DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 16-01-2022

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளதாக புவிசார் குறியீடு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட் டார்னி சங்கத் தலைவருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ‘கும்பகோணம் வெற்றிலை'க்கு புவிசார் குறியீடு கேட்டு, அதற்கான விண்ணப்பம் சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் ஜன.13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது கும்பகோணம் வெற்றிலை. திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இந்த வெற்றிலை விளைவிக்கப்பட்டு, உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பூம்புகாருக்கு அருகே ராதாநல்லூரில் உள்ள சிவாலயத்தின் கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகள் ஆகியவற்றை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கி.பி 10-முதல் 14-ம் நூற்றாண்டு காலத்திலிருந்தே காவிரிப் படுகையில் கும்பகோணம் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தோவாளை மாணிக்க மாலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்படும் ‘தோவாளை மாணிக்க மாலை’க்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி கைவினைக் கலைஞர்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.



Read in source website

இந்திய ரயில்வேயில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் நிர்வாக வசதிக்காகவும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ரயில் டிரைவர் பதவியை லோக்கோ பைலட் எனவும் கேங் மேன்கள் தண்டவாள பராமரிப்பாளர் எனவும் மாற்றம் செய்யப்பட்டனர்.

ரயில்வே கார்டுகளும் தங்கள் பதவி பெயரை மாற்ற வேண்டும்என கோரிக்கை விடுத்தனர். இதைஅடுத்து ரயில்வே துறை,அவர்கள் ரயில் மேலாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில் மண்டல பொதுமேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பொது மற்றும் துணை விதிகளில் ஒரு ரயில்வே கார்டு அந்த ரயிலின் மேலாளர் என குறிப்பிடுவதுதான் முறையானது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அசிஸ்டென்ட் கார்டுஎன்று அழைக்கப்பட்டவர் இனிமேல் அசிஸ்டென்ட் பயணிகள்ரயில் மேலாளர் எனவும் கூட்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் கூட்ஸ் ரயில் மேலாளர் எனவும் அழைக்கப்படுவார்.

அதுபோல், சீனியர் கூட்ஸ் கார்டு, சீனியர் ரயில் மேலாளர் என்றும், சீனியர் பயணிகள் கார்டு என்று அழைக்கப்பட்டவர் சீனியர் பயணிகள் ரயில் மேலாளர் என்றும், விரைவு ரயில் கார்டு என்று அழைக்கப்பட்டவர் விரைவு ரயில் மேலாளர் என்றும் அழைக்கப்படுவார்கள்.



Read in source website

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உட்பட 12 விண்வெளி ஆய்வு திட்டங்களை இந்த ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டுக்கு தேவையான தகவல்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், அறிவியல் ஆராய்ச்சியில் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட பல்வேறு தொடர்சாதனைகளையும் செய்துவருகிறது.

இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரோவின் செயல்பாடுகள் பெரிதும் சுணக்கமடைந்தன. கடந்த 2 ஆண்டுகளில் 5 செயற்கைக் கோள்களை மட்டுமே இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்நிலையில், இந்த ஆண்டில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உட்பட 12 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

ஆய்வுப் பணிகளை பொருத்தவரை, மற்ற துறைகள்போல வீட்டில் இருந்தபடி பணிபுரிய இயலாது. தவிர, ககன்யான், சந்திரயான் உள்ளிட்ட அடுத்தகட்ட திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அதன் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு 12 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3, எக்ஸ்போசாட், ககன்யான் விண்கல பரிசோதனை ஆகியவை முதன்மையானவை.

