DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 17-04-2022

மாநகரப் பேருந்துகளில் ஒலிப்பெருக்கி மூலம், முதல் நிறுத்த அறிவிப்பை ஜூலை மாதத்துக்குப் பிறகு வெளியிட மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மின்சார ரயில்கள், ஆம்னி பேருந்துகள் சிலவற்றிலும் நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்படுகிறது. அதன்படி, அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை அமல்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்படவிருந்த இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நிலுவையில் இருந்தது. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு 25ஜி, 101, 570 உள்ளிட்ட வழித்தடங்களில் சுமாா் 50 பேருந்துகளில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தத் திட்டத்தை வருகிற ஜூலை மாதத்துக்குப் பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக, 500 பேருந்துகளில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தோ்வாகும் ஒப்பந்ததாரா், போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு தொகையை செலுத்தி விட்டு, தனியாா் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் பெற்று ஒலிபரப்பு செய்வதற்கான தொகையை அவா்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்.



Read in source website

தொல்காப்பியம் குறித்த 144 நூல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: தொல்காப்பியரின் 2,733-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தொல்காப்பியரின் நூல்கள், அவா் தொடா்பான முக்கிய குறிப்பேடுகள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை தமிழ் இணையக் கல்வி கழகம் மேற்கொண்டு வருகிறது.

வரலாற்று ஆய்வாளா்கள், தமிழ் ஆய்வு மாணவா்கள், பொது மக்கள் பயன்பெறும் வகையில், தொல்காப்பியம் தொடா்பான 144 நூல்கள் மின் நூலகத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்க்ண்ஞ்ண்ற்ஹப்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ண்ய்) பதிவேற்றம் செய்து ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள தமிழா்கள் அவரவா் இடத்தில் இருந்து கொண்டே இதனை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



Read in source website

குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி தேவையில்லாத வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி டெல்டா, ஒமைக்ரான் உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக திறம்பட செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக வைரஸஸ் என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மைன்வாக்ஸ் ஆய்வகம் குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி மூலம் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், புதிதாகக் கரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது.

பிற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தடுப்பூசி தனித்துவம் வாய்ந்தது. இந்தத் தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங்களுக்கும், 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒன்றரை மணி நேரம் வரையும் வைத்திருக்க முடியும்.

இந்தத் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இதர தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை கட்டாயம் குளிா்பதன வசதி மூலம் சேமித்தாக வேண்டும். குறிப்பாக ஃபைஸா் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், மைன்வாக்ஸ் ஆய்வகம், காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு என்ற ஆஸ்திரேலிய அரசு அமைப்பின் விஞ்ஞானிகள் இணைந்து புதிய தடுப்பூசியை ஆய்வுக்குள்படுத்தினா். அந்தத் தடுப்பூசியை எலிகளுக்குச் செலுத்தி மேற்கொண்ட ஆய்வில், ஒமைக்ரான், டெல்டா உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக அத்தடுப்பூசி திறம்பட செயல்பட்டு வலுவான நோய் எதிா்ப்பாற்றலை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

இந்தத் தடுப்பூசி வெப்பத்தைத் தாங்கும். அத்துடன் திடீா் வெப்ப மாறுதலுக்குத் தாக்குப்பிடிக்கும். இந்தத் தன்மை போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைக்காத மிகவும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்குப் பெரிதும் பயன்படும்.

தற்போதைய ஆய்வின் முடிவு, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியை மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தலைசிறந்த பொது நிா்வாகத்துக்கான பிரதமரின் விருதுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த உடான் திட்டத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்தது. 2020-ஆம் ஆண்டுக்கான பொது நிா்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்திற்கான பிரதமரின் விருதுக்கு இந்தத் திட்டம், தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதுமைக் கண்டுபிடிப்புப் பிரிவின்கீழ் இந்த விருது வழங்கப்பட உள்ளது. குடிமைப் பணியாளா் தினமான ஏப்ரல் 21-ஆம் தேதி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த விருது வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் புதுமையான திட்டங்களை அங்கீகரித்து, பெருமைப்படுத்தும் விதமாக, தலைசிறந்த பொது நிா்வாகத்துக்கான விருதை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இலக்குகளை எட்டி சாதனை படைப்பது மட்டுமின்றி, நல்லாட்சி, தரமான சாதனைகள், தொலைதூர இணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருது, ஒரு சுழற்கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டதாகும்.

