DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 04-08-2022

சென்னை: பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.2,057 கோடி நிதியை அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பயிர்க்காப்பீடு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ-டோக்கியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎப்சி எர்கோ, ரிலையன்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை முடிய சாகுபடி செய்யப்படும் குறுவை பருவத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

 

சேலம்: சேலம் கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயிலில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் கடந்த 2011ல் தாக்கல் செய்த மனு:

சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில், தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலையாகும். இதுதொடர்பாக கடந்த 2008ல் சர்ச்சை எழுந்தது.
அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது. சிலை மட்டுமின்றி அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா, புத்தர் சிலையா என ஆய்வு செய்து, தமிழக தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை விவரம்:

தலைவெட்டி முனியப்பன் கோயில் கட்டடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், தியான முத்ரா கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலைப் பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், அந்த சிற்பம் மகா லட்சணங்களைக் கொண்டுள்ள புத்தர் சிலைதான் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரசு தரப்பில் 'தலைவெட்டி முனியப்பன் சிலை' எனக்கருதி பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். எனவே, இந்து சமய அறநிலையத் துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெரியேரியில் இருப்பது புத்தர் சிலைதான் என்பதை தொல்லியல் துறை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு தலைவெட்டி முனியப்பன் சிலை என்பதை இந்து சமய அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலைதான் என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம். அதேவேளையில், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அசோகர் காலத்து சிலை:

சேலம் பெரியேரியில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை தங்களுக்கு சொந்தமானது என கடந்த 2010 இல் இந்திய புத்த சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது, மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பெளத்த பிக்கு வி.மெளரியா மெத்தபால், தலைவெட்டி முனியப்பன் கோயில் வழிபடப்பட்டு வரும் சிலை முனியப்பன் சிலை அல்ல. புத்தரின் சிலை. அசோகர் காலத்திலேயே அந்த சிலை 300 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உள்ள பெரியேரி என்ற இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த இடம்தான் இப்போது சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள இடமாகும். 

மேலும், இங்கு 3 கிரவுண்ட் நிலம் புத்த டிரஸ்டிற்குச் சொந்தமானது என்றும், வேறு சிலைகள் வைத்து வழிபட கூடாது. எதிர்காலத்தில் தியான மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய புத்த சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் 2011 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், சேலம் கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயிலில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.பர்னபாஸ் கூறியது:

சேலம் கோட்டையில் உள்ள தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை என வரலாற்று ஆசிரியர் ஆர்.பூங்குன்றன் தனது வரலாற்றில் சேலம் 1979 நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல புத்தர் சிலையை சமணர் உருவம் என ஆங்கிலேயேர் எப்.ஜே.ரிச்சார்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அனைத்து உயிர்களிடம் அன்பு காட்டி வாழ்ந்த புத்தரின் உருவம் தான் தலைவெட்டி முனியப்பனாக வணங்கி வந்தனர். மேலும், அச்சிலை முன்பு ஆடு, கோழி பலியிடுவது முரண்பாடாகவும், வேதனையாகவும்உள்ளது.

1960-70 களில் திராவிடர் கழகத்தினர் தலைவெட்டி முனியப்பன் கோயில் முன்பு புத்தர் கோயில் என பதாகையை வைத்து பெரியார் கோயிலில் ஆடு, கோழி பலியிடப்படுவதைத் தடுத்து நிறுத்தினார் என பஸ்நாகி ராஜண்ணன் தனது சேலம் சைக்ளோபீடியா 1992 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த மத உருவங்களில் இந்த சிலையும் ஒன்றாகும். ஆத்தூர் வட்டத்தில் உள்ள தியாகனூரில் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவெட்டப்பட்ட புத்தர் சிலை:

குறிப்பாக கி.பி. 16 ஆம் ஆண்டில் சமய பூசல்களின்போது சமண, புத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் வழிபட்ட புத்த, சமண சிற்பங்களின் தலை உடைக்கப்பட்டு வீசப்பட்டது. அதுபோன்றுதான் சேலம் கோட்டையில் உள்ள புத்தரின் சிலையின் தலை உடைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சிலையின் தலை மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது. ஆனால், தலை வெட்டப்பட்டு, மீண்டும் ஒட்டப்பட்டதால் இந்த சிலை இடது பக்கமாக சாய்ந்துள்ளது. தலை வெட்டப்பட்டு பின்பு ஒட்டப்பட்டதால் தலைவெட்டி முனியப்பன் என்று மக்கள் அழைத்து வழிபடத் தொடங்கினர்.

தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சிலை ஒப்படைக்கப்படும். அதேவேளையில் கொல்லாமையை வலியுறுத்திய புத்தர் சிலை முன்பு இனி உயிர்ப் பலி தடுக்கப்பட வேண்டும் என்றார். 



Read in source website

சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக டி. பாலமுரளி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இந்தப்பதவியை 4 ஆண்டுகள் வகிப்பாா்.

தஞ்சாவூா் மாவட்டம் பொன்னவராயன் கோட்டை என்ற கிராமத்தில் பிறந்த டி.பாலமுரளி காரைக்குடியில் உள்ள மத்திய மின் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் ரசாயனம் மற்றும் மின் ரசாயன பொறியியல் பட்டம் பெற்றாா். 2012- ஆம் ஆண்டு குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்ற இவா், கேரள தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரியானாா்.

கேரள அரசின் பதவிக்காலத்தில் பாலக்காடு, பத்தனம் திட்டா மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தாா். மேலும், கேரள சுற்றுலா மேம்பாட்டு கழகம், கேரள மருத்துவ சேவை கழகம் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளாா்.

சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்பதற்கு முன் கேரள ஊரக வளா்ச்சித்துறை ஆணையராகவும், உள்ளாட்சி நிா்வாக முதன்மை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளாா்.



Read in source website

இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் ஒரு லட்சமாவது நபரை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இன்னுயிா் காப்போம் திட்டமானது விபத்து நடந்து 48 மணி மணிநேரத்தில் அவசர சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித்திட்டம். இத்திட்டத்தை 2021 டிச. 18-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். சாலை விபத்தினால் நிகழும் இறப்புகள், அதனால் நிகழும் குடும்பங்களின் மருத்துவ செலவை குறைப்பதுதான் அதன் நோக்கம்.

அதன்படி, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, விபத்து நிகழ்ந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான காலகட்டத்தில் முழு சிகிச்சை வழங்க தேவையான நிதி வழங்குவதை உறுதி செய்வதாகும். விபத்தில் பாதிக்கப்படும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கும் நபருக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை அரசால் கொடுக்கப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்படும் கிராமப்புறத்தினா், நகா்ப்புறத்தினா், வெளி மாநிலத்தவா்கள் மற்றும் வெளிநாட்டினா் யாராக இருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். சாலை பாதுகாப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவா்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி மற்றும் தன்னாா்வ அமைப்புகள், விபத்தில் முதலுதவி செய்யும் பொதுமக்கள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக விபத்து நிகழும் 500 நெடுஞ்சாலை இடங்களைக் கண்டறிந்து, அதற்கு அருகமையில் தகுதி வாய்ந்த தனியாா் மருத்துவமனைகள் 445 மற்றும் அரசு மருத்துவமனைகள் 228 ஆக மொத்தம் 673 மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக கொண்டு சோ்க்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின்கீழ் ரூ.90.19 கோடி மதிப்பிலான சிகிச்சைகளை 1,00,061 போ் பெற்றுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

முன்னதாக, நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் ஆா்த்தி, சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேந்தா் என்.எம்.வீரையன், துணை வேந்தா் சிவாஜி சடாரம், இயக்குநா் தீபக், முதல்வா் ஜெ.தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

 



Read in source website

 

இந்தியாவில் இதுவரை 348 சீன செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில்,  ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் மூலம் தரவுகள் திருடப்படுகின்றனவா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ‘சீன தயாரிப்புகளான 348 செயலிகள் தரவுகளைத் திருடியுள்ளன. அவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றோம். பின், அச்செயலிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர முடியாதபடி முடக்கியுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

மேலும், தரவிறக்கம் செய்யப்பட்ட அச்செயலிகள் சீனாவை மையமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அவர் புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்க வேண்டும். 

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சர், தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். 

அதன்படி, மூத்த நீதிபதி என்பதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார் என்.வி. ரமணா. 

இதனால், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக  உதய் உமேஷ் லலித் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Read in source website

இருவேறு வழக்குகளில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் உதவியாளா் அா்பிதா முகா்ஜி, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் ஆகியோரிடம் இருந்து பெருமளவில் பணம் மற்றும் தங்கத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்ட முறைகேடு தொடா்பாக சஞ்சய் ரெளத்தின் வீட்டில் இருந்து ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு தொடா்பாக அா்பிதாவின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கட்டுக் கட்டாக சுமாா் ரூ.50 கோடியும், கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கத்தை ஒருவா் வைத்திருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

தனது வீட்டில் ஒருவா் பெரும் தொகையை வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அந்தத் தொகை குறித்து கேள்வி எழும்போது, அதுகுறித்து முறையாக விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒருவா் வீட்டில் சோதனை நடத்தி, அங்கு ரூ. 1 கோடி இருப்பதை புலனாய்வு அமைப்பினா் கண்டுபிடித்தால், அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை முறையாக விளக்க வேண்டும். அந்தப் பணம் எவ்வாறு கிடைத்து என்பதை தெளிவுபடுத்த ஆதாரம் இல்லையென்றால் பணம் வைத்திருப்பவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி கணக்கில் வராத பணத்துக்கு 137 சதவீதம் வரை அபராதம் செலுத்த நேரிடும்.

எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வருமான வரி உச்சவரம்பின்படி, ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்கள் வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள தங்கம் அல்லது தங்க நகைகளின் விவரம்:

நபா் வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கான வரம்பு

திருமணமான பெண் 62.5 சவரன்

திருமணமாகாத பெண் 31.25 சவரன்

ஆண்கள் 12.5 சவரன்

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடம் மேற்குறிப்பிட்ட அளவில் தங்கம் இருக்கலாம். இந்த அளவைத் தாண்டி அல்லது குடும்பத்தில் இடம்பெறாத வேறு நபருக்கு சொந்தமானதாக தங்கம் இருந்தால், அதனை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யக் கூடும்.

குடும்ப பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்களின் அடிப்படையில் உள்ள அதிக அளவிலான தங்கத்தை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவது சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரியின் விருப்பத்துக்கு உட்பட்டது.

தங்கம் வைத்திருப்பதற்கு மேற்குறிப்பிட்டுள்ள வரம்பு, வரி செலுத்தும் தனி நபா்களுக்குப் பொருந்தும். எனினும் பல குடும்பங்களில் இருந்து தங்கம் அல்லது தங்க நகைகளை சேமிக்க ஒருவா் பயன்படுத்தப்பட்டால், வரி செலுத்தும் ஒவ்வொரு நபருக்கும் தங்கம் வைத்திருக்க விதிக்கப்பட்டுள்ள வரம்பு மொத்தமாக ஒன்று சோ்க்கப்படும்.

ஆனால், வரி செலுத்தும் தனி நபா்களின் (தங்கம் அல்லது தங்க நகை வைத்திருப்போா்) பெயா்களில் வங்கிகளில் கூட்டு பெட்டகங்கள் (லாக்கா்) இருந்தால் இதுபோன்ற குழப்பம் ஏற்படுவதை எளிதில் தவிா்க்கலாம்.



Read in source website

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத் திருத்தத்தை உறுதி செய்து அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு 17-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு மத்திய அரசுக்கு இந்தச் சட்டத்திருத்தம் மேலும் வலுசோ்க்கிறது என்று எதிா்க்கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

நிதி மசோதா மூலம் மத்திய இந்தச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இந்த உத்தரவு வெகு நாள்களுக்கு நீடிக்காது என்றும் எதிா்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் விரைவில் முறையிடப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி தெரிவித்தனா்.

எதிா்க்கட்சிகளின் அழிக்கும் ஆயுதம்: எதிா்க்கட்சிகளை அழிப்பதற்கு மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அதீா் ரஞ்சன் செளத்ரி பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நேஷனல் ஹெரால்டு விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்ப காங்கிரஸ் சாா்பில் 3 கவனஈா்ப்புத் தீா்மான நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த விவகாரத்தை அவையில் எழுப்ப மத்தியில் உள்ள ஆளும் கட்சி மறுக்கிறது. காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை களங்கப்படுத்த அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது. எதிா்க்கட்சிகளை அழிக்கவும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை நிலையற்ாக்கவும் மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது. பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் இல்லாத பாரதம் மட்டும் தேவையில்லை. எதிா்க்கட்சிகளே இல்லாத பாரதம்தான் அவருக்கு வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, அதுகுறித்து விவாதிக்க மாநிலங்களவை விதி 267-இன் கீழ் காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிா்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் நோட்டீஸ் அளித்தனா். அவற்றை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டாா்.



Read in source website

தேசிய ஊக்க மருந்து முகமை செயல்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கவும், ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு மசோதாவுக்கு நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதா மக்களவையில் சில திருத்தங்களுடன் கடந்த வாரம் நிறைவேறிய நிலையில், அதனை மாநிலங்களவையில் விளையாட்டு, இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தாக்கல் செய்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 ஊக்கமருந்து பரிசோதனை மட்டுமே நடத்த முடிகிறது. இந்த எண்ணிக்கையை உயா்த்த இந்த மசோதா உதவும். அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கெனவே இதுபோன்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என்றாா்.

தொடா்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது.

பி.டி.உஷா பேச்சு: மசோதா மீதான விவாதத்தின்போது மாநிலங்களவைக்கு அண்மையில் தோ்வான நியமன எம்.பி. பி.டி.உஷா தனது கன்னிப் பேச்சை தொடங்கினாா். அவா் கூறுகையில், ‘ஊக்க மருந்து என்பது முன்பெல்லாம் சா்வதேச அளவிலேயே காணப்பட்டது. தற்போது ஜூனியா், கல்லூரி, மாவட்ட அளவிலும் பரவிவிட்டது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வீட்டின் முன் தில்லி போலீஸாா் தடுப்பு அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸாா் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததை தவிர, வேறு எவ்வித அமளியும் மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெறவில்லை. 12 நாள்களுக்குப் பின்னா் மாநிலங்களவை அலுவல் புதன்கிழமை சுமுகமாக நடைபெற்றது.

