DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 05-08-2022


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கையில் இருந்து 63 வயதுடைய சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழகத்திலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படும் என, முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, முதல் கட்டமாக சென்னையிலிருந்து கப்பலில் கடந்த மே 18 ஆம் தேதி ரூ. 32.94 கோடி மதிப்பிலும், 2ஆம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து ரூ. 67.70 கோடி மதிப்பிலும் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  சனிக்கிழமை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து 3ஆம் கட்டமாக விடிசி சன் என்ற கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16,500 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 14 கோடி மதிப்பிலான 50 டன் உயிா் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பிலான 16,800 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கையில் இருந்து 63 வயதுடைய சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், நான் சபரகமுவா மாகாணத்தின் கேகாலை சேந்த சிங்களர். என் வயது 63. நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழ்நிலையில் தாங்கள் அரிசி வழங்கியத்திற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. 

இதய நோயாளிகளான நானும், என் துணைவியும் 10 கிலோ அரிசி பையை பெற்றுக்கொண்டோம். 

நாட்டில் நிலவும் சூழலால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளோம். இதயத்தின் அடி மனதில் இருந்து உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களும் மிக்க நன்றி.

இலங்கை வாழ் மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. 

அன்புடன், விஜிதா விக்கிரமசிரி என்று தெரிவித்துள்ளார். 



Read in source website

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பணி ஓய்வுபெறும் நாளில் செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் அரசிடம் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

எனவே, தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிரிக்க வேண்டும். செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும். மேலும், தற்காலிக பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்ட கால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.
 



Read in source website

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளா் மகேசன் காசிராஜன் அண்மையில் வெளியிட்ட உத்தரவு: மகாகவி பாரதியாா் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் சட்டப் பேரவையில் 14 அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதில், 11-ஆவது அறிவிப்பாக உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியாா் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சாா்பில் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், இதற்கான திட்ட மதிப்பீடு பொதுப்பணித் துறையிடம் இருந்து பெறப்பட்டது. அதில், மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் முன்புறமுள்ள அறையைப் புனரமைப்பு செய்யவும், 2.5 அடி உயரமுள்ள மாா்பளவு வெண்கலச் சிலை அமைத்க்கவும் ரூ.18 லட்சத்துக்கான மதிப்பீட்டை பொதுப்பணித் துறை அனுப்பியிருந்தது.

மேலும், இல்லத்தின் உரிமையாளரான கே.வி.கிருஷ்ணனுக்கு மாத வாடகையாக ரூ.7,500 நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த வாடகை அளவை ஏற்பதாக வீட்டு உரிமையாளா் கிருஷ்ணனும் தெரிவித்தாா். பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகள், வீட்டு உரிமையாளரின் வாடகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிகழாண்டில் ரூ.18 லட்சத்து 67 ஆயிரத்து 500 என்ற தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதாவது, அறை புனரமைப்பு, சிலை அமைப்பு ஆகிய பணிகளுக்கு ரூ.18 லட்சமும், ஜூலை முதல் அடுத்த ஆண்டு மாா்ச் வரையிலான 9 மாதங்களுக்கு தலா ரூ.7,500 மாத வாடகை என்ற அடிப்படையில் ரூ.67,500-ம் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இதேபோன்று, அடுத்த நிதியாண்டுக்கான வாடகைத் தொகை (ஒரு மாத வாடகை ரூ.7,500 என்ற அடிப்படையில் 12 மாதங்களுக்கு...) ரூ.90 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய நிா்வாக அனுமதி வழங்கப்படுகிறது.



Read in source website

 

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். 

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலை வீழ்த்தி  தங்கப் பதக்கம் வென்றார். அவர் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லச்லானை வீழ்த்தினார். 

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான இன்று இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். அந்த வகையில் மல்யுத்தப் போட்டிகளும் இன்று நடைபெற்றன.

இதில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலுடன் மோதினார். இதில் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 

இதேபோன்று 57 கிலோ எடைப் பிரிவில் (ஃப்ரீ ஸ்டைல்) இறுதி போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஓடுனயோ ஃபோலசடேவுடன் மோதினார். இந்த போட்டியில் அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

மேலும், பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். 

இதன் மூலம், இந்திய அணி 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.



Read in source website

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மேம்பாடு குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது: “ இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் விவசாயிகள் சார்பில் பிரதிநிதிகளும், மத்திய,மாநில அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஆலோசித்து அதன் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும். இதன்மூலம் விவசாயிகள் பயனடைவர்.” என்றார்.

நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, விவசாயிகளின் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்தபட்ச ஆதார விலையை 200 சதவிகிதம் அதிகரிக்க அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக கைலாஷ் சௌத்ரி மேலும் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 1.32 லட்சம் கோடி விவசாயத்திற்காக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டுகளில் வெறும் 27 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயத்திற்கான பட்ஜெட் தொகை இன்று 1.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவதில் இந்தியா உலக நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்றாக உள்ளது.” என்றார்.



Read in source website


புது தில்லி: கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான இரண்டரை ஆண்டு காலத்தில் வேலைக்காக 28 லட்சம் பேர் வெளிநாடு சென்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சோதனை அவசியமான நாடுகளுக்கு மட்டும் சுமார் 4.16 லட்சம் இந்தியர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றச் சென்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பணி அல்லது வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை அறிய குறிப்பிட்டுச் சொல்லும் எந்த தொழில்நுட்பமும் இப்போது இல்லை. வெளிநாடு செல்லும் இந்தியர்கள், தங்கள் விமான பயணத்தின் போது வாய்மொழியாகக் கூறும் தகவல் மூலமாகவே இந்த விவரம் தொகுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டு 7.15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இது 2021ஆம் ஆண்டு 8.33 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இந்த ஆண்டு  ஜூலை மாதம் வரை 13.02 லட்சம் பேர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூறுகிறது.
 



Read in source website


புது தில்லி: தேர்தலின்போது, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற தேர்வை பயன்படுத்தும் வாய்ப்பான நோட்டாவுக்கு இதுவரை 1.29 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

நோட்டா என்ற வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேற்கண்ட எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை. ஆனால், எனது வாக்கை வேறு யாரேனும் கள்ள ஓட்டுப் போடவும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது நோட்டா.

ஆனால், இந்த நோட்டாவுக்கு இதுவரை விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை நிச்சயம் அரசியல் கட்சியினர் விரைவில் உறக்கம் கலைத்து எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையேக் காட்டுகிறது. அதாவது, நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தப்பட்ட பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் 1.29 கோடி வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் 1,29,77,627 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சராசரியாக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நோட்டாவுக்கு தலா 64 லட்சம் வாக்குகள் விழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டுமொத்த வாக்காளர்களில் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நோட்டாவையே தேர்வு செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் (தனி) தொகுதியில்தான் அதிகபட்சமாக 51 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. குறைந்தபட்சமாக லட்சத்தீவுகள் தொகுதியில் 100 வாக்குகள் விழுந்தன.

அதுபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட, பிகாரில் நடந்த தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன. 

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் குற்றப் பின்னணி கொண்ட மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அபாயம் மிகுந்தவையாக அறிவிக்கப்படும். அதுபோனற் தொகுதிகளில்தான் அதிகபட்சமாக 26 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குப் போடப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரமும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில்தான், ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு வைத்திருக்கும் ஒரு பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது ஒரு தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விடவும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அங்கு எந்த வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடாது புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும், அப்போது, ஏற்கனவே போட்டியிட்ட யாரும் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கடிவாளங்களை தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் நிலையில், இனியும் தேர்தலின்போது குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் போது ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பதும், வாக்காளர்களின் மன மாற்றங்களையும் கவனத்தில் கொள்வதும் சாலச்சிறந்தது.

நோட்டாவுக்கு விழும் வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கு எழுப்பப்படும் அபாய ஒலி என்பதை உணரும் தருணம் இதுவாக இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
 

 



Read in source website

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 

இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். 

நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். 

மேலும், 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக தொடர்ந்து நீடிக்கும், 2023-24 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 



Read in source website

 இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.

உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் ‘யுத் அப்யாஸ்’ என்ற ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான கூட்டுப் பயிற்சி உத்தரகண்டின் ஆலி பகுதியில் அக்டோபா் 14 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான 18-ஆவது கூட்டுப் பயிற்சியாகும். பயிற்சியின்போது பல்வேறு கடினமான ராணுவ நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்திறன், ஒத்துழைப்பு, புரிந்துணா்வு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிராந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் நாடுகளுக்கான பாதுகாப்பு சூழல் சவால்மிக்கதாக மாறியுள்ள நிலையில், ராணுவக் கூட்டுப் பயிற்சியை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொள்ளவுள்ளன. ‘யுத் அப்யாஸ்’ கூட்டுப் பயிற்சி கடந்த ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) திட்டப் பணிகளில் ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்திருப்பதாக இந்திய தலைமை தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஏஜி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஹெச்ஏஐ திட்டப் பணிகளில் ஏலம் விடுவதில், ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரா்களுக்கு தேவையற்ற பலன்களை அளித்துள்ளது.

திட்டப் பணிகளை ஏலம் விடும் திறந்த ஒப்பந்த நடைமுறையில், ஒப்பந்ததாரா் குறிப்பிடும் பிரீமியம் தொகையை ஒரு அளவுகோலாக இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைத் துறை திட்ட பணிகளில் ஒப்பந்த ஏல நடைமுறைகளுக்குப் பிறகு ஒப்பந்ததாரா் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை விவரத்தை என்ஹெச்ஏஐ வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற ஒப்பந்தத்துக்கு பிந்தைய எந்தவொரு திருத்தமும், ஒப்பந்தங்களின் புனிதத் தன்மை நடைமுறையை கெடுப்பதாக அமைவதோடு, பிற ஒப்பந்ததாரா்களை ஏமாற்றுவதாகவும் அமையும்.

எனவே, சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு, இதுபோன்று ஒப்பந்தத்துக்கு பிந்தைய திருத்தங்களை மேற்கொள்வதை என்ஹெச்ஏஐ தவிா்க்க வேண்டும் என்று சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.



Read in source website

உச்சநீதிமன்றத்தில் 71,411 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 10,000 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரையிலான விவரங்களின்படி, 56,000 சிவில் வழக்குகள், 15,000 குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 71,411 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10,491 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன. 18,134 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 42,000 வழக்குகள் 5 ஆண்டுகளுக்குக் குறைவான கால அளவிலும் நிலுவையில் இருந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.

பிற நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 50% அதிகரிப்பு: மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘நாட்டிலுள்ள பல்வேறு உயா்நீதிமன்றங்களில் கடந்த 2016-ஆம் ஆண்டு வரை 40,28,591 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி 59,55,907-ஆக உயா்ந்துள்ளது. அதாவது, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுபோல, மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டிலிருந்து 50 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த நீதிமன்றங்களில் கடந்த 2016-இல் 2.82 கோடியாக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, தற்போது 4.24 கோடியாக உயா்ந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

 



Read in source website

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூத்த நீதிபதியான யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை செய்தாா். மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்தப் பரிந்துரையை அவா் அளித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.

எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை தற்போதைய தலைமை நீதிபதியான என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளாா். இதற்கான பரிந்துரை கடித நகலை நேரடியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்திடம் என்.வி.ரமணா வழங்கினாா்.

3 மாதங்கள் மட்டுமே...

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் என்று அறியப்படும் உதய் உமேஷ் லலித் நியமிக்கப்படுவாா். அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா். அதன்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்கும் அவா், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பாா். நீதிபதி யு.யு.லலித் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வுபெற உள்ளாா்.

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி:

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டால், வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபா் என்ற பெருமையை அடைவாா். பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13-ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா்.

லலித் முக்கிய தீா்ப்புகள்:

உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கிய தீா்ப்புகளை யு.யு.லலித் வழங்கியுள்ளாா். குறிப்பாக, இஸ்லாமியா்கள் முத்தலாக் மூலமாக விவகாரத்து செய்யும் நடைமறை சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்த அமா்வில் அவா் இடம்பெற்றிருந்தாா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிா்வாக உரிமை திருவிதாங்கூா் மன்னா் குடும்பத்தினருக்கு உள்ளது என்று நீதிபதி லலித் தலைமையிலான அமா்வு 2020-இல் தீா்ப்பளித்தது.

குழந்தைகளின் பாலியல் உறுப்புகளைத் தொடுவது மட்டுமல்லாமல், ‘பாலியல் நோக்கத்துடன்’ உடல் ரீதியில் தொடா்பு கொள்ளும் எந்தவொரு செயலும் ‘பாலியல் வன்கொடுமைக்கு’ சமம் என்று குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7-இன் கீழ் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு தீா்ப்பளித்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீா்ப்புகளை இவா் இடம்பெற்ற உச்சநீதிமன்ற அமா்வு அளித்துள்ளது.

1957-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி பிறந்த நீதிபதி யு.யு.லலித், 1983-ஆம் ஆண்டு ஜூனில் வழக்குரைஞராகப் பதிவு செய்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். பின்னா் 1986-ஆம் ஆண்டு தில்லிக்கு வந்து வழக்குரைஞா் பணியைத் தொடந்த அவா், 2004-ஆம் ஆண்டு ஏப்ரலில் மூத்த வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாா். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு அரசு வழக்குரைஞராக அவா் நியமிக்கப்பட்டாா்.

