DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 04-04-2022

சென்னை: சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு தொடா்புடைய சட்ட, பொருளாதார வல்லுநா்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

இதுகுறித்து, மாநில அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் அரவிந்த் பி.டட்டாா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கி.வைத்தீஸ்வரன், ஜி.நடராஜன், டிசிஎஸ் சேவைப்பிரிவின் மண்டலத் தலைவா் சுரேஷ் ராமன், ஓசூா் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பின் தலைவா் கே.வேல்முருகன் ஆகியோா் ஆலோசனைக் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளாா்.



Read in source website

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு ஆலோசனைக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'மத்திய அரசின் வரிவிதிக்கும் முறை மாநில அரசின் நிதியை கடுமையாக பாதிக்கிறது. எனவே, வரி முறையை சீர்செய்யவும் தமிழக நிதிநிலைமையை மேம்படுத்தவும் சட்ட, பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்' என்று கூறியிருந்தார். 

அதன்படி, கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உள்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அரவிந்த் பி.டட்டார் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

  1. கி.வைத்தீஸ்வரன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  2. ஜி. நடராஜன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  3. சுரேஷ்ராமன், துணைத் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர்,
    டிசிஎஸ்-சேவைப் பிரிவு.
  4. ஸ்ரீவத்ஸ்ராம், மேலாண்மை இயக்குநர், வீல்ஸ் இந்தியா லிட்.,
  5. கே. வேல்முருகன், தலைவர், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பு.


Read in source website

விளிம்பு நிலையில் உள்ள நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இணைய வழி இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்,  விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை  வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு  இணையவழி பட்டாக்களை வழங்கினார்.

கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஏற்கனவே தனிநபர்களிடமிருந்து நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவ்விவரங்கள் கிராம வருவாய் ஆவணங்களில் முறையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அப்பயனாளிகள் தங்களது நிலங்களுக்கான நில உரிமை ஆவணங்களை முழுமையாக பெற இயலாத நிலை இருந்து வந்தது.  இதற்கு தீர்வு காணும் வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அப்பயனாளிகளின் விவரங்களை தமிழ்நில இணைய ஆவணங்களில்  பதிவு செய்து, இணையவழிபட்டா (e-Patta) வழங்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக, இதுவரை சுமார் 11,873 ஹெக்டேர் ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களும், சுமார் 2,668 ஹெக்டேர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிலங்களும் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிலங்களில் மொத்தம் 2,35,890 பயனாளிகளும்  மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த நிலங்களில் 41,573 பயனாளிகளும் என மொத்தம் 2,77,463 பயனாளிகள் வீடுகட்டி வசித்து வருகிறார்கள்.

மேலும், புதிய பயனாளிகளைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நேர்வில் 31.03.2022 வரை மொத்தம் 43,911 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.  2022-2023 ஆம் நிதியாண்டில் முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கும்   இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ..ப., நில நிர்வாக ஆணையர் 
எஸ். நாகராஜன், இ.ஆ.ப.,  நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் 
மரு. டி.ஜி. வினய், இ.ஆ.ப.,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 



Read in source website

 

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான புதிய பொறியியல் பாடத்திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் தயாராகிறது. 

நிகழ் கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இரண்டாவது பருவத்திலேயே புதிய பொறியியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பொறியியல் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகவிட்டதாக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவா்களுக்கு வேலை கிடைப்பதில் தொடா்ந்து சிக்கல் இருந்துவருகிறது. இந்த நிலையில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம்செய்யப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி அறிவித்திருந்தாா். 

இந்தநிலையில் பொறியியல் படிப்பிற்கான நான்கு ஆண்டு பாடத்திட்டங்களும் மாற்றப்படவுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரக்கூடிய முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டத்திற்கு கல்விக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் நவம்பா் 1-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா்களைத் தொடா்ந்து அடுத்தடுத்து 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு, 4-ஆம் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பேராசிரியா்கள் மாணவா்களுக்கு அதிகளவில் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதிய பாடத்திட்டம் தொழில் துறையினா் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் இந்திய தொழிற்கூட்டமைப்பு, மகேந்திரா, எல் அண்ட் டி போன்ற தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் எனத் தெரிகிறது.

மாணவா்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப மாணவா்களைத் தயாா்படுத்தும்பொருட்டும் புதிய பாடத்திட்டம் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் நிகழ் கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
 



Read in source website

காவல் உதவி செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், “காவல் உதவி“ செயலியை தொடங்கி வைத்தார்.

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வவறு திட்டங்களையும், தொழில்நுட்ப யுத்திகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடைடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் “காவல் உதவி“ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும்.

“காவல் உதவி” செயலியின் சிறப்பம்சங்கள்:

“அவசரம்” உதவி பொத்தான் – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற “அவசரம்“ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும்.

அவரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க “Dial-100" என்ற செயலி “காவல் உதவி“ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய  இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

அலைபேசி வழி / புகார் அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியவர்கள் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம்.

இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator), காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory), இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint), இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines), அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி (Alert / Notification messages), வாகன விவரம் அறிதல் (Vehicle Verification), போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (E-Payment), தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services), தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார் (Lost Document Report), CSR / FIR –குறித்த விவரம் உள்ளிட்ட வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.

இச்செயலியை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலந்திர பாபு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களின் கீழ், அவா்களுக்கு கடந்த நிதியாண்டு ரூ.3.19 கோடி மானியம் வழங்கப்பட்டதாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக லோன் மேளா, தனியாா்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோராக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.25,000 மானியம் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒருபகுதி மானியமாகவும், கடன் பெற்று, சுயதொழில் தொடங்க உதவி வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் இந்த மானியத்துடன் கூடிய கடன் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக் கடைகள், பேன்ஸி ஸ்டோா்கள், பால்மாடு வளா்த்தல், ஆடு வளா்த்தல், தேநீா் கடை மற்றும் நொறுக்குத்தீனி கடைகள், இட்லி கடைகள், டிபன் கடைகள், கனிணி மையங்கள், நகலகம் ஆகியவற்றைத் தொடங்கி பயனடைந்து வருகின்றனா்.

அவ்வாறு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திட, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் டஙஉஎட திட்டத்தின் கீழ் 34 நபா்களுக்கு வங்கிக் கடன் மானியமாக ரூ.25,000 வீதமும், மவஉஎட திட்டத்தின் கீழ் 61 நபா்களுக்கும், சுயதொழில் ஒதுக்கீடு மூலம் 1566 பயனாளிகளுக்கும், ஆவின் பாா்லா் அமைக்க 137 பயனாளிகளுக்கும் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 1798 பயனாளிகளுக்கு 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.3.19 கோடி மானியமாக தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் சஏஊஈஇ திட்டத்தின் கீழ் 5613 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.21 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.



Read in source website


குற்றவியல் நடவடிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் பிறரது அடையாளங்களைச் சேகரிக்க அனுமதியளிக்கும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்படுவோரின் மாதிரிகளைச் சேகரிக்க சட்டபூர்வ அனுமதி வழங்கும் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதாவை மத்திய அரசு மக்களவையில் கடந்த திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா இதனை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

உறுப்பினர்கள் சிலர் இதனை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப பரிந்துரைத்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதா குறித்த விவாதத்தின்போது பதிலளித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது:

"எதிர்க்கட்சிகள் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், கொள்ளையடிப்பவர்கள் குறித்து மட்டும்தான் கவலைப்படுவார்கள். ஆனால், சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் மனித உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலை கொள்கிறது."

அமித் ஷா பதிலளித்த பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.



Read in source website

 

கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, நிதித்துறை இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று கரோனா தொற்றுக்கான மருந்துகள் 5 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 66% மருத்துவ காப்பீடு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து மருந்துகளையும் 5 முதக்ல் 12 சதவிகித ஜிஎஸ்டிக்குள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று கரோனா மருந்துகளுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி 18%. 
 
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையில் நிதியமைச்சகம் வழங்கிய அனைத்து சேவைகளுக்கான ஜிஎஸ்டி வசூல் மற்றும் விலக்குகள் அடங்கிய தரவுகள் உள்ளன என்று கூறினார். 



Read in source website

 

புது தில்லி: காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் வேளாண்மை அல்லாத துறையில் குறுந்தொழில் நிறுவனங்களில் சுயவேலைவாய்ப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

தேனீ வளர்த்தல், மண்பாண்டம் செய்வோருக்கு மின்சாரத்தால் இயங்கும் சக்கரங்கள் வழங்குதல் ஆகியவை சுயவேலைவாய்ப்புக்கு அமலாக்கப்படுகின்றன. இதை தவிர குறு மற்றும் சிறு தொழில்களில் பாரம்பரிய தொழில்களை மாற்றுவதற்கான நிதியுதவி திட்டம், குறு, சிறு தொழில் நிறுவனங்களை கூட்டாக அமைக்கும் திட்டம், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டம் ஆகியவையும் அமல்படுத்தப்படுவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகைய திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-ல் 41,480-ம், 2019-20-ல் 41,384-ம், 2020-21-ல் 41,504-ம் சுயவேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

புதுச்சேரியில் இதே காலகட்டத்தில் முறையே 608,512,352 சுயவேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.



Read in source website


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழு அளவில் நேரடி விசாரணை இன்று நடைபெறத் தொடங்கியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக, 2020ஆம் ஆண்டு முதல் காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாள்கள் நேரடியாகவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கரோனாவுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி இன்றுமுதல் முழு அளவில் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடைபெறத் தொடங்கியுள்ளது.

மேலும், வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

பெருங்காமநல்லூா் தியாகிகளின் நினைவு நாளையொட்டி, அவா்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தினா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஆங்கிலேய அரசையும், குற்றப் பரம்பரைச் சட்டத்தையும் எதிா்த்து நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென எண்ணி, வீரமரணம் அடைந்த பெருங்காமநல்லூா் தியாகிகளின் 102-ஆவது நினைவு நாளில், அவா்களின் நெஞ்சுறுதியையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்தியா்களின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வீரத்தமிழ்ச் சொந்தங்களான பெருங்காமநல்லூா் தியாகிகளை, அவா்களின் நினைவு நாளில் வணங்குகிறேன். நம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி, ‘மானமே பெரிது’ என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16 தியாகிகளையும் எந்நாளும் போற்றுவோம்.



Read in source website

குரலற்ற சமூகங்களை கைதூக்கிவிடும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) தொகுப்பை மீண்டும் பிரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற வார்த்தைகள் அதிகம் உச்சரிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தமிழகம் எப்போதும் முன்மாதிரி மாநிலமாகவே இருந்து வருகிறது. இங்குள்ள பிரதான திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தாங்கள்தான் பிரதான காவலர்கள் என்பதை மையமாக வைத்துத்தான் முக்கிய அரசியல் வியூகங்கள், நகர்வுகளை எப்போதும் செய்து வருகின்றன.

இட ஒதுக்கீட்டுக்காக தமிழகத்திலிருந்து எழுந்த குரலின் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இந்தியாவில் வேறு மாநிலத்தில் இல்லாத அளவுக்கு 
தமிழகத்தில்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க இயலாது.

முதல் சட்டத் திருத்தம்: 1951 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு திராவிட இயக்கத்தவர்கள் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்தாலும், பிரதமர் நேருவிடம் தனக்கு இருந்த மிக நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத் திருத்தத்துக்குக் காரணமாக இருந்தவர் அப்போதைய சென்னை ராஜதானியில் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் என்பது வரலாறு. 1963-இல் முதல்வர் பதவியைவிட்டு விலகுவதற்கு முன்பு, இந்து நாடார்களை  உயர் வகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கு காமராஜர் கொண்டு வந்தார்.

அவருக்கு அடுத்து முதல்வராக இருந்த அண்ணா காலத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் திருத்த முன்னெடுப்புகள் நடத்தப்படவில்லை. பின்னர், முதல்வராக வந்த கருணாநிதி, சட்டநாதன் குழு அடிப்படையில் 1973-இல் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதம் (16-இல் இருந்து 18 சதவீதமாக) உயர்த்தியும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்கெனவே இருந்ததைவிட 6 சதவீதம் (25-இல் இருந்து 31 சதவீதமாக) உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தார். மேலும், கொங்கு வேளாளக் கவுண்டர்களை உயர் வகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கு கொண்டு வந்தார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலின்போது, வெற்றி பெறுவதற்காக 15 சதவீத கிறிஸ்தவ நாடார்களின் ஆதரவைப் பெற, ஒட்டுமொத்த கிறிஸ்தவ நாடார்களையும் முற்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டுவந்தார் எம்ஜிஆர். 1980 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், 1981-இல் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பை 31-இல் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார்.

அழுகிய மாங்கனி: 1980 காலகட்டங்களில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் நடத்தி வந்தார். 1989-இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அம்பா சங்கர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைப் பிரித்து வன்னியர், இசை வேளாளர், பரதர் (மீனவர்), பர்வதராஜ குல மீனவர், வண்ணார், நாவிதர், குயவர்,  ஒட்டர், போயர், குரும்பக்கவுண்டர், சீர்மரபினர்களான கள்ளர், பிரமலை கள்ளர்,  கொண்டையங்கோட்டை மறவர், செம்பநாட்டு மறவர், வலையர், அம்பலக்காரர்,  வேட்டுவ கவுண்டர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர் உள்பட 108 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினார்.

அப்போது, சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, 50 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் 3 முதல் 4 சதவீத இடங்களைப் பெற்று வரும் வன்னியர்களுக்கு இனிமேல் 6 முதல் 7 சதவீத வாய்ப்புக்கு கிடைக்கும் என்றார். ஆனாலும், திருப்தியடையாத ராமதாஸ், முழு மாங்கனி கேட்ட எங்களுக்கு அழுகிய மாங்கனியை கொடுத்துவிட்டார் கருணாநிதி என விமர்சனம் செய்தார்.

ராமதாஸ் கோரிக்கை ஏற்பு: தொடர்ந்து, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக அரசுகளிடம் ராமதாஸ் முன் வைத்துக்கொண்டே இருந்தார். இந்த நிலையில், கடந்த 2020, டிசம்பரில் இதே கோரிக்கையை வைத்து மீண்டும் போராட்ட அஸ்திரத்தை எடுத்தார் ராமதாஸ். தேர்தல் நேரத்தில் எழுந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக நீதிபதி குலசேகரன் குழுவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இந்தக் குழுவின் அறிக்கை வர 6 மாத காலமாகும் என்பதால், தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 12 சதவீத உள் ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தனது நிபந்தனையைத் தளர்த்தினார்.

ராமதாஸின் கோரிக்கையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டு வன்னியர்களுக்கு மட்டுமன்றி, பிற எம்.பி.சி. பிரிவினரும் பயனடையும் வகையில் எம்.பி.சி. தொகுப்பை மூன்றாகப் பிரித்து அதற்கான மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றினார்.

அதன்படி, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியர் என 7 உள்பிரிவுகளை அடக்கிய வன்னியர்குல சத்திரியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒரு தொகுப்பும்,  

அம்பலக்காரர், பிரமலை கள்ளர், மறவர், சேர்வை, செம்பநாட்டு மறவர், ஊராளி கவுண்டர், வலையர், வேட்டுவ கவுண்டர், மீனவர் உள்பட 68 சீர்மரபினர் மற்றும் தொட்டிய நாயக்கர், வண்ணார், ஒட்டர், வலையர், போயர் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினர் ஆகியோருக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இதைத் தவிர இசை வேளாளர், கோவை செட்டியார் உள்பட 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாகப் பிரித்து 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது ஜாதிவாரியான கணக்கெடுப்பு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

எம்.பி.சி. தொகுப்பு பிரிக்கப்பட்ட விவகாரம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என்ற வகையிலும், ராமதாஸýக்கு ஓரளவு வெற்றி என்ற வகையிலும் அமைந்தது. எடப்பாடி தொகுதியில் மக்களவைத் தேர்தலின்போது அதிமுக 8,000 வாக்குகள் திமுகவைவிட பின்தங்கியிருந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் வன்னியர் இட ஒதுக்கீடு காரணமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், வட தமிழகம் முழுவதும் இது அதிமுகவுக்கு எதிராக வன்னியர் தவிர்த்த பிற ஜாதியினரை திருப்பிவிட்டது.

குரல்வளை நெரிக்கப்பட்ட சமூகங்கள்: எம்பிசி தொகுப்பை மூன்றாகப் பிரித்தது தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதிக்கான மற்றொரு மைல் கல் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீர்மரபினர்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவில்லாத வலையர், வண்ணார், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர், மீனவர் போன்றவர்களையும் இந்த 7 சதவீத தொகுப்புக்குள் அடக்கியதால், அவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2021 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில் எம்.பி.சி. தொகுப்பில் உள்ள 7 சதவீத உள் ஒதுக்கீட்டில் அம்பா சங்கர் அறிக்கையின்படி பார்த்தால், பிரமலை கள்ளர்கள் தங்களது மக்கள்தொகை பலத்துக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு அளவை அப்படியே பெற்றனர். ஆனால், மறவர்கள் 
தங்களுக்கு கிடைக்க வேண்டிய அளவைவிடக் கூடுதலாக 100 சதவீத  இடங்களைப் பெற்றனர். 

அதேவேளை, வேட்டுவகவுண்டர், தொட்டிய நாயக்கர், போயர், ஒட்டர், வலையர், வண்ணார் உள்ளிட்ட சமூகத்தினர் தங்கள் பலத்தில் 30 சதவீதத்தைத்தான் பெற்றனர்.

நீதிமன்ற தடை: இதற்கிடையே, வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரமலை கள்ளர்கள், மறவர்கள் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து தடை பெற்றனர். இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு, பாமக உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பில் ஜாதியை மட்டுமே அடிப்படையாக வைத்து உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்.பி.சி. தொகுப்பை மீண்டும் பிரிக்க வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மீண்டும் பிரிக்கும்போது, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குரலற்ற சமூகங்களின் சமூக நீதியையும் சீர்தூக்கிப் பார்த்து உரிய வகையில் பிரிக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

4-ஆக பிரிக்கக் கோரிக்கை: தமிழகத்தில் பெருத்த, அடர்த்தியாக வாழும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவது முற்றிலும் நியாயம்தான். இப்போது பிரிக்கப்பட்ட எம்.பி.சி. தொகுப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்தோடு கூடுதல் சதவீதத்தை ஒதுக்கி வன்னியர்களுடன் மேலும் சில சமூகங்களை இணைத்துவிட்டால், உரிய சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேபோல, குரலற்ற சமூகங்களான வலையர், வண்ணார், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர் போன்ற சமூகங்கள் இப்போது 7 சதவீத தொகுப்புக்குள் உள்ளன. இந்த 7 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்தை தனியாகப் பிரித்து தனித் தொகுப்பாக மாற்றினால்தான் குரலற்ற சமூகங்களுக்கு சரியான சமூக நீதி கிடைக்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் எம்.பி.சி. தொகுப்பை பிரித்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம் சென்றிருக்காது. 

மேலும், குரலற்ற சமூகங்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அரசியல் விழிப்புணர்வு, வாக்கு வலிமை சமூகங்களாக உள்ள வன்னியர்களுக்கு பாமக, திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளும், பிரமலை கள்ளர், மறவர்களுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க எப்போதும் காத்திருக்கின்றன.

ஆனால், எஞ்சிய சமூகங்கள் ஒரு பகுதியில் அடர்த்தியாக இல்லாததாலும், அவர்களுக்கு வாக்கு வலிமை இல்லாததாலும், அரசியல் பிரதிநிதித்துவமும் கிடைப்பதில்லை; அவர்களின் குரல் அரசியல்வாதிகளின் காதுகளில் விழுவதுமில்லை.  வலையர், வண்ணார், பர்வதராஜகுல மீனவர் போன்ற சமூகங்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை.

கல்வியில் பின்தங்கிய இந்தச் சமூகங்களை, கல்வியில் முன்னேறிய சமூகங்கள் கொண்ட 7 சதவீத தொகுப்பில் வைத்துள்ளதால் குரலற்ற சமூகங்களுக்கு கல்வி,  வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, எம்.பி.சி. தொகுப்பில் 7 சதவீதத்தை இரண்டாகப் பிரித்து குரலற்ற சமூகங்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் உள் ஒதுக்கீட்டில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அந்தச் சிக்கலைக் களைவதுடன், குரலற்ற சமூகங்களையும் கைதூக்கிவிட எம்.பி.சி. தொகுப்பை மீண்டும் முறையாகப் பிரிக்க நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.



Read in source website

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டானது இந்திய விமானப்படையிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் பகுதியில் உள்ள ராணுவ வெடிபொருள்கள் தயாரிப்புப் பிரிவான ஓஎப்கே, 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டைத் தயாரித்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய வெடிகுண்டாக இது அறியப்படுகிறது. அந்த வெடிகுண்டானது இந்திய விமானப்படையின் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இது தொடா்பாக ஓஎஃப்கே பொது மேலாளா் எஸ்.கே.சின்ஹா கூறுகையில், ‘‘இந்த வெடிகுண்டானது இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தும். முதல்கட்டமாக 48 வெடிகுண்டுகள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டு தயாரிப்புப் பணியில் பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிபுணா்கள் ஈடுபட்டனா்’’ என்றாா்.