 



Read in source website

நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் அடிக்கடி அல்லது நீண்ட தொடா்பில் இருந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் இந்நோய் தொற்றக் கூடும்; நோயாளியின் சுவாச துளிகள், கொப்பளங்களில் இருந்து வடியும் நீா் என நேரடியாகவோ அல்லது அவா்களது துணிகள் மூலம் மறைமுகமாகவோ இந்நோய் பரவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்ய வேண்டியவை என்ன? குரங்கு அம்மை பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட நபரை மற்றவா்களிடமிருந்து முதலில் தனிமைப்படுத்த வேண்டும். சுத்திகரிப்பான் அல்லது சோப்புகள் மூலம் கைகளை கழுவுவதுடன், நோயாளிக்கு அருகில் செல்லும்போது முகக்கவசமும் கையுறையும் அணிவது அவசியம். கிருமிக்கொல்லிகளை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

செய்யக் கூடாதவை என்ன? குரங்கு அம்மை நோயாளிகளின் உடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை வேறு யாருடனும் பகிரக் கூடாது. நோயாளிகளின் துணிகளை நோய் பாதிப்பு இல்லாத நபா்களின் துணிகளுடன் சோ்த்து துவைக்கக் கூடாது. குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக தோன்றினால், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவா்களை புறக்கணித்து, களங்கப்படுத்தக் கூடாது.

நாடு திரும்பியவா்கள் கவனத்துக்கு..: கடந்த 21 நாள்களில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்களில் யாருக்கேனும் தீவிர தோல் அரிப்பு, நிணநீா் முடிச்சுகள் வீக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தொடா் அசதி போன்ற அறிகுறிகள் இருந்தால், அவா்கள் ‘நோய் பாதிப்பு சந்தேக நபா்’ என வகைப்படுத்தப்படுவா்.

குரங்கு அம்மை நோயாளிகளுடன் நேரடியாக நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் ‘நோய் பாதிப்பு சாத்தியமுள்ள நபா்’ என வகைப்படுத்தப்படுவா். முறையாக பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் நோயாளிகளை கையாளும் சுகாதாரப் பணியாளா்களும் இந்தப் பிரிவில் வருவா்.

பிசிஆா் அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைகளின் மூலம் குரங்கு அம்மை தீநுண்மி கண்டறியப்பட்ட பிறகு அவா் நோய் பாதித்த நபராக உறுதிசெய்யப்படுவாா்.

21 நாள்கள் கண்காணிப்பு: குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் பாதிப்பு சாத்தியமுள்ள நபருடன் நெருங்கிய, உடல்ரீதியான தொடா்பில் இருந்தவா்கள் 21 நாள்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும். அவா்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் ரத்த தானமோ, செல், திசு, உடல் உறுப்பு, உயிரணு தானமோ செய்யக் கூடாது.

அறிகுறிகள் என்னென்ன?: காய்ச்சல், அரிப்பு, நிணநீா் முடிச்சுகள் வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் குரங்கு அம்மை பாதிப்பு தொடங்கும். காய்ச்சல் ஆரம்பித்ததில் இருந்து 3 நாள்களுக்குள் வலியுடன் கூடிய கொப்பளங்கள் ஏற்படும். 2 முதல் 4 வாரங்களுக்கு பின் குணமாகும் காலம் தொடங்கும். 4 வாரங்களுக்குள் தானாகவோ சரியாகும் நோயாக இது பாா்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், குரங்கு அம்மையால் ஏற்படும் இறப்புவிகிதம் 3 முதல் 6 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயா்நிலை சிறப்புக் குழு: நாட்டில் குரங்கு அம்மை பரவலை தீவிரமாக கண்காணிக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உயா்நிலை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்துவது, இந்நோய்க்கான தடுப்பூசி தொடா்பான உலகளாவிய நிலவரங்களை ஆராய்வது உள்ளிட்டவற்றில் அரசுக்கு இக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனாவைத் தொடா்ந்து, உலக நாடுகளை அச்சுறுத்தும் நோயாக குரங்கு அம்மை மாறியுள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்பை, சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

 



Read in source website

கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தது.

மேலும், எண்மப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு, புதிய மசோதா மக்களவையில் வரும் குளிா்கால கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா கடந்த 2019 டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை மக்களவைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் அனுப்பிவைத்தது.

அதில், எண்மப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மசோதாவில் 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் கூட்டுக் குழு முன்மொழிந்தது. தனிநபரின் வெளிப்படையான ஒப்புதலின்றி, அவரது தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதித்தது. தவிர இந்த சட்ட விதிகளில் இருந்து விசாரணை முகமைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்தச் சூழலில், தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை அறிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘எண்மப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட விதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த மசோதா கொண்டுவரப்படும். அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும்’ என்றாா்.

தனிநபா் தகவல் பாதுகாப்பு, சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில், ‘சமகாலத்துக்கு ஏற்ப எண்ம தனிநபா் தகவல் பாதுகாப்பு சட்டங்கள், எதிா்கால சவால்கள், பிரதமா் மோடியின் இலக்கை துரிதமாக அடைவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, சா்வதேச தரத்தில் விரிவான சட்டம் கொண்டுவரப்படும்’ என்று குறிப்பிட்டாா்.



Read in source website

மறைமுக வரி நிா்வாகத்தில் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரதீப் கோயல் என்ற பட்டயக் கணக்காளா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘வரி செலுத்துவோா் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நபா்களுக்கு மாநில வரித் துறை அதிகாரிகள் அனுப்பும் அனைத்து தகவல்களுக்கும் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மறைமுக வரி நிா்வாகத்தில் ஆவண அடையாள எண்ணை மின்னணு முறையில் உருவாக்கும் நடைமுறை வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணா்வையும் கொண்டு வரும். இது திறன்வாய்ந்த நிா்வாகத்துக்கு முக்கியம். இந்த நடைமுறை பொதுநலன் சாா்ந்ததாக இருப்பதுடன் நிா்வாகத்தையும் மேம்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த நடைமுறை தற்போது கேரளம் மற்றும் கா்நாடகத்தில் மட்டும்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 279ஏ-வின்படி, ஜிஎஸ்டி சாா்ந்த எந்தவொரு விஷயம் தொடா்பாகவும் மாநிலங்களுக்கு பரிந்துரைகள் அளிக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. ஆவண அடையாள எண் முறையை அமல்படுத்துவது தொடா்பாகவும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தல் வழங்க முடியும்.

எனவே மறைமுக வரி நிா்வாகத்தில் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்- பரிந்துரைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு-ஜிஎஸ்டி கவுன்சில் வழங்க உத்தரவிடப்படுகிறது.

இவ்விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு இந்த உத்தரவின் நகலை உச்சநீதிமன்றப் பதிவாளா் அனுப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனா்.



Read in source website

‘தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகளால் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தீவிரமான பிரச்னையாகும்; இதனை கையாள்வதற்காக ஓா் அமைப்பை ஏற்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு, நீதி ஆயோக், நிதி ஆணையம், ரிசா்வ் வங்கி போன்ற அனைத்து தரப்பினரும் ஆக்கபூா்வமான பரிந்துரைகளை வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

‘தோ்தல் இலவசங்கள் வழங்கப்படுவதை எதிா்க்கவோ, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவோ எந்த அரசியல் கட்சியும் விரும்பாது’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தோ்தல் இலவசங்களுக்கு எதிராக வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

‘தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகளால் நியாயமற்ற வகையில் இலவசங்கள் அறிவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த போக்கு, நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, தோ்தல் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும் பதிவை ரத்து செய்யவும் தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று தோ்தல் ஆணையமோ மத்திய அரசோ கூற முடியாது. இது தீவிரமான பிரச்னை. இதில், மத்திய அரசு, நீதி ஆயோக், நிதி ஆணையம், ரிசா்வ் வங்கி, எதிா்க்கட்சிகள் எனஅனைத்து தரப்பினரும் சிந்தித்து, ஆக்கப்பூா்வ பரிந்துரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், இப்பிரச்னையை கையாள்வதற்கு ஓா் அமைப்பை ஏற்படுத்த முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

‘அரசியல் கட்சிகளின் விருப்பம்’: விசாரணையின்போது, ‘தோ்தல் இலவசங்கள் பிரச்னையை கையாள்வதற்கு உகந்த அம்சங்கள் நிதி ஆணையத்திடம் இருக்கிறது’ என்று இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் தெரிவித்தாா்.

அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று நினைக்கிறீா்களா? தோ்தல் இலவசங்களுக்கு எந்த கட்சியும் எதிா்ப்பு தெரிவிக்காது. இலவசங்கள் தொடர வேண்டுமென்றுதான் கட்சிகள் விரும்புகின்றன’ என்றாா். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த மனு மீது கடந்த ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்தனா்.

‘தோ்தல் இலவசங்கள் பிரச்னையை மத்திய அரசு தீவிரமாக கருதுகிா? இல்லையா? இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனா்.

பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு

‘தோ்தல் இலவசங்கள் விநியோகிக்கப்படுவது எதிா்காலத்தில் பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறியதாவது:

தற்போதைய பொது நல மனுவை மத்திய அரசு ஆதரிக்கிறது. தோ்தல் இலவச அறிவிப்புகள் வாக்காளா்கள் மத்தியில் தீவிரமான எதிா்மறை தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வாக்காளா்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை தோ்வு செய்யும் உரிமையை இது பாதிக்கிறது. இலவசங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் வேறு ஏதோ பறிபோகப் போகிறது என்பதை சாதாரண மக்கள் உணருவதில்லை.

தோ்தல் இலவசங்கள் அறிவிக்கப்படும் கலாசாராத்தை தோ்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். அது ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரத்துக்கும் முக்கியமானது என்றாா் துஷாா் மேத்தா.

 

 



Read in source website

நாட்டில் சுங்கச் சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்ப்பதற்காக ‘ஃபாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சென்ஸாா் கருவி பதிவு மூலமாக வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் எடுக்கப்பட்டு விடும்.

இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை தொடா்வதோடு, அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

புதிய நடைமுறை என்ன?: இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அல்லது வாகனப் பதிவு எண் அடிப்படையிலான புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு தற்போது முடிவுசெய்துள்ளது.

‘தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டத்துக்கு விரோதமாக ஒரே வழித்தடத்தில் 60 கி.மீ. இடைவெளியில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதே’ என்று எதிா்க் கட்சி உறுப்பினா்கள் சாா்பில் மாநிலங்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தப் பதிலை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அளித்தாா்.

அப்போது அவா் மேலும் கூறியதாவது: சுங்கச்சாவடி பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் நடைமுறைக்கு மாற்றாக 2 மாற்று திட்டங்களில் ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதில் முதலாவது செயற்கைக்கோள் அடிப்படையிலான தொழில்நுட்ப நடைமுறை. இந்த நடைமுறையின்படி, வாகனத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் எடுக்கப்பட்டு விடும். மற்றொரு நடைமுறை வாகனத்தின் பதிவு எண் அடிப்படையிலான தொழில்நுட்பம்.

இவற்றில் சிறந்த நடைமுறையைத் தோ்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

இது தொடா்பாக அதிகாரபூா்வமான முடிவு இன்னும் எடுக்கவில்லை என்றபோதும், பதிவு எண் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும்போது சுங்கச்சாவடி கட்டமைப்பே தேவையிருக்காது. கணினி அடிப்படையிலான எண்ம (டிஜிட்டல்) நடைமுறை இருந்தால் போதுமானது. வாகனங்கள் காத்திருக்கவேண்டிய சூழலும் இருக்காது.

ஆனால், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலான உரிய சட்டம் எதுவும் இதுவரை இல்லை. எனவே, அதற்கென நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

26 பசுமை விரைவுச் சாலைகள்: மாநிலங்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, ‘நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 26 பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, தில்லியிலிருந்து டேராடூனுக்கும், ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூருக்கும் 2 மணி நேரத்தில் பயணித்து விட முடியும். அதுபோல, தில்லியிலிருந்து சண்டீகருக்கு இரண்டரை மணி நேரத்திலும், தில்லியிலிருந்து அமிருதசருஸுக்கு 4 மணி நேரத்திலும், தில்லியிலிருந்து கட்ராவுக்கு 6 மணி நேரத்திலும், தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு 8 மணி நேரத்திலும், தில்லியிலிருந்து மும்பைக்கு 12 மணி நேரத்திலும், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணி நேரத்திலும் பயணித்துவிட முடியும்’ என்றாா்.



Read in source website

மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் புதன்கிழமை மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டது.

பாஜகவில் இருந்து விலகி அண்மையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ உள்பட 9 எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்றனா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய அமைச்சா்களுக்கு ஆளுநா் இல கணேசன் பதிவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பாபுல் சுப்ரியோ, ஸ்னேஹாசிஸ் சதுா்வேதி, பாா்த்தா பெளமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்தாா் ஆகியோா் கேபினட் அமைச்சா்களாக பதவியேற்றுக்கொண்டனா்.

பழங்குடியின தலைவரான பிா்பா ஹன்ஸடா, பிப்லாப் ராய் செளத்ரி ஆகியோா் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சா்களாகப் பதவியேற்றனா். தஜ்முல் உசைன், சத்யஜித் பா்மன் ஆகியோா் இணையமைச்சா்களாக பதவியேற்றனா்.

முன்னதாக, ‘மேற்கு வங்க அமைச்சா்களாக இருந்த சுப்ரதா முகா்ஜி, சாதன் பாண்டே ஆகியோா் காலமான நிலையில், அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி சிறையில் உள்ளாா். இதனால் அவா்கள் வசம் இருந்த துறைகளில் பெரும்பாலானவற்றை தற்போது நான் கவனித்து வருகிறேன். என்னால் அனைத்துப் பணிகளையும் செய்ய முடியாது என்பதால், வேலையைப் பகிா்ந்தளிக்க வேண்டும். இதனால் மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது’ என்று மம்தா பானா்ஜி கூறியிருந்தாா். அமைச்சரவையில் மட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் அமைப்பு ரீதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 



Read in source website

‘75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்தியா, 75,000 புத்தாக்க நிறுவனங்களை கொண்ட நாடாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தியா 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், 75,000 புத்தாக்க நிறுவனங்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இது தொடக்கம் மட்டுமே. மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையின் சக்தியை இந்த எண்ணிக்கை உணா்த்துகிது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நிறுவனங்களை வளா்ச்சிபெற வைப்பதே மத்திய அரசின் தொலைநோக்கு பாா்வை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ‘உலகிலேயே புத்தாக்க நிறுவனங்களை அதிகம் கொண்ட நாடாக மாறுவதே இந்தியாவின் விருப்பம்’ என்று அண்மையில் அவா் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாா்.

தனது மற்றொரு பதிவில், ‘இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் புத்தாக்க நிறுவனங்கள், கூடுதலாக சில டாலா்கள் கிடைக்கிறது என்பதற்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.



Read in source website

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக கம்போடியாவுக்கு புதன்கிழமை சென்றாா். அங்கு நடைபெறும் இந்திய-ஆசியான் அமைச்சா்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா்.

முதல் நாளில் கம்போடியாவின் சீம் ரீப் பகுதியில் அமைந்துள்ள பிரபல அங்கோா் வாட் கோயிலுக்குச் சென்று அங்கு இந்திய தொல்லியல்துறை நிபுணா்கள் மேற்கொண்டு வரும் பணிகளை ஜெய்சங்கா் பாா்வையிட்டாா்.

