DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 08-03-2023


பின்பனிக்காலம் முடிவதற்குள் இளவேனில் காலம் தொடங்கி முதுவேனில் அளவிற்கு வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. நிலத்தில் பெய்த மழையும், நிலத்தடி நீரும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டது. குடித்த நீர், குடித்த வேகத்தில் வியர்வையாக வெளியேறி உடல் அசதியை, நீர் வேட்கையை உண்டாக்குகிறது. இப்புவியுலகில் என்ன நிகழ்கின்றதோ, அதே மாற்றம் நம் உடலிலும் நிகழ்கின்றது. இதனை ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ என்று சித்த மருத்துவ தத்துவங்களுள் ஒன்றாக விவரிக்கின்றது. 

அதாவது  பூமியில் நிகழும் பருவ நிலை மாறுதலுக்கு ஏற்றார் போல, நமது உடலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்பது தான். அந்த வகையில் பின்பனிக்காலத்தில் அதிகமான கபம் இளவேனில் காலத்தில் படிப்படியாக குறைந்து, பித்தம் உடலில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். இருமல், சளி போன்ற கபம் சார்ந்த நோய்கள் படிப்படியாக குறைந்து பித்தம் சார்ந்த நோய்கள் உருவெடுக்கத் தொடங்கும்.

இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் தொடர்ந்து பித்தம் கூடுவதால் நீர்ச்சுருக்கு, உடல் சோர்வு, வாந்தி, வாய்க்குமட்டல், ஒவ்வாமை, கண் எரிச்சல் போன்ற பல்வேறு நோய்க்குறிகளை உண்டாக்கும். மேற்க்கூறிய நோய்க்குறிகளை மட்டுமல்லாது, அதிகமாகும் பித்தம் நாற்பது வகையான நோய்நிலைகளையும் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம். அத்தகைய பித்தத்தைக் குறைத்து உடலை சமநிலைப்படுத்தினால் வெயில் கால பித்த நோய்களை தடுக்க முடியும் என்றும் கூறுகிறது சித்த மருத்துவம்.

நாம் உண்ணும் உணவில் அறுசுவைகளும் அவசியம் என்பதிலே நமது பாரம்பரிய மருத்துவ முறை தொடங்கிவிடுகின்றது. சித்த மருத்துவம் நோய்க்கு காரணமாகக் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றையும் ஒவ்வொரு சுவையும் கூட்டவும், குறைக்கவும், சமப்படுத்துவம் வல்லது. அந்த வகையில் பித்தத்தைக் குறைத்து சமப்படுத்தி வெயில் கால நோய்களில் இருந்து காக்க வல்ல சித்த மருத்துவ மூலிகைகளில் ஒன்று புளிப்பு சுவையுள்ள ‘மஞ்சள் பழம்’ எனும் ‘எலுமிச்சை’.

எலுமிச்சை என்றதுமே பல் கூச்சமும், புளிப்பும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதன் பெயர்க்காரணத்தை அறிய முற்பட்டால் எவ்வளவு சிறப்பானது என்று அறியவரும். எலுமிச்சையை எழும்+இச்சை என்று பிரிக்கலாம். புளிப்பை வாயில் இட்டவுடன் வாய் நீர் சுரந்து பசியை தூண்டுவிக்கும். அதாவது அதிகமான பித்தத்தால் குறைந்த உணவு இச்சையை எழுப்புவதால் இதற்கு எலுமிச்சை என்று பெயர் வந்துள்ளதாக அறியக்கிடக்கின்றது. ‘இராசகனி’ என்பதும் கூடுதல் சிறப்பு.

எலுமிச்சை என்று கூறியதும் நம் நினைவுக்கு வருவது வைட்டமின்-சி தான். ஆனால், அதனைக் கடந்து அதில் உள்ள பல்வேறு தாவர வேதிப்பொருள்கள் பல மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளன. இதில் உள்ள ஹிஸ்பிரிடின், குர்சிட்டின், அபிஜெனின் ஆகிய பிளவனாய்டு வேதிப்பொருள்கள் பல்வேறு மருத்துவ பண்புகளுக்கு கூடாரமாக உள்ளன. வைட்டமின்-சி மட்டுமின்றி வைட்டமின்கள்-ஏ, பி-1, பி-2, பி-3 ஆகியவைகளும் உள்ளன. மேலும் உயிருக்கு ஊட்டமக்களிக்கும் தாது உப்புக்களான கால்சியம், மக்னேசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகியவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சையில் உள்ள கணக்கில்லாத வேதிப்பொருள்களால் புற்றுநோயை தடுப்பதாகவும், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாகவும், கிருமிக்கொல்லியாகவும், புழுக்கொல்லியாகவும், வீக்கத்தை குறைப்பதாகவும், கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்ற இராச உறுப்புகளைப் பாதுகாப்பதாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், சர்க்கரை நோயை தடுப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும் உள்ளது.

வெய்யில் காலத்தில் பித்தம் அதிகரித்து உண்டாகும் வாந்தி, தலைசுற்றல், வாய்க்குமட்டல் இவற்றிற்கு எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். அல்லது சீரகத்தை நீர்விட்டு கொதிக்க வைத்து கசாயமாக்கி அதில் எலுமிச்சை சாறும், தேனும் சேர்த்து எடுத்துக்கொண்டாலும் நன்மை பயக்கும். 

வெய்யில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் சார்ந்த நோய்நிலைகளில் எலுமிச்சை நற்பலன் தரும். அடிக்கடி எலுமிச்சை சாற்றினை சிறிது உப்பிட்டு எடுத்துவர சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் தொற்றுக்கள் உண்டாகாமல் தடுக்கும். சிறுநீர்ப்பாதையில் உண்டாகும் கல்லடைப்புக்கு எலுமிச்சை சாறு நாள்தோறும் எடுத்துக்கொள்வது கல்லை கரைக்க உதவும்.

ரத்த அழுத்த நோய்க்காக பல நாடுகளின் பாரம்பரிய வைத்திய முறைகளில் எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சையில் உள்ளவர்கள், துணை மருந்தாக, சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடித்து நாள்தோறும் எடுத்துக்கொள்ள இதயத்திற்கு பலம் சேர்க்கும்.

சித்த மருத்துவத்தில் ரத்த விருத்திக்காக பயன்படுத்தப்படும் ‘அயசம்பீர கற்பம்’ எனும் சித்த மருந்தில், ‘கேசரி லேகியம்’, ‘சம்பீர தைலம்’ போன்ற சித்த மருந்துகளில் எலுமிச்சை சேருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் பித்த நோய்களாக கருதப்படும் மன நோய்களில் எலுமிச்சை தேய்த்து குளிக்க சித்த மருத்துவம் வலியுறுத்துவது சிறப்பானது.

சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்மம் மருத்துவத்திலும் எலுமிச்சையின் பங்கு அளப்பரியது. வர்ம காயங்களுக்கு ஒற்றடமிட எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை விதைகளை குழந்தைப்பேறின்மை நிலையில் பல கிராமங்களில் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.

தவிர்ப்பது நல்லது


வயிற்றுப்புண் உள்ளவர்கள் எலுமிச்சை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றில் மேலும் அமில சுரப்பைத் தூண்டி புண்ணை அதிகமாக்கும். அதே போல மூட்டு வாதம், இடுப்பு வலி போன்ற வாத நோயுள்ளவர்கள் எலுமிச்சை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் எலுமிச்சையின் புளிப்பு பித்தத்தைக் குறைத்து, அதன் குளிர்ச்சித் தன்மை வாதத்தைக் கூட்டும் தன்மை உடையது. சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு பத்திய உணவு கூறுவதன் பொருள் விளக்கம் இப்போது பலருக்கு புரிய வரும். இறைச்சி உணவுகளின் மீது எலுமிச்சையை பிழிந்து உண்பதும் பித்தத்தை அதிகரிக்காமல் தடுக்கும் வழி தான்.

க்ரீன் டீ-யில் எலுமிச்சையை சேர்த்து கொண்டாடும் வெளிநாட்டினர் மரபால், எளிதில் கிடைக்கும் நம்ம ஊர் மரபுக்கனியான எலுமிச்சையை நாம் கொண்டாடுவதை மறந்துவிட்டோம். வைட்டமின்-சி என்றதுமே நினைவில் முதலிடம் பிடிக்கும் ஆரஞ்சு பழத்திற்கு நிகரான இடத்தை, நம்ம ஊர் மஞ்சள் பழத்திற்கு (எலுமிச்சை) நாமே கொடுப்பதில்லை. ஆக, வைட்டமின் சி என்று ஒரு பக்க முத்திரையை மட்டும் எலுமிச்சைக்கு பூசாமல், சித்த மருத்துவம் கூறும் தத்துவப்படி இதனை பயன்படுத்திட தொடங்கினால், வெயில் கால நோய்களுக்கு மட்டுமின்றி அநேக நோய்களுக்கு எலுமிச்சை நல்ல பலன் தரும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு: இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com 



Read in source website

நாடு முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 சதவீதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என மாநில நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, இந்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் சென்னை மகளிா் பிரிவு சாா்பில் பெண் சாதனையாளா்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் சென்னை கிளைத் தலைவா் பிரசன்னா வசநாடு தலைமை வகித்தாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 8 பெண்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு சமூக வளா்ச்சியிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. மகளிருக்கு சம உரிமை கொடுக்கக் கூடிய சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக அதற்கான பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா முழுவதும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் 42 சதவீதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். தமிழக பெண்கள் தொழில்துறையில் முன்னேறி இருப்பது அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கல்வி மற்றும் வாழ்க்கையிலும் பெண்களின் வழிகாட்டல் மிக முக்கியமானதாக இருந்தது.

அவா்கள் கொடுத்த பயிற்சியால், எனது தந்தை நடத்தி வந்த நிறுவனத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடிந்தது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகளிரின் பங்களிப்பு விலைமதிப்பற்ாக உள்ளது. சாதனையாளா்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறாா்களோ, அந்தளவு சமூகம் பொருளாதாரம், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் அடைகிறது என்றாா் அவா்.

விழாவில், சத்தியபாமா பல்கலை. நிா்வாக இயக்குநா் மரியசீனா ஜான்சன், கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவா் சுதா சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.



Read in source website

தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற மாநில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பொறியியல் பட்டப் படிப்புகள், பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகள் நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து வழங்க வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அத்துறையின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் 29.12.2022-இல் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, சிறுபான்மை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறுபான்மை பாலிடெக்னிக் கல்லூரிகள் சிறுபான்மையினா் அந்தஸ்து பெறுவதற்கு மாநில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

காஷ்மீர் விவகாரத்தில் ஜவாஹர்லால் நேரு மீதான மோடி அரசின் குற்றச்சாட்டுகளை அன்றைய காலகட்ட காஷ்மீர் கடிதங்கள் பொய்யாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் நேரு தனது ராணுவ மூத்த அதிகாரியின் அறிவுரைப்படி செயல்பட்டார் என இங்கிலாந்து நாளேடான கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு தனது ராணுவ மூத்த அதிகாரி அறிவுறுத்தலின்படி, பாகிஸ்தானுடன் 1948ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நிறுத்திக்கொண்டார். 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பாகிஸ்தானியர்களிடமிருந்து கூடுதல் நிலப்பரப்பை கைப்பற்றாமல் நேரு தவறு செய்துவிட்டதாக பாஜக அரசு குற்றம் சாட்டியது.

1948ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் நிலையில் இருந்ததாகவும், அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக நேரு அரசு, ஐக்கிய நாடுகள் சபையை அணுகியது மிகப்பெரிய தவறு என தற்போதைய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார். 

ஆனால், நேரு மீதான பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகளை, பல ஆண்டுகளாக பராமரித்து வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் கடிதங்கள் பொய்யாக்குவதாக கார்டியன் அறிவித்துள்ளது.

நேரு தனது மூத்த ராணுவ அதிகாரியால் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டதை அந்தக் கடிதங்கள் சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகான நேரு ஆட்சியில், ராணுவ ஜெனரல் சர் பிரான்சிஸ் ராபர்ட் ராய் புச்சரின் கடிதங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

1948ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நேருவுக்கு புச்சர் எழுதிய கடிதத்தில், காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஒட்டுமொத்த ராணுவத்தையும் துடிப்புடன் இயங்கவைப்பது சாத்தியமில்லை. ராணுவ வீரர்கள் பலவீனமாகவும், இளம் வீரர்கள் போதிய பயிற்சி இன்றியும் உள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உயிரூட்டும் வகையில் தற்போது ஓய்வு தேவைப்படுகிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு நேரு அளித்த பதில் கடிதத்தையும் கார்டியன்  சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, 1948 டிசம்பர் 23-ல் நேரு எழுதிய பதில் கடிதத்தில், தற்காப்பு நிலையில் இருக்கும் பாகிஸ்தானை எஞ்சியுள்ள ராணுவ வீரர்களைக் கொண்டு எதிர்ப்பது அரிது என்பதை புரிந்துகொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், காஷ்மீரின் வான்வழிப் பரப்பில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் தனது சாலை அமைப்பை விரிவாக்கம் செய்து இந்தியாவுக்கு எதிராக பலத்தைப் பெருக்கி வருவதாகவும் தகவல் வெளியாகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 28 தேதியிடப்பட்ட புச்சரின் பதில் கடிதத்தில், பாகிஸ்தானின் சாலை அமைக்கும் பணிகளைத் தடுக்க ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் கருதுகிறேன். இந்தப் பிரச்னைக்கு  அரசியல் அணுகுமுறையை நான் பரிந்துரைக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்துக்காக நேரு ஐ.நா. சபையை அணுகியதன் விளைவாக 1949 ஜனவரி 1ஆம் தேதி பாகிஸ்தான் உடனான போர் முடிவுக்கு வந்தது.

