Editorials - 24-10-2021

இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று…கடவுள் அமைத்து வைத்த மேடை…ஆம் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து புதிய குடும்பத்திற்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மகிழ்ச்சி, துக்கம் அனைத்திலும் கணவர் வீட்டினுரோடு உறுதுணையாக இருப்பவர்கள் மருமகள்கள் எனும் மகள்கள்.

நெற்றிப் பொட்டு பிறந்த வீட்டின் அடையாளமாகவும், உச்ச நெற்றிப் பொட்டு(வகிடு பகுதி) புகுந்த வீட்டின் அடையாளமாகவும் பெண்களுக்கு கருதப்படும். இதில் உச்ச நெற்றிப் பொட்டையை பெரும்பாலும் பெண்கள் இட்டுக் கொள்வர். தாங்கள் திருமணமானவர் என்பதற்கான அடையாளச் சான்றும்கூட.

பெற்ற தாய், தந்தை வளரும் காலம் வரை, மாமனார், மாமியார் என்பது ஆயுள் முடியும் வரையில் என்பதுதான் பெண்ணினத்துக்கான வரம். ஒரு சில இடங்களில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களுக்காக அனைவரையும் குற்றம் சாட்டலாகாது. அத்தையும், அன்னையைப் போன்றவர்தான். அவருடைய அன்பு கிடைத்துவிட்டால், புகுந்த வீட்டுக்கு செல்லும் மருமகள்கள் வாழும் வீடு சொர்க்கத்துக்கு நிகரானது.

தாங்கள் புகுந்த வீடு அன்பாலும், அமைதியாலும் உருவான அழகான கோட்டை என்கின்கிறனர் நாமக்கல்லில் அமைந்துள்ள பிரபல தங்கம் புற்றுநோய் மருத்துவமனையின் மூன்று மருத்துவ மருமகள்கள்.  

இந்த மருத்துவமனையின் தலைவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த மருத்துவர் குழந்தைவேல். இவரது மனைவி மல்லிகா குழந்தைவேல். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இருவரும் மருத்துவர்கள். மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் காதலித்து மணம் புரிந்து கொண்டனர்.

இவர்களுக்கு சரவணன், தீபன், கார்த்திக் ஆகிய மூன்று மகன்கள். மூன்று பேரும் மருத்துவர்கள். குஜராத்தைச் சேர்ந்த தீப்தி மிஸ்ராவை சரவணன் மருத்துவம் பயிலுகையில் காதல் மணம் புரிந்தார். கோவையைச் சேர்ந்த மருத்துவர் சுபா–தீபன், ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் மகாலட்சுமி–கார்த்திக் மற்ற இரு தம்பதிகள். மூன்று மகன்கள் மட்டுமல்ல, மூன்று மருமகள்களும் மருத்துவர்களே. இவர்களை அரவணைத்து வாழும் மருத்துவத் தம்பதிகள் குழந்தைவேலும், மல்லிகா குழந்தைவேலும்.

மாமியார் தினமான இன்று, நாமக்கல் தங்கம் மருத்துவமனையின் மூன்று மருமகள்கள் தங்களுடைய மாமியார் மல்லிகாவை பற்றி பகிர்ந்து கொண்ட சுவையான தகவல்கள் இதோ:  

முதலில் மூத்த மருமகளான தீப்தி மிஸ்ரா, 'நான் பிறந்து வளர்ந்தது அனைத்தும் குஜராத்தில் தான். எனது கணவர் சரவணன், இருவரும் காதல் மணம் புரிந்து கொண்டோம். என்னுடைய மாமனார், மாமியார் இருவரும் மற்றொரு அன்னை, தந்தை போன்றவர்கள். மொழி தெரியாத மாநிலத்தில் திருமணமாகி வந்த நிலையில், எனக்கு ஆதரவளித்தது மாமியார் மல்லிகா தான். நல்ல தாய் அமைவதும், மாமியார் அமைவதும் இறைவன் வழங்கும் வரம். தமிழகத்தில் எனக்கொரு நல்ல அம்மா கிடைத்திருப்பது இயற்கை தந்த பரிசு. மாமியார் என்பவர் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல, ஆணிவேரும் கூட. பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக இருந்து எங்களை வழிநடத்துகிறார். அவரும் மருத்துவர், நானும் மருத்துவர் என்பதால், ஒரு ஆசிரியை, மாணவியைப் போன்ற உறவும் எங்களிடையே உண்டு. மல்லிகை மணம் எவ்வாறு மாறாதோ, அதேபோல் எனது மாமியார் மல்லிகாவின் குணம் என்றும் மாறாது. மாமியார் என்று சொல்வதைவிட அம்மா என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்' என்றார் தன்னுடைய மழலை குஜராத்திய தமிழில் தீப்தி மிஸ்ரா. 

இரண்டாவது மருமகள் சுபா, 'தாய் என்பவர் மாமியாராகவும், மாமியார் என்பவர் தாயாகவும் மாற முடியுமா என்று கேட்டால் முடியும் என்பேன். ஏனென்றால் அவரும் ஒரு வீட்டின் மருமகளாக இருந்து மாமியாரானவர். அவருக்கும் மருமகள்களின் தேவை என்னவென்பது நன்றாகவே தெரியும். என்னைப் பொருத்தவரை பல நேரங்களில் அவரை எனது அம்மாவாகத் தான் பார்க்கிறேன். அத்தை என்று அழைத்த நாள்களை காட்டிலும் அம்மா என்று அழைத்த நாள்கள் அதிகம். மகன்களையும், மருமகள்களையும், பேரன்களையும் அரவணைத்து, அன்பு செலுத்தி குடும்பத்தை நகர்த்தி செல்லும் அவருடைய பாங்கு எங்களுடைய இளமையில் நாங்கள் கற்க வேண்டிய பால பாடம், அவருக்கு மாமியார் தின வாழ்த்துக்களை அன்புடன் பகிர்ந்து கொள்கிறேன்' என்றார் மகிழ்ச்சி புன்னகையுடன் சுபா .          

 மூன்றாம் மருமகள் மகாலட்சுமி, 'ரத்த சம்மந்தமே இல்லாத ஒரு புனித உறவு பெண்ணுக்கு எதுவென்றால் அது மாமியார் உறவு தான். புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாமியார் என்பவர் மற்றொரு அன்னையாவார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. எங்களுடைய அத்தை மல்லிகா, பெயருக்கு ஏற்றவாறு குணங்களைப் பெற்றவர். இதுவரை அவர் பிறரை கண்டித்து நான் பார்த்ததில்லை. அமைதிக்கு மறுபெயர் என்னவென்று கேட்டால் எனது அத்தையை தான் குறிப்பிடுவேன். அத்தை மட்டுமின்றி, மாமாவும் அன்பாலும், நகைச்சுவைப் பேச்சாலும் இல்லத்தை அலங்கரிப்பவர். தங்கம் மருத்துவமனை குடும்பத்தின் மருமகளானது ஆண்டவன் எனக்கு அளித்த வரம்' என்றார் மகாலட்சுமி.

மூன்று மருமகள்களையும் வாழ்த்தியபடி நம்மிடையே மாமியார் மல்லிகா குழந்தைவேல் கூறியதாவது: னக்கு ஒரு மகள் இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்தது. குடும்பத்திற்கு ஒரு பெண் வாரிசு இல்லாமல் போனதை என்ற கவலை எட்டிப்பார்த்த நாள்கள் அதிகம். பெண்ணாக இருந்தால் தலைவாரி, பூச்சூடி, நகைகளை அணிவித்து, கண்ணுக்கு மை தீட்டி அழகு பார்க்கலாம். அதற்கான வாய்ப்பு இல்லையே என அவ்வப்போது வருத்தப்படுவேன். மகன்கள் மூவருக்கும் திருமணம் நடைபெறும் வரையில் தான் இருந்தது. அதன்பின் மூன்று மருமகள்கள் அழகு பதுமைகளாக வந்து என் வீட்டை அலங்கரிக்கின்றனர். எனது மகள்களாக அவர்களை பார்ப்பதால் நான் பட்ட கவலையெல்லாம் காணாமலே போய்விட்டது. ஆல்போல் தளைத்து, அருகுபோல் வேரூன்றி, வாழையடி வாழையாக மகன்களும், மருமகள்களும், பேரன், பேத்திகளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே  எனது விருப்பம் என்றார்.

ஒரு வீட்டில் ஒரே அடுப்பில் சமைத்து பகிர்ந்துண்டு வாழும் உறவுகள் அடங்கிய அமைப்பிற்கு குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பம் என்ற அமைப்புதான் சமூகத்தின் ஒழுக்க மேம்பாட்டிற்கு உறுதுணை புரிகின்றது. இக்குடும்ப அமைப்பு கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் என்கிற வகைமையுடையதாய் அமைந்து உறவுகளின் உணர்வு, உரிமை என்கிற நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது. இருதரக் குடும்ப அமைப்புகளிலும் மாமியார் என்ற உறவு ஒரு உறுதியான முக்கியமான உறவாகத் திகழ்கிறது.

மாமியார் என்பவர் தனிக் குடும்பத்தில் இருந்தாலும் அல்லது சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையானக் குடும்பங்களில் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருப்பதில்லை. சில குடும்பங்களில் மாமியாருக்கும் - மருமகளுக்குமான மன இறுக்கம் வெளிப்படையாகவும், சில குடும்பங்களில் பனி மூட்டம் போலவும் திகழ்கிறது. பெரும்பாலும் பல்வேறு சூழல்களில்  இவர்களது வானிலைப் பதட்டமாகவே இருக்கிறது. இதன் அடிப்படையில் இல்லம் சூடாகவே இருந்துவிடுவதுண்டு. இதனால் இவர்களுக்குள் ஒரு புன்னகை மனநிலை இல்லாமல் மறைந்துவிடுகிறது.

இத்தனைக்கும் தன் மகனுக்கு பிடித்துப் போன பெண்ணை மணம் முடித்து அழைத்துவரும் மாமியாராயினும், அல்லது தனக்குப் பிடித்த வீட்டிற்கு மருமகளாகச் செல்லும் பெண்ணாயினும் இந்த உறவுக்குள் பல குடும்பங்களில் உறவும் அன்பும் பலமாக அமைந்திருக்கிறதா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

மாமியார் என்பவர் கணவன் என்கிற உறவைத் தந்த அற்புதமான உறவு என்பதை முதலில் மருமகளா இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்வது நலம். மாமியார் என்பவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்துவரும் ஆளுமை இவர் தனது ஆளுமை உடையாமல் இருப்பதற்கு கவனமாகச் செயல் படுவார். அப்பொழுது மருமகளாகச் செல்லும் பெண் தன்முனைப்பு இன்றி தன்னால் மாமியாரின் மதிப்பீடு குடும்பத்தில் என்னிலையிலும் உடைபடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

செயல்பாடு நம்பிக்கை உடையதாக இருக்க வேண்டும். மாமியாரும் பொன் பொருள் நோக்கம் கொண்டு மருமகளை வதைசெய்யும் தொலைக்காட்சி நாடக மாமியார் போல் வில்லியாக செயல்படும் மனநிலை இல்லாதவராக இருக்க வேண்டும். மருமகளை கடுமையாக வேலை வாங்கும் கெடு மனமில்லாது மருமகளை மகள்போல் நடத்தும் மனம் கொள்ள வேண்டும்.

வலுவுடையவர் வலுவில்லாதவர்களை அதிகாரவரம்பிற்குள் உட்படுத்த நினைப்பது மிகப்பெரும் தவறென்பதை இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இருவரும் புரிதலோடு செயல்படுகையில் குடும்பத்தின் பாதுகாப்புக் கூடுகிறது. மாமியார் என்பவர் தன் மகனின் உலகத்தை பாதுகாக்க சுழல்கிறார் என்பதை மருமகள் புரிந்துகொள்ள வேண்டும். மாமியார் என்கிற உறவு ஒரு பன்முக ஆளுமைவுடையது. இந்தப் புரிதல் ஒவ்வொரு மருமகளுக்கும் வேண்டும். பொருளாதாரக் கட்டமைப்பையும் உறவுகளையும் அறிமுகப்படுத்தும் வலிமையும் மாமியார் என்பவராலேயே ஒரு மருமகளுக்கு கிடைக்கிறது என்பதை  இருவரும் புரிந்து பயணிக்கையில் சிக்கல் எழுவது குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

மாமியார் அவரது மகன் மீது கொண்டுள்ள அன்பால் பல நேரங்களில் தன் மகனுக்கு வேண்டியதை தானே செய்ய வெண்டுமென நினைப்பார். அதேபோல் தன் மீது மகன் கொண்ட அன்பு குறைந்துவிடக் கூடாது அந்த அன்பை யாரும் பகிர்ந்து போய் விடக்கூடாதென்பதும் சிலரிடம் இருக்கும். இது காலம் செல்ல செல்ல சரியாகிவிடும் என்பதை மருமகள் புரிந்துகொள்கையில் மாமியார் - மருமகள் உறவுச் சிக்கல் சற்று தணிந்து போகிறது.

மாமியார்,  மருமகள் வந்தப் புதிதில் தன் மகன் மீது கொண்ட அன்பு, நம்பிக்கை மருமகளால் சேதமாகி விடுமோ என்ற பயம், பதட்டம் மாமியார் என்கிறப் பெண்ணுக்குள் விழும் போதும் தன் மகனின் அன்பு திடீரென்று இன்னொரு பெண்ணிற்கு பகிர்ந்தளிக்கப்படும்போதும் தன்மகனை தன்னிடமிருந்தும் தன் குடும்பத்திலிருந்து பிரித்துவிடுவாளோ எங்கிற அச்சம் வருகிறபோதும்  மாமியார் என்கிறப் பெண் உளவியல் சார்ந்த சிக்கலுக்கு ஆளாகிறாள். இதிலிருந்து விடுவித்து மாமியாருக்கு நம்பிக்கை கொடுப்பவராகப் மருமகள் என்கிறப் பெண் திகழ வேண்டும். இது சமூகத்தில் சாத்தியமாகிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

மாமியார் மருகளுக்குள் புரிதல், விட்டுக்கொடுத்தல் குறையும் போது மனச் சிக்கல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலை பல்வேறு இடங்களில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் இரு பெண்களையும் சமநிலைக்கு கொண்டுவர முடியாது, ஆண்கள் திண்டாடிவிடுகிறார்கள். இருவரையும் சாமளித்து தாய்க்கு நம்பிக்கையையும் மனைவிக்கு புரிதலையுக் கொடுக்கும் ஆண், மாமியார்-மருமகள் உறவு வலுப்பெற அதைத் தக்கவைக்க  காரணமாகிறான். மருமகள் சிறுபெண் தன் குடும்பத்தை தனக்குப் பிறகு வழிநடத்தும் பெண் என்கிற நிலையில் அன்பையும் அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்க வேண்டும் மாமியார்.

மருமகள் -மாமியார் இடையே ஏற்படும் சண்டைதான் கூட்டுக் குடும்பச் சிதைவிற்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. சில குடும்பங்களில் மாமியாருக்கு உணவிடுவதில்கூட சிக்கலாகி அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள் இல்லையேல் முதியோர் இல்லங்களைக் காட்டிவிடுகிறார்கள்..

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந்தலை.

என்கிற உயரிய பண்பாடு மறந்துபோனவறாகிறோம்.

மாமியார்கள் மருமகள்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக பொன், பொருள் சார்ந்து  சித்ரவதை செய்யும் கொடும் மனதைத் தன்னிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். மருமகளும் தன் அம்மாவாக நினைத்து மனம் கொண்டு தன்செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மாவிற்கு கொடுக்கும் அதே பிரியத்தை, மரியாதையை மாமியாருக்கும் கொடுக்க மனம் கொள்ளவேண்டும்.குற்றத்தை பொறுத்தலும் பெரிதுப்படுத்தாமல் இருத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும். மருமகளுக்கு அம்மா வீடென்றால் அன்பு, சுதந்திரம் மாமியார் வீடென்றால் அச்சம், பயம் நிறைந்த இடமாக இருப்பதை மாமியார்கள் களைய வேண்டும். 

மாமியார்களின் நிலை என்பது அன்பிற்கும் உணவிற்கும் உடைக்கும் தடுமாறும் நிலையாகவும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது. நகர்ப்புறத்தில் பொருளாதார நிலையுடைய மாமியார் என்கிறப் பெண்ணிற்கு பொருள் சார்ந்த சிக்கல் சிலருக்கு குறைவு, சிலர் வயதான நிலையிலும் ஏதோ ஒரு வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலை உள்ளது.

கிராமப்புறங்களில் சற்று நிலை வேறென்றாலும் உணவு சார்ந்தும் அன்பு சார்ந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இங்கு எத்தகு குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமென்றால் பணத்தால் நிறைந்த குடும்பமல்ல, உறவால்  நிறைந்தக் குடும்பமே மகிழ்ச்சியானக் குடும்பம். இதற்கு மாமியார்கள் காரணமாய் அமைய வேண்டும். மருமகள்கள் இவரின் கரம் பற்றிக்கொள்ள வேண்டும். மாமியாரும் ஒரு மனுஷி என்பதை மனம் கொண்டு அவர்களின் உலகை அழகாக்குவோம். இது நடக்குமா? நடந்தால் எல்லா நாளும் மகிழ்ச்சிதான்.  

[கட்டுரையாளர் -உதவிப் பேராசிரியர்-தமிழ்த் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி(த), தஞ்சாவூர்]      

ஒரு காலத்தில் மாமியார் - மருமகள் என்றால் எலியையும் பூனையையும் உதாரணமாக காட்டுவது வழக்கம். ஆனால் நவீன காலத்தில் அவர்களுக்கு இடையிலான உறவு பிணைப்புத் தரும் வகையிலான உறவைத் தருவதாக மாறி வருகிறது. இந்த உறவு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் தமிழியல் ஆய்வாளர் முனைவர் இரா. அறிவழகன்.

மாமியார்-மருமகள் உறவு என்பது தொலைக்காட்சித் தொடர் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை சிக்கலானதாகவே கருதப்படுகின்றது. அவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்றில்லாமல் பல குடும்பங்களில் அவ்வாறாகவே இருந்து விடுவதும் உண்மை. இதற்கு என்ன காரணம்? தமிழ் சூழலில் தொடக்கம் முதலே அவ்வாறு இருந்து இருக்கிறதா? பெரும்பாலான குடும்பங்களில் மாமியார்கள் மற்றும் மருமகள்களுக்கு இடையான பூசல்களுக்கான காரணம் என்ன என்பது விடைதெரியாத வினாவாகவே தொடர்கிறது.

தமிழர் பண்பாட்டு விழுமியங்களில் முக்கியமானது குடும்பம் என்றால் மிகையாகாது. மதிப்புமிக்க தமிழர் குடும்பங்களின் இன்றைய சூழல் பொருளாதாரத் தேடலை நோக்கிய நகர்புறமயமாக்கம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல முடியாத தனிக்குடும்பமயமாக்கம் போன்றவற்றால் சீர்குலைந்துள்ளது எனலாம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக கூட்டுக் குடும்பம் எனும் ஒரு சமூக அமைப்பு தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையாக இருந்தது. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் அந்த கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகள் அல்லது மாமியார் மிகச் சிறந்த குடும்பத் தலைவியாக விளங்கி வந்தனர். 

விழாக்களுக்கு உடைகள், அணிகலன்கள் வாங்குவது மட்டுமல்லாமல் செய்து வைத்த உணவுப்பண்டங்களைப் பகிர்ந்து தருவது உள்பட எல்லாப் பணிகளும் சிறப்பாகவும் முறையாகவும் நடந்து வந்தது. அவசரகதியில் முடிவு செய்யாமல் எல்லாவற்றையும் நிதானமாக யோசித்து முடிவு செய்யும் இடத்தில் பெண்கள் இருந்து செய்து வந்தனர். பாரம்பரிய தமிழ் சமூக அமைப்பான தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே அந்த நிகழ்வுகள் கருதப்பட்டன.

கூட்டமாக வாழ்ந்த கூட்டுக் குடும்பத்திற்குள் பெரிய வசதிகள் ஏதும் இல்லாத சூழலிலும் மிகச் சிறப்பான வாழ்வு இருந்து வந்ததை பலர் கூறக் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் விழாக்கள் போன்று 25க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாழ்ந்துவந்த வீடுகளுக்கான செய்திகள் இன்றைய காலத்தில் மிகப்பெரிய வியப்பைத் தருகின்றன. அது எப்படி முடியும் சுதந்திரமாக வாழ முடியாது அது எல்லாம் சரிப்பட்டு வராது? என்கிற எண்ணம் இன்றைய சூழலில் எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. ஆனால் அவ்வாழ்வை வாழ்ந்தவர்கள் கூறும் செய்திகள் மனதிற்கு நெகிழ்ச்சியையும் அன்புப் பரிமாற்றத்தின் முயற்சியையும் அழகாகக் காட்டுகிறது.

அதை ஏன் இழந்தோம்? எப்படி இழந்தோம்? என்று யோசிக்கிற போது சுருங்கிப்போன மனித மனங்கள் தன் பெண்டு தன் பிள்ளை என்ற வட்டத்திற்குள்ளாக மாறிய பொழுது அந்த கூட்டுக் குடும்ப முறை எனும் ஒரு சிறப்பு வாய்ந்த அந்த முறை காணாமல் போனது.

அறிவியல் யுக வாழ்வு அவசரகதியில் சென்று சகோதரப் பாசம், பெற்றோர் பாசம் போன்றவற்றைப் பற்றிய யோசனை கூட இல்லாது நகர்ந்துகொண்டிருக்கிறது. எங்கங்கோ தூர தேசத்தில் இருப்பவர்களோடு தொடர்புபடுத்திக்கொள்கிற வாழ்வு நம்மோடு பிறந்தவர்களோடு நாம் பெற்றோர்களோடு காட்ட முடிவதில்லை என்பது ஆச்சரியம் கலந்த உண்மை. இது போன்ற காரணங்கள்தான் மாமியார்-மருமகள் போன்ற உறவு நிலைகள் சீர்குலைவதற்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.

கூட்டுக்குடும்ப முறையில் வளராது தனிக் குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களே மாமியாரை அனுசரித்துக்கொள்ளாத புரிந்துகொள்ளாத மருமகளாக இருக்கிறார்கள். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழி சமூகத்திற்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும் தேவை என்பது இன்றைய தலைமுறை மருமகள்களுக்கு புரியாமலேயே இருக்கிறது. இந்த மாதிரியான பெண்கள் தன் தாய் சொல்வதையே ஏற்றுக்கொள்வதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இக்கால பெண்கள் வாழ்வை சுதந்திரமானதாகவும் தனியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நல்ல நல்ல உடைகளை அணிந்துகொள்வது, அடிக்கடி உணவு விடுதிகளுக்கு சென்று சாப்பிடுவது, திரையரங்கிற்கு செல்வது, மால்களுக்கு சென்று வருவது போன்ற செயல்பாடுகளே வாழ்வு என்று ஆழமாக நம்புகிறார்கள். எல்லாவற்றையும் நாம்தான் செய்ய வேண்டும், யாரும் தலையிடக் கூடாது என்பதையே சுதந்திரமான வாழ்வு சிறந்த வாழ்வு என அவர்கள் கருதுகின்றனர். இவ்வறான சுதந்திர வாழ்விற்கு மாமியார் தொந்தரவாக இருப்பார் என்பதை ஆழமாக நம்புகின்றார்கள். இதை இன்றைய ஊடகங்கள் அவர்கள் மனதில் மிக ஆழமாக பதியவும் வைத்துவிட்டன.

வரவுக்கு தகுந்தவாறு செலவு செய்ய வேண்டும். அடிக்கடி உணவு விடுதிகளுக்கு சென்று சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது. அதிகாலை எழுந்து சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். சில வழிபாடுகள் சில சடங்குகள் ஆகியவற்றை முறையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும் என்பன போன்ற பெரியவர்களின் அறிவுரைகளும் வாழ்வியல் முறைகளும் இன்றைய தலைமுறையினருக்கு பெரும் தொந்தரவாக தெரிகின்றன.

மாமியார் வீட்டில் இருந்தால் அதிகாலை எழவேண்டும், வாசலில் கோலம் போட வேண்டும் தனியாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் எழுந்து கொள்ளலாம், சுதந்திரமாக இருக்கலாம் என்று சொல்கிற மருமகள்கள் பெருகிவிட்ட காலம் இது. மாமியார்கள் இல்லாததால் ஏற்படுகிற சில சங்கடங்களை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்களோடு இருந்தால் நாம் சுதந்திரமாக இருக்க இயலாது என்று எண்ணுகிற அளவுக்கு அவர்களின் மனநிலை இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இன்றைய மருமகள்களின் இவ்வாறான எண்ணங்களுக்கு காரணம் அவர்கள் மட்டுமல்ல. தன்னுடன் பிறந்தவர்களை தன் பெற்றோர்களை மதிக்கத் தெரியாத மதிக்காத ஆண்களின் மனைவிகளே மாமியார்களை மதிக்காதவர்களாக மாமியாரோடு சண்டை போடுபவர்களாக மாறி போயிருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

இன்றைய ஊடகங்களால் வாழ்வியல் முறைகளால் மருமகள்கள் எனப்படுகிற இளம் தலைமுறையின் எண்ணங்களும் மனங்களும் இவ்வாறு மாறி இருக்கிறது என்றால், வயதில் மூத்தவர்களாக சென்ற தலைமுறை வாழ்வில் வாழ்ந்தவராக கருதப்படுகிற மாமியார்களின் மனநிலையும் இதே அளவிற்கு உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மருமகள்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் இக்கால மாமியார்களும் தங்கள் பங்குக்கு இவ்வுறவுகளுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றன. மருமகள்களை கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் விட்டுவிட்டாலும் நம் பிள்ளைகளை நம்மிடமிருந்து பிரித்து விடுவாள் எனக் கருதும் மாமியார்கள் அதிகம். அதேபோன்று நான் திருமணமாகி வந்தபோது என் மாமியார் என்னை அப்படி இருக்க சொன்னார்கள், இப்படி இருக்க சொன்னார்கள் என்கிற அவர்களின் பழைய அனுபவங்களும் வலியும் அடுத்த தலைமுறையும் பட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

இவர்களில் இந்த மனமாற்றத்திற்கு இக்கால சமூக ஊடகங்களில் பங்கு அதிகமாக இருக்கலாம். புதிய வாழ்வியல் முறையை விரும்பி பழைய வாழ்வை வெறுத்திடும் மருமகள்களும் தம் பிள்ளைகள் சரியாக வாழ வேண்டும் என்கிற நோக்கத்திலோ அல்லது நான் வாழ்ந்த மாதிரி இவர்கள் வாழ வேண்டும் என்கிற ஆசையைத் இணைக்கின்ற மாமியார்களும் சேர்ந்து வாழமுடியாத சூழல் பெருகிவருகின்றன.

'மகள் தனிக்குடித்தனம் சென்றால் கெட்டிக்காரி, மருமகள் தனிக்குடித்தனம் சென்றால் கொடுமைக்காரி' என்கிற எண்ணம் இன்றைய வயது வந்த பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. தன் மகள் அவர்களின் கணவன் குடும்பத்தையும் பெற்றோர்களையும் பார்த்துக்கொள்வதை விரும்பாத அம்மாக்கள் அவர்களின் மருமகள்கள் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என விரும்புவது விந்தையே.  

குடும்ப வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தாது மனித மனங்களுக்குள் அன்பு, பாசம் போன்றவற்றை ஏற்படுத்தாது வாழ்வியல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்கிற புரிதல்களை கொண்டு வராது. இந்த உறவு நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இவற்றை மாற்ற வேண்டுமெனில் தமிழ் சமூகப் பெண்களின் மனங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மாறி மாறி குறை சொல்வது மட்டும் இதன் நோக்கம் அல்ல. நல்ல குடும்பச்சூழல் அமைய வேண்டும். அந்த குடும்பச் சூழலுக்குள் அடுத்த தலைமுறை வளர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

தன் மருமகள் தன்னிடம் தன் குடும்பத்தாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என ஒரு மாமியார் எதிர்பார்கிறாரோ அதையே தன் மகளுக்கு சொல்லித் தரவேண்டும். தனக்கு தன் மாமியார்கள் தொந்தரவு செய்தபோது ஏற்பட்ட கோபத்தை, வருத்தத்தை நினைவில் கொண்டு அதை அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடாது என்கிற எண்ணத்தை வளர்க்க வேண்டும். நம் வாழ்வு முடிந்துவிட்டது அடுத்த தலைமுறையின் வாழ்வு இப்படி இருக்கிறது. இதற்கு காரணம் இக்கால சமூக மாற்றமே என்பதை கருத்தில் கொண்டு, இதை நாம் சொல்வதால் சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து சில விஷயங்களை அறிவுறுத்தி மட்டும் விட்டு விட்டு அவர்களை சுதந்திரமாக விட்டு விடலாம்.

மாறாக சில விஷயங்களை அறிவுறுத்தி தொந்தரவு செய்யும் போது அது அவர்களின் மேலான வெறுப்பாக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. லேசான அறிவுறுத்தல்களை செய்து கொஞ்சம் விலகி இருந்து அவர்களை கவனிக்கிறபோது அவர்களாகவே மாறுவதற்கோ அல்லது விழாக்காலங்களில் கூடி கொள்கிற வாய்ப்புக்கோ சாதகமாக அமையும். மாறாக அவர்களை மாற்றி விட வேண்டும் என்கிற வைராக்கியம் வெறுப்பை அதிகமாகி தொடர்பைத் துண்டித்து விடும்.

நிச்சயமாக பெரும்பான்மையான மாமியார்கள் மருமகள்களின் வாழ்வு கெட வேண்டும் என்பதற்காகவோ அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதற்காகவோ சொல்ல மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆங்காங்கே சிலர் இருப்பார்கள், அதை பெரிதாக்கிக் கொண்டு எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும்.
தன் தாயிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதேபோன்று தன் மாமியாரிடமும் மருமகள்கள் நடந்துகொள்ள வேண்டும். தன் ஆசைக் கணவனைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து நம்மிடம் தந்திருக்கிற அவர்களுக்கு தன் கணவனாகிய அவர்களின் மகன்தான் உரிய ஆதரவு. அவர்கள் அவர்களுடன் இருப்பதுதான் நல்லது என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். தன் அம்மாவை விட்டுச் சென்ற அண்ணன் மேல் கோபம் வருகிற மருமகள்களுக்கு தனக்காக தன் கணவன் தவிக்க விட்டு வந்த மாமியார்களின் நினைவு இல்லாமல் போவதும் எப்படி என்று தெரியவில்லை.

சில குடும்பங்களில் தன் மகளுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் அந்த மருமகள்களின் அம்மாக்களின் தவறான வழிகாட்டுதல்கள் இந்த  உறவை சிதைத்து விடுகின்றன.

இன்றைய மருமகள்களின் அம்மாக்கள், குடும்பத்திற்கான வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை சொல்லித் தந்து தன் மகள்களான அடுத்த குடும்பத்தின் மருமகள்களை  நெறிப்படுத்த முடியும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் அறிவுரைகளை மட்டும் சொல்வது நலம் பயக்கும்.

இன்றைய ஆண்களின் அதீத தாய் பாசமும் அளவுக்கதிகமான மனைவிக் காதலுமே மாமியார் - மருமகள் உறவு சிக்கல்களை வரவழைத்து விடுகின்றன.
குடும்பத் தலைவர்களாக விளங்குகிற ஆண்களும் அவர்களின் கடமைகளை உணர்ந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் வீட்டுப் பெண்களின் பிரச்சனைகளில் தலையிடாது இருக்க வேண்டும். ஒருவருக்கு ஆதரவாக இருக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர்களை காயப்படுத்தாது ஒருதலைபட்சமாக கருத்து சொல்லாது இருந்து விடுவது சிக்கல்களைத் தவிர்க்கும்.

ஒருவருக்கொருவர் ஒத்துணர்ந்து அடுத்தவர்களின் ஆசைகளையும் அன்பையும் புரிந்து வாழ்கிறபோது உறவுகள் வலுபெற்று வளமான குடும்பம் வலிமையான சமூகமும் உருவாகும் என்பது நிச்சயம். 

திருவாரூரில் மூலிகைப் பெண்மணி என்ற பெயர் பெற்றவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான அமுதவல்லி. அரசு விழாக்களிலோ, திருவிழா நடக்கும் ஊர்களிலோ தவறாமல் பங்கேற்று மூலிகைகளை பரிசாக வழங்கியவர். இயற்கையுடன் கழிப்பதில் அலாதியான பிரியம் கொண்டவர். அவரைப் பற்றிக் கூறுகிறார் அவரது மருமகளும், கருத்தரிப்பு மற்றும் வாழ்வியல் நோய் சிறப்பு மருத்துவருமான எம். சுபிதா.

புதிதாக மணமாகி வந்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது. நிறைய பேர் மூலிகைகளை வாங்க வருவதால் தோட்டப் பராமரிப்பு அவருக்கு ரொம்பப் பிரியம். அதனால், எப்படி நடந்து கொள்வாரோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், அவரோ மருமகள் என்று கருதாமல் மகளாகவே என்னை பாவித்தார். எனவேதான் நான் அவரை 'அம்மா' என அழைப்பது வழக்கம்.

திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லுமிடத்தில் நான் அவரை அம்மா என உரிமையுடன் பேசுவதை சிலர் பார்க்கும்போது இவர் உங்கள் மகளா.. என ஆச்சரியத்தோடு கேட்கும்போது பெருமையாக இருக்கும். மூலிகைத்தாய், மூலிகை அம்மா என்று அழைத்துக் கொண்டு சிலர் மூலிகைகளை வாங்க வருவர். அப்போது எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படுவதுண்டு. அத்துடன், அவர் என் மாமியார் என நினைக்கும்போது கர்வமும் ஏற்படும்.

பெண்கள் தங்கள் நேரத்தை டிவி பார்ப்பதிலே செலவிடுவார்கள். விளம்பரங்கள், நாடகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்திவிட்டு, தங்கள் வீட்டை மறந்துவிடும் பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மத்தியில், அமுதா அம்மா முற்றிலும் மாறுபட்டவர். நெடிய சிந்தனை அதிகம் கொண்டவர். வெட்டியாக அரட்டை அடித்துக்கொண்டு வீணாக நேரத்தை கழிக்கும் பெண்ணில் தனித்துவமாக தெரிந்தவர் என் மாமியார்.

ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பது, இயற்கை சார்ந்த நிகழ்வுகள், செடி, கொடிகள் வளர்ப்பு என இன்னமும் தன்னை சுறுசுறுப்பான மனநிலையிலேயே வைத்துள்ளார். பயிர் வாடினாலும் அவரால் தாங்க முடியாது, எங்கள் முகம் வாடினாலும் அவரால் தாங்க முடியாது. குறிப்பறிந்து எங்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் கெட்டிக்காரி. வீட்டையும், சமுதாயப் பணியையும் செவ்வனே ஒருங்கிணைத்து நடத்துவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்.

அவர் கூட இருக்கிறபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு புகுந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் நம் வீட்டில் சுதந்திரமாக இருக்கிறோம் என்ற உணர்வை அதிகமாக உணர வைத்தவர். இதுபோன்ற மாமியார் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம் என என் தோழிகளிடம் பல முறை தெரிவித்துள்ளேன்.

நம்மாழ்வாரால் பாரட்டப்பட்ட பெண்மணிக்கு நான் மருமகளாக இருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 

அன்னையர், தந்தையர் தினம் போன்று அக்டோபர் மாதம் 4 ஆவது ஞாயிற்றுக்கிழமை மாமியார் தினம் கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி, ஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 'மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா?' என்பது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். 

சா.மோகனாதேவி: மாமியாரை தாய்க்கு இணையானவராக ஏற்றுக்கொள்ளலாம். தாய் வீட்டுக்கு இணையாக மாமியார் வீட்டையும் அங்குள்ள அனைத்து உறவுகளையும் நேசிக்க வேண்டும்.

பூவரசி: மாமியாரை அம்மா என்று அழைக்கலாம். தாய் வீட்டு உறவுகளை பிரிந்து மாமியார் வீட்டுக்குச் செல்லும் பெண், தன் தாய்க்கு இணையாக மாமியார் இருப்பார் என நினைக்கிறார். அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் மாமியார் கிடைத்துவிட்டால் தாயாக அழைப்பதில் தவறு இல்லை.

பிரியா: மாமியார் காட்டும் பாசம், அரவணைப்பு தான் அவரை அம்மா என்று அழைக்கலாமா என்பதை முடிவு செய்ய முடியும்.

திவ்யபாரதி: மாமியாரை அம்மாவுக்கு இணையாக நினைத்து அவரிடம் அன்பு செலுத்துவதன் மூலம் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  மாமியார் கண்டித்தாலும் அம்மா கண்டிப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும்.

ந.பவ்யா: பிறந்த வீட்டில் இருந்த காலத்தைக் காட்டிலும் புகுந்த வீட்டில்தான் அதிக காலம் இருக்கப்போகிறோம் என்பதை நினைவில் கொண்டு, மாமியார் என்று அழைக்கலாம்.

நவீனா: மாமியாரை இன்னொரு அம்மா என்றுதான் நினைக்க வேண்டும். பெற்றோரைப்போல் மாமியாரை பார்த்துக்கொள்ள வேண்டும்.

அஸ்மா ரிஸ்வானா: புகுந்த வீட்டில் பிரச்னைகளை தவிர்க்க அம்மாவுக்கு இணையாக மாமியார் மீது அன்பும், மரியாதையும் செலுத்த வேண்டும்.

ஆர்.ஹரிணி: பிறந்த வீட்டில் தாயைப் பிரிந்து செல்லும் நிலையில் மாமியாரை தாயாக நினைத்து அன்பு செலுத்தி அவரை வாழ்க்கை முழுவதும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

சௌமியா: மாமியாரை தோழியாக நினைத்துப் பழக வேண்டும். அவருடைய உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெயஸ்ரீ: சோம்பறித்தனத்தினாலேயே மாமியார் வீட்டில் பிரச்னை வருகிறது. இதனால் புகுந்த வீட்டில் வேலைகளை மாமியாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மாமியார்- மருமகள் உறவு தாய் -மகள் உறவாக இருக்கும்.

பிரீத்தி: அம்மாவுக்கு இணையான புனிதமான உறவுதான் மாமியார். எனினும்மாமியாரை அம்மா என்று அழைக்க வேண்டியதில்லை. அவரை அத்தை என்றே அழைக்கலாம்.

சம்யுக்தா: மாமியாரை அம்மா என்று அழைப்பதன் மூலம் இருவருக்குமிடையோன உறவு வலுப்படுகிறது. அரவணைத்துச்செல்லும் மாமியார் கிடைப்பது வரம். அவரை அம்மா என்று அழைக்கலாம்.

கோகிலா: மாமியார் நல்ல விதமாக நடந்துகொண்டால் அவரை தாயாக நினைக்கலாம்.

கிருஷ்ணஹரினி: பெற்றோர் வீட்டில் கிடைத்த அரணைப்பு புகுந்த வீட்டில் மாமியாரிடம் கிடைத்தால் அவரை தாயாக நினைக்கலாம். 

உலகில் எதைத் தக்க வைக்க அதிகம் சிரமப்படுகிறீர்கள் எனக் கேட்டால் 10-ல் 8 பேர் உறவுகளை என்பார்கள். ஏன்? அத்தனை சிரமமானதா உறவின் பாரம்? இருக்கலாம் . ஆனால் சிரமம் என்பதை விட சிக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் சில சமயங்களில் எதிர்தரப்பினர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து செல்லக் கூடும் .

அவர்கள் நண்பர்கள், அண்ணன், தங்கை, வேறு யாரானாலும் விட்டுப் பிடிக்கலாம். ஆனால் அது உங்கள் மாமியாராக இருந்தால்? ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, ஒரு வாய்ப்பு போன்றதுதான் இந்த மாமியார்-மருமகள் உறவு. ஒருமுறை மாமியாரின் பார்வையில் நீங்கள் சிக்கிவிட்டாலும் எதிலும் குற்றத்தைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள் இல்லையா? 

அதனால் உங்கள் வருங்கால அல்லது நிகழ்கால மாமியாரிடம் உருவாகும் சண்டைக்கான காரணங்களைத் எப்படி தவிர்ப்பது என்பதைப் பார்ப்போம்.

