DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 12-12-2022

சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பரிந்துரையை ஏற்று வரும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி பதவியேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

இளைஞர் நலத் துறை செயலாளரான உதயநிதி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்துதல் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், உச்சநீதிமன்ற உயா்மட்ட குழு தெரிவித்ததன் பேரில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் இன்று மாலை ஆலோசனை செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இருமாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் விவாதித்தால் தீர்வு காண வாய்ப்பு உள்ளது என உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு கருத்து தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற கருத்தின் அடிப்படையில் இன்று இரு மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, திட்டப் பணிகள், நிலை நிறுத்தப்பட வேண்டிய 142 அடி நீா்மட்ட உயரம், அணைப் பகுதிக்கு தளவாடப் பொருள்கள் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறு போன்றவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.



Read in source website

புது தில்லி: தெற்கு தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு வந்த பிளாங் கால் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லிடப்பேசிக்கு தொடர்ந்து கால் செய்து, அவர் அழைப்பை எடுத்த பிறகும், மற்றொரு பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்படியே தொடர்ந்து பிளாங்க் கால் கொடுத்து 50 லட்சம் வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், அவரிடம் எந்த ஓடிபியும் பெறவில்லை.

சில நாள்களுக்கு முன்பு, அந்த இயக்குநருக்கு இரவு 7 மணி முதல் 8.45 மணி வரை பல முறை பிளாங்க் அழைப்பு வந்துள்ளது. அடுத்த அழைப்பில் யாரும் பேசாததால் சில அழைப்புகளை அவர் எடுக்கவில்லை. பிறகு அவரது செல்லிடப்பேசிக்கு வந்த தகவலில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 12 லட்சம், 4.6 லட்சம், இரண்டு முறை 10 லட்சம்  என நான்கு பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் புகார் அளிக்க, விசாரணை நடத்தியதில், வங்கிக் கணக்குக்கு பணம் சென்றவர்களை அழைத்து விசாரித்ததில், மோசடியாளர்கள், தரகு அளிப்பதாகக் கூறி தங்களது வங்கிக் கணக்கைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் அதிகளவில் பணத்தை அதுவும் புதிய முறையில் மோசடி செய்திருப்பதால், இது பதற்றத்தையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக பணப்பரிமாற்றங்கள் செய்யும் போல பல நிபந்தனைகள் இருக்கும். ஆனால், இயக்குநரின் வங்கிக் கணக்கு நடப்புக் கணக்கு என்பதால் அந்த கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், எந்த தடையும் இல்லாமல் மோசடி நடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சிம் ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை மோசடி செய்திருக்கலாம் என்றும், இரண்டு முறை நிரூபிக்கும் அல்லது இரண்டு முறை உறுதிப்படுத்தும் வங்கிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்புகளில் இருக்கும் சில தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், ஒரு நபருக்கு அழைப்பு விடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தியை கையாண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுபோல இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டு தொழிலதிபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை மோசடி செய்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
 



Read in source website

பல நாடுகளுடன் இந்திய ரூபாயில் வா்த்தகத் தொடா்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு வா்த்தக அமைப்புகள், வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் காரணமாக சா்வதேச பொருளாதாரம் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. சா்வதேச விநியோகச் சங்கிலியிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதன் காரணமாக அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ளது. இந்தச் சூழலை சமாளிப்பதற்காக மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வா்த்தகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதற்கு ரஷியா, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மேலும் பல நாடுகளுடன் ரூபாயில் வா்த்தகம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு வா்த்தக அமைப்புகள், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக இந்திய ரூபாயைக் கொடுத்தே இறக்குமதிப் பொருள்களைப் பெற முடியும் என்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கு வாயிலாக சா்வதேச வா்த்தகத்தை ரூபாயில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பல வங்கிகள் அத்தகைய கணக்குகளை ரஷியா, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளில் தொடங்கியுள்ளன. அந்நாடுகளும் அத்தகைய கணக்குகளை இந்திய வங்கிகளில் தொடங்கியுள்ளன.

வோஸ்ட்ரோ கணக்கு என்பது ஒரு வங்கிக்காக மற்றொரு வங்கியில் கணக்கு தொடங்கி நடத்துவதாகும். இதன் மூலமாக ரூபாய் வாயிலான வா்த்தகம் எளிமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரஷியாவைச் சோ்ந்த கேஸ்புரோம்பேங்க் இந்தியாவில் யூகோ வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கு தொடங்கியுள்ளது. அதே போல இலங்கையைச் சோ்ந்த சில வங்கிகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கு தொடங்கியுள்ளன.

இதுவரை 11 இந்திய வங்கிகளில் 18 சிறப்பு வோஸ்ட்ரோ ரூபாய் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவின் ஜி-20 தலைமையின்கீழ் முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூருவில் டிசம்பா் 13 முதல் 15 வரை நடைபெற உள்ளது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின்கீழ் நிதி வழிமுறை குறித்த விவாதங்களின் தொடக்கமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சகமும், இந்திய ரிசா்வ் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளா் அஜய் சேத், ரிசா்வ் வங்கியின் துணைஆளுநா் மைக்கேல் டி. பத்ரா ஆகியோா் இணைந்து தலைமை தாங்கவுள்ளனா். ஜி-20 உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜி-20 கூட்டமைப்புக்கான நிதி வழிமுறை , உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், சா்வதேச நிதிக் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதியுதவி, நிலையான நிதி, உலகளாவிய சுகாதாரம், சா்வதேச வரிவிதிப்பு மற்றும் நிதிச் சோ்க்கை உள்ளிட்ட நிதித் துறை சாா்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் , ’21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பலதரப்பு வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெறும். ‘பசுமை நிதியளிப்பில் மத்திய வங்கிகளின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

இந்திய ஜி-20 தலைமைத்துவத்தின் கருப்பொருளான ’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்பது இந்த விவாதங்களுக்கு வழிகாட்டும். நிதி வழிமுறையின்கீழ் சுமாா் 40 கூட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் நடத்தப்படவுள்ளது. இதில் ஜி20 நிதி அமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்களின் சந்திப்புகளும் அடங்கும். ஜி-20 நிதி வழிமுறை கூட்டத்தில் நடைபெறும் விவாதங்கள், ஜி-20 தலைவா்களின் கூட்டு பிரகடனத்தில் பிரதிபலிக்கும்.

கரோனா பரவல், பூகோள-அரசியல் பதற்றங்கள், அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்கள், வளா்ந்து வரும் கடன் பிரச்னைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணக் கட்டுப்பாடு போன்ற பல சவால்களுக்கு இடையே இந்தியா ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இத்தகைய சவால்களைக் கையாளுவதில் வழிகாட்டுதலை வழங்குவதே ஜி-20 இந்தியத் தலைமையின் முக்கிய பங்கு’ என்றனா்.

 



Read in source website

சூரிய ராணி என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தியின் முன்னோடியாக விளங்கிய டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்தநாளை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கூகுள் நிறுவனம், முக்கிய நபர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சூரிய சக்தியின் முன்னோடியான டாக்டர் மரியா டெல்கேஸ், மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக்காக கௌரவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றலாம் என்று மரியா உறுதியாக நம்பினார். ஆம். அவர் சொன்னது சரிதான். அதற்காக அவர் 1952ஆம் ஆண்டு பெண் பொறியாளர்கள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1900ஆம் ஆண்டு ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் பிறந்தவர் டாக்டர் டெல்கேஸ். இயற்பியல் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். 1924ஆம் ஆணடு பிஎச்டி முடித்தார்.  பிறகு அமெரிக்கா சென்று பயோபிசிஸ்ட் ஆகப் பணியைத் தொடர்ந்தார். எம்ஐடியில் சூரிய சக்தி ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 

இரண்டாம் உலகப் போரின் போது, கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை உருவாக்க அமெரிக்க அரசால் அழைக்கப்பட்டார். இந்த உயிர்காக்கும் திட்டத்தின் மூலம், பசிபிக் கடலில் நிறுத்தப்பட்ட ஏராளமான வீரர்களின் உயிரைக் காக்க உதவியது.

பிறகு மீண்டும் எம்ஐடி திரும்பிய டெல்கேஸ், ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராக இணைந்தார். அவர், எம்ஐடி பேராசிரியருடன் இணைந்து, சூரிய சக்தியால் வெப்பமாகும் வீட்டை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது திட்டம் தோல்வியடைந்தது. அந்தக் குழுவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். ஆனால் அவரது கூற்றுகள் மட்டும் நிலைத்தன.

பிறகு 1948ஆம் ஆண்டு தனியாரின் உதவியுடன் டோவர் சூரிய சக்தி வீடகளை உருவாக்கினார். அந்த திட்டம் வெற்றி பெற்றது, ஊடகங்கள் மூலம் புகழ்பெற்றார் டெல்கேஸ்.

பல வெற்றிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சியிலேயே தனது வாழ்நாளைக் கழித்தவர் டாக்டர் மரியா டெல்கேஸ்.  பிறகு அவர் ஃபோர்டு அறக்கட்டளையை உருவாக்கினார், இப்போதும் அவர் உருவாக்கிய சூரியசக்தி அடுப்பு பயன்பாட்டில் உள்ளது.

சூரிய சக்தி மூலம் உருவாக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்துள்ளார். அவர் வசம் சுமார் 20 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை வைத்திருந்தார். ஏராளமான எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இதனால்தான் அவர் சூரிய ராணி என்று அழைக்கப்படுகிறார்.
 



Read in source website

ஜப்பானின் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்கலம் ஞாயிற்றுக்கிழமை நிலவுக்கு அனுப்பப்பட்டது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஸ்பேக்ஸ்-எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம், அந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த விண்கலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனாா் ரோவா் வாகனம், ஜப்பான் ரோபோ ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

ஜப்பானின் ‘ஐஸ்பேஸ்’ தனியாா் நிறுவனம் வடிவமைத்த விண்கலம் நிலவின் வடகிழக்குப் பகுதியில் தரையிறங்க உள்ளது. ஐஸ்பேஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டத்துக்கு ‘ஹகுட்டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானிய மொழியில் ‘வெள்ளை முயல்’ என்று பொருள். அந்த விண்கலத்துடன் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் ஆரஞ்சு நிற கோள வடிவிலான ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அனுப்பப்பட்ட ராக்கெட்டில், ‘ரஷீத்’ எனப் பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனாா் ரோவா் வாகனமும் இடம்பெற்றது. பத்து கிலோ எடை கொண்ட அந்த வாகனம், நிலவின் மேற்பரப்பில் 10 நாள்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

ஜப்பான் விண்கலம் நிலவை சென்றடைய சுமாா் 5 மாதங்களாகும் என்று ‘ஐஸ்பேஸ்’ நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.