இந்தக் கடிதங்கள் மூலம் இந்திய ராணுவ மூத்த அதிகாரியின் அறிவுறுத்தலின்படி நேரு செயல்பட்டது உறுதியாகியுள்ளதாக கார்டியன் விளக்கியுள்ளது. 

காஷ்மீரின் இந்தக் கடிதங்களை குறிப்பாக புச்சர் எழுதிய கடிதங்களை, அபாயகரமானது எனக் குறிப்பிட்டு மோடி அரசு வெளியிடாமல் பாதுகாக்க முயற்சிப்பதாக கடந்த மாதம் கார்டியன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

ஜோஷிமட் நகரையடுத்து நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள இரு மாவட்டங்கள் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் புகைப்படத்தில் ஜோஷிமட் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ஒட்டுமொத்த நகரமுமே புதைபடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சாமோலி மற்றும் ருத்ரபிரயாக் ஆகிய மாவட்டங்களும் நிலச்சரிவில் புதைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு அபாயங்களை அறிக்கை பகுப்பாய்வு செய்துவருகிறது. நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட 147 மாவட்டங்களில் உத்தரகண்ட்டின் 13 மாவட்டங்களும் அடங்கும். அவற்றுள், நிலச்சரிவு அபாயத்தில் நாட்டிலேயே சமோலி 19வது இடத்தில் உள்ளது. நாட்டில் நிலச்சரிவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் அடிப்படையில் உள்ள 10 மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் தெஹ்ரி, ருத்ரபிரயாக் உள்ளது. 

சமோலி மாவட்டத்தின் ஜோஷிமட் நகரம் ஏற்கனவே நிலச்சரிவின் பிடியில் சிக்கியுள்ளது. அந்த நகரத்தை மக்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பில்லாத நிலச்சரிவு-புதைவு மண்டலமாக மாநில அரசு அறிவித்த நிலையில், அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இதையடுத்து, நாட்டிலேயே அதிக நிலச்சரிவு அடர்த்தி உள்ள மாவட்டம் ருத்ரபிரயாக், அதாவது இந்த மாவட்டம் நிலச்சரிவுகளால் சமூக மற்றும் பொருளாதார சேதத்திற்கு மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும், தெஹ்ரி மாவட்டத்திலும் இதே நிலை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களும் புவியியல் ரீதியாக மற்ற மாவட்டங்களை விட சிறியவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

என்ஆர்எஸ்சி அறிக்கையின் படி, இமாச்சலப் பிரதேசத்தில் 12மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் உணர்திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ள 147 மாவட்டங்களில் இந்த 11 மாவட்டங்களும் உள்ளன. 
இமாச்சலில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மண்டி மாவட்டம் நாட்டிலேயே 16வது இடத்தில் உள்ளது. 

ஹமிர்பூர் 25வது இடத்திலும், பிலாஸ்பூர் 30வது, சம்பா 32வது, சோலன் 37வது, கின்னார் 46வது, குலு 57வது, சிம்லா 61வது, உனா 70வது, சிரோமர் 88வது, லஹௌல் ஸ்பிட்டி 126வது இடத்திலும் உள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் 14 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாய உணர்திறன் மாவட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிக்கை கூறுகிறது. அவற்றில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரஜோரி நாட்டிலேயே நான்காவது இடத்திலும், பூஞ்ச்  ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

உலக மகளிர் நாளையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.  

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. 

அந்தவகையில் இன்று மகளிர் நாளையொட்டி,  சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

பெண்களுக்கு பல வழிகளில் ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இந்த கவன ஈர்ப்பு சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் நினைவாக - சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்! என்று கூகுள் தெரிவித்துள்ளது. 



Read in source website

மும்பை: உயிரோடு இருப்பவர் தனது உடல் உறுப்புகளை தானமளிப்பதில் மனைவி மற்றும் தாய்தான் அதிக விழுக்காட்டினராக இருப்பதாக மருத்துவமனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகமே இன்று மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், உயிரோடு இருக்கும்போதே தனது உடல் உறுப்பை தானமாக அளித்த 10 பேரில் 7 பேர் மனைவி அல்லது தாயாக இருந்துள்ளனர் என்று தரவுகள் வெளியாகியுள்ளன.

அதாவது, ஒரு தனியார் மருத்துவமனை என்று எடுத்துக் கொண்டால், அங்கு நடந்த ஆயிரம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அறுவை சிகிச்சைகளில் உடல் உறுப்பை தானமாக அளித்தவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

தனது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும் போது, உடல் உறுப்புகளை தானமளிக்க பெண்கள் மறுப்பதில்லை என்ற ஒரு ஆழமான கருத்தையும் பல மருத்துவமனை மருத்துவர்கள் முன் வைக்கிறார்கள்.

உடல் உறுப்புகளை தானமளித்த 70 சதவிகித பெண்களில் ஒரு சிறுநீரகம் அல்லது கல்லீரலின் ஒரு பகுதியை 35 சதவிகித பெண்கள் கணவருக்காகவும், மற்ற 35 சதவிகித பெண்கள் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள், பிள்ளைகளுக்காகவும் தானமளித்துள்ளனர்.

இந்த 70 சதவிகிதத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 2 சதவிகித பெண்கள் தனது கணவரின் பெற்றோருக்கும் உடல் உறுப்புகளை தானமளித்துள்ளனர். பல அறுவை சிகிச்சைகளை அருகிலிருந்து பார்த்திருப்பதால், தியாகம் செய்வதிலும் தானமளிப்பதிலும் பெண்களுக்கு நிகரே இல்லை என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். 

வழக்கமாக, கணவர் அல்லது குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படும்போது, மனைவியோ, தாயோ ஒரு போதும் தானமளிக்க மறுத்ததேயில்லை என்கிறார்கள் பல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.
 

 



Read in source website


புதுதில்லி: பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்தெவொரு தயாரிப்பு நிறுவனங்களின் பொருள்கள் அல்லது சேவைகளை அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் விளம்பரப்படுத்தக் கூடாது என மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

சமூக வலைத்தங்கள், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைகாட்சிகளில் பிரபலங்கள் அழகு சாதனங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களின் மீது தரம், நம்பிக்கை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. 

மேலும், பிரபலங்கள் விளம்பரம் செய்யும் பொருள்களின் தரத்தை சோதிக்காமல் விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும், மோசடிகளும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடந்து வந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்த புகார் மத்திய அரசுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தற்போது புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதில், பொருள்களை விளம்பரம் செய்யும் நபர்கள் தெளிவான வார்த்தைகளில் அனைவருக்கும் புரியும் விதமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும், அது பணம் கொடுத்து ஊக்குவிக்கும் விளம்பரமா, வெறும் ஆதாரமற்றதா என்பதை தெரிவிக்க வேண்டும். 

என்ன காரணத்தை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களும் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக நிச்சயம் இருக்கக் கூடாது. 

பிரபலங்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் அந்த குறிப்பிட்ட பொருள்களை பயன்படுத்தி அல்லது அனுபவித்து அதன் உண்மை தன்மையை தெரிந்துகொள்ளமால் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவைகள் குறித்த பதிவுகள் எதையும் செய்யக் கூடாது.

பிரபலங்கள் விளம்பரத்தில் கூறப்படும் உரிமைகோரல்களை நிரூபிக்கும் நிலையில் விளம்பரதாரர் இருப்பதை எப்போதும் மதிப்பாய்வு செய்திருக்க வேண்டும்.  

பிரபலங்கள், தங்கள் பார்வையாளர்களுடன் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்க இந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.

எந்தெவொரு தயாரிப்புகள் அல்லது சேவைகளை அங்கீகரிக்கும் போது பிரபலங்கள் தங்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்தாமல் இருப்பதையும், அவர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அல்லது வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதிசெய்வதை வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வென்றன.

தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வராக மாணிக் சாஹாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் முறையாகப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். மேற்கு படைப்பிரிவு என்பது பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக கடந்த 2003-ஆம் ஆண்டு பணிக்கு சோ்ந்த இவா், 2,800 மணிநேரம் பல்வேறு விமானங்களில் பறந்த அனுபவமுள்ளவா். இவா் விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளா் ஆவாா். மேலும், மேற்கு படைப்பிரிவின் ஹெலிகாப்டா் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாகவும் பணியாற்றியுள்ளாா். சிறந்த பங்களிப்புக்காக இரு முறை தலைமை தளபதியின் விருது பெற்றுள்ளாா்.

விமானப்படையின் முக்கிய போா் விமானங்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பெண் விமானிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது, 1,875 பெண் அதிகாரிகள் விமானப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், படைத்தளபதி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கட்டளையிடும் பதவிகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் நோக்கில் ஷாலிஸா தாமி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

 



Read in source website

நிலத்தில் இருந்து நடுத்தர தொலைவில் உள்ள வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சோதித்துப் பாா்க்கப்பட்டது.

ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போா்க் கப்பலிலிருந்து இந்திய கடற்படையினா் இந்தச் சோதனையை மேற்கொண்டனா். எதிரி நாட்டு கப்பல்களை அழிக்கும் ஆயுதமாக எம்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணையைப் பயன்படுத்தும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் இந்த ஏவுகணையைத் தயாரித்துள்ளது.

Read in source website

ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சுந்தா்காா் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான சகசாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரப் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், கிராமம் முழுவதும் 24 மணி நேரமும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் நிறுவனம் ஒன்றின் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிராமத்தில் உள்ள 90 வீடுகளுக்கு சூரிய மின் சக்தி அடிப்படையிலான மின்விளக்கு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி 10,000 லிட்டா் கொள்ளளவு மூலம் நீா் வசதிக்கான அமைப்புகள் கிராமத்தின் 12 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 70 சூரிய மின்சக்தி தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சூரிய மின்சக்தியில் இயங்கும் ஸ்மாா்ட் வகுப்பறை இந்த முன்னெடுப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து சாா் ஆட்சியா் சுரஞ்சன் சாஹு கூறுகையில், ‘நிலைத்த வளா்ச்சி இலக்குகளுக்கான வறுமை ஒழிப்பு, கிராமத்தில் மாசு இல்லாத மின்சாரப் பயன்பாட்டை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆா்சிலாா் மிட்டல், நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் உதவி முக்கியப் பங்காற்றி உள்ளன’ என்றாா்.

சகசாஹி கிராமத்தைச் ‘சூரிய மின் சக்தி கிராமம்’-ஆக அறிவித்து அந்தக் கிராம பஞ்சாயத்தின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நாட்டில் மின்சார பகிா்மான கட்டமைப்பை நவீனப்படுத்துவது தொடா்பான நிபுணா் குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மின்சார பகிா்மான கட்டமைப்பை நவீனப்படுத்துவது தொடா்பாக ஆராய்வதற்கான நிபுணா்கள் குழுவை மத்திய எரிசக்தி அமைச்சகம் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அமைத்தது. மத்திய, மாநில எரிசக்தித் துறை அதிகாரிகள், மத்திய மின்னணுவியல் அமைச்சக அதிகாரிகள், கான்பூா் ஐஐடி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனா். அக்குழு தனது அறிக்கையை அண்மையில் மத்திய அரசிடம் சமா்ப்பித்தது.

அக்குழுவின் அறிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. அக்கூட்டம் தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டு மக்களுக்கு 24 மணி நேரமும் மலிவான விலையில் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான இலக்கை அடைய மின் பகிா்மான அமைப்பை நவீனப்படுத்துவது அவசியம். ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடையவும் அத்தகைய மாற்றங்கள் கட்டாயம்.