1. தாய் வீட்டை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது

முதலில் திருமணமான புதிதில் பெற்றோர்களைப் பிரிந்து வேறு ஒரு வீட்டில் புதிய மனிதர்களுடன் இருக்கும்போது உருவாகும் வெறுமையில் உங்கள் மாமியாரிடம் ‘ என்னோட வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்’ என சொல்லவே கூடாது. அதில் மனரீதியான உருவாகும் விலகல்கள் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கும்.

2. உங்கள் அம்மாவின் பெருமைகளைப் பேசக்கூடாது

சொந்த வீட்டில் இருக்கும் வரை தெரியாத அம்மாவின் அருமைகளை தூக்கத்தில் கூட மாமியாரிடம் சொல்லி புலம்பக் கூடாது. ஒருவேளை தெரியாமல் சொன்னாலும் அதைவிடச் சிறந்தவர் என் மாமியார் எனக் காதைக் கடித்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி.

3. ஆடையைப் பற்றிய அபிப்ராயம்

உங்களுக்கு நல்ல ‘டிரெண்டிங்’ ஆடைகளை அணிய விருப்பம் இருக்கலாம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு உங்கள் மாமியார் இல்லாமல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதனால் சில நேரங்களில் அவருக்கு பிடித்த மாதிரி உடைகளைத் தேர்வு செய்து அதனால் உருவாகும் தேவையற்ற வாதங்களிலிருந்து தப்பித்து விடுங்கள்.

4. குழந்தைப் பேறு

நவீன சிந்தனையின் விளைவுகளில் ஒன்றான ‘இப்ப கொழந்தை பெத்துக்க முடியாது’ என்ற பல மருமகள்கள் அவர்களுடைய மாமியாரை சமாளிக்க முடியாமல் திணறி வருவதால் கூடுமானவரை அதைப் பற்றிய எண்ணங்களை உங்கள் கணவர் மூலம் தெரிவிப்பது சரியான வழி.

5. ஸ்மார்ட்போன் என்னும் வில்லன்

தற்போது உறவுகளுக்குள்ளான நிறைய சண்டைகளுக்கு அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதுதான் காரணம் எனத் தெரிய வந்திருக்கிறது. ’அந்த காலத்துல‘ என்கிற கதைகளைக் கேட்க விடாத உங்கள் ஸ்மாட்போனை மாமியார் எதிர்படும் போது தூர வீசிவிடுங்கள். ஒருவேளை உங்களுடன் இணைந்து அவர் ‘ரீல்ஸ்’ செய்கிற ஆளாக இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

6. ஆணவத்தைக் கவனித்தல் 

பல நேரம் நமக்கு எதிர்தரப்பினர் மீது உருவாகிற கோபத்தைவிட ஆணவம் பயங்கரமானது. குறிப்பாக, மருமகள்-மாமியார் உறவுகளில் இந்த ஆணவமே பெரிய சண்டைகளுக்கு வழி வகுக்கிறது என்பதால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.

7. உடல்நிலையை அறிதல்

உங்கள் மாமியாருக்கு உடலில் என்னனென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். அதனால் அவர் உடல் ஒத்துழைக்காத வேலைகளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் அவரது உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. 

8. அக்கம் பக்கம் பார்

உங்கள் மாமியாருக்கு ஆகாத அக்கம் பக்கத்தினருடன் நீங்கள் உறவாடினால் ஏற்படும் புரிதலின்மை, குழப்பங்கள் இருவருக்கும் மனக்கசப்பை உருவாக்கும். அதனால் அவர் நடமாட்டம் இல்லாதபோது தோழிகளிடம் குழம்பு, பொரியலைப் பரிமாறிக் கொள்ளலாம். 

9.விட்டுக்கொடுக்காமை

உறவைத் தக்கவைக்க முதன்மையான குணங்களில் ஒன்று எந்த நிலையிலும் உடன் இருப்பவரை விட்டுக் கொடுக்காமல் இருப்பது. பொதுவெளியிலோ, குடும்பச் சந்திப்புகளிலோ மாமியாருக்கு உண்டான மரியாதையை அளித்து விடுங்கள்.

10.வேற்று மனிதர்கள் என்ற எண்ணத்தைக் களைதல்

எந்த உறவுகளும் என் பெற்றோர்களுக்கு இணையானவர்கள் இல்லை என நினைத்து பிறரிடம் வேற்று மனிதர் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடாது. அது உறவில் ஏற்படும் முக்கியமான பிளவு. அதை சரி செய்ய வேண்டுமென்றால் மாமியாருடனான உறவு கசப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது அதை அறிந்து இணங்கி உங்கள் அன்பை தெரிவித்துக் கொண்டே இருங்கள்.

மேலே சொன்னக் கருத்துகள் நாட்டில் 80 சதவீதம் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள். அதை மறுக்கலாம் அல்லது ஏற்கலாம். ஆனால் மாமியார் - மருமகள் என்கிற ஒரு அற்புதமான உறவை அன்றாட சண்டைகள், ஆணவங்கள் மூலம் அழித்தால் நீங்கள் ஒரு அழகான வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நம் நாட்டில் அனைத்து பெண்களுமே ஆண்கள் சந்திக்காத இரு பெரும் சவால்களை தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். ஒன்று உடல்ரீதியான சவால். அதுதான் மகப்பேறு. மற்றொன்று மன ரீதியான, உணர்வு ரீதியான சவால். அது மாமியார் என்கிற உறவு. ஆம் இந்த உறவு சரியாக அமையாவிட்டால் பல பெண்களின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகிவிடும். அதனால்தான் அதை ஒரு சவால் என்று சொல்கிறேன்.

ஒரு ஆண் திருமணத்துக்குப் பெண் தேடும்பொழுது வரும் பெண்ணைப் பற்றிய கனவும் எதிர்பார்ப்பும் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படியல்ல.. கணவருடன் சேர்ந்து தனக்கு வரப்போகும் மாமியார் பற்றிய சிறு எதிர்பார்ப்பும், ஒரு படபடப்பும் இருக்கும். திருமணம் வரை அம்மாவை செல்லமாக அதிகாரம் செய்து வளர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் மாமியாருக்கு மரியாதை கொடுத்து அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. அதை இன்று வரை அனைத்து பெண்களுமே (ஒரு சில விதி விலக்கைத்தவிர) தங்களால் இயன்றவரை காப்பாற்றித்தான் வருகிறார்கள.

ஆனாலும் நம் முந்தைய தலைமுறை பெண்கள் அதிகமான படிப்பறிவு இல்லையென்றாலும் கூட கூட்டுக் குடும்பத்தில் இருந்து இத்தனை சவாலை சமாளித்த நமக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் அதிகம்படித்தும், வெளி உலகின் மிகப்பெரிய சவால்களை எல்லாம் சமாளிக்கும் திறமை இருந்தும் வீட்டில் உள்ள இந்த சிறு உறவுச் சவாலை சந்திக்கத் தயங்குகிறார்கள். தடுமாடுகிறார்கள்.

ஆம், திருமணத்துக்கு முன்பே சில பெண்கள் மாமியார் இருக்கக் கூடாது என்றும், ஒருவேளை இருந்தால் தனிக்குடித்தனம் வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்கள். அம்மாக்களோ தன் பையனின் திருமணம் நிச்சயமானவுடன் புது உறவு வரப்போகிறது என்ற சந்தோஷத்தையும் தாண்டி அவள் வந்தால் நமது வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ என்ற அச்சத்தையும் உணருகிறார்கள்.

ஒருபடி மேலேச் சென்று இந்த அச்சத்தின் காரணமாக, தனது மகனுக்கு திருமணம் முடிப்பதையே தள்ளிப்போடும் தாய்மார்களும் உண்டுதான். மறுப்பதற்கில்லை.

ஏன் இந்த முரண்பாடான எண்ணம் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்? ஒரே மகன், ஒரே மகள் என்ற அச்சமா? மகன் அல்லது மகள் மீது வைத்த பாசமா? இவையெல்லாம் காரணங்களாக இருந்தாலும், வீட்டுக்குள் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களும் இவற்றுக்குக் காரணங்களாக அமைகின்றன என்பதை முற்றிலும் மறுத்துவிட முடியாத உண்மை.

ஆம்.. பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களில் மாமியாரை மகனிடம் இருந்து மருமகளைப் பிரித்து வீட்டை விட்டு வெளியேற்றும் கொடுமைக்காரியாகவும், (இதில் மாமியாருக்கு உதவ அவரது தாயோ, சகோதரியோ கூட்டுச் சதி வேறு செய்வார்கள்) மருமகளை, அம்மாவிடமிருந்து மகனைப் பிரித்து மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒரு வில்லியாகவும் சித்தரித்து இந்த அழகான உறவை அச்சுறுத்தும் உறவாகப் பார்ப்பவர்களின் மனதில் ஒரு பீதியையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். தங்கள் கதை விறுவிறுப்பாகவும், பல வாரங்களுக்கு தொடரை இழுக்கவும், வார இறுதி நாள்களில் எதிர்பார்ப்பைக் கூட்டவும் தொடர்கதைகளில் இவ்விரண்டு உறவுகளையும் வில்லிகளாகச் சித்தரிப்பது வேதனை. அவர்களைக் கேட்டால், உண்மையில் பல வீடுகளில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்பார்கள். தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பெண்களும் வீடுகளில் நடப்பதை அப்படியே காட்டுகிறார்கள் என்று புலங்காகிதம் அடைகிறார்கள்.

இருக்கலாம், இந்த தொடர்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல 25 சதவீத வீடுகளில் இருக்கலாம். நடக்கலாம். அதுவே முழு சமுதாயத்துக்குமான அடையாளமாகிவிடாது. அடையாளமாக்கிவிடவும் முடியாது.

நான் பணிபுரிந்த இடத்தில் வேலைக்குச் செல்லும் மருமகளுக்காக வீட்டிலிருந்து பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மாமியார்களும், மருமகளுக்கு பிரசவம் பார்க்க தன் கணவனையும், நாட்டையும் விட்டு வெளிநாடு செல்லும் மாமியார்களையும், அதே வேளையில் வயதான மாமியாருக்காக 4 மணிக்கே எழுந்து சமைத்து மேசையில் வைத்துவிட்டு வேலைக்குச் செல்லும் மருமகளும், உடல்நிலை சரியில்லாத மாமியாருக்காக தன் வேலையை தியாகம் செய்த மருமகளையும் பார்த்திருக்கிறேன்.

மற்ற எல்லா உறவுகளையும் போல அல்லது அதையும் விட சற்று அதிகமாகவே மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மாமியார் - மருமகள் உறவுக்குள் வரலாம். அது அம்மா  - மகள் உறவுக்கிடையே கூட வரும். அதை யாரும் பெரிதுப்படுத்தமாட்டார்கள்.

எனவே நல்ல புரிதல் ஏற்பட்டால் மாமியார், மருமகள் என்கின்ற இந்த உறவு மிகவும் சிறந்த ஒரு உன்னதமான உறவு என்பதை நான் ஒரு மருமகளாகவும் மாமியாராகவும், பெருமையுடன் சொல்லி முடிக்கிறேன்.

[கட்டுரையாளர்-சராசரி தமிழ் குடும்பத் தலைவிகளில் ஒருவர்]

மாமியார்கள் மருமகளிடம் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

1. உறவுமுறை சிக்கல்

மாமியார் என்ற உறவு முறையை கையாள்வதில் வெளிநாட்டினரும் திணறியே வருகின்றனர். அவர்கள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் ஒன்றாக உணவு அருந்தி நேரம் செலவிடுவது வழக்கம். மருமகள் அல்லது மாமியார் இடையே இது நடக்கும்போது தேவையில்லாத அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது.

எல்லா மாமியார்களும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதில்லை. ஆனால் மருமகள்களை எப்படி கையாள வேண்டும் என்று சமூகமோ அல்லது முந்தைய தலைமுறையோ அவர்களுக்குச் சொல்லித்தர தவறியதே பிரச்னைக்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.

திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடிகளுக்கு திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. சமூகம் சார்ந்து, சமயம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து அவர்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், மாமியார்களுக்கு மருமகள் அல்லது மருமகனை கையாள்வது குறித்து சொல்லித்தரப்படுவதில்லை.

மற்ற உறவுகள் போல மாமியார் என்ற உறவும் எதிர்பார்ப்புகளை சுமக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாதபோது மருமகன்/மருமகள் குறித்து வருத்தம் ஏற்படுகிறது.

வளர்த்த தங்களது குழந்தைகள் புதிய உறவுக்குள் போகும்போது பெற்றோர்கள் இயல்பாகவே வருத்தம் அடைகிறார்கள். திருமணத்திற்கு முன்பு வரை முக்கியமான நபராக இருந்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு உறவு தங்கள் பிள்ளைகளுக்கு முக்கியமாகி விடுகிறது என்ற பெற்றோர்களின் எண்ணமும் பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது.

2. குடும்ப சொத்தை இழக்க நேரிடும்

வெளிநாடுகளிலும் திருமணம் என்பது பொருளாதாரத்தை அதிகப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மகள் அல்லது மகனின் திருமணத்திற்கு பிறகு சொத்துகள் பிரிவதற்கு வாய்ப்பிருப்பதால், ரத்த உறவுகளுக்கு சொத்துகள் எழுதித் தரப்படுகின்றன.  திருமணத்திற்கு முன்பு மருமகள் அல்லது மருமகனுக்கு சொத்துகள் பரிசாக வழங்கப்படுகின்றன. ஒரு சில குடும்பங்களில் புதிய உறவான மகன்/மகளின் வாழ்க்கைத் துணைக்கு சரிபாதி சொத்துகள் எழுதித்தரப்படாது. விவாகரத்து ஏற்பட்டால் சொத்துகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். 

சொத்துகள் சார்ந்து குடும்பத்தில் பேசும்போது அல்லது முடிவெடுக்கும்போது மருமகளுடன் எந்தவித ஆலோசனையும் இருக்காது. இதனால் அவர்களுக்கு சேரவேண்டிய தொகை சரிபாதியாக சேராததும் மனக்கஷ்டத்துக்குக் காரணம்.

குறிப்பாக, குழந்தைகள் பிறந்தால் பாட்டி தாத்தாவின் மூலம் குழந்தைகள் பெயரில் சொத்துகள் எழுதி வைக்கப்படுகிறது. வளர்ந்த பிறகு அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கு பிறகு மருமகள்/மருமகனுக்கு அதை அனுபவிப்பதற்கான உரிமை இருக்காது என்பதும் பிரச்னைகள் உருவாகக் காரணமாவதாக கூறுகின்றனர்.

3. உறவுமுறையை உருவாக்க அல்லது அழிக்க முடியும்

பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு தனது மாமியாருடன் நெருக்கமாக இருப்பது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் கூடுதல் சிக்கலையே உருவாக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

ஒரு ஆண் தனது மாமியாருடன் இணக்கமாக இருப்பதால் விவாகரத்துக்கான வாய்ப்பு 20 சதவிகிதம் குறைகிறது. ஆனால் இதுவே ஒரு பெண் தனது மாமியாருடன் நெருக்கமாக இருப்பது விவாகரத்துக்கு 20% கூடுதல் வாய்ப்பாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான காரணம் என்ன? அழுத்தம் கொண்ட உறவுமுறையை பேணிக்காப்பதற்காக பெண்கள் தங்கள் கணவருடன் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் செலவிடுவதால் இந்த பிரச்னை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் மருமகனாக நெருக்கமாக இருப்பதைக் காட்டிலும், பெண்கள் மருமகளாக குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எழுந்துள்ளது.

மருமகள்கள் தங்களது சக்திக்கு மிகுந்த குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாமியார்களுடன் நெருக்கமாக இருப்பது அந்த பொறுப்புகளை அழுத்தமாக மாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

4. உன் வாழ்க்கைத்துணை என் குழந்தை

மனைவி தங்கள் வாழ்க்கைத் துணையாக கணவரை பார்க்கிறார். ஆனால் அவரது தாய் வளர்ந்த குழந்தையாகவே தனது மகனைக் கருதுகிறார். அவர்களை வளர்ந்த மனிதர்களாக பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. திருமணத்திற்கு பிறகு இதுவும் ஒரு பிரச்னையாக உருவாகிறது.

மகன் தனது மனைவியால் நன்கு கவனிக்கப்படுகிறான் என்பதை பெற்றோர்கள் ஒரு பிரிவாக எண்ணி கவலைப்படும்போது, மருமகளின் அக்கறை விமர்சனமாக மாறுகிறது.

மனைவி தனது கணவனுக்கு சைவ உணவுகளை நாள்தோறும் பரிமாறும்போது, மகனுக்கு அசைவ உணவுகளை சமைத்துக் கொடுத்ததை எண்ணி தாய் கவலையுறுகிறார்.

இதற்காக மருமகளை விமர்சிக்காமல், மகனிடம் ஏன் சைவம் உண்கிறாய் என்று கேட்கலாம். அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது என்பதால், உடல்நலன் கருதி சைவ உணவை பரிமாறுவதாக விளக்கம் கொடுக்க மருமகளுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.

5. உறவில் குழந்தைகள் வழங்கும் சலுகை

பேரக்குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்வதன் மூலம் மருமகள்/ மருமகனிடம் சுமூகமான உறவு மேம்படுகிறது. மாமியார்களுடன் இணக்கமற்ற உறவைக் கொண்ட மனைவி, பேரக் குழந்தைகளை அவர்களுக்காக அழைத்து வருவது குறைவு. விவாகரத்துக்குப் பிறகு இது மிகவும் குறைந்துவிடும். விவாகரத்துச் சட்டங்கள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது.

சில விவாகரத்தில் பேரக்குழந்தைகளைப் பார்க்க அனுமதி வழங்கப்படும். எழுத்துப்பூர்வமாக இல்லையென்றாலும், விவாகரத்துக்கு பிறகு பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவிட தாத்தா, பாட்டிகளை பெற்றோர்கள் அனுமதிப்பார்கள். திருமண ஒப்பந்தத்தின்படி குழந்தைகள் வளரும் வரை தாத்தா, பாட்டி உறவு இருக்க வேண்டியது நிர்பந்திக்கப்படுகிறது.

6. மாமியார் உறவு எதற்கும் பொருந்தாதது அல்ல

முன்பு இரண்டு மூன்று தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது திருமணம் ஆனதுமே தனிக்குடித்தனம் செல்கின்றனர். வீட்டில் உள்ள மூத்தவர்களையும் உடன் வைத்திருக்க விரும்புவதில்லை. வயதானவர்கள் தங்களது பென்ஷன் தொகையில் வாழ்ந்து வந்தாலும், அனைவரும் சேர்ந்து வாழும்போது 60 சதவிகித செலவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சேர்ந்து வாழ்வது இரு தலைமுறைகளுக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்கும் என்றாலும், இது அனைவருக்கும் பொருந்துவதில்லை.  

அப்படி பொருந்தாத பட்சத்தில் மாமியார்-மாமனார் உறவை அடிக்கடி இல்லத்திற்கு வரவேற்கலாம் அல்லது தனி வீடு அமைத்து அவர்களை கண்காணித்துக்கொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு மாமியார் - மாமனார் உறவை பாதுகாப்பது தம்பதிகளுக்கு மிகப்பெரிய கேள்வியாக மாறுகிறது. இதனை திருமணத்திற்கு முன்பு பேசி முடிவு செய்துகொள்வதால் திருமணத்திற்கு பிறகான பிரச்னைகள் குறைக்கலாம்.

7. மாமியார்களின் அதீத அறிவுரை

மாமியார்களின் அறிவுரை கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அவர்கள் குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுவது இல்லை. அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்யவே முயற்சிக்கின்றனர். ஆனால் அது சொல்லப்படுபவர் மற்றும் எடுத்துக்கொள்பவரைப் பொருத்து  எதிர்வினைகளை உருவாக்குகிறது.

பல மருமகள்கள் ஒரே மாதிரியான அறிவுரைகளுக்கு வேறு வேறு வகையில் எதிர்வினையாற்றுவதாக ஆய்வு கூறுகிறது. தனது மாமியார் கூறும் அறிவுரைகளை ஏற்காதவர், தாய் கூறும் அதே அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறார்.

நம் குழந்தையின், குடும்பத்தின் வளர்ச்சியில் நமது பங்கு இல்லையோ என்ற அச்சம் மாமியார்களுக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. இதனால் மருமகள்களால் குடும்பத்தில் நிறைவற்ற தன்மையை அவர்கள் உணருகின்றனர்.

8. சில நேரங்களில் என்னை அணுக வேண்டும்

குடும்பத்தில் மருமகள்/மருமகன் மற்றும் மாமியார்/மாமனார்களுக்கு இடையிலான உறவு வயதாக வயதாக வலுவானதாகவே மாறும். இளமைக்காலத்தைவிட முதுமையில் அவர்கள் உடல் நலனில் அதீத அக்கறை செலுத்தப்படும்.  குடும்ப பொறுப்புகளை பார்த்தது போதும் என்று மாமியார் முடிவு செய்தால், அது மருமகளின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது.

மாமியார்/மருமகள் வார்த்தைகளால் வெளிப்படையாக குடும்பத்தில் உரையாடுவதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. நாம் நமது மகன்/மகளுக்கு எதை போதிக்கிறோமோ அதை நாமும் கடைபிடிக்க வேண்டும்.

9. என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

குழந்தைகள் வளர்ந்தவர்களாகவே இருந்தாலும் அவர்கள் அமைத்துக்கொள்ளும் புதிய உறவு தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத புதிய உறவை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.    

மகன் மீது அதீத ஈடுபாடுடன் செயல்படுபவர்கள் மருமகளுடன் அத்தகைய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதில்லை.

10. சாக்குபோக்கான பரிசு பரிமாற்றம்

புதிய உறவான மருமகளுடன் அதிகம் பரிட்சயம் இல்லாத காரணத்தால் மாமியார் மருமகளுக்கு வாங்கும் பரிசுப் பொருள்கள் அவரை திருப்தி படுத்தாததாக இருக்கலாம். தலைமுறை இடைவெளியே இதற்குக் காரணம். இந்த விஷயத்தில் பெற்றோர்களும் குற்றவாளிகளாகவே இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விருப்பமில்லாத பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

ஆனால், மாமியார்கள் இதுபோன்ற பரிசுப் பொருள்களை எதிர்பார்ப்பவர்கள். கணவர் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பை தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருமகள்கள் செயல்படலாம்.

தான் கோபப்பட்டுப் பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று தனது மாமியாரை மெச்சுகிறார் மருமகள் கார்த்திகா . 

மாமியார் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடியைச் சேர்ந்த, கார்த்திகா தனது மாமியார் சாவித்திரி குறித்துக் கூறியதாவது: 

நாங்கள் ஒருவரையொருவர் விரும்பி, மிகுந்த எதிர்ப்புடன் ஆதரவற்ற நிலையில்தான் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், முதலில் எனக்கு முழுமையான தைரியத்தையும், ஆதரவையும் வழங்கியவர் எனது மாமியார்தான்.

என் கணவருக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். என்னை தன் மகள் போலத்தான், என் மாமியார் பார்த்துக் கொள்வார். வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கேயும் இருந்து வருகிறேன். நான் என்ன சொன்னாலும் என் மாமியார் கேட்பார். எனது அம்மாவிடம் எப்படி பேசுவேனோ, அப்படித்தான் என் மாமியாரிபமும் பேசுவேன்.

நான் கோபமா இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, என் அம்மாவிடம் பேசுவது போலத்தான் பேசுவேன். பழகுவேன். நான் கோபப்பட்டால் கூட, என் மாமியார் கோபித்துக்கொள்ள மாட்டார். என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிடுவேன். எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசிக் கொள்வோம். நான் கருவுற்று இருந்த நேரத்தில், எனது துணிகளை துவைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் எனது மாமியார்தான் செய்வார்கள். எனக்கு உடம்பு சரியில்லை என்றால் அழுதுவிடுவார். என்னுடைய அம்மா என்னிடம் எப்படி இருப்பாரோ அப்படியே என் மாமியாரும் இருக்கிறார். அந்தவகையில் நான் மிகவும் பாக்கியசாலி என்றார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பனங்காட்டாங்குடியைச் சேர்ந்த, கனிமொழி, தனது மாமியார் வாசுகியை தனது அம்மா என்று கூறுகிறார்.

மாமியார் தினத்தையொட்டி, மருமகள் கனிமொழி சத்யகீர்த்தி தனது மாமியார் குறித்துக் கூறியதாவது: 

மாமியார் தின நாளை முன்னிட்டு, மாமியாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திருமணம் காதல் திருமணம்தான். திருமணம் நடந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. என் வீட்டில் பல எதிர்ப்புகளுடன்தான் நடந்தது. இன்று வரை எனது வீட்டில் பேசுவதில்லை. எனக்கு எல்லாமே என் மாமியார்தான். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், எனக் கூறி முதலில் முழு ஆதரவுடன் தன்னம்பிக்கையையும் விதைத்தவர் என் மாமியார்தான். எந்தக் கட்டுப்பாடும் சொல்ல மாட்டார்.

எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 பேர். நான் 3 ஆவது மருமகள். ஒரு ஆண்டுக்குள் 3 திருமணம் நடந்தது. மூன்றுமே, காதல் திருமணம்தான். 3 மருமகளையும் தன் மகள்கள் போலத்தான் பார்ப்பார். என் மாமியாருக்கு மகள் இல்லை. எங்களைத் தான் மகள்களாகப் பார்ப்பார். நாங்களும் அத்தை என்றெல்லாம் கூப்பிட மாட்டோம். அம்மா என்றுதான் அழைப்போம். எங்கு சென்றாலும் சேர்ந்துதான் போய் வருவோம். வெளியில் விழாக்களுக்குப் போனால்கூட, நாங்கள் சேர்ந்து இருப்போம். அந்த அளவுக்கு ஒற்றுமை இருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன போது எப்படியிருந்தேனோ, அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கும் இருக்கிறேன். எல்லார் வீட்டிலும் மாமியார், எங்கள் மாமியாரைப் போல இருக்க வேண்டும் என்றார்.

மாமியார்-மருமகள் என்றாலே சண்டை, சச்சரவு என்றே முன்னிறுத்தப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில் இதை மனதில் வைத்தே திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்குகிறது. பொதுவாக ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனுக்கு ஒருவிதமாகவும், மகளுக்கு வேறு விதமாகவும் அவரவர் இல்லத் துணையைத் தேர்வு செய்கின்றனர். மகள் என்றால் மாப்பிள்ளை தனிக்குடித்தனம் வந்துவிட வேண்டும் என நினைக்கின்றனர்.

மாமியார், நாத்தனார் இல்லாத குடும்பம் என்றால் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர், அதேநேரம், மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர், பெண் வீட்டில் மாமியார்-நாத்தனார் இருக்க வேண்டும். அதிலும் மைத்துனர் கண்டிப்பாக வேண்டும். அதோடு பெண்ணின் உடன் பிறந்த சகோதரர்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் மகிழ்வுக்கு அளவே இல்லை. இன்றைய சூழலில் திரைப்படங்கள், தொலைக்காட்சித்  தொடர்கள் அனைத்தும் மாமியார்-மருமகள் உறவை மிகவும் கொடுமையாகக் காட்டி வருகின்றன.

ஆனால், இதையெல்லாம் தாண்டி பல குடும்பங்களில் மாமியார்-மருமகள் உறவு ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்குச் சிறப்பாக இருக்கிறது. ஒரு பெண் சுமார் 20 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தில் வானம்பாடியாக வலம் வந்த நிலையில்,  திருமணம் என்ற பந்தத்தில் வேறொரு குடும்பத்தோடு இணைகிறார். அத்தகைய சூழலில் புதிய உறவு உருவாகும்போது இருதரப்பிலும் சக உறுப்பினராக முதலில் அங்கீகாரம் அளிப்பது அவசியமானது. இதில் ஏற்படக் கூடிய சறுக்கல்கள்தான் பல்வேறு குடும்பங்களில் பிரச்னை, கருத்து வேறுபாடு, பிளவு என பல அசௌகரியங்களுக்கு அடித்தளமிடுகின்றன. மற்ற உறவு முறைகளைப் போலவே மாமியார் - மருமகள் உறவும் என்ற மனமாற்றம் அவசியமாகிறது.

மாமியார்-மருமகள் உறவு வலுப்பட மதுரை அஹானா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் மற்றும் உள சிகிச்சையாளர் ப.ராஜசௌந்தரபாண்டியன் கூறும் ஆலோசனைகள்...

ஒரு மனிதனுக்கு பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பலர் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேருகின்றன. அப்படி ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மூலம் கிடைக்கும் ஒரு உறவு தான் மாமியார். அதேபோல் ஒரு பெண்ணுக்கு தன் மகன் மூலம் கிடைக்கும் உறவுதான் மருமகள். உலகில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வுண்டு.  ஆனால் மாமியார் -மருமகள் பிரச்சனைக்கு தீர்வேயில்லை என நம்மில் பலர் நினைப்பதுண்டு. நம்மைப் படைத்த ஆண்டவனால் கூட இந்த பிரச்சனைக்குத்  தீர்வு காண முடியாது என புலம்பிய ஆண்கள் இவ்வுலகில் பலர் உண்டு. பல திரைப்படங்களில் இந்த இரண்டு உறவுகளுக்கு இடையேயான உறவை கேலி செய்வது போல் சித்தரித்திருப்பார்கள்.

காலங்காலமாகவே திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் மாமியாரையோ அல்லது மருமகளையோ வில்லியாகத்தான் காட்டி வருகிறார்கள். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்னையில் அதிகம் சிக்கித் தவிக்காத ஆண்கள் சிலரே. தொழில் மற்றும்  வேலைகளில் சிறப்பாக செயல்படும் ஆண்கள் கூட அம்மா மற்றும் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னைகளை சமாளிக்கத் தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்கள்.

உறவு மேம்பட

மாமியார் -மருமகள் உறவு சிறப்பதில் மிக முக்கிய பங்கு ஆண்களுக்கே. ஆண்கள், திருமணத்திற்கு முன்பு பல மணி நேரம் நிச்சயித்த பெண்ணோடு பேசுகிறார்கள். இக்காலகட்டத்தில் கண்டிப்பாக தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி அப்பெண்ணிடம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக தங்களதுஅம்மாவைப் பற்றி முழுமையாக அப்பெண்ணிடம் தெரிவிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் பற்றியும் ஆண் தெரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம் அம்மாவிடம் தன் வருங்கால மனைவியைப் பற்றி தெரிவிக்க வேண்டும். இப்படி தெரிவிப்பதன் மூலம் ஒவ்வொருவருடைய குணம் பற்றி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ஏற்றார் போல் நாம் அவரிடம் நடந்து கொள்வதன் மூலம் பல தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

மாமியார் அல்லது மருமகள், உறவு வலுப்படுவதற்கு இருவருக்கும் சமஅளவில் பொறுப்பு உள்ளது. இருவருமே தங்களை குடும்பத்தின் சக அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அநேக மக்கள் தங்கள் உறவினர்களுடனான உறவை கெடுத்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களை எதிரிகளாகப் பார்க்கிறார்கள். பெரும்பாலும் குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் மட்டுமே இவ்வாறு ஏற்படுகிறது. எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் மற்றவர்கள் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு நிறைய விசயங்கள் நன்றாகப் புலப்படும். இதன் மூலம் பல தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில் உங்கள் உறவை நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும்.

ஈகோவை விட்டெறியுங்கள்

பெரும்பாலான உறவுகள் பாதிப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது நம்முடைய ஈகோ தான். குறிப்பாக மாமியார்- மருமகள் உறவு பிரச்னைகளில் ஈகோவின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தாழ்மையுடன் இருங்கள் மற்றும் எந்தவிதமான மோதலையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஈகோவை விட்டெறிந்து அன்பை கையில் எடுப்பதன் மூலம் உறவு வலுவடைகிறது அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களின் சொந்தங்கள் மற்றும் உறவுமுறைகளை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இப்படி தெரிந்து கொள்வதன் மூலம் நம்மால் பல விஷயங்களில் தவறான முடிவு எடுப்பதைத் தவிர்க்க முடியும் . நமக்கு ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரிந்தால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோல் ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதன் மூலமே அவர்களுடனான உறவை சரியான முறையில் அமைத்துக்கொள்ள முடியும்.

மரியாதை, மதிப்பை உயர்த்தும்

நீங்கள் பேசும்போதும் அல்லது சாப்பிடும்போது அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள். குறிப்பாக அவர்கள் குடும்ப பாரம்பரியம் மற்றும் பின்னணி பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். மரியாதை என்பது நேரில் கொடுப்பதைத் தாண்டி மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி பேசும்போதும் இருக்கிறது.

மிகவும் மரியாதையாகப் பேசுவதால்  கண்டிப்பாக அந்த விஷயம் அவர்களுக்குச் சென்றடையும். அது உங்களின் உறவை வலிமையாக்கும். அதேபோல, மற்றவர்களைக் குறை கூறுவது என்பது நமக்கு எப்போதும் அலாதி பிரியம்தான். ஆனால், இது உறவுகளில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. ஒருவரை குறை கூறுவதைத் தாண்டி அவர்களை மற்றவர்களிடம் பாராட்டிப் பேசிப் பாருங்கள். அது மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் உறவில் உருவாக்கும். இதைத்தான் புரிந்துகொள்ள நாம் தவறுகிறோம். மற்றவர்களிடம் உள்ள குறையை பார்ப்பதை விட்டுவிட்டு அவர்களிடம் உள்ள நிறையை பார்ப்பதன் மூலம், அவர்கள் மீது உள்ள மதிப்பு கூடுகிறது அது பிரகாசமான உறவிற்கு வித்திடுகிறது. 

வேலையின்போது முன்வந்து உதவுங்கள்

மாமியாரோ அல்லது மருமகளோ வேலை செய்யும்போது அவர்களுக்கு முன்வந்து பரஸ்பரம் உதவி செய்யுங்கள். அது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும். குறிப்பாக நீங்கள் விடுமுறைக்குச் செல்லும்போது  நாம் விடுமுறைக்கு தானே வந்தோம் என்று சும்மா இருந்துவிடாமல் அனைத்துப் பணிகளிலும் பங்கு எடுத்து முடித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள்.அதேநேரம், நீங்கள் நீங்களாகவே இருங்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று பாசாங்கு செய்யாதீர்கள். அதனால் துளியளவும் உபயோகம் இல்லை. இப்படி நடிப்பது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. உண்மையான அன்புடன் இருந்தால் மட்டுமே அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கும்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் 

நம்மை யாராவது மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசினால் நமக்கு அறவே அது பிடிக்காது. ஆனால் அதே விஷயத்தை நாம் அடிக்கடி செய்து கொண்டுதான் இருக்கிறோம். மருமகள் மாமியாரை மற்றொருவருடன் ஒப்பிட்டும், மாமியார் மருமகளை மற்றொருவருடன் ஒப்பிட்டும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதுவே பலவித பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. ஒப்பிடுதல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். இதை தவிர்ப்பதன் மூலம் உறவுகள் பலப்படும்.

எப்பொழுதும் தொடர்பில் இருங்கள்

இன்று மாமியார்-மருமகள் ஒரே வீட்டில் வசிப்பதை அரிதாகவே பார்க்க முடிகிறது. அப்படி வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் கூட அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். நலம் விசாரிப்பது என்பது உறவை எப்பொழுதுமே மேம்படுத்தும். நலம் விசாரிப்பதற்கு நேரமில்லை என்று சொல்வது மிகவும் அபத்தமான செயல் ஆகும்.  மணிக்கணக்கில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் உங்கள் சொந்தத்திடம் பேச நேரமில்லை. ஒரு சில நிமிடம் அன்பாக பேசுவதன் மூலமும் கல்யாண நாள், பிறந்த நாள், பண்டிகை நாட்களில் தொடர்புகொண்டு வாழ்த்துவதன் மூலமும் அந்த உறவு சிறப்பாக அமையும்.

உறுதுணையாக  இருங்கள்

அம்மா தன் மகனுக்கு உதவுவதன் மூலம் மருமகளின் மனதில் இடம் பிடிக்கிறார். மனைவி தன் கணவனுக்கு துணையாக நிற்கும் போது கண்டிப்பாக மாமியாரின் மனதில் நீங்கா இடம் பெறுகிறார். இவ்வாறு  இருப்பதன் மூலம் மாமியார் - மருமகள் உறவு நிலையானதாக மாறும்.

வேறெந்த உறவுகளைவிட மிகச் சிக்கலானது மாமியார் - மருமகள் இடையிலான உறவு. இதனால், காலங்காலமாக மாமியார் - மருமகள் உறவு எதிரும், புதிருமாகவே இருந்து வருகிறது.

தனது மகனுக்கான வரனைத் தேடித் தேடித் தேர்வு செய்யும் தாயே, வரக்கூடிய பெண்ணுக்கு மிகப்பெரும் எதிரியாக மாறிவிடுவது பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகிறது.

இச்சிக்கல் அனைத்து சமூகங்களிலும், ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடின்றி எல்லா நிலைகளிலும் நிலவுகிறது. எனவே, பல குடும்பங்களில் மாமியார் - மருமகள் இடையே வெறுப்பும், பகையுமே மேலோங்கி இருக்கும்.

இப்படியொரு சூழ்நிலையிலும் தஞ்சாவூர் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் உஷாநந்தினி விஸ்வநாதன் தனது மாமியாரை உயர்வாகப் போற்றுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை மைனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மாமியார் தம்பிக்கோட்டை மைனர் என்கிற என்.ஆர். ராமசாமியின் மனைவி என்.ஆர். வைரமணி அம்மாள் (86).

இன்னர்வீல் சங்கம், கில்டு ஆப் சர்வீஸ், கலை ஆயம் உள்பட பல்வேறு அமைப்புகளின் மூலம் பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வரும் உஷாநந்தினி விஸ்வநாதன் தனது மாமியார் வைரமணி அம்மாள் குறித்து தொடர்கிறார்...

எங்க மாமியார் 31 வயதில் எட்டுக் குழந்தைகளுடன் விதவையாகிவிட்டார். அவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள். ஐந்து மகள்களையும் நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதேபோல, 3 மகன்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவி செய்து, அவர்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.

எங்க மாமனார் ஒரே பையன். இவர் 37 வயதில் இறக்கும்போது நிறைய சொத்துகள், பேருந்துகள், வணிகம் இருந்தன. இவற்றையெல்லாம் எங்க மாமியார் 31 வயதில் தனியொரு பெண்மணியாகத் திறமையாக நிர்வாகம் செய்தார். மகள்களுக்குத் தானாகவே ஒவ்வொரு இடமாகப் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார். எல்லோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

அவர் இளம் வயதில் விதவையாகும்போது மிகுந்த கஷ்டம் இருந்திருக்கும். அதையெல்லாம் கடந்து குடும்பத்துக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பாடுபட்டார். பிள்ளைகளைப் படிக்க வைத்தது, பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தது என அனைத்து நிர்வாகத்தையும் எடுத்துச் செய்தார். இதற்காக அவர் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

எங்க மாமனார் இருந்தவரை சொத்துகள் என்னவெல்லாம் எங்கு இருக்கின்றன என்பது மாமியாருக்குத் தெரியாது. இதெல்லாம் உங்கள் சொத்து என தம்பிக்கோட்டையில் சொல்வார்கள். ஆனால், எங்கே? என்ன இருக்கிறது? என்பது புரியாது. மாமனார் இறந்த பிறகு, ஆவணங்களைச் சரிபார்த்து, அனைத்து சொத்துகளையும் மாமியார்தான் கண்டறிந்து, அளவீடு செய்து, வேலி போட்டார். இவற்றையெல்லாம் திறம்படச் சமாளித்தார்.

மாமியார் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் கூட, வங்கியில் கணக்குச் சொல்வது உள்ளிட்ட விஷயங்களில் மணக்கணக்குப் போட்டு மிகச் சரியாகக் கூறுவார்.

எங்களுடைய குடும்பத்துக்கு 21 கோயில்கள் உள்ளன. அதற்கு டிரஸ்டியாக இருந்த அவர் தனியொரு பெண்மணியாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.

