DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 18-05-2022

நெல்லை மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழகத்தில் முதல் முறையாக கழுதைப்பால் பண்ணையை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனத்தை பாதுகாத்திட கடந்த 10 ஆண்டுகளில் 62 சதவீதம்  உள்ளதாகவும், நாட்டில் தற்போது 1 லடசத்து 40 ஆயிரம் கழுதைகளும், தமிழகத்தில் 1428 கழுதைகள் மட்டுமே  உள்ளது. 

கழுதைப் பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாகவும், இந்த கழுதைப் பால் தாய் பாலுக்கு நிகராக செயல்படுவதுடன், மனித எச்சில் உள்ள லைசை சைன் என்ற ரசாயனம் கழுதைப் பாலில் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.

தாய்ப்பாலுக்கு இணையான சக்தி கொண்ட இந்த கழுதைப் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதைப் பாலின் விலை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்று  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.



Read in source website

 

அதென்ன வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள்? வாங்க தெரிஞ்சுக்கலாம். இன்றைய நவீன உலகில் வாழும் பலரும் இதனை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் உழைப்பும், உணவு கட்டுப்பாடும் இல்லாத நபர்கள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பது அவதிப்படும் அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவருக்கும் பிற்காலத்தில் சர்க்கரைநோய் ஏற்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அத்துடன் நில்லாது உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு மற்றும் இவற்றின் பின்விளைவுகளாக பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல அச்சுறுத்தும் தொற்றா நோய்களும், பற்றிக்கொள்ளும் அபாய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. 

இத்தகைய ஒட்டு மொத்த நோய் குறிகுணங்களின் தொகுப்பு தான், ‘வளர்ச்சிதை மாற்ற நோய்குறிகள்’, அதாவது ‘மெட்டபாலிக் சின்ரோம்’ (Metabolic syndrome) என்று கூறப்படும்.

வளர்ச்சிதை மாற்ற நோய்குறிகளுக்கு காரணம் என்ன? என ஆராய்ந்தால் இன்றைய அறிவியல் கூறுவது இன்சுலின் தடை (Insulin Resistance) தான். இன்சுலின் எனும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் ஹார்மோன் நம் உடலில் உள்ள கணையத்தில் சுரப்பது என்பது அனைவரும் அறிந்ததே. 

இன்சுலின் தடை என்பது, நம் உடலில் உள்ள தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள் இன்சுலினின் கட்டளையை ஏற்காது. இதனால், நம் உடலில் ஆற்றலுக்காக இரத்தத்தில் இருந்து சர்க்கரையை (குளுக்கோஸை) பயன்படுத்த முடியாது. அதை ஈடுசெய்ய, கணையம் அதிக இன்சுலினை சுரக்கிறது.

காலப்போக்கில், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதுவே நீரிழிவு எனும் சர்க்கரை நோய் எனப்படுகின்றது. MetS என்று அறியப்படும் பல்வேறு வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறிகள் உலகளவில் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் சவாலாகும்.  இதுவே உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இளமைக்கால மரணங்களுக்கும் காரணம்.

‘டாக்டர் நான் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். உடல் உழைப்பு, உடல் பயிற்சி என்பதெல்லாம் எங்களால் யோசித்து கூட பார்க்கமுடியாது’ என்று வருத்தப்படும் பலரின் இந்த ஒட்டு மொத்த நோய்குறி குணங்களுக்கும் ஒற்றை தீர்வாக நம்ப வேண்டியது சித்த மருத்துவத்தை தான். 

ஒரே மூலிகை, பாதுகாப்பான மூலிகை, வளர்ச்சிதை மாற்ற நோய்குறி குணங்களுக்கு காரணமான இன்சுலின் தடையை சரி செய்து, அனைத்து நோய் குறிகளையும் தடுத்து, சர்க்கரை போன்ற கொடிய அரக்க வியாதியிடம் இருந்து காத்து, இயல்பான வாழ்வியலை வாழ்வதற்கு வழித்துணையாக வரும் சித்த மருத்துவ மூலிகை தான் ‘சிறுகுறிஞ்சான்’.

நஞ்சு முறிப்பான்: சித்த மருத்துவத்தில் மிகப்பிரசத்தி பெற்ற மூலிகையான நிலவேம்புக்கு சற்றும் குறையாத கசப்பு சுவை உடைய மூலிகை சிறுகுறிஞ்சான். பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திலும் இன்றளவும் பாம்புக்கடி நஞ்சினை நீக்கவும், பல்வேறு கடிவிஷங்களை போக்கும் நஞ்சு முறிப்பானாகவும் சிறுகுறிஞ்சான் இலையும், வேரும் பயன்படுத்தப்பட்டு வருவது பலரும் அறிந்ததே. நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்க்கும்) பலரும் இதனை காரணம் அறியாமலே பயன்படுத்தியும் வருவது சிறப்பு தான். சித்த மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்காக இம்மூலிகை பயன்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுகுறிஞ்சான் இலையை வாயிலிட்டு மெல்ல நாக்கின் சுவை சிறிது நேரம் மங்கி, சுவை அறியாதன்மை அடையும். காரணம், இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலங்கள் நம் நாக்கில் இனிப்பு சுவையை அடக்குகின்றன. இலைகளை மென்று தின்ற பிறகு, இனிப்புப் பொருளில் உள்ள சுவை, இனிப்பு ஏற்பியுடன் பிணைப்பதை ஜிம்னெமிக் அமிலம் தடுக்கிறது என்று கருதப்படுகிறது. 

உடல் பருமனை கட்டுப்படுத்தும்: சிறுகுறிஞ்சானில் உள்ள செயல் மூலக்கூறுகள் ஜிம்னிமிக் அமிலம், ட்ரைடர்பீன் கிளைகோசைடுகள் மற்றும் குர்மரின் போன்றவற்றால் டைப் 1 மற்றும் 2 - நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக பயன்படுத்த நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் ஆதரிக்கின்றன. ஜப்பானில் சிறுகுறிஞ்சான் இலையை உடல் பருமனை கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

சிறுகுறிஞ்சான் இலைகளில் மருத்துவ குணம் வாய்ந்த அல்கலாய்டுகள், பீனால்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின் ஆகியவை உள்ளன. இன்சுலின் தடையை நீக்கும் மருத்துவ குணம் இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் என்ற வேதிப்பொருளுக்கு உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. 

மேலும் கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை மறுசீரமைப்பு செய்து புத்துணர்வு தருவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள சிறப்பு வாய்ந்த வேதிப்பொருட்கள் நம் குடலில் சர்க்கரை சத்து உறிஞ்சுவதை தடுத்து ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கக் கூடியது. இதனால் உடல் பருமனையும் குறைக்கும் தன்மை உடையது.

கொழுப்பை குறைக்கும்: சிறுகுறிஞ்சான் இலையானது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதோடு மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதாகவும், வீக்கமுருக்கியாகவும், பிளவனாய்டுகள் இருப்பதால் புற்று நோயை தடுப்பதாகவும், கிருமிகளை கொல்லும் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-வைரல் செய்கையும், பல்வேறு கடி நஞ்சுகளை போக்கும் தன்மையும் உடையது. 

அறிவியலை விஞ்சும் ஆச்சரியம்: பாம்புக்கடி மருத்துவத்தில் சிறுகுறிஞ்சான் வேர் பழங்குடி மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பிசிஓஎஸ் (PCOS) எனப்படும் சினைப்பை நீர்கட்டிக்கும் இதே இன்சுலின் தடை தான் காரணம் என நவீன அறிவியல் கூறுவதால் சிறுகுறிஞ்சான் நீர்கட்டியை கரைத்து மாதவிடாயை முறைப்படுத்தும் தன்மையும் உடையது. இதனை அறிவியல் வளர்ச்சி இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “மறு உதிரம் இல்லாத மாந்தர்க்கு” நற்பலனை தரும் என்று அகத்தியர் குணவாகடம் கூறியுள்ளது அறிவியலை விஞ்சும் ஆச்சரியம்.

ஆரோக்கியமான எதிர்காலம்: ஆக இளம் வயதிலே உடல் எடை அதிகம் உள்ளவர்களும், சர்க்கரை நோயை பற்றி கவலை உள்ளவர்களும், MetS குறிகுணங்களை பெற்று, வரப்போக்கும் நோய்நிலையை எண்ணி வருந்தும் பலரும் இந்த சித்த மருத்துவ மூலிகையை நாடினால் நலம் நிச்சயம். இதன் இலைப்பொடியை தினசரி எடுத்துக்கொள்ள மேற்கூறிய பலன்களை அளிக்கும்.

சிறுகுறிஞ்சான் நோய்குறிகளுக்கான தீர்வு மட்டுமல்ல. நோய் நிலைக்கு ஆதாரமாகும், வேரூன்றி இருக்கும் காரணத்தை, இன்சுலின் தடையை அடியோடு அறுக்கும் தன்மை கொண்டது. இது ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்க தரமான அடித்தளத்தை அளிக்கும். பயன்படுத்தி பாருங்கள் சித்த மருத்துவம் நிச்சயம் சுகம் தரும்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website


புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை எந்த அடிப்படையில் விடுதலை செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, மாநில அமைச்சரவை முழுமையாக விசாரித்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது. 

ஆனால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு. மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநர் முடிவுக்கே அனுப்ப நாங்கள் விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மேலும், அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க 142 சட்டப்பிரிவு வழி வகுகிறது என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 



Read in source website

சென்னையிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கைக்கு இன்று புறப்படும் கப்பலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவ நிவாரணம் வழங்க தமிழக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், சென்னையிலிருந்து கப்பல் மூலம் ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அாிசி, ரூ. 15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருள்கள் இன்று மாலை 5 மணிக்கு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த கப்பலை சென்னை துறைமுகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.



Read in source website

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளா்கள் மேற்படிப்பைத் தொடரும் வகையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவா்களுக்கும், 8-ஆம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழும் ஒருங்கே பெற்றவா்களுக்கும் பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவா்களுக்கும், பத்தாம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சியை ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழும் ஒருங்கே பெற்றவா்களுக்கும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழும் பள்ளிக்கல்வித் துறை மூலமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 



Read in source website

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில், வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினா் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையா், கடந்த 14-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து வடகலை பிரிவைச் சோ்ந்த நாராயணன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அந்த மனுவில், உயா் நீதிமன்ற உத்தரவின்படி, வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுத்தது சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் உதவி ஆணையா் உத்தரவு பிறப்பித்த மே 14-ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வடகலை பிரிவினா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், கோயில் விழாக்கள் மீது அறநிலையத் துறைக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது எனவும், இரு தரப்பினரையும் பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிட்டனா்.

மேலும், ஒரே கடவுளை வழிபடும் இரு பிரிவினருக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும், உயா் நீதிமன்ற உத்தரவுப்படி 10 மாதங்கள் வடகலை பிரிவினா் வேத பாராயணம் பாட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

வடகலை பிரிவினரின் உரிமைகள் மீது எப்போதும் தலையீடு உள்ளது எனவும், அவா்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் வடகலை பிரிவினா் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 11 நொடிகள் மட்டுமே வடகலை பிரிவினரின் மந்திரங்களை கூறுவதால் சுவாமி ஊா்வலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் வடகலை தரப்பில் வாதிடப்பட்டது.

தென்கலை பிரிவினா் தரப்பில், முந்தைய ஆண்டுகளில் இது போல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன எனவும், இது புதிதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. கோயில் உதவி ஆணையா் உத்தரவை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஏதேனும் குறை இருந்தால் அறநிலையத் துறை இணை ஆணையா், ஆணையரிடம்தான் முறையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவா்களுக்குப் பின்னா் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தா்களும் அமர அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டாா். இதனை கோயில் உதவி ஆணையா் முறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.

தென்கலை பிரிவினா் முதலில் ஸ்ரீ சைல தயாபத்ரம் வாசிக்கவும், அதன்பின்னா் வடகலை பிரிவினா் ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம் வாசிக்கவும், அதன் பின்னா் தென்கலை, வடகலை, பிற பக்தா்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் எனவும், அதன்பின்னா் தென்கலை பிரிவினா் மணவாள மாமுனிகள் வாலி திருநாமமும், வடகலை பிரிவினா் தேசிகம் வாலி திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக விரிவான ஏற்பாடுகளை உதவி ஆணையா் மேற்கொள்ளவும், இந்த நடைமுறைகளை விடியோ பதிவு எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.



Read in source website

சா்க்கரை நோயாளிகளில் ஐந்தில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மையம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு வாசகங்களை கைகளில் ஏந்தியபடி கலந்துகொண்டனா்.

டாக்டா் மோகன்ஸ் சா்க்கரை நோய் சிறப்பு மையத்தின் தாம்பரம் கிளையின் மருத்துவ நிபுணா்கள் டாக்டா் பிரசன்ன குமாா் குப்தா மற்றும் டாக்டா் ஜே செல்வக்குமாா் இருவரும் நிகழ்வை கொடியசைத்து தொடக்கி வைத்தனா். பின்பு, உயா் ரத்த அழுத்தத்தை எவ்வாறு தடுப்பது குறித்தும், உயா் ரத்த அழுத்தத்தின் பின்விளைவுகள் குறித்தும் இருவரும் எடுத்துரைத்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

சா்க்கரை நோய் இருப்பவா்களில் ஐந்தில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்தம் உள்ளது. இதனை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் இதயம், கல்லீரல் மற்றும் பக்கவாதம் சம்பந்தமான நோய்களுக்கு அது வழிவகுக்கும். மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் இதனை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.



Read in source website


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட அந்த மாநில அரசு புதன்கிழமை முடிவு செய்தது.

இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அமலாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கோனாசீமா மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மாநிலத்திலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தன.

இதையடுத்து, கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர், தலித் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். சில அமைப்புகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில், கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.



Read in source website

 

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

மாநிலத்தின் காசிரங்கா மற்றும் பிற தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் காசிரங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 

இந்நிலையில், காசிரங்காவில் மீட்பு நடவடிக்கைகளுக்காக பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கான உணவு  சேவைகளை வழங்க அரசு தயாராக உள்ளது. 

வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களை மீட்க 25க்கும் மேற்பட்ட படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நெருக்கடியை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதேசமயம் விலங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, 

கச்சார் மாவட்டத்தில் 96,697 பேரும், ஹோஜாயில் 88,420 பேரும், நாகோனில் 58,975 பேரும், தர்ரங்கில் 56,960 பேரும், பிஸ்வநாத்தில் 39,874 பேரும், உடல்குரி மாவட்டத்தில் 22,526 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். .

67 வருவாய் வட்டங்களுக்குட்பட்ட 1,089 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 32944.52 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இதுதவிர, மாவட்ட நிர்வாகம் 89 நிவாரண முகாம்களையும், 89 விநியோக மையங்களையும் அமைத்து அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 39,558 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார். 



