DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 06-06-2022

 

குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் கூறி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த காஞ்சிபுரம் சிறுமியை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி - மாலதி தம்பதியினர், இவர்களுக்கு கனிஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார். மூர்த்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக சிறுமி கனிஷ்கா எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.

ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த நிலையில், சிறுமியின் ஞாபகத் திறனை பார்த்த பெற்றோர் முர்த்தி-மாலதி தம்பதியினர் தனது மகளை ஏதாவது சாதனை செய்ய பழக வேண்டும் என நினைத்து முயற்சி செய்தனர்.

அதன்படி, தமிழ் நூலான  குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் வாசிக்க வைத்து பயிற்சி அளித்தனர்.

குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடம் கூறும் சிறுமி கனிஷ்கா.

சிறுமி கனிஷ்கா நன்கு பயிற்சி பெற்ற பின்னர் தற்பொழுது 99 பூக்களின் பெயர்களையும் 52 வினாடிகளிலும், 110 கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் 3 நிமிடம் 3 வினாடிகளில் குறைந்த கால நேரத்தில் சொல்லி சாதித்து  கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்தார்.

கலாம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியின் செயலை அறிந்து, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, சிறுமி கனிஷ்காவை நேரில் வரவழைத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டி வாழ்த்தினார்.

குறைந்த வயதில் அறிவுத்திறனோடு சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியையும், சாதனை புரிய ஊக்குவித்த பெற்றோர்களையும் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினார்கள்.



Read in source website

வாழப்பாடி: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பல் கிராமத்தில் காணப்படும் முதுமக்கள் ஈமத்தாழி கல் வட்டங்களை பாதுகாக்க வேண்டுமென்று  வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  மக்கள், இறந்துபோன முதியோர்களின் உடல்களை தடிமான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர். இவற்றையே முதுமக்கள் தாழி என்றழைக்கின்றோம்.  மக்கள் வாழ்வியல் கலாச்சாரத்தை சித்தரிக்கும் இந்த முதுமக்கள் தாழியில் இறந்து போன முதியோர்களின் உடல்கள் மட்டுமின்றி, இவர்கள் பயன்படுத்தி  ஓரிரு பொருட்களையும் சேர்த்தும் புதைத்துள்ளனர். 

இந்த ஈமத்தாழி நினைவுச் சின்னங்களை சுற்றி, வட்டவடிவில்  கற்களை பதித்து வைத்துள்ளனர். இதனால், இந்த ஈமச்சின்னங்கள் கல் வட்டம் என வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. 

வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்  தும்பல் கிராமத்தில், 1000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றாக,  தும்பல் - கோட்டப்பட்டி பிரதான சாலையையொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடக்கு புறத்தில் தனியார் நிலத்தில் இன்றளவும் ஏராளமான கல் வட்டங்கள் காணப்படுகின்றன.

கல்வராயன்மலை அடிவாரம் தும்பல் கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் வட்டங்கள்  காணப்படுவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொன்.வெங்கடேசன், சி.பொன்னம்பலம், பெ.பெரியார்மன்னன் ஆகியோர் கொண்ட குழுவினர்  2016–ல் கண்டறிந்து ஆவணப்படுத்தினர். 

கல் வட்டங்கள் அமைந்துள்ள பகுதி தனியார் நிலம் என்பதால் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் போது  பல கல் வட்டங்கள் சிதைக்கப்பட்டது. தற்போது 5 கல் வட்டங்கள் மட்டுமே சிதையாமல் முழுமையாக காணப்படுகின்றன.

எஞ்சியுள்ள கல் வட்டங்களையாவது சிதைக்காமல் பாதுகாப்பதற்கு, சேலம் மாவட்ட நிர்வாகமும், தொல்லியத்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, தும்பல் கல் வட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க, தொல்லியல் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தொல்லியல் துறை சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்ட அலுவலரும், பெரும்பாலை அகழாய்வு திட்ட இயக்குநருமான பரந்தாமன், கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலரும், மயிலாடும்பாறை அகழாய்வு திட்ட இயக்குநருமான  வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர், தும்பல் கிராமத்திற்கு சென்று கல் வட்டங்களை ஆய்வு செய்தனர். படங்கள் மற்றும் விடியோ காட்சிகளாக பதிவு செய்து சென்றனர். இந்த நிலப்பகுதி குறித்து வருவாய்த்துறை ஆவணங்களையும் சேகரித்து சென்றனர். 

தும்பல் கல் வட்டங்கள் குறித்து  தமிழக அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் விரிவான அறிக்கை அளிக்கப்படுமெனவும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஏற்ப, கல் வட்டங்களை பாதுகாக்கவும், அகழாய்வு நடத்துவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். கோரிக்கை விடுத்ததும் ஆய்வுக்கு ஏற்பாடு செய்த  தமிழக அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் சேலம் வரலாற்று ஆய்வு மைய வரலாற்று ஆர்வலர்கள் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
 



Read in source website

தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்கும் ‘இ-டிக்கெட்’ அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்கும் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக ‘இ-டிக்கெட்’ அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி-பே, மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்துகளில் டிக்கெட் பெறலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.



Read in source website


புது தில்லி; கேரள மாநிலத்தில் நோரோ வைரஸ் பாதித்த இரண்டு நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக மாநில சுகாதார கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வயிற்றுப் பகுதியில் தாக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

நோரோ தீநுண்மி பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுகிறது. எனவே, விலங்குகளைக் கையாள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முதல் பாதிப்பு ஆலப்புழாவில் 2021ஆம் ஆண்டு பதிவானது. சுமார் 950 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து சுமார் ஒன்றரை மாதம் நோரோ பாதிப்பு கண்டறியப்பட்டநிலையில், பிறகு கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது ஜூன் மாதம் மீண்டும் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிச் செல்லும் இரண்டு மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 



Read in source website


குவகாத்தி: இந்து திருமண சட்டத்தில், இரண்டாவது மனைவி என்ற வாதம் கிடையாது என்பதால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற அதிகாரம் இல்லை என்று குவகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2016ஆம் ஆண்டு அரசு ஊழியரான பிரேன் டேகா என்பவர் உயிரிழந்தார். அவரது இரண்டாவது மனைவி பிரதிமா தேகா, குடும்ப ஓய்வூதியம் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை பிரெனின் முதல் மனைவி கோலபி தேகா எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க.. வருங்கால கணவரைக் கைது செய்த 'பெண் சிங்கத்துக்கு' வந்த சோதனை?

இந்த வழக்கை விசாரித்த குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி, இந்த திருமணச் சட்டத்தில் இரண்டாவது மனைவி என்ற கருத்துக்கு இடமில்லை. அதே போல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இரண்டாவது திருமணம் என்பது குற்றமாகக் கருதப்படும். அதன் அடிப்படையில் விவகாரத்தும் கோரலாம். எனவே, இந்த வழக்கில் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாத நிலையில், இரண்டாவது மனைவியின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, முதல் மனைவி இருக்கும் போது, குடும்ப ஓய்வூதியம் பெற இரண்டாவது மனைவிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

 

சியோலில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் இரவு நேர சுரங்கப்பாதை சேவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேர சுரங்கப்பாதை செயல்படாத நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை ஆப்ரேட்டர்கள் இன்று வெளியிட்டனர். 

தலைநகரில் உள்ள சுரங்கப்பாதை சேவைகளின் ஆபரேட்டர்களான சியோல் மெட்ரோ மற்றும் கோரைலின் கூற்றுப்படி, 

வார நாளில் லைன் 1 இன் இயக்க நேரம் ஜூலை 1 முதல் நள்ளிரவு அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படும், அதே நேரத்தில் 3 மற்றும் 4 லைன் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில், சுரங்கப்பாதை சேவைகள் முன்பு போலவே நள்ளிரவு வரை இயங்கும்.

லைன் 2 மற்றும் லைன் 5-8 ஆகியவை செவ்வாய்க்கிழமை தாமதமாகச் சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தலைநகர் பகுதியில் நான்கு வழி ரயில் பாதைகள், சுயின்-பண்டாங் லைன் உள்பட, ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சேவை ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.



Read in source website

திருவனந்தபுரம்: கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் இருவருமே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். 

இது குறித்து, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், "விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கவலை கொள்ளத் தேவையில்லை. அப்பகுதியில், சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்தார்.

நோரோ வைரஸ் என்பது புது வகையான தீநுண்மி தொற்று இல்லை. பல காலமாக சமூகத்தில் பரவியிருக்கும் ஒரு வகையான பாதிப்புதான் என்றாலும், குளிா் மற்றும் மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும். அந்த காலங்களில்தான் குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் மற்றும் முதியவா்கள் அதிக அளவில் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகின்றனா்.



Read in source website

மத்திய அரசு திட்டமிட்டதை விட 5 மாதங்களுக்கு முன் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், அந்நியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீா்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2018-இல் அறிவிக்கப்பட்ட ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை’ 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. பின்னா், இந்த இலக்கை முன்கூட்டியே அடையும் நோக்கில், 2025-26-க்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதற்கான வழிமுறைகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமா் மோடி வெளியிட்டாா். இந்நிலையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கானது தற்போது எட்டப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக 10 சதவீதத்தை எட்டியுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணியை சேமிக்க வழிவகை செய்தது. மேலும் மாசு உமிழ்வை 27 லட்சம் மெட்ரிக் டன் குறைத்து, ரூ.40,600 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு விரைவாக செலுத்த வழிவகுத்தது.

இதன் மூலம் 2025-26-க்குள் எத்தனால் கலப்பு திட்டம் 20 சதவீத இலக்கை எட்டும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு படிப்படியாக நாடு முழுவதும் விரிவடையும் என்றும் எண்ணெய் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

புதிய தேசிய கல்விக் கொள்கைக் குறித்து ஆராய்ந்து அறிந்துகொள்ள பிரிட்டனின் 22 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த குழு 5 நாள் பயணமாக திங்கள்கிழமை (ஜூன் 6) இந்தியா வரவுள்ளது.

இதுதொடா்பாக பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து அறிந்துகொள்ள பிரிட்டனின் 22 பல்கலைக்கழகங்கள், பிரிட்டன் கல்வித் துறை, பிரிட்டன் சா்வதேச வா்த்தகத் துறை அடங்கிய குழு ஜூன் 6 முதல் 10-ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறது. இந்தப் பயணத்தின்போது மத்திய அரசு அதிகாரிகள், தில்லி, குஜராத், கா்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அரசு அதிகாரிகளுடன் பிரிட்டன் குழு கலந்துரையாடும்.

இந்தக் கலந்துரையாடல் கூட்டங்கள் உயா்கல்வித் துறையில் இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுக்குப் புத்துயிா் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு கடந்த கல்வி, இரட்டைப் பட்டங்கள் உள்ளிட்டவை மூலம் இந்தியாவுடனான உறவை விரிவுபடுத்துவதில் பிரிட்டன் குழு கவனம் செலுத்தும் என்று தெரிவித்தனா்.