இதையெல்லாம் கேள்விப்பட்டது முதல், எனக்கு என் மாமியார் மீது தனி மரியாதை வந்தது. எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார். நான் 12 ஆம் வகுப்புப் படிக்கும்போது திருமணமாகி வந்தேன். அதன்பிறகு என்னை ஊக்கப்படுத்தி கல்லூரி, முனைவர் பட்டப்படிப்பு வரை முடிக்க உதவி புரிந்தார். குடும்பத்தினரின் ஆதரவு இல்லையென்றால் படித்திருக்க முடியாது. குறிப்பாக, மாமியாரின் ஆதரவு இருந்ததால்தான், சாதிக்க முடிந்தது. மிகுந்த பாரம்பரியமான இக்குடும்பத்தில் பெண்கள் அதிகமாக வெளியே வரவோ, படிக்கவோ மாட்டார்கள். இந்தச் சூழ்நிலையிலும், என்னைப் படிக்க வைத்தார்.
 
நான் எது செய்தாலும், நிச்சயமாக ஊக்கப்படுத்துவார். எந்தச் சமையல் செய்தாலும் நல்லாருக்கு எனக் கூறுவார். இதுபோல பல வகைகளிலும் எனக்கு ஊக்கமாக இருந்தது எனது மாமியார்.

குடும்பம் என்றால் பிரச்னைகள் இருக்கும்தான். சில நேரங்களில் சிறு, சிறு பிரச்னைகள் வந்துள்ளன. பிரச்னை வரும்போது, மாமியார் கூறுவதை அமைதியாகக் கேட்டுக்கொள்வேன். அதற்கு உடனடியாகப் பதில் பேசமாட்டேன். அமைதியாக இருக்கும்போது, அடுத்த நிமிடம் அப்பிரச்னை ஒன்றுமில்லாமல் ஆகி, சுமூகமாக மாறிவிடும்.

முதலில் அவருடைய கருத்தைக் கேட்டுக்கொள்வேன். என்னைப் பொருத்தவரை மற்றவருடைய கருத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு மாறான கருத்தைக் கூறும்போதுதான் பிரச்னைகள் வருகின்றன. அவர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பேசித் தீர்வு காணலாம். குடும்பத்தை நடத்துவதற்கான திறன் இருக்கிறது என்ற நம்பிக்கையை மாமியார்களிடம் ஏற்படுத்திவிட்டால், அதன் பிறகு எல்லாமே சுமூகமாகச் செல்லும்.
 
எங்க மாமியாரைப் பொருத்தவரை ரொம்ப செலவு செய்யக் கூடாது என அறிவுரைகள் வழங்குவார். எந்தவொரு செலவையும் பட்ஜெட் போட்டுத்தான் செய்ய வேண்டும் எனக் கூறுவார். இவ்வளவுதான் பணம் இருக்கிறது என்றால், இதற்குள் என்ன செய்ய முடியுமோ, அதை மட்டுமே செய்ய வேண்டும் என சொல்வார். வரவு-செலவு விஷயத்தில் மிகவும் துல்லியமாகச் செயல்படுவார். வியாபாரம் உள்பட எதுவாக இருந்தாலும் அகலக் கால் வைக்கக் கூடாது என்பார். வெளியில் கடன் வாங்குவது அவருக்குப் பிடிக்காது. இதுபோன்ற விஷயங்கள் சரி என்பதே என்னுடைய கருத்தும் கூட.

ரொம்பவும் சென்டிமென்டலாக இருக்கமாட்டார். மூட நம்பிக்கை கிடையாது. சுதந்திரம் நிறையவே தருவார். கோட்பாடுகளுக்குள் நாம் செயல்பட்டால், அவரும் ஏற்றுக் கொள்வார்.

என்னைப் பொருத்தவரை எங்க மாமியாரை நான் என்னுடைய வழிகாட்டியாகவே நினைக்கிறேன். எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அவர்தான் என நினைக்கிறேன்.

எனது மகன் வினீத் ராமசாமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தோம். மருமகள் பெயர் மரகதம். தற்போது நானும் மாமியார்தான். முன்பு மருமகளாக இருந்தபோது மருமகள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என நினைப்பேன். மாமியாரான பிறகு மாமியார் இன்னும் விட்டுக் கொடுத்துப் போனால், வாழ்க்கை இன்னும் சுமூகமாகச் செல்லும் என்ற கருத்து தோன்றியது.

எனவே, மருமகளிடம் நான் மாமியாராக ரொம்பவும் எதுவும் அழுத்தமாகச் சொல்லமாட்டேன். பொதுவாக, மருமகள்களை ஓராண்டுக்கு அவர்களுடைய இஷ்டப்படி விட்டுவிட வேண்டும். ஆரம்பத்திலிருந்தே எதாவது முரண்பட்ட கருத்தைக் கூறினால், நிச்சயமாக நம் மீது அவர்களுக்கு அதிருப்திதான் ஏற்படும். ஓராண்டுக்கு அவர்களுடைய இஷ்டப்படி விட்டுவிட்டால், நம்மைப் பார்த்து அவர்களும் மாறிக்கொள்வர். அடிக்கடி அவர்களிடம் கருத்துகளைக் கூறும்போது பிரச்னைகள்தான் ஏற்படும்.

ஓராண்டு கடந்த பிறகு அவர்களுக்கே பொறுப்பு வந்துவிடும். குழந்தைகள் பிறந்தபிறகு அவர்களுடைய வேலைகளை உரிய முறையில் செய்துவிடுகின்றனர். இதனிடையே, நம்முடைய குடும்பப் பாரம்பரியத்தை அவ்வப்போது சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் ரொம்பவும் அழுத்தம் கொடுக்கக்கூடாது.

மாமியார் நிலையில் இருப்பவர்கள் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நிறைய தோழிகள் கூறும்போது, எப்போதோ 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது மாமியார் இப்படி செய்தார்கள், அப்படி சொன்னார்கள் என இன்னமும் அதைப் பற்றிப் பேசுவர். அது தேவையில்லை. மறப்போம் - மன்னிப்போம் என இருந்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும். அதன் மூலம் உறவுகளும் மேம்படும்.

என்னுடைய கனவு வேறாக இருக்கும். மருமகளின் கனவு வேறு விதமாக இருப்பது வழக்கம். இச்சூழ்நிலையில் நாம் சொல்வதுதான் சரி என வாதிடக்கூடாது. அப்படிச் செய்யும்போதுதான் பிரச்னைகள் வருகின்றன. மாமியார் செய்வதை மருமகள் செய்து வந்தாலே போதுமானது.

மாமியார்களுடைய நல்ல செயல்கள், விஷயங்கள் அனைத்தையும் மருமகள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மாமியார் ஏதாவது சொல்லும்போது, அதை எதிர்க்கும் விதமாகப் பதில் அளிக்கக்கூடாது. பதிலுக்கு பதில் பேசுவது தேவையற்றது. ஒவ்வொரு வாதத்திலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கத் தேவையில்லை. விட்டுக் கொடுத்து போனால் பிரச்னை வராது. மாமியார் ஒரு கருத்தைச் சொல்லும்போது, அவரே வெற்றி பெற்றதாக இருக்கட்டும் என நினைக்க வேண்டும். மாமியார் கூறியதை தவறு என நிரூபிக்க முயற்சிக்கக் கூடாது. ஒரு கட்டத்தில் மாமியார்களே உணர்ந்துவிடுவார்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எனக் கூறுவர். அதை என் அனுபவத்திலும் பார்த்துவிட்டேன் என்றார் உஷாநந்தினி விஸ்வநாதன்.

இதேபோல, உஷாநந்தினியின் மருமகள் வி. மரகதம் கூறியது:

அத்தை கூறியது மிகவும் சரியானது. எப்போதுமே பதிலுக்கு பதில் கருத்துகள் கூறுவது என இருக்கக் கூடாது. முதலில் மாமியாரிடம் மருமகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என் அத்தை எனக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுத்தார். முதல் ஓராண்டுக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த உத்தரவும் போட்டதில்லை. அதேபோல, எல்லையைத் தாண்டுவதாக எனக்குத் தோன்றினால், அதைச் செய்யக்கூடாது என இருந்துவிடுவேன்.

எங்களுடைய உறவு மிகவும் திறந்த மனப்பான்மையுடன் இருக்கும். விமர்சனங்கள் இருக்காது. ஏதாவது கருத்து சொல்ல வந்தாலும், அதைக் கூறுவதற்கு எனக்கு அனுமதி அளிப்பார். சிறு சிறு விவாதங்கள் இருக்குமே தவிர, பெரிய அளவுக்கு பிரச்னைகள் வராது. அத்தை நல்ல சுதந்திரமும், இடமும் கொடுப்பார். என்னை ஆதிக்கம் செய்ய வேண்டும் என அவர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. அவர் நெருங்கிய தோழி போலவே இருப்பார். மகிழ்ச்சியான தருணங்களிலும், வருத்தமான நிலையிலும் ஒரே மாதியாக இருப்பார்.

மாமியார் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டாலும், நடைமுறையில் எது சரியாக இருக்கிறதோ, அதைச் செய்து கொண்டாலே போதுமானது. முதலில் மாமியாரிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றார் மரகதம். 

ஒரு வீட்டிற்குச் செல்லும் மருமகள், அந்த குடும்பத்துக்கு மகளாக மாறுகிறாளோ இல்லையோ, ஒரு மருமகன் அந்த பெண் வீட்டாருக்கும் சேர்த்தே மகனாக இருக்கிறார். பெரும்பாலாக இந்த சூழலை நம்மைச் சுற்றியுள்ளோரிடம் ஏன், நம் வீட்டிலேயே கண்கூடாகப் பார்க்க முடியும். 

மாமியார் - மருமகள் உறவைப் போல் அல்லாமல், மாமியார் -மருமகன் இடையேயான அன்புப் பரிமாற்றம் பெரும்பாலான வீடுகளில் அழகாகவே இருக்கும். அதிலும் பெண் பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீடு என்றால், மருமகனை மகனைப் போல பாவிக்கும் மாமியார் - மாமனாரால், மனைவியின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறி விடுவார் மருமகன். 

கணவன் வீட்டை கவனித்துக்கொள்ள பெண் எரிச்சலடைவதைப் போல, மனைவியின் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க ஆண்மகன்கள் பெரும்பாலாக எரிச்சலைடைவதில்லை. அதனை தன் கடமையாக உணர்ந்து செய்யும் பல மருமகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது பல குடும்பங்களில் வயதான பெற்றோரை மகள்-மருமகனே கவனித்துக்கொள்கின்றனர். 

மாமியாரைப் பொருத்தவரை, மகளுக்குத் திருமணம் ஆனவுடன் பெண் வீட்டில் மாப்பிள்ளை விருந்துக்கு வகைவகையான சாப்பாடு செய்து மருமகனை திக்குமுக்காடச் செய்வார். மருமகன் மீதான அக்கறையை வெளிப்படுத்தவும் மருமகன் தன் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலும் பெண் வீட்டார் இவ்வாறு செய்வதாக சொல்லப்படுவதுண்டு. 

மருமகள்கள் பெரும்பாலாக 'மகளாக' பார்க்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பாலாக மருமகனை, மகனாகப் பார்க்கும் மாமியார்கள் அதிகம். ஆண் பிள்ளைகள் இல்லாத வீடென்றால் மருமகனே மகனாக இருப்பார். அதுபோல பெரும்பாலான மருமகன்களும் மாமியாரையும் தன்னுடைய அம்மாவாகவே பார்க்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக வாழும் ஒரு மாமியார் - மருமகனைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம். 

சென்னையைச் சேர்ந்த மகேஷ், தன்னுடைய மாமியார் குறித்து கூறியதாவது: 

'எனக்கு 2017ல் காதல் திருமணம் நடந்தது. வேறுவழியின்றி அவசர அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. நாங்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். என்னுடைய மனைவி வீட்டார் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். 

ஆனால், திருமணத்திற்கு மனைவி வீட்டார் சம்மதம் தெரிவித்து திருமணத்திலும் கலந்துகொண்டனர். எனக்கு திருமணம் ஆன புதிதில் ஒரு 6 மாதங்கள் நானும் என் மனைவியும் தனியே வாசித்தோம். அதன்பிறகு பொருளாதார சூழ்நிலை சற்று மோசமானது. பின்னர், என்னுடைய மாமியார் அழைக்கவே, அவரது வீட்டிற்கு நானும் மனைவியும் சென்றோம். எனது மனைவிக்கு ஒரு தங்கை மட்டும். சகோதரர்கள் இல்லை. 

குடும்பத்தைவிட்டு திருமணம் செய்த எனக்கு வாழ்க்கையை நினைத்து கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. குறைவான ஊதியத்தில் எப்படி மனைவியை கவனித்துக்கொள்ளப் போகிறோம் என்று. ஆனால், சரியான நேரத்தில் எங்கள் நிலையைப் புரிந்துகொண்டு என் அம்மா(மாமியார்) எங்களை அழைத்தது எனக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தது. 

திருமணம் ஆனது முதல் என் மாமியாரை 'அம்மா' என்றுதான் அழைத்து வருகிறேன். பல சூழ்நிலைகளில் என்னுடைய மற்றொரு அம்மாவாகவே உணர்கிறேன். ஒரு வருடத்திற்குப் பின்னர் என்னுடைய பெற்றோரிடம் பேசினாலும் சூழ்நிலை சரியில்லாததால் பெற்றோர் சம்மதத்துடனே சுமார் 4 வருடங்களாக மாமியார் வீட்டில் வசித்து வருகிறேன். 

பல தருணங்களில் அவர் என்னை மகனாகவே உணர வைத்திருக்கிறார்.  எனக்குப் பிடித்த உணவை பார்த்து பார்த்து சமைத்துக் கொடுப்பதில் தொடங்கி என் மனைவியிடம் எனக்கு ஆதரவாகப் பேசுவது வரை அனைத்திலும் அவர் என் தாயைப் போலவே உணர வைப்பார்.

காதல் திருமணம் செய்து கொண்டாலும், தனது மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணைக் கிடைத்திருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் என்னிடம் வெளிப்படுத்தும்போது எனக்கு நெகிழ்ச்சியாகவும் இன்னும் என் மனைவியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். 

வீட்டில் எந்த முக்கிய முடிவுகளானாலும் அம்மா(மாமியார்) என்னைக் கேட்டுவிட்டே செய்வார். மனைவியிடம் சண்டை வரும்போதெல்லாம் எனக்கு தான் ஆதரவாக இருப்பார். என் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர். என்னுடைய குழந்தையை முழுமையாக கவனித்துக்கொள்கிறார். மாமனார் இருந்தாலும்கூட வீட்டில் என்னையே முன்னிலைப்படுத்துவார். என்னுடைய குடும்பத்தினரிடமும் நல்ல நட்புறவு கொண்டிருக்கிறார். இப்படி ஒரு அம்மா(மாமியார்) கிடைத்தது என்னுடைய பாக்கியமாகவே கருதுகிறேன். 

சிலர் மாமியார் வீட்டில் இருப்பதை வேறுவித தவறான கண்ணோட்டத்தோடு அணுகுகின்றனர். பெண்கள் கணவனுக்காக தங்களுடைய உயிருக்கும் மேலான பெற்றோரை விட்டு வரும்போது அவர்களுக்காக நாம் இவ்வாறு செய்தால் என்ன தவறு இருக்கிறது? பெண்களுக்கு கணவன் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதுபோல ஆண்களுக்கும் மனைவியின் வீட்டையும் சேர்த்து பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நம் பெற்றோருடன் மனைவியின் பெற்றோரையும் கவனித்துக்கொள்ள வேண்டியது கடமையும்கூட' என்கிறார் மகேஷ். 

இதுகுறித்து மாமியார் ஆனந்தி கூறும்போது, 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. என்னுடைய மகனை நான் எப்படி பார்த்துகொள்வேனோ அதுபோல தான் என் மருமகனையும் பார்த்துக்கொள்கிறேன். 

என் கணவர் பெரும்பாலாக வீட்டு விவகாரத்தில் தலையிட மாட்டார். நானும் என் மருமகனும்தான் வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்போம். பொறுப்பாக அனைத்தையும் கவனித்துக்கொள்வார். என்னை அம்மா என்று அழைப்பது எனக்கு ஒரு மகன் இல்லாத குறையைப் போக்குகிறது. அவர் இருப்பது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிக்கிறது. என்னுடைய மகளையும் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார். இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்? நான் இருக்கும்போதும் சரி, இறந்தபின்னரும் சரி, என் மகள்களைவிட என் மருமகனுக்கே அனைத்து உரிமைகளும் உண்டு. 

என்னுடைய இன்னொரு மகளுக்குத் திருமணம் ஆனாலும் அந்த மருமகனும் எனக்கு மகன்தான் என்கிறார் பூரிப்புடன். 

உலகப்புகழ் பெற்ற மாமியார்களின் பட்டியலைத் தொகுத்தால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பெயர் சாரா ரூஸ்வெல்ட். யார் அந்த சாரா ரூஸ்வெல்ட் என்கிறீர்களா? அமெரிக்க அதிபராக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டின் தாயார் இவர்.

1882 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகன் பிறந்தபோது இனிமேல் குழந்தை பெறுவது ஆபத்து என்று மருத்துவர்கள் சாரா ரூஸ்வெல்டிடம் சொல்லி விட்டார்கள். ஆகவே, ஒரே மகனான பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் சாரா ரூஸ்வெல்ட்.

அந்த கால அமெரிக்காவில் தாதிகள், ஆயாக்களை வைத்து வளர்க்காமல் தனியொரு பெண்ணாக மகனை வளர்த்த ஒரே தாய் சாராதான் என்றால் மிகையாது. 

மகன் ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது மகனுக்காகவே மசாசூசெட்ஸ் பகுதிக்கு இடம் மாறினார் அவர். மகன், எலினோர் என்ற தூரத்து உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான் என்று தெரிந்ததும், டிபிகல் அம்மாக்களைப் போலவே மகனின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டார் சாரா ரூஸ்வெல்ட். எப்படியாவது இந்த திருமணம் நடப்பதைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று சாரா ரூஸ்வெல்ட் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்.

இதுவெல்லாம் வேலைக்கு ஆகாது என்று ஒரு கட்டத்தில் தெரிந்தபோது, மகனின் திருமண விருப்பத்தை ஓராண்டு காலம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க சாரா ரூஸ்வெல்ட் உத்தரவிட்டார்.

ஓராண்டு காலத்துக்குள் ஏதாவது செய்து மகனின் மனதை மாற்றிவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் அதையும் மீறி ரூஸ்வெல்ட்- எலினோர் திருமணம் நடந்தே விட்டது. 

ஆரம்பத்தில் மாமியார் - மருமகள் மோதல் இருந்தாலும் பிறகு எலினோரின் சொந்த தாய் போல மாறினார் சாரா. மகன், லூசி மெர்சர் என்ற வேறொரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று தெரிந்தபோது அந்த விஷயத்தில் மருமகளுக்கு ஆதரவாக இருந்தார் சாரா. இருந்தாலும் வழக்கமான மாமியாராக, மருமகளை கட்டுப்படுத்தும் வேலையையும் செய்திருக்கிறார் சாரா. 

சாராவின் இந்த மாமியார்த்தனத்தை உளத்தூண்டுதலாக வைத்து ‘சன்ரைஸ் எட் கேம்போபெல்லோ’ என்று ஒரு திரைப்படம் கூட வெளிவந்திருக்கிறது. 
பிராங்கிளின் ரூஸ்வெல்ட், நியூயார்க் நகரத்தில் வீடு கட்டியபோது திருமண நாள் பரிசாக பண உதவி செய்த சாரா, மகனுக்கு போட்ட முதல் நிபந்தனை, ‘வீட்டை இரு பகுதிகளாக பிரித்து கட்ட வேண்டும். அதன் ஒரு பகுதியில் நான் குடியிருப்பேன். மறுபகுதியில் நீங்கள் குடியிருக்கலாம்’ என்பதுதான்.
அந்த வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் போகும் பாதைகள், கதவுகள் எல்லாம் சாராவின் மேற்பார்வையில் கட்டப்பட்டவை.

இது ஒருபுறம் இருக்க, இப்படி ஒரு மாமியாரை சமாளித்து எலினோர் வாழ்ந்தது தனிக்கதை.

ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணாக இருந்த எலினார், நாட்டின் முதல் குடிமகளாக மாறியது மட்டுமல்ல, மாமியாரின் அதிகாரத்தை மீறி அவர் எப்படி மக்கள் உரிமை போராளியாக, அமெரிக்க குடியியல் உரிமைப் போராளியாக மாறினார் என்பது ஒரு பெரிய அதிசயம்தான். 

1933ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று வெள்ளை மாளிகையில் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டும், எலினாரும் குடியேறியபோது அவர்களுக்கு அப்பாடா என்று இருந்திருக்கும். அதன்பிறகு 3 முறை மகன் அதிபரானதை கண்ணால் பார்த்து மகிழ்ந்தார் சாரா.

மகன் என்னதான் அமெரிக்காவுக்கே அதிபராக இருந்தாலும், மகனையும், மகனது குடும்பத்தையும் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சாராதான்.

இதையும் மீறி மருமகள் எலினோர், பன்னாட்டு அரசியலில் ஆர்வம் காட்டியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். உழைக்கும் பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் அவை என்னும் பன்னாட்டு மன்றத்தை உருவாக்கப் பாடுபட்டிருக்கிறார். பன்னாட்டு மன்றம் உருவானபின் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகவும் எலினோர் இருந்திருக்கிறார்.

1941 ஆம் ஆண்டு, தனது 87 ஆவது வயதில் மாமியார் சாரா ரூஸ்வெல்ட் இறந்தார். அதே நாளில்தான் இரண்டாம் உலகப்போர் தொடர்பாக ஜப்பான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்கான பிரகடனத்தில் மகன் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டார்.

மாமியார் சாரா இறந்தபோது மருமகள் எலினோர் அவரது இரங்கல் குறிப்பில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

’36 ஆண்டுகளாக தெரிந்த ஒருவர் இறந்தும் அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தையோ, இழப்பு உணர்வையோ எனக்கு ஏற்படுத்தவில்லை’
ம்... இதற்கு மேல் ஒரு மாமியார் - மருமகள் உறவைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?


உறவுகள் மனித வாழ்க்கையின் வரம். மகிழ்ச்சியின்போது கொண்டாடுவதற்கும் துக்கத்தின்போது ஆறுதலுக்கும் கடினமான சூழ்நிலையில் உதவுவதற்கும் உறவுகள் தேவையாகிறது. ஒவ்வொருவரும் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டிய சூழ்நிலையில், வாழ்வில் ஒவ்வொரு உறவையும் அரவணைத்துச் செல்வது அவசியமாகிறது. 

இந்த உறவுகளில் சில இணக்கமான உறவுகள் என்றும் சில இறுக்கமான உறவுகள் என்றும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் அதிக இறுக்கமான உறவு அதிக சண்டைகள் வருவது மாமியார்-மருமகள் உறவில்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சண்டைகளுக்குக் காரணம் அன்பும் எதிர்பார்ப்புகளும்தான் என்ற புரிதல் இங்கு எத்தனை பேருக்கு இருக்கிறது?

மாமியார் - மருமகள் என்றாலே எதிரும்புதிரும்தான் என்ற ஒரு பிற்போக்கான நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால், அந்த வெகு சிலரும் யாரும் பெரிதாக வெளிகாட்டிக்கொள்வதில்லை, மற்றவர்களும் அவர்களைக் கொண்டாடுவதில்லை. 

அதனால்தானோ என்னவோ தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் தினத்தை கொண்டாடும் பலருக்கு மாமியார் தினம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. 

ஒரு பெண்ணின் மனதை மற்றொரு பெண்ணால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற பேச்சுவழக்கு ஒன்று உண்டு. ஆனால், மாமியார்-மருமகள் உறவுக்கு மட்டும் விதிவிலக்கு போன்ற நிலையே இங்கிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் இருவருக்கும் இடையிலான புரிதல் அவசியம். 

ஒரு காலத்தில் பெரும்பாலாக கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலையில், இன்றெல்லாம் திருமணத்திற்கு முன்னரே தனிக்குடித்தனம் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் இக்காலத்துப் பெண்கள். குறிப்பாக தன்னுடைய சுதந்திரம் பறிபோய் விடும் என்றும் வீட்டு வேலைகளைச் செய்ய சோம்பேறித்தனப்பட்டும் பலரும் இந்த முடிவும் எடுக்கிறார்கள். ஆனால், அம்மாவைப் பற்றி கவலைப்படும் பெண்கள், தன் மாமியாரும் வயதான காலத்தில் என்ன செய்வார்? என்று யோசிப்பதில்லை. 

மாறாக, தன்னுடைய குழந்தைகளுக்கு பணிவிடைகளைச் செய்ய மட்டுமே மாமியாரை அழைக்கிறார்கள். இக்காலத்து இளம்பெண்கள் பெரும்பாலாக மாமியார்-மாமனாரை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. 

பெண்கள் பலரும் வேலைக்குச் செல்வதால் வெளியூர்களுக்குச் சென்று இருக்க நேரிடுகிறது. அது விதிவிலக்கு. அதிலும் மாமியாரை உடன் வைத்து பார்த்துக்கொள்ளலாம். மாமியாரும் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார். 

தன்னுடைய மகனை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் எதிர்பார்ப்பு. மகன்-மருமகள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதும் மாமியாரின் எதிர்பார்ப்பு. 

மகன்களும் சிலர் திருமணம் ஆனவுடன் மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அம்மாவை ஒதுக்குவதும் உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளே மாமியார்-மருமகள் சண்டைக்கும் காரணமாகி விடுகின்றன. மகன்களும் அம்மா- மனைவி இருவரையும் அவரவர்களிடத்து விட்டுக்கொடுக்கக் கூடாது. இருவரையும் சமமாக நடத்தினாலே பிரச்னை வராது.

மாமியார்-மருமகளின் இணக்கமான உறவுக்கு இருவரிடையே புரிதல் இருக்க இருக்க வேண்டும். அவரவருடைய எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு நடந்தால் பிரச்னைகளை சண்டைகளை குறைக்க முடியும். 

மருமகளிடம் மாமியாரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? 

► எதிர்பார்ப்புகள் தோல்வி அடையும்போதுதான் வாழ்க்கையில் பிரச்னை, விரக்தி ஏற்படுகிறது. எந்தவொரு உறவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு அதன்படி நடக்க முயற்சித்தால் உறவு இணக்கமாகிவிடும். மனிதனின் அதிகபட்ச எதிர்பார்ப்பு அன்பும் அக்கறையும்தானே. 

அந்தவகையில், தாய் தன்னுடைய குழந்தையை(மகனோ, மகளோ) பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குகிறாள். மகள் திருமணமாகி வேறொரு வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள். தன் வாழ்வின் கடைசி வரை உடன் இருக்கும் மகனுக்குத் திருமணமாகிறது. இப்போது தனக்கும் மகனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிவிடுமோ, மருமகள், தன்னிடம் இருந்து மகனை பிரித்துவிடுவாளோ என்று அச்சம் மாமியாருக்கு ஏற்படுகிறது. 

திருமணத்திற்கு முன்பு மகன் எவ்வாறு தனக்கு முக்கியத்துவம் கொடுத்தானோ, மனைவி வந்த பின்பும் அதே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மாமியாரிடம் அந்த நம்பிக்கையை விதைக்க வேண்டியது மருமகளின் கடமை. 

► தன்னைவிட மூத்தவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது பொதுவான வழக்கம். அதன்படியே, மாமியார் தனது மருமகளிடம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச மரியாதை. வயதில் மூத்தவர், தன்னுடைய கணவனை அடையாளப்படுத்தியவர் என்ற வகையில் மாமியாருக்கு மருமகள் உரிய மரியாதை அளிக்க வேண்டும். 

►  வீட்டில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் மாமியாரைக் கேட்டு பின்னரே எடுக்க வேண்டும். அப்படியென்றால் மாமியாருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை அவர் உணர்வார். மருமகளாகிய உங்கள் மீது அவருக்கு மதிப்பு அதிகரிக்கும். 

►  இதுநாள் வரை குடும்பத்தை வழிநடத்திய மாமியாரிடம் இருந்து ஒரேநாளில் பொறுப்புகளை பறித்துக்கொள்ளக் கூடாது. 'என்றைக்குமே குடும்பத்தில் நீங்கள்தான் எல்லாமே' என்று மாமியாருக்கு உணர்த்த வேண்டும். செயலளவில் நீங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டாலும் 'வீட்டின் அதிகாரம் மாமியார் கையில்தான்' என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். 

►  தனக்கு பிடித்தவர்களை, மருமகள் நன்றாக நடத்த வேண்டும், நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மாமியாரின் பெரும் எதிர்பார்ப்பு. குறிப்பாக தன்னுடைய மகள்கள் வீட்டுக்கு வரும்போது மருமகள் அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும், மகள்களின் குழந்தைகளை மருமகள், தன் குழந்தைகளைப் போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயல்பு.

► உறவினர்களிடம் மாமியாரை ஒருபோதும் மருமகள் விட்டுக்கொடுக்கக்கூடாது. உங்களிடம் கண்டிப்பாக நடந்துகொண்டாலும் மற்றவர் முன்னிலையில் மாமியாரைப் பற்றி குறை கூறாமல் அவரை மெச்சினால் மாமியாரின் மனம் மாற வாய்ப்பிருக்கிறது. 

►  மாமியாரின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் மருமகளாக இருக்க வேண்டும். மாமியாருக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அவர் செய்யும் நல்ல செயல்களை பாராட்டத் தவறிவிடாதீர்கள். 

► இக்கால பெண்கள் பலரும் பெண் சுதந்திரம் குறித்துப் பேசுகிறார்கள். எனவே, தன்னுடைய மாமியாரும் ஒரு பெண் என்பதை உணர்ந்து, வீட்டில் அவர்களுக்கான சுதந்திரத்தை நீங்களும் அளித்து மற்றவர்களிடமும் பெற்றுத் தர வேண்டியது மருமகளின் கடமை. 

► இறுதியாக, 'உங்கள் மாமியார் எப்படி இருக்க வேண்டும், அவரிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?' என்பதையும் நேரடியாக உங்கள் மாமியாரிடமே தெரிவிக்கலாம். 

மருமகள்களே, உங்கள் கணவனின் குணம் பிடித்துதானே அவர் மீது அதீத அன்பு கொண்டிருக்கீறீர்கள்? அந்த மகனை சமூகத்தில் ஒரு மனிதனாக அடையாளப்படுத்தியது யார்? உங்கள் மாமியார்தானே? வீட்டில் அம்மாவுடன் சண்டை போட்டு பின்னர் எதுவுமே நடக்காத மாதிரி 'ஈகோ' இன்றி பேசுவீர்கள் அல்லவா? அதுபோல மாமியாரிடம் ஏன் நடந்துகொள்ளக் கூடாது?

இப்போது உங்கள் அம்மாவை விட்டு வந்த உங்கள் வாழ்வில் ஒரு வெற்றிடம் தோன்றியிருக்கலாம். அந்த வெற்றிடத்தை உங்கள் மாமியார் மூலமாக நிரப்பலாமே? 

பெண் ஒருவள் திருமணமாகி ஒரு ஆணிடம் ஒப்படைக்கப்படுவதுபோலே, ஆணும் வளர்க்கப்பட்டு மனைவி என்ற உறவிடம் ஒப்படைக்கப்படுகிறான். மகளை வளர்த்தவர்களுக்கு இருக்கும் அதே அன்பு மகனை வளர்த்தவர்களுக்கும் இருக்கும். அதை புரிந்துகொண்டு அனுசரித்து விட்டுக்கொடுத்துச் சென்றாலே நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும். 

மாமியாருக்குத் தேவையானது மகன், மருமகளிடம் இருந்து குறைந்தபட்ச அன்பு. அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள். இன்று மாமியார்-மருமகள் பலரும் அம்மா-மகள் போன்று இணக்கமுடன் இருக்கின்றனர் என்பதையும் மறந்துவிட வேண்டாம். 

தாய், தந்தையர் தினத்தையே அதிகமாகக் கொண்டாடிய நமக்கு மாமியார் தினம் புதிதாக இருக்கலாம். ஆனால், மாமியார்-மருமகள் உறவை ஒரு இறுக்கமான உறவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தில் மாமியார் தினத்தைக் கொண்டாடுவதன் மூலமாக நிலையை மாற்ற முடியும். உங்கள் அம்மாவைப் போன்று உங்கள் மாமியாருக்காக இந்த ஒருநாளை அவர்களுடன் அவர்களுக்காக செலவழியுங்கள். மாமியாரை கொண்டாடுங்கள்!

நானெல்லாம் அப்படி இருக்க மாட்டேங்க! எனக்கு மருமகள் வந்தா நான் என் பொண்ணு போல பார்த்துப்பேன். கஷ்டம் ஏதும் வராம பார்த்துப்பேன்! என்ன ஆடை வேணும்னாலும் போட்டுக்க விட்டுருவேன். எது வேணும்னாலும் வாங்கிக்கச் சொல்வேன்!

நானும் எங்க மாமியாரும் நண்பர்கள் போல! எதுவாயிருந்தாலும் பகிர்ந்து கொள்வோம்! எங்களுக்குள்ள ஒண்ணும் பிரச்னையில்லை.

மேலே குறிப்பிட்ட முதல் வசனம், மாமியார் ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லா பெண்மணிகளும் வாடிக்கையாகச் சொல்வது. என் மாமியார் போல இருக்க மாட்டேன்! அவங்க எதுக்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பாங்க! எவ்வளவு செஞ்சாலும், என்னைப் பற்றி எல்லாரிடமும் குறை சொல்வதே அவருக்கு வேலை. இல்லைனா அவங்களுக்கு தூக்கமே வராது. மாமியார் உடைச்சா மண்சட்டி, மருமகள் உடைச்சா பொன்சட்டி போல இருப்பாங்கண்ணு சொல்ல நாம் கேள்விப்பட்டதுண்டு.

இரண்டாவது வசனம். கல்யாணம் ஆன புதிதில் மருமகள் தனது மாமியாரைப் பற்றி கூறுவது. ஏனென்றால் புதிதில் அவர்களுக்கு தனது மாமியாரை அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வதும், மாமியாரும், மருமகளைத் தன் மகள் போல பாவித்து எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வதால் வரும் வசனம் அது.

நான் என்னுடைய கிளினிக்கில் ஆய்வு செய்யும்போது, பொதுவாக நடுத்தர வயதில் உள்ள பெண்மணியும், புதிதாக கல்யாணம் ஆன மருமகள்களும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதுபோல உள்ளவர்கள் பின்னாளில், தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, பூதாகரமாக வெடித்து, குடும்பம் தனித்தனியாகப் பிரிவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். மாற்றாக சிலர், குடும்பங்களில் பிரச்னைகள் இருந்தாலும், அது பெரிதாக வளரவிடாமல் இன்னும் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாகச் செல்வதையும் காண்கிறோம்.

ஏன் பிரச்னை ஏற்படுகிறது? உறவில் விரிசல் ஏற்படுவது ஏன்?

1. மகனை வளர்க்கும் தாய், சிறு வயதிலிருந்து மகனுக்கு எது வேண்டும். என்ன வேண்டும் என பார்த்து பார்த்து வாங்கி செய்கிறார். திடீரென கல்யாணம் ஆனவுடன், மகன் அவருடைய மனைவியிடம் நெருக்கம் காட்டுகிறார். இதனால், தன் மீது அன்பு குறைந்துவிட்டதாகவும், தன்னுடன் நேரத்தைச் செலவிடமாட்டேன் என்கிறான் என்ற ரீதியில், தனக்குள்ளே ஒரு மாயையை தாய் ஏற்படுத்திக் கொள்கிறார். இதன் விளைவாக மருமகள் மீது பொறாமை கொள்வது, குற்றம் கண்டுபிடித்து அதை எல்லோரிடமும் முக்கியமாக அண்டை அயலார்களிடம் கூறுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது, பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.

2. முக்கியமாக சமையலறையில் தன் கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, வீட்டில் வருவோருக்கு என அதிக நேரம் தன் வாழ்க்கையில் அங்கேயே கழித்துவிட்ட தாய்க்கு, திடீரென அந்த இடத்தை இன்னொரு பெண் வந்து, ஆக்கிரமித்து விட்டாளே! என ஆதங்கப்பட்டு, வரும் பிரச்னைகளும் ஏராளம்.

3. பழைய கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறுவதாலும், அதை கட்டாயப்படுத்துவதாலும் கூட சில வீடுகளில் மாமியார் - மருமகள் பிரச்னை ஏற்படுவதுண்டு. செல்லமாக, அம்மா, அப்பா வீடுகளில் வளரும் பெண் குழந்தைகள் அதே எண்ணத்துடன், கணவன் வீட்டில் எதிர்பார்க்கும்போது, மாமியாரால் கண்டிக்கப்படுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிறு சிறு சச்சரவுகள் தொடங்கி, பெரும் பிரச்னைகளில் முடிவடைவதும் உண்டு. உணவு, உடை போன்றவற்றில் அம்மா, அப்பா வீட்டில் உள்ளதுபோல, இங்கே இருக்க முடியவில்லை என்ற ரீதியில் பிரச்னை ஏற்படுகிறது. பெரியவர்கள், ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என உத்தரவு போடும்போது பிரச்னை ஏற்படுகிறது.

4. அவன் அப்படியே அந்தப் பக்கம் சாய்ந்துவிட்டான். மனைவியின் அம்மா, அப்பாவுக்கு, அந்தக் குடும்பத்துக்கு என்ன தேவையோ கவனித்துக்கொள்கிறான். எங்களைச் சுத்தமாகக் கண்டுகொள்வதே இல்லை. மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை அவளிடமே கொடுத்துவிடுகிறான்.

5. பணத்தை சேமித்து வைக்காமல், ஊதாரித்தனமாக செலவு செய்கின்றனர், பெரியவர்களுக்கு மரியாதை தரவில்லை என பல விஷயங்கள் உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது.

மாமியார் - மருமகள் உறவில் விரிசல் ஏன் ஏற்படுகிறது?

தன்னுடைய மகன் மீது மென்மையாக அன்பைக் கொண்டிருக்கும் தாய்க்கு, திடீரென மாற்றம் ஏற்படும்போது, அதை ஏமாற்றமாக உணர்கிறார். இனிமேல் நமக்குப் பாதுகாப்பு இல்லையோ என்ற சந்தேகம் அவருக்கு மேலிடுகிறது.

பொதுவாக சமூகத்தில் மாமியார் - மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராளிகள் என நம்மிடையே பரவலான எண்ணம் உள்ளது. தங்கள் கருத்தே சரியானது என இரு தரப்பினரும் நினைப்பது, அதை ஒருவர் மீது ஒருவர் கட்டாயமாகத் திணிப்பது போன்றவற்றாலும் பிரச்னை ஏற்படுகிறது.

இரு சாராருக்கும் இடையே புரிதல் குறைவாக உள்ளது. முதிர்ச்சியின்மை இல்லாதது, மனம் விட்டுப் பேசாமல் இருத்தல், வெளி ஆட்கள் தலையீடு போன்றவற்றாலும் பிரச்னை வருகிறது.

பிரச்னைகளை தீர்ப்பதற்கு என்னதான் வழி?

1. ஏற்றுக்கொள்ளுதல்: மாமியாரை மருமகள் ஏற்றுக்கொள்வது முக்கியமானது. தன்னுடைய கணவனை வளர்த்த விதத்தில் மாமியாருக்கு உள்ள பங்கினை மருமகள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல, தனது மகன் வாழ்க்கையில் ஒரு அங்கம் மருமகள் என்பதையும் மாமியார் ஏற்றுக்கொள்வது அவசியமானது.

2. சில விஷயங்களை மாற்றவே முடியாது என உணரும்போது, அதனுடன் எப்படி ஒத்துப்போகலாம் என எண்ண வேண்டும்.

3. வயதான காலத்தில் மாமியாருக்கு ஏற்படும் சில சிரமங்களைப் புரிந்து கொண்டு, சிறிய உதவிகள் செய்வது, அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும், தேநீர், தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்குவது போன்ற சேவைகளை மருமகள் செய்ய வேண்டும். இதேபோல, மருமகளுக்குச் சமையலறையில் சிறு, சிறு உதவிகளைச் செய்தால், உறவைப் பலப்படுத்தும்.