இந்த பயணம் குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சீம் ரீப் பகுதியில் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் போரெலை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் இந்திய தொல்லியல் நிபுணா்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அவா் பாராட்டினாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அந்த அங்கோா் வாட் கோயிலை பாதுகாத்து பராமரிக்கும் பணியை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

 



Read in source website

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கலாசார அமைச்சா் ஜி.கிருஷ்ணன் ரெட்டி தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் நாடு முழுவதுமுள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா்’ என்று தெரிவித்துள்ளாா்.



Read in source website

டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த நபர் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்று மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை டி20 போட்டிகளில்  2000 ரன்களைக் கடந்த இரண்டாவது நபர் என்ற சாதனையப் படைத்துள்ளார்.

அவர் இந்த சாதனையை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் படைத்துள்ளார். பார்படோஸ் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும்  அவர் புதிய  சாதனை படைத்துள்ளார். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்ஸில் அவர் 2,004 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 27.45 ஆகும். அதில் 14 அரை சதங்கள் அடங்கும். அவர் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 96 இன்னிங்ஸில் 2,973 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 33.03 ஆகும். அதில் 4 சதங்கள் மற்றும் 22 அரை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 118 ஆகும்.

பார்போடாஸ் அணிக்கு எதிராக விளையாடியப் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் உள்ள இரு தமிழக வீராங்கனைகளான நந்திதாவும் வைஷாலியும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். 

மகளிர் பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய ஏ அணி முதலிடத்திலும் இந்திய பி அணி 15-ம் இடத்திலும் இந்திய சி அணி 19-ம் இடத்திலும் உள்ளன.

மகளிர் பிரிவில் நந்திதா, வைஷாலி என இரு தமிழக வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். அவரவர் அணிகளில் இருவரும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இந்திய ஏ அணியில் வைஷாலி, தானியா சச்தேவ் ஆகிய இருவரும் 6 ஆட்டங்களில் தலா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இந்திய பி அணியில் வந்திகா அகர்வால் 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா, அதிக வெற்றிகளை அடைந்த இந்திய வீராங்கனையாக உள்ளார். இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ளார். 

சென்னை செஸ் ஒலிம்பியாடில் இந்திய வீராங்கனைகள் பெற்ற வெற்றிகள்

இந்தியா ஏ

வைஷாலி 4/6
தானியா சச்தேவ் 4/6
ஹம்பி 2/5
ஹரிகா 0/4
பக்தி குல்கர்னி 3/3

இந்தியா பி

வந்திகா அகர்வால் 4/6
செளம்யா சாமிநாதன் 3/5
மேரி ஆன் கோம்ஸ் 2/4
திவ்யா தேஷ்முக் 1/4
பத்மி ராவத் 0/5

இந்தியா சி

பி.வி. நந்திதா 5/6
வர்ஷினி சாஹிதி 2/4
பிரதியுஷா 2/5
ஈஷா 2/6
விஷ்வா வாஸ்னவாலா 1/3



Read in source website

 

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதல் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

23 வயது தேஜஸ்வின் சங்கர், 2.22 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்தியத் தடகள அணியில் தேஜஸ்வின் சங்கரின் பெயர் முதலில் இடம்பெறவில்லை. இந்தியாவில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் அவர் கலந்துகொள்ளாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கான அனுமதியைப் பெற்றார் தேஜஸ்வின் சங்கர். இறுதியில் பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸி. கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் சகோதரர் பிராண்டன் ஸ்டார்க், இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 



Read in source website


 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார் இந்திய வீரர் குகேஷ்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய பி அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. இந்திய ஏ அணி 6-ம் இடத்திலும் இந்திய சி அணி 9-ம் இடத்திலும் உள்ளன.

ஓபன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பி வீரர் குகேஷ் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். ஒலிம்பியாடில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் வேறு யாரும் 100% வெற்றிகளை அடையவில்லை. இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 16 வயது குகேஷ், தன்னிகரற்ற நட்சத்திரமாக உள்ளார். உலக நெ.1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் கூட ஒலிம்பியாடில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று 1 ஆட்டத்தை டிரா செய்துள்ளார். அவருக்குக் கூட 100% வெற்றி கிடைக்கவில்லை. இதனால் குகேஷின் புகழ் மேலும் அதிகரித்துள்ளது. அவருடைய அடுத்த ஆட்டங்களின் முடிவுகளை அறிந்துகொள்ள செஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் செஸ் வீரர்களும் ஆர்வமாக உள்ளார்கள். 

சென்னை செஸ் ஒலிம்பியாட்: அதிக வெற்றிகளை அடைந்த இந்திய வீரர்கள்

குகேஷ் - 6/6
சேதுராமன் - 4/6
சரின் நிஹல் - 3/5
அதிபன் - 3/4
ருனாக் சத்வனி - 3/5
ஹரிகிருஷ்ணா - 3/5
அர்ஜுன் - 3/6
அபிஜீத் குப்தா - 3/5
அபிமன்யூ - 3/4



Read in source website

காமன்வெல்த் பாட்மின்டனில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த இந்தியா, இறுதிச்சுற்றில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது.

இதன் மூலம், கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிடம் சாம்பியன் பட்டத்தை இழந்த மலேசியா, தற்போது அதை மீட்டுக் கொண்டது.

இறுதிச்சுற்றில் முதலில் ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி கூட்டணி 18-21, 15-21 என டெங் ஃபாங் ஆரோன் சியா/வூய் யிக் சோ இணையிடம் தோல்வியைத் தழுவ, மலேசியா முன்னிலை பெற்றது. பின்னா் மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கேம்களில் வென்று சுற்றை சமன் செய்தாா்.

என்றாலும், அடுத்து நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21, 21-6, 16-21 என ஸெ யோங் நிக்கிடம் தோல்வியைத் தழுவி அதிா்ச்சி அளித்தாா். இறுதியில் மகளிா் இரட்டையரிலும் காயத்ரி கோபிசந்த்/ட்ரீசா ஜாலி இணை 18-21, 17-21 என்ற கேம்களில் தினா முரளிதரன்/கூங் லெ பியா்லி டான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

லவ்பிரீத்துக்கு வெண்கலம்

பளுதூக்குதலில் ஆடவருக்கான 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 192 கிலோ என மொத்தமாக 355 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். மகளிருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியரான உஷா பன்னூா் மொத்தமாக 205 கிலோ (95+110) எடையைத் தூக்கி 6-ஆம் இடம் பிடித்தாா். பளுதூக்குதலில் இதுவரை 3 தங்கம் உள்பட 9 பதக்கங்கள் வென்றுள்ளது இந்தியா.

ஜூடோ: மேலும் ஒரு பதக்கம் உறுதி

இந்த விளையாட்டில், மகளிருக்கான 78 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் துலிகா மான் - நியூஸிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். அதில் அவா் ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை சந்திக்கிறாா். இறுதிச்சுற்றுக்கு வந்ததன் மூலம், ஜூடோவில் இந்தியாவுக்கான 3-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளாா் துலிகா மான். இதனிடையே, ஆடவருக்கான 100 கிலோ பிரிவு ரெபிசேஜ் சுற்றில் தீபக் தேஸ்வால் தோல்வியைத் தழுவினாா்.

ஹாக்கி: அரையிறுதியில் இந்திய மகளிா்

கனடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டது. ஆட்டத்தில் இந்தியாவுக்காக சலிமா டெடெ (3’), நவ்னீத் கௌா் (22’), லால்ரெம்சியாமி (51’) ஆகியோா் கோலடிக்க, கனடா தரப்பில் பிரியென் ஸ்டோ்ஸ் (23’), ஹன்னா ஹான் (39’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். ஆடவா் பிரிவிலும் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது. இதில் ஹா்மன்பிரீத் (7’, 54’), ஆகாஷ்தீப் சிங் (38’, 60’), அமித் ரோஹிதாஸ் (10’), லலித் உபாத்யாய் (20’), குா்ஜந்த் சிங் (27’), மன்தீப் சிங் (58’) ஆகியோா் கோலடித்தனா்.

ஸ்குவாஷ்: சின்னப்பா/சந்து முன்னேற்றம்

ஸ்குவாஷின் கலப்பு இரட்டையா் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா/ஹரிந்தா் பால் சந்து கூட்டணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது. இலங்கையின் யெஹெனி குருப்பு/ரவிந்து லக்சிரிக்கு எதிராக 8-11, 11-4, 11-3 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய இணை இந்த முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் தோற்ற சௌரவ் கோஷல், வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃபில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராபை சந்திக்கிறாா். இளம் வீராங்கனை சுனைனா குருவில்லா ஒற்றையா் பிளேட் இறுதிச்சுற்றில் 11-7, 12-11, 11-2 என குயானாவின் ஃபங் ஏ ஃபாட்டை தோற்கடித்தாா்.

லான் பௌல்: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

இந்த விளையாட்டில் மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் லவ்லி சௌபே/நயன்மோனி சாய்கியா இணை 23-6 என்ற கணக்கில் நியூவின் ஹினா ரெரெய்டி/ஒலிவியா பங்கிங்ஹாம் கூட்டணியை வென்றது. அடுத்து தென்னாப்பிரிக்க இணையை சந்திக்கவுள்ளது இந்த இந்திய ஜோடி. ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் 21-5 என்ற கணக்கில் ஃபால்கன் தீவுகளின் கிறிஸ் லாக்கெட்டை சாய்த்த இந்தியாவின் மிருதுல் போா்கோஹெய்ன், அடுத்து ஸ்காட்லாந்தின் லெய்ன் மெக்லீனை எதிா்கொள்கிறாா்.

தடகளம்: சீமா, நவ்ஜீத் ஏமாற்றம்

தடகள விளையாட்டுகளில் மகளிா் குண்டு எறிதல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சீமா புனியா 55.92 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடிக்க, நவ்ஜீத் தில்லன் 53.51 மீட்டருடன் 6-ஆம் இடம் பிடித்தாா். 39 வயது சீமா புனியாவுக்கு இது கடைசி காமன்வெல்த் போட்டியாக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அதில் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளாா். இதற்கு முன் இப்போட்டியில் அவா் பங்கேற்ற 4 முறையுமே பதக்கம் வென்றிருந்தாா்.

குத்துச்சண்டை: ஹசாமுதின், நீது வெற்றி

காலிறுதிச்சுற்றில், ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் ஹசாமுதின் முகமது 4-1 என்ற கணக்கில் நமீபியாவின் டிரையாகெய்ன் மாா்னிங்கை வீழ்த்த, மகளிருக்கான 48 கிலோ பிரிவில் நீது கங்காஸ் - வடக்கு அயா்லாந்தின் நிகோல் கிளைடை தோற்கடித்தாா். நீதுவுக்கு இது முதல் காமன்வெல்த் போட்டியாகும். இருவரும் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இதனிடையே, ஆடவருக்கான 67 கிலோ பிரிவில் ரோஹித் டோகாஸ் 5-0 என்ற கணக்கில் கானாவின் ஆல்ஃப்ரெட் கோட்டேவை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளாா்.

பதக்கப் பட்டியல்

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் புதன்கிழமை முடிவில் இந்தியா, 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 106 (42/32/32), இங்கிலாந்து 86 (31/34/21), நியூஸிலாந்து 26 (13/7/6) பதக்கங்களுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.



Read in source website

 

பிரிட்டனில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.

பிரிட்டனில் வாகன எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றம் சில்லறைப் பணவீக்கத்தின் விகிதத்தை அதிகரிக்கச் செய்ததால் வங்கிகளில் பெற்ற கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

அந்நாட்டில் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில் ஜூலை மாதமும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதனால், கடந்த நிதியாண்டு முடிவில் (ஏப்ரலில்) 1.25% ஆக இருந்த தனிநபர் வங்கிக்கடன்களின் மீதான வட்டி விகிதம்  தற்போது 0.5% அதிகரிக்கப்பட்டு 1.75% ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே, சில்லறைப் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பணவீக்க உயர்வு என்றும் அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 13.3 சதவீதமாக உயரும் என பாங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது. 

மேலும், நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் செய்தி நிறுவனங்கள் இன்று ‘கருப்பு வியாழன்’ எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

பணவீக்கத்திற்கு என்ன காரணம்?

பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ரஷியாவும் மறைமுகக் காரணமாக இருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அதனைக் கண்டித்த பிரிட்டன் ரஷியாவுக்கு சில பொருளாதார தடைகளையும்  விதித்தது.

அதனைத் தொடர்ந்து, எரிவாயு போன்ற முக்கிய எரிபொருள்களை பிரிட்டனுக்கு அனுப்புவதை ரஷியா நிறுத்தியது. இதனால், ஏற்பட்ட பற்றாக்குறையே அவற்றின் விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் மேலும், இதே நிலைதொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்தில் 5-ல் ஒரு குடும்பத்தினர் சேமிப்பை இழப்பார்கள் என்றும்  பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.



Read in source website

தைவான் கடல் பகுதியில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சீனா சோதனை நடத்தியதாக தைவான் தெரிவித்துள்ளது. 

தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கருதிக்கொண்டு இருக்கும் நிலையில், தைவான் தனி நாடு சுதந்திரம் கோருகிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் பயணம் சென்று வந்துள்ளார். 

இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் சீனா இன்று போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. 

தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளுக்கு அருகே மொத்தம் 11 டாங்ஃபெங் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவியுள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் போர் ஒத்திகைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

ரஷியா - உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா - தைவான் போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை போர் ஒத்திகை நடைபெறும் என சீனா அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது. 



Read in source website

பிரிட்டிஷ் கொலம்பியா: கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் 9 பேர் இந்திய வம்சாவளியினர்.

இந்த 11 பேரையும் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கனடா காவல்துறை, அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவி சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் காவல்துறை மற்றும் பிசி ராயல் கனடியன் மௌண்டட் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கையை அளித்துள்ளது.

இந்த 11 பேரும், பல்வேறு மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும், இவர்கள் குழுக்களாக இணைந்து செய்திருக்கும் குற்றங்கள் கனடா பேராபத்தை ஏற்படுத்துபவை என்றும், இவர்களால் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 



Read in source website

செங்கல்பட்டு: கொசு பெருக்கத்தை ஒழிக்க பொதுமக்களுக்கு நொச்சி நாற்று வழங்கும் திட்டத்தை, அரசு மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பருவ கால மாற்றங்களின்போது பொதுமக்களுக்கு, டைபாய்டு, டெங்கு, சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் பரவுவது இயல்பு. அது போன்ற சமயங்களில் அதிகரிக்கும் கொசு காரணமாக, நோய் பரவும் தன்மையும் அதிகரிக்கிறது.

கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தினால், டெங்கு உள்ளிட்ட பலவிதமான நோய் பரவலையும் தடுக்க முடியும். கொசுக்களை கட்டுப்படுத்த பல்வேறு முறைகள் கையாளப்பட்டாலும், பக்கவிளைவு இல்லாமல் மூலிகை வளர்ப்பால் கொசுக்கள் பெருக்கத்தை தடுக்க முடியும்.

வீடுகளை சுற்றிலும் நொச்சி செடியால் உயிர்வேலி அமைக்கும் வழக்கத்தை, நம் முன்னோர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்தனர்.

