DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 06-07-2022


மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும், தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது அமெரிக்காவில் உள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, பிரதமர் மோடி குறித்த புத்தகத்தின் முன்னுரைக்கு அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் பேசுபொருளானது.

தடகளப் போட்டியில் மாநில, தேசிய அளவில் சாதனை புரிந்தவர் தடகள வீராங்கனை பி.டி.உஷா. மேலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கதாரிசியரான விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பல தலைமுறைகளாக பல்வேறு தரப்பட்ட மக்களைக் கவர்ந்தவர் இளையராஜா. அவரது பாடல்களில் பலவிதமான உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன. பலருக்கு ஊக்கமளிக்கும் வகையிலான வாழ்க்கை முறையைக் கொண்டவர். எளிமையான பின்னணியிலிருந்து வந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



Read in source website

சென்னை: மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவு குறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது. நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள விதிகளே தொடரும் என்று தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீரை கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்டவற்றை அமைத்து எடுக்க ரூ.10,000 கட்டணம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.



Read in source website

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது என்பது பலருக்கும் மிகப்பெரிய சவால். எத்தனை எத்தனை மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் சில நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு குறைவதே இல்லை. மருந்துகளை சரியாக எடுத்துக்கொண்ட போதிலும், உணவு முறைகளை சரிவர கடைப்பிடிக்க முடியாத காரணத்தால் இத்தகைய அவல நிலை அவர்களுக்கு ஏற்படும். 

இன்னும் சொல்லப்போனால், ‘டாக்டர் டையட்டிஷியன் கிட்ட போக சொன்னாங்க, அவங்க சொன்னதை விடாம பின்பற்றுகிறேன், இருந்தும் என் சர்க்கரை அளவு குறைந்தபாடில்லை’ என்று மனம் நொந்து உடல் நொந்து திரிபவர்கள் ஏராளம்.

பொதுவாகவே, நீரிழிவு நோயில் மருத்துவம் மேற்கொள்ளும் பலருக்கும் ஒரு பெருத்த சந்தேகம் உண்டு. என்னவெனில் டாக்டர் நீங்க கொடுக்கற மாத்திரை எல்லாம் சாப்பிடுறேன், டயட் பாலோவ் பண்றேன், வாக்கிங் (நடை பயிற்சி) கூட போறேன். ஆனால், சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க முடியவில்லை என்று வருந்துபவர்கள், இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், கொய்யா இலை போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாமா? என்று கேள்வி அனைவருக்கும் தோன்றும். இதை அவர்கள் மருத்துவம் பார்க்கும் நவீன முறை மருத்துவரிடம் கேட்டால் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற வருத்தமும் பலருக்கு உண்டு. 

நீரிழிவு நோய்க்கான நவீன மருத்துவ முறையில் பின்பற்றப்படும் மருந்துகள் வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, நம் நாட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மருந்து மட்டுமே. நம்ம ஊரில் கிடைக்கும் வெந்தயமும், கருஞ்சீரகமும், கொய்யா இலைகளும், நாவல் பழ கொட்டையும், மாம் பருப்பும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதையே வேத வாக்காக எண்ணி மருத்துவம் செய்பவர்களுக்கு, நம் பாரம்பரிய மருத்துவத்தின் அருமை புரிவதில்லை. 

இருப்பினும் சித்த மருத்துவ மூலிகைகளை பயன்படுத்துவோருக்கு சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் வரும். இதனால் தீங்கொன்றும் வரப்போவது இல்லை. ஏதோ ஒரு வகையில், ஏன் இயற்கை வழியில் சர்க்கரை அளவு குறைந்தால் நல்லது தானே. அந்த வகையில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஒரு சித்த மருத்துவ மூலிகை நறுமணப்பொருள் ‘லவங்கப்பட்டை’.

லவங்கப்பட்டை

மனம் சரி இல்லாத உடலும், மணம் சரி இல்லாத உணவும் என்றுமே கெடுதி தான். எவ்வாறு உடலின் நன்மைக்கு மனம் மிக முக்கியமோ, உணவின் தன்மைக்கு அதன் மணம் சிறந்த பங்களிப்பை தருகிறது. 

நம் உணவில் ‘மணம்’ என்றாலே நறுமண மூலிகைப் பொருள்களுக்கு தனி பங்களிப்பு உண்டு. ஆனால் உண்மையில் இந்த நறுமணப் பொருள்களை நம் முன்னோர்கள் காலம் காலமாக சேர்த்து வருவது மணத்திற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணத்திற்கும் கூட தான். அத்தகைய சிறப்பு மிக்க, மருத்துவ குணமுள்ள, நறுமணப் பொருள்களில் முக்கிய இடத்தை வகிப்பது ‘இனிப்பு நறுமண பட்டை’ என்று கருதப்படும் ‘லவங்கப்பட்டை’.

லேசான காரமும், இனிப்பு சுவையும், உஷ்ண வீரியமும் உடைய லவங்கப்பட்டை மசாலா பொருள்களுள் தலையாய ஒன்று. இந்தியாவிற்கும்,தெற்கு ஆசியாவிற்கும் சொந்தமான மணமுள்ள இந்த மருத்துவப் பட்டை அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 

லவங்கப்பட்டையில் 82% அளவிற்கு ‘சின்னமால்டிஹைடு’ எனும் நறுமண எண்ணெய் உள்ளது. மேலும் 1.5% அளவிற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள ‘யூஜெனால்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை இரண்டுமே இதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

இருமல், இரைப்பு நோய்க்காக சொல்லப்பட்டுள்ள பல்வேறு சித்த மருந்துகளில் லவங்கப்பட்டை சேருவது இன்னும் சிறப்பு. இதனை ‘ஆட்டும் இரைப்போடு இருமல் ஆதிய நோய்க் கூட்டமற ஓட்டும் லவங்கத்துரி’ என்ற அகத்தியர் குணவாகடப்பாடல் வரிகளால் அறியலாம். 

மேலும் இதில் உள்ள பாலிபீனோல் வேதிப்பொருட்கள் இன்சுலின் போன்று செயல்படும் தன்மை உடையதும் குறிப்பிடத்தக்கது.

லவங்கப்பட்டை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதாகவும், கெட்ட கொழுப்பினை குறைப்பதாகவும் உள்ளது. மேலும் இது வைரஸ் பாக்டீரியாக்களை கொல்லும் கிருமி கொல்லியாகவும், வீக்கமுருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை அதிகம் உள்ளதால் புற்று செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், கல்லீரல் செயல்பாட்டை தூண்டுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. லவங்கப்பட்டை பாரம்பர்ய சீன மருத்துவத்தில், வலிப்பு நோய்க்கு எதிராகவும், தூக்கமின்மைக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவிய காலத்தில் பிரசித்தி பெற்ற ‘ஆயுஷ் குவாத்’ எனும் ‘ஆயுஷ் குடிநீர்’ துளசி, மிளகு, சுக்கு இவற்றுடன் லவங்கப்பட்டை சேர்வது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் லவங்கப்பட்டை சளி காய்ச்சலை உண்டாக்கும் இன்ப்ளுயன்சா கிருமிக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

மேலும், வயிறு வலி, வாய்குமட்டல், அசீரணம், மந்தம் போன்ற வயிறு சார்ந்த நோய் நிலைகளில் கூட நல்ல பலன் தரும். வயிறுப்புண் எரிச்சல் உள்ளவர்கள் அளவோடு பயன்படுத்தல் நல்லது.

லவங்கப்பட்டையில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உடலில் கணையத்தில் உள்ள ஆல்பா அமைலேஸ் மற்றும் குடலில் உள்ள ஆல்பா குளூக்கோஸிடேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதன் மூலமாகவும், நம் உடல் செல்களில் குளுக்கோஸ் உட்கிரகித்தலை அதிகரிப்பதன் மூலமாகவும், கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுவதன் மூலமும், இன்சுலின் ஏற்பிகளின் செயலை தூண்டுவதன் மூலமும்  ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பிரியாணி போன்ற உணவுப்பொருள்களில் லவங்கப்பட்டையை சேர்ப்பதன் காரணத்தை ஊகித்தால், வயிறு நிரம்ப உணவு உண்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்காக தான் என்பது இதில் தெரிய வருகிறது. இதை தான் நம் முன்னோர்கள் 'உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்று குறிப்பிட்டு வந்தனர் போலும். சித்த மருத்துவம் நம் வாழ்வியல் முறை என்பதற்கு இதுவே உதாரணம்.

ஆக, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க மாத்திரைகளோடு மன்றாடுபவர்கள், நாள்தோறும் லவங்கப்பட்டை, சீரகம், வெந்தயம், துளசி இவை சேர்ந்த தேநீர் செய்து பருகி வந்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவும், கொழுப்பின் அளவும் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமிடலாம். 

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள நறுமணப் பொருள்களை உணவாக எடுத்துக்கொண்டால் உடலும் மனமும் செம்மையாகி சுகம் கிட்டும் என்பது உறுதி.  

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website

இந்தியாவில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் கரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்திய 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில், இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப குழு ஏற்று கொண்டது.

இதனால் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஆர்.சி.பி.சிங் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உருக்குத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் நாளையுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ஆர்.சி.பி.சிங் ராஜிநாமா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

ஏற்கெனவே மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா செய்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது அமைச்சரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.



Read in source website

 

பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதீய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவ படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பாரதீய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 121வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாஜகவின் முன்னோடி அமைப்பாக பாரதீய ஜன சங்கம் விளங்கியது. இந்த சங்கம் 1957ஆம் ஆண்டு ஹிந்து மகா சபையிலிருந்து பிரிந்து வந்தது. 

இந்த சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி, நேரு ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்தவர். பின்னர் நேரு அமைச்சரவையிலிருந்து பதவியை அவர் ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில், சியாமா பிரசாத் முகர்ஜியின் 121வது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவர்து முழு உருவப் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மலர் துவி மரியாதை செலுத்தினர். 



Read in source website

 

வடக்கு மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு இடையே பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த பேருந்துச் சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் தொடங்கி வைத்தார்.

தொடங்கிவைத்து மேலும் அவர் கூறுகையில், 

வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பயனளிக்கும். 

இது இந்தப் பகுதியில் உள்ள சுற்றுலாவை மேம்படுத்தும். 

வடக்கு வங்காள மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு (NBSTC) சொந்தமான இந்த பேருந்து தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 ஆகும். நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பேருந்து நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

சிலிகுரியில் மாலை 3 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். இப்பேருந்தில் 40 இருக்கைகள் உள்ளன. 