4. வெளியே செல்லும்போது ஒருவருக்கொருவர் உங்களுக்கு ஏதேனும் தேவையா? எனக் கேட்பது மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும். மொத்தத்தில் உறவில் குறை காண்பவருக்கு வாழ்க்கையை ரசிக்கத் தெரியாது. வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு உறவில் குறை காணத் தெரியாது.

[கட்டுரையாளர் - ஹோமியோபதி மருத்துவர் - மனநல ஆலோசகர்
கும்பகோணம்]

தமிழ் சினிமாவில் உறவுகளின் மேன்மையை பறைசாற்றும் படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், அவற்றை உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் என்றால் வெகு சொற்பமே. 

உதாரணமாக அப்பா - மகள் , அம்மா - மகன், அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பிகள் ஆகிய உறவுகளின் மேன்மையை பேசும் படங்கள் தொடர்ந்து தமிழில் வெற்றிபெற்று அது வெற்றிக்கான ஃபார்முலாவாகி விட்டன. உறவுகளுக்குடையே நிலவும் பிரச்னைகளை சோகம் பிழிய பிழிய சொன்னால் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. உதாரணமாக சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே. ஆனால் அதனை ஓரளவுக்காவது சுவாரசியமாக சொன்னால் வெற்றிபெறலாம் என்பதுதான் உண்மை. 

1960களில் பாசமலர்  என்ற படத்துக்காக கண்ணீர் விட்டது ஒரு தலைமுறை. 30 வருடங்களுக்கு பிறகு வெளியான கிழக்குச் சீமையிலே படத்திலும் அதே அண்ணன் - தங்கை கதை தான். கூட்டம் கூட்டமாக திரையரங்குகள் சென்று கண்ணீருடன் திரும்பியது ஒரு தலைமுறை. கிட்டத்தட்ட  அடுத்த 30 வருடங்களுக்குப் பிறகு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்கும் ஒரு தலைமுறை கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறது. இது அண்ணன் - தங்கை உறவுகளுக்கு மட்டுமல்ல, மற்ற உறவுகளுக்கும் பொருந்தும். 

நம் தமிழ் சமூகத்தில் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் உறவுகளுக்கு இருக்கும் வலிமை குறையவே குறையாது என்பதற்கான சான்றுதான் இது. திரைப்படங்களில் அதிகம் பேசாத, விவாதிக்கப்படாத உறவுகளில் ஒன்று மாமியார் உறவு. அப்படியே திரைப்படங்களில் மாமியார் உறவை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்திருந்தாலும், அந்த உறவை எதிர்மறை கதாப்பாத்திரமாகவே சித்திரித்திருப்பார்கள். உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் குறைவே. 

அந்த வகையில் இயக்குநர் வி.சேகரின் படங்கள் முக்கியமானவை. அவரின் 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'நான் பெத்த மகனே' உள்ளிட்ட படங்கள் முக்கியமானவ. இதில் நான் பெத்த மகனே படத்தில் மனோராமா தனது மகன் 'நிழல்கள்' ரவிக்கு ஊர்வசியை மணமுடிப்பார். ஒரு கட்டத்தில் தன் மகன் மனைவியின் மீது அதிகம் நாட்டம் கொண்டராக மாறிவிட்டதாக மனோராமாவுக்கு தோன்றும். உடனடியாக தன் மகனை  மீட்பதாக நினைத்துக்கொண்டு மருமகளை கொடுமைப்படுத்த துவங்குவார். மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் ஊர்வசி தற்கொலை செய்துகொள்வார். 

மாமியார் கொடுமையின் காரணமாகவே ஊர்வசி இறந்தவிட்டதாக ஊரே மனோராமாவை திட்டும். அவரது மகன் நிழல்கள் ரவி கூட மனோராமாவை தான் குற்றம் சொல்லுவார். ஆனால் வழக்கறிஞரான ராதிகா அதன் பின் இருக்கும் உளவியல் சிக்கலை புரியவைப்பார். இந்தப் படத்தில் மாமியாராக நடித்திருக்கும் மனோராமாவின் நடிப்பு மிக முக்கியமானது. அவரது நடிப்பு, நேர்மறையாகவும் இல்லாமல் எதிர்மறையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டும். அதாவது தன் மகன் மீது இருக்கும் பாசத்தால் தான் அவர் அப்படி நடந்து கொண்டிருக்கிறார் என நமக்கு அந்த வேடத்தின் மீது சிறிது கருணை ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அந்த வேடம் வில்லி வேடமாகிவிடும். 

இதேப் போல ரஜினிகாந்த் நடித்துள்ள மாப்பிள்ளை திரைப்படம், திமிர் பிடித்த மாமியார் வேடத்தை ஒரு மருமகன் எப்படி அடக்குகிறார் என்பதே படத்தின் கதை. ரஜினிகாந்த் படங்களில் பெண் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதற்கு மாப்பிள்ளை, மன்னன், படையப்பா, சந்திரமுகி இப்படி சில உதாரணங்களை சொல்லலாம். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களின் பாத்திரங்கள் மிக சிறியதாகவே எழுதப்பட்டிருக்கும். அதனை நடிகர்கள் அனுமதிப்பதில்லை. நடிகர் ரஜினிகாந்த் அதற்கு விதி விலக்கு. 

ஆனால் அப்படி பெண் நடிகர்களுக்கு அவரது படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும் அந்த வேடங்கள் மிகவும் பிற்போக்குத்தனமாகவே எழுதப்பட்டிருக்கும். ஒரு பெண் தன் விருப்பம்போல் இருந்தால், பிடித்ததையெல்லாம் செய்தால் அவள் திமிர் பிடித்தவள். அந்தத் திமிரை கதாநாயகனான ரஜினிகாந்த் அடக்குவார். அதுதான் மாப்பிள்ளை படத்திலும் நடந்தது. இந்த சமூகத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என எழுதப்படாத விதி இருக்கிறதோ, அந்த விதிப்படி தான் அந்த வேடம் எழுதப்பட்டிருக்கும். 

ஆனால் அந்தப் படத்தை இன்றளவும் ரசிக்கவைப்பது ரஜினிகாந்த், மற்றும் ஸ்ரீவித்யாவின் நடிப்பு தான். குறிப்பாக ஸ்ரீவித்யா எந்தவிதமான பாத்திரங்களையும் மிக சரியாகக் கையாளக் கூடியவர். கொஞ்சம் கூடவோ, குறையவோ தெரியாது. உதாரணமாக அபூர்வ ராகங்களில் ரஜினிகாந்த்தின் முன்னாள் மனைவியாக ஸ்ரீவித்யா நடித்திருப்பார். பின்னர் உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அக்காவாக, தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக, மாப்பிள்ளை படத்தில் அவருக்கு மாமியாராக நடித்திரிப்பார். ஆனால் ஒரு படத்தில் கூட இருவரது நடிப்பும் வித்தியாசமாகவோ, உறுத்தலாகவோ தெரியாது. பெரும்பாலும் கண்களிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுவார். 

அதே மாப்பிள்ளை படம் மீண்டும் தனுஷ் நடிப்பில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீவித்யா அளவுக்கு தனுஷ் மற்றும் மனிஷ் கொய்ராலாவின் நடிப்பு ரசிகர்களைக் கவராதது கூட அந்தப் படம் தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம். 

இதே போல பாலச்சந்தரின் பூவா தலையா, அந்தப் படத்தின் தழுவலாக சொல்லப்படும், கந்தா கடம்பா கதிர் வேலா உள்ளிட்ட படங்கள் மாமியார் வேடத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளன. ஆனால் அந்தப் படங்கள் மேலோட்டமாக மாமியார் வேடம் என்றாலே திமிர் பிடித்தவர் என்றே அனுகியிருக்கின்றன.  ராம்கி - குஷ்பு இணைந்து நடித்த எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்றொரு படம். 

அந்தப் படத்தில் குஷ்புவின் மாமியாராக வடிவுக்கரசி நடித்திருப்பார். அவருக்கு தன் குடும்பத்து வாரிசாக ஆண் குழந்தை வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார். அதன் காரணமாக தன் மருமகள் குஷ்புவை கொடுமைப்படுத்துவார். இறுதியில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்த உடனே திருந்திவிடுவார். பெரிய பாராட்டத்தக்க வேடம் எல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்த வேடத்துக்கு ஒரு கொள்கை என்ற ஒன்றாவது இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் வரும் மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கும். 

விசில் படத்தில் நடிகர் விவேக்கிற்கு யார் மனதில் என்ன நினைத்தாலும் கேட்டுவிடும். ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவேக் நின்று கொண்டிருப்பார். அப்போது அங்கு வரும் மாமியார் மருமகள்கள் ஒருவரையொருவர் பழி தீர்க்க மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருப்பர். ஆனால் வெளியில் சிரித்து பேசுவர். அதனை கேட்கும் விவேக் அதிர்ச்சியாகி அவர்களிடமே கேள்வி கேட்க, அங்கே குடுமி பிடி சண்டை நடக்கும். இது ஒரு நகைச்சுவைக் காட்சி தான். ஆனால் மாமியார் மருமகள்கள் என்றாலே ஒருவருக்கொருவர் பிடிக்காமல் சண்டையிட்டுக்கொள்வர் என்று மக்கள் புரிந்து வைத்துக்கொள்வதற்கு இது ஒரு உதாரணம்.

சமீபகாலமாக ஒரு விடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், நடிகர் கார்த்திக் தனது மாமியார் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அவருடன் அமந்து சாப்பிடும் அனைவரும் தங்கள் கண்களை துணியால் கட்டிக்கொள்வர். பரிமாறும் மாமியாரும் துணியால் கண்களைக் கட்டியிருப்பார். காரணம் கேட்கும் கார்த்திக்கிடம், அவரது மாமியார், நீங்கள் நன்றாக சாப்பிடுவீர்கள். நீங்கள் சாப்பிடும்போது அதனை நாங்கள் பார்த்தால், எங்கள் கண்பட்டு அதனால் உங்கள் உடலுக்கு தீங்கு நேரலாம் இல்லையா அதனால் தான் என்கிறார். ஒன்று காரணமேயின்றி மாமியாரை மிக மோசமாக காட்டுவார்கள். இல்லை அதீத நல்லவர்களாக காட்டி கடுப்பேத்துவார்கள். இவ்வளவு ஏன் மாமியார் வீடு என்று கூட ஒரு படம் இருக்கிறது. ஆனால் தலைப்பில் மாமியாருக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட படத்தில் கொடுக்கவில்லை என்பது தான் வேதனை. 

அந்த வகையில் நான் பெத்த மகனே திரைப்படம் தவிர, மாமியார் வேடத்தை உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் என்பது தமிழில் ஒன்று கூட இல்லை என்பது தான் கசக்கும் உண்மை. எல்லா உறவுகளையும் போல மாமியார் என்ற உறவும் உன்னதமானது தான். மாமியாரைக் கொண்டாடி படமாக்க சொல்லவில்லை. அவர்களை உள்ளது உள்ளபடி இயல்பாக படங்களில் காட்டுங்கள், அவர்களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்களை புரந்துகொள்ளுங்கள் என்பதே இந்த மாமியார் தினத்தில் நாம் வைக்கும் கோரிக்கை. இன்னொரு அம்மாவாக திகழும் அனைத்து மாமியார்களுக்கும் மாமியார் தின வாழ்த்துகள். 

மாமியார் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் மருமகளாக அல்லது மருமகனாக இருந்தால், இந்த நாளை கொண்டாடத் திட்டமிடலாம்.

மாமியார் - மருமகள் என்றாலே எதிரும் புதிரும் என்ற பார்வை தற்போது மாறி வருகிறது. பல வீடுகளில் மாமியார் - மருமகள் எல்லாம் தோழிகளைப் போல பழகும் போக்கும் அதிகரித்துவிட்டது. 

அதே வேளையில், என்னங்க கிண்டலா? மாமியார் தினம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது? இதில் மாமியார் தினத்தைக் கொண்டாட யோசனை வேறு கொடுக்கிறீர்களா என்று எங்கள் மீது கோபக் கனலை வீசுபவர்களும் உண்டு.

மாமியார் என்பவர் உங்களுக்குப் பிடித்தவராக இருந்தாலும் இல்லையென்றாலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் தாய். எனவே, அவர்தான் உங்கள் மாமியார்.. அதை மாற்ற முடியாது. அவரும் கொண்டாடப்பட வேண்டியவர்தான்.

மாமியார் தினத்தைக் கொண்டாடுவது என்றால் ஏதோ மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து நூறு பேருக்குச் சொல்லி செய்யப்போவதில்லை. உங்கள் மாமியாருடன் இருக்கும் சில சின்னச் சின்ன பிணக்குகளை கூட்டிக் கழித்து பூஜ்யமாக்கும் ஒரு நாளாகக்கூட இதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

வயதில் பெரியவர். தாய்க்கு நிகரானவர். எனவே, மாமியார் நாளில், அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில சின்ன சின்ன யோசனைகளைத்தான் சொல்லப் போகிறோம். மனதிருந்தால் மார்க்கம் உண்டு.

உங்கள் மாமியாருடன் அடிக்கடி போனில் பேசுவரோ இல்லையோ, மாமியார் தினத்தன்று அவருக்கு போன் செய்து நலமா என்று விசாரியுங்கள். அவரது நாள்கள் எப்படிச் செல்கின்றன என்று கேளுங்கள். அவருடன் சில மணித் துளிகளாவது பேசுங்கள். அவர் பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள். சில முதியவர்களுக்கு பேச்சுத் துணைதான் பெரும் தேவையே. அடிப்படையில் அதை நிறைவு செய்வதே போதுமானது.

கூடுதலாக, இன்று உங்கள் நினைவு வந்ததாக அவரிடம் சொல்லுங்கள். அவருடன் நீங்கள் பெற்ற ஒரு அனுபவத்தை, அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதைச் செய்தாலே போதும்.. ஒரு குறைந்தபட்ச மாமியார் தினத்தைக் கொண்டாடியதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

அதற்கும் மேல், ஏதேனும் செய்ய நினைத்தால், ஒரு வேளை புதிய மருமகளாக / மருமகனாக இருக்கும்பட்சத்தில், 

மாமியாருக்குப் பிடித்த பரிசுபொருள் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பரிசளிக்கலாம். அவரை பெருமைப்படுத்தி நாலு வார்த்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைக்கலாம். அவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். வெளியில் சென்று உணவருந்த அழைக்கலாம். தினமும் சமைப்பவராக இருந்தால், ஒருநாள் ஓய்வு கொடுத்து சமைக்கலாம் அல்லது வெளியிலிருந்து உணவை வரவழைத்துக் கொடுக்கலாம்.

மாமியார் உங்களுடன் இருந்தால், அவருக்கு மிகவும் பிடித்த உறவினர் அல்லது நண்பரை, வரவழைத்து இன்ப அதிர்ச்சிக் கொடுக்கலாம். 

அவருக்கு மிகவும் பிடித்த கோயிலுக்கு அழைத்துச் செல்லவோ, அழைத்துச் செல்ல முடியாவிட்டால், அங்கிருந்து கோயில் பிரசாதத்தையோ வரவழைத்துக் கொடுக்கலாம்.

வெகு நாளாக அவருக்குத் தேவை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பூர்த்தி செய்யலாம், முயற்சிக்கலாம், பூர்த்தி செய்வதாக வாக்குக் கொடுக்கலாம். 

எப்படியாகினும்.. கொண்டாட்டமோ, கொண்டாடவோ பெரிதாக எதுவும் தேவையில்லை. மனதார வாழ்த்தி, அவரது வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டாலே போதும். 
 


"நீ மட்டும் எனக்கு மருமகளா வந்த.. அந்த வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற இடுப்பு எலும்பை உடைச்சி மாலையா போட்டுக்குவேன்..."

"நீ மட்டும் என் மாமியாரா வந்த.. முன் பல் எல்லாத்தையும் உதிர்த்து கோத்து ஒட்டியானமா கட்டிக்குவேன்.." இது சின்னக்கவுண்டர் படத்தில் வரும் மனோரமா - சுகன்யா நடித்த கதாப்பாத்திரங்கள் பேசிக் கொள்ளும் வசனமாக அமையப்பெற்றிருக்கும்.

உண்மையிலேயே சுகன்யா மருமகளாக வீட்டுக்குள் வரும் போது, இந்த மைன்ட் வாய்ஸ், அங்கிருக்கும் அனைவருக்குமே கேட்கும். அதனால் மனோரமா - சுகன்யாவுடன் சேர்ந்து அனைவரும் சிரிக்க, இது புரிபடாத சின்ன கவுண்டர் விஜயகாந்தோ, எதற்கு வம்பு என்று சிரித்து வைப்பார்.

குடும்பச் சித்திரத்தில் இது ஒரு அருமையான நகைச்சுவைக் காட்சி மட்டுமல்ல, இத்திரைப்படத்தில் மாமியார் - மருமகளின் கதாப்பாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இத்தனையும் இங்குச் சொல்லக் காரணம்.. மாமியார்களைப் பற்றி நாம் சொல்லப் போகும் விஷயம்தான்.

என்ன திடீரென மாமியார்களைப் பற்றி என்று சிந்திக்கிறீர்களா? காரணம் இல்லாமல் இல்லை. அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர் நாள் என்பது போல அக்டோபர் 4வது ஞாயிற்றுக்கிழமை மாமியார் தினம் கொண்டாடப்படுகிறது. 

மாமியாரைக் கொண்டாட ஒரு நாளா? என்று ஆச்சரியப்படுபவர்களுக்கும், மாமியாரைக் கொண்டாடவெல்லாம் ஒரு நாளா? என்று கோபப்பார்வை பார்ப்பவர்களுக்கும் ஒரு பதில் உண்டென்றால் அது ஆம் என்பதுவே.

தாயை கொண்டாடுவது போல மாமியாரும் கொண்டாடப்பட வேண்டியவர்தான். நமக்கான வாழ்க்கைத் துணையை பெற்றெடுத்து பெரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கி, நம் கையில் ஒப்படைத்திருக்கும் மாமியாரும் தாய்க்கு நிகரானவர்தான். ஆனால் விதிவசத்தால் கொண்டாட முடியவில்லை, கொண்டாடப்படுவதில்லை. 

அது ஏன் என்றெல்லாம் இங்கே அலசப்போவதில்லை. மாறாக. மாமியாரில் இரண்டு ரகம் உண்டு. அந்த இரண்டு ரகம் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வேறுபடுகிறது என்பதைத்தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.

சொந்தத்தில் திருமணம் முடித்தவர்களுக்கு அத்தை, மாமி, ஏன் பாட்டி கூட மாமியாராகிறார். ஆணைப் பொருத்தவரை அக்காவே மாமியாராவதும் உண்டு. ஆனால் ஒரு பெண்ணுக்கு வாய்க்கும் மாமியாரும், ஆணுக்கு வாய்க்கும் மாமியாரும் குணத்தால், மனத்தால் எத்தனை வேறுபடுகிறார்கள்? உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

ஒரு பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் போது, அங்கே தனது மகனின் வாழ்க்கைத்துணையாக மருமகளைப் பார்க்காமல், தன் மகன் மீதான அன்பு, பாசம், ஆதிக்கம், வருமானத்தைப் பங்குப் போட வருபவளாக மருமகளைப் பார்க்கத் தொடங்கும் போதுதான் பிரச்னையும் தொடங்குகிறது. திருமணத்துக்குப் பிறகு மகன் செய்யும் ஒவ்வொரு செயலையும், பூதக் கண்ணாடி வைத்து உற்று கவனித்து, அதில் ஏற்படும் மாறுபாடுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து, அதன் தாக்கத்தை மருமகள் மீது கொட்டுவதும் உண்டு.

ஆனால், மகளைக் கட்டிக் கொண்டு மருமகனாக வீட்டுக்குள் வருபவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனிவிதம்தான். நம் பெண்ணைக் கட்டிக் கொண்டு கடைசி வரை காப்பாற்றப் போகும் மருமகனை, ஒரு தாய், தனது மாமனாருக்கும் அதிகப்படியாக மதிப்பதைப் பார்க்கலாம். இது சில குடும்பங்களில் மாறுபடலாம். அது வேறுக் கதை.

வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தனது குடும்ப பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்து, அதை அவர் முழுமையாகச் செய்ய வைப்பதில் குறியாக இருப்பார் மாமியார். ஆனால், வீட்டுக்கு வந்த மருமகனின் பழக்க வழக்கங்களை நாசுக்காகவோ, மேம்போக்காகவோ கேட்டறிந்து கொண்டு அதற்கேற்ப வீட்டில் சில மாற்றங்களைச் செய்வதோடு, மகளையும் அதற்கேற்ப மாறச் சொல்வார்.

மருமகளுக்கு என்னப் பிடிக்கும் என்பதைப் பற்றி எந்த மாமியாரும் லட்சியம் கொள்வதில்லை. அப்படியே ஏதாவது ஒன்றை மருமகள் பிடிக்காது என்று சொல்லிவிட்டால் அது பற்றி ஒரு புராணமே பாடப்படும்.  ஆனால் மருமகனுக்குப் பிடித்த உணவை சமைத்துக் கொடுப்பதில் தாயை விட மாமியார்களை அடித்துக் கொள்ளவே முடியாது. பார்த்து பார்த்து சமைத்துக் கொடுப்பார்கள். அது மட்டுமா? மருமகன் வந்துவிட்டால் வீட்டில் சமையல் வேலை திருமண வேலை போல நடக்கும். 

மருமகன் ஏதேனும் தவறு செய்து விட்டதாக மகள் கண் கலங்கினால் கூட, அவரை விட்டுக் கொடுக்காமல், மகளைத் திட்டி அனுசரித்துப் போகுமாறு சொல்லும் மாமியாரே, தன் வீட்டுக்கு வந்த மருமகள் ஏதேனும் தெரியாமல் சிறிய தவறு செய்து விட்டால் கூட அதைப் பெரிதாக்கி, பலூன் ஊதி அவரது பெற்றோர் வீடு வரைக்கும் பறக்கவிடுவார்கள்.

பெரும்பாலும் மருமகனிடம் மாமியார் பேசும் வழக்கம் கூட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இல்லை. பேசுவது என்ன, அவர் இருக்கும் பக்கத்துக்கே மாமியார் போக மாட்டார். பேசுவது கேட்பது எல்லாம் மறைவிலிருந்துதான். அதெல்லாம் நகரத்தில் இல்லை என்று ஆணியடித்தார்போலச் சொல்பவர்கள், பல கிராமங்களுக்குச் சென்று கேட்டுப் பார்க்கத்தான் வேண்டும் இது எவ்வளவு உண்மையென்று. இதை நிச்சயம் மற்றொரு பக்கத்தில் ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

இப்படி, பெண்ணின் மாமியாருக்கும் ஆணின் மாமியாருக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றன. ஒரு பெண்ணுக்கு மகனும், மகளும் இருக்கும்பட்சத்தில், இருவருக்கும் மணமுடித்துக் கொடுத்த பிறகு, தனது மகள் புகுந்த வீட்டில் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பும் தாய், தனது மருமகளை அவ்வாறு நடத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். அங்கிருந்துதான் மாற்றம் தொடங்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல, மாற்றத்தை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு வந்தால், அன்னையர் தினத்தைப் போல, தந்தையர் தினத்தைப் போல நிச்சயம் ஒவ்வொரு ஆண்டும் மாமியார் தினமும் வெகுச் சிறப்பாக கொண்டாடப்படும் நாள்களில் ஒன்றாக வெகு விரைவில் இணைந்து விடும்.

மாமியார்  என்ற ஒற்றைச் சொல்தான் பல குடும்பங்களின் அஸ்திவாரங்களாக இருக்கும். எனவே, அந்த அஸ்திவாரம் அதிகம் ஆடாமலும், ஆட்டங்கான வைக்காமலும் இருப்பதுவே அழகான குடும்பங்களின் தலையாய கடமை. இதில் இரு தரப்புக்குமே பொறுப்புகள் அதிகம். அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் கைமேல் பலன் நிச்சயம்.

மாற்றத்தை இந்த ஆண்டு மாமியார் தினத்தன்றே தொடங்குவோம்.. 
 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா திருமணம் நடந்தபோது அது ஏதோ தேவதைக் கதைகளில் வரும் திருமணம் போலவே நடந்தது. 1981ல் அந்த திருமணம் நடந்தபோது டயானாவுக்கு வயது வெறும் 20.

இங்கிலாந்து ராணியும், இளவரசர் சார்லசின் தாயாருமான இரண்டாம் எலிசபெத்தின் முழு ஒப்புதலுடன்தான் சார்லஸ்-டயானா திருமணம் நடைபெற்றது.

ராணி எலிசபெத் - டயானா இடையிலான உறவு வழக்கமான மாமியார் மருமகள் உறவாகவே இருந்தது. மாமியாரைக் கண்டு பயந்து அவரிடம் குறிப்பிட்ட ஒரு இடைவெளியை டயானா கடைப்பிடித்து வந்ததாகச் சொல்வார்கள். அரச குடும்ப நடைமுறைகள் டயானாவுக்கு சரிவர ஒத்துவரவில்லை என்று ராணி எலிசபெத் குறைபட்டுக் கொண்டதாகக் கூடச் சொல்வார்கள்.

டயானா ஸ்பென்சர், மெல்ல மெல்ல சின்னப் பெண் என்ற நிலையில் இருந்து உருமாறி பின்னர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். இங்கிலாந்து மக்கள் அவரை ‘மக்களின் இளவரசியாக’ கொண்டாடினார்கள். 

டயானாவின் மாமியாரான இங்கிலாந்து ராணி எலிசபெத் எங்கே போனாலும் கையில் ஒரு சிறிய கைப்பையை வைத்திருப்பார். அந்த கைப்பைக்குள் என்னதான் இருக்கும் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் டயானா எங்கே சென்றாலும் வெறும் கையை வீசியபடியேதான் செல்வார்.

இந்த ஒளிவுமறைவில்லாத போக்கு காரணமாக, மாமியார் ராணி எலிசபெத்தை விட மருமகள் டயானாதான் இங்கிலாந்து மக்களின் இதயம் கவர்ந்தவராக இருந்தார். இது ராணி எலிசபெத்துக்கு ஓரளவு பொறாமையாகக் கூட இருந்திருக்கும்.

ஆனால், இன்பமாக நீடித்திருக்க வேண்டிய இளவரசர் சார்லஸ்-டயானா திருமண வாழ்வு, கமீலா பார்க்கர் என்ற பெண்ணால் ஒரு கட்டத்தில் திடீர் முடிவுக்கு வந்தது. 

இளவரசர் சார்லசுக்கு, கமீலாவுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் டயானா நொறுங்கிப் போனார். அதன்பின் 1996ல் சார்லசுடன்  விவாகரத்து நடந்தது. அதன்பிறகு ஹெர் ராயல் ஹைனஸ் என்ற பட்டம் டயானாவிடம் இருந்து நீங்கியது. இந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள டயானா நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை.

மகன் வில்லியம் மட்டும், ‘கவலைப்படாதேம்மா! ஒருநாள் நான் இங்கிலாந்துக்கு மன்னராவேன். உனக்கு அந்தப் பட்டம் திரும்பக் கிடைக்கும்’ என்று தாயாரை சமாதானப்படுத்தினான்.

விவாகரத்துக்குப்பின் டயானா, பல்வேறு அறப்பணிகளைக் செய்தார். ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கான நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் புரவலராக அவர் இருந்தார். உலகம் முழுக்க கண்ணிவெடிகளை ஒழிக்கப் பாடுபட்டார்.

இந்த நிலையில் 1997ஆம் ஆண்டு, நடந்த எதிர்பாராத கார் விபத்து, எமனாக வந்து டயானாவை வேறு உலகத்துக்கு அவசரமாகக் கூட்டிச் சென்று விட்டது.
கமீலா பார்க்கர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். முதல் திருமணம் மூலம் அவருக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. 

கமீலாவும், டயானாவும் தோழிகளாக இருந்தவர்கள். அதுபோல, சார்லசும், கமீலாவின் முதல் கணவரும் நண்பர்கள்.

கமீலா பார்க்கரை சார்லஸ் மறுமணம் செய்ய விரும்பிய போது இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கமீலா பார்க்கரை சார்லசைத் தவிர வேறு யாருக்கும் இங்கிலாந்தில் பிடிக்கவில்லை.
கமீலாவுடன் மகனுக்கு இருந்த காதலை முறிக்க ராணி எலிசபெத் சில ரகசிய ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூட சொல்வார்கள்.

இந்த நிலையில், கமீலா பார்க்கரை மணந்தால் மட்டுமே சமூகத்தில் தனக்கு மரியாதை நீடிக்கும் என்ற முடிவுக்கு சார்லஸ் வந்தார். 2005 ஆம் ஆண்டளவில்தான் ஒருவழியாக இந்தத் திருமணத்துக்கு ராணி எலிசபெத் ஒப்புக் கொண்டார். கமீலா பார்க்கரை அவர் சந்திக்க அனுமதித்தார்.
2005ல் சார்லஸ்-கமீலா திருமணம் நடந்தபோது ராணி எலிசபெத் அதில் பங்கேற்கவில்லை. கமீலாவுக்கான திருமண மோதிரம்கூட, பக்கிங்காம் அரச குடும்பத்தின் பாரம்பரிய தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம் அல்ல. 

ராணி எலிசபெத்–கமீலா பார்க்கர் இடையிலான மாமியார் - மருமகள் உறவு ரொம்ப நெருடலான உறவாகத்தான் இருந்தது. இருவரும் தப்பித்தவறி சந்தித்துக்கொள்ளும் வேளைகளில் அவர்களது உடல்மொழியே அதைக் காட்டிவிடும்.

இத்தனைக்கும் குதிரைப் பந்தயம் மாதிரியான சில பொழுதுபோக்குகளில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஒரே மாதிரியான ரசனை உண்டு.
சார்லஸ்-கமீலா திருமணம் நடந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆனபிறகே மாமியார் எலிசபெத்துக்கும், மருமகள் கமீலாவுக்கும் இடையே ஒரு இணக்கச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைத்து, கூடவே இங்கிலாந்தையும் ஆட்டிவைத்த கரோனோ பெருந்தொற்று கூட இந்த இணக்கச் சூழ்நிலைக்கு ஒரு காரணம் எனக் கூறலாம்.

மாமியார் மெச்சும் மருமகளாக கமீலா இல்லாவிட்டாலும்கூட, ஏதோ ஒரு விதத்தில் இந்த உறவு நீடித்து வருகிறது.

குடும்ப உறவுகள் மேம்பட மாமியார்-மருமகள் உறவு வலுவாக அமைய வேண்டும். மாமியார் - மருமகள், அம்மா-மகள் போல நல்ல தோழியாக இருந்தால் ஆனந்தம் விளையாடும் வீடு தான்.

கடல் நீர் வற்றினாலும், காகம் வண்ணம் மாறினாலும் மாமியார்-மருமகள் உறவு ஒன்றோடு, ஒன்று முரண்பட்டது என்பது பேச்சு வழக்கு. அம்மா- மகள் என்ற உறவு என்பது இயற்கையாக உருவானது என்பதால் பாசப் பிணைப்பையும் இயற்கையே கொடுத்து விடுகிறது.

மாமியார்-மருமகள் உறவில் அம்மா-மகள் உறவை செயற்கையாக உருவாக்க முயலும் போது, அது செயற்கையான பாசப் பிணைப்பைதான் உருவாக்கும் என்பது குடும்ப வாழ்வில் அனுபவம் பெற்றவர்களின் கூற்றாக உள்ளது.

இருப்பினும், இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் மாமியார்-மருமகள் ஒரே வீட்டில் வசிப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு இடத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே உள்ள சின்ன புரிதல்தான், பெரிய சிக்கல் எழாமல் தடுக்கிறது.

மனைவி அமைவது மட்டுமல்ல, மாமியார் அமைவதும் இறைவன் கொடுத்த வரமாகத்தான் பார்க்கப்படுகிறது. இத்தகைய வரத்தைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அத்தகைய வரத்தைப் பெற்று இணைந்த கைகளாக செயல்பட்டு வருபவர்கள்தான் ஜெயலட்சுமியும், பிரகதாவும்.

திருச்சியைச் சேர்ந்த இந்த இருவர்தான், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும், கரோனா தொற்றின் பொதுமுடக்கத்திலும் பலருக்கும் வயிறு நிரம்ப அன்னமிட்டு மகிழ்ந்தனர். இத்தோடு நிற்கவில்லை இவர்களது சமூக சேவை. தனது மகன் அறக்கட்டளை தொடங்கவும், ஆண்டுதோறும் சிறார்களுக்கான தீபாவளி கொண்டாட்டம், ஆதரவற்றோர் இல்லத்துக்கான உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி, ரத்ததானம், மருத்துவ முகாம் என பல தொண்டுகளை செயல்படுத்துவதில் காரண கர்த்தாவாக விளங்குகின்றனர்.

கணவர் (மோகன்) உடன் சுற்றிய நாள்களைவிட மாமியார் (ஜெயலட்சுமி) உடன் சுற்றிய நாள்கள்தான் அதிகம் என்கிறார் பிரகதா. பி.காம். பட்டதாரியான இவர், தனது 19 ஆவது வயதில் (2002இல்) திருமணம் முடித்து கணவர் வீட்டுக்கு வந்தார். இதற்கு அடுத்த 19 ஆண்டுகளும் மாமியார் (அம்மாச்சி) அன்புக் கடலில் மூழ்கி மூச்சு மூட்ட நிற்கிறார். அம்மாச்சி என்பது அம்மாவின் அம்மாவை அழைப்பதற்கான பெயர். தனது அம்மாச்சியான காசியம்மாளைப் போன்று, மாமியார் (ஜெயலட்சுமியும்) சிறு வயது முதலே தெரிந்த முகம் என புன்முறுவல் பூக்கிறார் பிரகதா.

மாமியார் தினத்தை முன்னிட்டு அவர் அளித்த சிறப்புப் பேட்டி

எனது வீடும், எனது கணவரின் தந்தை வீடும் அருகருகே இருந்தது. அதோடு மட்டுமின்றி எனது கணவரின் தாயான ஜெயலட்சுமி தபால்துறையில் உதவியாளராக பணிபுரிந்தார். எனது, தந்தையும் தபால்துறையில் பணிபுரிந்தவர்தான். எனவே, சிறு வயது முதலே அம்மாச்சி (மாமியாரான ஜெயலட்சுமி) அறிமுகம் உள்ளது. திருமணத்துக்குப் பின்பும் அம்மாச்சி என்றுதான் அழைக்கிறேன். எனது, மகன் சுஜித் பட்டப்பிடிப்பு பயின்று வருகிறார். மகள் சுஜிதா 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். எனது, குழந்தைகளின் பராமரிப்புக்காகவே பாதியிலேயே விருப்ப ஓய்வு பெற்றார் அம்மாச்சி.

பின்னர், நானும், அம்மாச்சியும் இணைந்து வீட்டின் ஒரு பகுதியில் பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடை வைத்து குடும்ப வருமானத்துக்கு முடிந்த பங்கை அளிக்கத் தொடங்கினோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது திருச்சி நீதிமன்ற சாலையில் இளைஞர்கள் பலர் கூடி தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது, போராட்ட நாள்கள் முழுவதும் நானும், அம்மாச்சியும் உணவு தயார் செய்து கொண்டு சென்று போராட்டத்தில் பங்கேற்றோருக்கு வழங்கினோம். கரோனா பொதுமுடக்கத்திலும் இதேபோல களம் இறங்கி பணியாற்றினோம். எங்களுக்கு ரோல்மாடலாக இருந்தது எனது கணவரும், அவருடைய மகனுமான மோகன்தான். ஏனெனில், அவர்தான் தனது நண்பர்கள் வட்டத்தை இணைத்து சேவை அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அவரைப் பார்த்து நாங்களும் சமூக சேவைக்கு வந்தோம். எனது, கணவருடன் ஊர் சுற்றிய நாள்களைவிட, அம்மாச்சியுடன் சுற்றிய நாள்கள்தான் அதிகம். கோயில், சுற்றுலாத் தலங்கள், கோடை வாசஸ்தலங்கள், பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு என சுற்றி வந்துள்ளோம். பெரும்பாலான சுற்று பயணத்தில் பணிநிமித்தம் கணவர் இடம்பெற முடியாது. நானும், அம்மாச்சி மற்றும் குழந்தைகள்தான் குதூகலமாக சுற்றி வருவோம். அம்மாச்சி இன்றி ஓரணுவும் எனது குடும்பத்தில் அசையாது. எனக்கு ஆடைகள் தேர்வு செய்வது தொடங்கி எனது ஒவ்வொரு விருப்பத்தையும் கேட்டு கேட்டு நிறைவேற்றுவார். எனக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரது தேவைகளையும் கேட்டு தட்டாமல் நிறைவேற்றித் தருவதில் முக்கிய பங்கு அம்மாச்சிக்கு உண்டு. பல, குடும்பங்களில் மாமியார்-மருமகள் உறவு சிக்கலாக இருக்கும் சூழலில், ஆண்டுதோறும் மாமியார் தினம் கொண்டாட வேண்டும் என்பது அவசியமானதுதான். அக்டோபர் மாதத்தின் 4ஆவது ஞாயிற்றுக்கிழமை மாமியார்களுக்கு மகத்துவம் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தினத்தை கொண்டாடுவதை தவிர்த்து எல்லா நாளுமே மாமியார்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

கூட்டுக் குடும்பங்கள் அரிதாகி, பெரும்பாலும் தனிக்குடும்பங்கள் என்றாகிவிட்டன. அதிலும், சிங்கிள் பேரண்ட் என்பதை பெருமையாகக் கூறிகொள்ளும் இன்றைய இளம்தலைமுறையால் வாரிசுகளை வளர்த்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்த முடியாது. எதிர்கால தலைமுறைக்கு அன்பையும், பண்பையும், நமது பண்பாட்டையும் கற்றுத் தருவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் மாமியார் (எனது அம்மாச்சிப் போன்று) ஒருவர் அவசியம். கூட்டுக் குடும்பம் என்ற வார்த்தைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மகனைப்பெற்ற தாய் மட்டுமே குடும்பத் தலைவியாக இருந்து வழிகாட்ட முடியும். அந்தக் குடும்பத் தலைவியின் மறுபெயர்தான் மாமியார். மாமியாரைப் போற்றுவோம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்கிறார் பிரகதா.

நமது நாட்டின் மிகப்பெரிய பலமே குடும்பக் கட்டமைப்புதான். அந்த குடும்பக் கட்டமைப்புகளுக்கு அடிப்படையாக இருப்பது உறவுகள். ஒவ்வோர் உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை. உறவுகளுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை, நமது பண்பாடும், பாரம்பரியமும் வழங்கி உள்ளது. நமது, வாழ்வில் உறவுகளைத் தவிர்த்து எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த வீடுகளிலும் நடைபெறுவதில்லை. 

கணவன்-மனைவி, அப்பா-மகன்-மகள், மாமன், மைத்துனன், கொழுந்தியாள், சித்தப்பா, சித்தி, தாத்தா-பாட்டி, பெரியப்பா-பெரியம்மா, அத்தை-மாமா, அண்ணன்-அண்ணி, அக்கா-அத்தான், தம்பி, தங்கை என எத்தனை, எத்தனை உறவுகள் நம்மைச் சுற்றி அத்தனையும் தவம். அதிலும், மாமியார்-மருமகள் உறவு குறிப்பிடத்தக்கது. 

காலங்காலமாகவே மாமியார்-மருமகள் உறவு என்பது சிக்கல் மிகுந்ததாக உள்ளது. தானே விரும்பி அழைத்து வரும் பெண்ணை தன் வாழ்நாள் எதிரியாக நினைக்கும் அளவிற்கு மோசமாகும் நிலையும் உள்ளது. மகனின் மீதான உரிமை, தன்னுடைய சாம்ராஜ்யத்தில் நுழைந்த புதிய உறவு, தன்னை விட படிப்பு, வருமானம், வேலை ஏதோவொன்றில் உயர்ந்த பெண், தனக்கான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடுமோ என்ற பயம் உள்ளிட்ட காரணங்கள்தான் பெரும்பாலும் மாமியார்-மருமகள் பந்தத்தை சிதைக்கின்றன.

