Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







29-03-2024
Friday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





தூத்துக்குடி

History And Geography

       தூத்துக்குடி “முத்து நகரம்” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடல் பரப்பில் முத்துக்கள் அதிகம் கிடைக்கின்றன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 9 நூற்றாண்டு வரை இது பாண்டிய மன்னராலும், 10ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களாலும் ஆளப்பட்டது. கி.பி.1658-ல் டச்சுக்கரர்களை தொடர்ந்து கி.பி.1732ல் போர்ச்சுக்கீசியர்கள் வந்தனர். பின்பு இது டச்சுக்கரர்களிடமிருந்து 1782ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

இந்த மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 20.10.1986லிருந்து புது மாவட்டமாக செயல்படுகிறது. தொடக்கத்தில் இதற்கு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றே பெயரிடப்பட்டது. பின்பு 1997 முதல் இது தூத்துக்குடி மாவட்டம் என பெயர் பெற்றது.

வ.உ.சிதம்பரனார் அவர்கள் கி.பி.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இந்திய சுதேசி கப்பல் கம்பெனியை தொடக்கிவைத்தார்.

 Agriculture

       இந்த மாவட்டத்தின் 70 சதவித மக்கள் உணவிற்காக நெற்பயிரையே நம்பியுள்ளனர். முக்கிய தானியமாக நெல், சோளம், கம்பு, வரகு, ராகி மற்றும் சாமை பயிரிடப்படுகிறது.

 சுற்றுலா

       இங்குள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாற்று சிறப்புமிக்கது. கழுகுமலை என்ற இடத்தில் சமண மதத்தவரின் ஓவியம் மற்றும் சிற்ப்பங்கள் காணப்படுகிறது. இங்குள்ள பஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை உள்ளது. எட்டயபுரத்திலுள்ள பாரதி மணிமண்டபம், நவ திருப்பதி மற்றும் வன திருப்பதி கோவில்கள் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.

வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாகக்கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனைத்தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெனியினை நிறுவினார்கள்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டபொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு,பருத்திநூல்,சென்னா இலைகள்,பனைப்பொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்புவகைகள் மற்றும் தானியவகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1 மில்லியன் சரக்குகளைக்கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது. தூத்துக்குடியைச்சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குப்பாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது. இந்நகரம் மிதமான தட்பவெப்ப நிலையைக்கொண்ட பகுதியாகும். சிறிய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.

தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்ப்புற வளாச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

காணத்தக்க இடங்கள்

அய்யனார் சுணை

அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று இதன் அருகில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது மனற்குனக்றுகள் மற்றும் காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது

எட்டையாபுரம்

புரட்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டையாபுரம் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 76 கி.மீட்டரிலும் கோவில்பட்டியிலிருந்து 35 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக அரசால் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் புலவரான உமறுபுலவரின் தான்ஷா இவ்வூரில் அமைந்துள்ளது.

கழுகுமலை வைணவ கோவில்

கழுகுமலை வையணவ கோவில் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் கோவில்பட்டியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வைணவகோவிலான இக்கோவில் ஆதிநாதன்நேமிநாத மகாவீர பர்வநாதர், பாகுபலி ஆகியோரின் சிலைகள் உள்ளன . இங்கே பிரதித்தி பெற்ற வெட்டுவான் கோவிலும் உள்ளது. பாண்டிய மன்ர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இக்கோவில் இப்போதும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிறது.

குலசேகரபட்டிணம்

இத்திருத்தலம் கன்னியாகுமாரி – திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமாரியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் உள்ளது. குலசேகரபட்டிணத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்காளவிரிகுடா கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையானது. இங்க ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தசராப் பண்டிகை கொண்டாப்படுகிறது. கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களின் உருவங்கள் வேடம் அணிந்து பக்தா்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.

