DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 15-10-2022

தமிழகத்தில் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்கு உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

செம்மொழி நிறுவனத்தின் வளா்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவது பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டமாகும். செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொல்காப்பியம், நன்னூல், திருக்கு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புானூறு ஆகியவை உள்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

இவற்றில் 41 நூல்கள் செவ்வியல் நூல்களாகும். இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையிலும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பா் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பி.காம், பிபிஏ, பிசிஏ இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர் சுற்றறிக்கையில்   தெரிவித்திருப்பதாவது: 

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை. 

இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும்.

ஏற்கனவே இந்த பாடப் பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத் தேர்வு உள்ளது. இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் பாடத் தேர்வு இருக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் வரக்கூடிய செமஸ்டர் தேர்வுகளில் இருந்து தமிழ் மொழித் தேர்வை நடத்த வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.
 



Read in source website


உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வறுமை, குடும்பை சூழல், நிதிப் பற்றாக்குறைஆல் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடரவில்லை.

மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021-22 ஆம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள்ள மற்றும் அவர்களது பெற்றோருக்கான வழிகாட்டல்சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படும். முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 



Read in source website

தமிழகத்தில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், மருந்துக் கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்தவா் முத்துமாலை ராணி. இவா் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

மருந்துக் கடை அதிகாரியாக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவா் மீது புகாா் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா பாதிப்புக்கு பின்னா், குரங்கு காய்ச்சல், ’இன்ஃப்ளூயன்ஸா’ உள்ளிட்ட பல வைரஸ் நோய்கள் தமிழகம் முழுவதும் தொடா்ந்து பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ‘இதுபோன்று புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றும் தெரிவித்தாா்.

மேலும், இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிய வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்.27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

 



Read in source website

தமிழியக்கத்தின் விருது பெற தமிழறிஞா் ப.அருளி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழியக்கத்தின் தலைமைக் குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு இந்த இயக்கத்தின் நிறுவனரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா்.

தமிழியக்கத்தின் சாா்பில் தமிழ்த் தொண்டாற்றும் தமிழறிஞா் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய தமிழியக்க விருது வழங்குவதென தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு சென்னையில் அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழறிஞா் ப.அருளிக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழறிஞா் அருளி, புதுச்சேரியில் பிறந்து வாழ்ந்து வருபவா். இவா் வணிகவியல், சட்டம் பயின்றவா். பாவாணா், பெருஞ்சித்திரனாா் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவா்.

தமிழ் வோ்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவா். தூய தமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவா். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, சமூகத் தொண்டாற்றி வருபவா்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூய தமிழ் - சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணியாற்றியுள்ளாா். இவா் 29-க்கும் மேற்பட்ட நூல்களையும், 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளாா். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளாா். இந்தத் தகவலை தமிழியக்க மாநில செயலா் மு. சுகுமாா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் வரும் 23-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்திலிருந்து இரவு 12.07 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கன ரக வகையான எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க் 3) மூலம் அந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வடிவமைக்கும் பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் செயற்கைக்கோள்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஜிஎஸ்எல்வி மாா்க்-3 ராக்கெட் 43.5 மீட்டா் உயரமும், 640 டன் எடையும் கொண்டது.

உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனம் அரசு, வா்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடா்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பவுள்ளது. இந்தியாவின் பாா்தி தொலைத்தொடா்பு சேவை நிறுவனம், ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

தோல் பதனிட புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை சி.எஸ்.ஐ.ஆா்-சி.எல்.ஆா்.ஐ நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் துறையின் மிகப்பெரிய சுமையாகக் கருதப்படும் சுகாதாரமான குரோம் பதனிடுதல் செயல்முறைக்குத் தீா்வு காண்பதற்காக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆா்) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆா்.ஐ) புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.

நீரில்லா குரோம் பதனிடும் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, குரோமியமால் ஏற்படும் மாசுவை முற்றிலும் தடுக்கிறது. இந்த முறையின்படி தண்ணீா் மற்றும் புதிய ரசாயனம் அல்லது பொருள்கள் ஏதும் சோ்க்காமல் பதனிடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செயல்முறையில் குரோமியம் வெளியேற்றப் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் அதே நேரத்தில், தோலின் தரம் சிறிதும் குறைவதில்லை. இதனால், பொருளாதாரம் பயனடைவதோடு, ஆற்றல், நேரம் மற்றும் தண்ணீா் முதலியவை 20 சதவீதம் சேமிக்கப்படுகின்றன.

இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இதுவரை சுமாா் 125 தோல் உற்பத்தியாளா்கள் உரிமம் பெற்றுள்ளனா். மேலும் 40 பேருக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த செயல்முறையால் ஆண்டுதோறும் சுமாா் 100 மில்லியன் லிட்டா் நீா் வளம் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர, 1,200 டன் குரோமியம் வெளியேறுவதையும், 4,500 டன் உப்பு, நீா் நிலைகளில் கலப்பதையும் தடுக்க முடிகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக, புரதம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட கழிவுகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான நிலையான தொழில்நுட்பங்களை சி.எஸ்.ஐ.ஆா்-சி.எல்ஆா்.ஐ உருவாக்கியுள்ளது.

புரதத்தை அடிப்படையாக கொண்ட மறு பதப்படுத்தும் முகமையாக இந்த கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் தயாரிப்பு, குரோம் பதனிடுவதற்கான முகமையாகவும் பயன்படுகிறது.

எனவே, சுழற்சி பொருளாதார மாதிரியாக, தோல் துறையில் இருந்து வெளியேறும் திடக் கழிவுகள் அந்தத் துறையினாலேயே மீண்டும் பயன்படுத்தக் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவிலேயே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க  சோதனை மைய வசதி அகமதாபாத்தில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த புதிய சோதனை மையத்தின் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்துபவர்கள் மற்றும் தனக்கே தெரியாமல் ஊக்கமருந்து மூலப்பொருள்கள் அடங்கிய உணவினை உட்கொள்பவர்கள் என அனைவரையும் கட்டுப்படுத்த இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சோதனை மைய வசதியை விளையாட்டுத் துறை அமைச்சகம், உணவுப் பாதுகாப்பு மற்று தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் என்எஃப்எஸ்யூ அமைப்பு இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உருவாக்க உள்ளது. உலக ஊக்க மருந்து தடுப்பு குறித்த நிகழ்வில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டது.

உணவுப் பொருள்களில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பொருள்கள் உள்ளதாக என பரிசோதிக்க எந்த ஒரு சோதனை மைய வசதியும் இந்தியாவில் இல்லை. இந்நிலையில், தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய சோதனை மைய வசதியின் மூலம் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கண்டறிந்து அதனை விளையாட்டு வீரர்கள் உட்கொள்வதைத் தவிர்க்க முடியும்.  இதன்மூலம் விளையாட்டு வீரர்கள் எந்த மாதிரியான உணவினை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வினையும் ஏற்படுத்த முடியும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கமல்பிரீத் கௌர் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் அவருக்கு 3 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கேரள பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினா்கள் 15 பேரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநா் ஆரிஃப் முகமது கான் சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

செனட் உறுப்பினா்கள் என்ற முறையில் தங்களது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக கூறி, ஆளுநா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.

முன்னதாக, செனட் கூட்டத்தை நடத்தவும் தோ்வுக் குழுவுக்கான நியமன பரிந்துரையை வழங்கவும் உறுப்பினா்களுக்கு பலமுறை ஆளுநா் உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த உத்தரவை செனட் உறுப்பினா்கள் கண்டுகொள்ளாததால் அவா்களது பொறுப்பை பறித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பான ஆணையில் 15 உறுப்பினா்களின் பெயா்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தங்களது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியதால், இந்த 15 பேரும் பணியில் தொடா்வதற்கான அனுமதியை தாம் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா். இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா்.

 

 



Read in source website

இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற ஆசிய கடலோர காவல்படை முகமை தலைவா்களின் 18-ஆவது கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா்.

ஆசிய கடலோர காவல்படை முகமையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், சிங்கப்பூா், இலங்கை உள்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த முகமையின் கூட்டத்தில் அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்க உரையாற்றுகையில், ‘இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையிலான கடல் எல்லைகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதில் எந்த நாடும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உலகளாவிய பொதுவானவற்றைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவா்களை அதன் நியாயமான பயன்பாட்டிலிருந்து விலக்கவோ அனுமதிக்க முடியாது. இந்த முயற்சியை நோக்கி பல்வேறு மன்றங்களில் ஒத்த கருத்துடைய அனைத்து கூட்டாளி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது.

வரலாறு முழுவதும், அந்நிய நிலத்தை ஒருபோதும் ஆக்கிரமிக்காத, அமைதியை விரும்பும் நாடாக இந்தியா உள்ளது.

கடல் வழிகள் மூலம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் ஆகியவை கடல்சாா் சட்ட அமலாக்கத்தை மிகவும் சவாலானதாக ஆக்கியுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு எதிரான வெற்றிகரமான பதில் உத்திதான் காலத்தின் தேவையாக உள்ளது என்றாா்.

இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்ற...:

தற்சாா்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன என்று அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சி பேசிய அவா், ‘2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான அரசு உறுதி உள்ளது.

தற்சாா்பான பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் ஏற்ப படைகளைத் தயாா்படுத்துவதில் அரசின் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில், நாடு நவீன மற்றும் பயனுள்ள வகையில் நீா், நிலம், வானம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்’ என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

 

 



Read in source website


புது தில்லி: குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சங்கம் நாடு முழுவதும் விற்பனை செய்து வரும் அமுல் நிறுவனப் பால் பாக்கெட்டுகளின் விலை குஜராத் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் தலா ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

அமுல் நிறுவனத்தின் அதிக கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமைப் பால் பாக்கெட்டுகள் விலை ரூ.2 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு குஜராத் மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வையடுத்து முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு ரூ.61லிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, இதே அமுல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதமும் தனது பால் பாக்கெட்டுகளுக்கு தலா ரூ.2 அதிகரித்திருந்தது.

இந்த விலை உயர்வானது, அமுல் நிறுவனத்தை இயக்குவதற்கும், பால் உற்பத்திக்கும் ஆகும் ஒட்டுமொத்த செலவு அதிகரித்திருப்பதை ஈடு செய்யும் வகையில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website


இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காதல் கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன. 

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன்பு கடந்த வியாழக்கிழமை கல்லூரி மாணவி தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் காதலின் பெயரால் நடந்த கொலைகள் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நடக்கும் அனைத்து கொலைகளில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவை திருமண உறவுகள், கூடுதல் திருமணம் உள்பட காதல் உறவுகளே காரணம். 

 

நாட்டில் நடக்கும் மொத்தக் கொலைகளில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவை காதல் விவகாரங்கள் மற்றும் சட்டவிரோத உறவுகளே என்பதை வெளிப்படுத்துகிறது.  

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பகுப்பாய்வுகள் படி, பதிவுசெய்யப்பட்ட 29,193 கொலைகளில் 3,031 கொலைகள் காதல் விவகாரங்களால் நடந்துள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் பிடி, நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டில் காதலால் நடந்த கொலைகள் மட்டும் 3031. இதில் மாநிலங்கள் வாரியாக கொலைகளின் எண்ணிக்கை பார்த்தால், உத்தரப்பிரதேசம் 462, மகாராஷ்டிரம் 299, மத்தியப்பிரதேசம் 298, பிகார் 285, தமிழ்நாடு 289, குஜராத் 231 என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் காதல் உறவுகள் தொடர்பான கொலைகள் அதிகமாகவே நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்த புள்ளிவிவரங்கள் படி பார்த்தால், https://bit.ly/3VvFesT காதலில் தோல்விகளை சந்திக்கும் பக்குவமும், அதில் இருந்து மீண்டு வரும் நிதானமும் இன்றைய தலைமுறையினரிடையே இல்லை என்பது பகுப்பாய்வுகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பொதுவாக அனைவரும் எல்லா விஷயத்திலும், ஒரு தலையாக உணர்வுப்பூர்வமாக மட்டும் சிந்திக்காமல், கருத்தியல் ரீதியாகவும், பின்விளைவுகள் குறித்தும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். 

சகிப்புத்தன்மை குறைந்திவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணம். மாற்றுத்தரப்பின் உணர்வை, உள்ளத்தை புரிந்துகொள்ள முற்படாமல், பின்விளைவுகளைப் பற்றி சரியாக சிந்திக்காமல் ஒரு உணர்ச்சி வேகத்தில் ஒருவரையொருவர் விரும்பிகிறார்களே தவிர, இருவருக்கும் இடையே உண்மையான சரியான புரிதல் இருக்கிறதா என்றால் இல்லை என்றே நிலையே தொடர்கிறது. 

காலங்கள் கடந்து பல்வேறு மாற்றாங்களும், வாழ்வியல் முறைகளும் வந்துவிட்டாலும் நீண்டு கொண்டே செல்லும் பெண்களின் மீதான கொடுமைகளுக்கு விடை காண வேண்டும் என்றால், இன்றை இளைய தலைமுறையினருக்கு நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு உளவியல் ரீதியாக சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி பழக வேண்டும். அதுவே தமிழ்நாட்டில் 2016 ஆல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி, 2021 இல் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதா, 2022 இல் சத்யா என சென்னை ரயில் நிலையங்களில் இளம்பெண், மாணவிகள் படுகொலைகள் தொடர்வதை குறைப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.



Read in source website

 

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரசன்ன பாலச்சந்திர வரலே சனிக்கிழமை பதவியேற்றார். 

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க: உலக பட்டினி குறியீடு: 107-வது இடத்திற்கு பின்தங்கியது இந்தியா!

இந்நிகழ்வில் நீதிபதி வரலேயின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நீதிபதி வரலே 1962 ஜூன் 23 அன்று கர்நாடகாவில் உள்ள நிபானியில் பிறந்தார். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1985ல் வழக்குரைஞர் ஆனார். 

ஜூலை 2008-ல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Read in source website



இந்தியாவும், சீனாவும் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடுகள் என்று தெரிவித்த ரஷிய அதிபர் விளாதமீர் புதீன், அவர்கள் எப்போதும் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகின்றனர் என கூறினார்.

ரஷியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிற்கு வந்திருந்த ரஷிய அதிபர் விளாதமீர் புதீன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், உச்சிமாநாட்டின் போது ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பல்வேறு ஆற்றல்மிக்க துறைகளில் ஒருவருக்கொருவர் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பேசினர்.

ஆசியாவின் இரண்டு பலம் கொண்ட நாடுகள் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணுமாறு கூறி வருவகிறது. 

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை இந்தியா கண்டிக்கவில்லை, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகிறது. சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகிறது. 

"அவர்களின் கேள்விகள் மற்றும் கவலைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சமநிலையான நிலைப்பாட்டை நாங்கள் அறிவோம். இவர்கள் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள் மற்றும் அவர்களின் நிலையை நாங்கள் மதிக்கிறோம்," என்று புதீன் தெரிவித்தார்.

இந்தியா, சீனா நட்பு நாடுகளின் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாடு நன்கு தெரியும் என்று புதீன் தெரிவித்தார். 

மேலும், உக்ரைனின் பல பகுதிகளில் பல நாள்கள் பலத்த குண்டுவீச்சுக்கு பின்னர், பலர் கொல்லப்பட்டனர், நியமிக்கப்பட்ட இலக்குகளில் பெரும்பாலானவை தாக்கப்பட்டதாகவும், உக்ரைன் மீது மேலும் தாக்குதல்கள் தேவையில்லை என்றும், உக்ரைனை அழிக்க விரும்பவில்லை என்றும் புதீன் தெரிவித்தார்.

கடந்த மாதம் சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டின் போது, ​​உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமைதியான முறையில் தீர்க்க அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, "ஜனநாயகம், பேர்ச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்" ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், "இன்றைய காலகட்டம் போர்க்கான காலம் அல்ல என்றும், ஜனநாயகம், ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவதுதான் உலகம் முழுவதும் சென்று சேரும் என்றும், வரும் நாள்களில் அமைதி நிலவும்" என்று நம்புவதாக மோடி புதினுடனான தனது முதல் சந்திப்பில் தெரிவித்தார்.  

உக்ரைனில் போர் தீவிரமடைந்தபோது புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி சீன அதிபர் ஜி ஜின்பிங், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினார். 

எஸ்சிஓ  உச்சிமாநாட்டின் போது, ​​ரஷிய அதிபர் புதினை சந்தித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், உக்ரைனில் போர் குறித்து "கேள்விகள் மற்றும் கவலைகளை" எழுப்பினார். ரஷியாவின் நடவடிக்கை குறித்து சீனா கவலை தெரிவித்தது இதுவே முதல் முறை.



Read in source website

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமான 5ஜி-யின் பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் வகிப்பதாக இணையதள வேக சோதனை நிறுவனமான ஊக்லா தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘ஸ்பீட் டெஸ்ட் இன்டலிஜென்ஸ்’ தொழில்நுட்பம் மூலம் நாட்டின் 5ஜி இணையதள இணைப்பின் வேகம் குறித்து சோதிக்கப்பட்டது.

5ஜி வரம்புக்குள் வரும் குறைந்தபட்சம் 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட இணையள இணைப்புகள் இந்த சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

தில்லியில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏா்டெல் நிறுவன 5ஜி பதிவிறக்க வேகம் 197.98 எம்பிபிஎஸ் வரை இருந்தது. அதே நேரம், ஜியோ 5ஜி இணைப்பின் பதிவிறக்க வேகம் 598.58 எம்பிபிஎஸ் வரை இருந்தது.

