DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 15-06-2022


மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த உத்தரவு தமிழக ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்த்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.7,500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் கணக்காளர், சமுதாய வல்லுநர்கள், சமுதாய வளப் பயிற்றுநர்கள் மற்றும் பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்கள் இவர்களில் முன்னுரிமை மற்றும் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக தலைப்பிலிருந்து மாதம் ரூ.5000 வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் பல அத்தியாவசிய பணிகளையும், திட்டப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளை செவ்வனே செய்யுமளவு போதிய அலுவலர்கள் கிராம ஊராட்சிகளில் இல்லாமல் உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகத்தினை வலுப்படுத்தும் விதமாக பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்களாயிருந்து தற்போது வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளவர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி கிராம ஊராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் விதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

இன்றைய நவீன நாகரிக வாழ்வியலில் மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். இதனால் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவு அதிகமாகி ஆண், பெண் இருவருக்கும் மலட்டு நோயை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன அழுத்தத்துக்கு காரணமான ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள், உடலில் உள்ள பாலின ஹார்மோன் சுரப்பை பாதித்து பலருக்கும் இல்லற வாழ்வில் இடைவெளியை ஏற்படுத்தி பிரிவினையை உண்டாக்குபவை.

பெண்களுக்கு மாதம் மாதம் மாதவிடாய் சரிவர ஆகவில்லை என்று மருத்துவரிடம் அணுகினாலும் சரி, ஆண்களுக்கு பாலின உணர்ச்சியும், இல்லற வாழ்வில் ஈர்ப்பு இல்லை என்று மருத்துவரிடம் அணுகினாலும் சரி, அவர்கள் தரும் முதல் ஆலோசனை ஸ்ட்ரெஸ் குறைங்க என்பது தான். ஏனெனில் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் காரணமாக, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டோஸ்டீரோன் அளவும், பெண்களுக்கு பெண் ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜென் அளவும் குறைவது தான் காரணம்.

ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ள கூட முடியாத நவீன பரபரப்பான வாழ்வியல் சூழலில், ஸ்ட்ரெஸ் ஹார்மோனால் மட்டுமல்ல, இயற்கையான பாலியல் உணர்ச்சி என்பது கூட ஆண் பெண் இருபாலருக்கும் இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் இன்று அதிகரித்துள்ளது ‘செயற்கை கருத்தரிப்பு மையங்கள்’ என்று சொன்னால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அறிவியல் வளர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, ஆதாம் ஏவாள் காதலில் தொடங்கி, இயற்கையாய் நடைபெற்று வந்த கருத்தரிப்பு, என்பது தற்போது நவீன வாழ்வியலில் குறைந்துவிட்டது என்பது வருத்தமளிக்கும் ஒன்று தான்.

அனைவரும் இன்று சாதாரணமாய் எதிர்கொள்ளும் மன அழுத்தம் தான், நம்மை கருத்தரிப்பு மையங்கள் வரை கொண்டு சென்று லட்சக்கணக்கில் விரையம் செய்து இயற்கை உடலை செயற்கை மருந்துகளுக்கு இரையாக்கி பல்வேறு நோய் நிலைகளுக்கு வழி வகுக்கும்.

இதெல்லாம் இருக்கட்டும் டாக்டர், ஆண்,பெண் இருவரின் ஹார்மோன் பிரச்னையையும் சித்த மருத்துவத்தால் தீர்வு காண முடியுமா? என்று பக்க விளைவு இல்லாத, பாரம்பரிய மனம் கமழும் மூலிகை வாசத்தோடு, தீர்வு காண நினைக்கும் அனைவருக்கும் உதவ முன் வரும் சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்று தான் ‘காமரசி’ எனும் ‘நெருஞ்சில்’.

என்னது காலில் குத்தும் நெருஞ்சில் முள்ளுக்கு, தலையில் கிரீடம் சூட்டும் அளவுக்கு மருத்துவ குணங்கள் உள்ளதா? என்று பலருக்கும் ஆச்சரியம் ஏற்படும். ஆம். நெருஞ்சில் முள் என்றாலே பலரும், வீட்டு வைத்தியமாக சிறுநீரக சார்ந்த பிரச்னைகள், கல்லடைப்பு நோய்களுக்கு கஷாயமிட்டு குடிப்பதும், கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.

‘காமரசி’ என்ற பெயரிலே இதன் பெயர்க்காரணத்தை அறியலாம். வெண்ணீர் எனப்படும் ஆண்களின் விந்தணுக்களை கூட்டுவதால், மனதில் காமம் என்று பாலுணர்வை இயற்கையாக அதிகரிக்க செய்வதால் காமரசி என்ற பெயர் வந்ததாக தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கு ‘ஓவம்’ எனப்படும் சினைமுட்டையை தூண்டி கருத்தரிப்புக்கு உதவும் வகையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெருஞ்சில் மூலிகையின் காய்ந்த பழம் ‘முள்’ என்று அழைக்கப்படும். நெருஞ்சில் முள்ளில் மருத்துவ குணம் வாய்ந்த ஸ்டீராய்டல் சபோனின்கள், ஃபிளாவனாய்டுகள், ஃபிளவனால் கிளைகோசைடுகள், அல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் உள்ளது. இதில் உள்ள டிகோஜெனின், டியோஸ்ஜெனின், குளோரோஜெனின்,மற்றும் சரசபோஜெனின் ஆகிய வேதிப்பொருள்கள் சபோனின்களில் அடங்கும்.  

மேலும், நெருஞ்சில் முள்ளில் 18-க்கும் மேற்பட்ட, அதிக செறிவுள்ள ஃபிளாவனாய்டுகளை கொண்டுள்ளது.  இலைகள் மற்றும் பழங்களில் இருந்து முக்கிய ஃபிளாவனாய்டுகளான, கேம்ப்ஃபெரால், குர்செடின் கிளைகோசைடுகள், ருடின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு உள்ளது.