மின் பகிா்மான கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக நிபுணா் குழு வழங்கிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. அப்பரிந்துரைகளின்படி மின்சார பகிா்மான கட்டமைப்பானது விரைவில் நவீனப்படுத்தப்படும். நவீன கண்காணிப்பு கருவிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு அதிகரிப்பு, மின்சார பகிா்மானத் திறனை மேம்படுத்துவது, இணையவழி தாக்குதல்களை எதிா்கொள்வது, பேரிடா்களை எதிா்கொள்வது, தரவுகள் அடிப்படையிலான நிா்வாகம், மின்தடையைக் குறைப்பது, தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

தானியங்கி அடிப்படையில், எண்ம ரீதியில் கட்டுப்படுத்தப்படும் மின்சார பகிா்மான அமைப்பானது இணையவழி தாக்குதலில் இருந்தும் தேசியப் பேரிடா்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். அவசரகால சூழல்களை எதிா்கொள்ளும் வகையில் அத்தகைய மின் பகிா்மான அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறுகிய காலத்துக்கான பரிந்துரைகள் 3 ஆண்டுகளிலும், நீண்ட காலத்துக்கான பரிந்துரைகள் 3 முதல் 5 ஆண்டுகளிலும் நிறைவேற்றப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

 

காஷ்மீர் விவகாரத்தில் ஜவாஹர்லால் நேரு மீதான மோடி அரசின் குற்றச்சாட்டுகளை அன்றைய காலகட்ட காஷ்மீர் கடிதங்கள் பொய்யாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் நேரு தனது ராணுவ மூத்த அதிகாரியின் அறிவுரைப்படி செயல்பட்டார் என இங்கிலாந்து நாளேடான கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு தனது ராணுவ மூத்த அதிகாரி அறிவுறுத்தலின்படி, பாகிஸ்தானுடன் 1948ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நிறுத்திக்கொண்டார். 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பாகிஸ்தானியர்களிடமிருந்து கூடுதல் நிலப்பரப்பை கைப்பற்றாமல் நேரு தவறு செய்துவிட்டதாக பாஜக அரசு குற்றம் சாட்டியது.

1948ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் நிலையில் இருந்ததாகவும், அப்போது போர் நிறுத்தம் தொடர்பாக நேரு அரசு, ஐக்கிய நாடுகள் சபையை அணுகியது மிகப்பெரிய தவறு என தற்போதைய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார். 

ஆனால், நேரு மீதான பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகளை, பல ஆண்டுகளாக பராமரித்து வகைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் கடிதங்கள் பொய்யாக்குவதாக கார்டியன் அறிவித்துள்ளது.

நேரு தனது மூத்த ராணுவ அதிகாரியால் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டதை அந்தக் கடிதங்கள் சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகான நேரு ஆட்சியில், ராணுவ ஜெனரல் சர் பிரான்சிஸ் ராபர்ட் ராய் புச்சரின் கடிதங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

1948ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நேருவுக்கு புச்சர் எழுதிய கடிதத்தில், காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். ஒட்டுமொத்த ராணுவத்தையும் துடிப்புடன் இயங்கவைப்பது சாத்தியமில்லை. ராணுவ வீரர்கள் பலவீனமாகவும், இளம் வீரர்கள் போதிய பயிற்சி இன்றியும் உள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உயிரூட்டும் வகையில் தற்போது ஓய்வு தேவைப்படுகிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு நேரு அளித்த பதில் கடிதத்தையும் கார்டியன்  சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, 1948 டிசம்பர் 23-ல் நேரு எழுதிய பதில் கடிதத்தில், தற்காப்பு நிலையில் இருக்கும் பாகிஸ்தானை எஞ்சியுள்ள ராணுவ வீரர்களைக் கொண்டு எதிர்ப்பது அரிது என்பதை புரிந்துகொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், காஷ்மீரின் வான்வழிப் பரப்பில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் தனது சாலை அமைப்பை விரிவாக்கம் செய்து இந்தியாவுக்கு எதிராக பலத்தைப் பெருக்கி வருவதாகவும் தகவல் வெளியாகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 28 தேதியிடப்பட்ட புச்சரின் பதில் கடிதத்தில், பாகிஸ்தானின் சாலை அமைக்கும் பணிகளைத் தடுக்க ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாது என்று நான் கருதுகிறேன். இந்தப் பிரச்னைக்கு  அரசியல் அணுகுமுறையை நான் பரிந்துரைக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்துக்காக நேரு ஐ.நா. சபையை அணுகியதன் விளைவாக 1949 ஜனவரி 1ஆம் தேதி பாகிஸ்தான் உடனான போர் முடிவுக்கு வந்தது.

இந்தக் கடிதங்கள் மூலம் இந்திய ராணுவ மூத்த அதிகாரியின் அறிவுறுத்தலின்படி நேரு செயல்பட்டது உறுதியாகியுள்ளதாக கார்டியன் விளக்கியுள்ளது. 

காஷ்மீரின் இந்தக் கடிதங்களை குறிப்பாக புச்சர் எழுதிய கடிதங்களை, அபாயகரமானது எனக் குறிப்பிட்டு மோடி அரசு வெளியிடாமல் பாதுகாக்க முயற்சிப்பதாக கடந்த மாதம் கார்டியன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 



Read in source website

உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கத் தேர்வான 40 இந்திய வீராங்கனைகளுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 6-ஆவது உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெறவுள்ளன. இதில், இந்திய அணி சார்பாக பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட 40 வீராங்கனைகளுக்கு சின்னாளபட்டியில் கடந்த 6-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வருகிற 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இந்திய அணிக்கு தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேர்வான எஸ்.எஸ்.சுஷ்மிதா, எஸ்.கண்மணி, ஏ.தியோஸ்ரீசாயினி, வாசிமா ஆகிய 4 மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மத்தியபிரதேசம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற 40 வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
 முதல்கட்டப் பயிற்சி முகாமில் அமைப்பாளர் மாஸ்டர் எம்.பிரேம்நாத், தலைமையில், முகாம் மேற்பார்வையாளர் எம்.பி.சுப்பிரமணியம், பயிற்சி முகாம் பயிற்சியாளர் அமித் படேல், மகாராஷ்டிர மாநில பயிற்சியாளர் மோகினி யாதவ் ஆகியோர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
 இதுகுறித்து ரோல்பால் ஸ்கேட்டிங் மாஸ்டர் எம்.பிரேம்நாத் கூறுகையில், "இதுவரை நடைபெற்ற 5 உலக கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழக அணி சார்பாக, சின்னாளப்பட்டியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் நான்கு முறை தேர்வு பெற்றனர்' என்றார்.



Read in source website

 

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த 2021இல் ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் உலகை பரபரப்பான சூழலுக்குத் தள்ளி வருகிறது. தலிபான் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்பது சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள புதிய ஆட்சியாளர்கள் பெரும்பாலான பெண்களை அடக்கி ஆள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பல விதிமுறைகளும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் தடை விதிக்கும்படியான சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பெண்கள் மேற்கல்வி கற்கவும், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை பெண்கள் தங்களை மறைத்துக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தலிபான்களின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்பாக உலகின் மிகவும் அடக்குமுறை நாடாக உள்ளது என்று ஐ.நா பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதியும், ஆப்கனின் தூதுக்குழுவின் தலைவருமான ரோசா ஒடுன்பயேவா கூறினார். 

கட்டுப்பாடுகள், குறிப்பாகக் கல்வி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான தடைகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

கனவுகள் சிதைந்து, ஒரு பெண்ணாக இருப்பதற்காக தண்டிக்கப்படுவது என்ற மிகவும் மோசமான சூழ்நிலைதான் அங்கு நிலவி வருகின்றது. ஆனால், தலிபான்களுக்கு குற்றஉணர்ச்சி ஏதுமில்லை, அவற்றிலிருந்து பின்வாங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

மகளிர் தினத்தை முன்னிட்டு, சுமார் 200 மேற்பட்ட ஆப்கானிய பெண் வணிகத்தினர் காபூலில் தங்கள் தயாரிப்புகளின் கண்காட்சியை நடத்துவது வழக்கம். ஆனால், தலிபான் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும்பாலானோர் தங்கள் வணிகத்தை இழந்துள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். 

இங்குள்ள பெண்கள் தங்கள் உரிமைகளைக் கடைப்பிடிக்க முடியாது, அதேசமயம் மகளிர் தினத்தையும் கொண்டாடவும் முடியாது.. ஏனென்றால் நாங்கள் பள்ளி, பல்கலைக்கழகம், வேலைக்குச் செல்ல முடியாது எனவே கொண்டாட எந்த நாளும் எங்களுக்கு இல்லை என்று அங்குள்ள பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின்படி, 11.6 மில்லியன் ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 



Read in source website

சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் உருவாக்கியுள்ள புதிய வரிசை ராக்கெட்டான ஹெச்3-ஐ முதல்முறையாக விண்ணில் செலுத்தும் முயற்சி செவ்வாய்க்கிழமை தோல்வியடைந்தது.

ஏற்கெனவே 3 வாரங்களுக்கு முன்னா் வேறொரு கோளாறு காரணமாக அந்த ஏவுகணையை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தால் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்ட ஹெச்3 ஏவுகணையின் இரண்டாவது நிலையில் பழுது ஏற்பட்டதால் அது மனிதா்கள் வசிக்கும் பகுதியில் விழும் ஆபத்தை தவிா்ப்பதற்காக வேண்டுமென்றே வெடித்து சிதறடிக்கப்பட்டது.

இது குறித்து ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், ‘ஹெச்3 ஏவுகணையின் இரண்டாம் நிலைத் தொகுதியில் இக்னிஷன் செயல்படாததால் அது திட்டமிட்ட பாதையில் செலுத்த முடியாதது உறுதியானது. அதையடுத்து, அந்த ஏவுகணை வெடித்து சிதறடிக்கப்பட்டது. 2-ஆம் நிலை ஏவுகணையும், அது எடுத்துச் சென்ற செயற்கைக்கோளும் பிலிப்பின்ஸ் அருகே ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்பாக விழுந்தன’ என்று தெரிவித்தது.

இந்தத் தோல்வி ஜப்பானிய விண்வெளி ஆய்வு ஆா்வலா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.



Read in source website

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்த தங்களது நாடு தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் ஜோ-ஜாங் எச்சரித்துள்ளாா்.

தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தங்களது பி-52 குண்டுவீச்சு விமானத்தை கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா திங்கள்கிழமை பறக்கவிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கிம் ஜோ-ஜாங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்கப் படை மற்றும் அதன் கைப்பாவையான தென் கொரிய ராணுவத்தின் இடைவிடாத ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

தேவைப்படும் சூழல் வரும்போது அந்த இரு நாடுகளுக்கும் எதிராக மிகத் துரிமாகவும், சமாளிக்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது, தங்கள் மீதான படையெடுப்புக்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுவதால் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.



Read in source website

அமெரிக்காவும் தங்கள் நாடும் மோதலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதைத் தடுப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது எனவும் சீனாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக மிக நீண்ட காலம் பொறுப்பு வகித்த வாங் யீ-க்கு பதிலாக அந்தப் பதவிக்கு கடந்த டிசம்பா் மாதம் நியமிக்கப்பட்ட கின் காங், இதற்கு முன்னா் அமெரிக்காவுக்கான சீன தூதராக பொறுப்பு வகித்தது நினைவுகூரத்தக்கது.

இது குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற தனது முதல் வருடாந்திர செய்தியாளா்கள் சந்திப்பின்போது, கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

அமெரிக்காவும், சீனாவும் மிகப் பெரிய மோதலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ‘பிரேக்’ அமெரிக்காவிடம்தான் உள்ளது. அந்த நாடு அதனைப் பயன்படுத்தவில்லை என்றால் மோதலை நோக்கிய பயணம் தொடரும்.

அமெரிக்காவுடன் ஆரோக்கியமான போட்டியையே சீனா விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவோ சீனாவை நசுக்கும் முயற்சியிலேயே உள்ளது.

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒருவா், எதிராளியைவிட அதிக திறனை காட்டி போட்டியில் வெல்வதே நியாயமாகும். அதற்குப் பதிலாக போட்டியாளரை தடுக்கி விழவைக்கவும் காயப்படுத்தவும் முயற்சிப்பது நியாயமான செயல் அல்ல. அந்த செயலைத்தான் அமெரிக்கா செய்துகொண்டிருக்கிறது.

ரஷியாவுடனான உறவு: சா்வதேச நாடுகள் தங்களிடையே நட்புறவை எவ்வாறு பேணுவது என்பதற்கு ரஷியாவும் சீனாவும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பனிப்போா் காலத்திய கண்ணோட்டத்துடன் பாா்ப்பது தவறு.

எங்களுக்கு இடையிலான உறவு ‘போா்க் கூட்டணி இல்லாத, போா் மோதல் இல்லாத, 3-ஆவது நாடுகளைக் குறிவைக்காத’ உறவாகும்.

ரஷியாவுடனான வா்த்தகப் பரிமாற்றங்களில் அமெரிக்க டாலா், ஐரோப்பிய யூரோ நாணயப் பயன்பாடு குறைக்கப்பட்டு, ரஷியாவின் ரூபிள், சீனாவின் யுவான் நாணயங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதில் எந்தத் தவறும் இல்லை.

எங்களுக்கு எந்த நாணயம் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதோ அதனையே பயன்படுத்துவோம். நாணயப் பயன்பாடு என்பது ராஜீயரீதியிலான உறவை நிா்ணயிக்கக் கூடாது என்றாா் அவா்.

உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் 3-ஆவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இரு நாடுகளும் மோதலை நோக்கிச் செல்வதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சா் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

சென்னை: கருணை அடிப்படையிலான வேலையை பெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு அந்தப் பணியை வழங்கக் கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்துள்ளதாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போதும், திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமையில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கர்நாடக அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.



