DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 01-03-2023

தொற்றா நோய்களுள் மிகப்பெரிய கூட்டணி என்றால் அது சர்க்கரை வியாதியும், புற்றுநோயும் தான். ஏனெனில் உலக அளவில் சர்க்கரை நோய் முதலிடத்தைப் பிடித்து, இருதய நோய்களுக்கு காரணமாகி, உயிரிழப்பை உண்டாக்குவது போல, அதிக இறப்பை ஏற்படுத்தும் வரிசையில் அடுத்த இடத்தைப் பிடிப்பது புற்றுநோய் தான். 

40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இரண்டு நோய்களும் பெரிதாக பேசப்படவில்லை. அந்த அளவுக்கு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அன்கொன்றும் இன்கொன்றுமாக சொற்ப எண்ணிக்கையிலே புற்றுநோய் பாதிப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று ஆலமரமாய் புற்றுநோயாளர் எண்ணிக்கையும், புற்றுநோய் சார்ந்த சிகிச்சை நிலையங்களும் வளர்ந்திருப்பது பலருக்கும் புரியாத புதிர் தான்.

தற்போதைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவது கூடுதல் வருத்தம். முக்கியமாக சில ஆய்வுத்தரவுகளின்படி, கல்லீரல், கணையம், பெருங்குடல், கருப்பை, மார்பகம், சிறுநீர்ப்பை சார்ந்த புற்றுநோய்கள் உண்டாவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்சுலின் செலுத்திக்கொள்ளும் முதல் வகை நீரிழிவு (டைப் 1) வகையினருக்கு கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் தொற்றா நோய்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. இவைகள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி அமைத்து, உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து மரணத்தை உண்டாக்குவதாக உள்ளன.

நித்தியகல்யாணி

அதில் முக்கியமாக ஆரோக்கியமான பெண்களை விட, நீரிழிவு நோய் உள்ள பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 27 சதவீதம் அதிகம் என்றும் ஆரோக்கியமான ஆண்களை விட, சர்க்கரை நோயாளி உள்ள ஆண்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு 19 சதவீதம் அதிகம் என்றும், கூடுதலாக நீரிழிவு நோயுடைய ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் ஆபத்து 12 சதவீதம் அதிகம் போன்ற பல புள்ளி விவரங்கள் நம்மை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அந்த வகையில் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய்க்கான கூட்டணியை அறிந்துகொண்டு, ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியம். முதலில் பாரம்பரிய உணவுகளை மறந்தது, உடல் உழைப்பினை ஓரங்கட்டியது, ஆரோக்கியத்தை அள்ளித்தந்த வாழ்வியலை புறக்கணித்தது போன்றவை எல்லாம் தான் இன்றைய தொற்றா நோய்களுக்கு முதன்மைக் காரணிகள் என்பது வெளிப்படை. ‘உணவே மருந்து’ என்று நம்பி வாழ்ந்த வரை தலை தூக்காத இந்த நோய்கள் எல்லாம், மருந்தை மட்டுமே வேளை வேளைக்கு உணவாக எடுத்துக்கொள்ள தொடங்கியவுடன், அதிகமாகும் காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் அச்சம் தரும்.

இவை ஒருபுறமிருக்க, சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் இவை இரண்டையும் ஒரு சேர தடுக்க கூடிய தன்மையுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலிகைகள் சித்த மருத்துவத்தில் அதிகம். இயற்கை நிறமிகள் பலவற்றுக்கும் இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பது இயற்கை நமக்களிக்கும் ஆரோக்கியத்திற்கான வரப்பிரசாதம் தான். புற்றுநோயை தடுக்க கூடியதாக மட்டுமின்றி, புற்றுநோய்க்கான மருந்தாக பயன்படுத்தும் சித்த மருத்துவ மூலிகை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது என்பது ஒரே அம்பில் இரண்டு அரக்கர்களை கொல்வது போன்றது. அவ்வளவு மகத்துவம் மிக்க சிறப்பான மூலிகை, ‘புற்றுநோய் மூலிகை’ என்று கருதப்படும் ‘நித்தியகல்யாணி’. 

பலரது வீட்டு வாசலில் கேட்பாரற்று கிடக்கும் இந்த எளிய மூலிகை தான் புற்றுநோய்க்கான மருந்து தேடலில் கை கொடுத்து பலரை காப்பாற்றியது என்று கூறினால் நிச்சயம் வியப்பளிக்கும். அதில் ‘வின்கிரிஸ்டின், வின்ப்ளாஸ்டின்’ ஆகிய இயற்கை வேதிப்பொருள்கள் நவீன அறிவியல் உலகில் பிரித்தெடுக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதில் வின்கிரிஸ்டின் வேதிப்பொருள் சிறுவர்களுக்கு உண்டாகும் இரத்த புற்றுநோயிலும், வின்ப்ளாஸ்டின் ஹாட்க்கின் லிம்போமா எனும் புற்றுநோய் நிலையிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நித்தியகல்யாணி அதில் உள்ள தாவர மூலக்கூறுகளால் புற்றுநோயை தடுப்பதாகவும், புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியதாகவும், கிருமி நாசினியாகவும், புழுக்கொல்லியாகவும், புண்களை ஆற்றுவதாகவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும், வயிற்றுப்புண்ணை ஆற்றுவதாகவும் உள்ளது என்று நவீன ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

நித்திய கல்யாணியில் இரண்டு வகையான பூக்கள் உள்ளன. அவை இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்று தான். இதன் இலை மற்றும் பூ இரண்டிலுமே மருத்துவ குணங்கள் உள்ளது. நித்தியகல்யாணி இலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க சர்க்கரை அளவு கட்டுப்படும். அல்லது பூவுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் நற்பலன் தரும்.  அல்லது முழு செடியை வேருடன் பிடிங்கி எடுத்துக்கொண்டு கசாயமிட்டு ஒரு நாள் எடுத்துக்கொண்டு மறுநாள் முதல் இலை அல்லது வேரினை மட்டும் மேற்க்கூறியபடி கசாயமாக்கி எடுத்துக்கொள்வதும் நற்பலன் தரும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். 

சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். எளிமையாக கிடைப்பதால் அதன் மருத்துவ குணம் நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஆக, சித்த மருத்துவ மூலிகையான நித்திய கல்யாணியை எடுத்துக்கொள்ள நிச்சயம் ஆரோக்கியத்திற்க்கு வழிகோலும். தொற்றா நோய்களை தூர துரத்தும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

தேசிய அறிவியல் நாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா - தேசிய அறிவியல் நாள் விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், இந்திய அறிவுசாா் அமைப்புகளில் சிறந்த பங்களிப்பு செய்த மணிபால் உயா் கல்வி அகாதெமி பேராசிரியா் எம்.எஸ். வலியதனுக்கு சாஸ்த்ரா - மகாமனா விருதும், இயற்பியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியா் எஸ். ராமசாமிக்கு சாஸ்த்ரா - ஜி.என். ராமச்சந்திரன் விருதும், உயிா் அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியா் சமீா் கே. மாஜிக்கு சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருதும், வேதியியல் மற்றும் உலோக அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியா் எஸ். நடராஜன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியா் டி. பிரதீப் ஆகிய இருவருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் விருதுகளும், தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு மடலும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை டாடா எலக்டிரானிக்ஸ் நிறுவன (பேப் மற்றும் ஓசாட் பிரிவு) தலைவா் சரண் குருமூா்த்தி வழங்கி பாராட்டினாா். மேலும், விருது பெற்றவா்களின் பாராட்டு மடலும் வாசிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 10 பள்ளிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வக சாதனங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, சிறந்த முனைவா் பட்ட ஆய்வறிக்கையை அளித்த மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழக (ஐ.ஐ.எஸ்.இ.ஆா்.) மாணவி ஷாலினி ராவத், பெங்களூரு ஜவஹா்லால் நேரு அறிவியல் உயராய்வு மைய மாணவி தீக்ஷா பாதி, கான்பூா் இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) மாணவி சிா்ஷா சாகா ஆகியோருக்கு சாஸ்த்ரா - சரோஜ் சந்திரசேகா் விருதுகளையும், தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசையும், பாராட்டு சான்றையும் சரண் குருமூா்த்தி வழங்கினாா்.

இந்த விழாவில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Read in source website

தேசிய, மாநில மற்றும் மண்டல அளவில் நடக்கும் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்பதற்கு இணைய வழிப் பதிவு வசதியை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிமுகம் செய்துள்ளது.

தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சிகளில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது உற்பத்திப் பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கண்காட்சி நடைபெறும் தகவல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு சில மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு கிடைப்பதில்லை. இதற்காக கண்காட்சிகள் நடைபெறும் இடம், விவரங்கள் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://ங்ஷ்ட்ண்க்ஷண்ற்ண்ா்ய்.ம்ஹற்ட்ண்க்ஷஹக்ஷ்ஹஹழ்.ஸ்ரீா்ம்/ப்ா்ஞ்ண்ய்

எனும் இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சாராஸ் கண்காட்சி: கோவையில் மாா்ச் 4 முதல் 12- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிா் சுயஉதவிக்குழுவினா் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

ராஜஸ்தானில் வருகிற மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அரசுப் பேருந்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மற்றும் விரைவு உள்பட அனைத்து  அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தன்று சுமார் 8.50 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7.50 கோடி நிதிச்சுமை ஏற்படும் என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

சாதாரண  அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை 30 சதவிகிதத்திலிருந்து, 50 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்திற்கும் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நாட்டில் பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பொருளாதார காண்காணிப்பு மையம் அவ்வப்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நிலவிய வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில் நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் 8.55 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் பிப்ரவரி மாதம் சற்று குறைந்து 7.93 சதவிகிதமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே கிராமப்புற பகுதிகளில் 6.48 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் 7.23 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகியவற்றில் பழங்குடியினா் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் பிரதான தொழிலாக வேளாண்மையே உள்ளது. அதிலும் பாரம்பரிய நெல் வகைகள், பணப்பயிா்கள் உள்ளிட்டவற்றைப் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் விளைவித்து வந்த நிலையில், ஒடிஸா பழங்குடியினரின் புதிய வாழ்வாதாரமாக ‘ஸ்ட்ராபெரி’ மாறியுள்ளது.

ஒடிஸாவில் புதிய பயிராக அண்மைக் காலத்தில் ஸ்ட்ராபெரி அறிமுகம் செய்யப்பட்டது.

பல்வேறு தொடா் முயற்சிகளுக்குப் பிறகு ஸ்ட்ராபெரி சாகுபடியில் வெற்றி கண்டுள்ளனா் ஒடிஸா பழங்குடியின விவசாயிகள். ஸ்ட்ராபெரி சாகுபடி மூலமாக ஒன்றரை குவிண்டாலுக்கு (150 கிலோ) ரூ.37,500 வரை அவா்கள் வருவாய் ஈட்டி வருகின்றனா்.

மாநில அரசின் நிதியுதவி, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு, பழங்குடியினரின் கடின உழைப்பு, மகளிா் சுய உதவிக் குழுக்களின் ஆதரவு ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

மேற்கத்தியத் தோற்றம்

இனிய மனம், பிரகாசமான சிவப்பு நிறம், இனிப்பு கலந்த புளிப்புச் சுவை நிறைந்த சாறு உள்ளிட்டவற்றால் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் பழமாக ஸ்ட்ராபெரி உள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் ஸ்ட்ராபெரியின் அமெரிக்க ரகங்களில் மேற்கொள்ளப்பட்ட இனக்கலப்பு மூலம் வழக்கத்தில் உள்ள ஸ்ட்ராபெரி பழத்தின் ரகம் உருவாக்கப்பட்டது. தற்போது வரையிலும் பல்வேறு ஸ்ட்ராபெரி ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமும் வளா்ச்சியும்

ஸ்ட்ராபெரி இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைச் சரிவில் அமைந்துள்ள மகாபலேஷ்வா் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் பம்பாய் மாகாணத்தின் கோடைக்கால தலைமையகமாக விளங்கியது. அங்கு நிலவி வந்த தட்பவெப்ப சூழல் ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு உகந்ததாகக் காணப்பட்ட நிலையில், 1920-களில் அங்கு பயிரிடப்பட்டது.