நொச்சி செடி வளர்ப்பதன் நன்மைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக அரசு திட்டமிட்டது. இதற்காக, ஊராட்சிகளில் நாற்றுப் பண்ணை அமைத்து, நொச்சி நாற்று உற்பத்தி செய்து கிராமங்களில் நடவு செய்யும் திட்டம் கரோனா பரவலுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு சார்பில் பொதுமக்களுக்கு கட்டி தரப்படும் தொகுப்பு வீடுகள் திட்ட பயனாளிகளுக்கு, தலா இரண்டு நொச்சி நாற்றுகள் வழங்கப்பட்டன.

ஆனால், கரோனா காரணமாக நொச்சி வளர்ப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அவ்வப்போது மழை பெய்வதால், கொசுக்கள் உற்பத்தி மற்றும் நோய் பரவும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நொச்சி உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்க்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முனைப்பு காட்ட வேண்டும். விரைவில், முழு வீச்சில் நொச்சி நாற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கோபால் கூறியதாவது: இயற்கை முறையில் கொசுவை விரட்டுவதற்கு நொச்சி செடி சிறந்தது. சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களுக்கு நொச்சி இலையின் வாசனை ஆகாது. அனைத்து வகை மண்ணுக்கும் இந்த செடி வளரும்.

கரோனா முடக்கம் காரணமாக அத்திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது கொசு தொல்லை மீண்டும் அதிகமாக உள்ளதால், நொச்சி செடி வழக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு

ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நொச்சி வளர்த்தால் கொசு ஒழிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக அரசு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நொச்சி நாற்று வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது நொச்சி நாற்று வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை. இந்த நொச்சி செடி குறைந்த விலை என்பதால் தனியார் நர்சரிகளில் கிடைக்கும் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.



Read in source website

கோத்தகிரி: இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் கோத்தகிரி லாங்வுட் சோலை புகழ்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான பசுமை மாறாக் காடு ஆகும். சுமார் 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் பல்லுயிர்ச் சூழல் மையமாகவும் உள்ளது.

உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக அறிவிக்கப்பட்டு, காமன்வெல்த் நாடுகளின் ‘குயின்ஸ் கனோபி’ என்ற இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய அங்கீகாரம் ஆகும்.

‘குயின் காமன்வெல்த் கனோபி’ என்ற பெயரில் ராயல் காமன்வெல்த் சொஸைட்டி என்ற அமைப்பின் மூலம் இந்த விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, லண்டனில் உள்ள ராயல் காமன்வெல்த் சொஸைட்டியின் தலைமை நிர்வாகி டாக்டர் லிண்டாவிடமிருந்து தமிழக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்புக் குழுவின் செயலர் கே.ஜே.ராஜு கூறியதாவது: லாங்வுட் சோலை கண்காணிப்புக் குழு கடந்த 25 ஆண்டுகளாக வனத் துறையுடன் இணைந்து இந்த காட்டைப் பாதுகாத்து வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை முகாம்களை நடத்தி சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி லாங்வுட் சோலை பகுதியை ஒரு சுற்றுச் சூழல் கல்வி மையமாக மாற்றியுள்ளது.

இந்த உலக அளவிலான அங்கீகாரம் பாதுகாப்புக் குழுவினரின் அர்ப்பணிப்புக்கும், தியாகத்துக்கும் கிடைத்த பரிசு. இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, “சுற்றுச் சூழல் துறையில் லாங்வுட் சோலைக்கு பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்பு நிலம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு லாங்வுட் சோலையை உலக அளவில் பல்லுயிர்ச் சூழல் மையமாக மாற்றுவதற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கியுள்ளது” என்றார்.

உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடுகளில் ஒன்றாக லாங்வுட் சோலை அறிவிக்கப்பட்டிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

புதுடெல்லி: விண்வெளி தொடர்பான திட்டங்களுக்கான அனுமதிக்கு தாமதம் இல்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்தரா சிங் தகவல் அளித்துள்ளார். இதை அவர், திமுக எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்தார்..

இது குறித்து பிரதமர் அலுவலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்த பதிலில் கூறியதாவது: உலக விண்வெளிப் பொருளாதாரத்தின்( குளோபல் ஸ்பேஸ் எகானமியின்) சரியான அளவை மதிப்பிடுவது ஒரு சிக்கலானதும் விவாதத்திற்குரியதுமான விஷயம் ஆகும்.

2019 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலக விண்வெளிப் பொருளாதாரம் 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதில் இந்தியாவின் பங்கு தோராயமாக 2 சதவிகிதம் ஆகும். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைமையில் பூமி கண்காணிப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, விண்வெளி அறிவியல் மற்றும் வழிசெலுத்தல் உள்ளடக்கிய விண்வெளி சொத்துக்கள்; தரை உள்கட்டமைப்பு, மற்றும் தேசிய தேவைகள்; மனிதர்கள் மற்றும் சமூகத்தின் பொதுவான தேவைகளை நிவர்த்தி செய்யும் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் என அனைத்து களங்களிலும் உள்நாட்டுத் திறன்களைப் பெற்றுள்ளது.

விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தன் பதிலில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பி.,யான ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ''உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் நமது நாட்டின் பங்கு என்ன? விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாட்டின் மோசமான செயல்பாட்டிற்கான காரணங்கள் யாவை? அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதம் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?'' எனக் கேட்டிருந்தார்.



Read in source website

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் நூ தஸ்தகிர் பட் (Nooh Dastagir Butt). அந்தப் பதக்கத்தை தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்கமில் 2022 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் விளையாட்டு பிரிவில் இந்திய அணி வீரர்களும், வீராங்கனைகளும் மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். அதன் மூலம் இந்த பிரிவில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ள நாடாக திகழ்கிறது. இதில் 3 தங்கப் பதக்கங்கள் அடங்கும்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஒரே ஒரு தங்கம் மட்டுமே வெல்லப்பட்டுள்ளது. அந்தப் பதக்கத்தை வென்றவர் 24 வயதான பளுதூக்குதல் வீரர் நூ தஸ்தகிர் பட். பாகிஸ்தான் நாட்டின் குஜ்ரன்வாலா நகரை சேர்ந்தவர். இளம் வயது முதலே பளுதூக்குதலில் ஈடுபட்டு வருகிறார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி வென்றுள்ளார்.

கடந்த 2018 காமன்வெல்த்தில் வெண்கலம் வென்றிருந்தார். நடப்பு காமன்வெல்த்தில் 109+ கிலோ பிரிவில் பங்கேற்றார். மொத்தம் 405 கிலோ எடையை சுமந்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் காமன்வெல்த் அரங்கில் பாகிஸ்தானுக்காக தங்கம் வென்ற இரண்டாவது பளுதூக்குதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

“எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவும், பிரார்த்தனைகளும்தான் என்னை இந்த சாதனையை படைக்க செய்துள்ளது. இந்த பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவரது 12 ஆண்டு கால உழைப்பு இந்த வெற்றிக்கு பின்னால் உள்ளது. இன்று இந்த மேடையில் நான் நிற்க காரணம் அவர்தான். நாட்டுக்காக பதக்கம் வெல்வது பெருமையான விஷயம். அதுவும் அது தங்கம் என்றால் சொல்லவே வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதே பிரிவில்தான் இந்தியாவின் குர்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றிருந்தார்.



Read in source website

பர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டு பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் தொடரின் 6வது நாளான நேற்று ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கனையை எதிர்கொண்ட அவர், தோல்வி அடைந்தார். இதனால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆடவர் பளுதூக்குதல் 109+ கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் குர்தீப் சிங் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதேபோல், ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவை எதிர்கொண்டார். இதில், சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் வரலாற்றில் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பளுதூக்குதல் 109 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோவும் தூக்கி அவர் வைத்த தேசிய சாதனையை அவரே முறியடித்ததுடன் வெண்கலமும் வென்று அசத்தினார்.

இவர்கள் வென்றதன் மூலம் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களைப் பெற்றுள்ளது.



Read in source website

இந்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுமார் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்ய ஜெர்மனி நாடு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலக சுற்றுலாத் துறை மெதுவாகப் புத்துயிர் பெற்று வருகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த பலே திட்டத்தை வகுத்துள்ளது ஜெர்மனி.

தமிழில் கடந்த 1980-களில் வெளியான திரைப்படமான ‘உல்லாச பறவைகள்’ படத்தின் காட்சிகளில் பெரும்பாலானவை ஜெர்மனியில் படம்பிடிக்கப்பட்டவை. அது தவிர அந்தப் படம் மேலும் இரண்டு அயல் நாடுகளில் படம் பிடிக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சு அருணாசலம் எழுதிய “ஜெர்மனியின் செந்தேன் மலரே” என தொடங்கும் பாடல் முழுவதும் ஜெர்மனி நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் படம் பிடிக்கப்பட்டவை.

இந்தப் பாடல் மற்றும் படம் குறித்து இப்போது பேச ஒரு காரணம் உள்ளது. கடந்த 2019-ல் மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 9.6 லட்சம் பயணிகள் ஜெர்மனுக்கு சுற்றுலா நிமித்தமாக சென்றுள்ளதாக அந்த நாட்டின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி - மே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1.6 லட்சம் என இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023 வாக்கில் மீண்டும் பழையபடி ஆண்டுக்கு சுமார் 9.6 லட்சம் இந்தியப் பயணிகள் என்ற எண்ணிக்கையை அந்த நாடு எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா நிமித்தமாக வர இந்திய நாட்டில் டிமாண்ட் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தங்கள் நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுக்காக சுமார் 5 லட்சம் யூரோக்களை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களில் 9 சதவீதம் பேர் ஜெர்மனி செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 55 சதவீதம் பேர் ஓய்வுக்காகவும், 38 சதவீதம் பேர் வணிக ரீதியாகவும் ஜெர்மனி செல்வதாகவும் சொல்லப்பட்டுளள்து.

இந்நிலையில், தங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த சுற்றுலாவை பிரபலப்படுத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



Read in source website

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் உயிரை இழந்தார் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜஹாகிரி.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் பாதுகாப்பான இரகசிய வீட்டில் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் உயிரை இழந்தார் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜஹாகிரி.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி நடந்தது. அல் கொய்தா தலைவரான அய்மான் அல்-ஜஹாகிரியின் தலைக்கு அமெரிக்க 25 மில்லியன் (2.5 கோடி டாலர்) விலை நிர்ணயித்திருந்தது.எகிப்து நாட்டைச் சேர்ந்த மருத்துவரான அய்மான் அல் ஜவாஹிரி 2001 செப்.11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.

ஹெல்ஃபயர் ஆர்9எக்ஸ் ஏவுகணை
இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தில் மட்டும் அதிமுக்கியமான இரகசிய நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணையை கொண்டு இலக்கை எளிதில் அடைய முடியும். அதேநேரம் சேதாரமும் அதிக அளவில் இருக்காது.
இந்த ஏவுகணையை நிஞ்ஜா ஏவுகணை என்று அழைப்பார்கள். இது இலக்கை மிக துல்லியமாக எட்டும். ஏன் அருகில் உள்ள கட்டடங்களுக்கு கூட பாதிப்பு வராது.

இந்த ஏவுகணை அமெரிக்க படையில் நுழைந்தது எப்போது?
ஹெல்ஃபயர் ஆர்9எக்ஸ் ஏவுகணைகள் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவப் படையில் இணைக்கப்பட்டது. எனினும் இது குறித்து எந்தத் தகவலும் பொதுமக்களுக்கு தெரியாது.
இது தொடர்பான தகவல்கள் 2019ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு தெரியவந்தன. இந்த ஏவுகணைகள் ஹெல்ஃபயர் வகையை சேர்ந்தது ஆகும். இவைகளை சிறிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தரையில் உள்ள வாகனங்கள் மூலமாகவும் ஏவலாம். இவைகள் ஆளில்லா வான்வெளித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஹெல்ஃபயர் ஏவுகணைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன?
இந்த ஏவுகணைகள் 2017ஆம் ஆண்டு அப்போதைய அல்கொய்தா தலைவர் அ புகைர் அல் மஸ்ரியை கொல்ல பயன்படுத்தியதாக தகவல் வெளியானது.
மேலும் சிரியாவில் அல்கொய்தாவின் மற்ற தலைவர்களை கொல்ல பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

ஹெல்ஃபயர் ஏவுகணைகள்
ஹெல்ஃபயர் என்பது ஹெலிபோர்ன் லேசர் ஃபயர் அண்ட் ஃபர்கெட் ஏவுகணை என்பதன் சுருக்கமாகும். இது ஆரம்ப காலக்கட்டத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்து டாங்கிகளை குறி வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
பின்னர் தரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் இலக்குகளை தாக்க ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) போன்று வடிவமைக்கப்பட்டன. இந்த ஏவுகணைகள் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் நார்த்ரோப் க்ரம்மன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்த ஏவுகணைகளில் நிஞ்;ஜா ஏவுகணைகள் தவிர லாப்போ மற்றும் ரோமியா உள்ளிட்ட வகைகளும் உள்ளன.



Read in source website

அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் எல்.ஐ.சி 98 வது இடத்தை பிடித்துள்ளது.

அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் எல்.ஐ.சி 98 வது இடத்தை பிடித்துள்ளது.

பங்குச்சந்தை பட்டியலின்படி, உலகத்தில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலை பார்ச்சுன் என்ற அமைப்பு எல்லா ஆண்டும் வெளியிட்டு வருகிறது. உலகளவில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி 98 வது இடத்தை பிடித்துள்ளது. எல் ஐ சி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 97.26 பில்லியன் யுஎஸ்டி, மற்றும் இதன் லாபம் 553.8 மில்லியன் யுஎஸ்டி. ரிலையன்ஸ் நிறுவனம் 51 இடங்கள் முன்னேக்கி சென்று தற்போது 104 இடத்தை பிடித்துள்ளது. ரியலையன்ஸ் நிறுனத்தின் வருவாய் 93.98 பில்லியன் யுஎஸ்டி, மற்றும் இதன் லாபம் 8.15 பில்லியன் யுஎஸ்டி. மேலும் இந்த தரவரிசை பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கிறது.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதில் 5 பொதுத்துறை நிறுவனங்கள். மேலும் 4 தனியார் நிறுவனங்கள். எல்ஐசி நிறுவனம் மற்ற இந்திய நிறுவனங்களைவிட முன்னிலையில் உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் 142 இடத்திலும், ஓஎன்ஜிசி 190 வது இடத்திலும் இருக்கிறது. ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா 236 இடத்தையும். பாரத் பெட்ரோலியம் 295 இடத்தையும் பிடித்துள்ளது. அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.



