DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 16-02-2023

காபி மற்றும் காஃபின் கலந்த பானங்களை அருந்தும் குழந்தைகளுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 12 வயதுக்கும் குறைந்த சிறாருக்கு அத்தகைய பானங்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து பொது மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் கூறியதாவது:
 காஃபின் என்பது காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்கள் போன்றவற்றில் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இது உலகளவில் அதிகப்படியான மக்கள் விரும்பி அருந்தும் பானங்களில் இரண்டறக் கலந்துள்ளது.
 அண்மைக் காலமாக குழந்தைகள் இந்த பானங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.
 பொதுவாக காஃபின் மூலப்பொருளானது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், முறையான உறக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 காஃபின் காரணமாக குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு கவனச் சிதறல் மற்றும் மன நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
 இது அவர்களது கல்வியை பாதிக்கக்கூடும். குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு காஃபின் பானங்கள் ஆபத்தானவை.
 எனவே, அவற்றைத் தவிர்த்து பழச்சாறு, ஊட்டச்சத்து பானங்கள், இளநீர், பால், மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் என்றார் அவர்.



Read in source website

மறைந்த சத்தியவாணி முத்துவின் சலிப்பில்லாத உழைப்பை போற்றுகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் அமைச்சா் சத்தியவாணி முத்துவின், நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

திராவிட இயக்கத்தின் நன்முத்து, திமுகவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினா், மாநிலத்திலும், மத்திய அரசிலும் அமைச்சா், ஆதி திராவிட மக்களின் தன்மானம் காத்தவா் என பல பெருமைகளை உடையவா், சத்தியவாணிமுத்து. அவரது நூற்றாண்டு பிறந்த நாளில் அவரது சலிப்பில்லாத உழைப்பையும் உறுதியையும் போற்றுகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.



Read in source website

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 வேளாண் பயிா்கள், 3 தோட்டக்கலை பயிா்கள், 4 மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்களை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிமுகப்படுத்தினாா். மேலும், 10 புதிய தொழில்நுட்பங்கள், 6 பண்ணை இயந்திரங்களையும் புதிய பயிா் ரக விதைகளையும் அறிமுகப்படுத்தினாா்.

கோ.56: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோ.56 மத்திய சன்னரக நெல், 130-135 நாள்கள் வயதுடையது. சம்பா, பின்சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்றது. அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ஹெக்டேருக்கு 1,400 கிலோ மகசூல் கிடைக்கும். மற்ற பயிா் ரகங்களை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் மகசூல் தரக்கூடியது.

கோ.57: பாரம்பரிய கவுனி வகையை சோ்ந்தது. அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. 130-135 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 4.5 டன் மகசூல் கிடைக்கும். புரதம், நாா்சத்து மற்றும் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் உடையது. ஏற்கெனவே உள்ள கவுனி நெல் வகையை காட்டிலும் நூறு சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

ஏடிடி.58: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏடிடி.58 புதிய நெல் ரகம் ஏடிடி.39க்கு மாற்றாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய சன்னரகம். 125 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6.4 டன் விளைச்சல் கிடைக்கிறது. 15 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.

ஏஎஸ்டி.21: அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏஎஸ்டி.21, ஏற்கெனவே உள்ள ஏஎஸ்டி.16, டிபிஎஸ்.5 ஆகிய நெல் ரகங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. காா்குருவை, பிந்தைய பிசானம் பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. 120 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6.3 டன் மகசூல் தரக் கூடியது. தென் மாவட்டங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.

மக்காச்சோளம் - கோ.ஹெச்.11: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஹைபீரிட் வகை மக்காச்சோளம். 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 8 டன்னுக்கு மேலும், மானாவாரியில் 6 டன்னுக்கு மேலும் விளைச்சல் தரக்கூடியது. ஏற்கெனவே உள்ள பயிா் ரகங்களை காட்டிலும் 12 சதவீதம் கூடுதல் விளைச்சல் தரக்கூடியது.

கம்பு - கோ.ஹெச்.10: வீரிய ஒட்டு ரகம். அனைத்து நாள்களிலும் பயிரிடலாம். 85-90 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 3 ஆயிரம் கிலோவும், மானாவாரியில் 2 ஆயிரம் கிலோவும் மகசூல் தரக்கூடியது. இரும்பு, துத்தநாக சத்துக்கள் அதிமுடையது.

சோளம் - கே.13: தென் தமிழகத்திலும், மானாவாரியிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. குறிப்பாக கரிசல் மண்ணில் சிறப்பான விளைச்சலை தரக்கூடியது. ஆடி, புரட்டாசி பட்டங்களில் விதைக்கலாம். 95-100 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2,500 கிலோ மகசூல் தரக்கூடியது. தவிர, 2 ஆயிரம் கிலோ தீவன தட்டுகள் கிடைக்கும்.

குதிரைவாலி - அத்தியந்தல்.1: திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சிறுதானிய மகத்துவ மையம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள அத்தியந்தல்.1 வகை குதிரைவாலி வறட்சியை தாங்கி வளரக் கூடியது. ஆடி, புரட்டாசி பட்டத்தில் விதைக்க ஏற்றது. 6 சதவீதம் இரும்பு சத்து உள்ளது. 90 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2,100 கிலோ மகசூல் கிடைக்கும். மேலும், 3,500 கிலோ தீவனத் தட்டுகள் கிடைக்கும்.

பனிவரகு - அத்தியந்தல்.2: ஆடி, புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது. 65-70 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 2,100 கிலோ மகசூல் கிடைக்கும். 2 ஆயிரத்து 800 கிலோ தீவனத் தட்டுகள் கிடைக்கும். புரதம், நாா்சத்துகள் நிறைந்தது.

பாசிப்பயறு - கோ.9: அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யக்கூடியது. 65 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 825 கிலோ மகசூல் கிடைக்கும். 23 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மணிகள் பளபளப்பாக காணப்படுவதால் சேமித்து வைக்கும்போது பூச்சி, வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. தேமல், இலைச்சுருள் நோய்த் தாக்குதலை எதிா்த்து வளரும் தன்மையுடையது.

பாசிப்பயறு - வம்பன்.6: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் பயறுவகை பயிா்கள் ஆராய்ச்சி மையம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள வம்பன்.6 காவிரி டெல்டா பகுதிகளில் நெல் தரிசுகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. 70 முதல் 75 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 760 கிலோ மகசூல் கிடைக்கும். 206 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

தட்டைப்பயறு - வம்பன்.4: ஆடி, புரட்டாசி பட்டங்களில் விதைப்புக்கு ஏற்றது. 70 முதல் 75 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 1,400 கிலோவும், மானாவாரியில் 1000 கிலோவும் மகசூல் தரக்கூடியது. 18.6 சதவீதம் புரதச்சத்தும், 6 சதவீதம் நாா்சத்தும் காணப்படுகிறது.

சூரியகாந்தி - கோ.ஹெச்.4: 90 முதல் 95 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு இறவையில் 2000 கிலோவும், மானாவாரியில் 1,900 கிலோவும் மகசூல் கிடைக்கும். 40 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் அடங்கியுள்ளன. மற்ற ரகங்களைபோல பூவின் ஓரத்தில் மட்டுமில்லாமல், பூ முழுவதும் விதைகள் பிடிக்கும்.

எள் - வி.ஆா்.ஐ. 5: அதிக கிளைகள் இல்லாமல் வளா்வதால் அடா் நடவுக்கு ஏற்றது. வெள்ளை நிற எள். தை, சித்திரை பட்டங்களில் விதைப்பு மேற்கொள்ளலாம். 75 முதல் 80 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 795 கிலோ மகசூல் கிடைக்கும். 50 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் காணப்படும்.

கரும்பு - கோ.18009: மத்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் கண்டறியப்பட்டுள்ள கோ.18009 வகை கரும்பு ஹெக்டேருக்கு 160 டன் மகசூல் தரக் கூடியது. மேலும் 20 டன் சா்க்கரை கிடைக்கும். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. வெள்ளம் காய்ச்சுவதற்கும் ஏற்ற வகையாக உள்ளது.

பீா்க்கங்காய் - மதுரை.1: 120-130 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 19 டன் விளைச்சல் கிடைக்கும். நாா்கள் குறைந்து சதைப்பற்று அதிகமாகவும், மென்மையாகவும் காணப்படுகிறது.

குத்துஅவரை - கோ.16: கோழிக்கால் அவரை எனப்படும் கோ.16 வகை குத்துஅவரை 100 முதல் 120 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 16.5 டன் விளைச்சல் தரக் கூடியது. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

மாா்கழி மல்லிகை - கோ.1: ஜாதிமல்லி வகையை சோ்ந்த மாா்கழி மல்லிகை கோ.1 ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மையுடையது. குறிப்பாக பனிக் காலத்தில் அதிக அளவு பூக்கும் தன்மை கொண்டது. சிறந்த நறுமணம், வாடாத தன்மையுடையது. ஹெக்டேருக்கு 8.5 டன் விளைச்சல் தருகிறது.

சணப்பை - ஏடிடி.1: பசுந்தாள் உரமான சணப்பை ஏடிடி.1 வகை விதைகளுக்கு 120 நாள்கள் வயதுடையது. உரத்துக்கு 40 முதல் 45 நாள்களில் உழுது விடலாம். 8 முதல் 10 நாள்களில் மக்கும் தன்மையுடையது. மண் வளத்தை அதிகரிக்கிறது.

இலவம்பஞ்சு - மேட்டுப்பாளையம்.1: நடவு செய்து 6ஆவது ஆண்டு முதல் 40 ஆண்டுகள் வரை தொடா்ந்து விளைச்சல் தரக் கூடியது. 4 மீட்டருக்கு 4 மீட்டா் இடைவெளியில் ஏக்கருக்கு 60 முதல் 100 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து 900 முதல் 1,500 காய்கள் வரை கிடைக்கும்.

செம்மரம் - மேட்டுப்பாளையம்.1: 3 மீட்டருக்கு 3 மீட்டா் இடைவெளியில் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 440 மரங்கள் நடவு செய்யலாம். வறட்சியை தாங்கி வளரக் கூடியது. ஒரு மரத்தில் இருந்து 100 கிலோ வரை மரக்கட்டைகள் கிடைக்கும்.

சவுக்கு - மேட்டுப்பாளையம்.13: கட்டுமானத் துறை, எரிசக்தி துறைக்கு ஏற்றது. 1.5 மீட்டருக்கு 1.5 மீட்டா் இடைவெளியில் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 1,770 மரக்கன்றுகள் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 60 டன் மகசூல் தரக் கூடியது.

ஆப்பிரிக்கன் மகோகனி (காயா) - மேட்டுப்பாளையம்.1: பிளைவுட் தொழிற்சாலைகளுக்கு ஏற்றது. 4 மீட்டருக்கு 4 மீட்டா் இடைவெளியில் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 250 மரக்கன்றுகள் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 150 டன் மகசூல் தரக் கூடியது. இறவை, மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.



Read in source website

இந்திய குடிமகனாக இல்லாதோருக்கு குடும்ப அட்டை அளிக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து, அந்தத் துறையின் ஆணையா் வெ.ராஜாராமன் அலுவலா்களுடன் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட உத்தரவு: நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, அரிசி அட்டைதாரா்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. விற்பனை முனைய இயந்திரத்தின் பதிவுக்குப் பிறகே, வேஷ்டி, சேலைகளை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளரால் பெற்றுக் கொள்ளப்பட்ட வேஷ்டி, சேலை எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உடனடியாக குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இருப்பு வைத்து விநியோகம் செய்யாமல் இருக்கக் கூடாது.

இந்திய குடிமகன்: நியாயவிலைக் கடைகளை தினமும் சரியாக காலை 9 மணிக்குத் திறக்க வேண்டும். பொருள்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள் உறுதி செய்ய வேண்டும். கடை திறக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவதை, சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு ஆணையரகமே நேரடியாகக் கண்காணிக்கும். கடை திறக்கப்படாதபட்சத்தில், அதற்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும்.

ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காத நபா்களை நேரடியாக வங்கியில் சென்று இணைக்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். எந்தப் பொருள்களும் விற்பனை செய்யாமல், கடை திறக்காமல் உள்ள நியாயவிலைக் கடைகளைக் கண்காணிக்க வேண்டும். இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், மாநில ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களுக்கு தனித்தனியாக ரசீதுகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நபா் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருள்கள் பெற்றால் அவரின் விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். அதுதொடா்பாக கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

மொழிவழிச் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மொழிப் பாடத்தை அவரவா் தாய்மொழியில் எழுதிக் கொள்ள மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி அரசுத் தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அண்மையில் தமிழை கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களித்த நிலையில், அதைப் பின்பற்றி தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களும் பிப்.17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் www.ct.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐடி, பாஸ்வோ்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மொழி சிறுபான்மையினா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு பகுதி 1-இல் தமிழ்மொழிக்கு பதிலாக அவரவா் தாய்மொழிகளில் 2023-ஆம் ஆண்டில் பகுதி 1-இல் தோ்வெழுத தீா்ப்பாணை பெறப்பட்டுள்ளது.

பிப்.20 முதல் திருத்தம்...: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தங்கள் பள்ளி மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப்பட்டியலில் திருத்தங்கள் ( பெயா், பிறந்த தேதி, தாய் / தந்தை /பாதுகாவலா் பெயா், புகைப்படம், பகுதி-1 மொழிப்பாடம் உள்பட) இருப்பின் அவற்றை பிப்.20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான நாள்களில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ‘எமிஸ்’ போா்டலில் Nominal Roll பகுதிக்குச் சென்று அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாள்களில் ‘எமிஸ்’ போா்டலில் மேற்கொண்ட திருத்தங்கள் மட்டுமே DGE போா்டலில் ‘அப்டேட்’ செய்ய இயலும் என்பதால் அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தகுந்த பணியிடங்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ளாா்.