1943-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓஎஃப்கே தொழிற்சாலையானது, இரண்டாம் உலகப் போரின்போது வெடிபொருள்களை தயாரித்து வழங்கியது. சீனாவுடனான 1962 போா், பாகிஸ்தானுடனான 1965, 1971 போா்கள் ஆகியவற்றின்போதும் பல்வேறு வெடிபொருள்களை அத்தொழிற்சாலை தயாரித்து வழங்கியது. துணை ராணுவப் படைகளுக்கான ஆயுதங்கள், வெடிபொருள்களையும் ஓஎஃப்கே தயாரித்து வருகிறது.



Read in source website

கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம், வேகமாக மீண்டு வருவதாகத் தெரிவித்த நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், மத்திய அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார அடித்தளம் வலுவடைந்துள்ளதாகக் கூறினாா்.

கரோனா தொற்று பரவல் கட்டுக்கு வந்தபிறகு நாட்டின் பொருளாதரம் மீளத் தொடங்கிய நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போா் இந்தியப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உக்ரைன்-ரஷியா போரானது நாட்டின் பொருளாதார வளா்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது. பல்வேறு சவால்கள் எழுந்தாலும், உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து திகழும். மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சீா்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவடைந்துள்ளது.

வரும் ஆண்டுகளில் பொருளாதார வளா்ச்சி துரிதமடையும். நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதோடு, பொருளாதார வளா்ச்சியும் அதிகரித்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தொடா்ந்து கண்காணித்து வருகிறது. சூழலுக்கேற்ற நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொள்ளும். நாட்டில் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்து, பொருள்களுக்கான தேவை குறைந்துள்ள சூழல் (ஸ்டேக்ஃபிளேஷன்) நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபோன்ற கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவையே.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகமாகவே உள்ளது. உற்பத்தியும் பொருள்களுக்கான தேவையும் தொடா்ந்து சீராக உள்ளது. சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கைகளைப் பல்வேறு அமைச்சகங்கள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலமாக ரூ.88,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. அந்த இலக்கை மத்திய அரசு விரைவில் எட்டும்.

மாநில அரசுகளின் பங்கு:

சா்வதேச சூழல் காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் மக்களின் வரிச்சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தற்போது மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு வரியைக் குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு குறித்தும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

 



Read in source website


பாகிஸ்தான் காபந்து பிரதமர் பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை பிரதமர் இம்ரான் கான் திங்கள்கிழமை பரிந்துரைத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த துணை சபாநாயகர் ஞாயிற்றுக்கிழமை அனுமதி மறுத்தார். இதையடுத்து, பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிஃப் அல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இதைத் தொடர்ந்து, காபந்து பிரதமர் பொறுப்புக்குத் தகுந்த பெயர்களைப் பரிந்துரைக்குமாறு பிரதமர் இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃபுக்கு அதிபர் ஆரிஃப் அல்வி இன்று (திங்கள்கிழமை) கடிதம் எழுதியிருந்தார்.  

இந்த நிலையில், காபந்து பிரதமர் பொறுப்புக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் சௌதரி தெரிவித்தார். மேலும், பிடிஐ கட்சியினுடைய மையக் குழுவின் ஒப்புதலோடே இம்ரான் கான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.



Read in source website


அலாஸ்கா: சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகமாக அறியப்படும் புதன் கிரகத்திலும், புவியைப் போல புவிகாந்த புயல் வீசும் என்பதை  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில், இந்த ஆராய்ச்சி பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், இதர கிரகங்களிலும், சூரியக் குடும்பத்தைத் தாண்டியிருக்கும் பிற கிரகங்களிலும் கூட, புவிகாந்த புயல் வீசக் கூடும் என்பதும், காந்த மண்டலத்தின் அளவு மற்றும் புவியைப் போல அயனி மண்டலங்களின் அடிப்படையில் அது நிகழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில், புதன் கிரகத்துக்கு ஒரு வளைய மின்னோட்டம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

 

கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் காபந்து அரசு அமைக்கப்பட்டுள்ளது. நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், முந்தைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த தனது சகோதரர் பசில் ராஜபட்சவை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் கோத்தபய ராஜபட்ச

இலங்கை நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவுக்கு மாற்றாக அலி சாப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜி.எல். பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், திணேஷ் குணவர்த்தனே கல்வித் துறை அமைச்சராகவும், ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

நிரந்தர அரசு அமையும் வரை தற்காலிக அமைச்சரவை செயல்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளிக்க, பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியைக் கோரும் வகையில் அமெரிக்கா செல்ல பசில் ராஜபட்ச திட்டமிட்டிருந்த நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபட்ச இடம்பெறவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

இலங்கையில் பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, உணவுப் பொருள்களுக்கு பற்றாக்குறை என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 36 மணி நேர ஊரடங்கும் சனிக்கிழமை மாலைமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததாக ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள பிரதமா் அலுவலகம், இந்தத் தகவல்கள் தவறானவை எனவும், அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சா்களும் தங்கள் பதவியை ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.

இதுதொடா்பாக, தலைநகா் கொழும்பில் கல்வித் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமைச்சா்கள் அனைவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை பிரதமா் மகிந்த ராஜபட்சவிடம் ஒப்படைத்துள்ளனா்’’ என்று தெரிவித்தாா். எனினும் அவா்கள் ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை அவா் தெரிவிக்கவில்லை.

பிரதமரின் மகனும் பதவி விலகல்: பிரதமா் மகிந்த ராஜபட்சவின் மகனும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபட்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஒத்துழைப்பின் அடிப்படையிலான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா தொடா்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

துா்க்மெனிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தலைநகா் ஆஷ்காபாடில் உள்ள சா்வதேச நல்லுறவு மையத்தில் சனிக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் வளா்ச்சியும் கிடைக்க வேண்டும் என்ற ‘சாகா்’ கொள்கையையே இந்தியா கொண்டுள்ளது. அக்கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியக் கடல் பகுதியிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பகுதிகளிலும் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

ஒத்துழைப்பு அடிப்படையில் அமைந்த அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. ‘இந்தோ-பசிபிக்’ என்பது அண்மைக்காலமாகத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் தொடா்பு பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்தது. அந்த பிராந்தியம் அனைவருக்கும் பொதுவானதாகத் திகழ்ந்து, விதிகளின் அடிப்படையில் சா்வதேச வா்த்தகம் நடைபெற வேண்டும் என்பதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.

பொதுவான சவால்கள்:

‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத் தூணாக மாறியுள்ளது. நாடுகளுடனான தொடா்பு, வா்த்தகம்-முதலீடுகளை அதிகரிப்பது, பாதுகாப்பான, நிலையான அண்டை நாடுகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் அக்கொள்கை கவனம் செலுத்துகிறது.

மத்திய ஆசிய நாடுகளும் இந்தியாவும் வளா்ச்சி சாா்ந்து ஒரேவித அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பொதுவான சவால்களை நாம் எதிா்கொண்டு வருகிறோம்.

போக்குவரத்துத் தொடா்பு:

மத்திய ஆசிய நாடுகளுடன் போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவதற்கு இந்தியா தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஈரானில் உள்ள சாபஹா் துறைமுகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அத்துறைமுகமானது மத்திய ஆசிய நாடுகளுடன் பாதுகாப்பான போக்குவரத்துத் தொடா்பைக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

மத்திய ஆசிய பிராந்தியத்தில் போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது. அத்தகைய திட்டங்கள், அனைத்து நாடுகளின் பங்களிப்புடன் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்தியாவும் துா்க்மெனிஸ்தானும் பழைமையான நாகரிகங்களைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை:

ஹிந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்கள் இந்தியாவில் தோன்றின. 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கொண்டுள்ளனா். மற்ற கலாசாரத்துக்கும் மதிப்பளித்து வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழ்வதே இந்தியாவின் வலிமையாக உள்ளது.

உலக நாடுகள் சா்வதேச விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அந்நாட்டுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கியுள்ளது என்றாா் அவா்.

குடியரசுத் தலைவரின் உரை தொடா்பான அறிக்கையை வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.



Read in source website

ஆப்கானிஸ்தான் முழுவதும் ஹெராயின் போதைப் பொருளை உருவாக்கப் பயன்படும் அபின் செடிகளைப் பயிரிடுவதற்கும், அவற்றை பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனா்.

இதையடுத்து, அபின் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே 1990-களில் தலிபான்கள் ஆட்சியின்போது அபின் பயிரிடுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டது. எனினும், அபினுக்குப் பதிலாக கோதுமை போன்ற மற்ற பயிா்களைப் பயிரிட்டு விநியோகிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை விவசாயிகளுக்கு தலிபான்கள் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.



Read in source website

இந்தியாவைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை ஐ.நா. அமைப்புகளுக்கு விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ) உறுதி செய்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பிற உலக நாடுகளும் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் டபிள்யூ.ஹெச்.ஓ. அறிவுறுத்தியுள்ளது.

ஹைதாராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் உலக சுகாதார அமைப்பு நிபுணா்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நிபுணா்கள் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி இந்த ஆய்வை மேற்கொண்டனா். அப்போது, பாரத் பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதும்,

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதையும் நிபுணா்கள் கண்டறிந்தனா். இந்தக் குறைபாட்டுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.

அதனடிப்படையில், இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) மற்றும் உலக சுகாதார அமைப்புகளுக்கு குறைபாடுகளை நிவா்த்தி செய்வதற்கான திட்ட அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், ‘தடுப்பூசிக்கான தேவை குறைந்து வருவது மற்றும் கொள்முதல் அமைப்புகளுக்கான தடுப்பூசி விநியோகம் பெரும்பாலும் நிறைவுபெற்றவிட்ட காரணங்களால் அனைத்து உற்பத்தி பிரிவுகளிலும் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை படிப்படியாக குறைக்கப்படும்’ என்று பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதனைத் தொடா்ந்து, ஐ.நா. அமைப்புகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி விநியோகம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, கோவேக்ஸின் கொள்முதல் செய்யும் பிற நாடுகளையும் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளது.

‘ஏற்றுமதிக்கான கோவேக்ஸின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட இருப்பதால், அதன் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், தடுப்பூசியில் சமீபத்திய ஆபத்து ஆய்வு புள்ளிவிவரங்களில், ஆபத்து - பயன் விகிதத்தில் எந்தவித மாற்றமும் தென்படவில்லை. குறிப்பாக, தடுப்பூசி நோய் எதிா்ப்பு திறன் மிக்கதாக உள்ளது. ஆனால், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படவில்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



Read in source website

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு ஏற்கெனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீா்வு காணப்படும் என்று நேபாளம் தெரிவித்துள்ளது.

நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தாா். அவா் தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்து இருநாடுகள் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினாா். அவருடன் நேபாள வெளியுறவு அமைச்சா் நாராயண் கட்காவும் இந்தியா வந்திருந்தாா்.

அவா் நேபாள தலைநகா் காத்மாண்டில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா, நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்து இருநாட்டுப் பிரதமா்கள் ஆலோசித்தனா். அந்தப் பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியாகவும், பேச்சுவாா்த்தை மற்றும் ஏற்கெனவே உள்ள வழிமுறைகள் மூலமாகவும் தீா்வு காண இருவரும் தீா்மானித்தனா். இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை மற்றும் கருத்து பரிமாற்றங்கள் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது’’ என்று தெரிவித்தாா்.



Read in source website

 

இனிமேல் நியூசிலாந்து அணி விளையாடும்போது வீரர்களின் பட்டியலில், மைதானத்தில் ராஸ் டெய்லரைப் பார்க்க முடியாது. இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் டெய்லர்.  

37 வயது ராஸ் டெய்லர் 2006 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 112 டெஸ்டுகள், 236 ஒருநாள், 102 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டில் 19 சதங்கள், 35 அரை சதங்களுடன் 7683 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ஒருநாள் சதம், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரும் டெய்லர் தான். 

கடந்த ஜனவரி மாதம், வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டெய்லர். நவம்பர் 2020-க்குப் பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெய்லர் விளையாடவில்லை. 

இந்நிலையில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை இன்று விளையாடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார். 

நெதர்லாந்து அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 1 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஹேமில்டனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 3-0 என வென்றது நியூசிலாந்து. 

ஆட்டம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் ஒலித்தபோது கண்ணீர் விட்டார் ராஸ் டெய்லர். 

தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் 1 சிக்ஸ் உள்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் விளையாட வந்தபோது நெதர்லாந்து அணி வீரர்களுக்கு வரிசையாக நின்று, கைத்தட்டி உரிய மரியாதையை வழங்கினார்கள். மேலும் டெய்லர் ஆட்டமிழந்தபோது அதை அவர்கள் கொண்டாடவும் இல்லை. நெதர்லாந்தின் கடைசி விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார் டெய்லர். 



Read in source website

மியாமி ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் போலந்தின் இளம் வீராங்கனை ஐகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்.

உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக்குடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் மோதினாா் ஜப்பானின் நவோமி ஒஸாகா. இதில் 6-4, 6-0 என்ற நோ் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா் ஸ்வியாடெக்.

4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஆன ஒஸாகா எளிதில் வெல்வாா் எனக்கருதப்பட்ட நிலையில், முதல் செட்டில் 3 முறை அவரது சா்வீஸை முறியடித்து 5-0 என முன்னிலை பெற்றாா் ஐகா. இரண்டாம் செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றினாா் ஸ்வியாடெக். இந்த ஆட்டம் 79 நிமிஷங்கள் நீடித்தது.

20 வயதான ஸ்வியாடெக் கடந்த வாரம் ஆஷ்லி பா்டி ஓய்வு பெற்ற நிலையில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை அந்தஸ்தை அடைந்தாா். மியாமி ஓபன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற வழியில் அவா் ஒரு செட்டைக் கூட இழக்கவில்லை. கடந்த பிப்ரவரியில் கத்தாா் ஓபன் போட்டியில் இருந்து தொடா்ந்து 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றாா் ஸ்வியாடெக்.

சன்ஷைன் டபுள் வெற்றி கண்ட வீராங்கனைகள் பட்டியலில் ஸ்டெ‘ஃ‘ப்பி கிரா‘ஃ‘ப், கிம் கிளிஜிஸ்டா்ஸ், விக்டோரியா அஸரென்கா ஆகியோா் வரிசையில் இணைந்தாா். மேலும் முதல் 3 டபிள்யுடிஏ 1000 போட்டி பட்டம் வென்ற சிறப்பையும் பெற்றாா் ஸ்வியாடெக்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் ஜான் ஐஷ்நா்-ஹா்காஸ் இணை 7-6, 6-4 என்ற நோ் செட்களில் கூல்ஹோப்-ஸ்கூப்ஸ்கி இணையை வென்று பட்டத்தைக் கைப்பற்றினா்.



Read in source website

சென்னை: குழந்தைகளுக்கு அழகான தூய தமிழ்ப் பெயர் சூட்டுவதற்கு உதவும் வகையில் புதுமையான வழிகாட்டு நூல் வெளியிடுவதற்கு மத்திய தமிழாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழ் செவ்வியலின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருக்குறளை 58 பழங்குடியினர் மொழிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், தமிழில் உள்ள மணிமேகலை உட்பட சங்க இலக்கிய நூல்கள் மற்றும் இதர செவ்வியல்களை பல்வேறு உலக மற்றும் இந்திய மொழிகளில், இந்நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது.

இதற்கிடையே சமீபகாலமாக குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் வைக்க, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன்காரணமாக தமிழ் பெயரை வைக்க நினைக்கும் பெற்றோர், புழக்கத்தில் தூய தமிழ் பெயர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த எண்ணத்தைக் கைவிடும் சூழலும் ஏற்படுகிறது. மேலும், தவறான அர்த்தமுள்ள பெயர்களையும் சில நேரங்களில் வைத்து விடுகின்றனர். இதை சரிசெய்யும் நோக்கத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பெயர்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை மத்திய செம்மொழி நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவன இயக்குநர் இரா.சந்திரசேகரன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: செம்மொழி மத்திய நிறுவனம் மொழிபெயர்ப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதி நூல்கள் என பல்வேறு வெளியீடுகளைத் தமிழ் ஆய்வுலகத்துக்கு அளித்துள்ளது.

அடுத்தபடியாக ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்’ என்ற நூல் மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாக அமையவுள்ளது. சங்ககாலத் தமிழ் மக்களின் பெயர்கள் இயற்கையோடு ஒன்றியுள்ளன. பெயர் என்பது ஒருவரின் முழு அடையாளமாகத் திகழ்வதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.

ஒருவரின் பெயர் என்பது அவரை மட்டும் குறிப்பிடுவதில்லை அவரது புலமை, சிந்தனை, ஆளுமைத் திறன், அவர் பெற்ற புகழ் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், குறிப்பாக அவரது மரபைத் தெரிவிப்பதாகவும் அமைகிறது.

எனவேதான், தொல்காப்பியர் மனிதர்களைக் குறிக்கக் கூடிய பெயர்கள் எப்படி அமைய வேண்டும், அப்பெயர்கள் அமைந்து வழங்க வேண்டிய சூழல்களை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளார். சங்ககாலப் புலவர்கள் மன்னரை நோக்கிப் பாடும்போது அவரின் பெயர் நிலைக்கும்படியாகப் புகழ்பெறுக என்று பாடியுள்ள குறிப்புகளைப் புறப்பாடல்களில் காணமுடியும்.

தற்போதைய காலகட்டத்தில் பெயரில் என்ன இருக்கிறது என்று மிக மேலோட்டமாகச் சிந்தித்து பலரும் செயல்படுகிறார்கள். தமிழர்களுக்கு எல்லாமே பெயரில்தான் அடங்குகிறது. பெயரை கொண்டே இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். நவீனம் என்ற மாயையில் தமிழ்ப் பெயர்கள் வழக்கொழிந்துவிட்டன.

இந்நிலையில்தான், புலவர் பா. இறையரசனின் ‘சங்க கால மக்கட் பெயர்க் களஞ்சியம்’ என்றொரு நூலை செம்மொழி மத்திய நிறுவனம் வெளியிட உள்ளது. அரசர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள், வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், பொதுமக்கள் என இதில் 611 சங்க காலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பெயருக்கான காரணம், அதற்கான விளக்கம் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழில் பெயர் சூட்டும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இக்களஞ்சியம் பெருந்துணையாக அமையும். இந்நூலின் துணையுடன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி மகிழ்ந்து மரபைப் பேணிக் காக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

புதுச்சேரி: புதுச்சேரியின் பண்டைய துறை முகமான அரிக்கமேட்டுடன் தொடர்புடைய உள்ளூர் வணிக நகரங்களை கண்டறிய புராணசிங்கு பாளையத்தில் அரசு சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு மத்திய தொல் லியல்துறை அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

பண்டைய காலத்தில் கிழக்கு கடற்கரையோரம் பல வணிகத் தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், கொற்கை ஆகி யவை குறிப்பிடத்தக்கவை. இந்த பழங்கால துறைமுகங்களில் புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு துறைமுகத்தில் வெளிநாட்டு வாணிபம் மிகவும் செழிப்புற்று இருந்துள்ளது. அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது.

அயல்நாட்டு பயணிகளான பெரிபுளூஸ், தாலமி ஆகியோரும், காவிரிபூம்பட்டினம் - மரக்காணம் இடையே 'பொதுகே' என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த 'பொதுகே' என்பது இன்றைய புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவு படுத்தி உள்ளனர்.

இதில், அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மட்கலன்களும், வெளிநாடு களில் இருந்து கொண்டு வரப்பட்ட மட்கலன்களும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. பலவகைசுடுமண் விளக்குகளும் கூறை ஓடுகளும் அகழாய்வில் கிடைத்தன.இதன்மூலம் பண்டைய காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்ற வணிகத்தலமாக விளங்கியது என தொல்லி யல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரிக்கமேட்டில் செய்யப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள், கிரேக்க, ரோமானியர்கள் அரிக்கமேட்டில் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது உறுதியானது. அதேநேரத்தில் அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்த பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பது கண்டறிய முடியவில்லை. இதனால், அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிகத் தலங்களை கண்டறிந்து அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டது.

தாகூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப் போது திருக்கனூர் அடுத்த புரா ணசிங்குபாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பையாற்றின் ஓரத்தில் கி.பி.1-ம் நூற்றாண்டில் பயன்படுத்திய ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைகிணறு, பழங்கால செங்கற்கள், பழங்கால பொருட்களின் சிதறல்கள் இருப்பதை கண்டறிந்தனர். கோட்டைமேடு பகுதிக்கும், அரிக்கமேட் டிற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதினர்.

புராணசிங்குபாளையம் கோட் டைமேடு பம்பையாற்றங்கரையில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித செயற்கை மாற்றமும் இன்றி மணல்மேடுகளாகவே உள்ளன. இங்கு அறிவியல் ரீதியாக நவீன தொழில்நுட்களை பயன்படுத்தி அகழாய்வு மேற் கொள்வதன் மூலம் புதையுண்டு கிடக்கும் அக்கால தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளும், பண் டைய காலத்தில் பயன்படுத்திய கட்டிட கலையும் வெளிச்சத்திற்கு வரும் என்று கருதுகின்றனர்.

இந்த பகுதியில் அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய காலத்தில் புதுச்சேரிக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தனர்? இங்கிருந்து எங்கெல்லாம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது? என் பது தெளிவாக தெரிய வரும். எனவே கோட்டைமேட்டில் உள்ளபம்பையாற்று பகுதியில் அக ழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் அனு மதி வழங்கியுள்ளனர்.