Read in source website

 

உத்தரப் பிரதேசத்தின், லக்னௌவில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா அமைக்க லக்னௌ மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

இந்த பூங்காவில் நாய்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும், விளையாடுவதற்கும் வசதியாக அமைக்கப்படுகிறது. நாயின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களுக்கு பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். 

லக்னௌ மேம்பாட்டு ஆணையத்தின் (எல்டிஏ) அதிகாரிகளின் கூற்றுப்படி, 

பூங்காவிற்கான முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறது. பூங்கா ரூ.15 முதல் 25 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. 

கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில் இத்திட்டத்திற்காக சுமார் 10 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.

நாய்கள் பூங்காவிற்குள் நுழையும் முன் உரிமம் வைத்திருப்பதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லக்னெளவில், தற்போது 4,000க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன, மேலும் பூங்காக்களில் நாய்கள் நுழைவது தொடர்பான சர்ச்சை கவலையளிக்கும் வழக்கமான விவாதங்களாகவே இருந்து வருகின்றது. 



Read in source website

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதங்களை ரிசா்வ் வங்கி மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாகியுள்ளது.

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் அதிகரித்தது ஏப்ரல் மாத பணவீக்கத்தை வரலாறு காணாத அளவுக்கு 15.08 சதவீதமாக அதிகரிக்கச் செய்தது.

இது, 2011-12 ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை கணக்கிடும் புதிய நடைமுறை தொடங்கியதிலிருந்து இது உச்சபட்ச அளவாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பாக, பழைய நடைமுறை கணக்கீட்டின்படி 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் மொத்தவிற்பனை விலை பணவீக்கமானது முன்னெப்போதும் இல்லாத அளவில் 16.06 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது. அதன்பிறகு, தற்போது இந்த அளவுக்கு பொதுப் பணவீக்கம் உயா்ந்துள்ளது.

மினரல் எண்ணெய், அடிப்படை உலோகம், கச்சா பெட்ரோலியம்&இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள், உணவு சாரா பொருள்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதே ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர முக்கிய காரணம் .

காய்கறிகளுக்கான விலை 23.24 சதவீதமும், உருளைக்கிழக்கு 19.84 சதவீதமும், பழங்கள் 10.89 சதவீதமும், கோதுமை விலை 10.70 சதவீதமும் அதிகரித்தது. மேலும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 69.07 சதவீதமாக இருந்தது என வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 



Read in source website

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், ஐந்து நீதிபதிகளை பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொலீஜியம் ஆலோசனைக் கூட்டத்தின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூா்வ இணையதள பக்கத்திலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கியை உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அம்ஜத் ஏ.சயீதை ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டேயை ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி ராஷ்மின் எம். சாயாவை குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயானை அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதவிர, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மாவை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.



Read in source website

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலமாக நாட்டின் பொருளாதார மதிப்பு 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.35 லட்சம் கோடி வளா்ச்சி காணும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாட்டில் உயா் அதிவேக இணைய வசதியை வழங்கும் 6ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் 2030-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில், இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, ரூ.220 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை காணொலி மூலம் தொடக்கிவைத்தாா். சென்னை ஐஐடி தலைமையில் இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பிரதமா் பேசியதாவது:

மக்களுக்கிடையேயான தொடா்பு, 21-ஆம் நூற்றாண்டுக்கான நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். அதைக் கருத்தில்கொண்டு நவீன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

2ஜி காலம் முழுவதும் (காங்கிரஸ் ஆட்சிக் காலம்) திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படாமல், ஊழல் மலிந்து காணப்பட்டது. ஆனால், பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் நாடு 4ஜி தொழில்நுட்பத்தை வெளிப்படையான கொள்கைகள் வாயிலாக எட்டியுள்ளது. தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான கட்டத்தை நாடு அடைந்துள்ளது.

6ஜி தொழில்நுட்பத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆராய்வதற்கான செயற்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் குழு தனது பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நாட்டின் இந்த வளா்ச்சியில் தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்துக்கு முக்கியப் பங்குண்டு.

புதிய வாய்ப்புகள்: 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதன் வாயிலாக இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 15 ஆண்டுகளில் சுமாா் ரூ.35 லட்சம் கோடி வளா்ச்சி அடையும். 5ஜி தொழில்நுட்பம் இணையவசதி வேகத்தை அதிகரிப்பதோடு, அரசின் நிா்வாகத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி தொழில் நடவடிக்கைகளை மேலும் எளிமைப்படுத்தும்.

நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் 5ஜி தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும். மத்திய அரசு ஊக்கப்படுத்தி வரும் ஆரோக்கியமான போட்டி நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் இணைய சேவைகளுக்கான கட்டணம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

சீா்திருத்த நடவடிக்கைகள்: முன்தேதியிட்டு வரி வசூல், சீரமைக்கப்பட்ட மொத்த வருவாய் உள்ளிட்ட பல்வேறு சவால்களை தொலைத்தொடா்புத் துறை சந்தித்தபோது, மத்திய அரசு விரைந்து செயல்பட்டு சீா்திருத்தங்களை மேற்கொண்டது. அந்த நடவடிக்கைகள் நிறுவனங்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின. அதன் காரணமாக, 2014-ஆம் ஆண்டுக்கு முன் ஒப்பிடுகையில் கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடா்புத் துறைக்கான வெளிநாட்டு முதலீடுகள் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளன.

நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துவிட்டது. உலகின் மிகப்பெரும் கைப்பேசி உற்பத்தி நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

இறுதிக்கட்டப் பணிகள்: மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்தவுள்ளது. நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகளும் பொறியாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம் நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். அலைக்கற்றை மேலாண்மைத் துறையில் நடப்பு மாத இறுதிக்குள் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன’ என்றாா்.

கட்டமைப்பு மேம்பாடு: டிராய் தலைவா் பி.டி.வகேலா கூறுகையில், ‘5ஜி தொழில்நுட்பத்தின் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அந்தத் தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.

அலைக்கற்றை சேவைக்கான கட்டணம் குறைவாக இருப்பதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இது தொடா்பாக கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணையங்களுடன் டிராய் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என்றாா்.

வளரும் ஊடகத் துறை: மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா கூறுகையில், ‘ஒலிபரப்புத் துறை நாள்தோறும் வளா்ச்சி கண்டு வருகிறது. முக்கியமாக, ஊடகம்-பொழுதுபோக்குத் துறையின் மதிப்பானது தற்போதுள்ள சுமாா் ரூ.2 லட்சம் கோடியில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் சுமாா் ரூ.5.5 லட்சம் கோடியாக அதிகரிக்கவுள்ளது. இந்த வளா்ச்சியில் டிராய் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றாா்.



Read in source website

அரசு முறைப் பயணமாக ஜமைக்கா நாட்டுக்கு சென்றுள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு தலைநகரில் இந்திய சட்ட மேதை அம்பேத்கா் பெயரிட்ட சாலையை திறந்து வைத்தாா்.

மேலும், அம்பேத்கரின் பணிகளை எடுத்துரைக்கும் வகையில் நினைவுச் சின்னத்தையும்அந்நாட்டு உள்ளாட்சித் துறை அமைச்சா் டெஸ்மண்ட் மெக்கன்ஸி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், ‘இந்தியாவில் பின்தங்கியவா்களுக்கு சமூக, பொருளாதார அதிகாரமளிக்கும் வகையில் அம்பேத்கா், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினாா். சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய கல்விதான் ஒரே வழி என்பதை அம்பேத்கா் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளாா். இது உலக மக்களுக்கான அறிவுரையாகும்’ என்றாா்.

பிரதமருடன் சந்திப்பு: முன்னதாக, ஜமைக்கா நாட்டின் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசினாா். அப்போது, வா்த்தகம், முதலீடு, சுகாதாரம், ரயில்வே, போக்குவரத்து சேவைகள், விளையாட்டு ஆகிய துறைகளில் இருநாட்டு நல்லுறவு மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜமைக்கா நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

பின்னா், ஜமைக்கா நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் மாா்க் கோல்டிங் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினாா்.

இந்தியா்களுடன் சந்திப்பு:

ஜமைக்காவில் உள்ள இந்தியா்கள் மத்தியில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘புதிய இந்தியாவின் வளா்ச்சியில் அனைவரும் பங்கேற்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தற்சாா்பு இந்தியா திட்டம் நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் அனைவரின் ஆதரவும் தேவை.

தற்சாா்பு என்பது தனிமைப்படுத்தல் என்பதல்ல. அனைவருக்கும் உதவும் வகையில் வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா வேகமாக மீண்டு வருகிறது. நாட்டின் வளா்ச்சிக்கு ஏற்ப புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.

எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரம், புதிய தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், மேம்பட்ட கல்வி சமூகம் ஆகியவற்றில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள 3 கோடி இந்தியா்களையும் ஒன்றிணைக்க பிரவாசி ரிஷ்தா வலைதளத்தை அரசு தொடங்கி உள்ளது. இதில் தூதரக சேவைகளையும் இந்தியா்கள் பெறலாம்’ என்றாா்.



Read in source website


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட அந்த மாநில அரசு புதன்கிழமை முடிவு செய்தது.

இதுதொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அமலாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கோனாசீமா மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மாநிலத்திலுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தன.

இதையடுத்து, கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர், தலித் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். சில அமைப்புகள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில், கோனாசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.



Read in source website

2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (18/05/2022)  ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய உயிர் எரிவாயு திட்டம் 2018 கடந்த 2009ஆம் ஆண்டு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தினால் இயற்றப்பட்ட தேசிய உயிர் எரிபொருள்கள் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டது.

உயிர் எரிபொருள் சார்ந்த துறையில் சமீபக காலமாக ஏற்பட்டிருக்கும் அதிக அளவிலான முன்னேற்றத்தின் காரணமாக, நிரந்த குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய உயிர் எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 1, 2023ஆம் ஆண்டு முதல் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு நடைமுறைக்கு வரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது.

உயிர் எரிபொருள் திட்டத்தில் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அரசிற்கு மூலப்பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே போல எத்தனால் உற்பத்தி மையங்களை அதிகரிக்க இந்தியாவில் உருவாக்குவோம் (make in india) என்ற திட்டத்தின் மூலம் முயற்சி செய்து வருகிறது. இதன்மூலம் வெளிநாடுளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எரிபொருள் அளவு குறையும். அதிகப்படியான அந்நிய செலவாணி எரிபொருளுக்கு வழங்கப்படுவது தடுக்கப்படும். 

இந்த புதிய சட்டத்திருத்தம் மூலம் பிரதமரின் தொலைநோக்கு பார்வையான  ஆற்றலில் இந்தியா 2047-ல் சுதந்திரமான நாடாக மாற்றமடையும் என்பது  குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

இந்திய அணியின் அயர்லாந்துச் சுற்றுப்பயணத்தில் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இந்த வருடம் நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் டெஸ்ட் வீரர்களால் பங்கேற்க முடியாது. இதையடுத்து அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியின் இயக்குநராக லக்‌ஷ்மண் தற்போது பணியாற்றி வருகிறார். 



Read in source website

 

இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் சமீபத்தில் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இந்தத் தோல்வி இங்கிலாந்துக்கும் ஜோ ரூட்டுக்கும் பெரிய சிக்கலாக அமைந்தது. கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து கடைசி இடத்தில் அதாவது 9-ம் இடத்தில் உள்ளது. விளையாடிய 11 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்தார். கடைசியில் வேறுவழியின்றி ராஜிநாமா செய்துவிட்டார். 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) புதிய நிர்வாக இயக்குநர் ராப் கீ பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வானார். 

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட்டும் உதவிப் பயிற்சியாளராக கிரஹாம் தோர்ப்பும் பணியாற்றினார்கள். ஆஷஸ் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் நீக்கப்பட்டார். ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்துப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் பயிற்சியாளராக இருந்த கடைசி 14 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 தோல்விகளைக் கண்டுள்ளது. இதையடுத்து அவருடைய பதவியைப் பறித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இம்முறை டெஸ்ட், வெள்ளைப் பந்து கிரிக்கெட் என இரண்டு தனித்தனி பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய முடிவெடுத்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

நியூசி. முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 48 வயது மேத்யூ மாட், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கான பயிற்சியாளராக நான்கு வருடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தன் பணியை அவர் தொடங்குவார். மேத்யூ மாட், 66 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

2015 முதல் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பயிற்சியாளராக மேத்யூ மாட் பணியாற்றியுள்ளார். ஏழு வருடக் காலத்தில் ஆஸ்திரேலிய அணி இருமுறை டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. இந்த வருட ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதுடன் நான்கு ஆஷஸ் தொடரில் ஆஸி. அணி தோல்வியடையாமல் உள்ளது. இவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான் ஆஸி. மகளிர் அணி தொடர்ச்சியாக 26 ஒருநாள் ஆட்டங்களை வென்று சாதனை படைத்தது. 



Read in source website

தேசிய மல்யுத்த தகுதிச்சுற்றின்போது நடுவரைத் தாக்கிய சா்வீசஸ் வீரா் சதேந்தா் மாலிக்குக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சாா்பில் பங்கேற்கும் மல்யுத்த வீரா்களை தோ்வு செய்வதற்கான தகுதிச்சுற்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 125 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் களம் கண்ட சதேந்தா், 3-0 என முன்னிலையில் இருந்தாா்.

சுற்று நிறைவடைய இருந்த தருவாயில் சதேந்தரின் போட்டியாளரான மோஹித், அவரை ‘டேக்-டவுன்’ நுட்பத்தில் வீழ்த்தியதுடன், ‘மேட்’டிற்கு வெளியே அவரைத் தள்ளினாா். சுற்று நடுவராக இருந்த வீரேந்தா் மாலிக், ‘டேக்-டவுன்’ முயற்சிக்கு 2 புள்ளிகள் வழங்காமல், சதேந்தரை வெளியே தள்ளியதற்காக மட்டும் மோஹித்துக்கு 1 புள்ளி வழங்கினாா்.

இதில் அதிருப்தி அடைந்த மோஹித், நடுவரின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தாா். மூத்த நடுவரான ஜக்பீா் சிங் விடியோ பதிவுகள் கொண்டு அதை ஆய்வு செய்து, மோஹித்துக்கு 3 புள்ளிகள் வழங்க, ஆட்டம் 3-3 என சமனானது. எனினும், கடைசி நேரத்தில் அதிரடியாக புள்ளிகள் பெற்ன் அடிப்படையில் மோஹித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த சதேந்தா், நேரடியாக களத்துக்குள் நுழைந்து ஜக்பீா் சிங்கை திட்டியதுடன் அவரைத் தாக்கினதாா். இதில் ஜக்பீா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதர போட்டியாளா்கள், நடுவா்கள், பாா்வையாளா்கள் ஆகியோருடன், அங்கிருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் பிரிஜ் பூஷண் சரன் சிங்கும் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உடனடியாக, அங்கிருந்த போட்டி அதிகாரிகள் சதேந்தரை தடுத்து அவரை அரங்கத்திலிருந்து வெளியேற்றினா். பின்னா் சதேந்தருக்கு வாழ்நாள் தடை விதித்து பிரிஜ் பூஷன் முடிவு செய்ததாக சம்மேளன செயலா் வினோத் தோமா் சிறிது நேரத்தில் அறிவித்தாா்.