Read in source website

சென்னை: பழங்குடியின பெண்களும் குடும்பச் சொத்தில் சம பங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பச் சொத்தில் தங்களுக்கும் சம பங்கு வழங்கக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவியும், மகளும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு பெற உரிமையுள்ளதாக கூறி, இரு பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த சட்டத்தின் கீழ், சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது" என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, "பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க மறுக்கும் வகையில் எந்த மரபும், நடைமுறையும் நிரூபிக்கப்படவில்லை. இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நடைமுறை, மரபு பின்பற்றப்படாத நிலையில் பழங்குடியின பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடைக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம பங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது என வேதனை தெரிவித்தார்.

மேலும், குடும்ப சொத்தில், பழங்குடியின பெண்கள் சமபங்கு பெறும் வகையில் மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடச் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.



Read in source website

சென்னை: நிலம் கையகப்படுத்தல் தொடர்பான 4 தொகுப்புகளை தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிலஎடுப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துவருவாய்த்துறை களப் பணியாளர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வாயிலாக நிலஎடுப்பு தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு தொகை: இதையடுத்து, மாநில நில எடுப்பு சட்டங்கள், மத்திய நில எடுப்பு சட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் மற்றும் தனிநபர் பேச்சுவார்த்தை முறை ஆகியவற்றின் கீழ் நிலஎடுப்பு நடைமுறைகளின் உயர் இழப்பீட்டுத் தொகை கோரும் மனுக்களை கையாள்வது குறித்த நடைமுறைகளையும் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக இதுவரை நடைமுறையில் இருந்து வரும் அனைத்து சட்டங்கள், விதிகள், அரசாணைகள், அரசுவழிகாட்டுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 4 தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்புகளை சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் நேற்றுநடைபெற்ற விழாவில் தமிழகஅரசின் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் தலைவருமான வெ.இறையன்பு வெளியிட்டார்.

அவற்றின் முதல் பிரதிகளைவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர்குமார் ஜெயந்த் பெற்றுக்கொண்டார். அப்போது மனிதவள மேலாண்மைத்துறை செயலர் மைதிலி ராஜேந்திரன், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி கூடுதல் இயக்குநர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இ ருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.



Read in source website

திருச்சி: ஆசிய பசிபிக் நாடுகளில் 20 லட்சத்துக்கும் குறைவான பயணிகளைக் கையாளக்கூடிய விமானநிலையங்களில் சிறந்த விமானநிலையமாக திருச்சி சர்வதேச விமானநிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து சர்வதேச விமானநிலைய கவுன்சில் (ஏசிஐ) சார்பில் தலா 3 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 4 முறை ஆய்வு செய்து ஓராண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

விமானநிலைய உள்நுழைவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், விமான நிலையத்திலுள்ள வசதிகள், தரமான உணவு மற்றும் குளிர் பானங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், விமானநிலைய சுற்றுச்சூழல் உள்ளிட்ட 32 கேள்விகளுக்கு பயணிகளிடமிருந்து பதில்களைப் பெற்று, அதனடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை சர்வதேச விமான நிலைய கவுன்சில் வெளியிட்டு வருகிறது.

இதன்படி, 2022-ம் ஆண்டுக்கான பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கியுள்ள ஆசிய பசிபிக் நாடுகளில் 20 லட்சத்துக்கும் குறைவான பயணிகளைக் கையாளக்கூடிய விமானநிலையங்களில், சிறந்த விமானநிலையமாக திருச்சி சர்வதேச விமானநிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானநிலைய இயக்குநர் சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: ஆசிய பசிபிக் நாடுகளில் 20 லட்சத்துக்கும் குறைவான பயணிகளை கையாளக்கூடிய விமானநிலையங்களில் திருச்சி விமானநிலையத்தை சிறந்த விமானநிலையமான சர்தேச விமானநிலைய கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

அடுத்தகட்டமாக, இங்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அடுத்தடுத்த ஆய்வுகளில் 20 லட்சத்துக்கும் மேல் பயணிகளைக் கையாளக்கூடிய விமானநிலையங்களில் பட்டியலில் திருச்சி சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

விமானநிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளில் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ராணுவத்திடமிருந்து 145 ஏக்கர், மாநில அரசிடமிருந்து 345 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதில் மாநில அரசு முதற்கட்டமாக 280 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தித் தருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

விமானநிலைய புதிய முனையக்கட்டுமானப் பணிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க இந்திய விமானநிலைய ஆணையக்குழுமத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், அதற்குள்ளாக முடித்துவிடுவோம் என்றார்.

சுங்கத் துறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: திருச்சி விமானநிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக இருந்தபோதிலும், சுங்கத் துறையினரின் நடவடிக்கைகள் பெரும்பாலான பயணிகளுக்கு அதிருப்தி அளிப்பதாகவும்,சோதனை என்ற பெயரில் பயணிகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விமானநிலைய இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து, இப்பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும்’’ என்றார்.



Read in source website

அதர்தலா: தொடர்ந்து இரண்டாவது முறையாக திரிபுரா மாநில முதல்வராக டாக்டர் மாணிக் சாஹா இன்று (மார்ச் 8) பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

புதன்கிழமை அகர்தலாவில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்ஸாம் முதல்வர் ஹேம்ந்த பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார்.

சமீபத்தில் திரிபுராவின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. உள்ளூர் கட்சியான திப்ரா மோதா, 13 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக முன்னேறியுள்ளது.

முன்னதாக, திங்கள்கிழமை நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வராக மாணிக் சாஹா பெயர் முன்மொழியப்பட்டத்தைத் தொடர்ந்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து அகர்தலாவிலுள்ள விவேகானந்தா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக ரத்தன் லால் நாத், பிரஞ்சித் சிங்க ராய், சந்தான சக்மா, சுசானந்த சவுத்ரி, டிங்கு ராய், பிகாஸ் டெப்பர்மா, சுதாங்சு தாஸ், சுக்லா சரண் நோட்டியா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். முதல் நான்கு பேர் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள். அடுத்த மூன்று பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டியிலிருந்து ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.

பல் மருத்துவரான மாணிக் சாஹா, மாநிலத்தில் தேர்தல் நடக்க இருந்த சில மாதங்களுக்கு முன்பாக கடந்த 2022ம் ஆண்டு பிப்லப் டெப்-க்கு பதிலாக திரிபுராவின் முதல்வராக்கப்பட்டார். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்டோவாலி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அவர் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட்டிருக்கவில்லை. இந்த தேர்தலிலும் அந்த தொகுதியை மாணிக் சாஹா தக்கவைத்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மாணிக் சாஹா தொடர்ந்து பாஜகவில் இணைந்தார். 2022-ம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: ஆயுள் தண்டனை பெற்ற நாள்பட்ட நோய், முதியோர் கைதிகளை விடுவிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அம்மாநிலத்தின் 75 மாவட்ட சிறைகளிலும் இருப்பவர்களின் விவரங்களை கேட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு தன் சிறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த வருடம் முதல் துவங்கிய இந்த மாற்றங்களில் புதிதாக ஒரு முடிவை பாஜக ஆளும் அரசு எடுத்துள்ளது.

இதன்படி, ஆயுள் தண்டனை பெற்று நெடுநாட்களாக நோயால் அவதிப்படுபவர்களையும், எழுபதிற்கும் அதிகமான முதிய வயது கைதிகளையும் விடுதலை செய்ய உள்ளது. இவர்களில் நாட்கால நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளில் பலரும் சிறைகளில் சிக்கியதன் காரணமாக இறப்பிற்கும் உள்ளாகி வருகின்றனர்.

இது போன்றவர்கள், தம்மை விடுவிக்கக் கோரி பாஜகவிற்கும் முன்பாக உபியில் ஆட்சி செய்த அரசுகளிடமும் கேட்டிருந்தனர். மிக முக்கியமாக கருதப்படும் இம்முடிவால் உபியின் பல ஆயிரம் கைதிகள் விடுதலையாகும் சூழல் உருவாகி உள்ளது.

அதேபோல், எழுபதுக்கும் அதிகமான மூத்த வயது கைதிகளும் பலன் பெற உள்ளனர். இந்த இரண்டு தரப்பினரை சிறைகளில் வைத்து பராமரிப்பது உபி அரசுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

இந்த இரண்டு வகை கைதிகளின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே இந்த விடுதலை வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இந்த முடிவில் தீவிரவாதக் குற்றங்களை செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு பலன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

எனினும், முதியோர் மற்றும் நாட்கால நோய் கொண்ட கைதிகளின் விவரங்களை கேட்டு, தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உபியின் சிறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவற்றை இரண்டு வாரங்களில் அனுப்பக் கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை பெற்ற பின் உபி சட்டத்துறையின் சேவை ஆணையம், அவர்களை விடுவிப்பதற்கான விதிகளை தம் அரசிற்கு பரிந்துரைக்கும். இதன் மீது முதல்வர் யோகி இறுதி முடிவு எடுத்து விடுதலைக்கான தேதியை அறிவிக்க உள்ளார்.

இதுபோல், உபியின் கைதிகளுக்கு சாதகமான பாஜக அரசால் அளிக்கப்படுவது புதிதல்ல. தண்டனைக் காலம் முடிந்தும் அதனுடன் சேர்த்து விதிக்கப்பட்ட அபராதத் தொகை கட்ட முடியாமலும் பல சிறைவாசிகள் உபியில் உள்ளனர்.

இவர்களுக்காகவும் ஒரு திட்டம் வகுத்து அவர்கள் விடுதலைக்கு உதவ உபி முதல்வர் யோகி அறிவித்திருந்தார். கைதிகளுக்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு தேநீர், அனைத்து மதங்களின் பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டன.

பெரும்பாலான சிறைக் கைதிகள் அறைகளில் அடைக்கப்படுவதும் குறைந்து வருகிறது. ஒரே குடும்பத்தின் கைதிகளை சிறைகளின் உள்ளே சந்தித்து பேச அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் உபியில் படிப்படியாக அறிமுகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான 70 எச்டிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களை மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து (எச்ஏஎல்) வாங்க மத்திய அமைச்சரவை கடந்த 1-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பு ரூ.6,838 கோடி ஆகும்.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை அடைய வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக இது அமைந்துள்ளது. இதுபோல எல்&டி நிறுவனத்திட
மிருந்து ரூ.3,100 கோடிக்கு 3 பயிற்சி கப்பல்களை வாங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்
பட்டு தயாரிக்கப்பட்டவை (ஐடிடிஎம்) என்ற திட்டத்தின் கீழ் இந்த கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், பாதுகாப்புத் துறைக்கு பயிற்சி போர் விமானங்கள் மற்றும் பயிற்சி கப்பல்கள் வாங்க, எச்ஏஎல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தனித்தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9,900 கோடி ஆகும். இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 70 எச்டிடி-40 ரக விமானங்களை 6 ஆண்டுகளுக்குள் எச்ஏஎல் தயாரித்து விமானப்படையிடம் ஒப்படைக்கும். விமானப்படையில் சேரும் பைலட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும்.

இதுவரை பயிற்சி விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் சில ராணுவ தளவடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

எல்&டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, பயிற்சி கப்பல்கள் தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளியில் தயாரிக்கப்படும். இந்த கப்பல்கள் 2026-ல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பல்கள் கடற்படை மாலுமிகளுக்கு அடிப்படை பயிற்சி வழங்க பயன்படுத்தப்படும்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் 6%-க்கும் அதிகமான அல்லது 4,40,989 நிறுவனங்கள் அடிப்படை பசுமை விதிகளைக்கூட கடைபிடிப்பதில்லை. பசுமை விதிகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதங்களை விதிக்கிறது.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பஞ்சாப் மாநிலம் (6,293)முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து குஜராத் (4,605), ராஜஸ்தான் (3,796), மகாராஷ்டிரா (3,043), ஜார்க்கண்ட் (1,760 நிறுவனங்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ரசாயனம், சிமெண்ட் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும் 34 நிறுவனங்களுக்கு ரூ.13.4 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐஏஐ) ஆகியவை இணைந்து, தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணையை (எம்ஆர்எஸ்ஏஎம்) வடிவமைத்தன. இதை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணையின் திறனை பரிசோதிக்க இந்திய கடற்படை திட்டமிட்டது. இதன்படி ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. அப்போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை எட்டியதாகவும் இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை, 70 கி.மீ. தொலைவில் வரும் எதிரி நாடுகளின் போர் விமானம், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.



Read in source website

பெர்த்: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் தொழிலாளர் கட்சி ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு தனது பயணத்தை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளதாக தகவல். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பொருளாதாரம், விளையாட்டு மற்றும் கல்வி உறவுகள் சார்ந்து இந்த பயணம் அமைந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்தோணி அல்பானீஸ் ட்வீட் செய்திருந்தார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார் அந்தோணி அல்பானீஸ். அவர் பெர்த் நகரில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாலை 4 மணி அளவில் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு அவர் வர உள்ளார்.

இன்று மாலை சபர்மதியில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்திற்கு அவர் செல்கிறார். தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஹோலி கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கிறார். நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி உடன் இணைந்து பார்க்க உள்ளார். இந்தப் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை மாலை அவர் மும்பை செல்கிறார்.