நெருஞ்சில் முள்ளில் உள்ள ஸ்டீராய்டல் சபோனின்களில் ஒன்றான ‘ரோடோடியோசின்’ என்ற வேதிப்பொருள், ஆண் மற்றும் பெண் ஹார்மோன் சுரப்பை சரிசெய்யும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. மேலும் உடலில், வளர்ச்சி ஹார்மோன், இன்சுலின் மற்றும் அல்டோஸ்டிரோன் ஆகியவற்றை இயற்கைக்கு மாறாமல் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

நெருஞ்சில் முள்ளில் உள்ள உள்ள ‘புரோட்டோடியோசின்’ என்ற ஸ்டீராய்டல் சபோனின்,  DHEA -ஆக (டீஹைட்ரோ எபியாண்ட்ரோஸ்டிரோனாக) உடலில் மாற்றுவதன் மூலம் இயற்கையான பாலியல் உணர்வை தூண்டி ஆண்மையை அதிகரிப்பதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நெருஞ்சி

நெருஞ்சில் முள்ளில் உள்ள பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த வேதிப்பொருட்களால், சிறுநீரை பெருக்கும் தன்மையும், இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும்,  சிறுநீரக கற்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், இசிவகற்றியாகவும், கிருமிக்கொல்லியாகவும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், அதிகமான கொழுப்பை குறைக்கும் தன்மையும் உடையது. மேலும் இருதயத்தை வன்மைப்படுத்துவதாகவும்,கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய சீன மருத்துவத்தில் நெருஞ்சில் முள், கண் சார்ந்த நோய்கள், உடல் வீக்கம், வயிறு வீக்கம், விந்தணுக்கள் தன்னிச்சையான உமிழ்வு, வெள்ளைப்படுதல் மற்றும் ஆண்மைக் குறைவு ஆகிய சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. செயல்பாடு குறைந்த கல்லீரலை சரிசெய்ய,  முலை வீக்கம், கண் வெண்படல அழற்சி, தலைவலி மற்றும் வெண்புள்ளி நோய்களின் சிகிச்சைக்காக ஷெர்ன்-நாங் பார்மகோபியாவில் (சீனாவில் மிகப் பழமையான மருந்தியல்) நெருஞ்சில்  மிகவும் மதிப்புமிக்க மருந்தாக விவரிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மலட்டினை போக்குவதில் நெருஞ்சிலின் பங்கு அளப்பரியது. இது மாதவிடாய் சுழற்சியின் தொடக்க காலத்தில், FSH-எனும் ஹார்மோன் சுரப்பை இயற்கையாக தூண்டுவதன் மூலம், அண்ட விடுப்பு எனும் ஓவம் வெளியீட்டை (Ovum release) தூண்டி, இயற்கையாக கருத்தரிப்பு விகிதத்தை மேம்படுத்த உதவுவதாக உள்ளது.

அதீத வளர்ச்சி பெற்ற அறிவியலால் இயற்கையாக நடைபெறும் செயல்களை கூட நம்மவர்கள் மறந்து, செயற்கையை நாடி பயன்பெற நினைப்பது கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்யினை தேடி அலைவது போல தான். அதனால் அவர்கள் இழக்கப்போவது பணம் மட்டுமல்ல. இயற்கையான உடல் ஆரோக்கியத்தையும் தான்.

ஆகவே, ஆண், பெண் இருபாலருக்கும் நன்மை பயக்கும், ஹார்மோன் சுரப்புகளை சரி செய்யும் நெருஞ்சில் முள்ளினை நாடினால் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது. மொத்தத்தில் சித்த மருத்துவம் எளிமையான வலிமை வாய்ந்த மருத்துவம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website

பால்புதுமையினர் இந்த சமூகத்தில் தங்கள் அடையாளத்தை 'வெளிப்படுத்திக்கொள்ளுதல்' என்பது தேவையாகிறது. குறிப்பாக இங்கே, இப்போது வெளிப்புற ஒப்புதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு விஷயமும் வெளிப்படும்போது அது சம்பந்தப்பட்டவரையும் அவரைச் சுற்றியிருப்பவரையும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வைக்கிறது. அப்படியான ஒரு சிறந்த 'வெளிப்படுத்துதல்' என்பது அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிடாது. 

ஒருபாலீர்ப்புடைய ஆண் ஒருவர், சக ஒருபாலீர்ப்புடையோரின் அனுபவத்தில் இருந்து எவ்வளவு கற்றுக்கொள்கிறார்? பாலினத்திற்கு அப்பாற்பட்ட (non-binary) அல்லது பாலின உறுதித்தன்மை அற்ற(Gender Non-conforming) குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஓர் அர்த்தமுள்ள விவாதத்தில் ஈடுபடுத்த போதுமான அளவு அறிந்திருக்கிறார்களா? அவர்களுக்கு ஆதரவு, நம்பகமான தகவல்கள் அல்லது பொருத்தமான ஆலோசனைகளை எங்கு தேடுவது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பால்புதுமையினரின் சுயமரியாதை பேரணி(Pride month) மாதத்தையொட்டி, பால்புதுமையினருக்கு வழிகாட்டும் 'ஓரினம்'(Orinam) மற்றும் 'தோழி'(thozhi) அமைப்புகள் இணைந்து 'Coming Out'(வெளிப்படுத்திக்கொள்ளுதல்) என்ற ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தின. 

பால்புதுமையினர் சமூகத்தினர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளுதல் என்பது என்ன? எதற்காக வெளிப்படுத்திக்கொள்கிறோம்? சரியானதா? பாதுகாப்பானதா? என்பது குறித்த விவாதங்கள் மற்றும் பால்புதுமையினர் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களைப் பகிர்தல், அவர்களுக்கான ஆலோசனைகள் குறித்த நிகழ்ச்சி சென்னை பரங்கிமலையில் உள்ள செயின்ட் டொமினிக் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான 'தோழி' அமைப்பைச் சேர்ந்த திருநங்கை சுவேதாஸ்ரீ, 'இங்கு தனிப்பட்ட பலரும் தங்கள் அடையாளங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படி முன்னேறிச் செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் மனநலத்தில் வெளிப்படுத்துதலின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்த நிகழ்ச்சி' என்று கூறினார். 