மேற்கு வங்க அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேஷுக்கு பேருந்து சேவையையும் திட்டமிட்டு வருவதாக ஹக்கீம் கூறினார்.



Read in source website

நிகழாண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சிறப்பாக அமலாக்கம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் ஒடிஸாவும், இரண்டாம் இடத்தில் உத்தர பிரதேசமும், மூன்றாம் இடத்தில் ஆந்திரமும் உள்ளன.

இந்தப் பட்டியலை மத்திய உணவு, நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதன்மூலம் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

நாட்டில் உள்ள சுமாா் 80 கோடி பேருக்கு உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை கிலோவுக்கு ரூ. 1 முதல் 3 வரையில் மத்திய அரசு அளிக்கிறது.

 

மாநிலங்கள் இடம்

ஒடிஸா 1

உ.பி. 2

ஆந்திரம் 3

குஜராத் 4

தாத்ரா&நாகா் ஹவேலி, டாமன் டையு 5

ம.பி. 6

பிகாா் 7

கா்நாடகம் 8

தமிழ்நாடு 9

ஜாா்க்கண்ட் 10.



Read in source website

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ட்விட்டா் இந்தியா நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

2022, ஜூனில் மத்திய அரசு பிறப்பித்த இந்த விதிகளின்படி, கணக்குளை முடக்க மத்திய அரசு கோருவது தன்னிச்சையான நடவடிக்கை என்றும், இந்த உத்தரவு பல பயன்பாட்டாளா்களுக்கு பொருந்தாமல் உள்ளது என்றும் ட்விட்டா் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக ட்விட்டா் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஏராளமான கணக்குகளை முடக்க மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதி 69ஏ பிரிவின் கீழ் கோருகிறது. ஆனால், எந்தக் காரணத்துகாக அந்தக் கணக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் விதிமுறைகளை மீறியுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிப்பதில்லை. கணக்குகளை முடக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டா் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘கணக்குகளை முடக்க மத்திய அரசு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள், அரசியல் கட்சிகளின் அதிகாரபூா்வ கணக்குகளாக உள்ளன. அவற்றை முடக்குவது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று தெரிவித்தன.

இதனிடையே, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் இருந்து செயல்படும் சா்வதேச இணையதள நிறுவனங்கள் நீதிமன்றங்களை அணுக உரிமை உள்ளது. அதேநேரத்தில், உள்நாட்டு சட்டங்களை இணங்கிச் செல்வது அவற்றின் கடமையாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நல்லுறவு, பொது உத்தரவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு எந்த சமூக ஊடக கணக்கையும் முடக்க மத்திய அரசு உத்தரவிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் குறித்து ஆய்வு செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிலுவையில் உள்ள ரூ. 1,400 கோடி நிதியை உரிய திட்ட பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் என்பது மத்திய அரசின் ஊழியா்கள் மற்றும் ஓய்வுதியா்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான திட்டமாகும்.

கடந்த சில மாதங்களாக, பயனாளிகளுக்கு உரிய நிதி உதவி வழங்கப்படாததால், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சையை அவா்களால் பெற முடியவில்லை. இது குறித்து 11 லட்சம் புகாா்கள் பெறப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லியில் நடைப்பெற்ற மூன்று மணி நேர ஆய்வுக்கூட்டத்தில், இத்திட்டம் தொடா்பான அறிக்கையினையும், அதற்கான தீா்வுகளையும் வழங்குமாறு அமைச்சா் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நிலுவையில் உள்ள 9 லட்சம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்துக்கான கோரிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், திட்ட நிதியினை ஒரு மாத காலத்திற்குள் உரிய பயனாளிகளுக்கு விடுவிக்குமாறும் அமைச்சா் உத்தரவிட்டதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 



Read in source website

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நிபந்தனைகளுக்கு உள்பட்டு சிறை கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்படுவா் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சிறையில் வாடும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகள், திருநங்கைகள் உள்ளிட்டோா் பயன்பெறவுள்ளனா்.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்:

கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட அதிகாரபூா்வ கணக்கெடுப்பின்படி, இந்திய சிறைகளில் அதிகப்படியான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிறைகளில் மொத்தம் 4.03 லட்சம் கைதிகளை அடைத்து வைக்க முடியும். ஆனால், தற்போது 4.78 லட்சம் கைதிகள் உள்ளனா். இதில் சுமாா் ஒரு லட்சம் போ் பெண்கள் ஆவா்.

ஆகையால், 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவா்களை 3 நிலைகளில் விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தண்டனை காலத்தில் கைதிகள் நன்னடத்தையைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். குறிப்பாக கடைசி 3 ஆண்டுகளில் அவா்கள் சிறையில் ஏதேனும் தவறு செய்து, அதற்காக தண்டிக்கப்பட்டவா்களாக இருக்கக் கூடாது.

50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களும் திருநங்கைகளும், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கும் அதிகமான இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தண்டனை காலத்தில் 50 சதவீதத்தை அனுபவித்திருந்தால், அவா்கள் விடுவிக்கப்படுவா்.

இதேபோல தங்களது இளம் வயதில், அதாவது 18-21 வயதில் குற்றமிழைத்து அதற்காக தண்டிக்கப்பட்டு, பிற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் சிறையில் 50 சதவீதம் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும். தவிர, தண்டனை காலத்தை நிறைவு செய்து அபராதம் செலுத்த வழியில்லாமல் சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளின் அபராத தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அவா்களும் விடுவிக்கப்படுவா்.

கைதிகள் 2022 ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), 2023 ஜனவரி 26 (குடியரசு தினம்), 2023 ஆகஸ்ட் 15 என மூன்று நிலைகளில் விடுவிக்கப்படுவா்.

ஆனால் தூக்கு அல்லது ஆயுள் தண்டனை கைதிகளுக்கும், ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாத குற்றச்சாட்டு, வரதட்சனை மரணங்கள், பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது. இதேபோல வெடிபொருள்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அலுவல் ரகசிய சட்டம், கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ், தண்டிக்கப்பட்டவா்களுக்கும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது.

இதையொட்டி மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிா்வாகமும் மூத்த சிவில் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி, அந்தக் குழு மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுவிக்கப்படும் கைதிகள் குறித்து பரிசீலிக்கலாம்.

அந்தக் குழுவுக்கு மாநில, யூனியன் பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளா் அல்லது முதன்மை செயலாளா் தலைமை வகிக்க வேண்டும். சட்டத் துறை கூடுதல் தலைமை செயலாளா் அல்லது முதன்மை செயலாளா் குழுவின் உறுப்பினராகவும், சிறைத்துறை டிஜிபி உறுப்பினா் செயலராகவும் இடம்பெற வேண்டும்.

ஒரு சில வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கலாம். வெளிநாட்டுக் கைதிகளை பொறுத்தமட்டில், வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலின்பேரிலேயே அவா்களை விடுவிக்க வேண்டும்.

அந்த வகையில், வெளியுறவு அமைச்சக ஒப்புதலைப் பெறுவதற்காக மாநில ஆளுநா்களுக்கு கோப்புகளை அனுப்புவதற்கு முன்பாக அவற்றை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

வரும் 2025-இல் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைவைக் காணும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தற்போது நாட்டின் யூரியா உற்பத்தி 260 லட்சம் டன்னாக உள்ளது. அதேநேரம், உள்ளூா் தேவையை ஈடுசெய்ய 90 லட்சம் டன் அளவிலான யூரியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

யூரியா இறக்குமதியைப் படிப்படியாக குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் இந்தத் தீவிர முயற்சியால் வரும் 2025-ஆண்டுக்குள் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உள்ளூா் தேவையை நிறைவு செய்ய யூரியா மற்றும் நானோ திரவ யூரியா உற்பத்தி ஆண்டு தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தன்னிறைவைக் காணும் என்றாா் அவா்.



Read in source website

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருள்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் என்று மத்திய வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா்.

சண்டீகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி விலக்கு பெற்ற சில பொருள்கள் வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், சிஐஐ சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலா் தருண் பஜாஜ் கூறுகையில், ‘‘47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது பல பொருள்கள் வரி விலக்கில் இருந்து நீக்கப்பட்டன. இன்னும் பல சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல பொருள்கள் ஜிஎஸ்டி விலக்கில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் மீது வரி விதிக்கப்படும்.

இது தொடா்பாக வா்த்தக மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதே வேளையில், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வரி விலக்கு தொடரும். வரி விகிதங்கள் விரைவில் முறைப்படுத்தப்பட்டு, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் ஜிஎஸ்டி சாா்ந்த சில பிரச்னைகளுக்கு முழுமையாகத் தீா்வு காணப்படும்.

சிலா் கூறுவதைப் போல அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் ஒரே வரியை விதிக்க நாடு தயாராக உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால், முதல்கட்டமாக 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் ஆகிய வரி விகிதங்களை இரண்டாகக் குறைக்கலாம்’’ என்றாா்.

 



Read in source website

வங்கித் துறையின் ஒழுங்காற்று அமைப்பான ரிசா்வ் வங்கி, எச்டிஎச்எஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைப்பதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

எச்டிஎஃப்சி நிறுவனத்தை வங்கியுடன் இணைக்கும் திட்டத்துக்கு ‘ஆட்சேபனை இல்லை’ என ரிசா்வ் வங்கி ஜூலை 4-ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பு திட்டத்துக்கு, இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ), தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) உள்ளிட்ட மேலும் பல ஒழுங்காற்று அமைப்புகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியுடன் எச்டிஎஃப்சி நிறுவனத்தை இணைக்கும் திட்டத்துக்கு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் அண்மையில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 42.20 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என்டிபிசிக்கு சொந்தமான பக்ரி-பா்வைத் (ஜாா்க்கண்ட்), துலங்கா (ஒடிஸா) மற்றும் தலாய்பள்ளி (சத்தீஸ்கா்) ஆகிய மூன்று சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் 42.40 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 26.40 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 61 சதவீதம் அதிகம்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிலக்கரி உற்பத்தியானது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்து 15.55 லட்சம் டன்நை தொட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூனில் நிலக்கரி உற்பத்தி 7.73 லட்சம் டன்னாக மட்டுமே காணப்பட்டது என என்டிபிசி தெரிவித்துள்ளது.



