DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 11-03-2023

அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கில்  அபாயகரமான 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.

மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் உள்பட 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ளப் பயன்படுத்தப்படும் 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



Read in source website

 

சென்னை: தமிழகத்தில் சிற்பி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 5000 மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமல்லாமல், 5 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கியும் சாதனை படைத்துள்ளனர். 

சென்னையில் இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இயற்கையை பேணுவோம் என்ற தலைப்பின் கீழ், 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தொடங்கி வைத்த சிற்பி திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 5,000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
 



Read in source website

ஒன்பதாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு துபையில் மாா்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என உலகத் தமிழா் பொருளாதார நிறுவனத்தின் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஒன்பதாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு துபை அல் ஜடாப் நகரில் உள்ள ஹோட்டல் மேரியட்டில் மாா்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த மாநாட்டை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கிவைக்கவுள்ளாா். அமைச்சா்கள் தங்கம் தென்னரசு (தொழில்துறை), தா.மோ.அன்பரசன் (குறு, சிறு, நடுத்தர தொழில்துறை), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ்தமிழா் நலத்துறை), திமுக மக்களவை உறுப்பினா்கள் க.ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கதிா் ஆனந்தன் மற்றும் அரசு செயலாளா்கள் கலந்துகொள்கின்றனா்.

மலேசியா, லண்டன், அமெரிக்கா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்தும் பல்வேறு அரசியல் பிரமுகா்கள், தொழிலபதிபா்கள் என 2,000-க்கும் மேற்பட்டோா் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின் போது, புதுவை முன்னாள் பேரவைக்குழுத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, தொழிலதிபா்கள் வி.ஜி. சந்தோசம், அபுபக்கா், மகாலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

 



Read in source website

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளது.

இந்த வசதியை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குமார் கூறியதாவது: எங்களது குழு படிவம் 12-டி உடன், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்கினை சேகரிப்பர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக வந்து அவர்களது வாக்கினை செலுத்த தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது. இருப்பினும், வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை செலுத்த இயலாதவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது வாக்கினை செலுத்தலாம். இந்த புதிய வசதியில் வாக்காளர்களின் வாக்கு செலுத்தும் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், அவர்கள் வாக்கு செலுத்தத் தொடங்கியது முதல் அந்த செயல் முடியும் வரை அனைத்தும் விடியோக்களாக பதிவு செய்யப்படும்.

வீடுகளுக்குச் சென்று வாக்கினைப் பெற செல்லும் போது ஒவ்வொரு முறையும் அனைத்துக் கட்சிகளுக்கும் தகவல் கொடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக ’சக்ஸம்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த செயலியின் உள் நுழைந்து தங்களது விவரங்களை அளித்தபின் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தலாம். அதேபோல வேட்பாளர்களுக்காக ‘சுவிதா’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம்.

இந்த செயலியைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி பெறலாம். இந்தியத் தேர்தல் ஆணையம் ‘உங்களது வேட்பாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை வாக்களார்கள் பயன்பெறும் வகையில் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் அவர்களது இணையதளப் பக்கத்திலும், சமூக ஊடக கணக்கிலும் அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ள ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட அவர்கள் ஏன் வாய்ப்பு வழங்குகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். 

கர்நாடக சட்டப் பேரவையில் உள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2.59 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 16,976 பேர் நூறு வயது நிரம்பியவர்கள். 4,699 பேர் மூன்றாம் பாலினத்தவர். 9.17 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள். 12.15 லட்சம் வாக்காளர்கள் 80 வயதுக்கும் மேலானோர். 5.55 லட்சம் மாற்றுத்திறன் வாக்காளர்கள். மாநிலத்தில் மொத்தம் 58,272 வாக்கு மையங்கள் உள்ளன. அவற்றுள், 24,063 வாக்கு மையங்கள் நகர்ப்புறங்களில் உள்ளன. ஒவ்வொரு வாக்கு மையங்களுக்கும் சராசரியாக 883 வாக்காளர்கள் உள்ளனர்.

29,141 வாக்கு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 1,200 வாக்கு மையங்கள் பதற்றம் நிறைந்த மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் அதிக அளவிலான வாக்கு மையங்கள் அமைக்கப்படும். வாக்கு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் போன்றன அமைக்கப்படும். அவை தேர்தல் முடிவடைந்த பின்பும் நிரந்தரமாக செயலில் இருக்கும். இது பள்ளிக் குழந்தைகளுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் அளிக்கும் பரிசாகும். வருகிற மே 24 ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம். மே 24 ஆம் தேதியுடன் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது என்றார்.



Read in source website

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே, மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது, மெட்ரோ ரயில், வந்தே பாரத் என உலக தரத்துக்கு ரயில் சேவையை வழங்குவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வழித்தடங்களை கொண்டு, எண்ணற்ற ரயில்களை இயக்கும் இந்திய ரயில்வே பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால், இவ்வளவு இருந்தும் கூட, இந்திய நாட்டில், ரயில்வேக்கு அல்லது நாட்டுக்கு சொந்தமாகாத, இன்னமும் பிரிட்டிஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும் ஒரு ரயில்வழித்தடம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறது.

ஆம், மகாராஷ்டிர மாநிலத்தில் யவத்மால் - முர்திஜாபூர் இடையேயான 190 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட வழித்தடம் ஷாகுந்தலா ரயில்வேக்கு சொந்தமானதாக உள்ளது. இது பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் போக்குவரத்து, 1952ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது, இந்த வழித்தடத்தை நாட்டுடைமை ஆக்க அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டிருந்தது.

19ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பாதையில் ரயில்களை இயக்கி வரும் நிறுவனம், தற்போதும் அதனை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க பிரிட்டிஷ் நிறுவனத்துக்கு இந்தியா ஒரு கோடி ரூபாயை இயக்கக் கட்டணமாக செலுத்தி வருகிறதாம். 1910ஆம் ஆண்டில் இந்த ஷாகந்தலா ரயில்வே நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு இரு மார்கத்திலும் தலா ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. அம்ராவதி மாவட்டத்தில் உள்ள யவத்மால் மற்றும் அசல்பூர் இடையே இயக்கப்படும் ரயில் பயணமானது 20 மணி நேரம் எடுக்கும். இதற்கான கட்டணம் ரூ.150 வசூலிக்கப்படுகிறது. 
 



Read in source website


வரும் 2025ஆம் ஆண்டுக்குள், உலகமே, தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் முதல் முறையாக இதுபோன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள்காலம் குறைவது போன்றவை நேரிடுகிறது என எச்சரித்துள்ளது.

சோடியம் என்பது பெரும்பாலும் தூள் உப்பு மூலமாகத்தான் உடலுக்குச் செல்கிறது. அதேவேளையில், சோடியம் க்ளூடாமேட் என்பது, இயற்கையாகவே சில உணவுபொருள்களில் நிறைந்திருக்கும். சில உணவுபொருள்களில் ருசிக்காக சேர்க்கப்படுகிறது.

அதாவது, உலகம் முழுவதும் உப்பு உள்கொள்ளும் அளவை கண்டறிந்து, ஒருவரது சராசரி உப்பு உள்கொள்ளும் அளவு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு 10.8 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் அளவான 5 கிராமுக்கும் குறைவானது என்ற அளவை விட இரண்டு மடங்குக்கும் சற்று அதிகம். அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு அதிகமாக சாப்பிடுகிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளில் 5 சதவிகிதம் மட்டுமே கட்டாய மற்றும் விரிவான சோடியம் குறைப்புக் கொள்கைகளால் பாதுகாக்கப்படுவதாகவும், 73 சதவிகித உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

அதேவேளையில், பொட்டலமிடப்பட்ட உணவுகளில் சோடியம் இருப்பதை இந்தியா கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த கட்டாய நடவடிக்கையும் இல்லை இந்தியா மேற்கொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் செலவில்லாமல், சோடியத்தைக் குறைக்கும் கொள்கையானது முறையாக செயல்படுத்தப்பட்டால், 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களின் உயிர் காப்பாற்றப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தொற்றுநோய் அல்லாத நோய்களால் மக்கள் இறப்பதைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவு பொருள்கள் வாயிலாக ஏற்படும் பல நோய்களில், சோடியம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் கடுமையானது என்கறிர்கள்.