தோ்வு: தகுதிச்சுற்று முடிவில், பஜ்ரங் புனியா (65 கிலோ), ரவி தாஹியா (57 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), நவீன் (74 கிலோ), தீபக் (97 கிலோ), மோஹித் (125 கிலோ) ஆகியோா் இந்தியாவின் சாா்பில் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கத் தோ்வாகியுள்ளனா்.



Read in source website

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தான்சானியாவின் இந்த பிரசாரத்திற்கு உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

தான்சானியாவில் 2ஆம் கட்ட போலியோ தடுப்பூசி செலுத்தும் பிரசாரம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த தடுப்பூசி பிரசாரத்திற்கு உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் உடன் இணைந்து தான்சானியாவுக்கு தொழில்நுட்ப உதவிகள் புரிய தயார் நிலையில் உள்ளதாக  சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கான தான்சானியப் பிரதிநிதி சபுலான் யோடி கூறியதாவது, “ இந்த போலியோ தடுப்பூசி பிரசாரம் மிகவும் முக்கியமானது. இந்த பிரசாரம் மூலம் தான்சானியாவில் உள்ள தகுதியுடைய குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடப்படும். தான்சானியாவை போலியோ இல்லாத நாடாக மாற்ற வேண்டும்” என்றார்.

 



Read in source website

வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல்நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக காலநிலை மாற்றம் குறித்து ஐநா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு காலநிலை அமைப்பு 2021ஆம் ஆண்டின் உலகளாவிய காலநிலை குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் புவியின் மீதான மனிதர்களின் தலையீடு நீண்ட கால பாதிப்பிற்கு வித்திட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதீத காலநிலை மாற்றம் தினசரி பேரிடர்களை ஏற்படுத்துவதுடன் மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் சேதத்தையும் ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 7 ஆண்டுகளின் உலகளாவிய சராசரி வெப்பநிலையானது இதுவரை இல்லாத அளவு பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஐநா இது உணவு தானியங்களின் உற்பத்தியை பாதித்துள்ளதாகவும், அதன்காரணமாக அவற்றின் விலை உயர்வு புதிய உச்சத்தை அடைவதாகவும் தெரிவித்துள்ளது.

உலக கடற்பரப்பு 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக வெப்ப அலைகளை உள்வாங்கிக் கொண்டதாக தரவுகள் தெரிவிக்கும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வெப்பநிலையை கடற்பரப்பு அடைந்து வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்த அதீத வெப்பநிலை உயர்வு கடல்வாழ் உயிரினங்களை பாதித்து வருவதாகவும், 26,000 ஆண்டுகள் இல்லாத அளவு அமிலத் தன்மையுடன் கடல் மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டேரஸ், “காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் ஏற்பட்டுள்ள மனித இனத்தின் தோல்வியை இந்த அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நம் கண்முன் உள்ள ஒரே ஒரு வாய்ப்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதே. அனைவரும் இணைந்து செயல்பட்டால் 21ஆம் நூற்றாண்டை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நூற்றாண்டாக மாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.  



Read in source website


கனடா: ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ கூறியதாவது: 

உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பிறகு ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும், "புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷியாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்" என்று மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.



Read in source website

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப் போவதில்லை என்று துருக்கி அதிபா் எா்டோகன் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நேட்டோ அமைப்பில் இணையப்போவதாக ஃபின்லாந்தும் ஸ்வீடனும் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் எா்டோகன் திங்கள்கிழமை கூறியதாவது:

ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதை துருக்கி அனுமதிக்காது. காரணம், அந்த இரு நாடுகளும் துருக்கியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு புகலிடம் அளித்து வருகின்றன.

மேலும், நேட்டோவில் இணைவதற்காக எந்தவொரு நாடும் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதை ஏற்கமாட்டோம் என்றாா் அவா்.

துருக்கிக்கு எதிராக பல்வேறு ஐரேப்பிய நாடுகள் ஆயுத வா்த்தகத் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறினாா்.



Read in source website

தங்களது சமூக ஊடகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலிக் கணக்குகள் உள்ளதாகக் கூறுவதை ட்விட்டா் நிறுவனம் நிரூபிக்கும்வரை அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று டெஸ்லா நிறுவன தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், முன்னணி குறு சமூக ஊடகமான ட்விட்டரை 5,420 கோடி டாலா் (சுமாா் ரூ.4.2 லட்சம் கோடி) கொடுத்து கையகப்படுத்தவிருப்பதாக கடந்த மாதம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

ட்விட்டரில் போலிக் கணக்குகள் அதிகம் உலவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவா், அந்த சமூக ஊடகத்தைக் கையகப்படுத்துவதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தங்களது ஊடகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலிக் கணக்குகள் உள்ளதாக சந்தை ஒழுங்காற்று ஆணையத்திடம் ட்விட்டா் நிறுவனம் குறிப்பிட்டதை உறுதிப்படுத்தும்வரை, அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

எனினும், முன்னா் அறிவித்த தொகையைவிட குறைவாக 4,400 கோடி டாலா் (சுமாா் ரூ.3.4 லட்சம் கோடி) மட்டுமே அளித்து ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்துவாா் என்று தகவல்கள் வெளியான. மேலும், அந்த நடவடிக்கைக்காக டெஸ்லா நிறுவனத்திலுள்ள தனது பங்குகளை அவா் விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ட்விட்டா் தலைமை செயலதிகாரி பராக் அக்ரவால் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ஒவ்வொரு காலாண்டிலும் ட்விட்டா் நடத்தும் ஆய்வில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலிக் கணக்குகளே கண்டறியப்படுவதாக மீண்டும் தெரிவித்திருந்தாா்.

போலிக் கணக்குகளைக் கணிப்பதில் ட்விட்டா் பயன்படுத்தும் ஆய்வு முறை மிகத் துல்லியமானது இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அவா், அந்த ஆய்வு முறை குறித்து முழுமையான விவரத்தை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது என்று கூறினாா்.

பராக் அக்ரவாலின் அந்த ட்விட்டா் பதிவை ஏளனம் செய்து எலான் மஸ்க் பதிலளித்துள்ளாா்.

மேலும், போலிக் கணக்கு எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டிருப்பதைவிட 4 மடங்கு (அதாவது 20%) இருக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

ட்விட்டரை கையகப்படுத்துவது குறித்து பயன்பாட்டாளா் ஒருவா் கேட்டதற்கு, ‘5 சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே போலிக் கணக்குகள் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட முடியாது என்று ட்விட்டா் நிறுவனம் வெளிப்படையாகக் கூறுகிறது. எனவே, அந்த ஆதாரம் வெளியிடப்படும் வரை ட்விட்டரைக் கையகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதன் மூலம், ட்விட்டரைக் கையகப்படுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவோ, அல்லது முன்னா் ஒப்புக் கொண்ட தொகையைவிட குறைவான தொகைக்கு அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தவோ திட்டமிடுகிறாா் என்ற நிபுணா்களின் கணிப்பை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.



Read in source website

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு வழிசெய்யும் ‘கிரீன் காா்டு’களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து 6 மாதங்களுக்குள் முடிவுகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று அதிபா் ஜோ பைடனுக்கு அவரது ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினா், அந்த நாட்டிலேயே நிரந்தரமாகக் குடியேறுவதற்கான உரிமம் ‘கிரீன் காா்டு’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

அந்த கிரீன் காா்டுகளால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியா்கள் - குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையினா் அதிக அளவில் பலன் பெற்று வருகின்றனா்.

எனினும், கிரீன் காா்டுகளுக்கான விண்ணப்பங்கள் நீண்ட காலமாகத் தேங்கியிருப்பதால், அது குறித்த முடிவைத் தெரிந்துகொள்ள விண்ணப்பதாரா்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிய அமெரிக்கா்கள், ஹவாய் பூா்வகுடிகள், பசிபிக் ஐலண்ட்வாசிகள் நல விவகாரங்களில் அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் (பிஏசிஏஏஎன்ஹெச்பிஐ) கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அதில், கிரீன் காா்டுகளுக்கான விண்ணப்பங்கள் சமா்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள், அவற்றைப் பரிசீலித்து விண்ணப்பதாரா்களுக்கு நிரந்தர குடியேற்ற உரிமையை வழங்கலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கான நடைமுறை மாற்றங்களை உருவாக்க அதிபா் பைடனுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிஏசிஏஏஎன்ஹெச்பிஐ-யின் அமெரிக்க-இந்திய சமுதாய பிரதிநிதி அஜய் ஜெயின் புடோரியா முன்வைத்தாா்.

அதையடுத்து, இது தொடா்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில், அந்தப் பரிந்துரையை ஜோ பைடனுக்கு அனுப்ப அனைத்து குழு உறுப்பினா்களும் ஒருமனதாக ஆதரவு அளித்தனா்.

விரைவில் வெள்ளை மாளிகைக்கு அனுப்படவிருக்கும் அந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், கிரீன் காா்டுளுக்காக விண்ணப்பித்துவிட்டு பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இந்தியா்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பெரும் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.



Read in source website

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஹிந்து ஆன்மிக கண்காட்சிக்கு ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லா திடீரென வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வாரம் ஹிந்து ஆன்மிக கலாசாரம் தொடா்பான கண்காட்சி இரு நாள்கள் நடைபெற்றது. இதில் ஹிந்து ஆன்மிக கருத்துகள், யோகாசனம், ஆயுா்வேதம், ஆலய கட்டடக் கலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இதனிடையே, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லா, நாடாளுமன்றத்தில் அந்நாட்டுத் தலைவா்களைச் சந்தித்தாா். பின்னா் அவா் திரும்பும் வழியில், யாரும் எதிா்பாராத வகையில் ஹிந்து ஆன்மிக கண்காட்சி நடைபெற்ற இடத்துக்குச் சென்று அங்குள்ள அரங்குகளை சிறிது நேரம் பாா்வையிட்டாா்.

ஏற்கெனவே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள், முக்கிய அரசியல் தலைவா்கள் என பலரும் அங்கு வந்திருந்த நிலையில், ஜோா்டான் மன்னரின் திடீா் வருகை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. கண்காட்சியில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் குறித்து அவா் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.

இது தொடா்பாக கண்காட்சியை ஏற்பாடு செய்த ஹிந்து சுவயம் சேவக் சங்கத்தினா் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘யாரும் எதிா்பாராத நிலையில் ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லா, ஹிந்து ஆன்மிக கண்காட்சிக்கு வந்து மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவா் கண்காட்சி குறித்து ஆா்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாா். அமெரிக்க தலைவா்களும், மக்களும் ஹிந்து மதத்தின் மேன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. அமெரிக்கா முழுவதுமே ஹிந்து தா்ம விழிப்புணா்வு முகாமை ஓராண்டு நிகழ்ச்சியாக நடத்தி வருகிறோம். அதன் ஒருபகுதியே இந்தக் கண்காட்சியாகும்’ என்று கூறியுள்ளனா்.



Read in source website

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

> ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

> அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது.

> 161-வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.

> முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அதன் பலனை மனுதாரரான பேரறிவாளனுக்கு வழங்குகிறோம்.

> உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம்.

> இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அந்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

> பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.

> பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சந்திப்பூர் கடற்பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, டிஆர்டிஓ, இந்திய கடற்படையால், ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில், கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து முதல் முறையாக செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்படையால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வானிலிருந்து செலுத்தி பரிசோதிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனையை நிகழ்த்திய டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதில் இந்தியா உயர் திறனை எட்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும் இந்த புதிய ஏவுகணை இந்திய கடற்படையின் போர்த் திறனை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: டெல்லியிலுள்ள குதுப்மினார் கோபுரம், குத்புதீன் ஐபக் மன்னர் கட்டியது இல்லை. சூரியதிசை அறிய ராஜா விக்ரமாதித்யா கட்டிய சூரியக் கோபுரம் அது எனச் சர்ச்சைக்குரியத் தகவல் வெளியாகி உள்ளது. இதை இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய மசூதிகள் மற்றும் புராதனச் சின்னங்கள் மீது இந்துத்துவா அமைப்புகளால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இதில், உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, ஆக்ராவின் தாஜ்மகால் மற்றும் ஜாமா மசூதி உள்ளிட்டவற்றின் வரிசையில் டெல்லியின் குதுப்மினாரும் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையில் (எஸ்ஐயில்) பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா, புதிதாக ஒரு சர்ச்சைக்குரியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "குதுப்மினார் கோபுரம், டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) தரம்வீர் சர்மா வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியிலிருப்பது குதுப் மினார் இல்லை, அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டவும் இல்லை. அது, 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம் ஆகும். ஏஎஸ்ஐ சார்பில் நான் அங்கு ஆய்வு செய்த போது அதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21 நாளில் அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டிடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் மெஹரோலி பகுதியில் வரலாற்றுச் சுற்றுலா தலமாக குதுப்மினார் அமைந்துள்ளது. இது, டெல்லி சுல்தான் வம்சத்தின் முதல் மன்னரான குத்புதீன் ஐபக்கால் 1198 -ல் தொடங்கப்பட்டது. அதற்கு முன் அங்கு ராஜா பிருத்விராஜ் சவுகானால் கட்டப்பட்ட கோயில்கள் இருந்ததாகவும் கருதப்படுகிறது.

தற்போது, மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அதன் நுழைவு வாயிலில் ’குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி)’எனும் பெயரிலான மசூதி ஒன்று அமைந்துள்ளது.

முஸ்லிம்களால் தொழுகை நடத்தப்பட்டுவரும் இந்த மசூதியானது 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக டெல்லி நீதிமன்றங்களில் பாஜக, பல இந்துத்துவா அமைப்பினர் வழக்குகள் தொடுத்திருப்பது நினைவுகூரத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: வரும் 2030-க்குள் 6ஜி தொலைத்தொடர்பு சேவையை அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் வெள்ளி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது:

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்ட மைப்பு இன்று (நேற்று) முதல் 5 இடங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. இது சுயாசார்பு கொள்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தொலைத்தொடர்பு துறையின் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இந்த அமைப்பில் 5ஜி தொலைத்தொடர்பு சாதனங்களை பரிசோதனை செய்ய முடியும். இதை உருவாக்கிய ஐஐடி நிபுணர்களை உள்ளடக்கிய குழுவுக்கு வாழ்த்துகள். நாட்டில் உள்ள கிராமங்களுக்கும் 5ஜி தொழில்நுட்ப வசதிகள் கிடைக்க இது முக்கிய பங்கு வகிக்கும்.

