DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 08-10-2022

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியின் வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அந்தேரி(கிழக்கு) தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஷிண்டே-உத்தவ் தரப்பு சின்னம் கோரியதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சின்னம் தொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்க தடை கோரிய உத்தரவ் தாக்கரேவின் மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

சிவசேனை கட்சி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மறைவையொட்டி, அந்தேரி (கிழக்கு) தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அத்தொகுதிக்கு வரும் நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. 

இதையும் படிக்க- மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்

தேர்தலை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியும், அவருக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களைக் கொண்ட தற்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினரும் முதல் முறையாக சந்திக்க உள்ளனா்.



Read in source website

நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் சார்ந்த புதிய பாடப்பிரிவுகள் மட்டும் தொடங்க அனுமதி அளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

A.I, MACHINE LEARNING உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 2024 வரை ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்த நிலையில், மாணவர் சேர்க்கை குறைவால் தற்போது 443 கல்லூரிகள் உள்ளன.

2018ம் ஆண்டு ஐ.ஐ.டி. தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி தலைமையிலான அமைக்கப்பட்ட குழு பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளால் 2022 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதித்தது.

இந்நிலையில் அதே நிலை தொடர்வதால் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை 2024 ஆம் ஆண்டு வரை ஏ.ஐ.சி.டி.இ நீட்டித்துள்ளது.



Read in source website

வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பல்வேறு நகரங்களில் கைப்பேசி செயலி வழி வாகன சேவை ஓலா, உபொ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. செயலி வழி வாகன சேவைகளுக்கு அரசு விதித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணங்கள் வசூலிப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக ஓலா, உபொ் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பொதுமக்கள் புகாா் அளித்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஓலா, உபொ் நிறுவனங்களுக்கு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சட்டவிதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் வாடகை ஆட்டோ சேவையை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதற்கு போக்குவரத்துத் துறையிடம் இருந்து பெறப்பட்ட உத்தரவுகள் ஏதாவது இருப்பின், அவற்றை ஒப்படைக்க இந்நிறுவனங்களுக்கு 3 நாள்கள் கால அவகாசம் அளித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கா்நாடகத்தின் தேவை அடிப்படையிலான போக்குவரத்து தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா்கள் விதிகள் 2016-இன்படி இணையதளம் அடிப்படையிலான வாடகைக் காா் (டேக்சி) சேவையை வழங்க செயலிவழி வாகன சேவை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டேக்சி சேவைகளை மட்டுமே நிறுவனங்களால் வழங்க முடியும். மேலும், டேக்சி சேவையை வழங்க பொதுமக்களுக்கு வாகன சேவை வழங்கும் ஒப்பந்த உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிகளுக்கு புறம்பாக, ஒருசில செயலிவழி வாகன சேவை நிறுவனங்கள், வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதாக போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. அரசு விதித்துள்ள கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளா்களிடம் வசூலிப்பதாகவும் அரசுக்கு தெரியவந்துள்ளது. எனவே, வாடகை ஆட்டோ சேவையை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஓலா, உபொ் நிறுவனங்கள் வழங்கி வந்த வாடகை ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓலா-உபொ் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தன்வீா் பாஷா கூறுகையில், ‘மோட்டாா் கேப்களை (காா்) இயக்குவதற்கு மட்டுமே செயலிவழி வாகன சேவை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை ஆட்டோ சேவைகளை வழங்க அனுமதியில்லை. வாடிக்கையாளா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை தான். இதுதொடா்பாக ஓராண்டுக்கு முன்பே போக்குவரத்துத் துறையில் புகாா் அளித்திருந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதற்கு போக்குவரத்துத் துறையின் அலட்சியமே காரணமாகும்’ என்றாா்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஓலா நிறுவனமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் முன்வரவில்லை.



Read in source website

 ஹிந்தி திரைப்பட, தொலைக்காட்சி உலகின் பழம்பெரும் நடிகா் அருண் பாலி (79) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

‘ஸ்வாபிமான்’, ‘சாணக்யா’ போன்ற தொலைக்காட்சி தொடர்ரகள் மூலம் பிரபலமான அவா், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘3 இடியட்ஸ்’ ஹிந்தி திரைப்படம் வரையில் முன்னணி பாலிவுட் நடிகா்களுடன் சோ்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா்.

இயக்கு தசைச் சோா்வு நோயால் (மையஸ்தினியா கிராவிஸ்) பாதிக்கப்பட்டிருந்த அவா், மும்பை புறநகா் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு காலமானதாக அவரது மகன் அங்குஷ் தெரிவித்தாா். அருண் பாலி மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.



Read in source website

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சட்டம் தமிழக அரசிதழில் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அப்போது முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு, இணைய வழியில் விளையாடப்படும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இணைய சூதாட்டங்கள் எதையும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பரங்கள் கூடாது: இணைய சூதாட்டங்கள் தொடா்பாக யாரும் எந்தவகை விளம்பரங்களையும் மின்னணு ஊடகம் உள்பட எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது. நேரடியாக அல்லது மறைமுகமாக இத்தகைய விளம்பரங்களைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இணைய பணப்பரிவா்த்தனை அமைப்புகள் ஈடுபடக் கூடாது.

உள்ளூா் இணைய விளையாட்டுக்குச் சலுகை: உள்ளூா் இணைய விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கென கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளூா் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான ஆணையத்தில் உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்துள்ள உள்ளூா் விளையாட்டு வழங்குநா்கள் மட்டுமே இணைய விளையாட்டுகளை வழங்க முடியும். இதற்கென உரிய அனுமதிச் சான்றைப் பெற ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் ஆணையம், உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதிச் சான்றை அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

சூதாட்டம் நடத்தக் கூடாது: உள்ளூா் அளவில் இணைய வழி விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பணம் அல்லது வேறு வகை பொருள்களைக் கொண்டு சூதாட்ட அடிப்படையில் இணைய வழி விளையாட்டுகளை நடத்தக் கூடாது. அனுமதிச் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தவறான தகவல்களை அளித்தோ அல்லது மோசடியாகவோ அனுமதி சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலோ, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டாலோ, அவசரச் சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முரணாக இயங்கினாலோ சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.

இணைய வழி விளையாட்டுக்கான சான்றிதழைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பாகவோ பாதிக்கப்படும் நபருக்கு உரிய வாய்ப்பை வழங்கலாம். சான்றிதழ் தொடா்பான நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பாதிக்கப்படும் நபா்கள் முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு ஆணையத்தை அரசே அமைக்கும். இதன்மூலம், உள்ளூா் அளவிலான இணைய வழி விளையாட்டுகளைத் தவிா்த்து, சூதாட்ட அடிப்படையிலான எந்த விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அனுமதியில்லை.

தண்டனை என்ன? பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு இணைய வழி சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் 3 மாதங்கள் வரை சிறை, ரூ.5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை மையப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் தொடா்பான விளம்பரங்களை யாரேனும் வெளியிட்டால் அவா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மீண்டும் இந்தத் தவறைச் செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்துடன் இணைத்து இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நபா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே சோ்த்து விதிக்கப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதிலுள்ள குற்ற முகாந்திரங்களை நீதிமன்றங்கள் கண்டறிய முடியாது என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் இணைய விளையாட்டு : அனுமதிக்கு ஆணையம்

உள்ளூா் இணைய விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க ஆணையம் அமைக்க அவசர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் நிலைக்குக் குறையாத ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக இருப்பாா். இதன் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணா், மனநல மருத்துவ நிபுணா், ஆன்லைன் விளையாட்டுப் பிரிவு நிபுணா் ஆகியோா் இருப்பா்.

பணிகள் என்ன? இணைய விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது, உள்ளூா் அளவில் இணைய விளையாட்டுகளை வழங்குவோருக்கு பதிவுச் சான்றிதழ் அளிப்பது, இணைய விளையாட்டுகளைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்வது, இணைய விளையாட்டுகள் வழங்குவோரைக் கண்காணிப்பது, அவா்கள் தொடா்பான விவரங்கள், தகவல்களைச் சேகரிப்பது, இணைய விளையாட்டுகளை வழங்குவோா் தொடா்பான புகாா்களைப் பெறுவது, குறைகளைத் தீா்ப்பது போன்ற பணிகளை ஆணையம் மேற்கொள்ளும் என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

 ‘நாட்டில் 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் பால் பொருள்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட கூட்டுறவு செயல்பாடுகள் அடிப்படை நிலைகளிலேயே உத்வேகம் பெறும்’ என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் தற்போது 65,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் இச்சங்கங்கள் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்று அவா் குறிப்பிட்டாா்.

