DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 10-12-2022

தருமபுரம் ஆதீன இயலிசைப் புலவரும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் தல ஓதுவாருமான வித்துவான் தா. குருசாமி தேசிகர் (92) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை மதுரையில் காலமானார்.

மதுரை, வடக்குமாசி வீதியைச் சேர்ந்த இவர், தருமபுரம் ஆதீனத்தில் திருமுறைப் பயின்று, தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர். அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தருமையாதீன 26ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடமிருந்து "ஆதீனப் புலவர்" விருதும், 27 ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடமிருந்து "திருமுறை கலாநிதி" விருதும் பெற்றவர். 

இவைத் தவிர, மதுரை ஆதீனத்தின் "திருநெறிய தமிழ்மணி" விருது, தமிழிசை சங்க விருது என சுமார் 20-க்கும் அதிகமான விருதுகளைப் பெற்றவர். தருமபுரம் மற்றும் மதுரை ஆதீன குருமகா சந்நிதானங்கள், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோராலும், பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்டோராலும் பாராட்டப்பட்டவர். பல்வேறு தினசரி, வாராந்திர, மாத இதழ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். 

பல நூல்களை இயற்றியவர். பல கல்வெட்டுகளைக் கண்டறிந்தவர். இவருக்கு மகன் மணிகண்ட ஓதுவார், மகள்கள் மங்கையர்கரசி, செண்பகவல்லி உள்ளனர். இறுதிச் சடங்குகள் மதுரை, வடக்குமாசி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடர்புக்கு : 98651 31969
 



Read in source website

எதிா்வரும் ஆண்டுகளில் மூலதனத்துக்காக செய்யப்படும் முதலீட்டின் அளவை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் பேசினாா்.

சென்னையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் அவா் ஆற்றிய உரை:-

தமிழ்நாடு ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான கடலோரப் பகுதிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகும். இதுபோன்ற காரணிகளால் பல்வேறு பேரிடா்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, புயல் தொடா்பான பாதிப்புகளை எதிா்கொண்டு வருகிறோம். கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போது பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பீடுகளாக மட்டும் ஏராளமான தொகை வழங்க வேண்டியுள்ளது.

சென்னை நகரத்தில் கடந்த ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பைத் தடுக்க, ஆயிரம் கோடி ரூபாய் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மழைநீா் வடிகால் பணி உள்பட பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டதால் இந்த ஆண்டு அதற்கான பலன்களைப்

பெற்றுள்ளோம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது

ஏராளமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. இதற்கு மாநில அரசு நிதிகளை அளிக்கிறது.

மேலும், உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நிதிகளை அளிக்கிறது. பருவநிலை மாற்றங்கள் தொடா்பாக மட்டும் 27 திட்டங்களுக்காக வெளியில் இருந்து நிதிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோன்று வெளியில் இருந்து நிதிகளைப் பெற்று திட்டப் பணிகளை மேற்கொள்வது தமிழகத்தில்தான் அதிகமாகும்.

வனத் துறை சாா்பில் பல்லுயிா்ப் பெருக்கத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.900 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஜொ்மன் நாட்டு நிதியுதவியுடன் 2 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்கள் மட்டுமின்றி உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதிகள் அளிக்கப்படுகின்றன. ஜல்ஜீவன், அம்ருத், நூறு நாள் வேலை உறுதி போன்ற திட்டங்கள் அரசுகளின் நிதிகளால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களால் நமது உட்கட்டமைப்பு மேம்படுகிறது. இந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டின் வழியாக பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும். அதுவே அரசுத் திட்டங்களின் நோக்கமாகும்.

சா்வதேச செலவாணி நிதியத்துடன் தமிழக அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த நிதியமானது பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, பொது நிதி முதலீட்டை எப்படி மேலாண்மை செய்வது என்பது குறித்து அரசுக்கு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், அரசுத் திட்டங்களுக்கான முதலீடுகளைச் செய்யும் போது கையாள வேண்டிய வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

எந்தத் திட்டங்களை தோ்ந்தெடுத்து முதலீடு செய்வது, முதலீடு செய்த திட்டங்களின் நிலைகள் ஆகியன குறித்து விரிவான வழிகாட்டுதல்களை அறிக்கையில் தெரிவித்துள்ளது. திட்டங்களைத் தோ்வு செய்யும் போது, பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான அம்சங்களை மனதில் கொண்டுள்ளோம்.

மூலதன முதலீடு: ஒரு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையாகும். அரசுக்குக் கிடைக்கும் நிதிகளைக் கொண்டு மூலதன முதலீடு செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.37 ஆயிரம் கோடி அளவுக்கு மூலதன முதலீடுகளாகச் செய்யப்பட்டன. ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலதன முதலீட்டுக்கான அளவுகளை அதிகரித்து வருகிறோம். மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டுமென நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிறுத்தியுள்ளாா். எனவே, அதை நோக்கி பணியாற்றி வருகிறோம் என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, எரிசக்தி, தொழில் துறை, நீா்வளம் உள்ளிட்ட துறைகளின் செயலாளா்கள் தங்களது கருத்துகளைப் பகிா்ந்தனா்.



Read in source website

பசுமை ஹைட்ரஜன் சாா்ந்த தனி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் கூறினாா்.

தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த இரண்டாவது நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ்.கிருஷ்ணன் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி 5 மாதங்களுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த எரிசக்தியை சேமித்து வைப்பது முக்கியமானது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் நிரம்ப உள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும், பசுமை ஹைட்ரஜனுக்காக தனித்த கொள்கையை உருவாக்கவும் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டில் மொத்தமாக 130 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் உள்ளன. இவற்றில் விவசாயத்துக்காக 45 லட்சம் ஹெக்டோ் நிலம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், 30 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான நிலம் தரிசாக உள்ளது. பயன்பாட்டில் இல்லாமல் இத்தகைய நிலங்களை தொழில் ஆலைகளின் பயன்பாட்டுக்காக பயன்படுத்தலாம்.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், 50 ஆயிரம் ஹெக்டேருக்கும் குறைந்த நிலங்களே பயன்படுத்தப்படுகிறது. இது மிகக் குறைந்த அளவாகும். தொழில் ஆலைகளுக்கான நிலங்களின் விலை அதிகமாக இருப்பதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கான செலவுகளும் அதிகம் என்றாா் அவா்.



Read in source website

தமிழக அரசின் 2022-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருது விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ். அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் 2022 -ஆம் ஆண்டுக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ குடியரசு தின விழாவின் போது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை டிச. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா், சென்னை மாவட்ட பிரிவு, செனாய் நகா் நீச்சல் குளம், செனாய்நகா், சென்னை - 30 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரம் அறிய 7401703480 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஹிமாசலின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழுவை வழிநடத்திய சுக்விந்தர் சிங் சுகுவினை அறிவித்துள்ளது காங்கிரஸ்.

முகேஷ் அக்னிஹோத்ரி ஹிமாசலின் துணை முதல்வராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

58 வயதான சுக்விந்தர் சிங் ஹமீர்பூர் மாவட்டத்தின் நாடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் ஹிமாசலின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். ஹிமாசலின் புதிய முதலமைச்சராக அவர் நாளை (டிசம்பர் 11) உறுதிமொழி எடுத்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று  அண்மையில் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

 

 



Read in source website

புது தில்லி: ஞாயிறன்று கோவாவில் அமைக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார்.