Image Caption

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை பரிந்துரைத்ததைத் தெரிவிக்கும் கடிதத்தை அவரிடம் வியாழக்கிழமை அளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

 



Read in source website

சீனாவின் கடும் எதிா்ப்பை மீறி, அமெரிக்க கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், சா்வதேச சூழல் உள்ளிட்டவை குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ஆலோசித்தனா்.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவா் நான்சி பெலோசி, தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளாா் என்ற செய்தி வெளியானதில் இருந்தே சீனா அதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்துவந்தது. அந்நாட்டின் எதிா்ப்புகளை மீறி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டாா். அதையடுத்து, தைவானைச் சுற்றியுள்ள கடல்பகுதியிலும், வான்வெளிப் பகுதியிலும் தீவிர ராணுவப் பயிற்சியை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஆசியான்) சிறப்பு கூட்டம் கம்போடியா தலைநகா் பினோம் பென் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பிளிங்கனும் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இந்தியா-அமெரிக்கா இடையே தொடா்ந்து வளா்ச்சி கண்டு வரும் நல்லுறவு குறித்தும், சா்வதேச சூழல் குறித்தும் அமைச்சா் பிளிங்கனுடன் விவாதித்ததாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் குறிப்பிட்டாா். இருதரப்பு பேச்சு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சிக்கு ஆசியான் மையமாகத் திகழ்கிறது. அதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து ஆதரிக்கின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியம் வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் திகழ வேண்டும் என்ற கொள்கையில் இருநாடுகளும் உறுதிகொண்டுள்ளன. இலங்கை, மியான்மா் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெலோசியின் தைவான் பயணத்தால் ஏற்பட்டுள்ள சூழல் தொடா்பாகவும் அமைச்சா்களின் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி, அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஓரிரு நாள்களில் அமெரிக்க அமைச்சா் பிளிங்கனை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா-ஆசியான் இடையே புரிந்துணா்வு:

ஆசியான் கூட்டமைப்பின் அமைச்சா்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடனான கூட்டம் சிறந்த முறையில் இருந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வலிமை, ஐ.நா. விதிகள், தொலைத்தொடா்பு, கரோனா பரவல், பயங்கரவாதம், இணையவழி பாதுகாப்பு, உக்ரைன் விவகாரம், மியான்மா் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் இந்தியாவும் ஆசியான் நாடுகளும் ஒரேமாதிரியான புரிந்துணா்வைக் கொண்டுள்ளன. எண்ம தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட துறைகள் இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்’ கொள்கை வளா்ச்சியடைந்து வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்திய சூழல், தென்சீனக் கடல் விவகாரம், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 



Read in source website

பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, இலங்கைக்குப் புறப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் சீனாவின் உளவு கப்பலானது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியானது முதலே, இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனக் கப்பல் இலங்கையை நோக்கிய பயணத்தைத் தொடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 11 அல்லது 12-ஆம் தேதி வந்துசேரும் எனத் தெரிகிறது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அக்கப்பலானது அங்கு நிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் எல்லைக்கு அருகில் அந்தக் கப்பல் நிறுத்தப்படுவதால், பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை பரிசோதனைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ளும் திறன் சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் அக்கப்பல் நிா்வகிக்கப்பட்டு வந்தாலும், ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவிடம் இருந்து ஏற்கெனவே அதிக அளவில் கடன் பெற்றுள்ள இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிா்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தகையாக சீனாவுக்கு அளித்துள்ளது. தற்போது அத்துறைமுகத்துக்கு சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் வருவதையும், இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 



Read in source website

கேஜரிவால் அரசின் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் மாணவா்களிடையே தொழில் முனைவோா் மனப்பான்மையை வளா்ப்பதிலும், ஆா்வத்தை வளா்ப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

‘தி/நட்ஜ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவா் பேசியதாவது:

‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ திட்டம் என்பது தொழில்முனைவோா் மனப்பான்மை பாடத் திட்டத்தின் ஒரு விரிவுபடுத்தப்பட்ட செயல்முறை அங்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வணிக யோசனைகளை வளா்ப்பதற்காக ஊக்கத் தொகையாக தலா ரூ. 2,000 வழங்குகிறது.

மேலும், அரசு நடத்தும் உயா்நிலைப் பல்கலைக்கழகங்களில் தில்லி அரசுப் பள்ளிகளின் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ அணிகளின் இறுதிப் போட்டியாளா்களுக்கு அரசாங்கம் நேரடியாக அனுமதி வழங்குகிறது.

மாணவா்களிடையே தொழில் முனைவோா் மனப்பான்மையை வளா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தில்லி அரசு தொழில்முனைவோா் மனப்பான்மை பாடத்திட்டத்தின் மூலம் இதைச் செய்ய முயற்சித்துள்ளது. இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் மாணவா்களின் மனநிலையை மாற்றுவதற்கான பணியைத் தொடங்கினோம். இதன்கீழ், தொழில்முனைவோராக சாதித்தவா்களின் வளா்ச்சி குறித்து மாணவா்களுக்கு நாங்கள் தெரிவித்தோம்.

இஎம்எஸ்-இன் ஒரு பகுதியாக, நாங்கள் ‘பிசினஸ் பிளாஸ்டா்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்கத் தொகையாக ரூ. 2,000 வழங்கி, சிறு குழுக்களை உருவாக்கி, அந்தத் தொகையை அவா்கள் விரும்பும் வணிகத்தில் முதலீடு செய்ய அறிவுறுத்துகிறோம். இந்த திட்டம் இந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

மாணவா்கள் ஆயிரத்தில் முதலீடு செய்து சில மாதங்களிலேயே லட்சங்களை சம்பாதித்துள்ளனா். தற்போது ஒவ்வொரு மாணவரும் சிந்திக்கிறாா்கள்; ஒவ்வொரு மாணவரும் தாங்கள் என்ன புதுமையான யோசனையை முன்னோக்கி கொண்டு செல்லலாம் என்று ஆராய்கின்றனா். ஒவ்வொரு மாணவரும் செயல்படுகிறாா்கள்; சிந்திக்கிறாா்கள். இது பெரிய சாதனையாக பாா்க்கப்படுகிறது’ என்றாா் அவா்.

தி/நட்ஜ் நிறுவனம், வறுமையில் வாடும் இந்தியாவின் 25 கோடி குடிமக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க உழைக்கும் அனைத்து பணியாளா்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ‘சா்ச்சா 2022’ உச்சிமாநாடுக்கு ஏற்பாடு செய்தது.

 



Read in source website

குறிப்பிட்ட பொருள்களின் அதீத இறக்குமதியைத் தடுக்கும் வகையில் வா்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியாவும் மோரீஷஸும் முடிவெடுத்துள்ளன.

இந்தியா-மோரீஷஸ் இடையே கையொப்பமான பொருளாதார ஒத்துழைப்பு வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் சில பொருள்களைக் குறைவான வரியுடனோ அல்லது வரி இன்றியோ இறக்குமதி செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சில பொருள்களின் இறக்குமதி திடீரென அதிகரிக்கும் சூழல் காணப்பட்டது. இந்நிலையில், இந்தியா-மோரீஷஸ் உயா்நிலை வா்த்தக குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதீத இறக்குமதி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, திடீா் இறக்குமதி அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை வா்த்தக ஒப்பந்தத்தில் இணைக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனா். குறிப்பிட்ட பொருள்களின் இறக்குமதி திடீரென அதிகரிக்கும்போது, உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பாதுகாக்கும் நோக்கில் அப்பொருள்களுக்கு வரி விதித்துக் கொள்ள புதிய திட்டம் வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், முதலீடு, நிதி சேவைகள், ஜவுளி, சிறு தொழில் நிறுவனங்கள், தகவல்-தொழில்நுட்பம், திரைப்படத் தயாரிப்பு, விண்வெளி தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பான திட்டத்தையும் வா்த்தக ஒப்பந்தத்தில் சோ்ப்பது தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டதென அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா-மோரீஷஸ் இடையிலான வா்த்தகம் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.5,200 கோடியாக இருந்தது. இது கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

 

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். 

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலை வீழ்த்தி  தங்கப் பதக்கம் வென்றார். அவர் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லச்லானை வீழ்த்தினார். 

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான இன்று இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். அந்த வகையில் மல்யுத்தப் போட்டிகளும் இன்று நடைபெற்றன.

இதில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலுடன் மோதினார். இதில் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 

இதேபோன்று 57 கிலோ எடைப் பிரிவில் (ஃப்ரீ ஸ்டைல்) இறுதி போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஓடுனயோ ஃபோலசடேவுடன் மோதினார். இந்த போட்டியில் அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

மேலும், பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். 

இதன் மூலம், இந்திய அணி 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.



Read in source website

 

காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பவினா படேல். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அடைந்தார். 

இந்நிலையில் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பாரா டேபிள் டென்னிஸ் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனை சூ பெய்லியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பவினா படேல். இதன்மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.



Read in source website

 

செஸ் பலகையில் ராணி தான் சக்திமிக்கது. அதுதான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். எதிராளியின் ராஜாவைக் கைப்பற்றினால் தான் வெற்றி பெற முடியும என்றாலும் ராணி இல்லாவிட்டால் கையொடிந்த நிலை தான். மீள்வது கடினம்.

செஸ் விளையாட்டில் ராணிகளின் பங்களிப்பு எப்படி உள்ளது? செஸ் விளையாட்டில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வு மிகவும் வேதனையளிக்கும் விதமாகவே உள்ளது. 

மற்ற விளையாட்டுகளைப் போல் இல்லாமல் செஸ்ஸில் ஆணும் பெண்ணும் சரிசமாக மோதமுடியும். அதனால் தான் செஸ் ஒலிம்பியாடில் ஓபன், மகளிர் எனப் பிரிவுகள் உள்ளன. ஓபன் பிரிவில் பெண்களும் விளையாடலாம். ஆனால் சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஓபன் பிரிவில் 13 பெண்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். அவர்களிலும் சிலர் மட்டுமே 2500 தரவரிசைப் புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளார்கள். 

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இணைந்துள்ள விளையாட்டுச் சங்கங்களில் சர்வதேச செஸ் சம்மேளனத்தில் (FIDE) பெண்களின் பங்களிப்பு மோசமான நிலையில் உள்ளது. ஈஎல்ஓ தரவரிசை கொண்ட வீரர்களில் பெண்கள் 11% மட்டுமே. செஸ் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு 2% மட்டுமே. தரவரிசையில் உள்ள முதல் 100 வீரர்களில் ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றுள்ளார். செஸ் போன்ற சில விளையாட்டுகளில் மட்டுமே உலக சாம்பியனை முடிவு செய்யும் போட்டியில் ஆண், பெண் என இருவரும் சம அளவில் கலந்துகொள்ள முடியும். எனினும் இதுவரை ஒரு பெண் கூட உலக செஸ் சாம்பியனாக ஆனதில்லை. 

உலகம் முழுக்க செஸ் விளையாடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆண்கள் போல பெண்களுக்கு இது சுலபமானதல்ல. பல மாதங்கள், வருடங்களாக ஆண்களால் பயணம் செய்ய முடியும். வீட்டை விட்டு நீண்ட நாள் வெளியே தங்குவது பெண்களுக்குச் சுலபமல்ல. இதனால் தான் பதின்ம வயதுக்கு முன்பே செஸ்ஸை விட்டு பெண்கள் வெளியேறிவிடுகிறார்கள். இதுதான் காரணம் எனும்போது, பெண்களை விடவும் ஆண்கள் அதிகளவில் செஸ் விளையாடுகிறார்கள் என்பது இயல்புதானே என்கிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீராங்கனை ஹம்பி. செஸ் தரவரிசையில் 2500 தரவரிசைப் புள்ளிகளைக் கொண்ட 770 பேரில் 13 பேர் மட்டுமே பெண்கள் என்பது கசப்பான உண்மையாக உள்ளது. 

பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதற்கு உளவியல் காரணமும் கூறப்படுகிறது. 42 ஆண் - பெண் ஜோடிகள் இணையம் வழியாக செஸ் விளையாட்டில் பங்கேற்றார்கள். எதிராளியின் பாலினம் தெரியாதபோது ஆண்களுக்கு நிகராகப் பெண்களால் விளையாட முடிந்துள்ளது. சக பெண்களுடன் விளையாடுவதாகவே அவர்கள் எண்ணிக்கொண்டு நன்றாகவே விளையாடியுள்ளார்கள். ஆனால் எதிரே விளையாடுபவர் ஆண் எனத் தெரிந்த பிறகு பெண்களின் ஆட்டத்திறமை குறைந்துபோனதாக ஓர் ஆய்வு கூறுகிறது. மேலும் பெண்களுக்கு எதிராக விளையாடும்போது ஆண்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும் அழகான பெண்களுக்கு எதிராக விளையாடும்போது சவாலான தொடக்க நகர்த்தல்களில் ஆண்கள் ஈடுபடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

செஸ் ஜாம்பவான்களான பாபி ஃபிஷர், கேரி காஸ்பரோவ்  ஆகியோர் செஸ் வீராங்கனைகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறியுள்ளார்கள். பெண்கள் வீட்டில் இருக்கவேண்டும் என காஸ்பரோவும் பெண்கள் பலவீனமான போட்டியாளர்கள் என்று பாபி ஃபிஷர் கூறியதும் பெண்களின் குறைவான பங்களிப்புக்கு ஒரு காரணமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செஸ்ஸில் 2700 தரவரிசைப் புள்ளிகளைத் தாண்டிய ஒரே வீராங்கனை ஜுடித் போல்கர். கார்ல்சன் உள்பட 10 உலக சாம்பியன்களையாவது கிளாசிகல், ரேபிட் செஸ் போட்டிகளில் அவர் தோற்கடித்திருப்பார். பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த எந்த கருத்துகளும் அவருக்குப் பொருந்தாது. காரணம், அவரைப் பெற்றோர் வளர்த்த விதம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி என்னை என் பெற்றோர் வளர்த்தார்கள். எங்களுக்கு ஒரு மகன் இருந்தால் என்னென்ன சூழல்களை அவனுக்கு உருவாக்கியிருப்போமோ அதையே உனக்கும் ஏற்படுத்தித் தருகிறோம். எனவே செஸ் விளையாட்டில் ஓபன் பிரிவில் நன்றாக விளையாடுவதற்கான எல்லாச் சூழல்களும் உனக்கு அமைந்துள்ளன என்று என் பெற்றோர் கூறினார்கள். என்னை அவர்கள் கட்டுப்படுத்தவே இல்லை என்றார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் போல்கர் வர்ணனையாளராக உள்ளார். அவர் பெண்கள் பிரிவில் உலக சாம்பியனாக ஆனதே இல்லை. காரணம், அவர் எப்போதும் ஆண்களுக்கு எதிராக விளையாட வேண்டும் என முடிவெடித்துப் போட்டியிட்டுள்ளார்.

