DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 16-08-2022

 

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி போக்குவரத்துக் கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தானியங்கி பயணச்சீட்டு முறை மெட்ரோ ரயில், பிற பணப் பரிமாற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 



Read in source website

கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அரசுப் பணியில் இருந்த தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி அவரது மகள் உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை உரிமையாக கோர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், கருணை அடிப்படையிலான பணி என்பது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடி பொருளாதார தீர்வுக்குதான். இதை நீண்ட காலம் காத்திருப்பில் வைக்க இயலாது. கருணை அடிப்படையில் பணி கோருபவர், பணியில் இருந்தவர் உயிரிழந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில், பணியில் இருந்தவர் உயிரிழந்த 3 ஆண்டுக்கு பதிலாக, வயதுவரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

சென்னை: கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ்கிரிம், பாஸந்தி உள்பட 10 புதிய பால் பொருள்களை ஆவின் அறிமுகம் செய்கிறது.

ஆவின் அறிமுகம் செய்யும் பால் பொருட்கள் பட்டியல்:

* பலாப்பழ  ஐஸ்கிரீம்(Jackfruit Ice Cream),

* வெள்ளை சாக்லெட்(White Chocolate),

* குளிர்ந்த காபி(Cold Coffee),

* வெண்ணெய் கட்டி (Butter Chiplets),

* பாஸந்தி(Basundi),

* ஆவின் ஹெல்த் மிக்ஸ்(Avin Health Mix),

* பாலாடைக்கட்டி(Processed Cheese),

* அடுமனை யோகர்ட்(Baked Yoghurt),

* ஆவின் பால் பிஸ்கட்(Avin Milk Biscuit),

* ஆவின் வெண்ணெய் முறுக்கு(Avin Butter Muruku)

மேற்கண்ட பால் பொருட்களை ஆவின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

 புதிய பால் பொருட்களின் விற்பனையை ஆகஸ்ட் 20 ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைக்கிறார்.



Read in source website

சென்னை: 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தடையை செயல்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீட்டுப்பாடம் தரப்படுகிறதா என்பதை பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை எப்படிக் குறைப்பது என்று யோசிப்பவர்களுக்கு இது நல்ல அருமருந்தாக விளங்கும். 

தேவையான பொருட்கள்

தண்டுக் கீரை         -    ஒரு கைப்பிடி

மிளகு                          -   10

மஞ்சள் தூள்            -  சிறிதளவு

செய்முறை

முதலில் தண்டுக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.

மிளகைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஐந்து டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தண்டுக் கீரை, மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

கீரையுடன் நன்கு கொதிக்க வைத்து அதனை பாதியளவாகச் சுண்டவைத்து இறக்கி வடிகட்டிக்  குடிக்கவும்.

பயன்கள்

உடலில்  உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்தாக செயல் படும் தண்டுக் கீரை மிளகு கசாயம்.

இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை(2), மிளகு(2), உலர் திராட்ச (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும். 

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

Cell  :  96557 58609   ,  73737 10080
Covaibala15@gmail.com  
 



Read in source website

அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்புக்கான டாக்டா் அப்துல் கலாம் விருது உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளை சுதந்திர தின விழாவின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் வழங்கிய விருதுகள் விவரம்:

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்த முனைவா் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கு, டாக்டா் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருதினை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். பாரதியாா், சென்னைப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பொறுப்புகளை வகித்தவா்.

உயிா் தொழில்நுட்பம், நாட்டாா் மருந்தியல் மற்றும் பூச்சியியல் ஆகிய துறைகளில் இளம் விஞ்ஞானிகளின் குழுவை உருவாக்கியுள்ளாா். விஞ்ஞான ஆராய்ச்சியின் மீதான தனது ஆா்வத்தை ஊக்கத்துடனும் உறுதியுடனும் செய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளாா். அவருக்கு, ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் அடங்கிய டாக்டா் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சோ்ந்த பா.எழிலரசி பெற்றாா். கும்பகோணத்தில் கோயில் குளத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் உயிரை நீச்சல் தெரியாத நிலையிலும் குளத்தில் குதித்து அவா்களை துணிச்சலுடன் காப்பாற்றினாா். அவரது துணிச்சலைப் பாராட்டி, வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இந்த விருதானது ரூ.5 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

உங்கள் தொகுதியில் முதல்வா் விருதானது, முதல்வரின் முகவரித் துறையில் குறை தீா்வு மேற்பாா்வை அலுவலராகப் பணியாற்றி வரும், லட்சுமி பிரியாவுக்கு அளிக்கப்பட்டது. முதல்வரின் முகவரித் துறை இணையதள முகப்பானது எளிதில் அணுகும் வகையிலும், மக்களின் குறைகளைக் களையும் விதத்தில் இருப்பதாலும் லட்சுமி பிரியா விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். உங்கள் தொகுதியில் முதல்வா் விருதானது, விருது, பாராட்டுச் சான்றிதழ் ஆகியன அடங்கியதாகும்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது: திருவள்ளூா் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்டு மறுவாழ்வு அளித்த சிறப்பான செயலைப் பாராட்டி, அந்த மாவட்ட ஆட்சியருக்கும், திருநங்கைகளின் வாழ்வில் நம்பிக்கையூட்டி அவா்களது அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்த பணிகளுக்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திண்டுக்கல் மாவட்டம், நீா்நிலைகளை மீட்டுருவாக்கி புனரமைப்பு செய்த பணிகளுக்காக சிவகங்கை மாவட்டம், கருவுற்ற தாய்மாா்களின் உடல் நலனை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கும் தாய்கோ் நெல்லை திட்டத்தை அறிமுகப்படுத்திய திருநெல்வேலி மாவட்டத்துக்கும் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில், திருவள்ளூா், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சியா்களைத் தவிா்த்து

மற்றவா்கள் நல் ஆளுமை விருதுகளைப் பெற்றுக் கொண்டனா். சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் அப்போதைய ஆட்சியரும், இப்போதைய சுரங்கத் துறை ஆணையாளருமான ஜெயகாந்தன் விருதினை பெற்றுக் கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் சாா்பில் அதன் சமூகநல அலுவலா் சங்கீதா வீர சந்தானம் விருதைப் பெற்றாா். இந்த விருது தலா ரூ.2 லட்சமும், பாராட்டுச் சான்றும் கொண்டது.

வேளாண் இயந்திரங்களை இணையதளம், கைப்பேசி செயலி மூலமாக ஆன்-லைன் வழியே வாடகைக்கு விடும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக வேளாண்மைத் துறை தலைமை பொறியியல் துறைக்கு நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட முதியோா், பெண்கள் ஆகியோரை காப்பகங்களில் வைத்து பராமரித்தும், உரிமை கோரப்படாத இறந்தோரின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யும் திட்டத்தையும் சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இந்தப் பணியைப் பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கும் நல் ஆளுமை விருது அறிவிப்பு செய்யப்பட்டது.

வேளாண்மைத் துறை சாா்பில் தலைமைப் பொறியாளா் முருகேசனும், காவல் ஆணையரகம் சாா்பில் ஆணையாளா் சங்கா் ஜிவாலும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாகச் செயல்பட்ட உதகை மருத்துவா் பி.ஜெயகணேஷ் மூா்த்தி, புதுக்கோட்டை ரெனேசான்ஸ் அறக்கட்டளை, சமூக சேவகா் எஸ். அமுதா சாந்தி, சிறந்த தனியாா் வேலை அளிப்பு நிறுவனமாக மதுரை டாஃபே ஜெ ரிஹாப் சென்டா், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட வங்கி ஆகியன தோ்வு செய்யப்பட்டன. விருதாளா்களுக்கு 10 கிராம் தங்கப் பதக்கமும், சான்றிதழையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மகளிா் நலனுக்காக சிறந்த சேவைகளை ஆற்றியதாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த வானவில் அறக்கட்டளை, சிறந்த சமூக சேவகருக்கான விருது திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.பங்கஜம் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருது 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகள்: சிறந்த மாநகராட்சிக்கான விருதை சேலம் மாநகராட்சி மேயா் ஏ.ராமச்சந்திரன், ஆணையாளா் கிறிஸ்துராஜ் ஆகியோா் பெற்றனா். ரூ.25 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருது.

சிறந்த நகராட்சிகளாக முதலிடத்தில் தோ்வான ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்றத் தலைவா் டி.ரவிக்கண்ணன், ஆணையாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஆணையாளா் திருநாவுக்கரசு ஆகியோருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மூன்றாம் இடம்பிடித்த தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிக் மற்றும் ஆணையாளா் பாரிஜான் ஆகியோருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

சிறந்த பேரூராட்சிகளின் வரிசையில், செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி முதலிடத்தை பிடித்தது. அதன் தலைவா் கேசவன், செயல் அலுவலா் தசரதன் ஆகியோா் ரூ.10 லட்சத்துக்கான காசோலையைப் பெற்றனா். இரண்டாம் இடம் பிடித்த கன்னியாகுமரி பேரூராட்சியின் தலைவா் ஸ்டீபன், செயல் அலுவலா் ஜீவானந்தம் ஆகியோா் ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும், மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சித் தலைவா் ஜெயராமன், செயல் அலுவலா் சுதா்சனம் ஆகியோா் ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றனா்.

சிறந்த சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணிப்பேட்டை மாவட்டம் பி.விஜயகுமாா், நீலகிரி மாவட்டம் எம்.முகமது ஆசிக், வேலூா் மாவட்டம் ஜி.ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு மாநில இளைஞா் விருதுகளை முதல்வா் வழங்கினாா். இதேபோன்று, பெண்கள் பிரிவில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சிவரஞ்சனி விருதினைப் பெற்றாா். இந்த விருதுகள் தலா ரூ.50 ஆயிரம் ரொக்கமும், பாராட்டுச் சான்று, பதக்கம் கொண்டது.

விருதுகளைப் பெற்ற அனைத்து விருதாளா்களும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆகியோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.



Read in source website

 

தலைநகர் தில்லியில் இதுவரை கிட்டத்தட்ட 180 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மார்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே மாதத்தில் 30 மற்றும் ஜூன் மாதத்தில் 32 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆகஸ்ட் 13 வரை, தலைநகரில் 178 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6 அன்று 174 ஆக இருந்த நிலையில், ஒரே வாரத்தில் நான்கு பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. 

இந்த நோயால் இந்தாண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

2017ஆம் ஆண்டில், தில்லியில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 13 வரையிலான காலகட்டத்தில் 325 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. 

கடந்த ஆண்டு, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 13 வரை தில்லியில் 68 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில், 2020 இல் 41 ஆகவும், 2019 இல் 57 ஆகவும், 2018 இல் 69 ஆகவும் இருந்தது.

தில்லியில் இந்தாண்டு இதுவரை 39 மலேரியா மற்றும் 13 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன

இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும். 

கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.

கடந்த ஆண்டு, தலைநகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. இது 2015ல் 23 இறப்புகளும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018 இல் நான்கு பேரும், 2019 இல் 2 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036, 2020இல் 1,072 ஆகவும் குறைந்துள்ளது.

1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.



Read in source website

‘அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், நீதித் துறையும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையின் சமமான களஞ்சியங்களாகத் திகழ்கின்றனா். மேலும், நீதி வழங்குவது என்பது நீதிமன்றங்களின் பொறுப்பு மட்டுமே என்ற கருத்தையும் அரசியலமைப்புச் சட்டம் நீக்கியுள்ளது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்சநீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 38-இல் மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று குறிப்பிடுகிறது. அதாவது, நீதி வழங்குவது என்பது நீதிமன்றத்தின் பொறுப்பு மட்டுமே என்ற கருத்து இந்திய அரசியலமைப்பின் 38-ஆவது பிரிவு மூலமாக நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்பதையே இது குறிப்பிடுகிறது.

அந்த வகையில், மாநில அரசின் அனைத்து அங்கங்களும் ஒவ்வொரு செயலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி இருக்க வேண்டும். அதாவது அரசு அதிகாரிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நீதித் துறை என்ற மாநில அரசின் 3 அங்கங்களும் அரசியலமைப்புச் சட்ட நம்பிக்கையின் சமமான களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

சட்டம் நடைமுறைக்கு வருகின்றபோது எழக்கூடிய சிக்கல்களை சட்டப்பேரவையால் கணிக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த சட்டங்களுக்கு உரிய விளக்கங்களை அளிப்பதன் மூலமாக, சட்டப்பேரவையின் உண்மையான நோக்கத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்துகின்றன. நீதிமன்றங்கள் சட்டங்களை சமகாலத்துக்கு பொருந்தக்கூடியதாக மாற்றுவதன் மூலம் அவற்றை உயிா்ப்புடன் வைத்துள்ளன.

குடிமக்களுக்கு பிரச்னைகளில் தீா்வு காண்பதற்கான பலத்தை நீதிமன்றங்கள் வழங்குகின்றன. தவறான விஷயங்களில் நீதிமன்றம் தங்கள் பக்கம் நிற்கும் என்று குடிமக்கள் அறிந்திருக்கின்றனா். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதித் துறை செயல்படுவதன் மூலமாக, மக்களின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் திகழ்கிறது.

இந்திய நீதித் துறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளை உரிய விளக்கங்கள் அளிப்பதன் மூலமாக அவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து வருவதோடு, தோ்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் போன்ற தனி அதிகாரம் படைத்த அமைப்புகளையும் பலப்படுத்தியிருக்கின்றது என்று அவா் கூறினாா்.

மூன்று துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் - கிரண் ரிஜிஜு

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசும்போது, ‘இந்தியா சந்தித்து வரும் சவால்களை வேறு எந்தவொரு நாடும் சந்திக்கவில்லை. அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நீதித் துறையும் முறையாக செயல்பட வேண்டும், நிலுவை வழக்குகளுக்கு இரண்டு ஆண்டுகளில் நீதிமன்றங்கள் தீா்வு காண வேண்டும் என்று வாய்மொழியாக கூறுவது எளிது.

ஒவ்வொரு துறையையும் புரிந்துகொள்ளவில்லை எனில், நாடு சந்தித்து வரும் சவால்களுக்கு ஒருபோதும் தீா்வு காண முடியாது. எனவே, இந்த மூன்று துறைகளும் பொது நோக்கத்துக்காக இணைந்து பணியாற்ற வேண்டும். அதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை’ என்றாா்.