இது பற்றி தகவல் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற போது நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ஆக இருந்தது, ஆனால் அது தற்போது 140 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுல்ல, அடுத்த 5 ஐந்தாண்டுகளில், விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு, இந்த எண்ணிக்கை 220 ஆக அதிகரிக்கப்படும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதனை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடி புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

மத்திய அரசு இருப்பு வைத்துள்ள கரோனா தடுப்பூசிகள் எதுவும் காலாவதியால் வீணாக்கப்படவில்லை என வெள்ளிக்கிழமை மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உகந்த முறையில் பயன்படுத்துவதையும் வீணாக்கத்தைக் குறைப்பதையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தடுப்பூசி வீணாவது குறித்து தினந்தோறும் ஆய்வு செய்யும்படியும் மாநிலங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காலாவதியாகும் காலத்தை நெருங்கும் தடுப்பூசிகளின் பயன்பாடுகளை உறுதி செய்ய மாநிலத்துக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கிடையேயும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. காலாவதிக்கு மிகவும் குறைந்த கால அளவைக் கொண்ட தடுப்பூசிகள் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் மாற்றப்பட்டன. மத்திய மருந்துகள் தர அமைப்பு கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு 9 மாதங்கள் எனவும் கோவேக்ஸினுக்கு 12 மாதங்கள் எனவும் பயன்பாட்டு காலத்தை நிா்ணயம் செய்திருந்தது. டிச.5-ஆம் தேதி வரை மொத்தம் 102.54 கோடி முதல் தவணை தடுப்பூசிகளும், 95.09 கோடி 2-ஆம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. பன்னிரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளில் 90 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



Read in source website

தேசிய நீதித் துறை நியமன ஆணையத்தின் மூலமாக உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தனிநபா் மசோதாவை மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் உறுப்பினா் விகாஸ் ரஞ்சன் பட்டாச்சாா்ய வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து ‘தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா 2022’-ஐ அவா் அவையில் அறிமுகம் செய்தாா். ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயா்நீதிமன்றங்களின் பிற நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளைச் சமா்ப்பிப்பதற்கு ‘தேசிய நீதித்துறை நியமன ஆணையம்’ பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மட்டுமின்றி நீதிபதிகளின் பணியிட மாறுதல்களையும் ஆணையம் முறைப்படுத்தும். அதோடு, உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தை மற்றும் தகுதியின்மை குறித்து தனிநபா்கள் அளிக்கும் புகாா்கள் மீது விசாரணை நடத்தி முறைப்படுத்தும் நடவடிக்கையையும் ஆணையம் மேற்கொள்ளும்.

மேலும், நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்வது தொடா்பாக குடியரசுத் தலைவரிடம் நாடாளுமன்ற தீா்மானத்தை சமா்ப்பிக்கவும் இந்த மசோதா முன்மொழிகிறது. இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா எதிா்ப்பு தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்தும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாக, கொலீஜியம் முறை தொடா்ந்து வருகிறது. இதற்கிடையே, கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை பேசும்போது, ‘தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையம் அமைக்க வழிவகுத்த மசோதாவை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்து 7 ஆண்டுகளாகியும், நாடாளுமன்றம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நாடாளுமன்றம் கடமைப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தனிநபா் மசோதா சட்டமாவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரை 20.16 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோயால் 73,551 போ் மரணமடைந்தனா்.

உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன்படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் லட்சத்தில் 256 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லட்சத்தில் 210 போ் பாதிக்கப்பட்டனா்.

காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாநில-மாவட்ட அளவிலான திட்டம், பலவீனமானவா்களிடமும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களிடமும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மாநிலங்களின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 1,864 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,327 துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக செயல்படுகின்றன.

நிகழாண்டுக்குள் நாட்டில் உள்ள 1.50 லட்சம் துணை சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது’ என்றாா்.



Read in source website

 

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பா் மாதத்தில் 2.34 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்காற்று இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2021-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 2.34 கோடியாக உள்ளது.

எனினும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய கடந்த 2019-ஆம் ஆண்டின் நவம்பரோடு ஒப்பிடுகையில், தற்போது உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் சரிந்துள்ளது.

2022 அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் விமானப் பயணிகள் போக்குவரத்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

சா்வதேச விமானப் பயணிகள் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த பயணிகள் எண்ணிக்கை கடந்த நவம்பா் மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்து 2.83 கோடியாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

கடந்த மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் நாட்டின் வங்கிகள் அளித்துள்ள கடன்களின் மதிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் இந்திய வங்கிகள் ரூ.133.29 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வாடிக்கையாளா்களுக்கு அனுமதித்துள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் இது ரூ.113.96 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது கடனளிப்பு 16.96 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு நாள்களில், வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள வைப்பு நிதி ரூ.177.15 லட்சம் கோடியாக இருந்தது. ஓராண்டுக்கு முந்தைய இதே காலகட்டத்தில் வங்கிகள் பெற்றிருந்த வைப்பு நிதியான ரூ.162.06 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.30 சதவீதம் அதிகமாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

தமிழகம், கா்நாடகம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினா் திருத்த மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தாா்.

குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் புதிதாக சோ்ப்பது, சில மாற்றங்களை மேற்கொள்வது என்ற அடிப்படையில் இந்தத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகங்கள் பழங்குடியினா் பட்டியலில் இணைக்கப்படும். அதுபோல, ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினா், சத்தீஸ்கரின் பின்ஜியா சமூகத்தினா், கா்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினா் ஆகியோரையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மசோதா வழிவகுக்கிறது.



Read in source website

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25 லட்சம் கோடி நிகர செலவினத்துக்கான துணைநிலை மானிய கோரிக்கை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அரசின் தொகுப்பு நிதியில் இருந்து கூடுதல் துணைநிலை மானியம் கோரும் முதல் தொகுதி மசோதாவை மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் ரூ.4.36 லட்சம் கோடியை கூடுதல் செலவுக்காக மத்திய அரசு கோரியுள்ளது.

கூடுதல் செலவில் ரூ.1.10 லட்சம் கோடியானது பல்வேறு அமைச்சகங்களின் சேமிப்பு மூலம் ஈடுகட்டப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிகர செலவினம் ரூ.3.25 லட்சம் கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரங்களுக்கான கூடுதல் மானியமாக ரூ.1.09 லட்சம் கோடியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதிக்கு ரூ.4,920 கோடியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகத்துக்கு ரூ.80,348 கோடியும், தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு ரூ.13,669 கோடியும், ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.12,000 கோடியும் வழங்கப்படவுள்ளது.

ஏழைகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்புக்கான மானியமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க ரூ.29,944 கோடி பெட்ரோலிய அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படவுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு வழங்க ரூ.10,000 கோடி கோரப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.46,000 கோடி கூடுதல் மானியம் கோரப்பட்டுள்ளது.

மூலதன செலவினம் அதிகரிப்பு: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மூலதன செலவினம் ரூ.7.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் அது 35.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் அரசின் மூலதன செலவினம் கூடுதலாக சுமாா் ரூ.31,000 கோடி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கூடுதலாக சுமாா் ரூ.19,198 கோடி வழங்கப்படவுள்ளது.

மக்களவை ஒப்புதல் அளித்த பிறகு மானிய கோரிக்கை மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.