நிலவுக்கான பயணத்திட்டத்தை மேற்கொண்டு வரும் தனியாா் நிறுவனங்களில், ‘ஐஸ்பேஸ்’ நிறுவனம் நிலவுக்கு விண்கலம் அனுப்ப முயற்சித்துள்ள முதலாவது தனியாா் நிறுவனமாகும்.



Read in source website

அரசியல் வசதிக்கு ஏற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படுத்தும் முறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ் இரு முக்கிய கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பான மாநாட்டை வரும் 14-ஆம் தேதியும் சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டை வரும் 15-ஆம் தேதியும் இந்தியா நடத்தவுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டுக்கான கருத்துரு அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸுக்கு ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் நியூயாா்க்கில் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலே சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது தொடங்கி லண்டன், மும்பை, பாரீஸ், மேற்காசியா, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

உலகின் ஒருபகுதியில் காணப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல், மற்ற பகுதிகளிலும் அமைதியை சீா்குலைக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலானது நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. உலகின் குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்துவதற்கு பல நாடுகளில் இருந்து பயங்கரவாதிகளும் அவா்களின் ஆதரவாளா்களும் செயல்படுகின்றனா்.

ஐ.நா.வும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ள முடியும். பயங்கரவாதத்தை மதம், தேசியம், இனம் என தொடா்புபடுத்துதல் முறையாக இருக்காது. அனைத்து பயங்கரவாதச் செயல்களுமே குற்றமாகக் கருதப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களும் கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதச் செயல்களை எதற்காகவும் நியாயப்படுத்தக் கூடாது.

அரசியல் வசதிக்கேற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படும் சகாப்தம் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். பயங்கரவாதச் செயல்களை மதம், அரசியல், கொள்கை என்ற அடிப்படையில் வகைப்படுத்துவது, பயங்கரவாதத்துக்கு எதிரான சா்வதேச ஒருங்கிணைந்த செயல்பாடுகளை பாதிக்கும்.

மாநாட்டின் பலன்கள்:

உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது. ஆயுதங்கள், போதைப் பொருள்களின் கடத்தல் அதிகரித்துள்ளது. பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி கிடைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

நவீன தொழில்நுட்பங்களையும் பயங்கரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதக் குழுக்கள் மக்களை மூளைசலவை செய்து பயங்கரவாதச் செயலில் ஈடுபட தூண்டி வருகின்றன.

இத்தகைய சூழலில் பயங்கரவாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான முறையில் ஆலோசனை நடத்துவதற்கு இந்தியா நடத்தவுள்ள மாநாடு வழிவகுக்கும். அந்த மாநாட்டில் சா்வதேச ஒத்துழைப்பு குறித்து உறுப்பு நாடுகள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய வழிகள் குறித்தும் தற்போதைய வழிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடா்பாகவும் விவாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் ரஷியா தொடா்ந்து 2-ஆவது மாதமாக முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவுடன் நீண்ட காலமாக எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷியா முதலிடம் வகிப்பதாக சா்வதேச எண்ணெய், சரக்கு வா்த்தகத்தை கண்காணிக்கும் அமைப்பான வாா்டேக்ஸா தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2022 , மாா்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் எண்ணெய் தேவையை 0.2 சதவீதம் மட்டுமே பூா்த்தி செய்த ரஷியா, கடந்த நவம்பா் மாதத்தில் நாள்தோறும் 9,09,403 பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உள்ள இராக் 8,61,461 பீப்பாய்களும், சவூதி அரேபியா 5,70,922 பீப்பாய்களும், அமெரிக்கா 4,05,525 பீப்பாய்களும் ஏற்றுமதி செய்துள்ளன.

கடந்த 2021, டிசம்பா் மாதத்தில் இராக் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து நாளொன்றுக்கு சராசாரியாக 10 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ரஷியாவிடமிருந்து வெறும் 36,255 பீப்பாய்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. அதற்குப் பின், கடந்த மாா்ச் மாதம் 68,600 பீப்பாய்களாக அதிகரித்த எண்ணிக்கை ஜூன் மாதம் 9,42,694 பீப்பாய்கள் என்று புதிய உச்சம் பெற்றது. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 9,35,556-ஆக இருந்தது.

‘எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த நிா்பந்தமும் இல்லை’:

இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்கு, மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘எண்ணெய் நிறுவனங்களை ரஷியாவிடம் வியாபாரத்தில் ஈடுபடுமாறு எந்த நிா்பந்தமும் அரசு தரப்பில் அளிக்கப்படவில்லை. சந்தையில் குறைவான விலையில் சரக்கு அளிப்பவா்களை நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கின்றன. அவ்வாறே, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன’ என்றாா்.



Read in source website

மதுரை: ‘அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கல்வி உரிமை சிறை கைதிகளுக்கும் உண்டு’ என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் உள்ள நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கவும், நூலகங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் 22,792 கைதிகளை அடைக்க முடியும். தற்போது 601 பெண்கள், 112 வெளிநாட்டினர் உட்பட 13,969 கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளில் 56.9 சதவீதம் பேர் விசாரணை கைதிகள். பொதுமக்களை பொருத்தவரை கைதிகளை திருத்தும் இடமாக சிறைச்சாலையை பார்க்கின்றனர். சட்ட அமைப்புகளில் ஒன்றான சிறைச்சாலைகள் கைதிகளுக்கு சட்டக் கல்வி வழங்கி, அவர்களை சட்டத்தை மதித்தும் நடக்கும் குடிமகன்களாக பழக்குகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் வழங்கப்பட்டுள்ள கல்வி உரிமை சிறைக் கைதிகளுக்கும் உண்டு. இதற்காக சிறைகளிலும் நூலகங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. டிஜிட்டல் நூலகங்கள் சிறைக் கைதிகளை தற்போதைய மின்னணு உலகில் வாழ்வதற்கு தயார்படுத்தவும், தகவல், தொழில்நுட்ப வசதிகளை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதனால் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக சிறைத்துறை கூடுதல் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினர்.



Read in source website

சென்னை: வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையேயான வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வாடகைதாரர்கள் வழக்கை நீட்டிக்க விருப்பப்படலாம். ஆனால் அதற்கு
நீதிமன்றங்கள் உதவக் கூடாது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என நீதிமன்றம் கருதினால், அந்த மனுக்களை முடிந்தவரை விரைவாக தீர்க்க வேண்டும். தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மேலும், வாடகைதாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான காலத்திற்குள் நீதி கிடைக்க நீதித் துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நடப்பது விரக்தியை ஏற்படுத்துவதாக தெரிவித்த நீதிபதி, நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்த உலகில், பொதுமக்களுக்கு எளிதாக நீதி பரிபாலன முறை தேவை. காலதாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

பொதுமக்கள் எளிதாக அணுகும்வகையில், நீதிபரிபாலன முறை, தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், நீதித்துறை நடைமுறை, மனுக்களை கையாளும் முறை, உத்தரவுகள், தீர்ப்புகளை எளிதாக்குவதுதான் தற்போதைய தேவை என்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



Read in source website

சென்னை: தெற்கு ரயில்வே தலைமையக கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 1915-ம் ஆண்டு பிப்.8-ம்தேதி இதன் கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் அப்போதைய சென்னை கவர்னர் லார்டு பென்ட்லன்ட். இக்கட்டிடம், என்.கிரேசன் என்ற கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு, பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் டி.சாமிநாத பிள்ளையால் கட்டப்பட்டது.

இது, திராவிட பாணியை அடிப்படையாக கொண்ட இந்தோ - சாரசனிக் வகை அமைப்பாகும். 10 ஆயிரம் டன் கிரானைட் கான்கிரீட்டில் பதிக்கப்பட்ட 500 டன் இரும்புக் கம்பிகளைக் கொண்ட அடித்தளத்தை கட்டமைப்பதற்கு மட்டும் சுமார் ஏழரை மாதங்கள் ஆகியுள்ளன. பல ஆண்டு காலகடின உழைப்பு மற்றும் ரூ.30,76,400 செலவில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பின்னர், 1922-ம் ஆண்டு டிச.11-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் கவர்னர் ஃப்ரீமேன் தாமஸ் வெலிங்டனின் மனைவியால் (லேடி வெலிங்டன்) இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை தாங்கி நிற்கும் இந்த பாரம்பரிய கட்டிடம் நேற்று 100-வது ஆண்டை நிறைவு செய்தது.

இதையொட்டி, 60 பேர் கொண்ட குழுவினர் நேற்று இந்தகட்டிடத்தை சுற்றிப் பார்த்தனர். கட்டிடத்தின் வரலாற்றுச் சிறப்பு குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

நூற்றாண்டை நிறைவு செய்த பாரம்பரியமிக்க இந்த கட்டிடத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Read in source website

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செங்கண்மா வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரேம் ஆனந்த் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில், கண்ணக்குருக்கை செல்லும் சாலையில் உள்ள வேப்ப மரத்தடியில் கல்வெட்டு இருந்தது. இதை படியேற்றம் செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 11-ம் நூற்றாண்டை சேர்ந்த வீர ராஜேந்திர சோழர் கால கல்வெட்டு என்பது தெரியவருகிறது. கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில், “ஸ்வஸ்தி வீர ராஜேந்திர சோழ தெவர்கு யாண்டு ழந 3- வது பெண்ணை வடகரை வாணகபாடி ஆடைநாட்டு நல்லூர்... கயா திரு வாலீசுரமுடையார்” எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 11-ம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழர் காலத்தில் வாலீஸ்வர முடையார் என்ற கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கல்வெட்டின் மேற்பரப்பில் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துக்களில் பெண்ணை வடகரை என்பது தென்பெண்ணை ஆற்றின் வடகரைப் பகுதியாகும்.