மேலும், புதுச்சேரி அரசும் இந்த ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி முதல்கட்டமாக ரூ.20 லட்சம் பணமும் ஒதுக்கீடு செய் துள்ளது.

தற்போது தாகூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன், கோட்டைமேடு பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அனு மதி வழங்கக்கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி முதல்வருக்கு கடிதம்அனுப்பியுள்ளார். அனுமதி கிடைத்தவுடன் அவர் தனது குழுவினருடன் அங்கு சென்று அகழாய்வு பணிகளை மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளார்.



Read in source website

புதுடெல்லி: நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கினார்.

நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 2-ம் தேதி அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா, நேபாளம் இடையிலான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது நேபாள பிரதமர் தேவ்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கினார். இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கலைஞர்கள், இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர்.

இந்து தேச கோரிக்கை

நேபாள மக்கள் தொகையில் 81 சதவீதம் பேர் இந்துக்கள். கடந்த 2008-ம் ஆண்டு வரை நேபாளம், இந்து தேசமாக இருந்தது. சீனாவின் திரைமறைவு நடவடிக்கைகளால் நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நேபாளத்தில் வலுத்து வருகிறது.

இந்த பின்னணியில் நேபாள பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ராதை-கிருஷ்ணன்" ஒவியத்தை பரிசாக வழங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

- பிடிஐ



Read in source website

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது முந்தைய நிதி ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய ஆண்டில் நடைபெற்ற ஏற்றுமதியைவிட 33 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டார்.

இன்ஜினீயரிங் பொருள் ஏற்றுமதி 11,100 கோடி டாலரை தொட் டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 1,600 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஆசியபிராந்திய நாடுகளுக்கு மட்டுமேஅதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த நிதிஆண்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, நெதர்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

2022 மார்ச் மாதத்தில் மிக அதிக அளவாக 4,000 கோடி டாலருக்கு பொருட்கள் ஏற்றுமதியாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேளாண் பொருள் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கோயல், 2019-20-ம் நிதி ஆண்டில் 2 லட்சம் டன்னாக இருந்த கோதுமை ஏற்றுமதி 2020-21-ம் நிதி ஆண்டில் 21.55 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் 70 லட்சத்தை எட்டியதாக அவர் கூறினார்.

சணல் சார்ந்த பொருள் ஏற்றுமதி, ஜவுளி, தோல் சார்ந்த பொருள், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதோடு வேலை வாய்ப்பும் பெருகும் என்று குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று காலத்திலும் நமதுஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. உறுதியான, தீர்மானமான முடிவெடுக்கக் கூடிய பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்களின் தலைமையிலான அரசின் உதவியோடு இவையெல்லாம் சாத்தியமாகும். அரசு முழு மூச்சுடன்செயல்படும்போது நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எட்டுவது எளிதாகிறது என்று பியூஷ் கோயல் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இதனால் இந்த ஆண்டு கோதுமை ஏற்றுமதி 100 லட்சம் டன்னை எளிதாக எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வங்கதேசத்துக்கு சாலைமார்க்கமாக 35 லட்சம் டன்கோதுமை அனுப்பப்பட்டதாகவர்த்தக செயலர் பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

- பிடிஐ



Read in source website

இஸ்தான்புல்: துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை, பாகிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் துருக்கியும் உள்ளது. அங்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாகவே அங்கு பொருளாதார பாதிப்பு தொடங்கி விட்டது.

விநியோகச் சங்கிலித் தடை, துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பில் கடும் சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பின்னர் கரோனா ஏற்பட்ட பிறகு பெரும் பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. தொழில், வர்த்தகம் சரிவடைந்தது.

பணவீக்கம் உயர்ந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியை முன் வைத்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். செப்டம்பரில் மத்திய வங்கி 500 அடிப்படை புள்ளிகளை தளர்த்தி வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் லிரா பலவீனமடைந்ததால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் மோதலால் துருக்கியில் கடுமையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் உயர்ந்துள்ளது. துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பும் கடும் சரிவு கண்டு வருகிறது.

இந்தநிலையில் துருக்கி நாட்டின் வருடாந்திர பணவீக்க விகிதம் வெளியாகியுள்ளது. துருக்கியின் வருடாந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 61.14% ஆக உயர்ந்தது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைகள் 5.46 சதவீதம் அதிகரித்துள்ளதாக துருக்கிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ஆண்டு பணவீக்கம் 54.44 சதவீதமாக உள்ளது.

நுகர்வோர் விலை பணவீக்கத்தில் மாதாந்திர உயர்வு போக்குவரத்து, பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கல்வி தொடர்பான பொருட்களான பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி கட்டணம் ஆகியவை முறையே 13.29% மற்றும் 6.55% உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும், போக்குவரத்து செலவு 99.12% உயர்ந்துள்ளது. உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 70.33% ஆகவும், மரச்சாமான்களின் விலை 69.26% ஆகவும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு மக்கள் அடிப்படைத் தேவையான உணவு பொருட்களைக் கூட வாங்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: வீடுகள் மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிப்பது என எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று பரவிய செய்தி போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று காட்டுத் தீ போல பரவி வருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வீடுகள் மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்படும் என்ற அந்தத் தகவலில் உண்மை எதுவும் இல்லை என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதி அமைச்சகம் அத்தகைய முன்முடிவு எதையும் எடுக்கும் திட்டமில்லை என்றும், தயவுசெய்து இதுபோன்ற பதிவுகளை பகிர்வதைத் தவிர்க்கவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அவ்வாறு பரவிய தகவல்களால், வீட்டு வாடகைக்குப் போடப்படும் ஜிஎஸ்டி கூட, வாடகைதாரர்களின் தலையில்தான் இறுதியில் வந்துவிழும் என்பன போன்ற கவலையுடன் கூடிய பதிவுகள் பலவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



Read in source website

நியூயார்க்: ட்விட்டர் மீது விமர்சனங்களை முன் வைத்து சமூகவலைதளத்தில் களமிறங்கக்கூடும் என கூறப்பட்ட எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கடந்த மாதம் 25 ஆம் தேதி ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. ட்விட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" என கேள்வி கேட்டு இருந்தார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டரின் கொள்கைகள் குறித்து சில விமர்சனங்களையும் வைத்திருந்தார்.

அதற்கு 70% வாக்குகள் இல்லை எனப் பதிவாகியிருந்தது. இதனால் மஸ்க் புதிய சமூக வலைதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளாரா என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இது குறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

எலான் மஸ்க்கின் புதிய சமூகவலைதள யோசனையை ஆதரித்து சிலர் கருத்து தெரிவித்தனர். ‘‘ட்விட்டரை வாங்கிவிடுங்கள் இல்லாவிட்டால் புதிதாக ஒன்றை உருவாக்குங்கள்’’ என்று பதிவிட்டனர்.

இந்தநிலையில் எலான் மஸ்க் ட்விட்டரில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். அவர் சார்பில் பங்குச்சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சுமார் 73.5 மில்லியன் ட்விட்டர் பங்குகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக ஆனார். சமூக ஊடகத் துறையை அவர் அசைக்கக்கூடும் என்று தகவல்கள் பரவிய ஒரு வாரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை மஸ்க் வாங்கிய செய்தி வெளியானதை தொடர்ந்து அதன் வர்த்தகம் சுமார் 26% உயர்ந்தது.



Read in source website

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தடுக்க ஊரடங்கு மற்றும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது இலங்கை அரசு.

இத்தகைய சூழலில் இலங்கை பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இலங்கை பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 5.9 சதவீதம் சரிவைத் தொடர்ந்து வர்த்தகத்தை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அந்த நாட்டில் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில், அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. மேலும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார சிக்கல், கடன் சுமை, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு போன்றவற்றால் அந்நாட்டு மக்களுக்கு உயிர் வாழ அடிப்படை தேவையான உணவு கூட கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. எரிபொருள் மற்றும் மின்சார வசதி கூட இல்லாமல் சுமார் 22 மில்லியன் மக்கள் திண்டாடுவதாக சொல்லப்பட்டுள்ளது.



Read in source website

‘வட்டி’ என்பதை காத்திருப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதி என்கிறது பொருளாதாரம். அதாவது பணத்தை கடனாகக் கொடுத்த ஒரு நபர், அதைத் திரும்பப் பெறுவதற்கு சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளதல்லவா, அந்தக் காத்திருப்புக் காலத்திற்காக அவருக்கு, அவர் கொடுத்த பணத்துடன் சிறிது பணத்தையும் சேர்த்து கொடுப்பதுதான் ‘வட்டி’ எனப்படுகிறது.

வட்டிக்காக கடன் கொடுக்கும் தனி நபர் முதல் தேசிய வங்கிகள் வரை இந்த பார்முலாவில்தான் செயல்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் வட்டிதான் வங்கித் தொழிலின் அடிப்படை. வங்கியில் பணம் போடுபவர் இல்லையென்றால் ஒரு வங்கி தன் வணிகத்தை நடத்த முடியாது. மக்களின் வைப்புத் தொகையை, கடன் தேவைப்படுவர்களுக்குக் கொடுத்து, அதற்கு வட்டியைப் பெறுவதன் மூலமே வங்கிகள் இயங்குகின்றன. அதனால், வங்கியில் பணம் போடும் வாடிக்கையாளர்களை வங்கிகள் மிகவும் மதிப்புடன் நடத்திவந்தன.
ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக நிலைமை மாறியுள்ளது. அதாவது, ஒரு காலத்தில் மதிப்புடன் நடத்தப்பட்டு வந்த வைப்புதாரர்கள், தற்போது வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி வங்கிகளுக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

வட்டி விகிதத்தின் அவலம்

வங்கிகள் வைப்புதாரர்களுக்கு வழங்கிவரும் வட்டி விகித்தில் ஏற்பட்டுவரும் தொடா் வீழ்ச்சிதான் வைப்புதாரர்களின் தற்போதைய பரிதாபநிலைக்குக் காரணம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியில் போடப்படும் தொகை 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி விடும். அதாவது ரூ.1 லட்சம் வைப்பீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து ரூ.2 லட்சத்தை வங்கி தரும். 1988-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திர விகாஸ் பத்திரங்கள் 5 ஆண்டுகளில் வைப்பீட்டை இரண்டு மடங்காக திருப்பித்தந்தன.

ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? வங்கியில் செய்யும் வைப்பீடு இரண்டு மடங்காக பெருக 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும். வைப்புகளுக்கு அளிக்கப்பட்ட வட்டி விகிதம் 16 சதவீதத்திலிருந்து படிப்படியாக இறங்கி வந்து, இன்றைக்கு 6 சதவீதத்தி்ல் நிற்கிறது. இந்த 6 சதவீதமும் தொடர்ந்து இருக்குமா அல்லது அதுவும் இறக்கம் கண்டு விடுமா என்ற பயத்தில்தான் இன்றைய டெபாசிட்தாரா்கள் உள்ளனா், ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் வைப்பீடு செய்தால் அவருக்கு வங்கி 12 சதவீதம் வட்டி அளித்தது. இதனால் அவருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 வட்டி வருமானமாகக் கிடைத்தது. இந்தத் தொகையைக் கொண்டு அப்போது அவர் தனது வாழ்க்கை செலவில் ஒரு பகுதியை சமன் செய்ய முடிந்தது. ஆனால் இன்றைக்கு அதே ரூ.1 லட்ச ரூபாய்க்கு வைப்புதாரருக்கு கிடைக்கும் மாதாந்திர வட்டி ரூ.500க்கும் கீழ்தான். இன்றைய நிலையில் ஒரு கூலித் தொழிலாளிக்கு குறைந்தபட்சம் ரூ.500 நாட்கூலியாக கொடுக்க வேண்டி உள்ளது.

இதை வைத்துப் பார்த்தால் வங்கிகள் அளிக்கும் வட்டி அளவின் அவலம் நமக்குப் புரியும். வைப்புதாரர்களின் மனக்குமுறல் ஆங்கிலேயர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்த பென்சன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திவிட்டன. பங்களிப்பு ஓய்வூதியம் என்பது இன்னும் விடை காண முடியாத விஷயமாகவே இருக்கிறது. அரசுகளும் நிறுவனங்களும் தன் ஊழியர்களுக்காக வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளன.

இந்த நிலையில் வைப்பீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம்தான் பல்வேறு பிரிவினருக்கு வருமான ஆதாரமாக இருந்துவருகிறது. பல்வேறு நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டினாலும், பாதுகாப்பான முதலீட்டுக்கு வங்கியைத்தான் மக்கள் தோ்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்கள் மிகவும் சொற்பமாக உள்ளது. வங்கிகளில் பணம் போடுவது ஆதாயமற்றது என்பது வைப்புதாரா்களுக்கு தெரிந்து இருந்தாலும், அவர்களுக்கு வங்கிகள் தவிர வேறு வழிகள் தெரியவில்லை. இவ்வாறு வங்கித் தொழிலின் அஸ்திவாரமாக இருக்கும் வைப்புதாரர்களின் மனக்குமுறலில்தான் இன்றைய வங்கிகள் தங்கள் தொழிலை நடத்துகின்றன.

சுரண்டப்படும் வைப்புதாரர்கள் இது ஒருபுறமிருக்க, வங்கிகள் தன் கடனாளர்களுக்கு வட்டி விகிதங்களை தொடா்ந்து குறைத்து கொண்டே வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகபட்சமாக கடன்தாரர்களிடமிருந்து வங்கிகள் 20 சதவீதம் அளவில் வட்டி வசூலித்தன. ஆனால் இன்றைக்கு வீட்டுக் கடன் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான வட்டியில் கிடைக்கிறது. நகைக்கடன், தொழில் கடன் மற்றும் அரசின் முன்னுரிமை திட்டக் கடன்கள் ஆகியன அதிகபட்சமாக 10 சதவீத வட்டிக்குள் கிடைக்கின்றன.

நாட்டின் தொழில் வளா்ச்சி மற்றும் சுய வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை அளிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இந்த நல்ல விஷயத்திற்கான விலையை கொடுப்பவா்கள் வங்கிகளில் வைப்பீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்பதை நாம் புரிய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் வங்கிகள், கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கின்றன. இன்றைய வங்கி வணிகத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால் கடனாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், இதற்கு காரணகர்த்தாவாகிய வைப்புதாரர்கள் மன வேதனை அடைகிறார்கள்.

வைப்புதாரர்களை உற்சாகப்படுத்துங்கள்

வைப்புதாரர்களை உற்சாகப்படுத்தும் வழிகள் வங்கிகளுக்கும் அரசுக்கும் தெரியாமலில்லை. உதாரணமாக ஒரு தானியத்திற்கு குறைந்தபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. இந்த விலை போதாது என்பதால் மாநில அரசு தனியே ஊக்கத் தொகையை அளிக்க முன்வருகிறது.லாபத்தில் இயங்கும் பல கூட்டுறவு அமைப்புகளில் பங்கு ஈவு, சிக்கன சேமிப்பு வட்டி ஆகியன வழங்கப்பட்ட பிறகும், உறுப்பினா்களுக்கு போனஸ் என்ற ஒரு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பல வழிகள் கையாளப்படும்போது, வங்கி வைப்புதாரர்கள் சார்ந்து மட்டும் ஏன் மவுனம் காக்கப்படுகிறது? வட்டி விகிதங்கள் ரிசா்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்த தன் வைப்புதாரர்களுக்கு ஒரு ஊக்கத் தொகையை அளித்து வைப்புதாரர்களை உற்சாகப்படுத்துவதில் என்ன தடை வரப்போகிறது?

கடந்த 2021ம் நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் ரூ.1,02,752 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகளைத் தவிர மற்றவை லாபத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வைப்புதாரர்களை சுரண்டி வங்கிகள் தங்கள் லாபத்தை பெருக்கிக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? லாபத்தில் இயங்கும் வங்கிகள் தங்கள் வைப்புதார்களுக்கு தங்கள் லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை செயல்படுத்துவதில் என்ன தடை இருக்க முடியும்?

வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்து அவற்றின் பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கின்றன. வாராக்கடன் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் செய்வதற்கு வங்கிகள் விதிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறபோது வைப்புதாரா்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது? இந்த நேரத்தில் மகாத்மா காந்தி, ஒரு வங்கியைத் திறந்துவைக்கும்போது தெரிவித்தக் கருத்தை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

‘வாடிக்கையாளருக்கு வங்கி எஜமானர் அல்ல. மாறாக வாடிக்கையாளர்தான் வங்கிக்கு எஜமானர். வங்கி வாடிக்கையாளருக்கு உதவி செய்யவில்லை. மாறாக வாடிக்கையாளா்தான் வங்கிக்கு உதவி செய்கிறார்.’ இதை வங்கிகள் உணர வேண்டும்!

- தொடர்புக்கு: levinarumugam@gmail.com



Read in source website

பூவின் நறுமணம், சாக்கடையின் துர்நாற்றம், உணவின் வாசம் போன்று பல்வேறு வாசனை வகைகளை நம்மால் அறியமுடிகிறது. அதே மாதிரி ஒரு தாவரத்தால் வேறு தாவரத்தின் வாசனையை அறியுமா?

தாவரங்களுக்கு மூக்கு போன்ற உறுப்பு இல்லை. எனினும் கஸ்கட்டா (Cuscuta - தூத்துமக் கொத்தான்) கொடிக்கு வாசனை அறியும் உணர்வு உள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கடுகு போன்ற விதையிலிருந்து வளரும் கஸ்கட்டா இளம் தளிர், பற்றிப்படர வசதியாக அருகில் உள்ள தாவரங்களைத் தேடுகிறது. ஏதேனும் தாவரம் அகப்பட்டால், அதன் தண்டில் ஸ்பிரிங் மாதிரி சுற்றிக்கொள்ளும். அந்தத் தாவரத்தின் நீரையும் ஊட்டச்சத்தையும் உறிஞ்சிக்கொள்ளும்.

கஸ்கட்டா விதை முளைத்த பத்து நாட்களில் அந்தத் தளிர் படர வேண்டிய தாவரத்தை எட்ட முடியவில்லை என்றால் மடிந்துவிடும். தாவரத்தைப் பற்றிப்படர்ந்துவிட்டால் அதன் வேர் அழிந்துவிடும். ஹஸ்டோரியா எனும் உறிஞ்சும் உறுப்பு உருவாகி, படர்ந்த தாவரத்தின் நீரையும் ஊட்டச் சத்தையும் உறிஞ்சி, ஒட்டுண்ணியாக கஸ்கட்டா வளரும்.

அருகில் தக்காளிச் செடி இருந்தால் அதன் வாசனையால் ஈர்க்கப்பட்டு, அதன் மீது பற்றிக்கொள்ளும். வாசனையை உணர்ந்துதான் தக்காளிச் செடியை அடைகிறது என்கிற முடிவுக்கு எப்படி வருவது? பென் பல்கலைக்கழக உயிரியலாளர் கான்சுலோ டி மோரேஸ், தொடர் ஆய்வுகளைச் செய்து இதை நிரூபித்திருக்கிறார்.

முதல் சோதனையில் காலியான தொட்டி, பிளாஸ்டிக் செடி நட்ட தொட்டி, நடுவே கஸ்கட்டாவை வளர்த்து சோதனை செய்தார்கள். எதை நோக்கியும் கஸ்கட்டா செல்லவில்லை. இரண்டு தொட்டிகளையும் புறக்கணித்தது.

தக்காளிச் செடியை அருகில் வைத்தபோது அதனை நோக்கி கஸ்கட்டா சென்றது. போதிய ஒளியில் தக்காளிச் செடியை வைத்தாலும் இருட்டில் வைத்தாலும் அதனை நோக்கி கஸ்கட்டா சென்றது. தக்காளிச் செடி பார்வைக்குப் படாமல் நடுவே திரையால் மூடினாலும் தக்காளிச் செடியை நோக்கிச் சென்றது. அதாவது தக்காளிச் செடியைப் பார்வை உணர்வு மூலம் அறிந்து செல்லவில்லை என இந்த ஆய்வுகள் நிறுவின.

அடுத்து கஸ்கட்டா கொடியையும் தக்காளிச் செடியையும் இரண்டு பெட்டிகளில் அடைத்து, இரண்டின் நடுவே குழாய் போன்ற அமைப்பை இணைத்தனர். குழாய் மூலம் தக்காளிச் செடியின் வாசனை பரவும். இந்த வாசனையை நோக்கி கஸ்கட்டா சென்றது.

தொடுவுணர்வு, காட்சி உணர்வு இரண்டும் இந்த இறுதிச் சோதனையில் விலக்கப்பட்டுள்ளன. எனவே மோப்ப உணர்வு கொண்டு கஸ்கட்டா கொடி செல்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்.

பலருக்கு உப்புமாவைவிட ரவா தோசை பிடிக்கும். அது போல கோதுமைச் செடியா, தக்காளிச் செடியா என கஸ்கட்டா கொடிக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கொடுத்தால், அது தக்காளிச் செடியைத்தான் விரும்பும். ஒரு பக்கம் கோதுமை, மறுபக்கம் தக்காளிச் செடியை வைத்து சோதனை செய்தனர். கஸ்கட்டா தக்காளியை நோக்கிச் சென்றது.

