கோயம்புத்தூர்


History And Geography

      தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் (பொ) 20.10.1803லிருந்து 20.01.1805ம் ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு:- பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம், கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது. 1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது, இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை எண். 1917ன்படி வருவாய் துறை தேதி: 31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பெருந்துறை மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது. அவைகள் பின்வருமாறு:- கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், அவிநாசி, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை. அரசு ஆணை நிலை எண். 617, 618ல் வருவாய் துறை தேதி 24.10.2008 கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்கள் அதாவது (திருப்பூர், உடுமலைப்பேட்டை, பல்லடம் மற்றும் அவினாசி பகுதி) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் வட்டங்கள் அதாவது (தாராபுரம், காங்கேயம், பெருந்துறை பகுதிகள்) ஆகியன பிரிக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பொழுது கோவை மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு: கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை மற்றும் இரண்டு வருவாய் மண்டலங்கள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளன.

Industry

       கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888ல் அமைக்கப்பட்டது. இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25,000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது. இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க கனிம வளங்கள், கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

 சுற்றுலா

 1. கோவை மாவட்ட சமயத் திருத்தலங்கள் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் ஈச்சனாரி விநாயகர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தண்டு மாரியம்மன் கோவில் பேரூர் சாந்தலிங்கர் திருமடம் சிரவணபுரம் கெளமார மடாலயம் கோவை ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம் புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம் கிருஸ்துவ அரசர் ஆலயம் இம்மானுவேல் ஆலயம் அத்தார் ஜமாத் பள்ளி வாசல் ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் பள்ளி வாசல் குருத்துவார கோயில் (சிங்) ஜெயின் கோவில் போன்றவை முக்கிய சமய திரு தலங்களாக விளங்குகின்றன. 2. கோவை மாவட்ட வரலாற்று சிறப்பிடங்கள்:- தொல்பழங்கால ஓவியங்கள் வெள்ளருகம்பாளையம், வேடர் பாத்தி, சோமனூர் குமிட்டிபதி, பதிமலை ஆகிய ஊர்களின் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ள குகைகள் உள்ளன. இக்குகைகளில் வெள்ளருகம்பாளைய குகை 400 அடி உயரத்தில் உள்ளது. மற்ற குகைகள் தரைப்பகுதியில் உள்ளன. இந்த ஓவியங்கள் கி.மு. 1,000 – கி.பி. 100 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை. வேட்டை காட்சிகள் சண்டை காட்சிகள், நடனக்காட்சிகள், தேர்வடிவம், கட்டிடங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அரசி, புத்தர், மைத்ரேயர் ஆகிய பொம்மைகள் கிடைத்துள்ளன. இங்குள்ள கோவில் கல்வெட்டுக்கள் இவ்வூரின் வரலாற்றை அறிய உதவுகின்றது. நாகேஸ்வரம் (சின்ன கோவில்), திருமலைக்கோயில், முட்டத்துஅம்மன் கோயில் ஆகிய கோயில்கள் பழமை வாய்ந்தவை. இங்கு நிலை பெற்றுருந்த கட்டிடங்கள் அழிந்துவிட்டன. அவை கி.பி 8ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. பேரூர் திருமுருகன் பூண்டி இராசக்கேசரிப் பெருவழி ஆனைமலை சமணப்பள்ளிகள் அமராவதி ஆற்றங்கரை மருதமலை போன்றவை முக்கிய வரலாற்று சிறப்பிடங்கள் ஆகும். 3. கோவை மாவட்ட சுற்றுலா தலங்கள்:- வெள்ளியங்கிரி மலை ஆனைமுடி சிறுவாணி அணைக்கட்டு நொய்யல் அமராவதி ஆறு ஆழியார் போன்றவை சிறந்த சுற்றுலா தலங்கள் ஆகும்

வரலாறு

கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இதன் வரலாறு சங்ககாலம் முதலே அறியப்படுகிறது. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது. அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது. ஆயினும் இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை. இப்பகுதி இராஷ்டிரகுட்டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது. இராஷ்டிரகுடர்களிடமிருந்து சோழர்களின் பொற்காலம் எனப் போற்றப்படும் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கைகளிலிருந்து வீழ்ந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் வந்த பாண்டியர்களாலும், ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது. பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் 1377 – 78ல் இப்பகுதியை போரிட்டு வென்றனர். சில காலம் இப்பகுதி நாயக்கர்களின் சுதந்திரமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது.

