DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 08-08-2022

 

தமிழக போக்குவரத்தில் தனியார் மயமாக்கல் இல்லை எனவும், நவீனமயமாக்கல் மட்டுமே செய்யப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். 

இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு
மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது. 

சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நவீனப்படுத்துவது, தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும் தாண்டி, அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

 

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,   உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும்.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேருவோர் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி நீக்கப்பட்டு, இதழியல் படிப்பு படித்திருப்பதும் கட்டாயம் என மாற்றப்பட்டுள்ளது. 

மேலும், 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வபோது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும். அந்தவகையில்,  நேரடி நியமனம், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வின் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும்.

அதாவது 1:1 என்ற விகிதத்தில் (50% நேரடி நியமனம், 50% பதவி உயர்வு, பணிமாறுதல் நியமனம்) நிரப்ப வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.



Read in source website

 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளதால், சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என எம்.பி.க்கள் அவையில் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

முதலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மக்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 33 மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடும்பநல பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய எந்த சட்டமும் நிறைவேற்றாமல் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில்  இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. 

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய்ராஜ் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் - சீன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி  21-15, 21-13 என வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இந்த ஜோடி வெள்ளி வென்ற நிலையில் இப்போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென்னும் மலேசியாவின் என்ஜி ஸி யாங்கும் மோதினார்கள். முதல் கேமை மலேசிய வீரர் 21-19 என வென்றார். அடுத்த கேமை 21-9 என வென்ற லக்‌ஷயா சென் கடைசி கேமிலும் ஆதிக்கம் செலுத்தி 19-21, 21-9, 21-16 என இறுதிச்சுற்றை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார். 

2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது. இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. 



Read in source website

 

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யனும் இங்கிலாந்தின் பால் டிரிங்ஹாலும் மோதினார்கள். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 11-9, 11-3, 11-5, 8-11, 9-11, 10-12, 11-9 என சத்யன் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார் சத்யன். 
 



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார் இந்தியாவின் சிந்து. இதற்கு முன்பு இருவரும் விளையாடிய 10 ஆட்டங்களில் 8-ல் சிந்து வெற்றியடைந்திருந்தார். எனினும் காலில் ஏற்பட்ட காயத்துடன் அரையிறுதியில் அவர் விளையாடினார். இதனால் இறுதிச்சுற்றிலும் காயத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படுமா என ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். 

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 21-15, 21-15 என வெற்றி பெற்று தங்கம் வென்றார் பி.வி. சிந்து. 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற சிந்து, 2018-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது காமன்வெல்த் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாகத் தங்கம் வென்றுள்ளார்.



Read in source website

 

சாதாரணமாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைப் போல தலைமுடியும் வறண்டு போகும். எனவே, குளிர்காலத்தில் தலைமுடியை அதிக கவனத்துடன் பராமரிப்பது அவசியமாகும்.

முடி உதிர்தலுக்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல காரணங்கள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு, எடுத்துக்கொள்ளும் உணவு, மன அழுத்தம், வேறு நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறலாம்.

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில எளிய முறைகளைக் காணலாம். 

► முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்தலைக் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். 

► வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த கலவையுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலசி விடவும்.  

► கற்றாழைச் சாறையும் தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். 

► முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம். அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வாரமாக நல்லெண்ணெய், ஒரு வாரம் பாதாம் எண்ணெய், ஒரு வாரம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

► பொடுகினைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து ஸ்கால்ப்பில் படும்படி தெளிக்கவும் அல்லது பஞ்சு கொண்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவலாம். 

► இதேபோல ஆப்பிள் சீடர் வினிகருக்குப் பதிலாக டீ ட்ரீ ஆயிலையும் பயன்படுத்தலாம். 

► குளிர்காலத்தில் குளிப்பதற்கு சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரிலே தலைமுடியை அலச வேண்டும். 

► தலைமுடி வறண்டு போக விடக்கூடாது. முடிந்தவரை லேசாக எண்ணெய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

► தலைக்கு குளித்தவுடன் ஈரத்துடன் சீப்பினை பயன்படுத்தக்கூடாது. 



Read in source website

 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய நடைமுறைகளுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில், 

- 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும்.

- விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்(சிஇஓ) தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

- 38 மாவட்ட குழுக்கள் தரும் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையிலான மாநில அளவிலான குழு ஆய்வு செய்ய வேண்டும். 

- எவ்வித புகாருக்கும் இடம் தராமல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிருக்க வேண்டும்.

- ஏற்கனவே விருது பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது. 

- தனிப்பயிற்சி (டியூசன்) எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பெட்ரோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

எம்-19 கொரில்லா படையின் முன்னாள் உறுப்பினரான அவா், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்தாா். சந்தை சாா்பு பொருளாதாரத்தில் முந்தைய ஆட்சியாளா்கள் சிறு சீா்திருத்தங்கள் மேற்கொண்டாலும், அதிகரிக்கும் வறுமை, வன்முறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. அதனைப் பயன்படுத்தி, இடதுசாரிக் கொள்கையையுடைய கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், அவா் நாட்டின் புதிய அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். 4 ஆண்டுகளுக்கு அவா் அதிபராக பதவி வகிப்பாா்.



Read in source website

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கா் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.

தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனுப்சந்திர பாண்டே ஆகியோா் கையொப்பமிட்ட தன்கரின் தோ்தல் சான்றிதழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுடன் எம்எல்ஏக்களும் வாக்களிப்பதால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாட்டின் பல இடங்களில் நடைபெற்றது. ஆனால், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் மட்டும்தான் வாக்களிப்பா். இதனால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாடாளுமன்றத்தில் மட்டும் நடைபெற்றது. அதில் தன்கா் 528 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆல்வா 182 வாக்குகள் மட்டும் பெற்றாா்.

அதனைத் தொடா்ந்து, ஜகதீப் தன்கா் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோா் கையொப்பமிட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது. மூத்த துணைத் தோ்தல் ஆணையா் தா்மேந்திர சா்மா மற்றும் தோ்தல் ஆணைய மூத்த முதன்மைச் செயலா் நரேந்திர என்.புடோலியா ஆகியோா் அந்தச் சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தனா்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் புதிய குடியரசு துணைத் தலைவா் உறுதிமொழியேற்பு விழாவின்போது இந்தச் சான்றிதழ் வாசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநராகவும் என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிஎஸ்ஐஆரின் 80 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவா் இரு ஆண்டு காலம் இப்பணியில் இருப்பாா். சிஎஸ்ஐஆா்-இன் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிக்ரி) இயக்குநராக கலைச்செல்வி தற்போது பணியாற்றி வருகிறாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த இவா், பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவா். அறிவியல் பாடத்தில் இருந்த ஆா்வம் காரணமாக அறிவியலில் பட்டம் பெற்றாா். அதிலேயே ஆராய்ச்சிக் கல்வியும் பயின்றாா்.

மின் வேதியியல் தொழில்நுட்பத்தை வீடுகளிலும் பயன்படுத்தும் வகையில் எளிமைப்படுத்தினால் எரிசக்தியை சேமிக்கலாம் என்பதை வலியுறுத்தி வருகிறாா். லித்தியம் பியான்ட், லித்தியம் மின்கலன்கள் (பேட்டரிகள்) தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்டாா்.

காரைக்குடி சிக்ரியில் ஆராய்ச்சியாளராக பணியில் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிக்ரியின் முதல் பெண் இயக்குநரானாா். 125 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். ஆராய்ச்சிக்காக 6 காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறாா். தற்போது சோடியம் அயன், லித்தியம் சல்பா் மின்கலன்களை மேம்படுத்துவது தொடா்பான ஆராய்ச்சியில் ஆா்வம் காட்டி வருகிறாா்.

முதல்வா் வாழ்த்து: விஞ்ஞானி கலைச்செல்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

‘இந்தியாவின் உயா் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆா்- இன் முதல் பெண் தலைமை இயக்குநா் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சோ்ந்த கலைச்செல்வி அடைந்திருக்கிறாா். தமிழ் வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று’ என்று கூறியுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.



Read in source website


புது தில்லி: வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்துள்ளதா என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளிலிருந்து கள்ள நோட்டுகள் கடத்திக் கொண்டு நாட்டுக்குள் கொண்டு வரும் சம்பவங்கள் நடந்திருப்பதாக புலனாய்வுத் துறை மூலம் கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், வங்கிப் பணிகளின்போது கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2016 - 17ஆம் நிதியாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 7.62 லட்சமாக இருந்த நிலையில், இது 2020 - 21ஆம் நிதியாண்டில் 2.08 லட்சம் நோட்டுகளாகக் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 



Read in source website

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களவையில் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று மசோதா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மசோதா அனுப்பி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம், அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதா கூறுகிறது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.



Read in source website

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட, நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்ஏஎல் அதிகாரிகள் கூறியதாவது:

சுழலும் இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன், ஏவுகணைகள், சென்சாா் உள்பட 40 கிலோ எடை வரையிலான பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன்வாய்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவ வீரா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ட்ரோன் வடிவமைக்கப்படுகிறது.

ஆளில்லா இந்தக் குட்டி விமானத்தின் சோதனை ஓட்டத்தை அடுத்த ஆண்டின் (2023) மத்தியில் நடத்த ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 60 ட்ரோன்கள் தயாரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் உள்பட பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன்களை ராணுவ வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சென்சாா், ஏவுகணைகள் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இஸ்ரேலின் ஹெரோன் டிபி டிரோன்களை அந்நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. ராணுவ வீரா்களின் தேவையையும், உலகளாவிய ராணுவத் தளவாட பொருள்களின் விநியோகத்தையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுத்தர வடிவிலான ஹெரோன் ட்ரோன்கள், 35,000 அடி உயரத்தில் சுமாா் 45 மணிநேரம் தடையின்றி பறக்கும் திறன்வாய்ந்தவை என்று அவா்கள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக்கில் சீனா உடனான மோதல், ஜம்முவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதல் ஆகிய சம்பவங்களைத் தொடா்ந்து ராணுவத் தேவைக்கான ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.



Read in source website

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

சென்சாா் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு விரைவில் எஸ்எஸ்எல்வி - டி2 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறினாா்.

இஸ்ரோவின் முதல் முயற்சியாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘ஆஸாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

அதன் முதல் மூன்று நிலைகள் வெற்றிகரமாக அமைந்தன. அதன்பின்னா், திட்டமிட்டபடி இஒஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனா். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிநிலை உடனான தகவல் தொடா்பை இழந்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதைக்கு பதிலாக வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், எஸ்எஸ்எல்வி - டி1 திட்டம் முழுமையான வெற்றியை எட்ட முடியாமல் போனது.

செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது

புவி வட்டப் பாதைக்கு பதிலாக நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதே பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா். புவியிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அங்கேயே நீடித்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அவை மீண்டும் புவிக்கே திரும்பி வந்துள்ளன. இதன் காரணமாக இஓஎஸ்-02 மற்றும் ஆஸாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களுமே பயன்பாடற்ற நிலைக்கு சென்றுவிட்டன.

பின்னடைவுக்கு காரணம் என்ன? இஸ்ரோ தலைவா் விளக்கம்

எஸ்எஸ்எஸ்வி ராக்கெட் திட்டத்தின் பின்னடைவு குறித்து இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் கூறியதாவது:

செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவுக்கான முதற்கட்ட காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றை இன்னும் ஆழ்ந்து ஆராய வேண்டியிருக்கிறது.

சென்சாா் சமிக்ஞை நுட்பம் செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. திட்டமிட்ட பாதையை விட்டு செயற்கைக்கோள்கள் விலகும்போது அதிலிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

இஒஎஸ்-02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்களை தரையில் இருந்து 356 கிலோ மீட்டா் தொலைவில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குமாறாக புவியில் இருந்து குறைந்தபட்சம் 76 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 356 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. இதுகுறித்து ஆய்வு செய்ய பிரத்யேக நிபுணா் குழு அமைக்கப்பட உள்ளது. விரைவில் தவறுகள் சரிசெய்யப்பட்டு புதிய எஸ்எஸ்எல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.



Read in source website

 

2022 ஆசியக் கோப்பைக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

தற்போது, ரோகித் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளனர்.

விராட் கோலி, சூர்ய குமார், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வு மொழிபெயர்ப்பு நூல் பரிசாக வழங்கப்பட்டன. 

கீழடி ஆய்வு நூலுடன், திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகமும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த இரு நூல்களும் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அவர்களுடன் விருந்தினர்களும் பங்கேற்றுள்ளனர். தற்போது 10வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து நாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களின் மொழிபெயர்ப்பு நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. 

இவை ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் தமிழ்நாட்டின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் அறிய இயலும்.



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென்னும் மலேசியாவின் என்ஜி ஸி யாங்கும் மோதினார்கள். முதல் கேமை மலேசிய வீரர் 21-19 என வென்றார். அடுத்த கேமை 21-9 என வென்ற லக்‌ஷயா சென் கடைசி கேமிலும் ஆதிக்கம் செலுத்தி 19-21, 21-9, 21-16 என இறுதிச்சுற்றை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார். 

2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது. இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. 



Read in source website

 


இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரணவ்.