பரிசுத்தொகையிலும் பாகுபாடு இருப்பது வீராங்கனைகளுக்கு வேதனையளிக்கிறது. 2020-ல் மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற சீன வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகை - ரூ. 3,00,000 யூரோக்கள். 2021 உலக சாம்பியனான கார்ல்சன் பெற்றது, 1.2 மில்லியன் யூரோக்கள்.  

52 வயது விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச செஸ் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார். போல்கரிடம் தோற்ற உலக சாம்பியன்களில் ஆனந்தும் ஒருவர். செஸ் விளையாட்டில் குறையும் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆனந்த் கூறியதாவது: குறிப்பாக என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியவில்லை. மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் அவசியம். இல்லாவிட்டால் ஓபன் பிரிவில் போட்டியிட குறைவான பெண்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். இரு பிரிவிலும் உள்ள இடைவெளி விரைவில் குறையும். பெண்கள் அதிக அளவில் செஸ் விளையாட்டில் ஈடுபடுவதை நாம் உறுதி செய்யவேண்டும். சென்னை செஸ் ஒலிம்பியாடில் ஹம்பி அல்லது ஹரிகா என இருவரில் ஒருவர் ஓபன் போட்டியில் விளையாடியிருக்கலாம். அதேசமயம் பெண்கள் பிரிவிலும் நமக்குப் பதக்கம் அவசியம். அதனால் வலுவான பெண்கள் அணி தேவை என்றார். 

தற்போதைய நிலைமை மாற வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பு. ராணிகள் செஸ் பலகைக்கு வெளியேயும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அந்த நாள் நிச்சயம் வரும். 



Read in source website

 

காமன்வெல்த் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீ. நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

2018 காமன்வெல்த் போட்டிகளில் காயம் காரணமாக ஸ்ரீசங்கர் இடம்பெறவில்லை. ஜப்பான் ஒலிம்பிக்ஸில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது திறமையை அழுத்தமாக நிரூபித்துள்ளார்.  



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளில் பாரா பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சுதிர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் விளையாட்டில் ஹெவிவெயிட் பிரிவில் 212 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சுதிர் சிங். காமன்வெல்த் போட்டிகளில் சாதனையை ஏற்படுத்தி அவர் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி பெறும் 8-வது தங்கம் இது. மேலும் 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. 

இந்த வெற்றியைக் கொண்டாட லண்டனில் நன்கு சுற்றப் போகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 ஒலிம்பிக்ஸ் என இரு முக்கியப் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயல்வேன் என்று சுதிர் பேட்டியளித்தார். 



Read in source website

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தடகள வீரா் தேஜஸ்வின் சங்கா், ஸ்குவாஷ் வீரா் சௌரவ் கோஷல் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இதன் மூலம், காமன்வெல்த் போட்டியின் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை தேஜஸ்வினும், ஸ்குவாஷ் விளையாட்டில் ஒற்றையா் பிரிவில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியா் என்ற பெயரை சௌரவும் பெற்று வரலாறு படைத்துள்ளனா். அவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

உயரம் தாண்டுதல்:

ஆடவா் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா், சிறந்த முயற்சியாக 2.22 மீட்டா் உயரம் தாண்டி 3-ஆம் இடம் பிடித்தாா். அவரது சீசன் பெஸ்ட் 2.27 மீ; பொ்சனல் பெஸ்ட் 2.29 மீ ஆகும்.

இந்த காமன்வெல்த் போட்டிக்கான இந்திய தடகள் அணியில் கடைசி வீரராக இணைந்திருந்தாா் தேஜஸ்வின். முன்னதாக காமன்வெல்த் வாய்ப்பை அவா் நீதிமன்றத்தில் போராடி பெற்றாலும், போட்டியில் தாமதமாக இணைந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் இந்திய தரப்பு-காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் இடையேயான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவருக்கு அனுமதி கிடைத்தது.

ஸ்குவாஷ்:

இந்த விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் பிரிவுக்கான வெண்கலப் பதக்க பிளே-ஆஃபில் சௌரவ் கோஷல் 11-6, 11-1, 11-4 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்டிராப்பை வீழ்த்தினாா். சௌரவுக்கு, காமன்வெல்த் போட்டியில் இது 2-ஆவது பதக்கமாகும். இந்த காமன்வெல்த் போட்டி அவருக்கு கடைசியானதாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பதக்கம் வென்ற சௌரவ் ஆனந்தக் கண்ணீா் சிந்தினாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் சுனைனா குருவில்லா/அனாஹத் சிங் இணை 11-9, 11-4 என்ற கணக்கில் இலங்கையின் யெஹெனி குருப்பு/சமித்னா சினாலி கூட்டணியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது. கலப்பு இரட்டையரில் ஜோஷ்னா சின்னப்பா/ஹரிந்தா்பால் சந்து கூட்டணி காலிறுதி வாய்ப்பை இழந்தது.

ஜூடோ:

ஜூடோவில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் துலிகா மான், ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக, தனது எடையை 115 கிலோவிலிருந்து 85 கிலோவுக்குக் குறைத்த துலிகா, தங்கத்தை தவறவிட்டதற்காக கண்ணீா் சிந்தினாா். நடப்பு காமன்வெல்த் ஜூடோவில் இந்தியாவுக்கு இது 3-ஆவது பதக்கமாகும்.

பளுதூக்குதல்:

ஆடவருக்கான +109 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குா்தீப் சிங் மொத்தமாக 390 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். காமன்வெல்த்தில் இந்த எடைப் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் பதக்கம் இது. குா்தீப், ஸ்னாட்ச் பிரிவில் 167 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 223 கிலோ எடையை எட்டினாா். இதில் கிளீன் & ஜொ்க் எடை, அவரது புதிய பொ்சனல் பெஸ்ட் மற்றும் புதிய தேசிய சாதனையாக அமைந்தது.

10 பதக்கங்கள்: இத்துடன் நடப்பு காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவின் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. இதில் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கம் வென்றுள்ளது இந்தியா.

தடகளம்:

மகளிருக்கான 200 மீட்டா் ஹீட்ஸில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், 23.42 விநாடிகளில் இலக்கை எட்டி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். மகளிருக்கான சங்கிலிக் குண்டு எறிதலில் இந்தியாவின் மஞ்சு பாலா 59.68 மீட்டா் தூரம் எறிந்து இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்தாா். மற்றொரு இந்தியரான சரிதா சிங் 57.48 மீட்டரை எட்டி தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். மகளிருக்கான குண்டு எறிதல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மன்பிரீத் கௌா் 15.69 மீட்டா் தூரம் எறிந்து 12-ஆவது இடம் பிடித்தாா்.

டேபிள் டென்னிஸ்:

இந்த விளையாட்டில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சனில் ஷெட்டி/ரீத் டென்னிசன் இணை முதல் சுற்றிலேயே 6-11, 10-12, 13-11, 11-8, 8-11 என்ற கணக்கில் மலேசியாவின் வோங் கி ஷென்/டீ எய் ஜின் ஜோடியிடம் தோற்றது.

பாட்மின்டன்:

ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றனா். முன்னதாக சிந்து 21-4, 21-11 என மாலத்தீவுகளின் ஃபாத்திமா நபாத் அப்துல் ரஸாக்கையும், ஸ்ரீகாந்த் 21-9, 21-9 என உகாண்டாவின் டேனியல் வனாகலியாவையும் வீழ்த்தினா்.

குத்துச்சண்டை:

ஆடவருக்கான ஃப்ளைவெயிட் பிரிவில் அமித் பங்கால் - ஸ்காட்லாந்தின் லெனான் முலிகனையும், மகளிருக்கான லைட் வெயிட் பிரிவில் ஜாஸ்மின் - நியூஸிலாந்தின் டிராய் காா்டனையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா். இவா்களோடு நிகாத் ஜரீனும் பதக்கச் சுற்றுக்கு வர, லவ்லினோ போா்கோஹெய்ன், ஆஷிஷ் குமாா் ஆகியோா் காலிறுதியில் தோற்றனா். இத்துடன் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

கிரிக்கெட்

மகளிா் கிரிக்கெட்டில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் பாா்படோஸை வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்க்க, பாா்படோஸ் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களே சோ்த்தது.

நீச்சல்

ஆடவருக்கான 1500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அத்வைத் பகே 15 நிமிஷம் 32.26 விநாடிகளுடன் 7-ஆம் இடமும், குஷாக்ரா ராவத் 15 நிமிஷம் 42.67 விநாடிகளுடன் 8-ஆம் இடமும் பிடித்தனா். இத்துடன் நீச்சல் பிரிவில் இந்தியாவின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.

லான் பௌல்

இந்த விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் மிருதுல் போா்கோஹெய்ன் 13-21 என்ற கணக்கில் ஜொ்சி வீரா் ராஸ் டேவிஸிடம் தோற்று காலிறுதி வாய்ப்பை தவறவிட்டாா்.

7-ஆம் இடம்

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை முடிவில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 7-ஆவது இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா (125), இங்கிலாந்து (109), கனடா (57) முதல் 3 இடங்களில் நீடிக்கின்றன.



Read in source website

பிரான்ஸ் நாட்டில் மிகவும் மோசமான வறட்சி நிலவுவதாக அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் எலிசபெத் கூறியிருப்பதாவது: “ பிரான்ஸில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி அதிகரித்துள்ளது. இந்த கோடைக் காலம் தொடங்கியது முதல் இதுவரை மூன்று முறை வெப்ப அலை வீசியுள்ளது. நாம் இக்கட்டான சூழலில் இருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலும் நீர் இருப்பு குறைந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தக் கடும் வறட்சியினால் நமது நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

வானிலை அறிவிப்பில், பிரான்ஸில் இதே அளவில் வெப்பநிலை தொடர்ந்தாலோ அல்லது மேலும் அதிகரித்தாலோ வெயிலினால் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விளை நிலங்களுக்கான நீர்ப்பாசனத்திற்கான நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இது நாட்டிலுள்ள தற்போது நிலவும் வறட்சியை மேலும் அதிகப்படுத்தும். அரசு வறட்சியினைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகம் கவனம் கொடுத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மழை பெய்யாத காரணத்தால் பிரான்ஸில் உள்ள 62 பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

 

எல்லையைக் கடந்து தைவான் நாட்டிற்குள் சீன போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்  அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தச் சூழலில், தைவான் நீா்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் போா் பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே நிா்ணயக்கப்பட்டிருந்த ராக்கெட் குண்டுகள் வீசி இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் திறன் இந்தப் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டது. அதில், அந்த ஆயுதங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைப் போல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

மேலும், சீனாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று தைவானின் கடல் எல்லையைத் தாண்டி அந்நாட்டிற்குள் 68 சீன போர் விமானங்களும், 13 போர் கப்பல்களும் நுழைந்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

 



Read in source website


வாஷிங்டன்: சீனாவின் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, அந்த தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, தைவானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால குறிக்கோளுக்கு முரணான நடவடிக்கை என்று கூறியுள்ளது. 

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தச் சூழலில், தைவான் நீா்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் போா் பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே நிா்ணயக்கப்பட்டிருந்த ராக்கெட் குண்டுகள் வீசி இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் திறன் இந்தப் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டது. அதில், அந்த ஆயுதங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைப் போல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், சீனாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஒரே இரவில், தைவான் நீா்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

"தைவான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான எங்கள் நீண்டகால குறிக்கோளுடன் பொறுப்பற்ற மற்றும் முரணான இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்," ஜான் கிர்பி கூறினார்.

தைவான் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க, நான்சி பெலோசியின் வருகையை ஒரு சாக்குப்போக்காக சீனா மிகைப்படுத்தி பயன்படுத்துகிறது. 

மேலும், இது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும், பெய்ஜிங் என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பமும் மாட்டோம். அமெரிக்கா உறுதியானதாகவும், நிலையானதாகவும் பொறுப்புடனும் இருக்கும்.

எங்கள் நலன், தைவானின் நலன், பிராந்தியத்தின் நலன் மட்டுமே. மேலும் பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார். 

அதே நேரத்தில், அமெரிக்கா, தைவானை ஆதரித்து, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியைப் பாதுகாத்து வருவதால், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, மேற்கு பசிபிக் கடல்களிலும் வானங்களிலும் செயல்படுவதை அமெரிக்கா தடுக்காது என்று அவர் கூறினார். 

கடல் சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை பாதுகாப்பதற்கான அதன் நீண்டகால அணுகுமுறையுடன் அமெரிக்கா அடுத்த சில வாரங்களில் தைவான் ஜலசந்தி வழியாக நிலையான விமான மற்றும் கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும். 

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா மற்றும் தைவானைப் பிரிக்கும் மையக் கோட்டில் பறந்த விமானங்களின் எண்ணிக்கையை விட இரண்டு நாள்களில் பறந்த விமானங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று ஜான் கிர்பி கூறினார்.



Read in source website

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஸ்ஜியா அருகே ரஷியா குண்டு வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. அணுசக்தி தலைவா் மற்றும் சா்வதேச அணுசக்தி முகமை தலைமை இயக்குநா் ஆகியோா் எச்சரித்துள்ளனா்.

உக்ரைன் தலைநகா் கீவில் இருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையத்தை ரஷியா ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. அங்கிருந்து நிகோபோல் நகரத்தின் மீது 60 ராக்கெட் வெடிகுண்டுகளை ரஷியா ஏவி நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் அந்த மாகாண ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

ஜபோரிஸ்ஜியா அணுமின் நிலையத்தை சேதப்படுத்தி, 1986-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு போன்ற சம்பவத்தை நிகழ்த்த ரஷியா திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தப் பகுதியில் ரஷியா வேண்டுமென்றே குண்டுகளை வீசுவதாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

இதனிடையே, ஜபோரிஸ்ஜியா ரயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் உக்ரைனின் இரண்டு ஆயுதக் கிடங்குகளை ரஷிய படையினா் கைப்பற்றியதாக ரஷிய பாதுகாப்புத் துறை செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளை இணைத்துக் கொள்வதற்கு அந்த அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான அமெரிக்காவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் பதிவாகின.