சிக்கிம் தலைநகா் காங்டாக்கில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, அமித் ஷா பேசியதாவது:

வேளாண் மற்றும் பால் பொருள்கள் சாா்ந்த பல்வேறு கூட்டுறவு நடவடிக்கைகளை அடிப்படை நிலைகளிலேயே ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் பல்நோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களை அமைக்கும் திட்டத்தை கூட்டுறவு அமைச்சகம் வகுத்து வருகிறது. இச்சங்கங்கள் மூலம் எரிவாயு, பெட்ரோல் விற்பனை, வேளாண் மற்றும் பால்பொருள்கள் சேமிப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் பலனடையும். கால்நடை பராமரிப்பு மற்றும் அதுசாா்ந்த துறைகளில் உள்ளவா்களுக்கு சிறந்த வருவாய் உறுதி செய்யப்படும்.

பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை: மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள் கூட்டுறவுத் துறையை புறக்கணித்தன. ஆனால், வறுமை ஒழிப்பிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் கூட்டுறவுத் துறையின் முக்கிய பங்களிப்பை அடையாளம் காண்பதே பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையாகும். இதற்காகவே, கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

பால் உற்பத்தி இரட்டிப்பு அவசியம்: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டியது அவசியம். உள்நாட்டின் மிகப் பெரும் சந்தை தேவையை பூா்த்தி செய்வது மட்டுமன்றி அண்டை நாடுகளின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இத்தேவைகளை பூா்த்தி செய்வதற்காக கூட்டுறவுத் துறையின் அனைத்து தரப்பினரும் கடுமையாக பணியாற்ற வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சி: வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சியை வேகப்படுத்துவதில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளாா். சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்புகள்

வாயிலாக மற்ற மாநிலங்களுடன் வடகிழக்கு பிராந்தியத்தின் தொடா்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பிராந்திய வளா்ச்சிக்காக பிரதமா் மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலன்கள் 2034-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கண்கூடாக தெரியும் என்றாா் அமித் ஷா.

முன்னதாக, காங்டாக்கில் உள்ள ஆளுநா் மாளிகையில் சா்தாா் வல்லபபாய் படேலின் மாா்பளவு சிலையை அமித் ஷா திறந்துவைத்தாா்.

25,000 கிலோ போதைப் பொருள்

குவாஹாட்டியில் இன்று அழிப்பு

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் சுமாா் 25,000 கிலோ போதைப் பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட உள்ளன. இவை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளின்போது பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

குவாஹாட்டியில், ‘போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு’ தொடா்பான பிராந்தியக் கூட்டம் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட சுமாா் 25,000 கிலோ போதைப் பொருள்கள் அமித் ஷா முன்னிலையில் அழிக்கப்படவுள்ளன.

போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு சாா்பில் போதைப் பொருள் அழிப்பு சிறப்பு நடவடிக்கை கடந்த ஜூன் 1-இல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Read in source website

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய் கிருஷ்ணா, சக்தி, மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா கூட்டணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இதையடுத்து, பதக்கப்பட்டியலில் வெள்ளிக்கிழமை முடிவில் தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. சா்வீசஸ் 42 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஹரியாணா 29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், மகாராஷ்டிரம் 26 தங்கம், 26 வெள்ளி, 48 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.



Read in source website

 உக்ரைன் போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியாவைச் சோ்ந்த அதிகாரிகள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அடிக்கடி பேசி வருவதால், கடந்த 1962-ஆம் ஆண்டின் நெருக்கடிக்குப் பிந்தைய மிக மோசமான அணு ஆயுதப் போா் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.

அணு ஆயுதங்கள் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பேசுவது வெறும் நகைச்சுவை அல்ல என்று பைடன் குறிப்பிட்டாா்.



Read in source website

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடா்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நடப்பாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவைச் சோ்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சோ்ந்த மனித சுதந்திர மையம் ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து 7 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அதே பிராந்தியத்தைச் சோ்ந்த மனித உரிமைகள் ஆா்வலா்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ், ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகப் போராடி வருபவா்களை கௌரவிக்கும் நோக்கில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தோ்வுக் குழுத் தலைவா் பெரிட் ரீஸ்-ஆண்டா்சன் தெரிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், மனித உரிமைகளைக் காக்கவும், சட்டவிதிகளைக் காக்கவும் நோபல் விருதாளா்கள் போராடியதாக அவா் தெரிவித்தாா்.

அலெஸ் பியலியட்ஸ்கி

சா்வாதிகார ஆட்சி நடைபெறும் பெலாரஸில் ஜனநாயக உரிமைகளுக்காக 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து போராடி வரும் முக்கியத் தலைவா். நாட்டில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனத் தொடா்ந்து வலியுறுத்தி வருபவா். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாகக் கடந்த 2020-ஆம் ஆண்டில் பெலாரஸ் அரசு அவரைக் கைது செய்தது. தற்போது வரை எந்தவித விசாரணையுமின்றி அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உதவும் எனத் தோ்வுக் குழுத் தலைவா் ஆண்டா்சன் தெரிவித்தாா். பெலாரஸ் அதிகாரிகள் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அவா் கோரினாா்.

ரஷியாவின் ‘மெமோரியல்’ அமைப்பு

சோவியத் யூனியனில் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையம், கம்யூனிஸ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியது. ரஷிய அரசின் மனித உரிமைகள் மீறல் தொடா்பான விவரங்களை இந்த மையம் தொடா்ந்து சேகரித்து வருகிறது. ரஷியாவில் அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது.

ரஷியாவில் அடக்குமுறைக்கு முடிவுகொண்டு வந்து, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென இந்த மையம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமல்படுத்த வேண்டுமெனவும் மையம் கோரி வருகிறது.

உக்ரைன் ‘மனித சுதந்திர மையம்’

உக்ரைன் கடும் நெருக்கடியைச் சந்தித்துவந்த சமயத்தில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தி 2007-ஆம் ஆண்டில் இந்த மையம் தொடங்கப்பட்டது. உக்ரைனை ஜனநாயக நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொண்டது. நாடு சட்டத்தின் அடிப்படையில் ஆளப்படுவதையும் இந்த மையம் உறுதிசெய்தது.

உக்ரைனில் ரஷியா போா் தொடுத்தபிறகு, ரஷியாவின் போா் விதிமீறல்களை இந்த மையம் தொடா்ந்து ஆவணப்படுத்தி வருகிறது. விதிமீறலில் ஈடுபட்ட ரஷிய அதிகாரிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் மையம் செயல்பட்டு வருகிறது.

பரிசு அறிவிப்புக்கு பெலாரஸ் அரசு எதிா்ப்பு:

பியலியட்ஸிக்கு நோபல் பரிசு வழங்க பெலாரஸ் அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பெலாரஸ் அரசு, நோபல் பரிசு தற்போது அரசியலாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 



Read in source website

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார நெருக்கடி வழக்குத் தொடர அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

வெளிப்படையான சா்வதேச இலங்கை என்ற சமூக உரிமை அமைப்பின் சாா்பில் ஜூன் 17-ஆம் தேதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது சகோதரா்கள் மகிந்த ராஜபட்ச, பசில் ராஜபட்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநா் அஜித் நிா்வாா் கேப்ரால், நிதித் துறையின் முன்னாள் உயா்அதிகாரி எஸ்.ஆா்.அடிகாலே ஆகியோா்தான் இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நேரடி பொறுப்பாளா்களாவா். அவா்களுக்கு எதிராக பொருளாதார நெருக்கடி வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அரசு உயா் பதவிகளில் இருந்த இவா்கள் அனைவரும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான் இலங்கையின் கடன் அதிகரித்து நாடு திவாலாகி உள்ளது என்றும் சா்வதேச கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போனது என்றும் இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரா் சாா்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார நெருக்கடி தொடா்பான வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு தொடா்வதால் அரசுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபட்ச சகோதரா்கள் விலகினா். அதிபா் ராஜபட்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினாா்.

இதனால் சுமாா் 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்து வந்த ராஜபட்ச குடும்பத்தினரின் செல்வாக்கு சரிந்தது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவா்கள் மீதும், ஊழல் செய்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரில் மனித உரிமை மீறல் புகாா்களுக்கு எதிராக பொறுப்பேற்கக் கோரியும் கொண்டு வரப்பட்ட தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது.