தனியாா் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், ஈரோடு மாவட்டம் சக்தி மசாலா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில், கூடுதலாக வேலூா் கலிஞ்சூரில் உள்ள சிமா்டெக் பிரைவேட் நிறுவனத்தின் இணை நிறுவனா் - முதன்மை செயல் அதிகாரி ராகுல் பரமசிவம்

சோ்க்கப்பட்டுள்ளாா். இந்தக் குழுவானது, தனியாா் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும், முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது எனவும் கோவையில் இதயவியல் சங்க மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். 
 



Read in source website



புதுதில்லி: பழங்குடியினரின் கலாச்சாரத்திற்கு பெரும் மதிப்பளிக்கும் வகையில், ‘ஆதி மஹோத்சவ்’ என்ற மெகா தேசிய பழங்குடியின விழாவை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்து, சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடியின மக்களுக்கு பெரும் மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்  ‘ஆதி மஹோத்சவ்’ என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருள்கள், உணவு பொருள்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் வியாழக்கிழமை (பிப்.16) முதல் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  ‘ஆதி மஹோத்சவ்’ இல் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.  

சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் சூழலில் பழங்குடியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அன்னா சிறுதானியமும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 



Read in source website

இந்தியா - சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையை (ஐடிபிபி) வலுப்படுத்தும் வகையில் புதிதாக 7 படைப் பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை வழங்கியது. இதன்மூலம் அந்தப் படைப் பிரிவில் கூடுதலாக 9,400 வீரா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

சீனாவின் அத்துமீறலைத் தடுக்க...: கிழக்கு லடாக் மற்றும் அருணாசலின் தவாங் பகுதி என அடுத்தடுத்து அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வரும் சூழலில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்புதலின்படி, படையில் புதிதாகச் சோ்க்கப்படும் வீரா்கள் இந்திய-சீன எல்லைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 47 எல்லை நிலைகள் மற்றும் 12 படை முகாம்களில் பணியமா்த்தப்பட உள்ளனா்.

இந்த எல்லைப் பகுதியில் 1962-இல் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான 3,488 கி.மீ. நீள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியைப் பாதுகாப்பதற்காக 90,000 வீரா்களுடன் வலுவான ஐடிபிபி காவல் படை உருவாக்கப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. அதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. தற்போது எல்லைப் பகுதியில் பழைய நிலையை அமல்படுத்துவதற்காக இரு தரப்பிலும் தொடா் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அருணாசல பிரதேசம் தவாங் பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரா்கள் முறியடித்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துக் கால நிலைக்கேற்ற சுரங்கப் பாதை: லடாக்கின் எல்லைப் பகுதிகளில் அனைத்துக் கால நிலைகளிலும் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிமு-பதாம்-டா்ச்சா சாலையை இணைக்கும் 4.1 கி.மீ. நீள ‘ஷின்குன் லா சுரங்கப் பாதை’ அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

2025-ஆம் ஆண்டு இறுதிக்குள்...: ‘மொத்தம் ரூ.1,681 கோடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப் பாதை கட்டுமானப் பணிகள் 2025-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். இதன்மூலம் லடாக் பகுதியை குறிப்பாக ஜன்ஸ்கா் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க முடியும்’ என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒப்பந்தம்: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான திட்டங்களை இணைந்து மேம்படுத்துவது தொடா்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே புந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி, அதிகரித்துவரும் மாற்றுத்திறனாளி முதியவா்களுக்குத் தேவைப்படும் நவீன, எளிதில் பயன்படுத்தக்கூடிய குறைந்த விலையிலான உபகரணத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள உள்ளன என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள்

இந்தியா முழுவதும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாத கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பால் பண்ணை - மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களை அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. தற்போது நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

‘இந்தக் கூட்டுறவு சங்கங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் மேம்படும் என்பதுடன், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளும் பெருகும்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

ரூ.4,800 கோடியில் வடக்கு எல்லை கிராம மேம்பாட்டுத் திட்டம்

இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள கிராமங்களின் விரிவான மேம்பாட்டுக்காக ‘ஒளிரும் கிராமங்கள் திட்டம்’ என்ற ரூ. 4,800 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2022-23 முதல் 2025-26 ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,500 கோடி வடக்கு எல்லை கிராமங்களின் சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

வடக்கு எல்லை கிராம மக்கள் வேலைவாய்ப்புக்காக புலம்பெயா்வதைத் தடுத்து, சொந்த கிராமங்களிலேயே அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும். இதன்மூலம் எல்லைப் பாதுகாப்பும் மேம்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 


நியூசிலாந்து வீரர் டாட் ஆஸ்ட்லே, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 5 டெஸ்டுகள், 9 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் 2012 முதல் 2021 வரை விளையாடியவர் டாட் ஆஸ்ட்லே. 2020-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஆஸ்ட்லே, தற்போது தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

உள்ளூர் கிரிக்கெட்டில் கேண்டர்பர்ரி அணிக்காக 300-க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் அந்த அணியின் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக உள்ளார். 



Read in source website

கரோனா பேராபத்து உயிரிழப்புகள் அதிகரித்ததால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹாங் காங்கின் மக்கள்தொகை குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வேலைத் தேடி ஹாங் காங் வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டில் மக்களாட்சி செயலிழந்து விட்டதாக ஹாங் காங்கில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 


2022 ஆம் ஆண்டு இறுதியில் ஹாங் காங்கின் மக்கள் தொகை 0.9 சதவிகிதம் குறைந்து 73 லட்சமாக மாறியது. இதனை அந்த நாட்டின் மக்கள்தொகை புள்ளியியல் கணக்கெடுப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதில், நாட்டில் இருந்து 60 ஆயிரம் பேர் வெளியேறியதாகவும், 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங் காங் சீனாவின் பூஜ்ஜியக் கரோனா திட்டத்தினைப் பின்பற்றியது. இதனால் அதிருப்தியடைந்த ஹாங் காங்கின் இளம் தலைமுறையினர் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். புதிதாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புக் கொள்கையே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில் எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறித்தத் தரவுகளை வெளியிடவில்லை. கடந்த ஆண்டின் இறுதிவரை யாரும் ஹாங் காங்குக்கு திரும்பவில்லை. பின்னர், அரசு கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின் சிலர் ஹாங் ஹாங் திரும்பத் தொடங்கினர். கடந்த ஆண்டின் முதல் பாதியில் பெரிய அளவிலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 முதல் 2025 ஆம் ஆண்டு இடைவெளியில் ஆண்டுக்கு 35 ஆயிரம் நபர்களை வேலைக்காக ஹாங் காங்கிற்கு வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாங் காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் லீ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பிரிட்டன் முடிசூட்டு விழாவின்போது அணிவதற்கு கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடத்தை அந்நாட்டு அரசி கமீலா தோ்வு செய்துள்ளாா்.

உலகின் பெரிய வைரங்களில் ஒன்றாக கோஹினூா் வைரம் திகழ்கிறது. 105.6 கேரட் எடை கொண்ட இந்த வைரம், காலனி ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிரிட்டன் முன்னாள் அரசி விக்டோரியாவுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அதனை திருப்பி அளிக்குமாறு பிரிட்டனிடம் இந்தியா கோரியுள்ளது.

இந்த வைரத்துக்கு ஆங்கிலேயா் ஆட்சியின்போது இந்தியாவின் அங்கமாக இருந்த பாகிஸ்தானும் உரிமை கோருகிறது. அத்துடன் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், அந்த வைரத்துக்கு ஆப்கானிஸ்தானும் உரிமை கோரி வருகிறது.

இந்நிலையில், வரும் மே மாதம் பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டு அரசராக சாா்லஸுக்கும், அரசியாக சாா்லஸின் மனைவி கமீலாவுக்கும் முறைப்படி முடிசூட்டப்பட உள்ளது. இந்த விழாவின்போது கோஹினூா் வைரம் தாங்கிய மணிமகுடத்தை கமீலா அணிவாா் என்று அதிகம் எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், முடிசூட்டு விழாவின்போது அணிய கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடத்தை கமீலா தோ்வு செய்துள்ளதாக பிரிட்டன் அரச இல்லம் அறிவித்துள்ளது. ராஜீய காரணங்களால் அந்த வைரம் மணிமகுடத்தில் இடம்பெறுவது தவிா்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கோஹினூா் வைரத்தைப் போன்றதொரு வைரம் மணிமகுடத்தில் இடம்பெறக்கூடும் என்று கருதப்படுகிறது.

கடைசியாக சாா்லஸின் பாட்டியும் பிரிட்டன் முன்னாள் அரசியுமான எலிசபெத் ஏஞ்செலா மாா்கரீட்டின் மணிமகுடத்தில் கோஹினூா் வைரம் இடம்பெற்றது. எலிசபெத் ஏஞ்சலொ மாா்கரீட் 2002-ஆம் ஆண்டு காலமானாா்.



Read in source website

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இந்தியா சாா்பில் நடத்தப்படும் சிறுதானியங்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டு சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக நடப்பு 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபையின் தலைமை அலுவலகத்தில் சிறுதானியங்கள் கண்காட்சியை இந்தியா ஏற்பாடு செய்தது. இந்தியாவில் பயிரிடும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் கொழுப்பு உள்ளடக்கம் குறித்து உலக அரங்குக்கு எடுத்துரைக்கும் விதமாக கண்காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியில் பங்கேற்றனா்.

சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக 2023-ஆம் ஆண்டைத் தோ்வு செய்ய இந்தியா எதற்காக வலியுறுத்தியது மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குக்கு சிறுதானியங்கள் எவ்வாறு தீா்வாக இருக்கும் என்பது குறித்து கண்காட்சியில் பங்கேற்றவா்களுக்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் விளக்கமளித்தாா்.

இவரைத் தொடா்ந்து, இந்தியாவின் கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் ‘மிா்தா’ நிறுவனத்தின் இயக்குனா் அருண் நக்பால் பேசினாா். பண்ணையில் இருந்து உணவு தயாரிக்கும் கூடம் வரை சிறுதானியங்களின் பயணம் குறித்து அவா் விவரித்தாா்.

பின்னா், ஐ.நா. துணைச் செயலா் அமினா முகமது மற்றும் செயலகத் தலைவா் கோா்டனே ராட்ரே ஆகியோரின் உரையுடன் கண்காட்சி தொடங்கியது.

கண்காட்சியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் சுவைப்பதற்காக சிறுதானியங்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜ.நா. பொதுச் சபையின் பிரதிநிதிகள் நுழைவு வாயில் அருகே உள்ள கண்காட்சி அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 17) வரை சிறுதானியங்கள் கண்காட்சி நடைபெறும்.



Read in source website

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் விசா மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததையடுத்து அந்த மையத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழா்கள் வசிக்கின்றனா். மேலும், அந்நாட்டின் பல தொழிலதிபா்கள் இந்தியாவுடன் வா்த்தகத் தொடா்பில் உள்ளனா். இதனால், பணிநிமித்தமாக மற்றும் உறவுகளைச் சந்திக்க இந்தியாவுக்கு பலா் பயணிப்பது வழக்கம்.

இந்தியாவுக்கு இவா்கள் பயணிக்க அனுமதி வழங்கும் விசா விண்ணபிக்கும் மையமாக கொழும்பில் உள்ள ஐ.வி.எஸ். தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

பாதுகாப்பு குளறுபடிக்கான காரணங்கள் குறித்து இலங்கை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், ஐ.வி.எஸ். தனியாா் நிறுவனத்தில் செயல்பட்டு வந்த விசா மையத்தின் சேவைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. வரும் நாள்களில் விசா சேவைக்காக பதிவு செய்திருந்தவா்கள், மறு அறிவிப்புக்கு பின்னா் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என இலங்கைக்கான இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவித்தது.



Read in source website

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது. இதில் 2 பல்லவர்கள் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டறிப்பட்டன.

ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் புதைந்த நிலையில் இரண்டு நடுகற்களையும் வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் இரண்டு நடுகற்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நடுகல் கல்வெட்டை படித்து விளக்கமளித்த தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் கூறியதாவது, "ஒரு நடுகல் வீரர் உருவம் ஒன்றும், அதில் இடது கையில் கேடயமும் வலது கையில் வாளும் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கச்சையும் அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடபுறத்தில் வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இது வெட்டப்பட்டதென்றும், இதில் காட்டி சாமி என்பவர் கீழ் வாளப்பாடி மாத விண்ணனோடு ஆநிரைகளை மீட்டு பூசலில் ஈடுபட்டு புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்துபோனதை குறிப்பிடுகிறது.

மற்றொரு நடுகல்லில் வீரன் உருவத்தில் வலது கையில் குறுவாளும் இடதுகையில் வில்லும் கொண்டு போருக்கு ஆயத்தமாகும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் இடதுபுறம் உள்ள வட்டெழுத்தில் பல்லவ மன்னன் சிங்க விஷ்ணுவின் பதினொராவது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். இந்த கல்வெட்டில் வேணாட்டு புஞ்சி மல்ல நக்கன் என்பவர் புஞ்சியில் நடந்த பூசலில் ஆநிரைகளை மீட்டு அதன் பின் இறந்து போனதைக் குறிப்பிடுகிறது என்றும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த நடுகற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது " எனத் தெரிவித்தார்.