மார்ச் 10-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார். பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவர் சந்திக்கிறார். இரு நாட்டு வணிக உறவு சார்ந்தும் இந்தப் பயணத்தின் போது பேசப்படும் என தெரிகிறது. வரும் 11-ம் தேதி தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்புகிறார்.



Read in source website

மதசார்பற்ற சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், கேரள இஸ்லாமிய தம்பதியர் மீண்டும் திருமணம் செய்துகொண்டது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

மதச்சட்டங்களின்படி முதன்முதலில் திருமணம் செய்து சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, கேரளாவின் காசர்கோட்டில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய உள்ளனர்.

வழக்கறிஞரும் நடிகருமான சி சுக்கூர் மற்றும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அவரது மனைவி ஷீனா ஆகியோர் புதன்கிழமை (மார்ச் 08) மீண்டும் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர்.

ஷரியத் சட்டக் கோட்பாட்டின் கீழ் தங்களின் பரம்பரைப் பிரிவினையைத் தவிர்ப்பதற்காகவும், சிவில் சட்டத்தின்படி தங்களின் மூன்று மகள்கள் மட்டுமே தங்களின் சட்டப்பூர்வ வாரிசுகளாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தத் திருமணத்தை செய்ததாக தம்பதியினர் கூறுகின்றனர்.

தம்பதிகள் ஏன் தங்கள் திருமணத்தை மீண்டும் பதிவு செய்கிறார்கள்?

குஞ்சாக்கோ போபன் நடித்த ‘ன்னா தான் கேஸ் கொடு’ (என் மீது வழக்கு தொடருங்கள்) படத்தில் வழக்கறிஞராக நடித்ததற்காக அறியப்பட்ட சுக்கூர் ஒரு பேஸ்புக் பதிவில், தங்கள் சொத்துக்கள் தங்கள் மூவருக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனது மனைவி ஷீனாவை மறுமணம் செய்யப் போவதாகக் கூறினார்.
மேலும், முஸ்லிம் வாரிசுரிமைச் சட்டத்தின்படி இது சாத்தியமில்லை என்றார்.

முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்தியாவில் முஸ்லீம்களுக்கான பரம்பரை முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937 ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
ஷரீஅத்தை குறியீடாக்கும் இந்த சட்டம் இரண்டு வகையான சட்டப்பூர்வ வாரிசுகளை அங்கீகரிக்கிறது.

அந்த வகையில், பரம்பரையில் பங்கு பெறும் சட்டப்பூர்வ வாரிசு பன்னிரண்டு பிரிவுகளாகும்.
அவர்கள் (1) கணவன், (2) மனைவி, (3) மகள், (4) ஒரு மகனின் மகள் (அல்லது மகனின் மகன் அல்லது மகனின் மகன் மற்றும் பல), (5 ) தந்தை, (6) தந்தைவழி தாத்தா, (7) தாய், (8) ஆண் வரிசையில் பாட்டி, (9) முழு சகோதரி (10) கன்சங்குயின் சகோதரி (11) கருப்பை சகோதரி, மற்றும் (12) கருப்பை சகோதரர் ஆவார்கள்.

எஞ்சிய வாரிசுகள் அத்தைகள், மாமாக்கள், மருமகள்கள், மருமகன்கள் மற்றும் பிற தொலைதூர உறவினர்களாக இருக்கலாம். அவர்களின் பங்கின் மதிப்பு பல காட்சிகளைப் பொறுத்தது.

எடுத்துக்காட்டாக, ஒரு மனைவி தனது கணவரின் சொத்தில் 1/8 பங்கை அவர் இறந்தவுடன் பெறலாம். அவர்களுக்கு பரம்பரை பரம்பரையினர் இல்லையென்றால், அவள் 1/4 பங்கு எடுக்கிறாள்.
மகன்கள் பெற்றதில் பாதிக்கு மேல் மகள்களால் பெற முடியாது. ஒரு முஸ்லிமின் சொத்து ஒரு முஸ்லிமுக்கு மட்டுமே செல்ல முடியும், இது மற்றொரு மதத்தைப் பின்பற்றும் மனைவி அல்லது குழந்தைகளுக்கு பாரபட்சம் விளைவிக்கும்.

தம்பதிகள் ஏன் தங்கள் மகள்களுக்கு ஆதரவாக உயில் செய்ய முடியாது?

ஷரியத் சட்டத்தின் கீழ், எஸ்டேட்டில் 1/3 மட்டுமே யாருக்கும் ஆதரவாக இருக்க முடியும். மீதமுள்ளவை இன்னும் சிக்கலான மதச் சட்டத்தின்படி பிரிக்கப்பட வேண்டும்.

எனவே, ஒரு முஸ்லீம் தம்பதிகள் ஒருவரை தங்கள் ஒரே வாரிசாக மாற்ற மதச் சட்டத்தின் கீழ் வழி இல்லை.

இந்த சட்டத்தை தம்பதிகள் எப்படி மீறுகிறார்கள்?

சுக்கூர் மற்றும் ஷீனா முதலில் 1994 இல் உள்ளூர் காஜி மூலம் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி தற்போது தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தேர்வு செய்துள்ளது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் விதிகளின்படி எந்தத் திருமணத்தையும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய SMA இன் பிரிவு 15 அனுமதிக்கிறது.

(A) இரு தரப்பினருக்கும் இடையே திருமணம் என்ற சடங்கு நடத்தப்பட்டு, அவர்கள் கணவன்-மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்;

(B) பதிவு செய்யும் போது எந்த ஒரு தரப்பினரும் ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைத் துணையை கொண்டிருக்கவில்லை;

(C) பதிவு செய்யும் போது எந்த கட்சியும் ஒரு முட்டாள் அல்லது பைத்தியம் இல்லை;

(D) பதிவு செய்யும் போது கட்சிகள் இருபத்தி ஒரு வருட வயதை நிறைவு செய்துள்ளன;

(E) கட்சிகள் தடைசெய்யப்பட்ட உறவின் அளவுகளுக்குள் இல்லை.

ஏற்கனவே உள்ள திருமணத்தை பதிவு செய்வதற்கான நடைமுறையானது புதிய திருமணத்தை நிச்சயப்படுத்துவது போலவே இருக்கும்.

இரு தரப்பினரும் திருமண அதிகாரியின் மாவட்டத்தில் முப்பது நாட்களுக்கு குறையாமல் வசித்திருக்க வேண்டும் மற்றும் திருமண அதிகாரியால் ஆட்சேபனைகளுக்கு 30 நாள் அறிவிப்பு வழங்கப்படுகிறது.

SMA இன் கீழ் திருமணத்தை பதிவு செய்வது என்பது மதச்சார்பற்ற சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும். மேலும், இந்திய வாரிசு சட்டம் பொருந்தும்.

இது ஒரு புதுமையான அணுகுமுறையா?

மதச் சட்டங்களைத் தவிர்க்க சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தஞ்சம் அடைவது புதிதல்ல. உண்மையில், சிறப்பு திருமணச் சட்டத்தை இயற்றியதன் நோக்கம் இதுதான்.

உதாரணமாக, கிறிஸ்தவர்களிடையே விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே விவாகரத்து அங்கீகரிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்து தொடர்பான சட்டத்தை ஒழுங்குபடுத்தும் இந்திய விவாகரத்துச் சட்டம், 1869, சட்டம் திருத்தப்பட்ட 2001 வரை விவாகரத்துக்கான ஒரே காரணமாக விபச்சாரத்தை அங்கீகரித்தது.

சட்டத்தின் 10வது பிரிவின்படி, விவாகரத்து கோருவதற்காக ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவர் “விபச்சாரம்” அல்லது “விபச்சாரம் மற்றும் கொடுமையுடன் இணைந்த விபச்சாரத்தில்” ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டும்.

2001 ஆம் ஆண்டில், இந்திய விவாகரத்து (திருத்தம்) சட்டம், 2001 நிறைவேற்றப்பட்டது, இது திருமணத்தை கலைப்பதற்கான பிற காரணங்களை அங்கீகரிக்கிறது.

அதுவரை, விவாகரத்து செய்ய விரும்பும் பல கிறிஸ்தவ தம்பதிகளுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து, பின்னர் சிவில் சட்டத்தின் கீழ் விவாகரத்துக்குச் செல்வதே நடைமுறை வழியாக உள்ளது.



Read in source website

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய 4 துறைகள் STEM என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஆண்களால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப்படும் இந்த துறைகளில் நவீன உலகத்தில் பெண்களின் பங்கேற்பு சவாலாகவே உள்ளது.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2023- இந்தாண்டு “டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்ற கருப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. (DigitALL: Innovation and technology for gender equality)

ஐக்கிய நாடுகள் சபை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் அனைவரது பங்கு பற்றிய விவாதங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
IWD பெண் தொழிலாளர் இயக்கங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல் இல்லாததால், அவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பரந்த துறைகளில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

STEM துறைகளில் பெண்கள் குறைவு ஏன் முக்கியத்துவமானது?

STEM துறை வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. ஐடி துறை, சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை, மருத்துவ துறை ஆகியவைகளில் பெண்கள் பங்கு குறைவாக உள்ளது. இந்த குறைவான பிரதிநிதித்துவம் கவனிக்கத்தக்கது, ஏனெனில் STEM துறைகளின் வளர்ச்சிகள், குறிப்பாக தொழில்நுட்பத்தில், நவீன வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பெரிய அளவில் வடிவமைக்கின்றன. ChatGPT போன்ற சாட்போட்கள் பல்வேறு அமைப்புகளில் தொழிலாளர்களை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சமூக ஊடகங்கள் எங்கும் அடையாளங்கள் மற்றும் பொது உரையாடல்களை வடிவமைக்கிறது.

மேலும், தொழில் நுட்ப ரீதியாக இந்த துறைகள் பொதுவாக தொழிலாளர்களுக்கு லாபகரமானவையாக உள்ளது. இந்த துறை சார்ந்த ஊழியர்கள் மற்ற துறைகளில் வேலை செய்பவர்களை விட மூன்றில் இரண்டு பங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று பியூ ஆராய்ச்சி மையம் கூறுகிறது. . எனவே, STEM இல் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் ஒட்டுமொத்த பாலின ஊதிய இடைவெளியையும் பாதிக்கிறது. பெண்கள் பொதுவாக குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் STEM துறைகள் போன்ற அதிக ஊதியம் பெறும் வேலைகளில் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

STEM இல் ‘பாலின இடைவெளி’ என்ன?

உலகளவில், 35 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், உயர்நிலைக் கல்வியில் 18 சதவீத பெண்கள் STEM துறை படிப்புகளைப் படிக்கின்றனர். இதில் STEM துறைகளுக்குள்ளே பாலின இடைவெளி உள்ளது. பெண்கள் இயற்கை அறிவியல் சார்ந்த படிப்புகள் படிக்கின்றனர். அதே நேரத்தில் அதிகமான ஆண்கள் பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானம் சார்ந்த படிப்புகளைப் படிக்கின்றனர்.

இந்தியாவில், பொறியியல் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவாக உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் தரவுகளின்படி, யுஜி, பிஜி, எம்ஃபில் மற்றும் பிஎச்டி இன்ஜினியரிங் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக, மொத்த மாணவர் சேர்க்கை 36,86,291 ஆக உள்ளது. .

ஆனால் இளங்கலை, முதுகலை, எம்ஃபில் மற்றும் பிஎச்டி நிலைகளில் அறிவியல் படிப்புகளில் ஆண்களை விட பெண்கள் 53 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும் இவைகள் வேலைவாய்ப்பில் அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல.

இந்த இடைவெளி ஏன்?

பெண்கள் எவ்வாறு தங்கள் வேலையைத் தேர்வு செய்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் விருப்பங்கள் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

யுனிசெஃப் நிறுவனம் பாடத்திட்டங்களில் உள்ள பாலின சார்புகளை சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, இந்தியாவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்புத்தகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான விளக்கப்படங்கள் ஆண்களாகவும், 6 சதவீதம் மட்டுமே பெண்களாகவும் உள்ளன. இங்கிலாந்தில், நான்கில் ஒரு பங்கிற்கும் மேற்பட்ட பெண்கள் தொழில்நுட்பத் துறையில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுகின்றனர். வெறும் 22 சதவீத பெண்கள் மட்டுமே இத்துறைகளில் பிரபலமானவர்களாக உள்ளனர் என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், 26 சதவீத டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் நிறுவனர் உள்ளார். அதே ஐரோப்பாவில் 21 சதவீத தொழில்நுட்ப நிறுவனங்களை பெண்கள் வழிநடத்துகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பெண்களுக்கு அதிக முன்மாதிரிகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

NAAC இன் செயற்குழுவின் தலைவர் பூஷன் பட்வர்தன், NAAC கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை பலமுறை கோரிய பின்னர் ராஜினாமா செய்தார்

Sourav Roy Barman

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அதன் செயல்பாட்டில் முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

மார்ச் 5 அன்று, NAAC இன் செயற்குழுவின் தலைவர் பூஷன் பட்வர்தன், NAAC கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை பலமுறை கோரிய பின்னர் ராஜினாமா செய்தார்.

