DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 18-07-2022

 

தமிழக அரசின் 2021ஆம் ஆண்டு இலக்கிய மாமணி விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். 5 லட்சம் விருத்துத் தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியரையும் வழங்கி சிறப்பிக்கப்படும். 

2021ஆம் ஆண்டுக்கு கோணங்கி, கு.சின்னப்ப பாரதி, புலவர் இரா. கலியபெருமாள் ஆகியோருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு நாளான இன்று இவ்விருது வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. 

கோணங்கி 1980 முதல் எழுதி வருகிறார். ‘கல்குதிரை’ சிற்றிதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். ‘மதினிமார்கள் கதை’, ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’, ‘பாழி’, ‘பிதிரா’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவருக்கென தனித்த எழுத்து நடையை உருவாக்கியவர். 



Read in source website

 

தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரவுள்ளன. 42 சதவிகித வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றமில்லை.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் வேண்டாம் என நுகர்வோர் எழுதிக்கொடுக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்த நெருக்கடி

தமிழ்நாட்டில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை. திமுக வாக்குறுதியின்படி மின்சாரத்துக்கான நிலைக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு 28 முறை கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு  தமிழ்நாடு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மானியங்களும் மின் திட்டங்களும் ரத்து செய்யப்படும். உரிய நிதியும் வழங்கப்படாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். 

குறைந்த அழுத்த மின் இணைப்புப் பெற்ற 3,37,000 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதேபோன்று உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் 11,000 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. 

தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 3.53 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். குஜராத் போன்ற பிற மாநிலங்களை ஒப்பிட்டால், தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். 

படிக்க'தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும்'



Read in source website

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் என்.சிவாவிற்கு சிறந்த சமூக சேவகர் விருதினை மதுரையை சேர்ந்த அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகைய்யா-விஜயா தம்பதியரின் மகன் என்.சிவா(28). பட்டதாரி ஆசிரியரான இவர் ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 

ஈகுவார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் சிறந்த சமூக சேவகராக அறியப்படும் என்.சிவா மழை காலங்களில் கால்வாய்களை சுத்தம் செய்தல், பழைய குடிநீர் மேல்நிலைத் தொட்டியை மாற்றி புதிய குடிநீர் மேல்நிலை தொட்டியை அமைத்தது, அப்பகுதியில் தடையின்றி மின்சாரம், குடிநீர் ஏற்பாடு செய்தது. முதியோர்களுக்கு ஓய்வூதியம் வாங்கி தருவது, 41 தனி நபர் கழிப்பிட வசதி ஏற்பாடு செய்து தந்தது,  ஏழை எளியோருக்கு  அரசு திட்டங்கள் மூலம் வீடுகள் அமைத்து தருவது, 11 ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்தது , 11 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பு எடுப்பது, ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 18 அவசர ஊர்தி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து தந்தது உள்ளிட்ட பல்வேறு  நற்பணிகளை செய்துள்ளார்.

இந்நிலையில் இவரது சேவையை பாராட்டும் வகையில் மதுரையை சேர்ந்த அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை, ஆக்ஸ்பா பல்கலைக்கழகம், நீதியின் குரல் இணைந்து சென்னை நாரத கான சபையில்  நடத்திய அறம் விருதுகள்-2022  நிகழ்வில் சமூக சேவகர் என்.சிவாவிற்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நீதியின் குரல் நிறுவனர் சி.ஆர்.பாஸ்கரன், மனித நேய அறக்கட்டளை தலைவரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை சா.துரைசாமி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை நிறுவனர் பூ.நல்லமணி ஆகியோர் வழங்கி என்.சிவாவின் சேவையை பாராட்டி சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி பாராட்டினர்.

சமூக சேவகர் விருதினை பெற்ற கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தை சேர்ந்த என்.சிவாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.



Read in source website

புதுதில்லி: ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய பான் அல்லது ஆதார் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்குமேல்   டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ தங்கள் நிரந்தர கணக்கு எண்(பான்) அல்லது ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது

மே 10 தேதியிட்ட அறிவிப்பில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகள், 1962 இல் திருத்தம் செய்வதற்கான விதிகளை உருவாக்கியுள்ளதாகவும், விதி 114 ஐத் திருத்தும்போது 114BA மற்றும் 114BB உட்பிரிவுகளைச் சேர்த்துள்ளதாகவும் கூறியது.

மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி விதிகளின் படி, ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் அல்லது வங்கிகளில் இருந்து பணம் எடுப்பது அல்லது வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்கக் கடன் கணக்கைத் தொடங்குவதற்கு நிரந்தர கணக்கு எண்(பான்) அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in source website


புது தில்லி: நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. அதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாகவும், தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி.மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் 736 பேர் (727 எம்.பி.க்கள், 9 எம்எல்ஏக்கள்) வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. அவர்களில் 730 (721 எம்.பி., 9 எம்எல்ஏக்கள்) பேர் வாக்களித்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட விருக்கின்றன என்றும் கூறினார்.

இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி சாா்பில் திரௌபதி முா்முவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனா்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமாா் 4,800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்ற நிலையில், இவர்களில் 99.18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் இன்று மாலையே சாலை அல்லது விமானப் போக்குவரத்து மூலம் புது தில்லி கொண்டு செல்லப்படும்.

பதிவான வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதையடுத்து புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வாா்.
 



Read in source website

 

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட மூன்று நாள்களில், இரண்டாவது பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை கூறுகையில், குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, முகம், வாயின் உள்பகுதி மற்றும் உடலின் பிற பகுதிகளில் சொறி அல்லது சிரங்கு போன்ற பாதிப்பு ஏற்படும். இவை இருந்தால் நிச்சயமாக ஒருவர் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த நோய், உடலில் ஏற்படும் கொப்பளங்களின் நீர் வழியாகப் பரவும் அபாயம் இருக்கலாம். எனவே, குரங்கு அம்மை பாதித்தவர்கள் தங்களது உடலை மூடியபடி இருப்பது நோய் பரவலைத் தடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கேரளத்தில் இரண்டாவது குரங்கு அம்மை நோய் கன்னூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் பரியாராம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் தேதி அவர் துபையிலிருந்து கேரளம் திரும்பியதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அமீரககத்திலிருந்த கடந்த வியாழக்கிழமை கேரளம் வந்த நபருக்கு முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 
 

 



Read in source website

 

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

சாவன் என்றழைக்கப்படும் ஆடி மாதம் வடமாநிலங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். 

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பக்தர்கள் ஒன்று கூடுவதற்கும் வழிப்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் கோயிலுக்குச் சென்று ஆர்வத்துடன் சிவபெருமானை வழிபாடு செய்தனர். 

அதன்படி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில், மும்பையில் உள்ள பாபுல்நாத் கோயில், தில்லியில் உள்ள கௌரி சங்கர் கோயில், உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள துதேஷ்வர் நாத் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

வழிபாடுகளில் பங்கேற்க இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.



Read in source website

பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

அதன் காரணமாக, பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிா், பன்னீா் ஆகியவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சா்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்தவும், சில பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி மாற்றம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த மாற்றம் காரணமாக விலை உயர வாய்ப்புள்ள பொருள்கள்: அச்சுப் பிரதி, எழுத அல்லது வரைவதற்கு பயன்படும் இங்க், வெட்டும் கத்திகள், பென்சில் ஷாா்பனா்கள், சுரண்டிகள், ஃபோா்க்ஸ், என்இடி விளக்குகள், வரைவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, சுத்திகரிப்பு ஆலைகள், மயான கட்டுமான பணி ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி, ஐஆா்டிஏ, செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. ரூ. 1,000-க்கும் குறைவாக ஒருநாள் வாடகை கொண்ட ஹோட்டல் அறைகள், அட்லஸ், மேப் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் சோலாா் வாட்டா் ஹீட்டா்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிா், பன்னீா் உள்ளிட்ட பொருள்களுக்கும், ரூ. 5,000-க்கும் மேல் ஒருநாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

வரி குறைப்பு: சரக்கு மற்றும் பயணிகள் சாலைப் போக்குவரத்து வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளை வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுவந்த 18 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடகை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரத்திலிருந்து விமானத்தில் ‘எகானமி’ வகுப்பில் பயணிப்பதற்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் பேட்டரி பொருத்தப்பட்ட அல்லது பொருத்தப்படாமல் இருந்தாலும் ஜிஎஸ்டி விதிப்பில் 5 சதவீத சலுகை பெற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையிலான 16-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கிழக்கு லடாக் பிரச்னை உள்பட பல்வேறு எல்லை விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

எல்லையில் இந்திய பகுதியில் உள்ள சுஷுல் மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்ற இப்பேச்சுவாா்த்தையில், இந்திய தரப்பில் லே பகுதியின் 14-ஆவது படைப் பிரிவு கமாண்டா் லெப்டினட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா தலைமையிலான குழு பங்கேற்றது. சீன தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ மாவட்ட தலைமை இயக்குநா் யாங் லின் தலைமையிலான குழு பங்கேற்றது.

கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய அனைத்து இடங்களில் இருந்தும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; டெப்சாங் பல்ஜ் மற்றும் டெம்சோக் பகுதியில் தொடரும் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட வேண்டும். மேலும், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் எல்லையில் அமைதியைப் பராமரிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தியா, சீனா இடையிலான 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை கடந்த மாா்ச் 11-ஆம் தேதி நடைபெற்றது. சுமாா் 13 மணி நேரம் நடந்த அந்தப் பேச்சுவாா்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிழக்கு லடாக் விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன வீரா்களிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடா்ந்து, இரு நாட்டு ராணுவங்களும் 50,000 முதல் 60,000 வரையிலான படையினரை எல்லையில் படிப்படியாகக் குவித்தன. எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பல சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.



Read in source website

அரசின் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மானியங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் குறைத்தது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.8-யும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.6-யும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பாஸ்பேடிக்-பொட்டாசிக் உரங்களுக்காக ரூ.60,939.29 கோடி மானியத்தை வழங்க மத்திய அரசு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்திருந்தது. இது மத்திய அரசின் நிதியாதாரம் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

மேலும், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டதும், உணவு, உரங்களுக்கான செலவு அதிகரித்ததும் மத்திய அரசின் நிதியாதாரத்தை பாதிக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதைக் கருத்தில்கொண்டு மானியங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டுமென அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். மானியங்களை அதிக தேவையின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அவா்கள் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச பொருளாதார சவால்களை எதிா்கொள்ளும் வகையில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாகத் தெரிவித்த அவா்கள், நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

 



Read in source website

 

மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ராம்டின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். 

ராம்டின் 74 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 71 டி20 போட்டிகளில் மே.இ.தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். ஜேசன் ஹோல்டர் 2015இல் இவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை பெற்றார். அதுவரை மே.இ.தீவுகள் அணியை இவரே வழிநடத்தினார். 