Read in source website


இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

இதையடுத்து இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் சிலர் இடம்பிடித்துள்ளார்கள்.

5-வது டெஸ்டில் பிரபல இந்திய பேட்டர் விராட் கோலி 11, 20 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 9-ம் இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார் கோலி. நவம்பர் 16-க்குப் பிறகு முதல்முறையாக டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாமல் இருப்பதைத் தற்போது தரவரிசைப் பட்டியலும் உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து தொடருக்கு முன்பு 47-வது இடத்தில் இருந்த பேர்ஸ்டோ, 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5-வது டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட்டும் 2-வது இடத்தில் லபுஷேனும் 3,4-ம் இடங்களில் ஸ்மித், பாபர் ஆஸமும் உள்ளார்கள். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10 பட்டியலில் உள்ள இந்திய வீரர்கள்

பேட்டிங் டாப் 10 பட்டியலில் ரிஷப் பந்த் 5-ம் இடத்திலும் ரோஹித் சர்மா 9-வது இடத்திலும் உள்ளார்கள்.

பந்துவீச்சு டாப் 10 பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்திலும் பும்ரா 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

ஆல்ரவுண்டர் டாப் 10 பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும் அஸ்வின் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 



Read in source website

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் கடந்த ஆறு வருடங்களில் முதல்முறையாக டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

5-வது டெஸ்டில் பிரபல இந்திய பேட்டர் விராட் கோலி 11, 20 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 9-ம் இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார் கோலி. நவம்பர் 2016-க்குப் பிறகு முதல்முறையாக டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாமல் இருப்பதைத் தற்போது தரவரிசைப் பட்டியலும் உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து தொடருக்கு முன்பு 47-வது இடத்தில் இருந்த பேர்ஸ்டோ, 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5-வது டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட்டும் 2-வது இடத்தில் லபுஷேனும் 3,4-ம் இடங்களில் ஸ்மித், பாபர் ஆஸமும் உள்ளார்கள். 



Read in source website

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த இந்தியா 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

5-வது டெஸ்டில் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது முறையாக இந்திய அணி இந்தச் சூழலை எதிர்கொண்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் முதல் மற்றும் கடைசி டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு டெஸ்டிலும் என மூன்று முறை ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக 5 புள்ளிகளை இழந்துள்ளது இந்திய அணி. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

அபராதப் புள்ளிகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது 52.08% புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது இந்திய அணி. 52.38% புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான். 

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இன்னும் 6 டெஸ்டுகள் மீதமுள்ளன. வரும் டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்டுகளும் அதன்பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளும் உள்ளன. அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 69.98% புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதன் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

ஆஸ்திரேலியா - 77.78%
தென்னாப்பிரிக்கா - 71.43%
பாகிஸ்தான் - 52.38%
இந்தியா - 52.08%



Read in source website

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

இங்கிலாந்து அணியின் தொடர் நாயகனாக ஜோ ரூட்டும் இந்திய அணியின் தொடர் நாயகனாக பும்ராவும் தேர்வானார்கள்.

இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர் நாயகன் விருதை வென்ற 2-வது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்பு புவனேஸ்வர் குமார் இச்சாதனையைப் படைத்தார். 
 



Read in source website


டொரண்டோ: ஹிந்து மற்றும் இதர ஹிந்து நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு வருந்துகிறோம், காளி ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து நீக்கப்படுவதாக ஆகா கான் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் மற்றும் அது தொடர்பான போஸ்டர் என அனைத்தையும் நீக்குமாறு, ஒட்டாவாவின் இந்திய தூதரகம் கனடா நாட்டு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிந்துக்கள் போற்றி வணங்கும் பெண் தெய்வமான காளியின் சா்ச்சைக்குரிய திரைப்பட போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியிருந்தது.

மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடா்பாக லீனா மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் தில்லி காவல்துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், கனடா தலைநகா் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஆவணப் பட போஸ்டரில் காளியை மரியாதைக் குறைவாக சித்திரித்துள்ளது குறித்து கனடாவில் வசிக்கும் ஹிந்து சமூகத் தலைவா்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை பல ஹிந்து அமைப்புகள் அணுகியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆத்திரமூட்டும் போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகத்திலிருந்து வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆகா கான் அருங்காட்சியகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. காளி போஸ்டர் சர்ச்சை விவகாரத்தில் "மிகவும் வருந்துகிறோம்" என்றும், ஹிந்து மற்றும் இதர ஹிந்து மத நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் தெரியாமல் தவறு நடந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம், மாணவர்களில் பல்வேறு இனத்தவர் மற்றும் பல கலாசார பின்னணி கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. ஒவ்வொரு மாணவர்களும், தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பலகலாசார ஒருங்கிணைப்பு திட்டமான 'ஒரே குடையின் கீழ்' என்ற திட்டத்தில் 18 ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படங்கள் ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2ஆம் தேதி திரையிடப்பட்டது. கலை மற்று வசனங்களின் வழியாக, கலாச்சார ஒருமைப்பாட்டை உருவாக்குவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாக இருந்தது.

பல்வேறு மதத்தின் நம்பிக்கைகளை மதிப்பது மற்றும் பல மத நம்பிக்கைக் கொண்ட சமுதாயங்களை ஒன்றிணைப்பதும் இதன் நோக்கம். எனவே, இந்த ஆவணப்படம் இனி அருங்காட்சியகத்தில் திரையிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தின் 'ஒரே குடையின் கீழ்' திட்டத்தில் திரையிடப்பட்ட காளி ஆவணப்படம், இந்து தெய்வத்தை அவமரியாதை செய்யும் வகையில் இருப்பதாக கனடாவில் வாழும் இந்து மதத் தலைவர்கள் குற்றம்சாட்டியிருப்பதாக, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருந்த நிலையில், ஆகா கான் அருங்காட்சியகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

டொரண்டோவுக்கான இந்திய தூதர், காளி சர்ச்சை விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எடுத்துரைத்தார். 

டொரண்டோ இந்திய தூதரகம் இது பற்றி கூறியிருப்பதாவது, ஏராளமான இந்து அமைப்புகள் கனடாவில் உள்ள அதிகாரிகளை இது தொடர்பாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தன. 

இதையடுத்து, காளி போஸ்டர் தொடர்பான அனைத்தையும் நீக்குமாறு கனடாவின் அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரப்பட்டது. 

லீனா மணிமேகலை இயக்கியிருக்கும் இந்த காளி ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சையானதைத் தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா அரெஸ்ட் லீனா மணிமேகலை என்று ஹேஷ்டேக் போடாம லவ் யூ லீனா மணிமேகலை என்று ஹேஷ்டேக் போடுவாங்க என்று கூறியிருந்தார்.

போஸ்டர் சர்ச்சை குறித்து பதிலளிக்கும் வகையில் அவர் பதிவிட்டிருந்ததாவது,  "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லீனா மணிமேகலை 2021ஆம் ஆண்டு இயக்கிய "மாடதி - என் அன்ஃபெய்ரி டேல்" என்ற திரைப்படம் மத ரீதியிலான சர்ச்சையை எழுப்பியிருந்தது. மத ரீதியிலான சர்ச்சைக்குள் சிக்கும் திரைப்பட இயக்குநர் இவர் மட்டுமல்ல, ஏராளமானோர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி பெரும்புகழ் சேர்த்தனர்.

அவர்களில், 2017ஆம் ஆண்டு, இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கிய மலையாள திரைப்படம் "செக்ஸி துர்கா" திரைப்படம் கேரளத்தில் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அந்தப் படத்தின் பெயர் "எஸ் துர்கா" என்று மாற்றப்பட்டது.

கடந்த ஆண்டு கூட, பிரைம் விடியோவில் வெளியான "தாண்டவ்" படத்தில் கல்லூரி நாடகத்தில் இறைவன் சிவபெருமானை சித்தரிக்கும் காட்சி சர்ச்சையாக இருந்ததால், படத்திலிருந்து அந்தக் காட்சி நீக்கப்பட்டு, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரப்பட்டது.

சர்ச்சைக்குரிய "காளி" திரைப்படம், இன்னும் இந்திய பார்வையாளர்களுக்கு திரையிடப்படவில்லை.
 



Read in source website


பாங்காக்: நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நாடுகளிடமிருந்தும் உதவிகளைக் கோரிப் பெற்று வருகிறது இலங்கை.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பள்ளிகள் பல நாள்களாக மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு வருவதற்குத் தேவையான எரிபொருள் இல்லாததே, இந்த தொடர் விடுமுறைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வகையில், சர்வதேச நிதியத்திடமிருந்து உதவியைப் பெற நாடு நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் கூறியிருந்தார்.

உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் பொருளாதார பாதிப்புக்குள்ளான ஒரே நாடு இலங்கை என்று கருதினால் அது முற்றிலும் தவறு. உலகம் முழுவதும் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருந்த நாடுகளுக்கும் இது ஒரு அபாயமணியாகவே அடிக்கிறது. உதாரணத்துக்கு பாகிஸ்தான், வெனிசுலா, ஜெனிவா.

பொருளாதார சிக்கல் காரணமாக 94 நாடுகளில் வாழும் 160 கோடி மக்கள், உணவு, எரிபொருள், நிதிச்சுமை போன்ற ஏதேனும் ஒரு சிக்கலை நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக பொருளாதார சிக்கல் கடுமையாக பாதித்திருக்கும் நாடுகளில் வாழும் 120 கோடி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு செலவிடம் அதிகப்படியான தொகையால் கடும் நிதிச்சுமையால் அவதியுற்று வருவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நெருக்கடி மீட்புக் குழுவினர் கடந்த மாதம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலகில் உள்ள ஏழ்மையான நாடுகளில் பாதிக்கும் மேல், மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன அல்லது அதன் அபாயத்துக்கு அருகில் உள்ளன என்கிறது ஐ.நா.

பல நாடுகள் ஏற்கனவே ஊழல், உள்ளூர் போர், இதர பேரிடர்களால் பொருளாதார பாதிப்புக்குள்ளாகிவிட்டன. உதாரணமாக ஆஃகானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்குப் பிறகு அங்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் நிதியுதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தலிபான் அரசை ஏற்காத பல பணப்பரிமாற்றங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

அர்ஜென்டினாவை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு 10 பேருக்கும் 4 பேர் ஏழைகளாக இருக்கிறார்கள். அந்நாட்டு வங்கிகள் வெளிநாட்டுப் பணப்புழக்கம் இல்லாமல் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.