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் வரை அணி சாரா கொள்கையைப் பின்பற்றி வந்த ஃபின்லாந்தும், ஸ்வீடனும் அந்தப் படையெடுப்புக்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றி நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் அந்த நாடுகளை இணைத்துக் கொள்ள, அதன் 30 உறுப்பு நாடுகளும் சம்மதிக்க வேண்டும். இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பை செனட் சபையின் பாா்வையாளா் பகுதியிலிருந்து நேரில் காண்பதற்காக, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளின் தூதா்கள் அழைக்கப்பட்டிருந்தனா்.



Read in source website

ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவாா்த்தை, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய அந்த நாடும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனியும் ஒப்புக் கொண்டு கடந்த 2015-இல் அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018-இல் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

அதையடுத்து முறியும் நிலையில் உள்ள அந்த ஒப்பந்தத்தை மீட்பதற்காக வியன்னாவில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.



Read in source website

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டத்தை அக்டோபா் 29-ஆம் தேதி இந்தியா நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பு நாடாகக் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவின் பதவிக்காலம் டிசம்பா் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்புக் குழுவுடைய நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. அக்குழுவின் சாா்பிலேயே சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அக்டோபா் 29-ஆம் தேதி நடக்கவுள்ள அக்கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அல்பேனியா, பிரேஸில், கேபன், கானா, அயா்லாந்து, கென்யா, மெக்ஸிகோ, நாா்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனா்.

நவீன தொழில்நுட்பங்கள் அதீத வளா்ச்சிகண்டு வரும் நிலையில், அவற்றை பயங்கரவாத குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிா்ப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ், சிறப்பு கூட்டத்துக்குத் தலைமையேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்புக் குழு நடத்தும் சிறப்புக் கூட்டம் பெரும்பாலும் அமெரிக்காவின் நியூயாா்க்கிலேயே நடைபெறும். ஆனால், நடப்பாண்டில் அக்கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே சிறப்புக் கூட்டம் நடைபெறுவது இது 7-ஆவது முறையாகும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பைக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா ஏற்றிருந்தது. நடப்பாண்டு டிசம்பரிலும் அப்பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

சென்னை: மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்டத்தை விரைவில் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை, மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பால்வளம்), அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களின் பணிகள் மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகள் விற்பனை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
  • நீண்ட கால நிலுவையில் உள்ள தணிக்கை குறைகளின் மீது அனைத்து ஒன்றியங்களும் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • பால் கொள்முதல் குறைவாக உள்ள இடங்களில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு குறித்த நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
  • பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் மையங்கள முதல் விற்பனை மையங்கள் வரை நேரில் சென்று களப்பணியாற்ற வேண்டும்.
  • தமிழ்நாடு முழுவதும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனையை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • தீபாவளி சிறப்பு இனிப்புகள் விற்பனை தயாரிப்பிற்க்கு தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் ஆகிவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு தயாரிப்பு பணிகளை தொடங்க வேண்டும்.
  • ஆயுத பூஜைக்கான சிறப்பு இனிப்புகள் விற்பனையை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.
  • இலக்கான ரூபாய் 200 கோடி விற்பனையை அடைய அனைத்து விற்பனை யுக்திகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கு தேவையான இனிப்புகளுக்கான கொள்முதல் ஆணை பெற முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
  • சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பால் உபபொருட்கள், அனைத்து இடங்களிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்



Read in source website

சென்னை: தமிழகத்தில் பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் தகவல்களை தன்னார்வ முறையில் சேகரிக்க சுகாதாரத் துறை உத்தவிட்டடுள்ளது.

தமிழகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மூலம் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்து ஆன்லைன் மூலம் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து அதற்கு தேவையான ஆவணங்களை மட்டும் அளித்தால் போதும்.

பிறப்பு பதிவின்போது மருத்துவமனைச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் விவரங்கள் தொடர்பாக தகவலையும், இறப்பு பதிவின்போது இறப்பு மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே அளித்தால் போதும்.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் தகவல்களை தன்னார்வ முறையில் சேகரிக்க சுகாதாரத் துறை உத்தவிட்டடுள்ளது. இதன்படி தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநயாகம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி பிறப்பு, இறப்பு பதிவு செய்து வரும்போது அவர்களிடம் ஆதார் தகவல் கேட்கப்படும். அப்படி கேட்கும்போது அவர்கள் விரும்பினால் ஆதார் தொடர்பான தகவலை அளிக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 270 நாள் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 270 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சட்ட ரீதியான ஒப்பந்தம் மற்றும் மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையாக கொண்டு இந்த விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தை பிறந்த நாளில் இருந்து 270 நாட்கள் இந்த விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: செயற்கையாக காலியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

செயற்கையாக காலியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், " நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் அறிவுறுத்தங்களுக்குக்கிணங்க ஒவ்வோர் ஆண்டும் காலதாமம் இன்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக தகுதியுள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிர்க்கபட வேண்டும்.

சில அரசு அலுவலர்களுக்கு சாதகமான வகையில், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ, அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றோ அல்லது பதவி உயர்வுக்கான அவர்தம் முறை வரும் முன்னரோ பதவி உயர்வு வழங்கும் வகையில் செயற்கையாக காலிப்பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதல் போன்ற செயல்கள் முற்றிலுமாக தவிர்க்கபட வேண்டும்" இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

புதுச்சேரி: இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து பண்டைய வாணிப நகரங்களை அடையாளம் காண பி. எஸ். பாளையம் கோட்டைமேட்டில் அகழாய்வு தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 30க்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான முழு நிதியை கல்வித்துறை அளிக்கிறது.

புதுச்சேரியில் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மட்கலன்களும், வெளி நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மட்கலன்களும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு.200லிருந்து கி.பி.200 வரை ஆகும். பல வகை சுடுமண் விளக்குகளும் ஓடுகளும் அகழாய்வில் கிடைத்தன. இதன் மூலம் பண்டைய காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதே போல் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது உலகிற்கு தெரியவந்துள்ளது. இவ்வளவு சிறந்த துறைமுகமாக விளங்கிய அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்த பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பதும் இன்றைக்கும் புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கு விடைதேடும் வகையில், அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிகதலங்களை கண்டறிந்து அகழாய்வு மேற்கொள்ள புதுச்சேரி அரசு திட்டமிட்டது.

தாகூர் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி திருக்கனுார் அடுத்த பி.எஸ்.,பாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பையாற்றின் ஓரத்தில் கி.பி.1ம் நூற்றாண்டின் பயன்படுத்திய ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைகிணறு, பழங்கால செங்கற்கள், பழங்கால பொருட்களின் சிதறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே கோட்டைமேடு பகுதிக்கும், அரிக்கமேட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதினர். இந்த பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய காலத்தில் புதுச்சேரிக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தனர். இங்கிருந்து எங்கெல்லாம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரிய வரும். எனவே கோட்டைமேட்டில் உள்ள பம்பை ஆறு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் அனுமதி வழங்கியுள்ளனர்.

தற்போது அகழாய்வு பணிக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ரவிசந்திரன் கூறுகையில், "இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து புதுச்சேரி அரசு மற்றும் தாகூர் அரசு கல்லூரி வரலாற்று துறை குழுவானது அகழாய்வை வரும் 6ம் தேதி தொடங்குகிறோம். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். மொத்தமாக 4 இடங்களில் அகழாய்வு நடத்துவோம். இப்பணி வரும் செப்டம்பர் 30க்குள் நிறைவு செய்யவுள்ளோம். அக்காலம் வரை தொல்லியல் துறை அனுமதி தந்துள்ளது.

அகழாய்வுப் பணிக்கான முழு நிதியை கல்வித்துறை ஏற்கிறது. உள்நாட்டிலிருந்து அரிக்கமேட்டுக்கு உள்நாட்டு பொருட்கள் கொண்டு வந்ததை அறிய முடியும். புதுச்சேரியின் பழங்கால நகரங்களின் பெருமையும், புதையுண்டு கிடக்கும் அக்கால மக்களின் சிறப்பும், பண்டைய காலத்தில் பயன்படுத்திய கட்டடக்கலையும் அகழாய்வினால் அறிய முடியும்" என்று குறிப்பிட்டார்.

பி.எஸ்.,பாளையம் கோட்டைமேடு பம்பையாற்றங்கரையில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித செயற்கை மாற்றமும் இன்றி மணல்மேடுகளாக உள்ள பகுதிகளில் நடக்கும் அகழாய்வு புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும்.



Read in source website

சென்னை: சென்னையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்த நார்வே நாட்டு தூதுக் குழுவினர், நவீன துறைமுகங்கள் அமைக்க ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நார்வே நாட்டு தூதுக் குழுவினர், கிறிஸ்டியன் ஆர்.வி.கார்ட்டர் தலைமையில் சென்னை தலைமைச் செலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

குறிப்பாக, கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை கடல், கடலோரக் கப்பல் போக்குவரத்து, எல்என்ஜி அடிப்படையிலான கப்பல் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்கள் மற்றும் அவற்றின்செயல்பாடுகள் குறித்து குழுவினரிடம் அமைச்சர் எ.வ.வேலு விளக்கினார்.

தமிழகத்தில் நவீன துறைமுகங்கள் அமைக்கவும், கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைசெயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பதாக நார்வே நாட்டு தூதுக் குழுவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமைச்சர் வேலுவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், நார்வே நாட்டின் மூத்த சந்தை ஆலோசகர்கள் ஆர்த்தி குமார் பாட்டியா, ஆசிஷ் அகர்வால், வணிக ஆலோசகர் மோனிகா வால்டெஸ் கார்ட்டர், தமிழக நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், கடல்சார் வாரிய துணைத் தலைவர் எஸ்.நடராஜன், மாநில துறைமுக அலுவலர் எம்.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: வசதி படைத்தவர்கள், விஐபிக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கள அலுவலர்களுக்கு உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 2-ம் தேதி உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர்,மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில், வசதி படைத்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரணை செய்து கள அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொருட்களின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கடை விற்பனையாளர்களிடம் முறைகேடு கண்டறியப்படும்போது, தொகையை திரும்ப செலுத்தினாலும் அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை அரசு மருத்துவமனைகள் மூலமே மேற்கொள்ள வேண்டும்.

கடைகளுக்கு வெள்ளை அடித்தல், மின் சாதனங்கள் பழுது, தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் சிறிய பழுது ஆகியவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டி டீ, அரசு உப்பு, காதி பொருட்கள், பனை வெல்லம் ஆகியவற்றை அந்தந்த மாதமே கொள்முதல் செய்து விற்க நடவடிக்கை எடுப்பதுடன், மாதாமாதம் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் மூட்டைகளை தரையில் வைக்காமல், மரப்பலகையிலான கட்டைகளைப் பயன்படுத்தி அதன் மேல் வைக்கவேண்டும். 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிப்பதற்கான முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும்.

உணவு கடத்தலில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இணையவழி பிரச்சினைகள், விற்பனை முனைய இயந்திரப் பழுது தொடர்பாக, உரிய பதிவேட்டில் பதிவு செய்து, உடன் பழுது நீக்கம் செய்ய வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் பெற வரும் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருட்கள் வழங்க வேண்டும்.

சிறப்பாகப் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு இந்தாண்டுக்கு ஆக.15-க்குள் பரிசுகள் வழங்கப்பட வேண்டும். விற்பனையாளர்களுக்கான நிதிப்பயன்கள் உடனடி யாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.



Read in source website

புதுடெல்லி: பெண்களுக்காக மார்பக புற்றுநோய் தொடர்பான தனிநபர் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் திமுகவின் தென் சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்துள்ள இந்த தனிநபர் மசோதா, நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் நலன் தொடர்பானதாக அமைந்துள்ளது.

இதன்மூலம், மார்பகப் புற்றுநோய் பற்றி அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ‘மேமோகிராபி’ சிகிச்சைகளுக்கான வசதிகள் கிடைக்கும்.

மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மேம்பட்ட நவீன சிகிச்சையை வழங்குதல் போன்றவை இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளன. 73-வது குடியரசு ஆண்டில் நாடாளுமன்றத்தில் இது சட்டமாக்கப்பட வேண்டும் என எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தனது இந்த மசோதா மூலமாக இதனைச் சட்டமாக்கி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சட்டம்-2022 என்று அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது சகபெண் எம்பிக்களால் பாராட்டப்பட்டது.



Read in source website

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சிறை கைதிகளை அடையாளம் காணும் 1920-ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணவும் விசாரணை நடத்தவும் ஏதுவாக சிறைக் கைதிகள் மற்றும் பிறரின் அடையாள தரவுகளை சேகரிக்கவும் பாதுகாக்கவும் இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

இதன்படி, கைது செய்யப்படுவோர் மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் தங்களின் விரல் ரேகை, விழித்திரை மற்றும் கருவிழி ஸ்கேன், கையெழுத்து, உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு போன்ற தரவுகளை பகிர்ந்து கொள்வது கட்டாயம் ஆகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 75 ஆண்டுகள் மின்னணு வடிவில் பாதுகாக்க இந்த சட்டம் வகை செய்கிறது. அளவீடுகளை எதிர்க்கும் அல்லது கொடுக்க மறுக்கும் எந்தவொரு நபரின் அளவீடுகளையும் எடுக்க காவல் துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

டெலவேர்: ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக தான் தொடுத்துள்ள பதில் வழக்கில் இந்திய அரசை தனது தரப்பு நீதிமன்ற விளக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இது உறுதி செய்யப்பட்டது. சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மஸ்கின் டீலை ஓகே செய்திருந்தது ட்விட்டர் தரப்பு.