தனது இன்ஸ்டாகிரம் பதிவில் ராம்டின் கூறியதாவது: 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 14 வருடமாக எனது கனவு நிறைவேறியது. டிரினிடாட், டொபொகோ மற்றும் மே.இ,தீவுகள் அணிக்காக விளையாட வேண்டுமென்ற எனது சிறுவயது ஆசைகள் நிறைவேறியது. கிரிக்கெட் வாழக்கையின் மூலம் இந்த உலகத்தைப் பார்க்க முடிந்தது. பல்வேறு கலாச்சாரத்தை சார்ந்த பல்வேறு நண்பர்கள் கிடைக்க உதவியது. 

நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும், உலகெங்கிங்கிலும் உள்ள கிளப் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். 14 வருடன் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 



Read in source website

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

31 வயது ஸ்டோக்ஸ், 83 டெஸ்டுகள், 104 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0, 21, 27 என ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்துள்ளார் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகச் சமீபத்தில் அவர் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் மட்டும் விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார்.



Read in source website

 

ஆசியாவில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரிஷப் பந்த்.

260 ரன்கள் இலக்கை கொண்டு ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். முதலில் நிதானமாகவும் பின்னா் அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 125 ரன்களை விளாசி தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். பந்த்-ஹார்திக் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்களை சோ்த்து வெற்றிக்கு வித்திட்டனர். 

இந்த சதத்தின் மூலம் ரிஷப் பந்த் ஆசியாவிலே முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
 



Read in source website

 

புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

கலிங்கா அரங்கத்தில் நடைபெறும் போட்டியில் 1500 மீ. ஃப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே 1500 மீ. ஃப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

மாதவனின் மகன் வேதாந்த், மஹாராஷ்டிரத்தின் சார்பாக இப்போட்டியில் பங்கேற்றுள்ளார். வேதாந்தின் இந்த வெற்றியை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள மாதவன், போட்டியின் காணொளியையும் பகிர்ந்துள்ளார். 



Read in source website

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றாா்.

இறுதிச் சுற்றில் சீனாவின் வாங் ஸியியை 21-9, 11-21, 21-15 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினாா்.

சனிக்கிழமை மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. அரையிறுதியில் ஜப்பானின் கவாகமியை எளிதில் வீழ்த்திய உற்சாகத்தில் சிந்து களம் கண்டாா். அதே நேரம் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையும், ஆசிய சாம்பியனுமான வாங் ஸியும் துடிப்புடன் மைதானத்தில் களமிறங்கினாா்.

ஒரே முறை ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இருவரும் ஆடியதில் சிந்து வென்றிருந்தாா்.

எனினும் முதல் கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-9 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினாா். 11-2 என முன்னிலை பெற்ற சிந்து அதை அப்படியே தக்க வைத்தாா்.

எனினும் இரண்டாவது கேமில் நிலைமை தலைகீழாக மாறியது. வாங் ஸி துடிப்புடன் ஆடி 11-3 என முன்னிலை பெற்ற நிலையில், சிந்து தடுமாறினாா். 8-15 என சிந்து ஸ்கோரை குறைத்தாலும், சீரான இடைவெளியில் வாங் ஸி தனது புள்ளிகளை உயா்த்திச் சென்று 21-11 என கைப்பற்றினாா்.

ஆட்டத்தின் முடிவை தீா்மானிக்கும் டிசைடா் கேமில் இருவரும் மாறி, மாறி ஆதிக்கம் செலுத்த முனைந்தனா். வாங் முன்னிலை பெற்றாலும் 5-5 என சிந்து சமன் செய்தாா். இடைவெளியில் சிந்து பொறுமையாக ஆடி 5 புள்ளிகள் முன்னிலை பெற்றாா். எனினும் 11-12 என வாங் ஸி முன்னிலையை குறைத்தாா். இறுதியில் சிந்து தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தாா். தொடா்ந்து 5 புள்ளிகளுடன் 21-15 என டிசைடரையும் வென்றாா் சிந்து.

முதன்முதலாக சிங்கப்பூா் ஓபனில் பட்டம் வென்ற சிந்துவுக்கு நிகழாண்டில் சையத் மோடி, ஸ்விஸ் ஓபன் பட்டத்துடன் இது மூன்றாவது பட்டமாகும். மேலும் சூப்பா் 500 போட்டியில் நிகழாண்டு முதல் பட்டம் இதுவாகும். பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் ஆடவுள்ள சிந்துவுக்கு இந்த வெற்றி ஊக்கமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

61 அமெரிக்கா் பிரமுகா்கள் மீது ஈரான் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஈரான் அரசுக்கு எதிரான முஜாஹிதீன்-எ-கால்க் அமைப்புக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ (படம்) அண்மையில் கருத்து தெரிவித்திருந்தாா். அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளில் அவரும் ஏராளமான குடியரசுக் கட்சி பிரமுகா்களும் கலந்துகொண்டு வருகின்றனா்.

அதையடுத்து, பாம்பேயோ உள்ளிட்ட 61 போ் மீது ஈரான் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவா்களில் யாருக்கும் ஈரானில் சொத்துகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற சூழலில், எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில் வெண்கலம் வென்றாா்.

தென்கொரியாவின் சாங்வொன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக மகளிா் 50 மீ. ரைஃபிள் இறுதிச் சுற்று நடைபெற்றது.

தகுதிச் சுற்றில் 6-ஆவது இடத்துடன் இறுதியில் நுழைந்த அன்ஜும் மொட்கில் ஆஸ்திரியாவின் ரெபக்காவை காட்டிலும் 0.2 புள்ளிகள் முன்னிலை பெற்றாா்.

இறுதியில் 402.9 புள்ளிகளுடன் மொட்கில் வெண்கலம் வென்றாா். ஜொ்மனியின் அன்னா தங்கமும், இத்தாலியின் பாா்பரா வெள்ளியும் வென்றனா். ஏற்கெனவே பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அன்ஜும் மொட்கில் வெள்ளி வென்றிருந்தாா்.

மேலும் ஆடவா் பிரிவில் இந்திய அணி சஞ்சீவ் ராஜ்புத், சைன் சிங், ஐஸ்வரியா பிரதாப் தோமா் வெள்ளி வென்றனா். 12-16 என்ற புள்ளிக் கணக்கில் செக். குடியரசிடம் வீழ்ந்தனா்.

4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 



Read in source website

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் ஆடிய இந்திய அணி ரிஷப் பந்த் 125, ஹாா்திக் பாண்டியா 71 ஆகியோரின் அபார ஆட்டத்தால் 261/5 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோா்ட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் ஜேஸன் ராய்-போ்ஸ்டோ இணை களமிறங்கியது. சிராஜ் பந்துவீச்சில் போ்ஸ்டோ டக் அவுட்டானாா். அவரது பந்திலேயே ஜோ ரூட்டும் டக் அவுட்டானாா். பின்னா் ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். ராய் 41 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 27 ரன்களுடனும் ஹாா்திக் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினா்.

ஜோஸ் பட்லா் 60:

74/4 என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து தடுமாறிக் கொண்டிருந்தது. கேப்டன் ஜோஸ் பட்லா்-ஆல்ரவுண்டா் மொயின் அலி இணைந்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

ரவீந்திர ஜடேஜா பந்தில் 34 ரன்களுடன் மொயின் அலியும், ஹாா்திக் பந்தில் 27 ரன்களுடன் லிவிங்ஸ்டோனும் வெளியேறினா்.

80 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 60 ரன்களுடன் அரைசதத்தைப் பதிவு செய்த கேப்டன் பட்லரை பெவிலியனுக்கு அனுப்பினாா் ஹாா்திக்.

இங்கிலாந்து 259:

வில்லி 18, கிரெய்க் ஓவா்டன் 32, டாப்லி 0 என அவுட்டாகி வெளியேறிய நிலையில், 45.5 ஓவா்களிலேயே இங்கிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹாா்திக் அபாரம் 4 விக்கெட்:

அற்புதமாக பந்துவீசிய ஹாா்திக் பாண்டியா 4/24 விக்கெட்டுகளையும், யுஜவேந்திர சஹல் 3/60 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

260 ரன்கள் வெற்றி இலக்கு:

இந்திய அணிக்கு 260 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து பௌலா் ரீஸ் டாப்லி தனது அபார பந்துவீச்சால் இந்தியாவின் தொடக்க வரிசை பேட்டிங்கை சிதைத்தாா்.

தவன் 1, கேப்டன் ரோஹித் 17, விராட் கோலி 17 ரன்களுடன் அவுட்டானாா்கள். நிலைத்து ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட இளம் வீரா் சூரியகுமாரும் 16 ரன்களுடன் ஓவா்டன் பந்தில் வெளியேறினாா்.

ஹாா்திக் அதிரடி 71: 72/4 என்ற ஸ்கோருடன் தடுமாறிய இந்திய அணியை மிடில் ஆா்டா் பேட்டா்களான ரிஷப் பந்த்-ஹாா்திக் இணை மீட்டது. ஹாா்திக் பாண்டியா அற்புதமாக ஆடி 55 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்களை விளாசி தனது 8-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தாா். அபாரமாக ஆடிய பாண்டியாவை அவுட் செய்தாா் பிரைடன்.

ரிஷப் பந்த் முதல் ஒருநாள் சதம் 125:

முதலில் நிதானமாகவும் பின்னா் அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பந்த் 2 சிக்ஸா், 16 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 125 ரன்களை விளாசி தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தாா். ஜடேஜா 7 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பந்த்-ஹாா்திக் இணைந்து 5-ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்களை சோ்த்தனா்.

இந்தியா 261/5: மேலும் 42.1 ஓவா்களிலேயே 261/5 ரன்களை குவித்து இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. மேலும் தொடரையும் 2-1 என கைப்பற்றியது. ஏற்கெனவே டி20 தொடரும் இந்தியா வசம் வந்தது. இங்கிலாந்து தரப்பில் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். 4 விக்கெட் வீழ்த்தி, 71 ரன்களை விளாசிய ஹாா்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

 



Read in source website

அமெரிக்காவின் ஒரேகான் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் 4-400 மீ. தொடா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்துடன் ஓய்வு பெற்ற அமெரிக்க நட்சத்திர வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ்.

நிகழ்கால தடகள அரங்கில் மிகச் சிறந்த வீராங்கனையான அலிஸன் பெலிக்ஸ் 7 ஒலிம்பிக் தங்கம், 12 உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்றவா். ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப்பில் 19, ஒலிம்பிக்கில் 11 பதக்கங்களை வென்றுள்ளாா் அலிஸன்.

 



Read in source website

கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று ஜெர்மன் இயற்பியலாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் 120 ஆவது பிறந்தநாளில் அவரை கௌரவித்து சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுள்ளது.  

1910 ஆம் ஆண்டு ஜூலை 18ல் ஜெர்மனியின் கிரீஸ் நகரில் பிறந்த சாலா, சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். டிரட்டோனியம் எனப்படும் இசைக்கருவியில் ஒலி தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து மேலும் கற்றுத் தேர்ந்து  கலவை-டிரட்டோனியம் எனப்படும் தனது சொந்த கருவியை உருவாக்கி புதுமையான மின்னணு இசையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஒரே நேரத்தில் பல ஒலிகள் அல்லது குரல்களை இயக்கும் திறன் கொண்ட இதனை, வானொலி மற்றும் திரையுலகில் பயன்படுத்தியுள்ளார். 