தென்பெண்ணையாற்றின் கரையே அமைந்துள்ள இந்த வேடியப்பன் கோயிலில் மண்ணில் புதைந்திருந்த நடுகற்களை மீட்டு, ஆய்வு நடுவத்தினரும் ஊர்மக்களும் இணைந்து அதே இடத்தில் அடிபீடம் அமைந்து நிலையாக நிற்கவைக்கப்பட்டது.

தென்பெண்ணையாற்றின் கரையில் ஏற்கனவே திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுபோல மண்ணில் புதைந்த நிலையில் இன்னும் நடுகற்கள் கிடைப்பதினால் தென்பெண்ணையாற்றின் இருகரைகளிலும் உள்ள ஊர்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல அரிய வரலாற்றுத் தடங்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் இந்த நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த பகுதியை நடுகல் மண்டலமாக அறிவித்து நடுகற்களையும் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முன்வரவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



Read in source website

சென்னை: மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் மாணவர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட 150 சிறிய செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் பிப்.19-ம் தேதி ஏவப்பட உள்ளது. இதற்கு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டம்-2023 என பெயரிடப்பட்டுள்ளது.

சவுண்டிங் ராக்கெட்: இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

அப்போது ஸ்பேஸ் ஜோன்பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஆனந்த் மேகலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 5,000 மாணவர்கள் மூலம் 150 சிறியரக செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் பிப். 19-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 2,000 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் சவுண்டிங் ராக்கெட்டையும் எங்கள் குழுவினரே தயாரித்துள்ளோம். 3 மீட்டர் உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் எடை 65 கிலோவாகும். சுமார் ரூ.2.5 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரையில் இருந்து 5 முதல் 6 கிமீதூரத்துக்கு வானில் பாய்ந்து செல்லும் இந்த ராக்கெட்டுக்குள் இருக்கும் செயற்கைக் கோள்கள் மூலம் காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, வெப்பநிலை, காற்றின் அழுத்தம், கார்பன் அளவு உட்பட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்க முடியும்.

19 நிமிடங்களில்...: மேலும், வானில் செயற்கைக் கோள்களை செலுத்திய பின்பு கடலில் விழும் ராக்கெட் பகுதிகளை மீண்டும் நம்மால் பயன்படுத்த முடியும். சுமார் 19 நிமிடங்களில் இந்த ஏவுதல் திட்டம் முழுமையடையும். இது இந்தியாவிலேயே முதல் முயற்சியாகும். விரைவில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மார்ட்டின் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜார்ஜ் மார்ஷல், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read in source website

சென்னை: மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான காவல் பணித் திறனாய்வுப் போட்டியில், சென்னை மத்தியக் குற்றப் பிரிவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் தங்கப் பதக்கம் வென்றார்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அனைத்திந்திய 66-வது காவல் பணித் திறனாய்வுப் போட்டிகள் கடந்த 13-ம்தேதி தொடங்கின. வரும் 17-ம்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

அறிவியல் சார்ந்த புலனாய்வு, கணினி விழிப்புணர்வு, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு, நாசவேலை தடுப்பு சோதனை, மோப்ப நாய்களின் திறமை ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அறிவியல் சார்ந்த புலனாய்வுப் போட்டியில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 60 போலீஸார் பங்கேற்றனர். இதில், தமிழக காவல் துறை அணியைச் சேர்ந்த, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவில் பணிபுரிந்து வரும் முதல்நிலைக் காவலர் எம்.ஆனந்த பெருமாள் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார். காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.



Read in source website

பெங்களூரு: எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது விரைவில் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றும் சதானந்த் சவுகான் உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கணினி பொறியாளரான சதானந்த் சவுகான், ரேடியோ அலைவரிசை அடிப்படையில் இதனை உருவாக்கியுள்ளார். இது எல்லையில் சில இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் குறித்து சதானந்த் சவுகான் கூறும்போது, “இந்த சாதனம் அதன் செயல்பாட்டு நோக்கங்களை அடைந்துள்ளது. துருப்புக்களிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் வந்துள்ளன. எதிரிகளின் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வதற்கான தொலைவை நாங்கள் அதிகரிக்க முயன்று வருகிறோம். படைகளின் தேவைக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களை செய்வோம்” என்றார்.

சதானந்த் சவுகான் தனது புதிய ட்ரோன் எதிர்ப்பு சாதனம் குறித்து, ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வந்த ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜுவுக்கு விளக்கம் அளித்தார்.

வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வாகன அடிப்படையிலான ட்ரோன் ஜாமர்களை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இவற்றை சப்ளை செய்ய விரும்புவோர் அதற்கான கோரிக்கைகளை முன்வைக்குமாறு கடந்த மாதம் கேட்டுக்கொண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் தென்மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் எல்லைக்கு அப்பாலிருந்து ட்ரோன்களை இந்த ராணுவம் கண்டறிந்துள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ட்ரோனுக்கும் அதை இயக்குவோருக்கும் இடையிலான ரேடியோ அலைவரிசை இணைப்பில் குறுக்கீடு செய்து ட்ரோனை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஹைதராபாத்: மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண் டையொட்டி, விரைவில் அவரது உருவப்படம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.

என்.டி. ராமாராவ் சினிமா துறையில் கால்பதித்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். பின்னர், காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய ஆந்திர மாநிலத்தில், 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியை பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார்.

1983-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்திய என்.டி.ராமாராவ் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தினார்.

ஆந்திராவில் காங்கிரஸ் அல்லாத முதல்வராக முதலில் அரியணை ஏறியவர் என்.டி. ராமாராவ். இவர் கடந்த 1923-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி பிறந்தார். தற்போது என்.டி. ராமாராவின் நூற்றாண்டு நடைபெற்று வருகிறது. இதை பெருமைப்படுத்தும் வகையில், மத்திய அரசு விரைவில் என்.டி.ராமாராவ் உருவப்படம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களை தேர்வு செய்ய நேற்று என்.டி.ஆரின் மகளும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான புரந்த ரேஸ்வரியை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில், மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் சிலர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் என்.டி.ஆரின் 3 புகைப்படங்களை சேகரித்து சென்றுள்ளனர்.



Read in source website

பெங்களூரு: பெங்களூரு எலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியில் ரஷ்யா சார்பில் 200 வகையான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரஷ்ய ராணுவ சேவை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பின் இயக்குநர் திமித்ரி சுகாயேவ், ரஷ்ய அரசு ஊடகமான டாஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யும் நாடுகளில் ரஷ்யா முன்னணியில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.10.75 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளோம்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கக் கூடாது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவை நிர்பந்தம் செய்து வருகின்றன. எனினும் ரஷ்யா, இந்தியா இடையிலான வர்த்தக, பாதுகாப்பு உறவு வலுவடைந்து வருகிறது.

சுகோய் எஸ்.யு.30 போர் விமானம், மிக் 29 போர் விமானம், எம்ஐ17, எம்.ஐ-24, எம்.ஐ-35, கே.ஏ.-28, கே.ஏ.-31 ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம். எஸ்-400 ரக ஏவுகணைகள், பெச்சோரா -2M ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளோம். தரையில் இருந்து வான்வெளி இலக்கை தாக்கும் பான்ட்சர் ஏவுகணைகள், வீரர்களின் தோளில் வைத்து செலுத்தும் ஸ்டிரிலா -2எம் ரக ஏவுகணைகள், ஆர்லான்-10 ரகத்தை சேர்ந்த ட்ரோன்களையும் இந்தியாவுக்கு அளித்துள்ளோம்.

இவ்வாறு திமித்ரி சுகாயேவ் தெரிவித்தார்.

ரஷ்யாவின் முன்னணி ஊடக மான ஆர்.டி. வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இப்போதைய நிலையில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படையில் பெரும் பாலும் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களே பயன்பாட்டில் உள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் குவாட் கூட்டமைப்பு கூட்டம் இந்த ஆண்டு மத்தியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துப் பேச உள்ளனர். செப்டம்பரில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின்போதும் இருவரும் சந்தித்துப் பேசுவார்கள்.

அதற்கு முன்பாக வரும் மே மாதம் கோவாவில் நடைபெறும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப் பின் மாநாட்டில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்துச் பேச உள்ளனர். அப்போது இருதரப்பு வர்த்தக, பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படும். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Read in source website

புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:

நாடு முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள், அமைப்புகளை பலப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு கடன் சங்கங்களை நாடு முழுவதும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதை கிராமப்புற அளவில் இருந்து அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் இந்த சங்கங்களை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண், பால்பண்ணை, மீன்வள கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்கித் தரும்.

இந்த கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை, சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள், பால் வியாபாரம் செய்வோர், மீனவர்கள் பெறுவார்கள். மேலும் அவர்கள் பொருட்கள் வாங்க கடன் உதவியும் வழங்கப்படும். இதையடுத்து அவர்களது வருமானம் அதிகரிக்கும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உள்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த செயல் திட்டத்தை சுமுகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பொருளாதாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவற்றை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் கூட்டுறவு சங்கங்களை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு: வட மாநிலங்களில் எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ‘எழுச்சிமிகு கிராமங்கள்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2025-26 வரை இத்திட்டத்துக்கு ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையை வலுப்படுத்தவும் ஒப்புதல்: சீன நாட்டுடன் எல்லை பிரச்சினையில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் எல்லை பகுதியில் நமது துணை ராணுவப் படையான இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையை (ஐடிபிபி) வலுப்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஐடிபிபி பிரிவில் கூடுதலாக 7 பட்டாலியன்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பட்டாலியன்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கான அனுமதியை தந்துள்ளது.

இதேபோல, மத்திய ஆயுத போலீஸ் படையையும் (சிஏபிஎஃப்) வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எல்லை பகுதியில் புதிதாக 47 கண்காணிப்புச் சாவடிகள் அமைக்கப்படும். அருணாச்சல் பகுதியில் அதிக அளவில் எல்லைச் சாவடிகள் அமைக்கப்படும்.

புதிதாக எல்லைச் சாவடிகள் அமைத்தல், குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதற்காக ரூ.1,808.15 கோடி செலவிடப்படும் என்றும் அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.



Read in source website

கொல்கத்தா: இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் துளசிதாஸ் பலராம் காலமானார். அவருக்கு வயது 87. அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என போற்றப்படும் 1951-62 காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய வீரர். இந்திய கால்பந்து விளையாட்டின் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் என்றும் போற்றப்படுகிறார். முன்கள வீரர். 1956 மற்றும் 1960 ஒலிம்பிக்கில் விளையாடியவர். 1962 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் விளையாடியவர்.

கடந்த 1936, அக்டோபர் 4-ம் தேதி செகந்திராபாத் பகுதியில் வாசித்த தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தஞ்சாவூரில் இருந்து அவரது குடும்பம் அங்கு புலம் பெயர்ந்துள்ளது. தனது மூத்த சகோதரர்களை பார்த்து கால்பந்து விளையாட தொடங்கி உள்ளார். அங்கிருந்து தொடங்கிய அவரது கனவுப் பயணம் இந்திய அணிக்காக விளையாடுவது வரை நகர்ந்தது. 1962-ல் அர்ஜுனா விருதை வென்றார். 1963-ல் உடல்நலன் சார்ந்த சிக்கலால் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டில் கோல் பதிவு செய்தவர்.

இந்தியக் கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் இவர், 1960 ஒலிம்பிக்கில் ஹங்கேரிக்கு எதிராக பதிவு செய்த ஒரு கோல், இவர் பதிவு செய்த கோல்களில் சிறந்த கோல் என அறியப்படுகிறது.

உடல்நல கோளாறு காரணமாக கடந்த டிசம்பரில் மருத்துவமனையில் பலராம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தனது 87 வயதில் மறைந்தார்.



Read in source website

கேப் டவுன்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா.

நடப்பு டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன்மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா படைத்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி ஷர்மா பெற்றார். ஆடவர் அணியை பொறுத்தவரை டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 91 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா. மேற்கிந்திய தீவுகள் வீராங்கனை அனிசா முகமது 125 விக்கெட்கள் வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

முன்னதாக, இன்றைய ஆட்டத்தில் சிறந்த பிளேயர் விருது வென்றதும் இவர்தான். இன்றைய ஆட்டத்துக்குப் பின் பேசிய தீப்தி, "ட்ரெஸ்ஸிங் ரூமில் விவாதித்த திட்டங்களை களத்தில் செயல்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனை உண்மையில் எனக்கு ஒரு மைல்கல். இதில் கூடுதல் மகிழ்ச்சி. மீதமுள்ள உலகக் கோப்பை ஆட்டங்களில் கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.

25 வயதாகும் தீப்தி சர்மா, சமீப காலமாக இந்திய அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவரை திங்கள்கிழமை நடந்த மகளிர் பிரீமியர் லீக் WPL ஏலத்தில் எடுக்க கடும்போட்டி நிலவியது. இறுதியில், 2.6 கோடி ரூபாய்க்கு தனது சொந்த மாநில அணியான உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் தீப்தி.



Read in source website

கொழும்பு: இலங்கையில் ஓர் ஆண்டுக்குப் பிறகு தடையற்ற மின்சார விநியோகம் இன்று தொடங்குவதாக, அந்நாட்டு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பெரும் கடன் நெருக்கடியில் இலங்கை சிக்கியதை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் தொடர் மின்வெட்டு இருந்து வந்தது. நாள்தோறும் ஒரு மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்து வந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நோக்கில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை 2.9 பில்லியன் டாலர் கடன் கோரி இருந்தது. இந்தக் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது.