இந்தியாவின் மொத்த ஸ்ட்ராபெரி சாகுபடியில் 85 சதவீதம் இந்தப் பகுதியில் விளைவிக்கப்படுகிறது. அந்த வகையில் ‘இந்தியாவின் ஸ்ட்ராபெரி தலைமையகமாக’ மகாபலேஷ்வா் விளங்குகிறது. மித வெப்பமண்டலப் பயிரான ஸ்ட்ராபெரி நவம்பா் முதல் மாா்ச் வரை நன்கு விளைகிறது.

ஒடிஸாவில் அறிமுகம்

ஒடிஸாவின் சுனாபேடா பீடபூமியின் தட்பவெப்ப சூழலானது மகாராஷ்டிரத்தின் மகாபலேஷ்வரில் நிலவும் சூழலுடன் ஒத்துப் போவதால், கோராபுட் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சிறிய பரப்பில் ஸ்ட்ராபெரி பயிரிடப்பட்டது. அச்சோதனை ஓரளவு வெற்றியடைந்த பின்னா் படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் ஸ்ட்ராபெரி சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது.

மாநில தோட்டக் கலைத் துறையானது பழங்குடியின விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்தும், நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்தும் ஸ்ட்ராபெரி சாகுபடியை ஊக்குவித்தது. ஏப்ரல் முதல் அக்டோபா் வரை நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகள், நெல் அறுவடைக்குப் பிறகு நவம்பரில் ஸ்ட்ராபெரியைப் பயிரிடுகின்றனா்.

தற்போது விளைச்சல் பெருகி வருவாய் அதிகரித்துள்ளதால் ஒடிஸா பழங்குடியின விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஸ்ட்ராபெரி சாகுபடியை சுனாபேடா பீடபூமியில் உள்ள மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி, பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஸ்ட்ராபெரியில் காணப்படும் ஊட்டச்சத்துகள்

1. மாங்கனீஸ்

2. பொட்டாசியம்

3. வைட்டமின் சி

4. வைட்டமின் பி9

இரும்பு, காப்பா், பாஸ்பரஸ், வைட்டமின்கள்- பி6, கே, இ உள்ளிட்டவையும் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்

1. நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கிறது

2. உயா் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

3. இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

4. பக்கவாத பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது

5. ரத்த சா்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது

6. புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது

விளைவிக்கப்படும் மாநிலங்கள்

1. மகாராஷ்டிரம்

2. ஹிமாசல பிரதேசம்

3. மேற்கு வங்கம்

4. தில்லி

5. ஹரியாணா

6. பஞ்சாப்

7. ராஜஸ்தான்

8. உத்தர பிரதேசம்

9. ஜம்மு-காஷ்மீா்

10. ஒடிஸா

பயிரிடப்படும் முக்கிய ரகங்கள்

1. சாண்டலா்

2. தியோகா

3. டோரே

4. ஃபொ்ன்

5. செல்வா

6. பஜாரோ

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கிய நாடுகள்

1. ஆஸ்திரியா

2. வங்கதேசம்

3. ஜொ்மனி

4. ஜோா்டான்

5. அமெரிக்கா

தொகுப்பு: எஸ்.சிவகுமாா், சுரேந்தா் ரவி

====



Read in source website

சமூக வலைதள பயனீட்டாளர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் குறைதீர் மேல்முறையீட்டு குழுவை நாடுவதற்கான புதிய தளத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 சமூக வலைதள அமைப்புகளின் குறைதீர் அதிகாரிகளின் முடிவுகளில் திருப்தி ஏற்படாதபட்சத்தில் பயனீட்டாளர்கள் இந்த குறைதீர் மேல்முறையீட்டுக் குழு தளத்தில் (ஜிஏசி) விண்ணப்பித்து தீர்வு காணலாம். இந்த மேல்முறையீட்டு குழு என்பது இணையவழி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தளமாகும். புதுதில்லியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்தப் புதிய குறைதீர் மேல்முறையீட்டுக் குழு தளத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பயனீட்டாளர்களுக்கு இணையதளங்கள் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையவழி பிரச்னைகளைக் களைவதற்கான முயற்சிகளில் இது மேலும் ஒரு மைல்கல்லாகும். இந்த மேல்முறையீட்டுக் குழு தளத்தின் முக்கிய நோக்கம் குறைகளுக்குத் தீர்வு காண்பதை உறுதி செய்வதுதான். அந்த வகையில் பயனீட்டாளர்கள் தங்கள் இணையவழி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ட்ற்ற்ல்ள்://ஞ்ஹஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம்.
 சமூக வலைதள நிறுவன குறைதீர் அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக பயனீட்டாளர்கள் இத்தளத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம். அதன்மூலம் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் இப்புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜிஏசி என்பது ஒரு குறைதீர் மேல்முறையீட்டுக் குழுவாகும்.
 சமூக வலைதள நிறுவனங்களில் உள்ள குறைதீர் அதிகாரிகள் தெரிவிக்கும் பதில்களில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் பயனீட்டாளர்கள் அந்த அதிகாரியின் தகவல் கிடைத்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் இந்த மேல்முறையீட்டுக் குழுவில் விண்ணப்பிக்கலாம்.
 இந்த ஜிஏசி தளம் எண்மப் பயனீட்டாளர்களின் இணையதளம் சார்ந்த பிரச்னைகளில் நேரடியாக தலையீட்டு தீர்வு காணும். இணையதளம் பாதுகாப்பானது, நம்பிக்கைக்குரியது என்பதை உறுதிப்படுத்துவதோடு ஆன்லைன் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் கோடிக்கணக்கான எண்மப் பயனீட்டாளர்களுக்கு பொறுப்பளிக்கும் நிறுவனங்களாக இருத்தல் வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இந்தக் குறைதீர் மேல்முறையீட்டுக் குழு இணையதளங்களையும் எண்ம அதிகாரிகளையும் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய ஊக்குவிக்கும்.
 பொதுமக்கள் சார்பாக அவர்களின் புகார்களைத் தெரிவிக்க பிற அமைப்புகள் அனுமதிக்கப்படுவார்களா என்று கேட்கிறீர்கள். ஜிஏசி சேவையானது பொது சேவை மையங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதால் சில உதவிகள் மேல்முறையீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
 அத்துடன் இந்தத் தளத்தில் பயனீட்டாளர்களின் வசதிக்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏக்யூ) என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பயனீட்டாளர்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் புகார்கள் மீதான தற்போதைய நிலவரம் குறித்த தகவலையும் அறிந்துகொள்ளலாம். இத்தளம் சார்ந்த புதிய உத்தரவுகள் தளத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். மேல்முறையீட்டாளர்களுக்கு இதன் அறிவிப்புகள் குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும் என்றார்.
 
 



Read in source website

மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் சுவாச தொற்று பாதிப்பால் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது அந்த மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடினோ தீநுண்மி பாதிப்பால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தவில்லை.

அடினோ வைரஸ் குழந்தைகளைத்தான் அதிகமாக பாதிக்கும். குழந்தைகளின் சுவாசம், குடல் பகுதிகளில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அதிக அளவில் இந்தத் தொற்று மோசமாக பாதிக்கும் என்றும் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சராசரி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 5 முதல் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் இந்த பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் வீட்டில் வைத்தே குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தற்போது, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2 குழந்தைகளும், பி.சி.ராய் குழந்தைகள் மருத்துவமனையில் 3 குழந்தைகளும் அடினோ தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

நிமோனியா பாதிப்பால் 5 குழந்தைகளும் உயிரிழந்ததாக தெரிவித்தாக அரசு அதிகாரி தெரிவித்தாா். எனினும், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 2 குழந்தைகள் சுவாச தொற்றுப் பிரச்னையால்தான் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 



Read in source website

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கானது ஜனவரியில் 67.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

அரசின் செலவினத்துக்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடே நிதிப் பற்றாக்குறையாகும். செலவினத்தை சமாளிப்பதற்காக அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை அளவிடும் கருவியாகவும் நிதிப் பற்றாக்குறை உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ரூ.17.55 லட்சம் கோடிக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.4 சதவீதம் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.11.9 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக கணக்குகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (சிஜிஏ) தெரிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த இலக்கில் 67.8 சதவீதம் ஆகும்.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த இலக்கில் 58.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. நடப்பு நிதியாண்டில் அதிகரித்த செலவினம், சரிவடைந்த வருவாய் ஆகியவற்றின் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் வரி வருவாய் ரூ.16,88,710 கோடியாக உள்ளது. இது பட்ஜெட் இலக்குடன் ஒப்பிடுகையில் 80.9 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வரி வருவாயானது ஒட்டுமொத்த இலக்கில் 87.7 சதவீதமாக இருந்தது.

அரசின் நிதிப் பற்றாக்குறையானது அடுத்த 2023-24-ஆம் நிதியாண்டில் 5.9 சதவீதமாகவும், 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 4.5 சதவீதமாகவும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பிரதமா் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தேசிய அறிவியல் தினத்தன்று அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளா்களுக்கு எனது வாழ்த்துகள். அறிவியல் உலகின் இந்தியா எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புக்குமான சூழலை வளா்த்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

 

ஐசிசி தரவரிசையில் பல பிரிவுகளில் இந்திய வீரர்களும் இந்திய அணியும் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1  பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 36 வயது அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ஆண்டர்சன், 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

ஐசிசி தரவரிசையில் பல பிரிவுகளில் இந்திய அணியும் அதன் வீரர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அணிகளுக்கான ஒருநாள், டி20 தரவரிசைகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதேபோல சூர்யகுமார் யாதவ், அஸ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோரும் தரவரிசைகளில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி

நெ.1 ஒருநாள் அணி: இந்தியா 
நெ.1 டி20 அணி: இந்தியா 
நெ.1 டி20 பேட்டர்: சூர்யகுமார் யாதவ் 
நெ.1 டெஸ்ட் பந்துவீச்சாளர்: அஸ்வின் 
நெ.1 ஒருநாள் பந்துவீச்சாளர்: சிராஜ்
நெ.1 டெஸ்ட் ஆல்ரவுண்டர்: ஜடேஜா
 



Read in source website

கால்பந்து உலகில் 2022-ஆம் ஆண்டு சிறந்த விளங்கியவா்களுக்கான விருதை கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனம் (ஃபிஃபா) அறிவித்தது. சிறந்த வீரராக ஆா்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸ் ஆகியோா் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக தோ்வு செய்யப்பட்டனா்.

சிறந்த வீரா்: இந்தப் பிரிவில் பிரான்ஸின் கிலியன் பாபே, கரிம் பென்ஸிமா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிய மெஸ்ஸி, 7-ஆவது முறையாக விருது பெற்றுள்ளாா். கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி தனது 5-ஆவது தொடா் முயற்சியில் ஆா்ஜென்டீனாவுக்கு கோப்பை வென்று தந்துள்ளாா்.

சிறந்த வீராங்கனை: இப்பிரிவில் அமெரிக்காவின் அலெக்ஸ் மோா்கன், இங்கிலாந்தின் பெத் மீட் ஆகியோரை விடவும் சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸ் தோ்வாகியிருக்கிறாா். கடந்த ஆண்டு, தேசிய அணிக்காக 100 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை புடெலாஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. முழங்கால் காயம் காரணமாக கடந்த நவம்பா் முதல் அவா் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பாரீஸில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த மாற்றுத்திறனாளி வீரராக போலந்தின் மாா்சின் அலெக்ஸி, ஆடவா் அணி சிறந்த பயிற்சியாளராக ஆா்ஜென்டீனாவின் லயோனல் ஸ்கலோனி, மகளிா் அணி சிறந்த பயிற்சியாளராக இங்கிலாந்தின் சரினா வெய்மன், சிறந்த ஆடவா் கோல்கீப்பராக ஆா்ஜென்டீனாவின் எமிலியானோ மாா்டினெஸ், சிறந்த மகளிா் கோல்கீப்பராக இங்கிலாந்தின் மேரி ஏா்ப்ஸ் ஆகியோா் தோ்வாகினா்.