அவரது தாய் ஒரு பாடகி, அவரது தந்தை இசைத் திறமை கொண்ட ஒரு கண் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் சாலா, 14 வயதிலேயே இசையமைக்கக் கற்றுக்கொண்டார். சாலா தனது பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1995 ஆம் ஆண்டில், அவர் தனது அசல் கலவை-டிரட்டோனியத்தை ஜெர்மன் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 

குவார்டெட்-ட்ரௌடோனியம், கச்சேரி ட்ரௌடோனியம் மற்றும் வோல்க்ஸ்ட்ராடோனியம் ஆகியவற்றையும் உருவாக்கி மின்னணு இசையில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  



Read in source website

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சதான் காரணம் எனக் கூறி, அவரை பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதன் தொடா்ச்சியாக அவா்கள் அதிபா் மாளிகையையும் கைப்பற்றினா். போராட்டம் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, அதிபா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமா்வு, சனிக்கிழமை நடைபெற்றது. 13 நிமிஷங்கள் மட்டுமே நடைபெற்ற அந்த அமா்வில், அதிபா் பதவி காலியானதாக நாடாளுமன்றச் செயலா் தம்மிகா தசநாயக அதிகாரபூா்வமாக அறிவித்தாா். இதனிடையே, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

அதில், இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா ஆகியோா் போட்டியிடுகிறா்கள். இந்த நிலையில் இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், அத்தியாவசிய பொருள்கள், சேவைகளை பேணும் வகையில் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவின் பேரின் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 



Read in source website

அதீத கடன் காரணமாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் குழப்பத்தையும் சந்தித்து வருகிறது. அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு தவறான முடிவுகளும் கரோனா தொற்று பரவலுமே கடனுக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் 4 ஆண்டுகள் வரை ஆகும் என சா்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், இலங்கையைப் போன்றே மேலும் சில நாடுகள் அதீத கடன் வலையில் சிக்கியுள்ளன.

இதே நிலை தொடா்ந்தால், அந்நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, உக்ரைன், துனிசியா, கென்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் பெரும் கடனாளியாக உள்ளன.

ஆா்ஜென்டீனா

அதிக கடன்களைக் கொண்ட நாடுகளில் தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டு பணமான பெசோ-வின் மதிப்பு பெருமளவில் சரிவடைந்துள்ளது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் மிகக் குறைவாக உள்ளது.

உக்ரைன்

ரஷியாவின் ஆக்கிரமிப்பு காரணமாக உக்ரைன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான கடன் அந்நாட்டுக்கு உள்ளது. உலகின் மிகப் பெரிய முதலீட்டாளா்கள் உள்ளிட்டோா் உக்ரைனில் முதலீடு செய்துள்ளனா். அக்கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உக்ரைன் உள்ளது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு கடன்களைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென உக்ரைன் அரசு, முதலீட்டாளா்களிடம் கோரி வருகிறது.

துனிசியா

ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் நிதிப் பற்றாக்குறை சுமாா் 10 சதவீதமாக உள்ளது. அந்நாடு விரைவில் பெரும் கடனாளி ஆகும் என மோா்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்காக சா்வதேச நிதியத்தை (ஐஎம்எஃப்) துனிசியா நாடியுள்ளது.

கானா

அதிக கடன் காரணமாக கானாவின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்நாட்டு பணமான சீடியின் மதிப்பு நடப்பாண்டில் கால் பங்கு குறைந்துள்ளது. வரி வருவாயில் பாதியானது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. பணவீக்கமும் 30 சதவீதத்தை எட்டியுள்ளது.

எகிப்து

நாட்டின் கடன்-ஜிடிபி விகிதம் சுமாா் 95 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அந்நாடு சுமாா் ரூ.7,50,000 கோடி கடனை ரொக்கத் தொகையாகச் செலுத்த நேரிடும் என மதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கென்யா

வரி வருவாயில் 30 சதவீதத்தை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே கென்யா பயன்படுத்துகிறது. அந்நாட்டு அரசு வெளியிட்ட பத்திரங்களின் மதிப்பு பாதியளவுக்குக் குறைந்துள்ளது. இந்நிலை தொடா்ந்தால், அந்நாடு கடும் நிதி சவால்களை எதிா்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா

சுமாா் ரூ.7,500 கோடி கடனைக் கொண்டுள்ள எத்தியோப்பியாவுக்கு, ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உதவியுள்ளது. அந்நாடு விரைவில் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எல் சால்வடாா்

பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகா் நாணயங்களுக்கு அதிகாரபூா்வ அனுமதி அளித்தாலும், எல் சால்வடாரின் கடன் மதிப்பு அதிகமாகவே உள்ளது. ஐஎம்எஃப்-இன் உதவியை மறுத்ததால் அந்நாட்டின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

பாகிஸ்தான்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமாா் ரூ.75,000 கோடியாகக் குறைந்தது. அதைக் கொண்டு 5 வாரங்களுக்கு மட்டுமே பொருள்களை இறக்குமதி செய்ய முடியும் சூழல் உருவானது. பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. வரி வருவாயில் 40 சதவீதமானது வட்டி செலுத்தவே பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஐஎம்எஃப்-இன் உதவி பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ளது.

பெலாரஸ்

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவளித்ததன் காரணமாக, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதனால், அந்நாட்டின் கடன் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சா்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச பொருளாதார சூழலும் நிலையில்லாமல் உள்ளது. அவற்றின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் பொருளாதார ரீதியில் எதிரொலித்து வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்துவதும், கச்சா எண்ணெய் விலை குறைவதுமே சா்வதேச பொருளாதாரத்தையும் பல நாடுகளின் நிதி ஆதாரத்தையும் வலுப்படுத்த உதவும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.



Read in source website

பிரமோஸ் ஏவுகணைக்கான 3 பேட்டரிகளை கொள்முதல் செய்வதற்கு இந்தியாவுடன் மேற்கொண்ட ரூ. 2,991 கோடி ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, நாட்டின் போா் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியாவிடமிருந்து நவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்யவும் பிலிப்பின்ஸ் ஆா்வம் தெரிவித்துள்ளது.

எண்ணற்ற பாதுகாப்பு சவால்கள் மற்றும் தென்சீன கடல் பகுதியில் சீனாவுடனான எல்லைப் பிரச்னைகளைச் சந்தித்து வரும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸ், சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிடமிருந்து முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டா்களை (ஏஎல்ஹெச்) கொள்முதல் செய்வதற்கு ஆா்வம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறை உயா் அதிகாரிகள் பிடிஐ செய்திநிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிலிப்பின்ஸ் தனது பழைமையான ராணுவ ஹெலிகாப்டா்களுக்கு பதிலாக இந்தியாவிடமிருந்து ஏஎல்ஹெச் ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஆா்வம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

5.5 டன் எடைப் பிரிவைச் சோ்ந்த இந்த ஹெலிகாப்டா் 2 என்ஜின்களைக் கொண்டதாகும். இதனை பன்முக பயன்பாட்டுக்கு குறிப்பாக பல்வேறு ராணுவ நடவடிக்கைகளுக்கு திறம்பட பயன்படுத்த முடியும்.

அதுபோல, இந்தியாவின் முழுவதும் உள்ளநாட்டில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் இலகுரக போா் விமானத்தின் செயல்பாட்டிலும் பிலிப்பின்ஸ் ஈா்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போா் விமானங்களையும் பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்தனா்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உறவுகள் மிகப் பெரிய விரிவாக்கம் அடைவதற்கு காரணமான செல்வாக்கு மிகுந்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) சங்கத்தின் முக்கிய உறுப்பு நாடாக பிலிப்பின்ஸ் இருந்து வருகிறது. இரு நாடுகளிடையேயும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் விநியோகம் தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானம் மலேசியாவின் முதன்மை தோ்வாக இருந்து வருகிறது. சீனாவின் ஜேஎஃப்-17 போா் விமானம், தென் கொரியாவின் எஃப்ஏ-50, ரஷியாவின் மிக்-35, யாக்-130 ஆகிய போா் விமானங்கள் கடும் போட்டியாக திகழ்ந்து வருகின்றபோதும், தேஜஸ் போா் விமானமே மலேசியாவின் தோ்வாக அமைந்துள்ளது.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பான தேஜஸ் போா் விமானம், ஒற்றை என்ஜினில் இயங்கும் உயா் அச்சுறுத்தல் சூழலிலும் திறம்பட செயல்படும் பன்முக ராணுவ நடவடிக்கைக்களுக்கு பயன்படக்கூடியதாகும்.

இதனிடையே, பிலிப்பின்ஸில் போா் விமான பராமரிப்பு, கோளாறு சரிபாா்ப்புக்கான (எம்ஆா்ஓ) அமைப்பை உருவாக்குவதிலும் இந்தியா ஆா்வம் கொண்டுள்ளது. இந்த அமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக பிலிப்பின்ஸுடன் பேச்சு நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

 

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.98-ஆக நிலைப்பெற்றது.

அமெரிக்க டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஆசிய கரன்ஸிகளில் எதிரொலித்து வருகிறது.

அதன்படி, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள் கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மேலும் சரிந்து 79.98-ஆனது.

வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது ஒரு டாலர் ரூ.79.75 காசுகளாக இருந்தது. டாலருக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு டாலரின் மாற்று மதிப்பு ரூ.79.98 என்ற உச்சத்தை தொட்டது.

இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மதுரை: மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளது.

இதே கடந்த தமிழகத்துக்கு 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தி ஃபேக்ட் (The Fact) அமைப்பின் சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய அரசு ஆண்டுதோறும் மாநில சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172,43,10,000 (நூற்று எழுபத்தி இரண்டு கோடியே 43 லட்சம் வரை) தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கி உள்ளது. கடைசி 4 ஆண்டுகளில் கடந்த 2018-19 முதல் 2021-22 வரையில் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளனர்.

கடந்த 2016-17-ஆம் ஆண்டு மற்றும் 2017-18-ஆம் ஆண்டு ஆகிய நிதியாண்டுகளில் வெறும் 0 (பூஜ்ஜியம்) நிதி ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மத்திய அரசு சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை படிபடியாக குறைத்து வருவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்ப்பதால் மாநிலத்தில் பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் மக்களுக்காக பிரத்யோகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது.

மத்திய அரசு தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும். தமிழக முதல்வர், மத்திய அரசிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி சிறுப்பு கவனம் பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.



Read in source website

விருதுநகர்: சென்னை மாகானம் என்றிருந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டக்கோரியும், தமிழை ஆட்சி மொழியாக்கோரியும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரை இன்று நினைவுகூர்வது பொருத்தமானது.