இந்த நிபந்தனையை ஏற்று, இலங்கை அரசு மின்கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 70 சதவீத மின் கட்டணத்தை உயர்த்திய இலங்கை அரசு, கடந்த 6 மாதங்களில் இருமுறை 66 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அரசின் இந்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின் கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. எனினும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற இலங்கை அரசு மறுத்துவிட்டது.

அதேநேரத்தில், இலங்கையில் தடையற்ற மின்சார விநியோகத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டிருந்தார். அதிபரின் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார வாரியமான சிலோன் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுக்கு இணங்க மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவி பெறுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என கூறியுள்ளார். ஓராண்டுக்குப் பிறகு தடையற்ற மின்சாரம் கிடைத்தாலும், அதற்காக தாங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



Read in source website

பியாங்யாங்: வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. அந்த வகையில் புதிதாக ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது வடகொரியா. அந்த உத்தரவின்படி, அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது கிம்மின் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிம் ஜு ஏ என்ற பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஒருவாரத்திற்குள் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் தனது குழந்தைகளின் புகைப்படங்களை கடந்த சில ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக கிம்மின் மகள் கிம் ஜு ஏ பொதுவெளியில் தனது தந்தையுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது.

வடகொரியா தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடு. அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப் பின்புதான் வெளியாகும். கிம்மின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது.

மேலும் அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும் மக்களுக்கு மரண தண்டனைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்து வருகிறது.



Read in source website

சென்னை: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம்தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் 2021-22 ஆண்டில் ஈட்டிய வருவாய் மற்றும் லாபம், நஷ்டம் தொடர்பான தகவலை மாநிலங்களவையில் சிவில் விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் சமீபத்தில் அளித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, 2021-22 ஆண்டில் இந்தியாவில் அதிக நஷ்டம் அடைந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. 2021-22 நிதியாண்டில் சென்னை விமான நிலையம் 189.85 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 278.63 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சென்னை விமான நிலையத்திற்கு 12,380 விமானங்கள் வந்து சென்றுள்ளது. இதில் 17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், 2024-ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டு ஒன்றுக்கு 5.5 கோடியாக உயர்த்தவும், ஒரு மணி நேரத்திற்கு 65 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. கோவை விமான நிலையம் 28.51 கோடி ரூபாய், மதுரை விமான நிலையம் 41.20 கோடி ரூபாய், சேலம் விமான நிலையம் 5.61 கோடி ரூபாய், திருச்சி விமானம் நிலையம் 19.17 கோடி ரூபாய், தூத்துக்குடி விமான நிலையம் 13.97 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மேலும் புதுவை விமான நிலையமும் 12.36 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.



Read in source website

1932 இல் ஆங்கில மொழி வானொலி சேவையுடன் தொடங்கப்பட்ட நாட்டில் அதன் இருப்பு பல தசாப்தங்களில் ஒரு முழு அளவிலான செய்தி ஒளிபரப்பாளராக உருவெடுத்தது.

1932 இல் இந்தியாவில் அறிமுகம் ஆனபோது, British Broadcasting Company ஒரு ஏகாதிபத்திய ஒளிபரப்பாளராக இருந்தது, அதன் வெளிநாட்டு முயற்சிகள் பெரும்பாலும் அந்த அடையாளத்துடன் தொடர்புடையவை. இருப்பினும், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், BBC (Now British Broadcasting Corporation), ஒரு சுதந்திரமான வெளிநாட்டு ஒளிபரப்பாளராக தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேலை செய்தது.

இடையில், அதன் இந்திய நடவடிக்கைகளை குறுகிய காலம் நிறுத்த வேண்டிய இரண்டு சம்பவங்கள் நடந்தன – 1970 மற்றும் 1972 க்கு இடையில் ஒரு முறை இந்தியாவை மோசமான வெளிச்சத்தில் காட்டிய இரண்டு ஆவணப்படங்களை ஒளிபரப்பியதற்காகவும், மீண்டும் 1975ல், எமர்ஜென்சியின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் வெளியேற்றப்பட்டது.

ஏப்ரல் 2017 இல், இந்தத் தாளின் அறிக்கையின்படி, “இந்தியாவின் நற்பெயருக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத சேதத்திற்காக” பிபிசியை இந்தியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் படம்பிடிப்பதை அரசாங்கம் தடை செய்தது. பிபிசி ஆவணப்படங்கள் மற்றும் செய்தி அறிக்கைகளை படமாக்க ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பிபிசியை மிகவும் தவறான அறிக்கைக்காக விமர்சித்தது, மேலும் அசாமில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகத்திற்கான அரசாங்கத்தின் “இரக்கமற்ற வேட்டையாடுதல் எதிர்ப்பு உத்தி”யை எடுத்துக்காட்டும் ஆவணப்படத்திற்காக பிபிசியின் தெற்காசிய நிருபர் ஜஸ்டின் ரவுலட்டை தடுப்புப்பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தது.

எனவே, 2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு பற்றி பேசும் இரண்டு ஆவணப்படங்கள் ஒளிபரப்பப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்துடனான தற்போதைய நெருக்கடி, நிறுவனத்தை பொறுத்தவரை அசாதாரணமானது அல்ல.

செவ்வாய்க்கிழமை பிபிசி இந்தியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

1932 இல் ஆங்கில மொழி வானொலி சேவையுடன் தொடங்கப்பட்ட நாட்டில் அதன் இருப்பு பல தசாப்தங்களில் ஒரு முழு அளவிலான செய்தி ஒளிபரப்பாளராக உருவெடுத்தது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமல்ல, பல பிராந்திய மொழிகளிலும் இது செய்திகளை வழங்குகிறது. இதில் பெங்காலி, நேபாளி, தமிழ், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகியவை அடங்கும்.

பிபிசி இணையதளத்தின்படி, 1924 ஆம் ஆண்டில், அதன் பொது மேலாளர் ஜான் ரீத், இந்தியாவில் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு அமைப்பு “இந்தியப் பேரரசின் அனைத்து பகுதிகளுக்கும் இடையே இணைப்பை” வழங்க முடியும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்திய அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

உண்மையில், அதன் டெல்லி பீரோ தான், வெளிநாடுகளில் இருப்பதிலே மிகப்பெரியது. 1970 களில் டெல்லி பீரோவில் மார்க் டுல்லி பொறுப்பேற்றபோது பிபிசியின் இந்திய அறிக்கை மிகவும் பிரபலமானது.

சதீஷ் ஜேக்கப் உடன், அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பற்றிய டுல்லியின் கவரேஜ் மற்றும் அதன் பின்விளைவுகள், இருவரையும் நன்கு அறிந்த பெயராக மாற்றியது, மேலும் அவர்களின் அறிக்கைகள் அடுத்த ஆண்டுகளில் ஒரு சான்றாக மாறியது.



Read in source website

சீனா பறக்கவிட்ட பலூன்கள் கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கு பெரியவை ஆகும்.

அமெரிக்காவும் சீனாவும் உயரமான பலூன்கள் மூலம் உளவு பார்த்ததாக அசாதாரணமான மோதலில் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம், அமெரிக்கா தனது வான்வெளி மற்றும் கனடாவின் வான்வெளியில் பறந்து வந்த அடையாளம் தெரியாத மூன்று ‘பொருள்களை’ சுட்டு வீழ்த்தியது. கீழே விழுந்த பொருள்கள் இன்னும் மீட்கப்படாததால், இவை பலூன்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதில் முதல் சம்பவம் பிப்.4ஆம் தேதி நடந்தது. அப்போது, “ஆராய்ச்சி நோக்கங்களுக்காக ஒரு சீன பலூன் தற்செயலாக காற்றினால் பறந்தது” என பெய்ஜிங் விளக்கம் அளித்தது.
இதனை மறுத்த அமெரிக்கா சீன பலூன்கள் 4 முறை அமெரிக்க எல்லைக்குள் வந்ததாக கூறியது.
இதற்குப் பதில் குற்றஞ்சாட்டு கூறிய சீனா, “அமெரிக்க பலூன்கள் 10க்கும் மேற்பட்ட முறை தங்கள் நாட்டுக்குள் நுழைந்தது என குற்றஞ்சாட்டியது.

உயரமான பலூன்கள்

பலூன்கள் இப்போது பல தசாப்தங்களாக அடிக்கடி பயன்பாட்டில் உள்ளன, இருப்பினும் முதல் பயன்பாடுகள் குறைந்தது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

அவை முக்கியமாக அறிவியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சுற்றுலா மற்றும் மகிழ்ச்சி சவாரிகள், கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

பெரிய பலூன்கள் ஒரு கால்பந்து மைதானம் போல பெரியதாக இருக்கும், தரையில் இருந்து 40-50 கிமீ வரை சென்று, சில ஆயிரம் கிலோகிராம் பேலோடுகளை சுமந்து செல்லும்.

இவற்றில் பெரும்பாலானவை பொதுவான பிளாஸ்டிக் பைகள் போன்ற மெல்லிய பாலிஎதிலீன் தாள்களால் கட்டப்பட்டுள்ளன, மேலும் அவை பெரும்பாலும் ஹீலியம் வாயுவால் நிரப்பப்படுகின்றன.

பலூன்கள் சில மணிநேரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை எங்கும் பறக்க முடியும். காற்றில் நீண்ட நேரம் இருக்கவும், வளிமண்டலத்தில் உயரமாகச் செல்லவும் முடியும்..

மேலும், பலூன்களில் பொதுவாக கருவிகள் அல்லது மனிதர்களை சுமந்து செல்லும் கோண்டோலாக்கள் எனப்படும் கூடை இணைக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களில், கோண்டோலாக்களும் பாராசூட்டில் இணைக்கப்பட்டிருக்கும். பலூனின் வேலை முடிந்ததும், கோண்டோலாவில் உள்ள ஒரு சாதனம் பலூனுடனான அதன் உறவுகளை முறித்து, பலூனின் துணியில் ஒரு சிதைவை உருவாக்க தூண்டுகிறது.

பாராசூட்டின் உதவியுடன், கோண்டோலா பூமியை நோக்கிச் செல்கிறது, அதைத் தொடர்ந்து உடைந்த பலூன். சாத்தியமான தரையிறங்கும் மண்டலம் வானிலை நிலைமைகளின் அடிப்படையில் விமானத்திற்கு முன்னதாக கணக்கிடப்படுகிறது.

அறிவியல் பணிகள்

பலூன்களின் மிகவும் பொதுவான பயன்பாடு அறிவியல் ஆராய்ச்சியில் உள்ளது. ஒரு வகையில், விண்வெளி யுகம் உதயமாவதற்கு முன்பே, கருவிகள் பொருத்தப்பட்ட பலூன்கள் செயற்கைக்கோளின் செயல்பாடுகளைச் செய்ய முடிந்தது.

மேம்பட்ட செயற்கைக்கோள்களின் காலங்களில் கூட, பலூன்கள் மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படும் சூழ்நிலைகள் உள்ளன. காற்றின் வெப்பநிலை, அழுத்தம், காற்றின் வேகம் மற்றும் திசை, ஏரோசல் செறிவு போன்ற அளவீடுகளைச் செய்ய வானிலை ஏஜென்சிகள் வழக்கமாக பலூன்களைப் பயன்படுத்துகின்றன.

இன்றைய ராட்சத பலூன்கள் அடையக்கூடிய உயரம் காரணமாக, அவை வானியற்பியல் வல்லுநர்களுக்கும் விண்வெளி நிறுவனங்களுக்கும் கூட பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.

இவை ஒப்பீட்டளவில் தெளிவான இடங்களாகும், விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு மிக அதிகமாகவும், பூமியிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சுற்றுப்பாதைகளுக்கு மிகக் கீழே, செயற்கைக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும், அவை பூமியின் குறிப்பிட்ட பகுதிகளை அவதானிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன, மேலும் செயற்கைக்கோள்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு மலிவானவை.

மேலும், பலூன்கள் அவற்றின் வேலை முடிந்ததும் கீழே கொண்டு வரப்படுவதால், பயன்படுத்தப்பட்ட கருவிகள் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.

நாசா ஒரு முழு அளவிலான பலூன் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு ஆண்டும் நான்கு அல்லது ஐந்து ஏவுதல்களை செய்கிறது. பல பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பலூன்களைப் பயன்படுத்துகின்றன.

பலூன் அடிப்படையிலான சோதனைகள் 1936 மற்றும் 2006 இல் இயற்பியலுக்கான குறைந்தபட்சம் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளன.

கண்காணிப்பு

உயரமான பலூன்கள் உளவு நடவடிக்கைகளுக்கு தூண்டும் வாகனங்கள், இருப்பினும் அவற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானதாக தெரியவில்லை.
ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன, மேலும் உளவு விமானங்கள் முதலாம் உலகப் போருக்குப் பிறகு பயன்பாட்டில் உள்ளன.

ஆனால் இங்கே மீண்டும், பலூன்கள் சில நன்மைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் ஒரு பகுதியில் நீண்ட நேரம் வட்டமிட முடியும்.
பெரிய பலூன்கள் சில ஆயிரம் கிலோகிராம் பேலோடை சுமந்து செல்ல முடியும், அதாவது உளவு கருவிகளுடன் நிரம்பியிருக்கும்.

மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அவர்கள் கண்டறியப்படாமல் இருப்பதற்கான அதிக வாய்ப்பு. அவற்றின் ஒப்பீட்டளவில் மெதுவாக இயக்கம் காரணமாக, பலூன்கள் பெரும்பாலும் பாதுகாப்பு ரேடார்களால் பறவைகளாக பார்க்கப்படுகின்றன.
இதனால் கவனத்தைத் தவிர்க்கின்றன. உண்மையில், மெதுவாக நகரும் பொருட்களைக் கண்டறிய அதன் ரேடார் அமைப்புகளை மறுசீரமைப்பதாக அமெரிக்கா இப்போது கூறியுள்ளது.