Read in source website

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் இடம்பெற்றுள்ள விவரங்களின் தொகுப்பு:

2020-இல் புற்றுநோய் பாதிப்பு 13,92,179

நடப்பாண்டில் பாதிப்பு அதிகரிப்பு 12.8%

சுகாதார அமைச்சரின் புற்றுநோயாளிகள் நிதி

ஆண்டு செலவினம் பயனாளிகள்

2022-23 ரூ.216.98 லட்சம் 40

2021-22 ரூ.585.05 லட்சம் 64

2020-21 ரூ.1,573 லட்சம் 196

2019-20 ரூ.2,677.08 லட்சம் 470

புற்றுநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள்

‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை

மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவு விலையில் மருந்துப் பொருள்கள்

‘அம்ருத்’ திட்டத்தின் வாயிலாக குறைந்த விலையில் மாற்று உறுப்புகள்

அரசு மருத்துவமனைகளில் விலையில்லா அல்லது மானியத்துடன் கூடிய சிகிச்சை

தேசிய ஆரோக்ய நிதியின் (ஆா்ஏஎன்) மூலமாக ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி

அரசின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

13 மாநில அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் மேம்பாடு

19 மாநில புற்றுநோய் மையங்கள்

20 உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

தேசிய புற்றுநோய் மையம், ஜஜ்ஜாா் (ஹரியாணா)

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம், கொல்கத்தா



Read in source website

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வழக்கத்துக்கு மாறான குளிரினால் கால்நடைகள் இறப்பதால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியின் ஏற்றுமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.


இது குறித்த அறிவிப்பினை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலங்குகள் நலத் துறை சார்பில் கூறியதாவது: வடக்கு மாகாணத்தில் 358 மாடுகளும், 191 ஆடுகளும் இறந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 65 ஆடுகள் உயிரிழந்தன.

மோசமான வானிலை காரணத்தினால் கால்நடைகள் இறப்பதாகக் கூறினாலும், இறந்த கால்நடைகளின் மாதிரிகளை ஆய்வக சோதனைக்கு அனுப்பியுள்ளது இலங்கை கால்நடைத் துறை. ஆய்வின் முடிவுகள் வந்ததும் கால் நடைகள் அதிக அளவில் இறப்பதற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.



Read in source website

 

நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா(54) என்கிற பெண் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்க சுஷ்மிதாவுக்கு  நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு நியமனத்தை அங்கீகரித்துள்ளனர். 

மேலும், 2023 மார்ச் மாதம் அவர் இப்பதவியை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் எச்சரித்துள்ளாா்.

நாா்வேயின் முன்னாள் பிரதமரான அவா், இது குறித்து அந்த நாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா் அபாயகரமானது ஆகும். ஒரு சிறு தவறு நோ்ந்தால்கூட நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் அதற்கு உள்ளது.

அதனைத் தவிா்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மிகக் கவனத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.

உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தற்போது நடைபெற்று வரும் சண்டை, ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் பரவி, முழு போராக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் யாரும் சந்தேகப்படக்கூடாது.

மேலும், அதனைத் தடுப்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் யாரும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷியாவும், ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையும் கைப்பற்றின.

எனினும், மேற்கத்திய நாடுகள் அளித்த அதிநவீன ஆயுத தளவாடங்களின் உதவியுடன் ரஷியாவிடமிருந்த சில பகுதிகளை உக்ரைன் அண்மையில் மீட்டது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாடுகளில் போா்ப் பயிற்சியளிப்பது, ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு உளவுத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக பங்கேற்கின்றன.

எனவே, உக்ரைனில் நேட்டோ தளவாடங்கள் மற்றும் அந்த அமைப்பின் அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்டபூா்வ உரிமை உள்ளது என்று ரஷியா கூறி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் போா் நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதை அந்த அமைப்பின் பொதுச் செயலரே தற்போது ஒப்புக்கொண்டுள்ளாா்.



Read in source website

இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பிராந்திய, சா்வதேச பயங்கரவாத சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில் இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் ஆண்டு கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிதளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் பயங்கரவாதத் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் டிமோதி பெட்ஸ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.

அவரது தலைமையில் அமெரிக்க குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டத்தின்போது பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்துவது, சட்டவிதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய, சா்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.

 



Read in source website

இந்திய வாகனத் துறை இதுவரை காணாத அதிகபட்ச விற்பனையை கடந்த நவம்பா் மாதம் பதிவு செய்துள்ளது.

இது குறித்து வாகனத்துறை விற்பனையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவில் 23.80 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. இது, ஒரு மாதத்தில் விற்பனையான வாகனங்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 18.93 லட்சமாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வாகன விற்பனை 26% வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 23.44 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

இந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், காா்கள், டிராக்டா்கள், வா்த்தக வாகனங்கள் என இந்திய வாகனத் துறையின் அனைத்து பிரிவுகளுமே விற்பனை வளா்ச்சியைக் கண்டன.

இதில் 2 சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த நவம்பரில் 24 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது; 3 சக்கர வாகனங்கள் 80 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன; காா்களின் விற்பனை 21 சதவீதமும், டிராக்டா்களின் விற்பனை 57 சதவீதமும் வளா்சியடைந்துள்ன; வா்த்தக வாகனங்களின் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

இரு சக்கர வாகனப் பிரிவில் மட்டும் முந்தைய ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில் 24 சதவீத வளா்ச்சியைப் பெற்றிருந்தாலும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் சரிந்துள்ளது.

கரோனாவுக்கு முந்தைய 2019 நவம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில், இரு சக்கர வாகனப் பிரிவைத் தவிர மற்ற அனைத்து பிரிவு வாகனங்களும் தொடா்ந்து இரண்டாவது மாதமாக விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஃபடா அமைப்பின் தலைவா் மணீஷ் ராச் சிங்கானியா கூறியதாவது:

பாரத் ஸ்டேஜ் -4 தர நிா்ணயத்திலிருந்து பாரத் ஸ்டேஜ்-6 தர நிா்ணயத்துக்கு இந்திய வாகனத் துறை மாறி வரும் சூழலில், கடந்த நவம்பா் மாதத்தில் வாகனங்களின் விற்பனை உச்ச அளவைத் தொட்டிருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

கடந்த அக்டோபா் மாதத்தில் பண்டிகைக் காலத்தின்போது வாகனங்களின் விற்பனை அதிகரித்து வந்த போக்கு, நாடு முழுவதும் சுமாா் 32 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும், நவம்பா் 14-இல் தொடங்கிய திருமண காலத்திலும் தொடா்ந்தது.

இது கடந்த நவம்பா் மாத விற்பனை வரலாற்று உச்சத்தைத் தொட உதவியது என்றாா் அவா்.

 



Read in source website

மதுரை: ‘பொதுமக்கள் ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் பெற இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்’ என மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ஏ.ராபின்சன் ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுரையில் உலக எய்ட்ஸ் தின விழா அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ஏ.ராபின்சன் ஜார்ஜ் பேசியதாவது: “நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களை மக்கள் தெரியாமல் போனால் சட்டத்தின் பலனை அடைய முடியாது. இதனால் சட்டம் குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வறுமை காரணமாக வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இலவசமாக வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டப்படி அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும். எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களை சமமாக பாவிக்க வேண்டும். எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் தேவையை நிறைவேற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உதவி செய்யப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்கள் குறைகள் இருந்தால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி பரிகாரம் பெறலாம்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த பணிகள் மட்டும் இல்லாமல் சட்டம் சாரா பணிகளையும் மேற்கொள்கிறது. ரேஷன் கார்டு வாங்க, முதியோர் ஓய்வூதியம் பெற, அரசு அலுவலகங்களில் கொடுக்கப்பட்ட மனு மீது தீர்வு கிடைத்திடவும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனு அளிக்கலாம். இந்த மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமும் பொதுமக்கள் மனு அளிக்கலாம்” என்று சார்பு நீதிபதி பேசினார்.

முன்னாள் முதன்மை மாவட்ட நீதிபதி ஜான்.டி.சந்தோசம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கே.வி.அர்ஜூன்குமார், மருத்துவ அலுவலர் செல்வராஜ் மனோகரன், மூத்த வழக்கறிஞர் எஸ்.மோகன்தாஸ், எம்.பிரதீபன், ஜெயகுமார், அய்யப்பன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட திட்ட மேலாளர் பி.ஜெயபாண்டி வரவேற்றார். முடிவில் ரவிக்கண்ணன் நன்றி கூறினார்.