முத்து வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை, விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது. இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் விழுந்தது, அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினார். ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்ப்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மகாராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த இராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவிற்கே பிரிட்டிஷார் வழங்கினர். அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான வருவாய் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

கோவை வட பகுதிகளுடன் சேலம் பகுதிகள் சில இணைக்கப்பட்டன. தென் பகுதி தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது. 1804 ஆம் ஆண்டு கோவை மாவட்டமாக உருவானது. 1866ஆம் ஆண்டு நகராட்சியானது. அப்போதைய மொத்த மக்கள் தொகை 24,000 ஆகும். அதன் பிறகு வளர்ச்சி பெற்று 01.05.1981 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மொத்த மக்கள் தொகை 34,58,045 (2011ல் கணக்கெடுப்பு), ஆண்கள் – 17,29,297,பெண்கள் – 17,28,748. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது சாலை வசதி, விமானம், இரயில் போக்குவரத்து மற்றும் இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.

கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் கோவையை கைப்பற்றி படைத்தளம் அமைத்தனர். பின்னர் மைசூர் மன்னர்கள் இதை கைப்பற்றிக் கொண்டனர். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடன் பலமுறை போர் செய்தனர். இதனால் இப்பகுதி அடிக்கடி கைமாறிக் காண்டே இருந்தது. 1768ல் ஆங்கிலேயர்கள் கோவையை கைப்பற்றி இழந்தனர். 1783ல் மீண்டும் இதுவே நிகழ்ந்தது. 1790ல் 5 மாத காலம் இப்பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடமிருந்து இதை கைப்பற்றிக் கொண்டார். 1799ல் நடந்த மைசூர் போரில் திப்புவை வென்று கோவையை கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதனை 1947 வரை அரசு புரிந்தனர். திப்பு இறந்ததும் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்ஹெசி பிரவு உடனடி நடவடிக்கையில் இறங்கினார் . திப்புவின் வாரிசுகளுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு அரசு உரிமை பறிக்கப்பட்டது. பழைய அரச குடும்பத்தினரான கிருஷ்ண ராஜ உடையாரிடம் மைசூரை ஆளும் உரிமையை ஒப்படைத்த ஆங்கிலேயர்கள் கன்னடம், வயநாடு, கோயம்புத்தூர், ஈரோடு,தாராபுரம், ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். ஹைதராபாத் நிஜாமுக்கு ஊட்டி ஆகிய பகுதிகள் தரப்பட்டன. இந்த பிரிவினைகளால் கோவை பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருந்த்தால் 1799ம் ஆண்டு கோவை பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் (பொ) 20.10.1803 லிருந்து 20.01.1805 ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு: பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு , கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம்,உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம, கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது. 1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது,இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை என் 1917ன் படி வருவாய் துறை தேதி:31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச் செட்டிபாளையம், சத்தியமங்கலம்,ஈரோடு, பெருந்துறை, மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது. அவைகள் பின்வருமாறு கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம்,அவிநாசி, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை. அரசாணை (நிலை) எண் 617,618ல் வருவாய் துறை தேதி 24.10.2008 கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்கள் அதாவது (திருப்பூர்,உடுமலைப்பேட்டை,பல்லடம் மற்றும் அவினாசி பகுதி) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் வட்டங்கள் அதாவது (தாராபுரம், காங்கேயம்,பெருந்துறை பகுதிகள்) ஆகியன பிரிக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அரசாணை (நிலை) எண் 419 வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை, பிரிவு நாள் 25.10.2008 உத்தரவின் படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய பொள்ளாச்சி வருவாய் வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய ஆனைமலை வருவாய் வட்டம் தனி வட்டமாக உருவாக்கப்பட்டது.

தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில்  கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு) மற்றும் பொள்ளாச்சி என மூன்று  வருவாய் மண்டலங்கள் உள்ளன. வருவாய் வட்டங்கள் பதினோன்று உள்ளன. அவைகள், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு), மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, அன்னூர், ஆனைமலை, கிணத்துககடவு, பேரூர், மதுக்௧ரை மற்றும் வால்பாறை உள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

கோவை குற்றாலம்

கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை மேல் பகுதி சிறுவானி அணை உள்ளது இது மாநிலத்தின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்திட வனத்துறை அனுமதிக்க வேண்டும். நகரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது, இந்த பகுதி மாலை 5 மணிக்கு பின் அனுமதி இல்லை. கோயம்புத்தூருக்கு மிகஅருகாமையில் உள்ள ஒரே நீர்வீழ்ச்சி இது.

>

ஆழியார் அணை

அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட மலைகளால் சூழப்பட்ட அழகிய அணை ஆழியார் அணை. பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது.

1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது, அணைக்கு முதன்மையான நோக்கம் வேளாண்மை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கு பாசனத்திற்கு ஆதரதிற்கும் ஆகும். அணை உயரம் 81 மீட்டர். அணையின் கீழே ஒரு நன்கு பராமரிக்கப்படும் பூங்கா உள்ளது. நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள அனமலை கண்களுக்கு ஒரு விருந்து, படகு சவாரி இங்கே இருக்கிறது.