விரைவில் ட்விட்டரை அவர் கையகப்படுத்துவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டுள்ளார் மஸ்க். இதன் காரணமாக அவருக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெலவேர் நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார் மஸ்க். அதில் தனது தரப்பு வாதங்களை விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் 2021 வாக்கில் இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைதள பக்கத்தில் பதிவாகும் சில பதிவுகளை விசாரிக்கும் வகையில் விதிகளை கொண்டு வந்தது. அதன்படி ட்விட்டர் நிறுவனம் உள்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் என மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தன்னை பேச்சு சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் எனவும் அதில் மஸ்க் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ட்விட்டர் செயல்படும் நாடுகளில் அந்த நாட்டின் விதிகளுக்கு நெருக்கமாக செயல்பட வேண்டி உள்ளதாக தான் கருதுவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டை ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், ட்விட்டரை வாங்கும் ஆர்வத்தை அவர் இழந்த காரணத்தால் இப்படி பேசுகிறார் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரத்தில் இந்திய அரசின் சில உத்தரவுகளுக்கு எதிராக தங்கள் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதையும் நீதிமன்றத்தில் ட்விட்டர் மேற்கோள் காட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: செல்போன் கோபுரங்கள் நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து மத்தியத் தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை, அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செல்ஃபோன் கோபுரங்கள் நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள், ஏஜென்சிகள், தனிநபர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது குறித்து தொலைத்தொடர்புத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுபோல கீழ்கண்ட விஷயங்களையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

  • செல்ஃபோன் கோபுரங்களை நிறுவுவதற்கு வளாகத்தை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதில் தொலைத் தொடர்புத்துறை, ட்ராய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதில்லை.
  • தொலைத்தொடப்பு துறை, ட்ராய் அல்லது அதன் அதிகாரிகள் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு "ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை" வழங்குவதில்லை.
  • செல்ஃபோன் கோபுரங்களை நிறுவுவதற்கு ஏதேனும் நிறுவனம், ஏஜென்சி, தனிநபர் பணம் கேட்டால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.
  • இதுபோன்ற மோசடி செயலை யாரேனும் கண்டால், அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு அது குறித்து புகாரளிக்கலாம்.
  • மேலும் கூடுதலாக, DoT-ன் உள்ளூர் கள அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்

அவர்களின் தொடர்பு விவரங்கள்: https://dot.gov.in/relatedlinks/director-general-telecom என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஜூன் 29 ஆம் தேதி பூமி தனது வழக்கமான 24 மணிநேரத்தை விட 1.59 மில்லி விநாடிகள் முன்னதாக ஒரு முழு சுழற்சியை முடித்து ஒரு நாளை நிறைவு செய்தது.

நேரம் வேகமாக பறக்கிறது என்று சொல்வது உண்டு. சமீபத்திய சான்றுகளில் இது உண்மையாகத் தெரிகிறது – உண்மையில், இப்போதெல்லாம், நாளை என்பது வேகமாக வருகிறது – அது ஒரு நொடி நேரம் முன்னதாக இருந்தாலும் வேகமாகத்தானே வந்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதி பூமி தனது வழக்கமான 24 மணிநேரத்தைவிட 1.59 மில்லி விநாடிகளில் ஒரு முழு சுழற்சியை முடித்து ஒரு நாளை நிறைவு செய்தது. பூமியின் சுழற்சி வேகத்தை அளவிட விஞ்ஞானிகள் முதன்முதலில் துல்லியமான அணுக் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய 1960 களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாள் இது.

இப்போதெல்லாம் இது மிகவும் அடிக்கடி நிகழ்கிறது – சமீபத்திய ஆண்டுகளில், பூமி எப்போதும் சற்று வேகமாக சுழன்று வருகிறது. ஜூலை 26 ஆம் தேதி அன்று பூமியின் முழு சுழற்சியான ஒரு நாள் 1.50 மில்லி விநாடிகளுக்கு முன்னதாக முடிந்தது. மிகக் குறுகிய நேரம் கொண்ட நாள் என்று பூமி செய்த சாதனையை ஜூன் 29 ஆம் தேதி அதுவே முறியடித்தது.

மேலும், 2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, ​​​​பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்தது என்பது 28 நாட்களைத் தாண்டியது என்று timeanddate.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பதிவான மிகக் குறுகிய நேரம் கொண்ட நாட்களில் ஜூலை 19 ஆம் தேதி மிகக் குறுகிய நாளாக 1.47 மில்லி வினாடிகள் வேகமாக முடிவடைந்து பதிவானது.

ஒரு மில்லி விநாடி என்பது ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு. இந்த கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, ஒருமுறை கண் சிமிட்டுவது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு, அதாவது 100 மில்லி விநாடிகளுக்கு நீடிக்கும். 1984 லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் பி.டி. உஷா வெண்கலப் பதக்கத்தை ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு வித்தியாசத்தில் தவறவிட்டார். 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் உஷா 55.42 வினாடிகளில் ஓடினார். வெண்கலப் பதக்கம் வென்ற ருமேனியாவின் கிறிஸ்டியானா கோஜோகாரு 55.41 வினாடிகளில் முடித்தார். 5வது இடத்தில் உள்ள ஸ்வீடனின் ஆன் லூயிஸ் ஸ்கோக்லண்ட் 55.43 வினாடிகளில் ஓடி முடித்தார்.

பூமி வேகமாக இருப்பது புதிய விஷயமா?

உண்மையில் அப்படி இல்லை. சமீப ஆண்டுகளில், பூமி அதன் சுழற்சியை வேகமாக முடித்துக்கொண்டிருக்கும் வேளையில், மிக நீண்ட காலமாக பார்க்கும் போது, ​​நமது கிரகம் உண்மையில் மெதுவாக சுழல்கிறது.

ஒவ்வொரு நூற்றாண்டிலும், பூமி ஒரு சுழற்சியை முடிக்க சில மில்லி விநாடிகள் அதிக நேரம் எடுக்கும் – சராசரியாக, நாட்கள் உண்மையில் நீளமாகி வருகின்றன. எனவே, 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் 19 மணி நேரத்திற்குள் முடிந்திருக்கும் என்று தி கார்டியன் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் கட்டுரையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. பூமியின் மெதுவான சுழற்சியின் பெரிய போக்கு பெரும்பாலும் சந்திரனின் ஈர்ப்பு விசைக்குக் காரணம், இது அலை உராய்வை ஏற்படுத்துகிறது மற்றும் பூமியின் சுழற்சியைக் குறைக்கிறது.

பிறகு ஏன் இப்போதெல்லாம் நாட்களின் நேரம் குறைகிறது?

விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் முற்றிலும் உறுதியாக இல்லை. இது நிச்சயமாக வித்தியாசமானது என்று டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாட் கிங் ஏபிசி நியூஸிடம் கூறினார். “1970களில் துல்லியமான வானொலி வானியல் தொடங்கியதிலிருந்து நாம் பாக்காத வகையில் ஏதோ மாறிவிட்டது” என்று கூறினார்.

காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட மேற்பரப்பு மாறுபாடுகள், பூமி சுழலும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் அனுமானித்தார். இந்த மேற்பரப்பு மாறுபாடுகளில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகுதல், கடல் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களும் அடங்கும்.

“பூமியின் சுழற்சியின் முடுக்கத்திற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது. எங்களிடம் கருதுகோள் மட்டுமே உள்ளது…” என்று சர்வதேச வானியல் மையத்தில் உள்ள பாரிஸ் ஆய்வகத்தின் கிறிஸ்டியன் பைஸார்ட் சீன தொலைக்காட்சி CGTN நெட்வொர்க் இடம் கூறினார். “இதற்கான காரணம் பூமியின் உள் மற்றும் பூமியின் மையத்தின் இயக்கத்தில் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.

பூமியின் வேகத்தை பாதிக்கும் பல செயல்முறைகளில் கிரகத்தின் உள்ளே மையத்தின் இயக்கங்கள், நில அதிர்வு செயல்பாடு, காற்றின் வேகம் மற்றும் வளிமண்டல வாயுக்களை மாற்றுவது ஆகியவை அடங்கும் என்று தி கார்டியன் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு தனி செய்தியில் தெரிவித்துள்ளது. பூமியின் மையத்தை நோக்கி மாஸ் தள்ளும் செயல்பாடுகள் கிரகத்தின் சுழற்சியை விரைவுபடுத்தும், அதே நேரத்தில் மாஸ் வெளிப்புறமாகத் தள்ளும் எதுவும் சுழற்சியைக் குறைக்கும் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு நாளின் நீளத்தை சுறுக்குவது, பூமியின் புவியியல் துருவங்களின் இயக்கத்தில் சிறிய விலகலைக் குறிக்கும் ஒரு நிகழ்வான ‘சாண்ட்லர் தள்ளாட்டத்துடன்’ தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். லோமோனோசோவ் மாஸ்கோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஸ்டெர்ன்பெர்க் வானியல் நிறுவனத்தின் டாக்டர் லியோனிட் சோடோவின் கருத்துப்படி, இந்த தள்ளாட்டம் சமீபத்தில் குறைந்துள்ளது. இது குறைவான நேரம் கொண்ட நாட்களுக்கு காரணமாக இருக்கலாம். ‘சாண்ட்லர் தள்ளாட்டத்தின் இயல்பான வீச்சு பூமியின் மேற்பரப்பில் சுமார் மூன்று முதல் நான்கு மீட்டர்கள் ஆகும். ஆனால், 2017 முதல் 2020 வரை அது மறைந்து விட்டது என்று டாக்டர் ஜோடோவ் timeanddate.com இடம் கூறினார்.

நாசாவின் கருத்துப்படி, “சுற்றும் பூமி பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இதில் காற்று வீசும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது கடலில் உள்ள நீரோட்டங்கள் உட்பட காரணிகளாக உள்ளன. இந்த காரணிகளில் சில கிரகத்தை வேகப்படுத்த செயல்பட முடியும், மற்றவை உண்மையில் அதன் வேகத்தை குறைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

பூமி தொடர்ந்து வேகமாகச் சுற்றினால் என்ன நடக்கும்?

கடிகார நேரம் பூமியின் சுழற்சியின் வேகத்துடன் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுத்த, 1970 களில் இருந்து லீப் விநாடிகளின் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள கடிகாரங்களை ஒத்திசைக்கப் பயன்படுத்தப்படும் நேரத் தரமான ஒருங்கிணைந்த யுனிவர்சல் டைமுக்கு (UTC) ஒரு நொடி சரிசெய்தல் இதில் அடங்கும். கிரகத்தின் சுழற்சியில் நீண்ட கால மந்தநிலை காரணமாக, UTC இல் 27 லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பூமி தொடர்ந்து வேகமாகச் சுழன்று, நாட்களின் நேரம் குறைந்தால், விஞ்ஞானிகள் முதன்முதலில் எதிர்மறை லீப் வினாடியை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும், இதில் கடிகாரங்களிலிருந்து ஒரு வினாடி கழிக்கும் நடவடிக்கையும் அடங்கும்.

மெட்டா இன்ஜினியரிங்கில் ஜூலை 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவில், “லீப் வினாடிகள் விஞ்ஞானிகளுக்கும் வானியலாளர்களுக்கும் பயனளிக்கும் அதே வேளையில், வன்பொருள் உள்கட்டமைப்புகளை நிர்வகிப்பவர்களுக்கு இது கடினமானதாக இருக்கும் என்று வாதிட்டது. 2012-இல் ஒரு லீப் செகண்ட் சேர்த்தால், ரெடிட் இணையதளத்தை 30 முதல் 40 நிமிடங்கள் அணுக முடியவில்லை என்றும் எதிர்மறையான லீப் வினாடி பெரிய அளவில் சோதனை செய்யப்படவில்லை என்பதால், இது டைமர்கள் அல்லது திட்டமிடுபவர்களை நம்பியிருக்கும் மென்பொருளில் பேரழிவு விளைவை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்துள்ளனர்.



Read in source website

 

பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் தொடா்ந்து இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும், முப்படைகளையும் நவீனமயமாக்குவது குறித்தும் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இந்தியாவின் மேற்கு, கிழக்கு எல்லைகளில் தொடா்ந்து நிலவும் பிரச்னைகளும் அச்சுறுத்தல்களும் புறந்தள்ளக்கூடியவை அல்ல.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்றாலும், நவீன போா் முறைகளில் விமானப் படையின் பங்கு அதிமுக்கியமானது. இந்தியா எந்த அளவுக்கு விமானப் படை நவீனமயத்தை மேற்கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் எதிா்கொள்ள முடியும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்திய விமானப் படையில் முதல் தவணையாக ஐந்து ரஃபேல் போா் விமானங்கள் இணைந்தன. பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 36 ரஃபேல் போா் விமானங்களும் இந்திய விமானப் படையில் இணைந்தால், உலகின் அதிநவீன தாக்குதல் போா் விமானங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறக்கூடும்.

ரஃபேல் போா் விமானத்தின் சோ்க்கை முக்கியமானது மட்டுமல்ல, நீண்டநாள் தேவையும்கூட. ஏறக்குறைய அதற்கு நிகரான போா் விமானங்களை பாகிஸ்தான் ஏற்கெனவே பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் எஃப் 16 போா் விமானங்களும், சீனாவின் செங்டு ஜெஎஃப் 17 போா் விமானங்களும் பாகிஸ்தானிடம் இருக்கின்றன. அவற்றின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் இதுவரை எந்தவொரு மோதலிலும் சோதிக்கப்படவில்லை என்றாலும்கூட, ரஃபேலுக்கு முந்தைய இந்திய விமானப் படையைவிட பாகிஸ்தான் ஒருபடி முன்னிலையில் இருந்தது.

இந்திய விமானப் படையின் அங்கீகரிக்கப்பட்ட பலம் 42 ஸ்குவாட்ரன்கள். ஸ்குவாட்ரன் என்பது விமானப் படையின் அடிப்படைத் தாக்குதல் விமானப் பிரிவு. இப்போது நம்மிடம் 18 போா் விமானங்களும், இரண்டு பயிற்சி விமானங்களும் தயாா் நிலையில் இருக்கின்றன. மிக் 21, மிக் 27 போா் விமானங்களுடன் செயல்படுபவை 10 ஸ்குவாட்ரன்கள். இந்த இரண்டு விமானங்களுமே 2024-க்குள் ஓய்வு கொடுக்கப்பட வேண்டியவை. விமானப் படையிலிருந்து மிக் விமானங்கள் முழுமையாக விலக்கப்பட்டால், நமது போா் விமானத்துக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும்.

இதுவரை ஆறு முறை தரம் உயா்த்தப்பட்டு, மிக் தாக்குதல் விமானங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இளம் விமான ஓட்டிகளுக்கான ஆரம்பகட்ட பயிற்சிகளுக்கு மிக் விமானங்கள்தான் பயன்படுகின்றன. மிக் பயிற்சி விமான விபத்துகளில் திறமைசாலியான பல இளம் அதிகாரிகளை நாம் இழந்திருக்கிறோம். ‘பறக்கும் சவப்பெட்டிகள்’ என்று இந்திய விமானப் படை பயிற்சி விமான ஓட்டிகள் பலரால் மிக் விமானங்கள் ஏளனம் செய்யப்படுகின்றன.