கஸ்கட்டாவைக் கவரும் தன்மை கொண்ட மூன்று வகை நறுமண வேதிப் பொருள்களின் கலவை தக்காளிச் செடியிலிருந்து வெளிப்படுகிறது. ஆனால், கோதுமையில் கவர்ந்து இழுக்கக்கூடிய ஒரே ஒரு வாசனை மட்டுமே உள்ளது. அதாவது வாசனையின் தன்மையை நுட்பமாகத் தாவரங்கள் பிரித்து அறிகின்றன.

தாவரங்கள் வெளியிடும் நறுமண வேதிப் பொருள்களின் கலவையைப் பிரித்து உணர்ந்து, அதற்கு ஏற்ற வகையில் செயல்படுகின்றன. இதுவும் ஒருவகை முகர்தல்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

(நிறைவுற்றது)



Read in source website

சட்ட விரோதமான தாக்குதலுக்கு நேரடியாக உத்தரவிட்டதன் மூலம் புதின் அல்லது மற்றொரு தலைவர் போர்க்குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களை ஒரு வழக்கறிஞர் முன்வைக்க முடியும்.

அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாத காலத்துக்கு மேல் ஆகிவிட்டது.
இதுவரை 3 முறைக்கு மேல் அமைதிப் பேச்சுவார்த்தையும் இரு நாடுகளுக்கு இடையே நடந்து முடிந்து விட்டது.

இருப்பினும், போர் நிறுத்தம் தொடர்பான எந்தவொரு முக்கிய முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் எவ்வளவோ இறங்கி வந்தும் கூட ரஷ்யா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
போர் தொடுப்பதற்கு முன்பு உக்ரைனின் ராணுவ நிலைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்த ரஷ்யா, அதன் பிறகு மெல்ல மெல்ல உக்ரைனியர்கள் வசிக்கும் பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் தாக்குதலை தொடுக்க தொடங்கியது.

போர் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் ரஷ்யா தன் மீதான உலக நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்தது. மேலும், உக்ரைனில் நடைபெறுவது ராணுவ நடவடிக்கை என்று கூறியது.
உக்ரைன் தலைநகர் கிவிவ் நகருக்கு வெளியே புசா பகுதியில் ரஷ்யா போர் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நகர மேயர் அறிவித்தார்.

சுமார் 300 உக்ரைனியர்களை ரஷ்ய படைகள் சுற்றுக் கொன்றதாக அவர் கூறினார். பலரின் சடலங்களை ராய்டர்ஸ் செய்தியாளர்கள் கூட பார்த்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், ரஷ்ய பாதுகாப்புப் படை இந்தத் தாக்குதல் குறித்து உடனடியாக பதிலளிக்கவில்லை. புசா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியது.

அதாவது, உக்ரைனின் தெற்கு பிராந்தியமான மரியுபோல் நகரில் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகளின் பதுங்கிடமான தியேட்டர் ஆகியவற்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாடுகள் இவ்வாறு குற்றம்சாட்டியது.

சட்ட நிபுணர்கள் கூறுகையில், ரஷ்ய தலைவர்கள் அல்லது அந்நாட்டு அதிபர் புதின் அடுத்த பல ஆண்டுகளுக்கு போர் குற்ற விசாரணையை எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.

போர்க் குற்றம் எப்படி வரையறுக்கப்படுகிறது?

வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பது மற்றும் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளைத் தாக்குவது ஆகியவை போர்க் குற்றங்களில் அடங்கும் என்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்ற வழக்கு விசாரணை நீதிமன்றம் போர்க் குற்றத்தை வரையறுத்து இருக்கிறது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

போர்க்குற்ற வழக்கு எப்படி தொடங்கும்?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான், உக்ரைனில் நடந்திருக்க போர்க் குற்றங்கள் குறித்து கடந்த மாதம் விசாரணையைத் தொடங்கியதாகக் கூறினார்.

ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை.
2014 ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமியாவை இணைத்ததில் இருந்து அதன் எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை ஆய்வு செய்ய உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒத்துழைக்க வேண்டாம் என்று ரஷ்யா முடிவு செய்யலாம்.
ஒரு பிரதிவாதி கைது செய்யப்படும் வரை எந்த விசாரணையும் தாமதமாகும்.

ஆதாரத்தின் தரநிலை என்ன?

போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக “நம்புவதற்கு நியாயமான காரணங்களை” வழக்கறிஞர்கள் காட்டினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்கும்.

ஒரு தண்டனையைப் பெற, வழக்கறிஞர் ஒரு பிரதிவாதியின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதைச் செய்வதற்கான ஒரு வழி, தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ இலக்குகள் எதுவும் இல்லை என்றும் அது விபத்து அல்ல என்றும் வழக்கறிஞர் காட்ட வேண்டும்.

ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் வருகைப் பேராசிரியரான அலெக்ஸ் வைட்டிங் கூறுகையில், “இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து, நகர்ப்புறங்களில் உள்ள பொதுமக்களைக் குறிவைப்பது உத்தியாகத் தோன்றினால், அது ஒரு நோக்கத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த சான்றாக இருக்கும்” என்றார்.

யார் குற்றம் சாட்டப்படலாம்?

போர்க்குற்ற விசாரணையானது வீரர்கள், தளபதிகள் மற்றும் அரச தலைவர்கள் மீது கவனம் செலுத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோதமான தாக்குதலுக்கு நேரடியாக உத்தரவிட்டதன் மூலம் புதின் அல்லது மற்றொரு தலைவர் போர்க்குற்றம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களை ஒரு வழக்கறிஞர் முன்வைக்க முடியும்.

ஒரு போர்க் குற்றத்தின் தண்டனையை கடினமாக்குவது எது?

மரியுபோலில் உள்ள தியேட்டர் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மீதான குண்டுவெடிப்புகள் போர்க்குற்றங்கள் என்ற வரையறையின் கீழ் வருவதாகத் தெரிகிறது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால் ஒரு தண்டனையைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.

பல சந்தர்ப்பங்களில் நோக்கத்தை நிரூபிப்பது மற்றும் தலைவர்களை நேரடியாக குறிப்பிட்ட தாக்குதல்களுடன் இணைப்பது போன்ற சவால்களுக்கு மேலதிகமாக, வழக்குரைஞர்கள் ஒரு போர் மண்டலத்திலிருந்து சாட்சியங்களைப் பெறுவதற்கு கடினமான நேரங்களைக் கடக்க நேரிடும்.

இதில் மிரட்டப்பட்ட அல்லது பேசத் தயங்கக்கூடிய சாட்சிகளுடன் நேர்காணல்கள் அடங்கும்.
உக்ரைன் விஷயத்தில், சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் வழக்கறிஞர்கள் பொதுவில் கிடைக்கும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை முன்வைப்பர்.

ஏதேனும் முன்மாதிரிகள் உள்ளதா?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது முதல், அது 30 வழக்குகளை மேற்பார்வையிட்டுள்ளது. அதன் நீதிபதிகள் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் நான்கு பேரை விடுதலை செய்துள்ளனர். காங்கோவின் போர்வீரர் தாமஸ் லுபாங்கா டைலோ 2012 இல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

உகாண்டாவில் உள்ள லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி போராளிக் குழுவின் தலைவர் ஜோசப் கோனி உட்பட தலைமறைவாக இருக்கும் பல பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.

மரண தண்டனை வழங்கும் செயல்முறைகளில் மாற்றங்கள்; உச்ச நீதிமன்ற முடிவுக்கு காரணம் என்ன?

1993 இல் ஐக்கிய நாடுகள் சபை, பால்கன் போர்களின் போது நடந்த குற்றங்களை ஆராய முன்னாள் யூகோஸ்லாவியாவிற்காக தனி சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கியது. இது 161 குற்றச்சாட்டுகளை வெளியிட்டது மற்றும் 90 நபர்களுக்கு தண்டனை வழங்கியது.

உக்ரைனில் சாத்தியமான போர்க்குற்றங்களை ஆராய ஒரு தனி நீதிமன்றத்தை உருவாக்கும் சாத்தியத்தை சட்ட வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர். இது ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஒப்பந்தம் மூலம் செய்யப்படலாம்.



Read in source website

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் படி ஆயுள் தண்டனை தான் அதிக பட்சத் தண்டனையாக கருத்தில் கொள்ளப்படுகிறது. நீதிபதி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கின்றார் என்கிற பட்சத்தில் அதற்கான சிறப்பு காரணங்களை முன்வைக்க வேண்டும்.

Anup Surendranath

Reforming death penalty: 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மரண தண்டனை மேல் முறையீடு வழக்குகளை விசாரிக்கும் போது, மிகவும் குறைவான தகவல்களின் அடிப்படையில் தண்டனையை விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்கள் வழங்குவது குறித்து கவலையை பலமுறை தெரிவித்துள்ளது.

நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, கீழ்மை நீதிமன்றங்கள் செய்த தவறுகளை காரணம் காட்டி தூக்கு தண்டனையை குறைத்துள்ள நிலையில், நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, பிழைகளை சரிசெய்யும் முயற்சியில் நன்னடத்தை அதிகாரிகள், சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மனநல நிபுணர்களிடமிருந்து அறிக்கைகளை கோரியது. இந்த வாரம் லலீத் தலைமையிலான அமர்வு மரண தண்டனை வழக்குகளின் நடைமுறைகளை விரிவாக ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டது. மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்கும் இடையே மரண தண்டனையை நீதிபதிகள் தேர்வு செய்ய தேவையான காரணங்களை கொண்டுள்ளனரா என்பதை இந்த அமர்வு உறுதி செய்யும்.

மரண தண்டனை நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்தக் காரணம் என்ன?

மரணதண்டனை வழக்கில் தேவையான தகவல்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை சீர்திருத்துவதற்கான முயற்சியை நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. இப்படி செய்யும் போது உச்ச நீதிமன்றம், மரண தண்டனை நிறைவேற்றப்படும் விதம் குறித்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.மரணதண்டனை அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று கருதப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது நீதிமன்றம்.

1980ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பச்சன் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியல் அமைப்பின் தன்மையை உறுதி செய்த போது, எதிர்வரும் காலங்களில் நீதிபதி ஆயுள் தண்டனைக்கும் மரணதண்டனைக்கும் இடையே எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியது. அந்த கட்டமைப்பின் மையத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் படி ஆயுள் தண்டனை இயல்பான தண்டனையாக கருத்தில் கொள்ளப்படுகிறது. நீதிபதி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கின்றார் என்கிற பட்சத்தில் அதற்கான சிறப்பு காரணங்களை முன்வைக்க வேண்டும்.

1980ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, அரிதினும் அரிதான ஆனால் பிரபலமான கட்டமைப்பாக கருதப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் போது நீதிபதிகள் குற்றம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பான மோசமான காரணங்களையும் மற்றும் மிட்டிகேஷன் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் மரண தண்டனையை வழங்குவதற்கு முன் ஆயுள் தண்டனையை சந்தேகத்திற்கு இடமற்ற தண்டனையாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. மேலும் தீர்ப்புக்கு பொருத்தமான காரணங்களை உள்ளடக்கிய பட்டியல் இருக்கலாம். ஆனாலும் அது மட்டுமே ஒரு முழுமையான பட்டியலாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பச்சன் சிங் கட்டமைப்பின் இன்றைய நிலை என்ன?

முறையாக இதனை செயல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கூறி வருகிறது. சட்ட ஆணையத்தின் 252வது அறிக்கையும் இதையே முன்மொழிந்தது. தண்டனைக்கான குற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வழக்குகள் நகர்வது முக்கியமான கவலைகளில் ஒன்றாகும். குற்றம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்த காரணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற பச்சன் சிங்கின் ஆணையை பெரும்பாலும் மீறும் வகையிலேயே தண்டனைகள் வழங்கப்படுகிறது. தன்னிச்சையாக மரண தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதும் ஒரு கவலையாக இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில், வழக்குகளை முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நீதிமன்றங்களில் பச்சன் சிங் கட்டமைப்பின் விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதை கூறுகிறது ப்ராஜெக்ட் 39ஏ என்ற ஆராய்ச்சி முடிவுகள். இதற்கு தேவையற்ற பல காரணிகளை நீதிபதிகள் முன்வைக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 595 மரண தண்டனைகள் இந்த கவலையை தீவிரப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

காரணங்கள் என்ன?

இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக அமைவது நீதிபதிகள் முன்பு கொண்டு வரப்படும் மிகக் குறைவான தகவல்கள். பச்சன் சிங் வழக்கின் தீர்ப்பு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் போது அந்த கட்டமைப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கபப்ட்டது. ஆனால் அந்த கட்டமைப்பில் தகவல்கள் முறையாக பெறப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்கும், எத்தகைய தகவல்களை நீதிபதிகள் முன்பு சமர்பிக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்தவில்லை.

இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் குறித்து கிடைக்கும் குறைந்தபட்ச தகவல்கள் அடிப்படையில் தண்டனை வழக்கும் செயல்பாடுகள் ஆரம்பமாகிறது. தற்போது மரணதண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளிகளில் பெரும்பான்மையானோர் பொருளாதார ரீதியாக பின்னடைவு கொண்டவர்கள் அல்லது மோசமான சட்ட பிரதிநிதிகள் மூலம் வழக்கை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறது ப்ராஜெக்ட் டெத் பேனல்டி இந்தியா ரிப்போர்ட் 2016. இதனால் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக, பயிற்சி மற்றும் திறன் கொண்ட சட்ட வல்லுநர்கள்/நிபுணர்களை அவர்களால் அணுக முடிவதில்லை.

சட்டத்தில் இதற்கான வழி இல்லாத போதும் கூட, பல நேரங்களில் நிகழ்ந்த குற்றத்தின் மீதான தங்களின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இதர காரணங்களை நீதிபதிகள் புறக்கணிக்கின்றனர். ஒரு குற்றவாளிக்கான சாதக பாதக சூழல்களையும் காரணங்க்ளையும் எப்படி ஒரு நீதிபதி அணுக வேண்டும் என்பதற்கும் ஒரு காரணத்தை மற்றொரு காரணத்திற்கு எதிராக எப்படி எடை போட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் இல்லை.

தடுப்பு (Mitigation) மற்றும் தடுப்பு காரணங்கள் என்றால் என்ன?

குற்றவியல் விசாரணைகளில் இரண்டு கட்டங்கள் உள்ளன. ஒன்று ஒருவர் குற்றம் செய்தாரா என்பதை நிரூபிக்கும் கட்டம். மற்றொன்று தண்டனை வழங்கும் கட்டம். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அடுத்தக் கட்டம் நோக்கி விசாரணை நகரும். அங்கே தான் அவருக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படுகிறது. தண்டனை வழங்கும் கட்டத்தில் திரட்டப்படும் எந்த தரவுகளும் அதற்கு முந்தைய கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாற்றத்தை வழங்காது.

தண்டனை தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும், அதாவது தண்டனையை நிர்ணயிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சூழ்நிலைகளை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நமது எல்லா முடிவுகளும் செயல்களும் நம் வாழ்வில் உள்ள பல்வேறு காரணிகளின் சிக்கலான இடையீட்டால் விளைகின்றன என்ற உணர்வை இது பேசுகிறது. மேலும் ஒவ்வொரு தனிநபருக்கும் அத்தகைய செயல்கள் வேறுபட்டது என்பதையும் வலியுறுத்துகிறது. ஒரு தனிநபரின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கும் சிக்கலான தன்மை மற்றும் பல்வேறு காரணங்களை பரிசீலிக்க இயலாது என்றால் வழங்கப்படும் நீதி முழுமையற்றதாக இருக்கும்.

யாரால் இத்தகைய தகவல்களை எல்லாம் சேமிக்க இயலும்?

உச்ச நீதிமன்றம் அனைத்து சிக்கலான தகவல்களையும் சேமிப்பது தண்டனை வழங்கும் போது இன்றியமையாதது என்று கருதுகிறது. சாந்தா சிங் (1976) மற்றும் முகமது மன்னன் (2019) தீர்ப்புகள் இத்தகைய பயிற்சியின் இடைநிலைத் தன்மையை அங்கீகரித்துள்ளன, மேலும் இதுபோன்ற தகவல்களைச் சேகரிக்க வழக்கறிஞர்களைத் தவிர வேறு வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள்.

வழக்கறிஞர்கள் இந்த பணியை செய்வதற்காக பயிற்றுவிக்கப்படவில்லை. அதனால் தான் அமெரிக்க பார் அசோசியேஷன் 2003 மரண தண்டனையில் பாதுகாப்பு ஆலோசகரின் நியமனம் மற்றும் செயல்திறனுக்கான வழிகாட்டுதலை வெளியிட்டது.

இந்தியா நீதித்துறையில் இது சாத்தியமா?

தனிநபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் ஒரு அமைப்பில், சட்டத்தின் மூலம் உயிர்களை பறிக்கும் ஒரு அமைப்பில் உயர்ந்த பட்ச நியாயங்கள் வேண்டும். இதனை துவக்கமாக கொண்டு குற்றவியல் நீதி அமைப்பு, உயர்ந்த பட்ச நியாயத்தை வழங்கும் அமைப்புகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

மரண தண்டனை வழக்குகளில் நியாயம் மற்றும் தனிநபர் காரணங்களின் தேவை என்ன என்ற கேள்வியுடன் துவங்க வேண்டும். நடைமுறையை கேள்வியாக கொண்டு பிறகு நியாயம் மற்றும் தனிநபருக்கான நீதியை அதற்கேற்ற வகையில் வரையறுக்க இயலாது.

நடைமுறைச் சீர்திருத்தங்கள் மரண தண்டனையுடன் தொடர்புடைய இதர பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் (1970-94)பணியாற்றிய நீதிபதி ஹாரி பிளாக்முன் மரண தண்டனைக்கு வலுவான ஆதரவை வழங்கினார். மேலும் அமெரிக்காவில் மரண தண்டனையை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றினார். அமர்வில் இருந்த காலத்தில், அமெரிக்க மரண தண்ட அமைப்பு நியாயமாக செயல்படுவதை உறுதி செய்வதில் தன்னுடைய நேரத்தை பயன்படுத்தினார்.

மரண தண்டனையை சீர்திருத்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், தேவையான நியாயத்தை அடைய முடியாது என்றும் நீதிமன்றத்தில் அவர் பணியாற்றிய இறுதி ஆண்டில் அறிவித்தார். “இனி மரணத்தின் இயந்திரத்தை பழுதுபார்க்க என்னால் இயலாது” என்று கூறினார்.

மரண தண்டனையை சீர்திருத்துதல் ஒருபுறம் என்றால் அதை ஒழிப்பதற்கான பாதை மறுபுறம் என்று மிக நீண்ட தூரம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பயணிக்கின்றன. நம்முடைய நாட்டில் இருப்பது போன்ற ஒரு நீதி அமைப்பில் மரண தண்டனையை சீர்திருத்துவதில் ஈடுபடும் ஒவ்வொரு நிகழ்வும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதில் உள்ள நியாயமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.



Read in source website

அதிகரிக்கும் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறை; மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பள்ளிகளில் மேற்பார்வையாளரை நியமிக்க அரசு நடவடிக்கை

Tamilnadu schools to have Special Supervisor for attacks against teachers: அரசு பள்ளிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து பள்ளிகளிலும் ஒரு மேற்பார்வையாளர் அல்லது குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு ஆலோசனை நிபுணர்கள், அவ்வப்போது வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2021 முதல், கொரோனா காரணமாக பள்ளிகள் குறைந்த காலம் மட்டுமே செயல்பட்டாலும், ஆசிரியர்களுக்கு எதிரான 10க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பெரும்பாலானோர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். டிசம்பர் 2021 இல், ஓசூர் மாசிநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஆங்கில ஆசிரியரை அறைந்தார். அதே மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து மற்றொரு 8 ஆம் வகுப்பு ஆசிரியர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் ஒரு மாணவர் தனது தலைமுடியை வெட்டச் சொன்ன தனது ஆசிரியரைத் தாக்க முயன்றார், என்று கூறினார்.

மேலும், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அடங்கிய குழு மூலம், இதுபோன்ற கோபமடைந்து வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களைக் கையாளவும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கவும் விரும்புகிறார்கள். ‘ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு விதியை’ கொண்டு வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

கொரோனா காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளிகள் செயல்பட வில்லை. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தனியார் பள்ளிகளைப் போல ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படுவது இல்லை.  இந்தநிலையில் திடீரென பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதால், அவர்கள் விரக்தி அடைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை கவனமாகக் கையாள வேண்டும், என்று கவுன்சிலிங் வழங்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.



Read in source website

ஒரு ஆத்திரம் அவசரம்னா எங்க “டாய்லெட்” இருக்குனு தேடுறது நம்ம எல்லாருக்கும் ஒரு தலைவலியான விசயம். பெண்கள்னா சொல்லவே வேண்டாம்… சரின்னு வேற வழியில்லாம கார்ப்பரேஷன் டாய்லெடுக்குள்ள நுழைஞ்சா, ஏன்டா போணோம்னு நமக்கே தோணும்.

ஒரு ஆத்திரம் அவசரம்னா எங்க “டாய்லெட்” இருக்குனு தேடுறது நம்ம எல்லாருக்கும் ஒரு தலைவலியான விசயம். பெண்கள்னா சொல்லவே வேண்டாம்… சரின்னு வேற வழியில்லாம கார்ப்பரேஷன் டாய்லெடுக்குள்ள நுழைஞ்சா, ஏன்டா போணோம்னு நமக்கே தோணும். மெரினா பீச்ல இருக்குற எல்லா கழிப்பறைகளும் இதுக்கு ஒரு நல்ல உதாரணம். அங்க ஒரு சில கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்துவிடாம இருக்குற கொடுமையும் கூட உண்டு.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சூப்பரான தீர்வை கையாள உள்ளது. அது என்னனா, பொதுமக்கள் ஒரு கழிப்பறையின் தூய்மை நிலவரம் என்னனு மாநகராட்சிக்கு ஒரு ஆப் மூலமா சட்டனு சொல்றது தான். இந்த புகாரையும் பொதுமக்கள் தரும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்தா சென்னை முழுவதும் மிகவும் தூய்மையான கழிப்பறைகளை பயன்படுத்த முடியும்.

