DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 01-06-2022

சென்னை: தமிழகத்தில்  99% பேருக்கு பிஏ2 வகை கரோனா தொற்று அதிகம் பரவுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 100-க்கும் கீழ் உள்ளது. உயிரிழப்பும் இல்லாத நிலை உள்ளது. விஐடி கல்லூரியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. . ஐஐடியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைந்துள்ளனர்.  

ஒமைக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் 7 வகை உள்ளது. அதன்படி,பிஏ1,பிஏ2,பிஏ3,பிஏ4,எக்ஸ்இ உள்ளிட்ட ஏழு வகையிலான தொற்று உள்ளது. அந்த வகையில், தற்போது பெரும்பாலும் 99% பேருக்கு பிஏ2 கரோனா தொற்று உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் விரைவில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக இருந்த  நிலையில் தற்போது  100-ஐ எட்டியுள்ளது. 

அடுத்தடுத்த நாள்களில் கரோனா பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 வாரத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



Read in source website


இன்று உலகத்தையே அச்சுறுத்தும் தொற்றா நோயான உடல்பருமன் எனும் அரக்க நோய் சர்க்கரை வியாதி, இருதய நோய்கள், பக்க வாதம் போன்ற கொடிய பல நோய்களை விளைவிக்கக் கூடியது என்பது பலரும் அறிந்ததே. 

இந்நோய்கள் உடலளவிலும், மனதளவிலும் பலரையும் வருத்தி மருத்துவமனை வாசலுக்கு காலம் தோறும் நம்மை நடையாய் நடக்க வைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அழையா விருந்தாளியாக இன்னும் பல நோய்கள் உடல்பருமனுடன் வந்து சேரும் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

பித்தப்பை கல்: அதில் ஒரு விருந்தாளி தான் ‘பித்தப்பை கல்’ எனும் நோய் நிலை. இது கொழுப்பு படிமத்தால் ஏற்படும் கல், பித்தநிறமிகளால் ஏற்படும் கல் என்று பொதுவாக இரண்டு வகை. பெண்களுக்கு அதிகம் ஏற்படும் கொழுப்பினால் ஏற்படும் பித்தப்பை கல் என்பது, இன்று உடல்பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது.  

கல்லீரலோடு சேர்ந்த பித்தப்பை, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தத்தை சேமித்து வைக்கும். அது செரிமானத்திற்கு தேவைப்படும் போது அவ்வப்போது பித்தத்தை வெளியேற்றும். அத்தகைய பித்தப்பையில் கல் என்பது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது. வேறு எதோ ஒரு காரணத்திற்கு ஸ்கேன் எடுக்கும் போது, ‘உங்களுக்கு பித்தப்பையில் கல் இருக்கு’ என்கிற அதிர்ச்சி செய்தி வந்து சேரும். இதில் பலருக்கும் அனுபவமிருக்க வாய்ப்புண்டு. 

கவலைப்படத் தேவையில்லை: குறிகுணம் இல்லாத நிலையில் பித்தப்பை கல் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவர் ஆலோசனை கூறினாலும், மனம் அதை ஏற்க மறுக்கும். எப்படியாவது தீர்வு காண வேண்டிய ஆவல் பலருக்கும் இருக்கும்.

குறிகுணங்கள்: ‘டாக்டர் வெயிட் கூடிட்டே போகுது, உடல் எடையை குறைக்க முடியவில்லை’ என்று வருந்தும் பலரும் அவர்களின் செரிமானத் தன்மையை உற்றுநோக்குவதில்லை. அவர்கள் பலருக்கும் செரியாமை, அசீரணம், வாய் குமட்டல், உணவு செரியாமையால் வயிறு உப்பசம், சில சமயங்களில் வலது பக்க வயிற்றில் கல்லீரல் உள்ள இடத்தில் லேசான வலி, கல்லின் அளவு பெரிதானால் வலது பக்க தோள்பட்டை வலி ஆகிய குறிகுணங்கள் காணும். அவர்களின் ரத்தத்தில் கொழுப்பின் அளவும் மாறுபட்டு காணும்.  

பித்தப்பை கல்

அதிகம் பாதிக்கப்படுபவர்கள்: பித்தப்பை கல் என்ற நோய் நிலையினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமெரிக்கர்கள். இந்தியர்களின் பாதிப்பு மிகக்குறைவு. ஏனெனில் நமது உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிமுறைகள் நம்மை பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் தன்மையுடையதாக உள்ளது சிறப்பு. ஆனால் சமீப காலத்திய உணவுமுறைகளால் நாளுக்கு நாள் உடல் பருமன், பித்தப்பைக் கல்லினால் பாதிக்கப்படும் நபர்கள் நம் நாட்டில் அதிகம். 

மூலிகை கடைசரக்கு: உடல் பருமனையும் குறைத்து ரத்த கொழுப்பினை அளவையும் குறைத்து பித்தப்பை கற்களை கரைக்கும் எளிய பல வழிமுறைகளும், மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தில் உள்ளன. அதில் ஒரு எளிய சித்தமருத்துவ மூலிகை கடைசரக்கு தான், நாம் உணவில் பயன்படுத்தும் ‘வெந்தயம்’.

அஞ்சறைப்பெட்டி: பெரும்பாலான வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் முக்கிய இடம் பிடித்துள்ள கடைச்சரக்கு ‘வெந்தயம்’. இது உணவாகவும், மருந்தாகவும் பலரால் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக சர்க்கரை நோய்க்காகவும், உடல் குளிர்ச்சிக்காகவும், பெண்களின் வெள்ளைப்படுதல் வயிற்றுவலிக்காகவும், மலச்சிக்கலை தீர்க்கும் மருந்தாகவும், நார்சத்து அதிகம் கொண்ட எளிய கடைச்சரக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

வெந்தயம் ஒரு பழம்பெரும் கடைசரக்கு. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் உணவு வகைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  முடி வளர இதைப் பலரும் முடித்தைலங்களில் இன்றளவும் பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே. பிறநாடுகளில் மார்பு அளவை அதிகரிக்க பெண்கள் இதை பயன்படுத்துகின்றனர். இந்த மருத்துவ தன்மைக்கு ஹார்மோன் போன்ற தன்மையுடைய  ‘டியோஸ்ஜெனின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக இருக்கலாம் என்று அறியப்படுகின்றது. இது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பெயர்க்காரணம்: வெந்தயம் என்பதின் பெயர்க்காரணத்தை உற்று நோக்கினால் வெந்த+அயம், அதாவது உடல் உள்கிரகிக்க தகுந்த பக்குவத்தில் இரும்பு சத்தினை தன்னகத்தே கொண்டது என்று பொருள்படும். ஆம். இதில் உடலுக்கு அத்தியாவசியமான தாது சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செம்பு, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், இரும்பு சத்து இவற்றையும் கொண்டுள்ளது. 

ரத்த விருத்தி: ஆக, ரத்த சோகை நோயால் அவதிப்படும் பலரும் வெந்தயத்தை அணுகினால் நல்ல பலன் தரும். வெந்தயத்தை பச்சரிசியுடன் சேர்த்து பொங்கலிட்டு சாப்பிட ரத்த விருத்தியாகும் என்கிறது சித்த மருத்துவம். வெந்தய கீரையும் நல்ல மருத்துவ குணங்களை கொண்டது. 

மூலக்கூறுகள்: வெந்தயத்தில் உள்ள மருத்துவ குணமுள்ள மூலக்கூறுகள் சபோனின்கள், டையோஸ்ஜெனின், ட்ரைகோனெலின் மற்றும் 4-ஹைட்ராக்ஸி ஐசோலூசின் ஆகியவை உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலெஸ்டெராலை குறைக்கும் தன்மையுடையதாகவும், பித்தப்பையில் கொழுப்பு படிவதை தடுக்கும்படியாகவும் உள்ளது. 

சர்க்கரை அளவை குறைக்கும்: மேலும், இதில் உள்ள ‘ஹைட்ராக்ஸி ஐசோலூசின்’ என்ற வேதிப்பொருள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் இன்சுலின் சுரப்பை இயற்கையாக தூண்டுவதாக உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் படியாக உள்ளது. ‘டியோஸ்ஜெனின்’ என்ற வேதிப்பொருள் புற்று செல்களுக்கு எதிராக செயல்படும் தன்மையும், ‘பீனோலிக் அமிலம் மற்றும் பிளவனாய்டுகள்’ புற்று நோயை தடுக்கும் தன்மையும், வீக்கமுருக்கியாகவும், ரத்த குழாயில் அடைப்பை தடுப்பதாகவும், வயிறு புண்களை ஆற்றுவதாகவும் உள்ளது.  

யாருக்கு வேண்டாம்: இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் குடலில் உள்ள நீர்சத்தினை உறிஞ்சி, உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்து உறிஞ்சுவதை தடுக்கும்படியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மலச்சிக்கலை போக்கவும் இது உதவும். மாதவிடாயை ஒழுங்குபடுத்த உதவும் சித்த மருத்துவத்தின் மகளிர் பருவ கால உணவில் வெந்தயம் சேருவதும் சிறப்பு. இருப்பினும், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்புடையது அல்ல.

உடலுக்கு குளிர்ச்சி: வெந்தயத்தை இளவறுப்பாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு பகல் வேளைகளில் சூடான நீரில் கலந்து எடுத்துக்கொள்ள மேற்கூறிய மருத்துவ நன்மைகளை அளிக்கும். இது பித்தத்தை குறைப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சியை தரும். வெந்தயத்தை வறுத்து கோதுமையுடன் சேர்த்து காபி பொடிக்கு பதிலாகவும் பயன்படுத்த மேற்கூறிய நன்மைகளை அளிக்கும்.

ஐயம் வேண்டாம்: சிறு  மணிகளை போன்ற தோற்றம் தரும் இந்த வெந்தயம், பித்தப்பையில் உருவாகும் கொழுப்பு கற்களையும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினையும் கரைத்து ஆரோக்கியான சீரணத்திற்கும், வாழ்விற்கும் வழிகோலும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது எளிய நம் வீட்டு சித்த வைத்தியம். பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768



Read in source website

குஜராத்தில் இன்று தொடங்கும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார், அனைத்து மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின், கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு இன்றும், நாளையும் குஜராத்தில் நடைபெறவுள்ளது.
 
 
இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது, பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.
 