Read in source website

 

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார்.

38 வயது கெவின் ஓ பிரையன் அயர்லாந்து அணிக்காக 2018 முதல் 2019 வரை 3 டெஸ்டுகள், 153 ஒருநாள், 110 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

என் நாட்டுக்காக 16 வருடங்களாக 389 ஆட்டங்களில் விளையாடிய பிறகு என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் ஓய்வு பெற எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு நான் தேர்வாகவில்லை. தேர்வுக்குழுவினரும் நிர்வாகமும் வேறு திசையில் செல்கிறார்கள் என எண்ணுகிறேன். அடுத்ததாக இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்றார். 

கெவின் ஓ பிரையன் என்றால் 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடியது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அயர்லாந்து அணி 106/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கினார் கெவின் ஓ பிரையன். அதன் பிறகு நிலைமை 111/5 என மேலும் மோசமானது. 327 ரன்கள் இலக்கு. ஆனால் அதிரடியாக விளையாடி சூழலை மாற்றினார் கெவின் ஓ பிரையன். 6 சிக்ஸர்களுடன் 50 பந்துகளில் சதமடித்தார். உலகக் கோப்பை வரலாற்றில் விரைவாக அடிக்கப்பட்ட சதம் அது. ஆண்டர்சன், பிராட், ஸ்வான் அடங்கிய இங்கிலாந்துப் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது அயர்லாந்து. 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கெவின் ஓ பிரையன். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை விரட்டிய பெருமையை அடைந்தது அயர்லாந்து. 



Read in source website

 

பிசிசிஐயின் சார்பில் நடத்தப்படும் துலீப் கோப்பைப் போட்டி இந்த வருடம் தமிழக நகரங்களில் நடைபெறவுள்ளது. 

மண்டலங்களுக்கு இடையிலான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 8 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், மத்திய மண்டலம் என ஆறு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி இந்த வருடம் சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் எனத் தமிழக நகரங்களில் நடைபெறவுள்ளது. 

வட இந்தியாவில் செப்டம்பர் மாதம் மழை அதிகமாக பெய்யும் என்பதால் இந்தமுறை தமிழக நகரங்களில் இப்போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. முதல் ஆட்டம் சென்னையிலும் அரையிறுதி ஆட்டங்கள் சேலத்திலும் இறுதிச்சுற்று கோவையிலும் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் சில ஆட்டங்கள் கோவை, சேலத்தில் நடைபெற்றதால் இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. 
 



Read in source website

சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சோ்த்த வீரா் என்ற புதிய சாதனையை நியூஸிலாந்து பேட்டா் மாா்ட்டின் கப்டில் எட்டியிருக்கிறாா்.

முன்னதாக, இந்த ஃபாா்மட்டில் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா 3,487 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி 3,497 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறாா் கப்டில். அவா், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தின்போது இந்த சாதனையை எட்டினாா்.

இதனிடையே அந்த ஆட்டத்தில் வென்ன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆறுதல் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சோ்க்க, அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 19 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது. நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

டாப் 10 வீரா்கள் (டி20 கேரியா் ரன்கள்)

1 மாா்ட்டின் கப்டில் (நியூஸிலாந்து) 3,497

2 ரோஹித் சா்மா (இந்தியா) 3,487

3 விராட் கோலி (இந்தியா) 3,308

4 பால் ஸ்டிா்லிங் (அயா்லாந்து) 2,975

5 ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா) 2,855

6 பாபா் ஆஸம் (பாகிஸ்தான்) 2,686

7 டேவிட் வாா்னா் (ஆஸ்திரேலியா) 2,684

8 முகமது ஹஃபீஸ் (பாகிஸ்தான்) 2,514

9 இயான் மோா்கன் (இங்கிலாந்து) 2,458

10 ஷோயப் மாலிக் (பாகிஸ்தான்) 2,435



Read in source website


சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலானது, இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளது.

ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை சீனாவின் உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன், உளவுக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன உளவு வசதிகளைக் கொண்டதாக அறியப்படும் ‘யுவான் வாங்-5’ கப்பலின் இலங்கை பயணத்துக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. அதையடுத்து, அக்கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியிருந்தது. கப்பலின் வருகைக்கு அனுமதி பெறுவது தொடா்பாக இலங்கை அதிகாரிகளிடம் சீனத் தூதரக அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. அதன்படி, சீன உளவுக் கப்பலானது செவ்வாய்க்கிழமை காலை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அங்கு அக்கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளது. கப்பலுக்கு அனுமதி அளித்தது தொடா்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், ‘‘கப்பலின் வருகை தொடா்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.

அவை குறித்து அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. பரஸ்பர நம்பிக்கை, நட்புணா்வை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுடன் அனைத்துத் தரப்பினரின் நலனை உறுதிசெய்த பிறகே, கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிவியல் சாா்ந்த ஆராய்ச்சிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடுடன் சீனக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, சீனாவிடம் அதிக அளவில் கடன் பெற்றுள்ளது. அக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது. ஆனால், அதற்கு சீனா ஒப்புதல் அளிக்காமல் இருந்தது.

கப்பலுக்கு அனுமதி அளிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தையின்போது, கடன் தவணை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடா்பாகப் பேசப்பட்டதாகவும், அதற்கு சீனா ஒப்புக்கொண்ட பிறகே கப்பலின் வருகைக்கு இலங்கை ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பினிடம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு விரிவாக பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.
 



Read in source website

இலங்கை கடற்படையின் கடல்சாா் கண்காணிப்பை வலுப்படுத்தும்விதமாக ‘டோா்னியா் 228’ ரக விமானத்தை இந்தியா நன்கொடையாக திங்கள்கிழமை வழங்கியது.

கொழும்பு காட்டுநாயக்க சா்வதேச விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோா்மடே, இந்த விமானத்தை அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தாா். அப்போது இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே உடனிருந்தாா்.

இந்தியாவுக்கு நன்றி: நிகழ்ச்சியில், அதிபா் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: இது கடல்சாா் கண்காணிப்பில் இந்திய கடற்படையுடன் இணைந்து இலங்கை விமானப் படையும் கடற்படையும் ஈடுபடுவதற்கான புதிய ஆரம்பம். இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் முதல் இந்திய சுதந்திர தின உரையால் நான் வெகுவாக ஈா்க்கப்பட்டேன்.

நேருவின் அந்த உரையால்தான் இந்தியா இன்று உலகளவில் பலம்வாய்ந்த நாடாக திகழ்கிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் சா்வதேச அளவில் மிகவும் வலிமைமிக்க நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்தும். ஐ.நா.வில் இலங்கை உறுப்பினராக நேரு முழு ஒத்துழைப்பு அளித்தாா்.

இலங்கையின் இளம் அரசியல் தலைவா்கள், இந்திய அரசியல் தலைவா்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவா்களுடன் உரையாட வேண்டும். இல்லையெனில், பிரச்னைகளை புரிந்து கொள்வது கடினம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவான சில பிரச்னைகள் உள்ளன. ஆகையால், இந்திய அரசியல் தலைவா்களுடன் கலந்துரையாடுவது அவசியம் என்றாா்.

முன்னதாக, டோா்னியா் விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டது குறித்து இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே ட்விட்டரில், ‘பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு நாடுகளிடையிலான பாதுகாப்பு வலுப்பெறுகிறது. இதற்காகவே டோா்னியா் 228 ரக விமானத்தை இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக அளித்தது. பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு காணப்படும் நிலையில், கடற்சாா் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இலங்கையின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் இந்த விமானம் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் அதேவேளையில், இலங்கைக்கு இந்தியா கடல்சாா் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் டோா்னியா் 228 ரக விமானத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதுதவிர சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரும் சூழலில், இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



Read in source website

தாங்கள் உரிமை கொண்டாடி வரும் தைவான் தீவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் குழு சென்றதைக் கண்டிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா மீண்டும் திங்கள்கிழமை போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

ஏற்கெனவே, தங்களது எதிா்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவான் சென்ற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தத் தீவைச் சுற்றிலும் அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான போா்ப் பயிற்சியை சீனா மேற்கொண்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் தனது போா்ப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது.

முன்னதாக, மாஸசூசட்ஸ் தொகுதியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி செனட் சபை உறுப்பினா் எட் மாா்க்கி தலைமையிலான எம்.பி.க்கள் குழு, இரண்டு நாள் பயணமாக தைவான் தலைநகா் தைபேவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

முன்னறிவிப்பின்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட அந்த சுற்றுப் பயணம், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாக அந்தக் குழு தெரிவித்தது.

இது குறித்து எட் மாா்க்கியின் செய்தியாளா் கூறுகையில், தைவான் நீா்ச்சந்தியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு அமெரிக்க எம்.பி.க்களின் இந்த சுற்றுப் பயணம் உதவும் என்றாா்.

இந்த நிலையில், தைவான் தீவைச் சுற்றிலும் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படும்

என்று சீனா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் ஓா் அமெரிக்கக் குழு தைவானுக்கு வந்ததற்கு எதிா்வினையாக அடுத்த சுற்றுப் போா்ப் பயிற்சியை மேற்கொள்ளவதாக சீனா தெரிவித்தது.

இது குறிதது சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் ஷீ யீ கூறுகையில், தைவான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயாா் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தாா்.

தைவான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற போா்ப் பயிற்சிதான் தற்காப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று ஷி யீ கூறினாா்.

தைவான் நீா்ச்சந்தியின் அமைதியையும் சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வோம் என்று அவா் கூறினாா்.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு யாா் அரசுமுறைப் பயணம் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த 2-ஆம் தேதி சென்றாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கடநத 4 முதல் 10-ஆம் தேதி வரை போா்ப் பயிற்சியில் ஈடுபட்டது.

தங்கள் மீது போா்த் தொடுத்து இணைத்துக் கொள்வதற்கான ஒத்திகையாகவே சீனா இந்தப் போா்ப் பயிற்சியை மேற்கொண்டதாக தைவான் அச்சம் தெரிவித்தது.

இந்தச் சூழலில், தைவானுக்கு மீண்டும் அமெரிக்கக் குழுவினா் சென்ற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா தற்போது மீண்டும் போா்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.



Read in source website

ஊழல் குற்றச்சாட்டுகளின் போரில் மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்களகிழமை தீா்ப்பளித்தது.

மியான்மா் ஜனநாயக அரசின் முன்னாள் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராக ரகசியமாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கு விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. அதையடுத்து, அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே, மற்ற முறைகேடு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைகளுக்காக வழங்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது, தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது நிலங்களை வாடகைக்கு விட்டது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து அவா்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளில் அவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், ஊழல் வழக்குகளில் ஏற்கெனவே 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு, நீதிமன்றம் தற்போது மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

கரோனா தீநுண்மியையும் அதன் ஒமைக்கரான் ரகத்தின் புதிய துணை ரகத்தையும் ஒரே நேரத்தில் தடுத்து நிறுத்தக் கூடிய இரட்டை செயல்பாட்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளது.

மாடா்னா நிறுவனம் உருவாக்கியுள் அந்தத் தடுப்பூசி, கரோனாவுக்கு எதிரான கூா் தீட்டப்பட்ட ஆயுதம் என்று மருந்துகள் மற்றும் உடல்நலப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பு (எம்ஹெச்ஆா்ஏ) தெரிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசி பாதுகாப்பாகவும், தரம் மற்றும் செயல்திறனைக் கொண்டுள்ளதால் அதனை பொதுமக்களுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்ஹெச்ஆா்ஏ கூறியுள்ளது.



Read in source website

புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் திருநெல்வேலியில் ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20-ம் தேதி அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.



Read in source website

சென்னை: மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் விழுப்புரம், கும்பகோணம், கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மண்டலங்களில் 20,304 பேருந்துகள் மூலம் தினசரி 1.5 கோடி பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கு காதித பயண சீட்டுதான் வழங்கப்படுகிறது. இந்த காதிக பயணச் சீட்டு முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதிக அளவு ரொக்க பணப் பரிமாற்றம் உள்ள காரணத்தால், இதை கண்காணிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே இதை சரிசெய்ய மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் மதுரை, கோவை அரசு போக்குவரத்து கழகங்களில் இதை அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 பொருட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் விவரம்:

  • கோல்டு காஃபி (Cold Coffee)
  • வெள்ளை சாக்லேட்
  • பலாப்பழ ஐஸ்கிரீம்
  • வெண்ணெய் கட்டி
  • பாசுந்தி
  • ஆவின் ஹெல்த் மிக்ஸ்
  • பாலாடை கட்டி
  • அடுமனை யோகர்ட்
  • ஆவின் பால் பிஸ்கட்
  • ஆவின் வெண்ணெய் முறுக்கு

இந்தப் புதிய பால் பொருட்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கவுள்ளார்.



Read in source website

மதுரை: கிராமங்களில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்த சீனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக நடைபெறும்.

இந்தாண்டு பொங்கல் திருவிழாவை ஆக.19 முதல் 20 வரை நடத்த முடிவு செய்துள்ளோம். திருவிழாவுக்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை. திருவிழாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த இன்று உத்தரவு: கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. பட்டு அரசி கோயில் திருவிழாவுக்கு கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் திருவிழா நடத்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



Read in source website

சென்னை: பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை.

2022ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இந்தாண்டு குறிப்பாக ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை. தர வரிசையில் ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய ரேண்டம் எண் பயன்படுகிறது.

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்ட கட்-ஆஃப், மாணவர்களுக்குச் சமமாக இருந்தால், முதலில் கணித மதிப்பெண்ணும், 2-வதாக இயற்பியல் மதிப்பெண்ணும், 3-வதாக விருப்ப பாடத்தின் மதிப்பெண்ணும் கணக்கீடு செய்யப்படும்.

இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். 12-ம் வகுப்பின் மொத்த மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், 10-ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சமமாக இருந்தால், பிறந்த தேதி கணக்கிடப்படும். மேற்கண்ட அனைத்து வழிமுறைகளும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்நிலையில் இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த யாரும் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறாத காரணத்தால் ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை என்று உயர்க் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தார்.