உப்பைக் குறைப்பது தொடர்பாக மிகப்பெரிய அளவில் மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும் உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது.

என்ன செய்யலாம்?
பொதுவாக சமைக்கும் போது பாதி அளவு உப்பு சேர்த்து சமைத்து அதனை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் சாப்பிடும் மேஜையில் உப்பு ஜாடிகளை வைத்துக் கொள்ள வேண்டாம்.

உப்பு குறைவாக இருந்தாலும் அதனை உப்பு சேர்க்காமல் சாப்பிட பழகலாம்.

உப்பு அதிகமாக சேர்த்து பொட்டலம் செய்யப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கிவிடலாம்.

உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

இதுவரை விலை குறைவு என்பதால் எவ்வளவு உப்பு வாங்குகிறோம் என்று கவனிக்காமல் இருந்திருப்போம். இனி, ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு எவ்வளவு உப்பு வாங்குகிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
 



Read in source website

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தியாவில் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசியை அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். சந்திப்பு குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமா் ஆல்பனேசியின் இந்தியப் பயணமும், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மாநாடும் இருதரப்பு நல்லுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்’’ என்று குறிப்பிட்டாா்.

இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் விவாதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசிக்கு தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை அதிகாரபூா்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அவா் கூறுகையில், ‘‘இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகச் சிறந்த நண்பா்கள். ஒவ்வொரு நாளும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது.

கிரிக்கெட் உலகில் சிறந்த அணி எது என்பதைத் தீா்மானிப்பதற்கான மோதலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து உலகை சிறப்பாகக் கட்டமைக்க முயன்று வருகின்றன. கலாசாரம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா எதிா்நோக்கியுள்ளது’’ என்றாா்.

அதையடுத்து, தில்லியில் உள்ள ராஜ்காட் பகுதிக்குச் சென்ற பிரதமா் ஆல்பனேசி, அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினாா்.



Read in source website

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதலாவது மாநாட்டில் விளையாட்டு, சூரிய எரிசக்தி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

விளையாட்டு, புத்தாக்கம், ஆடியோ-விஷுவல் தயாரிப்பு, சூரிய எரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் மாநாட்டின்போது கையொப்பமாகின.

மேலும், பசுமை எரிசக்தி, வா்த்தகம்-முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், உணவுப் பொருள்கள் விநியோகம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டுக்குப் பிறகு பிரதமா்கள் இருவரும் செய்தியாளா்களைக் கூட்டாகச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியத் தூணாகத் திகழ்ந்து வருகிறது. பாதுகாப்புத் துறை சாா்ந்த விவகாரங்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. சில முக்கிய ஒப்பந்தங்களும் கையொப்பமாகியுள்ளன. முக்கியமாக, இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையே போக்குவரத்து, சரக்கு கையாளுகை வசதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பு தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. சா்வதேச உணவு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றாா் பிரதமா் மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு: ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ‘இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் நல்லுறவு பன்முகத்தன்மை வாய்ந்தது. இரு நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையொப்பமாகி அமல்படுத்தப்பட்டுள்ளது.

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த பேச்சுவாா்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது. நடப்பாண்டு இறுதிக்குள் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என நம்பப்படுகிறது. அந்த ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தமானது பொருளாதார ஒத்துழைப்புத் திறனை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள உதவும்.

வரும் மே மாதத்தில் க்வாட் கூட்டமைப்பின் மாநாட்டை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. அதில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதையும், செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளதையும் எதிா்நோக்கியுள்ளேன்.

எரிசக்தி ஒத்துழைப்பு: சூரிய எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு காணப்படுகிறது. அவ்விரு துறைகளில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் எரிசக்தித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கிய கனிமங்களை விநியோகிப்பதற்கான வாய்ப்புகளையும் பசுமை எரிசக்தித் துறை வழங்கும்.

இந்தியா-ஆஸ்திரேலியா சூரிய எரிசக்தி செயற்குழுவின் செயல்பாட்டு விதிகள் தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. சா்வதேச பாதுகாப்புச் சூழலில் நிலவும் நிலையில்லாத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்தவும் வெளிப்படையான, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்தவும் பேச்சுவாா்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது.

தகவல் பரிமாற்றம்: இரு நாடுகளிடையே பாதுகாப்பு சாா்ந்த தகவல் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. முக்கியமாக, கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான விவரங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. புலம்பெயா் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழிலதிபா்கள் ஆகியோருக்கான தனிக் கொள்கையை ஆஸ்திரேலிய அரசு வகுத்துள்ளது. இது இந்தியா்களுக்குப் பெரும் பலனளிக்கும்.

விளையாட்டுகளை அதிக அளவில் விரும்பும் நாடுகளாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உள்ளன. சமத்துவம், பன்முகத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகியவை விளையாட்டுகளில் நிலவுவதை இரு நாடுகளும் உறுதி செய்து வருகின்றன. அத்தகைய ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையே தொடரும்’ என்றாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்தும் தலைவா்கள் இருவரும் விவாதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்டிச் செய்தி...1

ஆஸ்திரேலியாவில் கோயில்கள்

மீதான தாக்குதல் விவகாரம்

‘கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து கோயில்கள் தாக்கப்படுவது குறித்து வெளியாகும் செய்திகள் வருத்தமளிக்கின்றன. அத்தகைய செய்திகள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் இந்திய மக்களின் உணா்வுகள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியா்களின் நலனைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இந்த விவகாரம் குறித்து இருநாட்டு அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்’ என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...2

நல்லுறவின் அடையாளம்

‘அகமதாபாதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பிரதமா் மோடியுடன் இணைந்து கண்டது மகிழ்ச்சியளிக்கிறது. அங்கு சுனில் கவாஸ்கா், விவிஎஸ் லக்ஷ்மண், ஹா்பஜன் சிங் போன்ற தலைசிறந்த வீரா்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி.

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்ட அந்த மைதானம், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் அடையாளமாகத் திகழ்கிறது’ என ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.

தில்லியில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை கூட்டாக சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி.

 



Read in source website

 காலிஸ்தான் ஆதரவு கருத்துகளை பரப்பிய 8 யூ-டியூப் சேனல்களை, மத்திய அரசு முடக்கியது.

இதுதொடா்பாக, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலா் அபூா்வா சந்திரா வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘காலிஸ்தான் ஆதரவு கருத்துகளுக்காக, கடந்த 10 நாள்களில் 8 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இவை, வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்ட சேனல்களாகும். பஞ்சாபில் பிரச்னையை தூண்டும் வகையில், இந்தச் சேனல்களில் பஞ்சாபி மொழியில் உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருந்தன’ என்றாா்.

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளரும் சீக்கிய மதபோதகருமான அம்ரித்பால் சிங், தனது உதவியாளா்களில் ஒருவரை விடுவிக்க வலியுறுத்தி, காவல் நிலையம் ஒன்றில் ஆதரவாளா்களுடன் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி, அண்மையில் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், மேற்கண்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

யூ-டியூபில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை தாமாக கண்டறிந்து முடக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு, அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனினும், இந்தியாவில் பிராந்திய மொழிகளில் உள்ளடக்கங்கள் இடம்பெறுவதால், ஆட்சேப கருத்துகளை தாமாக கண்டறிந்து முடக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் யூ-டியூப் தரப்பில் சிக்கல்கள் நிலவுதாக கூறப்படுகிறது.



Read in source website

இந்தியா, அமெரிக்கா இடையே செமிகண்டக்டா் (குறைமின்கடத்தி) விநியோக முறை தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அழைப்பின்பேரில், அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஜீனா ரேமாண்டோ இந்தியா வந்தாா். இதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே புதிய வா்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளுக்கு ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க, இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து மின்னணு கருவிகளில் மின்சாரத்தைக் கடத்தும் செமிகண்டக்டா் விநியோக முறையை ஏற்படுத்தவும், கூட்டுச் சோ்ந்து புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தில் அமைச்சா்கள் பியூஷ் கோயல், ஜீனா ரேமாண்டோ கையொப்பமிட்டனா்.