இந்நிலையில், மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் பங்கேற்க போவதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

 


Read in source website

பெரியார் பல்கலைக்கழகம் முன்அனுமதி பெறாமல் தொலைநிலைக்கல்வி படிப்புகளை நடத்தி வருவதால், அந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிக்கை:
 முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருகிறது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைநிலைக் கல்வி படிப்புகளிலோ, ஆன்லைன் படிப்புகளிலோ சேர வேண்டாம். இதுகுறித்து விசாரித்து ஆளுநர், உயர்கல்வித் துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 துணை வேந்தர் விளக்கம்: இதனிடையே, யுஜிசி அனுமதியுடன் மட்டுமே பெரியார் பல்கலை.யில் தொலைநிலைக் கல்வி படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக அதன் துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து பெற்றதில் அகில இந்திய அளவில் 2-ஆம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்ற அரசு பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெரியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. தேசிய அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், பெரியார் பல்கலை. திகழ்கிறது.
 பெரியார் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில், 2020 ஜனவரி மாதம் 13 படிப்புகளை ஒரேயொரு பருவத்தில் மட்டும் நடத்திக் கொள்ள யுஜிசி அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் இதுவரை ஒரு முறை மட்டுமே மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது. மேலும், இணைய வழிக் கல்வியில் 7 படிப்புகளை நடத்திக்கொள்ள பெரியார் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி 2021-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
 யுஜிசி அனுமதி அளித்துள்ள படிப்புகள் மட்டுமே பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார் துணை வேந்தர் இரா.ஜெகநாதன்.
 
 



Read in source website

கல்விச் சான்றிதழ் ஒன்றும் சந்தை பொருள் அல்ல; அந்த சான்றிதழை வைத்து ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், டாக்டா் கிரிதரன் உள்பட 25 மருத்துவா்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை முதுநிலை மருத்துவ கல்வி படித்து பட்டம் பெற்றோம். முதுநிலை படிப்பில் சேரும்போது, 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதம் அளித்து இருந்தோம்.

2021-ஆம் ஆண்டு பட்ட மேற்படிப்பை முடித்து நாங்கள் கரோனா சிகிச்சைப் பிரிவில் 10 மாதங்கள் பணியாற்றினோம். இதன் பின்னா் புதிய பணி வழங்காததால், எங்களது அசல் கல்விச் சான்றிதழ்களைக் கேட்டோம். ஆனால், 2 ஆண்டுகள் முழுமையாக அரசு மருத்துவமனையில் பணியாற்றாததால், எங்களுக்கு கல்விச் சான்றிதழை வழங்க அரசு கல்லூரி நிா்வாகம் மறுத்து விட்டது. எனவே, அசல் கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மருத்துவ மேற்படிப்பில் சேரும்போது 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறோம் என்று மனுதாரா்கள் அளித்த உத்தரவாதத்தை அவா்கள் அமல்படுத்த வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரா்களைப் போன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவா்கள் அசல் கல்விச்சான்றிதழ் கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

அதை எதிா்த்து மாணவா்கள் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்றத்தின் முதல் அமா்வில் நிலுவையில் இருந்தபோது, அந்த மாணவா்களின் அசல் கல்வி சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்கும்படி அனைத்து மருத்துவ கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநா் கடந்த ஏப்.24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி, மேல்முறையீட்டு மனு முடித்து வைக்கப்பட்டது.

அந்த மாணவா்கள் படிப்பில் சேரும்போது அரசுக்கு அளித்த உத்தரவாதத்தை அமல்படுத்தாமல், அசல் கல்விச்சான்றிதழ்களை பெற்றனா். இதை ஏற்கமுடியாது, ஒரே விவகாரத்தில் அரசு 2 விதமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது, மேலும் கல்விச்சான்றிதழ் ஒன்றும் சந்தை பொருள் அல்ல. அதை வைத்து இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ள முடியாது. மாணவா்களின் கல்விச் சான்றிதழ்களை மருத்துவ கல்லூரி நிா்வாகம் இதுபோல வைத்துக் கொள்ள முடியாது. 15 நாள்களுக்குள் அசல் கல்விச்சான்றிதழ்களை மனுதாரா்களுக்கு கல்லூரி நிா்வாகம் வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.



Read in source website

 

இலங்கையை போன்று பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் சமையல் எண்ணெய் மற்றும் நெயின் விலை தற்போது உயர்ந்துள்ளது. 

சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.213 அதிகரித்து ரூ.605 ஆகவும், நெய் கிலோவுக்கு ரூ.208 அதிகரித்து ரூ.555 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

நாடு தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

கடந்த மே மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.40 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

மே மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.140,885 கோடியாகும். அதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான ரூ.37,469 கோடி உள்பட) வசூலானது. செஸ் வரியாக ரூ.10,502 கோடியும் கிடைத்துள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 97,821 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 44% அதிகமாக வசூலாகியுள்ளது. 

ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தைவிட 15% வருவாய் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. 

மத்திய நிதித்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 



Read in source website

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இருவரும் சவூதி அரேபியாவில் படித்தபோது சந்திக்கொண்டனர். நாளடைவில் இருவருக்குள்ளான நட்பு தன்பாலின ஈர்ப்பாக மாறியது.

இருவரது குடும்பத்தினரும் சவூதியில் வேலை பார்த்து வந்ததால் இவர்களுக்கு இடையான உறவைத்  தெரிந்துகொண்ட உறவினர்கள்  பாத்திமா நூராவை கேரளத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பாத்திமாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருந்த ஆதிலா கேரள உயர்நீதிமன்றதில் பாத்திமாவை அவளது உறவினர்கள் அடித்துத் துன்புறுத்தி கொண்டு சென்றுவிட்டதாகவும், அவளைக் காணவில்லை எனக் கூறி ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மனுவை விசாரித்த  கேரள உயர்நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு  மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத்தில் பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரின் இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய பாத்திமா நூரா “இத்தனை நாள்கள் எங்கள் வீடுகளில் கடுமையான மன அழுத்தத்தைச் சந்தித்தோம். இப்போது உண்மையிலேயே அற்புதமாக உணர்கிறோம்” எனத் தெரிவித்தார்.



Read in source website

 

உலக பால் தினத்தை முன்னிட்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக பால் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் 1945 ஜூ-1 முதல் கொண்டாடி வருகிறது. 

டெல்லி ராஜேந்திர நகரில் உலக பால் தினத்தை முன்னிட்டு, மாட்டை வழிபடுவோம் என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 



Read in source website

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து (53), கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினாா்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளாா்.

தமிழில் மின்சாரக் கனவு, கில்லி, அந்நியன், மன்மதன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட படங்களுக்கு பாடியுள்ளாா். இவருடைய திடீா் மறைவு ரசிகா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே.கே.யின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.



Read in source website

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.7 சதவீதத்தை எட்டியதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையின் அளவு 6.71 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், இது, நிதி அமைச்சகம் பட்ஜெட் மறுமதிப்பீட்டில் தெரிவித்த 6.9 சதவீதத்தைக் காட்டிலும் குறைவான அளவே ஆகும்.

பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளபடி, நிதிப் பற்றாக்குறையானது கடந்த நிதியாண்டில் ரூ.15,86,537 கோடியாக உள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய் பற்றாக்குறை 4.37 சதவீதமாக இருந்தது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு, நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 1 கோடி டன் சா்க்கரையை மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் இருப்பை உறுதிப்படுத்தவும் விலை உயா்வை தவிா்க்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை தொடா்ந்து, அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘அரசு சேமிப்புக் கிடங்குகளிலும், தனியாா் வணிகா்களிடமும் போதிய அளவு அரிசி உள்ளது. அதேவேளையில், நாட்டில் அரிசி விலையும் தற்போது கட்டுக்குள் உள்ளது. எனவே அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை’’ என்று தெரிவித்தாா்.

உலகில் அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் முதல் நாடாக சீனா திகழ்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2020-21-ஆம் ஆண்டு 4.8 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.37,291 கோடி) மதிப்பிலும், 2021-22-ஆம் ஆண்டு 6.11 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.47,464 கோடி) மதிப்பிலும் பாஸ்மதி அல்லாத இதர அரிசி வகைகளை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. 2021-22-ஆம் ஆண்டில் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத இதர அரிசி வகைகளை இந்தியா ஏற்றுமதி செய்தது.



Read in source website

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இரு காப்பீட்டுத் திட்டங்களுக்கான ‘ப்ரீமியம்’ தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஜீவன் ஜோதி காப்பீட்டுத் திட்டத்தில் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதினா் இணைந்துகொள்ளலாம். சுரக்ஷா திட்டத்தில் 18 முதல் 70 வயதுடையோா் இணைந்து கொள்ளலாம்.

ஜீவன் ஜோதி திட்டத்துக்கான ப்ரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ.330-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.436-ஆக (32 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்துக்கான ஆண்டு ப்ரீமியம் தொகையும் ரூ.12-இல் இருந்து ரூ.20-ஆக (67 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ப்ரீமியம் மூலமாகக் கிடைக்கும் வருவாயை விடக் காப்பீட்டாளா்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்துவந்த நிலையில், ப்மீரியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஜீவன் ஜோதி திட்டத்தில் 6.4 கோடி பேரும், சுரக்ஷா திட்டத்தில் 22 கோடி பேரும் இணைந்துள்ளனா். இரு திட்டங்களின் கீழும் காப்பீட்டுத் தொகை கோருவோருக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது.

 

 



Read in source website

குரங்கு அம்மை தொற்று அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாயப் பரிசோதனை செய்யுமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.

அறிகுறிகள் உள்ளவா்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்குமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளாா். குரங்கு அம்மை குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழகத்தில் உள்ள சா்வதேச விமான நிலையங்களின் இயக்குநா்களுக்கும், மாவட்ட இணை சுகாதார இயக்குநா்களுக்கும் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆப்பிரிக்க நாடுகளில் விலங்குகளிடமிருந்து பரவியதாகக் கருதப்படும் குரங்கு அம்மை தொற்று, பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளில் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை தொற்று கண்டறியப்படவில்லை.

அதேவேளையில், அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்புப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாள்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். காய்ச்சல், தலை வலி, உடல் வலி, உடலில் தடிப்புகள் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகளாகும்.

அத்தகைய அறிகுறிகளுடன் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் விமான நிலையங்களிலேயே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். மேலும், அவா்களிடமிருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து புணேவில் உள்ள தேசிய வைரலாலஜி ஆய்வகத்துக்கு பொது சுகாதாரத் துறை மூலம் அனுப்பி வைத்தல் அவசியம்.

அதில் தொற்று உறுதிசெய்யப்பட்டால், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிக்க வேண்டும். உடலில் பாதிப்பு முழுமையாக குணமடையும் வரை சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் உமிழ்நீா், சளி மூலமாக பிறருக்கு தொற்று பரவும் என்பதால், அதுகுறித்த விழிப்புணா்வையும், வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்துதல் முக்கியம்.