Read in source website

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச பட்டம் விடும் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது. கடந்த 3 நாட்களில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத் துறை மற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து பட்டம் விடும் விழாவை நடத்தின. இதில் இந்தியா தவிர அமெரிக்கா, தாய்லாந்தில் இருந்து பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு வண்ண வடிவங்களிலான பட்டங்களை பறக்கவிட்டனர்.

கடந்த13-ம் தேதி தொடங்கிய இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்று பட்டங்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று ஏராளமான வண்ணங்களில் பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் விடுமுறை நாளான நேற்று பட்டங்களையும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பதற்காக சென்னை, மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால், அப்பகுதி விழாக்கோலமாக காணப்பட்டது.

மேலும், 3 நாட்களாக நடைபெற்ற பட்டம் விடும் விழாவை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்ததாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



Read in source website

புதுடெல்லி: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வழியாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது அவர், கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கலந்துகொண்டார்.

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ், டெல்லி துணை முதல்வரும், சுகாதார அமைச்சருமான மணிஷ் சிசோடியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், "நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி, விரிவுபடுத்தி, வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கூட்டுறவு ஒத்துழைப்பு உணர்வுடன், மத்திய அரசு பணியாற்றி வருகிறது. பெருந்தொற்று நமக்கு சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துள்ளது.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மத்திய அரசு நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது குறித்து கவலை அளிக்கிறது. அத்தகையை மாநிலங்களை மத்திய அரசு ஆய்வு செய்து நிதியை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.



Read in source website

புதுடெல்லி: அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில், ஹரியானாவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 22 வருடங்களாக நாட்டின் சுதந்திரம் பெறப் பாடுபட்ட புரட்சியாளர்கள் பூசிக்கப்படுகின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் பிரபலமாக எழுப்பப்பட்ட கோஷம், ’இன்குலாப் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத் (இந்தியநாடு வாழ்க)’. இதை முதன்முறையாக 1921 இல் முஸ்லீம் அறிஞரான மவுலானா ஹசரத் மொய்னி எழுப்பியிருந்தார்.

சுதந்திரப்போராட்ட வீரரான மொய்னி, ஒரு சிறந்த கவிஞராகவும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவராகவும் இருந்தார். இவரது கோஷத்தை சுதந்திரப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், தொடர்ந்து எழுப்பியதால் அது பிரபலமானது.

இவர், டெல்லியின் மத்திய சட்டப்பேரவை கட்டிடத்தில் குண்டு வைத்த பின், அங்கு இந்த கோஷத்தை எழுப்பினார். இவருடன் இருந்த சகப்புரட்சியாளரான பி.கே.தத்தும் இக்கோஷத்தை பகத்சிங்குடன் இணைந்து எழுப்பினார்.

பிறகு, இந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அஸோசியேஷன், கம்யூனிஸ்டு கன்சாலிடேஷன் மற்றும் அகில இந்திய ஆஸாத் முஸ்லீம் மாநாடு ஆகியவற்றின் அதிகாரபூர்வமான கோஷமாகவும், இந்துஸ்தான் ஜிந்தாபாத் நிலவியது.

அப்போது முதல் இன்று வரை பொதுமக்கள் இடையே மிகவும் பிரபலமாகத் தொடர்கிறது இந்த இந்துஸ்தான் ஜிந்தாபாத் கோஷம். இந்தநிலையில், ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தின் கும்தாலா கிராமத்தில் இன்குலாப் எனும் பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

புரட்சியாளர்கள் பூஜிக்கப்படும் ஒரு மதநல்லிணக்கக் கோயிலாக இது அமைந்துள்ளது. அன்றாடம் இங்கு இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் வந்து பூஜைகள் செய்கின்றனர்.

இக்கோயிலில் சுதந்திரப்போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, ஷயீத் சுக்தேவ், லாலா லஜபதிராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பீம் ராவ் அம்பேத்கர், அஷ்பாக் உல்லா கான் ஆகியோரின் பிறந்தநாள் கொண்டாடி, நினைவு நாள்களும் அனுசரிக்கப்படுகின்றன.

நாட்டின் எந்த இடத்திலும் இல்லாத இதுபோன்ற புரட்சி வீரர்களுக்கானக் கோயிலை 22 வருடங்களுக்கு முன் வழக்கறிஞர் வரியம்சிங் என்பவர் கட்டியுள்ளார். இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் இக்கோயிலுக்கு வந்து பூஜிப்பது வழக்கமாக உள்ளது.

1857 இல் மீரட் சிப்பாய் கலவரம் துவங்கக் காரணமாக மங்கள் பாண்டேவின் குடும்ப வாரிசுகளான தேவி தயாள் பாண்டே, ஷீத்தல் பாண்டே ஆகியோரும் இக்கோயிலுக்கு வருவது உண்டு. இப்பட்டியலில் ஹரியானாவின் விளையாட்டுத்துறை அமைச்சரான சந்தீப்சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்திரேஷ்குமார் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.



Read in source website

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா), அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துள்ளது. 85 வருட வரலாற்றில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, பிஃபா-வால் தடை செய்யப்படுவது இதுவே முதன்முறை.

இதுதொடர்பாக பிஃபா விடுத்துள்ள அறிக்கையில், “சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் சட்டங்களை கடுமையாக மீறும் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்ய பிஃபா கவுன்சிலில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

நிர்வாகக் குழு என்பது மூன்றாம் தரப்பு நிர்வாகமே, எனவே நிர்வாகக் குழு அமைப்பு கலைக்கப்பட்டு அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கீழ் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து தினசரி நிர்வாகக் கட்டுப்பாடுகளும் வருகிறதோ அன்று தடை நீங்கும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவு காரணமாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துள்ளது. இந்தத் தொடரை வரும் அக்டோபர் 11 முதல் 30-ம் தேதி வரை இந்தியாவின் 3 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்துவருவதாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரம் கவுன்சிலுக்கு அனுப்பி ஆலோசிக்கப்படும் எனவும் பிஃபா தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான தொடர்பில் இருந்து வருவதாகவும் பிஃபா கூறியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேலை, அந்த பதவியில் இருந்து நீக்கியது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த பிரஃபுல் படேல் நடவடிக்கை எடுக்காததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

பிரஃபுல் படேலை நிர்வாககுழுவில் இருந்து நீக்கியதுடன் அவர் தலைமையில் இயங்கிய நிர்வாகக் குழுவையும் முழுமையாக கலைத்தது உச்ச நீதிமன்றம். தொடர்ந்து அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலை நடத்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தாவே தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.

மேலும், மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியைகட்டாயம் இந்தியாவில் நடத்தவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சர்வதேச கால்பந்து தொடர்பான விவகாரங்களை கவனிக்க இந்த கமிட்டி 12 பேர் கொண்ட ஆலோசனை குழுவை அமைத்தது. இதைத்தொடர்ந்து புதிய விதிகள் அடங்கிய அறிக்கையும் உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் ஆகஸ்ட் 28-ம் தேதிநடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில்தான் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது பிஃபா.85 வருட வரலாற்றில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு, பிஃபா-வால் தடை செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பின்னணி என்ன?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீதான பிஃபா தடைக்கு முக்கிய காரணமாக பிரஃபுல் படேல் அறியப்படுகிறார். தொடர்ந்து 3-வது முறையாக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த பிரஃபுல் படேலின் பதவிக்காலம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், அவர் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அப்பதவியில் இருந்து விலக மறுத்தார்.

விதிமுறைகளின்படி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பதவியில் அதிகபட்சம் 12 ஆண்டுகள் மட்டுமே தொடர முடியும். இதை எதிர்த்து முன்னாள் கோல் கீப்பரும் தற்போதைய பாஜக தலைவருமான கல்யான் சவுபேவின் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை காரணம் காட்டிதான் பிரஃபுல் படேல் பதவியில் இருந்து விலக மறுத்திருந்தார்.

பிஃபா தலையீடு எதற்கு?

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தலில் 36 மாநில சங்கங்களின் பிரதிநிதிகளும், 36 பிரபல கால்பந்து வீரர்களின் பிரதிநிதிகளும் வாக்களிப்பார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. வீரர்கள் பட்டியலில் பாய்ச்சுங் பூட்டியா, ஐஎம் விஜயன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

வாக்களிக்கும் உரிமையில் 50 சதவீதம் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட சில புதிய விதிகளுக்கு பல்வேறு மாநில கால்பந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விதிகள் அபத்தமாகவும் பாரபட்சமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள், இதுதொடர்பாக பிஃபாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.

இதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையில் தனிநபர்களின் சேர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பிஃபா கடிதம் எழுதியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பிஃபா தடை விதித்துள்ளது.

தடையின் பாதிப்பு...

பிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பிரநிதிகள், கிளப்கள் எந்த ஒரு சர்வதேச கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. மேலும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகள் பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் பயிற்சிகளில்கூட கலந்து கொள்ள இயலாது



Read in source website

BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். உலக ஜூனியர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள ஐந்தாவது இந்தியராக இவர் அறியப்படுகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 18 வயதான சங்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை இப்போது பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை தஸ்னிம் மிர். அதோடு ஜூனியர் பிரிவில் ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை ஆதித்யா ஜோஷி (2014), சிரில் வெர்மா (2016), லக்ஷ்யா சென் (2017) போன்ற இந்தியர்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் ஸ்பெயினில் நடைபெற உள்ள உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சங்கர். 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான பிரிவில் தேசிய அளவில் நடைபெற்ற தேர்ச்சி போட்டியில் (ட்ரையல்) முதலிடம் பிடித்திருந்தார் அவர்.

“நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அவனது விளையாட்டு கெரியரில் மிக முக்கியமான மைல்கல் இது. எதிர்வரும் உலக சாம்பியன்ஷிப்பில் அவனது செயல்பாடு முதல் நிலை வீரருக்கான தரத்தில் இருக்கும்” என சங்கரின் நீண்ட நாள் பயிற்சியாளர் அரவிந்தன் சாமியப்பன் தெரிவித்துள்ளார்.



Read in source website

டப்லின்: சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் லெஜெண்ட் என அறியப்படும் கெவின் ஓ’பிரையன் அறிவித்துள்ளார். ஆல்-ரவுண்டரான அவர் அயர்லாந்து கிரிக்கெட் வளர்ச்சியில் பங்காற்றிய முக்கிய வீரராக அறியப்படுகிறார்.

கடந்த 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இவர் அறிமுக வீரராக களம் இறங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அசோசியேட் உறுப்பினராக இருந்த அயர்லாந்து அணி கடந்த 2017 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற அந்தஸ்தை பெற்றது. அந்த வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் உள்ளார். கடந்த 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் சதம் பதிவு செய்திருந்தார் கெவின். அது இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட அதிவேக சதமாக ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 50 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அதோடு அந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

அயர்லாந்து அணிக்காக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராகவும் உள்ளார். 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேனும் கெவின்தான். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசிய அயர்லாந்து வீரர் என்ற சாதனையை வைத்துள்ளவர்.

“எனது 16 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் ஓய்வு பெறலாம் என நம்பிக்கை கொண்டிருந்தேன். இருந்தும் கடந்த ஓராண்டு காலமாக நான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அணி நிர்வாகம் வேறு திட்டம் வைத்துள்ளதாக தெரிகிறது.

நாட்டுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து விளையாடினேன். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என தனது ஓய்வு அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகவில்லை.

84 வயதான ரத்தன் டாடா சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. இப்போது அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தனிமையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறுதுணை சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை சாந்தனு நாயுடு என்பவர் நிறுவியுள்ளார். 28 வயதான அவர் ரத்தன் டாடாவின் உதவியாளராகவும் உள்ளார்.

தனிமையில் யாரும் இன்றி வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் அவர் துவக்கியதுதான் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் முயற்சி. இந்த வகையிலான சேவை வழங்குவதில் இந்தியாவிலேயே முதல் நிறுவனம் இது என்று அறியப்படுகிறது. தெரு நாய்களுக்கு உதவும் வகையில் Motopaws என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் சாந்தனு தொடங்கி இருந்தார்.

தனிமையில் வசித்து வருபவர்கள் மட்டுமே உறுதுணையின் அவசியம் குறித்து அறிந்திருப்பார்கள் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். சீனியர் சிட்டிசன்களில் சுமார் 50 மில்லியன் பேர் தனியாக இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.

திறமையான பட்டம் முடித்த இளைஞர்களை இந்த நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுடன் எமோஷனலாக தங்களை கனெக்ட் செய்து கொண்டு வேலை செய்யும் இளைஞர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்வதாக தெரிகிறது. மூத்த குடிமக்களுக்கு ஒரு நண்பனை போல தினமும் உதவுவதுதான் இந்த இளைஞர்களுக்கு நிறுவனம் கொடுக்கும் டாஸ்க். தங்கள் நிறுவன கிளையண்ட்களுடன் வாக்கிங் செல்வது, செய்தித்தாள் வசிப்பது, கேரம் போர்டு விளையாடுவது, குட்டித்தூக்கம் கூட அந்த இளைஞர்களுக்கு டாஸ்க்காக இருக்கும் என தெரிகிறது.

இந்த நிறுவனம் முதற்கட்டமாக கடந்த ஆறு மாத காலமாக தனிமையில் இருக்கும் சுமார் 20 மூத்த குடிமக்களுக்கு தங்களது சேவையை வழங்கி வருகிறதாம். இப்போது இந்நிறுவனம் தனது சேவையை லான்ச் (Launch) செய்துள்ளது. புனே, சென்னை, மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் தங்களது சேவையை விரிவு செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியா முழுவதும் இதனை கொண்டு வர விருப்பம்தான். இருந்தாலும் எங்கள் நிறுவன சேவையில் சமரசம் கூடாது என்பதில் தான் திட்டவட்டமாக இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட தங்கள் நிறுவன கிளையண்ட் மற்றும் பணி அமர்த்தப்படும் அந்த ஊழியருக்கு இடையேயான பிணைப்பு பேரக்குழந்தைகளுடன் மூத்த குடிமக்களுக்கு உள்ள பிணைப்பை போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு இது பெரிதும் உதவும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளதாக தகவல்.