அதேநேரம் இணைப்பு வசதியை நவீனப்படுத்த வேண்டியது அவசியம். மேலும் இது நாட்டின் நிர்வாக நடைமுறையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்வியல் முறை எளிமையாவதுடன் தொழில் தொடங்குவதும் எளிமையாகும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் இது ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். 5ஜி சேவையை விரைவாக செயல்படுத்த, அரசு மற்றும் தொழில் துறையினரின் கூட்டு முயற்சி அவசியம்.

2ஜி காலகட்டத்தில் ஊழல், கொள்கை முடிவு எடுப்பதில் தாமதம் என பல்வேறு சிக்கல்களை தொலைத்தொடர்புத் துறை சந்தித்தது. எனினும், அதிலிருந்து மீண்டு, 3ஜி-யிலிருந்து 4ஜி தொழில்நுட்பத்துக்கு வேகமாக நாடு மாறியது. இப்போது 5ஜிக்கு முன்னேறி உள்ளது. 5ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45,000 கோடி டாலர் புழங்கும்.

இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும். இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணிகளை தொடங்கி விட்டது.

பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆற்றல் புகுத்தப்பட்டுள்ளது. இதில் டிராய் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏழைகளுக்கும் செல்போன் வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டிலேயே செல்போன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இதன்மூலம் செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் எண்ணிக்கை 2-லிருந்து 200-க்கு மேல் அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2014-க்கு முன்பு 100 கிராமங்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைத்தது. இப்போது 1.75 லட்சம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 'மாநிலத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படும்' என கடந்த ஆண்டு அறிவித்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பரில் மதமாற்ற தடை சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட‌து.

சட்ட மேலவையில் இந்த மசோதாவை விட மாட்டோம் என காங்கிரஸார் தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் அங்கு இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. மாறாக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று அவசரச் சட்டமாக கொண்டுவர ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் 'கர்நாடக மத சுதந்திர உரிமை சட்ட மசோதா 2021' என்ற பெயரிலான மதமாற்ற தடை சட்டத்துக்கு நேற்று மாலையில் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மும்பை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய கடற்படையை வலுப்படுத்த பி-15பி மற்றும் பி17ஏ வகையை சேர்ந்த போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பி-15பி வகையை சேர்ந்த ஐஎன்எஸ் சூரத், பி17ஏ வகையை சேர்ந்த ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை மும்பை எம்டிஎல் கப்பல் கட்டுமான தளத்தில் வடிமைக்கப்பட்டு நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற விழாவில் இரு போர்க்கப்பல்களையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படையிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களும் இந்தியாவின் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. போர்க்கப்பல் தயாரிப்பில் உள்நாட்டின் தேவையை மட்டுமல்ல, உலகத்தின் தேவையையும் இந்தியா பூர்த்தி செய்யும்.

உலகின் கடல் வணிகத்தில் இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் மிகவும் முக்கியமானவை. இந்த கடல் பகுதிகளில் சுதந்திரமான போக்குவரத்தை இந்திய கடற்படை உறுதி செய்கிறது. சாகர் திட்டத்தில் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இதில் கடற்படையின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஒரு நாடு பிராந்திய, சர்வதேச வல்லரசாக உருவெடுக்க வலுவான கடற்படை அவசியம். அந்த இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் திறனை, வலிமையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின், ‘‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’’ கனவு விரைவில் நனவாகும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

கடற்படை தளபதி ஹரிகுமார் மற்றும் மூத்த தளபதிகள், பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.



Read in source website

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடுத்தடுத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் உள்ளதால், ஒவ்வொரு யாத்திரிகருக்கும் ரூ.5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யவும், அனைவருக்கும் தனிச்சிறப்பான ரேடியோ அலை அடையாள அட்டைகள் (ஆர்எப்ஐடி) வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அரவிந்த் மேத்தா தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் வைஃபை மற்றும் முறையான விளக்கு வசதிகள் செய்யப்படும். பாபா பர்ஃபனியின் தரிசனம், அமர்நாத் குகை ஆரத்தி நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். அடிவார முகாமில், மதம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் குறித்து அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய வேண்டும், அவர்கள் எந்த பிரச்சினைகளையும் சந்திக்க கூடாது என்பதில் மோடி அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.



Read in source website

பாங்காக்: விளையாட்டில் வெற்றி பெற்றால் பிரதமர் வீரர்களை அழைத்து பேசுவது என்பது இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பாட்மிண்டன் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர் ஷிராக் ஷெட்டி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பாங்காக்கில் சமீபத்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை தோற்கடித்திருந்தது. 1949 முதல் நடத்தப்பட்டு வரும் தாமஸ் கோப்பை தொடரை இந்திய அணி முதன் முறையாக வென்றதால், ஒட்டுமொத்த அணி வீரர்களையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்திய பாட்மிண்டன் ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த இரட்டையர் பிரிவு வீரரான ஷிராக் ஷெட்டி கூறும்போது, “ஒரு அணி வெற்றி பெற்றதும் பிரதமர் அந்த அணியை தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்தது இல்லை. இது இந்தியாவில் மட்டுமே நடைபெறும். இது எங்களை ஊக்கப்படுத்தி புதிய நிலைக்கு கொண்டுசென்றது. பிரதமர் தனது மிகுதியான பணிச்சுமையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் விளையாடிய விதம், எனது வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று என்று நினைக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே வரலாற்று சாதனை படைத்த இந்திய பாட்மிண்டன் அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, "எங்கள் சாம்பியன் அணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது“ என்றார்.



Read in source website

கோவை: அர்ஜென்டினாவில் நடைபெற வுள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த இரு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகவும் உயர்ந்த போட்டியாக கருதப்படும் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி அக்டோபர் மாதம் 24-ம்தேதி முதல் நவம்பர் 13-ம் தேதிவரை அர்ஜென்டினா நாட்டில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கான தேர்வு ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ‘ஆல்பைன்' பிரிவில் பங்கேற்கும் அணியில் கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த எஸ்.கவுதம் (17), சாயிபாபா காலனியை சேர்ந்த பி.நவீனா (15) ஆகியோர் தேர்வாகியுள்ளனர். கோவையில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் இருவரும் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்களின் பயிற்சியாளரான கனிஷ்கா தரணிகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

அர்ஜென்டினாவில் சான் ஜூவான் மற்றும் பியூனஸ் அயர்ஸ் நகரங்களில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி நடைபெற உள்ளது. இதில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஸ்பீடு ஸ்கேட்டிங், ஸ்கேட் போர்டு, ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங், ஆல்பைன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா சார்பில் 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில், ஆல்பைன் பிரிவில் பங்கேற்போருக்கான தேர்வு மொகாலியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் 2 பேரும், பெண்கள் பிரிவில் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்வில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணியில் ஆண்கள் பிரிவில் எஸ்.கவுதம் என்ற மாணவரும், பெண்கள் பிரிவில் பி.நவீனா என்ற மாணவியும் தமிழ்நாடு சார்பில் தேர்வாகியுள்ளனர்.

கோவையிலிருந்து ஆல்பைன் பிரிவு போட்டிக்கு ஒரே நேரத்தில் 2 ஸ்கேட்டிங் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள வீரர், வீராங்கனை இருவரும் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் பிரதாப்குமார், பொதுச்செயலாளர் ராமநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வீரர்கள் இருவருக்கும் சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி மற்றும் நுணுக்கங்களை அளித்து தற்போது தயார்படுத்தி வருகிறோம். விரைவில் இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் இருவரும் இணைய உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

பீஜிங்: கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி டேட்டாவின் படி விமானம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்தனர். எவருமே உயிர் பிழைக்கவில்லை.

இந்த விமானம் கீழே விழுந்த போது செங்குத்தாக கீழ் நோக்கிப் பாய்ந்ததால் அது விபத்துதானா இல்லை ஏதேனும் சதியா என்ற ஊகங்கள் எழுந்தன. போயிங் விமான விபத்திற்கு மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு , தீவிரவாத தாக்குதல், பைலட்டின் உடல் நலமின்மை, தற்கொலை இவற்றில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டது. கருப்புப் பெட்டியை ஆய்வு முடிவில் இது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியில் பதிவான விவரங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தை இயக்கும் பைலட்டுகளுள்ள காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவரே விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும் கருப்புப் பெட்டி ஆய்வு உணர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான செய்தி அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான போயிங் விமானத்தை செலுத்திய முதன்மை பைலட் 6,709 மணி நேரங்கள் விமானத்தை ஓட்டிய அனுபவம் உடையவர். முதல் துணை விமானிக்கு 31,769 மணிநேரம் பயணம் அனுபவம் உள்ளது. இரண்டாவது துணை விமானிக்கு 556 மணிநேரம் பறந்த அனுபவம் உள்ளது. பைலட்கள் அனைவரும் இளைஞர்கள் அவர்கள் விமானத்தை செலுத்துவதற்கான அனைத்து திறனையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பைலட்டுகள் மீதே சந்தேகப் பார்வை திருப்பப்பட்டுள்ளது. இருப்பினும் போயிங் கோ, என்ற ஜெட் விமான தயாரிப்பு நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மார்ச் மாதம் போயிங் விமானம் விபத்துக்குள்ளான பிறகு ஏப்ரல் பிற்பாதியில் தான் 737-800 ரக போயிங் விமானங்களை இயக்க சீன அரசு அனுமதித்தது.



Read in source website

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறும்போது, "இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மார்ச் 2021 நிலவரப்படி 4,500 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. விமானத்தில் பயணம் செய்யாத ஏழை மக்கள், விமான நிறுவனம் எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதேநேரம் கரன்சி புதிதாக அச்சிடுவதால் நாட்டின் நாணய மதிப்பு மேலும் சரிவடையும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில் வெளிச்சந்தையில் டாலரை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெயுடன் 3 கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் உள்ளன. இவற்றுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அவற்றை இறக்குமதி செய்ய முடியும். அதற்குத் தேவையான பணத்தை திரட்டவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரணில் தெரிவித்துள்ளார்.



Read in source website

வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகி கடன் கேட்டு விண்ணப்பித்து, அதற்கான அனைத்து நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் வங்கிக் கடன் கொடுக்க சம்மதிக்கும். கடன் வழங்கும் சமயம், வடிக்கையாளருக்கு ஒப்புதல் கடிதம் (Sanction Letter) ஒன்றை வழங்கும். இதில்தான் மிக மிக கவனம் தேவை என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான 'குறள் இனிது' சோம.வீரப்பன் கூறும்போது, "உதாரணமாக, வாடிக்கையாளர் வங்கியில் ரூ.10 லட்சத்திற்கு வாகனக் கடன் பெற்று கார் வாங்குகிறார். அதற்கு வங்கி ஒப்புதல் கொடுக்கும். வாடிக்கையாளர் மார்ஜின் போக, ரூ.7.5 லட்சம் வாகனக் கடன் கொடுக்க ஒப்புதல் தருகிறது என்றால், அந்த கடன் என்னென்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது என்பது முக்கியம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செய்கின்ற பெரிய பிழை, வங்கியில் வாகனக் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு, வங்கி கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கொடுத்து, பின்னர் கடன் கிடைத்து வீட்டிற்கு கார் வந்த மகிழ்ச்சியில், வங்கியின் விதிமுறைகளை புறந்தள்ளி விடுவார்கள். பிற்காலத்தில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஏதாவது புரிதல் குறைபாடு அல்லது பிரச்சினை வரும்போது இந்த ஒப்புதல் கடிதம் முக்கியப் பங்காற்றும்.

அதனால், தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன், தொழிற்சாலைகளுக்காக வாங்கப்பட்ட கடன் என எந்த வகைக்கடனாக இருந்தாலும், அதற்கு ஒப்புதல் கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வது அவசியம். பெரும்பாலான வங்கிகள் அவர்களாகவே ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்து விடுவார்கள். அதேபோல அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என ஒப்பதல் கடிதத்தில் வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கும் வழக்கம் பல வங்கிகளில் இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளரிம் அந்தக் கடிதத்தின் பிரதி இல்லையென்றால் விதிமுறைகள் குறித்து வாடிக்கையாளருக்கு தெரிய வராது.

முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வாடிகையாளர் ஒருவருக்கு கடன் வழங்கப்படும்போது அது என்னென்ன நிபந்தனைகள், விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுகிறது என்று சொல்ல வேண்டியது வங்கியின் கடமை. அதனைத் தெரிந்துகொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களின் உரிமை. பொதுவாக எந்த ஒரு கடன் வாங்கினாலும் அந்த வங்கிக்கடன் வாங்க கொடுத்த விண்ணப்பப்படிவத்தின் நகல், கடனுக்காக வழங்கப்பட்டட ஆவணங்களின் நகல்கள், வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதம், வங்கிக்கொடுத்த ஆவணங்களை தனியாக ஒரு பைலில் பாதுகாத்து வைத்திருப்பது நலம்.

கடிதத்தில் என்னென்ன இருக்கும்? - கடிதத்தில் வாடிக்கையாளரின் பெயர் இருக்கும். அடுத்ததாக எவ்வளவு தொகை கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு எந்த வகையில் கடன் வழங்கப்படுகிறது என்று கடன் தன்மைப் பற்றிய தகவல்கள் இருக்கும். பிறகு மொத்தக் கடன் தொகையில் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மார்ஜின் தொகை எவ்வளவு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்ததாக, செக்யூரிட்டி என்று ஒரு காலம் இருக்கும். அதாவது, நீங்கள் வாங்கியக் கடனுக்கு என்ன செக்யூரிட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடுத்தகாத திருப்பிச் செலுத்தும் காலம், வட்டி குறிப்பிடப்பட்டிருக்கும். இது மிகவும் முக்கியமானது. கடனை எத்தனைத் தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும். அதில் ஏதாவது தவணைச் சலுகை உண்டா, தவணையை எப்போது செலுத்த ஆரம்பிக்க வேண்டும் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தது வட்டி, கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு, வட்டி ரெப்போ போன்றைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா, அது எப்போது மாறும் போன்ற விபரங்களும் அந்த கடிதத்தில் இருக்கும்.

இவை தவிர கியாரண்டி இருந்தால் யார் கியாரண்டி என்றும், கொலாட்ரல் செக்யூரிட்டி இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு மற்ற நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, வாடிக்கையாளர் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த காலதாமதம் செய்தால் அதற்கு எவ்வளவு வட்டி போடப்படும், உங்களிடம் இருக்கும் சொத்தை வங்கி எத்தனை மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வரும் அதற்காக ஆகும் செலவை யார் ஏற்றுக்கொள்ளவேண்டும் போன்ற விபரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்" என்றார்.