உடான் திட்டத்தின்கீழ், 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் 100 புதிய விமான நிலையங்களைக் கட்டவும், 2026-ம் ஆண்டிற்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி தேவையில்லாத வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி டெல்டா, ஒமைக்ரான் உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக திறம்பட செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக வைரஸஸ் என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மைன்வாக்ஸ் ஆய்வகம் குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி மூலம் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், புதிதாகக் கரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது.

பிற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தடுப்பூசி தனித்துவம் வாய்ந்தது. இந்தத் தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங்களுக்கும், 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒன்றரை மணி நேரம் வரையும் வைத்திருக்க முடியும்.

இந்தத் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இதர தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை கட்டாயம் குளிா்பதன வசதி மூலம் சேமித்தாக வேண்டும். குறிப்பாக ஃபைஸா் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், மைன்வாக்ஸ் ஆய்வகம், காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு என்ற ஆஸ்திரேலிய அரசு அமைப்பின் விஞ்ஞானிகள் இணைந்து புதிய தடுப்பூசியை ஆய்வுக்குள்படுத்தினா். அந்தத் தடுப்பூசியை எலிகளுக்குச் செலுத்தி மேற்கொண்ட ஆய்வில், ஒமைக்ரான், டெல்டா உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக அத்தடுப்பூசி திறம்பட செயல்பட்டு வலுவான நோய் எதிா்ப்பாற்றலை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

இந்தத் தடுப்பூசி வெப்பத்தைத் தாங்கும். அத்துடன் திடீா் வெப்ப மாறுதலுக்குத் தாக்குப்பிடிக்கும். இந்தத் தன்மை போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைக்காத மிகவும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்குப் பெரிதும் பயன்படும்.

தற்போதைய ஆய்வின் முடிவு, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியை மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதற்குத் தற்போதைய சா்வதேச சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூா் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

ஹனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள பரம் பூஜ்ய கேசவானந்த் ஆசிரமத்தில், 108 அடி உயரமுள்ள ஹனுமன் சிலையை பிரதமா் மோடி காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலையை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட இரண்டாவது சிலை இதுவாகும்.

முதலாவது ஹனுமன் சிலையானது சிம்லாவில் கடந்த 2010-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. ராமேசுவரத்தில் அடுத்த சிலையை அமைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

குஜராத்தில் சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது பிரதமா் மோடி பேசியதாவது: இந்தியா தற்போதைய சூழலில் அமைதியாக இருக்கக் கூடாது. நாம் இதே இடத்தில் தொடா்ந்து நிலைபெற்று இருக்கக் கூடாது. தற்போதைய சா்வதேச சூழலைப் பயன்படுத்தி தற்சாா்பை அடைய வேண்டும். தற்போது உலக நாடுகள் அனைத்தும் தற்சாா்பு அடைவது குறித்தே சிந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், இந்திய மக்கள் அனைவரும் உள்ளூா் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நம் நாட்டு மக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே வீடுகளில் பயன்படுத்த வேண்டும். அதன் காரணமாக, நாட்டில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டுப் பொருள்களை நாம் விரும்பலாம். ஆனால், உள்ளூா் மக்கள் உழைப்புக்கு அந்தப் பொருள்கள் என்றும் ஈடாகாது. மக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உள்ளூா் பொருள்களை மட்டுமே பயன்படுத்தினால், நாட்டில் வேலையின்மை பிரச்னை இருக்காது.

அனைத்து மக்களுக்கும் ஊக்கம் தருபவராக ஹனுமன் திகழ்ந்து வருகிறாா். அனைத்து வன உயிரினங்களையும் பழங்குடியினரையும் மதிப்பதற்கு அவா் கற்றுத் தந்தாா். இது ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகிறது. இந்தக் கொள்கையானது சுதந்திரத்துக்கு முன்பே நாட்டு மக்களை ஒன்றிணைக்க உதவியது.

கலாசாரத்தின் அடிப்படை: ராமரின் கதையானது அனைத்து மக்களையும் கடவுளுடன் பிணைக்கிறது. இதுவே இந்தியாவின் நம்பிக்கை, ஆன்மிகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் வலிமையாக உள்ளது. நல்லிணக்கம், சமத்துவம், ஒருங்கிணைந்த தன்மை உள்ளிட்டவற்றை இந்திய கலாசாரம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கடவுள் ராமரால் அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும் என்றபோதும்கூட, அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அவா் செயல்பட்டாா். ‘அனைவருடனான நம்பிக்கையால் ஒருங்கிணைதல்’ என்ற கொள்கைக்கு அவரே அடிப்படையாக இருந்தாா்.