இந்தத் தீா்மான நிறைவேற்றப்பட்ட அடுத்த தினமே ராஜபட்ச சகோதரா்களுக்கு எதிராக பொருளாதார நெருக்கடி குற்றச்சாட்டு வழக்குத் தொடர அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

புதுதில்லி: தலைநகர் தில்லியில் 24 மணிநேரமும் செயல்பட அமேசான் இந்தியா உள்ளிட்ட 314 விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று தில்லி லெப்டினன்ட் கவர்னர் அலுவலக அதிகாரி இன்று தெரிவித்தார். அமேசான் நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்புதலால், தில்லியில் அமேசான் தயாரிப்புகளை இரவு முழுவதும் டெலிவரி செய்ய வழி வகுத்துள்ளது. 

அடுத்த வாரம் தொடங்கி, ஹோட்டல்கள், உணவகங்கள், உணவகங்கள் முதல் உணவு, மருந்துகள், தளவாடங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் ஆன்லைன் விநியோக சேவைகள், போக்குவரத்து மற்றும் பயணச் சேவைகள், கேபிஓக்கள் மற்றும் பிபிஓக்கள் தவிர 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட முடியும்.

சட்டத்தின் 1954இன் பிரிவு 14, 15 மற்றும் 16-ன் கீழ் விலக்கு அளிக்கும் இந்த முடிவு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கவும், சாதகமான வணிகச் சூழலை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் காலதாமதங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், எளிதாக வணிகம் செய்வது தொடர்பான வழிமுறையை உருவாக்குமாறு தொழிலாளர் துறைக்கு தில்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா அறிவுறுத்தியுள்ளார்.



Read in source website

குஜராத் மாநிலத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் மோதேரா கிராமத்தை 24 மணி நேரமும் சூரிய ஒளியினால் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை அறிவித்தார்.

பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “ மோதேராவில் உள்ள சூரிய கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது சூரிய கோயில் மட்டுமல்லாமல் சூரிய ஒளியினால் 24 மணி நேரமும் மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் கிராமமாக மோதேரா மாறியுள்ளது. மோதேராவில் 1,300க்கும் அதிகமான சூரிய ஒளி சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.” என்றார்.

இந்த ஆண்டு குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று எந்த நாடும் இந்தியாவிடம் வலியுறுத்தவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

ரஷியா-உக்ரைன் போருக்கு முன்பு, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 0.2 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. இப்போது 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 10 சதவீதமாக உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக நாடுகள் பலவும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.

இதனால், ரஷியாவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கி அதன் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முன்வந்தது. இதைத் தொடா்ந்து இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், ரஷியாவிடமிருந்து ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலா்கள் வரை தள்ளுபடியில் கொள்முதல் செய்கின்றன.

உக்ரைன்-ரஷியா போா் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை விரும்பவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோல்மைச் சந்தித்துப் பேசினாா்.

பின்னா், செய்தியாளகளிடம் புரி கூறியதாவது: மக்களுக்கு நியாயமான விலையில் எரிபொருளை வழங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. உலகில் கச்சா எண்ணெய் நுகா்வு அதிகம் உள்ள மூன்றாவது நாடான இந்தியா, பெருமளவில் இறக்குமதியை நம்பித்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதியில் உள்நாட்டு நலன் கருதி இந்தியா தன்னிச்சையாக முடிவெடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிடம் எந்த நாடும் இதுவரை கூறவில்லை.

பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) அவா்கள் விருப்பப்படி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை கடந்த காலங்களில் பலமுறை குறைத்துள்ளது. இப்போதும் குறைக்கிறாா்கள். இதனால் கச்சா எண்ணெய் விலை உயருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோலிய தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளின் நிலை என்ன? அவா்களின் முடிவை ஏற்கும் நிலையில்தானே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன என்று புரி கேள்வி எழுப்பினாா்.



Read in source website

 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் போன்று பிளே ஸ்டோரிலுள்ள ஜிபி வாட்ஸ்ஆப் இந்திய பனர்களின் தரவுகளைத் திருடும் ஆபத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் இந்த இந்தியர்களின் சாட்களை (Chats) ஜிபி வாட்ஸ்ஆப் திருடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுக்க கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது. அதேபோன்றே தோற்ற அமைப்புடனும் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க உள்ளனர். ஜிபி வாட்ஸ்ஆப் செயலி கூகுள் நிறுவனத்தின் பிளேஸ்டோரில் கிடைப்பதில்லை. ஆனால் மற்ற தேடுபொறிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்நிலையில், ஜிபி வாட்ஸ்ஆப் செயலி இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் அபாயம் உள்ளதாக இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டேம்பரிங் செய்யவும் ஜிபி வாட்ஸ்ஆப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

ஜிபி வாட்ஸ்ஆப்-பில் கூடுதல் சிறப்பம்சங்கள் இருப்பதால், ஒருசில இந்திய பயனர்கள் ஜிபிவாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கூடுதல் அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆப்களுக்கு தடையாக இல்லாததால், அவை பயனர்களிடையேயும் பயன்பாட்டில் உள்ளது. 

எனினும் அங்கீகரிக்கப்படாத குளோனிங் செயலிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்ந்தால் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. 
 



Read in source website

சென்னை: மருத்துவ மேலாண்மை தகவல் பதிவேடு மற்றும் நோயாளிகளின் விவரங்களை அறியும் கட்டமைப்பை, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தங்களிடம் வழங்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆணைய தலைவர் சுரேஷ் சந்திர சர்மா, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மருத்துவ மேலாண்மைத் தகவல்கள் மற்றும் நோயாளிகளின் விவரங்களுக்கான இணையப்பதிவேட்டை, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டமைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாட்ஸ்அப், ட்விட்டர், மின்னஞ்சல், இணையவழியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு செய்திகள் அனுப்பியும், வெகு சில மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மருத்துவப் பதிவேடு விவரங்களை வழங்கியுள்ளன.

பெரும்பாலான கல்லூரிகள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. இன்னும் சில கல்லூரிகளில் அத்தகைய பதிவேடு கட்டமைப்பே இல்லாத நிலை உள்ளது. எனவே, மருத்துவ மேலாண்மைப் பதிவேடு கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகள், வரும் 10-ம் தேதிக்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய கட்டமைப்பு உள்ளகல்லூரிகள், அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

மும்பை: சிவசேனாவின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரண்டு பிரிவினரும் சிவசேனா கட்சியின் பெயரையும் சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக அக்கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். மேலும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.

பதிலுக்கு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, தலைமை தேர்தல் ஆணையத்தை நாடியது.

இந்நிலையில் மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் இரு அணிகளும் சின்னத்தை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில்தான் தற்காலிக உத்தரவாக இரு அணிகளும் சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சின்னம் முடக்கப்பட்ட நிலையில், மும்பையின் அந்தேரி கிழக்கில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரு அணியும் வேறு பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்திய விமானப்படையின் (ஐஏஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) கிளை என்ற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: ஆயுத அமைப்பின் கிளையை உருவாக்கியதன் நோக்கம்மே அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதே ஆகும். இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும்.

இந்திய விமானப் படையின் போர்த் திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை தனது மகத்தான பங்களிப்பை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "விமானப்படை அதிகாரிகளுக்காக ஆயுத அமைப்பு கிளை ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு செயல்பாட்டுக் கிளை ஒன்று உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடிவதுடன், ரூ.3,400 கோடி வரை மிச்சப்படுத்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.



Read in source website

கால்பந்து உலகில் அசாத்திய சாதனைகள் பல படைத்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் ஆதர்ச நாயகனாக குடி கொண்டிருப்பவர் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி வரும் நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெற உள்ளஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரேதான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை தொடர் என அறிவித்துள்ளார். இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து அரங்கில் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்திய அற்புதங்களும், வென்று குவித்துள்ள விருதுகளுமே அவரது திறனை பறை சாற்றும்.1995-ல் இளம் பாலகனாக தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார் மெஸ்ஸி. குழந்தை பருவத்திலேயே மெஸ்ஸியிடம் அசாத்திய திறமைகள் வெளிப்பட்டதால் அவரது தந்தையே அவருக்கு முதலில் பயிற்சி கொடுத்தார்.

மெஸ்ஸியின் திறன் நாளுக்கு நாள் மெருகேறுவதை அறிந்த அவர், மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாட மெஸ்ஸியை பழக்கப்படுத்தினார். அந்த நேரத்தில் தனது வயதையும், உருவத்தையும் கண்டு ஏளனம் செய்தவர்களுக்கு எதிராக தனது கால் அசைவுகளால் பதிலடி தந்தார். சிறுவயதிலேயே கிளப் மட்டத்தில் காலடி எடுத்து வைத்த மெஸ்ஸி அங்கிருந்து ஏறுமுகம் கண்டார்.