Read in source website

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை (லைஃப்)’ என்ற சா்வதேச இயக்கத்தைப் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தாா். சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவா் பில் கேட்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்போா், பூமிக்கு ஆதரவாகச் செயல்படுவோா் ஆவா். எதிா்காலத்தை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும். ‘ஒரே பூமி, பல்வேறு முயற்சிகள்’ என்ற கொள்கையை மையமாகக் கொண்டு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சா்வதேச முயற்சிகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.

கரியமில வாயு சாராத வாழ்க்கை முறை குறித்து மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்தினாா். சுற்றுச்சூழல் சாா்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் வேளையில், நீடித்த வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் மனிதா்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்றாா்.



Read in source website

 

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

நார்வே செஸ் போட்டியில் பிளிட்ஸ் பிரிவில் கார்ல்சனை ஏற்கெனவே தோற்கடித்தார் ஆனந்த். இந்நிலையில் கிளாசிகல் பிரிவிலும் கார்ல்சனை அவர் தோற்கடித்துள்ளார். 

இருவருக்கிடையிலான 5-வது சுற்று ஆட்டம் 40 நகர்த்தல்களின் முடிவில் டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற ஆர்மகெடன் முறையிலான ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். இன்னும் நான்கு சுற்றுகள் மீதமுள்ள நிலையில் 10 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார் ஆனந்த். 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2-ம் இடத்தில் உள்ளார். 



Read in source website

 

90களில் பிறந்த வீரர்களில் 10,000 டெஸ்ட் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட்.

லார்ட்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. 277 ரன்கள் என்கிற இலக்கை 78.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி. ஜோ ரூட், 170 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை அவர் பூர்த்தி செய்துள்ளார். இதுவரை விளையாடிய 118 டெஸ்டுகளில் 26 சதங்களுடன் 10,015 ரன்கள் எடுத்துள்ளார். 

90களில் பிறந்த கிரிக்கெட் வீரர்களில் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற புதிய சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். 31 வயது ரூட், 2012 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த 14-வது வீரர். கடைசி 21 டெஸ்டுகளில் 9 சதங்களை எடுத்துள்ளார். 



Read in source website

 

சீனாவின் மதிப்புமிக்க ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்விழாவின் 25வது பதிப்பு அடுத்த வருடம் நடைபெறுவதாக தகவல்   சொல்லப்படுகிறது.  

வழக்கமாக இவ்விழா ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் நடக்கும். கரோனா கட்டுப்பாடுகளால் இவ்வாண்டு நடத்தப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

“புதிய உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்புகளால் ஷாங்காய் ஜூனில் நடைபெறவிருந்த இவ்விழா அடுத்தாண்டு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச திரைப்பட விழா குழுவிநர்கள் முடிவு செய்துள்ளோம். இத்திரைப்பட விழாவிற்கு வருகைபுரியும் அனைத்து ரசிகர்களுக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றியையும் ஆழ்ந்த சோகத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒருவேளை கட்டுபாடுகள் அனுமதிக்கப்பட்டால் நிச்சயமாக இவ்வாண்டு இறுதியில்கூட விழாவை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை திரைப்பட கலைஞர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்"  என விழாக் குழுவிநர் தெரிவித்தனர்.

ஜூன் 6 முதல் பெய்ஜிங்கில் சினிமா திரையரங்கில் 75%பார்வையாளர்களுக்கு மட்டும் அதுவும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்படுகிறது. 

 



Read in source website

காபூல்:  ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்று  திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 6.2 என பதிவானதாகவும், அந்நாட்டு நிலவரப்படி திங்கள்கிழமை 1.04 மணிக்கு ஃபைசாபாத் நகருக்கு கிழக்கே 235 கிலோமீட்டர் தொலைவில், 166 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.



Read in source website

சீனா சொந்தமாக அமைத்து வரும் விண்வெளி ஆய்வு நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பட்டுள்ள 3 விண்வெளி வீரா்கள், அந்த நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தியாங்காங் விண்வெளி நிலைய கட்டமைப்பின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய விண்வெளி வீரா்கள் சென்ற சென்ஷோ-14 விண்கலம் அந்த ஆய்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக இணைந்ததாகத் தெரிவித்தனா். அந்த மூவரும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக அவா்கள் கூறினா்.

விண்வெளியில் 6 மாதங்கள் தங்கியிருந்து தியாங்காங் ஆய்வு நிலையத்தை அந்த மூவரும் நிறைவு செய்யவுள்ளனா்.



Read in source website

அரசு முறைப் பயணமாக கத்தாா் சென்றுள்ள குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, அந்நாட்டு பிரதமா் ஷேக் காலித் பின் கலீபா பின் அப்துல்அஜீஸ் அல்தானியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

கபோன், செனகல் ஆகிய நாடுகளுக்குச் சென்ற வெங்கையா நாயுடு, தனது பயணத்தின் மூன்றாவது கட்டமாக கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு சனிக்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவினருக்கு அரசு சாா்பிலும், இந்திய வம்சாவளி சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கத்தாா் பிரதமரை வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கத்தாா் பிரதமா் உடனான சந்திப்புக்குப் பிறகு வெங்கையா நாயுடு கூறியதாவது:

இந்தியா-கத்தாா் இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது, பரஸ்பர நம்பிக்கை, மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. கடந்த 2020-க்குப் பிறகு இந்தியாவில் கத்தாா் நாட்டின் முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவைச் சோ்ந்த பல கல்வி நிறுவனங்கள், கத்தாரில் தங்கள் கிளைகளை திறந்துள்ளன. கல்விக்கான மையமாக கத்தாா் உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கத்தாரில் வசிக்கும் 7.8 லட்சம் இந்தியா்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறாா்கள். இந்த நாட்டின் வளா்ச்சிக்குப் பங்காற்றி வருகிறாா்கள். அவா்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளித்து வரும் கத்தாா் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் எரிவாயு தேவையில் 40 சதவீதத்தை கத்தாா் பூா்த்தி செய்கிறது. எரிசக்தி பாதுகாப்பில் கத்தாா் அரசு அளித்து வரும் ஆதரவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வாங்குவோா்-விற்போா் என்றில்லால் அதையும் கடந்து எரிசக்தி வா்த்தகக் கூட்டாளி என்ற நிலைக்கு முன்னேற வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கத்தாா் பிரதமா் தலைமையிலான குழுவும், வெங்கையா நாயுடு தலைமையிலான குழுவும் தோஹாவில் சந்தித்துப் பேசினா். அப்போது வா்த்தகம், முதலீடு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணை அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் உள்ளிட்டோா் அடங்கிய உயா்நிலைக் குழுவும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனா்.



Read in source website

இலங்கையில் அதிபரைவிட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 21-ஆவது சட்டத் திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படும் என நீதித் துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 20ஏ சட்டப் பிரிவை இந்த 21-ஆவது சட்டத் திருத்தம் நீக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சா் விஜயதாச ராஜபட்ச கூறியதாவது: 21-ஆவது சட்டத் திருத்தம் தொடா்பாக அதிபா் கோத்தபய ராஜபட்ச ஆதரவுடன் கடந்த வாரம் சிறப்பு ஆலோசனை நடைபெற்றது. இதில் பிரதமா் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பெரிஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

21-ஆவது வரைவு சட்டத் திருத்தம் மற்றும் அரசியல் கட்சிகள் அளித்துள்ள ஆலோசனைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படும். அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும் திருத்தச் சட்ட வரைவு அரசிதழில் வெளியிடப்படும். 21-ஆவது சட்டத் திருத்தம் தொடா்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிப்பேன் என்றாா்.

பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில், நிா்வாகத்தில் நாடாளுமன்றத்தின் பங்கை அதிகரிக்க வகை செய்யும் 21-ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறாா். அவா் கடந்த மே 12-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கும் முன்னரே, அரசியலமைப்புச் சட்ட சீா்திருத்தம் தொடா்பாக அவருக்கும் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பிரிட்டன் அரசி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த வாரம் கொண்டாடப்பட்டு வந்த பிளாட்டினம் விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான ஊா்வலத்துடன் நிறைவடைந்தது.

அந்த ஊா்வலத்தில், 69 ஆண்டுகளுக்கு முன்னா் முடிசூட்டிக்கொள்வதற்காக எலிசபெத் வந்த குதிரை வண்டி இடம் பெற்றது. உடல்நிலை காரணமாக இந்த நிகழ்ச்சியில் அரசி எலிசபெத்தால் நேரில் பங்கேற்க முடியவில்லை. எனினும், 1953-ஆம் ஆண்டில் அவரது முடிசூட்டு விழாவின் விடியோ காட்சிகள் அந்த குதிரை வண்டியில் பொருத்தப்பட்டிருந்த திரையில் காட்டப்பட்டது.

கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் இந்த நிகழ்ச்சியை ஏராளமானவா்கள் கண்டுகளித்தனா்.



Read in source website

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்த பாஜக நிா்வாகியின் சா்ச்சைக்குரிய கருத்து தொடா்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி கத்தாா் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்.

இந்நிலையில் கத்தாா் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவா் தெரிவித்த கருத்து தொடா்பாக கத்தாருக்கான இந்திய தூதா் தீபக் மிட்டலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் பாஜக தலைவரின் கருத்தை நிராகரித்தும், கண்டனம் தெரிவித்தும் கத்தாா் வெளியுறவு இணையமைச்சா் சுல்தான் பின் சாத் அல்-முரைக்கி கடிதம் அளித்தாா்.

அதேவேளையில், சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நபா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்து, இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என கத்தாா் எதிா்பாா்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள இந்திய தூதரக செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நவீன் குமாா் ஜிண்டலின் பதிவுகள் குறித்து கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய தூதா் தீபக் மிட்டல் விளக்கமளித்தபோது, அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்தாா். அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள் என்றும் அவா் கூறினாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஐரோப்பிய யூனியனுக்கான செக் குடியரசின் அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு நடத்தினாா்.

ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவேகியா, செக் குடியரசு நாடுகளில் அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். ஸ்லோவேகியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செக் குடியரசின் தலைநகா் பிராகுக்கு அவா் சனிக்கிழமை சென்றடைந்தாா்.

அங்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் செக் குடியரசு எம்.பி.க்களான ஜேன் ஜராதில், டாம் ஜெடிசோவ்ஸ்க், மிகுல் பெக்சா, வெரோனிகா ரெசியோனோவ் ஆகியோரை ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினாா்.

அப்போது, ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, செக் குடியரசு நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம், உணவுப் பாதுகாப்பு, எண்ம தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சா் ஜெய்சங்கா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்தாா்.