Read in source website

புதுடெல்லி: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அந்த நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. இது இந்திய தேயிலைக்கு குறிப்பாக தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் அந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி வணிகப் பயிரான தேயிலையை கடுமையாக பாதித்துள்ளது. இயற்கை விவசாயம் என்ற இலங்கை அரசின் உத்தரவால் ஏற்கெனவே அந்நாட்டில் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு காரணமாக தேயிலை தூள் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மரபுவழி தேயிலை

தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரம் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை, தேயிலை அறுவடை செய்வோரைப் பெரிதும் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 18 சதவீதம் சரிந்தது.

இதனால் இலங்கையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரும் சரிவு கண்டது. இலங்கை ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. இலங்கை நீண்டகாலமாகவே மரபுவழி தேயிலையான ஆர்த்தடாக்ஸ் தேயிலை உற்பத்தியாளராக உள்ளது. இலங்கை தனது உற்பத்தியில் 97-98 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.

இலங்கை மரபுவழி தேயிலையின் மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருவாயை அது பெற்றுத் தந்தது. ஆனால், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய பொருளாதார நெருக்கடி, தேயிலை ஏற்றுமதிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதி 63.7 மில்லியன் கிலோவாக குறைந்தது. கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏற்றுமதி 69.8 மில்லியன் கிலோவாக இருந்தது. 1999ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்குப் பிறகு, தேயிலை ஏற்றுமதி இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதன்முறை. 1999ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 60.3 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

தென்னிந்தியாவுக்கு வாய்ப்பு?

உலகளாவிய தேயிலை சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஆர்த்தடாக்ஸ் தேயிலை கணிசமாக உற்பத்தியாகிறது.

இதுகுறித்து இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கனோரியா கூறியதாவது:

இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக இந்த ஆண்டு 15 சதவீதம் விளைச்சல் குறையும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். உரம், டீசல் மற்றும் பிற உற்பத்திக்கு தேவையான பொருட்களின் பற்றாக்குறை அதன் உற்பத்தியை மேலும் பாதிக்கும். இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் ஏற்றும்தி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இலங்கை முக்கியமாக மரபுவழி தேயிலையை உற்பத்தி செய்கிறது. இது கையால் அறுவடை செய்யப்பட்டு பதப்படுத்தப்படும் ஆர்த்தடாக்ஸ் தேயிலை, ரஷ்யா மற்றும் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தேநீர் குடிப்பவர்களிடையே இது பிரபலமானது. ஆர்த்தடாக்ஸ் தேயிலைக்கு உற்பத்திச் செலவுகள் பொதுவாக அதிகமாக இருக்கும். ஆனாலும் அந்த நாட்டு மக்களின் விருப்பமாக இலங்கை தேயிலை உள்ளது.

உயரும் விலை?

இந்திய மற்றும் இலங்கை மரபுவழி தேயிலைகள் ரஷ்யாவில் பிரபலமாக உள்ளன. இந்திய ஆர்த்தடாக்ஸ் தேயிலைக்கான தேவை இலங்கையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இலங்கை தேயிலைக்கு என தனியாக மார்க்கெட் உள்ளது. இலங்கை தேயிலை விலை 10-20 சதவீதம் உயர்ந்தபோதும் அதிக விலை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்தியாவைப் போலவே ரஷ்யாவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். போர் காரணமாக வர்த்தகத்தை நிறுத்தி வைத்திருந்த ரஷ்ய வர்த்தகர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இது இலங்கை தேயிலையின் விலையை மேலும் உயர்த்தக் கூடும்.

ஒட்டுமொத்தமாக, இலங்கையில் தேயிலை விளைச்சல் பாதிப்பு, தேயிலை தயாரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் தென்னிந்தியா ஓரளவுக்கு பயனடைந்துள்ளது. சில குறுகிய கால நன்மைகள் உள்ளன. ஆனால் இலங்கை பயன்படுத்தும் சர்வதேச தரம் மற்றும் பிராண்ட்டை விரும்பும் மக்களின் தேவையை தென்னிந்திய தேயிலை அவசரமாக மாற்ற முடியாது.

மேலும் இலங்கையைத் தவிர, சீனா, வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை பல்வேறு முக்கிய தேயிலை உற்பத்தியாளர்களாக உள்ளன. ஆனால் சீனா ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலை ஏற்றுமதி செய்வதில்லை. ஏனெனில் உள்நாட்டிலேயே அதற்கு அதிகமான தேவை உள்ளது.

இந்தியா சுமார் 110 மில்லியன் கிலோ ஆர்த்தடாக்ஸ் தேயிலையை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகம் உற்பத்தியாகிறது. அதில் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையின் உயர் ரகத்துடன் நமது தேயிலை போட்டியிடும் சூழல் இல்லை. எனினும் சரிந்து போன அதன் 35 சதவீத உற்பத்தியில் ஓரளவை இந்தியா பங்களிக்க கூடும் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2021-ம் ஆண்டில் 6.8% குறைந்து 195.5 மில்லியன் கிலோவாக இருந்தது. 2019 இல் மொத்த ஏற்றுமதி 252.15 மில்லியன் கிலோவாக இருந்தது.



Read in source website

புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் சிக்கலை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் இதேபோன்று ஜிஎஸ்டிபி- கடன் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக பெரும் தொகைய செலவு செய்யும் மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களுக்காக நம்பி இருப்பது கடனை தான்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகின்றன.

சமையல் எண்ணெய் தொடங்கி கோதுமை வரை பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இது எல்லாவற்றிக்கும் மேலாக கடன் சுமை என்பது அந்த நாட்டை கடுமையாக ஆட்டிப்படைத்து வருகிறது.

இலங்கையின் கடன் /ஜிடிபி விகிதம் 120 சதவீதமாகும். அதாவது நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி விகித்த அளவை விடடும் அதிமாக 20 சதவீதம் அந்த நாடு கடன் வைத்துள்ளது. 50 சதவீதம் என்பதே ஆபத்தான அளவு என்கிறபோது இலங்கையின் கடன் அளவு 120 சதவீதமாக உயர்ந்துள்ளது பெரும் கவலையளிக்கும் அம்சமாகும்.

இலங்கையை போலவே துருக்கி, பாகிஸ்தான், லெபனான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடன் சுமை என்பது இன்று மிகப்பெரிய பொருளாதார சவாலாக உருவெடுத்துள்ளது.

கடன் வாங்கும் மாநிலங்கள்

இந்தநிலையில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களின் பொருளாதார நிலையும் கடன் சுமையால் ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. இலங்கையை போலவே அதிகமாக வாங்கப்படும் கடன் அந்த மாநிலங்களில் பெரும் நிதி சுமையை ஏற்படுத்தி வருகிறது. மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபி- கடன் அளவு என்பது சில மாநிலங்களில் கவலையளிக்கும் விதித்தில் உள்ளது.

இதில் முதல் மாநிலமாக இருப்பது பஞ்சாப். கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பஞ்சாபில் ஜிஎஸ்டிபி- கடன் அளவு 53.3 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.

சிக்கலில் பஞ்சாப்

மாநிலத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதாவது மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் கடன் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஜிடிபி 71 பில்லியன் டாலர்களாகும்.

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்சிகளும் இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தன. அங்கு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, மக்களுக்கு மாதம்தோறும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனை செயல்படுத்த பஞ்சாப் அரசுக்கு ஆண்டுக்கு.5,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு கூடுதலாக 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு விடும்.

மற்ற மாநிலங்கள்

பஞ்சாப் போலவே பல இந்திய மாநிலங்கள் இலங்கையை போன்றே நிதி நிலை உள்ளன. அவற்றில் ஜிஎஸ்டிபி- கடன் அளவு என்பது ராஜஸ்தானில் 39.8 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 38.8 சதவீதமாகவும், கேரளாவில் 38.3 சதவீதமாகவும், ஆந்திர பிரதேசத்தில் 37.6 சதவீதமாகவும் உள்ளது.

ஜிடிபியை பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் ஜிடிபி 118 பில்லியன் டாலர்களாகவும், ஆந்திர மாநிலத்தில் ஜிடிபி 130 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. பிஹாரில் ஜிடிபி 99 பில்லியன் டாலர்களாகவும் ஹரியாணா மாநிலத்தில் ஜிடிபி 100 பில்லியன் டாலர்களாக உள்ளது.

2016-ம் ஆண்டில் நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மறுஆய்வு செய்ய என்.கே.சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு 2017 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அதன் மொத்தக்கடன் 2023 க்குள் 20 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தது.

ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மாநிலங்களின் மொத்த கடன்-ஜிடிபி விகிதம், 2022 மார்ச் இறுதியில் 31 சதவிகிதமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் 2022-23 இல் 20 சதவிகிமாக குறைக்க வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

20 இலக்கு நிறைவேறுமா?

மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கையொட்டி குஜராத் (21.4%) மற்றும் மகாராஷ்டிரா (20.4%) ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே 20 சதவிகிதமாக உள்ளன. இந்த கடன் சுமைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று இலவசங்கள் ஆகும். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக பல கட்சிகளும் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. இதனை செய்ய முற்படும்போது நீண்டகாலத்துக்கு மாநில அரசுகளுக்கு பெரும் சுமை ஏற்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக அண்மையில் தகவல் வெளியானது.

இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக பெரும் தொகையை மாநில அரசுகள் செலவழித்து விடுவதால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன. மாநில அரசுகளிடம் பணம் இல்லாதபோது, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் செல்கின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் 28 பில்லியன் டாலர்கள் உலக வங்கியிடம் கடன் பெற்று 127 வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வரம்பற்ற கடன் பெறுவதால் ஏற்படும் நிதிச் சுமை என்பது மாநில அரசை கடுமையாக நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது. மாநில்கள் கடன் அளவை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கு என்பது எப்போது நிறைவேறும் என்பது தான் கேள்வியாக உள்ளது.



Read in source website

புதுடெல்லி: உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததை அடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மே 13 தேதி அன்று மத்திய அரசு தடை விதித்தது. இதனால் கோதுமை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்களில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், நேற்று மத்திய அரசு கோதுமை ஏற்றுமதி தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, மே 13 மற்றும் அதற்கு முன்பாக கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு பதிவு செய்திருந்தவர்கள், தற்போது அந்தச் சரக்கை ஏற்றுமதி செய்துகொள்ளலாம்.

எகிப்துக்கு இந்தியாவிலிருந்து 61,500 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட இருந்தது. இதில் பெரும் பகுதி கோதுமை கண்டெய்னர்களில் நிரப்பப்பட்டது. மத்திய அரசின் தடை உத்தரவால் மேற்கொண்டு நிரப்புவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 17,160 டன் கோதுமையை நிரப்பி, அதை எகிப்துக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



Read in source website

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக வி.சி. அசோகன் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் எண்ணெய் நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் இவர் செயலாற்ற உள்ளார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அசோகன் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, சில்லறை விற்பனை, செயல்பாடுகள் மற்றும் சர்வதேச மார்க்கெட்டிங் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருச்சியில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரியில் வர்த்தக மேலாண்மைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.

கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) பிரிவில் பல்வேறு தலைமைப் பதவிகளையும் மேலாண்மை நிலைகளையும் வகித்து வந்துள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

அரசியலமைப்பின் இந்த விதி ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. 142வது பிரிவு சட்ட வரைவில் 118 ல் தொடங்கியது. இந்த பிரிவு மே 27, 1949 -இல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியலமைப்பின் இந்த விதி ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. 142வது பிரிவு சட்ட வரைவில் முதலில் 118 ல் தொடங்கியது. இந்த பிரிவு மே 27, 1949 -இல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய புதன்கிழமை (மே 18) உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வரராவ் மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.

“இது சம்பந்தமான பரிசீலனைகளின் அடிப்படையில் மாநில அமைச்சரவை தனது முடிவை எடுத்துள்ளது. சட்டப்பிரிவு 142ன் படி, குற்றவாளியை விடுவிப்பதே சரியானது” என்று நீதிமன்றம் கூறியது.

அரசியலமைப்பின் 142வது பிரிவு

அரசியலமைப்பின் 142வது பிரிவு அதன் துணைப்பிரிவு 1 (“உச்ச நீதிமன்றத்தின் ஆணைகள் மற்றும் உத்தரவுகளை அமல்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் போன்ற உத்தரவுகள் போன்றவை”) கூறுகிறது. “உச்சநீதிமன்றம் அதன் அதிகார வரம்பைப் பயன்படுத்தி அத்தகைய ஆணையை நிறைவேற்றலாம் அல்லது முழுமையாகச் செய்வதற்குத் தேவையான அத்தகைய உத்தரவை உருவாக்கலாம். எந்தவொரு காரணத்தினாலோ அல்லது விவகாரத்தினாலோ நிலுவையில் உள்ள நீதி, மற்றும் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு ஆணை அல்லது உத்தரவும் இந்தியப் பகுதி முழுவதும் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தால் அல்லது அதன் கீழ் பரிந்துரைக்கப்படும், அதன் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் வரை நடைமுறைப்படுத்தப்படும். இது குடியரசுத் தலைவர் உத்தரவின்படி பரிந்துரைக்கக்கூடிய வகையில் இவ்வாறு செய்யப்பட்டது.

அடிப்படையில், அரசியலமைப்பின் இந்த விதி, ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. அரசியல் அமைப்பு வரைவு பிரிவு 118 ஆகத் தொடங்கியது இந்த 142 பிரிவு, இது மே 27, 1949 அன்று அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

142 வது பிரிவின் நோக்கம்

142வது பிரிவின் கீழ் அதிகாரங்கள் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளாக அதன் தீர்ப்புகளில் அதன் நோக்கம் மற்றும் அளவை வரையறுத்துள்ளது. இது சம்பந்தமாக சில முக்கியமான வழக்குகள் ‘பிரேம் சந்த் கார்க் வி. எதிரி கலால் ஆணையர், உ.பி., அலகாபாத் ‘(1962); ‘ஏ.ஆர். அந்துலே எதிரி ஆர்.எஸ். நாயக் & உள்ளிட்டோர்'(1988); ‘யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் எதிரி யூனியன் ஆஃப் இந்தியா ’(1991); மற்றும் ‘உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் எதிரி இந்திய ஒன்றியம் (1998). ‘அன்துலே’ வழக்கில் தீர்ப்பு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வால் தீர்மானிக்கப்பட்டது; மற்ற மூன்று வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுகளால் தீர்க்கப்பட்டன.