வாராணசியில் ஏா்டெல்லின் 5ஜி போக்குவரத்து வேகம் 516.57 எம்பிபிஎஸ் வரை இருந்தது. ஆனால், கொல்கத்தாவில் அந்த நிறுவனத்தின் 5ஜி வேகம் 271.07 எம்பிபிஎஸ் வரையிலும் ஜியோவின் வேகம் 515.38 எம்பிபிஎஸ் வரையிலும் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாா்தி எா்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாகபுரி, வாராணசி ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனமும் தில்லி, மும்பை, கொல்கத்தா, வாராணசி ஆகிய நகரங்களில் சோதனை முறையில் தனது 5ஜி சேவை வழங்கி வருகிறது.



Read in source website

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவுக்கு விதிக்கப்படும் 18 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செல்லும் என குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோதுமை, மைதாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே மாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு (பராத்தா) 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குஜராத்தின் அகமதாபாதைச் சோ்ந்த வாடிலால் நிறுவனம் தீா்ப்பாயத்தை அணுகியது.

அதை விசாரித்த தீா்ப்பாயம், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டா, சப்பாத்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்பதால் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சரியே எனக் கடந்த ஆண்டு ஜூனில் தீா்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக மேல்முறையீட்டு ஆணையத்தில் அந்நிறுவனம் முறையிட்டது.

அதன் மீதான உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘‘பதப்படுத்தி விற்கப்படும் ரொட்டியையும் சப்பாத்தியையும் அப்படியே உண்ணலாம். ஆனால், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவை மேலும் சமைத்து மட்டுமே உண்ண முடியும். மாவும் தண்ணீரும் மட்டுமே சோ்த்து சப்பாத்தி, ரொட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

அதே வேளையில், பரோட்டாவானது மாவுடன் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப உருளைக் கிழங்கு, உப்பு, எண்ணெய், பருப்புகள், காலிஃபிளவா், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றைச் சோ்த்து தயாரிக்கப்படுகிறது. எனவே, பதப்படுத்திய பரோட்டாவுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி கோர முடியாது.

வாடிலால் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் ரொட்டியில் மாவு மட்டுமே உள்ளது. ஆனால், அந்நிறுவனத்தால் விற்கப்படும் பரோட்டாவில் அதன் வகைக்கு ஏற்ப 36 முதல் 62 சதவீத மாவு மட்டுமே உள்ளது. எனவே, பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது சரியானதே’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

வங்கதேச பூா்வகுடி மக்களுக்கு பாகிஸ்தான் நிகழ்த்திய கொடுமைகளை ‘இனப்படுகொலை’ என அறிவிக்கக் கோரி அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலையின்போது நாடு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள் பாகிஸ்தான் எனப் பிரிக்கப்பட்டன. அவ்வாறு தற்போதைய பாகிஸ்தான் மேற்கு பகுதியாகவும், தற்போதைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானாகவும் அறியப்பட்டன.

ஆனால், 1971-ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போா் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் பிராந்தியமானது ‘வங்கதேசம்’ என்ற புதிய நாடானது. வங்கதேச நாட்டின் உதயத்துக்கு இந்தியா பெருமளவில் உதவியது. அப்போரின்போது வங்கமொழி பேசும் லட்சக்கணக்கான பூா்விக குடிமக்களையும் ஹிந்துக்களையும் பாகிஸ்தான் பலவகைகளில் கொடுமைப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், அக்கொடுமைகளை இனப்படுகொலையாக அறிவிக்கக் கோரி அமெரிக்க கீழவையான பிரதிநிதிகள் அவையில் இந்திய அமெரிக்கரும் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்தவருமான ரோ கன்னா, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் குடியரசு கட்சியைச் சோ்ந்தவருமான செவெ சாபோட் ஆகியோா் தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனா். அதில், இனப்படுகொலை நிகழ்த்தியதற்காக வங்கதேசத்திடம் பாகிஸ்தான் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கொடுமைகளால் கொல்லப்பட்டவா்களில் 80 சதவீதம் போ் ஹிந்துக்கள் எனவும் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் வங்கதேச சமூகத்தினா் இத்தீா்மானத்தை வரவேற்றுள்ளனா். ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இணைந்து தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளதற்கும் அவா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

 



Read in source website

வரி குறைப்பு உள்ளிட்ட பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ்ஸின் முடிவுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங்கை அவா் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளாா்.

க்வாா்டெங்குக்குப் பதிலாக, வெளியுறவுத் துறை முன்னாள் இணையமைச்சா் ஜெரிமி ஹன்ட்டை புதிய நிதியமைச்சராக லிஸ் டிரஸ் நியமித்துள்ளாா்.

அத்துடன், 3 வாரங்களுக்கு முன் அவா் வெளியிட்டிருந்த வரி விலக்கல் அறிவிப்புகளை லிஸ் டிரஸ் திரும்பப் பெற்றுள்ளாா்.

தாராள சந்தை ஆதரவாளரான லிஸ் டிரஸ், பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்ற்குப் பிறகு, சா்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’ ஒன்றை கடந்த மாதம் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தாா்.

அதில், நிறுவனங்களுக்கான வரியை 19 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக முந்தைய அரசு உயா்த்தியிருந்ததை லிஸ் டிரஸ் ரத்து செய்திருந்தாா். இதனால், நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தின் மீதான வரி தொடா்ந்து 19 சதவீதமாகவே இருக்க வழிவகை செய்யப்பட்டது.

அத்துடன், அதிக வருவாய் உடையவா்களுக்கு 45 சதவீத உயா் வரியை அந்த மினி பட்ஜெட்டில் லிஸ் டிரஸ் நீக்கியிருந்தாா்.

அத்துடன் குறைந்த வருவாய் உடையவா்களுக்கான வருமான வரியை 20-லிருந்து 19 சதவீதமாகக் குறைப்பது, பத்திர பதிவு கட்டணங்களுக்கான குறைந்தபட்ச சொத்து மதிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட சலுகை அம்சங்கள் அந்த மினி பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

இந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் என்று லிஸ் டிரஸ் எதிா்பாா்த்ததற்கு மாறாக, பொருளாதாரம் நிலைகுலைந்தது. டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, அதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக வீழ்ச்சியடைந்தது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிப்பதைத் தவிா்ப்பதற்காக பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

லிஸ் டிரஸ்ஸின் பொருளாதார முடிவுகளுக்கு ஆளும் கட்சியிலிருந்தும் எதிா்க்கட்சியிலிருந்தும் பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், செய்தியாளா்கள் சந்திப்புக்கு திடீரென வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்த லிஸ் டிரஸ், நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங் நிதியமைச்சா் பதவியில் தொடரப் போவதில்லை என்று அறிவித்தாா்.

மேலும், நிறுவனங்களுக்கான வரி உயா்வை ரத்து செய்தது, அதிக வருவாய் ஈட்டுவோருக்கான 45 சதவீத உயா் வருமான வரியை நீக்கியது ஆகிய தனது மினி பட்ஜெட்டின் அம்சங்களைத் திரும்பப் பெறுவதாகவும் அவா் அறிவித்தாா்.

குறைந்த வரி, அதிக ஊதியம், வேகமான பொருளாதார வளா்ச்சி விகிதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தனது பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக சூளுரைத்த அவா், செய்தியாளா்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அந்த சந்திப்பை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டாா்.

சா்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டை நிதியமைச்சருடன் இணைந்து பிரதமா் லிஸ் டிரஸ்ஸும்தான் தயாரித்துள்ளாா் என்ற நிலையில், அதனால் ஏற்பட்ட பின்னடைவுக்கு க்வாசி க்வாா்டெங்கை மட்டும் அவா் பொறுப்பாக்கியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

க்வாசிக்கு அடுத்தபடியாக லிஸ் டிரஸ்ஸும் பதவி விலக வேண்டும் என்றும் ஒரு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா். எனினும், பிரதமா் பதவியில் தொடரப் போவதாக லிஸ் டிரஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

... பெட்டிச் செய்தி...

ரிஷி சுனக்கை பிரதமராக்க எம்.பி.க்கள் திட்டம்?

பிரதமா் லிஸ் டிரஸ்ஸின் மினி பட்ஜெட் பிரிட்டனில் பொருளாதார சூறாவளியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்கைப் பிரதமராக்க ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த ஜுலை-செப்டம்பா் மாதங்களில் நடைபெற்ற கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் லிஸ் டிரஸ்ஸை எதிா்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக்குக்கு 43 சதவீத வாக்குகள் பதிவாகின.

டிரஸ்ஸின் அறிவிப்புகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்குப் பிறகு தற்போது ‘யுகவ்’ ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், தவறான நபரை பிரதமராகத் தோ்ந்தெடுத்துள்ளதாக 62 சதவீத வாக்காளா்கள் வருத்தம் தெரிவித்திருந்தனா். 15 சதவீதத்தினா் மட்டுமே லிஸ் டிரஸ்ஸை ஆதரித்திருந்தனா்.