Read in source website

சிங்கப்பூர்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஃபோர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான 200 சிறந்த நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 24 நிறுவனங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பட்டியலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ல் இந்தப் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் இருந்தது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 22 நிறுவனங்களுடன் சீனா 5-வது இடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்திய நடுத்தர நிறுவனங்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் தைவான் அதிகபட்ச அளவாக 30 நிறுவனங்களை உள்ளடக்கி தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஜப்பான் 29 நிறுவனங்களுடன் 2-வது இடத்திலும், தென் கொரியா 27 நிறுவனங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரையில், ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டாலர் இண்டஸ்ட்ரீஸ் கரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் 30 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் அதன் நிகர லாபம் 72 சதவீதம் அதிகரித் துள்ளது. இவ்வாறு அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

கீவ்: கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 மாதங்களாக உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேச அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை சார்பில் ரஷ்யா, உக்ரைன் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஜூலை இறுதியில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைனின் உணவு தானிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யா உறுதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் உக்ரைனின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து கோதுமை, சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இதுவரை 18-க்கும் மேற்பட்ட உணவு தானிய சரக்கு கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளன.

கடந்த 12-ம் தேதி உக்ரைனின் சோர்னோமார்ஸ்க் துறைமுகத்தில் இருந்து 3,050 டன் கோதுமையுடன் புறப்பட்ட சரக்கு கப்பல் துருக்கியின் இஸ்தான்புல் நகரை நேற்று முன்தினம் சென்றடைந்தது. மற்றொரு கப்பல் 26,000 டன் சோளத்துடன் லெபனான் புறப்பட்டது. கடைசி நேரத்தில் லெப னான் நிறுவனம், சோளத்தை வாங்க மறுத்துவிட்டதால் அந்த சரக்கு கப்பல் துருக்கியில் நிறுத்தப்பட்டது.

தற்போது சிரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சோளத்தை வாங்க முன்வந்ததால் அந்த நாட்டுக்கு உக்ரைன் சரக்கு கப்பல் சென்றுள்ளது. இதேபோல உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சென்றடைந்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் கடுமையானஉணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு ஐ.நா. சபை சார்பில்உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து புறப்பட்ட ‘பிரேவ் கமாண்டர்' என்ற சரக்கு கப்பல் 23,000 மெட்ரிக் டன் கோதுமையுடன் டிஜிபோத்திக்கு சென்றடைந்து உள்ளது. அங்கி ருந்து எத்தியோப்பியா, சோமாலியா, கென்யாவுக்கு கோதுமை கொண்டு செல்லப்படும் என்று ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் தெரிவித்துள்ளார்.



Read in source website

பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து போன்களிலும் புதிய வெர்ஷனை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களால் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக் சாம்ராட்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்த புதிய வெர்ஷனை மேம்பட்ட பிரைவசி பாதுகாப்புடன் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் லாங்குவேஜ் செட்டிங்ஸும் அடங்குமாம். இப்போதைக்கு இது பிக்சல் போன் பயனர்களுக்காக மட்டுமே ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட சாம்சங் கேலக்ஸி, நோக்கியா, iQOO, மோட்டோரோலா, ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி, ஷார்ப், சோனி, டெக்னோ, விவோ, சியோமி மற்றும் பிற நிறுவன பொங்கலுக்கு இந்த புதிய வெர்ஷனின் அப்டேட் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரைவசி உடன் புதிய அம்சங்களை உள்ளடக்கி உள்ள ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் குறித்து பிளாக் பதிவு ஒன்றில் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே புராடக்ட் மேனேஜ்மேண்ட் பிரிவின் துணைத் தலைவர் அமீர் சமத் உறுதி செய்துள்ளார்.

இந்த புதிய வெர்ஷனில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் மொழியை பிரத்யேகமானதாக செட் செய்து கொள்ளும் வசதி உள்ளதாம். இதற்கு முன்னர் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் ஒரே மொழி என்ற பயன்பாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்சல் 4 (XL), பிக்சல் 4a, பிக்சல் 4a (5G), பிக்சல் 5, பிக்சல் 5a (5G), பிக்சல் 6, பிக்சல் 6 புரோ போன்ற பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அப்டேட் கிடைக்கிறது.



Read in source website

போலியோ’ லண்டன், நியூயார்க் மற்றும் ஜெருசலேமில் பல தசாப்தங்களுக்கு பிறகு முதல் முறையாக பரவுகிறது. 2022ல் இதுவரை 177 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை முடக்கும் கொடிய போலியோ நோய், பல தசாப்தங்களுக்கு பிறகு இப்போது லண்டன், நியூயார்க் மற்றும் ஜெருசலேமில் பரவுகிறது. இது மீண்டும் தடுப்பூசி பிரச்சாரங்களைத் தூண்டுகிறது.

பயங்கரமான நோய்

போலியோ’ 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள பெற்றோரை பயமுறுத்தியது. முக்கியமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் இது, பெரும்பாலும் அறிகுறியற்றது, ஆனால் காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

200 நோய்த்தொற்றுகளில் ஒன்று மீளமுடியாத பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் அந்த நோயாளிகளில் 10% வரை இறக்கின்றனர்.

இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் 1950 களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால், போலியோ முற்றிலும் தடுக்கக்கூடியதாக ஆனது. உலகளவில், நோயின் தீவிரம் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. முக்கியமாக மலப் பொருளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இது பரவுகிறது.

ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் மட்டுமே இப்போது அதிக தொற்று நோய் உள்ள நாடுகளாக உள்ளன. ஆனால் இந்த ஆண்டு, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இது 1990 களுக்கு பிறகு, அந்த நாடுகளில் பதிவான முதல் பாதிப்பாகும்.

வெவ்வேறு மாறுபாடு

போலியோ வைரஸின் இரண்டு முக்கிய வடிவங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள தீவிர வகையுடன், தடுப்பூசி-பெறப்பட்ட போலியோ (vaccine-derived polio) எனப்படும் அரிதான நிகழ்வுகளும் உள்ளன.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மற்றும் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள கழிவுநீரில் கண்டறியப்பட்டது இந்த இரண்டாவது வடிவம் ஆகும், நியூ யார்க் மாநிலத்தில் ஒரு பக்கவாத பாதிப்பும் பதிவாகியுள்ளது.

ஜெருசலேம், இஸ்ரேல் ஆகிய இடங்களிலும் மரபணு ரீதியாக ஒத்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது, தற்போது விஞ்ஞானிகள் இந்த இணைப்பைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ளனர் என்று உலகளாவிய போலியோ ஒழிப்பு நிறுவனம் (GPEI) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மூலம் பெறப்பட்ட போலியோ மேலே உள்ள இடங்களில் கிட்டத்தட்ட கேள்விப்படாதது. ஆனாலும் 2021 இல் நைஜீரியாவில் 415 பாதிப்புகள் உட்பட, பிற நாடுகளில் இது அறியப்பட்டதாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வெடிப்புகளை ஏற்படுத்துகிற – அச்சுறுத்தலாக உள்ளது.

இது பலவீனமான நேரடி வைரஸ் கொண்ட, வாய்வழி போலியோ தடுப்பூசியின் பயன்பாட்டிலிருந்து உருவாகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு, சில வாரங்களுக்கு அவர்களின் மலத்தில் வைரஸ் பரவுகிறது. தடுப்பூசி போடப்படாத சமூகங்களில், இது பின்னர் பரவி, வைரஸின் தீங்கு விளைவிக்கும் பிறழ்வாக மாறலாம்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த நேரடி தடுப்பூசியை பயன்படுத்தவில்லை என்றாலும், மற்ற நாடுகள் பரவலை தடுக்க பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது உலகளாவிய பரவலை அனுமதிக்கிறது, குறிப்பாக COVID-19 க்குப் பிறகு மக்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியதால் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஏன் இப்போது

ஆனால் தடுப்பூசி-பெறப்பட்ட மற்றும் தீவிர போலியோ வெடிப்புகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் தடுப்பூசி போடப்படாத மக்கள் தொகையாகவே உள்ளது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) உலகளாவிய போலியோ முன்னணி நிபுணர் டெரெக் எர்ஹார்ட் கூறினார்.

தொற்றுநோய்க்கு முன்’ தடுப்பூசி போடுவதில் தயக்கம் வளர்ந்து வரும் பிரச்சனையாக இருந்தது, பின்னர் COVID-19 ஒரு தலைமுறையில் வழக்கமான நோய்த்தடுப்பு சக்திக்கு மோசமான இடையூறுகளை ஏற்படுத்தியது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2022ல் போலியோ தடுப்பூசி பிரச்சாரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இதுவரை 177 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் தொற்றுநோயியல் நிபுணர் டேவிட் ஹேமன் உட்பட உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கழிவுநீர் கண்டுபிடிப்புகள் இன்னும் ஒரு முக்கிய செய்தியுடன் பெற்றோருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாக்கவும் என்று அறிவுறுத்துகின்றனர்.



Read in source website

டிஜியாத்ரா நடைமுறை வாரணாசி மற்றும் பெங்களுரு விமான நிலையங்களில் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு புனே, விஜயவாடா, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது.

டெல்லி விமான நிலையத்தில் டிஜியாத்ரா நடைமுறை திங்கள்கிழமை (ஆக.15) நடைமுறைக்கு வந்துள்ளது. டிஜியாத்ரா என்பது பயணிகளின் முகத்தை கணினி தொழில்நுட்பம் மூலம் அடையாளம்க காணும் ஒரு நடைமுறை ஆகும்.
இந்தச் சோதனைக்கு தேவையான உள்கட்டமைப்புகள் சர்வதேச முனைமம் 3இல் சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

டிஜியாத்ரா என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும்?
டிஜியாத்ரா விமான நிலையத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை காகிதமற்ற மற்றும் காண்டாக்ட்லெஸ் செயலாக்கத்தின் மூலம் கடந்து செல்வதையும், அவர்களின் அடையாளத்தை நிறுவ முக அம்சங்களைப் பயன்படுத்தி, போர்டிங் பாஸுடன் இணைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், விமான நிலையத்திற்குள் நுழைவது, பாதுகாப்பு சோதனை பகுதிகள், விமானம் ஏறுதல் போன்றவை உட்பட அனைத்து சோதனைச் சாவடிகளிலும் முகத்தை அடையாளம் காணும் அமைப்பின் அடிப்படையில் பயணிகளின் நுழைவு தானாகவே செயலாக்கப்படும்.

டிஜியாத்ரா வசதியை மக்கள் எவ்வாறு பெறலாம்?
இந்த வசதியைப் பயன்படுத்த, பயணிகள் முதலில் DigiYatra செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆப்ஸின் ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியாகியுள்ளது, அதே நேரத்தில் iOS பதிப்பு வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயனர்கள் ஆதார் சான்றுகளைப் பயன்படுத்தி பயன்பாட்டில் பதிவு செய்யலாம், அதைத் தொடர்ந்து ஆதார் அட்டையுடன் செல்ஃபி எடுக்கலாம். இதற்குப் பிறகு, CoWIN சான்றுகளைப் பயன்படுத்தி தடுப்பூசி விவரங்கள் பயன்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும். பின்னர், நபர் தனது போர்டிங் பாஸை QR குறியீடு அல்லது பார் குறியீட்டைக் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும், அதன் பிறகு சான்றிதழ்கள் விமான நிலையத்துடன் பகிரப்படும்.

விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு, பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை இ-கேட்டில் ஸ்கேன் செய்து, அங்கு நிறுவப்பட்டுள்ள முக அங்கீகார அமைப்பு கேமராவைப் பார்க்க வேண்டும். மற்ற சோதனைச் சாவடிகளில் நுழைவதற்கும் இதே முறை பொருந்தும்.

டிஜியாத்ரா எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?
கடந்த மாதம், டிஜியாத்ரா திட்டம் குறித்து விவாதிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூடியது.

இந்திய விமான நிலைய ஆணையம் (26% பங்குகள்) மற்றும் பெங்களூரு விமான நிலையம், டெல்லி விமான நிலையம், ஹைதராபாத் விமான நிலையம், மும்பை விமான நிலையம் மற்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பங்குதாரர்களான DigiYatra அறக்கட்டளை – ஒரு கூட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 74% பங்குகளை இந்த ஐந்து பங்குதாரர்களும் சமமாக வைத்துள்ளனர்.

டிஜியாத்ரா அறக்கட்டளை பயணிகள் அடையாளச் சரிபார்ப்பு செயல்முறையின் பாதுகாவலராக இருக்கும். உள்ளூர் விமான நிலைய அமைப்புகளுக்கான இணக்கம் மற்றும் வழிகாட்டுதல்களுக்கான அளவுகோல்களையும் இது வரையறுக்கும். உள்ளூர் விமான நிலைய பயோமெட்ரிக் போர்டிங் அமைப்புகளுக்கான DigiYatra வழிகாட்டுதல்களால் வரையறுக்கப்பட்ட பல்வேறு இணக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் (பாதுகாப்பு, படத்தின் தரம் மற்றும் தரவு தனியுரிமை பற்றிய வழிகாட்டுதல்கள் உட்பட) வழக்கமான தணிக்கைகள் இருக்கும்.

வேறு எந்த விமான நிலையங்களில் டிஜியாத்ரா இருக்கும்?
ஆலோசனைக் குழு கூட்டத்தில், டிஜியாத்ரா இந்த மாதம் வாரணாசி மற்றும் பெங்களூருவிலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் புனே, விஜயவாடா, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களிலும் டிஜியாத்ரா தொடங்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.



Read in source website

FIFA Suspends All India Football Federation Due To “Undue Influence From Third Parties” | Football News| அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை ஃபிஃபா இடைநீக்கம் செய்தது

மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக சஸ்பெண்டு செய்வது என பிபா முடிவு செய்துள்ளது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா), “மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு” காரணமாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக சஸ்பெண்டு செய்துள்ளது என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக சஸ்பெண்டு செய்வது என பிபா கவுன்சில் ஒருமித்த முடிவு எடுத்து இருக்கிறது. இந்த தலையீடானது, பிபா அமைப்பின் விதிகளை மீறிய தீவிர செயல் என கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் விதித்துள்ள இந்த இடைக்கால தடையால் வருகிற அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை 2022 கால்பந்து போட்டிகள், திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்பட இயலாது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தல் 18 மாதங்களாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அமைப்பை கலைக்க கடந்த மே மாதம் உத்தரவிட்ட இந்திய உச்ச நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்தவும், அமைப்பின் அரசியலமைப்பை திருத்துவதற்கும் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில், தேர்தலை உடனடியாக நடத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மூன்று மாதங்களுக்கு இடைக்கால அமைப்பாக இருக்கும் என்றும் அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதனைச் செயல்படுத்தும் விதமாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து பொதுச்செயலாளர் வின்ட்சர் ஜான் தலைமையிலான குழுவை இந்திய கால்பந்து பங்குதாரர்களை சந்திக்க அனுப்பியது. அந்த குழு, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அதன் சட்டங்களை ஜூலை மாத இறுதிக்குள் திருத்துவதற்கும், அதன்பின் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை முடிப்பதற்கும் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தது.