  • ‘பிரேம் சந்த் கார்க்’ வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கள் 142 (1) பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு சிவப்புக் கோடுகளை வரைந்தன. அப்போது உச்ச நீதிமன்றம் கூறியது: “இரு தரப்புகளுக்கு இடையே முழுமையான நீதியை வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் செய்யக்கூடிய ஒரு உத்தரவு, அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், அது தொடர்புடைய சட்டப்பூர்வ சட்டங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணாக இருக்க முடியாது… எனவே, அந்த கலையை நடத்துவது சாத்தியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். 142வது பிரிவு (1) இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது. இது பிரிவு 32 (அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை) விதிகளுக்கு முரணானது.
  • ‘அந்துலே’ வழக்கில், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து ‘பிரேம் சந்த் கார்க்’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்தது.
  • யூனியன் கார்பைடு வழக்கில், போபால் விஷவாயு பேரழிவிற்கு 470 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடுகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 142 (1) பிரிவின் பரந்த நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த அமர்வு “சில தவறான எண்ணங்களை நீக்குவது அவசியம்” என்று கூறியது. அரசியலமைப்பின் பிரிவு 142 (1) இன் கீழ் நீதிமன்றத்தின் அதிகாரங்களின் வரம்பைத் தொடும் வாதங்கள் இருந்தன.

உச்ச நீதிமன்ற உத்தரவு: “142வது பிரிவின் கீழ் அதிகாரம் முற்றிலும் வேறுபட்ட மட்டத்திலும் வேறுபட்ட தரத்திலும் உள்ளது. சாதாரண சட்டங்களில் உள்ள விதிகள் மீதான தடைகள், சட்டப்படி, சட்டப்பிரிவு 142 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்கள் மீதான தடைகள் அல்லது வரம்புகளாக செயல்பட முடியாது… பிரிவு 142 இன் கீழ் அதிகாரங்கள் சட்டரீதியான தடைகளை வெளிப்படுத்தும் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அது சட்டப்பூர்வ விதிகள் அரசியலமைப்பு விதியை மீறுகிறது என்ற கருத்தை வெளிப்படுத்தும்.

  • ‘உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன்’ 142வது பிரிவின் கீழ் அதன் அதிகாரங்கள் இயல்பான துணை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பெரும்பாலும் இந்த சட்டத்தை மாற்ற முடியாது. எதுவும் இல்லாத இடத்தில் ஒரு புதிய விஷயத்தை உருவாக்க முடியாது என்று கூறியது.

உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது: “எப்படியானாலும், 142வது பிரிவின் மூலம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இயற்கையில் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கின் காரணத்தை கையாளும்போது ஒரு வழக்கறிஞரின் முக்கிய உரிமைகளைப் புறக்கணிக்க நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் அதிகாரங்களாகக் கருத முடியாது. நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள வழக்கு அல்லது வழக்கின் காரணத்துக்கு பொருந்தக்கூடிய கணிசமாக சட்டத்தை மாற்றுவதற்கு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை கையாள்வதில் வெளிப்படையான சட்ட விதிகளை புறக்கணிப்பதன் மூலம், நேரடியாக அடைய முடியாத ஒன்றை மறைமுகமாக அடைவதன் மூலம்… 142 வது பிரிவின் அமைப்பையும் இந்த பிரின் நன்மை நோக்கத்தால் செயல்பாட்டு ரீதியாக தெரிவிக்கப்பட வேண்டும். இரு தரப்புகளுக்கு இடையே முழுமையான நீதியை நிலைநாட்ட வேண்டும். இது வேறுவிதமாக இருக்க முடியாது.” என்று கூறியுள்ளது.

பேரறிவாளன் வழக்கு

பேரறிவாளன் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி, எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டனை பெற்ற எந்தவொரு நபருக்கும், “மன்னிப்பு அல்லது தண்டனையை ரத்து செய்ய அல்லது தண்டனையை நிறுத்திவைக்க அல்லது குறைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.”

ஆளுநரிடம் இருந்து பதிலைப் பெறத் தவறியதால், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றம், 2018 இல் அளித்த கருணை மனு மீது முடிவெடுக்க ஆளுநரின் உரிமையை அடிக்கோடிட்டுக் காட்டியது. மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 9, 2018 அன்று, அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்தது.

இருப்பினும், ஆளுநர் தொடர்ந்து அமைச்சரவையின் பரிந்துரையில் முடிவெடுக்காமல் தாமதம் செய்து வந்தார். மேலும், ஜூலை 2020 இல், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கை மற்றும் பற்றுறுதி காரணமாக மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளில் செயல்படுவதற்கு அரசியலமைப்பு காலக்கெடுவை பரிந்துரைக்கவில்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நினைவூட்டியது. மேலும், உயர் நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது.

ஆனால், ஆளுநர் அதற்கு பதிலளிக்கவில்லை, மேலும் ஜனவரி 2021 இல், அதிகப்படியான தாமதத்தின் அடிப்படையில் குற்றவாளியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது. பிப்ரவரி 2021 இல், ஆளுநர் அலுவலகம் மாநில அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியது. அன்றிலிருந்து அந்தக் கோப்பு ராஷ்டிரபதி பவனில் கிடக்கிறது.

சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் காலதாமதம் செய்தால் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) தொடர்பான வழக்குகளில் விடுதலை வழங்க குடியரசுத் தலைவருக்கு பிரத்யேக அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பேரறிவாளனை விடுதலை செய்ய 142வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியது.

அயோத்தி தீர்ப்பில் 142வது பிரிவு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2019 ஆம் ஆண்டு தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் 142 வது பிரிவுக்கு விரிவான குறிப்புகளை அளித்தது. “142வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரம் வரம்பற்றது அல்ல” என்று கூறியது. 142 வது பிரிவு மூலம் அரசியலமைப்பு முழுமையான நீதியைப் பெறுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது என்று கூறியது, நீதி, சமத்துவம் மற்றும் நல்ல மனசாட்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. அத்துடன் இந்த பிரிவு முழுமையான நீதியை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்திற்கு ஒரு துணை அதிகாரம் என்று கூறியது.

சர்ச்சைக்குரிய பகுதிக்கு வெளியே அமைந்துள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லீம் தரப்பினருக்கு வழங்க இந்த விதியின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிமன்றம், 1992 இல் பாபர் மசூதி இடிப்பு பற்றிய மறைமுகக் குறிப்பில், ஒரு தவறு சரி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அது 142 வது பிரிவை செயல்படுத்துகிறது என்று கூறியது.

மதச்சார்பற்ற நாட்டில் ஆட்சியில் பொருத்தமில்லாத வகையில் மசூதி அமைப்பில் இருந்து பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமையை நீதிமன்றம் புறக்கணித்தால் நீதி வெற்றி பெறாது என்று நீதிமன்றம் கூறியது. சட்டம்… அரசியலமைப்பு அனைத்து மதங்களின் சமத்துவத்தை முன்வைக்கிறது. சகிப்புத்தன்மையும் பரஸ்பர சகவாழ்வும் நமது தேசம் மற்றும் அதன் மக்களின் மதச்சார்பற்ற அர்ப்பணிப்பை வளர்க்கின்றன.

இந்த வழக்கில் ஒரு தரப்பாக இருந்த நிர்மோகி அகாராவுக்கு ஆதரவாக 142வது பிரிவையும் நீதிமன்றம் பயன்படுத்தியது. அதில் நீதிமன்றம் கூறியது: “சர்ச்சைக்குரிய இடத்தில் நிர்மோகி அகாராவின் வரலாற்று இருப்பு மற்றும் அவர்களின் பங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முழுமையான நீதியை வழங்குவதற்கு இந்த நீதிமன்றம் 142 வது பிரிவின் கீழ் அதன் அதிகாரங்களை நாட வேண்டியது அவசியம். எனவே, இந்த திட்டத்தை வடிவமைப்பதில், நிர்வாகத்தில் பொருத்தமான பங்கு நிர்மோகி அகாராவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.” என்று கூறியது.



Read in source website

இ-ஷ்ரமில் உள்ள நிரந்தர முகவரித் தரவுகளுடன், இருப்பிடத் தரவை ஒப்பிடுவது, இ-ஷ்ரமில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண உதவும்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துடன் இ-ஷ்ரம் போர்ட்டலை ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இ-ஷ்ரமின் வாக்குறுதி குறித்து IE THINC மைக்ரேஷன் வெபினாரில் மத்திய அமைச்சர் யாதவ்  கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  பொது விநியோக கடைகளில் இருந்து மாதாந்திர உணவு தானிய சேகரிப்பின் இருப்பிடத் தரவுகளின் அடிப்படையில், “ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டுடன் இ-ஷ்ரமை ஒருங்கிணைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இ-ஷ்ரமில் உள்ள நிரந்தர முகவரித் தரவுகளுடன், இருப்பிடத் தரவை ஒப்பிடுவது, இ-ஷ்ரமில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளியின் இருப்பிடம்’ சமூக பாதுகாப்பு நலன்களை அணுகுவதற்கு ஒரு தடையாக இல்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். E-Shram அனைத்து தொடர்புடைய தரவுகளையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும்,” என்று பூபேந்தர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, ஆஜீவிகா பீரோவின் இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் தீர்வுகளுக்கான மையத்தின் திட்ட மேலாளர் திவ்யா வர்மா, இ-ஷ்ரம் பயிற்சி அதன் முன்னோடிகளிலிருந்து எவ்வாறு வேறுபடும் என்பது உண்மையில் தெளிவாக இல்லை.

“அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு வாரியம் 2008 இல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர் அடையாள எண் 2015 இல் தொடங்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டங்கள் மற்றும் அட்டைகள் மற்றும் இயங்குதளங்கள் அனைத்தும், முறைசாரா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கணக்கிடுவது ஆகிய ஒரே விஷயத்தைத் தேடுகின்றன…

ஆனால், இத்தகைய நடவடிக்கையால் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இ-ஷ்ரமின் அணுகலில், டிஜிட்டல் டிவைட் மற்றும் அதன் பலன்கள் பற்றிய போதிய தகவல் இல்லாததை பற்றி திவ்யா பேசினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மிகப்பெரிய முதலாளியாக தனியார் துறை உள்ளது, அவர்களின் பங்களிப்பு நீண்ட தூரத்துக்கு எடுத்து செல்லும்,” என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இந்திய அலுவலகத் தலைவர் சஞ்சய் அவஸ்தி கூறினார்.

ஜான் சஹாஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிப் ஷேக் கூறுகையில், “இ-ஷ்ரம் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பதிவேட்டை உருவாக்க முயற்சிக்கிறது. பதிவு செய்வது முதல் படி, அதன் பிறகு பாதுகாப்பின் மூலம் பாதிப்பை எவ்வாறு குறைப்பது என்பது மிகவும் முக்கியம். இதில் தொழில்துறையின் பங்கு முக்கியமானது மற்றும் அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

கோவிந்தராஜ் எத்திராஜ், பத்திரிகையாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் நிறுவனர், தேர்தல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் தரவுத்தளத்தை இ-ஷ்ரமுடன் இணைக்கும் சாத்தியம் குறித்தும் பேசினார். “வாக்களிப்பதை ஏன் அறிமுகப்படுத்தக்கூடாது? தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நம்மை தடுக்க எதுவும் இல்லை, ”என்று கூறினார்.



Read in source website

 லாயத்தில் இருந்த திறமையும், சுறுசுறுப்புமுள்ள குதிரைகள் எல்லாம் ஓடிவிட்ட பிறகு, நடக்கக்கூட முடியாத கிழட்டுக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டு லாயத்தின் நுழைவாயில் கதவைப் பூட்டுவது போன்ற முயற்சியை காங்கிரஸ் கட்சி
 மேற்கொண்டிருக்கிறது. கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற மூன்று நாள் "சிந்தனை அமர்வு' (சிந்தன் ஷிவிர்) சாதிக்க முயல்வது அதைத்தான்.
 காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பிரச்னைகள் என்னென்ன என்று ஆராய, கூடித்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முன்னாள் தலைவரும், கட்சியின் இளவரசருமான ராகுல் காந்தி இதற்கு முன்னர் வெளியிட்டிருக்கும் கருத்துகளைத் தொகுத்து பட்டியலிட்டாலே போதும். காங்கிரûஸ மீட்டெடுப்பதற்கும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதற்கும் என்னென்ன தேவை என்பதை தெரிந்தோ, தெரியாமலோ அவர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.
 காங்கிரஸ் கட்சி மக்களிடமிருந்து மிகவும் விலகிச் சென்றுவிட்டது; கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், மக்களின் உண்மை மனநிலை அறியாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்; நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும்; அவர் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக் கூடாது - இவையெல்லாம் வெவ்வேறு கட்டங்களில் ராகுல் காந்தி வெளிப்படுத்திய கருத்துகள்.
 இத்தனையும் நன்றாகத் தெரிந்திருந்தும், காங்கிரஸ் தலைமை ராஜஸ்தான் மாநிலத்தில் எதற்காக சிந்தனை அமர்வு நடத்தி, ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும் என்பது புரியவில்லை. நாங்களும் இருக்கிறோம் என்பதை நாட்டுக்குத் தெரிவிப்பதற்காக நடத்தப்படும் நாடகம் என்பதைத் தவிர, அந்த மூன்று நாள் கூட்டத்தால் நிகழப்போகும் மாற்றம்தான் என்னவாக இருந்துவிடப் போகிறது?
 அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான முடிவு, "குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு' என்பது. அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு விதிவிலக்கை ஏற்படுத்தி இருப்பதுதான் காங்கிரஸின் கொள்கைக் குழப்பத்தையும், மாற்றத்துக்குத் தயாராக இல்லாத மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. "ஒரு பதவி, ஒரு குடும்பம், ஒரு சீட்டு' என்று தெரிவித்துவிட்டு, அடுத்த வரியாக, "ஐந்தாண்டுகளுக்கு மேலாகக் கட்சியில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்' என்று கூறியிருப்பதன் மூலம் அந்தத் தீர்மானம் வெறும் கண்துடைப்பு என்பது தெளிவாகிறது.
 "ஒரு குடும்பம், ஒரு சீட்டு' என்று முடிவெடுத்தால், சோனியா, ராகுல் இருவரில் ஒருவர்தான் தேர்தலில் போட்டியிட முடியும். ப. சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, பூபிந்தர் சிங் ஹூடா, கமல்நாத், அசோக் கெலாட் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அவர்களது வாரிசுகளும் கட்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் துணிவு காங்கிரஸுக்குக் கிடையாது. அப்படி முற்றுப்புள்ளி வைக்காத வரையில் காங்கிரûஸ மீட்டெடுப்பதும் இயலாது.
 முகுல் வாஸ்னிக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இருந்து வருகிறார். அதே போலத்தான் குலாம்நபி ஆஸாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்ட பல தலைவர்களும் முக்கியப் பொறுப்புகளில் தொடர்கிறார்கள். குடும்ப வாரிசுகளாக இல்லாத புதியவர்களுக்குக் கட்சியிலும், ஆட்சிப் பொறுப்புகளிலும் வாய்ப்பில்லாத நிலைமை காணப்படும்போது, அந்தக் கட்சியில் புதியவர்கள் எப்படிச் சேர முன்வருவார்கள் என்பதைத் தலைமை யோசிப்பதாகவே தெரியவில்லை.
 2018-இல்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு 19 தேர்தல்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அவற்றில் பெரும்பாலும் மாநில கட்சிகளிடம்தான் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. காங்கிரஸின் பல
 வீனத்தில்தான் எல்லா மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் வளர்ந்து, ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. சமீபத்தில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதும் அதில் அடக்கம்.
 இதையும் ராகுல் காந்தி உணர்ந்தே இருக்கிறார். சிந்தனை அமர்வில் பேசும்போது, மாநில கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும், அவற்றிற்கு பாஜகவை எதிர்க்கும் கொள்கைப் பிடிப்பு கிடையாது என்றும் பேசியிருப்பது, சிரிப்பை வரவழைக்கிறது.
 இப்படியும் கூறிவிட்டு, மாநில கட்சிகளின் கூட்டணிதான் இந்திய ஒன்றியம் என்றும் அவர் கூறியிருப்பதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?
 காங்கிரஸின் அடிப்படை பிரச்னை "குடும்பம்'. தேசிய அளவில் சோனியா குடும்பம் இருப்பதுபோல, மாநில அளவிலும் அந்தக் கட்சியில் பல குடும்பங்கள் கோலோச்சுகின்றன. மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை வளர விடாமல், குடும்பத் தலைமைகள் கட்சிப் பதவிகளையும், ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றன.
 உடை கலையாமல், ஏசி வாகனங்களில் வலம் வரும் தலைவர்கள் உருவாகிறார்கள். பணத்தைச் செலவழித்துப் பதவியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கூட்டணி இல்லாமல் காங்கிரஸால் தேர்தலை சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு அமைப்பு ரீதியாக பலவீனம் ஏற்பட்டிருக்கிறது.
 இதிலிருந்து காங்கிரஸ் வெளியேற ஒரேயொரு வழிதான் உண்டு. அது, முறையான உள்கட்சித் தேர்தல் மூலம் ஏற்படுத்தப்படும் சோனியா குடும்பத்தைச் சேர்ந்ததாகவோ சார்ந்ததாகவோ இல்லாத தலைமை!
 