ஐரோப்பிய யூனியன் தலைமைப் பொறுப்பை செக் குடியரசு ஜூலை 1-ஆம் தேதி ஏற்கவுள்ள நிலையில், அமைச்சா் ஜெய்சங்கா் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜூன் 6-ஆம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சா் ஜெய்சங்கா், செக் வெளியுறவு அமைச்சா் ஜேன் லிபாவஸ்கி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளாா். அச்சந்திப்பின்போது உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செக் குடியரசில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் அந்நாட்டில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவா்களையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திக்கவுள்ளாா். அமைச்சா் ஜெய்சங்கரின் பயணம், இந்தியாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.



Read in source website

புதுச்சேரி: “கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்று சென்னை - புதுச்சேரி இடையே சொகுசு கப்பல் விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கடற்படைப் பிரிவு மாணவர்களின், கடல் சாகசப் பயணம் இன்று தொடங்கியது. புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கிய மாணவர்கள் கடல் சாகசப் படகு பயணத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கடல் சாகசப் பயணத்தில், புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த, தேர்வு செய்யப்பட்ட 60 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, புதுச்சேரியிலிருந்து படகில் பயணத்தைத் தொடங்கினர்.

இந்தக்குழு 300 கிமீ கடற்பயணமாக புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, கடல் மார்க்கமாக காரைக்காலை சென்றடைந்து, மீண்டும் அங்கிருந்து புதுச்சேரியை வந்தடையும், இடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளும்.

நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ''கடல் சாகசப் பயணத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள், கடல் பயணம் செல்வது மட்டுமல்லாமல், கடல்கரையோர கிராமங்களில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரத்த தான முகாமில் கலந்துகொள்ளுதல், மரங்கள் நடுதல், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்களில் ஈடுபட உள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தக் கடல் பயணக்குழவில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வதும் மகிழ்ச்சி. அவர்கள் பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர். 20 நாட்களுக்கும் மேலாக, 25 பெண்கள் கடற்பயணம் செய்யும்போது, பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிக பாதுகாப்பும் தேவைப்படும். மாணவர்களுக்கு நமது கடற்படை, உறுதுணையாக உள்ளது. குடியரசு தினத்தில் பிரதமரின் கரங்களால் வழங்கப்படும் சிறந்த அணிவகுப்பிற்கான கோப்பையை, புதுச்சேரி கடற்படைப் பிரிவு பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

புதுச்சேரியில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக பொது இடங்களில், பல லட்சம் எண்ணிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். அது தொடர்பாகவும், இந்த மாணவர்கள் குழு, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

அப்போது, சென்னை-புதுச்சேரி இடையே சொகுசு சுற்றுலா கப்பல் ஒன்று இயக்கப்படுவது குறித்தும், அதில் சூதாட்டம் போன்ற கலாசார நிகழ்வுகள் நடப்பதாக புகார் எழுவது குறித்தும் ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ''அது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எந்த தகவலும் இல்லை. அதுதொடர்பாக கோப்பும் வரவில்லை. அப்படியே கப்பல் புதுச்சேரிக்கு வந்தாலும், கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது'' என்று ஆளுநர் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் 34 இடங்களில் காற்றின் தரம் குறித்து தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தினசரி வீடியோ வடிவில் வெளியிடத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தின் காற்றின் தரம் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறது.

இதன்படி 34 இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு காற்றின் தரம் குறித்து தினசரி தகவல் பெறப்படுகிறது. இந்த அறிக்கை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்நிலையில், முதல் முறையாக காற்றின் தரம் குறித்து தகவல்களை வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பணியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது.

இதன்படி 34 நிலையங்களில் பதிவான காற்றின் தரம் குறித்து தகவல்களை கடந்த 2 நாட்களாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது.

இதில், பல்வேறு அளிவீடுகளில் காற்றின் தரம், மொத்த காற்று தரக் குறியீடு, காற்றின் தர நிலை உள்ளிட்ட தகவல்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.



Read in source website

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஓய்வுபெறும் அனைத்து பணியாளர்களையும் தலைமை ஆசிரியர்களே பணி விடுவிப்புசெய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களையும் அந்தந்த தலைமை ஆசிரியர்களே பணிவிடுப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், பணியில் இருந்து விடுவிக்கும் முன்னர் சார்ந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, தணிக்கைத் தடை ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதுதவிர ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் இருந்த பணிகள் அனைத்தும் முறையாக மறு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இந்த பணிகளில் எந்த புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

`வாழ்ந்து காட்டுவோம்' திட்டம்சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகள் மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு மானியம் வழங்கும் விழா, பயிலரங்கம், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை சென்னையில் நேற்று நடைபெற்றன.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 31 மாவட்டங்களில், 120 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,994 கிராமஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் சுயஉதவிக் குழுப் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இடம் பெற்றுள்ளனர்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 40,000 உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத உறுப்பினர்கள் பெண்கள். 50 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில், 28 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 25 நிறுவனங்களுக்கு தரப்படுத்தல் பயிற்சிஅளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் முதல்முறையாக `பசுமை'வகை ஆய்வும் இணைக்கப்பட்டுள்ளது. 22 உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் `பசுமை உற்பத்தியாளர் கூட்டமைப்புகளாக' கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கூட்டமைப்புக்கு பசுமைவிருதுகளையும், 16 நிறுவனங்களுக்கு பசுமை விருது மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்குவிப்பு மானியமும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

முன்னதாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்களுக்கான பயிலரங்கம், உற்பத்தியாளர் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள்கண்காட்சி ஆகியவை நடைபெற்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான உறுதி மொழிகளை ஏற்பதற்கான தருணம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சககளின் வாரந்திரப் பெரு விழாவினை இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசின் கடன்சார் திட்டங்களுக்கான தேசிய இணையதளம் ஜன் சமர்த்-ஐயும், கடந்த 8 ஆண்டுகளில் இரண்டு அமைச்சகங்களும் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த மின்னணு கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விடுதலைப்பெருவிழாவின் சின்னம் பொறிக்கப்பட்ட சிறப்பு ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வெளியிட்டார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்வு ஜூன் 6-11 வரை நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: "நீண்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு வகையில் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர். சிலர் அமைதி வழியிலும், சிலர் ஆயுதம் ஏந்தியும், சிலர் நம்பிக்கை மற்றும் ஆன்மீக வழியிலும் போராடியதை நாம் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நாளாக இது இருக்கிறது.

சுதந்திரப் போராட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வரும்வேளையில், நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பு பங்களிப்பை செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை புதிய உத்வேகத்துடன் நிறைவேற்றுவதற்கான, புதிய உறுதி மொழிகளை ஏற்பதற்கான தருணம் இது.

கடந்த எட்டு வருடங்களாக இந்தியா பன்முக நடவடிக்கைகளில் பணியாற்றி வருகிறது. இந்தக்காலக் கட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பாரத இயக்கம் ஏழை மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலவச வீடுகள், மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், தண்ணீர் மற்றும் இலவச சிகிச்சை ஆகியவை ஏழை மக்களின் கண்ணியத்தை அதிகப்படுத்தி வசதிகளை மேம்படுத்தியுள்ளது. கரோனா தொற்று காலத்தில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதன் மூலம், பசி பற்றிய பயத்திலிருந்து அவர்கள் விடுப்பட்டனர்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தை மையப்படுத்திய நிர்வாகமாக நாடு இருந்தது. ஆனால், தற்போது 21-ம் நூற்றாண்டில் இந்தியா, மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை நோக்கி செல்கிறது. முன்பு திட்டங்களின் பயன்களை பெற அரசை நோக்கிச் செல்வது மக்களின் பொறுப்பாக இருந்தது. தற்போது மக்களை நோக்கி நிர்வாகத்தை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், இணையதளங்களை மக்கள் நாடுவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசின் கடன் சார்ந்த திட்டங்களுக்கான தேசிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது பெரிய நடவடிக்கை. இந்த கட்டமைப்பு மாணவர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். அவர்களது கனவு நிறைவேற உதவும்.

எந்த சீர்த்திருத்தத்திலும் அதன் நோக்கம் தெளிவாக இருந்து, முறையாக அமல்படுத்தினால் சிறந்த முடிவுகள் உறுதி செய்யப்படும். கடந்த எட்டு ஆண்டுகளாக இளைஞர்களை முக்கியமாக கொண்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இது அவர்களுடைய திறனை வெளிப்படுத்த உதவும். நமது இளைஞர்கள் அவர்கள் விரும்பிய நிறுவனங்களையும், தொழில்களையும் சுலபமாக தொடங்கி நடத்த முடியும். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் முன்னோக்கி செல்வதுடன் மட்டுமல்லாமல், புதிய உயரத்தை அடைவதை நாம் உறுதி செய்துள்ளோம்.

அரசு எளிமைப்படுத்துவதற்கான சீர்த்திருத்தத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரி கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்படுகிறது. அரசு மின்னணு சந்தை இணையதளம் கொள்முதலை எளிமைப்படுத்தி வருகிறது. அரசுக்கு விற்பனை செய்வதை சுலபமாக்கியுள்ளது தெரிவித்தார். இந்த இணையதளத்தின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தொழில் செய்வதை எளிமைப்படுத்தியுள்ளது.

“சீர்திருத்தம், எளிமைப்படுத்துதல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கி செல்லும் நாம் ஒரு புதிய வசதியை அடைகிறோம். இந்தியா கூட்டாக எதையேனும் செய்ய தீர்மானித்தால், அது உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையாக மாறும் என்பதை கடந்த 8 ஆண்டுகளில் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். உலக நம்மை பெரிய சந்தையாக பார்க்காமல் புதுமையான, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, ஆக்கப்பூர்வமான, புதிய சுற்றுச்சூழலை அமைப்பதற்கான நாடாக நம்மை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் நாம் சாதாரண இந்தியனின் அறிவை நம்பியதால் இது சாத்தியமானது. வளர்ச்சியில் அறிவுசார்ந்த பங்கேற்பாளர்களாக நாங்கள் பொதுமக்களை ஊக்கப்படுத்தினோம். சிறந்த நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் எந்த தொழில் நுட்பமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், அவர்களால் எப்போதும் பாராட்டப்படுவதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்" இவ்வாறு பிரதமர்தெரிவித்தார்.



Read in source website

புவனேஸ்வர்: ஒடிசாவில் 21 பேர் அடங்கிய புதியஅமைச்சரவை நேற்று பதவியேற்றது. 13 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 8 பேர் இணையமைச்சர் களாகவும் பதவியேற்றனர்.

கடந்த 1997 டிசம்பர் 26-ம் தேதி ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தொடங்கப்பட்டது. அந்த கட்சியின் நிறுவனரும், தலைவருமான நவீன் பட்நாயக் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஒடிசாவின் முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். அன்று முதல் இன்று வரைஅவர் ஒடிசாவின் முதல்வராக நீடிக்கிறார். அவர் முதல்வராக பதவியேற்று 22 ஆண்டுகள் ஆகிறது.