இத்தகைய சூழலில் அன்றும், இன்றும், என்றும் மாமியார்-மருமகள் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் திருச்சியைச் சேர்ந்த 2 பெண் மருத்துவர்கள். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ந. நல்லுசாமியின் மனைவிதான் அந்த மாமியார் (ராமேஸ்வரி நல்லுசாமி). திருச்சியில் சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் சிறந்த மருத்துவர் என்ற பெயர் பெற்றவர். இவரது மருமகள்தான் லட்சுமி பிரபா. இவரும், மகப்பேறு மருத்துவர். இதய அறுவை சிகிச்சை நிபுணரான செந்தில்குமார் நல்லுசாமியை, 22 வயதில் திருமணம் முடித்து, பிறந்தவீட்டை விட்டு புகுந்த வீடு வந்தவர். தனது தாய் வீட்டில் இருந்த ஆண்டுகளைவிட மாமியார் வீட்டில் இருந்த ஆண்டுகள்தான் அதிகம் என்பதைவிட ஆனந்தம் என்பதே சரியாக இருக்கும் என்கிறார் லட்சுமி பிரபா. 

தனது மாமியார் குறித்து லட்சுமி பிரபா பகிர்ந்து கொண்டதாவது:

நான், எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தபோது திருமண பேச்சு எழுந்தது. திருமணம் முடிந்துதான் பயிற்சி மருத்துவராக ஆனேன். அப்போது தொடங்கி இப்போது வரை எனது முதுகெலும்பாகவும், என் குடும்பத்தின் அச்சாணியாகவும் விளங்குகிறார் எனது மாமியார் (ராமேஸ்வரி நல்லுசாமி). நான், மாமியார், அத்தை என நினைத்ததும் இல்லை. அழைத்ததும் இல்லை. அம்மா என்றுதான் இன்றுவரை அன்போடு அழைத்து வருகிறேன். எம்பிபிஎஸ் முடித்தவுடன் எந்தத் துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் எனது விருப்பத்துக்கே முன்னுரிமை அளித்தார். எனக்கு முன்னுதாரணமே அவர்தான் என்பதால், அவர் பிரசித்தி பெற்று விளங்கும் மகப்பேறு மருத்துவர் துறையை தேர்வு செய்து மேற்படிப்பு முடித்து இன்று நானும் மகப்பேறு மருத்துவராக வளர்ந்து நிற்கிறேன்.

எனது கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி, எனது இரு பிரசவத்தையும் பார்த்தது எனது அம்மாதான் (மாமியார்). முதல் மகன் சித்தார்த் யஷ்வந்த். இரண்டாவது மகன் அகிலேஷ் விஷ்வா. எனது, கணவர் செந்தில்குமார் நல்லுசாமி, அவரது தம்பி அருண்குமார் நல்லுசாமி ஆகியோரையும் இதய அறுவை சிகிச்சை நிபுணராக வளர்த்தெடுத்துள்ளார். அதோடு மட்டுமன்றி எனது மகன் சித்தார்த்தையும் மருத்துவராக்கியுள்ளார். இரண்டாவது மகன் அகிலேஷ், தற்போது நீட் தேர்வு எழுதி மருத்துவராகும் விளம்பில் நிற்கிறார். இத்தனைக்கும் அடித்தளமாகவும், ஆணிவேராகவும் இருந்தவர் எனது அம்மா (மாமியார்).

74 வயதிலும் பம்பரமாக சுழன்று, மருத்துவமனையில் அத்தனை கர்ப்பிணிகளையும், நேயாளிகளையும் அன்புடன் கவனித்து ஓய்வே இன்றி பணியாற்றி வருகிறார். அவர்தான் எனது ரோல்மாடல். செய்யும் பணியில் முழுமையும், திருப்தியும் வேண்டும் என்பது அவரது விருப்பம். அதுதான், அவரை ஒவ்வொரு நாளும் உற்சாகமாய் வைத்துள்ளது. எனக்கும், எனது கணவருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் எழுந்தால் மகன் என்பதற்காக எனது கணவருக்கு ஆதரவாக நிற்பதில்லை. எப்போதும், எனக்கு ஆதரவாகவே நின்றுள்ளார். நான், வைத்துள்ள புடவைகளில் பெரும்பகுதி அவர் எடுத்து கொடுத்ததுதான். எந்த விசேஷமாக இருந்தாலும் எனக்கான புடவை தேர்வு என்பது அவரது பணிதான். ஒருபோதும் எனது சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. சுதந்திரம் இருப்பதற்காக ஒருபோதும் அவர் தடத்தை விட்டு விலகிச் சென்றதில்லை. வீட்டிலும் (கூட்டுக் குடும்பம்) அவருடன்தான் இருக்கிறேன். மருத்துவமனையிலும் அவருடன்தான் இருக்கிறேன். வாழ்க்கைக்கும், சேவைக்கும் (மருத்துவம்) வழிகாட்டியாக இருக்கிறார்.

பெரும்பாலான பெண்களுக்கு பிறந்த வீடுதான் சொர்க்கம் என்பது வழக்கம். ஆனால், நான் எதிர்மறை. எனக்கு, புகுந்த வீடும், பிறந்த வீடும் வேறல்ல. அம்மா என்றே அழைத்து வருவதால் இதுவும் (மாமியார் வீடு) எனக்கு பிறந்த வீடுதான். எல்லோருக்கும், இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது. அந்த வகையில் நான் கொடுத்து வைத்துள்ளேன் என்கிறார் லட்சுமி பிரபா.

அக். 26 மாமியார் தினத்தையொட்டி திருச்சி கலை காவேரி கல்லூரி மாணவிகள் தங்களுடைய வருங்கால மாமியார்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

கே. அபிநயா (பிஏ மூன்றாமாண்டு): எனது வருங்கால மாமியார் என்னை தாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர், அவராக இருக்கலாம். நான், நானாக இருக்க அனுமதிக்க வேண்டும். நான், ஏதாவது தவறு செய்தால் கூட நேரடியாக என்னிடம் தெரிவித்து திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். மாறாக, குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடமும், எனது கணவரிடம் எனது குறையை தெரிவித்து பேசக்கூடாது. எங்கு சென்றாலும் அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும். நீ தனியே போ. நான், எனது மகனுடன் செல்கிறேன் என பிரித்துப் பார்க்காமல், எந்த விருந்து, விசேஷமாக இருந்தாலும் ஒன்றாகவே செல்ல வேண்டும். பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

எம்.எஸ். ஆஷ்லின் (பிஏ மூன்றாமாண்டு): எனது வருங்கால மாமியார் என்னுடன் தோழியாகப் பழக வேண்டும். அனைத்து விஷயங்களையும் நான் அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவரும் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.அனைத்து வேலைகளையும் என்னுடன் சேர்த்து செய்ய வேண்டும். என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவரது மகனை எப்படி பார்க்கிறாரோ, அதேபோல என்னையும் ஒரு மகளாக பார்க்க வேண்டும். மருமகளாக இல்லாமல் மகளாக நினைத்து அன்பு பாராட்ட வேண்டும்.

எஃப்: ரூத் மரிய வின்ஸி (பிஏ மூன்றாமாண்டு): மாமியார் என்பவர், இப்போதைய இளைய தலைமுறையினரைப் போன்று மார்டனாக, டிரண்டிங்காக இருக்க வேண்டும். பழங்காலத்தில் பெண்களை வைத்திருந்ததைப் போன்று வைத்திருக்கக்கூடாது. வீட்டில் எந்த வேலையாக இருந்தாலும் பகிர்ந்து செய்ய வேண்டும். மகன் என்பதற்காக அவருக்கு மட்டும் ஆதரவாக பேசாமல், மருமகளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும். எனது, அம்மா எப்படி என்னை பார்த்துக் கொள்வார்களோ அதுபோல இருக்க வேண்டும். என்னைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது. பிறர் முன்பு என்னை விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஜே. வெண்ணிலா (பிஏ மூன்றாமாண்டு): எனது மாமியார், எனது தோழியாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும். எத்தனை கஷ்டம் வந்தாலும் என்னோடு அவர் இருக்க வேண்டும். அதேபோல, எந்த கஷ்டமாக இருந்தாலும் அவருடன் நான் இருப்பேன். என் வகுப்புத் தோழியைப் போன்ற குணம் கொண்ட மாமியார் வர வேண்டும் என்பதே விருப்பம். 

ஜே. ராட்ரா (பிஏ மூன்றாமாண்டு): எனது மாமியார் ஒருபோதும் கண்டிப்புடன் இருக்கக் கூடாது. சாதாரணமாக இருந்தாலே போதும். ஆடை அணிவதில் எந்தவித நிர்பந்தமும் செய்யக் கூடாது. நான், இப்போதைய வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப டிரண்டாக இருப்பேன். அதேபோல, அவரும் டிரண்டாக, எனது சக தோழியாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும், எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. வெளியே செல்லும்போது எந்தவித கட்டுப்பாடும், தடையும் விதிக்காமல் எங்கும் சுதந்திரமாக சென்றுவர அனுமதிக்க வேண்டும்.

ஏ. ரம்யா (பிஏ இரண்டாமாண்டு): மகனுக்கு எப்படி சுதந்திரம் கொடுக்கிறாரோ, அதுபோல மருமகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். மகள் எப்படி வீட்டில் இருப்பாளோ, அதேபோல மருமகளும் இருக்க அனுமதிக்க வேண்டும். சுதந்திரம் கொடுத்தாலும் நாங்கள் எந்தவித மீறலும் செய்யாமல் மாமியாருடன் இணைந்து செயல்படுவோம். மாறாக ஒருவட்டத்துக்குள் வைத்து, சிறையில் அடைத்ததைப் போல நடத்தக் கூடாது. கஷ்டம், நஷ்டங்களை பகிர்ந்து மகளாக நடத்த வேண்டும்.

யூ. பிரதீபா (பிஏ இரண்டாமாண்டு): எனது வருங்கால மாமியார் தோழியாக இருக்க வேண்டும். மகள் தவறு செய்தால் அதனை கண்டிக்காமல் காப்பாற்றுவதும், மருமகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டி குறை கூறுவதையும் தவிர்க்க வேண்டும். எனது ஆசையை தெரிந்து, விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தனது மகனிடம் எனது விருப்பத்தை தெரிவித்து அதற்கு துணையாக இருக்கச் செய்ய வேண்டும்.

எஸ்.எஸ். நிவேதா (பிஏ இரண்டாமாண்டு): எனது வருங்கால மாமியார் தோழியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் என்னையறியாமல் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதற்காக கண்டிக்கும் நோக்கத்துடன் நடந்துவிடக் கூடாது. தவறை சுட்டிக்காட்டி மறுமுறை அது நிகழாத வகையில் என்னை வழிநடத்த வேண்டும்.

ஜி.பி. போபிஷா (பிஏ இரண்டாமாண்டு): எனக்கு வரப்போகும் மாமியார். எனது, 2ஆவது அம்மாவாக இருக்க வேண்டும். யாராலும் அம்மாவின் இடத்தை பூர்த்தி செய்ய முடியாது. இருந்தாலும், அம்மாவின் இடத்தை நிரப்பும் வகையில் மாமியார் இருக்க வேண்டும். எனது, கனவுகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருமணத்துக்குப் பிறகு நான் படிப்பதற்கோ, பணிக்கு செல்வதற்கோ தடையாக இல்லாமல், ஊக்குவிக்கும் நபராக இருக்க வேண்டும். சமையல் தெரியாது என்பதற்காக குறைகூறாமல், அவர் சொல்லிக்கொடுத்து நான் கற்றுக் கொள்வேன். நான், அவருக்கு துணையாகவும், எனக்கு அவர் துணையாகவும் இருக்க வேண்டும்.

ஐஸ்வர்யா லட்சுமி (பிஏ இரண்டாமாண்டு): நான் இசைக் கல்லூரி மாணவி. இசைக்கு நான் எப்படி முக்கியத்துவம் அளிக்கிறேனோ அதனை, எனது வருங்கால மாமியாரும் ஆதரிக்க வேண்டும். நான் இசைத்துறையை விட முயற்சித்தாலும், விட்டுக்கொடுக்காமல் என்னை ஊக்குவித்து, எனது விருப்பத்தை நிறைவேற்றித் தருவதில் முக்கிய பங்காற்ற வேண்டும். எனது தோழிபோன்று இருக்க வேண்டும்.

கே. சோனா (பிஏ இரண்டமாண்டு): எனது வருங்கால மாமியார், எனது அம்மா எப்படி என்னைப் பார்த்துக் கொள்வாரோ அவரைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும். தோழியாக இருக்க வேண்டும். நல்ல முறையில் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும்.

1. மாமியாரின் இயல்பான குணம் என்ன?

2. இயல்பான குணத்துக்கும் மாமியார்தனத்துக்கும் எவ்வளவு இடைவெளி?

இயல்பான பெண்மணி யார்?

முதலில் பார்க்கவேண்டியது, வீட்டில் ஆட்சி யார் கையில் இருக்கிறது என்பதைத்தான். உங்கள் கணவரின் ஆட்சி என்றால் பிரச்னை இல்லை. உங்கள் மாமனாரின் ஆட்சியாக இருந்தால் கொஞ்சம் சிக்கல். மாமனார் ஆட்சியில் மாமியார் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதாவது மாமனார் சொல்வதைக் கேட்டு அடங்கி நடந்திருக்கலாம். எத்தனையோ ஏமாற்றங்கள், ஏக்கங்கள், துக்கம், வேதனை போன்றவை அடக்கிவைக்கப்பட்டிருக்கும். மருமகளைப் பார்த்ததும் அந்தத் துக்கம் ஆழ்மனத்தில் இருந்து ஆர்ட்டீஷியன் ஊற்று போல் மேலே பொங்கி வரும். இந்த ஊற்று மருமகளைப் பதம் பார்க்காமல் விடாது.

பிரபாவதி வீட்டில் கணவர் ஆட்சிதான். கடுகு வாங்குவதாக இருந்தாலும் சரி ஃப்ரிட்ஜ் வாங்குவதாக இருந்தாலும் சரி. இவ்வளவு வேண்டும் என்று சமர்த்தாகக் கேட்டுவிட்டால் கேட்ட பணத்தை எண்ணி கொடுத்துவிடுவார் அவர். ஆனால் மொத்தப் பணத்தையும் கொடுத்து, பிரபாவதியை வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள் என்று அவர் சொன்னதில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார்.

ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரிடம் கை நீட்டி, பணம் வாங்குவது பிரபாவதிக்குப் பிடிக்கவே இல்லை. எப்படிச் செலவழித்தாய் என்ன வாங்கினாய், எங்கே வாங்கினாய், பேரம் பேசினாயா என்றெல்லாம் அவர் கேட்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது. இத்தனைக்கும் பிரபாவதி பணத்தை வீட்டுக்காகத்தான் செலவு செய்திருப்பார். பிரபாவதிக்கு அழுகையும் கோபமுமாக வரும். ஆனால் பொதுவாக பெரும்பாலான ஆண்கள் இப்படிக் கணக்குக் கேட்பதையும், செலவுகளைக் குறைத்துக்கொள்ளச் சொல்வதையும் தங்களுடைய முக்கியப் பணியாக நினைக்கின்றனர்.

தன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு, தன்னை எல்லோரும் அண்டியிருக்க வேண்டும் என்று நினைத்தார் கணவன். அதனால் பிரபாவதிக்கு மருமகள் வரும் வரை அவள் கணவன் பொருளாதாரச் சுதந்தரத்தைக் கொடுக்கவே இல்லை. இந்த வலி அவருக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

பிரபாவதிக்கு மருமகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டது. 'இனி தான்தான் இந்த வீட்டின் எஜமானி, மருமகளை என் சொல்படி நடத்தலாம். கணவன் மீது காட்ட முடியாத கோபத்தை, எரிச்சலைக் காட்ட கல்யாணம் என்ற போர்வையில் ஓர் ஆள் கிடைத்தாள்' என்று நினைக்க ஆரம்பித்து விட்டார் பிரபாவதி. இதன் விளைவாக மாமியார் என்ற மிடுக்குடன் 'நீ அதைப் பண்ணு, இதைப்பண்ணு' என்று தன் கணவன் தன்னிடம் சொன்னது போல் தன் மருமகளிடம் சொல்ல பழகிக்கொண்டார் அவர்.

சரி, மாமனார் ஆட்சி என்றால்தானே பிரச்னை, மாமியார் ஆட்சி என்றால் பிரச்னை இருக்காது அல்லவா என்று நினைத்துவிடவேண்டாம். அங்கும் பிரச்னை இருக்கும். மாமியார் ஆட்சியில் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள், மாமனாரிலிருந்து பிள்ளைகள் வரை அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எனவே மருமகளும் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நினைப்பார் மாமியார்.

மாமியார் ஆட்சியில் இருக்கும் வீட்டில் புது மருமகள் கவனிக்க வேண்டியது இரண்டு முக்கியமான விஷயங்களை. வீட்டில் உள்ளவர்கள் மாமியாருக்கு அடிபணிந்து செல்கிறார்களா அல்லது அட்ஜஸ்ட் செய்துகொண்டு செல்கிறார்களா?

வீட்டில் உள்ளவர்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள் என்றால் அவ்வளவாகப் பிரச்னை இல்லை என்று அர்த்தம். அதுவே அடிபணிந்து செல்கிறார்கள் என்றால் அந்த மாமியார் எல்லோரையும் கண்ட்ரோல் செய்பவர் என்று உடனே புரிந்துகொண்டுவிடலாம். கண்டிப்பாக மாமியார்-மருமகள் பிரச்னை வந்தே தீரும்.

இந்த விஷயங்களை ஆரம்பத்திலேயே நீங்கள் புரிந்துகொண்டுவிடவேண்டும். முதல் ஒரு மாதத்துக்கு இது மட்டுமே வேலையாக இருக்கவேண்டும். இது ஒரு ப்ராஜக்ட். இந்த ப்ராஜக்ட் முடியும் வரை எந்தப் பிரச்னையும் வரமால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கிய சமாசாரத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் மாமியாரிடமுள்ள குறைகளை மட்டுமே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றில்லை. ஒருவரை எடைபோடவேண்டுமென்றால் அவருடைய நல்ல குணங்கள், துய குணங்கள் இரண்டையுமே ஆராய்ந்து பார்த்துவிடுவது நல்லது.

காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவிடம்கூட பல நல்ல விஷயங்கள் இருந்திருக்கின்றன. கோட்சே சிறந்த தேசபக்தன், ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்றுக்கொண்டவன், எழுத்தாளன். ஒரு பத்திரிகையின் ஆசிரியர்! ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. மாமியார் இதற்கு விதிவிலக்கு அல்ல.

உங்கள் மாமியார் பக்திமானாக இருக்கலாம்; பாட்டுப் பாடுபவராக இருக்கலாம்; டான்ஸ் ஆடத்தெரிந்தவராக இருக்கலாம்; ஊருக்கு உதவும் பரோபகாரியாக இருக்கலாம்; புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கலாம்.

அவர் ஃப்ரீயாக இருக்கும் நேரம் பார்த்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘அப்புறம், சொல்லுங்க அத்தை!' என்று அவரைத் தூண்டிவிட்டு அவரைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, மாமியாரின் நிறைவேறாத ஆசைகள் என்னென்ன என்பதை காது கொடுத்துக் கவனமாக மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும். கவனம். நிறைவேறாத ஆசைகள்தான் சிலரை நோயாளியாக மாற்றுகிறது; சிலரை மனநோயாளியாக மாற்றுகிறது; பலரை வில்லிகளாக மாற்றிவிடுகிறது.

0

அமலாவுக்கு நல்ல அடர்த்தியாக முடி இருந்தது. திடீரென்று டைபாய்டு ஜுரம் வர முடியெல்லாம் கொட்டி எலி வால் போல் ஆகிவிட்டது. பியூட்டி பார்லருக்குப் போய், முடியைக் குட்டையாகவும் ஒரே அளவாகவும் வெட்டிக்கொண்டு வந்தாள். அமலாவின் கூந்தலைக் கண்ட மாமியார் 'ஐயையோ! முடி போச்சே. இப்படியெல்லாம் பண்ணுவாளா ஒருத்தி?' என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

'இது என் முடி, நான் கட் பண்ணறேன், வளர்க்கறேன், உங்களுக்கு என்ன?' என்று கேட்டுவிடலாமா என்று நினைத்தாள் அமலா. ஆனால் கேட்கவில்லை. அவள் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது.

ஒரு கத்தரிக்கோலையும் சீப்பையும் எடுத்துக்கொண்டு மாமியாரிடம் வந்தாள்.

'அத்தை, இங்க வாங்க. நானும் உங்களைப் பார்த்துட்டே இருக்கேன். இப்படியா மெலிசா, நீளமா சடையை வச்சிக்கிறது. உங்க ஃப்ரெண்ட் லஷ்மி ஆண்ட்டி எப்படி இருக்காங்க பார்த்தீங்க இல்லை. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். உங்களுக்கு அப்படி என்ன வயசாயிடுச்சி? ஏன் இப்படியே கவனிக்காம விடறீங்க. இங்க வாங்க.'

கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து, அவர் தலைமுடியின் அடிப்பகுதியை கத்தரிக்க ஆரம்பித்தாள் அமலா.

'ஐயையோ! இந்த வயசுல எனக்கெதுக்கு இதெல்லாம்? சின்னவ. நீ பண்ணிக்கலாம். '

வாய் மட்டும்தான் புலம்பியதே தவிர, தலையை வாட்டமாக மருமகளுக்குத் திருப்பிக்காட்டினார் மாமியார்.

'இதுல பெரியவங்க, சின்னவங்க வித்தியாசமெல்லாம் பார்க்க வேண்டாம் அத்தை. இருங்க, இந்த டையையும் போட்டு விடறேன்' என்று மாமியாரிடம் தன் திறமையைக் காட்டத் தொடங்கினாள் அமலா.

டை போட்டு, முடி வெட்டியதும் மாமியாரின் முகத்தில் சந்தோஷம் கலந்த வெட்கம். குடுகுடுவென்று ஓடிச்சென்று கண்ணாடி முன்னால் நின்று வெட்கத்துடன் தன்னைத்தானே பார்த்துககொண்டார். அமலாவின் கணவனே 'எங்கம்மா இவ்வளவு சந்தோஷப்பட்டுப் பார்த்ததில்லை' என்று சொன்னான்.

இன்னொன்று தெரியுமா? இப்போதெல்லாம் மாமியாரும் மருமகளுமாக ஜோடி போட்டுட்டு பியூட்டி பார்லர் கிளம்பி விடுகிறார்கள்!

0

மாமியாரிடம் உள்ள நல்ல குணங்களை, அவருடைய நிறைவேறாத கனவுகளை தெரிந்துகொள்வதைப் போலவே அவருடைய மறுபக்கத்தையும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். மாமியார் வம்பு பேசுபவரா? ஏமாற்றுவாரா? வீட்டுக்குத் தெரியாமல் விஷயங்களை மறைப்பவரா? கோள் சொல்பவரா? அக்கம்பக்கத்தில் வம்பு செய்பவரா? மாமியாரின் கேரக்டரை தரோவாக ஒரு ஸ்டடி பண்ணுவது அவசியம். அப்போதுதான் மாமியாரின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று அக்கு அக்காகத் தெரிந்துகொள்ளமுடியும்.

0

உணவு நன்றாக இருந்தால் உறவு வலுப்படும்; உணவு சரியில்லை என்றால் உறவும் சீர்கெட்டுப்போகும். மாமியார் பிரமாதமாக சமைக்கக் கூடியவர் ஆனால் உங்களுக்குச் சமையலே தெரியாது என்றால் தானாகவே ஸ்கோர் மாமியாருக்குச் சென்று சேர்ந்துவிடும். மாமியாரின் கைப்பக்குவத்துக்குக் குடும்பமே அடிமைப் பட்டிருக்கும்போது நீங்கள் என்ன சொன்னாலும் அது எடுபடாது. இது போன்ற சமாசாரங்களில், மாமியாரின் உண்மையான பலத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரை அங்கீகரிக்க மறந்து விடாதீர்கள்.

மாமியாரிடம் அன்பாக, பதமாகப் பேசிப் பழகி, அவருடைய சமையல் கலை நுணுக்கங்களைத் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ளுங்கள். நாளடைவில் இருவருடைய சமையலும் ஒரே மாதிரி இருக்கும்போது மாமியாரின் ஆளுமை குறையும். வீட்டில் உள்ளவர்களுக்கும் சமையலில் மருமகளின் பங்கும் இருப்பது தெரிய வரும்.

0

‘வீட்டு வேலைகளை சரியா செய்யறதில்லே!'

* காபி தண்ணியாக இருக்கு.

* பாத்திரம் சரியாகத் தேய்க்கலை.

* துணியில் அழுக்குப் போகலை.

* பெருக்கும்போது அங்கே இங்கே தூசி இருக்கு.

* உணவில் சுவையே இல்லை.

இது போன்ற குறைகள் பெரும்பாலும் மருமகளை மட்டம் தட்டுவதற்காகவே சொல்லப்படுகின்றன. 'நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா? என்னால இவ்வளவுதான் முடியும்' என்று சொல்லிவிடுவது சுலபம். ஆனால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

அதைவிட இப்படிச் சொல்லிப் பாருங்களேன்! 'என்ன இருந்தாலும் உங்களை மாதிரி வேலை செய்ய முடியுமா அத்தை? சீக்கிரமாவே உங்களை மாதிரி செய்யக் கத்துக்கறேன்' என்று சொல்லுங்கள். நிச்சயம் கோபம் வராது. புன்சிரிப்புதான் வரும். புகழுக்கு ஏங்காத மாமியார் எங்காவது இருக்கிறாரா?

இந்த மாதிரி மாமியாருக்கு அடங்கி, பவ்யம் காட்டுவது சில மாதங்களுக்குத்தான். இந்தச் சில மாதங்களுக்குள் மாமியாரையும் அனுசரித்து, கணவரிடமும் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றுவிட்டால் போதும். உங்கள் கணவரின் சப்போர்ட் இருந்தால் எந்த மாதிரியான மாமியாரும் ஜீரோதான். கணவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை நீங்கள் லாபகரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். லாபகரமாக மாற்றும் முயற்சியை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு வெளிக்காட்டிக் கொண்டால் எல்லாம் வீணாகிவிடும். கல்யாணம் ஆனாலும் தன் பிள்ளை தன் கண்ட்ரோலில்தான் இருக்கிறான் என்று மாமியார் நம்பவேண்டும்.

எதற்கு இத்தனை வம்பு பேசாமல் தனிக்குடித்தனம் போய்விடலாமே என்ற நினைப்பு மனத்துக்குள் உதித்துக்கொண்டே இருக்கும். அத்தகைய சிந்தனைகளை அப்போதைக்கு அப்போதே கொன்றுவிடுங்கள்.

உங்கள் அம்மா, அப்பா மீதும் உங்கள் பிறந்த வீட்டின் மீதும் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறீர்கள். அதே போல்தானே உங்கள் கணவரும் அவர் பிறந்த வீட்டின்மீது பாசமும் மரியாதையும் வைத்திருப்பார். உறவை வெட்டிக்கொண்டு போகும்போது ஒருவேளை உங்கள் கணவர் ஒத்துழைப்புத் தந்தாலும் தன் குடும்பத்தை விட்டு வந்தது அவருக்குக் காலமெல்லாம் உறுத்திக்கொண்டே இருக்கும். உறவுகளை அனுசரித்துப் போவதுதானே வாழ்க்கை?

வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு உங்கள் உரிமைகளை நீங்கள் பெற்று, குடும்பத்தை நடத்திச் செல்வதில்தானே வெற்றி இருக்கிறது. அதில்தானே உங்கள் திறமையும் இருக்கிறது.

சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. மாமியாருடன் சேர்ந்து வாழும் சாத்தியமே சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். நினைத்துப் பார்க்க முடியாத பல பிரச்னைகளை நித்தம் நித்தம் உருவாக்கும் ஒரு நபராக அத்தகைய மாமியார் இருக்கலாம். அது போன்ற சந்தர்பங்களில், நீங்கள் நிச்சயம் சேர்ந்துதான் வாழ்ந்தாகவேண்டும் என்று உபதேசம் செய்வது வீண். அமைதியாக பிரிவதே அவர்களுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால், இவை விதிவிலக்குகள்.

சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பூதாகரமாக்கி, எல்லோரின் மனத்திலும் ரணத்தை உண்டு பண்ணாமல் வாழ்வது பற்றித்தான் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஒட்டிக்கொண்டு வாழும்போது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் சமஸ்தானம் உங்கள் கைக்கு வந்த பிறகு நீங்கள் தானே ராணி. அதன் பிறகு வரும் பிரச்னைகளை நீங்களே சமாளித்து விடமாட்டீர்களா என்ன?

0

* புடைவை கட்டக்கூடத் தெரியாதா?

* தலையில் எண்ணெய் வைத்து வாரி, பின்னாமல் இதென்ன கூத்து?

* செண்ட், பாடி ஸ்ப்ரே எல்லாம் தேவையா?

* அயர்ன் பண்ணாமல் டிரஸ் பண்ணறாளா பாரு!

* அவ கலருக்கு எப்படி கண்ணை உறுத்தற மாதிரி உடுத்தறா பாரு!

இதுபோன்ற குறைகளைச் சொல்லும் போது இரண்டு விதங்களில் நடந்து கொள்ளலாம். ஒன்று, இந்த மாதிரி விமர்சனங்களைக் காதில் வாங்காமல் விட்டுவிடுவது. அதாவது கண்டுகொள்ளவே கூடாது. எந்தப் பதிலும் தரக்கூடாது. இரண்டு, மாமியாரையும் உங்கள் டேஸ்ட்டுக்கு மாற்றிவிடுவது.

விஜிக்கு நல்ல டிரஸ் சென்ஸ் இருந்தது. விதவிதமான காட்டன் புடைவைகளைக் கஞ்சிப் போட்டு, அயர்ன் செய்து அழகாக உடுத்துவாள். அவளுக்குப் புடைவை பாந்தமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஆனால் மாமியாருக்கு மட்டும் இது பொறாமையைத் தந்தது. 'என்ன சேலை கட்டறே? இந்த லட்சணத்துக்குக் கஞ்சி போட்டு அயர்ன் வேற பண்ணிக்கறே. இதுக்கு சின்தடிக் சேலைகளைக் கட்டலாம். செலவும் பிடிக்காது, ரொம்ப நாளைக்கு வரும்' என்றார்.

விஜி முதல் முறை சொல்லும்போது பொறுத்துக்கொண்டாள். ஆனால் மாமியார் தன் உடைகளை அடிக்கடி விமர்சனம் செய்ய ஆரம்பித்தபோது தான் அந்த முடிவுக்கு வந்தாள்.

மறுநாள் மாமியாருக்கு இரண்டு பெங்கால் காட்டன் புடைவைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். அன்று மாமியாருக்கு ஓரளவு நல்ல மூட்.

'அத்தை, வனஜா குழந்தைக்குப் பிறந்தநாள். வாங்க ரெண்டுபேரும் போயிட்டு வந்துடலாம்' என்றாள் விஜி.

'என்ன டிரஸ் போட்டுக்கறதுன்னு குழப்பமா இருக்கு.'

'குழப்பமே வேண்டாம். இந்தப் புடைவையைக் கட்டுங்க. கறுப்பு ஜாக்கெட் வச்சிருக்கீங்களே.'

'ஐயையோ, காட்டன் புடைவையா? எனக்கு வேண்டாம். கட்ட வராது.'

'நான் ஹெல்ப் பண்ணறேன் வாங்க அத்தை.'

விஜி, மாமியாருக்கு புடைவையைக் கட்டிவிட்டாள். வெளியில் வந்த மாமியாரை மாமனார் ஆச்சரியத்துடன் பார்த்தார். 'ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டினார். மாமியாருக்கு முகம் எல்லாம் சந்தோஷம்.

'அத்தை, உங்களைப் பார்த்தால் ஒரு டீச்சர் மாதிரி கம்பீரமா இருக்கு!'

'எனக்கு எப்பவும் காட்டன் புடைவை பிடிக்கும். கல்யாணம் ஆனப்ப காட்டன் புடைவை கட்டினதுக்கு நீ என்ன கலெக்டரா, மடிப்புக் கலையாம டிரஸ் பண்ணறேன்னு என் மாமியார் ரகளை பண்ணிட்டார். அத்தோட என் ஆசை போயிருச்சு.'

'உங்க பிள்ளைதான், நீ மட்டும் நல்லா டிரஸ் பண்ணிக்கறே. எங்கம்மாவுக்கு என்ன வயசாச்சு, அவங்களுக்கும் ஏதாவது பண்ணுன்னு சொன்னார்' என்றாள் விஜி.

மாமியாருக்குத் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. பத்து வயது குறைந்த மாதிரி தெரிந்தது. தன் மனத்தில் இருந்த ஆசையை, மருமகள் அழகாக தீர்த்து வைத்ததை நினைத்துப் பெருமிதம் கொண்டார். இப்போதெல்லாம் விஜி மறந்தாலும் மாமியார் அவளை 'நல்லா டிரஸ் பண்ணிக்க, முடியை அழகா வெட்டிக்க' என்று ஆலோசனை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

நீங்கள் செண்ட் போடுவது மாமியாருக்குப் பிடிக்கவில்லையா? அவருக்கு என்ன ஸ்மெல் பிடிக்கும் என்று கேட்டு, அந்த செண்ட்டை வாங்கி அடித்து விடுங்கள். முதலில் கொஞ்சம் தயங்கினாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்.

இப்படிச் செய்வதால் மாமியாரிடம் இருந்து வரும் எதிர்மறையான கருத்துகள் ஓடி ஒளிந்துகொள்ளும்.

0

உஷா கல்யாணமாகி வந்த மூன்றாம் நாளே மாமியார் சமையலறையை விட்டு வெளியேறி விட்டார். அவ்வளவுதான். பூரித்துப்போனாள் உஷா. 'அடடா, மாமியார் என்றால் இவரல்லவா மாமியார். என்னைப் போல் புண்ணியம் செய்த இன்னொரு பிறவி இந்த பூவுலகில் உண்டா?' நிறைய சீரியல் பார்த்திருப்பார் போலும். பொங்கிவிட்டார் பொங்கி. பார்ப்பவரிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து பேசினாள். மாமியார் என்றாலே சண்டைபோடுபவர் என்று யார் சொன்னது? என்னுடைய மாமியார் பத்தரைமாத்துத் தங்கம். என் செல்லக்கட்டி, வெல்லக்கட்டி, புஜ்ஜிக்குட்டி.

மறுநாளே, தன் வேலையை தொடங்கிவிட்டார் அந்த மாமியார். சாதத்துக்கு எத்தனை தம்ளர் அரிசி வைக்க வேண்டும், என்ன கூட்டு பண்ண வேண்டும்? சாம்பாரில் என்ன காய் போட வேண்டும்? மிளகு ரசமா? பூண்டு ரசமா? ஆரோக்கியாவா ஆவினா? எல்லாவற்றையும் முடிவு செய்யும் சக்தி அவர்தான்.

மாமியார் தலையசைத்தால் மட்டுமே மேற்கொண்டு உலை கொதிக்கும். இல்லையென்றால், மாமியார் கொதித்துபோய்விடுவார். இத்தனைக்கும் உஷாவுக்கு தினுசு தினுசாக பதார்த்தங்கள் செய்யத்தெரியும். ஆனால், என்ன பிரயோஜனம்? சகலத்துக்கும் மாமியார் கருத்தைக் கேட்டாகவேண்டிய நிலை.

கேட்டுக்கேட்டு செய்தால் மட்டும் என்ன? சும்மா இருந்துவிடுவாரா?

'அத்தை, என்ன குழம்பு பண்ணட்டும்?'

'ம்... எதையாவது பண்ணு. தினமும் உனக்குச் சொன்னால் தான் பண்ணத் தெரியுமா?'

கேட்டால் பிரச்னை. கேட்காவிட்டாலும் பிரச்னை.

'நான் ஒருத்தி எதுக்கு இங்கே இருக்கேன். என்ன பண்ணட்டும் அத்தைன்னு ஒரு வார்த்தை கேட்டா குறைஞ்சா போயிடுவே?'

ஒரு வாரம் கழித்து, மாமியார் உஷாவைக் கூப்பிட்டார்.

'என் ஃபிரெண்ட் சரோஜாவோட ஊர்ல சாம்பார்ல வெல்லம் போட்டு செய்வாங்களாம். இன்னிக்கு அவ சொன்ன மாதிரியே பண்ணிடு. வித்தியாசமா இருக்கும்' என்றார்.

'ஐயையோ! சாம்பாரில் வெல்லமா?' என்று வாய் விட்டு, கேட்கப் போனவள் அப்படியே நிறுத்திக்கொண்டாள். உணர்ச்சிவசப்படாமல் யோசித்தாள். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வெல்லத்தை இரு கையாலும் அள்ளிப்போட்டாள். சாம்பார் ரெடி!

ஞாயிற்றுக் கிழமை. பொறுமையாக உட்கார்ந்து ஒரு கட்டு கட்டவேண்டிய தினம். ஆவலுடன் மாமனாரும் உஷாவின் கணவனும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சாம்பாரை ஊற்றி ஒரு வாய் வைத்ததும் இருவரின் முகமும் சுண்டைக்காயாகச் சுருங்கிவிட்டது.

'என்ன இது? நல்லாத்தானே சமைச்சிட்டிருந்தே! இப்படி பண்ணி வச்சிருக்கே?' முதல் ரியாக்‌ஷன் கணவனிடமிருந்து.

'சாம்பார்ல வெல்லத்தை யாராவது போடுவாங்களா? இனிப்புச் சாப்பிடணும்னா பாயசம் பண்ணிருக்கலாமே? இல்ல உங்க அத்தையையாவது கேட்டிருக்கலாமே?' இது மாமனார்.

'மாமா, அத்தைதான் இந்தச் சாம்பாரை செய்யச் சொன்னாங்க. எனக்கு இது எப்படி பண்ணறதுன்னு கூட தெரியாது. அவங்க சொன்னதாலதான் செஞ்சேன்' என்றாள் உஷா.

'அம்மாதான் சொன்னாங்கன்னா உனக்குப் புத்தி இல்லையா? சண்டே மூடே போச்சு' என்றான் அவள் கணவன்.

'பெரியவங்க சொல்லும்போது எப்படி மறுத்துப் பேச முடியும்? அத்தை நல்லதுக்குத்தானே சொல்வாங்க' என்று உஷா சொல்லிக்கொண்டிருக்கும் போதே மச்சினர் வந்தார்.

சாம்பாரை டேஸ்ட் பார்த்து விட்டு, 'அம்மா, அம்மா இங்க வாங்க' என்று

கத்தினான்.

'எதுக்குடா கூப்பிட்டே?'

'சாம்பார் பிரமாதம். உன்னோட ஐடியாவா?'

'சரோஜா சொல்லிக் கொடுத்தா. நான்தான் உஷாவுக்குச் சொல்லிக் கொடுத்தேன்' என்றார் பெருமை பொங்க மாமியார்.

'சகிக்கலை. ஏம்மா, இப்படி அபத்தமெல்லாம் பண்ணறே? உன்னால முடியலைன்னா சும்மா இரு. அண்ணி நல்லாத்தான் சமைச்சிட்டிருக்காங்க. அவங்களை இப்படியெல்லாம் பண்ண வைக்காதே' என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

'ஏன் அகிலம் இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கறே? உனக்குப் பிடிச்சா நீயே சாப்பிடு' என்று மாமனாரும் கிளம்பினார்.

மாமியாருக்கு அவமானமாகி விட்டது. அசடு வழிய நின்றார்.

'வாங்க அத்தை. நம்ம ரெண்டுபேரும் சாப்பிடலாம்' என்று கூப்பிட்ட உஷாவைப் பொருட்படுத்தாமல் தன் அறைக்குச் சென்று விட்டார் மாமியார்.

மறுநாள், 'அத்தை என்ன சட்னி...?' என்று உஷா சொல்லி முடிப்பதற்குள் 'நீயே ஏதாவது செய். நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை' என்று ஒதுங்கிக் கொண்டார் மாமியயார். தான் சொன்ன விஷயம் தோற்றுப் போனது மட்டுமில்லாமல், தன் சின்ன மகன் மருமகளின் சமையலைப் பாராட்டியதும் மாமியாருக்கு ஒரு பயத்தைக் கொடுத்து விட்டது. அதிலிருந்து உஷாவிடம் சமையல் விஷயத்தில் தலையிடுவதே இல்லை அவர்.