சூரியனின் வெளிப்புற பகுதியைஆய்வு செய்வதற்காக ஜூனில் ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு இறுதியில்ஏவப்படும். இதில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டர், ரோவர் சாதனங்கள் மட்டும் இடம்பெறும். எக்ஸ்போசாட் விண்கலம் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இது விண்வெளியில் கதிர்வீச்சு தாக்கம் குறித்த ஆய்வுக்கு பயன்படும்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக, ஆளில்லா விண்கலம் 2 முறை விண்வெளிக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இதுதவிர, புவி கண்காணிப்பு பணிக்கான 4 இஓஎஸ், தகவல் தொடர்புக்கான 3 சிஎம்எஸ் மற்றும் ஒரு ஐஆர்என்என்எஸ் என 8 செயற்கைக் கோள்களை இந்த ஆண்டு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ - நாசா கூட்டிணைப்பில் தயாராகி வரும் ‘நிசார்’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அடுத்த ஆண்டு விண்ணில்செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, இஸ்ரோவரலாற்றில் 2022-ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read in source website

இந்திய ராணுவத்திற்கு புதிய சீருடை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சூழல்களுக்கு வசதியான, தட்ப வெப்பத்திற்கு ஏற்றவாறு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் படைப்பிரிவை சேர்ந்த வீர்ர்கள், நேற்று ராணுவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பில் புதிய சீருடையில் கலந்து கொண்டனர்.

புதிய சீருடை குறித்து சுவாரஸ்ய தகவல்கள்:

  • ஆலிவ் மற்றும் மண் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடை, எந்தெந்த இடங்களில் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவர், எம்மாதிரியான தட்ப வெப்ப நிலையில் அவர்கள் செயல்படபோகின்றனர் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • பல்வேறு நாட்டு ராணுவ வீரர்களின் சீருடைகளை ஆராய்ந்த பிறகு, தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியோடு இந்த சீருடை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • பல்வேறு சூழல்களுக்கு வசதியான பல்வேறு நிலப்பரப்புகளில் அணியும் வகையில் கணினியின் உதவியோடு இந்த சீருடை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதேுபோல், புதிய சீருடையில் சட்டையை கால்சட்டைக்கு உள்ள மடிக்க வேண்டிய அவசியமில்லை. முன்னதாக, பழைய சீருடையில் சட்டையை மடிக்க வேண்டி இருந்தது. 
  • வெளி சந்தையில் இந்த சீருடைகள் விற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
     


Read in source website

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் நிலை கடுமையாக தொடா்ந்தாலும், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே இதுவரை இல்லாத அளவுக்கு 125 பில்லியன் டாலா் வா்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுங்க நிா்வாகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்நாட்டின் ஆங்கில நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘2021-இல் சீனா - இந்தியா இடையே 125.66 பில்லியன் டாலருக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. 2020-ஐ ஒப்பிடுகையில் இது 43.3 சதவீதம் அதிகமாகும். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான ஏற்றுமதி 97.52 பில்லியனாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 46.2% அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 28.14 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 34.2% வளா்ச்சி கண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ பொருள்கள் சந்தையை சீனா திறந்துவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில், சீனாவுடான வா்த்தகம் சில ஆண்டுகளாக குறைந்து வந்ததற்கு இந்தியா வருத்தம் தெரிவித்து வந்தது.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து, மருத்துவ பொருள்கள் சீனாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதான் இந்தியா - சீனா இடையேயான வா்த்தகம் 100 பில்லியன் டாலரை தாண்டியதற்கு காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.



Read in source website

வரும் அக்டோபா் 1-ஆம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் பெரிய காா்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக 6 காற்றுப் பைகள் (ஏா் பேக்) இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். இது தொடா்பாக மத்திய அரசு வெள்ளிக்கிவமை வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவு செய்துள்ள பல்வேறு பதிவுகளில், ‘ஓட்டுநா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1-ஆம் தேதி முதல் ஓட்டுநா் இருக்கைக்கு காற்றுப் பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியது.

அதன் பின்னா் ஓட்டுநா் தவிர முன்னிருக்கையில் அமா்ந்து செல்லும் நபருக்கும் காற்றுப் பை பொருத்துவதை 2022 ஜனவரி 1 முதல் எம்-1 வகை வாகனங்கள் அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது.