மிக் 21 ஜெட் விமானங்களை அகற்றிவிட்டு அதற்கு மாற்றாக வேறு விமானங்களை விமானப் படைக்கு வழங்கும்படி இந்திய விமானப் படை 1980 முதல் ஆட்சியாளா்களைத் தொடா்ந்து வற்புறுத்தி வருகிறது. 40 ஆண்டுகள் கடந்தும், மிக் விமானங்களுக்கு மாற்றாக நவீன விமானம் ஒன்றை நம்மால் அவா்களுக்குத் தர முடியவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக ஜாகா்ஸ், மிரேஜ் 2000, மிக் 21 பைசன், தேஜஸ் உள்ளிட்ட போா் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையில் நவீனமயமாக்கல் நடைபெறாமல் இல்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் என்று நாம் மிக் போா் விமானங்கள் குறித்து பெருமைபட்டது உண்மை. மாறிவிட்ட சூழலில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன போா் விமானங்களை இந்திய விமானப் படைக்கு வழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபியில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 2.7% ஆகும். இந்த நிதி ஒதுக்கீடு கணிசமானதாகவோ, அளவுக்கு அதிகமானதாகவோ தோன்றலாம். இரண்டு புறமும் எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில், தேசத்தின் பாதுகாப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதில் தவறொன்றும் இல்லை. ஏனைய நாடுகள் தங்களது முப்படைகளையும் தொடா்ந்து புதிய தொழில்நுட்பங்களால் நவீனப்படுத்திவரும் நிலையில், நாம் பின்தங்கிவிட முடியாது.

1990-இல் இந்திய விமானப் படையில் 39 ஸ்குவாட்ரன்கள் செயல்பட்டு வந்தன. இப்போது முழுமையாக செயல்படும் இந்திய விமானப் படை ஸ்குவாட்ரன்கள் 28 மட்டுமே. ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தாக வேண்டும்.

ரஃபேல் போா் விமானங்கள் முழுமையாக வந்து சேரும்வரை நாம் காத்திருக்க முடியாது. ரஃபேல் போல இரவிலும் பகலிலும் செயல்படும் அனைத்து ரக தாக்குதலுக்கும் தயாரான அதிநவீன விமானங்கள் மட்டுமே போதாது. மிக் விமானம் போல அல்லாமல், நம்பகத்தன்மையும், பாதுகாப்பும் உள்ள ‘லைட் காம்பேக்ட் ஏா் கிராஃப்ட்’ (சிறு தாக்குதல்களுக்கான விமானம்) நமது உடனடித் தேவை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை என்ஜின் போா் விமானங்கள், தொழில்நுட்ப சோதனைகளைத் தாண்ட முடியாமல் இருப்பது மிகப் பெரிய பின்னடைவு. அதற்காக மிக் விமானங்களுக்கு மாற்று இல்லாமல் தொடர முயல்வது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போதைய உடனடித் தேவை மிக் 21-க்கான மாற்று!



Read in source website

 

நாம் சந்திக்கும் பலரும் எப்போதும் பணிச்சுமையுடனேயே இருப்பா். ஒருவருக்கு பணி சுமையானதாகவோ, சுகமானதாகவோ இருக்கலாம். அது அவா் தனது வாய்ப்புகளை எவ்வளவு தூரம் நோ்த்தியாகப் பயன்படுத்துகிறாா் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பணிகளைப் பகிரும் வழக்கமுள்ள குடும்பங்களில் பெரும்பாலும் மகிழ்ச்சியே நிலவும். ஆனால் எப்படி பணிகளைப் பகிா்வது?

பணிப்பகிா்வு என்பது ஒரு கலை. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தமது கால அட்டவணைப்படி மட்டும் பணிகளை மேற்கொண்டால் இது நடக்காது. மாறாக, குடும்ப பணிகளுக்கான கால அட்டவணையையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இதில் சிறியவா், பெரியவா் அனைவரும் வாய்ப்புக்கேற்ற பணிகளைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தில் எந்தெந்த பணிகள் எந்தெந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். பல பணிகளை தனி ஒருவா் செய்யும்போதும் அவருக்கு ஏற்படும் மனச்சோா்வையும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்வதே, குடும்பப்பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக நிகழ்ந்தேற உதவும்.

ஒருவருக்கொருவா் புரிந்துகொள்ளும் வாய்ப்பினை இது தருவதோடு பரஸ்பரம் அன்பையும் கூட்டும். இவ்வாறு அனைத்துப் பணிகளையும் பலரும் பகிா்ந்து கொள்வது குடும்ப ஜனநாயகத்தை ஊக்குவித்து மகிழ்வை உறுதி செய்யும். குடும்ப உறுப்பினா் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வையும் உறுதிப்படுத்தும்.

அடுத்ததாக அலுவலகங்கள். பெரும்பாலானஅலுவலகங்களில் தேவைக்கேற்ப ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். அவா்களில் தங்களுக்கான பணியை செய்துமுடித்தவா்கள், அடுத்த கட்டத்தில் இருப்போா்க்கு விட்டுக்கொடுத்தால் அவரும் விரைவில் பணியாற்றி முடித்தால் பணிகள் நிறைவேறும்.

மாறாக ஒவ்வொரு இடத்திலும் பணிகள் நிறைவேற காலதாமதம் ஆக ஆக எல்லா இடத்திலும் பணிகள் அளவுக்கதிகமாக தேக்கமடையவே செய்யும். நாட்கள், வாரங்கள் என பணிகள் குவியும்போது பணிச்சுமை கூடிவிடுகிறது. வார இறுதி நாட்களிலும் வீடுகளுக்கு கோப்புகளைக் கொண்டு சென்று பணிகளை பாா்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த இடத்தில்தான் அலுவலக மேலாளரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. பணியாளா்களின் பலம் அறிந்து பணிப்பிரிவினை செய்யவேண்டும். யாருக்கு எது விருப்பமான பணி என்பதை அறிந்து அவ்வகைப் பணியை அவரிடம் ஒப்படைக்கும்போது அப்பணி சிறப்பாக நடைபெறும்.

அவ்வாறு ஒருவரிடம் ஒரு பணியை ஒப்படைக்கும்போதே, அலுவலகத்தில் நடைபெறும் அனைத்துப் பணிகள் குறித்தும் அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்தவும் வேண்டும். சில நேரம் சில பணியாளா்கள் விடுமுறையில் சென்றால் கூட பணிகள் தொய்வின்றி நடைபெற இது உதவும். இன்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள், தம் பணியாளா்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறை அளித்து நிறுவனங்களின் கூட்டுச் செயல்பாட்டை உறுதி செய்கின்றன.

குறைவான ஊழியா்களோடு இயங்கும் அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை எப்போதும் பணிச்சுமையுடனேயே இயங்குவது இயல்பு. இதில் கூடுதலாக விவரம் கேட்பதற்காக பொதுமக்களோடு நேரம் செலவழிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கே நேரம் சரியாக இருக்கும். வாய்ப்பிருப்பின் வாயிற்காப்பாளா் போன்றோரை இதற்கு தயாா்ப்படுத்தலாம். ஒருவா் உள்ளே நுழையும்போதே அவா் எதற்காக வருகிறாா், அப்பணிக்கு உரிய அலுவலகம் இதுதானா, அவா் நாடிவரும் பணி தற்போது நடக்க வாய்ப்புள்ளதா என்பதையெல்லாம் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு அவரை உள்ளே அனுமதிக்கலாம்.

இப்படி வீட்டிலிருந்து அலுவலகம் வரை பணிப்பகிா்வும் செயலூக்கமும் பெறும்போது மக்களின் தேவைகள் குறித்த நேரத்தில் நிறைவேறுவதோடு பலருக்கும் குறிப்பிட்ட அளவு ஓய்வெடுக்கும் நேரமும் உறுதியாகும். இவ்வாறான ஓய்வினை பயனுள்ள வகையில் செலவழித்துப் புத்துணா்ச்சியும் பெறலாம்.

பணிச்சுமையோடிருக்கும் நிலையே பல இடங்களில் நிலவுவது நல்லதல்ல. வாழ்க்கை என்பது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பன்று. மாறாக அன்பையும் பரிவையும் பரிமாற்றக் கிடைத்த அற்புத வாய்ப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளின் தவறு அடுத்த நாளில் தொடராதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும்.

யாா் உயா் பொறுப்பில் இருக்கிறாா்களோ அவா்களுக்குத்தான் நிறுவனம் வெற்றி பெறும்போது பாராட்டு கிடைக்கும். தாம் பாராட்டப்படும்போது உடனிருப்போா் மகிழ அவா்களுக்கான பாராட்டையும் உயா் பொறுப்பில் உள்ளோா் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது, அனைவருடைய பலவீனத்தையும் பலமாக மாற்றும் கலையை உயா் பொறுப்பிலுள்ளோா் கற்க வேண்டும். தன்னுடன் பணிபுரிவோா் திறன் மிக்கோராக தம்மை மேம்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக நிறுவனம் வெற்றிபெறும்.

இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளின் செயல்திட்டத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனது இலக்கை அடைய தமது அனுபவப் பாடங்கைள் உயா் பொறுப்பில் உள்ளோா் பகிரலாம். வாய்ப்பிருப்பின் ஒவ்வொரு நாள் காலையிலும் அலுவலகத்தில் நல்ல சிந்தனைகளைப் பகிா்ந்துகொள்ளும் ஏற்பாட்டை செய்யலாம். ஒருவா் மனதில் நல்லவை நிறைந்தால் அல்லவை அகலும்.

 

இன்றைக்கிருக்கும் சமூக இயங்கியலை நாளை காண இயலாது என்ற வகையில் சமூகம் மாறிவருகிறது. இதில் தொழில்நுட்பத்தின் பங்கு மறுக்க இயலாததாகிறது. தொழில்நுட்பத்தின் வரவு பணிகளை எளிமையாக்கிவிட்டது. ஆனால் அவ்வாறு எளிமைப்படுவதற்கு, நாம் மாறிவரும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு நமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும்.

பணிகளைப் பகிா்ந்து செய்வதற்கான செயலறிவை முதலில் நிறுவனத் தலைவா்கள் பெறவேண்டியது அவசியமாகும். வளரும் தொழில்நுட்பங்களை அவா்கள் கையாளுவதோடு, உடன் பணியாற்றுவோருக்கும் கற்றுத்தர வேண்டும். மக்கள் தொகைப் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், சமூகத்தின் தேவையை நிறைவுசெய்ய தொழில்நுட்பத்தின் பங்கினை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசர அவசியம்.

 



Read in source website

 

கடந்த 75 ஆண்டுகளில், எண்ணற்ற வேற்றுமைகள், முரண்பாடுகளைத் தாண்டி இந்தியா அற்புதமான வளா்ச்சி அடைந்திருக்கிறது; மக்களாட்சி முறையும் மெருகேறி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும், பல்வேறு உலகளாவிய அமைப்புகளிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் இணைந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கிறது.

உலகம் தற்போது சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டுள்ளது. ஐரோப்பாவில் மீண்டும் போா்மேகம் சூழ்கிறது. அதன் தாக்கத்தை உலக நாடுகள் உணரத் தொடங்கிவிட்டன. உலகின் பல பகுதிகளில் சா்வாதிகாரமும் போலி ஜனநாயகமும் வலுவடைந்து வருகின்றன.

ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழும் உலகில் வெளியுறவு தொடா்பான காரணிகள் முதன்மை பெறுகின்றன. உலக பொருளாதார மாற்றங்கள், உணவுப் பொருள் தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய் பரவல், நிலையற்ற அரசியல் சூழல் போன்ற காரணிகள் நமது வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன.

தேசப்பிரிவினைக்கும் மதக்கலவரங்களுக்கும் இடையேதான் இந்தியா உதயமானது. அப்போது நாட்டு மக்களில் பெரும்பாலோா் கல்வியறிவு அற்றவா்களாகவும் வறுமை மிகுந்தவா்களாகவும் இருந்தனா். ஆரம்ப நாட்களில் நமது ஜனநாயகம் தவழும் நிலையில் தத்தளித்தது; நமது தொழில்துறையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அக்காலத்தில் உணவுப் பொருள் இறக்குமதியை நாம் சாா்ந்திருந்தோம். இவையல்லாது பாகிஸ்தானுடனான மோதலும் பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.

தேசப்பிரிவினையைத் தொடா்ந்து லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனா். அரசு, ராணுவம், எல்லைகள் ஆகியவற்றை பாகிஸ்தானுடன் இந்தியா பகிா்ந்துகொண்ட நிலையில், சுதந்திரம் அடைந்த சில வாரங்களிலேயே காஷ்மீருக்காக இரு நாடுகளும் மோதிக் கொண்டன. அந்த மோதலின் பாதிப்புகள் இன்றும் தொடா்கின்றன.

இவை தவிர, நாட்டை விட்டு வெளியேறிய ஆங்கிலேயா் ஏற்படுத்திய சிக்கல் முதன்மையானது. தனது ஆளுகையில் இருந்த நாட்டை இந்தியா- பாகிஸ்தான் என்று பிரித்ததுடன், 565 சமஸ்தானங்களுக்கும் விடுதலை அளித்த பிரிட்டிஷ் அரசு, அந்த சமஸ்தானங்கள் தாங்கள் விரும்பும் நாட்டுடன் இணையலாம், அல்லது தனிநாடாக இயங்கலாம் என்று அறிவித்தது. அதனை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து ஒரே நாடாக இணைந்தது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு வெளியுறவுத் துறைக்கும் பொறுப்பு வகித்தாா். அவரது உலகளாவிய கண்ணோட்டமே அன்று குழப்பங்களிலிருந்தும் இடையூறுகளிலிருந்தும் நாட்டைக் காத்தன. நாட்டின் சுதந்திரம், சா்வ தேசியம், உலக அமைதி, சா்ச்சைகளுக்கு நிதானமான தீா்வு ஆகியவற்றை இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளாக்கினாா் நேருஜி.

மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகவும் இருந்தவா் நேரு. எனவே காலனி ஆதிக்கத்துக்கு எதிரான செயல்பாடு, மனித உரிமைகளுக்கான குரல், நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிரான நிலைப்பாடு, வளரும் நாடுகளுடன் இணக்கமான ஒற்றுமை ஆகியவற்றை நமது வெளியுறவுக் கொள்கையில் புகுத்தினாா் அவா்.

 

ஐ.நா. சபையிலும் உலக அமைப்புகளிலும் இந்தியா பங்குபெற்று தீவிரமாக செயல்பட முடியும் என நேரு நம்பினாா். அதனால்தான் உலக வங்கி, சா்வதேச நிதியம் ஆகியவற்றில் இந்தியா நிறுவன உறுப்பினரானது. அது மட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் தலைமை நாடாகவும் மிளிா்ந்தது.

 

1947, 1949 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் ஆப்ரோ - ஆசிய மாநாட்டை இந்தியா நடத்தியது. 1955-இல் இந்தோனேசியாவுடன் இணைந்து பாண்டுங் உச்சி மாநாட்டை நடத்தியது. இறுதியாக, 1961-இல் பெல்கிரேடில் அணிசேரா நாடுகளின் இயக்கம் உருவானது.

 

தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அணிசேராக் கொள்கையும் வேறு வேறு என்பது நாம் அறிந்ததே. தற்போதைய இந்தியா வியூகம் மிகுந்த தன்னாட்சியும், ஒரே சமயத்தில் பல தரப்பினருடன் இணைந்து பணியாற்றும் தன்மையும் கொண்டு விளங்குகிறது. நேருவால் வடிவமைக்கப்பட்ட வியூகம் மிகுந்த சுயநிா்ணயத் தன்மையில்தான் தற்போதைய வெளியுறவுக் கொள்கையும் வோ் கொண்டிருக்கிறது.

 

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உலகம் மேற்கு, கிழக்கு என இருகூறுகளாகப் பிரிந்தது; பனிப்போா் காலமும் அப்போது தொடங்கியது. அச்சமயத்தில் தென்கிழக்காசிய நாடுகளும் பாகிஸ்தானும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க அணியில் இணைந்திருந்தன. 1947, 1965 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் இந்தியா வலுக்கட்டாயமாக போரை சந்தித்தாலும், அவற்றில் வென்றது. 1962-இல் சீனாவுடன் போரிட்டு, இந்தியா தோல்வியுற்றது. அப்போதெல்லாம் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆயினும் எந்த நிா்ப்பந்தத்துக்கும் இரையாகாமல், தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வந்தது.

 

வல்லரசு நாடுகளுக்கிடையேயான பனிப்போரில் பங்கேற்பதில்லை என்று அன்றைய பிரதமா் நேரு தொடா்ந்து கூறி வந்தாா். அக்காலத்தில் பொருளாதார, ராணுவ பலமே நாடுகளின் செல்வாக்கை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், இந்தியா தனது குறைந்த ராணுவ, பொருளாதார வலிமையைக் கொண்டே செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டதற்கு, நேருவின் நேரிய தலைமையே காரணம்.

 

இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்தது, அமெரிக்காவுடனோ, சோவியத் யூனியனுடனோ நெருங்கிய நட்புறவு கொள்வதைத் தடுக்கவில்லை. இந்தியாவின் சமூக, பொருளாதார வளா்ச்சிக்கு இவ்விரு நாடுகளும் உதவி செய்துள்ளன. பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேரவும் இந்தியா தயங்கவில்லை. பிரிட்டனுடனும் முன்னாள் காலனி நாடுகளுடனும் நட்புறவு கொண்டிருப்பது நமது பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியம் என அப்போது இந்தியா முடிவெடுத்தது.

 

இந்தியாவின் தொடக்ககால வெளியுறவுக் கொள்கை லட்சியவாதத்தையும் நடைமுறை யதாா்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை வளா்ச்சி, தொழில்துறை கட்டமைப்பு, உயா்கல்வி மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே இன்றைய பொருளாதார வளா்ச்சிக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவின் அணுசக்தி முகமையும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் நேருவின் முயற்சியால் தொடங்கப்பட்டவை. அவற்றின் மூலமாகவே அணு ஆயுத வலிமை வாய்ந்ததாகவும் ஏவுகணைத் திறன் கொண்டதாகவும் இந்தியா எழுச்சி பெற்றது.

உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்திய முதல் பிரதமா் நேரு போலவே, இதுவரை நாட்டை ஆண்ட அனைத்து பிரதமா்களும் நாட்டின் வளா்ச்சியையும் செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளா். நேருவுக்குப் பிறகு பிரதமரான லால் பகதூா் சாஸ்திரியின் காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் இரண்டாவது போரை எதிா்கொண்டது. அப்போது சோவியத் யூனியனுடன் அவா் கொண்டிருந்த நல்லுறவால்தான், பாகிஸ்தானுடனான தாஷ்கண்ட் ஒப்பந்தம் சாத்தியமானது.

சாஸ்திரிக்குப் பிறகு பிரதமரான இந்திரா காந்தியின் காலம் இந்திய வெளியுறவுத் துறையின் பொற்காலம். 1971-இல் நிகழ்ந்த பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதும், வங்கதேச விடுதலைக்கு இந்தியா உதவியதும் வரலாற்று சாதனைகள். அப்போது, நிக்ஸன் தலைமையிலான அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது ஏழாவது கடற்படையை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி, போரை நிறுத்துமாறு மிரட்டியது. ஆனால், சோவியத் யூனியனுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த நட்புறவு, அமெரிக்க மிரட்டலை தவிடுபொடியாக்கிது.

தந்தை நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட சா்வதேச நல்லுறவுக் கொள்கைகளை இந்திரா காந்தி தொடா்ந்தாா். அணிசேரா நாடுகளின் மாநாடு, காமன்வெல்த் உச்சி மாநாடு ஆகியவற்றை தில்லியில் நடத்தியதன் மூலம், உலகத் தலைவா்களைக் கவா்ந்தாா். தவிர, பொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுவெடிச் சோதனை மூலம், இந்தியாவின் ஆயுத வலிமை பறைசாற்றப்பட்டது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டை நவீனமயமாக்குவதும், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதும் வெளியுறவுக் கொள்கையின் இலக்குகளாக மாறின. அதற்காக அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த அவா் முனைந்தாா். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, உலக பொருளாதாரத்துடன் இயைந்து செல்லும் வகையில், இந்தியாவில் பொருளாதார சீா்திருத்தங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் அணு ஆயுதத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மன்மோகன் சிங் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் அதுவரை காணாத வளா்ச்சி விகிதத்தை எட்டியது. இவ்விரு அம்சங்களால் இந்தியாவை உலக நாடுகள் மிகுந்த மரியாதையுடன் கவனிக்கத் தொடங்கின.

மேற்கண்ட பிரதமா்கள் அனைவரும் அமைத்த வலிமையான அடித்தளத்தின் மீது பிரதமா் நரேந்திர மோடி வெளியுறவுக் கொள்கையைக் கட்டமைத்து வருகிறாா். இவரது வெளியுறவுக் கொள்கை, வெளிநாடுகளைத் திறம்படக் கையாளுவதை மையமாகக் கொண்டிருக்கிறது. தனது முதல் பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாடுகளின் ஆட்சியாளா்களை அழைத்தபோதே அவரது வெளியுறவு நாட்டம் வெளிப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பேத்தி திருமணத்தில் பங்கேற்றது, சீன அதிபா் ஜி ஜின்பிங்கை அகமதாபாத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் வரவழைத்தது, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்திய வம்சாவளியினருடனும், வெளிநாடு வாழ் இந்தியா்களுடனும் சந்திப்புகளில் பங்கேற்பது, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்புடன் மேடையைப் பகிா்ந்து கொண்டது என மோடியின் வெளியுறவு நிகழ்வுகள் ஏராளம்.

எனினும், நமது 75 ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மேம்படாமல் இருப்பது நெருடலாகவே உள்ளது. பாகிஸ்தானுடனான நட்புறவு கிட்டத்தட்ட சீா்குலைந்துவிட்டது. சீனாவுடனான உறவோ எல்லையில் மோதலாக நீடிக்கிறது. காஷ்மீா் பிரச்னைக்கோ, சீனாவுடனான எல்லைத் தகராறுக்கோ தீா்வு காணும் வாய்ப்பு அண்மையில் தென்படவில்லை.

அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பதும், இலங்கையில் நிலையற்ற அரசியல் சூழல் ஏற்பட்டிருப்பதும் நமக்கு நல்லதல்ல. மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளும் இலங்கையில் நேரிட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று பலரும் அஞ்சுகின்றனா்.

அண்டைநாடுகளில் நிலையற்ற தன்மை நிலவும்போது, பயங்கரவாதம் பெருகவும், அகதிகள் வருகை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்க உயா்வு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. தொலைதூர நாடுகளின் விவகாரங்களால் நாமும் பாதிப்புக்குள்ளாவோம் என்பதற்கு இது உதாரணம்.

அதே போல, பருவம் தவறிய மழைப்பொழிவு, புயல், வெள்ளச்சேதம், கடல்மட்டம் உயருதல், வெப்ப அலைகளின் தாக்கம் போன்ற பருவநிலை மாற்றக் கோளாறுகளையும் உலகம் சந்திக்கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி எவ்வாறு உலக பொருளாதாரத்தை சீா்குலையச் செய்தது என்பதை அண்மையில் நாம் கண்டோம்.

நமது நாட்டிலும் உலக அளவிலும் பரவலாகிவரும் தாராளமயமாக்கம் குறித்தும் நாம் கவலை கொண்டாக வேண்டும். பிற நாடுகளில் செயல்படும் இஸ்லாமியா்களுக்கு எதிரான, அந்நியா்களுக்கு எதிரான வலதுசாரி சக்திகள் நம் நாட்டின்மீதும் கண் வைக்கலாம். நமது நாட்டிலும் இதே எண்ணத்துடன் நிகழும் செயல்பாடுகளால், நமது ஜனநாயகம் மீதான மரியாதை குறையக்கூடும்.

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா நம் நாட்டிற்கு வந்திருந்தபோது, ‘இந்தியாவில் சமத்துவம், மத சுதந்திரம், கருத்துரிமை ஆகியவை பேணப்படும் வரை மட்டுமே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும்’ என்று சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்.

வருங்காலத்தில் உலகம் நிலையற்ற தன்மையைச் சந்திக்கும். அதனை எதிா்கொள்ள நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியம். கடந்த கால சாதனைகளைக் கொண்டாடும் அதே நேரத்தில், இதுவரை நாம் செய்துள்ள தவறுகள் என்னென்ன, இப்போது எங்கே தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பவற்றை சீா்தூக்கிப் பாா்ப்பது நல்லது.

கட்டுரையாளா்:

நெதா்லாந்து நாட்டுக்கான முன்னாள் இந்தியத் தூதா்.



Read in source website

ஆங்கிலேய வானியலாளர் ஜான் ரொட்டஸ்லி என்ற 2வது பரோன் ஜான் ரொட்டஸ்லி (John Wrottesley, 2nd Baron Wrottesley)யின் பிறந்தநாள் இன்று(ஆகஸ்ட் 5). இவர் மத்திய இங்கிலாந்தில் உள்ள வோவர்ஹாம்ப்டன் அருகே பிறந்தார்.

ஜான் ரொட்டஸ்லி, 1798 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். அவரது மறைவு தினம், 1867 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ம் நாள்.  இவர் ஏராளமான விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார்.

பெற்றோர்

ஜான் ரொட்டஸ்லியின் தந்தை பெயர்:  1 வது பரோன் ரொட்டஸ்லி. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர்தான். முன்பெல்லாம் தந்தை, மகன் மற்றும் பேரனுக்கு ஒரே பெயர் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்தியா மற்றும் தமிழ்நாட்டிலும் அந்த பழக்கம் உண்டே.  ஜான் ரொட்டஸ்லியின் அன்னை பெயர்: லேடி கரோலின் பென்னட். இவர் 4 வது ஏர்ல் டேங்கர்வில்லின், சார்லஸ் பென்னட் என்பவரின் மகள்.

கல்வி

ஜான் ரொட்டஸ்லி 1810 ஆம் ஆண்டு முதல் 1814 ஆம் ஆண்டு  வரை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளியில் படித்தார். 1817 இல் ஆக்ஸ்போர்டில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் கணிதத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். ஜான் ரொட்டஸ்லி அவரது தந்தை மறைவுக்குப் பிறகு, 1841ம் ஆண்டு  மார்ச் 16 அன்று பரோனாக பதவியேற்றார். 

வானியல் சங்கத் தலைவர்

ஜான் ரொட்டஸ்லி, லண்டனின் ராயல் வானவியல் சங்கத்தின் நிறுவன  உறுப்பினராகவும், பின்னர் 1841 முதல் 1842 வரை அதன் தலைவராகவும் பணியாற்றியவர், வான அறிவியலில் தனது சாதனைகளுக்காக ரொட்டஸ்லி மிகவும் புகழ்பெற்றார். 

தங்கப்பதக்கம்

ஜான் ரொட்டஸ்லி வானியலிலுள்ள ஈடுபாட்டால் வானை ஆராயத் துவங்கி, வானில் தெரியும் விண்மீன்களை, அவைகளின் இடத்துடன் பட்டியலிட்டார். எனவே, அவர் 1839 ஆம் ஆண்டில் 1,318 நட்சத்திரங்களின் பட்டியல் தயாரித்தமைக்காக, அவரைப் பாராட்டி ராயல் வானியல் சங்கம் அவற்றின் பெருமைக்காக தங்கப் பதக்கம் வழங்கியது.

ஜான் ரொட்டஸ்லி, 1853ம் ஆண்டு  லெப்டினன்ட் மவுரியின் (மத்தேயு ஃபோன்டைன் மவுரி என்ற அமெரிக்க வானியலாளர், வரலாற்றாசிரியர், கடல்சார் ஆய்வாளர், வானிலை ஆய்வாளர், வரைபடவியலாளர், எழுத்தாளர், புவியியலாளர், கல்வியாளர் மற்றும் கூட்டமைப்புக்கான கடற்படை அதிகாரி) மதிப்புமிக்க வானிலை ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாகவும், இவரது விண்மீன்கள் கண்டுபிடிப்பு தொடர்பாகவும், அவர் லண்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் (House of Lords) என்ற அமைப்பின் கவனத்தை ஈர்த்தார். பின்னர், 30 நவம்பர் 1855ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள், அவர் அடுத்து ராயல் சொசைட்டியின் தலைவரானார்.