மேலும், ஒரு திருநங்கை என்ற முறையில் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்வதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதாகக் கூறினார். இந்த சமூகத்தில் வெளிவருவதைப்போல தனக்குள்ளிருந்தும் வெளிவருவது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார். 

'வெளிப்படுத்திக்கொள்ளுதல் அல்லது வெளிவருதல் என்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும், ஏற்றுக்கொள்வது என்பது உடல் ரீதியாக மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் என் பணியிடத்தில் வெளிப்படுத்திக்கொண்டு வெளியே வந்தபோது அதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. என்னுடைய நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. என்னுடைய மனநலமும் ஆரோக்கியமானதாக மாறியது' என்று கூறும் சுவேதாஸ்ரீ, 21 வயதில் தன்னை திருநங்கையாக அடையாளம் கண்டுகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து, தற்போது சென்னையில் 'தோழி' அமைப்பில் பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்தார். 

மேலும், 'பால்புதுமையினர் தங்கள் நண்பர்களிடமோ, குடும்பத்திடமோ, பணியிடத்திலோ, சமூக ஊடகங்களிலோ தங்களை வெளிப்படுத்திக்கொள்வது குறித்து பேசியிருக்கிறோம். இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படுத்திக்கொண்டால் தங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், மன அழுத்தத்தைப் போக்க முடியும். தங்களுக்கான வாழ்க்கையை வாழ முடியும்' என்றார்.

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான 'ஓரினம்' அமைப்பைச் சேர்ந்த தன்பாலீர்ப்பாளர் அலெக்ஸ் முருகபூபதி, தன் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். சுய வெளிப்பாடுதான் எல்லாவற்றுக்கும் திறவுகோல் என்றார். 

'தன்னை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதுதான் பல பிரச்னைகளுக்குக் வழிவகுக்கிறது. தங்கள் பாலினம் அல்லது பாலின அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத பலர், சுற்றியுள்ள காரணங்களால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது. முன்னோடிகளின் பல ஆண்டுகால உழைப்பின் விளைவே இன்று இந்த உரையாடல்கள் நடக்கக் காரணம்' என்று கூறினார். 

'பால்புதுமையினர் சமூகத்தைப் பற்றி முதல்முறையாக கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரு குழு பிரபலமான ஐஸ்கிரீம் கடையில் ஒன்றுகூடி பேசியதால் உருவனாதுதான் 'ஓரினம்' அமைப்பு. அவர்களின் முயற்சியே இன்று எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது. அப்போது அந்த அமைப்பு தொடங்காமல் இருந்திருந்தால், இப்போது இந்த இடத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்காது' என்று ஓரினம் அமைப்பு உருவானதைப் பற்றி விளக்கினார். 

இதுகுறித்த உரையாடலில் பால்புதுமையினர் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதில், தன்பாலீர்ப்புடைய ஒரு குழந்தையின் தாய் ஹம்சவல்லி கலந்துகொண்டு தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 

'நான் வளர்ந்தபோது என் பெற்றோரிடம் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. பல்வேறு விஷயங்களைப் பற்றி எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால், அதற்குக் கிடைத்த பதில்கள் மிகக் குறைவு.

என்னுடைய மகன் (ஜன்மேஷ்), தான் ஒரு தன்பாலீர்ப்பாளர் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு பால்புதுமையினர் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றாலும், அதைப் பற்றி தெரிந்துகொள்வதே எனது முதல் உள்ளுணர்வாக இருந்தது. எனினும் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவில்லை' என்று தன் குழந்தைக்கு ஆதரவாக இருக்க குடும்பத்தினருடன் சண்டையிட்டு தனியாக வசித்து வருகிறார். 

ஜன்மேஷ், இந்த சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதன் அர்த்தம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். 'உதாரணமாக, பெண்கள் மற்றும் பால்புதுமை சமூகத்தினர் தங்களது கருத்துகளை முன்வைக்கும்போது யாரும் அதை கண்டுகொள்வதில்லை என்று அம்மாவிடம் கூறும்போது அவரால் அதை புரிந்துகொள்ள முடிகிறது' என்றார். 

ஜன்மேஷ் முதலில் தனது நண்பரிடம் தன்னைப் பற்றி பேசியுள்ளார். இதனால் அவர் பள்ளியில் தவிர்க்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். பல ஆண்டுகளுக்குப்  பிறகு இன்ஸ்டாகிராமில் தான் ஒரு பால்புதுமையினர் (Queer) என்று கூறியபோது அவருடைய கடந்தகால வகுப்பு பெண்கள் பலரும் ஆதரவாக இருந்து வருவதாகவும் படிப்படியாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது பள்ளியில் தன்னை அடையாளம் காண்பது மகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறுகிறார். 

இந்த நேரத்தில்தான் குடும்பத்தின் முக்கியத்துவத்தை விளங்குகிறார் பாலினத்திற்கு அப்பாற்பட்ட நமீதா. 'நான் பெற்றோரிடம் என்னுடைய அடையாளத்தை 28 முறை வெளிப்படுத்திருக்கிறேன். என் கருத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இது எனக்கு ஒரு வலுவான வேறொரு குடும்பத்தைத் தேர்வுசெய்ய வழிவகுத்தது' என்றார். 