பனிமயமாதா ஆலயம்

தூத்துக்குடி நகரின் கடற்கரை ஒரத்தில் அமைந்துள்ள பணிமயமாதா ஆலயம் கிறிஸ்தவர்களின் பிரசித்தப் பெற்ற வழிப்பாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் கி.பி. 1711 போர்த்துகிசியர்காளால் நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பனிமயமாதா திருவிழா கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்

திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுங்சாலையில் திருநெல்வேலி 25.கி.மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது பழங்காலங்களில் இறந்தவர்களை மண்பானையில் புதைக்கும் வழக்கம் இருந்தது. இங்கு அகல்வாராய்ச்சின் மூலம் மண் பாண்ட தாழி மற்றும் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த இடம் தற்போது தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்சி துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

காயல்பட்டிணம்

காயல்பட்டிணம் கொற்கைக்கு அடுத்தாற்போல் பிரசித்திபெற்ற துறைமுகமாக கி.பி 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் செயல்பட்டது. இது தூத்துக்குடி யிலிருந்து 30கி.மீ தொலைவிலும் திருச்செந்தூரலிருந்து 18 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது வங்காளவிாிகுடாவில் அமைந்துள்ள சிறந்த கடற்கரை ஒன்றாகும்.

கயத்தார்

கயத்தார் திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 25 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயேரை எதிர்த்து முதலில் குரல் கொடுத்த சுதந்திர போராட்ட வீரா் வீர பாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயேர் இவ்விடத்தில் தூக்கிலிட்டனர். வீரம் செறிந்த இச்சுதந்திர போராட்ட வீரரின் நினைவு சின்னம் அவரை தூக்கிலிடப்பட்ட இடத்திலேயே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கொற்கை பழைய துறைமுகம்

சங்க காலத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்து கொற்கை துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது.தூத்தக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது.திருச்செந்தூரிலிருந்து 29 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இத்துறைமுக பகுதியில் கொற்கை குளம் 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பழங்கால பிரசித்துபெற்ற வெற்றிவேலம்மன் கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

மணப்பாடு

இத்திருத்தலம் திருச்செந்தூரிலிருந்து 18 கி.மி. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 70 கி.மி. தொலைவிலும் உள்ள மணப்பாடு என்னும் கிராமத்தில் திருச்சிலுவை ஆலயம் அமையப்பட்டுள்ளது.

மெஞ்ஞனபுரம்

திருச்செந்தூரிலிருந்து 13 கி.மி. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமம் ஒரு பழமையான கிராமம் ஆகும். 1847 ஆம் ஆண்டு தூய பொலின் ஆலயம் இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. இது 110 அடி நிலத்திலும் 55 அடி அகலத்தில் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் முகப்பில் 192 அடி உயரத்தில் வானளாவிய கோபுரம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் மிக உயரமான கோபுரத்துடன் கூடிய பெரிய தேவாலயமாகும்.