செஸ் கிராண்ட்மாஸ்டராக மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையை 2021-ல் எட்டிய பிரணவ், கடந்த ஜூனில் புதாபெஸ்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் 2-ம் நிலையை எட்டினார். இந்நிலையில் ரொமானியாவில் நடைபெற்ற செஸ் போட்டியை வென்ற பிரணவ், 3-ம் நிலையை அடைந்து இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். ரொமானியாவில் நடைபெற்ற லிம்பேடியா செஸ் போட்டியில் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனதுடன் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியையும் அவர் பூர்த்தி செய்தார். சென்னை வேலம்மாள் பள்ளியில் பயின்று வரும் பிரணவின் பயிற்சியாளர் காமேஷ் விஸ்வேஸ்வரன். 

பிரணவ், தமிழ்நாட்டின் 27-வது செஸ் கிராண்ட்மாஸ்டர். அதாவது இந்தியாவிலுள்ள 75 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 27 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 

1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். தற்போது 75-வது கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் தருணத்தில் கிராண்ட்மாஸ்டராகி தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார் பிரணவ். 

மாநிலங்கள் வழங்கிய செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்
 

 மாநிலங்கள் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை
 தமிழ்நாடு  27
 மஹாரஷ்டிரம்  10
 மேற்கு வங்கம்  9
 தில்லி  6
 தெலங்கானா   5
ஆந்திரப் பிரதேசம்  4
 கேரளா  3
 கர்நாடகம்   3
 ஒடிஷா  2
 குஜராத்   2
 கோவா  2
 ராஜஸ்தான்  1
 ஹரியாணா  1
 மொத்தம்   75

தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்

 1.  விஸ்வநாதன் ஆனந்த்

 (1988, இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர்)
 2.  சசிகிரண்

 (2000, இந்தியாவின் 5-வது கிராண்ட்மாஸ்டர்)
 3.  ஆர்.பி. ரமேஷ்

 (2004, இந்தியாவின் 10-வது கிராண்ட்மாஸ்டர்)
 4.  மகேஷ் சந்திரன்

  (2006, இந்தியாவின் 12-வது கிராண்ட்மாஸ்டர்)
 5.  தீபன் சக்ரவர்த்தி

 (2006, இந்தியாவின் 13-வது கிராண்ட்மாஸ்டர்)
 6.  அருண் பிரசாத் 

 (2008, இந்தியாவின் 18-வது கிராண்ட்மாஸ்டர்)
 7.

 எஸ். கிடாம்பி

 (2009, இந்தியாவின் 19-வது கிராண்ட்மாஸ்டர்)

 8.  ஆர்.ஆர். லக்‌ஷ்மண்

 (2009, இந்தியாவின் 20-வது கிராண்ட்மாஸ்டர்)
 9.  அதிபன்

 (2010, இந்தியாவின் 23-வது கிராண்ட்மாஸ்டர்)
 10.

 எஸ்.பி. சேதுராமன்

 (2011, இந்தியாவின் 24-வது கிராண்ட்மாஸ்டர்)

 11.

 எம்.ஆர். வெங்கடேஷ்

 (2012, இந்தியாவின் 28-வது கிராண்ட்மாஸ்டர்)

 12.  ஷ்யாம் சுந்தர்

 (2013, இந்தியாவின் 31-வது கிராண்ட்மாஸ்டர்)
 13.

 விஷ்ணு பிரசன்னா

 (2013, இந்தியாவின் 33-வது கிராண்ட்மாஸ்டர்)

 14.   அரவிந்த் சிதம்பரம்

 (2015, இந்தியாவின் 37-வது கிராண்ட்மாஸ்டர்)
 15.

 கார்த்திகேயன் முரளி

 (2015, இந்தியாவின் 38-வது கிராண்ட்மாஸ்டர்)

 16.  அஸ்வின் ஜெயராம்

 (2015, இந்தியாவின் 39-வது கிராண்ட்மாஸ்டர்)
 17.  பிரியதர்ஷன்

 (2016, இந்தியாவின் 44-வது கிராண்ட்மாஸ்டர்)
 18.
 ஸ்ரீநாத் நாராயணன்

 (2017, இந்தியாவின் 46-வது கிராண்ட்மாஸ்டர்)
 19.  பிரக்ஞானந்தா

 (2018, இந்தியாவின் 52-வது கிராண்ட்மாஸ்டர்)
 20.

 கார்த்திகேயன்

 (2018, இந்தியாவின் 57-வது கிராண்ட்மாஸ்டர்)

 21.

 என்.ஆர். விசாக்

 (2019, இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர்)

 22.

 குகேஷ்

 (2019, இந்தியாவின் 60-வது கிராண்ட்மாஸ்டர்)

 23.

 இனியன்

 (2019, இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டர்)

 24.

 ஆகாஷ் கணேசன்

 (2020, இந்தியாவின் 66-வது கிராண்ட்மாஸ்டர்)

 25.

 அர்ஜுன் கல்யாண்

 (2021, இந்தியாவின் 68-வது கிராண்ட்மாஸ்டர்)

 26.

 பரத் சுப்ரமணியன்

 (2022, இந்தியாவின் 73-வது கிராண்ட்மாஸ்டர்)

 27.   பிரணவ்

 (2022, இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர்)
 

 

இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருந்தாலும் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து மட்டுமே செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக மஹாராஷ்டிரமும் மேற்கு வங்கமும் அதிக கிராண்ட்மாஸ்டர்களைத் தந்துள்ளன. 

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இதுவரை ஒரு கிராண்ட்மாஸ்டரும் நமக்குக் கிடைக்கவில்லை. செஸ்ஸைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவும் அவசியம் என்பதால் இதுவும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும் செஸ்பேஸ் போன்ற செஸ் தளங்கள் தற்போது ஹிந்தியிலும் இயங்குவதால் விரைவில் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய செஸ்ஸின் வளர்ச்சி

 வருடம்  இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை
 1988  1
 1991  1
 1997  1
 2000  2
 2001  1
 2002  1
 2003  2
 2004  2
 2005  0
 2006  4
 2007  1
 2008  2
 2009  2
 2010  3
 2011  2
 2012  4
 2013  6
 2014  1
 2015  5
 2016  3
 2017  6
 2018  8
 2019  7
 2020  2
 2021  5
 2022  3
 மொத்தம்  75

 



Read in source website

 


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது டி20யையும் டி20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

லாடர்ஹில்லில் நடைபெற்ற 5-வது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். ஹார்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஹெட்மையர் 56 ரன்கள் எடுத்தார். பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

டி20 தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகனாகவும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். 

5-வது டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் அனைத்து விக்கெட்டுகளும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுபோல எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இதுவே முதல்முறை. இதன்மூலம் பிஷ்னாய், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்கள். 



Read in source website

தைவான் தீவைச் சுற்றி 5-ஆவது நாளாக திங்கள்கிழமை சீனா போா்ப் பயிற்சியைத் தொடா்ந்தது.

சீனாவின் கடும் எதிா்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி சென்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தைவான் தீவைச் சுற்றிலும் தீவிர போா்ப் பயிற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. திட்டமிட்ட நாள்களையும் தாண்டி 5-ஆவது நாளாக இந்தப் பயிற்சி நீடித்தது.

நீா்மூழ்கிக் கப்பல் எதிா்ப்புப் பயிற்சி, வானிலிருந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தும் பயிற்சியை முதன்மையாகக் கொண்டு தைவான் தீவு அருகே பயிற்சியைத் தொடரவுள்ளதாக சீனாவின் மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) கிழக்குப் படை தலைமை தெரிவித்துள்ளது. சீனாவின் இந்தப் புதிய அறிவிப்பு மூலம் போா்ப் பயிற்சி இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

கடந்த நான்கு நாள்கள் நடத்தப்பட்ட பயிற்சியின்போது நீண்ட தொலைவு வான் இலக்குகள், தரை இலக்குகளைத் தாக்கும் திறன்களை சீனா சோதித்துப் பாா்த்தது.



Read in source website

சீனாவின் ‘யுவான் வாங் 5’ உளவு கப்பலின் பயணத்தை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை வலியுறுத்திய நிலையில், ‘பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் இலங்கை மீது சிறிதும் பொருத்தமற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது’ என்று இந்தியாவை சீனா விமா்சனம் செய்துள்ளது.

நவீன உளவு தொழில்நுட்பங்களைக் கொண்ட சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக இருந்தது. அக் கப்பலின் வருகை, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இலங்கை அரசிடம் தெரிவித்த இந்தியா, கடும் எதிா்ப்பையும் பதிவு செய்திருந்தது.

உளவுக்கப்பல் சீனாவிலிருந்து கிளம்பிய நிலையில், இந்தியாவின் கடும் எதிா்ப்பு காரணமாக கப்பலின் வருகையைக் காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அக்கடிதத்தில், இந்த விவகாரத்துக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணும் வரை கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரியிருந்தது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

சீனா - இலங்கை இடையேயான ஒத்துழைப்பு என்பது பொது நலன்களுக்காக இரு நாடுகளும் சுதந்திரமாக மேற்கொண்ட உடன்பாடாகும். இது எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு அல்ல.

இத்தகைய சூழலில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை மீது அா்த்தமற்ற அழுத்தம் அளிக்கப்படுகிறது. இலங்கை இறையாண்மை உள்ள நாடு. அந்த வகையில், நாட்டின் வளா்ச்சிக்காக எந்தவொரு நாட்டுடன் இலங்கை கூட்டு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பாா்க்க வேண்டும். சீனா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான சாதாரண பரிமாற்றங்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகளை அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய பெருங்கடலில் போக்குவரத்து முனையமாக இலங்கை செயல்பட்டு வருகிறது. சீனாவின் கப்பல்கள் உள்பட பல நாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.

சீனா எப்போதுமே ஆழ்கடல் கண்காணிப்பு சுதந்திரத்தை பயன்படுத்தியும் பிற நாடுகளின் கடல் எல்லைஅதிகார வரம்புகளுக்கு மதிப்பளித்தும் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.



Read in source website

உக்ரைனிலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை திங்கள்கிழமை வந்தடைந்தது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உக்ரைனிலிருந்து தானிய கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி ஏற்பாட்டில் கடந்த மாதம் கையொப்பமானது.

அதன்படி, உக்ரைனிலிருந்து உணவு தானியங்களுடன் கப்பல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு உக்ரைனின் சோா்னோமோா்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5-ஆம் தேதி 12,000 டன் சோளத்துடன் புறப்பட்ட கப்பல் துருக்கியை வந்தடைந்தது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் உங்களைக் கைவிடாது என மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தத் தகவல் நம்பிக்கை அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஒப்பந்தப்படி உக்ரைனிலிருந்து 12 கப்பல்கள் அனுப்பப்படவுள்ளன. 3,22,000 மெட்ரிக் டன் வேளாண் பொருள்கள் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் புறப்பட்டுள்ளன.

உக்ரைனிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட மேலும் 4 கப்பல்கள் விரைவில் துருக்கியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சியெரா லியோன் நாட்டுக் கொடியுடன் 26,000 மெட்ரிக் டன் கோழித் தீவனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் திட்டமிட்டபடி இன்னும் லெபனானை சென்றடையவில்லை. அந்தக் கப்பல் வருவதற்குத் தாமதமானதால் உணவு தானியத்தை வாங்கவிருந்தவா் மறுப்பு தெரிவித்ததாகவும், வேறு யாராவது வாங்குவதற்காக அந்தக் கப்பல் லெபனான் அருகே காத்திருப்பதாகவும் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

அணுமின் நிலைய பகுதியில் குண்டுவீச்சு

உக்ரைனின் ஸப்போரிஷியா அணுமின் நிலைய பகுதியில் உக்ரைன் குண்டுவீசியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தை ரஷிய படையினா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த அணுமின் நிலைய பகுதியில் உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை குண்டுவீசி தாக்கியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புக் குழுவினா் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆனால், ரஷிய படையினா்தான் அணுமின் நிலைய பகுதியில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு தலைவா் ஆண்ட்ரி யுஸோவ், ‘ரஷியாதான் அணுமின் நிலைய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இது உண்மையில்லை என்றால், அணுமின் நிலைய கட்டுப்பாட்டை சா்வதேச அணுமின் முகமையிடம் அவா்கள் ஒப்படைத்துவிட வேண்டியதுதானே எனக் கூறியுள்ளாா்.



Read in source website

காஸாவில் தாங்கள் பரிந்துரைத்துள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

காஸாவில் கடந்த இஸ்ரேல் ராணுவத்துக்கும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐஜே) இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இரு தரப்பினரிடமும் எகிப்து தூதுக் குழு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

அப்போது பரிந்துரைக்கப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க இஸ்ரேல் தரப்பு சம்மதித்துவிட்டது.

இனி ஐஜே அமைப்பினரிடமிருந்துதான் இது தொடா்பான பதில் வரவேண்டியுள்ளது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஜே அமைப்பின் பிரதிநிதி ஒருவா் கூறுகையில், ‘காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான உயா்நிலைக் குழு பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், காஸாவில் தனது ஆக்கிரமிப்பதையும் குற்றச் செயல்களையும் இஸ்ரேல் நிறுத்தும்வரை எங்களது எதிா்த்தாக்குதல் தொடரும்’ என்று எச்சரித்தாா்.