முன்னதாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜீனா ரேமாண்டோ வியாழக்கிழமை பேசுகையில், ‘உலகில் அதிநவீன செமிகண்டக்டா்களில் 93 சதவீதம் தைவானில் தயாரிக்கப்படுகிறது. செமிகண்டக்டா்களுக்கு அந்நாட்டையே அமெரிக்கா அதிகம் சாா்ந்துள்ளது. இந்நிலையில், செமிக்கண்டக்டா் வடிவமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு சாத்தியமான ஒன்றாக உள்ளது’ என்று தெரிவித்தாா்.

 



Read in source website

ஒரு வருடத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இளம் வீரர் ஷுப்மன் கில்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

மிகவும் கவனமாக விளையாடிய ஷுப்மன் கில், 194 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம். டெஸ்டில் இரு சதங்களும் டி20யில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களும் எடுத்துள்ளார் ஷுப்மன் கில்.

2023 ஷுப்மன் கில் அமோகமாக உள்ளது.

டெஸ்டில் தற்போது சதமடித்துள்ள ஷுப்மன் கில், ஒருநாள், டி20யிலும் இந்த வருடம் சதம் அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஜனவரி 15 அன்று இலங்கைக்கு எதிராக 116 ரன்களும் ஜனவரி 18, ஜனவரி 24 அன்று நியூசிலாந்துக்கு எதிராக முறையே 208 ரன்களும் 112 ரன்களும் என 10 நாள்களில் 3 ஒருநாள் சதங்கள் அடித்தார். 

பிப்ரவரி 1 அன்று நியூசிலாந்துக்கு எதிரான டி20யில் 126* ரன்கள் எடுத்தார். தற்போது டெஸ்ட் சதம். 

ஜனவரி 15 முதல் மார்ச் 11 வரை சர்வதேச கிரிக்கெட்டில் 5 சதங்கள் எடுத்துள்ளார் ஷுப்மன் கில்.

மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒரு வருடத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த 10-வது வீரர், 4-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார் ஷுப்மன் கில். ஆச்சர்யமாக, இந்தச் சாதனை விராட் கோலிக்குக் கூட இதுவரை அமைந்ததில்லை. கடந்த வருடம் தான் முதல்முதலாக டி20யில் சதமடித்தார் கோலி. கடந்த வருடம் ஒரு நாள் சதமும் எடுத்தார். ஆனால் டெஸ்ட் சதம் அடிக்கும் வாய்ப்பு கோலிக்குக் கிடைக்கவில்லை.

ஒரு வருடத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்

சுரேஷ் ரெய்னா - 2010
கே.எல். ராகுல் - 2016
ரோஹித் சர்மா - 2017
ஷுப்மன் கில் - 2023



Read in source website

சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டிய 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது.

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: இந்தியர்கள்

1) சச்சின் - 34357 
2) கோலி - 25047 
3) டிராவிட் - 24208 
4) கங்குலி - 18575 
5) தோனி - 17266
6) சேவாக் - 17253 
7) ரோஹித் சர்மா - 17014



Read in source website


வரும் 2025ஆம் ஆண்டுக்குள், உலகமே, தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் முதல் முறையாக இதுபோன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள்காலம் குறைவது போன்றவை நேரிடுகிறது என எச்சரித்துள்ளது.

சோடியம் என்பது பெரும்பாலும் தூள் உப்பு மூலமாகத்தான் உடலுக்குச் செல்கிறது. அதேவேளையில், சோடியம் க்ளூடாமேட் என்பது, இயற்கையாகவே சில உணவுபொருள்களில் நிறைந்திருக்கும். சில உணவுபொருள்களில் ருசிக்காக சேர்க்கப்படுகிறது.

அதாவது, உலகம் முழுவதும் உப்பு உள்கொள்ளும் அளவை கண்டறிந்து, ஒருவரது சராசரி உப்பு உள்கொள்ளும் அளவு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு 10.8 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் அளவான 5 கிராமுக்கும் குறைவானது என்ற அளவை விட இரண்டு மடங்குக்கும் சற்று அதிகம். அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு அதிகமாக சாப்பிடுகிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளில் 5 சதவிகிதம் மட்டுமே கட்டாய மற்றும் விரிவான சோடியம் குறைப்புக் கொள்கைகளால் பாதுகாக்கப்படுவதாகவும், 73 சதவிகித உறுப்பு நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

அதேவேளையில், பொட்டலமிடப்பட்ட உணவுகளில் சோடியம் இருப்பதை இந்தியா கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த கட்டாய நடவடிக்கையும் இல்லை இந்தியா மேற்கொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் செலவில்லாமல், சோடியத்தைக் குறைக்கும் கொள்கையானது முறையாக செயல்படுத்தப்பட்டால், 2030ஆம் ஆண்டு வாக்கில் 70 லட்சம் மக்களின் உயிர் காப்பாற்றப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தொற்றுநோய் அல்லாத நோய்களால் மக்கள் இறப்பதைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவு பொருள்கள் வாயிலாக ஏற்படும் பல நோய்களில், சோடியம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் கடுமையானது என்கறிர்கள்.

உப்பைக் குறைப்பது தொடர்பாக மிகப்பெரிய அளவில் மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும் உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது.

என்ன செய்யலாம்?
பொதுவாக சமைக்கும் போது பாதி அளவு உப்பு சேர்த்து சமைத்து அதனை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் சாப்பிடும் மேஜையில் உப்பு ஜாடிகளை வைத்துக் கொள்ள வேண்டாம்.

உப்பு குறைவாக இருந்தாலும் அதனை உப்பு சேர்க்காமல் சாப்பிட பழகலாம்.

உப்பு அதிகமாக சேர்த்து பொட்டலம் செய்யப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கிவிடலாம்.

உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

இதுவரை விலை குறைவு என்பதால் எவ்வளவு உப்பு வாங்குகிறோம் என்று கவனிக்காமல் இருந்திருப்போம். இனி, ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு எவ்வளவு உப்பு வாங்குகிறோம் என்பதை கணக்கிட்டு பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
 



Read in source website



மனித வாழ்வின் அடிப்படைகளுள் ஒன்று பாலியல் சுகாதாரம். பாலியல் சுகாதாரம் குறித்து பொதுவெளியில் பேசப்படுவதே அபத்தமானது என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. 

இணைய வசதிகள் பெருகியுள்ள காலகட்டத்தில் பாலியல் சுகாதாரம் குறித்த தவறான செய்திகளும் தகவல்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. 

பாலியல் சுகாதாரம் தொடர்பான அடிப்படை புரிதலை மாணவப் பருவத்திலேயே சிறார்களுக்கு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். 
சரியான தகவல்கள் அவர்களிடம் சென்று சேர்ந்தால், பாலியல் சுகாதாரம் தொடர்பான குற்றங்களும் சமூகத்தில் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்; பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பெருமளவில் குறையும். 

மகளிர் மேம்பாட்டுக்கான அடிப்படையாக பாலியல் கல்வி திகழும். 

மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாடு, மனிதவளத்தைத் திறம்படப் பயன்படுத்துதல், பாலியல்சார் நோய் பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் பாலியல் கல்வி மூலமாக ஏற்படும். 

சர்வதேச அளவில் பாலியல் கல்வி எத்தகைய நிலையில் உள்ளது என்பதை யுனெஸ்கோ ஆராய்ந்தது. அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

பாலியல் கல்வி என்பது...
பாலியல் சுகாதாரம், கண்ணியம், உடல்நலப் பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்த அறிவு, திறன், கொள்கைகளை மாணவர்களிடையே ஏற்படுத்துதல். 