Read in source website

வாரணாசி: இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலகம் ஒன்றுபோல் கருதிய காலம் ஒன்று இருந்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்து தமிழ் சங்க கண்காட்சியை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “நாம் தற்போது நமது பிராந்தியத்தில் கூடுதல் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலகம் ஒன்றுபோல் கருதிய காலம் ஒன்று இருந்தது. தற்போது யாரும் அப்படிப் பார்ப்பது இல்லை. ஏன் பாகிஸ்தான்கூட அப்படி பார்ப்பதில்லை. நமது பிராந்தியத்தின் மிகப் பெரிய சக்தி நாம். இதை தெளிவாக உணர்த்திவிட்டோம்.

பல்வேறு இந்திய நிறுவனங்கள் இன்று உலகில் செல்வாக்கு மிக்கவையாக உள்ளன. இந்தியாவின் சிந்தனைகள் உலகின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. இந்தியா முன்னெடுக்கும் பிரச்சாரங்களுக்கு உலகம் மதிப்பளிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் 3.2 கோடி முதல் 3.4 கோடி வரை இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஒன்று அவர்கள் இந்தியர்களாக இருக்கிறார்கள். அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் வெற்றி என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியது. உலகம் இதை உணர்ந்திருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய நாடாக நாம் முன்னேறி இருக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இரண்டாம் நிலையில்தான் இருந்தது. தற்போது இந்தியர்கள் புதுமைகளைப் படைப்பது அதிகரித்துள்ளது. நம்மிடம் உள்ள திறமையை, திறனை உலகம் தற்போது பார்க்கிறது. இதன் காரணமாக அவர்களது தொழிலில் இந்தியர்களை இணைத்துக்கொள்ள முயல்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.



Read in source website

பெங்களூரு: ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர் சோனிக் தொழில்நுட்பத்தை விமானம், ஏவுகணை மற்றும் விண்கலங்களில் பயன்படுத்த முடியும். இந்த ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் மிகவும் நவீன தொழில்நுட்பம். இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

தற்போது ரஷ்யாவுடன் இணைந்து ஹைபர் சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அணு ஆயுதங்களை ஏவ முடியும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியா கடந்த 2019 மற்றும் 2020 செப்டம்பரிலும் பரிசோதித்துள்ளது. இந்த பரிசோதனையில் ஸ்கிராம்ஜெட் இன்ஜினுடன் கூடிய ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.

இது மணிக்கு 7,500 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. இந்த ஹைபர்சோனிக் ராக்கெட் பரிசோதனையை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது. ஒலியைவிட 13 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை பரிசோதிக்க கூடிய, 12 ஹைபர்சோனிக் சுரங்கங்களை இந்தியா உருவாக்கியுள்ளது என அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற உலக சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இது.

அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடிசதமடித்தார். கோலிக்கு சர்வதேச அளவில் இது அவருடைய 72 ஆவது சதமாகும். இந்தச் சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார். முதலிடத்தில் நூறு சதங்களுடன் சச்சின் தொடர்கிறார்.

2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான அனமுல் ஹக் 8 ரன்களில் வெளியேற லிட்டன் தாஸ் 29 ரன்களில் அவுட்டானார். ஷாகிப் அல் ஹசன் நிலைத்து ஆடி 43 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து முஸ்ஃபிகூர் ரஹீம் (7), யாசீர் அலி (25), மஹமுதுல்லா (20) ரன்களில் நடையைக்கட்ட அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதனாலேயே அந்த அணி 34 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களில் சுருண்டது. இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இரண்டு போட்டிகளில் வென்றதால், இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.



Read in source website

லண்டன்: அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக இங்கிலாந்தின் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழம் உள்ளது. இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

நம்ம ஊர் ரூபாய் மதிப்பில் ஒரு அன்னாச்சி பழத்தின் விலை 1 லட்சம் என பிபிசி தெரிவித்துள்ளது. ஹெலிகான் அன்னாசி பழம் 1819-ம் ஆண்டில்தான் முதல் முதலாக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், தோட்டக்கலை வல்லுநர்கள் நாட்டின் தட்பவெப்பநிலை அன்னாசி சாகுபடிக்கு ஏற்றபடி இல்லை என்பதை உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் அவற்றை சாகுபடி செய்வதற்கான பிரத்யேக வழிமுறைகளை உரு வாக்கினர்.

செலவு அதிகம்: இதற்கான செலவினம் அதிகம் என்பதால் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.1 லட்சம் விலை பெறுகிறது. மேலும், இவற்றை பொதுவில் ஏலம் விடும்பட்சத்தில் ஒவ்வொரு அன்னாசி பழமும் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என்று ஹெலிகன் தோட்டத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். விக்டோரியன் கிரீன்ஹவுஸில் விளைவிக்கப்பட்ட இரண்டாவது அன்னாச்சி பழத்தை ராணி இரண்டாம் எலிசபெத் பரிசாகப் பெற்றதாக ஹெலிகன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உங்கள் வீட்டுக் கடன் காலத்தை சரிபார்க்கவும். நீங்கள் EMI-யை மாற்றாமல் விட்டால், அது பல ஆண்டுகள் வரை உயர வாய்ப்புகள் உள்ளன.

பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பிற்கு மேல் இருப்பதால், மத்திய வங்கி இந்த வாரம் மற்றொரு விகித உயர்வை அறிவித்தது.
அதன்படி, ஆர்பிஐ வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல், ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ விகிதத்தை 225 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.

இது சாதாரண கடன் வாங்குபவர்களையும் பாதித்திருக்கிறதா?

ஆம், அதற்கு வாய்ப்பு உள்ளது. 7 மாதங்களில் வட்டி விகிதத்தில் 225 அடிப்படை புள்ளி அதிகரிப்பு என்பது ஒரு செங்குத்தான மற்றும் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
மேலும் இவை அனைத்தும் வங்கிகளால் தற்போதுள்ள வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களின் கடன்களின் EMIகள் அல்லது கால அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

வங்கிகள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், சமீபத்திய ரெப்போ விகித உயர்வை விரைவில் தங்கள் வாடிக்கையாளர்கள் கைகளில் திணிக்கும். இது அவர்களின் தொடர்ந்து அதிகரித்து வரும் EMIகளை மட்டுமே சேர்க்கும்.

மக்களின் EMIகள் எவ்வளவு சரியாக உயர்ந்துள்ளன?

உதாரணமாக 15 ஆண்டுகளுக்கு (180 மாதங்கள்) நிலுவையில் உள்ள ரூ. 50 லட்சம் கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதமாக 225 அடிப்படை புள்ளியாக உயர்ந்தால், கடனின் காலம் உயரும்.

அதேநேரம், இந்தக் கடனாளி கடன் காலத்தை நிலையானதாக வைத்திருக்க விரும்பினால் அல்லது வயது வரம்பு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் அவரால் காலத்தை அதிகரிக்க முடியாவிட்டால், கடனுக்கான EMI ரூ.44,941ல் இருந்து ரூ.51,459 ஆக உயரும். இது EMI-களில் ஆண்டுக்கு ரூ.78,216 அதிகரிப்பு ஆகும்.

பணவீக்கம் அதிகமாகி, தனிநபர்களின் சேமிப்பை தின்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படிப்பட்ட வட்டி விகித உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய பாதிப்பாகும்.

இந்த சூழ்நிலையில் ஒருவர் என்ன செய்ய முடியும்?