அந்நோய் அறிகுறிகளுடன் எவரேனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

 



Read in source website

கபோன் நாட்டுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகள்:

மத்திய ஆப்பிரிக்க நாடான கபோன், செனகல் மற்றும் கத்தாா் ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பயணம் மேற்கொண்டுள்ளாா். அவருடன் மத்திய அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கொண்ட உயா்நிலைக் குழுவும் சென்றுள்ளது.

மூன்று நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஆவாா். அவா் திங்கள்கிழமை கபோன் சென்றடைந்தாா். அந்நாட்டுத் தலைநகா் லிப்ரேவில்லில் கபோன் அதிபா் அலி பாங்கோ ஒன்டிம்பாவை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது கபோனுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக அவா் தெரிவித்தாா். தேபானின் வளா்ச்சி பயணத்தில், அந்நாட்டின் நம்பகமான கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று இந்தியா உறுதி கொண்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

கபோன் வெளியுறவு அமைச்சா் மைக்கேல் முசா அடாமோவைச் சந்தித்த வெங்கையா நாயுடு, அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா்களையும் சந்தித்துப் பேசினாா். அப்போது இந்திய அரசமைப்பின் பிரதிகளை அவா்களுக்குப் பரிசாக அளித்து, இந்தியா-கபோன் உறவின் பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை பகிா்ந்து கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) 33 ஆண்டுகளாகப் பணியாற்றிய பெண் விஞ்ஞானியான எஸ்.கீதா, செவ்வாய்க்கிழமை பணிஓய்வு பெற்றாா்.

திருவனந்தரபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) விண்வெளி போக்குவரத்து அமைப்புகள் துறையின் முதல் பெண் திட்ட இயக்குநரான கீதா, வட்டியூா்காவு அரசு உயா்நிலைப் பள்ளியில் மலையாள வழியில் கல்வி பயின்றாா். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வேலன்டினா டெரஸ்கோவாவைக் கண்டு ஊக்கமடைந்த கீதா, திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் (இசிஇ) துறையில் பட்டம் பெற்றாா். அதே கல்லூரியில் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் பிரிவில் எம்.டெக் பட்டம் பெற்றாா்.

விஎஸ்எஸ்சி-யில் பொறியாளராகப் பணியில் இணைந்து அவா் பங்கேற்ற முதல் திட்டமான பிஎஸ்எல்வி டி1, 1993-ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்தது. மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக அது வங்கக் கடலில் விழுந்தது.

அதன் பின்னா், ஜிஎஸ்எல்வி திட்டங்கள் தொடா் தோல்வியைத் தழுவியது பெரும் சோதனைமிக்க காலமாக இருந்ததாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் விஎஸ்எஸ்சி-யின் ஏவுகணைப் பிரிவில் முதல் பெண் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணியாற்றினாா். 2017-ஆம் ஆண்டில் ஒரே ஏவுகணையில் 104 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பியது. அத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய குழுவிலும் கீதா பணியாற்றினாா். பணிநேரத்துக்கு நடுவிலும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். அவரின் கணவா் எஸ்.ஆா்.விஜயமோகனகுமாா் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவா் இரு ஆண்டுகளுக்கு முன்பு பணிஓய்வு பெற்றாா்.

 



Read in source website

ஜம்மு-காஷ்மீா் தேசிய பேந்தா்ஸ் கட்சி நிறுவனா் பீம் சிங் (81) ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்கிழமை காலமானாா். கடந்த சில மாதங்களாக அவா் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த பீம் சிங் இளைஞா் பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். பின்னா் அக்கட்சியில் இருந்து விலகி 1982-இல் ஜம்மு-காஷ்மீா் தேசிய பேந்தா்ஸ் கட்சியை நிறுவினாா். ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் இருமுறையும், அங்குள்ள உதம்பூா் மக்களவைத் தோ்தலில் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளாா். மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரை எதிா்த்து மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டுள்ளாா்.

ஆதரவற்ற நிலையில் சிறையில் வாடுபவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்கள் பிரச்னைகளுக்காக களத்திலும், சட்டரீதியாகவும் போராடி 50-க்கு மேற்பட்ட முறை சிறை சென்றுள்ளாா். இதில் 18 முறை உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை விடுதலை செய்துள்ளது. வழக்குரைஞரான அவா் உச்சநீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளுக்காக ஆஜராகி அதில் வெற்றியும் பெற்றுள்ளாா். கொலை முயற்சியில் இருந்தும் ஒருமுறை தப்பினாா். லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவா், அங்கு செயலராக தோ்வான முதல் இந்தியா் என்ற பெருமைக்குரியவா். மோட்டாா் சைக்களில் 130 நாடுகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டுள்ளாா். பாலஸ்தீன தலைவா் யாசீா் அராஃபத், கியூபா இடதுசாரி தலைவா் ஃபிடல் காஸ்ட்ரோ, ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைன், லிபியாவில் ஆட்சி நடத்திய மம்மா் கடாஃபி ஆகியோருக்கு நண்பராக இருந்தாா்.

பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் ஹெச்.டி.தேவெ கெளடா உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பேராசிரியா் பீம் சிங், ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அா்ப்பணித்த தலைவராக நினைவுகூரப்படுவாா். அவா் மிகவும் நன்றாகப் படித்து, புலமை பெற்றவா். அவருடனான எனது கலந்துரையாடல்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவால் பெரிதும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று கூறியுள்ளாா்.



Read in source website

இந்தியத் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் கைப்பேசிக்கான கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் அவற்றின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

தொலைத்தொடா்பு துறையில் சேவைகளை வழங்கி வரும் முன்னணி மூன்று நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு (அக்டோபா்-மாா்ச்) காலகட்டத்தில் கைப்பேசிக்கான கட்டணங்களை மீண்டும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பணியில் அந்த நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நடப்பு 2023-ஆம் நிதியாண்டில் அவற்றின் வருவாய் வளா்ச்சி விகிதம் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செயல்பாட்டு லாப வரம்பு 1.80-2.20 சதவீதம் உயரும்.

வாடிக்கையாளா்களிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் கடந்த நிதியாண்டில் 5 சதவீதம் அதிகரித்த நிலையில், அதனை நடப்பு நிதியாண்டில் 15-20 சதவீதம் என்ற அளவில் கணிசமான அளவில் அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

வருவாயை அதிகரிப்பதன் மூலமாக, நெட்வொா்க், ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவற்றில் முதலீட்டை அதிகரித்து வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்த தொலைத்தொடா்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.

ஜியோவின் வரவால் ஏற்பட்ட குறைந்த கட்டண போட்டியால் தவித்து வந்த தொலைத்தொடா்பு நிறுவனங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2019 டிசம்பரிலிருந்து கைப்பேசிக்கான கட்டணங்களை அதிகரிக்கத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

இங்கிலாந்தின் 90 வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் ஜிம் பார்க்ஸ் காலமானார். 

சசெக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர் ஜிம் பார்க்ஸ். அவர்தான் இங்கிலாந்து நாட்டின் மிகவும் வயதான உயிருடன் வாழ்ந்து வந்த கிரிக்கெட் வீரர். தனது வீட்டில் கீழே விழுந்த காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு (மே-31) காலமானார். 

1930இல் பிறந்த ஜிம் 18வயதில் சசெக்ஸ் அணிக்காக விலையாட ஆரம்பித்தார். 739 முதல்தர ஆட்டங்களை வெற்றிகரமாக விளையாடினார். 
அவர் முதலில் லெக்ஸ்பின்னர் பேட்ஸ்மேனாக ஆரம்பித்தார். பிறகு விக்கெட் கீப்பராக மாறி இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் முதல்தர போட்டிகளில் 36000 ரன்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு அதிரடியான ஆட்டக்காரர். அவர் ஏராளமான புதிய ஷாட்களை அடிக்ககூடியவர். ‘ஸ்லாக் ஸ்வீப்’ எனப்படும் முட்டிப்போட்டுக்கொண்டு அடிக்கும் ஷாட்டை உருவாகியவரும் இவரே ஆவார். 

சசெக்ஸ் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்ததாவது: 

90 வயதில் இறந்த ஜிம் பார்க்ஸ்க்கு சசெக்ஸ் கிரிக்கெட் அணி மிகவும் வருத்தம் தெரிவிக்கிறது. ஒரு வாரம் முன்பு வீட்டில் கீழே விழுந்ததால் வொர்திங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது காலமானார். அவர்தான் இங்கிலாந்தின் மிகவும் வயதான உயிருடன் வாழ்ந்துவந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர். அவரது மகன் மற்றும் குடும்பத்தாருக்கு அழ்ந்த அனுதாபங்கள். 



Read in source website

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் அணிகள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வலரிவன், ரமிதா, ஷ்ரேயா அகா்வால் கூட்டணி கலந்துகொண்டது. இறுதிச்சுற்றில் இந்த அணி 17-5 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மாா்க்கின் அனா நீல்சன், எமா கோச், ரிக்கி மேங் இப்சன் அடங்கிய அணியை வீழ்த்தியது. முன்னதாக தகுதிச்சுற்றில் இந்திய அணி 2-ஆம் இடத்துடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அந்தச் சுற்றில் டென்மாா்க் முதலிடம் பிடித்திருந்தது.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் போட்டியிட்ட இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல், பாா்த் மகிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் அடங்கிய அணி, 10-16 என்ற புள்ளிகள் கணக்கில் குரோஷியாவிடம் தோல்வி கண்டது. தற்போதைய நிலையில் இந்தியா இப்போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 1 தங்கத்துடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.



Read in source website

 

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்கவியல் மையம் தெரித்துள்ளது. 

பெய்ஜிங் நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. 

17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. 
 



Read in source website

 

ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

உக்ரைனின் மீதான ரஷியாவின் தாக்குதல் நூறு நாள்களை நெருங்க உள்ள நிலையின் போர் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து வருகிறது. இதன் அருகேயுள்ள லிசிசன்ஸ்க் நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை அந்நகரில் வீசப்பட்ட குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப் பலியானர். இதையடுத்து, உக்ரைனுக்கு பிரான்ஸ் அரசு தாக்குதல் குறித்த விசராணைக்கு  அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதல்களை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர்(ரூ.5000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களுடன்  80 கி.மீ தொலைவு வரை இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹிமர்ஸ்(himars) போன்ற அதி நவீன ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.

 



Read in source website

எரிபொருள் பற்றாக்குறையால் தவித்து வரும் இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை வழங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா அனுப்பிய 40,000 மெட்ரிக் டன் டீசல் கொழும்பு நகரை திங்கள்கிழமை வந்தடைந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 50 கோடி டாலா் (சுமாா் ரூ.3,880 கோடி) மதிப்பிலான எரிபொருளை கடனுக்கு அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கையொப்பமானது.