சென்னை சாந்தோமில் நேற்று (03/04/2022) நடைபெற்ற சர்வதேச கழிப்பறைத் திருவிழாவில் கக்கூஸ் என்ற அந்த செயலியை வெளியிட்டார் திருவல்லிக்கேணி – சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்வில் உதயநிதியுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மேயர் ஆர். ப்ரியா, துணை மேயர் மகேஷ் குமார், மைலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“சென்னையில் உள்ள கழிப்பறைகள் மிகவும் தூய்மையான கழிப்பறைகளாக இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகளின் நிலையை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் உதவியுடன் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநகராட்சியில் அமைந்திருக்கும் 1497 கழிப்பறைகளை இந்த செயலியில் இணைத்துள்ளனர். அதில் 806 கழிப்பறைகள் மால்கள், வர்த்தக தளங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் அமைந்துள்ளன.

சென்னை பெருநகரில் உள்ள மாநகராட்சி மற்றும் தனியார் வசம் இருக்கும் கழிப்பறைகளின் நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், அங்கே நிலவும் சுத்தம் குறித்து மதிப்பெண்கள் வழங்கவும், புகார்கள் தெரிவிக்கும் வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் உள்ள சுகாதாரமான கழிப்பறைகள் கண்டறியப்பட்டு சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு உதயநிதி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தார்.



Read in source website

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத் திடலில் ஏப்ரல் 16-ம் தேதி ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் தீவுத் திடலில் ஏப்ரல் 16-ம் தேதி மாலை 6 மணி முதல் ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அதற்காக, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டு வரப்படும் என்று விழாவில் அனைவருக்கும் இலவச அனுமதி என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி என்று கூறினார்.

சென்னையில், பூமி பூஜைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.வி.சுப்பா ரெட்டி, “சென்னையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவாரி கல்யாணம் நடத்தப்படுகிறது. 33 ஏக்கர் பரப்பளவில் இந்த திருக்கல்யாணத்தில் ஒரே நேரத்தில் 1.5 லட்சம் பேர் பக்தர்கள் பங்கேற்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திருமலைக்கு மக்கள் செல்ல முடியவில்லை, அதனால்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி கல்யாண உற்சவத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மைதானம் முழுவதும் தரைவிரிப்புகள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், சென்னை தீவுத் திடலில் நடைபெறும் ஸ்ரீவாரி உற்சவத்தை அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் சிலைகள் சாய்வுதளத்தில் வைக்கப்பட்டு நடுவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு, ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பழம் மற்றும் ஒரு கோவிந்த நாமாவளி கையேடு வழங்கப்படும் என்று ஒய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

ஸ்ரீவாரி உற்சவ விழாவில் வரும் பக்தர்கள் தீவுத்திடலில் உள்ளே வருவதற்கு நுழைவாயில் அண்ணாசாலை பக்கம் இருக்கும். கன்னியாகுமரி, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இதே போன்ற உற்சவங்களை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிசி) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறுகையில், திருப்பதிக்கு தினசரி தரிசன டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஒரு நாளைக்கு 150 டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கமிட்டி பெறுகிறது ஒவ்வொரு டிக்கெட்டும் 300 ரூபாய். டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரியுள்ளோம். மேலும், அவர்கள் ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று சந்தீப் நந்தூரி கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை சென்னை தீவுத்திடலில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவருடன், திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளுர் ஆலோசனைக் குழுவின் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் இருந்தனர்.



Read in source website

ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பைத் தொடா்ந்து, உலக நாடுகளின் பாா்வை இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது. 100 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயகம்; 3 டிரில்லியன் டாலா் மதிப்பு ஜிஎஸ்டி-யுடன் கூடிய உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம்; வல்லரசுகளுக்கு வலு சோ்க்கும் ராணுவ பலம் கொண்ட தேசம் - இவையெல்லாம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடந்த இரண்டு வாரங்களாக உலக நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவா் பின் ஒருவராக வரிசைகட்டி இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறாா்கள். ஜப்பான் பிரதமா், ஆஸ்திரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா், அமெரிக்காவின் துணைச் செயலா், கிரீஸ் நாட்டின் நிதியமைச்சா், ஓமன் நாட்டின் நிதியமைச்சா், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சா், ஐரோப்பிய யூனியனின் சிறப்புப் பிரதிநிதி, ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா் என்று அந்தப் பட்டியில் நீண்டு கொண்டிருக்கிறது.

சா்வதேச அளவில் ஒரு நாட்டின் முக்கியத்துவம் அதிகரிப்பதற்கு, பொருளாதாரம்தான் முக்கியமான காரணியாக இருக்கக்கூடும். பொருளாதார வல்லமை இல்லாத ராணுவ பலத்தால் பலனில்லை என்பதை சோவியத் யூனியன் உலகுக்கு உணா்த்தியது. அதிலிருந்து பாடம் படித்த சீனா, தன்னை ஒரு பொருளாதார வல்லரசாகக் கட்டமைத்துக் கொண்டது. இப்போது இந்தியாவையும் பொருளாதார ரீதியிலான கண்ணோட்டத்துடன்தான் உலகம் பாா்க்கிறது.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சா்வதேசச் சந்தையில் தடம் பதிக்க இந்தியா பகீரதப் பிரயத்னங்களை மேற்கொண்டும் அதைச் சாதிக்க இயலவில்லை. இப்போது நிலைமை மாறி, உலகின் முதல் 15 ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயா்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியின் அளவு 418 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.32 லட்சம் கோடி) உயா்ந்திருக்கிறது என்கிற தகவலை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2018 - 19 நிதியாண்டின் சாதனையான 330 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.25 லட்சம் கோடி) முறியடித்திருக்கிறது கடந்த நிதியாண்டின் ஏற்றுமதியின் அளவு. கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டு அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும் நம்மால் ஏற்றுமதியில் சாதனை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

உலகின் பொருளாதாரம் மீண்டும் விறுவிறுப்படையத் தொடங்கி இருக்கிறது. ரஷியா மீதான பொருளாதாரத் தடையும், சீனப் பொருள்களின் மீதான வெறுப்பும் உலகை இந்தியாவை நாட வைத்திருக்கிறது. உலகின் பல நாடுகளிலும் இந்தியப் பொருள்களுக்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

கடந்த நிதியாண்டில் பல மேலை நாடுகள் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டன. அந்த நாடுகளின் பொருளாதார மீட்சிக்காகப் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முன்வந்தன. அந்த நாட்டு வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடனை அள்ளி வழங்கின. அதனால் பணப்புழக்கம் அதிகரித்து இறக்குமதிகளுக்கான வரவேற்பு அதிகரித்தது.

கொவைட் 19-க்கு முந்தைய 2019 - 20-உடன் ஒப்பிடும்போது 30% உம், கடந்த 2020 - 21-உடன் ஒப்பிடும்போது 46% உம், நடந்து முடிந்திருக்கும் 2021 - 22 நிதியாண்டில் இந்திய ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. மிக அதிக அளவிலான ஏற்றுமதி பெட்ரோலியப் பொருள்கள் என்றாலும் (15%), வேளாண் பொருள்கள், ரசாயனம், இயந்திரங்களும், உதிரிபாகங்களும் போன்றவையும் கணிசமாக ஏற்றுமதி கண்டன.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 10% அளவிலான வேளாண் பொருள்கள், முதல் பத்து மாதங்களிலேயே 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3 லட்சம் கோடி) கடந்து விட்டதாக வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்திருக்கிறாா். அதில் மிக அதிகமான ஏற்றுமதி கோதுமை என்றாலும், அரிசி, சா்க்கரை, வாசனை திரவியப் பொருள்கள் போன்றவையும், கடல்சாா் பொருள்களும்கூட கணிசமாகவே பங்களிப்பு நல்கின.

இயந்திரப் பொருள்கள் (26%), ரசாயனப் பொருள்கள் (7%), மருத்துவம் (6%) மட்டுமல்லாமல் பருத்தி, அலுமினியம் போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த ஏற்றுமதியை எட்டியிருக்கின்றன. இந்தியப் பொருள்களுக்கான பிரதான சந்தைகள் என்று கருதப்படும் அமெரிக்க (17%), சீனா (6%), ஐக்கிய அரபு அமீரகம் (7%) ஆகியவற்றைக் கடந்து துருக்கி, பெல்ஜியம், இந்தோனேஷியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, பிரிட்டன், பிரேஸில், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் கடந்த நிதியாண்டில் திடீா் அதிகரிப்பைக் கண்டிருக்கின்றன. இது தொடர வேண்டும்.

ஏற்றுமதியாளா்கள், தங்களது உற்பத்தியை துறைமுகங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளைக் கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு முனைப்புடன் அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதியாளா்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கியும் ஊக்குவித்திருக்கிறது. அதன் பலனை இப்போது நாம் உணர முடிகிறது.

நமது ஏற்றுமதிகள் 400 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) கடந்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைவது சரி. அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் மொத்த ஜிடிபி-யில் 18%-ஆக இருந்த ஏற்றுமதிகள், இப்போது சுமாா் 11% அளவில்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். ஏற்றுமதிக்கான முனைப்பு தொடர வேண்டும்.



Read in source website

"நூறுநாள் வேலை திட்டம்' என அறியப்படும் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்' தொடங்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முதலாவது, கிராமப்புறங்களில் குறைந்தபட்ச வேலை  உறுதி செய்யப்படுவது. இரண்டாவது, கிராமப்புறங்களில் குறைந்தபட்சமாக சில அடிப்படை வசதிகளை உருவாக்குவது.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டொன்றுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துதல், பெண்களுக்கு வேலைவாய்ப்பு தந்து அவர்களை தங்கள் சொந்த காலில் நிற்க வைப்பது, கிராமப்புற மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி, அதன்  மூலம்  பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்றெல்லாம் விரிவாகத் திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக, 200 மாவட்டங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் அரசாங்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. 

அரசின் இணையதளங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை  நபர்களுக்கு எத்தனை நாட்கள்,  எந்தெந்த வேலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல் பதிவிடப்பட்டுள்ளது. நபர்களின் பெயர்கள், பதிவு எண்கள் உள்ளிட்ட  தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. ஆனால், கள நிலவரம் வேறு மாதிரி உள்ளது. 

நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டங்கள் பலவும், அவற்றை சரிவர கண்காணிக்காததாலும், செயல்படுத்தாததாலும் பாழ்பட்டு விடுகின்றன. அது போல,   சில திட்டங்கள் எந்த அளவுக்கு நல்ல பலன்களைத் தருகின்றனவோ அதே அளவுக்கு எதிரான பலன்களையும் தருகின்றன. இதற்கு இந்த திட்டம் ஒரு உதாரணமாகும். 

மிக மிக பின்தங்கிய, சாலை வசதியோ பிற அடிப்படை வசதிகளோ அற்ற ,  விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாத கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது அது அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பயனை அளிக்கும் என்பது சரியே.

மாறாக, அடிப்படை வசதிகள் பெருமளவு நிறைவு செய்யப்பட்ட கிராமங்களிலும், நல்ல நீர்ப்பாசன வசதி உள்ள கிராமங்களிலும், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் அதிகம் பேர் தேவைப்படும் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது,  அது இரண்டு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

முதலாவதாக, இத்திட்டத்தில் செலவிடப்படும் நிதி அத்தியாவசிய பணிகளுக்கு செலவிடப்படுவதில்லை. அதனால், வேலையும் சரிவர நடப்பதில்லை. இரண்டாவதாக, இந்த வேலையில் உத்தரவாதமாக பணம் கிடைப்பதால், மக்கள் விவசாய வேலைகளுக்கு செல்வதைத் தவிர்க்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய வேலைகள் பாதிக்கப்படுகின்றன. பல கிராமங்களில், நூறுநாள் வேலை திட்டம், விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. 

தமிழ்நாட்டில், கிராமப்புற மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து தருவதுடன், உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. மேலும், தாய்-சேய் நலத் திட்டங்கள், பேறு காலத்தில்  பெண்கள் நலம் சார்ந்த திட்டங்கள், பெண்களின் படிப்புக்கான இலவச கல்வித் திட்டம், இலவச சத்துணவுத் திட்டம், பெண்களுக்கு திருமண நிதி உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு, முதியோருக்கு மாத பென்ஷன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

பல கிராமங்களில் குளம், கால்வாய் தூர்வாருதல், சாலை சீரமைப்புப் பணி, மரம் நடுதல், மாட்டுக் கொட்டகை கட்டுவது போன்ற எந்த பணியும் நடைபெறவில்லை என்பதுதான் கள நிலவரம். ஆனால், சுமார் 7,500 மனித நாட்கள், குறிப்பிட்ட  6 மாதங்களில் மட்டும் செலவிடப்படுவதாக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, வியப்பளிக்கும் தகவலாகும். 

பல்வேறு கிராமங்களில், கள நிலவரம் இவ்வாறுதான் உள்ளது என்பதை, சிஏஜி எனப்படுகின்ற கணக்குத் தணிக்கைக் குழு அளித்திருக்கும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது (தணிக்கைக் குழு அறிக்கை-2018).

தணிக்கைக் குழு, இத்திட்டத்தினை பல்வேறு கோணங்களிலும் ஆய்ந்து தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக, திட்டமிடுதல், நிதி ஆதாரங்களைக் கணக்கிடுதல், பணம் பட்டுவாடா செய்தல் போன்றவற்றில் கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பு சிறிதும் இல்லை என்பதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.மேலும் பல்வேறு விதிமீறல்களையும் சுட்டிக்காட்டுகின்றது. பல இடங்களில் பணிகள்  நடைபெறவில்லை என்பதோடு, அவற்றை கண்காணிப்பதற்கான அமைப்பு எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.  

மத்திய அரசாங்கத்தின் திட்டமாகக் கருதப்பட்டாலும், இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்துவது மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது. அந்த வகையில், இத்திட்டத்தை, கேரள மாநிலம், சிறப்பாக, முன்மாதிரியாக செயல்படுத்துகிறது. இதனையும் தணிக்கைக் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

கேரளத்தில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தனது தேவைகளின் அடிப்படையில் திட்டங்களை தீட்டுகிறது. ஒரு ஆண்டுக்கான முழு திட்டங்கள், அந்தத் திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது. மேலும், பெண்கள் சுய உதவி குழுக்கள், இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட பணிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்  பெண்களை இத்திட்டங்களில் பங்கெடுக்கச் செய்கிறது. 

கேரளத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு இந்த நூறுநாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பின்னணியில், இத்திட்டம் குறித்து திறந்த மனதுடன் விவாதம் பல தளங்களில் நடத்தப்பட வேண்டும். பல தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு, அரசு நிதி பயனுள்ள வகையில் செலவிடப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.



Read in source website

நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் தொடங்கி வரலாறு வரை இலங்கை தேசம் இடம் பெற்றிருக்கிறது. கம்பராமாயணத்தில், குபேரனின் வாசஸ்தலம் என்றும் ஐஸ்வரிய லட்சுமி குடிகொண்ட தேசம் என்றும் இலங்கை சொல்லப்பட்டிருக்கிறது.

"ஈழ நாட்டுக் குறம்' என்ற நூல், கனிபெற என்றொரு குறத்தி காதணியை வீச 
கடுவனதைக் கைபிடித்து காதலிதன் காதில் நனிஅழுத்த.. என்று கூறுகிறது.

அதாவது, மரத்தில் இருக்கும் கனியை விரும்பிய பெண், அதனை வீழச் செய்வதற்காக தன்னுடைய காதணியைக் கழற்றி எறிகிறாளாம்.

மரத்திலிருந்த ஆண்குரங்கு காதணியைப் பிடித்து, தன்னுடைய காதலி குரங்குக்கு அணிவிக்கிறதாம். இப்படி வளமான நாடு என்று இலங்கையை வர்ணிக்கிறது அந்நூல்.

அத்தகைய இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலைகுலைவால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகமே இலங்கையை பரிதாபத்தோடு பார்க்கிறது. பஞ்சம் பீடித்திருக்கும் இந்த தேசத்திலிருந்து வெளியேறினால்தான் வாழ்வென்பதே சாத்தியம் என இலங்கையின் இளைஞர்கள் தங்கள் நாட்டைத் துறந்து வெளிநாடுகளில் தஞ்சமடைய பலநாட்டுத் தூதரகங்களின் வாயிலில் வரிசையில் காத்திருக்கின்றனர். உயிரைப் பணயம் வைத்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் படகில் வந்திறங்கியவர்கள் அங்கே நிலவும் பஞ்சத்திற்கு சாட்சியாக நிற்கின்றனர். 

அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு என்று சென்ற ஆண்டு முதலே இலங்கையில் பிரச்னைகள் தலைதூக்கின. கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் ஒருபுறம். அதே நேரத்தில் அரசின் தவறான கொள்கை முடிவுகளால் தோன்றியிருக்கும் சிக்கல்கள் மறுபுறம். அரசு கையறு நிலையில் இருக்கிறது. 

நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் கடன் வாங்கியும் வருகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.

இலங்கையில் பெரும்பாலும் மின் உற்பத்தி நிலையங்கள் டீசலை நம்பியிருப்பவை. டீசல் இறக்குமதிக்கான வசதி இன்மையால் அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. சில உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பல மணி நேர மின்வெட்டு நீடிக்கிறது.

பெரும்பாலான இடங்களில் 13 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களான  பால் மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தட்டுப்பாடு விலைஉயர்வுக்குக் காரணமாகியிருக்கிறது.    

ஒரு கிலோ பால் பவுடர் இரண்டாயிரம் ரூபாய், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நான்காயிரத்திற்கும் மேல், ஒரு லிட்டர் பெட்ரோல் 254 ரூபாய், டீசல் ஒரு லிட்டர் விலை 176 ரூபாய்.  அதற்கும் கூட்டம், தள்ளுமுள்ளு. 
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ராணுவப் பாதுகாப்பு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் பணத்திற்கு அலைந்தால் மற்றவர் பொருள்கள் வாங்குவதற்கான வரிசையில் காத்திருப்பது என்று இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை நகர்கிறது.      

இதனால் பொறுமை இழந்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதால் அதிபர் பதவி விலகக்கோரி அதிபர் மாளிகை முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்  மக்களைக் கலைந்து போகச் செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், இலங்கையில் அவசரநிலை பிறப்பித்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபட்ச. இது குறித்த அவரின் அறிவிப்பில், "பத்து நாள் இந்த அவசரநிலை நீடிக்கும்; அதன்பின் நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டங்கள் இந்த அவசரநிலையினால் செயலிழக்கும். அவசரநிலை காலங்களில் கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமை இல்லாமல் போகும்.

பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் நபர் என்று கருதும் ஒருவரை மூன்று மாத காலத்திற்கு எவ்வித விசாரணையும் இல்லாமல் சிறைபடுத்த முடியும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார் எனக் கருதும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்புப் பிரிவுக்கு இந்த சட்டத்தினால் கிடைக்கும். இதனால் சுதந்திரமில்லாத சூழல் ஏற்படலாம்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள், பொருள்களைப் பெறமுடியாத நிலையில் மக்களின் ஏமாற்றம் இவை அவர்கள் மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால்தான் போராட்டங்கள் வெடித்தன.

அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை சரியான முறையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். பொது சொத்துகள் பாதுகாக்கப்படும்.

அவசர நிலையின் சாதக பாதகங்கள் ஒருபுறமிருக்க, ஒரு தேசம் இத்தகைய நெருக்கடிக்கு உள்ளாவதற்கான காரணங்களை நோக்க வேண்டியது அவசியம். உலக நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை பாடம் கற்றுக் கொடுக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை உற்பத்தி, சுற்றுலா இவற்றைப் பொறுத்தே இருக்கிறது. உலகம் முழுவதும் நிலவும் கொள்ளை நோய்த்தொற்று குறித்த அச்சத்தால் சுற்றுலா சார்ந்த வருமானம் முற்றிலும் இல்லாமல் போயிருக்கிறது. 

தேயிலை உற்பத்தியும், ஏற்றுமதியும் நாட்டையே வாழ வைத்து வந்த நிலையில், நூறுசதம் இயற்கை முறை விவசாயத்தை முன்னெடுப்பதாகக் கூறி, சென்ற ஆண்டு அரசு செயற்கை உரங்களுக்குத் தடை விதித்தது. இதனால் தேயிலை உற்பத்தியும், ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்து விட்டன. 

முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், படிப்படியாக செய்து வெற்றி கண்டிருக்க வேண்டிய திட்டம், நாட்டின் சரிவுக்கே காரணமாகி விட்டது.   

அரசின் தவறான முடிவுகளும், ஊழலும் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரிக்குறைப்பு செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த கோத்தபய ராஜபட்ச, ஆட்சிக்கு வந்ததும் அரசின் வரிகளை ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைத்து விட்டார். இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை சரிசெய்ய அவரிடம் திட்டம் ஏதுமில்லை. வரிவருவாய் குறைந்த பின்னர், மேம்பாட்டுத் திட்டங்கள் சாத்தியமற்றுப் போய்விட்டன. 