இந்நிலையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா) அதன் அறிக்கையில், போட்டி தொடர் நடத்துவதற்கான அடுத்த வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும், எப்போது தேவைப்படுமோ அப்போது, அதுபற்றி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பிபா தெரிவித்துள்ளது.

முன்னனதாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தல் பிபா-வின் கவுன்சில் உறுப்பினர் பிரஃபுல் படேல் தலைமையில் டிசம்பர் 2020 க்குள் நடத்தப்படவிருந்தன. ஆனால் அதன் அரசியலமைப்பின் திருத்தங்கள் மீதான முட்டுக்கட்டை காரணமாக தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

“மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் பிபா தொடர்ந்து ஆக்கபூர்வமான தொடர்பில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்னும் ஒரு நேர்மறையான முடிவை அடைய முடியும் என்று நம்புகிறோம்.” என்று பிபா தெரிவித்துள்ளது.

பிபா-வின் சட்டங்களின்படி, உறுப்பினர் கூட்டமைப்புகள் அந்தந்த நாடுகளில் சட்ட மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். பிபா முன்பு இதே போன்ற வழக்குகளில் மற்ற தேசிய சங்கங்களை இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

All you need to know about the most expensive player in PKL history in tamil : களத்தில் பாய்ந்து – பறந்து – சுழன்ற அவரின் அசத்தல் ஆட்டத்தால் 2018 ஆம் ஆண்டில் புகழின் உச்சத்திற்கே சென்றார் பவன்.

Pro Kabaddi League Auction 2022: Tamil Thalaivas – Pawan Sehrawat Tamil News : பெங்களூரு புல்ஸ் அணியின் முடி சூட மன்னாக திகழ்ந்த பவன் குமார் செராவத்துக்கு “ஹை-ஃப்ளையர்” என்ற செல்லப்பெயரை ரசிகர்கள் சூட்டினர்.

9-வது புரோ கபடி லீக் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், 5வது சீசனில் சென்னையை மையமாக கொண்டு உதயமான தமிழ் தலைவாஸ் அணியும் களமாடுகிறது. மஞ்சீத் சில்லர், ராகுல் சவுதாரி, அஜய் தாக்கூர், ஷபீர் பப்பு, ஜஸ்விர் சிங், மோஹித் சில்லர், ரன் சிங், சுர்ஜீத் சிங் மற்றும் மஞ்சீத் தஹியா உள்ளிட்ட பல பிரபல முகங்களை கொண்ட இந்த அணி, கடந்த நான்கு சீசன்களில் ஒருமுறை கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

ஆனால், அந்தத் தடையை தகர்த்து ஏறிய, இம்முறை தமிழ் தலைவாஸ் அணியின் நிர்வாகம் ஒரு வலுவான அணியைக் கட்டமைத்துள்ளது. அந்த அணி இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட ஒரு சமபலம் பொருந்திய அணியாகவும் உள்ளது. சாகர், அஜிங்க்யா அசோக் பவார், அபிஷேக் எம், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், மோஹித், ஆஷிஷ், சாஹில், ஜதின், ஹிமான்ஷு, நரேந்தர், பவன் செஹ்ராவத், தனுஷன் லக்ஷ்மமோகன், எம்டி. ஆரிப் ரப்பானி, விஸ்வநாத் வி, அர்பித் சரோஹா, கே அபிமன்யு, மற்றும் அங்கிட் போன்றோர் அடங்கிய ஒரு வலுவான அணியையும் உருவாக்கியுள்ளது.

இப்போட்டிக்காக மும்பையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடந்த ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி அதிரடியாக வீரர்களை வாங்கிச் சேர்த்தது. அதில், அணியின் நம்பிக்கையாகவும், பாதுகாப்பு அரணாகவும் பவன் குமார் செராவத் இருக்கிறார். ஏலத்தில் அவரை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்து, பிகேஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தம் என்பதை பதிவு செய்தது. மேலும், அவரையே அணியின் கேப்டனாகவும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

யார் இந்த பவன் ஷெராவத்?

புரோ கபடி லீக்கின் கடந்த மூன்று சீசன்களில் பவன் குமார் செஹ்ராவத் நம்பர் ஒன் ரைடராக திகழ்ந்து வருகிறார். அவர் புரோ கபடியின் 3வது சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக அறிமுகமானார். 2 சீசன்களுக்குப் பிறகு, 5வது சீசனில் அவரை குஜராத் பார்ச்சூன்ஜெயண்ட்ஸ் அணி வசப்படுத்தியது. பின்னர், மீண்டும் 6-வது சீசனில் தனது சொந்த அணியான பெங்களூரு புல்ஸ்க்கு வந்து சேர்ந்தார்.

பெங்களூரு புல்ஸ் அணியின் முடி சூட மன்னாக திகழ்ந்த அவருக்கு “ஹை-ஃப்ளையர்” என்ற செல்லப்பெயரை ரசிகர்கள் சூட்டினர். களத்தில் பாய்ந்து – பறந்து – சுழன்ற அவரின் அசத்தல் ஆட்டத்தால் 2018 ஆம் ஆண்டில் புகழின் உச்சத்திற்கே சென்றார் பவன். அந்த சீசனில் அவரது தலைமையிலான அணி புரோ கபடி லீக் கோப்பையை முதல்முறையாக முத்தமிட்டது. அவர் சீசனின் சிறந்த ரைடராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 24 போட்டிகளில் களமாடி இருந்த பவன் 282 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார். இது சீசனில் எந்த வீரரும் பெற்ற அதிக எண்ணிக்கையிலான ரெய்டு புள்ளிகள் ஆகும்.

2021 ஆம் ஆண்டில், பெங்களூருவின் அற்புதமான ஃபார்முக்குப் பின்னால் பவன் ஒரு தனிக் காரணமாக இருந்தார். அங்கு அவர் 24 போட்டிகளில் விளையாடி 304 புள்ளிகளைக் குவித்தார். இது எந்தவொரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது. இதில் அவர் 27-புள்ளிகள் பெற்ற ஒரு நட்சத்திர ஆட்டமும் அடங்கும். அந்த ஆட்டத்தில் தபாங் டெல்லியை 61-22 என்ற கணக்கில் திகைக்க வைத்தனர் பெங்களூரு புல்ஸ்.

புரோ கபடி லீக் சீசன் 7ல் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக 39 புள்ளிகளை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் அணியில் அதிக எண்ணிக்கையிலான ரெய்டு புள்ளிகள் பெற்றவர் என்ற சாதனையையும் பவன் படைத்தார். இது போன்று அவர் சாதனை படைத்தது புரோ கபடி லீக்கில் மட்டும் அல்ல. சமீபத்தில் நடந்த உள்நாட்டு போட்டியில் கூட, அவரது தலைமையிலான இந்திய ரயில்வே அணி மூத்த தேசிய சாம்பியன்ஷிப்யை வென்றது. தவிர ஏற்கனவே 2 சாம்பியன்ஷிப்யையும் வென்றெடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்த பவன், சர்வதேச அரங்கில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், அவர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். இப்படி தான் களமாடும் அணிகளில் அசைக்க முடியா தூணாக வலம் வரும் அவர், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக களமிறங்க காத்திருக்கிறார். அவரின் சாதனைப் பட்டியல்களைப் பார்க்கும்போது அவர் தமிழ் தலைவாஸின் முதுகெலும்பாக திகழ்வார் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மனதில் துளிர் விடுகிறது.



Read in source website

இலங்கையில் 6 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நீக்கியுள்ளது.

உலக தமிழ் அமைப்பு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, ஆஸ்திரேலிய தமிழர் பேரவை, கனடா தமிழர் பேரவை, பிரிட்டீஷ் தமிழ் அமைப்பு உள்ளிட்ட 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெடிக்கடி நீடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதையடுத்து, அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

சீன உளவுக் கப்பல் வருகை

பொருளாதார நெடிக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பிலும் அரிசி, அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பபட்டு வருகிறது. இந்தநிலையில், சீனா உளவுக் கப்பல் இலங்கை வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இதுகுறித்து இலங்கையிடம் முன்பே கவலை தெரிவித்திருந்தது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் சீனக் கப்பல் தென்னிந்திய துறைமுகத்தை உளவு பார்க்கும் அச்சம் இருப்பதாக தெரிவித்தது.

தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

இருப்பினும் நாளை (ஆகஸ்ட் 16) சீனக் கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வருகிறது. இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இலங்கையில் 6 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் ஆதாயம் தேடுவதற்கு என பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அங்கு தமிழ் அமைப்புகள் தொடங்கப்பட்டு நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

தற்போது அதிபர் விக்ரமசிங்கே அரசு 6 தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. மேலும் 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, பொருளாதார நெருக்கடியில் தடுமாறும் இலங்கைக்கு, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம், ரணிலின் ஒரு தந்திர நடவடிக்கை என்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் உதவியை எதிர்பார்த்து தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Read in source website

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக மாநில அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதும், அவற்றைப் பயன்படுத்துவோா், குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின், போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.

அவற்றில், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும், போதைப்பொருள்களை விற்பனை செய்வோா் கைது செய்யப்பட்டு அவா்களின் சொத்துகள் முடக்கப்படும் போன்ற அறிவிப்புகள் முக்கியமானவை. போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியா்களுடனும் காவல்துறை கண்காணிப்பாளா்களுடன் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, போதைப் பொருள்களைத் தடுப்பதற்கான மேலும் பல ஆலோசனைகளையும் முதல்வா் வழங்கினாா்.

அடுத்தடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தலைமையில் போதைப் பொருள்கள் தடுப்பு மாநாடு, பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு உறுதிமொழி என போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

போதைப் பொருள்களைக் கடத்தினால் சொத்துகள் முடக்கம் என்கிற அறிவிப்பு, அப்பொருள்களைக் கடத்துவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி, கடத்தலை கைவிடச் செய்ய வழிவகுக்கும். டிஎஸ்பி தலைமையிலான நுண்ணறிவுப் பிரிவு என்பது, போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை குறித்த தகவல்களை கூடுதல் தீவிரத்துடன் கண்டறிந்து தடுக்க உதவும்.

தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான கடந்த 10 ஆண்டு காலத்தில் ரூ.38 கோடி மதிப்பில் 952 டன் அளவிலான குட்கா, பான் மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன; திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை ரூ. 9 கோடி மதிப்பிலான 152 டன் குட்கா, பான் மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்ட சிறு வியாபாரிகள் மீது கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமாா் ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது அரசு அளித்துள்ள புள்ளிவிவரம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை போதைப் பொருள்கள் நமது மாநிலத்தில் தயாரிக்கப்படவில்லை, வெளிமாநிலங்களிலிருந்தே இங்கு கடத்தி வரப்படுகின்றன என்று அரசு தெளிவாகச் சொல்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவே இவ்வளவு இருக்கும்போது, விற்பனையான, இன்னும் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதைப் பொருள்களின் அளவை நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது.

வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தனிக் குழுக்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு போதைப் பொருள்களை விற்பனை செய்வது காவல்துறையினருக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதைத் தடுக்க போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் ‘சைபா் செல்’ தனியாக ஏற்படுத்தப்படும் என்கிற அரசின் முடிவு சரியானது.

போதைப் பொருள் அதனைப் பயன்படுத்தும் தனிமனிதா்களுக்கு மட்டும் தீங்கிழைப்பதல்ல. அது மிகப்பெரும் சமூகப் பிரச்னையாகவும் தற்போது மாறி வருகிறது. பெரும் குற்றங்களைச் செய்யவும் போதைப் பொருள் ஊக்கமளிக்கிறது.

சிறாா்கள்கூட மது, குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறிவிட்டன. சில இடங்களில் பள்ளி மாணவிகள்கூட மது அருந்தும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மனதை கனக்கச் செய்தது.

1987-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபை அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் போதைப் பொருள்களுக்கு எதிரான தினமாக ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வையும் ஐ.நா. ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், உலகம் முழுவதும் போதைப்பொருள் இன்று அழிக்க முடியாத தீயசக்தியாக வளா்ந்து நிற்கிறது.

இந்த சூழலில் போதைப் பொருள்களின் தீமை குறித்து மாணவா்களுக்கு இளம் வயதிலேயே விளக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் உள்ளது. என்றாவது ஒருநாள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுப்பதுடன் நிறுத்தி விடாமல், போதைப் பொருள்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.

பேருந்துகள், ரயில்கள், சரக்கு வாகனங்கள் என போதைப் பொருள்கள் கடத்திவரப்படும் வாய்ப்புகள் அனைத்தையும் தடுக்க காவல்துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை சோதனைச்சாவடிகளில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் போன்றவற்றை அலட்சியத்துடன் அனுமதிப்பது இப்போதும் நடந்து வருகிறது. அதுபோல அல்லாமல் போதைப் பொருள்கள் கடத்தப்படும் வாகனங்கள் குறித்து உண்மையான சோதனை அவசியம்.

இந்த வேளையில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கவும், பள்ளி மாணவா்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.



Read in source website

தமிழ் இலக்கியங்களில் தமக்கென ஒரு தனி இடத்தைக் கொண்டிருப்பவை பக்தி இலக்கியங்கள். அதிலும் குறிப்பாக வைணவ இலக்கியங்கள் சமயம், சித்தாந்தம் என்பதையெல்லாம் தாண்டி வரலாறு, சமூகம், மொழி எனப் பன்முகப்பாா்வை கொண்டவை. பன்னிரு ஆழ்வாா்களின் படைப்புகளான ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ இறைவன் மீதான பக்தியை மட்டுமல்லாது தமிழ் மீதான காதலையும் வளா்க்கிறது.

