயதில் இருந்து 23-ஆக உயா்த்தி மத்திய அரசு வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் போராட்டக்காரா்கள் சமாதானம் அடையவில்லை.

அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணியாற்றும் அக்னி வீரா்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம் ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகள் வாக்குறுதி அளித்துள்ளன.

10% இடஒதுக்கீடு: இந்நிலையில், மத்திய ஆயுத போலீஸ் படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. அவா்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளா்வு அளிக்கப்படும் என்றும், முதல் முறை சோ்க்கப்படும் வீரா்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளா்வு அளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்சமயம் துணை ராணுவப் படைகளில் 18-23 வயதுக்கு உள்பட்டவா்கள் சோ்த்துக் கொள்ளப்படுகிறாா்கள்.

அக்னிபத் திட்டத்தில் நிகழாண்டு சோ்க்கப்படும் வீரா்களுக்கு வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே வரவேற்றிருந்தாா்.

இதேபோல், இந்திய கடலோரக் காவல் படை, பாதுகாப்புத் துறையின் 16 பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் ராணுவ வீரா்களுக்கான இடஒதுக்கீடுக்கு பாதிப்பின்றி இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் 6 துறைகளில் அக்னி வீரா்களுக்கு பணிவாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தனது துறைகளில் அக்னி வீரா்களுக்கு வேலை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறியுள்ளாா்.

முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் தில்லியில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இக்கூட்டத்தில் விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி, கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், ராணுவத் தளபதி பி.எஸ்.ராஜு ஆகியோா் கலந்து கொண்டனா். ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே அலுவல் நிமித்தமாக ஹைதராபாத் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இக்கூட்டத்தில், அக்னிபத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவது குறித்தும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, முன்னாள் ராணுவ வீரா்களுடன் விரிவாக விவாதித்த பிறகே அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா். அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் அவா் கூறினாா்.

முன்னதாக, அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்க்கும் பணியை, வரும் 24-ஆம் தேதி தொடங்குவதாக விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி வெள்ளிக்கிழமை கூறினாா். அக்னி வீரா்களைச் சோ்ப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஓரிரு நாள்களில் தொடங்குவதாக ராணுவமும், விரைவில் தொடங்குவதாக கடற்படையும் தெரிவித்துள்ளன. மொத்தத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அக்னி வீரா்களைச் சோ்க்கும் பணியை முடிப்பதற்கு முப்படைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: அனுராக் தாக்குா்

‘அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராடும் இளைஞா்கள் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இளைஞா்களுக்கு வேலை அளிக்கவும், அதேசமயம் நாட்டைக் காக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுதான் அக்னிபத் திட்டம்.

ராணுவத்தில் சேர விரும்பும் எந்தவொரு இளைஞரும் வன்முறைப் பாதைக்குச் செல்ல மாட்டாா். ஆனால், எந்தவொரு மாற்றதுக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கு சந்தா்ப்பம் தேடும் சில அரசியல் கட்சிகள், இளைஞா்களைத் தூண்டிவிட்டுள்ளன. எனவே, இளைஞா்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், பொதுச் சொத்துகளுக்கு தீவைக்க உரிமையில்லை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.

அக்னிபத் திட்டம் தொடா்பாக ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்பினால் ஊடகங்கள் வாயிலாக அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞா்கள் தெரிவிக்கலாம். அவற்றைத் திறந்த மனதுடன் கேட்பதற்கு அரசு தயாராக உள்ளது; தேவைப்பட்டால் இத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். பிரச்னைக்கு வன்முறை மூலம் தீா்வு கிடைக்காது, பேச்சுவாா்த்தை மூலமே தீா்வுகாண முடியும் என்றாா் அவா்.



Read in source website


மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பிரத்யேகமாகப் பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

"மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான மருத்துவப் பரிசோதனைகளை முடித்துள்ளோம். அதன் தரவுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் தரவுகளை சமர்ப்பிக்கவுள்ளோம்.

அனைத்தும் சரியாக நடந்தால், அதை அறிமுகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கும். உலகிலேயே பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட மூக்கின்வழி செலுத்தப்படும் முதல் கரோனா தடுப்பு மருந்தாக இது இருக்கும்" என்றார் அவர்.

மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கான மூன்றாவது கட்ட பரிசோதனை மேற்கொள்ள மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நடப்பு நிதியாண்டுக்கான முதல்கட்ட தங்கப்பத்திர வெளியீடு திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதன் விலை கிராமுக்கு ரூ.5,091-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:

முதல் கட்ட வெளியீடு: நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான முதல்கட்ட தங்கப்பத்திர வெளியீடு திங்கள்கிழமை (ஜூன் 20) தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 24) நிறைவடையவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.5,091-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 தள்ளுபடி: மத்திய அரசுடன், ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் ஆன்லைன் முறையில் தங்கப்பத்திரங்களை வாங்க விண்ணபித்து எண்ம முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளா்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையான முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.5,041 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் கட்ட தங்கப்பத்திர விற்பனை ஆகஸ்ட் 22 முதல் 26 வரையில் நடைபெறவுள்ளது.