நவகைலாயம்

 நவகைலாய திருத்தலங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
பாபநாசம் (சூரியன்)
நவகைலாய திருத்தலத்தில் முதலாவதாக பாபநாசம் இருக்கின்றது. இது திருநெல்வேலியிலிருந்து மேற்கே 45கிமீ ல் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசராதர் அம்பாள் உலகாம்பிகை நடைதிறப்பு காலை 6.00 – 1.00 மாலை 4.30 – 8.00
சேரன்மகாதேவி (சந்திரன்)
இந்திருத்தலம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22கிமீ ல் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் ஆவுடைநாயகி நடைதிறப்பு காலை 7.00 – 9.00 மாலை 5.00 – 7.00
கோடகநல்லூர் (செவ்வாய்)
இக்கோவில் சேரன்மாகதேவியிலிருந்து திருநெல்வேலி சாலையில் 15கிமீ ல் கல்லூர்க்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 6.00 – 12.00 மாலை 5.00 – 6.30
குன்னத்தூர் (ராகு)
இக்கோவில் திருநெல்வேலி டவுணிலிருந்து 4கிமீ ல் அமைந்துள்ளது. இக்கோவிலிருந்து 2கிமீ ல் திருவேங்கிடநாதபுரம் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 7.300 – 11.00 மாலை 5.00 – 6.30
முறப்பநாடு (குரு)
இக்கோவில் திருநெல்வேலிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சாலையில் 13கிமீல் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 7.00 – 10.00 மாலை 5.00 – 7.00
திருவைகுண்டம் (சனி)
இக்கோவில் முறப்பநாடு கோவிலிருந்து கிழக்கே 20கிமீ ல் அமைந்துள்ளது. இங்கு நவதிருப்பதி தலங்களில் முதல் திருத்தலம் அமைந்தள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30
தென்திருப்பேரை (புதன்)
இக்கோவில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டத்திலிருந்து 8வது கிமீ ல் அமைந்துள்ளது இங்கு நவதிருப்பதி திருத்தலத்தின் 7வது திருத்தலம் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் அழகிய பொன்னம்மை நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30
இராஜபதி (கேது)
இக்கோவில் தென்திருப்பேரையிலிருந்து 6வது கிமீ ல் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் அழகிய பொன்னம்மை நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30
சேந்தபுமங்கலம் (சுக்கிரன்)
இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னக்காயல் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் அம்பாள் சௌந்தர்யநாயகி நடைதிறப்பு காலை 7.00 – 10.30 மாலை 5.00 – 8.30

நவதிருப்பதி

 தூத்துக்குடி மாவட்டத்தில் 9விஷ்ணு கோவில்களிலும் அருகாமையில் அமைந்துள்ளனர். இக்கோவிலில் வழிபடுவதின் மூலம் நவக்கிரங்களால் எற்படுகின்ற தீமையினின்று விடுதலைக் கிடைக்கும் இக்கோவில் பண்டைக்கால கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களில் கீழ்கண்டபடி தரிசனம் மேற்கொள்ளலாம் .

நவதிருத்தலங்கள் அனைத்தும் திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளன. 9 திருத்தலங்களின் ஆழ்வார் திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகியவை திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி சாலையின் இடையில் அமைந்துள்ளது. இதர ஏழு திருத்தலங்களும் சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருக பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் திருத்தலங்களை கண்டு தரிசிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் திங்களில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா கொண்டாடப்படுகிறது. நவதிருத்தலங்களை மக்கள் தரிசிப்பதற்கு ஏதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் திங்களில் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையித்திலிருந்து நவதிருப்பதி தலங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தால் சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சி கிராமம் தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிறிய ஊராகும். இவ்வூரில் பிறந்த மக்களால் போற்றப்பட்ட வீரபாண்டியக்கட்டபொம்மன் கி.பி. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் 1974ல் தமிழக அரசால் கட்டப்பட்டது. நினைவுச்சின்னம் கட்டிடத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர தீரங்களையும் அவர்கால வரலாற்று சான்றுகளையும் வெளிப்படுத்தும் முகமாய் அமைந்துள்ளன. கோட்டைக்குள் ஸ்ரீதேவி சக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. கோட்டையின் அருகே போரில் மரணம் அடைந்த ஆங்கிலேய போர் விரர்களை புதைக்கப்பட்ட இடம் உள்ளது. ஆங்கிலேயர்களால் அனுமதிக்கப்பட்ட பழைய கோட்டையின் எஞ்சியப் பகுதிகளை தொல்லியில் துறையினரால் பராமரிக்கப்பட்டது. இவ்விடத்திற்கு சென்று வர தூத்துக்குடியிலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தில் உள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில் தென் இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இக்கோவில் தூத்துக்குடியிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது . கி.பி.17ம் நூற்றாண்டில் இத்திருத்தலத்தின் கோபுரம் 157 அடி உயரத்தில் 9 அடுக்குகளை கொண்டுள்ளது

இக்கோவிலில் வள்ளிகுகை மற்றும் நாலிக்கிணறு ஆகியவை புனித இடமாக கருதப்படுகிறது.

 

 




Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us