முன்னதாக, எகிப்து அதிபா் அப்தெல் ஃபட்டா அல்-சிசி கூறுகையில், ‘காஸாவில் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 24 மணி நேர பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

காஸாவில் ஐஜே அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தளபதி அல்-ஜாபரி, 5 வயது சிறுமி உள்பட 12 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஸ்ரேலை நோக்கி ஐஜே அமைப்பினா் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதற்கு பதிலடியாக, ஐஜே அமைப்பினரின் இலக்குகள் மீது இஸ்ரேல் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில் ஐஜே அமைப்பின் மற்றொரு தளபதியும் கொல்லப்பட்டதையடுத்து, பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்த மோதலில் இதுவரை மொத்தம் 31 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில் 6 போ் சிறுவா்கள் எனவும் பாலஸ்தீன மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இஸ்தேல் தாக்குதலில் 275 போ் காயமடைந்ததாகவும் அவா்கள் கூறினா்.

காஸாவில் ஹமாஸ் அமைப்பினா் ஆட்சி செலுத்தி வந்தாலும் அங்கு ஐஜே உள்ளிட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. எனினும், கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் மோதலில் ஹமாஸ் படையினா் பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவத்துடன் கடந்த ஆண்டு 11 நாள்களாக நடைபெற்ற சண்டையில் பெரும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ள ஹமாஸ், மீண்டும் அத்தகைய மோதல் வெடிப்பதை தவிா்த்து வருகிறது.

இதற்கு, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனக் குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாக மத்தியஸ்தம் செய்து வரும் எகிப்துக்கு ஹமாஸ் அளித்துள்ள வாக்குறுதியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கஸாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலும் எகிப்து முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகே முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஐஜே அமைப்பினருக்கும் இடையை கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர தங்களிடம் இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக தற்போது எகிப்து அறிவித்துள்ளது.



Read in source website

சென்னை: சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது

சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி முடிவடைந்ததும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் அடையாறு ஆற்றில் தண்ணீருக்கு கீழ் மெட்ரோ அமைய உள்ளது. மேலும், பங்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைய உள்ளது. இதன்படி, திருமயிலையில் பங்கிங்காம் கால்வாயில் 58.33 மீ, அடையாற்றில் 666.03 மீ, இந்திரா நகரில் பங்கிங்காம் கால்வாயில் 1219.86 மீ என்று மொத்தம் 1219.86 மீட்டர் நீள பாதை நீர் நிலைகளில் செல்கிறது.

எனவே, இதற்கு அனுமதி அளிக்கக் கோரி மெட்ரோ ரயில் சார்பில் மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த ஆணையம், இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன்பிறகு மத்திய கடலோர ஒங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்றபின் இந்தப் பணிகள் தொடங்கும்.



Read in source website

2019-ம் ஆண்டு பரவிய கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் தரைவழிப்போக்குவரத்து மட்டுமின்றி விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 2020 மார்ச் 23-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்த மத்திய அரசு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை மட்டும் இயக்க அனுமதித்தது.

இதனால் அந்நிய செலவாணி மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, 2.15 கோடி மக்கள் வேலை இழந்தனர். இந்தியாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022 மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை அளிக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து, வெளிநாட்டு விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜனவரி முதல் மே மாதம் வரை இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களின் தரவுகளை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு ஜனவரி முதல் மே வரை சுற்றுலாவாக 16,01,381 வெளிநாட்டினர் வந்துள்ளனர்.

கடந்த மே மாதம் மட்டும் 4,23,701 பேர் வருகை தந்துள்ளனர். அதில், அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் 27.80 சதவீதம், வங்கதேசத்தினர் 23.47 சதவீதம், இங்கிலாந்து நாட்டினர் 7.58 சதவீதம், ஆஸ்திரேலியா நாட்டினர் 4.02 சதவீதம், கனடாவிலிருந்து 3.65 சதவீதம் பேர் வந்துள்ளனர்.

மேலும், ஜனவரி முதல் மே வரை வந்த வெளிநாட்டினரில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் 25.57 சதவீதம், வங்கதேசத்தினர் 15.86 சதவீதம், இங்கிலாந்திலிருந்து 11.65 சதவீதம், ஆஸ்திரேலியாவிலிருந்து 6.10 சதவீதம், கனடாவிலிருந்து 5.70 சதவீதம் பேர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வருகையில் முக்கிய பங்கு வகித்த முதல் 15 விமானநிலையங்களில் டெல்லி விமானநிலையம் 35.50 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் மும்பை விமானநிலையம் (14.58 சதவீதம்), 3-வது இடத்தில் சென்னை விமானநிலையம் (9.92 சதவீதம்), 4-வது இடத்தில் ஹரிதாஸ்பூர் விமானநிலையம் (7 சதவீதம்), 5-வது இடத்தில் பெங்களூரு விமானநிலையம் (6.06 சதவீதம்) உள்ளன. இதில், திருச்சி விமானநிலையம் 0.85 சதவீதத்துடன் 14-வது இடம் பெற்றுள்ளது.

மே மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் எண்ணிக்கையில் டெல்லி விமானநிலையம் 25.90 சதவீதத்துடன் முதலிடத்திலும், 2-வது இடத்திலும் மும்பை(14.58 சதவீதம்) உள்ளது. திருச்சி விமானநிலையம் 1.16 சதவீதம் என 13-வது இடம் பெற்றுள்ளது.

வருங்காலங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வருகை அதிகரிக்க வேண்டுமானால், இந்தியாவை 365 நாட்களுக்கான சுற்றுலா இடமாக மேம்படுத்துவதுடன், கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான வளர்ச்சியுடைய சுற்றுலாவுக்கான சாலை வரைபடத்தை உருவாக்க வேண்டும் என திருச்சி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, வறுமையற்ற வளர்ச்சி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் நாடு தைவான். சீனாவுடன் தொடக்கத்திலிருந்தே தொடரும் முரண்பட்ட உறவு, எப்போது போர் மேகங்கள் சூழுமோ என்கிற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளின் பகையை எதிர்கொள்ளும் எந்தவொரு நாடும், இன்றைக்கு உக்ரைன் எதிர்கொண்டுள்ள நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகத் தொடர்கிறது. ஒருவேளை, தைவானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் சீனாவிடமிருந்து தாக்குதல்கள் நேரலாம் என்று அஞ்சியிருக்க வேண்டியதில்லை என்பதுதான் எதார்த்த நிலை.

உதாரணத்துக்கு, வடகொரியாவையே எடுத்துக்கொள்ளலாம். தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை உலகுக்குக் காட்டிக்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அந்நாடு புதிய ஏவுகணைகளைச் சோதித்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், சீனாவின் மறைமுக ஆதரவோடு வடகொரியாவின் கிம் ஜாங்-உன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நாட்டுடன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் மிக எளிதானது. வடகொரியா தன்னிடம் இருப்பதாகக் கூறும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடுமோ என்ற ஆபத்து இருப்பது மட்டுமே.

எந்த நாடும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டவில்லை. சவுதி அரேபியா தொடங்கி வளைகுடா நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சமரசத்துக்குத்தான் முயற்சிகளை முன்னெடுக்கின்றன. இதற்குக் காரணம், இஸ்ரேலிடம் உள்ள அணு ஆயுதத் தொழில்நுட்பம் குறித்த அச்சம்தான்.

உக்ரைன் சந்திக்கும் இந்தச் சூழ்நிலைக்கு தைவானைத் தள்ளிவிடாமல் இருக்க ஒரே வழி, அவர்களை ஆதரிக்க முன்வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், யுத்தச் சூழல் ஏற்பட்டால், தங்களிடம் உள்ள அணு ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வோம் என்று உறுதியளிப்பதுதான்.

அணு ஆயுத வல்லமை கொண்ட சீனா, ஜனநாயக நாடான தைவானைச் சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கு மாறாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைச் சர்வதேசச் சமூகம் வேடிக்கை பார்க்கும் என்றால், அது வரலாற்றின் பக்கங்களில் நீங்காத கறையாகவே நிலைத்து நிற்கும். சீனா தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டால், அதைக் கண்டித்து அறிக்கைகள் விடுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சிறிய நாடுகளுக்கு அளிக்கப்படும் சர்வதேச ஆதரவு என்பது அணு ஆயுதத் தொழில்நுட்பப் பகிர்வாகவும் மாறக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு எழாவிட்டால் பொருளாதார, ராணுவ பலம் பொருந்திய நாடுகள் தங்களது அண்டை நாடுகளைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் தொடரவே செய்யும்.

ஜனநாயக நாடான தைவானைப் பாதுகாப்பது சர்வதேசச் சமூகத்தின் கடமை. தற்போதுள்ள கால அவகாசத்தை உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காலம் கடந்து பின்பு எடுக்கும் முடிவுகளால் பயனில்லை. ஒருவேளை, இது பிராந்தியப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் விலகி நின்று வேடிக்கை பார்த்தால், அது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியின்மைக்கே வழிவகுக்கும்.



Read in source website

காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்ட மாகின. மேலும், பாலஸ்தீனத்தின் அகதிகளின் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளானது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், இதில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீன பொதுமக்கள். பொதுமக்கள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 44 பேர் பலியாகினர். பலியானவர்களில் 15 பேர் குழந்தைகள். 350 பாலஸ்தீனிய பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு காசா பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 11 நாட்கள் நடத்த போரைவிட கோரமான மோதலாக இது அமைந்திருக்கிறது.

இந்தச் சூழலில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்தது. இதன் விளைவாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவுக்கும் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்த சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பாலஸ்தீனம் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதலின் வரலாற்றை தெரிந்தகொள்ள: பூமியின் ’நரகம்’ காசா - உக்ரைன் குண்டுச் சத்தங்களுக்கு இடையே பாலஸ்தீனர்களின் குரலையும் கேளுங்கள்!



Read in source website

புதுடெல்லி: பாதுகாப்புத் துறையில் இதுவரை 136 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு,102 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி சந்தோஷ் குமார் கேட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் திறன் கட்டமைப்புக்கான புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தை அரசு தொடங்கியது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தனி நபர் கண்டுபிடிப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை இதில் ஈடுபடுத்தும் வகையில் இது தொடங்கப்பட்டது.

இந்த கட்டமைப்பின் கீழ் இதுவரை பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்அப் சவால்களின் 7 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 136 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 102 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக 2021-2022 -ம் ஆண்டிலிருந்து 2025-26-ம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.4,98.78 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: நங்கியா ஆண்டர்சன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த 2019-ல் இந்தியர்களின் வெளிநாட்டு சுற்றுலா மதிப்பு 22 பில்லியன் டாலராக (ரூ.1.74 லட்சம் கோடி) இருந்தது. கரோனா சமயத்தில் வெளிநாட்டுப் பயணம் முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில், 2021-ல் இந்தியர்களின் வெளிநாட்டு சுற்றுலா மதிப்பு 12.6 பில்லியன் டாலராக (ரூ.99 ஆயிரம் கோடி) குறைந்தது. தற்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் பணக்காரர்கள் மட்டுமன்றி நடுத்தர குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல் தொடங்கியுள்ளனர். இந்நிலையி,ல் 2024-ம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் சுற்றுலாவின் மதிப்பு 42 பில்லியன் டாலராக (ரூ.3.3 லட்சம் கோடி) உயரும். ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் பங்கு 20 சதவீதம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்களின் பங்கு 10 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.



Read in source website

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், பணவீக்கம் விரைவில் குறையப் போகிறது. மேலும் மின்சார பயன்பாடும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மின்சார வாகனங்களின் விலை விரைவில் குறையும் என்றார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், பணவீக்கம் விரைவில் குறையப் போகிறது. மேலும் மின்சார பயன்பாடும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மின்சார வாகனங்களின் விலை விரைவில் குறையும் என்றார்.
அவரின் கூற்று தற்போது உணவுப் பொருளாதாரத்தில் நடைபெற்றுவருகிறது. ஏனெனில் உணவு பொருள்கள் மீதான பணவீக்கம் ஜூலை மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இது, கடந்த மாதத்தின் அளவை விட 8.6 சதவீதம் குறைந்து 140.9 புள்ளிகள் ஆக உள்ளது. இது 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு ஆகும்.

மார்ச் மற்றும் ஜூலை இடையே, உணவு பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக 11.8% குறைந்துள்ளது. இது தாவர எண்ணெய்கள் மற்றும் தானியங்களால் வழிநடத்தப்பட்டது, அவற்றின் சராசரி விலைகள் முறையே 32% மற்றும் 13.4% குறைந்துள்ளன. தாவர எண்ணெய் விலைக் குறியீடு குறிப்பாக நிலையற்றதாக உள்ளது, கோவிட் தேவை வீழ்ச்சியால் தூண்டப்பட்ட 77.8 புள்ளிகள் மே 2020 இல் இருந்து மார்ச் 2022 இல் 251.8 ஆக உயர்ந்து, ஜூலையில் 171.1 ஆக தளர்த்தப்பட்டது.

உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது அதன் மிகத் தெளிவான சின்னமாகும். கருங்கடல் வர்த்தகப் பாதையைத் தடுப்பதற்கான ஐ.நா-ஆதரவு ஒப்பந்தம் ரஷ்ய உணவு மற்றும் உரங்களின் தடையின்றி ஏற்றுமதியையும் வழங்குகிறது. ரஷ்யா மட்டும் 2022-23ல் (ஜூலை-ஜூன்) 40 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த ஆண்டு 33 மில்லியன் டன்னாக இருந்தது.