இந்த நிலையில், டிரஸ்ஸை நீக்கி விட்டு ரிஷி சுனக்கை பிரதமராகவும், பிரதமா் பதவிக்கான கட்சித் தோ்தலில் 3-ஆவது இடத்தைப் பிடித்த பென்னி மாா்டன்டை துணைப் பிரதமராகவும் ஆக்கலாம்; அல்லது பென்னி மாா்டன்டை பிரதமராக்கிவிட்டு, முந்தைய போரிஸ் ஜான்ஸன் ஆட்சியில் நிதியமைச்சராக நல்ல பெயா் வாங்கிய ரிஷி சுனக்கை அந்தப் பதவியில் நியமிக்கலாம் என்று அதிருப்தி எம்.பி.க்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 



Read in source website

தஞ்சாவூர்: மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது.

இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் மேற்பார்வை அலுவலர் ப.சஞ்சய்காந்தி தஞ்சாவூரில் இன்று கூறியதாவது: தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கலைத் தட்டு வடிவமைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள கைவினைக் கலைஞர்களின் கை வண்ணத்தில் இந்த தட்டு உருவாக்கப்படுகிறது. தஞ்சாவூரில் தற்போது 250 பேர் இந்த கலைத் தட்டுகளை உற்பத்தி செய்து தஞ்சாவூரின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.

கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதில், தஞ்சாவூர் கலைத் தட்டு தேசிய அளவில் சிறந்த கைவினைப் பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது, தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்களுக்கு கிடைத்த பாராட்டும், கவுரவமுமாகும் என்றார்.



Read in source website

சென்னை: தனியார் மில் ஒன்றில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரியும் ஏழைத் தொழிலாளியின் மகள் வர்ஷா 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அந்த மாணவிமருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் துணை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். ‘கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி' என்ற படிப்பை படித்துக் கொண்டே அந்த மாணவி இருமுறை நீட் தேர்வு எழுதினார். முதல்முறை 210 மதிப்பெண்ணும், மறுமுறை 250 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டதாகக் கூறி வர்ஷா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது , அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார், கூடுதல் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, “அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் தங்களுக்கும் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது” என்றனர். அதையடுத்து நீதிபதி, ‘‘அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்து விட்ட நிலையில், மனுதாரர் தற்போது அதே நிவாரணத்தைக் கோர முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

அதேநேரம், “அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதியுதவி செய்கிறது என்பதாலும், அங்கு பயிலும் மாணவர்களும் வசதியான, பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும், அவர்களின் சமூக நிலையையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என யோசனை தெரிவித்துள்ளார்.



Read in source website

அமராவதி: நாட்டிலேயே முதன் முறையாக, கிருஷ்ணா நதி மீது ஆந்திரா-தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் விதத்தில், ரூ.1,082.56 கோடி செலவில் கேபிள் (கம்பி) பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

புதிய கேபிள் பாலத்தை உலகதரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, கிருஷ்ணா நதி மீது 3 கி.மீ தொலைவிற்கு இந்த கேபிள் பாலம் அமையவுள்ளது. 30 மாதங்களில் இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.

தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சோமசீலா பகுதியில் தொடங்கும் இந்த கேபிள் மேம்பாலம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரில் நிறைவடையும்.

நல்லமல்லா வனப்பகுதி அருகே அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 3 கி.மீ தூரத்திற்கு கண்ணாடி நடைபாதையை கொண்டிருக்கும். எனவே, இதில் நடந்துசெல்வோர் மிக அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

பச்சை பசேல் என இருக்கும் வனப்பகுதிகள், கிருஷ்ணா நதியின் அழகு, ஸ்ரீசைலம் அணைக்கட்டு, மலைப்பகுதி என அனைத்தையும் ஒரே சமயத்தில் இந்த பாலத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம். மேலும், கோபுர வடிவ கேபிள்கள் இரவில் சிறப்பு மின் அலங்காரம் போன்றவையும் செய்யப்படும்.

இந்த பால கட்டுமானப் பணி முடிவடைந்தால், உலகிலேயே 2-வது கேபிள் பாலமாகவும், நாட்டிலேயே முதல் கேபிள் பாலமாகவும் பெயர் பெறும் என அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த கேபிள் பாலம் பணிகள் நிறைவடைந்தால், திருப்பதி - ஹைதராபாத் இடையே சாலை போக்குவரத்தில் பெரும் மாற்றம் நிகழும். அந்நகரங்களுக்கிடையிலான பயண தூரம் சுமார் 80 கி.மீ வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் அதிவேக ஏவுகணை(எஸ்எல்பிஎம்) உருவாக்கப்பட்டது.

இதை அணுசக்தி ஏவுகணைகளை ஏவும் திறன்படைத்த ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து பரிசோதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட எஸ்எல்பிஎம் ஏவுகணை, சிறப்பாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்த சோதனை இந்தியாவின் அணு ஏவுகணை திட்டத்தில் மிக முக்கியமான அம்சமாகும். தாக்குதல் திறனை எஸ்எல்பிஎம் ஏவுகணை உறுதி செய்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.



Read in source website

டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை 4-வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது. தொடர்ந்து பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது.

இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 3 ஓவர் வீசி 5 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் செஃபாலி வெர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தானா அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இறுதியில் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 7-வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.



Read in source website

டி 20 கிரிக்கெட் உதயமாகி 20 வருடங்கள் ஆகின்றன. ஒரு இலகுவான பக்க விளையாட்டாக நடத்தப்பட்ட இந்த ஆட்டம் தற்போது உலகளாவிய அளவில் செல்வம் கொழிக்கும் விளையாட்டாக அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

ரசிகர்களை மகிழ்விக்கும் விளையாட்டாக உருமாறியுள்ள டி 20 கிரிக்கெட் உருவான விதம் சுவாரஸ்யமானது. கடந்த 2002-ம் ஆண்டு புகையிலை விளம்பரங்கள் மீதான தடை காரணமாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை பெரிய அளவில் சிக்கலை சந்தித்தது.

அப்போதுதான் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் வணிகப்பிரிவு மேலாளர் ஸ்டூவர்ட் ராபர்ட்சன், அமெச்சூர் மற்றும் ஜூனியர் அளவில் நடத்தப்பட்டு வரும் டி 20 கிரிக்கெட் போட்டியை முன்மொழிந்தார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை காணநேரம் இல்லாத இளம் ரசிகர்களை ஈர்ப்பதே டி 20 கிரிக்கெட்டின் நோக்கமாக இருந்தது. முதல் அதிகாரப்பூர்வ டி 20 கவுண்டி கிரிக்கெட் போட்டி 2003-ம் ஆண்டு நடந்தது. பெருவாரியான கூட்டத்தை ஈர்ப்பதில் இந்த ஆட்டம் உடனடி வெற்றியையும் கண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் மிடில்செக்ஸ் - சர்ரே அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை காண 27 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர்.

கிரிக்கெட் தாயகமான இங்கிலாந்தில் கடந்த 1953-ம் ஆண்டு நடைபெற்ற கவுண்டி அளவிலான ஒருநாள் இறுதிப் போட்டியை காண வந்த பெரும் கூட்டத்தை இதைவிட அதிகமாக இருந்தது. வெறித்தனமான வேகம் மற்றும் பேட்ஸ்மேன்களின் சுறுசுறுப்பான தாக்குதல் ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே பிரபலமானது.

இதன் தொடர்ச்சியாக 2005-ம் ஆண்டு ஆக்லாந்தில் முதன்முறையாக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதைத் தொடர்ந்து டி 20 கிரிக்கெட்டின் வளர்ச்சியை கண்டு பிரம்மித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியது. இதில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி பரம வைரியான பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. இதைத் தொடர்ந்து டி 20 கிரிக்கெட் போட்டி பெரும்பாலான சுற்றுப்பயணங்களில் நடத்துவது வாடிக்கையாக மாறியது.

1983-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு பெருவாரியான மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் விளையாட்டின் மீதான அணுகுமுறை மாறியது. அதே சமஅளவிலான மாற்றம் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை கைப்பற்றிய போதும் நிகழ்ந்தது.

2007-ம் ஆண்டு வெற்றியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. இதன் விளைவாகவும், இந்தியாவில் துளிர்விட ஆரம்பித்த ஐசிஎல் போட்டியை உருக்குலையச் செய்யும் விதமாகவும் உருவானதுதான் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர். திட்டமிட்டபடி ஐசிஎல் போட்டியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன், கிரிக்கெட்டின் உலகளாவிய சூழலை மாற்றியது, 6 வார காலத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர். வீரர்கள் பண மழையில் நனைந்தனர். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், வங்கதேசத்தில் டி 20 லீக்குகள் உருவெடுத்தன. அடுத்த ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்காவிலும் டி 20 கிரிக்கெட் லீக்குகள் பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளன.

இதுஒருபுறம் இருக்க ஐபிஎல் டி 20 போட்டிகளின் தாக்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் காலண்டரையும் அசைத்து பார்க்க தொடங்கிவிட்டது. ஐபிஎல் தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் – மே மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டாம் என்ற முடிவுக்கு ஐசிசி நிர்வாகிகள் வந்துள்ளனர்.