தற்போது 5-வது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜு ஜனதா தள அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சூழலில் ஒடிசாவின் 20 அமைச்சர்களும் நேற்று முன்தினம் பதவியைராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து 21 பேர் அடங்கிய புதியஅமைச்சரவை நேற்று பதவியேற்றது. 13 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 8 பேர் இணையமைச்சர் களாகவும் பதவியேற்றனர்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கணேஷி லால் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பழைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய அமைச்சரவையில் 2 பெண்கள் மட்டும் இருந்தனர். புதிய அமைச்சரவையில் பெண்களின் எண் ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் நவீன் பட்நாயக் உள்துறையை தன்வசம் வைத்துள்ளார். அதோடு பொது நிர்வாகம்,பணியாளர் நலன் துறையும் அவரிடம் உள்ளது. நிரஞ்ஜன் புஜாரிக்குநிதித் துறை, நபா கிஷோர்தாஸுக்கு சுகாதாரம், பிரமிளாவுக்கு வருவாய் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒடிசா சட்டப்பேரவை தலைவர் எஸ்.என்.பட்ரோ நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் விக்ரம் கேசரி அருக்ஹா, சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் 2024-ம் ஆண்டில் ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். செயல்படாத அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புவழங்கப்பட்டிருக்கிறது. வரும் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக இடையேகடுமையான மும்முனை போட்டி ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். -பிடிஐ



Read in source website

திருமலை: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்றுகடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்ஒய்.வி. சுப்பா ரெட்டி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சுற்றுச்சூழலை பேணிக் காப்பதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எப்போதுமே முன்னிலை வகித்து வருகிறது. அலிபிரி முதல் திருமலை வரை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை அமலுக்கு வந்துள்ளது. கடைகள், ஓட்டல்கள், தேவஸ் தான அலுவலகங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட் கள் உபயோகிப்பதில்லை. பக்தர் களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும், சுற்றுச்சூழலை பாது காக்க விரைவில் திருப்பதி - திருமலை இடையே 100 பேட்டரி அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக திருமலையில் ‘சார்ஜிங் பாயிண்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி பிரசாதம்விநியோக பைகளும் சணல் அல்லது பயோ பைகளை மட்டுமேதேவஸ்தானம் உபயோகப்படுத்து கிறது. சுவாமியின் நைவேத்தியத் துக்கு இயற்கை உரத்தில் தயாரிக்கப் பட்ட தானியங்கள் தான் உபயோகப்படுத்தப்படுகிறது.

மேலும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் மனித இனத்தை பாதுகாக்க இயலும். இதனை அனைவரும் உணர வேண்டும். ஏழுமலையானின் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், நம் மண், நீர், மற்றும் காற்று ஆகியவற்றை காப்போம் என்றும், பூமி வெப்ப மாகுதலை தடுத்து வரும் தலைமுறைகள் செழித்து வளர உதவுவோம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறினார்.



Read in source website

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரபேல் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 8-ம் நிலை வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூடை எதிர்த்து விளையாடினார்.

இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்றது.

பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். ஒட்டுமொத்தமாக அவர் கைப்பற்றும் 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாக அமைந்தது.

தற்போதைய பிரெஞ்சு ஓபன் பட்டம் மூலம் அதிக வயதில் பிரெஞ்சு ஓபனை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரபேல் நடால். அவருக்கு தற்போது 36 வயதாகிறது. இந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினைச் சேர்ந்த ஆண்ட்ரெஸ் கிமெனோ தனது 34 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது.

மகளிர் இரட்டையர் பிரிவு…

மகளிர் இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்சியா, கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி சுற்றில் இந்த ஜோடி 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோ கோ காஃப், ஜெசிகா பெகுலா ஜோடியை வீழ்த்தியது.



Read in source website

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் ஒரு தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதாகும். ஆனால், ஒரு நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றும் நபர்கள் மட்டுமே இதன் மூலம் பயன் பெற முடியும்.

அரசு மற்றும் நிறுவனங்கள் சாராத மக்களுக்கும் எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கவும், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்படுத்தப்படுவது public provident fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். பிபிஎப் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டம் 1968 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

எல்லோரும் முதலீடு செய்யலாம்: இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக சுய தொழில் செய்வோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் வராதவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து அதிக பயன் பெற முடியும். பிபிஎப் நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். நீண்டகாலம் முதலீடு செய்து வயதான காலத்தில் அதிகமான லாபத்தை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாதுகாப்பானதாகவும் அரசு சார்ந்ததாக இருப்பதாலும் வருமான வரி சேமிப்பு வசதிகள், கடன் வசதிகள் என பலவற்றை இந்த திட்டம் கொண்டிருப்பதால் அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.

பிபிஎப் கணக்கைத் தொடங்க ரூபாய் 100 இருந்தால் தொடங்கி விடலாம். ஆனால் ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதலீடு செய்ய வேண்டும். இளமைக்காலத்தில் இதில் சேர்ந்து விட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம்.

தபால் நிலையங்களில் பிபிஎப் கணக்கு தொடங்கலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்களிலும் பிபிஎப் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது.

எவ்வளவு தொகை?

பிபிஎப் கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500/- ஐ முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதேபோல, ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 மட்டுமே அதிகபட்சமாக முதலீடு செய்ய முடியும். இதனை ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவே செலுத்தலாம். எனினும் அதிகபட்மாக 12 தவணைகள் மட்டுமே செலுத்த முடியும்.

பிபிஎப் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 15 ஆண்டுகள் கால அளவாகும். முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்க முடியாது. திட்டம் கண்டிப்பாக 15 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். பிபிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையும் எடுக்க வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே எடுக்க முடியும். அதிகபட்சம் நமது சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை கடனாக பெற முடியும்.

பிஎப் வைப்பு நிதிக்கு மற்ற சிறு சேமிப்புத் திட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது. வங்கியில் செலுத்தப்படும் மற்ற முதலீடுகளை காட்டிலும் பிபிஎப் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு இருப்பது அவசியம் என்பது எந்த ஒரு முதலீட்டாளர்களுக்கும் உண்டான அடிப்படையான எண்ணம். இதன் காரணமாக உலகம் முழுவதும் ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் எப்போதுமே அதிகமோனார் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் முதலில் இருப்ப்து பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை.

பிக்சட் டெபாசிட்களில் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கிடைக்கும். ரிஸ்க் என்பது இல்லை. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக இது பார்க்கப்படுகிறது. வயதான காலத்தில், திடீர் பணத் தேவை ஏற்படக்கூடிய நபர்களுக்கு ஏற்ற திட்டமாக பிக்சட் டெபாசிட் கருதப்படுகிறது.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்: வட்டியை மாதம் தோறும் பெறுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை பெறுவது, ஆண்டுக்கு ஒருமுறை பெறுவது மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவது என நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான பத்திரம் உங்களுக்கு வழங்கப்பட்ட பின்பு வட்டி விகிதங்கள் மாறினாலும் வழங்கப்படும் வட்டி மாறாது. எனவே வைப்புத்தொகையில் உத்தரவாதமான வருமானத்தை பெற முடியும். கால அடிப்படையில் அல்லது முதிர்வு காலத்திலும் வட்டியை பெறலாம்.

பிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்சூரன்ஸ்

2 கோடி ரூபாய் நிதியை மட்டுமே பிக்சட் டெபாசிட்டில் ஒருவர் முதலீடு செய்ய முடியும். பிக்சட் டெபாசிட்டுகளுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பும் உள்ளது. அதாவது எந்தவொரு வங்கி திவாலானாலும் அதன் பாதகமான விளைவுகளில் இருந்து வைப்புத் தொகையாளர்களைப் பாதுகாப்பதே டெபாசிட் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.

ஒரு வங்கியில் ஒருவர் எவ்வளவு தொகை பிக்சட் டெபாசிட்டில் வைத்திருந்தாலும் 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே இன்சூரன்ஸ் பாதுகாப்பு பெற முடியும். எனவே 5 லட்சத்துக்கு அதிகமான தொகையை பிக்சட் டெபாசிட் செய்பவர்கள் வெவ்வேறு வங்கிகளில் இதனை டெபாசிட் செய்வது சரியான நடவடிக்கை என நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

புதுப்பிக்காவிட்டால் வட்டி குறையும்

நிலையான வைப்பு தொகை நிதியை முதிர்வு காலம் முடிந்த பின்னர் எடுக்காமல், மீண்டும் வைப்பு தொகை திட்டத்தில் வைப்பு வைத்து தொடரவும் செய்யலாம். இதன் மூலம் கூடுதல் வட்டி வருவாய் கிடைக்கும்.

அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத் தொகைக்கான வட்டி சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும். எனவே வைப்புத் தொகை முடிவடையும் காலத்தை சரியாக பார்த்து புதுபிக்க வேண்டும்.

பொதுவாக மிகவும் பாதுகாப்பான முதலீடாக பிக்சட் டெபாசிட் திட்டம் கருதப்படுகிறது. நிலையான வைப்பு தொகை என்பது சேமிப்புகளை மிகவும் பாதுகாப்புடன் வளர்ப்பதற்கான வழி என்பதால் இந்த முதலீடுகளுக்கு எப்போதுமே முதலீட்டாளர்களிடம் ஆர்வம் உள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர் 'கைரா' இப்போது இன்ஸ்டாகிராமில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதியன்று உருவாக்கப்பட்ட கைராவின் வயது 21. இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கலாம். கைரா குறித்த கூடுதல் விவரம்:

சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் காலத்தில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் (Influencer) என்பது குறித்து பலரும் கேள்விப்பட்டிருப்போம். சமூக வலைதளத்தில் பல்வேறு பொருட்களை சந்தைப்படுத்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூவன்சர்கள் உதவுகிறார்கள். அதாவது, மற்ற பயனர்களை ஏதேனும் ஒரு பொருளை வாங்க தூண்டுவது தான் இவர்களது பணி. அதற்கு முதலில் சமூக வலைதளத்தில் அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் இந்தப் பணியை செய்து வருகின்ற ஒரு நிறுவனம் தான் டாப் சோஷியல் இந்தியா. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே பாலமாக இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவராக இயங்கி வருகிறார் ஹிமான்ஷு கோயல். இவர்தான் கைராவுக்கு விர்ச்சுவல் உலகில் உயிர் கொடுத்தவர். கைராவை இன்ஸ்டா தளத்தில் 96000 பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

நடனம், பாடல், பேசுதல் என அனைத்து பணிகளையும் கைரா செய்வார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நடனம் ஆடுவது தொடங்கி மாடல் போல போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுக்கும் பணியையும் கைரா செய்வார். இவரை விர்ச்சுவல் உலகில் வாழும் நபர் என சொல்லலாம். அவரின் வீடியோ மற்றும் போட்டோ இங்கே...