இந்தோனேசியா, மே மாத இறுதியில் இருந்து, பாமாயில் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியுள்ளது. இது, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் சோயாபீன் பயிர்களை அறுவடை செய்யத் தயாராக உள்ளது.

இந்தியாவின் வருடாந்திர நுகர்வுத் தேவையில் ஏறத்தாழ 60% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படும் சமையல் எண்ணெய்களில் இது அதிகம் காணப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில், அகில இந்திய மாடல் (அதிகமாக குறிப்பிடப்படும்) சில்லறை விற்பனை விலையானது ஒரு கிலோ சோயாபீன் எண்ணெய் ரூ.175ல் இருந்து ரூ.150 ஆகவும், பாமாயில் ரூ.165ல் இருந்து ரூ.142.5 ஆகவும் குறைந்துள்ளது.

உலகளாவியது மட்டுமல்ல

உலகளாவிய ரீதியில், உணவுப் பணவீக்கம் கணிசமான அளவில் குறையும் என்று எதிர்பார்ப்பதற்கு உள்நாட்டுக் காரணங்களும் உள்ளன.

அதில் முக்கியமானது தென்மேற்கு பருவமழை. ஜூன் முதல் ஆகஸ்ட் 7 வரையிலான நடப்பு பருவத்தில் மொத்த மழைப்பொழிவு இந்தக் காலத்திற்கான வரலாற்று நீண்ட கால சராசரியை விட 5.7% அதிகமாக உள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் தவிர – கிட்டத்தட்ட அனைத்து விவசாய-முக்கியமான பகுதிகளிலும் – இதுவரை நல்ல மழை பெய்துள்ளது. ஒடிசா-மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் – மேலும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பிறகு மற்றொரு முன்னறிவிப்புடன், வரவிருக்கும் நாட்களுக்கான வாய்ப்புகள் சமமாக ஊக்கமளிப்பதாகத் தெரிகிறது.

தென் தீபகற்பம், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் சராசரி மழைப்பொழிவு இந்த காரிஃப் பருவமழை பருவத்தில் பெரும்பாலான பயிர்களின் கீழ் ஏக்கர்களை அதிகரித்துள்ளது. விதிவிலக்காக அட்டவணையில் காட்டுவது போல், அரிசி (கங்கை சமவெளி மாநிலங்களில் பற்றாக்குறை மழையால் நாற்று நடவு பாதிக்கப்பட்டுள்ளது).

இருப்பினும், ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி, அரசு குடோன்களில் 47.2 மில்லியன் டன் அரிசி இருப்பு, இந்தத் தேதிக்கு தேவையான 13.5 மில்லியன் டன் அளவுக்கு 3.5 மடங்கு அதிகமாக இருந்தது. அதுவும், ராபி (குளிர்கால-வசந்த கால) பருவத்திலும் பயிரிடப்படும் நெல், ஒட்டுமொத்த நெல் நிலவரத்தை சமாளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

கொண்டை கடலை மொத்த விற்பனை மண்டிகளில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,400-4,600க்கு விற்கப்படுகிறது, அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.5,320க்கும் குறைவாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு முறையே 2.2 மில்லியன் டன் மற்றும் 25,000 டன்கள் இருந்த நிலையில், 3 மில்லியன் டன் கொண்டை கடலை மற்றும் 100,000 டன் மசூர் (சிவப்பு பருப்பு) அரசாங்க முகமைகள் வைத்துள்ளன.

முதன்மையாக கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய சர்வதேச உபரிகளும் கடந்த ஆண்டை விட இரண்டு பருப்பு வகைகளுக்கும் தலா 0.5 மில்லியன் டன் அதிகம். உளுந்தில் (கருப்பு), மியான்மரில் ஜூலை இறுதி பங்குகள் 0.3 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தோராயமாக 0.1 மில்லியன் டன் அதிகமாகும்.

மொத்தத்தில், இந்தியாவில் உணவுப் பணவீக்கம் “விரைவாகக் குறைய” இல்லாவிட்டாலும், “குறைவதற்கு” உலகளாவிய மற்றும் உள்நாட்டு – கட்டாயக் காரணங்கள் உள்ளன. இது ஏற்கனவே சமையல் எண்ணெய்களில் காணப்படுகிறது. பருவமழை காரணமாக சோயாபீன் மற்றும் பருத்தி உற்பத்தி அதிகரித்து, எண்ணெய் கேக் கிடைப்பதை மேம்படுத்த வேண்டும்.

இவை, மக்காச்சோளத்துடன், கால்நடை மற்றும் கோழி தீவனத்தில் முக்கிய பொருட்கள் ஆகும். ஒரு நல்ல பருவமழை கால்நடைகளுக்கு அதிக தீவனம் மற்றும் தண்ணீரைக் குறிக்கும், மேலும் கால்நடைகளின் உள்ளீடு செலவுகள் மற்றும் பால், முட்டை மற்றும் இறைச்சி மீதான பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கும்.

நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர்மட்டம் கடந்த ஆண்டை விட 5.9% அதிகமாகவும் கடந்த 10 ஆண்டுகளின் சராசரி சேமிப்பை விட 25.1% அதிகமாகவும் உள்ளது. இரண்டாவது பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) பருவமழை நியாயமான முறையில் பெய்தால், நிலத்தடி நீர் விவசாயத்துக்கு பயன்படும். இதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த வாய்ப்பு இருக்காது.



Read in source website

பெசா (PESA) சட்டம் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) குஜராத்தின் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஆறு அம்ச உத்தரவாதத்தை அறிவித்தார். பட்டியலிடப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளுக்கு நீட்டிக்கும் சட்டமான பெசா சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பெசா சட்டம் 1996-இல் பஞ்சாயத்துகள் தொடர்பான அரசியலமைப்பின் பகுதி 11வது விதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிபதற்காக இயற்றப்பட்டது. (பஞ்சாயத்துகளைத் தவிர, அரசியலமைப்பின் 243-243ZT பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி IX, நகராட்சிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளது.)

பெசா சட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பகுதிகள் பிரிவு 244(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐந்தாவது அட்டவணையின் விதிகள் அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பழங்குடியினருக்கும் பொருந்தும் என்று கூறுகிறது. ஐந்தாவது அட்டவணை இந்த பகுதிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது.

பெசா சட்டம் 1996 எவ்வாறு செயல்படும்?

பெசா சட்டம் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்டது. பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின சமூகங்கள், தங்களின் சுயமான அரசு அமைப்புகளின் மூலம் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையை இது அங்கீகரிக்கிறது. மேலும், இயற்கை வளங்கள் மீதான அவர்களின் பாரம்பரிய உரிமைகளையும் அங்கீகரிக்கிறது.

இந்தக் குறிக்கோளைப் பின்பற்றி, வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரிப்பதிலும், அனைத்து சமூகத் துறைகளையும் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க கிராம சபைகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது. கொள்கைகளைச் செயல்படுத்தும் செயல்முறைகள் மற்றும் பணியாளர்கள், சிறு வன வளங்கள் (காட்டில் விளையும் உணவுப் பொருள்கள்), சிறு நீர்நிலைகள் மற்றும் சிறு கனிமங்கள், உள்ளூர் சந்தைகளை நிர்வகித்தல், நிலம் அந்நியப்படுத்தப்படுவதைத் தடுப்பது மற்றும் போதைப்பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல் அடங்கும்.

மாநில அரசுகள் பெசா சட்டத்தின் ஆணைக்கு முரணாக எந்த சட்டத்தையும் உருவாக்காமல், அந்தந்த பஞ்சாயத்து ராஜ் சட்டங்களை திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து மாநிலங்கள் – ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா – இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பல மாவட்டங்களை உள்ளடக்கிய (பகுதி அல்லது முழுமையாக) ஐந்தாவது அட்டவணைப் பகுதிகளாக அறிவித்துள்ளன.

பெசா சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மாதிரி பெசா விதிகளை அறிவித்தது. இதுவரை, குஜராத் உட்பட 6 மாநிலங்கள் இந்த விதிகளை அறிவித்துள்ளன.

குஜராத்தில் என்ன பிரச்சினை?

குஜராத் மாநில பெசா சட்ட விதிகளை ஜனவரி 2017-இல் அறிவித்துள்ள்ளது. இது அந்த மாநிலத்தின் 8 மாவட்டங்களில் உள்ள 50 பழங்குடியினர் தாலுகாக்களில் உள்ள 2,584 கிராம பஞ்சாயத்துகளின் கீழ் உள்ள 4,503 கிராம சபைகளுக்கும் பொருந்தும்.

2020 டிசம்பரில் பழங்குடியினர் மாவட்டமான சோட்டா உதேபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி, இந்தச் சட்டத்தை ‘பழங்குடியினர் வளர்ச்சியின் பொற்காலம்’ என்று பாராட்டினார். கிராம சபைகளுக்கு அவர்களுடைய பிரச்னைகளில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் இருக்கும் என்றும் ஒரு தனி பாதுகாப்புப் படை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இருப்பினும், அவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் பிரதேசங்கள் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் கிராம சபைகள் மிகவும் திறமையானவை என்று சட்டத்தின் விதிகள் கருதினாலும், சட்டம் அதன் முழு அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பழங்குடியினர் உரிமைகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களில் பழங்குடி குழுக்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பூஷன் ஓசா, இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது உறுதியளிக்கப்பட்டதற்கு மாறாக உள்ளது என்று கூறினார்.

ஓசா 2020-இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பழங்குடியினர் பகுதிகள் தொடர்பான விஷயங்களில் அரசாங்கம் மாநில அளவிலோ அல்லது மத்திய அளவிலோ எந்தச் சட்டத்தையும் உருவாக்க முடியாது என்று 4(ஏ) மற்றும் 4(டி) வெளிப்படையாகக் கூறியிருந்தாலும்… பழங்குடியினரின் நிலங்கள் கையகப்படுத்தப் படுவதற்கோ அல்லது அவர்களின் வாழ்விடங்களில் திட்டங்கள் தீட்டப்படுவதற்கோ முன்னர், எப்போதும் அவர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. பெசா சட்டம் பழங்குடி சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் வேரூன்றியுள்ளது. மேலும், நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கான இறுதி அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்குகிறது. ஆனால், கள யதார்த்தம் அதுவல்ல.” என்று கூறினார்.

கிராம சபைக் குழுக்களில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாநிலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று பெசா சட்டம் கூறினாலும், விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் ஓசா கூறினார்.

குஜராத்தில் ஐந்தாவது அட்டவணையின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெசா சட்டத்தை உறுதியாக செயல்படுத்துவது என்பது எம்.எல்.ஏக்கள் சோட்டு வாசவா மற்றும் மகேஷ் வாசவா தலைமையிலான பாரதிய பழங்குடியினர் கட்சியின் முக்கிய விவாதமாக உள்ளது. பாரதிய பழங்குடியினர் கட்சித் தலைவர் சோட்டு வாசவா, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் தனது கட்சி கூட்டணி அமைப்பதற்கு பெசா சட்டத்தை அமல்படுத்துவது ஒரு முழுமையான நிபந்தனை என்று கூறியுள்ளார்.



Read in source website

தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடிவரும் தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி வருகை தந்தது தைவான் நீரிணையில் போா்ப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் உயா்நிலை தலைவா்களில் ஒருவரான பெலோசியின் தைவான் பயணம் சீனாவை அதிா்ச்சியடைய வைக்கும் என்று தெரிந்தேதான் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டாா் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பயணத்தை ‘மிகவும் ஆபத்தானது’ என சீனா கண்டித்திருப்பதிலிருந்தும், அதைத் தொடா்ந்து தைவானைச் சுற்றி பிரம்மாண்டமான அளவில் போா்ப் பயிற்சி மேற்கொண்டு வருவதிலிருந்தும் சீனாவின் கோபத்தை தெரிந்து கொள்ளலாம். நான்சி பெலோசி விஜயத்தைத் தொடா்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தென் கிழக்கு சீனாவிலிருந்து சுமாா் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவு தைவான். 17-ஆம் நூற்றாண்டில் குயிங் வம்சத்தினா் ஆட்சியின்போது சீனாவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் தைவான் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் சீனா-ஜப்பான் போரில் தோல்வியடைந்த பின்னா், தைவானை குயிங் வம்ச ஆட்சியாளா்கள் ஜப்பான் கட்டுப்பாட்டில் 1895-இல் கொடுத்துவிட்டனா். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுற்றதைத் தொடா்ந்து, 1945-இல் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தைவான்.

பின்னா், சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, 1949-இல் சீனாவும் தைவானும் மீண்டும் பிரிந்தன. கம்யூனிஸ்ட் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்ட தேசியவாத கட்சியில் எஞ்சிய குவாமின்டாங் கட்சியின் தலைவா் சியாங் கய்-ஷெக் சீனாவிலிருந்து வெளியேறி தைவானுக்குச் சென்று பல ஆண்டுகள் தைவானை ஆண்டாா்.

இந்த வரலாற்று ஆதாரத்தின் மூலம் தைவான் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கூறி வருகிறது. இதே வரலாற்று ஆதாரத்தை வைத்து நவீன சீனாவின் அதாவது மாவோ தலைமையில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னா் சீனாவின் ஒரு பகுதியாக தாங்கள் இருக்கவில்லை என தைவான் வாதிட்டு வருகிறது.