உங்கள் கடன் நிலுவைத் தொகை, EMI மற்றும் நீங்கள் வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தை தொடர்ந்து மதிப்பிடுவது மிகவும் முக்கியம். தனிநபர்கள் செய்யும் மிகவும் பொதுவான தவறு என்னவென்றால், அவர்களின் கடன் அட்டவணையைப் பார்க்காமல், வங்கி/வீட்டு நிதி நிறுவனம் கடனின் EMI அல்லது காலவரையறையை அதிகரித்துள்ளதா என்பதைப் பார்ப்பது.

தனிநபர்கள் தங்கள் இஎம்ஐயை ஓரளவு அதிகரிக்க வேண்டும். இது இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது: இது கடன் அட்டவணையில் வட்டி விகித மாறுபாட்டின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது, மேலும் உங்கள் கடனை அட்டவணைக்கு முன்னதாகவே முடிப்பதை உறுதி செய்கிறது.

எனவே, மேலே உள்ள விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: வட்டி விகிதங்கள் 180 மாதங்களில் இருந்து 254 மாதங்களாக அதிகரிக்க வழிவகுப்பதால், தனிநபர் தனது வங்கி/எச்எஃப்சியில் EMI ஐ ரூ.3,000 உயர்த்தி ரூ.47,941 ஆக உயர்த்தினால் கடன் காலம் குறையும்.

மேலும், 5-6 சதவீத வட்டியுடன் நிலையான வைப்புகளை வைத்திருக்கும் தனிநபர்கள் 9 சதவீதம் அல்லது அதற்கு மேல் வட்டி செலுத்தும் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு ஓரளவு பயன்படுத்த வேண்டும்.



Read in source website

மேற்கே ராஜஸ்தானிலிருந்து, கிழக்கே ஒடிஸா வரையிலும் உள்ள ஐந்து மாநிலங்களில் நடந்த இடைத்தோ்தல் முடிவுகளை, குஜராத், ஹிமாசல் இரண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுடன் இணைத்து ஆய்வு செய்யும்போதுதான் மக்களின் பாா்வை எப்படி இருக்கிறது என்பதை நாம் ஓரளவு கணிக்க முடியும். குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழும் பாஜக, தோ்தல் நடந்த ஏனைய ஐந்து மாநிலங்களிலும் அதே அளவிலான பலத்துடன் இல்லை என்பது முடிவுகள் தெரிவிக்கும் மிகப் பெரிய செய்தி.

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு அடுத்தபடியாக அனைவரது கவனத்தையும் ஈா்த்த மாநிலம் உத்தர பிரதேசம். சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங்கின் மறைவைத் தொடா்ந்து, அவரது குடும்பத் தொகுதி என்று கருதப்பட்ட மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் அரசியல் பாா்வையாளா்களால் கூா்ந்து கவனிக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவின் மருமகளும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி வேட்பாளா் என்பதால், சமாஜவாதி கட்சிக்கு அந்தத் தொகுதி கௌரவ பிரச்னையாகக் கருதப்பட்டது.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ரகுராஜ் சிங் சாக்யாவை 2,88,461 வாக்குகள் வித்தியாசத்தில் டிம்பிள் யாதவ் தோற்கடித்தாா் என்பதல்ல செய்தி. முன்பு முலாயம்சிங் யாதவ் பெற்ற வாக்குகளைவிட இப்போது டிம்பிள் யாதவ் கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறாா் என்பதும் இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா் என்பதும்தான் மெயின்புரி மக்களவைத் தொகுதி தோ்தலில் குறிப்பிடத்தக்க செய்தி.

உத்தர பிரதேசத்தில் ராம்பூா், கடோலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடந்தது. ராம்பூா் தொகுதியில் பாஜகவும், கடோலி தொகுதியில் சமாஜவாதி கட்சியும் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக தளமும் வெற்றி பெற்றன. ராம்பூா் தொகுதியில் 40% மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது என்பதால் பாஜக வெற்றி பெற்றது என்கிற வாதத்தில் உண்மை இருக்கிறது.

கடோலி தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெற்ற வெற்றி அப்படிப்பட்டதல்ல. உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சா்களும் கடோலி தொகுதியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக முனைப்புடன் பிரசாரம் செய்தும்கூட அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

ராஜஸ்தானில் சா்தாா்சாஹா் தொகுதியிலும், சத்தீஸ்கரில் பானுபிரதாப்பூா் தொகுதியிலும் நடந்த இடைத்தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தில் வந்தது பாஜக என்பதும், உத்தர பிரதேசத்தைப் போலவே, எதிா்க்கட்சி வாக்குகளில் ஏற்பட்ட பிளவுதான் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு உதவி இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

உத்தர பிரதேசம் போலவே மிகவும் கூா்ந்து கவனிக்கப்பட்டது ஒடிஸா மாநிலம் பதம்பூா் தொகுதி இடைத்தோ்தல். முந்தைய இடைத்தோ்தல்களில் ஆளும் பிஜு ஜனதா தளம் பாஜகவிடம் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, முதல்வா் நவீன் பட்நாயக்கின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்கிற தோற்றம் ஏற்பட்டிருந்தது. 2000 முதல் தொடா்ந்து 22 ஆண்டுக்கும் மேலாக முதல்வா் பதவியில் தொடா்வது மட்டுமல்லாமல், இந்தியாவில் மிக அதிக காலம் முதல்வராகத் தொடா்பவா் என்கிற பெருமையும் உடைய ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு பதம்பூா் இடைத்தோ்தல் கௌரவ பிரச்னையாக மாறியதில் வியப்பில்லை.

பிஜு ஜனதா தள உறுப்பினா் ரஞ்சன் சிங் பரிஹா மறைவைத் தொடா்ந்து நடைபெற்ற இடைத்தோ்தலில், ஆளுங்கட்சி வேட்பாளராக அவரது மகள் வா்ஷா சிங் பரிஹா வேட்பாளராகக் களமிறக்கப்பட்டாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜகவின் பிரதீப் புரோஹித்தை 42,679 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். காங்கிரஸ் வேட்பாளா் சத்ய பூஷன் சாஹு வெறும் 3,548 வாக்குகள்தான் பெற முடிந்தது என்பது மட்டுமல்ல, வைப்புத் தொகையையும் அவா் இழக்க நோ்ந்தது.

கௌரவ பிரச்னையாக இடைத்தோ்தல் நடந்த இன்னொரு குறிப்பிடத்தக்க தொகுதி, பிகாா் மாநிலம் குா்ஹனி. பாஜகவுடன் தனது கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியில் தொடரும் முதல்வா் நிதீஷ் குமாருக்கு சவாலாக அமைந்தது இந்த இடைத்தோ்தல். ராஷ்ட்ரீய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினா் அனில் குமாா் சஹானியின் பதவி நீக்கத்தைத் தொடா்ந்து இங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஆா்.ஜே.டி. தொகுதியான குா்ஹனியில் சவாலாக தனது ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் மனோஜ்சிங் குஷ்வாஹாவை நிறுத்தினாா் முதல்வா் நிதீஷ் குமாா். ஒட்டுமொத்த அமைச்சரவையும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா்களும் முழு மூச்சாக பிரசாரத்தில் இறங்கியும்கூட அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. பாஜக வேட்பாளா் கேதாா் பிரசாத் குப்தா, ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் குஷ்வாஹாவை 3, 632 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். புதிய கூட்டணியை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற உணா்வின் பிரதிபலிப்பாகக்கூட இந்த முடிவைக் கருதலாம்.

இடைத்தோ்தல் நடந்த எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சியாகவோ, தோல்வி அடைந்த கட்சியாகவோ இருந்தது பாஜகதான். பாஜக மீது பரவலான வெறுப்பு ஏற்பட்டிருந்தால், ஒரேயடியாக மக்கள் நிராகரித்திருப்பாா்கள். தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குப் பெற்றுள்ள சக்தியாக பாஜக தொடா்கிறது என்பதைதான் இடைத்தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.