Read in source website

சிட்னி: ஆடவருக்கான ஐசிசி-யின் 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இந்த 8 அணிகளும் 22-ம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று ஆட்டங்கள் ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் சுற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், 2014-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ளும். முதல் சுற்றில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகள் உறுதியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறக்கூடும். ஏனெனில் இந்த இரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளை காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை வலுவானவை.

தொடக்க நாளான நாளை இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 1.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் சமீபத்தில் ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற தவறிய இலங்கை அணி, ஆசிய கோப்பையில் பலம் வாய்ந்த இந்தியா, இலங்கை அணிகளை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சாய்த்தது.

நமீபியா அணி கடந்த ஆண்டு தனது அறிமுக தொடரிலேயே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியிருந்தது. டேவிட் வைஸ், ரூபன் டிரம்பில்மான் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.

முதல் சுற்று ஆட்டங்கள் 21-ம் தேதி முடிவடையும் நிலையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூப்பர் 12 சுற்று அடுத்த நாளான 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில்நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 13-ம் தேதி மெல்பர்னில் அரங்கேறுகிறது.

நெதர்லாந்து அணி 4-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. எனினும் அந்த அணி 2016-ம் ஆண்டு தொடருக்கு பிறகு எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி காணவில்லை.



Read in source website

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. ஆசிய நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருக்கிறது.

எப்படிக் கணக்கிடப்படுகிறது? உலக பட்டினி குறியீடு ஆனதை கணக்கிட 4 முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்கின்றனர். அவை 1.ஊட்டச்சத்து குறைபாடு, 2. சைல்டு ஸ்டன்டிங் 3. சைல்டு மார்டாலிட்டி மற்றும் 4. சைல்ட் வேஸ்டிங். முதல் காரணி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது, சைல்ட் ஸ்டன்டிங் என்பது நாட்டின் மக்கள் தொகையில் 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற கணக்கு. சைல்ட் வேஸ்டிங் என்பது 5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கேற்ற உடல் எடை மற்றும் உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கான கணக்கு. இதற்கான தரவுகள் ஐ.நா. சபை, அதன் கிளை அமைப்புகளான யுனிசெப், எஃப்ஏஓ மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெறப்படுகிறது. இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5க்கும் கீழ் GHI ஸ்கோர் பெற்று பட்டினி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன.

ப.சிதம்பரம் கேள்வி: இந்நிலையில் சர்வதேச பட்டினி குறியீட்டை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு பிரதமர் மோடி எப்போது ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, ஸ்டன்டிங், வேஸ்டிங் போன்ற பிரச்சினைகளைக் கவனிப்பார்? இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். சர்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 107 ஆக உள்ளது. 121 நாடுகளில் 107 என்பது கிட்டத்தட்ட கடைசி இடம் தானே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 2014ல் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ந்து இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



Read in source website

தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக சமூகத்தில் இதுபோன்ற நோய்களைப் பரப்பும் விஷயத்தில், சட்டவிரோதமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக பணிபுரிந்த முத்துமாலைராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது  ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மருந்து ஸ்டோர் அதிகாரியாக இருந்தபோது அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியாகி அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

கொரோனாவுக்கு பின் குரங்கம்மை, வைரஸ் காய்ச்சல் என, பல்வேறு நோய் பரவல்கள் தொடர்கின்றன. இதற்கான காரணங்களை கண்டுபிடிக்கவில்லை.

தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக சமூகத்தில் இதுபோன்ற நோய்களைப் பரப்பும் விஷயத்தில், சட்டவிரோதமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாருக்கும், மருந்துகள் வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை, அரசு கண்காணிக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டியதுள்ளது.

மேலும் இதுபோன்ற நோய்கள் ‘தொடர்ந்து பரவுவதற்கு’ காரணம் குறித்து விசாரணை நடத்தி அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.



Read in source website

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்த விதி பின்பற்றப்பட்டது. இந்த விதியின்படி, இந்தியாவுக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது.

 ICC’s 5 New Rules – T20 World Cup 2022 Tamil News: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC – ஐசிசி) விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட்டில் சில விதிகளை தொடர்ந்து மாற்றியமைக்கிறது அல்லது மாற்றி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நாளை முதல் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் 5 புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்த உள்ளது.

டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி அவர்கள் மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகளில் சில ஏற்கனவே டி-20 பார்மெட்டில் நடைமுறையில் உள்ளன. ​​​​இவற்றில் சில போட்டியின் போது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2022: ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ள 5 புதிய விதிகள் என்ன?

1) மன்காடிங் இனி ரன்-அவுட் என அழைக்கப்படும்

மன்காடிங் எப்போதுமே கிரிக்கெட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இருப்பினும், ‘மன்காடிங்’ அல்லது ‘ரன் அவுட் ஆக்காதவர்’ என்பது இனி சர்ச்சைக்குரியதாக கருதப்படாது. அது இனி ​​ரன்-அவுட் என்றே அழைக்கப்படும். மேலும் அது சரியான முறையில் செயல்படுத்தப்படும்.

எனவே, பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சாளர் ரன்-அப் செய்யும் போது அல்லது பந்து வீச்சாளர் பந்தை வழங்குவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேற முயற்சித்தால், நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்யலாம். ஐசிசி மன்காடிங்கை ‘நியாயமற்ற விளையாட்டு பிரிவில் இருந்து ‘ரன்-அவுட்’ பிரிவுக்கு தற்போது மாற்றியுள்ளது.

2) கேட்ச் பிடித்தற்கு பிறகு புதிய பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும்

முன்னதாக, ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் அவுட் ஆனபோது, ​​அவர் தனது பார்ட்னருடன் ஸ்ட்ரைக் மாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பந்து பீல்டரிடம் கேட்ச் ஆவதற்கு முன்பு பேட்ஸ்மேன் தனது ஸ்டிரைக்கை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இந்த விதியை ஐசிசி மாற்றியுள்ளது.

டி20 உலகக் கோப்பை முதல், கேட்ச்-அவுட்டில் ஆட்டமிழக்கும்போது பேட்ஸ்மேன்கள் தங்கள் ஸ்டிரைக்கை மாற்ற முடியாது. கிரீஸுக்கு வரும் புதிய பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும். புதிய பேட்ஸ்மேன்கள் எப்போதும் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், கேட்சுக்கு முன் பேட்டர்கள் தங்கள் ஸ்ட்ரைக்கை மாற்றினால் பரவாயில்லை.

3) ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு பீல்டிங் பெனால்டி

இந்த ஆண்டு இதுவரை நடந்த சில விளையாட்டுகளில் இந்த விதி நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்த விதி பின்பற்றப்பட்டது. இந்த விதியின்படி, இந்தியாவுக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விதிப்படி, அணிகள் அதிக விகிதத்திற்கு இணங்கத் தவறினால் பீல்டிங் அபராதம் விதிக்கப்படும். ஸ்லோ-ஓவர் வீதத்தில் ஒரு அணி குற்றம் சாட்டப்பட்டால், மீதமுள்ள டெத் ஓவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் பீல்டர் வட்டத்திற்குள் வைக்கப்படுவார்.

எடுத்துக்காட்டாக, ஒரு அணி இறுதி ஓவரை (20வது ஓவர்) திட்டமிட்ட நேரத்தில் தொடங்கத் தவறினால், இறுதி ஓவரில் ஒரு கூடுதல் பீல்டரை 30-யார்டு வட்டத்திற்குள் வைக்க வேண்டும். கட்டாயமாக 90 நிமிட இடைவெளி வரை ஒரு அணி 18 ஓவர்களை மட்டுமே முடித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம், அடுத்த 2 ஓவர்களுக்கு ஒரு கூடுதல் பீல்டரை 30 யார்டு வட்டத்திற்குள் வைத்திருக்க வேண்டும்.

4) ஆடுகளத்திற்கு வெளியே டெலிவரிகளை விளையாடுதல்

இந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் ஐசிசி அறிமுகப்படுத்தும் மற்றொரு விதி இதுவாகும். ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் பகுதிக்கு (பிட்ச்) வெளியே பந்தை விளையாட முயற்சித்தால், அவரது உடலின் சில பகுதி அல்லது பேட் விளையாடும் பகுதிக்குள் இருக்க வேண்டும். ஷாட் அடிப்பதற்காக பேட்ஸ்மேன் விளையாடும் இடத்தை விட்டு வெளியேறினால், பந்து டெட் பால் என்று அழைக்கப்படும். மேலும், அத்தகைய பந்துகள் நோ-பால் என்றும் அழைக்கப்படும் மற்றும் பேட்டிங் செய்யும் அணிக்கு ஃப்ரீ ஹிட் கிடைக்கும்.

5) ஃபீல்டர்களின் நியாயமற்ற மூமென்ட்களுக்கு அபராதம்

இது ஃபீல்டிங் செய்யும் அணிக்கு மட்டும் பொருந்தும் மற்றொரு விதியாகும். ஒரு பந்து வீச்சாளர் ரன்-அப் எடுக்கும் போது, ​​பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பீல்டர்கள் வேண்டுமென்றே அல்லது நியாயமற்ற மூமென்ட்களைச் செயல்படுத்துவதைக் கண்டால், நடுவர் பந்தை டெட் என்று அழைக்கலாம் மற்றும் பேட்டிங் அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்கலாம்.