நாட்டின் வலிமை: இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்குப் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. நாட்டில் உள்ள ஆன்மிகத் தலங்களைத் தூய்மையாகப் பராமரித்தாலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது நாட்டின் பெரும் வலிமையாக உள்ளது.

1857-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் ஆன்மிகத் தலைவா்கள், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி சுதந்திரப் போராட்டத்தைத் தொடக்கிவைத்தனா். ஹனுமன் கற்பித்த தன்னலமற்ற சேவைகளும் ஊக்கமும் நாட்டை வலிமையாக்கும் என்றாா் பிரதமா் மோடி.



Read in source website

தலைசிறந்த பொது நிா்வாகத்துக்கான பிரதமரின் விருதுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த உடான் திட்டத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்தது. 2020-ஆம் ஆண்டுக்கான பொது நிா்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்திற்கான பிரதமரின் விருதுக்கு இந்தத் திட்டம், தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதுமைக் கண்டுபிடிப்புப் பிரிவின்கீழ் இந்த விருது வழங்கப்பட உள்ளது. குடிமைப் பணியாளா் தினமான ஏப்ரல் 21-ஆம் தேதி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த விருது வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் புதுமையான திட்டங்களை அங்கீகரித்து, பெருமைப்படுத்தும் விதமாக, தலைசிறந்த பொது நிா்வாகத்துக்கான விருதை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இலக்குகளை எட்டி சாதனை படைப்பது மட்டுமின்றி, நல்லாட்சி, தரமான சாதனைகள், தொலைதூர இணைப்பு போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருது, ஒரு சுழற்கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டதாகும்.

உடான் திட்டத்தின்கீழ், 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் 100 புதிய விமான நிலையங்களைக் கட்டவும், 2026-ம் ஆண்டிற்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு, பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரது நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷியா பயணத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் 13 பிரிட்டன் அரசியல் தலைவா்கள் ரஷியா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், நிதியமைச்சா் ரிஷி சுனக், உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல், அட்டா்னி ஜெனரல் சுயெல்லா பிராவோ்மன், துணை பிரதமா் டோமினிக் ராப், வெளியுறவுத் துறை இணையமைச்சா் லிஸ் டிரஸ் ஆகியோா் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

விரைவில் மேலும் சில அரசியல்வாதிகளும் எம்.பி.க்களும் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படுவாா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

ரஷிய அதிபா் விளாதமீா் புதின், அவரது இரு மகள்கள், வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட 13 பிரிட்டன் தலைவா்கள் மீது ரஷியா பயணத் தடை விதித்துள்ளது.

 



Read in source website

பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவராக முன்னாள் பிரதமா் ராஜா பா்வேஸ் அஷ்ரஃப் (71) நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறுவதற்கு முன்பாக அவைத் தலைவராக இருந்த ஆசாத் கைஸா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியை சோ்ந்த அயாஸ் சாதிக் இடைக்கால அவைத் தலைவராகப் பொறுப்பேற்று வாக்கெடுப்பை நடத்தினாா். இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்று, புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றாா்.

அவைத் தலைவா் பதவி காலியாக இருந்ததையடுத்து, அதற்கான தோ்தல் நடைமுறைகள் தொடங்கின. இதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சோ்ந்தவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பா்வேஸ் அஷ்ரஃப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தாா். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததையடுத்து, புதிய அவைத் தலைவராக அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை அவருக்கு அயாஸ் சாதிக் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். புதிய அவைத் தலைவரை பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வாழ்த்திப் பேசினாா்.

ராஜா பா்வேஸ் அஷ்ரஃப் 2012 ஜூன் 22-ஆம் தேதிமுதல் 2013, மாா்ச் 16 வரை பிரதமராகப் பணியாற்றியுள்ளாா்.

துணைத் தலைவா் ராஜிநாமா:

அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி முந்தைய இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறி அவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது சனிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக காசிம் சுரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.



Read in source website

திருச்சி: தமிழகத்தில் நடைபெறக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சிகளில் இனி ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகள் வரக் காத்திருக்கின்றன என முதல்வரின் முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.

ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘தமிழ் நெடுஞ்சாலை' நூல் அறிமுகவிழா ‘களம்’ இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.துளசிதாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக முதல்வரின் முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் நூலை அறிமுகம் செய்து பேசியதாவது:

அதிகாரத்தின் மிக உச்சத்தில் இருப்பவர்களிடமும் தனது கருத்தை தைரியமாக எடுத்துச்சொல்லும் ஆற்றல் படைத்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். நாட்டின் பேரிடர் மீட்புக்கு மிக முக்கிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர். குடிமைப் பணி மட்டுமின்றி சிந்துவெளி ஆராய்ச்சி, பானைத்தடம், இடப்பெயர்ச்சி, அகழாய்வு என தொடர்ச்சியாக தமிழ், தமிழ் மண் சார்ந்து வாழக்கூடியவர். இந்நூல் முழுவதும் அவரது கவித்துவமும், அனுபவமும் நிரம்பி வழிகின்றன. பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு இந்நூலில் ஏராளமான திருப்பங்கள் உள்ளன. இது, பல ஆயிரம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அதிகாரத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவகளை பகுதியின் தொன்மையை பறைசாற்றும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் கடந்தமுறை கிடைத்தன. அதன் அடிப்படையில் கீழடி 2,600 ஆண்டுகள் பழமை என்றால், பொருநைநதி நாகரிகம் 3,700 ஆண்டுகள்பழமையானது என அறியப்பட்டது. இதை வைத்து, இனி இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து தொடங்கித்தான் எழுதப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் ஆராய்ச்சிகளில் ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகள் வரக் காத்திருக்கின்றன என்றார்.

நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றி பேசும்போது, “உலகின் மிகச்சிறந்த தமிழ் ஆவணகாப்பகமாக கருதப்படும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி மன்றத்தில் உள்ள 4.5 லட்சம் நூல்களை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர் தே.சங்கர சரவணன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன், எஸ்.ஆர்.வி பள்ளிகள் இணைச் செயலாளர் பி.சத்தியமூர்த்தி கலந்துகொண்டனர்.

முன்னதாக ‘களம்’ அமைப்பின் சார்பில் ரமேஷ்பாபு வரவேற்றார். வி.செல்வம் முன்னிலை வகித்தார். முடிவில் நெல்சன் ஆரோக்கியம் நன்றி கூறினார். இவ்விழாவை பிரபுகுமார், அமர்நாத், சுதா பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



Read in source website

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக தடையால் ரஷ்யாவிடம் இருந்து அதிகபட்ச சலுகை விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வரும் நிலையில் புதிய வாய்ப்பாக இந்திய உணவுப்பொருட்கள் ரூபாயில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தடையால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பு சார்பில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக அளவில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். அதன்படி ரஷ்யாவுடன் நட்பற்ற நாடுகள், கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு விற்பனைக்கு டாலருக்கு பதில் இனிமேல் ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவித்துள்ளார்.

இந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவு தங்கள் எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவையே நம்பியுள்ளன.

இருப்பினும் அந்த நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய முன் வரவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வராத சூழலில் ஆசியநாடுகளுக்கு அதிக அளவில், சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து ரூபாய் மற்றும் ரூபிள் அடிப்படையில் கரன்சியைப் பெற்று விநியோகம் செய்யவும் ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஏற்கெனவே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, ஹெச்பிசிஎல் ஆகியன கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தை மதிப்பை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் விலை குறைவாக ரஷ்யா கச்சா எண்ணெய் சப்ளை செய்கிறது, இந்த ஆண்டு 1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை தங்கள் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது.

இதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன் வரவில்லை. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஸ்விப்ட் சேவையை ரஷ்யாவில் தடை செய்த நிலையில், ரஷ்யாவின் பரிமாற்றத்தினை பெரிதும் முடக்கியுள்ளது. இதனால் ரஷ்யாவில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வர்த்தக நிறுவனங்களில் மசாலா பொருட்கள், சர்க்கரை, பாஸ்தா, பருப்பு, எண்ணெய், அரிசி உள்ளிட்ட பெரும்பாலான உணவுப்பொருட்கள் தீர்ந்து விட்டது. இதனையடுத்து ரஷ்யா நிறுவனங்கள் இந்தியாவை அணுக தொடங்கியுள்ளன. இதற்காக இந்திய உணவுப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றால் வழங்கப்பட்டு வந்த உணவு பொருட்களுக்கும், இந்தியாவினை அணுகியுள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்யா நிறுவனங்களை இணைக்கும் வகையில் நாளை மறுதினம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வாய்ப்பு

மளிகை பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் பிற உணவு பொருட்கள் தயாரிப்புக்காக ரஷ்யாவின் அஸ்ட்ராகானிலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலான லோடோஸ் என்ற இடத்தில், இந்தியா - ரஷ்யா கூட்டு விவசாய தொழில் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் சங்கங்கள் இங்கு வந்து தொழில் தொடங்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் மற்றும் ரூபிள் முறையில் பரிமாற்றம் செய்யவும் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்திய விற்பனையாளார்களுக்கும், ஏற்றுமதியாளார்களுக்கும் இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் இந்த புதிய வர்த்தக வாய்ப்பு இந்திய விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ரஷ்யாவுடன் வணிகத்தில் ஈடுபட ஆர்வமாகவும் உள்ளனர்.