அதன்படி, கடந்த மாா்ச் மாதத்தில் 40,000 டன்னும் ஏப்ரல் மாதத்தில் 40,000 டன்னும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு டீசல் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 40,000 டன் டீசலை தற்போது இந்தியா அனுப்பியுள்ளது.

அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கடனுக்கு அளிக்கப்படும் எரிபொருள்தான் கைகொடுத்து வருகிறது.

வரி விகித அதிகரிப்புக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்:

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு இடையே, அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டில் மதிப்புக் கூட்டு வரி, தனி நபா் வருமான வரி, நிறுவனங்களின் வருவாய் வரி விகிதங்களை அப்போதைய அரசு குறைத்தது.

இதனால், அரசுக்கான வரி வருவாய் மிகவும் குறைந்தது.

இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வரி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க பிரதமா் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளாா்.

அந்தப் பரிந்துரைக்கு திங்கள்கிழமை கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

உக்ரைன்-ரஷியா போா் எதிரொலியால் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

உக்ரைன்-ரஷியா போா் காரணமாக இந்திய பொருளாதாரம் நான்காவது காலாண்டில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி-மாா்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.1 சதவீத அளவிற்கே வளா்ச்சி கண்டுள்ளது. பணவீக்கம் பொருளாதார மீட்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, 2021-22 முழு நிதியாண்டில் (2021 ஏப்ரல் முதல் 2022 மாா்ச் ) நாட்டின் பொருளாதாரம் 8.7 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. இது, அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு முன்பாக மதிப்பீடு செய்திருந்த 8.9 சதவீதத்தைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.6 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி- மாா்ச் காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.8 சதவீத வளா்ச்சியை எட்டிய நிலையில், இந்திய பொருளாதாரம் அதை விட குறைவாகவே வளா்ச்சியடைந்துள்ளதாக புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் 90 சதவீதத்துக்குத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்தப் போரைக் கைவிடுவதற்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

எனினும், ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிசக்தி தேவைக்காக ரஷியாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிதும் சாா்ந்துள்ளதால், அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனினும், தங்களது எரிசக்தி தேவைக்காக ரஷியாவை சாா்ந்திருக்கும் நிலையிலிருந்து படிப்படியாக வெளியேற ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

மேலும், ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் அமைப்பு பல கட்டங்களாக பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.

எனினும், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், கடல் வழியாக ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெக் இறக்குமதி செய்வதை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்த பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புக் கொண்டனா்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது விதிக்கப்படும் 6-ஆவது கட்ட பொருளாதாரத் தடை தொடா்பாக நடைபெற்ற நீண்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா்கள் இடையே இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.

இந்தப் புதிய தடையின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியாவிடமிருந்து தற்போது மேற்கொண்டு வரும் 3-இல் இரண்டு பங்கு கச்சா எண்ணெய் இறக்குமதி ரத்து செய்யப்படும்.

தற்போதைய நிலையில் கடல்வழி இறக்குமதிக்கு மட்டும் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. குழாய் வழியாக ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க ஹங்கேரி எதிா்ப்பு தெரிவித்தது. அதனால், அந்த வகை எண்ணெய் இறக்குமதிக்கு தற்போது தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், ரஷியாவிலிருந்து குழாய் மூலம் எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப் போவதாக ஜொ்மனியும் போலந்தும் உறுதியளித்துள்ளன. அந்த வகையில், ரஷியாவிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப்படும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் கூறினாா்.

இது குறித்து ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மைக்கேல் கூறுகையில், உக்ரைன் போரில் ஈடுபடுவதற்கு ரஷிய ராணுவத்துக்கு உதவியாக இருந்த மிகப் பெரிய நிதி ஆதாரம், இந்தத் தடையினால் அழிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே, ரஷிய நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

அத்துடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள், அதிகாரிகள் மீதும் அந்த அமைப்பு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அதற்குப் பதிலடியாக ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.



Read in source website

ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அஸ்திரா எம்கே-1 ஏவுகணை, இந்திய கடற்படையிலும் விமானப் படையிலும் விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வலிமை கொண்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

அஸ்திரா எம்கே-1 வகை ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வழங்கிவிட்டது. அந்த நிறுவனத்துக்கு மற்ற உதவிகளும் வழங்கப்பட்டுவிட்டன. பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஏவுகணைத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது, ஏவுகணை உற்பத்தியில் இந்தியா தற்சாா்பு அடைவதற்கான பயணத்துக்கு உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 248 அஸ்திரா ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 200 ஏவுகணைகள் இந்திய விமானப் படையிலும், 48 ஏவுகணைகள் கடற்படையிலும் பயன்படுத்தப்படும்.

டிஆா்டிஓ வடிவமைத்த அஸ்திரா ஏவுகணை முதன்முதலில் கடந்த 2003-ஆம் ஆண்டு மே மாதம் பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த ஏவுகணைகள் பல முறை பரிசோதிக்கப்பட்டு சுகோய் போா் விமானத்தில் சோ்க்கப்பட்டன. அந்த ஏவுகணைகள், அடுத்த சில ஆண்டுகளில் தேஜஸ் மாா்க்-1ஏ போா் விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட மிக்-29 ரக போா் விமானங்களிலும் சோ்க்கப்படும்.

 



Read in source website

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது. அரபு நாடொன்றுடன் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள முதல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.

இது குறித்து இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதா் முகமது அல் காஜா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இதுவரை எட்டப்படாத சாதனையை இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் எட்டியுள்ளன; இதன் மூலம் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வா்த்தகம் மேற்கொள்ளப்படும் 96 சதவீத பொருள்களுக்கான இறக்குமதி வரி முழுமையாக ரத்து செய்யப்படும்.



Read in source website

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உருக்கு, உரம், சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. இத்துறைகளின் வளா்ச்சி விகிதம் முந்தைய மாா்ச் மாதத்தில் 4.9 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 62.6 சதவீதமாகவும் இருந்தன. இதற்கு, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் நுகா்வு நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததே முக்கிய காரணம்.

கடந்தாண்டு ஏப்ரலில் 2.1 சதவீதம் சரிவடைந்திருந்த கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி 0.9 சதவீதமா பின்னடைவை சந்தித்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நாட்டின் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் மே 30 வரையில் 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்எல்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான 2021-2022-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் மே 30 வரையில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, இதன் உற்பத்தி 3.06 கோடி டன்னிலிருந்து அதிகரித்து 3.52 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுகான சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தியானது 3.11 கோடி டன்னாக மட்டுமே இருந்தது. இந்த நிலையில், நடப்பு பருவத்தின் முதல் 8 மாத காலத்தில் சா்க்கரை உற்பத்தியானது கடந்த முழு சந்தைப் பருவத்தின் உற்பத்தியை விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு சந்தைப் பருவத்தின் இறுதிக்குள் மேலும் 4-5 டன் சா்க்கரை உற்பத்தியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உலகளவில் சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மே 30 வரையிலான மொத்த உற்பத்தி மதிப்பீட்டில், முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி மட்டும் 1.06 கோடி டன்னிலிருந்து 1.36 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், இரண்டாமிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் இதன் உற்பத்தி 1.10 கோடி டன்னிலிருந்து 1.02 கோடி டன்னாக குறைந்துள்ளது.

கா்நாடகத்தில் சா்க்கரை உற்பத்தி 42.50 லட்சம் டன்னிலிருந்து 59.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக என்எஃப்சிஎஸ்எஃப்எல் தெரிவித்துள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் 8,023 பேருக்கு 4-வது நிலை யானைக்கால் நோய் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் தெரிவித்துள்ளார்.

யானைக்கால் நோய் நிலை 4-ல் உள்ள நோயாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டதிற்கான சான்றிதழ், மருத்துவப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அரிசி, பருப்பு ஆகியவற்றை இன்று தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "யானைக்கால் நோய் ஆரம்பத்தில் காய்ச்சல், நெரிகட்டுதல், கைக்கால் வலி, தோல் சிவந்து காணப்படுதல், தோல் தடித்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். நோய் முற்றும்போது கால்களில் வீக்கம் (யானைக்கால்), விரைவீக்கம், கைகள் மற்றும் மார்பகங்களில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

இந்தத் தாக்கங்களுக்கு ஏற்ப யானைக்கால் நோய் 4 நிலைகளில் அழைக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் நோயின் தாக்கம் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் காணப்பட்டது. யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டம் 1957-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 44 இரவு நேர ரத்தப் பரிசோதனை மையங்களும், 25 யானைக்கால் நோய் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் ஆங்காங்கே பொது மக்களுக்கு இரவு நேர ரத்தத் தடவல் பரிசோதனை மற்றும் கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானைக்கால் நோயை ஒழிக்கும் பொருட்டு ஒட்டு மொத்த டிஇசி மாத்திரை வழங்கும் திட்டம் 1998 முதல் 2014 வரை 2 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் வருடம் தோறும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் இந்நோய் தற்பொழுது பரவக்கூடிய நிலையில் இல்லை என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு செல்கிறது.

தற்பொழுது யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிப்பு என்ற இலக்கினை நோக்கி சென்றபோதிலும், ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு யானைக்கால் நோய் நிலை 4-இல் தமிழகத்தில் 8,023 நபர்கள் தற்போது பாதிப்பில் உள்ளனர். நிலை 4-ல் உள்ளவர்களுக்கு கால் வீக்கம், தோலில் புண்கள் மற்றும் நீர்வடிதல் ஆகியவை காணப்படும்.

இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உதவித்தொகையாக மாதம் ரூபாய்.1000/- மற்றும் யானைக்கால் பராமரிப்பு உபகரணங்கள் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வங்கிக் கணக்கிலேயே மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மூலமாக செலுத்தப்படுகிறது.

மேலும், கால்களில் உள்ள புண்கள் பராமரிப்பதற்காக பிளாஸ்டிக் பேசின், குவளை, ஸ்டூல், சோப்புப்பெட்டி, சோப்பு, துண்டு மற்றும் மாத்திரைகள், களிம்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்நோயாளிகளுக்கு தன் சுத்தம் பற்றியும் கால்களை பராமரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது" என்று தெரிவித்தார்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் 'தட்கல்' முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த "தட்கல்" பத்திரப்பதிவு முறை செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழக சட்டப் பேரைவைக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக 'தட்கல்' முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில், "தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும்.

தினசரி அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 100 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், அதிகபட்சமாக தினசரி தலா 10 தட்கல் பத்திரப்பதிவுகள் செய்யப்படும்.

தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று பதிவு செய்தல், தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு விரல் ரேகை சாதனத்தை பயன்படுத்தி ‘ஜீவன் பிரமான்’ இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருமுறையில் வாழ்நாள் சான்றிதழை நேர்காணலில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை நடக்கும் நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதை கருத்தில்கொண்டும், அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று ‘ஜீவன் பிரமான்’ இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய 5 முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70 என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் தமிழக அரசு - இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந் நிகழ்வில், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி நிறுவன தலைமை பொதுமேலாளர் குருசரண் ராய் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

ஜகர்த்தா: நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது இந்தியா.

இந்தோனேசிய நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை - 2022 தொடர் ஆரம்பமானது. இந்தத் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன.

முதல் சுற்றில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது இந்தியா. அதனால் கோல்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

இன்று மாலை (ஜூன் 1) நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளாக உள்ள ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 2023 ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணி தொடரை நடத்தும் அணியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை தென்கொரியாவும், இரண்டாவது இடத்தை மலேசியாவும் வென்றுள்ளன. ஜப்பான் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.



Read in source website

ஜகர்த்தா: நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது இந்தியா.

இந்தோனேசிய நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை - 2022 தொடர் ஆரம்பமானது. இந்தத் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன.

முதல் சுற்றில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது இந்தியா. அதனால் கோல்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

இன்று மாலை (ஜூன் 1) நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளாக உள்ள ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 2023 ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணி தொடரை நடத்தும் அணியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை தென்கொரியாவும், இரண்டாவது இடத்தை மலேசியாவும் வென்றுள்ளன. ஜப்பான் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.



Read in source website

கரோனா தொற்று காலத்திற்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக பேரிடர்களுக்கு இடையில் தான் வாழ்க்கை என்று ஐபிசிசி (பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ள போவது சுகாதாரத்துறை.

இது மாதிரியான பலவேறு நெருக்கடியை சுகாதாரத்துறை வரும் சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ளது. உலகை முடக்கிய கரோனா தொற்றுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. மே 22 முதல் 28 வரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய சுகாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.



Read in source website

Minister Anbil Mahesh starts ‘Reading Marathon’, A new project for tamilnadu government school students Tamil News: கூகுல் நிறுவனத்தின் வழியே “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

க.சண்முகவடிவேல்

திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை, கூகுல் நிறுவனத்தின் வழியே “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டத்தை இன்று ஜூன் 01 முதல் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டது.

இத்திட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் “கூகுல் ரீடிங் அலாங்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான துவக்க விழா நிகழ்ச்சி திருவெறும்பூர் பகவதிபுரம் நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாசிப்புத்திறன் தொடர் ஓட்டம் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளித் தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, மாநகராட்சி கவுன்சிலர்கள் நீலமேகம், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்; குழந்தைகளுக்கு வாசிக்கின்ற திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த திட்டத்தை இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தொடர்ந்து நடத்த இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி மையம் தமிழகத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் மையங்கள் உள்ளதாகவும், அதிலிருக்கும் தன்னார்வலர்களும் மொபைல் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு படிக்கச் செய்வோம்.

குழந்தைகளை படிக்கும்போது நூறு வார்த்தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை படிக்கச் செய்வோம். நான்கு கட்டமாக இதற்கு உரிய பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அப்படிப் படிக்கும்போது செயற்கையான நுண்ணறிவு எற்படும் முழுமையாக படிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கூகுள் வாசிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த செயலியின் பெயர் “கூகுள் அலாமிங் ரீடு” என்பதாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் தொண்டர்கள் மூலம் செய்ய வேண்டும் என்பதே எங்களது ஆசை அதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். வரும் 13-ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்காக கதைகளோடு புகைப்படங்களும் இருப்பதால் படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று முதல் 12-ம் தேதி வரை இந்த வாசிப்பு திறன் பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.



Read in source website

Indian chess Grandmaster Viswanathan Anand beated Norwegian chess Grandmaster Magnus Carlsen Tamil News: விஸ்வநாதன் ஆனந்த் 2017ம் ஆண்டுக்கு பிறகு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பெருமை பெற்றுள்ளார்.

Viswanathan Anand Tamil News: செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். ‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் இவர் தனது 16 வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்கிற பட்டத்தைப் பெற்றவர். இவர் 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டத்தையும் வென்றெடுத்தார்.

14வது வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, 15 வயதில் ‘அனைத்துலக மாஸ்டர்’ அந்தஸ்து, 18 வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவராக இவர் இருக்கிறார். இந்த சாம்பியன் வீரருக்கு இந்திய அரசு அதன் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்…

இப்படியாக உலக செஸ் அரங்கில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் விசுவநாதன் ஆனந்த், கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார்.

இந்நிலையியல், நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்று விளையாடி வருகிறார். அவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்ட நிலையில், ஆட்டத்தின் 43வது நகர்வின் போது கார்ல்சனை வீழ்த்தி சாய்த்தார்.

இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் 2017ம் ஆண்டுக்கு பிறகு உலக சாம்பியனான கார்ல்சனை வீழ்த்திய பெருமை பெற்றுள்ளார். மேலும், இந்த தொடரில் அவர் 5 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தார். தற்போது அவர் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் நிலையில், பிரெஞ்சு செஸ் கிராண்ட்மாஸ்டர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ்வை எதிர்கொள்ள இருக்கிறார்.



Read in source website

India has bought 34 million barrels of discounted Russian oil since the Ukraine invasion: ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கியது முதல் தற்போது வரை இந்தியா சுமார் 34 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை அந்நாட்டிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.

India says it will keep buying “cheap” Russian oil, arguing a sudden stop would drive up costs for its people: உலகில் சக்தி வாய்ந்த நாடுகளுள் ஒன்றாக வலம் வரும் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஐ.நாவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் ரஷ்யாவின் செயலை கண்டித்து, அந்நாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனைத்தொடர்ந்து, உலகில் உள்ள வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதி வாக்களிக்கவில்லை. இதேபோல், இந்தியா மற்ற நாடுகளை போல் ரஷ்யாவை கடுமையாக சாடவில்லை. அது அந்த இருநாடுகளின் விவகாரம் என இன்று வரை யாருக்கும் எதிராகவும், சாதகமாகவும் கருத்து தெரிவிக்காமல், நடுநிலையை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு மற்றும் உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா கடந்த சுமார் 34 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கடல்வழி எண்ணெய் இறக்குமதியின் அளவுகள் CPC கலப்பு எண்ணெயை விலக்குகின்றன. இது ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகம் வழியாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் கஜகஸ்தானின் மேற்கத்திய நாடுகளின் துணை நிறுவனங்களால் போக்குவரத்து அளவுகளாக வழங்கப்படுகிறது.

ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் பிப்ரவரி முதல் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா இறக்குமதிக் கட்டணத்தைக் குறைத்து தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கு எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியா இந்த மாதம் 24 மில்லியனுக்கும் அதிகமான பேரல்கள் ரஷ்ய கச்சாவைப் பெற்றது. இது ஏப்ரல் மாதத்தில் 7.2 மில்லியன் பேரல்கள் மற்றும் மார்ச் மாதத்தில் சுமார் 3 மில்லியனாக இருந்தது. ஜூன் மாதத்தில் இது மேலும் சுமார் 28 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ரஷ்யாவிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் எரிசக்தி இறக்குமதியை மேற்கொண்டு வரும் நிலையில், பிப்ரவரி 24 முதல் மே 26 வரை ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதியை 6.4 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1.99 பில்லியன் டாலராக இருந்தது.

எவ்வாறாயினும், ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள், கிட்டத்தட்ட 50 சதவீதம் சரிந்து 377.07 மில்லியன் டாலர்களாக உள்ளது. ஏன்னென்றால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியா பண பரிமாற்றம் செய்வதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலர் போல் ரஷ்யாவும் ஒரு பண முறையை கொண்டு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிசக்தியை தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலையை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

அந்த இறக்குமதிகள் நாட்டின் ஒட்டுமொத்தத் தேவைகளில் ஒரு பகுதியை மட்டுமே செய்ததாகவும், “மலிவான” ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சனம் செய்த நாடுகளுக்கு பதில் கொடுத்தது. மேலும், இதை திடீரென நிறுத்தினால் அதன் நுகர்வோருக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றும் வாதிட்டு இருந்தது.

இதற்கிடையில், இந்திய எரிசக்தி நிறுவனங்கள் கால விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் சாத்தியமான பங்குகளை கையகப்படுத்துவது குறித்து விவாதித்து வருகின்றன.



Read in source website

துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு, துப்பாக்கி உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றார்.

மலேசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின்(102) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அப்போது அஞ்சலைக்கு 21 வயது. இரண்டாம் உலகப் போரின் போது, மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவினர். அப்போது, இந்தியப் பெண்கள் ராணுவ உடையுடன் கம்பீரமாக இருப்பதை பார்த்த அஞ்சலைக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை வந்தது

இவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்ஸி ராணி பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய படை இது. அந்த பெண்களை பார்த்து, உத்வேகமடைந்த அஞ்சலை, நாட்டின் சுதந்திரத்துக்காக, தன்னையும் அந்த படையில் அர்ப்பணித்துக் கொண்டார்.

பிறகு, சிங்கப்பூருக்கு ராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். அங்கு, துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு, துப்பாக்கி உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றார். பிறகு அங்கிருந்து பர்மாவுக்கு (மியான்மர்) அனுப்பப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. இதனால் அஞ்சலையும் மலேசியாவுக்குத் திரும்பினார். பிறகு 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார்.

இந்நிலையில், 102 வயதான அஞ்சலை பொன்னுசாமி, வயது மூப்பால் மே 31 ஆம் தேதி, மலேசியாவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

”அஞ்சலி பொன்னுசாமி மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியம் மற்றும் ஊக்கமளிக்கும் பங்கு எப்போதும் மக்கள் நினைவில் இருக்கும். 102 வயதான ஐஎன்ஏ வீரரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்” என்று மோடி ட்வீட்டில் கூறினார்.

அதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் அஞ்சலி பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.