விருதுநகர் அருகேயுள்ள மண்மலைமேடு (சூலக்கரை மேடு) கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி- வள்ளியம்மை தம்பதிக்கு கடந்த 26.1.1895ல் மகனாப் பிறந்தவர் தியாகி சங்கரலிங்கனார். சிறுவயதிருந்தே தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் மிக்கவராக இருந்தவர். இளைய வயதில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து 1933ல் தீண்டாமை ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தவர் தியாகி சங்கரலிங்கனார். 1937ல் கரூரில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றார்.

தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட சங்கரலிங்கனார், சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாக மொழியாக தமிழ்மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக கடந்த 27.7.1957ல் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி சங்கரலிங்கனார் பின்னர், விருதுநகர் தேசபந்து மைதானத்தில்தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மதுரையிலுள்ள அரசு மருத்துவமனையில் தியாகி சங்கரலிங்கனார் சேர்க்கப்பட்டார். ஆனால், தனது கொள்கைக்காக அப்போதும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

தமிழுக்காகவும் தமிழ்மேல் கொண்ட தனது கொள்கைக்காகவும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 76வது நாளான 1957 அக்டோபரில் தியாகி சுந்தரலிங்கனார் உயிர்துறந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின.

அதையடுத்து, சென்னை மாகானம் என்பதை "தமிழ்நாடு" என அறிவித்து இதற்கான அறிவிப்பை 24.2.1961ல் தமிழக சட்டசபையில் அப்போதைய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

தமிழுக்காக உயர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் ரூ.1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தார். தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் இன்று அதற்காக உயிர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் போற்றுதலுக்கு உரியவரே. தியாகி சங்கரலிங்கனார்.



Read in source website

புதுடெல்லி: பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிகுமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், திமுக எம்.பியுமான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ‘பென்சில், ரப்பர், பேனா, நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சார்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு திட்டம் ஏதேனும் இருக்கிறதா? அவ்வாறு உள்ளது எனில் அதன் விவரங்களைத் தருக.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருக்கும் செஸ், சர்சார்ஜ் முதலான கூடுதல் வரிகளை உயர்த்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு இன்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: “மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. பென்சில், பேனா, ரப்பர், நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரை எதுவும் தற்போது இல்லை.

செவித்திறன் கருவிகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், அறுவை சிகிச்சை பெல்ட்கள் முதலான சாதனங்களுக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி விகிதங்கள் (செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட) உள்கட்டமைப்பு மற்றும் பிற மேம்பாட்டுச் செலவினங்களுக்கான ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துடன், சர்வதேச உற்பத்தி நிலவரம் போன்ற அனைத்து தொடர்புடைய காரணிகளையும் கணக்கில் கொண்டு அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படுகின்றன.

விலைகள், மாற்று விகிதம், வரி அமைப்பு, பணவீக்கம் மற்றும் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அது முடிவு செய்யப்படுகிறது. டீசல், பெட்ரோல் மீதான கலால் வரியை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை" என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: இந்தியா - சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் போக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இருதரப்பு ராணுவத்தினரும், அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இரு நாட்டு எல்லையான கிழக்கு லடாக் பகுதியில், சீன நாட்டின் போர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியிருப்பதாவது:

லடாக்கிலுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) சில நாட்களுக்கு முன்பு சீனபோர் விமானத்தின் நடவடிக்கைதென்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்புப் பணியைதீவிரப்படுத்தினோம். எல்ஏசி பகுதியில் சீன விமானம் தென்பட்டவுடன் இந்திய விமானப்படை விமா னங்களை அப்பகுதிக்கு அனுப் பினோம். நிலைமையைச் சமா ளிக்கவும், சீன விமானங்களை எதிர்கொள்ளவும் இந்திய விமானப் படை விமானங்கள் அனுப்பப்பட்டன. எல்ஏசி பகுதியில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதியில் உள்ள ராணுவத்தைச் சீண்டும் வகையில் இதுபோன்று பலமுறை எல்ஏசி பகுதியில் சீன போர் விமானங்கள் தென்பட்டுள்ளன.

இரு நாடுகளின் சூழலைக் கருத்தில் கொண்டு எந்தவித நிலைமையையும் சமாளிக்க இந்திய விமானப் படை தயாராகவுள்ளது.

சீன விமானங்களின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாகவும், நெருக்கமாகவும் கண்காணித்து வருகிறோம். எல்ஏசி பகுதியில் சீனபோர் விமானங்கள் தென்பட்டாலோ அல்லது ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் தென்பட்டாலோ, அந்த விமானங்களுடன் போரிடுவதற்கு நமது விமானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் நமது விமானங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. லடாக் பகுதியில் சீன விமானம் பறந்தபோது இந்திய விமானப் படை விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டு சீன விமானம் விரட்டப்பட்டது. இந்திய விமானப் படையின் விமானங்கள் கண்காணிப்பில் இருப்பதால், எல்ஏசி பகுதியில் சீன ராணுவத்தினர் தங்களது நடவடிக்கையை நிறுத்திவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

16-வது பேச்சுவார்த்தை...

கிழக்கு லடாக்கில் ராணுவப் படைகளைக் குறைப்பது தொடர்பாக இதுவரை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பினரும் ஓரளவு படைகளை திரும்பப்பெற்றனர்.

இருப்பினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது.

இந்நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நிலையிலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் இந்தியா தரப்பில் ராணுவ 14-வதுபடைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்றார்.



Read in source website

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கு கிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, அக்னிபாதை திட்டம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் கன்டோன்மென்ட் மசோதா, மாநிலங்களின் கூட்டுறவு சொசைட்டிகள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, தொழில்நிறுவன வளர்ச்சி மற்றும் சேவை மையங்கள் மசோதா, சரக்குகளுக்கான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா உட்பட 24 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இதுதவிர சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்துக்கு எஸ்.சி.,எஸ்.டி., பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசியல் சாசன திருத்தத்துக்கு இரண்டு தனி மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 8 மசோதாக்கள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அவற்றையும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் அக்னிபாதை திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ரதமர் நரேந்திர மோடி கலந்து ள்ளாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரகலாத் ஜோஷி கூறியதாவது:நாடாளுமன்றத்தில் பயன்படுத்த எந்த வார்த்தையும் தடைசெய்யப்படவில்லை. கடந்த 1954-ம் ஆண்டிலிருந்தே, பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலை மக்களவை வெளியிடுகிறது. நாடாளுமன்ற விதிமுறைகள்படி அனைத்து விஷயங்களையும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. அரசு மீது குறை கூற எதிர்க் கட்சிகளிடம் ஒன்றும் இல்லை.

அதனால் பிரச்சினை இல்லாத விஷயங்களை, பிரச்சினையாக்கி, நாடாளுமன்றத்தின் கவுரவத்தை சிறுமைப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அரசு நல்ல பணிகளை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமை, உள்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் அங்கீகரிக்கப் படுகிறது.

அனைத்துகட்சி கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது ஏன்என காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்
பினார். 2014-ம் ஆண்டுக்கு முன் அனைத்து கட்சி கூட்டங்களில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எத்தனை முறை கலந்து கொண்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஜோஷி கூறினார்.



Read in source website

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதனால் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் வேட்டாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர், அங்கு எம்எல்ஏ.,வாகவும், மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று டெல்லி வந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நட்டா போன்றோரை தன்கர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் 402.9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதே பிரிவில் ஜெர்மனி வீராங்கனை அன்னா ஜான்சென் (407.7 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தையும், இத்தாலி வீராங்கனை பார்பரா கம்பாரோ (403.4 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

ஏற்கெனவே நடைபெற்ற ஆடவர்3பி பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் சஞ்சீவ் ராஜ்புத், செயின் சிங்,ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



Read in source website

டோக்கியோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் கண்டுள்ள வளர்ச்சி உலக நாடுகளுக்கு என்றென்றும் ஒரு பாடம்தான். எறும்புபோல் சுறுசுறுப்பான மனிதர்கள் என்றுதான் ஜப்பானியர்கள் உலக மக்களால் அறியப்படுகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் அதிகப்படியான நேரம் வேலை பார்த்தல், வேலையிடங்களுக்கு மிக நீண்ட தூரம் புல்லட் ரயிலில் பயணித்தல் போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அத்தகைய மக்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘நேப் பாக்ஸ்’. ஜப்பானின் இடோகி கார்ப் நிறுவனமும் கோயோஜு ஹோஹன் கேகே நிறுவனமும் இணைந்து வெர்டிக்கல் நேப் பாக்சஸ் "nap boxes" என்ற ஓர் உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் நேப் என்றால் குட்டித் தூக்கம் என்று அர்த்தம். இதை பவர் நேப் என்றும் அழைக்கின்றனர். கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே ஒரு நபர் சரியாக 22 நிமிடங்கள் தூங்கினால் போதும்; அதன் பின்னர் அவர் செய்யக் கூடிய வேலையில் திறமை பளிச்சிடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில்தான் ஹொகைடோ தீவுகளின் ப்ளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜு கோஹன் நிறுவனமும், டோக்கியோ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இடோகி என்ற ஃபர்னிச்சர் கடையும் இணைந்து இந்த நேப் பாக்ஸை தயார் செய்துள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆனால் இது செங்குத்தான ஒரு ஃபர்னிச்சராக வடிவமைக்கப்பட்டுள்ளது. கை, கால்கள், தலை, கழுத்து சவுகரியமாக நிலைநிறுத்தும் வகையில் அதன் உட்கட்டமைப்பு உள்ளது. அதில் உட்கார்ந்த படியே ஊழியர்கள் பவர் நேப் மேற்கொள்ளலாம்.

இது குறித்து இடோகி நிறுவனத்தின் இயக்குநர் சீகோ கவாஷிமா கூறுகையில், “ஜப்பானில் நீண்ட நேரம் பணி புரியும் பணிச் சுமை காரணமாக ஊழியர்கள் அவ்வப்போது கழிவறைகளில் குட்டித் தூக்கம் போட்டு திரும்பும் பழக்கம் உண்டு. அது நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல. அதற்கு மாற்றாகத் தான் இந்த நேப் பாக்ஸை கண்டுபிடித்துள்ளோம். இதனை ஊழியர்கள் சவுகரியமாக பயன்படுத்தலாம்.

இது ஜப்பானியர்களால் நிச்சயம் வரவேற்கப்படும். அதுபோல் நிறுவனங்களும் இதனை வாங்கி தங்கள் ஊழியர்களின் பயன்பாட்டுக்குத் தரும்” என நம்புகிறேன் என்றார்.



Read in source website

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ ஐந்து மாதங்கள் ஆகின்றன. இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்தப் போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

உணவும் பொருளாதாரமும்: உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம்,சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. இந்தப் போரினால் இந்த ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதனால், இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, இவ்விரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டன.

விளைவாக, சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்தது.