இந்தியா ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புடன் ரஷ்யாவின் தேவை என்னவோ அதன் பட்டியலையும் தங்கள் கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு பகிர்ந்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில் ‘‘இந்தியா முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு நாங்கள் தேவையான பட்டியலை ஏற்கெனவே அனுப்பியுள்ளோம்’’ என்றும் கூறியுள்ளார்.

உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் முதலில் ஏற்றுமதி செய்யப்படும் எனத் தெரிகிறது. ஜூன் மாதத்தில் இருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா சந்தையை இந்தியாவுக்கு மாற்றும் ரஷ்யாவின் இந்த முயற்சி இந்தியாவுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

ரஷ்யாவின் போர்வெறி நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் செல்கிறது. உக்ரைன் மீது பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் போர்த் தாக்குதல் இன்று வரை தொடர்கிறது.

மனித உரிமை மீறலில் ஈடுபடும் நாடுகளை கண்டிக்கும் விதமாகவும், அந்நாடுகளின் எதேச்சதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் உலக நாடுகள் அந்தக் குறிப்பிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதுண்டு. அந்த வகையில் ரஷ்யாவின் போர்த் தாக்குதலை பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன.

ரஷ்யாவில் முதலீடு செய்ய, ரஷ்யாவுக்கு முக்கியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய, ரஷ்யாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. ரஷ்ய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், ரஷ்யாவுடன் ஏனைய நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. 630 பில்லியன் டாலர் அளவிலான ரஷ்யாவின் அந்நிய செலவாணி இருப்பு முடக்கப்பட்டது.

அனைத்திலும் உச்சமாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால், உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவின் வருவாயில் 40 சதவீதம் பங்கு எண்ணெய் ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது. அந்த வகையில் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடை ரஷ்யாவை நிலைகுலையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வியில் முடியும் பொருளாதார தடைகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பல சமயங்களில், எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் தோல்வியில் முடிந்திருக்கின்றன. உலகமயமாக்கலுக்குப் பிறகு, பொருளாதாரத் தடைகள் என்பது ஒரு நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை. தற்போது ரஷ்யாவின் மீதான அமெரிக்காவின் தடையும் அப்படியானதுதான். அமெரிக்கா அதன் எண்ணெய் தேவையில், 8 சதவீதம் அளவிலே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. எனில், ரஷ்யா கச்சா எண்ணெய் மீது தடை விதிப்பதால், அமெரிக்காவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள், அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்து இருக்கின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான தடைக்கு முழுதாக உடன்பட முடியாத நிலையில் அந்நாடுகள் உள்ளன.

பொருளாதாரத் தடைகள் நீண்ட கால அளவில் தாக்குப்பிடிக்காது என்ற போதிலும், பொருளாதாரத் தடைகள் உலக நாடுகளின் வர்த்தகப் போக்கில் சில முக்கியமான மாற்றங்களுக்கு வித்திடுவதுண்டு.

அமெரிக்காவின் திட்டம்

அமெரிக்கா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆனால், உலக அளவில் எண்ணெய் விலையை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக ரஷ்யாதான் உள்ளது. இந்நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ரஷ்யாவின் எண்ணெய் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, தன்னை எண்ணெய் ஏற்றுமதில் முதன்மையாக நாடாக நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது என்று கூறப்படுகிறது.

தற்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடை விதிக்காமல் இருப்பதற்குக் காரணம், அந்நாடுகள் அவற்றின் எண்ணெய் தேவைக்கு ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நான்கு நாடுகள் மட்டும் தினமும் 6 மில்லியன் பீப்பாய்கள் அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில் உள்ளன. எனில், எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் அளவுக்கு அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கான சாத்தியம் இருக்கிறதா?