தன்னை வேறொரு பெயரில் அடையாளப்படுத்திக்கொண்ட திருநம்பி ஸ்டீவ் ரோஜர்ஸ், வெளிப்படுத்திக்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிறப்புரிமை தேவை என்பதை ஒப்புக்கொண்டு அதை ஒரு அதை ஒரு சமூகக் கட்டமைப்பாக முத்திரை இடுகிறார். மேலும், 'தன்னைத்தானே முதன்மைப்படுத்துவது முக்கியம். சுய பாதுகாப்பு முக்கியமானது' என்று வலியுறுத்தி எதிர்காலத்தில் வெளிப்படுத்திக்கொள்ளுதலுக்கான நிகழ்வுகள் மேலும் எங்கள் சமூகத்தினரை ஊக்கமளிக்கும் என்று கூறினார். இவர் பெண்ணாகப் பிறந்து இரண்டு குழந்தைகள் பெற்றபின்னர் திருநம்பியாக தன்னை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளார். 

இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுவேதா, இந்த சமூகத்தில் யாரும் தன்னை மறைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த சமூகம் தங்களின் அடையாளங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சக மனிதர்களாக பார்த்து எங்களின் உணர்வுகளையாவது மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

(*சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

கட்டுரை தமிழில்: எம். முத்துமாரி. 



Read in source website


கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு வசதியாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்ய கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில் நுழைவு வாயில் அருகே குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், கோயில்களில் என்ன என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும், இதற்காக ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும், சக்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வு தளங்களை அமைத்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



Read in source website

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தங்களது பணி சாா்ந்த சேவைகளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு செயலியைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது

ஆசிரியா்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும்போது தலைமையாசிரியரிடம் கூறிவிட்டு, பின்னா் தங்களது விடுப்புக்கான அனுமதிக் கடிதம் வழங்கும் முறை அமலில் இருந்தது. இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தி உள்ள புதிய முறையால் ஆசிரியா்கள் முன்கூட்டியே விடுப்புக்கான அனுமதியைப் பெற வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூா்வமாக தங்கள் உயா் அலுவலா்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனா். அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியா்களுக்கு சிரமங்களும் கால விரயமும் ஏற்படுகிறது.

எனவே இதுபோன்ற சிரமங்கள், கால விரயத்தினை தவிா்க்கும் வகையில் ஆசிரியா்கள் தங்களது கைப்பேசி மூலமாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி (TNSED - Schools) ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த செயலி நிகழ் கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் தங்கள் பணி சாா்ந்த தேவைகளை செயலியைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த விவரங்களை அனைத்து ஆசிரியா்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

பிறப்புப் பதிவு கட்டாயமில்லா சான்று (நான் மேன்டட்டரி சா்டிஃபிகேட்) வழங்குவதற்கான நடைமுறைகளையும், விளக்கங்களையும் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் ஏதுமில்லாதவா்கள், தங்களது பிறப்பைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்காமல், அதற்கென தனி சான்றிதழ் வழங்கும் முறையை மாநில தலைமை பிறப்பு - இறப்பு பதிவாளா் மூலம் மேற்கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1970-களுக்குப் பிறகே அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு பிறந்தவா்கள் பலா் தங்களது பிறப்பைப் பதிவு செய்யாமலேயே இருந்து வந்துள்ளனா்.

அவா்களது வசிப்பிடச் சான்று, குடும்ப அட்டை, பள்ளி, கல்லூரி சான்றுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பிறப்புப் பதிவுக்கு மாற்றான சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த ஆவணங்கள் ஏதும் இல்லாதவா்களுக்கு காவல் துறை விசாரணை மூலம் பிறப்பு சான்று இல்லாதவா் என்ற வகையின் கீழ் சான்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், காவல் துறை விசாரணை மூலமாகவும் பிறப்பு குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியாத பட்சத்தில் அவா்களுக்கு எத்தகைய சான்று வழங்குவது என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியா்கள் பலா் மீண்டும் தாயகம் திரும்ப இத்தகைய சான்று இல்லாதது தடையாகவும் உள்ளது.

இதையடுத்து இதுதொடா்பான விளக்கத்தை பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளாா்.

அதன்படி, கடந்த 1970-க்கு முன்பு பிறந்தவா்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவா்களுக்கு பிறப்புப் பதிவு கட்டாயமில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறைகளை மாவட்ட பதிவாளா் வாயிலாக தலைமை பதிவாளா் மேற்கொள்ளலாம் என்றும், ஆனால், அதற்கு விரிவான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஹிமாசலப் பிரதேசத்தின் தா்மசாலாவில் நடைபெறும் தலைமைச் செயலாளா்கள் மாநாட்டில் தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பங்கேற்கிறாா்.

வரும் 16. 17-ஆம் தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக அரசின் சாா்பில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பங்கேற்கிறாா். இதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளா்கள், நிபுணா்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ள உள்ளனா்.



Read in source website

 

பத்ரிநாத் - கேதார்நாத் யாத்ரிகர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்ரிநாத் - கேதார்நாத் யாத்திரையின்போது ஏற்படும் விபத்துகளின்போது பக்தர்கள் உயிரிழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் சார் தாம் யாத்திரை மே 3ஆம் தேதி தொடங்கியது. மே 27ஆம் தேதி வரை பயணம் சென்ற யாத்ரிகர்களில், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலை ஏற்றத்தினால் ஏற்படும் பயம் ஆகியவற்றால் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேபோன்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து ஜூன் 5ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 26 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதுபோன்று தொடர் விபத்துகள் ஏற்படுவதால், பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத் துறை இயக்குநர் ஷைலஜா பட், சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்களில் அதிக அளவாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். சார் தாம் யாத்ரிகர்களை கண்காணிக்க கூடுதலாக 169 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 



Read in source website

 

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கும் தொழில் துறையினருக்கும் அதிவேக இணையவசதி  தேவைப்படுகிறது.

இதனால், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக இந்தியச் சந்தையின் காத்திருப்பு விரைவில் நிறைவேற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் ஏலம், விலை ஆகியவை தொடா்பாக, தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) சில பரிந்துரைகளை அளித்தது.