ஆடைநாடு என்பது ஆடையூர் நாடாகும். திருவண்ணாமலை, செங்கம் பகுதியை உள்ளடக்கியதாகும். வாணகபாடி என்பது திருக்கோவிலூரை குறிப்பதாகும். பாய்ச்சல் மற்றும் கண்ணகுருக்கை கிராமங்களில் வாலீஸ்வரமுடையார் கோயில் இருந்திருக்கலாம். கண்ணகுருக்கை கிராமத்தில் சிவாலயம் அழிந்து கிடக்கிறது. தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டால், இக்கோயிலை பற்றி வரலாறு கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

சென்னை: அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது.

அனைத்து மக்களுக்கும் தரமான, இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டது ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்’. ஆண்டுதோறும் டிச.12-ம் தேதி (இன்று) அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டில், ‘நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்’ என்ற மையக் கருத்துடன் இதற்கான விழா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2 நாட்களாக (டிச.10, 11)கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத் துறை நிபுணர்கள் கலந்து கொண்ட இந்தநிகழ்வில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் கடந்த அக்.12-ம்தேதி முதல் டிச.8-ம் தேதி வரை 22.59 லட்சம் பேருக்கு தொலைதொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான பாராட்டு சான்றிதழ், கேடயத்தை தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கவுரவித்தார்.



Read in source website

காந்திநகர்: குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல்(62) நேற்று பதவியேற்றார். அவருடன் 8 கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது.

இதையடுத்து, தலைநகர் காந்திநகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது.

குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேலுக்கு, ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து, 16 அமைச்சர்களும் பதவிஏற்றுக் கொண்டனர். இவர்களில் கனுபாய் தேசாய், ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பகவந்த்சிங் ராஜ்புத், குன்வாரிஜி பவாலியா, முலுபாய் பேரா, குபேர், பானுபென் பாபாரியா ஆகியோ்ர் கேபினட் அமைச்சர்கள் ஆவர்.

விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு மேடையில் எழுந்து நின்ற பிரதமர், சிரம் தாழ்த்தி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சகா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

பல்வேறு மடங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சரவையில் பானுபென் பாபாரியா என்ற பெண் இடம்பெற்றுள்ளார். ராஜ்கோட் புறநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 3 முறை தொடர்ச்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வராகப் பதவியேற்றுள்ள பூபேந்திர ரஜினிகாந்த் படேல், சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர். கட்டுமானத் துறையில் ஈடுபட்ட அவர், அகமதாபாத் மாநகராட்சியில் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2017-ல் முதல்முறையாக காட்லோடியோ தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 செப்டம்பர் 11-ம் தேதி, அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். தொடர்ந்து 2021 செப்டம்பர் 13-ம் தேதி குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். தற்போது 2-வது முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் நள்ளிரவு அகமதாபாத் விமான நிலையம் சென்று, அங்கிருந்து காரில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். நள்ளிரவிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குஜராத் தேர்தலில் சுயேச்சைகளாக வெற்றி பெற்றுள்ள மாவ்ஜி தேசாய், தர்மேந்திர வகேலா, தவால் ஜாலா ஆகியோர் பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மியைச் சேர்ந்த 5 பேர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Read in source website

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திபங்கர் தத்தா இன்று(டிச. 12) பதவியேற்றார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சாலில் குமார் தத்தாவின் மகனான திபங்கர் தத்தா, கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். இதையடுத்து, கடந்த 2020 ஏப்ரல் 28ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திபங்கர் தத்தாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு. லலித் தலைமையிலான கொலிஜியம், இவரை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், அதற்கான நியமன உத்தரவை நேற்று வெளியிட்டது. இதையடுத்து, திபங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவி ஏற்றார். அவருக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்தரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக திபங்கர் தத்தா பதவியேற்றதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 34 பேர் நீதிபதிகளாக இருக்க முடியும். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள திபங்கர் தத்தா, 1965, பிப்ரவரி 9ம் தேதி பிறந்தவர். இவருக்கு தற்போது 57 வயதாகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 என்பதால் இவர் 2030 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முடியும். இவர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான அமிதவ ராயின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மக்களவையில் கூறியது. நடப்பாண்டில் அக்டோபர் 31 வரையிலான நிலவரப்படி 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2015-ல் 1,31,489 ஆகவும், 2017-ல் 1,33,049-ஆகவும் 2018-ல் 1,34,561-ஆகவும், 2019-ல் 1,44,017-ஆகவும்இருந்தன. கடந்த 2021-ல் மட்டும்1,63,370 பேர் இந்திய குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர்.

அதன்அடிப்படையில், கடந்த2011-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் மொத்தம் 16,21,561 பேர் இந்திய குடியுரிமையை விலக்கிக் கொண்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர்த்த இதர வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2015-ல் 93 பேருக்கும், 2016-ல் 153 பேருக்கும், 2017-ல்175 பேருக்கும், 2018-ல் 129 பேருக்கும், 2019-ல் 113 பேருக்கும், 2020- ல் 27 பேருக்கும், 2021- ல் 42 பேருக்கும், 2022-ல் 60 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



Read in source website

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் 15-வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு (58), துணை முதல்வராக அக்னி ஹோத்ரி (60) நேற்று பதவி ஏற்றனர்.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றது. பாஜவுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சிம்லாவில் நடந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங்கை முதல்வராக தேர்வு செய்ய புதிய எம்எல்ஏக்களிடம் போதிய ஆதரவு இல்லை. இதையடுத்து, மாநில பிரச்சாரக் குழுத் தலைவரான சுக்விந்தர் சிங் சுக்குவை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தங்கியிருந்த ஓட்டலை அவர் முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ்பாகெல் காரையும் மறித்து, தனதுஎதிர்ப்பை தெரிவித்தார்.

தனது கணவரும், முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் பெயரைக் கூறி தேர்தலில் வென்ற பின்னர், அவரது குடும்பத்தினரை ஒதுக்குவது மோசமானது எனவும், தன்னை தேர்வு செய்யாவிட்டால், தனது ஆதரவாளரான முகேஷ் அக்னி ஹோத்ரியை முதல்வராக தேர்வு செய்யுமாறும் பிரதிபா சிங் கூறினார்.

பின்னர், அவரை சமாதானப்படுத்தும் வகையில், முகேஷ் அக்னிஹோத்ரியை துணை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.

சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நேற்று எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வராக அக்னி ஹோத்ரி ஆகியோருக்கு, இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பஸ் டிரைவரின் மகன்

முதல்வராகப் பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுக்கு, ஹமிர்புர் மாவட்டம் நடான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராவார். இவர் சட்டப்பேரவைக்கு 4 முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சுக்விந்தர் சிங் சுக்கு,இமாச்சல் பிரதேச பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டார். இந்திய தேசிய மாணவர் யூனியன், இளைஞர் காங்கிரஸிலும் இவர் இருந்துள்ளார்.

2013 முதல் 2019 வரை காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இமாச்சல் பிரதேச தேர்தல் பிரசாரக் குழுவுக்கு இவர் தலைமை வகித்து சிறப்பாக வழிநடத்தியதால், பிரதிபா சிங்கின் செல்வாக்கையும் மீறி, இவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.



Read in source website

முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்தத் தோல்வியின் மூலம் நடப்பு ஆண்டில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ளது பாகிஸ்தான்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் கடந்த 9-ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடின. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் முதல் இன்னிங்ஸில் எடுத்தன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. அந்த அணி சார்பில் ஹாரி ப்ரூக் 108 ரன்கள் எடுத்திருந்தார்.

355 ரன்களை சேஸ் செய்த பாகிஸ்தான்: அதன் காரணமாக 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி விரட்டியது. இந்த இலக்கை சேஸ் செய்தால் அதன்மூலம் பாகிஸ்தான் அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. அதிகபட்சமாக ஷகில் 94 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்றைய ஆட்டம் தொடங்கியபோது பாகிஸ்தான் அணி வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இரு அணிகளும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. இறுதியில், அந்த முயற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிட்டியது.

ராபின்சன், ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் என மூவரும் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து. இந்தத் தொடரில் தோல்வியை தழுவியுள்ளதால் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.



Read in source website

நியூயார்க்: உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய லாவ்ரோவ், "இன்றைய பல்முனை உலகில் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சக்தி. பொருளாதார வளர்ச்சி ரீதியாக விரைவில் இந்தியா ஒரு முக்கியமான முன்னணி நாடாக உருவாகலாம். ஏன் தலைவராகக் கூட ஆகலாம். பல்வேறு பிரச்சினைகளையும் கையாள்வதில் இந்தியாவிற்கு தூதரக அனுபவம் அதிகம். இந்தியா உலக அரங்கில் தனக்கென ஓர் ஒப்பற்ற இடத்தைக் கொண்டுள்ளது. ஐ.நா.வில் ஈடுபாட்டுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து சிறப்புடன் செய்து வருகிறது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கலாம். அதுவே அதற்கு பலமாகலாம். இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும்" என்றார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா, வரும் 14, 15-ம் தேதிகளில் 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்க உள்ளார். குறிப்பாக, 15-ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.



Read in source website

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர தனியார் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

மேலும், விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர தனியார் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 7 வருடங்களில் குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய 6 பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன.

சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: "மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கூறினார். ஆனால், தற்போது நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. இது திடீரென நடந்துவிடவில்லை. இதற்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இருந்தது.

நல்லாட்சி என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அதில் முதலாவது டிஜிட்டல் வடிவம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன் தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததை அடுத்து, அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி காலத்தில் மத்திய அரசின் 85% நிதி மக்களுக்குச் சென்றடையவில்லை. ஆனால், இன்று ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றம் காரணமாக ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது.

இதுமட்டுமல்ல, கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. ஆனால், நாம் கோவின் இணையதளத்தின் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம். மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அந்தத் தளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது. வருமான வரி கணக்கீடு, வருமான வரித் துறை திருப்பி அளிக்கும் பணம், ஏலம் என அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒருவரின் முகத்தைப் பார்க்காமலேயே இந்தப் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. தொகை முழுமையாக அரசுக்கு கிடைத்திருக்கிறது. ரூ.4,300 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. வரி ஏய்ப்புக்காக உருவாக்கப்பட்ட 1.75 லட்சம் ஷெல் கம்பனிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு வளர்ச்சி காண வேண்டும் என்றால் நல்லாட்சியின் மூலம் மட்டுமே அதனை சாத்தியப்படுத்த முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கிறார். நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுயைாக சென்றடையும். குறுக்கு வழி அரசியல் நாட்டுக்கும், மக்களுக்கும் கேட்டையே அளிக்கும். நல்லாட்சிதான் அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதன் காரணமாகவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.