இது பொள்ளாச்சியிலிருந்து சாலைவழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வால்பாறை பார்வையிடும் பெரும்பாலான மக்கள் ஆழியார் அணைக்கு பயணம் செய்கிறார்கள்.

வால்பாறை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பொள்ளாச்சிக்கு 65 கி.மீ தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த செழிப்பாக உள்ளது. பொள்ளாச்யிலிருந்து வால்பாறைக்கு பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம்.

காணத்தக்க இடங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும் இங்கு நிறைய சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், ஆன்மீக மற்றும் வழிபாட்டு இடங்களும் உண்டு.

1. ஆழியார் அணை, பொள்ளாச்சி அருகே.
2. குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியார்அருகில்.
3. வால்பாறை மலைவாழிடம்
4. கோவை குற்றாலம்
5. சிறுவானி அணை
6. சோலையார் அணை வால்பாறை
7. பரம்பிக்குளம் அணை
8. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா
9. காரமடை வன சரகம் பில்லூர் அணை
10. காடம்பறை மின் நிலையம், வால்பாறை
11. தோட்டக்கலை பண்ணைகள், கல்லார், மேட்டுப்பாளையம் அருகே
12. வைதேகி நீர்வீழ்ச்சி, நரசிபுரம்
13. பரலிக்காடு காரமடை வன சரகம்
14.சலீம் அலி பறவையியல் ஆணைகட்டி

கோளரங்கம் மற்றும் அறிவியல் மையம்
பிராந்திய அறிவியல் மையம்
கோடீசியா வர்த்தக மையத்திற்கு அருகில்
அவிநாசி சாலை
கோயம்புத்தூர்

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்
இந்திரா காந்தி வன உயிரின சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பொள்ளாச்சி
வ.உ.சி பார்க், உப்லிபாளையம், கோயம்புத்தூர்
காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்
பாரதி பூங்கா, சாய்பாபா காலனி, கோயம்புத்தூர்
தாவரவியல் பூங்கா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
ஆழியார் அணை பூங்கா, ஆழியார், பொள்ளாச்சி

கேளிக்கை பூங்காக்கள்
பிளாக் தண்டர் (நீர் விளையாட்டு), மேட்டுப்பாளையம்
கோவை கொண்டாட்டம் (கேளிக்கை பூங்கா), பச்சாபாளையம்
மகாராஜா தீம் பார்க், நீலம்பூர்

அருங்காட்சியகங்கள்
வன அருங்காட்சியகம்
ஜி.டி.நாய்டுஆட்டோமொபைல் அருங்காட்சியகம்
பூச்சிகள் அருங்காட்சியகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

வழிபாட்டு இடங்கள்
1. அருள்மிகு பட்டீஸ்வரர் கோயில், பேரூர்
2. அருள்மிகு முருகன் கோயில், மருதமலை
3. அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோயில், ஈச்சனாரி
4. கோனியம்மன் கோயில், கோயம்புத்தூர்
5. பூரி ஜகனத் கோயில், கோயம்புத்தூர்
6. தண்டுமாரியம்மன் உப்லிபாளையம்
7. சுப்ரமணியசாமி கோயில், அனுவாவி
8. வன பத்ரகாளியம்மன் கோயில், நெல்லிதுரை, மேட்டுப்பாளையம்
9. மாசானியம்மன் கோயில், அனைமலை
10. முந்தி விநாயகர் கோயில், புலியகுளம்
11. சாய்பாபா கோயில், கோயம்புத்தூர்
12. பாலாஜி கோயில், கருமலை, வால்ப்பாறை
13. அரங்கநாதர் கோயில், காரமடை
14. ஆத்தர் ஜமாத் மஸீத், டவுன் ஹால், கோயம்புத்தூர்
15. குருத்வாரா, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்
16 . ஜெயின் கோயில், ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர் .
17 . இம்மானுவல் சர்ச், உப்லிபாளையம், கோயம்புத்தூர் .
18 . கிறிஸ் சர்ச், திருச்சி சாலை, கோயம்புத்தூர் .
19 . பெதஸ்தா பிரேயர் சென்டர், காருன்யநகர் .
20 . கார்மல் பிரேயர் டவர், கோயம்புத்தூர் .
21 . அந்தோனியார் சர்ச், புலியகுளம், கோயம்புத்தூர் .
22 . தென் திருப்பதி கோயில், சிறுமுகை, மேட்டுப்பாளையம் .
23 . கோட்டை ஈஸ்வரன் கோவில், டவுன்ஹால், கோயம்புத்தூர் .
24 . காமாச்சி அம்மன் கோயில், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர் .
25 . சாரதாம்பால் கோயில், ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர் .
26 . வெள்ளியங்கிரிஆண்டவர் கோயில், வெள்ளியங்கிரி .
27 . ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருகோவில், சிங்கநல்லூர் .