ஆா்ஜென்டீன ரசிகா்களுக்கு சிறந்த ரசிகா்களுக்கான விருதும், காயமடைந்த எதிரணி வீரா் உயிரை காக்கும் வகையில் செயல்பட்ட ஜாா்ஜிய வீரா் லுகா லோசோஷ்விலிக்கு மதிப்புமிக்க வீரருக்கான விருதும் வழங்கப்பட்டன.

தேசிய அணிகளின் பயிற்சியாளா்கள், கேப்டன்கள், விளையாட்டுப் பிரிவு செய்தியாளா்கள், ரசிகா்கள் ஆகியோா் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருதுக்கான வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

உலகின் சிறந்த லெவன்

ஆடவா்

கோல்கீப்பா் - திபௌத் கோா்டாய்ஸ் (பெல்ஜியம்).

டிஃபெண்டா்கள் - ஜாவ் கேன்செலோ (போா்ச்சுகல்), அச்ரஃப் ஹக்கிமி (மொராக்கோ), விா்ஜில் வான் ஜிக் (நெதா்லாந்து).

மிட்ஃபீல்டா்கள் - கேஸ்மிரோ (பிரேஸில்), கெவின் டி புருயின் (பெல்ஜியம்), லுகா மோா்டிச் (குரோஷியா).

ஃபாா்வா்ட்ஸ் - கரிம் பென்ஸிமா (பிரான்ஸ்), எா்லிங் ஹாலந்த் (நாா்வே), கிலியன் பாபே (பிரான்ஸ்), லயோனல் மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா).

* இந்தப் பட்டியலில் இத்துடன் 16-ஆவது முறையாக இடம் பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறாா் மெஸ்ஸி. முன்னதாக, அவரும், போா்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 15 முறை இதில் இடம் பிடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது

மகளிா்

கோல்கீப்பா் - கிறிஸ்டியன் எண்ட்லா் (சிலி).

டிஃபெண்டா்கள் - லூசி புரான்ஸ் (இங்கிலாந்து), மாபி லியான் (ஸ்பெயின்), வெண்டி ரெனாா்டு (பிரான்ஸ்), லியா வில்லியம்சன் (இங்கிலாந்து).

மிட்ஃபீல்டா்கள் - லெனா ஆபா்டாா்ஃப் (ஜொ்மனி), அலெக்ஸியா புடெலாஸ் (ஸ்பெயின்), கெய்ரா வால்ஷ் (இங்கிலாந்து).

ஃபாா்வா்ட்ஸ் - சாம் கொ் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் மோா்கன் (அமெரிக்கா), பெத் மீட் (இங்கிலாந்து).



Read in source website

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 84-ஆவது சீனியா் தேசிய பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் மிதுன் மஞ்சுநாத், மகளிா் பிரிவில் அனுபமா உபாத்யாய ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனா்.

இறுதி ஆட்டங்களில், ஆடவா் ஒற்றையரில் மிதுன் 21-16, 21-11 என்ற கேம்களில் பிரியன்ஷு ரஜாவத்தை சாய்த்தாா். மகளிா் ஒற்றையரில் அனுபமா 20-22, 21-17, 24-22 என்ற கணக்கில் ஆகா்ஷி காஷ்யப்பை வீழ்த்தினாா்.

ஆடவா் இரட்டையரில் குஷால் ராஜ்/பிரகாஷ் ராஜ் இணை 821, 21-91, 21-18 என்ற கேம்களில் அக்ஷன் ஷெட்டி/தீப் ராம்பியா கூட்டணியை வீழ்த்தி வாகை சூடினா். மகளிா் இரட்டையரில் காயத்ரி கோபிசந்த்/ட்ரீசா ஜாலி ஜோடி 21-10, 21-9 என காவ்யா குப்தா/தீப்சிக்ஷா சிங் இணையை தோற்கடித்தது.

கலப்பு இரட்டையரில் ஹேமநாகேந்திரா/கனிகா கன்வால் கூட்டணி 21-17, 21-16 சித்தாா்த் இளங்கோ/குஷி குப்தா இணையை வீழ்த்தியது.



Read in source website

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்திற்கு அதிகமாக கோடையில் உருகி வருவது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. 

காலநிலை மாற்ற பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. அதிகரித்துவரும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் முன்பைக் காட்டிலும் வேகமாக உருகிவருகின்றன. இந்த அதீத காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகிவருவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2014 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் முந்தைய கோடை காலங்களைக் காட்டிலும் 22 சதவிகிதம் வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேகமாக மாற்றம் கடல்நீர் மட்ட உயர்வுக்கு வித்திடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுவதால் கடந்த 1992 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 7.6 மிமீ கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே கடல்நீர் மட்டம் உயர்ந்துவருவது குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவரும் நிலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 



Read in source website

வெனிஸ் என்றதுமே, நீருக்குள் ஆனந்தக் குளியல் போடும் அந்த அழகிய நகரம் கண்ணில் வந்து மின்னும். நம்ம ஊர் பேருந்துகளைப் போல அங்கு படகுகள் கால்வாய்களுக்குள் நுழைந்து நுழைந்து செல்வதும் ரசிக்கத்தக்கதுதான்.

ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.

அந்நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்தாகவும் நீர்நிலையில் படகுச் சேவை மூலமாகவே நடந்து வந்த நிலையில், தற்போது நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீர் டாக்ஸி, படகுப் போக்குவரத்து, அவசரகால உதவிகள் என அனைத்தும் இந்த நீர்நிலையை நம்பியே இருந்த நிலையில், அனைத்து வகையான படகுகளும் சேருக்கிள் சிக்கி பரிதாபநிலையில் உள்ளன.

வெனிஸ் நகரைச் சுற்றியிருந்த 150 கால்வாய்கள் தண்ணீர் இன்றி, வறண்டுபோன கூவம் ஆற்றைப் போல காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பணியிடங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
பலரும் தங்கள் இருப்பிடங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  சிலர் சேற்றில் இறங்கி, குறைந்த தொலைவுக்கு இயக்கப்படும் படகுகளில் சென்று மீண்டும் சேற்றில் இறங்கிச் செல்லும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.


மழை குறைந்தது, அதிகப்படியான வெப்பநிலை, கடல்மட்டம் தாழ்ந்தது, ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெய்த பனிப்பொழிவின் அளவு குறைந்தது என பல காரணிகள் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.



Read in source website


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஒருபக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மக்கள் உண்ண உணவின்றி கோதுமை மாவுக்காகவும், பருப்பு, மருந்து பொருள்களை வாங்கவும் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க காத்திருக்கிறார்கள்.

ஆனால், பாகிஸ்தான் அரசு, தனது பொது பட்ஜெட்டில், ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக ஆஃப்கன் புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு ஊடகம் குற்றம்சாட்டியிருக்கிறது.

பாகிஸ்தானில் நடந்த பல முக்கிய தவறுகளுக்குக் காரணமாக இருக்கும் அந்நாட்டு ராணுவமோ, மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதைக் கொண்டு கொழுத்துவிட்டிருக்கிறது என்றும் அந்த ஊடகம்மேற்கோள் காட்டுகிறது.

நாட்டில் மிகக் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், அந்நாட்டின் பாதுகாவலாக இருக்க வேண்டிய பாகிஸ்தான் ராணுவம், ஒவ்வொரு ஆண்டும் அதற்கான 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியை நாட்டுக்காக பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு நிலம், வீடுகள் மற்றும் இதர சலுகைகள் ஒரு சல்லிக்காசும் குறையாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்காக பாகிஸ்தான் பட்ஜெட்டில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 - 23 பட்ஜெட்டில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு 7.5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தான் நாட்டு மக்களின் மீது மேலும் அதிகப்படியான வரிச்சுமையை செலுத்தவே வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு 92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய நிலையில், இது 2021ஆம் ஆண்டு 263 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் நீடித்து வரும் பதற்றத்துக்கு இடையே மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

கஜகஸ்தான் அதிபா் காஸிம் ஜோமாா்ட் டோகாயேவ், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சா் முக்தாா் டிலோபொ்டி ஆகியோருடன் பிளிங்கன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மத்திய ஆசியாவுக்கு அவா் வருகை தருவது இது முதல்முறையாகும்.

இந்தப் பயணத்தின்போது முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், துா்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் அமெரிக்காவும் இடம்பெற்ற ‘சி5+1’ அமைப்பின் கூட்டத்திலும் பிளிங்கன் பங்கேற்கவுள்ளாா்.

இக்கூட்டத்தில், மத்திய ஆசிய நாடுகளின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை குறித்து அவா் வலியுறுத்தவிருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் பயணத்தைத் தொடா்ந்து, தஜிகிஸ்தானுக்கு இந்த வாரத்தின் பிற்பகுதியில் பிளிங்கன் செல்லவிருக்கிறாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து, அண்மையில் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பிளிங்கன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

இந்த 5 நாடுகளும் ரஷியாவின் செல்வாக்குமிக்கவையாக கருதப்படுகின்றன. எனினும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை இந்த நாடுகள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

உக்ரைன் பிரச்னைக்கு ஐ.நா. சாசனம் மற்றும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சா்வதேச சட்டத்தின்கீழ் தூதரக வழியில் தீா்வு காணப்பட வேண்டும் என்று கஜகஸ்தான் அதிபா் காஸிம் ஜோமாா்ட் வலியுறுத்தி வருகிறாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீா்மானம் மீது ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பை மேற்கண்ட 5 நாடுகளும் புறக்கணித்தன. இந்தியாவும் வாக்கெடுப்பில் இருந்து விலகியது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா், மத்திய ஆசிய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் என்பதை அந்த நாடுகளிடம் பிளிங்கன் தெளிவுபடுத்துவாா் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய ஆசிய நாடுகளை, ரஷியாவின் செல்வாக்கில் இருந்து தங்கள் பக்கம் ஈா்க்க பல தசாப்தங்களாக அமெரிக்கா முயன்று வருகிறது. அந்த முயற்சிகளுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போருக்கு தளவாடரீதியில் உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியது போன்ற சில பலன்கள் கிடைத்தன.



Read in source website

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான அறிதிறன்பேசிகளில் சீனாவின் ‘டிக்டாக்’ பொழுதுபோக்கு செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. சாதனங்களில் ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளை நீக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் நிா்வாகம் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் தொடா்பான தகவல்கள் திருடப்படுவது மற்றும் கசிவதைத் தடுக்க பாதுகாப்புத் துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் முக்கிய நிா்வாகங்களில் சில தடை உத்தரவுகள் அமலில் இருக்கும். அதுபோல, விடியோக்கள் பதிவிடும் சீனாவைச் சோ்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசின் தகவல்களைப் பாதுகாக்கும் மேலும் ஒரு முயற்சியாக அரசின் அனைத்துத் துறை சாதனங்களில் டிக்டாக் செயலியைத் தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய அரசுத் துறைகளின் சாதனங்களில் டிக்டாக் செயலிக்குத் தடை விதித்து அமெரிக்க அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், டிக்டாக் பதிவிறக்கப்பட்டுள்ள சாதனங்களில் அதனை நீக்குவதற்கு 30 நாள்கள் அவகாசம் அளித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த அரசின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் டீரூசா கூறுகையில், ‘நாட்டின் எண்மக் கட்டமைப்பை வெளிநாட்டு அச்சுறுத்தல்களிடமிருந்து பாதுகாக்க தற்போதைய அரசு அதிகளவில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைக் காக்க எண்மக் கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் முயற்சியில் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றாா்.