இதையும் படியுங்கள்: ராணுவ நீதிமன்றம்; ஆயுதப்படை வீரர்களின் குற்றங்களுக்கு தண்டணை வழங்கும் நடைமுறை என்ன?

செவ்வாயன்று, NAAC குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, “NAAC இன் ஆணையின்படி, அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டின் முழு செயல்முறையும் வலுவானது, வெளிப்படையானது, ICT-மூலம் இயக்கப்படுகிறது மற்றும் தானியங்கு செயல்முறை. முழு செயல்முறையும் பரவலாக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் பயனர் நட்பு போர்ட்டல் மூலம் பங்குதாரர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதால், அமைப்பில் தவறுகள் செய்ய முடியாது,” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

NAAC இன் செயல்பாடுகள் என்ன?

1994 இல் நிறுவப்பட்ட NAAC, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிடும் பொறுப்பைக் கொண்டுள்ளது. பல அடுக்கு மதிப்பீட்டு செயல்முறையைத் தொடர்ந்து, இது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கிரேடுகளை வழங்குகிறது. அதன் அளவுருக்களில் பாடத்திட்டம், ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் நிதி நல்வாழ்வு ஆகியவை அடங்கும். NAAC வழங்கும் கிரேடுகள் A++ முதல் C வரை இருக்கும். ஒரு நிறுவனம் D தரம் பெற்றிருந்தால், அது அங்கீகாரம் பெறவில்லை என்று அர்த்தம்.

அங்கீகார செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

முதல் படியாக மதிப்பீட்டிற்காக NAAC ஐ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அணுகும். NAAC செயல்முறையை தொடங்கியவுடன், விண்ணப்பதாரர் நிறுவனம் அளவு மற்றும் தரமான அளவீடுகள் தொடர்பான தகவல்களைக் கொண்ட சுய ஆய்வு அறிக்கையை (SSR) சமர்ப்பிக்க வேண்டும். தரவு பின்னர் NAAC இன் நிபுணர் குழுக்களால் சரிபார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்பட்ட மதிப்பீட்டாளர்களை உள்ளடக்கிய சக குழுக்கள் நேரில் பார்வையிடுகின்றன.

NAAC அங்கீகாரம் கட்டாயமா?

பல்கலைக்கழக மானியக்குழு பல ஆண்டுகளாக NAAC இன் மதிப்பீட்டை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு பல சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்முறை இன்னும் பெரும்பாலும் நிறுவனங்களின் தன்னார்வமாக விருப்பமாகவே உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை (2020) அடுத்த 15 ஆண்டுகளில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரியில் மக்களவையில் மத்திய அரசு பகிர்ந்த தகவல்களின்படி, 2020-21 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் உள்ள 1,113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகளில், 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டுமே 2023 ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி NAAC அங்கீகாரம் பெற்றவை.

பூஷன் பட்வர்தன் குற்றம் சாட்டியது என்ன?

பிப்ரவரி 2022 இல் தலைவராகப் பொறுப்பேற்ற பூஷன் பட்வர்தன், சில நிறுவனங்களுக்கு கேள்விக்குரிய மதிப்பெண்களை வழங்கும் வகையில், ஆதாயத்துடன் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். கடந்த செப்டம்பரில் யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதீஷ் குமாரிடம் அவர் முதலில் இந்தப் பிரச்னையை எழுப்பினார். பூஷன் பட்வர்தன் தனது சொந்த அனுபவங்கள் மற்றும் அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் நியமித்த விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிப்ரவரி 26 அன்று யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதீஷ் குமாருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் அவர் தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார். பூஷன் பட்வர்தனுக்குப் பதிலாக முன்னாள் AICTE தலைவர் அனில் டி சஹஸ்ரபுதேவை NAAC செயற்குழுவின் தலைவராக யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் உடனடியாக நியமித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பூஷன் பட்வர்தன், தனது ராஜினாமா முடிவை தனது இறுதி ராஜினாமா கடிதமாக தவறாகக் கருதியதாகக் கூறினார். இருப்பினும், மார்ச் 5 அன்று, பூஷன் பட்வர்தன் சுயமரியாதை மற்றும் NAAC இன் “புனிதத்தைப் பாதுகாக்க” வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி தனது ராஜினாமாவை அறிவித்தார்.

விசாரணையின் முடிவுகள் என்ன?

பூஷன் பட்வர்தனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, யு.ஜி.சி மையமான தகவல் மற்றும் நூலக நெட்வொர்க்கின் இயக்குநரான ஜே.பி சிங் ஜோரீல் தலைமையில் அமைக்கப்பட்டது. NAAC இன் அங்கீகார செயல்முறை முறைகேடுகளில் சிக்கியிருப்பது குழுவால் கண்டறியப்பட்டது. முதலாவதாக, NAAC இன் தகவல் தொழில்நுட்ப அமைப்பு “சமரசம்” செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மேலும், மதிப்பீட்டாளர்கள் “தன்னிச்சையாக” ஒதுக்கப்படுகின்றனர், என்றும், அத்தகைய நடைமுறைகள் ஆதாயம் அடையும் சாத்தியமான நிகழ்வுகளைத் தூண்டுவதாகவும் குழு கண்டறிந்தது.

சுமார் 4,000 மதிப்பீட்டாளர்களைக் கொண்ட குழுவில் இருந்து கிட்டத்தட்ட 70% நிபுணர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நேரடியாக பார்வையிட எந்த வாய்ப்பையும் பெறவில்லை, அதே நேரத்தில் சிலர் பல முறை பார்வையிட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. NAAC இன் உள் அமைப்பில் முழு அணுகலைக் கொண்ட அதிகாரம் இல்லாத தனிநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது மற்ற குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

ஏன் சில நிறுவனங்கள் மட்டும் அங்கீகாரம் பெற்றுள்ளன?

NAAC இன் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளின் கூற்றுப்படி, மோசமான மதிப்பெண்களைப் பெறுவதற்கான பயம் நிறுவனங்களை விண்ணப்பிப்பதில் இருந்து பின்வாங்கச் செய்கிறது.

2019 ஆம் ஆண்டில், யு.ஜி.சி இந்த சிக்கலை தீர்க்க ‘பரமார்ஷ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், அங்கீகாரம் பெற விரும்பும் குறைந்தபட்சம் ஐந்து நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக பணியாற்ற, சிறப்பாக செயல்படும் சில நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. கடந்த ஆண்டு, கல்லூரிகளுக்கான தற்காலிக அங்கீகாரத்தை (பி.ஏ.சி) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் NAAC ஆராய்ந்தது, இதன் கீழ் ஓராண்டு பழமையான கல்வி நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, ​​குறைந்தபட்சம் ஆறு வயது நிரம்பிய அல்லது குறைந்தபட்சம் இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அங்கீகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஆனால், பூஷன் பட்வர்தன் உள்ளிட்ட கல்வியாளர்கள் குழு தயாரித்த வெள்ளை அறிக்கை, அத்தகைய அமைப்பு தரத்துடன் சமரசத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியது.



Read in source website

தமிழகத்தில் பிகார் மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் போலியான காட்சிப் பதிவுகள் பரப்பப்பட்டதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. உண்மை நிலையைக் கண்டறிய, பிகாரில் இருந்து அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை தீவிரமானது.
 இதற்கிடையே, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல, திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் (37) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு இறக்க, அவர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் திரண்டனர். பரப்பப்பட்ட வதந்திகளால் ஏற்பட்ட பீதியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறத் தயாரானார்கள்.
 வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறினால் தங்கள் தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும், இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், கட்டுமான சங்கங்கள், பின்னலாடை உற்பத்தி உள்ளிட்ட ஜவுளி தொழில் துறையினர், கோவை உற்பத்தி தொழில் துறையினர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சூழலில், இந்த வதந்தியைப் பரப்பியதாக பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை (மார்ச் 6) கைது செய்துள்ளதால் இப்போதைக்கு பதற்றம் குறைந்திருக்கிறது.
 இதுபோன்ற பிரச்னை திடீரென ஏற்பட்டதல்ல. திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில் தேங்காய் உரிக்க உள்ளூர் தொழிலாளர்கள் ஒரு தேங்காய்க்கு 75 முதல் 80 பைசா பெற்று வந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள் 55 பைசாவுக்கு தேங்காய் உரிக்க முன் வந்தனர். இதனால், உள்ளூர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகையில் ஈடுபடும் அளவு பிரச்னை தீவிரமானது.
 தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களிலும் ஒசூர் போன்ற சிறு நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நெடுஞ்சாலைப் பணிகள், மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட உடலுழைப்பு தேவைப்படும் எந்தப் பணியையும் குறைந்த ஊதியத்தில் அவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு இடம், சுமாரான ஊதியம், உணவுக்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் தினமும் 12 மணி நேரம்கூட உழைக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
 ஓரளவு வளர்ச்சி அடைந்த பகுதிகளை நோக்கி வேலைவாய்ப்புக்காக செல்வது என்பது புதிதல்ல. காலங்காலமாக நடந்துவருவதுதான். பல பத்தாண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் சென்றனர். இப்போது கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேபோன்றுதான், பிகார் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி தொழிலாளர்கள் வரத் தொடங்கி உள்ளனர்.
 சில பத்தாண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியினர் தமிழர்களைத் தாக்கியதையும், காவிரி பிரச்னை ஏற்படும்போதெல்லாம் கர்நாடகத்தில் மொழிவெறி கொண்ட சில கன்னட அமைப்பினர் தமிழர்களைத் தாக்கியதையும் பார்த்தோம். தமிழகத்திலேயே, "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' கோஷம் எழுந்ததையும், மலையாளிகளுக்கு எதிரான பரப்புரை கடந்த நூற்றாண்டில் நடந்ததையும்கூட சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
 உலகின் பல நாடுகளிலும் பல இடங்களில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ளார். எஸ்.ஆர்.நாதன் சிங்கப்பூர் அதிபராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ளார். இவை எடுத்துக்காட்டுகள். தமிழர்களும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்று மற்ற மாநிலங்களைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியர்களும் பல்வேறு நாடுகளிலும் மிகப் பெரிய பொறுப்புகளில் உள்ளனர்.
 மாறிவரும் உலக சூழலில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வேலைவாய்ப்பு தேடி செல்வது என்பது தவிர்க்க முடியாதது. மேலும், அரசியலமைப்பு சட்டப்படி, இந்திய குடிமகன் தான் விரும்பும் எந்தப் பகுதியிலும் பணிபுரிவதற்கு உரிமை உள்ளது. இந்த உரிமை காக்கப்பட வேண்டும்.
 மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களைப் போல தமிழகத்தில் யாரும் "மண்ணின் மைந்தர்கள்' கோஷம் எழுப்பவில்லை. முன்பு பெங்களூரிலிருந்தும், மும்பையிலிருந்தும், தில்லியிலிருந்தும் பிகார் மாநிலத்தவர்களும், வடகிழக்கு மாநிலத்தவர்களும் அடித்து விரட்டப்பட்டது போன்ற நிலைமை இங்கே இல்லை.
 சமூக ஊடகங்களைப் பொறுப்பில்லாமல் கையாள்வதும், பொய்ப்பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவதும் தயவுதாட்சண்யமில்லாமல் தடுக்கப்பட (தண்டிக்கப்பட) வேண்டும். இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பிரச்னையை மேலும் தீவிரமாக்கக் கூடாது.
 உண்மைக்கு மாறாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தமிழக அரசு இந்த பிரச்னையில் எடுத்திருக்கும் துணிவான நடவடிக்கைகளும், நிர்வாக ரீதியிலான முனைப்புகளும் பாராட்டுக்குரியவை மட்டுமல்ல, ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைகின்றன.
 