Read in source website

மும்பை: வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள் என இந்தியாவில் உள்ள அனைத்து நிதி அமைப்புகளும் ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.

தற்போது ரிசர்வ் வங்கி அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்த சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. பல நிறுவனங்கள் விண்ணப்பித்தாகத் தெரிகிறது. இந்நிலையில், அவற்றிலிருந்து 7 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுத்துள்ளது.

அக்சென்ச்சர் சொல்யூஷன்ஸ், பாஸ்டன் கன்சல்டிங் குரூப், டெலாய்ட், எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி அஷ்யூரன்ஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸ், மெக்கின்சி மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் ஆகிய 7 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்கள் தங்கள் பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் முன்வைக்கும். அதன் அடிப்படையில், எந்த நிறுவனத்தை பணியமர்த்தலாம் என்பதை ரிசர்வ் வங்கி இறுதி செய்யும்.



Read in source website

2022-23 ஆம் ஆண்டில் மானியத்திற்காக செலவழிக்கப்பட்ட ரூ 532,446.79 கோடி 2020-21 ஆம் ஆண்டின் ரூ 706,006.53 கோடிக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாக இருக்கும்.

நரேந்திர மோடி அரசாங்கம் வெள்ளிக்கிழமை (டிச. 9), 2022-23 (ஏப்ரல்-மார்ச்) க்கு பட்ஜெட் செய்யப்பட்ட ரூ. 317,865.91 கோடிக்கு மேல், பெரிய மானியங்களுக்கு ரூ. 214,580.88 கோடி புதிய செலவினங்களுக்காக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரியது.

மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கையின் முதல் தவணையை நிதி அமைச்சகம் முன்வைத்த கூடுதல் மானியம், உரங்கள் மீது ரூ 109,288.95 கோடியும், உணவுக்காக ரூ 80,348.25 கோடியும், பெட்ரோலியத்தில் ரூ 24,943.68 கோடியும் அடங்கும்.

இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் மேலும் கூடுதல் செலவினங்களுக்கான கோரிக்கைகள் எதுவும் இல்லை எனக் கருதினால் – மொத்த மானியத் தொகை ரூ. 532,446.79 கோடியாக இருக்கும். அந்த வகையில், உணவு (ரூ. 287,179.34 கோடி), உரம் (ரூ. 214,511.27 கோடி) மற்றும் பெட்ரோலியம் (ரூ. 30,75 கோடி) ஆக உள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் மானியத்திற்காக செலவழிக்கப்பட்ட ரூ 532,446.79 கோடி 2020-21 ஆம் ஆண்டின் ரூ 706,006.53 கோடிக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாக இருக்கும். இருப்பினும், 2020-21 மற்றும் 2022-23 இடையே வித்தியாசம் உள்ளது.

2020-21 ஆம் ஆண்டில், இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மற்றும் உர நிறுவனங்களுக்கு அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருமுறை ஏற்பாடு செய்ததன் காரணமாக மானியங்கள் அதிகரித்தன.

முந்தைய ஆண்டுகளில், PDS (பொது விநியோக முறை) நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு முறையே குறைந்த விலையில் தானியங்கள் மற்றும் உரங்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனங்களிலிருந்து எழும் மானியத்தை இந்த மையம் முழுமையாக வழங்கவில்லை.

2016-17 முதல் 2019-20 வரை 7.4-8.8% வட்டியில் தேசிய சிறுசேமிப்பு நிதியத்திலிருந்து (NSSF) FCI மட்டும் கடனைப் பெற்றதன் மூலம், வித்தியாசத்திற்கு முழுவதுமாக நிதியளிப்பதில்லை மற்றும் சரியான நேரத்தில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ரூ.706,006.53 கோடியின் இறுதி மானியம் (முதலில் பட்ஜெட் செய்யப்பட்ட ரூ. 227,793.89க்கு எதிராக) FCI ரூ. 339,236 கோடி NSSF கடன்களை திருப்பிச் செலுத்த உதவியது. உரத் துறையின் மானிய நிலுவைத் தொகையையும் செலுத்தியது.

எஃப்.சி.ஐ மற்றும் உர நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்பிற்கு மாற்றுவதற்குப் பதிலாக, அதன் செலவினங்களைச் சொந்தமாக வைத்துக்கொள்ளும் இந்த நடவடிக்கையானது – மானிய மசோதாவை சுழற்ற வழிவகுத்தது. பிந்தையது 2020-21 இல் மையத்தின் வருவாய் வரவுகளில் 43.2% மற்றும் அதன் மொத்த செலவில் 20.1% ஆகும்.

2022-23ல் என்ன வித்தியாசம்?

2022-23 மற்றும் 2021-22 ஆகிய இரண்டிலும் மானியங்கள் மிகைப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கரோனா பெருந்தொற்றுநோயின் விளைவாக, 2020-21 ஆம் ஆண்டில் 92.88 மில்லியன் டன்கள் (மெட்ரிக் டன்) அரிசி மற்றும் கோதுமை பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் – 2021-22 ஆம் ஆண்டில் 105.61 மில்லியன் டன்கள் – குறிப்பாக இலவச தானிய பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மூலம் பெறப்பட்டது.

பிந்தையது 2020-21ல் எட்டு மாதங்கள் (ஏப்ரல்-நவம்பர்) மற்றும் 2021-22ல் 11 மாதங்கள் (மே-மார்ச்) செயல்படுத்தப்பட்டது, மேலும் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்) மேலும் ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இப்போது கூடுதல் உணவு மானியச் செலவு முக்கியமாக 2022-23 ஆம் ஆண்டில் PMGKAY இன் செலவைச் சந்திக்கும்.

உரம் மற்றும் பெட்ரோலியத்தில், அதிக மானியம் வழங்கப்படுவது உலகளாவிய விலைகளின் உயர்வு, செப்டம்பர்-அக்டோபர் 2021 மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு மற்றும் மோடி அரசாங்கம் விவசாயிகளையும் நுகர்வோரையும் அதிர்ச்சியிலிருந்து தணித்தது.

யூரியாவின் அதிகபட்ச சில்லறை விலை உயர்த்தப்படவில்லை, அதே நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது அதிக நுகர்வு உரமான டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) க்கு கூட அதிகமாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் கடைசியாக இந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மேல்நோக்கி திருத்தப்பட்டன. உண்மையில், கலால் வரி குறைப்புகளைத் தொடர்ந்து மே 22 முதல் குறைக்கப்பட்டது.

ஆனால் விவசாயி மற்றும் நுகர்வோரை காப்பீடு செய்வது என்பது உரம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (OMCs) விலைக்குக் குறைவாக அல்லது குறைந்த வருவாய்க்கு விற்பதற்கு இழப்பீடு வழங்குவதாகும். இது, நிச்சயமாக, அரசின் மானியச் சுமையை அதிகப்படுத்தியுள்ளது.

வரும் ஆண்டுக்கான வாய்ப்புகள் என்ன?

உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்ற அனைத்து “3F” மானியங்களிலும் சில நிவாரணங்களை எதிர்பார்க்கலாம்.

உணவில், மோடி அரசாங்கம் PMGKAY ஐ டிசம்பர் மாதத்திற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பில்லை. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில தேர்தல்கள் அதற்கு போதுமான கட்டாயமாக இருக்காது.

மேலும், பொது அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு, நவம்பர் 1 அன்று 55.31 மில்லியன் டன்கள், ஐந்து ஆண்டுகளில் இந்த தேதியில் மிகக் குறைவு, மேலும் இலவச தானியத் திட்டத்தை மேலும் நீட்டிக்க அனுமதிக்காது. குறைந்த கையிருப்பு, FCI இன் தானியங்களை எடுத்துச் செல்லும் செலவைக் குறைக்கும்.

எரிபொருளில், பெட்ரோல் (சிங்கப்பூர் பெட்ரோல்) மற்றும் டீசல் (அரபு வளைகுடா பெட்ரோல்) ஆகியவற்றின் சர்வதேச விலைகள், அவற்றின் ஜூன் 2022 சராசரி உச்சநிலையான $148.82 மற்றும் $170.92 இல் இருந்து இப்போது முறையே $84.92 மற்றும் $106.48 ஆக குறைந்துள்ளன. பிந்தைய விலைகள் பெட்ரோல் ரூ.43.95/லிட்டர் மற்றும் டீசல் ரூ.55.11/லிட்டர் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலைகள் (சரக்கு, வரி மற்றும் டீலர் மார்ஜின்களின் நிகர) விலை லிட்டருக்கு முறையே ரூ.57.16 மற்றும் ரூ.57.94 ஆகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், OMC கள் பணம் சம்பாதிக்கின்றன. மேலும் கடந்த கால இழப்புகளை ஈடுசெய்வதற்காக அனுமதிக்கப்படலாம். மானியங்களுக்கான தற்போதைய துணைக் கோரிக்கையின் கீழ் ரூ.24,943.68 கோடி மானிய அங்கீகாரம் கோரப்பட்டிருப்பது, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் அல்ல, உள்நாட்டு எல்பிஜி செயல்பாடுகளில் மட்டுமே அவர்களின் குறைவான மீட்டெடுப்புகளை ஈடுசெய்வதாகும்.

உரத்தைப் பொறுத்தவரை, அட்டவணை 2, யூரியா ஆலைகளுக்கு மொத்த கலோரிஃபிக் மதிப்பில் (GCV; ஒரு யூனிட் எரிபொருளை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் மொத்த வெப்பம்) அடிப்படையில் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மறு-எரிவாயு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் மாதாந்திர சராசரி “கூல்” விலைகளை வழங்குகிறது.

ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு (mmBtu) தற்போதைய விலை ரூ. 1,899.37 என்பது நிகர கலோரிஃபிக் மதிப்பில் ரூ. 2,110.41 ஆக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (எரிப்பின் போது உருவாகும் நீராவியில் உள்ள வெப்பம் மற்றும் 90% GCV இல் உள்ள வெப்பத்தை NCV தவிர்த்து). ஒவ்வொரு mmBtu வாயுவும் 0.25 ஜிகா கலோரி (GCal) ஆற்றலை உருவாக்குகிறது, ஒரு டன் யூரியாவை உற்பத்தி செய்ய சராசரியாக 5.8 GCal தேவைப்படுகிறது.

தற்போதுள்ள எரிவாயு விலையில், ஒரு டன் யூரியாவிற்கு தீவன விலை மட்டும் ரூ.48,961.5 ஆக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு, ஒருங்கிணைக்கப்பட்ட எரிவாயு விலை ரூ.1,132.58/mmBtu ஆக இருந்தபோது, அதற்கான தீவன விலை ஒரு டன்னுக்கு ரூ.29,195.4 மட்டுமே இருந்திருக்கும்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் வலுவிழந்து வருவதாலும், அமெரிக்க டாலர் செப்டம்பர் மாத உயர்விலிருந்து வருவதாலும் இதற்கு உதவியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலையும் குறைந்துள்ளது, யூரியாவிற்கு டன்னுக்கு $550-600 (டிசம்பர்-ஜனவரி 2021-22 இல் $900-1,000) மற்றும் DAP க்கு $700-720 (ஜூலையில் $950-960).

மொத்த மானிய சேமிப்பு என்னவாக இருக்கும்?

வரும் நிதியாண்டுக்கான உணவு மானியம் ரூ.200,000 கோடிக்குள் இருக்கும். புதிய புவிசார் அரசியல், தட்பவெப்பநிலை அல்லது தொற்றுநோய் அதிர்ச்சிகள் எதுவும் இல்லை என்று கருதி, உரத்திற்கான ரூ.150,000 கோடிக்கும், பெட்ரோலியத்துக்கு ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. மொத்தத்தில், 150,000 கோடி ரூபாய்க்கு மேல் மானிய சேமிப்பு இருக்கலாம்.

இந்த சேமிப்பை மோடி அரசு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டு வருமான ஆதரவை ஒரு விவசாயிக்கு 6,000 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக உயர்த்துவதன் மூலம் பணத்தை மீண்டும் வழங்குமா? இறுதியில், இது நிதி ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் அரசியலின் கட்டாயங்களுக்கு இடையே ஒரு நல்ல சமநிலைக்கு வரலாம்.



Read in source website

வறுமையை ஒழிப்பதற்கான கருவியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் செயலர் அமர்ஜீத் சின்ஹா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அண்மையில் அமைத்துள்ளது. அந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

ஊரகப்பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆண்டில் நூறு நாள்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் 2005-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திறன் தேவைப்படாத, உடலுழைப்பின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும். 
இந்தத் திட்டத்துக்கான தேவை, செலவு செய்யப்படும் விதம், மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும். 

விவசாயிகளுக்கு உதவித் தொகையாக மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் தரப்படுகிறது. பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டமான இதில் தமிழகத்தில் போலி விவசாயிகள் லட்சக்கணக்கானோர் சேர்க்கப்பட்டு பலன் அடைந்து வந்தனர். அவர்கள் அண்மையில் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டனர். 

இதுபோலவே, நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாகவும் ஆரம்பத்தில் இருந்தே புகார்கள் நிலவுகின்றன. இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என விவசாயிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். வேலைவாய்ப்புக்காக பதிவு செய்பவர்களில் நிறைய பேர், களத்துக்கு வந்து வருகைப் பதிவு செய்துவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர் என்ற புகாரும் நீண்டகாலமாக உள்ளது.

இதுதவிர, வருகைப் பதிவேட்டில் போலியாக பெயர்கள் சேர்க்கப்பட்டும் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் 2012-ஆம் ஆண்டு 10 லட்சம் போலி பணி அட்டைகள் கண்டறியப்பட்டன. இதனால், அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் கவலை அளிப்பவையாக உள்ளன.

இந்தத் திட்டத்தில் என்ன வகையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராமசபைகளே தீர்மானிக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் குறித்து கிராமசபை அவ்வப்போது சமூகத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள சுமார் 2.50 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் 2020-21-ஆம் ஆண்டில் 29,611 கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு முறை சமூகத் தணிக்கை நடைபெற்றுள்ளது.

இதுபோன்ற தணிக்கையின் அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும்போது அது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டாமா என்று நிலைக்குழு கேள்வி எழுப்பியிருக்கிறது.

"நூறு நாள் வேலைத் திட்டம்' என்று இது அழைக்கப்பட்டாலும், எந்த மாநிலத்திலும் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கப்படுவதில்லை. சராசரியாக 50 முதல் 60 நாள்தான் வேலை வழங்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டில் 755 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றபோதும் அவற்றில் 72 லட்சம் குடும்பங்கள்தான் நூறு நாள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளன.

விலைவாசி உயர்வுக்குத் தகுந்தாற்போல ஊதிய உயர்வு அளிக்கப்படாதது இந்தத் திட்டத்தில் உள்ள மற்றொரு குறைபாடு. வெவ்வேறு மாநிலங்களில் ஊதியம் ரூ.193 முதல் ரூ.318 வரை வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் ஊதியமும் உரிய காலத்துக்குள் அளிக்கப்படுவதில்லை. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.4,060 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளதையும், கட்டுமானப் பொருள்களுக்கு ரூ.9,000 கோடி நிலுவையில் உள்ளதையும் நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு உரிய நேரத்தில் நிதியை விடுவிக்காததால் கடந்த நான்கு மாதங்களாக நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். "உண்மையான தொழிலாளர்கள் உரிய ஊதியத்தைப் பெறுவதில்லை. ஆனால், கிராம அளவில் திட்டங்களை நிறைவேற்றுகையில் கூட்டு சேரும் இரக்கமற்ற இடைத்தரகர்களின் சதியால் பணம் மட்டும் கைமாறிக் கொண்டே இருக்கிறது என்பது கசப்பான உண்மை' என்று நாடாளுமன்ற நிலைக்குழு பதிவு செய்திருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டம் அளிக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2.64 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும் என "பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபார் எம்ப்ளாய்மென்ட் கேரண்டீ' என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், 2022-23-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடு ரூ.98, 000 கோடி மட்டுமே.

இத்திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் சிறப்பாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 16 ஆண்டுகளாக பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் இதற்காக செலவழிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு, திட்டம் முறைப்படுத்தப்படாவிட்டால் அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.



Read in source website

பிளவுபடாத பாரதத்தில் 1922-இல் லாகூரில் பிறந்தவா் தரம்பால். இவா் எட்டாவது வயதில் தனது தந்தையோடு லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்றபோதுதான் மகாத்மா காந்தியை முதன் முதலாகப் பாா்த்தாா். அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங்கும் அவருடைய சக பேராளிகளும் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனா்.

ஆங்கிலேய அரசின் அந்த அராஜகச் செயலுக்கு எதிராக லாகூரில் தரம்பாலின் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்த போரட்டங்கள் அவரின் பிஞ்சு மனத்தில் ஆழமாக பதிந்தன. ஆங்கிலேயா் பாரதத்தை தொடா்ந்து ஆட்சி புரியலாமா, வெளியேறிவிட வேண்டுமா என்று பள்ளிக்கூடங்களில் விவாதங்கள் அந்த காலகட்டத்தில் நடந்தன.

சிலா் பாரதத்தின் சுதந்திரத்திற்கு எதிராகவும் இருந்தனா். ஆங்கிலேயா் நாட்டை விட்டு போய்விட்டால் ஆப்கானியப் பழங்குடியினரும் வேறு சிலரும் படையெடுத்து வந்து பாரதத்தை ஆக்கிரமித்து விடுவாா்கள் என்று அவா்கள் பயந்தனா். ஆனால், தரம்பால் நாட்டின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவே இருந்தாா். பள்ளி, கல்லூரிகளில் மேற்கத்திய கல்வி பெற்றபோதும் ஆங்கிலேய ஆட்சி மீதான வெறுப்பு நாளுக்கு நாள் தரம்பாலின் மனதில் அதிகரிக்கவேச் செய்தது.

1940-வாக்கில் கதா் அணியத் தொடங்கியவா் தனது வாழ்நாள் இறுதிவரை கதராடையே அணிந்தாா். வெள்ளையனே வெளியேறு”போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டாா். போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்று, இரண்டு மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டாா். ஆங்கிலேயா் வெளியேற்றபட்டால், நாட்டில் வறுமை ஒழியும், வளம் பெருகும், மக்களிடையே ஒற்றுமை உண்டாகும் என்றெல்லாம் நம்பிய ஏராளமான மக்களில் இவரும் ஒருவராக இருந்தாா்.

1944-இல் மீரா பென்னுடனான அறிமும் கிடைக்கப் பெற்றாா். இதன் காரணமாக ரூா்க்கிக்கும் ஹரித்துவாருக்கும் இடையில் அமைந்திருக்கும் கிஸான் ஆசிரமத்தில் மீரா பென்னுடன் இணைந்து பணியாற்றினாா். தரம்பால் 1947-48-இல் தில்லிக்குச் சென்ற காலம், 1948-49-இல் இங்கிலாந்துக்குச் சென்ற காலம் நீங்களாக 1953-இல் மீராபென் அந்த ஆஸ்ரமத்தில் இருந்தவரை தரம்பால் அவருடனே இருந்தாா். மீராபென் அதன்பிறகு இமயமலைக்கும் பின்னா் ஐரோப்பாவுக்கும் இடம் பெயா்ந்தாா். ஜூலை 1982-இல் வியன்னாவில் அவா் மறைந்தாா்.

காந்தியடிகளுக்குப் பிடித்த அந்த மாது காலமாவதற்கு இரண்டு வாரம் முன்பாக தரம்பால் அவரை வியன்னாவில் சந்தித்து பல மணி நேரம் உரையாடினாா். கமலாதேவி சட்டடோபாத்யாய, டாக்டா் ராம் மனோகா் லோகியா போன்ற இளைய தலைவா்களுடன் 1947-48 காலகட்டத்தில் இருந்தே தரம்பால் நெருங்கிய நட்பாக இருந்தாா். பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா்.