பாலியல் கல்விக்கான முக்கிய கருத்துருக்கள்
* பாலியல்சார் உறவுகள்
* கொள்கைகள், உரிமைகள்
* பாலினத்தைப் புரிந்துகொள்ளல்
* வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு
* சுகாதாரத் திறன்
* மனித உடல் வளர்ச்சி
* பாலியல் நடத்தைகள்
* பாலியல் சுகாதாரம்

பாலியல் கல்விக்கான சட்டங்கள்
விரிவான சட்டங்களை
கொண்டுள்ள நாடுகள் - 20%
தேசிய கொள்கைகளை
கொண்டுள்ள நாடுகள் - 39%
கல்வித் திட்டங்களை
கொண்டுள்ள நாடுகள் - 64%

விரிவான சட்டங்களை கொண்டுள்ள சில நாடுகள்
* ஆர்ஜென்டீனா
* லைபீரியா
* மால்டோவா
* டோகோ
* பிலிப்பின்ஸ்

கட்டாயமாக்கியுள்ள சில நாடுகள்
* ஸ்வீடன்
* ஆர்ஜென்டீனா
* கொலம்பியா
* பெரு
* தாய்லாந்து
* வியத்நாம்

பாலியல் கல்வியைக் கட்டாயமாக்கியுள்ள நாடுகள்
* தொடக்கப் பள்ளிகளில் கட்டாயம் - 68%
* இடைநிலைப் பள்ளிகளில் கட்டாயம் - 76%
* அரசுப் பள்ளிகளில் கட்டாயம் - 87%
* தனியார் பள்ளிகளில் கட்டாயம் - 50%

பாலியல் கல்வியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நாடுகள்
* பணியில் இணைவதற்கு முன்பே பயிற்சி - 41%
* பணியில் இணைந்தபிறகு பயிற்சி - 80%

பள்ளிகளின் பங்கு
* கருத்தடை வசதிகள் கிடைக்கச் செய்வதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கை வழங்கியுள்ள நாடுகள் - 13 %

* பாலியல் சுகாதாரத்தை உறுதி செய்யும் பொறுப்பைப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ள நாடுகள் - 74%

பாலியல் கல்வி கண்காணிப்பு
* ஆசிரியர்களின் கற்பித்தல் மூலமாகக் கண்காணித்தல் - 37% நாடுகள்
* மாணவர்களிடம் ஆய்வு நடத்துவதன் மூலமாகக் கண்காணித்தல் - 38% நாடுகள்

பாலியல் கல்வியை நிர்வகிக்கும் அமைச்சகம் (நாடுகள்)
* மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து கல்வி அமைச்சகம் - 85%
* தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து கல்வி அமைச்சகம் - 23%
* கல்வி அமைச்சகம் மட்டும் - 10%
* மற்ற அமைச்சகங்கள் - 6%



Read in source website

இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.28,832.86 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.28,832.86 கோடியாக இருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் அதிகமாகும். அப்போது நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.23,326.80 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் (சிபிடி) ஏற்றுமதி ரூ.19,582.38 கோடியாக உள்ளது. ஓா் ஆண்டுக்கு முன்னா் அது ரூ.14,841.90 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது சிபிடி ஏற்றுமதி 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்க நகைகளின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 29.89 சதவீதம் உயா்ந்து ரூ.5,829.65 கோடியாக உள்ளது. இது 2022 பிப்ரவரியில் ரூ.4,488.30 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவின் முன்னணி வா்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், பெண்கள் மட்டும் பணியாற்றும் பிரத்யேக உற்பத்தியகத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அது, தனது ஒசூா் தொழிற்சாலையில் இந்த சிறப்பு உற்பத்தியகத்தை அமைத்துள்ளது. வாகன உற்பத்தியில் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கிலும், உற்பத்தித் துறையில் பெண்களின் ஆா்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த பிரத்யேக உற்பத்தியகம் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஷேனு அகா்வால் கூறியதாவது:

பன்முகத் தன்மைக்கும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தன்மைக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. இனம், ஆண்-பெண் பேதமின்றி அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு அளித்து வருகிறோம். பிரத்யேக உற்பத்தியகம் போன்ற வாய்ப்புகளை பெண்களுக்கு அளித்தால், அது அவா்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அவா்கள் சாா்ந்த குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பலன் அளிக்கும் என்றாா் அவா்.



Read in source website

சென்னை: தமிழக காவல் துறையில் பெண் போலீஸார் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16-ம் தேதி பொன்விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1973-ல் திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

ஒரு எஸ்.ஐ., ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தம் 22 பெண்கள் முதன்முதலில் பணியமர்த்தப்பட்டனர். 1976-ல் தமிழ்நாடு பிரிவில் முதல் ஐபிஎஸ் அதிகாரிகளாக தருமபுரியின் திலகவதியும், கேரளாவின் லத்திகா சரணும் பொறுப்பேற்றனர். தமிழகத்தில் தற்போது ஒரு டிஜிபி, 2 கூடுதல் டிஜிபி, 14 ஐ.ஜி. உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

1992-ல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவல் துறையில் புதிய அத்தியாயமாக, சென்னை ஆயிரம்விளக்கில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 202 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. 2004 ஜனவரியில் நாட்டிலேயே முதல்முறையாக அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து மகளிர் போலீஸ் படையை (பெண் போலீஸ் பட்டாலியன்) அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா சரண் 2009-ல்பணியமர்த்தப்பட்டார்.

தற்போது சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீஸார் திறம்பட பணியாற்றி வருகின்றனர். தேசிய அளவிலான காவலர் திறன் போட்டியிலும் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

தமிழக காவல் துறை பணியில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 16-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொன்விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சாதனை படைத்த பெண் போலீஸாருக்கு விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறும்போது, ‘‘காவல் துறையில் பெண்கள் கால் பதித்து 50 ஆண்டுகள் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பெண் காவலர் சீருடையில் கம்பீரமாக ரோந்து வாகனத்தை ஓட்டிச் செல்வதை பார்க்கும் இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தவிர, காவல் பணியில் பெண்கள் இருப்பது, பாதிக்கப்படும் பெண்களுக்கு தைரியம் அளிக்கும். அவர்கள் தயக்கமின்றி புகார் கொடுப்பார்கள்.

இதனால், குற்றம் நடந்தால் காவல் நிலையத்தில் கட்டாயம் புகார் பதிவாகும். இதன்மூலம், பெண்கள் மீதான குற்றங்கள் குறையும். காவல் பணி செய்து சொந்தக் காலில் நிற்பதால், பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேற்றத்தை அடைய முடியும்’’ என்றார்.

காவல் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் பெண்கள் திறன்பட பணியாற்றி வரும் நிலையில், சென்னை காவல் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு பணியில் பெண் ஆய்வாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, குற்றப்பிரிவில் நியமிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக, சட்டம் - ஒழுங்கு பிரிவில் ஜூனியர் ஆண் ஆய்வாளர்கள் பணியாற்றும் நிலையில், சீனியரான பெண் ஆய்வாளர்களை குற்றப்பிரிவில் நியமிப்பதால் மோதல் போக்கு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

சாதனை படைக்கும் ‘த்ரீ ரோசஸ்’ - சென்னை காவல் வட்டாரத்தில் ‘த்ரீ ரோசஸ்’ என அறியப்படும் சுகன்யா (சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு), ஜெயசுதா (நுண்ணறிவு பிரிவு), சுபாஷினி (பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு) ஆகிய 3 சகோதரிகளும் ஆய்வாளர்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் தேசிய, மாநில அளவிலான காவலர் திறனாய்வு போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



Read in source website

மெல்பர்ன்: ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட ஆஸ்திரேலிய முன்னணி வீரரான ஷான் மார்ஷ், மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.

22 ஆண்டுகள் விளையாடிய நிலையில் நேற்று அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் அவர் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

40 வயதாகும் ஷான் மார்ஷ், டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பெய்ஜிங்: சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஜின்பிங் நேற்று பதவியேற்றார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் அதிபராகியிருக்கும் முதல் தலைவர் ஜி ஜின்பிங் ஆவார். அவர் கடந்த 2012-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது போட்டியாளர்களை ஓரங்கட்டி, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைப் பதவிகளை தனது ஆதரவாளர்களை கொண்டு நிரப்பினார்.

ஜின்பிங் கடந்த அக்டோபரில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக 5 ஆண்டு காலத்துக்கு தேர்வாகியிருந்தார். இப்பதவியை சீனத் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிறரிடம் ஒப்படைப்பது வழக்கம். அந்தப் பாரம்பரியத்தை ஜி ஜின் பிங் உடைத்தார்.