இதனிடையே, டிக் டாக் உள்ளிட்ட நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எந்தச் செயலியையும் நாடு முழுவதும் தடை செய்ய அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு எதிரான தடை உத்தரவு கடந்த 2 ஆண்டுகளாக அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா கருத்து: அரசு சாதனங்களில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அமெரிக்காவின் முடிவு அவா்களின் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மௌ நிங் தெரிவித்துள்ளாா்.

‘தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை அமெரிக்கா மிகவும் மிகைப்படுத்தி மற்ற நாடுகளின் நிறுவனங்களை ஒடுக்க அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. உலகின் முன்னணி நாடு என அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, ஒரு பொழுதுபோக்கு செயலியைத் தடை செய்யும் அளவுக்கு பயப்படுவது எப்படி எனக் கேள்வி எழுகிறது’ என அவா் மேலும் தெரிவித்தாா்.

வானிலை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்ட சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடா்ந்து அமெரிக்கா அறிவித்துள்ள டிக்டாக் செயலியின் மீதான தடை இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

சீனாவால் கட்டமைக்கப்பட்டுள்ள தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க வெளிநாட்டைச் சோ்ந்த விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

விண்வெளித் துறையில் தன்னை முன்னணி நாடாக நிலைநிறுத்த சீனா தொடா்ந்து முயன்று வருகிறது. அதன்படி, சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு போட்டியாக, தனது சொந்த விண்வெளி நிலையத்தை சீனா கட்டமைத்துள்ளது. இதன் பணிகள் கடந்த நவம்பரில் நிறைவடைந்தன.

இந்நிலையில், சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக பல்வேறு நாடுகளும் தங்களை அணுகியுள்ளதாக, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்ட அதிகாரி சென் ஷான்குவாங் தெரிவித்தாா்.

‘சீன விண்வெளி நிலையத்துக்கு பயணிக்க ஆா்வம் காட்டியுள்ள நாடுகளில் இருந்து விண்வெளி வீரா்களைத் தோ்வு செய்து விரைவில் பயிற்சியளிக்க உள்ளோம். விண்வெளியில் அறிவியல்பூா்வ பணிகளில் சீன விண்வெளி வீரா்களுடன் அவா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவா்’ என்றாா் அவா்.

சீன விண்வெளித் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, விண்வெளியில் ராணுவ தளத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. விரைவில் முதலிடம் பிடிக்கும் என்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்தநிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புத்தாக்க வசதி மையம் (Centre for Innovation Facility) கட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கவும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் இங்கு உதவிகள்வழங்கப்படும். இந்த மையத்தைகுடியரசு துணைத்தலைவர் ஜெகதீப்தன்கர் நேற்று திறந்து வைத்தார்.பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

வலுவான பட்ஜெட் தயாரிப்பு: கடந்த 1989-ல் நாடாளுமன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். 30 கட்சிகள் சேர்ந்து, 30 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்திய காலகட்டம் அது. 2014-ல்அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 2019-ல் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, நாட்டின் வலுவான பட்ஜெட்டை நம்மால் தயாரிக்க முடிந்துள்ளது.

புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் சிறந்த நாடாக 3-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. விரைவில் முதல் இடத்தை பிடிக்கும். புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் நாடு முழுவதும் சமநிலையை கொண்டுவர வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டுமே 300 புத்தொழில் நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி நிதி பங்களிப்பில் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இந்தியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். 2047-ல் இங்குள்ள மாணவர்கள் பலர் அதுபோல முக்கிய இடங்களில் இருப்பீர்கள். மனித வளத்தில் இந்தியர்களின் சிறந்த சிந்தனையும், ஆற்றலும் உலகை வழிநடத்தும்.

முந்தைய காலங்களில் இருந்ததலைவர்கள் மக்களவை, மாநிலங்களவை போன்றவற்றை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது, ஆரோக்கியமான விவாதங்கள் இல்லாமல் கூச்சல், குழப்பம் நிலவுவது வேதனை தருகிறது. பொதுமக்கள் செலுத்தும் பல கோடிரூபாய் வரிப் பணத்தில் நாடாளுமன்றம் இயங்குகிறது. ஆனால், அவையில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதுமக்களுக்கு தெரிவது இல்லை.

தனி நபர்களோ, ஊடகங்களோ தங்கள் கருத்தை வெளியிட முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், நாட்டின் உயர்ந்த அமைப்பான நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 20 ஆண்டுகள் கழித்து, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அந்த விவகாரத்தை மாற்றி திரித்து கூறுவது அரசியல் லாபத்துக்கான செயல்.

விவசாயிகளுக்கு முக்கிய பங்கு: இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் என்று கூறியபோது பலர் கிண்டல் செய்தனர். ஆனால், இன்று நாம் அதை நோக்கியே நகர்ந்து வருகிறோம். நம் வளர்ச்சியில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இன்று பல நாடுகள் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால், அந்த அவசியம் இல்லாத அளவுக்கு உணவு உற்பத்தியில் நாம் வளர்ந்துள்ளோம். மாணவர்கள் அவரவர் எண்ணங்கள், விருப்பங்களின் அடிப்படையில் புதுமையாக தொழில் தொடங்குங்கள். தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள். மன அழுத்தத்துக்கு இடம்தராமல் இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றிகிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி ஆகியோர்பங்கேற்றனர்.

1981-ம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்தவரும், கேம்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான சங்கர்இந்த புத்தாக்க வசதி மையத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதால், ‘சுதா அண்ட் சங்கர்புத்தாக்க மையம்’ என்ற பெயரில்இது அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் அவரும் கலந்துகொண்டார்.

குடியரசு துணைத் தலைவருக்கு வரவேற்பு: குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு, ஜெகதீப் தன்கர் முதல்முறையாக தமிழகத்துக்கு நேற்று வந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.



Read in source website

ஹைதராபாத்: குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில், அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு தனி ஆதார் அட்டையை கட்டாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிசு ஆதார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் அக்குழந்தைக்கு தனி அடையாளம் பிறந்தவுடனேயே கிடைத்து விடுகிறது. இதனால், அக்குழந்தைக்கு தொடர்ந்து அனைத்து சலுகைகளும் கிடைக்க அந்த ஆதார் அட்டை உதவிகரமாக உள்ளது.

பிறப்பு சான்றிதழும் தெலங்கானாவில் அதன் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள குறியீட்டு எண்ணை கொண்டே வழங்கப்படுகிறது. மேலும், அதற்கு தேவையான மருத்துவ உதவிகள், அங்கன்வாடி மைய உதவிகள், பள்ளி சேர்க்கை என அனைத்துமே அக்குழந்தைக்கு சுலபமாக ஒரு அடையாளத்தை கொடுத்து விடுகிறது.

ஆரம்ப சுகாதார மையம், ஏரியா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறந்ததும் அதன் நிர்வாகம் ஆதார் பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று, குழந்தையின் புகைப்படத்தை எடுத்து, அதன் முழு விவரங்களை பதிவு செய்து, 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட முகவரிக்கு ஆதார் அட்டை கிடைக்கும் படி வழி செய்கின்றனர் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள தந்தை அல்லது தாயின் செல்போன் எண்ணுக்கு ஆதார் அட்டையின் லிங்க்கை அனுப்பி விடுகின்றனர்.

அவர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு இணையதள மையத்திற்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பிறந்த குழந்தை குடும்பத்தின் உறுப்பினர் ஆகிவிடுவதால், பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, குடிமக்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கும் நோக்கில் ஆதார் அட்டை திட்டத்தை முன்னெடுத்தது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் தகவலை உறுதி செய்ய ஆதார் அட்டை முதன்மையான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஆதாருக்கு என்று அமைக்கப்பட்ட ஆணையமான யுஐடிஏஐ, ஆதார் அட்டை வழியான தகவல் சரிபார்ப்பு சார்ந்து புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதார் எண் வழியாக மட்டுமில்லாமல், குடிமக்களின் விரல் ரேகை பதிவு வழியாகவும் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இந்நிலையில் விரல் ரேகை சரிபார்ப்பு நடைமுறையின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லேர்னிங் உதவியுடன் புதிய பரிசோதனை கட்டமைப்பை யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு வழியாக, போலி ரேகைகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி நிலவரப்படி, நாட்டில் 135.9 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.



Read in source website

பாக்தாத்: ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இராக் பயணம் குறித்து அண்டோனியா குத்தரெஸ் பேசும்போது, “இராக் மக்கள் மற்றும் அதன் அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் உறுதுணைபுரியும். இராக்கியர்கள் அவர்களது சிரமங்களையும் சவால்களையும் பரந்த, ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் எதிர்கொள்ள முடியும் " என்று கூறியிருக்கிறார்.

இவர் தனது இராக் பயணத்தில், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஓர் அங்கமாக இன்று (புதன்கிழமை) இராக் அதிபர் முகமத் ஷியா அல் சுதானியை அண்டோனியா சந்திக்கிறார். அத்துடன் இராக்கின் வலதுசாரிகள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். மேலும். இராக் போரின் காரணமாக நாட்டின் வட பகுதியில் குடியமர்ந்த மக்களை சந்திக்கும் அண்டோனியா குத்தரெஸ், குர்திஸ்தான் அரசுடனும் உரையாற்றுகிறார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அண்டோனியா குத்தரெஸ் இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இராக்குக்கு அவர் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இராக்குக்குப் பிறகு கத்தாரில் நடக்கும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

முன்னதாக, கடந்த ஆண்டு இராக்கில் அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் 30-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கலவரம் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதைத் தடுக்க ஐ. நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எடுத்த முயற்சியின் விளைவாக கலவரம் கட்டுக்குள் வந்தது நினைவுகூரத்தக்கது.



Read in source website

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பணவீக்கம் முன் எப்போதுமில்லாத அளவாக பிப்ரவரி மாதத்தில் 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இறக்குமதி மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு பொருட்களின் விலையும், சேவைக் கட்டணமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கராச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபல வணிக நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன், பாகிஸ்தானின் நுகர்வோர் விலை குறையீடு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையும் போக்குவரத்துக்கான கட்டணமும் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, அந்த மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீடு 31.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நுகர்வோர் விலை குறியீடு கடந்த ஜனவரி மாதத்தில் 27.6 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நுகர்வோர் விலை குறியீடு குறித்த தகவல்கள் கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதான் அதிகபட்ச உயர்வு என்று ஆரிப் ஹபிப் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, கிராமப்புற பணவீக்கம் 28.82 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 35.56 சதவீதமாகவும் ஆண்டுக்காண்டு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது, எரிபொருள் செலவு மற்றும் நிர்வாகச் செலவு அதிகரிப்பு ஆகியவை பணவீக்கத்திற்குக் காரணம் என்று பாகிஸ்தான் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களின் இருப்புக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

நியூயார்க்:கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவ தொடங்கியத்திலிருந்தே, கரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து குழப்பமான பதில்களே சுற்றி வந்தன.

இந்த நிலையில் அமெரிக்க அரசு தொடர்ந்து, சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியதாக தொடர்ந்து கூறி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டோபர் தொலைகாட்சிக்கு அளித்தப் பேட்டியில் கூறும்போது, “கரோனா தொற்றின் உருவாக்கம் எங்கு உள்ளது என்பதை அடையாளம் காணும் முயற்சிகளை தடுப்பதற்கு சீனா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது. இது அனைவருக்கும் துரதிருஷ்டவசமானது. உண்மையில் சீனாவுக்கு சொந்தமான வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா பரவியுள்ளது. இதற்கான சாத்தியமே அதிகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் பிற புலனாய்வு அமைப்புகள் கரோனா வைரஸ் வூஹான் சந்தையிலிருந்து பரவியதாக உறுதியாக கூறுகின்றன.

முன்னதாக வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் தான் எழுதிய ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள்” புத்தகத்தில், ”கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 2019-ல் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை உலகம் முழுவதும் 67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.



Read in source website

தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ. நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு கூறும்போது, “ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 22-ஆம் தேதி அன்று, ஈரானின் ஃபோர்டோ ஆலையில் சுற்றுச்சூழல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் 83.7% வரை உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் இருப்பதைக் காட்டியது" என்று தெரிவித்துள்ளது.