மருமகளை அடிமையாகக் கருதி, ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் மாமியாரை வெளிப்படையாக எதிர்க்கக்கூடாது. அது ஆபத்தில் போய் முடியும். நீயா நானா குடுமிப்பிடிச் சண்டைக்கு வழி வகுக்கும். அவர்கள் வழியிலேயே போய் அவர்களை வீழ்த்த வேண்டும்.

****

குடும்ப வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் இந்தப் பெரிய சவாலுக்குப் பல தீர்வுகளைத் தருகிறது ஒரு தமிழ்ப் புத்தகம்.

திருமலை அம்மாள் எழுதிய உங்கள் மாமியாரை புரிந்துகொள்ளுங்கள் என்கிற புத்தகம் புதிதாகத் திருமணம் ஆன பெண்களுக்குப் பிரத்யேக வழிகாட்டியாக உள்ளது. அதில் மேலே நாம் பார்த்த பல்வேறு வகையிலான அறிவுரைகள், யோசனைகள் இடம்பெற்றுள்ளன. 

'என் மாமியார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறார்கள். மாதத்துக்கு ஒருமுறை எங்களைப் பார்க்க வந்துவிடுவார்கள். நானும் அவர்கள் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன். நிஜமாகவே என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்கள்.' 

தொலைக்காட்சிகளில் மாமியார் - மருமகள் சண்டைகளைத்தான் பார்த்திருப்போம். ஆனால் பிரபல தொலைக்காட்சி நடிகையான ரச்சிதா தான் தன் மாமியாரைப் பற்றி இப்படிக் கூறிருக்கிறார்.

பாட்டி வைத்தியம் என்றொரு பிரபல யூடியூப் சேனல் உண்டு. இன்றைய தேதியில் அதற்கு 7.78 லட்சம் ஆதரவாளர்கள் உண்டு. ஒவ்வொரு விடியோவையும் பல ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இதை நடத்துபவர்களும் மாமியார் - மருமகள் தான். 

மாமியார் என்பவர் இன்னொரு தாயாகும்போது இன்னொரு கடவுளாகப் பரிவு காட்டும்போது அங்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையே பூந்தோட்டமாகிவிடுகிறது.  

மாமியார் என்பவரை ஒரு பெண்ணால் இன்னொரு தாயாக, தாய்க்குச் சமநிலையில் வைத்துப் பார்க்க முடியுமா?

முதலில் பெண்ணுக்கு மாமியார் என்பவரைப் பற்றி ஒரு தவறான அபிப்ராயம் திருமணத்துக்கு முன்பே ஏற்பட்டு வருகிறது.

அவர் கண்டது கேட்டது எல்லாம் தவறான முன்னுதாரணங்களாக அமைந்துவிடுகின்றன. மாமியார் என்றாலே கொடுமைப்படுத்துபவர் என்கிற எண்ணம் மனதில் பதிந்துவிடுகிறது. மேலும் திருமணத்துக்கு முன்பு கணவரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை விடவும் மாமியாரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்கிற அறிவுரைகளே அவர் காதில் ஓயாது விழுகின்றன. இதனால் திருமணத்துக்கு முன்பே மாமியாருடன் போர்க்களத்தில் நிற்பது போன்ற ஒரு சூழலை எதிர்பார்த்து பல்வேறு கேடயங்களுடன் செல்கிறாள் பெண்.

மாமியார் பக்கம் வருவோம். மகனுக்குத் திருமணம் நிச்சயமானவுடன் மருமகளைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒரு மாமியாருக்கு எப்படி இருக்கிறது?

மகனுடன் அனுசரித்து நல்லபடியாகக் குடும்பம் நடத்த வேண்டும் என்பதே முதல் எதிர்பார்ப்பாக இருக்கும். தன்னால் திருத்த முடியாததை மருமகள் திருத்தினால் இன்னும் சிறப்பு என எண்ணுவார். 

ஆனால், திருமணத்துக்கு முன்பு மகனைத் தன்னிடமிருந்து மருமகள் பிரித்துவிடுவார் என்கிற அச்ச உணர்வு அவரிடம் ஏற்பட்டு விடுகிறது. உறவினர்களின் கேலிகளும் எச்சரிக்கைகளும் அதற்கு முக்கியக் காரணமாகி விடுகின்றன. தான் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை தன் கையைவிட்டுச் சென்றுவிடுவானோ, தன்னை மனைவி முன்பு உதாசீனப்படுத்துவானோ என்கிற பயம் தானாக ஏற்பட்டு விடுகிறது. இதனால் தன்னை அறியாமலேயே அவரும் ஆயுதத்தைத் தயார் செய்துகொள்கிறார். நீயா நானா என்கிற போட்டிக்கு மனதளவில் திருமணத்துக்கு முன்பே இருவர் தரப்பும் தயாராகி விடுகிறது.

திருமணத்தின்போது ஏற்படும் சில சிக்கல்கள், பிரச்னைகளும் இருவரும் அருகருகே வாழ்வதற்கு முன்பு ஒரு பிரிவை, மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகிறது.

யோசித்துப் பாருங்கள், திருமணத்துக்கு முந்தைய மாமியார் - மருமகள் உரையாடலில் அவ்வளவு சிநேகம் தென்படும். நீ வாம்மா... நான் உனக்கு எல்லாம் சொல்லித் தரேன் என்று இன்னொரு மகளை எதிர்பார்த்தபடி தான் மாமியார் பேசுவார். திருமணம் ஆகப்போகும் பெண்ணும் போன் உரையாடலில் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கவே முயற்சி செய்வார். ரொம்ப நடக்காதீங்கம்மா... நான் வந்து எல்லாம் பார்த்துக்கறேன். ஒழுங்கா மாத்திரை சாப்பிடுங்கம்மா என்று பதிலுக்கு இந்தப் பக்கமும் பாசம் பீறிடும்.

ஆனால் திருமண நாளிலேயே ஒருவரையொருவர் வெறுக்கும் அளவுக்குக் குடும்பப் பிரச்னைகள் இருவர் மனத்தையும் மாற்றிவிடும். முதல் இரவிலேயே மாமியாரைப் பற்றி புகார் சொன்ன பெண்களும் உண்டு. திருமண வேலைகள் கொடுத்த அலைச்சலில் மருமகளிடம் முகம் கொடுத்துப் பேச முடியாத நிலைமையும் மாமியாருக்கு ஏற்படும். அந்த போன் உரையாடலில் கொஞ்சிக்கொண்ட மாமியார் - மருமகளைத் தேடவேண்டிய நிலைமைக்கு எல்லாவற்றையும் காலம் மாற்றிவிடும்.

மாமியாரை அட்ஜஸ்ட் பண்ணிப் போ.... எதிர்த்துப் பேசாதே... என்கிற அறிவுரைகளைத்தான் பெண் கேட்டிருப்பார். அதைவிடவும் முக்கியம், மாமியாரைப் புரிந்துகொள்வது.

மாமியார் என்பவர் யார்?

30 வருடங்களுக்குத் திருமணம் ஆனவர். கூட்டுக் குடும்பத்தில் மாடாக உழைத்தவர். இன்று நாம் பேசும் பெண்ணிய உரிமைகள் எதையும் கேள்விப்படாதவர். காலையில் எழுந்து இரவில் தூங்கும்வரை கணவருக்கு மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைவருக்காகவும் எல்லா பணிவிடைகளையும் செய்தவர். (தி கிரேட் இந்தியன் கிட்சன் காட்சிகளை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இன்றைக்கே அப்படி எடுத்திருக்கிறார்கள் என்றால் 30 வருடங்களுக்கு முன்பு நிலைமை எப்படி இருக்கும்?). இன்று மாதத்துக்கு ஒருமுறை ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். என்னால் முடியவில்லை என்று மனைவி சொன்னால் போதும் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிவந்து விடுகிறார் கணவர். ஸ்விக்கி, ஸொமாட்டோ செயலிகளுக்கு வேலை தருகிறோம். பக்கெட் பிரியாணி ஆர்டர் செய்து இரண்டு வேளை வீட்டில் சமையல் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு காட்சியைக் கனவு காண முடியுமா? எப்போதாவது ஹோட்டலுக்குச் செல்வார்கள். மற்றபடி கடிகாரம் போல எந்நேரமும் உழைக்கும் இயந்திரங்களாகவே பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறையில் வாஷிங் மெஷின், மிக்ஸி, கேஸ் வசதிகள் கூட எல்லோருக்கும் கிடைத்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படியே இருந்தாலும் விறகடுப்பில் சமைக்கவேண்டும், அம்மிக்கல்லில் சட்னி அரைக்க வேண்டும் என்று கட்டளை இடுகிற கணவர், மாமனார்களும் இருந்தார்கள். பிற்போக்கான சிந்தனை கொண்ட மனிதர்களுடன் வாழும் ஒரு பெண்ணுக்கு என்ன சுகம் இருந்துவிட முடியும்? அப்போது வருமானமும் குறைவாக இருந்தது. இஷ்டத்துக்குச் செலவிட முடியாது, அவுட்டிங் என்றால் அம்மா ஊருக்கு, திருமணங்களுக்குச் செல்வதாகத்தான் இருந்தது. 

2000-க்குப் பிறகு தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது. வாஷிங் மெஷின், மிக்ஸி, கேஸ் வசதிகள் எல்லா வீடுகளுக்கும் கிடைத்தன. வருமானங்கள் அதிகமாகின. பொழுதுபோக்குகளுக்கு தமிழனின் வாழ்க்கையில் இடமளிக்கப்பட்டது. பொருளாதார வசதி உயர உயர வாழ்க்கைத் தரமும் வாழ்க்கைமுறைகளும் மாறின. பெண்களுக்கு ஓரளவு ஓய்வு கிடைத்தது. சிலவேலைகளை இயந்திரங்கள் பார்த்துக்கொண்டன. ஆனாலும் காட்சிகள் ஒரேடியாக மாறவில்லை. ஒரு பெண் வீட்டில் இல்லாவிட்டால் ஆண்கள் தடுமாறும் அளவுக்கு அவர்களுடைய பங்களிப்பு இருந்தது.

இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து வந்து மகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். வீட்டுக்குப் புதிய உறவு ஒன்று வருகிறது.

அம்மா அம்மா என்று தன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் தன்னைச் சார்ந்திருந்தவன் திடீரென இன்னொரு பெண்ணிடம் ஒரேடியாக சாய்வதை எந்தப் பெண்ணாலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், மாமியார் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தபோது அப்படியெல்லாம் காட்சி மாறவில்லை. இன்று தன் மகன் ஒரேடியாக தன்னை விட்டு விலகுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனத்தில் பயம் ஏற்படுகிறது. தான் நம்பிய உயிர், தனக்கென்று இருந்த ஓர் உறவு தன்னைவிட்டு விலகிச் செல்வது ஏற்க முடியுமா? அப்படியில்லையென்றாலும் அப்படியொரு நினைப்பு அவரை வாட்டுகிறது.

மருமகளிடமிருந்து, மகனிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார். அவையெல்லாம் பொய்த்துப்போகும்போது கோபம், ஏமாற்றம் ஏற்படுகிறது. மாமியார் என்கிற அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார். 

வீட்டுக்குள் புதிதாக வரும் மருமகள், மாமியாரின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு புதிய வீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு இன்னொரு பெண்ணாக அந்த வீட்டுக்குள் இருந்து வழிநடத்தப்போகிறவர் மாமியார் தான். எவ்வளவு சண்டை போட்டாலும் உறவு விலகாது. நீர் அடித்து நீர் விலகுமா? காலம் முழுக்க வரும் உறவு. ஒரு வீட்டுக்குள் பெரியவர்கள் இருப்பது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு பலம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வேலைக்குப் போகலாம், வெளியே செல்லலாம். அவர்களுடைய வாழ்வனுபவம் பல சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும்.

அம்மாவிடம் எந்தப் பெண்ணுக்காவது எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகுமா? பொட்டு டிசைனில் கூட கருத்துவேறுபாடு வரும். உடைகளில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் அம்மாவும் பெண்ணும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். அதற்காக அம்மாவை வெறுப்போமா? அம்மாவைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசுவோமா? அப்படித்தான் மாமியாரையும் மதிக்க வேண்டும்.

மாமியார் என்பவர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பழகிய மனிதர்களும் வேறு. பல விஷயங்களில் அவருக்கு இருக்கும் கருத்துகள் நிச்சயம் இந்தக் காலத் தலைமுறையினருக்குப் பிடிக்காமல் தான் போகும். நம் அம்மா எப்படி, அப்படித்தான் இவரும். 

மாமியாரை மதித்து, அவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். எல்லாமே தன் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என மாமியார் நினைப்பார். ஆரம்பத்தில் இருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் போகப்போக அவருடைய தவறுகளை, பழைய சிந்தனைகளைப் புரியவைக்க வேண்டும். சமையலில் ஆரம்பித்து பல வீட்டு வேலைகள், முக்கிய முடிவுகளிலும் இந்தப் போக்கைக் கடைப்பிடிக்கலாம். தன் மீது பாசம் காட்டும் ஓர் உயிரை யாருக்குத்தான் பிடிக்காது. தன் தவறுகளைப் பதமாகச் சொல்லி திருத்துபவரை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் அம்மா என அழைக்க வேண்டாம். ஆனால் நினைக்கலாம் அல்லவா. அம்மா செய்யும் தவறுகளைப் பொறுத்துப் போவது போல மாமியாருக்கும் அந்தச் சலுகை தரலாம் அல்லவா. மேலும் அவருடைய நிறைவேறாத விருப்பங்களை நிறைவேற்றி தரும் மருமகளாக இருந்து பாருங்கள். அவர் உடுத்த ஆசைப்பட்ட உடை, செல்ல ஆசைப்பட்ட ஊர்கள், சாப்பிட நினைத்த உணவுகள் என கொஞ்சம் மாமியார் மீது அக்கறை செலுத்திப் பாருங்கள். 

உங்கள் அம்மா தன் புகுந்த வீட்டில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்களோ அதே கஷ்டங்களை மாமியாரும் அனுபவித்திருப்பார். சிலர் இன்னும் அதிகமாக. சிலர் இன்னும் குறைவாக. அவ்வளவுதான் வித்தியாசங்கள் இருக்கும். பெண்களை இயந்திரங்களாகப் பாவிக்கும் சமூகத்திலிருந்து தான் நம் அம்மா மட்டுமல்ல மாமியாரும் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்டால் அவர்களுடன் சண்டை போடவோ அவர்களை ஒதுக்கவோ தோணாது. 

முக்கியமாக தனது மகன் தன்னை விட்டுச் சென்றுவிடுவானோ என்கிற பதற்றம் எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும். எங்கேயும் போகவில்லை, நீங்கள் எந்த இடத்திலிருந்து எனக்கு அவரைக் கொடுத்தீர்களோ அதே இடத்தில் தான் உள்ளார் என்கிற 96 பட வசனத்தை மாமியாருக்கு உணர்த்த வேண்டும். எப்படி? எல்லா முக்கிய முடிவுகளையும் மாமியாரிடமும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். மாமியார் முன்பே, அத்தைகிட்ட கேட்டுட்டீங்களா எனக் கணவரிடம் கேட்டு அவருக்குத் தரும் முக்கியத்துவத்தை உணர வைக்கலாம். மாமியாரின் பிறந்த நாள், திருமண நாளை கேக் வெட்டி, ஹோட்டலுக்குச் சென்று கொண்டாடலாம். மாமியாரிடம் மனம் விட்டு பேச முயலலாம். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே உள்ள தயக்கங்கள், ஈகோக்கள், கோபங்கள் விலகும்.

சின்னச் சின்ன சந்தோஷங்களை மாமியாருக்கு அளிப்பதன் மூலம் அவரிடம் மனமாற்றத்தை உண்டு பண்ணலாம். அவருடைய சமையலைப் பாராட்டலாம், அவரிடமிருந்து சில உணவுகளைக் கற்றுக்கொண்டு அதை நாலு பேரிடம் தெரிவித்தால் எந்த மாமியாரின் முகம் தான் மலராது? மாமியாரின் கஷ்ட நஷ்டங்களைக் காது கொடுத்து கேட்கலாம். மாமியாரின் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளலாம். மருந்து, மாத்திரைகளைச் சரியான நேரத்துக்கு எடுத்துத் தரலாம். மாமியார் மிகவும் ஆசைப்பட்டு அணிய முடியாத உடைகளை வாங்கித் தரலாம்... இப்படி ஒரு ஜீவன் மீது அதுவும் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் இருப்பவர் மீது ஆயிரம் வழிகளில் அக்கறை செலுத்தலாம். தன் மீது வாஞ்சையாக இருக்கும் நல்ல உள்ளத்தை யார் தான் புறக்கணித்து விட முடியும்?

எத்தனையோ மருமகள்களுக்கு மாமியார்கள் கடவுளாகத் தெரிவது எப்படி? பல மாமியார் - மருமகள்கள் அம்மா - பெண்ணாக ஜோவியலாக இருப்பது எப்படி? மேலே சொன்ன காரணங்கள் தான். மாமியாரை அம்மா என்று அழைப்பது அவரவர் விருப்பம். ஆனால் இன்னொரு அம்மாவாகப் பாவிப்பதில் என்ன தடை இருக்க முடியும்? 

உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை மாமியார்கள் தினமாக கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஆனால் இது அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரர்கள் தினம் உள்ளிட்ட மற்ற தினங்களைப் போல சிறப்பாக கொண்டாடப்படுவது இல்லை.

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் திரித்துக் கூறப்பட்ட இந்த கோஷத்தை தூக்கி சுமக்கப் போகிறீர்கள். மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பதுதான் அந்த பழமொழி. 

இப்படி சமூகம் முழுவதும் மாமியார்களுக்கு எதிராக பரவிக் கிடக்கும், செய்திகளும், சொல்லாடல்களும், கதைகளும், திரைப்படங்களும், குறிப்பாக சீரியல்களும் தொடர்ந்து அவர்களை இரக்கமற்றவர்களாகவே நிறுவி வந்துள்ளது. குறிப்பாக சிறைச்சாலையை "மாமியார் வீடு" என அழைப்பது எல்லாம் அந்த உறவுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையின் உச்சம்.

உலகில் உள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆணாதிக்கச் சிந்தனை சூழ்ந்த இந்திய சமூகத்தில் பெண்கள் இன்றளவும் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த தவறான கட்டமைப்புகள், பெண்கள் பிறக்கும்போது பெற்றோரைச் சார்ந்தும், வளரும்போது உடன் பிறந்தவர்களைச் சார்ந்தும், திருமணத்துக்குப் பின் கணவனைச் சார்ந்தும், குழந்தைகள் பிறப்புக்குப் பின் அவர்களைச் சார்ந்தும், பிள்ளைகளின் திருமணத்துக்குப் பின் அவர்களது பேரக் குழந்தைகளைச் சார்ந்தும் வாழ வைக்கிறது.

இந்த கட்டமைப்பின் காலச் சக்கர சுழற்சியில், ஒருமுறை அதிகாரம் செலுத்தும் நிலையை பெண்கள் எட்டும் நிலையே  மாமியார் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களுக்கான பணிவிடைகளைச் செய்ய பழக்கப்படுத்தப்பட்ட பெண்கள், வீட்டுக்கு வரும் மருமகள்களை தனக்கு கீழானவராக பாவித்து நடந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் தான் மாமியார்களை அந்நியப்படுத்துகிறது. 

இந்தியா முழுவதும் 1970கள் தொடங்கி 1990களின் தொடக்கக் காலம் வரை நாளிதழ்களில் வரதட்சணைக் கொடுமை சாவுகள் குறித்த செய்திகள் நீக்கமற நிறைந்திருந்தன. அதன் பின்னர் நடந்த சமூக மாற்றம், கடுமையாக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளால்  ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. அதே நேரம் காதல் திருமணங்களும், உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் வரதட்சணை போன்ற சமூக அவலங்களைத் தடுத்து நிறுத்தின.

ஆனால், ஆதிக்கக் கட்டமைப்பின் கற்பிதங்களை உள்வாங்கிய மாமியார்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சமூகம், குடும்பம், உணவு, சொத்து, நம்பிக்கை உள்ளிட்டவற்றை கட்டிக் காக்கும் பணிகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சடங்குகளின்போது மகனுக்காக வரதட்சணைகளைக் கேட்டு வாங்கவும், மகளுக்காக வரதட்சணைகளைக் கொடுக்கவும் செய்கின்றனர்.

மாமியார் என்பவரும் ஒருகாலத்தில் மருமகளாக இருந்தவர்தான். இதனை மனதளவில் உணராததாலோ என்னவோ அவர்களுக்கு எதிரான உளவியல் தாக்குதல்கள் இன்றளவும் கூர்மைபடுத்தப்படுகிறது. ஒரு 25-30 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் குடும்பத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படும்போது ஏற்படுகிற பொசஸிவ்னஸ் பாலிடிக்ஸ்தான் மாமியார் - மருமகள் முரண்களுக்கான அடிப்படைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

அதுவரை அம்மா சமைத்ததை உண்டு, துவைத்ததை உடுத்தி, சம்பளம், சேமிப்பு, கடன், செலவு என எல்லாத்துக்கும் அம்மாக்களைச் சார்ந்திருக்கும் மகன்களது வாழ்க்கை, மருமகள்களின் வரவால் தடம் மாறும். இதனால் ஏற்படும் பொசஸிவ்னஸ் பாசப் போராட்டத்தில் வீழ்த்தப்படுவதோ என்னவோ மாமியார்கள்தான்.

மருமகள்களின் வரவால் தங்களது அதிகாரம் பறிக்கப்பட்டதாக உணரும் மாமியார்களுக்கு எதிர்காலம் குறித்த கவலைத் தொற்றிக் கொள்கிறது.
இதனால் ஏற்படப் போகும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அந்த வீட்டுக்கு வந்த மருமகள்களுடன் முரண்பாட்டை உண்டாக்குகிறது. இந்த முரண்களை சாதகமாக்கிக்கொள்ளும் இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் கையிலெடுக்கும் பிரம்மாஸ்திரம் தனிக்குடித்தனம்.   இந்த முடிவு ஒரு சில இடங்களில்  மாமனார் மாமியார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பியும் விட்டது. 

இந்த நிலையில் தற்காலத்தில் ஒரு சிலர் மாமியரை 'அம்மா' என அழைக்கும் போக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத் தகுந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாம் வாழும் வீடுகளின் பரப்பு குறைந்து, பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அந்த சிறிய பரப்பை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் தேவையிருப்பதால், மாமியார் உள்ளிட்ட வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கான முன்னுரிமையை இழந்து வருகின்றனர். அதேவேளையில் குழந்தை, அம்மா, அக்கா, மாமியார் இன்னும் எத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பெண்களை அடிமைப்படுத்தும் தீண்டாமைகள் ஹைபர்சோனிக் ஏவுகணைகளைப் போல் துல்லியமாக்கப்பட்டிருக்கிறது
என்பதே நிதர்சனம்.

பெண்களே, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாமியாரிடமிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது! ஆனால், அவர்களை எதிர்கொள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. மாமியார்கள் குறித்து மருமகள்கள் என்ன நினைக்கிறார்கள், இருவரிடையேயான உறவை வலுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

பல நூற்றாண்டுகளாக, ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்களுக்கு இப்போதுதான் தங்களின் இணையர்களை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த உரிமை அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. ஆனாலும், நம்மால் ஒன்றை புரிந்துகொள்ள முடியவில்லை. நமது அன்புக்குரிய கணவர், அவர்களின் அன்புக்குரிய தாயால்தான் வளர்க்கப்படுகிறார். 

அந்த அன்புக்குரிய தாய்க்கு என இருக்கும் தனித்துவமான பண்புகள், தனித்திறன்கள், மனநிலை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள தேவை இல்லை. ஆனால், குறைந்தபட்சம் மதிப்பளிக்கலாம். கவலைப்பட வேண்டாம். அவர்களுடனான உங்கள் உறவை எப்படி எல்லாம் வலுப்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

பொதுவாக இல்லாமல், இந்திய சமூகத்தில் எப்படிப்பட்ட மாமியார்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 

வானளவு எதிர்ப்பார்ப்புகள் கொண்ட மாமியார்கள்

தங்களின் மகனுக்கு, நீங்கள் சரியான இணையர் அல்ல என சில மாமியார்கள் நினைக்கலாம். அதை உங்களிடம் மறைக்க அவர் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளாமலும் இருக்கலாம். "ம்ம்ம், என் பையனுக்கு வசதி படைச்சவங்களாம் கூட பொண்ணு கொடுக்கு தயாரா இருந்தாங்க" என சலித்துக்கொள்ளலாம். ஒரு படிக்கு மேலே சென்று, விருந்தினர் முன்பும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்பும்கூட இதைப் பற்றி பேசலாம்.

இப்படிப்பட்டவர்களை சமாளிப்பது எப்படி?

உங்களின் மகனுக்கு நான் ஏன் பொருத்தமற்றவர் என கருதுகீறீர்கள் என பொறுமையுடன் கேளுங்கள். அவருடைய மகன் உங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் எனக் கூறி பாருங்கள். வாழ்க்கை முழுவதும் ஒன்றாக பயணிக்க பரஸ்பர விருப்பத்தின் பேரில் முடிவெடுத்திருக்கிறோம் என சொல்லுங்கள். மகன் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கும் போது, அவரின் இணையரையும் சமமாக நடத்துவதுதான் சரி. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஏன் முக்கியம் என்பதை வெளிகாட்டி கொள்ளும் வகையில் மாமியார் முன்பு நடந்து கொள்ளலாம். 

அனைத்தையும் முறையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாமியார்கள்

அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாமியார்களை சமாளிப்பதில் நீங்கள் அவருக்கு நேர்மாறாக உள்ளபோது அது சவாலாக மாறிவிடுகிறது. நீங்கள் கவலையற்று இருப்பது அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆடையை அணிவது எப்படி? தலைமுடி வாருவது எப்படி? காய்கறிகளை வெட்டுவது எப்படி? என அனைத்திலும் உங்களுக்கு பாடம் எடுக்கலாம். அவரின் அழுத்ததால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அவரை தவிர்ப்பதற்கே, நீங்கள் அறையை விட்டு வெளியேற முற்படலாம்.

இம்மாதிரியான மாமியார்களை சமாளிப்பது எப்படி?

முடிந்த அளவுக்கு, அவர் முன்பு நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களை பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். காலம் செல்ல செல்ல அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். அவரின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவது குறித்து கவலை அடைய வேண்டாம். ஆனால், அவரின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளலாம். சொல்லப்போனால், உங்கள் இணையரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என அவருக்கு தெரிந்திருக்கக் கூடும். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். அவரிடமிருந்து சிலவற்றை கற்க விரும்புவதாகவும் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். கவலையற்று இருப்பது எப்படி என அவருக்கு சொல்லிக் கொடுங்கள். யாருக்கு தெரியும், எதிர்காலத்தில் அவர் உங்களுடன் அழகு நிலையத்திற்குக்கூட வரலாம்.

பொறாமை குணம் கொண்ட மாமியார்கள்

இணையரின் அன்புக்கு சொந்தம் கொண்டாடி மருமகன், மருமகள் ஆகியோருக்கிடையே அடிக்கடி சண்டை வரலாம். அதில், மாட்டிக்கொள்பவர் என்னவோ, பெரும்பாலும் உங்களின் இணையராகத்தான் இருப்பார்.

இவர்களை சமாளிப்பது எப்படி?

உங்களின் மாமியார் இப்படி நடந்து கொள்வதற்கு தன்னுடைய மகனை உங்களிடம் இழந்ததாக அவர் நினைக்கலாம். மகன்களை விட்டுத்தருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மகனை நன்றாக வளர்த்திருப்பதாக அவரை பாராட்டலாம். நீங்கள் கற்றுக்கொடுத்த நல்ல விஷயங்களே அவரைப் பிடிப்பதற்கு காரணம் என சொல்லலாம். இதே விழுமியங்களை அவருடைய பேரன், பேத்திகளுக்கு சொல்லித்தர நீங்கள் விரும்புவதாகக் கூறுங்கள். அவரின், முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

அனைத்திலும் மூக்கை நுழைக்கும் மாமியார்கள்

அனைத்திற்கும் சில வரம்புகள் உள்ளது என்பதற்குக்கூட அவருக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். குழந்தையைப் பெற்றெடுப்பது உள்பட நீங்களும், உங்களின் இணையரும் சேர்ந்து செய்யும் அனைத்திலும் அவர் மூக்கை நுழைக்கலாம். அனைத்து விவகாரங்கள் குறித்தும் உங்களிடம் நோண்டி நோண்டி கேள்வி எழுப்பலாம். வாழ்க்கையை மேம்படுத்துவது எப்படி என உங்களுக்கு பாடம் எடுக்கலாம். உங்களின் அந்தரங்க வாழ்க்கை வரை கூட அவர் செல்லலாம்.

இவ்வகை மாமியார்களை எதிர்கொள்வது எப்படி?

உங்களின் இணையரிடம் இதுகுறித்து தெரியப்படுத்துங்கள். அவரின் தாயாரின் கேள்விகள் அசெளகரியமாக  இருப்பதாக அவரும் ஒப்புக்கொண்டால், எதைப் பற்றி பேச வேண்டும் எதைப் பற்றி பேசக் கூடாது என்ற வரம்புகள் குறித்து அவரை விட்டு மாமியாரிடம் சொல்லச் சொல்லுங்கள். இப்பிரச்னையை முன் கூட்டியே, சரிப்படுத்தப்படவில்லை எனில், இது பெரிதாக மாற வாய்ப்புள்ளது.

அதிகாரம் செலுத்தும் மாமியார்கள்

ஒத்துழைப்புக்கு இடம் அளிக்காமல் தனக்கு என தனி பாதையை வகுத்துக் கொண்டவராக உங்கள் மாமியார் இருக்கலாம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பவராக இருக்கலாம். நீங்கள் ராணுவத்தில் இருப்பது போல உணரலாம். உங்களின் தினசரி வாழ்க்கையே அழுத்தம் நிறைந்ததாக மாறலாம்.

இவர்களை எதிர்கொள்வது எப்படி?

சில சமயங்களில், அவர்களின் வழிமுறை சரிதான் என நீங்கள் எண்ணலாம். உங்களின் மாமியார் குறிப்பிட்ட விவகாரங்களை தனித்துவமாக எதிர்கொள்வது உங்களுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால், வயது வந்த நீங்கள், விருப்பம் போல் செயல்படுவது உங்களின் உரிமை. நீங்கள் செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என கூறிப் பாருங்கள். அவருடன் உடன்பட்டு நீங்கள் சிலவற்றை செய்யும்போது அது மேலும் மிகழ்ச்சியை தர வாய்ப்புள்ளது. 

இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இரு மருமகள்களுக்கு மாமியார் என்ற பதவியையும் அந்தக் காலத்தில் வகித்திருக்கிறார். அந்த இரு மருமகள்கள் சோனியா காந்தி, மேனகா காந்தி என்பதை சொல்லவே தேவையில்லை. அனைவருக்கும் தெரியும்.

நெருக்கடி நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி பிரதமர் பதவியை இழந்தபின் அவரது வீட்டு நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக மாறிப்போனது. வீடு கொஞ்சம் குழப்பத்தில் இருந்தது. வீட்டில் வேலைக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது. மருமகள்கள் இரண்டு பேர்களுக்குமே வீட்டின் அந்த மாதிரியான சூழ்நிலை ரொம்ப புதியது.

அந்த காலகட்டத்தில் முன்னாள் பிரதமரின் வீட்டில் திடீர் திடீரென ரகசியக் கூட்டங்கள் நடைபெறும். காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து இந்திரா காந்தியுடன் பேசிவிட்டுச் செல்வார்கள்.

இந்த சூழ்நிலையில் வீட்டின் சமையல் உள்பட நிர்வாகப் பொறுப்பை சோனியாவே பெரும்பாலும் ஏற்றிருக்கிறார். மேனகா இதற்கு நேர்மாறாக இருந்திருக்கிறார்.

வயதில் சோனியாவைவிட இளையரான மேனகா காந்தி, வீட்டு வேலைகளை விட அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார். இந்திரா காந்தி என்னதான் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் என்றாலும் மருமகள் மேனகாவின் அரசியல் நடவடிக்கைகள் இந்திராவுக்குப் பிடிக்கவில்லை. ஆக, வழக்கமான ஒரு மாமியாராகத்தான் இந்திரா காந்தியும் இருந்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் அரசியல் கிசுகிசுக்களைத் தாங்கி வந்த சூரியா என்ற இதழுக்கு எடிட்டர் வேலையை மேனகா செய்து வந்திருக்கிறார். இதுவும் இந்திராகாந்திக்குப் பிடிக்கவில்லை.

இந்திரா காந்தியின் இரு மருமகள்களில், மேனகா ஆரம்பத்தில் இருந்தே இந்திராவுடன் ஒருவகை எதிர்ப்புணர்வுடனேயே இருந்திருக்கிறார். மாமியாருக்கும் அவருக்கும் எப்போதுமே நல்லிணக்கம் இருந்ததில்லை. அதுபோல சோனியாவுடனும் மேனகா அதிகம் பேசுவதில்லை. மாமியாரை நேருக்கு நேர் சந்திக்க விரும்பினால் கணவர் சஞ்சய் காந்தியின் துணையுடன் எதிர்கொள்வதே மேனகாவின் வழக்கம். 

ஆனால், விமான விபத்தில் சஞ்சய் மரணமடைந்தபிறகு மாமியாரை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய நிலை மேனகாவுக்கு உருவாகி விட்டது.
இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் குஷ்வந்த்சிங் சஞ்சய், மேனகா இருவருக்குமே நன்கு தெரிந்தவர். நல்ல நண்பர்.

‘சஞ்சய் விபத்தில் இறந்து ஐந்தாவது நாளில், இந்திராகாந்திக்கும், மேனகா காந்திக்கும் இடையே மிகப்பெரிய அளவில் புரிதல் இல்லாமல் போனதாக குஷ்வந்த்சிங்க் குறிப்பிட்டிருக்கிறார்.

சஞ்சய் காந்தி தொடர்பாக மேனகா தயாரித்த ஒரு புத்தகத்துக்கு இந்திராகாந்தி முன்னுரை எழுதித் தர முதலில் ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு நேரமில்லை என்று கூறி இந்திராகாந்தி முன்னுரை தர மறுக்க, மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையில் கடும் மனத்தாங்கல் ஏற்பட்டதாக குஷ்வந்த் குறிப்பிடுகிறார். 

சஞ்சய் இறந்தபோது மேனகாவுக்கு 23 வயது. கிட்டத்தட்ட அதே வயதில்தான், 1941 ஆம் ஆண்டு, ஃபெரோஸ்கான் திருமணம் தொடர்பாக தந்தை நேருவுடன் இந்திராகாந்தி பிணங்கினார். ஆனால், மருமகள் மேனகாவின் இதுபோன்ற பிணங்கல்களை மாமியாராக மாறிய இந்திராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

லக்னெளவில் இந்திரா காந்திக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் எதிர்ப்புக் கூட்டம் நடத்திய போது, அதில் மாமியாரின் கண்டனத்தையும் மீறி பங்கேற்றவர் மேனகா.  இதனால் வீட்டை விட்டு துரத்தப்பட்டார் மேனகா.
வீட்டில் இருந்த காலத்தில்கூட, தான் யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் தொலைபேசி இணைப்பை இந்திரா காந்தி துண்டித்து வைத்திருந்ததாகவும், மகன் வருண் காந்தியை  தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருந்ததாகவும் மேனகா பின்னாளில் குற்றம் சாட்டினார்.

இந்திரா காந்தியோ அவர் பங்குக்கு, மேனகாவுக்கும் அவருக்கும் இடையில் கலாச்சார ரீதியான வேறுபாடு இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ‘மேனகா மாறுவதுக்கு தயாராக வேண்டும், இல்லாவிட்டால் அம்மா வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்’ என்பதுதான் இந்திராகாந்தியின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.

மேனகாவின் கதை இப்படியிருக்க, சோனியா காந்தியோ அந்தக் காலத்தில், ‘மாமியார் மெச்சிய மருமகளாக’ இருந்திக்கிறார். வீட்டு வேலைகளை சோனியா கவனித்துக் கொண்டார். பிள்ளைகளை சரியாகப் பார்த்துக் கொண்டார். அரசியலில் சோனியா காந்தி ஆர்வம் காட்டவில்லை. இதனால் முதல் மருமகளை இந்திராகாந்திக்கு மிகவும் பிடித்துப் போனது.

இந்திரா காந்திக்கு இளைய மகன் சஞ்சய் மீது நிறைய பாசம் உண்டு. சஞ்சய்யின் மரணத்துக்குப்பிறகு அவரது பாசம் சோனியா மீது திரும்பியது என்றுதான் சொல்ல வேண்டும். 80களில் மருமகளாக இருந்த சோனியா மெல்ல மெல்ல இந்திராகாந்தியின் மகள் போல மாறினார் என்று சொன்னாலும்கூட அது மிகையில்லை.

இந்த பிரபஞ்சமானது ஓர் ஈர்ப்பு விதிக்குள் கட்டுப்பட்டு ஒரு பிணைப்பு சக்தியால் கவரப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. காலங்காலமாக அதனுள் தோன்றிய உயிரினங்களும் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஓர் அன்பு பாசப் பிணைப்பின் காரணமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஐந்தறிவு விலங்குகளும்கூடத் தன் குடும்பம், தன் சந்ததி என்று கூட்டமாகவும் பேணிக் காத்தும் வாழத் தலைப்படுகின்றன. இவற்றிற்கு மனிதனும் விதிவிலக்கல்ல.

சிந்திக்கும் அறிவு பெற்ற மனிதன் தன்னுடைய ஒவ்வொரு உணர்வையும் புரிந்துகொண்டு அதற்குரிய உறவுகளையும் பேணிப் பாதுகாத்து தானும் சமூகத்துடன் சேர்ந்து குடும்பமாக வாழ்கிறான். இந்தக் குடும்பம் என்கிற அமைப்பிற்கு அப்படி ஒரு வலுவான ஈர்ப்பும் பந்தமும் இருக்கின்றது.

சமூகம், குடும்பம் என்று இருந்தாலும் நாம் உறவுகளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்துள்ளோம். அத்தகைய ஒவ்வொரு உறவுக்கும் உண்டான பெயர் ஒவ்வொரு வகைப்படும். அந்த உறவுகளுக்கான உணர்வுகளும் ஒவ்வொரு மாதிரியாக உணரப்படும்.

தாய்-தந்தை உறவு, கணவன் -மனைவி உறவு, தாத்தா -பாட்டி உறவு, அண்ணன்- தங்கை உறவு, அண்ணன்- தம்பி உறவு, சித்தப்பா- சித்தி உறவு, மாமன்- மாமி உறவு, அத்தை- மாமா உறவு போன்ற உறவுகள். இவை அத்துணைக்கும் பொருள் உண்டு. குடும்பத்துடன் சேர்ந்த உறவுகள்தாம் இவை.

உலகெங்கும் தேடினும் நம் தமிழினத்தில் இருப்பது போன்ற இந்த அளவிற்கான உறவுமுறைகளும் அதற்குப் பெயர் சொல்லி அழைத்தலும் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்.

காலங்காலமாகத் தமிழரிடத்திலேதான் இந்த உறவுகள் மாறுபடாமல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை குடும்பம், உறவுகள் என்று பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை வெளிப்படுத்தியிருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு முக்கியமான உறவுக்கு ஒருவித மரியாதை கலந்த பயம் அல்லது வெறுப்புணர்வு ஏற்படுகிறது.

ஆம். மாமியார் - மருமகள் உறவே அது. இன்றைய நிலையில் மாமியார் என்றாலே மருமகளுக்கு ஸ்டவ் வெடித்தலும் மருமகள் என்றாலே மாமியாரை முதியோர் இல்லத்தில் விடுதலும் என்ற நிலைமை பொதுவாகிவிட்டது. அது அப்படி அல்ல, ஒரு பெண் திருமணம் முடித்து கணவன் வீட்டிற்கு வருகையில் எழுதப்படாத கரும்பலகை போலத்தான் வருகிறார். ஆனால், அவளுக்கு கணவன் வீட்டில் கிடைக்கும் அனுபவங்களைப் பொருத்து அவளுடைய எண்ணக் கரும்பலகையில் எழுத்துகள் பதிவாகின்றன.