அந்நிய செலாவணி இருப்பு குறைந்ததால் பண மதிப்பு குறைந்துள்ளதும், அதனால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வும் மோசமான நிதி நிர்வாகத்தின் சான்றுகள். அத்தியாவசியப் பொருள்களுக்கு, பிற நாடுகளை எதிர்பார்க்காமல் தங்கள் நாட்டில் அதற்கான உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமையும் ஒரு காரணம்.  

இலங்கை மக்களின் இன்றைய நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, மக்களும் ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்கும் கட்சிகளை மக்கள் ஆதரித்து ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும். அப்படி இல்லாமல் இனவாதம் பேசும் கட்சிகளின் பக்கம் நிற்பது எந்நாளும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது. 

இலங்கை அரசியல் எப்போதும் இனவாதத்தையே கையில் எடுத்து செயல்படுகிறது. சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று தேசம் பிளவுபட்டு நிற்கிறது. ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டுவது அங்கே சாதாரணமாக இருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி அந்த மக்கள் ஒன்று கூடி உழைக்கும் பொழுதுதான் சாத்தியமாகும். 

அரசியல்வாதிகள், தங்களின் சுய லாபத்திற்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் இனவாத சிந்தனையை மக்கள் மனங்களில் விதைக்கிறார்கள். அரசியல்வாதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஜனநாயகத்தில் குடிமக்களின் கடமை. 

ஓர் இனம் அழிய மற்றோர் இனம்  வேடிக்கை பார்க்குமானால், தனக்கும் அத்தகைய நிலை நாளை ஏற்படக்கூடும் என்ற புரிதல் இல்லாமல் போகுமானால் அந்த தேசத்தின் வீழ்ச்சியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கையின் வீழ்ச்சி கற்றுக்கொடுக்கும் பாடம் இதுதான்.



Read in source website

 

காந்தி 1927-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்றார். அப்போது நவம்பர் 26 முதல் 29 வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவரது மனைவி கஸ்தூரிபா, சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் அவரது மகள் லட்சுமி ஆகியோர் சென்றனர்.

மகாத்மா காந்தியின் இலங்கைப் பயணத்தில் அவரது செயலாளர்கள் மகாதேவ் தேசாய் மற்றும் பியாரே லாலும் உடன் வந்தனர். அந்தத் தருணத்தில் வல்லிபுர ஆழ்வார் கோயிலில் காந்தி உரை நிகழ்த்தினார். அதன் நினைவாக அக்கோயிலின் ராஜகோபுரத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.  அண்டை நாடான இலங்கைக்கு சென்ற காந்தி மூன்று வாரம் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டார்.

அவருடைய வருகை இலங்கை மக்களிடையேயும் விடுதலை உணர்வைத் தோற்றுவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தோட்டங்களிலே கூலி வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்களுடைய நிலையே நோக்கப்படவுள்ளது. இது எதிர்காலத்திலே இளைய தலைமுறையினர் விரிவான ஆய்வுகளைச் செய்வதற்கு வழிவகுக்கும்.

காந்தியின் இலங்கை வருகை பற்றிய செய்திகளை அக்காலத்துத் தமிழ்ச் செய்தித்தாள்கள் பதிவு செய்திருந்தன. பிற்கால நூல்களிலும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 'தினகரன்' (இலங்கையில் வெளிவரும்) செய்தித்தாளின் பதிவுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் மூன்று வாரங்கள் தங்கிய நாள்களில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை, காலி, சிலாபம், ஹட்டன் உள்பட பல முக்கிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சிலாபத்திலுள்ள கொரியாவின் மாளிகையிலே தங்கியிருந்தார். மகாத்மா காந்தி ஹட்டன் காசல்ரீ சமர்வில் தோட்டத்திலுள்ள செட்டியார் ஒருவரின் பங்களாவிலும் ஒருநாள் தங்கியிருந்தார். தற்போது அந்த பங்களா சமர்வில் தமிழ் வித்யாலயமாக இயங்குகிறது.

செட்டியாரின் கல்லறை இன்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் காட்சியளிக்கின்றது. மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு பயணம் மேற்கொண்ட காந்தி 35 முக்கிய உரைகளை நிகழ்த்தியதுடன் மாத்தளை விஜயத்தின்போது அவர் அடிக்கல் நாட்டிய பாடசாலையே பாக்கிய தேசியக் கல்லூரியாகும். காந்தியின் சுற்றுப்பயணத்தின்போது இயங்கக் கூடிய அளவிலான அமைப்புகள் இல்லாதபோதும் மன்றங்களே அதிகளவில் இயங்கின. அவ்வாறான நிலையில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மகாத்மா காந்தி இந்தியாவுக்குத் திரும்பிச் செல்கையில் "திடமான அமைப்பொன்று இலங்கையில் அவசியமானது, இல்லையெனில் சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு நெருக்கடிகளைத் தமிழர்கள் சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.

'உலகப் போராளி உத்தமர் காந்தி' என்ற நூலை எழுதிய இலங்கையர் இ. கிறிஸ் கந்தராசா என்பவர் தமது நூலிலே மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில் என பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில்,

13.11.1927 கொழும்பு விவேகானந்த சபை

15.11.1927 கொழும்பு மாநகர சபை

15.11.1927 கொழும்பு ஆனந்தாக் கல்லூரி

15.11.1927 நாலந்தாக் கல்லூரி

18.11.1927 மாத்தளையில் பொதுக் கூட்டம்

18.11.1927 கண்டி தர்மராஜா கல்லூரி

18.11.1927 கண்டி பொதுக் கூட்டம்

19.11.1927 பதுளையில் பொதுக் கூட்டம்

20.11.1927 நுவரெலியா விஜயம்

22.111927 கொழும்பு சகிரா கல்லூரி

22.111927 இலங்கை தேசிய காங்கிரஸ்

23.11.1927 காலியில் பொதுக் கூட்டம்

24.11.1927 காலி மகிந்தா கல்லூரி பரிசளிப்பு விழா

24.11.1927 கொழும்பு ரெட்டியார் சங்கம்

25.11.1927 யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டம்

26.11.1927 யாழ். மாணவர் காங்கிரஸ்

26.11.1927 யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி

29.11.1927 யாழ். மத்திய கல்லூரி

உடுவில் மகளிர் கல்லூரி

சுன்னாகம் இராமநாதன் கல்லூரி

சுன்னாகம் ஸ்கந்தவரோயக் கல்லூரி

மேலும், இந்நூலில் காந்தியின் யாழ்ப்பாண வருகை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் கண்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு மாற்றமும் சேய் நாடான இலங்கையிலும் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட சுதந்திர தாகம் யாழ்ப்பாண மாணவரிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1920 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் ஹண்டி பேரின்ப நாயகம் தலைமையில் ஆரம்பமானது.

இவருடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள் ஒறேற்றர் சுப்பிரமணியம், செனட்டர் பி. நாகலிங்கம், செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம். அட்வகேட் பாலசுந்தரம், பேராசிரியர் சுந்தரலிங்கம், பேராசிரியர் நேசையா, செனட்டர் சுப்பையா. நடேச பிள்ளை ஆகியோராவர் (அக்கால கூட்டத்தில் இவர்கள் மாணவர்கள்)

மகாத்மா காந்தியின் வரவேற்புக்கு மேற்கூறப்பட்டவர்களுடன் யாழ்ப்பாண மக்கள் இன, மத வேறுபாடின்றி ஒத்துழைத்து மகாத்மா காந்தியை வரவேற்றனர். இவற்றைவிட சர். பொன்.இராமநாதன் (HINDU BOARD) இராஜரத்தினம் போன்றோரும் மகாத்மா காந்தியை இராமநாதன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெரிய வரவேற்பும் நடந்தது. காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தபோது அவரைக் கௌரவிக்க மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. காந்தி சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்புகள் வழங்கப்பட்டன.

மகாத்மா காந்தியின் எண்ணக் கருத்துகளால் கவரப்பட்ட இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தினர் பலர் வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தனர். கதர் ஆடையை அணிந்தனர். இவர்களுள் ஹண்டி பேரின்ப நாயகம். சுப்பிரமணியம், கனகநாயகம், நேசையா, செனட்டர் பி.நாகலிங்கம் இன்னும் பலர் வாழ்நாள் முழுவதும் தேசிய உடையையே  அணிந்தனர்.

இக்குறிப்புகள் காந்தியின் இலங்கை வருகையைப் பற்றிச் சுருக்கமான தகவல்களையே தருகின்றன. எனினும் காந்தியின் வருகையைப் பற்றிய பகுப்பு நிலையைச் செய்வதற்கு முன்னோடித் தரவுகளாகக் காணப்படுகின்றன.

அவர் சென்ற இடங்களும் நிகழ்த்திய உரைகளும் இலங்கையில் உள்ளவர்களின் விடுதலை உணர்வை எவ்வளவு தூரம் விரைவுபடுத்தியது என்பதையும் உய்த்துணர முடிகிறது. இந்த உரையிலே விரிவாக அது பற்றி ஆராய்வதற்கு இடமின்மையால் காந்தியின் சிந்தனைகளின் பதிவு நிலை பற்றிய சுருக்கமான கருத்துப் பதிவையே செய்ய முடியும். மேலும் கருத்தரங்கின் கருப்பொருள் என்ற கட்டமைப்பில் உள்ளே நின்று கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டிய வரையறையையும் பேண வேண்டியமை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

காந்தியின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள்

காந்தியின் வருகையால் மூன்று சமூகத்தளங்களிலே மாற்றங்கள் ஏற்பட்டன. 

1: பொதுக்கூட்ட நிலை

2. இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு நிலை

3. கல்லூரிகள் என்ற நிலை

இத்தளங்களிலே ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிய பதிவுகளையும் செய்தித்தாள்கள் மூலம் கணிக்க முடிகிறது. காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது மேற்கூறிய மூன்று தளங்களின் செயற்பாடுகளையும் இன்று நாம் அறிவதற்கும் அச்செய்திகளே பெரிதும் உதவியாயுள்ளன.

குறிப்பாக, இலங்கையில் காந்தியின் வருகை பற்றிய செய்திப் பதிவுகள் பரிமாறப்பட்டபோது மீள் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகள் மாற்றங்களை விளங்கிக்கொள்ள உதவுகின்றன.

அப்பதிவுகள் சில பின்வருமாறு அமைந்துள்ளன. இவை இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை.

பொதுக் கூட்ட நிலையில் நாட்டு விடுதலை பற்றிய உணர்வு இலங்கை மக்களிடையே பரவுவதற்கு வாய்ப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் தேவை நன்கு உணரப்பட்டது. அக்காலத்தில் அந்நியராட்சிக்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்ற மனோநிலை மக்களிடையே தோன்றலாயிற்று, மகாத்மா காந்தி இலங்கைக்கு வருமுன்னதாகவே அவருடைய வருகை பற்றிய செய்தியைச் செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன.

இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரரான சி.இ.கொரியா மற்றும் அவருடைய சகோதரர் விக்டர் கொரியா ஆகியோரின் அழைப்புக்கிணங்கியே மகாத்மா காந்தி தனது மனைவி கஸ்தூரிபாவுடன் இலங்கைக்கு வந்திருந்தார். சிலாபத்தில் கொரியாவின் வீடு அமைந்திருந்தது. அந்த வீட்டிற்குச் சிகிரியா என்று பெயரிடப்பட்டிருந்தது.

அந்த 'வீட்டிற்கு அண்மையிலிருந்த "நைனாமடம்’ கிராமத்திற்கும் மகாத்மா காந்தி சென்றிருந்தார். அவரது வருகையின் காரணமாக அந்தக் கிராமம் அப்போது ’ஸ்வராஜ்யபுரம்’ என்று பெயர் மாற்றம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டிலிருந்த டொரின் என்ற ஒன்பது வயதுச் சிறுமி காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்புப் பற்றி வருமாறு கூறியுள்ளாள்.

"மகாத்மா உள்ளே வரும்போது நீலநிறத் தாவணியணிந்திருந்த என்னுடைய தங்கை நேன், அவருடைய கழுத்திலே மாலை இட்டாள். அந்த குட்டிப் பெண்ணின் வரவேற்பில் மகிழ்ந்த காந்தி, நேனை “காந்தியின் இனிமையான குட்டி இதயம்" என்று ஆங்கிலத்தில் விளித்தார். “சிகிரியா” வீட்டில் காந்திக்கு பேரீச்சம் பழங்களும் அவர் விரும்பி அருந்தும் ஆட்டுப்பாலும் அளிக்கப்பட்டன. மகாத்மா காந்தி தாம் நூல் நூற்கும் கருவியை எனது தந்தை கொரியாவுக்குப் பரிசாக அளித்தார்.

இப்பதிவு ஒரு சிறுமியின் உள்ளத்திலே காந்தியின் இலங்கை வருகை ஒரு வியப்பையும் பெருமகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதை உணர வைக்கிறது.

அதேநேரம், காந்தியின் கல்லூரிகளுக்கான வருகை இளையவர் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பத்திரிகைச் செய்தி வருமாறு அதைப் பதிவிட்டுள்ளது.

பௌத்த தியோசோஃபிகல் சொசையிட்டியினால் 1892 ஆம் ஆண்டில் மகிந்த கல்லூரி காலியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற மகாத்மா காந்தி அங்கு கல்வி கற்ற மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அதேபோல் கொழும்பில் அமைந்துள்ள ஆனந்தாக் கல்லூரிக்கும் சென்ற அவர் இலங்கையின் அழகைப் பற்றியும் அந்த மாணவர்களைக் காண்பதில் தாம் அடைந்த மகிழ்ச்சியைப் பற்றியும் கருத்துரைத்தார். மேலும், கண்டி தர்மராஜ கல்லூரிக்குச் சென்ற அவர் அங்கிருந்த மாணவர்களிடையே புகை பிடிப்பதன் தீமைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் மாத்தளைக்குச் சென்ற காந்தியின் கரங்களால் பாக்கியம் தேசிய கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னாளில் அது கட்டி முடிக்கப்பட்டு சர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இன்று இது மாத்தளையின் புகழ்பெற்ற பெண்கள் கல்விக் கூடமாகத் திகழ்கின்றது.

மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்து கல்லூரிகளிலே ஆற்றிய உரைகள் மாணவர்களைப் பெரிதும் ஈர்த்தன. பொதுமக்களும் சுதந்திரம் பற்றிய விளக்கங்களைப் பெற்றனர். அதனால், மகாத்மா காந்தியின் அகிம்சை இயக்கத்திற்காக நன்கொடை வழங்கினர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவருடைய பயணத்திலே பங்கு கொண்டனர். இலங்கை சார்பில் அப்போதைய ரூபா மதிப்பில் மொத்தம் 1,05,000 ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இலங்கையின் சில பாடசாலைகள் முன்வந்து காந்தி இயக்கத்திற்காக வழங்கிய நன்கொடை விபரம் வருமாறு:

நன்கொடை விபரம்

15.11.1927 ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு ரூ.400.00

15.11.1927 நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 400.00

15.11.1927 வித்யோதய கல்லூரி, கொழும்பு 600.00

18.11.1927 தர்மராஜாக் கல்லூரி, கண்டி 111.00

22.11.1927 சகிராக் கல்லூரி, கொழும்பு 400.00

24.11.1927 மகிந்தாக் கல்லூரி, காவி 465.00

29.11.1927 சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் 258.00

29.11.1927 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் 279.00

29.11.1927 இராமநாதன் பெண்கள் கல்லூரி, யாழ்ப்பாணம் 1111.08

29.11.1927 யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் 600.00

காந்தி யாழ்ப்பாணம் வருகை தந்த வேளையில் அங்கு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (JAFFNA YOUTH CONGRESS) என்ற அமைப்பு இயங்கி வந்தது. இது 1924 ஆம் ஆண்டிலே தொடக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இலங்கைக்கு முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதன்முதலாக ஓர் அமைப்பு நிலையில் முன்வைத்த பெருமை இந்த அமைப்பையே சாரும்.

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டிலும் காந்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை இளைஞர்களிடையே அரசியல் அடிப்படையில் தமக்கு வழிகாட்ட அயல்நாட்டில் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை உருவாகியது. செய்திகள் மூலமாக அறிந்திருந்த காந்தியை நேரில் கண்டதும் அவர் உரைகளைக் கேட்டதும் இதற்குக் காரணங்களாக அமைந்தன. இந்தியாவின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் மகாத்மா எவ்வளவு விரும்பினாரோ அதே அளவு அக்கறையை அவர் இலங்கை மீதும் கொண்டிருந்தார். ஆனால் 1927 ஆம் ஆண்டு காந்தி இலங்கைக்கு மேற்கொண்ட வருகையை அவரது முதல் வருகையும் இறுதி வருகையுமாக அமைந்துவிட்டது.

தமிழ்ப் பெண்களின் நிலையும் சுதந்திர நோக்கும்

அக்காலத்தில், கல்வியில் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் நிலை  முன்னேற்றம் பெற்றிருந்தது என்று கூறுவதற்கில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெண்களின் கல்விப்பேறு மட்டுப்படுத்தப்பட்டதாக மேட்டுக்குடியினருக்கே வாய்ப்பளிப்பதாக இருந்தது.

யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களின் பண்பாட்டு நிலையான வாழ்வும் இதற்கு ஒரு தடையாக இருந்தது. பிரிட்டிஷார்  நிர்வாகக் கட்டமைப்பிலே பெண் கல்வி இடம் பெற்றிருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருந்தன. மரபான வாய்மொழிக் கல்வியும் திண்ணைப் பாடம் பயிலும் பெண்களை உள்வாங்க முயற்சியெடுக்கவில்லை. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற பழமொழியைப் பேணும் நிலையே இருந்துள்ளது. மேலும் பருவமடைந்த பெண்களைத் திருமணமாகும் வரை வீட்டிற்கு வெளியே அனுப்பாத மரபும் பேணப்பட்டது.

இந்நிலையிலும் பெண்கள் கல்லூரிகள் சில அமைக்கப்பட்டன. அந்த வகையில் 1896 ஆம் ஆண்டு அங்கிலிக்கன் திருச்சபையின் ஒரு பிரிவான சேச் மிஷனால் (CMS) நிறுவப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும் 1824 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடுவில் மகளிர் கல்லூரியும் குறிப்பிடத்தக்கவை யாகும்.

உடுவில் மகளிர் கல்லூரி அமெரிக்கன் மிஷனரியால் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரியாகும். கிறிஸ்தவ சமயப்பரப்பலின் விளைவாகவே இப்பெண்கள் கல்லூரிகள் தோன்றின.

ஆனால், 1913 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம் என்னும் இடத்தில் பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட கல்லூரி சைவத் தமிழ் பெண்கள் ஆங்கிலக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடனேயே நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரிக்கும் காந்தி சென்றிருந்தார். மேலைத்தேய ஆட்சியின் கீழ்க்கல்வி முன்னெடுக்கப்பட்டபோது இத்தகையதொரு நிலைமை இருந்தமையால் பெண்கள் சுதந்திர நோக்கு ஆங்கிலக் கல்வியைப் பெறுதல் என்ற குறுகிய நோக்குடையதாகவே இருந்தது. இராமநாதன் கல்லூரியில் காந்தி ஆற்றிய உரையைத் தற்போது வெறும் செய்தியாகவே அறிய முடிகிறது.

அவருடைய இயக்கத்திற்கு இராமநாதன் பெண்கள் கல்லூரியே ஏனைய கல்லூரிகளைவிடக் கூடுதலான நிதிப்பங்களிப்பைச் செய்திருப்பது சுதந்திரம் பற்றிய ஒரு சிறு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கொள்வதற்கு இடமளிக்கிறது. எனவே, காந்தியின் இலங்கை வருகை யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்களிடையே ஒரு சுதந்திர உணர்வைத் தோற்றுவித்தது என்று கூறுவதற்கில்லை. ஆனால், ஆண்களைப் போல கல்லூரிக்குச் சென்று உயர்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் பெற வேண்டுமென்ற ஒரு நோக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இலங்கையில் மலையகப் பகுதியில் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் தேயிலை, ரப்பர் தோட்டங்களிலே கூலியாக வேலை செய்வதற்கெனத் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் ‘மலையகத் தமிழர் என்ற பெயரோடு வாழ்ந்தனர். அவர்களுடைய வாழ்வியல் சமூக நிலையில் ஓர் அடிமை வாழ்வியலாகவே இருந்தது. 'தோட்டக்காட்டார்' என்றொரு பெயராலும் அம்மக்கள் கேலியாக அழைக்கப்பட்டனர். கல்வியறிவு பெறமுடியாத தினக்கூலியாளர்களாக வாழ்ந்த அவர்களைப் பற்றிய செய்திப் பதிவுகள் நிறைய உள்ளன. ஆனால், இந்த உரையிலே குறிப்பாகப் பெண்கள் நிலை பற்றியே எடுத்துரைப்பது என்ற ஒரு வரையறை செய்யப்பட்டிருப்பதால் மலையகத்துத் தமிழ்ப் பெண்கள் பற்றிய நிலையே கூறப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மாள் நடேசய்யர் என்ற மலையகத்தில் வாழ்ந்த கவிஞரும் எழுத்தாளருமான பெண்மணியின் எழுத்துகளே இன்று தனித்துவமாகப் பெண்கள் பற்றிய நிலையை அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. இவர் மலையகத்தின் முதல் பெண் கவிஞர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரது கவிதைகள் மலையகத் தமிழர்களின் பொருளாதார வாழ்வியல் சிக்கல்களைப் பதிவு செய்துள்ளன. அவர்களை உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டுவதாக அமைந்துள்ளன. இன்னும் மீனாட்சியம்மாள் மலையக அரசியல்வாதியும் தமிழறிஞரும் பதிப்பாளருடைய நடேசய்யரின் மனைவியாக விளங்கியமையால் சுதந்திர உணர்வுடையவராக விளங்கினார்.