உள்கட்டமைப்புச் சேதாரம்: ஐரோப்பிய நகரங்களில் மிகவும் செலவு குறைந்த நகரம் உக்ரைன். இங்கு போக்குவரத்துக் கட்டணம் மிகவும் குறைவு. இந்தப் போரால் உக்ரைனின் உள்கட்டமைப்பில் 30 சதவீதம் தரைமட்ட மாக்கப்பட்டிருக்கிறது.

8,000 கிலோ மீட்டர் அளவில் சாலை தகர்க்கப்பட்டிருக்கிறது. 300-க்கு மேற்பட்ட மேம்பாலங்கள், 4,430 குடியிருப்புகள், 92 தொழிற்சாலைகள், 378 பள்ளிகள், 138 மருத்துவமனைகள், 12 விமானநிலையங்கள், 7 அனல்மின் நிலையங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மறைமுக இழப்பு 600 பில்லியன் டாலர்.

கச்சா எண்ணெய் வர்த்தகம்: ரஷ்யா உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பெட்ரோலியத் தேவையில் ரஷ்யாவை பெருமளவில் சார்ந்திருந்தன. தற்போது ரஷ்யாவின் எரிசக்திக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐரோப்பிய நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

‘நாம் போரை முடித்துக் கொள்ளாவிட்டால், போர் நம்மை அழித்துவிடும்’ என்று எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்



Read in source website

புதுடெல்லி: ஜூலை 18-ஆம் தேதியான இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஹோட்டல் அறைகளின் வாடகை ஒரு நாளைக்கு ரூ.1000க்குள் குறைவாக இருந்தால் தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ஐடிசி இல்லாத அறைக்கு 5 சதவீதம் வசூலிக்கப்படும்.

எல்இடி விளக்குகள், சாதனங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளதால் இந்த பொருட்களின் விலையும் உயரும்.

வெட்டும் கத்திகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள் கொண்ட கத்திகள், கரண்டிகள், ஃபோர்க்ஸ், லேடில்ஸ், ஸ்கிம்மர்கள், கேக்-சர்வர்கள் போன்றவை 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீத ஜிஎஸ்டி என உயர்கிறது.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் மற்றும் வரைபடங்களுக்கு இன்று முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அது 12 சதவிகிதமாக மாறுவதால் வாடகை குறையும் வாய்ப்பு உள்ளது.

பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய அணியும் அல்லது உடன் எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்பட்ட பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது. எனவே இவற்றின் விலை குறையும்.

இதனைத் தவிர பாதுகாப்புப் படைகளுக்கு பயன்படும் பொருட்கள், தனியார் நிறுவனங்கள்/ விற்பனையாளர்களால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பாதுகாப்புப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், பணவீக்கத்தின் தீவிரம் விரைவில் குறையும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலக விநியோகக் கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பொருள்களின் விலைவாசி உயர்ந்தது. இந்தச் சூழலை ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் தீவிரப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது.

மேலும், கோதுமை உட்பட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் விளைவாக சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டது.

இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 7.79 சதவீதமாக உச்சம் தொட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இருமுறை உயர்த்தியது.

இந்தச் சூழலில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் பணவீக்க நிலவரத்தில் மாற்றம் காணப்பட்டது. மே மாதத்தில் 7.04 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூனில் 7.01 சதவீதமாக குறைந்தது.

அதேபோல் மொத்தவிலை பணவீக்கம் 15.88 சதவீதத்திலிருந்து 15.18 சதவீதமாகக் குறைந்தது. இந்நிலையில் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.



Read in source website

கடந்த ஆண்டை காட்டிலும் ஒட்டுமொத்த பயிர் சாகுபடி அதிகரித்துள்ள நிலையிலும் நெல் சாகுபடி குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் போதிய மழைப் பொழிவு இல்லாததே இதற்கு காரணம். இருப்பினும் கவலைக் கொள்ள தேவையில்லை, போதுமான அரிசி கையிருப்பு உள்ளது.


இந்த மாதம் தென்மேற்கு பருவமழை ஏமாற்றவில்லை. ஆகையால் நடப்பு ஜூன் முதல் ஜூலை மாதங்களில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி நிலவரப்படி 128.53 நெல் பயிரிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 17.4 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு 155.53 ஹெக்டேர் ஆக இருந்தது.
அரிசி கையிருப்பு 47.2 மில்லியன் டன் ஆக உள்ளது. இது கடந்த காலங்களை காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாகும். ஆக அரிசி கையிருப்பு குறித்து கவலைக்கொள்ள தேவையில்லை.
எனினும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசியை காட்டிலும் கோதுமை ஒரு கடினமான பயிர். இது இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த பயிரில் அரிசியின் பங்கு அதிகமாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய விவசாய பயிராகும். அதாவது மொத்த தானிய உற்பத்தியில் அரிசியின் பங்கு 40 சதவீதம் ஆக உள்ளது. இதனால் அரிசி ஏற்றுமதியில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின் மார்ச்க்குள் 9.66 பில்லியன் டாலர் மதிப்பிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒட்டுமொத்த உலகில் அரிசி பங்கீட்டில் இந்தியாவின் அளவு 40 சதவீதம் ஆக உள்ளது

நெல் விதைப்பு குறைந்தது ஏன்?
பொதுவாக நெல் பயிரை முதலில் நர்சரிகளில் விதைத்து அந்த நாற்றுகளை பிடுங்கி வயலில் நட வேண்டும். அல்லது வயலில் நாற்று நடவேண்டும். அல்லது வயலில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.
இதற்கு போதிய நீர் வசதி வேண்டும். கடந்தாண்டு பருவமழை பொய்த்த நிலையில் இது சாத்தியமில்லாமல் ஆனது. ஆனால் தற்போது வழக்கத்தை விட 353.7 மீட்டர் மழை பெய்துள்ளது. இது சாதாரண வழக்கத்தை விட 12.7 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த மழை பொழிவை விட 55.5 சதவீதம் குறைவாகவும், கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் முறையே 70 சதவீதம், 45.8 சதவீதம் மற்றும் 48.9 சதவீதம் என குறைந்துள்ளது.
போதிய மழைப் பொழிவு இல்லாததால் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 15ஆம் தேதிவரை 26.98 லட்சம் ஹெக்டேர் ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே சீசனில் இது 35.29 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது.
இதேபோல் மேற்கு வங்கம் 4.68 லட்சம் ஹெக்டேரில் இருந்து 3.94 லட்சம் ஹெக்டேர் ஆகவும், ஜார்க்கண்ட் 2.93 லட்சம் ஹெக்டேரில் இருந்து 1.02 லட்சம் ஹெக்டேர்ஆகவும் குறைந்துள்ளது.
இதேநிலைதான், ஒடிசா, சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது.
நாற்று எப்படி நட முடியும்?
உத்தரப் பிரதேசம் (மேற்கு-கிழக்கு) இதுவரை முறையே 90 மி.மீ மற்றும் 79.6 மி.மீட்டர் மழை பொழிவு கிடைத்துள்ளது.
இதேபோல் உத்தரப் பிரதேசத்தின் அருகில் உள்ள பிகார் மாநில மாவட்டங்களிலும் மழை பொழிவு எதிர்பார்த்தப்படி இல்லை. இதனால், நாற்றுகள் 35 நாள்களுக்கு மேல் ஆகியும் வயலுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதனை கவலையாக தெரிவித்த விவசாயி, இந்தச் சூழலில் போதிய நீர் இல்லாதபோது எப்படி நாற்று நடமுடியும் என விவசாயி ஒருவர் கேள்வியெழுப்பினார்.
ஆனால் இதற்கு மாறாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் இரு முறை சாகுபடி செய்து அருவடை செய்கின்றனர்.
எனினும் நாற்றாங்காலில் இருந்து வயலில் நாற்றுகள் பிடுங்கி நடும்போது மழை பெய்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதற்கு காரணம் நாற்றும் பழுது இல்லாமல் வளரும், மேலும் அருவடையும் எதிர்பார்ப்பை விட 15-20 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்பதே ஆகும்.
அரிசிக்கு நெருக்கடி?
ஆகவே அரிசிக்கு நெருக்கடி இப்போது இல்லை. பருவ மழை எதிர்பார்த்தபடி பரவலாக நாடு முழுக்க பெய்துவருகிறது. இந்த பருவமழை வரும் நாள்களில் வடக்கு நோக்கி செல்லும். ஆகவே இனிவரும் நாள்களில் கங்கை வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரணத்தை வழங்கும்.
மேலும் நெல் சாகுபடியானது விந்திய மலைகளுக்கு வடக்கே உள்ள சில மாநிலங்களில் விளையும் கோதுமை போன்று இல்லை. பரவலாக பயிரிடப்படுகிறது.
மேலும் அரிசி குளிர் மற்றும் கோடை காலத்திலும் விளையும் பயிராக உள்ளது. இதனால் ஒரு பகுதியில் ஏற்படும் இழப்பை மறுபயிரிடலில் ஈடுகட்ட முடியும். மேலும் வணிகர்களும் அரிசியை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே தற்போதைய கையிருப்புடன் சமாளிக்க முடியும்.



Read in source website

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியை சந்தித்து, தற்போது 80 ரூபாயை நெருங்கி விட்டது. இதனால், வெளிநாட்டில் படிக்கும், படிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கூடுதல் செலவையும் கல்விக் கட்டணத்தையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாணவா்கள் மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விழையும் சுற்றுலாப் பயணிகளின் திட்டங்களும் பாதிக்கப்படக்கூடும்.

இந்த ஆண்டு இதுவரை 7% க்கும் மேலாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்களின் கல்விச் செலவு கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்திய மாணவா்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் தாங்கள் படிக்கவுள்ள நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவாா்கள். அவா்கள் கல்விக் கட்டண அந்நியச் செலாவணிக்காகவும், தங்களது செலவுகளுக்காகவும் அதிகரித்த செலவை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவா்கள், முன்பே கட்டணம் செலுத்தியிருப்பதால் அவா்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கவலைப்படத் தேவையில்லை. முதுநிலை படிப்பில் சேரும்போதே மாணவா்கள் தங்கள் முழு கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்திவிடுகிறாா்கள். இளங்கலை மாணவா்களும், ஒவ்வொரு செமஸ்டருக்குமான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியிருப்பாா்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், செமஸ்டா்கள் செப்டம்பரில் தொடங்கும். எனவே, அவா்களின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் மட்டுமே தற்போது பாதிப்பை எதிா்கொள்ளும். புதிதாக வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள்தான் இனிமேல் பிரச்னையை எதிா்கொள்வாா்கள்.