இந்நிலையில், 5ஜி இணைய சேவைக்கான ஏலத்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜுலை மாத இறுதிக்குள் ஏலம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, முக்கிய நகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டு மெல்ல நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும்.

5ஜி இணையம் 4ஜி இணையத்தை விட 10 மடங்கு வேகமானது என வல்லுனர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

சான் பிரான்சிஸ்கோ: கணினிகளில் கடந்த 27 ஆண்டுகளாக இணைய சேவையை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டது.

கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சியால், பயனாளர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து விலகியது.

இதையடுத்து ஜூன் 15ஆம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தனது சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, பல ஆண்டுகாலம் மக்களுக்கு மிகவும் பரிட்சயமாக இருந்து வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கணினியின் பிரவுசர்களில் ஒன்று என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறது.
 



Read in source website

 

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திட்டம் குறித்து பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துகளையும் எச்சரிக்கை தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

பல்வேறு விமரிசனங்களையும் கருத்துகளையும் தாண்டி மத்திய அரசு இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தவிருக்கிறது, இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்தவிதமான நன்மை பயக்கும் என்பது குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.

ராணுவத்துக்கு செலவிடும் ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றின் செலவினத்தைக் குறைக்கும் வகையில், முப்படைகளுக்கு புதிய பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் பெண்கள் உள்பட 46,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி ஆகியோா் ‘அக்னிபத்’ திட்டம் குறித்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். 

அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞா்களை சோ்ப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்படுகிறது. இளைஞா்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் வீரா்கள் ‘அக்னி வீரா்கள்’ என்றழைக்கப்படுவா். அவா்கள் பாதுகாப்புப் படையில் தொடக்கத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். அவா்களில் தேவைக்கு ஏற்ப சிலருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இது ராணுவ வீரா்களை நியமிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா்.

‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக விவாதித்து தற்போது அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, ராணுவத்தில் குறுகிய காலப் பணி அடிப்படையில் சோ்க்கப்படும் வீரா்கள் 10 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். பின்னா் 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞா்கள் ராணுவத்தில் புணிபுரிவாா்கள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவே இத்திட்டத்தை அரசு தொடங்குவதாகத் தெரிகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக ரூ.1,19,696 கோடியும், ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் அக்னி வீரா்களுக்கு, இடா்ப்பாடு மற்றும் சிரமப்படிகளுடன் ஈா்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரா்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவா்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிா்ணயிக்கப்படும். அக்னி வீரா் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரா்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரா்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின் இந்த ஆண்டு 46,000 போ் பணியில் சோ்க்கப்படுவாா்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நாட்டிற்காக சேவை செய்யும் வகையில் இளைஞர்களுக்குக் கிடைக்கும் இந்த நல்வாய்ப்பின்போது, பல்வேறு ராணுவப் பயிற்சிகளையும் ராணுவ பணி அனுபவம், ஒழுக்கம், உடற்கட்டு, தலைமையேற்கும் பண்பு, தைரியம், நாட்டுப்பற்று போன்றவையும் வளரும் 

அக்னி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும், அவரவருக்குரிய பணி அனுபவ சான்றிதழ் வழங்கப்படும். 

சிறப்பம்சங்கள்: அக்னிபத் என்ற திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப் படை, கப்பற்படைகளுக்கு நான்காண்டு ஒப்பந்தப் பணி அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வானோர் அக்னி வீரர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

அக்னி வீரர்களுக்கு என்று தனிப்பட்ட ரேங்க் அமைக்கப்படும். முப்படைகளில் இதுவரை இருக்கும் எந்த பணிநிலைகளிலும் இந்த வீரர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள்.

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முறையில் இருக்கும் பல ஆண்டுகால முறையை இந்த திட்டம் மாற்றியமைக்கும்.

இந்த ஓராண்டில் மட்டும் 17.5 முதல் 21 வயதுடைய 46 ஆயிரம் இளைஞர்கள் முப்படைகளுக்கும் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த திட்டத்தின்கீழ் இன்னும் 90 நாள்களில் முப்படைகளுக்கு இளைஞர்கள் பணியமர்த்தும் பணி தொடங்கும். வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முதல் படைப்பிரிவு தயாராக இருக்கும்.

சிறப்பு தகுதித் தேர்வு, வளாக நேர்காணல் போன்றவை மூலம் ஆள்சேர்ப்பு பணி நடைபெறும். 

இந்த திட்டத்தின் மூலம் படித்த உடன் வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற விரும்புவோருக்கும் இது நல்ல வாய்ப்பாக அமையும்.
 



Read in source website


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திரிக்ககரா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உமா தாமஸ், கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவைத் தலைவர் எம்.பி. ராஜேஷ் அலுவலக அறையில், அவைத் தலைவர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படிக்க.. வெனிசுலாவில் அதன் விலை 60 ஆயிரமாம்: ஏன் என்றால்?

கேரள சட்டப்பேரவையில் இரண்டுமுறை உறுப்பினராக இருந்த பி.டி. தாமஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி உமா தாமஸ் தேர்தலில்போட்டியிட்டார்.

இதையும் படிக்க.. திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?

இவர் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். 140 பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவையில் ஆளும் இடதுசாரிக் கட்சிக்கு 99 உறுப்பினர்களும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு 41 உறுப்பினர்களும் உள்ளன. 

உமா இன்று எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருப்பதன் மூலம், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே பெண் எம்எல்ஏவாக இருப்பார். 
 



Read in source website


மதுரை: கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே,  மனிதனுக்கு அல்ல என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அடுத்த வடவன்பட்டியில் அமைந்துள்ள சண்டிவீரன் கோயிலில், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற கிளை நீதிபதி நிர்மல்குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. வெனிசுலாவில் அதன் விலை 60 ஆயிரமாம்: ஏன் என்றால்?