பலூன்களில் ஒரு விமானம், ட்ரோன் அல்லது செயற்கைக்கோள் ஆகியவற்றின் அதிநவீன வழிசெலுத்தல் அமைப்புகள் இல்லை, அவை காற்றின் வேகம் மற்றும் திசையின் கருணையின் அடிப்படையில் உள்ளன.
ஆனால் பிப்ரவரி 4 ஆம் தேதி வீழ்த்தப்பட்ட பலூனில் ஒரு சோலார் பேனல் இணைக்கப்பட்டதாகத் தோன்றியது, இது ஒரு உள் உந்து சாதனத்தை இயக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் பலூன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, முதன்முதலில் காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிக்காக ஹோமி பாபாவால் 1948 இல் அனுப்பப்பட்டது.

மும்பையை தளமாகக் கொண்ட டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) 1950களில் பலூன் புனையமைப்புப் பணியைத் தொடங்கியது, மேலும் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பல பலூன் விமானங்கள் தொடங்கப்பட்டன.

சில சமயங்களில், 1969 ஆம் ஆண்டில், TIFR ஹைதராபாத்தில் ஒரு முழு அளவிலான பலூன் வசதியைத் திறந்தது, இது இந்தியாவின் மிகப்பெரிய வசதியாக இன்றும் உள்ளது. பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இதைப் பயன்படுத்தி இதுவரை 500க்கும் மேற்பட்ட விமானங்களைத் தொடங்கியுள்ளனர்.

இஸ்ரோவின் கீழ் உள்ள விண்வெளி நிறுவனங்கள் மற்றும் புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் போன்ற வானிலை ஆராய்ச்சி நிறுவனங்களால் இது தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் மற்றும் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் பலூன் திட்டங்களைக் கொண்டுள்ளன.



Read in source website

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் (MCLR) விளிம்பு விலையை 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளன. இதற்கான காரணம் என்ன, அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ENS Economic Bureau

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தியதைத் தொடர்ந்து, பல கடன் வழங்குபவர்கள் (வங்கிகள்) தங்கள் நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் விளிம்புச் செலவை (MCLR) 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளனர், இது கடன் வாங்குபவர்களுக்கு அதிக சமமான மாதாந்திர தவணையை (EMI) விளைவிக்கும்.

ஏன் உயர்வு

கடந்த வாரம், ரிசர்வ் வங்கி அதன் பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தை, அதாவது வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதத்தை, 25 பிபிஎஸ் முதல் 6.5 சதவீதமாக உயர்த்தியது, மே 2022 முதல் முக்கிய விகிதத்தில் ஒட்டுமொத்த அதிகரிப்பு 250 பிபிஎஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: காணாமல் போன துணை சபாநாயகர் பதவிகள்; அரசியலமைப்பு கூறுவது என்ன?

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI) பிப்ரவரி 15, 2023 முதல் அனைத்து தவணைக்காலங்களிலும் அதன் MCLR ஐ 10 bps அதிகரித்துள்ளது. ஒரே இரவில் MCLR 10 bps அதிகரித்து 7.95 சதவீதமாக உள்ளது. வங்கி ஒரு மாதம் மற்றும் ஆறு மாத MCLRகளில் தலா 8.1 சதவிகிதம் வீதத்தை வழங்குகிறது, இது இரண்டு தவணைக்காலங்களிலும் முன்பு 8 சதவிகிதமாக இருந்தது.

எஸ்.பி.ஐ ஓராண்டுக்கான MCLRஐ முந்தைய 8.4 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு MCLRகள் முறையே 8.6 சதவீதம் மற்றும் 8.7 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.

மற்ற வங்கிகளின் நிலை என்ன?

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா (BOB) பிப்ரவரி 12 முதல் அனைத்து தவணைக்காலங்களிலும் அதன் MCLR ஐ 5 bps அதிகரித்துள்ளது. வங்கி ஒரு வருட MCLR ஐ 8.5 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக மாற்றியுள்ளது. ஒரே இரவில், ஒரு மாதம் மற்றும் மூன்று மாத MCLRகள் முறையே 7.9 சதவீதம், 8.2 சதவீதம் மற்றும் 8.3 சதவீதம் ஆகும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) அதன் அனைத்து தவணைக்காலங்களிலும் MCLR ஐ 15 bps வரை உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கான MCLR 8.30 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாத MCLRகளும் 15 பிபிஎஸ் உயர்த்தப்பட்டு முறையே 7.9 சதவீதம், 8.2 சதவீதம் மற்றும் 8.35 சதவீதமாக உள்ளது. ஒரே இரவில், இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு MCLRகள் 10 bps மூலம் மேல்நோக்கி திருத்தப்பட்டுள்ளன.

MCLR என்றால் என்ன?

ஏப்ரல் 1, 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, MCLR என்பது வங்கிகள் கடன் கொடுக்க முடியாத குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். MCLRஐக் கணக்கிடுவதற்கான நிதிகளின் விளிம்புச் செலவின் சதவீதமாக அனைத்து இயக்கச் செலவுகளையும் வங்கிகள் கணக்கிடுகின்றன. MCLR முறையின் கீழ், வங்கிகள் கடன் வாங்குபவர்களுக்கு அவர்கள் அளிக்கும் வட்டி விகிதத்தை, அவர்கள் நிதியைப் பெறும் விளிம்புச் செலவின் அடிப்படையில், நிதிகள் மூலமாகவும், ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவதன் மூலமாகவும் முடிவு செய்கின்றன.

வங்கிகளின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமான ரெப்போ விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தை பாதிக்கிறது. வங்கிகள் தங்கள் வாரியங்களின் ஒப்புதலுடன் முன் அறிவிக்கப்பட்ட தேதியில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு முதிர்வுகளின் MCLR ஐ மதிப்பாய்வு செய்கின்றன.

வங்கிகளின் கடன் மற்றும் வைப்பு விகிதங்களுக்கு ரெப்போ விகிதத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி அக்டோபர் 2019 இல் வெளிப்புற பெஞ்ச்மார்க் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (EBLR) முறையை அறிமுகப்படுத்தியது. வங்கிகள் இப்போது கடன் விகிதங்களை வழங்குகின்றன, அவை ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன அல்லது கருவூல பில்களின் வருவாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் உடனடியாக வங்கிகளின் கடன் விகிதத்தில் பிரதிபலிக்கிறது.

அக்டோபர் 2019 க்கு முன் கடன்கள் வழங்கப்பட்ட, பழைய MCLR முறையில் தொடரும் கடன் வாங்கியவர்களில் சில பிரிவுகளும் உள்ளன.



Read in source website

இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையில் சில மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் அந்நாட்டு அரசாகத்தால் சீர்திருத்த மசோதாக்கள் முன்மொழியப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீதித்துறை சட்ட சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 13) நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் இஸ்ரேலியர்கள் ஒன்று திரண்டு ஜெருசலேமில் உள்ள நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைக்கும், ஊழலை ஊக்குவிக்கும் மற்றும் இஸ்ரேலில் சிவில் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தேசியக் கொடி, மெகாஃபோன்கள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகம், சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்
அரசியலமைப்பு, சமூக ஒழுக்கம் விளிம்பில் உள்ளது என்று கூறி எச்சரித்த மறுநாள் போராட்டம் வெடித்தது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு வலியுறுத்தினார்.

இஸ்ரேலில் போராட்டங்களை தூண்டியது எது?

தி கார்டியன் கூற்றுப்படி, 2022 டிசம்பரில் நெதன்யாகுவும் அவரது கூட்டணி கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும், இந்த சீர்திருத்த மசோதாவால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நெதன்யாகுவின் நம்பிக்கையாளரான சட்டத் துறை அமைச்சர் யாரிவ் லெவின் ஜனவரி முதல் வாரத்தில் சீர்திருத்தம் குறித்து அறிவித்தார். நாட்டின் சட்ட அமைப்பை மாற்றியமைக்கும் மசோதாவை முன்மொழிந்தப்பின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

4 முக்கிய மாற்றங்கள்

இந்த திட்டத்தில் நான்கு முக்கிய மாற்றங்கள் உள்ளன. முதலாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாற்றியமைக்கும் அதிகாரம். அதாவது 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் அல்லது நெசெட், எந்தவொரு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் 61 வாக்குகள் என்ற எளிய பெரும்பான்மை கொண்டு மாற்றியமைக்கும் அதிகாரத்தைப் பெறுவது ஆகும்.

இரண்டாவதாக, நிர்வாக நடைமுறைகளை கேள்வி எழுப்ப உச்ச நீதிமன்றம் முன்பு பயன்படுத்திய “reasonability” சோதனையை ரத்து செய்ய முயற்சிக்கிறது.

இது தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தையும் அமைச்சர் லெவின் முன்மொழிந்தார். இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்திற்கு கொலிஜியம் இருப்பது போல் இஸ்ரேலில் வல்லுநர்கள், நீதிபதிகள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் அடங்கிய குழு நீதிபதிகளை தேர்வு செய்து வருகிறது. இந்தநிலையில் தற்போதைய மசோதாவில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொண்டாதாக மாற்றப்படுகிறது. அதுவும் வலதுசாரி மற்றும் மதரீதியிலான பழமைவாத ஆளும் கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திரமாக நிபுணர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அமைச்சர்கள் தங்கள் சொந்த சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் வகையிலும் சீர்திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதையடுத்து திங்களன்று நாடாளுமன்றம் முன் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சித் தலைவர்களும் மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், எதிர்க்கட்சியினர் மேசை மீது ஏறி சபாநாயகர் சிம்சா ரோத்மேனுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிராக கடுமையான விவாதங்கள் நடைபெற்றது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் அரசு இதை சட்டமாக்குவதற்கான முயற்சிகளை எடுக்கும் என்று கூறினர்.

நெதன்யாகு அரசு ஏன் நீதித்துறையின் செயல்பாட்டை மாற்ற விரும்புகிறார்கள்?

இஸ்ரேலில் உள்ள பழமைவாதிகள் மற்றும் வலதுசாரிகள் நீண்ட காலமாக நீதித்துறை இடதுசாரி சார்பாக உள்ளது என கூறி வருகின்றனர். இதை ஒரு தடையாகவே அவர்கள் பார்க்கின்றனர். மேலும், நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கம் இஸ்ரேலியர்கள் சட்ட அமைப்பில் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அதன் சீர்திருத்தத் திட்டங்கள் நீதிபதிகள் தேர்ந்தெடுப்பதில் தலையிட்டு பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், பாலஸ்தீனிய நிலம், LGBTQ சமூகத்தை பாதிக்கும் சமூக சீர்திருத்தங்களை குறைக்கவும் அரசாங்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தங்கள் அதிகாரத்திற்கு உட்படுத்துவதாக கூறியுள்ளது.

ஏன் பல தலைவர்கள் வன்முறை பற்றி எச்சரிக்கிறார்கள்?

எதிர்க்கட்சித் தலைவர் லேபிட் (Lapid) கூறுகையில், இந்த சீர்திருத்தம் நாட்டை அழிக்க அச்சுறுத்துகிறது என்று எச்சரித்தார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தின் ஜனநாயக அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று கூறினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸும் இது உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், நெதன்யாகு தனது விமர்சகர்கள் “நாட்டை அராஜகத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக” குற்றம் சாட்டினார். மேலும் அவர், இஸ்ரேலின் பெரும்பாலான குடிமக்கள் அராஜகத்தை விரும்பவில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் சொற்பொழிவை விரும்புகிறார்கள், இறுதியில் அவர்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள்” என்று கூறினார்.



Read in source website

தற்போதைய மக்களவை மற்றும் ஐந்து மாநில சட்டசபைகளுக்கு துணை சபாநாயகர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர் இருப்பது கட்டாயமா? எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? எவ்வளவு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?

Liz Mathew , Khadija Khan

துணை சபாநாயகரை தேர்வு செய்யாதது தொடர்பாக மத்திய அரசுக்கும், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜூன் 19, 2019 அன்று அமைக்கப்பட்ட 17வது (தற்போதைய) மக்களவைக்கு துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்காதது, “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஆன்மாவிற்கு எதிரானது” என்று வாதிடும் பொதுநல மனுவின் மீது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பதில் கோரியது.

இதையும் படியுங்கள்: பி.பி.சி அலுவலகத்தில் வருமான வரித்துறை சர்வே: ஐ.டி ரெய்டில் இருந்து வேறுபட்டது எப்படி?

நான்கு ஆண்டுகள் முதல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட ஐந்து மாநில சட்டசபைகளிலும் இந்த பதவி காலியாக உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. (ஷாரிக் அகமது எதிர் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பலர்)

துணை சபாநாயகர் பற்றி அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?

சட்டப்பிரிவு 93 கூறுகிறது: “மக்களவை, மிக விரைவில், இரண்டு உறுப்பினர்களை… சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக… தேர்வு செய்யும் மற்றும், சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவி காலியாகும்போது, ​​மற்றொரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும்…”

சட்டப்பிரிவு 178, ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான பொருத்தமான பதவியைக் கொண்டுள்ளது.

துணை சபாநாயகர் பதவி கட்டாயமா?

அரசியலமைப்புச் சட்டத்தின்படி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது கட்டாயம் என்பதைச் சுட்டிக்காட்டும் 93 மற்றும் 178 சட்டப்பிரிவுகள் இரண்டும் “செய்ய வேண்டும்” (Shall) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதாக அரசியலமைப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

துணை சபாநாயகர் எவ்வளவு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?