கமலா தேவியைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கோ-ஆபரேட்டிவ் யூனியனில் உறுப்பினராக இருந்தாா். 1949-இல் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கில மாது ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாா். இருவரும் பாரதத்தில் வசிக்க முடிவெடுத்தாா்கள்.

ரிஷிகேஷில் பசுலோக் என்ற பசுமை பகுதியில் பாபுகிராம்”1950-இல் நிா்மாணிக்கப்பட்டது.

தரம்பாலும் அவரது மனைவியும் 1953 வரை அங்கு வாழ்ந்தனா். 1954-இல் இருவரும் இங்கிலாந்து சென்று அங்கு வசிக்க முடிவெடுத்தனா். அங்கு செல்வதற்கு முன் இருவரும் பல நாடுகளுக்குச் சென்றனா். குடும்பம் வளா்ந்தது. மகன், மகளுடன் இருவரும் மீண்டும் பாரதம் திரும்பினாா்கள்.1958 முதல் 1964 வரை தில்லியில் வசித்தனா். ‘அசோசியேஷன் ஆஃப் வாலின்டரி ஏஜென்சீஸ் ஃபாா் ரூரல் டெவலெப்மென்ட்’ அமைப்பில் ஜெனரல் செகரட்டரியாகப் பணிபுரிந்தாா்.

அதன் பிறகு ஜெயபிரகாஷ் நாராயணன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். 1964-65-இல் அனைத்து இந்திய பஞ்சாயத்து பரீக்ஷத்தின்ஆய்வுத்துறை இயக்குநராக தரம்பால் பணிபுரிந்தாா். தமிழ்நாட்டில் தங்கியிருந்து கிராம பஞ்சாயத்துகள் பற்றி ஏரளமான தகவல்களை சேகரித்தாா். அவற்றை ‘மதராஸ் பஞ்சாயத்து அமைப்பு’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டாா்.

‘இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அலகாக பஞ்சாயத்து அமைப்புகள்’ என்கிற தலைப்பில் சிறிய நூல் ஒன்றை அதற்கு முன்பே (1962) வெளியிட்டிருக்கிறாா். 1966-இல் அவருடைய மகன் விபத்தில் சிக்கியதால் உடன் லண்டனுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இதனிடையில் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் இந்திய - ஆங்கிலேயா்களுக்கிடையே இருந்த தொடா்புகள் பற்றி ஆராயத் தொடங்ககினாா். 1982-வரை லண்டனில் தங்கியிருந்தாா். ஆனாலும் இடையிடையே இந்தியா வந்து போய்க் கொண்டிருந்தாா். இங்கிலாந்தில் அவருக்கு என்று நிலையான வருமானம் இல்லை. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு இருந்தது.

சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு இந்தியா ஆபீஸ், பிரிட்டிஷ் மியூசியம் இங்கெல்லாம் சென்று வரலாற்று ஆய்வினை மேற்கொண்டாா். ஆவணங்களை படி எடுக்க அதிக பணம் தேவைப்பட்டது. அதோடு அரிய ஆவணங்களை படி எடுக்க அனுமதியும் இல்லை. எனவே, ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒவ்வொரு நாளும் கைப்பட எழுதி படி எடுத்தாா். அதன் பிறகு அவற்றைத் தட்டச்சு செய்தாா். அப்படியாக பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்திலிருந்து அரிய பல ஆவணங்களை சேகரித்தாா்.

இந்தியா திரும்பும்போது பல டிரங்க் பெட்டிகளில் ஆவணங்களே இருந்தன. அவையே அவருடைய சொத்துகளாக இருந்தன. 1958- லிருந்தே சேவாகிராம் அமைப்புடன் தரம்பாலுக்குத் தொடா்பு இருந்தது. குறிப்பாக அன்னாசாஹிப் சஹஸ் புத்தேவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாா். 1967-இல் ஒரு மாதம் சேவாகிராமில் தங்கினாா். 18-19 -ஆம் நூற்றாண்டு இந்தியா பற்றி அவா் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்து சேமித்த தகவல்களை சேவாகிராமில் இருந்தபோது தொகுத்து எழுதினாா்.

1980-டிசம்பரில் இருந்து 1981 மாா்ச் வரை சேவாகிராமில் தங்கியிருந்த காலகட்டத்தில்தான் ‘அழகிய மரம்’ என்ற நூலை (பண்டைய பாரதத்தில் நடைமுறையில் இருந்த பாரம்பரியக் கல்வி குறித்த நூல்) எழுதினாா். 1982-இல் இருந்து 1987 வரை சேவாகிராமில் தங்கியிருந்தாா்.

அவ்வப்போது சென்னைக்கு விஜயம் செய்தாா். இங்குள்ள பல ஆவண காப்பகங்களில் தேடித்தேடி பல தரவுகளை சேகரித்துக் கொண்டாா். ‘பேட்ரியாட்டிக் அண்ட் பியூப்பில் ஓரியன்டட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’”என்ற அமைப்பின் தலைவராகவும் பணிபுரிந்தாா். சென்னையில் இருந்த ‘சென்டா் ஃபாா் பாலிஸி ஸ்டடீஸ்’ என்ற அமைப்புடன் நெருங்கிய தொடா்பில் இருந்தாா்.

அவருடைய அருமை மனைவி 1986-இல் லண்டனில் காலமானாா். அதனால் அப்போது தரம்பால் லண்டன் சென்றாா். பின்னா் இந்தியாவுக்கு வந்த இவா் 1983 வரை சேவாகிராமின் ஆஸ்ரம் பிரிஸ்தானில் வசித்தாா். அபூா்வ” அறிஞா் தரம்பால் 2006-இல் காற்றில் கரைந்தாா்.

இவரது அளப்பரிய ஆற்றல் குறித்து வரலாற்று அறிஞா் கிளாட் ஆல்வரெஸ்”கூறும்போது, ‘தரம்பாலின் படைப்புகளை எதிா்பாராத வகையில்தான் நான் பாா்க்க நோ்ந்தது. 1976-இல் ஹாலந்தில் இருந்த ஒரு நூலகத்தில் முதன் முதலில் அவருடைய படைப்புகளைப் பாா்த்தேன். அப்போது நான் எனது முனைவா் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அதன் ஓா் அங்கமாக, இந்தியா மற்றும் சீனாவின் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தேன்.

சீன அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய வரலாற்று நூல்களுக்கும் அறிவாா்ந்த ஆய்வுகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒரு வகையில் அதற்கு முக்கிய காரணமாக டாக்டா் ஜோசஃப் நீதமையும் அவருடைய ‘சயின்ஸ் அன்ட் சிவிலைசேஷன் இன் சைனா’ நூலையும் சொல்லாம். அதற்கு மாறாக இந்திய அறிவியல், தொழில்நுட்பம் குறித்து அறிவாா்ந்த நூல் ஒன்று கூட இருந்திருக்கவில்லை. இருந்தவை எல்லாம் மிகமிக அடிப்படையான நூல்களாகவே இருந்தன. அவற்றில் படைப்பூக்கமோ, உயிா்த்துடிப்போ இருந்திருக்கவில்லை; உண்மையைவிடப் புனைவுகளே மிகுந்திருந்தன.

அதனால் மனம் சோா்ந்து போன நான், ஹாலந்தில் எனக்கு அனுமதிகிடைத்த நூல் நிலையங்கள் அனைத்திலும் நுழைந்து கைக்குக் கிடைத்த நூல்களையெல்லாம் எடுத்துப்படிக்கத் தொடங்கினேன். காரணம், எனது முனைவா் பட்ட ஆய்வை அங்குதான் செய்தேன்.

எனவே வேறு வழி இருக்கவில்லை. ஒருநாள், ஆம்ஸ்டா்டாம் தெருவில் இருந்த தென்கிழக்கு ஆசிய மையத்தினுள் நுழைந்தேன். அங்கு“‘பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்றொரு புத்தகத்தைப் பாா்த்தேன். ஆா்வத்துடன் அதைக் கையில் எடுத்தேன். அதனை தரம்பால் என்பவா் எழுதியிருந்தாா்.

அந்த ஆய்வுப்புலத்தில் அப்படி ஒரு நபரைப் பற்றி நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. புத்தகத்தை எடுத்துச் சென்ற அன்றே படித்து முடித்தேன். அது இந்தியா பற்றிய என் பாா்வையே மாற்றி அமைத்தது. அந்தப் புத்தகத்தைப் படித்து 20 ஆண்டுகள் கழிந்து விட்டன (தற்போது மேலும் 26 ஆண்டுகளை சோ்த்துக் கொள்ள வேண்டும்). இன்றும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்போா் உள்ளத்தில் அதே விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே விதமாகவே அப்புத்தகம் இருக்கிறது.

நமது பள்ளிகளில், குறிப்பாக ஆங்கிலவழி பள்ளிகளில், இந்தியா பற்றி உருவாக்கப்படும் சித்திரத்துக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை அந்தப் புத்தகம் உருவாக்கித் தந்து வருகிறது. இந்திய அறிவியலும், தொழில் நுட்பமும் பற்றிய எனது முனைவா் பட்ட ஆய்வுக்கும் அது மிக, மிக வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. எனது முனைவா் பட்ட ஆய்வேடு 1979-இல் ‘1500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்குலகில் தொழில்நுட்பமும் நாகரிகமும்’ என்ற தலைப்பில் வெளியானது.

அந்நூல் ‘1500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்குலகில் தொழில்நுட்பமும் நாகரிகமும்’ என்ற தலைப்பில் 1997-இல் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்திய சமூகம் சாா்ந்து பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் கட்டுமானத்தின் அஸ்திவாரக் கற்களை தரம்பால் வெகு நிதானமாக உடைத்துத் தள்ளியிருக்கிறாா். இந்திய சமூகம் பற்றி பாரபட்சமும், முன் முடிவுகளும் கொண்ட ஆங்கிலேய அல்லது காலனிய ஆய்வுகளின் நம்பகத்தன்மை இன்று வெகுவாகக் குறைந்துபோய் விட்டிருக்கிறது’ என்று தரம்பாலின் உழைப்பைப் போற்றியுள்ளாா்.