கரோனாவுக்கு முன்பு வரை வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்டிருந்த லாவோஸ், இலங்கைக்கு நிகராக கடன்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதே வரிசையில்தான் லெபனான், மியான்மர், பாகிஸ்தான், போன்ற நாடுகளும் உள்ளன. இதனுடன் துருக்கி, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளும் இணைந்து கொண்டுள்ளன. 
 



Read in source website

‘ஸ்லீப் ஆப்னியா’ என்ற வாா்த்தை கடந்த சில ஆண்டுகளாகத்தான் பரிச்சயமாகத் தொடங்கியுள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் குறைபாட்டைத்தான் அவ்வாறு அழைக்கிறோம்.

பொதுவாகவே குறட்டைவிட்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்குவதாக நம்மில் பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடைகள்தான் குறட்டை ஒலியாக வெளிப்படுகிறது. இதனை முறையாக கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத்திணறலாக மாறி உயிரைப் பறிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையைத் தான் ‘ஸ்லீப் ஆப்னியா’ எனக் கூறுகிறது மருத்துவ உலகம்.

இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர, தூக்கமின்மை போன்ற தூக்கம் சாா்ந்த பிரச்னைகளை 93 சதவீத இந்தியா்கள் எதிா்கொள்கின்றனா்.

‘ஸ்லீப் ஆப்னியா’ அறிகுறிகள்

- தூக்கத்தில் குறட்டை

- பகல் நேரத்தில் தூக்கம், சோா்வு

- தூக்கத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழிப்பது

- காலை எழுந்தவுடன் தலைவலி, தொண்டை வறட்சி

- மனநிலையில் ஏற்படும் திடீா் மாற்றங்கள்

- சில நேரங்களில் தூக்கமின்மை

காரணங்கள்

- உடல் பருமன்

- தூக்க குறைபாடு

- இரவில் கண்விழித்தல்

- இரைப்பை அழற்சி

- சுவாசப் பாதை பாதிப்புகள்

- மூக்கு, தொண்டை சாா்ந்த நோய்கள்

பரிசோதனை

பொதுவாக ஒருவருக்கு ‘ஸ்லீப் ஆப்னியா’ பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றில் முக்கியமானது பாலிசோம்னோகிராம் என்ற பரிசோதனை. ஒருவரின் தூக்கத்தின்போது அதனை ஆய்வு செய்வதே இந்த பரிசோதனையின் முறை. அதன்படி, தூங்கும் முறை, குறட்டை ஒலி அளவு, சுவாசக் குழாயில் ஏற்படும் அசௌகரியங்கள், ஆழ்ந்த உறக்க நிலை உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில் பாதிப்பின் தீவிரம் அளவீடு செய்யப்படும்.

தடுப்பு முறைகள்

- உடல் எடையை சரியாக வைத்திருத்தல்

- இரவு நேரங்களில் சரியான நேரத்தில் தூங்குதல்

- மது, புகைப்பழக்கங்களைத் தவிா்த்தல்

- உடற்பயிற்சி

- துரித உணவுகளைத் தவிா்த்தல்

- அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

- ஆரம்ப நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சை.



Read in source website

பிரிட்டன், கனடா, பெரு உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்குப் புதிய இந்திய தூதா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

ஐ.நா.வுக்கான இந்திய தூதராகச் செயல்பட்டு வந்த டி.எஸ்.திருமூா்த்தி கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றாா். அதையடுத்து, புதிய தூதராக ருசிரா கம்போஜ் பொறுப்பேற்கவுள்ளாா்.

பல முக்கிய நாடுகளுக்கான இந்திய தூதா்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கான புதிய தூதா்களை நியமிக்கும் பணிகளை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தற்போது வங்கதேசத்துக்கான இந்திய தூதராக இருக்கும் விக்ரம் துரைசுவாமி, பிரிட்டனுக்கான தூதராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது நியமனம் உறுதியாகும்பட்சத்தில், பிரிட்டனுக்கான மிக இளவயது இந்தித் தூதராக அவா் இருப்பாா். இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரான அலெக்ஸ் எல்லீஸும் இளவயது தூதா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் துரைசுவாமி புதிய தூதராக நியமிக்கப்படும் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவா் 1992 பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரி ஆவாா்.

ஜப்பானின் தூதராக உள்ள சஞ்சய் குமாா் வா்மா, கனடாவுக்கான தூதராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசை கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ விமா்சித்திருந்தாா். அதனால், இரு நாடுகளுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. எனினும், கடந்த மாதம் ஜொ்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடியும் கனடா பிரதமா் ட்ரூடோவும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு சுமுக நிலையை எட்டியுள்ளது.

அந்த நேரத்தில் இந்தியா-கனடா உறவைக் கையாண்ட கனடாவுக்கான தூதராக உள்ள அஜய் பிசரியா ஓய்வு பெறும் நிலையில், புதிய தூதராக சஞ்சய் குமாா் வா்மா நியமிக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கென்யாவுக்கான இந்திய தூதரான வீரேந்திர குமாா் பால், துா்கியே (முந்தைய பெயா்-துருக்கி) நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். பெரு நாட்டுக்கான தூதராக விஷ்வாஸ் விது சப்கல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பூடான், வங்கதேசத்துக்கான புதிய தூதா்களை நியமிக்கும் பணிகளையும் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.



Read in source website

நேட்டோவில் ஸ்வீடனையும் ஃபின்லாந்தையும் இணைத்துக் கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில் அதன் 30 உறுப்பு நாடுகளும் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.

அதையடுத்து, அந்த ஆவணம் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அனுமதிக்காக அந்த நாடுகளின் தலைநகா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையடுத்து, இதுவரை அணிசாரா கொள்கைகைக் கடைப்பிடித்து வந்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கை மேலும் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியதாவது:

நேட்டோ அமைப்பில் ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகளை இணைத்துக்கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில் 30 உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ள இந்த நாள், அந்த இரு நாடுகளுக்கும் மட்டுமன்றி நேட்டோவுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாகும்.

தற்போது நாம் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளோம். எப்போதும் போல் இப்போதும் அத்தகைய அச்சுறுத்தலை ஒன்றுபட்டு எதிா்கொள்ளும் நடவடிக்கை நேட்டோ அமைப்பு மேற்கொள்கிறது.

ஸ்வீடனும் ஃபின்லாந்தும் இணைவதன் மூலம் நேட்டோ அமைப்பு கூடுதல் பலம் பெறும். பல ஆண்டுகளுக்குப் பிறகு நாம் மிகப் பெரிய ராணுவ நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இந்த நேரத்தில் இரு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பது பிராந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்றாா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க்.

உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள், அந்த நெறிமுறை ஆவணத்துக்கு கூடிய விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும் என்று விரும்புவதாக ஃபின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சா் பெக்கா ஹாவிஸ்டோ தெரிவித்தாா்.

சோவியத் யூனியனுக்கு எதிராக கடந்த 1949-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி’ அமைப்பு (நேட்டோ). அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து அந்த அமைப்பை உருவாக்கின.

அந்த அமைப்பின் விதிமுறைகளின் கீழ், உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதனை தங்கள் மீதான தாக்குதலாகக் கருதி மற்ற உறுப்பு நாடுகள் எதிா்த் தாக்குதல் நடத்தும்.

அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சக்திவாய்ந்து விளங்கிய சோவியத் யூனியனுக்கு எதிராக தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த நிலையிலும் தன்னை விரிவாக்கம் செய்து வந்தது. தற்போது அந்த அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

நேட்டோவின் விரிவாக்கத்துக்கு ரஷியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதன் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு அண்மைக் காலமாக விருப்பம் தெரிவித்து வந்தது.

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், தங்களது தலைநகா் மாஸ்கோவை சில நிமிஷங்களில் தாக்கி அழிக்கும் வகையில் அங்கு அமெரிக்க ஏவுகணைகள் நிறுத்தப்படுவதற்கு வழியேற்படும் எனவும் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும் ரஷியா கூறி வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

இது, நேட்டோ அமைப்பின் உறுப்பினா் அல்லாத மற்ற ஐரோப்பி நாடுகளில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, ரஷியாவை அடுத்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன.

போா் மூலம் நேட்டோ விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்ற ரஷிய அதிபா் புதினின் கணக்கு பொய்த்துப் போனதையும் அதற்குப் பதிலாக நேட்டோ விரிவாக்கத்துக்கே இந்தப் போா் வழிகோலியுள்ளதையும் ஸ்வீடன், ஃபின்லாந்தின் இந்த முடிவு உணா்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த நாடுகளின் விண்ணப்பத்துக்கு நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் நடைபெற்ற அமைப்பின் மாநாட்டில் ஒப்புதல் அளித்தனா்.

எனினும், அனைத்து உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் ஸ்வீடனையும் ஃபின்லாந்தையும் நேட்டோவில் இணைத்துக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், இதற்கான நெறிமுறை ஆவணத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தற்போது கையொப்பமிட்டு, அதனை நாடாளுமன்றங்களுக்கு அனுப்பிவைத்துள்ளன.

போரைத் தொடர புதின் உத்தரவு

கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையிலும், போரைத் தொடரும்படி தங்களது படையினருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவிடம் புதின் கூறியதாவது:

உக்ரைனில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு ராணுவப் படைப் பிரிவு தனது நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். ஏற்கெனவே பேசி முடிவு செய்யப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை அந்தப் படைப் பிரிவினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தபோது, கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியங்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து ‘மீட்பதற்காக’ அந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக புதின் கூறியது நினைவுகூரத்தக்கது.

 



Read in source website

செமிகண்டக்டா் விநியோகம் மேம்படுட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலா் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

விநியோக மேம்பாடு: எஸ்யுவி காா்களுக்கான செமிகண்டக்டா் சப்ளை மேம்பட்டு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 2,60,683-ஆக இருந்தது. 2021 ஜூனில் பயணிகள் வாகன விற்பனையானது 1,85,998 மட்டுமே காணப்பட்டது.