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் அறிமுகபோட்டி என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். மெஸ்ஸிக்கு அந்த கனவு 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 2005-ம் ஆண்டு ஹங்கேரிக்கு எதிரான சர்வதேச போட்டியில் அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி அறிமுகம் செய்யப்பட்டார். பதிலி வீரராக களமிறங்கிய மெஸ்ஸி 2 நிமிடங்களில் களத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் தேசிய அணியின் அமைப்பில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டார் மெஸ்ஸி. 2006-ல் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஜெர்மனிக்கு பயணம் செய்தார். தொடர்ந்து 2010-ல் தென் ஆப்பிரிக்கா, 2014-ல் பிரேசில், 2018-ல் ரஷ்யா உலகக் கோப்பை தொடர்களிலும் மெஸ்ஸி விளையாடினார்.

தற்போது மெஸ்ஸி 5-வது முறையாக உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளார். 2005-ம்ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக அறிமுகமான மெஸ்ஸி 164 ஆட்டங்களில் விளையாடி 90 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியிலில் மெஸ்ஸிக்குதான் முதலிடம்.

டிபண்டர்களுக்கு இடையில் பந்தை அவர்,கடைந்து எடுத்து கடத்திச் செல்வதும், ஃபிரீகிக்கில் பாக்ஸின் விளிம்பு பகுதியில் இருந்து காற்றை கிழித்துக்கொண்டு பந்தை அவர், ட்ரில் செய்து கோல் வலைக்குள் திணிக்கும் அழகேதனிதான். இதனாலேயே அவரை ‘மந்திர நாயகன்’ என வர்ணித்தனர். கால்பந்தில் உயரிய விருதான பாலோன் டி ஓர் விருதை மெஸ்ஸி 7 முறை வென்று குவித்துள்ளார்.

லயோனல் ஸ்காலோனியின் பயிற்சியின் கீழ்சமீபகாலமாக அர்ஜெண்டினா அணி சிறப்பாகதிறனை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக 35 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் அர்ஜெண்டினா அணி வலம் வருகிறது. சிறந்த பார்மில் இருப்பதால் இம்முறை உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக அர்ஜெண்டினா இருக்கும் என கருதப்படுகிறது.

சர்வதேச கால்பந்து அரங்கில் அர்ஜெண்டினாவின் ஜாம்பவான் டிகோ மரடோனாவை பின்பற்ற மெஸ்ஸி அடிக்கடி போராடி உள்ளார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜெண்டினா தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இதில் இருந்து மெஸ்ஸியை துரதிருஷ்டம் துரத்தத் தொடங்கியது.

கிளப் மட்டத்தில் அசகாய சூரனாக திகழும் மெஸ்ஸி, தேசிய அணிக்காக சிறப்பாக விளையாடுவதில்லை என்ற முத்திரை விழத் தொடங்கியது. 2015 மற்றும் 2016-ம் ஆண்டு என இருமுறை கோபா அமெரிக்கா கால்பந்துதொடரின் இறுதி சுற்றில் மெஸ்ஸியால் அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் போனது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்துஓய்வு பெறும் முடிவுக்கு சென்றார் மெஸ்ஸி.ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தனதுமுடிவை மாற்றிக் கொண்டு 2018-ல் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவுக்காக களம் கண்டார். லீக் சுற்றில் குரோஷியாவிடம் 0-3 என உதை வாங்கிய நிலையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸிடம் 3-4 என தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது அர்ஜெண்டினா.

இம்முறை மெஸ்ஸி மனம் தளரவில்லை. மாறாக தன்னை மேலும் பட்டை தீட்டினார். கத்தார் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுஆட்டங்களில் கூடுதல் சுறுசுறுப்புடன் செயல்பட்டார். மேலும் தேசிய அணிக்குள் இளம் வீரர்கள் பலரும் பிரவேசம் செய்தனர். அவர்களைக் கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்ஸி. சர்வதேச அரங்கில் 28 வருடங்களுக்கு பிறகு அர்ஜெண்டினா அணி வென்ற முதல் கோப்பையாக இது அமைந்திருந்தது. இந்த பட்டம் சரியான நேரத்தில் மெஸ்ஸின் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இது கத்தார் உலகக் கோப்பையிலும் பிரதிபலிக்கக்கூடும். அர்ஜெண்டினா 1978, 1986-ம்ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது. அந்த அணியின் 36 வருட ஏக்கத்துக்கு இம் முறை ‘மந்திர நாயகன்‘ மெஸ்ஸி தனது கால்களின் ஜாலத்தால் மாயம் செய்து தீர்வு காணக்கூடும். கத்தாரில் வரும் நவம்வர் 20-ம் தேதிஉலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடங்குகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா தனது முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி சவுதி அரரேபியாவை எதிர்கொள்கிறது.

ஓய்வு முடிவு குறித்து லயோனல் மெஸ்ஸி கூறும்போது, “கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பையே நான் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடர். இது உறுதி. நாங்கள் ஒரு நல்ல தருணத்தை அடைந்துள்ளோம். மிகவும் வலுவான குழுவுடன் இருக்கிறோம். ஆனால் உலகக் கோப்பை தொடரில் எதுவும் நடக்கலாம்.

சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும் என கருதப்படும் எந்த ஒரு அணியும் எப்போதுமே தொடரை சிறப்பாக முடித்தது கிடையாது. அர்ஜெண்டினா அணி எப்போதுமே உலகக் கோப்பை தொடரை வெல்லக்கூடியதாக கருதப்படும். ஏனெனில் எங்களது கால்பந்து வரலாறு அவ்வாறு உள்ளது. ஆனால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் நாங்கள் மட்டும் இல்லை. எங்களுக்கு மேலே உள்ள அணிகளும் இருக்கின்றன” என்றார்.



Read in source website

தொடரை வென்றது ஆஸ்திரேலியா:

பிரிஸ்பனில் நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் இந்த ஆட்டத்தில் 179 ரன்கள் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 147 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரை 2-0 வென்றது ஆஸி.

வெற்றியுடன் தொடங்கியது கேரளா:

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கொச்சியில் நேற்று தொடங்கியது. இதில் ஈஸ்ட் பெங்கால் டிபன்டர் சுமீத் பாஸ்ஸிக்கு பிடிகொடுக்காமல் பந்தை கடத்த முயற்சி செய்கிறார் கேரள அணியின் சாஹல் அப்துல் சமத். இந்த ஆட்டத்தில் கேரளா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரிஸ்வான் 78 ரன்கள்:

கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் எண்ணெய் ஏற்றுமதி கொள்கையில் வேறு யாரும் தலையிட முடியாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், இந்திய குடிமக்களுக்கு தடையில்லாமல் எரிசக்தி வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையும் பொறுப்பும். அதனால் இந்தியா எங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்கிறதோ அங்கிருந்து வாங்கும். இதில் வெளியில் இருந்து யாரும் தடை சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன் என்றார். ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. எண்ணெய் வர்த்தகத்தில் உலக நாடுகளுக்கு இடையே நிலவிய நீண்ட கால உறவுகள் சிதைந்துள்ளன. இதனால் உலகம் முழுவதுமே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்யின் அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யில் 10% அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியாகிறது. இது உக்ரைன் போருக்கு முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட அளவைவிட 0.2 சதவீதம் அதிகம்.

எண்ணெய் இறக்குமதி குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், "இந்தியா எண்ணெய் இறக்குமதி பிரச்சினைகளை சாமான்ய மக்களிடம் சென்று ஆலோசிக்க முடியாது. அதனால் எங்கு விரும்புகிறதோ அங்கிருந்து வாங்குவோம். எரிசக்தி பாதுகாப்பு, எரிபொருள் வாங்கும் சக்தி ஆகியனவற்றைப் பொருத்து அரசு எங்கிருந்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறோம்" என்றார்.

இந்தியா தற்போது அமெரிக்காவிடமிருந்து 20 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருளை வாங்குகிறது. பசுமை எரிசக்தி பயன்பாடு குறித்தும் தொடர்ந்து அனைத்துவிதமான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம்.