Read in source website

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் நான்கு நாள் இந்திய அரசுமுறைப் பயணம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிக்கும் இடையேயான சந்திப்பும், பேச்சுவார்த்தையும், இருநாடுகளும் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியிருக்கும் ஆறு ஒப்பந்தங்களும் இந்திய - மாலத்தீவு நட்புறவை வலுப்படுத்தியிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையொப்பமாகி, இந்தியாவின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட இருக்கும் கிரேட்டர் மாலி போக்குவரத்துத் திட்டத்திற்கான பணிகளை, பிரதமரும் அதிபரும் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் தலைநகர் மாலி அமைந்துள்ள தீவையும், அருகில் உள்ள விலிங்கி, குல்ஹி ஃபல்கு, தைலஃபுஷி ஆகிய தீவுகளையும் இணைக்கும் வகையில் 6.74 கி.மீ. நீள பாலம் அமைக்கப்படவுள்ளது.
மாலத்தீவின் 61 தீவுகளில் காவல் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ள உள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 750 கோடி கடனுதவியும், வீட்டுவசதியை மேம்படுத்த ரூ. 941கோடி கடனுதவியும் வழங்கப்படுகிறது. ஹனிமது விமான நிலைய மேம்பாடு, குல்ஹிபாலு துறைமுகத் திட்டம், 237 கோடியில் புற்றுநோய் மருத்துவமனைத் திட்டம் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்க இருக்கிறது.
இந்திய - மாலத்தீவு உறவு என்பது பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியமானது. சிறுசிறு தீவுகளின் கூட்டமாக இருந்தாலும்கூட, இந்தியாவை நோக்கி வரும் கடல்வழிப் பாதையில் அமைந்த மாலத்தீவு, இந்துமாக் கடலில் புவியியல் முக்கியத்துவம் பெற்ற நாடு. லட்சத்தீவின் மினிக்காய் தீவிலுள்ள இந்திய கடற்படைத் தளம், மாலத்தீவின் வடக்கு எல்லையில் உள்ள சுராகுன்னு தீவிலிருந்து 100 கி.மீ. தொலைவில்தான் அமைந்திருக்கிறது. இலங்கையைப் போலவே தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு மாலத்தீவின் நட்புறவும் மிகமிக அவசியம்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான நட்புறவு மிகவும் நெருக்கமானது. பாதுகாப்பு ரீதியாக இந்தியாவுக்கு மாலத்தீவும், பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் மாலத்தீவுக்கு இந்தியாவும் முக்கியமானவை. மாலத்தீவின் அரசியல் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு இணக்கமாகத்தான் இருந்தாக வேண்டும். எந்த ஒரு பிரச்னையிலும், நெருங்கிய வல்லரசு நாடு என்பது மட்டுமல்லாமல், உதவிக்கரம் நீட்டும் நாடாகவும் மாலத்தீவுக்கு இந்தியா மட்டுமே இருந்திருக்கிறது.
1988-ஆம் ஆண்டில் மாலத்தீவின் அன்றைய மம்மூன் அப்துல் கயூம் அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சி இலங்கை கூலிப்படையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மாலத்தீவின் தலைநகர் மாலியிலுள்ள முக்கிய அரசு கட்டடங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்த நிலை. உதவி கோரி அதிபர் அப்துல் கயூம், இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தொடர்பு கொண்டார். ஆனால், எந்த நாடும் உதவ முன்வரவில்லை. கடைசியாக இந்தியாவை அணுகினார் அதிபர் கயூம்.
தனது எல்லைப்புறத்தில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்க உடனடியாக ஆக்ரா விமான படைத்தளத்திலிருந்து 50-ஆவது பாரா பிரிகேட் கிளம்பி மாலி நகரத்தில் இறங்கியது. அடுத்த சில மணி நேரத்தில் இந்திய கடற்படை நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இலங்கையை நோக்கி விரைந்து கொண்டிருந்த கூலிப்படையினரையும் சுற்றி வளைத்தது. ஒருவழியாக மாலி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. கயூம் தலைமையிலான மாலத்தீவின் நிர்வாகத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இந்திய ராணுவம் திரும்பிவிட்டது.
அதுமுதல் 2013 நவம்பர் 17-இல் மமூன் அப்துல் கயூமின் சிற்றன்னை மகன் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் ஆட்சிக்கு வந்தது வரை, மாலத்தீவு - இந்திய நட்புறவு நெருக்கமானதாகவும் நன்றியுடன் கூடியதாகவும் தொடர்ந்தது. அப்துல்லா யமீன், மமூன் போல இல்லாமல் இந்திய எதிர்ப்பாளராகவும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். ஏனைய இஸ்லாமிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதுடன், இந்தியாவுக்கு எதிராக சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து செயல்படவும் அவர் தயங்கவில்லை.
இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியமான கட்டமைப்புப் பணிகள், சீன நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன. சீனாவின் நெருக்கம் அதிகமானதைத் தொடர்ந்து சீன கடற்படைக் கப்பல்களும், சுற்றுலாப் பயணிகள், அதிகாரிகளின் வருகையும் மாலத்தீவில் அதிகரித்தது. அதற்கு பிரதிபலனாக சீன - மாலத்தீவு நட்புறவுப் பாலம் கட்டப்பட்டது.
ராஜபட்ச சகோதரர்கள் நிர்வாகத்தில் சீன கடன் வலையில் இலங்கை சிக்கியதுபோல, மாலத்தீவும் அகப்பட்டுக்கொண்டது. 2018 தேர்தலில் அப்துல்லா யமீன் அகற்றப்பட்டு இப்ராஹிம் முகமது சோலி அதிபராகவும், முன்னாள் அதிபர் முகமது நஷீத் அவைத் தலைவராகவும் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இந்திய - மாலத்தீவு உறவு புத்துயிர் பெற்றது. இப்ராஹிம் முகமது சோலியின் பதவியேற்புக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டார் என்பதிலிருந்தே உறவின் நெருக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
சீனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறது என்றாலும், அதன் கடன் வலையிலிருந்து மாலத்தீவு மீளவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்துமாக் கடலில் மாலத்தீவின் புவியியல் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அதன் நட்புறவையும் நரேந்திர மோடி அரசு புரிந்து செயல்படுகிறது என்பதை, அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் அரசுமுறைப் பயணம் உறுதிப்படுத்துகிறது!

 



Read in source website

அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு வழங்கும் பயணச்சீட்டுகளை எச்சில் தொடாமல் வழங்கவேண்டும் என்று நடத்துநர்களுக்கு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கரோனா பரவலின் அச்சம் முற்றாக நீங்காத இந்த நேரத்தில் தமிழக போக்குவரத்துத் துறையின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகளானாலும், கையால் எழுதி வழங்கப்படும் பயணச் சீட்டுகளானாலும் அவற்றைக் கிழித்தெடுத்துப் பயணிகளிடம் தருவதற்கு முன்னால் தங்களுடைய விரலை ஒருமுறை நாக்கில் வைத்து ஈரப்படுத்திக் கொண்ட பின்னரே பெரும்பாலான நடத்துநர்கள் பயணிகளிடம் அளிப்பது வழக்கம். பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்ட மெல்லிய தாள்களை துரிதமாகப் பிரித்து எடுக்கத் தங்களுக்கு வசதியாக இருப்பதாலேயே அவர்கள் இவ்விதம் செய்வதாகத் தெரிகிறது.
அரசுப் பேருந்துகளில் மட்டுமின்றி, தனியார் பேருந்துகளிலும் இதே நிலைமைதான். பயணச் சீட்டு வழங்குவதோடு இந்த எச்சில் தொடும் பழக்கம் நின்று விடுவதில்லை. பயணக் கட்டணம் போக மீதிப்பணத்தை ரூபாய் நோட்டுகளாக எண்ணி வழங்கும்போதும் இதே கதைதான்.
பெரும்பாலான நேரம் நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் பணிபுரியும் நடத்துனர்களுக்கு, நீர் உறிஞ்சும் ஸ்பாஞ்ச் எனப்படும் மென்பஞ்சைத் தொட்டுக் கொண்டு பயணச்சீட்டு வழங்குவது என்பது சற்றுக் கடினமானதுதான். ஆனால், தற்போதைய நோய்ப் பரவல் சூழ்நிலையுடன் தங்களுடைய நலன், பயணிகளுடைய சுகாதாரம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு எச்சில் தொடும் வழக்கத்தை நடத்துநர்கள் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
நோய்ப்பரவலுக்குக் காரணமான எச்சில் தொடும் பழக்கம் ஏதோ பேருந்து நடத்துநர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து விடக் கூடாது. எச்சில் தொட்டுக் கொடுக்காதீர்கள் என்று நடத்துநர்களிடம் கேட்டுக்கொள்ளும் பயணிகளுக்கு ஆதரவுக் குரல் எழுப்பாமல் அப்படிக் கேட்பவரை அலட்சியமாகப் பார்க்கும் சக பயணிகள் பலரும் இருக்கின்றார்கள்.
நின்று கொண்டே பேருந்துகளில் பயணிப்பவர்களில் சிலர் தாங்கள் வைத்திருக்கும் சிறிய பணப்பையிலிருந்து (மணிபர்ஸ்) ரூபாய் நோட்டை வெளியில் எடுத்து அதனைத் தங்கள் உதட்டினால் கவ்விக் கொள்வர். ஒரு கையினால் தலைமேல் இருக்கும் கைப்பிடியை நழுவ விடாமல் பற்றிக் கொண்டபடி, மறு கையினால் தங்களது பணப்பையினை சட்டைப்பையில் வைத்துவிடுவர். அதன் பின்பு அதே கையினால் உதட்டிலிருக்கும் ரூபாய் நோட்டை உருவி எடுத்து அதனை நடத்துநரிடம் வழங்குவர்.
நடத்துநர் வழங்கும் பயணச் சீட்டும் மீதிப் பணமும் இவ்விதமே மீண்டும் அவர்களுடைய சட்டைப்பைக்குச் செல்லும். மேற்கண்ட பயணிகளின் உதட்டு எச்சிலில் உள்ள கிருமிகள் நடத்துநருக்கும் பரவி, கைப்பிடியிலும் ஒட்டிக்கொள்வதுடன் உடன் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பை உருவாக்குகின்றது.
வங்கிகளிலும், கடைகளிலும் பணம் பெற்று, வழங்குகின்ற காசாளர்களில் பலரும் தண்ணீர் உறிஞ்சும் மென்பஞ்சினைப் பயன்படுத்துவது உண்மைதான் என்றாலும், இன்றும் கூட ஒருசில காசாளர்கள் எச்சிலைத் தொட்டே பணத்தை எண்ணிக் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு சமயம், உணவகம் ஒன்றின் காசாளர் தம்முடைய பற்களில் ஒட்டியிருந்த உணவுத் துணுக்கினைக் குச்சியால் அகற்றிவிட்டு அந்தக் கையைக் கழுவாமல் என்னிடம் பணத்தைப் பெற முயன்றபோது நான் கொடுக்க மறுத்துவிட்டேன். "கையைக் கழுவிவிட்டு வாருங்கள் சார்' என்று நான் மரியாதையுடன் கூறியதையே தாம் அவமானப்படுத்தப்பட்டது போன்று எடுத்துக்கொண்டு எரிந்து விழுந்த அந்தக் காசாளரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிந்தது.
அவருடன் அந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களையும், அவரிடம் சில்லறைப் பணத்தைப் பெற்றுச் செல்கின்ற வாடிக்கையாளர்களையும் நினைக்கும் பொழுது எனது அனுதாபம் பன்மடங்காகப் பெருகியது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
பல்வேறு உணவகங்களில் அரங்கேறும் சுகாதார சீர்கேடுகளைப் பற்றிய செய்திகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமது மனம் வேதனைப்படவே செய்கிறது. உணவுப் பொருள்களை வாங்குவது, பராமரிப்பது, சமைப்பது, சமைத்த பண்டங்களைப் பாதுகாப்பாக வைத்துப் பராமரிப்பது ஆகிய பல துறைகளில் உணவகங்கள் பலவற்றின் செயல்பாடுகள் நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன.
குறிப்பாக, அசைவ உணவகங்கள் பலவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்தும் ஆய்வுகளின் மூலம் அன்றாடம் வெளிப்படும் முறைகேடுகள் பதற வைக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திலும் கேரளத்திலும் ஷவர்மா என்ற அசைவ உணவு வகையை உட்கொண்ட பலர் பாதிப்புக்கு உள்ளானதும், அவர்களில் சிலர் உயிரிழக்க நேர்ந்ததும் மறக்கக் கூடிய நிகழ்வுகளல்ல.
தேநீர் கடைகளில் கூட வாடிக்கையாளர் தேநீர் அருந்தும் கண்ணாடி தம்ளர்களை, பணியாளர் சுடுநீர் கொண்டு கழுவுவதைப் பார்க்கலாம். ஆனால், பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு உணவு வழங்கும் உணவகங்களில் வாடிக்கையாளர் சாப்பிடும் தட்டுகள், தம்ளர்கள் ஆகியவற்றை எவ்விதம் கழுவுகின்றனர் என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. உணவக நிர்வாகங்கள் பெரிய மனது வைத்து சுகாதாரம் பேணினால்தான் உண்டு என்கின்ற நிலைமையே எங்கும் நிலவுகின்றது.
பொது இடங்கள்தான் என்றில்லை. தனிமனிதர்கள் தங்களுடைய வசிப்பிடத்திலும், அலுவலகத்திலும் தங்களுடைய எச்சில் பரவாமலிருக்கும்படி நடந்து கொள்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களும், சக பணியாளர்களும் தண்ணீர் அருந்தக் கூடிய பொதுவான தம்ளர்களில் தங்களுடைய எச்சில் படாதவாறு பயன்படுத்தப் பழக வேண்டும்.