இலங்கையில் பெண்களின் வாக்குரிமைக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தவர். இவரது கவிதைகள் இந்தியத் தொழிலாளரின் துயரங்களைப் பதிவு செய்துள்ளன. கவிதையின் மொழிநடை மிக எளிமையாக இருந்ததால் எல்லோரும் படித்து விடுதலையுணர்வு பெற வைத்தது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் மக்கள் ஒரு மகிழ்ச்சியான வாழ்வையே எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது என்பதை பின்வரும் கவிதையிலே காட்சிப்படுத்தியுள்ளார்.

"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்

பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்

தாய்நாடென் றெண்ணி யிருந்தோம் - இவர்கள்

தகாத செய்கை கண்டு மனமிக நொந்தோம்''

ஒரு பெண் என்ற பார்வையில் மிகத் துணிவாக . அப்போதைய வாழ்வியல் நிலையை அவர் பதிவு செய்திருப்பது ஒரு சுதந்திர நோக்கையே புலப்படுத்துகிறது. அவருடைய கும்மி, மெட்டிலே அமைந்த பாடற்பகுதி அரசியல் உணர்வை வெளிப்படுத்துவதாக வருமாறு அமைந்துள்ளது.

’ஏற்படப் போகின்ற போர் தனக்கே

பலமாய் எதிர்த்திட வேணும் நாமெல்லாரும்

பண்பாகக் கூடிட வாருங்களே

இந்தியர் இலங்கையைச் சுரண்டுகிறார் என்று

எக்காலம் கொட்டிடும் இலங்கையர்கள்

சிந்தனை செய்யாது பேசிடும் பேச்சுக்கு

சேதியொன்று சொல்ல வேணுமிப்போ

நூறு வருஷங்கள் முன்னாலே யிலங்கையின்

நேர்த்திதா னெப்படி யிருந்த தென்று

பாருங்கள் பங்களா தோட்டங்கள் தோட்டங்கள்

பண்பா யமைந்து விளங்குவதை’

இந்தக் கவிதை இலங்கைவாழ் இந்தியர் நலவுரிமை கோரியும் மலையகத்தமிழர் தமது வாழிட உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதாகவே அமைந்துள்ளது.

அடிமை வாழ்வை விட்டுச் சுதந்திரமாக வாழ மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற மீனாட்சியின் குரல் காந்தியின் வருகையின் எதிரொலி என்றே கூறலாம். மலையகத்திலே காந்தி சென்ற இடங்கள் எல்லாம் அங்கு வாழ்ந்த இந்திய மக்களின் குடியிருப்புகளாகவே இருந்தன.

நுவரெலியா, மாத்தளை, பதுளை, கண்டி, பண்டாரவளை, ஹட்டன் போன்ற இடங்கள் இன்றும் மலையகத் தமிழர் வாழ்விடங்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இன்னும் அந்தத் தமிழ் மக்களுக்கு குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையில் முழுமையான மாற்றம் ஏற்படவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்தியத் தமிழ்ப் பெண்களின் நிலை பற்றிப் பாரதி கவிதையிலே செய்த பதிவு இங்கே நினைவு கூற வேண்டும்.

கரும்புத் தோட்டத்திலே - அவர்

கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்துகின்றனரே ஹிந்து

மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்

சுருங்குகின்றனரே அவர்

துன்பத்தை நீங்க வழியில்லையோ? ஒரு

மருந்ததற் கிலையோ -செக்கு

மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்த

(கரும்புத் தோட்டத்திலே)

நாட்டை நினைப்போரோ - எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே

அன்னை

வீட்டை நினைப்பாரோ - அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்

கேட்டிருப்பாய் காற்றே- துன்பக்

கேணியில் எங்கள் பெண்கள் அழுதசொல்

மீட்டும் உரையாயோ - அவர்

விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்

(கரும்புத் தோட்டத்திலே)

பாரதியைப் போல இலங்கையிலே தேயிலைத் தோட்டத்திலே வேலை செய்யும் பெண்ணின் அவலநிலையை இலங்கைக் கவிஞரான கவிமணி திமிலைத்துமிலன் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

தோட்டத்திலே நேயிலைக் காட்டுக்குள்

கூடையைத் தூக்க எழும்வலிப் பூட்டுக்குள்ளே

ஓட்டத்திலே தளிர் கிள்ளி நிறைத்தங்கே

ஓடாய் உழைக்கிறாள் மாரியம்மா -அவள்

தோட்டச் சிறுமி மலர்ந்து விட்டாள் வாக்குச்

செய்து கொடுத்தாச்சு மாப்பிள்ளைக்கும் - அதை

நாட்டப் புரளுமா நாலு துட்டு சொல்லில்

நாளை பிறப்பது நம்முலகு!

வீட்டுப் படிகளிலே றோட்டுக்கு றோட்டாக

வீணாய் அலைகிற லட்சுமிக்குச்

சாட்டுக் கொருகந்தல் மார்பை மறைக்குது

சாவுக்குக் கெஞ்சுது கண்குழிகள் - நெஞ்சக்

கூட்டுக்குள்ளே உயிர்மூச்சுத் துடிக்குது

கும்பி கொதிக்குது வெம்பசியால் - இந்த

நாட்டுப் பிரசையாசு அவளும் நினைப்பது

நாளை பிறப்பது நம்முலகு!

மலையகத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில் இன்னமும் இந்த அவல நிலை தொடர்கிறது. உரிமையற்றவர்களாகக் கூலித் தொழிலாளர்களாக அவர்கள் வாழும் அவல வாழ்வு இப்போதும் நடைபெறுகிறது. மாற்றமில்லாத அந்த வாழ்க்கையை அவர்கள் ஏற்று வாழப் பழகிவிட்டனர்.

இவ்வுரை ஓர் அவல வாழ்வில் இன்னமும் பெண்கள் அடங்கிப் போயுள்ளனர் என்பதை நினைவூட்டவே நடந்தது. இலங்கைக்கு காந்தியின் வருகை பல நிலைகளிலே பயன்தருவதாக இருந்தாலும் பெண்களின் சுதந்திர நோக்கிலே முயற்சிகள் பெரிதாக இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.

சுதந்திர நோக்கு என்ற பெரியதொரு வண்ணக் கோலத்தின் முதற்புள்ளியாக ஆற்றியுள்ளேன். இதன் தொடர்ச்சி விரிவான தேடலுக்குரியது. காந்தியின் சிந்தனைத் தடங்களிலே இன்று பணி செய்பவர்கள் பெண்களின் எதிர்கால வளமான வாழ்வு பற்றிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பற்றிப் பெண்ணே எண்ணிச் செயற்பட வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தை விடுத்து எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை நினைவூட்டல் செய்யும் நடைமுறையை விட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த நம்முன்னோர் காட்டிய வழியைத் தேடிச் செல்ல வேண்டும்.

புலம் பெயர்ந்து சென்ற மக்கள் தமது தாய்நாடு திரும்பும் கனவோடு வாழ்ந்து தேயிலைச் செடியின் மடியிலே மறைந்தனர். இது வரலாற்றுக் குறிப்பாக மட்டும் பதிவு செய்யும் வாழ்வியலல்ல. நாம் வாழுங்காலத்திலே எம்மக்களுக்காகச் செய்ய வேண்டிய பணி. வெறும் உரையாகக் காற்றில் கலந்துபோகாமல் ஒரு விரைவான செயற்பாட்டில் இணைக்கும் குரலாக அமைய வேண்டும்.

                                                                                                                                           (தொடரும்)



Read in source website

இறைமறையாகிய திருக்குர்ஆன் பிறந்த ரமலான் மாதத்தின் இறுதியில் வரும் ‘ஈதுல் ஃபித்ர்’ எனும் ஈகைத் திருநாள் உலகெங்கும் வாழும் 125 கோடி (தற்போது 180 கோடி) முஸ்லிம்களால் உவப்புடன் கொண்டாடப்படும் பெருநாளாகும்.

இறை நம்பிக்கையாளர்களின் நெஞ்சகத்தில் ஆன்மீக எழுச்சியையும் ஈகையுணர்வையும் மனக் கிளர்ச்சியையும் உருவாக்கி, மனிதர்களைப் புனிதர்களாக்கும் இறை மாதமாகவும் ரமலான் மாதம் அமைந்துள்ளது.

திருக்குர்ஆனில் ‘ரமலான்’

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் மட்டுமே இறைமறையாகிய திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது.

ரமலான் மாதத்தின் சிறப்பு திருக்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித்தறியக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இம்மறை) அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கவும்” (2-185) எனக் கூறப்பட்டுள்ளது.

‘ரமலான்’ என்ற சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’ என்பது பொருளாகும். இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ‘தராவீஹ்’ என்னும் கூட்டுத் தொழுகை மூலம் மிக அதிகமாக இறைவணக்கம் புரிந்தும், தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் சுட்டெரிப்பதால் இம்மாதம் ரமலான் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வேதங்களின் மாதம்

நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு ‘ஜிப்ரீல்’ எனும் வானவர் மூலம் முதல் இறைச் செய்தி இம்மாதத்தின் இருபத்தியேழாம் நாளன்றுதான் இறைவனால் அருளப்பட்டது. அந்த நாள் லைலத்துல் கத்ர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அரபுச் சொல்லுக்குக் ‘கண்ணியமான இரவு’ என்பது பொருளாகும்.

இறைமறையாகிய திருக்குர்ஆன் மட்டுமல்லாது வேறு பல வேதங்களும் நபிமார்களாகிய இறைத்தூதர்கள் மூலம் இறைவன் உலகுக்கு வழங்கியதும் இதே ரமலான் மாதத்தில்தான்.

‘ஏப்ரஹாம்’ என அழைக்கப்படும் இபுராஹீம் நபி அவர்கட்கு சுஹ்பு எனும் வேதம் இதே ரமலான் மாதத்திலேதான் அருளப்பட்டது. அதன்பின் எழுநூறு ஆண்டுகள் கழித்து மோசஸ் எனும் மூஸா நபி அவர்கட்கு தெளராத் எனும் வேதம் இதே ரமலான் ஆறாம் நாளிலே தான் இறைவனால் வழங்கப்பட்டது. அதற்கும் ஐநூறு ஆண்டுகள் கழித்து ‘டேவிட்’ எனும் தாவூது நபி அவர்கட்கு ‘சபூர்’ எனும் இறைவேதம் இதே ரமலான் பன்னிரண்டாம் நாளன்று இறக்கியருளப்பட்டது. அதன்பின் 1200 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஜீசஸ் எனப் போற்றப்படும் ஈசா நபிக்கு ‘இன்ஜில்’ எனப்படும் ‘பைபிள்’ வேதம் ரமலான் பதினெட்டாம் நாளில் அருளப்பட்டது. அதன் பின்னர் அறுநூறு ஆண்டுகள் கழித்து ‘புர்க்கான்’ எனும் திருக்குர்ஆன் திருமுறை, நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்களின் மூலம் உலகுக்கு ரமலான் இருபத்தியேழாம் நாளன்று இறக்கியருளப்பட்டது.

ஐந்தில் நான்கு

ரமலான் மாதத்தின் மற்றொரு சிறப்பு மக்கள் கடைத் தேற்றத்திற்கென அல்லாஹ் விதித்த இறை நம்பிக்கை எனும் கலிமா, தொழுகை, நோன்பு, ஏழைவரி எனும் ஜக்காத், மக்காவிலுள்ள கஃபா எனும் இறையில்ல வணக்கத்திற்கெனச் செல்லும் ஹஜ் புனிதப் பயணம் எனும் ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஹஜ் தவிர்த்துள்ள நான்கு கடமைகளும் ஒரு சேர முற்றாக நிறைவேற்றப்படுவதும் இந்த ரமலான் மாதத்திலேதான்.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவதான நோன்பு ‘ரமலான்’ மாதத்தில்தான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது.

இஸ்லாமிய நோன்பும்
பிற மத விரதங்களும்

உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களும் நோன்பாகிய விரதத்தை வலியுத்துகின்றன. இந்தியாவிலுள்ள ஹிந்து மதம் போன்ற பெரும் சமயங்கள் விரதமிருப்பதை சமயத்தின் இன்றியமையாச் சிறப்புகளாக அமைத்து, பின்பற்றியொழுகப் பணிக்கின்றன. ஹிந்து சமயத்தவர்களும் விரதமிருப்பதைப் புனிதக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய நோன்புக்கு பிற சமய விரதங்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு.

பிற சமயங்களில் மாதத்தில் ஒரு நாளோ அல்லது ஒரு சில நாட்களோ அல்லது ஒரு சில மணி நேரங்களோ விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் வழக்கமாக உண்பவைகளில் சிலவற்றை நீக்கியோ அல்லது முழுமையாக உணவு மட்டும் உண்ணாமலோ விரதம் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான விரதங்களில் நீர் பருகத் தடையிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இஸ்லாமிய நோன்பு ரமலான் மாத முதல் நாள் தொடங்கி அம்மாதம் முழுவதும் இடையறாது தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்கப்படுகின்றது.

இறையச்சயுணர்வூட்டும் நோன்பு

அதிகாலை நான்கு மணிக்கு முன்னதாகவே, உண்பதும் பருகுவதும் நிறுத்தப்படுகிறது. மீண்டும் முன்னிரவு ஆறரை மணிக்குத்தான் உண்ணவும் பருகவும் முடியும். இவ்வாறு தொடர்ந்து முப்பது நாள்கள் நிகழும். இம்மாதம் முழுவதும் பகற் பொழுதுகளில் ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும். வழக்கமாக மேற்கொள்ளும் ஐவேளைத் தொழுகையுடன் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகை ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மணி நேரம் கூட்டுத் தொழுகையாக நிறைவேற்றப்படுகிறது. இந்நோன்பு நாள்களில் நோன்பாளிகள் முழுக்க முழுக்க இறைச் சிந்தனையாளர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ரமலான் மாத நோன்பு ஒவ்வொரு முஸ்லிமையும் படம் போட்ட தங்கமாக உருமாற்றும் செயற்பாடாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிம் உள்ளத்தில் இறையுணர்வு பூரணமாகப் பொங்கிப் பொழிவதோடு, இறைவனைப் பற்றிய அச்சவுணர்வும் அவனுள் அழுத்தம் பெறுகிறது.

இறைவன் தன் திருமறையில் ‘ல அல்லாஹும் தத்தஹூன்’ (இதனால் நீங்கள் இறையச்சமுடையோர்களா கலாம்) எனக் கூறியுள்ளதிலிருந்து இறையச்சவுணர்வைப் பூரணமாக உள்ளத்தில் உருவாக்கி நிலைபெறச் செய்வதே நோன்பின் முழு முதல் நோக்கமாகும்.

இறைவன் மனிதனுக்கு விலக்கிவைத்தவைகளின்றும் அறவே விலகியிருப்பதோடு, அல்லாஹ் இட்ட கட்டளையே இம்மியும் பிசகாது முழுமையாக, மனக் கட்டுப்பாட்டோடு நிறைவேற்றி, அவனது அன்பையும், அவனளிக்கும் வெகுமதியையும் பெறுவதற்கான பயிற்சிக் களமாக ரமலான் மாதம் அமைகிறது. 

மனக் கட்டுப்பாட்டை
உருவாக்கும் பயிற்சிக்காலம்

இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் இந்நோன்பு கடமையாக்கப்பட்டாலும், உளவியல் அடிப்படையிலும் மருத்துவவியல் அடிப்படையிலும் மிகுபயன் விளைவிப்பனவாக அமைந்துள்ளன என்பதை அறிவியல் நோக்கோடு அணுகும்போது தெளிவாகப் புலனாகிறது.

நோன்பு நோற்பவர் பகல் முழுவதும் எதையுமே உண்ணாமலும், பருகாமலும் புகைக்காமலும் அளவுக்கதிகமான மனக் கட்டுப்பாட்டுடன் தன் வழக்கமான வாழ்க்கைப் போக்கினின்றும் மாறுபட்டு வாழகிறார். தன் அன்றாட அலுவல்களிலும் தொய்வின்றி ஈடுபடுகின்றார். இதனால் மன உறுதிமிக்கவராகத் தன்னை ஆக்கிக் கொள்கிறார். “எல்லா வகையிலும் மனத்தைக் கட்டுப்படுத்துவதுதான் தூய்மையான போராட்டம் (ஜிஹாதுல் அக்பர்)” என்றார் நபிகள் நாயகம்.

மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பசியைக் கட்டுப்படுத்த முடியும். பசியைக் கட்டுப்படுத்தும் ஒருவனுக்குப் பிற இச்சைகளையும் விருப்பு வெறுப்புகளையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியமல்ல.

நோன்பு நோற்கும் காலத்தில் தீய செயல்களைத் செய்யாதிருத்தலோ அல்லது அவற்றை விட்டு நீங்கியிருத்தலோ மட்டும் முக்கியமன்று. தீய உணர்வுகளே நெஞ்சத்தில் முளைவிடாது தடுக்கும் வகையில் மனத்தின்மை பெற வழி வகுப்பதே நோன்பு நோற்பதன் முக்கிய நோக்கமாகும்.

பகலெல்லாம் அருஞ்சுவை உணவும் சுவைமிகு பானமும் பருகி இன்பமாக வாழும் முஸ்லிம், ரமலான் நோன்பு நாட்களில் இவைகளை அறவே ஒதுக்கி பசியுணர்வும் தாக வேட்கையுமிக்க கடினமான தவ வாழ்வை விரும்பி மேற்கொள்கிறார். இதன் மூலம் தன் உல்லாச வாழ்வுக்கு மாறாகச் சிக்கன உணர்வாளராக மாறுகிறார். மனிதன் உண்பதற்கென இறைவன் அனுமதித்துள்ள உணவு வகைகளையே நோன்பின்போது மனிதனால் விலக்கி வைக்க முடிகிறதென்றால், அவனால் எத்தகைய தீங்கையும் விலக்கி வைக்கவும் பெறுத்தொதுக்கவும், மனம் வலுப் பெற இயலவே செய்யும். எனவே, மனிதன், தன்னைத் தானே அடக்கியாள நோன்பு வழியமைத்து தருகிறதெனலாம்.

ஈகையுணர்வளிக்கும் நோன்பு

ஒரு மாத கால நோன்பின்போது பசித்துன்பம் எத்தகையது; தாகத்துடிப்பு எப்படிப்பட்டது என்பதையெல்லாம் அனுபவித்து உணரும்போது, பசியாலும் தாகத்தாலும் வருந்தும் ஏழை எளியவர்கள் மீது அன்பும், பரிவும் ஏற்படுவது இயல்பேயாகும். எனவே, இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் மக்கள் பசித் துன்பத்தினின்றும் மீள, வாரிவழங்கும் ஈகையுணர்வு பூரித்தெழுகிறது. அவர்களின் துன்பத்தில் பங்குகொள்ள விழைகிறது. எனவேதான் முஸ்லிம்கள் ரமலான் நோன்பு நாட்களில் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கி மகிழ்கிறார்கள். நோன்புப் பெரு நாளையே ‘ஈகைத் திருநாளாக’க் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நோயழிக்கும் நோன்பு

மருத்துவவியல் அடிப்படையிலும் நோன்பு மிகச் சிறப்பான இயற்கை மருத்துவ முறையாக அமைந்துள்ளது. உடலில் கொழுப்பு மிகுந்திருந்தால், நீரிழிவு நோய், இதய நோய்கள், ரத்த அழுத்தம், மூத்திரக்காய் வீங்கியிருத்தல், நாள்பட்ட கீழ்வாத நோய் போன்றவைகளை இஸ்லாமிய நோன்பு முறையால் குணமாக்க இயலும் என அண்மைக் கால மருத்துவ ஆய்வுகள் எண்பித்துள்ளன.

நாள்தோறும் கொழுப்புச் சத்துமிக்க புலால் உணவுகளையும் சுவையான இதர உணவு வகைகளையும் மிகுதியாக உண்பதால் உடலில் கொழுப்புச் சத்து சேர உடல் பருமனாகிறது. இவ்வாறு தடித்த உடலைக் கொண்டோர் எளிதாக இதய நோய், நீரிழிவு நோய் போன்றவைகளுக்கு இலக்காகின்றனர். இதனால் மாரடைப்பு போன்ற கொடிய நோய்கள் எளிதாகத் தலைதூக்க ஏதுவாகின்றன. எனவே, தேவைக்கதிகமாக உடலில் சேர்ந்துள்ள கொழுப்புப் பொருளைக் கரைக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இதன் மூலம் பற்பல நோய்த் தொல்லைகளிலிருந்து விடுபடவும் ‘நோன்பு’ முறை எளிய இயற்கையான வழி முறையாக அமைந்துள்ளது.

ரமலான் மாதம் முழுமையும் நோன்பு இருப்பதால் உடல் எடை வெகுவாகக் குறைய நேர்கின்றது. இதனால், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் சீரடைகின்றன, அல்லது குறைந்து விடுகின்றன.