8-ஆண்டு முதிா்வு காலம்: இக்கடன்பத்திரங்களுக்கான முதிா்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளா்கள் இந்த திட்டத்திலிருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 4 கிலோ: இத்திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு நிலையான அளவில் 2.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

வங்கிகள்: பங்குச் சந்தை, அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கத்தின் நேரடி பயன்பாட்டை குறைத்து உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் கடந்த 2015 நவம்பரில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கோட்ஸ்

நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான முதல்கட்ட தங்கப்பத்திர வெளியீடு ஜூன் 20 -இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.5,091-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.



Read in source website

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரா்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். 17.5 வயதில் இருந்து 21 வயது வரையிலான இளைஞா்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் 25 சதவீதம் போ் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடா்வாா்கள். மற்றவா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. வீரா்களுக்கு முதலாவது ஆண்டில் ரூ.30,000, இரண்டாவது ஆண்டில் ரூ.33,000, மூன்றாவது ஆண்டில் ரூ.36,500, நான்காவது ஆண்டில் ரூ.40,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் முடிவில் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் அறிவித்தாா்.

கரோனா பரவல் காரணமாக, ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பது 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த இளைஞா்கள், அரசின் புதிய அறிவிப்பால் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் இறங்கினா். இதையடுத்து, அக்னிபத் திட்டத்தில் பணியில் சோ்வதற்கான வயது வரம்பை 21 வயதில் இருந்து 23-ஆக உயா்த்தி மத்திய அரசு வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் போராட்டக்காரா்கள் சமாதானம் அடையவில்லை.

அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணியாற்றும் அக்னி வீரா்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம் ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகள் வாக்குறுதி அளித்துள்ளன.

10% இடஒதுக்கீடு: இந்நிலையில், மத்திய ஆயுத போலீஸ் படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. அவா்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளா்வு அளிக்கப்படும் என்றும், முதல் முறை சோ்க்கப்படும் வீரா்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளா்வு அளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்சமயம் துணை ராணுவப் படைகளில் 18-23 வயதுக்கு உள்பட்டவா்கள் சோ்த்துக் கொள்ளப்படுகிறாா்கள்.

அக்னிபத் திட்டத்தில் நிகழாண்டு சோ்க்கப்படும் வீரா்களுக்கு வயது உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே வரவேற்றிருந்தாா்.

இதேபோல், இந்திய கடலோரக் காவல் படை, பாதுகாப்புத் துறையின் 16 பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் ராணுவ வீரா்களுக்கான இடஒதுக்கீடுக்கு பாதிப்பின்றி இந்த இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் 6 துறைகளில் அக்னி வீரா்களுக்கு பணிவாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தனது துறைகளில் அக்னி வீரா்களுக்கு வேலை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறியுள்ளாா்.

முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் தில்லியில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இக்கூட்டத்தில் விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி, கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், ராணுவத் தளபதி பி.எஸ்.ராஜு ஆகியோா் கலந்து கொண்டனா். ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே அலுவல் நிமித்தமாக ஹைதராபாத் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இக்கூட்டத்தில், அக்னிபத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவது குறித்தும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, முன்னாள் ராணுவ வீரா்களுடன் விரிவாக விவாதித்த பிறகே அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா். அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் அவா் கூறினாா்.

முன்னதாக, அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்க்கும் பணியை, வரும் 24-ஆம் தேதி தொடங்குவதாக விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி வெள்ளிக்கிழமை கூறினாா். அக்னி வீரா்களைச் சோ்ப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஓரிரு நாள்களில் தொடங்குவதாக ராணுவமும், விரைவில் தொடங்குவதாக கடற்படையும் தெரிவித்துள்ளன. மொத்தத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அக்னி வீரா்களைச் சோ்க்கும் பணியை முடிப்பதற்கு முப்படைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: அனுராக் தாக்குா்

‘அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராடும் இளைஞா்கள் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இளைஞா்களுக்கு வேலை அளிக்கவும், அதேசமயம் நாட்டைக் காக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுதான் அக்னிபத் திட்டம்.

ராணுவத்தில் சேர விரும்பும் எந்தவொரு இளைஞரும் வன்முறைப் பாதைக்குச் செல்ல மாட்டாா். ஆனால், எந்தவொரு மாற்றதுக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கு சந்தா்ப்பம் தேடும் சில அரசியல் கட்சிகள், இளைஞா்களைத் தூண்டிவிட்டுள்ளன. எனவே, இளைஞா்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், பொதுச் சொத்துகளுக்கு தீவைக்க உரிமையில்லை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.

அக்னிபத் திட்டம் தொடா்பாக ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்பினால் ஊடகங்கள் வாயிலாக அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞா்கள் தெரிவிக்கலாம். அவற்றைத் திறந்த மனதுடன் கேட்பதற்கு அரசு தயாராக உள்ளது; தேவைப்பட்டால் இத்திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். பிரச்னைக்கு வன்முறை மூலம் தீா்வு கிடைக்காது, பேச்சுவாா்த்தை மூலமே தீா்வுகாண முடியும் என்றாா் அவா்.



Read in source website

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சோ்க்க வேண்டும் என கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பரிந்துரைத்துள்ளாா்.

தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடக்கி வைத்தாா்.

மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து 20-ஆம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சோ்ந்த 600 மாணவா்கள் இதில் கலந்து கொண்டுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘கரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இன்னல்களைப் போக்கவும், நெகிழ்தன்மையைக் கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்தது.

தேசிய கல்விக் கொள்கை 2020, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்,

பாடத் திட்டத்தில் யோகாவை சோ்க்க வேண்டும். தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி, வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த வேண்டும் என்றாா்.