இதற்கு விளக்கமளித்துள்ள ஈரான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செறிவூட்டல் செயல்பாட்டின்போது எதிர்பார்க்கப்படாத ஏற்ற இறக்கங்கள் விளைவாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, திங்களன்று ஐ. நா. பொது சபை கூட்டத்தில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் பேசும்போது, “அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தெஹ்ரான் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “எங்கள் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப அணுசக்தி திறன்களைப் பெறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, ஈரானின் செறிவூட்டலுக்கான உச்சவரம்பு 20% ஆக இருக்காது. சொல்லப்போனால் ஈரானின் அணுசக்திக்குத் தேவை ஏற்பட்டால் யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாகக் கூட இருக்கலாம். நாங்கள் அணு ஆயுதங்களைப் பெறவேண்டும் என்று நினைத்தால். அதனை இஸ்ரேல் மற்றும் அதனை வேறு எந்த நாட்டாலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

ஏன் இந்த சர்ச்சை? - யுரேனியம் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு தனிமம். இவை பெரும்பாலும் அணுசக்தி தொடர்பான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது பொதுவாக U-235 என்று அழைக்கப்படுகிறது. இவை 3-5% செறிவு கொண்டது. இவை பெரும்பாலும் அணுமின் நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் 20% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுசக்தி ஆராய்ச்சி உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அணு ஆயுதங்கள் தயாரிக்க 90% செறிவூட்டப்பட்ட யுரேனியங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 2015-ஆம் ஆண்டு சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் 3.67% யுரேனியத்தை செறிவூட்ட மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி ஆலையில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐ. நா. கூறியுள்ளது.

ஈரான் - அமெரிக்க மோதல்: அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார்.

இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் தெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

வாஷிங்டன்: தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

காஷ்மீரில் மட்டும் 153 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்திய பாதுகாப்பு படைகளின் அதிதீவிர நடவடிக்கைகளால் காஷ்மீரில் ஓராண்டில் 193 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படைகளை சேர்ந்த 45 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பொதுமக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த நவம்பர் 1-ம் தேதி மக்கள் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிவது, தீவிரவாத தாக்குதல்களை தடுப்பது, தீவிரவாத அமைப்புகளை அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

விமான நிலையங்கள், துறைமுகங்களில் பயோமெட்ரிக் சோதனை நடத்தப்படுகிறது. விமானத்தில் அனுப்பப்படும் சரக்குபெட்டகங்கள் இரட்டை எக்ஸ்ரேசோதனைக்கு உட்படுத்தப்படு கின்றன.

இந்தியா முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேருக்கு அண்மையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2012-ம்ஆண்டில் பிஹாரின் புத்த கயாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் சார்பில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்திய கடல் எல்லை மிகவும் நீளமானது. கடல் எல்லையைப் பாதுகாக்க இந்திய அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குவாட் கூட்டமைப்பு சார்பில்இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த நவம்பரில் போர்ஒத்திகையை நடத்தின. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கலிபோர்னியா: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்த எலான் மஸ்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார்.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2-ம் இடம் வகித்து வந்தார். தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100 சதவீதம் அதிகரித் துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

லூயி வுட்டான் நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 185.3 பில்லியன் டாலராக (ரூ.15.30 லட்சம் கோடி) உள்ள நிலையில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலராக (ரூ.15.45 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.6 லட்சம் கோடி)ட்விட்டர் நிறுவனத்தை வாங் கினார். 50 சதவீத ஊழியர்களை நிறுவனத்திலிருந்து நீக்கினார். அவரது நடவடிக்கைகள் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளா னது. இதனால், அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது.

இதனால், உலக கோடீஸ் வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஆனால், இவ் வாண்டு அவரது சொத்து மதிப்பு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. இவ்வாண்டில் இதுவரையில் அவரது சொத்துமதிப்பு 70 சதவீதம் அதிகரித் துள்ளது.



Read in source website

CESCR என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை (ICESCR) செயல்படுத்துவதைக் கண்காணிக்கும் 18 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட அமைப்பாகும்.

பிப்ரவரி 24 அன்று ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான (CESCR) குழு நடத்திய விவாதத்தில், நித்யானந்தாவின் சுய-பிரகடனப்படுத்தப்பட்ட நாடான, கைலாசாவின் (USK) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக நித்யானந்தா தனது நாட்டின் பிரதிநிதி ஒருவரின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, “ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி பற்றிய பொதுவான கருத்து பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில் கைலாசா இல்லை. முன்னதாக நித்யானந்தா 2020ஆம் ஆண்டு ஈக்வடார் தீவில் ஒரு நாட்டை நிறுவியதாக கூறினார்.
அந்த நாட்டுக்கு கொடி, அரசியலமைப்பு, பாஸ்போர்ட், சின்னம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், விவாதத்தில் USK பிரதிநிதிகள் எவ்வாறு பங்கேற்றனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நிகழ்விற்குப் பதிவு செய்வதற்கான இணைப்பு CESCR இன் இணையதளத்தில் கிடைக்கிறது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் வலைத்தளத்தின்படி, CESCR தற்போது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கும் பணியில் உள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட பல ஆலோசனைகளைத் தொடர்ந்து பொதுக் கருத்தின் முதல் வரைவைத் தயாரிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் குழுவின் ஆலோசனையின் இறுதி கூட்டத்தில் பிப்ரவரி 24 விவாதம் நடைபெற்றுள்ளது.

CESCR என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை (ICESCR) செயல்படுத்துவதைக் கண்காணிக்கும் 18 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட அமைப்பாகும்.

1966 இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் அதன் மாநிலக் கட்சிகளால். மே 29, 1985 இல் நிறுவப்பட்டது. இது, குழு உறுப்பு நாடுகளுடன் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை உருவாக்க முயல்கிறது.
மேலும், உடன்படிக்கையின் விதிமுறைகள் உறுப்பு நாடுகளில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை தீர்மானிக்கிறது மற்றும் உடன்படிக்கையை செயல்படுத்துதல் மற்றும் அமலாக்கம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை மதிப்பிடுகிறது.

2018 முதல், குழு பொதுவான கருத்தை உருவாக்கி வருகிறது, இது ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளின் உள்ளடக்கத்தை தெளிவுபடுத்துகிறது.
ஐ.நா.வின் இணையதளம், “பொதுக் கருத்துகளின் நோக்கம், ஒப்பந்தங்களில் உள்ள உரிமைகளை மாநிலக் கட்சிகள் சிறப்பாக செயல்படுத்த உதவுவதாகும்.”

கைலாசா (USK) பிரதிநிதிகள் என்ன பேசினார்கள்?

தன்னை விஜயப்ரியா நித்யானந்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதி, “கைலாசா பழங்கால இந்துக் கொள்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான காலத்தால் சோதிக்கப்பட்ட இந்துக் கொள்கைகளுடன் இணக்கமாக உள்ள உள்நாட்டு தீர்வுகளை செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.

மேலும், இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பிப்பதற்காக நித்யானந்தாவின் கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் பேசினார்.

முன்னதாக நித்யானந்தா, கடந்த 2019-ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் குழந்தைகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இயன் குமார் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு பிரதிநிதி, குழுவில் உள்ள நிபுணர்களில் ஒருவரிடம், “தங்கள் கலாச்சார விவசாய மரபுகளை நம்பகத்தன்மையுடன் கடைப்பிடிக்க விரும்பும் பழங்குடியினக் குழுக்களை கணிசமாகத் தடுக்கக்கூடிய உள்ளூர் சட்டம்” பற்றிக் கேட்டார்.

ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, குழுவில் உள்ளவர்கள் எவரும் அவர்களின் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதிலளிக்கவில்லை.



Read in source website

Q3 க்கான GDP தரவுகளில் “மிகவும் தவறான புரிதல்” இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது, இது காலாண்டு வளர்ச்சி 4.4 சதவீதமாகக் குறைவதைக் காட்டுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தரவு செவ்வாய்க்கிழமை (பிப்.28) வெளியிடப்பட்டது.
அதில், இந்தியப் பொருளாதாரத்தின் காலாண்டு வளர்ச்சி அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனினும், நடப்பு 2022-23 நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி மதிப்பீடு 7 சதவீதமாக உள்ளது.

அரசாங்கச் செலவினங்களும், தொடர்ச்சியான இரண்டாவது காலாண்டிற்கான எதிர்மறையான உற்பத்தி அச்சமும், மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எடைபோடுகின்றன.

இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் புதன்கிழமை கூறுகையில், “முந்தைய ஆண்டுகளின் தரவுகளுக்கான திருத்தங்களுடன் வந்த Q3 க்கான GDP தரவுகளில் “மிகவும் தவறான புரிதல்” உள்ளது” என்றார்.

GDP தரவு குறித்து அரசாங்கம் என்ன சொல்கிறது?

தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன், “Q3 GDP தரவை முந்தைய நிதியாண்டுகளுக்கான திருத்தங்களின் பின்னணியில் பார்க்க வேண்டும்” என்றார்.

மேலும், “நுகர்வுத் தேவையைப் பிரதிபலிக்கும் தனியார் இறுதி நுகர்வுச் செலவினத்திற்கு (PFCE), “முந்தைய ஆண்டு(களுக்கு) தரவுத் திருத்தம் Q3 FY23 இல் 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை 2 சதவீதமாகக் குறைத்துள்ளது” என்றார்.

ஒருவர் நுகர்வை நுகர்வுடன் ஒப்பிட்டாலும், ஒருவர் முதல் திருத்தத்தின் ஒட்டுமொத்த அடிப்படை விளைவை 2021-22, இரண்டாவது திருத்தம் 2020-21 என ஒப்பிடுகிறார்.

இவை அனைத்தும் இப்போது அடிப்படைக் காலத் தரவை உயர்த்தி 2022-23க்கான வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கின்றன.
எனவே, உண்மையில் ஒருவர் ஆப்பிளை ஆரஞ்சுகளுடன் ஒப்பிடுகிறார். அடிப்படைத் தரவுத் திருத்தங்கள், பெரிய மாதிரிகள் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக ஒரு செட் தரவு திருத்தப்பட்டால், மற்றொன்று இல்லை, இது போன்ற ஒப்பீடு அல்ல,” என்று அவர் புதன்கிழமை கூறினார்.

இதேபோல், திருத்தப்பட்ட தரவு இல்லாமல் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் FY23 இல் உற்பத்தி GVA 5.1 சதவிகிதம் வளர்ந்திருக்கும் என்று அவர் கூறினார்.

“இருப்பினும், திருத்தத்திற்குப் பிறகு இந்த காலகட்டத்தில் அது 0.6 சதவீதம் வளர்ச்சி அடையும். இது 4.5 சதவீத புள்ளிகளின் திருத்தம்,” என்றார்.

மூன்றாம் காலாண்டில், திருத்தப்பட்ட தரவு இல்லாமல் உற்பத்தி 3.8 சதவீதம் வளர்ந்திருக்கும்.
எவ்வாறாயினும், இந்தத் திருத்தத்திற்குப் பிறகு Q3 FY23 இல் 1.1 சதவிகிதம் சுருங்கிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட GDP தரவுகளில் என்ன திருத்தங்கள் இருந்தன?

முந்தைய நிதியாண்டுகளுக்கான திருத்தப்பட்ட தரவு Q3 தரவுகளுடன் வெளியிடப்பட்டது, அதன்படி 2021-22 நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் முந்தைய 8.7 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாக 40 அடிப்படை புள்ளிகளால் திருத்தப்பட்டது.

2020-21 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி முந்தைய (-)6.6 சதவீதத்திற்கு பதிலாக (-)5.8 சதவீதமாக மதிப்பிடப்பட்ட நிலையில், கோவிட் காலத்திலும் மேல்நோக்கிய திருத்தம் இருந்தது. 2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 3.7 சதவீதத்தில் இருந்து 3.9 சதவீதமாக திருத்தப்பட்டது.