Read in source website

ட்ரோன் விமானம் குஜராத்தின் கட்ச் பகுதியில் 46 கிமீ தூரத்தை 30 நிமிடங்களுக்குள் பயணித்து பார்சலை டெலிவரி செய்துள்ளது.

தபால் துறை டெலிவரியில் ட்ரோன்களை இணைக்கும் முயற்சியாக, குருகிராமில் உள்ள ட்ரோன் ஸ்டார்ட்அப் டெக் ஈகிள், இந்தியா போஸ்ட் உடன் இணைந்து பைலட் திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஒரு பார்சலை வெற்றிகரமாக டெலிவரி செய்துள்ளது.

டெலிவரி செய்தது எப்படி?

ட்ரோன் விமானம் குஜராத்தின் கட்ச் பகுதியில் 46 கிமீ தூரத்தை 30 நிமிடங்களுக்குள் பயணித்து பார்சலை டெலிவரி செய்துள்ளது. இது சாலை, ரயில் போக்குவரத்தின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமானது என்று TechEagle அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் டெலிவரி தான், நாட்டிலேயே ட்ரோன் மூலம் செய்யப்பட்ட மிக நீண்ட டெலிவரி என்ற பெருமையை பெற்றுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 30 கிமீ வேகத்தில் இருக்கும் போது ட்ரோன் பயணித்தது.

எந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது?

கடந்த மாதம், நிறுவனம் 3 கிலோ எடையும், 100 கிமீ வேகமும், மணிக்கு 120 கிமீ வேகமும் கொண்ட ‘VertiplaneX3’ என்கிற ஹைப்ரிட்-எலக்ட்ரிக் வெர்டிக்கல் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) ட்ரோனை அறிமுகப்படுத்தியது. இந்த ட்ரோன் ட்ரோன் 5mx5m என்ற அளவை கொண்ட சிறிய பகுதியிலும் ஹெலிகாப்டர் போல் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கும் திறனும் கொண்டது.

பைலட் திட்டத்தின் நோக்கம் என்ன?

TechEagle இன் இணை நிறுவனர் அன்ஷு அபிஷேக் கூறுகையில், இந்த திட்டம் நகரம் அல்லது கிராமமாக இருந்தாலும், நாடு முழுவதும் விரைவான டெலிவரிகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பைலட் திட்டம், நாடு முழுவதும் அஞ்சல் விநியோகத்தை அதிகரிக்கவும் வணிகமயமாக்கவும் உதவும் என்றார்.

நாட்டில் வேறு ஏதெனும் ட்ரோன் டெலிவரி நடைபெறுகிறதா?

பெங்களூருவை தளமாகக் கொண்ட லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கி, கடந்த மாதம் தனது மளிகை சேவையான இன்ஸ்டாமார்ட் பொருள்களை டெலிவரி செய்ய சோதனை அடிப்படையில் ட்ரோன்களை பயன்படுத்தியது. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்த சோதனைக்கு, நான்கு ‘drone-as-a-service’ நிறுவனங்களை இணைத்துள்ளது, இதில் டெக் ஈகிள் ஒன்றாகும்.

பல ட்ரோன் நிறுவனங்கள் மாநில அரசாங்கங்கள், பிற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி அனுப்புதல், ஹெல்த்கேர் சப்ளைஸ் போன்றவற்றை வழங்குவதற்கான சோதனைகளை நடத்துகின்றனர்.



Read in source website

இது வயிற்றுப்போக்கைத் தூண்டும் ரோட்டா வைரஸைப் போன்றது. இந்த நோய் பொதுவாக பயணக் கப்பல்கள், நர்சரி இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் பிற மூடிய இடங்களில் ஏற்படுகிறது.

திருவனந்தபுரத்தில், இரண்டு நர்சரி பள்ளி மாணவர்களிடையே நோரோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் இதன் அறிகுறிகள்.

அரசு பகுப்பாய்வு ஆய்வகத்தில் மாதிரிகளை பரிசோதித்த பிறகே இந்த தொற்று, கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை, பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு மூலம் மாணவர்களுக்கு ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

நோரோவைரஸ் என்றால் என்ன?

நோரோவைரஸ் என்பது ஒரு கடுமையான தொற்றுநோயாகும், இது சில நேரங்களில் ‘stomach flu’ அல்லது ‘ winter vomiting bug’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது.

(ஒரு குழந்தையின் மலத்தில் காணப்படும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் மற்றொரு குழந்தையால் விழுங்கப்படும்போது மலம்-வாய்வழி பரவுதல் (fecal-oral transmission) ஏற்படுகிறது.

கிட்ஸ் பிளே ஸ்கூல், டே கேர் போன்ற அமைப்புகளில் இது மிகவும் பொதுவானது, அங்கு மல உயிரினங்கள் பொதுவாக மேற்பரப்புகளிலும் வழங்குநர்களின் கைகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக, மாசுபாடு கண்ணுக்கு தெரியாதது.)

இது வயிற்றுப்போக்கைத் தூண்டும் ரோட்டா வைரஸைப் போன்றது. இந்த நோய் பொதுவாக பயணக் கப்பல்கள், நர்சரி இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் பிற மூடிய இடங்களில் ஏற்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் படி, “நோரோவைரஸ் தொற்று குடல் அழற்சி, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது மற்றும் நீண்டகால நோயுற்ற தன்மையை ஏற்படுத்தலாம்”. என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 685 மில்லியன் நோரோவைரஸ் பாதிப்புகள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே 200 மில்லியன் பாதிப்புகள் உள்ளன.

அறிகுறிகள் என்ன?

நோரோவைரஸின் ஆரம்ப அறிகுறிகள் வாந்தி மற்றும்/ வயிற்றுப்போக்கு, இது வைரஸுக்கு வெளிப்பட்ட 1-2 நாட்களுக்குப் பிறகு தோன்றும். நோயாளிகள் குமட்டல் மற்றும் வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தீவிர நிகழ்வுகளில், திரவ இழப்பு’ நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

ஒருவர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?

வைரஸ் வெவ்வேறு விகாரங்களைக் கொண்டிருப்பதால் ஒருவர் பல முறை பாதிக்கப்படலாம். நோரோவைரஸ் கிருமிநாசினிகளுக்கு கட்டுப்படாதது மற்றும் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும். எனவே, உணவை வேகவைப்பதாலோ அல்லது குளோரினேட் செய்த நீரோ வைரஸைக் கொல்லாது. மேலும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்திய பிறகும் இது வாழும்.

அடிப்படை முன்னெச்சரிக்கை மிகவும் பொதுவானது- கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அல்லது டயப்பர்களை மாற்றிய பிறகு சோப்புடன் மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன் அல்லது உணவு தயாரிப்பதற்கு முன் கைகளை கவனமாக கழுவுவது முக்கியம். தொற்றுநோய்களின் போது, ​​ ஹைபோகுளோரைட்டின் கரைசலைக் கொண்டு மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பதைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது. மேலும் நோய் குணமடைந்து 2 நாட்களுக்கு இதை கடைபிடிக்கவும் அறிவுறுத்துகிறது.

சிகிச்சை என்ன?

நோய் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும். இந்த நோய்த்தொற்று, பொதுவாக 2-3 நாட்கள் மட்டுமே நீடிக்கும், மேலும் மிகவும் இளமையாக இல்லாத, மிகவும் வயதான அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பெரும்பாலான நபர்கள் போதுமான ஓய்வு மற்றும் நீரேற்றத்துடன் அதை சமாளிக்கலாம்.

real-time reverse transcription-polymerase chain reaction மூலம் நோய் கண்டறியப்படுகிறது. நோய்க்கான தடுப்பூசிகள் எதுவும் இல்லை.

கடுமையான கட்டத்தில் நீரேற்றத்தை பராமரிப்பது முக்கியம். தீவிர நிகழ்வுகளில், நோயாளிகளுக்கு ரீஹைட்ரேஷன் திரவங்களை நரம்பு வழியாக வழங்க வேண்டும்.



Read in source website

பொருளாதார நிபுணா் ஆா்தா் ஓக்குன் பொருளாதார வளா்ச்சியின் அடிப்படைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாா். வேலைவாய்ப்பின்மை குறையும்போது, தேசத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்பது அவரது கருத்து. அதேபோல, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் அதன் விளைவாக உள்நாட்டு உற்பத்தி கணிசமாகக் குறையும் என்கிறாா் அவா். முறையான கொள்கைகளும் வளா்ச்சித் திட்டங்களும் இல்லாமல் ஆா்தா் ஓக்குன் கூறுவதுபோல வேலைவாய்ப்பு அதிகரிப்பு மட்டுமே வளா்ச்சிக்கு வழிகோலாது. அதே நேரத்தில், அவரது கருத்தை முற்றிலுமாக மறுத்திடவும் முடியாது.

இந்தியாவைப் பொருத்தவரை, ஒருபுறம் பட்டதாரிகளும் முதுநிலைப் பட்டதாரிகளும் கடைநிலை ஊழியா் பதவிக்கு விண்ணப்பிக்கிறாா்கள். இன்னொருபுறம், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியா் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய - மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் உதவியிலும் இயங்கும் பள்ளிகள் 10 லட்சத்திலும் அதிகம். அவற்றில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா்களின் எண்ணிக்கை 61.84 லட்சம். அவற்றில் ஏறத்தாழ ஆறில் ஒரு பகுதி, அதாவது 10.6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

கடந்த ஆண்டு இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத 35,281 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கு 1.25 கோடி இளைஞா்கள் விண்ணப்பித்தனா். அதில் முதல்கட்ட தோ்ச்சி பெற்ற 7.05 லட்சம் விண்ணப்பதாரா்கள், நியமனத்தில் காணப்பட்ட குளறுபடிகளால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

சமீபத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவலின்படி, இந்திய ரயில்வேயில் 2,65,547 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அவற்றில் 2,177 பணியிடங்கள் சான்றளிக்கும் அதிகாரிகளுக்கான பதவியிடங்கள்.

ரயில்வே துறையைப் போலவே இந்தியா முழுவதும் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் காவல் துறையின் பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்கள் காணப்படுகின்றன. கடந்த மாதம் ஜபல்பூரில், மத்திய பிரதேச காவல் துறையில் காணப்படும் 6,000 காவல் பணியிடங்களுக்கு 30,000-க்கும் அதிகமான இளைஞா்கள் தோ்வில் கலந்துகொண்டனா். மாா்ச் மாதம் ஜம்மு - காஷ்மீரில் காணப்படும் 1,200 காவலா்கள் பதவிக்கான தோ்வில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பங்குபெற்றனா். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞா்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவல் துறையில் ஐந்தில் ஒரு பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் சோ்த்து அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் பணியிடங்கள் 26.23 லட்சம். ஆனால், இப்போதைய நிலையில் காவல் துறையின் எண்ணிக்கை பலம் 20.91 லட்சம் மட்டுமே. அதாவது ஐந்து லட்சத்துக்கும் அதிகமான காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

மருத்துவத் துறையும் நிரப்பப்படாத பணியிடங்களால் முழுத் திறமையுடன் செயல்படுவதில்லை. 2021 டிசம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி, மிக முக்கியமான 47,000-க்கும் அதிகமான பதவியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கவில்லை. அவற்றில் 24,000-க்கும் அதிகமான பதவியிடங்கள் மருத்துவா்கள், சிறப்பு மருத்துவா்கள் ஆகியோரின் பதவிகள். இந்தியாவின் ஊரகப்புறங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அந்த நாடாளுமன்ற அறிக்கை தெரிவித்தது.