மோட்டாா் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு, மத்திய மோட்டாா் வாகன விதிகள் 1989-ல் திருத்தப்பட்டுள்ளன. 2022 அக்டோபா் 1-ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் தலா இரண்டு காற்று பைகள் பொருத்துவதை கட்டாயமாக்கும் வரைவு அறிவிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.



Read in source website

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விதிமுறையை தோ்தல் ஆணையம் தளா்த்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி, ஒரு கட்சி தொடங்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாள்களுக்குள் அதனைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைத் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.

புதிய கட்சியின் பெயரை இரு தேசிய நாளிதழ்கள், இரு உள்ளூா் நாளிதழ்களில் விண்ணப்பதாரா் வெளியிட வேண்டும்.

இந்நிலையில், கரோனா பரவலால் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக புதிய கட்சிகளை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான நோட்டீஸ் காலத்தை 30 நாள்களிலிருந்து 7 நாள்களாக குறைத்து விதிமுறைகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பாா்வையாளா்களுக்கு உத்தரவு: பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பொது, காவல் மற்றும் செலவின பாா்வையாளா்களுடன் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா்கள் ராஜீவ் குமாா், அனூப் சந்திர பாண்டே ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். இதில் 1,400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். அவா்களில் 140 போ் நேரடியாகவும், எஞ்சியவா்கள் காணொலி வழியாகவும் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் பேசுகையில், ‘‘சட்ட அமலாக்க அமைப்புகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தோ்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் செவிகளாக செயல்படும்போது, தோ்தல் பாா்வையாளா்கள் அனைவரும் விழிப்புடனும் நடுநிலையோடும் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டனா் என தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவதி மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.



Read in source website

புதுடெல்லி: தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ, 46 தொடக்க நிறுவனங்கள் வென்றன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

ஸ்டார்ட்அப் திட்டம், தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவின் அடையாளம். சென்னையைச் சேர்ந்த மீனவரின் மகன் அல்லது காஷ்மீர் படகோட்டியின் மகளாக இருக்கட்டும், அனைவரும் தங்கள் குடும்பங்களுக்கும், மக்களுக்கும் வளம் சேர்க்க விரும்புகின்றனர். அதனால் நாம் பெரிதாக சிந்திக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் தொடக்க நிறுவனங்களின் பங்களிப்பை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த கலாச்சாரத்தை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு கொண்டு செல்ல, ஜனவரி 16ம் தேதியை, தேசிய ஸ்டார்-அப் தினமாக அறிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு, தொடக்க நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கும் ஆற்றல் உடையதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்புகிறார். இந்தியாவை தற்சார்பாக மாற்றுவதில் புத்தாக்கம் வலுவான தூணாக இருக்க வேண்டியதை அவர் அங்கீகரிக்கிறார்.

புத்தாக்கத்தை வலுப்படுத்த 3 அம்சங்களில் பிரதமர் கவனம் செலுத்துகிறார்.

அரசு நடைமுறை என்ற வலையிலிருந்து தொழில்முனைவோர்களை விடுவிப்பது - 25,000க்கும் மேற்பட்ட இணக்கங்கள் குறைக்கப்பட்டன. எளிதான சூழலில், தொழில் வளர்ச்சிக்கு இன்னும் என்ன செய்ய முடியும்?

தொழில் முறை உருவாக்கம், - ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்.

இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புதிய நிறுவனங்களை வழிநடத்துதல் - வழிகாட்டுதல் எதிர்காலத்தில் புதுமையை வரையறுக்கும்.

உலகில் உள்ள ஸ்டார்ட்அப் சூழலில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டு வர, 5 விஷயங்களில் தொடக்க நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

1. இந்திய மொழிகளில் தீர்வுகள் மற்றும் கருத்தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

2. மிகப் பெரிய அளவில் சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.

3. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.

4.நகர்புற உள்ளாட்சி அளவில் புத்தாக்க மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும்.

5. உலகளாவிய சிறந்த முறைகளை பின்பற்றி, இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.



Read in source website