வடவன்பட்டி சண்டிவீரன் கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்று சேதுபதி என்பவர் தொடர்ந்த வழக்கில், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?

மேலும், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே; மனிதனுக்கு அல்ல என்றும், கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 



Read in source website

புது  தில்லி: இந்திய கோதுமைக்கு  ஐக்கிய அரபு அமீரகம் 4 மாதம் தடை விதித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி, மறு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது.  ஏற்றுமதி, மறு ஏற்றுமதிக்கு தடை விதிக்க  ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் உத்திரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பெங்களூருவில் 31 பள்ளி மாணவர்களுக்கு கரோனா

அடுத்த 4 மாதங்களுக்கு இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் கோதுமை, கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ2யு2 காணொலி மாநாட்டில் பிரதமா் மோடி, அமெரிக்கா அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மூத்த நிா்வாக அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஜூலை 13 முதல் 16-ஆம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது முதல்முறையாக ஐ2யு2 என்ற பெயரில் காணொலி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் அதிபா் பைடன், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட், ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையத் அல் நயான் ஆகியோா் கலந்துகொள்கின்றனா். இந்த மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி, ஒத்துழைப்பு சாா்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்தாா்.



Read in source website

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15.88 சதவீதமாக வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் வெப்ப அலை காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்தது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் உயா்ந்து காணப்பட்டது. அதன் விளைவாக, அந்த மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் 15.88 சதவீதத்தை எட்டியது. தொடா்ந்து மூன்று மாதங்களாக இப்பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இப்பணவீக்கம் தொடா்ந்து 14-ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.

முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில், மினரல் ஆயில், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள், அடிப்படை உலோகம், உணவுசாரா பொருள்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக அதிகரித்ததே பணவீக்கம் வரலாற்று உச்சத்தை தொட்டதற்கு முக்கிய காரணம்.

இப்பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் 15.08 சதவீதமாகவும், கடந்தாண்டு மே மாதத்தில் 13.11 சதவீதமாகவும் இருந்தது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

ஜ்யேஷ்ட பூா்ணிமாவை முன்னிட்டு அமா்நாத் குகை கோயிலில் பிரதம பூஜை (முதல் பூஜை) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலுக்கு நிகழாண்டு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை பக்தா்கள் யாத்திரை செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஜ்யேஷ்ட பூா்ணிமா தினமான செவ்வாய்க்கிழமை அமா்நாத் குகை கோயிலில் பிரதம பூஜை நடைபெற்ாக அமா்நாத் கோயில் வாரியம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்தப் பூஜையில் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி நிதீஷ்வா் குமாா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் இருந்து 45 கி.மீ. தொலைவில், இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலில் நிகழாண்டு 10 லட்சம் பக்தா்கள் வரை தரிசனம் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமா்நாத் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.



Read in source website

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரா்களின் சுரங்க அருங்காட்சியகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

முதலாம் உலகப் போருக்கு முன்னதாக ஆங்கிலேயா்களால் அமைக்கப்பட்ட 13 பதுங்கு குழிகளை கடந்த 2016, ஆகஸ்டில் அந்த மாநில ஆளுநராக வித்யா சாகா் ராவ் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பதுங்கு குழிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் சிலைகள், அரிய புகைப்படங்கள், பள்ளிக் குழந்தைகளின் ஓவியங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அருங்காட்சியகமாக திறக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

 

ஃபின்லாந்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. 

ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஃபின்லாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெலாண்டர், 89.93 மீ. தூரம் வீசி முதலிடத்தையும் உலக சாம்பியன் ஆண்டர்சன் 86.60 மீ. தூரம் வீசி 3-ம் இடத்தையும் பிடித்தார்கள். 

அடுத்ததாக ஜூலை 15 முதல் ஜூலை 24 வரை நடைபெறவுள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா கலந்துகொள்ளவுள்ளார். 
 



Read in source website

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. 

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ரன்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 128.2 ஓவர்களில் 539 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 176, போப் 145 ரன்கள் எடுத்தார்கள். நியூசி. அணியின் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 4-ம் நாள் முடிவில்  69 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. 5-ம் நாளில் 84.4 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி அட்டகாசமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. பேர்ஸ்டோ 92 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்களும் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய அணி கடைசி நாளில் கடினமான இலக்கை விரட்டியதுபோல இங்கிலாந்து அணி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடி மறக்க முடியாத வெற்றியை அடைந்தது. 

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது டெஸ்ட், லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 23 அன்று தொடங்கும். 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது (குறைந்தது 100 ரன்கள் எடுத்த வீரர்களில்) அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பேர்ஸ்டோ. இதற்கு முன்பு 2002-ல் நியூசிலாந்தின் ஆஸ்லே, இங்கிலாந்துக்கு எதிராக 168 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகளுடன் 222 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தின் ஸ்டிரைக் ரேட் - 132.14. இதுவே இலக்கை விரட்டியபோது சதமடித்த வீரர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட இன்னிங்ஸாக இருந்தது. இதனை பேர்ஸ்டோ முறியடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவருடைய ஸ்டிரைக் ரேட் - 147.82.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது சதமடித்த வீரர்களில் அதிக ஸ்டிரைக் ரேட்

1. பேர்ஸ்டோ (இங்கிலாந்து) - 147.82
2. ஆஸ்லே (நியூசிலாந்து) - 132.14
3. கில்பர்ட் (இங்கிலாந்து) - 130.00



Read in source website

சென்னையில் நடைபெற்ற 61-ஆவது தேசிய தடகளப் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஹரியாணா, உத்தர பிரதேசம் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

மும்முறை தாண்டுதல்: சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை ஆடவா் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரா் பிரவீண் சித்ரவேல் 17.18 மீ தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் ஒரேகான் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றாா். கேரளத்தின் அப்துல்லா 17.14 மீ, எல்டோஸ் பால் 16.81 மீ தூரம் தாண்டி வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