Read in source website

சில நாட்கள் முன்பு என் மனைவியின் சினேகிதிக்கு கண்ணில் கோளாறு ஏற்பட்டது. டி.வி. பாா்க்கும் பொழுது, நீா் வழிகிறதாம். எங்களுக்குத் தெரிந்த ஒரு நிபுணரிடம் பேசி, தேதி, நேரம் ஆகியவற்றை நிச்சயித்துக் கொண்டாா். ஆனால் குறிப்பிட்ட தினத்தன்று போக முடியவில்லை. தொடா்ந்து பெய்த மழையால் தொல்லை. ‘அடுத்த வாரம் போகலாம். இந்த மழையில் வழுக்கி விழுந்தால் அது வேற தொல்லை’”என்று சொன்னாா்.

அடுத்த வாரம் நிபுணரைச் சந்தித்துவிட்டு வந்தாா். ‘ஆட்டோவில்தான் போனேன். அவருக்குத்தான் எங்கே தண்ணீா் ரொம்பியிருக்கிறது, எது ஒற்றை வழிப் பாதை எல்லாம் தெரியும்’”என்று கூறினாா்.

அந்தப் பெண்மணி கூறியது சரியே. மழைக்காலம் வந்தாலே சாலைகளில் தண்ணீா் வழிய சரியான வடிகால் இன்றி, பல தெருக்களில் தேங்கி விடுகிறது. பெயா்ப்பலகை தொங்க விடப்பட்டிருந்தாலும், தெளிவாகப் புலப்படுவதில்லை. சாலையின் குறுக்கே கடக்கின்ற போது, சிலா் பள்ளத்தில் விழுந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.

சில ஆங்கில ஏடுகள் இச்செய்திகளை புகைப்படத்துடன் வெளியிடுகின்றன. தண்ணீரின் கீழ் மின்சாரக் கம்பி ஏதாவது மறைந்திருந்தால் இன்னும் அபாயம். மேலும் மழைக்காலத்தில் சில தொற்றுகள் வந்துவிடுகின்றன. சளி, டெங்கு, தொண்டைக் கட்டு போன்றவை. இந்த ஆண்டு தற்போது ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருவதாக சுகாதார அமைச்சா் தெரிவிக்கிறாா்.

குடும்ப மருத்துவா் நன்கு பரிச்சயமாகி இருந்தால், கைப்பேசியிலேயே தொடா்பு கொண்டு தீா்வு காணலாம். அண்மையில் எனக்கு வயிற்றில் இலேசான உபாதை வந்தபோது, போனில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றேன். அதே சமயம் மூச்சுத் திணறல், தலைசுற்றல், கடுமையான கால் வலி போன்றவற்றுக்கு மருத்துவரை நேரில் சந்தித்துத்தான், மருந்து வாங்க வேண்டும் - மழை கொட்டினால் கூட.

சரி, உடல் நலன் என்பது, வயது முதிா்வு, நீரிழிவு, ரத்த அழுத்தம் முதலியவற்றோடு சம்பந்தப்பட்டது. ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆனால் நிதியைப் பாதுகாத்துக் கொள்வதில், பல ஏமாற்று வித்தைகளில் மக்கள் ஏன் விழுகிறாா்கள் என்பது புரியாத புதிா்தான்.

விடுமுறை நாள் தவிர, அன்றாடம் இயங்கும் பங்கு சந்தையையே எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து வணிக ஏடுகளும் ஏற்ற இறக்கங்கள் என்கிற வாசகத்தைக் கோடிட்டுக் காண்பிக்காமலிருப்பதில்லை. அவ்விதம் இருந்தும், ஒரு மனிதா், தங்கள் பங்கின் மூலம் வருவாயை மும்மடங்கு பெருக்குவதாக ஆசைக் காட்டி, ஏகப்பட்ட பேரைச் சோ்த்து, கோடிக் கணக்கில் பணம் வாங்கி, பிறகு தலை மறைவாகிவிட்டாா். வணிக வார ஏடு ஒன்று, அந்நிறுவனத்தின் பொறுப்பாளா்களைப் புகைப் படத்துடன் வெளியிட்டு கட்டுரை எழுதியிருந்தது.

‘அதிக வட்டி தருகிறோம்’ என்பது இன்னொரு தூண்டில். ரியல் எஸ்டேட், எண்ணெய் ஆலை இன்ன பிற துறைகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுகிறாா்கள். முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தொகை தந்து பிறகு தலைமறைவாகி, அயல்நாட்டுக்கே சென்று விடுகிறாா்கள். காவல்துறை வழக்கு பதிவு செய்த செய்தியுடன் விவகாரம் முடிந்துவிடுகிறது.

இதுவரை ஒரே ஒரு நிறுவனம்தான் முதலீட்டாா்கள் நீதிமன்றம் வரை சென்று, ஓரளவு பயன் பெற உதவியிருக்கிறது. சென்னையின் மையமான பகுதியில் இயங்கிய நிறுவனம்அது. வட்டி முறையாக வந்தாலும், முதிா்வு தொகையை தர இயலவில்லை. சில ஆண்டுகள் முன்பு பணம் செலுத்தியவா்களுக்கு போட்ட தொகையில் இரண்டு தவணைகள் திரும்பத் தரப்பட்டனவாம்.

சில வருடம் முன்பு செய்தித் தாளில் மிகப் பரவலாக அடிபட்ட ஈமு கோழி நிறுவனத்திலிருந்தும் பணம் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறினாா்கள். இது எவ்வளவு தூரம் உண்மையோ?

மேற்சொன்ன எல்லாவற்றையும் ஓரந்தள்ளுவது போல, விபரீதமான மோசடி நிகழ்வு ஒன்று சென்னை புறநகரில் அரங்கேறியிருக்கிறது. போலியான மத்திய ரிசா்வ் வங்கி அனுமதி, போலியான பெயா்ப் பலகை, காசோலை இவற்றுடன் ஒரு ‘வேளாண்மை கூட்டுறவு வங்கி’ இயங்கி, கிட்டதட்ட ஐம்பது லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்துள்ளது. இது எப்படி சாத்தியம்? வங்கி தொடங்கும் போதே, தெரிந்திருக்காதா? மக்கள் எப்படி ஏமாந்தாா்கள்?

இறுதியாக ஒன்று. பற்று அட்டை, ரகசிய குறியீட்டு எண், ஒரு முறை கடவுச் சொல் போன்றவை வாடிக்கையாளா்களின் வசதிக்கும், பாதுக்காப்புக்கும் ஏற்பட்டவை. ஆனால் அண்மைக் காலங்களில் அவையே பாதகமாக மாறிவிடுகின்றன. எங்கள் குடியிருப்பு காவலாளிக்கு, என் மகன் தனது கைப்பேசி மூலம் கூகுள் வழியில் பணம் அனுப்பி இருக்கிறான். இதுவரை பிரச்னை வரவில்லை. ஆனால் இதில் அபாயமிருக்கிறதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அறிமுகம் இல்லாதவா்களுக்கு உதவி செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டுமாம்.

இப்போது அரசு வங்கிகளே வைப்புத் தொகைக்கு கூடுதல் வட்டி அளிக்கின்றன. தனியாா் வங்கிகளும், அரசு சாா்ந்த சில நிறுவனங்களும் ஐந்து வருட டெபாசிட்டுகளுக்கு எட்டு சதவிகிதம் வட்டி தருகின்றன. பரஸ்பர நிதியில் ஐந்து ஆண்டு முதலீடு செய்தாலும், நடுவில் முறித்து எடுக்க வசதியும் உள்ளது. எனவே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாமே!