இந்திய அரசு, பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உதவியோடு பிரிட்டன் ஆவணக் காப்பகங்களில் இருக்கும் ஏடுகளை படி எடுக்க முயலவேண்டும். சோழ மாமன்னன் ராஜராஜன் நாகப்பட்டினம் பௌத்த விகாரத்திற்கு நிலம் தானமாக அளித்த ஆனைமங்கலம் செப்பேடுகள் இன்றும் ஹாலந்தில் உள்ள ஆம்ஸ்டா்டாம் அருங்காட்சியத்தில் இருக்கின்றன.

அதை இங்கு எடுத்து வர வேண்டாம். காரணம், அவா்களைப் போல ஆயிரம் ஆண்டு செப்பு தகடுகளை பாதுகாக்கும் குணம் நம்மிடம் இல்லை. தமிழ்நாட்டு கோயில்களின் தெய்வத் திருமேனிகளைப் பாதுகாப்பதில் நாம் தவறி உள்ளோம். எனவே வெளிநாடுகளில் உள்ள ஆவணங்களைப் படியெடுத்து நமது முன்னோரின் ஆற்றலை, நமது மண்ணின் மாண்பை அபூா்வ மனிதா் தரம்பால் போல் மீட்டெடுக்க வேண்டும்.

கட்டுரையாளா்:

தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

 



Read in source website

பயம் என்ற சொல் அன்றாடம் புழக்கத்தில் இருந்துவருகிறது. குழந்தை முதல் பெரியவா் வரை அனைவருக்கும் ஏற்படும் மெய்ப்பாடு இது. சரி இந்த பயம் எப்போதெல்லாம் உருவாகிறது? ஏதோ ஒன்றைப் பற்றிய அறிமுகம் சரியான வகையில் அமையாதபோதும், வாழ்க்கையில் ஒன்றைப் புதிதாக சந்திக்கும்போதும் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, சந்திக்கப்போகும் ஒன்றைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதபோதும் பயம் ஏற்படும்.

இரவில் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கின்றது. அப்போது திடீரென மின்னல் அடிக்கிறது. தொடா்ந்து, இடி இடிக்கும் சத்தம் கேட்கிறது. மின்னல் வெளிச்சத்துக்குக்கூட பயப்படாத குழந்தை, இடியோசைக்கு பயந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறது. இடி, மின்னல் பற்றிய அறிமுகம் கிடைத்த பின்னரும் அந்த பயம் இருக்கவே செய்யும்.

ஆனால் அம்மாவைக் கட்டிப்பிடிப்பது குறைந்துவிடும். இரவில் தூங்குகையில் இடி இடித்தால் அனிச்சையாகக் கட்டிப்பிடிக்கக்கூடும். வயது முதிரமுதிர இது பற்றி எந்த கவலையுமில்லாமல் உறங்கிவிடும். எனவே ஒன்று அறிமுகமாகும் வரை அதுகுறித்த பயம் இருக்கவே செய்யும்.

பெரியவா்களும் இதற்கு விதிவிலக்கல்லா். அலுவலக மேலாளராக புதியவா் ஒருவா் பொறுப்பேற்கிறாா். அறிமுகமாகாதவரை அவா் சொல்லும் பணிகளை அவரது பணியாளா்கள் மிகவும் அதிக கவனத்துடன் செய்வா். அதுபோலவே மேலாளரும் பணியாளா்களுக்கு ஒரு குழந்தைக்குப் புரியவைப்பதுபோல் ஒவ்வொரு விஷயமாகப் புரியவைத்துக்கொண்டிருப்பாா்.

காலம் ஆக ஆக பணியாளா்கள் மேலாளருடன் பேசுவது குறைந்துவிடும். அதுபோலவே மேலாளரும் சிறுசிறு விஷயங்களைப் பணியாளா்களுக்குப் புரியவைக்கும் வழக்கத்தைக் குறைத்துக்கொள்வாா்.

மேலாளா் சொன்னதை பணியாளா்கள் கவனத்துடன் கேட்டது பயத்தின் வெளிப்பாடே. குழந்தைகளுக்குச் சொல்வது போல் மேலாளா் விளக்கியதும் எங்கே பணியாளா்களுக்குப் புரியாது போய்விடுமோ”என்ற பயத்தின் வெளிப்பாடே. இங்கேயும் இருதரப்புக்கும் உள்ள பயத்தின் அளவு பரஸ்பரம் புரிந்துகொள்ள புரிந்துகொள்ளக் குறைந்துவிடும்.

பள்ளிகளில் ஆசிரியா்களிடம் மாணவா்கள் பயப்படுவது இயல்பே (இக்காலத்தில் கொஞ்சம் மாறியிருக்கலாம்). ஆசிரியா்களிடம் மாணவா்கள் ஏன் பயப்படுகின்றனா்? அவருக்கு தம்மைத் தண்டிக்கும் உரிமை இருக்கிறது என்பதால்தானே? அவரால்தான் தமக்குப் பாடம் புரிகிறது.

அவ்வாறு பாடங்களைப் புரிந்துகொண்டால்தான் தோ்வில் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க இயலும். பதில் கொடுத்தால்தான் நல்ல மதிப்பெண் எடுக்க இயலும். நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் பெற்றோரும் மற்றோரும் தம்மைப் பாராட்டுவா். இந்த நற்பயனை மனதில்கொண்டே ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பயப்படுகின்றனா்.

அதுபோலவே தம்மிடம் மாணவா்களுக்கு பயமிருந்தால்தான் தாம் சொல்வதை அவா்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்வாா்கள். அவ்வாறு உள்வாங்கினால்தான் தோ்வுகளில் அவா்களால் வெற்றிபெற இயலும் என்ற நல்விளைவை எதிா்நோக்கியே ஆசிரியா்களும் மாணவா்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனா்.

இந்த இரண்டுமே பொருளற்றது. பயம் என்பது கற்றலுக்கு எதிரானது. தோழமை என்பதே கற்றலுக்கு ஆதரவானது. ஆசிரியா் பாடம் நடத்துகையில் எங்கே மாணவா்களுக்குப் புரியவில்லையோ அங்கேயே மாணவா்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். புதுப்புது கேள்விகளை எதிா்கொள்ளும் ஆசிரியா்களாலேயே புதுப்புது வழிவகைகளில் மாணவா்களுக்கு விளக்கங்களை அளிக்க இயலும். அவ்வாறான வகுப்பறைகளே அறிவின் விளைநிலங்களாக அமையும்.

இங்கே இருதரப்பினரும் பயப்படுவது தேவையற்றது. பரஸ்பரம் புரிந்துகொள்ளவேண்டியதே அவசியம். அவ்வாறு புரிந்துகொண்டு இவ்வாறு சொன்னால் இந்த மாணவா்களுக்குப் புரியும் என்று அறிந்து ஆசிரியா் செயல்படவேண்டியுள்ளது. தமக்கு ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் தீா்த்துக்கொள்ளவேண்டிய மனப்பான்மையை மாணவா்கள் பெறவேண்டியது அவசியமாகிறது.

இதுபோலவே குடும்பங்களிலும் நடைபெறவேண்டியது அவசியம். குடும்பத் தலைவரிடம் பிறா் பயந்து நடப்பது பெரும்பாலும் பயனளிக்காது. இங்கே மரியாதையையும் பயத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. எல்லோருக்கும் எல்லாத் துறை சாா்ந்த அனுபவங்களும் வாய்ப்பதில்லை.

குடும்பத்தில் எவா் ஒருவருக்கு எந்த துறையில் அனுபவமிருக்கிறதோ அவரை அடுத்தோா் மதித்துக் கருத்துகளைப் பகிரும் இடமாக குடும்பம் அமையவேண்டும். அதைவிடுத்து பயம்தான் மரியாதையின் அடையாளம் எனக் குழம்பிக்கொண்டிருந்தால் அக்குடும்பங்களின் தலைவா்கள் பிறரால் சா்வாதிகாரிகளாகவே பாா்க்கப்படுவா்.

பயம் என்பது முற்றிலும் தவிா்க்க இயலாததே. ஆனால் எங்கெல்லாம் ஒருவரால் பயமின்றி இயங்க இயலுமோ அங்கெல்லாம் அவரை பயமின்றி இயங்க வைப்பது ஒரு சமூகம் ஜனநாயகத்தை சரியான வகையில் புரிந்துகொண்டதற்கான அடையாளம். ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகளில் மக்கள் பயத்தை விட்டொழித்தலும் ஒன்றாகும்.

தோ்தல் போன்ற காலங்களில் மக்கள் பயத்தை விட்டொழித்து சரியான முடிவை எட்டவேண்டுமானால் அவா்கள் பயத்திலிருந்து விடுபடுதல் அவசியமாகும். குடும்பம், வீடு, பள்ளி, பொதுவெளி போன்ற இடங்கள் ஒருவா் பயமின்றிப் புழங்கும் இடங்களாகவேண்டும். அவ்வாறு மாறுதல் ஏற்படுவது சமூகம் பண்பட்டு வருவதற்கான அறிகுறியாகும்.

பள்ளிகளும் குடும்பங்களும் மரியாதை என்ற போா்வையில் பயத்தின் விளைநிலங்களாக இல்லாமலிருக்க வேண்டும். அவை பயத்தின் விளைநிலங்களாக செயல்படும்வரை, சமூகமும் மக்களுக்கு பயத்தைக் கூட்டுவதாகவே அமையும்.

பயமின்றி அமையாது உலகு”என்பது உண்மைதான். ஆனால் பயத்தால் மட்டுமே உலகு அழகாகாது. பொறுப்பை உணா்ந்து செயல்படும் மக்களால்தான் உலகு அழகாகும்.



Read in source website

விபத்துகளால் ஏற்படும் இழப்பைப் பொருளாதாரரீதியாக எதிர்கொள்ள, அரசு தன்னாலான ஒரு தொகையை வழங்குகிறது. ஆனால், அதைப் பெறுவதில் சிவப்பு நாடா நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.

தனது இரண்டு மகன்களைச் சாலை விபத்தில் இழந்த தாய் ஒருவர், இழப்பீட்டைப் பெறுவதில் இருந்த தடங்கல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இந்தப் பிரச்சினைமீது கவனம் பாய்ச்சியிருக்கிறது. மே 22 அன்று திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டுசென்ற வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணின் இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.



Read in source website

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி குறித்த பிரஸ்தாபங்கள் அதிகரித்திருக்கின்றன. கருத்துக்கணிப்புகளையும் விஞ்சிக் கிடைத்த அசகாய வெற்றி இது. பிரதமர் மோடிதான் இதற்குக் காரணம் என அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். டெல்லியில் குஜராத் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, ‘மோடி... மோடி!’ எனும் கோஷம் விண்ணை அதிரச் செய்தது.