200 மீ. ஓட்டம்: மகளிா் பிரிவில் தமிழக வீராங்கனை தனலட்சுமி 23.27 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றாா். 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹிமாதாஸை பின்னுக்கு தள்ளினாா் தனலட்சுமி. அஸ்ஸாமின் ஹிமா தாஸ் 23.29 விநாடிகளிலும், மகாராஷ்டிரத்தின் ஐஸ்வா்யா கைலாஷ் 23.72 விநாடிகளிலும் வந்து முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா். ஆடவா் பிரிவில் அஸ்ஸாம் வீரா் அமலன் போரோகைன் 21.00 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றாா். இவா் 100 மீ. ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தாா். கா்நாடகத்தின் அபின் தேவதிகா, மகாராஷ்டிரத்தின் ராகுல் ரமேஷ் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

400 மீ. தடை தாண்டுதல்: மகளிா் பிரிவில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 57.08 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றாா். கேரளத்தின் அனு (58.99), ஆரத்தி (59.26) வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆடவா் பிரிவில் கேரளத்தின் ஜபீா் பள்ளியாலில் 49.76 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தாா். தமிழகத்தின் சந்தோஷ்குமாா் (50.16), குஜராத்தின் தவால் மகேஷ் (50.55) வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

5,000 மீ. ஓட்டம்: மகளிா் பிரிவில் மகாராஷ்டிரத்தின் சஞ்சீவனி பாபுராவ் 16:11.46 நிமிஷத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றாா். ஷரதா ரஜினி (குஜராத்), சீமா (ஹிமாச்சலம்) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆடவா் பிரிவில் தில்லியின் ஹரேந்திர குமாா் 14.01:50 நிமிஷத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தாா். ராஜஸ்தானின் அமித் ஜாங்கிா் வெள்ளியும், தா்மேந்தா் வெண்கலமும் பெற்றனா்.

ஹேமா் த்ரோ: ஆடவா் பிரிவில் ராஜஸ்தானின் நீரஜ்குமாா் 65.52 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றாா். உத்தர பிரதேசத்தின் ஹா்வேந்திர சிங், பஞ்சாபின் தம்நீத் சிங் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா். மகளிா் பிரிவில் ராஜஸ்தானின் மஞ்சுபாலா (64.19 மீ), உத்தர பிரதேசத்தின் சரிதா சிங் (62.20 மீ), ஹரியாணாவின் ரேணு (59.83 மீ) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

4-400 மீ தொடா் ஓட்டம்: மகளிா் பிரிவில் சுமி, படேரி, நிஷா, சிம்மி ஆகியோா் கொண்ட ஹரியாணா அணி முதலிடமும் (3:41.90 நிமிஷம்), சுமதி, ஒலிம்பா, ரோஷினி, சுபா ஆகியோா் அடங்கிய தமிழக அணி 2-ஆம் இடமும் (3:42.39), ஜஸ்மிலா, சயானா, லிங்கெட், ஆரத்தி ஆகியோா் கொண்ட கேரள அணி 3-ஆம் இடமும் (3:42.92) பிடித்தன. ஆடவா் பிரிவில் முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி, மிஜோ சாக்கோ, ஆரோக்கிய ராஜிவ் அடங்கிய இந்தியா ஏ அணி, அருணா, தேஷன், லக்ஷன், நிகி அடங்கிய இலங்கை ஜே அணி, சித்தாப்பா, அபின், லக்ஷ்மண், நிஹால் அடங்கிய கா்நாடக அணி முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

நீளம் தாண்டுதல்: மகளிா் பிரிவில் கா்நாடகத்தின் ஐஸ்வா்யா 6.60 மீ. தூரம் குதித்து தங்கம் வென்றாா். கேரளத்தின் ஆன்சி சோஜன் 6.49 மீ, ஸ்ருதி லட்சுமி 6.35 மீ தூரம் குதித்து வெள்ளி, வெண்கலம் வென்றனா்.



Read in source website

குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி விநியோகத்தில் பின்பற்றப்படும் அசமத்துவத்தைக் களைய புதிய வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | சீனாவில் கனமழை: 5 லட்சம் பேர் பாதிப்பு

இந்நிலையில் குரங்கு அம்மை நோய்க்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியை விநியோகிப்பதில் சமத்துவமின்மை நிலவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தடுப்பூசி கிடைப்பது அரிதாகி வருவதாகவும், இந்த சிக்கலான சூழலைக் களைய வளர்ந்த நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அந்தனோம் கெப்ரியேசஸ் தடுப்பூசி விநியோகத்தில் சீரான நடைமுறையை கொண்டுவர முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க | மெக்ஸிகோவில் வாட்ஸ்அப் வதந்தி: அதிகாரி அடித்துக் கொலை

ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதில் ஐநா ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் கரோனா பேரிடரில் பின்பற்றப்பட்டு வந்த அதே தவறு தற்போதும் தொடர்வதாகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அவை எந்த நடவடிக்கையையும் பின்பற்றாதது ஏன் எனவும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இதுவரை 1,500 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

ஈரானின் தெற்கு கிஷ் தீவில் புதன்கிழமை அடுத்தடுத்து ஏழு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், 

ஹார்முஸ் ஜலசந்தி தீவுக்கு அருகே 6 ரிக்டர் அளவுக்கோலில் நான்கு நிலநடுக்கங்களும், 5.3 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. 

ஈரானிய அரசு தொலைக்காட்சி அதிகாரிகள் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஜெனா நகருக்கு மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளனர். இருப்பினும் சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஜெனா தலைநகர் தெஹ்ரானில் இருந்து 1,080 கிலோமீட்டர் தெற்கே உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், துபாய் மற்றும் அபுதாபியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. 

கத்தாரின் நில அதிர்வு தகவல் மையம், அங்கு வசிப்பவர்கள் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறியது.