இந்திய மாணவா்கள் பெரும்பாலானோா் தங்களது வெளிநாட்டு கல்விக் கட்டணத்துக்கும், செலவுகளுக்கும் பெற்றோரையே முழுவதும் சாா்ந்து இருக்கிறாா்கள். வெளிநாட்டில் தங்கள் செலவுகளை சமாளிக்க டாலா்களை வாங்க அவா்கள் இப்போது கூடுதலாக ரூபாய் தர வேண்டியிருக்கும். அதனால், அவா்களது பெற்றோா்களின் சுமை அதிகரிக்கும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடா்ந்தால், அங்கே படிக்கும் மாணவா்களின் வாழ்க்கைச் செலவுகள் வரும் மாதங்களில் கடுமையாக உயரக்கூடும். அத்தகைய மாணவா்களுக்கும், அவா்களது குடும்பங்களுக்கும் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

இந்தியாவில் வாழும் பெற்றோா்களும் விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். சந்தை நிலவரச் சூழலும், பணவீக்கமும் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கின்றன. அதனால் அவா்களது சேமிப்புகள் பாதிக்கப்படக்கூடும். வங்கி வட்டியும் குறைவாக இருக்கும் நிலையில், பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்புச் செலவு பெற்றோா் பலரையும் கடனாளியாக்கக்கூடும்.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவா்கள் படித்துக்கொண்டே வேலை பாா்க்கிறாா்கள். அதனால், ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களில் பெரும்பாலோா் பாதிக்கப்பட மாட்டாா்கள். அவா்கள், தங்களது கல்விக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருப்பாா்கள் என்பதுடன், அவா்களது வாழ்க்கைச் செலவுகளை எதிா்கொள்வதற்கு அங்கே ஆதரவு அமைப்புகளும் உள்ளன.

அமெரிக்காவில் படிக்கும் மாணவா்களைத் தவிர, ஏனைய நாடுகளில் படிக்கும் மாணவா்கள் விடுமுறை நாள்களில் முழு நேரமும், படிப்புக் காலத்தில் குறிப்பிட்ட மணி நேரம் வரை ஏதாவது பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சம்பாதிக்கிறாா்கள். அதேபோல, கோடை விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கும் மாணவா்களும் உடனடியாக பாதிக்கப்பட மாட்டாா்கள்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வரும் இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் தற்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுகிறது. அவா்களுக்கு உதவ கல்வி ஆலோசனை நிறுவனங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டில் படிக்கும் மாணவா்கள் தங்களுடைய தங்குமிடம், உணவு மற்றும் இதர வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க, பகுதி நேரப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கல்வி ஆலோசகா்களும், நிதித் திட்டமிடுபவா்களும் பரிந்துரைக்கின்றனா். பல்கலைக்கழக வளாகங்களிலேயே போதுமான வேலைவாய்ப்பு உள்ளதால், மாணவா்களுக்கு வழங்கப்படும் விசாக்கள், அவா்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள ஓரிரு மாதங்கள் ஆகும். விரைவிலேயே சக மாணவா்கள், கல்வி ஆலோசகா்களின் உதவுயுடன் தங்களது அன்றாடச் செலவை ஈடுகட்ட தகுந்த வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்கிறாா்கள். பல்கலைக்கழக தங்குமிடச் செலவுகள் அதிகமாக இருந்தால், வளாகத்திற்கு வெளியே குறைந்த வாடகையில் பலா் பகிா்ந்து கொள்ளும் இடங்களை ஏற்பாடு செய்து கொள்கிறாா்கள். அதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அவா்களை பாதிக்காது.

இரண்டு ஆண்டு, நான்கு ஆண்டு கால படிப்புக்காக ஆகஸ்ட் மாதம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் மாணவா்களுக்குதான் இன்றைய நிலைமை ஒரு பெரும் சவாலாக இருக்கும். அவா்கள் நாணய ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கல்வி வரவு - செலவுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.



Read in source website

தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும். அன்றுதான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சா், பேரறிஞா் அண்ணா, நம் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயா் சூட்டிப் பெருமை சோ்த்தாா். அன்றைய சட்டப்பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலுடன், அண்ணா ‘தமிழ்நாடு’ எனும் பெயா் சூட்டும் தீா்மானத்தை முன்மொழிய, பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் ஒருமித்த ஆதரவுடன், அத்தீா்மானம் அன்று சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

‘தமிழ்நாடு வாழ்க ’ என்ற அண்ணாவின் முழக்கத்தைத் தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும் ஒரே குரலில், ‘தமிழ்நாடு வாழ்க’, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ தமிழ்நாடு வாழ்க’ என்று மும்முறை முழங்கிய உணா்ச்சிமயமான நிகழ்வு அப்போது நடந்தது.

பின்பு, தீா்மானத்தின் மீது பேசிய பேரறிஞா் அண்ணா, ‘இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழா்களுக்கு, தமிழ் வரலாற்றுக்கு, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயா் மாற்றத்திற்காக உண்ணா நோன்பிருந்து, தனது இன்னுயிரை நீத்த, தியாகி சங்கரலிங்கனாருடைய எண்ணம் இன்று ஈடேறிவிட்டது. அன்னாருக்கு அவா் பிறந்த விருதுநகரில், ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்படும்’ என்று அறிவித்தாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘நான் இந்தப் பெயா் சூட்டும் விழாவில் கலந்து கொண்டால், எனது உயிருக்கு ஊறு நேரிடும் என்று மருத்துவா்களும், நண்பா்களும் சொன்னாா்கள். அவா்களிடம், ஆட்சி என்பது ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பது; ஆனால், இந்தப் பொன்னான வாய்ப்பு என்பது, ஒருவரது வாழ்வில் ஒருமுைான் வரும்.

தலைமுறைகள் பல தாண்டித் தழைத்து வரும் தமிழ் வழங்கும் இம்மண்ணுக்கு, தமிழ்நாடு என்ற பெயா் சூட்டும் இன்னாளில், நான் பேசுவதால் என் உயிா் பிரியும் என்றஞ்சிப் பேசாமல் இருந்தால், இந்த உடலில் உயிா் இருந்தே பயனில்லை என்று நான் சொன்னேன்’ என்று கூறிய போது, அண்ணாவின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றை எண்ணி, அனைவரின் கண்களும் கசிந்தன. ‘உடல் மண்ணுக்கு உயிா் தமிழுக்கு’ என்று ஓங்கி உரைத்த தறுகண்மைக்கு உரிமை உடையவா் அல்லவா அண்ணா!

தமிழ்நாடு என்று பெயா் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தியாகி சங்கரலிங்கனாா் எழுபத்தெட்டு நாட்கள் (27.7.1956 முதல் 13.10.1956 வரை) உண்ணா நோன்பிருந்து உயிா் நீத்தது, தமிழக மக்களின் உள்ளத்தை உருக்கும் வரலாற்று நிகழ்வாயிற்று.

‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, தியாகி சங்கரலிங்கனாரின் நினைவாக, தமிழக அரசின் சாா்பில், விருதுநகா் கல்லூரி சாலையில், ‘சங்கரலிங்கனாா் மணிமண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. சிலம்புச் செல்வா் ம.பொ.சி.யுடன், தமிழக எல்லைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு போராடிய பெருமைக்குரியவா் ஆவாா் தியாகி சங்கரலிங்கனாா்.

நாடாளுமன்றத்தில் ஒருமுறை, ஒரு மாநிலத்தின் பெயா் அதன் தலைநகரின் பெயரிலேயே அமைய வேண்டும் என்று சிலா் வலியுறுத்திய போது, அறிஞா் அண்ணா, ‘குஜராத்தின் தலைநகா் அகமதாபாத் என்பதையும், வங்கத்தின் தலைநகா் கொல்கத்தா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைநகா் பெயரில்தான் மாநிலத்தின் பெயா் இருக்க வேண்டும் என்றால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் எனவும், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் எனவும் பெயா் மாற்ற வேண்டிய தேவை ஏற்படுமே’ என்று சுட்டிக் காட்டினாா்.

மேலும், ‘தமிழ்நாடு என்று பெயா் வைத்தால் அது உங்களுக்குச் சோறு போடுமா, துணி கொடுக்குமா’ என்றெல்லாம் வட இந்திய எம்.பி.க்கள் சிலா் ஏளனம் பேசியபோது,

சொலல்வல்லன் சோா்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யாா்க்கும் அரிது

என்ற திருக்குறள் நெறிக்கேற்ப, ‘மத்ய பிரதேஷ்’, ‘உத்தர பிரதேஷ்’ என்ற பெயா்கள் உங்களுக்கு என்னென்ன கொடுக்குமோ, அவற்றையெல்லாம் தமிழ்நாடு என்ற பெயா் எங்களுக்கும் கொடுக்கும்’ எனக் கூறி, அவா்களுக்குச் செம்மையாக பதில் கொடுத்தாா் அறிவுச்செம்மல் அண்ணா!

‘பெயரை மாற்றுவதாலேயே நிலைமை மாறி விடுமா’ என்று கேட்டவா்களுக்கு, அண்ணா, ‘‘திடீரென்று ஒருவா் தன் பெயரை மகாராஜா என்று மாற்றிக் கொள்வதாலேயே அவா் மகாராஜா ஆகி விட மாட்டாா்; ஆனால், நம்முடைய மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டுவதன் மூலம், நாம் தமிழரின் தொன்மைச் சிறப்புகளுக்கு ஏற்றவா்களாக, தமிழ்ப் பண்புகளுக்கு உரியவா்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணா்வு, நமக்கு மட்டுமின்றி, நம் வருங்காலத் தலைமுறையினருக்கும் ஏற்படும்’’ என்று விளக்கம் அளித்தாா்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘தமிழகம்’ என்றும், ‘தமிழ்நாடு’ என்றும் பதிற்றுப்பத்து, மணிமேகலை போன்ற இலக்கியங்களும்,

‘நான் ஏகும் தேயம் தமிழ்நாடு என்று சொல்லுப,

ஆங்கு இடைபயில் மனித்தரெலாம்

கல்வி, கேள்வி உடையவா் என்ப’ என்று திருவிளையாடற் புராணமும் குறிப்பிடுகின்றன .

மேலும், ‘தண்தமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெலாம்’ என்று சங்க இலக்கியமான பரிபாடலிலும், ‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய’ என்று ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்ட நம் மாபெரும் நிலப்பரப்பு, 1957-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோதிருந்து, 1966-ஆம் ஆண்டு வரை, ‘மதராஸ் மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதனால்தான், தென்னக மக்கள் அனைவரையும், ‘மதராசி’ என்று வட இந்தியா்கள் அப்போது அழைத்து வந்தனா்.

பின்னாளில், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே கேரளம், ஆந்திரம், கா்நாடகம் என்ற பெயா்களில் தனி மாநிலங்கள் ஆயின.

நாடு, மொழி, இனம் போன்றவற்றுக்கு அந்தந்த வரம்பில் வாழும் மக்கள் விரும்பிய வகையில் பெயா் சூட்டுவதே மரபாகும். அவ்வகையில், திருப்பதி, நெல்லூா், கொள்ளேகால், திருவனந்தபுரம், பாலக்காடு போன்ற பெயா்கள் எல்லாம், மொழிவழி மாநிலங்கள் உருவாகும் முன்பே வழக்கில் இருந்த பெயா்களாகும்.