Read in source website

 தில்லி நிர்பயா சம்பவத்தைப் போல, ஹைதராபாத் சம்பவமும் எளிதில் மக்களின் நினைவில் இருந்து மறைந்துவிடக் கூடியதல்ல. நாடுதழுவிய அளவில் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட அந்த நிகழ்வு மிகப் பெரிய பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
 சம்பவம் நடந்த அடுத்த நாளே (2019 நவம்பர் 29) ஹைதராபாத் காவல்துறை ஆணையர், அந்தப் பாலியல் வன்கொடுமை மரணத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவர்கள் 13 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். டிசம்பர் 6-ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் சம்பவம் நடந்த சத்தன்பள்ளி மேம்பாலத்துக்குக் கீழே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது என்கவுன்ட்டரில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 தங்களை அழைத்துச் சென்ற காவல்துறையினரின் ஆயுதங்களை வலுக்கட்டாயமாகப் பறிந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டபோது அந்த நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. உடனடி நியாயம் வழங்கியதற்காக, மக்கள் மத்தியிலும் பெண்ணியவாதிகள் மத்தியிலும் காவல்துறையினருக்கு கைத்தட்டல்களும் பாராட்டுதல்களும் கிடைத்தன. அதே நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த விரும்பும் நடுநிலையாளர்களும் காவல்துறையினரின் அதிகார அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பினர்.
 உச்சநீதிமன்றம் அந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி டி.எஸ். திர்புர்கர் தலைமையில் நீதிபதி ரேகா பி சொந்தூர் பல்டோட்டா, முன்னாள் சிபிஐ இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணை ஆணையம் இப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்குக் கிடையாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறது, ஹைதராபாத் என்கவுன்ட்டர் வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை.
 சத்தன்பள்ளி சம்பவத்தில் சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதிகளை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் நடத்தியது வரை அனைத்துமே ஜோடிக்கப்பட்ட நாடகம் என்கிறது அந்த அறிக்கை. காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து கைதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது இயலாது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது அறிக்கை. மக்கள் மத்தியில் காணப்பட்ட கொந்தளிப்பை அடக்குவதற்காக காவல்துறையினரால் நடத்தப்பட்ட நாடகம்தான் அந்த என்கவுன்ட்டர் என்பதை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது அறிக்கை.
 துப்பாக்கிச் சூட்டில் கைதிகள் கொல்லப்படுவார்கள் என்பது தெரிந்தே அவர்கள் மீது காவல்துறையினர் என்கவுன்ட்டர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதுடன் நின்றுவிடவில்லை அறிக்கை. அந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் தொடர்புடைய 10 காவல்துறை அதிகாரிகள் மீதும் தடயங்களை அழிக்க முற்பட்டதற்காகவும், கொலைக் குற்றத்துக்காகவும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. சட்டத்துக்கு விரோதமாக எந்தவித ஆவணங்களையும் பரிசீலிக்காமல், சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் பார்க்காமல் அவர்களின் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட நீதிபதியும் அந்த விசாரணை ஆணையத்தின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
 இதுபோன்ற சம்பவங்களில் எல்லா புள்ளிகளையும் இணைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது ஓரிரு நாள்களில் நடக்கக் கூடியது அல்ல. பொதுமக்கள் மத்தியில் பாலியல் சம்பவங்கள், கொலைகள் ஏற்படுத்தும் பரபரப்பும் ஆத்திரமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது இயல்பு. அவர்கள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பதும், யாராவது குற்றவாளிகளை அடையாளப்படுத்தி பொதுமக்களின் ஆத்திரத்தைக் குறைத்து கவனச் சிதறலை ஏற்படுத்துவதும் காவல்துறை கையாளும் வழக்கமான அணுகுமுறை.
 2017 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரையில் இதுவரை 655 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான என்கவுன்ட்டர் வழக்குகளில் அரசியல் தலைமையையும், காவல்துறை உயரதிகாரிகளையும் விசாரிப்பதோ குற்றப்படுத்தப்படுவதோ இல்லை. மேலிட உத்தரவை வேறுவழியில்லாமல் நடைமுறைப்படுத்தும் காவலர்களும், ஆய்வாளர்களும்தான் தண்டிக்கப்படுகிறார்கள். உயரதிகாரிகளும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆட்சியாளர்களும் என்கவுன்ட்டர் மரணங்களுக்கு பொறுப்பேற்கும்படி செய்யாத வரை இது தொடரும்.
 ஹைதராபாத் சம்பவத்தையே எடுத்துக்கொண்டால் அந்த நான்கு பேர்தான் உண்மையான குற்றவாளிகளா என்பது நிரூபிக்கப்படவில்லை. நீதித்துறையால் கொலையாளிகளும் பாலியல் கொடுமை செய்பவர்களும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்கிற மக்கள் மன்றத்தின் பரவலான அபிப்பிராயம்தான் இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்துகின்றன.
 2020 தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, பாலியல் வன்கொடுமை மரணங்கள் தொடர்பான 48.8% வழக்குகள் காவல்துறையினரின் விசாரணையிலும், 96.9% வழக்குகள் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. விசாரணையில் ஏற்படும் காலதாமதம்தான் காவல்துறையினர் நீதிபரிபாலணத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை நியாயப்படுத்துகிறது.
 தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திடம்தான் இருக்க வேண்டும்; காவல்துறையிடம் அல்ல. அதை ஹைதராபாத் சம்பவ விசாரணை அறிக்கை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.
 