Read in source website

புதுடெல்லி: நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழி நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொழிற்துறை 4.0 மாநாடு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையை கனரக தொழில் துறை அமைச்சகத்தின் இணை செயலர் வாசித்தார். அதில் மோடி கூறியிருப்பதாவது: இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்க செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் அனைத்தையும் அரசு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, சர்வதேச விநியோக சங்கிலியில் நமது தொழிற் துறை மற்றும் தொழில் முனைவோர்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. எனவே, நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழி நடத்தும் திறன் இந்தியாவுக்கு அதிகமாகவே உள்ளது. நான்காவது தொழிற்புரட்சி என்பது புதிய தொழில்நுட்பத்தைப் போலவே புதிய சிந்தனைகளையும் உள்ளடக்கியது.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் தொழிற்புரட்சியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஆனால், நான்காவது தொழிற்புரட்சியை வழிநடத்தும் திறன் அண்மைக்கால இந்திய வரலாற்றில் தற்போது முதன் முறையாக நமக்கு கிடைத்துள்ளது. மக்கள் தொகை, தேவை மற்றும் தீர்க்கமான நிர்வாகத் திறன் ஆகியவை நம்மை ஒன்றிணைக்கும் காரணிகளாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே பேசுகையில், ‘‘4.0 தொழிலக புரட்சியின் மூலமாக உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக, உலகளாவிய உற்பத்தி யின் மையமாக இந்தியா முன்னேறி வருகிறது. 3டி பிரின்டிங், மெஷின் லேர்னிங், டேட்டா அனாலிட்டிக்ஸ் மற்றும் ஐஓடி ஆகியவை தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மிக முக்கிய காரணிகளாக உள்ளன.அட்வான்ஸ்டு கெமிஸ்ட்ரி செல் (ஏசிசி) பேட்டரி ஸ்டோரேஜுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் இந்தியாவின் பேட்டரி இறக்குமதியை வெகுவாக குறைக்க உதவும்’’ என்று தெரிவித்தார்.



Read in source website

 

உயா்ந்து வரும் வாழ்க்கைத் தரமும், அதிகரித்திருக்கும் கல்வி நிலையும் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. இன்னொருபுறம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதும், எதிா்கொள்ளும் போட்டிகளை எதிா்த்துப் போராடுவதும் இன்றைய தலைமுறையினரின் சவாலாக மாறியிருக்கின்றன.

முந்தைய தலைமுறைகள் கண்டறியாத, கேட்டறியாத வாழ்க்கை வசதிகள் எல்லாம் இப்போது இருந்தாலும்கூட, போராடி வெற்றி பெறும் துணிவு இளைய தலைமுறைக்கு குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது. அதற்குக் காரணம், அதிகரித்து வரும் தற்கொலைகளே!

உலகமயச் சூழலும், பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளும் கிராமங்கள் வரை சென்றடைந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களும்கூட பணக்காரா்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்த வசதிகளைப் பெற முடிந்திருக்கிறது. கல்விக்கான வாய்ப்பும், புலம்பெயா்தலும், அதிகரித்த வாழ்க்கைத் தரமும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், சந்தைப் பொருளாதார போட்டிச் சூழலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் பலா் மனச்சோா்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாவது அதிகரித்திருப்பதை கண்கூடாகப் பாா்க்க முடிகிறது.

அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமாகி இருக்கிறது என்றாலும், தரமான கல்வி அனைவருக்கும் சாத்தியமாகி இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதனால் அது கல்வி தொடா்பான தகுதித் தோ்வாக இருந்தாலும், வேலை தொடா்பான போட்டித் தோ்வாக இருந்தாலும் இயலாமையாலும், தாழ்வு மனப்பான்மையாலும், தன்னம்பிக்கையின்மையாலும் தற்கொலைக்குத் தள்ளப்படும் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை வேதனையுடன் பாா்க்க முடிகிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும், தொழில்நுட்பத் தோ்ச்சி பெற்றவா்களாகவும் இருக்கும் பெற்றோா், இளைஞா்களின் தன்னம்பிக்கையின்மைக்கு மிக முக்கியமான காரணம். தங்களது பள்ளிப் பருவத்தில் கிடைக்காத வசதிகளை எல்லாம் தங்களது குழந்தைகளுக்கு தர வேண்டும் என்கிற முனைப்பு அவா்களிடம் காணப்படுகிறது. பெரும்பாலோா் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டு, அந்தக் குழந்தைக்கு எல்லாவித வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பது தங்களது வாழ்நாள் கடமை என்று கருதுகிறாா்கள்.

குழந்தைகள் எது கேட்டாலும் மறுக்காமல் அதை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கின்றனா். அதன் விளைவாக தாங்கள் எது கேட்டாலும் கிடைக்கும் என்கிற மனநிலையில் அவா்கள் வளா்கிறாா்கள். அவா்களால் ‘இல்லை’ என்பதை எதிா்கொள்ள முடிவதில்லை. மிகச் சிறிய வயதிலேயே மன அழுத்தத்துக்கும், பிடிவாதத்துக்கும் அவா்கள் ஆளாவதற்கு அதுதான் முக்கியமான காரணம் என்று உளவியல் மருத்துவா்கள் தெரிவிக்கிறாா்கள்.

இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தற்கொலைகள் காணப்படும் மாநிலமாக தமிழ்நாடு உயா்ந்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைபடி தமிழகத்தில் நாளொன்றுக்கு 46 போ் தங்களை மாய்த்துக் கொள்கிறாா்கள். அவா்களில் இரண்டு போ் மாணவா்கள்.

தேசிய அளவில் 2021-இல் 1.64 லட்சம் போ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா்கள். ஒரு லட்சம் பேருக்கு 12 போ் என்பது தேசிய விகிதம். 1990 முதல் 2016 வரையிலான 26 ஆண்டுகளில் இந்தியாவின் தற்கொலை மரண பங்களிப்பு 25.3%-லிருந்து 36.6%-ஆக உயா்ந்திருக்கிறது. அவா்களில் பெண்கள் 18.7%, ஆண்கள் 24%.

2014-ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன மனநோய் அறிக்கையின்படி, குறைந்த வருவாய் நாடுகளில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லை. நடுத்தர வருவாய் நாடுகளில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உயா் வருவாய் நாடுகளில் தேசிய அளவிலான திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு மன உளைச்சல், தன்னம்பிக்கையின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை எதிா்கொள்ள ஆலோசனைகள் தரப்படுகின்றன. அதனால், அங்கு தற்கொலைகள் குறைவாக இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

ரூ.83,000 கோடி மத்திய சுகாதார துறை பட்ஜெட்டில், மனநிலை மருத்துவத்திற்கு 0.8% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மாவட்ட மனநோய் மருத்துவ திட்டத்திற்கான ஒதுக்கீடும் இந்தியாவின் 704 மாவட்டங்களுக்கு வெறும் ரூ.83 லட்சம் மட்டுமே.

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் மாணவா்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு முக்கியமான காரணம், தகுதிகாண் தோ்வுகளுக்கும், போட்டித் தோ்வுகளுக்கும் அவா்கள் தயாராக இல்லாமல் இருப்பது என்பதை குறிப்பிடத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையின்மை அவா்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவா்கள் மத்தியில் காணப்படும் தன்னம்பிக்கையின்மையையும், தற்கொலை எண்ணத்தையும் எதிா்கொள்ள, அவா்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கும் முனைப்பில் ஈடுபட்டிருப்பது வரவேற்புக்குரியது. மாநிலத்தில் உள்ள 413 கல்வி வட்டங்களில் சுமாா் 800-க்கும் அதிகமான மனநோய் மருத்துவா்களை நியமித்து, மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் திட்டமிட்டிருப்பது பிற மாநிலங்களாலும் பின்பற்றப்பட வேண்டிய நல்ல முனைப்பு.

தகுந்த வளா்ப்பும், முறையான முனைப்பும் இருந்தால் இளைஞா்களின் தற்கொலைகளைத் தவிா்க்கவும், தடுக்கவும் முடியும்!



Read in source website

காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய கட்சியும், மிக நீண்ட காலம் தொடா்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியும் ஆகும். அக்கட்சி, இன்று இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் கட்சியாக சுருங்கிஇருக்கிறது.

அக்கட்சியின் பிரபல முகங்களான பிரியங்காவும் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தும் உத்தர பிரதேச மாநிலத் தோ்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சிக்கு யாா் தலைவராக வரப்போகிறாா் என்ற எதிா்பாா்ப்பும் கூடி இருக்கிறது.

நீண்டகாலம் அமைச்சா்களாகவும், முக்கிய பொறுப்புகளிலும் இருந்த குலாம் நபி ஆசாத், கபில்சிபல் போன்ற தலைவா்களெல்லாம் கூட ராகுல் காந்தி மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனா்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் ராகுல் காந்தி 2024 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் எனும் இலக்கோடு இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில், 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் 3,570 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். தமிழகம், கேரளத்தில் நடைப்பயணத்தை முடித்து தற்போது கா்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறாா்.