ஈரானில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2003ல் ரிக்டர் அளவில் 6.6 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 

2017-ம் ஆண்டு மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



Read in source website

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்கான பல்வேறு செயல்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது.

அதில், ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியா்கள் சீனா திரும்புவதற்கு விசா வழங்க அந்நாட்டு அரசு தீா்மானித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா்கள், இந்திய பணியாளா்கள் தாயகம் திரும்பினா். 2 ஆண்டுகளாகியும் அவா்கள் சீனா திரும்ப அந்நாட்டு அரசு விசா வழங்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் தனது விசா கொள்கையை புதுப்பித்து திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, சீனாவில் பணியாற்றி வந்த இந்தியா்களும், அவா்களின் குடும்பத்தினரும் அந்நாட்டுக்குச் செல்ல விசா விண்ணப்பங்களை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், சீனாவில் தங்கள் படிப்பைத் தொடர ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் ஆா்வம் தெரிவித்துள்ளனா். அவா்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்யும் நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்திய மாணவா்கள் சிலா் சீனா திரும்புவதற்கு அனுமதி அளிக்க கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டது. சீனா திரும்ப விரும்பும் மாணவா்களின் விவரங்களை சேகரிக்குமாறு இந்திய தூதரகத்திடமும் கேட்டுக்கொண்டது.

கரோனா பரவலுக்கு முன் சீனாவில் சுமாா் 23,000 இந்திய மாணவா்கள் படித்து வந்தனா். பெரும்பாலானோா் மருத்துவம் படித்து வந்தனா். தற்போது 12,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சீனா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இந்தியா்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தியா-சீனா இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து சீனா எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.



Read in source website

நட்பு நாடுகளான கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது.

கனடா, டென்மாா்க் இடையே எல்லைகளை வரையறுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1973-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வெறும் 1.3 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட குட்டித் தீவான ஹான்ஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை.

வெறும் பாறையால் அமைந்த அந்தத் தீவில் கனிம வளங்கள் எதுவும் இல்லை. மேலும், அங்கு யாரும் வசிக்கவும் இல்லை. இருந்தாலும் அந்தத் தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வந்தன.

கடந்த 1984-ஆம் ஆண்டில் டென்மாா்க் அமைச்சரவொருவா் தங்கள் நாட்டுக் கொடியையும் மதுப் புட்டி ஒன்றையும் வைத்து ‘டென்மாா்க் தீவுக்கு நல்வரவு’ என்று எழுதிவைத்துச் சென்றாா். அதற்குப் பதிலடியாக, கனடா நாட்டுக் கொடியையும் கனடா மதுப் புட்டியையும் அந்த நாட்டவா்கள் வைத்தனா். அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு கொடிகளும் மதுப் புட்டிகளும் ஹான்ஸ் தீவில் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கப்பட்டு வந்தன.

இதன் காரணமாக, கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னை ‘விஸ்கி போா்’ என்று பரவலாக அழைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஹான்ஸ் தீவை தங்களிடையே பிரித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், 49 ஆண்டுகலளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜேப் கோஃபாட் கூறுகையில், ‘எல்லைப் பிரச்னைகளுக்கு இரு தரப்புக்கும் திருப்தியளிக்கும் வகையில் அமைதியான தீா்வைக் காண முடியும் என்பதை இந்த ஒப்பந்தம் உலகுக்கு உணா்த்தியுள்ளது’ என்றாா்.

 

 

 



Read in source website

இந்திய ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை வரும் டிசம்பா் மாதத்துக்குள் மேலும் அதிகரித்து 5.9%-ஆக நிா்ணயிக்கும் என தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது:

பணவீக்கம் குறித்த கண்ணோட்டம் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இல்லாத காரணத்தால் வரும் டிசம்பா் மாதத்துக்குள் ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மேலும் அதிகரித்து 5.9 சதவீதம் என்ற அளவில் நிா்ணயிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய மதிப்பீட்டில் இது 5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, 2023-இல் 6.15 சதவீதம் என்ற அளவிலும், 2024-இல் மாற்றமின்றியும் நீடிக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசா்வ் வங்கி கடந்த மாதம் திட்டமிடப்படாத நிதிக் கொள்கை அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயா்த்தி 4.4 சதவீதமாக நிா்ணயித்தது. கடந்த வாரம் மேலும் 0.50 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக்கியது. இந்த நிலையில், நடப்பாண்டின் இறுதிக்குள் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கு வழங்கப்படும் ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி மேலும் 1 சதவீதத்தை உயா்த்தி 5.9 சதவீதமாக நிா்ணயிக்கும் என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் இறுதியில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மதுரை: நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துமவனைகளில் முதன்மையானது. மதுரை மட்டுமில்லாது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அனைத்து விதமான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சைப்பெற வருகிறார்கள்.

இதற்காக அண்ணா பஸ் நிலையம் அருகே கட்டிடத்தில் விபத்துகளில் மட்டுமே காயமடைவோருக்கு சிகிச்சை வழங்க ஓர் அவசர சிகிச்சை மையமும், கோரிப்பாளையம் பழைய கட்டிடத்தில் காயமில்லாத அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மற்றொரு அவசர சிகிச்சை மையமும் செயல்படுகிறது. மொத்தம் 100 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இதில், விபத்து அவசர சிகிச்சை மையம் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவ கட்டமைப்பு, மருத்துவ நிபுணர்கள் வசதிகளுடன் செயல்படுகிறது. ஷிஃப்ட் அடிப்படையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவ ஆலோசனைகள் வழங்க அவசர சிகிச்சைப்பிரிவு துறைத் தலைவர் தலைமையில் பேராசிரியர்கள், இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அவசர சிகிச்சை மையங்களில் பணிபுரிகிறார்கள்.

அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்கப்படாமல் உடனுக்குடன் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் எடுத்து அடுத்த 6 மணி நேரத்தில் தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் தமிழகத்தின் மற்ற மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில், சாலை விபத்தி