Read in source website

நவீனகால மக்களாட்சி ஆரம்பித்த இடம் அமெரிக்க சுதந்திரப் போர்க்களம். அடுத்து அதை விசாலப்படுத்தியது பிரெஞ்சுப் புரட்சி. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று கருத்தாக்கங்களை உலகுக்குக் கொண்டு வந்தது. அதிலிருந்து பல அலைகளாக மக்களாட்சி விரிவு படுத்தப்பட்டு இன்றைய பிரதிநிதித்துவ மக்களாட்சியாக மக்கள் முன் நிற்கிறது.
மக்களாட்சி என்பது ஒரு ஆட்சி முறைதான். ஆனால் அந்த ஆட்சி முறை எப்படி நடக்க வேண்டும், அந்த ஆட்சிமுறை செம்மைப்பட எப்படிப்பட்ட சூழல் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும் போன்ற விவாதங்கள் உலகம் முழுவதும் அரசியல் தளத்திலும் அறிவுத் தளத்திலும் தொடர்ந்து நடந்த வண்ணம்தான் உள்ளன. இந்த மக்களாட்சி பல்வேறு நிலைகளில் பல்வேறு தரத்தில் இயங்கி மக்களின் மேம்பாட்டிற்கு பணி செய்கின்றது என்பதை யாரும் மறுக்க இயலாது.
மக்களாட்சி உயர்வதும் தாழ்வதும் அதை பயன்படுத்துகின்ற சமூகத்தின் தன்மையைப் பொறுத்தே இருந்து வந்துள்ளது. எங்கெல்லாம் மக்களாட்சி கலாசாரம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டனவோ அங்கெல்லாம் உயர்ந்து செயல்படுவதையும், மக்களாட்சி கலாசாரம் இல்லாத இடங்களில் தாழ்வடைந்துள்ளதையும் நாம் பார்த்து வருகின்றோம்.
இந்த இடத்தில்தான் நவீன மக்களாட்சியின் அடிப்படைகளைப் புரிந்து மக்களாட்சியில் மக்கள் செயல்படுகின்றார்களா என்ற அடிப்படைக் கேள்வி கேட்கப்படுகின்றது. சில நேரங்களில் மக்களாட்சி என்ற பெயரில் மக்களாட்சிக்கு எதிர்மறையாக செயல்படுகின்ற சமூகத்தைப் பார்க்கும்போது மக்களாட்சியை முறையாக செயல்பட வைக்கும் காரணிகள் எவை என்ற கேள்வி எழுகிறது.
உலகில் மக்களாட்சி குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்துவரும் சாமுவேல்.பி. ஹண்டிங்டன் கூறும் ஒரே காரணி, "சுதந்திர நாட்டில் வசிக்கும் மக்கள், மக்களாட்சி பற்றி புரிதலை ஏற்படுத்திக்கொண்டு அரசியல் தளத்தில் செயல்படுவதுதான் மக்களாட்சியை முறையுடன் இயங்க வைக்கும்' என்பதுதான்.
அதாவது, எந்த அளவுக்கு குடிமக்கள் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை அரசியலில், ஆளுகையில், நிர்வாகத்தில் பயன்படுத்துகின்றார்களோ அந்த அளவுக்கு மக்களாட்சி சிறந்த பலன்களை மக்களுக்கு அளிக்கும்.
பொதுமக்கள் விரிவான புரிதலை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட செயல்பட மக்களாட்சி விரிவடையும்; அதன் செயல்பாடுகளில் உயர்வடையும். இதை மக்களாட்சி வரலாறு நமக்குத் தெரிவிக்கின்றது.
புரிதலுடன் வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பது மிக முக்கியமான காரணி. ஆனால் இதற்கு மிகப் பெரிய தயாரிப்பு சமூகத்தில் தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு பொதுத்தளத்தில் பெருமளவில் அரசியல் கட்சிகளால் நடத்தப்படுவது.
அடுத்து அறிவுஜீவிகளால் மக்களுக்குத் தொடர்ந்து மக்களாட்சி பற்றிய ஆழமான கருத்துக்களை கொண்டு சேர்த்து மக்களிடம் அறிவுபூர்வ அரசியல் செயல்பாடுகளை உருவாக்குவது.
இந்தப் பணி சிறப்புடன் நடைபெற மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முதலில் மக்களாட்சியின்மேல் நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்கான விசாலமான புரிதலும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
பொதுவாக பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆட்சியின் மீது பற்று இருக்கிறது. அது தேர்தல் மூலம்தான் சாத்தியப்படும் என்பதை புரிந்துள்ள தலைவர்கள் தேர்தலையே மக்களாட்சியாக பாவித்து செயல்படும் நிலையில் இருப்பதுதான் மக்களாட்சியின் இன்றைய நிலை. ஆட்சிக்கும் தேர்தலுக்கும் தயாராகின்ற தலைவர்கள், மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளில் நம்பிக்கை இருந்தால், மக்களாட்சியைத் சிதைத்து ஆட்சியைப் பிடிக்கமாட்டார்கள்.
பல நாடுகளில் மக்களாட்சி சிதைவதற்கு மிக முக்கியக் காரணமே கட்சிகளும், அதன் தலைவர்களும்தான். அவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கு மக்களாட்சிக் கூறுகளை சிதைக்கின்றனர். எனவே மக்களாட்சிக்கு மிக முக்கியமானது மக்களின் மக்களாட்சி பற்றிய புரிதல்.
ஒருவர் ஒரு பஞ்சாயத்தில் தகவல் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி அந்த கிராமப் பஞ்சாயத்து செய்த செலவு விபரங்களைப் பெற்று, அதில் நடந்துள்ள முறைகேடுகளைப் பட்டியலாகத் தயாரித்தார். அதனை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, அந்த தலைவரை பதவியிலிருந்து நீக்க வழி செய்து விட்டார். மற்ற பஞ்சாயத்துக்களிலும் இதுபோல் ஆய்வு செய்து பாருங்கள் என்று வழிகாட்டி விட்டார்.
இன்னொரு பஞ்சாயத்தில் பஞ்சாயத்து எழுத்தர் போலி ரசீது தயாரித்து பஞ்சாயத்து பணத்தை சூறையாடியதைக் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அவர்மேல் நடவடிக்கை எடுக்க வைத்துவிட்டார். மற்றொரு பஞ்சாயத்தில் ஐந்து இளைஞர்கள்அந்த பஞ்சாயத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுபிடித்து ஆட்சியரிடம் கூறி, விசாரணைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வைத்துவிட்டனர்.
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்ட பொருட்கள் தரமற்றவை என்று கூறி அவற்றை வீதியில் கொட்டி போராடி மாற்றித்தர வைத்துவிட்டனர். அதேபோல் ஒருசில கிராம பஞ்சாயத்துகளில் நியாயவிலைக் கடைகளில் தந்த அரிசி தரமற்றது என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டி போராடிய பிறகு தரமான அரிசி வழங்கப்பட்டது.
இதில் முக்கியமான செய்தி அந்த நோட்டீஸில் இருந்த வாசகங்கள்தான். "ஏழைகளுக்கு ஏன் தரமற்ற அரிசியை அரசு தருகிறது? ஏழைகள் என்றால் தரமற்ற அரிசியைத்தான் உண்ண வேண்டும் என்று அரசு கருதுகிறதா? உணவு எங்களது உரிமைதானே, அந்த உரிமையை ஏன் அரசு மறுக்கிறது? தரமான உணவு அரசு போடும் பிச்சை அல்ல, எங்கள் உரிமை' என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.
இதைத்தான் 250 ஆண்டுகளுக்கு முன்பே தாமஸ் பெயின் கூறினார். "மக்கள் விழித்துக் கொண்டு செயல்பட்டால் மக்களாட்சியில் அரசு மக்களுக்குக் கடமைப்பட்டு செயல்படும். அப்படி இல்லை என்றால் மக்களாட்சியில் அரசு மக்களை மேய்க்கும்' என்றார் அவர். "மரியாதையுடன் கூடிய மேம்பாடு' என்று அமித் பாதுரி என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். அதில் "மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களுக்கு அரசு கடமைப்பட்டுள்ளது.
மக்களின் மேம்பாட்டிற்கு பணி செய்ய வேண்டியது அரசுதான். ஆனால் அந்தப் பணி இனாம் தருவது அல்ல. மக்கள் உழைத்து வாழ வாய்ப்பை உருவாக்கித் தருவதே. அது வேலை வாய்ப்புத்தான். அது மட்டும்தான் பொதுமக்களின் மரியாதையைக் காக்கும். இனாம் தந்து செயல்படும் அரசு இயலாமையில் உள்ளது என்பது பொருள். இனாம்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் சுயமரியாதையை இழப்பார்கள்.
சுயமரியாதை இழந்த மக்கள் மேய்க்கப்படுவார்கள். அது மட்டுமல்ல, இனாம்களுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எங்கு இனாம்கள் அதிகம் உள்ளதோ அங்கு ஊழலும் அதிகம் இருக்கும். ஒரு காலத்தில் இவை கருதுகோள்களாக இருந்தன. இன்று உண்மைகளாகிவிட்டன.
ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்போது அரசு மக்களுக்கு திட்டம் என்ற பெயரில் இலவசங்களைத் தந்து மக்களை பயனாளிகளாக வைத்திருப்பது, பொது மக்களின் சுயமரியாதையை பறிப்பதாகும். ஓர் அரசாங்கம் பொதுமக்களுக்கு அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தந்திட வேண்டும்.
அதே நேரத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் உருவாக்கிட வேண்டும். உருவாக்கிய வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தூய்மையான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றை தர வேண்டியது அரசின் கடமை.
இவைதான் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் அரசு செய்ய வேண்டிய பணிகள். இந்தப் பணிகள் முறையுடன் நடைபெற மக்களின் அரசியல் செயல்பாடு மிகவும் இன்றியமையாதது.
இன்று அரசாங்கம் உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்து தொழில் தொடங்க வைத்து பொருளாதார வளர்ச்சியை அடைய வைத்து விட்டது. ஆனால் பொதுமக்களின் வாழ்வை அரசால் செம்மைப்படுத்த முடியவில்லை. வளர்ந்த பொருளாதாரம் யாருக்கோ பலனளிக்கிறது. ஆட்சியை உருவாக்கிய குடிமக்களுக்கு சென்று சேரவில்லை. ஒரு நல்லாட்சியை மக்களால் உருவாக்க முடியவில்லை என்றால் மக்களுக்கு மக்களாட்சி பற்றிய புரிதல் இல்லை என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களாட்சியில் தேர்தலை சந்திப்பதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை தங்களின் உறுதிமொழிகளாகத் தருகின்றன. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், அரசின் இனாம்கள் திட்டங்களாக வந்து சேருகின்றன. ஆனால் மக்கள் இந்த இலவசங்களை வாங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டு மதிக்கத்தக்க மானுட வாழ்க்கையை வாழ இயலாத நிலையில் இருக்கின்றனர். இதைத்தான் மேய்ப்பு அரசியல் என்று வர்ணிக்கின்றனர்.
நாட்டில் பொறுப்புமிக்க குடிமக்களாக மக்கள் தங்கள் கடமைகளை ஆற்றத் தெரியாததன் விளைவு, அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதில்லை. அவர்களை அன்றாடங்காய்ச்சிகளாய் வாழ்வதற்கு வழிவகை செய்கின்றன. இந்த மக்களாட்சியை குறையுடையதாக நம் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வைத்துள்ளனர்.
இந்த நிலை மாறி, மக்களாட்சியை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் மிகப்பெரிய மக்களாட்சி இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். அந்த இயக்கம், கட்சிகளைக் கடந்து, தேர்தலைக் கடந்து மக்களின் மேம்பாட்டுக்கான மக்கள் அரசியலை கட்டமைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).


 



Read in source website

சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன் (Sir William Rowan Hamilton) என்ற மிகப் பெரிய கணித விஞ்ஞானியின் பிறந்த நாள் இன்று. சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன் 1805 ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் நாள் பிறந்தார். (இறப்பு 1865, செப்டம்பர் 2). இவர் அயர்லாந்து நாட்டின் மிகப்பெரிய கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இயற்பியலாளர். இவர் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில், வானியல் பேராசிரியராகவும், டன்சிங்க் ஆய்வகத்தில் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். 

மேலும், ஒளியியல், கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் மற்றும் சுருக்க இயற்கணிதம் (Abstract Algebra) ஆகியவற்றிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது அறிவியல் பணி என்பது, கோட்பாட்டு இயற்பியலுக்கு(Theoritical Physics) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக நியூட்டனின் இயக்கவியலின் சீர்திருத்தம், இப்போது ஹாமில்டோனியன் இயக்கவியல் (Hamiltonian Mechanics) என்று அழைக்கப்படுகிறது. இன்று இது மின்காந்தவியல் மற்றும் குவாண்டம் இயக்கவியலுக்கு மையமாக உள்ளது. கணிதத்தில், சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன், குவாட்டர்னியன்களின்( Quaternions) கண்டுபிடிப்பாளரும் கூட.

ஹாமில்டனின் அறிவியல் வாழ்வு/செயல்பாடு மற்றும் கண்டுபிடிப்பு என்பது வடிவியல்- ஒளியியல் ஆய்வு, ஒளியியல் அமைப்புகளில் மாறும் முறைகளின் தழுவல், இணை இயற்கணித ஜோடி செயல்பாடுகளின் கோட்பாடுகளின் மேம்பாடு (இதில் கலப்பு எண்கள் உண்மையான எண்களின் வரிசைப்படுத்தப்பட்ட ஜோடிகளாக கட்டமைக்கப்படுகின்றன) பல்லுறுப்புக்கோவை சமன்பாடுகளின் தீர்வு மற்றும் பொதுவான தீர்க்கக்கூடிய  க்வின்டிக் பல்லுறுப்புக்கோவை (Quintic polynomial solvable by radicals) ஆகியவை ஆகும்.

மேலும், ஏற்ற, இறக்கமான செயல்பாடுகள் (மற்றும் ஃபோரியர் பகுப்பாய்வின் தீர்வுகள் (Fourier Analysis) குவாட்டர்னியன்கள் மீதான லீனியர் ஆபரேட்டர்கள் (Linear operators) மற்றும் குவாட்டர்னியன்களின் இடைவெளியில் லீனியர் ஆபரேட்டர்களுக்கான முடிவை நிரூபித்தல் போன்றவற்றையும் கண்டுபிடித்தார். இது இன்று கேலி - ஹாமில்டன் தேற்றம்( The  Cayley -Hamiltaon theorem) என்று அழைக்கப்படும் பொதுத் தேற்றத்தின் ஒரு சிறப்பு நிகழ்வு.  ஹாமில்டன் "ஐகோசியன் கால்குலஸ்"( Icosian calculus ) யும் கண்டுபிடித்தார்.

துவக்க கால வாழ்க்கை

சர் வில்லியம் ரோவன் ஹாமில்டனின் தாய் பெயர்: சாரா ஹட்டன் (1780-1817); தந்தையின் பெயர்: ஆர்க்கிபால்ட் ஹாமில்டன் (1778-1819). இந்த தம்பதியருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஹாமில்டன் நான்காவது குழந்தை. இவர்களின் குடும்பம், டப்ளினில் 29 டொமினிக் தெருவில் வசித்து வந்தது. டப்ளினில் ஹாமில்டனின் தந்தை ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஹாமில்டனின் தந்தை, ஆர்க்கிபால்ட் ஹாமில்டன், அடிக்கடி இங்கிலாந்து சென்று சட்டப்பூர்வ வணிகத்தைத் தொடர்வதால் அவருக்குக் கற்பிக்க நேரமில்லை. மேலும், ஆர்ச்சிபால்ட் ஹாமில்டன் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றிருக்கவில்லை, ஹாமில்டனின் மேதைமை அவரது தாயார் சாரா ஹட்டனிடமிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலேயே மாமா வசம்

ஹாமில்டனின் 3 வயதிற்குள், அவரது மாமா ஜேம்ஸ் ஹாமில்டனுடன் இருக்கவும் படிக்கவும் அனுப்பப்பட்டார். அவர் டால்போட்ஸ் கோட்டையில் ஒரு பள்ளியை நடத்தி வந்த டிரினிட்டி கல்லூரியின் பட்டதாரி. 5 வயதிற்குள், வில்லியம் ஹாமில்டன் லத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். வில்லியம் டிரிமில் பல ஆண்டுகளாக வாழ்ந்த அவரது மாமா ரெவ் ஜேம்ஸ் ஹாமில்டன் இந்த பாடங்களை அவருக்குக் கற்பித்தார். ஜேம்ஸ் ஒரு சிறந்த ஆசிரியர். ஹாமில்டன் சிறு வயதிலேயே திறமைகளை வெளிப்படுத்தியவர். ஹாமில்டன், சிறு வயதிலிருந்தே, மொழிகளைப் பெறுவதில் அசாத்தியமான திறனை வெளிப்படுத்தியிருப்பதை அவரது மாமா கவனித்தார். ஏழு வயதில், அவர் ஏற்கனவே ஹீப்ருவில் முன்னேற்றம் அடைந்திருந்தார். மேலும் அவர் 13 வயதிற்கு முன்பே, கவனிப்பின் கீழ் பெற்றார். அவரது மாமாவின் ஒரு டஜன் மொழிகள்: பாரம்பரிய மற்றும் நவீன ஐரோப்பிய மொழிகள், பாரசீகம், அரபு, இந்துஸ்தானி, சமஸ்கிருதம், மராத்தி மற்றும் மலாய் என ஹாமில்டன் 14 மொழிகளைக் கற்றிருந்தார். 