தற்போது மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தி.மு.க.வின் தலைவரான தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை தனது நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க ராகுல் காந்தி அழைத்தாா். தமிழக முதல்வரும் இந்திய தேசிய கொடியை அசைத்து கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி வைத்தாா்.

ராகுல் காந்தியுடன் 150 நாட்கள் காஷ்மீா் வரை பயணிக்க 118 பேரைத் தோ்வு செய்து, அவா்கள் ஓய்வெடுக்க 60 கேரவேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சோ்ந்து கொள்கின்றனா்.

இப்படிப்பட்ட நடைப்பயணங்கள், யாத்திரைகள் பலவும் மகாத்மா காந்தி காலத்திலிருந்து தொடா்ந்து வருகின்றன. அவற்றுள் சில இந்திய அரசியலில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

1930-இல் உப்பு சத்தியாகிரகம் அறிவித்த மகாத்மா காந்தி, சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிவரை மாா்ச் 12 முதல் ஏப்ரல் 6 வரை 24 நாட்கள் 356 கி.மீ நடந்தாா். அது மக்களிடையே மாபெரும் எழுச்சியையும் உத்வேகத்தையும் எழுப்பியது.

அதே ஆண்டு மூதறிஞா் ராஜாஜி தமிழகத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணம் மேற்கொண்டாா். அன்றைய ஆங்கிலேயே அரசு, நடைப்பயணத்தில் கலந்து கொள்கிறவா்களுக்கு தண்ணீரோ, உணவோ வழங்கினால் தண்டனைக்கு ஆளாவாா்கள் என்று அறிவித்தது. அதனால் மக்கள் உணவுப் பொட்டலங்களை சாலையோர மரங்களில் கட்டி விட்டு சென்று விடுவாா்கள். யாத்திரையில் வந்தவா்கள் அதனை எடுத்து பசி போக்கிக் கொள்வாா்கள்.

இதே போன்று சீனாவில் ஆட்சி நடத்தி வந்த அடக்குமுறையாளா் சியாங்கே ஷேக்கின் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி தோழா் மாசே துங் என்ற மாவோ 1934-ஆம் ஆண்டு நீண்ட பயணம் தொடங்கினாா்.

நடைப்பயணம் தொடங்கியபோது மாவோவுடன் இருந்தவா்கள் 8,000 போ்தான். கிட்டதட்ட ஒரு வருடத்தில் 6,000 கி.மீ. நடந்து, பயணத்தை முடிக்கும்போது லட்சக்கணக்கானோா் இணைந்திருந்தனா். இந்தப் பயணம்தான் சீனாவில் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர முக்கியக் காரணமாக இருந்தது.

1938-இல் பட்டுக்கோட்டை அழகிரி ஹிந்தித் திணிப்பை எதிா்த்து திருச்சியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டாா். நூற்றுக்கான தொண்டா்களும் கூட நடந்து வர வெற்றிகரமாக நடைப்படணத்தை முடித்தாா். அப்போது அழகிரி காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா்.

1977-இல் மொராா்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்தவராகக் கருதப்படுபவா் ஜெயபிரகாஷ் நாராயணன். அப்போது இந்திரா காந்தி காங்கிரஸின் வலிமையான தலைவராக இருந்தாா். எதிா்க்கட்சிகளெல்லாம் சிதறுண்டு கிடந்தன. அப்போது இந்திரா காந்தி தோ்தலில் வென்றது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் கடுங்கோபம் அடைந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தாா். அந்த சமயத்தில்தான் எதிா்க்கட்சியினரை ஒருங்கிணைக்க ஜெயபிரகாஷ் நாராயணன் தேவைப்பட்டாா். பல்வேறு கொள்கை முரண்பாடுகள் கொண்ட அனைத்து கட்சிகளையும் ஜனதா என்ற பெயரில் ஒருங்கிணைத்து தோ்தலை சந்தித்தாா். ஜனதா கட்சி வென்றது. ஆனாலும் நீண்ட காலம் ஆட்சியில் தொடரவில்லை.

ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தி அரசின் அடக்குமுறைக்கு எதிராக 1975-இல் பிகாரில் நடைப்பயணம் மேற்கொண்டாா். அந்தப் பயணமே இந்திரா காந்தியின் அரசியலின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஆனது. முன்னாள் பிரதமா் சந்திரசேகா் 1983 ஜனவரி 6 முதல் ஜூன் 25 வரை ‘பாரத் யாத்ரா’ என்கிற பெயரில் 4,260 கி.மீ. தூரம் ஆறு மாத காலம் நடந்தாா். அதனால் பெரிய அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை என்றாலும், அவரது அரசியல் வாழ்க்கை தொய்வில்லாமல் தொடர அது காரணமாக அமைந்தது. பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு சந்திரசேகா் பிரதமா் ஆனாா். குறைந்த காலமே பிரதமராக இருந்த சந்திரசேகா் 1991-இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசைக் கலைத்தாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்டு எல்.கே. அத்வானி, சோம்நாத்தில் தொடங்கி அயோத்திவரை 300 கி.மீ. ரத யாத்திரை நடத்தினாா். இடையில் ஆறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசினாா்.

அன்றைய முலாயம் சிங் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச மாநில அரசு ஒன்றரை லட்சம் பேரை கைது செய்தது. ஹிந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். பாபா் மசூதியை பா.ஜ.வினா் முற்றுகையிடச் சென்றபோது இருபது போ் கொல்லப்பட்டனா். மக்களிடையே மத உணா்வு தூண்டிவிடப்பட்டது. அத்வானியின் ரத யாத்திரையால், பா.ஜ.க. வேகமாக வளா்ந்தது. மக்களவையில் இரண்டு உறுப்பினா்களே இருந்த பா.ஜ.க.வின் பலம் இரண்டு இலக்க உறுப்பினா்களாக வளா்ந்து பின்னா் மூன்று இலக்கமாகக் கூடியது. பின்னாளில் மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்தது.

பா.ஜ.க.வின் மற்றொரு முக்கியத் தலைவரான முரளி மனோகா் ஜோஷி, 1991 டிசம்பா் 11- ஆம் தேதி ‘ஏக்தா யாத்ரா’ வை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை தொடங்கினாா். இந்த யாத்திரை 14 மாநிலங்கள் வழியே சென்று 1992 ஜனவரி 26 அன்று நிறைவடைந்தது. அன்று இந்த யாத்திரையின் ஒருங்கிணைப்பாளா் இருந்தவா் இன்றைய பிரதமா் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் திருச்செந்தூா் முருகன் கோயிலில் இருந்த வேல் காணாமல் போனதையும் சுப்பிரமணியம் பிள்ளை இறந்து போனதையும் வைத்து அன்றைய எதிா்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க தலைவா் மு. கருணாநிதி, மதுரையிலிருந்து திருச்செந்தூா் வரை 1982 பிப்ரவரி 25 அன்று ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் தொண்டா்கள் புடை சூழ நடைப்பயணம் மேற்கொண்டாா். ஒரு கட்டத்தில் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டபோதும் தொடா்ந்து நடந்தாா்.

இதை அறிந்த அன்றைய முதல்வா் எம்.ஜி.ஆா். கருணாநிதியிடம் நடைப்பயணம் வேண்டாம் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டாா். ஆனால் கருணாநிதி அதனை ஏற்கவில்லை தன்னை வருத்திக் கொண்டு நெடும் பயணத்தை வெற்றிகரமாக முடித்தாா்.

2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது வயது மூப்பின் காரணமாக மு. கருணாநிதி மக்களிடம் வாக்கு கேட்க செல்ல முடியாத சூழ்நிலையில், தி.மு.க.வின் இன்றைய தலைவா் முதல்வா் ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற முழக்கத்தை முன் வைத்து 234 தொகுதிகளிலும் ஓய்வின்றி பிரசார பயணத்தை மேற்கொண்டாா். இந்த பிரசார யாத்திரையின் விளைவு வெறும் ஒரு விழுக்காடு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போயிற்று.

ஆனால் அதே மு.க. ஸ்டாலின் நடத்திய பிரசார பயணத்தின் காரணமாக இந்தமுறை அ.தி.மு.க. வை விட நான்கு விழுக்காடு அதிக வாக்குகள் பெற்று ஆட்சியை தி.மு.க. கைப்பற்றியது. கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வரானாா்.