தைவானை தனி நாடாக இதுவரை 13 நாடுகளே அங்கீகரித்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரே சீனா என சீனாவைத்தான் அங்கீகரிக்கிறதே தவிர தைவானை அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1979-இல் ஏற்படுத்தப்பட்ட தைவான் உறவுகள் சட்டத்தின் மூலம் தைவானுடன் அமெரிக்கா தொடா்பு கொண்டுள்ளது. இந்த சட்டமானது இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திரம் அல்லாத கணிசமான உறவுகளை வரையறுக்கிறது.

தைவானை சீனா தாக்கினாலோ தைவானுக்குள் ஊடுருவினாலோ ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுவதற்கு இந்தச் சட்டம் உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால், தைவான் போதுமான தற்காப்புத் திறன்களைப் பேணுவதற்குத் தேவையான அளவு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

தைவானைப் பாதுகாக்க ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு கடந்த மே மாதம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ‘ஆம்’ என பதிலளித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. பைடனின் கருத்துக்கு சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. அதன் பின்னா், ‘பைடனின் இந்தக் கருத்தால் அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதக் கூடாது’ என வெள்ளை மாளிகை விளக்கம் அளிக்க நேரிட்டது. அதே போன்ற ஒரு சூழலை அமெரிக்கா இப்போதும் ஏற்படுத்தியுள்ளது.

தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைக்க ராணுவத்தையும் பயன்படுத்துவோம் என சீன அதிபா் ஷி ஜின்பிங் ஏற்கெனவே கூறியுள்ளாா். ராணுவ பலத்தை ஒப்பிட்டால் சீனாவின் பிரம்மாண்டமான படை பலத்தின் முன்னால் தைவானால் சிறிதளவுகூட தாக்குப்பிடிக்க முடியாது. அதை தைவானும் உணா்ந்தே உள்ளது.

தென் சீனக் கடலில் பல தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடி அக்கடல் பகுதியையே கபளீகரம் செய்யத் துடிக்கிறது சீனா. சீனாவின் ஆக்கிரமிப்பால் நாட்டைவிட்டு வெளியேறிய திபெத்திய பெளத்த மதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளதற்கு இப்போதுவரை எதிா்ப்பு தெரிவித்து வருகிறது சீனா. திபெத்தை ஆக்கிரமித்ததுபோல தைவானையும் சீனா எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்கக்கூடும்.

எல்லைப் பிரச்னையில், பிற நாடுகளை ஆக்கிரமிப்பதில் சீனா எந்த அளவுக்கு மோசமாகச் செயல்படும் என்பதற்கு, கடந்த கால உதாரணங்கள் ஏராளம். ‘ஒரு நாடு- இரு நிா்வாகம்’ என ஹாங்காங்கை நிா்வகிப்பது போன்ற சீனாவின் திட்டத்தை தைவான் விஷயத்திலும் சீனா முன்வைத்தது. ஆனால், அந்தத் திட்டத்தை தைவான் ஆட்சியாளா்கள் மட்டுமின்றி மக்களும்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில் தைவான் விஷயத்தில் சீனா, அமெரிக்காவின் செயல்பாடுகளில் சிறிதளவும் பொறுப்புணா்வு இருப்பதாகத் தெரியவில்லை. உக்ரைனை ரஷியாவுடன் போருக்குத் தள்ளியதில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைக்கு முக்கியப் பங்கு உண்டு. பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கண்டிருக்கக்கூடிய உக்ரைன் விவகாரம், ஒரு பெரிய அளவிலான போராக மாறியது இன்னமும் விவாதப் பொருளாகவே உள்ளது.

என்னதான் நேட்டோ படை ஆயுத உதவி அளித்தாலும் போரின் வலியை அனுபவிப்பது உக்ரைன்தான். இப்போதைய சா்ச்சையால் தைவான் மீது சீனா உடனடியாகப் படையெடுத்து ஆக்கிரமித்துவிடும் எனக் கூற முடியாது என்றாலும், இன்னொரு உக்ரைனாக தைவான் மாறிவிடக் கூடாது.



Read in source website

அண்மைக்காலத்தில், நம்மையும் அறியாமலேயே, நம் அன்றாட பொருளாதார பட்ஜெட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தொடா் விரிசல்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்த புரிதலுக்கு, உலக பொருளாதார நிகழ்வுகளுக்கான ‘டைம் மெஷி’னை நாம் சற்று பின்னோக்கி நகா்த்த வேண்டும்.

கடந்த சில வருடங்களாக, உலகம் சில அசாதாரண நிகழ்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் முதல் இடம் வகித்து, உலக பொருளாதாரத்தின் அடித்தளத்தை அசைத்து, அதன் சீரான அசைவுகளை ஸ்தம்பிக்க வைத்தது கரோனா கொள்ளை நோய்த்தொற்று ஆகும்.

2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் உலகை பீடித்த தீவிர கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் பிறந்து வளா்ந்த பொருளாதார நலிவுகளால் ஏற்பட்ட மந்தநிலைக்கு முட்டுக் கொடுக்க, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகள், பெரும் அளவிலான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை (ஸ்டிமுலஸ் பேக்கேஜ்) அறிமுகப்படுத்தின. மந்தநிலையின் ஓா் முக்கிய பக்க விளைவான, சுணக்கம் (ரிஷசன்) என்ற நிலைக்கு பொருளாதார முள், பின்னோக்கி நகா்ந்து விடாமல் தடுக்கும் இடைக்கால மருந்தாக அந்த நடவடிக்கைகள் கருதப்பட்டன.

தங்கள் நாட்டு பொருளாதாரத்திற்கு வலுவூட்ட, அவற்றை மிக பிரமாண்டமான அளவில் மேற்கொண்டது அமெரிக்காதான். கரோனா நோய்த்தொற்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், சுமாா் 30 லட்சம் கோடி டாலா் அளவிலான பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் ஓா் அங்கமாக, சந்தையிலிருந்து பெருமளவில் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு, அவற்றின் கொள்முதல் விலைக்கு ஈடான பெரும் தொகை புழக்கத்தில் விடப்பட்டது. இது முழுக்க முழுக்க செயற்கைப் பணமாகும்.

நாணயத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரமற்ற செயற்கைப் பணத்தை உள்ளடைத்த பொருளாதார பலூனை அமெரிக்கா காற்றில் பறக்க விட்ட தருணம் என்று இதைக் கூறலாம். அந்த பலூன், உலகம் முழுவதும் பறந்து பறந்து பண மழையைத் தூவியது.

இதன் தொடா்ச்சியாக, கடன்களுக்கான வட்டி விகிதம், ‘பூஜ்ய’ நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.அமெரிக்காவின் வட்டி விகிதம் ‘பூஜ்ய’ நிலையில் இருந்ததால், அதிக வருவாய் ஈட்டக்கூடிய, வளா்ந்து வரும் நாடுகளின் (எமொ்ஜிங் மாா்க்கெட்) பங்கு சந்தை போன்ற சொத்து மையங்களில், முதலீடுகள் பெருமளவு அதிகரித்தன. அடிப்படை ஆதாரம் இன்றி தோன்றிய பண மழை, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பணப்புழக்கத்தை அதிகரித்தது.

இந்த காலகட்டத்தில், மூலப் பொருள்களுக்கான உற்பத்தித் தட்டுப்பாடு, விநியோகத் தட்டுப்பாடு இவற்றால் கேட்புக்கும் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வந்தது.

2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தடுப்பூசிகளின் வரவால், தொற்றுப் பரவல் குறைந்து, பொருளாதாரம் மீண்டு எழுந்த நிலையில், பொருளாதார ஊக்க நடவடிக்கைகளால், பல மடங்கு அதிகரித்த பணப் புழக்கம், பணவீக்கம் என்ற இடியை, இந்தியா உள்பட, உலகின் பல பகுதிகளில் படிப்படியாக இறக்குமதி செய்யத் தொடங்கியது.

உலகின் பல்வேறு பகுதிகளில் அந்த இடியின் தாக்கம் வெவ்வேறு விகிதங்களில் தோன்ற ஆரம்பித்தாலும், தனக்கு வரம் கொடுத்த பரமேஸ்வரன் தலையிலேயே கை வைத்து சோதித்து பாா்க்க முற்பட்ட பஸ்மாசுரன் கதை போல, பணவீக்கம், கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவான, 9 சதவீதத்தைத் தாண்டி, அமெரிக்காவில் அது பெருத்த முழக்கமாக உருவெடுத்தது எனலாம்.

அமெரிக்காவால் தோற்றுவிக்கப்பட்ட ஊக்க பொருளாதார நடவடிக்கைகளின் பக்க விளைவுகளால் ஏற்பட்ட தாக்கத்தை உணர தொடங்கியவுடன், அமெரிக்க மத்திய வங்கி, தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, பூஜ்ய நிலையிலிருந்த வட்டி விகிதத்தை, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த மாா்ச் முதல் ஜூலை வரை நான்கு முறை உயா்த்தியதோடு நிற்காமல், ‘இது முடிவல்ல, ஆரம்பம்தான், இது மேலும் தொடரும்’ என்றும் கோடிட்டுக் காட்டி இருக்கிறது.

அமெரிக்க வட்டி விகித உயா்வால், வளரும் நாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த மூலதனங்கள், படிப்படியாக வெளியேற ஆரம்பித்திருக்கின்றன. உதாரணமாக, கடந்த ஏழு மாதங்களில், இந்திய பங்கு சந்தையிலிருந்து சுமாா் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அந்நிய முதலீடுகள் வெளியேறி இருப்பதாக, நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற முதலீடுகளின் வெளியேற்றத்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2022-இல் ஏழு சதவீத வீழ்ச்சியை சந்தித்து, கடந்த ஜுலை 21 அன்று, ரூ. 80.06-ஐத் தொட்டு திரும்பியது. நாணய மதிப்பு சரிவு என்பது, பல தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பொருளாதார உபாதையாகும். இதனால், இறக்குமதி பொருள்களுக்கான விலை அதிகரிக்கும். பணவீக்கம் கூடும். அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். அந்த பாதிப்புகளைத்தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இது போன்ற நாணய மதிப்பு சரிவு என்பது இந்தியாவுக்கு மட்டும் பிரத்யேகமான ஒன்று அல்ல. இதே காலகட்டதில், மற்ற நாடுகளில் ஏற்பட்ட நாணய மதிப்பு சரிவை ஒப்பிட்டால், இந்திய ரூபாயின் எதிா்ப்பு சக்தியைப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஐரோப்பிய யூனியனின் நாணயமான யூரோவின் மதிப்பு, டாலருக்கு நிகரான அளவுக்கு சரிந்தது.

எரியும் தீயில் எண்ணெய்யை இட்டது போல், ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே உருவான போா்சூழல், அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் வரவை குறைத்து, அவை சாா்ந்த விலை ஏற்றத்திற்கு வித்திட்டு, நம் நாட்டின் பணவீக்கத்தை 8 சதவீத அளவுக்கு உயா்த்தியது.

நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, கடந்த ஏப்ரல் முதல், ரிசா்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 180 புள்ளிகள் உயா்த்தி உள்ளது. எனினும், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம், வங்கிகளால் அதே வேகத்தில் உயா்த்தப்படவில்லை. இதனால், பணவீக்கக் குறியீட்டுக்கும் (சுமாா் 7.5%) வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்திற்கும் (சுமாா் 5.5%) இடையே கணிசமான இடைவெளி உள்ளது.

இது எதாா்த்த நிலைக்கு முரண்பாடான செயல்பாடாகும். வட்டி வருவாயை சாா்ந்திருப்பவா்களின் பட்ஜெட்டில் விரிசல் பரவுவதற்கான ஒரு காரணம் என்று இந்த இடைவெளியைச் சொல்லலாம்.

இது போன்ற தருணங்களில், பணவீக்கத்திற்கு சமமான வட்டி விகிதத்துடன் (எதாா்த்த வட்டி விகித கூப்பன்) குறுகிய கால கடன் பத்திரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டியது மிக அவசியம். வங்கி டெபாசிட்டுகளுக்கு மாற்றாக, இந்த பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம், சாமானிய மக்கள், பணவீக்கத் தாக்குதல்களிருந்து ஓரளவு தப்பிக்க முடியும்.

ஏற்கெனவே உயா்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் மேலும் உயராமல் இருப்பதற்கு, அணி சாராத நம் வெளிநாட்டு கொள்கை கை கொடுத்தது என்று கூறலாம். இந்த கொள்கையால், ரஷியாவிலிருந்து, ஓரளவு நியாய விலைக்கு எரிபொருள்களை இறக்குமதி செய்ய முடிகிறது. மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அந்த பலன், பொதுமக்களை சென்றடைய வேண்டும்.

சாமானிய மக்கள், கரோனா காலத்தின் பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவா்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருள்களின் மீதான வரியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை, மத்திய - மாநில அரசுகள் ஒத்திப்போடுவது மிக அவசியம்.

தன் பண ஊக்க நடவடிக்கைகள் மூலம், உலக நாடுகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு வித்திட்ட அமெரிக்கா, தற்போது செய்வது அறியாமல், திகைத்து நிற்கிறது. வட்டி விகித உயா்வால், அந்த நாட்டின் ஜி.டி.பி. கீழ்நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.