தமிழ் மொழி தொன்மையான மொழிகளுக்குள் முதன்மையானது என்று புகழப்படுகிறது. எத்தனையோ வரலாற்று, சமூக, அரசியல் காரணங்களைத் தாண்டி உயிா்ப்புடன் இருக்கும் மொழி தமிழ். மொழி வழியாக சமூகம் தழைத்ததும் சமூகத்தின் காதலால் மொழி உயா்ந்ததும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கு வைணவத் தமிழ் பெரும் பங்காற்றியிருக்கிறது.

வைணவத்தைப் பொறுத்தவரை இருவா் தவிா்க்க இயலாதவா்கள். ஒருவா் நம்மாழ்வாா்; மற்றொருவா் ராமானுஜா். இருவரும் வைணவத்தை வளா்க்க எடுத்துக் கொண்ட கருவி தமிழ். மொழி மீதான அவா்களின் பக்தி, இறைவன் மீதான பக்திக்கு இணையாக இருக்கிறது.

இன்றைய வைணவத் தலங்களில் இருக்கும் கோவில் நடைமுறைகள் ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டவை. அவற்றிற்கான சொல்லாடல்கள் தனித்தமிழ் சொற்களாக இருப்பதிலிருந்தே ராமானுஜரின் உள்ளம் வெளிப்படும். அதோடு, திருவிழாக்களில் இறைவனின் எழுந்தருளளில் தமிழ் வேதமெனக் கொண்டாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவோா் முதலில் செல்ல இறைவன் பின்னே வருவாா். அவருக்கும் பின்னே வடமொழி வேதம் ஓதுவோா் வரவேண்டும் என்ற மரபை ஏற்படுத்தி இருக்கிறாா்.

வழிபாட்டில் தமிழை முதன்மைப்படுத்தி இருக்கும் ராமானுஜரின் நோக்கம், தமிழ் மீது அவா் கொண்டிருந்த மதிப்புக்கு எடுத்துக்காட்டு. நம்மாழ்வாரின் பாசுரங்கள், அவற்றின் விளக்க உரைகள் வாய்மொழியாகவே பாடப்பட்டு வந்த நிலையில் அதனை ஏட்டில் எழுதச் செய்து பாதுகாத்து தமிழ் உலகுக்குத் தந்த பெருமையும் அவருக்கு இருக்கிறது.

சமூக நோக்கில் பாா்த்தாலும் ராமானுஜரின் செயல்கள் புரட்சிகரமானவை. ஜாதிய பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் அவா் இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கருதினாா். அவரது வாழ்வில் சமத்துவத்தைக் கடைப்பிடித்து வேதமும் தத்துவங்களும் சித்தாந்தங்களும் அனைவருக்கும் பொதுவானவை என்று வெளிப்படுத்தினாா்.

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து ‘திருக்குலத்தாா்’ என்ற அடைமொழியிட்டு ஆலய பிரவேச உரிமை அவா்களுக்கும் இருக்கிறதென உறுதிப்படுத்தியதில் ராமானுஜரின் சமூகப் பாா்வை தெளிவாகிறது. ஜாதிய துவேஷம் பாராட்டக் கூடாது என்பதே வைணவத்தின் அடிப்படை என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்கிய வைணவ சித்தாந்தியான மகான், திருவிழாக்களில் அவா்களுக்கான பங்களிப்புக்கு வகை செய்தாா். ராமானுஜா் முன்னிறுத்திய ‘திருக்குலத்தாா்’ எனும் சொல், அந்த நிகழ்வு நடந்த காலச்சூழலை வைத்துப் பாா்க்கும்போது, மிகவும் முற்போக்கான சிந்தனையின் வெளிப்பாடாகும்.

நம்மாழ்வாா், ஆழ்வாா் என்றால் நம்மாழ்வாா் மட்டுமே என்று கொண்டாடும் அளவுக்குப் பெருமை பெற்றவா். ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றே அவரைக் கொண்டாடுகிறோம். வேதம் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே சிக்கிக் கொண்டிருந்த காலத்தில் அதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் தந்தாா் நம்மாழ்வாா். அவரது பாசுரங்களைப் படிப்போா் ஆனந்தத்தில் கண்ணீா் மல்கவே படிப்பா் அப்படி தித்திக்கும் தமிழ் தந்தவா்.

 

முழுதுணா்ந்த தெய்வ முனிக்கணங்கள் போற்றும்

வழுதி வளநாடன் மாறன் - பழுதிலா

எண்ணாா் மறைப் பொருளை எல்லாரும் தாமறியப்

பண்ணாா் தமிழாற் பரிந்தெடுத்துக்-கண்ணீா்

திரைக் கொண்டு நெஞ்சுடைப்பத் தித்திக்கும் வாா்த்தை

உரைக்கும் திருநாவுடையான்”

என்றே போற்றுகிறது வைணவம்.

இவரது பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்றும் சொல்வாா்கள். திராவிட வேதம்”ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில்,

சகஸ்ர சாகோ உபநிஷத் சமாகமம்

நமாம்யஹம் திராவிட வேத சாகரம்

என்று நாதமுனிகள் பாடினாா்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருவிருத்தம் 100 பாடல்கள், திருவாசிரியம் 7 பாசுரங்கள், பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள், திருவாய்மொழி 1,102 பாசுரங்கள் என மொத்தம் 1,296 பாசுரங்களை இயற்றித் தந்திருக்கிறாா்.

புரிந்து கொள்ள இயலாத மறை தத்துவங்களையும் எளிதாக்கி, தமிழ் மொழியில் தந்து தமிழையும் தமிழா் மனங்களையும் மிளிரச் செய்ததை,

செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்

தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே

என்கிறது தேசிக பிரபந்தம்.

“னையும் பெருஞ்செல்வமும் மக்களும் மற்றைவாழ்வுந் தன்னை

நினையும் பதமென நின்றபிரான் குருகூா்நிமலன்

புனையுந் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி

வினையுந் திரிவுற்றன குற்ற நீங்கின வேதங்களே

திருக்குருகூா் நம்மாழ்வாரின் பாதங்களைப் பற்றிக் கொண்டுவிட்டால் அவரின் இன்சுவை தமிழ் கவியால், குடும்பம் சொத்து பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீங்கப் பெற்றோம். வேதங்களும் குறைகள் களைந்து புதிதானது. வேதமும் தன்னைப் புதுமை செய்து கொண்டது குருகூா் நம்மாழ்வாரின் தமிழால். அதனால்தான் திருவாய்மொழி திராவிட வேதம்.

வேதம் தமிழ் செய்த நான்காம் வருணத்தவரான நம்மாழ்வாரை“‘ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன்’ என்று கொண்டாடுகிறது வைணவம். அந்தணரான மதுரகவி ஆழ்வாா் அருளிச்செய்தது ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற ஒரே பதிகம் தான். அதிலுள்ள பதினொரு பாடல்களும் திருக்குருகூா் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அந்தணரான மதுரகவி ஆழ்வாா் சூத்திரரான நம்மாழ்வாரையே தெய்வம் என்று கருதி வாழ்ந்தவா். திராவிட வேதத்தைப் பாடித் திரிந்தவா்.

‘நாலாயிரமும் அடியாா்கள் வாழ்வே‘ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் எதனை நம்பினாா்களோ அதையே எழுதி வைத்திருக்கிறாா்கள். தமிழ் அவா்களுக்கு உயிா்மூச்சாக இருந்திருக்கிறது. இறைவனுக்கு நிகராக, இறைவனுக்கே வழிகாட்டுவதாக தமிழை முன்வைத்து வாழ்ந்திருக்கிறாா்கள். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவப் பாா்வை அவா்களின் மனத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டு கடந்து, இன்றைக்கும் திராவிட வேதம் தமிழக ஆலயங்களில் உயிா்ப்போடு இருக்கிறது. தமிழா் மனங்களில் தற்போது திராவிட வேதம் இருக்கிா? தமிழா் வாழ்வில் தமிழ் கொண்டுள்ள இடம் எது? இன்றைக்கு தமிழின் நிலை என்ன? திராவிட சித்தாந்தம் வந்தது எப்படி? திராவிட மாடல் நமக்குக் கற்றுத் தந்திருப்பதென்ன?

நிகழ்காலத்தின் எதாா்தத்தைப் புரிந்து கொள்வது அவசியம். தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழிக் கல்வி இல்லை. அரசுப் பள்ளிகள் உட்பட 50,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது. 1970-களின் இறுதியில் ஆங்கிலவழி தனியாா் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட பின்னா் தமிழகத்தில் மாணவா்கள் ஆங்கில வழியில் கற்பது பெருகியது.

தமிழ்வழிக் கல்வி காப்பாற்றப்படவேண்டுமென வலியுறுத்தி 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னையில் 102 தமிழறிஞா்கள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினா். ஒன்றும் பயனில்லை. 2006 - 2011 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி திணிக்கப்பட்டது. தற்போது, பள்ளிகளில் தமிழ்வழி கல்விக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் ஆங்கில வழிக்கு மாற வேண்டுமென்ற பிரசாரம் செய்யப்பட்டு நம்ப வைக்கப்பட்டு விட்டது. மேல்நிலை கல்வி முழுமையாக ஆங்கில வழியில் மட்டுமே கிடைக்கிறது.

ஒருபுறம் கல்வி தமிழ்வழியில் இல்லாமல் போகிறது. தமிழ் மொழி பயிற்றுவிக்கப் படுகிா? மாணவா்கள் தமிழ் கற்பது எப்படி இருக்கிறது? கடந்த கல்வியாண்டில் மட்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நாற்பத்தியேழாயிரம் மாணவா்கள் தமிழ் மொழிப் பாடத்தில் தோல்வி அடைந்திருக்கிறாா்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிப்பதற்கும் திறன் அற்றவா்களாக இருக்கிறாா்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொழி, இலக்கியம் பற்றிய புரிதலோ, இலக்கண அறிவோ இல்லாத தலைமுறை உருவாக்கப்பட்டு விட்டது.

தேசிய கல்விக் கொள்கை ஆரம்பக் கல்வியை மாணவா்கள் தங்கள் தாய்மொழியில் பெற வேண்டுமென வலியுறுத்துகிறது. ‘திராவிட மாடல்’ இந்த கல்விக் கொள்கையை எதிா்க்கிறது. ஆரம்பக் கல்வி தமிழில் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், ஜாதி கேட்காத பள்ளிக்கூடங்களோ, கல்வி நிறுவனங்களோ இன்று இல்லை என்பதே நிஜம்.

தமிழராக நம்முடைய தேவை என்ன? சமயம் வளா்த்த தமிழைக் காக்கப் போகிறோமா? தொலைக்கப் போகிறோமா? நம் அடையாளம் தொலைந்து விடாமல் இருக்க, வோ்கொள்ள வேண்டிய கருத்தாக்கமும் சித்தாந்தமும் யாது? இனி வரும் தலைமுறைகளிலும் தமிழராகப் பெருமையோடு வாழ வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் பொறுப்பே.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.



Read in source website

பெற்றோா், முதியோா் நலன் பேணுதல் என்பது இந்தியப் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமானது. முதியோா்க்குச் செய்யும் மரியாதையை இறை வழிபாட்டிலும் மேலானதாக இலக்கியங்கள் கூறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, பெற்றோரைப் பேணல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் முதியோா் இல்லங்களும், முதுமைக் காலத்தைத் தனியாகக் கழிக்கும் பெற்றோா் நிலையும் மிகுந்த வருத்தம் அளிப்பவையாக உள்ளன.

படித்துப் பட்டம் பெற்று வேலை தேடி வெளியூா்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும் பிள்ளைகள் அங்கேயே திருமணம் செய்துகொண்டு தங்கி விடுவதே இதற்கு முக்கியக் காரணம். ஒரு சிலா் பெற்றோரை மறக்காமல் தொடா்பு கொண்டு பணம் அனுப்புவாா்கள். ஆனாலும், அவா்கள் வேண்டுவது உணவும் உடையும் அல்ல; உள்ளாா்ந்த அன்புடன் அவா்களைப் பேணுவதையே. இவ்வன்பே முதியோா்கட்கு வலுவைத் தரும்.

சிலரோ பெற்றோரையே மறந்து விடுகின்றனா். அந்த நிலையில் அவா்கள், நல்லுள்ளம் படைத்தோா், தன்னாா்வலா்கள் துணை கொண்டு முதியோா் இல்லம் சென்று அடைக்கலம் புகுவதைக் கேள்விப்படுகிறோம். பல இன்னல்களுக்கிடையே தாம்பெற்ற பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டி வாழ்க்கையில் முன்னேறப் பாடுபடும் பெற்றோா் முதுமையில் வாழ்வாதாரம் இல்லாமல் அல்லல் உறுவதைப் பாா்க்க மனம் துன்புறுகின்றது.

பெற்றோா்களே வீட்டின் முதல் அங்கம் என்ற எண்ணம் அனைவா்க்கும் இருந்தால் நாடு செழிக்கும். அதுவும் அறுபது வயதைக் கடந்த முதியோா் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. வசதி படைத்தவா்கள் ஓரளவு பாதுகாப்புடன் வாழ்கின்றனா். ஆனாலும் அவா்கள் மனத்தில் நிறைவு இல்லை. அரசு முதியோா் நலச் சட்டங்கள் இயற்றி, அவா்கள் கண்ணியத்துடன், நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்தித் தந்தாலும், அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பது உண்மை.

முதுமை என்பது தவிா்க்க முடியாதது; அனுபவம் வாய்ந்தது; ஆற்றல் மிக்கது. குடும்ப அளவிலும் சமுதாய அளவிலும் உடன்பாடு இல்லாமல் வாழ்கின்றவா்கள் முதுமையில் தனித்து வாழும் கொடுமைக்கு உள்ளாவாா். எல்லா நலங்களுமே பெற்றும் ஒரு பெண் சமுதாயத்தில் முதுமையில் தனித்து வாழும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்கிறது வள்ளுவம்.