இந்த நிதியாண்டில், ஏப்ரல்-ஜூன் (Q1)க்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 13.5 சதவீதத்தில் இருந்து 13.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, அதே சமயம் ஜூலை-செப்டம்பருக்கான (Q2) 6.3 சதவீதமாகவே இருந்தது.

மேலும், முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன், FY23க்கான GDP கூறுகளும் திருத்தத்திற்கு உட்பட்டன.
அரசின் இறுதி நுகர்வுச் செலவு முந்தைய 3.1 சதவீதத்திலிருந்து 1.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் இறுதி நுகர்வுச் செலவினம் இப்போது 7.7 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 11.5 சதவிகிதம் முந்தைய மதிப்பீட்டில் இருந்து 11.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்து உள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது அட்வான்ஸ் ஜிடிபி மதிப்பீடுகள் என்ன?

முன்னதாக, GDP முன்கூட்டிய மதிப்பீடுகள் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்பட்டன, ஆனால் 2016-17 இல், NSO முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தியது.

ஜனவரி 7 அன்று வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள், அடுத்த நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டுக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சிக்கான முதல் அதிகாரப்பூர்வ அரசாங்க மதிப்பீட்டைக் குறிக்கிறது.

மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பிற துறைகளில் உள்ள அதிகாரிகளுக்கு அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் பரந்த வரையறைகளை வடிவமைக்க உதவும் வகையில், 7-8 மாதங்களின் தரவுகளை விரிவுபடுத்துவதன் மூலம் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் பெறப்படுகின்றன.

மேலும், ஜிடிபியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படுகின்றன.

இந்த ஆண்டு முதல், திருத்தப்பட்ட மதிப்பீடுகளை வெளியிடுவதற்கான காலவரிசையை NSO மாற்றியுள்ளது.

முன்னதாக, முந்தைய நிதியாண்டிற்கான இரண்டாவது திருத்தப்பட்ட மதிப்பீடும் அதற்கு முந்தைய ஆண்டிற்கான மூன்றாவது திருத்தப்பட்ட மதிப்பீடும் ஜனவரி-இறுதியில் வெளியிடப்பட்டன.

இது இப்போது பிப்ரவரி-இறுதியில் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

NSO இன் படி, முதல் அட்வான்ஸ் மதிப்பீடுகள் “மிகக் குறைந்த தரவு” மற்றும் 2021-22 இன் தற்காலிக மதிப்பீடுகளைப் பயன்படுத்தி, தொடர்புடைய குறிகாட்டிகளைப் பயன்படுத்தி விரிவாக்கப்படுகின்றன.

2022-23க்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின் தொகுப்பிற்காக, முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் போது பயன்படுத்தப்பட்ட 2021-22 இன் தற்காலிக மதிப்பீடுகள் 2021-22 ஆம் ஆண்டிற்கான முதல் திருத்தப்பட்ட மதிப்பீடுகளால் மாற்றப்பட்டுள்ளன,

திருத்தங்கள் எதைக் குறிக்கின்றன?

ஜிடிபியின் முதல் அட்வான்ஸ் மதிப்பீடுகள் எக்ஸ்ட்ராபோலேஷனை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் அவற்றை அதிகம் படிக்க வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

“பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட இருந்ததால், முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் ஜனவரி நடுப்பகுதிக்கு மாற்றப்பட்டன. திருத்தங்கள் வழக்கமான GDP தரவு வெளியீடுகளின் ஒரு பகுதியாகும். ஆனால், Q3 இன் கார்ப்பரேட் முடிவுகள் ஜனவரி நடுப்பகுதியில் இருந்து வரத் தொடங்குகின்றன மற்றும் இரண்டாவது அட்வான்ஸ் மதிப்பீடுகள் GDP செயல்திறன் பற்றிய சிறந்த படத்தை அளிக்கிறது.

2023 நிதியாண்டில் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்ட நிலையில், Q3 வளர்ச்சியானது மூன்றாம் காலாண்டில் மிகக் குறைவாக இருந்துள்ளது.

இது பொருளாதார மீட்சி இன்னும் பலவீனமாக உள்ளது என்பதை காட்டுகிறது” என்று தலைமைப் பொருளாதார நிபுணர் தேவேந்திர குமார் பந்த், இந்தியா ரேட்டிங்ஸில் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் பொருளாதார மீட்சியானது, பணவியல் மற்றும் நிதி ஆகிய இரண்டும் கொள்கை நடவடிக்கைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயங்களைக் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார்.



Read in source website

யானைகள் மீதான தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையாக கோயில் சார்பாக மற்றும் தனி நபர்கள் யானைகள் வாங்க கூடாது. அனைத்து கோயில்கள் மற்றும் தனியார் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவருக்கு சொந்தமான 56 வயதான லலிதா என்ற பெண் யானையின் பராமரிப்பு தொடர்பாக வனத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் யானை பாகனுடனே இருக்கட்டும். பாகனிடம் இருந்து யானையை அழைத்து செல்ல வேண்டாம். தொடர்ந்து பாகன் பராமரிப்பில் இருக்கட்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பாகன் கோயில் விழாவுக்கு யானையை அழைத்து சென்றபோது காயம் ஏற்பட்டது. முறையாக சிகிச்சை அளிக்கப் படவில்லை. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், யானையின் பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

இதுவே சரியான நேரம்

இந்நிலையில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “வன விலங்குகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மதுரை கால்நடை மருத்துவர் கலைவாணன், யானை லலிதா பூரண குணமடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். அவரது பரிந்துரைப்படி லலிதாவுக்கு தேவையான உணவு, மருந்து, தகுந்த மாற்று இருப்பிடம் வழங்க விருதுநகர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ப்பதற்காக யானைகளை வாங்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம்.

பல கோவில்களில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் யானைகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை, 24 மணி நேரமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.

யானைகள் துன்புறுத்தல்

யானைகள் துன்புறுத்தப்படுகின்றன. குடிபோதையில் உள்ள பாகன்களால் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன. சித்ரவதை தாங்க முடியாமல், யானைகள் சில நேரங்களில் கோபமடைந்து வன்முறையில் ஈடுபடுகின்றன. அனைத்து கோயில்கள், தனியார் யானைகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஆய்வு செய்ய வேண்டும்.

தனி நபர்களோ அல்லது மத நிறுவனங்களோ யானைகளை இனி வாங்கக்கூடாது என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கோயில்களில் வளர்க்க இனி யானைகள் வாங்க கூடாது என தமிழகத்தின் அனைத்து கோயில்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.



Read in source website

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தன்னை இணைத்துகொள்ள விரும்பும் நபர்களின் பட்டியலை சேகரிப்பதாகவும், அதற்கான அரசு அறிவிப்பு பிறப்பிக்கப்படிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தன்னை இணைத்துகொள்ள விரும்பும் நபர்களின் பட்டியலை சேகரிப்பதாகவும், அதற்கான அரசு அறிவிப்பு பிறப்பிக்கப்படிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் ஒரு கட்டத்தில் அரசால் நிரந்திரப்படுத்தபட்டனர். அவர்களை நிரந்தரமாக்கும்போது, புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.

அந்த காலகட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்தான் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போது நாங்கள் பணியில் சேர்ந்தோம் என்று கூறினார்கள். இவர்கள் நீதிமன்றத்தையும் இது தொடர்பாக அணுகினர்.



Read in source website

 இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் 11.8 கோடி டன் கோதுமை மகசூலுக்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதம், வழக்கத்துக்கு மாறாக இந்தியாவில் மேற்கு, வடக்கு மாநிலங்களில் காணப்படும் அதிகரித்த வெப்பத்தைப் பார்க்கும்போது அது சாத்தியப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. உடனடியாக எந்தவித முடிவுக்கும் வரமுடியாது என்றாலும்கூட, நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
 கடந்த ஆண்டு 11.1 கோடி டன் கோதுமை உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் காணப்பட்ட வெப்பம் காரணமாக 10.7 கோடி டன் விளைச்சல்தான் கிடைத்தது. கோதுமை, கடுகு போன்ற ராஃபி பருவகால விளைச்சல் குறித்து மார்ச், ஏப்ரல் மாத வெப்பநிலையின் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது அனுபவம் கற்றுத்தந்த பாடம்.
 பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ, லா நினா அடிப்படையில்தான் கீழமை நாடுகளின், குறிப்பாக தெற்கு ஆசியாவின் தட்பவெப்பநிலை அமைகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குளிர்காலத் தன்மைகள் தொடரவும் அவை காரணமாகின்றன. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இந்தியாவின் பல பகுதிகளிலும் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடராமல், நேரடியாக கோடை கால வெப்பநிலை காணப்படுவதை உணர முடிகிறது.
 2022-க்கும் 2023-க்கும் வித்தியாசம் இருக்கிறது. கடந்த ஆண்டு அதிகரித்த வெப்பத்தால் குளிர்காலப் பயிர்களின் அறுவடைக்கு முன்பு மார்ச் மாதம் கருகத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை வெப்பம் தொடங்கியிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
 கோதுமை அறுவடைக்குக் காற்றில் ஈரப்பதம் இருப்பது மிகவும் அவசியம். குளிர்காலத்தில் போதுமான மழை இல்லாததால், கோடை வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். அதனால் வழக்கமான பருவமழையும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
 2021 - 22-இல் இந்தியாவின் கோதுமை சாகுபடி 2.5% குறைந்து 10.7 கோடி டன்னாக இருந்தது. விளைச்சல் குறைந்தாலும், அரசு அதிக அளவில் கோதுமையைக் கொள்முதல் செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நமது தானியக் கையிருப்பு 5.3 முதல் 5.7 கோடி டன் என்றால், 2023 ஜனவரியில் அதுவே பாதிக்குப் பாதி அளவில் (2.98 கோடி டன்)தான் இருக்கிறது.
 தானியங்களிலும், கோதுமையின் கையிருப்பு மிக அதிகமாக இல்லை. நமது குறைந்தபட்ச தேவை 1.38 கோடி டன் என்றால், ஜனவரி மாத கோதுமை கையிருப்பு 1.71 கோடி டன். கோதுமையின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த 30 லட்சம் டன் சந்தைக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம், போக்குவரத்துக் கட்டணம் அகற்றப்பட்டு கூடுதலாகச் சந்தையில் கோதுமை கிடைக்க வழிகோலப்பட்டது.
 கையிருப்பைக் குறைத்துக் கொண்டு சந்தைக்குக் கூடுதல் கோதுமை கிடைக்க வழிகோலுவதன் மூலம் விலையை சற்றுக் கட்டுக்குள் கொண்டுவரலாம்தான். வர இருக்கும் ராஃபி பருவத்தில் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் எடுக்கப்படும் நடவடிக்கை அது. 2022 ராஃபி பருவத்தில் மார்ச் மாதம் அதிகரித்த வெப்பத்தால், மகசூல் குறைந்ததுபோல இந்த ஆண்டும் நேர்ந்து விடுமோ என்பதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.
 சென்ற ஆண்டில் கோதுமை உற்பத்தி குறைந்ததால், இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பை இழந்தது. உற்பத்தி குறைந்ததால் உணவுப் பொருள்களின் விலைவாசி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியது. ரஷிய - உக்ரைன் போரால் உலகம் முழுவதும் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், அதை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போயிற்று. இந்த ஆண்டும் அதே நிலைமை ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அச்சம்.
 அரசின் கையிருப்பு குறைந்ததற்கு, இலவச ரேஷன் முக்கியமான காரணம். நடப்பு ராஃபி பருவத்தில் அதை ஈடுகட்டலாம் என்கிற எதிர்பார்ப்பில்தான் இலவச ரேஷன் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக சாகுபடிப் பரப்பில் கோதுமை பயிரிடப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் கடந்த ஆண்டின் உற்பத்தி அளவை கோதுமை எட்டினாலே பெரிது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
 இந்தியாவில் சில்லறை விலைவாசி ஜனவரி 2023-இல் 6.52% சற்று குறைந்து மீண்டும் அதிகரித்துவிட்டது. தானியங்களின் விலைவாசி செப்டம்பர் 2022 முதல் இரட்டை இலக்கத்தை எட்டி, தற்போது 16.12% அளவை எட்டியிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யவும் முடியாது. உலகளாவிய நிலையில் நிலவும் கோதுமைத் தட்டுப்பாடு முதல் காரணம். இந்தியா சர்வதேச சந்தையில் நுழைந்தால், சர்வதேச கோதுமை விலை பலமடங்கு உயர்ந்துவிடும் என்பது இன்னொரு காரணம்.
 அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இல்லை. இந்தியாவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 151 பகுதிகளை அடையாளம் கண்டு வெப்பம் தாங்கும் சக்தி படைத்த கோதுமை வித்துகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. கோடையை எதிர்கொள்ள, முன்கூட்டியே பயிரிடவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கிக் கூடுதல் கோதுமை கையிருப்பை உறுதிப்படுத்துவது புத்திசாலித்தனம். உணவுப் பொருள்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 2023 சவாலாகத்தான் இருக்கப் போகிறது!
 