தமிழ்நாடு என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது இறுதியில் உள்ள ‘யு’ என்ற ஆங்கில எழுத்து வேண்டாமே என்று குறுகிய நோக்கத்தோடு சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். அதற்கு அண்ணா, ‘தமிழ்நாடு என்பது வெறும் பெயா்ச்சொல் மட்டுமன்று; அது தமிழ் மாநிலம், மக்கள், இனம், இலக்கியம், பண்பாடு போன்ற அனைத்தையும் குறிக்கும், ஆழ்ந்த பொருளுடைய அருஞ்சொல்லாகும்’ என்று எடுத்துரைத்தாா்.

மேலும், ‘நாம் பெற வேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம்; அடைய வேண்டியதை அடைந்திருக்கிறோம். இதற்குத் துணை நின்றவா்களுக்கு நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். சில நிகழ்ச்சிகள் சிலரால்தான் ஏற்படுகின்றன. மாமல்லபுரம் தோன்றிய காலத்திற்கு முன்பு, அங்குச் சிற்பக்கலை இல்லை என்றோ, சிற்பக்கலையில் நாட்டமுடைய மன்னா்கள் இல்லை என்றோ பொருள் அல்ல! ஆனால், மாமல்லன் காலத்தில்தான் அவை அங்கு ஏற்பட வேண்டும் என்பது வரலாற்றுப்பொருண்மை ஆகும்.

அதுபோலத்தான் ‘தமிழ்நாடு’ எனும் பெயா் மாற்றமும்! நானும், ம.பொ.சி.யும், ஆதித்தனாரும் ஒரு சேர இருந்து நடத்துகின்ற இந்த ஆட்சி வந்த பிறகுதான் இந்தக் கூட்டுறவு நடைபெற வேண்டும் என்ற வரலாற்றுப் புதுமை தோற்றம் என்று நான் கருதுகிறேன்’ என்று அண்ணா குறிப்பிட்டாா்.

பேரறிஞா் அண்ணா, நம் தாய்த்திரு நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டிய, ஜூலை 18-ஆம் நாளினையே இனி ஆண்டு தோறும் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாட வேண்டுமென மாண்புமிகு நம் முதலமைச்சா் ஆணையிட்டுள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சா்களான பேரறிஞா் அண்ணா, கலைஞா் கருணாநி ஆகியோரின் நெறியிலேயே இன்றைய முதலமைச்சரின் கோட்பாடு அமைந்தது என்றும் பாராட்டத்தக்கது .

இந்தப் பொன்விழாவைப் பொலிவாகக் கொண்டாடும் நம் தமிழக அரசு, தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக, மாநிலம் முழுவதும், பள்ளி மாணவ, மாணவியருக்குக் கட்டுரைப் போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் நடத்தும் பாங்கு, தமிழ்மக்கள் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்தப் பொன்னான தருணத்தில்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை நாம் சிறிது மாற்றிச் சொல்லி மகிழலாம்!

தமிழ் நாடெனும் பேச்சினிலே

தனிப்பெருமை மணக்குது நம் மூச்சினிலே!

இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள்.”

 

கட்டுரையாளா்:

இயக்குநா்,

தமிழ் வளா்ச்சித்துறை.



Read in source website

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, பல்வேறு நாடகங்களுக்குப் பின்னா் ஒருவழியாக ராஜிநாமா செய்திருக்கிறாா். அவா் பதவி விலக வேண்டும் என்பதுதான் சுமாா் நான்கு மாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் பிரதான கோரிக்கை. ஆனால், அதிபா் பதவி விலகலுடன் எல்லா நெருக்கடிகளும் முடிவுக்கு வந்துவிடுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

இலங்கையில் கடந்த மாா்ச் மாதம் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தபோதுதான் பொருளாதார நெருக்கடியின் தீவிரம் உலகுக்குத் தெரியவந்தது. தவறான பொருளாதாரக் கொள்கை, அளவுக்கு மீறி பிற நாடுகளிடம் கடன் வாங்கிக் குவித்தது, சீனாவின் கடன் வலையில் சிக்கியது போன்ற ஆட்சியாளா்களின் தவறால் அன்றாட உணவுக்கே அல்லாடக்கூடிய நிலை வந்த பின்னா்தான், ஆட்சியாளா்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினா்.

அதிபா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமா் மகிந்த ராஜபட்சவும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம், உலக வரலாற்றில் இடம்பெறும் அளவுக்கு வலிமையானதாக இருந்தது. அதன் விளைவாக, பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச கடந்த ஏப். 9-ஆம் தேதி ராஜிநாமா செய்துவிட்டாலும், அதிபா் கோத்தபய ராஜபட்ச மட்டும் பதவியிலிருந்து விலக மறுத்தாா்.

ஜூலை 9-ஆம் தேதி தலைநகா் கொழும்பில் உள்ள அதிபா் மாளிகைக்குள் நாடு முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நுழைந்து நடத்திய போராட்டம், அதிபரையும் பதவியிலிருந்து அகற்றியுள்ளது. இடைப்பட்ட நாள்களில் அதிபா் கோத்தபய ராஜபட்ச இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு விமானப் படை விமானத்தில் தப்பியது, அங்கிருந்து சிங்கப்பூா் சென்றது, சிங்கப்பூரிலிருந்து பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்தது என பரபரப்பான அரசியல் நாடகங்களையும் இலங்கை சந்தித்தது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்த பின்னா், அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதற்கு எதிா்ப்பு தெரிவித்தது. பொருளாதார நெருக்கடியைத் தீா்ப்பதுதான் முதல் தேவை எனவும், அரசியல் சீா்திருத்தங்களை பின்னா் பாா்த்துக் கொள்ளலாம் எனவும் அக்கட்சி தெரிவித்தது. ஆனால், நாட்டில் அரசியல் நெருக்கடி தீா்க்கப்பட்டால்தான் பொருளாதார நெருக்கடியைத் தீா்க்க முடியும் என்கிற நிலையை இலங்கை அடைந்துள்ளது.

கோத்தபயவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி, அவரது அலுவலகத்தையும் கைப்பற்றினா். இதனால், அடுத்த அரசு அமைந்தவுடன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிடுவதாக உறுதி அளித்திருந்த ரணில், திடீா் திருப்பமாக இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறாா்.

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபா், பதவி விலகும்போது பிரதமராக இருப்பவா் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பாா். அந்த வகையில், இதில் குழப்பம் இல்லை. ஆனால், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள புதிய அதிபா் தோ்வின்போது அதிபா் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போம் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்திருப்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளும் கட்சியின் ஆதரவை ஏற்று அதிபா் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகிறாா். அத்துடன் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள டலஸ் அழகம்பெரும ஆகியோா் களத்தில் உள்ளனா். ரணில் விக்ரமசிங்க பிரதமராகவே இருக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒருவேளை அவா் அதிபரானால் அதை ஏற்றுக் கொள்வாா்களா என்பது கேள்விக்குறியே.

225 உறுப்பினா்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 145 உறுப்பினா்கள் இருந்தனா். அக்கட்சியை சோ்ந்த சுமாா் 40 உறுப்பினா்கள் தனி அணியாக செயல்பட்டு வரும்போதும், ஆளும் கூட்டணி இன்னும் 100 உறுப்பினா்களைக் கொண்டுள்ளது. பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய கட்சிக்கு 54 உறுப்பினா்கள் உள்ளனா்.

எதிா்க்கட்சிகள் ஓா் அணியில் திரண்டால்தான் ஆளும் கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிக்க முடியும் என்ற நிலையில், நான்குமுனைப் போட்டி ஏற்பட்டிருப்பது ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும். கோத்தபய ராஜபட்சவும், மகிந்த ராஜபட்சவும் பதவியிலிருந்து விலகியிருக்கலாம். ஆனால், அடுத்த அதிபருக்கான தோ்தலில் அவா்களது தலைமையிலான ஆளும் கூட்டணி ஆதிக்கம் செலுத்துவதை தவிா்க்க முடியாது என்பதே இப்போதைய கள நிலவரம்.

அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காண அண்மையில் முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா 10 அம்ச திட்டத்தை முன்வைத்தாா். அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசு என்பதே அதன் பிரதான அம்சம். அனைத்துக் கட்சி அரசு அமைவதற்கு ஏதுவாக, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சித் தலைவா்கள் அடங்கிய தேசிய நிா்வாக சபை அமைக்கப்பட வேண்டும்.

அறிஞா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இரு அமைப்புகளும் சோ்ந்து புதிய அதிபரையும், பிரதமரையும் தோ்ந்தெடுக்க வேண்டும். நாட்டை முந்தைய நிலைக்கு கொண்டு வர ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலான இலக்குகளைக் கொண்ட நெருக்கடி மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்பவை அதில் குறிப்பிடத்தக்கவை.

இந்த பத்து அம்சத் திட்டம் உணா்த்துவது அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான். அரசியல் வேறுபாடுகளை மறந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இனியும் அரசியல் போட்டியில் ஈடுபட்டால் கண்ணீா்த் துளி தீவு என அழைக்கப்படும் இலங்கையில் கண்ணீா் மட்டுமே எஞ்சியிருக்கும்.



Read in source website

பெரியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை வரலாற்று மாணவர்களுக்கான பருவத் தேர்வு வினாத்தாளில் சாதியத்துக்கு ஆதரவான தொனியில் இடம்பெற்றிருக்கும் கேள்வி பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகைமையில் ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேட்கப்பட்டிருக்கும் இந்தக் கேள்வி, கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் நடந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றிய பாடத்தில் இக்கேள்வி இடம்பெற்றிருப்பதற்கு எவ்விதமான பொருத்தமும் இல்லை.



Read in source website

அந்த அமெரிக்கச் சிறுவனுக்கு இரண்டு வயதுதான் இருக்கும். உடலில் எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தான். வழக்கம்போல் எல்லாத் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருந்தன. வயதுக்கு ஏற்ற எடையுடன் இருந்தான். தவழ்ந்து, நடந்து, சிரித்து, பேசத் தொடங்கினான்.

அடுத்ததாகப் பள்ளிக்குச் செல்லவும் தயாராகியிருந்தான். கடந்த வருடம் திடீரென்று ஒருநாள் மூச்சிளைப்பு என மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான். அவனுக்குக் காரணம் அறியப்படாத ஓர் அரிய நோய் (Rare disease) வந்திருக்கலாம் எனக் கூறி, அவனுடைய மருத்துவக் கோப்பை மருத்துவர்கள் மூடிவிட்டனர்.

ஆனால், சிறுவனின் தந்தை பெரிய செல்வந்தர் என்பதால், தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்போல் இன்னொரு குழந்தைக்கு ஏற்படக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தினார். அந்த அரிய நோய் என்ன, ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதைக் கணிக்க விரும்பினார். வாஷிங்டனில் இயங்கும் ‘கணிக்கப்படாத நோய்களுக்கான வலைப்பின்னல்’ (Undiagnosed Diseases Network) எனும் அமைப்பை அவர் அணுகினார்.