Read in source website

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வரும்நிலையில், ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்க ரயில்வே சட்டம் வலுப்படுத்தப்படும் என்று அத்துறையின் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவா், ‘ஆா்ப்பாட்டக்காரா்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கும். ரயில்வே பொது மக்களின் சொத்து. விமான சேவையை ஏற்க முடியாத நடுத்தர மக்கள், நாடு முழுவதும் ரயில் சேவையைதான் பயன்படுத்தி வருகிறாா்கள்.

ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்க ரயில்வே சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவா்கள் இந்திய ரயில்வே சட்டம் 151 பிரிவின்படி அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம். ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதால் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கு தீா்வு ஏற்படப் போவதில்லை.

புல்லட் ரயில் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 2026-இல் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும். மகாராஷ்டிர மக்கள் தங்கள் மாநிலத்தில் புல்லட் ரயில் இயங்குவதை வரவேற்கிறாா்கள். ஆனால், மாநில அரசு விரும்பினால்தான் அங்கு புல்லடா் ரயிலின் செயலாக்கம் தொடங்கும் என்றாா்.



Read in source website

 6 மாதக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை அவசரக் காலத்தில் செலுத்துவதற்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் மாடா்னா நிறுவனங்கள், 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயது சிறுவா்கள் வரை கரோனாவிடமிருந்து எதிா்ப்பாற்றல் பெறுவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அவற்றை அந்த வயதுப் பிரிவினருக்குச் செலுத்துவதற்கு உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ராபா்ட் கலிஃப் கூறியதாவது:

ஏராளமான பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்புசிக்காக நீண்ட காலம் காத்திருக்கின்றனா். அவா்களது தேவையை பூா்த்தி செய்யும் விதமாக, குறைந்தபட்சம் 6 மாதக் குழைந்தைகளுக்கு செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் மற்றும் மரணம் போன்ற மோசமான பாதிப்புகளைக் குறைக்கும் என்றாா் அவா்.

ஆா்என்ஏ-வை அடிப்படையாகக் கொண்ட இந்த இரு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தக் கூடியவை.



Read in source website

உக்ரைன் உணவு தானிய கப்பல்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்த உலகை ரஷியா பஞ்ச அபாயத்துக்கு இட்டுச் செல்வதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரெல் சனிக்கிழமை கூறியதாவது:

கருங்கடலை முற்றுகையிட்டு, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்கள் வெளியே செல்லவிடாமல் ரஷியா தடுத்து வருகிறது.

இதன் மூலம், இந்த உலகில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது.

உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்காக ஐ.நா. அமைப்பு மற்றும் பிற நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.

உக்ரைன் போரில் தனது இலக்கை அடைவதற்காக உணவு தானிய ஏற்றுமதியை ஓா் ஆயுதமாக ரஷியா பயன்படுத்துகிறது.

உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எழும் குரல்களை அந்த ஆயுதம் மூலம் ரஷியா நசுக்கப்பாா்க்கிறது.

கருங்கடல் பகுதியை அந்த நாடு ஒரு போா்க் களமாகவே ஆக்கியிருக்கிறது. அந்தப் பகுதிய வழியாக உணவு தானியங்களையும் பிற நாடுகளில் உணவு உற்பத்தி செய்வதற்குத் தேவையான உரப் பொருள்களையும் ஏற்றியிருக்கும் உக்ரைன் கப்பல்கள் வெளியேற முடியாமல் ரஷிய கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

ரஷியாவின் இந்த முற்றுகை, அந்த நாட்டின் உணவு தானிய ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. இது தவிர, தனது தானிய ஏற்றுமதிக்காக கட்டுப்பாடுகளையும் கூடுதல் வரிகளையும் ரஷியா விதித்துள்ளது.

ஆனால், ஐரோப்பிய யூனியன் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால்தான் உணவு தானிய ஏற்றுமதி தடைபட்டுள்ளதாக அந்த நாடு கூறி வருகிறது. இதன் மூலம், இந்த விவகாரத்தில் தன்னுடைய கண்ணோட்டத்தை ரஷியா திணிக்கப் பாா்க்கிறது.

உண்மையில், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளில் உணவுப் பொருள் ஏற்றுமதியை பாதிக்கும் எந்த அம்சங்களும் இல்லை. ரஷியாவின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையோ, அதற்கான தொகையை அந்த நாடு பெறுவதையோ ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகள் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.

வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் தொடா்புடைய எந்த நபா் அல்லது நிறுவனங்கள் மீதும் ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதிக்கவும் இல்லை.

இந்த நிலையில், உலகம் எதிா்நோக்கியுள்ள உணவுப் பஞ்சத்துக்கு ஐரோப்பிய யூனியன்தான் காரணம் என்ற தோற்றத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது.

ஐ.நா.வுடனும் பிற ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து விரைவில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்போம் என்று நம்புகிறேன்.

அவ்வாறு தீா்வு காணாவிட்டால் இந்த உலம் மிகக் கொடூரமான உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் எல்லையில் போா்க் கப்பல்கள் மூலம் முற்றுகையிட்டுள்ள ரஷியா, அந்தக் கடல் வழியான உக்ரைன் கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் துறைமுகங்கள் முடக்கப்பட்டுள்ளதால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஐ.நா. உணவுப் பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் டேவிட் பியாஸ்லி குற்றம் சாட்டினாா்.