“முடிந்தவரை விரைவாக”, என்று சட்டப்பிரிவுகள் 93 மற்றும் 178 கூறுகிறது. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை வகுக்கவில்லை.

பொதுவாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் இரண்டிலும் புதிய அவையின் (பெரும்பாலும் குறுகிய) முதல் அமர்வின் போது சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது, அதாவது வழக்கமாக முதல் இரண்டு நாட்களில் உறுப்பினர்களின் பதவியேற்பு மற்றும் உறுதிமொழிகளுக்குப் பிறகு மூன்றாவது நாளில் தேர்வு நடக்கும்.

துணை சபாநாயகர் தேர்தல் வழக்கமாக இரண்டாவது அமர்வில் நடைபெறும், மேலும் உண்மையான மற்றும் தவிர்க்க முடியாத கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் பொதுவாக தாமதமாகாது.

மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 8 துணை சபாநாயகர் தேர்தல் “சபாநாயகர் நிர்ணயிக்கும் தேதியில் நடத்தப்படும்” என்று கூறுகிறது. துணை சபாநாயகர் அவரது பெயரை முன்மொழியும் தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டவுடன் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், துணை சபாநாயகர் பொதுவாக சபையின் முழு காலத்திற்கும் பதவியில் நீடிப்பார். சட்டப்பிரிவு 94 (மாநில சட்டமன்றங்களுக்கான பிரிவு 179) கீழ், சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் “சபையின் உறுப்பினராக இருப்பதை நிறுத்தினால்…” அவரது பதவியை காலி செய்வார். அவர்கள் ஒருவர் மற்றொருவரிடம் ராஜினாமா கடிதம் பெறலாம், அல்லது மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்… “அதிகாரத்தில் இருந்து நீக்கப்படலாம்”.

துணை சபாநாயகர் பதவி எப்படி எதிர்பார்க்கப்பட்டது?

மே 19, 1941 அன்று, எச்.வி.காமத் அரசியல் நிர்ணய சபையில் சபாநாயகர் ராஜினாமா செய்தால், “அவர் தனது ராஜினாமாவை குடியரசுத் தலைவரிடம் தெரிவிப்பது மிகவும் நல்லது, துணை சபாநாயகரிடம் அல்ல, ஏனெனில் துணை சபாநாயகர் அவருக்குக் கீழ் உள்ள பதவியை வகிக்கிறார்,” என்று வாதிட்டார்.

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் ஏற்கவில்லை. மேலும் ஒரு நபர் பொதுவாக தனது ராஜினாமாவை அவரை நியமித்த நபரிடம் கொடுப்பது சரியானது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், “…சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்… சபையால் நியமிக்கப்படுபவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது தேர்வு செய்யப்பட்டவர்கள். இதன் விளைவாக, இந்த இரண்டு நபர்களும், அவர்கள் ராஜினாமா செய்ய விரும்பினால், தங்கள் ராஜினாமாக்களை நியமிக்கும் அதிகார சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். நிச்சயமாக, சபையானது மக்களின் கூட்டு அமைப்பாக இருப்பதால், ராஜினாமாவை சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக தெரிவிக்க முடியாது. இதன் விளைவாக, ராஜினாமாவை சபாநாயகரிடம் அல்லது துணை சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் சபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்,” என்றும் அம்பேத்கர் கூறினார்.

ஜூலை 19, 1969 அன்று 4வது மக்களவையின் சபாநாயகர் பதவியை நீலம் சஞ்சீவ ரெட்டி ராஜினாமா செய்தபோது, ​​அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் தெரிவித்தார்.

ஆனால் துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தால் என்ன ஆகும்? “சபாநாயகரின் ராஜினாமா குறித்து துணை சபாநாயகராலும், துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தால், அந்த அவையில் ராஜினாமா கடிதத்தைப் பெறும் பொதுச் செயலாளராலும் சபைக்கு தெரிவிக்கப்படுகிறது. ராஜினாமா அரசிதழிலும் செய்திக் குறிப்பிலும் அறிவிக்கப்படும்” என்று மக்களவையின் தலைமை அதிகாரிகளுக்கான விதிகள் கூறுகின்றன.

சபாநாயகரின் அதிகாரங்கள் துணை சபாநாயகருக்கும் உள்ளதா?

சட்டப்பிரிவு 95(1) கூறுகிறது: “சபாநாயகர் பதவி காலியாக இருக்கும்போது, ​​அந்த அலுவலகத்தின் கடமைகளை துணை சபாநாயகர் நிறைவேற்றுவார்”.

பொதுவாக, அவையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் போது துணை சபாநாயகருக்கு சபாநாயகருக்கு இருக்கும் அதே அதிகாரங்கள் உள்ளன. விதிகளில் சபாநாயகரைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் துணை சபாநாயகர் தலைமை தாங்கும் போது அவருக்கும் குறிப்பிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

சபாநாயகர் இல்லாத நேரத்தில், துணை சபாநாயகர் அல்லது சபைக்கு தலைமை தாங்கும் எந்தவொரு நபரும் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சபாநாயகரிடம் எந்த முறையீடும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

தற்போது காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவி குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

சபையில் சாதாரணமாக “மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடத்தப்படுவதால்” துணை சபாநாயகருக்கு “உடனடி தேவை” இல்லை என்று கருவூல பெஞ்சுகள் கூறி வருகின்றன. “சபையை நடத்துவதற்கு சபாநாயகருக்கு உதவுவதற்காக மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழு உள்ளது” என்று ஒரு அமைச்சர் வாதிட்டார்.

ஒன்பது பேர் கொண்ட இந்த குழுவில் பா.ஜ.க.,விலிருந்து ரமா தேவி, கிரிட் பி சோலங்கி மற்றும் ராஜேந்திர அகர்வால்; காங்கிரசை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ்; தி.மு.க.,வின் ஆ.ராசா; பி.வி மிதுன் ரெட்டி (YSRCP); பர்த்ருஹரி மஹ்தாப் (BJD); என்.கே பிரேமச்சந்திரன் (ஆர்.எஸ்.பி); மற்றும் ககோலி கோஷ் தஸ்திதர் (TMC) ஆகியோர் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்குவது வழக்கமான மரபு. 2004-09 ஆம் ஆண்டு UPA-I ஆட்சியில் இருந்தபோது துணை சபாநாயகராக சரண்ஜித் சிங் அத்வால் (SAD, NDA வின் ஒரு அங்கம்) இருந்தார், 2009-14 (UPA-2) ஆட்சியில் கரியா முண்டா (BJP) இருந்தார். நரேந்திர மோடியின் முதல் அரசாங்கத்தின் போது (2014-19) தம்பிதுரை (அ.தி.மு.க) துணை சபாநாயகராக இருந்தார்.

துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா?

செப்டம்பர் 2021 இல், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவில் துணை சபாநாயகர் தேர்தலை தாமதப்படுத்துவது சட்டப்பிரிவு 93 (பவன் ரிலே எதிர் சபாநாயகர், லோக்சபா மற்றும் பலர்) மீறப்படுவது என்று வாதிட்டது. ஆனால், சட்டப்பேரவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க நீதிமன்றம் கட்டாயப்படுத்தியதற்கு முன்மாதிரி இல்லை.

பாராளுமன்றத்தின் நடைமுறை நடத்தையில் நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடுவதில்லை. சட்டப்பிரிவு 122(1) கூறுகிறது: “பாராளுமன்றத்தில் நடைபெறும் எந்தவொரு நடவடிக்கைகளின் செல்லுபடியாகும் நடைமுறையில் ஏதேனும் முறைகேடு இருப்பதாகக் கூறப்படுவதால், அது கேள்விக்குள்ளாக்கப்படாது.”

எவ்வாறாயினும், அரசியலமைப்பு “மிக விரைவில்” தேர்தலை எதிர்பார்க்கிறது என்பதால், துணை சபாநாயகர் பதவிக்கு ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.



Read in source website

 வானொலியின் வீச்சையும் வலிமையையும் புரிந்து கொண்டிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. தனது "மனதின் குரல்' நிகழ்ச்சியால் கோடிக்கணக்கான இந்தியர்களிடம் வானொலியின் மூலம் மாதந்தோறும் உரையாடும் உத்தியை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அதுதான் காரணம்.
 விளையாட்டானாலும், இசையானாலும், செய்தியானாலும், பருவநிலை அறிவிப்புகளானாலும் வானொலி அமைத்துத் தந்த பாதையில்தான் தகவல் தொடர்பு அறிவியல் புதிய பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. வானொலியின் வலிமை எத்தகையது என்பது பரவலாக வெளியில் தெரியவில்லை. "காலம் மாறிவிட்டது,
 வானொலிக்கான வரவேற்பு குறைந்துவிட்டது, தேவை முடிந்துவிட்டது' என்றெல்லாம் சொன்னாலும்கூட இன்றும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடையும் ஒரே தகவல் தொடர்பு சாதனமாக வானொலியே இருக்கிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்தியாவில் வானொலி மூலம்தான் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், போக்குவரத்து தொடர்பே இல்லாத கிராமங்களும் செய்திகளைப் பெற முடிகிறது. பேரிடர் காலங்களில் வானொலி சேவையின் அருமை தொடர்ந்து நிரூபிக்கப்படுகிறது.
 உலகிலேயே மிகப் பெரிய வானொலி சேவையை நடத்தும் அமைப்பாக அகில இந்திய வானொலி திகழ்கிறது. இந்தியாவின் 92% பகுதிகளை சென்றடையும் வானொலி, 99% மக்கள்தொகையினருக்கு தனது சேவையை வழங்குகிறது என்கிற தகவல் பலரையும் வியப்படையச் செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை.
 23 மொழிகளில், 179 பேச்சுவழக்குகளில் அகில இந்திய வானொலி, நிகழ்ச்சிகளை வழங்குகிறது. 420 வானொலி நிலையங்கள் மூலம் நாள்தோறும் 647 செய்தியறிக்கைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வளவு பெரிய, பரந்து விரிந்த வானொலி சேவை உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லை.
 அகில இந்திய வானொலி சேவை மட்டுமல்லாமல், பிரசார் பாரதியின் "நியூஸ் ஆன் ஏர்' செயலி, 240 மாநில வானொலி அலைவரிசைகளை ஒலிபரப்புகிறது. அதுமட்டுமல்லாமல், 388 தனியார் பண்பலை வானொலிகள் 107 நகரங்களில் சேவைகளை வழங்குகின்றன. பண்பலை தனியார் மயத்தின் 3-வது கட்டம் நிறைவடையும்போது மேலும் 236 நகரங்களில் அந்தந்த நகரத்துக்கான பண்பலை சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன.
 வானொலிக்கும் ஏனைய தகவல் பரிமாற்றக் கருவிகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அது தொலைக்காட்சியானாலும், "யூ டியூப்' போன்ற இணையம் மூலமாக பெறப்படும் சேவைகளானாலும், கைப்பேசியின் மூலம் பெறப்படும் சமூக ஊடகமானாலும் பயனாளிகளின் முழு கவனத்தையும் தன்பால் ஈர்த்து வேறு வேலை எதுவும் செய்யவிடாமல் தடுத்துவிடுகின்றன. ஆனால் வானொலி அப்படியல்ல. தங்களது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டவாறு வானொலி சேவையைப் பெற முடியும் என்பதுதான் அதன் தனிச்சிறப்பு.
 பண்பலை ஒலிபரப்பு அறிமுகமான பிறகு, வாகனங்களில் பயணிப்போரும், தொலைக்காட்சி வசதிகள் இல்லாத பகுதியில் வசிப்போரும் அன்றாட அலுவல்களுக்கு இடையில் வானொலியுடன் பிணைந்தே இருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அன்றாடத் தீர்வுகளை வழங்கும் சேவை வானொலியால் பெறப்படுகிறது. கடலோரப் பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு பருவநிலை குறித்த அறிவிப்புகளை வழங்க வானொலியால் மட்டுமே முடியும்.
 இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. விமான சேவை உள்பட அனைத்துத் துறைகளும் தனியார்மயத்தை நோக்கி நகர்ந்து விட்டன. தகவல் தொடர்பை எடுத்துக்கொண்டால் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தை சமூக ஊடகங்கள் அனுபவிக்கின்றன. தனியார் தொலைக்காட்சி சேனல்களும் பெருகிவிட்டன. ஆனால், அகில இந்திய வானொலி மட்டும் இனியும்கூட அரசாங்கத்தின் கட்டுப்பாடு என்கிற சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறது.
 அரசின் அதிகாரபூர்வ செய்திகளை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும் என்கிற கட்டுப்பாட்டு வளையம் வானொலிக்கு மட்டுமே இருப்பது வேடிக்கை. அச்சு ஊடகமானாலும், காட்சி ஊடகமானாலும், இணைய ஊடகமானாலும் செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் சுதந்திரமாக வெளியிடும் உரிமை வழங்கப்பட்டிருக்கும்போது வானொலி மட்டும் ஆட்சி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் ஏன் தொடர வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.
 பண்பலை சேனல்களுக்கு செய்திகளை ஒலிபரப்ப அனுமதியில்லை. நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க முடியாது. வணிக ரீதியிலான பொழுதுபோக்குக்காக மட்டுமே அவை இயங்க வேண்டும் என்கிற தடை நிலவுகிறது.
 கருத்து சுதந்திரத்துக்கு இது எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது அரசு விசித்திரமான வாதத்தை முன்வைத்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், தேச விரோத சக்திகள் தங்களது பிரசாரத்துக்குப் பயன்படுத்துவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அரசால் முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 900-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் இரவு பகல் பாராமல் செய்திகளையும், கருத்துகளையும் ஒளிபரப்புகின்றன. ஆனால் பண்பலை வரிசைகள், அகில இந்திய வானொலியின் செய்தி அறிக்கைகளைத்தான் ஒலிபரப்ப முடியும்.
 உலகிலேயே வானொலிக்கு கடிவாளம் போட்டு வைத்திருக்கும் ஜனநாயக நாடு இந்தியா மட்டும்தான். அதிலிருந்து வானொலிக்கு எப்போது விடுதலை வழங்கப் போகிறோம்?