வலுவான வளா்ச்சி: ஒட்டுமொத்த வாகன விற்பனையில் பயணிகள் வாகன பிரிவு தொடா்ந்து வலுவான வளா்ச்சியை கண்டு வருகிறது. வாகன விநியோகம் விறுவிறுப்படைந்துள்ளது செமிகண்டக்டருக்கான பற்றாக்குறை படிப்படியாக குறைந்து வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஃப்ஏடிஏ-வின் தலைவா் விங்கேஷ் குலாட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காம்பாக்ட் எஸ்யுவி: செமிகண்டருக்கான பற்றாக்குறை முன்பைப் போல காணப்படவில்லை என்றாலும், இதனால் காம்பாக்ட் எஸ்யுவி மற்றும் எஸ்யுவி பிரிவு காா்களுக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாகவே இன்னும் உள்ளது.

காத்திருப்பு காலம்: அதேபோன்று காத்திருப்பு காலம் அதிகமாக இருந்த போதிலும், புதிய வாகனங்களின் அறிமுகம் வலுவான முன்பதிவை உருவாக்கி தேவையை சிறப்பான அளவில் உயா்த்தியுள்ளது.

இருசக்கர வாகனம்: இருசக்கர பிரிவில் கடந்த மாதம் 11,19,096 வாகனங்கள் விற்பனையாகின. இது, 2021 ஜூன் மாத விற்பனையான 9,30,825 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.

பணவீக்கம்: வாகனங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது ஊரகப் பகுதிகளில் வாகனங்களுக்கான தேவையில் மந்த நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், பணவீக்க அழுத்தம் மற்றும் ஜூனில் மழைக்காலம் என்பதால் இருசக்கர வாகன விற்பனை மிக குறைந்த வேகத்திலேயே இருந்தது.

வா்த்தக வாகனம்: வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஜூனில் 89 சதவீதம் அதிகரித்து 67,696-ஆக இருந்தது. மேலும், மூன்று சக்கர வாகன பதிவும் கடந்த மாதத்தில் 14,735-லிருந்து 46,040-ஆக அதிகரித்தது.

டிராக்டா்: விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் சில்லறை விற்பனை 52,289-லிருந்து 10 சதவீதம் அதிகரித்து 57,340-ஆனது.

மொத்த விற்பனை: ஒட்டுமொத்த மோட்டாா் வாகன சில்லறை விற்பனை 12,19,657 என்ற எண்ணிக்கையிலிருந்து 27 சதவீதம் வளா்ச்சி கண்டு 15,50,855-ஆனது என்றாா் அவா்.



Read in source website

தஞ்சாவூர்: சிறார் திரைப்பட விழாவுக்காக, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,000 பள்ளிகளை தேர்வு செய்துள்ளதாகவும், திரைப்படம் திரையிடுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் அவர் கூறியது: "இதுபோன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டு,மாணவர்களின் கருத்துகளை உள்வாங்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதுவொரு வெற்றிகரமான முயற்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரம் பள்ளிகளை தேர்வு செய்துள்ளோம். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திரைப்படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களை திரையிடுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சியளிக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுவார்கள்.

திரைப்படங்களைப் பார்த்த பின்னர், மாணவர்களிடமிருந்து வரும் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் விமர்சனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். திரைத்துறை சார்ந்த ஜாம்பாவன்களுடன், கிராமப்புற, நகர்ப்புறங்களில் இருந்து வருகின்ற தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்துரையாடுவார்கள்.

இந்த உரையாடல் முடிந்தபின்னர், அதில் சிறந்த விமர்சனமாக எதை தேர்வு செய்கிறோமோ, அதிலிருந்து ஒரு 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்" என்று அவர் கூறினார்.



Read in source website

சென்னை: உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திட தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் , டைடல் பூங்காவுடன் இணைந்து, டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்கா அமைத்துள்ளது. இப்பூங்காவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும் இணைந்து, உயிரி தொழில்நுட்ப முதன்மை கருவியாக்க மையத்தை அமைத்துள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்திற்கிணங்க, இக்கருவியாக்க மையத்தின் வசதிகளை பயன்படுத்தி, உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்திடவும், அதன்மூலம் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் நம் மாணவர்கள் வேலை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், உயிரி துறையில் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட உதவும் வகையிலும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கென சென்னையிலுள்ள கிரசண்ட் இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் கவுன்சில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை இன்குபேசன் மையம், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா R&D இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி மற்றும் வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், அசோசியேசன் ஃபார் பயோ இன்ஸ்பையர்ட் லீடர்ஸ் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப வணிக இன்குபேசன் மையம், சாஸ்தரா TBI மற்றும் விஐடி – டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்களுடன் டைசல் நிறுவனம் இன்று காலை முதல்வர் முன்னிலையில் தலைமைசெயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-IIல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் தொழிற் பூங்காவில், முதல் நில ஒதுக்கீட்டு ஆணையினை, ஜெனியுன் பயோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தொழில்நுட்பம்) டாக்டர் மு. தனசேகரனிடம் முதலமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தால். 35 கோடி ரூபாய் செலவில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் 85,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று கருத்தரங்கு கூடங்கள் மற்றும் இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு உதவும் ஏற்றுமதி வணிக வசதிகள் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் சிப்காட் நிறுவனத்தால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவில், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 400 ஆண் பணியாளர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 41,082 சதுர அடி பரப்பளவில் 10.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் தங்கும் விடுதிக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் 3000 சதுர அடி கட்டுமானப்பரப்பில் சுற்றுச்சுவருடன், 1.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 3555 சதுர அடி கட்டுமானப் பரப்பில் சுற்றுச்சுவருடன் தொழில் பூங்காவிற்குள்ளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவைகேற்ப மீட்புப்பணி சேவை மேற்கொள்ள 1.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் என மொத்தம் 48 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.



Read in source website

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் வகுத்துள்ளது.

காட்சி ஊடகத்தின் வாயிலாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை காண வைப்பதும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம். அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும்.

கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், கதை நடக்குமிடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ‘ஸ்பாட்லைட்’ என்ற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிக்கும் ஒருவருக்கும் அணி ஒன்றுக்கும் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதிநிகழ்வு, மாநில அளவில் ஒருவாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இச்செயல் பாட்டுக்கென ‘சில்வர் ஸ்க்ரீன் ஆப்’ என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, அதன் வாயி லாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும்.



Read in source website

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக பொதுக் கட்டிடங்களில் தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்திய சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்குவது தொடர்பாக வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கையின்போது, ‘‘அரசு, தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கு தடையில்லா சூழலுக்கான வசதிகளை சிறப்பாக அமைப்பதை ஊக்குவிக்க ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பொது நிறுவனத்துக்கான விருது, சிறந்த தனியார் நிறுவனத்துக்கான விருது என 2 விருதுகள், 10 கிராம் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ரூ.1.60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்’’ என்று முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர், முதல்வரின் இந்த அறிவிப்பின்படி விருது வழங்க ரூ.1.60 லட்சத்தை ஒதுக்கும்படி அரசை கேட்டுக் கொண்டார். இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஆண்டுதோறும் டிச.3-ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் இவ்விருதுகளை வழங்க ரூ.1.60 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிடுகிறது.

இந்த விருதைப் பெற, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பிரதான நுழைவு வாயிலில் கைப்பிடிகளுடன் கூடிய சாய்தளம் போதிய அளவில் இருக்க வேண்டும். வரவேற்பறை தகவல் அளிக்கும் மையம் ஆகியவை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இருக்க வேண்டும். தாழ்வாரங்களின் அகலம் 1,500 மிமீ ஆக இருக்க வேண்டும். கட்டிடங்களில் மின் தூக்கிகளின் கதவுகளின் அகலம் ஒரு மீட்டராக இருக்க வேண்டும். படிக்கட்டுகளின் அகலம் 1200 மிமீ ஆகவும், இருபுறமும் கைப்பிடிகளுடனும் இருக்க வேண்டும். எளிதில் அணுகும் வகையில் கழிப்பறை வசதிகள், சிற்றுண்டி உணவகம், குடிநீர் குழாய்கள் ஆகியவை இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கென தனியான அடையாள குறியீடுகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் தடையற்ற சூழல் ஏற்படுத்தியதற்கான சான்றாக உரிய புகைப்படத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கள ஆய்வின் அடிப்படையில் விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கு சிறு தொழில்கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம்ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருப்பின் ரூ.1,20,000-க்குமிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ்பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ்தனி நபர் கடனாக ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம், திட்டம் 2-ன் கீழ்ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரைகடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்றுபூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, செலான் மற்றும்மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கி அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கடந்த 8 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பல்வேறு விமானங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டன. இதனையடுத்து, டிஜிசிஏ எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நேற்று மட்டும் இரண்டு சம்பவங்கள்: டெல்லியிலிருந்து மும்பை வழியாக துபாய்க்கு நேற்று மதியம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது.

இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்பட்டு அதில் பயணிகள் துபாய் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் க்யூ-400 ரக விமானம் குஜராத்தின் கண்ட்லா நகரிலிருந்து நேற்று மும்பை புறப்பட்டது. விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இறக்கையில் உள்ள காற்று தடுப்பான் தகட்டில் விரிசல் விழுந்தது. இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று நடந்த இந்த இரண்டு சம்பவங்கள் உள்பட ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 18 விமானங்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

டிஜிசிஏ நோட்டீஸில் இருப்பது என்ன? - இந்நிலையில் டிஜிசிஏ தனது நோட்டீஸில், "கடந்த சில நாட்களில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பல ஒன்று அவை புறப்பட்ட இடத்திற்கு திரும்பியுள்ளன இல்லாவிட்டால் அவை வேறு ஏதாவது விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இதற்கு மிக மோசமான கண்காணிப்பே காரணமாக இருக்க வேண்டும். இல்லையேல், பராமரிப்பு நடவடிக்கைகளில் குறைபாடு, மெத்தனம் இருக்க வேண்டும்.

மேலும் 2021-ல் டிஜிசிஏ மேற்கொண்ட ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் நிதி மேலாண்மை குறித்த ஆய்வும் சிறப்பானதாக இல்லை. தனது வெண்டார்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சரிவர கணக்குகளை முடிக்கவில்லை அதனால் உதிரிபாகங்கள் பற்றாக்குறை இருப்பதையும் கண்டறிந்துள்ளோம்.

இவற்றையெல்லாம் வைத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகளுக்கு பாதுகாப்பான, சிறப்பான, நம்பத்தகுந்த விமான சேவைகளை வழங்கவில்லை என்று கருதப்படும். எனவே அண்மைச் சம்பவங்கள் குறித்து விரிவான விளக்கமளிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



Read in source website

கர்னூல்: 8-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்கள்’ வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், ஆதோனியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் 47.40 லட்சம் பேருக்கு தோளில் மாட்டிச்செல்லும் வகையில் உள்ள பைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் ஜெகன் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இந்த பைகளை இலவசமாக வழங்குகிறோம். இதன் மூலம் 47,40,421 பேர் பயன் அடைவர். இதற்காக அரசு ரூ.931 கோடி செலவு செய்துள்ளது.