உலகம் முழுவதும் 12.5 கோடி பேருக்கு உணவு அளிக்கும் ஐ.நா.வின் திட்டத்துக்கு 50 சதவீத உணவு தானியங்கள் உக்ரைனிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, விளாதமீா் புதினுக்கு இருதயம் இருந்தால் உக்ரைன் துறைமுகங்களை அவா் திறந்துவிட வேண்டும் என்று அவா் கடந்த மாதம் வலியுறுத்தினாா்.

அதற்கு, தற்போதைய உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடிக்கு, உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் ஒரு காரணம் என்று ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரி ருடென்கோ கூறினாா்.

அந்தத் தடைகள் வழக்கமான வா்த்தகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, கோதுமை, உரம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உக்ரைன் துறைமுகங்களை திறந்துவிட வேண்டுமென்றால், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று அவா் வலியுறுத்தினாா்.

இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.



Read in source website

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) டி20 6-ஆவது சீசன் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. முதன்முறையாக சேலம், கோயம்புத்தூரிலும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

டிஎன்சிஏ சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎல் லீக் போட்டியின் ஆட்டங்கள் நிகழாண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் முதன்முறையாக நடைபெறவில்லை. புதிதாக சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம், கோவை எஸ்என்ஆா் கல்லூரி மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜூலை 31-ஆம் தேதி கோவையில் இறுதி ஆட்டம் நடைபெறும்.

39 நாள்கள் நடைபெறும் இதில் பிளேஆஃப் உள்பட 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சாம்பியனுக்கு ரூ.50 லட்சமும், ரன்னா் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசளிக்கப்படும். 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் நடைபெறும் இதில் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

டிஎன்பிஎல் தொடரில் ஆடிய 14 வீரா்கள் ஐபிஎல் 2022 தொடரிலும் ஆடினா் என்பது குறிப்பிடத்தக்கது. இதை டிஎன்சிஏ செயலாளா் ஆா்.எஸ். ராமசாமி தெரிவித்தாா். டிஎன்பிஎல் சோ்மன் சிவக்குமாா், கிரிக்கெட் வீரா் முரளி விஜய், தொழிலதிபா் சுப்பிரமணியம் ஐயா், சித்தாா்த் பங்கேற்றனா்.

 



Read in source website

தென்தமிழகத்தின் முதல் அருங் காட்சியகமும், முதல் புத்தகக் கடையும் உருவான இடம் மதுரை புதுமண்டபம்தான் என்பதற் கான கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரையில் கி.பி.1800-களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ‘காவல் கோட்டம்’ நாவலில் எழுதி உள்ளேன். பழங் காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகள் புத்தகங்களாக மாறி, அந்த புத்தகங்களை விற்க ‘புத்தகக் கடைகள்’ முதன்முதலில் உருவான இடம் மதுரை புதுமண்டபம்.

கிபி.1800-களின் இறுதி பத் தாண்டில் ராமநாதபுரத்திலிருந்து மதுரை வந்த பாண்டித்துரைதேவர் கம்பராமாயணம், திருக்குறள் புத்தகம் படிப்பதற்காக நண்பர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. இறுதியில் புதுமண்டபத்திலுள்ள கடைகளிலிருந்து 2 புத்தகத்தையும் வாங்கி உள்ளார். அதன் பின்னரே, நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தொடங்கும் எண்ணம் அவருக்கு உருவாகியுள்ளது.

இவ்வரலாற்றின் தொடர்ச்சி யாக 1942-ம் ஆண்டு புதுமண்டபத் தின் மையப்பகுதியில் அருங்காட்சி யகத்துடன் அமைந்த நூலகம் ஒன்று, அன்றைய சென்னை மாகாண கவர்னரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் கல்வெட்டு, புது மண்டபத்தின் மையப்பகுதி நுழைவாயில் கதவோரம் இருந்ததை 25 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்துள்ளேன். ஆனால், இடையில் அக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட தூணைக் காண வில்லை. புது மண்டபத்துக்கு போகும் போதெல்லாம் அந்த தூணைத் தேடுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இக்கல்வெட்டு தொடர்பாக பேசியுள்ளேன்.

தற்போது புதுமண்டபத்திலி ருக்கும் கடைகள் முழுவதும் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப் பட்டுள்ளதால் 100 ஆண்டுக்குப் பிறகு புதுமண்டபம் மீண்டும் ‘பழைய மண்டபமாக’ காட்சி அளிக்கிறது. புதுமண்டபத்தில் நடக்கும் வசந்த விழாவுக்காக சுத்தம் செய்தபோது ஒரு ஓரத்தில் கல்தூண் கிடந்துள்ளது. அதனைப் புரட்டிப் பார்த்தபோது சென்னை மாகாண கவர்னரால் அருங்காட்சியகமும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு எனத் தெரிந்தது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



Read in source website

குன்னூர்: மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை இடையே இயங்கும் நீலகிரி மலை ரயில், பல் சக்கரத்தின் உதவியுடன் நூறாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. மலைப் பாதையில் மலை ரயிலை இயங்க ‘பிரேக்ஸ் மேன்’ என்னும் பணி மிக முக்கியமானது.

ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் ‘பிரேக்ஸ் மேன்’ இருப்பார்கள். இவர்கள் மலைப் பாதையில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தேவையான இடங்களில் பிரேக்கை பயன்படுத்துவார்கள். ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள ‘பிரேக்ஸ் மேன்’களுக்கு இவர்கள் சிக்னல் தருவார்கள். அதற்கேற்றாற்போல மற்ற ‘பிரேக்ஸ் மேன்’களும் தயாராக இருப்பார்கள்.

இந்தப் பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், முதல் முறையாக, குன்னூரைச் சேர்ந்த சிவஜோதி (45) என்ற பெண் ‘பிரேக்ஸ் உமன்’ பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே இவரை ‘பிரேக்ஸ் உமன்’ பணிக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டது. இவர் இந்தப் பணியில் ஏற்கெனவே ஆர்வமாக இருந்ததால், மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ரயில்வே சார்பில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, மலை ரயிலில் இவர் ‘பிரேக்ஸ் உமன்’ பணியைத் தொடங்கியுள்ளார். ‘பணியின் மீதான ஆர்வம், தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எதுவுமே சாத்தியம்’ என்றார் சிவஜோதி.



Read in source website

புதுடெல்லி: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா தற்போது 30 சதவீத தள்ளுபடியில் நிலக்கரியையும் வாங்கி குவித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் 6 மடங்கு நிலக்கரி ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியுள்ளது. மே மாதத்தில் ஒரு நாளைக்கு 840,645 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரலில் 388,666 பீப்பாய்களாக இருந்தது.

30% தள்ளுபடியில் கச்சா எண்ணெய்

இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. அதிக சப்ளை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இராக் உள்ளது.

இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு போக்குவரத்து செலவு அதிகமாக இருந்ததால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் வாங்குவது குறைவாக இருந்தது. தற்போது அதிகமான தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவு மே மாதத்தில் சுமார் 16.5 சதவீதமாகும். ஜூன் மாதத்தில் இது மேலும் உயரக்கூடும். ஜூன் மாத இறக்குமதி 1.05 மில்லியன் பீப்பாய்கள் என்ற உச்ச எண்ணிக்கையை தொடும் என நம்பப்படுகிறது.

பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 30 டாலர் விலைக்கும் குறைவாகவே ரஷ்யா வழங்குகிறது. இதனால் இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன.

நிலக்கரி இறக்குமதி

இந்தநிலையில் கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இதனையும் 30 சதவீத தள்ளுபடி விலையில் இந்தியா வாங்கி வருவதாக தெரிகிறது.

அதிக தள்ளுபடியை வழங்கியதால், சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிகஅளவில் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்ததால் 30% தள்ளுபடி விலையில் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து நிலக்கரியும் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிக சரக்கு செலவுகள் இருந்தபோதிலும் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்தியா ரஷ்ய நிலக்கரியை வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்படாத இந்திய அரசின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி இந்த செய்தியை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 15 வரையிலான 20 நாட்களில் அதன் நிலக்கரி மற்றும் தொடர்புடைய பொருட்களை வாங்குவது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே நேரத்தைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகியுள்ளது. 331.17 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.

இதேபோல் 20 நாட்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பு 31 மடங்கு அதிகரித்து 2.22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டன. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பப்பட்டது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு ரயில்கள் மூலம் வேகமாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்தநிலையில் தான் ரஷ்ய நிலக்கரி இந்தியாவுக்கு கைகொடுத்து வருகின்றன.



Read in source website

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக (சிக்ரி) இயக்குநர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை, அதே வெப்ப நிலை யில் உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பம் கோவையைச் சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறியதாவது: சிக்ரி நிறுவனத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு, 19 கண்டுபிடிப்புகளை தேர்வு செய்துள்ளோம். இதில் முதல் வெற்றியாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு குளிர்விக்கப்பட்டு, மீண் டும் அதிக அழுத்தம் மற்றும் வெப் பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம்.

அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகை யில், எங்களது புதிய தொழில் நுட்பம் இருக்கும். அதன்படி, தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளியேறும் கார் பன்டை ஆக்சைடை, அதே வெப்ப நிலையில் பயனுள்ள திடநிலை யாக மாற்றி பயன்படுத்த முடியும். இதன் மூலம் வெப்பமயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை சிமென்ட் ஆலை, அனல்மின் நிலையங்கள், இரும்புத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பயன் படுத்த முடியும் என்றார்.



Read in source website


காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல் அண்மையில் சென்னை விக்னேஷ் காவல் நிலைய மரணம் தொடங்கி அடிக்கடி நிகழும் காவல் மரணங்கள் காவல் துறை சீர்திருத்தங்களின் உடனடித் தேவையை பேசுபொருளாக்கி உள்ளன.

‘காவல் துறை புகார் ஆணையம்’ குறித்த ஓர் வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவது காவல் துறையின் பேதலித்த மனநிலையையே காட்டுகிறது என கண்டனம் தெரிவித்திருந்தது.

அந்த வழக்கு திங்கள்கிழமை (ஜுன் 20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மனுதாரரின் வாதம் என்னவென்றால், 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு காவல் துறை (சீர்திருத்த) சட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட அளவிலான “காவல் துறை புகார் ஆணையங்கனின்” அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் 2006-ஆம் ஆண்டு உத்தரவுக்கு முரணானவை என்பதாகும்.