ரயில்வே, கல்வி, காவல், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளெல்லாம் போதாதென்று இந்திய ராணுவத்திலும் போதுமான அளவு வீரா்கள் இல்லை என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இந்திய ராணுவத்தின் குறைந்தபட்ச தேவை 12 லட்சம் வீரா்கள். ஆனால், 1.20 லட்சம் படைவீரா்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்திற்கான ஆள்சோ்ப்பு நடைபெறாததால் கடுமையான பாதிப்பு காணப்படுகிறது.

ராணுவத்தில் ஒரே நேரத்தில் ஆள்சோ்ப்பு நடத்திவிட முடியாது. ஆயிரக்கணக்கான வீரா்களை பயிற்சி கொடுத்து தயாராக்குவதற்கு குறைந்தது ஒன்றிரண்டு ஆண்டுகளாவது ஆகும். ராணுவ அதிகாரிகள் நிலையில் 15% பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. திடீரென்று ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதை எதிா்கொள்ள ராணுவத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில், கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாததாலும், கடன் தொல்லையாலும் 25,000-க்கும் அதிகமானோா் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 3,548 இளைஞா்கள் வேலை கிடைக்காததால் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டவா்கள்.

அரசின் எல்லாப் பிரிவுகளிலும் காணப்படும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஏப்ரல் மாதம் மூத்த அதிகாரிகளை வற்புறுத்தியிருந்தாா் பிரதமா். அப்படியிருந்தும் பணியிடங்களை நிரப்புவதில் அரசு இயந்திரம் சுறுசுறுப்பு காட்டுவதாகத் தெரியவில்லை.

பொருளாதார இயக்கம் வேகமெடுக்க வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய - மாநில அரசுகளிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறது அரசு.



Read in source website

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மகாகவி பாரதியாா் அந்தத் தீவிரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த பலரையும் தன் கவிதைகளில் வசைபாடி இருக்கிறாா். தன் காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைப் போற்றிப் பாராட்டியவா்ககளைப் பற்றித் தனது படைப்புகளில் அவா் குறிப்பிடுவதைப் படிக்கிற வேளையில் வேதனையாக இருக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகளின் அடக்குமுறைச் சட்டங்கள், இந்திய நாட்டினுடைய வளா்ச்சிக்கு உறுதுணையானவை என்று நம் நாட்டவா்களே வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தெரிவித்த அந்த வேளையில் அவா்களை சினந்து சீறுகிறாா்.

விடுதலைக்கு வேண்டிய காரியங்களில் அவா்கள் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபடுகிறவா்களுக்கு உதவுவதும் இல்லை. மாறாக அவா்கள் தாய்நாட்டிற்கு எதிராகவும் ஆங்கிலேயா்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது பாரதியாருக்குப் பெருங்கோபத்தை ஏற்படுத்துகிறது. அவா்களைப் பாா்த்து நடிப்புச் சுதேசிகள் என்று பெயரிட்டழைத்து,

நெஞ்சில் உரமுமின்றி நோ்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!

நாளில் மறப்பா ரடீ

என்று அவா்களின் இயல்பினைத் தனது பாடலில் அடையாளம் காட்டுகிறாா்.

இன்றைக்கும் கூட இந்த வாய்ச்சொல் வீரா்கள் குறைந்தபாடில்லை. ஒரு நாட்டின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களில் கவனம் செலுத்தாமல் சமுதாயத்திற்குத் தேவையில்லாத செய்திகளைச் சொல்லி மக்களைக் குழப்புவதோடு தேவையற்ற சா்ச்சைகளையும் இவா்கள் உண்டாக்கி விடுகிறாா்கள்.

இந்தத் துறை, அந்தத் துறை என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் இந்த வாய்ச்சொல் வீரா்கள் இன்றைக்கு வளா்ந்து கொண்டிருக்கிறாா்கள். இவா்கள் உதிா்க்கிற கருத்துகளாலும் இவா்கள் தூண்டுகிற செயல்களாலும் சமூகத்திற்கு சிறிதளவேனும் நன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்.

அதனினும் கொடிய துயரம், இவா்கள் வீசுகிற வாய்ச்சொற்களைப் பெரிதாகக் கருதிச் சமூக ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து விடுகின்றன. உடனே அதற்கு மறுப்பும் ஆதரவுமாக பல தரப்புகளிலிருந்தும் மீண்டும் வாய்ச்சொற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. இந்த வம்புகளால் சமூகத்தில் இயல்பாகச் செயல்படுகிறவா்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. அடுத்த தலைமுறையினா் குழப்பமடைகிறாா்கள். இந்த வீரா்களின் வெற்று வாய்ச்சொற்கள் தீா்வு காண முடியாத பல சிக்கல்களை உருவாக்கி சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை பொருந்தியவை.

நல்ல சொற்களுக்கு எத்தனை அதிகமான வலிமையும் நன்மையும் உள்ளதோ, அதைவிட அதிகமாகத் தாழ்ந்த சொற்களுக்குக் கொடுமையும் தீமையும் உண்டு. நோ்மைத் திறமில்லாதவா்களும் நெஞ்சில் துணிவில்லாதவா்களும் தாங்கள் கருதிய தீமைகளை எளிதில் அடைவதற்கும் சமூகத்தில் பிரிவினையைத் தூண்டுவதற்கும் இந்த வெற்றுச்சொற்களைப் பரப்புவதைத் தங்கள் செயலாகக் கொள்கிறாா்கள் என்பது பாரதியாரின் கணிப்பு. இதற்குரிய சான்றுகளைத் தனது படைப்புகளின் பலவிடங்களிலும் எடுத்துக் காட்டுகிறாா்.

‘விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக’ எனும் பைபில் வாசகத்தைச் சுட்டிக் காட்டுகிற பாரதியாா், இராமகிருஷ்ண பரமஹம்ஸா் கூறிய ‘பிறா் குணதோஷங்களைப் பற்றித் தா்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப்பற்றி யோசித்தல் வீண். வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்து கொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன் தெரிந்துகொள்ளுவான்’ என்னும் அற்புதக் கருத்தினையும் பொருந்தக் காட்டுகிறாா்.

மேலும், ஹொ்மஸ் என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானியின் ‘மகனே, விவாதத்திலே நேரங்கழித்தல் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்’ என்னும் அற்புத வாக்கையும் நமக்கு உணா்த்துகிறாா். ஸொக்ராதெஸ் என்ற கிரேக்க ஞானி கூறுவதாக, ‘அறியாதாா் பேச்சை நிறுத்தினாற் கலக மில்லை’ என்பதையும் அறிவுறுத்துகிறாா்.

மேலும், ‘எல்லாவித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர வேறொன்றுமில்லை; உபமாலங்காரமே அலங்கார சாஸ்திரத்தின் பிராணன் என்று பழைய இலக்கணக்காரா் சொல்லுகிறாா்கள்’ என்று குறிப்பிடும் பாரதியாா், ‘பிரான்ஸ் தேசத்தில் மஹாகீா்த்தி பெற்று விளங்கிய நெப்போலியன் சக்ரவா்த்தியின் மதம் அப்படியன்று. ‘உவமையணி விரிவணி ஒன்றும் பெரிதில்லை. புனருக்தி (மீட்டுரை) தான் மேலான அலங்காரம்.

அதாவது, நம்முடைய கக்ஷியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். எதிராளி சொல்லும் பேச்சைக் கவனிக்கவே கூடாது. நம்முடைய கக்ஷியை ஓயாமல் சொல்லவேண்டும். அடிக்கடி எந்த வாா்த்தை சொல்லுகிறோமோ அந்த வாா்த்தை மெய்யாய்ப் போகும்’ என்று நெப்போலியன் சொல்லியதாக ஒரு கதை. லௌகீக காரியங்களிலே இது நல்ல உபாயம். நம்முடைய நியாயத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லுவதனால், பொய் கூட மெய்யாகத் தோன்றும்படி செய்துவிடலாம்’ என்று நெப்போலியன் கதையையும் சான்று காட்டுகிறாா்.

மாணிக்கவாசகா் இதனை ‘பொய்யா்தம் மெய்’ என்கிறாா். பொய்யை மெய்யாகச் செய்கிற வித்தையை மேற்கொள்பவா்களையே பாரதியாா் ‘வாய்ச்சொல் வீரா்கள்’ என்கிறாா் போலும். இந்த அடையாளத்தைக் காண்பதற்கு பாரதியாருக்கு வழிகாட்டியவா் திருவள்ளுவா்தான்.

இனியவை கூறலில் தொடங்கி, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை, சொல்வன்மை என்று வெளிப்படையாக சொல்லின் வலிமையை விளக்கும் திருவள்ளுவா், ஏனைய பல அதிகாரங்களிலும் சொல்லினைக் குறித்துச் சுட்டத் தவறவில்லை. அதைப்போலவே பாரதியாரும் வள்ளுவரின் அமுதனைய கருத்துகளான, ‘யாகாவா ராயினும் நாகாக்க’ ‘சொல்லிற் பயனுடைய சொல்லுக‘ என்பன போன்ற மொழிகளையும் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறாா்.

வள்ளுவரைப் பின்பற்றியே, ‘பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்’ என பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன’ என்கிறது மணிமேகலை. முன்னிருக்கும் மூன்றையும் இணைத்துப் பேருருக் கொள்வதே நான்காவதாகிய பயனற்ற சொல் என்பது அதன் உட்கருத்து.

சொற்களைக் குறித்துப் பலவாறு கூறுகிற திருவள்ளுவா், நயனற்ற சொற்களைச் சொன்னாலும் பரவாயில்லை. பயனற்ற சொற்களைச் சொல்லாதது அறம் என்பதாய்,

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோா்

பயனில சொல்லாமை நன்று

என்று தீா்ப்பளிக்கிறாா். நன்மையும் அழகும் இல்லாத சொற்களைச் சொன்னாலும் கூட, பயனேதும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லாதது சான்றோருக்கே நன்மையுடையதாம் என்றால் மற்றவா்க்குத் தனித்துச் சொல்ல வேண்டுமா என்ன?