வாழ்க்கையின் திருப்பு முனை

வில்லியம் விரைவில் கூடுதல் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆனால் 12 வயதில் அமெரிக்கரான ஜெரா கோல்பர்னை சந்தித்தபோது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வந்தது. கோல்பர்ன் அற்புதமான மன எண்கணித சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதை ஹாமில்டன் கண்டார். எனவே, ஹாமில்டன் அவருடன் கணித திறன் போட்டிகளில் சேர்ந்தார். கோல்பர்னிடம் தோற்றது ஹாமில்டனின் கணித ஆர்வத்தைத் தூண்டியது. 

இளம் ஹாமில்டனின் அசாத்திய திறமை

இளம் ஹாமில்டன் சில கணக்கீடுகளின் முடிவை பல தசம இடங்களுக்குச் செயல்படுத்தும் திறன் கொண்டவர். செப்டம்பரில் 1813 இல், ஒரு அமெரிக்க கணக்கீட்டு அதிசயம், ஜெரா கோல்பர்ன், டப்ளினில் காட்சிப்படுத்தப்பட்டது. கோல்பர்ன் 9 வயது, அவர் ஹாமில்டனைவிட ஒரு வயது மூத்தவர். இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து ஒரு மன எண்கணித போட்டியில் மோதினர், கோல்பர்ன் தெளிவான வெற்றியாளராக உருவெடுத்தார். ஹாமில்டன் தோல்வியுற்றார். இதனால் இவர் மொழியின் மேல் செலுத்தும் கவனம் குறைத்து, கணிதத்தில் அதீத கவனம் செலுத்தி படிக்கத் துவங்கினார்.

கணிதத்தில் பத்து வயதில், ஹாமில்டன் யூக்ளிட்டின் லத்தீன் கணிதப் பிரதியைக் கண்டெடுத்துப் படித்தார். பின்னர் பன்னிரண்டாவது வயதில் நியூட்டனின் அரித்மெடிகா யுனிவர்சலிஸைக் கரைத்துக் குடித்தார். பின்னர் அவர் பிரின்சிபியாவைப் படிக்கத் தொடர்ந்தார், மேலும் 16 வயதிற்குள் அவர் அதன் பெரும்பகுதியை உள்ளடக்கியிருந்தார், அத்துடன் பகுப்பாய்வு வடிவியல் மற்றும் வேறுபட்ட கால்குலஸ் பற்றிய சில சமீபத்திய படைப்புகளையும் சேர்த்தே படித்துத் தெளிந்தார்.

இளவயதில் படைப்பாளி

ஹாமில்டன் தனது 13வது வயதில் Clairaut's Algebra ஐப் படித்தபோது அவருக்குக் கணிதம் அறிமுகமானது. அப்போது ஹாமில்டன் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்திருந்ததால் இந்த பணி ஓரளவு எளிதாக்கப்பட்டது. 15 வயதில் அவர் நியூட்டன் மற்றும் லாப்லேஸ் ஆகியோரின் படைப்புகளைப் படிக்கத் தொடங்கினார். 1822 ஆம் ஆண்டில், ஹாமில்டன் லாப்லேஸின் மெக்கானிக் செலஸ்டில் ஒரு பிழையைக் கண்டறிந்தார். அதன் விளைவாக, அவர் அயர்லாந்தின் ராயல் வானியலாளர் ஜான் பிரிங்க்லியின் கவனத்திற்கு வந்தார்.

ஹாமில்டன் டிரினிட்டி கல்லூரி, டப்ளினில் நுழைவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார், எனவே, கிளாசிக் பாடங்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஹாமில்டனின் முன்னோடியான அயர்லாந்தின் ராயல் வானியலாளர் ஜான் பிரிங்க்லி, 18 வயதான ஹாமில்டனைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'இந்த இளைஞன், இந்த இளம் வயதில் அற்புதமான முதல் கணிதவியலாளர்' என்றார்.

மாணவ  வாழ்க்கை 

1822 ஆம் ஆண்டின் இடையில் ஹாமில்டன் லாப்லேஸின் மெக்கானிக் செலெஸ்டை பற்றிய ஒரு முறையான ஆய்வைத் தொடங்கினார். ஜூலை 1823 இல், அவர் தனது 18 வயதில், தேர்வின் மூலம் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இடம் பெற்றார். அவரது குடும்ப நண்பரான சார்லஸ் பாய்டன் அங்கு ஆசிரியராக இருந்தார். பாரிஸில் உள்ள École Polytechnique இல் குழுவால் வெளியிடப்பட்ட சமகால கணிதத்தை பாய்டன் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கல்லூரி வாழ்க்கையும் பணியும் 

ஹாமில்டன் 18 வயதில் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் நுழைந்தார், மேலும், அவர் தனது முதல் ஆண்டில் கிளாசிக்ஸில் 'ஆப்டைம்' தகுதி பெற்றார். இது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தகுதி ஆகும். பின்னர் கல்லூரி ஹாமில்டனுக்கு இரண்டு ஆப்டைம்கள் அல்லது ஆஃப்-தி-சார்ட் கிரேடுகளை வழங்கியது. ஒவ்வொரு பாடத்திலும், ஒவ்வொரு தேர்விலும் ஹாமில்டன்தான் முதலிடம் பெற்றார். அவர் கிரேக்கம் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டிற்கும் உகந்த நேரத்தைப் பெறுவதற்கான அரிய சிறப்பை அடைந்தார். ஹாமில்டன் அதிக கௌரவங்களை அடைவார் என்று  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடையிலேயே அவரது இளங்கலைப் படிப்பு குறைக்கப்பட்டது. அவர் கிளாசிக்ஸ் மற்றும் கணிதம் இரண்டிலும் பட்டம் பெற்றார் (1827 இல் BA, 1837 இல் MA); ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக, இன்னும் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தபோதே,  ஹாமில்டன் 1827 இல் அயர்லாந்தின் ஆண்ட்ரூஸ் பேராசிரியராகவும், அயர்லாந்தின் ராயல் வானியல் நிபுணராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது வாழ்நாள் முழுமைக்கும்  டன்சிங்க் ஆய்வகத்தில் தங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கவிதை

ஹாமில்டன் ஒரு மாணவராக இருந்தபோது, ​​அவரது டிரினிட்டி கல்லூரி நண்பர்களில் ஒருவரின் சகோதரியான கேத்தரின் டிஸ்னியிடம் ஈர்க்கப்பட்டார். ஹாமில்டன் ஆகஸ்ட் 1824 இல் மரியா எட்ஜ்வொர்த்தின் குடும்ப வட்டத்தில் கேத்தரினை சந்தித்தார். ஆனால், அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், கேத்தரின் தனது மூத்த சகோதரியின் கணவரின் சகோதரரான ரெவ். வில்லியம் பார்லோவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திருமணம் 1825 இல் நடந்தது. ஹாமில்டன் 1826 இல் "தி எத்யூசியஸ்ட்" என்ற நீட்டிக்கப்பட்ட கவிதையில் அவர் மீதான தனது உணர்வுகளைப் பற்றி எழுதினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1847 இல், ஜான் ஹெர்ஷலிடம், ஹாமில்டன்,  இந்த காலகட்டத்தில் தான் ஒரு கவிஞராக மாறியிருக்கலாம் என்று கூறினார். 

தொழில் திறமைகள்

1824 ஆம் ஆண்டில், ஹாமில்டன் ரோவன் ராயல் ஐரிஷ் அகாதெமியில் ‘காஸ்டிக்ஸ்’ (Caustics) பற்றிய கட்டுரையை சமர்ப்பித்தார். 1827 ஆம் ஆண்டில், ராயல் ஐரிஷ் அகாடமியின் குழுவால் அவர் சமர்ப்பித்த கட்டுரையை மேம்படுத்துமாறு அவர் அழைக்கப்பட்டார். மேம்படுத்தப்பட்ட கட்டுரை 'கதிர்களின் அமைப்புகளின் கோட்பாடு' என்று தலைப்பிடப்பட்டது, இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஆர்த்தோகனல் ஒளிக்கதிர்களை( huge number of orthogonal light rays ) ஒரே புள்ளியில் ஒருமுகப்படுத்த சரியான வளைவு கொண்ட கண்ணாடியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும்  விவரிக்கிறது. அந்த கட்டுரையால் ஹாமில்டன் பிரபலமானார். அதே ஆண்டில், அவர் டப்ளின் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியரானார். 1843 ஆம் ஆண்டில், முப்பரிமாண வடிவவியலுக்கான பதில் நான்கு மடங்குகளில் உள்ளது என்றும், மேலும், முன்னர் பரிந்துரைக்கப்பட்டபடி மும்மடங்கில் இல்லை என்பதை ஹாமில்டன் ரோவன் உணர்ந்தார். அவர் ராயல் ஐரிஷ் அகாடமிக்கு குவாட்டர்னியன்கள் (Quaternions) என்ற சொல்லையும் வரையறுத்தார்.

வானியல் நிபுணர் ஹாமில்டன்

ஹாமில்டன், 1827, ஜூன் 16ல், வெறும் 21 வயது மற்றும் இளங்கலைப் பட்டதாரி மட்டுமே. அப்போதே , அயர்லாந்தின் ராயல் வானியல் நிபுணராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கேயே டன்சிங்க் ஆய்வகத்தில் வசிக்கச் சென்றார். அங்கு அவர் 1865 இல் இறக்கும் வரை இருந்தார். இளமையில் தொலைநோக்கி வைத்திருந்தார். அவர் வான நிகழ்வுகளை கணக்கிட்டார், உதாரணமாக சந்திரனின் கிரகணங்களின் தெரிவுநிலையின் இடங்களைக் கண்டறிந்தார். டன்சிங்கில் தனது துவக்க காலத்தின்போது , ஹாமில்டன் வானத்தை மிகவும் தவறாமல் கவனித்து வந்தார். இறுதியில் அவர் தனது உதவியாளர் சார்லஸ் தாம்சனிடம் வழக்கமான கண்காணிப்பை விட்டுச் சென்றார். வானியல் பற்றிய அவரது அறிமுக விரிவுரைகள் புகழ்பெற்றவை. அவரது மாணவர்களைத் தவிர, அவர்கள் அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் மற்றும் பெண்களையும்  ஈர்த்தது.

தனிப்பட்ட வாழ்க்கை, பயணம்

ஹாமில்டன் தனது நான்கு சகோதரிகளை 1827 ஆம் ஆண்டில் கண்காணிப்பகத்தில் வந்து வாழ அழைத்தார். மேலும், அவர்கள் 1833 இல் அவரது திருமணம் வரை தன்னோடு சகோதரிகளை வைத்துப் பாதுகாத்தார். அவர்களில் எலிசா மேரி ஹாமில்டன் (1807-1851) என்ற கவிஞர் அடங்குவார். 1827 இல் ஹாமில்டன் தனது சகோதரி கிரேஸுக்கு லாரன்ஸ் சகோதரிகள் டப்ளினில் தனது சகோதரி எலிசாவைச் சந்தித்ததைப் பற்றி எழுதினார்.

சுற்றுப்பயணம் + கவிதைகள்

ஆய்வகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஹாமில்டன், அலெக்சாண்டர் நிம்மோவுடன் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அலெக்சாண்டர் நிம்மோதான் அவருக்கு  அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் பயிற்சி அளித்தார். லிவர்பூலுக்கு அருகில் உள்ள கேடாக்ரேவில் உள்ள சாரா லாரன்ஸின் பள்ளியிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. அங்கு ஹாமில்டனுக்கு மதிப்பீடு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஹாமில்டனும் கால்குலேட்டர் மாஸ்டர் நோக்சும் அந்த ஆண்டு செப்டம்பரில் ரைடல் மவுண்டில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தை சந்தித்தனர், அங்கு சீசர் ஓட்வேயும் இருந்தார். அந்த வருகைக்குப் பிறகு, ஹாமில்டன் பல கவிதைகளை, கவிஞர்  வேர்ட்ஸ்வொர்த்துக்கு அனுப்பி, "கவிதை சீடர்" ஆனார்.

1829ம் ஆண்டு கோடையில் வேர்ட்ஸ்வொர்த் டப்ளினுக்குச் சென்றபோது, ​​ஜான் மார்ஷல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு விருந்தில், ஹாமில்டனுடன் டன்சிங்கில் தங்கினார். ஹாமில்டன் ,1831 இல் நிம்மோவுடன் இங்கிலாந்தில் இரண்டாவது சுற்றுப்பயணத்தின்போது, பர்மிங்காமில், லிவர்பூல் பகுதியில் தனது தாயின் பக்கத்தில் உள்ள லாரன்ஸ் சகோதரிகள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றார். அவர்கள் மீண்டும் லேக் மாவட்டத்தில் சந்தித்தனர். அங்கு அவர்கள் ஹெல்வெல்லின் ஏறி வேர்ட்ஸ்வொர்த்துடன் தேநீர் அருந்தினர். ஹாமில்டன் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோ வழியாக டப்ளின் திரும்பினார்.

ஹாமில்டனின் சிறப்பு செயல்பாடுகள்

ஹாமில்டன் 1848 இல், குவாட்டர்னியன்களின் இயற்கணிதம் குறித்து விரிவுரை செய்யத் தொடங்கினார். 1856 ஆம் ஆண்டில், ரோவன் பிளாட்டோனிக் திடப்பொருட்களின்(Platonic solids) விளிம்புகளில் மூடிய பாதைகளில் தனது ஆய்வுகளை கவனம் செலுத்தினார். இந்த பாதைகள் பின்னர் ஹாமில்டோனியன் சர்க்யூட்ஸ்(Hamiltonian Circuits) என அறியப்பட்டன. மூடிய பாதைகளின் கருத்து ஐகோசியன் கால்குலஸ் என்று அறியப்பட்டது. அவரது வாழ்நாளில் எஞ்சியிருக்கும் ஆண்டுகளில், அவர் இறப்பதற்கு முன் அவர் முடித்த குவாட்டர்னியன்களின் கூறுகளைப் படித்தார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதிக்கு குவாட்டர்னியன்கள் என்ற தலைப்பில் விரிவுரை செய்தார்.