காவல்துறை சீர்திருத்தம் குறித்த 2006-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், காவலில் ஏற்படும் கைதிகளின் கொலைகள், மரணங்கள், பாலியல் வல்லுறவு, தாக்கி காயங்களை ஏற்படுத்துவது மற்றும் பிற அத்துமீறல்களை விசாரிக்க மாநில அளவில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலும், மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலும் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், 2013-ஆம் ஆண்டின் தமிழக சட்டமோ, இந்த ஆணையங்கள் முறையே உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்க வழிவகை செய்தது. இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டாலும், அவை செயல்படுவது பொதுமக்களுக்கு தெரியும் வகையில் இதுவரை எந்த ஏற்பாடும் இல்லை என்பது வேதனை. தற்போது நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஆணையங்களை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? எனவும் நீதிபதிகள் கேட்டிருந்தனர். 

உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், புகார் ஆணையம் அமைப்பது குறித்த 2013-ஆம் ஆண்டின் சட்டப்பிரிவுகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அவற்றை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜுன் 20) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த விசாரணையின் போதாவது, தமிழ்நாடு அரசு, நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்ட காவல் துறை புகார் ஆணையங்களை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப் போகிறதா என்பது தெரியவில்லை.

தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த சட்டத்தில், புகார் ஆணையங்களின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, வேறு பிரச்னைகளும் உள்ளன.

தற்போதைய சட்டப் பிரிவின் படி, பாதிக்கப்பட்ட நபர் அல்லது உறவினர், காவல்துறையினர் குறித்த புகார் அளிப்பதன்றால் அது நோட்டரி பப்ளிக் (நன்னடத்தை அலுவலரால்) சான்றொப்பமிட்ட வாக்குமூலம் வடிவில் இருக்க வேண்டும். மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே, புகார் ஆணையம் அதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். இந்த நடைமுறைகள், புகார் அளிக்க முன்வருபவரை ஊக்கமிழக்கச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, புகார் ஆணையங்களின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டு சட்டத்திலோ, பரிந்துரையின் மீது அரசு நடவடிக்கை எடுப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இவ்வாறு செய்யப்படாவிட்டால், புகார் ஆணையங்களால் பயனேதும் விளையப்போவதில்லை. 

இந்த பின்னணியில், காவல் துறை சீர்திருத்தங்கள் குறித்து, ஒரு மைல்கல்லாக விளங்கும் செப்டம்பர் 22, 2006 தீர்ப்பின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வது நமக்கு உதவும். 
  
சீர்திருத்தங்களின் தேவை:

பொதுமக்கள் அளிக்கும் நியாயமான புகார்களைப் பதிய மறுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது தொடங்கி, ஆளுங்கட்சிகளின் கைப்பாவையாக மாறுவது, போலி `மோதல் சாவுகள்’, காவல் நிலைய பாலியல் வல்லுறவு உள்ளிட்ட அப்பட்டமான, கொடூரமான மனித உரிமைகள் மீறல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல் துறை மீது இருந்து வருகிறது.

1861ஆம் ஆண்டு காவல் துறை சட்டம், காலனியாதிக்க அடக்கமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இச் சட்டம் விடுதலை பெற்ற இந்தியாவின், ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலைமைகளை மாற்றும் நோக்கில், ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில் 1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது தேசிய காவல் ஆணையம் (National Police commission). இது எட்டு அறிக்கைகளை சமர்ப்பித்தது.

சுதந்திர இந்தியாவில், பிரிட்டிஷ் காலனியாதிக்க அடக்குமுறை நடைமுறைகளை கைவிடுவது தொடங்கி அடிநிலைக் காவலர்களின் பணிநிலை, ஊதிய விகிதம், தேர்வு, காவலர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் பரிந்துரைகளை வழங்கியது அந்த ஆணையம். 

தேசிய காவல் ஆணையத்தின் பரிந்துரைகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகள், சட்டக் கமிஷன், ரிபைரோ கமிட்டி, பத்மநாபய்யா கமிட்டி, குற்றவியல் நீதி அமைப்பு பரிந்துரைகள் குறித்த மாலிமத் கமிட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் செப். 2006ல் தனது தீர்ப்பில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையில், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான சோலி சோராப்ஜி தலைமையிலான குழு மாதிரி போலீஸ் சட்டத்தை வடிவமைத்து மாநில அரசுகளுக்கு சுற்றுக்குவிட்டது. இவற்றை ஆராய்ந்து மாநில அரசுகள் காலனியாதிக்க போலீஸ் சட்டத்துக்கு பதில் மாற்று சட்டத்தை இயற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தன.

அந்த வகையில் தமிழ்நாடு அரசும், காவல் துறை (சீர்திருத்த) சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், இந்த சட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்  அடிப்படை நோக்கை நீர்த்துப் போகும் வகையில் அமைந்தன.
 