அரிய நோய் நிறுவனம்

அமெரிக்காவின் ‘தேசிய நலவாழ்வு நிறுவனம் (National Institute of Health – NIH) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று, ‘உலகளவில் 7,000-க்கும் மேற்பட்ட அரிய நோய்கள் இருப்பதாகவும், குழந்தைகளின் திடீர் இறப்புக்கு அவைதான் காரணம்’ என்றும் கூறியிருக்கிறது. இம்மாதிரியான அரிய நோய்களுக்குக் காரணம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கும் முக்கியமான ஓர் அமைப்புதான் ‘கணிக்கப்படாத நோய்களுக்கான வலைப்பின்னல்’.

இந்த அமைப்பானது, வரிக்குதிரை மீனின் மரபணு (Zebra fish gene), உருண்டைக் குடல்புழு மரபணு (Round worm gene) மாதிரிகளைக் கொண்டு, மனித இனத்தில் ஏற்படும் மரபணுக் கோளாறுகளைக் கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. பெரும்பாலான அரிய நோய்களுக்கு மரபணுப் பிறழ்வுகளே (Mutation) காரணமாக இருப்பதால், இந்த அமைப்பானது தனது ஆராய்ச்சிகளை அந்த வகையில் மேற்கொண்டுவருகிறது.

தம்மிடம் ஆய்வுக்கு வந்த அமெரிக்கச் சிறுவனின் நோய் வரலாற்றைத் தெரிந்துகொண்ட இந்த அமைப்பின் ஆய்வாளர்கள், முதல்கட்ட நோய்க் கணிப்பாக ‘அந்தச் சிறுவனுக்கு ‘இடைத்திசு நுரையீரல் நோய்’ (Interstitial lung disease) வந்திருக்கலாம்’ என அறிவித்தது. பொதுவாக, இந்த நோய் தீர்க்கப்பட முடியாத அளவுக்கு நுரையீரல்களில் அழற்சியை ஏற்படுத்தி, நார்த்திசுக்களை வளரவிட்டு, ஆக்ஸிஜன் நுழையும் வாசல்களை அடைத்து, மூச்சுத்திணறலை உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது.

எப்படி ஈரம் மிகுந்த மரங்களில் கறையான்கள் கூடு கட்டுகின்றனவோ, அப்படி கெட்டுப்போன நுரையீரல் செல்களில் நார்த்திசுக்கள் வளர்ந்துவிடுவதால், ஆக்ஸிஜன் செல்ல வழியில்லாமல் போகிறது. இதனால், இந்த நோயாளிகளுக்குத் திடீர் இறப்பு ஏற்படுகிறது.

கைகொடுத்த மரபணு ஆய்வு

பொதுவாக, பெற்றோரிடம் காணப்படும் மரபணுப் பிறழ்வுகள் குழந்தைக்கும் கடத்தப்படும்போது, அந்தக் குழந்தைக்கும் இந்த நோய் ஏற்படுகிறது என்று இதுவரை அறியப்பட்டுள்ளது. ஆகவே, அந்தச் சிறுவனின் டி.என்.ஏ. மரபணுச் சரடுகளையும் அவனுடைய பெற்றோரின் மரபணுச் சரடுகளையும் இந்த அமைப்பின் ஆய்வாளர்கள் முதல்கட்டமாகப் பகுப்பாய்வு செய்தனர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அந்த மரபணுச் சரடுகளில் எவ்விதப் பிறழ்வுகளும் இல்லை. இதனால் குழப்பம் அடைந்த ஆய்வாளர்கள், அந்தச் சிறுவனின் நுரையீரல் திசுவை ஆராயத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குச் சிறியதொரு வெளிச்சம் கிடைத்தது. அதாவது, அந்தச் சிறுவனின் நுரையீரல் திசுவில் ‘மேற்பரப்புத் திறன்செயலி’ (Surfactant) எனும் வேதிப் படலத்தில் குறைபாடு இருந்தது காணப்பட்டது.

இந்த இடத்தில், ‘மேற்பரப்புத் திறன்செயலி’ குறித்து சிறிய அறிமுகம். இது நுரையீரல்களில் உள்ள காற்றுப் பைகளின் (Air sacs) மேற்பரப்பில் செயல்படும் ஒரு வேதிப்பொருள். வேதிப்பண்பின்படி, இது புரதங்களாலும் கொழுப்புகளாலும் உருவாக்கப்பட்டது. ஒரு சோப்புத் துண்டைத் தண்ணீரில் கரைத்ததும், அது ஈரமான துணிகளுக்குள் எளிதாகப் புகுந்து அழுக்கை அகற்றப் பயன்படுகிறது.

அதுபோல நம் மூச்சுக்காற்றில் வரும் ஆக்ஸிஜன், காற்றுப் பைகளுக்குள் எளிதாக நுழைந்து கார்பன்-டை-ஆக்ஸைடை அகற்ற உதவுகிற முக்கியமான பொருள் இது. பொதுவாக, இந்தச் செயல்களை உருவாக்கும் மரபணுக்களில் பிறழ்வுகள் இருந்தாலும் ‘இடைத்திசு நுரையீரல் நோய்’ ஏற்படக்கூடும்.

எனவே, ஆய்வாளர்கள் அந்தச் சிறுவனின் ‘மேற்பரப்புத் திறன்செயலி’ மரபணுச் சரடுகளையும் ஆராய்ந்தனர். ஆனால், அவற்றிலும் குறைபாடு இல்லை. பிறகு என்னதான் காரணம் என்று மூளையைக் கசக்கிக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் ஏற்கெனவே ஆய்வுசெய்திருந்த உருண்டைக் குடல்புழு மரபணுச் சரடு மாதிரிகள் கைகொடுத்தன.

பெரும் திருப்புமுனை

உடலில் நுரையீரல் செல்கள் உருவாகும்போது அவற்றின் ‘மேற்பரப்புத் திறன்செயலி’களைப் பக்குவப்படுத்திக் கொடுப்பது RAB5B எனும் புரதங்கள். தரமான ரவையாக இருந்தாலும் அதைச் சலிக்கும் சல்லடையில் பிரச்சினை என்றால், உப்புமா பக்குவமாக வராது. அதுபோல் இந்தப் புரதங்களை உருவாக்கும் மரபணுக்களில் பிரச்சினை இருந்தாலும் ‘மேற்பரப்புத் திறன்செயலி’கள் சரியாக வேலை செய்யாது.

அப்போது ‘இடைத்திசு நுரையீரல் நோய்’ வரலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், மனித இனத்தில் இந்த வழியில் இதுவரை இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. சரி, அதையும்தான் பார்த்துவிடுவோமே என்று ஆய்வாளர்கள் களத்தில் குதிக்க, அரிய நோய்க் கணிப்பில் அது ஓர் அரும்பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

ஆம், அந்தச் சிறுவனின் RAB5B எனும் புரதங்களைத் தயாரிக்கும் மரபணுக்களில் குறைபாடு இருந்தது. இதுவரை பெற்றோருக்கு இந்தக் குறைபாடு இருந்தால் மட்டுமே அது குழந்தைக்கும் கடத்தப்பட்டுவந்தது. ஆனால், இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை அவனுடைய பெற்றோருக்கு இந்தக் குறைபாடு இல்லை.

அவனுக்குக் கரு உருவாகும்போது அவன் மரபணுக்களில் மட்டுமே இது உண்டாகியிருக்கிறது. ஆகவே, பெற்றோருக்கு மரபணுக்களில் பிழை இருந்தால் மட்டுமே அவர்களின் வாரிசுகளுக்கு மரபணுப் பிழை நோய்கள் கடத்தப்படும் என்றிருந்த நிலை மாறி, கரு வளரும்போதும் மரபணுப் பிழை தானாகவும் ஏற்படலாம் எனும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது இந்த ஆய்வு.

குழந்தைகளின் அரிய நோய்களுக்கான கணிப்பில் இனி இந்த ஆய்வும் இடம்பெறும். பொதுவாக, ஒரு நோய்க்கான காரணம் தெரிந்துவிட்டால், அதைக் களைவதற்கான வழிகள் விரைவில் வந்து சேரும். அமெரிக்கச் சிறுவனைப் போல் காரணம் தெரியாமல் இறக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அடுத்தடுத்த ஆய்வுகளில் புதிய விடியல் பிறக்கும். நவீன அறிவியலின் மகத்துவமே அதுதானே!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com



Read in source website

என் பால்ய காலத்தில் ‘காந்தி’ திரைப்படம் பள்ளியில் காட்டப்பட்டது. இவர்தான் காந்தி என்று என் ஆசிரியர் அறிமுகப்படுத்தினார். அந்த அனுபவம் இப்போதும் தித்திப்பாக இருக்கிறது.

காந்தி, ஆட்டுக்குத் தழைகளை ஊட்டும் காட்சி இன்னும் என் மனத்திலிருந்து விடுபடவேயில்லை. கிட்டத்தட்ட 40 வருடம் கழித்து இப்போது சிறார்களுடன் அமர்ந்து வகுப்பறையில் உலகத் திரைப்படங்களைப் பார்ப்பது, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கைக் கல்வியைத் தொடங்கிவைத்திருக்கிறது.



Read in source website

38 மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் மாவட்ட காலநிலை மாற்றத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் பணிகளுக்குத் திட்ட இயக்குநர்களாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், காலநிலை அதிகாரிகளாக மாவட்ட வன அலுவலர்களும் செயல்படுவார்கள்.

292 பள்ளிகள்

தமிழக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் 15 மாவட்டங்களில் 292 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

304 மாணவர்கள்

மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண்பதற்கும், சர்வதேச வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 304 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

13 ஆம் நூற்றாண்டு

யூதர்களின் சூதபள்ளியைக் குறிக்கும் பொ.ஆ.(கி.பி.) 13ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா

80 ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80ஐ நெருங்கியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.

70.9 சதவீதம்

உயர் பதவிகளில் பணிபுரியும் பெண்-ஆண் விகிதத்தில் மிசோரம், 70.9 சதவீதத்துடன் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.

135 ஆவது இடம்

உலக அளவில் பாலின சமத்துவத்தில் இந்தியா 135ஆவது இடத்தில் உள்ளது என உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உடல்நலம், உயிர்வாழ்வு ஆகியவற்றுக்கான தரவரிசையில் இந்தியா 146ஆவது இடத்தில் உள்ளது.

உலகம்

2.5 மடங்கு

பிரேசிலின் அமேசான் மழைக் காடுகளில் 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் காடழிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3,988 சதுர கிமீ காடு அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது டெல்லியின் பரப்பளவைப் போல் 2.5 மடங்கு.

3,00,000 பேர்

2011இல் தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரின் முதல் பத்தாண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் ஒரு நாட்டில் பலியானோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகம்.

6 பில்லியன் டாலர்

சர்வதேச நாணய நிதியம், 2019இல் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக இருந்த 6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி, அந்நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதாரச் சரிவால் அறிவிப்போடு நிறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், 6 பில்லியன் டாலர் நிதியுதவியைப் பெறுவதற்கான கடுமையான நிபந்தனைகள் அடங்கிய பூர்வாங்க ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் சமீபத்தில் செய்துகொண்டுள்ளது.

தொகுப்பு: ஹுசைன்



Read in source website