2010-க்கு முன்னால் எண்ணெய் உற்பத்தியில் பின் தங்கிய இடத்தில் இருந்த அமெரிக்கா, கடந்த பத்தாண்டுகளில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எண்ணெய் உற்பத்தில் முதல் பத்து பெரிய நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் அதன் கட்டமைப்பை இன்னும் சில ஆண்டுகளிலே விரிவுபடுத்தும் சாத்தியத்தை அமெரிக்கா கொண்டிருப்பதாகவும், ஆனால் அத்தகைய உற்பத்தி வழக்கமான உற்பத்தியைவிட அதிக செலவு பிடிக்கக் கூடியது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், அமெரிக்கா முன் பல்வேறு சவால்கள் உள்ளன. தற்போது உலக அளவில் குறைந்த விலையில் தரமான எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. ஈரான் அதிக எண்ணெய் உற்பத்திக்கான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து, அமெரிக்கா ஈரானை ஓரம்கட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்வதை அமெரிக்கா தடுக்க முயற்சித்தால், அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் ஈரானை முதன்மைபடுத்தத் தொடங்கும்.

தவிர, அமெரிக்காவின் ஆதிக்கத்தை ரஷ்யாவும் ஒபெக் நாடுகள் (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) பார்த்துக்கொண்டிருக்காது. மற்ற எண்ணெய் வள நாடுகள் எண்ணெய் விலையை குறைத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முயலும் - தற்போது ரஷ்யா செய்ததுபோல. அது அமெரிக்காவுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக அமையும். ஏனென்றால், அமெரிக்கா அதன் தற்போதையக் கட்டமைப்பில் குறைந்த செலவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியாது.

வர்த்தக உறவில் புதிய அத்தியாயம்

அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதியில் முதன்மை நாடாக ஆகிறதோ இல்லை. அமெரிக்காவின் நகர்வு சர்வதேச வர்த்தகச் சூழலில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும். அமெரிக்காவின் தடையால் தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதுவரையில், 2 சதவீதம் அளவிலே இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வது வந்த நிலையில், இப்போது ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்பால் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கூடுதலாக இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அமெரிக்காவின் நகர்வு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கூடியதாக மட்டுமல்லாமல், உலக நாடுகளின் வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்துக்கும் வித்திடலாம்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவுக்கு எஸ் 400 ரக ஏவுகணை பாகங்கள் விநியோகத்தை, ரஷ்யா தொடங்கியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரகத்தை சேர்ந்த 5 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டில் முதல் ஏவுகணை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஏவுகணை பஞ்சாப் மாநிலத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதாவது சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி தகர்க்க முடியும். எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க முடியும்.

இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இரண்டாவது எஸ் 400 ரக ஏவுகணையை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் எஸ். 400 ரக ஏவுகணையின் பாகங்களை ரஷ்யா விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து முக்கிய பாகங்கள் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, "சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணையின் பாகங்களை பெற்றுள்ளோம். உக்ரைன் போர் காரணமாக ஏவுகணை பாகங்கள் விநியோகத்தில் சில மாதங்கள் தாமதம் ஏற்படலாம்" என்று தெரிவித்தன.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கக்கூடாது, மீறி வாங்கினால் பொருளாதார தடைகளை விதிப்போம் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது. எனினும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணியாமல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வாங்கி வருகிறது.



Read in source website

புதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாயை கணிசமாக உயர்த்தும் வகையில் வரிவிதிப்பு விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதாச்சாரங்கள் உள்ளன. தங்கத்துக்கு மட்டும் 3% என தனி விகிதாச்சாரம் உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து 8-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது.

இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூலில் கடந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 32,378 கோடியாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 74,470 கோடியாகவும் உயர்ந்துள்ளது. செஸ் வரி ரூ.9,417 கோடியாகவும் உள்ளது.

இந்தநிலையில் ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்த பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 5% விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் கொண்டுவர கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழு ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளதாக தெரிகிறது. அதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு வேறு சில பொருட்களுக்கு 8% என்ற புதிய விகிதாச்சாரத்திற்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சில மக்கள் பயன்படுத்தும் முக்கிய பொருட்களை 3% விகிதாச்சாரத்தில் கொண்டுவரவும், அதேசமயம் 5% ஜிஎஸ்டி பிரிவில் உளள சில அத்தியாவசிய மற்ற பொருட்களை 8% விகிதாச்சாரத்தில் வைக்க அரசு பரிசீலித்து வருகிறது.

5% விகிதாச்சாரத்துக்கு பதிலாக 7%, 8%, 9% ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு உருவாக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு 1% விகிதாச்சார உயர்வுக்கும் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

5 சதவீதத்துக்கு பதில் 7%, 8%, 9% ஆகிய மூன்று விகிதாச்சாரங்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் 8% விகிதாச்சாரத்தை ஜிஎஸ்டி கவுன்சில் தேர்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக உயரும் என தெரிகிறது.