இது கல்வி பரிசு எனும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 3-ம் ஆண்டாக இதை வழங்கி வருகிறோம்.

ஆங்கிலவழிக் கல்வி அவசியம்

ஒவ்வொருவரும் ஆங்கில வழிக்கல்வியை கற்க வேண்டும். அதுவே உயர் கல்வி பயில மிகவும் உதவிகரமாக இருக்கும். அதே சமயம் தாய் மொழியையும் நாம் மறந்து விடக்கூடாது.

தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் தலா ரூ.15 ஆயிரம் செலுத்தப்படுகிறது. அன்றும்-இன்றும் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

8-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்கள்’ வழங்குவோம். இதன் மூலம் மாணவர்கள் விரைவில் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். தற்போது வழங்கப்பட்டுள்ள புத்தகப் பையின் விலை ரூ.2 ஆயிரம் ஆகும். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக பள்ளி சீருடை, ஷூக்கள், சாக்ஸ்கள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக 7 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.



Read in source website

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, கடந்த 4-ம் தேதி பக்தர்கள் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

உலகின் பணக்காரக் கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருவாய் குறைந்தது.

தற்போது வழக்கம்போல பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்த திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தலைமுடி காணிக்கை செலுத்துபவர்கள், துலாபாரம் செலுத்துபவர்கள், அங்கப்பிரதட்சணம் செய்ய வருபவர்கள், மலைக்கு நடந்து வருபவர்கள், திருக்கல்யாண உற்சவம் செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள் என ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட திருமலைக்கு வருகின்றனர்.

இதனால், சனி, ஞாயிற்றுக்கிழமை என வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் காணப்படும் கூட்டம், சாதாரண நாட்களிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாக சர்வ தரிசனம் முறையில் சுவாமியை வழிபட சுமார் 18 மணி நேரம்கூட ஆகிறது.

பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், உண்டியல் காணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே போகிறது. ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு சராசரியாக நாளொன்றுக்கு ரூ.3 கோடி வரை உண்டியல் காணிக்கை வசூலானது. இது இந்த ஆண்டு ரூ.4 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி அதிகபட்சமாக ரூ. 5.73 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். இதுவே, இதுவரை அதிகபட்சமான ஒரு நாள் உண்டியல் வருவாயாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.6.19 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இதுதான் தற்போது தேவஸ்தான உண்டியல் காணிக்கையில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஒரு பக்தர் ஒரே கட்டாக ரூ.1.64 கோடியை காணிக்கையாக செலுத்தி இருந்தார். இவர் ஒவ்வோர் ஆண்டும் இதுபோல் அதிக தொகையை காணிக்கையாக செலுத்தி வருகிறார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை.

கடந்த 4-ம் தேதி சுவாமியை 77,907 பக்தர்கள் வழிபட்டனர். இதில் 38,267 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். நேற்று காலை தர்ம தரிசனத்துக்கு சென்றவர்கள், 12 மணி நேரம் கழித்து சுவாமியை வழிபட்டுவிட்டு வெளியே வந்ததாகத் தெரிவித்தனர்.



Read in source website

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான 'ரிம்பாக் ஒத்திகை'யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன.

பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன.

இதில், சாத்புரா கப்பல் ஜூன் 27-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்த நிலையில், பி-8ஐ விமானம் ஜூலை 2-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்தது. துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ள கடற்படை வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியக கப்பலான யுஎஸ்எஸ் மிசோரியை பார்வையிட்டனர். தொடர்ந்து யுஎஸ்எஸ் அரிசோனா நினைவிடத்தில், இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆறுவார காலம் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில் ஐஎன்எஸ் சாத்புரா மற்றும் ஒரு பி-8ஐ கடலோர ரோந்து விமானமும் பங்கேற்றுள்ளன. நட்பு நாட்டு கடற்படைகளிடையே, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் போர்ப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 28 நாடுகளைச் சேர்ந்த 38 போர்க் கப்பல்கள், 9 நாடுகளின் தரைப்படையினர், 31 ஆளில்லா சாதனங்கள், 170 விமானங்கள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்னனர்.

இந்தக் கடல் ஒத்திகை ஜூலை 12- ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 4-ம் தேதி பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.



Read in source website

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன், இல்லை இல்லை இப்படி சொல்லலாம் சர்வதேச கிரிக்கெட் களத்தின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார் மகேந்திர சிங் தோனி. இன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு வயது 41. அவர் குறித்த அறிந்ததும் அறியாததும் என முத்தான 41 தகவல்கள்.

2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. மிகவும் நெருக்கடியான அன்றைய சூழலில் அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சர்ப்ரைஸ் முடிவு.

பின்னாளில் அவர் இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று கொடுக்கும் மகத்தான கேப்டன் என யாரும் கணித்திடவில்லை. ஆனால், அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட அனைத்தையும் ஒரு கேப்டனாக அவர் திறம்பட செய்தார். பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜி சொன்ன வசனம் அப்படியே கச்சிதமாக நிஜ வாழ்வில் பொருந்திப் போவது தோனிக்கு மட்டும் தான். சக்சஸ். சக்சஸ்.. சக்சஸ்… என்பது மட்டும் தான் அது.

தோனி: அறிந்ததும் அறியாததும்

  1. டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒன் அண்ட் ஒன்லி கேப்டன் தோனி மட்டும் தான்.
  2. 16 ஆண்டு காலம் கிரிக்கெட் களத்தில் அயராது ஓடி ஆடி விளையாடியவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து பார்மெட்டையும் சேர்த்து மொத்தம் அவர் விளையாடியது 538 போட்டிகள். 526 இன்னிங்ஸில் களம் கண்டுள்ளார். அதன் மூலம் 17266 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 16 சதங்கள் மற்றும் 108 அரை சதங்கள் இதில் அடங்கும்.
  3. 2004, டிசம்பர் 23-ஆம் தேதி அன்று சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். அவர் விளையாடிய அந்த முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
  4. ஐபிஎல் களத்தில் 10 முறை இறுதிப் போட்டியில் விளையாடியவர். அதிக முறை ஐபிஎல் பிளே-ஆஃப்களில் விளையாடியவர் தோனி.
  5. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம். அதனை அவரது நண்பர் சந்தோஷ் லால் மூலம் கற்றுக் கொண்டு, அந்த ஷாட் ஆடுவதில் கைதேர்ந்த வீரராக தேர்ச்சி பெற்றார்.
  6. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முதன் முறையாக நம்பர் 1 அணியாக இடம் பெற செய்த கேப்டன் தோனி தான். 2009 வாக்கில் மும்பையில் இலங்கை அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த மைல்கல்லை இந்தியா எட்டியது.
  7. கோலிக்கு முன்னதாக இந்திய அணியை வழிநடத்தி அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டனாகவும் அறியப்படுகிறார் தோனி. அவரது தலைமையின் கீழ் மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கோலி தலைமையில் மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
  8. 2014 வாக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு கேப்டன் பொறுப்பை கோலி வசம் ஒப்படைத்தார் தோனி.
  9. அவரது சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்தும் டிசம்பர் மாதம் தான் நடந்துள்ளது. அதே போல அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பும் டிசம்பர் மாதம் தான் வெளியானது. அதனால் டிசம்பருக்கும் அவருக்கும் ஏதோ ஒரு வகையில் பந்தம் இருக்கிறது.
  10. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 656 நாட்கள் முதல் நிலை பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார்.
  11. 2011-2020 தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருதை வென்றுள்ளார் தோனி. களத்தில் தனது கேம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தும் வீரர்களில் முதன்மையானவராக திகழ்ந்தவர் தோனி.
  12. கிரிக்கெட் உலகின் சிறந்த பினிஷர் என அறியப்படுபவர். பல போட்டிகளை இந்திய அணிக்கு வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார்.
  13. சர்வதேச களத்தில் 359 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அதன் மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
  14. விக்கெட் கீப்பரான தோனி சர்வதேச அரங்கில் ஒரே ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் Travis Dowlin தான் அவர் கைப்பற்றிய அந்த ஒரு விக்கெட்.
  15. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் தோனி. கடந்த 2005-இல் அவர் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்திருந்தார்.
  16. அதே இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசிய முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டினார்.
  17. மகத்தான கேப்டனாக அறியப்படும் தோனி கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானவர். ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, விராட் கோலி மற்றும் ஜடேஜா (ஐபிஎல் - சிஎஸ்கே) தலைமையிலான அணியில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
  18. சர்வதேச கிரிக்கெட்டில் Successful கேப்டனாக இருந்தாலும் அவர் ரஞ்சிக் கோப்பை அல்லது டொமஸ்டிக் தொடர்களில் கோப்பை வென்றது கிடையாது.
  19. நியூசிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கேப்டன் என அறியப்படுகிறார் தோனி. கடந்த 2009-இல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
  20. அதே போல 2010-11 வாக்கில் தோனி தலைமையிலான இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தி இருந்தது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அந்த ஒரு தொடரை தவிர 7 முறை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
  21. 5 முதல் 7-வது பேட்ஸ்மேன்களுக்கான வரிசையில் (பேட்டிங் ஆர்டர்) விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் சுமார் 8273 ரன்களை எடுத்துள்ள ஒரே ஒரு பேட்ஸ்மேன் அவர் தான்.
  22. 2007, 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016 என ஆறு முறை டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஒரே கேப்டன் தோனி தான். மொத்தம் 33 போட்டிகளில் அவர் இந்தியாவை வழி நடத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை கேப்டன்சி ஸ்டேட்களில் இதுவொரு ரெக்கார்டாக உள்ளது.
  23. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு 2018-இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அணியை தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார் தோனி.
  24. ஒருநாள் கிரிக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டம்பிங் டிஸ்மிஸலை செய்த விக்கெட் கீப்பர் தோனி.
  25. கால்பந்தாட்ட கோல் கீப்பராக தனது கெரியரை தொடங்கியவர்.
  26. 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. இது எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை.
  27. DRS சிஸ்டத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று தான் சொல்வார்கள். கிரிக்கெட் களத்தில் மின்னல் வேக ஓட்டக்காரர்.
  28. ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கடந்த 2017 வாக்கில் தோனி படைத்தார்.
  29. மார்க் பவுச்சர் மற்றும் கில்கிறிஸ்ட்டுக்கு அடுத்ததாக மொத்தம் 829 டிஸ்மிஸலை மேற்கொண்ட விக்கெட் கீப்பராக தோனி திகழ்கிறார்.
  30. சச்சினுக்கு அடுத்ததாக இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக தோனி உள்ளார்.
  31. மொத்தம் 288 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி.
  32. ஐபிஎல் அரங்கில் அவர் சதம் பதிவு செய்தது கிடையாது.
  33. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார். அதோடு சென்னையை தனது இரண்டாவது தாய் வீடு என சொல்பவர் அவர். உலகில் அவருக்கு பிடித்த இடங்களில் சென்னையும் ஒன்று.
  34. 2019 ஜனவரியில் ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேனாக இணைந்தார் தோனி.
  35. ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 வெற்றிகளை பெற்ற கேப்டனாக திகழ்கிறார்.
  36. 2013-இல் இந்திய அணியை தொடர்ச்சியாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற செய்த கேப்டன் தோனி.
  37. நம்பர் 7 ஜெர்சியை அணிந்து விளையாடுபவர் தோனி. இது உள்ளூர் முதல் உலக கிரிக்கெட் வரை அவர் கடைப்பிடித்து வருகிறார். அவரது பிறந்த நாளும், மாதமும் கூட ஏழு தான்.
  38. தோனி வாகனங்களின் பிரியர். ஹம்மர் எச் 2, மிட்சுபிஷி பஜெரோ, ஜி.எம்.சி சியரா பிக்-அப் டிரக், போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஆடி கியூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் மற்றும் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் ரக வின்டேஜ் கார் என பல கார்களை வைத்துள்ளார். இந்த லிஸ்டில் டஜன் கணக்கிலான பைக்குகளும் அடங்கும்.
  39. ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட்டும், இந்தியாவின் சச்சினும் தான் தோனிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள்.
  40. ஜெயித்தாலும் தோற்றாலும் 'சென் துறவி போல' எப்போதும் ஒரே ரியாக்‌ஷனில் இருப்பவர் தோனி.
  41. தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரை ரன்-அவுட்டில் தொடங்கி, அந்த ரன்-அவுட்டிலேயே முடித்தவர் தோனி. தனது கடைசி கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில் தான் என சூளுரைத்துள்ளார் அவர்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல.