Read in source website

 இந்தியாவில் தேசிய நதிகளை இணைக்க பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் அமைக்கும்போதே ஆங்கிலேயர் நீர்வழிப் போக்குவரத்து, நதிநீர் இணைப்பு குறித்தும் ஆய்வு நடத்தினர். ஆர்தர் கார்ட்டர் இதை முன்னெடுத்தார்.
 இந்திய விடுதலைக்குப் பின் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அன்றைய மத்திய அமைச்சர் கே.எல். ராவ், கங்கை, மகாநதி, கோதாவரி, காவிரி ஆகிய நதிகளை இணைக்க திட்டம் தீட்டினார். இந்திரா காந்தி ஆட்சிக்குப் பின்னர் அமைந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் கேப்டன் தஸ்தூர் "பூமாலைத் திட்டம்' என்ற பெயரில் நதிநீர் இணைப்பு அறிக்கையை வழங்கினார். பின்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, முதலில் ஹிமாலய நதிகள், தீபகற்ப நதிகளை இணைத்து, பின் இந்த இரண்டையும் சேர்த்து இந்திய நதிகளை இணைப்பதற்கு ஆய்வு நடத்தப்பட்டது.
 கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளில் உள்ள உபரி நீரை கிழக்கு முகமாக தமிழகத்துக்குத் திருப்ப வேண்டும், கேரள அச்சன்கோவில், பம்பை ஆற்றுப் படுகையை சாத்தூர் வைப்பாற்றோடு இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு முப்பது ஆண்டு காலம் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய என்னுடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2012-இல் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், எனது கோரிக்கைகள் நியாயமானவை, அவசியம் கவனிக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தென்பெண்ணை - பாலாறு இணைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு, தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு ஆகியவற்றுக்கான செயல் திட்டங்கள் உள்ளன.
 கென் - பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் 44,605 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று 2022-23ஆம்ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்விரு நதிகளையும் இணைக்கும் திட்டத்தின் மூலம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அதன் அண்டை மாநிலங்களில் 9.8 லட்சம் ஹெக்டேர் பாசன வசதியும், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீர் வசதியும், 103 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும், 27 மெகாவாட் சூரியமின் உற்பத்தியும் உறுதிப்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 மேலும், தமங்கங்கா - பிஞ்சல், பார் - தாபி - நர்மதா - கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணாறு, பெண்ணாறு - காவிரி ஆகிய நதி இணைப்புகளின் வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் இந்நதி இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் பல ஆண்டுகளுக்குப் பிறகு நதிகள்இணைப்புத் திட்டத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கென் - பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. யமுனை ஆற்றின் துணை நதிகளான கென் நதியிலிருந்து பெட்வா நதிக்குத் தண்ணீரை எடுத்துச்செல்ல இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு கிலோ மீட்டர் நீளச் சுரங்கப்பாதையுடன், மொத்தம் 221 கி.மீ. நீளக் கால்வாய்கள் இருக்கும். நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்கள் இத்திட்டத்தால் பயன் அடையும். குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள புந்டேல்கண்ட் பகுதி இத்திட்டத்தால் மிகுந்த பயன் அடையும்.
 தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த நதிநீர் இணைப்பை காவிரி வரை இல்லாமல் வைகை, தாமிரபரணி, குமரி மாவட்டம் நெய்யாற்றுடன் இணைக்க வேண்டும். அதாவது கங்கை, குமரியைத் தொட வேண்டும். தென்தமிழகம் முழுமையாகப் பயன் பெறும் வகையில் திட்டங்கள் வர வேண்டும். காவிரி, கல்லணை என்றில்லாமல் தமிழகத்தின் தென்முனை வரை இத்திட்டங்கள் நீட்டிக்கப்பட வேண்டும்.
 1980-இல் நீர்வளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கான தேசிய நீர்வள முன்னோக்குத் திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வகுத்தது. இதன்படி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இமயமலை நதிகள், அதாவது வடபுலத்திலே 14 நதிகளை இணைத்து, தென்னிந்திய தீபகற்ப நதிகள் 16-ஐயும் இணைத்து இந்த இரண்டு இணைப்பையும் ஒன்றிணைப்பது என்று திட்டமிடப்பட்டது.
 இத்திட்டத்தின் கீழ் 2000-ஆவது ஆண்டில் கென் பெட்வா நதிநீர் இணைப்புக்காக அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தொடக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகத்தைப் பொறுத்தவரை பாசன வசதி இருக்கும் பல பகுதிகளில் நீர் வசதி இல்லை. குடிநீருக்கும் வசதி இல்லை. ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் தென்பகுதி, சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், கரிசல் பூமியான தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டத்தின் கீழ்ப்பகுதியான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், திருவேங்கடம் போன்ற வட்டங்கள் மட்டுமில்லாமல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளும் பயன்படும் வகையில் இந்த இணைப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
 கோவை மாவட்டம் கௌசிகா நதியால், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டம் கிழக்குப் பகுதி, வடமதுரை, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய பகுதிகளில் விவசாயம் சிறக்கும் வகையில் நீர்ப்பாசன திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
 தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரைதான் மழைநீர் கிடைக்கின்றது. எனவே, அது மட்டுமே இன்று போதுமானதாக இல்லை. தேவைக்கேற்ப நீரில்லாததால் பயிர்கள் காய்ந்து விடுகின்றன. மேலும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், உணவு தானியங்களைப் பெருக்கவும் நீர் ஆதாரம் தேவை. இதை உறுதிப்படுத்த நீர் ஆதாரத் திட்டங்கள் முக்கியமாகும்.
 ஐ.நா. சபையின் அறிக்கையிலேயே தமிழகம் நீராதாரங்கள் இல்லாமல் பாலைவனமாகக் கூடும் என்று குறிப்பிடப்பட்டது நினைவுக்கு வருகிறது. மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றது. எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில் மக்கள்தொகை 150 கோடியாக உயர்ந்தால், அப்போது தேவைப்படும் உணவு தானியங்கள் 4,500 லட்சம் டன் ஆகும். இந்த அளவு உணவு தானியங்களைப் பெருக்க வேண்டும் என்றால் 2050-க்குள் விவசாயம் செய்யும் நிலப்பரப்பை 1,600 லட்சம் ஹெக்டேராகக் கூட்ட வேண்டும்.
 நிலத்தடி நீரும் குறைந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளப் பெருக்கெடுத்து வடக்கே செல்லும் நதிகளைத் தெற்கு முகமாகத் திருப்புவதுதான் ஒரே வழி. அதுவும் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் திட்டங்கள் தீட்ட வேண்டும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி என்பதை மாற்றி நதிநீரைச் சமமாகப் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். கங்கை, பிரம்மபுத்ரா, மேக்னாம் ஆறுகளில் எப்போதும் வெள்ளம். உத்தர பிரதேசம், பிகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மழைக்காலங்களில் வெள்ளக் காடாக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
 ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் நீர் பற்றாக்குறையால் வறட்சியைத்தான் சந்தித்து வருகின்றன. 1960-லிருந்து இன்றுவரை நமக்குத் தேவையான நீர் சரியாகக் கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். நதிநீர் இணைப்பு, நீர்ப்பாசனத் திட்டங்களை, குறிப்பாக, தென் மாநிலங்களில் சீராகத் திட்டமிட்டால் ஏறத்தாழ 35 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
 நீதி ஆயோக் 2018-இல் வெளியிட்ட நீர் மேலாண்மைக் குறியீட்டு அறிக்கை, 6 ஆயிரம் லட்சம் இந்தியர்கள் தண்ணீருக்காகப் போராடி வருகிறார்கள்; சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் 2 லட்சம் பேர் இந்தியாவில் நோயால் இறக்கின்றனர் என்று கூறுகிறது. நதிநீர் இணைப்பால் விவசாயம் செழிக்கும்; குடிநீர் தட்டுப்பாடும் தீரும். மேலும், ஏறத்தாழ 34 ஜிகாவாட் நீர் மின்சாரத்தையும் கூடுதலாகப் பெருக்கலாம்.
 நதிகளை இணைப்பதால் வெள்ளத்தையும் வறட்சியையும் எதிர்கொண்டு இயற்கையை சமப்படுத்த முடியும்; விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும்; பல லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாறும்; குடிநீர் ஆதாரம் பெருகும்; நீர் மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தியைக் கூடுதலாக்கலாம்; உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தைப் பெருக்க முடியும்; நதியின் கரையோரம் உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும்; சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும்; தொழில், வணிகம் பெருகி வேலைவாய்ப்பு பெருகும்; உள்நாட்டு மீன்பிடித் தொழில் வளர்ச்சி அடையும்.
 இப்படி பல பயன்பாடுகள் உள்ள தேசிய நதிகள் இணைப்பை, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் செயல்படுத்துவது கடினம். அணைகள் கட்டுவதும், மின் உற்பத்தி செய்வதும் தேவையானது. அதைப் புரிந்து கொண்டு சுற்றுச்சூழல் பிரச்னைகளை முடிந்த அளவு தீர்த்து இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
 நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது நாட்டு மக்களுக்கான திட்டம். எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வரும்போது சமன்பாடாக தண்ணீர் வரத்துகள் சீராகவும், செம்மையாகவும் வெள்ளத்தையும், வறட்சியையும் முறியடிக்கக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்துவதுதான் நதிநீர் இணைப்பு. இந்த வகையில் பிரம்மபுத்ரா, கங்கை, நர்மதா, தபதி, மகாநதி, துங்கபத்ரா, கோதாவரி, பாலாறு, தென்பெண்ணையாறு, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள், தென்குமரியில் உள்ள நெய்யாற்றோடு இணையட்டும்.
 தமிழகத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் ஒரு புறம் நடக்கின்றது. இதில் எந்த சிக்கலும் இல்லை. ஏனெனில், தாமிரபரணி தமிழ்நாட்டில் பொதிகை மலையில் உருவாகி தமிழ்நாட்டிலேயே புன்னக்காயலில் கடலில் சேர்வதால் வேறு மாநிலம் இதில் சம்பந்தப்படவில்லை. தற்போது காவிரி - வைகை - குண்டாறு இணைப்புப் பணிகள் தொடங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கர்நாடக மாநிலத்திலிருந்து இந்தத் திட்டத்தை எதிர்த்து குரல் எழுகிறது.
 இதே போலவே, எதிர்காலத்தில் தமிழகம் திட்டமிட்டுள்ள தென்பெண்ணை - பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ஆந்திர மாநிலம் பிரச்னையை உருவாக்கலாம். நதிகள் ஒருமைப்பாடு பன்மையில் ஒருமையை வளர்க்கும். நதிநீர் இணைப்பை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.
 
 கட்டுரையாளர் :
 அரசியலாளர்.
 



Read in source website

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாகப் பணி உயர்வு பெறுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்களையும் பரிசீலிக்கும்வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணிகள் துறை ஒன்றை நிறுவ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஆட்சிப் பணித் துறை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கொள்ளத்தக்கது. ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் 98 அதிகாரிகள் 2012-ல் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இதுவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, துணை ஆட்சியராகப் பணியில் சேர்பவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐஏஎஸ் பணி உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல, அத்தேர்வில் வெற்றிபெற்றுக் காவல் துறைத் துணை கண்காணிப்பாளராகப் பணியில் சேர்பவர்கள், இந்தியக் காவல் பணி அதிகாரிகளாகப் பணி உயர்வைப் பெறுகிறார்கள். ஆனால், குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று வணிக வரித் துறை உதவி ஆணையராக, கூட்டுறவுச் சங்கங்களின் உதவிப் பதிவாளராக, ஊரக மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநராக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் மாவட்ட அலுவலர்களாகப் பணியாற்றுபவர்கள், தம் பணிக் காலத்தில் தம் துறைசார்ந்து பதவி உயர்வுகளைப் பெற முடியுமேயொழிய, ஐஏஎஸ் பணி உயர்வைப் பெறுவதென்பது அரிதினும் அரிதாகவே இருந்துவருகிறது.



Read in source website

அற்புதம் அம்மாள்... இந்தப் பெயரே ஒரு தனிக் கட்டுரைதான். பத்திரிகை துறையில் உள்ளவர்களில் பலருக்கும் அற்புதம்மாளை பேட்டி எடுக்கவோ, நேரில் சந்திக்கவோ வாய்ப்பு வெகு நிச்சயமாக கிடைத்திருக்கும். எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாக, ஒரு நாள் மதிய உணவை அவருடன் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.