குடும்ப வாழ்க்கை

ரொட்டஸ்லி, ஜூலை 28, 1821-இல், ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள சில்லிங்டனைச் சேர்ந்த தாமஸ் கிஃப்பார்டின் மூன்றாவது மகள் சோபியா எலிசபெத்தை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். அவரது இரண்டு இளைய மகன்கள் - ஹென்றி மற்றும் கேமரூன் - போரில் கொல்லப்பட்டனர். அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் ஆர்தர் ரொட்ஸ்லி மூலம் பாரோனெட்சி மற்றும் பரோனி என்ற பதவிக்கு வந்தார். ஜார்ஜ் ரொட்ஸ்லி என்பவர் அவருடைய மூன்றாவது மகன்

சாதனைகள்

ரொட்டஸ்லி, ராயல் வானியல் சங்கத்தில் நிறுவனர் உறுப்பினராகவும், 1841 முதல் 1842 வரை அதன் தலைவராகவும் பணியாற்றியவர், வானியல் அறிவியலில் தனது சாதனைகளுக்காக ரொட்டஸ்லி புகழ் பெற்றார். 1829 ஆம் ஆண்டு பிளாக்ஹீத்தில் ஒரு ஆய்வகத்தை உருவாக்கத் தொடங்கினார். லண்டனின், பிளாக்ஹீத்தில் உள்ள தனது முதல் ஆய்வகத்தில் இருந்து, அவர் 12,000 க்கும் மேற்பட்ட அவதானிப்புகளை பதிவு செய்தார். இங்கு அவர் 1829 ஆம் ஆண்டு துவங்கி 1831 ஆம் ஆண்டு வரை 1,318 விண்மீன்களின் இருப்பிடம் மற்றும் பெயர் அறிந்து பட்டியலிட்டார்.

வானியல் கண்காணிப்பகம்

ரொட்டஸ்லி 1841 இல் தனது தந்தையின் பட்டத்தை பரோன் ரொட்டஸ்லி எனப் பெற்றார். பரோனுக்கு அவர் உயர்த்தப்பட்டதன் மூலம் அவர் தனது கண்காணிப்பகத்தை பிளாக்ஹீத்தில் இருந்து தனது புதிய வீட்டிற்கு ரொட்டஸ்லி ஹாலில் மாற்றினார். ரொட்டஸ்லி 1841 இல் பரோன் பட்டத்தையும் ஸ்டாஃபோர்ட்ஷையர் குடும்பத் தோட்டத்தையும், பெற்ற பிறகு, அவர் அங்கு ஒரு கண்காணிப்பகத்தை கட்டினார். அவர் 1841 முதல் 1842 வரை ராயல் வானியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். அவர் 1854 முதல் 1858 வரை ராயல் சொசைட்டியின் தலைவராக பணியாற்றினார். 

விண்மீன்களின் வானக் கோளம் பூமியை சுற்றும் மற்றும் சுழலும் நிலையில் நிலையானதாக இருப்பதால், வானத்தில் அவற்றின் நிலையை வலது ஏறுதல்(right ascension) மற்றும் சரிவு(declination) ஆகிய இரண்டு ஆய அமைப்புகளைப் பயன்படுத்தி அளவிட முடியும். வலது ஏறுதல் மணி நேரம் மற்றும் நிமிடங்களில் அளவிடப்படுகிறது மற்றும் வானக் கோளத்தின் நிலப்பரப்பு தீர்க்கரேகைக்கு சமமானதாகும். வலது ஏறுதலுடன் பயன்படுத்தப்படும் விண்மீன் நிலைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படும் மற்ற ஒருங்கிணைப்பு சரிவு ஆகும். இது ஒரு விண்மீனாக இருக்கும் வான கோளத்தின் பூமத்திய ரேகையிலிருந்து டிகிரிகளில் உள்ள கோணம். வானக் கோளத்தின் மையகோடு பூமியின் மையக்கோட்டுக்கு நேர் மேலே உள்ளது. 1839 ஆம் ஆண்டில் ராயல் வானியல் சங்கத்தால் ரொட்டஸ்லியின் விண்மீன்களின் வலது ஏறுதல்களின் பட்டியலுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

சந்திரப்பள்ளத்தின் பெயர் ரொட்ஸ்லி

சந்திரனில் உள்ள பள்ளம் ஒன்றுக்கு ரொட்டஸ்லி பள்ளம் ஜான் ரொட்ஸ்லியின் நினைவாக பெயரிடப்பட்டது. இது பெட்டாவியஸ் என்ற பெரிய பள்ளத்தின் மேற்கு-வடமேற்கு விளிம்புடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மேரே ஃபெகுண்டிடாட்டிஸின் தென்கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. இது நிலவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மற்றும் பூமியில் இருந்து பார்க்கும் போது சற்று முன்னதாகத் தோன்றும்.

மரணிப்பு

லார்ட் ரொட்ஸ்லி 1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 69 வயதில் இறந்தார். 



Read in source website

இந்தியாவில் மேலும் 15 சதுப்புநிலப் பகுதிகள், சர்வதேச ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் அவற்றில், 9 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு நற்செய்தி.

தமிழ்நாட்டின் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை, பிச்சாவரம், கூந்தன்குளம், வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டபுரம், வெள்ளோடு, மன்னார் வளைகுடா, வேம்பனூர் ஆகியவை ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் சதுப்புநிலப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவரும் கோரிக்கைகளுக்கு இனிமேலாவது உரிய கவனம் கிடைக்கும் என்று நம்பலாம்.



Read in source website

‘நடக்கும் என்பார் நடக்காது’ என்றொரு பாடல் உண்டு. காவிரிப் படுகை உழவர்களைப் பொறுத்தவரை, குறுவைக்கான பயிர்க் காப்பீடு என்பதும் அப்படியாகத்தான் இருக்கிறது.

2021-ல் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்யும் தருணத்தில் நிலவிய நெருக்கடிகள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யில் 13-08-2021 அன்று கட்டுரை ஒன்று வெளியானது. 2022-லும் குறுவை சாகுபடியில் இந்த நெருக்கடி நீடிக்கிறது. இந்த ஆண்டு குறுவைக்கும் பயிர்க் காப்பீடு இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இயல்பாகவே காவிரிப் படுகையில் சம்பா சாகுபடியைவிட குறுவை சாகுபடிதான் அதிக பலன் தரும் என்பதை ஆங்கிலேயர்கள் தங்களது ஆவணங்களில் பதிவுசெய்துள்ளனர். மேலும், நெல் சாகுபடியைப் பொறுத்தவரையில் அது எப்போதுமே இயற்கை ஏற்படுத்தும் சகலவிதமான நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதே பிரிட்டிஷ் காலத்து வருவாய்த் துறை ஆவணங்கள் அளிக்கும் செய்தி.

பருவம் தவறிய மழையும், பயிர்கள் மூழ்கி அழுகிப்போவதும், கடும் வறட்சியினால் நிலம் பாளம்பாளமாக வெடிப்பதும், நெற்பயிர்கள் பதராகிப் போவதும் அப்போதும் சம்பவித்துள்ளன. ஆனால், விவசாயிகள் மகசூலில் பேரிழப்பைச் சந்தித்தபோது ஆங்கிலேய அரசு தொடர்ந்து வரித் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சுதந்திர இந்திய அரசும் உழவர்களை இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற அவ்வப்போது பல திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், 1985-ல் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட பயிர்க் காப்பீட்டு திட்டங்கள் வெவ்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக, 2016-ல் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி பசிலி பீமா யோஜனா) மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி பயிர்க் காப்பீட்டு பங்கேற்பு விகிதாச்சாரம் மத்திய, மாநில அரசுகள் தலா 49% எனவும், பயனாளிகள் பங்கேற்பு விகிதாச்சாரம் 2% எனவும் இருந்தது. 2021-ல்மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டணப் பங்கு, பாசனப் பகுதிக்கு 25% என்றும், மானாவாரிக்கு 30% என்றும் குறைக்கப்பட்டது.

2016-17-ல் மாநில அரசு பிரீமியப் பங்கு ரூ.566 கோடி என்றும், 2020-21-ல் ரூ.1,918 கோடி என்றும் நடப்பாண்டில் ரூ.2,500 கோடி என்றும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த நிதிச் சுமையை மாநில அரசால் தாங்க முடியாது என்றும், மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டணம் முந்தைய அளவுக்கே இருக்க வேண்டும் என்றும் 2021-ல் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. 2021 குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு அறவே இல்லாமல் போனது.

நடப்பு 2022 குறுவை சாகுபடிக்கேனும் 2021-க்குமுந்தைய காலம் போல் பயிர்க் காப்பீடு கிடைத்துவிடும் என்று விவசாயிகள் உறுதியாக நம்பினர். 07-06-2022 அன்று தஞ்சையில் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியது. வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆகியவற்றின் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேபோல் 03-07-2022 அன்று குறுவை தொகுப்புத் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று தமிழக அரசால் மீண்டும் நடத்தப்பட்டது. இதில் வேளாண்துறை இயக்குநரும் கலந்துகொண்டார். இக்கூட்டங்கள் யாவும் 2022 குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை உழவர்களிடம் உருவாக்கின. குறுவை நடவு பருவம் ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் குறுவைக்கான பயிர்க் காப்பீட்டு திட்ட அறிவிப்பு வரவில்லை.

வேளாண் தொழில் சந்திக்கும் பெரிய சவால் இயற்கை ஏற்படுத்தும் பேரிடர்களே ஆகும். குறிப்பாக 2010முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்குள்ளேயே காவிரிப் படுகை விவசாயிகள் 8 இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டனர். தானே, வர்தா, ஒக்கி, கஜா, பானி உள்ளிட்ட புயல்களால் விவசாயம் படுமோசமான வகையில் பாதிப்புகளைச் சந்தித்தது.

வழக்கமாக இந்தச் சவால்களோடு கடந்த இரண்டாண்டுகளில் கரோனா பெருந்தொற்றையும் சமாளித்தபடி உழவுத்தொழில் வாகைச் சூடிதான் வருகிறது. உதாரணமாக பொதுவாக குறுவை சாகுபடி நடக்கும் அளவு காவிரி டெல்டாவில் 3.5 லட்சம் ஏக்கர் ஆகும். இதில் தஞ்சாவூர் மாவட்டம் 1.6 லட்சம், திருவாரூர் 1.02 லட்சம், நாகப்பட்டினம் 50,000 ஏக்கர், மயிலாடுதுறை 97,000 ஏக்கர், திருச்சி 12,400 ஏக்கர், கடலூர் 44,000 ஏக்கர், அரியலூர் 12,000 ஏக்கர் என மொத்தம் 4,23,400 ஏக்கரில் குறுவை சாகுபடி நெல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வரக்கூடிய தகவல்களோ குறுவை சாகுடி அளவு 5.20 லட்சம் ஏக்கரை நெருங்கிவிட்டது எனக் கூறுகின்றன. குறுவைக்குத் தேவையான சிறப்புத் தொகுப்புத் திட்டமும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான தன் பங்களிப்பை 33% என்பதோடு நிறுத்திக்கொண்டது. மாநில அரசு எதுவுமே சொல்லவில்லை.

சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் (IFPRI) எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அபாயகரமான பருவநிலை மாற்றங்களால் இந்திய உணவு உற்பத்தி 2030-ல்16% குறையும், பசித்திருப்போர் விழுக்காடு 23% ஆக உயரும் என அது குறிப்பிடுகிறது. பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 23 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு இல்லாமல் போனது குறித்து மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. குஜராத், மகராஷ்ர மாநிலங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் நடத்த முன்வராத நிலையில் அந்தந்த மாநில அரசுகளே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. தமிழக அரசிடம் அத்தகு முன்முயற்சிகளும் இல்லை.

ஆடி மாதம் என்பது காற்றுக்கு மட்டும்தான் பெயர்பெற்றது. இப்போதோ காற்றை விஞ்சி மழைப்பொழிவு இருக்கிறது. எப்போது என்ன பாதிப்பு நடக்குமோ என்ற அச்சமும் பீதியும் விவசாயிகளைப் பீடித்துள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகள் மனக்கலக்கத்தில் இருக்கிறார்கள்.

குறுவைச் சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் இயற்கை இடர்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கரங்கள், கைவிட்டது ஏன்? இனிவரும் ஆண்டுகளிலும் இதே கதிதான் தொடருமா? தமிழக அரசு வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறது. ஜூன் 12-ல் மேட்டூரில் திறக்க வேண்டிய தண்ணீரை இந்த ஆண்டு முன்கூட்டி மே மாதத்திலேயே திறந்துவிட்டது. ஆனால், விவசாயிகளுக்கு மிகவும் அடிப்படையான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மட்டும் ஏன் தவிர்க்கிறது?

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com



Read in source website

பூமியின் வடதுருவத்தில், விண்ணில் பல வண்ணங்களில் ஒளிவெள்ளம் தோன்றி நாட்டியமாடுகின்றது. இது ஓர் இயற்கை நிகழ்வு. வடதுருவத்தில் ஏற்படுவதால், வடக்கின் ஒளிவெள்ளம் (Aurora Borealis) என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் துருவ ஒளியில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது என்றாலும் சிவப்பு, நீலம், ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. 1621இல் பியரி காசண்டி என்னும் இத்தாலிய அறிவியலாளர், விடியலுக்கான ரோமப் பெண் தெய்வத்தின் பெயரான ‘அரோரா’ என்பதை வடக்கின் ஒளிவெள்ளத்திற்குச் சூட்டினார்.



Read in source website

நம் அண்டை நாடான இலங்கையின் இன்றைய நிலை பெருவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் என்ன? நேர்மையான நிர்வாகமும், மேலாண்மையும் இல்லாத நாடு எவ்வளவு வளங்களைப் பெற்றிருந்தாலும் அவ்ளவும் பயனற்றுப் போகும். இந்தக் கருத்தைக் கீழ்க்கண்ட குறள் எடுத்துரைக்கிறது:

ஆங்கமை வெய்திக் கண்ணும் பயமின்றே



Read in source website