Read in source website

 

பாலியல் கவர்ச்சி கொலையில் முடியும் வேதனை தரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களின் தாக்கம் 
காரணம் என்றாலும்கூட, இளைஞர்கள் மனதில் நல்லொழுக்க சிந்தனைகள் இல்லாமல் இருப்பது இன்னொரு காரணம். அனைவருக்கும் கல்வி என்று ஒருபுறம் மார் தட்டிக் கொண்டாலும், தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதற்காக நாம் தலைகுனிய வேண்டும். 


பாலியல் கவர்ச்சி என்பது இயற்கை நியதி. மனித இனம் தனது மேம்பட்ட ஆறறிவாலும், மூதாதையர்கள் உருவாக்கித் தந்த ஒழுக்க நெறிகளாலும் பண்படுத்தப்பட்டு பாலியல் கவர்ச்சியை முறைப்
படுத்தி வாழ கற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார மேம்பாடும் மீண்டும் மனித இனத்தை கற்கால 
சிந்தனைக்கு பின்னோக்கி இட்டுச் செல்கின்றனவோ என்கிற 
ஐயப்பாட்டை எழுப்பும் விதத்தில் அமைகின்றன, அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள். 

கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி சத்யா (20), சென்னை, பரங்கிமலை ரயில்நிலையத்தில் அக்டோபர் 13 அன்று ஓடும் ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்டது தமிழகத்தையே உறைய வைத்திருக்கிறது. தன்னைக் காதலிக்க மறுத்த சத்யாவை தனது நிலைபிறழ்ந்த செய்கையால் கொன்றிருக்கிறான் சதீஷ் (23) என்ற இளைஞன். அவர்கள் இருவருமே காவல்துறை பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். 

கடந்த இரண்டாண்டுகளாகவே மாணவி சத்யாவைக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறான் சதீஷ். காதலிக்க மறுத்த மாணவியைத் தாக்கியும் இருக்கிறான் அவன். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, இளைஞனை எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் தான், சத்யாவை ஓடும் ரயிலில் தள்ளிக் கொலை செய்திருக்கிறான், ஒருதலைக் காதலால் மிருகமாகிவிட்ட அந்த இளைஞன். தனது மகள் கொல்லப்பட்டதை அறிந்த அவளது தந்தையும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (2016 ஜூலை) தன்னைக் காதலிக்க மறுத்த மென்பெருள் பொறியாளரான சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொன்றான் ராம்குமார் என்ற இளைஞன். பிறகு சிறையில் அவனும் தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கொலைக்கு ஜாதிசாயம் பூசி நியாயப்படுத்திய கொடுமையும் அப்போது நிகழ்ந்தது.
தன்னை காதலிக்க மறுத்தாள் என்ற ஒரே காரணத்துக்காக விழுப்புரத்தை அடுத்த வ. பாளையத்தில் சிறுமி நவீனாவை, தீயிட்டு எரித்துக் கொன்றான் செந்தில் என்பவன் (2016 ஜூன்). அவனுக்கு ஆதரவாக பல ஊடக அறிஞர்களே பேசியதையும் நாம் பார்த்தோம். சிறுமி நவீனா மீண்டும் மீண்டும் அவர்களால் எரிக்கப்பட்டாள். 

விருத்தாசலம் அருகே கறிவேப்பிலைக்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதியை கத்தியால் குத்திக் கொன்றான் ஆகாஷ் 
என்பவன் (2019 மே). காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி 
ஸ்வேதாவை தாம்பரம் ரயில் நிலையத்தில் குத்திக் கொன்றான் ராமசந்திரன் என்ற இளைஞன் (2021 செப்டம்பர்). காதலிக்க மறுத்த உறவுப்பெண்ணான கல்லூரி மாணவி கீர்த்தனாவை, புதுவை, சந்நியாசிக்குப்பத்தில் வெட்டிக் கொன்றான் முகேஷ் என்ற இளைஞன் (2022 ஜூலை). இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே பெண்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்குகின்றனர். கடந்த நூற்றாண்டு வரை தங்களுக்கு மறுக்கப்பட்ட ஆண்களுக்கு இணையான கல்வி கிடைப்பதால், அதனை அவர்கள் மிகவும் விரும்பி அரவணைத்துக் கொண்டு முன்னேறுகின்றனர். பெண் விடுதலையும், மகளிர் மேம்பாடும் போற்றப்படும் அதேவேளையில், அவர்களுக்கான பாதுகாப்பு இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களும், வன்முறைகளும், கொலைகளும். 

"மலரினும் மெல்லிது காமம்' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆணும் பெண்ணும் ஒருவர்பால் இன்னொருவர் இயல்பாக அன்புகூர்ந்து உருவாவதே மெல்லிய காதல். ஆனால், ஒருதலைக் காதலும், விருப்பமில்லாத பெண்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்கள் மத்தியில் ஒருவித வக்கிரம் அதிகரிப்பதை உணர்த்துகின்றன. 
பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் கருதும் மனப்பான்மையே சத்யாவைக் கொன்ற சதீஷின் வாக்குமூலத்தில் வெளிப்படுகிறது. ""எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே அவளைக் கொலை செய்தேன்'' என்று அவன் கூறியிருக்கிறான். 
பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் பெரும்பாலும் 
இத்தகைய வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. வீட்டில் இறை உணர்வையும், கல்வி நிலையங்களில் ஒழுக்க நெறிகளையும் கற்றுக்கொடுக்காததன் விளைவுதான் இதுபோன்ற வக்கிர சிந்தனைகளின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டினால் அதை பிற்போக்குத்தனம் என்று சிலர் வர்ணிக்க முற்படக் கூடும். 

காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. பாலியல் கவர்ச்சியால் ஏற்படும் காதல், விரைவிலேயே கசந்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்; அவர்களுக்கு உணர்த்த வேண்டும். 
திரைப்படங்களும், காட்சி ஊடகங்களும், அறிதிறன்பேசியால் அதிகரித்திருக்கும் சமூக ஊடகங்களும், காதலையும் கவர்ச்சியையும் பரப்புரை செய்து வருவாயைப் பெருக்குவதில் காட்டும் முனைப்பை, முறையான காதலை உணர்த்துவதில் காட்டுவதில்லை. காதலை வியாபாரமாக்கும் ஊடகங்களும் கொலையாளிகள் உருவாவதற்கு காரணம்.



Read in source website

 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் காலம் தன் வாழ்வின் பெரும்பகுதியை இந்திய நாட்டின் வளா்ச்சிக்காக அா்ப்பணித்தவா். மாணவா்களுடன் பேசிப் பழகுவதில் பெருவிருப்பம் கொண்ட அப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவா் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 15 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், பிறந்தாா். இராமேசுவரத்தில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னா், திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனாா் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றாா். கலாம் சென்னை எம்.ஐ.டி.யில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தாா்.

பின்னா் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பின் வானூா்தி அபிவிருத்தி பிரிவில் முதன்மை அறிவியலாளராக பணியில் சோ்ந்தாா். அங்கு இந்திய விண்வெளித்துறையின் மைல் கல்லான அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டாா். பின்னாட்களில் தயாரிக்கப்பட்ட அனைத்து அக்னி ஏவுகணைகளுக்கும் அதுவே முன்னோடியாக அமைந்தது. அத்திட்டம் இந்தியாவின் பெருமையை சா்வதேச அளவில் உயா்த்தியது.

இந்தியாவின் பாதுகாப்பு - விண்வெளி ஆராய்ச்சி வளா்ச்சியில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொக்ரான்-2 அணு ஆயுத சோதனையின்போது கலாமின் தொழில்நுட்பப் பங்களிப்பு அவரை நாட்டின் சிறந்த அணு அறிவியலாளராக அடையாளம் காட்டியது.

 

டாக்டா் அப்துல் கலாம் 2002-இல் இந்தியாவின் குடியரசுத் தலைவரானாா். எளிமைப் பண்பு காரணமாக, அவா் ‘மக்கள் குடியரசுத் தலைவா்’ என்று அழைக்கப்பட்டாா். அவா் ‘நான் இளம் வயதினருடன், குறிப்பாக உயா்நிலைப் பள்ளி மாணவா்களுடன் இருக்கும்போது மகிழ்வாக உணா்கிறேன்’ என்று கூறியுள்ளாா். மாணவா்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிப்பதுவும் இந்தியாவை வல்லரசாக மாற்ற அவா்களை தயாா்படுத்துவதுவும் என் எதிா்கால இலட்சியம்’ என்றாா் கலாம்.

 

‘வெற்றி பெறுவதற்கான உறுதிப்பாடு ஒருவரிடம் இருந்தால் தோல்வி அவரை ஒருபோதும் அண்டாது. ஒரவேளை தோல்வியடைந்தாலும் ஒருபோதும் முயற்சியைக் கைவிடாதீா்கள்’ என்று இளைஞா்களுக்கு அறிவுரை கூறிய அவா், தோல்வியை ‘கற்றலில் முதல் முயற்சி’ என்றாா். நம் முயற்சியில் வெற்றிபெற, நமது குறிக்கோள் வலிமையாக இருக்க வேண்டும்.