ஒருநாள் 'இந்து தமிழ் திசை' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அற்புதம் அம்மாள். எங்களுக்கு மதிய உணவு அலுவலகத்திலேயே தரப்படும். கேன்டீனில் சாப்பாட்டு தட்டுடன் நின்றிருந்த என்னருகில் திடீரென வந்து நின்றார் அற்புதம் அம்மாள். அதுவரை நான் அவரை நேரில் பார்த்ததேயில்லை. "அம்மா வணக்கம்" என்று சொல்ல, ஒரு புன்னகையுடன் "உன் பேரு மா..." என்றார். பெயரைச் சொல்லிவிட்டு இருவரும் ஒரே மேஜையில் இன்னும் சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டோம்.

மிகவும் குறைவாகவே சாப்பிட்டார். "இன்னும் கொஞ்சம் சோறு" என்றேன். "இல்லம்மா... சாப்பாடு அளவெல்லாம் குறைஞ்சுடுச்சு மா" என்றார். நிறைய விஷயங்களை வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே இருந்தார். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தேன். கை கழுவச் செல்லும்போது "அறிவு வெளிய வந்தது கல்யாணம் பண்ணி வைக்கணும்" என்றார்.

ஒரு தாய் எப்போதுமே குழந்தையை வளர்த்துக் கொண்டே அதன் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொண்டிருப்பாள். வயிற்றில் கருவாக இருக்கும்போது அதற்குப் பெயரைத் தேடுவாள், பெயருள்ள பிள்ளையாய் விளையாடும்போது அதற்கு அறிவு தரும் பள்ளியைத் தேடுவாள், பள்ளிக்குச் சென்றால் அதன் எதிர்காலத்தை கட்டமைக்க உதவுவதைப் பற்றி யோசிப்பாள். அவளோ / அவனோ வேலையில் அமர்வதற்கு முன்னரே அவர்களின் திருமணத்தைப் பற்றி கனவு காண்பாள். அம்மாக்கள் அப்படித்தான். ஆனால் அற்புதம் அம்மாள் அப்படிப்பட்ட அம்மா மட்டுமல்ல.

"ராஜீவ் காந்தி கொலைக்கும், என் மகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." - இந்த ஒற்றைப் புள்ளியில்தான் அற்புதம் அம்மாள் தனது சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார். அதிலிருந்து 31 ஆண்டு காலம் கழித்து அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. உடலில் பலமும், தோற்றத்தில் இளமையும் இருந்த காலத்தில் போராட்டத்தை ஆரம்பித்தவர் முதுமையின் பிடிக்கு வந்த வேளையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

31 ஆண்டு காலம் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. மனித வாழ்வில் அது ஒரு பெம்பகுதி. பேரறிவாளனுக்கும் தான். அப்படியான, வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறைச்சாலையில், எண்ண அலைகள் அனைத்தையும் வழக்கின் வசமே வைத்துவிட்டு இன்று வருமா, நாளை வருமா என 31 ஆண்டுகள் காத்திருப்பு பேரறிவாளனுக்கு விடியலைத் தந்துள்ளது. அந்த விடியலுக்கு வித்திட்டவர்தான் அற்புதம் அம்மாள். அவர் தான் முழுமுதற்க் காரணமும் கூட. அப்படித்தானே பேரறிவாளனும் சொல்கிறார்.

அன்பு, அறிவு, அருள் என மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் குயில்தாசனுடன் வெகு இயல்பான வாழ்க்கையைத்தான் அற்புதம்மாள் வாழ்ந்து கொண்டிருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக சிபிஐ சொல்லும் வரை அவர் சாதாரண குடும்பப் பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால், "செய்யாத தவறுக்கு என் மகன் சிறை அனுபவிக்கக் கூடாது" என்ற வாதத்துடனான வேகம் அவரை சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வைத்தது.

ஆரம்ப நாட்களில் பேரறிவாளனைப் பார்க்கவே நாள் கணக்கில் காத்திருந்து, ஜோலார்பேட்டைக்கும், சிபிஐ அலுவலகத்துக்கும், சிறைச்சாலைக்கும் அலைந்து வந்தவர் இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று மகனை வென்றெடுத்துள்ளார். 1991 ஜூன் மாதம் தொடங்கிய அவரது போராட்டம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுபெற்றுள்ளது.

எத்தனை துணிச்சல், எத்தனை வைராக்கியம் அந்த மனதில் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு தாயாக எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

மகனைப் பற்றி காதுபட கேலி பேசியவர்களுக்கு மத்தியில் மகனுக்காக அறப்போராட்டங்களை முன்னெடுத்தார். உண்ணாவிரதம், பேரணி, பிரச்சாரக் கூட்டங்கள் என்று முன்னெடுத்தார். அவருக்காக சில அமைப்புகள் இன்றுவரை பக்கபலமாக இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆட்சிகள் மாறினாலும் அவருடைய கோரிக்கை மகன் விடுதலையைப் பற்றி மட்டுமே இருந்தது.

இந்நிலையில்தான் கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் மற்றும் மற்ற 3 பேர் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. "பிழைத்தான் மகன்" என்ற பெருமகிழ்ச்சியோடு போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்தார்.

அவரது அறப்போராட்டத்துக்கு கிடைத்த இமாலய வெற்றிதான் விசாரணை அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம். 2017-ல் அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். "பேரறிவாளனிடம் நான் நடத்திய விசாரணையின் போது அவர் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொன்னதை நான் அறிக்கையில் பதிவு செய்யத் தவறிவிட்டேன்" என்றார்.

எறும்பு ஊற பாறை கரையுமோ என்று நினைப்பவர்களுக்கு அது பொய் என அற்புதம் அம்மாள் நிரூபித்த தருணம்தான் அதிகாரி தியாகராஜனின் அந்த அறிவிப்பு. அவருடைய அந்த அறிவிப்பு வழக்கிற்கு பேருதவியாக அமைந்தது.

அதன்பின்னர்தான் இன்னும் உத்வேகத்துடன் அற்புதம்மாள் சுழன்றடிக்க ஆரம்பிக்கிறார். 2017 ஆகஸ்டில் முதன்முறையாக பேரறிவாளனை பரோலில் எடுத்தார் அற்புதம் அம்மாள். அப்போதும் அவரது எண்ணம் விடுதலையை நோக்கியே இருந்தது. அதன்பின்னர் பலமுறை பரோல் நீட்டிக்கப்பட்டது. அற்புதம் அம்மாளின் அலைச்சல்கள் குறைந்தது. ஆனால், அவரது போராட்டம் சுணக்கம் காணவே இல்லை. அற்புதம்மாள் சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே அவர் 12 ஆண்டுகள் போராடியிருக்கிறார்.

ஒருவழியாக கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது அவர் சொன்னது: "இந்த ஜாமீன் ஒரு இடைக்கால நிவாரணம் மட்டுமே. என் மகன் பேரறிவாளன் உள்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை, எங்கள் சட்டப்போராட்டம் தொடரும்." இன்று மே 18, 2022 வரலாற்றில் ஒரு முக்கியப் பக்கத்தை அற்புதம் அம்மாள் எழுதியிருக்கிறார். மகனின் விடுதலை அவரின் வெற்றியாக அமைந்திருக்கிறது.

"தாயால் விடுதலையானேன்" என்று நெகிழும் பேரறிவாளன், தன் தாயை மாக்சிம் கார்கியின் 'தாய்' புதினத்தில் வரும் தாய்க்கு இணையாக ஒப்பிட்டுப் பேசுகிறார். ’இத்தனை ஆண்டு போராட்டத்தில், அம்மாவின் தனிப்பட்ட வாழ்வை நான் திருடிவிட்டேனோ என வருந்துகிறேன்’ எனக் கூறுகிறார்.

ஆனால், அற்புதம் அம்மாள் அப்படி நினைக்கவில்லை. இத்தனைப் போராட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தாலும் பேட்டியில் அவர், "31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்றாரே தவிர, "நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று சொல்லவில்லை. அதனால்தான் அவர் ஓர் அற்புதமான அம்மா!



Read in source website

அருங்காட்சியகங்களில் பல துறைகள் கொண்ட காட்சிக்கூடங்கள் இருந்தாலும் ஓர் இயற்கை ஆர்வலனாக நான் விரும்பும் பகுதி விலங்கியல் கூடங்கள்தான். காட்டுயிர்களை உயிருடன் அவற்றின் இயற்கையான வாழிடங்களில் மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு, பாடம்செய்துவைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உடல்களைப் பார்ப்பது ஒருவேளை மகிழ்ச்சியைத் தராமல் போகலாம். ஆயினும், கண்ணாடிக் கூண்டில் உள்ள, பளிங்குக் கண்கள் பொருத்தப்பட்ட, கண்ணாடிக் குடுவையில் ஃபார்மால்டிஹைடு திரவத்தில் பதப்படுத்தப்பட்ட, நிறங்களை இழந்த, சில வேளைகளில் கோரமாகத் தோற்றமளிக்கும் இறந்துபோன உயிரினங்களின், அவற்றின் எலும்புக்கூடுகளின் முக்கியத்துவத்தை அறிந்தால் நிச்சயமாக நாம் ஆச்சரியமடைவோம்.



Read in source website

காவிரிப் படுகையின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம், அந்த அமைப்பின் தலைவரும் மாநில முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. 2012-ல் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கிய காவிரிப் படுகை மக்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் 2013-ல் இடைக்காலத் தடையையும், 2015-ல் நிரந்தரத் தடையையும் விதித்தார்.

ஆனாலும், ஒன்றிய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய HELP (Hydrocarbon Exploration Licencing Policy) கொள்கையின் அடிப்படையில், மாறுபட்ட வடிவங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் உட்புகுந்தன. அதன் விளைவாக, காவிரிப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்துக்கும் எதிர்ப்பு உருவானது. எனவே, 2020-ல் காவிரிப் படுகையின் பிரதானப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

20.02.2020-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் பழனிசாமியால் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட’த்தை வரவேற்ற இன்றைய முதல்வர், மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரியும், விடுபட்ட காவிரிப் படுகைப் பகுதிகளை இணைக்கக் கோரியும் வெளிநடப்பு செய்தார். ஆனாலும், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 2020-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

அந்தச் சட்டப்படி தமிழ்நாடு அளவில் முதல்வர் தலைமையிலான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையம் அமைக்க வேண்டும். அதில் துறைசார் அமைச்சர்கள், அலுவலர்கள் 20 பேரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மூவர், வேளாண் அறிவியல், தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளைச் சேர்ந்த தலா ஒரு நிபுணர்கள் என 29 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

சட்டத்தின் விதி எண் 7(1) படி, தேவையின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டலாம் என்று கூறப்பட்டாலும், ஆண்டுக்கு இரண்டு முறை கண்டிப்பாகக் கூட்டம் நடத்த வேண்டும். செப்டம்பர் 2020-லேயே அமைப்பு உருவாக்கப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, மற்றும் விவசாயப் பிரதிநிதிகளும் அறிவிக்கப்பட்ட பின்னரும் அன்றைய அரசு ஆணையக் கூட்டத்தைக் கூட்டாத சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2021-ல் ஆட்சிக்கு வந்த புதிய அரசு, முதல் முறையாக வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்தது. அதை வரவேற்ற அதே வேளையில், ஆணையத்தை விரைந்து கூட்டுமாறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன.

அதனைத் தொடர்ந்து விதி எண் 6(1)படி புதிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ஜனவரி 2022-ல் மாநில அரசு நியமித்தது. சட்டம் அரசிதழில் வெளிவந்து 21 மாதங்கள் கழித்து, நடைபெற்ற முதல் கூட்டம் வரவேற்கக் கூடிய ஒன்று. கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர், முந்தைய அரசு கொண்டுவந்த சட்டம் என்றாலும் அதன் கூறுகளை முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று கூறியிருப்பது சிறப்பானது.

விதி எண் 10-ன்படி மாநில ஆணையத்தின் முடிவுகளைச் செயல்படுத்தவும் மற்றும் ஆணையத்துக்கு உதவிசெய்யும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் துறைசார் அலுவலர்கள் 11 பேர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தேர்வுசெய்யப்படும் விவசாயப் பிரதிநிதிகள் இருவர் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதுவரை அமைக்கப்படாத மேற்கண்ட குழுவைச் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். மாநில அரசு ஏற்கெனவே பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் ஒரு குழு அமைத்து, தமிழ்நாடு ஹைட்ரோகார்பன் திட்டங்களின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்தது. அக்குழுவும் தனது அறிக்கையைக் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மாநிலத் தொழிற்துறைச் செயலரிடம் அளித்தது. அப்போது பேசிய அதன் தலைவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல்,12 2022-ல் கனடா நாட்டின் கியூபெக் மாகாணம், எண்ணெய் மற்றும் எரிவாயு முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் முதல் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. அம்மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்படும். 2011 தொடங்கி அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

தமிழ்நாட்டோடு கியூபெக் மாகாணத்தை ஒப்பிட்டால் நிலப்பரப்பில் 12 மடங்கு அதிகம். ஆனால், அதே வேளை மக்கள்தொகையில் 9 மடங்கு குறைவானது. அதாவது, கியூபெக்கில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6.23 பேர் மட்டுமே வசிக்க, தமிழ்நாட்டில் சுமார் 550 பேர் (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ) வசிக்கும் சூழலில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கியூபெக் போன்ற நடவடிக்கை தேவைப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு எண்ணெய் வளத்தில் தமிழ்நாட்டின் பங்கு அதிகபட்சமாக எண்ணெயில் 2 சதவீதமாகவும் எரிவாயுவில் 4 சதவீதமாகவும் உள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த அளவே. மேலும், இந்த வளங்களை எடுத்தால் அதிகபட்சமாக 60 அல்லது 70 ஆண்டுகளில் முடிந்துவிடும். ஆனால், இப்பகுதியில் விவசாயம் என்பது 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது, இந்த நில வளத்தையும் நீர் வளத்தையும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டால், மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உணவுத் தேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆகவே, ஆணையம் இதில் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக முக்கியமான காரணியாக இருந்த எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியில் பழைய திட்டங்கள் தொடர்வதற்குச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் மாற்றப்பட்ட எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில், அனுமதி பெற்ற பழைய எண்ணெய்க் கிணறுகளில் ஒற்றை அனுமதி அடிப்படையில் ஷேல், மீத்தேன் உள்ளிட்ட செயல்திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது. அது காவிரிப் படுகையின் நில வளத்தையும் நீர் வளத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஆணையத்தின் விவாதக் குறிப்புகள் வெளிவரவில்லை. அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றிருந்தால் நல்லது. இல்லையெனில் அதையும் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுபட்ட பகுதிகளை இணைப்பது, மண்ணின் வளமும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வண்ணம் விவசாயத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கான ஆய்வுகள் செய்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், வேளாண் சந்தையை விரிவுசெய்தால், தமிழ்நாடு கியூபெக் போல வரலாற்றில் இடம்பிடிக்கும்.

- வ.சேதுராமன், மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தொடர்புக்கு: mannaisethu1@gmail.com



Read in source website