Read in source website

 ஏகாதசி விரதம், அமாவாசை விரதம் போலவே மற்றொரு புதிய விரதமும் இருக்கிறது. அதுதான் எண்ம விரதம். அதாவது டிஜிட்டல் விரதம். டிஜிட்டல் இணைப்பில் இருந்து சில மணித்துளிகள் எனத் தொடங்கி சில நிமிடங்கள், சில மணி நேரங்கள் முற்றிலுமாக விலகி இருப்பது. இந்த டிஜிட்டல் விரதம் குறித்துப் பலரும் யோசிக்கிறார்கள், சிலர்தான் செயல்படுத்துகிறார்கள்.
 பலருக்கும் இதன் மீது ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. சில நிறுவனங்கள் எண்ம விரதம் குறித்து விளம்பரப்படுத்துகின்றன. ஆம், பேஸ்புக், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சிலிக்கான் வேலி ஊழியர்களிடையே இது மிகவும்பிரபலமானது. தொழில்நுட்பம் இன்று நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறது. அப்படி இருக்க ஏன் இந்த எண்ம விரதம் தேவைப்படுகிறது?
 சமீபத்தில் ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். கணவன், மனைவி, பிள்ளைகள் இருவர் என குடும்பமாக உணவருந்த வந்திருந்தனர். இருக்கையில் வந்து அமர்ந்தது முதல் சாப்பிட்டு எழுந்து செல்லும் வரை அவர்களில் எவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ளவே இல்லை. நால்வர் கையிலும் கைப்பேசி இருந்தது. அவர்கள் உணவு பரிமாறுபவரை பார்த்தார்களே ஒழிய தங்களுக்குள் பார்த்துக்கொள்ளவே இல்லை.
 ஒவ்வொருவரின் பார்வையும் அவருடைய கைப்பேசியில்தான் இருந்தது. காணொலி பார்ப்பதும் செய்தி அனுப்புவதுமாக அவர்கள் அனைவரும் வேறு தளத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
 குடும்பத்துக்குள் மட்டுமல்ல, பொது இடங்களிலும் இந்த கைப்பேசியினால் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆசையாக ஒரு பட்டிமன்றத்திற்குச் சென்று பேச்சு அரங்கை ரசிக்கலாம் என உட்கார்ந்தால் அந்த அரங்கில் பேச்சாளர்களை விட அதிகம் பேசுவது பார்வையாளர்கள்தான். அவ்வளவு அழைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன அனைவருக்கும். இது அந்த பேச்சாளர்களுக்கு மட்டுமின்றி சுற்றி இருக்கும் சகலருக்கும் பெருத்த இடையூறு.
 சிலர் கோயிலுக்கு வந்தால் கூட இரண்டு கைகளையும் இணைத்து மனதார கடவுளை வணங்குவதில்லை. ஒரு பார்வையில் கைப்பேசியை பார்த்துக் கொண்டு மறுபார்வையில் இறைவனை நோக்கி வணங்குகின்றனர். அவர்களால் தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.
 "பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க' என்று பேசுவதற்காக மட்டுமே இருந்த தொலைபேசி கைப்பேசியாக அவதாரம் எடுத்துப் பின் திறன்பேசியாகி அது போதாதென்று அறிதிறன்பேசியாகி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கருவியை, பேசுவதற்கு பதில் பிற விஷயங்களுக்கு தான் நாம் தற்போது அதிகம் பயன்படுத்துகிறோம். ஒரு கைப்பேசி எத்தனை பொருள்களை ஓரங்கட்டியிருக்கிறது என்று கவனித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
 பெருவாரியான இளைஞர்கள் இன்று கைகடிகாரம் கட்டுவதையே மறந்து விட்டார்கள். அவ்வப்போது நேரம் பார்த்துக் கொள்ளத்தான் கையிலேயே கைப்பேசி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வீடுகளில் அலாரம் கடிகாரம் என்று ஒன்று இருக்கும். அதிகாலையில் அலாரம் அடித்து எழுவோம். இன்று அப்படி ஒன்று இருந்ததையே மறந்து விட்டோம். காரணம், நம் கைக்கெட்டும் தொலைவில் கைப்பேசி இருக்கிறது. இருளில் செல்ல பயந்து டார்ச் லைட் எடுத்துப் போகும் நடைமுறையும் கிட்டதட்ட இல்லாமலாகி விட்டது. கையில் உள்ள அலைபேசியே அவர்களுக்கு வழிகாட்டி விடுகிறது.
 கணக்குப் போட பயன்படுத்தப்பட்ட கால்குலேட்டரின் விற்பனை மட்டுமல்ல, அதன் உற்பத்தியே தற்போது அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. நம் மகிழ்ச்சியான தருணங்களை பின்னர் நினைத்துப் பார்த்து மகிழ எத்தனை ஆயிரம் கொடுத்து முன்பு புகைப்படக் கருவி வாங்கினோம். இன்று திருமணங்களுக்கு புகைப்படம் எடுப்பவர் மட்டுமே அதைக் கையில் வைத்திருக்கிறார். நாம் கைப்பேசியின் புண்ணியத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறோம். வானொலியும் ஒலிநாடா கருவியும் இல்லாத வீடு இருக்க முடியாது என்ற நிலைமை இப்போது அடியோடு மாறிவிட்டது. ஏன் திரைப்படங்களைக் கூட நம் கையடக்கக் கருவி காட்டிவிடுகிறது.
 இவை மட்டுமா? பெருவாரியான பணப்பரிவர்த்தனை கைப்பேசி மூலமே நடைபெறுகிறது. பயணத்தின்போது புத்தகங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டோமா? பரவாயில்லை, கைப்பேசியைத் திறந்தால் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் நமக்கு படிக்கக் கிடைக்கும். மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய இடத்தில் நேரம் ஓடவில்லையா? இருந்த இடத்திலிருந்தபடியே உலக நிகழ்வுகளைப் பார்த்து பொழுது போவது தெரியாமல் கண்டு களிக்கலாம்.
 அவசரத்துக்கு பேனாவும் காகிதமும் கிடைக்கவில்லையா? கைப்பேசியிலேயே நோட்பேட் இருக்கிறது. கையால் முக்கிய குறிப்புகளை எழுதிக் கொண்டு பக்கம் ஒதுக்கிக் கொள்ளலாம். இப்படி கைப்பேசி நம் நினைவாற்றல் திறனை மழுங்கடித்தாலும், பல சிறப்பான சேவைகளை நமக்கு வழங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதனாலேயே நாம் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தேதியில் கையில் பணம் எடுத்துச்செல்லாமல் கூட வெளியே போகலாம். ஆனால், கைப்பேசி இல்லாமல் வெளியே போக முடியாது எனும் நிலை உருவாகியுள்ளது.
 முதலில் பழக்கம் என்று ஆனது, இப்போது வழக்கமாகி நம் வாழ்வும் ஆகிவிட்டது. கைப்பேசி இல்லாவிட்டால் ஏதோ கையை இழந்தது போல் தவிக்கிறோம் நாம். கல்லூரியில் படித்து முடித்து ஒரு வேலையில் காலூன்றிய பிறகு வேலை நிமித்தம் இப்படி பழகிப் போனால் கூட பரவாயில்லை. கரோனா பரவலுக்குப் பிறகு பள்ளிக் குழந்தைகள் கையில் சென்று பழக்கமாகிப் போனது. அதுதான் பல அவலங்களுக்கு காரணமாகி இருக்கிறது.
 பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் கைப்பேசிக்கு அடிமையாகிப் போக கொள்ளை நோய்த்தொற்று முக்கிய காரணமாக அமைந்து விட்டது. போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டது போல் கைப்பேசி இல்லாமல் தம்மால் இருக்க முடியாது என தவிக்கிறார்கள். இதனால் அவர்களின் மனவலிமை குறைகிறது. பிறருக்கு அவர்களின் மீதான நம்பிக்கை குன்றி போகவும் வாய்ப்பு இருக்கிறது.
 செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல் எடுத்து ஊடுருவிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மை நாம் மீட்டெடுத்துக் கொள்ள சில வழிமுறைகளை நிச்சயம் கையாள வேண்டும் என்று அண்மையில் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட தனது "மன் கி பாத்' நிகழ்ச்சியில் எண்ம விரதம் இருக்க வேண்டிய அவசியம் பற்றி முன்மொழிந்திருக்கிறார். நமக்கு சுயகட்டுப்பாடு மிக மிக அவசியம். அதற்காக தினசரி எண்ம விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நம்மால் அவ்வாறு இருக்கவும் முடியாது. முயன்றால் வாரத்தில் ஒரு நாள் நம்மை கட்டுப்படுத்தும் இவ்வகை சாதனங்களில் இருந்து விலகி நம்முடைய சுய கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும். இப்போது இந்த எண்ணம் அனைவருக்கும் வலுப்பெற்று வருகிறது.
 இப்போதெல்லாம் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திலும் இந்த பிரச்னை பெரிதாக பேசப்படுகிறது. பள்ளி விட்டு வந்ததும் பிள்ளைகள் நேராக போய் கைப்பேசியை எடுத்து பார்க்கிறார்கள் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பலாக இருக்கிறது.
 இந்த பள்ளியில் மட்டும் ஏன் இணைய வகுப்புகள் தொடங்கவில்லை? உடனே தொடங்குங்கள் என இரண்டு வருடங்களுக்கு முன் பள்ளி நிர்வாகத்தை நச்சரித்தவர்கள் எல்லாம் இப்போது தயவு செய்து பாடம் சார்பாக எந்த தகவலையும் வாட்ஸ்ஆப் குழுவில் அனுப்பாதீர்கள். தினசரி பள்ளிக்கு வருவதால் அனைத்தையும் அவர்கள் அங்கேயே தெரிந்து கொள்ளட்டும். பெற்றோர்களுக்கான குழு மட்டும் இருக்கட்டும். பிள்ளைகளுக்கு எந்த தகவலையும் அலைபேசியில் அனுப்பாதீர்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் மன்றாடுகிறார்கள்.
 பிள்ளைகளின் கைகளில் இருந்து கைப்பேசியை பிடுங்குவதற்குள் பெற்றோர்கள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. அப்படி வலுக்கட்டாயமாகப் பிடுங்கினாலும் பிள்ளைகள் எதையோ பறி கொடுத்தது போல ஆகிவிடுகிறார்கள். எல்லோரும் வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரிவர பேசிக் கொள்வதில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே அந்நியமாகிப் போனது போன்ற ஒரு உணர்வில் வாடுகிறார்கள் பெற்றோர்கள்.
 இதுபோன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது ஒரு பித்து நிலை ஏற்படத்தான் செய்யும். பின்னர் மனம் சமநிலைக்கு வந்தாக வேண்டும். ஆனால் அந்த பித்து நிலை தொடர்கதை ஆகிப்போகும் போது தான் குடும்ப உறவுகளில் சிக்கல் எழுகிறது. இயந்திரம் சூழ் உலகாக இருப்பினும் மனிதர்களுடன்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். இயந்திரங்களை நாம் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர நாம் அதற்கு அடிமையாகி விடக்கூடாது. நம் கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்திருக்கும்போது நமக்கு சிறந்த சேவகனாக அது இருக்கும். ஆறறிவு கொண்டவர்களின் சாமர்த்தியம் அதுதான்.
 அதிக நேரம் கைப்பேசியை பயன்படுத்துவதால் "டெஸ்க் நெக் சிண்ட்ரோம்' எனப்படும் கழுத்து வலி பிரச்னை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கழுத்து வலியோடு, தலைவலி, தோள்பட்டை வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் வரும் என்கிறார்கள். கண் இமைக்காமல் கைப்பேசியைப் பார்ப்பதால் கண்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
 இணையப் பயன்பாடு இல்லாமல் இன்று எவரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. பழம்பெருமையைப் பேசிக்கொண்டு காலம் கடத்த முடியாது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான குப்பைச் செய்திகள் நம் கைப்பேசியில் வந்து விழுகின்றன. வாரத்திற்கு ஒரு முறை வீட்டை சுத்தம் செய்வதைப் போல நாம் நம் கைப்பேசியையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
 அவரவர் வசதிப்படி ஒரு நாளில் சில மணி நேரமோ, ஒரு வாரத்தில் அரை நாளோ, ஒரு நாளோ என மின்னணு சாதனங்களிலிருந்து தள்ளி இருக்கலாம். நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய நேரமிது!
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.