Read in source website

இன்று உலக ஹீமோபிலியா தினம். உலக ஹீமோபிலியா சம்மேளனத்தை உருவாக்கிய கனடாவைச் சேர்ந்த ஃபிராங்க் ஸ்னாபல்லின் சீரிய முன்னெடுப்புகளை நினைவுகூறும் விதமாக அவர் பிறந்தநாளான ஏப்ரல்17 உலக ஹீமோபிலியா விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

மனிதர்களுக்கு அடிபட்ட இடத்தில் கசியும் ரத்தம் உறைந்து நின்றுவிடுவது இயற்கை. ஆனால், ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் எளிதில் உறையாது; கசிவும் தொடரும். உலகம் முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இந்தியாவில்தான் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இந்த நோயால் பெரும்பாலும் ஆண்களே பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவது அபூர்வம்.



Read in source website

இறையில்லங்களின் தாய்

ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள் ‘ஹஜ்’ பெருநாளாகவும் அமைந்துள்ளது. ‘ஹஜ்’ என்ற சொல்லுக்குச் ‘சந்திக்க நாடுதல்’ என்பது பொருளாகும். ஹஜ்ஜின்போது உலகெங்குமுள்ள மக்கள் “கஃபா இறை இல்லத்தைச் சந்திக்க நாடி வருவதால் ‘ஹஜ்’ என அழைக்கப்பட்டது.

ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது இறுதிக் கடமையாக அமைந்திருப்பது ஹஜ் கடமை. எல்லோருக்குமுரிய கடமையாயினும் உடல் நலமும் பொருள் வசதியுமுள்ளோருக்குக் கட்டாயக் கடமையாகும்.

துல்ஹஜ் மாதத்தில் உலகெங்குமுள்ள முஸ்லிம் மக்கள் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குவதற்கென மக்காவில் அமைந்துள்ள ‘கஃபா’ இறையில்லம் சென்று இறைவணக்கம் புரிவதே ஹஜ் ஆகும்.

உலகிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களுக்கும் தாய் போன்றது கஃபா இறையில்லம். ஆனால், உலகிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தின் அமைப்புக்கும் தன்மைக்கும் முற்றிலும் மாறுபட்டதாக கஃபா விளங்குகிறது. உலகெங்குமுள்ள பள்ளிவாசல்களில் இறை வணக்கம் புரிவோர் கஃபா இருக்கும் திசையை நோக்கியே தொழுவர். ஆனால், கஃபா இறையில்லத்தில் வணக்கம் புரிவோருக்கு திசை கட்டுப்பாடு ஏதுமின்றி எல்லாத் திசைகளிலும் கஃபாவைச் சுற்றி வட்டவடிவமாக நின்று தொழுகின்றனர்.

வாழ்வின் உட்பொருளை வெளிப்படுத்தும் ஹஜ்

ஹஜ் என்பது மனித வாழ்வின் சூட்சம நோக்குகளை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வோர் தாங்களே பாடுபட்டு நேர்மையான முறையில் தேடிய பொருளைச் செலவிட்டே ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணம் மேற்கொள்வோர் எல்லாவித உலகியல் பற்றுகளையும் விட்டொழித்தவராக இறைவனையும் இறையில்லச் சிந்தனையையும் தவிர, மற்ற எதையும் நினைக்காதவராகத் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார். இது அவரது மறுமையின் பயணத்தை அவருக்கு நினைவூட்டுவதாக அமைகிறது.

தனது குடும்பம், உற்றார் உறவினர், சொத்து சுகம் அனைத்தையும் துறந்தவராக கஃபா இறை இல்லம் நோக்கி ஹஜ் பயணம் செல்பவர் தனது மரணப் பயணத்தையே நினைவு கூர்பவராகிறார்.

ஹஜ் பயணம் செய்வோர் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இருந்தே தனது ஆடம்பர ஆடை அணிகலன் அனைத்தையும் களைந்துவிட்டு தைக்கப்படாத சாதாரண துணியிலான இரு வெள்ளைத் துண்டுகளை மட்டுமே அணிகிறார்கள். இவ்வாறு அரசராயினும், ஆண்டியாயினும் எல்லாரும் ஒரே மாதிரியான 'எஹ்ராம்' எனும் தைக்கப்படாத வெள்ளுடை உடுத்தியே இறையில்லம் செல்ல வேண்டும். இதே உடைதான் இறந்த சடலத்துக்கும் (மையத்) போர்த்தப்படுகிறது. எனவே, இந்த எஹ்ராம் எனும் வெள்ளுடை அணியும் ஹஜ் பயணி தனது மரணத்தையே நினைவு கூர்பவராகிறார். 

வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘எஹ்ராம்’ போன்ற வெள்ளுடையையே இறுதிவரை அணிந்து வந்தார் என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

ஒருமை உணர்வு தரும் கஃபா இறையில்லம்

ஹஜ்ஜின்போது லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கஃபா இறையில்லத்தில் கூடுகின்றனர். எல்லோருமே ஒரேமாதிரி சீருடையில் தைக்கப்படாத இரு துண்டுத் துணிகளை அணிந்தவர்களாக காட்சி தருகின்றனர். பல்வகைப்பட்ட மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தபோதிலும் அங்கு ஒரே மொழியில் அரபியில் இறை வணக்கம் புரிகின்றனர். வேற்றுமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகத்தான ஒற்றுமையை சமத்துவத்தை சொல்லிலும், செயலிலும் இறைவன்முன் நிலைநாட்டுகின்றனர்.

ஹஜ் கடமை நிறைவேற்றம்

கஃபா இறையில்லத்தை ஹஜ் செய்வோர் ஏழு முறை ‘தவாப்’ சுற்ற வேண்டும். ‘தவாப்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘சுற்றி வருதல்’ என்பது பொருளாகும். அதன்பின் அருகிலுள்ள ஜம்ஜம் கிணற்று நீரைக் குடித்து விட்டு சஃபா மருவா என்னும் இரு குன்றுகளிடையே ஏழு முறை தொங்கலோட்டம் ஓட வேண்டும்.

இக்கடமைகளை இனிது நிறைவேற்றிய ஹாஜிகள் அடுத்து மக்காவிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள மினா என்னுமிடத்தை அடைந்து, தங்கி இறைவணக்கம் புரிவார்கள்.

அடுத்த நாள் வைகறையில் தொழுகையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அருகில் உள்ள அரஃபாத் பெரு வெளியில் ஹாஜிகள் குழுமுகிறார்கள்.

ஹஜ் கடமையே இங்குதான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது. ஒரே மாதிரியான வெள்ளைச் சீருடை அணிந்த லட்சக்கணக்கான ஒரே மாதிரியான கூடாரங்களில், ஒரே மாதிரியான வெள்ளை எஹ்ராம் உடையில் தங்கிப் பிரார்த்தனை செய்கின்றனர்.

உலக ஒருமைப்பாட்டு மாநாடு

ஹஜ்ஜின்போது குழுமும் ஹாஜிகள் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாயிருந்தும், பல்வேறு விதமான மொழிகளையே பேசுபவர்களாயிருந்தும் வெவ்வேறு விதமான கலாசார அடிப்படையில் ஆடை அணிகளை அணியும் வழக்கமுடையவர்களாயிருந்தும், பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாயிருந்தும் ஏழை-பணக்காரன், அரசன் - ஆண்டி என்ற பொருளாதார வேற்றுமைக்கு உட்பட்டவர்களாயிருந்தும் கருப்பன் வெள்ளையன் நிற பேதமுடையவர்களாயிருந்தும் இறையில்லத்தின் முன் இந்த வேறுபாடுகள் எதுவும் இல்லாதவர்களாகக் குழுமி ஒரே மாதிரியான எஹ்ராம் வெள்ளுடையில் ஒரே இறைச் சிந்தனையுடன் ஒரே மொழியில் இறையருளை வேண்டி நிற்கும்போது உலக மக்கள் அனைவருமே ஆதி பிதாவான ஆதாமின் மக்கள் என்பதை உலகறிய பறைசாற்றும் ஒப்பற்ற காட்சியாக அமைகிறது. இறைவன் முன் எல்லோரும் ஓர் குலம், ஓர் இனம், ஓர் நிறை என்ற உன்னத நிலையை செயல் வடிவில் உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது. 40 லட்சத்து ஹாஜிகளும் வியக்கத்தக்க ஒற்றுமையுடனும், ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதன் மூலம் உலக சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, ஆண்டு தோறும் ஹஜ் திருநாளின்போது நிலைநாட்டுகிறார்கள்.

தியாக சீலர் ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்களால். நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பு உலக மக்களுக்கு விடுவிக்கப்பட்ட ஹஜ் அழைப்பு, பதினைந்து நூற்றாண்டுகளாக பெருமானார் அவர்களால் முறைப்படுத்தப்பட்ட ஹஜ் கடமை, உலகமே வியக்கும் வகையில் அனைத்து வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் உலக முஸ்லிம்களின் மாபெரும் மாநாடாகவே நடந்து வருகிறது.



Read in source website