Read in source website

அண்மையில் ஆந்திர மாநிலத்தில் நடந்த ஓர் ஈவு இரக்கமற்ற செயல், இதயத்தைக் கனக்கச் செய்துவிட்டது. திருப்பதிக்கு அருகில் அன்னமையா மாவட்டத்தில் சித்வெல் என்றோர் கிராமம் உண்டு. பழங்குடி மக்கள் வாழ்கின்ற கிராமம் அது. அங்கு நரசிம்மலு என்பவர், ஒரு மாம்பழத் தோப்பில் மாதம் ரூ. 4,000 ஊதியத்திற்கு தோட்டக்காரராக வேலை பார்த்து வருகிறார். அவருக்குப் பத்து வயதில் ஜாஸ்வா என்றொரு மகன் இருந்தான்.
 அந்த மகன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, திருப்பதியிலுள்ள எஸ்.எஸ்.ஆர்.ஆர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். வசதி படைத்தவர்களுக்கு சிறுநீரகம் தருவதற்குப் பலர் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், ஏழைகளுக்கு இறைவனை விட்டால் ஏது கதி? ஜாஸ்வா ஒரே நேரத்தில் சிறுநீரகமும் கல்லீரலும் பாதிக்கப்பட்டு 25.4.2022 இரவு 11மணிக்கு, இறந்து விடுகிறான்.
 மருத்துவமனை அதிகாரிகள், இரவு இரண்டு மணிக்கு இறந்த மகனின் உடலை, நரசிம்மலுவிடம் கொடுத்து, உடனடியாக எடுத்துப் போக வற்புறுத்தினர். கலங்கி நின்ற நரசிம்மலு, ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து தரும்படி கெஞ்சினார். ஏழையின் சொல் அம்பலம் ஏறவில்லை.
 மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த தனியார் ஆம்புலன்சு ஓட்டுநர்களிடம் தம் நிலையை எடுத்துச் சொல்கிறார் நரசிம்மலு. திருப்பதியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சிக்வெல் கிராமத்திற்கு, உடலை எடுத்துச் செல்வதென்றால் ரூ. 20,000 வேண்டும் எனக் கூறினர் அங்கிருந்த ஆறு ஓட்டுநர்களும். தாம் மாதம் ரூ. 4,000-க்கு வேலை பார்க்கும் தோட்டக்காரன் என்று கெஞ்சிக் கூத்தாடிப் பார்க்கிறார் நரசிம்மலு. இறுகிப் போனவர்கள் இளகவில்லை.
 தமிழ்நாட்டில் இலவச ஆம்புலன்ஸ் 108 போல், ஆந்திரத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவ "மகாபிரஸ்தானம்' எனும் இலவச வாகனங்களை அந்த அரசு, பொது மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர்.ஆர். மருத்துவமனைக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அந்த மூன்றில் ஒன்றுகூட அந்த நேரத்தில் அங்கு இல்லை.
 என்றாலும், "அமரர் ஊர்தி' வாகனங்கள் மூன்று நின்றிருந்தன. அந்த மூன்றில் ஒன்றைத் தரும்படி மருத்துவமனை அலுவலர்களிடம் நரசிம்மலு வேண்டினார். ஆனால், அதிகார வர்க்கம் அவ்வூர்திகள் காலை 7.00 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரைதான் செயல்படும் என்று உரத்த குரலில் கூறிவிட்டது.
 உள்ளத்தால் உடைந்து நொறுங்கிப் போயிருந்த நரசிம்மலு, தம் கிராமத்தில் இருந்தவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு வாகனம் அனுப்பும்படி வேண்டினார். ஊர்க்காரர்களும் ஓர் ஆம்புலன்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 20,000- ரூபாய் கேட்டுக் கொண்டிருந்த தனியார் ஆம்புலன்சு ஓட்டிகள், வந்த வாகனத்தை அடித்து விரட்டினர்; ஓட்டி வந்த ஓட்டுநரையும் தாக்கினர். அதைத் தடுக்கப் போன நரசிம்மலுவையும் தாக்கத் தொடங்கினர். வந்த வாகனம், வந்த வேகத்திலேயே திரும்பி விட்டது.
 வேறு வழியின்றி, நரசிம்மலு மோட்டார் பைக் ஒன்றை வரவழைத்து, தம் மகனைத் தோளில் போட்டுக் கொண்டு, பின் சீட்டில் அமர்ந்தபடியே 90 கிலோ மீட்டரைக் கடந்து, சித்வெல் கிராமத்தை அடைந்தார். உயிரோடு அழைத்து வந்த மகனை பிணமாகச் சுமந்து சென்றார் நரசிம்மலு.
 நம் நாட்டில் மட்டுமன்றி, அயல்நாடுகளிலும் மனிதம் தேய்ந்தே வருகிறது. உலகத்தில் இருக்கின்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வறுமை ஒழிய வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் காரல் மார்க்ஸ். ஆனால், அவருடைய வறுமையை மனிதநேயத்தோடு பரிசீலித்தவர்கள் யாருமில்லை.
 மார்க்ஸ் "மூலதன'த்தை எழுதிக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி ஜென்னி, அவரை நெருங்கி, "மகள் பிரான்சிஸ்கா இறந்துவிட்டாள்; சவப்பெட்டி வாங்கப் பணமில்லை' என்றார். அதற்கு மார்க்ஸ், "அவள் பிறந்தபோது தொட்டில் வாங்கக் காசு இருந்தால் அல்லவா, இப்பொழுது இறந்தபோது சவப்பெட்டி வாங்கப் பணம் இருக்கும்' என்றார். அதனால், அவருடைய இரண்டு கரங்களிலும் மகளின் உடலை ஏந்தியவாறே கல்லறைக்கு நடந்து போனார்.
 நரசிம்மலு வீட்டு வாசலையும் காரல் மார்க்ஸ் வீட்டு வாசலையும் எட்டிப் பாராத மனிதநேயம், காந்தியடிகளுடைய வாசலை ஓரளவு எட்டிப் பார்த்திருந்தது. காந்தியடிகள் ஆகாகான் மாளிகையில் அரசியல் கைதியாக இருந்தபோது, 22.2.1944 அன்று அன்னை கஸ்தூர்பா இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். அன்னையினுடைய புகழுடம்பை இறுதி யாத்திரைக்கு வெளியே எடுத்துச் செல்ல, ஆங்கில அரசு அனுமதிக்கவில்லை. அதனால், ஆகாகான் மாளிகையிலேயே அன்னையைத் தகனம் செய்ய, காந்திஜி முடிவெடுத்தார். அன்னைக்குப் புத்தாடை அணிவிக்க என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அங்கிருந்த ஜெயிலர் கடேலி மனிதநேயத்தோடு ஒரு தூய கதராடையைக் கொண்டு வந்தார்.
 ஆனால், காந்தியடிகள் "கதர் துணியை நான் வீணாக எரிக்க விரும்பவில்லை. இது ஏழைகளுக்குப் பயன்படும்' என்றார். மனிதாபிமானம் மிக்க ஜெயிலர், "என்னிடம் ஏற்கெனவே வெட்டப்பட்ட இரு சந்தன மரங்கள் இருக்கின்றன' என்றார். அதற்கு காந்தியடிகள், "நீங்கள் எதைக் கொடுப்பீர்களோ, அதுதான் பயன்படப் போகிறது' என்றார். ஒரு ஜெயிலரின் மனித நேயத்தால், அன்னையின் தகனத்திற்கு சந்தனக் கட்டை கிடைத்தது.
 மனிதநேயத்தின் உச்சத்தை கம்பர், கானகத்தில் இராவணனின் வாள் பட்டு இறக்கும் தறுவாயில் இருந்த சடாயு எனும் பறவைக்கு, இராமபிரான் ஈமக்கிரியைகள் செய்ததன் மூலம் எடுத்தியம்புகிறார். அயோத்தியில் இருந்திருந்தால், தசரதனுக்கு இராமன் எப்படி இறுதிக் கடன்களைச் செய்வானோ, அவ்வாறே சடாயு எனும் கழுகரசனுக்குச் செய்கிறான். சடாயு ஓர் அநாதைப்பிணமாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணிய இராமபிரான், சடாயுவைத் தம்முடைய இரு கரங்களிலும் ஏந்தி, ஈமப்படுக்கையில் இடுகின்றான் (தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்).
 இராவணன் பிறன்மனை விழைந்தவன் என்றாலும், அவன் அம்பு பட்டு வீழ்ந்தவுடன், அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை நிறைவேற்றும்படியாக வீடணனுக்கு ஆணையிடுகிறான், இராமன்.
 உயிர் நீத்த ஒரு சடலத்திற்கு ஈமக்கிரியைகளைச் செய்வதற்கு, எந்த ஜாதியும் மதமும் தடை போட்டது இல்லை. எம்பெருமானார் இராமானுசரின் ஆச்சாரியர்களில் ஒருவர், பெரியநம்பி. சேரியில் பிறந்து வாழ்ந்த மாறநேரி நம்பி, பெரியநம்பிக்கு உற்ற சீடராக இருந்தார். மாறநேரி நம்பிக்கு முதுகில் பிளவை நோய் ஏற்பட்டு, உடல் புண்ணாகி விட்டது. பெரிய நம்பிகள் ஒவ்வொரு நாளும் சேரிக்குச் சென்று, மாறநேரி நம்பியின் புண்களைத் துடைத்து, மருந்திட்டு வந்தார்.
 ஒருநாள் மாறநேரி நம்பி அகால மரணமடைந்தார். அவருக்கு உற்றார் யாருமில்லாத காரணத்தால், பெரிய நம்பியே ஈமக்கடன்களை ஆற்றினார். அதனால், வெகுண்ட மேற்குலத்தார், பெரிய நம்பியை ஜாதி பிரஷ்டம் செய்தனர். அப்படிச் செய்வார்கள் எனத் தெரிந்தும், பெரிய நம்பிகள் இறுதிக்கடன்களை ஆற்றியது, மனிதநேயத்தால் அல்லவா?
 எம்பெருமான் இராமானுசருக்கு நீலகிரி பகுதியில் நல்லான் என்றொரு சீடன் இருந்தார். அந்த நல்லான் ஆற்றோரமாக நடந்து கொண்டிருந்தபொழுது, ஒரு பிணம் மிதந்து வருவதைப் பார்த்தார். உடனே ஆற்றில் இறங்கி, அப்பிணத்தை ஏந்தி வந்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, ஈமக்கடன்களை நிறைவேற்றினார். ஆனால், அதனை ஊர்க்காரர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 "குலம் தெரியாத ஒருவனின் பிணத்திற்கு எப்படி ஒரு வைணவன் ஈமக்கடன்களைச் செய்யலாம்' எனச்சொல்லி, அவரை ஊரை விட்டு விலக்கி வைத்தனர்.
 எம்பெருமானார் நீலகிரி வழியாக மேல்கோட்டைக்குச் செல்லும்போது, "நல்லான் எங்கே' என்று தம் சீடர்களைக் கேட்கின்றார். ஊர்க்காரர்கள் நல்லானை ஜாதி நீக்கி வைத்திருக்கும் செய்தியை சீடர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, சீடர்கள் நல்லானைத் தேடிப்பிடித்து, எம்பெருமானாருக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். எம்பெருமானார் நல்லானை ஆரத்தழுவிக்கொண்டு, "இவன் ஊருக்குப் பொல்லான் என்றாலும், எனக்கு நல்லான்' என உரைத்தார்.
 சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், டிகா கடற்கரையில் ஆழிப்பேரலை எழுந்து, பல மனித உயிர்களை பலிகொண்டது. சுவாமிஜிக்கு நீச்சல் தெரியும் என்ற காரணத்தால், கடலில் நீந்திச் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த உயிர்களைத் தோளில் தாங்கிவந்து, கரையேற்றினார். அவர் ஏந்தி வந்த மனிதர்களில் இந்துக்களும் உண்டு; இசுலாமியர்களும் உண்டு. மனிதநேயமே வடிவெடுத்து வந்தாற்போன்ற சுவாமி, பேதம் பார்க்காமல் தொண்டாற்றினார்.
 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது, ஆங்கிலேய சிப்பாய்களும் இறந்து போனார்கள்; இந்திய சிப்பாய்களும் இறந்து போனார்கள். இறந்து போன ஆங்கிலேய சிப்பாய்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றிக் கொண்டு வரும்போது, அதில் இந்திய சிப்பாய்களின் பிணங்களும் தென்பட்டன. ஆங்கிலேயர்கள் மனிதர்களுக்கு இடையிலேதான் பேதம் காட்டுகிறவர்களே தவிர, பிணங்களுக்கிடையில் பேதம் காட்டியவர்கள் இல்லை. அதனால், இந்திய பிணங்களுக்கும் மாலையிட்டு புதைகுழியில் இறக்கினர்.
 காக்கைக் கூட்டத்தில் ஏதாவது ஒரு காக்கை மின் கம்பத்தில் சிக்கி, உயிரிழந்து கீழே விழுந்தால், உடனே அது எப்படியோ பல காக்கைகளுக்குத் தெரிந்து, செத்த காக்கையைச் சூழ்ந்து நின்று கரைந்து கொண்டே இருக்கும். சிறிது நேரம் கழித்து, செத்த காக்கையை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டுப்பறந்துவிடும். காக்கைகள்கூட செத்த காக்கையை அநாதையாக விட்டு விடுவதில்லை.
 ஒளரங்கசீப் பதவியேற்றவுடன், தனது தந்தை ஷாஜகானை தாஜ்மகாலுக்கு எதிரே சிறை வைத்து, யமுனைத் தண்ணீரை அவருக்குக் கிடைக்க விடாமல் செய்தான். தாகம் எடுத்தே ஷாஜகான் சாக வேண்டும் என நினைத்தான். ஷாஜகான், "என் மகன் என்னை வாழும்போதே சாகடிக்கிறான்' என்றார்.
 ஒரு மனிதன் வாழும்போது எத்தனை இடர்ப்பாடுகளுக்கும் உள்ளாகலாம்; ஆனால், அவன் மரித்துவிட்டால், மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டும். எத்தகைய காலமாற்றத்திலும் மனிதம் மட்டும் மரித்துவிடலாகாது!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 



Read in source website

 

புதிய உலக வரிசையில் அமெரிக்கா தலைமையிலான உலக வரிசை தவிர்க்க முடியாதபடி விளங்குகின்றது. அமெரிக்காவை பொறுத்தவரை தன் மீதான சர்வதேச நாடுகள் சார்ந்திருக்க செய்ய வேண்டும் என்றே விரும்புகிறது. இத்தகையதொரு தன்மையினை அடைந்துகொள்ள அமெரிக்கா கடைப்பிடிக்கும் உபாயங்கள் மூன்றாம் உலக யுத்தத்திற்கு கூட வழிவகுக்கலாம். ஆனால் இது சீனாவின் இராஜதந்திர ரீதியிலான செயற்ப்பாட்டினை பொறுத்தே அமையும் என்பது எனது நோக்காக உள்ளது.

உலக, பிராந்திய நலன், அதிகாரங்கள் போன்றவற்றை கைப்பெற்ற ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நடத்தும் அதிகார போராட்டத்தில் இந்தியப் பெருங்கடலும் இலங்கையும் முதன்மையான இடத்தினை பெற்றுள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியம்(இந்தியப் பெருங்கடல்) இன்று அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகியுள்ளது. வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தில் இருந்தே இன்றைய இதன் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பெரும் பேரரசாக தோற்றம் பெற்ற சோழப்பேரரசு கிழக்கு ஆசிய நாடுகளில் தமது செல்வாக்கினை பெருக்கவும் பின்னர், அரேபியர்களின் கவனத்தை ஈர்த்த இப்பிராந்தியம் அரேபியர்களின் சமய, கலை, கலாச்சாரங்களை இப்பிராந்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் ஐரோப்பியர் ஆதிக்கம் பெற தொடங்கியதுடன், அவர்கள் உலகில் அரசியல் பொருளாதார ரீதியில் மேன்யைடைய வழி ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சமயத்தை பரப்ப செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பிராந்திய நாடுகள் 2ஆம் உலக யுத்தத்தை தொடர்ந்து காலணித்துவ ஆதிக்கத்தை தோற்கடித்தன. இதனால் மேலைத்தேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்ளை தமதாக்கி கொள்ள புது வடிவங்களை நிலைநிறுத்த முற்பட்டனர். இப்படியான நிலையில் இந்து சமுத்திர நாடுகளின் நிலை இந்த வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு தமது சுயாதிபத்தியத்தையும் அமைதியையும் இழந்து வாழவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதாய் இருக்கிறது.