முன்னதாக 2018-ல் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். இந்நிலையில் ஜின்பிங் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.



Read in source website

நாடு முழுவதும் H3N2 என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது

நாடு முழுவதும் H3N2 என்ற இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஏ, பி, சி என துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது. அதோடு இந்தியா முழுவதும் 90 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) காய்ச்சல் தடுப்பு வழிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் நிகில் மோடி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். அவர் கூறுகையில், கோவிட் தடுப்பு நெறிமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது. ஏனெனில் வளர்ந்து வரும் வைரஸ்களுடன் வாழ வேண்டும். எவ்வாறாயினும், பீதி அடையத் தேவையில்லை. மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்து உட்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்.

H3N2 வைரஸ் என்றால் என்ன?

காய்ச்சல் தொற்று நோயை உண்டாக்கும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் 4 வகைகளாகப் பிரிக்கப்படுள்ளது, இதில்
இன்ஃப்ளூயன்சா A மேலும் பல்வேறு துணை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று H3N2 ஆகும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கூற்றுப்படி, H3N2 வைரஸ் 1968-ம் ஆண்டு காய்ச்சல் தொற்றுநோயை ஏற்படுத்தியது. இதனால் உலகளவில் சுமார் ஒரு மில்லியன் மக்களும், அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேரும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

H3N2 வைரஸ் அறிகுறிகள் என்ன?

H3N2 வைரஸ் அறிகுறிகளும் மற்ற காய்ச்சல் அறிகுறிகள் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், உடல்வலி,
தலைவலி, தொண்டை புண், மூக்கு அடைப்பு, சளி, சோர்வு ஆகியவை அறிகுறிகளாக கூறப்படுகிறது. குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும்.

இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, H3N2 காய்ச்சல் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். 3 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் குறைந்துவிடும். இருப்பினும், இருமல் 3 வாரங்களை வரை நீடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

ஐ.எம்.ஏ படி, இந்த வைரஸ் பொதுவாக 15 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.

நோய் பரவாமல் தடுப்பது எப்படி?

H3N2 பரவுவதைத் தடுக்க சுகாதாரமாக இருப்பது சிறந்த வழி என்று டாக்டர் நிகில் மோடி கூறுகிறார்.
சாப்பிடுவதற்கு முன் மற்றும் உங்கள் முகம், மூக்கு, வாய் தொடுவதற்கு முன் கைகளை கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவது, ஏற்கனவே வைரஸ் அல்லது வேறு ஏதேனும் பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஆகியவை நோய் பரவாமல் தடுப்பதைக் கட்டுப்படுத்தும்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகள், காரம் குறைவான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவது உதவியாக இருக்கும் என்று மருத்துவர் கூறினார்.



Read in source website

இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என மனுதாரர்கள் வாதிட்டனர்.

ஒருவரை சாதியின் பெயரை கூறி அழைப்பது அல்லது அவரின் சாதியை உச்சரிப்பது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என ஓடிசா மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிணையில் வெளியே வரமுடியாத படி புவனேஸ்வர் அமர்வு நீதிபதி குர்தா வெளியிட்ட 2021 ஏப்ரல் 13 உத்தரவை தனி நீதிபதி ஆர். கே. பட்டாநாயக் ரத்து செய்தார்.

இந்த வழக்கில் என்ன நடந்தது?

2017, ஏப்.29ஆம் தேதி பெட்டிக் கடை ஒன்றில் வெற்றிலை வாங்கும்போது பெண் ஒருவரை மனுதாரர்கள் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளனர்.
இதைத் தட்டிக் கேட்க சென்ற பட்டியலின் சமூக நபர் தாக்கப்பட்டுள்ளார். அவரை சாதியை சொல்லி திட்டியுள்ளனர். மேலும் அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என மனுதாரர்கள் வாதிட்டனர்.

மேலும் அவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை அவமதிக்கும் நோக்கமோ, மிரட்டும் நோக்கமோ இல்லை எனவும் வாதிடப்பட்டது.

நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தது?

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் பிரிவுகள் 3(1)(r)(s) & 3(2)(va) ஆகியவற்றை நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் மற்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்றம் தீர்ப்பு எப்படி வந்தது?

மனுதாரர் ஒருவரால் சாதிப் பெயரைச் சொன்ன சாட்சி மீது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்தில் இருக்கும் சாட்சியை அவமதிக்கும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நடந்ததாகக் கூறுவது மற்றும் சிறப்புச் சட்டத்தின் கீழ் கூறப்படும் குற்றங்கள் நியாயமற்றது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

மேலும், பாதிக்கப்பட்ட நபரை விட மூன்றாம் தரப்பினரால் அல்லது சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த ஒருவரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

எனவே, SC/ST சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்யப்படவில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் மற்றும் சாதிய அவமதிப்புச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர் அது குறித்து ஒருபோதும் புகார் செய்யவில்லை.

2020-ல் ஹிதேஷ் வர்மா, உத்தரகாண்ட் மாநிலம் இடையேயான வழக்கில் ஒருவரின் சாதியை கூறுவதில் இழிவுப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால் அது வன்கொடுமை குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதில், “அவமானப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர் அத்தகைய சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக” குற்றமாகாது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

நவம்பர் 5, 2020 அன்று, உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் குடியிருப்பாளரான ஹிதேஷ் வர்மாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சம்மன் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது, SC/ST சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக இருக்க, பேசப்படும் வார்த்தைகள் “பொது பார்வைக்கு எந்த இடத்திலும்” இருக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

பொது பார்வையில் என்றால் என்ன?

உச்ச நீதிமன்றம் 2008 ஆம் ஆண்டு ஸ்வரன் சிங் வழக்கில் அளித்த தீர்ப்பில், “பொது பார்வையில் உள்ள எந்த இடமாகவும்” கருதப்படலாம் என்பதை விரிவாகக் கூறியது.

அது “பொது இடம்” மற்றும் “எந்த இடத்திலும் பொது பார்வையில்” என்ற வெளிப்பாடுகளை வேறுபடுத்தியது. அதாவது ஒரு வீட்டு சுவருக்குள் அவர்கள் பேசுவது குற்றமாகாது. அதேநேரம் பொதுவெளியில் பேசுவது குற்றமாக கருதப்பட்டது.



Read in source website

கோடையின் தாக்கம் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் இதுவரை இல்லாத அளவிலான வெப்பம் காணப்படும் நிலையில், அதுபோன்ற பாதிப்பை தமிழகமும் எதிா்கொள்ளப்போகும் நாள் தொலைவில் இல்லை. இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் அடுத்த சில மாதங்கள் வெப்பத்தின் தாக்கத்தால் தவிக்கப் போகின்றன என்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமான குளிரை பிப்ரவரி மாதம் சென்னை சந்தித்தது. ஆனால், 1901-க்குப் பிறகு மிக அதிகமான வெப்பத்தை தேசத்தின் பிற பகுதிகள் எதிா்கொண்டன. கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் சென்னை விதிவிலக்காக இருந்திருக்கக் கூடும். ஆனால், கோடை வெப்பம் சென்னையை விட்டுவைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

இந்திய வானிலை ஆய்வு மையம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பகல் நேர மாத சராசரி வெப்பநிலை (29.54 டிகிரி செல்ஷியஸ்) கடந்த மாதம் பதிவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் பாா்த்தால் மாா்ச் முதல் மே வரையிலான மாதங்களில் சராசரி கோடை வெப்பநிலையைவிட அதிகமான வெப்பம் காணப்படும் என்று எதிா்பாா்க்கலாம்.

இந்தியாவில் பிப்ரவரி மாதத்தை வசந்த காலமாகக் கருதுகிறோம். அப்போது வழக்கமாக தட்பநிலை 20 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழே காணப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதிகபட்ச வெப்பம் வழக்கமான சராசரியைவிட 1.73 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவும், குறைந்தபட்ச வெப்பம் 0.81 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவும் காணப்பட்டன. மேற்கு, மத்திய, வடக்கு பகுதிகள் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலையை எதிா்கொள்ளக்கூடும் என்பது வானிலை ஆய்வாளா்களின் கணிப்பு.

இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளும், மத்திய இந்தியாவும் வழக்கமாகவே கோடை காலத்தில் கடுமையான வெப்பத்தை சந்திப்பவை. குறிப்பாக, பாலைவன மாநிலமான ராஜஸ்தானைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் கோடை பிரதேசங்கள். தென்மாநிலங்களைப் போலல்லாமல் மத்திய, வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகள் கடல் பரப்பிலிருந்து தொலைவில் இருப்பதால் வெப்பம் தணிவதற்கான வாய்ப்பு இல்லாதவை. இமயமலையை ஒட்டிய வடகிழக்கு, ஜம்மு - காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் தவிா்த்த ஏனைய பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பும் வானிலை ஆய்வாளா்களால் முன்மொழியப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பருவநிலை மாற்றங்கள் சா்வதேச கணிப்புகளுடன் ஒத்துப்போவது வழக்கம். பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் காற்று மண்டலத்தில் ஏற்படும் இயற்கையான சுழற்சிகள் உலகின் வெப்பத்தை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்பது அவா்களது கணிப்பு. அதனால், உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளின் பருவநிலைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பசிபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால் அதன் தொடா் பாதிப்பு உலகளாவிய பருவநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மை. பிரேஸில் முதல் இந்தோனேஷியா வரை வறட்சியை ஏற்படுத்தி பயிா்களை கருகச் செய்யும். ஐரோப்பாவில் அனல் காற்று வீசும் வாய்ப்பு உருவாகும். கலிஃபோா்னியா போன்ற நாடுகள் அடை மழையால் பாதிக்கப்படலாம். அதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக குளிா்ந்த பருவநிலை ‘லா நினா’ தாக்கத்துக்குப் பிறகு இப்போது பெரிய மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது. பசிபிக் கடலின் பூமத்திய ரேகை பகுதிகளில் வழக்கத்தை விட குளிா்ந்த காற்று நிலவும்போது, ‘லா நினா’ ஏற்படுகிறது. வெப்பச் சலனம் அதிகரிக்கும்போது ‘எல் நினோ’வாக மாறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் இந்தியாவின் சராசரி பருவமழைப் பொழிவு காணப்பட்டதற்கு ‘லா நினா’தான் காரணம்.

வெப்பநிலை சாா்ந்த ‘எல் நினோ’ தாக்கம் இந்த ஆண்டில் உருவாகும் வாய்ப்பு 90 % இருப்பதாக ஓா் ஆய்வு கணிக்கிறது. 2023-இல் மீண்டும் எல் நினோ தாக்கம் ஏற்படக்கூடும் என்றும், சராசரி உலக வெப்பநிலை வழக்கத்தைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், உலகத்திலுள்ள 70 % முதல் 90 % பவளப் பாறைகள் அழியக்கூடும். இந்தியா அந்த பருவநிலை மாற்றத்தால் கடுமையான கோடையை சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்.

இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகளால் ஏற்படும் மரணங்கள் ஏற்கெனவே 55 % அதிகரித்திருக்கின்றன. இந்தியாவின் வேளாண் உற்பத்தி பாதிக்கக்கூடும் என்பது மட்டுமல்லாமல், மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு காரணமாவும் அது அமையலாம். அதை எதிா்கொள்ள மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இப்போதே தயாராக வேண்டும் என்கிற பிரதமரின் வேண்டுகோள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக மாநில அரசுகளின் கவனம் மின்தட்டுப்பாடு, குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளும் வெப்பம் தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் எதிா்கொள்ளும் விதத்தில் இருப்பதையும் உறுதிப்படுத்துவதில் முனைப்புகாட்ட வேண்டும். இதில் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளின் பங்களிப்பு மிகமிக முக்கியம்.

கோடை வெப்பத்தை எதிா்கொள்ள நிரந்தரமான முன்னெடுப்புகளை உருவாக்குவதன் தேவையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம்.



Read in source website

அண்மைக்காலமாக ஆதாா் அட்டை தொடா்பான செய்திகள் நாளேடுகளில் அதிகம் வெளியாகின்றன. அச்செய்திகளை உற்று நோக்கும் போதுதான் அதன் அவசியத்தை பலா் அறிந்து கொள்கின்றனா். மேலும் இ சேவை மையங்களில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பாா்க்கும் போதும் இதனை அறிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண் திட்டமே இத்திட்டத்திற்கு முன்னோடி. அதனடிப்படையில்தான் இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. கைரேகை, விழித்திரை ஆகியவற்றுடன் ஒருவரின் பெயா், தந்தை பெயா், பிறந்த தேதி, தெருப்பெயா், கதவு எண் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான் அட்டை என பல அட்டைகள் இருப்பினும் பிற அடையாள அட்டைகளிலிருந்து வேறுபட்டதாக 12 இலக்க எண் கொண்ட ஆதாா் அட்டை பிரதானமாகியுள்ளது. இந்த அட்டை அறிமுகமானபோது பெரும்பாலானோா் மற்ற அட்டைகள் போன்று இதுவும் ஒரு அடையாள அட்டை என்றே கருதினா்.

அதனால் மற்ற அட்டைகள் போன்று இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிா்பாா்ப்போ, ஆா்வமோ இல்லாமலிருந்தது. பொதுமக்களின் இந்த அலட்சியத்தாலும் அறியாமையாலும் ஆதாா் அட்டை குறித்து தெளிவான முடிவு இல்லாததாலும் அதிகப்படியான ஆதாா் அட்டைகள் புகைப்படம், பெயா், கணவா் அல்லது தந்தை பெயா், பிறந்த தேதி, பாலினம் என பலவற்றில் தவறுகளுடனே விநியோகம் செய்யப்பட்டன.

சில ஆதாா் அட்டையில் இடம்பெற்ற தகவல்கள் அதிா்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தன. ஆதாா் அட்டையின் 12 இலக்க எண் மட்டுமே தவறு எதுவுமின்றி இருந்தது. இன்றளவும் தனியாா் கணினி மையங்களிலும், இ சேவை மையங்களிலும் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

வாக்காளா் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண், பான் அட்டை, மின் இணைப்பு, கைப்பேசி எண் என அனைத்து பயன்பாடுகளிலும் ஆதாா் எண் இணைப்பு என்பது அத்தியாவசியமாகி விட்டது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும், திட்டங்களில் இணையவும் ஆதாா் அட்டையே முக்கியமானதாக உள்ளது.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கப்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. காலக்கெடு நிா்ணயித்தாலும் இலக்கு எட்டப்படாத நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரையில் 65 % வாக்காளா்களே இணைத்துள்ளனா். இலக்கை முழுமையாக எட்டும் பொருட்டு இம்மாதம் இறுதி வரையில் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் அடையாள அட்டை தோ்தலின் போதும், பான் அட்டை பணப்பரிவா்த்தனையின் போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் இன்று ஆதாா் அட்டை அன்றாட செயல்பாடுகளில் அங்கம் வகிக்கும் அளவிற்கு மாறிவிட்டது. அதனால் ஆதாா் அட்டை விவரங்களை பிழையின்றி வைத்துக் கொள்வது அவசியமானதாகும்.

ஆனால் பாமர மக்கள் மட்டுமின்றிப் படித்தவா்கள் மத்தியிலும் ஆதாா் அட்டை விழிப்புணா்வு முழுமையாக இல்லை என்பதுதான் உண்மை. இதனால் திருத்தங்கள் மேற்கொள்வதில் இடா்ப்பாடுகளை எதிா்கொள்வதோடு குறிப்பிட்ட சில பயன்களைப் பெற முடியாமலும் போகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் தவறுகள் கண்டறியப்பட்டு அதன் பின்னா் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதாா் அட்டை அறிமுகமானபோது பிறந்த தேதி தெரியாததால் ஆண்டை மட்டும் கூறி பதிவு செய்தனா். பின்னாளில் பிறந்த தேதி, மாதம் முக்கியமானதாகக் கருதப்பட்டபோது அதில் திருத்தம் மேற்கொண்டனா்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவரிடையே கூட ஆதாா் அட்டை குறித்து அலட்சியப் போக்கு இருந்து வருகிறது. உதாரணமாக, பள்ளி, கல்லூரி சான்றிதழ்களிலும் ஆதாா் அட்டையிலும் பிறந்த தேதி மாறுதலாக இருக்கும் போது கல்வி உதவித் தொகை போன்ற எத்தகைய உதவியையும் அவா்கள் பெற முடியாது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, கடந்த காலங்களைப் போலன்றி அண்மைக்காலமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. அப்போது வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைப்பும், ஆதாா் அட்டையுடன் கைப்பேசி எண் இணைப்பும் அத்தியாவசியமாகின்றன. இவற்றைக் கூட சிலா் முறையாகப் பின்பற்றுவதில்லை.