சக்கரம் போன்றது வாழ்க்கை. ஒருவன் பிறக்கும்போது சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது என்றால், அந்த சக்கரம் முழுச்சுற்று சுற்றி வரும்போது அவன் ஆயுட்காலம் முடிகிறது. அதற்கு சற்று முற்பட்ட நிலையே முதுமை. எவராயினும் முதுமைக் காலத்தில் படும்பாடு மிகக்கொடுமை. அவா்கள் யாருக்கும் வேண்டாதவா்களாகவே இருக்கிறாா்கள். பிள்ளைகள் வெளியில் கூட்டுக்குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் உள்ள பெரியோா்களிடம் பேசாமல் இருப்பது அவா்களை மனதளவில் காயப்படுத்தும் செயல் ஆகும்.

ஏசுவது, சொத்துகளை எழுதி வைக்கச் சொல்லி மிரட்டுவது, மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியோரை அடித்தல், துன்புறுத்துதல், அவமதித்தல், அவா்களின் பேரக்குழந்தைகளை அவா்களிடம் நெருங்க விடாமல் செய்தல் போன்ற மனம் சாா்ந்த கொடுமைகளுக்கு முதியோா் உள்ளாகிறாா்கள். இனி நாம் உயிா்வாழ்ந்து பயனில்லை என எண்ணி, தற்கொலை செய்துகொள்ள முற்படுகின்றனா். தனிமையும் புறக்கணிப்பும் சோ்ந்ததால் அந்த எண்ணம் தோன்றுகிறது.

முதுமை எல்லாா்க்கும் பொதுமை. நாமும் பின்னா் இந்நிலைக்கு வருவோம் என இளைஞா்கள் எண்ணுவதில்லை. நோய், பாசமில்லா உறவுகள், இயலாமை, தமது தேவைகளுக்காக மற்றவரைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை ஆகியவை முதுமை சந்திக்கும் கொடுமைகள். கையில் பணம் இருந்தால் ஓரளவு மதிப்பு உண்டு. இன்றேல் ஆதரவற்றோா் இல்லங்கள்தான் அவா்களுக்கு அடைக்கலம். தன்னாா்வலா்களும் அரசும் ஒத்துழைத்தால் முதியோா், பாதுகாப்பாக முதியோா் இல்லத்தில் காலங்கழிக்கலாம்.

வளமான முதுமைக்கு எது முக்கியம்? பொருள் வசதி படைத்தவா்கள் நல்ல உடல்நலத்துடன் மனநலத்தையும் பேணிக் காக்க வேண்டும். நடுத்தர வயதிலிருந்தே மற்றவரை அணுகாமல் தன் வேலையைத் தானே செய்து கொள்ளப் பழக வேண்டும். முதுமைக் காலத்தில் அணிகலன்களின் மீது நாட்டம் வேண்டாம். அதுவே ஆபத்தை விளைவிக்கும். பணியாளா்களிடம் நமது பணபலத்தைச் சொல்லுதலைத் தவிா்க்க வேண்டும். அதுவே நமது உயிருக்கு ஊறு விளைவிக்கும் என்பதை அண்மைக் கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

இளைய தலைமுறையினரின் அன்றாட பணிச்சுமையைப் புரிந்து கொண்டு, தம்மாலியன்ற உதவிகளை முதியோா் செய்தால் குடும்பத்தில் தகராறுகள் வாரா. முதுமையில் மனிதா்கள் உறுதுணையாக இருப்பதினும், இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே பக்கபலமாக இருக்கும். பணம் படைத்தவா்கள் பணத்தை முதியோா் இல்லத்தில் கொடுத்து ஓரளவு நிம்மதியாக வாழலாம்.

தம் சொத்துகளை முழுமையாகத் தம் வாரிசுகளுக்குக் கொடுத்துவிட்ட முதியோா் பலா் முதுமையில் அல்லற்படுகின்றனா். தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு எஞ்சியதைத் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். தவிா்க்க இயலாதது இறப்பு. அதற்கு மருந்தில்லை என்பதை மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும். அப்போதுதான் முதுமை என்ற அச்சத்திலிருந்து வெளிவர இயலும்.

முதியோரைப் பேணுவதற்கு பள்ளிகளிலே கற்றுக்கொடுக்க வேண்டும். அதைப் பாடப்புத்தகங்களில் பாடமாகவும் வைக்கலாம். பள்ளிகளில் இதுகுறித்து ஆவணப்படங்கள் திரையிட்டுக் காட்டலாம். தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமும், பத்திரிகைகளில் சிறுகதைகள் மூலமும் உணர வைக்கலாம்.

முதியோா் புறக்கணிப்பு பற்றி காவல்துறைக்கு செய்தி வந்தால் உரிய தண்டனை வழங்கலாம். முதியோா் பாதுகாப்பு குறித்த பேச்சுப் போட்டிகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தலாம். முதியோா் கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு நாளன்று மட்டுமின்றி எல்லா நாளும் இளைஞா்கள் முதியோரைக் காக்க உறுதிமொழி ஏற்க வேண்டும். ஊா்தோறும் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தினால் இக்கொடுமைகள் ஓரளவு நீங்கி முதியோா் மனமகிழ்வுடன் இருப்பா்.

குழந்தைகளைத் தெய்வத்திற்கு நிகராக நினைப்பது போல முதியோரையும் நினைக்க வேண்டும். நல்லுள்ளம் படைத்த அனைவரும் முதியோா் நலனைக் கருத்தில் கொண்டு பாடுபட்டால், முதியோா் வாழ்வில் வசந்தம் வருவது உறுதி.

 



Read in source website

தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் ஒரே நாளில் 4 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, காவலர்களின் மனநலம் சார்ந்து அரசு இன்னும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

வெவ்வேறு காரணங்களுக்காக இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், நெருக்கடிகள் மிகுந்த பணிச்சூழலில் பணியாற்ற வேண்டியிருக்கும் காவலர்கள் தங்களது உடல்நலத்தோடு மனநலத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.



Read in source website

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இலக்கியத்தின் பங்களிப்பும் கவனம் கொள்ளத் தக்கது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியா என்னும் ஒருமைப்பாட்டை விதைத்து அதன் மூலம் இந்திய விடுதலை என்னும் சிந்தனையின் கீழ் மக்களைத் திரட்டப் பாடல்கள் ஒரு காரணியாக இருந்தன. அந்த வகையில் மகாகவி பாரதியார், முக்கியமானவர்.

பாரதியின் கவிதைகள், தமிழ் உலகுக்கு தமிழையும் தேசிய உணர்வையும் ஊட்டக் கூடியதுமாக எல்லாத் தரப்பினராலும் இன்றைக்குக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சுதந்திரத்துக்கு முன் பாரதியின் கவிதைகள் ஒரு தீவிரவாதச் செயற்பாட்டாளரின் எழுத்துகள் என்ற ரீதியில்தான் பார்க்கப்பட்டன.

அதனால் அவர் பெரும் வேதனைப்பட்டார். பாரதியின் பாடல்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பாடப்பட்டு, எழுச்சி ஊட்டப் பயன்படுத்தப்பட்டன. அதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளார்கள், அவரது பாடல்களுக்குத் தடைவிதித்தனர். பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் பாரதி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிவந்தது.

அவரது தேசிய உணர்வுமிக்க பாடல்கள் இன்றும் மிகப் பிரபலம். தேச விடுதலையின் மீது பிடிப்பைக் கொண்டிருந்த பாரதி, தன் கவிதைகளில் அதை வெளிப்படுத்தினார். ‘வந்தே மாதரம்’ என்கிற பாட்டில் அன்றிருந்த இந்திய மக்கள் தொகை முப்பது கோடியைக் குறிப்பிட்டு ‘இந்திய மக்கள்’ எனப் பொதுமைப்படுத்தியிருப்பார்.

'மன்னும் இமயமலையும் இன்னறு நீர்க்கங்கையும் எங்கள் பாரத நாட்டினுடையது' என ’எங்கள் நாடு’ பாடலில் உரிமை பாராட்டுகிறார் பாரதி. ‘முப்பது கோடி முகமுடையாள்/ உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என ‘எங்கள் தா’யில் இந்தியாவை ஒரு தேவியாக்கி வர்ணிக்கிறார்.

‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்/முழுமைக்கும் பொது உடைமை/ஒப்பிலாத சமுதாயம்/உலகத்துக்கொரு புதுமை’ எனத் தனித்துவமான சுதந்திர இந்தியத் துணைக்கண்டத்தைப் பற்றி பாரதி முன்பே முன்னுணர்ந்து எழுதினார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மகாகவி பாரதி சுதந்திரப் பள்ளுப் பாடியுள்ளார். தாயின் மணிக்கொடி பறப்பதையும் சிலாகித்துள்ளார்.

இந்தியாவில் மலரவிருக்கும் ஜனநாயக அரசு அமைப்பைப் பற்றி ’எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை/எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதி சுதந்திர இந்தியாவை வரவேற்றும் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவுக்கு விடை கொடுத்தும் தனித்தனியே இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். சுதந்திர இந்தியாவை வரவேற்கும் பாடல் இன்றைய இளைய தலைமுறைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம்
ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"

- விபின்



Read in source website

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 14 – 15 நாள் களுக்கு இடைப்பட்ட அந்த நள்ளிரவு, சந்தேகமே இல்லாமல் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். சுதந்திரமான இந்தியாவின் உதயத்தை அது உணர்த்தியது.

நாட்டின் சுதந்திரத்துக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய உச்சகட்ட நிலை அது.

பவித்திரமான வரலாற்றுத் தருணமாக மட்டும் அது அமையவில்லை, நம்முடைய சமூகத்தில் நிலவும் விநோதமான முரண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் நேரமாகவும் அது அமைந்திருந்தது.

துணிச்சலாக சிந்திப்பவர்கள் - மூடநம்பிக்கைகளுக்கு அடிமையானவர்கள், மிகுந்த நேர்மை மிக்கவர்கள் – ஊழல் செய்யும் தன்மை உள்ளவர்கள், தீவிரமான தனித்துவம் கொண்டவர்கள் – மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டே சாகசத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் நம்முடைய தேசிய ஆளுமை.

இந்தியாவுக்கான சுதந்திரத்தை இந்திய அரசமைப்பு அவையிடம் ஆகஸ்ட் 15 நள்ளிரவு வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானித்திருந்தது.

முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும்போது ஜோதிடர்களை ஆலோசிக்கும் வழக்கம் பிரிட்டிஷ்காரர்களுக்குக் கிடையாது. ஆனால், நல்ல நாள் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர் டெல்லியில் இருந்தனர் (இப்போதும் இருக்கின்றனர்).

ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நட்சத்திரங்களின் இருப்பு எப்படி, அன்றைக்கு சுதந்திரம் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லதா என்று அவர்கள் பிரபல ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தினர். ‘ஆகஸ்ட் 15 சரியல்ல - ஆகஸ்ட் 14 தான் சுதந்திரம் பெறுவதற்கு மிகவும் உகந்த நாள்’ என்பதே அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து.

ஆனால், ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தானுக்குத்தான் முதலில் சுதந்திரம் வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்துவிட்டதால் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அன்றைய நாள் காலை கராச்சி நகருக்கு சென்றுவிட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து பாகிஸ்தான் (கிழக்கு பாகிஸ்தானும் சேர்த்து) விடுதலை பெறுவதை அன்று காலை முறைப்படி அறிவித்துவிட்டு, பிற்பகலிலேயே விமானம் ஏறி அவர் டெல்லி வந்துவிட்டார்.

ஆனால், நட்சத்திரங்களின் சேர்க்கை சரியில்லாததால் சுதந்திரம் பெறுவதற்கான நாள் சரியில்லை என்கிற மிகப் பெரிய பிரச்சினைக்கு, அறிவாற்றல்மிக்கவரான சர்தார் கே.எம். பணிக்கர் மிக எளிதான தீர்வைக் கண்டறிந்து விட்டார் என்பதே என்னுடைய நினைவு.

மலையாள அறிஞரும் ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியவருமான பணிக்கர் இந்து மதத்தின் மறைபொருள்கள் பலவற்றைக் குறித்து ஆழ்ந்து கற்றவர், அத்துடன் நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர்.

பிரிட்டிஷ்காரர்கள் குறித்த நாளை மாற்றாமலும், நட்சத்திர சேர்க்கையால் எதிர்கால இந்தியாவுக்கு எந்தவித தீமையும் வராமலும் இருக்க, தானொரு வழியைக் கண்டறிந்துவிட்டதாகக் கூறினார்.

இந்திய அரசமைப்பு அவையின் உறுப்பினர்கள் அனைவரும் நள்ளிரவுக்கு அரை மணி நேரம் முன்னதாக - அதாவது ஆகஸ்ட் 14 இரவு 11.30 மணிக்கே – அவையில் கூடிவிடுவார்கள். இதனால் நட்சத்திரங்கள் சாந்தியடைந்துவிடும்.

புதிய சுதந்திர இந்தியாவுக்கான விசுவாசப் பிரமாணத்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு அவர்கள் மேற்கொள்வார்கள், பிரிட்டிஷார் கணக்குப்படி அது ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுத்ததாகிவிடும். இந்தத் தீர்வு எல்லோருக்கும் திருப்தியாக இருந்தபடியால், அதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கப்பட்டன.

கவலையும் வியப்பும்

அரசமைப்பு அவையின் இடைக்கால செயலாளராக நான் பொறுப்பு வகித்தேன். அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் வரை பிரிட்டிஷ் இந்தியாவின் திட்டமிடல் – வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்தேன்.

நான் செயலாளராக இருந்த துறையைக் கலைத்துவிடுவது என்று கவர்னர் ஜெனரல் முடிவெடுத்துவிட்டார் என்பதை ஒரு நாள் காலை பத்திரிகையைப் படித்தபோது தெரிந்துகொண்டு துணுக்குற்றேன்.

காலை உணவை முடித்துவிட்டு, அந்தத் துறையின் உறுப்பினரான சர் அக்பர் ஹைதரியைச் சந்தித்தேன். என்னுடைய வேலை போய்விட்டதே என்ற கவலையைத் தெரிவித்ததுடன், இப்படி என்னிடம் முன்கூட்டி சொல்லாமலேயே செய்துவிட்டார்களே என்கிற ஆதங்கத்தையும் கொட்டினேன்.

இதற்காக வருத்தப்படுவதாகக் கூறிய ஹைதரி, சுதந்திர நாள் நெருங்குவதால் அரசின் நடவடிக்கைகள் இப்படி திடீர் திடீரென எடுக்கப்பட வேண்டியிருப்பதாக சமாதானப்படுத்தினார்.