இந்து சமுத்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 28,350,000 சதுரமையில் பரப்பு கொண்டதாகும். இந்தியப் பெருங்கடல் உலகிலுள்ள பெரிய சமுத்திரங்களில் மூன்றாவது சமுத்திரமாகவும் உலக நீர்ப்பரப்பில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன் தென்முனையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளடங்கலாக 10,000 கிலோ மீட்டர் அகலத்தை கொண்டதாகும்.

இந்தியப் பெருங்கடலை ஐந்து புவிசார் அரசியல் பிரதேசங்களாக பிரிக்கலாம். கிழக்காபிரிக்கா பிராந்தியம், தென் மேற்க்காசியா பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், ஆஸ்திரேலிய பிராந்தியம், என ஐந்து பிராந்தியங்களாக கொள்ளலாம். இது தென்கிழக்காசியாவையும், மத்திய கிழக்கையும் அதாவது மலாக்கா நீரினையும், அரபிக்கடலையும் இணைக்கும் சமுத்திரமாகவும் விளங்குகிறது. இந்து சமுத்திரப் பிராந்தியம் அரேபியக்கடல், வங்களாவிரிகுடா, அந்தமான்கடல், ஓமான் வளைகுடா, பாரிய ஆஸ்திரேலியன் குடா, ஏடன் வளைகுடா, பசுபிக்கடல், மொசாம்பிக் கால்வாய், மலாக்கா நீரினை ஏங் கடல் சபுக் கடல், தீமோர் கடல், ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற கடற்பிராந்தியமாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மட்டும் 47 நாடுகள் உள்ளன. இதில் 36 நாடுகள் கரையோர நாடுகளாகவும், 11 நாடுகள் இந்து சமுத்திர பின்னனி நாடுகளாகவும் காணப்படுகின்றன. இச்சமுத்திரத்தில் பல தீவுகள் காணப்படுகின்றன. அவை கொக்கோ தீவுகள், இலங்கை அந்தமான் தீவுகள், மாலத்தீவுகள், டிக்காகோவியிலி, மொரிசியஸ், பிச்ரல்ஸ் தீவுகள் ஆகும். அதே நேரம் கப்பல் போக்குவரத்துக்கான பல துறைமுகங்கள் காணப்படுகின்றன. சிற்றாங் கொஸ், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை, லியா விசாகப்பட்டினம், கொச்வின் கர்வோர், நர்மாறா வோடர், தீலுகிஸ் துறைமுகம், விக்டோரியா துறைமுகம், பூயூகென் ஆகிய துறைமுகங்கள் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் உள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள பெருமளவான சக்தி மூல வளங்களான பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் மிக முக்கியமானவையாகும். இவை தவிர பல தாது பொருள்களான தகரம், செம்பு, ஈயம், மற்றும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், போன்ற பெறுமதி மிக்க தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளதுடன் இன்று உலகில் முக்கிய சர்ச்சைக்குரிய ஓர் மூலவளமான யுரேனியம் இப்பராந்தியத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படுகின்றது. மேலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர்ந்த இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் பரவலாக விவசாயப் மூலப் பொருள்கள் காணப்படுகின்றன.

மேலும் 40 எண்ணை உற்பத்திகள் குறிப்பாக பெர்சியன் வளைகுடாவிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் இந்தியப் பெருங்கடலின் வழியாக ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்கின்றன. மலாக்கா நீரினை உலகத்தில் இரண்டாவது கடல்வழிப்பாதையாகும். ஜப்பானுக்கான எண்ணை விநியோகத்தில் 80 சதவிகிதம் சீனாவுக்கான எண்ணை விநியோகத்தில் 60 சதவீதமும் மலாக்கா நீரினை வழியாக இடம்பெறுகின்றன. 70 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மசகு எண்ணை ஒவ்வொரு வருடமும் இந்த நீரினை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. உலக நாடுகளுக்கு கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களில் ஏறக்குறைய அரைப்பங்கு இவ்வழியாலையே ஏற்றி இறக்கப்படுகின்றன. அத்தோடு இப்பிராந்தியம் பெரும் சந்தை வாய்ப்பினை கொண்டதாகும்.

மேற்கூறப்பட்ட தன்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியப் பெருங்கடல் இன்றைய புதிய உலக வழியாக என்றும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. இதனாலையே, "யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவை கட்டுப்படுத்துவார்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்து மகா சமுத்திரமே ஏழு கடல்களின் திறவு கோலாக விளங்கும் அதுவே உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் மகா சமுத்திரமாக விளங்கும்” எனக் கூறுகின்றார்கள்.

இந்தியப் பெருங்கடல் பொருளாதார ரீதியிலும் தொடர்பாடல் ரீதியிலும் மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் பெற்றுள்ள முதன்மை இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நிலைமையில் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஆராய்வதன் வழியாக உலக அமைதி, உலக சமாதானம், உலகப் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரப் போட்டி ஆகிய அம்சங்களை நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதனை எதிர்கொள்ளக் கூடியதுடன், அத்தகையதொரு அம்சம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை ஒட்டியதாக நடைபெறவுள்ளது என்பதனை அண்மைக்கால அமெரிக்க சீன நகர்வுகளின் ஊடாக வழியாக அறியக் கூடியதாக உள்ளது.

இலங்கைக்கு கடன் உதவி அளிக்கும் திட்டமில்லை: உலக வங்கி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசு, விரிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் வரை புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டிருப்பதாவது: நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை அரசு மீண்டு வருவதற்கு குறுகிய காலக் கடன் அல்லது புதிய கடனுதவி அளிக்க நாங்கள் (உலக வங்கி) திட்டமிட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அவை தவறானவை. அதே சமயம், இலங்கை மக்களுக்காக கவலைப்படுகிறோம். இலங்கை அரசு சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இலங்கை அரசு விரிவான பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் வரை அந்நாட்டுக்கு புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி அளிப்பது குறித்து

உலக வங்கி திட்டமிடாது. இருப்பினும், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதியை அத்தியாவசிய மருந்துகள், ஏழைகளுக்குப் பண உதவி, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு மடைமாற்றி வருகிறோம். இலங்கையில் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்த அந்நாட்டு அரசு தொடர்ந்து முயன்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருள்கள், பெட்ரொல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 5,100 கோடி டாலர் (ரூ.3.95 லட்சம் கோடி). அதில், 2,500 கோடி டாலரை (ரூ.1.93 லட்சம் கோடி) வரும் 2026-க்குள் அந்நாடு செலுத்த வேண்டும். ஆனால், நிகழாண்டில் செலுத்த வேண்டிய 700 கோடி டா லரை (ரூ.54,316 கோடி) இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

எகிப்தின் பொருளாதார நிலவரம் கவலைக்குரியதாக உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாட்டை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. எகிப்து அதன் கோதுமை தேவைக்கு ரஷ்யா மற்றும் கோதுமை உக்ரைனை பெரிதும் சார்ந்து இருந்தது. தற்போது அவ்விரு நாடுகளிடையிலான போரின் காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து உதவியை எதிர்பார்த்து இருக்கிறது எகிப்து.

துனிசியா வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்து அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 800 மில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. அந்நாட்டில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.

2020-ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் லெபனான் நாட்டின் மிகப் பெரிய உணவு கிடங்கு தீக்கிரையானது. விளைவாக, உணவுப் பொருள்களின் விலை 11 மடங்கு அதிகரித்ததோடு லெபனானின் நாணய மதிப்பு 90 சதவீதம் சரிந்தது. பொது மக்களின் கடன் சுமை அந்த நாட்டின் ஜிடிபியில் 360 சதவீதமாக உள்ளது. லெபனான் அதன் கோதுமை தேவையில் 80 சதவீதத்தை உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, லெபனானில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. உணவு பாதுகாப்புக்காக உலக வங்கியில் லெபனான் 150 மில்லியன் டாலர் கடனாக பெற்றுள்ளது. துருக்கி நாட்டின் கடன் சுமை அதன் ஜிடிபியில் 54 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் 70 சதவீதமாக உள்ளது. இது தவிர கடுமையான உணவு பற்றாக்குறையையும் துருக்கி எதிர்கொண்டுள்ளது.

அர்ஜென்டைனாவும் கடன் சுமையால் தள்ளாடுகிறது. கடன் தவணையை அடைப்பதில் 9 முறை தவறியது. இந்நிலையில் தற்போது சர்வதேச செலாவணி நிதியத்திடம் 45 பில்லியன் டாலர் கடன் கேட்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் எல் சல்வடார், பெரு போன்ற நாடுகள் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தீவிரமடைந்துள்ளன.

கானா, எத்தியோப்பியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. கென்யா நாட்டின் கடன் சுமை 70 பில்லியன் டாலர். இது அந்த நாட்டின் ஜிடிபியில் 70 சதவீதம் ஆகும். பொருளாதாரச் சீர்குலைவை தவிர்ப்பதற்காக சென்ற வாரம் 244 பில்லியன் டாலர் கடனை சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து கென்யா பெற்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் கடன் சுமையும் அதன் ஜிடிபியில் 80 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

                                                                                                            

                                                                                                                    - தொடரும்

                                                                                                         



Read in source website

உலகத் தொழிலாளர் நல அமைப்பின் (ஐஎல்ஓ) சமீபத்திய அறிக்கை, நடப்பாண்டின் முதல் காலாண்டில் 11.2 கோடி வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையில் மட்டுமின்றி, நாடுகளுக்குள்ளும் வேலை கிடைக்கப்பெறுவதில் உள்ள சமத்துவமின்மையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2020 இறுதிக் காலாண்டில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில் நம்பிக்கையளிக்கும் சில அறிகுறிகள் தென்பட்டன என்றாலும் நடப்பாண்டில் உலகளவிலான மொத்தப் பணி நேரம் என்பது 3.8% குறைந்துள்ளது.

பணவீக்கம், உணவு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி நிலை, கடன்சுமை அதிகரிப்பு, ரஷ்ய - உக்ரைன் போருக்குப் பிறகு உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்று ஒன்றுதொட்டு ஒன்றாகப் பெருகிய சிக்கல்கள் அனைத்தும் கடைசியில் மோசமான அளவில் வேலையிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.



Read in source website

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகாக பெருங்கடலில் இலங்கை தத்தளித்து மூழ்கிக்கொண்டிருக்கிறது.

ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காதவரை இலங்கைக்குத் தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால், வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமல் இருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.



Read in source website