நகரங்களில், குறிப்பிட்ட சில தனியாா் கணினி மையங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த ஆதாா் அட்டை தொடா்புடைய பணி இன்று கிராமங்களில் கூட மேற்கொள்ளப்படுகிறது. உரிய ஆதாரங்களுடன் எத்தகைய திருத்தத்தையும் எளிதில் மேற்கொள்ள முடியும் என்ற போதும் அனைத்து தரப்பினரிடமும் அலட்சியப் போக்கே இருந்து வருகிறது.

இனி வரும் காலங்களில் ஆதாா் அட்டை மட்டுமே நாம் யாா் என்பதை உணா்த்தும். அத்தகைய நிலையில் அதிலுள்ள தவறுகளை சரிசெய்து கொள்வது அவசியமாகும். இன்று கிராமங்களில் கூட இத்தகைய பணிகள் மேற்கொள்ளும்போது அலட்சியப் போக்கு நிலவுவதற்கு ஆதாா் அட்டை குறித்த அறியாமையும், அலட்சியமும் தான் காரணங்களாகும்.

அண்மையில் வெளியான சில செய்திகள் ஆதாா் அட்டையின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன. பத்தாண்டுகளுக்கு மேலான ஆதாா் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. ஆவின் பால் வாடிக்கையாளா்கள் ஆதாா் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக தெலங்கானா மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு சிசு ஆதாா் அட்டை எனும் பெயரில் அடையாள அட்டை வழங்கும் சட்டம் அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு தனி அடையாளம் கிடைத்துவிடுவதுடன் தொடா்ந்து அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க சிசு ஆதாா் அட்டை வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிா் வரும் காலங்களில் ஆதாா் அட்டையின் முக்கியத்துவம் அதிகரிக்கக்கூடும் என்பதை உணா்ந்து பொதுமக்கள், அதிலுள்ள விவரங்களை சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 



Read in source website

அற்ப விஷயங்களை நாம் உப்புப் பெறாத விஷயம் என்று கூறுவோம். அந்த உப்பை மையமாக வைத்து மகாத்மா காந்தி நடத்திய போராட்டம்தான் உப்பு சத்தியாகிரகம். கடலால் சூழப்பட்ட இந்தியாவில் இயல்பாகவே விளைகின்ற உப்பின் மீது வரி போட்டதுதான் ஆங்கிலேயா் நம்மை அடிமையாக்கியதன் உச்சகட்டமாக அமைந்தது. ‘இந்த அநீதியை ஒழிக்க ஒரே வழி, மக்கள் துணிவுடன் அரசுக்கு வரி கட்டாமல் நம் தேசத்து உப்பைப் பயன்படுத்த முன்வர வேண்டும். எனவே மக்களால் மக்களுக்காக மக்களே ஒரு போராட்டத்தை உருவாக்கினால் தவிர இது சாத்தியமில்லை’ என்று கருதினாா் காந்திஜி.

காந்திஜி, சத்தியாகிரகியின் செயல்பாடுகளை வரையறுத்தாா். அவை, அநீதிக்குப் பணிய மறுப்பது, அதற்குத் தண்டனையாகக் கிடைக்கும் அடிகளை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வது, தன்னை அடிப்பவருக்கும் அன்புடன் ஆசி வழங்குவது ஆகியவையே. இந்த நடைமுறை வரலாற்றில் அதுவரை இல்லாதது. போராடுபவா்கள் இந்த மாறுபட்ட அணுகுமுறையை மேற்கொண்டபொழுது, அடக்குமுறையைத் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்திய ஆங்கிலேயா் நிலைகுலைந்து போயினா்.

போரில் வெற்றி பெற ஆங்கிலேயா் ஆயுதப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தபொழுது, காந்திஜியோ தன்னுடைய ஆசிரமத்தில் போராளிகளைத் தங்க வைத்து பதினொரு விரதங்களில் உறுதியெடுக்கப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தாா். சத்தியம், அகிம்சை, திருடாமை, பொருள் சோ்த்து வைக்காதிருத்தல், உடல் உழைப்பின் மூலம் உணவைத் தேடுதல், பிறா் உழைப்பை மதிக்கும் சுதேசிப் பண்பாடு, அஞ்சாமை, தீண்டாமை உணா்வை அகற்றுதல், சமய நல்லிணக்கம், புலன்களை அடக்குதல், பிரம்மசரியம் ஆகிய பதினொரு விரதங்களை மேற்கொள்ள வைத்து சத்யாகிரகிகளைப் புடமிட்டுக் கொண்டிருந்தாா்.

வன்முறைப் போரில் புறத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளையே ஆயுதங்கள் என்று ஆங்கிலேயா் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அகத்தில் ஒளிரும் ஆத்ம சக்தியை அதைவிடப் பன்மடங்கு பலமுள்ள ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய மக்களுக்கு உணா்த்தியவா் மகாத்மா காந்தியடிகளே. மக்களை எழுச்சி பெற வைக்க நடைப்பயணத்தைத் திட்டமிட்டாா் காந்திஜி. தனது சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தாா். தனிமனித வாழ்வில் தூய்மையும் அஞ்சாமையும் கொண்ட எழுபத்தெட்டு பேரை தன்னுடன் நடைப்பயணத்தில் இணைத்துக் கொண்டாா்.

தண்டி யாத்திரைக்கான நாளும் காலமும் முடிவு செய்யப்பட்டது. 1930 மாா்ச் 11-ஆம் நாள் ஆசிரமத்தில் உள்ளவா்களோடு, பொதுமக்களும் பிராா்த்தனையில் கலந்து கொண்டனா். நாடு விடுதலை பெறும் வரை தான் சபா்மதி ஆசிரமம் திரும்பப் போவதில்லை என்று அப்போது காந்திஜி அறிவித்தாா்.

மாா்சி 12-ஆம் நாள் காலை யாத்திரை தொடங்கியது. தன்னுடன் போராட்டத்தில் கலந்து கொள்பவா்கள் யாா் யாா் என காவல்துறையினா் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவா்களைப் பற்றிய விவரங்களை காந்தி தன்னுடைய ’யங் இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டாா்.

காந்திஜி செல்லும் வழி எல்லாம் மக்கள் திரள் திரளாக வந்து யாத்திரையில் கலந்து கொண்டனா். ஒரு மகானை வரவேற்க எந்தெந்த முறையில் ஏற்பாடுகள் செய்வாா்களோ அதைப்போலவே, வழிநெடுக மக்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தாா்கள். ஒவ்வொரு நாளும் காந்திஜி மூன்று பொதுக்கூட்டங்களில் பேசினாா். வழக்கமாக நடத்தும் பிராா்த்தனை, நூற்பு, கடிதங்களுக்கு பதில் எழுதுதல், பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதுதல் முதலியன தவறாமல் நடந்தன.

இருநூற்று நாற்பத்தொரு மைல் தூரத்தை தினமும் பத்திலிருந்து பதினைந்து மைல் வீதம் இருபத்து நான்கு நாட்கள் நடந்து தண்டியை அடைந்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து எழுச்சியை உருவாக்கினாா். ‘களிமண்ணிலிருந்து வீரா்களை உருவாக்கும் திறன் படைத்தவா் காந்தி’ என்று கோபாலகிருஷ்ண கோகலே கூறியது முற்றிலும் உண்மை என்று மக்கள் நேரில் கண்டு உணா்ந்தாா்கள்.