ஏனெனில், நோன்பு நாட்களில் உண்ணும் உணவின் அளவு வெகுவாகக் குறைவதால், ‘ஹார்மோன்’ சுரப்பதும் குறையவே செய்கிறது. இதனால் ரத்தக் கொதிப்பும் மட்டுப்பட நேர்கின்றது. 

உடல் உறுப்புகளில் ஓய்வும்
பெறும் புத்துணர்வும்

தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பதால், உடலில் ஜீரண உறுப்புகளெல்லாம் நன்கு ஒய்வு பெற வாய்ப்பேற்படுகின்றது. நோன்பு முடிந்த பின்னர் இவ்வுறுப்புகளெல்லாம் புத்துணர்வோடு இயங்க இயலுகிறது.

மிக இளமைதொட்டே ஆண், பெண் அனைவருக்கம் ரமலான் மாத நோன்பு கட்டாயமானாலும் நோயாளிகள், பிரயாணிகள், கர்ப்பிணிகள், பால் குடிக்கும் குழந்தையுடைய தாய்மார்கள், உடல் நலிவடைந்த வயோதிகர் ஆகியோருக்கு இஸ்லாம் நோன்பினின்றும் விலக்களித்துள்ளது.

சமய அடிப்படையிலும் உளவியல், மருத்துவ அடிப்படையிலும் மிகுபயன் விளைவிக்க வல்ல ரமலான் மாத நோன்பு ஒவ்வொருவருக்கும் ஆன்மீக பலத்தையும் உடல் வலுவையும் பெருக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.



Read in source website

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து காட்டிவரும் சிறப்புக் கவனம் பாராட்டுக்குரியது. 2021 டிசம்பர் தொடங்கி, 2022 ஜனவரி வரையில் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மீண்டும் ஏப்ரல் 27 வரையில் அதைத் தொடர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டாம் கட்டமாகத் தொடரும் இந்நடவடிக்கையின் முதலிரண்டு நாட்களிலேயே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவரும் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இயல்புநிலை திரும்ப ஆரம்பித்திருக்கும் வேளையில், போதைப் பொருட்களை விநியோகிக்கும் சமூக விரோதக் கும்பல்களிடமிருந்து மாணவர்களைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு அரசு, ஆசிரியர், பெற்றோர், காவல் துறை என அனைத்துத் தரப்பினருக்குமே இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை தரும் பல்வேறு விதமான பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. பாக்கு, மிட்டாய் என்று பல்வேறு வடிவங்களில் இவை மாணவர்களிடையே புழங்குகின்றன. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களைத் தொடர்ந்து அக்கறையுடன் கண்காணித்துவருவதும், அவர்களது நடத்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைத் தீர்க்க முயல்வதும்தான் மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவும்.

ஆனால், போதைப் பொருள் விநியோகத்தின் பின்னால் இயங்கும் வலைப் பின்னல் மிகப் பெரியது. மாநில எல்லைகளைத் தாண்டி அது பரவியுள்ளது. இந்நிலையில் ஆசிரியர், பெற்றோர்களின் அக்கறை மாணவர்களைப் பாதுகாக்க உதவுமே தவிர, காவல் துறையின் கடுமையான நடவடிக்கைகளால்தான் இந்த வலைப்பின்னலை அறுத்தெறிய முடியும். தமிழ்நாடு காவல் துறை இது தொடர்பாகத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக்கூடியது. இது எப்போதும் தொடர வேண்டும்.

காவல் துறை தனது பணியைச் செவ்வனே செய்கிற அதே நேரத்தில், பள்ளிக் கல்வித் துறையும் இவ்விஷயத்தில் உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் திறம்படச் செயல்படத் தொடங்கியிருக்கிற இந்நேரத்தில், மாணவர்களுக்கிடையே இவ்விதமான பழக்கங்கள் கண்டறியப்பட்டால், ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து பேசி, அதற்கான வாய்ப்புகளை நிரந்தரமாகக் களைவதற்கு முயல வேண்டும். தேவைப்படின், காவல் துறையின் உதவியை நாடவும் தயங்கக் கூடாது.

போதைப் பழக்கங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றின் அருகிலுள்ள கடைகளும், அந்நியர்களின் நடமாட்டமும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாணவர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு; ஒவ்வொருவரும் தனக்கான கடமையை ஆற்றத் தயாராக இருக்க வேண்டும்.



Read in source website

மார்ச் 18 அன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பெண் கல்வி உட்பட ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளையும், அதற்கான பொருளாதாரப் பலன்களையும் அறிவித்தது பெரிதும் கொண்டாடப்பட்டது. பெரும்பாலான அறிவிப்புகள் இப்படிக் கொண்டாடப்படும் வேளையில், ‘கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் கேலிசெய்யப்பட்டது. தமக்குப் பிடிக்காதவர்களையும், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் கேலி செய்யும்பொருட்டு, ‘இந்தத் திட்டம் அவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டது’ என்று இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான அறிவிப்பு பலராலும் நகைப்புக்குள்ளாக்கப்பட்டது. உலகம் முழுக்கச் சமீப காலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கும் மனநலப் பிரச்சினைகளின் தீவிரத்தை நாம் உணராததன் விளைவே இப்படிப்பட்ட கேலிக்குக் காரணம்.

சமீப காலங்களில், இளைய வயதினரின் மரணத்துக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக மனநலப் பிரச்சினைகள் இருக்கின்றன. நம் வாழ்நாளில் நம்மைச் செயல்படாமல் முடக்கும் நோய்களில் மனநோய்கள் முக்கியமானவை என்கின்றன ஆய்வுகள். மனநலப் பிரச்சினைகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், வேறெந்த உடல் நோய்களை விடவும் அதிகம். அதனால்தான் சர்வதேச மருத்துவச் சமூகம் சமீப காலமாக மனநலத்துக்கும், மனநோய் சிகிச்சைகளுக்கும் அதிக முக்கியத்துவத்தைத் தருகின்றன. மருத்துவ அறிவியலில் தற்போது பெரும்பாலான ஆராய்ச்சிகள் நரம்பியல் மற்றும் மனநலத் துறையில்தான் நடக்கின்றன.

ஆனால், இதன் தீவிரம் தெரியாமல் நாம் இன்னமும் மனநலத் துறையை அலட்சியத்துடனே அணுகிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை மனநோய் என்றால், யாரோ பிறழ்வடைந்தவர்களுக்கு வரக்கூடிய தீவிரமான நோய் என நினைக்கிறோம். ஆனால் தீவிர மனநோய்களைவிட, அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளால் உருவாகக்கூடிய மனநலப் பிரச்சினைகள்தான் இன்று பெரும் சுமையாக இருக்கின்றன. அவையே நமது ஆரோக்கியமின்மைக்கு முக்கியக் காரணமாகவும் இருக்கின்றன என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, உலகம் முழுக்க மனநலப் பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. குழந்தைகளுக்குக்கூட புதிய மனநலப் பிரச்சினைகள் வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும், இளைஞர்களிடம் புதிதாக அதீத மனச்சோர்வும் மனப்பதற்றமும், கணவன்-மனைவி உறவில் உருவாகியிருக்கும் சிக்கல்களும், முதியவர்களின் புதிய மனநலப் பிரச்சினைகளும் இந்தக் காலத்தில் அதிகரித்திருக்கின்றன.

ஊரடங்கின் விளைவாக உருவான பொருளாதாரச் சுமைகள், வேலையிழப்பு, உறவுச் சிக்கல்கள், எதிர்காலத்தின் மீதான நிச்சயமின்மை, இணையவழிக் கல்வி, வீட்டிலிருந்து வேலை பார்க்கக்கூடிய புதிய சூழல், அதிகரிக்கும் போட்டித் தேர்வுகள், மாணவர்களின் மனநிலைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கைகள், பொருளாதாரத் திட்டங்கள் என அத்தனையும் சேர்ந்து பொதுச் சமூகத்தின் மனநிலையைப் பெரிய அளவுக்குப் பாதித்திருக்கின்றன. சமீபத்தில் அதிகரித்திருக்கும் தற்கொலைகள், போதைப் பொருள் பழக்கம், விவாகரத்துகள், குற்றச் சம்பவங்கள் போன்றவையெல்லாம் ஆரோக்கியமற்ற மனநிலையின் வெளிப்பாடே!

“மனதைத் தைரியமாக வைத்துக்கொண்டால் எதுவும் வராது, பலவீனமாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன” என்று சமூகத்தில் எழும் அனைத்து மனநலப் பிரச்சினைகளுக்கும் தனிநபரின் மீதே பழியைப் போட்டுவிட்டுக் கைகளைக் கழுவிக்கொள்கிறோம். தனிநபர் என்பவர் ஒரு சமூகத்தின் அங்கமே, சமூகத்தின் இடர்கள், சமநிலையின்மைகள் தனிநபரைப் பாதிக்கக்கூடியவை என்பதை நாம் உணருவதில்லை. ஏனென்றால், அதற்கான எந்த அறிவியல்பூர்வமான சான்றுகளும் நம்மிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மனநலத்தின் மீதான எந்தவித அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியையும் இன்னும் நாம் தொடங்கவே இல்லை. “தனிநபரின் மனரீதியான பிரச்சினைகளை யோகா எப்படிக் குணப்படுத்துகிறது?” என்ற வகையில்தான் நமது ஆராய்ச்சிகள் இருக்கின்றன.

ஏன் வேறெப்போதும் இல்லாத வகையில் மனநலப் பிரச்சினைகள் சமீபத்தில் குழந்தைகளிடம் அதிகரித்திருக்கின்றன? தொழில்நுட்பச் சாதனங்கள் மூளையின் வளர்ச்சியில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன? மாறிவரும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், சமூகச் சீர்கேடுகள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள், வாழ்க்கை முறை போன்றவையெல்லாம் நமது மூளையின் மீதும் அதன் நுட்பமான செயல்பாடுகளின் மீதும், மரபணுக்களின் மீதும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, நவீன காலத்தில் முக்கியத்துவம் பெறும் குழந்தையின்மை போன்ற மருத்துவச் சிக்கல்களுக்கு, மனநலம் எந்த வகையில் காரணமாக இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியல்பூர்வமான தரவுகளின் வழியாகப் பதில்களைப் பெறும்போது ‘மனம்’ என்பது நாம் நினைப்பதுபோல் அல்லாமல், முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமான ஒன்றாக அது நமக்குக் காட்சியளிக்கும். மனநலத் துறையின் அடுத்த நகர்வுகள் அனைத்தையுமே அதை அறிவியல்பூர்வமாக அணுகுவதன் வழியாகவே செய்ய முடியும். மனநலப் பிரச்சினைகளின் தோற்றம், அவற்றின் மரபணுப் பண்புகள், பல்வேறு காரணங்கள், நோய்மைக் குணங்கள், உயிரியல் விளைவுகள், சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் நாம் உலகத்தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கெல்லாம் தேவை நமக்கென்று அதிசிறந்த மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம். மனநல மருத்துவமனை என்பதே மனநோயாளர்களை அடைத்து வைக்கக்கூடிய இடம் என்ற கற்பிதங்களிலிருந்து மாறி, மனநலம் தொடர்பாகவும், மூளையின் நுட்பமான இயக்கம் தொடர்பாகவும், நரம்பியல் செயல்பாடுகள் தொடர்பாகவும் அதிநவீன ஆராய்ச்சிகளை முன்னெடுக்கிற, ஒருங்கிணைக்கிற அறிவியல் நிறுவனம் என்பதாக ஒரு நிறுவனத்தை நாம் கட்டமைக்க வேண்டும்.

அதன் வழியாக அதிநவீன மனநல சிகிச்சைகள், மரபணு முதலான ஆராய்ச்சிகள், தரவுகளை உருவாக்க வேண்டும். மனநலத் துறையில் உலகத்தரமான சிகிச்சைகள் அத்தனையும் கிடைக்கக்கூடிய, அதன் தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கும் இடமாகவும் அதன் பலன்களை ஒட்டுமொத்த மக்களுக்கும் அளிக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கக்கூடிய இடமாகவும் அந்த நிறுவனம் இருக்க வேண்டும். மனம் மீதும் அதன் நோய்மைகளின் மீதும் பொதுச் சமூகத்துக்கு இருக்கும் இந்தக் களங்கப் பார்வையை மாற்றுவதற்கு இதுவே தீர்வாக இருக்கும்.

இதற்காக இந்தியாவில் இருக்கும் வேறு எந்த தேசிய நிறுவனத்தையும் முன்மாதிரியாகக் கொள்ளத் தேவையில்லை. நவீன அறிவியலின் பலனைக் கடைசி மனிதர்கள் வரை கொண்டுசேர்க்கும் திராவிட முன்மாதிரியையே நாம் மனநலத் துறைக்கும் அடிப்படையாக எடுத்துக்கொள்ளலாம். உலகத்தர மனநல நரம்பியல் ஆராய்ச்சி மையத்தைத் தமிழ்நாட்டில் கட்டமைப்பதன் வழியாக, அதை முழுக்க முழுக்க நவீன அறிவியல் நிறுவனமாக, ஆராய்ச்சி மையமாக, அதிசிறந்த கல்வி நிறுவனமாக உருவாக்கி, அதன் வழியாகக் கிடைக்கும் புரிதல்களை, சாதனைகளை, தரவுகளை சர்வதேச மருத்துவ அறிவியலுக்குப் பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், மனநலத் துறையிலும் தமிழ்நாடு மாடலை உருவாக்க முடியும்.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்/ எழுத்தாளர், தொடர்புக்கு: sivabalanela@gmail.com



Read in source website

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைந்துள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கான தீவிர முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த முன்னெடுப்புகள், சமூகத்தின் பல தரப்புகளிலிருந்தும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அதே நேரத்தில், அக்குழுவின் செயல்பாடுகளும் கட்டமைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. சு.உமாமகேஸ்வரி எழுதிய ‘பள்ளி மேலாண்மைக் குழு எதிர்கொண்டிருக்கும் ஆபத்து’ கட்டுரையில் (‘இந்து தமிழ் திசை’ 31.03.22) பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பது குழுவின் செயல்பாட்டுக்கே ஆபத்தை விளைவிக்கும் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். 

மொத்தம் 20 உறுப்பினர்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் 75% பேர் பெற்றோர்களாக இருப்பார்கள். குறைந்தது 15 உறுப்பினர்கள் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களாக இருக்க வேண்டும். மேலும், குழுவில் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழி உறுப்பினராகவும், ஆசிரியர் பிரதிநிதியாக ஒரு ஆசிரியரும், சுய உதவிக்குழு பிரதிநிதியாக ஒருவரும், கல்வியாளர் அல்லது அரசு சாரா நிறுவனத்தின் உறுப்பினர் அல்லது ஓய்வுபெற்ற ஆசிரியர் இவர்களில் யாரேனும் ஒருவர் குழுவின் ஒரு பிரதிநிதியாக இருக்கும் இந்தக் குழுவில், இரண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருக்க வழிவகை செய்துள்ளது சட்டம்.

இந்த இருவரில் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்க முடியும். இதைத்தான் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள் சிலர். பள்ளி மேலாண்மைக் குழுவுக்கான முதன்மைப் பயிற்றுநராகப் பயிற்சி வழங்கிவருபவன் என்ற முறையிலும், இக்குழுவின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வது குறித்த விவாதங்களில் பங்கேற்றவன் நான். ஆகவே, இந்தக் கட்டமைப்பு உருவாவதற்குப் பல வல்லுநர்களின், சமூக ஆர்வலர்களின் அனுபவரீதியான ஆலோசனைகளின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும். 

அரசுப் பள்ளிகள், மக்களுக்கான பள்ளிகளாக, அப்பகுதி மக்களின் பங்கேற்பை விரும்பி வரவேற்கும் இடமாக அமைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே, குழுவின் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்துக்கும் சமூகத்துக்கும் இடையே தற்போது உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கியமான படிதான் இந்த முயற்சி. அதில் யார் இருக்கிறார்கள் என்பது மிக முக்கியம்.

ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இது முற்றிலும் நிராகரிக்க முடியாத ஒன்று. பொதுவாக, விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பான நாட்களில், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சில ஆசிரியர்கள் வந்து செல்வதைப் பார்க்க முடியும். பள்ளி தொடங்க இருக்கிறது, பள்ளியைத் தூய்மைப்படுத்துவதற்கு எங்களுக்குத் தூய்மைப் பணியாளர்களை அனுப்பி வையுங்கள் என்று கேட்பதற்காக ஊராட்சி மன்றத்துக்கு வந்திருப்பார்கள்.

நிச்சயமாகப் பள்ளி தூய்மைக்கான உதவிகளைப் பள்ளிக்கு வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது ஊராட்சி நிர்வாகம். அதே வேளையில், ஆசிரியர்கள் எத்தனை முறை கிராம சபைக் கூட்டத்துக்கு வந்திருப்பார்கள் என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். சமூகத்தோடு பள்ளியை இணைப்பதற்கு ஆசிரியர்கள் பாலமாக இருக்க முடியும், இருக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பள்ளி மேலாண்மைக் குழு என்னும் ஜனநாயக அமைப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கக் கூடாது எனச் சொல்வது சமூகத்திலிருந்து பள்ளியை விலக்கி வைத்துவிடும். 

மேலும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அப்பகுதி மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு ஆசிரியரின் கருத்துக்கு நேரெதிராக எந்த ஒரு உள்ளாட்சிப் பிரதிநிதியாலும் செயல்பட்டுவிட முடியாது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சில தலைமை ஆசிரியர்கள் நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பல பள்ளிகளில் பார்க்கிறோம். ஜனநாயக அமைப்பாக இருக்கக்கூடிய பள்ளி, தலைமை ஆசிரியர் விருப்பப்படி மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டுக்குள் கொண்டுவர முடியாது. அங்கு மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெற்றோரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டமைப்பில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் பங்கை உறுதிசெய்திருக்கிறது சட்டம். 

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்களில் ஒருவர்கூட பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக வரக் கூடாது என்று சிலர் நினைத்தால், அது ஏற்புடையதாக இருக்க முடியாது. நாங்கள்  நேரடியாகப்  பார்த்ததில், எத்தனையோ ஊராட்சித் தலைவர்கள் தங்கள் உள்ளாட்சியில் உள்ள பள்ளிகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதில் பெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள். கடந்த மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான பெற்றோர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக வீடுதோறும் சென்று, பெற்றோர்களை அழைத்து வந்த ஊராட்சித் தலைவர்களையும் வார்டு உறுப்பினர்களையும் பார்க்க முடிந்தது. யாரையும் விலக்கி வைப்பதால் குழுவை வலுப்படுத்த முடியாது. அனைவரையும் ஒன்றுசேர்த்து இயங்க வேண்டியது அவசியம்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்களே ஒழிய அவர்கள் தலைவர்களாக இல்லை. பெற்றோர்தான் தலைவராக இருக்கப்போகிறார். துணைத் தலைவரும் ஒரு பெற்றோர்தான். தலைமை ஆசிரியரும் அப்பள்ளியின் ஓர் ஆசிரியரும் குழு உறுப்பினர்களாக இருக்கப்போகிறார்கள். இத்தனை பேர் இருக்கும்போது இந்தக் குழுவின் முடிவுகளை முழுமையாக ஊராட்சித் தலைவர் கட்டுப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து, அது ஆபத்து என்று முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதே நேரத்தில், சு.உமாமகேஸ்வரியின் அச்சத்தை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. பல உள்ளாட்சித் தலைவர்களுக்கு அந்தப் பள்ளி தாங்கள் படித்த பள்ளியாகக்கூட இருக்கும். அப்பள்ளியின் நலன் கருதுபவர்கள்கூட ஊராட்சித் தலைவர்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவில் சேர்த்துக்கொள்வதற்கு ஏன் அச்சம் தெரிவிக்கிறார்கள் என்பதை நடுநிலையோடு அணுக வேண்டும். ஜனநாயகக் கட்டமைப்பான பள்ளி மேலாண்மைக் குழுவில் ஆசிரியர்களின் பங்கு, பெற்றோர்களின் பங்கு, கல்வியாளர்களின் பங்கு, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பங்கு, அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகளின் பங்கு, உள்ளாட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளின் பங்கு என அனைவரின் பங்கும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.  

‘‘எதிர்காலச் சந்ததிகளான நம் குழந்தைகளின் நலனுக்காகத்தான் இத்தனை முயற்சிகளும். அவர்களின் முகம் நம் மனத்திரையில் வரும்போது, நமக்குள் வரும் எந்தத் தடையையும் நாம் இயல்பாகக் கடந்துவிட முடியும்" என்று எங்களுக்கான பயிற்சியின்போது பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர் ஒருவர் குறிப்பிட்டதை மறக்கக் கூடாது.

நாளைய தலைவர்களுக்காக இந்திய ஜனநாயகம் உருவாக்கியிருக்கும் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழு, தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைப்பதற்கு அனைவரின் முயற்சியும் ஒத்துழைப்பும் பங்கேற்பும் இன்றியமையாதவை. ஒன்றிணைந்து முன்னெடுப்போம்!

- நந்தகுமார் சிவா, உள்ளாட்சிச் செயற்பாட்டாளர் மற்றும் பொதுச் செயலாளர், தன்னாட்சி அமைப்பு.

தொடர்புக்கு: nanda.mse@gmail.com



Read in source website