உச்ச நீதிமன்றத்தின் முதல் வழிகாட்டு நெறிமுறை- மாநில பாதுகாப்பு ஆணையம் அமைப்பது- காவல்துறை நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமையவும், மாநில அரசின் சட்டவிரோத நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், நாட்டின் அரசியல் சட்ட விழுமியங்களின் அடிப்படையில் காவல் துறை செயல்படுவதை உறுதி செய்ய சட்டப்பூர்வ மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த கண்காணிப்பு அமைப்பு முதல்வர் அல்லது காவல் துறை அமைச்சர் தலைமையில் காவல் துறை இயக்குநரை செயலராகக் கொண்டு செயல்பட வேண்டும். அரசின் கட்டுப்பாடின்றி காவல்துறை சுயேச்சையாக செயல்படும் வகையில் இந்த ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அரசைக் கட்டுப்படுத்துவதாக அமைய வேண்டும். பரந்த கொள்கைகளை உருவாக்குவது, காவல்துறையின் செயல்பாட்டை திறனாய்வு செய்வது, காவல் துறை குறித்து, சட்டப்பேரவையின் பரிசீலனைக்கு அறிக்கைகள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும். இந்த ஆணையத்தின் உறுப்பினர்களை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரிபைரோ கமிட்டி, சோராப்ஜி கமிட்டி ஆகியை அளித்துள்ள மாதிரிகளிலிருந்து எதையாவது ஒன்றை பின்பற்றி நியமிக்கலாம். மூன்று குழுக்களின் பரிந்துரைகளிலும் பொதுவாக இடம் பெற்றிருக்கும் சில அம்சங்கள்- முதல்வர் அல்லது காவல் துறை அமைச்சர் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைச் செயலர், டி.ஜி.பி ஆகிய அலுவலர் சார் உறுப்பினர்கள், பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள், நேர்மை-திறமை கொண்ட சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோரை இந்த ஆணையம் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் - மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையின் உணர்வுக்கு எதிராக, இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவது கட்டாயமாக்கப்படவில்லை. 

மேலும், ஆணைய உறுப்பினர்கள் நியமனம் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த எந்த ஒரு மாதிரியையும் பின்பற்றி அமையவில்லை. உள்துறை அமைச்சர் (தமிழ்நாட்டில் முதல்வரே உள்துறையை கவனிக்கிறார்) தலைமையிலான இந்தக் குழுவில் சுயேச்சை உறுப்பினர்களோ, ஓய்வுபெற்ற நீதிபதிகளோ உறுப்பினராக வழி இல்லை. எதிர்க்கட்சித் தலைவரும் ஓர் உறுப்பினர் என்றாலும், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆணையக்கூட்டங்களில் பங்குபெறாத நிலையே தொடர்கிறது.

மேலும், தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி போலீஸ் வாரிய உறுப்பினராக இருக்க வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என மத்திய அரசு அனுப்பிய மாதிரி மசோதாவில் உள்ளன. தமிழக அரசின் சட்டத்தில் இந்த அம்சங்கள் இடம் பெறவில்லை.
  
டிஜிபி தேர்வும், குறைந்தபட்ச பணிக்காலமும்:

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்-பணிக்காலம், பணியில் சிறந்து விளங்கியது, காவல் துறையின் பல பிரிவுகளில் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், முதுநிலையில் உள்ள மூன்று அதிகாரிகளின் பட்டியல் மத்திய தேர்வாணையத்தால் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்படும். இப்பட்டியலிலிருந்து மாநில அரசு ஒருவரை டிஜிபியாக தேர்வு செய்யலாம். அவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து டி.ஜி.பி. பதவி வகிக்க வேண்டும். அனைத்திந்திய போலீஸ் சேவை விதிகளின்படி அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டாலோ, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலோ, ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவோ, அவர் பணிகளைச் செய்ய முடியாமல் போனாலோ மட்டும், மாநில பாதுகாப்பு ஆணையத்துடன் கலந்தாலோசித்து டிஜிபியை பணியிலிருந்து விடுவிக்கலாம். இல்லையெனில் அவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

இதே போன்று ஐ.ஜி. முதல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வரை குறைந்தபட்சம் ஓர் இடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மேற்கண்டது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டும் அவர் இடமாறுதல் செய்யப்படவேண்டும்.

மாநில சட்டம்- காவல்துறைத் தலைவரின் ( டி.ஜி.பி) பதவிக்காலம் குறைந்தது இரு ஆண்டுகளாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு கூறிய மூன்று அதிகாரிகள் பட்டியல் என்பதற்கு பதில் ஐந்து அதிகாரிகள் பட்டியலில் இருந்து டி.ஜி.பியை தேர்வு செய்யலாம் என்கிறது. மேலும், “பிற நிர்வாக காரணங்களுக்காக (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே) விடுவிக்கப்படலாம்’ என்ற விதி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

தனித்தனியாக பிரிப்பது- காவல் துறையின் விசாரணைப் பிரிவையும், சட்டம்-ஒழுங்குப் பிரிவையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற ஆணைக்கு ஏற்ப, காவல்நிலைய அளவில் அந்தப் பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் மற்றொரு உத்தரவுப்ப படி நான்கு படிநிலைகளில் காவல் பணிநிலை வாரியங்கள் அமைக்க தமிழ்நாடு சட்டம் வழி செய்திருந்தாலும், அதன் அமைப்பு, உறுப்பினர்கள் விவரம் சட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் தாண்டி, காவல் துறையை மக்கள் காவல் துறையாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.



Read in source website

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டது. அந்த ஆறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாக இங்கே குறிப்பிடுகிறேன்.

  _ இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் பிரத்தியோக டிஜிட்டல் அடையாள முறையை அமல்படுத்துதல்.

 _ கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

  _ யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகியமூன்று தீவுகளிலும் கலப்பு மின்சக்தி திட்டங்களை அமல் படுத்துதல்.

   _  இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை நல்குதல்.

  _  காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் பிரத்யோகமாக கல்வி மென் பொருள்களுடன் கூடிய ஸ்மார்ட் அட்டைகளோடு நவீன கணித ஆய்வுக் கூடங்களை அமைத்தல்.