இதன் விளைவாக, ஆரேக்கிள், வால்மாா்ட், ஓலா, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள், செலவுகளைக் கட்டுப்படுத்த, ஆள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை, அமெரிக்க பொருளாதாரத்தை சாா்ந்திருப்பது நிதா்சனமான உண்மை. தன்னால் பறக்கவிடப்பட்ட செயற்கை பண வாயு பலூனில் துளையிட்டு, விபத்துகள் அதிகமின்றி, அதை லாகவமாக கீழே இறக்க அமெரிக்கா தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

அந்த தரை இறக்கத்தினால் ஏற்படப்போகும் பக்க விளைவுகள், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போதைய 576 பில்லியன் டாலா் அந்நிய நாணய கையிருப்புடன், பொருளாதார வலிமை தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. இந்த வலிமையுடன், காத்திருக்கும் பொருளாதார தாக்குதல்களை, அதிக பாதிப்புகள் இன்றி எதிா்கொள்வோம் என்கிற நம்பிக்கையை வளா்ப்போம்!

சோதனை மிகுந்த இன்றைய காலகட்டத்தில், அரசியல்வாதிகள் தங்கள் சுயநலப் போக்கை மறந்து, சட்டப்பேரவையிலும், நாடாளுமன்ற அவைகளிலும் மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் அமளி துமளிகளில் ஈடுபடுவதைத் தவிா்த்து, மக்கள் நலனை மையமிட்டு, தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பும் வேண்டுகோளும் ஆகும்!

கட்டுரையாளா்:

வங்கி அதிகாரி (ஓய்வு).

 



Read in source website

நமது பாரத பிரதமா் நரேந்திர மோடி, 2022-23-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் நாள் உறுதியளித்திருந்தாா். செப்டம்பா் 2020-இல், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மூன்று புதிய விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் பிரதமரின் இந்த இலக்கினை எட்டுவது சிரமம் என இந்திய அரசின் சிந்தனைக் குழுவான நீதி ஆயோக்கின் உறுப்பினா் கூறியுள்ளாா்.

2017-ஆம் ஆண்டு 15 மாநிலங்களில் 35 விவசாய போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் 2020-ஆம் ஆண்டு 22 மாநிலங்களில் 165 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இப்போராடங்கள் பெரும்பாலும், பயிா்ச்சேதங்களைத் தவிா்க்கக் கோரியும், விளைபொருட்களுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தக் கோரியும், வளா்ச்சித் திட்டங்களுக்காக வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிா்த்துமே நடைபெற்றன.

2020-ஆம் ஆண்டில், 5,579 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனா் என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட “‘இந்தியாவில் விபத்து இறப்புகள் - தற்கொலைகள் அறிக்கை’ தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 15 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையில், மூன்று ஆண்டுகளில் விவசாயத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையினில் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட செலவழிக்கப்பட்ட தொகை 29 சதவீதமும், 2020-21 நிதியாண்டில் 18 சதவீதமும், 2017-18 நிதியாண்டில் 4 சதவீதமும் குறைவாக செலவிடப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் உழவா் திட்டம் (பி.எம். கிசான் யோஜனா) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த நிதியாண்டில்தான் (2022-23) மத்திய அரசின் விவசாய திட்டங்களுக்கான நிதி மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் விவசாயத் திட்டங்களுக்கு ரூ. 1,05,710 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உழவா் திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு மூன்று சம தவணைகளில் ரூ. 2000 என மொத்தம் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டில் 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை 3.16 கோடி குடும்பங்கள் இந்நிதியினை பெற்றன என்றும், 2018-19 நிதியாண்டில் நம் நாட்டில் இருந்த 9.3 கோடி விவசாயக் குடும்பங்களில் இது 33 சதவிகிதம் மட்டுமே என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வறிக்கை கூறுகிறது.

உழவா் திட்டத்தின் கீழ் 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரை 10.76 கோடி விவசாயக் குடும்பங்கள் 6,000 ரூபாயைப் பெற்றுள்ளன என்று இந்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டம் அனைத்து விவசாயக் குடும்பங்களும் பயனடையும் வகையில் விரிவடைந்து வருவதையே இந்த அறிக்கை காட்டுகிறது.

இந்திய விவசாயக் குடும்பம் ஒன்றின் சராசரி ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய் என்றிருக்கும் நிலையில், அவா்கள் வருமானத்தில் 6,000 ரூபாய் உயா்வு என்பது ஒரு சிறு வேறுபாட்டை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் இத்தொகை அவா்களுக்கு ஏற்படும் பணவீக்க பாதிப்பினை கூட ஈடுசெய்யாது என்றும் பொருளாதார வல்லுநா்கள் கூறுகின்றனா்.

2016-இல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டமான ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’வின் கீழ் 2019-இல் மானாவாரி சாகுபடி காலமான ஜூன் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் 46 சதவீத (4.3 கோடி) விவசாயக் குடும்பங்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டது. 2021-இல் அதே காலகட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 4.92 கோடி இந்திய விவசாயிகள் காப்பீடு பெற்றுள்ளனா்.

2012 -13-களில் 57.8 சதவீதமாக இருந்த கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 2018-19-இல் 54 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவு கூறுகிறது. 2012-13-இல் 6,426 ரூபாயாக இருந்த விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம், 2018-19-இல் 10,218 ரூபாயாக உயா்ந்துள்ளதெனினும் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. பயிா் உற்பத்தி மூலம் 2012-13-ஆம் ஆண்டுகளில் 48 சதவீத வருமானத்தை ஈட்டியுள்ள நிலையில் 2018-19-ஆம் ஆண்டுகளில் இது 37 சதவீதமாக குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் 32 சதவீதமாக இருந்த விவசாய ஊதிய வருமானம் 39.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. உண்மையில் விவசாய ஊதியம் தற்போது விவசாய குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாக மாறியுள்ளது.

அதே சமயம் 2012-13-இல் மாதம் ரூ. 2,192 ஆக இருந்த சாகுபடி செலவு 2018-19-இல் ரூ. 2,959 ஆக அதிகரித்துள்ளது.

விவசாயக் கடன் பெற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரளவு குறைந்துள்ளபோதிலும், நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் பெற்றுள்ளனா். 2012-13-இல் 47,000 ரூபாயாக இருந்த விவசாயிகளின் சராசரி கடன் தொகை 2018-19-இல் 74,131 ரூபாயாக உயா்ந்துள்ளது.

2012-13 காலகட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான விவசாய நிலம் கொண்ட விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை 69.44 சதவீதமாக இருந்தது. இதுவே 2018-19 காலகட்டத்தில் 70.44 சதமீதமாக அதிகரித்துள்ளது. 1.01 ஹெக்டோ் முதல் 10 ஹெக்டோ் வரை சொந்த விவசாய நிலமுடைய சிறு, நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கை 30.52 சதவீதத்தில் இருந்து 29.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. பணக்கார விவசாயிகளின் நிலை 0.4 சதவீதமாக மாறாமல் உள்ளது.

விவசாயத்துறையில் பொது முதலீடு, விவசாயிகளுக்கான கடன், மானியம் ஆகியவற்றை அதிகரித்தல், உற்பத்தி செலவை விட அதிகமாக நிா்ணயிக்கப்படவேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50 சதவீதம் உயா்வு போன்றவற்றினை உள்ளடக்கிய மாற்றம் விவசாயக் கொள்கையில் ஏற்படுத்தப்படவேண்டும் என்று விவசாயத்துறை சாா்ந்த பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.



Read in source website

தூக்கம்

தூக்கத்தின் ஆரம்ப நிலையில் வெளியில் இருந்து வரும் சத்தம் மிகவும் இடையூறாக இருக்கும். குறிப்பாக குறட்டை விடுவது, உடன் தூங்குபவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும்.

ஆனால், உண்மையில் எவ்வளவு ஒலியை நாம் தூக்கத்தில் எவ்வாறு உணர்வுப்பூர்வமாக உணர்கிறோம்?

தூக்கத்தின்போது ஒலிக்கு, மூளையின் எதிர்வினை வலுவாக இருக்கும், ஆனால், அது நனவான கவனத்தின் பக்கம் வராமல் மறைந்துவிடும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தூக்கத்தில் ஒலி பற்றிய ஆய்வு

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் நடத்தப்பட்டுள்ள ஒரு புதிய ஆராய்ச்சி நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த விஞ்ஞான புதிருக்கு விடை கொடுத்துள்ளது. நாம் விழித்திருக்கும்போது நம்மைச் சுற்றியுள்ள ஒலிகளைக் கேட்கிறோம். அதற்குத் தகுந்தாற்போல எதிர்வினை செய்கிறோம். நாம் தூங்கும்போது நம்மைச் சுற்றி உருவாகும் ஒலிக்கு நாம் எதிர்வினை செய்கிறோமா? என்பதுதான் இந்த ஆய்வு. 

டெல் அவிவ் பல்கலைக்கழக  ஆய்வாளர்களின் குழு, இதற்காக வலிப்பு நோய் வரும் நோயாளிகளிடம், அவர்களின் ஒப்புதலோடு, மூளைக்குள் பொருத்தப்பட்ட மின்முனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து இதற்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடித்துள்ளது. மனித மூளையின் ஆழத்தில் மருத்துவ நோக்கங்களுக்காக பொருத்தப்பட்ட மின்முனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த அற்புதமான ஆய்வு நம்பியுள்ளது. 

தூக்கமும் விழிப்பும்

விழித்திருக்கும் மூளை உணர்வு உள்ளீட்டை எவ்வாறு நனவான அனுபவமாக மாற்றுகிறது? மனித மூளையின் ஆழத்தில் மருத்துவ நோக்கங்களுக்காக பொருத்தப்பட்ட மின்முனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த அற்புதமான ஆய்வு நம்பியுள்ளது.

ஒற்றை நியூரான்களின் தீர்மானத்தில், தூக்கம் மற்றும் விழிப்பு நிலையில் உள்ள ஒலிகளுக்கு பெருமூளைப் புறணியின் எதிர்வினைக்கு இடையே உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்ய இந்தத் தகவல் பயன்படுத்தப்பட்டது.

மூளையின் எதிர்வினை தூக்கத்தில்

தூக்கத்தின் போது, எப்படிப்பட்ட ஒலிக்கும் (அனைத்து வகையான ஒலிக்கும் ) மூளையின் செயல்பாடு /எதிர்வினை என்பது மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் இங்கே, மூளையின் ஆல்ஃபா-பீட்டா அலைகளின் இணைந்த செயல்பாடும் கூட , ஒலியின் செவிவழி உள்ளீடு மற்றும் தொடர்புடைய எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையது ஆகும்.   

மூளையின் அலைகள்

மூளை ஒரு மின்வேதியியல் உறுப்பு. முழுமையாக செயல்படும் மூளை 10 வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இந்த மின்சாரம் மிகவும் குறைவாக இருந்தாலும் கூட,  அது மனித மூளையின் சிறப்பியல்பு;அதுதான் மூளையின் திறன். மூளையில் இருந்து வெளிப்படும் மின் செயல்பாடு, மூளை அலைகள் (brainwaves) வடிவில் காட்டப்படுகிறது/சொல்லப்படுகிறது. 

இங்கே 5 வகை  மூளை அலைகள் உண்டு . அவை ஆல்பா, பீட்டா, தீட்டா டெல்ட்டா மற்றும் காமா . மூளை அலைகளில் அதிக செயல்பாடு முதல் குறைந்த செயல்பாடு வரை உண்டு.  மூளை நன்கு தூண்டப்பட்டு, மன செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும்போது, ​​அது பீட்டா அலைகளை உருவாக்குகிறது. இந்த பீட்டா அலைகள் ஒப்பீட்டளவில் குறைந்த அலைவீச்சு மற்றும் நான்கு வெவ்வேறு மூளை அலைகளில் வேகமானவை. பீட்டா அலைகளின் அதிர்வெண் ஒரு நொடிக்கு 15 முதல் 40 சுழற்சிகள் வரை இருக்கும். பீட்டா அலைகள் ஒரு வலுவான ஈடுபாடு கொண்ட மனதின் பண்புகள். செயலில் உரையாடலில் இருப்பவர் பீட்டாவில் இருப்பார். விவாதிப்பவர் அதிக பீட்டாவில் இருப்பார். ஒரு பேச்சை ஆற்றும் நபர், அல்லது ஒரு ஆசிரியர் அல்லது ஒரு பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் தங்கள் வேலையில் ஈடுபடும்போது பீட்டாவில் இருப்பார்கள்.

அதிர்வெண் வரிசையில் அடுத்த மூளை அலை வகை ஆல்பா ஆகும். பீட்டா விழிப்புணர்வைக் குறிக்கும் இடத்தில், ஆல்பா என்பது விழிப்புணர்வு இல்லா நிலையைக்  குறிக்கிறது. ஆல்பா மூளை அலைகள் மெதுவாகவும், அலைவீச்சில் அதிகமாகவும் இருக்கும். அவற்றின் அதிர்வெண் வினாடிக்கு 9 முதல் 14 சுழற்சிகள் வரை இருக்கும். ஒரு பணியை முடித்துவிட்டு ஓய்வெடுக்க அமர்ந்திருப்பவர் பெரும்பாலும் ஆல்பா நிலையில் இருப்பார். பிரதிபலிக்க அல்லது தியானிக்க நேரம் ஒதுக்கும் நபர் பொதுவாக ஆல்பா நிலையில் இருப்பார். மாநாட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தோட்டத்தில் நடப்பவர் பெரும்பாலும் ஆல்பா நிலையில் இருப்பார்.