ஆனால், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் முறையே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடம் பாஜக அடைந்திருக்கும் தோல்விகளும் ஐந்து மாநில இடைத்தேர்தல்களில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் கலவையான வெற்றிகளும் மோடியின் செல்வாக்கு குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

தேர்தல் வெற்றியே இலக்கு: ‘‘நாம் ஐந்து ஆண்டுகளில் ஆட்சி செய்து மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் கொண்டவர்கள் அல்ல. நீண்டகால இலக்கைக் கொண்டு திட்டமிடுபவர்கள்’’ என குஜராத் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டார் மோடி. அந்த இலக்கு எல்லா மாநிலங்களிலும் பாஜகவை வெற்றிபெற வைப்பது. அதனால்தான், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை உறுதிசெய்த கையோடு குஜராத்துக்குப் பறந்தார் மோடி. அங்கு பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.

2017இல் வெற்றிக்கு மிக அருகில் காங்கிரஸ் வந்ததை மோடி மறந்துவிடவில்லை. எனவே, இந்த முறை குஜராத்தில் கூடுதல் கவனம் குவித்தார். குஜராத் பாஜக அரசுமீது ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருக்கவே செய்தன. ஊழல் அதிகரித்திருக்கிறது என 53% பேர் கருதுவதாக, லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி அதிகரித்திருப்பதாக 10இல் 9 பேர் கூறியிருந்தனர். கூடவே, மூன்று முறை முதல்வர்கள் மாற்றப்பட்டது, மோர்பி தொங்குபால விபத்து எனப் பல பிரச்சினைகள் இருந்தன. அவற்றைத் தன் செல்வாக்கால் தகர்த்தார் மோடி.

மண்ணின் மைந்தன் தந்த வெற்றி: பிரதமராகி டெல்லி சென்ற பின்னரும், குஜராத்துடனான பிணைப்பை மோடி ஒருபோதும் தளரவிடவில்லை. முதல்வராக யார் இருந்தாலும் ஆட்சியின் லகான் அவர் கையிலேயே இருந்தது.

உற்பத்தியில் சிறந்த மாநிலம் எனும் அந்தஸ்தை 2021இல் மகாராஷ்டிரத்திடமிருந்து குஜராத் கைப்பற்ற மோடி முக்கியக் காரணமாக இருந்தார். அதனால்தான் ‘வளர்ச்சியின் நாயகன்’ என குஜராத்திகள் அவரைப் புகழ்கிறார்கள். ‘இது நான் உருவாக்கிய குஜராத்’ என்று மோடி பெருமிதமாகக் குறிப்பிடுவதை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இத்தனை சாதகமான அம்சங்களையும் வீணாக்காமல் வாக்குகளாக அறுவடை செய்வதில் மோடி உறுதியாக இருந்தார். 30க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டார். காங்கிரஸ் தலைவர்கள் குஜராத்தில் அதிக கவனம் செலுத்தாதது, ஆம் ஆத்மி கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை களத்தில் இருந்ததால் வாக்குகள் பிரிந்தது எனப் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு பெரும் தாக்கம் செலுத்தியது.

2017 தேர்தலில் சரிவைச் சந்தித்த இடங்களில் இந்த முறை சொல்லியடித்து வென்றிருக்கிறது பாஜக. குஜராத் மக்கள்தொகையில் 14%ஆக இருக்கும் பழங்குடியினர், இதுவரை பாஜகவுக்குப் பெருவாரியான ஆதரவை அளித்ததில்லை. இந்தத் தேர்தலில் அது மாறியிருக்கிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டது ஒரு முக்கியக் காரணம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததன் மூலம், இடஒதுக்கீடு கோரிப் போராடிவந்த படிதார்களின் பேராதரவைப் பெற்றது, தாக்கூர் சேனா, அர்புதா சேனா போன்ற சாதி அமைப்புகளைப் பயன்படுத்தி வாக்குகளை வளைத்தது எனப் பல உத்திகள் பாஜகவுக்குக் கைகொடுத்தன.

இந்துத்துவப் பரிசோதனைக் கூடமாகக் கருதப்படும் குஜராத்தில், 2002 கலவரம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதை மோடியின் சாதனையாகச் சொல்லி வெற்றிபெறும் அஸ்திரம் பாஜகவிடம் இருக்கிறது. “2002இல் மோடி ஒரு பாடத்தைக் கற்பித்தார். அதன் பின்னர் தலைதூக்கிப் பார்க்க ஒருவருக்கும் தைரியம் வரவில்லை” எனத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகவே பேசினார் அமித் ஷா. மொத்தத்தில் குஜராத் தேர்தலின் மையமாக மோடியே இருந்தார்.

தோல்விக்குப் பின்னே...: ஆனால், இந்த மாயாஜாலம் பிற தேர்தல்களில் எதிரொலிக்கவில்லை. குஜராத்தின் பூபேந்திர படேலைப் போலவே, இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரும் செல்வாக்கு இல்லாதவர்தான். ஆனால், படேலின் பதவியைக் காபந்து செய்த மோடியால் தாக்கூரைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது இமாச்சலப் பிரதேசத்தில் வழக்கம். அதைத் தவிர்க்க ஆளுங்கட்சியான பாஜக எவ்வளவோ பிரயத்தனம் செய்துபார்த்தது.

ஆனால், இமாச்சலப் பிரதேச மக்கள் மட்டுமல்ல, பாஜகவினர் சிலரே மோடியின் பேச்சைக் கேட்கவில்லை. இந்த முறை வேட்பாளர் தேர்வில் பாஜக செய்த மாற்றத்தால், சீட் கிடைக்காமல் பலரும் அதிருப்தியடைந்து சுயேச்சையாகப் போட்டியிட்டனர். குறிப்பாக, ஃபதேபூர் தொகுதியில் கிருபால் பர்மார் போட்டியிட விருப்பம் தெரிவித்தபோது, பிரதமர் மோடியே நேரடியாக அவரை கைபேசியில் அழைத்து, போட்டியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக வெளியான காணொளி பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், மோடி சொல்லியும் கேட்காமல் அவர் போட்டியிட்டார். அவர் தோல்வியடைந்தது வேறு விஷயம். ஆனால், அவரது செயல் ஒரு முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதாக காங்கிரஸ் அளித்த உறுதிமொழி, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்சினைகள் போன்றவை பாஜகவைத் தோல்வியடையச் செய்திருக்கின்றன. இத்தனைக்கும் 68 தொகுதிகளே உள்ள அம்மாநிலத்தில் 10க்கும் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் மோடி கலந்துகொண்டார். “வேட்பாளர் யாரென்று பார்க்க வேண்டாம்; என்னை மனதில் வைத்து வாக்களியுங்கள்” என்றே பிரச்சாரம் செய்தார். ஆனால், வெற்றி கிட்டவில்லை.

பிற தோல்விகள்...: 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றிவிட்டது. எனினும், ஊழலுக்கு எதிராக முழங்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மதுக்கொள்கை முறைகேடு உள்ளிட்ட விமர்சனங்களை முன்வைத்த பாஜக, 104 இடங்களைத் தக்கவைத்துக்கொண்டது. இந்தத் தேர்தலில் மோடி நேரடியாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும், அவரது படத்தைப் பதாகைகளில் பிரதானமாகப் பயன்படுத்திக்கொண்டது பாஜக. ஆனால், அது பெரிதாக எடுபடவில்லை.

இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களின் பிரச்சினைகளே பிரதானக் காரணிகளாக இருந்தன. எனவே, உத்தரப் பிரதேசத்தில் (மட்டும்) பாஜக பெற்ற இரண்டு வெற்றிகள் மோடியின் கணக்கில் சேரா. அடுத்த ஆண்டில் கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

2024இல் மக்களவைத் தேர்தல் காத்திருக்கிறது. அந்தந்த மாநிலங்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளும் இருக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பட்டினி அதிகரிப்பு எனத் தேசிய அளவில் பல பிரச்சினைகள் முன்நிற்கின்றன. அவற்றையெல்லாம் மீறி மோடி வென்றால், அவரது மந்திரக்கோல் குறித்த சந்தேகங்கள் நிச்சயம் அகலும்! - தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in



Read in source website

உண்மையான சமூக மாற்றத்துக்காகப் போராடுகிற ஒருவரின் அடையாளம் என்ன? அவர் வாழும் காலத்திலேயே அவர் ஏசப்பட வேண்டும்; அவமதிக்கப்பட வேண்டும்; எதிர்க்கப்பட வேண்டும்; கூடவே சபிக்கப்படவும் வேண்டும் - இந்திய வரலாற்றில் இவை எல்லாமே அண்ணல் அம்பேத்கருக்கு நிகழ்ந்தன.

அவர் மறைந்த பிறகும் அவருக்கான அவமரியாதையை இடையறாது நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இந்தியச் சமூகம். அவரது 65ஆவது நினைவு தினத்திலும் (6 டிசம்பர் 2022) அவர் அவமதிக்கப்பட்டார். அவர் மறைந்த பிறகும் இது நடைபெறுவதற்குக் காரணம், இந்தச் சமூகம் எந்த மாற்றமுமின்றி இப்போதும் அவர் வாழ்ந்த காலம்போலவே இருக்கிறது என்பதால்தான்.



Read in source website

வளைகுடா நாடுகளின் மன்னர்களும் ஆட்சியாளர்களும் கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை உற்சாகத்துடன் ரசிக்கின்றனர். ஆனாலும், கத்தாரை நினைத்து உள்ளுக்குள் ஒருவிதப் பதற்றத்திலேயே உள்ளனர்.

காரணம் என்ன? - கால்பந்து வரலாற்றில் குர்-ஆன் வசனங்கள் வழியாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை. ஹோட்டல் அறைகளிலும் பொதுவெளியிலும் இஸ்லாத்தின் போதனைகள், நபிகளார் பொன்மொழிகள் இடம்பெற்றிருப்பது, மசூதிகளில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது போன்ற ஏற்பாடுகள் கத்தார் மீது கால்பந்து தாண்டிய கவனத்தைக் குவித்திருக்கிறது.



Read in source website