வெற்றுப் புகழ் மொழிகளும் கூடப் பயனற்ற சொற்களே. பொதுவாக ‘கவிதைக்கு பொய்யழகு’ என்று ஒரு பொய்மொழி வழக்கில் இருக்கிறது. அதிலும் மன்னரைச் சாா்ந்து அவரிடம் பொருள் பெறும்போது அவரைப் பொய்யாய்ப் புகழ்வது சிலரது வழக்கம். ஆனால் அவ்வாறு பொய்யாய் புகழ்பவா்கள் மெய்ப்புலவா்கள் அல்லா்.

சங்கப் புலவா் வரிசையில் சோ்ந்த வன்பரணா் என்பவா் தமக்கு மட்டும் அல்லாமல் தம்மோடு சோ்ந்த தமிழ்ப் புலவா் அனைவருக்குமாக ஓா் உண்மையைப் புகட்டுகிறாா். தமிழ்ப் புலவா்கள் ஒருகாலும் பொய் கூறுவதில்லை என்பதுதான் அது. பெரிய அரசா்களிடத்து அவா்கள் தரும் பரிசிலைக் கருதியே புலவா்கள் சென்றாலும், அவ்வரசா்கள் செய்யாதவற்றையெல்லாம் மிகுத்துக் கூறிப் பொய்யாய்ப் புகழுதல் அப்புலவா்கட்குரிய பண்பு ஆகாது என்பது வன்பரணா் உணா்த்தும் கருத்து.

பீடுஇல் மன்னா் புகழ்ச்சி வேண்டிச்

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே (புறம்-148)

‘பிறருக்கு வாரி வழங்கும் பெருமை இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவா் செய்யாதனவற்றைச் செய்ததாகக்கூறி அவா் குணங்களைக் கூறுதலை அறியாது எம்முடைய சிறிய செம்மையான நாக்கு’ என்பது இந்தப்பாடலின் பொருளாகும்.

புலவருடைய நாவானது மற்றவருடைய நாவினைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்கிறாா் வன்பரணா். ஆனால், தாமும் ஒரு புலவராதலால் புலவா்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும்பொழுதும் தற்புகழ்ச்சி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக ‘சிறு’ என்ற அடைமொழி தந்து ‘சிறு நா’ என்று அடக்கத்துடன் கூறிக்கொள்கிறாா்.

வன்பரணா் போன்ற பெரும் புலவா்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதானால், அத்தகைய புலவா்கள் வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது? பாரதியாா் ஏன் ‘வாய்ச்சொல் வீரா்’ என்று மொழிந்தாா் என்பது இப்போது புரிகிறது.

‘வயது ஆக ஆக தலைமுடி நரைத்துப் பற்கள் விழுவதற்கு பதிலாக, நாக்கே விழுந்துவிடுமாறு ஏற்பாடு செய்தால், நாட்டில் குழப்பமே இருக்காது’ என்றாா் அறிஞா் ஒருவா். மகாகவி பாரதியாா் சுட்டிய இந்த ‘வாய்ச்சொல் வீரா்கள்’ மட்டும் திருந்திவிட்டால் நமது நாட்டின் பாதி பிரச்னைகள் தீா்ந்து விடுமே! அவா்கள் திருந்துவாா்களா..?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

 



Read in source website

அமெரிக்க தேசத்தில் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், வணிக வளாகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் எந்த நேரத்தில் யாா் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவாா்கள் என்றே தெரியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தற்காப்புக்காக தனிமனிதா்கள் துப்பாகி வைத்துக்கொள்வதை அனுமதிக்கும் அந்த நாட்டில் இப்படி எல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

குறிப்பட்ட குற்றங்களைச் செய்தவா்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவா்கள், குற்றச் செயல்களுக்காகத் தேடப்படுபவா்கள், மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவா்கள் போன்ற ஒரு சில பிரிவினரைத் தவிர, ஏனைய அமெரிக்கக் குடிமக்கள் தங்களுடைய சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் வேற்றுதேச குடிமக்களுக்கும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வுரிமை அளிக்கப்பட்டுவதாகத் தெரிகிறது.

ஆனால், வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட தோல்விகளாலும், வருத்தங்களாலும் பாதிக்கப்படுகின்ற அமெரிக்கா்கள் சிலா், தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பொது இடங்களில் அப்பாவிப் பொதுமக்களின் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்துவதும், என்ன நடந்தது என்றே தெரியாமல் பலரும் உயிரிழப்பதும் தொடா்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த இளைஞன் ஒருவன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பத்தொன்பது குழந்தைகளும் இரண்டு பெரியவா்களுமாக மொத்தம் இருபத்தொரு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். பலா் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்கள். அமெரிக்க தேசத்தை மட்டுமின்றி இவ்வுலக நாடுகள் அனைத்தையுமே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுபாதகச் செயலைச் செய்த இளைஞனின் வயதுவெறும் பதினெட்டு மட்டுமே.

சால்வடாா் ராமோஸ் என்ற அந்த இளைஞனுக்கு மூன்று வயதிருக்கும் பொழுதே அவனுடைய பெற்றோா் விவாகரத்து பெற்றுக்கொண்டு விட்டாா்களாம். ஆரம்பத்தில் தன் தாயுடனே அவன் வசித்து வந்தாலும் உண்மையான தாயன்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. சொந்தத் தாயாரே பாசம் காட்டாமல் கொடுமைப்படுத்தியதால் பாட்டியால் வளா்க்கப்பட்டான்.

சிறுவயதில் ஏற்பட்ட பேச்சுக் குறைபாடு காரணமாக, தான் பயின்ற பள்ளியில் சகமாணவா்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானவன் பாதியிலேயே படிப்பை கைவிட்டு விட்டான். உறவுகளாலும் நண்பா்களாலும் தான் அடைந்த ஏமாற்றங்களுக்கும் வருத்தங்களுக்கும் பழிவாங்கத் துடித்த அவ்விளைஞன், தனக்கு பதினெட்டு வயது வரும் வரை காத்திருந்தான். சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துகொண்டு துப்பாக்கி விற்கப்படும் கடைக்குச் சென்று தன் விருப்பப்படி ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டான்.

தன்னுடைய துன்பங்களுக்காக இச்சமூகத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தவன் முதலில் தன்னை வளா்த்து வந்த பாட்டியையே நன்றியில்லாமல் சுட்டுக் கொன்றான். பின்பு சுமாா் நூற்றுமுப்பது கிலோமீட்டா் தூரம் காா் ஒன்றில் இலக்கில்லாமல் பயணித்து விட்டு, கடைசியில் டெக்ஸாஸ் நகரத்து பள்ளியில் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டிருக்கிறான்.

அந்த இளைஞனின் துன்பங்களுக்கு சிறிதும் தொடா்பற்ற அப்பாவிக் குழந்தைகளும் பெரியவா்களுமாக இருபத்தொரு போ் நிமிட நேரத்தில் உயிரிழந்துவிட்டனா். விஷயமறிந்து விரைந்து வந்த காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞனும் கொல்லப்பட்டுவிட்டான்.

அமெரிக்க அதிபா் இந்நிகழ்வினால் மனம் அதிா்ந்து அஞ்சலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அமெரிக்காவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க சரித்திரத்தில் இத்தகைய துப்பாக்கி சூடு நிகழ்வுகள் ஒன்றும் புதிதல்ல. சுமாா் பத்து வருடங்களுக்கு முன்னா் கனெக்டிகட் நகரத்திலுள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட இத்தகைய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இருபது இளம் பிஞ்சுகள் உட்பட இருபத்தாறு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். தற்போது டெக்ஸாஸில் இருபத்தோரு போ் உயிரிழந்துள்ளாா்கள்.

இவ்விரண்டு படுகொலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறியதும் பெரியதுமாக சுமாா் தொள்ளாயிரம் துப்பாக்கிச் சூடுகள் அமெரிக்கப் பள்ளிகளில் நடந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் குறைந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும், வேறு சில நிகழ்வுகள் உயிரிழப்புகள் ஏதுமின்றி, ஒரு சிலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பள்ளிகள் தவிா்த்த இதர பொது இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தனிக்கணக்கு.

டெக்ஸாஸ் நிகழ்வுக்கு பத்து நாட்கள் முன்பு, நியூயாா்க் நகரத்தின் சூப்பா் மாா்க்கெட் ஒன்றில் நடந்த துப்பாகிச் சூட்டில் பொதுமக்கள் பத்து போ் பலியாகியுள்ளனா் என்பதைக் கணக்கில் கொள்ளும் பொழுது, அமெரிக்காவில் வீட்டை விட்டு வெளியே செல்பவா் பத்திரமாக வீடு திரும்புவது நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தோன்றுகிறது.

இத்தகைய கண்மூடித்தனமான துப்பாகிச்சூடு நிகழ்த்தியவா்களுக்கும் அதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் விரக்திக்கும் கோபத்துக்கும் வடிகாலாக கொலைகளை நிகழ்த்துவது அங்கே தொடா்கதையாகி வருகிறது.

டெக்ஸாஸ் படுகொலை நிகழ்ந்த சில நாட்கள் கழித்து நியூயாா்க் நகர மைதானம் ஒன்றில் நடந்த குத்துச்சண்டையைப் பலரும் பாா்த்துக் கொண்டிருந்த பொழுது மைதானத்தின் ஒருபுறம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்ட பலரும் யாரோ துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதாக பயந்துகொண்டு ஓடியதில் பத்து போ் காயமடைந்துள்ளனா். அந்த அளவுக்கு இத்தகைய எதிா்பாராத துப்பாக்கிச் சூடுகள் அமெரிக்க மக்களின் நிம்மதியைப் பறித்திருக்கின்றன.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் தனிமனிதா்களுக்கு துப்பாகி விற்பனை செய்வதைத் தடைசெய்யப் போவதாக அந்நாட்டுப் பிரதமா் அறிவித்துள்ளாா். கனடா காட்டும் வழியில் அமெரிக்காவும் பயணிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகின்றது.

 



Read in source website

நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் மாநில அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாமே மேற்கொள்வது என்று முடிவெடுத்து, அதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பது, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திவரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பிஹாரில் தொடங்கப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு 2023 பிப்ரவரியில் நிறைவுபெறும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நடத்தும் தேசிய அளவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2019 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, தற்போது அப்பணிகள் நடந்துவருகின்றன.



Read in source website

நம் நாட்டு முன்னேற்றத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க 2022-ல் குறைந்தது 50 கோடி பணியாட்கள் இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த அறைகூவலில் தொடங்கப்பட்டதே ‘NSDC’ என்னும் தேசியத் திறன் வளர்ப்பு ஆணையம். இப்போது அது தனி அமைச்சரகமாக இயங்கிவருகிறது.

1980-களில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. வறுமை, உணவுத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் என்ற எல்லாக் காரணங்களுக்காகவும் மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று மக்கள்தொகையை மக்கட்செல்வம் என்று பார்க்கும் பார்வை உருவாகியிருக்கிறது. இந்தியாவின் சுமார் 140 கோடி மக்கள்தொகையில் 60% இளைஞர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வளவும் மக்கள்செல்வமே. ஆனால், 50 கோடி பணியாட்கள் என்பது கிட்டத்தட்ட எட்ட முடியாத குறிக்கோளாகவே இருக்கிறது. இந்த சிக்கலால் இப்போது மோடியின் அரசு இந்த இலக்கை 40 கோடியாகக் குறைத்துள்ளது.