 _ வெளிநாட்டு சேவைக்கான சுஷ்மா சுவராஜ் நிலையம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

இவற்றுள் இரண்டாவதாகக் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது, இந்திய அரசாங்கத்தின் 6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியோடு இலங்கையில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய உளவு விமானங்கள் இலங்கை வானத்தைப் பயன்படுத்தும். இலங்கை தன்னுடைய கடல் மற்றும் வான் பாதுகாப்பை இந்தியாவுடன் நேரிடையாக பகிர்ந்து கொள்வதாக கருதலாம். கடல் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்தில் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இந்த நிலையம் மிகவும் அவசியம். மூன்றாவது உடன்படிக்கையை முன்பே இலங்கை சீனாவுடன் மேற்கொண்டிருந்தது. இப்போது சீனாவுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும், சில ஒப்பந்தங்கள் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 61,886 மில்லியன் ரூபா நட்டமடைந்திருந்தது.

இலங்கை மின்சார சபைக்கு 929 மில்லியன் ரூபாயும் அதே போல தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (National Water Supply and Drainage Board) 825 மில்லியன் ரூபா நட்டத்தையும் சந்தித்தது.

இது மட்டுமின்றி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (Airport and Aviation Services) ரூ. 1,792 மில்லியன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankan Airlines) ரூபா 24,800 மில்லியன் நட்டத்தையும் எதிர்கொண்டது.

அதே போல இலங்கை போக்குவரத்து சபை (Sri Lanka Transport Board) 3,215 ரூபாய் நட்டத்தை சந்தித்து இருந்தது.

இது தவிர, அரசு பொறியியல் கூட்டுத்தாபனம் (State Engineering Corporation) 730 மில்லியன் ரூபாய் நட்டமும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்திற்கு (Central Engineering Consultancy Bureau) 6 மில்லியன் ரூபாய் நட்டமும் ஏற்பட்டுடிருந்தது.

அதே போன்று அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமான நிறுவனம் (State Development and Construction Corp) 106 மில்லியன் ரூபாய் நட்டமடைந்து இருந்தது.

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantations Corporation) ரூ.95 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருந்தது.

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (Janatha Estates Development Board) 118 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்து இருந்தது

களுபோவிடியன தேயிலை தொழிற்சாலைற்கு (Kalubovitiyana Tea Factory) 34 மில்லியன் ரூபாயும் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி சேவை (Independent Television Network Ltd) 244 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் சந்தித்தது.

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் (Sri Lanka Rupavahini Corporation) ரூபா 56 மில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டது.

இலங்கை கைப்பணி பொருள்கள் சபை (Sri Lanka Handicraft Board) ரூ.58 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருந்தது.

சதொச நிறுவனத்திற்கு (Lanka Sathosa Ltd) ரூ.151 மில்லியன் நட்டம் ஏற்பட்டிருந்தது.

இலங்கை அச்சக கூட்டுத்தாபனம் (State Printing Corporation) ரூ.226 மில்லியன் நட்டமும் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் (Ceylon Fisheries Corporation) 43 மில்லியன் ரூபாயும் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு (Ceylon Fishery Harbour Corporation) ரூ.83 மில்லியன் நட்டம் ஏற்பட்டு இருந்தது.

இது போதாதென்று ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் (Hotel Developers Lanka Ltd) ரூ.153 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்து இருந்தது.

இந்த நிலைமை வெறுமனே அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மட்டுமின்றி அரசாங்கத்தின் சகல அமைச்சகங்கள், துறைகள், கூட்டுத்தாபனங்கள் என மத்திய அரசின் நிர்வாக அலகுகள் தொடக்கம் மாவட்ட அரச செயலகங்கள் வரை தொடர்கின்றது.

குறிப்பாக வினைத்திறனற்ற நிதி நிர்வாகம் , வளங்களின் வீண் விரயம், ஊழல் மோசடிகள் , அளவுக்கதிமான அரச ஊழியர்கள் , அரசியல் தலையீடுகள் , அரசியல் நியமனங்கள் போன்ற பல காரணங்களினால் அரச நிறுவனங்கள் தோல்வியடைகின்றன. தோல்வியடைகின்ற அரச நிறுவனங்கள் சர்வதேச ரீதியாக ஏற்படும் விலை தளம்பல்களை எதிர்கொள்ள முடிவடைவதில்லை.

இதனால் தோல்வியடைகின்ற நிறுவனங்கள் தங்கள் நட்டங்களை  பொதுமக்கள் மீது சுமத்தி விடுகின்றார்கள்

குறிப்பாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 62,000 மில்லியன் ரூபாய் நட்டமடைந்திருக்கின்ற நிலையில் சர்வதேச விலை மாற்றங்களை தனித்து எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றது.

ஆகவே, வெறுமனே மீள மீள கடன்களைப் பெற்று கொள்வதன் மூலம் மேற்படி நெருக்கடிகளை கட்டுப்படுத்த முடியாது.

சக்தி மிக நாடுகளாக உருவாகி வரும் ருவாண்டா, பங்களாதேஷ், வியட்நாம், எத்தியோப்பியா போன்று இலங்கை தனது செயன்முறைகளையும் அரச நிறுவனக் கட்டமைப்புகளையும் மீள கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

                                                                                                                                 - தொடரும்



Read in source website