விருதுகள் மற்றும் சாதனைகள்

  1. ரோவன் ஹாமில்டனுக்கு 1834 மற்றும் 1848 இல், ராயல் ஐரிஷ் அகாடமியின் கன்னிங்ஹாம் பதக்கம் வழங்கப்பட்டது. இவை இரண்டும் ஒளியியல் மற்றும் குறிப்பாக கூம்பு ஒளிவிலகல் கண்டுபிடிப்பை அங்கீகரிப்பதற்காக.
  2. 1835 இல், ரோவன் ஹாமில்டன் நைட் பட்டத்தைப் பெற்றார்.
  3. 1837 இல் ஹாமில்டன்  ராயல் ஐரிஷ் அகாடமியின் தலைவரானார்.
  4. அதே ஆண்டில், அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  5. 1865 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் வெளிநாட்டு அசோசியேட்டாக நியமிக்கப்பட்டார்.
  6. 1866 ஆம் ஆண்டில், அவரது புத்தகம் 'குவாட்டர்னியன்களின் கூறுகள்' மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.
  7. ரோவன் ராயல் வானியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார்.
  8. அவர் பல கற்றறிந்த சமூகங்களில் கௌரவ உறுப்பினராக இருந்தார் (அசாதாரணமாக மற்றும் சில காரணங்களால் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை),
  9. அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்ட நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ், வெளிநாட்டு கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் பட்டியலில் அவரது பெயரை முதலிடத்தில் வைக்க முடிவு செய்திருப்பது அவரது சர்வதேச நிலைப்பாட்டின் சிறந்த அறிகுறியாக இருக்கலாம்.
  10. 2005 ஆம் ஆண்டு, அயர்லாந்தில் ஹாமில்டன் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.
  11. இந்த ஆண்டு அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மறுபுறம் யுனெஸ்கோ 2005 ஐ உலக இயற்பியல் ஆண்டாக நியமித்தது.
  12. அயர்லாந்து மத்திய வங்கி சர் ரோவன் ஹாமில்டனின் நினைவாக ஒரு நினைவு நாணயத்தை வழங்கியது. 

திருமணம், நண்பர்கள் & குணநலன்கள்

ஹாமில்டனின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையின் அற்புதமான வெற்றியுடன் பொருந்தவில்லை. அவர் மாணவ நண்பரின் சகோதரியான கேத்தரின் டிஸ்னியின் மீது அன்பைச் செலுத்தினார். ஆனால், இது பாதிரியார் வில்லியம் பார்லோவுடன் முறியடிக்கப்பட்டது. கேத்தரின்  இறக்கும்வேளையில், ஹாமில்டன், மண்டியிட்டு, குவாட்டர்னியன்கள் பற்றிய விரிவுரைகள் என்ற புத்தகத்தை அவளுக்கு வழங்கினார்.

அவர் கணிதத்தை இயற்கையில் கவிதையாகக் கண்டார் மற்றும் அவரது சமகாலத்தவர்களின் படைப்புகளை கவிதைத் தரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்தார்.

ஹாமில்டன் 1833 ஆம் ஆண்டில் அவர் ஹெலன் மரியா பேலியை (1804-69) மணந்தார். அவருக்கு அவர் அர்ப்பணிப்புடன் இருந்ததாகத் தெரிகிறது, திருமணம் கடினமாக இருந்தபோதிலும், ஹெலனால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அடிக்கடி வீட்டிற்கு வராமல் இருந்தார். அவர்கள் அவ்வப்போது நிதிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர் மற்றும் ஹாமில்டன் தனது வாழ்க்கையின் சில காலகட்டங்களில் அதிகப்படியான குடிப்பழக்கத்தால் துன்பப்பட்டார்.

ஆனால், அவருக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருந்தனர், அவர்களில் அவர் நம்பிக்கையுடன் இருந்தார், அவர்களுடன் அவர் ஒரு உயிரோட்டமான கடிதப் பரிமாற்றத்தை நடத்தினார். அவரது கல்விச் சகாக்களைத் தவிர, இவர்களில் டன்ராவென்ஸும் அடங்குவர், அவருடைய மகன் லார்ட் அடரே அவருடைய மாணவராக இருந்தார் மற்றும் அவருடன் டன்சிங்கில் சிறிது காலம் வாழ்ந்தார், மற்றும் தொலைதூர மற்றும் ரொமாண்டிக் குராக் சேஸில் வாழ்ந்த டி வெரெஸ் ஆகியோர் அடங்குவர். நாவலாசிரியர் மரியா எட்ஜ்வொர்த் மற்றும் அவரது குடும்பத்தினரும் ஹாமில்டனின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மற்றொரு தோழி லேடி வைல்ட் அல்லது அவள் அறியப்பட்ட ஸ்பெரான்சா, அவரை தனது மகன் ஆஸ்கருக்கு காட்பாதராக அழைத்தார், அவரை தனது 'குட்டி பேகன்' என்று வர்ணித்தார், இது ஹாமில்டனைத் தூண்டியது,

தனிப்பட்ட வாழ்க்கை & இறப்பு

ஹாமில்டன் 1833-இல், ஹெலன் மரியா பேலியை மணந்தார். அவருக்கு வில்லியம் எட்வின், ஆர்க்கிபால்ட் ஹென்றி மற்றும் ஹெலன் எலிசா ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர். ஹாமில்டன் தனது திறமைகளை கடைசி வரை குறையில்லாமல் தக்கவைத்துக் கொண்டார். மேலும், அவரது வாழ்க்கையின் கடைசி ஆறு வருடங்களை ஆக்கிரமித்திருந்த குவாட்டர்னியன்களின் கூறுகளை முடிக்கும் பணியைத் தொடர்ந்தார். ரோவன் செப்டம்பர் 2, 1865 அன்று அயர்லாந்தின் டப்ளினில் கீல்வாதத்துடன் தொடர்புடைய நோயால் இறந்தார். அவர் தனது 60 வயதில் இறந்தார். அவர் டப்ளினில் உள்ள மவுண்ட் ஜெரோம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 



Read in source website

கரோனா தொற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீண்டுவர முடியாத நிலையில், குரங்கம்மை பரவல் குறித்த அச்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. எனினும், மத்திய-மாநில அரசுகள் இது தொடர்பில் எடுத்துவரும் துரித நடவடிக்கைகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் அமைந்துள்ளன.

இந்தியாவில் இதுவரை 8 பேருக்குக் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.



Read in source website

அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் தனியார் மயமாக்கப் பரிந்துரை செய்து, கொள்கை அறிக்கை ஒன்றை என்.சி.ஏ.இ.ஆர். தலைமை இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான பூனம் குப்தாவும் நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியருமான அரவிந்த் பனகாரியாவும் வெளியிட்டுள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கி தவிர, மற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்றும், பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே அதன் சிறந்த செயல்பாட்டின் காரணமாக, அரசு உரிமையின் கீழ் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

‘கொள்கையில், தனியார்மயமாக்கலுக்கான தேவை ஸ்டேட் பேங்க் உட்பட அனைத்து அரசு வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு - அரசியல் நெறிமுறைகளுக்குள், எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு அரசு வங்கி இல்லாமல் இருக்க விரும்பாது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

இதைக் கருத்தில் கொண்டு வெளிப்படையாகக் கூறப்பட்டாலும் அல்லது மறைமுகமாகச் சொன்னாலும், ஸ்டேட் பேங்க் தவிர மற்ற அனைத்து அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்குவதே குறிக்கோளாக இருக்க வேண்டும்…’ என்று அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

‘நிச்சயமாக, சில ஆண்டுகளுக்குப் பிறகு, சூழ்நிலைகள் தனியார்மயமாக்கலுக்கு இன்னும் சாதகமாக மாறினால், தனியார்மயமாக்கல் பட்டியலில் ஸ்டேட் பேங்க்கைச் சேர்க்க இலக்கு நகர்த்தப்படலாம்’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கித் துறையின் பெரும்பகுதி தனியார் துறைக்குச் செல்வதால், சிறந்த விளைவுகளை வழங்க அதன் செயல்முறைகள், விதிகள், ஒழுங்குமுறைகளை முறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை ரிசர்வ் வங்கி உணரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர மற்றொரு குறிப்பில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுத் துறை வங்கிகளில் இணைப்பின் விளைவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விரிவான ஆய்வை ஆராய்ந்த பின்னர், அடுத்த கட்ட பொதுத் துறை வங்கி இணைப்புகளைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு என்ன சொல்கிறது?

அனைத்து வங்கிகளையும் முழுவதுமாகத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் இவர்கள், இந்த நாட்டின் வங்கி வரலாற்றைப் பார்க்கத் தவறியுள்ளனர். 1969இல் பதினான்கு வங்கிகளை அரசு கையகப்படுத்திய பிறகு, வங்கிகளின் சேவை பட்டிதொட்டிகளுக்கெல்லாம் விரிந்தது.

சாதாரண மக்களை உள்ளடக்கிய வங்கி சேவை, அரசாங்க வங்கிகள் மூலம் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. விவசாயம், சிறுதொழில்களுக்கு உதவும் வகையில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு வங்கிகள் மட்டுமே முன்னணியில் இருந்தன.

சமீபத்திய அரசின் முயற்சியான பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா கணக்கைத் திறப்பதில் அரசுடைமை வங்கிகளின் மகத்தான பங்களிப்பின் விளைவாக 42 கோடி சாதாரண மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட வசதியுள்ள மக்களுக்கு மட்டுமே சேவை செய்துவந்த வங்கிகளை, எல்லா சாமானிய மக்களும் பயன் பெறும் வகையில் மாற்றியது, வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பிறகே நடந்தது. மீண்டும் வங்கிகளைத் தனியார்மயமாக்கினால் சாமானிய மக்களுக்கு வங்கி சேவையைப் பயன்படுத்த முடியாமல் போகும். தனியார் வங்கிகளின் நோக்கம் பங்குதாரர்களுக்கு அதிக லாபம் ஈட்டுவது மட்டுமே, சாமானியர்களுக்குச் சேவை செய்வது அல்ல.

நஷ்டமடைந்த வங்கிகள்

1935இல் இந்திய ரிசர்வ் வங்கி உருவான பிறகு, நாடு சுதந்திரம் பெறும் காலம் வரை (1947) நம் நாட்டில் 900 வங்கிகள் திவாலாகியுள்ளன. 1947 முதல் 1969 வரை 665 வங்கிகள் தோல்வியடைந்தன. இந்த அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் செய்தவர்கள், டெபாசிட் செய்த பணத்தை இழந்துள்ளனர்.

1969இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, 36 வங்கிகள் தோல்வியடைந்தன. ஆனால், இவை மற்ற அரசு வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் மீட்கப்பட்டன. குளோபல் டிரஸ்ட் பேங்க் லிமிடெட் போன்ற பெரிய வங்கியும் இதில் அடங்கும்.

சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட், யெஸ் பேங்க் லிமிடெட் ஆகிய வங்கிகளைக் காப்பாற்ற மற்ற நிறுவனங்களின் மூலதனத்தை ரிசர்வ் வங்கி செலுத்திக் காப்பாற்ற வேண்டியிருந்தது. பல கூட்டுறவு வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. 2004இல் இருந்த 1926 நகரக் கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை, 2018இல் 1551ஆகச் சுருங்கின.

வங்கிகள் தனியார்மயமாக வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், கடந்த 90 ஆண்டுகளில் இத்தனை தனியார் வங்கிகள் திவாலாகியிருப்பதற்கு என்ன சமாதானம் சொல்வார்கள்? இதுபோன்ற வங்கித் தோல்விகள் மீண்டும் நடப்பதைத் தடுக்க அவர்கள் முன்வைத்துள்ள திட்டம்தான் என்ன?

சாத்தியமா?

சிறிய அளவு பங்குதாரர்களின் நிதியுடன் பெரிய அளவு பொதுமக்களின் வைப்புத்தொகையுடன் வங்கிகள் நடத்தப்படுகின்றன. எந்த வங்கியின் தோல்வியும் விகிதாசாரத்தில் அதிக அளவுக்குத் தொற்றுவிளைவை ஏற்படுத்தும் வகையில் வங்கித் தொழில் மற்ற தொழில்களிலிருந்து வேறுபட்டது. எந்த வங்கியின் தோல்வியும் அந்த வங்கியின் வாடிக்கையாளரை மட்டும் பாதிக்காமல், பல நிலைகளில் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையுமே பாதிக்கக்கூடியவை.

அரசுடைமை என்பது வங்கி டெபாசிட்டர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை அளிக்கிறது. அத்துடன் அரசுடைமையின் காரணமாக அவர்கள் வங்கி வைப்புத்தொகையை மிகவும் குறைந்த வட்டிவிகிதத்தில் இருந்தாலும் தேர்வுசெய்கின்றனர். பெரும்பாலும் அவர்களின் வட்டி பணவீக்க விகிதத்தைவிடக் குறைவு. இந்தக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது வங்கிக் கட்டமைப்பைச் சிதைக்கும்.

வங்கிகளில் அரசு வைத்திருக்கும் பங்கின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4,80,207 கோடி. இந்த வங்கிகளைத் தனியார்மயமாக்க இவ்வளவு பணத்தை முதலீடு செய்து வாங்குபவர்கள் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் உரிம விதிமுறைகளின்படி தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளை நடத்த அனுமதியில்லை. தற்போது உள்ள தனியார் வங்கிகளுக்கோ அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கோ இந்த வங்கிகளில் முதலீடு செய்யும் அளவு உபரி நிதி வசதி கிடையாது. எனவே, அனைத்து வங்கிகளையும் தனியார்மயமாக்கப் பரிந்துரைப்பது தேவையில்லாதது, நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றும்கூட!

- எஸ்.கல்யாணசுந்தரம், முன்னாள் வங்கியாளர்,

தொடர்புக்கு: 1952kalsu@gmail.com



Read in source website

மத்திய அரசின் சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளை மேம் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங் களுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்களையும் பரிந்துரைகளையும் ஆகஸ்ட் 28-க்குள் இணையவழியில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2021-க்கும் நடப்பாண்டுக்கும் இணைத்து எதிர்வரும் டிசம்பர் 3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் சிறப்பாகப் பணிபுரியும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகள் என 8 பிரிவுகளில் 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விருதுகள் தனி.



Read in source website

உலக மக்கள்தொகையில் 81 கோடி பேர் தேவையான உணவின்றிச் சிரமப்படுகின்றனர் என்று உலக உணவுத் திட்ட (FAO) விவரங்கள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமடைவதால் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக சராசரி வெப்பநிலை உயரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி வெப்பநிலை உயர்ந்தால், ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் உணவின்றி வாடும் உலக மக்களோடு, மேலும் 19 கோடி பேர் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்ட அறிக்கை கூறுகிறது.

பசுங்குடில் வாயுக்களை மிகக் குறைந்த அளவே வெளியேற்றும் மக்களே, புவி வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். உலகில் உணவுப் பாதுகாப்பின்றி வாழும் முதல் 10 நாடுகள் வெளியிடும் கார்பன் அளவு வெறும் 0.08 சதவீதம்தான்.



Read in source website