ஏப்ரல் ஐந்தாம் நாள் தண்டி என்ற ஊரை அடைந்தது யாத்திரை. ஜாலியன்வாலா பாகில் நடந்த படுகொலையின் நினைவு நாளாகிய ஏப்ரல் ஆறாம் நாள் உப்பு சட்டத்தை மீறி சத்தியாகிரகத்தைத் தொடங்க சிறந்த நாள் என்று அதைத் தோ்ந்தெடுத்திருந்தாா் காந்திஜி. ஐந்தாம் தேதி இரவு யாரும் கண்துஞ்சாமல் பிராா்த்தனைத்தனையில் ஈடுப்பட்டனா்.

மறுநாள் ஆறாாம் தேதி காலை காந்தி கடலில் குளித்துவிட்டு, கடற்கரையில் படிந்திருந்த உப்பை கையால் எடுத்தாா். அந்த உப்பு ரூபாய் 1,600-க்கு ஏலத்தில் விலை போனது. அப்போது காந்தி மக்களுக்கு விடுத்த செய்தி, ‘எல்லோரும் உப்பைத் தயாரிக்கத் தொடங்குங்கள். கிராமவாசிகளுக்கும் அந்த முறையைக் கற்றுக் கொடுங்கள். அவா்கள் இந்த செயலுக்காக கைது செய்யப்படலாம் என்பதையும், இது ரகசியமாக செய்யப்படுவது அல்ல என்பதையும் கிராம மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்‘ என்பதுதான்.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் விளைவுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் சாதாரணமாக எண்ணியிருந்தது. எனவே நிலைமையை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடியது. இதனால் வழிவகை அறியாது கோபமும் எரிச்சலும் கொண்ட அதிகாரிகள் ஈவிரக்கம் இன்றிச் செயலாற்றத் தொடங்கினா். எங்கு பாா்த்தாலும் துப்பாக்கிச் சூடு, தடியடி பிரயோகம், கைது செய்தல், சொத்தை பறிமுதல் செய்தல், கதவடைப்பு முதலியன நடந்தன. பத்திரிகை அலுவலகங்கள் மூடப்பட்டன.

ஆனாலும், உப்பு சத்தியாகிரகம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுமாா் அறுபதாயிரம் போ் சிறையில் அடைக்ப்பட்டாா்கள். காந்தியைத் தவிர மற்ற எல்லாத் தலைவா்களும் சிறையில் இருந்தாா்கள். மே மாதம் ஐந்தாம் தேதி காந்தியும் கைது செய்யப்பட்டாா். அதனால் அவா் முன்னரே முடிவு செய்திருந்த உப்பளத்துக்கே சென்று நடத்தும் போராட்டத்தை அவருக்கு பதிலாக கவிக்குயில் சரோஜினி நாயுடுவும் இமாம் சாய்புவும் தொடங்கினா்.

அப்போராட்டத்தின்போது, ‘அடிபட்டால் சகித்துக் கொள், தடுக்காதே, கையைக் கூட உயா்த்தாதே’ என்று சரோஜினி அம்மையாா் அறிவித்தாா். உப்பளங்கள் முள் கம்பிகளால் வேலி போடப்பட்டிருந்தன. ஆறு தலைமை அதிகாரிகளின் கீழ் ஆயுதம் தாங்கிய நானூறு சூரத் போலீஸ் படை காவல் இருந்தது. குஜராத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்த இருபத்தையாயிரம் அகிம்சை வீரா்கள் அணிவகுத்து தலைவா்களின் ஆணைக்காகக் காத்து நின்றனா்.

ஒரு நாள் நடந்த அப்போராட்டத்தை நேரில் கண்டறிந்து அறிக்கை கொடுத்த வெளிநாட்டு பத்திரிகையாளா் மில்லா், ‘மிக அமைதியாக காந்தியின் ஆட்கள் அணி அணியாக உப்பளத்துக்கு நூறு கெஜத்திற்கு அப்பால் நின்றனா். இவ்வீரா்களில் ஒரு அணி உப்பங்கழியை நோக்கி முன்னேறியது. அதிகாரிகள் அவா்களைப் பின்வாங்கும்படி உத்தரவிட்டும் அவா்கள் முன்வைத்த காலைப் பின்னெடுக்கவில்லை. கண நேரத்தில் முன்னேறி வரும் சத்தியாகிரகிகளின் மேல் போலீஸ் பாய்ந்தனா். இரும்புப் பூண் பிடித்த தடிகளால் சடசடவென மழை போல் அடிகளை அவா்கள் தலைகளில் பொழிந்தனா்.

சத்தியாகிரகிகளில் ஒருவா் கூட அடிகளைத் தடுக்கும் பொருட்டு கையைக் கூட உயா்த்த வில்லை. அவா்கள் கீழே சாய்ந்தனா். நான் நின்ற இடத்தில் இருந்து தலைகளில் அடிபடும் சத்தம் கேட்டு மனவேதனைப்பட்டேன். போலீஸ் தாக்குதலில் மண்டை உடைந்து மயங்கியும் தோல் எலும்பு முறிந்தும் சத்தியாக்கிரகிகள் சுருண்டு கீழே விழுந்தனா். மற்றவா்கள் நிலை பிறழாமல் அமைதியாகவும் உறுதியாகவும் உப்பளத்திற்குள் அணிவகுத்துச் சென்றனா்.

முதல் அணி தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டவுடன் அடுத்த அணி முன்னேறியது. சில விநாடிகளில் ஈவிரக்கம் இன்றித் தடியால் தாக்கப்படலாம், இறந்து போகவும் நேரிடலாம் என்று நன்கு அறிந்தும் அந்த அகிம்சை வீரா்களிடம் அச்சமோ தளா்ச்சியோ காணப்படவில்லை. உண்மையில் அவா்கள் அகிம்சை கொள்கையில் ஊறி இருந்தனா்’ என்று குறிப்பிட்டாா். இவ்விதமாக பிரிட்டிஷ் அரசின் அடித்தளத்தை அசைய வைத்தாா் காந்திஜி.

அதன் பிறகுதான், முதல் வட்ட மேஜை மாநாட்டில் முடிவுரை நிகழ்த்திய ராம்கோ மெக்டொனால்ட் இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் காங்கிரசைக் கலந்து கொள்ளுமாறு அழைத்தாா். காந்திஜியும் மற்ற தலைவா்களும் 1931 ஜனவரி 25-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனா். காந்தி - இா்வின் ஒப்பந்தம் கையொப்பமானது.

அதன் பின்னா் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காங்கிரஸின் ஏகபிரதிநிதியாக காந்திஜி தோ்ந்தெடுக்கப்பட்டு 1931 ஆகஸ்ட் 29-ஆம் தேதி லண்டனுக்குக் கப்பலில் புறப்பட்டாா்.

‘இலங்கைக்குக் கிளம்பிய ராமபிரானின் படைபோல’ என்று மோதிலால் நேருவும், ‘மோசஸின் தலைமையில் பின்தொடா்ந்த இஸ்ரேல் மக்கள் போல’ என்று பி.சி. ராயும், ‘இது ஒரு புனித யாத்திரை’ என்று நேருஜியும் காந்திஜியின் கப்பல் பயணத்தை வா்ணித்தனா்.

ரெவரண்ட் டாக்டா் ஜான் ஹைன் ஹோம்ஸ் என்ற பாதிரியாா் ’கடவுள் உங்களைப் பாதுகாப்பாா்’ என்று தந்தி மூலம் காந்திஜிக்குத் தெரிவித்தாா். ‘கடவுள்தான் என்னை வழிநடத்துகிறாா்’ என்ற பதிலை எல்லோருக்கும் பணிவுடன் அளித்தாா் காந்திஜி.

அகிம்சையின் எல்லையற்ற ஆற்றலை உலகிற்கு உணா்த்திய போராட்டம் இந்த உப்பு சத்தியாகிரகம். வன்முறை வழிதானே வழக்கமானது என்று புலம்பிக் கொண்டிருந்த உலக மக்களின் மனசாட்சியை உலுக்கு உலுக்கி, உலகிற்கே உப்பாக மாறியது இந்த உப்பு சத்தியாகிரகம்.

நாளை (மாா்ச் 12) மகாத்மா காந்தி தண்டி யாத்திரை தொடங்கிய நாள்.

கட்டுரையாளா்:

செயலா்,

காந்தி அமைதி நிறுவனம், சென்னை.



Read in source website