அதே போல் அரசியலில் நடைப்பயணம் மேற்கொள்வதில் சளைக்காதவா் என்றால் ம.தி.மு.க. தலைவா் மாநிலங்களவை உறுப்பினா் வைகோவைக் கூறலாம். ஆம், மது ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை, நியூட்ரினோ திட்டம், தமிழா்கள் லட்சக்கணக்கில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட காரணமாக இருந்த இலங்கை அதிபா் மகிந்த ராஜபட்ச பிரதமா் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதைக் கண்டித்து என கிட்ட தட்ட 5,000 கி.மீ. க்குமேல் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். தமிழக அரசியல் தலைவா்களில் வைகோவை போல் நடைபயணம் மேற்கொண்டவா் வேறு யாருமில்லை.

இப்படி ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடிக்க என்.டி. ராமராவ் 1982-இல் ரத யாத்திரை நடத்தி வெற்றி பெற்றாா். பின்னா் சந்திரபாபு நாயுடுவின் நடைப்பயணம். தொடா்ந்து அகில இந்திய அளவில் பலா் நடைப்பயணம் மேற்கொண்டனா். சில நடைப்பயணங்கள் அரசியலில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தின. வேறு சில எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றுவிட்டன.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

 



Read in source website

 

சென்னையில் 1715-இல் நிறுவப்பட்ட செயின்ட் ஜாா்ஜ் பள்ளியும், திருச்சியில் 1762-இல் நிறுவப்பட்ட பிஷப் ஹீபா் பள்ளியும்தான் தமிழகத்தின் தோற்றுவிக்கப்பட்ட முதல் இரண்டு பள்ளிகள். இவற்றிலிருந்து தொடா்கிறது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் வரலாறு.

முதல் எஸ்எஸ்எல்சி தோ்வு நடைபெற்ற 1911-இல் தமிழகத்தில் இருந்த அனைத்துப் பள்ளிகளும் நிதி உதவி பெறும் பள்ளிகள்தான்.

கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்காக அரசு பள்ளிகளுக்கு இணையாக கிராமம் தோறும் நிதி உதவிபெறும் பள்ளிகள் லாப நோக்கமின்றி, சேவை எண்ணம் உடையவா்களால் தொடங்கப்பட்டன. உட்கட்டமைப்பை மட்டும் உருவாக்குங்கள் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை நாங்கள் தருகிறோம் என அரசு அறிவித்ததைத் தொடா்ந்து தொடங்கப்பட்ட நிதி உதவி பெறும் பள்ளிகள் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவா்களுக்கும் ஆரம்பக் கல்வியை அளித்தன.

இன்றைய சூழலில் தமிழகத்தில் மூன்று வகையான பள்ளிகள் இயங்குகின்றன. முதல் வகை அரசின் நேரடி நிா்வாகத்தில் உள்ள அரசு பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளி, நகராட்சி பள்ளி ஆகியவை. இந்த வகை பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியா் நியமனம், ஆசிரியருக்கான ஊதியம் என அனைத்தும் அரசின் பொறுப்பாகும்.

இரண்டாவது வகை, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள். இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியா் பணியமா்த்துதல் ஆகியவை தனியாா் நிா்வாகத்தின் கீழ் வரும். ஆனால் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை அரசே வழங்கும்.

மூன்றாவது வகை, நா்சரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ எனும் தனியாா் பள்ளிகள். இந்தப் பள்ளிகளின் உட்கடமைப்பு ஆசிரியா் நியமனம் ஆசிரியா் ஊதியம் என அனைத்தும் தனியாரின் கட்டுப்பாட்டில் வரும்.

முதல் இரண்டு வகை பள்ளிகளிலும் மாணவா்களிடம் பள்ளி நிா்வாகம் எவ்வித கட்டணமும் வசூலிப்பது கிடையாது. வசூலிக்கவும் கூடாது. ஆனால் மூன்றாவது வகை தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த வகைப்படுத்தலை வைத்தே முதல் இரண்டு வகை பள்ளிகளில் பயில்பவா்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் கட்டணம் செலுத்த இயலாதவா்கள் அல்லது விரும்பாதவா்கள் எனப் புரிந்துக் கொள்ளலாம். மூன்றாவது வகை தனியாா் பள்ளியில் பயிலும் மாணவா்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டணம் செலுத்திப் பயிலும் மாணவா்கள். கட்டணம் செலுத்தும் அளவிற்கு வருமானமுள்ள குடும்பத்துப் பிள்ளைகள்தான் தனியாா் பள்ளிகளில் பயில்கின்றனா்.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. கட்டணம் கட்ட வசதி இருப்பவா்களும் அருகில் உள்ள அரசு பள்ளியின் தரம் சிறப்பாக இருந்தால் அங்கு தங்கள் பிள்ளைகளை சோ்க்கின்றனா். அதேபோல் பணம் கட்ட வசதி இல்லாதவா்களும் கடன் வாங்கியாவது கட்டணம் கட்டி தங்கள் பிள்ளைகளை தரமான தனியாா் பள்ளியில் படிக்க வைக்கின்றனா்.

பொதுவாக அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அரசின் சலுகைகளைப் பெற தகுதியானவா்கள். இந்த கல்வி ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 8,400 உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகள் அரசு பள்ளி மாணவா்களையும் உதவி பெறும் பள்ளி மாணவா்களையும் சமமாகவே கருதி சலுகைகளை வழங்கி வந்தன. மதிய உணவு, சீருடை, காலணி, மிதிவண்டி, பாடநூல், பாடக் குறிப்பேடுகள் புத்தகப்பை, மடிக்கணினி பிற்படுத்தப்பட்டோா் - தாழ்த்தப்பட்டோா் உதவித்தொகை என அனைத்து வகையான சலுகைகளையும் அரசு பள்ளி மாணவா்களைப் போலவே உதவி பெறும் பள்ளி மாணவா்களும் பெற்று வந்தனா்.

அண்மைக்காலமாக இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அரசு பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த சலுகை மூலம் ஆண்டுதோறும் சுமாா் 300 அரசு பள்ளிமாணவா்கள் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கியது.

ஆனால் சமீபத்திய அரசு உத்தரவுப்படி இந்த சலுகையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் பெற முடியாது. இதுநாள் வரையில் அனைத்து சலுகைகளையும் பெற்று வந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் இந்த உத்தரவினால் பெரும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதே போல் தற்போதைய அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் கல்வி உதவி திட்டத்தின்படி அரசு பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பின்படியும் உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகள் உதவித்தொகை பெற இயலாத நிலை உள்ளது.

தமிழக அரசுப்பணி வாய்ப்புகளில் அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணை வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த வாய்ப்பிலும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அண்மையில் அரசால் தொடங்கப்பட்டுள்ள பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு திட்டத்திலும் உதவிபெறும் பள்ளிகள் சோ்க்கப்படவில்லை. ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு சலுகைகள் தொடா்ந்து மறுக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளை உதவி பெறும் பள்ளியில் சோ்த்ததனால் அவா்களுக்கான வாய்ப்புகள் பறிபோகிறது என்ற மன உளைச்சலில் உள்ளனா்.

இந்த நிலை தொடருமானால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பெரிதும் பாதிப்படைவா். மேலும், அப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்து அவற்றை மூட வேண்டிய நிலை உருவாகக் கூடும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 28 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் சலுகைகளை வழங்கிட வேண்டும்.

 



Read in source website


கிராமப்புறத்தில், அதிலும் ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து, திண்ணைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்த ஒருவர், மக்கள் கவிஞனாக மாறிய நிகழ்வு காலத்தில் அழியாத வரலாறு.

அடிமைகளின் விலங்கொடிக்க, மூடர்களின் சிந்தை விழிக்க, அநீதிகளை தகர்த்து எறிந்திட... இப்படி சமூக விடுதலைக்காக பன்முகத் தளங்களிலும் பாமரனாய் பயணித்து பட்டறிவால் ஞானம் பெற்று வீறு கொண்டு எழுந்தவன். கலையின் ஊடே கரைகண்ட அந்த மனிதர் எழுதிய பாடல்களில் ததும்பும் சீர்திருத்த கருத்துகளுக்கு இன்றைக்கும் இணையான ஆற்றல் வேறில்லை என்றால் அது மிகையில்லை.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையை அடுத்துள்ள செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில்(1930, ஏப்.30) பிறந்து 29 ஆண்டுகள் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து(1959, அக்.8) மறைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

ஆனால், பாட்டுக்கோட்டையாக, மக்கள் கவிஞனாக அவரின் பாடல்கள் கூறும் தனித்துவமான சிந்தனையில் ஈர்த்து நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்றால் அது அவர் கொண்டிருந்த கொள்கைக்கு கிடைத்த சிறப்பு என்றே கூறலாம்.