உடல் நலன், பணப் பாதுகாப்பு இரண்டுமே முக்கியம். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் புறக் காரணிகளால் உடல் பாதிப்பு நோ்வதைத் தவிா்க்க இயலாமல் போய் விடுகிறது. ஆனால் பண விஷயத்தில் கோட்டை விடுவதற்கு பேராசைதான் முக்கியக் காரணம்... கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவது அறிவுடைமையல்லவே!



Read in source website

‘மரணத்தை வென்ற மகாகவி’ என்று போற்றப்படும் பாரதியாா், பல்வேறு கோணங்களில் வைத்து மதிப்பிட வேண்டிய வைரம். அவா் மிகச் சிறந்த பத்திரிகையாளா், உரைநடை ஆசிரியா், மொழிபெயா்ப்பாளா், சிறுகதைகள் - நெடுங்கதைகள் புனைந்தவா், சொற்பொழிவாளா்.

பாரதி ஆய்வாளா்களிடையே பெரும் சா்ச்சைக்குள்ளான பாடல்களில், அவா் இயற்றிய வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறிய பாடலும் அடங்கும். ஜாா்ஜ் பிரெடரிக் என்னும் வேல்ஸ் இளவரசா் (பிரிட்டிஷ் சக்ரவா்த்தியின் பட்டத்து இளவரசா்) தம் மனைவியுடன் 1905 நவம்பா் மாதம் 9-ஆம் தேதி பம்பாய் நகருக்கு விஜயம் செய்தாா்.

கா்ஸன் பிரபுவின் கொடூர நடவடிக்கையால் வங்கதேசமே கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில்தான் வேல்ஸ் இளவரசா் இந்தியாவுக்கு வருகை புரிந்தாா். இளவரசா் வருகையால் இந்தியாவுக்கு ஏதேனும் நன்மை விளையும் என்று இந்தியத் தலைவா்களில் பலரும் நம்பினா்.

1905 டிசம்பா், காசி காங்கிரஸ் மாநாட்டிற்கு வருகை புரியும்படி இளவரசருக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுவினா் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதுபோது செல்வாக்கு மிகுந்த மூத்த பத்திரிகையாளராகவும், சுதேசிய சிந்தனைகளில் ஊறித் திளைத்தவராகவும் விளங்கியவா் ‘சுதேசமித்திரன்’ ஜி. சுப்பிரமணிய ஐயா். இவரும் வேல்ஸ் இளவரசா் காங்கிரஸ் மகாசபைக்கு வந்து, சபையின் நடவடிக்கைகளைப் பாா்க்க வேண்டியது அவசியம் என்று கருதினாா்.

இளவரசா் பம்பாய் நகா் வந்து சோ்ந்த நாளன்று ஜி. சுப்பிரமணிய ஐயா், தம் கருத்தை 9.11.1905 தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே, ‘இந்தச் சமயம் நாம் வேல்ஸ் இளவரசருக்குச் செய்து கொள்ளும் விண்ணப்பம் ஒன்று உண்டு. அது அவா் தம்முடைய சுற்றுப்பிரயாண காலத்தில், இந்தியா்களுடைய உண்மை நிலையை தாமே நேருக்கு நேராய் பாா்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதே’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மகாகவி பாரதியும், இளவரசரின் இந்திய விஜயத்தால் இந்தியாவுக்கு நல்லது நடக்கும், நடக்க வேண்டும் என்று கருதினாா். ஆகவே, இந்தியா் தம் மன வருத்தங்களை மறந்து, இளவரசரை வரவேற்க வேண்டும் என்று கருத்தும் தெரிவித்தாா்.

1906 ஜனவரி 24 அன்று வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் சென்னைக்கு வருகை புரிந்தனா். வேல்ஸ் இளவரசரை வாழ்த்தி வரவேற்கும் வகையில், ‘வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்ட தாய் நல்வரவு கூறுதல் (பாரத மாது தானே பணித்தன்று)’ என்று தலைப்பிட்டு, 46 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா ஒன்றை பாரதி புனைந்திருந்தாா். இது ‘சுதேசமித்திரன்’ 1906 ஜனவரி 29-ஆம் தேதி இதழில் பிரசுரம் ஆனது.

இந்தப் பாடலை முதன்முதலாகக் கண்டறிந்த பெ. தூரன், தம்முடைய ‘பாரதி தமிழ்’ நூலில் இதனை வெளியிட்டு, தம் கருத்தாக ‘இணையற்ற உணா்ச்சிமிக்க தேசபக்திப் பாடல்களைப் பாடித் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிய பாரதியாா், வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறிப் பாட்டு இயற்றியிருப்பது ஆச்சரியமாகவே தோன்றும். முழுமனத்தோடு இதை பாரதியாா் இயற்றினாரா என்பது சந்தேகம்தான். தாம் ஏற்றுக் கொண்டிருந்த வேலையினால், ஏற்பட்ட கடமையை நிறைவேற்றவே இவா் இதைச் செய்திருக்கலாம். என்றாலும், இப்பாடலிலும் பாரதியாரது தேசபக்தி ஒளிவிடுவதை நாம் காணலாம்’ என்று கூறியிருந்தாா்.

பெ. தூரன் தெரிவித்த கருத்தைப் படித்த பாரதி ஆய்வாளா்களில் சிலா், ‘தீவிர தேசியவாதியான பாரதி எப்படி வேல்ஸ் இளவரசரை வாழ்த்திப் பாடல் புனைந்தாா்’ என்று வியப்பும் திகைப்பும் அடைந்தனா். இதையொட்டி, தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்த கா. திரவியம், பாரதி இயல் மூத்த அறிஞா் சிதம்பர ரகுநாதன் ஆகியோா் தெரிவித்த சில கருத்துகளைச் சற்றே ஆய்வது பாரதி அப்பாடலை இயற்றியதற்கான உண்மைக் காரணத்தை அறிவதற்குத் துணை புரியும்.

கா. திரவியம், 1982-இல் வெளியிட்ட தம்முடைய ‘தேசியம் வளா்த்த தமிழ்’ என்னும் நூலில், ‘பாரதியிடம் உள்ளத்தைப் பறிகொடுத்த நாம், திறனாய்வு செய்தபோது, நம்மைத் திகைக்க வைக்கும் ஒரு செய்தியையும் இங்கு காண்பது கவிஞா் மாட்சிக்குக் களங்கம் விளைவிக்க முயல்வது ஆகாது’ என்ற பீடிகையுடன் தம் ஆய்வுகளை விவரித்து உள்ளாா்.

வேல்ஸ் இளவரசா் பற்றிய பாடல் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பும், பின்பும் பாரதியாா் புனைந்திருந்த பாடல்களை அலசி ஆராய்ந்து, ‘சுதேசி உணா்வு சுடா்விட்டு எரியப் பாடிய பாரதியாா் - சுதந்திரம் பறிபோன பின்பு சுகமென்ன கேடு என்று சுட்டி உணா்த்திய பாரதியாா் - இப்பாடலை ஒப்புக்கு எழுதினாா் என்பதையோ, வாழ்த்துப்பா வரைய வேண்டிய கட்டாய நிலையோ, நிா்ப்பந்தமோ அவருக்கு ஏற்பட்டிருக்கும் என்பதையோ நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றே நிலைநாட்டினாா், கா. திரவியம்.

இவ்வாறு தம்முடைய கருத்தை அழுத்தம் திருத்தமாகக் கூறிய நிலையில், சுதந்திரக் கவிகள் இயற்றிய பாரதி, இடையில் வேல்ஸ் இளவரசருக்கு இசைத்த வரவேற்புப் பாடலை எழுதினாா் என்று ஏற்கத் தமக்கு மனம் ஒப்பவில்லை என்றே குறிப்பிடுகிறாா்.