Read in source website

இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “இத்தாலியின் மிக நீளமான போ நதியை ( போ நதி அளவு 650 கிமீ) சுற்றியுள்ள 5 மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினால் நாட்டின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30%க்கும் அதிகமான விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி தடுக்கும் பொருட்டு வடக்கில் உள்ள ஐந்து மாகாணங்களில் (லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ )இத்தாலி அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.

வறட்சி கடுமையாக ஏற்பட்டுள்ள 5 மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க சுமார் 36.5 மில்லியன் யூரோவை இத்தாலி அரசு ஒதுக்கி உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

வறட்சியை கட்டுப்படுத்தவே அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் வறட்சி நிலைமையை சமாளிக்க சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை இத்தாலி எதிர்கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. அதி தீவிர மழை, கடும் வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் மனிதர்களும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.



Read in source website

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது கடிதத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது கவலை தருகிறது. ஆனால், இதே நிலையில் தொடர முடியாது என்பதால் வெளியேறுகிறேன். அரசாங்கம் ஒழுங்காக, சிரத்தையுடன், திறம்பட நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு வாய்ப்பில்லை என்பதால் நான் ராஜினாமா செய்கிறேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் கனவை தொடர்வாரா?

ரிஷி சுனக், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக பிரிட்டன் பிரதமருக்கான போட்டாப் போட்டியில் அவர் முன்நின்றார். ஆனால், மனைவி அக்‌ஷதா மீதான வரி ஏய்ப்பு புகார்களால் மக்கள் செல்வாக்கில் எதிர்பாரா சரிவு கண்டார். இதனையடுத்து அவர், தீவிர அரசியலில் இருந்து விலகப்போகிறார்’ என்று லண்டன் ஊடகங்கள் கூறின. ஆனால், தனது கடும் உழைப்பால் இளம் வயதிலேயே பிரிட்டன் பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறிய ரிஷி சுனக், அரசியல் போரில் அவ்வளவு எளிதில் பின்வாங்க மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் சுகாதாரத் துறை அமைச்சர் சாஜித் ஜாவேத், நான் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் எனது ராஜினாமா பற்றி தெரிவித்துவிட்டேன். நான் இதை சொல்வதில் வேதனைப்படுகிறேன், ஆனால், உங்கள் தலைமையின் கீழ் எதுவும் மாறாது என்பது தெளிவாகிவிட்டது. ஆகையால் நீங்கள் எனது நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள் என்று கூறினார்.
எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன.

இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஸ்டீவ் பார்க்லேவசவிடம் சுகாதார அமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.



Read in source website

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தாக்க தொழில்களுக்கு உகந்த சூழலை வழங்கும் மாநிலங்களின் தரவரிசை அறிக்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் பல்வேறு மாநிலங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன.
"புத்தாக்க தொழில் முன்னெடுப்புக்கான பார்வை மற்றும் இலக்குகளைக் கொண்டிருத்தல்' என்ற பிரிவில் பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், அந்தமான்-நிகோபார், அருணாசல பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களுடன் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. "புத்தாக்க தொழில்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம்' என்ற பிரிவில் நமது அண்டை மாநிலமான கேரளம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இடம்பெற்றிருப்பது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை எடுத்துரைக்கிறது.
"ஸ்டார்ட்அப் இந்தியா' எனப்படும் "புத்தாக்க இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, 2015, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையின்போது அறிவித்தார். எண்மம், தொழில்நுட்பத்துறை முதல் விவசாயம், உற்பத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வரை புத்தாக்க தொழில்முனைவோரை உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
மக்களின் தினசரி வாழ்க்கையை எளிமைப்படுத்தும் புதுமையான யோசனையை தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெற்றிகரமான ஒரு தொழிலாக உருவாக்குவதுதான் புத்தாக்கத் தொழில் முனைவு. ஸ்விகி, úஸாமாட்டோ போன்ற கைப்பேசி செயலிகள் மூலம் விருப்பமான உணவகத்தில் விருப்பமான உணவைத் தேர்வு செய்து வீட்டுக்கே வரவழைப்பது புத்தாக்க முனைப்பில் ஒன்று. இப்போது பல உணவு விடுதிகள், தங்களுக்கான விநியோகச் செயலிகளை உருவாக்குகின்றன. இதே போன்ற முனைப்புதான் ஊபர், ஓலா போன்ற வாடகை வாகனங்களை செயலி மூலம் இயக்கும் புத்தாக்க தொழில் முனைப்பு.
உலகம் முழுவதும் புத்தாக்க தொழில்கள் முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியிருந்தாலும் இந்தியா அதில் முன்னணியில் உள்ளது நமக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும். இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு வரை 500-க்குள் இருந்த புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை, அடுத்த எட்டு ஆண்டுகளில் 70,000-ஆக அதிகரித்திருப்பதே இதற்கு சான்று.
இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் செயல்படுகின்றன. இந்தியாவின் 625 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புத்தாக்க நிறுவனமாவது செயல்பட்டு வருகிறது என்பது அதன் வீச்சின் அடையாளம்.
இதில், ரூ.7,500 கோடி (1 பில்லியன் டாலர்) மதிப்புகொண்ட "யுனிகார்ன்' நிறுவனங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இந்த யுனிகார்ன் நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் கோடி. உலக அளவில் 487 யுனிகார்ன் நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 300 யுனிகார்ன் நிறுவனங்களுடன் சீனா இரண்டாம் இடத்திலும், 100 யுனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக "ஓரியோஸ் வென்சர்ஸ்' ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த யுனிகார்ன் நிறுவனங்களில் பெங்களூரு முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, "புத்தாக்க தொழில்துறை புதிய இந்தியாவின் முதுகெலும்பு; நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றலை அளிக்கும் உந்துசக்தி' என்று குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. இந்தியாவில் இப்போது 55 தொழில்துறைகளில் புத்தாக்க தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
"யுபிஐ' எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற அமைப்பின் வெற்றி, புத்தாக்க தொழில்துறையின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோல பிற எண்ம பணப்பரிமாற்ற முறைகளும் புத்தாக்க தொழிலுக்கு உதவுகின்றன.
புத்தாக்க தொழில் புரட்சியால் பாரம்பரிய தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கிற விமர்சனம் எழுப்பப்படுகிறது. ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இணையவழி வர்த்தகம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்குவது குறையாமல் இருப்பதுபோலத்தான் இதுவும். கைப்பேசிகள், எண்ம தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவற்றின் நேரடி விற்பனை வேண்டுமென்றால் சற்று குறைந்திருக்கலாம். மற்றபடி, புத்தாக்க தொழில் மக்களுக்கு அளிக்கும் பயன்கள் ஏராளம்.
இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தாக்க தொழில்முனைவோர் உருவாகி வருவது, சமச்சீராக இந்திய இளைஞர்கள் தொழில்முறை சாதனை புரிந்து வருவதைக் காட்டுகிறது. கல்வி, வணிகம் மட்டுமின்றி விவசாயத்துறையிலும் புத்தாக்க நிறுவனங்கள் கோலோச்சுவதும், அத்துறையில் இந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டை ஈர்த்திருப்பதும் கவனிக்கத்தக்கவை.
தொழில்நுட்பங்கள் வளர வளர மக்களின் வாழ்க்கை முறை எளிமையாகிறது. தொழில்நுட்பங்களின் துணையுடன் புதிய சிந்தனையைப் புகுத்தும் புத்தாக்க தொழில்கள், சர்வதேச வரைபடத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கின்றன. நாம் பெருமைப்படலாம்!