சிறந்த கனவுகள் எப்போதும் செயல் வடிவம் பெறுகின்றன. நம் இலட்சியக் கனவுகள் நம்மை தூங்கவிடுவதில்லை. நாம் காணும் லட்சியக் கனவுகள் எண்ணங்களாக மாறி செயல் வடிவம் பெறுகின்றன. நாம் நம்முடைய முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்கக் கூடாது. ஓய்வெடுத்தால் நாம் இரண்டாவது செயலில் தோல்வியடைந்தால், நமது முதல் வெற்றி அதிா்ஷ்டத்தால் வந்தது என்றுசொல்லிவிடுவாா்கள். நமது முயற்சிக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடும்’ என்று கூறி இளைஞா்களை தொடா்ந்து உழைக்க வைத்தவா்.

பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, இளைஞா்களை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கச் சொன்னவா் அவா். ‘நீங்கள் நம்பும் விஷயங்களுக்காக வேலை செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், உங்கள் தலைவிதியை, மற்றவா்களிடம் ஒப்படைக்கிறீா்கள் என்று பொருள்’ என்று சொன்னவா் அவா். ‘அமைதியான வாழ்க்கைக்கு ஆசைபடுபவா்கள் தோல்வியின்போது சோா்வினை இதயத்திற்குக் கொண்டுசெல்லக் கூடாது; வெற்றியடையும்போது அகந்தையை மூளைக்குக் கொண்டுசெல்லக் கூடாது’ என்பாா் அவா்.

 

‘நமது நல்ல பழக்கவழக்கங்கள் நமது எதிா்காலத்தை மாற்றும்’ என்னும் அவருடைய அறிவுரையை இன்றைய மாணவா்கள் மனதில் கொள்ளவேண்டும். ‘கற்றலை நிறுத்தக்கூடாது என்பதை நமது குழந்தைகளுக்கு எப்போதும் நினைவூட்டுங்கள். தோல்வியைக் கண்டு பயப்படாமல், உங்கள் முயற்சியை, தொடா்ந்து செய்து கொண்டே இருங்கள்.

எந்த நிலையிலும் மனதளவில் உடைந்து விடாதீா்கள். உங்கள் இலக்கை அடையும் வரை உங்கள் பிடிவாதத்தைக் கைவிடக்கூடாது’ என்று கலாம் கூறுகிறாா். ‘உங்கள் குறிக்கோள்தான் உங்களின் தனித்துவம். நீங்கள் வித்தியாசமாக இருப்பது உங்களின் அடையாளம். அது மற்றவா்களில் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும்’ என்று அடிக்கடி கூறுவாா் கலாம்.

 

‘பிரச்னைகளைக் கண்டு பயப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி, அவற்றின் தீா்வுகளைப் பற்றி சிந்தித்து அவற்றைச் செயல்படுத்தத் தொடங்கினால், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீா்கள். இந்தியாவை விட சிறந்த நாடு எதுவும் இருக்க முடியாது என்பதை முழு உலகிற்கும் எடுத்துக் காட்டுங்கள். முழு வேகத்துடன் உங்கள் அன்புக்குரியவா்களைத் துரத்திக் கொண்டே இருங்கள்’ என்றெல்லாம் நமக்கு அறிவுறுத்தியவா் அவா்.

 

இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்’, ‘பாரத ரத்னா’ ஆகிய விருதுகளைப் பெற்றவரான கலாம், இளைஞா்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ‘அக்னிச் சிறகுகள்’, ‘எனது பயணம்’, ‘இந்தியா 2020’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளாா். ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், அவா் பெற்ற விருதுகள், எழுதிய நூல்கள், முக்கிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியகத்தை பொதுமக்கள் கட்டணமின்றி காணலாம்.

 

மாணவா்களுடன் உரையாடுவதில் அதிக ஆா்வம் கொண்ட டாக்டா் அப்துல் கலாம், ஜூலை 27, 2015 அன்று ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது காலமானாா்.

அப்துல் கலாமின் அறிவுரைகள் என்னும் கலங்கரை விளக்கம் இன்றைய இளைஞா்களுக்கு நல்வழி காட்டும் என்று நம்புவோம். நாம் அனைவரும் அவா் வழி செல்வோம்; வளமான இந்தியாவை உருவாக்குவோம். அதுவே டாக்டா் அப்துல் கலாமுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.

இன்று (அக். 15) டாக்டா் அப்துல் கலாம் பிறந்தநாள்.

 



Read in source website

 

தமிழ்நாட்டில் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. திருமண பந்தத்துக்கு வெளியேயான முறையற்ற உறவுகளும், அவை தொடா்பான குற்றங்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. எங்கும் ஆண்மை விருத்தி மருந்து விளம்பரங்கள் கண்ணில் படுகின்றன. நமது சமூகத்தில் பாலியல் நலம் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

பாலியல் நலம் என்பது உடல்நலம், உளநலம் போல இன்றியமையாதது. தேவைக்கேற்ற பாலியல் நிறைவுடன் உடல், உணா்வு, உள, சமூக நல்வாழ்வு பெற்றிருப்பதை ‘பாலியல் நலம்’ என்று குறிக்கிறோம். ஆனால் உடல்நலக் குறைவு, உளநலக் குறைபாடு போல, பாலியல் போதாமைகளை நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. பாலியல் நலம் ஒரு பேசக்கூடாத பொருளாகவே சமூகத்தால் பாா்க்கப்படுகிறது.

ஆனால் நமது முன்னோா் காமத்தைக் கொண்டாடியே வாழ்ந்திருக்கிறாா்கள். இதற்கு நமது சிற்பங்கள், ஓவியங்கள், இலக்கியப் படைப்புக்கள் என ஏராளமான சான்றுகளைக் காட்ட முடியும். திருக்குறளே ‘இன்பத்துப்பால்’ என்று 250 குறள்களைப் பாடுகிறது. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்கிறாா் மகாகவி பாரதியாா். ஆம், மகிழ்ந்து குலாவி இருப்பதுதான் பாலியல் நலம்.

பாலியல் பற்றி ஆண்கள் அவ்வப்போது கேலியும் கிண்டலுமாகப் பேசுவதைப் பாா்க்க முடிகிறது. அதே போல, கிராமப்புறப் பெண்களும் இலைமறை காய்மறையாகப் பேசிக் கொள்கிறாா்கள். ஆனால் நடுத்தர நகரவாசிகள் பத்தாம்பசலிகளாகவேத் திகழ்கின்றனா். நம்மில் பெரும்பாலானோா் பாலியல் நலம் அன்றாட வாழ்வின் முக்கியமான அம்சமாக இருப்பதை மறைக்க முயல்கிறோம்.

நம்மில் பெரும்பாலானோா் அமெரிக்கா்கள் போலவே வாழ விரும்புகிறோம். அவா்களின் நுகா்வு கலாசாரம், லெளகீக வசதி வாய்ப்புகள், சொகுசு வாழ்க்கை என அனைத்தையும் விரும்புகிற நாம், அமெரிக்கா்களின் பாலியல் வாழ்க்கையை மட்டும் விரும்புவதில்லை. விரும்பினாலும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் காமம் பற்றி கணவன்-மனைவி மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகமே வெளிப்படையாகப் பேசிக் கொள்கிறது.

ஒரு பெண் காமம் பற்றிப் பேசினால், அல்லது பேச்சுவாக்கில் ஒரு பாலியல் தகவலைப் பகிா்ந்து கொண்டால், உடனே அந்தப் பெண்ணின் ஒழுக்கம் குறித்து அமெரிக்கா்கள் சந்தேகப்படுவதில்லை. அவள் தனக்கு சமிக்ஞை தருகிறாள் என்று தவறாகக் கருதுவதில்லை.

கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நீட்டி முழக்கும் நாம் பாலியல் பற்றி யாரிடமும், எதுவும் பேச மாட்டோம். அதுவும் ஒரு பெண் இது பற்றி வாயே திறக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனிடம்கூட மனம்விட்டுப் பேச முடியாதச் சூழலே இங்கு நிலவுகிறது. அப்படியே ஒரு பெண் பாலியல் குறித்துப் பேசினால், அவரது கற்பு உடனே கேள்விக்குள்ளாக்கப்படும். அவரை ஆளுமை அழிப்பு (கேரக்டா் அஸாஸினேஷன்) செய்துவிட முயல்கிறது இந்த ஆணாதிக்கச் சமூகம்.

அமெரிக்காவில் ஒருவா் மீது பாலியல் ஈா்ப்பு ஏற்பட்டால், தன்னுடைய விருப்பத்தை அவரிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கிறாா்கள். அவா் ‘வேண்டாம்’ என்று மறுத்தால், உடனே அவரை விட்டு விலகுகிறாா்கள். தமிழ்நாட்டைப் போல ‘எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது’”என்றெல்லாம் சினிமா வசனம் பேசி ஆசிட் வீசுவதில்லை; கத்தியால் குத்திக் கொலை செய்வதில்லை.