Read in source website

 பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 40-க்கும் மேற்பட்டோர் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர். இன்றைய சூழலில் தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது தனிமனிதர்களுக்கு சாத்தியமானதல்ல. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
 உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரையில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு பதவிக்கும் செலவினத் தொகை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அத்தொகையைக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம்.
 இன்றைய தேர்தல் கோடிகளை விழுங்கும் தேர்தலாகிவிட்டது. இருப்பினும் கோடிகளைப் பற்றியோ, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் பணபலம், படைபலம் பற்றியோ கவலைப்படாமல் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 கடந்த கால தேர்தலுக்கும் இன்றைய தேர்தலுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அன்றைய தேர்தலில் வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே அவரது வெற்றியை நிர்ணயிப்பதாக இருந்தது. அதனால்தான் 1952-இல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 533 சுயேச்சை வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்றனர். 1957-இல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் 481 பேர் போட்டியிட்டு 42 பேர் வெற்றி பெற்றனர். அதிகப்படியான சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றது இத்தேர்தலில்தான்.
 ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு 1952-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 62 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சில சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் அப்போது ஆட்சி அமையப் பெற்றது.
 1957-க்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெறும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையும் மொத்த வாக்குகளில் அவர்கள் பெறும் விழுக்காட்டு எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன. கிராமங்களில் கூட அரசியல் கட்சிகள் வேரூன்றிவிட்ட இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட ஒருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற இயலாது.
 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறாத நிலையிலும் அவர்கள் பெறும் வாக்குகள் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கவோ, வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தைக் குறைக்கவோ செய்கின்றன. இதுவே சுயேச்சைகளை எண்ணி அரசியல் கட்சிகள் அச்சம் கொள்ள காரணமாகிறது.
 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது எளிதானதல்ல. அப்படியிருக்க, சுயேச்சையாக போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
 தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்திலும், மக்களின் கவன ஈர்ப்புக்காகவும் சிலர் சுயேச்சையாகப் போட்டியிடுவதுண்டு. அத்தகையோரின் தேர்தல் பிரசார செயல்பாடுகள், வாக்குறுதிகள் கவனம் பெறுவதாகவே இருக்கும். அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாத, சாத்தியமில்லாத பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
 சுயேச்சை வேட்பாளர்கள் அதிகரிக்க மற்றொரு காரணமும் உண்டு. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியில் சிலர் போட்டியிடுவதாலும் சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
 அதிருப்தி வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவது சாத்தியமன்று. இருப்பினும் வடமாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சுயேச்சைகள் வெற்றி பெறுகின்றனர்.
 இதுபோன்ற நிகழ்வு மக்களைவைத் தேர்தலைக் காட்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
 இவ்வேட்பாளர்களால் வாக்குகள் வித்தியாசம் மட்டுமே மாற்றம் காண்கிறது; வெற்றிவாய்ப்பில் எத்தகைய மாற்றமும் ஏற்படுவதில்லை.
 சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அரசு நிர்வாகம் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தொகுதியில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. ஒவ்வொருவருக்கும் சின்னம் ஒதுக்குவதிலும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 வாக்காளர்களிடம், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவதன் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பது ஏற்புடையதன்று. நிர்வாக சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சுயேச்சை வேட்பாளர்களைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
 வேட்பு மனு தாக்கலுக்கான வைப்புத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். சுயேச்சையாக போட்டியிடும்போது வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் அவர்கள் மீண்டும் போட்டியிடக் கூடாது. வைப்புத் தொகையை மீண்டும் பெறும் அளவிற்காவது வாக்குகள் பெறவேண்டும். குறிப்பிட்ட முறை தேர்தலில் வைப்புத் தொகையை இழப்பவர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது என்பவை போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம்.
 வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினுடைய சக்தியைப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர் எனலாம். அதனால்தான் சுயேச்சை வேட்பாளர்களின் பங்களிப்பு அண்மைக்கால தேர்தல்களில் அருகி வருகிறது. சுயேச்சை வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்கு வீதம் குறைந்து கொண்டே வருகிறது.
 தேர்தல் என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் ஜனநாயகத் திருவிழா என்பதில் ஐயமில்லை. வாக்களிக்க உரிமையுள்ளபோது போட்டியிடவும் உரிமை உண்டு. அதே நேரத்தில் அதிருப்தி, பிரபலமாக காட்டிக் கொள்ளும் ஆர்வம், கவன ஈர்ப்பு இவற்றுக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமானதல்ல.
 



Read in source website

 அண்மையில் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது, அப்பாவின் நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. இளம் வயதில் என்னை, ஒரு பலகையின் மீதேற்றி, ஒலிவாங்கி முன் நின்று பேச வைத்துக் கேட்ட பெரியவர் அவர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர், பேச்சு, பேச்சைப் பற்றி அமைந்துவிட்டது.
 "அந்த காலத்திலே கூட்டம் என்றால், பேச்சாளர்கள் வருவதற்கு முன்னரே கேட்பவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அப்படியா இருக்கிறது? பேச்சாளர்கள் வந்து வெகுநேரம், கூட்டம் வருவதற்குக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் இன்றைக்கு இருக்கிற இவ்வளவு வசதிகள் அன்றைக்கு இல்லை. ஏன், ஒலிபெருக்கி, அலங்கார மேடைகள்கூட இல்லாமல் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் உயர்ந்த இடத்தில் நின்று கொண்டு பேச்சாளர்கள் பேச, மக்கள் கேட்கிற காலம் எல்லாம் இருந்தது' என்று கூறி பழைய நினைவுகளில் மூழ்கினார் அவர்.
 உண்மைதான். நமது பகுதிக்கு சிறந்த பேச்சாளர் ஒருவர் வருகிறார் என்றால், அவர் பேசும் ஊர்களுக்கெல்லாம் அவருக்கு முன்னரே போய்த் தொடர்ந்து கேட்பதும், கேட்டு வந்த பிறகு, கேட்க வாய்ப்புக் கிடைக்காத மற்றவர்களுக்கு அதை முடிந்த வரையில் அப்படியே எடுத்துச் சொல்வதும் வழக்கம். முடிந்த வரையில் அவர் போலக் குரலையும் ஆக்கிக் கொண்டு பேசிக்காட்டினால், பேச்சாளருக்குக் கிட்டிய மகிழ்ச்சியில் பாதி, கேட்பவருக்கும் கிடைத்துவிடும். அந்த அளவிற்குப் பேச்சாளர்களுக்கு அப்போது மவுசு இருந்தது."
 கேட்டுக் கேட்டுப் பழகிய அந்த மனிதருக்குள் ஊற்றுப்போல் அந்தப் பழைய நினைவுகள் வெளிப்படத் தொடங்கின. என் ஒருவனையே பெருங்கூட்டம் என்று நினைத்துக் கொண்டதுபோல, அந்த காலப் பேச்சாளர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களின் சிறந்த கருத்துகளைச் சொல்லி, அதனால் ஏற்பட்ட அரசியல், கலை, இலக்கிய, ஆன்மிகத் தாக்கங்களை விளக்கும்போது, அவர் ஒருவரே நடமாடும் மேடைத்தமிழ்க் களஞ்சியமாகத் தெரிந்தார்.
 அவர் மட்டுமா? அந்த காலத்தில் அவ்வாறு கேட்ட செவிச்செல்வர்கள் பலரும் அப்படித்தான் இருந்தார்கள். என் பள்ளிப் பருவத்தில், எங்கள் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு இப்படி, கூட்டத்துக்குப் போனவர்கள் வந்து சொல்லச் சொல்லிக் கேட்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். ஈ.வே.ரா. பெரியாரின் பகுத்தறிவு முழக்கமும், அதற்குப் பதில் சொல்லுமாப்போலே, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்த விளக்கங்களும், தோழர் ஜீவா, அண்ணா தொடங்கி பலரும் முழங்கிய அரசியல் பேச்சுகளை எடுத்துக் காட்டியும், வாரியார் சுவாமிகள் தரும் ஆன்மிக அறிவுரைகளைத் திரும்பச் சொல்லியும் அவை குறித்து விவாதிக்கிற பாங்கு இருக்கிறதே அற்புதம்.
 அவர்கள் சொல்லியவற்றுள் உண்மை எது, புனைவு எது என்று கண்டுகொள்வதும் அதில் இருக்கும் அழகிய தமிழ்ச் சுவையை அனுபவிப்பதும், கற்றறிய இயலாத இலக்கிய வரிகளைச் சுவைபடச் சொல்லிய வண்ணம் செவிமடுத்துச் சிந்தை கொள்வதுமாக இருந்த காலம் அது.
 திருக்குறளும், சிலப்பதிகாரமும், புறநானூறும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவதுடன் அயலகச் சிந்தனையாளர்களின் பெயர்களை நினைவுபடுத்துவதும் அப்போது நிகழ்ந்தது. கம்பன் கழகங்கள், காப்பிய மாந்தர்களைக் கம்பனின் துணையோடு, கண்முன்னே உலவவிட்டன. பெரியபுராணத்து நாயன்மார்கள் மீளவும் திருத்தொண்டு புரியத் தொடங்கிய காலகட்டமும் அதுவாக இருந்தது. புராண, இதிகாசக் கருத்துகள் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.
 பகுத்தறிவுப் பாசறைகள் தொடங்கப்பட்ட அளவிற்கு, உழவாரத் திருக்கூட்டங்களும் அடியார் பேரவைகளும் முகிழ்க்கத் தொடங்கின. வாசகசாலைகள், படிப்பகங்கள் தெருவெங்கும் தோன்றின. இருதரத்தாரும் சின்னஞ்சிறு பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கியதன் மூலமாக வாசிப்பு அனுபவங்களையும் வளர்த்தனர். பொது ஊடகமாக, வானொலியும், பத்திரிகைகளுமே திகழ்ந்த காலத்தில் அவை வாரி வழங்கிய தரவுகளும் கலை, இலக்கியச் செல்வங்களும் கணக்கில்லாதவை.
 செவிவழியாக வந்து சிந்தை நிறைத்த வானொலிச் செல்வங்களும், எழுத்து வழியாக வந்து இதயத்தை விசாலப்படுத்திய இதழியல் ஆக்கங்களும் மகத்துவமான கற்பனை வளத்தை மனிதர்க்கு வழங்கின; கனவுகளை வளர்த்தன; காவிய வாழ்வை ஆக்கிக் கொடுத்தன; கேளாரும் வேட்ப மொழிகிற நுட்பம் வளர்ந்தது. வாரந்தோறும் இதழ்களின் வழியே வெளிவந்து வளர்ந்த "பொன்னியின் செல்வன்' புதினம், இன்றைக்கும் எழுத்தாளர் கல்கியையும், ஓவியர் மணியத்தையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறதே.
 வானொலி உரைகள் எழுத்துரைகளாகி நூல்களாக ஆக்கம் பெற்றன. அவை எழுதப் படிக்கத் தெரிந்த எளிய மக்களின் இதயங்களைச் செழுமைப்படுத்தின. குறைந்த விலையில் நிறைய நூல்கள் அச்சாக்கம் பெற்றன; அவை முறைபட வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உள்ளாக்கப்பட்டன.
 அரங்கத் தமிழ் உரைகள் மாலைநேரப் பாடசாலை வகுப்பறைகளாகவே மலர்ந்தன. அவரவர் பக்க நியாயங்களை, வாத, தருக்க முறைப்படி எடுத்துரைத்துப் பேசுகிற பேச்சாளர்கள் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இருந்தார்கள். மேற்கோளிடும் ஒரு கருத்துக்கு ஆதரவாக இலக்கியத் தொடரை முன் வைக்கும் கருத்தாளரை மறுக்கும் மற்றொரு கருத்தாளர் அதேபோல இன்னொரு மேற்கோளினை அதே இலக்கியத்தில் இருந்து எடுத்துக் காட்டவும் செய்தார்.
 தேவை கருதி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுட்டப்பட்ட இலக்கிய வரிகள் இதய வரிகளாகி, காவிய உணர்வை, செவிமடுப்போர் சிந்தைகளில் நிறைத்தன. தம் சொந்த வாழ்வின் சிக்கல்களுக்கான தீர்வுகளை, இந்த உரைகளில் இருந்து தேர்ந்து கொள்ளவும் தெளிந்திருந்தனர். இராமனையும், சீதையையும், பரதனையும், குகனையும் மட்டுமின்றி, கூனியையும், கும்பகருணனையும் இன்னபிற பாத்திரங்களையும் தத்தம் நிகழ்கால வாழ்வில் அடையாளம் காணத் தெரிந்திருந்தனர்.
 இராமனுக்குக்கு நிகராகவும் மேலாகவும் இராவணனை ஏற்றுப்போற்றுகிற மரபில் கம்பர் கலைவல்லாராக மிளிர்ந்தார். அசுரர்கள் புதிய கோணத்தில் இனங்காணப்பட்டனர். மரபியல் சார்ந்த கருத்தாக்கங்கள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டன.
 இதிகாசக் காப்பியங்களுக்கு மாற்றாக சங்க இலக்கியச் சிந்தனைகளும் முன்வைக்கப்பட்டன. குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த பொழுதுக்குள் வகுத்துக் கொண்ட உரையினைச் செறிவுற நிகழ்த்தியவர்கள் அப்பேச்சுரைகளை, எழுத்துரைகளாகவும் தயாரித்தனர். அவை நூல்களாகவும் வெளிப்பட்டன. அவை அக்காலத்து உயரிய இலக்கிய விருதுகளையும் அவர்களுக்குப் பெற்றுத் தந்தன.
 இசை, நாட்டிய அரங்குகளுக்கு நிகராகவும், அவற்றுக்கு மேலாகவும் இயற்றமிழாகிய உரைநடைத் தமிழுக்குக் களம் அமைத்தது அக்காலம். அரசியல் மேடைகளில் இலக்கிய நயமும், இலக்கிய மேடைகளில் அரசியல் நளினமும் அழகாக வெளிப்பட்டன. பகுத்தறிவைப் பறைசாற்றியவர்களின் உரைகளில் மனிதநேயமும், பக்தியைப் புலப்படுத்தியவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும் சிறப்பாக வெளிப்பட்டன.
 அவரவர்களின் நிலைப்பாட்டில், உண்மைகள் உலாவரத் தொடங்கின. அவை முழு உண்மை இல்லை என்பதைச் செவிமடுத்தோர் நன்கறிந்திருந்தனர். பகுதி உண்மைகளைத் தொடர்ந்து செவிமடுத்து, முழு உண்மையை உள்வாங்கிக் கொள்ளும் நுட்பம் கேட்பாளர்களுக்கு இருந்தது. மெய்யாகவே அவர்கள் பொதுமக்களாக விளங்கினர்.
 ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வேகத்தில், மளமளவென்று தன்னரசை நிலைநிறுவ மேற்கொண்ட நேரத்தில், சுயம் கெடாமல், சமய, சமூகச் சீர்திருத்தங்களையும் செய்தாக வேண்டிய நெருக்கடியைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் செயல்படவும் மேடைகளே பெரிதும் துணைநின்றன. எழுத்துத் தமிழை விடவும் பேச்சுத் தமிழுக்கு இன்றியமையாத இடம் கிடைத்தது.
 பண்டிதர்களின் முற்றங்களில் மெல்ல நடந்துகொண்டிருந்த தமிழணங்கு, தெருவெல்லாம் பவனி வரத் தொடங்கினாள். "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்ற மகாகவி பாரதியாரின் கட்டளை நடைமுறைக்கு வந்தது. பண்டைய இலக்கியங்களுக்கு நிகராக, பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் கவிதைகள் உரத்துப் பேசப்பட்டன.
 ஏற்றுக்கொள்ள முடியாத இயக்கங்களின் முழக்கங்களையும் தமிழ்ச்சுவை கருதிக் கேட்டு மகிழ்ந்த இதயங்கள் அன்றைக்கு இருந்தன. எத்துணை விதமான எதிர்க்கருத்துகள் இருந்தாலும் கருத்தாளர்கள் எதிர்ப்படச் சந்தித்துக் கொள்ளும்போது நனிநாகரிகர்களாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.
 பேச்சாளர்களைப் போலவே, கவிஞர்களுக்கான கவியரங்குகளும், எழுத்தாளர்களுக்கான உரையாடல் அரங்குகளும் மேடைத் தமிழுலகு நிர்மாணித்துத் தந்தது. சுவைஞர்கள் அவர்களினும் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள்.
 எல்லார்க்கும் எல்லாச் செல்வமும் கிட்ட இயலாத காலத்தில் தலைச்செல்வமாக, இச்செவிச்செல்வம் கிட்டியதும், அதன் சுவையுணர்ந்து தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள். தற்காலமாக மலர்ந்த அக்காலத்தை இப்போது நினைக்க அதுவொரு பொற்காலமாக அவருக்குத் தெரிந்ததுபோலும். "அந்தக் காலம் இனிமேல் வருமா? தெரியவில்லை. வந்தால் நல்லது' என்று பழைய நினைவுகளைக் கலைத்துக் கொண்டு அவர் எழுந்தார். கூடவே நானும் எழுந்தேன்.
 செவிச் செல்வம் வளர்க்கும் சீலம் மீளவும் வரவேண்டும் என்பதற்காக, அரங்க அமைப்பாளர்களும், பொழிவாளர்களும் காலத் தேவைக்கேற்ப சிந்தித்துச் சிறப்பாகச் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 