அடுத்த நிலை, தீட்டா அலைகள், பொதுவாக இன்னும் அதிக அலைவீச்சு மற்றும் மெதுவான அதிர்வெண் கொண்டவை. இந்த அதிர்வெண் வரம்பு பொதுவாக ஒரு வினாடிக்கு 5 முதல் 8 சுழற்சிகள் வரை இருக்கும். ஒரு பணியில் இருந்து ஓய்வு எடுத்து பகல் கனவு காணத் தொடங்கும் நபர் பெரும்பாலும் தீட்டா மூளை அலை நிலையில் இருப்பார். ஃப்ரீவேயில் வாகனம் ஓட்டும் நபர், கடைசி ஐந்து மைல்களை அவர்களால் நினைவுகூர முடியவில்லை என்பதைக் கண்டறிந்தால், அவர் பெரும்பாலும் தீட்டா நிலையில் இருக்கிறார். ஓட்டுநர் பணியை பாதுகாப்பாகச் செய்ய, தீட்டா நிலை மற்றும் பீட்டா நிலை ஆகியவற்றை வேறுபடுத்தும்.

அடுத்து மூளை அலை டெல்டா ஆகும். இவை மிகப்பெரிய வீச்சு மற்றும் மெதுவான அதிர்வெண் கொண்டவை. அவை பொதுவாக வினாடிக்கு 1.5 முதல் 4 சுழற்சிகள் வரை மையமாக இருக்கும். அவை ஒருபோதும் பூஜ்ஜியத்திற்குச் செல்லாது, ஏனென்றால் நீங்கள் மூளை இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், ஆழ்ந்த கனவில்லா தூக்கம் உங்களை மிகக் குறைந்த அதிர்வெண்ணுக்குக் கொண்டு செல்லும். பொதுவாக, ஒரு வினாடிக்கு 2 முதல் 3 சுழற்சிகள்.

நாம் படுக்கைக்குச் சென்று தூங்க முயற்சிக்கும் முன் சில நிமிடங்கள் படிக்கும்போது, ​​நாம் குறைந்த பீட்டாவில் இருக்க வாய்ப்புள்ளது. புத்தகத்தை கீழே வைத்து, விளக்குகளை அணைத்து, கண்களை மூடும்போது, ​​​​நமது மூளை அலைகள் பீட்டாவிலிருந்து ஆல்பா, தீட்டா மற்றும் இறுதியாக, நாம் தூங்கும்போது, ​​​​டெல்டாவுக்கு இறங்கும். எனவே, மூளையில் உருவாகும் அலைகளைப் பொறுத்தே மூளை இயங்குகிறது.

மூளையின் ஆல்ஃபா-பீட்டா அலைகளின் இணைந்த செயல்பாட்டுடன்  தூக்கத்தின்போது, ​​மூளை கேட்கும் ஒலியின் உள்ளீட்டை பகுப்பாய்வு செய்கிறது, ஆனால் ஒலியில் கவனம் செலுத்தவோ அல்லது அதை அடையாளம் காணவோ முடியாது, எனவே நனவான விழிப்புணர்வு ஏற்படாது. அதனால்தான் சுற்றிலும் ஒலி இருப்பினும் விழிப்பு ஏற்படுவது இல்லை.

ஆய்வுக்குழு

டாக்டர் ஹன்னா ஹயாத் என்ற விஞ்ஞானியின் தலைமையில் மற்றும் ஸ்கூல் ஆஃப் மெடிசின், சாகோல் ஸ்கூல் ஆஃப் நியூரோ சயின்ஸின் டாக்டர் அமித் மார்மெல்ஸ்டீனின் முக்கிய பங்களிப்போடு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த UCLA மருத்துவ மைய பேராசிரியர் யுவல் நிரின் ஆய்வகத்தில், இணைந்து மேற்பார்வையிடப்பட்டது.

இந்த ஆய்வில் இணைந்து செயல்பட்ட மற்ற ஆய்வாளர்கள்: பேராசிரியர் நிரின் குழுவின் டாக்டர். ஆரோன் க்ரோம், டாக்டர் யானிவ் சேலா மற்றும் டெல் அவிவ் சௌராஸ்கி மருத்துவ மைய டாக்டர் இடோ ஸ்ட்ராஸ் மற்றும் டாக்டர் ஃபிராஸ் ஃபஹூம் ஆகியோர் அடங்குவர். தூக்கத்தில் ஒலி கேட்கும் திறன் பற்றிய கட்டுரை நேச்சர் நியூரோ சயின்ஸ் இதழில் ஜூலை 12ம் நாள் வெளியிடப்பட்டது. 

வலிப்பு நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மின்தரவு

பேராசிரியர் நிர் என்பவர், தூக்கத்தில் கேட்கப்படும் ஒலி குறித்து, "இந்த ஆய்வு தனித்துவமானது, இது மனித மூளைக்குள் ஆழமாக பொருத்தப்பட்ட மின்முனைகளிலிருந்து அரிய தரவுகளை உருவாக்குகிறது, இது மூளையின் மின் செயல்பாட்டின் தனிப்பட்ட நியூரான்களின் அளவு வரை உயர்-தெளிவுத்திறன் கண்காணிப்பை செயல்படுத்துகிறது. ஆனால் நமக்காக, நாம்  புரிந்துகொள்ளக்கூடிய காரணங்களுக்காக, விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உயிருள்ள மனிதர்களின் மூளையில் மின்முனைகளை பொருத்த முடியாது. அது சட்டப்படி குற்றம். ஆனால், இந்த ஆய்வில், கால்-கை வலிப்பு நோயாளிகளின் மூளையில் மின்முனைகள் பொருத்தப்பட்டு, இது அறியப்பட்டது. அவர்களின் மூளையின் பல்வேறு பகுதிகளில் உருவாகும் செயல்பாட்டைக் கண்காணித்து, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான நோக்கங்களுக்காக ஒரு சிறப்பு மருத்துவ முறை மூலம் இதனை செயலாக்க மற்றும் பயன்படுத்த முடிந்தது. வலிப்பு நோயாளிகளும்கூட விழிப்பு மற்றும் தூக்கத்தில் கேட்கும் தூண்டுதலுக்கு மூளையின் பதிலை ஆய்வு செய்ய உதவ முன்வந்தனர்' என்றார். 

8 ஆண்டுகள் நடந்த ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள் நோயாளிகளின் படுக்கையில் பல்வேறு ஒலிகளை வெளியிடும் ஒலிபெருக்கிகளை வைத்தனர். மேலும், அவர்களின் மூளையின் பல்வேறு பகுதிகளில் உள்ள நரம்பு செயல்பாடு மற்றும் மின் அலைகலிளிருந்து விழித்திருக்கும்போதும் மற்றும் தூக்கத்தின் போதும் பல்வேறு நிலைகளில் பொருத்தப்பட்ட மின்முனைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் ஒப்பிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக, இந்த ஆய்வுக்குழு 700 க்கும் மேற்பட்ட நியூரான்களிடமிருந்து தரவுகளை சேகரித்தது. ஒவ்வொரு நோயாளிக்கும் சுமார் 50 நியூரான்களின் தகவல்கள், தரவுகள் சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து பெறப்பட்டது. 

தூக்கத்தில் பெருமூளையின் செயல்பாடு-ஒலியில்

ஆய்வு தொடர்பாக டாக்டர் ஹயாத் கூறுவது, 'ஒலிகள் காதில் பெறப்பட்ட பிறகு, மூளைக்குள் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. சமீப காலம் வரை, நாம் என்ன எண்ணிக்கொண்டு இருந்தோம் என்றால், தூக்கத்தின் போது இந்த சமிக்ஞைகள் பெருமூளைப் புறணியை அடைந்தவுடன் விரைவாக சிதைவடையும் என்று எண்ணினோம். ஆனால் நமக்கு மின்முனைகளிலிருந்து கிடைத்துள்ள தரவைப் பார்க்கும்போது, அவை அப்படி இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.  ​​தூக்கத்தின் போது மூளையின் செயல்பாடு /எதிர்வினை என்பது நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் வலிமையாகவும், அதிகமாகவும்  இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்' என்கிறார். 

தூக்கத்தில் ஆல்பா-பீட்டா அலைகளின் செயல்பாடு

மேலும், இந்த வலுவான எதிர்வினை என்பது பெருமூளைப் புறணியின் பல பகுதிகளுக்கும் பரவியது. தூக்கத்தின் போது மூளையின் செயல்பாடு வலிமையானது; அது  விழித்திருக்கும் போது எப்படி செயல்படுகிறதோ அப்படியே தூக்கத்திலும் எதிர்வினையாற்றியது.அதில் ஒரு விஷயம் மட்டும்தான் வேறுபாடு. அதுதான், வியத்தகு வேறுபாடு பதிவுசெய்யப்பட்டது: அதுவே மூளையின் ஆல்பா-பீட்டா அலைகளின் செயல்பாட்டின் நிலையாகும்

ஆல்ஃபா-பீட்டா அலைகள் (10-30Hz) மூளையின் உயர் பகுதிகளிலிருந்து வரும் பின்னூட்டங்களால் கட்டுப்படுத்தப்படும். இவை நமது  கவனம் மற்றும் எதிர்பார்ப்பு செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.(முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது )

ஒலி மூலம் உருவாகும் சிக்னல்கள், உணர்ச்சி உறுப்புகளிலிருந்து மேல் பகுதிகளுக்கு 'கீழே-மேலே' பயணிக்கும்போது, ​​ஒரு 'மேலிருந்து-கீழ்' இயக்கமும் நிகழ்கிறது: உயர் பகுதிகள், மூளையில் குவிந்துள்ள முந்தைய தகவலை நம்பி, வழிகாட்டியாக செயல்படுகின்றன, சமிக்ஞைகளை அனுப்புகின்றன. எந்த உள்ளீட்டில் கவனம் செலுத்த வேண்டும், எது புறக்கணிக்கப்பட வேண்டும், முதலியன போன்றவை  மிகச் சரியாக  உணர்வுப் பகுதிகளுக்கு அறிவுறுத்த உதவுகிறது. .

மயக்க நிலையிலும் ஒலி உணர்தல்

உதாரணமாக, காதில் ஒரு குறிப்பிட்ட ஒலி வரும்போது, ​​​​அது புதியதா அல்லது பழக்கமானதா, அது கவனத்திற்கு தகுதியானதா இல்லையா என்பதை உயர் பகுதிகள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன. இந்த வகையான மூளை செயல்பாடு ஆல்பா-பீட்டா அலைகளை அடக்குவதில் வெளிப்படுகிறது, உண்மையில், முந்தைய ஆய்வுகள் ஓய்வு மற்றும் மயக்க நிலைகளில் இந்த அலைகளின் உயர் மட்டத்தைக் காட்டியுள்ளன. தற்போதைய ஆய்வின்படி, ஆல்ஃபா-பீட்டா அலைகளின் வலிமையானது, விழித்திருக்கும் நிலை மற்றும் தூக்கம் ஆகியவற்றில் உள்ள செவிவழி உள்ளீடுகளுக்கு மூளையின் எதிர்வினைக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.

பேராசிரியர் நிர், "எங்கள் கண்டுபிடிப்புகள் இந்த குறிப்பிட்ட சோதனைக்கு அப்பால் மிகப் பரந்த தாக்கங்களை/செயல்பாடுகளை/சோதனைகளை செய்ய வழிவகுக்கும். முதலாவதாக, இந்த ஆய்வு பழைய புதிருக்கு ஒரு முக்கிய திறவுகோலை வழங்கியுள்ளது' என்று கூறினார்.  

'எக்ஸ்-காரணி'

உணர்வின் ரகசியம் என்ன? 'எக்ஸ்-காரணி'

நனவுக்கான தனித்துவமான மூளையின் செயல்பாடு, நாம் விழித்திருக்கும்போது நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும், தூங்கும்போது மறைந்துவிடுவதையும் அறிந்துகொள்ள அனுமதிக்கிறது?

தன்னிலை இழந்த நிலையிலும் ஒலியை உணரும் திறன் மூளைக்கு ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஒரு புதிய தகவலைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், எதிர்கால ஆராய்ச்சியில் இந்த வேறுபாட்டிற்கு காரணமான வழிமுறைகளை மேலும் ஆராயப்படும். கூடுதலாக, நனவு மற்றும் மயக்க நிலைகளுக்கு இடையில் வேறுபட்ட ஒரு குறிப்பிட்ட மூளை அம்சத்தை அடையாளம் கண்டுள்ளதால், உள்வரும் ஒலிகள் குறித்த ஒரு நபரின் விழிப்புணர்வை மதிப்பிடுவதற்கு, இப்போது ஒரு தனித்துவமான அளவு அளவீடு உள்ளது.