மாமியார் கூறுவதை ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்றே நினைத்துச் செயல்பட ஆரம்பிக்கிறாள். ஆனால், நாளடைவில் எங்கே இவள் தம் குடும்பத்தினரிடம் தன்னைவிட முக்கியத்துவம் பெற்று விடுவாளோ என்ற ஐயப்பாட்டில் ஒரு உறையில் இரு கத்தி இருக்காதல்லவா? மெதுமெதுவாக சண்டை பூசல், பொறாமை, யார் பெரியவர்? யாருக்கு வீட்டில் உள்ளவர்களிடம் உரிமை அதிகம்? இதுபோன்ற பிரச்னைகள் தலைதூக்கி அது நாளடைவில் சகிக்க முடியாத அளவிற்கு சண்டையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. மனித வாழ்விற்கு பலமாக இருக்கக்கூடிய கூட்டுக்குடும்ப வாழ்வு இதன் காரணமாக சிதைவுற்று தனிக் குடும்பமாகிறது. புதிதாக வருகின்ற உறவாகிய மருமகளிடம் மாமியார்தான், தன் வீட்டுப் பழக்க வழக்கங்கள், உணவுமுறை, உறவுமுறை பற்றிக்கூறி வழிகாட்ட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை, அவ்வூரில் உள்ள தன் குடும்பத்தின் பெருமை, கௌரவம் அது குலையாமல் காக்கும் விதம் அனைத்தையும் சொல்லித் தருதல் இயல்பேயாகும்.

சங்க காலத்தில் அகநானூறு பாடல் காட்சியொன்றைக் கவிஞர் சுவைபட வருணிக்கிறார். ஒரு தாயானவள் தன் மகனும் மருமகளும் மகிழ்வுடன் வாழ்க்கை நடத்தும் அழகைக் காண பகலெல்லாம் பல தொலைவு நடந்து வருகிறாள். இல்லத்தின் வாயிலருகே வரும் நேரம் இலேசாக இருட்டி விடுகிறது. அவள் வாயிலிலிருந்து உள்ளே பார்க்கும் காட்சியானது அவள் முகத்தையும் மனதையும் பெருமிதம்கொள்ளச் செய்கிறது.

வீட்டின் முன்புறம் ஒரு மலர்த்தோட்டம் ஒன்று இருந்தது. அங்கே உள்ள மரத்தினடியில் ஓர் அகலமான கல்மேடை. அம்மேடையின் அருகே அழகுமிகு முல்லைக்கொடியானது வௌ்ளை வெளேரென்று மலர்களைச் சுமந்தபடி படர்ந்து கிடக்கிறது. அவ்வழியாக அப்போது ஒரு பாணன் இசையை மீட்டிக்கொண்டு இனிமையாகப் பாடிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான். இளங்கணவன் முகமலர்ச்சியுடன் அமர்ந்தவாறு எதிரே இருக்கும் தன் சிறு மகனை எடுத்து தொடையில் அமர்த்திக்கொண்டு பாணன் பாடிச் செல்லும் இசைக்கு ஏற்ப குழந்தையின் இரு கைகளையும் பிடித்தபடி தாளம் போடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். மறுபுறத்தில் அவனுடைய இளம் மனைவி முல்லைப் பூக்களைப் பறித்து அவற்றினைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். பின்பு தான் தொடுத்த சரத்தில் ஒரு பகுதியை எடுத்து வந்து கணவனின் மடியில் அமர்ந்திருந்த சிறுவனுக்குச் சூடி மகிழ்கிறாள். மற்றொரு பகுதியை தானும் சூடிக்கொண்டாள். கணவனின் கவனம் குழந்தையிடம் இருந்து மனைவியிடம் திரும்பி அவளின் அழகைப் பருகலானான். இக்காட்சியைக் கண்ட தாயின் நெஞ்சம் பெருமிதத்தால் மகிழ்ந்தது. தன் மகனும் மருமகளும் நடத்தும் இனிய இல்லறத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

சங்க இலக்கியப் பாடல்களில் மாமியார் இறக்க மருமகள் ஒப்பாரி வைத்துப் பாடும் பாடலை அதிகம் காண முடியவில்லை. ஆனால், வாய்மொழியாக நாட்டுப்புறப் பாடலிலே சில வரிகளைக் காண முடிகிறது.

கொப்பரைய அடகு வச்சி
ஒப்பாரி படிக்கப் போனேன்
ஒப்பாரி படிக்கலியே
கொப்பரையும் திருப்பலியே

அதுபோல புறநானூற்றுப் பாடல் ஒன்று இயம்புகிறது.

போர்க்களத்திலிருந்து திரும்பி வராத தன் கணவனைக் கண்டு வரச் செல்கிறாள் மனைவி. அங்கே அவள் தன் கணவன் மார்பில் அம்பு பாய்ந்து இறந்து கிடப்பதைக் கண்டாள். இறந்து கிடக்கும் கணவனை நினைத்து அவள் கதறி அழுகிறாள். தன் இல்லத்திற்குச் சென்று தன் கணவன் இறந்த செய்தியை அவனுடைய தாய்க்கு எவ்வாறு கூறுவது என்று கலங்குகிறாள். அவளுடைய கையறு நிலையை இப்பாடலில் கயமனார் கீழ்வருமாறு கூறுகிறார்.

இளையரும் முதியரும் வேறு புலம் படர
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல
இடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று
நின்னுரை செல்லும் ஆயின் மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே என்மகன்
வளனும் செம்மலும் எமக்கென நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல் அளியள் தானே.

தன்னுடைய மகனின்  செழுமையான வாழ்வு பற்றிய தாயின் இன்பமான ஒரு கர்வம் மணம் முடித்து இல்லறம் நடத்தும் தன் மகனின் செல்வச் செழிப்பும் அவன் ஆடம்பரமும், ஆரவாரமும் ஒரு தாய்க்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அவன் குடித்தனம் செய்யும் பாங்கை அனைவரிடமும் பேசிப் பேசி மகிழ்ந்து போவாள். இறந்துபோன கணவனின் உடலை வைத்துக்கொண்டு அவன் இறந்து போனதை எண்ணி அவனது தாய் எவ்வாறு அரற்றுவாள் என்று அந்தப் பெண் அப்பாடலைக் கூறி அழுகிறாள் என்கிறார் புலவர்.
இதன்மூலம் தன் மகனை இழந்து அத்தாய் தவித்தது புலனாகிறது. மாமியார் மகனின் பேரில் வைத்திருந்த எல்லையற்ற பேரன்பும், பெருமிதமும், நம்பிக்கையையும் ஒரு மருமகள் போற்றுவதாக இக்கையறு நிலைப் பாடல் உணர்த்துகிறது.

பிற்கால இலக்கியத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் செட்டிநாட்டு மாமியாரின் வாக்காக,

நல்லாத்தான் சொன்னாரு நாராயணச்செட்டி
பொல்லாத பெண்ணாக பொறுக்கி வந்து வச்சாரு
வல்லூறைக் கொண்டுவந்து வாசலிலே விட்டாரு
கல்லாப் பொறந்ததையும் கரும்பாம்புக் குட்டியையும்
செல்லாப் பணத்தையும் செல்ல வெச்சுப் போனாரு
ஊரெல்லாம் பெண்ணிருக்கு உட்கார வெச்சிருந்தா
எட்டுக்கண் விட்டெரிக்க எந்தம்பி மகளிருக்க
குத்துக்கல் போலே ஒண்ணெ கூட்டிவந்தோம் வீடுவரை

என்று மருமகளை நம்பி நின்று நாராயணன் செட்டி செய்த செயல்களைக் கூறும் மாமியாராக இருக்கட்டும், மாமியாருக்கு பதில் கூறுதல்போல இருக்கும் மருமகள் மான்மியமாக

அவகெடக்கா சூர்ப்பனகை
அவமொகத்த யாரு பாத்தா?
அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான்
பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா
எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக

என்று மாமியாருக்கு பதில்கூறும் விதமாகத் தன் மனக்கருத்து ஒத்துவரவில்லை என்பது விளங்குகிறது.

மாமியார் - மருமகள் குறித்த பலமொழிகள்

மாமி குற்றம் மறைப்பு மருமகள் குற்றம் திறப்பு
மாமியார் உடைத்தால் குழவிக்கல் மருமகள் உடைத்தால் வைரக்கல்
மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கை தவிடு தேவலை.
மாமியார் கோபம் வயிற்றுக்கு மட்டும்
மாமியார் சாமான் வாங்கி மச்சு நிரம்புமா?

தற்போது காலம் வேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் அனைவருமே வேலைக்குச் சென்றாக வேண்டியுள்ளது. அவரவர்களுக்குத் தன்னுடைய வேலையைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. இதில் அடுத்தவரைப் பற்றிய கவலையோ செயல்பாடுகளையோ கவனிப்பது என்பது சிந்திப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. ஆகையால் அவரவரே அந்தந்த குடும்பத்துக்குப் பொறுப்பு என்கிற எண்ணம் வந்துவிட்டது.

முக்கியமான நாள் கிழமைகளில் மகன்-மருமகள், பேரன்-பேத்திகள் என வந்து செல்வது அல்லது மகனின் வீட்டிற்குப் பெற்றோர் வருவது நடைமுறையாகிவிட்டது. வந்த இரண்டு மூன்று நாட்களிலும் விருந்தினர் போல இருந்துவிட்டுச் சென்றுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அலுவலகத்தில் மேலதிகாரியைச் சகித்துச் செல்வது இல்லையா? அதுபோல்தான் என்ற எண்ணம் மருமகளுக்கும் நாட்கள் செல்லச்செல்ல தன் நிலைமை போன்றுதான் தம் மருமகளுக்கும் என்ற எண்ணத்தில் மாமியாரும் நேரத்தைக் கடத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் சென்றுவிடுகிறார்கள்.

நடுநிலை தவறாது ஆண்கள் இருக்கும் பட்சத்தில் இருவருக்குமே சற்று பயமும் மரியாதையும் ஆண்களிடத்தில் இருக்கும். நடுநிலை தவறும்பட்சத்தில் யாரிடம் பாதிப்பு இருக்கிறது. அவர்களிடம் கோபமும் தலைதூக்கி பிரச்சினை, சண்டை என்கிற அஸ்திரங்கள் வரிசையாக வந்து சேரும். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமை என்னும் ஓர் ஆயுதத்தைக் கைக்கொண்டால் அது எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தாலும் வெல்லலாம்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய உறவுகள் மேம்பட குற்றம் கூறாதீர்கள்; அதைச்செய், இதைச்செய் என்று அதிகாரம் செய்யாதீர்கள். அது வேண்டும், இது வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். சகித்துக்கொள்ளுங்கள். விட்டுக்கொடுங்கள். தியாகம் செய்யுங்கள்.

மிக முக்கியமாக விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாமியாரும் தன் மருமகளை மகளாகவும், ஒவ்வொரு மருமகளும் தன் மாமியாரை தாயாகவும் பார்த்தாலே அனைத்து பிரச்னைகளும் எளிதில் தீரும்.

மாமியார் தினமா, அப்படியொரு நாளா, அதையெல்லாமா கொண்டாடுவார்கள்? யாருங்க முடிவு செய்தது, யாருங்க இதையெல்லாம் கொண்டாடுவது? ஏதோ மாமியாரையெல்லாம் கொண்டாடவே கூடாது என்பதைப் போலதான் பலரும் கேட்கிறார்கள். நமக்கு ஒருவேளை புதிதாக இருக்கலாம். ஆனால், உலகின் எங்கோ ஒரு மூலையில் மாமியார் தினத்தைக் கொண்டாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். இப்போது அல்ல, கடந்த 86 ஆண்டுகளாக!

அன்னையர் நாள், தந்தையர் நாள் என்பதைப் போல மாமியார் நாளும் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது, 1934 ஆம் ஆண்டில். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள அமரில்லோ நகரில் உள்ளூரில் வெளியாகும் செய்தித்தாளான அமெரில்லோ குளோப் நியூஸின் ஆசிரியர் ஜீன் ஹோவ் (சட்டெனத் தோன்றுவதைப் போலவே இவர் பெண்மணி அல்ல, ஆண்தான்) என்பவரின் முன்முயற்சியால் முதன்முதலில் மாமியார் தினம் கொண்டாடப்பட்டது.

அன்னையர் நாளைப் போலவே திட்டமிடப்பட்டு, முதன்முதலில் மார்ச் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், அதன் பிறகு, அப்போதைய சூழ்நிலைகளைப் பொருத்து வெவ்வேறு நாள்களில் கொண்டாடப்பட்டு வந்தது. பிற்காலத்தில் மாமியார் தின விழாக் குழுவொன்று அமைத்து ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்களுக்குப் பரிசுகள் எல்லாம்கூட அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அவை அல்லது உலகளாவிய முகமைகள் அல்லது அமைப்புகள் அறிவிப்பதற்கு மாறாக, 1970-களில் அமெரிக்கப் பூங்கொத்து வணிகர்கள் அமைப்புதான் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை மாமியார் தினமாகக் கொண்டாடுவதென அறிவித்தனர். அப்போதிருந்து இந்த நாளில் மாமியார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2002, ஜனவரி 23-ல் மாமியார் தினம் விடுமுறை நாளாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற நாள்களைப் போல பரவலாகக் கொண்டாடப்படாமல், மிகச் சில நாடுகளில்தான்  கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்னையர் நாளைப் போலவோ, தந்தையர் நாளைப் போலவோ அல்லது இன்னபிற நாள்களைப் போலவோ மாமியார் தினம் மட்டும் உலகளாவிய புகழை அல்லது பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறலாம். என்னவோ தெரியவில்லை, காலங்காலமாக மாமியார் என்பவர் மற்றொரு தாயைப் போல என்றாலும் அன்னையருக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஏனோ மாமியார்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால், உள்ளபடியே மாமியார்கள் எல்லாரும் கொடுமைக்காரர்களா, நல்ல மாமியார்களே இருக்க மாட்டார்களா, அதுவும் உலகம் முழுவதும்... நினைத்துப் பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது.

எல்லா உறவுகளுக்கும் இருக்கும் எல்லா மதிப்பும் மரியாதையும் மாமியார்களுக்கும் இருக்கிறது, மருமகள்களுக்கு மட்டுமல்ல, மருமகன்களுக்கும். ஆனால், அது இன்னமும்கூட சரியாகப் புரிந்துகொள்ளப்படாததுதான் பிரச்சினை, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாமியார்களாலும் மருமக்கள்களாலும்!

தான் வளர்த்து ஆளாக்கிய மகனை அல்லது மகளை உங்கள் மீது அன்பு செலுத்துபவராக, காதல் கொள்பவராக, உங்களுடைய வாழ்நாள்  முழுதும் உங்களைப் பேணிக் காப்பவராக, எதிர்காலத்துக்கு உரித்தான  ஒருவராக உங்களிடம் ஒப்படைக்கும் பெருந்தன்மையான பெண் அல்லவா, மாமியார்? அவரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாடுவது?

இவ்வளவு காலமாக மகனையோ, மகளையோ பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு திருமண உறவுக்குப் பிறகு மருமகனை, மருமகளையும் சேர்த்து, அவர்களுடைய நலனிலும் அக்கறையும் ஆர்வமும் கொள்ளத் தொடங்கிவிடுகிறார்.

மருமகளின் வருகையுடன் இல்லத்தில் இன்னோர் இடத்தையும் உருவாக்கிக் கொடுக்கிறார், தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வைப் பார்த்து மகிழ்கிறார் மாமியார். எத்தனையோ குடும்பங்களின் அச்சாணியாகத் திகழ்பவர்கள் மாமியார்கள்.

நம் வாழ்வில் மாமியார்களுக்குச் சிறப்பான தனித்ததோர் இடமிருக்கிறது, சிலநேரம் கடிந்துகொண்டாலும்கூட நம் குழந்தைகள் நல்லவர்களாக சமூகத்தில் வளர்ந்து உயர்வதில் அவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது.

நினைத்துப் பாருங்கள், இரண்டு குடும்பங்கள் இணைவதில் இரு தரப்பு மாமியார்களுக்கும்தான் பெரும் பங்கிருக்கிறது. மாமியார்களுடன் இருக்கும் குடும்பங்களில் பெரும் பாதுகாப்பு இருக்கிறது. பொறுப்பின்  சுமையும்கூட குறைகிறது.

இளைஞனும் யுவதியும் மணம்புரிந்து சமுதாயத்தின் உறுப்பினர்களாக,  வளர்ந்த மனிதர்களாக மாறுவதில் இருவருடைய அன்னையர்களுக்குதான், அதாவது மாமியார்களுக்குதான் பெரும் பங்கிருக்கிறது. தாய் என்றாலும் மாமியார் என்றாலும் இருவருமே தங்கள் குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்கியவர்கள்தானே. புதிதாக உருவாகும் ஒரு குடும்பத்தில் இருவருக்குமேதானே பங்கிருக்கிறது.

அதிகபட்சம் என்ன, ஒவ்வொரு தாயும் (நாளைய மாமியார்) தன் மகள் அல்லது மகன் நன்றாக இருக்க வேண்டும், நல்ல துணை அமைய வேண்டும், வாழ்வு சிறக்க வேண்டும், வம்சம் விருத்தியடைய வேண்டும் என்பதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்?

ஆனால், ஏனோ மாமியார்கள் எப்போதும் மோசமாகவே சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள். திரைப்படங்களும் சின்னத் திரைத் தொடர்களும் இணைந்து இவர்களை பெரும் வில்லிகளாக்கிவிடுகின்றன. மாமியார்களின் பெருந்தன்மைகளைவிட கொடுமைகளைப் பற்றிதான் ஏராளமான கதைகளும்கூட.

மாமியாரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாட? உங்களுக்கு அவரைப் பிடிக்கிறதோ, இல்லையோ, கொண்டாடுங்கள். வாழ்த்துச் சொல்லுங்கள், இப்படியும் ஒரு நாள் இருக்கிறது, உலகத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடுங்கள். மகிழ்ச்சியடைவார்கள்.

இந்த சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சித்திரத்தில், மாமியாரை மருமகள்கள் அல்லது மருமகன்கள் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டாலே அதிசயப்படுவார்கள், ஆச்சர்யப்படுவார்கள், நேரில் பார்க்கும்போது, வாழ்த்தும்போது... எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? நினைத்துப் பார்க்க முடியவில்லை அல்லவா?  கொண்டாடிப் பாருங்கள்.  

மாமியார் தினம் சரி, மாமனார்கள் தினமும் இருக்கிறதா? இருக்கிறது, ஜூலை 30! இனிவரும் காலத்தில் மாமனார்களையும்கூட கொண்டாடத்தானே வேண்டும் [என்ன கொடுமை சரவணா, மச்சான், மச்சினி நாள்கள் எல்லாம் எதுவும் இல்லையாமே!].

#MotherInLawDay  

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, 18-ம் நூற்றாண்டில் பெரும் வெற்றியையும் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை அறிந்து, அவர்களுக்கு எதிரான உரிமைக்குரல் ஒலிக்கத் தொடங்கியது.

ஆங்கிலேயரின் அரசியல் அதிகார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, தெற்கில் மைசூர் பகுதியில் ஆட்சிபுரிந்த திப்பு சுல்தான் தலைமையில் ஒரு அணி உருவானது. திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புகொண்டு, தன் அணிக்கான ராணுவ வலிமையைப் பெருக்கிக்கொள்ள முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஐரோப்பாவில் உருவான திடீர் திருப்பங்களால் வரலாறு திசைமாறிப்போயிற்று.

பிரான்ஸிலிருந்து இங்கு அனுப்பிவைப்பதாக நெப்போலியனால் வாக்குறுதி தரப்பட்ட பிரான்ஸ் ராணுவம், அங்கு இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக இங்கு அனுப்பிவைக்கப்படவில்லை. ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களாலும், முறையாகப் பயிற்சிபெற்ற ராணுவத்தாலும், இங்குள்ள சில சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்து காட்டிக்கொடுத்தமையாலும் அப்போது நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முதல்கட்டமாக பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன் ஆகிய தலைவர்கள் வீரமரணத்தைக் களத்தில் சந்தித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாகத் தென்பகுதியில் சிவகங்கைச் சீமையில் மருதுபாண்டியர்கள் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிரான போர்க் கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டது. ஆங்கில ஆட்சிக்கு எதிரான சுதேசித் தலைவர்களான கர்நாடகத்தின் சிமோகா பகுதியைச் சார்ந்த தூண்டாஜ் வாஹ், கேரளவர்மா வேலுத்தம்பி, ஆந்திரத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், விருப்பாட்சி கோபால் நாயக்கர், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோர் ஒன்றுகூடி ஒரு கூட்டணியை உருவாக்கியதோடு, ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில், மக்களே ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை அழித்தொழிக்கும் ‘மக்கள் புரட்சியாக’ அதை மாற்றிடத் திட்டமிட்டார்கள். இந்த மக்கள் புரட்சிக்குத் திட்டமிட்ட மருதுபாண்டியர்கள் தலைமையிலான போராட்டக் குழுத் தலைவர்கள், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் பற்றியும் பிரான்ஸில் நடைபெற்ற ‘மக்கள் புரட்சி’ பற்றியும் அறிந்து வைத்திருந்தார்கள். அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் 1775 ஆண்டு முதல் 1783 வரை என்பதும், பிரான்ஸில் நடைபெற்ற மக்கள் புரட்சி 1789 முதல் 1799 வரை என்பதும் வரலாற்றுச் செய்திகளாகும். எனவே, அமெரிக்க சுதந்திரப் போராட்டமும், பிரான்ஸின் மக்கள் புரட்சியும், இங்கு ஆங்கிலேயருக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட மக்கள் புரட்சியும் 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற புரட்சிகரமான போராட்டங்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!

வஞ்சகமும் துரோகமும் சுயநலமும் ஆங்கில அதிகாரவர்க்கத்தால் உற்சாகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், மக்களின் ஆயுதம் தாங்கிய புரட்சிதான் ஆங்கில ஆக்கிரமிப்பை வேரறுக்க முடியுமென மருதுபாண்டியர்கள் கருதினார்கள். எனவே, நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் திட்டமிட்டபடி, ஆயுதம் தாங்கிய மக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சியில் ஈடுபடுவார்களேயானால், கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ பலம் சிதறிப்போய்விடும், மக்கள் புரட்சியின் மூலம் வெற்றி காண முடியும் என்று திட்டமிட்டது மருதுபாண்டியர்கள் தலைமையிலான போர்க் கூட்டமைப்பு. அதன்படி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்ப் பிரகடனத்தைத் திருவரங்கம் கோயிலிலும், ஆற்காடு நவாப் அரண்மனைக் கோட்டை வாயிலிலும் ஒட்டிப் பிரகடனப்படுத்தினார்கள். இந்த போர்ப் பிரகடனத்தின் மூலம் அனைத்து மக்களும், ஆயுதங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து அணிதிரள வேண்டும், அவர்களை ஆங்காங்கு அழித்தொழிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்கள், அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.

இந்த போர்ப் பிரகடனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த லட்சியங்களையும் தொலைநோக்குப் பார்வையையும் உள்ளடக்கியது மட்டுமல்ல... நாட்டின் விடுதலைக்காகவும், ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்துவதற்காகவும் சர்வதியாகத்துக்கும் எப்போதும் தயார் என்கிற ஆழமான நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதும்கூட. ‘ஜம்பு தீவிலும், ஜம்பு தீபகற்பத்திலும் (தென்நாட்டிலும் – நாட்டின் வடபகுதியிலும்) வாழும் சகல சாதியினரும், பிராமணர்களும், சத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், முசல்மான்களும் ஒன்றுபட்டு ஐரோப்பியர்களை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஆயுதம் ஏந்தவேண்டுமென’ அந்தப் போர்ப் பிரகடனம் வலியுறுத்தியது.

இந்த போர்ப் பிரகடனத்தின் இறுதியில் சின்ன மருதுபாண்டியர் கையொப்பமிடும்போது, ‘பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய இழிபிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியன்’ எனக் கையொப்பமிட்டார். ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள்புரட்சியை ஒருங்கிணைத்துத் தலைமையேற்று நடத்திய மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் தலைநகர் சென்னையில் நிறுவப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தமிழ் மண்ணின் புரட்சி வரலாற்றை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் நன்முயற்சி.

- பொன்.முத்துராமலிங்கம், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்

அக் 24: மருது சகோதரர்கள் நினைவு தினம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய 18 வயதில் கல்விக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இங்கிலாந்து சென்று, தாய்நாட்டின் அரசியல் சூழல் காரணமாக அங்கு மீண்டும் திரும்ப முடியாமல், படிக்க வந்த நாட்டிலே அகதியாகத் தஞ்சமடைந்த ஒரு இளைஞன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றது வாழ்க்கைப் பயணம் குறித்து வியப்பை ஏற்படுத்துகிறது.

2021-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கறுப்பின ஆப்பிரிக்கப் பின்புலம் கொண்ட அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பரிசுத் தேர்வில் கறுப்பின எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கறுப்பின ஆப்பிரிக்க எழுத்தாளர் என்பதற்காக மட்டுமல்ல, முஸ்லிம் பின்புலம் கொண்ட எழுத்தாளர் என்பதன் அடிப்படையிலும் – உலக அளவில் இஸ்லாமிய வெறுப்பு தீவிரம் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், அவருக்கான விருது கூடுதல் கவனம் பெறுகிறது. எகிப்து எழுத்தாளர் நஜீப் மஹ்ஃபூஸ், துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் ஆகிய இருவரும் இதற்கு முன்பு முஸ்லிம் பின்புலத்திலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்கள். தற்போது, மூன்றாவது நபராக குர்னாவும் அந்தப் பட்டியலில் இணைகிறார்.

1948-ல் தான்சானியாவில் உள்ள சான்சிபார் தீவில் பிறந்த குர்னா, 1967 வாக்கில் குடும்பத்தைப் பிரிந்து பிரிட்டனுக்குச் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில், சான்சிபாரில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் அங்கு உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. இதனால், சொந்த நாடு திரும்ப முடியாமல் பிரிட்டனிலே அகதியாகத் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த குர்னா, சமீபத்தில் ஓய்வுபெறும் வரையில் அங்கு பேராசிரியராகப் பணியாற்றினார். சிறிய வயதிலேயே வீட்டைப் பிரிந்து வேறொரு உலகில் தன்னந்தனியராகத் தனக்கான பாதையைக் கண்டடைய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானதே தன்னுடைய எழுத்துகளுக்கு ஆதாரமாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். 72 வயதாகும் குர்னா, தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை பிரிட்டனில் கழித்தாலும், அவர் தன்னை இன்னும் ஒரு அகதியாகவே உணர்கிறார். அந்த உணர்வே அவருடைய படைப்புகளைக் கட்டமைக்கிறது. அவருடைய எழுத்துகள் அகதிகளின் வாழ்க்கையையும், அவர்களின் உள்ளார்ந்த துயரத்தையும் தனிமையையும் பேசுபவை. அவருடைய நாவல்களை வாசிக்கையில் அவை தனித்தனியான கதைகள் என்பதாக இல்லாமல், காலனியம், அதன் விளைவுகள் மற்றும் அகதிகளின் வாழ்வு ஆகியவற்றின் ஒருபிடி உலகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவித துயரார்ந்த அமைதி அவற்றில் வெளிப்படுகிறது.

குர்னா இதுவரையில் 10 நாவல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய முதல் நாவல் ‘மெமரி ஆஃப் டிபார்ச்சர்’ 1987-ம் ஆண்டு வெளிவந்தது. 1994-ம் ஆண்டு வெளிவந்த நாவலான ‘பாரடைஸ்’, புக்கர் பரிசுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. அது குர்னா மீது உலகளாவிய கவனம் ஏற்பட வழி செய்தது. 2005-ம் ஆண்டு வெளியான ‘டிஸெர்ஷன்’ (Desertion) நாவலைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஆண்டு 1899. அடையாளம் தெரியாத ஒரு நபர், அடிபட்டு கந்தல் கோலத்தில், சாகும் தறுவாயில் கென்யாவில் தெற்குப் பகுதிக் கிராமத்தை அடைகிறார். அந்த நபரைத் தன்னுடைய வீட்டுக்குத் தூக்கிச்சென்று சிகிச்சை அளிக்கிறார், அக்கிராமத்தில் கடைவைத்திருக்கும் ஹசனலி. இந்த நிகழ்வு அதிகாலை சுபுஹூ தொழுகைக்கான நேரத்தில் நிகழ்கிறது. தொழுகைக்கான அதிகாலை வேளையை விவரிப்பதன் வழியே அக்கிராமத்தின் ஆன்மாவை நம்முள் கடத்திவிடுகிறார் குர்னா.

கிழக்கு ஆப்பிரிக்க மண்ணை ஆளும் பிரிட்டிஷாரின் தொடர்பு வட்டத்தில் உள்ள மார்டின் பியர்ஸ்தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நபர். ஹசனலி தனது மனைவியுடனும், திருமணமாகாத சகோதரியுடனும் ஒரு வீட்டில் வசிக்கிறார். வெள்ளையின நபர் மார்டின் பியர்ஸ், ஹசனலியின் சகோதரி ரெஹானா மீது காதல் வயப்படுகிறார். நாவலின் முதல் பாகம் இந்தப் பின்னணியைச் சுற்றி விரிகிறது. ஹசனலி, அவரது குடும்பம், அந்தக் கிராமம், பிரிட்டிஷார்களின் ஆதிக்கம் என்பதாக முதல் பாகம் பயணிக்கிறது.

நாவலின் இரண்டாவது பகுதியானது முதற்பகுதியின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிக் கதையாக ஆரம்பிக்கிறது. 1950-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் சான்சிபார் தீவில் உள்ள குடும்பத்தைச் சுற்றிக் கதை நடக்கிறது. அமீன், ரஷீத் என்ற இரு சகோதரர்கள், சகோதரி ஃபரிதா, அவர்களது பெற்றோர்களைச் சுற்றி நடக்கிறது. பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். கல்விரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் முன்னேறிய குடும்பம். கிழக்கு ஆப்பிரிக்கச் சூழலில், அக்குடும்பத்தினரின் வாழ்க்கை - குறிப்பாக, ரஷீத், அமீன், ஃபரிதாவின் குழந்தைப் பருவம் - பேசப்படுகிறது. அந்நகரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரிட்டிஷ் – ஆப்பிரிக்கத் தம்பதியின் பரம்பரையைச் சேர்ந்த ஜமீலா என்ற தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணின் மீது அமீன் காதல் வயப்படுகிறான்.

மூன்றாவது பகுதி 1970-களில் நடக்கிறது. ரஷீத் கல்விக்காகக் குடும்பத்தைப் பிரிந்து இங்கிலாந்து செல்கிறான். புதிய உலகம், புதிய கலாச்சாரம். நிற வேற்றுமையை எதிர்கொள்கிறான். சான்சிபாரில் புரட்சி வெடிக்கிறது. பிரிட்டிஷ் ஆதிக்கம் வெளியேற்றப்படுகிறது. கலவரச் சூழல் நீடிக்கிறது. இதனால், ரஷீத் கல்வி முடிந்தும் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை. இனி தன் வாழ்நாளை இங்கிலாந்திலேயே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறான். அதற்கு முன்பு வரை மாணவன் என்ற அடையாளத்தில் இருந்தவன், கல்வி முடிந்ததும் அகதி என்ற உணர்வு நிலைக்கு ஆட்படுகிறான். அது சொந்த நிலத்துடனான நினைவுகளை அவனுள் பெருக்கச் செய்கிறது. எழுத ஆரம்பிக்கிறான்.

மார்டின் பியர்ஸ், அவனுடைய காதலி ரெஹானா, சகோதரன் அமீன், அவனுடைய காதலி ஜமீலா ஆகியோருக்கு இடையிலான தொடர்பு தூலமாகிறது. தனித்தனிக் கதைகளாக இருந்தவை, ஒரு நிலத்தின், ஒரு கலாச்சாரத்தின் கண்ணிகளாக மாறுகின்றன. ரஷீத்தின் நினைவுகளின் ஊடாக பின்காலனிய நிலம் ஒன்று கட்டமைகிறது. சுயசரிதைத் தன்மை கொண்டதாக இந்நாவல் இருக்கிறது. குர்னாதான் ரஷீத்தாக வருகிறார். குர்னாவின் எழுத்து ஆப்பிரிக்க நிலத்தின் ஆன்மாவை உணரச் செய்கிறது. இந்த நாவல் நேரடியாக கிழக்கு ஆப்பிரிக்காவின் அரசியல் சூழலையும் கலாச்சாரத்தையும் பேசுவதில்லை. காதல் கதைகளாக அது பயணிக்கிறது. அதன் வழியே காலனியம், அதன் விளைவுகள் ஆகியவை துலக்கம் கொள்கின்றன. குர்னாவைப் படிப்பது ஒரு வகையில் அசோகமித்திரனின் பாணியை நினைவூட்டுகிறது. குர்னா, நிகழ்வுகளைச் சாதாரண முறையிலேயே சொல்கிறார். ஆனால், அந்தச் சாதாரணத்துக்குப் பின்னால் பெரும் கனம் இருக்கிறது.

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

பல இளைஞர்களைக் காந்திய இயக்கத்துக்கு அழைத்துவந்த காந்திய ஆளுமை T.D. திருமலையின் நூற்றாண்டு இது. எளிமையாக, அதேசமயம் உணர்வோடு காந்தியைப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டுசென்றதில் முக்கியப் பங்கு வகித்தவர் திருமலை.

ஜே.கிருஷ்ணமூர்த்தியும், டி.கே.சி.யும், பேரா. அ.சீ.ரா.வும், ஜஸ்டிஸ் மகராஜனும் திருமலைக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி காந்தியை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவினார்கள். ஆகவேதான், அவருடைய சிந்தனையும் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருந்தன. தன் காந்தியப் பணிகளோடு இலக்கியத்தையும் இணைத்துக்கொண்டார். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் 'மல்லிகை' எனும் இலக்கிய அமைப்பை மதுரையில் இருக்கும்போது ஏற்படுத்தி, காந்திய இலக்கியம் வளரவும், இலக்கியத்தில் காந்தியச் சிந்தனைகளைக் கொண்டுவரவும் திருமலை முயற்சி செய்தார். ஆகவே, இலக்கியத் தளத்திலும் காந்திய நண்பர்களின் வட்டாரத்திலும் திருமலைக்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது.

காந்தி அமைதி நிறுவனத்தில் பெரும் தலைவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சீனிவாச அய்யங்கார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன், காந்தியத் தொகுப்பு நூல்களின் ஆசிரியர் பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி அவர்கள் எல்லாரும் காந்தி அமைதி நிறுவனத்தில் உறுப்பினர்களாக ஆனதற்குக் காரணம், திருமலையின் ஈடுபாடும் அவருக்கு காந்தியின் மேல் இருந்த பக்தியும்தான்.

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைப் பார்த்தால், ஒவ்வொன்றும் பல அடைமொழிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால், திருமலை எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்துக்கு 'காந்தி' என்று மட்டும் தலைப்பிட்டார். ஏனெனில், “உரிச்சொல், பெயர்ச்சொல்லின் விரோதி” என்பார் அவருடைய பேராசிரியர் அ.சீனிவாசராகவன். ஆகவே, திருமலை இவ்வாறு தலைப்பிட்டார். அவர் காந்தியைப் பார்க்கும் பார்வையில் எப்போதுமே ஒரு வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.

15 வயது இளைஞராக இருந்தபோதே காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை அவருக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் திருநெல்வேலிக்கு நேரு வந்தபோது, அவருடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பு திருமலைக்குக் கிடைத்தது. அதையடுத்து, காந்தி குல்லாவோடு சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் திருமலை. காந்தியின் செயல்திட்டங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு அந்த இளைய வயதிலும் உற்சாகத்துடன் பணியாற்றிக்கொண்டிருந்த திருமலைக்கு, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக ஆகிவிட்டது. பட்டப் படிப்பைத் தூக்கி எறிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டார். அவரைப் போன்ற இளைஞர்கள் அன்று தங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது, இந்த தேசத்தைப் பற்றி மட்டுமே கவலை கொண்டு, கல்லூரிகளையும் தாங்கள் பணிசெய்துகொண்டிருந்த நிறுவனங்களையும் விட்டுவிட்டுப் பொது வாழ்க்கைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.

1921-ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த திருமலையை பிறந்தவுடன் அவருடைய பெற்றோர்கள் பட்டுத் துணியால் ஏந்தினார்களாம். திருமலையின் உடம்பில் முதன்முதலில் பட்டது அந்தப் பட்டுத் துணியாக இருக்கலாம். ஆனால், தன்னுடைய உயிர் மூச்சு முடியும் வரை கதர் அணிந்து காந்தியப் பணிகளுக்காகவே வாழ்ந்தவர் திருமலை. 1956-ல் வினோபா பாவே பூமிதான இயக்கத்துக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஜெகநாதன், கிருஷ்ணம்மாள், ர.வரதன், பத்மா, கே.எம்.நடராஜன் ஆகியோரோடு திருமலையும் கிராமம் கிராமமாகச் சென்று, பலரிடமும் தானமாக நிலங்களை வாங்கி, நிலமில்லாத விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். தமிழ்நாட்டு பூமிதான யாத்திரையில் வினோபாவுடன் சென்ற அந்த அனுபவமும் அவர் பேசிய பேச்சுக்களின் தாக்கமும் கடைசி வரை திருமலையிடம் இருந்தது. வினோபாவின் வாழ்க்கை வரலாற்றையும் திருமலை எழுதியிருக்கிறார்.

அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டே இருந்தன. செல்வச் செழிப்போடு வாழ்ந்த திருமலை மிகவும் ஏழ்மை நிலைக்கு வந்தாலும்கூட தொடர்ந்து காந்தியப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த மாதிரியான நிலையிலும்கூட வாழ்க்கையை எப்படி ரசித்து வாழ்வது என்பதை ரசிகமணி டி.கே.சி.யிடம் அவர் கற்றுக்கொண்டிருந்தார். டி.கே.சி.யின் மேல் உள்ள பற்றால் ‘உலக இதயஒலி' எனும் இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தினார். ‘காந்திஜியின் வாழ்வும் வாக்கும்’ என்ற தமிழ்ப் பத்திரிகையும் ‘The Joy of Living’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்கூட திருமலை நடத்தினார்.

தமிழ்நாடு காந்தி நினைவு நிதியில் தத்துவப் பிரச்சாரகராக இருந்து, காந்தியத் தத்துவங்களை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லும் மிகப் பெரிய பணியை ஏற்றுக்கொண்டு மதுரையை மையமாகக் கொண்டு, பல கல்லூரிகளுக்கும் காந்தியின் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் எடுத்துச் சென்ற பெருமை திருமலையையே சாரும். 1969-ல், காந்தி நூற்றாண்டு விழாவின்போது, அதன் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்பட்டபோது திருமலை தொடங்கிய திட்டம்தான், ‘காந்திஜியின் வாழ்வும் வாக்கும்’ (The Voice of Gandhi) என்ற அஞ்சல் மூலம் படிப்புத் திட்டம். சென்னை காந்தி அமைதி நிறுவனத்துக்குச் செயலாளராக அவர் பணியாற்றியபோது பள்ளி, கல்லூரிகளுக்கு காந்தியின் வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் சத்தியசோதனை தேர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவந்தார். அது இன்றும் நடந்துவருவது அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகவே கருத வேண்டியிருக்கிறது. மாணவர்கள் மத்தியில் பிரபலமான தேர்வுத் திட்டமாக சத்தியசோதனை தேர்வுத் திட்டம் அமைந்திருந்தது.