Read in source website

ஆந்திர பிரதேசப் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் முத்திரை பதித்தவர் அல்லூரி சீதாராம ராஜு. வனப்பகுதிக்குள் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல் முறையில் தாக்கி பெரும் சேதம் விளைவித்த அல்லூரியை நினைத்தாலே ஆங்கிலேயப் படைகள் மிரண்டன. வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய இந்த அச்சமற்ற நாயகரின் நினைவுகளுக்கு நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துவோம்.
ஜூலை 4-ஆம் தேதி சுதந்திரப் போராளி அல்லூரி சீதாராம ராஜுவின் 125-ஆவது பிறந்த ஆண்டு தொடங்கியுள்ளது. சுதந்திரத்தின் பவளவிழாவைக் கொண்டாடும் நேரத்தில் இந்த விழாவும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
1897, ஜூலை 4-இல் பிறந்த அல்லூரி சீதாராம ராஜு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 'மான்யம் வீருடு' என்று அழைக்கப்பட்டவர். அதன் பொருள், வனத்தின் நாயகர் என்பதாகும். இப்பகுதிகளில் பல வீடுகளில் குழந்தைகளுக்கு இவரது பெயரை வைப்பது வழக்கமாக இருக்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான இவரது துணிச்சலான சாகசங்களும் அதிரடித் தாக்குதல்களும் அக்காலத்தில் ஆங்கிலேய நிர்வாகத்தையே மிரளச் செய்தன. இவரது வாழ்க்கை இப்பகுதி மக்களிடையே கதாநாயக அந்தஸ்துடன் போற்றப்படுகிறது. ஆனால் நமது வரலாற்றுப் புத்தகங்களில் இவரது வீர சாகசங்கள் போதிய அளவு பதிவு செய்யப்படவில்லை.
பிறவியிலேயே புரட்சியாளராகப் பிறந்தவர் அல்லூரி. தனது 18-ஆவது வயதில் துறவறம் ஏற்ற இவர், மதராஸ் மாகாணத்தில் நடைமுறையிலிருந்த மதராஸ் 1882 வனச்சட்டத்தை எதிர்த்து, 1922 முதல் 1924 வரை "ராம்பா கலகம்' எனப்படும் போராட்டத்தை விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டப் பகுதிகளில் முன்னெடுத்தவர்.
அந்தக் கடுமையான போராட்டத்தின் இறுதியில் தனது 27-ஆவது வயதில் ஆங்கிலேயப் படைகளின் தாக்குதலில் பலியானவர் அல்லூரி.
வனப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள், தங்கள் பகுதியில் போடு சாகுபடி முறையில் விவசாயம் செய்வதையும், அதில் கிடைக்கும் விளைபொருட்களை வனப்பகுதிக்கு வெளியே விற்பதையும் மதராஸ் வனச்சட்டம் தடுத்தது.
அதனால் வெகுண்ட, தீவிரமான தேசபக்தியால் உந்தப்பட்ட அல்லூரி, பழங்குடி மக்கள் ஆங்கிலேய அரசால் சுரண்டப்படுவதை எதிர்த்தும், வனத்துக்குள் பழங்குடி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் பிடியிலிருந்து அவர்களை மீட்கவும் தனது ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஆங்கிலேயரின் அநியாய ஆட்சிக்கு எதிராக பழங்குடி மக்களை அணிதிரட்டிய அல்லூரி, அவர்களையும் போராளிகளாக்கினார். "வாழ்க்கை என்பது நீண்டதாக இருப்பதைவிட மிகப் பெரியதாக இருக்க வேண்டும்' என்பது டாக்டர் அம்பேத்கரின் புகழ்மிக்க பொன்மொழி. அதன்படியே அல்லூரியின் காவிய வாழ்க்கை அமைந்தது.
கடந்த ஏப்ரல் மாதம், அல்லூரி பிறந்த பாண்டுரங்கி கிராமத்துக்குச் செல்லும் அதிருஷ்டம் எனக்கு வாய்த்தது. அங்கு அல்லூரியின் கிராமத்தைச் சார்ந்த மக்களையும், அவரது ரத்த சொந்தங்களையும் நான் சந்தித்தேன். அங்கு அல்லூரிக்கு உயரமான ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வேட்டியும் அங்கவஸ்திரமும் தரித்து, கரங்களில் வில் அம்புடன் அல்லூரி நிற்கும் தோரணையே கம்பீரம். அதைக் கண்டபோது, அசுரர்களின் அதர்மத்துக்கு எதிராக வில்லேந்திய கடவுள் ராமனே எனக்கு நினைவுக்கு வந்தார்.
அவரது பெயரிலுள்ள சீதாராமன் என்பது அன்னை சீதையின் பணிவையும் கருணையையும் கடவுள் ராமனின் துணிவையும் வீரத்தையும் அடையாளப்படுத்துகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்த, மிகவும் பின்தங்கிய மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தனது வாழ்வையே போர்க்களமாக்கிக் கொண்ட தன்னலமற்ற எளிய விடுதலைப் போராளி அல்லூரி.
எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அல்லூரியின் பள்ளிக்கல்வி தந்தையின் திடீர் மரணத்தால் தடைபட்டது. அதுவே இவரது ஆன்மிக நாட்டத்துக்குக் காரணமாக மாறியது. இளைஞரான அல்லூரி நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்றார்.
நாசிக், கங்கோத்ரி, சிட்டகாங் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) போன்ற பல இடங்களுக்குச் சென்ற இவர், தனது தேசத்தின் குடிமக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கி இருப்பதையும், ஆங்கில காலனி ஆதிக்கத்தில் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதையும் கண்டார்.
அந்த புனிதப் பயணம் இவரது கண்களைத் திறந்தது. இந்திய மக்களை காட்டுமிராண்டித்தனமான சுரண்டலுக்கு உட்படுத்திய, பழங்குடி மக்களை கடுமையாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை அல்லூரி உணர்ந்தார்.
வீடு திரும்பிய இளைஞர் அல்லூரி, கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்த பகுதிகளை தனது பணிக்களமாக மாற்றிக் கொண்டார். அந்த மக்களின் மிகத் தாழ்ந்த வறுமை நிலையை மாற்றவும், அவர்களுக்கு கல்வியறிவு புகட்டவும், அதன் மூலமாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல முயற்சிகளை அல்லூரி மேற்கொண்டார்.
அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகளாக இருந்த வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளால் வனப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்தனர்.
எனவே, மக்களை சிறிது சிறிதாகத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆங்கிலேய அரசுடன் நேரடியாக மோதுவதற்கான ஆயத்தங்களை அல்லூரி செய்து வந்தார்.
பழங்குடியினரை வஞ்சித்த ஆங்கிலேய அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக, "மான்யம் வீருடு' அல்லூரி சீதாராம ராஜுவின் தலைமையில் "ராம்பா கலகம்' (1922 - 1924) வெடித்தது. அக்கலகத்தில் அல்லூரியின் போர்க்கள சாகசங்கள் இன்றும்கூட, ஆந்திரத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் நாட்டுப்புறக் கதைகளாகப் பாடப்படுகின்றன.
வனத்தின் உட்பரப்பையும் பழங்குடியினரின் பாரம்பரிய போர்க்கலைகளையும் நன்கு அறிந்தவர் அல்லூரி. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்முறையில் வித்தகரான இவரது தலைமையில் வனவாசி மக்கள் ஆங்கிலேயப் படைகள் மீது தொடர்ந்து நடத்திய தாக்குதல்கள் அரசை நிலைகுலையச் செய்தன.
ஆங்கிலேய அரசின் காவல் நிலையங்கள் மீதான இவரது தாக்குதல்கள் மிகத் துல்லியமானவையாகவும் தனித்துவமானவையாகவும் விளங்கின. தனது ஒவ்வொரு தாக்குதலின்போதும், அத்தாக்குதலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் பட்டியலை தனது கையொப்பத்துடன் காவல் நிலையத்தில் விட்டுச் செல்வது அல்லூரியின் வழக்கம்.
இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு மேலும் பல இரக்கமற்ற கொடூரங்களை அரங்கேற்றியது. ஆயினும் அல்லூரி நிதானம் தவறாமல் நடந்துகொண்டார். ஒருமுறை, அரசுடன் சேருமாறு அறிவுறுத்தவும் தன்னைக் கைது செய்யவும் வந்த இந்திய காவல் அதிகாரி ஒருவரைப் பிடித்த அல்லூரி, அவருக்கு உயிர்ப்பிச்சை அளித்தார்.
சுமார் இரண்டாண்டுகள் வனத்துக்குள் இருந்தவாறு அல்லூரி நடத்திய தீவிரமான யுத்தம் ஆங்கிலேய அரசுக்கு கெளரவ பிரச்னையாக மாறியது. கேரளத்திலிருந்து மலபார் சிறப்புப் படையை வரவழைத்த ஆங்கிலேய அரசு, அல்லூரியின் தொடர் யுத்தத்திற்கும் இவரது ஆதரவாளர்களின் கிளர்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க முனைந்தது.
அந்தப் போரில், 1924 மே 27-ஆம் தேதி அல்லூரி சீதாராம ராஜு வீரமரணம் அடைந்தார். இந்திய விடுதலைப் போராட்ட நாயகர்களின் பட்டியலில், அந்த வண்ணமயமான சுதந்திரவானில் மிளிரும் அற்புதமான விடிவெள்ளிகளின் வரிசையில் இவரும் இணைந்தார்.
இந்தியாவில் தோன்றிய வீரப் புதல்வர்களுள் அல்லூரி சீதாராம ராஜு முக்கியமானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தேசிய அளவிலான நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அல்லூரி போன்றவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கும் உண்மையாகும்.
இத்தவறு இப்போதேனும் திருத்தப்பட வேண்டும். அல்லூரியின் வீர சாகசங்கள் நிறைந்த ராம்பா கலகத்தின் நூற்றாண்டை விரைவில் கொண்டாடப் போவதாக இந்திய அரசு தற்போது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம், பீமாவரத்தில் அல்லூரியின் 125-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருப்பதும், அங்கு மாவீரர் அல்லூரியின் சிலையைத் திறந்து வைத்திருப்பதும் மிகப் பொருத்தமானது.
இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவை பவளவிழாவாக நாம் கொண்டாடும் இத்தருணத்தில், இந்திய விடுதலைக்காகவும் இந்த நாட்டின் உருவாக்கத்துக்காகவும் போராடிய பழங்குடியின மக்களை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். நாட்டின் விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடிய அவர்களது தியாகத்தையும், தேச கெளரவத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதியையும் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நாட்டுநலனுக்காக தங்கள் வாழ்வை ஆகுதியாக்கிய விடுதலை வீரர்களுக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள புகழஞ்சலியாக இருக்கும்.

கட்டுரையாளர்:
குடியரசு துணைத் தலைவர்.



Read in source website