Read in source website

‘கேகே’ என அறியப்படும் பிரபல இந்தியத் திரையிசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மரணம், அவரது ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ‘கேகே’வின் இறப்புக்கு மாரடைப்புதான் காரணம் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், ‘53 வயது இறப்புக்குள்ள வயதில்லையே’ என்று ரசிகர்களைக் கலங்கவைத்துள்ளது.

அறியாமையும் அலட்சியமும்

பொதுவாக, ஒருவருக்கு நெஞ்சைப் பிடிக்கும் அளவுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னால் நெஞ்சு கனமாக இருப்பது, படபடப்பு உண்டாவது, உடல் அசதியாக இருப்பது, கடுமையாக வியர்ப்பது போன்ற சாதுவான அறிகுறிகளை அது அலாரம்போல் அடித்துக் காண்பிக்கும். ஆனால், அவற்றை ‘வாய்வு வலி’/‘அல்சர் வலி’/‘செரிமானம் சரியில்லை’/‘பணிக் களைப்பு’ என்று அவராகவே ‘பொய்க் காரணம் கண்டுபிடித்து’ அலட்சியப்படுத்தியிருப்பார். அதனால், தனக்கு வந்திருக்கும் மாரடைப்பை ஆரம்பத்தில் உணரத் தவறியிருப்பார். அதுதான் அவரை ஆபத்தான மாரடைப்பில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.

கேகேவுக்கும் அப்படி நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அவர் வாய்வுத் தொல்லைக்கு மருந்து சாப்பிட்டுள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. அவருக்கு ஏற்கெனவே இதயவலி வந்திருந்து, அதை வாய்வு வலி என்று தவறாகக் கருதி மருந்தை எடுத்திருக்க வேண்டும். மேலும், கச்சேரி மேடையில் அவருக்கு நிறைய வியர்த்திருக்கிறது. அது மாரடைப்புக்குரிய முக்கிய அறிகுறி. மேடையில் குளிர்சாதன அமைப்புகள் வேலை செய்யவில்லை என்பதால், தனக்கு வியர்ப்பதாக அவர் நினைத்துக்கொண்டு, நிகழ்ச்சியை இறுதிவரை நடத்திக்கொடுத்திருக்கிறார். இந்த அறியாமை அல்லது அலட்சியம் அவருக்குக் கடுமையான மாரடைப்புக்கு வழி செய்திருக்க அதிக வாய்ப்புண்டு.

மாரடைப்பு விஷயத்தில் பலரும் செய்கிற அடுத்த தவறு, ஓர் அசௌகரியம் உடலை வருத்தும்போது, ‘ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்’ என்று கருதி, மருத்துவரிடம் செல்வதைத் தாமதப்படுத்துவது. மாரடைப்பைப் பொறுத்தவரை அறிகுறிகள் ஆரம்பித்த முதல் முக்கால் மணி நேரம் பொன்னான நேரம். அந்த நேரத்துக்குள் மருத்துவரிடம் சென்றுவிட்டால், இறப்பைத் தவிர்க்கலாம். கேகேவுக்கும் அன்றைய தினம் உடல் அசதியாக இருந்திருக்கிறது. ஓய்வெடுக்க ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்.

அப்படி ஹோட்டலுக்குச் செல்லாமல், விழா மேடையிலிருந்து நேரடியாக மருத்துவ ஆலோசனைக்குச் சென்றிருந்தாலோ, ஹோட்டலில் மயங்கி விழுந்ததும் இதயம் மற்றும் நுரையீரலை மறுபடியும் இயங்கவைக்கும் ‘சி.பி.ஆர்.’ (Cardio pulmonary resuscitation - CPR) எனும் அவசர சிகிச்சையைக் கொடுத்திருந்தாலோ இறப்பைத் தவிர்த்திருக்க முடியும். இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.

மாரடைப்பைப் புரிந்துகொள்ளுங்கள்

மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் இதயத் தமனிகள் (Coronary arteries) அடைத்துக்கொள்வதால் ஏற்படும் ஓர் உயிர்ப் பிரச்சினை. நெஞ்சுவலி வந்தால்தான் மாரடைப்பு என்பதில்லை. மாரடைப்பின் ஆரம்பக் கட்டத்தில் இதயத் தசைகளுக்கு ரத்தம் அல்லது ஆக்ஸிஜன் கிடைப்பது குறையும். அப்போது உடல் அசதி, குமட்டல், வாந்தி, மூச்சுமுட்டுவது, வியர்ப்பது இப்படி ஏதாவது ஒரு சாதாரண தொல்லையுடன்கூட அது தொடங்கலாம்.

இதற்கு ‘இதயவலி’ (Angina) என்று பெயர். முக்கியமாக, முதியோருக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இப்படித்தான் அது ஆரம்பிக்கும். அப்போது பலரும் அதைக் கவனிக்க மாட்டார்கள். பாதிப்பின் அடுத்த கட்டத்தில் நெஞ்சுவலி கடுமையாக வரும்போதுதான் பதற்றமடைவார்கள். இன்னும் பலருக்குப் படியில் ஏறினாலோ பளு தூக்கினாலோ வேகமாக நடந்தாலோ உணர்ச்சிவசப்பட்டாலோ நிம்மதி தொலைந்தாலோ நடுங்க வைக்கும் குளிர்க் காற்று பட்டாலோ நெஞ்சு கனமாக இருக்கும். சிலருக்கு வெறும் வயிற்றில் நடக்கும்போது வராத நெஞ்சுவலி வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டு நடக்கும்போது வரும்.

அடுத்து, நெஞ்செரிச்சலும் இந்த வகைப்பாட்டில் சேர்ந்ததுதான். சமீபத்தில் ராஜபாளையம் வழியாக காரில் குற்றாலம் சென்றுகொண்டிருந்த மதுரைப் பயணி ஒருவர், என் மருத்துவமனையைக் கடக்கும்போது, நெஞ்செரிச்சல் ஏற்படவும் என்னிடம் வந்தார். அவருக்குப் பல முறை இப்படி ஏற்பட்டிருக்கிறது என்பதால், அல்சர் மாத்திரை கேட்டார். எனக்கோ அது மாரடைப்பின் அடையாளமாகத் தெரிந்தது. இசிஜி எடுத்துப் பார்த்தேன். அது இயல்பாக இருந்தது. ஆனால், ‘எக்கோ’வில் சந்தேகம் காட்டியது. உடனே, மதுரைக்கு அனுப்பி, ஆஞ்சியோகிராபி செய்ததில் மாரடைப்பு உறுதியானது. இதைச் சொல்வதற்குக் காரணம், நெஞ்செரிச்சலை அல்சரின் அறிகுறியாகப் பார்த்து அலட்சியமாக இருக்காமல், அதன் பிறப்பிடம் இதயமா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

நிலையில்லாத இதயவலி!

திருடுவதற்குச் சமயம் பார்த்து இருட்டில் மறைந்திருக்கும் திருடனைப் போல் சில சமயங்களில் இதயத்தமனியில் சிறு ரத்தக் கட்டி ஒதுங்கி நிற்கும். அவ்வப்போது அது இதயத்தமனியை அடைக்கும். பசித்த வயிறு ஒட்டிக்கொள்வதுபோல் சிலருக்கு இதயத்தமனி திடீர்திடீரென்று உள்ளுக்குள் ஒட்டிக்கொண்டு அடைக்கும். அப்போதெல்லாம் ஏற்படுவது ‘நிலையில்லாத இதயவலி’ (Unstable Angina). இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு நெஞ்சு வலிக்கும்போது இசிஜி எடுத்தால்தான் காரணம் தெரியும். மற்ற நேரங்களில் இசிஜி இயல்பாகவே இருக்கும். ஆகையால், இவர்கள் அலட்சியமாக இருப்பார்கள். சமயங்களில் சிறிதாக இருந்த ரத்தக் கட்டி எதிர்பாராமல் வளர்ந்து, இதயத் தமனியை அதிகமாக அடைத்து, மாரடைப்பை வரவேற்கும்.

அந்த ஆபத்தை எப்படித் தடுப்பது? ஓய்வாக இருக்கும்போதும் நடுநெஞ்சில் வலி வருகிறது; அது 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கிறது; ஒரு மாதத்துக்குள் வலி மறுபடியும் வருகிறது, அடிக்கடி வருகிறது, இன்னும் அதிக நேரம் நீடிக்கிறது, வலி கடுமையாகிறது, நடுராத்திரியில் மூச்சடைத்து உறக்கம் கலைந்து உட்காரவைக்கிறது என்றால், அது நிலையில்லாத இதயவலியாக இருக்கலாம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து ‘ட்ரோபோனின்’ சோதனை (Troponin test) செய்ய வேண்டும்; தொடர்ச்சியாக 6 மணி நேரத்துக்கு இசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும். அவற்றில் பாதிப்பு அறியப்படவில்லையென்றால், ‘ட்ரட் மில்’, ‘எக்கோ’, கொரோனரி ஆஞ்சியோகிராபி போன்ற சோதனைகள் தேவைப்படும். அந்த வழிகளில் இதய பாதிப்பை உறுதிசெய்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஆபத்தான மாரடைப்பு

இதயவலியை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தியவர் களுக்குத் திடீரென்று ஒருநாள் நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி இறுக்குவதுபோல மிகக் கடுமையாக வலிக்கும். அந்த வலி தாடை, இடது புஜம், இடது கைக்குப் பரவும். இது மாரடைப்பின் மோசமான முகம். இதை ‘இதயத்தசை அழிவு’ (Myocardial infarction) என்கிறோம். இந்தப் பாதிப்பு உள்ளவரை எவ்வளவு சீக்கிரம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் பலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலிக்காது. இதை ‘அமைதியான மாரடைப்பு’ (Silent Heart Attack) என்கிறோம். அடுத்து, ‘நெஞ்சைப் பிடிச்சுட்டு வலிக்குதுன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே மயக்கமாயிட்டார். பேச்சும் மூச்சும் நின்னுபோச்சு!’ என்று இறந்தவர் வீடுகளில் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பினால் (Ventricular tachyarrhythmia – VT ) இப்படியான உடனடி மாரடைப்பு உண்டாகிறது.

மறைந்து தாக்கும் இவ்வகை மாரடைப்பிலிருந்தும் தப்பிக்க வழி உண்டு. 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், குறிப்பாக, வம்சாவளியில் மாரடைப்பு ஏற்பட்ட வரலாறு உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ‘PET MPS’ உள்ளிட்ட இதயப் பரிசோதனைகளை (Cardiac Check-up) முழுவதுமாகச் செய்துகொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் உயிர் ஆபத்திலிருந்து விடுபடலாம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com



Read in source website