 



Read in source website

 கடந்த ஆண்டு, அரசியலமைப்பு தினத்தை ஒட்டி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விழாவில் இறுதிப் பேருரை ஆற்றியபோது, அனைவருக்கும் நீதி கிடைப்பதன் அவசியம் குறித்துப் பேசினேன். அப்போது, சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின் உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டேன். எனது இதயத்திலிருந்து பேசிய அந்தப் பேச்சுக்கு ஓரளவு தாக்கமும் இருந்தது. இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, அதேபோன்ற உணர்வுடன், எனது இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
 எனது மழலைப் பருவத்திலிருந்தே, சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை குறித்து குழப்பங்களை அடைந்து வந்தேன். ஒருபுறம், பெண் குழந்தைகள் குடும்பத்தில் மிகவும் செல்லமாகவும் பாசமாகவும் நடத்தப்படுகிறார்கள்; விழாக் காலங்களில் பெண் குழந்தைகளை வழிபடுவதையும் காண முடியும். அதேசமயம் மறுபுறத்தில், சம வயதுடைய ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்பதையும் பெண் குழந்தைகள் மிக விரைவில் புரிந்துகொள்கின்றனர்.
 பெண்களின் உள்ளார்ந்த அறிவுக்காக ஒருபுறம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்; குடும்பத்தின் அச்சாணியாகவும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது நலம் பேணுபவளாகவும் பெண் மதிக்கப்படுகிறாள். அதேசமயம், குடும்ப அளவிலோ, ஏன், தன்னளவிலோ கூட அவளால் சுயமான முடிவை எடுத்துவிட முடியாது.
 எனது கடந்த வாழ்வில், முதலில் மாணவியாக வீட்டைவிட்டு வெளிவந்தேன். பிறகு ஆசிரியரானேன். அதையடுத்து சமூகசேவகியாகப் பணிபுரிந்தேன். அந்த இடங்களிலெல்லாம், இந்த முரண்பாடுகளைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அவற்றை நான் ஒருபோதும் ஏற்றதில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்று தனிப்பட்ட வகையில் கூறுவதைக் கண்டிருக்கிறேன். அதேசமயம், அவர்களே ஒரு முடிவு என்று வரும்போது, சமூகத்தில் பாதியான பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதையும் காண்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்விலேயே, பெண்ணுரிமைக்காகவும், பாலின சமத்துவத்துக்காகவும் குரல் கொடுத்த தனிநபர்கள் பலரைச் சந்தித்திருகிறேன். ஆனால், சமூக அளவில் வரும்போது, பழைய பாரம்பரிய நம்பிக்கைகளும் அவர்கள் சுமக்கும் பழைய பழக்கங்களும் அவர்களை முற்போக்காக இயங்க விடுவதில்லை.
 இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ள பெண்களின் கதைதான். உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இதுபோன்ற தடைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பலவிதங்களில் சாதனைச் சிகரங்களை எட்டி உள்ளது. ஆயினும், இன்னமும் பல நாடுகள் அரசின் தலைமைப் பீடத்தில் மகளிர் பொறுப்பேற்பதை அனுமதிப்பதில்லை. இதன் துரதிருஷ்டவசமான மற்றொரு காட்சி என்னவென்றால், உலகின் பல நாடுகளில் பெண்கள் சக மனுஷியாகக் கூட மதிக்கப்படாத நிலை நிலவுகிறது; இன்னும் சில நாடுகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதே, வாழ்வா சாவா போராட்டம் போல மாறி இருக்கிறது.
 ஆனால் எல்லா இடங்களிலும் இதே நிலை நீடிக்காது. இந்தியாவில் பெண்களே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்த காலம் உண்டு. நமது தொன்மையான நூல்களும் வரலாறும், துணிச்சல் மிகுந்த, பேரறிவு படைத்த, நிர்வாகத் திறன் கொண்ட பெண்களைக் குறித்துப் பேசுகின்றன. இன்று, எண்ணற்ற மகளிர் தத்தமது துறைகளில் தங்கள் சிறந்த பங்களிப்பால் தேச வளர்ச்சிக்குக் காரணமாகி வருகிறார்கள். அவர்கள் பெருநிறுவனங்களின் தலைமைப் பதவியை அலங்கரிக்கிறார்கள்; அதேபோல, பாதுகாப்புப் படைகளிலும் பணியாற்றுகிறார்கள்.
 தற்போதுள்ள கவனிக்க வேண்டிய சிக்கல் ஒன்று மட்டுமே. மகளிர் தங்கள் திறனை ஒரே சமயத்தில் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் நிரூபித்தாக வேண்டி இருப்பதுதான் அந்தச் சிக்கல். இதற்காக அவர்கள் யாரும் சமுதாயத்தைக் குறை கூறுவதில்லை. அதேசமயம், தங்கள் மீதான நம்பிக்கையை சமுதாயம் தக்கபடி வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 இதுவே தற்போதைய ஆர்வம் மிகுந்த சூழலுக்குக் காரணமாகிறது. நாட்டின் கொள்கையை வடிவமைக்கும் பல்வேறு அமைப்புகளின் அடித்தளத்தில் ஆரோக்கியமான மகளிர் பிரதிநிதித்துவத்தை நாம் கொண்டிருக்கிறோம். ஆயினும் உயர்நிலை அளவில் காணும்போது, மகளிர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக, மிகக் குறைவாக இருப்பதையும் காண்கிறோம். அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், நீதித் துறை,, பெருநிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் இதுவே உண்மை நிலவரம்.
 கல்வியறிவில் மேம்பட்ட மாநிலங்களிலும் கூட இதே நிலை காணப்படுவது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அதாவது கல்வி மட்டுமே மகளிரின் நிதி சுதந்திரத்தையோ, அரசியல் தன்னாட்சியையையோ அளித்து விடாது என்பதையே இது வெளிக்காட்டுகிறது.
 எனவே, சமூக மனமாற்றமே அவசியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமுதாயத்தில் புரையோடி இருக்கும் பாலின சமத்துவத்துகு எதிரான ஆதிக்க மனப்போக்குகள் கண்டறியப்பட்டு துடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வளமான, அமைதியான சமுதாயத்தை அமைக்க முடியும். இதுவரை சமூக நீதிகாகவும் சமத்துவத்துக்காகவும் மனப்பூர்வமான முயற்சிகள் செய்யப்படாமல் இல்லை. ஆனால், பாலின சமத்துவத்துக்கு எடுக்கப்பட்ட போதிய முயற்சிகளை நிரூபிப்பதாக அவை இல்லை. உதாரணமாக, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூகத்தின் சரிபாதியான மகளிருக்கு உரிய பிரதிநித்துவம் இல்லை. அவர்கள் ஆண்களை விட பின்தங்கியே உள்ளனர். இதற்கு பிற காரணங்களை விட சமுதாயத் தாக்கமே பெரும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
 நாடு முழுவதும் பல பட்டமளிப்பு விழாக்களில் நான் கலந்து கொள்கிறேன். அங்கு நான் கவனித்த வரை, பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமானால் ஆண்களை விடச் சிறப்பாக கல்வியில் சாதனை படைக்கிறார்கள். இதுவே இந்திய சமுதாயத்தில் பெண்களின் வெல்ல முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம். இதனால்தான், பாலின சமத்துவத்துக்கான உலக அளவிலான தொடர் ஓட்டத்தில் முன்கள ஜோதியை ஏந்திச் செல்லும் தகுதியுள்ள நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்ற நம்பிக்கை என்னிடம் எழுந்துள்ளது.
 சமுதாயத்தின் சரிபாதியான பெண்களைப் பின்னுக்குத் தள்ளுவதன் மூலமாக மற்றொரு சரிபாதியான ஆண்கள் முன்னேறிவிட முடியாது என்பது உறுதி. மாட்டுவண்டியில் இரு சக்கரங்களும் இணையாக இருக்க வேண்டும். ஒரு சக்கரம் பெரிதாகவும் இன்னொரு சக்கரம் சிறிதாகவும் இருந்தால் வண்டி ஓடாது. அதுபோல ஆண்கள் - பெண்களிடையிலான சமத்துவமின்மை, மனிதத் தன்மையையே காயப்படுத்தி வருகிறது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சுற்றுச்சூழல் செயல்பாடுகளிலும் கூட முடிவுகளைத் தீர்மானிப்பதில் மகளிரின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். உலகில் மனிதத்தன்மையை மேம்படுத்துவதில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டால், உலகம் பெருமளவில் பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
 உண்மையில் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எனது வாழ்விலேயே, மக்களிடத்திலும் அவர்களின் நடத்தையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்திருக்கிறேன். உண்மையில் இதுவே மனிதகுல வரலாற்றின் கதை. இவ்வாறு இல்லையெனில் நாம் இன்னமும் மலைக் குகைகளில் தான் வாழ்ந்திருக்க வேண்டும்.
 மகளிர் சுதந்திரம் மெதுவாக நடக்கத் தொடங்கிவிட்டது. அது அவ்வப்போது வலி மிகுந்த நிகழ்வுகளையும் சந்திக்கிறது. ஆயினும் அது தனது வீறுநடையைத் தொடர்கிறது. மகளிர் சுதந்திரத்துக்கான முயற்சிகள் இனி தலைகீழ் திசையில் பின்னோக்கித் திரும்ப வாய்ப்பில்லை. இதுவே எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியது போல, இந்திய சுதந்திரத்தின் அமுதகாலக் கொண்டாட்டம் தொடங்கி நூற்றாண்டு வரையிலான காலகட்டம் இளம்பெண்களுக்கானது.
 ஒரு தேசமாக, பாலின சமத்துவத்துக்கான வலிமையான அடித்தளத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்பதே எனது இந்த நம்பிக்கைக்குக் காரணம். நூறாண்டுகளுக்கு முன்னர், மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று வீட்டு வாயிற்படியைத் தாண்டி சுதந்திரப் போரில் இந்தியப் பெண்கள் குதித்தனர். அதுவே அவர்களின் வெளியுலகப் பிரவேசத்தைத் தூண்டியது. அன்றுமுதல் நமது சமுதாயம், குறிப்பாக மகளிர் சிறந்த எதிர்காலத்துக்கான கனவுகளைக் கண்டு வந்திருக்கிறார்கள்.
 பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முன்முடிவுகளும், பழக்க வழக்கங்களும் சட்டத்தின் மூலமாகவோ, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவோ நீக்கப்பட வேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் ஆக்கபூர்வமான தாக்கத்தை நாம் உணர வேண்டும். உலகிலேயெ மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசுத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டதை, மகளிர் அதிகாரம் பெற்றதற்கான பொருத்தமான சான்று என்று நான் சொல்லத் தேவையில்லை.
 தாய்மையில் காணப்படும் இயல்பான தலைமைப்பண்பை வலியுறுத்துவதன் வாயிலாக பாலின சமத்துவத்தை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். "பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' என்பது போன்ற அரசின் திட்டங்கள் மகளிர் மேம்பாட்டை நோக்கிப் பயணிக்கின்றன. இவை சரியான திசையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளே.
 முற்போக்கு எண்ணங்களுக்குச் செவிமடுத்து அவற்றை ஏற்க நமது சமுதாயங்கள் சிறிது காலமாகும் என்று கூறுவதை நாம் ஏற்றாக வேண்டும். அதேசமயம், இந்த சமுதாயத்தின் சரிபாதி மகளிர்தான். எனவே, இந்த செயல்பாட்டை நம்மில் சரிபாதியான அவர்களே வேகப்படுத்த வேண்டும்.
 எனவே, இந்நாளில், நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் குடும்பத்திலும், அண்டைவீடுகளிலும், பணியிடத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும். அந்த மாற்றமே பெண் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்; அந்த மாற்றமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அவளது வாய்ப்புகளை அதிகரிக்கும். இதுவே எனது இதயத்தில் ஆழத்திலிருந்து நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.
 
 கட்டுரையாளர்:
 இந்திய குடியரசுத் தலைவர்.



Read in source website

பெண்களைக் கொண்டாடும் பொருட்டும் அவர்களுக்கான உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு, இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என எந்த வேறுபாடும் இன்றி பெண்கள் தங்கள் சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படும் நாள் இன்று! 

சர்வதேச பெண்கள் இயக்கம்

மகளிர் நாள் கொண்டாடப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில், இது பெண்களுக்கான ஒரு புதிய உலகளாவிய பரிமாணமாக பார்க்கப்பட்டது. பின்னர் சர்வதேச பெண்கள் இயக்கம்(IWD) நடத்திய 4 மிகப்பெரிய பெண்கள் மாநாடுகளால், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் அரசியல், பொருளாதார அரங்கங்களில் பங்கேற்க வித்திட்டது. 

உலக மகளிர் நாள் முதல் முதலில் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து முதன்முதலில் தோன்றியது. 

முதல் இயக்கம் 

1848 ஆம் ஆண்டு, பெண்கள் அடிமைப்படுத்தப்படுத்துவதற்கு எதிராக, அமெரிக்கர்களான எலிசபெத் கேடி ஸ்டாண்டன், லுக்ரேஷியா மோட் ஆகிய பெண்கள் நியூயார்க்கில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். இது முதல் பெண் உரிமை மாநாடு என்று கருதப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்கான முதல் இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் ஐ.நா., மகளிர் நாளை அங்கீகரிக்கவும் இந்த முதல் இயக்கமே அடித்தளமிட்டது. 

மார்ச் 8 - மகளிர் நாள்!

முதல்முதலில் 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவால் இந்நாள் கொண்டாடப்பட்டது. 

1857 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற பின்னலாடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை அளிக்கும் விதமாக அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி இந்த நாளை தேர்வு செய்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் தங்களின் வேலை நேரம் குறைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினர். 

அதுபோல 1917 ஆம் ஆண்டு (பிப்ரவரி 23 ஆம் தேதி) ரஷியாவில் 'உணவும் அமைதியும்' என்ற பெயரில் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமே சோவியத் ரஷியாவில் பெண்களுக்கு வாக்குரிமை பெற வழிவகுத்தது. கிரிகோரியன் காலண்டர்படி, அந்த நாள் மார்ச் 8.

இதன்பின்னர் 1977ல், மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் நாளாக ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்தது. 