Read in source website

பிப்ரவரி 27 அன்று நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதைத் தாண்டி, இந்தத் தேர்தலை ஒட்டி நடைபெற்ற தேர்தல் விதிமுறை மீறல்களும் தேர்தல் பிரச்சாரம் என்னும் பெயரில் நடைபெற்ற கேலிக்கூத்துகளும் ஜனநாயகத்துக்கு மீண்டும் ஒருமுறை மிகப் பெரிய தோல்வியைப் பரிசளித்திருக்கின்றன.

ஆளும்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.3,000, ரூ.2,000 என பணமும் ஸ்மார்ட்வாட்ச், வெள்ளிக் கொலுசு, வெள்ளி விளக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருள்களையும் இரண்டு கட்சிகளும் கொடுத்துள்ளன.



Read in source website

மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) செயலா் மணீஷ் ஆர்.ஜோஷி பிப்ரவாி 16 அன்று ஒரு கடிதம் அனுப்பினார்.

‘2023-24 கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (கியூட் - CUET) தோ்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தோ்வில் வெற்றி பெறுபவர்களுக்கே பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சோ்க்கை அனுமதி அளிக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், விரும்புகின்ற பல்கலைக்கழகங்கள் இந்தப் பொது நுழைவுத் தோ்வு முறையை அமல்படுத்தலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் 1,113 பல்கலைக்கழகங்கள், 47,000 கல்லூரிகளுக்கான மாணவர் சோ்க்கைக்கும் இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை 2020இல், அனைத்துப் பாடச் சோ்க்கைக்கும் பொது நுழைவுத் தோ்வு அவசியம் என்று பாிந்துரைக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

நோக்கம் சிதையும்: பள்ளிப் படிப்பை முடித்த அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் கல்வியாக உயர்கல்வி அமைய வேண்டும் - கல்வி மேம்பாட்டுக்கென அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆணையம், கோத்தாரி ஆணையம் போன்றவற்றின் பாிந்துரையிலும், தேசியக் கல்விக் கொள்கை 1986, 1992 ஆகியவற்றிலும், தற்போது அமல்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கை 2020இலும் இதுதான் முக்கிய நோக்கமாக வலியுறுத்தப்படுகிறது.

அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையில், தற்போதுள்ள உயர்கல்விக்கான மாணவர் சோ்க்கையின் மொத்தப் பதிவு விகிதம் (GER) 24%இலிருந்து 2030க்குள் 50%ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முரண்பாடாகப் பொது நுழைவுத் தோ்வை அமல்படுத்துவது சோ்க்கை எண்ணிக்கையைக் குறைத்துவிடும். குறிப்பாக முதல் தலைமுறை, கிராமப்புற, மலைவாழ் மாணவர்கள் பொது நுழைவுத் தோ்வை எழுதித் தோ்ச்சி பெற்று உயர்கல்வி பெறுவது என்பது கானல் நீராகிவிடும்.

இந்தியாவில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21ஆம் ஆண்டில், முதன்முறையாக 4 கோடியைக் கடந்தது. இதில் 2019-20ஆம்ஆண்டை ஒப்பிட, தொலைதூரப் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7% அதிகரித்தது.

கல்லூரிக்குக் கட்டணம் செலுத்த இயலாதவர்கள், வேலை இல்லாதவர்கள், பகுதி நேரப் படிப்பைத் தொடர்பவர்கள் போன்றோர்தான் தொலைதூரக் கல்வி முறையில் பயிலுகின்றனா். இவா்களுக்கும் பொது நுழைவுத் தோ்வு அவசியம் என்பது மிகப் பெரிய முரண்.

முன்னிலையில் தமிழ்நாடு: உயர்கல்விச் சேர்க்கையில் மொத்தப் பதிவு விகிதம், 52% எனும் நிலையை அடைந்த முன்னணி மாநிலம் தமிழ்நாடு. மேலும், பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக உயர்கல்வி பயிலச் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், அரசுக் கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவா்களுக்குக் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்களிக்கப்படுகிறது. இவ்வாறான மேம்பாட்டுச் செயல்பாடுகளால்தான் உயர்கல்விக்கான மாணவர் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், பொது நுழைவுத் தோ்வு கட்டாயம் என்பது சரியல்ல.

விளைவுகளும் விபரீதங்களும்: கியூட் கட்டாயமாக்கப்பட்டால், பொது நுழைவுத் தோ்வுக்குப் பயிற்சியளிக்கும் மையங்கள் நாடு முழுவதும் புற்றீசலாகப் பெருகும். பொருளாதார வசதி படைத்த மாணவா்கள் மட்டும்தான் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற்றுத் தோ்ச்சி பெறுவார்கள்.

ஏழை மாணவா்களின் குடும்பத்தினா், இந்தக் கட்டணத்துக்காகக் கடன் வாங்கி மேலும் இன்னலுக்குள்ளாவார்கள். பலர் விலகி நிற்பார்கள். தோ்வில் தோல்வியடைந்தவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர இயலாமல் பெரும் இழப்புகளைச் சந்திப்பார்கள். சமூகத்திலும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

பொது நுழைவுத் தோ்வின் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்விச் சோ்க்கைக்குத் தேவை என்பதால், மாணவர்கள் 10, 2 பொதுத் தோ்வுகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். இதனால், அடிப்படைப் பாடங்களின் அறிவைப் பெறுவது தடுக்கப்பட்டுவிடும்.

பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான செலவை, மாணவர்களின் கட்டணம் - குறிப்பாகத் தொலைதூரக் கல்விக் கட்டணத்தின் வருவாயில்தான் ஈடுகட்டப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, ஏறத்தாழ 45% பல்கலைக்கழகங்கள் ஊழியா்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் வழங்க நிதி இல்லாமல் திண்டாடிவருகின்றன.

மாணவர் எண்ணிக்கை குறையும்போது நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும். தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஏறத்தாழ 95% மாணவர்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவர்கள். கியூட் தேர்வு மூலம் சோ்க்கை நடைபெறும்போது, வெளிமாநிலத்து மாணவர் சேர்க்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தியாவில் உயர்கல்வி பெற்ற பல லட்சம் மாணவா்கள் - குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வருகின்றனா். வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.

அத்தகையவா்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியிருக்கின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணியும் உயர்ந்துள்ளது. இனிவரும் காலத்தில், இவையெல்லாம் எட்டாக் கனியாகிவிடும் அபாயம் உள்ளது.

உயர்கல்விச் சோ்க்கையில் நாடு முழுவதும், முக்கியமாக தமிழ்நாட்டில், சமூக நீதியின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கியூட் தோ்வு இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்துவிடும். புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

தற்போது கொண்டுவரப்படும் பொது நுழைவுத் தோ்வுக்கு, நிச்சயமாக பிற மாநிலங்களிலும் எதிர்ப்பு உருவாகும். இதன் தொடர்ச்சியாக, புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கின்ற மாநிலங்களின் எண்ணிக்கை கூடும்.

தீர்வுகள்: அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நுழைவுத் தோ்வின் அடிப்படையில்தான் மாணவர் சோ்க்கை நடைபெறுகிறது. பல்கலைக்கழகங்களே நடத்தும் தோ்வுகளை எப்படி நடத்த வேண்டும் என்று வரைமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு தொிவிக்கலாம்.

தோ்வுகள் நடத்தும் முறைகளை ஆய்வுசெய்யலாம். இப்படியான கண்காணிப்பு மூலமாகச் சாியான முறையில் தோ்வுகள் நடத்தி, தகுதியுள்ள மாணவர் சோ்க்கைக்கு வழிவகுக்கலாம்.

சிறந்த ஆசிரியா்களால், எப்படியான மாணவர்களையும் கல்வியில் மேம்பட்டவர்களாக உருவாக்க முடியும். இன்றைக்கு உயர்கல்வியின் தரம் விமா்சனத்துக்குள்ளாக முக்கியக் காரணமே பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியா்கள் நியமன முறைகேடுகள்தான்.

திறமையும் தகுதியும் உள்ளவர்கள்கூட, செல்வாக்கும் செல்வமும் இல்லாமல் நியமனம் பெற முடியாத நிலை உள்ளது. இது அடிப்படைப் பிரச்சினை.

இந்நிலையில், தேசிய அல்லது மாநில அளவில் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்துக்கான வாரியத்தை உருவாக்கி, முறைப்படி தோ்வுகள் நடத்தி, வல்லுநா்களைக் கொண்டு நோ்காணல் மூலம் சிறந்த தகுதியும் அனுபவமும் உள்ளவா்களைக் கல்லூரி ஆசிரியா்களாகத் தோ்வுசெய்யலாம்.

அதன் மூலம் உயர்கல்வியின் தரம் உயரும் என்பது திண்ணம். பொது நுழைவுத் தோ்வை மாணவா்களுக்கு நடத்துவதை தவிர்த்து, ஆசிரியா்களுக்கு நடத்தினால் அனைத்து நிலைபெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்பார்கள்!

- க.திருவாசகம் | முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: vc@ametuniv.ac.in



Read in source website

ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனமாக மேம்படுத்தும் நோக்கில் ‘விஹான் ஏ.ஐ’ எனும் செயல்திட்டத்தை டாடா குழுமம் செயல்படுத்திவருகிறது. அதன் நீட்சியாக, புதிய விமானங்களுக்கான கொள்முதல் ஆணை ஒன்றை ஏர்பஸ், போயிங் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா வழங்கியுள்ளது.

470 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான இந்தக் கொள்முதல் ஆணையின் மதிப்பு ரூ 6.4 லட்சம் கோடி. உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவரையிலான கொள்முதல் ஆணைகளில் இதுவே பெரியது.



Read in source website

தேர்வில் மாணவர்கள் எழுதும் விடைகள் தெளிவாக இருந்தால்தான், உரிய மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. எனில், கேள்விகளும் தெளிவாகத்தானே இருக்க வேண்டும்?! சில நேரம் அதில் தவறுகள் நிகழ்வது உண்டு.

எழுத்துப் பிழைகள் முதல் தகவல் பிழைகள்வரை இடம்பெறுவதுடன், சிக்கலான வாக்கிய அமைப்புகளும் மாணவர்களைச் சிரமத்தில் ஆழ்த்திவிடும். இந்தக் குழப்பம் சமீபத்திலும் நடந்திருக்கிறது. மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) படிக்கும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 24 அன்று தொடங்கின.



Read in source website