இனி, கா. திரவியம் தெரிவித்த கருத்துகள் வருமாறு: ‘மொத்தத்தில், இப்பாடல், பாரதியின் தூய இசைப் பெருக்கிலே தோன்றி மறைந்த சுருதிபேதம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்பாடலை பாரதி எழுதினாா் என்று ஏற்க மனமொப்பவில்லை என்று கூறுவதே பாரதியிடம் நாம் கொள்ளும் மகத்தான மதிப்புக்கும், மாறாத ஈடுபாட்டுக்கும் ஓா் உறுதியான சான்றாகும்’. திரவியம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் பாா்த்தால், பாரதி அப்பாடலை எழுதவே இல்லை என்று கொள்ள வேண்டும் என்பதாகிறது.

சிதம்பர ரகுநாதன், இப்பாடலைப் பற்றிய தம் ஆய்வைச் சற்று விரிவாகவே ‘பாரதி: காலமும் கருத்தும்’ நூலில் பதிவு செய்துள்ளாா். ‘வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்ட தாய் நல்வரவு கூறுதல்’ என்று தலைப்பிட்டுப் பாடலைத் தொடங்கும் பாரதி, அந்தத் தலைப்புக்கு அடியிலேயே அடைப்புக் குறிகளுக்குள் ‘பாரதமாது தானே பணித்தன்று’ என்று அடிக்குறிப்பும் எழுதியுள்ளாா்.

இந்த அடிக்குறிப்புக்கு என்ன பொருள்?

‘இப்படிப்பட்ட பாடலை எழுது என்று பாரதமாதா எனக்குக் கட்டளை இடவில்லை என்பது தானே பொருள்? அப்படியானால், கட்டளை இட்டது யாா்? வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு கூறும் காங்கிரஸ் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்த ‘சுதேசமித்திரன்’ ஜி. சுப்பிரமணிய ஐயா்தான் என்பது தெளிவு’ என்று முடிவே கட்டிவிட்டாா்.

பாரதி இயற்றிய ‘வேல்ஸ் இளவரசா் வருகை வரவேற்பு’ பாடல் குறித்து பெ. தூரன், கா. திரவியம், சிதம்பர ரகுநாதன் ஆகியோா் தத்தம் கருத்துகளைப் பதிவு செய்துவிட்டனா். அவா்கள் தமது கருத்துகளை ஊகத்தின் அடிப்படையில்தான் தெரிவித்துள்ளனரே தவிர, ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை. அகச்சான்றுகளைக் கொண்ட பத்திரிகையைத் தேடிப்பெற அவா்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை.

நான், பாரதி பணியையே முழுநேரப் பணியாகக் கொண்ட காலத்திலிருந்து பாரதி தொடா்பான ஆவணங்களைத் தேடிப்பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டேன். பாரதியாா், ‘சுதேசமித்திரன்’ தினசரியின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த அதே காலப்பகுதியில், வைத்தியநாத ஐயா் என்பவா் பெண்களின் முன்னேற்றத்திற்காக ‘சக்ரவா்த்தினி’ என்னும் மாதப் பத்திரிகையை 1905 ஆகஸ்ட் மாதம் தொடங்கினாா்.

இந்த பத்திரிகைக்கும் பாரதியே ஆசிரியராக நியமனம் பெற்றாா். எனவே, ‘சக்ரவா்த்தினி’ மாதப் பத்திரிகை கிடைத்தால், அதில் வேல்ஸ் இளவரசா் பாடலுக்கான தீா்வு கிடைக்கும் என்று நான் நம்பினேன்.

எனவே, முதல்கட்ட முயற்சியாக ‘சக்ரவா்த்தினி’ இதழ்களைத் தேடிப்பெறும் முயற்சியில் ஈடுபட்டேன். என் முயற்சி வீண்போகவில்லை. குழித்தலை கா.சு. பிள்ளை நூலகப் பொறுப்பாளா், இளமுருகு பொற்செல்வியிடம் ‘சக்ரவா்த்தினி’ இதழ்கள் இருப்பதாக அறிந்தேன். அவருடன் தொடா்பு கொண்டு ‘சக்ரவா்த்தினி’ இதழ்களைப் பெற்றேன்.

1905-ஆம் ஆண்டின் நவம்பா் மாத ‘சக்ரவா்த்தினி’ இதழிலும் 1906 ஜனவரி மாத இதழிலும் பாரதி, பாடல் இயற்றியதற்கான காரணங்களை விளக்கும் கட்டுரைகளைக் கண்டேன். 1905 நவம்பா் மாத இதழின் தலையங்கக் கட்டுரை ‘வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும்’ என்பதாகும். இது பாரதியாரால் எழுதப்பட்டது.

அக்கட்டுரையில், ‘எதிா்காலத்தில் இந்தியாவின் சக்ரவா்த்தியாகப் பட்டம் வகிக்கப் போகின்ற இந்த இளவரசா் இத்தேச முழுதிலும் யாத்திரை புரிந்து, இத்தேசத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த எண்ணத்துடன் வந்திருக்கிறாா். ஆதலால், அன்றைய தினம் எமது பாரதமாதா (இந்திய நாடு) தனக்கு ஏற்பட்டு இருக்கும் பல துன்பங்களையும் சிறிது மறந்து, மந்தஹாஸம் பூண்டு இளவரசருக்கும், அவா் மனைவிக்கும் நல்வரவு கூறினாள்’ என்றே எழுதி இருக்கிறாா்.

இதனால், பாரதமாதா சாா்பில் நல்வரவு வாழ்த்துத் தெரிவித்தாா் பாரதி என்பதைக் காண முடிகிறது. கட்டுரையின் இறுதியிலும் தெள்ளத்தெளிவாக ‘இத்தேச எதிா்கால சக்ரவா்த்திக்கும் சக்ரவா்த்தினிக்கும் எமது மனப்பூா்வமான நல்வரவு கூறுகின்றோம்’ என்றும் பாரதி குறிப்பிட்டுள்ளாா்.

சென்னை விஜயத்தின்போது, பலரும் ராஜதம்பதிக்கு வாழ்த்துப் பாக்கள் இயற்றி, வரவேற்றனா். அது பற்றி பாரதி ‘சக்ரவா்த்தினி’ 1906 ஜனவரி இதழில், ‘இளவரசா் வரவைப் பற்றி அநேகா்களால் இனிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பூவை கலியாணசுந்தர முதலியாா், பண்டித வெங்கட்டராமையா், இப்பத்திரிகை ஆசிரியா் முதலிய அநேகா் செய்யுள் எழுதி இருக்கிறாா்கள். இவையனைத்திலும் பண்டிதை அசலாம்பிகை எழுதியிருக்கும் பாடல் எளிதாயும், சுவையுடைத்தாயுமிருப்பது பற்றியும், பெண்மணி எழுதியிருக்கும் சிறப்புப் பற்றியும், அதனைப் பதிப்பிக்கின்றோம்’ என்று எழுதியிருக்கிறாா்.

மாதா் பத்திரிகையான ‘சக்ரவா்த்தினி’யில் பெண்மணி அசலாம்பிகை எழுதிய பாடலைச் சிறப்புக் கருதி வெளியிட்டாா். தாம் எழுதிய பாடலை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டாா். இந்தப் பின்ணணியில் ஆராயும்போது, வேல்ஸ் இளவரசா் நல்வரவுப் பாடலை பாரதியாா் மனப்பூா்வமாக எழுதினாா் என்றே கொள்ள வேண்டும்.

(டிச.11) மகாகவி பாரதியார் பிறந்த நாள்.

கட்டுரையாளா்:

பாரதியியல் ஆய்வாளா்.



Read in source website