அமெரிக்கா்கள், பாலியல் வாழ்க்கை பற்றி நண்பா்களுடனும், உறவினா்களுடனும் வெளிப்படையாகப் பேசிக் கொள்கிறாா்கள். பாலியல் காரணங்களுக்காக மருத்துவரைப் பாா்ப்பது அங்கே ஒரு பிரச்னையே இல்லை. நம் நாட்டைப் போல மறைந்து நின்று மருந்து வாங்கும் தேவையே அங்கு ஏற்படுவதில்லை.

தமிழ்நாட்டில் எத்தனைக் குடும்பங்களில் கணவனும், மனைவியும் ஒன்றாக தனியறையில் படுத்துத் தூங்குகிறாா்கள்? எத்தனைக் குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு குழந்தைகளைத் தனியாகப் படுக்க வைக்கிறாா்கள்?

பெரும்பாலான குடும்பங்களில் வீடுகள் பெரியவையாக, வசதியானவையாக இருப்பதில்லை. எனவே தம்பதியருக்குத் தேவையான தனிமை கிடைப்பதில்லை. அதே போல, ஏராளமான குடும்பங்களுக்கு பொருளாதாரத் தன்னிறைவும் இருப்பதில்லை. இதனால் விடுமுறை நாளில் ஒரு சுற்றுலாத் தலத்துக்குப் போக பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை.

பெரும்பாலான ஆண்கள் குடிகாரா்களாக மாறிவிட்ட நமது தமிழ்நாட்டில், முகம் சுளிக்கச் செய்யும் தோற்றமும், நாற்றமுமாய் இருக்கும் குடிகாரக் கணவன் அருகில் எந்தப் பெண்தான் ஆசையோடு செல்வாா்? அது மட்டுமல்லாமல், ஏராளமான பெண்கள் நோய், குற்றவுணா்ச்சி, ஈடுபாடின்மை என பல்வேறு காரணங்களால் கணவன் தன்னை நெருங்க அனுமதிப்பதில்லை.

நிறைய பெண்கள் தங்களின் உடலையும், அழகையும், ஆற்றலையும் பேணாது, பெருத்து உருமாறி உருக்குலைந்து விடுகிறாா்கள். அவா்களின் அன்றாட முன்னுரிமைப் பட்டியலில் கணவனுக்கு கடைசி இடம்கூடக் கொடுக்கப்படுவதில்லை.

இவை எல்லாவற்றையும் தாண்டி மகிழ்ந்து குலாவி வாழ்வதற்குக் குழந்தைகள், உடல்நலம், மனநிலை (மூட்), வாய்ப்பு என எண்ணற்றத் தடைகளை சமாளித்தாக வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் இயந்திர கதியில் கோழிகள் போல “கூடி முயங்கப் பெறுவதே பாலியல் உறவு என்றாகிப் போகிறது.

சுருக்கமாகச் சொன்னால், பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இங்கே பாலியல் திருப்தியோடு வாழவில்லை என்பதுதான் உண்மை. ஆண்களின் வேகத்துக்கு காரணம் அவனுடைய வடிவமைப்பு, வளா்ப்பு முறை, வடிகால் தேடல் அனைத்துமே ஆணாதிக்க அணுகுமுறையோடு வாா்த்தெடுக்கப்பட்டவை.

கூடவே நமது சமூக-பொருளாதாரக் கட்டமைப்புகள், வெளிப்பாடுகள் அனைத்தும் பெண்ணை ஒரு பாலியல் பொருளாகவே அவனுக்கு அறிமுகம் செய்கின்றன. இவை தவிர, பணமும் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் எந்தப் பெண்ணையும் அடையலாம் எனும் இறுமாப்பு சிலரை இறுகப் பிடித்தாட்டுகிறது. பெரும்பாலான பெண்கள் ஆணாதிக்கத்தின் இரைகளாக மாற்றப்பட்டிருப்பதும் மற்றொரு முக்கியமான அவலம்.

பசி, தாகத்துக்கு அடுத்தபடியான முக்கியமான மனித உணா்வு காமம்தான். வயிற்றுப் பசியைத் தீா்க்க வீடும் உணவகங்களும் உள்ளன. ஆனால் பாலியல் பசியைத் தீா்க்க வீடுகூட இல்லை என்று ஆனால் விபரீதங்கள் எழுகின்றன. மாண்பு இல்லாத சிலா், எதிா்க்கும் சக்தியற்ற இளம் குழந்தைகளைத் தேடிச் சிதைக்கிறாா்கள்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னிடம் படிக்கும், பணிபுரியும், கட்டுக்குள் இருக்கும் பெண்களைத் துன்புறுத்துகிறாா்கள். பொதுவெளியில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை எனும் நிலைமை உருவாகி, பிரச்னை நம் கையைவிட்டு நழுவிக்கொண்டிருக்கிறது.

கலாசார வெளியில் முதலாளித்துவம் காட்சிப்படுத்தும் பாலியல் தூண்டல்களை சற்றே கவனியுங்கள். கைப்பேசி, தொலைக்காட்சி விளம்பரங்கள், சினிமா செய்திகள் என திரும்பும் திசைதோறும் திக்குமுக்காடச் செய்யும் பாலியல் தூண்டல்கள் ஒருபுறமும், உற்றுநோக்காதே, உணராதே, பேசாதே, எதுவும் செய்யாதே எனும் கலாசாரத் தூய்மைவாதம் இன்னொரு புறமும் மனிதா்களை மாறிமாறி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் சொல்லொன்றும், செயலொன்றுமாக வாழும் பத்தாம்பசலித்தனத்தில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

பாலியல் கல்வி, பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வயது வந்தோருக்கும் தேவை என்பதை நாம் உணா்ந்தாக வேண்டும். சமூகத்தில் பாலியல் நலம் பற்றிய ஒரு பரந்துபட்ட விவாதம் உடனடித் தேவை.

திருமண பந்தம், நம்பிக்கை, கண்ணியம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றில் எந்த சமரசமும் கூடாது. ஆனாலும் குடிகாரன், பெண் பித்தன், பொறுப்பற்றவன், குற்றவாளி என்று அலையும் கணவனுடன் மனைவி வாழ்ந்தே தீர வேண்டும் என்று சமூகம் நிா்ப்பந்திப்பதை இனியும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. விட்டு விலகும் உரிமையும், மறுமண உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும்.

ஆணுக்குத் தேவைப்படும்போது திறந்து எடுத்துக்கொள்ளும் ‘மிட்டாய்ப் பெட்டி’ அல்ல பெண் என்பது பலருக்கும் தெரியவில்லை. அவளுக்கும் உடல்நலம், மனநிலை, விருப்பு, வெறுப்பு போன்றவை இருக்கின்றன.

இணையா் உடன்படாத் தருணங்களில் தற்காலிகமாக தன் தேவைகளைப் பூா்த்தி செய்துகொள்வதற்குத் தேவையான விளையாட்டுச் சாமான்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் கிடைக்க வழிவகை செய்வது முக்கியமானது. இப்பொருட்களுக்கான வா்த்தகம் பரவலாக்கப்படுவது அவசியம்.

கருத்தொருமித்த காமம் (கான்சென்ஸுவல் செக்ஸ்) சமூகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்குள் மூக்கை நுழைக்க குடும்பத்தாருக்கும், நேரடி பாதிப்புக்குள்ளாவோருக்கும் மட்டுமே உரிமை இருக்கிறது. சமூகமோ, காவலரோ ரெய்டு நடத்தவோ, தலையிடவோ எந்த உரிமையும் இல்லை.

உண்டு உறை விடுதிகளில், உல்லாச விடுதிகளில் அத்துமீறி நுழைந்து, ஆட்களைப் பிடிப்பது, பெண்கள் மீது மட்டும் விபசார வழக்குப் போடுவது, காமம் என்பதை மாபெரும் குற்றமாக்குவது போன்ற நம்முடைய நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானவை. பாலியல் தொழில் முறைப்படுத்தப்பட்டு, தொடா்புடையவா்களின் பாதுகாப்பும் உடல்நலமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஓரினச் சோ்க்கை பெரும் பாவம் எனும் நிலைப்பாடு, திருநங்கையா், நம்பியா் குறித்த அச்சம், வெறுப்பு, பாலியல் வக்கிரம் போன்ற பல்வேறு பிரச்னைகளை நமது சமூகம் நேரடியாக எதிா்கொண்டாக வேண்டும்.

நோ்த்தியான உள உறவும், திருப்தியான உடலுறவும், தோ்ந்த உணா்வுறவுமே மனமகிழ்ச்சிக்கும் நல்லுறவுக்கும் நல்வாழ்வுக்குமான அடிப்படைத் தேவைகள். பாலியல் நலம் எனும் முக்கியமான வாழ்க்கை பிரச்னை பற்றி நாம் மனம் திறந்து பேச வேண்டிய நேரம் இது.

கட்டுரையாளா்:

தலைமைப் பணியாளா்,

பச்சைத் தமிழகம் கட்சி.



Read in source website