2023 ஆம் ஆண்டு கருப்பொருள் 

2023 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. கருப்பொருள் 'டிஜிட்ஆல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்'. மாறி வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் முன்னேற்றத்திற்காக போராடும் பெண்கள், சிறுமிகளை அங்கீகரித்துக் கொண்டாடப்படுகிறது. 

பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் எண்ம(டிஜிட்டல்) பாலின இடைவெளியின் தாக்கத்தை ஆராயவும், எண்ம இடைவெளிகளில் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்நாள் வலியுறுத்துகிறது. 

ஏனெனில், உலக அளவில் 37% பெண்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தவில்லை. பெண்கள் இணையத்தை அணுக முடியாமலோ, ஆன்லைனில் பாதுகாப்பாக உணர முடியாமலோ தேவையான எண்ம (டிஜிட்டல்) திறன்களை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியாது. இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான தொழில்ககளில் அவர்கள் ஈடுபடும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஏனெனில், 2050 ஆம் ஆண்டுக்குள் 75% வேலைகள் இந்த நான்கு துறைகளை சார்ந்தே இருக்கும். இன்றும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பதவிகளில் பெண்கள் வெறும் 22% மட்டுமே உள்ளனர். பெண்களை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வருவதே இந்த ஆண்டு மகளிர் நாளின் நோக்கம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

தொடரும் போராட்டம் 

பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வளர்ச்சி மேம்பாட்டு வந்தாலும் இன்றும் இன்றும் பல நாடுகளில் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி இதற்கு ஒரு பெரும் உதாரணம். தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, என உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களின் ஹிஜாப் போராட்டமும் உலக அளவில் கவனம் ஈர்த்த ஒன்று. 

ஏன் இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக கல்லூரி மாணவிகளுக்கு வகுப்புகளில் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். 

உலகம் முழுவதும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுவது மட்டுமின்றி அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. 



Read in source website

உலக வங்கி, 190 நாடுகளில் நடத்திய ‘பெண்கள், தொழில், சட்டம் 2023’ என்கிற தலைப்பிலான ஆய்வு, பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள சட்டரீதியிலான பாகுபாட்டை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படும் நிலையில், பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதில் உள்ள தடைகளை இந்த ஆய்வறிக்கை கவனப்படுத்துகிறது.



Read in source website

“எழுதுகிறவன்தான் எழுதுகிறவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும்” - மக்சிம் கார்க்கி

எழுத்தாளர் கோணங்கி தங்களிடம் பாலியல் சித்ரவதைகள் செய்ததாக இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுவருகிறார்கள்; கூட்டாக அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி நடத்தும் ‘மணல்மகுடி’ நாடகக் குழுவில் இருந்த காலத்திலும், அவர்களது வீட்டுக்குச் சென்றிருந்தபோதும், வெளியில் சந்தித்தபோதும் இதுபோன்ற சித்ரவதைகள் நடைபெற்றதாகப் பதிவுகள் கூறுகின்றன; ‘மணல்மகுடி’ குழுவைச் சாராத பலரும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

பதின்ம வயதின் இறுதியிலும் 20-களின் தொடக்க வயதுகளிலும் தாங்கள் இருந்தபோது, இந்தப் பாலியல் சித்ரவதைகள் நிகழ்ந்ததாகவும் இதன் காரணமாகத் தீவிர மனநல பாதிப்புகளுக்கு ஆளானதாகவும், இது தங்கள் தனிப்பட்ட உரிமைகளின் மீது நிகழ்ந்த அப்பட்டமான உரிமை மீறல் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.

கவனமில்லா அசட்டை: சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சித்ரவதைகள் அதிகளவில் நடைபெற்றுவருகின்றன; அவற்றில் குறைந்த அளவே வெளியே தெரியவருகின்றன. ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து #metoo இயக்கம் அமெரிக்காவில் 2017இல் மிகப் பெரிதாக எழுச்சிபெற்றது.

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தைச் செலுத்தியும் மிரட்டப்பட்டும் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயம் குறித்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வெளியில் சொல்லத் தொடங்கினார்கள்.

எழுத்தாளர்கள் மீது பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது புதிதல்ல. இந்த விவகாரத்தில் ஆண் எழுத்தாளர் ஒருவர், மற்ற ஆண்களிடம் அத்துமீறியதாக வந்துள்ள குற்றச்சாட்டு புதிது. பாய்ஸ் நாடகக் குழு காலம் தொடங்கி தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சித்ரவதைகள் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சமூகம் அதை உரிய கவனத்துடன் அணுகவோ, தீர்வுகாணவோ முன்வரவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் சித்ரவதைகளில் உறவினர்கள், குடும்ப நண்பர்கள் போன்ற நெருக்கமான ஆண்களே பெரும்பாலும் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்பது எப்படி அசட்டையாகக் கையாளப்படுகிறதோ, அதே வகையில் ஆண்களுக்கு இன்னொரு ஆணால் நிகழ்த்தப்படும் பாலியல் சித்ரவதைகள் குறித்தும் ஒருவித அசட்டைத்தனம் காட்டப்படுகிறது.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனக்கு இப்படி நடந்திருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்வதற்கும், அவருக்குத் துணைநிற்பதற்கும் இந்தச் சமூகம் நெடுங்காலமாகவே தயாராக இல்லை.

தனக்கு இதுபோல நடந்தது என ஓர் ஆண் கூறினால், முதலில் அதை உளவியல்பூர்வமாக - அறிவியல்பூர்வமாக அணுகும் தன்மையைச் சமூகமும் குடும்பத்தினரும் கொண்டிருக்கின்றனவா? நம் சமூகத்துக்கு அந்த உணர்வு இருந்திருந்தால், இந்தப் பிரச்சினை இவ்வளவு காலம் தொடர்ந்திருக்காது.

குற்றம் பெருகுவதன் காரணம்: இந்தியாவில் #metoo இயக்கம் உத்வேகம் பெற்றபோது, கவிஞர் வைரமுத்து மீது இளம்பெண்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இணைய அரட்டை மூலம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

தங்களிடம் அத்துமீற முயன்றார் என ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு உள்ளது. இப்போது கோணங்கி பிரச்சினையை முன்வைத்துப் பேசும் பலரும் மேற்கண்டவர்களுக்கு எதிராகப் பெரிதாகப் பேசப்படவில்லையே, நடவடிக்கை எடுக்கப்படவில்லையே; இப்போது மட்டும் ஏன் இவ்வளவு வேகம் என்கிறரீதியில் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விமர்சனபூர்மாகவே சமூகம் எதிர்கொள்ள வேண்டும். அதிகாரம், செல்வாக்கு, மறைமுக மிரட்டல் போன்ற பல்வேறு அம்சங்களைக் காட்டியே பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவை கண்டிக்கவும் தண்டிக்கவும் படாமல் போவது, புதிய புதிய நபர்களிடம் அவை தொடரவே வழிவகுக்கும்.

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து பேட்டியளித்துள்ள கோணங்கி, ‘இது ‘மணல்மகுடி’ நாடகக் குழுவுக்கு எதிரான சதி’ என்பதுபோலப் பேசியுள்ளார். மேலும் சிலரோ இது ஒன்றும் ‘ஊருக்குத் தெரியாத ரகசியம் இல்லையே’ என்பதுபோலப் பேசுகிறார்கள்.

நடக்கும் குற்றத்தை ஏற்காமல் இருப்பதும், தனக்கு நிகழாமல் இருப்பதுவரை பிரச்சினை இல்லை என்று கடப்பதுமே இதுபோன்ற குற்றங்கள் பெருகுவதற்கும் தொடர்வதற்கும் அடிப்படைக் காரணம்.

நெறியற்ற வாதங்கள்: இந்த விவகாரம் சார்ந்து கருத்து தெரிவிக்கும் சிலர், அவரவர் கருத்துநிலைப்பாட்டைச் சற்றும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருகிறார்கள்.

எழுத்தாளர்களுக்குப் பிறழ்வு மனநிலை தவறு இல்லை என்றும், சமூகத்தில் மற்றவர்களிடம் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகள்-சித்ரவதைகளைப் பெரிதுபடுத்தக் கூடாது என்றும் அவர்கள் கோருகிறார்கள். ‘எழுத்தாளர்கள் தவறு செய்வதற்கும், சமூக நெறிமுறைகளை மீறுவதற்கும் சாத்தியமுண்டு. அதைப் பெரிய குற்றமாகக் கருதக் கூடாது’ என்று ஜெயமோகன் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ மாறுபட்ட பாலியல் விழைவு கொண்டவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்களைக் குற்றமிழைத்தவர்களாகக் கருதக் கூடாது என்று வாதிடுகிறார்கள். மாற்றுப் பாலின விழைவு கொண்டவர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையே. அதே நேரம், பாலியல் குற்றமிழைப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர், எப்படிப்பட்ட பாலியல் விழைவைக் கொண்டிருந்தால் என்ன?

பாலியல் குற்றம் என்பது பாலியல் குற்றம்தான். யார் அதைச் செய்கிறார், எதற்காகச் செய்கிறார், அவர் பின்னணி என்ன என்பதையெல்லாம் எப்படிக் கணக்கில் கொள்ள முடியும்? இப்படிப்பட்ட நெறியற்ற வாதங்களை கணக்கில்கொள்ளும் ஒரு சமூகம், பிற்போக்குத்தனத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கிறது என்றே அர்த்தம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிய அக்கறை இதில் எங்கேயும் வெளிப்படவில்லை.

மற்றொருபுறம், இதே தீவிர இலக்கியவாதிகள்தான் இந்தச் சமூகம் சுரணையற்றது, மக்கள் அறிவிலிகள் என்று எடுத்ததற்கெல்லாம் குற்றம்சுமத்தி எழுதுவதும் பேசுவதுமாக இருக்கிறார்கள். இப்போது, எழுத்துத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது, ‘இல்லை! அவர் எழுத்தாளர், சிறு பிறழ்வுகளுக்காக அவர்களைக் குற்றவாளியாக்காதீர்கள்’ என்று ஓடோடி வருகிறார்கள்.

என்ன மாறிவிடும்? இந்தப் பாலியல் சித்ரவதைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இது போன்ற வெளிப்படையான கண்டனங்களால் என்ன நேர்ந்துவிடப் போகிறது, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகக் கருத்து சொல்வதால் என்ன மாறிவிடப் போகிறது என்கிற கேள்வி வரலாம்.

பாலியல் குற்றங்கள் தனக்கு நேர்ந்தாலும் நேராவிட்டாலும் கண்டனத்துக்கு உரியவையே என்கிற சேதி இந்தக் கண்டனங்களின் மூலம் சமூகத்துக்குக் கடத்தப்படுகிறது. எதிர்காலத்தில் இதே குற்றத்தை ஒருவர் இழைக்கத் துணியும் முன் அவருக்கான பகிரங்க எச்சரிக்கையாக இது அமையும். ஒருவேளை இது போன்ற குற்றம் மீண்டும் நடந்தால், பாதிக்கப்பட்டவர் துணிச்சலுடன் தனக்கு நேர்ந்த குற்றத்தை வெளிப்படையாகச் சொல்லவும், மனநலம் பெறவும், எதிர்காலக் குற்றங்களைத் தடுக்கவும் வாய்ப்பாக அமையும். ஒரு சமூகம் தனது தவறுகளை இப்படித்தான் காலந்தோறும் திருத்திக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவருகிறது.

எல்லா நுண்ணுணர்வுகளும் ஒரே நாளில் சமூகத்துக்கு வாய்க்கப்பெறுவதில்லை. ஒவ்வொரு உரிமையும், புரிதலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு, போராடி, சிறிதுசிறிதாக நகர்த்தித்தான் பல மாற்றங்கள் சாத்தியப்பட்டுள்ளன. எல்லா மாற்றங்களும் ஒரு தலைமுறையின் போராட்டத்தில் தொடங்கி, அந்தத் தலைமுறையின் காலத்திலேயே விளைச்சலைக் கண்டுவிடுவதில்லை.

அதே நேரம், அடுத்து வரும் தலைமுறைகள் போராட்டத்துக்கான பலன்களை நிச்சயமாகப் பெறும். எந்த ஒரு மனிதரும் பாரபட்சமாக நடத்தப்படவோ, சுரண்டப்படவோ கூடாது என்கிற நுண்ணுணர்வுகளை வளர்த்தெடுப்பதையே ஒரு சமூகம் நோக்கமாகக் கொண்டு இயங்க வேண்டும்; அதுதான் அடிப்படை!

- ஆதி வள்ளியப்பன் | தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in



Read in source website

சிவகங்கை மாவட்டம் கீழடியில், கீழடி அருங்காட்சியகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 5 அன்று திறந்துவைத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டுவரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்கலைப்பொருள்கள் (artefacts) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரைக்குத் தென்கிழக்காக, 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கீழடி. இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வு, தமிழ்நாட்டில் சங்க காலத்தில், வைகை ஆற்றின் கரைகளில் நகர நாகரிகம் (urban civilisation) செழித்திருந்ததற்கான ஆதாரங்களை வழங்குகிறது.



Read in source website