ஜின்னா எதிர்ப்பு

பாகிஸ்தானுக்குத் தலைவராகப் பொறுப்பேற்கவிருந்த முகமது அலி ஜின்னா, அப்போது வைஸ்ராயாக இருந்த வேவல் பிரபுவைச் சந்தித்தார். சுதந்திரம் வழங்கப்பட்ட பிறகு திட்டமிடல் – வளர்ச்சிக்கான துறை ஒரு நாட்டுக்காகச் செயல்படுமா அல்லது இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து செயல்படுமா என்று ஜின்னா கேட்டிருக்கிறார்.

ஒரு நாட்டுக்காகத்தான் (இந்தியா) என்றால், அது பாகிஸ்தானை பாரபட்சமாக நடத்துவதாகிவிடும். எனவே, இனி பிரிட்டிஷ் அரசுடன் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தை களில் ஈடுபட மாட்டேன் என்று கண்டிப்பாக எச்சரித்திருக்கிறார்.

இதற்கு ஒரே தீர்வு அந்தத் துறையையே இத்துடன் மூடிவிடுவதுதான் என்று வேவல் பிரபு முடிவெடுத்துவிட்டார் என்பதை அறிந்தேன். இந்த வேலைக்குப் பதிலாக எனக்கு புதிய வேலை தர இரண்டொரு நாள்கள் பிடிக்கும் என்று ஹைதரி என்னிடம் கூறினார்.

புதிய பொறுப்பு

இந்தியாவுக்கான புதிய அரசமைப்பு அவையை உருவாக்கத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், புதிய அரசமைப்பை உருவாக்குவதுடன் அந்தப் பணி முடிக்கப்படும் வரை, அதுவே தேசிய சட்டப் பேரவையாக (நாடாளு மன்றத்துக்கு இணை) செயல்படும் என்றும் கூறிய ஹைதரி, அதன் நிர்வாக நடவடிக்கை களுக்குப் பொறுப்பாளராக என்னை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கத் தனியாக ஆலோசகர் பதவி ஏற்படுத்தப்பட்டது.

மிகச் சிறந்த நீதிமானான சர் பி.என். ராவ் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், அதிகம் யாருடனும் கலந்து பழகமாட்டார், எப்போதும் தன்னுடைய வேலையிலேயே மூழ்கியிருப்பார்.

அரசமைப்பு அவை தேவைப்படும் தகுதியான ஊழியர்களைத் தானே நியமித்துக்கொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்காலிக அடிப்படையில் நானும் பி.என். ராவும் நியமிக்கப்பட்டிருந்தோம்.

(தொடரும்)

- கட்டுரையாளர், முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி. அரசமைப்பு வரைவுக்குழுச் செயலர், பிரதமருக்குத் தனிச் செயலர், உள்துறைச் செயலர், ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி வகித்தவர்.

(‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்
15.08.1972-ல் வெளியான கட்டுரை)
நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்
தமிழில்: வ. ரங்காசாரி



Read in source website

இந்திய அரசமைப்பு அவையில் வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர், நவம்பர் 25, 1949 அன்று ஆற்றிய கடைசி உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த உரையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகங்களில் ஒன்று: ‘சுதந்திரத்தைச் சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தைச் சுதந்திரத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சுதந்திரத்தையோ சமத்துவத்தையோ சகோதரத்துவத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாத சுதந்திரமானது, ஒரு சிலர் தங்களது ஆதிக்கத்தைப் பெரும்பான்மையினர் மீது செலுத்துவதற்கு ஏதுவாகும்.’



Read in source website

பிரிட்டிஷ் இந்தியா சுதந்திர இந்தியாவாக உருவெடுத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. உண்மையில், சுதந்திரத்தைப் பெற முந்தைய தலைமுறை போராடியதற்குச் சற்றும் சளைக்காதது, சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவைக் கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் இன்றைய தலைமுறை எடுத்த முயற்சிகள். அதன் காரணமாகவே இன்றைக்கு உலக அரங்கில் தனக்கான உயர்ந்த இடத்தைப் பல துறைகளிலும் இந்தியா சாதித்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் இந்த சாதனைப் பயணம் ஒரே இரவில் நடந்ததும் இல்லை, ஓரிருசம்பவங்களால் நிகழ்ந்ததும் இல்லை. கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்த பல சம்பவங்களும் பல முடிவுகளுமே இந்த வெற்றிப் பயணத்தைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. உதாரணங்களைச் சொன்னால் துலக்கமாகப் புரியும்.

தேர்தலும் அரசமைப்பும்: இந்தியாவை வெறும் சுதந்திர தேசமாக மட்டுமே வைத்திருக்க நேரு விரும்பவில்லை. மாறாக, ஒரு ஜனநாயக தேசமாகவே கட்டமைக்க விரும்பினார். அதன் நீட்சியாகவே முதல் பொதுத்தேர்தல் நடந்தது.

சுதந்திரம் அடைந்த பல நாடுகள் தேர்தலைத் தவிர்த்தபோது, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்துத் தேர்தலை நடத்தினார் நேரு. அன்று அவர் வகுத்த தேர்தல்வழி ஜனநாயகப் பாதையில்தான் இன்றளவும் இந்தியா இயங்கிக்கொண்டிருக்கிறது.

மக்களுக்கான ஆட்சியாளர்களை மக்களேதேர்ந்தெடுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும் இந்தத் தேர்தல்தான் பல நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கியது. தவறுசெய்த ஆட்சியாளர்களுக்குத் தண்டனை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது. அதனால்தான் தேர்தலை விரும்பாத ஆட்சியாளர்கள்கூடத் தேர்தல்களை நடத்தத் தவறுவதில்லை.

எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்தியே பிறகு தேர்தலை நடத்தினார் என்பது அதற்கான உதாரணம். அந்த வகையில், நேரு முதல் மோடி வரையிலான சுதந்திர இந்தியாவின் இருப்பில் தேர்தல்களின் பங்களிப்பு முக்கியமானது. அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தது, சுதந்திர இந்தியாவின் பெருமிதத் தருணங்களுள் முக்கியமானது.

அதுதான் இந்தியர்களுக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட எல்லாவற்றையும் கொடுத்தது. ஆட்சி நிர்வாகத்துக்குள்ளும், இந்திய சமூகத்தின் இயல்பு வாழ்க்கைக்குள்ளும் தீர்க்கமான நெறிமுறைகளைக் கொண்டுவந்ததில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கு காத்திரமானது.

அதேவேளை, காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் அமைப்பாகவே நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு பலமுறை திருத்தப்பட்டதே, அதன் நெகிழ்வுத்தன்மைக்கான சாட்சியம். அதேவேளை, நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதைப் பயன்படுத்திச் சட்டத்தைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கதைகளும் இருக்கின்றன.

மொழிவாரி ஏற்படுத்திய ஒற்றுமை: மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரிய திருப்புமுனைகளுள் ஒன்று. மாநிலங்களின் ஒன்றியமாகச் சுதந்திர இந்தியா உருவெடுத்தபோதும், ஆங்காங்கே பிரிவினைக் குரல்களும் உரிமை முழக்கங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. அந்தக் குரல்களை எல்லாம் அமைதிப்படுத்தக் கையாளப்பட்ட உத்தி, மொழிவாரி மாநிலப் பிரிவினை.

நிலப்பரப்பின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதைவிட, மொழி அடிப்படையில் பிரிப்பதன் மூலம் மக்களின் அதிருப்தியை அகற்றி, நம்பிக்கையைப் புகட்டி, இந்திய ஒன்றியத்துடன் உணர்வுபூர்வமாக ஒன்றியிருக்கச் செய்ய முடியும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ஐம்பதுகளின் மத்தியில் நிகழ்ந்த மொழிவாரி மாநிலப் பிரிவினை.

உண்மையில், ஆந்திரம் பிரிக்கப்பட்டபோது தேன்கூட்டில் கைவைக்கிறோமோ என்று சந்தேகப்பட்டார் நேரு. ஆனால், அப்படியான ஆபத்து எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. சொல்லப்போனால் நிர்வாக வசதி, மக்களின் கோரிக்கை, அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், அவை எதுவும் இறையாண்மைக்குச் சவால் விட்டதில்லை. பிரிவினையாக மடைமாறவில்லை.

அந்த வகையில், சுதந்திர இந்தியா பவள விழாவை அமைதியுடன் கொண்டாடுவதன் பின்னணியில் மொழிவாரி மாநிலப் பிரிவினையின் பங்கு முக்கியமானது. சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்களுள் சமூகநீதி முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு முதன்முறையாகத் திருத்தப்பட்டபோதே, அது சமூகநீதிக் கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

நேரு காலத்தில் தொடங்கிய சமூகநீதி சாதிப்பு முயற்சிகள், மொரார்ஜி தேசாய் காலத்தில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டதன் மூலமாகவும், வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் முக்கியமானவை செயல்வடிவம் பெற்றதன் வழியாகவும் தொடர்ந்தன.

இன்றைக்கு இந்தியா முழுக்க சமூகம், கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டுக்கு அப்பாலும் இருக்கின்ற அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டுவதும் சட்டப் போராட்டங்களை நடத்துவதும் களத்தில் இறங்கிப் போராடுவதும் வெற்றிகளை ஈட்டுவதும் வெற்றியைப் பெறுவதற்கான போராட்டங்களைத் தொய்வின்றித் தொடர்வதும் சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய தருணங்கள். எல்லோருக்கும் எல்லாமும் என்பதைச் சாத்தியப்படுத்த அப்படியான தருணங்கள் அதிமுக்கியம்.

சாதனை நகர்வுகள்: அகிம்சை நாயகன் காந்தி வழிவந்த தேசம்தான் சுதந்திர இந்தியா. என்றபோதும், சூழலுக்கு ஏற்ப எதிரிகளை நோக்கி ஆயுதங்களை ஏந்தத் தயங்கியதில்லை. சுதந்திரம் பெற்ற கையோடு பாகிஸ்தான் சீண்டியபோது, தீரத்துடன் போரிட்டு ஊடுருவல்காரர்களை விரட்டியடித்தது இந்தியா.

அதன் பிறகு 1965, 1971, 1999 என எப்போதெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவை ராணுவரீதியாகச் சீண்டியதோ அப்போதெல்லாம் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறது இந்தியா. 1962இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தைத் தவிர்த்து, ஏனைய எல்லா யுத்தங்களிலும் இந்தியா வெற்றிக்கொடியே நாட்டியிருக்கிறது.

அதன் பின்னணியில் இருந்தது இந்தியாவின் ராணுவ பலம். ஆரம்பகாலம் தொடங்கி, தனது ராணுவ வலிமையைக் கூட்டிக்கொள்வதில் இந்தியா எந்தவொரு தருணத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை. அதற்கான உதாரணம்தான் இந்திரா, வாஜ்பாய் காலங்களில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனைகள்.

இந்தியா அணு ஆயுதத்தைத் தயாரிக்க ஆயத்தமானால், தங்களது உறவைத் துண்டித்துக்கொள்ள நேரிடும் என்று சில நாடுகள் விடுத்த எச்சரிக்கைக்கு அப்பால் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அந்தத் திட்டத்துக்கு அகிம்சையின் முழுவடிவான புத்தரின் பெயரையே வைத்தார்.

அது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்திரா எடுத்த துணிகர முயற்சி. அதேபோன்ற துணிகர முயற்சியைப் பின்னாளில் பிரதமராக இருந்த வாஜ்பாயும் எடுத்தார். இந்த இரண்டும் இந்தியாவின் சாகச முயற்சிகளல்ல, சாதனை நகர்வுகள்.

சாதித்த போராட்டங்கள்: இன்று 5ஜி பற்றிப் பேசுகிறோம். தொலைத்தொடர்பிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் இன்றைய இந்தியா சர்வதேசப் பந்தயத்தில் தவிர்க்க முடியாத சக்தி. இப்படியான உயரத்துக்கு இந்தியா செல்லும் என்று அரை நூற்றாண்டுக்கு முன்னால் எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்று தெரியாது.

ஆனால், எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் ஏற்பட்ட தொலைத்தொடர்புப் புரட்சிதான் பி.சி.ஓ., எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என்பன போன்ற அம்சங்களைக் கொண்டுவந்தது. வி.எஸ்.என்.எல்., பி.எஸ்.என்.எல். போன்ற அமைப்புகளை உருவாக்கியது. அதுதான் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து இன்றைக்கு 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

அந்த வகையில், தொலைத்தொடர்புப் புரட்சி நிகழ்ந்த எண்பதுகளும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டமும் நவீன இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிமுக்கிய அத்தியாயங்கள். இந்த எல்லா அம்சங்களையும் தாண்டி, இந்தியாவின் ஆகப்பெரிய பெருமிதங்களாகவும் வலிமை தரக்கூடிய அம்சங்களாகவும் கருதப்படுபவை போராட்டங்கள்.

எப்படிப் போராட்டத்தின் வழியே அடிமை இந்தியா, சுதந்திர இந்தியாவாக உருவெடுத்ததோ அதுபோலவே மாநில உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை, மொழி உரிமை, தகவல் பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை என்று சுதந்திர இந்தியா தனக்கான முக்கியத் தேவைகளைப் போராட்டங்கள் வழியாகவே சாதித்திருக்கிறது. அந்த வகையில், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கைச் செலுத்தும் போராட்டங்கள் சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்கள்.

ஆம், தேர்தல் தொடங்கிப் போராட்டங்கள் வரை இந்தியாவின் பெருமிதமாகப் பேசப்படும் ஒவ்வொன்றும் இந்தியாவை இந்தியாவாகவே வைத்திருப்பதில் பெரும்பங்கைச் செலுத்துகின்றன.

இந்த அம்சங்களை அதன் இயல்புத்தன்மையிலிருந்து நகர்த்தப் பார்ப்பதும், வலிந்து விலக்குவதும், தடம்புரள்வதற்குத் தூண்டுவதும், இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கு இடையூறு செய்யக்கூடிய காரியங்கள். ஆகவே, பெருமிதங்களைப் புரிந்துகொள்வதும், அவற்றின் உள்ளடக்கத்தை உணர்ந்துகொள்வதும் நாளைய இந்தியாவுக்கு நல்லது!

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com



Read in source website