எதிர்காலத்தில், ஆல்பா-பீட்டா மூளை அலைகளை அளவிடுவதற்கான மேம்படுத்தப்பட்ட நுட்பங்கள் மற்றும் EEG போன்ற ஆக்கிரமிப்பு இல்லாத கண்காணிப்பு முறைகள் மூலம், பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு நபரின் நனவு நிலையை துல்லியமாக மதிப்பிட முடியும்: நோயாளிகள் முழுவதும் சுயநினைவின்றி இருப்பதை சரிபார்க்கலாம். (அப்போதும் கூட வெளியில் உள்ள ஒலியினை அவர்கள் கேட்பார்கள் என்பது தெரியவருகிறது) ஒரு அறுவை சிகிச்சை, டிமென்ஷியா உள்ளவர்களின் விழிப்புணர்வைக் கண்காணித்தல் அல்லது கோமா நிலையில் இருப்பவர், தொடர்புகொள்ள முடியாமல், உண்மையில் அவரது/அவள் சுற்றுப்புறத்தைப் பற்றி அறியாதவரா என்பதைத் தீர்மானித்தல் என எல்லா விஷயங்களுக்கும் இந்த ஆய்வு மிகவும் உதவும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒலிக்கு எதிர்வினையாற்றும் வகையில் குறைந்த அளவிலான ஆல்பா-பீட்டா அலைகள் மயக்கமடைந்ததாகக் கருதப்படும். ஒரு நபர் உண்மையில் அவரைச் சுற்றிச் சொல்லப்படும் வார்த்தைகளை உணர்ந்து புரிந்துகொள்ளலாம் என்று பரிந்துரைக்கலாம்.

எங்கள் கண்டுபிடிப்புகள் பல்வேறு மயக்க நிலையில் இருக்கும் நபர்களின் விழிப்புணர்வின் அளவை அளவிடுவதற்கான பயனுள்ள புதிய முறைகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என நம்பிக்கையுடன் இந்த ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.



Read in source website

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் பொருளாதாரப் பெருமந்த நிலையோ, உயர் பணவீக்க அழுத்தமோ ஏற்படாது என்று உறுதிபடத் தெரிவித்திருப்பது, பொருளாதார நிலை குறித்த அச்சங்களிலிருந்து விடுவித்து புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கத்தை 7%-க்குள் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள நிதியமைச்சர், கச்சாப் பொருட்களின் விலையைக் குறைத்து, உணவுப் பொருட்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.



Read in source website

ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, வறுமையற்ற வளர்ச்சி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் நாடு தைவான். சீனாவுடன் தொடக்கத்திலிருந்தே தொடரும் முரண்பட்ட உறவு, எப்போது போர் மேகங்கள் சூழுமோ என்கிற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் யுத்தத்தையும் அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் எடுத்திருக்கும் கொள்கைரீதியான முடிவுகளையும் வைத்துப்பார்க்கிறபோது, தைவான் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடந்தால் அதுவும் உக்ரைனைப் போல தனித்துவிடப்படுமோ என்கிற இயல்பான கேள்வி எழுகிறது.



Read in source website

நாடு விடுதலை அடைந்த 1947-ல் இந்தியாவின் எழுத்தறிவு 12% ஆக இருந்தது (அன்றைய மதராஸ் மாகாணம் – 14%); 100 இந்தியர்களில் 12 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் பொருள்.

இன்று அது 77.7% ஆக உயர்ந்துள்ளது (தமிழகம் 82.9%). 1948-ல் பிரதமர் நேரு ‘அகில இந்தியக் கல்வி மாநாட்’டைக் கூட்டி, ‘நாட்டின் வளர்ச்சி நமது கல்வியில் ஏற்படும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது... ஒட்டுமொத்தக் கல்வி முறையிலும் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருவோம்’ என்று அறைகூவல் விடுத்தார்.

அந்தக் கல்வி மாநாட்டில் முன்வைக்கப்பட்டசில புள்ளிவிவரங்களின்படி, 1947-ல் பள்ளியில் சேரும் குழந்தைகளில் 100-ல் 3 பேர் மட்டுமே கல்லூரி வரை சென்றனர். அவர்களில் ஒருவர்கூடப் பெண் இல்லை. நாடு முழுவதும் மொத்தம் 18 பல்கலைக்கழகங்கள் இருந்தன. மூன்று மருத்துவக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்வி நிலையங்கள், சிறிதும் பெரிதுமான சுமார் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்தன.

மூன்று மந்திரச் சொற்கள்: ஆரம்ப ஆதாரக் கல்வி என்பது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியாகும். உலக நாடுகள் தம் கல்விக் கோட்பாடுகளை அங்கிருந்தே தொடங்கின. ஆனால், இந்தியாவில் அது தலைகீழாக நடந்தது. முதலில், 1948-ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழகக் கல்விக் குழுவும், 1952-ல் டாக்டர் லட்சுமணசாமி தலைமையில் உயர், மேல்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவும் அமைக்கப்பட்டன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலியாக, 1961-ல் டாக்டர் சம்பூரானந்த் தலைமையில் தேசிய உணர்வு ஒருங்கிணைப்புக் கல்விக் குழுவை நேரு அமைத்தார். ஆரம்ப ஆதாரக் கல்வியை யாருமே சீண்டவில்லை. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் கல்வியாளர் எம்.சி.ஜக்லா கல்வி அமைச்சரானார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த விஞ்ஞானி டி.எஸ்.கோத்தாரி தலைமையில் இந்தியக் கல்விக் குழு 1964-ல் அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் ஒட்டுமொத்தக் கல்வியிலும் கவனம் செலுத்தப்பட்டது; ஆரம்ப ஆதாரக் கல்வி எனும் சொல்லாக்கமும் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

இக்குழுவின் உறுப்பினர் செயலராக இருந்த ஜே.பி.நாயக், 1950-களிலேயே இந்தியக் கல்வியின் (முக்கோண) மூன்று முக்கியச் சொற்களை முன்மொழிந்தார். அவை: அனைவருக்கும் கல்வி - தரமான கல்வி - சமத்துவக் கல்வி. அதை முழுமையாக அடைவதற்கான பெரும் போராட்டமே நம் இந்தியக் கல்வியின் உயிரோட்டமாக மாறியது. இந்த அம்சங்களை ஜே.பி.நாயக் முன்மொழிய முதன்மைக் காரணம் தமிழ்நாடுதான்!

1950-களின் தொடக்கத்தில் அப்போதைய மதராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி, தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதற்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் பதவிவிலகினார். அதன்பின் முதல்வரான காமராஜர், தமிழகத்தில் ஆதாரக் கல்வியில் பெரும்புரட்சி நிகழ்த்தினார்.

மதிய உணவுத் திட்டம், இலவசச் சீருடை, ஓராசிரியர் பள்ளி என லட்சக்கணக்கான குழந்தைகள் பஞ்சாயத்துகள் நடத்திய பள்ளிக் கல்வியில் இணைந்தனர்; நாடே பார்த்து வியந்தது. அதன் பிறகு தமிழகம் சமத்துவச் சமூகநீதிக் கல்வி முன்மாதிரியை உருவாக்கியது வரலாறு.

கோத்தாரி கமிஷன்: உயர்நிலைப் பள்ளி (பத்தாம் வகுப்பு) முடிவில் மேல்நிலைக் கல்வி ( 2), மூன்றாண்டு கல்லூரிப் பட்டம் (10 2 3) என கோத்தாரி கமிஷன் 1966-ல் பொதுக் கல்வியைப் பிரித்தது. ஆரம்பக் கல்வி (ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை), நடுநிலைக் கல்வி (ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை) என்றும் தனித்தனியாகப் பிரித்து முன்மொழிந்தது.

பெண் கல்விக்காக நியமிக்கப்பட்ட துர்காபாய் தேஷ்முக் தேசிய கமிட்டி (1960), ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் ஆசிரியைகளே அதிகம் நியமிக்கப்படுதல், கல்வியில் மாற்றுத்திறனாளிகள், இளம் கைம்பெண்கள், பிற்படுத்தப்பட்ட -தாழ்த்தப்பட்ட வகுப்பினப் பெண்களுக்கு முன்னுரிமை எனப் பலவற்றைச் சாதித்தது.

இருபாலரும் கல்வி கற்கும் ஆரம்பப் பாடசாலைகள், பெண்களுக்காகவே பிரத்யேகமாக முதியோர் கல்வி ஆகிய பரிந்துரைகளை எம்.பக்தவத்சலம் கல்விக் குழு (1963) வழங்கியது; 1968-ல் முன்மொழியப்பட்ட தேசியக் கல்விக்கொள்கை மூலம் பாலிடெக்னிக், ஐடிஐ பயிற்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் அறிமுகமாகின.

பொதுப் பட்டியலில் கல்வி: பள்ளிக்கு முன், 1974-ல் பருவ அங்கன்வாடிகள் வந்தன. பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் இலக்குகள் உறுதியாகி ஒன்பது உயர்கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இந்தியக் கல்வி மாநிலப் பட்டியலில் ஓரளவு தன்னிறைவு அடைந்தது. பிரதமர் இந்திரா நெருக்கடிநிலையை அறிவித்ததும், 1976-ல் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து இந்திய அரசமைப்பின் 42-வது சட்டத் திருத்தத்தின்படி மத்திய–மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அப்பட்டியலின் இடுகை 25-ன்படி பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தியது.

அடிப்படை உரிமையாகக் கல்வி: 1986-ல் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் (National Policy on Education) செயல்திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தமிழகம் முழுவதும் ஆங்கில நர்சரிப் பள்ளிகள் தோன்றி கல்வி வியாபாரமாகிப் போனதால், அரசுப் பள்ளிகளின் நிலை நொடிந்தது என்று கல்வியாளர்கள் விமர்சித்தனர்.

சிறப்பு வகுப்புக் கலாச்சாரம், மதிப்பெண் மைய வாழ்க்கை என்று குழந்தைகளைக் கல்வி வாட்டி வதைத்த நிலையில், 1999-ல் பேராசிரியர் யஷ்பால் கற்றலின் சுமையைக் குறைக்க ஒரு நபர் குழுவாகக் களமிறங்கினார்; அவரது தலைமையில் தேசியக் கலைத் திட்ட வடிவமைப்பு 2005-ல் உருவாக்கப்பட்டுப் பள்ளிக் கல்வியில் தொடர் - முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகமானது. வானொலி, தொலைக்காட்சி என ஊடகங்களின் பயன்பாடு, செயற்கைக்கோள் வழியான தொலைதூரக் கல்வி, எழுத்தறிவு மேம்பாட்டுக்காக அறிவொளி இயக்கம் என இந்தியக் கல்வி மக்கள் இயக்கமாக மாறியது.

விடுதலை அடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ல்,கல்வியைக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று அறிவித்துச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, 86-வது சட்டத் திருத்தத்தில் 45-வது கூறு திருத்தப்பட்டு கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக அளவில்பேராசிரியர் யஷ்பால் தலைமையில் ஒரு கமிட்டி அதே ஆண்டில் நியமிக்கப்பட்டது.

உலக வங்கியும் கல்வியும்: 2001-ல் ‘சர்வசிக்‌ஷா அபியான்’ (அனைவருக்கும் கல்வித் திட்டம்) மூலம் உலக வங்கி இந்தியக் கல்வித் துறைக்குள் நுழைந்தது. முதல் கட்டமாக 2 கோடிக் குழந்தைகளுக்கு ரூ.500 கோடி அமெரிக்க டாலரும், 2003-ல் இரண்டாம் கட்டமாக மேலும் ரூ.600 கோடி அமெரிக்க டாலரும் நிதியுதவி பெறப்பட்டது.

தற்போது நான்காம் கட்டமாக, ஸ்டார்ஸ் (Strengthening Teaching – Learning and Results for States) என்ற இந்தியக் கல்வித் துறை தர மேம்பாட்டிற்காக உலக வங்கி ரூ.1,006 கோடி அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரம், மத்திய-மாநில அரசுகள் இணைந்து ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்விக்கு ஒதுக்கிட கோத்தாரிக் குழு பரிந்துரைத்தது. ஆனால், 2022 நிதிநிலை அறிக்கையில்கூட கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை வெறும் 2.88% தான்.

ஒரே நாடு... ஒரே கல்வி: மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாநிலப் பாடத்திட்டம் எனப் பிரிந்து கிடந்ததை ஒற்றைக் கல்விமுறையாக (சமச்சீர்) தமிழ்நாடு அரசு 2009-ல் அறிவித்தது. 2004-ல் 94 குழந்தைகளைப் பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து, பள்ளிப் பாதுகாப்பு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சம்பத் கமிட்டி முதல் பல கல்விக் குழுக்களைத் தமிழகக் கல்வித் துறை கண்டுள்ளது.

2020-ல் அமைக்கப்பட்ட தமிழகப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் அயராத உழைப்பும் குறிப்பிடப்பட வேண்டியது. 2019-ல் மீண்டும் பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழுவின் பரிந்துரைகள் நாடு தழுவிய புதிய கல்விக் கொள்கையாக அறிமுகமாகி உள்ளன.

அது ‘ஒரே நாடு... ஒரே கல்வி’ எனும் முழக்கத்தை முன்வைக்கிறது. அதே சமயம், தமிழகத்திற்கு என்று ஒரு மாநிலக் கல்விக் கொள்கையைப் பரிந்துரைக்க நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு கல்விக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய விடுதலையின் 75-வது ஆண்டில் கல்வி குறித்த பெரும் விவாதங்கள் தொடர்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக நாம் வெற்றிபெற்றிருப்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும்!

- ஆயிஷா இரா.நடராசன், கல்வியாளர் - எழுத்தாளர்

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com



Read in source website