அவர் செயலாளராக இருந்த காந்தி அமைதி நிறுவனமும் அவர் ஆரம்பித்த காந்தி கல்வி நிலையமும் இன்றும் அவருடைய சிந்தனைகளுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து காந்திய சிந்தனைகளை இளைஞர்களிடமும் குறிப்பாக மாணவர்களிடமும் கொண்டுசெல்கிறது. பணம் இல்லையே என்ற பதற்றம் என்றும் திருமலைக்கு இருந்ததில்லை. எதைச் செய்தாலும் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்... அவ்வளவுதான். செயல்திட்டங்களைப் பற்றியும் நிகழ்ச்சிகள் பற்றியும் விவாதிக்கும்போது அவர் ஒரு விஷயத்தைக் கூறுவார், “நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நிகழ்ச்சிகளும் செயல்திட்டங்களும் தாமாகவே வந்து உங்களைச் சேர்ந்துவிடும். செயல்திட்டங்களைத் தீட்டி, நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, ஆட்களைச் சேர்த்தால், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அந்த ஆட்களும் எங்கோ சென்றுவிடுவார்கள்.”

திருமலையைப் பொறுத்தவரை, உலகத்தில் அனைவரும் அன்போடு நண்பர்களாகப் பழகிவந்தாலே காந்தியம் மலர்ந்துவிடும். அன்றாட வாழ்க்கையில் அனைவரையும் அன்போடு நண்பர்களாக்கிக்கொண்டு பழகுவதே உண்மையான காந்தியம் என்பதே அவருடைய காந்திய சித்தாந்தம்.

- அ.அண்ணாமலை, இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுடெல்லி,

Tavleen Singh writes: In the past two years, the Prime Minister’s men have tried to create a new breed of ‘nationalistic’ Kashmiri politicians. This exercise has failed abysmally. Modi must come up with a better strategy.

This has been a week of drama and distractions. No sooner did our intrepid TV reporters take a break from the story of Shah Rukh Khan’s son than we began cheering and beating our drums to celebrate the billionth Covid vaccination dose. This still means that just 30 per cent of our adult population is fully vaccinated, but the Prime Minister ordered the country to celebrate this ‘historic’ moment, and so we did. In all the din and drama, what everyone seems to have forgotten about is the ominous new phase of killings in Kashmir. As someone who has covered the Kashmir story since that summer in 1981 when Sheikh Abdullah anointed Farooq his heir by handing over his ‘crown of thorns’, it worries me that we are not talking more about Kashmir.

In this column I have said before and will say again that one of the bravest things that Narendra Modi did was to push through the abrogation of Article 370 in Parliament. The special status that this Article provided served mostly to fool Kashmiris into believing that ‘freedom’ was a possibility. It never was and never will be. But this is something that our political leaders hesitated to say plainly in that era when there were endless rounds of ‘dialogues’ with Pakistan. Having been present at some of these dialogues, I can report that they were exercises in duplicity.

The Pakistani side usually banged on about how much we had in common and how important peace was, and the Indian side responded in similar vein. One of the most embarrassing things, from my viewpoint, was to see high officials from southern India trying to soften their interlocutors by reciting bad Urdu poetry badly. Often, they did this to Punjabis from the other side, whose own Urdu was bad. Modi tried to take the dialogue route and stopped only when, every time he held out the hand of friendship, the response was a terrorist attack. After Pulwama, he realised it was hopeless.

The only thing that has made Pakistan’s leaders understand that India has no intention of discussing the surrender of the Kashmir Valley is the abrogation of Article 370. The initial Pakistani response was for Imran Khan to throw a tantrum and appoint himself ‘ambassador of Kashmir’, but the expected rebellion against ‘Indian brutality’ never happened in the Valley. And the world was not interested. So, an uneasy sort of calm descended on the new Union territory, and tourists quietly started to return. In the past few months so many tourists poured into the Valley that it became hard to find a hotel room or a houseboat in Srinagar.

The abrogation of Article 370 seemed to have ushered in a new era of tentative peace and prosperity. In recent weeks this has changed. Hindu and Sikh teachers, shopkeepers and daily wage labourers have been targeted by jihadists who remain faceless. The day after the killings the police usually announce that the terrorists who did such and such killing have been ‘eliminated’ in an encounter. And, then the killings begin again, and we go through the same routine. This is not good enough. Jihadist killers do not deserve anonymity. They need to be named, shamed, and publicly punished. Or we will soon find that the gains made by the abrogation of Article 370 have gone to waste.

The Home Minister is now directly in charge of security and it is intelligence agencies of the Government of India who have full charge of ensuring that there are no failures on the intelligence front. If they are not able to identify exactly who the new jihadist killers are, they are not doing their job. It is necessary to see their faces so that we can learn if we are dealing with Kashmiri terrorists or those exported by Pakistan. With the Taliban back in Afghanistan and with their leaders publicly honouring the families of suicide bombers, we need to urgently stem Kashmir’s slide into violence. The ‘jihad’ will soon be fought with renewed energy because, as a smirking Pakistani minister said after the Taliban took Kabul, ‘They will help us win Kashmir.’

What should we do to prevent this? The most obvious and urgent need is for intelligence and security to be strengthened visibly, but it is also time that a political process began. The former state of Jammu & Kashmir must become a state once more and elections must be held as soon as possible. No Governor installed in the splendid heights of Srinagar’s Raj Bhawan can find the political solutions that are needed, because it is not just his magnificent, fortified residence that is too far from what is happening on the ground. He himself is.

In the four decades that have gone by since I first went to Srinagar as a reporter to attend Farooq Abdullah’s coronation in Iqbal Park, I have never met a Governor, and I met many, who has been able to understand the nuances and the complexity of the Kashmir problem. If we want it to remain a domestic issue, which is why Article 370 was abrogated, then statehood must be restored, and a political process must begin immediately. In the past two years, the Prime Minister’s men have tried to create a new breed of ‘nationalistic’ Kashmiri politicians. This exercise has failed abysmally. Modi must come up with a better strategy.

Coomi Kapoor writes: Rahul Gandhi’s complete sway over the party was apparent when he declared that he would don the formal crown as president only when he chose to and not simply because some begged him to.

At its meeting last fortnight, the Congress Working Committee accused the BJP of “electoral autocracy’’. The CWC was unmindful that the party itself exemplified autocracy of sorts, having skipped even a pretence of internal democracy, with elections not held since 1998. In fact, the Election Commission has threatened to freeze the party’s symbol for failure to adhere to its own constitution. Sonia Gandhi says she is a hands-on interim chief, but the party’s real power centre, known as the “high command”, is a euphemism for Rahul Gandhi and his close confidants. Rahul’s complete sway over the party was apparent when he declared that he would don the formal crown as president only when he chose to and not simply because some begged him to.

Rahul Gandhi’s comment at the CWC that when he informed Charanjit Singh Channi that he was being appointed the Chief Minister of Punjab, he broke down, was the subject of much private discussion in the party. The surmise was that Rahul implied that Channi, a Dalit, fitted into his vision of steering the party’s ideological position in a more Leftist direction, aimed at marginalised groups. The comment was also seen as directed at Rajasthan CM Ashok Gehlot and Chhattisgarh CM Bhupesh Baghel, who have refused to budge in respective power tussles with their rivals. Where does that place Navjot Singh Sidhu in the new scheme of things?

Not In or Out

When Subramanian Swamy’s name was not announced as a member of the BJP National Executive this month, it was yet another indicator that the outspoken, unconventional politician and the BJP leadership were not on the same page. The first signs of the cold vibes between Swamy and the Modi regime surfaced shortly after he was nominated to the Rajya Sabha in April 2016. At the request of then party president Amit Shah, Swamy filled out the official form declaring himself to be a member of the BJP and not an Independent, a status some nominated members opt for. Swamy attended the first two meetings of the BJP parliamentary party but subsequently he was not invited. In his second session in the Rajya Sabha, he was asked to be the lead speaker on the Augusta Westland deal but subsequently, the party bosses completely marginalised the articulate parliamentarian though he still sat prominently in the treasury benches. Unsurprisingly, Swamy’s tweets have become increasingly irreverent towards the party leadership, even questioning why a cricket stadium in Ahmedabad should be renamed after a living leader (Narendra Modi).

Kishor’s challenge

Huge billboards of Mamata Banerjee dominate the Goan landscape. Banerjee’s political campaigner Prashant Kishor and his organisation I-PAC are handling the TMC campaign for the Assembly elections in the state next year. TMC Rajya Sabha leader Derek O’Brien has set up an office in Goa and plans to spend considerable time there. Veteran Congressman Luizinho Faleiro is so far the most high-profile TMC recruit, but Banerjee is hopeful of enlisting Vijay Sardesai, leader of the Goan Forward Party. Goa’s oldest newspaper, O Heraldo, actively supports the TMC. Kishor has deliberately selected Goa for his latest campaign as he believes that its relatively small population is easier to work on electorally. MLAs here are kingpins in their respective constituencies, and not beholden to political parties. He reckons that even if the TMC were to win less than half-a-dozen seats in the House of 40, it could emerge kingmaker. The Congress and AAP are at a disadvantage with the TMC’s arrival. The ruling BJP, handicapped by anti-incumbency and Chief Minister Pramod Sawant’s inability to improve Goa’s pot-holed roads, could well be the biggest beneficiary of the multi-party contests.

Savarkar’s story

Uday Mahurkar’s recent biography of Savarkar makes the case that far from trying to divide the country, he wanted to unify India. The author contends that Savarkar was dismissed in history books with a single line during the Congress years. Then, in 2003. Mani Shankar Aiyar sought to “demonise” Savarkar, holding him responsible for the division of the country. In fact, Syama Prasad Mookerjee, the Jana Sangh founder, wrote a letter to Savarkar in 1947, after the riots in Bengal and Punjab, noting that if Hindus had heeded Savarkar’s warning, they would not have ended up as “slaves” in the land of their birth, the author writes. He adds that the late General K M Cariappa while commenting on the debacle in the 1962 war against China had lamented that the nation did not listen to Savarkar and prepare militarily.

Leena Misra writes: When the Gujarat government allowed the garba this time, with restrictions, the dance returned with a vengeance.

“Watch the footwork, don’t worry about the hands,” the dancer in front would say when you barged in, and that’s how we grew up learning the garba as teenagers. Most times, you either did not know who the dancer on either side was.

But you went with the flow, till you mastered the teen tali, dodhiyu, hinch and raas, readying you for any Navratri garba. Now, of course, there are dandiya “trainers” announcing sessions, months in advance.

In the ’80s, two weeks to go for Navratri, mothers in a group would go looking for chania-cholis or hand-block-printed fabric, with oxidized jewellery to match. We danced with friends, their parents, the milkman, the “kaka (uncle)” who dropped us to school. Most nights as the cymbals, tambourine and drums hit a high during aarti, the milkman would go into a “trance”. “He is possessed by the goddess,” people would whisper, and hopefully ask him about some missing jewellery, or their children’s exams and so on. The musicians were home-grown — none of the new-fangled DJs with Punjabi pop songs or Gangnam Style, or salons offering Navratri “grooming” packages.

The nine nights of dancing around the pandal of “Ma Amba”, as Goddess Durga is known in Gujarat, meant bonding into the night, and for some, a chance to go dating. The joke was not to go by what one looked like at garba, but “love” happened. Buying a different chania-choli for the nine nights was expensive, so most would share, mix and match. (Covid has put paid to that.)

Vadodara, where I grew up, had among Gujarat’s best-known garbas —with up to 10,000 men and women dancing in a group, in 15-20 circles, so large that those in the outermost circle completed one round in nearly 20 minutes. Well past midnight, when the dance ended, we would zip away on Scooties, our biggest worry not any stalker but the waiting hostel warden or parents. On the night before Dussehra, we would dance till dawn.

In Ahmedabad, my first garba was at a club where people piled their belongings, including footwear, at the centre of the dance to “guard” them — a shocker for one used to strangers dancing together.

While curfew times for loudspeakers later curtailed dandiya hours, things actually began to change at the beginning of the millennium when a minister remarked that abortion rates in the state “soared” post-Navratri — putting a new colour on what was an open secret as boys and girls hung out together with social sanction. Soon, condom and pregnancy terminating pills were advertising at garba venues.

In 2003, Narendra Modi as Chief Minister launched ‘Vibrant Navratri’, promoting the garba as “the world’s longest dance festival”. While it was to highlight the state as safe for women, soon there was talk of “terror attacks”, followed by “love jihad”, prompting garba organisers to seek I-cards. Around then, many organisers stopped allowing non-Hindus entry, while police deployed “anti-Romeo squads”.

A friend from Gujarat was not allowed entry at a garba all the way in North America as she was a Muslim.

Can the garba survive all this? I have hope as I look at my 15-year-old. If Ek Lal Darvaje, celebrating Ahmedabad’s founder Ahmed Shah, remains my favourite garba song, my daughter prefers the raas. In 2020, Covid curbs left such a void that apartments saw people dance on their lawns to music on mobile phones.

When the Gujarat government allowed the garba this time, with restrictions, the dance returned with a vengeance. The news from Madhya Pradesh of controversies around the entry of minorities was just that — a distant news.

Meanwhile, a friend based in Zurich, Switzerland, sent news about a dandiya there. She had rushed back from Gujarat for it — a dance open to all.

Sandeep Dwivedi writes: When cricketers from across the border are made to look like enemies at the gate, even their relatives on this side, or genuine cricketing fans of world cricket’s unpredictable but entertaining team, can’t even afford to stay neutral.

India’s heart-breaking loss to Australia in the 2003 World Cup final had at least one perk — no calls from office the next day and time to explore Johannesburg. Shahid Hashmi, a seasoned reporter from Pakistan, had been a fellow traveller on the month-and-a-half-long journey across South Africa — sharing media-box space, late night cabs, takeaways and press conference quotes. He too was finally faarigh. Free.

With him wanting to shop for his sons, we ended up at a crowded merchandise outlet where heavily discounted official World Cup team shirts were flying off the shelves. I cut through the crowd first, and almost instinctively, turned to Shahid bhai and pointed to the Pakistan section with green jerseys. He moved towards the hangers with India blues, and said, “Kyon bhai, hamare bachche Tendulkar ki T-shirt nahin pehen sakte (Why? Can’t our kids wear Tendulkar T-shirts?).”

No amount of essential reading on Pakistan, and certainly not the narrative back home, would have prepared me for the reaction. On the last day of my very first foreign assignment, I got to know our neighbours better and saw through the farce played out in the lead-up to the games between the two great cricketing nations.

On big India-Pakistan match days, like today, when most news channels in both the countries turn into war rooms, and some walk the extra mile to hold dog-fight debates at Wagah border, the Shahid bhais of the sub-continent go unrepresented. Even former players, rivals but friends, indulge in juvenile one-upmanship.

It’s also when foreign correspondents in Islamabad and New Delhi file mood copies with lines such as: “The fierce nuclear rivals who have fought several wars are a melting pot of noise and colours of all hue.” In distant non-cricketing lands, these dispatches — invariably headlined ‘War minus guns’ — further underline the cliche called the subcontinent. Peacocks, carpets, rugs, Taj, butter chicken, pashmina and neighbours who can’t stand each other.

Having been at several of these much-hyped games for close to two decades, I can say that the bitterness and toxicity that the millions are fed don’t emblematise the behaviour of the thousands in the stands and the 22 on the field. The scenes at the stadium are very different from the ones scripted, second-guessed and transmitted from the television studios.

Those pre- and post-match stadium vox populi, the staple for all channels and the alleged mood-meter, are a scam. A day before the 2015 India-Pakistan World Cup game at Adelaide, a fellow-reporter and I had hung around the venue. A biggish group of fans asked if the cricketers were still training. Few wore India colours, others had Pakistan written on them. They seemed like family friends on an outing.

The eager bunch couldn’t believe their luck, when they got spotted by cameras. Soon they were neatly divided into two groups based on the shirts. To our amusement, in a matter of minutes, the happy bunch turned into blood-thirsty fans letting out battle cries. Once the cameras were off, they all got into one big van and were busy calling home, in India and Pakistan, to inform their relatives about the telecast timing of their act.

Even during the game, without the spotlight, the stands stay mostly civil. There is rigorous flag-waving, sometimes finger wagging, rarely any further transgression.

There are no brawls, there is no one vaguely resembling a neo-Nazi football hooligan. The young among the desis, mostly overseas students and fresh-off-the-boat immigrants, are too busy living their dream — watching cricket with a beer glass in their hand, exactly the way they had seen the bare-bodied Aussies glug the bitter on the hill during those Channel Nine days.

Much as TV channels want the stadium to be a tinderbox, on the ground, the India-Pak matches have the same intensity of any Sunday tennis ball cricket game — few tiffs, few abuses and lots of laughs.

The one picture that dispelled many myths was from the 2017 Champions Trophy final. It was the game where Pakistan thrashed India. At the trophy ceremony, Virat Kohli, Yuvraj Singh, Shoaib Malik and coach Azhar Mahammod seemed to be having a collective bout of laughter. Here were old friends with common culture, language and humour cracking up on a Malik joke. In contrast, angst-ridden fans of the two nations were drawing red circles — labelled “mujrims (culprits)” — on the cricketers who were treating a game of cricket the way it needed to be. The bonds between the nations that were undivided are too old and strong.

During the 2015 World Cup, after interviewing Pakistan wicket-keeper Sarfaraz Ahmed, I asked him to pose for a picture. “Achha kheenchna, India mein mere maamu rehte hein, dekh kar bahut khush honge (Click a sharp picture, my uncle stays in India, he will be very happy to see it),” he had said. He would share the maamu’s number in Etawah.

Over the years, the maamu has stayed in touch, but on India-Pakistan days, he remains confused about what to say.

When cricketers from across the border are made to look like enemies at the gate, even their relatives on this side, or genuine cricketing fans of world cricket’s unpredictable but entertaining team, can’t even afford to stay neutral.

At the stadium, it’s different. It’s a bubble where a cricket nut can be non-partisan without being judged. Unlike political sparring, the cricket games are evolved engagements. If only our politicians were statesmen, they would have worked towards preserving this clear line of communication.

When the AAP’s Atishi Marlena and AIMIM’s Asaduddin Owaisi joined a few second-rung BJP politicians urging India to boycott the Pakistan game, you feared mixing sports and politics was finding a dangerous consensus.

You thought these sharp young politicians — one academically rich and other a one-time university pacer — would know better. India-Pakistan are no Serbia-Croatia football games of the past where ultras burn flags on terraces and the violence would spill onto streets. Fans from the sub-continent don’t turn up for cricket games wearing leather gloves lined with pointed pellets or baseball clubs wrapped under flags. Trust me, it’s mainly tasty theplas and paranthas rolled in a silver foil.

P.S: 18 years later, Shahid bhai’s son still treasures the Tendulkar jersey, and like always, he will be supporting Pakistan today.

P Chidambaram writes: If some Indians — not all —can find excuses to taunt, abuse, harm, hurt, terrorise or kill fellow Indians who are Muslims, will not Hindus and Sikhs living in other countries become the objects of taunts, abuse, harm, hurt, terror or homicide? In a combustible sub-continent, ‘action’ and ‘reaction’ can never be neatly separated.

Boundaries define countries. Boundaries cannot contain people. The history of the world has many examples of large numbers of people migrating from one country to another. The 20th century was — and now the 21st century is — noteworthy for migration.

There is a body called the International Organisation of Migration (IOM) as part of the United Nations system. Founded in 1951, the IOM recognised the link between migration and economic, social and cultural development as well as the right to freedom of movement. Migration — both internal and external — cannot be stopped. (There are 65 million inter-state migrants in India.) We can only work, as the IOM does, to “help ensure the orderly and humane management of migration”.

Migration of Millions

Partition is a cause of migration. War is another. India has witnessed both. The Partition of India in 1947 is believed to have caused one of the largest ‘forced’ migrations in human history — estimated at nearly 18 million. Before and after the Liberation war that gave birth to Bangladesh, 8-9 million refugees came to India. Most settled in West Bengal, a significant number settled in Assam. They included Hindus and Muslims. At the same time, millions of Muslims stayed back in India, thousands of Hindus and Sikhs stayed back in Pakistan and a large number of Hindus stayed back in Bangladesh. Of the three, India and Bangladesh, self-declared secular republics, are under severe test.

Over the years, millions of Indians, including Hindus, Muslims and Sikhs, migrated to the United States. We proudly call them the Indian diaspora, but they are a minority in a secular, but largely Christian, country. So are the Indian migrants settled in many European countries, Canada, Australia and New Zealand. The Indian government is legitimately concerned when any of them becomes a victim of racial or religious prejudice.

Majoritarian Agenda

213 million Muslims have their home in India where their forebears lived. Similarly, 15 million Hindus (out of a population of 160 million) in Bangladesh are descendants of families that did not migrate to India either during Partition or the Liberation war.

Both groups of Muslims — descendants of Indian citizens and migrants — reside in India. They are, from time to time, victims of religious prejudice. Yet, the Modi government refuses to protect them or condemn the violence against them. If any country raises questions, the Modi government warns them against ‘interference in the internal affairs of India’. Contrast the concerns expressed by India when Hindus and Hindu places of worship were attacked in Bangladesh. Consider also the forthright statements of Prime Minister Sheikh Hasina and her firm instructions to her home minister.

Let me recall what M S Golwalkar, one of the founding fathers of the RSS, wrote in his book We or Our Nationhood Defined: “Muslims must entertain no idea(s) but those of the glorification of the Hindu race and culture… may stay in the country wholly subordinated to the Hindu nation, claiming nothing… not even citizen’s rights.”  Have the current leaders of the RSS/BJP distanced themselves from that philosophy?

Assuming they have, their actions and words belie that assumption. In fact, their silence in the face of excesses upon Muslims tells us more.

– Will a secular nation justify a patently discriminatory law such as the Citizenship Amendment Act (CAA) that embraces people of all faiths but excludes Muslims? Can one say that the CAA and the threat of detaining thousands of alleged ‘foreigners’ will not have an impact in Bangladesh and elsewhere?

– Will a multi-cultural nation condone the lynching of Pehlu Khan who was transporting cows to his small dairy farm in Rajasthan, or of Aklaq on the suspicion that he had kept beef in his house in UP?

– Will a multi-religious country tolerate the pernicious theory of love jihad when two young persons belonging to different faiths fall in love or wish to be married?

– Will a modern nation pressure Tanishq, a popular brand, to pull out an advertisement which suggested that an inter-faith couple are living happily with the husband’s family?

– Will a multi-lingual country take offence to an Urdu name given to the launch of a line of clothes by Fabindia, an international brand, on the allegation that it gave an Islamic colour to a Hindu festival that was two weeks away?

– Will an unbiased State obliged to uphold the law tolerate the kind of outcomes in the investigation and prosecution of the accused in the Muzaffarnagar and Northeast Delhi communal violence?

Pluralism is here

If some Indians — not all — can find excuses to taunt, abuse, harm, hurt, terrorise or kill fellow Indians who are Muslims, will not Hindus and Sikhs living in other countries become the objects of taunts, abuse, harm, hurt, terror or homicide? In a combustible sub-continent, ‘action’ and ‘reaction’ can never be neatly separated.

Pluralism is a reality. Every country must learn to live with people who belong to different cultures, practise different faiths, speak different languages and follow different mores. What bind a nation are acceptance and mutual respect. In recent years, India has failed in this regard.

Violence seems to have taken the place of tolerance. That is abhorrent anywhere, any time. Violence will breed violence. An eye for an eye will render the world blind. Ask yourself, who said that?

The social justice ministry's suggestions should be adopted, as is happening elsewhere in the world, not just to help celebrities from overzealous authorities, but to also implement, as the 2019 report says, 'evidence-informed policies and strategies to address the challenges posed by drug use'.

In response to an official consultation last month by the department of revenue - the nodal agency for the Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act - the social justice ministry has reiterated the suggestions it had made in its landmark 2019 report, 'Magnitude of Substance Use in India'. These include decriminalising possession for personal consumption, and treating users, especially addicts, with a rehabilitative, not punitive, approach. They should be heeded.

As investigators from the National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (Aiims), stated in the 2019 report, 'People affected by drug use are one of the most marginalised and underserved populations. It is hoped that this report provides strategic directions, to find ways to help save and improve their lives.' The NDPS Act itself came into being in 1985 after GoI was arm-twisted to align with the Reagan era's politically motivated (and ineffective) 'war against drugs' via the UN Convention Against Illicit Traffic in Narcotic Drugs and Psychotropic Substances. This, despite India's traditional tolerance for drug consumption at par with the West's permissiveness for alcohol use. Coupled with a Victorian stigma towards recreational drug intake - with the ingrained usage of 'abuse' and Orientalist suspicion towards ganja-imbibing sadhus and fakirs - the West foisted its own phobia on a laissez-faire India.

The social justice ministry's suggestions should be adopted, as is happening elsewhere in the world, not just to help celebrities from overzealous authorities, but to also implement, as the 2019 report says, 'evidence-informed policies and strategies to address the challenges posed by drug use'.

The main challenge is to estimate how much to invest in fossil fuels, in relation to the stepped-up investment in renewables and storage.

The ongoing transition to green energy worldwide poses a significant risk of creating a series of energy price shocks similar to that in the 1970s, said Jayanth Varma, Monetary Policy Committee (MPC) member, who voted to tighten the stance of monetary policy. 'This means that the upside risks to long-term inflation and to inflation expectations are now more aggravated,' he said, according to the minutes of the recent MPC meeting. Varma is right to worry about energy price shocks during the low-carbon transition, but wrong to assume that best way to tackle such inflation is to squeeze demand hard. It should be possible to minimise the price shocks arising from undersupply of fossil fuels during the transition. Investment in fossil fuels must see a calibrated rise.

Worldwide, investment in fossil fuels has been scaled back since 2014. While investment in renewables has been on the rise and the share of renewable sources in the total energy mix has surpassed that of gas and is well over a quarter, that is still not large enough to supplant dirtier fuels. So, till renewable energy production is large enough and the means of storing renewable power - through pumped storage, production of green hydrogen, storage batteries or more esoteric means such as heating large chunks of salt that, when gradually dipped into water, release steam in sufficient quantities to rotate a turbine - sufficiently advanced, investment in coal and gas is unavoidable. Technologies to minimise emissions from power plants that burn such fuels are available and must be deployed. Both the tech and the funds needed for this should come, ideally, from the rich nations and their promise of funding the green transition in the global south. But if the rich fail to live up to their promise, a country like India should stump up its own funds to curtail emissions.

The main challenge is to estimate how much to invest in fossil fuels, in relation to the stepped-up investment in renewables and storage. To model different scenarios to figure that out is your job, NITI Aayog.

The Coalition of Disaster Resilient Infrastructure (CDRI), a global partnership of 27 countries that Prime Minister Narendra Modi launched in 2019, will initiate a programme at the United Nations Climate Change Conference (COP26) in Glasgow (starting October 31) to help small island states (SIS) boost their climate resilience. The programme, Infrastructure for Resilient Island States, will be implemented between 2022 and 2030 in 58 countries in three geographical regions: The Caribbean; the Pacific; and the Atlantic, Indian Ocean, Mediterranean and South China Sea. India, Australia, and the United Kingdom are likely to pledge $10 million each for the project and other CDRI initiatives. Japan and the United States have offered technical expertise.

When the developed world is still not forthcoming with assistance, the New Delhi-headquartered CDRI’s programme is essential. The difficulties of the climate crisis are exacerbated in SIS because of their small area, isolation, exposure, and lack of expertise to tackle sea-level rise, altered rainfall patterns, and storm surges. Moreover, any new wave of shocks, such as Covid-19, stretches their vulnerabilities. CDRI can help these states in several ways, from developing climate-resistant building codes to designing resilient infrastructure.

The decision to launch the programme shows India’s intent at COP26. Even as it demands that the Western world fulfil its promise of extending climate finance and green technology to others, India is likely to support the long-standing demand of least developed countries and countries most vulnerable to the climate crisis for compensation for the loss and damage they are facing due to the climate crisis.

With each passing week, the magnitude of the real problem with social media companies becomes clearer. The latest revelations include more unseen details of how Facebook knew about misinformation and hate spreading through its network, and a study of unprecedented scale by Twitter in which the company found its service to be disproportionately amplifying Right-wing political messages. In both cases, the findings are based on internal research and experiments, although there is a significant distinction: Twitter carried out the research with academics and owned up to the findings, while the information from Facebook comes from a whistle-blower after the company kept its assessments secret and dithered on acting, alarming its own staff.

The charitable way to look at these revelations is to see two private enterprises with planet-scale networks and influence struggling to understand what they have created. An even more generous way would be to assume that the outcomes are the result of present-day societal problems. But, at least in case of Facebook, there is increasingly irrefutable evidence of deliberate inaction. The company knows that the code it creates nudges people toward conspiracy theories and hate groups. For instance, in India, which several of the leaked documents deal with, the company found evidence of hate speech in pages of prominent political groups, but this was not acted upon because of political considerations. It also purportedly has “white-lists” to exempt politicians from fact-checking

The case studies and experiments by both companies also include more signs that engagement-based algorithms are creating problems that their authors do not quite understand. These algorithms are the bedrock of the revenue model – they drive user growth and ensure more people click on advertisements. At present, there are no guardrails to keep these companies from acting solely on the profit motive. There are no rules for routine risk-assessments, or impact estimates when they enter geographies where politics and culture may differ from their own. The clamour for such rules will only get louder — as they should. Only regulation can help stem this rot. But to do that, lawmakers need to listen to the best of minds in the social sciences who, in turn, need to be given access to data and insights that only the Facebooks, Twitters and Googles of the world have. The guardrails we put in place today could determine whether we succeed in creating open societies.

On October 17, Financial Times reported that China had conducted a test of a hypersonic glide vehicle that circled the earth in low-orbit space before cruising onto its target. Earlier in the summer, through multiple media reports, we learnt that China is constructing at least 250 long-range missile silos at three different locations. In addition, we know from the 2020 United States (US) department of defense report that China intends to move to a launch-on-warning posture for its missile forces. To this end, Beijing is reportedly working on a space-based early warning system. Moreover, experts such as Austin Long and officers such as US Navy Admiral Charles Richard have pointed towards potential shifts in Chinese no-first-use policy.

The big question that arises is: Why are we seeing such a flurry of activity in nuclear China? Of course, the most prominent reason is that the leadership in China is feeling the pressure of the overwhelming nuclear superiority of the US and is working to correct the balance. In addition to the number and quality of warheads, the US has an extraordinary suite of capabilities in precision-targeting, satellite imagery, and anti-submarine warfare that make it a threat for the second-strike forces of its rivals.

Using its satellites, the US can track the land-based nuclear arsenal of its adversaries, and then use its accurate missiles to eliminate them. It can also use its passive sonar systems, extraordinarily stealthy nuclear attack submarines, and proficient maritime patrol air assets to hunt hostile SSBNs. If the US is unable to clean up all the long-range nuclear weapons of its rival in a counterforce strike, it has a chance to intercept the remaining ones through its missile defence systems.

If China has to escape this counterforce noose of America, it has to ensure that a) it has enough long-range nuclear weapons left after a counterforce strike by the US, and b) those remaining weapons can penetrate American missile defences. Through hundreds of silos, China is hoping to build a sink for American missiles.

If Beijing gets its shell game (shuffling the missiles among silos randomly) right — America’s radar satellites make the job difficult — the US will have to expend a large number of its missiles to be certain that it has eliminated all of China’s long-range systems. The sheer scale of the task might deter the US from contemplating a counterforce strike.

In case the US is not deterred, Beijing’s newly tested weapon has two components — the hypersonic glider and the low-earth orbiting space system, also known as Fractional Orbital Bombardment System (FOBS), both independently designed to defeat American missile defence systems.

China’s need for silos, hypersonic glider, and FOBS is not entirely a surprise. However, what is puzzling is the acceleration on all these fronts around the same time. The US has been working on, and improving, its counterforce and missile defence capabilities for long. China is only responding now. One can understand that developing technology takes time, and hence China could not have tested hypersonic gliders decades ago. However, building missile fields was within China’s reach and yet we see them in such numbers only now.

The most likely explanation is that the possibility of a US-China conflict is much higher now, or at least the leadership in Beijing thinks so. If there is a conventional conflict between the US and China, over, let’s say, Taiwan, it can always escalate to nuclear levels. If the US believes that it possesses significant nuclear superiority, it might be tempted to undertake a massive counterforce strike. The latest Chinese investments are meant to deter such temptations.

However, why have the risks of a US-China conventional conflict grown? There are broadly two reasons.

The first has to do with structural factors and misperceptions leading to conflict. A rising power and a declining power, James Fearon argues, can go to war because they may not be able to settle over a bargained outcome. The rising State (China) will want a bargain based on its future power but the declining State (the US) will not agree to it because it stands to benefit from a bargain based on the current distribution of power. In such a scenario, a preventive war can be started by the declining power. The rising power, too, may start a war if it believes its power is peaking or if it is dissatisfied with its status. Similarly, both sides might slide into a war as a result of security dilemma. One side may take steps which are entirely defensive in nature, but the other may see them as offensive. In a resulting spiral, both may end up amassing offensive weapons and then either may start a war perceiving a window of opportunity or a first-mover advantage.

The second reason why China thinks a conventional conflict is likely is because it is going to start one. Here, structural factors such as power transition between rising and declining States or security dilemmas are not important. Instead, China’s “greed” — for example, to exercise complete sovereignty over Taiwan — is contributing to the risk of conflict. Rather than being worried about structural factors and misperceptions that can start a war, China might simply be preparing for a conflict it knows it will start. Therefore, even if China has non-aggressive motivations to invest in its nuclear forces, the timing of these developments suggest that Beijing’s aggressive intentions might still be a factor.

Kunal Singh is a PhD candidate in political science at the Massachusetts Institute of Technology

At a time when the world was caught up in the maelstrom of World War I and the Spanish flu, young men from India were forced to go and fight on the frontlines in Europe and Africa in support of the British Empire. Indian soldiers wrote a new chapter of bravery on all fronts. At that time, The New York Times wrote: “The world must pay India in whatever India wants, for without Indian products, there would be greater difficulty in winning the war.”

As a nation, we tend to be apprehensive. This is the case with the battle against Covid-19. We may now have crossed the billion-dose mark in vaccinations. But we seem to have forgotten how difficult the journey has been.

Until eight months ago, the government machinery itself was sceptical about how the vaccination campaign could be moved to a decisive stage. One concern was where we would get the quantities of vaccine needed. Wealthy nations were quick off the block to reserve vaccines for themselves.

When Prime Minister (PM) Narendra Modi reviewed vaccine manufacturing units in pharma companies of Hyderabad and Pune, an ugly round of political mud-slinging began, ignoring the importance of this in the challenging battle against the virus. They easily forgot: A journey of a thousand miles begins with a single step.

Then there was the issue of creating an effective cold chain for the vaccines across the country. India has a vast and diverse landscape with villages in remote mountain areas, near deserts and isolated islands. In addition, there were inclement weather conditions to consider. Health workers overcame all these challenges.

I visited some primary health centres in villages both in the hills and plains to see for myself the situation on the ground. When I was in a village in Uttar Pradesh, a dust storm was on and there was no electricity.

Two health workers were seen storing vaccines in a bucket full of ice cubes. I asked them if the vaccines were safe and I was told that this “cold chain” was totally effective. Meanwhile, the second wave of the pandemic set in. The health workers persevered. It is in these moments of crisis that a unique sense of unity and zeal develops in Indians.

All attempts by naysayers to debunk the efforts undertaken in the battle against Covid-19 fell flat. India is used to large vaccine campaigns such as the one against polio, so there wasn’t any major resistance to the Covid-19 vaccine.

Let us look at some examples from around the world. Russia is lagging behind with only around 34% of people having been administered the vaccine. Similarly, the average immunisation rate in key Bible Belt states in the United States (US) is much less than that in India. Distrust of the leadership in Russia and religious superstitions in the US are proving to be obstacles.

At the beginning of the pandemic, there were very few laboratories in India which could test for the virus effectively. Health is a state subject in India. Given this, even if there was a magic wand available, the central government could not do anything in a hurry. India is a country beset by political animosities. There are many states where the parties which are in Opposition at the national stage are in power, and they are bitterly opposed to the Centre on many issues. It was difficult to get them all on the same page with regard to the vaccination drive.

The Union government left no stone unturned to address the concerns of these states and arrive at a common ground. The PM and home minister Amit Shah repeatedly spoke to many chief ministers to impress upon them that this was a challenge for all Indians, irrespective of political affiliations.

Apart from the pandemic, India was and is facing challenges on several fronts. In the midst of the fight against pandemic, China created unrest on the borders. So, it was only natural that New Delhi was distracted. The incident at Galwan Valley on June 15, 2020, in which 20 of our soldiers lost their lives, took place when the first wave of pandemic was still raging. It came as a huge shock to India at a time when all energies were directed towards the fight against Covid-19. But the government and the nation stood firm and refused to back down despite China’s sabre-rattling. Once again, we were in a similar situation to the time when we had to combat the Spanish flu and lose our soldiers in battle in World War I, but we didn’t blink an eye.

But in our moments of pride, we must not lose sight of the fact that the battle is far from over despite crossing the billion-dose mark. The third wave could well be upon us if we are not careful. The economic downturn in the wake of the pandemic has broken people’s backs. The real test of the collective spirit we have demonstrated in the fight against Covid-19 is yet to come.

Shashi Shekhar is editor-in-chief, Hindustan

There was a notable absence in external affairs minister (EAM) S Jaishankar’s five-day schedule in Israel: Palestine. Becoming the fourth EAM to visit Israel since the normalisation of relations in 1992, he met a range of interlocutors in the government and outside. The emerging West Asian Quad also steered clear of the Palestinian question. Even a reference to the peace process or the right of a Palestinian State coexisting peacefully and side by side with Israel was missing during Jaishankar’s trip. But should this be surprising?

Prime Minister (PM) Narendra Modi redefined India’s Palestine policy in May 2017, weeks before he became the first Indian PM visit to Israel. With Palestinian president Mahmoud Abbas standing by his side in New Delhi, Modi reiterated India’s support for “a sovereign, independent, united and viable Palestine, coexisting peacefully with Israel”. The most interesting part of this statement was the absence of any reference to East Jerusalem as the capital of the future Palestinian State. This was followed by Modi visiting Israel without going to Ramallah, the headquarters of the Palestine National Authority. He completed the de-hyphenation by visiting Ramallah the following February, without going to Israel.

Jaishankar’s predecessors — Jaswant Singh (2000), SM Krishna (2012) and Sushma Swaraj (2016) — visited Palestine during their visits to Israel. Even president Pranab Mukherjee followed this pattern in 2015, adding Jordan to the visit. Jaishankar, however, followed Modi in undertaking a standalone visit to Israel. If the past is an indication, the EAM will visit Palestine in the future but without going to Israel. Geography would compel him to coordinate that trip with Jordan; while India can de-link Israel from Palestine, the latter cannot be de-linked from Jordan.

Skipping Ramallah will not go down well with a section of the Indian elite who will see in this an abandonment of the Palestinians, erosion of morality in Indian foreign policy or greater ideological convergence with Israel. But with Likud in Opposition, it is difficult to depict Jaishankar’s snub as yet another sign of a Likud-Bharatiya Janata Party alliance. Despite the Modi-Bibi bonhomie, EAM did not meet Benjamin Netanyahu. Moreover, since Jaishankar came to Israel from Abu Dhabi, arguments of Islamophobia or anti-Arab conspiracy would be difficult to sustain.

The absence of any reference to Palestine reflects two trends. One, under Modi, India has de-hyphenated Palestine from its Israel relationship. Just like India does not like to be hyphenated with Pakistan, Israel also does not like foreign leaders visiting Palestine during their visits to Israel. Israeli governments are satisfied with Washington being the only active player in the peace process and do not visualise a role for any other power. And, under Modi, India is respecting Israeli sensitivities.

Two, the marginalisation of the Palestinian question in India’s policy has been gradual. Besides the end of the Cold War and the Madrid conference, the Indo-Israeli normalisation was possible also due to the Palestinian factor losing its erstwhile relevance in inter-Arab relations, especially after the Kuwait crisis. Because of a host of regional factors, the Arab leaders were prepared to deal with Israel even without resolving the Israeli-Palestinian conflict. In the wake of the Arab Spring protests, even the Arab street is less concerned about the Palestinian statelessness than about the survival of Arab states and their territorial integrity. Hence, if one examines the Indian statements during the visits and meetings with regional leaders, the Palestinian question figures only vis-à-vis Egypt and Saudi Arabia and not others. The Abraham Accord, shepherd by President Donald Trump, facilitated Israel normalising relations with key Arab states even without resolving the vexed Palestinian question and provided an Arab-Islamic legitimacy to relations with Israel. And New Delhi is merely responding to this new regional reality.

Foreign policy is not an emotional exercise. Rather than criticising Jaishankar skipping Ramallah, one should ask — how did this become possible?