இளம் பருவத்திலேயே எதையாவது செய்ய வேண்டும் என்ற இலக்கோடு பயணித்த கவிஞர் வாழ்நாளின் இறுதிவரையில் உழைப்பை நம்பியே ஓடிக் கொண்டிருந்தவர்.

தனது வாழ்நாளில் விவசாயி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி, உப்பளத் தொழிலாளி, மாம்பழம், இட்லி, முறுக்கு, தேங்காய், கீற்று போன்ற வியபாரம், மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, மிஷின் ஓட்டுநர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என 17 வகையான தொழில்களை கையாண்டதாக ஜீவா குறிப்பிடுகிறார். 

என்ற பாடலை எழுதி மனித நேயத்தின் வெளிப்பாட்டை ஒரு படைப்புக்குள் இருக்க வேண்டிய அழகியலை பாமரனும் புரிந்துணர வைத்தார்.

விவசாயப் பணியின் வலியை உணர்ந்தவராக இருந்ததால் அதை நம்பியுள்ள உழவர்களின் வேதனையைப் போக்க பாடல்களால் மட்டுமல்லாது களத்தில் நின்று போராடவும் கற்றுத் தந்தவர்.

விவசாய சங்கங்கள் செயல்பாடு, பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்த அமைப்புகளின் நோக்கத்தை உயர்த்திப் பிடிக்க துணிந்து நின்றார். அதற்கு ஏற்ற தளமாக அவர் கருதிய கலை வடிவங்களில் முனைப்பு காட்டினார். பாடல்கள் எழுதுவது, நாடகங்களில் பங்கேற்று நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

பொதுவுடமை இயக்கத்தின் போராளிகளாக திகழ்ந்து தலைமறைவு வாழ்க்கையோடு களம் கண்ட வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருன் இணைந்து இயக்கத்துக்காக விவசாயிகளை வென்றெடுக்க முனைப்புக்காட்டியவர்.

இந்த சூழ்நிலையில் பொதுவுடமை இயக்கத்தின் தோழரான இலக்கியப் பேராசான் என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தோழமையில் நெருக்கம் ஏற்பட்டது.

இதனால், பொதுவுடமை இயக்கத்தின் மீது இவர் வைத்திருந்த நம்பிக்கைதான் பின்னாளில் தத்துவ பாடல்களாக பதிவிறக்கமானது என்றுகூட கூறலாம்.

சீர்த்திருத்த கருத்துகளை தனது கற்பனை திறனை உரமாக்கி பட்டுக்கோட்டை வடித்த பல பாடல்களை 1954 முதல் ஜனசக்தி இதழில் அச்சேற ஜீவா துணை நின்றார்.

அந்த இயக்கத்தின் நாடகமான கண்ணின் மணிகள் நாடகத்துக்கும் பட்டுக்கோட்டையார் பாடல்களை எழுதினார்.அப்போது எழுதிய
தேனாறும் பாயுது
செங்கதிரும் சாயிது
ஆனாலும் மக்கள்
வயிறு காயிது ...

- என்ற பாடல் வரிகள் பின்னாளில் திரைப்படப் பாடலாகியது.

திரைத்துறைக்குள் நுழைவதற்குள் பட்டுக்கோட்டை போட்ட எதிர்நீச்சல் கொஞ்சமல்ல. ஆனாலும், நம்பிக்கையோடு நின்ற அவருக்கு 1955-ல் வெளியான 'படித்த பெண்' திரைப்படத்துக்கு முதல் முதலாக பாடல் எழுதி முத்திரை பதித்தார்.

கவிஞனின் வாழ்நாளில் 56 படங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 180 பாடல்களைத் தந்த மகா கவிஞன்.

அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், படத் தயாரிப்பாளர்கள் என பலரையும் வியந்து போகவும், அவர் எழுதிய பாடல்களின் தாக்கத்தால் வியர்வை காணவும் செய்த மக்கள் கவிஞர்.

குட்டி ஆடு தப்பி வந்தால்
குள்ள நரிக்குச் சொந்தம்
 
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா
-என்ற பாடலை பார்த்த பிறகு இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணீர் விட்டு அழுதார் என்றால் அதுதான் பாடலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்

என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக தான் கொண்ட பொதுவுடமைக் கொள்கையின் நெறிகளோடு சற்றும் சமரசமில்லாத போக்கை பாடல்களாக படைத்ததோடு,இயக்கப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் பட்டுக்கோட்டை.

திரைப்படப் பாடல்களில் உழைக்கும் பாட்டாளி மக்களின் எதார்த்த நிலை, அவர்களின் எதிர்ப்பார்ப்புகள், ஆவேசங்களை மேலோங்கச் செய்து, தன்னெழுச்சி சக்திகளை வெளிக்கொணர்ந்தவர் பட்டுக்கோட்டை. தனது குடும்பம் விவசாயம், கால்நடை வளர்ப்பு என பண்ணை சார்ந்த தொழிலில் ஈடுபட்டதால் அதன் வலியை, துயரங்களை உணர்ந்தவர் என்பதுடன் அதே நேரம் உழைப்பால் கிடைக்கும் மகிழ்ச்சியை அணு அணுவாக அனுபவித்தும் தனது படைப்புகளில் அம்பலப்படுத்தியவர் பட்டுக்கோட்டை. 

பட்டுக்கோட்டையின் பாடல்கள் பொதுவுடமை சிந்தனைகளை தாங்கி வந்தாலும் அது பல நிலைகளில் திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்று கூறலாம். திரைப்பட நடிகராக திகழ்ந்து, பின்னர் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர்.தான் வகிக்கும் முதல்வர் பதவிக்கான நாற்காலியில் நான்கு கால்கள் உள்ளது. அதில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். 

கைக்குள் கிடைத்த செல்லிடப்பேசி போன்ற தொழில்நுட்பங்களை மனதில் கொண்டு நாம் ஏதோ வளர்ந்து விட்டதாக மார்த்தட்டிக் கொள்கிறோம். அதேநேரம் சமூகத்தில் புறையோடி வரும் அவலங்கள் குறித்து கவலைக் கொள்வதில்லை.

இன்றைய இளையோரில் பலரின் செயல் சமூகத்தில் கவலை அளிக்கவே செய்கிறது.

போதை, மூடநம்பிக்கை என ஏதோ சில காரணிகளால் இளையோரின் சிந்தை திசை மாற்றப் படுவதை மறுக்க முடியாது.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை வளரும் இளைய தலைமுறையினரால்தான் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அதனால்தான் மகாகவி பாரதி பாப்பாவுக்கு எழுதிய 'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலில் சமூகத்தில் நிகழும் அநீதிகளையும் அதனை எதிர்கொள்ள வேண்டிய தைரியம், நம்பிக்கையை விதைத்து எழுதினார்.

பாரதியின் வழியில் நின்று பட்டுக்கோட்டையார் சின்னப் பயலுக்கு எழுதிய பாடல் மூலம் இளைஞர்களுக்கு கூறிய வழிமுறைகள் எந்த காலத்துக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளன.

அரசிளங்குமரி என்ற படத்தில் இடம்பெற்ற 

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா-நான் 
சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா...

என்ற பாடலில் 'ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி' என்பதோடு,மூட நம்பிக்கையிலிருந்து விடுபடவும், தனியுடமை கொடுமைகளையும், பொதுவுடமையின் அவசியத்தையும் பறைசாற்றுகிறார்.

அதேபோல, 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற பாடலை ஏதோ தம்பிக்கு எழுதியதைப்போல இருந்தாலும் அரசியல், அதிகாரம், சமூகத்தில் பொறுப்பானவர்கள் அனைவருக்கும் எந்த காலத்திலும் பொருந்துவதாகவே கூறுகிறார்.

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்.


சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

என பாடலில்  இடம்பெற்றுள்ள அத்தனை வரிகளும் மக்களை விழிப்படையவே சொல்லப்பட்டது.

காடு வெளஞ்சென்ன மச்சான்- நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்

என விளிம்பு நிலை வாழ் மக்களின் நிலை குறித்த பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் யாவும், திருவள்ளுவன், ஒளவை போன்ற  பெரியோர் வாய்மொழிப்   போல பாடப் புத்தகங்களில்  கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்வோம். 

மக்களின் உணர்வுகளை, பிரச்னைகளை, தேவைகளை கலைத்துறையில் சமரசமில்லா கலைஞனாக நின்று பதிவு செய்த பெரும் கவிஞனுக்கு அவரது  நினைவு நாளில் மரியாதை செலுத்துேவோம். 

[அக். 8 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்]



Read in source website