Read in source website

பெண்களின் உழைப்புக்கு உரிய ஊதியமும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை எனும் விமர்சனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உண்டு. இந்தச் சூழலில், ‘‘குழந்தை வளர்ப்பும் குடும்ப நிர்வாகமும் பெண்களுக்கானவை என்கிற கற்பிதத்தை நாம் கைவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் ‘மதிப்புறு சமூகத்தின் அடித்தளம் பெண்கள்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பேசிய அவர், “பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது ஆண்களைவிட ஒருபடி மேலாகவோ சாதிப்பார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்களித்தாலும் தனியார் துறைகளில் இடைநிலை நிர்வாகப் பொறுப்பில் பெண்கள் மிக அரிதாகவே அமர்த்தப்படுகிறார்கள்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.



Read in source website

சமீபத்தில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்றிருந்தபோது, வட இந்தியத் தொழிலாளர்கள் சிலர் அங்கு வந்ததைப் பார்த்தேன். அவர்களைக் கண்டதும் மருந்தாளுநர், வலிநிவாரணிகளை அவர்கள் கேட்காமலேயே எடுத்துக்கொடுத்தார்.

தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆபத்தான மருந்துகளை அவர்கள் ஏன் வாங்குகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாள் முழுவதும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டதால் ஏற்படும் உடல் வலியைப் போக்கவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் அவர்கள் அந்த வலிநிவாரணிகளை வாங்கிச் செல்வதாகப் பின்னர் அறிய முடிந்தது.

ஆனால், அந்த மருந்துகளால் ஏற்படப் போகும் பிரச்சினைகளை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பொருட்படுத்தவும் அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களைத்தான் ‘வடக்கன்ஸ்’ என நம்மவர்கள் விளிக்கிறார்கள். நம் தொழிலாளர்களின் வாய்ப்பை அவர்கள் தட்டிப்பறிப்பதாகவும் விமர்சிக்கிறார்கள்.

வரவின் பின்னணி: வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேலதிக சமூக, பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மட்டுமே 8.8% பங்களிக்கிறது. இது தேசியப் பங்களிப்பில் இரண்டாமிடம். நாட்டிலேயே அதிக அளவு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.

சமூக வளர்ச்சியிலும் நமது மாநிலம் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் சேர்வோர் விகிதம் (GER), தேசிய விகிதத்தைவிட இரண்டு மடங்கு. இந்தியாவிலேயே அதிக அளவு முனைவர் படிப்புகளை (PhD) முடிப்போர் விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள சிறந்த 100 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறுகிறது, தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF). அதேபோல சுகாதாரக் குறியீடுகள், தனிநபர் வருமானம் ஆகியவற்றிலும் நம் மாநிலம் முன்னேறியுள்ளது.

உயர் கல்வி பெற்று மற்ற மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை தோராயமாக 50 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. ‘அயலகத் தமிழர்கள் நல மாநாடு’ ஒன்றைத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் உயர் கல்விக்காக ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இப்போதும் பயணிக்கின்றனர். மறுபுறம், குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS-5) பிறப்பு விகிதத்துக்கான தேசியச் சராசரி 2.0 என்று உள்ளபோது, தமிழ்நாட்டில் அது 1.7 ஆகக் குறைந்துள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார வளர்ச்சி, குறைந்த பிறப்பு விகிதத்தை ஒட்டிய மக்கள்தொகை குறைவு போன்றவை, உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தட்டுப்பாடு, வட இந்தியத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி நகர்த்தியுள்ளது.

அதிகரிக்கும் வெறுப்பு: வளர்ந்த பிரதேசங்களை நோக்கிய மக்களின் நகர்வு உலகம் முழுவதும் வழக்கமானதுதான். மனிதவளக் குறியீட்டில் தொடர்ந்து முதல் வரிசையில் உள்ள கனடா, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் வெளிநாட்டவரைத் தங்கள் நாட்டில் குடியேற்ற முடிவுசெய்துள்ளது.

இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 4% ஆகும். ஏனெனில், அங்கும் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதன் காரணமாகத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதை நிவர்த்திசெய்யவில்லை எனில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பது அந்நாட்டின் கவலை.

அதேபோல், வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவதும் சமூக, பொருளாதார அளவீடுகளின்படி தவிர்க்க இயலாத ஒன்றுதான். மாதம் ரூ.10,000 ஊதியத்துக்கு அவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கிறார்கள். பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லாமல் குடும்பத்தைப் பிரிந்து, மோசமான வாழிடத்தில் தங்கி வேலை செய்கின்றனர்.

இவ்வாறான சாதாரண கூலித் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. உண்மையில், இந்தப் போக்கு இந்திய அரசமைப்பின் பாகுபாட்டுக்கு எதிரான 15ஆவது கூறு, வாழ்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் 21ஆவது கூறு ஆகியவற்றுக்கு எதிரானது.

யேல் பல்கலைகழகப் பேராசிரியர் ஜேசன் ஸ்டேன்லி, ‘பாசிசம் எவ்வாறு இயங்குகிறது?’ (How Fascism Works: The Politics of Us and Them) எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். அதில், ‘சிறுபான்மையினரால் நமது உரிமை / பொருளாதாரம் / கல்வி / வேலைவாய்ப்பு ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று பெரும்பான்மையினரிடையே நடத்தப்படும் பிரச்சாரமும் அதையொட்டிப் பரப்பப்படும் அச்சவுணர்வுமே பாசிசத்தின் அடிப்படை’ என்று அவர் வரையறுக்கிறார்.

ஆகவே, தமிழ்நாட்டினரின் உரிமைக்காகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, வட இந்தியக் கூலித் தொழிலாளர்களை எதிரிகள் எனச் சமூக ஊடகங்களில் சித்தரித்துச் சிலர் பரப்பும் கருத்துகளைப் பாசிசத்தின் தோற்றுவாய் என்றே கருத வேண்டியிருக்கிறது.

தமிழர்களின் குடியேற்றங்கள்: திரைகடலோடியவர்கள் தமிழர்கள். இங்கிருந்து புலம்பெயர்ந்தோர் பல்வேறு நாடுகளில், மாநிலங்களில் வாழ்கின்றனர். அமெரிக்கத் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். தமிழர்கள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் வருவாயில் வெளிநாட்டில் வசிக்கும் நமது மக்கள் அனுப்பும் பணமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, உடல் வலியைப் போக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டு உழைத்துக்கொண்டிருக்கும் எளிய வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்புவது இனவாத வெறுப்பில்தான் முடியும். தமிழ்நாட்டில் கட்டப்படும் பெரும் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில்கள், சிறு, குறு நிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் அவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.

அரசு செய்ய வேண்டியவை: அதே நேரத்தில், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் தமிழ்நாட்டின் அரசு வேலைகளில், ரயில்வே பணிகளில், வங்கிப் பணிகளில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற பலவற்றிலும் தமிழரல்லாத அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதை இத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது.

தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரக் கனவோடு நகர்ந்துகொண்டிருக்கும்போது, இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கே பெருமளவு வருவதைத் தடுப்பது சரியல்ல. உடலுழைப்பு செய்யும் தொழிலாளர்கள் குறைந்தது, உயர் கல்வியறிவு விகிதம் அதிகரித்தது ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நாம் நிரப்பாவிடில், தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிந்து வீழ்ந்துவிடும்.

எவ்வித முறைப்படுத்துதலும் இல்லாமல் இங்கே உழைக்கும் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு மாநில அரசு நலவாரியம் அமைக்க வேண்டும். அவர்களின் தொழில் முறையை ஒழுங்குபடுத்தி, வருங்கால வைப்பு நிதி, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடுகள், பணிப் பாதுகாப்பு முதலியவற்றை உறுதிசெய்ய வேண்டும். அது சமூகநீதி வரலாற்றில் ஒரு மணிமகுடமாக அமையும்!

- சட்வா தங்கராசு மருத்துவர், ‘போலி அறிவியல், மாற்று மருத்துவம் & மூடநம்பிக்கை’ நூலாசிரியர்; தொடர்புக்கு: drsatva@gmail.com



Read in source website

துருக்கியிலும் அதன் அண்டை நாடான சிரியாவிலும் பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த ஆண்டின் மிகப் பெரிய துயரங்களில் ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது. இதுவரை 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. கடும் குளிர்காலம் என்பதால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அடிக்கடி நிலநடுக்கப் பேரழிவைச் சந்திக்கும் நாடு துருக்கி. ‘அனடோலியன்’ எனப்படும் மேலடுக்குத் தட்டில் அமைந்திருக்கும் இந்நாட்டில், 1999இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2020இல் மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.



Read in source website

சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள வள்ளலார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றிருந்தேன். ஏன் சென்றோம் என மனம் கசந்துவிட்டது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ உச்சகட்ட மனிதநேயர். ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ எனப் பறைசாற்றிய நன்னெறியாளர். ‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!’ எனக் கொதித்தெழுந்த புரட்சித் துறவி.

அவர் வாழ்ந்த இல்லம் இப்போது குண்டும் குழியான தெருவில், நெருக்கமான வீடுகளுக்கு இடையில், பரிதாபமாகத் தோற்றமளித்தது. அதிர்ச்சியும் வேதனையும் மனதைக் கவ்வின. உலகச் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க ஓர் அரிய ஆளுமைக்கு நாம் செலுத்தும் மரியாதை இவ்வளவுதானா?



Read in source website